திருச்சிற்றம்பலம்
பறையின் ஓசையும்
பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும்
வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள்
பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 1
மனத்துள் மாயனை
மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள்
ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம்
மானிடை மருதனை
நினைத்திட் டூறி
நிறைந்ததென் னுள்ளமே. 2
வண்ட ணைந்தன
வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த
சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும்
இடைமரு தாவென
விண்டு போயறும்
மேலை வினைகளே. 3
துணையி லாமையிற்
றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ
மக்கரி தேயெனா
இணையி லாஇடை
மாமரு தில்லெழு
பணையி லாகமஞ்
சொல்லுந்தன் பாங்கிக்கே. 4
மண்ணை யுண்டமால்
காணான் மலரடி
விண்ணை விண்டயன்
காணான் வியன்முடி
மொண்ணை மாமரு
தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந்
தானும் பயிலுமே. 5
மங்கை காணக்
கொடார்மண மாலையைக்
கங்கை காணக்
கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை
மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக்
கொடுத்தார் இதழியே.
இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
சுவாமி : மகாலிங்கேசுவரர்; அம்பாள் : பெருநலமுலையம்மை. 11
திருச்சிற்றம்பலம்