logo

|

Home >

shivarchana-chandrikai >

sivarchana-chandrika-kapila-pujai

சிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை

 

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை

கபில பூசை

இவ்வாறு சிவபூசையை முடித்துவிட்டுக் கபில பூசையைச் செய்ய வேண்டும். அது வருமாறு:- நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனஸ் என்னும் பெயரையுடைய பொன்மை வர்ணமான பசுவை “பஞ்சகோத்ர ரூபாயை கபிலாயை நம:” என்று சொல்லிக்கொண்டு சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓ உலகத்துக்கு அன்னையாயும், தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பவளாயும் இருக்கும் தேனுவே! என்னால் கொடுக்கப்பெற்ற இந்தக் கவளத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயென்று சொல்லிக்கொண்டு கவளத்தைக் கொடுத்து, பின்னர் வசிட்டர், விசுவாமித்திரர், ஜஹ்னு மகரிஷி என்னும் இவர்களால் போற்றப்பட்ட கபிலநிறத்தையுடைய தேனுவே! என்னால் செய்யப்பட்ட பாவங்களைப் போக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, என்னுடைய முன்பக்கம் பின்பக்கம் ஹிருதயம் என்னும் இவற்றில் எப்பொழுதும் பசுக்களிருக்கின்றன; யானும் பசுக்களின் மத்தியில் வசிக்கின்றேன் என்று ஜபிக்க வேண்டும். இவ்வாறு எந்த மனிதன் சுத்தனாய் முக்காலங்களிலும் நியமத்துடன் ஜபிக்கின்றானோ அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுச் சிவலோகத்தை அடைகின்றான்.

Related Content

சிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்

சிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-

சிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி

சிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி

சிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை