உள்ளுறை
கோயில் |
(1-10) |
||
கோயில் |
(11-21) |
||
திருவீரட்டானம் |
(22-32) |
||
திருவதிகைவீரட்டானம் |
(33-43) |
||
திருவீரட்டானம் |
(44-53) |
||
திருவதிகைவீரட்டானம் |
(54-63) |
||
திருவீரட்டானம் |
(64-75) |
||
திருக்காளத்தி |
(76-86) |
||
திருஆமாத்தூர் |
(87-96) |
||
திருப்பந்தணைநல்லூர் |
(97-103) |
||
திருப்புன்கூர் - திருநீடூர் |
(107-116) |
||
திருக்கழிப்பாலை |
(117-126) |
||
திருப்புறம்பயம் |
(127-136) |
||
திருநல்லூர் |
(137-147) |
||
திருக்கருகாவூர் |
(148-158) |
||
திருவிடைமருது |
(159-168) |
||
திருவிடைமருது |
(169-178) |
||
திருப்பூவணம் |
(179-189) |
||
திருவாலவாய் |
(190-200) |
||
திருநள்ளாறு |
(201-210) |
||
திருவாக்கூர் |
(211-220) |
||
திருநாகைக்காரோணம் |
(221-231) |
||
திருமறைக்காடு |
(232-241) |
||
திருவாரூர் |
(242-251) |
||
திருவாரூர் |
(252-262) |
||
திருவாரூர் |
(263-268) |
||
திருவாரூர் |
(269-278) |
||
திருவாரூர் |
(279-289) |
||
திருவாரூர் |
(290-299) |
||
திருவாரூர் |
(300-309) |
||
திருவாரூர் |
(310-319) |
||
திருவாரூர் |
(320-329) |
||
திருவாரூர் அரநெறி |
(330-339) |
||
திருவாரூர் |
(340-349) |
||
திருவெண்காடு |
(350-359) |
||
திருப்பழனம் |
(360-369) |
||
திருவையாறு |
(370-379) |
||
திருவையாறு |
(380-390) |
||
திருமழபாடி |
(391-400) |
||
திருமழபாடி |
(401-407) |
||
திருநெய்த்தானம் |
(408-417) |
||
திருநெய்த்தானம் |
(418-427) |
||
திருப்பூந்துருத்தி |
(428-437) |
||
திருச்சோற்றுத்துறை |
(438-447) |
||
திருவொற்றியூர் |
(448-457) |
||
திருஆவடுதுறை |
(458-468) |
||
திருஆவடுதுறை |
(469-478) |
||
திருவலிவலம் |
(479-488) |
||
திருக்கோகரணம் |
(489-498) |
||
திருவீழிமிழலை |
(499-508) |
||
6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
1 |
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.1 |
2 |
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.2 |
3 |
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.3 |
4 |
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.4 |
5 |
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.5 |
6 |
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானை அருமறையோ டாறங்க மாயி னானைச் சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.6 |
7 |
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச் துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.7 |
8 |
காரானை ஈருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன் றன்னை அமரர்களுக் கறிவரிய அளவி லானைப் பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.8 |
9 |
முற்றாத பால்மதியஞ் சூடினானை மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச் திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.9 |
10 |
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
6.1.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
11 |
மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார் குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த் தரும புரத்துள்ளார் தக்க ளூரார் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.1 |
12 |
நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள் நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப் பரிதி நியமத்தார் பன்னி ருநாள் விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.2 |
13 |
துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந் தூமதியும் பாம்பு முடையார் போலும் மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும் அறமருளிச் செய்த அரனா ரிந்நாள் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.3 |
14 |
வாரேறு வனமுலையாள் பாக மாக மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச் திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார் கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார் |
6.2.4 |
15 |
காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக் கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ் திருவாரூர்த் திருமூலத் தான மேயார் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.5 |
16 |
காதார் குழையினர் கட்டங் கத்தார் கயிலாய மாமலையார் காரோ ணத்தார் முதலு மிறுதியுந் தாமே போலும் மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.6 |
17 |
இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று பெரியான்றன் பெருமையே பேச நின்று மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.7 |
18 |
குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக் கையோ டனலேந்திக் காடு றைவார் நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.8 |
19 |
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர் சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள் படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.9 |
20 |
பாதங்கள் நல்லார் பரவி யேத்தப் பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள் எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம் விடையொன்று தாமேறி வேத கீதர் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. |
6.2.10 |
21 |
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ் தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள் ஓதுவதும் வேதமே வீணை யுண்டே கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. |
6.2.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
22 |
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப் பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.1 |
23 |
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப் பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை வாரா வுலகருள வல்லான் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.2 |
24 |
முந்தி யுலகம் படைத்தான் றன்னை மூவா முதலாய மூர்த்தி தன்னைச் தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச் செழுங்கெடில வீரட்ட மேவி னானை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.3 |
25 |
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும் அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக் கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.4 |
26 |
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார் உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார் வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.5 |
27 |
ஆறேற்க வல்ல சடையான் றன்னை அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக் கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை நின்மலன் றன்னை நிமலன் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.6 |
28 |
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி வானவர்க ளேத்தப் படுவான் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.7 |
29 |
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க் கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன் மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன் ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.8 |
30 |
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக் கட்டங்க மேந்திய கையி னானை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.9 |
31 |
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக் கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும் ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.10 |
32 |
முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள் முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித் தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார் மதனழியச் செற்றசே வடியி னானை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. |
6.3.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 04 திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
33 |
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே சாம வேதக் கையனே மெய்யனே கனக மேனிப் பசுவேறு மேபரம யோகி யாமே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.1 |
34 |
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.2 |
35 |
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே முதலாகி நடுவாகி முடிவா னானே கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே பெருநிலநீர் தீவளிஆ காச மாகி அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.3 |
36 |
செய்யனே கரியனே கண்டம் பைங்கண் வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக சடையனே விளங்குமழுச் சூல மேந்துங் கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த அவனாகி லதிகைவீ ரட்ட னாமே. |
6.4.4 |
37 |
பாடுமே யொழியாமே நால்வே தமும் படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள் சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத் அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.5 |
38 |
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால் வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல் இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால் அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.6 |
39 |
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும் அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.7 |
40 |
மாலாகி மதமிக்க களிறு தன்னை வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.8 |
41 |
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ் செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும் மணவாள னேவலங்கை மழுவா ளனே நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.9 |
42 |
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.10 |
43 |
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே நேரொருவ ரில்லா தானே கொல்வேங்கை அதளனே கோவ ணவனே புவலோகந் திரியுமே புரிநூ லானே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. |
6.4.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 05 திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
44 |
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி கற்றா ரிடும்பை களைவாய் போற்றி வீரட்டங் காதல் விமலா போற்றி. |
6.5.1 |
45 |
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல்லூழி யாய படைத்தாய் போற்றி உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. |
6.5.2 |
46 |
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி. |
6.5.3 |
47 |
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. |
6.5.4 |
48 |
நீறேறு நீல மிடற்றாய் போற்றி நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி அடியார்கட் காரமுத மானாய் போற்றி இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி. |
6.5.5 |
49 |
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. |
6.5.6 |
50 |
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி பார்முழுது மாய பரமா போற்றி கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி. |
6.5.7 |
51 |
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி நான்மறையோ டாறங்க மானாய் போற்றி அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. |
6.5.8 |
52 |
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. |
6.5.9 |
53 |
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி எறிகெடில வீரட்டத் தீசா போற்றி. |
