logo

|

Home >

temples-of-lord-shiva >

nellai-mavattathil-ulla-iru-sabaikal

நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு சபைகள்


தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

 
	 நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு சபைகள் 
 
	சித்ர சபை 	- 	திருக்குற்றாலம்  
	தாமிர சபை 	-	திருநெல்வேலி  
 

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Location:

State : Tamil Nadu 
District : Thirunelveli 

 

 

Related Content

Vrishabha vratam

Is the Bull of Lord Shiva Stray or Domesticated?

Rishabha Arudar (God Shiva on Bull )

Five ambalams

Five ambalams - chidambaram