2.61 | திருவெண்காடு | (655-665) | மின்பதிப்பு |
2.62 | திருமீயச்சூர் | (666-676) | மின்பதிப்பு |
2.63 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (677-687) | மின்பதிப்பு |
2.64 | திருமுதுகுன்றம் | (688-697) | மின்பதிப்பு |
2.65 | திருப்பிரமபுரம் | (698-708) | மின்பதிப்பு |
2.66 | திருஆலவாய் | (709-719) | மின்பதிப்பு |
2.67 | திருப்பெரும்புலியூர் | (720-730) | மின்பதிப்பு |
2.68 | திருக்கடம்பூர் | (731-741) | மின்பதிப்பு |
2.69 | திருப்பாண்டிக்கொடுமுடி | (742-752) | மின்பதிப்பு |
2.70 | திருப்பிரமபுரம் | (753-764) | மின்பதிப்பு |
2.71 | திருக்குறும்பலா | (765-775) | மின்பதிப்பு |
2.72 | திருநணா | (776-786) | மின்பதிப்பு |
2.73 | திருப்பிரமபுரம் | (787-798) | மின்பதிப்பு |
2.74 | திருப்பிரமபுரம் | (799-810) | மின்பதிப்பு |
2.75 | சீகாழி | (811-821) | மின்பதிப்பு |
2.76 | திருஅகத்தியான்பள்ளி | (822-832) | மின்பதிப்பு |
2.77 | திருஅறையணிநல்லூர் | (833-843) | மின்பதிப்பு |
2.78 | திருவிளநகர் | (844-854) | மின்பதிப்பு |
2.79 | திருவாரூர் | (855-865) | மின்பதிப்பு |
2.80 | திருக்கடவூர்மயானம் | (866-876) | மின்பதிப்பு |
2.81 | திருவேணுபுரம் | (877-886) | மின்பதிப்பு |
2.82 | திருத்தேவூர் | (887-897) | மின்பதிப்பு |
2.83 | திருக்கொச்சைவயம் | (898-908) | மின்பதிப்பு |
2.84 | திருநனிபள்ளி | (908-918) | மின்பதிப்பு |
2.85 | கோளறு திருப்பதிகம் | (919-929) | மின்பதிப்பு |
2.86 | திருநாரையூர் | (930-940) | மின்பதிப்பு |
2.87 | திருநறையூர் | (941-951) | மின்பதிப்பு |
2.88 | திருமுல்லைவாயில் | (952-962) | மின்பதிப்பு |
2.89 | திருக்கொச்சைவயம் | (963-972) | மின்பதிப்பு |
2.90 | திருநெல்வாயில் அரத்துறை | (973-983) | மின்பதிப்பு |
2.91 | திருமறைக்காடு | (984-994) | மின்பதிப்பு |
2.92 | திருப்புகலூர் | (995-1005) | மின்பதிப்பு |
2.93 | திருத்தெங்கூர் | (1006-1016) | மின்பதிப்பு |
2.94 | திருவாழ்கொளிபுத்தூர் | (1017-1027) | மின்பதிப்பு |
2.95 | திருஅரசிலி | (1028-1037) | மின்பதிப்பு |
2.96 | சீகாழி | (1038-1048) | மின்பதிப்பு |
2.97 | சீகாழி | (1049-1058) | மின்பதிப்பு |
2.98 | திருத்துருத்தி | (1059-1069 | மின்பதிப்பு |
2.99 | திருக்கோடிகா | (1070-1080) | மின்பதிப்பு |
2.100 | திருக்கோவலூர் வீரட்டம் | (1081-1091) | மின்பதிப்பு |
2.101 | திருவாரூர் | (1092-1102) | மின்பதிப்பு |
2.102 | திருச்சிரபுரம் | (1103-1113) | மின்பதிப்பு |
2.103 | திருஅம்பர்த்திருமாகாளம் | (1114-1124) | மின்பதிப்பு |
2.104 | திருக்கடிக்குளம் | (1125-1135) | மின்பதிப்பு |
2.105 | திருக்கீழ்வேளூர் | (1136-1146) | மின்பதிப்பு |
2.106 | திருவலஞ்சுழி | (1147- 1157) | மின்பதிப்பு |
2.107 | திருக்கேதீச்சரம் | (1158-1168) | மின்பதிப்பு |
2.108 | திருவிற்குடிவீரட்டானம் | (1169-1178) | மின்பதிப்பு |
2.109 | திருக்கோட்டூர் | (1179-1189) | மின்பதிப்பு |
2.110 | திருமாந்துறை | (1190-1200 | மின்பதிப்பு |
2.111 | திருவாய்மூர் | (1201-1211) | மின்பதிப்பு |
2.112 | திருஆடானை | (1212-1222) | மின்பதிப்பு |
2.113 | சீகாழி | (1223-1233) | மின்பதிப்பு |
2.114 | திருக்கேதாரம் | (1234-1244) | மின்பதிப்பு |
2.115 | திருப்புகலூர் | (1245-1255) | மின்பதிப்பு |
2.116 | திருநாகைக்காரோணம் | (1256-1266) | மின்பதிப்பு |
2.117 | திருஇரும்பைமாகாளம் | (1267-1277) | மின்பதிப்பு |
2.118 | திருத்திலதைப்பதி | (1278-1288) | மின்பதிப்பு |
2.119 | திருநாகேச்சரம் | (1289-1299) | மின்பதிப்பு |
2.120 | திருமூக்கீச்சரம் | (1300-1310) | மின்பதிப்பு |
2.121 | திருப்பாதிரிப்புலியூர் | (1311-1321) | மின்பதிப்பு |
2.122 | திருப்புகலி | (1322-1331) | மின்பதிப்பு |
666 | காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. |
01 |
667 | பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர் நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. |
02 |
668 | பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க் கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே. |
03 |
669 | வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப் பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன் மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே. |
04 |
670 | விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் படையார் பூதஞ் சூழப் பாட லாடலார் பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார் விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே. |
05 |
671 | குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன் மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே. |
06 |
672 | நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார் காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே. |
07 |
673 | புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே. |
08 |
674 | காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார் கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே. |
09 |
675 | கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால் விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. |
10 |
676 | வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர் நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன் பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே. |
11 |
677 | மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர் அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே. |
01 |
678 | மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர் நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும் பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே. |
02 |
679 | பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண் டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே. |
03 |
680 | வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர் அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே. |
04 |
681 | என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர் அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர் பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே. |
05 |
682 | வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. |
06 |
683 | நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. |
07 |
684 | இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும் பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான் வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே. |
08 |
685 | முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங் கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே. |
09 |
686 | கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே. |
10 |
687 | நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல் செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே. |
11 |
688 | தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. |
01 |
689 | எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார் சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. |
02 |
690 | நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந் தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. |
03 |
691 | தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர் முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே. |
04 |
692 | வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ் சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார் கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும் முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. |
05 |
693 | வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | |
694 | வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில் பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. |
08 |
695 | அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ் சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. |
09 |
696 | கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில் திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. |
10 |
697 | அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. |
11 |
698 | கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. |
01 |
699 | கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. |
02 |
700 | சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும் பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. |
03 |
701 | நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங் கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும் மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. |
04 |
702 | தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும் ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும் பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. |
05 |
703 | விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும் வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும் பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. |
06 |
704 | பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. |
07 |
705 | பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும் புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும் பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே. |
08 |
706 | அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங் கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும் பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. |
09 |
707 | வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும் உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும் பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. |
10 |
708 | பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே. |
11 |
709 | மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. |
01 |
710 | வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. |
02 |
711 | முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. |
03 |
712 | காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. |
04 |
713 | பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. |
05 |
714 | அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. |
06 |
715 | எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. |
07 |
716 | இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. |
08 |
717 | மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. |
09 |
718 | குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. |
10 |
719 | ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. |
11 |
720 | மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
01 |
720 | துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக் கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
02 |
* கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது. |
||
722 | கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
03 |
723 | ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம் பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
04 |
724 | தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
05 |
725 | கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர் மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப் பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
06 |
726 | மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர் கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே. |
07 |
727 | உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித் துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
08 |
728 | சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
09 |
729 | உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர் கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே. |
10 |
730 | பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. |
11 |
731 | வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத் தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக் கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில் தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே. |
01 |
732 | அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும் விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப் பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே. |
02 |
733 | *இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத் தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில் ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப் புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே. |
03 |
* இளி - என்பது ஏழிசையிலொன்று. | ||
734 | பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. |
04 |
735 | தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில் பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே. |
05 |
