திருநாரையூர்

இறைவர் திருப்பெயர்	: சௌந்தர நாதர்
இறைவியார் திருப்பெயர்	: திரிபுர சுந்தரி
தல மரம்		: புன்னாகம்
தீர்த்தம்			: காருண்ய தீர்த்தம்
வழிபட்டோர்		: நம்பியாண்டார் நம்பி, நாரை
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (1. உரையினில் வந்தபாவம், 2.காம்பினை வென்ற, 
				3.கடலிடை வெங்கடு), 
                                 அப்பர் (1. வீறு தானுடை வெற்பன், 2.சொல்லானைப் பொருளானை)
thirunaraiyur temple

தல வரலாறு

  • நாரை பூஜித்ததால், இப் பெயர்.
  • தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.

சிறப்புக்கள்

  • நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.
  • பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)
  • கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ் பாதையில் 5கீ.மீ தூரத்தில் இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 32வது தலம்
கானாட்டுமுள்ளூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 34வது தலம்
கடம்பூர்