logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ உமாமஹேச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்

சங்கரர் அருளிய

 (உமா, மஹேச்வரன் இருவரையும் சேர்த்துத் துதிப்பது.)

நம: சிவாப்4யாம் நவயௌவ நாப்4யாம்

       பரஸ்பராச்லிஷ்டவபுர்த4ராப்4யாம்

நகே3ந்த்3ரகன்யா வ்ருஷகேத நாப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                         1

       மங்கள வடிவானவர்களும் எப்பொழுதும் யெளவனப் பருவங் கொண்ட வர்களுமான பார்வதீ பரமேச்வரர்களுக்கு வணக்கம். ஒருவரோடொருவர் அணைத்துக் கொள்ளப்பட்ட சரீரத்தை உடையவர்களும், இமயமலையின் புதல்வியும் காளைமாட்டுக் கொடியரும் மான பார்வதிக்கும் சங்கரருக்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் ஸரஸோத்ஸவாப்4யாம்

       நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரநா3ப்4யாம்

நாராயணே நார்சிதபாது3காப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                         2

     மங்களமே வடிவானர்களும் எப்பொழுதும் சுவையான உத்ஸவத்தை உடையவர்களும், தங்களை வணங்குகிற பக்தர்களுக்கு வேண்டிய வரன்களை கொடுப்பவர்களும், மஹாவிஷ்ணுவினால் தொழப்பட்ட திருவடிகளை உடையவர் களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் வ்ருஷவாஹநாப்4யாம்

       விரிஞ்சி விஷ்ண்விந்த்3ரஸுபூஜிதாப்4யாம்

விபூ4தி பாடீர விலேபநாப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                        3

       மங்கள வடிவானவர்களும் காளை மாட்டை வாகனமாய்க் கொண்டவர்களும், நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோரால் நன்கு தொழப்பட்டவர்களும், திருநீறும் - மஞ்சள் குங்குமமும் பூசியவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்யாம் ஜக3தீ3ச்வராப்4யாம்

       ஜக3த்பதிப்4யாம் ஜயவிக்3ரஹாப்4யாம்

ஜம்பா4ரிமுக்3யைரபி4 வந்தி3தாப்4யாம்

       நமோநம: சங்கர பார்வதீப்4யாம்                                         4

       மங்கள வடிவானர்களும் உலகெல்லாம் ஆள்பவர்களும், உலகத் தலைவர் களும் வெற்றியே உருவானவர்களும், இந்திரன் முதலானவர்களால் வணங்கப் பட்டவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

 நம: சிவாப்4யாம் பரமௌஷதா4ப்4யாம்

       பஞ்சாக்ஷரீ பஞ்ஜராஞ்ஜிதாப்4யாம்

ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி ஸ்தி2திஸம்ஹ்ருதாப்3யாம்

       நமோநம: சங்கர பார்வதீப்4யாம்                                          5

       மங்களமே வடிவானர்களும் (பிறப்பிறப்பெனும் நோய்க்கு) சிறந்த மருந்து ஆனவர்களும், பஞ்சாக்ஷரம் என்ற ஐத்து எழுத்தாகிற கூட்டில் ஆனந்திப்பவர் களும், உலகத்தை படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவைகளைச் செய்பவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் அதிஸுந்த3ராப்4யாம்

       அத்யந்தமாஸக்த ஹ்ருத3ம்பு4ஜாப்4யாம்

அசேஷலோகைகஹிதங்கராப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                         6

       மங்களமே வடிவானர்களும் மிகவும் அழகானவர்களும், மிகவும் ஒற்றுமை யான இதய கமலத்தை உடையவர்களும், எல்லா உலகிற்கும் நன்மையே செய் பவர்களுமான சங்கரருக்கும் பார்வதித்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் கலிநாசநாப்4யாம்

       கங்கால கல்யாண வபுர்த4ராப்4யாம்

கைலாஸ சைலஸ்தி2த தே2வதாப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                         7