6.5.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 06 திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
54 |
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பதினெண் கணங்களும் பாடும்மடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.1 |
55 |
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி கடல்வையங் காப்பான் கருதும்மடி நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. |
6.6.2 |
56 |
வைதெழுவார் காமம்பொய் போகாவடி வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி கணக்கு வழக்கைக் கடந்தவடி நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.3 |
57 |
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி அழகெழுத லாகா அருட்சேவடி சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.4 |
58 |
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி ஊழிதோ றூழி உயர்ந்தவடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.5 |
59 |
திருமகட்குச் செந்தா மரையாமடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி உருவென் றுணரப் படாதவடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.6 |
60 |
உரைமாலை யெல்லா முடையவடி உரையால் உணரப் படாதவடி வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி அகலம் அளக்கிற்பார் இல்லாவடி கமழ்வீரட் டானக் காபாலியடி. |
6.6.7 |
61 |
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி நடுவாய் உலகநா டாயவடி தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி மந்திரமுந் தந்திரமு மாயவடி திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. |
6.6.8 |
62 |
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி அடியார்கட் காரமுத மாயவடி பற்றற்றார் பற்றும் பவளவடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தகைசார் வீரட்டத் தலைவனடி. |
6.6.9 |
63 |
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி பவளத் தடவரையே போல்வானடி வீரட்டங் காதல் விமலனடி. |
6.6.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருவீரட்டேசுவரர்,
தேவியார் - திருவதிகைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 07 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
64 |
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந் தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும் நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங் கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே. |
6.7.1 |
65 |
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந் திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் அறையணி நல்லூரும் அரநெறியும் இடைமரு தின்னம்பர் ஏகம்பமும் கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே. |
6.7.2 |
66 |
சிறையார் புனற்கெடில வீரட்டமுந் திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர் சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும் ஐயாற் றமுதன் பழனம்நல்ல கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே. |
6.7.3 |
67 |
திரையார் புனற்கெடில வீரட்டமுந் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் மாகாளங் கேதாரம் மாமேருவுங் கடம்பந் துறையுறைவார் காப்புக்களே. |
6.7.4 |
68 |
செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங் குடமூக்குங் கோகரணங் கோலக்காவும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங் கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே. |
6.7.5 |
69 |
தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று பறியலூர் வீரட்டம் பாவநாசம் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே. |
6.7.6 |
70 |
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ் சிக்காலி வல்லந் திருவேட்டியும் |
6.7.7 |
71 |
தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச் சரமுந் திருப்புகலூர் ஏயீச் சரமுநல் லேமங்கூடல் குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங் காரோணந் தம்முடைய காப்புக்களே. |
6.7.8 |
72 |
சீரார் புனற்கெடில வீரட்டமுந் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங் கடவூரில் வீரட்டங் காப்புக்களே. |
6.7.9 |
73 |
சிந்தும் புனற்கெடில வீரட்டமுந் திருவாஞ் சியமுந் திருநள்ளாறும் ஆக்கூரு மாவூரு மான்பட்டியும் இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங் கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே. |
6.7.10 |
74 |
தேனார் புனற்கெடில வீரட்டமுந் திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும் மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக் கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே. |
6.7.11 |
75 |
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம் மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும் பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங் கயிலாயந் தம்முடைய காப்புக்களே. |
6.7.12 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
76 |
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கணநாதன் காணவனென் கண்ணு ளானே. |
6.8.1 |
77 |
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண் எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.2 |
78 |
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண் தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங் கணநாதன் காணவனென் கண்ணு ளானே. |
6.8.3 |
79 |
செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண் திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க் உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ் சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கணநாதன் காணவனென் கண்ணு ளானே. |
6.8.4 |
80 |
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.5 |
81 |
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண் ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப் புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண் நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.6 |
82 |
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண் கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண் எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண் தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.7 |
83 |
இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண் வெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்காண் மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.8 |
84 |
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண் திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண் மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.9 |
85 |
இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண் ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண் குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண் மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.10 |
86 |
உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண் ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப் பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண் அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
6.8.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்,
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.9 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
87 |
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக் கடியதோர் விடையேறிக் காபா லியார் தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.1 |
88 |
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக் கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன் நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில் ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. |
6.9.2 |
89 |
கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக் கடிய விடையேறிக் காபா லியார் இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர் பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.3 |
90 |
பசைந்தபல பூதத்தர் பாட லாடல் படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங் இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர் பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.4 |
91 |
உருளுடைய தேர்புரவி யோடும் யானை ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம் புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.5 |
92 |
வீறுடைய ஏறேறி நீறு பூசி வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக் குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து பலிகொள்வா ரல்லர் படிறே பேசி அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.6 |
93 |
கையோர் கபாலத்தர் மானின் றோலர் கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.7 |
94 |
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே றொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர் நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர் இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.8 |
95 |
கல்லலகு தாங்கொண்டு காளத் தியார் கடியவிடை யேறிக் காணக் காண என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன் துருத்தி பழனமோ நெய்த்தானமோ அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.9 |
96 |
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய மணாளர் போலுங் கொடுகொட்டி தாள முடையார் போலுஞ் தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. |
6.9.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆமாத்தீசுவரர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
97 |
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார் பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.1 |
98 |
காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற் குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.2 |
99 |
பூதப் படையுடையார் பொங்கு நூலார் புலித்தோ லுடையினார் போரேற் றினார் விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி உம்பரோ டம்பொன் னுலக மாண்டு பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.3 |
100 |
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார் நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார் ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார் மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.4 |
101 |
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும் அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.5 |
102 |
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல் செய்து மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.6 |
103 |
முற்றா மதிச்சடையார் மூவ ரானார் மூவுலகு மேத்தும் முதல்வ ரானார் கங்கையாள் காதலார் காம்பேய் தோளி பான்மையா லூழி உலக மானார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.7 |
104 |
கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப் பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார் மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.8 |
105 |
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார் நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார் அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.9 |
106 |
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார் காரோணங் காதலார் காதல் செய்து நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. |
