உள்ளுறை
திருவீழிமிழலை |
(509-519) |
||
திருவீழிமிழலை |
(520-529) |
||
திருவீழிமிழலை |
(530-540) |
||
திருப்புள்ளிருக்குவேளூர் |
(541-550) |
||
திருக்கயிலாயம் |
(551-561) |
||
திருக்கயிலாயம் |
(562-571) |
||
திருக்கயிலாயத்திருமலை |
(572-580) |
||
திருவலம்புரம் |
(581-590) |
||
திருவெண்ணியூர் |
(591 -600) |
||
திருக்கற்குடி |
(601-610) |
||
திருக்கன்றாப்பூர் |
(611-619) |
||
திருவானைக்கா |
(620-629) |
||
திருவானைக்கா |
(630-639) |
||
திருவேகம்பம் |
(640-650) |
||
திருவேகம்பம் |
(651-660) |
||
திருநாகேச்சரம் |
(661-670) |
||
திருக்கீழ்வேளூர் |
(671-680) |
||
திருமுதுகுன்றம் |
(681-690) |
||
திருப்பள்ளியின்முக்கூடல் |
(691 -700) |
||
க்ஷேத்திரக்கோவை |
(701-711) |
||
திருஅடைவு |
(712-722) |
||
திருவலஞ்சுழி |
(723) |
||
திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர் |
(724-733) |
||
திருநாரையூர் |
(734-743) |
||
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் |
(744-754) |
||
திருப்புத்தூர் |
(755-764) |
||
திருவாய்மூர் |
(765-774) |
||
திருவாலங்காடு |
(775-784) |
||
திருத்தலையாலங்காடு |
(785-794) |
||
திருமாற்பேறு |
(795-804) |
||
திருக்கோடிகா |
(805-812) |
||
திருச்சாய்க்காடு |
(813-822) |
||
திருப்பாசூர் |
(823-832) |
||
திருச்செங்காட்டங்குடி |
(833-842) |
||
திருமுண்டீச்சரம் |
(843-851) |
||
திருவாலம்பொழில் |
(852-860) |
||
திருச்சிவபுரம் |
(861-868) |
||
திருவோமாம்புலியூர் |
(869-877) |
||
திருவின்னம்பர் |
(878-887) |
||
திருக்கஞ்சனூர் |
(888-897) |
||
திருவெறும்பியூர் |
(898-907) |
||
திருக்கழுக்குன்றம் |
(908-909) |
||
பலவகைத் - திருத்தாண்டகம் |
(910-919) |
||
நின்ற - திருத்தாண்டகம் |
(920-929) |
||
தனி - திருத்தாண்டகம் |
(930-939) |
||
தனி - திருத்தாண்டகம் |
(940-950) |
||
திருவினாத் - திருத்தாண்டகம் |
(951-961) |
||
திருமறுமாற்றத்-திருத்தாண்டகம் |
(962-971) |
||
திருப்புகலூர் |
(972-981) |
6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
509 |
கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.1 |
510 |
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கெடில வடவதிகை வீரட் டத்தார் மழபாடி மேய மழுவா ளனார் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.2 |
511 |
அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில் இமையோர் பெருமானார் ஒற்றி யூரார் மாடத்தார் கூடத்தார் பேரா வூரார் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.3 |
512 |
வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார் பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர் உரித்துரிவை போர்த்த விடலை வேடம் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.4 |
513 |
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார் றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார் கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.5 |
514 |
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார் பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார் இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற் கருப்பறிய லூரார் கரவீ ரத்தார் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.6 |
515 |
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார் கற்குடியார் விற்குடியார் கானப் பேரார் பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.7 |
516 |
அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார் சாந்தை அயவந்தி தங்கி னார்தாம் நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.8 |
517 |
கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார் கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம் வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.9 |
518 |
அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார் அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார் பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.10 |
519 |
புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க தலைகளொடு மலைகளன தாளுந் தோளும் பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர் வீழி மிழலையே மேவி னாரே. |
6.51.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
520 |
கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண் வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.1 |
521 |
ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண் திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண் பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.2 |
522 |
தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண் சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண் காமனுடல் வேவித்த கண்ணி னான்காண் இருவர்க் கெரியா யருளி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.3 |
523 |
காதிசைந்த சங்கக் குழையி னான்காண் கனக மலையனைய காட்சி யான்காண் வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண் ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.4 |
524 |
நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண் நித்தமண வாளனென நிற்கின் றான்காண் காலனுயிர் காலாற் கழிவித் தான்காண் செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.5 |
525 |
கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக் கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண் வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண் பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.6 |
526 |
கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண் வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண் சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.7 |
527 |
மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம் விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும் எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண் உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.8 |
528 |
சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண் தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண் ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம் மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. |
6.52.9 |
529 |
ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண் எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண் ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண் கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண் விண்ணிழிதண்வீழி மிழலை யானே. |
6.52.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
530 |
மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும் கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந் திருவீழி மிழலையமர் செல்வர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.1 |
531 |
சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும் நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங் குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.2 |
532 |
நீறணிந்த திருமேனி நிமலர் போலும் நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும் எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும் வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.3 |
533 |
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும் வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.4 |
534 |
துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ் சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும் பூதகணம் புடைசூழ வருவார் போலும் வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.5 |
535 |
மாலாலும் அறிவரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும் நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும் வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.6 |
536 |
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும் வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ் திருவீழி மிழலையமர் சிவனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.7 |
537 |
குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங் குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும் புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும் வியன்வீழி மிழலைநக ருடையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.8 |
538 |
முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் மொய்பவளக் கொடியனைய சடையார் போலும் இருநான்கு மூர்த்திகளு மானார் போலும் வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.9 |
539 |
கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங் கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும் ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும் வியன்வீழி மிழலையமர் விமலர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.10 |
540 |
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங் கூத்தாட வல்ல குழகர் போலும் வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. |
6.53.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.54 திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
541 |
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடியயன்மா லறியா வண்ணம் நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங் கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.1 |
542 |
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக் குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம் பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.2 |
543 |
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித் தானை எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும் அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.3 |
544 |
இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.4 |
545 |
மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.5 |
546 |
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக் கடல்நாகைக் காரோணங் கருதி னானை திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.6 |
547 |
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இறையவனை எனையாலுங் கயிலை யென்னும் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.7 |
548 |
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.8 |
549 |
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப் படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள் காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.9 |
550 |
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும் எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை அலைகடலில் ஆலால முண்டு கண்டங் காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. |
