logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolதிருவாசகம் தமிழ் உரை & Thiruvasagam English TranslationOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


சிவமயம் (Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli) சிவபுராணம் ( சிவனது அநாதி முறைமையான பழமை) திருப்பெருந்துறையில் அருளியது கலிவெண்பா 1. CIVAPURANAM The Beginningless Ancientry of Lord Civan (Sung whilst in Thirup-Perun-Thurai) திருச்சிற்றம்பலம் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் குரு வடிவாக எழுந்தருளி மணிவாசகப் பெருந்தகைக்கு அருளாரமுதத்தை வழங்கிய சிவபெருமான், அருட்கண்பாலித்துச் “சிதம்பரத்தில் ஆன்மாக்களுய்ய அனவரதமும் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அருளுகின்றோம்; அவ்விடம் வருக" என்று ஆணை தந்து மறைந்து அருளினார். கேட்ட வாதவூரடிகள் திடுக்கிட்டு, குருவின் திருமேனி காணும் இணையில்லா இன்பத்தை இழக்கின்றோமே என்று இரங்கி, அன்பரோடு மருவுதலாகிய சிவநெறியில் தலைப்படுவாராக அடியார் கூட்டத்தை அடைந்தார் . அங்கு அடியார்களும் தாமுமாகக் குருந்தமரத்தடியில் தெய்வப் பீடிகை ஒன்று செய்து, அதில் குருநாதனுடைய திருவடித் தாமரைகளை அமைத்து வணங்கி வந்தார். ஒருநாள் இவர் உள்ளத்து, “இறைவன் அடியடைந்தார் அன்பிலர் ஆயினும் பாடிப் பரவுவாராயின் இறைவன் அவர்க்கு இரங்கி அருள் செய்வான்” என்ற எண்ணம் திருவருள் விளக்கத்தால் தோன்றியது . உடனே மங்கலச் சொல் யாவற்றிற்கும் தலையாயதும், தான் மங்கலமாதலேயன்றித் தன்னைச் செபிப்பார்க்கும் தியானிப்பார்க்கும் பெருமங்கலம் தரவல்லதும், வேதவிருட்சத்து வித்தாய் உள்ளதும் ஞானசம்பந்தப் பெருந்தகையாரால் “வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது” என்றும் “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்" ஆவது என்றும், திருநாவுக்கரசு சுவாமிகளால் "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது" என்றும், "நாவினுக் கருங்கலம்", “நல்லக விளக்கு" என்றும் பாராட்டப் பெறுவதும், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்று மூன்று முறைகளால் பரிபாக நிலைக்கு ஏற்ப ஓதப்பெறுவதும் ஆகிய திருவைந்தெழுத்தை முதலாக வைத்து "நமச்சிவாய வாழ்க” என இக்கலிவெண்பாவை அருளிச் செய்தார்கள். சிவபுராணம் - சிவனது அநாதி முறைமையான பழைமை . "அநாதியுடனாம் நின்மல சிவனுடைய அநாதி முறைமையான பழைமை" என்பது அகத்திய மாமுனிவர் அருளிய திருவாசக அனுபவச் சூத்திரம். புராணம் - பழைமை. சிவபுராணம்- சிவனது பழைமை. பழைமையில் காலத்தொடு பட்ட பழைமையும், காலம் கடந்த பழைமையும் என இருவகை உண்டு. அவற்றுள் சிவனது பழைமை காலாதீதமானது. காலத்தொடு கற்பனை கடந்தது. ஆதலின், அநாதி நித்திய முறைமையான பழைமை எனப்பட்டது. சிவனது பெருங்கருணையாகிய அநாதியான சச்சிதாநந்த முறைமை; இதனுள் வேதாகம புராண சாத்திர சுத்த சைவ அபேத அத்துவித சித்தாந்த சம்பிரதாயம் முழுதும் அடங்குந் தன்மைக்குச் சிவபுராணம் என்று பெயராயிற்று என்பது பழைய உரை. இதன் கருத்து இறைவனுடைய உண்மை அறிவானந்தப் பழைமையே சிவ புராணம், இதனுள் ஞானவாயில்களாகிய வேதாகம விதிகளும் அவற்றின் விளைவும் அனைத்தும் அடங்கும் என்பதாம். இது சிவனது அருவநிலை கூறுவது என்பர் சிலர். "தேசுறுமா ணிக்கமெனச் சிறந்ததிரு வாசகத்தில் பேசுதிருச் சிவபுரா ணத்தகவற் பெருமைசொலில் ஈசர்தமக் கியல்பான திருநாம முதலெவையும் மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட்குறிப்பாம்" என்பது பழைய திருப்பெருந்துறைப் புராணம். இது கலிவெண்பாவால் ஆனது. சிலர் இதனை அகவல் என வழங்குவதைக் காண்கிறோம். பழைய திருப்பெருந்துறைப் புராண ஆசிரியரும் சிவபுராணத்தகவல் என்கிறார். ஆகவே கலிவெண்பாவை அவர்கள் தவறி அகவல் என்கின்றார்கள் அல்லர். முதற்கண் உள்ள நான்கினில் இது நீங்க ஏனையவை அகவலாக இருத்தலின் பெரும்பான்மை பற்றிய வழக்காகக் கூறினார்கள் என்று கொள்க. இது தொண்ணூற்றைந்து அடிகளால் அமைந்த ஒரு கலிவெண்பா. இதனுள், "நமச்சிவாய வாஅழ்க" என்பது, திருவாசக முழுதும் மணிமாலையுள் நூலிழைபோல ஊடுருவி நின்று ஒளிதரும் பொருள் திருவைந்தெழுத்தாகலின் அது எம் மனத்துள் என்றும் நிலவுக என்னும் பொருளும், சிவ ஞான போதப் பன்னிரண்டாம் சூத்திரத்து அணைந்தோர் தன்மையாக அமைந்ததன் கருத்தும் அடங்க உணர்த்துகிறது. "நாதன் தாள் வாழ்க' என்பது முதல் 'இறைவனடி வாழ்க' என்பது வரையுள்ள அடிவாழ்த்து ஐந்தும் சிவன் நாதாதி நின்று அருள்வழங்கும் முறைமையை அறிவிக்கிறது. "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்பது முதல் உள்ள "வெல்க" எனத் திருவடி வெற்றி கூறும் பகுதி ஐந்தும் பஞ்சமல நிவிருத்தியை அறிவிப்பன. "ஈசனடி போற்றி" என்பது முதல் திருவடி போற்றிகள் எட்டும் இறைவனுடைய காருண்யமாகிய எண்குணங்களைத் துதிப்பன. " சிந்தை மகிழ..... உரைப்பன் யான்' என்பது இச்சிவபுராணத்தை உயிர்கள் ஐம்புலக் கட்டினின்றும் அகன்று, பேரானந்தம் பெற்று, இன்பமெய்துக என்று இயற்றுதற்குக் காரணம் இயம்புகின்றது. "கண்ணுதலான் தன் கருணை......... இறைஞ்சி" என்பது ஆசாரிய வணக்கம் அறிவிக்கின்றது. "விண்ணிறைந்து....... எல்லையிலாதானே" என்பது இறைவனியல்பு உபதேச வாயிலான் உணரத் தக்கது என்பது உரைக்கின்றது. "நின் பெருஞ்சீர்..... பணிந்து" என்பது துதியும், இதன் பெருமையும், இதன் பொருட்பயனை உணருவோர் உணர்த்துவோர் எய்தும் பயனும் உணர்த்துகிறது. இவ்வண்ணம் இச்சிவபுராணம் பொருட்பேற்றினால் எட்டு பகுதியாக அமைந்துள்ளது. இவற்றின் அமைப்பையும் அழகையும் உரைக்கிடையில் காண்க. இப்பகுதி முழுதும் பழையவுரை தந்த கருத்துக் கருவூலமாகும். "God Head is not a being full of Bliss, but Bliss itself" Poet, Sage and Saint Maanikkavaachakar affirms the above truth through his poetry Thiruvaachakam. It is a spirit. It is an outpouring of love to the Supreme by the soul. Saint Maanikkavaachakar composed these gems of divine utterances on Lord Civan and of man's relationship with Him, with the world and with fellow beings, so that all who read his psalms may experience the divine greatness of His grace at work in all the activities of human life and in the universe. Civaprakasa Swamigal in his poem of praise on Thiruvaachakam exclaimed thus: " Oh Beloved of Vaathavoorar Thy Thiruvaachakam is the essence of exalted love and life" Mrs.Ma Ratna Navaratnam writes, "If poetry is the resonance of greatness of soul, Thiruvaachakam stands unchallenged, as one of the finest gems of poetry in the literature of the world. Maanikkavaachakar is acclaimed as one of the renowned poet, sage and saint". Ramachandra Deekshithar, the author of "Studies in Tamil Literature and History" says: "The Thiruvaachakam relates an autobiographical story of the different stages of Maanikkavaachakar's spiritual life and experience which ultimately enabled him to attain Bliss ineffable and eternal. It is a torrential outflow of ardent religious feelings and emotions in rapturous songs and melodies. The work may be regarded as a convenient hand book on mystical theology". The first chapter in Thiruvaachakam is captioned as "CIVAPURAANAM". Civapuraanam means Lord Civan's way of old or the beginningless ancientry of Civan, whose acts of grace which give solace and redemption to souls, transcending all calculations of time. This may be generally termed as a prologue, corresponding to the Tamil word "PAAYIRAM". It is a poem of praise on Lord Civan. It begins with the famous five-letter mystic word "NAMACHCHIVAAYA". The word "NAMACHCHIVAAYA" is not only a five letter mystic word but also stands as the name of Lord Civan. Similarly, the word "NAATHAN" in the same line also stands for Lord Civan. Thus, Maanikkavaachakar starts the poem by paying salutations to the God head Lord Civan with an auspicious word. The antiquity and importance of this five-letter mystic word can be further explained by quoting Yajur Veda. Among the three Vedas - Ruk, Yajur and Sama (Vedas are only three in number, Atharvana veda was added in a later period; That is why Vedas are called Thirayee (த்ரயீ) i.e, Three in number). Among the three Vedas, the middle one is Yajur. In the middle of Yajur veda is Thiru Vuruthiram (திருவுருத்திரம்). In the central piece of Thiru Vuruthiram, the following lines appear. "NAMACHCHIVAAYASA CIVATHARAAYASA" "நமச்சிவாயச சிவதராயச" The world famous scientist Darwin discovered the theory known as "Theory of Evolution". The present day discovery of this scientific theory finds a place in Thiruvaachakam lines 26-31 of this first poem: "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்" written by Maanikkavaachakar, thousands of years ago. Of course, these six lines have been made not in the order of evolution, but for the sake of consonance and alliteration the order has been altered. It will not be out of place here to quote the following lines from a poem writen by Jalal Ad-Din Rumi (1207-1273) a Persian mystic and poet. "I died as mineral and became a plant I died as plant and rose to animal I died as animal and I was man Why should I fear? When was I less by dying? Yet, once more I shall die as man to soar With angels blessed, but even from angelhood I must pass one; all except God death perish When I have sacrificed my angel-soul I shall become what no mind ever çonceived Oh! Let me not exist" The penultimate lines in this poem reads: " பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து" i.e.one should conceive what he consumes, then he must realise, then he must comprehend what Maanikkavaachakar has meant and then try to adhere to the pathway towards God that he suggested in the poem" Thiru Muruga Kirubaanantha Vaariyaar, an exponent of Hindu religious scriptures in Tamil, says, "The Civapuraanam is the essence of all the 108 upanishads". Similarly, there are many more aspects in the first poem itself, which is left to readers to conceive and appreciate. 1.1 நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! 5. ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க ! வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! 10. சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! ஈசன் அடிபோற்றி ! எந்தை அடிபோற்றி ! தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி! 15. சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி ! ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை, 20. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய் எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும்சீர் 25. பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன், புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக் கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய் வல்லசுரர் ஆகி முனிவர் ஆய், தேவர் ஆய், 30. செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் ! மெய்யே உன்பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் 35. "ஐயா"என,ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே! வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம்விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே ! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! 40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில் நாற்றத்தின் நேரியாய்! சேயாய் ! நணியானே! 45. மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே! கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்தபிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த 50. மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை! மறைந்திட மூடிய மாய இருளை அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 55. மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்புஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி, 60. நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே ! 65. நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! 70. இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! 75. கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற 80. தோற்றச் சுடர் ஒளி ஆய்ச், சொல்லாத நுண் உணர்வு ஆய் மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவுஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண்ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன்; "எம் ஐயா! அரனே! ஓ!" என்று என்று போற்றி, புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்ஆனார், மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம்பயின்று ஆடும் நாதனே! 90. தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ!' என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார். சிவன் அடிக்கீழ், 95. பல்லோரும் ஏத்தப் பணிந்து. திருச்சிற்றம்பலம் 1.1 நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க விமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க வாகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க ! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! namasivaya vaazkha naathanthaaL vaazka imaipoluthum en nenjil neengkaathaan thaaL vaazka kookaziy aaNda kurumaNithan thaaL vaazka aakamam aaki ninRu aNNippaan thaaL vaazka பொழிப்புரை 1 - 4: தலைவனது பெருமையை உணர்த்தும் நாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலை பெறுக. தலைவனது திருவருட் சத்தியானது என்றும் விளங்குக. கண்ணை மூடி விழிக்கும் நேரமளவுங்கூட அடியேனுடைய உள்ளத்தை விட்டு அகலாதவனுடைய திருவடிகள் வாழ்வனவாக. திருவாவடுதுறை அல்லது திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியார்க்கு மெய் உணர்த்தி ஆட்கொண்டு அருளிய தலைமை அருட் பேராசிரியராகிய முதல்வனின் திருவடிகள் என்றும் விளங்குக. வீட்டு நூல் கூறும் தனிப்பொருளாய் நின்று இனிமை தருவானுடைய திருவடிகள், உள்ளத்தில் என்றும் நிலை பெறுக. தன்னிலையில் ஒருவனாய், அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக. குறிப்புரை 1 - 4: "நமச்சிவாய" என்னும் சொல் வடமொழியில் "வணக்கம் சிவனுக்கு" என்று பொருள்படும். நமஸ்= வணக்கம். சிவாய= சிவனுக்கு, சித்தாந்த நூல் முறைப்படி, "நமச்சிவாய" என்பதற்கு எழுத்துப் பொருள் கொள்ளுமிடத்து, நகரம், உயிர்கள் உலகியலில் செல்லுதற்குத் துணை புரிந்து நிற்கும் கடவுளது மறைப்புச் சக்தியைக் குறிக்கும். மகரம், மலமாகிய உலகப் பாசத்தைக் குறிக்கும் . சிகரம், சிவமாகிய கடவுளைக் குறிக்கும். வகரம், வீடடைதற்குத் துணைபுரியும் அருட்சத்தியைக் குறிக்கும். யகரம் உயிரைக் குறிக்கும். ஆணவத்துள் கிடக்கும் உயிரினைப் பிறவிக் கட்டினுள் படுத்தி, உலகியலில் செலுத்தியும், ஆணவம் நீங்குதற்குரிய பக்குவம் வந்த போது கட்டுக்களை ஒழித்து அருட்சத்தி வாயிலாகத் தன்பால் வீடு பெறுவித்தும், உயிருக்கு நன்மை புரியும் கடவுளின் பெருந்தன்மையைத் திருவைந்தெழுத்து விளக்குதலால், "நாதன் நாமம் நமச்சிவாய" எனப்பட்டது. நாதனை அவன் நாமத்தால் வழுத்தியபின், நாதனது சத்திக்கு வாழ்த்துக் கூறப்பட்டது. நமசிவாய என்பதைப் பெரிய ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் எனவும் , சிவாயநம என்பதை நுண்ணிய ஐந்தெழுத்து சூக்கும பஞ்சாக்கரம் எனவும் கூறுப. கட்டு நிலையை நமசிவாய என்பதும், வீட்டு நிலையை சிவாயநம என்பதும் குறிக்கும். நாதன் என்பதற்கு நாத தத்துவ முதல்வன் என்று பொருள் கொள்வதும் உண்டு. தாள்= அருளாற்றல், இமைத்தல்= இயற்கையாகக் கண்மூடி விழித்தல், இமைப்பொழுது மிகச் சிறிய கால அளவைக் குறிக்கும். கோகழி = பசுத் தன்மை கழிதல். இப்பொருளில் அது திருவாவடுதுறையைக் குறிக்கும் . கோ= பெரிய, கழி= துறை. இப்பொருளில் திருப்பெருந்துறையைக் குறிக்கும். அடிகள் காலத்திற்கு முன்னமே நவகோடி சித்தபுரம் என்னும் திருவாவடுதுறையிலே இறைவன் பலர்க்கு அருள் புரிந்திருக்கக் கூடும். கோகழி இத்திருப்பதிக்கே பெரு வழக்கமான பெயர். திருப்பெருந்துறை என்ற பொருள், அடிகள் வரலாற்றிற்கு மிகவும் பொருத்தமானது. மணி= மாணிக்கம். அது இரத்தினங்களுள் சிறந்ததாதல் பற்றித் தலைமையையும் குறிக்கும். ஆகமம் = ஆகமப் பொருள். ஆகமம் வீட்டு நூலாதலின் கடவுள்,ஆகமப் பொருளாயினமை கூறினார். அண்ணிப்பான் என்பதற்கு அணுகி நிற்பான் என்று பொருள் கொள்வாரும் உளர். இறைவன், இறு என்பதனடியாகப் பிறந்தது. இறு = தங்கு. 5. வேக னநேக னிறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க ! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க ! கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க! ekan aneekan iraivan adi vaazka veekang keduththaaNda veenthan adi velka pirapaRukkum pinjakanRan peykazalkaL velka puRaththaarkku seyoonRan puungkazalkaL velka karanguvivaar uLmakizhung koonkazalkaL velka பொ-ரை: 5 - 10; உய்தி கூடுதற்கு அருட்குரவனை நாடி அலைந்த மனத்தின் விரைவைத் தொலைத்துத் திருவருள் தந்து ஆட்கொண்ட மன்னனது திருவடிகள் மேம்படுக. பிறவியை வேரறுக்க வல்ல தலைக்கோலப் பெருமானுடைய வீரச் சிலம்பு நிறைந்த திருவடிகள் சிறந்து விளங்குக. அன்பிற்குப் புறமாய் உள்ளவர்கள் அணுக ஒண்ணாத தூரத்தில் உள்ளவனுடைய அழகிய மெல்லடிகள் வெற்றியுடன் திகழ்க . கை கூப்பித் தொழுவார் தமது நெஞ்சத்தில் நினைந்து நினைந்து களிப்படைவதற்கு ஏதுவாகிய அரசனுடைய திருவடிகள் நிலைபெற்றுச் சிறக்க; தலை குவித்து வணங்குவாரை மேன்மை அடைவிக்கும் புகழுடையானது திருவடிகள் வெற்றியுடன் மிளிர்க. 1 - 10: "Namachchivaaya" the sacred and mystic five-lettered name of Lord Civan which extols His greatness be hallowed for ever. May the holy Feet of the Lord which symbolise His divine grace (Paraa Caththi or primal energy) be hallowed. Hallowed be the Feet of Civan who never quits my heart even for the twinkling of an eye. Let me praise the holy Feet of Civan, gem among all preceptors, who appearing in the place called "Kokazhi", made me realise the truth and graciously accepted me as His (Some authors interpret the place "Kokazhi" as Thiruvaavaduthurai and some others claim that it refers to Thirup Perun-Thurai). My prostrations to the holy Feet of Lord Civan who, in the form of aagamaas draws the souls towards Him and blesses them with the sweetness of His grace. Hail the holy Feet of Civan who is One in His original stature, but who takes many forms as desired by His devotees and as necessitated by the circumstances, as He is immanent. Victory to the holy Feet of the King who stilled the tumult of my mind, showered His grace on me and made me His. Victory to the anklet-girt Feet of Civan who wears the moon on His head (Pinahan) and who stops the cycle of my birth in this world. Victory to the beautiful soft Feet of Civan who is not accessible to those who have distanced themselves from Him as they have no love for Him. Victory to the holy Feet of Civan, the King, who delights in the hearts of those who adore Him with joined palms. Victory to the Feet of the glorious one who exalts those who bow their heads down at His Feet. கு-ரை: 5 - 10 வேகம்= விரைவு, பிஞ்ஞகம்= தலைக்கோலம், பிஞ்ஞகம் = பின்னகம் = பின்+நகம்; (தலையின்) பிற்பகுதியில் விளங்கும் அணி . இறைவனுக்குப் "பிறை" அவ்வணியாகும் என்ப .'பெய்கழல்' என்பதில், 'பெய்' மிகுதியாகச் சாத்தப்படுதலைக் குறிக்கும். இறைவனது ஒப்பற்ற வெற்றிச் செயல்களைக் கண்ட விண்ணவரும் வீர அன்பர்களும் அவன் திருவடிக்கண் கழல்களைச் சாத்தினமை குறிப்பித்தவாறாம். கழல், திருவடிக்கு ஆகுபெயர். உள்=உள்ளம். கரங்குவித்தல் பெரும்பாலும் நெஞ்சிற்கு நேரே புறத்து நிகழ்தலின், அது அக மகிழ்வின் விளைவாயிற்று. சிரம், உயர்ந்த உறுப்பாகலின் ஓங்குவித்தல், சிரங்குவிதலின் பயனாகக் கூறப்பட்டது. 10. சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க வீச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ! ஈசன் அடிபோற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! sirangkuvivaar oongkuvikkunj seeroonkazal velka iisan adi pooRRi enthaiy adi pooRRi theesanadi pooRRi sivanseevadi pooRRi neeyathee nindRa nimalan adi pooRRi. maayap piRappaRukkum mannanadi pooRRi பொ-ரை 11-16: ஆண்டவனுடைய திருவடிகள் நம்மைக் காப்பனவாக; நம் அப்பனுடைய திருவடிகள் காக்க; ஒளி மேனியனுடைய திருவடிகள் காக்க ; மங்கலப் பொருளாகிய சிவபெருமானுடைய செவ்விய பாதங்கள் காப்பனவாக; அன்பிலே விளங்கி நின்ற மாசில்லாதவன் திருவடிகள் காக்க; வஞ்சப் பிறவியை வேரறுக்கும் வேந்தன் திருவடிகள் காக்க; அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நம் இன்பன் திருவடிகள் நம்மைக் காக்க; தெவிட்டாத இனிமையை ஆறாக நல்கும் மலைபோலும் பெருமான் நம்மைக் காக்க. கு-ரை 11 - 16: ஈசன், ஆளுதல் என்று பொருள்படும் வினையடியாய்ப் பிறந்தது. தேசு= ஒளி, நிமலன்=மலமில்லாதவன், மாயம் = வஞ்சனை, நிலையாமை; எடுத்த பிறவி நிலையாமையானும், வரும் பிறவி யாதென்று அறியப்படாமையானும் "மாயப்பிறப்பு" என்றார். தேவன் = தே+அன்= இனிமையன், தேவன் என்னுஞ் சொல் வடமொழியிலே ஒளி உருவினன் என்று பொருள்படும் என்க, ஆராத= உண்டு நிரம்பாத, 'மலை' என்றமையால், உரையுள், இன்பம் ஆறெனப்பட்டது. 15. சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி யாராத வின்ப மருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையு ணின்ற வதனா லவனரு ளாலே யவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச், சிவ புராணம் தன்னை, seerar perunthuRai nam devanadi pooRRi aaraatha inpam aruLumalai pooRRI sivan avan en sinthaiyul ninRa athanaal avan aruLaalee avan thaaL vaNangki sinthai makiza sivapuraaNam thannai பொ-ரை 17-22 : சிவபெருமானாகிய முழுமுதற் கடவுள் எனது நினைவின் கண் நிலை பெற்றிருந்த காரணத்தால், என் செயலற்று அவனது திருவருள் துணை கொண்டு அவனது திருவடிகளைத் தொழுது இயற்றிய நல் தவத்தின் பயனாக, நெற்றிக்கண் முதல்வன் ஆசிரியனாக எழுந்தருளி வந்து தனது அருட்பார்வை நல்கவே சிவ ஞானம் பெற்று, மனத்தாற்கிட்ட ஒண்ணாத மாறிலா அழகு நிறைந்த அவனது திருவடிகளைப் பணிந்து, எனது நெஞ்சம் மகிழ்ச்சியடையவும், முற்பிறவியில் செய்த எனது ஊழ்வினை முற்றிலும் ஒழிந்து போகவும், சிவனது பழமையான அருட்செயல் முறையினை யான் சொல்லுவேன், கு-ரை:17- 22: “சிவனவன்" என்பதில் "அவன்" என்பது பல்சமயத்தாரும் பொதுவாகக் குறிக்கும் முழுமுதற் கடவுள் என்று பொருள் படுவதாகும். திருவருள் பெற்ற காலையும் எடுத்த உடம்பு கொண்டு நுகர்வதற்கு உரிய முன்வினைப்பயன் எஞ்சி நிற்றலின் "முந்தை வினை முழுதும் மோய" என்றார். சிவஞானம் பெற்ற பெரியோர்க்கு அறிவு புறத்தே சென்ற காலை இறைப்புகழ் பாடுதல் எண்ணத்திற்கு இன்பம் பயத்தலின், “சிந்தை மகிழ" என்றார். இறைவனது ஞானத்தைப் பெறுதற்கு முன்னேயே, சரியை, கிரியை, யோகம் என்னும் நல் தவ வழியில் நிற்றற்கு அவன் திருவருள் வேண்டப்படும் ஆதலின் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்றார். ஞானம் பெற்றபின் ஆற்றப்படும் சுட்டு இறந்த வணக்கம் "எண்ணுதற்கு எட்டா" என்பதால் உணர்த்தப்பட்டது. 20. முந்தை வினைமுழுது மோய வுரைப்பன் யான் கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி யெண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியா யெண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான். கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர், munthai vinai muzuthum moya uraippan yaan kaNNuthalaan than karuNai kaN kaadda vantheythi eNNuthaRku eddaa ezilaar kazal iRainji viNNiRainthu maNNiRainthu mikkaay viLangkoLiyaay eNNiRaNthu ellai illathaanee ! ninperunjseer பொ-ரை 23-25; மேலுள்ள வானுலகெங்கும் நிறைந்தும், கீழுள்ள மண்ணுலகெங்கும் நிறைந்தும், அவற்றிற்கு அப்பாலுமாய் விளங்குவோனே, எங்கும் திகழ்கின்ற ஒளி மேனியனே, கணிக்கப்படும் சுட்டுப் பொருள் அனைத்தையும் கடந்து நிற்கும் அளவிலாத் தன்மையனே, நினது ஒப்புயர்வற்ற பெரிய புகழினை, அறிவு விளக்கத்தைத் தடை செய்யும் தீயவினை உடையேன் எடுத்தோதும் வகை யாதும் தெரியாதேன். கு-ரை 23-25: "நிறைந்து" என்பது இறைவனது பூரணமான அறிவும் செயலும் விளங்குவதைக் குறிக்கும். அது காற்று வான் முதலிய சடப்பொருளின் வியாபகம் போன்ற விரிவினைக் குறியாது, இறைவனது வியாபகத்தின் ஒரு பகுதியுள் உலகெலாம் அடங்குதலின் “மிக்காய்" என்றார். "தேசமார் ஒளிகளெல்லாம் சிவனுருத் தேசது" என்ற கருத்துப் பற்றி, "விளங்கொளியாய்" என்றார். தத்துவம் புவனம் முதலியன எல்லாம் நூல்களால் கணிக்கப்படுவன. அவற்றைக் கடந்த இறைநிலை, "எண் இறந்து" என்பதாற் குறிக்கப் பட்டது. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின்," என்றமையால் வினை ,அறிவு விளக்கத்திற்குத் தடையென உரையுள் கூறப்பட்டது. உயிர் இயற்கையாகவே சிறு தொழில் உடையது. தன் சிறுசெயல் கொண்டு இறைவன் பெருஞ்செயலை அளக்க வல்லதன்று என்பார், "பொல்லா வினையேன்" என்றார். 25. பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன் புல் ஆகி , பூடு ஆய், புழு ஆய் , மரம் ஆகி பல்விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக் கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல்லசுரர் ஆகி ,முனிவர் ஆய், தேவர் ஆய் polla vinaiyeen pukazumaaRu onRu aRiyeen pullaaki puudaay puzuvaay maramaaki pal virukamaaki paRavaiyaay paampaaki kallaay manitharaay peeyaay kaNngkaLaay vallasuraraaki munivaraith theevaraay உரைநடை 26 - 31 எம்பெருமான்! கல்லாய்ப் புல்லாகிப் பூடாய் மரமாகிச் செல்லாஅ நின்ற இத் தாவரத்துள், புழுவாய்ப் பாம்பாய்ப் பறவையாய்ப் பல்விருகமாகி மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இச்சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், பொ-ரை 26 - 31: உலகத் தோற்றத்தில் கற்பாறை அணுக்களில் அடங்கிக் கிடந்து, பின் புல்லாகியும் அடர்ந்த புற்செடிகளாகியும், மரங்களாகியும் படைக்கப்பட்டு நிகழ்கின்ற பல்கோடி நிலையியற் பொருள்களுள்ளும், புழு, பாம்பு முதலிய ஊர்வனவாகியும் பறப்பனவாகியும், விலங்குகளாகியும், மக்களாயும், பேயினங்களாயும், பூதகணங்களாயும், வலிய அசுரராயும், முனிவராயும், விண்ணவராயும், படைக்கப்பட்டு இயங்குகின்ற பல்கோடி பிராணிகளுள்ளும் அடங்கிய எல்லா வகையான பிறப்பிலும் உடலெடுத்து இறந்து உழன்று அலுத்தேன். 11 - 31: Adoration to the holy Feet of Civan who is the Ruler of all (Eesan), Adoration to the holy Feet of my Father, Adoration to the holy Feet of the effulgent one, Adoration to the rosy Feet of Civan: Adoration to the holy Feet of Civan who stands rooted in the love of the devotees and who is devoid of any sin (Malam), Adoration to the holy Feet of the King who severs the cycle of delusion- bringing births, Adoration to the holy Feet of our Lord who manifested Himself in the beautiful hamlet called Perunthurai, Adoration to the holy Feet of Civan who is the mountain of grace from which flows unsatiating bliss. As He, Civan the auspicious Lord, abides in my mind, I, having lost my petty individuality, am empowered to worship His Feet, through His own grace. As a result of this good deed of worshipping His holy Feet, Civan who has an eye on his forehead appeared before me as my Master to turn His gracious and dazzling look on me which made me attain the highest wisdom - Civagnaanam. I prostrated at His feet, whose unmatched beauty is beyond the conception of thought, and my heart filled with ecstatic joy and all my last karma disappearing. I start to narrate the "Ways of Old of Lord Civan. Oh! Lord! You have not only filled the heaven and the earth, but also transcend them both, in the form of a dazzling effulgence! Thou boundless one who cannot be measured by any norms! I , a man of evil karma, do not in the least know how to sing thy glory. Oh! my noble Lord ! I have been born several times as stone, as grass, as shrub, as tree, as worm, as snake, as bird, as beast, as man, as demon, as goblin, as mighty giant, as ascetic, as devas - in fact in all the forms of existence as the moving and the non-moving and am wearied of it all. கு-ரை: 26 - 31 உயிர்த் தோற்ற நூல் முறைப்படி, பிறவிகளைத் தொகுத்துப் பொருள் கூறப்பட்டது. விருகம்= மிருகம் = விலங்கு "பல்" என்ற அடையை எங்கும் கூட்டலாம். 30. செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றே னுய்யவென் னுள்ளத்து ளோங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்க செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்! மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் sellaaa ninRa iththavara sangamaththuL ella piRappum piRanthiLaitheen emperuman meyye un ponadigal kaNdinRu viiduRReen uyya en uLLathuL oongkaaramaai ninRa meyyaa vimala vidaippakaa veethangkaL பொ-ரை: 32 - 35: ஆணவ இருளில் கிடந்த யான் உடம்பெடுத்து உழன்று, பக்குவம் வந்த காலை உன் திருவடியைக் கூடிப் பிழைக்கும் வண்ணம், எனது நெஞ்சத்துள், ஐந்தொழிற்கும் காரணமான ஓம் என்ற முதுமொழி வடிவாய் நின்ற உண்மையனே! கட்டு இலாதவனே, அறவுருவாகிய காளை மேல் எழுந்தருள்பவனே, அறிவு நூல்கள் நின்னுடைய பேரளவினைக் காணமாட்டாது. ஐயனே என்று அலற, அவற்றின் எல்லையைக் கடந்து உயர்ந்தும் தாழ்ந்தும் விரிந்தும் விளங்குகின்ற பெருமையனாய் அவற்றால் காணவொண்ணாத நுட்பப் பொருளாய் எவற்றினும் கலந்துள்ளவனே, பிறவியில் உழலாது நிலைப்பாயிருப்பதற்கு ஏது ஆய உனது அழகிய திருப்பாதங்களை இப்போது காணப் பெற்றுப் பாச நீக்கம் அடைந்தேன், 32-35: Oh! Reality! having seen Your golden Feet this day I am redeemed from the birth cycle. That I may be redeemed, You ever abide in my heart as "Om"! Oh! Truth! Oh! Spotless one (Vimalaa) Oh! Rider of the bull! oh! Lord! the Vedas which cannot perceive Your greatness, wail "Oh! Sire' You soar, sink, and spread beyond everything, while being the subtlest of the subtle. கு-ரை: 32 - 35 உயிர்கள் உய்யுமாறு இறைவன் ஐந்தொழில் இயற்றுமிடத்து, உயிர்க்குயிராய் நின்று ஓங்காரத்தின் பிரிவாகிய அகரம், உகரம், மகரம், விந்து, நாதமென்பவற்றின் வாயிலாகக் கருவிகளை இயக்குவதாலும், ஓங்காரம், இறைவனது சிறந்த மந்திர வடிவமாதலாலும், "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற" என்றார். இறைவன் ஐந்தொழில் இயற்றினாலும் தனது மெய் இயல்பில் மாற்றமில்லாதவன் ஆகலின், "மெய்யா" என்றார். அங்ஙனம் இருந்ததற்குக் காரணம் இயல்பாகவே கட்டிலாமையாகலின், "விமலா" என்றார். வி=இன்மை. மலம் = கட்டு. இறைவன் நடு நிலையன் என்பார், "விடைப்பாகா" என்றார். அவன் பெரியதில் பெரியதாய், சிறியதில் சிறியதாய், எங்கும் கலந்து நிற்குமுறை நூலுணர்வான் அறியப்படாமையின், "வேதங்கள் ஐயா என" என்றார். "மெய்யே உன்" என்பதில், மெய்= நிலைப்பு, ஏய்=பொருந்து, பொன் மாற்றமிலா ஒளி நயம் உடையது. வீடு= பாசத்தினின்று விடுபடுதல். 35. ளையா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியா யியமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே யெஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே "ஐயா"என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே! வெய்யாய் ! தணியாய் ! இயமானன் ஆம்விமலா ! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! aiyaa ena oongki aaznthakanRa nuNNiyanee veeyyaay thaNiyaay iyamaananaam vimala poyyayna ellam pooyakala vantharuLi meyngnganam aaki miLirkinRa meyssudaree enjnjaanam illatheen inpap perumaanee பொ-ரை 36-40 வெப்பமுடையவனே, குளிர்ச்சியுடையவனே, அத்துவிதக் கலப்பால் உயிரோடு தொடர்புடைய மாசிலாதவனே. யான் பற்றிய நன்மையிலாதனவும் நிலையாதனவும் ஆகிய இவைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி ஒழியுமாறு குருவாய் வந்து அருள் புரிந்து மெய்யறிவாய் விளங்குகின்ற உண்மை ஒளியே, எவ்வகையான அறிவும் விளங்கப் பெறாத எனக்குப் பேரறிவின் பயனாய்ப் பேரின்பம் ஈந்தருளும் பெருந்தன்மையனே, பொய்யை மெய்யென உணரும் திரிபுணர்ச்சியை நீங்கச் செய்யும் தூய அறிவானவனே. 36 - 40: Oh! Lord Civa ! You are the heat, You are the cold. You are the Master of 'yagnyaas'! You are the spotless one (Vimalan)! By your grace all thoughts of unreality (nescience) fled from me. The true godly wisdom gleaming bright You are, Oh! blissful Lord of mine who am devoid of all wisdom still with the result of your wisdom I acquired bliss. You are the embodiment of true wisdom that dispels all nescience கு-ரை: 36-40 "வெய்யாய்" என்றது ஞாயிறுபோல ஆண் தன்மை உடையனாதல் குறித்தற்கு; "தணியாய்" என்றது திங்கள் போலப் பெண் தன்மையுடன் ஆதல் குறித்தற்கு. இயமானன்=உயிர். இது வடமொழியில் , வேள்வி இயற்றுவானுக்குச் சிறப்புப் பெயராய் உயிர்க்குப் பொதுப் பெயராய் வழங்குவது. உயிர்க்கு உயிராய்க் கலந்து , உயிர்களை ஆணாகவும் பெண்ணாகவும் பிறப்பித்தற்குரிய சிவமும் சத்தியுமாய இறைநிலை குறிக்கப்பட்டது. அங்ஙனம் உயிரோடு கலந்து நின்றும், தனது தூய இயல்பு மாறாதவன் என்பார், "விமலா" என்றார், பொய் தீயவற்றையும், நிலையாதவற்றையும் குறிக்கும். பாச நீக்கத்தில் விளங்கும் மெய்யறிவு பதிஞானம் எனப்படும். இறைவன் கதிரவன் போலவும் , மெய்ஞ்ஞானம் கதிர்போலவும் இருத்தலின், "மெய்ஞ்ஞானமாகி" என்றார். எவ்வகை அறியும் இல்லா நிலை, ஆணவத்தோடு கிடந்த உயிரின் தனிநிலை. அஞ்ஞானம் என்பது, நல்லறிவுக்கு மாறாய புல்லறிவு. நல்லறிவு என்பதில் "நல்" என்பது "பெரும் பயன் தரும்" என்ற பொருள் உடைத்து என்றலும் ஒன்று . "நற்றாள்"என்பது போன்று. 40. யஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே யாக்க மளவிறுதி யில்லா யனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பா யருடருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பி னாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ! ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய் போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே ! anjnjaanam thanai akalvikkum nallaRivee aakkam aLaavu iRuthi illaay anaithu ulakum aakkuvay kaappaay azippaay aruL tharuvaay pookkuvaay ennai pukuvippaay ninthoozumpin naaRRaththin neeriyaay seeyaay naNiyaanee பொ-ரை: 41-43: படைக்கப்படுதல், ஒருகால அளவாக நிலைபெறுத்தப் படுதல், ஒடுக்கப்படுதல் என்பன இல்லாதவனே, எல்லா உலகங்களையும் நீயே படைப்பாய், நிறுத்துவாய், ஒடுக்குவாய். மலபரிபாகம் வரும்வரை என்னைப் பிறவியில் செலுத்துவாய். உய்தி கூடுங்காலம் வருங்கால் நின் திருத்தொண்டாகிய நற்றவத்தில் புகுவிப்பாய். பின்னர் பிறவி அறுதற்கு ஏதுவாய நின் திருவருளைத் தருவாய். கு-ரை: 41-43 தொழும்பு=தொண்டு. இறைவனது ஐந்தொழிலும், அவற்றை ஆற்றவல்ல அவனது தனிச்சிறப்பும் இங்கே கூறப்பட்டன. 45. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமா னிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே! கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் ! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த maaRRam mananjkaziya ninRa maRaiyoonee kaRantha paal kannalodu neykalnthaaR poolas siRanthadiyaar sinthanaiyuL theenuuRi ninRu piRantha piRappaRukkum engkal peruman niRangkaLoor ainthudaiyaay viNNoorkaL eeththa பொ-ரை: 44-48: பூவின் மணம்போல் நுட்பமாயிருப்பவனே, நீ தூரத்திலிருப்பவனும் ஆவாய், அருகே இருப்பவனுமாவாய். எவ்வாறெனில் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்கின்ற இரகசியப் பொருளாயுள்ளாய். எனினும், நின் மெய்யடியார்கள் உள்ளத்திலே சிறப்பாக விளங்கிப் பசுவில் இருந்து உடன் கறந்த புனிதமான பாலோடு சருக்கரையும் நெய்யும் கலந்து இனிமை பயத்தாற்போல், இன்பம் ஊற்றெடுக்குமாறு நிலை பெற்றருளி எடுத்த பிறவியை ஒழிக்கும் எங்கள் பிரானாய் உள்ளாய். பொ-ரை 49-50: எங்கள் பிரானே, பூதங்களைத் திருமேனியாகக் கொண்ட நீ அவற்றிற்குரிய ஐந்து நிறங்களையும் உடையாய் ; அன்பர்க்குப் பூத நிறங்களோடு தோன்றும் நீ செருக்குடைய வானோர் உன்னைத் துதித்த போதும், நீ அவர்கட்குத் தோன்றாது ஒளித்திருந்தனை. 41 - 48: Of Lord Civa! You are not created. You have no life span: You have no end; yet You create all worlds, sustain them, dissolve them; You cause me to be born again and again till the end of my karma, and at the ripe moment prompt me to serve you. Oh Lord Civa! You are one with me like fragrance in flowers! You are afar to those who do not love You. You are near,to those who are devoted to You. You are the mystic content of the Vedas transcending word and thought. You are in the thoughts of your glorious devotees like honey drops, giving them sweetness like the mixture of fresh milk, sugar candy and ghee (clarified butter). You, our Lord, cut asunder the knots of my karma in this very birth itself and grant me release. கு-ரை: 44-48: கண்ணிற்குத் தோன்றும் பூவிலே அதன் மணமானது தோன்றாது கலந்திருந்தால் போல உலகுயிர்களிலே இறைவன் தோன்றாது கலந்திருத்தல் குறித்தவாறாம். நேர்= நுட்பம். ஒப்பு என்றும் பொருள்படும். "மணம் போன்றிருப்பவனே" என்றும் பொருள் கொள்க. தேன்= இன்பத்திற்கு அறிகுறி என்க . ஊறி=ஊற. அறிவிற்குப் பாலையும், செயலுக்குக் கன்னலையும், விழைவிற்கு நெய்யையும் உவமை கூறுவதுண்டு. கு-ரை: 49-50; பொன்னிறம், வெண்ணிறம், செந்நிறம், கருநிறம், புகை நிறம் என்பன நிலம், நீர், தீ, காற்று, வான், என்பவற்றிற்கு முறையே நிறமாகக் கொள்க . இறைவன் ஓர் இயக்கன் போலத் தோன்றி நின்ற காலை, விண்ணவர் அவனை அறிந்திலர் என்ற கதை கேந உபநிடதத்துள் காண்க. 50. மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய விருளை யறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்குமூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மறைந்து இருந்தாய், எம்பெருமான் ! வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை maRainthirunthai emperuman valvinaiyeen thannai maRainthida muudiya maaya iruLai aRampaavam ennum arungkayiRRaaR kaddi puRanthool poorthuenkum puzuazukku muudi malanjsoorum onpathu vaayiR kudilai 55. மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகு நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி malangkap pulanainthum vanjsanaiyai seyya vilanjku manaththal vimala unakku kalantha anpaakik kasinthu uLL urukum nalanthan ilaatha siRiyeRku nalki nilanthanmeel vantharuLi neeLkazalkaL kaaddi உரைநடை: 51-61: விமலா, வல்வினையேன் தன்னை , மறைந்திட மூடிய இருள் மாய, அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி, புழுவழுக்குப் புறம்தோல் போர்த்து மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை நல்கி, மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும், நலந்தான் இலாத சிறியேற்கு நிலம்தன் மேல் வந்தருளி.... பொ-ரை 51-61: தத்துவனே! குற்றமிலாதானே! கொடிய வினையேனது அறிவிச்சை செயல்கள் மறையும்படி மூடிய இருளாகிய ஆணவம் மாயும் வண்ணம், நல்வினை, தீவினை என்னும் காண்டற்கும் கடத்தற்கும் அரிய இருவகைக் கயிறுகளிலே பிணிப்புற்றுத் தன்னகத்து எங்குமுள்ள புழுக்களும், மாசுகளும், புறத்தேயுள்ள தோலினாற் போர்த்து மூடப் பெற்றுத் தனது நவத்துவாரங்களிலும் அழுக்கு வடியும் குடிலை எனக்குக் கொடுத்தருளி, யான் கலங்கும்படி ஐம்பொறியறிவு தத்தம் வழியில் என்னை இழுத்துத் தந்திரமாகக் கேடு செய்தலினாலும், அவற்றின் சார்பாய் நின்று உன்னை அணுகவொட்டாது தடை செய்யுமனத்தின் இடர்ப்பாட்டினாலும், உன்னோடு கலந்து உறவாகி உள்ளமுருகி, அழுது தொழுதலாகிய நற்செயல் யாதுமில்லாத சிறியனேன் பொருட்டு, இந்நில வுலகத்தே அருட்குருவாய் எழுந்தருளி வந்து உனது புகழ்மிக்க திருவடிகளை எனக்குக் காட்டியருளி நாயினும் கீழ்ப்பட்டவனாய்க் கிடந்த அடியனேற்குத் தாயினும் மேம்பட்ட கருணை வடிவான மெய்யனே. 49-61: Oh! Lord Civa! You are the five basic colours. You are invisible to the egoistic heaven dwellers though they adore You! (The five colours are attributed as under. Earth - Golden, Water- White, Fire - Red, Wind- Black; Ether - Smoke colour. As God is immanent in the five elements, their colours are ascribed to Him also). Oh Lord Civa, the Pure One! You graciously gave me the nine-gated hovel of this body which, secreting foul through its nine holes, does cover with skin, the filth and worms within and is bound with the rare cords of virtue and sin, yet which is the means for the destruction of the enshrouding gloom of ignorance amidst which I lay hidden. I am bewildered and betrayed by the five senses which lead my mind astray. Lowly am I indeed who cannot merge with You in love that thaws the heart within. For the sake of this wretched one, who is meaner than a cur, You came in grace on this earth as Guru and showed Your grand bejewelled Feet and bestowed Your grace on this slave of Yours. Surpassing the love of the mother indeed is your grace, Oh! The Truth! கு-ரை: 51-61: இருளை என்பதில் ஐ-சாரியை. அதனை வேற்றுமை உருபாகக் கொள்ளின் "மாய" என்பதைப் பிறவினைப் பொருளில் வந்ததாகக் கொள்க. தான் மலத்தின் வேறாதல் குறிப்பார், வல்வினையேன் தன்னை என்றார். "குடிலை" என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு. மலங்க= கலங்க, விலங்கு = தடை, கசிந்து = அழுது, நீள் = நீண்ட = புகழாற் சிறந்த, நாய், உடையானைச் சார்ந்தொழுகும். உடையானைத் தான் சார்ந்தொழுகாமை கருதலின், " நாயிற்கடையாய்" என்றார். தாய்-கைம்மாறு கருதாது உதவும் இயல்பினள். அவள் என்றும் யாண்டும் உதவ இயலாமையின், என்றும் யாண்டும் உதவும் மெய்யன் தாயிற் சிறந்தானாதல் காண்க. 60. நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! naayiR kadaiyaay kidantha adiyeeRku thaayiR siRantha thayaavaana thaththuvanee maasaRRa soothi malarntha malarssudaree theesanee! theenar amuthee sivapuranee paasamaam paRRaRuththup paarikkum aariyanee 65. நேச வருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே யாரா வமுதே யளவிலாப் பெம்மானே யோராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெரும் கருணைப்பேர்-ஆறே ! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர்உயிர்ஆய் நின்றானே! neesa aruL purinthu nenjsil vanjsam keda peeraathu ninRa perungkaruNaip peeraRee aara amuthee aLavilaap pemmaanee ooraathaar uLLathool oLikkum oLiyaanee neeraay uruki en aaruyiraai ninRaanee பொ-ரை: 62-69 குற்றமில்லாத ஒளியானது இதழ்களாக மலரப்பெற்ற பூப்போன்ற ஒளி மேனியனே, குரு முதல்வனே, இனிமை நிறைந்த பிறவி மருந்தே சிவலோகனே, கட்டுப்படுதற்கு ஏதுவாகிய அவாவினை வேரறுத்து அறிவினை விரிவுறச் செய்யும் மேலோனே, காதலொடு கூடிய இரக்கம் வைத்து என் மனத்துள்ள களங்கம் ஒழியும்படி எனது உள்ளத்தை விட்டு நீங்காது விளங்கிய பேரருள் வடிவாகிய வற்றாது ஓடும் பெரிய ஆறு போன்றவனே, உண்ண உண்ணத் தெவிட்டாத இன்னமுதம் போன்றவனே, அளவிலடங்காத பெருமை உடையவனே, ஆய்ந்து அறியாதார் உள்ளத்திலிருந்தும் அவர்கட்குப் புலனாகாத சோதியே, எனது கல் மனத்தைக் கரைத்துத் தண்ணீராக உருகும்படி செய்து பிரிவாற்ற எண்ணாத உயிர்க்குயிராய் நின்றவனே. கு-ரை: 62-69: இறைவனது திருமேனி ஒளிநயமும் மென்மையும் உடைமையால் ஒளியாலாகிய பூவிதழ் போன்ற உறுப்புடைய திருவடிவமென்று குறித்தார். தேசன்= ஆசிரியன். தேன்=இனிமை. அமுது=சாவாமருந்து. பாரிக்கும்= விரிக்கும், வளர்க்கும்; ஆரியன் = மேலோன். நேசம் = தாயன்பு போன்ற விருப்பம். 70. யின்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே யன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே யாதியனே யந்த நடுவாகி யல்லானே யீர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே ! அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! inpamum thunpamum illanee uLLaanee anparukku anpanee yaavaiyumaay allaiyumaam soothiyanee thuniruLee thonRaap perumaiyanee aathiyanee antham naduvaaki allaanee iirththu ennai aadkkoNda enthai perumanee 75. கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தி னோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே யாற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே ! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற kuurththa meynjnjaanaththal koNduNarvaar thangkaruththin nookkuariya nookkee nuNukkariya nuN uNarvee pookkum varavum puNarvum ilaap puNNiyanee kaakkum em kaavalanee kaaNpariya peeroLiyee aaRRinpa veLLamee aththa mikkaay ninRa பொ-ரை 70-78, உலகுயிர்களினால் வரும் இன்பமும் துன்பமுமில்லாதவனே, அன்பர் பொருட்டு அவற்றையுடையவனே, கலப்பினால் எப்பொருளுமாய், பொருள் தன்மையால் ஒன்றும் அல்லாதவனாயும் இருக்கின்ற அறிவுருவனே, அடர்ந்த இருள் போன்றவனே, தோன்றாத பெருமையை உடையவனே, எப்பொருளின் தோற்றத்திற்கும் மூலகாரணனே, எவற்றையும் ஒடுக்கும் இறுதிக் கடவுளாயும், எப்பொருளினும், உள்ளீடாயும் இருந்து, தனக்கொரு முதலும் முடிவும் நடுவும் இல்லாதவனே, என்னை வலிய இழுத்து ஆட்கொண்டருளிய எங்கள் அப்பனாகிய பெருந்தன்மையனே, கூரிய மெய்யறிவினாலே கேட்டுக் சிந்தையுட்கொண்டு தெளிந்து உணர்வாருடைய உள்ளத்தே சுட்டிறந்தறியப்படும் பொருளே சுட்டப்படாத அநுபவப் பொருளே, நுகரப்படும் நுட்பப் பொருளே, ஒன்றை நாடிப் போதலும் அதனை யடைதலும், அதன் கண் நின்று மீளுதலுமில்லாத நன்மையனே, உயிர்களை உய்தி கூட்டுவிக்கும் எங்கள் அரசனே, நீ அங்ஙனம் செய்வதை உயிர்கள் தமது அறிவாற் காணுதற்கரிய பெரிய அறிவே. கு-ரை: 70-78: இறைவன் தானே இன்பமுடையவன், பிற பொருளால் வரும் இன்பத்தை நாடுபவன் அல்லன். அவன் துன்பம் இல்லாதவன் என்பது தெளிவு . தம் செயலற்ற அன்பர்க்கு வரும் இன்ப துன்பங்களைத் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளும் இயல்பு இறைவற்குக் கூறப்படுதலின் " அவையுள்ளானே" என்றார். இதற்குக் காரணத்தை "அன்பருக்கு அன்பனே" என்பதாற் குறித்தார். சோதி= அறிவு. உலகப்பற்று விட்டு இறைவனைப் பற்றக் கருதும் பரிபாகமுடையார்க்கு அவன் கதிரவன் உதயத்திற்கு முன் உளதாங் காரிருள் போல்வானாதலின், "துன்னிருளே" என்றாரென்பதும் உண்டு. ஐம்புலனால் ஒரு சிறிதும் அறியப்படாமை பற்றித் "துன்னிருளே" என்றாரென்ப. "உன் தனை யெதிரே கண்டும் அம்புயத் தோனுணர்ந்திலன், மால் சொலவுணர்ந்தான்" என்றபடி இறையன் வெளிப்படையாகத் தோன்றினாலும் தன்னை உயிர்கட்கு அறிவித்தாலன்றி, உயிர்கள் அவனை அறிய மாட்டாத இயல்பினவாதலின்," தோன்றாப் பெருமையன்" என்றார். இறைவன் பல அருள் உருவமெடுத்துத் தோன்றி மறைதலின், ஆதியும் நடுவும் அந்தமும் உடையானென்பாரும் உளர். நடு என்ற சொல் அந்தரியாமித்துவம் குறிக்குமென்பர். இறைவன் எவற்றினுள்ளும் இருத்தலின் அவை காக்கப்படுகின்றன என்ப. குதிரை வாங்கப் போன அடிகளை வலியத் தன்பால் வருவித்து ஆட்கொண்டமையின் "ஈர்த்து" என்றார். வினையிலே கிடந்தேனைப் பக்குவகாலம் வருமுன்னரே ஆட்கொண்டானென அடிகள் பிறவிடங்களில் கூறுதல் காண்க. தீவிர உணர்ச்சியைக் "கூர்த்த மெய்ஞ்ஞானம்' என்றார் போலும். நோக்கு அறிவையும், உணர்வு அனுபவத்தையும் குறிக்கும் என்ப . "நோக்கு" என்பது இறைவனது அகண்ட இயல்பையும், "நுண்ணுணர்வு" என்பது அவனது அதிநுட்ப இயல்பையும் குறிக்கும் என்பாருமுளர். "போக்கும் புணர்வும் வரவுமிலா" என உரை நடை கொள்க. 80. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையு ளூற்றான வுண்ணா ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப தோற்றச் சுடர் ஒளி ஆய்ச் சொல்லாத நுண் உணர்வு ஆய் மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே ! தேற்றத்தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப thooRRa sudaroliyay soollaatha nuNuNarvaay maaRRamaam vaiyakaththin vevveeRee vanthaRivaam theeRRanee theRRath theLivee en sinthanaiyuL uuRRana uNNaar amuthe udaiyaanee veeRRu vikaara vidakkudampin udkidappa 85. வாற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே ஆற்றேன்; "எம் ஐயா! அரனே! ஓ! " என்று என்று போற்றி, புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே ! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! aaRReen em aiyaa aranee oo enru enru pooRRip pukaznthirunthu pooykeddu meyyaanaar miidduingku vanthu vinaippiRavi saaraamee kaLLap pulakkurampaik kaddu azikka vallaanee naLiruLil naddam payinRu aadum naathanee பொ-ரை : 79-83: ஆற்றின் தூய புனல் போலத் துன்பங்கலவாத இன்பப் பெருக்கே, அப்பனே, மாறுபாடு அடைகின்ற உலகத்திற்கு அப்பாற் பட்டவனாய் நிலைபெற்ற விளக்கமுடைய கதிரொளிப் பிழம்பாய், மொழியால் உணர்த்துதற்கு அரிய நுட்ப அனுபவமாய், உலகத்தே வெவ்வேறாகக் காணப்பட்டு வந்து முடிவாக அறிவாய்த் தெளியப்படும் தெள்ளியனே , கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவிடத்தே விளங்கும் தெளிவான பரம்பொருளே, எனது உள்ளத்திலே ஊற்றாகத் ததும்பிய உண்ணத் தெவிட்டாத அமுதமே, கட்டிலும் வீட்டிலும் என்னை அடிமையாக உடையவனே. 62 - 83: Oh! spotless effulgence who blossomed in my heart as a flower of flame! Oh My Master! sweet ambrosia, Lord of Civapuram! Oh! venerable one, who severs the hold of the fetters of desire and thus sets free my knowledge You showered your loving grace on me like water flowing in a perennial river and flushed away the delusions of my mind. Oh! One of exceeding grace who leaves not my heart. Oh! unsatiating ambrosia! Infinite and mighty Lord! You are the light unseen in the hearts of those who do not contemplate You! You melt my hard heart into water and abide in me as the life of my life! Oh! Lord Civa! You have neither pleasure nor pain, yet You have them both for the sake of Thy devotees. You love those who love You. Oh effulgence! You are everything but simultaneously You are nothing! Oh dense darkness! Oh! You who have the distinction of having no birh. Oh beginning! Oh end! Oh middle! You have none of these! Oh! My Father and my noble Lord! You drew me unto You and made me Your own. Oh! Rare-to-be-viewed vision in the conception of those who intuit You with one pointed true wisdom. Oh! Subtlest of subtle experience! Oh! Pure one who have no going or coming or mingling, as You are omnipresent. Oh our safeguarding King! Oh! blazing light that cannot be gazed upon! Oh! food stream of bliss! Oh! My Father! Oh! You who are greater than everything! Oh! Clarity! Oh! Quintessence of clarity! You are the light of the flame of stable aspect! You are the ineffably subtle experience! You come in the form of diverse things in this changing world, yet You are in the final analysis realised as the subtle awareness! In my thoughts You are the fountain of unsatiating ambrosia. Oh! My Owner! 90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே யல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ' என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ், thilaiyuL kuuththanee thenpaaNdi naaddaanee allaR piRavi aRuppaanee o enRu sollaRku ariyaanai sollith thiruvadikkiiz solliya paaddin poruL uNarnthu solluvaar selvar sivapuraththin uLLar sivan adikkiiz பொ-ரை: 84-92 : எங்கள் தலைவனே, வெவ்வேறு திரிபுகளுடைய ஊனுடம்பினுள்ளே கிடத்தலை யான் பொறுக்கமாட்டேன். அவ்வுடம்பைத் தொலைக்கவல்ல அரனே, ஓலம் என்று கூவிக்கூவி, வழிபட்டுப் பாடி நினைத்திருந்து நிலையாதவற்றின் பற்றற்று நிலைப்பொருளோடு ஒன்று பட்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைக்கீடாய் பிறப்பினை அடையாமே, வஞ்சராகிய ஐம்புல அவாக்களுக்கு இடமாகிய, சிறு மனையாய உடம்பை முற்றிலும் தொலைக்கும் திறமையனே, நடு இரவு போன்ற, முழுதும் முடிவுற்ற காலத்தே தனது திருக்கூத்தினைப் பழகிப் பின் தோற்றக்காலத்தே பெருநடம் புரியும் முதல்வனே, நிலவுலகில் தில்லை மன்றினுள் ஆடுவோனே, தெற்கின் கண் உள்ள பாண்டி நாட்டை உடையவனே, துயருடைய இப்பிறப்பினை ஒழிப்பானே ஓலம் என்று சொல்லாற் கூறவொண்ணாதானை வழுத்தி. கு-ரை -84-92 : வேற்று விகாரம் - அறிவு நிலைக்கு மாறாயுள்ள திரிபு என்று பொருள் கொள்ளுவாருமுளர். விடக்கு=ஊன், கட்டழித்தல்= முற்றிலுமழித்தல். தென்=இயற்கையடை அரன்= பாசத்தை அழிப்பவன். 95. பல்லோரு மேத்தப் பணிந்து பல்லோரும் ஏத்தப் பணிந்து. palloorum eeththap paNinthu பொ-ரை: 92-95: அவனது திருவருள் வயமாய் நின்று மொழிந்த இக்கலி வெண்பாட்டின் பயன் தெரிந்து ஓதுபவர்கள் சிவலோகத்தினுள்ளே புகுவார்கள். அங்கு சிவ பெருமான் திருவடிக் கீழ் அன்பர் பலரும் வணங்கிப் புகழுமாறு இருப்பார்கள். 