பதிக வகை: 2. பிரிவுநினைவுரைத்தல்
கல்வியிற் பிரிவொரு நான்கும் காதல் புல்லும் ஆனந்த இன்பப் பூரணம் சொல்லும் பயனின் திறம்பா ராட்டல். 1. கல்விநலங்கூறல் சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற ஓரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல் ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. 308 கொளு கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச் செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது. 1
பதிக வகை: 3. கலக்கம்கண்டுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண் டோதலுற் றாருற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான் போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. 309 கொளு கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப் பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது. 2
பதிக வகை: 4. வாய்மொழி கூறித்தலைமகள் வருந்தல்
கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போலஅன்பர் சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக் கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. 310 கொளு ஓதற் ககல்வர் மேதக் கவரெனப் பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது. 3
பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந் தரியா மையுமொருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற் பிரியாமை செய்துநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே. 311 கொளு தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப் போதுறு குழலி புலம்பியது. ஓதற்பிரிவு முற்றிற்று 4