6.54.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.55 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
551 |
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.1 |
552 |
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.2 |
553 |
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.3 |
554 |
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.4 |
555 |
ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.5 |
556 |
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.6 |
557 |
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.7 |
558 |
இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.8 |
559 |
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.9 |
560 |
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.10 |
561 |
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.55.11 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.56 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
562 |
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி வானோர் வணங்கப் படுவாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.1 |
563 |
முன்பாகி நின்ற முதலே போற்றி மூவாத மேனிமுக் கண்ணா போற்றி ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.2 |
564 |
மாலை யெழுந்த மதியே போற்றி மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி மேலாடு திங்கள் முடியாய் போற்றி அடியார்கட் காரமுத மானாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.3 |
565 |
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி பல்கணக் கூத்தப் பிரானே போற்றி தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.4 |
566 |
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.5 |
567 |
ஆறேறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.6 |
568 |
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.7 |
569 |
பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி பேராநோய் பேர விடுப்பாய் போற்றி ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி ஆரு மிகழப் படாதாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.8 |
570 |
செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றி பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.9 |
571 |
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.56.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.57 திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
572 |
பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றி தூமாலை மத்த மணிந்தாய் போற்றி அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.1 |
573 |
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.2 |
574 |
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வ முடையாய் போற்றி ஆகாச வண்ண முடியாய் போற்றி வேளாத வேள்வி யுடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.3 |
575 |
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.4 |
576 |
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி யுடையாய் போற்றி ஏழி னிசையே யுகப்பாய் போற்றி மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.5 |
577 |
உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி ஏசுமா முண்டி யுடையாய் போற்றி அறிவே அடக்க முடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.6 |
578 |
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.7 |
579 |
முடியார் சடையின் மதியாய் போற்றி முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி அமரர் பதியாள வைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.8 |
580 |
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ண லரியாய் போற்றி எண்ணா யிரநூறு பேராய் போற்றி நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
6.57.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
6.57.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
581 |
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று கதநாகங் கையுடையார் காணீ ரன்றே பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.1 |
582 |
சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக் கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.2 |
583 |
தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர் அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும் துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே. |
6.58.3 |
584 |
மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி மூவர் உருவாய முதல்வ ரிந்நாள் குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.4 |
585 |
அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப் புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச் சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.5 |
586 |
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார் முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.6 |
587 |
பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி வேறோர் பதிபுகப் போவார் போல வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.7 |
588 |
பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும் பழனம் பதிபழமை சொல்லி நின்றார் நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார் சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.8 |
589 |
பொங்கா டரவொன்று கையிற் கொண்டு போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர் தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர் என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.9 |
590 |
செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. |
6.58.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.59 திருவெண்ணியூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
591 |
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும் பொங்குதழற் பிழம்பாய புராண னாரும் வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.1 |
592 |
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும் நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும் பூந்துருத்தி நகர்மேய புராண னாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.2 |
593 |
கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங் கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும் பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ் திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.3 |
594 |
சடையேறு புனல்வைத்த சதுர னாருந் தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும் உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும் மயிலாடு துறையுறையும் மணாள னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.4 |
595 |
மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும் பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங் கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.5 |
596 |
வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங் குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும் ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.6 |
597 |
மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி மடவா ளவளோடு மானொன் றேந்திச் சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங் காலன்றன் கால மறுப்பார் தாமும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.7 |
598 |
செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந் திருவால வாயுறையுஞ் செல்வ னாரும் ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும் மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.8 |
599 |
வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங் கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும் உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.9 |
600 |
பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங் குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந் திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. |
6.59.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.60 திருக்கற்குடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
601 |
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன் அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.1 |
602 |
செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத் திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை அணியானைச் சேயானை ஆனஞ் சாடும் விடையானைச் சடையானை வெறித்த மான்கொள் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.2 |
603 |
மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.3 |
604 |
நற்றவனைப் புற்றரவ நாணி னானை நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப் படையானை அடைவார்தம் பாவம் போக்கக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.4 |
605 |
சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச் சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும் ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.5 |
606 |
பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி வேதியனை வேதத்தின் கீதம் பாடும் பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.6 |
607 |
பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப் பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம் ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.7 |
608 |
வானவனை வானவர்க்கு மேலா னானை வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.8 |
609 |
கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக் கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.9 |
610 |
பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப் புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.60.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர்,
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
611 |
மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.1 |
612 |
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.2 |
613 |
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.3 |
614 |
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.4 |
615 |
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.5 |
616 |
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.6 |
617 |
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.7 |
618 |
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
6.61.9 |
|
619 |
