துளசி Ocimum Sanctum, Linn.; Lamiaceae.
கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ ஓர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே.
. - திருஞானசம்பந்தர்.
திருவிற்குடி வீரட்டம் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது துளசியாகும். துளவம், திருத்துழாய் என்ற பெயர்களாலும் இது குறிக்கப்பெறுகிறது. இதில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, முள்துளசி முதலிய பல இனங்கள் உள்ளன. கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்துள்ள பூங்கொத்துக்களையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்வது. இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
இலை கோழையகற்றும், நோய் நீக்கி உடல் தேற்றும், வியர்வை பெருக்கும், உடலுக்கும், உடலுக்கு வெப்பந்தந்து நாடிநடையை மிகுக்கும், முறைநோய் நீக்கும்.
திருமுறைகளில் துளசி பற்றிய குறிப்பு :-
கட்டார் துழாயன் தாமரையா
னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய்
செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள
நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ்
கொச்சையமர்ந்தவனே. 11
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே. 9
கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி
மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக்
கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங்
கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்
தானத் திருந்தவனே. 5
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ
வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே. 9
வீரன் அயன்அரி வெற்பலர்
நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர்
ஊர்திவெவ் வேறென் பரால்
யாரும் அறியா வகைஎங்கள்
ஈசர் பரிசுகளே. 95
வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40)
இடமால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே. 6