84- 95: Your devotees, who, saluting and praising You crying constantly, " Oh! My Father! Oh! Hara (Lord Civa) I can not endure any longer the stay in the fleshly human body which is subject to various changes" were freed from falsehood and became one with You the Reality. You are the mighty Lord who are capable of destroying the bonds of the physical frame which is the seat of the five deceitful senses so that the devotees may not come back any more into this world and get involved in the cycle of karmic birth. Oh! Lord! You ceaselessly dance in the midst of dense cosmic darkness! You mystic dancer in Thillai ! Sovereign of the southern land of Paandiyan! Oh Lord! You are the one who can cut off the evil birth cycles. Devotees adore You in these words, Oh! The ineffable one! Those who sing this psalm of praise sung at the sacred Feet of Civan, feeling well all its import will gain entry into Civapuram, beneath His holy Feet, surrounded by the holy band of His devotees who adore Him. கு-ரை: 92-95: அடி= அருள். பயன் உணர்ந்து இயம்புவார் பயனைப் பெறுதற்குரியர் ஆவர். திருவடி, என்பது இறைவன் அறிவு ,செயல்களைக் குறிக்கும். உயிரின் அறிவு செயல்கள் இறைவனுடையவற்றில் அடங்கி நிற்றலே திருவடிக் கீழிருத்தலாம் என்பர், சிவபுரம் என்பது வீட்டினை உருவகமாகக் குறிப்பதாய், சிவனொடு பேரின்பம் பெறுதலைக் குறிக்கும் என்பர். THIRUCHCHITRAMBALAM 2. கீர்த்தித் திருவகவல் 2. KEERTHITH THIRU AHAVAL (சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை) Sacred Verse in praise of Civa's Grace and His Glory தில்லையில் அருளியது Compiled whilst in Thillai நிலைமண்டில ஆசிரியப்பா இறைவன் ஆணையின் வண்ணம் புலியூரை அடைந்த வாதவூரடிகள், கண்ட பத்தைக் கருத்தார உரைத்தபின், ஆனந்தக் கூத்தரின் திருமேனி அனுபவத்தில் ஈடுபட்டு அநுபூதி விஞ்சத் தம்மையும் மறந்து கனக சபையிலேயே அசைவற்று நின்றார். இந்நிலை அறியாத கோயில்காப்பார் “கனக சபையை விட்டுக் கீழேயிறங்கும்" எனக் கடிந்து கூறினர். அவ்வுரை அடிகளாருடைய திருச்செவியில் புகுந்திலது . அடிகளார் சிதானந்தப் பெருவெளியில் ஓங்காது குறையாது விளங்குகின்ற சிவானந்தப் பிரகாசத்தில் திளைத்து அசைவற்று நின்றார். கண்ட காவலர்கள் "என்ன; இவர் போம் என்றாலும் போகிலர்; உரையும் ஆடார்; பித்துக் கொண்டார் போலும்” என்று இரங்கி நின்றபோது, அடிகளார் வாய் "சிவ சிவ” என்று அசைந்தது. கைகள் தலைமேல் குவிந்தன. குஞ்சித பாதத்தை மீட்டும் தலையால் வணங்கி திருப்புலீச்சரம் சார்ந்தார். அங்கிருந்து அனந்தேச்சரத்தையும் வணங்கிக் கொண்டு திருவீதியை வலம் வருகின்றபோது கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்ற மூன்றையும் சொல்லிக் கொண்டே வந்தார். இதனாலேயே, இன்றும் சைவத் தமிழுலகம் இந்த மூன்றையும் பாராயணம் செய்துகொண்டே திருவீதியையும் திருக்கோயிலையும் வலம் வருதலை மரபாகக் கொண்டு உள்ளது. கீர்த்தி - சிவனது திருவருட்புகழ்ச்சி, அதனை முறைமையாக அறிவிக்கும் அகவல் கீர்த்தித் திருவகவல். உரை மனம் கடந்து நின்ற தன்னியல்பை இடைவிடாது நினைந்து நினைந்து உருகும் அடியார்கள் கண்ணாரக் கண்டு மனங்குளிரத் தியானித்து உய்யும் வண்ணம் பெருங்கருணை கொண்டு தலங்கள்தோறும் எழுந்தருளி, அருளுருவைக் காட்டி ஆண்ட புகழ் அனைத்தையும் தொகுத்துக் கூறலின் இப்பெயர் பெற்றது இவ்விளக்கங்கள் அனைத்தும், "புகழ்பெருகும் செய்கையெல்லாம் புகல் அகவல் ஒன்றாகும்" என்ற பழைய திருப்பெருந்துறைப் புராணம் பகுதியின் விரிவாகும். இந்நூல் முழுவதையும் அகப்பொருட்டுறை அமைதிபெற வகுத்தார் என்று உரைப்பார் சிலர். தலைமகனுடன் ஊடிய தலைமகளின் ஊடல் தணியும் வண்ணம் தலைவன் இயலைப் புகழ்ந்து கூறிய வாயில்களை மறுத்துத் தலைவி இயற்பழித்தது என்பது அவர் கருத்து. பழைய உரைகாரராகிய காழித் தாண்டவ ராயர், சிவபுராணத்தில் அநாதி முறைமையான நிட்கள சொரூப வியாபகத்தின் பழைமையை அருளி, இதில் சகளமாய் இவ்வுலகில் எழுந்தருளி அருள் வழங்கும் தடத்த தரிசன முறைமையை அனுக்கிரகிக்கின்றார் மணிவாசகர் என்பர். அகளமாய் யாரும் அறிவரிதாய் நின்ற அப்பொருள் சகளமாய்த் தலங்கள் தோறும் எழுந்தருளினாலும், உருகிய நெய் உறைந்தாலும் நெய்யாமே அன்றிப் பிறிதாகாத வண்ணம் அகளமாய் அறிவாய் நின்ற சிவம் சகளமாய் வடிவு கொள்ளினும் அவ்வடிவு மாயா காரியம் அன்று. அநாதியாகிய பரையே அருள் திருமேனி கொண்டு ஆன்மாக்களது பரிபாக நிலைக்குத் தக குருவடிவாக எழுந்தருளிச் சிவானந்த அனுபவ உண்மை உணர்த்திய பொழுது, அச்சிவம் எவ்விடத்து எவ்வுரு மேற்கொண்டு எம்முறையால் உணர்த்திற்று என்று தன் அனுபவம் சித்திக்கச் சொல்லுவதே இக்கீர்த்தித் திருவகவலின் கருத்தாகும் என்க. "தில்லை மூதூர்" என்பது முதல் "கொள்கையும் சிறப்பும்" என்பது முடிய எட்டடிகளும் இறைவன் எங்கும், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து, அறிவுருவாகக் காட்சி வழங்கியதைத் தெரிவிப்பது. ஒன்பதும் பத்துமாகிய அடிகள், அறிவுருவாய் விளங்கிய இறைவன் அடியார்கள் ஈடேறப் பிரமாண நூல்களை அருளிச் செய்த உருவ அருவ இயல்பு உணர்த்துவன. "கல்லாடத்து" என்பது முதல் "மகேந்திர வெற்பன்" (100ஆவது அடி) என்பது முடிய இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களும் அவற்றில் அவன் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல்களும் உணர்த்தப் பெறுகின்றன. "அந்தமில் பெருமை" (101ஆவது அடி) என்பது முதல் "ஆண்டு கொண்டருளி" ( 126 ஆவது அடி) என்பது முடிய அடிகளார் தம்மை ஆட்கொள்ள இறைவன் தசாங்கங்களுடன் போந்து ஆண்ட சிறப்பு உணர்த்தப் பெறுகின்றது. "நாயினேனை" (127ஆவது அடி) என்பது முதல் “ஏங்கவும்" (139ஆவது அடி) என்பது முடிய தன்னைக் “கனக சபைக்கு வருக” என ஆணை தந்து இறைவன் மறைய, அடியார்கள் பலரும் எரியில் பாய்ந்தும், மயங்கியும், அலறியும், அரற்றியும், ஏங்கியும் பாதம் எய்த, கைலைக் கிழவோன் தன் அடியார்களோடு புலியூர்ப் புகுந்து இனிதாக வீற்றிருந்த சிறப்பைத் தெரிவிக்கின்றது. தொகுத்து நோக்கினால், கைலை நாதனாகிய இறைவனே எம்மை ஆட்கொண்டு , இங்கு இருத்தி, பல தலங்களிலும் பல காலங்களில் பலருக்கு அருள் வழங்கி, அடியாரோடு புலியூர்ப் புக்கு இனிது இருந்தான் என்பதை அறியலாம். இதனையே சிவனுடைய அருளின் முறைமை என அகத்தியச் சூத்திரம் அறிவிக்கின்றது. The title of the second chapter of Thiruvaachakam means as under Keerthi - Glory: Thiru - Sacred; Ahaval- Blank verse that is the sacred blank verse on the glory of Lord Civan. It consists of 146 lines of four feet each. This verse was sung in Thillai (Chidambaram Temple). The quintessence of this verse is adoration of Lord Civan's glorious grace. The poem deals with the general scheme of the working of the grace or sakti in the universe. The Lord can be understood by man only through the force of His grace. In this garland of homage are woven poetically the manifold acts of glorious grace of Lord Civan as recounted in the sacred love of saivaite Hindus. As many as 45 incidents of grace are thus related here. The Almighty Lord reveals Himself to the devotees in their diverse walks of life, and moves with them in accordance with the varied stages of their spiritual development, so that His faithful ones may be drawn towards His light. 2.1 தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி மண்ணும், விண்ணும், வானோர் உலகும் 5. துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் என்னுடை இருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் 10. சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்; 15. கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நல் தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் மற்று, அவை தம்மை மகேந்திரத்து இருந்து 20. உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்; நந்தம் பாடியில் நான் மறையோன் ஆய், அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும் வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி 25. ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக் கூறுஉடை மங்கையும் தானும் வந்தருளிக் குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச் சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும் வேலம்புத்தூர் விட்டேறு அருளிக் 30. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும் 35. அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறா அது 40. ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநல் மாநகர் இருந்து 45. குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆகப் பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் 50. பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாதவூரினில் வந்து, இனிது அருளிப் பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும் திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக் 55. கருஆர் சோதியில் கரந்த கள்ளமும் பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் 60. விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில், குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும் பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு 65. காடு அது தன்னில், கரந்த கள்ளமும் மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும், ஓரியூரில் உகந்து, இனிது அருளிப் பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் 70. பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் தேன் அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் 75. இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்த அப்பரிசும் ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து 80. மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்: சேவகன் ஆகித் திண்சிலை ஏந்தி பாவகம் பல பல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்; 85. ஐயாறு அதனில் சைவன் ஆகியும் துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் 90. புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் குற்றாலத்துக் குறியாய் இருந்தும் அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு இந்திர ஞாலம் போல வந்து அருளி, 95. எவ் எவர் தன்மையும் தன்வயின் படுத்துத் தானே ஆகிய தயாபரன், எம்இறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும் 100. மந்திர மாமலை மகேந்திர வெற்பன் அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும் 105. ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் ஆனந் தம்மே, ஆறா அருளியும் மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் 110. கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனி, சுடர்விடு சோதி காதலன் ஆகிக், கழுநீர் மாலை ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும் 115. அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் 120. உத்தரகோச மங்கை ஊர் ஆகவும் ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய தேவ தேவன் திருப்பெயர் ஆகவும் இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை ஆகவும் 125. எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி நாயினேனை நலம் மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி 130. அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் எய்த வந்திலாதார் எரியில் பாயவும் மால் அது ஆகி, மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் 135. கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி 'நாத! நாத! ' என்று அழுது அரற்றி பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் 140. எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம்நவில் கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை இறைவன், ஈண்டிய அடியவரோடும் 145. பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் ஒலிதரு கைலை உயர் கிழவோனே. திருச்சிற்றம்பலம் 2.1 தில்லை மூதூ ராடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி யெண்ணில் பல்குண மெழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோ ருலகுந் தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி மண்ணும், விண்ணும், வானோர் உலகும் thillai muuthur aadiya thiruvadi palluyirellaam payinRanan aaki eNNil palkuNam ezilpeRa viLangki maNNum viNNum vaanoor ulakum 5. துன்னிய கல்வி தோற்றியு மழித்து மென்னுடை யிருளை யேறத் துரந்து மடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் என்னுடை இருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் thunniya kalvi thooRRiyum aziththum ennudai iruLai eeRath thuranthum adiyaar uLLaththu anpu miithuurak kudiyaak koNda koLkaiyum siRappum mannum maamalai makeenthiram athanil பொ-ரை: 1-10: சிவபெருமான் தில்லை என்னும் பண்டைத் திருப்பதியின்கண் கூத்து இயற்றுபவன். அவன் தனது பொற்பாதங்களைப் பல்வகைப்பட்ட உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்துமாறு செய்த அருளாளன். கணக்கில் அடங்காத தனது பலகோடி அருட்பண்புகளும் சிறந்து தோன்றுமாறு அவன் வெளிப்படுகிறான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட வானவர் உலகிலும் பொருந்திய பல கலைகளைத் தோற்றுவித்தும் ஒடுக்கியும் விளங்குகிறான். என்னை மேற்கொண்ட அறியாமையை முற்றிலும் ஒழித்து அருளினான். அன்பர்கள் நெஞ்சத்தில் மெய்யன்பு பொங்கிப் பெருகும் பொருட்டு அதனைத் தன் இருக்கையாகக் கொண்ட உறுதியும் தலைமையும் உடையவன் அவன். புகழால் நிலைபெற்ற பெருமலையாகிய மகேந்திரம் என்னும் இடத்தில் உமையம்மையாருக்கு அருளிய வீட்டு நூலை உலகினர் நலன் பொருட்டு எமக்குக் காட்டி அருளினான். 1 - 8: Lord Civan's holy Feet which danced in the age old temple in Thillai also dances unceasingly in the hearts of countless devotees. This mystic dance revealed the beauty of His myriad qualities. (Concised into eight qualities - See Story No. 23). Lord Civan unfolds the rich lore of knowledge in this earth, in the skies (Indira's abode) and also in the world of the heavenly ones (world of Brahma, Vishnu, Rudran, Ananthar, Sadaacivan and others) and then conceals them also. He dispelled in its entirety my own ignorance. It is the firm principle and glory of Civan that He dwells within the inner-most soul of His loved ones, wherein wells up intense love towards Him. 9- 10: In the great firm Mahendra Hill (situated in Ganjam district, Orissa), He revealed in grace the Aagamaas, which were earlier recounted by Him to goddess Uma (See Story No. 14 of how the Aagamaas were first told to goddess Uma and were destroyed). கு-ரை: 1- 8: பயின்றனன் என்பதில், பயிலுதல் - பொருந்துதல். ஏற - முற்றிலும். கொள்கை - உறுதி. தில்லையானது ஐம்பூதங்களுள் வானைக் குறிக்கும் திருப்பதி . வான் வெளியிலே பிற பூதங்கள் அடங்குவது போல, அருள் வெளியிலே தத்துவம், புவனம் முதலிய யாவும் அடங்கும். அவ்வருள் வெளியில் நடமாடும் அப்பன், படைப்புக் காலத்தில் உடம்பெடுக்கும் உயிர்களின் நெஞ்சத் தாமரையிலும் பொருந்திக் கூத்து இயற்றுங்கால் எவ்வுயிரும் இயங்குவனவாம். தில்லை, உலகிற்கு இதயமென்றும் கூறுப. தில்லை மரங்கள் நிறைந்த இடமாய் இருந்தமை பற்றி அப்பெயர் ஏற்பட்டதென்ப. இறைவனின் பல்குணங்கள் நல்லுயிர்கட்கு அங்கங்கே தோன்றுவன. கலைகள் சிறப்பாக அவனை அடையும் வழியை உணர்த்துவன. உய்திபெறத் தகுதியுற்ற காலத்தே அவனே அறியாமையை முற்றிலும் ஒழிப்பான். பின்னர் அன்பர் நெஞ்சில் குடிகொண்டு அதனை நீங்காது தலைமை பூண்டிருப்பான். இக்கருத்து இப்பகுதியில் தெரிவிக்கப்பட்டது. இருள் - ஆணவமாகிய மூலமலம். மலநீக்கத்தின் பின் சிவப் பேற்றிற்குரிய அயரா அன்பே, மீதூரும் அன்பாகும். தன்னைப்பற்றிய அன்பரைக் கைவிடாத உறுதியும் ஆட்கொள்ளும் தலைமையும் உடையான் என்பது கருத்து. கு-ரை: 9-10: மகேந்திரம், பொதிகைக்குத் தெற்கேயுள்ளதெனச் சிவதருமோத்தரம் கூறும். 'சொன்ன' என்பதற்கு மேலுலகிற் கூறப்பட்ட எனவும், 'தோற்றுவித்து' என்பதற்கு எழுதுவித்து எனவும் பொருள் கொள்ளுவதும் உண்டு. 10. சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியுங் கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடு மெஞ்சா தீண்டு மின்னருள் விளைத்துங் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்; soonna aakamam thooRRuviththu aruLiyum kallaadaththuk kalanthu inithu aruLi nalla Loodu nayappuRavu eyuthiyum panja paLLiyil paalmoozi thannoodum enjaathu eeNdum innaruL viLaiththum 15. கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்துங் கேவேட ராகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய வாகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நல் தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் மற்று, அவை-தம்மை மகேந்திரத்து இருந்து kiraatha veedamoodu kinjsuka vaayavaL viraavu koongkai nalthadam padinthum keeveedar aakik, keLiRu athu paduththum maaveeddu aakiya aakamam vaangkiyum maRRu avai thammai makeenthiraththu irunthu பொ-ரை: 11-22: கல்லாடமென்னும் பதியில் இயற்கை நல்லியல்புடைய அம்மை வழிபட்ட திருவடிவிற் கலந்து தோன்றினான். இன்னருள் புரிந்து அவளோடு பேரின்ப நட்புக் கொண்டும் விளங்கினான். பஞ்சப் பள்ளி எனும் ஊரில் பால்போல் தூய மொழியளாம் உமையம்மையுடன் கலந்திருந்து அடியவர்கட்குக் குறையாது வளரும் இனிய கருணையைப் பெருக்கினான். வேடன் வடிவம் கொண்டு முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினையுடைய அருட்சத்தியின் நெருங்கிய நகிலாகிய புனிதப் பொய்கையில் மூழ்கி இருந்தான். வலைஞர் வேடம் பூண்டு வலை வீசிக் கெளிற்று மீன் ஒன்றை வலையில் வீழ்த்தினான். அதன் பாலிருந்த பெரிய ஏட்டின் உளவாகிய அருள்நூலை மீளப் பெற்றான். இருபத்தெட்டு ஆகமங்களாகிய அவைகளை மகேந்திர மலையில் ஐந்து திருமுகங்களோடு வீற்றிருந்து ஐந்து பெரும் முனிவர்களுக்கும் ஓதி அருளினான், நந்தம்பாடி என்னும் இடத்தில் நான்மறை உணர்த்தும் ஈறில்லாப் பேராசிரியனாகி வீற்றிருந்து அருளினான். 11 - 14: Goddess Uma was worshipping Lord Civan in the icon of His Holy Feet in a place called "Kallaadam". Lord Civan showered His bounteous grace on Uma by appearing before Her and was happy in Her company. In another place known as "Panchapalli" Lord Civan along with His divine consort Uma, whose voice is as sweet as pure milk, granted lavishly His unstinting grace on those who humbly sought Him there (See Story No. 70). 15 - 16: In the guise of a hunter and huntress Lord Civan and Uma appeared in the forest where Arjuna was doing penance to get darshan of Lord Civan to get Civan's divine missile (Paasupathaasthram - பாசுபதாஸ்திரம்) to fight against the Kauravaas. This incident which is narrated in Maha Bhaarata, is alluded to, by Maanikkavaachakar in lines 15 and 16 . It is but natural that hunters will feel thirsty while roaming in the forest. Metophorically these two lines indicate that Lord Civan gets grace (அருட்சத்தி) by diving into the tank of Uma's bosom (from where her grace Shakti - energy flows), whose lips are as crimson as the flower of holy-leaved berberry (Erithrina Indica - முள்ளு முருங்கை - கிஞ்சுகம்) 17 - 20: Lord Civan took the form of a fisherman and spread his net and succeeded in catching the fiddler fish (Macro Nes Vittatus) which was carrying the big scrolls of Aagamaas and recovered them. (See Story No.14). Taking the Aagamaa scrolls to Mount Mahendra, He explained the 28 Aagamaas on this second occasion to His five disciples viz., Agastyar, Kaasibar, Gauthamar, Bharadwaajar and Kaucikar (அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர், கௌசிகர்) through His five faces. Note: Five faces are Eesaanam, Thathpurusham, Aghoram, Vaamadevam and Sathyojaatham. கு-ரை: 11-20: நயப்பு - இன்பம். உறவு - நட்பு. வீட்டினை நல்குவான் புரியும் கருணை, குறையாது மிகும் இயல்பிற்று. இன்பம், அதன் விளைவாகும். கிராதன் = வேடன். கிஞ்சுகம் = முள்முருக்கு. விராவு=நெருங்கு. தடம் = பொய்கை. படிதல் = மூழ்குதல். தவங்கிடந்த அருச்சுனனுக்கு அருள்புரியச் சென்ற காலை இறைவனும் இறைவியும் வேட்டுவ வடிவம் கொண்டு சென்றமை பாரதத்துள் காண்க. வேட்டை ஆடுகிறவனுக்கு நீர் வேட்கை மிகுதியும் உளதாகும் ஆதலின், அதனைத் தீர்த்தற்குரிய பொய்கை இஃதென அடிகள் கவிநயம்பற்றி ஓதியருளினர். உய்தி கூட்டும் ஞானம் தருவது முலைப்பால்; ஞானத்துள் காணப்படுவது சிவமாதல்பற்றி, 'கொங்கை நற்றடம் படிந்த' தென்றார். கேவேடர்= வலைஞர். மாவேட்டு என்பதற்குப் பெரிய விருப்பத்தைத் தருவதாகிய என்றும் பொருள் கொள்ளுதலுண்டு. வேட்டு=விருப்பம் . அவை தம்மை' என்றமையால் ஆகமம் பல ஆதல் தெளிவு. முதற்கண், உமையம்மைக்கு ஆகமம் ஓதுவித்த காலை, அம்மை, நந்தி முதலியோர் செய்த பிழைக்காக, அவர்கள் வெஞ்சொற் பெற்றனரென்றும், கெளிற்று மீனான நந்தி பெருமான் ஆகம ஏட்டைக் கடற்கண் சுமந்து திரிந்தார் எனவும், இறைவன் வலைஞனாய் ஏட்டை மீளக் கொண்டான் எனவும் திருவிளையாடற் புராணம் கூறுவது காண்க. இரண்டாவது முறை அகத்தியர் முதலிய ஆதிசைவக் குடிமுதல்வராகிய ஐவர்க்கும், ஐம்முகங்கள் வாயிலாக ஆகமங்கள் கூறப்பட்டன. ஐவரும், ஐந்து திருமுகங்களிலே ஒவ்வொன்றில் இறைவனை வழிபட்டமையால் 'உற்ற ஐம்முகங்களால்' என்றார். ஐம்முனிவராவார்:- அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர், கௌசிகர். 20. துற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியு நந்தம் பாடியி னான்மறை யோனா யந்தமி லாரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையு நூறுநூ றாயிர மியல்பின தாகி உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் நந்தம் பாடியில் நான்ம றையோன் ஆய், அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும் வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி URRA aimmukangkaLaal paNith tharuLiyum nantham paadiyil naanmaRai yoonaay anthamil aariyanaay amarnthu aruLiyum veeRu veeRu uruvum veeRu veeRu iyaRkaiyum nuuRu nuuRu aayiram iyalpinathu aaki பொ-ரை: 23-26: அறமாகிய காளையை ஊர்தியாகக் கொண்டவன் எம் பெருமான். இவ்வுலகினரை உய்வித்தற்பொருட்டு, தன் திருமேனியில் ஒரு பகுதியாகச் சத்தியைக் கொண்டனன். அடியாரின் பக்குவ வேறுபாட்டுக்கேற்ப மாதொருபாகன் வெவ்வேறு திருவடிவமும், வெவ்வேறு தன்மைகளும் கோடிக்கணக்கில் அமையுமாறு தோன்றி அருளினான். 21 - 22: Lord Civan, the eternal Guru (preceptor), was graciously seated in the place called "Nandampaadi" as a matchless exponent of the four Vedas (See Story No. 67). 23- 26: Civan, the Lord of the Universe who has the bull as His vehicle,assuming multi diverse forms, and multi diverse attributes, with myriad such mutations suited to the maturity of the devotees, came graciously with His spouse (divine consort) who is His half, to redeem this world. கு-ரை: 21-22 நமது பாடியென்று பொருள் கொள்ளின், நந்தம் பாடியென்பது திருவாதவூரைக் குறிக்கலாம். ஆரியன் - ஆசிரியன், நான்மறையாய பொது நூல் வெளிப்படுத்தினவனும் இறைவன் என்பது இங்கே குறிக்கப்பட்டது. இறைவன் பொதுச் சிறப்பு நூல்களை வெளிப்படுத்தினமை கூறி அவனுடைய திருவிளையாடல்களை விதந்தோதுவான் தொடங்குகின்றார். கு-ரை: 23-26: 'ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமுமாதி மாண்புங் கேட்பான் புகில் அளவில்லை' என்ற கருத்தே இங்கு வந்தமை காண்க, உய்ய= உய்விக்க, சக்தி இறைவனது திருமேனியாதலின், ''மங்கையும் தானும்' என்றார். அருட்சக்தி வாயிலாகவே உய்தி கூட்டுமுறை நிகழ்த்தற்பாலது, நூறு நூறாயிரம் என்பது கோடி என்ற எண்ணைக் குறித்தாலும், 'பலப்பல' என்ற பொருளில் வந்ததாகும். அளவிலையென்பதே கருத்து. 25. யேறுடை யீசனிப் புவனியை யுய்யக் கூறுடை மங்கையுந் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் வேலம் புத்தூர் விட்டே றருளிக் ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக் கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச் சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும் வேலம்புத்தூர் விட்டேறு அருளிக், eeRudai iisan ippuvaniyai uyyak kuuRudai mangkaiyum thaanum vantharuLik kuthiraiyai koNdu kudanaadu athanmisai sathurpada saaththaayth thaan ezuntharuLiyum veelam puththuur viddeeRu aruLi பொ-ரை: 27-32: வேலம்புத்தூர் என்னுமிடத்திலே உக்கிரகுமாரனுக்கு வேல் கொடுத்தருளித் தன் திருவடிச் சிறப்பைக் காட்டிய அருட்செயல் மிகப்பெரியது. சாந்தம்புத்தூரில் வில்லாற் போர்புரியும் வேடனுக்குக் கண்ணாடியில் தோன்றி அவன் செய்த தவப்பயனாக வாள் கொடுத்து அருள் செய்தான். குதிரைகளை நடத்திக் கொண்டு மேலை நாட்டிடத்தே வணிகர் கூட்டத்தினனாய்த் திறமையுடன் தானே புறப்பட்டு வந்தருளினான். 27 - 32: Lord Civan appeared in grace as an able dealer of horses and, mingling with the horse traders very cleverly, brought the horses to the western part of the land (Madurai is in the western direction of Thiru-Perun-Thurai). In a place called "Velam Putthoor" Lord Civan showed the splendour of His form to King Ukkira Kumaara Paandiyan and gave him the Javelin (Sec Story No. 93), In another place known as "Saantham Puthhoor" Lord Civan appeared in a mirror to an archer - devotee and gave him the bow and arrows and similar weapons as prayed for. கு-ரை: 27-32: திருப்பெருந்துறைக்கு மேற்கே மதுரைக்குப் போகும் வழியிலுள்ள நாடு குடநாடு எனப்பட்டது. (கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய 'குட்ட நாடு' வேறு. இது திசை நோக்கிக் கூறப்பட்டது) குடக்கு= மேற்றிசை. சதுர் = திறமை, தன்னைப் பிறரறிய முடியாத சதுரப்பாடு. பட= பொருந்த, சாத்து= வணிகர் கூட்டம். விட்டேறு=வேல். கொள்கை =செயல், தர்ப்பணம் = கண்ணாடி. 'ஈந்த விளைவும்' என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றுக 30 கோலம் பொலிவு காட்டிய கொள்கையுந் தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவு மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையு கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும் koolam polivu kaaddiya koLkaiyum tharppaNam athanil saantham puththuur vilporu vedaRku eentha viLaivum mokkaNi aruLiya muzuththazal meeni sokku athu aaka kaaddiya thonmaiyum 35. மரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையு மாண்டுகொண் டருள வழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற் றீண்டு கனக மிசையப் பெறாஅ அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறா அது ariyodu piramaRku aLavu aRi oNNaan nariyai kuthirai aakkiya nanmaiyum aaNdu koNdu aruLa azkuRu thiruvadi paNdiyan thanakkup parima viRRu iiNdu kanakam isaiyap peRaa athu பொ-ரை: 33-41: இறைவனாகிய தலைவன் குதிரை வாயில் கொள்ளுப் பையைக் கட்டும் விதமாகக் கீழே இறங்கி நின்றனன். அவ்வமயம் நெருப்பையொத்த சிவந்த திருமேனியை அவன் அழகுறக் காட்டிய முறைமை மிகப் பழமையானதாகும். திருமாலோடு பிரமனும் அளந்தறிய இயலாத எம்பெருமான், நரிகளைப் பரிகளாக்கிய நற்செயல் செய்தவன். பாண்டியனை ஆட்கொண்டு, அழகு மிகுந்த திருவடிவுடன் அவனுக்குக் குதிரைகளை விற்று அவன் தந்த திரண்ட பொருளை ஏற்றுக் கொள்ள மறுத்தவன்; அதனால் பாண்டியன் சற்றுநேரம் செயலற்று தன் திருவருள் வழி நிற்குமாறும் செய்தனன். அங்ஙனம், அவன் பாண்டியனது உள்ளத்தை ஊக்கும் அருளொளி காட்டி நின்றது பாண்டியன் பெற்ற பண்டைய பரிசாகும். 33 - 41: Lord Civan showed His beautiful form of grace as a full Flame of Fire to the Paandiyan King while He was handling the horse-gram bag. He who could not be perceived even by Brahma and Thirumaal did the good deed of transforming the jackaals into horses. Lord Civan sold the horses to the Paandiyan King, but refused to accept the large quantity of gold he gave. But to make the king His own my Lord displayed gracefully His beautiful holy Feet,which impelled the king to stay in the holy path of my King (Civan) who then manifested in the ancient brightening ray. கு-ரை: 33-41: மொக்கணி = கொள்ளுப்பை; அருளிய = அருளும் பொருட்டு, தூய செம்மேனி என்பார் . 'முழுத்தழல் மேனி' என்றார். சொக்கது= அழகுடையது. ஆட்கொள்ளக் கருதிய அடியார்க்குத் தன் அருள் வடிவம் காட்டுதல், இறைவனது வழக்கமான பழைய முறை என்பார் 'தொன்மை' என்றார். முழுத்தழல் மேனி அடிகட்குக் காட்டப்பட்டது . 'தூண்டு சோதி' பாண்டியற்குத் தோற்றுவிக்கப்பட்டது. திருவடி= திருவடிவு (கொடு); ஈண்டு கனகம் = திரள் பொன், வினைத்தொகை, இறைவனது திருமேனியைக் கண்ட அளவிலே பாண்டியன் தன் செயலற்றுத் தலை மேல் கை குவித்தனனாதலின், 'அருள்வழி இருப்ப' என்றார். 40. தாண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையு மந்தண னாகி யாண்டுகொண் டருளி யிந்திர ஞாலங் காட்டிய வியல்பு மதுரைப் பெருநன் மாநக ரிருந்து ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி, இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநல் மாநகர் இருந்து aaNdaan engkoon aruLvazi iruppa thuuNdu soothi thooRRiya thonmaiyum anthaNan aaki aaNdu koNdaruLi inthira njaalam kaaddiya iyalpum mathurai perunan maanakar irunthu பொ-ரை: 42-47: அழகிய தண்ணருள் நிறைந்த முனி வடிவினனாகி என்னை ஆட்கொண்டு அருளியவன்; உடனே மறைந்தமையாகிய இந்திர ஜாலம் போன்ற திருவிளையாடல் (மாயம்) காட்டிய இயல்புடையவன்; சுந்தர சாமந்தன் என்ற அன்பனுக்காக மதுரைப் பெருநகரில் வீற்றிருந்தவன்; குதிரை வீரனாகி வெளிப்போந்த அருட்செயலுக்குரியவன்; அம்மதுரை நகரில் தனது மெய்யன்பினள் செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி பொருட்டு உரிமையாக மண் சுமந்து அருளிய பண்பினன் அவன். 42 - 47: Lord Civan took the form of a Brahmin and graciously made me (Maanikkavaachakar) His own, when He manifested His mystic powers by assuming a physical form and vanishing at will. (The incident which happened at Thirup-Perun-Thurai where Maanikkavaachakar had his first vision of Lord Civan, under the "Kuruntha" tree, who disappeared after giving initiation to Maanikkavanchakar, is quoted here). In another instance Lord Civan became the chief horse breeder in the great city of Madurai to save His devotee "Soundara Saamanthan". The latter, a commander-in-chief of the Paandiyan King, spent the money given to him by the king in feeding the disciples and devotees of Civan and in renovating Civan Temples. Lord Civan gave darshan to the Paandiyan King as well to Soundara Saamanthan as the captain of the cavalry and later disappeared along with His entire army. In the same city of Madurai, Lord Civan condescended to carry sand on his head as a labourer, to prevent the breach of the flooded river Vaigai. This He did on behalf of a faultless and sincere devotee 'Vandhi' (செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி). He came as a labourer belonging to her own community and took the responsibility of undertaking her share of the work as ordered by the king. கு- ரை: 42-47: இந்திர ஞாலம்= இந்திர ஜாலம்= இந்திரன் வலை= இந்திரன் தன்னெதிரிகளை வெல்லச் செய்த சூழ்ச்சிகள். அவை போல்வனவற்றையும் அச்சொற்றொடர் குறிப்பதாயிற்று. சௌந்தர சாமந்தன் என்ற பாண்டிய அமைச்சன் அரசன் பொருளை அடியார்க்கு அமுதளிக்கப் பயன்படுத்தினவன். அவன் கதை திருவிளையாடற் புராணம் மெய்க்காட்டிட்ட படலத்துள் காண்க, திருவாதவூரடிகளுக்குக் கீழ்த்திசை நின்று குதிரை கொணர்ந்தனர். சௌந்தர சாமந்தனுக்கு மதுரையிலிருந்தே குதிரைப் படை காட்டினர். மண் சுமந்த வரலாறு வெளிப்படை, பாங்கு= உரிமை, அவளினத்தான் போல வந்து அவள் செய்யவேண்டிய வேலையைச் செய்தமையின் அவ்வாறு கூறினர். 45. குதிரைச் சேவக னாகிய கொள்கையு மாங்கது தன்னி லடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசு முத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய வியல்பும் குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ஆங்கு, அதுதன்னில், அடியவட்கு ஆகப் பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் kuthirai seevakan aakiya koLkaiyum aangku athu thannil adiyavadku aaka paangkaay maNsumanthu aruLiya parisum uththara koosa mangkaiyuL irunthu viththaka veedam kaaddiya iyalpum 50. பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்புந் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாதவூரினில் வந்து, இனிது அருளிப் பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும் திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக் puuvaNam athanil polinthirunthu aruLi thuvaNa meeni kaaddiya thonmaiyum vaatha uurinil vanthu inithu aruLi paatha silambu oli kaaddiya paNpum thiruvaar perunthuRai selvan aaki பொ-ரை: 48-55: உத்தர கோச மங்கை எனும் பதியில் எழுந்தருளி, போதக ஆசிரிய வடிவம் காட்டி அருள் செய்தவன் எம்பெருமான், திருப்பூவணம் எனும் திருப்பதியில் சித்தர் வடிவம் கொண்டு அடியவர் வீட்டில் எழுந்தருளினான். ஆங்கு அவன், தன் பொன் வண்ணத் திருவடிவத்தை அடியவருக்குக் காண்பித்து அருளினான். மேலும், பாண்டியனுக்குக் குதிரை கொண்டு வரும் வழியில் திருவாதவூருக்கு வந்து, தங்கி, தன் திருவடிச் சிலம்பின் ஓசையை நன்கு காண்பித்த நயமும் அவனது அருட்சிறப்பேயாகும்: அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் கலைவல்லவனாகி அருள் புரிந்து பின் பெருமை பொருந்திய ஒளிப்பிழம்பில் மறைந்ததுவும் அவன் செய்த தந்திரமாகும். 48 - 55: In the place known as "Uththara-Kosa-Mangai” (உத்தர கோச மங்கை ) Lord Civan appeared as preceptor and explained the Aagamaas as requested by sages. (Sixty-four sages prayed to Lord Civan exercising their wish to learn the Aagamaas directly from Him, who granted their request, as well as Uma Devi's) In a place called 'Thirup-Poovanam' (திருப்பூவணம்) situated towards east of Madurai Lord Civan appeared as a mystic (சித்தர்) to a lady devotee and converted all the iron materials in her house into gold. The story goes that a lady devotee by name 'Ponnanaiaal' (பொன்னனையாள்) was feeding many devotees of Lord Civan with sumptuous tasty food. She had a desire to worship Lord Civan in a golden icon. But she had not the wherewithal to make the icon in gold. Lord Civan appeared before her and showed His pure and graceful form and converted the iron pieces she had in her house into gold. With this gold she made an icon of Civan (Civa Lingam) and worshipped it. Lord Civan reached the village Vaadavoor (வாதவூர்) (the birth place of Maanikkavaachakar) and happily showered His grace on Maanikkavaachakar. Also, He caused the tinkling of His anklet to be heard by Maanikkavaachakar. Note: Maanikkavaachakar was waiting for Lord Civan's arrival with horses as promised by Him. The Paandiyan king got wild at this delay. In this embarassing situation, Maanikkavaachakar prayed for Civan's arrival with the horses. Maanikkavaachakar not seeing the horses, in Madurai went up to Vaadavoor (வாதவூர்) awaiting the arrival of Civan with horses. It is then that he heard the tinkling of Lord Civan's anklets. In the beauty-brimming Perunthurai (பெருந்துறை) Lord Civan appearing as a Preceptor initiated Maanikkavaachakar and then disappeared in the effulgence which is the source of everything. கு-ரை: 48-55: இறைவனே தமக்குக் குருவாய் வந்து ஆகமம் கற்பிக்க வேண்டும் என்று உத்தர கோச மங்கையில் தவங்கிடந்த அடியவர் அறுபத்து நால்வர் பொருட்டு, அவன் அவ்வாறு உபதேசித்தான் என்ப. வித்தகம்= ஞானம், கல்வி. உத்தரகோசம்= உயர்ந்த நூல் (வெளியான இடம்). மங்கை - நிலமடந்தையின் பொதுப்பெயர் ஊர்க்காயிற்று. திருப்பூவணத்திலே பொன்னனையாள் என்னும் நன்மாது கடவுளிடத்தும் அடியாரிடத்தும் மெய்யன்பு உடையளாய் விளங்கினாள். இறைவழிபாடியற்ற ஒரு பொன் திருவுருச் சமைப்பிக்க விரும்பினள். அவள் கைப் பணம் அடியார்க்கு அமுதளிக்கவே போதியதாக இருந்தமையால் திருவுருவத்திற்குப் பொன்னின்றி வருந்தினள். அப்போது, இறைவனே ஒரு சித்த வேடங்கொண்டு அவள் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த இரும்புச் சாமான்கள் பலவற்றையும் எடுப்பித்து அவற்றைக் குளிகையாற் பொன்னாக்கி விட்டு மறைந்தனர். திருவருள் திறத்தை அடியவள் பெரிதும் வியந்து தான் கருதியபடி பொன் திருவடிவம் சமைப்பித்து வழிபாடியற்றினள். இனிது= நன்கு, சிலம்பு = வீரக்கழல், கரு= பெருமை,மேன்மை. கரு= காரணம், வித்து. உருவப்பொருள் எவற்றிற்கும் காரணமாகிய சோதி எனவும் கூறலாம். இறைவனது அருஉருவத் திருமேனி சோதியாதலின், அது உருவங்கட்குக் கருவாயிற்று. செல்வன்= ஞானச் செல்வமுடையான். திருப்பெருந்துறையில் அடிகட்கு அருள் புரிந்த பின், சோதியில் இறைவன் மறைந்தமை வேம்பத்தூரார் திருவிளையாடலிற் காண்க. 55. கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசுந் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும் கருஆர் சோதியில் கரந்த கள்ளமும் பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் karuvaar soothiyiR karantha kaLLamum puuvalam athanil polinthu inithu aruLi paava naasam aakkiya parisum thaNNiir panthar sayam peRa vaiththu nanniir seevakan aakiya nanmaiyum பொ-ரை: 56-63 பூவலம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் விளங்கியருளி, தன் அடியவரின் தீவினை தொலைத்தது அவன் திறனாகும். பாண்டியன் ஒருவன் போர் செய்த காலத்து அவன் படைகளுக்குத் தாகவிடாய் தீர்த்தற்பொருட்டு, தானே தண்ணீர்ப் பந்தல் அமைத்தான் இறைவன். அப்பந்தலில் அமர்ந்து நல்ல நீரை வழங்கி, பணியாளனாகப் பேருபகாரம் செய்து பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கும்படியாகச் செய்தனன். முன்னொரு காலம் திருவெண்காட்டில் விருந்தினனாய்க் குருந்த மரத்தடியில் அமர்ந்து அருள் செய்தான்; பட்ட மங்கை என்ற ஊரில் உரிமையுடன் வீற்றிருந்து ஆங்கு இயக்கிகள் அறுவருக்கு அட்டமா சித்திகளை அளித்த நயமும் அவனது அருட்திறமேயாகும். 56 - 63: Lord Civan appeared in a place called "Poovalam" (பூவலம்) and destroyed the evil karma (bad deeds) of all souls. As there is no place called "Poovalam" now, it is to be construed that Civan showered His grace to Maanikkavaachakar in all the temples he visited on his way from Madurai to Chidambaram. The earlier place "Poovanam" (பூவணம்) is different from this "Poovalam"(பூவலம்). Lord Civan created a drinking-water booth in the battlefield where a Paandiyan King who was an ardent devotee of Lord Civan was attacked by his own brother who along with a Chola King waged war against him. Civan condescended to be the attendant and Himself served water to the tired soldiers of the devotee king which paved for the victory of Paandiyan King (See Story No. 61). In a place called “Thiru Ven Kaadu" (திருவெண்காடு) Lord Civan turned up as a stranger guest and was seated under the "Kuranda" tree (The details of the story of the guest who came to "Thiru Ven Kaadu" are not known). In the place called "Patta Mangai" (பட்ட மங்கை) Lord Civan bestowed graciously to His former hand maidens the eight great supernatural powers (அட்டமா சித்தி ) The story goes like this. The six maidens who fed Lord Karthik requested Lord Civan to impart the eight great supernatural powers called as "Attamaa Siddhi" (அட்டமா சித்தி). Civan asked them to learn it from goddess Uma. They were very inattentive while listening and hence Civan imprecated them to become stones and remain so under a banyan tree in the place called "Patta Mangai" (பட்டமங்கை). When they repented and prayed for mercy Civan agreed to give deliverance from the curse after 1000 years. As Civan was ruling in Madurai as "Soma Sundarar" (சோமசுந்தரக் கடவுள்), He went to "Patta Mangai" (பட்ட மங்கை ) and graciously revealed to the six maidens the eight super natural powers. The eight super natural powers are: "Animaa" (அணிமா): "Mahimaa" (மகிமா); "Garimaa" (கரிமா); "Lakimaa" (லகிமா); "Praathi" (பிராத்தி); "Piraakaamiyam" (பிராகாமியம் ); "Eechath-thuvam" (ஈசத்துவம்); "Vacith-thuvam (வசித்துவம்): Definition of the above eight super natural powers: 1"Animaa" Supernatural power of becoming as small as an atom. அணுப் போலாகுதல். 2."Mahimaa" Increasing the size at one's will. விருப்பம் போல் உருவத்தைப் பெரியதாகச் செய்யும் பேராற்றல். 3."Garimaa" Making oneself heavy at will. 4."Lakimaa" Super natural power of levitation. கனமற்றதாகும் ஆற்றல். 5."Praathi" The power of obtaining anything one likes. 6."Piraakamiyam" The power of satisfying all desires by irresistible will force. 7."Eechath-thuvam" Supremacy or Superiority considered as a super natural power. 8."Vacith-thuvam" The super natural power of subduing all to one's own will. எல்லாவற்றையும் தன் வசமாக்கும் சக்தி. கு-ரை: 56-63: இனிது= சிறப்பாக, பொலிந்து = விளங்கி. திருவிளையாடற்புராணம் தண்ணீர்ப்பந்தல் வைத்த படலத்திலே சோழனோடு சேர்ந்து தன்னொடு போர்க்கு வந்த தனது தம்பியை வெல்வதற்கு இராசேந்திர பாண்டியன் கடவுள் துணையை நாட, அவர் தண்ணீர்ப்பந்தல் வைத்ததாகக் கூறினமை காண்க. சயம் = வெற்றி, சேவகன் = வேலையாள். விருந்து = புதிதாக வந்தோன், பட்டமங்கையில் உபதேசம் பெற்ற நங்கையர், முன்னர்க் கயிலையினின்று இழிந்து ஒரு சாபத்தாற் கல்லாய்க் கிடந்து சாபம் நீங்கப் பெற்று இறைவன் உபதேசம் கேட்டனர். முன் தொடர்பிருத்தல் பற்றிப் 'பாங்காய்' என்றார். எட்டுப் பெருஞ்சித்திகளாவன: அணுவாதல், மேருவாதல், எளிதாதல், பளுவாதல், எங்கும் இயங்குதல், விரும்பிய இன்பம் பெறுதல், முத்தொழில் புரியும் முதன்மை, தன்வயப்படுத்தல் என்பனவாம். 60. விருந்தின னாகி வெண்கா டதனிற் குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய வதுவும் வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில் குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும் பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு, virunthinan aaki veNkaadu athanil kurunthin kiiz anRu iruntha koLkaiyum padda mangkaiyiR paangkaay irunthu angku addamaa siththi aruLiya athuvum veeduvan aaki veeNduruk koNdu பொ-ரை: 64-67: பாண்டியனுக்காக, சோழனுக்கு எதிராகப் போர் புரிதற் பொருட்டு குதிரைமேல் வேடனாக அச்சமயத்திற்கேற்ப வேடம் தரித்து வந்தான். மன்னன் அவனைத் தொடர்ந்து வர, காட்டினுள் சென்று மறைந்து விட்டது இறைவனது தந்திரச் செயலாகும். உண்மையைக் காட்டி விடுவதற்கு இறைவன் தான் வேண்டிய வடிவமெல்லாம் எடுக்கும் நீதிமானாகவும் விளங்குகிறான். 64 - 65: Assuming any form at will, the Lord Civan took the form of a hunter, fought against the Chola King to protect His devotee the Paandiyan King and disappeared in the forest. These two lines (64 and 65) allude to a story that at the request of His devotee, a Paandiyan King, Lord Civan appeared in the battlefield as a hunter riding on a horse and engaged the Chola King in direct fight. When the Chola King challenged that he would capture Him along with His horse, Lord Civan fled fast, as if in fear, into a forest, the Chola King chasing him all the while. Abruptly Lord Civan dived into a deep pond along with His horse while the chasing Chola King also fell into the pond and perished. Thus Civan made His devotee the Paandiyan King victorious. 66 - 67: Lord Civan assumed at pleasure the form of a commander-in-chief suitable to the circumstance and proved to the Paandiyan King the truth of his army chief Soundara Saamanthan. (சௌந்தர சாமந்தன்). The story goes that a Paandiyan King one day heard from his secret agent that a hunter chieftain, by name "Sethipar Kone" (சேதிபர் கோன்) was coming to wage war against him with a big army. The king immediately asked his army chief to take enough money from the treasury and to recruit soldiers. The army chief spent all the money in feeding the devotees of Lord Civan every day. The king came to know of this and ordered the army chief to show the entire army he had recruited by next day. The army chief went to the temple and prayed to Lord Civan who revealed through an astral voice that He would bring a big army the next day. Lord Civan Himself took the guise of a Commander-in-Chief and led a huge army to the wonderment of the king. At that moment, news reached the king that the hunter chieftain was killed in the forest by a lion. Simultaneously, the entire army and its chief, Lord Civan disappeared.The king, his army chief and all the others assembled, praised and worshipped Lord Civan for his gracious deed. கு-ரை: 64-67: வேடுவன் ஆகி = வேடனாக, இக்கதை திருவிளையாடற்புராணம் சோழனை மடுவில் வீழ்த்திய படலத்திற் காண்க. சோழன் தொடர்ந்து வந்தபோது, தான் காட்டகத்தே உள்ள ஒரு குளத்திலே குதிரையொடு வீழ்ந்து மறையவே, சோழனும் அதனுள் வீழ்ந்து இறந்தான். மடு இருந்த இடம் காடு மூடிக்கிடந்தமையால் 'காடது தன்னில்' என்றார். காட்டிட்டு=காட்டிட= காட்டி விட, ஒருவன்= ஒப்பற்றவன், தக்கான் = நீதிமான் = நடுவன். சிவபத்தியிற் சிறந்த வாளாசிரியன் ஒருவனது மனைவியை விழைந்த அவன் மாணவனது உண்மைத் தன்மையை வெளியிட்டு அவனை ஒறுக்கவேண்டி இறைவனே வாளாசிரியனாகத் தோன்றி அம்மாணவனோடு பொருது நீதி செலுத்திய வரலாறு, திருவிளையாற் புராணம் அங்கம் வெட்டிய படலத்துட் காண்க. அகவலின் இப்பகுதி மெய்க்காட்டிட்ட படலத்தைக் குறிக்கும் என்பாரும் உளர். 65. காடது தன்னிற் கரந்த கள்ளமு மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கா னொருவ னாகிய தன்மையு மோரி யூரி னுகந்தினி தருளிப் பாரிரும் பாலக னாகிய பரிசும் காடு அது தன்னில், கரந்த கள்ளமும் மெய்க் காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஓரியூரில் உகந்து, இனிது அருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் kaadu athu thannil karantha kaLLamum mey kaaddiddu veeNduru koNdu thakkaan oruvan aakiya thanmaiyum oori uuril ukanthinithu aruLi paar irum paalakan aakiya parisum பொ-ரை: 68-69: ஓரியெனும் தலத்தில் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி அவளுக்கு அருள் செய்த இனியவன்; அவள் மகிழ்ச்சியடையவும், இந்நிலவுலகம் பெருமை அடையவும் தாலாட்டக்கூடிய பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய பண்பும் அவனுடையது. 68 - 69: In a hamlet called "Ori" (ஓரி) Lord Civan became a child of greatest glory on earth, in order to bless a devotee and make her His own (See Story No. 35) கு-ரை : 68-69: திருவிளையாடற் புராணம் விருத்த குமார பாலரான படலத்தில் இக்கதையைக் காண்க. சைவ மறையோன் ஒருவன் சிவனடியார் பத்தியிற் சிறந்த தன் மகளைத் திருமால் வழிபாடுடைய ஓர் அந்தணனுக்கு மணஞ் செய்வித்தான். அப்பெண்ணின் மாமியார் அவளை ஓர் ஒதுக்கிடத்தே வைத்துக் கொடுமையாய் நடத்தி வந்தாள். ஒரு நாள் தன் கணவனும் மாமி முதலியோரும் வீட்டைப் பூட்டிவிட்டு அயலூருக்குப் போய்விட, சிவனடியார் ஒருவர் அப்பெண்ணிருந்த ஒதுக்கிடத்திற்கு வந்து உணவு கேட்டார். மாமி உணவுப் பொருள்களை எல்லாம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயினதை அவருக்கு அவள் தெரிவிக்கவும், அவர் அவளை நோக்கி "நீ கதவின் பக்கம் போ, அது திறக்கும்" என்றார். உடனே அவள் அவ்வாறு போய்க் கதவு திறந்ததைக் கண்டு வியந்து உட்சென்று உணவு சமைத்து அவ்வடியார்க்கிட்டாள். வயது சென்ற அவ்வடியார் உண்டபின், ஓர் இளைஞன் வடிவம் கொண்டார். பெண்மணி அத்திருக்கோலத்தைக் கண்டு வியந்து நடுங்கி நிற்கும்போது வெளியே போன மாமியார் திரும்பி வந்துவிட்டாள். அப்போது இளைஞராயிருந்தவர், குழந்தையாய் ஒரு தொட்டிலிற் கிடந்தனர். மாமியார் சினங்கொண்டு மருமகளையும் குழந்தையையும் வெளியே தள்ளி விடவே குழந்தையாயிருந்த அடியவர் விடைப்பாகராகத் தோன்றி அப்பெண்மணியை உமை வடிவினள் ஆக்கிச் சிவலோகம் புக்கனரெனப் புராணம் பகர்கின்றது. பார்= நிலவுலகம், இரும்= பெருமை உடைய. 70. பாண்டுர் தன்னி லீண்ட விருந்துந் தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையுந் தேனமர் சோலைத் திருவா ரூரின் ஞானந் தன்னை நல்கிய நன்மையு பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் தேன் அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் paaNduur thannil iiNda irunthum theevuur thenpaal thikaztharu thiivil koovaar koolam koNda koLkaiyum theen amar soolaith thiruvaaruuril njaanam thannai nalkiya nanmaiyum 75. மிடைமரு ததனி லீண்ட விருந்து படிமப் பாதம் வைத்தவப் பரிசு மேகம் பத்தி னியல்பா யிருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசுந் திருவாஞ் சியத்திற் சீர்பெற விருந்து இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்த அப்பரிசும் ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து idaimaruthu athanil iiNda irunthu padimap paatham vaiththa apparisum ekampaththin iyalpaay irunthu paakam peNNoodu aayina parisum thiruvaanj siyathil siirpeRa irunthu பொ-ரை: 70-80; பாண்டூர் என்னும் பதியில் அடியவர்க்கு விளங்குமாறு நெருங்கியிருந்து அருள் செய்தனன். தேவூர்க்குத் தென்புறத்தே விளங்கும் தீவில் அரசியல் தன்மை பொருந்திய திருவடிவம் கொண்டருளினான். வண்டுகள் தங்கும் பொழிலினையுடைய திருவாரூரில் முனிவர் பலருக்கு உயர்ந்த பெரும் சிவஞானத்தைத் தந்தருளிய உபகாரி அவன். திருவிடைமருதூரில் அடியார்க்கு விளங்க வீற்றருளி தன் தூய திருவடிகளை அவர் சென்னி மீது வைத்த கருணைத் திறம் அவனுடையதாகும். காஞ்சிபுரத்தில் தன் இயற்கையான அருஉருவத் திருமேனியில் வீற்றிருந்தான். தம்மை வழிபட்ட உமையம்மையை இடப்பாகத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டது அவனது பெருஞ்சிறப்பாகும். திருவாஞ்சியம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் இருந்து இயற்கையில் மணமுடைய கூந்தலினையுடைய அம்மையோடு கலந்து மகிழ்ந்து இருந்ததுவும் அவன் திருவிளையாடல் ஆகும். 70 - 72: In the place called "Paandoor" (பாண்டூர்) Lord Civan came in order to dwell to give darshan to His devotees. In the resplendant island situated in the south of "Thevoor" (தேவூர்) Lord Civan assumed the form of a glorious king and ruled the island. 73 - 74: In the place called “Thiruvaaroor" (திருவாரூர்) which is surrounded by groves full of honeycombs, Lord Civan imparted enlightenment to His devotees. 75 - 76: In "Thiru Idai Maruthoor" (திரு இடை மருதூர்) Lord Civan surrounded by his devotees blessed them by placing His holy Feet on their heads. 77 - 78: In the town of "Ekambam" (திரு ஏகம்பம்) (present day Conjeevaram) Lord Civan was worshipped in His natural Linga form by Uma. There, He became Ardhanaareeswarar, the half male-half-female form, His left half of His form being occupied by His never-sundered queen Goddess Uma (See Story No. 29). 79 - 80: In the place called "Thiruvaanchiyam" (திருவாஞ்சியம்) Goddess Uma was in Her bridal beauty with Her naturally fragrant trusses of hair, when Civan joined Her and delighted in Her. கு-ரை: 70-80: பாண்டூர், தேவூர் என்பன, பாண்டி நாட்டிலுள்ளன. தேவூர்க்குத் தெற்கே கடலில் இருப்பது தீவு. ஈண்ட = நெருங்க, விளங்க. கோ = அரசத்தன்மை. தேன் = வண்டு . இங்கே கூறிய ஞானம் வீடு பயக்கும் உணர்வாதலின், 'தன்மை ' யெனச் சிறப்பித்தார். படிமம் = ஒளி வடிவம், தூய்மை . ஏகம்பநாதர் காஞ்சிப்பதியமர்ந்த சிவபிரான். திருக்கயிலையில் இறைவர் திருக் கண்களைப் பொத்தி உலகிற்கு இருள் உண்டாக்கிய குற்றம் நீங்க, உமையம்மையார் காஞ்சியில் ஒரு மாமரத்தினடியில் மணலாற் சிவலிங்க வடிவமைத்து வழிபட்டகாலை, வெள்ளம் வரவே சிவபெருமானைத் தழுவிப் பின்னர் அவரது இடப்பாகங் கொண்டனரென அறிக, மரு = இயற்கை வாசனை. கற்புடை நங்கை கூந்தலுக்கு இயற்கை மணமுண்மை, நக்கீரர் கதையால் விளங்கும். திருவாஞ்சியம், சோழ நாட்டில் உள்ளது 80. மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமுஞ் சேவக னாகித் திண்சிலை யேந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசுங் கடம்பூர் தன்னி லிடம்பெற விருந்து மீங்கோய் மலையி லெழிலது காட்டியு மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்; சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பல பல காட்டிய பரிசும் கடம்பூர்-தன்னில் இடம்பெற இருந்தும்; ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்; maruvaar kuzaliyodu makizntha vaNNamum seevakan aaki thiNsilai eenthi paavakam palapala kaaddiya parisum kadampuur thannil idam peRa irunthum iingkooy malaiyil ezilathu kaaddiyum 85. மையா றதனிற் சைவ னாகியுந் துருத்தி தன்னி லருத்தியோ டிருந்துந் திருப்பனை யூரில் விருப்ப னாகியுங் கழுமல மதனிற் காட்சி கொடுத்துங் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் aiyaaRu athanil saivan aakiyum thuruththi thannil aruththiyoodu irunthum thiruppanai uuril viruppan aakiyum kazumalam athaniR kaadsi koduththum kazukkunRu athanil vazukkaathu irunthum பொ-ரை: 81-91: பாண்டிய அரசன் ஒருவனுக்கு வெற்றி உண்டாக்குதற் பொருட்டு வில்வீரர் வடிவம் கொண்டு வலிமிக்க வில்லைக் கைக்கொண்டு, பல்வேறு இயல்புகளைத் தோற்றுவித்தனன் எம்பெருமான். திருக்கடம்பூரில் கோயில் கொண்டு வீற்றிருந்தனன். ஈங்கோய் மலையில் அழகுமிக்க மரகதத் திருமேனியைக் காண்பித்து அருளினான். திருவையாற்றில் பூசனைபுரியும் சைவ ஆசாரியன் வேடத்தில் தோன்றினான். திருத்துருத்தியில் அடியவர்க்கு அருள்புரியும் ஆசையுடன் வீற்றிருந்து அருளினான். திருப்பனையூரில் வேண்டுவார் வேண்டுவன ஈயும் விருப்பத்தினனாய் அமர்ந்திருந்தனன். சீகாழிப் பதியில் திருக்கோலம் காட்டி அருளினான். திருக்கழுக்குன்றத்தில் ஞானவடிவோடு தவறாது எழுந்தருளினான். திருப்புறம்பயத்தில் தருமச் செயல்கள் பல ஆற்றினான். திருக்குற்றாலத்தில் சிவலிங்க வடிவில் அருள் வழங்கினான். 81 - 82: To help a Paandiyan King who was Civan's devotee He became a soldier carrying a mighty bow and manifested Himself in various Forms (See Story No. 57). 83: Lord Civan dwelt in the temple in "Kadamboor” (கடம்பூர்) and made it His abode. 84: On the hill of "Eengoi" (திரு ஈங்கோய் மலை) He showed His beautiful emerald form (மரகதத் திருமேனி) to His devotees. 85: Lord Civan assumed the form of a civaacharya priest in the place called "Thiruvaiyaaru' (திருவையாறு (See Story No. 34) 86: To bestow His grace on His devotee Lord Civan happily abided in his place called "Thirup- Poon-Thuruththi" (திருப்பூந்துருத்தி). 87 - 91: In “Thirup-Panaiyur" (திருப்பனையூர்) Lord Civan was the bestower of things yearned by devotees. In "Kazhumalam" (திருக்கழுமலம்) present-day “Seerkaazhi" (சீர்காழி), He gave darshan to His devotees in all the three forms of "Guru", "Linga" and "Sangamam" (குரு, லிங்க, சங்கமம்). Guru - Thoniappar (குரு - தோணியப்பர்), Linga - Brahmapureeswarar (லிங்கம் - பிரமபுரீசுவரர்) . Sangamam - Chattainathar; (சங்கமம்-சட்டைநாதர்). He was abiding unfailingly in Thiruk-Kazhuk-Kundram (திருக்கழுக்குன்றம்). In "Thirup-Purampayam" (திருப்புறம்பயம்). He was witness to many virtuous deeds. In “Thiruk-Kutralam" (திருக்குற்றாலம்) He appeared in Linga form to give darshan to sage Agasthiya (அகத்திய முனிவர்). The story goes that sage Agasthiya was sent to the south from the mount Kailas (கைலாசம்) in the north to balance the earth, as the entire host of devas and other celestials had assembled in mount 'Kailas' to witness the marriage of Lord Civan. The sage came to 'Pothigai' hills (பொதிகை மலை) where he saw the statue of Maha Vishnu in the sanctum sanctorum of a temple at the foot of the hill. By his divine powers he placed his hands on Maha Vishnu's head and uttered "Kuru Kuru Kutralam" (குறு குறு குற்றாலம்) (May you become small). The statue became a "Linga" (Symbol of Civa). கு-ரை: 81-91 : திருவிளையாடற் புராணம், யானை எய்த படலத்துள், சோழன் விடுத்த யானையைக் கொல்லுதற் பொருட்டு, இறைவன் வில் வீரராய்த் தோன்றி யானை எய்தமை கூறப்பட்டது. இடம்=கோயில், 'எழிலது' என்பதில், அது திருமேனியைக் குறிக்கும். திருவையாற்றிலே இறைவனைப் பூசனை புரியும் சைவாசாரியருள் ஒருவர் காசிக்குப் போய், நெடுநாளாக மீண்டு வராமையால், அவர் மனைவி மக்கட்குரிய பொருளைப் பிறர் கவர்ந்து கொள்ளக் கருதிய போது, அதனைத் தடுத்தற் பொருட்டு, காசிக்குப் போன சைவரின் வடிவத்தோடு இறைவன் தோன்றியருளினமை இங்கே குறிக்கப்பட்டது. திருக்கழுமலத்திலே அடிகட்கு இறைவன் காட்சி நல்கியமையும், திருக்கழுக்குன்றிலே கணக்கிலாத் திருக்கோலம் அடிகட்குக் காட்டியமையும் அடிகள் வரலாற்றானறிக. 'வழுக்காது', என்பதற்கு மறவாது என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. திருக்குற்றாலத்திலே விண்டு வடிவமே அகத்தியர் வேண்டுகோளால் சிவ வடிவமாக மாறினமை திருக்குற்றாலத் தலபுராணத்துட் காண்க. திருக்கடம்பூர், ஈங்கோய்மலை, திருப்பனையூர் ஆகியவை சோழ நாட்டிலுள்ளவை. திருத்துருத்தி இப்போது சோழநாட்டிலே குற்றாலம் எனப்படும் இடமென்ப . திருக்குற்றால மென்பது, பாண்டி நாட்டிலேயுள்ளதென்பது வெளிப்படை. திரிகூட பருவதத்தினடியில் அழகிய அருவியுடன் கூடியது. 90. புறம்பய மதனி லறம்பல வருளியுங் குற்றா லத்துக் குறியா யிருந்து மந்தமில் பெருமை யழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் டிந்திர ஞாலம் போலவந் தருளி புறம்பயம்-அதனில் அறம்பல அருளியும் குற்றாலத்துக் குறியாய் இருந்தும்; அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து சுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டு இந்திர-ஞாலம் போல வந்து அருளி, puRam payam athanil aRampala aruLiyum kuRRaalathu kuRiyaay irunthum anthamil perumai azaluru karanthu sunthara vedaththu oru muthal uruvukoNdu inthira njalam poola vanthu aruLi 95. யெவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபர னெம்மிறை சந்திர தீபத்துச் சாத்திர னாகி யந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியு எவ்எவர் தன்மையும் தன்வயின் படுத்துத் தானே ஆகிய தயாபரன், எம்இறை சந்திர தீபத்துச், சாத்திரன் ஆகி அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும் evvevar thanmaiyum thanvayiR paduththu thanee aakiya thayaaparan emiRai santhira thiipaththu saaththiran aaki antharaththu izinthu vanthu azaku amar paalaiyuL sunthara thanmaiyoodu thuthainthu irunthu aruLiyum பொ-ரை : 92-99: தனது அளவற்ற பெருமையுடைய சோதியுருவை மறைத்து அழகிய பிரணவ வடிவமான காதணியோடு ஒப்பற்ற ஞான முதல்வனாக வடிவம் கொண்டான். இந்திர ஜால வித்தையில் பொருள்கள் எதிர்பாராது தோன்றுதல் போல திடீரென எழுந்தருளி வந்தான். எவ்வகைப்பட்டவர் இயல்பையும் தன்பாலாக்கித் தானே எல்லாமாய் விளங்கும் கருணையாளன் எம் தலைவன், சந்திர தீபமென்னும் பதியில் வானின்று இறங்கி அழகிய பாலை என்னுமிடத்தில் கலைவல்ல ஆசிரியனாய் வனப்பு நிறைந்த இயல்புடனே வீற்றிருந்து அருளினான். 