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங் கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. |
6.61.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்,
தேவியார் - மாதுமைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
620 |
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.1 |
621 |
ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய் நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய் திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.2 |
622 |
ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான் ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று திறமறந்து திரிவேனைக் காத்து நீவந் ஆண்டவனே எழிலானைக் காவா வானோர் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.3 |
623 |
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால் முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங் கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.4 |
624 |
இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத் திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங் காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய் வேதியனே தென்னானைக் காவுள் மேய அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.5 |
625 |
உரையாரும் புகழானே ஒற்றி யூராய் கச்சியே கம்பனே காரோ ணத்தாய் மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய் திருவானைக் காவிலுறை தேனே வானோர் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.6 |
626 |
மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய் மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங் கங்காளா முன்கோளும் விளைவு மானாய் குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.7 |
627 |
இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.8 |
628 |
விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய் என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக் கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.9 |
629 |
கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக் குறட்பூதங் கூத்தாட நீயு மாடி மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய் பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. |
6.62.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
630 |
முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே சார்தற் கரியானைத் தாதை தன்னை எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.1 |
631 |
மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத் இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக் கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.2 |
632 |
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும் ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம் பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.3 |
633 |
காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக் காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத் தானன்றி வேறொன்று மில்லா ஞானப் பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.4 |
634 |
பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப் புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக ஏறமரும் பெருமானை இடமா னேந்து கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.5 |
635 |
கலையானைப் பாசுபதப் பாணி யானைக் கனவயிரத் திரளானை மணிமா ணிக்க வார்தருபுன் சடையானை மயான மன்னும் நினையாதார் புரமெரிய வளைத்த மேருச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.6 |
636 |
ஆதியனை எறிமணியின் ஓசை யானை அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.7 |
637 |
மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப் பூதகணப் படையானைப் புறங்காட் டாடல் ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.8 |
638 |
நசையானை நால்வேதத் தப்பா லானை நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின் மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.9 |
639 |
பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப் பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ் தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. |
6.63.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.64 திருவேகம்பம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
640 |
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.1 |
641 |
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும் பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத் தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.2 |
642 |
நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில் துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம் பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.3 |
643 |
தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார் வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ் திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.4 |
644 |
அடுத்தானை யுரித்தான் காண் ... ... ... ... ... ... |
6.64.5 |
645 |
அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண் பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.6 |
646 |
அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப் பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால் கடலில்விட முண்டமரர்க் கமுத மீய ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.7 |
647 |
முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம் பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.8 |
648 |
வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் வானகமும் மண்ணகமு மற்று மாகிப் பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.9 |
649 |
வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண் வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத் அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.10 |
650 |
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற் பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.64.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.65 திருவேகம்பம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
651 |
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம் வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.1 |
652 |
நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.2 |
653 |
பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின் வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப் பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.3 |
654 |
பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண் பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும் பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.4 |
655 |
பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண் பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும் வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண் அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.5 |
656 |
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும் அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப் பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.6 |
657 |
உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண் உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண் இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண் தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.7 |
658 |
தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண் தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண் ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண் வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.8 |
659 |
முந்தைகாண் மூவரினு முதலா னான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.9 |
660 |
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண் பூதகண நாதன்காண் புலித்தோ லாடை சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண் எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில் ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. |
6.65.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
661 |
தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம் அழலவனை நிழலவனை அறிய வொண்ணா மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.1 |
662 |
உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந் தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம் கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.2 |
663 |
காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக் காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.3 |
664 |
தலையானை எவ்வுலகுந் தானா னானைத் தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.4 |
665 |
மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப் பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.5 |
666 |
துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத் தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த நிற்பனவும் நடப்பனவு மாயி னானை அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.6 |
667 |
மறையானை மால்விடையொன் றூர்தி யானை மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள் இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில் என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.7 |
668 |
எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில் இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப் பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற் குறியிலாக் கொடியேனை அடியே னாகச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.8 |
669 |
அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந் சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க் இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.9 |
670 |
சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப் பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. |
6.66.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
671 |
ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.1 |
672 |
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப் பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.2 |
673 |
அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும் வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக் உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.3 |
674 |
தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக் கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால் வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.4 |
675 |
நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச் தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.5 |
676 |
சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை தூமத்தம் வாளரவஞ் சூடி னானை ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.6 |
677 |
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை விண்ணொடுமண் ஆகாச மாயி னானை வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.7 |
678 |
தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத் தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.8 |
679 |
மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.9 |
680 |
முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப் பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
6.67.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேடிலியப்பர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.68 திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
681 |
கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக் கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.1 |
682 |
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக் காபாலி கட்டங்க மேந்தி னானைப் பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப் பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.2 |
683 |
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று பாமாலை பாடப் பயில்வித் தானை முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.3 |
684 |
ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக் கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.4 |
685 |
தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் தாமரையான் நான்முகனுந் தானே யாகி மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை கங்கங்கே அறுசமய மாகி நின்ற தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.5 |
686 |
புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப் பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக் கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.6 |
687 |
போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப் புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக் காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.7 |
688 |
துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச் சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப் பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.8 |
689 |
பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப் புவலோக மெல்லா முழிதந் தானை முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக் கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.9 |
690 |
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப் புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. |
6.68.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்,
தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.69 திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
691 |
ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.1 |
692 |
விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச் தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.2 |
693 |
பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப் புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம் அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.3 |
694 |
போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந் சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.4 |
695 |
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங் கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.5 |
696 |
கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங் கனலாடு திருமேனி கமலத் தோன்றன் திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார் மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.6 |
697 |
நதியாருஞ் சடையானை நல்லூ ரானை நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.7 |
698 |
நற்றவனை நான்மறைக ளாயி னானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ் திருவாரூர்த் திருமூலத் தான மேய குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.8 |
699 |
ஊனவனை உடலவனை உயிரா னானை உலகேழு மானானை உம்பர் கோவை மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.9 |
700 |
தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும் எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. |
6.69.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர், தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.70 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
701 |
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முழையூர் பழையாறை சத்தி முற்றங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.1 |
702 |
ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.2 |
703 |
இடைமரு தீங்கோ யிராமேச் சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் தலையாலங் காடு தலைச்சங் காடு கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.3 |
704 |
எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.4 |
705 |
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நின்றியூர் நீடூர் நியம நல்லூர் எறும்பியூர் ஏராரும் ஏம கூடங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.5 |
706 |
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.6 |
707 |
வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர் ஆலங் காடும் அரைதைப் பெரும் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.7 |
708 |
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.8 |
709 |
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு ஐயா றசோகந்தி ஆமாத் தூருங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.9 |
710 |
நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல தோணிபுரந் துருத்தி சோமீச் சரம் ஓமாம் புலியூரோர் ஏட கத்துங் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.10 |
711 |
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர் கயிலாய நாதனையே காண லாமே. |
6.70.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
712 |
பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக் கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற் செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார் பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே. |
6.71.1 |
713 |
காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங் கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங் கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே. |
6.71.2 |
714 |
நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங் குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால் வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே. |
6.71.3 |
715 |
பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர் பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும் நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும் அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந் துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே. |
6.71.4 |
716 |
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே. |
6.71.5 |
717 |
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க வெண்காடும் அடையவினை வேறா மன்றே. |
6.71.6 |
718 |
கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. |
6.71.7 |
719 |
நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச் சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால் அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல் இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே. |
6.71.8 |
720 |
கந்தமா தனங்கயிலை மலை கேதாரங் காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம் வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம் ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே. |
6.71.9 |
721 |
நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந் இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம் கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே. |
6.71.10 |
722 |
கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன் பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற் பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே. |
6.71.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.72 திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
723 |
அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந் நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. |
6.72.1 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.73 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
திருச்சிற்றம்பலம்
724 |
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.1 |
725 |
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய் அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. |
6.73.2 |
726 |
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய் சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய் வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.3 |
727 |
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. |
6.73.4 |
728 |
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் அருமறைக ளாறங்க மானான் கண்டாய் சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.5 |
729 |
சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.6 |
730 |
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.7 |
731 |
விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய் வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய் அழலாடி கண்டாய் அழகன் கண்டாய் வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.8 |
732 |
தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய் எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய் மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.9 |
733 |
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய் விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய் தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோ டங்கங் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
6.73.10 |
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.
