உ செந்திலாண்டவன் துணை திருச்சிற்றம்பலம் 9. கணங்கள் செல் படலம் அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா னருளால் நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர் இந்தி ராதியர் யரையுந் தருதியென் றிசைத்தான். 1 இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப கன்ன யப்புட னிரைந்துபின் நந்தியெம் பெருமான் அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள் உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார். 2 உலக முய்ந்திட வெம்பிரான் மணம்புரி யுண்மை புலன தாதலும் அவனருண் முறையினைப் போற்றி மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார். 3 பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத்தி திரனே மூலத் தீப்புரை விடைப்பெருங் கேதுவே முதலாஞ் சூலத் தீக்காத் தாயிர கோடியோர் சூழக் காலத் தீப்பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில். 4 சுழல லுற்றிடு சூறையும் வடவையுந் தொலைய முழுது யிர்த்தொகை அலமர வுயிர்க்குமொய்ம் புடையோர் எழுப திற்றிரு கோடிபா ரிடத் தொகை யீண்ட மழுவ லத்தின னாயகூர் மாண்டனும் வந்தான். 5 நீடு பாதலத் துறைபவர் நெற்றியங் கண்ணர் பீடு தங்கிய வல்வகை நிறத்தவர் பெரியர் கோடி கோடியா முருத்திர கணத்தவர் குழுவோடு ஆட கேசனா முருத்திரன் கயிலையில் அடைந்தான். 6 கோர மிக்குயர் நூறுபத் தாயிர கோடி சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர் ஆரு மச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த வீர பத்திர வுருத்திரன் வந்தனன் விரைவில். 7 விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரலிற் கொண்டு தங்குறு குறட்படை கோடிநூ றீண்டப் பண்டு தாங்கலந் தரியரன் இருவரும் பயந்த செண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான். 8 முந்தை நான்முகன் விதிபெறான் மயங்கலும் முக்கட் டந்தை யேவலால் ஆங்கவன் நெற்றியந் தலத்தின் வந்து தோன்றிநல் லருள்செய்து வாலுணர் வளித்த ஐந்து மாறுமா முருத்திரர் தாமும்வந் தடைந்தார். 9 இத்தி றத்தரா முருத்திரர் அல்லதை யேனை மெத்து பல்புவ னங்களு மளித்தவண் மேவி நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர் புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில். 10 தொட்ட தெண்கடல் யாவையுந் துகளினால் தூர்க்கும் எட்டு நூறெனுங் கோடிபா ரிடத்தொகை யீண்டக் கட்டு செஞ்சடைப் பவர்முத லாகவே கழறும் அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார். 11 கூறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர் நாறு கொண்டுள கலத்தொடு பொடிபுனை நலத்தோர் நூறு கொண்டிடு கோடிபூ தத்தொடு நொடிப்பின் வீறு கொண்டகுண் டோதரன் போந்தனன் வெற்பில். 12 அண்டம் யாவையும் உயிர்த்தொகை யனைத்தையும் அழித்துப் பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு கொண்ட சாரதர் நூற்றிரு கோடியோர் குழுமக் கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை. 13 ஆன னங்களோ ராயிரம் இராயிரம் அங்கை மேனி வந்தபொன் மால்வரை புரைநிற மேவித் தானை வீரர்நூற் றைம்பது கோடியோர் சாரப் பானு கம்பனாந் தலைவன்ஒண் கயிலையிற் படர்ந்தான். 14 தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும் பங்கி யாகிய கேசமும் படைகளும் பறித்துத் துங்க மெதிய கணங்கள்பல் கோடியோர் சூழச் சங்கு கன்னன்வந் திறுத்தனன் தடவரை தன்னில். 15 காள கண்டனுந் தண்டியும் நீலனுங் கரனும் வாள்வ யம்பெறு விச்சுவ மாலியும் மற்றும் ஆளி மொய்ம்பின ராயபல் பூதரும் அனந்தம் நீளி ருங்கடற் றானையோ டணைந்தனர் நெறியால். 16 கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர் நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின் மாற்ற லார்புரம் அட்டவன் தாளிஆணை வழிபட் டேற்ற மிக்கஈ சானன்அக் கயிலையில் இறுத்தான். 17 எகின மாகிய மால்அயன் வாசன் இமையோர் புகலு மாதிரங் காவலர் கதிர்மதி புறக்கோள் மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள்வே றுள்ளார் மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார். 18 வாலி தாகிய மறைகள்ஆ கமங்கள்மந் திரங்கள் ஞால மாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள் கால மானவை ஏனைய பொருளெலாங் கடவுட் கோல மெய்திவந் திறுத்தன கயிலையிற் குறுகி. 19 இந்த வாசற்றினாற் கயிலையில் யாவரும் யாவும் வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து நந்தி யுள்புகுந் தமலனுக் கித்திறம் நவில முந்தை அன்னவர் யாரையுந் தருகென மொழிந்தான். 20 புராரி யித்திரம் மொழிதலுஞ் சிலாதனார் புதல்வன் ஒராய்மு தற்கடை குறுகியே உருத்திர கணங்கள் முராரி யாதியாம் விண்ணவர் முனிவரெல் லோரும் விராவு நீர்மையிற் சென்றிடக் கோயிலுள் விடுத்தான். 21 விடுத்த காலையில் அரியணை மீமிசை விளங்கிக் கடுத்த யங்கிய கண்டன்வீற் றிருப்பது காணூஉ அடுத்த வன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர் எடுத்து நீடநின் றேத்தியே அணுகினர் இமைப்பில். 22 நீண்ட சீருருத் திரர்தமை நிறைந்தபல் கணத்தை ஈண்டு தேவரை முனிவரை வீற்றுவீற் றிசையா ஆண்டு தன்விரற் சுட்டியே ஆதிநா யகற்குக் காண்டல் செய்துநின் றேத்தினன் வேத்திரக் கரத்தொன். 23 ஆர ழற்பெயர் அண்ணல்கூர் மாண்டன்ஆ டகத்தோன் வீர பத்திரன் முதலுருத் திரகண மேத்தப் பாரி டத்தவர் யாவரு மெம்பிரான் பாங்கிற் சேர லுற்றுநின் றேத்தினர் பணிந்தசிந் தையராய். 24 அன்ன காலையில் நான்முகன் எம்பிரான் அணிவான் உன்னி யேமுடி முதலிய பல்கல னுதவிப் பொன்னி னாயதோர் பீடிகை யிற்கொடு போந்து முன்ன ராகவைத் திறைஞ்சியே இத்திரம் மொழிவான். 25 ஐய கேளுனக் கில்லையாற் பற்றிகல் அடியேம் உய்யு மாறிவண் மணஞ்செய வுன்னினை உன்பால் மையல் மாசுணப் பணியெலா மாற்றிமற் றிந்தச் செய்ய பேரணி அணிந்தரு ளென்று செப்பினனே. 26 பங்க யாசனன் குறையிரந் தினையன பகர அங்கண் மூரல்செய் தன்புடன் நீயளித் திடலால் இங்கு நாமிவை அணிந்தென மகிழ்ந்தன மென்னார் செங்கை யாலணி கலத்தினைத் தொட்டருள் செய்தான். 27 பிரமன் அன்புகண் டிவ்வகை யருள்செய்த பின்னர் ஒருதன் மெய்யணி பணிகளே யணிகளா யுறுவான் திருவுளங்கொள அவ்வகை யாகிய செகத்தை அருள்பு ரிந்திடு பராபரற் கிச்செயல் அரிதோ. 28 கண்டி யாவரு மற்புத மடைந்துகை தொழலும் வண்டு லாங்குழற் கவுரி*பா லேகுவான் மனத்திற் கொண்டு பாங்குறை தலைவருக் குணர்த்தியே குறிப்பாற் பண்டு மாலயற் கரியவன் எழுந்தனன் படர. 29 ( * கவுரி - கௌரி - கௌரவண்ணம் உடையவள்; கிரிராஜ புத்திரி எனினுமாம். கௌரம் - பொன்போன்ற வண்ணம். ) ஆகத் திருவிருத்தம் - 754 - - - 10. தி ரு க் க ல் யா ண ப் ப ட ல ம் நாற்ற டம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான் போற்றி முன்செல அமரரும் முனிவரும் புகழ வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும் பாற்றி யக்கமும் நீழலு மாமெனப் பாட. 1 சொன்ம றைத்தொகை ஆகம முதலிய துதிப்பப் பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றாள் வன்மை பெற்றகுண் டோதரன் மொய்ம்பிடை வைத்துச் சின்ம யத்தனி மால்விடை ஏறினன் சிவனே. 2 விடையின் மீமிசைத் தோன்றியே யெம்பிரான் விளங்கப் புடையின் வந்தவ ரல்லது திருநகர்ப் புறத்துக் கடையின் நின்றவர் யாவருங் கண்டுகண் களியா அடைய வேபணிந் தேத்தினர் அளக்கரின் ஆர்த்தார். 3 நந்தி மேல்கொண்டு நந்திமே வுறுதலும் நந்தித் தந்தி மாமுகத் தவுணர்கோன் இலமரத் தடிந்தோன் ஐந்து நூற்றெழு கோடிபூ தப்படை யணுக வந்து வந்தனை செய்துமுன் போயினன் மாதோ. 4 கதிருஞ் சோமனுங் கவிகையுஞ் சீகரங் காலும் உததி யண்ணல்சாந் தாற்றியும் உம்பர்தங் கோமான் புதிய கால்செயும் வட்டமு மெடுத்தனர் புடைபோய் முதிரும் ஆர்வமோ டப்பணி புரிந்தனர் முறையால். 5 பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி போரி யற்படு காகளம் வயிர்முதற் புகலுஞ் சீரி யத்தொகை இயம்பினர் பாரிடத் திறலோர். 6 அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவுமா லலயனும் மெய்த்த வம்புரி முனிவரும் ஏனைவிண் ணவரும் மொய்த்த தேரொடு மானமாப புள்ளிவை முதலாந் தத்த மூர்திமேல் கொண்டனர் செய்பணி தவாதோர். 7 தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவருந் தவத்தாற் காழ்ந்த நெஞ்சுடைப் பூதரு மேனைய கணமுஞ் சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்றுதொல் லுலகம் வாழ்ந்தி டும்படி யேகினன் இமையமால் வரைமேல். 8 வார்ப்பெ ரும்பணை யாதிய வரம்பில்பல் லியத்தின் ஆர்ப்பு மெங்கணும் வௌ¢ளிடை யின்றியே யகல்வான் தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையுஞ் சுரர்கள் ஆர்ப்பும் வாழ்த்தொலி அரவமும் புணரியுண் டெழுமால். 9 வேறு அனைய தன்மையி லாதியம் பண்ணவன் பனிகொள் வெற்பிற் படரஅம் மன்னவன் இனிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன் புனித மாநக ரிற்கொடு போயினான். 