logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolThiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (verses 571 - 1006) Om symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


இரண்டாம் பகுதி 1. கருணை விண்ணப்பம் பொது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 571. நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால் எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே. 572. இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர் மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே. 573. தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப் பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல் தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ. 574. அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால் தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ பொருளோர் இடத்தே மிடிகொண்டோ ர் புகுதல் இன்ற புதிதன்றே. 575. புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான் மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்படினும் துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே. 576. நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங் கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ. 577. சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம் தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே. 578. அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் பெரிய பெருமாள் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே கரிய பெருமால் உடையற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே. 579. அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய் இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல் என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம் தொன்று மொழிந்த து஑மொழிதான் சூது மொழியோ சொல்லாயே. 580. சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே. திருச்சிற்றம்பலம் 2. பிரார்த்தனைப் பதிகம் திருவொற்றியூரும் திருத்தில்லையும் கட்டளைத் கலித்துறை திருச்சிற்றம்பலம் 561. அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன் இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே. 582. ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன் மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்தலையேல் ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே. 583. நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர் சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே குலத்தேவர் போற்றும் குணக்குன்றே மேஎங் குலதெய்வமே புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே. 584. அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில் பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன் இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன் மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே. 585. வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன் ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன் பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும் நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே. 586. நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற் கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையக்தே. 587. வையக் தேஇடர் மாக்கடல் முழ்கி வருந்துகின்ற பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால் நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண் மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே. 588. விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன் பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான் அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப் புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே. 589. உண்டேர்என போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ கண்டோ ர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன் பண்டோ ர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன் எண்டோ ள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே. 590. கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள் உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே. திருச்சிற்றம்பலம் 3. பெரு விண்ணப்பம் பொது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 591. இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் அருள்ஆர் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ தெருள்ஆர் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ. 592. உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால் எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே. 593. எளியேன் இழைத்த பெரும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய் களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே ஒளியே முக்கட் செழுங்கரும்மே ஒன்றே அன்பர் உறவேநல் அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே. 594. காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன் ஏமக் கொடுங்கற் றெனும்கரம் யாது செயுமோ என்செய்கேன் நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே. 595. எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே கண்ணார் துதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ் வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே. 596. பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள் தாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன் மேலே அருள்கூர்ந் தெனைநின்தான் மேவு வோர்பால் சேர்த்தருளே. 597. கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய் பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே. 598. பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான் ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே. 599. இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான் என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம் பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே. 600. வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால் விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால் எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே. திருச்சிற்றம்பலம் 4. சிறு விண்ணப்பம் பொது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 601. பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார் பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக் கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக் கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன் அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 602. எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான் வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 603. இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர் இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத் துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம் அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 604. விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர் மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார் நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி முட நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம் அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 605. பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார் நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச் சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 606. தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றான் சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார் மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன் இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங் கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 607. வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார் தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச் செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன் ஆரமுதே முக்கனுடை அரசே வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 608. வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய் தாநந்த வயத்தே நின்றார் பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர் ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 609. உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம் இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும் வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன் அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. 610. கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம் குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார் புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன் நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும் நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும் அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ. திருச்சிற்றம்பலம் 5. கலி முறையீடு கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் 611. பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப் பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே. 612. பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின் சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே. 613. செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப் புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ கொல்லலும் தகும்எனைக் கொன்றி டர்தருள் மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே. 614. வள்ளலே நின்அடி மலரை நண்ணிய உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட் கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே. 615. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப் பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல் வையநின் றையவோ மயங்கல் அன்றியான் உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே. மேற்படி வேறு 616. இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே தில்லை மன்றில் சிவபரம் சோதியே வல்லை யான்செயும் வஞ்சமே லாம்பொறுத் தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே. மேற்படி வேறு 617. இல்லையே என்திங் கில்லை என்றருள் நல்லையே நீஅருள் நயந்து நல்கினால் கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே 618. உண்மையே அறிகிலா ஓதிய னேன்படும் எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ 619. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன் சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள் மல்லலங் கடலிடை மகிழ்ந்து முழ்கினால் கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே. 620. மெய்மையே அறிகிலா வீண னேன்இவன் உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக் கைமையே அனையர்தம் கடையில் செல்லவும் பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ. 621. என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின் தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே. 622. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர் திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன் அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப் புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே. திருச்சிற்றம்பலம் 6. அச்சத் திரங்கல் கோயில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 623. துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே சுயம்பிர காசமே அமுதில் கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக் கடவுளே கண்ணுதற் கரும்பே குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடுந்துய ரால்அலைந் தையா முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை முடன்என் றிகழ்வது முறையோ. 624. இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி ஏன்றுகொள் பவரிலை அந்தோ அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும் அஞரெலாம் அறுத்தருள் புரிவாய் புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவபரம் பொருளே. 625. பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமு தேகுணப் பொருப்பே இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே இன்பமே என்பெருந் துணையே அருள்எலாம் திரண்ட ஒருசிவ முர்த்தி அண்ணலே நின்அடிக் கபயம் மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கெலாம் மாற்றிஆண் டருளே. 626. ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற் றணுத்துணைத் திவலையே எனினும் ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என்செய்கேன் எளியேன் நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள் நினைப்பரும் நிலைமையை அன்பர் வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும் விமலனே விடைப்பெரு மானே. 627. பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர் பெற்றதோர் பெருந்தனிப் பொருளே அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்தநற் செல்வமே அமுதே இருமையிற் பயனும் நின்திரு அருளே என்றுநின் அடைக்கலம் ஆனேன் கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக் களைகளைந் தெனைவிளைத் தருனே. 628. விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய விருப்பினை நெருப்புறழ் துன்பின் இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என்செய்கேன் என்பிழை பொறுத்துத் தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின் தனைஅன்றி அறிந்திலன் தமியேன் கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே கிளர்தரும் சிற்பர சிவனே. 629. சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத் தேவனே தில்லைஅம் பலத்தே தற்பர நடஞ்செய் தாணுவே அகில சராசர காரணப் பொருளே அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால் அலைதரு கின்றனன் எளியேன் கற்பகம் அனையநின் திருவருட் கடலில் களிப்புடன் ஆடுவ தென்றோ. 630. என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள் என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா தோன்றறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணியே. 631. வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தக வேனை எடுப்பவர் நின்னை அன்றிஎங் கணும்இலை ஐயா மத்தகக் கரியின் உரிபுனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்தக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள்எலாம் புரிந்தருள் பவனே. 632. அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல் மருள்பவன் என்னை அல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள் இணைதுணை எனநினைந் துற்றேன் மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய் வாழிய அருட்பெருந் துறையே. திருச்சிற்றம்பலம் 7. அபராதத் தாற்றாமை திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 633. துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மைஒன் றில்லா எச்சிலை அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம்பசு பதியே அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே. 634. தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன் தோகையர் மயக்கிடை அழுந்தி ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள மாமணிக் குன்றமே மருந்தே ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி யூர்வரும் என்னுடை உயிரே. 635. கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் திரப்படும் கருணைச் செல்வமே சிவமே தெய்வமே தெய்வநா யாகமே உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும்என் உவப்பே. 636. இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும் இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர் எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே கண்ணுதல் உடையசெங் கனியே தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே திருவொற்றி யூர்வரும் தேவே. 637. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன் மலரடி வழுத்திடச் சிறிதும் எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில்வந் தருள்விழி விருந்தே கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே காட்சியே ஒற்றியங் கரும்பே. 638. முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும் முடனேன் முழுப்புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் ஒட்டியே அன்பர் உனத்தெழும் களிப்பே ஒளிக்குளாம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடையுடைக் கனியே காலமும் கடந்தவர் கருத்தே. 639. கருதென அடியார் காட்டியும் தேறாக் கன்மனக் குரங்கனேன் உதவா எருதென நின்றேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் மருதிடை நின்ற மாணிக்க மணியே வன்பவம் தீர்ந்திடும் மருந்தே ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும்என் உறவே. 640. வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை வஞ்சனேன் நின்னடி யவர்பால் எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர் கோலநெஞ் சொளிர்குணக் குன்றே உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே. 641. தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே இடையிடர்ப் பசியசெம் பொன்னே செவ்வண மணியே திகழ்குணக் கடலே திருவொற்றி யூர்ச்செழுந் தேனே. 642. வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புதுமணப் பூவே பாதமே சரணம் சரணம்என் தன்னைப் பாதுகாத் தளிப்பதுன் பரமே. திருச்சிற்றம்பலம் 8. காட்சிப் பெருமிதம் திருவலிதாயம் கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் 643. திரைப டாதசெ ழுங்கட லேசற்றும் உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ் வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ. 644. சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே தந்தை யேவலி தாயத்த லைவநீ கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ. 645. வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே மாலை கொண்ட வளர்வல்லி கேசனே பாலை கொண்ட பராபர நீபழஞ் சேலை கொண்ட திறம்இது என்கொலோ 646. பன்னு வார்க்கு ளும்பர மேட்டியே மன்னும் மாமணி யேவல்லி கேசனே உள்ள நீஇங்கு டுத்திய கந்தையைத் துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே 647. கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே. 648. ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு மால்அ டுத்தும் கிழ்வல்லி கேசநீ பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத் தோல்உ டுப்பது வேமிகத் து஑ய்மையே 649. துன்னும் மாமருந் தேசுட ரேஅருள் மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில் என்ன நீர்எமக் கியும்ப ரிசதே. 650. மாசில் சோதிம ணிவிளக் கேமறை வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர் தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே. 651. தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம் சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர் பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர் யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே. 652. மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே வல்லி தாயம ருவிய நாதனே புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால் கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே. திருச்சிற்றம்பலம் 9. அருளியல் வினாவல் திருமுல்லைவாயில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 653. தேன்என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான்என நிற்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே ஊன்என நின்ற உணர்விலேன் எனினும் உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ. 654. பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே புத்தமு தேமறைப் பொருளே வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே தீங்கொடி யாத வினையனேன் எனினும் செல்வநின் கோயில்வந் தடைந்தால் ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி ஏன்எனா திருப்பதும் இயல்போ. 655. துப்புநேர் இதழி மகிழ்ந்தால் யாண சுந்தரா சுந்தரன் து஑தா மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினுநின் கோயிற் கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா திருப்பதுன் திருவருட் கியல்போ. 656. கங்கைஅஞ் சடைகொண் டோ ங்குசெங் கனியே கண்கள்முன் றோங்குசெங் கரும்பே மங்கல்இல் லாத வண்மையே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில்வந் தடைந்தால் எங்குவந் தாய்நீ யார்என வேனும் இயம்பிடா திருப்பதும் இயல்போ. 657. நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும் நல்லவ னேதிருத் தில்லை மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில்வந் தடைந்தால் என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா திருப்பதுன் திருவருட் கியல்போ. 658. பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட் கருள்செயும் பரமே மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெருமநின் அருள்பெற லாம்என் றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல் இருப்பதுன் திருவருட் கியல்போ. 659. முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே முக்கணா முவர்க்கும் முதல்வா மன்னிய கருணை வாரியே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன் அருட்பெரும் கோயில்வந் தடைந்தால் என்இது சிவனே பகைவரைப் போல்பார்த் திருப்பதுன் திருவருட் கியல்போ. 660. நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள் ஞானநா டகம்புரி நலமே வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகறிந் ததுநீ இல்லையென் றாலும் விடுவனோ சும்மா இருப்பதுன் திருவருட் கியல்போ. 661. பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே மதுவினின் றோங்கும் பொழில்தரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது பூங்குழற் கன்புபூண் டவன்காண் எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல் இருப்பதுன் திருவருட் கியல்போ. 662. பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப் புண்ணியா கண்ணுதல் கரும்பே மன்னனே மருந்தே வளர்திரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன் உன்திரு அடித்துணை அறிய என்னைஈன் றவனே முகமறி யார்போல் இருப்பதுன் திருவருட் கியல்போ. திருச்சிற்றம்பலம் 10. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம் கலிவிருத்தம் திருசிற்றம்பலம் 663. தாயின் மேவிய தற்பர மேமுல்லை வாயின் மேவிய மாமணி யேஉன்தன் கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா தேயின் மேவி இருந்தனன் என்னையே. 664. தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு முல்லை வாயில் முதல்சிவ முர்த்தியே தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின் எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே. 665. வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக் களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே. 666. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய விலையி லாமணி யேவிளக் கேசற்றும் குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில் தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே. 667. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில் ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத் தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன் ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே. 668. சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில் பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன் கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ. 669. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய அண்ண லேஅமு தேஅரை சேநுதல் கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெல்லாம் நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ. 670. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ் கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது பண்ணும் நின்அருள் பாரி��

Related Content