ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
எமநல்லூர் என்ற இத்தேவார வைப்புத் தலம், முதல் ராஜராஜன் காலத்தில் திரைலோக்கியமாதேவி சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. அதுவே தற்போது திருலோக்கி எனப்படுகிறது. திருப்பனந்தாள் அருகில் உள்ளது.
சுவாமி: சுந்தரேச்வரர் அம்பிகை: அகிலாண்டேசுவரி 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : கருவூர்த்தேவர்
திருமுறை : ஒன்பதாம் திருமுறை
பண் : காந்தாரம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : திரைலோக்கிய சுந்தரம்
சிறப்பு: கருவூர்த்தேவர் அருளிய திரைலோக்கிய சுந்தரம் திருவிசைப்பா