10 போத லோடும் புனிதன் வரத்தினைக் காத லாற்கண்டு கண்களப் பாகியே ஆதம் எய்திநின் றஞ்சலித் தேத்தியே வீதி யாவும் விழாவயர்ந் திட்டவே. 11 மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார் அண்டர் நாயகன் அற்புதப் பேருருக் கண்டு தாழ்ந்து கரைதவிர் காதலாந் தெண்டி ரைப்படிந் தார்செயல் வேறிலார். 12 நிறைத்த பூண்களும் நேர்ந்தபொன் னாடையும் நறைத்த சாந்தமும் நாண்மலர்க் கண்ணியும் பிறைத்தி ருச்சடைப் பிஞ்ஞகன் பேரெழில் மறைத்த தென்று மனந்தளர் வார்சிலர். 13 உய்யு மாறென் உவர்தமைக் காண்டலு வெய்ய காமக் கனல்சுட வேவுறுந் தைய லார்கள் தனுவுறு நீறுகொல் ஐய ராகத் தணிந்ததென் பார்சிலர். 14 எழாலை யன்னசொல் ஏந்திழை மாதரார் குழாம கன்று குழகனைச் சேர்தலுங் கழாலு கின்றபல் காழுடை மேகலை விழாதி றைஞ்சினர் மெல்லிய லார்சிலர். 15 அல்லி சேர்தரும் அம்புய மீமிசை வல்லி யன்னவர் வான்துகில் சோர்வுறா மெல்ல வீழ்தலும் மின்னிடை யார்க்கெலாம் இல்லை யோபுனை யென்றுரைப் பார்சிலர். 16 வாசம் வீழ்தலும் வந்துவந் தில்லிடைத் தூசு டுத்தில மென்றொர் துகில்புனைந் தாசை யோடுசென் றன்னதும் வீட்டியே ஊசல் போன்றனர் ஒண்டொடி மார்சிலர். 17 மாண்ட சாயன் மடந்தைய ரேதனை வேண்டி மால்கொடு வீடுறும் வேலையில் ஈண்டு போற்று கெனவுமெண் ணாததோ ஆண்ட கைக்கிய லாகுமென் பார்சிலர். 18 கரும்பு நேர்மொழிக் காரிகை மாதரார் விரும்பி வேண்டவு மேவலர் போலுமால அரும்பொன் மேனியெம் மண்ணலுக் குள்ளமும் இரும்பு கொல்லென் றியம்பிடு வார்சிலர். 19 நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்குமால் பெருக்கி னாரவர் பேதுற லோர்கிலார் உரைப்ப தென்கொல் உயிர்க்குயி ராகியே இருக்கு மிங்கிவர் என்றுரைப் பார்சிலர். 20 திருகு வார்சடைச் செய்யனை நோக்கிநின் றுருகு வார்சிலர் உள்ளுற வெம்பியே கருகு வார்சிலர் காதலி மாரொடும் பெருகு காதலைப் பேசுகின் றார்சிலர். 21 வேறு ளார்மெய் விளர்ப்பினை நோக்கியே ஈறி லாரை இவரணைந் தார்கொலோ நீறு மெய்யின் நிலவிய தென்றவர்ச் சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். 22 கட்டு செஞ்சடைக் கான்மிசை யூர்தர விட்ட வெண்மதி மெல்லிய லார்தமைச் சுட்ட தம்ம சுமப்பதென் நீரெனாக் கிட்டி நின்று கிளத்திடு வார்சிலர். 23 கஞ்ச மேலய னாதிக் கடவுளர் தஞ்ச மென்று சரண்புக வுண்டதோர் நஞ்சின் வெய்யகொல் நங்கையர் கொங்கைமேல் துஞ்சு கின்ற துயிலதென் பார்சிலர். 24 பின்ன ருள்ள பொருந்தொழி லாற்றுவான் துன்னு வீரெனில் தொல்குழு ஆடவர் நன்ன லத்தொடு நண்ணமின் னாரையே இன்னல் செய்வதென் என்றுரைப் பார்சிலர். 25 சாற்றி யிங்கினி யாவதென் தையல்மீர் ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட மாற்றி லாத மலைமகள் போலயாம் நோற்றி லேமென நொந்துயிர்ப் பார்சிலர். 26 தேவர் உய்யத் திருமணஞ் செய்திட மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர் ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம் ஏவர் செய்வ ரெனஉரைப் பார்சிலர். 27 மையல் வேழம் வயப்புலி போல்வரும் வெய்யர் தம்மை மெலிவிப்ப தன்றியே நொய்ய மான்புரை நோக்கியர்க் குந்துயர் செய்யு மோவெனச் செப்புகின் றார்சிலர். 28 நங்கள் கொற்றவன் நற்றவத் தாற்பெறு மங்கை பாலின் மணப்பொருட் டேகினர் இங்கெ மக்கினி மைத்திறஞ் செய்கலார் சங்க ரர்க்குத் தகாதிதென் பார்சிலர். 29 பேதை நீரவர் பேரிளம் பெண்மையோர் ஆதி யந்தத் தணங்கினர் இன்னணம் வீதி தோறும் விரவியத் தாருக மாத ராரினும் மாதர்பெற் றாரரோ. 30 பண்டை வேதன் பதத்தினும் பேரெழில் கொண்டு நின்றவக் கோநகர் வீதியின் அண்டம் வெ•க அணிபடுத் திட்டவை கண்டு போந்தனன் கண்ணுத லண்ணலே. 31 செய்ய தான செழுங்கம லாசனத் தையல் காமுறத் தக்கன வீதிகள் பைய நீங்கிப் பராபரை யாகிய ஐயை கோயில் அணித்தென நண்ணினான். 32 வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்றுகா றாய்ந்து நாடற் கரியவெம் மண்ணல்முன் பூந்த டம்புனல் பூரித்த பல்குடம் ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார். 33 இருவ கைப்படு மெண்வகை மங்கலப் பொருண்மை முற்றவும் பூவையர் பற்பல வரிசை யிற்கொடு வந்தெதிர் எய்தினர் அரிய யற்கரி தாகிய அண்ணல்முன். 34 அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ் சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை குறுகு தண்புனற் கொள்கல மேந்தியே மறுகில் வந்தனர் மங்கையர் எண்ணிலார். 35 நெருக்கு பூண்முலை நேரிழை யாரவர் பொருக்கெ னாவெதிர் போந்துயிர் யாவினும் இருக்கும் ஆதி யிறைவனை யேத்தியே தருக்கொ டேநின்று தந்தொழி லாற்றினார். 36 எங்கள் நாதன் எதிருற எண்ணிலா மங்கை மார்சுடர் மன்னிய தட்டைகள் செங்கை யிற்கொடு சென்று வலன்வளைஇ அங்கண் மும்முறை அன்பொடு சுற்றினார். 37 ஆன காலை அருமணச் சாலைமுன் ஞான நாயகன் நட்பொடு நண்ணியே வானு லாய மழவிடை நீங்கினான் யான மீதினின் றியாரும் இழிந்திட. 38 விடையி ழிந்துழி மேனைவிண் ணாட்டவர் மடமின் னாரொடு வந்து பராபரன் அடிகண் மீதினில் ஆன்பொழி பால்கொடு கடிதின் ஆட்டினள் கைதொழு தேகினாள். 39 நாதன் அவ்வழி நந்திக ளுய்த்திடும் பாது கைக்கட் பதமலர் சேர்த்தியே போதன் மாதவன் பொற்கரந் தந்திடக் கோதில் மாமணக் கோயிலுள் எய்தினான். 40 வேறு பல்லிய மியம்ப வானோர் பரவவிஞ் சையர்கள் பாட ஒல்லெனக் கணங்க ளார்ப்ப உருத்திரர் யாருஞ் சூழ மெல்லெனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும் வேண்ட மல்லலங் கோயி லுள்ள வனப்பெலாம் நோக்க லுற்றான். 41 உலாவுறு சுரும்பு மூசா ஒண்மலர்ச் சோலை வாலி நிலாவுறழ் புனல்சே ரோடை நெடுந்தடம் நிறம்வே றாகிக் குலாவுமண் டபங்க ளின்ன கொண்டியல் வனப்புக் காட்டிச் சிலாதனன் மதலை கூறச் சென்றுசென் றிறைவன் கண்டான். 42 கண்டலுந் தம்போல் தங்கள் காமர்விண் ணகரந் தானும் மண்டல வரைப்பின் வந்து வைகிய தாங்கொ லென்னா அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்துங் காமர் தண்¢டலை யாடல் செய்துந் தலைத்தலை திரிதந் துற்றார். 43 நந்தியந் தேவு காட்ட நல்வனப் பனைத்தும் நோக்கிக் கந்தமென் போது வேய்ந்த கடிமணச் சாலை தன்னில் இந்திர நீலத் திட்ட எழில்நலத் தவிசி னும்பர் வந்துவீற் றிருந்தான் எல்லா மறைகட்கும் மறையாய் நின்றான். 44 வீற்றிருந் தருளு மெல்லை வீரபத் திரன்தீப் பேரோன் ஆற்றல்கொள் கூர்மாண் டேசன் ஆடகன் ஐயன் ஏனோர் போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர் ஏற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவற் சூழ. 45 வேறு அமையப்படும் அப்பொழு தத்தினில் ஆதி யண்ணல் விமலத்திரு மாமணங் காணுற மேலை யண்டச் சுமையுற்றிடும் எப்புவ னத்தருந் தொக்க நீரால் இமையச்சயி லந்துளங் குற்ற திடுக்கண் எய்தி. 46 பொன்பா லிமையந் துளங்குறறுழிப் போற்று சேடன் தன்பால் அவனி யெனலாந் துலைத்தட்டி ரண்டின் வன்பால தான படபா லதுதாழ மற்றைத் தென்பால தாற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க. 47 ஓங்குற் றதுதென் புவியாதலும் உம்ப ரெல்லாம் ஏங்குற் றனர்மண் ணுகோர்கள் இடுக்க ணுற்றுத் தீங்குற் றனவோ எமக்கென்று தியக்க முற்றார் பாங்குற் றிடுதொன் முனிவோரும் பரிய லுற்றார். 48 இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் முன்னோனு மன்ன செயல்கண்டு முறுவ லெய்தி அன்னோர் குறைநீத் திடநந்தியை நோக்கி ஆழி தன்னோர் கரத்திற் செறித்தானைத் தருதி யென்றான். 49 என்றா னதுகாலையில் நந்தி யிறைஞ்சி யேகிக் குன்றாத கும்ப முனிவன்றனைக் கூவ அங்கட் சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்ன ருய்ப்ப மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல். 50 தாழுந் தவத்தொன் றனைக்கண்ணுதற் சாமி நோக்கித் தாழுங் குறியோய் இவண்யாவருஞ் சார்த லாலே தாழும் புவிதக் கினமுத்தரஞ் சால ஓங்கத் தாழுஞ் சுவர்க்க நிலனுந் நனிதாழு மன்றே. 51 தெருமந் துழலுந் தரைமன்னுயிர் செய்த தொல்லைக் கருமந் தனைவிட் டயர்வெய்திக் கலங்குகின்ற பெருமந் தரமே முதலாய பிறங்கல யாவும் அருமந்த மேரு வரையுந்தவ றாகு மம்மா. 52 ஆனான் முனிகேள் ஒருநீயிவ் வசலம் நீங்கித் தேனார் மருத வளமேயதென் னாடு நண்ணி வானார் பொதிய மலைமேவுதி வைய மெல்லாம் மேனா ளெனவே நிகராதி விளங்கு மென்றான். 53 பிறையொன்று வேணிப் பரனிங்கிது பேச லோடும் அறையொன்று தீஞ்சொற் றமிழ்மாமுனி அச்ச மெய்திக் குறையொன் றியான்செய் துளனோகொடி யேனை ஈண்டே உறையென் றிலைசே ணிடைச்செல்ல வுரைத்தி எந்தாய். 54 என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தி லுண்டோ அன்னத் தவனும் உனைநேர்கிலன் ஆத லால்நீ முன்னிற் றெவையுந் தவறின்றி முடித்தி மன்னோ. 55 வேறுற்றிடு தொன்முனி வோர்களின் விண்ணு ளோரின் ஈறுற்றிடு மோவிது செய்கை எவர்க்கும் மேலாம் பேறுற்ற நின்னால் முடிவாகும் பெயரு கென்று கூறுற் றிடலும் முனியீது குறித்து ரைப்பான். 