|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருச் சாய்க்காடு(சாயாவனம்)
இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை
தல மரம் : பைஞ்சாய் (சாய்-கோரை)
தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்
வழிபட்டோர் : உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்( 1. நித்தலுந்நியமஞ்செய்துநீர், 2.மண்புகார் வான்புகார்), அப்பர்(தோடுலா மலர்கள் தூவி, 2.வானத் திளமதியும்பாம்புந்), ஐயடிகள் காடவர்கோன்(அஞ்சனஞ்சேர் கண்ணார்)
தல வரலாறு
- பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால்,
இப் பெயர்.
- ஆதி சேடனது நாகமணி ஒளி வீசியதாலும்
(இதனை சாய் - ஒளி என்பர்.) இப் பெயர் பெற்றது.
- இயற்பகை நாயனார் வழிபட்ட தலம்.
- இந்திரன் தாயார் தினமும் இத் தலத்தைப் பூஜித்து
வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன்
இத்திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக
எண்ணித் தோண்டி, அது, பாதாளம் வரை
சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே
எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.
சிறப்புக்கள்
- காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1.திருவெண்காடு, 2.மயிலாடுதுறை,
3.திருவிடைமருதூர், 4.திருவையாறு 5.திருவாஞ்சியம் .
- சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
- கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சீர்காழிக்குத் தென் கிழக்கே12கீ.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து
பஸ் வசதி உள்ளது.
|