திருவலஞ்சுழியில்,
சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருக்கொட்டையூரில்,
சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர், தேவியார் - பந்தாடுநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.74 திருநாரையூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
734 |
சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும் நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.1 |
735 |
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப் பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும் நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.2 |
736 |
மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை முடியாதே முதல்நடுவு முடிவா னானைத் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.3 |
737 |
செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச் செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும் நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.4 |
738 |
புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப் புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை வெண்ணீறு செம்மேனி விரவி னானை வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.5 |
739 |
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை மலையானைக் கடலானை வனத்து ளானை உள்ளானைப் புறத்தானை ஓசை யானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.6 |
740 |
தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக் கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.7 |
741 |
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத் சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.8 |
742 |
ஆலால மிடற்றணியா அடக்கி னானை ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப் பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை வேள்வியினின் பயனாய விமலன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.9 |
743 |
மீளாத ஆளென்னை உடையான் றன்னை வெளிசெய்த வழிபாடு மேவி னானை வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத் தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. |
6.74.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.75 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
744 |
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.1 |
745 |
கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன் கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும் தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந் செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.2 |
746 |
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும் நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும் ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.3 |
747 |
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ் சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ் செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும் மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.4 |
748 |
காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங் காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும் ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும் நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.5 |
749 |
முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும் அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத் சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.6 |
750 |
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக் கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச் சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும் பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.7 |
751 |
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார் புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.8 |
752 |
பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற் பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ் சதுரநட மாட்டுகந்த சைவர் போலும் அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.9 |
753 |
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந் சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.10 |
754 |
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித் தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும் நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும் மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. |
6.75.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்,
தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
755 |
புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் போர்விடையின் பாகன்காண் புவன மேழும் விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந் தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.1 |
756 |
வாராரும் முலைமங்கை பாகத் தான்காண் மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங் குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.2 |
757 |
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண் நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.3 |
758 |
ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண் துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம் மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.4 |
759 |
கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண் காமருபூங் கச்சியே கம்பத் தான்காண் பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண் சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.5 |
760 |
காம்பாடு தோளுமையாள் காண நட்டங் கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண் சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.6 |
761 |
வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண் பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண் ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.7 |
762 |
புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண் ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.8 |
763 |
பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும் பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.9 |
764 |
உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும் வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண் அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. |
6.76.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.77 திருவாய்மூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
765 |
பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக் கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.1 |
766 |
பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன் நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன் கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.2 |
767 |
மண்ணைத் திகழ நடம தாடும் வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன் வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் நாலு மறையங்க மோதக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.3 |
768 |
விளைத்த பெரும்பத்தி கூர நின்று மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன் என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன் சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.4 |
769 |
கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண் உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன் நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.5 |
770 |
அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன் கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.6 |
771 |
குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன் ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன் தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.7 |
772 |
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன் பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன் மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.8 |
773 |
மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன் கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன் அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.9 |
774 |
கலங்க இருவர்க் கழலாய் நீண்ட காரணமுங் கண்டேன் கருவாய் நின்று பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன் இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. |
6.77.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.78 திருவாலங்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
775 |
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே கோலப் பழனை யுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.1 |
776 |
மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே வானோர் வணங்கப் படுவார் தாமே சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.2 |
777 |
ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமே புனிதப் பொருளாகி நின்றார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.3 |
778 |
நாறுபூங் கொன்றை முடியார் தாமே நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.4 |
779 |
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியுஞ் சந்தியு மானார் தாமே தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.5 |
780 |
தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.6 |
781 |
மையாருங் கண்ட மிடற்றார் தாமே மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.7 |
782 |
விண்முழுதும் மண்முழுது மானார் தாமே மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே காலங்க ளூழி கடந்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.8 |
783 |
காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே கயிலை மலையை யுடையார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.9 |
784 |
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே வண்கயிலை மாமலையை வந்தி யாத நெரிய விரலா லடர்த்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. |
6.78.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.79 திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
785 |
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.1 |
786 |
அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக் குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.2 |
787 |
மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப் புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.3 |
788 |
சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச் செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப் பொன்னாகி மணியாகி முத்து மாகிப் பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.4 |
789 |
கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக் காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை ஐயாறு மேயானை ஆரூ ரானைப் பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.5 |
790 |
விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.6 |
791 |
விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை முன்னானைப் பின்னானை அந்நா ளானை உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.7 |
792 |
கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச் தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.8 |
793 |
பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப் படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக் காரணனை நாரணனைக் கமலத் தோனை எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந் சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.9 |
794 |
கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம சாராதே சாலநாள் போக்கி னேனே. |
6.79.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர், தேவியார் - திருமடந்தையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.80 திருமாற்பேறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
795 |
பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை கனைத்துலகு மானானை அமரர் கோனைக் கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.1 |
796 |
விளைக்கின்ற நீராகி வித்து மாகி விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன் தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல் முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.2 |
797 |
மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை மரகதத்தை மாமணியை மல்கு செல்வக் காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.3 |
798 |
உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம் பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே கச்சியே கம்பனைக் காலன் வீழச் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.4 |
799 |
நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி நினைவாகி நினைவினிய மலையான் மங்கை குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.5 |
800 |
மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக் கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.6 |
801 |
பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண்ணா ணாய நினையானை நினைவோரை நினைவோன் றன்னை அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.7 |
802 |
வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக் கருதுவார் கருத்தானைக் கருவை மூலத் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.8 |
803 |
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும் பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில் ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.9 |
804 |
விரித்தானை நான்மறையோ டங்க மாறும் வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. |
6.80.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.81 திருக்கோடிகா - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
805 |
கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய் மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.1 |
806 |
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய் பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய் திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.2 |
807 |
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் அடியார்கட் காரமுத மானான் கண்டாய் வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய் ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.3 |
808 |
மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய் மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய் பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய் ஐயா றகலாத ஐயன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.4 |
809 |
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் புகலூரை யகலாத புனிதன் கண்டாய் நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.5 |
810 |
கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.6 |
811 |
உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய் ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய் காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய் என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.7 |
812 |
படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய் கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. |
6.81.8 |
இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
6.81.9-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.82 திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
813 |
வானத் திளமதியும் பாம்புந் தன்னில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந் தில்லை நடமாடுந் தேவர் போலும் நன்மையுந் தீமையு மானார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.1 |
814 |
விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும் வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும் அதியரைய மங்கை யமர்ந்தார் போலும் பராய்த்துறையுள் மேய பரமர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.2 |
815 |
கானிரிய வேழ முரித்தார் போலுங் காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும் வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும் உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.3 |
816 |
ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும் மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.4 |
817 |
கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங் காலனையும் ஓருதையாற் கண்டார் போலும் பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.5 |
818 |
மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் முதுகுன்ற மூதூ ருடையார் போலுங் குரைகழலா லன்று குமைத்தார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.6 |
819 |
கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங் காரோணத் தென்று மிருப்பார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.7 |
820 |
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும் வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந் சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.8 |
821 |
அல்ல லடியார்க் கறுப்பார் போலும் அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.9 |
822 |
உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால் ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும் பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. |
6.82.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர்,
தேவியார் - குயிலினும்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.83 திருப்பாசூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
823 |
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.1 |
824 |
வேதமோர் நான்காயா றங்க மாகி விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக் கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.2 |
825 |
தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக் காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக் கூத்தாட வல்ல குழக னாகிப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.3 |
826 |
நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை நிறைமதிய முடன்சூடி நீதி யாலே செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.4 |
827 |
வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான் விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின் கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல் அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.5 |
828 |
புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற் பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.6 |
829 |
இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார் அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர் தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.7 |
830 |
அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றி அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம் இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர் வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.8 |
831 |
ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை நான்முகனு மறியாத நெறியான் கையிற் தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.9 |
832 |
வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான் மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச் தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
6.83.1 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.84 திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
833 |
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.1 |
834 |
துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித் தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.2 |
835 |
உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும் முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.3 |
836 |
கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக் கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் சராசரநற் றாயானை நாயேன் முன்னைப் பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.4 |
837 |
நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக வியன்கெடில வீரட்டம் மேவி னானை மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.5 |
838 |
கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக் கடவூரில் வீரட்டங் கருதி னானைப் பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப் பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.6 |
839 |
எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம் புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப் பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.7 |
840 |
கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்றோருங் காத லானைப் பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.8 |
841 |
அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை அலைகடலில் ஆலால மமுது செய்த கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.9 |
842 |
போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப் புறம்பயமும் புகலூரும் மன்னி னானை நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப் பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. |
6.84.1 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.85 திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
843 |
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப் புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.1 |
844 |
கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக் காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.2 |
845 |
நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண் நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண் ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட் அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.3 |
846 |
மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண் முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண் கங்காளன் காண்கயிலை மலையி னான்காண் ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.4 |
847 |
கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண் கனலாட வல்லான்காண் கையி லேந்தும் வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண் உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.5 |
848 |
உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண் புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண் நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.6 |
849 |
உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி உருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந் தலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.7 |
850 |
உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
6.85.9 |
|
851 |
அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம் அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம் மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக் கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச் சிவலோகன் காணவனென் சிந்தை யானே. |
6.85.1 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முண்டீசுவரர், தேவியார் - கானார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.86 திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
852 |
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியை உணர்வெலா மானானை ஓசை யாகி மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.1 |
853 |
உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாக உடையானை உடைபுலியி னதளே யாகத் தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.2 |
854 |
உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற் காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.3 |
855 |
பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் வாட்போக்கி யம்மானை எம்மா னென்று வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.4 |
856 |
வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.5 |