56 வான்செய்த மேனி நெடுமான் மகவேள்வி மன்னன் தேன்செய்த கஞ்சத் தயனிற்கவிச் செய்கை தீயேன் தான்செய் திடவே பணித்திட்டனை தன்மை யீதேல் நான்செய் ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய். 57 ஈங்கிப் பணியை யளித்தாயெனில் எந்தை யுன்றன் பாங்குற்ற புத்தேள் மணக்காட்சி பணிந்தி டாமல் நீங்கற் கரிதாங் கவல்கின்றதென் னெஞ்ச மென்ன ஓங்கற் கயிலைத் தனிநாயகன் ஓத லுற்றான். 58 வேறு சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண் வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி நந்தமை யுன்னி யாங்கே நாள்சில இருத்தி பின்னர் முந்தையி லெமது பாங்கர் வருதியால் முனிவ என்றான். 59 என்றிவை அமலன் செப்ப இசைதரு புலத்தினாகி மன்றமர் கழல்க டம்மைப் பன்முறை வணக்கஞ் செய்து நின்றுகை தொழுது போற்றி நெடிதுயிர்த் தரிதின் நீங்தித் தென்றிசை யெல்லை நோக்கிச் சிறுமுனி கடிது போனான். 60 கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த வெற்பதும் வன்மை சிந்த வில்வல னொடுவா தாவி கற்பனை யகன்று மாயக் காவிரி நீத்தத் தோடு முற்பகல் படர்ந்த தென்ன முனிவரன் தென்பாற் போனான். 61 மறைபுகல் வேள்வி யாற்று மாவலி வலிகொள் காட்சிக் குறியவன் துணையாய் மற்றோர் குறளுமுண் டாங்கொ லென்னா நெறியெதிர் அவுணர் தம்முள் ஒருசிலர் நில்லா தோடச் சிறுமுனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான். 62 முண்டகன் வலிகொண் டுற்ற மூவெயில் அழிப்பான் முன்னி அண்டரும் புவன முற்று மாகிய கொடிஞ்சி மான்றேர் பண்டொரு பதத்தா லூன்றிப் பாதலத் திட்ட அண்ணல் கொண்டதொல் லுருவ முன்னிக் குறுமுனி அங்கண் உற்றான். 63 பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முனிவன் வைகத் துதியுறு வடபாற் றென்பாற் புவனியோர் துலைபோ லொப்ப அதுபொழு துயிர்க ளானோர் அணங்கொரீஇ அரனை யேத்தி மதிமகிழ்ந் தமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம். 64 கதுமென மலயந் தன்னிற் கடமுனி சேற லோடு முதுமைகொ ளிமையம் புக்க முனிவருஞ் சுரருந் தேர்ந்து மதிமலி சடையெம் மண்ணல் வரம்பில்பே ரருளும் அன்னோன் பதமுறை வழிபட் டோர்தம் பான்மையும் பரவ லுற்றர். 65 அங்கது பொழுது தன்னில் அரசன திசைவால் எங்கள் சங்கரி ஐயை காப்பச் சசியென்பான் அடைப்பை ஏநதக் கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப் பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள். 66 வந்திடு முலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி அந்தமொ டாதி யில்லான் அடிகளை வணங்க முன்னோன் முந்துறு தவிசின் றன்பான் முற்றிழை யிருத்தி யென்ன இந்திரை முதலோர் யாரு மெத்திட இருத்நதா ளன்றே. 67 இருந்திடு மெல்ல தன்னில் ஏலவார் குழலி யென்னுங் கருந்தடங் கண்ணி னாளைக் கண்ணுதற் பராப ரற்கு விரைந்தருள் செய்ய வுன்னி வேந்தன திசைவான் மேனை பெருந்தடம் புனலுஞ் சந்து மலர்களும் பிறவுந் தந்தாள். 68 தருதலு மிமையத் தண்ணல் தாழ்ந்தன னிருந்து தேவி சிரகநீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம் விரைமலர் புனைந்து நின்ற வியன்கடன் பலவுஞ் செய்து பொருவரு மகிழ்ச்சி யோடு பூசனை புரிந்தான் மாதோ. 69 பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப் பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து நேசமொ டளித்தே னென்னா நெடுமறை மனுக்கள் கூறி வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி. 70 எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ் சங்கரன் உலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்றால் அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார். 71 ஆனதோ ரமைந் தன்னில் ஆடினர் அமரர் மாதர் கானம திசைத்தார் சித்தர் கந்தரு வத்த ரானோர் ஏனைய விருவர் தாமு மேழிசைக் கீதஞ் செய்தார் வானவர் முனிவர் யாரும் மறைகளை யறைய லுற்றார். 72 அல்லியங் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக வல்லியும் மற்று ளோரும் மங்கலம் பாட லுற்றார் சல்லரி திமிலை காளந் தண்ணுமை சங்க மாதிப் பல்லிய மியம்பிச் சூழ்ந்து பாரிடத் தொகையோர் ஆர்த்தார். 73 அதுபொழு திமையத் தண்ணல் ஆபொழிந் திட்ட தீம்பால் கதலிமாப் பலவின் தீய கனிவகை நெய்தே னாதி மதுரமாஞ் சுவையின் வர்க்கம் பரம்பில வீற்று வீற்று நிதிகொள்பா சனத்தி லிட்டு நிருமலன் முன்ன ருத்தான். 74 மறைநெறி யினைய வெல்லாம் மலைமக னுய்த்து மற்றெம் மிறையிவை நுகர்தல் வேண்டு மெனத்தொழ இனிதே யென்னாக் கறைமிடற் றணிந்த மேலோன் கரத்தினால் அவற்றைத் தொட்டாங் குறுபெருங் கருணை செய்தே உவந்தனங் கோடி யென்றான். 75 தொன்மைகொ ளருளின் நீரால் துய்த்தன வாகத் தொட்ட நின்மல வுணவை மன்னன் நேயமோ டங்கண் மாற்றி இன்மலர் கந்தந் தீர்த்த மிவற்றொடு மொருசா ருய்ப்ப நன்மகிழ் வோடு வேதா நாயகற் குரைக்க லுற்றான். 76 படங்கிளர் சேடன் தாங்கும் பார்விசும் புறையும் நீரார் அடங்கலும் மணஞ்செய் போதத் தவ்வவர்¢கடுத்த தாற்றி நடந்திடு மொழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற் சடஙகினி யுளது முற்றத் தண்ணளி புரிதி யென்றான். 77 என்னலு முறுவல் செய்தே இறையருள் புரிய வேதன் வன்னியு மதற்கு வேண்டும் பொருள்களும் மரபிற் றந்து பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையிற் சூழத் தன்னிக ரில்லா மன்றற் சடங்கெலாம் இயற்றல் செய்தான். 78 அந்தணர் கரண மெல்லா மாற்றியே முடிந்த பின்னர்த் தந்தையுந் தாயுமாகி உலகெலாந் தந்தோர் தம்மை முந்துற அயனும் பின்னர் முகுந்தனு மதற்குப் பின்னர் இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்ச லுற்றார். 79 அரனுடன் உமையா டன்னை யாங்கவர் பணித லோடும் உருகெழு நிலையுட் கொண்ட உருத்திரத் தலைவ ரேனோர் பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன்பின் னாகக் கிரியுறை யிறைவன் மைந்தன் கேளொடு வணக்கஞ் செய்தான். 80 தமதுமுன் பணிகின் றோர்கள் தமக்கெலா மீசன் றானும் உமையும்நல் லருளைச் செய்ய வோர்ந்திது பதமென் றுன்னி இமகிரி புரந்த வண்ணல் ஈண்டுறை நீரர்க் கெல்லாம் அமலன துணவு மற்றும் அளிப்பனென் றகத்துட் கொண்டான். 81 ஆய்ந்திடு மறைகள் போற்று மாதிதன் தீர்த்தம் போது சாந்தமொ டவிகள் தம்மைச் சதுர்முகன் முதல்வா னோர்க்கும் வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும் மன்னன் ஈந்திட வவற்றை அன்னோ ரியாவரும் அணிந்துட் கொண்டார். 82 ஆலமா மிடற்றோற் கான அமலமாம் பொருளை யேற்றுச் சீலமோ டணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து நந்தம் மூலமாம் வினைகட் கின்றே முடிபொருங் குற்ற தென்றார் மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்ப லாமோ. 83 அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்க டம்மைப் பனிவரை யிறைவன் றானும் பன்னியுந் தமரு ளாரும் எனைவரு மருந்தி மேற்கொண் டெல்லையில் இன்ப முற்றார் வினைவலி யொருவி மேலாம் வீடுபே றடைந்து வார்போல். 84 தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல் பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள். 85 சீருறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றங் கேளா ஆருயிர் முழுதும் நின்றே யனைத்தையு முணர்ந்து கூட்டும் பேரரு ளுடைய நாதன் பேதுறல் மடந்தை யென்னா மாரன்வந் துதிக்கும் வண்ணம் மனத்திடை நினைந்தா னன்றே. 86 நினைதரு மெல்லை தன்னில் நெடியமான் முதலா வுள்ள அனைவரு மருட்கை யெய்த அழுங்கிய இரதி நோக்கி மனமகிழ் சிறந்து கார்காண் மஞ்ஞையிற் களிப்ப அங்கட் குனிசிலை கொண்ட மாரன் கொம்மெனத் தோன்றி னானே. 87 முன்பொடு தோன்று மாரன் முதல்வியோ டிருந்த நாதன் பொன்புனை கமலத் தாள்முன் போந்தனன் தாழ்ந்து போற்றி என்பிழை பொறுத்தி யென்ன யாம்உனை முனியின் அன்றோ பின்பது தணிவ துள்ளம் பேதுறல் மைந்த என்றான். 88 எரிபுனை நமது நோக்கால் இறந்தநன் னுடலம் நீறாய் விரைவொடு போயிற் றன்றே வேண்டினள் இரதி யன்னாட் குருவமா யிருத்தி ஏனை உம்பரோ டிம்மபர்க் கெல்லாம் அருவினை யாகி யுன்றன் அரசியல் புரிதி என்றான். 89 செய்வினை முறையால் ஈசன் சித்தசற் கினைய கூறி அவ்வவன் அரசுஞ் சீரு மாணையும் வலியும் நல்கி மைவிழி யிரதி யோடு மன்னுதொல் புரத்துச் செல்ல மெய்விடை யுதவ அன்னோர் விரைந்துடன் தொழுது போனார். 90 இரதியும் மதனு மேக இந்திர நீலத் திட்ட அரியணை யிருந்த நாதன் அம்மையொ டிழிந்து அன்னேர் திருவுரு வுடைய மேலோர் தேவர்மா முனிவ ரெனோர் பரவினர் செல்லப் பூதர் பல்லியந் தெழிப்பச் சென்றான். 91 மன்னுயிர்ச் குயிராய் நின்றோன் மால்விடை யேறி மாதைக் தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக்கொடு நடத்தி வானோர் தொன்னிலை யமைந்து செல்லத் துவன்றியே கணங்கள் சுற்றப் பொன்னிய லிமையந் தீர்ந்து வௌ¢ளியம் பொருப்பில் வந்தான். 92 அன்னதோர் காலை மாலை அயனைவெற் பரசை வேள்வி மன்னனை அமரர் தம்மை முனிவரை மாத ரார்கள் என்னவர் தமையுந் தத்த மிடந்தொறு மேகும் வண்ணம் முன்னுற விடுத்தா னென்ப மூலமும் முடிவு மிலோன். 