6.10.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்,
தேவியார் - காம்பன்னதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.11 திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
107 |
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.1 |
108 |
பின்றானும் முன்றானு மானான் றன்னைப் பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.2 |
109 |
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை இனியநினை யாதார்க் கின்னா தானை மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.3 |
110 |
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக் கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப் பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.4 |
111 |
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.5 |
112 |
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த முடையானை முடைநாறும் புன்க லத்தில் உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.6 |
113 |
உரையார் பொருளுக் குலப்பி லானை ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப் புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.7 |
114 |
கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார் அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.8 |
115 |
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.9 |
116 |
இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீதனே னென்னேநான் நினையா வாறே. |
6.11.10 |
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர்,
தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்,
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்,
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
117 |
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.1 |
118 |
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.2 |
119 |
நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.3 |
120 |
பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.4 |
121 |
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும் இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங் கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.5 |
122 |
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப் பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.6 |
123 |
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் பேதப் படுகின்ற பேதை மீர்காள் எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.7 |
124 |
இயல்பாய ஈசனை எந்தை தந்தை என்சிந்தை மேவி யுறைகின் றானை தியம்பகன் திரிசூலத் தன்ன கையன் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.8 |
125 |
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால் காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங் கழிப்பாலை மேய கபாலப் பனார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.9 |
126 |
பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன் புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக் கால்விரலா லூன்று கழிப்பா லையார் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. |
6.12.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
127 |
கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும் நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப் பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.1 |
128 |
முற்றொருவர் போல முழுநீ றாடி முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார் மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.2 |
129 |
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல் திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.3 |
130 |
பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர் நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில் கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.4 |
131 |
செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் சிரமாலை சூடிச் சிவந்த மேனி மடவா ளவளோடு மானொன் றேந்தி ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.5 |
132 |
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப் பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர் துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.6 |
133 |
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச் திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.7 |
134 |
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.8 |
135 |
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித் திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர் ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.9 |
136 |
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் குமரனும் விக்கின விநாய கனும் பூமி யளந்தானும் போற்றி சைப்பப் பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. |
6.13.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்,
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.14 திருநல்லூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
137 |
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.1 |
138 |
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார் புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார் வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார் வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.2 |
139 |
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார் துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப் பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார் சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.3 |
140 |
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம் பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார் கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார் சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.4 |
141 |
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார் வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார் கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார் திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.5 |
142 |
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார் உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார் மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார் சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.6 |
143 |
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார் மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார் ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.7 |
144 |
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார் குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார் உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார் நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.8 |
145 |
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார் திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார் நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார் குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.9 |
146 |
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப் பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர் அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார் உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.10 |
147 |
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார் குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால் ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. |
6.14.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்,
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.15 திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
148 |
குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.1 |
149 |
வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டு முருவமாம் விரும்பி நின்ற பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந் தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.2 |
150 |
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கொண்ட சமயத்தார் தேவ னாகி ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.3 |
151 |
இரவனாம் எல்லி நடமா டியாம் எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம் ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங் கண்ணாங் கருவூ ரெந்தை தானே. |
6.15.4 |
152 |
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் பரிசொன் றறியாமை நின்றான் றானாம் ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.5 |
153 |
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ் செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.6 |
154 |
அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் தீவினை நாசனென் சிந்தை யானாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.7 |
155 |
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.8 |
156 |
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம் பலபலவும் பாணி பயின்றான் றானாம் என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.9 |
157 |
பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச் சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம் இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.10 |
158 |
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும் ஆகாய மந்திரமு மானா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. |
6.15.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்,
தேவியார் - கரும்பனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
159 |
சூலப் படையுடையார் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும் மந்திரமுந் தந்திரமு மானார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.1 |
160 |
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் காரானை ஈருரிவை போர்த்தார் போலும் பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ் திசையனைத்து மாய்மற்று மானார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.2 |
161 |
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும் பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.3 |
162 |
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும் வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும் பரங்குன்ற மேய பரமர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.4 |
163 |
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும் படுவெண் டலையிற் பலிகொள் வாரும் மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.5 |
164 |
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ் திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங் கூத்தாட வல்ல குழகர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.6 |
165 |
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய் விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர் பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.7 |
166 |