736 | தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக் கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில் பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப் பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. |
06 |
737 | பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில் ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன் புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே. |
07 |
738 | பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில் காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில் மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித் தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே. |
08 |
739 | திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன் கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில் மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே. |
09 |
740 | ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச் சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன் காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே. |
10 |
741 | விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங் கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும் படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே. |
11 |
742 | பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும் பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
01 |
743 | தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே. |
02 |
744 | சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும் விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
03 |
745 | நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
04 |
746 | போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
05 |
747 | கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
06 |
748 | ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங் கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
07 |
749 | புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும் பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங் கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே. |
08 |
750 | திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
09 |
751 | புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால் மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
10 |
752 | கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச் சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. |
11 |
753 | பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே. |
01 |
754 | வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. |
02 |
755 | புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர் அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம் பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. |
03 |
756 | வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. |
04 |
757 | தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. |
05 |
758 | தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. |
06 |
759 | சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே. |
07 |
760 | புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர் விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. |
08 |
761 | சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே. |
09 |
762 | செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக் கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. |
10 |
763 | கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர் நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. |
11 |
764 | காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. |
12 |
765 | திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. |
01 |
766 | நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல் கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே. |
02 |
767 | வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல் பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக் கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. |
03 |
768 | பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக் கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல் கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே. |
04 |
769 | தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல் குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே. |
05 |
770 | நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர் கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில் ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல் கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே. |
06 |
771 | பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப் பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக் குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே. |
07 |
772 | ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச் சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல் பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே. |
08 |
773 | அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல் மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே. |
09 |
774 | மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக் கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே. |
10 |
775 | கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல் நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே. |
11 |
776 | பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண் டேற தேறி னிடம்போலும் அந்தண் சாரல் வார்பொழிலில் வண்டு பாடச் கனியுதிர்க்குந் திருந ணாவே. |
01 |
777 | நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
மற்றொருகை வீணை யேந்தி னிடம்போலு மிலைசூழ் கானில் விசைகாட்ட முந்தூ ழோசைச் திரைசேர்க்குந் திருந ணாவே. |
02 |
778 | நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த கிடம்போலும் விரைசூழ் வெற்பில் மயிலாலுஞ் சாரற் செவ்வி அடிபணியுந் திருந ணாவே. |
03 |
779 | கையில் மழுவேந்திக் காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு கிடம்போலு மிடைந்து வானோர் னருளென்றென் றாத ரிக்கச் னளித்தியலுந் திருந ணாவே. |
04 |
780 | முத்தேர் நகையா ளிடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த லிசைமுரல ஆலத் தும்பி வினைகெடுக்குந் திருந ணாவே. |
05 |
781 | வில்லார் வரையாக மாநாகம்
நாணாக வேடங் கொண்டு கிடம்போலும் புலியு மானும் கைகூப்ப அடியார் கூடிச் அருள்புரியுந் திருந ணாவே. |
06 |
782 | கானார் களிற்றுரிவை மேல்மூடி
ஆடரவொன் றரைமேற் சாத்தி றானுகந்த கோயி லெங்கும் னாமமே யேத்தி வாழ்த்தத் அடிவணங்குந் திருந ணாவே. |
07 |
783 | மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
வலிதொலைய விரலா லூன்றி கிடம்போலும் முநனைசேர் சீயம் விழிகுறைய வழியு முன்றில் கரியொளிக்குந் திருந ணாவே. |
08 |
784 | மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைக டோ றும் இடம்போலுங் கழல்கள் நேடிப் யளந்தானும் போற்ற மன்னிச் முறவணங்குந் திருந ணாவே. |
09 |
785 | ஆடை யொழித்தங் கமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி உரையகற்றும் மூர்த்தி கோயில் மொய்த்தகிலுங் கரையில் சாரச் யொளிபெருகுந் திருந ணாவே. |
10 |
786 | கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணி சீரார் ஞானசம் பந்தன் எண்ணுஞ் திருநணா ஏத்து பாடல் பழியிலரிம் மண்ணின் மேலே. |
11 |
787 | விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை சிரபுரம்வண் புறவ மண்மேல் கொச்சைகழு மலமென் றின்ன பகையெறிவித் திறைவ னூரே. |
01 |
788 | திருவளருங் கழுமலமே கொச்சைதே
வேந்திரனூர் அயனூர் தெய்வத் காழிதகு சண்பை யொண்பா தோணிபுரம் உயர்ந்த தேவர் கண்டத்தோன் விரும்புமூரே. |
02 |
789 | வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர் காழியிறை கொச்சை யம்பொன் மிக்கயனூர் அமரர் கோனூர் தரன்நாளும் அமரு மூரே. |
03 |
790 | மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான் கொச்சைதே வேந்திரனூர் சீர்ப் சிலம்பனூர் காழி சண்பை பயன்நுகர்வோர் பரவு மூரே. |
04 |
*தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி | ||
791 | வயங்கொச்சை தயங்கு பூமேல் விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர் வென்றித் வம்பெருகு தோணிபுரஞ் சீர் உலகத்தில் உயர்ந்த வூரே. |
05 |
792 | புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை பூந்தராய் தோணிபுரஞ் சீர் கொச்சைவா னவர்தங் கோனூர் யுதைத்துகந்த அப்ப னூரே. |
06 |
793 | வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலி யிஞ்சி சண்பைவியன் காழி கொச்சை தோணிபுரம் பூந்தராய் சீர்ப் பால்வண்ணன் பயிலு மூரே. |
07 |
794 | மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர் காழி மூதூர் வேணுபுரங் கமல நீடு தராய்தோணி புரங்கூ டப்போர் செற்றமலைச் சிலைய னூரே. |
08 |
795 | இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் தன்னூர் தயனூர்சீர்த் தேவர் கோனூர் லாச்சண்பை காழி கொச்சை தணர்வேத மறாத வூரே. |
09 |
796 | மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர் மெய்ம்மை குருப்புகலி தராய்தூ நீர்மேல் சிலம்பனூர் செருச்செய் தன்று சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே. |
10 |
797 | ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன் பானூர் சிரபுரமொண் புறவ நண்பார் புகலிவெங் குருவு மென்பர் வகைநின்றான் தங்கு மூரே. |
11 |
798 | அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப் புகழ்க்காழி சண்பை தொல்லூர் வேணுபுரம் அயனூர் மேலிச் தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே. |
12 |
799 | பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
குறைவிலாப் புகலி பூமேல் பூந்தராய் வாய்ந்த இஞ்சிச் புகழ்ச்சண்பை காழி கொச்சை கழுமலம்நாங் கருது மூரே. |
01 |
800 | கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
தோணிபுரம் கனக மாட யுலகாருங் கொச்சை காழி செங்கமலத் தயனூர் தெய்வத் முடியண்ணல் தங்கு மூரே. |
02 |
801 | ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு காழி கொச்சை தோணிபுரங் கற்றோ ரேத்துஞ் புறவம்அய னூர்பூங் கற்பத் குருக்கங்கை தரித்தோ னூரே. |
03 |
802 | தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
தோணிபுரந் தரியா ரிஞ்சி தராய்புகலி யிமையோர் கோனூர் சண்பைசெழு மறைக ளெல்லாம் னூருலகில் விளங்கு மூரே. |
04 |
803 | விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுரம் மேக மேய்க்கும் யெழிற்புகலி புறவம் ஏரார் சிரபுரம்வன் னஞ்ச முண்டு மன்னுடலங் காய்ந்தோ னூரே. |
05 |
804 | காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரஞ் சீர் இருங்கமலத் தயனூர் இன்பம் தராய்கொச்சை காழி சண்பை பகைகெடுத்தோன் திகழு மூரே. |
06 |
805 | திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழி தேசார் வயங்கொச்சை புறவம் விண்ணோர் குருவெம்போர் மகிடற் செற்று பணிந்துலகில் நின்ற வூரே. |
07 |
806 | நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணு மன்றில் சண்பைவளர் புறவ மோடி தராய்புகலி தேவர் கோனூர் தாங்காக்க மிக்க வூரே. |
08 |
807 | மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை காழி கொச்சை பூந்தராய் சிலம்பன் சேரூர் வெங்குருவல் அரக்கன் திண்டோ ள் டழித்துகந்த எம்மா னூரே. |
09 |
808 | எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலி யென்றும் தரனூர்நற் றோணிபுரம் போர்க் னூர்தராய் சண்பை காரின் விளங்கியஎம் இறைவ னூரே. |
10 |
809 | இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
னூர்இமையோர்க் கதிபன் சேரூர் புரங்குணமார் பூந்தராய் நீர்ச் கொச்சைகழு மலந்தே சின்றிப் பரிசறியா அம்மா னூரே. |
11 |
810 | அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
குருக்கொச்சை புறவ மஞ்சீர் தோணிபுரந் தேவர் கோனூர் வழிமுடக்கு மாவின் பாச்சல் தமிழ்கற்போர் தக்கோர் தாமே. |
12 |
811 | விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப் பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற் கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள் மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. |
01 |
812 | வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான் கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. |
02 |
813 | சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத் துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள் மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. |
03 |
814 | பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங் கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள் தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. |
04 |
815 | தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய் நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள் தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. |
05 |
816 | சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள் பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. |
06 |
817 | முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள் கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. |
