பதிக வகை: நூற் சிறப்பு
எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக் கண்ணிறைந்து நின்றருளுங் கற்பகமே! - நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு. 1
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 2