|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநல்லூர் கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirunallur Temple
இறைவர் திருப்பெயர் : கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கொட்டும் பறைசீராற்,
2. பெண்ணமருந் திருமேனி,
3. வண்டிரிய விண்டமலர்
2. அப்பர் - 1. அட்டுமின் இல்பலி யென்றன்,
2. நினைந்துருகும் அடியாரை.
தல வரலாறு
கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.
- திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.
- பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம்.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.
சிறப்புகள்
அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.
- இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்றத் திருத்தலம்.
- இஃது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.
- சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம், கும்பகோணம் - தஞ்சை இரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. பாபநாசம் என்னும் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவு. (வலங்கைமான் - பாபநாசம் சாலை).
|