பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன வழியடு கூட்டி வருந்திசி னோரே. 1. பொழிலிடைச் சேறல் என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம்வருந்தல் நெஞ்சே மின்னெறி செஞ்சடைக்கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே. 49 கொளு ஐயரிக் கண்ணியை யாடிடத் தேசென் றெய்துவ னெனநினைந் தேந்தல் சென்றது. இடந்தலைப்பாடு (மூன்றாம் அதிகாரம்) முற்றிற்று 1