93 அடுகன லவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள் வடிவின னாதி யான வரம்பிலா உருத்தி ரர்க்குங் கடகரி முகத்தி னாற்குங் கணங்களில் தலைமை யோர்க்கும் விடையினை யுதவி ஐயன் வியன்பெருங் கோயில் புக்கான். 94 ஏறெனுங் கடவுள் மீதில் இம்மென இழிந்து அன்னோர் கூறுடை முதல்வி யோடுங் கோநகர் நடுவ ணெய்தி ஆறணி சடையெம் மண்ணல் அரியணைப் பீட மீதில் வீறொடு தொன்மை யேபோல் வீற்றிருந் தருளி னானே. 95 அன்பினர்க் கௌ¤வந் துள்ள ஆதியம் பரமன் மாது அன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந் துன்பகன் றிருபா லாகித் துவன்றிய உயிர்க ளெல்லாம் இன்பொடு போக மாற்றி இனிதமர் வுற்ற வன்றே. 96 ஆகத் திருவிருத்தம் - 850 - - - 11. தி ரு வ வ தா ர ப் ப ட ல ம் பற்பக லினைய வாற்றாற் படர்தலும் பின்னோர் வைகல் முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசைகாப் பாளர் சொற்படு முனிவர் வானோர் யாவருந் தொல்லை மேரு வெற்பினிற் குழுமிச் சூரால் மிகமெலிந் திரங்கிச் சொல்வார். 1 உலகினை அவுணர்க் கீந்தே யோகிபோல் வைகி நம்பால் மெலிவினைப் படுத்தி யாம்போய் வேண்டலும் இரக்க மெய்தி மலைமக டன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத் தலையளி புரியான் வாளா இருப்பதென் தாணு வானோன். 2 இவறலு மிகலு மின்றி யார்க்குமோர் பெற்றித் ததாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்குஞ் சிவனையாம் வெறுத்தல் குற்றஞ் சிறந்தநோன் பியற்றி டாதே தவறுசெய் தனமென் றெம்மை நோவதே தக்க தென்றார். 3 ஆயினு மவன்றாள் போற்றி அடையின்நன் கனைத்து மாகுந் தீயன வகலு மீது திண்ணமாம் அதனால் இன்னுங் காய்கதிர் மதிசூழ் கின்ற கயிலைய கிரியின் முக்கண் நாயகற் கிதனைக் கூற நாமெலாம் போது மென்றார். 4 போதர விசைந்த காலைப் பொன்னலர் கமலப் புத்தேள் மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டுந் தூதுவ னொருவன் றன்னைத் தூண்டிமுன் னறிது மென்றே ஊதையங் கடவு டன்னை நோக்கியீ துரைக்க லுற்றான். 5 வடவரை யதனில் மூன்று மாண்குவ டெறிந்து வௌவி உடல்சின வரவ முட்க உதவியி லுய்த்த மைந்த படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பண்ணவன் செயலை வௌ¢ளிக் கடிவரை நகரத் தெய்திக் கண்டனை மீடி யென்றான். 6 பல்லிதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றாள் வில்லுடை மதன வேளை விழித்தடு கடவுள் முன்னஞ் செல்லுவ தரிது செல்லில் தீமையே பயக்கு மென்பால் ஒல்லுவ தன்றிச் செய்கை உள்ளமும் வெருவு மென்றான். 7 கூற்றிது நிகழ்ந்த வேலைக் கோகன தத்து மேலோன் காற்றினுக் கரசை நோக்கிக் கம்பலை கொள்ளேல் யாண்டும் ஊற்றமொ டுலவல் செய்யு பொருவனை நீயே யன்றி வீற்றொரு தேவ ருண்டோ மேலிது புரிதற் பாலோர். 8 உற்றுழி உதவி செய்வோர் உலப்புறா தெவையும் ஈவோர் அற்றமில் தவத்தா றுற்றோர் அமர்புரி வீர ராவோர் மற்றொரு பொருளும் வெ•கார் வருத்தமு மோரார் ஆவி இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வ ரன்றே. 9 ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடு முதவிக் காகப் போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வே றேதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தீயின் காதலன் விடைகொண் டேகிக் கயிலைமால் வரையிற் சென்றான். 10 குன்றதன் புடையில் வீழுங் குரைபுன லாற்றின் ஆடி மன்றலங் காமர் காவின் மலர்மணம் அளாவி வாரித் தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை நின்றதோர் நந்தி காணூஉ வுரப்பினன் நெடிது சீறி. 11 பொற்பிரம் பொன்று பற்றிப் பொலன்முதற் கடையைப் போற்றி நிற்புறும் ஆணை வள்ளல் நெடுஞ்சினத் துரப்ப லோடுங் கற்பொழி யெழிலி கான்ற கனையொலி கேட்ட பாம்பின் முன்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான். 12 வேறு ஒல்லென வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன் எல்லையில அச்சமொ டிரங்கி யேயெழீஇத் தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன் மல்லலங் கழல்களை வணங்கிக் கூறுவான். 13 மாலயன் மகபதி வானு ளோரெலாம் ஆலமர் கடவுளை யடைதல் முன்னிநீ காலைய தறிந்தனை கடிது செல்கென மேலுரை செய்தனர் வினையி னேனுடன் 14 கறுத்திடு மிடறுடைக் கடவு ளாடலைக் குறிக்கரி தஞ்சுவல் குறுக என்றியான் மறுத்தனன் அனையர்தம் வருத்தங் கூறியே ஒறுத்தெனை விடுத்தன ருடைய வன்மையால். 15 ஆதலின் அடியனேன் அஞ்சி யஞ்சியே மேகு தென்றியாய் மெல்ல வந்தனன் ஓதிட நினைந்திலன் உனக்கு மற்றிது பேதைமை உயர்வினேன் பிழைபொ றுத்திநீ. 16 தானவர் தொழவரு தகையில் சூரனால் மானம தொருவியே வருத்துற் றோய்ந்தனன் ஆனதொன் றுணர்கிலேன் அறிவு மாழ்கினேன் கூனைய தேவரு மினைய நீரரே. 17 அறைதரு கணத்தரு ளாதி யாகிய இறைவநின் முனிவினுக் கிலக்குற் றாரிலை சிறியவென் பொருட்டினாற் சீற்றங் கோடியோ பொறைபுரிந் தருளெனப் போற்றி வேண்டினான். 18 ஆண்டகை நந்தியெம் மடிகள் அவ்வழி மூண்டெழு தன்பெரு முனிவு தீர்ந்தியாம் ஈண்டுநின் னுயிர்தனை யீதும் நிற்கலை மீண்டனை போகென விடைதந் தேவினான். 19 சீரிய நந்தியந் தேவன் ஏவலும் மாருதன் அவனடி வணங்கி வல்லையின் நேரறு கயிலையின் நீங்கி நீடுபொன் மேருவில் விண்ணவர் குழுவை மேவினான். 20 மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன் பூவடி வந்தனை புரிந்து நந்திதன் காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம் யாவதும் முறைபட இயம்பி னானரோ. 21 காற்றுரை வினவியே கமலக் கண்ணணும் நாற்றிசை முகத்தனும் நாகர் செம்மலுஞ் சாற்றருந் துன்பினர் தம்மி லோர்ந்திடாத் தேற்றமொ டினையன செப்பல் மேயினார். 22 எந்தைதன் செய்கைதோர்ந் தேகு நீயென வெந்திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கவன் நந்திதன் னாணையால் நடுக்க முற்றிவண் வந்தனன் அச்சுறு மனத்த னாகியே. 23 மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம் இன்னினி யேகியே ஈசன் றன்முனம் உன்னருங் காலமொ டுற்ற நங்குறை பன்னுதல் துணிபெனப் பலருங் கூறினார். 24 இவ்வகை யவரெலாம் இசைந்து செம்பொனின் மெய்வரை நீங்கியே வௌ¢ளி வெற்பினில் தெய்வதக் கோயின்முன் சென்று நந்தியை அவ்விடை தொழுதிவை அறைதல் மேயினார். 25 வேறு நந்திந் தேவுகேள் நங்கள்பால் துன்பெலாஞ் சிந்தைசெய் திடுதியத் தேவதே வற்கியாம் வந்தவா றோதியே வல்லைநீ எமையவன் முந்துறக் காட்டெனா முகமனோ டுரைசெய்தார். 26 மற்றிவா றுரைசெய்யும் வானவத் தொகையினை நிற்றிரால் என்றவண் நிறுவியே உறையுள்போய்ச் கற்றைவார் சடைமுடிக் கண்ணுதற் கடவுடன் பொற்றடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான். 27 அண்ணலே உனதுபொன் னடிகளைக் காணிய விண்ணுளோர் யாவரும் வேந்தன்மா லயனொடு நண்ணினா ரென்றலும் நந்தியைத் தெரிகுறீஇத் கண்ணிலா வேணியான் தருதியென் றருள்செய்தான். 28 அருள்புரிந் திடுதலும் ஆதியம் பண்ணவன் திருமலர்த் தாள்களைச் சென்னியிற் சூடியே விரைவுடன் மீண்டுறா வேதன்மா லாதியாஞ் சுரரெலாம் வம்மெனத் தூயவன் கூவினான். 29 கூவியே அருடலுங் கொண்டல்பே ரொலியினால் தாவிலா மகிழ்வுறுஞ் சாதகத் தன்மையாய்ப் பூவினா யகன்முதற் புகலும்வா னவரெலாந் தேவதே வன்முனஞ் செல்லுதல் மேயினார். 30 அம்மையோர் பங்குற அரியணைக் கண்ணுறும் எம்மையாள் இறைவன்முன் னெய்தியே ஆங்கவன் செம்மைசேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்தெழீஇப் பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார். 31 வேறு நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர் வாக்கினும் அமைகிலை மதிப்ப வொண்கிலை நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ ஆகிய மாயமீ தறிகி லேமரோ. 32 இருமையு மொருமையும் இரண்டு மொன்றிய ஒருமையு மன்றென உலகம் யாவையும் பெருமையின் இயற்யி பெரு நின்செயல் அருமறை யானவும் அறிதற் பாலவோ. 33 உருவொடு தொழில்பெய ரொன்று மின்றியே பரவிய நீயவை பரித்து நிற்பது விரவிய வுயிர்க்கெலாம் வீடு தந்திடுங் கருணைய தேயலாற் கருமம் யாவதே. 34 அவ்வுயிர் யாவுநின் னருளி லாவழிச் செய்வினை புரிகில சிறிதும் ஆதலால் வெவ்விய நயப்பொடு வெறுப்பி லாதநீ எவ்வகை யோவுல கியற்றுந் தன்மையே. 35 முன்னதின் முன்னென மொழிது மேயெனிற் பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால் அன்னவை யேயெனில் ஒழிந்த தல்லையோ என்னென நின்னையாம் ஏத்து கின்றதே. 36 புல்லிய புரம்பொடித் ததுவுங் காமனை ஒல்லென எரித்ததும் உனக்குச் சீர்த்தியோ எல்லையில் விதிமுத லெனைத்தும் ஈண்டுநின் நல்லருள் ஆணையே நடாத்து மென்கையால். 37 எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை எங்களை இவ்வர சியற்று வித்தனை எங்களொ டொருவனென் றிருத்தி நின்செயல் எங்களின் அறிவரி தென்று போற்றினார். 38 வேறு அவ்வகை இமர ரெல்லாம் அன்சய் தேத்து மெல்லை மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி நொவ்வுற லெய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட் கின்னே எவ்வர மெனினும் ஈதும் வேண்டிய திசைத்தி ரென்றான். 