07 |
818 | வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. |
08 |
819 | மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. |
09 |
820 | நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர் அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான் கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. |
10 |
821 | கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. |
11 |
822 | வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. |
01 |
823 | துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர் அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. |
02 |
824 | உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங் கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. |
03 |
825 | காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. |
04 |
826 | போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. |
05 |
827 | தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. |
06 |
828 | ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. |
07 |
829 | செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம் ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம் அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. |
08 |
830 | சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. |
09 |
831 | செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச் சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. |
10 |
832 | ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள் சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. |
11 |
833 | பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. |
01 |
834 | இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன் அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. |
02 |
835 | என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. |
03 |
836 | விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே. |
04 |
837 | தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. |
05 |
838 | விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே. |
06 |
839 | வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. |
07 |
840 | தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. |
08 |
841 | வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில் ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச் சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. |
09 |
842 | வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப் பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. |
10 |
843 | கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே. |
11 |
844 | ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. |
01 |
845 | அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. |
02 |
846 | வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. |
03 |
847 | கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. |
04 |
848 | பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. |
05 |
849 | தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. |
06 |
850 | சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. |
07 |
851 | படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. |
08 |
852 | கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. |
09 |
853 | உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. |
10 |
854 | மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. |
11 |
855 | பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு போலநீ வெள்கி னாயே தேறிய காள கண்டன் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
01 |
856 | தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார் பார்க்கின்றார் கொண்டு போவார் வைத்தியால் ஏழை நெஞ்சே மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
02 |
857 | நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
ஆக்கைதான் நிலாய தன்றால் காதெனக் குலுங்கி னாயே வைகலும் மனங்கொ டேத்தும் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
03 |
858 | நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள் இன்பமே மருவி னாயே வருணனும் ஏத்து முக்கண் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
04 |
859 | பிறவியால் வருவன கேடுள
ஆதலாற் பெரிய இன்பத் காதெனத் தூங்கி னாயே தீர்த்தநீர் மல்கு சென்னி மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
05 |
860 | செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
தேரையாய்ச் சிறு பறவை லாமென்று கருதி னாயே தன்பரா யேத்து முக்கண் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
06 |
861 | ஏறுமால் யானையே சிவிகையந்
தளகமீச் சேர்ப்பி வட்டில் நடலைக்கு மயங்கி னாயே பங்கினர் மதியம் வைத்த மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
07 |
862 | என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
சுவரெறிந் திதுநம் இல்லம் லாமையான் முகடு கொண்டு குரம்பையின் மூழ்கி டாதே மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
08 |
863 | தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தார மென்னும் கில்லெனப் பற்றி னாயே சோதியார் வேத கீதர் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
09 |
864 | நெடியமால் பிரமனும் நீண்டுமண்
ணிடந்தின்னம் நேடிக் காணாப் பனிவளர் மலையாள் பாக மணியணி கண்டத் தெண்டோ ள் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. |
10 |
865 | பல்லிதழ் மாதவி அல்லிவண்
டியாழ்செயுங் காழி யூரன் ஞானசம் பந்தன் ஆரூர் மீசனை யேத்து பாடல் ஓதநீர் வைய கத்தே. |
11 |
866 | வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார் கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. |
01 |
867 | மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக் கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார் அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. |
02 |
868 | ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக் காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார் ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. |
03 |
869 | இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார் மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார் பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. |
04 |
870 | வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத் துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக் கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. |
05 |
871 | பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார் ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார் கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார் பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. |
06 |
872 | பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார் ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. |
07 |
873 | செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற் கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார் மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. |
08 |
874 | வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார் கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப் பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. |
09 |
875 | தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர் பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. |
10 |
876 | மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. |
11 |
877 | பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர் ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. |
01 |
878 | சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல் உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம் அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும் படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. |
02 |
879 | கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர் திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர் மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப் பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. |
03 |
880 | நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும் ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக் கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே. |
04 |
881 | ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. |
05 |
882 | மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர் துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர் பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத் தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. |
06 |
883 | நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர் கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர் ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. |
07 |
884 | இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன் விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற் கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார் விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. |
08 |
885 | தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால் போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே. |
09 |
886 | நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள் புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும் விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. |
10 |
இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 11 |
887 | பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. |
01 |
888 | ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
02 |
889 | மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
03 |
890 | முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும் பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள் சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர் அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
04 |
891 | பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
05 |
892 | பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர் அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. |
06 |
893 | வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
07 |
894 | தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. |
08 |
895 | முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான் செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர் அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
09 |
896 | பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர் ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. |
10 |
897 | அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. |
11 |
898 | நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமா வுரித்த நிகரில் திகழ்தேவன் மேவு பதிதான் விழவோசை வேத வொலியின் கொடியாடு கொச்சை வயமே. |
01 |
899 | விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன் தகவைத்த சோதிபதி தான் கமலத்து வைகும் வயல்சூழ் வளர்கின்ற கொச்சை வயமே. |
02 |
900 | படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன் இடமாய வேர்கொள் பதிதான் நளிர்சோலை கோலு கனகக் மறையோது கொச்சை வயமே. |
03 |
901 | எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகி பணிவுற்ற பாதர் பதிதான் வயல்பாய வாளை குழுமிக் வளர்கின்ற கொச்சை வயமே. |
04 |
902 | பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன் இறைவன் இடங்கொள் பதிதான் வளர்தூம மோடி யணவிக் நிறைகின்ற கொச்சை வயமே. |
05 |
903 | புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில் நலமா இருந்த நகர்தான் யுடையார் நிறைந்து வளரப் வரைமேவு கொச்சை வயமே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | |
904 | மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப் டுடனாடி மேய பதிதான் விடுமூச லன்ன கமுகின் அடிதேடு கொச்சை வயமே. |
08 |
905 | வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
முழுதுண்ட மாலும் இகலிக் அறியாத சோதி பதிதான் விரைதேரப் போது மடுவிற் வயல்மேவு கொச்சை வயமே. |
09 |
906 | கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தி னுடையார் விகிர்தத் துருக்கொள் விமலன் குரவம் பயின்று மலரச் மணநாறு கொச்சை வயமே. |
10 |
907 | இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே இனிதா இருந்த மணியைக் தமிழ்மாலை பாடு மவர்போய் அழகா இருப்ப தறிவே. |
11 |
908 | காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
படர்தொடரி கள்ளி கவினிச் சிவன்மேய சோலை நகர்தான் குதிகொள்ள வள்ளை துவள நனிபள்ளி போலு நமர்காள். |
01 |
909 | சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே யிறைவன்னி டங்கொள் பதிதான் மணநாறும் நீல மலரும் நனிபள்ளி போலு நமர்காள். |
02 |
910 | பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடி லாத பெருமான் யிடமாய காதல் நகர்தான் விடுபோ தலர்ந்த விரைசூழ் நனிபள்ளி போலு நமர்காள். |