       மங்களமே வடிவானவர்களும் கலி தோஷத்தைப் போக்குபவர்களும், (ஒருபுறம்) எலும்புக்கூடு தரித்து மறுபுறம் சுபமான உடலை உடையவர்களும், கயிலை மலையை இருப்பிடமாய்க் கொண்ட தெய்வங்களுமான, சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்யாம் அசுபா4பஹாப்2யாம்

       அசேஷ லோகைக விசேஷிதாப்4யாம்

அகுண்டி2தாப்4யாம் ஸ்மிருதி ஸம்ப்4ருதாப்4யாம்

       நமோநம: சங்கர பார்வதீப்4யாம்                                          8

       மங்கள வடிவானவர்களும் அசுபத்தைப் போக்கடிப்பவர்களும், எல்லா உலகிற்கும் மேலானவர்களும், மழுக்க முடியாத (சக்தி பொருந்திய) வர்களும் சாஸ்திரங்களினால் அடைவிக்கப்படுபவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வண்க்கம்.

 நம: சிவாப்4யாம் ரத2வாஹநாப்4யாம்

       ரவீந்து3 வைச்வாநரலோசநாப்4யாம்

ராகாசசாங்காப4முகா2ம்பு4 ஜாப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                        9

       மங்களமே வடிவானவர்களும் ரதத்தை வாகனமாயுடையவர்களும், சூரியன் - சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் கண்களாய்க் கொண்டவர்களும், முழு நிலவுக்கு ஒப்பான முகத்தை உடையவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக் கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் ஜடிலந்த4ராப்4யாம்

       ஜராம்ருதிப்4யாஞ்ச விவர்ஜிதாப்4யாம்

ஜநார்த3நாப்3ஜோத்3ப4வ பூஜிதாப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                        10

       மங்களமே வடிவானர்களும் சடை முடி உடையவர்களும், முதுமையும் இறப்பும் அற்றவர்களும், திருமால் நான்முகன் ஆகிய இருவராலும் தொழப் பட்டவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் விஷமேக்ஷணாப்4யாம்

       பி3ல்வச்ச2தா3ரமல்லிகதா3 மப்4ருத்ப்4யாம்

சோபா4வதீ சாந்தவதிச்வராப்4யாம்

       நமோ நம: சங்கர பார்வதீப்4யாம்                                        11

       மங்களமே வடிவானவர்களும் நெற்றிக்கண்ணை உடையவர்களும், வில்வத் களத்தையும் மல்லிகைப்பூ மாலையையும் அணிந்தவர்களும், அழகையும் அமைதி யையும் கொண்டவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

நம: சிவாப்4யாம் பசுபாலகாப்4யாம்

                ஜகத்ரயீரக்ஷண ப3த்3த4ஹ்ருத்2ப்4யாம்

ஸமஸ்த தே3வாஸுரபூஜிதாப்4யாம்

                நமோநம: சங்கர பார்வதீப்4யாம்                                                                                              12

    மங்களமே வடிவானவர்களும் பசுக்களாகிய (உயிர்களை) காப்பவர்களும் மூவுலகையும் காப்பதிலேயே கட்டப்பட்ட இதயமுள்வவர்களும், எல்லா தேவர் களாலும் அரக்கர்களாலும் பூஜிக்கப்பட்டவர்களுமான சங்கரருக்கும் பார்வதிக்கும் வணக்கம்.

ஸ்தோத்ரம் த்ரிஸந்த்4யம் சிவபார்வதீப்4யாம்

       ப4க்த்யா படே2த்3த்3வாத3சகம் நரோ ய:

ஸ ஸர்வ ஸௌபா4க்ய ப2லாநி பு4ங்க்தே

       சதாயுரந்தே சிவலோகமேதி                                             13

   சிவ பார்வதியினுடைய 12 சுலோகங்கள் கொண்ட இந்தத் துதியை மூன்று ஸ்ந்த்யைகளிலும் படிக்கும் மனிதன் எல்லா பேறுகளையும் அடைந்து நூறு வயது வாழ்ந்து முடிவில் சிவலோகத்தை அடைவான்.

Related Content

Chekkizar Swamikal Puranam

Kodikkavi

Umamaheshvara Stotram

Vina Venba Of Saint Umapati Sivacharyar

அத்வைத பஞ்சரத்னம் - தமிழ் உரையுடன்