39 என்றலும் அமரர் சொல்வார் யாமெலா மிந்நாள் காறும் வன்றிறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி நன்றிகொள் தொல் ஆக்கம் நண்ணுவா னாக நின்பால் ஒன்றொரு வரம்வேண் டுற்றாம் அதனியல் புரைத்து மன்றே. 40 மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகும் அம்மையை மணந்த தன்மை ஆங்கவள் இடமா ஈங்கோர் செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட் டுள்ள எம்மையாளு வதற் கேதுக் காட்டிய இயற்கை யல்லால். 41 ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும் ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார். 42 வந்திக்கு மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப் புந்திக்குள் இடர்செய் யற்க புதல்வனைத் தருது மென்னா அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்கு தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான். 43 நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் ணென்ன நீடும் அற்புத நீர ராகி அருள்முறை யுன்னிப் போற்றச் சிற்பரன் றான்கொண் டுள்ள திருமுகம் ஆறு தன்னில் பொற்புறு நுதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான். 44 ஆவதோர் காலை ஈசன் அறுமுக நுதற்கண் மாட்டே மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா வுள்ளோர் ஏவரும் அணுகல் செல்லா எல்லைதீர் வெம்மைத் தாகிப் பூவுல கண்ட முற்றும் பொள்ளெனப் பராய வன்றே. 45 மாதண்டங் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள் கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்துணர் வரிய சோதி வேதண்டம் பரவிற் றென்ன மேதினி சூந்ந்து விண்போய் மூதண்டங் காறுஞ் சென்ற முதல்வன்கண் ணுதலிற் செந்தீ. 46 வேறு மங்கையோர் பங்குடை வள்ளல் ஏந்திய செங்கனல் ஊழியிற் செறிவ தாமென அங்கவன் விழிபொழி அனலம் யாவையும் எங்குள வுலகமும் ஈண்ட லுற்றவே. 47 ஆங்கனந் தழலெழ அகில முற்றுமாய் ஓங்கிய கால்களும் உலைவுற் றோய்ந்தன வாங்கிய திரைக்கடல் வறந்த தாயிடைத் தீங்கனல் வடவையுஞ் செருக்கு நீங்கிற்றால். 48 பக்கன பாரகம் பதலை முற்றுற நெக்கன பணிகள்மெய் நௌ¤த்து நீங்கிய திக்கயம் அரற்றியே தியக்க முற்றன தொக்கன உயிர்தொகை துளக்க முற்றவே. 49 காரண மில்லவன் கண்ணிற் கான்றதீப் பேரருள் புரிந்திடப் பிறந்த பான்மையால் ஓருயிர் தன்மையும் ஒழிவு செய்தில ஆரையும் எவற்றையும் அச்சஞ் செய்தவே. 50 அன்னதன் வெம்மைகண் டமலன் பாங்குறை கன்னியும் வியர்த்தனள் கலங்கி யேயெழீஇப் பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத் தன்தோ ருறையுளைச் சார ஓடினாள். 51 முண்டக னாதியா முன்னர் நின்றுள அண்டர்கள் யாருமவ் வழல்கண் டஞ்சியே விண்டனர் தலைத்தலை வெருவி யோடினார் பண்டெழு விடத்தினாற் பட்ட பான்மைபோல். 52 தீங்கனல் அடர்தலுஞ செம்பொற் கோயிலின் யாங்கணு மாகியே இரிந்த பண்ணவர் வீங்கிய வுயிர்ப்பொடு மீண்டும் எந்தைதன் பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார். 53 வலைத்தலை மானென வன்னி சூழ்ந்துழித் தலைத்தலை இரிந்துளோர் தம்மின் மீள்குறா நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர் கலைத்தனை அகன்றிடாக் காகம் போலவே. 54 தோற்றிய நுதல்விச் சுடரின் சூழ்வினுக் காற்றல ராகியே அடைந்த வானவர் நாற்றடம புயமுடை ஞான நாயகற் போற்றிசெய் தினையன புகல்வ தாயினார். 55 வெந்திற லவுணரை வீட்டு தற்கொரு மைந்தனை அருள்கென வந்து வேண்டினேம் அந்தமிர் அழலைநீ யருடல் செய்தனை எந்தையே எங்ஙனம் யாங்க ளுய்வதே. 56 பங்குறை உமையவள் வாயி யின்வரு கங்கையெவ் புலகமுங் கலந்த தாமென இங்குநின் னுதல்விழி யிருந்து நீங்கிய பொங்கழ லெங்கணும் பொள்ளென் றீண்டியே. 57 கற்றையஞ் சுடர்பொழி கனல்க ளின்றொகை சுற்றியெவ் வுலகமுந் துவன்ற லுற்றவால் மற்றொரு கணத்தவை மாற்றி டாயெனின் முற்றுயிர்த் தொகையையும் முடிவு செய்யுமால். 58 விஞ்சிய பேரழல் வெம்மை யாற்றலா தஞ்சினம் இரிந்தயாம் ஐய நின்னிரு செஞ்சரண் அடைந்தனம் தெரியின் நீயலால் தஞ்சம துளதுகொல் எம்மைத் தாங்கவே. 59 மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும் உலக்குற நீக்குநீ யொல்லை எம்மிடை அலக்கண தியற்றுதி யாயின் அன்னதை விலக்குறு நீரினார் வேற யாவரே. 60 நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும் இறைமுடிக் கின்றவிவ் வெரியை நீக்கியே பிறைமுடிக் கொண்டிடு பெரும எம்முடைக் குறைமுடித் தருளெனக் கூறி வேண்டினார். 61 அஞ்சலி னவர்புகழ் அண்ண லாதியோர் அஞ்சலி செய்திவை யறைந்து வேண்டலும் அஞ்சலி லஞ்சடை யணிந்த நாயகன் அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான். 62 பொன்மலை வில்லினான் புதிதின் வந்திடு தன்முகம் ஐந்தையுங் கரந்து தாவில்சீர் நன்முக மொன்றொடு நண்ணி யத்துணைத் தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான். 63 தன்னருள் நிலைமையாற் சண்மு கத்திடை நன்னுதல் விழிகளின் நல்கு தீப்பொறி இந்நில வரைப்புவான் ஈண்டல் உற்றவை முன்னுற வரும்வகை முதல்வன் முன்னினான். 64 அந்தியம் பெருநிறத் தமலன் அவ்வகை சிந்தைகொண் டிடுவழிச் செறிந்த பேரழன் முந்தையின் வெம்பொறி மூவி ரண்டவாய் வந்து முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான். 65 ஆதகு காலையில் அமரர் தங்களுள் ஓதகு செயலிலா உலவைத் தேவையும் மூதகு தீயையும் முகத்தை நோக்குறா மேதகு கருணையால் விமலன் கூறுவான். 66 நீங்களிச் சுடர்களை நெறியிற் றாங்கியே வீங்குநீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை ஆங்கவள் சரணம் அமர வுய்க்குமால் ஈங்கிது நும்பணி யென்றி யம்பினான். 67 கூற்றுயி ருண்டதாட் குழகன் இவ்வகை சாற்றிய துணர்தலுந் தாழ்ந்து மும்முறை போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர் காற்றொடு கனலிவை கழறல் மேயினார். 68 ஒருநொடி யளவையின் உலகம் யாவுமாய்ப் பெருகிய இத்தழல் பெரும நின்னுடைத் திருவருள் நிலைமையாற் சிறுகிற் றாதலால் அரிதரி தடியரேம் ஆற்ற லாகுமோ. 69 ஈற்றினை யுலகினுக் கிழைக்கு நின்கணே தோற்றிய கனலினைச் சுமத்தற் கோர்கணம் ஆற்றலை யுடையரோ அவனி கேள்வனும் நாற்றிசை முகமுடை நளினத் தேவுமே. 70 பண்டெழு விடத்தினிற் பரந்த தீச்சுடர் கண்டலும் நின்றிலங் கவலுற் றோடினம் அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக் கொண்டனம் ஏகுதல் கூடற் பாலதோ. 71 அப்பெருங் கனலினை அடைதற் குன்னினும் வெப்புறும் எமதுளம் வியர்க்கும் யாக்கையும் எப்பரி சேந்துவம் யாங்கள் என்றலுந் துப்புறழ் படர்சடைப் பகவன் சொல்லுவான். 72 ஒன்றொரு நொடியினின் உலக முற்றுமாய்த் துன்றிய இச்சடர் சுமர்ந்து கங்கையிற் சென்றிட நுங்கள்பால் திண்மை யெய்துக என்றலும் நன்றென இசைந்து போற்றினார். 73 மற்றது தெரிதலும் மால யன்முதற் சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்குறா இற்றது கொல்லெம தின்னல் இன்றெனா உற்றனர் உவகையை யுடலம் விம்மினார். 74 ஆங்கனம் அவர்தமை ஆதி நோக்கியித் தீங்கனல் சரவணஞ் செறிந்தொர் செம்மலாய் ஓங்குபு சூர்கிளைக் கொழிவு செய்யுமால் ஈங்கினி யாவரும் ஏகு வீரென்றான். 75 இறையவன் இனையன இயம்ப உய்ந்தனங் குறையிலம் இனியெனக் கூறிக் கஞ்சமேல் உறைபவ னாதியாம் உம்பர் அன்னவன் அறைகழ லடிதொழு தங்கண் நீங்கினார். 76 முன்னுற மாருதன் முதல்வன் றாள்களை வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ் சென்னியின் மேறகொடு சேறல் மேயினான். 77 அரனுறு கடிநகர் அதனைத் துர்ந்தொராய் எரிகெழு சுடர்முடி யேந்தி மாருதன் வருதலும் அயன்முதல் வானு ளோரெலாங் கருதரு மகிவொடு கண்டு கூறுவார். 78 செந்தழல் மேனியன் தீயின் வண்ணமாத் தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால் உய்ந்திட யாமெலாம் உலகின் முன்னரே வந்திடும் வீரனாம் மதலை மானவே. 79 தொன்னிலை யாம்பெறச் சூரன் பாடுற இன்னமுஞ் சில்பகல் இருத்த லால்அரன் தன்னிகர் திருமகன் சரவ ணத்திடை மன்னுபு குழவியாய் வளர நல்கினான். 80 போற்றலர் புரமடு புனித நாயகன் ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால் ஏற்றதோர் சான்றிவண் எரியைத் தந்ததுஞ் சாற்றருங் கருணையிற் றலைமை யானதே. 81 என்றிவை பற்பல இயம்பி இன்னினிப் பொன்றினர் அவுணர்கள் புலம்பு நங்குறை நன்றிவண் முடிந்தது நாமும் அத்தடஞ் சென்றிடு வாமெனச் செப்பி னாரரோ. 82 உருப்பம தாகிய ஔ¤று தீஞ்சுடர் தரிப்பதோர் மருத்துவன் றம்முன் சென்றிடத் திருப்பயில் மான்முதற் றேவர் வௌ¢ளியம் பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார். 83 இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர் பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன் மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால் திறற்படு வன்னிதன் சென்னி செர்த்தினான். 