திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி)

இறைவர் திருப்பெயர்		: கற்கடகேஸ்வரர் (கற்கடகம் - நண்டு)
இறைவியார் திருப்பெயர்		: அருமருந்தம்மை, அபூர்வநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர்.
thirundudevankudi temple

தல வரலாறு

  • நண்டு பூசித்த தலமாதலின் 'நண்டாங் கோயில் ' என்று வழங்குகிறது. (திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன.)

  • வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை 'அருமருந்தம்மை' யாகும். பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'அபூர்வநாயகி ' திருமேனியாகும்.

சிறப்புக்கள்

  • 'தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி' என்னும் தேவாரத்தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது. (கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

< PREV <
காவிரி வடகரை 41வது தலம்
சேய்ஞலூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 43வது தலம்
திருவியலூர்