விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 1
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி ராமே. 2