857 |
விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப் பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே. |
6.86.6 |
858 |
பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.7 |
859 |
ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப் பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப் பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.8 |
860 |
கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங் கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
6.86.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
6.86.1 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.87 திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
861 |
வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங் கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.1 |
862 |
நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த நாதன்காண் பூதகண மாட ஆடுஞ் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.2 |
863 |
வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண் மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண் அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.3 |
864 |
பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம் பீடழியச் சாடி யருள்கள் செய்த முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.4 |
865 |
தூயவன்காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண் சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண் அடியார்கட் காரமுத மாயி னான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.5 |
866 |
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும் பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.6 |
867 |
வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண் வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண் வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.7 |
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின. |
6.87.8-9 |
|
868 |
கலையாரு நூலங்க மாயி னான்காண் கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண் தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. |
6.87.1 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.88 திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
869 |
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும் எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.1 |
870 |
ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச் சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.2 |
871 |
வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத் சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல் உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.3 |
872 |
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.4 |
873 |
பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப் பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப் பாராத வகைபண்ண வல்லான் றன்னை உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.5 |
874 |
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் மணவாள நம்பியையென் மருந்து தன்னைப் பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.6 |
875 |
மலையானை வருமலையன் றுரிசெய் தானை மறையானை மறையாலும் அறிய வொண்ணாக் கடிவானை அடியார்கள் துயர மெல்லாம் புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.7 |
876 |
சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச் செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச் தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம் உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.8 |
877 |
வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும் இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப் பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. |
6.88.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
6.88.1 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர், தேவியார் - பூங்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.89 திருவின்னம்பர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
878 |
அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும் அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ் தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும் வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.1 |
879 |
கோழிக் கொடியோன்றன் தாதை போலுங் கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும் உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும் அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.2 |
880 |
தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங் காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.3 |
881 |
வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும் ஒளிநீறு பூசு மொருவர் போலுந் தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.4 |
882 |
சூழுந் துயர மறுப்பார் போலுந் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் ஆட லுகந்த அழகர் போலுந் தன்மை யளித்த தலைவர் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.5 |
883 |
பாதத் தணையுஞ் சிலம்பர் போலும் பாரூர் விடையொன் றுடையார் போலும் பூம்புகலூர் மேய புராணர் போலும் வேடம் பரவித் திரியுந் தொண்டர் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.6 |
884 |
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும் பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங் கற்றவர்கள் ஏதங் களைவார் போலும் பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.7 |
885 |
மட்டு மலியுஞ் சடையார் போலும் மாதையோர் பாக முடையார் போலுங் காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும் ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.8 |
886 |
கருவுற்ற காலத்தே என்னை யாண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ் தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும் மலரடிகள் நாடி வணங்க லுற்ற இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.9 |
887 |
அலங்கற் சடைதாழ ஐய மேற்று அரவ மரையார்க்க வல்லார் போலும் வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும் விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. |
6.89.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.90 திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
888 |
மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நால்வேத மாறங்க மாயி னானை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.1 |
889 |
தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.2 |
890 |
தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச் சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத் செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப் பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.3 |
891 |
விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப் பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.4 |
892 |
உருத்திரனை உமாபதியை உலகா னானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப் பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.5 |
893 |
ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச் செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.6 |
894 |
நாரணனும் நான்முகனு மறியா தானை நால்வேதத் துருவானை நம்பி தன்னைப் பால்வணனைத் தீவணனைப் பகலா னானை மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.7 |
895 |
வானவனை வலிவலமும் மறைக்காட் டானை மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.8 |
896 |
நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத் சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.9 |
897 |
மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச் தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. |
6.90.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - கற்பகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.91 திருவெறும்பியூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
898 |
பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.1 |
899 |
பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப் பசுபதியைப் பாசுபத வேடத் தானை வேதியனை விண்ணவனை மேவி வையம் அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.2 |
900 |
கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக் கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும் உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற மயானத்து மாசிலா மணியை வாசத் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.3 |
901 |
பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப் புண்ணியனைப் புவனியது முழுதும் போக உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.4 |
902 |
பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம் பயில்வானை அயில்வாய சூல மேந்தி நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும் பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.5 |
903 |
கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர் கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.6 |
904 |
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும் மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன் அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.7 |
905 |
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும் மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற் பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.8 |
906 |
அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப் புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட சடையானை மடைதோறுங் கமல மென்பூச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.9 |
907 |
அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள் முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. |
6.91.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
908 |
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலா னானை ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப் புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.92.1 |
909 |
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப் பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத் தானை ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. |
6.92.2 |
இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர |
6.92.3-10 |
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்,
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.93 பலவகைத் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
910 |
நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு படவரவும் பனிமதியும் வைத்த செல்வர் தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம் பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே. |
6.93.1 |
911 |
ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே. |
6.93.2 |
912 |
பொய்யாறா வாறே புனைந்து பேசிப் புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக் களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர் நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே. |
6.93.3 |
913 |
இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார் ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர் அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே. |
6.93.4 |
914 |
ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர் மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே. |
6.93.5 |
915 |
கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற் கள்ளக் கடலி லழுந்தி வாளா நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில் அருமறையோ டாறங்க மானார் கோயில் வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. |
6.93.6 |
916 |
தண்டி குண்டோ தரன்பிங் கிருடி சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன் பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத் சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான் கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே. |