03 |
911 | குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி வுடையா னுகந்த நகர்தான் பெடைவண்டு தானும் முரல நனிபள்ளி போலு நமர்காள். |
04 |
912 | தோடொரு காதனாகி யொருகா திலங்கு
சுரிசங்கு நின்று புரளக் யிடமாய காதல் நகர்தான் வெறிநீர் தெளிப்ப விரலால் நனிபள்ளி போலு நமர்காள். |
05 |
913 | மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன் பெருமான் அமர்ந்த நகர்தான் அகிலுந்தி யொண்பொன் இடறி நனிபள்ளி போலு நகர்காள். |
06 |
914 | தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
கொடுகொட்டி வீணை முரல பெருமான் உகந்த நகர்தான் பணிவார்கள் பாடல் பெருகி நனிபள்ளி போலு நமர்காள். |
07 |
* பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில், முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப் பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க. |
||
915 | வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
மதியா அரக்கன் வலியோ பெருமான் உகந்த நகர்தான் எனநின்ற நீதி யதனை நனிபள்ளி போலு நமர்காள். |
08 |
916 | நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார் அறியாத அண்ணல் நகர்தான் புனைகொன்றை துன்று பொதுளி நனிபள்ளி போலு நமர்காள். |
09 |
917 | அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும் குணமின்றி நின்ற வடிவும் விடையா னுகந்த நகர்தான் நனிபள்ளி போலு நமர்காள். |
10 |
918 | கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருத பதியான ஞான முனிவன் னிசையா லுரைத்த பனுவல் வினைகெடுதல் ஆணை நமதே. |
11 |
919 | வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி உளமே புகுந்த அதனால் சனிபாம்பி ரண்டு முடனே அடியா ரவர்க்கு மிகவே. |
01 |
920 | என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே உளமே புகுந்த அதனால் உடனாய நாள்க ளவைதாம் அடியா ரவர்க்கு மிகவே. |
02 |
*இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத 12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவைகளாகும். |
||
921 | உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன் உளமே புகுந்த அதனால் திசை தெய்வ மானபலவும் அடியா ரவர்க்கு மிகவே. |
03 |
922 | மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன் உளமே புகுந்த அதனால் கொடுநோய்க ளான பலவும் அடியா ரவர்க்கு மிகவே. |
04 |
923 | நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன் உளமே புகுந்த அதனால் மிகையான பூத மவையும் அடியா ரவர்க்கு மிகவே. |
05 |
924 | வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய் உளமே புகுந்த அதனால் கொடுநாக மோடு கரடி அடியா ரவர்க்கு மிகவே. |
06 |
925 | செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார் உளமே புகுந்த அதனால் வினையான வந்து நலியா அடியா ரவர்க்கு மிகவே. |
07 |
926 | வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய் உளமே புகுந்த அதனால் இடரான வந்து நலியா அடியா ரவர்க்கு மிகவே. |
08 |
927 | பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் உளமே புகுந்த அதனால் வருகால மான பலவும் அடியா ரவர்க்கு மிகவே. |
09 |
928 | கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் உளமே புகுந்த அதனால் திருநீறு செம்மை திடமே அடியா ரவர்க்கு மிகவே. |
10 |
929 | தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ மறைஞான ஞான முனிவன் நலியாத வண்ணம் உரைசெய் அரசாள்வர் ஆணை நமதே. |
11 |
930 | உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில் மிகவேத்தி நித்தம் நினைமின் வளர்கங்குல் நங்கை வெருவ திருநாரை யூர்கை தொழவே. |
01 |
931 | ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும் விதியான வேத விகிர்தன் விடையான் இலங்கு முடிமேல் திருநாரை யூர்கை தொழவே. |
02 |
932 | ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவிப் ஒழிவுற்ற வண்ண மகலும் புகழ்வானு ளோர்கள் புணருந் திருநாரை யூர்கை தொழவே. |
03 |
933 | தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின் நிலையாக நின்று மருவும் விடமுண்ட கண்டன் முடிமேல் திருநாரை யூர்கை தொழவே. |
04 |
934 | வசையப ராதமாய வுவரோத நீங்குந்
தவமாய தன்மை வரும்வான் விரிநூலர் விண்ணும் நிலனும் யமையாத காத லொடுசேர் திருநாரை யூர்கை தொழவே. |
05 |
935 | உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில் நிறைவாற்று நேசம் வளரும் அரவார்த்த அண்ணல் கழலே திருநாரை யூர்கை தொழவே. |
06 |
936 | தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக் குழன்ற உடலின் நினைவொன்று சிந்தை பெருகும் சரமுன் றெரிந்த அவுணர் திருநாரை யூர்கை தொழவே. |
07 |
937 | உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர் அழிபா டிலாத கடலின் அழியத் தடக்கை முடிகள் திருநாரை யூர்கை தொழவே. |
08 |
938 | வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில் கரவைக் கரந்து திகழுஞ் திருமாலும் நேட எரியாய்ச் திருநாரை யூர்கை தொழவே. |
09 |
939 | மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும் ஒலிபாடி யாடி பெருமை உரைமாயும் வண்ணம் அழியச் திருநாரை யூர்கை தொழவே. |
10 |
940 | எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார் திருநாரை யூர்கை தொழுவான் உரைமாலை பத்தும் மொழிவார் துளதென்பர் செம்மை யினரே. |
11 |
941 | நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான் யுறுதீயு மாய நிமலன் நலகண்டு பண்டு சுடலை நறையூரின் நம்ப னவனே. |
01 |
942 | இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையிற் அமரர்க் களித்த தலைவன் மனம்நின்ற மைந்தன் மருவும் நறையூரின் நம்ப னவனே. |
02 |
943 | சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான் படுபிச்ச னென்று பரவத் குழைதாழ வேழ வுரியன் நறையூரின் நம்ப னவனே. |
03 |
944 | சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள் இருளாய கண்டன் அவனித் மலையின்கண் வந்து தொழுவார் நறையூரின் நம்ப னவனே. |
04 |
945 | நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழம் பலத்தின் நடுவே எமர்சுற்ற மாய இறைவன் விடையேறி இல்பலி கொள்வான் நறையூரின் நம்ப னவனே. |
05 |
946 | கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடை யினான் பலவாகி நின்ற பரமன் பொருளான ஆதி யருளான் நறையூரின் நம்ப னவனே. |
06 |
947 | ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம் விகிர்தன் விடங்கொள் மிடறன் எழிலார வென்றி யருளும் நறையூரின் நம்ப னவனே. |
07 |
948 | அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
எதிருஞ் சிலம்பொ டிசையக் முனிவுற் றிலங்கை யரையன் இசைகேட் டிரங்கி யொருவாள் நறையூரின் நம்ப னவனே. |
08 |
949 | குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற் பெரியா னிலங்கு சடையன் வருமைத் திகழ்ந்த பொழிலின் நறையூரின் நம்ப னவனே. |
09 |
950 | துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
வவர்தாமு மல்ல சமணுங் பெருமான் பிறங்கு சடையன் முறைமாதர் பாடி மருவும் நறையூரின் நம்ப னவனே. |
10 |
951 | கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர நறையூரின் நம்ப னவனை தமிழ்மாலை பத்தும் நினைவார் வழிபாடு செய்யும் மிகவே. |
11 |
952 | துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
நடமன்னு துன்னு சுடரோன் உமைபங்க னெங்க ளரனூர் கமலங்கள் தங்கு மதுவின் திருமுல்லை வாயி லிதுவே. |
01 |
953 | பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனைப் படைத்த பரமன் மரவிக்க நின்ற அரனூர் யவையோத மோத வெருவித் திருமுல்லை வாயி லிதுவே. |
02 |
954 | வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளு முருகில் அருள்மேவி நின்ற அரனூர் அலர்மேவு பேதை பிரியாள் திருமுல்லை வாயி லிதுவே. |
03 |
955 | ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
இருமூன்றொ டேழு முடனாய் அறியாமை நின்ற அரனூர் கொடியொன்றொ டொன்று குழுமிச் திருமுல்லை வாயி லிதுவே. |
04 |
956 | கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
விடைநாளும் ஏறு குழகன் மதியேறு சென்னி அரனூர் அணிகோபு ரங்க ளழகார் திருமுல்லை வாயி லிதுவே. |
05 |
957 | ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட வொருவன் அரவேறு பூணு மரனூர் குயிலேறு சோலை மருவி திருமுல்லை வாயி லிதுவே. |
06 |
958 | நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன் அனலாடு மேனி யரனூர் உளதென்று வைகி வரினுஞ் திருமுல்லை வாயி லிதுவே. |
07 |
959 | வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
முடிபத்து மிற்று நெரிய உமைபங்கன் எங்க ளரனூர் மிளிர்கின்ற பொன்னி வடபால் திருமுல்லை வாயி லிதுவே. |
08 |
960 | மேலோடி நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன் யவர்தேட நின்ற பரனூர் கதிரேறு செந்நெல் வயலிற் திருமுல்லை வாயி லிதுவே. |
09 |
961 | பனைமல்கு திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்ப னடியே அமண்மாய நின்ற அரனூர் முகுளங்க ளெங்கு நெரியச் திருமுல்லை வாயி லிதுவே. |
10 |
962 | அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
அருள்செய்த எந்தை மருவார் திருமுல்லை வாயி லிதன்மேல் மிகுபந்தன் ஒண்டமிழ் களின் அகல்வானம் ஆள்வர் மிகவே. |
11 |
963 | அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற் பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. |
01 |
964 | சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக் கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. |
02 |
965 | பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர் வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. |
03 |
966 | கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர் கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. |
04 |
967 | ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. |
05 |
968 | மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற் துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற் கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | |
969 | அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய் குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. |
08 |
970 | சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. |
09 |
971 | குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர் பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. |
10 |
972 | கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே. |
11 |
973 | எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச் சென்றுகை கூடுவ தன்றாற் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
01 |
974 | ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்த எம்பெருமான் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால் வருபுனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
02 |
975 | *பிணிக லந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனெனப் பேணிப் பாவிகள் தொழச்செல் வதன்றால் வருபுனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
03 |
*பிணி - கட்டுதல் | ||
976 | துன்ன ஆடையொன் றுடுத்துத்
தூயவெண் ணீற்றி னராகி ஒன்றுங்கை கூடுவ தன்றாற் பொருபுனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
04 |
977 | வெருகு ரிஞ்சுவெங் காட்டி
லாடிய விமலனென் றுள்கி ஒன்றுங்கை கூடுவ தன்றால் மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந் அரத்துறை யடிகள்தம் அருளே. |
05 |
978 | உரவு நீர்சடைக் கரந்த
வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப் பரிந்துகை கூடுவ தன்றால் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
06 |
979 | நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணுஞ் சென்றுகை கூடுவ தன்றால் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
07 |
980 | செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற போற்றியென் பார்க்கல்ல தருளான் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
08 |
981 | நுணங்கு நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை வந்துகை கூடுவ தன்றால் வருபுனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
09 |
982 | சாக்கி யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும் பாவிகள் தொழச்செல்வ தன்றால் பொருபுனல் நிவாமல்கு கரைமேல் அரத்துறை யடிகள்தம் அருளே. |
10 |
983 | கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞான சம்பந்தன் அரத்துறை யடிகள்தம் அருளை மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப் பாட்டிவை பத்தும் வல்லார்க்கே. |
11 |
984 | பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங் கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந் திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும் எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே. |
01 |
985 | கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங் கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே. |
02 |
986 | நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற் பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக் கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே. |
03 |
986 | ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித் தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம் மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின் நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே. |
04 |
987 | அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும் பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான் மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட் டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. |
