|
Home > Temples of India > pADal peRRa sthalam
வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள் கோயில்)
இறைவர் திருப்பெயர் : தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.
தல மரம் : தென்னை.
தீர்த்தம் :
வழிபட்டோர் : வாலி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.
கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால்
சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார்.
சிறப்புக்கள்
குறிப்பு
ஐந்து நிலை ராஜகோபுரம் - சிதைந்து செங்கற்கள் தெரிகின்றன. வாகனமண்டபமும் சிதிலமாகியுள்ளது, சுற்று மதில் முழுவதுமாக அழிந்துள்ளது. பல்வேறு மூர்த்தங்கள்
வெட்ட வெளியில் பிராகாரத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் பராமரிப்பில்லா நிலையைக் காணும்போதும் மனது மிகவும் வேதனைப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கும்
மேலாக கும்பாபிஷேகமே நடக்கவில்லை என்பதை கேள்விபட்டடு அடையும் வேதனைக்கு அளவேயில்லை.
இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் - ஆடுதுறை உள்ளது.
(ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள் கோயில் என்னும் வைணவத் தலம் இருப்பதாலும் இத்தலம் 'அந்த'
ஆடுதுறையினின்றும் வேறுபட்டறிய "ஆடுதுறை பெருமாள் கோயில்" என்று வழங்குகிறது. குரங்காடுதுறை என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை.) இத்தலம்
குடந்தையிலிருந்து 20 கி. மீ. தொலைவிலும், திரவையாற்றிலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் உள்ளது.
|