84 சேர்த்தலும் ஒருபதந் தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய் ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த் தானரோ. 85 கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந் துய்த்திடும் ஆர்சுடர்த் தொகுதிவந் தடைய முவெயில் ஊர்சுடச் சிவந்தகண் ணொருவன் துப்புறழ் வார்சடைக் கரந்தென வறந்த கங்கைநீர். 86 அரனருள் முறையினை யறிந்து கங்கைதன் சிரமிசை யேந்தியே சென்றொர் கன்னலிற் சரவண மெனுந்தடந் தன்னிற் சேர்த்தனன் மரையீத ழாயிடை மல்குற் றாலென. 87 ஆவயின் காறும்வந் தரிய யன்முதல் தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர் மேவர அணியதாம் விளைவு நாடியே காவல்கொள் நிரப்புடைக் காத லோரென. 88 ஆரணன் விண்ணகம் அச்சு தன்புவி வாரணன் முதலிய மாதி ரத்துளோர் ஏரண வமரர்கள் எண்டிக் காதியே சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். 89 வேறு கங்கையு மொல்கப் புக்க கடுங்கனற் கடவுட் சோதி அங்கிரு மூன்று முன்னர் அம்மைவாழ இமையச் சாரற் அங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கட் புங்கவன் அருளாள் தொன்மை போன்றது வறத்த லின்றி. 90 விண்ணிடை யிழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும் வண்ணவொண் கமலஞ் செய்ய முளரியை மாற தாகத் தண்ணரி யோடு நல்கித் தரித்தெனச் சரவ னப்பேர்க் கண்ணகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைச்கொண் டன்றே. 91 அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய. 92 தோன்றல்வந் திடலும் வின்பால் துந்துபி கறங்க லுற்ற ஆனறதொல் மறைக ளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும் வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி ஏன்றெமை யருளு கென்றே ஏத்திசை யெடுத்துச் சூழ்ந்தார். 93 ஏவர்தம் பாலு மின்றி யெல்லைதீர் அமலற் குற்ற மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப் பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகும் ஐயன் ஆவிகள் அருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே. 94 மல்லலம் புவனத் துள்ள மன்னுயிர்க் கணங்கட் கெல்லாம் ஒல்லையின் மகிழ்ச்சி யெய்தி உவகையின் குறிப்புண் டான தொல்லையில் அவுண னாகுஞ் சூரனே முதலா வுள்ள எல்லவர் தமக்கும் மாயும் இருங்குறிப் புற்ற அந்நாள். 95 மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே. 96 பாங்குறு தருச்சூழ் காலாப் ப•றழைச் சினைமென் கொம்பர் நீங்கறப் புடையோய் வானின் நிரந்தரன பந்த ராகத் தூங்கிய பழனுங் காயுந் துணர்களும் அகத்துட் டுன்ன ஆங்கதன் நடுவட் பொய்கை அணிநிழல் அமர்ந்தான் ஐயன். 97 முடிபொறா தசையும் நாகர் முதியகால் பலகை வையந் தொடர்கரை மரனே வானந் தூங்குபன் னாணந் தெண்ணீர்த் தடமலர் பாய லாகச் சரவண மஞ்ச மீதில் அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா னன்றே. 98 எண்பெரு நாகர் சேடன் ஏந்தெழில் அரிமா னாகத் தண்பொலி புனற்பூம் பொய்கை தவிசுரு வாக நாள்கோள் விண்படர் விதான மாக வேலையந் தலைவன் காலை ஒண்பகல் ஆடி காட்ட உமைமகன் அங்கண் உற்றான். 99 தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய்கை தன்னில் விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செவ்வேள் பெருவடி வமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்ணென் றெரிசுடர் விளக்கத் துச்சி இருந்திடும் ஈசன் போன்றான். 100 பெருந்தரை நடுவ ணாகிப் பிறங்கிய சரவ ணத்தில் இருந்தனிக் கமல மொன்றில் குமரவேள் இருந்த பான்மை திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக புரந்தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும். 101 பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக வீசுசை வலங்கா ராக வேறுசூழ் கமல மெல்லாம் மாசறு பகலோ ராக அவற்றிடை மார்ந்த கஞ்சந் தேசுடை இரவி யாகச் சிவனெனச் சேய்அங் குற்றான். 102 மாலயன் எழிலி மேலோன் வானவ ரேனோர் யாரும் பாலுற மரனு மாவும் பறவையும் பிறவுஞ் சூழ ஏலுறு குமரன் கஞ்சத் திருந்தது பரமன் ஆதிக் காலையின் உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும். 103 சலங்கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில் நலங்கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறைமேல் வீட்டிப் புலங்கிளர் உயிர்கள் நல்கப் பொருந்துநற் பகலின் முன்னர் இலங்கெழிற் பதும பீடத் தேறிய இயற்கை போலும். 104 முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ் வண்டுளர் கமலக் காடு வான்புனற் றடத்தின் நிற்றல் அண்டர்கள் முதல்வ ஓர்பால் அன்றியெம் மெல்லாம் பீடங் கொண்டருள் முறையி னென்று நோற்றிடுங் கொள்கைத் தன்றே. 105 அணங்குசெய் தோற்றத் துப்பின் அவிர்சுடர்க் குமரற் சூழ மணங்கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச் சேர்வான் தணங்கெழு புனலிற் புக்குத் தபனன்மேல் நாட்டஞ் சேர்த்தி நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்றவண் நிற்றல் போலும். 106 ஒண்ணகை யுயிர்க்குஞ் சங்க பொருசில கமலம் வைகத் தண்ணுறு நறவைப் ப•றாட டாமரை பரித்துச் சூழ்தல் அண்ணலம் பொய்கை தற்சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப எண்ணெயுஞ் சங்கஞ் சூழ இட்டது போலு மன்றே. 107 ஆரமும் வனசத் தோடும் அணிமக ரந்தச் சேறும் வேரியம் பூந்தண் தேனும் முறைமுறை வீசிக் கையாற் சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல் வாரியந் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும். 108 பங்கயச் செம்மற் போது பதனழிந் தவிழ்ந்து பாங்கர் அங்குள இலைமேல் வீழ அவைபுறத் தசையும் நீர்மை சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும்பூந் தட்டில் துங்கநல் விளக்க மாட்டித் திரைக்கையாற் சுலவல் போலும். 109 காசுறழ் பதுமப் போது களாசிய தாக மீச்செல் பாசடை கவிகை யாகப் பலநனை விளக்க மாக வீசிகள் கவரி யாக மிழற்றுபுள் ளியம தாக மாசறு பொய்கை சேய்க்கு வளம்பட ஒழுகிற் றன்றே. 110 அழல்நிவந் தன்ன கஞ்சத் தகல்தடத் திரைகள் நாப்பண் உழிபட ராது சூழ்போந் துலவுவ தானை நீரால் விழுமிய குமரன் பொய்கை வௌ¤யுறா தமர ரிட்ட எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும். 111 கொன்படை சேவ லாகும் எகினமோர் கோடி ஈசன் தன்பெருங் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை பொன்பிறழ் பதுமன் செய்கை புரியுநாள் ஊர்தி யாவல் என்புடை யிருத்தி யென்றே தமித்தமி இரத்தல் போலும். 112 வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத் தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான் உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ. 113 தீர்த்திகை*க் கங்ககை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல்**நோக்கி ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங் கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார். 114 ( * தீர்த்திகை - தீர்த்தத்தையுடையது. ** குமாரக் கடவுள் பின்னரும் பற்பல திருவிளையாடல்களைச் செய்யப் போகின்றார். ஆதலின், இவ்விளையாட்டை 'முதற்புரியாடல்' என்றார். ) சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத் தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப் போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார். 115 மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும் நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான். 116 ( * ஆரலாகும் மாதர் மூவிருவர் - ஆறு உருவமுடைய கார்த்திகை மாதர்கள். ) ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான். 117 உண்டபின் அறுவ ராகும் ஒருபெரு முதல்வன் றன்னைத் தண்டழை பொதுளும் நீபத் தண்ணிழற் பொய்கை தன்னில் வண்டயி லுறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக் கண்டுயில் செய்வித் தேத்தக் கருணையால் இனைய செய்வான். 118 துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற் பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத் தயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல் இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான். 119 ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். 120 ஆடவோ ருருவம் செங்கை அறையவோ ருருவம் நின்று பாடவோ ருருவம் நாடிப் பார்க்கவோ ருருவம் ஆங்கண் ஓடவோ ருருவம் ஓர்பால் ஔ¤க்கவோ ருருவம் யாண்டுந் தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான். 121 இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில் பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல் வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான். 122 சிற்பர னாகி வந்த செய்யவேள் ஆடற் றன்மை பற்பல திறமும் நாடிப் பங்கயத் தயனு மாலுஞ் சொற்படு மகத்தின் தேவும் முனிவருஞ் சுரரும் யாரும் அற்புத மகிழ்ச்சி கொண்டாங் கின்னவா றறைத லுற்றார். 