திருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்)

இறைவர் திருப்பெயர்		: சிவக்கொழுந்தீசர்.
இறைவியார் திருப்பெயர்		: பெரியநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: சூல தீர்த்தம்.
வழிபட்டோர்			: உமை.
தேவாரப் பாடல்கள்		: அப்பர்.

தல வரலாறு

  • இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் 'சத்தி முத்தம்' என்று வழங்குகிறது.

  • அப்பர், தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார்.

சிறப்புக்கள்

  • மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.
  • மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.
  • சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.
  • கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்படுகிறார்.
  • அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
  • ( 'நாரைவிடு தூது ' பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் நகரப் பேருந்துகளில் எளிதில் இத்தலத்திற்கு செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 21வது தலம்
திருஆவூர்ப்பசுபதீச்சரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 23வது தலம்
திருப்பட்டீச்சரம்