92 - 99: Lord Civan concealed His endless and glorious form of fire and assumed the beautiful form of matchless supreme Lord with ear rings. Taking each one's nature unto Himself, our Lord of infinite grace descended as though by magical powers and landed in the beautiful place called "Paalai" (பாலை) situated in the island of "Chandra Deepam" (சந்திர தீபம்) and abided there, filling it with his sweet grace and beauty. Here, as an exponent of all arts. He was in his fairest form full of grace. கு-ரை: 92-99: அழலுருவென்பது இறைவனது தெய்வ வடிவை அல்லது அடிமுடியறியாச் சோதியாய் நின்ற வடிவைக் குறிக்கும். வேடம் = காதணி. வட்டவடிவாய்ச் சைவ ஆசாரியர்களால் அணியப்படுவது. 'சுந்தரம் துதைந்த தன்மையோடு இருந்து அருளியும்' என உரைநடை கொள்க. துதைதல்= நெருங்குதல்,நிறைதல்; பாலை நிலத்திற்குரிய மரங்களடர்ந்ததாய் அழகு வாய்ந்ததாயிருக்கலாம். அல்லது, இடத்தின் பெயர் பாலையாதல் கூடும். ஒரு காலத்துப் பாலையாயிருந்து பின்னர் பொழிலாய பின்னும், அப்பெயர் அதற்கு வழங்குதல் கூடும். 100. மந்திர மாமலை மகேந்திர வெற்ப னந்தமில் பெருமை யருளுடை யண்ண லெந்தமை யாண்ட பரிசது பகரி னாற்ற லதுவுடை யழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியு மந்திர மாமலை மகேந்திர வெற்பன் அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உரு நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும் manthira maamalai makeenthira veRpan anthamil perumai aruLudai aNNal emthamai aaNda parisu athu pakarin aaRRal athu udai azaku amar thiru uru neeRRu koodi nimirnthu kaaddiyum 105. மூனந் தன்னை யொருங்குட னறுக்கு மானந் தம்மே யாறா வருளியு மாதிற் கூறுடை மாப்பெருங் கருணைய னாதப் பெரும்பறை நவின்று கறங்கவு மழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன் ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் ஆனந் தம்மே, ஆறா அருளியும் மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் uunam thannai orungkudan aRukkum aananthammee aaRaa aruLiyum maathiR kuuRudai maapperung karuNaiyan naathap perumpaRai navinRu kaRangkavum azukku adaiyaamal aaNdu koNdu aruLpavan 110. கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியு மூல மாகிய மும்மல மறுக்குந் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை யேலுடைத் தாக வெழில்பெற வணிந்து கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனி, சுடர்விடு சோதி காதலன் ஆகிக், கழுநீர் மாலை ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும் kazukkadai thannai kaikkoNdu aruLiyum muulam aakiya mummalam aRukkum thuuya meeni sudarvidu soothi kaathalan aaki kazhuneer maalai eel udaiththu aaka ezilpeRa aNinthum பொ-ரை: 100-114: எல்லையற்ற ஆற்றலும் அருளும் உடைய எம்பெருமான் மந்திர நூலாகிய ஆகமம் வெளிப்பட்ட பெருமலையாகிய மகேந்திர மலையின் தலைவன். அத்தகையோன் எங்களை ஆட்கொண்ட வகையைச் செப்பவேண்டும். வலிவும் வனப்பும் பொருந்திய திருமேனியில் (நெற்றி, மார்பு, புயம் முதலிய இடங்களில்) திருநீற்றுக் கொடியினை எடுப்பாக, இடையிட்டுத் தரித்து, தரிசனம் அளித்தனன். பாசமாகிய குற்றம் முழுவதையும் ஒரு சேர, ஒரே காலத்தில் வேரறுத்துக் களையும் பேரின்பத்தையே ஆறாக அருளினான். உமையம்மையை ஒரு பாகத்தே உடைய, கைம்மாறு வேண்டாப் பேரருளாளன் அவன். நாத தத்துவமாகிய பெரும்பறை இடைவிடாது ஒலிப்பக் கொண்டுள்ளவன் அவன். வாசனா மலம் தாக்கா வண்ணம் அன்பர்களைத் தடுத்தாட் கொள்ளுபவன். மூவிலைச் சூலத்தைத் திருக்கைகளிற் கொண்டருளி, உயிர்களை அநாதியே பற்றிய (இருள், வினை, மருள்), ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைப் பாசங்களையும் வேரறுக்கவல்ல திருமேனியுடன் எழுந்தருளி உள்ளான். அறிவுக்கதிர் பரப்பும் ஒளியுருக் கொண்ட முதல்வன். அடியாரிடம் அன்பு பூண்ட அருளாளன். அடியார் உள்ளங்கள் பக்குவமெய்தற்குப் பொருத்தமாக, அவருள்ளம் கவருமாறு செங்கழுநீர் மாலை சூடிக் காட்சி அளிப்பவன் அவன். 100 - 114: Lord Civan, Chieftain of the great Mahendra Mountain of mystic lore (where the Aagamas were re-told by Him) and whose endless greatness and grace made me His own. I shall now narrate how His victorious way enslaved me. He showed His sacred form of power and grace with the three interspaced parallel lines of holy ash in several places of His body (form). In grace He caused to flow the river of rapture which swept away all the human vileness that is Aanava Malam (ஆணவ மலம்). With great mercy, He concorporated Uma on the left side of His body. He happily created the cosmic sound form out of His hour-glass-shaped drum (பறை,உடுக்கை) To enslave and protect me from the primal bond of the three Malams- Aanavam, Kanmam and Maayai (மும்மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை), He was holding the trident in His hand. He is of pure fire, like the sparkle emitting effulgence and was wearing a lovely garland of blue lotus (Kazhuneer; கழுநீர்ப் பூ ). Thus, He came to sever from me the three Malams which are the root cause of all misery, and became my beloved. கு-ரை: 103-114: கொடி என்பது கோடியென நீண்டது. எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலையும் அருளொளியையும் திருநீறானது குறித்தலின், 'ஆற்றலது வுடை அழகமர் திருவுரு' என்றார் போலும். நிமிர்ந்து= (முக்குறியாக) இடையிட்டுத் தரித்து திருமேனியிற் பல பாகங்களில், கொடியிலங்குவது போல நீற்றுக் குறி துலக்கமாய்த் தோன்றியது என்றவாறாம். பேரின்பவுணர்ச்சியில் உயிர் ஈடுபட்ட இடத்து வாசனா மலமும் தொலைதலின், மலம் முழுவதையும் ஒருங்கு அறுக்கும் என்றார். ஆனந்தமே, என்பது ஆனந்தம்மேயென விரிந்தது. அது, ஆனந்த மேலீட்டைக் குறிக்கும். 'மாதின்' என்பதில், இன்-சாரியை. 'மாப்பெரு' என ஈரடை கொடுத்தது கைமாறின்மையும் அளவின்மையும் குறித்தற்கென்க. நாத தத்துவத்தில் உள்ள சூக்கும வாக்கு என்றும் ஒலித்துக் கொண்டிருப்பதனாலே உலகெலாமியங்குமாதலின் அதனைப் பெரும்பறை என்றார். நவிலுதல் - இடையின்றிப் பயிலுதல். இறைவன், உயிர்கள் மேல் வைத்த கருணையாலே, தூயமாயையின் நின்று, சிவ தத்துவமாகிய நாத தத்துவத்தைத் தோற்றுவித்தலின் ' கருணையன்' என்பதோடு, நாதப் பெரும்பறையென்பதை உடன்புணர்த்துக் கூறினர், அழுக்கு நீங்கிய பின்னும், அது அடையாமற் காத்தலின், அழுக்கு, உரையுள், வாசனா மலம் எனப்பட்டது. மலமூன்றாதலின் இறைவன் அதனை நீக்குவதற்கு மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்டனர் போலும். கழுக்கடை= மூவிலைவேல், ஆணவம் உள்ளவிடத்தே, வினையும் மாயையும் நுட்பமாக உண்மையின் மூன்றையும் மூலமாகியவை என்றார். மலங்காரணமாக வரும் உடம்பு இறைவற்கின்மையின், "தூய மேனி" என்றார். தூய மேனி உடையவனே, அழுக்கை நீக்க வல்லவன் ஆவான் என்பது கருத்து, சுடர்=சிவஞானம், தலைவியின் உள்ளத்தைத் தனது மாலையால் கவரும் தலைவன் போல, இறைவன் அன்பருள்ளத்தைத் தமது தூய அடையாள மாலையால் கவர்வான் ஆதலின், 'காதலனாகி ஏலுடைத்தாக எழில்பெற' என்றார். ஏல்= பொருத்தம். எழில்= எழுச்சி, கிளர்ச்சி. 115. மரியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமு மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும் பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவ அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் ariyodu piramaRku aLavu aRiyaathavan parimaa vinmisai payinRa vaNNamum miiNdu vaaraa vazi aruL puripavan paaNdi naadee palampathi aakavum paththisey adiyarai paramparaththu uyppavan பொ-ரை :115-120: செருக்கினால் திருமாலும் நான்முகனும் அடிமுடி தேடி அளந்தறியவொண்ணாத சிறப்புடையவன் எம்பெருமான். தாழ்மனமுடைய அடியாரின் பொருட்டுக் குதிரையாகிய விலங்கின் மீது ஏறிவந்தது அவனது அருள் திறமேயாகும். வீடு பேற்றிற்குரிய அன்பர், திரும்பப் பிறவாத வகையாய் அருள் செய்யும் பெருமான். பாண்டி நாட்டைப் பழமை நாடாகக் கொண்டு மெய்யன்பராகிய பத்தர்களை பர, அபர முத்திகளில் சேர்ப்பவன். உத்தர கோச மங்கையை ஊராகக் கொண்டவன். 115 - 124: Civan, whom even Hari (Thirumaal) and Brahma could not fathom, came riding on a horse, for the sake of his devotee (See Story No.1). He who showers His grace on His devotees by showing them the path of no return (the cycle of birth) redeemed the Paandiyan Kingdom as His ancient domain. He lifted His pious saints to the loftiest of lofty states and had "Uththara Kosa-Mangai" (உத்தர கோச மங்கை ) as His town. Lord Civan having showered His grace to the primal deities, came to be named as "Mahaa Devan" (God of gods). The bliss that dispels the darkness of ignorance is his mount, the sacred bull, and the grace granting greatness is his mountain. கு-ரை: 115-120: பாண்டிய நாட்டிலே இறைவன் முதற்கண் தக்க தவத்தினர்க்கு ஞானமும் வீடும் நல்கியதால், நிலவுலகிலே அதனைப் பழையபதி என்றார். பதி நாட்டையுங் குறிக்கும். உத்தர கோச மங்கையில் அறுபத்து நால்வர்க்கு இறைவன் சிறப்பாக ஆகமம் அறிவுறுத்தினமையின், அதனை ஊரென்றார். 120. னுத்தர கோச மங்கையூ ராகவு மாதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் றிருப்பெய ராகவு மிருள்கடிந் தருளிய வின்ப வூர்தி யருளிய பெருமை யருண்மலை யாகவு உத்தரகோச மங்கை ஊர் ஆகவும் ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய தேவ தேவன் திருப்பெயர் ஆகவும் இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள் மலை ஆகவும் uththar koosa mangkai uur aakavum aathi muurthikadku aruLpurinthu aruLiya theva thevan thiru peyar aakavum iruL kadinthu aruLiya inpa uurthi aruLiya perumai aruL malai aakavum பொ-ரை: 121-126: காரணேசுவரர்களாகிய முதல்வர்கட்குத் திருவருள் புரிந்து அதிகாரம் நல்கியதால் மகாதேவன் என்னும் திருநாமம் பெற்றவன் எம்பிரான். அடியார்க்கு ஆணவத்தை நீக்கி, பேரின்ப வாகனம் அருளிய அவனது அருட்பெரும் தன்மையே கருணை மலையாக உள்ளது. எவ்வகைப் பட்டவர்களையும், எத்தகைய பேரியல்பையும் பக்குவத்தையும் அறிந்து, அவரவர்க்கேற்ற முறைமையினால் அவரவர்களை ஆட்கொண்டு அருளுகிறான். 125 - 129: Thus He enslaved each of the people according to their varying merit and varying capabilities and made them His own. He bade me, this cur, to come in course of time to the beauteous court in Thillai, (Chidambaram) rich in goodness, abandoning me to live on this earth. கு-ரை: 121–126: சுத்த தத்துவங்களிலுள்ள, அயன், அரி, அரன், அனந்தர், அணுசதாசிவர் முதலியோர் கீழ்ப்பட்ட தத்துவங்களில் உள்ளோரை இயக்குவதால் காரணேசுரராய் ஆதி மூர்த்திகள் எனப்பட்டார். சிலர், மும்மூர்த்திகளை ஆதி மூர்த்திகள் எனக் கொண்டு, அவர்கள் தலைவனாகிய சிவபெருமானைத் தேவதேவன் என்பர். பேரின்ப உணர்ச்சியானது பரமுத்தி அடைதற்கு உயிர்களை மேற்கொண்டு சேரலின் அதனை 'ஊர்தி' என்றார். ஈற்றடிகளிலே இறைவனது வரம்பிலாற்றல் கூறப்பட்டது, மேற்போந்த அடிகளில் அரசர்க்குரிய கொடி, ஆறு, பறை, படை, மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை எனப்படும் பத்துறுப்பும் பகரப் பட்டமை காண்க. 125. மெப்பெருந் தன்மையு மெவ்வெவர் திறமு மப்பரி சதனா லாண்டுகொண் டருளி நாயி னேனை நலமலி தில்லையுட் கோல மார்தரு பொதுவினில் வருகென வேல வென்னை யீங்கொழித் தருளி எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி நாயினேனை நலம் மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி epperun thanmaiyum evvevar thiRamum apparisu athanal aaNdu koNdaruLi naayineenai nalamali thilaiyuL koola maartharu poothuvinil varuka ena eela ennai iingku oziththu aruLi 130. யன்றுடன் சென்ற வருள்பெறு மடியவ ரொன்ற வொன்ற வுடன்கலந் தருளியு மெய்தவந் திலாதா ரெரியிற் பாயவு மாலது வாகி மயக்க மெய்தியும் பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியுங் அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் எய்த வந்திலாதார் எரியில் பாயவும் மால் அது ஆகி, மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் anRudan senRa aruL peRum adiyavar onRa onRa udan kalanthu aruLiyum eytha vanthilaathaar eriyiR paayavum maal athuvaaki mayakkam eythiyum puuthalam athaniR puraNdu viiznthu alaRiyum 135. கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி நாத நாத வென்றழு தரற்றிப் பாத மெய்தினர் பாத மெய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென் றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவு கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி. 'நாத! நாத!' என்று அழுது அரற்றி பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் kaalvisaithu oodi kadalpuka maNdi naatha naatha enRu azuthu araRRi paatham eythinar paatham eythavum pathanjalikku aruLiya parama naadaka enRu etham salippu eitha ninRu eengkinar eengavum பொ-ரை: 127-139: நாய்போலும் கடையேனாகிய என்னை நன்மை மிகுந்த தில்லைப் பதியின் கண்ணே அழகு நிறை அம்பலத்தில் வந்து கலப்பாயாக என்று பணித்தான். என் வினைக்குப் பொருத்தமாக என்னை இந்நிலவுலகத்தே கழித்து ஒதுக்கி என்னை ஆட்கொண்டான். அன்றே, வீடுபேற்றுக்கு உரியவராய் தன்னுடன் போந்த அடியார்கள் தன்னுடன் வந்து சேரச் சேர அவர்களுடன் இரண்டறக் கலந்து அருளினான். அங்ஙனம் தன்னோடு கலக்கப் பெறாதவர் சிலர் நெருப்பில் விழுந்து தன்னுடன் வந்து சேருமாறு அருளினான். சிலர் வீடெய்தும் ஆசையால் மயங்கி உயிர்நீத்து, தன்னை வந்தடைய அருளினான். இன்னும் சிலர் விரைந்து கடலிடைச் சேர்ந்து, தலைவனே தலைவனே என்று அரற்றி, அழுது உடம்பை நீத்து, தன் திருவடி அடையவும் உதவினான். மற்றும் சிலர், "பதஞ்சலி முனிவர்க்கருள் புரிந்த மேலான அற்புதக் கூத்தனே" என்று தொழுது உள்ளம் ஏக்கமுற்று, அவ்வாறு ஏங்கியதன் மூலம் தன்னை அடைய வைத்து அருள் பாலித்தவன் அவன். 130 - 139: However those devotees, who gained His grace to accompany Him on that day, mingled in perfect union with Him. Those who could not leap into the fire and who longed to reach Him wailed, rolled on the earth and swooned; while still others rushed, with hurrying feet to fall into the sea, weeping and wailing 'Oh! Lord! Oh! Lord!' and succeeded in reaching and gaining His holy Feet. Some others who were longing for Him became heart wearied. They hailed and cried, Oh! Supreme Dancer! who showered grace to "Pathanjali" and continued to yearn for His bliss. 140. மெழில்பெறு மிமயத் தியல்புடை யம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில் கனிதரு செவ்வா யுமையொடு காளிக் கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை யிறைவ னீண்டிய வடியவ ரோடும் எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில் கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை இறைவன், ஈண்டிய அடியவரோடும் ezilperum imayaththu iyalpudai ampon politharu puliyuur pothuvinil nadam navil kanitharu sevvaay umaiyoodu kaaLikku aruLiya thirumukaththu azakuRu siRunakai iRaivan iiNdiya adiyava roodum பொ-ரை: 140-143: எம்பெருமான், மந்திர ஒலிகள் பயிலும் புகழ்மிக்க கயிலை மலையின் தலைவனாவான். எழுச்சிமிக்க பனிமலைபோல் அழகிய பொன்னொளி தவழும் புலியூராகிய தில்லை அம்பலத்தின்கண் திருநடனம் புரிகின்றான். இனிமையான சிவந்த வாயினையுடைய உமையம்மையும், காளியம்மையும் அவனோடு கூத்து பயில்கின்றனர். அவர்கட்கு அருள் புரிதல் பொருட்டு, தன் திருமுகத்தில் கவின் மிகுந்த புன்சிரிப்பைக் காட்டி நின்றனன். கு-ரை: 140-143: சுத்த தத்துவச் சார்புடையது கயிலையாதலின், அத்தத்துவத்திலெழும் மந்திர ஒலி ஆண்டு பயிலுதல் கூறப்பட்டது. கயிலையிற் பிற அதிகார மூர்த்திகள் உளராயினும், இறைவனே முழு முதலாட்சியுடையன் ஆதலின், 'உயர்கிழவோன்' என்றார். இமயமலை, மிக்க உயர்வுடையது வெளிப்படை. அது பொன்னிறத்ததென்ற கொள்கையுண்டு. 'நடம்நவில்' என்பதை 'இறைவன்' என்பதொடுங் கூட்டலாம். பாணி தந்து உடன் உலவுதலின் உமை நடம் பயில்கிறாள் எனலாம். காளி இறைவனொடு வாதாடி நடம் பயின்று ஊன நடனமியற்ற இயலாது தோற்றனளென்ப. அருளிய - 'செய்யிய' வாய்ப்பாட்டு வினையெச்சம், மகிழ்ச்சிபற்றி உமைக்கும், இகழ்ச்சிபற்றிக் காளிக்கும் புன்னகை காட்டினன் என்றலும் உண்டு. 145. பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளின னொலிதரு கைலை யுயர்கிழ வோனே. பொலிதரு புலியூர்ப்புக்கு, இனிது அருளினன் ஒலி தரு கைலை உயர் கிழவோனே. politharu puliyuurp pukku inithu aruLinan olitharu kayilai uyar kizavoonee பொ-ரை: 144-146: மெய்ஞ்ஞான விளக்கம் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்துள் எம் வேந்தனாகிய இறைவன், தன்னை நெருங்கிய அடியாருடன் புகுந்தருளினான். எனக்கு இன்பம் மிகுமாறு பேரருள் புரிந்தருளினான். 140 - 146: Civan the supreme lord of Mount Kailas in the beautiful Himaalayaas, reverberating with the sacred and raptuous songs, came down to the golden-roofed shimmering hall of "Puliyoor' (another name for Chidambaram) to dance and to grace Uma, of sweet and rosy lips, and Kaali showing to them His blessed countenence with the beauteous smile. Thus Lord Civan graciously entered the resplendent Tiger Town (Puliyoor) along with His band of saints. கு-ரை: 144-146: அம்பலம் ஆதலின், தனியே செல்லாது அடியாரோடு சென்றான் போலும் . 'மெய்ஞ்ஞானமே' அம்பலமெனப்படுதலின், பொலிதருதல் ஞானத்தால் என்பது குறிக்கப்பட்டது. கயிலை கலைஞானச் சிறப்பெய்திய புலியூர், பரஞானச் சிறப்பெய்தியமை கூறப்பட்டது. கீர்த்தித் திருவகவல் இயற்றுவித்தமையும் அருளின்பாற்படும் வீடு, தமக்குத் தில்லையில் அருளும் உறுதிபற்றி, ' இனிது அருளினன்' என்றாரென்றலுமொன்று. புலி, உபாயத்தாற் பாய்ந்து தன் இரையைப் பற்றுதல் போலப் பேரின்பத்தை உயிர் முயன்று விரைவிற் பற்றுதற்குரிய இடமென்ற கருத்து புலியூர் என்பதால் புலனாகும். THIRUCHCHITRAMBALAM 3. திருவண்டப்பகுதி 3. THIRU-ANDAP-PAKUTHI (சிவனது தூல சூக்குமத்தை வியந்தது ) The Nature and Development of the Universe தில்லையில் அருளியது Compiled whilst in Thillai இணைக்குறள் ஆசிரியப்பா திருச்சிற்றம்பலம் இது, "அண்டப்பகுதியின்" எனத் தொடங்கும் இவ்வகவலின் முதற்குறிப்பால் பெயர் பெற்றது. "ஆத்திசூடி", “கொன்றைவேந்தன்" என்பன முதற்குறிப்பால் அந்தந்த நூலுடைய பெயரானாற்போல, “கண்ணிநுண் சிறுத்தாம்பு" அப்பாடலை முதலாகக் கொண்ட பத்துக்கும் பெயரானாற்போல, இது அதனை முதலாகக் கொண்ட அகவலுக்குப் பெயராயிற்று . இது இணைக்குறள் ஆசிரியப்பாவால் அமைந்தது. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் என்பன போலப் பாடற்பெயரும் பாடற்கருத்தும் ஒருநோக்குடையனவாக அமையவில்லை. பாடற்பெயர் முதலான் அமைந்தது. பாடற்கருத்து அது நுதலிய பொருளான் அமைந்தது. இவ்வகவலின்கண், இறைவன் சிறியவாகப் பெரியோனாகியும், கருதாக் கருத்துடைக் கடவுளாகியும், உலகமே தானாய் எங்கும் பரந்தும், அவற்றைக் கடந்தும், அணுத்தரு தன்மையின் அமைந்தும், பிரமன் மாலறியாப் பெற்றியனாக - தமக்கு எளிவந்த தலைவனாக விளங்கும் இயல்பும் விரித்துரைக்கப் பெறுகின்றன. பழைய புராணம், "திகழ் திருவண்டப்பகுதி திருவகவல் செப்பியது தகுசிருட்டி திதியொடுக்கம் சாற்றுதிரோ தம்பொதுவாய் அகலமுறத் தெரிந்திடவே யருளியநற் பொருளாகும்" எனச் சிவபெருமானுடைய ஐந்தொழிலில் அநுக்கிரகம் நீங்கலான நான்கன் இயல்புகளை விளக்குவதாம் என்கின்றது. இவ்வகவல் முதற்கண் பல அண்டங்களையும் அவற்றின் பிரிவுகளையும் உணர்த்துகின்றது ஆதலின் "அண்டப்பகுதி" என ஆயிற்று எனலுமாம். அது அடைமொழி ஏற்றுத் திருஅண்டப்பகுதியாயிற்று. இது, "அந்தச் சொரூப தடத்தத்தின் பெருமையும், நுட்பமும், பெருங்கருணையும் பெறுதற்கருமையும் தூல சூக்குமங்களில் வைத்துச் சொல்கிறது" என்ற விளக்கம் பழைய உரையினது. பகுதி- மூலப்பகுதி, அண்டப்பகுதி- அண்டங்கள் அனைத்திற்கும் மூலப்பகுதியாகிய சிவபுரம். அதுவே, திருவாகிய வீடுடையது. ஆதலால், அது “திருவண்டப்பகுதி" என வழங்கப்படுவதாயிற்று என்பது பழையவுரை. இவ்வண்ணம் எல்லார் கருத்துக்களையும் தொகுத்து எண்ணும்போது, முதற்குறிப்பால் பெயர் பெற்றது உண்மையாயினும் அம்முதற்குறிப்பு இறைவன் பெருமையை உணர்த்த உதவலானும், அவன் விசுவரூபியாகவும், விசுவாதிகனாகவும், விசுவாந்தர்யாமி ஆகவும் விளங்குகிறான் என்று உபநிடதம் உரைப்பது போல இப்பகுதியும் இறைவன் அண்டங்களாயும் அவற்றின் பெரியனாயும் விளங்குகின்றான் என்று அண்டத்தின் இயல்பு உணர்த்துதலின் அண்ட பகுதியாயிற்று எனல் பொருந்தும். அண்டத்தின் பொதுவியல்பு மாயையின் காரியமாய்ச் சடமாய் இருப்பதாம். சிறப்பியல்பு இறைவன் அந்தர்யாமியாக இருக்கப் பெறுகையும், அவனது விராட் சொரூபத்தில் தாம் பரமாணுக்களின் கூட்டமாக விளங்குகையும் ஆம், இவற்றை இப்பகுதி விளக்குதலால் இப்பெயர் பெற்றது எனல் தெளிவு. முதல் 28 அடிகள், இயங்குவ நிற்பவான - சித்தும் சடமுமான எல்லாவற்றையும் அவற்றின் இயல்பின்படி இறைவன் நடத்திக் கடந்திருத்தலை உணர்த்துவன. "முன்னோன் காண்க", (29 ஆவது அடி) என்பது முதல் "அவளுந் தானும் உடனே காண்க” என்பது (65வது அடி) முடிய இறைவனுடைய அருட்செயல் இயல்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, உலகவர்களை விளித்து காணுமாறு பணிக்கின்றது. "காண்க" என நாற்பது முறை கூறியதை நோக்குக. "பரமானந்த பழங்கடல்” (66ஆவது அடி) என்பது முதல் “மேகன் வாழ்க” (95ஆவது அடி) என்பது முடிய இறைவனை மேகத்திற்கு முற்றுருவகமாக்கிச் சுவைத்தது. “மேகன் வாழ்க" (95 வது அடி) என்பது முதல் “எய்ப்பினில் வைப்பு வாழ்க” (105ஆவது அடி) என்பது முடிய இறைவனை வாழ்த்திய “வாழ்க" எனப் பதினொரு முறை கூறப்பட்டுள்ளதை நோக்குக. "நச்சர வாட்டிய” (106 வது அடி) என்பது முதல் “களிப்போன் போற்றி” (121ஆவது அடி) என்பது முடிய இறைவனைப் போற்றிக் கூறிய “போற்றி” ஆறு முறை கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். "ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்" (122 - 123 ஆவது அடிகள்) என்ற பகுதி தனது ஆற்றாமை கூறல் காண்க. "மரகதக்குவா அல்" ( அன் என்றும் பாடபேதம் உண்டு) (124 ஆவது அடி வரை) என்பது முதல் "பற்று முற்றொளித்தும்" (145ஆவது அடி) என்பது முடிய, பசு போத முனைப்பால் தேட முயன்ற தேவர்களுக்கு ஒளித்தமை கூறப்பட்டது. ("ஒளித்தும்" என ஒன்பது முறை வருவதை நோக்குக) "தன்னேரில்லோன்” (146 ஆவது அடி) என்பது முதல் இறுதிவரை பிரமன் மாலறியாப் பெற்றியோன் அறைகூவி ஆட்கொண்டதும், அதனால் விளைந்த அனுபவங்களும், ஆனந்தமும் ஆனந்தாதீதமும், பரவசமும் ஆகியன கூறப்பட்டுள்ளன. இவ்வண்ணம் இவ்வகவல் எட்டுப் பகுதிகளாக நூற்று எண்பத்திரண்டு அடிகளான் அமைந்தது. In this hymn, Maanikkavaachakar deals with the God-Head immanent in gross as well as subtle manner in all created things. It will be better to quote here what Dr. G. U. Pope has written about this chapter. "The very first phase in the first line of this hymn has given it its heading or nomenclature. This poem has an introduction of 28 lines, after which the praises of Civan are inter-mingled with somewhat intricate but ingenious allegories. The whole partakes of the nature of a rhapsody-not without some sublimity - and can be fully appreciated by only those who has studied the whole saiva system, It is an imitation, it would seem, of the Sanskrit Satarudriya, or Hymn to Rudra. Yet,Civan, the auspicious is imagined by the Tamil saivites quite otherwise than by the northern and more ancient authorities. Civan in the south is the Guru, the friend, almost the familiar companion of His votaries, and is addressed with a mixture of awe and of simple affection that has a peculiar effect. Through all Maanikkavaachakar's poems this personal relation of the God as manifested Guru to His devotees or disciples is, of course, most prominent. I am not aware of anything quite like this in the mythology of the north, though among the worshippers of Vishnu in His various incarnations something analogous may exist". 3.1 அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை , வளப் பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன; 5. இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மால்-அவன் மிகுதியும் தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய மாப் பேர் ஊழியும் நீக்கமும், நிலையும் 10. சூக்கமொடு, தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை 15. கரப்போன்; கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்: திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும் 20. அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன்: திண்திறல் தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்; மேதகு காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ் 25. நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று எனைப்பல கோடி, எனைப்பல பிறவும் அனைத்து அனைத்து, அவ்வயின் அடைத்தோன் - அஃதான்று முன்னோன் காண்க! முழுதோன் காண்க! 30. தன் நேர் இல்லோன்-தானே காண்க! ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க! கானப் புலி உரி அரையோன் காண்க! நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்! 35. இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க ! அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க! பரமன் காண்க! பழையோன் காண்க! பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க! அற்புதன் காண்க! அநேகன் காண்க! 40. சொல்-பதம் கடந்த தொல்லோன் காண்க! சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க! பத்தி வலையில் படுவோன் காண்க! ஒருவன் என்னும் ஒருவன் காண்க! விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க! 45. அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க! இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க! அரியதில் அரிய அரியோன் காண்க! மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க! நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க! 50. மேலோடு, கீழாய், விரிந்தோன் காண்க! அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க! பந்தமும், வீடும், படைப்போன் காண்க ! நிற்பதும், செல்வதும் ஆனோன் காண்க! கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க! 55. யாவரும் பெறஉறும் ஈசன் காண்க! தேவரும் அறியாச் சிவனே காண்க! பெண், ஆண், அலி எனும் பெற்றியன் காண்க! கண்ணால் யானும் கண்டேன் காண்க ! அருள் நனிசுரக்கும் அமுதே காண்க! 60. கருணையின் பெருமை கண்டேன் காண்க! புவனியில் சேவடி தீண்டினன் காண்க! சிவன் என யானும் தேறினன் காண்க! அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க! குவளைக் கண்ணி - கூறன் காண்க! 65. அவளும், தானும், உடனே காண்க! பரம - ஆனந்தப் பழம் கடல் - அதுவே கருமா முகிலின் தோன்றித் திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய 70. ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர எம்-தம் பிறவியில் கோபம் மிகுத்து, முரசு எறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கி 75. பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள செம்சுடர் வெள்ளம் திசை-திசை திட்ட, வரை உறக் கேதக்குட்டம் கையற ஓங்கி இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை, 80. நீர்நசை தரவரும், நெடும் கண், மான் கணம் தவப் பெரு வாயிடைப் பருகித், தளர்வோடும் அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப்பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்து 85. சுழித்து எம்பந்தம் மாக்கரை பொருது. அலைத்து, இடித்து ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து உருவ, அருள் நீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டு அவிழ் 90. வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் மாப்புகைக் கரைசேர் வண்டுஉடைக் குளத்தின் மீக்கொள மேல் மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு தொண்ட உழவர் ஆரத் தந்த 95. அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க! கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க! அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க! அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க! நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க! 100. சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க! எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன், வாழ்க ! கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க! பேர் அமைத் தோளி காதலன் வாழ்க! ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க! 105. காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க! நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி ! பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி! நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி! நால் திசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 110. நிற்பன நிறீஇச் சொல்-பதம் கடந்த தொல்லோன் உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன் விண்முதல்பூதம் வெளிப்பட வகுத்தோன் 115. பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து, அருளி அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் - போற்றி! 120. அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி ! ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி! ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல், மாமணிப் பிறக்கம் 125. மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும் 130. மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 'இத்தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும் முனிவு அறநோக்கி, நனிவரக் கௌவி, ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து 135. வாள்நுதல் பெண் என ஒளித்தும், சேண் வயின், ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய் துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அரும் - தவர் காட்சியில் திருந்த ஒளித்தும் ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும் 140. பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும், ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில் தாள் தளை இடுமின் ! சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்! 145. 'பற்றுமின்!' என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் தன்நேர் இல்லோன் தானே ஆனதன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி ஆட்கொண்டு அருளி மறையோர் கோலம் காட்டி அருளலும் 150. உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு அலைகடல் திரையின் ஆர்த்து-ஆர்த்து ஓங்கித் தலைதடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும், 155. கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு கோல்-தேன் கொண்டு செய்தனன் ஏற்றார்-மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்தாங்கு, அன்று 160. அருள் பெரும் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்; சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ! தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது 165. தெரியேன் ஆ! ஆ! செத்தேன், அடியேற்கு அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்ல கில்லேன்; செழும் தண் பால் கடல் திரை புரை வித்து உவாக்கடல் நள்ளும் நீர்உள் அகம் ததும்ப 170. வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும், தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை குரம்பை தோறும், நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள், 175. எற்புத் துளைதொறும் ஏற்றினன்; உருகுவது உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன்: ஒள்ளிய கன்னல் கனிதேர் களிறுஎனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில் 180. கருணை வான் தேன் கலக்க அருளொடு பரா-அமுது ஆக்கினன் பிரமன், மால் அறியாப் பெற்றியோனே. திருச்சிற்றம்பலம் 3.1 அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்க மளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி யொன்றனுக் கொன்று நின்றெழில் பகரி னூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பு-அரும் தன்மை , வளப் பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன aNda pakuthiyin uNdai piRakkam aLapparun thanmai vaLapperung kaadsi onRanukku onRu ninRezil pakarin nooRRoru koodiyin meeRpada virinthana பொ-ரை: 1 - 6: ஆராயுமிடத்து, அண்டமாகிய பேருலகில் பகுதிகள் உருண்டை வடிவமாக விளங்குகின்றன. அவை எல்லையற்ற தன்னியல்புகளைக் கொண்டுள்ளன. பலவகை வளம் பொருந்திய பெருமை மிக்க தோற்றங்களும் ஒன்றுக்கொன்று மேலாகவும் வேறுபாடுகளுடனும் விளங்குகின்றன. அவ்வேறுபாடுகள் நூற்றொரு கோடிக்கதிகமாக அளவில்லாமல் பரந்து பெருகி உள்ளன. வீட்டின் பலகணி வாயிலாகப் புகும் கதிரவன் கதிர்களில் சிறியனவாக அணுப் போன்ற தூசிகள் தென்படுகின்றன. பேருலகங்கள் எல்லாம் அவ்வணுக்களைப் போன்று சிறியனவாகத் தோன்றும்படியாகத் தான் பெரியவனாக விளங்குகின்றான் முதல்வன். கு-ரை: 1 - 6: தெரியின் என்பதை முதலில் கொள்க. அண்டம், பல உலகத் தொகுப்பு. கதிரவனைச் சுற்றியுள்ள உலகங்களின் தொகுப்பை ஓர் அண்டம் எல்லாம். உலகங்கள் அண்டத்தின் பகுதிகளாய் உருண்டை வடிவினவாய் அமைதல் காண்க. 'நூற்றொரு கோடி' என்பது அளவின்மையைப் பெரிதாகக் குறித்து நின்றது. வானிலே முத்துக்கள் போலத் தோன்றும் விண்மீன்கள் வெவ்வேறு உலகங்களாகும். அவை எண்ணிலாதனவாய்ப் பரந்து தோன்றுதலின், 'அளப்பருந்தன்மை' என்றார். அவை பல்வகை வடிவும், அளவும், தன்மையும் உடையனவாகலின், 'வளப்பெருங்காட்சி' யென்றார். அவற்றின் தூரம் முதலியன அளவிலடங்காமையின், 'நூற்றொரு கோடியின் மேற்பட' என்றார். எல்லா உலகங்களும் இறைவன் திருமுன் அணுக்கூட்டம் போலுதலின், இறைவன் வியாபகப் பெருமை அளவிடற்பாலது அன்று என்பது குறித்தவாறாம். 5. வின்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் றெரியின் வேதியன் றொகையொடு மாலவன் மிகுதியுந் தோற்றமுஞ் சிறப்பு மீற்றொடு புணரிய மாப்பே ரூழியு நீக்கமு நிலையுஞ் இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும், தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும் ilnuzai kathirin thunaNup puraiya siRiya vaaka periyoon theriyin veethiyan thokaiyodu maal avan mikuthiyum thooRRamum siRappum iiRRodu puNariya maappeer uuziyum neekkamum nilaiyum 10. சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுள்; காப்பவை சூக்கமொடு தூலத்துச், சூறை-மாருதத்து எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை suukkamodu thuulaththu suuRai maaruthaththu eRiyathu vaLiyin kodkap peyarkkum kuzakan muzuvathum padaipoon padaikkum pazaiyoon padaiththavai kaappoon kaakkum kadavuL kaappavai பொ-ரை: 7 - 12: படைப்புக் கடவுளரின் கூட்டமும், காப்புக் கடவுளரின் அதிக எண்ணிக்கையும் அவனால் இயங்குகின்றன. தோன்றுதலும், நிலைத்தலும், வளர்தலும், ஒடுங்குதலும் நிகழ்தற்குரிய காலப்பகுதிகள் அவனுள் அடங்கும். மிகப் பெரும் ஊழிக் காலங்களின் தொடக்கமும், நிலைபேறும், முடிவும் அவனது இயக்கமே ஆகும்.சிறு சுழற்காற்றுகளாகிய நுண் பகுதிகள் பல கொண்ட பெரிய சூறாவளியின் வீச்சுக் காற்றைப் போல, இவை முழுவதையும் இயக்கும் இளைஞனாகவும் விளங்கும் முதல்வன் அவன். 1-12: CIVAN'S GROSS AND SUBTLE NATURE A study of the development of the universe with its innumerable spheres is difficult, indeed, for immeasurable is its nature and abundant its phenomena. If one were to tell the way in which they excel each other in beauty, they spread widely, numbering a hundred crores (one thousand millions) and more. Such is the greatness of Lord Civan. All these universal bodies look like the crowded specks that are floating in a ray of sunlight streaming into the house through a hole in the roof. If one were to research into it (one would find that) the hordes of Brahmas and multitudes of Vishnus, along with the cosmic happenings of emergence, existence, and the very great cataclysmic deluge associated with the end of all things, and the revival from this dissolution, and sustenance following it - all these mighty universal occurrences are like small eddies of wind in the devastating tornado - spun and swirled about by the Eternal Youth - Civa. கு-ரை : 7-12: அண்டங்கள் பலவாதலின், அவைதோறும், அவற்றைப் படைப்போரும் காப்போருமாய கடவுள் பலதிறப்பட்டனர். ஒடுங்குவோர் இறைவனோடு ஒன்றித்து ஓதப்பட்டனர். உலகம் யாவும் தோன்றி யொடுங்கும் பேரூழிக் காலமானது பெரும் புயற்காற்றுப் போலவும், அண்டத்தின் கடவுளரின் காலங்கள் பெரும் புயலிலடங்கிய சிறு சுழல் காற்றுப் போலவும் கருதப்பட்டன. சூக்கம்=சூக்குமம்; நுட்பம். தூலம் = பருமை. சிறு புயல்கள் நுட்பப் பகுதிகளாகவும், பெரும் புயல் தூலமாகுவுங் கருதப்படும். சூறை மாருதம் = சுழற்பெருங் காற்று. எறிதல் = வீசுதல், என்றும் ஒருபடித்தாய் முதிர்ச்சியிலன் ஆகலின் , இறைவன் இளைஞன் ஆயினன். எல்லாம் தோன்றி முதிர்ந்து ஒடுங்கி யொழியத் தான் ஒருவனே அம்மாறுபாடு இல்லாதவன் என்பது கருத்து. 'முழுவதும்' என்பதைக் 'கொட்க' என்பதனோடு சேர்க்க. கொட்க= சுழல. மாப்பேரூழிக் காலமும், மீண்டும் மீண்டும் வருதலின் 'சுழல' என்றார். 15. கரப்போன் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவு டிருத்தகு மறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடு பேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோ னாடொறு கரப்போன்: கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்: திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும் karappoon karappavai karuthaa karuthudai kadavuL thiruththakum aRuvakai samaiyaththu aRuvakai yoorkkum viidupeeRay ninRa viNNoor pakuthi kiidam puraiyum kizavoon naaLthoRum பொ-ரை: 13 - 19: படைப்புக் கடவுளைப் படைக்கும் பழமைப் பெரியோன் . படைத்தனவற்றைக் காக்கும் கடவுளைக் காக்கும் மேலோன்; காக்கப் பட்டனவற்றை உரியகாலத்தில் ஒடுக்குவோன். ஒடுக்கியன நன்கு இளைப்பாறும் வரை அவற்றை மீண்டும் படைத்துக் காக்க எண்ணாத திருவுள்ளமுடையோன் எம்பெருமான். அறுவகைச் சமய நெறியின்கண் நிற்கும் அறுவகைப்பட்ட தவத்தினர்க்கும் முத்திப்பேறு அளித்தற்குரிய கடவுள் கூட்டம், முதல்வோன் முன்னே புழுக் கூட்டம் போல் சிறியதாய்த் தோன்றுகிறது. அவனோ, தானே உயர் முத்தியளிக்கும் உயர்வுடையோனாய் விளங்குபவன். கு-ரை: 13 - 19: உலகங்களை ஒடுக்கம் செய்யும் உருத்திர வருக்கத்தார் தம் செயலற்று இறைவனோடு அத்துவிதக் கலப்புடையராதலின், அவர் செயல் இறைச் செயலாகவே கூறப்பட்டது உணர்க . கருத்து= திருவுள்ளம். அடிகள் காலத்துச் சமயங்கள், மணிமேகலையுள் கூறப்பட்டனவாக இருத்தல் கூடும். அவற்றுள் சில, கடவுள் கொள்கையில்லாதன. கடவுட் கொள்கையுடைய அறுசமயங்களே 'திருத்தகும்' எனச் சிறப்பிக்கப்பட்டன. சைவம், வைணவம், பிரமம், நையாயிகம், வைசேடிகம், ஆசீவகம் முதலிய மதங்கள் ஒருவகையான கடவுட்கொள்கையொடு விளங்கின. ஆண்டுக் கூறப்பட்ட சைவம், உருத்திர வணக்கமாய் அமைந்திருத்தல் பற்றி, அறுவகைச் சமயத்துள் வைத்தோதப்பட்டது போலும். அச்சமயங்களின் தெய்வங்கள், அவை முடிவாகக் கூறும் தத்துவத் தலைவராகிய உயிர்களாய் அமைதலின் அவை இறைவனை நோக்கப் புழுப்போன்றன. மெய்யான வீடுபேற்றைத் தரத்தக்க கடவுள் ஒருவனே ஆதலின், அவனைக் 'கிழவோன்' என்றார். 20. மருக்கனிற் சோதி யமைத்தோன் றிருத்தகு மதியிற் றண்மை வைத்தோன் றிண்டிறற் றீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலி னூக்கங் கண்டோ னிழறிகழ் அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன், திண் திறல் தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்; மேதகு காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ் arukkanil soothi amaiththoon thiruththaku mathiyil thaNmai vaiththoon thiNthiRal thiiyin vemmai seythoon poytheer vaanil kalappu vaiththoon meethaku kaalin uukkam kaNdoon nizalthikaz 25. நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென் றெனைப்பல கோடி யெனைப்பல பிறவு மனைத்தனைத் தவ்வயி னடைத்தோ னஃதான்று முன்னோன் காண்க முழுதோன் காண்க நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று எனைப்பல கோடி, எனைப்பல பிறவும் அனைத்து அனைத்து, அவ்வயின் அடைத்தோன் - அஃதான்று முன்னோன் காண்க! முழுதோன் காண்க! niiril insuvai nikaznthoon veLippada maNNil thiNmai vaiththoon enRu enRu enaippala koodi enaippala piRavum anaiththu anaiththu avvayin adaiththoon aqthaanRu munnoon kaaNka muzuthoon kaaNka பொ-ரை: 20 - 28: ஞாயிறு மண்டலத்திலே தினந்தோறும் திகழும் படியான ஒளியினை அமைத்தவன். அழகு பொருந்திய திங்கள் மண்டலத்தில் குளிர்ச்சியை பொருத்தினவன். மிகுந்த ஆற்றலுடைய நெருப்புக்கு வெப்பத்தை உண்டாக்கினவன். நிலையாகவுள்ள வானத்திலே, எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து, தானும் கலந்து நிற்கும் இயல்பினை அமைத்தோன். மேலெழும் தன்மையுடைய காற்றிலே கிளர்ச்சியைப் பொருத்தினோன். பொருட்களின் தோற்றம் நிழலாய் விழும் நீரிலே இன்சுவை புலப்படுத்தும் தன்மையைப் படைத்தவன். நிலத்திலே கடினமாகிய திரட்சியை இயற்றினோன். இவ்வாறு எந்தக் காலத்திலும், எத்தனையோ கோடி பொருட்களிலும், ஏனைய பிறவற்றிலும் அவ்வவற்றின் தன்மையை அவ்வவற்றுக்கு இடமாகப் பொருத்தினோன். 13- 28: THE COSMIC OPERATIONS OF LORD CIVA Lord Civan, the Supreme God, is the Ancient One, Who creates the Creator of the entire universe, Who preserves the Preserver of things created. Who absorbs the things preserved. He is the mindful one who is keeping the souls, worlds etc., unto Himself, thinks not of their bringing forth till the appointed time for them to reappear again after the aeons of involution. He is the hoary One before whom the six categories of theology, with their six diverse kinds of philosophies that are the goals and salvation to their followers, are like mere worms. It is Lord Civan who, day by day, gave lustre to the Sun, placed coolness in the sacred moon, kindled the heat in the mighty fire, gave the external ether its pervasiveness endowed the ambient with energy, gave sweet savour to the clear and transparent water, endowed the Earth with its conspicuous density. Furthermore, He endowed, by His grace, many many millions of things with their relative qualities in appropriate measure suitable to catch. கு-ரை : 20 - 28: கொடிநிலை, கந்தழி வள்ளி என்றபடி ஞாயிறு, திங்கள், நெருப்பு ஆகிய மூன்றும் முதற்கண் விதிக்கப்பட்டன. அவை முத்தொழிற்குரியன ஆதல் காண்க. பொய்தீர்= நிலையாமை அற்ற, நீரானது கண்ணாடி போல வடிவங்களின் நிழல் காட்டுதலின் ' நிழல்திகழ்' என்றார். கடினப் பொருள்களின் சுவையைப் புலப்படுத்துவது நீரே. இன்சுவை= நல்ல சுவை, நிகழ்ந்தோன்= நிகழ்வித்தோன். 30. தன்னே ரில்லோன் றானே காண்க வேனத் தொல்லெயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி யரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறு நினைதொறு மாற்றேன் காண்க வந்தோ கெடுவே தன் நேர் இல்லோன் தானே காண்க! ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க! கானப்புலி உரி அரையோன் காண்க! நீற்றோன் காண்க! நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்! thanneer illoon thaanee kaaNka eenath tholeyiRu aNinthoon kaaNka kaana puliuri araiyoon kaaNka niiRRoon kaaNka ninaithoRum ninaithoRum aaRReen kaaNka anthoo keduveen 35. ன்னிசை வீணையில் லிசைந்தோன் காண்க வன்னதொன் றவ்வயி னறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க வற்புதன் காண்க வனேகன் காண்க இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க ! அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க! பரமன் காண்க! பழையோன் காண்க ! பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க! அற்புதன் காண்க! அநேகன் காண்க! innisai viiNaiyil isainthoon kaaNka annathonRu avvayin aRinthoon kaaNka paraman kaaNka pazaiyoon kaaNka piraman maal kaaNaa periyoon kaaNka aRputhan kaaNka aneekan kaaNka பொ-ரை: 29 - 38: அஃதன்றியும் படைப்புப் பொருள் யாவற்றுக்கும் முன்னே உள்ளவன் அவன் என்றறிக. அவன் எல்லாவற்றையும் உடையவன் என்றறிக. யாரும் நிகரில்லாத தனக்குத்தானே ஒப்பானவன் என்றறிக. தாருகா வனத்து முனிவர் வேள்வி செய்து விடுத்த காட்டுப் புலியினைக் கொன்று அதன் தோலை உடையாக அரையில் அணிந்தவன் என்று அறிக. திருநீறணிந்த எம்பெருமான் அருள் திறத்தை எண்ணுந்தோறும் அவனின் பிரிவாற்றாது வருந்தி, பிரிவு அதிகப்பட, ஐயோ! நான் கெட்டழிவேன். இனிய ஓசையானது வீணையின் கண் நுட்பமாய்க் கலந்திருத்தல் போன்று அவன் நமது உயிரில் கலந்துளான் என்று அறிக. அத்தகைய இசை ஒன்றினை அதனிடத்தில் அறிந்து அருள் புரிந்தான் என்று அறிக. எவற்றுக்கும் மேலானவன் என்று அறிக. அயனும் அரியும் அளந்தறிய ஒண்ணாப் பெருமை உடையவன் என்று அறிக. கு-ரை: 29 - 38: 'காண்க' என்பதை அசையாகவும் கொள்ளுப. நோக்கியருள்க என்றும், நீயறிக என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளுதலுமுண்டு. ஆதியில்லாதவனென்பார், முன்னோன் என்றார். ஒரு காலத்திலே நிலத்தைப் பாதாளத்திற் சுருட்டிச் சென்ற இரணியாக்கனைக் கொன்று நிலத்தை மேலெடுத்த போது, பன்றியுருவெடுத்த திருமால் அவன் குருதியைக் குடித்துப் பிறரைத் துன்புறுத்தினமையால், அப்பன்றியின் பல்லைப் பறித்துத் தன் மார்பிற் சிவபிரான் அணிந்த கதை சிவரகசியத்துள் காண்க. தாருகாவனக் கதை வெளிப்படை. எல்லாவற்றையும் ஒடுக்கி, அவற்றின் சாம்பலை அணிந்தமையால், 'நீற்றோன்' என்றார். திருப்பெருந் துறையிலே நீறணிந்த பெருமான் பிரிந்த காலமுதல், வீடுபேற்றைத் தலைப்பட அவாக்கொண்ட அடிகள் பிரிவாற்றாமை தெரிவித்தார். வீணையில் இன்னிசையொப்ப இசைந்தோன், என்றது இறைவன் தோன்றாது சார்பாயிருக்கும் தன்மை குறித்தவாறாம். பயிற்சியினால் வீணையில் இசை தோன்றுவதொப்ப, அன்பினால் அறிவில் இறைவன் விளங்குவன் என்றலும் ஒன்று . இராவணன் வரலாறு தெளிவு. 'பரமன்' என்றது மேலான முத்தியருள்பவன் என்று குறித்தற்கு. எக்காலத்தும் வீடருள்பவன் அவனேயாதலின் 'பழையோன்' என்றார். யான், எனது என்னும் செருக்குள்ளபோது இறைவன் தோன்றானாதலின், 'பிரமன் மால் காணா' என்றார். 40. சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க வொருவ னென்னு மொருவன் காண்க விரிபொழின் முழுதாய் விரிந்தோன் காண்க சொல்-பதம் கடந்த தொல்லோன் காண்க! சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க ! பத்தி வலையில் படுவோன் காண்க! ஒருவன் என்னும் ஒருவன் காண்க! விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க! sorRpatham kadantha tholloon kaaNka siththamum sellaa seedsiyan kaaNka paththi valaiyil paduvoon kaaNka oruvan ennum oruvan kaaNka viripozil muzuthai virinthoon kaaNka பொ-ரை: 39 - 41: வியத்தகு அதிசயங்கள் புரியும் பல்வேறு வடிவம் உடையோன் இறைவன். புகழ் பதவிகளைக் கடந்து நிற்கும் பழமையோன். சொல்லும் மனமும் சென்று அடைய ஒண்ணாத தொலைவில் உள்ளோன். கு-ரை: 39 - 41 : கடவுளின் அருஞ்செயல்களை உயிர்கள் கணக்கிடவல்லன அல்ல; அவை அவற்றிற்கு வியப்பு விளைப்பனவே. சிலர் இயற்கைச் சட்டங்கள் அனைத்தையும் உணர்ந்தாற்போலக் கடவுள் செயல் இயற்கைக்கு மாறாகாவெனப் பேசி, அற்புதங்களை மறுப்பார். அது பொருந்தாமை ஈண்டுக் குறிக்கப்பட்டது எனலாம். வழிபடுவார்க்கு அவ்வவர் பொருளாய் நின்றருளுதலின், 'அநேகன்' என்றார். சொல்= புகழ்ச்சி. புகழ்ச்சி மிக்க விண்ணவர் பதவிகளைத் தோற்றுவித்தவனாய் அவற்றிற்கு முற்பட்டவனாய் இறைவன் இருத்தலின், அவனைப் பதவிகளிலுள்ள தெய்வங்களோடொருவனாகக் கணித்தல் தவறென்பார். அவன் பதங்கள் யாவையும் கடந்தவன் என்றார். பதங்களைக் கடந்து, உயிர் பரமுத்தி அடையினும், அது பழைமை உடையது ஆகாது; இறைவனே 'தொல்லோன்' ஆவனென்பது பதம், என்பதற்குத் தாம் என்று பொருள் கொண்டு, சொல்லினாலே உணர்த்தப்படாது, 'சொல்' தோன்றுவதற்கு முன்னே உள்ளோன் என்றார் என்றலும் ஒன்று. 'சித்தமும்' என்றமையால், வாக்கிற்கும் காயத்திற்கும் எட்டாதவன் என்பது கூறியவாறாயிற்று. தம்மை மறந்து செய்யும் மெய்யன்பினுள் அகப்படுவனென்றது. ஒன்றிற்கும் எட்டாதவன் என்றால், அவனால் பயன் பெறுதல் இயலாதோ என்ற ஐயத்தை நீக்குதல் பொருட்டு என்க. 45. வணுத்தருந் தன்மையி லையோன் காண்க விணைப்பரும் பெருமையி லீசன் காண்க வரியதி லரிய வரியோன் காண்க மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க! இணைப்பு-அரும் பெருமையில் ஈசன் காண்க! அரியதில் அரிய அரியோன் காண்க ! மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க! நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க! aNuththarum thanmaiyil aiyoon kaaNka iNaipparum perumaiyil iisan kaaNka ariyathil ariya ariyoon kaaNka maruvi epporuLum vaLarppoon kaaNka nuul uNarvu uNaraa nuNNiyoon kaaNka பொ-ரை: 42 - 48: அன்பாகிய வலையில் அகப்படுபவன், ஒப்பற்றவன் என்று சொல்லப்படும் அக்கடவுள், விரிந்த உலகமெங்கும் பரந்து நின்றவன். அணுவைக் காட்டிலும் வியத்தகு நுட்பம் கொண்டவன். ஒப்பிடுவதற்கரிய பெருமை உடையவற்றுள் தலைநின்றவன். ஆய்ந்து அறிதற்கும், பெறுதற்கும் அரிய பலவற்றுள்ளும் அருமையிலும் அருமையுடையோன் . எல்லாப் பொருட்களையும் தழுவி நின்று அவற்றை வளர்த்துக் காப்பவன். கு-ரை: 42 - 48: அன்பர்பால் இறைவன் தானே வந்தருளுதல், மீன் மான் முதலியன வலையுள் தாமே வந்து சிக்குதல் போலுதலின் , அவ்வாறு கூறினர் என்ப. வலையைப் பரப்பினவர் செயலற்றிருத்தல் போல அன்பும் அன்பு மாத்திரமுடையராய்ச் செருக்கற்றுச் செயலற்றிருத்தல் குறித்தவாறாம். 'யானே கருத வர நாடார், சும்மா வருவார்' என்றதும் அது. வலையிற் சிக்கியவை வெளிப்போகாமைபோல, அன்பில் ஈடுபட்ட கடவுள் அன்பு விட்டகலாமையும் குறித்தவாறாம். பொழில் = உலகம். விரிந்தோன் = இயல்பாகவே வியாபகமுடையோன். மிக நுண்ணியவற்றுள் நுண்ணியனாய்ப் பெரியவற்றுள் பெரியனாய் அரியவற்றுள் மிக அரியனாய் உள்ளவன், பெருங் கருணையால் எவற்றிற்கும் சார்பாய் அவற்றைப் பாதுகாப்பான் என்பது பிற அடிகளிற் குறிக்கப்பட்டது. 50. மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க வந்தமு மாதியு மகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க கற்பமு மிறுதியுங் கண்டோன் காண்க மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க ! அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க! பந்தமும், வீடும், படைப்போன் காண்க ! நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க! கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க! meelodu keezaay virinthoon kaaNka anthamum aathiyum akanRoon kaaNka panthamum viidum padaipoon kaaNka niRpathum selvathum aanoon kaaNka kaRpamum iRuthiyum kaNdoon kaaNka 55. யாவரும் பெறவுறு மீசன் காண்க தேவரு மறியாச் சிவனே காண்க பெண்ணா ணலியெனும் பெற்றியன் காண்க கண்ணா லியானுங் கண்டேன் காண்க வருணனி சுரக்கு மமுதே காண்க யாவரும் பெறஉறும் ஈசன் காண்க! தேவரும் அறியாச் சிவனே காண்க ! பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க ! கண்ணால் யானும் கண்டேன் காண்க ! அருள் நனிசுரக்கும் அமுதே காண்க! yaavarum peRa uRum iisan kaaNka theevarum aRiyaa sivanee kaaNka peN aaN ali enum peRRiyan kaaNka kaNNaal yaanum kaNdeen kaaNka aruL nani curakkum amutE kaaNka பொ-ரை: 49 - 58: சுட்டியறியும் கல்வியறிவால் அறியப்படாத நுட்பமுடையோன் . மேலும் கீழுமாய் எங்கும் நிறைந்தவன். முடிவும் மூலமும் இல்லாதவன். பிறவிக் கட்டையும், பிறவி நீக்கத்தையும் உண்டாக்குவோன். இயங்காப் பொருள், இயங்கும் பொருள் யாவிலும் கலந்து அவையேயாய் நின்றவன். ஊழி முதலும் முடிவும் கண்டவன். பக்குவம் வந்த காலை எல்லாரும் தன்னை அடையும்படியாக வந்து ஆட்கொள்ளும் முதல்வன். மலம் நீங்காத எத்தகைய விண்ணவரும் காணவொண்ணாத மங்கலப் பொருளாவான். பெண்ணாகவும், ஆணாகவும், இரு தன்மையும் இல்லாதவனாகவும் உள்ள வடிவோடும் தன்மையோடும் தோன்றுகிறான். அவனை ஒன்றுக்கும் பற்றாத அடியேனும் கண்ணாற் காணப் பெற்று மகிழ்ந்தேன். கு-ரை: 49 - 58; நூலறிவு தூய மாயையில் எழும் நால்வகை வாக்கிற்கு அப்பாற்பட்டதன்று. அதனால் தூய மாயையும் கடந்த முதல்வனை அவ்வறிவால் அறிய முடியாது என்றலும் ஒன்று. மேன்மையுடையார்பாலும் தாழ்மையுடையார்பாலும் இறைச்செயல் காணப்படுதலின், 'மேலோடு கீழாய் விரிந்தோன்' என்றாரென்க. கற்பம் - படைப்பு முதல் இறுதிவரையுள்ள பெரும்பொழுது. இறைவன் முன் காலமனைத்தும் ஒருங்கே தோன்றுதலின், 'கற்பமுமிறுதியுங் கண்டோன்' என்றாரென்க. 'தேவர்' என்றது ஞானம் பெற்ற உருத்திர வருக்கத்தாருக்குக் கீழ்ப்பட்ட வானவரையே குறிக்கும். பெண், ஆண், அலி என்ற வகைத் தோற்றங்கட்கும் காரணமாய பெருமானை, அத்துவிதக் கலப்புப்பற்றி, அத்தன்மைகளை உடையான் என்றலுமொன்று. இறைவன் ஆண் மூர்த்தங்களாகவும், சத்தி மூர்த்தங்களாகவும் , அருவுருவமூர்த்தமாகவும் தோன்றுதலின், அவ்வாறு கூறினார் என்பாரும் உளர். அடிகட்கு இறைவன் திருவடிவு காட்டினமை தெளிவு. திருவருளை நாடா நிலைமை தன்பாலுளதாக அடிகள் கருதுதலின் 'யானும்' என்றார். தன் சிறுமையும் இறைவன் பெருமையும் குறித்தவாறாம். 60. கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க வவனெனை யாட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க! புவனியில் சேவடி தீண்டினன் காண்க! சிவன் என யானும் தேறினன் காண்க ! அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க! குவளைக் கண்ணி - கூறன் காண்க! karuNaiyin perumai kaNtEn kaaNka puvaniyiR seevadi thiiNdinan kaaNka sivanena yaanum theeRinan kaaNka avanenai aadkoNdu aruLinan kaaNka kuvaLai kaNNi kuuRan kaaNka பொ-ரை: 59 - 65: அருள் மிகுதியாக முகிழ்க்கும் அமுத ஊற்றானவன் அவன். அவனது கருணையின் பெருமையை உணர்ந்தேன். என்னை இந்நிலவுலகில் ஆட்கொள்ள வேண்டி தன் செவ்விய பாதங்கள் பொருந்த வந்தவன். பேரின்பம் அளிக்கும் பரம்பொருள் ஆனவன் என்று சிறியேனும் தெளிந்தேன். அவன் குவளை மலர் போலும் கண்களை உடைய உமையொருபாகன் . திருவருட்சத்தியும், தானும் ஒருங்கு வந்து என்னைப் பிறவிக் கடலிலிருந்து எடுத்து, ஆட்கொண்டு, பேரருள் புரிந்தவன் அவன் என்று அறிக. 29-65: FORTY EPITHETS IN HIS PRAISE Know Thou that, He is the primeval one, Know Thou that, He is the whole one, Know Thou that, He is the incomparable, Know Thou that, He adorned Himself with the tusk of the ancient wild boar, Know Thou that, He wears the forest's tiger skin around His loins. Know Thou that, He besmears His body with the holy ash. The more and more I bring Him to my memory, I am unable to bear His separation. Alas! I shall perish if the separation lasts long. Know Thou that, He is the melody in the sweet sound of the lute (Veena). Know Thou that, He plays a sweet tune in that Veena. Know Thou that He is the supreme one! That He is the ancient one; That He is the great one whom Brahma and Vishnu could not see. Know Thou that. He is the wonderful one, that He is the many. Know Thou that, He is the ancient one transcending words. Know Thou that, He is the farthest one whom human thought cannot reach. Know Thou that, He gets trapped in the net of loving dedication. Know Thou that, He is the only one adored as the peerless one. Know Thou that, He extends throughout the wide expansive earth. Know Thou that, He is more subtle than the tiny atom. Know Thou that, He is the "Eesan" (Supreme Being) of unparalleled greatness. Know Thou that, He is the precious one, rarest of all that is rare. Behold, Him who sustains each and everything, permeating them. Behold, Him who is too subtle for book knowledge. Behold, Him who spreads above, below and everywhere in the universe. Behold, Him who has no end or beginning. Behold, Him who ordains bondage and deliverance. Behold, Him who has become all that moves and all that remains static. Behold, Him who is a witness to the beginning and the end of aeons. Behold, Him who is the supreme one whom all may attain. Behold Civan who is not perceived even by devas. Behold, Him whose glory is that He is the male, the female, and the "neither one"! Behold, Him whom even I have seen with my own eyes. Behold, Him who is the fount of ambrosia yielding abounding grace. Behold! I have seen the greatness of His mercy! Behold, who (for my sake) trod on earth with His rosy Feet. Behold! Even I am convinced that He was none other than Civan! Behold! He showered His grace, making me His own! Behold! the one who is concorporate with Uma whose eyes are purple, like Indian water lily. Behold ! them both who came together (Note: She is responsible for removal of bondage and He is responsible to bestow deliverance and that is why they both come together whenever they want to grace their devotees). கு-ரை: 59 - 65: மேலே 'தானும் தன் தையலும் தாழ்சடையோ னாண்டிலனேல்' என்றதும் காண்க. பாசம் நீங்கிய காலை, திருவருட்சத்தியின் துணை கொண்டு சிவத்தையடைதலின் அம்மையை உடன் கூறினர். குவளை - தண்ணருளைக் குறிக்கும். அது நீலோற்பலம் எனப்படும். பாச நீக்கத்திற்கு அவளும் சிவப்பேற்றிற்கு அவளும் காரணராதலின், இரண்டையும் ஒருங்கு பெற்ற அடிகள் தம்மை அவளும் தானும் உடனே ஆட்கொண்டருளினமை கூறினார். 