logo

|

Home >

to-practise >

references-to-thillai-vazh-anthanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் தில்லை வாழ் அந்தணர் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.1 

 

முட்டாத முச்சந்தி மூவா 

        யிரவர்க்கு மூர்த்தி என்னப்

பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் 

        பாவமும் வினையும் போக

விட்டானை மலையெடுத்த இராவணனைத் 

        தலைபத்தும் நெரியக் காலால்

தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 

        பெருமானைப் பெற்றா மன்றே.                         7.90.7 

 

திருக்கோவையார்

 

ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து

மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்

தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)

ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே.              8.72-தி.கோவை 

 

திருவிசைப்பா

 

முடியா முத்தீவேள்வி மூவாயிரவரொடும்

குடிவாழ்க்கை கொண்டு நீ குலவிக் கூத்தாடினையே

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்

ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த

அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த

துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.                11.01-நம்பி

 

 பெரியபுராணம்

பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி

See Also: 1. Life details of thillaivAzanthaNar

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Oh parrot, tell my Lord's name

தில்லைத் திருப்பதிகங்கள்

Koyilpuranam Lectures

தில்லைவாழ் அந்தணர் யார்?

The Glory of Tillai-Vazh Anthanar