திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

இறைவர் திருப்பெயர்	: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்		: அத்தி.
தீர்த்தம்			: 
வழிபட்டோர்		: சண்டேசுவரர்.
தேவாரப் பாடல்கள்	: அப்பர்.
thiruappadi temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'திருவாய்ப்பாடி' என்று வழங்குகிறது.

  • இத்தலத்தில் சண்டேசுவரர் வழிபட்டு பேறு பெற்ற பெருமையுடையது.

சிறப்புக்கள்

  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி.

  • கொடிமரமில்லை.
  • முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது.
  • கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஆப்பாடி உடையார் ' என்றுள்ளது.

தற்போதைய நிலை (தேவை)

  • கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது; இக்கோயிலுக்கு ஊர்மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமானதொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்கு காணக்கிடைக்குமோ? என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்களின் பாதுகாப்பிலேயே இக்கோயில் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டுவருகிறது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் மிகவும் பழுதடைந்துள்ளது. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எதுவுமில்லை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் (சேய்ஞலூர்) சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 39வது தலம்
திருப்பனந்தாள்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 41வது தலம்
சேய்ஞலூர்