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் சுடர்வா யரவசைத்த சோதி போலும் அடியார்கட் காரமுத மானார் போலுங் கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.8 |
167 |
பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் படைக்கணாள் பாக முடையார் போலும் மணிநீல கண்ட முடையார் போலும் மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.9 |
168 |
கொன்றையங் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும் நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும் அருவரையைக் காலா லழுத்தி னாரும் இடைமருது மேவிய ஈச னாரே. |
6.16.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்,
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.17 திருவிடைமருது - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
169 |
ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல் நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங் கோடால வேடத்தர் கொள்கை சொல்லின் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.1 |
170 |
மங்குல் மதிவைப்பர் வான நாடர் மடமா னிடமுடையர் மாத ராளைப் பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர் சரிதை பலவுடையர் தன்மை சொல்லின் இடைமருது மேவி யிடங் கொண்டாரே. |
6.17.2 |
171 |
ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர் கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக் கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.3 |
172 |
தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ் செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார் மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர் நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.4 |
173 |
கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங் கரவாதே தந்நினைய கிற்பார் பாவந் தூய மறைமொழியர் தீயா லொட்டி நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.5 |
174 |
கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக் குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.6 |
175 |
பச்சை நிறமுடையர் பாலர் சாலப் பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர் கலனொன்று கையேந்தி இல்லந் தோறும் பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.7 |
176 |
காவார் சடைமுடியர் காரோ ணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற் பயிலுந் திருவுருவம் பாக மேயார் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.8 |
177 |
புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர் பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற் பிரியா ரொருநாளும் பேணு காட்டில் எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.9 |
178 |
விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார் மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர் செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. |
6.17.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
179 |
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.1 |
180 |
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும் ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற் செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.2 |
181 |
கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.3 |
182 |
படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும் நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும் மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.4 |
183 |
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும் இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங் ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.5 |
184 |
பாராழி வட்டத்தார் பரவி யிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ் திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும் உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.6 |
185 |
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.7 |
186 |
செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும் மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.8 |
187 |
அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல் மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத் செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.9 |
188 |
ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும் பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங் குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.10 |
189 |
ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும் மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும் நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. |
6.18.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்,
தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
190 |
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.1 |
191 |
விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.2 |
192 |
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப் பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக் கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.3 |
193 |
வானமிது வெல்லா முடையான் றன்னை வரியரவக் கச்சானை வன்பேய் சூழக் கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல் உணர்வாகி அடியேன துள்ளே நின்ற சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.4 |
194 |
ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும் பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும் அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.5 |
195 |
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூவுலகுந் தானே யெங்கும் படியெழுத லாகாத மங்கை யோடும் விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.6 |
196 |
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத் துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை எல்லி நடமாட வல்லான் றன்னை மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.7 |
197 |
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.8 |
198 |
பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப் பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை மேலாய தேவாதி தேவர்க் கென்றுந் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.9 |
199 |
மலையானை மாமேறு மன்னி னானை வளர்புன் சடையானை வானோர் தங்கள் தாபித் திருந்தானைத் தானே யெங்குந் தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.10 |
200 |
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத் தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப் பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. |
6.19.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.20 திருநள்ளாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
201 |
ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற் சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.1 |
202 |
படையானைப் பாசுபத வேடத் தானைப் பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம் அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச் சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின் நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.2 |
203 |
படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை அமுதாக உண்டானை ஆதி யானை மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.3 |
204 |
கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக் கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச் சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப் பல்கணமுந் தாமும் பரந்த காட்டில் நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.4 |
205 |
உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ் திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக் கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.5 |
206 |
குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக் குலவரையன் மடப்பாவை இடப்பா லானை மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.6 |
207 |
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப் புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத் சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.7 |
208 |
சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங் காளத்தி யானைக் கயிலை மேய நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.8 |
209 |
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச் சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும் நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.9 |
210 |
இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம் நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6.20.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
211 |
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங் கல்லலகு பாணி பயின்றார் போலுங் குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.1 |
212 |
ஓதிற் றொருநூலு மில்லை போலும் உணரப் படாதொன் றில்லை போலுங் கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும் விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.2 |
213 |
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் மணிநீல கண்ட முடையார் போலும் நீறேறு தோளெட் டுடையார் போலும் வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.3 |
214 |
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும் பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங் கட்டங்க மேந்திய கையார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.4 |
215 |
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும் புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும் மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.5 |
216 |
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள் மலைமகளை மார்பத் தணைத்தார் போலும் முதலு மிறுதியு மில்லார் போலுந் திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.6 |
217 |
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங் குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங் கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.7 |
218 |
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும் ஊழித்தீ யன்ன ஒளியார் போலும் ஏறேறிச் செல்லு மிறைவர் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.8 |
219 |
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை கதிர்போது தாதணிந்த கண்ணி போலும் நீலநற் கண்டத் திறையார் போலும் மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.9 |
220 |
திரையானுஞ் செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும் போரேறு தாமேறிச் செல்வார் போலுங் காலத்தீ யன்ன கனலார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. |
6.21.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்,
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
221 |
பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.1 |
222 |
விண்ணோர் பெருமானை வீரட் டானை வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப் பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.2 |
