|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
இறைவர் திருப்பெயர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
- அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.
- கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
- இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற்
பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.
- இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.
- இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது.
|