05 |
989 | பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே. |
06 |
990 | நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப் பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே. |
07 |
991 | தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான் மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன் பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே. |
08 |
992 | விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும் பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான் கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே. |
09 |
993 | பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக் கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள் அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள் பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே. |
10 |
994 | மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக் கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன் செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப் பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே. |
11 |
995 | பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில் புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே. |
01 |
996 | முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான் கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும் வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
02 |
997 | தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங் கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
03 |
998 | பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. |
04 |
999 | ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான் பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில் மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
05 |
1000 | தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக் கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல் வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
06 |
1001 | தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
07 |
1002 | சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக் காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார் வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. |
08 |
1003 | சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால் வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே. |
09 |
1004 | கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம் மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற் செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. |
10 |
1005 | பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில் மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத் தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே. |
11 |
1006 | புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர் விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
01 |
1007 | சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங் கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன் பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
02 |
1008 | அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட் படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
03 |
1009 | பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார் கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர் வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
04 |
1010 | சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால் தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
05 |
1011 | தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
06 |
1012 | நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார் முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப் பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
07 |
1013 | எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக் கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர் தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. |
08 |
1014 | தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார் பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால் ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. |
09 |
1015 | சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக் கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே |
.10 |
1016 | வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. |
11 |
1017 | சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
01 |
1018 | எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள் கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார் பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார் வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
02 |
1019 | நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும் வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார் வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
03 |
1020 | பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார் குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார் வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
04 |
1021 | பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார் விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
05 |
1022 | தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார் கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
06 |
1023 | மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
07 |
1024 | ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார் கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
08 |
1025 | வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும் என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. |
09 |
1026 | மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர் குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே. |
10 |
1027 | நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன் வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார் நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. |
11 |
1028 | பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. |
01 |
1029 | ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. |
02 |
1030 | கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென் கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன் சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே. |
03 |
1031 | மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. |
04 |
1032 | மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித் தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. |
05 |
1033 | பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப் பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | |
1034 | வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன் கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப் பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே. |
08 |
1035 | குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும் வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ் செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே. |
09 |
1036 | குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. |
10 |
1037 | அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ் சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே. |
11 |
1038 | பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான் செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந் தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே. |
01 |
1039 | தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே. |
02 |
1040 | கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந் திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. |
03 |
1041 | சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந் துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. |
04 |
1042 | மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான் எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. |
05 |
1043 | நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன் ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. |
06 |
1044 | நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில் விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம் இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. |
07 |
1045 | கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச் சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. |
08 |
1046 | மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற் பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. |
09 |
1047 | புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ் சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. |
10 |
1048 | ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- |
11 |
* இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள் சிதைந்துபோயின. |
1049 | நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. |
01 |
1050 | பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும் ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர் தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந் தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. |
02 |
1051 | சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. |
03 |
1052 | நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. |
04 |
1053 | கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய் உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. |
05 |
1054 | அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | |
1055 | பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. |
08 |
1056 | காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. |
09 |
1057 | நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. |
10 |
1058 | தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. |
11 |
1059 | வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந் திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. |
01 |
1060 | அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந் தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக் கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம் எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே. |
02 |
1061 | கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக் கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. |
03 |
1062 | கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம் அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும் ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய் இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே. |
04 |
1063 | துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. |
05 |
1064 | வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில் துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய் மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே. |
06 |
1065 | கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல் மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. |
07 |
1066 | சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன் இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய் கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே. |
08 |
1067 | களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய் வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார் துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. |
09 |
1068 | புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந் துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம் பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. |
10 |
1069 | கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ் சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால் பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே. |
11 |
1070 | இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. |
01 |
1071 | அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர் நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங் கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. |
02 |
1072 | துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. |
03 |
1073 | பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக் கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. |