65. வவளுந் தானு முடனே காண்க பரமா னந்தப் பழங்கட லதுவே கருமா முகிலிற் றோன்றித் திருவார் பெருந்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய அவளும், தானும், உடனே காண்க! பரம - ஆனந்தம் பழம் கடல் - அதுவே கருமா முகிலின் தோன்றித் திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின் ஒளி திசை-திசைவிரிய, avaLum thaannum udanee kaaNka paramaanantha pazangkadal athuvee karumaa mukilin thoonRi thiruaar perunthuRai varaiyil eeRi thiruththaku min oLi thisai thisai viriya பொ-ரை: 66 - 72: மேன்மையான பேரின்பக் கடல் முழுதும் சூல் கொண்ட மேகம் போல வடிவெடுத்து அவனது ஞான ஒளி விளங்குகிறது. அழகு நிறை திருப்பெருந்துறை என்னும் மலை மேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்சமானது எல்லாத் திசைகளிலும் பரவுமாறு அந்த ஞான ஒளி காணக் கிடைக்கிறது. ஐவகை வேட்கைப் பிணிப்பு எனும் வாள்போல் கொடிய பாம்புகள் கெட்டு விட வந்த ஞான ஒளி அது. பிறவித் துன்பம் என்னும் வெப்பமானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ளுமாறு வந்த ஞான ஒளி அது. மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போல என்னை ஆட்கொள்ளத் தோன்றிய ஆசிரியனது ஞான ஒளியாகும் அது. கு-ரை: 66 - 72: 'அதுவே' என்பது பரமானந்தப் பழங்கடலில் ஒரு பகுதி மாத்திரமன்றி முழுதுமே என்பதைக் குறித்து நின்றது. கரு= சூல்; நிறைநீர். புலம் = பொறியறிவாலாகிய அவா, பந்தனை=பந்தம், கட்டு விடமானது, உடம்பிலுள்ள குருதியைப் பிணித்தாற்போல ஐம்புல அவா உயிரைப் பிணித்து அறிவைத் தொலைத்தலின் அவை பாம்பிற்கு ஒப்பிடப்பட்டன. 'வெந்துயர்' என்பதில் வெம்மை, கடுமை குறித்தது. துயர், பலதிறப்பட்டு விரிதலின் அதற்கு 'மாத்தலை' கூறினர். தோன்றி - மழைக் காலத்துச் செடி. தோன்றிய ஆசிரியன் - தோன்றி எனப்பட்டனன். வாள், ஞானத்திற்கு அறிகுறி. 70. வைம்புலப் பந்தனை வாளர விரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றோன்றி வாளொளி மிளிர வெந்தம் பிறவியிற் கோப மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில்தோன்றி, வாள் ஒளி மிளிர எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து முரசு எறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கி aimpula panthanai vaaLaravu iriya venthuyar koodai maaththalai karappa needuezil thoonRi, vaaL oLi miLira entham piRaviyil koopam mikuththu murasu eRinthu maapperung karuNaiyin muzangki 75. பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட வெஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி யிருமுச் சமயத் தொருபேய்த் தேரினை பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள செம்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக் கேதக்குட்டம் கையற ஓங்கி இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை, puupurai anjsali kaanthaL kaadda ensa inaruL nuN thuLi koLLa senjsudar veLLam thisaithisai thevidda varaiyuRa keetha kuddam kaiyaRa oongki irumus samayaththu oru peey theerinai பொ-ரை: 73 - 82: எங்கள் பிறவிகளோ தம்பலப் பூச்சிகள் போல் செறிந்து தேன்றுகின்றன. இறைவனின் கருணையோ முரசுபோலும் இன்முழக்கம் செய்கிறது. பூப்போன்ற அடியாரின் கூப்பிய கைகள் காந்தள் மலர் போலும் விளங்குகின்றன. குறையாத இன்பம் தரும் அருளானது சிறுதுளியாக வடிவம் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் திரண்டோங்கியது. ஒரு வரையறைப்படுமாறு மக்கள் தம்தம் சிற்றறிவிற்கு ஏற்பக் கொண்ட கொள்கைகளின் கூட்டம் எல்லையற்று உயர்ந்து பரந்துள்ளது. கானல் நீரை அணுகி, விடாய் தீரப் போந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போல, சிற்றறிவுடைய உயிர்கள் அறுசமயம் எனும் கானல் நீரைத் தேடிச் சென்றன. கதியடையும் விருப்பத்தால் ஆராய்ச்சியுடன் சென்ற அந்த சிற்றுயிர்கள் கானல் நீரைப் பருகிய மான்கள் போன்று தளர்ச்சியொடு நடந்து மிகக் கெடுதியான தாகம் நீங்கப் பெறாது உழன்றன. 66-82: THE SEA AND THE CLOUD (Note: It is desirable to quote here the special remarks of Dr. G.U. Pope about these lines (66- 95) to enable the readers to understand the inner mystical meaning of the allegory described in these lines) Dr. G.U. Pope remarks: "Lines 66 to 95 are well nigh untranslatable, for they contain a subtle and intricate allegory by means of which the grace of manifested Civan, who is praised under the title of "cloud" is set forth. The idea is (line 66) that the infinite sea of rapturous supreme felicity is Civan, but (line 67) as the cloud in the monsoon season sucks up water from the sea and rises in black masses that cover the sky, while all the phenomenon of the wonderful outburst of the beneficent, but also fearful monsoon are exhibited, so does the Supreme manifest Himself as the Guru, the object of love, and giver of grace to His worshippers. In the monsoon season, lightning flash from one end of the sky to the other, crested torrents sweep down over the hills, bearing with them uprooted plants and trees, and not unseldom, huge snakes that have been disturbed from their rocky mountain-hiding places. The various kinds of "Gloriosa' spread forth their beautiful flowers like supplicating hands, while every valley and hollow is filled with water. Meanwhile, as the heat is most intense just before the burst of the monsoon, the poet pictures a troop of thirsty antelopes, deluded by the mirage which means to offer them refreshing streams and shade and disappointed they are left to die of thirst in the wilderness. Meanwhile the pain of the fierce heat has ceased. Down the gorges of the hills, the torrent rushes, and is received into tanks prepared for it by the expected husbandmen. These lakes are fragrant with beautiful flowers, and on their banks the maidens have kindled fires with aromatic woods at which they dry their hair and garments after the refreshing bath. The cultivators may now sow their seed and expect a rich harvest. All this is the work of the black clouds, which draw water from the sea to fertilize the earth. In these lines every detail of the description has its mystical meaning which hardly needs illustration. The readers may compare lines 61 - 64 in decad VII". The entire ancient ocean of bliss got transformed into the cumulus cloud (Civan, the Lord of Mercy) and rising, reached the beautiful mountain in Tirup-Perun-Thurai. There the dazzling lightning of grace appropriate flashed forth in every direction, seeing which the bright serpents of the binding five senses fled away in fear. The torturous summer of severe heat withdrew its mighty head, while the long stalked beauteous glory lily (Thondri - gloriosa superba) shone in blazing white like the brilliance of knowledge of Civan who manifests Himself as the divine teacher to make his devotees His own. Like my innumerable births the cochineals (ஈசல்- தம்பளப்பூச்சி) swarmed. The mighty grace of Civan came as thunder and resounded as war drums, while the Kanthal flowers looked like the open palms joined in supplication ready to offer flowers at the Feet of the Lord. Civan's sweet unfailing grace formed into tiny drops, and the gleaming torrents of the ruddy fresh floods swelled on every direction rendering the ponds of misery ineffective, while the herd of long eyed thirsty deer (i.e., mankind of imperfect knowledge and understanding) crowded near the mirage (of the six alien sects) to drink the non-existent water through their big mouths (their sincere but misguided austerities) and being disappointed, ran hither and thither finding no relief from their tortuous thirst. The beautiful allegory in these lines can be summarized as under: 66: The ancient sea=Transcendent bliss 67-69: The cloud and lightning - Civan the Supreme. 70: The glossy snake = The five sense-organs (skin, tongue, eye, nose, ear) which binds mankind to earthly things like coils of a snake binding its victim) 71: Cruel tortuous summer = The suffering of mankind. 72: The sudden flower of 'Thonri'= The sudden appearance of God in the guise of a Guru. 73: The myriad cochineals - The numerous births a soul takes, 74: The thundering drum = God's righteous wrath at mankind's endless cycle of births and deaths. 75: Kanthal flowers- The palms of devotees joined in grateful devotion. கு-ரை : 73 - 82: பிறவிகள் மழைத் தொடக்கத்தில் எழுந்து செத்தொழியும் பூச்சிகட்கு உவமிக்கப்பட்டன. இடி முழக்கம் இங்கே கருணை முழக்கமாயிற்று. கருணையிடி, ஐம்புலப் பாம்பு சாதற்கிடமாயிற்று. முரசு, வெற்றி குறிப்பது. 'மாப்பெருங் கருணை இன் முரசெறிந்து இன் முழங்கி' என உரைநடை கொள்க. அஞ்சலி = கைகூப்புதல், காந்தள், மழைக்காலத்துத் தோன்று மலர். அதற்கு உவமேயம், கை. பிற அடிகளில் விண்ணிலே வான்யாறு நிறைவதாகக் கூறியதென உணர்க. செஞ்சுடர் என்பதில், செம்மை, நேர்மை எனப் பொருள்படும். சுடர் மெய்யறிவைக் குறிக்கும். கேதம்= சங்கேதம், ஏற்பாடு, கொள்கை. குட்டம் கூட்டமென்பதன் முதற் குறுக்கம். கை = எல்லை. 'கேதம்' என்பதற்குத் துன்பமென்றும், குட்டம் என்பதற்குக் குளமென்றும் பொருள் கொள்ளுதலும் உண்டு. நீர்நசை = அருள் வேட்கை, நெடுங்கண்= ஆராய்ச்சி. மான்கணம் = சமயிகளின் கூட்டம். அறுவகைப் புறச் சமயங்களாற் கதி கைகூடாமையின் உயிர்கள் பெருநெறி நோக்கி உழன்றமை குறித்தவாறாம். 80. நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன வாயிடை வானப் பேரியாற் றகவயின் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் நீர்நசை தரவரும், நெடும் கண், மான் கணம் தவப் பெரு வாயிடைப் பருகித், தளர்வொடும் அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை, வானப்பேர்-யாற்று அகவயின் பாய்ந்து, எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்து neer nasai tharavarum nedungkaN maan kaNam thavappeeru vaayidai paruki thaLarvodum avapperun thapam neengkaathu asainthana aayidai vaana peeriyaaRRu akavayin paaynthu ezunthu inpap perunjsuzi koziththu 85. சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூழூ ழோங்கிய நங்க ளிருவினை மாமரம் வேர்பறித்தெழுந் துருவ வருணீ ரோட்டா வருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் சுழித்து எம்பந்தம் மாக்கரைபொருது, அலைத்து, இடித்து ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம்வேர் பறித்து, எழுந்து உருவ, அருள்-நீர் ஓட்டா, அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி, மட்டு அவிழ் suziththu em panthamaa karai poruthu alaiththu idiththu uuz uuz oongkiya nangkaL iruvinai maamaram veerpaRiththu ezunthu uruva aruLneer ooddaa aruvarai santhin vansiRai kaddi maddu aviz 90. வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி யருச்சனை வயலு ளன்புவித் திட்டுத் தொண்ட வுழவ ராரத் தந்த வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் மாப்புகைக்கரைசேர் வண்டு உடைக் குளத்தின் மீக் கொள மேல் மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு தொண்ட உழவர் ஆரத் தந்த veRi malar kuLavaay kooli niRai akil maappukai karaiseer vaNdudai kuLaththin meekkoLa meel meel makizthalin nookki arussanai vayaluL anpuviththu iddu thoNda uzavar aarath thantha பொ-ரை: 83 - 95: செஞ்சுடர் வெள்ளம் வானப் பேராற்றில் பெருக மான் கணம் பெருவிடாயால் அலமரும். அத்தருணத்தில் வான் ஆற்றிலே இறைவனாகிய மேகம் புகுந்து அருள்மழை பெய்விக்கும். பேரின்பமாகிய பெரிய சுழலினைச் சுழித்து, பாசக் கட்டாகிய கரைகளை மோதி அசைக்கிறது. வரிசை வரிசையாக மேன்மேலும் வளர்ந்து நின்ற நல்வினை தீவினை என்னும் இருவினைப் பெரு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. மிகுந்து வந்த அழகு மிகுந்த அருள் வெள்ளத்தைச் செலுத்தியது. தொண்டராகிய பயிர்த்தொழிலோர் கடத்தற்கரிய எல்லையுடைய சாந்தம் எனும் பெரிய கால்வாயைக் கட்டியது. வாசனை வீசும் தேன் மலர் போன்ற இதயக் குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்தது. பொறியடக்கம் என்ற சிறந்த அகிற்புகை சேரும்படி ஓங்காரம் என்னும் சங்கு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்தில் அருள் வெள்ளம் பெருகியது. அதனை மகிழ்வோடு பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்ற வித்தை விதைத்து பயன் கொண்டு துய்க்கச் செய்த அருள் மழை அது. ஆகவே உலகெங்கும் பெறுதற்கு அரியவனாகிய முகில் போன்ற இறைவன் வாழ்க ! 84: Whirlpool= Bliss 85: Shores = bonds of "Paasam". 86 & 87: Huge trees of great height = Good and bad Karmaa done life after life. 94: Ploughmen - devotees in the service of God. Rich harvest and feast - "Arul Amirtham", Bliss of fulfilment. 83 - 95: Meanwhile the flood water of the heavenly mighty stream swelling up in huge whirlpools of bliss, dashed against the banks of our bonds of Paasam and demolished them. And, they uprooted the huge trees (of twin deeds - இருவினைகள்) which had shot up to great heights (of life after life). The ploughmen (devotees) built a big dam of sandalwood logs grown in mountains and guided therein the beauteous water (of grace). From the dam they further formed an outlet to a lake. In the lake fragrant lotus flowers were dripping honey. The ploughmen were watching with delight the water level rising higher and higher in the lake. In the bunds of the lake bumble bees were buzzing over a huge pall of smoke which arose from the abundant piles of burning eagle-wood (Ahil). The ploughmen sowed seeds, of love in rich abundance in the field of worship. Oh! Lord Civan, You are rare to be reached in the universe; You bestowed on these devotee-ploughmen an abundant harvest of bliss of fulfilment to feast on. Hail to Thee! கு-ரை: 83 - 95: வான் ஆற்றிலே இறைவனாகிய மேகம் புகுந்து அருள் மழை பெய்வித்து, அன்பர் பயன் கொண்டு இன்பம் நுகரும்படி செய்வித்தமை கூறப்பட்டது. உருவம் = அழகு, ஓட்டா = ஓட்டி, செலுத்தி, சந்து = பொறை, சாந்தம், சிறை = எல்லை. நிறை = பொறியடக்கம், வண்டு= சங்கு, ஓங்காரத்திற்கு அறிகுறி, மகிழ்தலின்= மகிழ்ச்சியொடு, அண்டம் = உலகத் தொகுப்பு. தூய்மையாகிய வாசனையும் பற்றறுதலாகிய இனிமையுடையது நல்ல உள்ளம் என்பது. வெறி - பற்றின்மையைச் சுட்டும். மலர்க்குளவாய்= மலரின் குளவாய்; வாய்மையாகிய என்பது வருவித்து உரைக்கப்பட்டது . 'ஓட்டா என்பது 'தந்த' என்பதோடு முடிகின்றது. தொண்ட உழவர் கட்டி, கோலி, நோக்கி, இட்டு, ஆர என முடிக்க. 95. வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க வருந்தவர்க் கருளு மாதி வாழ்க வச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க ! கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க! அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க! அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க ! நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க! aNdaththu arumpeRal meekan vaazka karumpaNak kassai kadavuL vaazka arunthavarkku aruLum aathi vaazka assam thavirththa seevakan vaazka nissalum iirththu aadkoLvoon vaazka பொ-ரை: 96 - 98: கரிய படத்தையுடைய பாம்பை அரைப் பட்டிகையாக அணிந்த கடவுள் வாழ்க! செய்தற்கரிய பெருந்தவத்தோர்க்கு அருள்புரியும் முதல்வன் வாழ்க! பாண்டியன் முதலியோருக்கு அபாயம் வந்தபோது, பயம் நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க! (அல்லது) என் பிறவிப் பயத்தை நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க! 96 - 98: Hail Lord Civan who wears the black hooded snake for his waist-band! Hail Lord Civan who is the beginning of all things and who bestows grace on devout ascetics. Hail Lord Civan the guardian who removed my fear of birth and death. (This can also be interpreted as "Hail Lord Civan" the knight who removed the fear of Paandiyan Kings whenever they met with danger). கு-ரை: 96 - 98; பணம்= படம், அதனையுடைய பாம்பிற்காயிற்று. பாம்பு, குண்டலி சத்திக்கு அறிகுறி. உலகியக்கும் சத்தியைத் தன்பாற் கொண்டவன் என்பது கருத்து. அது வானில் நுட்பமாக உள்ளது. வானிறம் புகை நிறம் என்பதால், அதற்குக் கருநிறம் கூறப்பட்டது என்பாரும் உளர். காணப்படும் உலகிற்கும் காணப்படா உலகிற்கும் நடுநிகர்த்தாய் உள்ள அச்சத்தி, இரண்டினும் நிறைந்த இறைவனுக்கு அரைநாண் போலாயிற்று. 100. சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க வெய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேரமைத் தோளி காதலன் வாழ்க வேதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க சூழ்இரும் துன்பம் துடைப்போன், வாழ்க ! எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன், வாழ்க ! கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க! பேர்-அமைத்-தோளி-காதலன், வாழ்க! ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க! suuzirun thunpam thudaippoon vaazka eythinarkku aaramuthu aLippoon vaazka kuuriruL kuuththodu kunippoon vaazka peer amai thooLi kaathalan vaazka eethilarkku eethil em iRaivan vaazka பொ-ரை: 99 - 105: நாள்தோறும் வினையிற்படாது இழுத்து, என்னை ஆண்டு அருளுபவன் வாழ்க! எதிர்பாராது வந்து கவியும் பெரும் துயரத்தை அறவே ஒழிப்பவன் வாழ்க! தன்னை அடைந்தோருக்குக் கிடைத்தற்கரிய அமுதமாகிய பேரின்பம் வழங்குவோன் வாழ்க! மிகுந்த இருளிலே வளைந்தாடுவோன் வாழ்க! பெரிய மூங்கிலை ஒத்த தோளுடைய அருட்சத்தியின் கணவன் வாழ்க! தன்னைச் சார்தலில்லாதார்க்கு இயைபு காட்டாத எம் தலைவன் வாழ்க! அன்பர்கட்கு இளைப்புக்காலத்துப் பயன்படும் ஈட்டிய பொருள் போல்பவன் வாழ்க! 99: Hallowed be the One who draws me to Him every day by preventing me from doing evil deeds. 100: Hallowed be Him who wipes out in full, the great sorrow that overwhelms beings, that seek His grace. 101: Hallowed be Him who gives the rare ambrosia to those who gain access to Him. 102: Hallowed be Him who bends down while dancing in pitch darkness. 103: Hallowed be the lover of Her (Uma) whose shoulders are as fine and smooth as the big solid bamboo. 104: Hail our Lord who has no attachment to those who have no attachment to Him. 105: Hail Him who is the providence of help to His devotees in times of distress. கு-ரை: 99 - 105: நிச்சல் = நித்தியல் = நித்தியம் = ஒவ்வொரு நாளும். சூழ்தல் - முன்வினைப் பயன் எதிர்பாராது வந்து மூடுதல். உலகம் ஒடுங்கிய காலையும் இறைவன் நுட்பமாகிய (சூக்கும) ஐந்தொழிலியற்றுதலின், 'கூரிருட் கூத்தொடு குனிப்போன்' என்றார். கூரிருட் கூத்து, சூக்கும ஐந்தொழிலையும் , குனித்தல் தூல ஐந்தொழிலையும் குறிக்குமென்ப. கூரிருள், என்பதைக் காளிக்கு ஆகுபெயராகக் கொண்டு, அவளொடு நடம்புரிவோன் என்பாரும் உளர். மூங்கில், பசிய நிறம், மென்மை, ஒளி இவற்றைக் குறிக்கும். கூரிருட்கூத்தில், இறைவனுக்குத் துணையாய் நிற்பவள் சத்தியேயாதல் கூறினவாறாம். கலித்தொகைக் கடவுள் வாழ்த்துள் அக்கருத்து கவினுறத் தெரித்தமை காண்க. இறைவன் நலம் கொடுப்பினும், அதனைத் துய்க்கும் இயைபில்லாதார், ஏதிலராவர். அவர்கட்கு இறைவன் பேருதவி தெளிவாகப் பயன்படுமாறில்லை என்பது கருத்து. அடுத்த அடியில் அன்பர்க்கு உற்றவிடத்து உறுபேருதவியா மென்றார். எய்ப்பு= முதுமை, நோய் முதலியவற்றால் உளதாகும் இளைப்பு . வைப்பு= சேமித்து வைத்த பொருள். 105. காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க நச்சர வாட்டிய நம்பன் போற்றி பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க! நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி! பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி ! நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி!-நால்-திசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் kaathalarkku eyppinil vaippu vaazka nassuaravu aaddiya nampan pooRRi pissuemai eeRRiya periyoon pooRRi neeRRodu thooRRa valloon pooRRi, naal thisai nadappana nadaa ay kidappana kidaa ay 110. நிற்பன நிறீஇச் சொற்பதங் கடந்த தொல்லோ னுள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன் விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் நிற்பன நிறீஇச் சொல்-பதம் கடந்த தொல்லோன் உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்! விண்முதல்பூதம் வெளிப்பட வகுத்தோன் niRpana niRiii soRpatham kadantha tholloon uLLaththu uNarssiyil koLLavum padaaan kaNmuthaR pulanaal kaadsiyum illoon viNmuthaR puutham veLippada vakuththoon பொ-ரை: 106 - 114: திருப்புறம்பயத்தில் பாம்பு தீண்டி இறந்த ஒருவனை உயிர்ப்பிக்கக் கொடிய பாம்பொன்றை ஆட்டி வைத்து விடந்தீர்த்து உயிர்ப்பித்த எம்பெருமான் காத்தருளுக! விடத்தைத் தீர்த்தது போல எனக்கு மாலேற்றிய பெரியவன் காத்தருளுக! அகண்ட பொருளாக இருந்தும் அடியவரை ஆட்கொள்ளத் திருநீறு அணிந்த திருமேனியோடு தோன்றவல்லவன் அருளுக! நான்கு திக்கிலும் நடப்பனவற்றை நடப்பித்தும், கிடப்பனவற்றைக் கிடப்பித்தும் நிற்பனவற்றை நிற்பித்தும் இன்ன தன்மையன் எனச் சொல்லும் மொழியைக் கடந்த பழமையோன்; மனம் கொண்டு உணரும் உணர்வினால் பற்றப்படாதவன்; கண் முதலிய ஐம்பொறிகளாலும் காணப்பெறாதவன்; வான் முதலிய பூதங்கள் ஐவகையாகத் தோன்றும்படி அவற்றை முறையாக வகுத்தவன். 106: Praise to our Lord Civan who came as a snake charmer in Thirup-Purampayam (திருப்புறம்பயம்) and restored life to a young lover who was dead by snake bite. Note: In Thirup-Purampayam when a young lover was dead by snake bite, his fiancee prayed to Lord Civan who, hearing her sincere prayers, personally came as a snake-charmer and brought her lover back to life. 107: Praise be to Lord Civan, the great one, who made me zealously in love with Him. 108: Praise be to Lord Civan, who though immeasurable, is capable of appearing before His devotees in His ash-smeared form. 109 - 110: In all the four corners of the earth He moves those that move, lays to rest the things that lie still, and steadies those that stand. 111 - 113: Lord Civan is the ancient one, He transcends speech; He is the one who cannot be experienced by the feelings of the mind; and He is the one who cannot be perceived by the sense organs such as the eye either. 114: He is the one who ordained the ether and other elements to manifest. கு-ரை: 106-114: திருப்புறம்பயத்தில் கணவனை இழந்த காதலியின் பொருட்டு இறைவனே பாம்பாட்டியாக வந்து கணவன் உடம்பிலுள்ள விடத்தை இறக்கி உயிர்ப்பித்தான் என்பது குறித்தவாறு. பிச்சு= பித்து= அன்பினாலாகிய பெரு விருப்பம். நீற்று, என்பதற்கு அழித்தல் என்று பொருள் கொண்டு தோற்றம், என்பதற்குப் படைத்தல் எனப் பொருள் கொண்டு, அந்தமும் ஆதியுமாயிருக்க வல்லான் என்று பொருள் கூறுவாரும் உளர். எவ்வகைச் செயலும் இறைவன் செய்விக்கவே நிகழ்கின்றது என்பது கருத்து. ஆதலின் நடத்தல், கிடத்தல், நிற்றல், மூன்றையும் விதந்தனர். அப்படித் தொழிற்படுபவற்றிற்கு எல்லாம் முற்பட்டவனாதலின், 'பழையோன்' என்றார். மனமொழி மெய்களைக் கடந்தவன் என்பதைப் பிற அடிகளில் குறித்தார். 115. பூவி னாற்றம் போன்றுயர்ந் தெங்கு மொழிவற நிறைந்து மேவிய பெருமை யின்றெனக் கெளிவந் தருளி யழிதரு மாக்கை யொழியச் செய்த வொண்பொரு ளின்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து, அருளி அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் - போற்றி puuvil naaRRam poonRu uyarnthu engkum ozivu aRa niRainthu meeviya perumai inRu enakku eLivanthu aruLi azitharum aakkai oziyasseytha oNporuL inRu enakku eLivanthu irunthanan pooRRi பொ-ரை: 115 - 119. மலரின் மணம் போல் எழுந்து நிறைந்தவன். உலகில் நீக்கமற நிறைந்து, எல்லாவற்றுக்கும் சார்பாய் பொருந்திய பெருந்தன்மையுடைய பெரியோன், இக்காலத்தே எனக்கு எளிதில் வந்து அறிவுறுத்தி அருளி, அழியும் தன்மை உடைய உடல் எடுக்கும் பிறவி நீங்கும்படி செய்த ஞான முதல்வன். இன்று என்பால் எளிதாக வந்து அமர்ந்தோன். அவனுக்கு வணக்கம். 115 - 121: Like the fragrance of the flowers rising high and spreading everywhere,leaving no space unfilled, Lord Civan the supreme one pervades all things without exception. Supreme as He is, this day He came out of compassion to bless me. He is the splendour of knowledge who rid me of this body, which spells ruin. He is that same one who came today without any effort on my part. Obeisance to Him! - He made for me a body which melts in love - Obeisance to Him! He is the one who abiding in me like a perennial fountain delights my mind; Obeisance to Him! கு-ரை: 115 - 119: மலர், தோன்றும் பொருள், நாற்றம் நுட்பமாய்த் தோன்றாது உள்ளது. முகர வல்லார்க்குத் தோன்றும். அங்ஙனமே, இறைவன் தோன்றாச் சார்பாயிருந்து அன்பர்க்கே புலப்படுவான். பிற பொருட்சார்பும், எளிதில் அறியப்படுதலுமிலன் என்பார், 'உயர்ந்து' என்றார். திருவாசகத்திற் பிறிதோரிடத்திலும் 'உற்ற வாக்கையினுறு பொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' என்றது காண்க. தனது அகண்ட வியாபகப் பெருமையை இறைவன் தமக்கறிவுறுத்தினமை குறித்தார். சிவஞானத்தால் அது உணரப்படுதலின் பிறவியறுதற்கு ஏதுவாயிற்று. தமதுள்ளத்தே வீற்றிருந்தமை கூறுவார் 'எளிவந்து இருந்தனன்' என்றார் . போற்றுதல் என்று பொருள்படும் தொழிற்பெயராகப் போற்றி என்பதைக் கொள்ளின், அது வணக்கம் என்று பொருள்படும். 120. யளிதரு மாக்கை செய்தோன் போற்றி யூற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி யாற்றா வின்ப மலர்ந்தலை செய்யப் போற்றா வாக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி ! ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி! ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல், மாமணிப் பிறக்கம் aLitharum aakkai seythoon pooRRi uuRRirunthu uLLam kaLippoon poRRI aaRRaa inpam alarnthu alai seyya pooRRa aakkaiyai pooRuththal pukaleen marakatha kuvaaal maamaNi piRakkam பொ-ரை: 120 - 126: உருக்கம் மிகுந்த உடம்பைத் தந்தவனுக்கு வணக்கம். இன்ப ஊற்றாக உள்ளத்தில் அமர்ந்து அதை மகிழ்விப்பவனுக்கு வணக்கம். தாங்கமுடியாத பேரின்பப் பெரு வெள்ளம் பொங்கிப் பரந்து அலைவீச அதனைப் பேண இயலாத இந்த உடம்பை நான் தாங்க விரும்பமாட்டேன். பச்சை மணிக் குவியலும் மாணிக்க ஈட்டமும் சேர்ந்தால் காணப்படும் மின்னொளியைத் தன்னுள் கொண்டு, பொன்னொளி போல் சத்தியும் சிவமுமாகி விளங்குகிறான் அவன். நான்முகனும் திருமாலும் போய் முயன்று தேடியும் அவர்கட்குத் தன் மெய்யியல்பை மறைத்து நின்றான். 122 - 123: I wish not to retain any longer this body that is incapable of containing the flood of exquisite bliss which spreads and sours like waves. Note: The poet turns his attention from the allegory and resumes the language of direct address. Maanikkavaachakar describes the supreme one as eluding all knowledge (Lines 124-140) and the repetition of the word (ஒளித்தும்) veiling - conveys the indescribability and the inconceivability of His nature. 124 - 125: Similar to the dazzling bright light of the lightning, and with flashes from a heap of emerald and of ruby 126: His form glows like gold; but He concealed Himself from the four-faced one (Brahma, the Creator) and Mahaa Vishnu who both went to seek His Head and Feet. கு-ரை; 120 - 126: அளி = அன்பாலாய உருக்கம் , அன்பின் மிகுதியின் பயனாக இன்பப் பெருக்கம் எழுகின்றது. அதனை முற்றிலும் நுகர, உடம்பு தடையாதல் கூறியவாறு. இறைவியின் நிறம் பசுமையாதல் பற்றி, 'மரகதக் குவாஅல்' என்றார். இறைவனுருச் செவ்விய தாகலின், மாமணிப் பிறக்கமென்றார். தூய்மை, மின்னொளியாலும், மாறின்மை, பொன்னொளியாலுங் குறிக்கப்படும் . 'தேடினர்' என்ற பன்மையால் திருமாலையும் கொள்க . செருக்குப் பற்றி அயனரிக்கு இறைவன் வெளிப்பட்டிலர். நற்றவத்திற்குரிய வெவ்வேறு படிகளில் நிற்போர்க்கும், இறைவன் வெளிப்படாது, தவம் முற்றிய தாழ்மனத்தோர்க்கே அவன் தன் தன்மையைத் தானே காட்டுவான் என்பதைக் கீழ்ப்போந்த அடிகளில் விளக்கினமை காண்க. 125. மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்து முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்து மொற்றுமை கொண்டு நோக்கு முள்ளத் துற்றவர் வருந்த வுறைப்பவர்க் கொளித்து மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும் min oLi koNda pon oLi thikaza thisai mukan senRu theedinarkku oLiththum muRaiyuLi oRRi muyanRavarkku oLiththum oRRumai koNdu nookkum uLLaththu uRRavar varuntha uRaippavarkku oLiththum 130. மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்து மித்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க் கத்தந் திரத்தி னவ்வயி னொளித்து முனிவற நோக்கி நனிவரக் கௌவி யாணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 'இத் தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும் முனிவு அறநோக்கி, நனிவரக் கௌவி ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து maRaiththiRam nookki varunthinarkku oLiththum iththanthiraththil kaaNdum enRu irunthoorkku aththanthiraththil avvayin oLiththum munivaRa nookki nanivara kowvi aaNena thoonRi ali ena peyarnthu பொ-ரை: 127 - 135: முறையாக நூல் வழியிற் பொருந்தித் தன்னைக் காண முயன்றவருக்குத் தன்னை மறைத்தவன். உலகப் பொருள்களில் ஈடுபடாமல் அவனைக் காண விழையும் ஒருமைப்பாட்டுடன் நிற்பவரைக் கண்டு உலகத்தவர் வருந்துவர். ஆனால் இறைவனோ அவர்களுக்கும் தன்னை மறைத்து நிற்கிறான். மந்திர முறையினால் கடவுள் காட்சி காண வேண்டி, வருந்தி முயன்றவருக்கும் தன் மெய்த்தன்மையை ஒளித்து நிற்கிறான். இந்த உபாயத்தால் அவனைக் காண்போம் என எதிர்பார்ப்போருக்கு அந்த உபாயத்தில் அவ்விடத்திலேயே ஒளித்து இருக்கிறான். பரம்பொருளைச் சாந்தமாகப் பார்க்கவும் மிகுதியாகப் பற்றவும் முயன்றவருக்கு ஆண் வடிவோடு அல்லது ஒளி மிகுந்த பெண் வடிவோடு அல்லது இரண்டுமற்ற வடிவோடு தோன்றியும் தன் மெய் இயல்பைக் காட்டாமல் விளங்குகிறான். 127: He hid himself from those who toiled to see Him through Yogic practices as described in the scriptures. 128 - 129: He hid Himself from those who sought him with single minded devotion , unmindful of the grief of their kinsmen. 130: He hid himself from those who laboriously sought him by staking their belief in the power of the vedas. 131: From those who boasted to see Him by means of some rare device, 132: He hid himself by that same device. 133 - 135: Regarding (the devout ones of other faiths) without malice,and gripping them well with growing grace, He appeared to them now as a male, anon changed to a neutral form and presently in female form with a shinning forehead and thus hid His true self from them. கு-ரை: 127 - 135: முதலிலே நூலில் சொன்ன ஒழுக்க முறைப்படி நிற்றல் கூறப்பட்டது. மன அடக்கம் அல்லது மனோலயம் அடைதற்கு முயலும் முறை பின் கூறப்பட்டது . மந்திர வகைகளைக் கையாளுவதாலும், வேறு உபாயங்களைக் கையாளுவதாலும் இறைவன் வெளிப்படான். சூழ்ச்சிக்கு மேற்பட்ட சூழ்ச்சியனாதலின், உபாயத்திலேயே ஒளிக்கவல்லான் என்றனர். சாந்தமாக அன்பு செய்தலின் பயனாக, இறைவனது உருவத் திருமேனியின் காட்சி கிடைப்பினும், மெய்யியல்பு புலனாகாமை காண்க. 135. வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயி னைம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை யருந்தவர் காட்சியுட்டிருந்த வொளித்து மொன்றுண்டில்லை யொன்றறி வொளித்தும் வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின் ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய் துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அரும் - தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும் vaaLnuthal peN ena oLiththum seeNvayin aimpulan selaviduththu aruvarai thoRumpooy thuRRavai thuRantha veRRuyir aakkai arunthavar kaadsiyuL thiruntha oLiththum onRu uNdu, illai, enRa aRivu oLiththum 140. பண்டே பயிறொறு மின்றே பயிறொறு மொளிக்குஞ் சோரனைக் கண்டன மார்மி னார்மி னாண்மலர்ப் பிணையலிற் றாடளை யிடுமின் சுற்றுமின் சூழ்மின் றொடர்மின் விடேன்மின் பண்டேபயில் தொறும், இன்றேபயில் தொறும் ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில் தாள் தளை இடுமின்! சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின் ! விடேன்மின்! paNdee payilthoRum inRee payilthoRum oLikkunj sooranai kaNdanam aarmin aarmin naaLmalar piNaiyalil thaL thaLai idumin suRRumin suuzmin thodarmin videenmin பொ-ரை: 136 - 145: செயற்கரிய தவத்தினர் ஐம்பொறி அறிவினை நெடுந்தூரத்தில் போகும்படி நீத்தனர். கடத்தற்கரிய மலைகள்தோறும் சென்று நுகர்வனவற்றை எல்லாம் வெறுத்தனர். உயிர் மாத்திரமுள்ள தசையற்ற வெற்றுடம்புடையராய் உள்ள அவர்கள் பார்வையில் விளங்கினும் அவர்கள் திருத்தம் எய்தற்பொருட்டு முற்றிலும் தோற்றம் தராது ஒளிகிறான். "முன்னாட்களில் பயிலுந்தோறும், இந்நாட்களில் பயிலுந்தோறும் மறைந்து நிற்கிற கள்வனைக் கண்டோம். அனைவரும் கூடுங்கள்! அன்றலர்ந்த பின்னல் மாலையால் அவன் திருவடிகளுக்கு விலங்கிடுங்கள்! வலம் வாருங்கள்! சூழுங்கள் !பின் தொடருங்கள்! விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று ஓலம் இடுபவர்களுடைய பிடிக்கு அகப்படாமல் முழுவதும் ஒளித்துக் கொண்டான். 136 - 138: Bidding the desires of the five senses remain far away from their minds, and travelling through trackless hills for long, giving up pleasures within and without, with only a bony frame of the body breathing life, ascetics contemplate on him. Even to those ascetics He appears in their vision but not fully, in order to make them more perfect. (Another version: From the vision of such ascetics, He hid Himself completely.) 139: He hid himself from those who vacillate in their minds whether God exists or not. 140 - 145: Some cried in frenzy Ah! We have found that Thief who hid Himself whenever we strove of old and whenever we strive now. However, I have seen that stealthy thief now at this moment, gather in haste-gather in haste; bring the garland woven of fresh flowers picked this morning; bind His Feet; surround Him; encircle Him; Follow Him; and leave not; catch hold of Him; In spite of all this tumultuous cry, He eluded their grip and hid Himself! கு-ரை: 136 - 145: பற்றற்ற யோகியர்க்கும், சிவஞானம் பெறாத விடத்து இறைவன் முற்றிலும் வெளிப்படான். அவர்கள் திருந்துதலாவது, ஞானம் பெறுதற்குரிய பக்குவம் அடைதல். இறைவனைக் காணப் பெறாவிடத்து உயிரின் சிற்றறிவு முனைத்து, ஐயுறவு தோற்றுவிப்பின், அது ஞானப் பேற்றிற்குப் பெருந்தடையாகும். இறைவன் திருவருட் காட்சி ஒருகாற் பெறினும், செருக்கற்ற நிலையில் நில்லாது உயிரின் தற்போத முயற்சி மேற்பட்டெழுமாயின், இறைவன் வெளிப்படான் என்பது இறுதியாகக் குறித்தவாறு. 145. பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந் தன்னே ரில்லோன் றானே யான தன்மை யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி யறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலு பற்றுமின்!' என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் தன்நேர் இல்லோன் தானே ஆனதன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி, ஆட்கொண்டு அருளி மறையோர் கோலம் காட்டி அருளலும்; paRRumin enRavar paRRu muRRu oLiththum thanneer illoon thanee aanathanmai enneer anaiyoor keedka vanthu iyampi aRai kuuvi aadkoNdu aruLi maRaiyoor koolam kaaddi aruLalum 150. முளையா வன்பென் புருக வோலமிட் டலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கித் தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு அலைகடல் திரையின் ஆர்த்து-ஆர்த்து ஓங்கித் தலைதடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறிப் பித்தரின் மயங்கி: மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் uLaiyaa anpu enpu uruka oolamiddu alaikadal thiraiyin aarththu aarththu oongki thalai thadumaaRaa viiznthu puraNdu alaRi piththarin mayangki maththarin mathiththu naaddavar maruLavum keeddavar viyappavum பொ-ரை: 146 - 157: தன்னிகரில்லாத அவனே எல்லாவற்றோடும் அத்துவிதமாய்க் கலந்து அவையேயான தன்மை உடையவன். தன்னில் தானாய் உள்ள தனி இயல்பையும் என்னைப் போன்றவர்கள் கேட்கும்படி வந்து அறிவுறுத்தி அருளியவன். வலிய, போருக்கு அழைத்தாற்போல அழைத்து, அடிமையாக்கிக் கொண்டருளினான். அவ்வாறு அவன் அருளியதும் யான் சலிப்பில்லாத அன்பினாலே எலும்பும் உருகும்படி முறையிட்டேன். கொந்தளிக்கும் கடல்போலக் கூவிக்கூவி எழுந்து, தலை மயங்கி, கீழே விழுந்து உருண்டேன். பித்துக் கொண்டவர் போலக் கதறி, மால் கொண்டு, வெறி கொண்டது போலக் களித்து , நாட்டிலே பார்த்தவர் திகிலடையவும் கேட்டவர் அதிசயிக்கும்படியும் இருந்தேன். தன்மேல் பாகனை ஏற விடாத பெரு மதம் கொண்ட யானை போல இன்ப அன்பினைத் தாங்க இயலாதவன் ஆனேன். எனது உறுப்புக்களையெல்லாம் சுவைமிக்க கொம்புத் தேன் போன்ற இன்ப உணர்ச்சியால் செய்து அமைத்தனன் இறைவன். 146- 157: The incomparable Lord Civan, who eluded so many, made a clarion call so that even people like me could listen to His spiritual instructions about His nature, which is that, He is in everything, yet at the same time He is His own self. Coming in the form of a vedic sage to make this revelation, He blessed me and made me His own, upon which my ceaseless love for Him dissolved my bones. In that ecstatic mood, I wailed aloud, raising my voice above the billowing sea's loud waves. I fell down head long, rolled, cried and yelled and became madder than a mad man and more gleeful than frenzied men. The onlookers were puzzled and the hearers wondered-Like the rutting tusker whose mad rage does not allow its mahout to ride on him, I was unable to bear the infinite grace of His. It was then that He infused a horried sweetness through all my limbs and made me blessed. கு-ரை: 146 - 157: சிற்றறிவுடைய உயிர்க்குப் பேரறிவும் பேரின்பமும் தலைப்பட்டவுடன், அவற்றின் பாரம் தாங்க இயலாவென்பதும், அவற்றினாலாய மெய்ப்பாடும் குறித்தவாறாம். அருளலும் என்பதை ஈற்றடியிற் 'செய்தனன்' என்பதோடு முடிக்க. 'உருக' என்பதோடு முடித்தலும் உண்டு. 155. கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தி னாற்றே னாக வவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தன னேற்றார் மூதூ ரெழினகை யெரியின் வீழ்வித் தாங்கன் கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு கோல்-தேன் கொண்டு செய்தனன் ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்தாங்கு, அன்று kadakkaLiRu eeRRaa thadapperu mathaththin aaRReen aaka avayavam suvaitharu kooltheen koNdu seythanan eeRRaar muuthuur ezilnakai eriyin viizviththangku anRu, 160. றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடி லொருத்தரும் வழாமை யொடுக்கினன் றடக்கையி னெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியே னாயேன் றானெனைச் செய்தது அருள் பெரும் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ! தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது arudperum thiiyin adiyoom adikkudil oruththarum vazaamai odukkinan thadakkaiyin nellikkani enakku aayinan solluvathu aRiyeen vaazi muRaiyoo thariyeen naayeen than enai seythathu பொ-ரை: 158 - 167: திரிபுரத்தினை அழகுமிகுந்த தன் புன்னகையில் எழுந்த நெருப்பால் சுட்டெரித்து முன்பு வீழ்த்தினான். அது போலவே தனது அருட் பெரும் தீயினால் அடியோங்கள் ஒருத்தரும் தவறாத படி எங்கள் அடிமை உடம்பு எனும் குடில்களை ஒடுங்குவித்தான். வளைந்த உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக்கனி போல் தவறிப் போகாத கைகண்ட அமுதம் ஆகினான் -அந்த எம்பெருமான் வாழ்க! அவன் எவ்வாறு எனக்குக் கிட்டினான் என்பதை பிறருக்கு எடுத்துரைக்க அறிய மாட்டேன். அவன் என்னை உருவாக்கிய விதத்தை நாய் போன்ற நான் தாங்க மாட்டேன். அதை அறியும் ஆற்றலும் இல்லேன் ஆ! ஆ!! செருக்கு ஒழியப் பெற்றேன். அடியேனுக்கு நல்கிய பேரின்பத்தை அளந்தறிய வல்லவன் அல்லேன். அதை அருந்தியும் நிறைவெய்தல் பெறமாட்டேன். மிகுதியாக விழுங்கும் ஆற்றலும் உடையவன் அல்லேன். 158 - 162: Lord Civan by his beauteous smile caused the ancient city of His foes to fall down. similarly by His grace He drew the dwellings of the souls of all of us into His sphere. He came to me as the ripe gooseberry fruit in the folded palm of my hand. Hail to Lord Civan! 163- 167: I know not how to explain to others my experience of His grace. I, a mere cur, can not endure what he has done! I can not even understand that. Ah! Ah!! I am dead. I, His slave, know not what He has given me in this grace. Slipping it, I am not content, swallowing it. I do not feel full. கு-ரை: 158 - 167: முப்புர தகனம், மும்மல நீக்கத்தைக் குறிக்குமென்ற திருமந்திரக் கருத்து இங்கே புலனாதல் காண்க. கையை வளைத்து உள்ளங்கையில் உள்ள பொருள் கீழே விழாதபடி வைத்த காலை. அது தடக்கை எனப்படும். உருண்டு போகும் நெல்லிக்கனி உள்ளங்கையில் உருளவிடமில்லாது இருப்பதோடு அதன் எப்பகுதியும் காட்சிக்குச் செவ்விதிற் புலனாமென்ப. நெல்லிக்கனி, கரு நெல்லியைக் குறிப்பதாய்ச் சாவா மருந்தாகிய கற்பமாம் என்பர். அது பேரின்பம் ஈயும் இறைவனுக்கு உவமையாயிற்று. பேரின்ப அவா மேலீட்டினாற் 'பருகியுமாரேன்' என்றார். தனது ஆற்றலுக்கு ஏற்றவாறே அதனை உட்கொள்ள முடியுமன்றி மிகுதியாக முடியாது என்பார், 'விழுங்கியு மொல்லகில்லேன்' என்றார். 165. தெரியே னாவா செத்தே னடியேற் கருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியு மொல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடற் றிரை புரைவித் துவாக்கட னள்ளுநீ ருள்ளகந் ததும்ப தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்; விழுங்கியும் ஒல்ல கில்லேன் ; செழும், தண் பால் கடல் திரை புரைவித்து உவாக்கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப theriyeen aa aa seththeen adiyeeRku aruLiyathu aRiyeen parukiyum aareen vizungkiyum olla killeen sezunthaN paaRkadal thiraipurai viththu uvaakkadal naLLuneer uLakam thathumpa 170. வாக்கிறந் தமுத மயிர்க்கா றோறுங் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழைக் குரம்பை தோறு நாயுட லகத்தே குரம்பை கொண்டின்றேன் பாய்த்தினி ரம்பிய வற்புத மான வமுத தாரைக வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்: கொடியேன் ஊன்-தழை குரம்பை தோறும், நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத-தாரைகள் vaakkiRanthu amutham mayirkkaal thooRum theekkida seythanan kodiyeen uunthazai kurampai thooRum naayudal akaththee kurampai kooNdu intheen paayththi nirampiya aRputha maana amutha thaaraikaL 175. ளெற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை யமைத்தன னொள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை யென்னையு மிருப்ப தாக்கின னென்னிற் எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய கன்னல் கனிதேர் களிறு எனக், கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில் eRpu thuLai thoRum eeRRinan urukuvathu uLLam koNdu oruru seythaanku enakku aLLuRu aakkai amaiththanan oLLiya kannal kani theer kaLiRu ena kadaimuRai ennaiyum iruppathu aakkinan, ennil பொ-ரை: 168 - 182: முழுமதிக் காலத்தே கடல் நடுவிற்பொங்கும் நீர் போல உள்ளத்தில் பேரின்பம் நிறைந்தது. வளமிக்க பாற்கடலைப் போல உள்ளம் ததும்பச் செய்தது. சொல்லும் தன்மைகடந்த பேரமுதமானது உரோமத்தின் அடிதோறும் நிரம்பித் தங்கும்படி இறைவன் செய்தனன். நாய் போன்ற அடியேனின் உடம்பினகத்தே சிறு வீட்டிருக்கை கொண்டருளினான். தீயேனுடைய புலால் மிகுந்த உடம்பின் குருதிக் குழாய், நரம்புகளில் எல்லாம் இனிய தேனைப் பாய்ச்சினான். அதிசயிக்கத் தக்க நிறைவான அமுத ஒழுக்குகளை எலும்புத் துவாரங்களில் பாய்வித்தான். உருகும் தன்மையுள்ள உள்ளத்தினால் வடிவமைத்தது போல, ஒவ்வொரு பகுதிகளிலும் அமுதம் ஊறிக் கசிகின்ற உடம்பினைத் தந்தான். ஒளிமிக்க கற்கண்டின் இனிப்பினைக் கொண்ட கனியைத் தேர்ந்துண்கிறது இறுமாப்புடைய யானை. அதைப்போன்று முடிவான முறையாக தகுதியற்ற அடியேனும் இருக்குமாறு செய்தருளினான். அயன் அரி அறியாப் பெருந்தன்மையன் தனது மேலாம் திருவருள் தேனானது என்னில் கலக்கும்படி செய்து, அவ்வருளோடு மிக மேம்பட்ட பேரின்ப அமுதமும் அமைத்து அருளிச் செய்தான். 168 - 170: On full moon nights, the billows heave tossing up tides- so too the felicity of His grace rises up in my heart like rich cool waves, in a sea of milk. (At this juncture) Lord Civan made the indescribable ambrosia enter the pores of my body. 171 - 177: Lord Civan made his abode in this vile fleshy body of this cur (i.e., me), and created a bubbling physical frame of ecstatic delight for me. கு-ரை: 168 - 177: பொருள் கொள்ளுமிடத்தே, இரண்டாவது அடியை முதலில் கொள்க. உயிரினறிவில் தோன்றும் இன்பமாதலின் உள்ளகத்தே கடல் நடுநீர் என்றார். முழுமதி= பேரறிவைக் குறிக்கும். உயிரிற் கலந்த பேரறிவின் நடுவே இன்பம் உதிப்பது என்று அறிக. பேரறிவுக்கு அறிகுறி = பாற்கடல். குரம்பை என்பது உடம்பையும் அதன் பகுதியாய வரம்புகளையும் குறிக்கும். அள் ஊறு, எனவும் கள்ளூறு எனவும் பிரிப்பர். கள் = தேன். உடம்பு நினைவு வந்த போதும் உடம்பெங்கும் கலந்துள்ள முதல்வனது பேரின்ப நிறைவே புலனாதலாலும், அதற்குக் காரணமாய அன்பும் மேற்படுதலாலும், உடம்பிலே அமுதம் ஊறுவது என்றார். 180. கருணை வான்றேன் கலக்க வருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா லறியாப் பெற்றியோனே. கருணை வான் தேன் கலக்க அருளொடு பரா-அமுது ஆக்கினன் பிரமன், மால் அறியாப் பெற்றியோனே karuNai vaan theen kalakka aruLodu paraa amuthu aakkinan piraman maal aRiyaa peRRiyoonee. 178 - 182: Much like an elephant that revels avidly on choice sugarcane, He eventually sought out for me - me, this lowly one, and made me live in eternal bliss, absorbed in the illimitable honey of grace. He bestowed on me this, and the supernatural ambrosia. He, that is beyond the comprehension of Brahma and Vishnu! கு-ரை: 178 - 182: இறுதியடியைக் 'கருணைவான்' என்பதற்கு முன் கொள்க. அருள் விளக்கமும், சிவ விளக்கமும் கூறியவாறு. ஒண்மை அருளையும், கனி சிவானுபவத்தையும் குறிக்கும். இனிமை நிலை பெற்றிருத்தலின், கன்னற்கனி என்றார். கடைமுறை - கடையா முறையெனக் கொண்டு, அருள் பெற்ற அடியாருள் கடை நின்ற முறையிலெனப் பொருள் கொள்வாரும் உளர். பரா = மேலான. THIRUCHCHITRAMBALAM 4. போற்றித் திருவகவல் 4. POTRITH-THIRU AHAVAL (சகத்தின் உற்பத்தி ) Sacred Psalms of Supplication தில்லையில் அருளியது Compiled whilst in Thillai நிலைமண்டில ஆசிரியப்பா திருச்சிற்றம்பலம் இந்த அகவலில் 'போற்றி' என்னும் வணக்கத்தை அறிவிக்கும் சொல் மிகுதியாக வருதலின் போற்றித் திருவகவல் எனப் பெயர் பெற்றது (சகம் = உலகத்தில் உள்ள உயிர்கள்). இதில் முதற்கண் உலகத்தில் உள்ள உயிர்கள் உடம்புகளோடு கூடித் தோன்றுமுறை கூறப்படுதலின் இது "சகத்தின் உற்பத்தி" என்னும் கருத்து தொல்லாசிரியரால் குறிக்கப் பெற்றது. சில அடிகளே இதனைக் கூறுகின்றன. ஆயினும் சிறப்புக் கருதி இத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மிகுதியான அடிகள் சிவபெருமானை வணங்கியபடியே அமைந்துள்ளன. வடமொழியாளர் "நம" என்ற சொல்லால் எதைச் சுட்டினரோ அதையே "போற்றி" என்ற சொல்லும் குறிக்கும். ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை பல்வேறு பிறப்புக்களை எடுத்த இந்த ஆன்மா, தன்னுடைய குறிக்கோளை நோக்கிப் பயணம் புறப்படுவதை, இந்த நான்காவது போற்றித் திருவகவல் குறிப்பிடுகின்றது. அந்தப் பயணத்தில் நேரும் பல இடையூறுகளும், அவற்றை வெற்றி பெற்றுக் கடந்து செல்லும் ஆன்மா தெய்வம் ஆகிய ஓர் சித்தம் உண்டாகிய நிலையை அடைதலும், அதன்மேல் தொடர்கின்ற இடையூறுகளும் விரிவாக எடுத்து ஓதப்படுகின்றன. முடிவாக, இறைவனிடத்துத் தன்னை ஒப்படைக்கும் ஆன்மா பலவாறு அவன் பெருமைகளைக் கூறிப் போற்றி போற்றி என்று வழிபடுகின்றது. 225 அடிகளைக் கொண்ட இந்த நீண்ட பாடலே போற்றித் திருஅகவல் என்று போற்றப்படுகின்றது. This chapter consists of 225 lines set in 'Ahaval' metre (an easy verse form), out of which 140 lines are appeals to Lord Civan for his grace, and contain the term of incantation “Potri" at the end of each line. This term Potri connotes obeisance, to the Lord. This obeisance, besides extolling the glory of Lord Shiva and expressing submission to Him, is an appeal supplicating for protection, mercy and guidance. ("Potruthal" is both a hymn in the glory of Lord Civan (adoration), and a prayer for protection {appeal}). The Lord protects them (Potruthal = sustaining in good shape). Thus, we note that this composition is eminently suited for use in all saivite rituals, as the devotees can easily comprehend what they implore. Much like the Potrith-Thiruth-Thaandaham of Saint Appar, this composition highlights the multifarious attributes of Lord Civa, even as it extends obeisance and supplicates for mercy and protection. Grammarians would classify the term Potri as an exhortative appeal (Potri = pray, protect, Oh Lord). "Obeisance" is verily an implied petition for help and sustenance ("Hail, Oh Lord, Be Thou my Refuge"). The opening lines contain notes on the creation of the universe and how the human embryo passes through countless vicissitudes of fortune during its stay in the mother's womb and in later life, in all of which the good Lord lends His protective shield and emancipates the struggling mass of souls. The saint is overwhelmed by the sheer enormity of His grace and pours forth in soulful numbers, his gratitude and indebtedness to the inimitable Lord Civa. 4.1 நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர்-அடியாலே மூ-உலகு அளந்து, நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடி திருநெடுமால், அன்று 5. அடி,முடி, அறியும் ஆதரவு-அதனில் கடுமுரண் ஏனம் ஆகி, முன்கலந்து, ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து ஊழி முதல்வ, சய ! சய ! என்று வழுத்தியும் காணா மலரடி இணைகள் 10. வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் 15. ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் 20. ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தச மதி தாயொடு தான்படும் 25. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும் 30. கரும் குழல், செவ்வாய், வெள் நகை; கார்மயில் ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர் தம் 35. கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் 40. நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் ஆறு கோடி மாயா-சத்திகள் 45. வேறு வேறு தம்மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும் 50. விரதமே பரம் ஆக, வேதியரும் சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம் தம் மதங்களே அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் 55. சண்ட மாருதம் சுழித்து அடித்து, ஆஅர்த்து உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி, அதில்பெரு மாயை எனைப் பல சூழவும் தப்பாமே, தாம் பிடித்தது சலியாத் 60. தழல்-அது கண்ட மெழுகு அது போலத் தொழுது, உளம் உருகி, அழுது, உடல்கம்பித்து, ஆடியும், அலறியும் பாடியும் பரவியும், கொடிறும், பேதையும் கொண்டது விடாது' எனும் படியே ஆகி, நல்இடை அறா அன்பின், 65. பசு மரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக், கடல்என மறுகி அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய்விதிர்த்துச் சகம் பேய், என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை 70. பூண் அதுவாகக், கோணுதல் இன்றிச் சதுர் இழந்து, அறி-மால் கொண்டு, சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும், பதறியும் மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது 75. அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி, அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே, திருவடி-இணையைப் பிரிவினை அறியா நிழல் அதுபோல, முன் பின் ஆகி, முனியாது, அத்திசை 80. என்பு நைந்து உருகி, நெக்கு-நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக், கர-மலர் மொட்டித்து, இருதயம் மலரக், 85. கண்களி கூர, நுண்துளி அரும்பச் சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி, வளர்த்தனை போற்றி ! மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக், கைதர வல்ல கடவுள், போற்றி! 90. ஆடக மதுரை அரசே, போற்றி ! கூடல் இலங்கு குருமணி, போற்றி ! தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி ! இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி ! மூவா நான்மறை முதல்வா, போற்றி! 95. சேஆர் வெல் கொடிச் சிவனே போற்றி ! மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி ! கல் நார் உரித்த கனியே, போற்றி ! காவாய், கனகக் குன்றே, போற்றி! ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி ! 100. படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி! இடரைக் களையும் எந்தாய், போற்றி ! ஈச, போற்றி! இறைவ, போற்றி! தேசப் பளிங்கின் திரளே, போற்றி ! அரசே போற்றி !அமுதே போற்றி! 105. விரை சேர் சரண விகிர்தா, போற்றி! வேதி, போற்றி! விமலா, போற்றி ! ஆதி, போற்றி! அறிவே, போற்றி! கதியே, போற்றி! கனியே, போற்றி! நதிசேர் செம்சடை நம்பா, போற்றி! 110. உடையாய், போற்றி! உணர்வே, போற்றி ! கடையேன் அடிமை கண்டாய், போற்றி! ஐயா, போற்றி ! அணுவே, போற்றி! சைவா, போற்றி! தலைவா போற்றி ! குறியே, போற்றி! குணமே, போற்றி! 115. நெறியே, போற்றி! நினைவே, போற்றி! வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி! ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி ! மூஏழ் சுற்றம் முரண்உறு நரகிடை ஆழாமே அருள் அரசே, போற்றி! 120. தோழா, போற்றி! துணைவா, போற்றி ! வாழ்வே, போற்றி! என் - வைப்பே, போற்றி! முத்தா, போற்றி ! முதல்வா, போற்றி ! அத்தா, போற்றி! அரனே, போற்றி ! உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி! 125. விரிகடல் உலகின் விளைவே, போற்றி! அருமையில் எளிய அழகே, போற்றி! கருமுகில் ஆகிய கண்ணே , போற்றி! மன்னிய திரு அருள் மலையே, போற்றி ! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல் 130. சென்னியில் வைத்த சேவக, போற்றி! தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி ! அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி! அழிவதும் ஆவதும், கடந்தாய், போற்றி! முழுவதும் இறந்த முதல்வா, போற்றி! 135. மான் நேர் நோக்கி மணாளா, போற்றி! வானகத்து அமரர் தாயே, போற்றி! பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! 140. வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி ! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி! அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி ! கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி ! நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி! 145. இடை மருது உறையும், எந்தாய் போற்றி! சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி ! சீர்ஆர் திருவையாறா, போற்றி ! அண்ணாமலை எம் அண்ணா, போற்றி! 150. கண் ஆர் அமுதக் கடலே, போற்றி! ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி! பாகம் பெண்உரு ஆனாய், போற்றி ! பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! 155. மற்று ஓர்பற்று இங்கு அறியேன், போற்றி ! குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி ! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! 160. கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி! அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி! இத்தி தன்னின்கீழ் இரு-மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே, போற்றி! தென்நாடு உடைய சிவனே, போற்றி! 165. எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி! மானக் கயிலை மலையாய், போற்றி! அருளிட வேண்டும் அம்மான், போற்றி! இருள் கெட அருளும் இறைவா, போற்றி ! 170. தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி! களம்கொளக் கருத அருளாய், போற்றி! அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி! நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி! அத்தா போற்றி! ஐயா போற்றி! 175. நித்தா, போற்றி! நிமலா, போற்றி ! பத்தா, போற்றி! பவனே, போற்றி ! பெரியாய், போற்றி! பிரானே போற்றி! அரியாய், போற்றி! அமலா, போற்றி! மறையோர் கோல நெறியே, போற்றி! 180. முறையோ? தரியேன்! முதல்வா போற்றி! உறவே போற்றி! உயிரே, போற்றி ! சிறவே போற்றி! சிவமே போற்றி! மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி ! பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி! 185. அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி ! இலங்குசுடர் எம்ஈசா, போற்றி! கவைத்தலை மேவிய கண்ணே போற்றி! குவைப்பதி மலிந்த கோவே, போற்றி! மலை நாடு உடைய மன்னே, போற்றி! 190. கலை ஆர் அரிகேசரியாய், போற்றி! திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி! பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி ! அருவமும் உருவமும் ஆனாய், போற்றி! மருவிய கருணை மலையே போற்றி! 195. துரியமும் இறந்த சுடரே, போற்றி ! தெரிவு-அரிது ஆகிய தெளிவே, போற்றி! தோளா முத்தச் சுடரே, போற்றி! ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி ! ஆரா அமுதே அருளே, போற்றி! 200. பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி! தாளி அறுகின் தாராய், போற்றி! நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி! சந்தனச் சாத்தின் சுந்தர, போற்றி ! சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி! 205. மந்திர மாமலை மேயாய் போற்றி! எம் தமை உய்யக் கொள்வாய் போற்றி! புலிமுலை புல்வாய்க்கு அருளிளை, போற்றி! அலைகடல் மீமிசை நடந்தாய், போற்றி! கரும்குருவிக்கு அன்று அருளினை போற்றி! 210. இரும் புலன் புலர இசைந்தனை போற்றி! படி உறப் பயின்ற பாவக, போற்றி! அடியோடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி ! தரகொடு, சுவர்க்கம் நால் நிலம், புகாமல், பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி! 215. ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி! செழுமலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி ! கழுநீர் மாலைக் கடவுள், போற்றி ! தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி! பிழைப்பு, வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 220. குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி! புரம் பல எரித்த புராண, போற்றி! பரம் பரம் சோதிப் பரனே, போற்றி! போற்றி! போற்றி! புயங்கப் பெருமான் ! போற்றி போற்றி புராண-காரண! 225. போற்றி போற்றி சய, சய, போற்றி! திருச்சிற்றம்பலம் 4. 1 நான்முகன் முதலா வானவர் தொழுதெழ வீரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன் நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர்-அடியாலே மூ-உலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று naanmukan muthalaa vaanavar thozuthueza iir adiyaalee muuulaku aLanthu naal thisai munivarum aimpulan malara pooRRisey kathirmudi thiruneedumaal anRu 5. றடி முடி யறியு மாதர வதனிற் கடுமுர ணேன மாகிமுன் கலந் தேழ்தல முருவ விடந்து பின்னெய்த் தூழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள் அடி முடி, அறியும் ஆதரவு-அதனில் கடுமுரண் ஏனம் ஆகி, முன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து ஊழி முதல்வ, சய! சய! என்று வழுத்தியும் காணா மலர் அடி-இணைகள் adimudi aRiyum aatharavu athanil kadumuraN eenam aakimun kalanthu eezthalam uruva idanthu pineyththu uuzi muthalva saya saya enru vazuththiyum kaaNaa malar adi iNaikaL பொ-ரை: 1 - 10: எம்பிரான் சிவபெருமானைப் படைப்புக் கடவுள் முதலாக உள்ள தேவர்கள் எல்லாம் வழிபட்டுத் தொழுகின்றனர். வாமன அவதாரத்தில் தனது இரண்டடிகளால் மூவுலகும் அளந்தான் திருமால். அதனால் நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்கள், ஒளி வீசும் திருமுடியினை உடைய பெருமை மிக்க திருமாலைத் தம் ஐம்புலன்களும் மகிழ்வடையும்படி வணங்கினர். இறைவன் அனல் பிழம்பாய் நின்ற அக்காலத்தில், திருமால் ஈசன் திருமேனியின் அடியின் முடிவைக் காணும் விருப்பம் உடையவன் ஆனான். எனவே வலிமை மிகுந்த பன்றி வடிவம் எடுத்து அயனுக்கு முற்பட்டு கீழ் ஏழு உலகினும் புகுந்தான் . ஆங்கு ஊடுருவித் தோண்டிப் பின்பு கீழே செல்ல இயலாது இளைப்படைந்து நின்றான். எம் பெருமானை நோக்கி உலக முடிவுக்கு முதல்வனாய் உள்ளவனே உனக்கே வெற்றி! வெற்றி ! என்று துதித்து வணங்கியும் காணப் பெறாத திருவடிகள், வழிபடுவதற்கு எளிதாக நெடுங்கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தில் வெளிப்படுகிறது. 1 - 10: The four faced creator god "Brahma" and other junior heavenly gods gathered around and prostrated before Vishnu who in the days of yore, measured by his two feet the three worlds. The seers of the four quarters of the world adored the tall and beautiful Vishnu whose crown was glittering with flashes of bright light all around with such eagerness that in the act of adoration all their five senses blossomed with joy. However, this self-same Thirumaal was engaged in a fierce argument with Brahma and they both set out to spot the Head and Feet of Lord Civa. Vishnu challenged Brahma and said that he would venture to see the holy Feet of Civan while Brahma would go to see Civan's crown. Vishnu took the form of a fierce mighty boar and started digging into the seven underworlds to see Civan's holy Feet. The seven underworlds are Athala (அதல) , vithala (விதல), Sudhala (சுதல), Nithala (நிதல), Tharaathala (தராதல), Rasaathala (ரசாதல) and Mahaathala (மகாதல). Being unsuccessful Mahaa Vishnu in weariness started to extol Lord Civan by saying "Oh Universal Lord! First in each Aeon, Victory! Victory! To Thee" and worshipped Him. Even after this worship Vishnu could not see the holy twin flowery Feet of Lord Civan. But that Lord Civan became easily accessible to me and to His devotees in this earth, girdled by watery seas. (Mahaa Vishnu is head of all devas; while Brahma is below him; those above Vishnu are called Rudras. Lord Civa is above all these Gods). கு-ரை: 1- 10: இதனுள் தேவருள் சிறந்த திருமால், யான் எனது என்னும் செருக்கறாமையால், இறைவன் திருவடிகளைக் காணப்பெறாமை கூறினர். அரி, ஒரு குள்ளப் பிராமண வடிவம் எடுத்துச் சென்று மூவடி மண் வேண்டி, ஈரடியாலே உலகனைத்தும் அளந்து மூன்றாவது அடிமண் கிடையாமையால் , மாவலி தலையில் அடி வைத்த கதை வெளிப்படை. நிலைப்புக் கடவுளாதலின், ஐம்புலனும் தத்தம் நிறைவைப் பெறுமாறு இயற்ற வல்லவனாதலின் 'ஐம்புலன் மலர' என்றார். திருமாலுக்குக் கீழாக உள்ள கடவுள் அயனாதலின், அவன் முதலாக உள்ள பிற தேவரைக் கூறினர். திருமாலுக்கு மேற்பட்டவர்கள் உருத்திர வருக்கத்தினர். அவர்கள் இறைஞானம் பெற்றவர்கள். அடிமுடி = அடியின் முடிவு. உடல் வலிமையும், மனவலிமையும் உடைமையால், 'கடுமுரண்' என ஈரடை கொடுத்தார். அன்பர்க்கருள இறைவன் புவனியிற்சேவடி தீண்டினன் என்பார், 'வழுத்துதற் கெளிதாய்' என்றார். 'எளிதாய' என்பது ' எளிதாய்' எனக்குறைந்து நின்றது. (அல்லது 'எளிதாய்' என்பது எளிதாக, எனக் கொண்டு, எளிதாகவே அவற்றை வழுத்துதற் பொருட்டு எனப் பொருள் கோடலும் உண்டு). 10. வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில் யானை முதலா வெறும்பீ றாய வூனமி லியோனியி னுள்வினை பிழைத்து மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத் தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் vazuththuthaRku eLithaay vaarkadal ulakinil yaanai muthala eRumpu iiRaaya uunam il yooniyin uLvinai pizaiththum maanuda piRappinuL maathaa utharaththu iinam il kirumi seruvinil pizaiththum பொ-ரை: 11 - 14: பெரிய யானை முதல் சிறிய எறும்பு ஈறாக, பிறவிகள் எத்தனையோ வடிவாக உள்ளன. இவ்வுயிர்கள் குற்றம் இல்லாத பொருந்திய கருப்பைகளில் நிகழக்கூடிய கெடுதிகளுக்கு இறைவனருளால் தப்புகின்றன. மனிதப் பிறவியில் தாயின் கருப்பையில் நிகழும் குறைவிலாத புழுக்களின் போரில் சிதைவுபடாது தப்புகிறது. கு-ரை: 11 - 14: யானையும் பெரிய பிராணிகளும், எறும்பினும் சிறிய பிராணிகளிருப்பினும், அவற்றையும் இனம்பற்றிக் கொள்ளுக. பெரு வழக்காய்க் கட்புலனா யுள்ளவற்றை விதந்தனர். 15. மொருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்து மிருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னு ளம்மதம் பிழைத்து மீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் orumathi thaanRiyin irumaiyil pizaiththum irumathi viLaivin orumaiyil pizaiththum mummathi thannuL ammatham pizaiththum iiriru thingkaLil peeriruL pizaiththum anjsu thingkaLil munjsuthal pizaiththum 20. மாறு திங்களி னூறலர் பிழைத்து மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து மெட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்து மொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துந் தக்க தசமதி தாயொடு தான்படுந் ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தச-மதி தாயொடு தான்படும் aaRu thingkaLil uuralar pizaiththum eezu thingkaLil thazpuvi pizaiththum eddu thingkaLil kaddamum pizaiththum onpathil varutharu thunpamum pizaiththum thakka thasamathi thaayodu thanpadum பொ-ரை 15-26: தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன் கரு தான்றிக்காய் அளவு ஆகிறது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவுபடுதலாகிய இருமையிலிருந்து தப்புகிறது. இறை அருளால் இரண்டாவது மாதத்தில் பிற புழுக்களின் இடர்ப்பாட்டு மிகுதியால் உருவெடாமையில் இருந்து பிழைக்கிறது .மூன்றாம் மாதத்தில் கரு வளர்தற்கென்று பெருகும் கொழுப்பான நீர் மிகுதியிலிருந்து தப்புகிறது. கரு நீரினால் நான்காம் மாதம் கருப்பையில் இருள் மிருந்த காலை அந்த இருளிலிருந்து தப்புகிறது. ஐந்தாம் மாதம் கருப்பை நீர் மிகுதியால், இருள் மிகுதியால் சாவதிலிருந்து தப்புகிறது. ஆறாம் மாதத்தில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்புகிறது. ஏழாம் மாதம் கருப்பை தாங்காமல் காயாய்ப் பூமியில் விழுவதிலிருந்து தப்புகிறது. எட்டாவது மாதம் கருப்பையில் உண்டாகும் வளர்ச்சி நெருக்கத்தினின்றும் தப்புகிறது. ஒன்பதாம் மாதம் வெளிப்பட இயலாது வரும் துன்பத்தில் இருந்தும் தப்புகிறது. பத்தாவது மாதம் தாயும் தானும் வெளிப்படுவதற்குப் படும் துயரக் கடலிலிருந்து தப்பி, நிலவுலகில் பிறந்து வளருகிறது. 11 - 25: In this earth girdled by the watery ocean, I was saved from the matrices starting with that of elephant down to that of ant. Finally, I descended in my mother's womb to obtain a human form. Here also, I escaped from the attacks of microbes and germs. In the first month of my life (in my mother's womb), my foetus looking like a beleric myrobalam escaped from splitting into two. My embryo was saved in their unification during the second month; saved in the third month from profusion of the uterine fluid; saved in the fourth month from the great darkness; saved in the fifth month from abortion; saved in the sixth month from myriad mishaps; in the seventh month my developed embryo was saved from premature birth; in the eighth month escaped the congestion and pain; in the ninth month the baby in order to come out will roll inside the womb causing damages both to the baby and the mother. I was saved from these dangers. In the tenth month I was saved from the severe agony caused both to my mother and myself during my exit of as a baby from the mother's womb. 25. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்து மாண்டுக டோறு மடைந்தவக் காலை யீண்டியு மிருத்தியு மெனைப்பல பிழைத்துங் காலை மலமொடு கடும் பகற் பசி நிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்துங் துக்க-சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும் thukka saakara thuyaridai pizaiththum aaNdukaL thooRum adaintha akkaalai iiNdiyum iruththiyum enaippala pizaiththum kaalai malamodu kadumpakal pasinisi veelai niththirai yaaththirai pizaiththum 30. கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயி லொருங்கிய சாய னெருங்கியுண் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங் கரும்குழல், செவ்வாய், வெள்-நகை; கார்மயில் ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்-தம் karungkuzal sevvaay veLnakai kaarmayil orungkiya saayal nerungki uL matharththu kassu aRa nimirnthu kathirththumun paNaiththu eyththu idai varuntha ezunthupudai paranthu iirkku idai pookaa iLamulai maathartham 35. கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்துங் கல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ் செல்வ மென்னு மல்லலிற் பிழைத்தும் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் kuurththa nayana kooLLaiyiR pizaithum piththa ulakar perunthuRai parappinuL maththa kaLiRu enum avaavidai pizaiththum kalvi ennum palkadal pizaiththum selvam ennum allalil pizaiththum பொ-ரை: 27-41: நெருக்கியும் அழுத்தியும் துன்புறுத்தலாகிய எத்தனையோ பல இடையூறுகளில் இருந்தும் பிழைக்கிறது. காலையில் மலம் கழித்தல், நடுப்பகலில் கடும் பசி, நள்ளிரவில் துயில் ஆகியவற்றின் சார்பான எல்லா துன்பங்களிலிருந்தும் காக்கப்படுகிறது. ஊர்களுக்குப் போக்கு வரவு ஆகியவற்றால் வரும் இடையூறுகளினின்றும் தப்புகிறது. பெண்கள் கருதிறமுடைய கூந்தலையும் சிவந்த வாயினையும் வெள்ளிய பல்லினையும் கொண்டு விளங்குகின்றனர். இப்பெண்களின் நகிலானது கார்கால மயில் கண்டு அடங்குதற்கு ஏதுவாய் மென்மையுடையதாக உள்ளது. அவை ஒன்றையொன்று நெருங்கி உள்ளே திரட்சி எய்தி கச்சு அற்று விழும்படி மேலெழுந்து உள்ளன. ஒளி வீசி, மற்ற அங்கத்திலும் அதிகமாக முற்பட்டுப் பருத்து இருப்பதால் பாரந்தாங்காமல் இடைமெலிந்து வருந்தும்படி எழுச்சி பெற்று உள்ளன. பக்கத்தில் விரிந்து ஈர்க்கு (தென்னை இலையின் மெல்லிய நரம்பு) கூட இடையில் போகக் கூடாதபடி இளமை நயமிக்க நகிலையுடைய இந்தப் பெண்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் கவரப்படும் கொள்ளைக்கும் தப்புகிறது. மயக்கம் கொண்ட உயிர், உலக வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பில் நின்று , அதனைக் கலக்கும் மதயானை போன்று உள்ளத்தில் எழும் பேராசையினின்றும் தப்புகிறது. கல்வி எனப்படும் பலவாகிய கடல்களிலிருந்தும் உயிர் தப்பிப் பிழைக்கிறது. செல்வம் என்ற துன்பத்தில் இருந்தும், வறுமை எனும் நஞ்சிலிருந்தும் சிறு எல்லைகளையுடைய பல்வேறு முயற்சிகளிலும் தப்பி வருகிறது. 26 - 29: Escaped in the oncoming years from the various activities of mother towards the baby such as feeding, bathing, medication, sitting, moving and other countless hardships. Also, escaped from bother of morning ablutions, the midday acute hunger at work; in sleep, trite maneuvers and slumbering nights. All these I escaped. 30- 35: I was saved from the havoc of darts from maiden's eyes, damsels of dark locks, rosy lips, pearly teeth, and peacock gait. Also, I was saved from the sharp piercing glances of women with buxom waist and bra bursting, and irradiant breasts having no space in between for even a rib of palm to enter. 36 - 37: Similar to the wild elephant stirring the muddy waters, people of the world with mad desires run helter-shelter-I was saved from these. 38 - 41: I escaped the perils that arise from the sea of erudition. Escaped from the distressing ills of wealth. Escaped from the age-old strings of poverty, from the petty fetters of many mean customs and modes (After escaping all these.....). கு-ரை: 15 - 41 நெருக்குதல், அழுத்துதல் முதலியன, பலவகையான வசதி இன்மைகளால் விளைவன. காலை மலங்கழித்தல் உடற் புனிதத்திற்கும் சுகத்திற்கும் இன்றியமையாதது. பசியின் கடுமை வெம்மை மிக்க நண்பகலில் தான் தோன்றும், “சேமம் புகினும் யாமத் துறங்கு" என்றவாறு நிசிநித்திரை அவசியமானது. அகப்பற்று கடத்தற்கு அரியது ஆதலின், மாதர் மயலை விரித்துரைத்தார். கண்கவர் வனப்பு, நகிற்குண்மைத் தெளிவு. ஒருங்குதல் அடங்குதல், கார்காலம் மயில் மகிழ்ச்சியுடன் வளமுறும் காலம், சாயல், மென்மை; கண்ணும் நகிலும் நங்கையரின் சிறந்த அங்கங்களாதலின் அவற்றை விதந்தனர். செல்வமானது, பாதுகாப்புக் கவலை முதலிய பல இன்னல்களை விளைத்தலின் 'அல்லல்' என்றார். “புல்வரம்பாய பலதுறை” என்பன, பொழுதுபோக்காகவும், மிக்க பயன் இல்லாதனவாயும் உள்ள சிறு முயற்சித் துறைகள். கல்வி= பல வகைப் படும். வீடு சேர்க்கும் கல்வியே பயனுடைய கல்வி. பிற கல்விகளில் ஈடு பட்டால் அவை தவ முயற்சிக்கு இடையூறாகும். 40. நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்த முண்டாகி முனிவி லாததோர் பொருளது கருதலு மாறு கோடி மாயா சத்திகள் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் ஆறு கோடி மாயா-சத்திகள் nalkuravu ennum tholvidam pizaiththum pul varampaaya palthuRai pizaiththum theyvam enpathoor siththam uNdaaki munivu ilaathathu oor poruL athu karuthalum aaRu koodi maayaa saththikaL 45. வேறு வேறுதம் மாயைக டொடங்கின ஆத்த மானா ரயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் வேறு வேறு தம்மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும் veeRu veeRu tham maayaikaL thodangkina aaththam aanaar ayalavar kuudi naaththikam peesi naaththazumpu eeRinar suRRam enum tholpasu kuzaangkaL paRRi azaiththu pathaRinar perukavum பொ-ரை: 42 - 47: கடவுள் ஒருவன் உளன் என்ற நினைவு ஏற்பட்டு வெறுப்பற்றதொரு பெரிய பொருளை உயிர் நாடுகிறது. மயக்கம் தரவல்ல சட உலக ஆற்றல்கள் ஆறு கோடி என கணக்கிட்டுக் கூறப்படுகின்றன. அவை பல்வேறு திறப்பட்ட சூழ்ச்சிகளைக் காட்டத் தொடங்கி விட்டன. உண்மையான நண்பர்களும், பக்தர்களும் கடவுளை நாடாதிருக்கும்படி நாத்திகத்தைப் போதித்து அதனால் நாவில் தழும்பேறப் பெற்றனர் 42 - 45: There arose, then, the thought of God who is unique and free from hate, when the ever changing sixty millions of delusive thoughts started playing varied guiles of theirs. 46 - 47: Sincere friends and neighbors all gathered around and talked atheism until their tongue scarred. கு-ரை: 42 - 47: ஆறுகோடி மாயா சக்திகள் இன்னவென்பது, "மாமாயை மாயை வைந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓர் ஆறு கோடியில் தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள் ஆமா யலவாந் திரிபுரை யாங்கே" என்னும் திருமந்திரப்பாவால் விளங்கும். மாமாயை - சுத்த மாயை. மாயை - அசுத்த மாயை . வைந்தவம் சுத்த மாயைச் சார்ந்த பொருள்கள். ஈண்டு மத்திமையென்று கொள்ளலாம். வைகரி - செவிப்புலனாம் வாக்கின் மூலம், ஓமாயை- பைசந்தி, உள்ளொளி - சூக்குமை. பேரின்ப நாட்டத்தையே, முனிவிலாத பொருளென்றார். உலகப் பற்றுவிட்டு, மெய்நாட்டத்திற் செல்லுங்கால் உளவாகிய இடையூறுகளைத் தொகுத்து உரைத்தார். உலகியல் நெறியைத் தவிர்தல் கூடாதென்பதே, பக்குவம் வரப்பெறாத நண்பர் ,நொதுமலர், உறவினர் முதலியோரின் கருத்தாதலின், அக்கருத்திற்கு ஏற்ற முயற்சியை அவ்வவர் தம் தம் முறையிற் செய்வராயினர். உயர் ஞான நாட்டமில்லாத கிரியாவான்களும் புறச் சமயத்தாரும் தத்தங் கொள்கை விரித்தல் இயல்பே. 50. விரத மேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிக டத்த மதங்களே யமைவ தாக வரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னுஞ் விரதமே பரம் ஆக, வேதியரும் சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர் சமயவாதிகள் தம் தம் மதங்களே அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் virathamee param aaka veethiyarum saratham aakavee saaththiram kaaddinar samaiya vaathikaL tham tham mathangkaLee amaivathu aaka arRRi malainthanar miNdiya maayaa vaatham ennum பொ-ரை: 48 - 53: உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் பழமையான பற்றுக் காரணமாகக் கூட்டமிட்டுப் பதைபதைத்து ஒவ்வொரு பிறவியிலும் கடவுளை நாடச் செல்லாது தடுக்கிறார்கள். நோன்பிருத்தலே மேலான சாதனம் என்பதை மெய்ப்பித்தற் பொருட்டுக் கிரியை நூல் உணர்ந்த வேதியரும் நூல் பிரமாணங்களைக் காட்டினர். வெவ்வேறு சமய நூல் வல்லவர், தம்தம் சமயங்களில் முடிந்த உண்மை நிரம்பியிருப்பதாக முழங்கி எதிர்த்தனர். 48 - 49: Comparing relatives to cowherds, Saint Maanikkavaachakar says that, such relatives called him brother, father and others and fretted on to divert his mind from the spiritual path. 50 - 51: The vedic scholars emphasized their points, quoting scriptures, that fasting only is the supreme mode to reach His abode. 52 - 53: Sectarians asserted that their respective creed only was perfect and were confused and confounded. கு-ரை: 48 - 53: சுற்றத்தார் - பாசத்தாற் கட்டப்பட்டவராதலின், பசுக்குழாங்களெனவும் பண்டைத் தொடர்புடையராய் வருதலின் 'தொல்' எனவும் கூறினர். சரதம்= மெய்ம்மை . 55. சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் துலோகா யதனெனு மொண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி யதிற்பெரு மாயை யெனப்பல சூழவுந் தப்பா மேதாம் பிடித்தது சலியாத் சண்டமாருதம் சுழித்து அடித்து, ஆஅர்த்து உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலா-பேதத்த கடுவிடம் எய்தி அதில்பெரு மாயை எனைப் பலசூழவும் தப்பாமே, தாம்பிடித்தது சலியாத் saNdamaarutham suziththu adiththu aarththu ulookaayathan enum oNthiRaR paampin kalaapeethaththa kadu vidam eythi athil perumaayai enaippala suuzavum thappaamee thaam pidiththathu saliyaath பொ-ரை: 54 - 59: திண்ணிய மாயா வாதம் என்று சொல்லப்படும் மதம், வேகம் மிக்க சுழற் காற்றுப் போல சுழன்று வீசிய முழக்கமிடுகிறது. உலகாயதம் என்னும் மினுக்கங் காட்டும் வலிய கலை வேறுபாடுகள் உடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து, அதிலுள்ள எத்தனையோ வஞ்சனைகள் தம்மை வந்து சுற்றித் தொடர்ந்தன. அவ்வாறு தொடர்ந்தாலும் சிவபெருமானுடைய அடியார்களோ அவற்றால் நெறி பிறழாது நிற்கின்றனர். தாம் கொண்ட கடவுள் கொள்கையைக் கைவிட்டு விடாது நின்றனர். 54 - 55: The haughty Maaya creed whirled, dashed, and roared-like a furious hurricane (Maaya Vaatham is a doctrine that regards the material universe as an illusion-applied to the doctrines of the advaitins). 56 - 57: (Materialism is compared to a snake) The fierce, bright snake of materialism spat its venom amidst the conflict of sciences. 58 - 59: Thereafter great delusions encircled me and prevented me from escaping and grasped me tight without letting me go. கு-ரை: 54 - 58: அடிகள் காலத்திலே பௌத்தமே மாயாவாதம் எனப்பட்டது என்ப. பிற்காலத்திலே ஏகான்ம வாதத்துள் ஒரு பகுதி மாயாவாதம் எனப்பட்டது. மாயா = மயக்கம், மயல் விளைக்கு மதமென்பது கருத்து. கடவுள், உயிர், தடை முதலியனவெல்லாம் உடன்பாடாகக் கூறி, முடிவில் அவை சூனியம் என்றலின் அது மருட்சி விளைப்பதாயிற்று. உலகாயத மதம், நிலம், நீர், தீ, வளி, என்பவற்றையே உண்மைப் பொருளாகக் கொண்டு, கடவுள், உயிர் முதலியவை இல்லை என்ற கொள்கை உடையது . ஏகான்ம வாதம், ஓர் ஆன்மா தவிர, பிறவெல்லாம் இல்பொருள் எனக் கூறும். உலகாயதம் எல்லாஞ் சடப்பொருளே, சித்துப் பொருள் இல்லை எனக் கூறும் . அதுவும் பூதவாதம், பிராண வாதம், அந்தக்கரணவாதம் எனப் பல திறப்படுதலின், "கலாபேதத்த" என்றார். விடம் அறிவைக் கவர்தல் போல உலகாயதம் அறிவுப் பொருள் இன்மையை வற்புறுத்தலின் 'கடுவிடம்' என்றார். விடம், உடம்பிற்குக் கேடுவிளைப்பது. நாத்திகம், உயிர்க்குக் கேடு விளைப்பதாகலின், 'கடுவிடம்' என்றார். 60. தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுள முருகி யழுதுடல் கம்பித் தாடியு மலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா வன்பிற் தழல் அது கண்ட மெழுகு-அது போலத் தொழுது, உளம் உருகி, அழுது, உடல்கம்பித்து ஆடியும், அலறியும், பாடியும், பரவியும் 'கொடிறும், பேதையும் கொண்டது விடாது' எனும் படியே ஆகி, நல்இடை அறா அன்பின், thazalathu kaNda mezuku athu poolath thozuthu uLam uruki azuthu udal kampiththu aadiyum alaRiyum paadiyum paraviyum kodiRum peethaiyum kaNdathu vidaathu enum padiyee aakinal idaiaRaa anpin 65. பசுமரத் தாணி யறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி யகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக், கடல் என மறுகி அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய்விதிர்த்துச் சகம் பேய், என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை pasu maraththu aaNi aRainthaaR poolak kasivathu peruki kadal ena maRuki akam kuzainththu anukulamaay meyvithirththu sakam peey enRu thammai sirippa naaN athu ozinthu naadavar paziththurai பொ-ரை: 60 - 72: இறைவனை வழிபட்டு நெருப்பினில் பட்ட மெழுகு போல உள்ளம் உருகி குறை உணர்ந்து அழுது தொழுதனர். உடல் நடுக்கமுற, ஆனந்தக் கூத்தாடினர். ஓலமிட்டும் பாடல்களால் வாழ்த்தியும் உடம்பால் வணங்கியும் வழிபட்டனர். இடுக்கியும், மூடனும் தாம் பிடித்ததை நெகிழ விடாமை போலவே உறுதி கொண்டு பயன் கருதாத இடையறாத கடவுட் பக்தியில் திளைத்து நின்றனர். பசிய மரத்தில் அறைந்த ஆணி திண்மையாகப் பற்றி நிற்பது போல உறைத்து நின்றனர். அதே சமயம் உருக்கம் மிகுந்து, கடல் அலை போல அலைவுற்று மனம் வாடி அதற்கேற்ப உடல் அசைவுற்று இருந்தனர். இது கண்டு, உலகர் தம்மைப் பேயரென்று இகழ்ந்து சிரிப்பதைப் பொருட்படுத்தாது வெட்கம் என்பதைத் தவிர்த்து, நாட்டிலுள்ளோர் குறைச் சொற்களை அணியாக ஏற்றுக் கொண்டனர். அவற்றால் மனம் கோணாது யாம் எல்லாவற்றிலும் வல்லேம் என்னும் திறமை உணர்ச்சி இழந்து, சிவஞானம் பெறும் பேரவா மேலிடப் பெற்றனர் . அடைதற்குரிய வீடு பேற்றினையே மேலான வியப்பாகக் கருதினர். 60 - 69: My heart melted in prayer like wax near fire, and I started weeping, trembling, dancing, shouting, singing, praising and gripping firm in grasp as a nail driven into soft wood much like a crocodile and a dunce that (as the saying goes) never let go what they have clutched with pure and ceaseless love. I became firm in faith; tears increasingly trickling and forming as big as a sea, heart softening, body quivering in unison. The world laughed at me as a mad devil. I eschewed shyness taking the ridicule of the people in the town as my ornament. Unperturbed by all such extraordinary acts that seemingly defy common logic, but are characteristic of saintly folks engrossed in Civa worship. 70 - 72: My mind was fully absorbed in the reach to the goal I sought, of deliverance from birth as the supreme miracle. கு-ரை : 59-72 : முதற்கண், உயர்ந்த கொள்கையில் நிலைபேறான உறுதியை வற்புறுத்தினார். உறுதியுற்ற பின்தான் அன்பு நிகழும் . அன்பின் இன்றியமையாமையும் இடைவிடா நிகழ்ச்சியையும் வற்புறுத்துவார், மும்முறை அதன் மெய்ப்பாடுகளை இயம்பியருளினார். உறுதியையும் அன்பினையும் பிணைந்து பிணைந்து கூறுவாராயினர். சலியாப் பிடிப்பொடு, ஆடி அலறி அன்பு செலுத்துதல் சரியை எனவும், பசுமரத்தில் ஆணி அறைந்தாற்போல உறுதிகொண்டு அகங்குழைவது கிரியை எனவும், அறிமால் கொண்டு சார்தல் யோகமெனவுங் கூறுப. 'நல்' என்ற அடைமொழி பயன் கருதாமை குறிக்கும். 70. பூணது வாகக் கோணுத லின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு சாருங் கதியது பரமா வதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியு மற்றோர் தெய்வங் கனவிலு நினையா பூண்-அதுவாகக், கோணுதல் இன்றிச் சதுர் இழந்து, அறி-மால் கொண்டு, சாரும் கதியது பரமா-அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும், பதறியும் மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது puuN athu vaaka kooNuthal inRi sathur izanthu aRimaal kooNdu saarum kathiyathu parama athisayam aaka kaRRaa manam ena kathaRiyum pathaRiyum maRRuoor theyvam kanavilum ninaiyaathu 75. தருபரத் தொருவ னவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிரிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி, அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே, திருவடி இணையைப் பிரிவினை அறியா நிழல்-அதுபோல, முன் பின் ஆகி, முனியாது, அத்திசை aruparaththu oruvan avaniyil vanthu kuruparan aaki aruLiya perumaiyai siRumai enRu ikazaathee thiruvadi iNaiyai piRivinai aRiyaa nizal athu poola munpin aaki muniyaathu aththisai பொ-ரை: 73 - 79: கன்றினையுடைய பசுவானது கன்றினைக் காணாதபோது மனம் அலறிப் பதைத்து நிற்கும். அதுபோல அடியார்களும் அலறி நடுங்கி, பிற தெய்வங்களைச் சொப்பனத்திலும் நினையாது முழு முதற் கடவுளை வழுத்தினர். எட்டுதற்கரிய மேலாம் வீட்டினையுடைய ஒரு பரம்பொருள் குருமூர்த்தியாகி இந்நிலவுலகில் தோன்றி வந்தது. அவ்வாறு ஆட்கொண்டருளிய திருவருளின் பெருந்தன்மையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாமல் அடியவர்கள் மதித்துப் போற்றி வணங்கினர். குருமுதல்வனின் திருவடிகள் இரண்டையும், உருவை விட்டகலாத நிழல் போல், முன் வணங்கியும் பின்தொடர்ந்தும் பிரிவின்றி நின்றார்கள். இடையூறுகள் வந்த போது, வெறுப்புற்றுச் சலியாமல் குருபரன் அருளிய திசை நோக்கி வணங்கினர். 73 - 79: Similar to a recently delivered cow mooing low in pain and bewilderment in search of its missing calf; the soul is not thinking of other gods even in dream. Not despising me as a little thing, the greatness of grace of the Peerless One, came over to the earth as Guru supreme; clinging, like the inseparable shadow, of His sacred twin Feet that goes in front, rear and at every point, I never grew tired, looking towards the Peaceful One at all times. கு-ரை: 73 - 79: கன்றைக் காணப்பெறாத இடத்துக் கதறியழைத்தலும், கன்றிற்கு ஏதும் தீது வந்ததோ என்று எண்ணி மனம் பதறுதலும் ஆவிற்கு நேரும். ஆவின் செய்கைகள் அதன் மனத்திற்கேற்றப் பட்டன. அன்பர் இறைவனைக் காணவெண்ணிக் கதறுதலும், காட்சி கிடைக்குமோ கிடையாதோவென மனம் பதறுதலும் உடையராவர். வீட்டினையே நாடுவார், பிற பயன்களை நாடுதல் கூடாதாகலின், பிற பயனேயன்றி வீடளிக்க இயலாத பிற தெய்வங்களையும் நினைதல் கூடாது என்றார். இறைவன் பொருளைப் பெருமையாகப் பாராட்டாத விடத்து, மெய்யன்பு நிகழாது. இறைவனது அறிவுச் செயல்களின் வசம் தமது அறிவுச் செயல்களை ஒப்பித்து நிற்றலிற் சலித்தல் கூடாது என்பார், 'முன்பின்னாகி முனியாது' என்றார். முன்னிகழ்வது அறிவு, பின்னிகழ்வது செயலென உணர்க. இறைவன் ஆட்கொண்ட செயலை மறைத்தல் கூடாது என்பார், 'அத்திசை' என்றார். 80. யென்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி யன்பெனு மாறு கரையது புரள நன்புல னொன்றி நாதவென் றரற்றி யுரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் என்பு நைந்து உருகி, நெக்கு-நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரை அது புரள, நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக் கர-மலர் மொட்டித்து, இருதயம் மலரக் enpu nainthu uruki nekkunekku eengki anpu enum aaRu karai athu puraLa nanpulan onRi naathaenRu araRRI uraithadu maaRi uroomam silirppa karamalar moddiththu iruthayam malara 85. கண்களி கூர நுண்டுளி யரும்பச் சாயா வன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி கண்களி கூர, நுண்துளி அரும்பச், சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி, வளர்த்தனை-போற்றி ! மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக் கைதரவல்ல கடவுள், போற்றி! kaNkaLi kuura nuNthuLi arumpa saayaa anpinai naaLthoRum thazaippavar thaayee aaki vaLarththanai pooRRi meytharu veethiyan aaki vinaikeda kaithara valla kadavuL pooRRi பொ-ரை: 80 - 87: அன்பால் எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கினர். பக்தியெனும் நதி இருகரையும் புரண்டோட நல்ல ஐம்பொறி அறிவுகள் அடங்கி ஒருமையுறப் பெற்றனர். எம் தலைவனே என்று கூவி அழைத்து, வாய் குழறி, மயிர் புளகங் கொண்டு விம்மி நின்றனர். கைம்மலர் குவித்து அகத்தாமரை எனும் நெஞ்சம் விரிய, கண்கள் மகிழ்ச்சி மிகுதியால் நீர்த்துளிகளைத் தோற்றுவிக்க, உருகி நின்றனர். நிலை தளராத பேரன்பை ஒவ்வொரு நாளும் வளர்ப்பவர்களுடைய அடியார்களின் ஒப்பற்ற தாயாகிப் பாதுகாத்தனை! இறைவா! உனக்கு வணக்கம். 80 - 87: My very bones softened and melted, my heart yearned sighing again and again. The river of love overflowed its banks, and the five senses coalesced and lamented aloud "Oh Lord" then my very words faltered. Hair on the body standing on its end, I clasped my hand in worship like a lotus bud, my heart blossomed and eyes danced in delight, droplets dewing on them, when you as a very Mother reared me daily fostered my unfading love; Glory to Thee. கு-ரை: 80 - 87: 'கரையது புரள' என்றது, அன்பின் நிறைவைக் குறித்தற்கு, ஐம்பொறி அறிவும் இறைவனையே நாடுதல் குறித்தார். மொட்டித்து= மொட்டுப் போலக் குவிந்து, கைகூம்ப,நெஞ்சம் மலர என்று நயமுற உரைத்தமை காண்க. கண்ணீர், இன்ப அன்பைக் குறித்தலின், ஆனந்த உணர்ச்சியின் விளைவாயிற்று. அன்பினை வளர்ப்பாரை, இறைவன் வளர்க்கின்றான். 'தாய்' என்ற சொல்லிற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவன் இறைவனே என்பார், 'தாயே யாகி' என்றார். அன்பர்க்கு வரும் எல்லாவற்றையும், இறைவனே ஏன்று கொள்வதறிக. 90. யாடக மதுரை யரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்றில்லை மன்றினு ளாடி போற்றி யின்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி ஆடக மதுரை அரசே, போற்றி ! கூடல் இலங்கு குருமணி, போற்றி ! தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி ! இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி! மூவா நான்மறை முதல்வா, போற்றி! aadaka mathurai arasee pooRRi kuudal ilanku kurumaNi pooRRi then thilai maRinuL aadi, pooRRi inRu enakku aaramuthu aanaay pooRRi muuvaa naanmaRai muthalva pooRRi 95. சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னா ருருவ விகிர்தா போற்றி கன்னா ருரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி யாவா வென்றனக் கருளாய் போற்றி சேஆர் வெல் கொடிச்சிவனே போற்றி! மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி! கல் நார் உரித்த கனியே, போற்றி! காவாய், கனகக் குன்றே, போற்றி! ஆ! ஆ! என்-தனக்கு அருளாய், போற்றி! seevaar velkodi sivanee pooRRi minnar uruva vikirthaa pooRRi kalnaar uriththa kaniyee pooRRi kaavaay kanaka kunRee pooRRi aa aa en thanakku aruLaay pooRRi பொ-ரை: 88 - 99: மெய்யுணர்ச்சி நல்கும் அறிவனாகி, வடிவு கொண்டு எழுந்தருளி வந்தனை . பண்டை வினையும், வருவினையும் ஒழிய உதவும் ஆற்றலுடைய தெய்வமே! வணக்கம். மதுரையில் விளங்கும் பொன் வண்ண மன்னனே வணக்கம். கூடலம்பதியில் விளங்கும் நன்னிற மாணிக்கமே வணக்கம் . அழகிய தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே வணக்கம். இற்றை நாளில் எனக்குப் பெறுதற்கரிய அமுதமானவனே! வணக்கம். நான்மறைகளை வெளிப்படுத்திய மூப்பில்லாத் தலைவனே வணக்கம். நந்தி வடிவம் பொருந்திய வெற்றிக் கொடியுடைய சிவனே வணக்கம். மின்னலொளி பொருந்திய அழகிய பல்வேறு உருவங்கள் உடையவனே வணக்கம். கல்லில் நார் உரித்தாற் போல நெஞ்சினைப் பண்படுத்தி அதில் அன்பு எழுப்பும் கனிபோல மதுரமானவனே வணக்கம். பொன்மலை போன்றவனே காப்பாற்றுவாயாக, நினக்கு வணக்கம். ஆ! ஐயனே எனக்கு விரைவில் வீடு அருள்வாயாக! நினக்கு வணக்கம். 88 - 89: As a truth-dispensing sage you gave a helping hand to destroy my karma (residual and acquired - Sanchitam and Aahaamiam) Glory to Thee. 90-91: Glory to Thee, Oh Lord of Golden Madurai! Glory, Oh Gem among Gurus that shines in the courts of Koodal (Madurai). 92 - 93: Glory to the Dancer in the hall of Thillai of the south. This day you became my delicious ambrosia. 94 - 97: Glory to Thee who is the source of the four-fold mystic scroll. Glory to Civan whose banner of conquest has the Bull. Glory to Thee whose varied forms gleam as the lightning. Glory to Thee, like peeling fine strings from solid rock, you softened my stony heart by your divine grace (softening such a hard hearted one as I, This is indeed a most difficult task, which you alone can perform). 98: Glory to Thee - Thou hill of gold, guard me. 99: Glory to The - Ah! confer Thy grace on me. கு-ரை: 88 -99: மெய் = மெய்யுணர்ச்சி, சிவஞானம். முற்பிறவிகளிற் செய்த சஞ்சிதம் எனப்படும் தொகைவினையும் வரும் பிறவிக்கு ஏதுவாகிய ஆகாமியம் எனப்படும் எதிர்வினையும் இறைவன் ஆட்கொண்டபோது அவன் அருள் நோக்கால் எரிந்தொழிவன. ஆடகம்= பொன், ஆடிடமெனப் பொருள் கொள்ளுவாரும் உளர். குருமணி = வேதப் பொருளுரைக்கும் ஆசிரிய மாணிக்கம் எனவும் கொள்க. போகம் அளிக்கும் ஆடக அரசாகவும், வீடளிக்கும் குருமணியாகவும் இறைவன் ஆலவாய் அமர்ந்தனன். தென்= அழகிய 'மூவா' என்பதை, முதல்வனுக்கு அடை ஆக்காது “நான் மறைக்கு” அடையாக்கி என்றும் ஒரு தன்மையான நால்வகை வாக்கெனப் பொருள் கொள்ளுவாரும் உளர். உயிரை ஆட்கொள்ளுவதில் முதல்வனே வல்லான் என்பதை நந்திக்கொடி அறிவுறுத்தும். இறைவன் திருவடிவங்கள் ஒளி வண்ணமாதலின் 'மின் ஆர்' என்றார். அவை பலவாதலின் 'விகிர்தா' என்றார். விகிர்தன் =வேறுபாடு உடையவன். நார் = அன்பு: கல், நெஞ்சிற்கு அறிகுறி. கனகம் = பொன். என்றும் ஒரு படித்தாய் மாறிலாதவன் ஆதலின், பொற்குன்றம் என்றார். மாற்றமுடைய தன்னைக் காத்தல் மாறிலாதவனுக்கே இயலும் என்பது கருத்து. தாம் சிவஞானம் பெற்றும், வீடு கூடவில்லை ஆதலின், 'அருளாய்' என்றார். அடிகள் தமது உடலை நீத்து வீடடைதலில் விருப்பமிக்கவர் என்பது தெளிக. 100. படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி யிடரைக் களையு மெந்தாய் போற்றி யீச போற்றி யிறைவ போற்றி தேசப் பளிங்கின் றிரளே போற்றி யரைசே போற்றி யமுதே போற்றி படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி! இடரைக் களையும் எந்தாய், போற்றி ! ஈச, போற்றி ! இறைவ, போற்றி! தேசப் பளிங்கின் திரளே, போற்றி! அரைசே, போற்றி ! அமுதே; போற்றி! padaippaay kaappaay thudaippaay pooRRi idarai kaLaiyum enthaay pooRRi iisa pooRRi iRaiva pooRRi theesa paLingkin thiraLee pooRRi araisee pooRRi amuthee pooRRi பொ-ரை: 100 - 105: எல்லாம் உண்டாக்குபவனே! நிலை நிறுத்துபவனே! ஒடுக்குபவனே! வணக்கம். துன்பத்தை நீக்கும் எங்கள் தந்தையே! வணக்கம், ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே வணக்கம். ஒளிகாலும் படிகப் பிழம்பே வணக்கம். மன்னனே வணக்கம், சாவா மருந்தே வணக்கம். மணம் பொருந்திய புகலிடமாம் திருவடிகளையுடைய நீதியாளனே, வணக்கம். 100: Glory to Thee - who creates, protects and dissolves. 101: Glory to Thee - My father who removes my obstacles. 102: Glory to Thee - You, the Supreme Being and the Lord of the Universe. 103: Glory to Thee - You the cluster of lustrous crystals. 104: Glory to Thee - You King, Glory to Thee - You the (Sportex) ambrosia. 105: Glory to Thee - You unfailing refuge, with fragrant holy Feet. கு-ரை: 100 - 105: 'ஈச' என்பது ஆளுதல் என்று பொருள்படும் வினையடியாகப் பிறந்தமையால் ஆண்டவன் என்ற கருத்தை உணர்த்தும். இறுத்தல்= தங்குதல். இறு என்னும் வினையடியாகப் பிறந்த இறைவன், வியாபகன் என்ற பொருள் குறிப்பது. தேசு = ஒளி, அம், சாரியை. சரணம் = சரணம் புகுதற்குரிய திருவடி, விகிர்தம்= நீதி முறை 105. விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி யாதி போற்றி யறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி விரை சேர் சரண விகிர்தா, போற்றி! வேதி, போற்றி! விமலா, போற்றி! ஆதி, போற்றி! அறிவே, போற்றி! கதியே, போற்றி! கனியே, போற்றி! நதிசேர் செம்சடை நம்பா, போற்றி! virai seer saraNa vikirthaa pooRRi veethi pooRRi vimala pooRRi aathi pooRRi aRivee pooRRi kathiyee pooRRi kaniyee pooRRi nathiseer senjsadai nampaa pooRRi 110. யுடையாய் போற்றி யுணர்வே போற்றி கடையே னடிமை கண்டாய் போற்றி யையா போற்றி யணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி உடையாய், போற்றி! உணர்வே, போற்றி! கடையேன் அடிமை கண்டாய், போற்றி! ஐயா, போற்றி! அணுவே, போற்றி! சைவா, போற்றி! தலைவா போற்றி! குறியே, போற்றி! குணமே, போற்றி! udaiyaay pooRRi uNarvee pooRRi kadaiyeen adimai kaNdaay pooRRi aiya pooRRi aNuvee pooRRi saiva pooRRi thalaivaa pooRRi kuRiyee pooRRi kuNamee pooRRi 115. நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி யேனோர்க் கெளிய விறைவா போற்றி மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை யாழா மேயரு ளரசே போற்றி நெறியே, போற்றி! நினைவே, போற்றி ! வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி! ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி! மூஏழ் சுற்றம் முரண்உறு நரகிடை ஆழாமே அருள் அரசே, போற்றி! neRiyee pooRRi ninaivee pooRRi vaanoorkku ariya marunthee pooRRi eenoorkku eLiya iRaivaa pooRRi muuez suRRam muraN uRu narakidai aazaamee aruL arasee pooRRi பொ-ரை: 106 - 117: அறிவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். முதல்வா வணக்கம். ஞானமே வணக்கம். வீட்டுநெறியே வணக்கம். பழம்போன்ற இன்பனே வணக்கம். கங்கையணிந்த செவ்விய சடையுடைய நம்பெருமானே வணக்கம் . எம்மை உடைமைப் பொருளாய்க் கொண்டவனே வணக்கம். உணர்ச்சியானவனே வணக்கம். கீழ்ப்பட்ட என்னையும் நின்னடியவன் ஆக்கினவனே வணக்கம். ஐயனே வணக்கம். நுண்ணியனே வணக்கம். சைவனே வணக்கம். தலைவனே வணக்கம். அடையாளம் ஆனவனே வணக்கம். பண்பனே வணக்கம். நல்வழியானவனே வணக்கம் . என் நினைவிற் கலந்துள்ளவனே வணக்கம். செருக்குடைய விண்ணவர் அடைதற்கரிய அமுதமே வணக்கம். செருக்கில்லாத பிற அடியாருக்கு எளிவந்தருளும் அரசனே வணக்கம். 106: Glory to Thee - One who knows, Glory to Thee - Spotless Love. 107: Glory to the Primal One! Glory to Thee - Oh! Wisdom Incarnate. 108: Glory to Thee - the goal I seek, Glory to Thee - Oh! Delicious fruit-like one! 109: Glory to Thee - You the receiver of heavenly Ganga in your holy locks! Glory to Thee - you, the heart throb of the devotees! 110: Glory to Thee- Oh! Master, Glory to Thee - Oh! Consciousness. 111: Glory to Thee - you took under servitude even me, this lowliest of men. 112: Glory to Thee - Oh Sire! Glory to Thee - Oh! minute atom. 113: Glory to Thee - Oh Civan! Glory to Thee - Oh Chief! 114: Glory to Thee - Oh You of the formless form! Glory to Thee - Oh Virtue Incarnate! 115: Glory to Thee - that art the right path and the right thoughts. 116: Glory to Thee - Oh You the Rare Medicine, hard to gain even for the celestial gods (Note: Rare medicine is the elixir of immortality). 117: Glory to Thee - Oh Lord! Thou, easily accessible to those other than devas. கு-ரை: 106 - 117: வேதம் = அறிவு, வேதி = அறிவுறுத்துவோன். கதி = வீட்டிற்குச் செல்லும் வழியையும் சென்று அடையும் இடத்தையும் குறிக்கும். அறிவு விழைவுடன் கலந்த காலை, உணர்ச்சி எனப்படும். சைவன், சிவ சம்பந்தம் உடையான். சிவம்= மங்கலம். மங்கலத்தைச் செய்வோன், சைவனாவன். 120. தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி யத்தா போற்றி யரனே போற்றி யுரையுணர் விறந்த வொருவ போற்றி தோழா, போற்றி! துணைவா, போற்றி ! வாழ்வே, போற்றி! என் - வைப்பே, போற்றி ! முத்தா, போற்றி ! முதல்வா, போற்றி ! அத்தா, போற்றி ! அரனே, போற்றி ! உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி! thoozaa pooRRi thuNaivaa pooRRi vaazvee pooRRi en vaippee pooRRi muthaa pooRRi muthalva pooRRi aththaa pooRRi aranee pooRRi urai uNarvu iRantha oruva pooRRi 125 விரிகட லுலகின் விளைவே போற்றி யருமையி லெளிய வழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி யென்னையு மொருவ னாக்கி யிருங்கழற் விரிகடல் உலகின் விளைவே, போற்றி ! அருமையில் எளிய அழகே, போற்றி ! கருமுகில் ஆகிய கண்ணே , போற்றி ! மன்னிய திருவருள் மலையே, போற்றி! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல் virikadal ulakin viLaivee pooRRi arumaiyil eLiya azakee pooRRi karumukil aakiya kaNNee pooRRi manniya thiru aruL malaiyee pooRRi ennaiyum oruvan aakki irungkazal 130. சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா வானந்த வாரி போற்றி யழிவது மாவதுங் கடந்தாய் போற்றி முழுவது மிறந்த முதல்வா போற்றி சென்னியில் வைத்த சேவக, போற்றி ! தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி ! அழிவு இலா ஆனந்த-வாரி, போற்றி! அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி! முழுவதும் இறந்த முதல்வா, போற்றி! senniyil vaiththa seevaka pooRRi thozuthakai thunpam thudaippaay pooRRi azivu ilaa aanathavaari pooRRi azivathum aavathum kadanthaay pooRRi muzuvathum iRantha muthalva pooRRi பொ-ரை: 118 - 136: இருபத்தோரு தலைமுறையில் வருகிற சுற்றத்தார் அல்லது மூவழியில் வரும் ஏழு தலைமுறை சுற்றத்தார் மாறுபட்ட நரகங்களில் அழுந்தி வருந்தாமே ஆட்கொள்ளும் வேந்தனே வணக்கம். நண்பனே வணக்கம். துணை புரிபவனே வணக்கம். இன்ப வாழ்க்கையானவனே வணக்கம். ஈட்டி வைத்த நிதியம் ஆனவனே வணக்கம். வீடாயவனே வணக்கம். தம்வயம் உடையவனே வணக்கம். அப்பனே வணக்கம், பாசத்தை அழிப்பவனே வணக்கம். மொழியையும் மனவுணர்ச்சியும் கடந்த ஒப்பற்றவனே வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே வணக்கம். அரிய பொருளாயிருந்தும் அன்பர்க்கு எளிதின் வந்தருளும் அழகனே வணக்கம். கார்மேகம் போல, அருள் புரிகின்ற கண் போன்றவனே வணக்கம். (தகுதியற்ற) அடியேனையும் அன்பருள் ஒருவனாக்கிப் பெருமையுடைய திருவடிகளை அடியேன் தலைமீது வைத்தருளிய பாதுகாப்பாளனே வணக்கம். கும்பிட்ட கையினரின் துயர் களைவோனே வணக்கம், கேடில்லாத இன்பக் கடலே வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் இல்லானே வணக்கம். எல்லாவற்றையும் கடந்து அப்பாற்பட்டவனே வணக்கம். மான்போன்ற பார்வையுடைய உமையம்மையின் கணவனே வணக்கம். மேலுலகங்களிலுள்ள அடக்கமுடைய விண்ணவரின் தாயானவனே வணக்கம். 118 - 119: Glory to Thee! Oh Lord, pray grant us shelter; save me and my kinsmen from the deluge of infernal hell. 120: Glory to Thee - Oh! My companion, Glory to Thee - Oh! My Helping Hand. 121: Glory to Thee - Oh Bliss of my life! Glory to Thee - My Treasure Trove! 122: Glory to Thee - Oh You, free from the three kinds of bondage. Glory to Thee, the Primal Lord. 123: Glory to Thee - My Father! Glory to Thee - My Lord Civan. 124: Glory to Thee - Thou, the Peerless One! Who transcends speech and sense perception. 125: Glory to Thee - Thou, the Ultimate Reward of the souls in this wide sea-girt world! 126: Glory to Thee - Thou the Beauteous and the Rare yet easy of access to Thy devotees, pray shelter me. 127: Glory to Thee - Thou, the Bounteous, much like dark rain clouds. 128: Glory to Thee - the Eternal Mountain of holy grace. 129 - 130: Glory to Thee- You the Protector, made even this unworthy me as a worthy man among Your savants, placing Your two holy Feet on my head. 131: Glory to Thee - Thou that wipes off all sorrow of those who worship Thee with folded hands! 132: Glory to Thee - Oh! Imperishable sea of bliss. 133: Glory to Thee - Oh! Thou that art beyond beginning and dissolution. 134: Glory to Thee - Oh! Thou the First One, that hath surpassed everything else 135: Glory to Thee - Oh! Thou, Consort of Goddess Uma, who has fawnlike eyes. 136: Glory to Thee - Oh! Thou, that art the Mother of all sky-borne gods in the heavenly abode. கு-ரை: 118 - 136; சிவஞானிகளின் நல்லியல்பினை, இருபத்தொரு தலைமுறைச் சுற்றத்தாருடையராய் நரகம் புகார் என்பது ஒரு கருத்து. தந்தை வழி, தாய் வழி, தன் வழியென்ற மூவழியிலுள்ள ஏழு தலைமுறையார் என்பதும் உண்டு. மூவழிச் சுற்றத்தார்க்கும் அருள்க, அரசனே என்று வேண்டுவதாகப் பொருள் கொள்ளுவாரும் உளர். தோழன், ஒத்த உணர்ச்சி உடையவன். துணைவன் உடன் உதவி செய்பவன். வைப்பு= சேமித்து வைத்த நிதியம். 'எய்ப்பினில் வைப்பு' என்று வந்ததும் ஓர்க. முத்தா= பாச நீக்கமுடையவனே. எவற்றிற்கும் முதல்வனாய்த் தனக்கு ஒரு முதல்வனிலான், தம் வயமுடையன் என்று அறிக. மனித வாழ்வின் பயன், இறைவழிபாடே. உலகு ஓங்கி வளர்தற்குக் காரணமானவன் என்று பொருள் கோடலும் உண்டு. உள்ளங்கவர் வடிவினன் ஆதலின், 'அழகே' என்றார். கருமுகிலின் நீர் நிலையாதது. இறைவன் திருவருள், நிலைத்த தன்மையது. அமரர், அடக்கமுடையவர். 135. மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி மான் நேர் நோக்கி மணாளா, போற்றி ! வானகத்து அமரர் தாயே, போற்றி! பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி ! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி ! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! maanneer nookki maNaaLaa pooRRi vaanakaththu amarar thaayee pooRRi paaridai ainthaay paranthaay pooRRi neeridai naankaay nikaznthaay pooRRi thiiyidai muunRaay thikaznthaay pooRRi பொ-ரை: 137 - 141: நிலமாகிய பூதத்தின் கண் ஐந்து தன்மையனாய் விரிந்தவனே வணக்கம். நீரின் கண் நான்கு தன்மையனாய் விளங்கினவனே வணக்கம், நெருப்பின் கண் மூன்று தன்மையனாய்த் தெரிபவனே வணக்கம். காற்றின் கண் இரண்டு தன்மையனாய் விரும்பி நின்றாயே வணக்கம், வானின் கண் ஒரு தன்மையோடு தோன்றியவனே வணக்கம். 137: Glory to Thee - Oh! Thou, that pervadeth the earth as all the five elements (smell, taste, form, sense of touch and sound). 138: Glory to Thee - Oh! Thou, manifest in water as four elemental aspects (taste, form, sense of touch and sound). 139: Glory to Thee - Oh! Thou, shining in fire as three elemental aspects (form, sense of touch and sound). 140: Glory to Thee - Oh! Thou, delighting in air as two elemental aspects (sense of touch and sound). 141: Glory to Thee - Oh! Thou, that art present in ether as the One (sound). கு-ரை: 137 - 141: போற்றி, போற்றுதல் என்ற பொருளில் வணக்கத்தைக் குறிக்கும் 'காக்க' என்ற பொருளுடைய வியங்கோளுமாம். ஆதலின், இருவகையாகவும் பொருள் கொள்ளப்பட்டது. நாற்றம் சுவை, ஒளி, ஊறு, ஓசை என்பன ஐம்பூதத்தின் முறையே உள்ள தன்மைகள். நிலத்தில், பிற நாற்பூதமும் கலந்திருத்தலின், ஐந்து தன்மைகள் அதனில் காணப்படும். அவ்வாறே பிற பூதங்களுக்கும் கொள்க. 140. வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி யளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலு நாயேற் கருளினை போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி ! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி! அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி ! கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி! நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி! vaLiyidai iraNdaay makiznthaay pooRRi veLiyidai onRaay viLainththaay pooRRi aLipavar uLLaththu amuthee pooRRi kanavilum theevarkku ariyaay pooRRi nanavilum naayeeRku aruLinai pooRRi 145. யிடை மரு துறையு மெந்தாய் போற்றி சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி யாரூ ரமர்ந்த வரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி யண்ணா மலையெம் அண்ணா போற்றி இடை மருது உறையும், எந்தாய் போற்றி ! சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி ! சீர்ஆர் திருவையாறா, போற்றி! அண்ணாமலை எம் அண்ணா, போற்றி ! idaimaruthu uRaiyum enthaay pooRRi sadaiyidai kangkai thariththaay pooRRi aaruur amarntha arasee pooRRi seeraar thiruvai yaaRaa pooRRi aNNaa malai em aNNaa pooRRi 150. கண்ணா ரமுதக் கடலே போற்றி யேகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி கண் ஆர் அமுதக்கடலே, போற்றி! ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி ! பாகம் பெண்உரு ஆனாய், போற்றி! பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! kaNNaar amutha kadalee pooRRi eekam paththu uRai enthaay pooRRi paakam peN uru aanaai pooRRi paraayththuRai meeviya paranee pooRRi siraapaLLi meeviya sivanee pooRRi பொ-ரை: 142 - 156: உருகுபவர் உள்ளத்தே அமுதமாயுள்ளவனே வணக்கம் . உருகாத் தேவர்களுக்கு சொப்பனத்திலும் காண்பதற்கு அரியவனே வணக்கம். சாக்கிரமாகிய நினைவாலும் நாய் போன்ற எனக்கு அருள் புரிந்தவனே வணக்கம். திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் அப்பனே காத்தருளுக. தனது சடையில் கங்கையை ஏற்று அமைத்துக் கொண்டவனே காத்தருளுக. திருவாரூரில் தங்கி அருளிய மன்னனே காத்தருளுக! செம்மை பொருந்திய திருவையாறு உடையவனே காக்க . திருவண்ணாமலை உறையும் எமது மேலோனே காத்தருளுக. கண்ணில் நிறைந்த இன்பக் காட்சிக் கடலனையவனே காத்தருளுக. திருஏகாம்பரமாகிய காஞ்சிப்பதியில் வீற்றிருக்கும் எங்கள் தந்தையே காக்க. அவ்விடத்தில் ஒரு பாகத்தில் பெண் வடிவம் கொண்டவனே காத்தருளுக. திருச்சிராப்பள்ளி சிவபெருமானே காக்க. உன்னைத் தவிர வேறு ஆதரவு யாதுமிலாதேன், என்னைக் காத்தருளுக. திருக்குற்றாலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமானே காத்தருளுக. 142: Glory to Thee - Oh! Thou, that art ambrosia for those whose minds melt in reverence. 143: Glory to Thee - Oh! Thou that art difficult even in dreams for celestial gods to perceive. 144: Glory to Thee - Oh! Thou, that graced me, this cur, even in my wakeful state. 145: Glory to Thee - Oh! My Father who abides in Thiru-Idai-Maruthoor. 146: Glory to Thee - Oh! Thou, the Wearer of Goddess Ganga at Thy hair lock. 147: Glory to Thee - Oh! Thou, that abideth in Thiru Aaroor. 148: Glory to Thee - Oh! Thou the Lord of the bounteous Thiru-Iyaaru. 149: Glory to Thee - Oh! Thou, the pristine Lord of Thiru-Annaamalai. 150: Glory to Thee - Oh! The Sea of Ambrosia delighting the eye. 151: Glory to Thee - Oh! My Father abiding in Thiru-Ekambam. 152: Glory to Thee - Oh! Thou that holdeth a female form in your physical frame. 153: Glory to Thee - Oh! Thou that art fond of Thirup-Paraaith-Thurai. 154: Glory to Thee - Oh! Thou that art fond of Chirappalli. 155: Glory to Thee - Oh! I know not here any other desire. 156: Glory to Thee - Oh! Thou, the dancing Lord of Kuttalam. கு-ரை: 142 - 156: தேவர் பதவி, போக நோக்குடையது ஆகலின், இறை நினைவு அரிதாம். அதனால் அவன் கனவிலும் தோன்றான். நினைவிலுள்ளது, கனவில் தோன்றலாம். நினைவே இல்லாதபோது கனவிலும் தோற்றம் இராது. தனக்கு அருள்புரிந்தமை, வெளிப்படையாதலின், 'நனவிலும்' என்றார் . அங்ஙனம் இறை அருள் செய்யப்பெறுந் தகுதி தமக்கின்மை தெரிவித்தல் அடிகளியல்பு. திருவிடைமருதூர் முதலியன திருவாசகத்தின் வைப்புத்தலங்களாம். பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்திலே, கூத்தர் கோயில் என்பது சித்திர சபை அடிவாரத்தில் உள்ளது. அதன்கண் சிவலிங்க வடிவமே உள்ளது. 155. மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் மெந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி மற்று ஓர்பற்று இங்கு அறியேன், போற்றி! குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி ! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! maRRu oor paRRu ingku aRiyeen pooRRi kuRRaalaththu em kuuththa pooRRi kookazi meeviya koovee pooRRi iingkooy malai em enthaay pooRRi paangku aar pazanaththu azakaa pooRRi பொ-ரை: 157 - 159: திருவாவடுதுறையில் அன்பரை ஆட்கொள்ளப் பொருந்திய அரசே வணக்கம். ஈங்கோய் மலையில் எழுந்தருளிய எங்கள் அப்பனே வணக்கம். வனப்பு மிகுந்த திருப்பழனத்தில் இருக்கும் அழகனே வணக்கம். 157: Glory to Thee - Oh Lord, that gladly abideth in Thirup-Perun-Thurai. 158: Glory to Thee - You, my father in Eengoi hills. 159: Glory to Thee-Oh! Thou, The Handsome One of the beauteous Thirup-Palanam. கு-ரை: 157 - 159: கோகழி, பெருந் துறையையுங் குறிக்கலாம். ஈங்கோய்மலை, கீர்த்தித் திருவகவலிலும் கூறப்பட்டது. பாங்கு - அழகு 160. கடம்பூர் மேவிய விடங்கா போற்றி யடைந்தவர்க் கருளு மப்பா போற்றி யித்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய வரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி! அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி! இத்தி தன்னின்கீழ் இரு-மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே, போற்றி! தென்நாடு உடைய சிவனே, போற்றி! kadampuur meeviya vidangkaa pooRRi adainthavarkku aruLum appaa pooRRi iththi thannin kiiz iru muuvarkku aththikku aruLiya arasee pooRRi thennaadu udaiya sivanee pooRRi 165. யெந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி யேனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி யருளிட வேண்டு மம்மான் போற்றி யிருள்கெட வருளு மிறைவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! ஏனக்-குருளைக்கு அருளினை, போற்றி! மானக் கயிலை மலையாய், போற்றி ! அருளிட வேண்டும் அம்மான், போற்றி! இருள் கெட அருளும் இறைவா, போற்றி! ennaaddavarkkum iRaiva pooRRi eenak kuruLaikku aruLinai pooRRi maanak kayilai malaiyaay pooRRi aruLida veeNdum ammaan pooRRi iruL keda aruLum iRaivaa pooRRi 170. தளர்ந்தே னடியேன் றமியேன் போற்றி களங்கொளக் கருத வருளாய் போற்றி யஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி ! களம்கொளக் கருத அருளாய், போற்றி! ' அஞ்சேல்' என்று இங்கு அருளாய் போற்றி ! நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி ! அத்தா போற்றி! ஐயா போற்றி! thaLarntheen adiyeen thamiyeen pooRRi kaLam koLa karutha aruLaay pooRRi anjseel enRu ingku aruLaay pooRRi nanjsee amuthaay nayanthaay pooRRi aththaa pooRRi aiyaa pooRRi பொ-ரை: 160 - 176: திருக்கடம்பூரில் விளங்கிய வீரனே வணக்கம். தன்னை அன்பாற் சேர்ந்தார்க்குப் பேரருள் புரியும் தந்தையே வணக்கம். கல்லால மரத்தின் கீழ்ப் பட்டமங்கையில் இயக்கிகள் அறுவருக்கும், கடம்பவனத்தில் வெள்ளானைக்கும் அருள்புரிந்த வேந்தே வணக்கம். தென் தமிழ் நாட்டினைத் தனது பழமையான பதியாக உடைய சிவபெருமானே வணக்கம், எந்த நாட்டினருக்கும் வழிபடு தெய்வமானவனே வணக்கம். பன்றிக் குட்டிக்குப் பாலூட்டி வளர்த்து அருளியவனே வணக்கம். பெருமை பொருந்திய கயிலை மலையை இடமாகக் கொண்டவனே வணக்கம். விரைவில் வீடு அருள் புரிந்திட வேண்டுகிறேன் அம்மானே வணக்கம் . உனக்கு அடிமைப்பட்டவனாகிய தனியேன் தளர்ச்சியுற்றேன். காத்தருளுக. நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள் புரிவாய், நினக்கு வணக்கம். இவ்விடத்திலே அஞ்சாதேயென்று ஊக்கம் கொடுத்தருள்வாயாக. பெருமானே வணக்கம். விடத்தையே சாவா மருந்தாக விரும்பி உட்கொண்டாய் காத்திடுக. அப்பனே வணக்கம். தலைவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். அன்பனே வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே வணக்கம். 160: Glory to Thee - Oh Thou, gladly manifest as the uncreated form in Kadamboor. 161: Glory to Thee - Oh! Father who bestows grace on those who take refuge in you. 162 - 163: Glory to Thee- Oh King! You have showered benign grace on the six goddesses of virtue under the white fig tree and on the white elephant in Kadamba forest. 164 - 165: Glory to Thee - Oh Lord Civa who ruled over and owned the southern land of India; Glory to Thee that art the only God for all people in every land. 166: Glory to Thee - Oh! Lord, that bestowed grace on to a litter of young wild hogs and suckled them fondly by acting like a mother to the young ones. 167: Glory to Thee - Oh! Thou, that resideth in the glorious Mount Kailas ( Kailash Hill in Himalayaas) 168: Glory to Thee - Oh! Father, grant me grace and liberation. 169: Glory to Thee - Oh God! that showers grace in order to dispel my darkness of primordial bondage 170: Glory to Thee, Oh Lord, I am Your slave languishing all alone. 171: Glory to Thee - Oh God! Grant me grace that I may gain stability of mind and contemplate on You always 172: Glory to Thee - Oh God! say to me "Fear Not" and bestow grace on me here and now. 173: Glory to Thee - Oh! Lord that delightfully consumed poison as very ambrosia. 174: Glory to Thee - You Sire, Oh Father. Glory to Thee - Oh! My Teacher. 175: Glory to Thee - Oh! You Eternal One: Glory to Thee - Oh! You the immaculate one 176: Glory to Thee -Oh! You chief headman, Glory to Thee - Oh! You the source of creation கு-ரை: 160 - 176: விடங்கன்= வீரன். பிழை செய்தாலும் தன்னை வந்தடைந்தால் பிழையை மன்னித்து அருள்புரிபவன் என்பது கருத்து. வெள்ளை யானை சாபந்தீர்ந்த படலம், திருவிளையாடற்புராணத்துள் காண்க. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்ததும் அப்புராணத்துள் காண்க. தென்னாட்டிலே சிவ வணக்கத் தோற்றங் குறித்தவாறு. எந்த நாட்டில் எத்தெய்வம் வழிபடப்படினும், அத்தெய்வமாய் நிற்போன் சிவன் என அறிக. 'பத்தா' என்பதற்குப் பதியே, தலைவனே என்று பொருள் கோடலும் உண்டு. 175. நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி யரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி நித்தா, போற்றி ! நிமலா, போற்றி ! பத்தா, போற்றி! பவனே, போற்றி ! பெரியாய், போற்றி ! பிரானே போற்றி! அரியாய், போற்றி! அமலா, போற்றி! மறையோர் கோல நெறியே, போற்றி! niththaa pooRRi nimalaa pooRRi paththaa pooRRi pavanee pooRRi periyaay pooRRi piraanee pooRRi ariyaay pooRRi amalaa pooRRi maRaiyoor koola neRiyee pooRRi பொ-ரை: 177 - 182: எப்பொருளிலும் பெரிய பிரமமே வணக்கம். வள்ளலே வணக்கம். அரியவனே வணக்கம். பாசமிலானே வணக்கம். அந்தணர் வடிவோடு வந்த நீதியே வணக்கம். என்னையாட் கொண்டது நீதியோ, யான் அதன் சிறப்பைத் தாங்க மாட்டேன். நீ காத்தருளுக. எனக்குச் சுற்றமானவனே வணக்கம். என் உயிர்க்குயிரே வணக்கம். சிறந்த பொருளே வணக்கம். மங்கலப் பொருளே வணக்கம். 177: Glory to Thee - Oh! You, greater than everything else. Glory to Thee - Oh! You the Liege Lord. 178: Glory to Thee - Oh! You rare one; Glory to Thee - Oh! You the immaculate one. 179: Glory to Thee - Oh! You the path of virtue who came in the guise of a vedic saint. 180: Glory to Thee - Oh! Is it just for you to leave me after accepting me as your vassal before? I can no longer endure this situation. 181: Glory to Thee - Oh! You my kinsmen; glory to you. Oh! You my very life of every life. 182: Glory to Thee Oh! You the Meritorious One, Glory to Thee - Oh! You the pure wisdom (Civam) கு-ரை: 177 - 182: நீதியாளனே, முறையாக அருள் பெறத் தகுதிவரப் பெறாத என்னையும் ஆண்டது முறையோ, அருள் புரிந்த சிறப்பை ஆற்ற வல்லேன் அல்லேன் என்றார். சிறவு =சிறப்பு; வீடுமாம். 180. முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி முறையோ? தரியேன்! முதல்வா போற்றி ! உறவே போற்றி! உயிரே, போற்றி! சிறவே போற்றி !சிவமே, போற்றி! மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி! பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி! muRaiyoo thariyeen muthalva pooRRi uRavee pooRRi uyiree pooRRi siRavee pooRRi sivamee pooRRi manjsaa pooRRi maNaaLaa pooRRi panjsu eer adiyaaL pangkaa pooRRi 185. அலந்தே னாயே னடியேன் போற்றி இலங்கு சுடரெம் மீசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி ! இலங்குசுடர் எம்ஈசா, போற்றி! கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி! குவைப்பதி மலிந்த கோவே, போற்றி! மலை நாடு உடைய மன்னே, போற்றி! alantheen naayeen adiyeen pooRRi ilangku sudar em iisa pooRRi kavaiththalai meeviya kaNNee pooRRi kuvaippathi malintha koovee pooRRi malainaadu udaiya mannee pooRRi 190. கலையா ரரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமு முருவமு மானாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி கலை ஆர் அரிகேசரியாய், போற்றி ! திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி! பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி ! அருவமும் உருவமும் ஆனாய், போற்றி! மருவிய கருணை மலையே போற்றி ! kalaiyaar arikee sariyaay pooRRi thirukkazuk kunRil selvaa pooRRi poruppu amar puuvaNaththu aranee pooRRi aruvamum uruvamum aanaay pooRRi maruviya karuNai malaiyee pooRRi பொ-ரை: 183 - 196: அழகனே வணக்கம். மணவாளனே வணக்கம். பஞ்சு போல் மெல்லிய அழகிய சிற்றடியை உடைய அம்மை பாகனே வணக்கம். உடல் ஒழித்து வீடு எப்போதருள்வாய் என்றெண்ணி ஏக்கமுற்றேன். அடிமையாகிய நாயேன் தன்னைக் காத்திடுக. விளக்கமிக்க பெருஞ்சோதியான எங்கள் ஆண்டவனே வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே வணக்கம். குவைப்பதி எனும் ஊரில் மகிழ்ந்திருந்த மன்னனே வணக்கம். மலை நாட்டினையுடைய வேந்தனே வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரியெனும் ஊரினை உடையாய் வணக்கம் . திருக்கழுக்குன்றத்தில் மேவிய ஞானச் செல்வனே வணக்கம். திருப்பூவணத்திலே குன்றிலே அமர்ந்த ஒழுக்கக் கடவுளே வணக்கம். அருவமாய் நின்றும் உருவத் திருமேனி கொண்டவனே வணக்கம். அருள் நிறைந்த மலையே வணக்கம். நான்காம் நிலையைக் கடந்த பேரறிவே வணக்கம். அறிதற்கரிதாய் சிவஞானத்தால் தெளியப்பட்ட பொருளே வணக்கம். 183: Glory to Thee - You the white cloud; Glory to Thee - You that adorned yourself in wedding costume. 184: Glory to Thee - Oh! You the concorporate of Uma whose holy Feet glisten with crimson red (by application of henna lotion). 185: Glory to Thee - Oh! I this cur of a slave, I am in great distress. 186: Glory to Thee - Oh! You my preceptor of glittering radiant light. 187 - 192: (Lines 187 to 192 Maanikkavaachakar mentions a few ancient temple towns, where Lord Civan bestowed His grace, some of which could not be traced now). Glory to Thee - Oh! You my very eyes, willingly residing in Kaviththalai. Glory to Thee - Oh King! Who reside in Kuvaippathi. Glory to Thee - Oh King! Who owns the mountainous country. Glory to Thee - Oh! You whose abode is Arikesari where men of wisdom reside Glory to Thee - Oh! You the wealth of Thiruk-Kazhuk-Kundram, Glory to Thee - Oh! You Civan abiding in Thirup-Poovanam situated amidst hills. 193: Glory to Thee - You the form and the formless. 194: Glory to Thee - Oh! You inseparably united to the soul of your savants and showering on them your mountain of grace. 195: Glory to Thee - Oh! Effulgence who have transcended even the fourth (Thuriyam) state. (Thuriyam - The fourth state of the soul in which the soul is in the navel with the 'Piraanam' and is cognizant of itself alone). 196: Glory to Thee - Oh! Enlightenment known only by 'Civagnaanam' (Transcending man's ordinary intelligence). கு-ரை: 183 - 196: பஞ்சு என்பதற்குச் செம்பஞ்சுக் குழம்பூட்டிய எனலாம். குவைப்பதி என்பதற்குக் குகைகளாகிய இடங்கள் எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். துரியம் மூன்றவத்தைக்கும் அப்பாற்பட்ட நிலை. அதனையே உபநிடத முதலிய நூல்களில் முடிவான நிலையாகக் கூறுவர். அதற்கும் அப்பாற்பட்டவன் முதல்வன் என்பது சித்தாந்தக் கருத்து. 195. துரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி துரியமும் இறந்த சுடரே, போற்றி ! தெரிவு-அரிது ஆகிய தெளிவே, போற்றி ! தோளா முத்தச் சுடரே, போற்றி! ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி ! ஆரா-அமுதே அருளே, போற்றி! thuriyamum iRantha sudaree pooRRi therivu arithu aakiya theLivee pooRRi thooLaa muththa sudaree pooRRi aaL aanavarkadku anpaa pooRRi aaraa amuthee aruLee pooRRi 200. பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி யறுகின் றாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி ! தாளி அறுகின் தாராய், போற்றி ! நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி ! சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி! சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி ! peer aayiram udai pemmaan pooRRi thaaLi aRukin thaaraay pooRRi niiL oLi aakiya niruththaa pooRRi santhana saanthin sundara pooRRi sinthanaikku ariya sivamee pooRRi 205. மந்திர மாமலை மேயாய் போற்றி யெந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி மந்திர மாமலை மேயாய், போற்றி ! எம்-தமை உய்யக் கொள்வாய் போற்றி! புலிமுலை புல்வாய்க்கு அருளினை, போற்றி! அலைகடல் மீமிசை நடந்தாய், போற்றி ! கரும்குருவிக்கு அன்று அருளினை போற்றி! manthira maamalai meeyaay pooRRi emthamai uyya koLvaay pooRRi pulimulai pulvaaykku aruLinai pooRRi alaikadal miimisai nadanthaay pooRRi karungkuruvikku anRu aruLinai pooRRi 210. யிரும்புலன் புலர விசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீ றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி ! படி உறப் பயின்ற பாவக, போற்றி ! அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி! நரகொடு, சுவர்க்கம் நால்-நிலம், புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி! irumpulan pulara isainthanai pooRRi padiyuRa payinRa paavaka pooRRi adiyoodu nadu iiRu aanaay pooRRi narakoodu suvarkkam naanilam pukaamal parakathi paaNdiyaRku aruLinai pooRRi பொ-ரை: 197 - 214: துளைக்கப்படாத தூய முத்தாகிய ஒளியே வணக்கம், ஆட்பட்டவர்க்கு ஆதரவானவனே வணக்கம். தெவிட்டாத அமுதமே, அளவிடப்படாத அருளே வணக்கம். ஆயிரம் பேருடைய அண்ணலே வணக்கம். தாளிக்கொடியின் தழையும், அருகம் புல்லும் கலந்து கட்டிய மாலை அணிந்தவனே வணக்கம். நெடிய சோதியாய கூத்தனே வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே வணக்கம். அடியேங்களாகிய எங்களை உய்யும்படி ஆட்கொள்பவனே வணக்கம் . புலியின் பாலானது மானிற்குப் பயன்படும்படி அருளினவனே வணக்கம். அலையுடைய கடலின் மேலிடத்தே நடந்தவனே வணக்கம். கரிக்குருவிக்குப் பண்டைக் காலத்தே அருள் புரிந்தவனே வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்று ஒழியும்படி என் உள்ளத்தில் பொருந்தி அருளினாய்; உனக்கு வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்றம் உடையவனே வணக்கம் . முதலும் நடுவும் முடிவும் ஆனவனே வணக்கம். நரகம் விண்ணுலகம் நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி மேலான வீட்டுலகைப் பாண்டியனுக்கு நல்கி அருளினாய்; உனக்கு வணக்கம். 197: Glory to Thee - Oh! You radiance of unpierced pearl. 198: Glory to Thee - Oh! You that art dear to those who have become your vassal 199: Glory to Thee - Oh! You unsatiating ambrosia, Oh! You embodiment of divine grace. 200: Glory to Thee - Oh! Lord bearer of thousand names (though you are nameless), 201: Glory to Thee - Oh! You wearer of Thali and 'Aruhu' garland (Thali is a vine and Aruhu is a fine grass). 202: Glory to Thee - Oh! You tall pillar of effulgence the flame of which wafts about as in a dancing mode. 203: Glory to Thee -Oh! You handsome one smeared over with holy ash and sandal paste. 204: Glory to Thee - Oh! You bliss - rare to be conceived by mind. 205: Glory to Thee - Oh! You who delightfully reside in the Mahendra Mount from where you revealed the scriptures four. 206: Glory to Thee - Oh! Lord, pray take us unto Thee and redeem (us). 207: Glory to Thee - Oh! You who graced a tiger and made it suckle an orphaned deer. 208: Glory to Thee - Oh! You who had trodden upon the billowing sea. 209: Glory to Thee - Oh! You graced the blackbird in the days of yore. 210: Glory to Thee - Oh! Lord that controlled the five senses making them shrivel, and let the saints witness this. 211: Glory to Thee - Oh! You who have manifested in the earth in different forms. 212: Glory to Thee - Oh! You who are the beginning, the middle and the end. 213 - 214: Glory to Thee - Oh! Glory to You who without letting the Paandiyan King enter heaven or hell or come back into this world (of four divisions), graciously, bestowed Muththi on him. கு-ரை: 197 - 214: முத்தம்- முதன்மையான மணி என்று பொருள். 'தோளா' - குற்றமற்ற என்ற கருத்தைக் குறிக்கும். 'ஆரா' என்பதை அருளே என்பதோடும் சேர்ப்பதுண்டு. 'ஆயிரம்' என்பதற்குப் பல என்று பொருள் கொள்வாரும் உளர். அன்பர் சாத்திய பச்சிலை எதுவும் இறைவர்க்காம் என்பது கருத்து. 'தாளியறுகு' என்பது, அறுகின் ஒருவகை என்பாரும் உளர். நீளொளியாய் நின்று அயனரிகளைக் கூத்தாட்டுவித்தவன் ஆதல் பற்றி, 'நிருத்தா' என்றார் என்பாரும் உளர். மகேந்திரத்தை 'மந்திரமா மலை' என்று முன்பு, கீர்த்தித் திருவகவலிற் கூறியதும் காண்க. புலிநிறைந்த காடொன்றிலே, பெண் மான் ஒன்று குட்டியை ஈன்று, ஒரு புதரடியில் விட்டு நீர் பருகச் சென்ற இடத்தே வேடன் அம்பால் இறந்தபோது குட்டியை நினைந்து வருந்திற்று. சிவபெருமான், பெண் புலி ஒன்றையே அக்குட்டிக்குப் பால் கொடுக்குமாறு செய்வித்தனர். மான் குட்டி வளர்ந்து பிழைத்துக் கொண்டது. புல்வாய், ஒருவகை மான். வலைவீசிக் கெளிற்று மீன் கொண்ட காலை, இறைவன் அலைகடல் மிசை நடந்தான். கரிக்குருவி ஆலவாயண்ணலைத் தொழுது உபதேசம் பெற்ற கதை, திருவிளையாடற் புராணத்துள் காண்க. 'சாந்து' என்பதற்குத் திருநீறு என்று பொருள் கொள்வாரும் உண்டு. 215. ஒழிவற நிறைந்த வொருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மைய றுணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் ஒழிவுஅற நிறைந்த ஒருவ, போற்றி ! செழுமலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி ! கழுநீர் மாலைக் கடவுள், போற்றி ! தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி! பிழைப்பு, வாய்ப்பு. ஒன்று அறியா நாயேன் ozivu aRa niRaintha oruva pooRRi sezumalar sivapuraththu arasee pooRRi kazuneer maalai kadavuL pooRRi thozuvaar maiyal thuNippaay pooRRi pizaippu vaayppu onRu aRiyaa naayeen பொ-ரை: 215 - 217: நீக்கமின்றி எங்கும் நிறைந்த ஒருவனே வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த சிவபுரத்துத் தலைவனே வணக்கம் . செங்கழுநீர் மாலையணிந்த கடவுளே வணக்கம். 215: Glory to Thee - Oh! You unique one permeating everywhere without a void. 216: Glory to Thee - Oh! King of Thirup-Perun-Thurai which abounds, in luxurious red flowers. 217: Glory to Thee - Oh! God wearing the garland of purple Indian water lilly. கு-ரை: 215 - 217: சிவபுரம், பார்மேல் உத்தர கோச மங்கை என்றும் திருப்பெருந்துறை என்றும் கூறுப. சிவலோகம் என்பாரும் உளர். இறைவன் ஆசிரியனாய் வந்த போது செங்கழுநீர் மாலை அணிந்தமை கீர்த்தித் திருவகவலுள் கூறப்பட்டது. 220. குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி புரம்பல வெரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண குழைத்த சொல்-மாலை கொண்டருள் போற்றி! புரம் பல எரித்த புராண, போற்றி! பரம்-பரம் சோதிப் பரனே, போற்றி ! போற்றி! போற்றி ! புயங்கப் பெருமான்! போற்றி! போற்றி! புராண-காரண! kuzaiththa solmaalai koNdaruL pooRRi purampala eriththa puraaNa pooRRi paramparanj soothi paranee pooRRi pooRRi pooRRi puyangka perumaan pooRRi pooRRi puraaNa kaaraNa 225. போற்றி போற்றி சயசய போற்றி போற்றி !போற்றி! சய, சய, போற்றி! pooRRi pooRRi seya seya pooRRi பொ-ரை: 218 - 225: வழிபடுவோரது மயக்கத்தை அறுப்பாய்; உனக்கு வணக்கம். தவறு யாது பொருத்தம் யாது என்று அறியா நாயேன் தொடுத்த மொழித் தொடரை ஏற்றுக் கொண்டருள்வாய்; வணக்கம். ஊர்கள் பலவற்றை அழித்த பண்டையோனே வணக்கம். மேலானவற்றுக்கு மேலான ஒளியுடைய மேலோனே வணக்கம். வணக்கம். வணக்கம். பாம்பணிந்த பெரியோனே பழமையின் காரணனே வணக்கம். வணக்கம். வணக்கம். வெற்றி வெற்றி மிக்கோனுக்கு வணக்கம் . 218: Glory to Thee - Oh! You who dispels all delusions of thy worshippers. 219: Glory to Thee - Graciously accept this. 220: Garland of words strung (woven) by this cur who neither knows what is wrong nor knows how to avoid wrong doings. 221: Glory to Thee - Oh! You the Ancient One who burnt down many cities (the agglomeration of the three cities made out of iron, silver and gold). 222: Glory to Thee - Oh! Infinitely infinite effulgent infinity, 223: Glory to Thee! Glory to Thee!! Oh Lord adorned with snake- the lightning in the cloud is metaphorically described as snake. 224: Glory to Thee! Glory to Thee! Oh! You, the Ancient Cause. 225: Glory to Thee! Glory to Thee! Victory, Victory to Thee, Glory to Thee. கு-ரை: 218 - 225; குழைத்தல் = கூட்டுதல், 'புரம்பல' என்பதற்கு முப்புரம் எனவும் பொருள் கொள்வது உண்டு. திரிபுர தகனம், பல்லூழிகளிற் பலவாம் என்பாரும் உளர். 'புரம்பல' - உடல் பல என்று கொண்டு பல்பிறவியையும் 'அருட் பெருந்தீயால்' அழித்தவன் என்றும் கொள்க. எக்காலத்தும் எவ்வுயிர்க்கும் பிறவி அறுப்பவன் சிவனாதலின், அவன் 'புராணன்' எனப் பட்டான். புயங்கம் = பாம்பு, உலகை நடத்தும் பல சடசத்திகளுக்கும் அது அறிகுறி. காரணேசுரராகிய ஐவர்க்கும் காரணனாய்த் தனக்கொரு காரணமும் இல்லாதோன் ஆதலின், 'புராண காரண' என்றார். இறைவன் அருள் வெற்றியே நிலை பெறுதலின் வெற்றி, வெற்றி போற்றி என்று அருளினார். THIRUCHCHITRAMBALAM 5. திருச்சதகம் 5. THIRUCH-CHATHAHAM (பக்தி வைராக்கிய விசித்திரம் ) The Sacred Centad திருப்பெருந்துறையில் அருளியது Composed whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் 'சதகம்' என்பது நூறு பாட்டுக்களைத் தொகை நிலையாகவேனும் , தொடர் நிலையாகவேனும் செய்யும் செய்யுள் வகை. எனவே, 'சதகம்' என்பது, எண்ணால் பெறும் பெயராதல் தெளிவு, இனி, 'கலம்பகம், அந்தாதி' ஆகியவை அவற்றின் தொடக்கத்தாலும் பிற காரணங்களாலும் இப்பெயர்கள் பெறும். 'தொகைநிலை, தொடர்நிலை' என்னும் இரண்டனுள் இச்சதகம் தொடர்நிலை, 'சொற்றொடர் நிலை, பொருள் தொடர்நிலை' என்னும் இருவகைத் தொடர் நிலைகளுள் அந்தாதியாகத் தொடர்தலின், இது சொற்றொடர் நிலையாதல் வெளிப்படை. தொகை நிலையாய் வருவதனைச் 'சதகம்' என்றும் அந்தாதியாய் வருவதனை 'அந்தாதி' என்றும் வழங்கினர். இவ்வந்தாதித் தொடர், பத்து வகையான பாட்டுக்களை வகைக்குப் பத்தாக உடையது. அந்தாதியுள்ளும் இவ்வாறு வருவதனைப் பிற்காலத்தார் 'பதிற்றுப்பத் தந்தாதி' எனச் சிறப்புப் பெயர் கொடுத்து வழங்கினர். இங்ஙனம் பெயர்களை வேறுதெரித்துக் கூறினாராயினும், 'சதகம், அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி' என்னும் செய்யுள் வகைகளுக்கு எல்லாம் அடிகள் அருளிச்செய்த இத் திருச்சதகமே முதன் முதலாக அமைந்தது. சிவபுராணம் முதலிய நான்கும் மிகப் பல அடிகளையுடைய ஒவ்வொரு பாட்டாகிய தனிநிலைச் செய்யுள்கள் ஆதலின் அவற்றை முன்வைத்து, நான்கும், ஆறும், எட்டும் ஆய சீர் வரையறைகளை உடைய சில அடிகளை உடைய பல பாட்டுக்களின் திரட்சியாகிய தொகைநிலை தொடர்நிலைச் செய்யுள்கள் ஆதலின், இத்திருச்சதகம் முதலியவற்றை அவற்றின் பின் வைத்துக் கோத்தனர் முன்னோர். அவற்றுள்ளும், நூறு, ஐம்பது, இருபது முதலிய பாட்டின் தொகை பற்றி அம்முறையே முறையாகக் கோத்தனர் என்க. மிகப் பல அடிகளையுடைய தனிநிலைச் செய்யுட்களாதலின், சிவபுராணம் முதலிய நான்கும் 'தோல்' என்னும் வனப்புச் செய்யுட்கள் ஆகும். "இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோல் என மொழிப தொன்னெறிப் புலவர்" -(தொல்காப்பியம், செய்யுளியல், 238) என்னும் இந்நூற்பாவிற்கு உரையாசிரியர் உரைத்த உரையே கொள்ளத்தக்கது. இத்திருச்சதகம் முதலிய பலவும், பலப்பல வகையான பாட்டுக்கள், நூறு, ஐம்பது, இருபது முதலிய பல்வேறு தொகையினவாய், மகளிர் விளையாட்டு, புறக்கைக்கிளை ஆகிய வகையில் புகழ்தலும், பரவலும் முதலிய பல பொருள்கள்மேல் தொகை நிலையும், தொடர் நிலையுமாகப் பெரிதும் புதுமைப்பட வருதலின், 'விருந்து' என்னும் வனப்பு செய்யுட்களாம். "விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே" - (தொல்காப்பியம், செய்யுளியல், 239) என்னும் இந்நூற்பாவில் பின்னை உரையாளர், "புதுவது கிளந்த" எனப் பாடம் ஓதினார். தொல்காப்பியத்திற்குப் பின்னர்ப் பலவகையில் நெறிப்பட வந்த செய்யுள் வகைகளை 'அகலக்கவி' எனவும், 'பிரபந்த வகை' எனவும் வைத்துத் தொண்ணூற்றாறு என வரையறைப் படுத்தி, அவற்றிற்கெல்லாம் தனித்தனி இலக்கணம் சொல்லிப் போந்தார் பிற்காலத்தார். அவை பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்களுள் காணப்படும். எனினும், அடிகள் அருளிச்செய்த சில செய்யுள் வகைகள் அவற்றுள் அடங்கவில்லை. தேவாரத் திருப்பதிகங்களும் பலவேறு கட்டளைப்படச் செய்யப்பட்டமையின், 'விருந்து' என்னும் வனப்பினவே ஆயினும், அவை இசையாகிய சிறப்புடைமை பற்றித் திருமுறைகளுள் முன் வைக்கப்பட்டன. இயற்பாட்டுக்களிலும் இசைப்பாட்டுக்கள் இனிமையிற் சிறந்தன. கடவுட் பராவலில் இயற்பாட்டினும், இசைப்பாட்டு உணர்வு மிகச் செய்வனவாதல் அறிக. Chapter (5) of Thiruvaachakam, named as Thiruch-Chathaham, comprises one hundred hymns in all, and is divided into two decads, each decade bearing a distinct title reflecting the predominant theme portrayed thereunder. Chatham is one hundred and hence, we name this chapter 'The Sacred Centad' - 'Centad' standing for one hundred verses - Chathaham (On the analogy of Dyad, Triad, Pentad, Hexad, Octad and so forth). In this chapter, the last word of each verse is used the first in the following verse. Also the last word of a decade becomes the first one in the ensuing decade. Such an arrangement , known as Anthaathi (antham = the last one; aathi= the first) is common in saivaite literature, particularly in Arul Maalais glorifying God and godly saints. Thiruch- Chathaham is verily an outburst of the most profound emotions of the saint, who laments time and again, his forlorn state after being left behind in this world by Lord Civan who gathered up all His other fellow devotees in Thirup-Perun-Thurai and vanished from sight absorbing them into a state of blissful eternity. Having had personal benediction at the hands of Lord Civan Himself and then being denied redemption alongside his erstwhile holy companions must indeed have steeped him into a pathetic mood of desolation and despondency often driving him to extremes of self pity and remorse even as he tried to figure out what possible lapses in his regimen might have brought about this sordid state of isolation. And yet, he rallies round soon enough and makes progress taking comfort in the Lord's kindly and persuasive comments ordering him to serve for some more time in this world and then come over to merge in Him at the golden hall of Thillai (c.f line 126-129 of Keerthith-Thiru-Agaval). Saint Maanikkavaachakar is as well versed in the nuances of Tamil grammar and rhetoric as in the deep seated philosophical aspects of saivite theology, which is reflected in his deft handling and strict observance of the rules of prosody in all of his composition. The first four chapters are set in agaval metre - a relatively easy one to handle, while the fifth chapter has decad set in various other verse forms. The first decade of chapter V is in Kattalai-Kalith-Thurai which has to conform to very strict rules of grammar , and has a special aura of its own, making it an elegant format at the hands of many savants and scholars. The soul can apprehend Godhead only by unstinting and undying love and tenacity of purpose. This is the teaching of this decad; in fact, of the entire Tiruvaachakam. The entire set of poems are connected by a rule which requires that the last word of each verse shall begin the following verse. All the ten lyrics with their hundred verses are thus linked together. This arrangement in Tamil is called 'Anthaathi'. The nearest English word will be " Anaphoretic Verse" This centad is intended to exhibit the progress of the soul through the successive stages of religious experience till it loses itself in the rapture of complete communion with the Supreme. THIRUCHCHITRAMBALAM 5. 1. மெய்யுணர்தல் 5.1. MEIY UNARTHAL கட்டளைக் கலித்துறை Discrimination of the Real திருச்சிற்றம்பலம் 1. மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே மெய்தான் அரும்பி, விதிர் விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என் கை-தான் தலை வைத்துக், கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம் பொய்-தான் தவிர்ந்து, உன்னைப் 'போற்றி, சய,சய, போற்றி' என்னும் கை-தான் நெகிழ விடேன்; உடையாய் ! என்னைக் கண்டு கொள்ளே. meythaan arumpi vithirvithirththu un viraiyaar kazaRku en kaithaan thalai vaiththu kaNNeer thathumpi vethumpi uLLam pooythaan thavirnthu unnai pooRRi saya saya pooRRi ennum kaithaan nekizavideen udaiyaay ennai kaNdu koLLee பொ-ரை: என்னை அடிமையாக உடையவனே! உனது பெருங்கருணைத் திறத்தை நினைந்து என் உடல் மயிர்க் கூச்செறிந்து நடுக்கமுற்றது. எனது கைகள் தாமாகவே தலை மேல் ஏறப் பெற்று உனது மணம் பொருந்திய திருவடிகளை வணங்கலாயின. ஆனந்தக் கண்ணீர் என் கண்களினின்றும் அரும்பியது. எனது உள்ளத்து எழுந்த ஆராக்காதலால் என் மனமானது குளிர்ந்த நிலையினின்றும் நீங்கியது. நிலை அல்லாதவைகளின் மீதிருந்த எனது பற்று, தானே நீங்கி ஒழிந்தது. உனக்கு வணக்கம்! வெற்றி! வெற்றி ! மீண்டும் வணக்கம்! இவ்வாறு ஓதும் ஒழுக்கத்தையே நழுவ விடாது சிக்கெனப் பிடித்து நிற்பேன். அடியேனை உனது திருவருள் நோக்கினால் பார்த்து, ஏற்றுக் கொள்ளுக. My actions thoughts and words - all to You - graciously accept Oh! My master, owner of Thy slave: Thinking of Your everlasting grace, my body trembles. I prostrate before Your ankletgirt fragrance-laden Feet. In obeisance my palms join over my head, while my eyes are brimming with tears of joy. My mind is aglow with ardent longing towards you. My desire for the unreal and the impermanent leaves me automatically. Obeisance to You! Victory, Victory to you! Obeisance to You!! Never shall I let slip this hailing of You. Therefore, graciously acknowledge me as Your own. கு-ரை: உடையாய் - எல்லாவற்றையும் உடையவனாகிய சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். மனம் - வெதும்புதலும், பொய் தவிர்தலும் செய்ய, உடம்பு - மெய்ப்பாடுகள் உணர்த்த,வாய்-போற்றி செய செய போற்றி என்று கூற, ஆக முக்கரணங்களாலும் வழிபாடு செய்தல் அறியலாயிற்று. 2. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினு நள்ளே னினதடி யாரொடல் லானர கம்புகினு மெள்ளேன் றிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா வுள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ளுத்தமனே கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு: குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும் எள்ளேன் திரு அருளாலே இருக்கப்பெறின்; இறைவா ! உள்ளேன் பிறதெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே! koLLeen purantharan maal ayan vaazvu kudikedinum naLLeen ninathu adiyaaroodu allaal narakam pukinum eLLeen thiruvaruLaalee irukka peRin iRaivaa uLLeen piRatheyvam unnai allaathu engal uththamanee பொ-ரை: எங்கள் இருள் கடந்த முதல்வனே, அரசனே, இந்திரன், பிரம்மன், திருமால் என்போர் பதவிகளை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டேன், எனது வாழ்க்கைக்கு ஊறு வந்தாலும், உன்னுடைய அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகம் புகுந்தாலும், அங்கே உனது திருவருள் உணர்ச்சியோடு இருக்கப் பெற்றால், அதனை இகழ மாட்டேன். உன்னை ஒழிந்த வேறு கடவுளரை மனத்தாலும் நினைக்க மாட்டேன் . Oh Lord! Our Noblest One! Oh King! I shall not consider, the status of Indra, Vishnu or Brahma as a prestigious one and try to acquire it. I shall associate myself only with your devotees and certainly not with others, even if my family repute were to be ruined. Were I to go to hell, I shall not shun that life either, provided I am conscious of Thy divine grace. I shall have no regard for any other God except You. கு-ரை: புரந்தரன்- பகைவர் ஊர்களை அழிப்பவன். அயன் - பிறப்பு இல்லாதவன் என்ற பொருளில் பிரமனுக்கு உபசார வழக்கு. நள் - சிநேகம் கொள்ளல். திருவருளாலே- திருவருளோடு . "திருவருளாலே யிருக்கப் பெறின் " - என்பதை முதற்கண் கொண்டு, "கொள்ளேன்" முதலியவற்றிற்கும் அதனைச் சாரப் பொருள் கோடலுமுண்டு, வானவர் வாழ்வு பந்தத்தையும், அடியார் உறவு வீட்டையும் பயப்பதாகலின் அவ்வாறு கூறினார். குடி - உடம்பு வாழ்க்கை. உத்தமன் என்பது இருளைக் கடந்தவன், முதலானவன் என்று பொருள்படும் வடசொல். திருவருள் உணர்ச்சியோடு நரகிடை இருத்தல் அரிதாகலின், 'பெறின்' என்றார். திருவருளின் கட்டளையாலே அல்லது திருவருள் என்னை நரகிடை இருக்குமாறு பணிப்பின், என்றும் பொருள் கொள்ளுக. 3. உத்தம னத்த னுடையா னடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவ னென்ன மனநினைவி லொத்தன வொத்தன சொல்லிட வூரூர் திரிந்தெவருந் தத்த மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு, 'மால்இவன்' என்ன, மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும் தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே? uththaman aththan udaiyaan adiyee ninainthu uruki maththa manaththoodu maal ivan enna mana ninaivil oththana oththana sollida uur uur thirinthu evarum thaththam manaththana peesa enjnjanRu kol saavathuvee (correction: kool/ kol) பொ-ரை: தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் என் தந்தையும் , எம்மை உடையானுமாகிய இறைவா சிவபெருமானே! உன்னுடைய திருவடிகளையே எண்ணி எண்ணிக் கசிந்து, மனக்களிப்பு மிக்கு உடையவனாகி இருக்கின்ற என் நிலையை ஊரார் பார்க்கின்றனர். எனது சிவானந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஆற்றல் இல்லாமையால் அவர்கள் என்னை நோக்கி, தங்கள் தங்கள் மனம் போனவாறு பித்தன் என்றும், பேயன் என்றும், கள்ளன் என்றும், நல்லன் என்றும், அருளன் என்றும் பேசுகிறார்கள். நான் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்கு உள்ள தலங்களில் இறைவழிபாடு செய்து வரும்பொழுது உலகவர் இவ்வாறு கூறுகின்ற இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் கேட்டு அவற்றால் சிறிதும் நலிவுறாது, செருக்கு என்னும் தன் முனைப்பு நீங்கப் பெற்று இருக்கும் அத்தகைய நல்லநாள் என்று வருமோ? Oh Lord Civa, the noblest and the highest of devas, My Father, My Possessor! My heart melts in thoughts of Thy holy Feet, and is frenzied in ecstatic love of Thee, causing others to say "This man is a madcap". Seducing me wandering from place to place prattling all that suits the excited state of my mind, everyone speaks whatever occurs to his mind. Hearing all this yet remaining unperturbed my only thought is, when shall my ego die? I long for that blessed day! கு-ரை: மத்தம்= பெருங்களிப்பு. மால்= மயக்கம். உலகர் பேசுவது பல திறப்படுதலால் "ஒத்தன ஒத்தன" என்றார். திருக்கோவில்தோறும் சென்று இறைவனை வணங்குதலையே "ஊரூர் திரிந்து" என்றார். 4. சாவமுன் னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி யாவவெந் தாயென் றவிதா விடுநம் மவரவரே மூவரென் றேயெம்பி ரானொடு மெண்ணிவிண் ணாண்டு மண்மேற் றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே . சாவ, முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி 'ஆவ! எந்தாய்! ' என்று அவிதா இடும் நம்மவர்-அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு, மண்மேல் தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே! saava munnaL thakkan veeLvi thakar thinRu nanjsam anjsi aava enthaay enRu avithaa idum nammavar avaree muuvar enRee empiraanodum eNNi viN aaNdu maNmeel theevar enRee iRumaanthu enna paavam thirithavaree பொ-ரை: தேவர்கள் முன்னொரு காலத்திலே தக்கன் இயற்றிய யாகத்திலே கொல்லப்பட்ட ஆட்டின் ஊனைத் தின்று, பின்னர் வீரபத்திரர் தம்மைத் தண்டிக்க வந்தபோது சாவதற்குப் பயந்து சிவனிடம் ஓடி ' அப்பனே காப்பாற்று' என்று ஓலமிட்டார்கள், அதே போன்று பின்னொரு சமயம் பாற்கடலில் நஞ்சு எழுந்த காலத்தே, நஞ்சு தங்களைக் கொன்று விடுமே என்று அஞ்சி, சிவபெருமான் இருக்கும் இடம் ஓடி, "ஐயோ! எங்கள் அப்பனே காப்பாற்று" என முறையிடும் தன்மை உடையவர்கள் இந்தத் தேவர்கள். இவர்கள் தங்களை 'பிரம்மா','விஷ்ணு', 'உருத்திரன்' என்ற மூவர்களோடு ஒப்பாக எண்ணிச் செருக்கடைகிறார்கள். மேலும் மூவரில் ஒருவனாகிய உருத்திரன் குண ருத்திரனே அன்றி மகா ருத்திரனாகிய சிவபெருமான் அல்லன் என்பதையும் உணரமாட்டார்கள். இதன் விளைவாக, தங்களைச் சிவபெருமானுக்கு இணையாகக் கருதி விண்ணுலகை ஆண்டு மண்ணுலகில் செருக்கடைந்து திரிகின்றார்கள். தங்கள் வாழ்வில் முன்னே கூறிய இரு சந்தர்ப்பங்கள் போன்று பலமுறையும் தாழ்மைப்பட்டு வாழ்ந்தவர்கள் இவ்வாறு இறுமாந்திருந்ததற்குக் காரணம் என்னே? இது என்ன பாவம்! In this verse Maanikkavaachakar pities the haughtiness of the "Devas". The devas equate themselves with the "Trinity" i.e., "Brahma", "Vishnu" and “Rudran”, while this 'Rudra' has nothing to do with Lord Civa who is called "Maha Rudran" or "Gunaatheetha Rudran'. The 'Rudran' in the Trinity is "Guna-Rudran". Maanikkavaachakar assigns the devas the position of our kinsmen to denote that they are no better than the noble mortals on earth. They, once upon a time, fearing death in the hands of "Veerabadran" (Lord Civa's chief guard) who came to punish them along with "Thakkan" for eating the flesh of 'Thakkan's sacrificial ram, ran to Lord Civa and begged to be excused and protected. Again on another occasion, fearing death from the poison that came out of the ocean of milk, the devas ran to Lord Civa for safety and entreated Him crying "Ah! Ah!! Our Father, save us from death". Those same devas assuming themselves equal to Trinity now proclaim themselves as equal to Lord Civa, rule the heavens and haughtily strut about on earth as gods. What a sin is this! (In sufferance they entreat Lord Civa; while in their glory they neglect Him). கு-ரை: அரி - விஷ்ணு, திருமால், மால்; அயன் - பிரம்மன். இந்த "அரி" "அயன் " இவர்களோடு வைத்து மூவர் என்று சொல்லப்படும் "உருத்திரன்" என்பவன் குண ருத்திரன் ஆவான். இவன் குணாதீதனாகிய மகா ருத்திரன் எனப்படும் சிவபெருமான் அல்லன் என்பதை நன்கு உணர்க. "ஆவ" என்பது "ஆவா" என்பதின் குறுக்கம். அது இரக்கக் குறிப்பு "அவிதா" என்ற சொல் ஆபத்தினின்று காப்பாற்ற முறையிடுங்கால் கூறும் சொல் . சிவஞானம் பெறாதவர்களும், "சகலர்" என்று சொல்லப்படும் வருக்கத்தினராக உள்ளவர்களும் ஆகிய அயன், அரி முதலியவர்கள் பூவுலகத்தில் உள்ள நம்மவர்களைப் போலச் சுட்டு நிலையில் உள்ள உயிரினத்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அவர்களை மாணிக்கவாசகர் "நம்மவரே” என்று கூறினார். 5. தவமே புரிந்திலன் றண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சே னவமே பிறந்த வருவினை யேனுனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேனின் றிருவடிக்காம் பவமே யருளுகண் டாயடி யேற்கெம் பரம்பரனே தவமே புரிந்திலன்; தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன், உனக்கு அன்பர் உள் ஆம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு-கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே! thavamee purinthilan thaNmalar idu muddaathu iRainjseen avamee piRantha aruvinaiyeen unakku anparuLLaanj sivamee peRum thirueythiRRileen nin thiruvadikkaam pavamee aruLukaNdaay adiyeeRku em paramparanee பொ-ரை: எமது மேலோர்க்கும் மேலோனே! மெய், வாய், கண், மூக்கு,, செவி என்ற ஐம்பொறிகளைத் தம் தம் வழிச்செல்ல விடாமல் அடக்கி ஒடுக்கும் திறனும் பிறர்க்கு இன்னா செய்யாமையுமாகிய தவத்தை அடியேன் மேற்கொள்ளவில்லை. நின் திருவடிகளில் குளிர்ந்த மலர்களைத் தூவிக் குறையில்லாத முறையில் வழிபாடு செய்யேன். இவ்வுலகில் தோன்றும் தீவினைகளை உடையவனாகி வீணாக வாழ்ந்து பிறவி என்னும் கடலை நீந்துதற்கு உரிய வழிகளைச் செய்யவில்லை. உனக்கு அன்பராக உள்ளவர்கள் நடுவில், இருப்பதற்கு வேண்டும் தூய நேர்மை உண்டோ எனின், அதுவும் இல்லை. சிவத்தைச் சார்வதற்கு வாயிலாக உள்ள 'திரு' என்ற சிவஞானத்தைப் பெற நல்வினைப் பயனும் இல்லாதவனாகிவிட்டேன், ஆதலால் இப்பிறவி வேண்டாம். அடியேனுக்கு நின்னுடைய திருவடிக்கு அடிமையாகின்ற பிறவியையே நீ அருள்வாயாக. Oh! Our transcendentally transcendent one! I cannot really claim to have performed the "Gnana Maarkkam" of penance and prayer (Thavam) by controlling the five senses and adhering to strict discipline. I have not offered cool flowers at Your holy Feet in daily worship. I have been born in vain in this world because of rare evil fate (bad Karma) that I had in store. I have not gained the good fortune of receiving the bliss of being included in the band of Your devotees. Graciously grant me, Your servitor, only such birth as will lead me to Your holy Feet. கு-ரை: தவம் - சிவபூசை முதலிய கிரியைகளும், சிவயோகமும் ஆக இரண்டினையும் குறிக்கும் . சிவபூசை அகத்தும் புறத்தும் செய்யப்பெறுவன. யோகம் அகப்பூசை. எடுத்த எடுப்பிலேயே ஞான வாயிலாகிய சிவயோகத்தை இயற்ற முடியவில்லை ஆயினும், கிரியை என்று சொல்லப்படுகின்ற யாவும் ஞானவாயில் எனக் கொள்ளப்படுவதால் செயலும், சிந்தையும் ஒத்துச் செய்யப்படும் சிவபூசையையும் செய்யேன் என்றார். விசேட தீக்கை பெற்றுச் சிவபூசை செய்துவரும் கிரியை யோகங்களைச் செய்ய வேண்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இவ்வாறு கூறினார் என்று கொள்க. நால்வகை நெறியில் நின்று சிவபரம் பொருளை அடைவதே பிறவி எடுத்ததின் பயன் ஆகும். அவற்றுள்ளே ஒன்றும் எய்தாமையின் இப்பிறவியே பயனற்றதாக ஆயிற்று என்பார், 'அவமே பிறந்த அருவினையேன்' என்றார். 6. பரந்து பல்லாய்மல ரிட்டுமுட் டாதடியே யிறைஞ்சி யிரந்தவெல் லாமெமக் கேபெற லாமென்னு மன்பருள்ளங் கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தர மாயரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே. பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது, அடியே இறைஞ்சி 'இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும் அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே! நின்-தன் வார் கழற்கு அன்பு, எனக்கு நிரந்தரமாய் அருளாய்-நின்னை ஏத்த முழுவதுமே. paranthu palaay malariddu muddaathu adiyee iRainjsi irantha ellaam emakkee peRalaam ennum anpar uLLam karanthu nillaa kaLvanee ninthan vaar kazaRku anpu enakku nirantharamaay aruLaay ninnai eeththa muzuvathumee பொ-ரை: மெய்யன்பர்கள் உள்ளத்தில் மறைந்து நிற்காத கள்வனே! சிவபெருமானே! அந்த உனது மெய்யன்பர்கள் எல்லாத்தலங்களுக்கும் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சொல்லப்படும் எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் உன்னை , அசுத்தமாகாத பலவிதமான நன்மலர்களைக் கொண்டு இடைவிடாது அருச்சித்து வணங்குகிறார்கள். அவர்கள் தங்கள் விருப்பங்களை இரந்து, விண்ணப்பித்து, நிச்சயமாக அவை அனைத்தையும் பெறமுடியும் என்ற முழுநம்பிக்கையோடு வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் உள்ளத்தில் நீ வீற்றிருந்து அவர்களுக்கு அருளுகின்றாய். அவர்களைப் போன்று அடியேனும் உன்னை வாழ்நாள் முழுவதும் துதிக்கவும், உனது திருவடிகள் மீது என்றும் நீங்காத அன்பு வைத்திருக்கும் நிலையையும் அருள்வாயாக. Oh! You who hide yourself from the vision of those who have no love for you, but who manifest Yourself clearly in the hearts of saints who visit all Your holy places and offer sincere unstinted worship with choice and varied flowers! Those saints know fully well that they will be blessed with, all that they pray for. In grace, kindly bestow upon me also, that state of mind to enable me to have an unflinching love for Thy glorious Feet, to sing Thy name and to worship Thee uninterruptedly for ever in my life. 7. முழுவதுங் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த் துமுன்னாள் செழுமலர் கொண்டெங்குந் தேடவப் பாலனிப் பாலெம்பிரான் கழுதொடு காட்டிடை நாடக மாடிக் கதியிலியா யுழுவையின் றோலுடுத் துன்மத்த மேற் கொண் டுழிதருமே முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடிசாய்த்து, முன்நாள் செழுமலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்: இப்பால், எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி-இலியாய் உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே muzuvathum kaNdavanai padaiththaan mudi saayththu munnaaL sezumalar kooNdu engkum theeda appaalan ippaal empiraan kazuthodu kaaddidai naadakam aadi kathi iliyaay uzuvaiyin thool uduththu unmaththam meel kooNdu uzitharumee பொ-ரை: முன்னாள் என்பதை முதலில் கொள்க. இப்பால் என்பதை 'கழுதொடு' என்பதோடு கூட்டுக. முற்காலத்திலே எல்லாவற்றையும் படைத்தவன் அயன் (பிரம்மா), அந்த அயனைப் பெற்றவன் அரி (திருமால்), இந்தத் திருமால் தலை வணங்கி, வளமிக்க பூக்களைக் கையிற் கொண்டு சிவனாரது திருவடியைத் தொழுவதற்காக எங்கும் தேடவும், அவனுக்குப் புலனாகாது அப்பாற்பட்டவன் எமது வள்ளல், சிவபெருமான். இவன் இவ்விடத்தே பிணந்தின்னும் பேயோடு சுடுகாட்டின் கண், கூத்து இயற்றி வறியனாய்ப் புலித்தோல் உடுத்தி, பித்தனைப் போல அலைந்து திரிவான். இஃதென்ன வியப்பு! Brahma is the creator of the world, whose father is Maha Vishnu (Thirumaal) as the former came out of the navel of Mahaa Vishnu. Thirumaal, to satisfy his wish of seeing and worshiping the holy Feet of Lord Civa, carried choice flowers and roamed everywhere and finally went to the underworld digging the earth, transforming himself into a boar. There also he could not find Civa's holy Feet (Here, the story of Brahma seeking to see Civa's holy Face going up in the sky transforming himself into a swan may be remembered). The same Lord Civa, wearing the tiger skin, is dancing with ghouls in the cremation ground and wanders about with mounting madness as a vagrant, with no friends and possession. Civa was not easily accessible to Brahma, Maal and other devas who have no sincere love and regard for Him, while He is easy of approach to His sincere devotees here on earth. கு-ரை: பிரம்மனும், திருமாலும் அடி முடி தேடிய வரலாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது .தேவர்களுக்கு அரியவனாகிய இறைவன் மண்ணுலகில் வாழும் மெய்யன்பர்களுக்கு எளியன் என்பது 'இப்பால் எம்பிரான்' என்பதால் விளக்கப் பெற்றது. இப்பால் - இவ்வுலகத்து, அப்பாலன் - அப்பாலான் என்பதின் குறுக்கம். கண்டவன் - படைத்தவன். கழுது - பிணந்தின்னும் பேய். எல்லாம் ஒடுங்கிய இடத்தே தம்பாற் பேரன்புடைய அன்பர்பால் நுட்ப ஐந்தொழில் இயற்றுவதையே 'கழுதொடு காட்டிடை' என்று ஆடுதலாகக் குறித்தனர் போலும். கதியிலி- போக்கில்லாதவன்; இறைவன் ஒன்றை நாடிச் செல்லும் அவசியமில்லாதவன் என்பதைக் குறிக்கும். பூரணப் பொருளாகிய அவனுக்குச் செல்கதி யாது ஒன்றும் இல்லை. தாருக வனத்து முனிவர்கள் மீமாஞ்சக நெறியில் நின்று வேள்வி இயற்றி, அதனின்று வெளிப்போந்த புலியைச் சிவபெருமான் மீது ஏவ, அவன் அப்புலியைக் கொன்று, அதன் தோலைப் போர்த்த கதையும் இங்கு, குறிப்பால் உணர்த்தப் பெற்றது காண்க. கூத்துக் களிப்பினை, "உன்மத்தம்" என்றார் என்றும் கூறுவர். அன்பர்க்கு அன்பர் ஆதலின் இறைவன் பித்தன் எனப்படுதல் தெளிவு. செழுமலர் கொண்டு - “செழுமையான தாமரை மலர் போலும் திருவடிகளை மனதில் எண்ணி” என்றும் பொருள் கொள்ளலாம். நாடகம் - பொருள் தழுவிய கூத்து. இறைவன் விளைத்த கூத்து, பஞ்ச கிருத்திய பொருள்களைத் தழுவி இருத்தலின் அதனை “நாடகம்" என்றார். இம்மரபு அறியாதவர் வேறு விதமாகக் கூறுவர். இதனை ஞான சாத்திரங்கள் ஞான நடனம், திருவருள் நடனம், பரமானந்த நடனம் என்றெல்லாம் பேசும். பொன்னாடையும் பட்டாடையும் உடுத்த வேண்டிய இவர் புலித்தோல் உடுத்தினார் என்ற இகழ்ச்சி ஒரு புறம் தோன்றுமாயினும், வேள்வித் தீயினின்று வெளி வந்த புலியைக் கொன்று அதன் தோலை வெற்றிக்குறியாக உடுத்தினார் என வீரத்தால் விளைந்த புகழும் தோன்றுதல் காண்க. உன்மத்தம் - பயித்தியம், உழிதரல் - திரிதல், வாழ்வில் மக்களால் துறக்கப்பட்டுத் தனித்தவருக்கு உரையாடிக் களிக்க ஒருவரும் இன்மையால் பயித்தியம் பிடித்தல் இயல்பு. இறைவனும் எல்லாவற்றையும் அழித்து தனித்துப் பித்தேறி உள்ளார் என்ற பழிப்பும் அன்பர்கள் சூட்டிய ஊமத்த மலரைத் தன் தலையில் அணிந்து விளங்குகின்றார் என்ற புகழும் தோன்ற "உன்மத்தம் மேல் கொண்டு உழி தருமே" என்றார். பிரமன், திருமால் முதலிய அன்பிலாதார்க்கு இறைவன் அரியனாயும், பூவுலகத்தில் உள்ள மெய்யன்பர்களுக்கு எளியனாயும் இருத்தலை, வனப் பேயோடு ஆடிக் கதியற்றுத் திரிகின்றான் என அவனது இயல்பை அறிந்து கூறுதலின், இது மெய்யுணர்வு ஆயிற்று. 8. உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணும் விண்ணு மிழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பி னுழிதரு காலத்த வுன்னடி யேன்செய்த வல்வினையைக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே உழிதரு காலும், கனலும், புனலொடு மண்ணும், விண்ணும் இழிதரு காலம், எக்காலம் வருவது? வந்ததன் பின், உழிதரு காலத்த ! உள் அடியேன் செய்த வல் வினையைக் கழி, தரு காலமும் ஆய் அவை காத்து, எம்மைக் காப்பவனே! uzitharu kaalum kanalum punalodu maNNum viNNum izitharu kaalam ekkaalam varuvathu vanthathaRpin uzitharu kaalaththa un adiyeen seytha valvinaiyai kazitharu kaalamumaay avai kaaththu emmai kaappavanee பொ-ரை: மகா சங்கார காலத்தில் பஞ்ச பூதங்களான (1) அசையுந்தன்மையுடைய காற்றும் (2) நெருப்பும் (3) நீரும் (4) மண்ணும் (5) வானும் ஆகிய (இவ்வுலகம்) ஐந்தும் தத்தம் நிலையின் நீங்கி ஒடுங்கும். அந்தக்காலத்தும் அழியாப் பெரும் பொருளாக இருந்து அருட்கூத்து ஆடுபவனே! அடியேன் பல பிறவிகளில் ஈட்டிய வினைகள் யாவும் சருவ சங்கார காலத்தில் காரணமாயையில் சூக்குமமாய் ஒடுங்கி நின்று மீண்டும் புனர் உற்பவத்தில் சூக்கும கன்மமாகக் கலந்து என்னைப் பற்றாத வண்ணம் அந்த வல்வினையைச் சுட்டு எரிப்பவனாக இருந்து காப்பவனே! என்னைக் காத்து அருள்வாயாக. At the time of the dissolution of the universe, when the five elements viz., the wandering wind, the fire, the water, the earth and the ether - all become inactive and get dissolved one within another till everything is absorbed in the great infinite. Oh! Father! You are then dancing all alone and start creation afresh. Kindly shower Thy grace on this soul then, by removing all my past sins (Sanchitham) so that they will not afflict me when I take birth again. கு-ரை: ஐம்பூதங்களால் ஆகிய உலகம் ஒடுங்கிய போதும் சூக்கும ஐந்தொழிலை இறைவன் இயற்றி வருவதை 'உழிதருகால்' என்றார். உலகம் ஒடுங்கிய காலை, ஞானிகளின் வினை ஒடுங்கவே திருவடியில் கலத்தல் நிகழும். வினைகள் மூன்று; சஞ்சிதம் அல்லது தொகை வினை; பிராரப்தம் அல்லது தொடக்க வினை; ஆகாமியம் அல்லது ஏறுவினை; பிராரப்தத்தை அந்தந்த ஆத்மா அனுபவித்தே ஆகவேண்டும். சஞ்சிதத்தையும் ஆகாமியத்தையும் இறைவன் தக்க தருணம் வந்த காலத்து, சுட்டு எரித்து விடுவான். மகா சங்கார காலத்து வரும் அத்தருணத்திலும் அவைகளைச் சுட்டு எரித்து என்னை உன் திருவடிக்கு ஆளாக்குவாயாக என்று வேண்டுகிறார். இதன் கண் இறைவனே அநாதி நித்தியன் என்பதும் ஆன்மாக்கள் அவனைச் சார்ந்தே வினைகளைப் போக்கிக் கொள்ளத் தக்கன என்பதும் உணர்த்தப் படுதலின் இது மெய்யுணர்வு ஆயிற்று. 9. பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவனெம் பிரானென்னை யாண்டுகொண் டானென் சிறுமை கண்டு மவனெம் பிரானென்ன நானடி யேனென்ன விப்பரிசே புவனெம் பிரான்றெரி யும்பரி சாவதி யம்புகவே. பவன், எம்பிரான், பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான், சிவன், எம்பிரான், என்னை ஆண்டு கொண்டான்-என் சிறுமை கண்டும் அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே புவன், எம்பிரான், தெரியும் பரிசு ஆவது இயம்புகவே. pavan empiran pani maamathi kaNNi viNNoor peruman sivan empiran ennai aaNdu koNdaan en siRumaikaNdum avan empiran enna naan adiyeen enna ipparisee puvan empiran theriyum parisaavathu iyampukavee பொ-ரை: எங்கள் பெருமான், எல்லாம் தோன்றுவதற்கு இடமானவன். குளிர்ந்த சிறப்புடைய சந்திரனைத் தன் தலை மீது குறுங்கண்ணியாக அணிந்த தேவர் தலைவன். சந்திரனின் குற்றத்தைப் பொறுத்து, தனது திருமுடிக்கு அணி ஆக்கிய தன்மையால் அவன் எல்லோரையும் காப்பவன் ஆகின்றான். எல்லாவற்றையும் ஒடுக்குவானாகிய தூயோனும் ஆகிய எம்பெருமான், எனது சிற்றறிவும் சிறு செயலுமுடைய சிறிய தன்மையை அறிந்தும் , அவனது கருணையினாலே என்னைத் தடுத்தாட் கொண்டான். என் வள்ளலாகிய அவன் தானே தோன்றிய சுயம்பு. அவன் எங்கள் தலைவனாகவும், நான் அவன் அடியவனாகவும் இருக்கின்ற இம்முறையே எனக்குத் தெரியும் வகையாக, யான் சொல்லுவேனாக. Our Lord "Bhavan" is the creator of this universe. He graced the great cool moon by wearing it on His Head as a chaplet. He is the head of all devas. He forgave the moon for his bad deeds and wore him in His Head. This proves His protective grace to everybody. Though He knows my meanness, He had made me His. He is an uncreated Self-existent Being (Suyambu). He is our Lord Supreme and I his lowly servant. This I declare to the world. Let the world understand this greatness of His and praise Him. கு-ரை: பவன்- உலகத் தோற்றத்திற்கு நிலைக்களமாய் உள்ளவன். உலகிற்கு நிமித்த காரணமாதல் பரசிவத்திற்குரிய சிறப்பு இலக்கணங்களுள் ஒன்றாகும். பவன், சிவன் என்பன இறைவனின் பெயர்கள். இறைவனுக்கு ஆகமங்கள் கூறும் சிறப்பு மந்திரங்கள். பவாய - தேவாய, சிவாய - தேவாய, உக்கிராய-தேவாய என்பவைகளை இங்கே குறிப்பிடலாம் . சிவனுக்கு “பவன்" என்று சொல்லுவது போன்று அம்பிகைக்கு "பவானி" என்ற பெயரும் உண்டு. பிரான் - வள்ளல், உபகாரி. பூக்களால் ஆன கண்ணியை முடியில் அணிதல் போலச் சந்திரனை இறைவன் சடையில் அணிந்தமையால் “மதிக் கண்ணி" என்றார். மா - அங்ஙனம் அணியப்பெற்ற சிறப்பைக் குறிக்கும். என் சிறுமை- பெரியோரால் ஏற்றுக் கொள்ளத் தகாத நிலையைச் சிறுமை என்றார். புவன் - சுயம்பு ஆனவன், ஒளியுடையவன். சிவன் - தூயோன், ஒடுக்க முதல்வன். "புவனம்" என்பது புவனெம் என விகாரப் பட்டு உலகைக் குறிக்கும் என்று கூறுவாரும் உளர். "எம்பிரான்” என்று பலமுறையும் கூறுவது தன்னை ஆட்கொண்டருளிய சிறப்பைத் தெரிவித்தற் பொருட்டு ஆகும். 