123 சேயிவன் ஒருவ னேபல் சிறாருருக் கொண்டு நம்முன் ஏயெனு மளவை தன்னில் எண்ணில்பே த்த னாகும் ஆயினிக் குமரன் ஆடல் அறிவரி தெமக்கும் எல்லா மாயமு மியற்ற வல்லன் வரம்பிலா அறிவன் மாதோ. 124 கைப்பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும் இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார் செப்பியென் வேறி யாமுஞ் செய்ததொன் றில்லை அன்னான் ஒப்பறு பரனே ஆம்என் றுரைசெய்து தொழுது நின்றார். 125 அழலெனும் மீன வர்க்கத் தறுவருங்*குமரன் ஆடல் முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக் குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால். 126 ( * அழல் எனும் மீனவர்க்கத்தறுவரும் - கார்த்திகை மாதர்கள் அறுவர்களும். அழல் - கார்த்திகை. ) அம்புயம் உறழுஞ் செங்கேழ் அறுமுகம் படைத்த கோல நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அங்கண் எம்பெரு முதல்வி தன்பால் இலக்கத்தொன் பதின்மர் செவ்வேள் தம்பிய ராகி வந்த தன்மையை விளம்ப லுற்றாம். 127 ஆகத் திருவிருத்தம் - 977 - - - 12. து ணை வ ர் வ ரு ப ட ல ம் நஞ்ச யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும் வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை செஞ்சி லம்படி தக்கலின் நவமணி சிதற அஞ்சி யோடினள் இத்திற முணர்ந்தனள் அகத்துள். 1 மாய வன்முதல் அமரர்கள் ஈசனை வணங்கி நீயொர் மைந்தனைத் தருகென நெற்றிநாட் டத்தால் ஆய வன்சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான் ஏயி னான்சர வணத்தெனத் தெரிந்தனள் இறைவி. 2 அன்ன தற்பினர் உமையவள் எனதுபால் அமலன் தன்ன ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த பொன்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேளிர் பன்னி யர்க்கெலாம் புதல்வரின் றாகெனப் பகர்ந்தாள். 3 இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டேகிச் சமயம் யாவையும் நிறுவிய கண்ணுதற் றலைவன் அமல மாந்திரு முன்னர்வந் தரிக்குமுன் னரிதாங் கமல மார்அடி கண்டனள் பணிந்துகண் களித்தாள். 4 உம்பர் யாவருங் குறையிரந் திடலுநீ யுதவுஞ் செம்பொ றித்தொகை யாற்றலும் வெம்மையுந் தெரிந்து வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்றிவண் மீண்டேன் எம்பெ ருந்தகை அவ்வழல் நீக்கலா லென்றாள். 5 கன்னி இங்ஙனம் பகர்தலுங் கருணைசெய் தருளித் தன்னி டத்தினில் இருத்தினன் இருந்திடு தையல் முன்னம் ஓடலிற் சிதறுநூ புரமணி முழுதும் என்னை யாளுடை நாயகன் முன்னிலங் கினவால். 6 தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து மிளிரு மந்நவ மணிகளின் ஆணையால் விமலை ஔ¤ரு நல்லுருத் தோன்றின ஐம்முகத் தொருவன் தௌ¤ரு முச்சுடர் அகத்திடை யமர்ந்திடுஞ் செயல்போல். 7 எண்ணி லாநவ மணிகளின் உமையுரு வெனைத்துங் கண்ணி னாற்றெரிந் தருளினால் வம்மெனக் கழற அண்ண லோர்வகை மணிக்கொரு சத்திக ளாக நண்ணி னார்நவ சத்திகள் அமரர்நற் றவத்தால். 8 பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன் திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை விருப்பம் வைத்தலும் முனிவர்தம் மகளிற்போல் விரைவில் கருப்ப முற்றனர் யாவதும் உமையவள் கண்டாள். 9 முனம்பு ரிந்துல களித்தவள் அனையர்பால் முதிருஞ் சினம்பு ரிந்திவண் எமக்குமா றாகிய திறத்தால் கனம்பு ரிந்தஇக் கருப்பமோ டிருத்திர் பல்காலம் இனம்பு ரிந்தநீர் யாவரு மென்றுசூள் இசைத்தாள். 10 ஆவ தெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண் மேவு மாதர்மெய் வியர்த்தனர் அவியிர்ப் பதனில் தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல் ஒவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார். 11 வடுத்த னைப்பொருங் கண்ணினர் வியர்ப்பினில் வந்தாங் கடுத்த மானவர் ஓரிலக் கத்தரும் அசனி கடுத்த சொல்லினர் பொற்றுகி லுடையினர் கரத்தில் எடுத்த வாளினர் பலகைய ராகிஈண் டினரால். 12 அனையர் யாவரும் ஈசனை யடைந்தனர் அன்புற் றினிய வாகிய அமலன்நா மங்களை யேத்தி வனைக ருங்கழல் வணங்கிமுன் நிற்றலும் மற்றப் புனித நாயகன் அவர்தமை நோக்கியே புகல்வான். 13 மைந்தர் கேண்மினோ நீவிர்கள் யாவரும் வயத்தால் இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது கந்த வேள்படை யாகுதிர் என்னவே கழறி முந்து பேரருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். 14 இன்ப நீருடன் இவையருள் புரிதலும் இலக்கம் நன்பெ ருந்திறல் மைந்தர்க ளாயினோர் நாளும் அன்பு மேதகு பரிசன ராகியே அமலன் முன்பு நீங்கலா தொழுகினர் செய்பணி முறையால். 15 மாற்ற ருஞ்சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத் தோற்று நன்மணி யுருவமாந் தோகையர் துளங்கிப் போற்றி வந்தனை செய்துபின் அவள்பணி புரிந்தே ஆற்று தொல்கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார். 16 இகலு மாமணி மகளிர்தங் கருவினுள் இறைவற் புகழும் நந்தியங் கணத்தவர் குழவியாய்ப் போந்து நிகரில் காளைய ராகிவீற் றிருந்தனர் நெறிசேர் சுகன்எ னும்படி பரமனை முன்னியே தொழுது. 17 அரத னங்களில் தோன்றிய மங்கையர் அகட்டிற் கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப் புரியும் யோகுட னிருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப் பரம தாதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார். 18 இருவர் தம்மையும் பணிந்தவர் இன்றுகா றினைய கருவின் நொந்தனம் இன்னினி யாம்பரிக் கல்லேம் அருள்பு ரிந்திடு மென்றலும் ஆதியங் கடவுள் பரிவி னால்உமை திருமுகம் நோக்கியே பகர்வான். 19 ஏல வார்குழற் கவுரிநின் செய்யதா ளிடையிற் சாலு நூபுரத் துதித்தவர் உனதுசா பத்தாற் சூலி னான்மிக மெலிந்தனர் பற்பகல் சுமந்தார் பால ரைப்பெற இனியருள் புரிகெனப் பணிந்தான். 20 இறைவன் இங்கிது பணித்தலும் நன்றென இசையா முறுவல் செய்துமை மாதரை நோக்கிமொய்ம் பினரைப் பெறுதி ரால்இனி யென்றலும் அவர்வயிற் பெயரா துறையும் யோகுடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார். 21 மறத்த லில்லதோ ருணர்வுடை வீரர்கள் மற்றித் திறத்தை நாடியே யோகுவிட் டுளமகிழ் சிறப்ப இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப் பிறத்த லுன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார். 22 பரிபு ரந்தனின் முன்வரு மங்கையர் பரைதன் கருணை கொண்டசொற் கேட்டலுங் கவற்சியை அகன்று விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண் டொருவி மைந்தரை அளித்தனர் யாவரு மொருசார். 23 நந்தி தண்கண முதல்வர் களாகியே நணியோர் பந்த நீங்கியே சனித்தனர் ஒன்றிலாப் பதின்மர் எந்தை யாரருள் பெயர்கொடே இருநில வரைப்பில் சுந்த ரன்விடை முகத்தவன் றோன்றிய வாபோல். 24 பேர ஆகுவை யுடையவன் இளவல்பே ரருளால் சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான் கூர வாகுறுஞ் செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப. 25 விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படையாங் கரள வல்லிருள் அகற்றுவான் எழுந்தவெண் கதிர்போல் திரள வல்லினை அனையபூண் முலையுடைத் தெய்வத் தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே. 26 மக்கள் வானவர்க் கருந்துயர் புரியும்வல் லவுணர் தொக்க வீரமா மகேந்திரப் பெருவளந் தொலையச் செக்கர் நூபுரப் புட்பரா கத்திபாற் சிறப்பால் தக்க வீரமா மகேந்திரன் வந்தவ தரித்தான். 27 ஆத வத்தனிக் கடவுளும் வடவையா ரழலுஞ் சீத ளப்புது மதியமும் வௌ¢குறத் திகழ்கோ மேத கத்தமர் பாவைபால் விண்ணவர் புரியும் மாத வத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான். 28 தான மாநிலத் தேவர்கள் மகிழ்வுறத் தகுவ ரான பேரெலா முடிவுற அறந்தலை யெடுப்பக் கானல் பேர்வயி டூரிய மின்னிடைக் கழற்கால் மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான். 29 சூர ராக்கமுந் துணைவர்தம் மாக்கமுஞ் சூழுந் தீர ராக்கமும் வானவ ரேக்கமுஞ் சிதைய வார ராக்கமழ் கொன்றைவே ணியன்அரு ளதனால் வீர ராக்கதன் வந்தனன் வயிரமெல் லியல்பால். 30 கரக தத்தனி மால்வரை எடுத்தொரு கணத்தில் புரக தத்தினை இழைத்தவன் அருளினாற் புணரிக் குரக தத்திடைப் பைங்கனல் கொம்மென எழல்போல் மரக தத்திபால் வீரமார்த் தாண்டன் வந்தனனே. 31 மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித்தேர் வெய்ய தானவர் ப•றொகை இமைப்பினில் விளிய மொய்யி னார்த்தடு மானவன் பவளமா மொழிப்பேர்த் தையல் தன்வயின் வலியவீ ராந்தகன் சனித்தான். 32 கந்து தித்திடும் வியன்நர மடங்கலுங் கடலின் முந்து தித்திடும் ஆலமும் வடவையும் முரண நந்து தித்தநற் களமணிப் பாவைநற் றவத்தால் வந்து தித்தனன் வீரதீ ரப்பெயர் வலியோன். 33 இந்த வீரரொன் பதின்மரும் ஈசன தருளால் தந்தம் அன்னையர் நிறங்கொடே பொலந்துகில் தாங்கி வந்து பற்பகல் வளர்தரும் உறுப்பொடு மடவார் உந்தி யின்வழி நான்முகத் தண்ணல்போல் உதித்தார். 