04 |
1074 | முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான் கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. |
05 |
1075 | ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக் காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. |
06 |
1076 | ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர் மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. |
07 |
1077 | மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர் குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. |
08 |
1078 | மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர் கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. |
09 |
1079 | தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும் பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங் கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. |
10 |
1080 | கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. |
11 |
1081 | படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. |
01 |
1082 | கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த் திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர் குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. |
02 |
1083 | உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே. |
03 |
1084 | கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே. |
04 |
1085 | உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண் துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே. |
05 |
1086 | கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங் கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. |
06 |
1087 | உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. |
07 |
1088 | ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல் போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. |
08 |
1089 | ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில் நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே. |
09 |
1090 | குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல் பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில் வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே. |
10 |
1091 | கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில் விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே. |
11 |
1092 | பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே. |
01 |
1093 | விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும் இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர் கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே. |
02 |
1094 | கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர் மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர் வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே. |
03 |
1095 | அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில் குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர் பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. |
04 |
1096 | சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத் தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர் தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம் அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே. |
05 |
1097 | கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர் துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே. |
06 |
1098 | கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர் தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே. |
07 |
1099 | வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும் நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர் நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே. |
08 |
1100 | இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய் வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர் செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே. |
09 |
1101 | பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம் வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர் மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல் அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே. |
10 |
1102 | வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே. |
11 |
1103 | அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
அமரர்தம் பெருமானார் வைத்தவர் வேதந்தாம் சிரபுரத் தார்சீரார் வினையொடும் பொருந்தாரே. |
01 |
1104 | கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக்கொம் பிளஆமை சங்கர னார்தம்மைப் பொருகடல் விடமுண்ட தொழவினை நில்லாவே. |
02 |
1105 | மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று கண்டருள் புரிந்தார்பூந் சிரபுரத் துறையெங்கள் குற்றங்கள் குறுகாவே. |
03 |
1106 | மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
காலனை உதைசெய்தார் பிணக்கறுத் தருள்செய்வார் சிரபுரத் தமர்கின்ற கருவினை யடையாவே. |
04 |
1107 | பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி ஆகாசம் தலைவனு மாய்நின்றார் செழும்புனற் கோட்டாறு அடியவர் வருந்தாரே. |
05 |
1108 | ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட அந்தரத் துயர்ந்தார்தாம் இன்பன்எம் பெருமானார் வல்வினை அடையாவே. |
06 |
1109 | பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
பிணமிடு சுடுகாட்டில் ஆடும்வித் தகனாரொண் தகுசிர புரத்தார்தாந் தொழுமவர் தளராரே. |
07 |
1110 | இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற் பெடுத்தன்று நெரியவைத் தருள்செய்தார் றதனிடைப் புகுந்தாருங் தெழவினை குறுகாவே. |
08 |
1111 | வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று கிளறியும் பறந்துந்தாம் பசுபதி பரமேட்டி வினையவை கூடாவே. |
09 |
1112 | பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த தேவர்கள் பெருமானார் மூழ்கிட இளவாளை விட்டிடும் மிகத்தானே. |
10 |
1113 | பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடக்கு நித்திலப் பெருந்தொத்தை விண்ணவர் பெருமானைப் பரமனைப் பணிவாரே. |
11 |
1114 | புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப் பிணையல்செய் தவர்மேய வருபுனல் மாகாளம் கருவினை அடையாவே. |
01 |
1115 | அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி ளிசைவன பலபூதம் வருபுனல் மாகாளம் பயன்தலைப் படுவாரே. |
02 |
1116 | குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக் கருத்தறிந் தவர்மேய வருபுனல் மாகாளம் வல்வினை அடையாவே. |
03 |
1117 | எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை தாமகிழ்ந் தவர்மேய வருபுனல் மாகாளங் காதன்மை யுடையாரே. |
04 |
1118 | நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய கருதிய பொருள்கூடில் வருபுனல் மாகாளம் டேத்துதல் புரிந்தோர்க்கே. |
05 |
1119 | கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந் திகழவைத் தவர்மேய வருபுனல் மாகாளம் வுலகினில் உயர்வாரே. |
06 |
1120 | தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை புகழ்புரிந் தவர்மேய வருபுனல் மாகாளம் பெருமையைப் பெறுவாரே. |
07 |
1121 | பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி இறையவன் உறைகோயில் வருபுனல் மாகாளங் கனலிடைச் செதிளன்றே. |
08 |
1122 | உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும் பரவநின் றவர்மேய வருபுனல் மாகாளங் கவலையுங் களைவாரே. |
09 |
1123 | பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங் கழறநின் றவர்மேய வருபுனல் மாகாளம் பரவுதல் செய்வோமே. |
10 |
1124 | மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத் ஏறமர் பெருமானை பந்தன தமிழ்மாலை குற்றங்கள் குறுகாவே. |
11 |
1125 | பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை குரைகழல் சிலம்பார்க்கக் துறையுங்கற் பகத்தைத்தம் முன்வினை மூடாவே. |
01 |
1126 | விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
விகிர்தனை விழவாரும் வள்ளலை மருவித்தங் துறைதரு கற்பகத்தைப் பழியிலர் புகழாமே. |
02 |
1127 | பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
புலியதள் அழல்நாகந் தழல்புரை திருமேனிக் துறைதரு கற்பகத்தை இடும்பைவந் தடையாவே. |
03 |
1128 | நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப் பசும்பொன்னை விசும்பாருங் துறையுங்கற் பகந்தன்னைச் தேய்வது திணமாமே. |
04 |
1129 | சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழல்நாகம் கொண்டடி யவர்போற்றக் துறைதரு கற்பகத்தை விதியுடை யவர்தாமே. |
05 |
1130 | மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுனல் அழல்நாகம் புரிசடைக் கழகாகக் துறைதரு கற்பகத்தின் பற்றறக் கெடுமன்றே. |
06 |
1131 | குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்பொய்கை பூவைசே ருங்கூந்தல் துறையுங்கற் பகத்தைச்சீர் நிற்ககில் லாதானே. |
07 |
1132 | மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்
மதியிலா மையிலோடி இறையவன் விரலூன்றக் கடிக்குளந் தனில்மேவிக் குணமுடை யவர்தாமே. |
08 |
1133 | நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
நிகழடி முடிகாணார் பவளத்தின் படியாகிக் துறையுங்கற் பகத்தின்றன் தீவினை யடையாவே. |
09 |
1134 | குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
குறியினில் நெறிநில்லா கொள்ளன்மின் விடமுண்ட துறைதரும் எம்மீசர் தூநெறி எளிதாமே. |
10 |
1135 | தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்
மன்னன்நற் சம்பந்தன் மாலதாய் மகிழ்வோடுங் கடிக்குளத் தமர்வானை இறைவனோ டுறைவாரே. |
11 |
1136 | மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும் கறையணி கண்டத்தர் புகழ்மிகு கீழ்வேளூர் யோடிட வீடாமே. |
01 |
1137 | நீரு லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை மணிசிலம் பவையார்க்க எழில்திகழ் கீழ்வேளூர் பிணியொடு வினைபோமே. |
02 |
1138 | வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
வெள்ளெருக் கலர்மத்தம் பயில்வுறு கீழ்வேளூர்ப் கோயிலெம் பெருமானை உலகினில் உள்ளாரே. |
03 |
1139 | சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத் தழகாக நலமிகு கீழ்வேளூர்ப் கோயிலுட் பிரியாது நிலைமிகப் பெறுவாரே. |
04 |
1140 | துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை மணமிகு கீழ்வேளூர் நிமலனை நினைவோடுஞ் தேய்வது திணமாமே. |
05 |
1141 | கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித் தொழுதெழு கீழ்வேளூர்ப் பெருந்திருக் கோயில்மன்னும் முடுகிய இடர்போமே. |
06 |
1142 | பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும் காதல்செய் கீழ்வேளூர் பெருந்திருக் கோயில்மன்னும் நினைபவர் வினைபோமே. |
07 |
1143 | மலைநி லாவிய மைந்தனம் மலையினை
யெடுத்தலும் அரக்கன்றன் உறைதரு கீழ்வேளூர்க் பெருந்திருக் கோயிலுள் நினையவல் வினைபோமே. |
08 |
1144 | மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
மலரவன் காண்பொண்ணாப் பாகனைப் பரிவோடுஞ் மல்கிய கீழ்வேளூர் நடலைகள் நணுகாவே. |
09 |
1145 | சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரத்தார் சுரும்பமர் கீழ்வேளூர் பெருந்திருக் கோயில்மன்னு பேணுமின் தவமாமே. |
10 |
1146 | குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
அழகமர் கீழ்வேளூர்த் கோயிலெம் பெருமானை புகலிமன் சம்பந்தன் பெறுவது திடமாமே. |
11 |
1147 | என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து முழுமணித் தரளங்கள் வாணனை வாயாரப் வழிபடும் அதனாலே. |
01 |
1148 | விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம் இறைவனை உலகத்தில் வலஞ்சுழி யிடமாகக் டினிதிருந் தமையாலே. |
02 |
1149 | திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப் மத்தமாம் பிணிநோய்க்கு வலஞ்சுழி யிடமாக இணையடித் தலந்தானே. |
03 |
1150 | கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
அறத்திற முனிவர்க்கன் தினிதருள் பெருமானார் யிடமகிழ்ந் தருங்கானத் அற்புதம் அறியோமே. |
04 |
1151 | மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
எரியுரு வொருபாகம் பெருங்கடற் பவளம்போல் பரிபவர் மனம்புக்க இணையடி தொழுவாரே. |
05 |
1152 | ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
மேனியர் மடமாதர் பேய்களும் அடையாளம் தகந்தொறும் பலிக்கென்று வரிவளை கவர்ந்தாரே. |
06 |
1153 | குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
குலவிய நெய்த்தானம் இமையவர் பணிகேட்பார் வலஞ்சுழி யரனார்பால் சேயிழை தளர்வாமே. |
07 |
1154 | குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய தோளிரு பதுமூன்றி வலஞ்சுழி யெம்மானைப் அல்லவர் காணாரே. |
08 |
1155 | அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
அரவணைத் துயின்றானுங் மாண்பமர் தடக்கையில் வலங்கொடு பாதத்தால் துன்பங்கள் களைவாரே. |
09 |
1156 | அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந் தவஞ்செய்வார் தேறன்மின் மாறாநீர் மருவிய பெருமானைப் அளவறுப் பொண்ணாதே. |
10 |
1157 | மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி நவிற்றிய தமிழ்மாலை கேட்டுகந் தவர்தம்மை வருத்தம்வந் தடையாவே. |
11 |
1158 | விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரியம்பாப் றுறைபதி யெந்நாளுங் பொழிலணி மாதோட்டங் கடுவினை யடையாவே. |
01 |
1159 | பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம் சுண்டிருள் கண்டத்தர் எழில்திகழ் மாதோட்டம் கெடுமிடர் வினைதானே. |
02 |