223 |
சிறையார் வரிவண்டு தேனே பாடுந் திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே பற்றியாள் கின்ற பரமன் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.3 |
224 |
அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை ஆச்சிரா மன்னகரு மானைக் காவும் மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச் செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.4 |
225 |
நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய பன்மையே பேசும் படிறன் றன்னை மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.5 |
226 |
புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப் பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.6 |
227 |
பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப் புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச் தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.7 |
228 |
வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.8 |
229 |
சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத் தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.9 |
230 |
மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும் மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ் மெய்யென்று கருதாதே போத நெஞ்சே அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.10 |
231 |
நெடியானும் மலரவனும் நேடி யாங்கே நேருருவங் காணாமே சென்று நின்ற பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச் சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. |
6.22.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
232 |
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.1 |
233 |
கைகிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழுஞ் சோதி மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய் பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.2 |
234 |
சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.3 |
235 |
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய் புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய் வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.4 |
236 |
மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.5 |
237 |
ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய் குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய் நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.6 |
238 |
வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய் விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய் அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய் பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.7 |
239 |
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட் என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.8 |
240 |
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய் ஆதியு மந்தமு மானான் கண்டாய் பவளத் தடவரையே போல்வான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. |
6.23.9 |
241 |
அயனவனும் மாலவனு மறியா வண்ணம் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய் சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய் பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாலன் றானே. |
6.23.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
242 |
கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண் எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.1 |
243 |
ஊனேறு படுதலையில் உண்டி யான்காண் ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண் அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.2 |
244 |
ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண் இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண் அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.3 |
245 |
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண் கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண் ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண் பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.4 |
246 |
காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண் நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.5 |
247 |
பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண் பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண் கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண் இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.6 |
248 |
தலையுருவச் சிரமாலை சூடி னான்காண் தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண் அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண் கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.7 |
249 |
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண் அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண் வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.8 |
250 |
மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண் மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண் இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண் கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.9 |
251 |
பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண் புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண் மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண் இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. |
6.24.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
252 |
உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுரு வெழுதி உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே. |
6.25.1 |
253 |
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ முடியா லுறவணங்கி முற்றம் பற்றி இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே. |
6.25.2 |
254 |
தேரூரார் மாவூரார் திங்க ளூரார் திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக் கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும் உமையாள் மணவாளா என்று வாழ்த்தி அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே. |
6.25.3 |
255 |
கோவணமோ தோலோ உடை யாவது கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர் அறியேன்மற் றூராமா றாரூர் தானே. |
6.25.4 |
256 |
ஏந்து மழுவாளர் இன்னம் பரார் எரிபவள வண்ணர் குடமூக் கிலார் வார்சடையார் வந்து வலஞ்சு ழியார் புகலூர்க்கே போயினார் போரே றேறி அண்ணலார் செய்கின்ற கண்மா யமே. |
6.25.5 |
257 |
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால் மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந் செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே. |
6.25.6 |
258 |
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. |
6.25.7 |
259 |
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப் பரவுவார் அமரர்களு மமரர் கோனுந் தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங் குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே. |
6.25.8 |
260 |
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான் திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே. |
6.25.9 |
261 |
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப் பலர்காணத் தலையாலங் காட்டி னூடே இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே. |
6.25.10 |
262 |
கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக் கருவரைபோற் களியானை கதறக் கையால் உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித் திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள் அப்பனார் இப்பருவ மாரூ ராரே. |
6.25.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
263 |
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச் சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.1 |
264 |
வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.2 |
265 |
ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப் புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.3 |
266 |
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம் வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.4 |
267 |
பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப் பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத் சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக் கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.5 |
268 |
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப் பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச் சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. |
6.26.6 |
இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் |
6.26.7-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
269 |
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் கில்லையே கிடந்துதான் யானேல் வானோர் தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. |
6.27.1 |
270 |
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம் கில்லையே னுகர்போகம் யானேல் வானோர் ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர் தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே. |
6.27.2 |
271 |
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ் தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர் நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே. |
6.27.3 |
272 |
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள் வையகமே போதாதே யானேல் வானோர் புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே. |
6.27.4 |
273 |
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன் மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. |
6.27.5 |
274 |
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே உலோபமே பொறையே நீங்கள் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல் அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச் செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே. |
6.27.6 |
275 |
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக் குறிநின்ற தமையாதே யானேல் வானோர் அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. |
6.27.7 |
276 |
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் கில்லையே நுகர்போகம் யானேல் வானோர் கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற் பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே. |
6.27.8 |
277 |
மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர் நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே. |
6.27.9 |
278 |
சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித் துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச் செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. |
6.27.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
279 |
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங் கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங் கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.1 |
280 |
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங் காபாலங் கட்டங்கக் கொடியார் போலும் பேர்நந்தி யென்னும் பெயரார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.2 |
