மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே. 1
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 2