1160 | பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச் அகந்தொறும் இடுபிச்சைக் உயர்தரு மாதோட்டத் கருவினை யடையாவே. |
03 |
1161 | பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும் மறிகடல் மாதோட்டத் பரிந்தசிந் தையராகி மொய்த்தெழும் வினைபோமே. |
04 |
1162 | நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
மடைந்தவர்க் கருளீய மலிகடல் மாதோட்டத் இராப்பகல் நினைந்தேத்தி அன்பராம் அடியாரே. |
05 |
1163 | பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம் பொருளினர் குடிவாழ்க்கை மருவிய மாதோட்டக் தீச்சரம் பிரியாரே. |
06 |
1164 | பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை காதலித் துறைகோயில் நடமிடு மாதோட்டந் தீச்சர மதுதானே. |
07 |
1165 | தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன் முடிதிண்டோ ள் தலைவனார் கடல்வாயப் பொருந்திய மாதோட்டத் தீச்சரத் துள்ளாரே. |
08 |
1166 | பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி வித்தக மென்னாகும் தோட்டநன் னகர்மன்னித் திருந்தஎம் பெருமானே. |
09 |
1167 | புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரைச் சமணாதர் ஏழைமை கேலேன்மின் போர்த்தவர் மாதோட்டத் தீச்சரம் அடைமின்னே. |
10 |
1168 | மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத் தடிகளை யணிகாழி நவின்றெழு பாமாலைப் பரகதி பெறலாமே. |
11 |
1169 | வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த உடைபுலி யதளார்ப்பர் விற்குடி வீரட்டம் அருவினை யடையாவே. |
01 |
1170 | களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
கடிகமழ் சடைக்கேற்றி பொருகரி யுரிபோர்த்து விற்குடி வீரட்டம் வருத்தம தறியாரே. |
02 |
1171 | கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில் தாடிய வேடத்தர் விற்குடி வீரட்டம் பேணுவ ருலகத்தே. |
03 |
1172 | பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த கடலெழு விடமுண்டார் விற்குடி வீரட்டஞ் தீவினை கெடுமாறே. |
04 |
1173 | கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும் தடியவர் மேலுள்ள விற்குடி வீரட்டம் பற்றறும் அருநோயே. |
05 |
1174 | பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த அரியவர் அல்லார்க்கு விற்குடி வீரட்டம் கிடர்கள்வந் தடையாவே. |
06 |
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | |
1175 | இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
யிகலழி தரவூன்று பொருளினன் இருளார்ந்த விற்குடி வீரட்டந் துன்பநோ யடையாவே. |
08 |
1176 | செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
திருவடி யறியாமை யறைபுனல் முடியார்ந்த விற்குடி வீரட்டந் தவமல்கு குணத்தாரே. |
09 |
1177 | பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை பரிவுறு வீர்கேண்மின் விற்குடி வீரட்டங் கருத்துறுங் குணத்தாரே. |
10 |
1178 | விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத் யெழில்திகழ் கழல்பேணி பந்தனற் றமிழ்மாலை மற்றது வரமாமே. |
11 |
1179 | நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே ஒற்றைவிடைச் பொழில்கள்சூழ்ந் தழகாய கொழுந்தேயென் றெழுவார்கள் தாங்குவர் பாங்காலே. |
01 |
1180 | பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு
மெல்விர லரவல்குல் மிழற்றிய மொழியார்மென் கொழுந்தேயென் றெழுவார்கள் அருள்பெறல் எளிதாமே. |
02 |
1181 | நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
அடியவர் தமக்கெல்லாஞ் செல்வமல் கியநல்ல கொழுந்தேயென் றெழுவார்கள் டமர்ந்தினி திருப்பாரே. |
03 |
1182 | பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய அன்னஞ்சேர்ந் தழகாய கொழுந்தேயென் றெழுவார்கள் நீடிய புகழாரே. |
04 |
1183 | உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
அன்பராம் அடியார்கள் பத்திசெய் தெத்திசையுங் கொழுந்தேயென் றெழுவார்கள் அவனருள் பெறலாமே. |
05 |
1184 | துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
துன்னெருக் கார்வன்னி புலியுரி யுடையாடை கொழுந்தேயென் றெழுவாரை ஏதம்வந் தடையாவே. |
06 |
1185 | மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
மணியரங் கணிசாலை பரிசொடு பயில்வாய கொழுந்தேயென் றெழுவார்கள் கெழுவுவர் புகழாலே. |
07 |
1186 | ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சிச் நாளவற் கருள்செய்த கொழுந்தினைத் தொழுவார்கள் தவமுடை யவர்தாமே. |
08 |
1187 | பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்
முத்தினைப் பவளத்தைத் திருவினைத் தெரிவைமார் கொழுந்தேயென் றெழுவார்கள் நிகழ்தரு புகழாரே. |
09 |
1188 | கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழுந்திரளைப் மெய்யன்நல் லருளென்றுங் டாக்கர்சொற் கருதாதே பெருமையைப் பெறுவாரே. |
10 |
1189 | பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
பாவையோ டுருவாருங் கொழுந்தினைச் செழும்பவளம் பந்தன்வாய்ந் துரைசெய்த தாங்குவர் புகழாலே. |
11 |
1190 | செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக் குருந்தலர் பரந்துந்தி மாந்துறை யுறைகின்ற லேத்துதல் செய்வோமே. |
01 |
1191 | விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி மாந்துறை உறைவானத் சுடவிழித் தவனெற்றி யன்றிமற் றறியோமே. |
02 |
1192 | கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி மாந்துறை யுறைநம்பன் வானவர் மகிழ்ந்தேத்துங் கெழுமுதல் அறியோமே. |
03 |
1193 | இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங் மாந்துறை யுறைகண்டன் ஆடர வுடன்வைத்த வணங்குதல் அறியோமே. |
04 |
1194 | கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி மாந்துறை யுறைவானைப் பாட்டவி மலர்சேர்த்தித் தலைப்படுந் தவத்தோரே. |
05 |
1195 | பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப் புனிதனெம் பெருமானைப் பார்மன்னர் பணிந்தேத்த வணங்குதல் செய்வோமே. |
06 |
1196 | நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி மாந்துறை யிறைஅன்றங் அந்தணன் வரைவில்லால் நிரைகழல் பணிவோமே. |
07 |
1197 | மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம் மாந்துறை யுறைவானை நெரித்திடு விரலானைச் தீநெறி யதுதானே. |
08 |
1198 | நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி மாந்துறை யமர்வானை மலரடி யிணைநாளுங் கூற்றுவன் நலியானே. |
09 |
1199 | நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம் நாணலின் நுரைவாரி மாந்துறை யொருகாலம் அதுவவர்க் கிடமாமே. |
10 |
1200 | வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச் செழுமறை நிறைநாவன் பந்தனன் புறுமாலை பாவமும் இலர்தாமே. |
11 |
1201 | தளிரிள வளரென உமைபாடத்
தாள மிடவோர் கழல்வீசிக் தாடும் வேடக் கிறிமையார் வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் வாய்மூ ரடிகள் வருவாரே. |
01 |
1202 | வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர் பலபல கடைதொறும் பலிதேர்வார் செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ வாய்மூ ரடிகள் வருவாரே. |
02 |
1203 | பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ் உள்ள முருகி லுடனாவார் சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற வாய்மூ ரடிகள் வருவாரே. |
03 |
1204 | எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க வெருவவந் திடர்செய்த விகிர்தனார் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும் வாய்மூ ரடிகள் வருவாரே. |
04 |
1205 | அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில நண்ணிய நறுநுதல் உமைநடுங்க வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே வாய்மூ ரடிகள் வருவாரே. |
05 |
1206 | அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் சூடிள மதியினர் தோடுபெய்து வாய்மூ ரடிகள் வருவாரே. |
06 |
1207 | கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார் பொன்னென மிளிர்வதோர் அரவினொடும் வாய்மூ ரடிகள் வருவாரே. |
07 |
1208 | கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே இறைவனா ருறைவதோ ரிடம்வினவில் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய வாய்மூ ரடிகள் வருவாரே. |
08 |
1209 | ஏனம ருப்பினொ டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக் கள்வர் கனவில் துயர்செய்து திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற வாய்மூ ரடிகள் வருவாரே. |
09 |
1210 | சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய வாய்மூ ரடிகள் வருவாரே. |
10 |
1211 | திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி ஞானசம் பந்தன் தமிழ்மாலை தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே. |
11 |
1212 | மாதோர் கூறுகந் தேற தேறிய ஆதியா னுறை ஆடானை போதினாற் புனைந் தேத்து வார்தமை வாதியா வினை மாயுமே. |
01 |
1213 | வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் றாடலா னுறை ஆடானை தோடுலா மலர் தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகளே. |
02 |
1214 | மங்கை கூறினன் மான்ம றியுடை அங்கை யானுறை ஆடானை தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் மங்கு நோய்பிணி மாயுமே. |
03 |
1215 | சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை அண்ண லானுறை ஆடானை வண்ண மாமலர் தூவிக் கைதொழ எண்ணு வாரிடர் ஏகுமே. |
04 |
1216 | கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கைய ணிம்மல ரால்வ ணங்கிட வெய்ய வல்வினை வீடுமே. |
05 |
1217 | வானி ளம்மதி மல்கு வார்சடை ஆனஞ் சாடலன் ஆடானை தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊன முள்ள வொழியுமே. |
06 |
1218 | துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை அலங்க லானுறை ஆடானை நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் வலங்கொள் வார்வினை மாயுமே. |
07 |
1219 | வெந்த நீறணி மார்பிற் றோல்புனை அந்த மில்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் சிந்தை யார்வினை தேயுமே. |
08 |
1220 | மறைவல் லாரொடு வான வர்தொழு தறையுந் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் நல்வினை பற்றுமே. |
09 |
1221 | மாய னும்மல ரானுங் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவிக் கைதொழ தீய வல்வினை தீருமே. |
10 |
1222 | வீடி னார்மலி வேங்க டத்துநின் றாட லானுறை ஆடானை நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் பாட நோய்பிணி பாறுமே. |
11 |
1223 | பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. |
01 |
1224 | மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. |
02 |
1225 | கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர் மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர் நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. |
03 |
1226 | குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர் பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. |
04 |
1227 | விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார் எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. |
05 |
1228 | தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப் பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. |
06 |
1229 | மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. |
07 |
1230 | முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன் அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன் தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. |
08 |
1231 | பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந் தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங் காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. |
09 |
1232 | உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார் முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம் மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. |
10 |
1233 | கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள் உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. |
11 |
1234 | தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. |
01 |
1235 | பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந் தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங் கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. |
02 |
1236 | முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர் எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால் மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே. |
03 |
1237 | உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள் எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால் பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க் கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. |
04 |
1238 | ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால் மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. |
05 |
1239 | நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல் தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால் ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங் கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. |
06 |
1240 | மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால் உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல் கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே. |
07 |
1241 | அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. |
08 |
1242 | ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர் தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால் வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. |
09 |