34 வேறு உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுட னுறைந்த நாதன், பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி, மதியுடையர் திறலுடையர் மானவருங் கலத்தினர்நம் மைந்தர் இன்னோர், புதியரலர் நந்திதனிக் கணத்தவரென் றான்சுருதிப் பொருளாய் நின்றான். 35 தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாஞ் சிவன் வெவ்வேறு, தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கந் தனயரோடு, நீவிர்களு மொன்றிநுங்கட் கிறையவனா கியசேயை நீங்க லின்றி, ஏவலன் பணித்தனசெய் தொழுகுதிரென் றான்அவரும் இசைந்து தாழ்ந்தார். 36 ஓன்பானாம் இலக்கத்தோர் ஓரிலக்கத் தோர்தம்மோ டொன்றிப் புல்லி, அன்பாகி எம்பெருமான் சினகரத்தை அகலாமல் அங்கண் வைக, மென்பானல் புரையும்விழிச் சத்திகளொன் பதின்மர்களும் விமலக் கன்னி, தன்பாலை யிகவாமல் அவள்பணித்த தொழில்பரிந்து சார்த லுற்றார். 37 ஆகத் திருவிருத்தம் - 1014. - - - 13. ச ர வ ண ப் ப ட ல ம் ஏற்ற மானவர் ஒன்றொழி பதின்மரோ டிலக்கர் தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம் ஆற்றல் சேர்புனற் சரவணத் தடந்தனில் அறுவர் போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம். 1 தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வௌ¢ளிப் பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர் கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப் பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான். 2 பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச் செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை இம்ம லைக்கணே உய்க்குதும் வருகென இசைத்தான். 3 வேறு செமபுலி யதளினான் செப்பிற் றோர்தலும் அம்பிகை யுவகையோ டன்பு கொண்டேழீஇ நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும் எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றாள். 4 கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா மைம்மலி மிடறுவடை வான நாயகன் இம்மென அவளொடும் ஏற தேறினான். 5 நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு நந்திவந் திடுதலும் நாக மேலுளார் நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார். 6 அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச் கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர் எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர் வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார். 7 ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத் தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால் கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன் நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார். 8 சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி கல்லென இரங்குறு கரடி காகளஞ் செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம் பல்லியம் இயம்பின பாரி டங்களே. 9 வேறு வேத நான்குங் குடிலையும் வேறுள பேத மாய கலைகளும் பேரிசை நாத மோடு நணுகின விஞ்சையர் கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். 10 வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக் கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல் வௌ¢ளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார். 11 சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப் பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும் நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப் புகரில் சாமரம் பூதர்கள் வீசினர். 12 சீறு மால்கரி சீயம் வயல்புலி ஏறு பூட்கை இரலையெண் கேமுதல் வேறு கொண்ட வியன்முகச் சாரதர் நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினர். 13 இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந் திமில விண்புனல் நக்கிச் சிதறுவ அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால் கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே. 14 அன்ன காலை அகிலமும் ஈன்றருள் கன்னி தன்னொடு காமர்வௌ¢ ளேற்றின்மேல் மன்னி வைகு மதிமுடி வானவன் தன்ன தாலயத் தைத்தணந் தேகினான். 15 வேறு தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான் என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும். 16 பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரிய துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து நிறையும் வான்புனற் பொய்கையங் கரையிடை நின்றார். 17 முண்ட கச்சர வணந்தனில் மூவிரு வடிவங் கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன் அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக் கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான். 18 அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன் இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச் சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள். 19 சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள். 20 எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன்றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன். 21 முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தன தலையாம் அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ. 22 ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி. 23 கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென் றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும் அங்கை யாலவன் றனைஎடுத் தகலமேல் அணைத்துப் பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில். 24 அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப் பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி இருத்தி னான்தன தடந்தனில் எம்மையாள் இறைவன். 25 கூல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும். 26 வேறு விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய் இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர் கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப் புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார். 27 காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத் தோமாரில் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால் யாமாரினும் இழுக்குற்றனனம் எமையாள்இனி யென்னாப் பூமாரிகள பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார். 28 வாரற்பத முறவீங்கிய வன்னத்தன முருந்தின் மூரற்பவ ளச்சேயிதழ் முழுமாமதி வதனத் தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன் பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான். 29 கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும் நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர் தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். 30 என்னாவருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத் தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால் பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே. 31 வானார்சுர நதிபோற்சர வணத்தூடவை புகலுந் தூநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால் மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார். 32 கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும் அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார் துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால். 33 அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன் முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ டென்னாவுரை பெறுகுன்றிடை இருந்தேதவம் புரிமின் சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான். 34 நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன் விடை பெற்றே சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப் பொன்றாழ்சடை யினன்வௌ¢ளியம் பொருப்பின்றலை புக்கான். 35 அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய் விடையூர்தியின் இழிந்தெதனி விறற்சேயொடும் வெற்பின் மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தலையின் இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே. 36 சேயோனெனும் முன்னோன் றனைச் சிலம்பின்வரும் ஒன்பான் மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத் தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார். 37 ஆகத் திருவிருத்தம் - 1051 - - -