281 |
துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந் தூய திருமேனிச் செல்வர் போலும் பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும் வாசுகிமா நாணாக வைத்தார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.3 |
282 |
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங் காமரங்கள் பாடித் திரிவார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.4 |
283 |
ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும் இமையவர்க ளேத்த இருந்தார் போலுங் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.5 |
284 |
காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும் நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.6 |
285 |
முடியார் மதியரவம் வைத்தார் போலும் மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ் செல்கதி தான்கண்ட சிவனார் போலுங் கங்காள வேடக் கருத்தர் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.7 |
286 |
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ் தூத்தூய திருமேனித் தோன்றல் போலும் மாநாகம் நாணாக வளைத்தார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.8 |
287 |
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் பிறவி யிறவி இலாதார் போலும் முழுநீறு பூசு முதல்வர் போலுங் காளத்தி காரோணம் மேயார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.9 |
288 |
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும் பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும் உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.10 |
289 |
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங் கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ் திசையனைத்து மாயனைத்து மானார் போலும் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. |
6.28.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
290 |
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.1 |
291 |
பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப் பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத் தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.2 |
292 |
ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக் கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.3 |
293 |
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை மூவாத மேனிமுக் கண்ணி னானைச் சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை மறுமையு மிம்மையு மானான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.4 |
294 |
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே ஓரிபல விடநட்ட மாடி னானைத் நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.5 |
295 |
பழகிய வல்வினைகள் பாற்று வானைப் பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங் கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.6 |
296 |
சூளா மணிசேர் முடியான் றன்னைச் சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக் கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை நம்பனை நக்கனை முக்க ணானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.7 |
297 |
முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக் கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப் பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.8 |
298 |
பையா டரவங்கை யேந்தி னானைப் பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச் செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.9 |
299 |
சீரார் முடிபத் துடையான் றன்னைத் தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப் பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. |
6.29.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
300 |
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட அனலாடி யானஞ்சு மாடி னான்காண் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.1 |
301 |
அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.2 |
302 |
நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண் நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண் வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண் கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.3 |
303 |
கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண் உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண் ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.4 |
304 |
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண் வானவரு மறியாத நெறிதந் தான்காண் நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.5 |
305 |
சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண் தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண் அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண் அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.6 |
306 |
நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் நான்மறையோ டாறங்க மாயி னான்காண் வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண் சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.7 |
307 |
பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண் வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண் கோலமா நீறணிந்த மேனி யான்காண் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.8 |
308 |
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண் புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.9 |
309 |
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் தென்னானைக் காவன்காண் தீயில் வீழ வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண் ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. |
6.30.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
310 |
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ் தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங் கலைமான் மறியேந்து கையா வென்றும் ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. |
6.31.1 |
311 |
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப் புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும் அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங் கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. |
6.31.2 |
312 |
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. |
6.31.3 |
313 |
புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம் நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ நுந்தாத வொண்சுடரே யென்று நாளும் விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே. |
6.31.4 |
314 |
இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால் இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும் அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங் குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே. |
6.31.5 |
315 |
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச் சிவலோக நெறிதந்த சிவனே யென்றும் புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத் திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே. |
6.31.6 |
316 |
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற் சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும் பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. |
6.31.7 |
317 |
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம் அம்மானே ஆரூரெம் மையா வென்றுந் சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. |
6.31.8 |
318 |
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா திருவாரூர்த் திருமூலத் தானா வென்றும்
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே. |
6.31.9 |
319 |
புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம்புறமே திரியாதே போது நெஞ்சே தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும் எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும் நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே. |
6.31.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
320 |
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.1 |
321 |
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.2 |
322 |
மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.3 |
323 |
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.4 |
324 |
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.5 |
325 |
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.6 |
326 |
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி நால்வேத மாறங்க மானாய் போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.7 |
327 |
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.8 |
328 |
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றி சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.9 |
329 |
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ் திருமூலத் தானனே போற்றி போற்றி. |
6.32.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.33 திருவாரூர் அரநெறி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
330 |
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும் அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.1 |
331 |
கற்பகமும் இருசுடரு மாயி னானைக் காளத்தி கயிலாய மலையு ளானை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப் பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.2 |
332 |
பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள் அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.3 |
333 |
நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை நாகேச் சரமிடமா நண்ணி னானைச் தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.4 |
334 |
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச் சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.5 |
335 |
தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.6 |
336 |
பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.7 |
337 |
காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.8 |
338 |
ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை ஓத்தூரும் உறையூரும் மேவி னானை மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை வினையிலியைத் திருமூலத் தானம் மேய அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.9 |
339 |
பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப் பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப் பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. |
6.33.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.34 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
340 |
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோ காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந் திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.1 |
341 |
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலியமுத மூட்டி யந்நாள் நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.2 |
342 |
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும் நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான் விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.3 |