1243 | கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர் இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால் அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக் கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. |
10 |
1244 | வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான் ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே. |
11 |
1245 | வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப் பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே. |
01 |
1246 | வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல் வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள் போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே. |
02 |
1247 | மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள் தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே. |
03 |
1248 | பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால் யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே. |
04 |
1249 | அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே. |
05 |
1250 | குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால் உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள் நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே. |
06 |
1251 | ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப் பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான் ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே. |
07 |
1252 | உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன் கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால் செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம் பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே. |
08 |
1253 | நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும் ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான் சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே. |
09 |
1254 | வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும் போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள் தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால் ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே. |
10 |
1255 | புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள் வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே. |
11 |
1256 | கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
01 |
1257 | விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான் இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற் கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
02 |
1258 | வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில் முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர் நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
03 |
1259 | வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன் கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள் உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம் கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
04 |
1260 | வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
05 |
1261 | விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர் படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர் உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
06 |
1262 | பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார் எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
07 |
1263 | பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல் கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
08 |
1264 | நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால் அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல் கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
09 |
1265 | உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும் பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும் நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. |
10 |
1266 | மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான் நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன் வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே. |
11 |
1267 | மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம் எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. |
01 |
1268 | வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. |
02 |
1269 | வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள் கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. |
03 |
1270 | நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. |
04 |
1271 | பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள் கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள் மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. |
05 |
1272 | குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. |
06 |
1273 | பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம் எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. |
07 |
1274 | நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான் அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள் வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. |
08 |
1275 | அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான் இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. |
09 |
1276 | அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங் குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள் மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. |
10 |
1277 | எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. |
11 |
1278 | பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங் கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. |
01 |
1279 | தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங் கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந் தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. |
02 |
1280 | அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக் கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந் திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. |
03 |
1281 | கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ் செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே. |
04 |
1282 | புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான் பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே. |
05 |
1283 | விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும் பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந் தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே. |
06 |
1284 | ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால் தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. |
07 |
1285 | கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய் மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே. |
08 |
1286 | படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந் திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. |
09 |
1287 | புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம் பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. |
10 |
1288 | மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற் கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம் பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச் சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. |
11 |
1289 | தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின் பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே. |
01 |
1290 | பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார் நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங் கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே. |
02 |
1291 | குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர் பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே. |
03 |
1292 | கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும் நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே. |
04 |
1293 | வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே. |
05 |
1294 | காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே. |
06 |
1295 | வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய் பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே. |
07 |
1296 | இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும் மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம் வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே. |
08 |
1297 | கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே. |
09 |
1298 | தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே. |
10 |
1299 | கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல் நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே. |
11 |
1300 | சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. |
01 |
1301 | வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே. |
02 |
1302 | மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. |
03 |
1303 | அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே. |
04 |
1304 | விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. |
05 |
1305 | வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. |
06 |
1306 | அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய் உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான் அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. |
07 |
1307 | ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங் கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. |
08 |
1308 | நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. |
09 |
1309 | வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. |
10 |
1310 | மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. |
11 |
1311 | முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே. |
01 |
1312 | கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம் புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே. |
02 |
1313 | மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான் வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின் அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே. |
03 |
1314 | போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள் ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. |
04 |
1315 | ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள் பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே. |
05 |
1316 | மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப் புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும் பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள் குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே. |
06 |
1317 | கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே. |
07 |
1318 | வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே. |
08 |
1319 | அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள் முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன் தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே. |
09 |
1320 | உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத் திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும் எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின் புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே. |
10 |
1321 | அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம் பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள் சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல் வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே. |
11 |
1322 | விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார் படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. |
01 |
1323 | வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. |
02 |
1324 | வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. |
03 |
1325 | திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. |
04 |
1326 | ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. |
05 |
1327 | தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. |
06 |
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | |
1328 | தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. |
08 |
1329 | கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. |
09 |
1330 | தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. |
10 |
1331 | எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. |
11 |
This file was last revised on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR