|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
இறைவர் திருப்பெயர் : சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர் : வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி.
தல மரம் : மா.
தீர்த்தம் : பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.
வழிபட்டோர் : பிரமன், முருகன், பிருகு, வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி. (காகபுசுண்டரிஷி ஐக்கியமான தலம்)
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்
தல வரலாறு
சிறப்புக்கள்
- சம்பந்தர் மணக்கோலத்துடன் சோதியுள் கலந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.
- இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.
- சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.
- ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகை) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.
- உள்வாயிலில் இருபுறமும் தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
- நால்வரைத் தொடர்ந்து, அறுபத்துமூவர் சந்நிதியில் - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன.
- சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர் ' என்று
குறிக்கப்படுகின்றார்.
- நாடொறும் ஆறு கால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.
- இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரம் - சீர்காழி சாலையில், கொள்ளிடத்திலிருந்து 8.கி.மீ. தொலைவில் உள்ளது.
|