10. புகவே தகேனுனக் கன்பருள் யானென் பொல்லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்தியண் ணாவமுதே நகவே தகுமெம் பிரானென்னை நீசெய்த நாடகமே புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே! தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி: அண்ணா, அமுதே ! நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே. pukavee thakeen unakku anparuL yaan en poolla maNiyee thakavee enai unakku aadkoNda thanmai ep punmaiyarai mikavee uyarththi viNNoorai paNiththi aNNaa amuthee nakavee thakum empiran ennai nee seytha naadakamee பொ- ரை: தொளைபடாத என் முழு மாணிக்கமே! நான் உன் அடியார் கூட்டத்தில் புகுவதற்குத் தகுதி இல்லாதவன். அவ்வாறு இருந்தும் என்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை உன் பெருமைக்குத் தக்கதா? எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச் செய்கிறாய். மேலான தேவர்களைத் தாழ்த்துகிறாய்; அப்பனே! அமுதமே! எம் பெருமானே! நீ என்பால் செய்த நாடகம் சிரித்து நகையாடுவதற்கே உரியதாகும். Oh! my flawless, unpierced gem! I am not worthy of entering into the society of Your loving devotees. Even then You enslaved me as Thine own! Is this action of Yours worthy of Your dignity? You raise the very lowliest to an exalted place: You bring down the heavenly ones. Oh My Father! ambrosia! My Lord! What You have done to me by raising me to the lofty heights is a farce indeed! It is only fit to be laughed at by men. கு-ரை: பொல்லாமணி - துளையிடப்படாத மணி. பொள்ளாமணி என்பது பொல்லா மணி என மறுவிற்று. "குறைவில்லாத முழு மாணிக்கம் போன்ற பூரண ஆனந்த அறிவே" என்பது கருத்து. பச்சை (மரகதம்) பவளம், முத்து முதலிய இரத்தினங்களை மாலையாகக் கோப்பவர்கள் அவைகளின் நடுவில் துளையிட்டுக் கோப்பர். வைரத்தை மட்டும் துளைக்க முடியாமையினால் தங்கத்தில் செறித்து அதனுடன் சேர்ப்பர். நாடகம் : உண்மையைப் பொய்மையின் வாயிலாக வெளிப்படுத்துவது. உயிர்கள் எய்தும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் இறையருளே காரணம் என்னும் மெய் உணரப்படுதலின் இது மெய்யுணர்வு ஆயிற்று. THIRUCHCHITRAMBALAM 5.2 அறிவுறுத்தல் 5.2. ARI VURUTHTHAL தரவு கொச்சகக் கலிப்பா The Impartation of Divine Consciousness திருச்சிற்றம்பலம் 11. நாடகத்தா லுன்னடியார் போனடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றே னாடகச்சீர் மணிக்குன்றே யிடையறா வன்புனக்கென் னூடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள், எம் உடையானே! naadakaththaal un adiyaar pool nadiththu naan naduvee viidakaththee pukunthiduvaan mikap perithum viraikinReen aadaka siir maNikkunRee idaiyaRaa anpu unakku en uudakaththee ninRu uruka thantharuL em udaiyaanee பொ-ரை: எம்மை அடிமையாக உடையவனே! உன் மெய்யடியார் போலும் அன்புடையன் அல்லன் யான். ஆயினும் நின் அன்பர், வீடு செல்லுங்கால், வஞ்சனையாக நடந்து காட்டி யானும் முத்தியடைய மிகவும் துரிதப்படுகிறேன். பொன்னின் நலமுடைய மாணிக்கமலை போலும் ஐயனே! உன்பால் எப்போதும் நிகழும் அன்பை என் நெஞ்சகத்தில் நிலைபெறச் செய்து அதனால் என் நெஞ்சம் உருகவும் உதவி அருளுவாயாக. Oh Thou, bounteous gem of the holy hall of dance. I am here, putting up a mere show, feigning that I am devotee of Thine! And in this way, I hope to hasten towards the goal of liberation! Master, pray grant Thou, that I may ever stand in ceaseless dedication, with heart melting for merger with Thee. கு-ரை: நாடகத்தால், என்பதனை 'நாட்டகத்தால்', என்பதன் திரிபாகக் கொண்டு, 'நாட்டகத்தில்', அதாவது 'இவ்வுலகில்' எனப் பொருள் கொள்ளுதல், வலிந்து பொருள் கோடலாகும். 'நாடுகின்ற அகத்தால்' , வீடு நாடும் அவாவினால், என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. அன்பின்மையைப் பிறர் அறிய ஒண்ணாது நடப்பதே, நாடகத்தால் நடிப்பது, பிறர் அறிய நடப்பது, நடிப்பது மாத்திரையாகும் என்ப . அன்பர் தாம் வீடு செல்லுதற்கு உரியர், அவர் நடுவே விரைதல் உரிமை இன்மையைக் குறிக்கும். அடிகள் உடல் நீத்து இறைவனோடு இரண்டறக் கலத்தலையே பெரிதும் விழைந்தவர் என்பதற்கு இதுவே தெளிவான அகச்சான்று. ஆடகம் மாறின்மையையும், மாணிக்கம் செம்மேனியையும் குறிக்கும் . அரன்கழல் செல்லுதற்குரிய அயரா அன்பினையே அடிகள் வேண்டினர். நின்று = நிற்க 12. யானேதும் பிறப்பஞ்சே னிறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் றேனேயு மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம் மானேயுன் னருள்பெறுநா ளென்றென்றே வருந்துவனே. யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன் ? வானேயும் பெறில் வேண்டேன்: மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம் மானே! "உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே, வருந்துவனே. yaan eethum piRappu anjseen iRappathanukku en kadaveen vaaneeyum peRil veeNdeen maNNaaL vaan mathithum ireen theen eeyum malarkkondRai sivanee emperumaan em maanee un aruL peRum naaL enRu enRee varunthuvanee பொ-ரை: இறைவா! அடியேன் பிறப்பதற்கும் இறப்பதற்கும் அஞ்சமாட்டேன். விண்ணுலகைக் கொடுத்தாலும் விரும்பமாட்டேன். உலகாளும் மன்னனைச் சார்ந்து நின்று வாழமாட்டேன், தேன் பொருந்திய கொன்றை மலரணிந்த மங்கலப் பொருளானவனே! எம் தலைவா! பெரியோனே! உன்னோடு இரண்டறக் கலக்க ஏதுவான திருவருளை யான் பெறுங்காலம் எப்போது என்றெண்ணி மனம் உளைகின்றேன். I fear not, taking birth again! Neither am I afraid of death! I just yearn for the day I will receive Thy grace, and keep crying out (in anxiety), "when, when shall it be', oh Lord Civa, our Sire, our Chief, bedecked with honey-filled cassia flowers, even if I were to get the gift of all the heavens above, I will not want this. Nor shall I hold in esteem the kingship over the world. கு-ரை: பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சாமையே குறித்தார். இறப்புக்கு யாது செய்யக் கடவேன், என்று அஞ்சியதாகக் கூறுதல் தவறு . தேன் போன்ற இன்பம் நல்கும் மங்கலம் உடையானைச் சார்ந்த போது பிறப்பு இறப்பின்மையும், இறைவனைத் தலைவனாகப் பெற்றபோது, தாம் விண்ணவர் தலைவனாதலை விரும்பாமையும், இறைவனைப் பெரியனாகக் கொண்டவிடத்தே, மன்னனை மதித்து வாழாமையும், ஏற்படும் என்பது குறிப்பு. எம்மவன், எம்மான் என்றாயது என்பாரும் உளர். மான் என்பதற்கு மகான் என்று பொருள் கொள்ளுவர். 13. வருந்துவனின் மலர்ப்பாத மவைகாண்பா னாயடியே னிருந்துநல மலர்புனையே னேத்தேனாத் தழும்பேறப் பொருந்திய பொற் சிலைகுனித்தா யருளமுதம் புரியாயேல் வருந்துவனத் தமியேன்மற் றென்னேநா னாமாறே. வருந்துவன், நின் மலர்ப்பாதம் அவை காண்பான்; நாய்-அடியேன் இருந்து நலமலர் புனையேன்; ஏத்தேன் நாத்தழும்பு ஏற ; பொருந்திய பொன்சிலை குனித்தாய் ! அருள் அமுதம் புரியாயேல், வருந்துவன் அத்தமியேன்; மற்று என்னே நான் ஆம்ஆறே? varunthuvan ninmalar paatham avaikaaNpaan naay adiyeen irunthu nalamalar punaiyeen eeththeen naaththazumpu eeRa porunthiya poRsilai kuniththaay aruL amutham puriyaayeel varunthuvan aththamiyeen maRRu ennee naan aamaaRee பொ-ரை: நாய் போலும் அடியேன், நின் பெருமை மிகுந்த திருவடி மலர்களைக் காண வருந்தி நிற்கிறேன். இவ்வுலகில் வாழ்ந்திருந்தும் உனக்கு ஒரு மலர் மாலை தொடுத்தும் சாத்த மாட்டேன். நாவில் தழும்பேறும்படி உன்னை வாழ்த்தவும் மாட்டேன். பொன் பொருந்திய மேருமலையை வளைத்தவனே! நின் அருள் எனும் பேரின்ப அமுதம் நீ தந்தருளவில்லை எனில், ஆதரவின்றித் தனியாய் நான் துன்பமுறுவேன். அவ்வாறு துன்பமுறாது நான் உய்யுமாறு ஏதும் செய்யவும் வல்லேன் அல்லன். Pining for the sight of the flower like feet of Thine, stand I here, Thy cur like devotee. Yet I do not string together flowers for Thee. Neither do I hail Thy glories till my tongue gets furrowed with ovation. Oh Lord! that bent Mount Meru, should Thou not grant Thy grace ambrosia, I shall only rue in solitude. What else shall I become in such forlorn state? கு-ரை: மலையை வளைத்த நீ, என் மனத்தை வளைத்தல் அரிதில்லையே , என்றவாறு. நலம் - மிகுதி குறிக்கும். தனிமை மிகுதி கூறினார். 14. ஆமாறுன் றிருவடிக்கே யகங்குழையே னன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமானின் றிருக்கோயி றூகேன்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே ஆம்ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன் ; பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்: புத்தேளிர் கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன், சாம் ஆறே விரைகின்றேன்-சதுராலே சார்வானே! aamaaRu un thiruvadikkee akangkuzaiyeen anbu urukkeen puumaalai punainthu eeththeen pukaznthu uraiyeen puththeeLir koomaannin thirukkooyil thuukeen mezukeen kuuththaadeen saamaaRee viRaikinReen sathuraalee saarvaanee பொ-ரை: தேவர் பிரானே! திறமையான பணிக்கு நின் ஆதரவை அளிப்பவனே! நின் திருவடிப்பேறு அடையும் வண்ணம் மனம் நெகிழப் பெறமாட்டேன். அன்பால் உருக மாட்டேன். பூமாலை தொடுத்து, சாத்தி, வழிபட மாட்டேன். உன் புகழை எடுத்துப் பேச மாட்டேன். ஆனந்தமுற்று ஆட மாட்டேன். நற்செயலற்று, வீணே உயிர் விடுதற்கே துரிதப்படுகிறேன். Alas! I do not pine for permanent merger with Thy holy Feet, with my heart melting (in affection) for Thee. Neither do I adore Thee in dedication with strings of flowers. Lord of all gods! I spruce not Thy holy temple, nor wash it clean, nor dance in ecstasy. Instead, I hasten towards death, using my wits alone. Oh Lord of eminence approached by worthy folks . கு-ரை: சதுர்= திறமை, பணியைக் குறிக்கும்; சதுர் = அறிவு, அறிவிலே மன்னுபவனே, என்பதே 'சதுராலே சார்வானே' என்பதின் பொருள் எனக் கொள்ளுதலும் உண்டு. குழைதல் = இளகுதல், நெகிழ்தல், முக்கரணங்களாலும் வழிபடாமை கூறினார். 'சாதல்' பயன்பெறாது போதல் என்றும் கூறுப. 15. வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி யூனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்க் கோன் ஆகி, 'யான் எனது' என்று அவர் அவரைக் கூத்தாட்டு வான் ஆகி நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே! vaanaaki maNNaaki vaLiyaaki oLiyaaki uunaaki uyiraaki uNmaiyumaay inmaiyumaay koonaaki yaan enathu enRu avar avarai kuuththaaddu vaanaaki ninRaayai ensolli vaazththuvanee பொ-ரை: விண், மண், காற்று, நெருப்பு, நீர், உடம்பு, உயிர் ஆகிய யாவற்றிலும் கலந்தும் அவையே ஆகியும் நின்றவனே! மெய்யர்க்கு மெய்ப் பொருளாயும், பொய்யர்க்குப் பொய்ப்பொருளாயும் விளங்குபவனே! அல்லது, தோன்றும் பொருளாகவும், தோன்றாப் பொருளாகவும், அப்பொருட்களின் வசப்படாது தன்வயமுடைய முதல்வனாகியும் திகழ்பவனே ! பல்வகைப்பட்ட உயிர்களும் யான் செய்தேன், என்னுடையது என்று புல்லறிவால் மயங்கி, கூத்தாடும்படி, அவ்வவற்றையும் இயக்கியும் நின்ற நின்னை யான் யாது சொல்லிப் புகழ முடியும்? How shall I adore Thee in words, my Lord? Thou that are manifest as the earth, air and soul, and as the sky, and the light, as flesh and also as the real and the unreal also the King of all; You as a puppeteer playing on all folks leading everyone to identify himself and all things, as 'Me' and 'Mine'. கு-ரை: 'முற்றுநீ புகழ்ந்து முன் உரைப்பதென்', என்ற தேவாரமும் காண்க . இன்மையாதல், தோன்றாமையே. 'அவரவர்' என்று உயர்திணையாற் கூறினும், அஃறிணை உயிர்களையும் உடன் கொள்க. 'யான் எனது' என்னும் உணர்ச்சி, சிறப்பாக மக்களிடைக் காணப்படுதலின், உயர்திணையாற் கூறினர். உயிர்கட்குக் கூத்தாட்டாவது 'போக்கும் உணர்வும் வரவுமே'. பிற்காலத்தோருள் குமரகுருபரர் 'கூத்தாட்டு' என்பதை அக்கருத்தில் வழங்கியுள்ளார். 16. வாழ்த்துவதும் வானவர்க டாம்வாழ்வான் மனநின்பாற் றாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால் தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழ வேண்டி; சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய்-அடியேன், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே. vaazthuvathum vaanavarkaL thamvaazvaan manam ninpaal thaazthuvathum thaamuyarnthu thammai ellaam thozha veeNdi suuzththu mathukaram muralum thaarooyai naay adiyeen paazththa piRappu aRuththiduvaan yaanum unnai paravuveenee. பொ-ரை: வண்டுகள் ரீங்காரமிடும் மலர் மாலை அணிந்த நின்னை வானவர்கள் வாழ்த்துவது தாங்கள் குறைவின்றி வாழ்தற் பொருட்டே. தாங்கள் மேன்மை அடைந்து, தங்களை மற்றவர் வழிபட விரும்பியே உன்னிடத்தில் உள்ளத்தைப் பணிவிக்கிறார்கள். நாய்போலும் அடியேனின் பயனற்ற பிறப்பினை அழித்தல் பொருட்டு யானும் உன்னைப் போற்றித் துதிப்பேன் (வானவர்கள் ஆயுள் அதிகாரம் முதலிய பயன்கருதி இறைவனை வழிபடுகிறார்கள். அடிகளைப் போன்ற ஞானிகள் பிறவி நீக்கத்திற்காக இறைவனை வழுத்துகிறார்கள் என்பது கருத்து) Lord with garlands swarming with honeybees! All the heaven-dwelling gods shower praise on Thee and bow before Thee, in order to secure a life of glory to themselves, to rise high, so as to bring all others under their servitude, and to ensure that all folks worship them. I, this lowly cur of Thy devotee, pray to Thee, with just an appeal that my dreary birth cycles may cease to be. கு-ரை: வானவர்கள், ஆயுள், அதிகாரம் ஆகிய பயன் கருதி இறைவனை வழிபடுகிறார்கள் என்பதும், அடிகள் போன்ற ஞானிகள், பிறவி நீக்கத்திற்காக இறைவனை வழுத்துகின்றார்கள் என்பதும் அறியற்பாலன. வண்டுகள் மலரிலுள்ள தேன் பொருட்டு ரீங்காரம் செய்து மாலையைச் சூழ்தல் போல இனிய பயனைக் கருதி இறைவனை விண்ணவர் முதலியவர்கள் அடுத்து வழிபடுகின்றார்கள் என்பது கருத்து. 17. பரவுவா ரிமையோர்கள் பாடுவன நால்வேதங் குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் விரவுவார் மெய்யன்பி னடியார்கண் மேன்மேலுன் னரவுவார் கழலிணைகள் காண்பாரோ வரியானே. பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம் ; குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம் ; விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன் அரவுவார் கழல்-இணைகள் காண்பாரோ? அரியானே! paravuvaar imaiyoorkaL paaduvana naalveetham kuravuvaar kuzalmadavaaL kuuRudaiyaaL orupaakam viravuvaar meyyanpin adiyaarkaL meen meel un aravuvaar kazal iNaikaL kaaNpaaroo ariyaanee பொ-ரை: தேவர்கள் உன்னை வாழ்த்துகிறார்கள். அறிவுக்கு முதலாகிய நால்வகை வாக்காகிய நான்மறையும் உன் புகழையே ஒலிக்கின்றன. நறுமணம் பொருந்திய நீண்ட கூந்தலையுடைய இளம்பெண்ணான உமையம்மை உன்னுடைய ஒரு பகுதியான இடப்பாகத்தைப் பெற்றிருக்கிறாள். உண்மை பக்தியுடைய அடியார்கள் அணி அணியாக உன்னை வழிபடக் கூடுகிறார்கள். யாரும் அறிதற்கரியவனே! ஒலிக்கின்ற பெரிய கழல்கள் அணிந்த நினது இரு திருவடிகளையும் காண்பது யாரோ? ("நின்னை வழிபடுகிற இவர்கள் அனைவரும் திருவடியைக் காண்பார்களோ?" என்றும் பொருள் கொள்ளலாம் ) The gods of heaven offer prayers to Thee! The four scriptures sing on Thy glories! Thou, with Thy consort of flower-bedecked long locks occupying Thy (left) half! Rows of devotees come over and pay obeisance to Thee. And yet, can all of them see Thy snake clad, jewelled Feet, Oh Rarest of the Rare?! கு-ரை: தேவர்களும் மறையும் இறையடி காணாமை கூறப்பட்டன. உமையம்மை, சிவத்தின் பகுதியாவாள் ஆதலின், அடியிணை காணுங் கடப்பாடு உடையள் அல்லள். மெய்யடியார் காண்பர் என்பது கருத்து என்ப. குரவு - குரவமலரையும், மணத்தையும் குறிக்கும். விரவுதல்- கலத்தல், கூடுதல். அரவு என்பது அராவு என்பதன் நடுக் குறையாகக் கொள்ளப்படும். அழுத்தல் என்ற பொருளில், கழல்கள் அழுந்திய திருவடி எனக் கூறுவர். விண்ணவர் முடிபட்டு அழுத்தமுற்ற திருவடிகள் என்பதும் உண்டு. அரவு, ஒலி எனப் பொருள்படும் என்று கொண்டு, ஒலிக்கின்ற கழல்கள் அணிந்த திருவடிகள் என்றும் கொள்க. காண்பு= காண்டல், காண்பது. 18. அரியானே யாவர்க்கு மம்பரவா வம்பலத்தெம் பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறே னயந்துருகேன் றரியேனா னாமாறென் சாவேனான் சாவேனே அரியானே யாவர்க்கும் அம்பரவா! அம்பலத்து எம் பெரியானே ! சிறியேனை ஆட்கொண்ட பெய்-கழல்கீழ் விரை ஆர்ந்த மலர்தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன் ; தரியேன்; நான் ஆம் ஆறுஎன்? சாவேன்; நான் சாவேனே! ariyaanee yaavarkkum amparavaa ampalaththu em periyaanee siRiyeenai aadkoNda peykazaRkiiz virai aarntha malarthuuveen viyanthu alaReen nayanthu urukeen thariyeen naan aamaaRu en saaveen naan saaveenee பொ-ரை: எத்தகையோரும் அறிதற்கரியவனே! அருள் வாளினை உடையவனே! தில்லை அம்பலத்தில் நடனமாடும் எங்கள் பெருமானே! சிறுமை மிக்க அடியேனை ஆளாக்கிக் கொண்டாய்! செறிந்த கழலினை உடைய நின் திருவடிகளில் மணம் நிறைந்த மலர்களிட்டு வழிபட மாட்டேன்; புகழ்ந்து பாடித் துதியேன்; உள்ளம் விரும்பி உருகவும் மாட்டேன். இவ்வாறு கரணங்களால் வழிபடாது இருத்தலைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன். நான் உய்வதற்குத் தகுதியாகும் வகைதான் யாது? நான் இறப்பேன், இறப்பேன், இறந்து படவே துணிந்தேன். Rare one, abiding at the expansive space above! Thou, the great Lord of the hall of dance! I do not spray flowers of fragrance at Thy ornamented Feet that took me, this little one, under Thy tutelage. Neither do I cry in adoration , nor melt in affection. I shall not bear this state. How shall I attain reality? Indeed I shall just perish, merely perish. கு-ரை: மிகப் பெரியனாகிய கடவுள் மிகச்சிறியனாகிய என்னை ஆட்கொண்டும், அவனை வழிபடுகின்றேன் இல்லை. வழி படாது உயிர் வாழ்வு முடியவில்லை . இறப்பதே நலன் என்பது கருத்தாக அடிகள் கொண்டார். அடிகளின் தீவிர பக்குவத்தையே இத்திருப்பாடல் உணர்த்தும். மலர் தூவல், அலறுதல், உருகுதல்- முறையே உடம்பு, மொழி, மனம் என்பவற்றின் செயலாதல் காண்க. 19. வேனில்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே யூனெலா நின்றுருகப் புகுந்தாண்டா னின்றுபோய் வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே வேனில்-வேள் மலர்க்கணைக்கும், வெள்-நகை, செவ்-வாய்க் கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ! ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்றுபோய் வான் உளான்; காணாய்; நீ, மாளா வாழ்கின்றாயே veenilveeL malarkkaNaikkum veNnakai sevvaaykkariya paanal aar kaNNiyarkkum pathaiththu urukum paaznenjsee uun elaam ninRu uruka pukunthu aaNdaan inRu pooy vaan uLaan kaaNaay nii maaLaa vaazkinRaayee பொ-ரை: இளவேனிலாகிய வசந்த காலத்தில் மன்மதன் பூவகைகளாகிய அம்பினை விடுகிறான். வெள்ளிய ஒளியுடைய பற்களையும், கருநிறக் குவளை போலும் கண்களும் உடைய மகளிருக்காக ஈடுபட்டுத் துடிக்கிற, நெகிழ்கிற என் பயனற்ற மனமே! எம்பெருமான் நம் உடம்பெலாம் கனிந்து அமுதூறி உருகும்படியாக எழுந்து அருளினான். உள்ளத்தே நிலைபெற்று ஆட்கொண்டருளிய அப்பெருமான் இப்போது சென்று ஞான ஆகாயத்தின் கண் இருக்கிறான். அவனைக்காண நீ முயலமாட்டாய். நீ இறந்தொழியாது இன்னும் ஏன் நிலைத்திருக்கிறாய்? (உலகப் பற்றில் ஈடுபடக் கூடாதென நெஞ்சுக்கு அறிவுறுத்தும் பொருட்டு அடிகள் இங்ஙனம் புகன்றனர் போலும்) Ah you wretch of my mind, that in tremulous longing, doth ever crave for the bright smile, dark eyes and rosy lips of dames, goaded by the flowery spike of cupid (the god of love)! Note that the good Lord who entered our domain in order to steep our physique in bliss, has left us this day, and is now in the realms of the sky. What great pity, you are not dead and gone, but still happen to exist in vain! கு-ரை: மூன்றாம் அடியில், 'உருகப்புகுந்து நின்று' எனக் கொண்டு கூட்டுக. வாசனா மலத்தால், உலகப்பற்றில் ஈடுபடக் கூடாதென நெஞ்சிற்கு அறிவுறுத்துவார். இங்ஙனம் புகன்றனர் போலும். இளவேனிற்காலம், காமனுக்கு உகந்த பெரும்பொழுது, காம எண்ணத்தையே, மதன் அம்பிற்கு ஈடுபடுவதாகச் செப்பினர். பானல்= நீலோற்பலம்= குவளை, கரியபானல்= கருங்குவளை. புகுந்து என்பது உடலுள்ளும் உள்ளத்துள்ளும் உயிருள்ளும் புகுந்து எனவும், நிலவுலகிற் புகுந்து எனவும் இருவகையாகப் பொருள்படும். மாளா= மாளாது, வான்= சிதாகாசம், தில்லைக்குத் தம்மை வரப் பணித்தமையால் சிதம்பரமாகிய சிதாகாசத்தைக் குறித்தனர் என்பாரும் உளர். 20. வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றா யாழாமற் காப்பானை யேத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய்: ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன், பல்காலும் வீழ்கின்றாய் நீ, அவலக் கடல் ஆய வெள்ளத்தே. vaazkinRaay vaazaatha nenjsamee valvinaippaddu aazkinRaay aazaamal kaappaanai eeththaathee suuzkinRaay keedu unakku solkinReen palkaalum viizkinRaay nii avala kadal aaya veLLaththee. பொ-ரை: பேரின்ப வாழ்க்கையைப் பெற்று வாழக் கருதாத மனமே! நீ வீணாக இவ்வுலகில் நிலைத்திருக்கிறாய். இதனால் கொடிய வினையில் அகப்பட்டுத் துயரத்தில் அழுந்துகிறாய். அங்ஙனம் அழுந்தாமற் காக்கின்ற கடவுளை வழிபடாமல் உனக்குக் கெடுதியையே உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறாய். பலமுறையும் உனக்கு அறிவுரை இயம்புகிறேன்! நீ அதனைக் கேளாது துன்பக் கடலில் எழுந்த பெருவெள்ளத்தில் வீழ்ந்தொழிகின்றாய் என் செய்வது? What kind of life do you lead here, Oh dullard of my mind? Not adoring Him that saves you from drowning in sorrows, you are getting steeped into abysmal depths, as a result of your vile deeds in the past. Mark my words, harmful to you indeed, are your scheming acts (of indifference). What pity, time and again, you keep falling into the ever burgeoning flood of woes! கு-ரை: தமது அறிவு இறைவன் பால் ஈர்ப்ப, மனமானது உலகை அவாவி நிற்பதாகக் கருதி அதனைத் தடுத்து அறிவுரை பகர்தல் இச்செய்யுளின் நோக்கம். THIRUCHCHITRAMBALAM 5.3 சுட்டறுத்தல் 5.3. CHUTTARUTHTHAL எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Obliteration of the Self திருச்சிற்றம்பலம் 21. வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்நிற்க வென்னை யாண்டாய்க் குள்ளந்தா ணின்றுச்சி யளவு நெஞ்சா யுருகாதா லுடம்பெல்லாங் கண்ணா யண்ணா வெள்ளந்தான் பாயாதா னெஞ்சங் கல்லாங் கண்ணிணையு மரமாந்தீ வினையி னேற்கே வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ்உறு புனலில், கீழ்மேலாகப் பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா! வெள்ளம்-தான் பாயாதால், நெஞ்சம் கல் ஆம் கண்-இணையும் மரம் ஆம்-தீவினையினேற்கே. veLLanthaaz virisadaiyaay vidaiyaay viNNoor perumaanee enakkeeddu veedda nenjsaay paLLanthaaz uRupunalil kiiz meelaaka pathaiththu urukum avar niRka ennai aaNdaaykku uLLanthaaL ninRu ussi aLavum nenjsaay urukaathaal udampellaam kaNNaay aNNaa veLLanthaan paayaathaal nenjsam kallaam kaNiNaiyum maramaam thiivinaiyi neeRkee பொ-ரை: வானின்று இறங்கிய கங்கை விழுந்து தங்குவதற்கேற்ற விரிந்த சடை உடையாய்! காளையை ஊர்தியாய் உடைய தேவர் தலைவனே! இவ்வாறு அன்பர்கள் சொல்லக் கேட்டவுடன் நின் சிறந்த அடியார்கள் ஆர்வமிகுந்த மனத்தினராய் உன் அருளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பள்ளத்தில் விழுகிற நீர் போல மேல் கீழாக விழுந்து வணங்கி நெஞ்சம் துடிதுடித்து உருக்கம் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கு உன் அருளைக் கொடாமல் தகுதியற்ற என்னை நின் பெருங்கருணையால் ஆட்கொண்டாய் . என் உள்ளங்கால் முதல் உச்சிவரை உள்ளத்தின் இயல்பு போல உருகவேண்டும். ஆனால் உருகவில்லை. மேலோனே! உடம்பு முழுவதும் கண்ணின் இயல்பு கொண்டு நீர்பெருக்கி வெள்ளம் பாய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. ஆகவே, கொடிய வினையை உடைய எனக்கு நெஞ்சம் கல்லால் ஆனது. இரு கண்களும் மரத்தாலானவையாம். Bull mounted Lord! with expansive matted locks, whereat plentiful waters of Ganga river abide! Whilst many an ardent sage did, in adulation, go into shivers and melt down like "Valley seeking" waters, Thou Chief of "heaven dwelling" gods, made all gods wait outside, and took me in under Thee. Nevertheless, alas! Unto Thee my mind does not melt from head to foot. My whole physique does not shed tears of dedication. I am a stony-hearted, evil one with wood-like (senseless) eyes! What irony is this! கு-ரை: அடிகளது ஆர்வமிகுதியை இச்செய்யுள் குறிக்கும். இறைவன் பெருங்கருணையை நோக்கத் தமக்கு அன்பின்மையும், அதற்குக் காரணம் தனது தீவினையும் என அடிகள் அறிவுறுத்தியவாறாம். சடை, இறைவனது பேராற்றலைக் குறிக்கும். பகீரதன் கங்கை கொண்டுவந்த கதை வெளிப்படை. பெருவெள்ளம், ஒரு நீர்த்துளியாகச் சடையில் தங்கியது என்ப. விடை, நீதியை உணர்த்தும். வேட்ட= ஆசைப்பட்ட. அண்ணா என்பதற்கு அண்ட முடியாத என்றும் பொருள் கொண்டு, வெள்ளந்தான் என்பதற்கு அதனை அடையாக்குவர் ஒரு சாரார். 22. வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேட னென்பாய் போல வினையனா னென்றுன்னை யறிவித் தென்னை யாட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை யனையநான் பாடேனின் றாடே னந்தோ வலறிடே னுலறிடே னாவி சோரேன் முனைவனே முறையோநா னானவாறு முடிவறியேன் முதலந்த மாயி னானே வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 'போது, நான் வினைக்கேடன்' என்பாய் போல 'இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு, இரும்பின் பாவை அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ! அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்; முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு ? முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே. vinaiyilee kidantheenai pukunthu ninRu poothu naan vinaikkeedan enpaay poola inaiyan naan enRu unnai aRiviththu ennai aadkoNdu empiran aanaaykku irumpin paavai anaiya naan paadeen ninRu aadeen anthoo alaRideen ulaRideen aavi sooreen munaivanee muRaiyoo naan aanavaaRu mudivu aRiyeen muthal antham aayinaanee பொ-ரை: தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்னுள் புகுந்து வலிய எதிர்ப்பட்டு வந்து நின்றாய். நான் வினையை அழிக்கவல்லேன், நான் இத்தன்மையன் என உன் இயல்பை, எனக்கு அறிவுறுத்தி அருளினாய். என்னை அடிமையாக்கிய என் தலைவனாகிய உன்பால் இரும்புப் பதுமை போலும் யான் நின் புகழினைப் பாட மாட்டேன். நிலைபெற்று ஆனந்தக் கூத்திடவும் மாட்டேன். ஐயோ! கதற மாட்டேன்! பதறி வற்ற மாட்டேன். உயிர் தளர மாட்டேன். முதல்வனே! நான் இவ்வாறாம் முறை நியாயமாமோ? எனக்கு என்ன கதி வருமோ? அறிகிலேன். ! Even as I was sulking under the weight of past evil deeds, Thou didst call me over and Thyself revealed Thy true nature to me and took me under Thee, as if to show that Thou art indeed the destroyer of evil. Unto Thee, Oh Lord, that art at once the first and the last; alas I sing no praise, but stay as a mute metallic toy. Neither do I dance in glee, nor cry, nor faint in fatigue. What great pity, oh primal Lord! Is it meet for me to stay like this? I know not what is in store for me. கு-ரை: புகுந்து என்பது உள்ளத்திற் புகுந்து, உலகில் வடிவொடு புகுந்து, என இரு பொருள்படும். போது=வா, வினைவழி நின்று வெளியே போ, அதாவது, என்னிடைவா, என்று விரிபொருள் கொள்க. ஆசிரியனது பிரிவு ஆற்றாமையால், 'அலறிடேன், உலறிடேன்; ஆவி சோரேன்' என்றார் . தனது கடப்பாட்டுக் குறையால், உய்தி கூடாது போமோ என்ற ஐயப்பாட்டினால், 'முடிவறியேன்' என்றார் . இறைவன் கருணைச் சிறப்பை அறிவுறுத்தியவாறு. 23. ஆயனான் மறையவனு நீயே யாத லறிந்தியா னியாவரினுங் கடைய னாய நாயினே னாதலையு நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோ ரன்ப னென்பே னாயினே னாதலா லாண்டு கொண்டா யடியார்தா மில்லையே யன்றி மற்றோர் பேயனே னிதுதானின் பெருமை யன்றே யெம்பெருமா னென்சொல்லிப் பேசு கேனே ஆய நான் மறையவனும் நீயே ஆதல் அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் 'நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன்' என்பேன் ஆயினேன்; ஆதலால், ஆண்டு கொண்டாய் ; அடியார் தாம் இல்லையே ? அன்றி மற்றுஓர் பேயனேன்? இது தான் நின்பெருமை அன்றே! எம்பெருமான்! என்சொல்லிப் பேசுகேனே? aayanaan maRaiyavanum niiyee aathal aRinthuyaan yaavarinum kadaiya naaya naayineen aathalaiyum nookki kaNdum naathanee naan unakku oor anpan enpeen aayineen aathalaal aaNdu koNdaay adiyaar thaam illaiyee anRi maRRu oor peeyaneen ithu thaan nin perumai anRee emperumaan ensolli peesu keenee பொ-ரை: தலைவனே! நான்கு வேதப் பொருளானவனும் நீயே! அங்ஙனம் நின் பெருமை அறிந்து அடியேன் எல்லோரினும் கீழ்ப்பட்ட நாயியல்பு உடையேன் என்பதையும் ஆய்ந்து பார்த்து உனக்கு ஒரு வகையான அன்பன் என என்னை சொல்லிக் கொள்ளுவேன் ஆயினேன். அக்காரணம் பற்றி நீ என்னை ஆட்கொண்டு அருளினாய். மனித வடிவம் கொண்ட பேயென்று சொல்லத் தக்கவனான என்னையன்றி, நீ ஆட்கொள்ளத் தக்க அடியார்கள் தாம் வேறு இல்லையோ ? தகுதியில்லாத என்னை ஆட்கொண்ட இக்கருணைதான் நின் பேராற்றலை உணர்த்தும் அல்லவா? எம்பெருமானே! யான் நின் கருணைத் திறத்தை என்ன சொல்லிப் பாராட்டுவேன்? I am aware that Thou art verily the Lord of the four vedas. Also I am aware of my own "cur like" low state that assigns me the very last place in the row. And yet, I have come to say 'Oh my Lord, I am Thy favourite ward; That being so, Thou didst take me under Thee. Though Thy other pupils are here no more, this mad wretch, me, stayeth here as thine own. Such indeed is Thy glory, Oh Lord! In what words shall I speak on Thee? கு-ரை: 'ஆயநான் மறையவனும் நீயே யாத லறிந்து' = என்னை ஆட்கொள்ள உருவெடுத்து வரலான நான்மறை வல்லான் பரம்பொருளாகிய நீயே என்பது அறிந்து என்று கோடலுமுண்டு. ஓர் பேயனே அன்றி மற்று அடியார் தாம் இல்லையே என்று கொள்க. பேய் அன்னேன் பேய் போன்றேன் என்று பேயனேன் என்பதைப் பிரித்துப் பொருள் கோடலுமுண்டு. சொல்லிப் பேசுதல்= பாராட்டுதல். 24. பேசிற்றா மீசனே யெந்தா யெந்தை பெருமானே யென்றென்றே பேசிப் பேசிப் பூசிற்றாந் திருநீறே நிறையப் பூசிப் போற்றியெம் பெருமானே யென்று பின்றா நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை யாண்டானே யவாவெள்ளக் கள்வ னேனை மாசற்ற மணிக்குன்றே யெந்தா யந்தோ வென்னைநீ யாட்கொண்ட வண்ணந் தானே பேசின், தாம் 'ஈசனே, எந்தாய், எந்தை பெருமானே!' என்று என்றே பேசிப்பேசி பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி போற்றி எம்பெருமானே' என்று; பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார்-தம்மை ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை மாசு அற்ற மணிக்குன்றே! எந்தாய்! அந்தோ ! என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே? peesin thaam iisanee enthaay enthai perumaanee enRu enRee peesi peesi puusin thaam thiruniiRee niRaiya puusi pooRRi emperumaanee enRu pinRaa neesaththaal piRappu iRappai kadanthaar thammai aaNdaanee avaa veLLa kaLva neenai maasu aRRa maNikkunRee enthaay anthoo ennai nii aadkoNda vaNNam thaanee. பொ-ரை: குற்றமற்ற மாணிக்க மலையே! எங்கள் அப்பனே! நின் அன்பர்கள் தாம் பேசுவதானால் ஆண்டவனே ! அப்பனே! எங்கள் அப்பனுக்கும் தலைவனே என்று நின்னைத் துதித்துப் பேசுவார்கள். ஏதாவது பூசுவதானால் திருநீற்றினையே உடலெங்கும் நிரம்பப் பூசி "எம் பெருமானே! காத்தருளுக" என்று மொழிவார்கள். பேரன்பு மிகுதியால் பிறவியையும் சாவையும் கடக்கும் தகுதியடைந்தாரை ஆட்கொண்டவனே! உலக ஆசை வெள்ளத்தில் அகப்பட்டு உன் அடியவன் போல் நடிக்கும் வஞ்சகனாகிய என்னை நீ ஆட்கொண்ட வகைதான் என்ன? Coming to talk of it. Oh Lord, Thou didst bring under Thee, all those that respectfully called out, "Oh Father, our peerless Lord", with unflinching attachment. Wearing white ash profusely, they paid obeisance to Thee, and crossed the cycle of births and deaths. And yet, Thou didst take me too in Thy realm - me, this furtive one that am steeped in the floods of greed, Oh Faultless One! Strange indeed are Thy generous deeds! கு-ரை: மெய்யடியார், பேசுவதானால், ஈசன் புகழே பேசுவர், பூசுவதானால், திருநீறே பூசுவர் என்பது குறிக்கப்பட்டது. பின்றா= பின்னிடாது. 'கடந்தார்' - நடக்கும் தகுதியடைந்தார். இறைவன் ஆட்கொண்ட பின்னரே, மெய்யாகப் பிறப்பு இறப்பைக் கடந்தவராவர். உறுதிபற்றிக் கடப்பாரைக் கடந்தார் என்றார் என்க. வாசனாமலம் தோன்றுதல் பற்றிப் போலும், தம்மை அடிகள் ' அவா வெள்ளக் கள்வ' னென்றார். 25. வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற நேகனேக னணுவணுவி லிறந்தா யென்றங் கெண்ணந்தான் றடுமாறி யிமையோர் கூட்ட மெய்துமா றறியாத வெந்தா யுன்றன் வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க் கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டா யெம்பெருமா னென்சொல்லிச் சிந்திக் கேனே. வண்ணம் தான், சேயது அன்று; வெளிதே அன்று ; அனேகன்; ஏகன்: அணு அணுவில் இறந்தாய்; என்று அங்கு எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம் எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன்-தன் வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி மலர்க்கழல்கள் - அவை காட்டி, வழி அற்றேனைத் திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்; எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே? vaNNam thaan seeyathu anRu veLithee anRu aneekan ekan aNu aNuvil iRanthaay enRu angku eNNam thaan thadumaaRi imaiyoor kuuddaam eythumaaRu aRiyaatha enthaay unthan vaNNam thaan athu kaaddi vadivu kaaddi malar kazalkaL avaikaaddi vazi aRReenai thiNNam thaan piRavaamal kaaththu aadkoNdaay emperumaan ensolli sinthikkeenee. பொ-ரை: வானவர் கூட்டம் நீ சிவப்பன்று, வெள்ளையன்று, நீ பலவாயும் ஒன்றாயும் அணுவாயும் இருப்பவன் என்று பேசுகிறது. பிறகு அணுவினையும் கடந்த அதிநுட்பமுடையோன் என்றெல்லாம் வியந்து தமது நினைவுதானும் தடுமாறப் பெற்று உன்னை அடையும் ஏது அறியாது நிற்கிறார்கள். எந்தையே! உன் மெய் இயல்பாகிய நுட்பத்தை, ஆட்கொள்ள வந்த திருமேனியை, பூப்போன்ற நின் திருவடிகளைக் காட்டி, கதியின்றி நின்ற என்னை ஆட்கொண்டாய். இனி உறுதியாகப் பிறவாதிருக்கும் படி தடுத்தாட் கொண்டருளினாய். எம் தலைவனே! உன் கருணைத் திறத்தை யாது கூறி வியப்பேன்? The gods of heaven know not how to reach Thee. Mired in shaky thoughts,they conjure up visions of Thy physical state neither red nor white! They view Thy form as one and yet as so many, holding that Thou art inside the minutest of atoms. While such is the case, thou didst show me Thy colour and Thy form and Thy flowery Feet; to me, this resourceless one. And took me unto Thy lordly state, firmly rooting out all future births. Oh my Chief, in what manner of words shall I meditate on Thee? கு-ரை: விண்ணோர் இறைவனது வெளிப்படையான பல்வகைக் காட்சிகளை நினைந்து மெய் இயல்பு அறியாது மயங்கினமை கூறியவாறு. வண்ணந்தான் 'அது' என்பது மெய் இயல்பைச் சுட்டி நின்றது. ' 'மலர்க் கழல்கள் அவை' என்பதில், 'அவை' என்பது திருவடிகளாகிய அருட்சத்திகளைக் குறிக்கும். காத்து= தடுத்து. 26. சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் றிருப்பாதப் போதுக் காக்கி வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கியைம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே சிந்தனை நின்-தனக்கு ஆக்கி, நாயினேன்-தன் கண்-இணை நின்-திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன் மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெரும் கடலே! மலையே! உன்னைத் தந்தனை; செம்-தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே sinthanai ninthanakku aakki naayineen than kaNNiNai ninthiruppaatha poothukku aakki vanthanaiyum ammalarkkee aakki vaakku un maNivaarththaikku aakki aimpulankaL aara vanthanai aadkoNdu uLLee pukunthavissai maal amutha perunkadalee malaiyee unnai thanthanai senthaamarai kaadu anaiya meeni thanisudaree iraNdum il ith thaniyaneeRkee. பொ-ரை; நாய் போலும் என் எண்ணத்தை மாற்றினாய். உன்னையே நினைக்கும்படி செய்து, என் இரு கண்களையும் உன் திருவடிகளில் சாத்தும் மலர்களாக்கினாய். உன் திருவடியினைப் பார்த்து இன்பமுறும்படிச் செய்து, எனது வணக்கமும் அத்திருவடிக்கே உரியதாகச் செய்தாய். எனது ஐம்பொறி அறிவும் உன்னையே துய்க்கும்படி எழுந்தருளி வந்து என்னை ஆளாகக் கொண்டாய். எனதுள்ளத்தின் கண் புகுந்த அருஞ்செயலை உடைய அன்பு மயமான ஞானப் பெருங்கடலே ! சத்தாகிய மலையே! சிவந்த தாமரைக் காடு போலும் திருமேனியுடைய ஒப்பற்ற ஒளி உருவனே. கேடும் ஆக்கமும் (அல்லது) இருவினையும் கெட்ட தனிமையன் ஆன எனக்கு நின்னையே தந்தருளினாய். உன் பெருமை எத்துணைச் சிறப்புடையதாகும்!!? Thou didst direct all my thoughts on to Thee. Thou didst direct the eyes, of me this cur, on to Thy flowery Feet directing me to greet those very flower-like Feet, transforming all my utterances into Thine own holy speech. Thus earnest Thou, to the fulfilment of my five senses, entering into me, Thou took me as vassal, Oh mighty sea of ambrosia, mount of bliss, shining like lotus form in full bloom. Thou gavest Thyself to me, even me that am devoid of wit and skill. கு-ரை: மணி = அழகிய, சிறந்த; வார்த்தை = புகழ்: கண் மலர், திருவடி மலரிலே பொருந்தும் இயைபு உடையது, மலர் மலரோடு இனம் பற்றிச் சேர்தலால், நீயே சிந்தனை மயமாகவும், திருவடி மலர், கண் மலராகவும், புகழ்ச்சொல்லே வாக்காகவும் அமைந்தன என்பதும் ஒரு பொருள். சிந்தனை, வந்தனை, வார்த்தை முக்கரண வழிபாடு. இனி ஐம்புலன்களுக்கும் இறைவன் மாட்டே உரியன கிடைக்கப் பெற்றன என்பது கருத்து. அவையாவன: திருமேனி காண்டல், திருவடி மலர்த்தேன் பருகல், புகழ் கேட்டல், தெய்வ வாசனை முகரல், திருவடி சென்னிமிசை தீண்டப் பெறுதல், இரண்டுமிலி = இருவினையும் இல்லாதவன், இகபரம் பயனற்றவன். மூன்றாம் அடியில் வந்தனை = வந்து, விச்சை = வித்தை, வியத்தகு செயல், மால்=அன்பு. இறைவன் செம்மேனியன் ஆதலின் செந்தாமரைக் காடனையமேனி. எல்லா ஒளிகட்கும் தோற்றமாய்ச் சிறத்தலின் 'தனிச்சுடர்' என்றார். 'இரண்டுமிலித் தனியனேற்கே' என்பதை 'உன்னை' என்பதன் முன் வைக்க. 27. தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி யஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வத் தடம் திரையால், எற்றுண்டு, பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு, காம வான்சுறவின் வாய்ப்பட்டு 'இனி,என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய், மூர்க்க னேற்கே thaniyaneen perumpiRavi powvaththu evvath thadanthiraiyaal eRRuNdu paRRu onRu inRi kaniyaineer thuvarvaayaar ennum kaalaal kalakkuNdu kaama vaan suRavin vaayppaddu iniennee uyyumaaRu enRu enRu eNNi anjsezuththin puNai pidiththu kidakkinReenai munnaivanee muthal antham illaa mallal karaikaaddi aadkoNdaay muurkka neeRkee. பொ-ரை: கேவல அவத்தையில் தனியனாய்க் கிடந்து, பிறவிப் பெருங்கடலில் விழுந்து இருவினையாகிய இன்ப, துன்பப் பேரலைகளால் தாக்கப்பட்டேன் . ஆதரவு ஒன்றுமில்லாது கனிவாய்ப் பெண்டிர் என்று சொல்லப்படும் புயற்காற்றால் அலைக்கப் பட்டு மனக்குழப்பம் உற்றேன். ஆசையெனும் பெரிய சுறா மீனின் வாயில் அகப்பட்டு இனி உய்யும் வழி யாதோ என வாடினேன். திருவைந்தெழுத்தின் தெப்பத்தைப் பிடித்து அதை மேற்செலுத்தி, கரை சேர இயலாமல் தவித்தேன், முரண்பட்ட குணமுடைய எனக்கு, ஆதி அந்தம் இல்லா முத்திக் கரையைக் காட்டி என்னை ஆட்கொண்டருளினாய்! உன் கருணைத் திறம் தான் என்னே? This lonesome forlorn me, tossed about by the tall billows of the sea of birth have no other attachment; but am caught in the jaws of the whales of lust, swirled by the awesome lurid stance of fair dames. And lie here hopelessly ruminating on what avenues of redemption could there possibly exist for me now. Nevertheless,I held on to the raft of the five-letter incantation (the chanting of pentad), Upon which Oh primal Lord, Thou showed me the shores of Thy boundless weal and took me under Thee. கு-ரை: 'தனியனேன்' என்பது உடம்பெடாத தனிநிலையைக் குறிக்கும். பிறவிக் கடலிற் பொருந்திய நிலை சகல நிலையாகும். எவ்வம்=துன்பம், எற்று=மொத்து, தாக்கு, பற்று= ஆதரவு, 'கனி' கொவ்வைக் கனியைக் குறிக்கும் என்ப. துவர்- பவளம் என்னும் பொருளில், சிவப்பைக் குறித்தலால், 'கனி' சுவைக்கு உவமையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. புணை =தெப்பம், மிதவைக் கட்டை என்றும் கொள்ளலாம். மூர்க்கன்- கோபம் உடையவன், கீழ்ப்பட்டவன், பிடிவாதம் உடையோன். அஞ்செழுத்தின் சிறப்பையும், அதன் கண் தமக்குள்ள உறுதியையும் அடிகள் குறித்தனர். வீட்டிற்கு முதலீறின்மை தெளிவு, மல்லல்= வளம். 28. கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டா னாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா னெம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்; கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்; நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் - எம்பெருமான் செய்திட்ட விச்சை - தானே! keeddaarum aRiyaathaan keedu onRu illaan kiLaiyilaan keeLaathee ellaam keeddaan naaddaarkaL viziththu iruppa njaalath thuLLee naayinukku thavisu iddu naayineeRkee kaadaa thane ellaam kaaddi pinnung keeLa thana ellaam keedpithu ennai miiddeeyum piRavaamal kaaththu aadkoNdaan emperumaan seythidda vissai thaanee பொ-ரை: எவராலும் கேள்வியால் அறியப்படாதவன். அழிவும் இல்லாதவன். உறவினர் இல்லாதவன். கருவிகளின் உதவி இன்றிக் கேட்பனவெல்லாம் கேட்டவன். உலகத்தார் பார்த்திருக்க, உலகிற் புகுந்து, நாயேனுக்கு இருக்கையளித்து, சிறியவனான எனக்குக் காட்டக் கூடாதனவெல்லாம் காட்டி, கேட்கக் கூடாதன எல்லாம் கேட்பித்து என்னை மீண்டும் பிறவாதபடி ஆட்கொண்டருளிய எம்பெருமான் செய்த மாய வித்தையாகும் இது. He that none can know through the sense of hearing; He that never doth decay. He that hath none as His kin; He that hears all without listening to any. Such a one gave an exalted pedestal to this lowly cur of me and revealed unto me all that are not revealed yet, for all the world to see, made me hear all that is not heard of yet, and saved me from further births. Such is the wonder that He has wrought! Lo! What magic, is this! கு-ரை: இறைவனே குருவாக நேரில் வந்து அறிவு நல்கப் பெற்று அறியுந் தரத்தனேயன்றிப் பிறர்பாற்கேட்டு அறியப்படாதான் என்பார், 'கேட்டாரு மறியாதான்' என்றார். உபதேசம் பெற்றாராலுங்கூட முற்றிலும் அறியப்படாதான் என்றுங் கூறுப. தந்தை தாய் முதலிய உறவினரில்லாதான் தம் வயமும் பற்றின்மையும் உடையனாதலின் என்க. கேளாதே என்பதற்குப் பிறர் வாயிலாகக் கேட்டறியாதே என்றும் பொருள் கொள்வர். உயிர்கள் கூறும் எல்லாவற்றையும் தானே கேட்டு அருள் புரிபவன் என்பதுங் கொள்க. யாரும் அறியத் தெளிவாகவே, பக்குவம் வந்த காலை இறைவன் திருப்பெருந்துறையில் ஆண்டான். அந்நுட்பத்தை உலகில் நாட்டினர்கள் விழித்திருந்தும் அறிந்திலர் என்பது. தவிசு = ஆசனம், இருக்கை. இறையாசான், தன்பக்கம் அடிகளை இருக்கும்படி செய்து மெய்யறிவு நல்கினன். இருக்குமிடம் கொடுத்ததையே 'தவிசிட்டு' என்றார். ஞானிகள் இறையறிவாற் காண்பன, கேட்பன , பிறரால் அறியப்படாமையின், அவ்வாறு கூறினர். வித்தை = வியத்தகு அற்புதச் செயல். 29. விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாத லடியார்தம் மடிய னாக்கி யச்சந்தீர்த் தாட்கொண்டா னமுத மூறி யகநெகவே புகுந்தாண்டா னன்புகூர வச்சனாண் பெண்ணலியா காச மாகி யாரழலா யந்தமா யப்பா னின்ற செச்சைமா மலர்புரையு மேனி யெங்கள் சிவபெருமா னெம்பெருமான் றேவர் கோவே. விச்சை தான் இது ஒப்பது உண்டோ ? கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்பு கூர; அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம் ஆகி ஆர் அழல்-ஆய், அந்தம்-ஆய், அப்பால் நின்ற செச்சை மா-மலர் புரையும் மேனி, எங்கள் சிவபெருமான், எம்பெருமான், தேவர்-கோவே! vissai thaan ithu oppathu uNdoo keedkin mikukaathal adiyaar tham adiyan aakki assam thiirththu aadkoNdaan amutham uuRi akamneekavee pukunthu aaNdaan anpu kuura assan aaN peN ali aakaasam aaki aar azalaay anthamaay appaal ninRa sessai maamalar puraiyum meeni engkaL sivaperumaan emperumaan theevar koovee. பொ-ரை: இது போன்ற மாய வித்தைதான் உண்டோ ? தம்பால் மிகுந்த அன்புடைய அடியாருக்கு என்னை அடியனாக்கினான். பிறப்பு, இறப்பு பயத்தை நீக்கி என்னை ஆட்கொண்டருளினான். பேரின்ப அமுதம் ஊற்றெடுத்து, நெஞ்சம் கரைந்து, அன்பு மிகுதிப்படும் வண்ணம் என் உள்ளத்தில் புகுந்து ஆண்டருளினான் . அவன் யார் எனில் யாவருக்கும் அப்பன். ஆண், பெண், அலி என்பவையாய் எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும் வானாகி, கடத்தற்கரிய சோதி வடிவாகி, முடிந்த முடிவாய் அதற்கு அப்பாற்பட்டு நின்றான். வெட்சிப் பூப்போல் செம்மேனி படைத்த எங்கள் சிவபரம்பொருள் எம் தலைவன் - அவனே விண்ணவர்க்கரசன் ஆவான். Say, is there any other art like this? He removed my fear and took me under His tutelage, making me a page of the closest of His pages! He entered into me, to the thawing of my heart, ambrosia springing forth in kindly gusts. He, our sire, stands out as male, female, neuter, the sky and the unique fire. He is the end of all and goes beyond all!. This is our Lord, of flower like reddish frame, Lord of all gods! Lord Civa our Chief. கு-ரை: அடியர்க்கு அடியனாதல், அயரா அன்பினை வளர்த்தற்குக் கருவியாம். அச்சன்=அப்பன். நுண்ணிய வடிவன் என்று பொருள் கொள்வாரும் உளர். ஆரழல் = கடத்தற்கரிய நெருப்பு அல்லது ஒளி. ஆகாசம் என்பதை மூலப்பகுதி எனவும், ஆரழல் என்பதை ஒளிமயமான நாதக்கலையுடைய சுத்தமாயை எனவும் கூறுப. இறைவன் அப்பாற்பட்டவனாயினும், அடியார்க்குச் செம்மேனியனாய் வெளிப்பட்டு அருளுதலின், 'செச்சை மேனி' என்றார். செச்சை = வெட்சி. மா=சிறந்த. 30. தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே தேவர் கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை; யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியாரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே. theevar koo aRiyaatha theva thevan sezum pozilkaL payanthu kaaththu azikkum maRRai muuvarkoonaay ninRa muthalvan muurththi muuthaathai maathu aaLum paakaththu enthai yaavarkoon ennaiyum vanthu aaNdu koNdaan yaam aarkkum kudialloom yaathum anjsoom meevinoom avan adiyaar adiyaroodum meen meelum kudainthu aadi aadu voomee பொ-ரை: விண்ணவர் தலைவனான இந்திரன் அறியாத மகாதேவன்; உலகங்களைப் படைத்துக் காத்து ஒடுக்குகின்ற அயன், அரி, அரன் என்பவர்க்குத் தலைவனாய் நின்ற ஈசன் எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவன்; எல்லோருக்கும் பாட்டன். உமையொரு பாகனான எம் அப்பன் யாவருக்கும் அரசன். கடையனான என்னை ஆட்கொண்டான். அடியேங்களாகிய நாங்கள் அவனைத் தவிர பிறருக்கு ஆட்பட மாட்டோம். எதற்கும் அஞ்ச மாட்டோம். அவனது அடியாருக்கும் அடியாரிடம் பொருந்தி நடப்போம். அவனது ஆனந்தக் கடலில் மேன்மேலும் மூழ்கித் திளைத்துக் கூத்தாடுவோம். This our Lord is beyond the comprehension of even the leader (Indra) of gods. He is Chief of the three entities. Confer Basma Jabala Upanishad: 'Adwaitham Chathurththam Brahma Vishnu Rudra Teethmeha Machashyam Bagawantam Civam' (Brahma, Thirumaal and Rudran) who respectively (are ordained to) create, protect and dissolve the worlds. He is the first one and has no one above Him. He is the head, the primordial 'Self existing' one - One Half Mother, and is Sire of our Sire. Head of all, He came over to me and made me His own. C.f. St.Appar, Thandakam decad 312- Note the use of the same phrase 'No one's vassal am I'. Henceforth, I am vassal to no one else. I have nothing to fear. Along side the devotees of His devotees, ever more do we abide, bathing and playing in the splashing waters of bliss! கு-ரை: இந்திரன், அயன், அரி, அரன் இவர்க்கு அப்பாற்பட்டவன். அவர்க்கு மேல் அப்பெயருடைய காரணேசுரர் உளரெனின், அவர்க்கும் இறைவன் தந்தையாதலின், இவர்கட்கு அவன் பாட்டனாயினன். யார்க்கும் முற்பட்ட தகப்பன் என்று மூதாதை என்பதற்குப் பொருள் கொள்வாரும் உளர். சிவம் சத்தியாய் யாவற்றையும் மேற்கொண்டு நிற்பான் என்பார், 'மாதொரு பாகத்தெந்தை' என்றார். அப்பர் சுவாமிகள் நாமார்க்கும் குடியல்லோம் என்றதை இது நினைவுறுத்துகின்றது. 'அஞ்சுவதி யாதொன்று மில்லை' என்றதும் காண்க. இறுமாந்து இருப்போம் என்பதுபோல, 'குடைந்தாடி யாடுவோ' மென்றார். பேரின்ப நுகர்ச்சி எப்போதும் தொடர்தலின், அதற்கு எல்லையின்மை குறித்தவாறு. THIRUCHCHITRAMBALAM 5.4 ஆத்தும சுத்தி 5.4. AATHUMA SUTHTHI அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Aspects of Soul Cleansing Tossed about by the Vicissitudes of Life திருச்சிற்றம்பலம் 31. ஆடுகின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை யென்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை, பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே. ஆடுகின்றிலை; கூத்து உடையான கழற்கு அன்பு இலை; என்பு உருகிப் பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை! துணை இலி பிண நெஞ்சே! தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே. aadu kindRilai kuuththu udaiyaan kazaRku anpilai enpu uruki paadu kinRilai pathaippathum seykilai paNikilai paathamalar suudu kinRilai suuddukinRathum ilai thuNai ili piNanenjsee theedu kinRilai theruvu thooRu alaRilai seyvathu onRu aRiyeenee பொ-ரை: யாதொரு துணையுமில்லாத சவம் போன்ற மனமே! நினது கூத்தாட்டினை இயற்றுவிக்கும் முதல்வனது திருவடிக்கண் அன்பில்லாது இருக்கிறாய் . அவன்பால் ஆனந்தக் கூத்தியற்ற மாட்டாய். எலும்புருகப் பாடவும் செய்கிறாயில்லை. அஞ்சி நடுங்குவதும் இல்லை. தாழ்ந்து வணங்குவதும் இல்லை. அவனது திருவடிக் கமலங்களைச் சென்னி மேல் அணிந்து கொள்கின்றாயில்லை. திருவடிகட்கு மலர் மாலை சாத்துவதும் செய்ய மாட்டாய். அவன் திருவடியிணைகளைத் தேடி நாடுவதும் இல்லை. தெருவுதோறும் அலைந்து தேடிக் காணாத இடத்துக் கதறுவதும் இல்லை. நீ இவ்வாறு பிணம் போல் பயனற்றுக் கிடப்பின் செய்யத் தக்கதொன்றும் யான் அறிய மாட்டேன். Ah, you wretch of my mind, that stands forlorn, having no friend! You do not dance in prayerful glee, neither have you devotion to the dancing Lord's jewel-clad Feet. Nor sing on Him with thawing heart, nor do you throb and tremble, nor pay obeisance by prostrating before Him, nor place your head on His flowery Feet. You do not wander from street to street, crying out in search of Him. Verily I know not what to do (in order to achieve salvation) கு-ரை: நெஞ்சு, அறிவினைக் குறித்து நின்றது. அறிவின் துணைகொண்டே நற்செயல்கள் நிகழ்கின்றன. அவற்றிற்கு அது தூண்டித் துணை செய்யாவிடத்துப் பயனிலை என்றவாறு. அறிவு, இறைவனையே நாடி நிற்றலை வற்புறுத்தினார். உலகியல் பற்றற்ற விடத்தே, அறிவு இறைவனைச் சென்று பற்றாது பிணம்போற் கிடத்தல் தவறு என்பது கருத்து. 32. அறிவி லாத வெனைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமே னெறியெ லாம்புல மாக்கிய வெந்தையைப் பந்தனை யறுப்பானைப் பிறிவி லாதவின் னருள்கள் பெற்றிருந்து மாறாடுதி பிணநெஞ்சே கிறியெ லாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்னைக் கெடுமாறே அறிவு இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மேல் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப், பந்தனை அறுப்பானைப் பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி; பிண நெஞ்சே ! கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. aRivu ilaatha enaippukunthu aaNdukoNdu aRivathai aruLimeel neRielaam pulam aakkiya enthaiyai panthanai aRuppaanai piRivu ilaatha inaruLkaL peRRirunthum maaRaaduthi piNanenjsee kiRi elaam mika kiizppaduththaay keduththaay ennai kedumaaRee பொ-ரை: இறைவனை அறியும் ஞானமில்லாத என்னை, வலிய வந்து தடுத்தாட் கொண்டான். இறைவன் தன்னை அறியும் ஞானத்தையும் வழங்கினான். வீட்டுவழி முழுதும் அறிவித்த என் அப்பன் பிறவித் தளையைத் தொலைப்பவன். அவனைப் பிரியாதிருக்க ஏதுவான அருட்செயல்கள் என் பொருட்டுச் செய்யப் பெற்றும், அவனைப் பிரியாமைக்கு மாறாக இயங்குகிறாயே, சவம் போன்ற மனமே! உன் மாறுபாட்டால் பொய்கள் மிகுதிப்பட என்னைத் தாழ்த்திவிட்டாய். யான் கெட்டுப் போகும் வழியாகக் கெடுதிகளைச் செய்தனை. Eh, wretch of my mind! How come, you revel in many antiques, despite the fact that I have received gifts of grace from my Sire, Lord Civa, who erased all bonds that I had acquired. The many gifts that lit me up the right path. He that taught me in Grace, all that is to be learnt. Although I am a witless one, He came over and took me as His own. And yet, oh faltering mind, you ignored all this. Pulling me down this way. You ruined me, oh wretch, so that I now just lie here in desperation. What great mischief, this! கு-ரை: மெய்ந்நெறி நில்லாது, பொய் வழிபுகின், பாசத் தொடர்பு மீளும். அதனால் உய்தி கூடாமையாகிய கேடும் இழிவும் உளவாம் என்பது குறித்தவாறு. கிறி = பொய்; மாறாடுதி = தடுமாறுகிறாய்; கெடுத்தாய்=காரியக் கேடு விளைத்தாய். 33. மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையெம் மதியிலி மடநெஞ்சே தேறு கின்றில மினியுனைச் சிக்கெனச் சிவனவன் றிரடோண்மே னீறு நின்றது கண்டனை யாயினு நெக்கிலை யிக்காயங் கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே! தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கெனச் சிவன் - அவன் திரள் தோள் மேல் நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம் கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு-இது; கேட்கவும் கில்லேனே. maaRi ninRu enaikkeda kidanthanaiyai em mathi ili mada nenjsee theeRu kinRilam iniunai sikkena sivanavan thiraL thooL meel neeRu ninRathu kaNdanai aayinum nekkilai ikkaayam kiiRu kinRilai keduvathu un parisu ithu keedkavum killeenee (correction: kedkavum / keedkavum) பொ-ரை: எம் அறிவிலாத மூட மனமே! என்னைப் பகைத்து நின்று யான் கெடும்படியாகக் கிடந்தாய். இனிமேல் திட்டமாக உன்னை நம்ப மாட்டோம். தூய முதல்வனது திரட்சிமிக்க தோள்களின் மேலே திருநீற்றுக்குறி நிலையாக இருந்ததை நீ பார்த்த போதும் உணர்வு கனிவடைந்து உருகவில்லை. கெட்டொழிவதே உன் தன்மை. இதைக் கேட்கவும் நான் பொறுக்க மாட்டேன். Eh, witless mind, you turned hostile and stayed on to ruin me. Henceforth I Will not take note of you. For, although you had seen the white ash on the shoulders of Lord Civa, you did not melt away in ecstasy, nor let this physical frame strain and fall apart! This way leads you but to a disastrous end. I shudder even to hear of such a state. கு-ரை; யான் கூறும் அறிவுரையை ஏற்கமாட்டாய், ஆதலால் எம் மதியிலி. இயற்கையன்பும் அறிவுமில்லாதாய், ஆதலால், 'மடநெஞ்சே' என்றார் என்க. கெட=கெடுக்க. கிடந்தாலனையை கிடந்தனையை எனத் தொக்கு நின்றது. தேறுகின்றிலம் = தெளிகின்றிலம் = நம்புகின்றிலம், சிக்கென= உறுதியாக, திட்டமாக, கீறுதல் = கிழித்தல், வகிர்தல். பரிசு= தன்மை. கில், ஆற்றல் உணர்த்தும் சொல். 34. கிற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை விற்றெ லாமிக வாள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாவிளந் தளிர்பிரிந் திருந்துநீ யுண்டன வெல்லாமுன் னற்ற வாறுநின் னறிவுநின் பெருமையு மளவறுக் கில்லேனே கிற்றவா மனமே! கெடுவாய்; உடையான் அடி-நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம் முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து, நீ உண்டன எல்லாம் முன் அற்ற ஆறும், நின் அறிவும், நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே. kiRRavaa manamee keduvaay udaiyaan adi naayeenai viRRu elaam mika aaLvathaRku uriyavan viraimalar thirupaatham muRRilaa iLam thaLir pirinthirunthu nii uNdana ellaam mun aRRavaaRum nin aRivum nin perumaiyum aLavaRu killeenee பொ-ரை. இறைவனது மணம் பொருந்திய திருவடிக் கமலங்கள், முதிராத இளம் தளிர்போல் உள்ளன. அடிமையான நாய் போன்ற நான் பிரிந்திருந்தாலும் என் உடல், பொருள், ஆவி மூன்றும் கொண்டு என்னை முழுவதும் விலைப்படுத்தியாவது சிறப்பாக ஆளும் உரிமை உடையவன். ஆயினும் உலகப் பாசங்களில் செல்வதில் ஆற்றல் கெடாத நெஞ்சமே! நீ கெட்டு ஒழிதல் திண்ணம். நீ முன் நிகழ்ந்தன எல்லாம் கெட்டொழிந்த விதத்தையும், உன் அற்ப அறிவையும், உன் போலிப் பெருமையையும் அளந்தறியும் ஆற்றல் இல்லாதவன் நான். Perish thee, oh my mind that is ever drawn towards worldly life. You did go away from fragrant feet of our Lord who has every right to hold sway over me! You went away from His feet that resemble tender leaves shooting apart! Eh, how shall I gauge this strange irony, when all your past evil was extinguished by Him and yet you run away from Him! Great indeed is your wisdom and glory, that is (laughable) beyond measure! கு-ரை: இறைவன், தன் பெருங்கருணையால், என்னை எவ்வாறாயினும் ஆட்கொள்வான். ஆனால், நீ அருள்பெற்ற போதே, உலகப் பற்று ஒழிந்தனை என எண்ணுதற்கு இடமில்லாமையின், உன் பற்று அற்றதா இல்லையா என்பதையும், உன்செருக்குச் செயலையும் அளந்தறியக் கூடவில்லை. ஏனெனில், நீ இன்னும், உலகப்பற்றில் செல்லும் ஆற்றல் கெடாதிருக்கின்றாய் என்றவாறாம். கில் = ஆற்றல், தவா = கெடா. 