logo

|

Home >

to-know >

thundhubi-thirumurai-musical-instruments

துந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Thundhubi - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
துந்துபி காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் 
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் 
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப் 
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் 
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் 
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் 
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் 
கான வீணையின் ஓசையும் காரெதிர் 
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர் 
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம் 12.0014 

கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் 
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி 
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் 
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 12.0663 

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த 
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் 
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் 
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 12.1073 

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 

மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் 
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் 
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற 
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் 12.1767 

வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 12.1979 

தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 12.1996 

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101 

துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே 
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப 
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச் 
செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப 12.2547 

யான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக் 
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி 
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த 
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் 12.3096 
 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்