|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஇன்னம்பர்
இறைவர் திருப்பெயர் : எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்
இறைவியார் திருப்பெயர் : கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)
தல மரம் : பலா, சண்பகம்
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், அகத்தியர், ஐராவதம்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (எண்திசைக்கும் புகழ்),
அப்பர்( - விண்ணவர் மகுடகோடி,
- மன்னும்மலைமகள் கையால், என்னிலாரும் எனக்கினி, அல்லிமலர் நாற்றத் துள்ளார்
).

தல வரலாறு
- அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி.
சிறப்புக்கள்
- இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில்
3கீ.மீ. தூரத்தில் உள்ளது.
|