343 |
ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.4 |
344 |
பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ் சீர்மையே கூர்மையே குணமே நல்ல குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.5 |
345 |
திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச் சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.6 |
346 |
நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக் காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச் தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.7 |
347 |
பாதத்தால் முயலகனைப் பாது காத்துப் பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.8 |
348 |
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங் கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும் நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந் திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.9 |
349 |
ஈசனா யுலகேழும் மலையு மாகி இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. |
6.34.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
350 |
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம் பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர் நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார் வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.1 |
351 |
பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர் பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர் ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர் ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின் வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.2 |
352 |
நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன் அருகே வருவார்போல் நோக்கு கின்றார் என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார் வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.3 |
353 |
ஆகத் துமையடக்கி ஆறு சூடி ஐவா யரவசைத்தங் கானே றேறிப் புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார் பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.4 |
354 |
கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.5 |
355 |
தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப் பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற் கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.6 |
356 |
பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக் கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார் உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார் பாலைப் பரிசழியப் பேசு கின்றார் |
6.35.7 |
357 |
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு வானவரும் மாலயனுங் கூடித் தங்கள் தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக் என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.8 |
358 |
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் காணார் பொறியழலாய் நின்றான் றன்னை உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக் ஓவாமே நின்று தவங்கள் செய்த வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.9 |
359 |
மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி மாவேழம் வில்லா மதித்தான் றன்னை நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக் கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி வெண்காடு மேவிய விகிர்த னாரே. |
6.35.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
360 |
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.1 |
361 |
வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே கருத்துடைய பூதப் படையார் தாமே உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.2 |
362 |
இரவும் பகலுமாய் நின்றார் தாமே எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே அனலாடி யங்கை மறித்தார் தாமே கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.3 |
363 |
மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே என்பா பரண மணிந்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.364 |
364 |
சீரால் வணங்கப் படுவார் தாமே திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமே நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.5 |
365 |
கால னுயிர்வௌவ வல்லார் தாமே கடிதோடும் வெள்ளை விடையார் தாமே கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.6 |
366 |
ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமே தீவா யரவதனை யார்த்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.7 |
367 |
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே உலகை நடுங்காமற் காப்பார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.8 |
368 |
நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.9 |
369 |
விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே. |
6.36.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.37 திருவையாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
370 |
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானே குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.1 |
371 |
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா புராணனே யென்றேன் நானே முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.2 |
372 |
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே அடியார்கட் காரமுதே யென்றேன் நானே நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே நிறையு மமுதமே யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.3 |
373 |
தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.4 |
374 |
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே இருசுடர் வானத்தா யென்றேன் நானே துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.5 |
375 |
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.6 |
376 |
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே ஏகம்பம் மேயானே யென்றேன் நானே பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.7 |
377 |
அவனென்று நானுன்னை அஞ்சா தேனை அல்ல லறுப்பானே யென்றேன் நானே செல்வந் தருவானே யென்றேன் நானே பண்டை வினையறுப்பா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.8 |
378 |
கச்சியே கம்பனே யென்றேன் நானே கயிலாயா காரோணா வென்றேன் நானே நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.9 |
379 |
வில்லாடி வேடனே யென்றேன் நானே வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.37.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.38 திருவையாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
380 |
ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.1 |
381 |
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.2 |
382 |
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ |
6.38.3 |
383 |
வானுற்ற மாமலைக ளானாய் நீயே வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.4 |
384 |
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.5 |
385 |
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.6 |
386 |
எல்லா வுலகமு மானாய் நீயே ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.7 |
387 |
ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே அளவில் பெருமை யுடையாய் நீயே போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.8 |
388 |
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்ப மேய இறைவன் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.9 |
389 |
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.10 |
390 |
ஆரு மறியா இடத்தாய் நீயே ஆகாயந் தேரூர வல்லாய் நீயே பெரிய முடிபத் திறுத்தாய் நீயே ஒண்டா மரையானும் மாலுங் கூடித் திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
6.38.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
391 |
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய் கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய் ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.1 |
392 |
கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய் அனலங்கை யேந்திய ஆதி கண்டாய் அடியார்கட் காரமுத மானான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.2 |
393 |
நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய் பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய் செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.3 |
394 |
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய் கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய் செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.4 |
395 |
உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய் உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய் நால்வேத மாறங்க மானான் கண்டாய் உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.5 |
396 |
தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய் புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய் இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.6 |
397 |
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய் பகலாகி வானாகி நின்றான் கண்டாய் அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.7 |
398 |
பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய் தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.8 |
399 |
ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய் பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.9 |
400 |
ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய் ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய் விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய் ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே. |
6.39.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
401 |
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற் திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும் நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.1 |
402 |
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம் என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.2 |
403 |
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும் என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.3 |
404 |
ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.4 |
405 |
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.5 |
406 |
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப் பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.6 |
407 |
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர் என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான் பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த என்றென்றே நானரற்றி நைகின் றேனே. |
6.40.7 |
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் |
6.40.8-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
408 |
வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும் வெண்காடு மேவினாய் நீயே யென்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே. |
6.41.1 |
409 |
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங் கோடிகா மேய குழகா வென்றும் பழையனூர் மேவிய பண்பா வென்றுந் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.2 |
410 |
அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றும் காளத்திக் கற்பகமும் நீயே யென்றும் சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.3 |
411 |
மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும் பூத கணநாதன் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.4 |
412 |
முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் முன்கயிலை மேவினாய் நீயே யென்றும் நடமாடி நள்ளாறந் நீயே யென்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.5 |
413 |
தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும் புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.6 |
414 |
புகழும் பெருமையாய் நீயே யென்றும் பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும் இராமேச் சரத்தின்பன் நீயே யென்றும் ஆலவாய் மேவினாய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.7 |
415 |
வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் வானக் கயிலாயன் நீயே யென்றும் கடவூரில் வீரட்டன் நீயே யென்றும் ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.8 |
416 |
தந்தைதா யில்லாதாய் நீயே யென்றும் தலையார் கயிலாயன் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் மூவலூர் மேவினாய் நீயே யென்றும் நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.9 |
417 |
மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும் வீழி மிழலையாய் நீயே யென்றும் யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. |
6.41.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.42 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
418 |
மெய்த்தானத் தகம்படியுள் ஜவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம் இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய நிரையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.1 |
419 |
ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை அம்மானன் றருவரையாற் புரமுன் றெய்த நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.2 |
420 |
பரவிப் பலபலவுந் தேடி யோடிப் பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ யெண்ணிறந்த கோடி யமர ராயம் நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமெ |
6.42.3 |
421 |
அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள் தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா இருஞ்சடைமெல் வைத்துகந்தான் இமையோரேத்தும் நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமெ. |
6.42.4 |
422 |
தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காசு முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.5 |
423 |
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான் அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.6 |
424 |
பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.7 |
425 |
அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் டருநோய்க் கிடமாய் வுடலின் தன்மை தாழக் கருதுதியே தாழேல் நெஞ்சே மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும் நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.8 |
426 |
பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி யிமையவர்தம் பெருமானன் றுமையா ள்ஞ்சக் கண்ணுதல்கண் டமராடி கருதார் வேள்வி நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.9 |
427 |
உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந் தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன் யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. |
6.42.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.43 திருப்பூந்துருத்தி
திருச்சிற்றம்பலம்
428 |
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக் காணா தனவெல்லாங் காட்டி னானைத் தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.1 |
429 |
குற்றாலங் கோகரணம் மேவி னானைக் கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தாந்தன்னை யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப் பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.2 |
430 |
எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத் சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப் பொய்யிலியைப் புந்துரித்திக் கண்டேன் நானே. |
6.43.3 |
431 |
வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை அல்லற்கடல் நின்று மேற வாங்கி நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.4 |
432 |
மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.5 |
433 |
ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா அசைத்தானை அழகாய் பொன்னார் மேனிப் புணர்ந்தானைப் பூங்கனையா னுடலம் வேவப் படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.6 |
434 |
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால் யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.7 |
435 |
வைத்தானை வானோ ருலக மெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.8 |
436 |
ஆண்டானை வானோ ருலக மெல்லாம் அந்நா ள்றியாத தக்கன் வேள்வி விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.9 |
437 |
மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால் யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. |
6.43.9 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.44 திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
438 |
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே |
6.44.1 |
439 |
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே |
6.44.2 |
440 |
முற்றாத பான்மதியஞ் சூடி னானே |
6.44.3 |
441 |
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே |
6.44.4 |
442 |
நம்பனே நான்மறைக் ளாயி னானே |
6.44.5 |
443 |
ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி |
6.44.6 |
444 |
வானவனாய் வண்மை மனத்தி னானே |
6.44.7 |
445 |
தன்னவனாய் உலகெலாந் தானே யாகித் |
6.44.8 |
446 |
எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே |
6.44.9 |
447 |
மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை |
6.44.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.45திருவொற்றியூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
448 |
வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும் |
6.45.1 |
449 |
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி |
6.45.2 |
450 |
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர் |
6.45.3 |
451 |
நரையார்ந்த விடையேறி நீறு பூசி |
6.45.4 |
452 |
மத்தமா களியானை யுரிவை போர்த்து |
6.45.5 |
453 |
கடிய விடையேறிக்காள கண்டர் |
6.45.6 |
454 |
வல்லாராய் வானவர்க் ளெல்லாங் கூடி |
6.45.7 |
455 |
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் |
6.45.8 |
456 |
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை |
6.45.9 |
457 |
மருவுற்ற மலர்க்குழலி மடவா ள்ஞ்ச |
6.45.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.46 திருவாவடுதுறை
திருச்சிற்றம்பலம்
458 |
நம்பனை நால்வேதங் கரைகண் டானை |
6.46.1 |
459 |
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை |
6.46.2 |
460 |
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் |
6.46.3 |
461 |
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் |
6.46.4 |
462 |
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை |
6.46.5 |
463 |
ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை |
6.46.6 |
464 |
கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக் |
6.46.7 |
465 |
மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை |
6.46.8 |
466 |
வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை |
6.46.9 |
467 |
பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் |
6.46.10 |
468 |
தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் |
6.46.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.47 திருவாவடுதுறை
திருச்சிற்றம்பலம்
469 |
திருவேயென் செல்வமே தேனே வானோர் |
6.47.1 |
470 |
மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின் |
6.47.2 |
471 |
வரையார் மடமங்கை பங்கா கங்கை |
6.47.3 |
472 |
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் |
6.47.4 |
473 |
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி |
6.47.5 |
474 |
கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு |
6.47.6 |
475 |
உழையுரித்த மானுரிதோ லாடை யானே |
6.47.7 |
476 |
உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ |
6.47.8 |
477 |
பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் |
6.47.9 |
478 |
துறந்தார்ந் தூநெறிக்கண் சென்றே னல்லேன் |
6.47.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.48 திருவலிவலம்
திருச்சிற்றம்பலம்
479 |
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் |
6.48.1 |
480 |
ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் |
6.48.2 |
481 |
யேவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் |
6.48.3 |
482 |
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண் |
6.48.4 |
483 |
கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் |
6.48.5 |
484 |
நிலையவன்காண் தோற்றவன் காணிறையானான்காண் |
6.48.6 |
485 |
பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும் |
6.48.7 |
486 |
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி |
6.48.8 |
487 |
நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா |
6.48.9 |
488 |
பங்கயத்தின் மேலானும் பால னாகி |
6.48.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.49 திருக்கோகரணம்
திருச்சிற்றம்பலம்
489 |
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் |
6.49.1 |
490 |
தந்தவத்தன் தந்தலையைத் தாங்கி னான்காண் |
6.49.2 |
491 |
தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் |
6.49.3 |
492 |
ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண் |
6.49.4 |
493 |
சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் |
6.49.5 |
494 |
பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் |
6.49.6 |
495 |
மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் |
6.49.7 |
496 |
பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண் |
6.49.8 |
497 |
வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் |
6.49.9 |
498 |
கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக் |
6.49.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.50 திருவீழிமிழமலை
திருச்சிற்றம்பலம்
499 |
போரானை ஈருரிவைப் போர்வை யானைப் |
6.50.1 |
500 |
சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு |
6.50.2 |
501 |
அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை |
6.50.3 |
502 |
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் |
6.50.4 |
503 |
நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த |
6.50.5 |
504 |
மைவான மிடற்றானை அவ்வான் மின்போல் |
6.50.6 |
505 |
மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை |
6.50.7 |
506 |
வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை |
6.50.8 |
507 |
பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப் |
6.50.9 |
508 |
அறுத்தானை அயந்தலைகள் அஞ்சி லொன்றை |
6.50.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஆறாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.