தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண்ணாரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1
உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2
மனமாயை மாயைஇம் மாயை மயக்கம் மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3