6.93.7 |
917 |
விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர் பங்கயத்து மேலயனும் பரவிக் காணா கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே. |
6.93.8 |
918 |
தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந் தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக் கார்மயிலஞ் சாயலார் கலந்து காண எரிவீசி இரவாடும் இறைவர் மேய வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. |
6.93.9 |
919 |
தந்தையார் தாயா ருடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே. |
6.93.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.94 நின்ற - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
920 |
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. |
6.94.1 |
921 |
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. |
6.94.2 |
922 |
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. |
6.94.3 |
923 |
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. |
6.94.4 |
924 |
தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. |
6.94.5 |
925 |
அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதந் தானே யாகிப் பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக் கடலாகி மலையாகிக் கழியு மாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. |
6.94.6 |
926 |
மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக் கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப் புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. |
6.94.7 |
927 |
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப் பூக்குளால் வாசமாய் நின்றா னாகித் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. |
6.94.8 |
928 |
நீராகி நீளகலந் தானே யாகி நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப் பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம் பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. |
6.94.9 |
929 |
மாலாகி நான்முகனாய் மாபூ தமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப் பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப் பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. |
6.94.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.95 தனி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
930 |
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. |
6.95.1 |
931 |
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகையும் பைய நையும் எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம் அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. |
6.95.2 |
932 |
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. |
6.95.3 |
933 |
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே. |
6.95.4 |
934 |
திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவி லூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. |
6.95.5 |
935 |
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. |
6.95.6 |
936 |
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மறைநான்கு மானாயா றங்க மானாய் பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே. |
6.95.7 |
937 |
அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே. |
6.95.8 |
938 |
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன் என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. |
6.95.9 |
939 |
சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. |
6.95.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.96 தனி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
940 |
ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. |
6.96.1 |
941 |
முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச் செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார் சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிக ளாரே. |
6.96.2 |
942 |
முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார் அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார் சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. |
6.96.3 |
943 |
பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார் அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார் கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார் செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. |
6.96.4 |
944 |
அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார் சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார் மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார் சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே. |
6.96.5 |
945 |
பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார் நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார் வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார் உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. |
6.96.6 |
946 |
அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார் ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார் காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார் மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார் சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. |
6.96.7 |
947 |
படமூக்கப் பாம்பணையா னோடு வானோன் பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார் கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார் என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே. |
6.96.8 |
948 |
எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. |
6.96.9 |
949 |
சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார் சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார் காபால வேடங் கருதிக் கொண்டார் வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. |
6.96.10 |
950 |
குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார் தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. |
6.96.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.97 திருவினாத் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
951 |
அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. |
6.97.1 |
952 |
எரிகின்ற இளஞாயி றன்ன மேனி இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. |
6.97.2 |
953 |
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. |
6.97.3 |
954 |
பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே. |
6.97.4 |
955 |
நீறுடைய திருமேனி பாக முண்டோ நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம் அதனருகே பிறையுண்டோ அளவி லாத எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே. |
6.97.5 |
956 |
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன் குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன் கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன் தேவனைக் கனவில்நான் கண்ட வாறே. |
6.97.6 |
957 |
அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன் அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன் பழனம் புகுவாரைப் பகலே கண்டேன் கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன் மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே. |
6.97.7 |
958 |
நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன் கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன் அடியார்கட் காரமுத மாகக் கண்டேன் இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே. |
6.97.8 |
959 |
விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு இமையோர் பெருமா னிலாத தென்னே. |
6.97.9 |
960 |
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான் ஓரூர னல்லனோ ருவம னில்லி அவனருளே கண்ணாகக் காணி னல்லால் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. |
6.97.10 |
961 |
பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல் மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன் அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன் சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே. |
6.97.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.98 திருமறுமாற்றத் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
962 |
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. |
6.98.1 |
963 |
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந் சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே. |
6.98.2 |
964 |
வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங் கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம் பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே. |
6.98.3 |
965 |
உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள் உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம் நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற் சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே. |
6.98.4 |
966 |
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் உறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார் புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே. |
6.98.5 |
967 |
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர் செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும் நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. |
6.98.6 |
968 |
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத் ஆகின்ற தன்மையனை நன்மை யோடும் பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே. |
6.98.7 |
969 |
ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன வந்தீரார் மன்னவனா வான்றா னாரே. |
6.98.8 |
970 |
சடையுடையான் சங்கக் குழையோர் காதன் சாம்பலும் பாம்பு மணிந்த மேனி வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த உம்மோடு மற்று முளராய் நின்ற பாசமற வீசும் படியோம் நாமே. |
6.98.9 |
971 |
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம் அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே. |
6.98.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.99 திருப்புகலூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
972 |
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் கழலடியே கைதொழுது காணி னல்லால் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.1 |
973 |
அங்கமே பூண்டாய் அனலா டினாய் ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் திருப்புகலூர் மேவிய தேவ தேவே. |
6.99.2 |
974 |
பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய் பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல் மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர் அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.3 |
975 |
தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச் சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும் அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.4 |
976 |
நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள் நீங்காமை வைத்துகந்த நீதி யானே பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.5 |
977 |
விரிசடையாய் வேதியனே வேத கீதா விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய் திருவாரூர்த் திருமூலத் தான மேயாய் வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.6 |
978 |
தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந் திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக் கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.7 |
979 |
நெய்யாடி நின்மலனே நீல கண்டா நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய் கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.8 |
980 |
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித் சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே அக்காரம் பூண்டானே ஆதி யானே பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.9 |
981 |
ஒருவனையு மல்லா துணரா துள்ளம் உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. |
6.99.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள் ஆறாம் திருமுறை முற்றும்.
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR