|
Home > Temples of India > pADal peRRa sthalam
பட்டீச்சரம்
இறைவர் திருப்பெயர் : பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்)
வழிபட்டோர் : மார்க்கண்டேயர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பாடன்மறை சூடன்மதி.
தல வரலாறு
- ஊர் - பழையாறை; கோயில் - பட்டீச்சரம்.
காமதேனுவின் புதல்வியருள், "பட்டி" பூசித்தது ஆதலின் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது.
- இங்கே அம்பிகை தவஞ்செய்ததால் 'தேவிவனம் ' என்றும் பெயர்.
ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள (ஐந்து நந்திகள் உள்ளன) நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி, இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.
(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடத் தொடங்கினார் என்றும் அது முற்றுப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.)
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். (சத்திமுற்றமும் பட்டீச்சரமும் அருகருகேயுள்ள தலங்கள் - இடையில் வீதிதான் உள்ளது.)
|