திருச்சிற்றம்பலம்
175 | முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங் கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப் பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே. |
5.18.1 |
176 | தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும் முனகு தீரத் தொழுதெழு மின்களோ கனகப் புன்சடை யான்கடம் பந்துறை நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. |
5.18.2 |
177 | ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. |
5.18.3 |
178 | பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவருங் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே. |
5.18.4 |
179 | மறைகொண் டமனத் தானை மனத்துளே நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை சிறைகொண் டவினை தீரத் தொழுமினே. |
5.18.5 |
180 | நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி அரனுறை கின்றதே. |
5.18.6 |
181 | அரிய நான்மறை ஆறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே. |
5.18.7 |
182 | பூமென் கோதை உமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநந் தீவினை நாசமே. |
5.18.8 |
183 | பார ணங்கி வணங்கிப் பணிசெய நார ணன்பிர மன்னறி யாததோர் கார ணன்கடம் பந்துறை மேவிய ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. |
5.18.9 |
184 | நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார் காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. |
5.18.10 |
திருச்சிற்றம்பலம்
Back to Complete Fifth Thirumurai Index