பதிக வகை: 2. வருத்தந்தணித்தல்
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும் எங்கும் இன்பக் கனமென் றியறல். 1. பிரிவுகூறல் மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித் தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய் முகைதணித் தற்கரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. 314 கொளு துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது. 1
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத் திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே. 315 கொளு மணிப்பூண் மன்னவன் தணப்பதில்லை அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது. பகைதணிவினைப் பிரிவு முற்றிற்று 2