'கெடுவாய்' என்பது, அட பாவி, என்பதுபோல வியப்புக் குறிப்பு. பற்றியதை விடாது பற்றுமனவியல்பு குறித்தவாறாம். 35. அளவ றுப்பதற் கரியவ னிமையவர்க் கடியவர்க் கெளியானங் களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும் உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்தது மிலைநெஞ்சே பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே அளவு அறுப்பதற்கு அரியவன், இமையவர்க்கு; அடியவர்க்கு எளியான்; நம் களவு அறுத்து நின்று ஆண்டமை, கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் உள கறுத்து, உனை நினைந்து, உளம் பெரும்களன் செய்ததும் இலை; நெஞ்சே ! பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை-பரகதி புகுவானே. aLavu aRuppathaRku ariyavan imaiyavarkku adiyavarkku eLiyaan nam kaLavu aRuththu ninRu aaNdamai karuththinuL kasinthu uNarn thiruntheeyum uLa kaRuththu unai ninainthu uLam perungkaLan seythathum ilai nenjsee paLaku aRuththu udaiyaan kazal paNinthilai parakathi pukuvaanee பொ-ரை: விண்ணோராலும் அளந்து முடிவு செய்ய இயலாத பெருமையனாகிய இறைவன் அடியவர்க்கு எளிதில் அருள்பவன். அவன் நம் வஞ்சப் பிறவியை ஒழித்து, ஆட்கொண்ட தன்மையை உருகி உணர்ந்திருந்த போதிலும், வீடு அடைதற்கு, உள்ளத்து உள்ளனவாகிய காமம் முதலிய ஆறுபகைகளையும் கோபித்துத் தள்ளி, மனமே, உன் தகுதியை எண்ணி உள்ளத்தைச் சிவபெருமான் தங்குதற்குரிய பெரிய இடமாகச் செய்தாயில்லை. குற்றங்களை நீக்கி இறைவன் திருவடியை வணங்கினாயுமில்லை; என்னே உன் இயல்பு! Though the gods of the sky are unable to gauge His size, He is easy to approach for his devotees. Destroying all our falsehood, He stands out as our Lord. Knowing all this, Oh mind you did not discard your foibles and build for him a worthy abode. Nor did you bow before Him and land Him with a view to gaining access to the haven of eternity. கு-ரை: களவு= வஞ்சம் 'பிறவிக்கு ஆகுபெயர்'; உள = உள்ள பற்றுக்கள். கறுத்து= கோபித்து , வெறுத்து; களன்= இடம். பளகு= குற்றம். 36. புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவதாவது மெந்தையெம் பிரானென்னை யாண்டவன் கழற்கன்பு நெகுவ தாவது நித்தலு மமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவது மின்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே புகுவது ஆவதும், போதரவு இல்லதும் பொன் நகர் புகப் போதற்கு உகுவது ஆவதும், எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும், நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி மிகுவது ஆவதும், இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே? pukuvathu aavathum, pootharavu illathum ponnakar pukappoothaRku ukuvathu aavathum enthai empiraan ennai aaNdavan kazaRku anpu nekuvathu aavathum niththalum amuthodu theenodu, paalkaddi mikuvathu aavathum inRu enin maRRu ithaRku en seykeen vinaiyeenee பொ-ரை: சென்று அடைதற்குரியவன் நிறைந்திருக்கும் இடமும் அடைந்தார் மீளுதல் இல்லாததும், பொன்னகரம் ஆகிய வீடாகும். அதனுள் செல்லுதற்குப் பற்று ஒழிவதும் எங்கள் அப்பனும் தலைவனுமாய் என்னை ஆட்கொண்டவனுடைய திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும், நாள்தொறும் அமுதம், தேன், பால், கல்கண்டு இவற்றை விட அதிகமாகப் பேரின்ப உணர்ச்சி சிறப்பதும் இல்லையெனில், தீவினையுடையேன் இவ்விடையூற்றை நீக்க யாது செய்ய வல்லேன்? Alas! what can this sin ridden me do, if I am not to receive the boon of getting past the golden gates of heaven! The gates that allow only entry and bar all return! If I cannot melt for the love of His Feet, He that is Father and Lord that drew me to Him, if I am not to get daily, the bliss of heavenly ambrosia that far exceeds in sweetness all milk and honey, if I am not to get these boons for me, what shall I do, alas, what pity! Note: "Gates of no return" c.f. Swatesvadara Upanishad "Na cha punaravarthathe" - மீட்டிங்கு வாரா நெறி கு-ரை: பொன்னகர், மாறுபாடில்லாத வீட்டிற்கு உருவகம். உகுதல் = கழலுதல், நெகுதல் = உருகுதல், கட்டியினுமிகுவது = பேரின்பம், ஆவதும்= உணர்ச்சி சிறப்பதும், நாள்தோறும் என்றது நாளுக்கு நாள் பக்குவ மிக வேண்டும் என்று குறித்தவாறாம். 37. வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் றலைகீறே னினையன் பாவனை யிரும்புகன் மனஞ்செவி யின்னதென் றறியேனே. வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று ; மற்று அதனாலே முனைவன் பாத நல்-மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன் இனையன் பாவனை, இரும்பு: கல், மனம், செவி, இன்னது என்று அறியேனே vinai enpool udaiyaar piRar aar udai yaan adi naayeenai thinaiyin paakamum piRivathu thirukkuRippu anRu maRRu athanaalee munaivan paatha nalmalar pirinthirunthum naan muddileen thalai kiiReen inaiyan paavanai irumpu kalmanam sevi innathu enRu aRiyeenee பொ-ரை: என்னைப் போன்று தீவினைப் பயனுடையவர் யார் ? என் முதல்வனுக்கு அடிமையாகிய நாய் போன்ற என்னைப் பிரியும் திருவுளக் குறிப்பு சிறிதுமில்லை . தினையளவு கூட இல்லை. ஆகவே பிரிந்து இருத்தல் என் தவறே! முன்னவனுடைய நல்ல திருத்தாள்களைப் பிரிந்திருந்தும், நான் தலையை மோதவும், பிளக்கவும் மாட்டேன். இத்தகைய எனது எண்ணம் இரும்பாலானது. மனம் கல்போன்றது. செவி இன்னதால் ஆயிற்று என்று அறிய மாட்டேன். Who else can there be in this world that carries such loads of sin as I ? I know it is not in His traits to desert this lowly cur even for a moment. For having been away from the sacred flowery Feet of our primordial Lord Civa, I should have hit myself hard, and torn my head apart (as punishment). And yet, I did nothing of that sort! Alas, what pity! Hence, my nature is very like that of a stone. As for my ears, I do not know how to criticise it! கு-ரை: உயிர்விடாது, உடம்போடு நிலைத்திருத்தல், பிராரத்த வினைப்பயன் என்று குறித்தனர். இறைவன், தகுதியிருப்பின், உடனே வீடளிக்க விருப்பமுடையன் என்ற கருத்துப்பற்றிப் 'பிரிவது திருக்குறிப்பன்று' என்றார். பாவனை, புத்தியின் பகுதி. மனம், அதனின் வேறு. எண்ணம் முத்தியை நாடவேண்டும். மனம், உலகப்பற்று ஒழித்தல் வேண்டும். செவி, இறைவன் அறிவுரையையே பற்றி நெஞ்சத்தை ஊக்கவேண்டும். அவற்றை அவை செய்யாமையின், பழிப்புக்கு உரியவாயின போலும். 38. ஏனை யாவரு மெய்திட லுற்றுமற் றின்னதென் றறியாத தேனை யானெயைக் கரும்பினின் றேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மானன நோக்கிதன் கூறனைக் குறுகிலே னெடுங்கால மூனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத தேனை, ஆன் நெயைக், கரும்பின் இன் தேறலைச், சிவனை, என் சிவலோகக் கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன்; நெடும் காலம் ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே. eenai yaavarum eythidal uRRu maRRu innathu enRu aRiyaatha theenai aanneyai karumpin intheeRalai sivanai en sivalooka koonai maan ana nookki than kuuRanai kuRukileen nedungkaalam uunai yaan irunthu ompukinReen kedu veen uyir ooyaathee. பொ-ரை: அன்பரல்லாத பிறர் இறைவனை அடைய முயன்றும் இத்தன்மையினன் என்று அறியப்படாத தேன் போல்பவன், பசு நெய் போல்பவன்; கருப்பஞ்சாற்றின் தெளிவு போல்பவன்; என் சிவலோக மன்னன். மானின் பார்வையொத்த அம்மையை ஒரு பாகம் உடையவன். அவனை நீண்டகாலமாக நான் அடைந்திலேன். யான் இவ்வுலகில் தங்கி தசையாலாகிய இந்த உடம்பினைப் பாதுகாத்து இருக்கிறேன். கெட்டொழிகின்றேன். என் பிராணன் ஒடுங்காதோ? All other devotees merged into the Lord (while in Perunthurai), whereas I could not reach Him for a very long time; Him, who is very like inscrutable honey, like the ghee of that cow and like nectar of sugarcane. Lord Civa, Chief of the saivite world (Civa Loka), Consort of the goddess with deer-like eyes! I am here merely pampering my body of flesh. I waste away and perish, with all my breath extinguished. கு-ரை: சிவஞானம் பெறாது, முதல்வனை அறியக் கூடாமையின், 'இன்னதென்றறியாத' என்றார். விழைவிற்கு இன்பம் தருவதால் தேன், அறிவிற்கு இன்பம் தருவதால் ஆன் நெய், செயலுக்கு இன்பம் தருவதால் 'கரும்பின் தெளிவு' என்றார். உயிர்= பிராணன், அன= அன்ன என்பதன் குறுக்கம். 39. ஓய்வி லாதன வுவமனி லிறந்தன வொண்மலர்த் தாடந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படுமென்னை நன்னெறி காட்டித் தாயி லாகிய வின்னருள் புரிந்தவென் றலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள்-மலர்த் தாள் தந்து நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை , நல்-நெறி காட்டித் தாயில் ஆகிய இன்-அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன் ; தீயில் வீழ்கிலேன் : திண் வரை உருள்கிலேன்; செழும் கடல் புகுவேனே? ooyvu ilaathana uvamanil iRanthana oNmalar thaaL thanthu naayil aakiya kulaththinum kadaippadum ennai nanneRi kaaddi thaayil aakiya in aruL purintha en thalaivanai nanikaaNeen thiiyil viizkileen thiNvarai uruLkileen sezungkadal pukuveenee பொ-ரை: அழிவற்றனவாய், உவமிக்கப்படும் பொருள் யாவும் கடந்தனவாய் இருக்கின்ற ஒளிமிக்க திருவடிக்கமலங்களைக் காட்டி அருளி, நாயெனும் படைப்பு வகையினும் கீழ்ப்பட்ட எனக்கு நல்ல முத்தி நெறியைக் காண்பித்துத் தாய் போலும் இரக்கம் காட்டி இன்னருள் புரிந்த எனது நாதனை நன்கு தரிசிக்கப் பெற்றேன். அவன் பிரிவினைக் கண்டு நெருப்பிலும் விழமாட்டேன்; மலையிலும் உருண்டு விழமாட்டேன். வளமிக்க கடலிலும் பாய்வனோ? அதுவும் செய்ய மாட்டேன். Eternal and beyond compare are His bright flowery Feet so rare. He is in His grace, revealed to me, me, this lowly cur, the right path to salvation, much like a mother offering solace (to her child). Such is my chief. Since, I am not able to see Him (now), why do I not (in desperation), scorch myself in fire, or roll down the hill. Perhaps I will be drowned and lost in the deep waters of the sea. கு-ரை: ஓய்வு = ஒழிவு ,அழிவு. உவமன் = உவமை. குலம் = படைப்பு விசேடம். விசுவாசத்தில் நாயினும் கீழெனக் குறிப்பார், நாயினுங் கடைப்படுமென்றார். ஆட்கொண்டபோது கண்டு, பின், காணாமையால் 'நனிகாணேன்' என்றார். 40. வேனில் வேள் கணை கிழித்திட மதிசுடு மதுதனை நினையாதே மானி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேனி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகே னூனிலாவியை யோம்புதற் பொருட்டினு முண்டுடுத் திருந்தேனே. வேனில்-வேள் கணை கிழித்திட, மதி சுடும் அது-தனை நினையாதே மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகித் தேன் நிலாவிய திரு அருள் புரிந்த, என்சிவன்-நகர் புகப் போகேன்; ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே veenil veeL kaNai kiziththida mathisudum athu thanai ninaiyaathee maan nilaaviya nookkiyar padiRu idai maththu idu thayiraaki theen nilaaviya thiruaruL purintha en sivan nakar pukappookeen uunil aaviyai oomputhal poruddinum uNdu uduththu iruntheenee பொ-ரை: தேன் போலும் இனிமை நிலைக்கப் பெற்ற திருவருள் நல்கிய என் இன்பனின் வீட்டு நகரத்தையடையச் செல்லமாட்டேன். மான் போலும் பார்வையுடைய மாதர் வஞ்சனையால் மத்தில் அகப்பட்ட தயிர் போலக் கலங்கினேன். இளவேனிற் காமனுடைய அம்பு நெஞ்சைப் பிளந்து உடம்பைச் சுடும். அக்கெடுதியை நினையாது உடலில் உயிரை வைத்துக் காக்க உணவுண்டு, உடையுடுத்து வாழ்ந்திருந்தேன். என்னே என் அறியாமை? Not relishing the fact that the mind will get lost, pierced by Cupid's arrows,I become like the curd churned by the agitating rod, driven towards damsels of deer like eyes. I do not go forward to enter the city of Lord Civa who bestowed honeyed bliss on me. I merely stay here, eating and clothing afresh, in order to preserve my life in body. What pity! THIRUCHCHITRAMBALAM 5.5 கைம்மாறு கொடுத்தல் 5.5. KAIMMAARU KODUTHTHAL கலிவிருத்தம் What return to render to thee திருச்சிற்றம்பலம் 41. இருகை யானையை யொத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க் கொருவ னேகிற்றி லேன்கிற்ப னுண்ணவே இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக் கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே ; 'வருக' என்று பணித்தனை: வான் உளோர்க்கு ஒருவனே! கிற்றிலேன் கிற்பன் உண்ணவே. iru kai yaanaiyai oththirunthu en uLa karuvai yaan kaNdileen kaNdathu evvamee varuka enRu paNiththanai vaan uLoorkku oruvanee kiRRileen kiRpan uNNavee பொ-ரை: விண்ணவர்க்கெல்லாம் தலைவனாகிய ஒருவனே! பெரிய துதிக்கையுடைய யானையைப் போன்று இருக்கிறேன். என்னுடைய உள்ளத்தின் மூலத்தை அடியேன் காணாதிருந்தேன். யான் கண்டு அனுபவித்தது எல்லாம் துன்பமே. அங்ஙனம் ஆயினும் நீ என்னை 'வா' என்று கட்டளை இட்டு அருளினை. நீ தரும் இன்பத்தை நுகர வல்லேன் அல்லேன். துன்பத்தையே நுகர வல்லேன். I am verily a glutton, much like a (strange) pachyderm with a double trunk! I do not see the glittering germ that resideth in my mind but see only utter misery around. Yet, Thou called out to me, asking me to come over unto Thee! Oh Thou, that standeth without any parallel among heaven dwellers! I stay here, merely for eating, (and am not oriented towards Thee). (What return for Thy grace, this, indeed!) கு-ரை: இருகை என்பது அறிவு, செயல் என்ற இரண்டையும் குறிக்கும். இருகை= இருங்கை = பெரிய துதிக்கை என்று பொருள் கொள்வாரும் உளர். யானை, மதத்தால், தன்னையும் பிறரையும் அறியாமை போலச் செருக்கினால், என்னை மாத்திரமின்றி உன்னையும் அறியாது இருந்தேன். 'உள்ளக்கரு' என்பதற்கு உயிர்க்கு உயிர் எனவும் பொருள் கொள்ளலாம். உயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய முதல்வன் என்பது கருத்து. மனம் முதலிய கருவிகள் தோன்றுதற்குக் காரணமானவனும் அவனே. கரு என்பதற்குக் காரணம் என்றும், நடு என்றும் பொருள் உண்டு. நடு என்பது அந்தரியாமித்துவம் குறிக்கும் எனக் கொண்டு, 'உளக்கருவை' என்பதற்கு உள்ளத்திற்கு உள்ளீடாய்க் கலந்திருப்பதை என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. துதிக்கையால் தடவி அறிதல், யானையின் தொழில் போலும். இறைவனுடைய தன்மை, அறிவிலும் செயலிலும் புலனாவது. அதனைக் காணாமைக்குக் காரணம் செருக்கே என்பது கருத்து. நீ தரும் இன்பத்தை உண்ணவே கிற்றிலேன், (எவ்வத்தை) உண்ணவே கிற்பேன், என்று பிரித்துக் கூட்டுக. அல்லது, வருக கிற்றிலேன், உலகத் துன்பத்தை உண்ணவே கிற்பேன் என்று உரைநடை கோடலும் உண்டு. 42. உண்டொ ரொண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டி ராணலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலே னென்னகண் மாயமே 'உண்டு ஒர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம் பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் ; கண்டும் கண்டிலேன்; என்ன கண் மாயமே! uNdu or oNporuL enRu uNarvaarkku elaam peNdir aaN ali enRu aRi oNkilai thoNdaneeRku uLLavaa vanthu thoonRinaay kaNdum kaNdileen enna kaN maayamee பொ-ரை: உலகிற்கு முதல்வனாகிய ஓர் அறிவொளிப் பெரும் பொருள் உண்டென்று உணர்ந்து அன்பர் உன்னை நாடுவர். நீ பெண்ணோ , ஆணோ, அலியோ என்று உறுதியாக அறிய முடியாமல் இருக்கின்றனர். ஆனால் அடியேனுக்கு நீ உண்மையாக இருக்கிறவாறே தானே வந்து காட்சி கொடுத்தாய். உன் திருவருட் காட்சி பெற்றும் உன்னை அனுபவிக்கப் பெற்றிலேன். இது என்ன கண் மயக்காக உள்ளது? Even for those that are aware of there being an effulgent one, it is not posssible to know Thee. Yet, Thou camest in front of me- me, Thy devoted vassal, and clearly revealed Thee. Having thus seen Thy grace light (before), alas!, I do not now see Thee. What elusive magical plight.! கு-ரை: இறைவன் தானே வந்து தன்னியல்பு உணர்த்தும்வரை, அவன் மெய்த் தன்மை உயிர்கள் தாமே அறியும் தரத்தன அல்ல என்றனர். அருள் ஆசிரியனாய் வந்த இறைவனோடு உடன் செல்லாமை பற்றிக் 'கண்டிலேன்' என்றார். மாயம்= தந்திரம், வியப்பு, மயக்கம். உள்ளவா= உள்ள முறை. 43. மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை யாட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுனை யென்றுகொல் காண்பதே மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே, விசும்பே, இவை வந்து போம் காலமே !-உனை என்று-கொல் காண்பதே? meelai vaanavarum aRiyaathathu oor koolamee, enai aadkoNda kuuththanee njaalamee visumpee ivai vanthu poom kaalamee unai enRu kol kaaNpathee. பொ-ரை: மேலான பதவிகளிலுள்ள வானவரும் அறியக் கூடாத ஒப்பற்ற திருவுருவனே! அடியேனை ஆட்கொண்ட வியத்தகு செயலுடையானே ! நில உலகானவனே ! வானானவனே! மண்ணும்-விண்ணுமாய் இவைகள் தோன்றி ஒடுங்குதலை வரையறுத்து நிற்கும் கால தத்துவம் ஆனவனே! உன்னை எந்த நாள் இனி நான் காணக் கூடும்? Oh Thou, of a form that is beyond the wits of sky borne gods, Oh Lord of the cosmic dance, that took me under Thy care! Thou art verily the earth and the sky, and art the evolute time, into which all things come and merge (appear and disappear). I long for the day when I would have the chance to see Thee (again)! Note: Our Saint often refers to the fact that the Lord manifests Himself through the evolutes, the earth, the sky, etc. கு-ரை: மேலை = மேலாகிய இடத்திலுள்ள, இறைவன் ஆசிரிய வடிவம் கொண்டு நல்கானாயின், வானவர் அவன் மெய்த்தன்மை அறியார், ஆதலிற் 'கோலமே' என்றார். தன்னை ஆட்கொண்டது ஒரு வினோதம் என்பார் 'கூத்தனே' என்றார். 'ஞாலமே, விசும்பே', என்பதில் படைப்புப் பொருள் அனைத்தும் அடங்கும். கால முதலிய தத்துவங்கள் இறைவன் திருமேனி ஆதலின், அவையாய் அவன் இருப்பதாகக் குறித்தார். 44. காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப்பொரு ளேயிங்கோர் பார்ப்பெனப் பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாறறி யேன்புலன் போற்றியே காணல் ஆம் பரமே, கட்டு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே, இங்கு, ஓர் பார்ப்பு எனப் பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப் பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே. kaaNalaam paramee kadku iRanthathu oor vaannilaa poruLee ingku oor paarppu ena paaNaneen padiRRu aakkaiyai viddu unai puuNumaaRu aRiyeen pulan pooRRiyee பொ-ரை: அடியார் காணும்படியான திரு உருவம் காட்டும் மேலான தன்மையனே! ஊனக் கண்ணால் அன்றி ஞானக் கண்ணாலே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்கமுடியாது இருப்பது போன்று, பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே இதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக! Oh Lord of the universe, manifest before me in visible form of effulgent one! I know not the path towards Thee, leaving behind this faulty physical frame, much like the young one of a bird which cannot fly out of its nest. கு-ரை: பரம் = மேன்மை வாள் = ஒளி, அறிவு. பார்ப்பு = குஞ்சு குட்டியெனப் பொருள் கொண்டு குரங்குக்குட்டி தன் தாயைப் பற்றுவதுபோல உன்னை விடாதுபற்ற அறியேன் என்றார் என்பாரும் உளர். 'புலன்போற்றியே' என்பதற்கு ஐம்புல அவாவினை மேற்கொண்டு எனவும் கொள்ளலாம். பாணன்=பாழ்நன். வாழ்நன், வாணன் என்றாயினாற் போல. 45. போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்துநின் றாற்றன் மிக்கவன் பாலழைக் கின்றிலே னேற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே 'போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும் கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே. pooRRi enRum puraNdum pukaznthu ninRu aaRRal mikka anpaal azai kinRileen eeRRu vanthu ethir thaamarai thaaL uRum kuuRRam annathu or koLkaien koLkaiyee பொ-ரை: காத்தருள்க என்று நினைந்தும், நிலத்தே புரண்டு வலம் வந்தும், நின் புகழ் பாடியும் செய்யக் கடவதாகிய உனது திருத்தொண்டிலே நிலைபெற்று, திண்மை மிகுந்த பேரன்பால் உன்னைக் கூவுகின்றேனில்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடி அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கும். I do not call out to Thee in intense dedication, nor in ecstasy roll down on the ground, singing on Thy glorious Feet with shouts of joy. Well doth my attitude therefore, resemble that of Yama, the Lord of death, who was put to death when he confronted against Civa's devotee Maarkandeya, but later came back to life by the grace of Lord Civan Himself (What Maanikkavaachakar means is that he is as dead in soul as Yama was, but, by the grace of Civan's holy Feet, he will be restored to become His sincere devotee). கு-ரை: எதிர் - மாறு, பகை, நீயே வந்து யமனை உதைத்துத் திருத்திக் கொண்டது போலத் திருத்தப் பெறுவதே என்னியல்புக்கு ஒத்ததாம். அயரா அன்பு செலுத்த கில்லேன் என்றார். 46. கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டு மறாமலர்க் கொன்றையா னள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளு மெள்ளு மெண்ணெயும் போனின்ற வெந்தையே கொள்ளுங்-கில், எனை அன்பரில் கூய்ப் பணி கள்ளும், வண்டும். அறா மலர்க் கொன்றையான் ; நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும் எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே! koLLum kilenai anparil kuuyppaNi kaLLum vaNdum aRaamalar konRaiyaan naLLum kiizuLum meeluLum yaavuLum eLLum eNNeyum poolninRa enthaiyee பொ-ரை; தேனும் வண்டும் நீங்காத கொன்றைப் பூவினையுடையான் சிவபெருமான். அவன் எப்பொருளினுள்ளும் நடுவிலும், கீழும் மேலுமாய் எப்பக்கத்தும் எள்ளில் எண்ணெய் போல் வியாபித்து நின்றவனாகிய எம் அப்பன், அவனது மெய்யன்பர் போல என்னையும் வலிய அழைத்துப் பணி கொள்ளும் ஆற்றலுடையவன். How I wish that He calls me into service as He did in the case of other devotees! He wearing Konrai (Cassia) flowers ever full of honey and bees. He, our Sire, that is immanent in all things above, things in the middle and things below, merged together like sesame and its oil! கு-ரை: பேரின்பமும் இன்பத்தை நாடும் உயிரும் தன்னை விட்டகலாத ஞால முதல்வன், எங்கும் நிறைந்து எல்லாம் வல்லவன் ஆதலாலே, தகுதியற்ற என்னையும் பணிகொள்ள வல்லவன் என்றவாறு. கொள்ளுங்கில்= கொள்ள வல்லவன். 47. எந்தை யாயெம் பிரான்மற்று மியாவர்க்கும் தந்தை தாய்தம் பிரான்றனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தை யாலு மறிவருஞ் செல்வனே எந்தை, ஆய், எம்பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்; முந்தி என்னுள் புகுந்தனன்-யாவரும் சிந்தையாலும் அறிவு-அரும் செல்வனே enthaiyaay empiraan maRRum yaavarkkum thanthai thaay thampiraan thanakku aqthu ilaan munthi ennuL pukunthanan yaavarum sinthai yaalum aRivu arum selvanee பொ-ரை: எங்கள் அப்பனாகவும் அன்னையாகவும் இருக்கும் எம் தலைவன் பிற எல்லோருக்குமே தாயும் தந்தையும் ஆனவன். தலைவனும் ஆனவன். தனக்குத் தாய் தந்தையும் மேலோனும் இல்லாதவன். சொல்லாலன்றி மனத்தாலும் யாவரும் அறிதற்கரிய முத்திப் பெருஞ்செல்வனாகிய கடவுள், எனக்குப் பக்குவ காலம் வருமுன்னே என் உள்ளத்தே பெருங் கருணையாற் புகுந்தருளினான். Our Lord, Our Father, He that is Father, Mother and Lord for all as for Himself, He has no such, as Father, Mother or Lord. auspicious Lord, beyond even the thoughts of all! He entered into me (and is there) since long before. கு-ரை: ஆய் = தாய். பிரான் = எசமானன் = தலைவன். முந்தி' யென்றதுபோலத் திருக்கோவையாரிலும் 'என்னை முன்னாள் ஆள் உடையான்' என்றது காண்க. 48. செல்வ நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வ ரம்பின்றி யார்க்கு மரும்பொரு ளெல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே செல்வம், நல்குரவு இன்றி விண்ணோர், புழுப் புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள் எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன் ; கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே! selvam nalkuravu inRi viNNoor puzu pul varampu inRi yaarkkum arumporuL ellai il kazal kaNdum pirinthanan kalvakai manaththeen padda kaddamee பொ-ரை: சிவபிரான் செல்வம், வறுமை, தேவர், புழு, புல் என்ற வரையறையின்றி எல்லோருக்குமே அறிதற்கரியவன், யானோ பரம்பொருளின் அளவற்ற திருவடிகளைக் காணப்பெற்றும் அவற்றைப் பிரித்திருப்பேனாயினன் . கல்லின் இனத்தைச் சார்ந்த மனத்தினை உடையேன். நுகரக் கிடந்த துன்பம் எத்தன்மையது பாருங்கள். I had a chance to see His rare and boundless holy Feet (Once before). Feet that are beyond the high and the low! Beyond celestial folks and lowly ones. A priceless treasure for all. Despite this (early encounter), alas, I had (perforce) to stay away from Him. I, a stony hearted fellow- what agony I suffered! Note: Here we have the saint's biographical note recalling how he was left behind, when all other devotees vanished into the light of grace in Perunthurai and merged with the Lord. கு-ரை: எப்பிறவி எடுப்பினும், எந்நலம் எய்தினும், இறைவனை அடைவது மாத்திரம் தனியே வேறாக உள்ளது. எளிதிற் கிட்டத் தக்கதன்று. இறைவனது அகண்ட அறிவும் செயலுமே, 'எல்லையில் கழல்' எனப்பட்டன. மனத்தைப் புறத்தே தோன்றும் கல்லின், வேறாய ஒருவகைக் கல்லினாலாயது என்பார் 'கல் வகை மனத்தேன்' என்றார். 49. கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ றிட்ட வன்பரொ டியாவருங் காணவே பட்டிமண்டப மேற்றினை யேற்றினை எட்டி னோடிரண் டும்மறி யேனையே கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு இட்ட அன்பரொடு, யாவரும், காணவே பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை - எட்டினோடு இரண்டும் அறியேனையே kaddu aRuththu enai aaNdu kaNNaara neeRu idda anparodu yaavarum kaaNavee paddi maNdapam eeRRinai eeRRinai eddi noodu iraNdum aRiyeenaiyee பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீ என்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவே நாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ? Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thou didst to me, although I have come to know nothing of the scriptures. Note: Our Saint had to engage in many a verbal battle with the Buddhists of the time who dragged him into debate in public halls, in order to settle the veracity of several recondite metaphysical issues. In all these subtle encounters, the Saint came off in flying colours, as ordained by the Lord (much to the delight of fellow saivites). He was well versed in the scriptures and the nuances of logic, so necessary for such debates. கு-ரை: பட்டி = நாய். 'நாய் சிவிகை யேற்றுவித்த' என்றதும் காண்க. திருக்கோத்தும்பி (8) பட்டி= கள்வன் என்பாரும் உளர். எட்டு = அ. இரண்டு=உ. சிலர், அ + உ= ய அதாவது ஆன்மா, ஆன்ம நிலையறியாதேனை என்றார் என்ப. இரண்டாவது ஏற்றினை = ஏறூர்ந்தவனே. ஏற்றினை உடையவனே என்பாரும் உண்டு. 50. அறிவ னேயமு தேயடி நாயினே னறிவ னாகக்கொண் டோவெனை யாண்டது வறிவி லாமையன் றேகண்ட தாண்டநா ளறிவ னோவல்ல னோவரு ளீசனே. அறிவனே! அமுதே! அடி நாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ , எனை ஆண்டது? அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள் ? அறிவனோ, அல்லனோ, அருள், ஈசனே! aRivanee amuthee adi naayineen aRivanaaka koNdoo enai aaNdathu aRivu ilaamai anRee kaNdathu aaNdanaaL aRivanoo allanoo aruL iisanee. பொ-ரை: எல்லாம் அறியும் முற்றறிவினனே! சாவா மருந்தே! அடிமையாகிய நாயனையேன் நினதுரையை அறிய வல்லவன் என்று கருதியோ என்னை ஆட்கொண்டது? ஆண்ட நாள் அறிவில்லாமையை அல்லவா என்பால் நீ கண்டது? இனி உண்மைகள் அறிவேனோ அறியேனோ, ஆண்டவனே அருள் செய்ய வேண்டும். Lord Omniscient! ambrosial honey! Was it in consideration of my erudition that Thou took me in under Thee? Was it not my ignorance only, that Thou saw in me? When thou took me in, pray tell me Oh Lord, whether I knew or knew not anything about anything. I beseech Thee, Lord, kindly grant me Thy grace. Note: The Saint is agreeably surprised to see that the good Lord accepted him inspite of his collossal ignorance. கு-ரை: தனது அறிவின்மையைப் பொறுக்க வேண்டும் என்பார் இவ்வாறு கூறினர். THIRUCHCHITRAMBALAM 5.6 அநுபோக சுத்தி 5.6 ANUBOHA SUTHTHI அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் The Untrammeled Inhibition of Civam திருச்சிற்றம்பலம் 51. ஈச னேயென் னெம்மானே யெந்தை பெருமா னென்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேயம் பலவனே செய்வ தொன்று மறியேனே ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே ; தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே. iisanee en emmaanee enthai perumaan en piRavi naasanee naan yaathum onRu allaa pollaa naayaana neesaneenai aaNdaaykku ninaikka maaddeen kaNdaayee theesanee ambalavanee seyvathu onRum aRiyeenee பொ-ரை: அரசனே! என் தலைவனே! எங்கள் அப்பனாகிய பெரியோனே ! எனது பிறப்பினை ஒழிப்பவனே! நான் யாதானுமொரு சிறு பொருளுக்கும் ஈடாக மாட்டேன். தீய நாய்த் தன்மையுடைய இழி தகைமை உடையேன். என்னை ஆட்கொண்டருளிய உன்னை நன்றி உணர்வுடன் எண்ணித் துதிக்க மாட்டேன். அது நீ அறிந்தாயன்றே, ஒளி மேனியனே, மன்றில் ஆடுவோனே, செய்யத்தக்க ஒன்றையும் அறிகிலேன். Lord, my chief that destroyed my birth cycle! See, how I, a wily worthless cur, think not of Thy grace in accepting me. Despite this (this indifference of mine), Thou took me unto Thee, Oh effulgent one of the public hall of dance! I know not what it is that I can do! கு-ரை: எம்மான் = தலைவன், ஒவ்வோர் உயிரும் தனிவேறு இயல்புடைமையிற் பிறிது ஒன்றாகாது என்ற உண்மை கருதற்பாலது. பொல்லா = திருத்தமடைய மாட்டாத; அருள்பெற்ற நிலைக்கேற்றவாறு நடவாது கீழ்ப்பட்டமை கருதி, 'நீசனேன்' என்றார். நீயே அறிவொளி கொடுத்து வியத்தகு என்னை நல்வழியில் இயக்கி உய்யக் கொள்ள வேண்டும் என்பார், 'தேசனே அம்பலவனே' என்றார். 52. செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாத மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேனா னுண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப் பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா மெய்யர் வெறி-ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்; போர் ஏறே! seyvathu aRiyaa siRunaayeen sempon paatha malar kaaNaa poyyar peRumpeeRu aththanaiyum peRuthaRku uriyeen poyilaa meyyar veRi aar malarppaatham meeva kaNdum keddirunthum poyyaneen naan uNdu uduththu ingku iruppathu aaneen pooreeRee பொ-ரை: போரில் ஆண் சிங்கத்தை ஒப்பவனே! நிலையாதனவற்றில் பற்றில்லாத உண்மை அடியார், தேனூறும் பூப்போன்ற உன் திருவடிகளைப் பொருந்தினமையைப் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். ஆனால் பொய்த் தன்மையில் ஈடுபட்ட யான் இந்நிலவுலகத்தே வயிறார உணவு கொண்டு, உடை உடுத்தி வாளா வாழ்ந்திருப்பேன் ஆயினன். ஆதலிற் செய்யத்தக்கன ஒன்றுமறியாத கீழ்ப்பட்ட நாயனையேன், நினது செவ்விய பொன்னடிக் கமலங்களைக் காணப்பெறாத பொய்வழி நிற்பார் அடையக்கூடிய துன்பப் பேறு அனைத்தும் அடைதற்குரியவன். This lowly cur (me), that knows not what to do, deserves all the punishment that is justly due to all insincere folks who cannot see Thy sacred holy Feet. I had seen and heard of truly holy saints merging into Thy fragrant Feet, Oh valiant Lord! Yet, I, full of falsehood, have come down to stay back here, merely eating and dressing well. Note: An autobiographical note on the Saint's first encounter with the Lord of Thirup-Perun-Thurai. கு-ரை: அருளாசானோடு வந்த அடியார் அவனடி சேர்ந்தமையைக் குறித்தார். பாசப்பகையைத் தொலைக்கும் போரில், ஒப்பற்ற கடவுளாதலின், 'போரேறே' என்றார். 53. போரே றேநின் பொன்னகர்வாய் நீபோந் தருளி யிருணீக்கி வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள வருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண் கெட்ட ஊரே றாயிங் குழல்வேனோ கொடியே னுயிர்தா னுலவாதே. போர் ஏறே! நின் பொன் நகர் வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி, வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர்-தான் உலவாதே! pooreeRee nin ponnakarvaay nii poonthu aruLi iruL niikki vaar eeRu iLamen mulaiyaaLoodu udan vanthu aruLa aruL peRRa siireeRu adiyaar ninpaatham seera kaNdum kaNkedda uureeRaay ingku uzalveenoo kodiyeen uyirthaan ulavaathee பொ-ரை: போரில் ஏறு போன்ற பெருமானே! நீ வீடாகிய உனது அழகிய ஊரிலிருந்தும் புறப்பட்டருளினாய். கச்சை மிஞ்சிய இளமையும் மென்மையும் உடைய நகிலினளாகிய திருவருட் சத்தியோடு ஒருங்கு எழுந்தருளினாய். அடியவர் ஆணவ இருளை ஒழித்தருள உன் திருவருள் பெற்ற சிறப்பு மிகுந்த அன்பர் நினது திருவடியை அடைதலை நேரே பார்த்திருந்தும் பார்வையற்ற ஊர்மாடு போன்று இவ்வுலகில் திரிவேனோ? தீவினையேனது ஆயுள் முற்றி ஒழியாதோ? Valiant Lord, all Thy worthy devotees merged into Thy Feet, even as Thou camest out, alongside Thy consort, and blessed them. I had seen this (Thy devotees merging into Thee) and yet, even after seeing this, am I to slog around here (in vain) and rue like a blind bull going astray? And this, with the life of this wicked me, not withering away! கு-ரை: திருவருட் சத்தியின் துணைகொண்டே பாச நீக்கம் நிகழுதலின், அம்மையோடு எழுந்தருளினமை கூறினார். உலப்பிலா கருணையமுதம் உயிர்களுக்கீவான் முற்படும் அருள் அன்னையாதலின் 'வாரேறிள மென்முலையாள்' என்றார். அகண்ட நிலை நின்று அன்பர்க்கருள் செய்ய உருக்கோடலின் 'பொன்னகர்வாய் போந்தருளி' என்றார். 'உயிர்' என்பது உடலில் நிற்கும் பொழுதைச் சுட்டியது. 54. உலவாக் காலந் தவமெய்தி யுறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே யுனைக்காண்பான் அலவா நிற்கு மன்பிலே னென்கொண் டெழுகே னெம்மானே உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான், பல மா முனிவர் நனி வாடப், பாவியேனைப் பணி கொண்டாய் ; மல மாக் குரம்பை - இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான் , அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே? ulavaa kaalam thavam eythi uRuppum veRuththu ingku unaikkaaNpaan palamaa munivar nanivaada paavi yenai paNikoNdaay malamaa kurampai ithu maaykka maaddeen maNiyee unaikkaaNpaan alavaa niRkum anpu ileen en koNdu ezukeen emmaanee பொ-ரை: எங்கள் தலைவனே! அளவில்லாத காலம் நற்றவம் கிடந்து உடம்பை ஒரு பொருளாகப் போற்றாது பெரிய முனிவர் பலர் இருக்கிறார்கள். எடுத்த இப்பிறவியிலேயே உன்னைக் காணும் பொருட்டு அவர்கள் மிகவும் கவலையுற்றுத் தளர, அவர்கட்குப் போய் அருள் புரியாது தீவினையேனை ஆட்கொண்டு அருளினாய். அழுக்கு மிகுந்த இவ்வுடலை அழித்தொழிக்க மாட்டேன். மாணிக்கமே ! உன்னைக் காண்பதற்குக் கவலையுற்று ஆசைப்படும் அன்பில்லாதேன்; இனி அன்பொழிந்த பிற எதனைக் கருவியாகக் கொண்டு மேற் செல்ல வல்லேன்? Whereas many a struggling saint (in the past), in order to see Thee, went into penance for endless years, hurting their limbs, and got so wearied in spirit, Thou took me, this sinner, under Thy servitude. I am unable to cast off this morbid physical frame, oh my Chief! How then shall I rise up to reach Thee, my priceless gem, although I have longing for Thee? கு-ரை: குரம்பை = உடல், கூடு. அலவா நிற்றல்= கவலையுற்று ஆசைப்படுதல், அங்கலாய்த்தல், எழுகேன்=உயர்வேன். அயராவன்பே, அரன் கழல் சேர்ப்பிக்கும் என்பது குறிக்கப்பட்டது. 55. மானேர் நோக்கி யுமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே யமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்றில்லைக் கோனே யுன்றன் றிருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானே னுடையானே மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக் கோனே! உன்-தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட, ஊன் ஆர் புழுக்கூடு - இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே! maanneer nokki umaiyaaL pangkaa vanthu ingku aadkoNda thenee amuthee karumpin theLivee sivanee thenthillai konee unthan thirukkuRippu kuuduvaar nin kazal kuuda uun aar puzukkuudu ithu kaaththu ingku iruppathu aaneen udaiyaanee பொ-ரை: மான் போலும் விழியுடைய உமை நங்கையை இடப்பாகம் கொண்டவனே! மேல்நின்று இழிந்து இந்நிலவுலகில் வந்து ஆட்கொண்டருளிய, தேன் போலும் கெடாத இன்பமளிப்பவனே! சாவா மருந்தே! கருப்பஞ்சாறு போலும் தித்திப்பவனே ! மங்கலப் பெருமானே! அழகிய தில்லை அதிபதியே! முதல்வனே! உன்னுடைய திருவுளப்பாங்கிற்கு ஏற்றவாறு நடந்து, உன் திருஉளக் குறிப்பிற் சார்ந்தவர்கள் உன் திருவடியைக் கூடினார்கள். ஆனால் யானோ தசை நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுடம்பை இவ்வுலகில் வீணே காத்திருத்தலை உடையவன் ஆனேன். Oh Lord, consort of the fawn-eyed Uma, held on Thy left part, Thou, like honey, ambrosia and clear cane juice! Thou that took me in! Oh Lord Civa, Chief of southern Thillai! All those that were drawn towards Thee, merged into Thy bejewelled Feet, while alas,I happen to stay here alone, guarding my foul fleshy frame! 56. உடையா னேநின் றனையுள்கி யுள்ள முருகும் பெருங்காத லுடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேனெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே. உடையானே! நின்-தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல் உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின் கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன், முடை ஆர் புழுக் கூடு-இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே! udaiyaanee ninthanai uLki uLLam urukum perungkaathal udaiyaar udaiyaay ninpaatham seera kaNdu ingku uurnaayin kadaiyaaneen nenjsu urukaatheen kallaa manaththeen kasiyaatheen mudai aar puzukkuudu ithukaaththu ingku iruppathu aaka mudiththaayee பொ-ரை: உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. அதனைக் கண்ணுற்றும் அவர்களைப் போல் உன்னிடம் அன்பு கொள்ளவில்லை. மனம் கனிந்திடவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் அபிமானம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாய் இங்கு வாழ்ந்திருக்கிறேன் . Lord, my Chief, Thou hast under Thee devotees with intense dedication to Thee: devotees who melt at heart, thinking of Thee. I had seen such devotees merge into Thy feet. And yet, here I am, a lonely street cur, not melting at heart. Stony hearted, I just stand here, guarding this physical frame of mine that is so full of foul vermin! Note: Tearful outpourings, bemoaning his exclusion from the other saints who merged into the Lord at Thirup-Perun-Thurai. Such feelings are atonement for past inequities. Effect of past deeds gets washed out in this way. கு-ரை: ஊர் நாய், திரிந்து அற்பப் பயனாவது கொள்ளும். அதுவுமின்றி வறிதே திரிதலின், அதனினுங் கடையேன் என்றார். 57. முடித்த வாறு மென்றனக்கே தக்க தேமுன் னடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுந் துகிலிறையே சோர்ந்த வாறு முகங்குறுவேர் பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே முடித்த ஆறும், என்-தனக்கே தக்கதே; முன், அடியாரைப் பிடித்த ஆறும், சோராமல் - சோரனேன்-இங்கு, ஒருத்திவாய் துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர் பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே mudiththa aaRum en thanakkee thakkathee mun adiyaarai pidiththa aaRum sooraamaR soraneen ingku oruththi vaay thudiththa aaRum thukil iRaiyee soorntha aaRum mukangkuRuveer podiththa aaRum ivai uNarnthu keedu en thanakkee suuzntheenee பொ-ரை: உன்னை நாடிய மெய்யடியாரை நீ தளர விடாமல் பற்றிக் கொண்டனை. கள்வனாகிய என்னை இங்கு உடல் காத்திருக்க நீ முடிவு செய்தது தக்கதுதான் . உலகப்பற்றில் ஈடுபட்ட வஞ்சனேன் இங்கு மாயாசக்தியாம் பெண்ணின் கவர்ச்சியில் ஈடுபட்டேன். பெண்ணின் இதழ்த்துடிப்பும், சிறிது நேர்ந்த ஆடைக்கலைவும், முகச் சிறுவியர்வையின் தோற்றமும் நிகழ்ந்த முறையில் அவற்றில் ஈடுபட்டு, உலக உணர்ச்சி எய்தி, எனக்கே தீங்கு இழைக்கக் கற்றுக் கொண்டேன். Well do I deserve this penitence! For, even though close to Thy devotees, I did not keep off the worldly lore. When depraved folks were harping on lascivious themes, detailing many carnal proclivities, like the trembling of the lip and other lurid acts, I lent ears to obscene talk, and by such listening, I put myself in great distress. Note: Even listening to descriptions of enticing events and behaviour should be avoided, says the saint, for, they too deprive one of the chances for redemption. கு-ரை: முன் = நாடிய; முன் அடியார் - வினைத்தொகை. இறை = மிகச் சிறிய அளவு, பொடித்தல்= தோன்றுதல். துகில் = ஆடை. வாய்த்துடியாற் சொல்லும், ஆடைக் கலைவால் உடம்பும், உள்ளத்தின் நிலைகாட்டும் முகவியர்வையால் மனமும் உலக நிகழ்ச்சிகளில் அழுந்தி ஈடுபட்டதெனக் குறித்தவாறாம். இறைப்பற்று உடையார்க்கு வீடும், உலகப் பற்றுடையார்க்கு உடம்பில் நிலைப்பும் அருளியது பொருத்தம் என்றார். உலக வாதனை, உயிரறிவைக் கவர்தல் கூடுமாதலின், பெண்ணின் மயல்விளை செய்கைகளின் வைத்து அதனை விளக்குவார் ஆயினர். இவ்வாறு கொள்ளாது, ஒரு பெண்ணினைக் கண்டு அடிகள் மோகமுற்றார் என்பது, அத்துணை பொருந்தாமை அறிக. பெண்டிரைக் கூறுமிடத்துப் பன்மையாகக் கூறினமையும், இங்கே 'ஒருத்தி' என்றதும் உற்று நோக்குக. அவள் செயல்களை உணர்ந்தமையே கேடென்றாரே யொழிய, உணர்ந்து, பின்வேறு செயலாகிய கேடு சூழ்ந்தனர் என்று கருதற்க. கடவுள் ஒருபுறமும், உடம்புபற்றி நிகழும் பிராரத்தவாதனை ஒருபுறமும் இழுப்பப் பின்னதை விட்டு முன்னதைப் பற்றாமையே அடிகள் தன் குற்றம் என்றாரென உய்த்துணர்க. 58. தேனைப் பாலைக் கன்னலின் றெளியை யொளியைத் தெளிந்தார்தம் ஊனை யுருக்கு முடையானை யும்ப ரானை வம்பனே னானின் னடியே னீயென்னை யாண்டா யென்றா லடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் றன்மையே தேனைப், பாலைக் கன்னலின் தெளியை, ஒளியைத், தெளிந்தார்-தம் ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன் 'நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத் தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே theenaip paalai kannalin theLiyai oLiyai theLinthaar tham uunai urukkum udaiyaanai umpa raanai vampaneen naan nin adiyeen nii ennai aaNdaay enRaal adiyeeRku thaanum siriththee aruLalaam thanmai yaam en thanmaiyee பொ-ரை: தேன் போன்ற இனிமையும், பால் போன்ற தூய்மையும் கரும்பின் சாறு போன்ற அருட்செயலும் உடைய சோதியானவனே! நின் அருள் அறிவின் கண் தெளிந்த அடியார்களின் உள்ளம் மட்டுமன்றி உடம்பையும் உருகுவிக்கும் முதல்வனை வேண்டியதெல்லாம் எளிதின் ஈயும் விண்பசுவாகிய காமதேனு ஒப்பானை நோக்கி , வீணனாகிய நான் உன் அடியேன், நீ என்னை ஆட்கொண்டாய். என்று நான் கூறினால் அடியேனைப் பார்த்து அப்படியா நல்லது என்று அவன் இகழ்ந்து நகையாடி அருளுதற்குரிய இயல்பே என் இயல்பாயிற்று. Thou art like unto honey, sugarcane juice, bright light, Oh Lord, that melts the hearts of devotees with clear knowledge! Unto such Lord, in the high above, I, this recalcitrant me, declare thus: “I Thy vassal, Thou my over Lord". Hearing this, shouldst Thou then smile on me, that too would show my absorption to Thee. கு-ரை: தன்னை மெய்யடியானாக இறைவன் ஏற்றுக் கொள்ளத் தகுதியில்லை யெனினும், அவன் நகையாடுவதும் தமக்கு ஓர் ஆறுதல் என்று குறித்தவாறு காண்க. 59. தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ என்னை நோக்கு வார்யாரே யென்னான் செய்கே னெம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி யெந்தா யெங்குப் புகுவேனே தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ ? என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்! பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே? thanmai piRaraal aRiyaatha thalaivaa pollaa naayaana punmai yeenai aaNdu aiyaa puRamee pooka viduvaayoo ennai nookkuvaar yaaree ennaan seykeen emperumaan ponnee thikazum thirumeeni enthaay engku pukuveenee பொ-ரை: அன்பரன்றி, மற்றோரால் அறியப்படாத இயல்புடைய தலைவனே! தீய நாய் போன்ற சிறியேனை ஆட்கொண்டு, ஐயனே! உன் அருளுக்குப் புறம்பாகச் செல்ல விட்டு விடுவையோ? அங்ஙனமாயின் அடியேனைக் கண்பார்ப்பார் வேறு யார் ? எங்கள் பெரியோனே! நான் என்ன செய்வேன்? மாறில்லாத பொன்போல விளங்கும் அழகிய திருவுருவ முடையவனே! எந்தையே! நான் எங்கே அடைக்கலம் புகுவேன் ? Oh Chief, beyond comprehension, having taken me in earlier, will Thou now let me down? If Thou abandon this lowly cur, who else will care for me? What (on earth) can I do? Oh Lord and my Sire, of holy golden frame, whereto can I then go? Note: We note these repeated wails of the saint in verse after verse, revealing his extreme anxiety in catching up with his previous associates who merged into Lord Civa in Perunthurai. கு-ரை: தலைவனே, உனக்கே மீளாவடிமை, தூய அருள் ஒளியுடையானே, பிழை பொறுப்பது உன்கடன். பெரியோனே, நீயே கண் பார்க்க வேண்டும், உனக்கே அடைக்கலம், என்று அடிகள் செப்பியவை, உருக்கத்தின் தலை நின்றவை. 60. புகுவே னெனதே நின்பாதம் போற்று மடியா ருண்ணின்று நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினே னெகுமன் பில்லை நினைக்காண நீயாண் டருள வடியேனுந் தகுவ னேயென் றன்மையே யெந்தா யந்தோ தரியேனே புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று நகுவேன், பண்டு தோள் நோக்கி, நாணம் இல்லா நாயினேன் நெகும் அன்பு இல்லை, நினைக்காண நீ ஆண்டு அருள, அடியேனும் தகுவனே? என் தன்மையே! எந்தாய்! அந்தோ! தரியேனே! pukuveen enathee ninpaatham pooRRum adiyaaruL ninRu nakuveen paNdu thooLnookki naNam illaa naayineen nekum anpu illai ninaikkaaNa nii aaNdu aruLa adiyeenum thakuvanee en thanmaiyee enthaay anthoo thariyeenee பொ-ரை: நீ காட்சி கொடுத்த முன்நாளில் உன்னை வணங்கும் அன்பர் நடுவே நின்று வெட்கமற்ற நாய் போலும் யான், நின் திருத்தோள்களைக் கண்டு நகையாடிக் கொண்டிருந்தேன். உன் திருக்காட்சி பெறுதற்குரிய உள்ளம் உருக்கும் அன்பு என்னிடம் இருந்ததில்லை. அங்ஙனமாயினும் ஆட்கொண்டு அருளும் தகுதி உடையவன் ஆயினேன்; எந்தையே, என் இயல்புதான் என்னே! அன்பற்ற என் இயல்பை நான் பொறுக்க மாட்டேன். நீ ஆண்டமையால் நின் பாதம் எனக்குரியதே! நான் அதன் கண் அடைக்கலம் புகுவேன். Lord, I take refuge under Thy Feet, for these are just for me. I will stand amidst Thy devotees, filled with gladness at heart. As in the past, this cur of me, will take delight in eyeing Thy shoulders shedding all semblance of modesty. Yet I am devoid of intense keenness. Wouldst Thou still bless me, Oh Sire? Alas! No more can I be in this strife. THIRUCHCHITRAMBALAM 5.7 காருணியத்து இரங்கல் 5.7. KAARUNIYATHTHU IRANGAL அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Pining for Grace திருச்சிற்றம்பலம் 61. தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி யெங்கள் விடலையே போற்றி யொப்பி லொருத்தனே போற்றி யும்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி யெங்க ணின்மலா போற்றி போற்றி தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா, போற்றி ! வான விருத்தனே போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்புஇல் ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி! தில்லை நிருத்தனே, போற்றி ! எங்கள் நின்மலா, போற்றி ! போற்றி! tharikkileen kaaya vaazkkai sankaraa pooRRi vaana viruththanee pooRRi engkaL vidalaiyee pooRRi oppuil oruththanee pooRRi umpar thampiraan pooRRi thillai niruththanee pooRRi engkaL ninmalaa pooRRi pooRRi பொ-ரை: இவ்வுடலோடு வாழ்ந்திருத்தலைப் பொறுக்க முடியவில்லை. சுகத்தைக் கொடுப்பவனே! காத்தருளுக! சிதாகாசத்தில் உறையும் பழையோனே ! காத்தருளுக! அடியாருடைய அண்ணலே காத்தருளுக! ஒப்பற்ற ஒருவனே! காத்தருளுக! வானவர் தலைவனே காத்தருளுக! தில்லை மன்றில் நடனமாடுவோனே காக்க! எங்கள் தூயவனே காக்க ! காக்க! Oh Lord Sankara, I am unable to bear this embodied existence (to this world). Pray, save me from this (sordid) ordeal. Save me, Oh primordial Lord, our mighty Chief. Oh Thou unparalleled one, Lord of heavenly gods, Lord of the cosmic dance at Thillai, Thou free of all afflictions.I beseech Thee. Pray save me, do save me: கு-ரை: போற்றி என்பதற்கு வணக்கம் எனவும், காக்க எனவும் பொருள் கொள்ளலாம், விடலை=ஆண்மகன் 62. போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி போற்றி ! ஓ, நமச்சிவாய! புயங்கனே, மயங்கு கின்றேன் ; போற்றி ! ஓ, நமச்சிவாய ! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை ; போற்றி! ஓ, நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்; போற்றி! ஓ, நமச்சிவாய ! சய! சய ! போற்றி! போற்றி! pooRRyoo namassivaaya puyangkanee mayangku kinReen pooRRyoo namassivaaya pukalidam piRithu onRu illai pooRRyoo namassivaaya puRam enai pookkal kaNdaay pooRRyoo namassivaaya saya saya pooRRi pooRRi பொ-ரை: ஓம் நமச்சிவாய ! பாம்பணிந்தவனே! அடியேன் திகைப்புறுகின்றேன். காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனுக்கு நின்னைத் தவிர தஞ்சமான இடம் வேறு எதுவுமில்லை. காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனைப் புறம்பே போக விடாதே காத்திடுக. ஓம் நமச்சிவாய! காத்தருளுக! நின் வெற்றி ஓங்குக! வணக்கம் ! வணக்கம்! Glory be to Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA,Pray grant me refuge, Thou (shining) with garlands of snakes! I stand here bemused, Thou of the five-letter form NAMACHIVAAYA, pray grant refuge, I have none to shelter me except Thee. Glory be to Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA pray grant refuge. Shunt me not out of here. Glory be to Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA pray grant refuge. Oh victorious one, Glory be to Thee!; Glory be to Thee! கு-ரை: 'நமச்சிவாய' என்பதற்கு நமச்சிவாயனே எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். அங்ஙனமாயின் ஓ, நமச்சிவாயனே என்று கூறுவதாகக் கருதவேண்டும். கண்டாய், முன்னிலை அசை. போக்காதே என்பதை வற்புறுத்துவது. இருவினையை வெல்வதால், இருமுறை வெற்றி என்றனர். வெற்றி இருமுறையாகவே, வணக்கமும் இருமுறையாயிற்று. 63. போற்றியென் போலும் பொய்யர் தம்மையாட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவன நீர்தீக் காற்றிய மானன் வான மிருசுடர்க் கடவு ளானே போற்றி ! என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி ! நின்பாதம் போற்றி ! நாதனே, போற்றி ! போற்றி! போற்றி! நின்கருணை வெள்ளப் புதுமதுப் புவனம், நீர், தீக் காற்று, இயமானன், வானம், இருசுடர்க் கடவுளானே! pooRRi en poolum poyyar thammai aadkoLLum vaLLal pooRRi nin paatham pooRRi naathanee pooRRi pooRRi pooRRi nin karuNai veLLap puthumathu puvanam neer thii kaaRRu iyamaanan vaanam irusudar kadavuLaanee பொ-ரை: நிலையல்லாதவற்றில் பற்றுடைய என்னைப் போன்றவரையும் ஆட்கொள்ளும் ஈகை மிக்க பெருந்தகை நீ! உனக்கு வணக்கம்! உனது திருவடிக்கு வணக்கம். தலைவனே வணக்கம். வணக்கம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான், உயிர், ஞாயிறு, திங்கள் ஆகிய எட்டினையும் வடிவாகக் கொண்டு அவையாகிய கடவுள் தன்மை கொண்டவனே ! உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. அருள் வெள்ளம் எம்மைக் காக்க என்பது பொருள். Obeisance to Thee, Oh munificent Lord that takes in even pretentious folks like me. Obeisance to Thy Feet, obeisance Oh Lord. Prayer grant me refuge, Oh grant refuge. Lord of ambrosial flood of grace, Thou, manifest as the earth, water, fire, air, soul and the sky, as also, the sun and the moon. Note: Thevaram hymns also refer to the Lords' manifestation in the five elements - earth, water, fire, air and the sky - as also the soul, the sun and the moon - vide Saint Thiru Gnana Sambandar (153.2) (பாருமாகி வானுளோர்க்குப்). Also Saint Kumara Kuru Para Swamigal (17th Century AD) - Verse 54. சிதம்பர மும்மணிக்கோவை: மருவருக்கன், மதி, வளி, வான், இயமானன், தீ, நீர், மண் எனும் எண்வகை உறுப்பின் வடிவு கொண்ட. கு-ரை: இயமானன்= உயிர். புவனம் = பிருதிவி. வள்ளல்= வரையாது கொடுப்போன். கூறிய எட்டையும் அட்டமூர்த்த மென்ப . பொய்யர்க்கும் மெய்யர்க்கும் அருள் வழங்குதலால் 'வள்ளல்' என்றார். 'நின் கருணை வெள்ளப் புதுமது போற்றி' என்பதை இறுதியிற் கொள்க. 64. கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே யுருக்கி யென்னை யாண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை யும்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி ! விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி ! உடல்-இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி ! சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி! kadavuLee pooRRi ennai kaNdu koNdu aruLu pooRRi vida uLee urukki ennai aaNdida veeNdum pooRRi udal ithu kaLainthiddu ollai umpar thanthu aruLu pooRRi sadaiyuLee kangkai vaiththa sangkaraa pooRRi pooRRi பொ-ரை: மனம், மொழி, மெய்களைக் கடந்த பெருமானே! வணக்கம் அடியேனைக் கண்பார்த்து இரங்குக வணக்கம். உலகப்பற்றை விடுதற்கு, என் உள்ளத்தை அன்பால் உருகுவித்து என்னை அடிமை கொண்டிட வேண்டுகிறேன். வணக்கம். இந்த உடலினை நீக்கி, விரைவாக வீட்டினைக் கொடுத்தருளுக வணக்கம். உலகினர்க்கு இரங்கி கங்கையானது உலகை அழிக்கவொட்டாமல் சடையின் கண்ணே கங்கையை ஏற்று அமைத்துக் கொண்ட இன்ப வள்ளலே! வணக்கம்! வணக்கம்! Obeisance to Thee, Oh Lord, pray take note of me and bestow benediction. Lord! pray melt my heart and make me thine. Grant salvation soon, weeding out this physical frame of mine. Obeisance to Thee, Oh Lord Sankara that holdeth the Ganges on the matted hair. Obeisance to Thee, Obeisance to Thee. கு-ரை: 'கடவுளே' என்பதற்கு, காணப்பட்ட எல்லாவற்றையும் கடந்த பொருளே என்றும் கூறலாம். புறக்கணியாது போற்ற வேண்டும் என்பார், 'கண்டு கொண்டருளு' என்றார், ஒல்லை = விரைவாக. உம்பர்= மேலிடம் - முத்தி. கங்கையைத் தடுத்தமை போல, துன்ப வெள்ளத்தைத் தடை செய்தருளுக, என்றவாறு. 65. சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா வல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி யிங்கிவ்வாழ் வாற்ற கில்லே னெம்பிரா னிழித்திட் டேனே சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப் பொங்கு அரா அல்குல், செவ்வாய், வெள் நகைக் கரியவாள் கண், மங்கை ஓர்பங்க, போற்றி ! மால்விடை ஊர்தி, போற்றி ! இங்கு, இவ்வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே. sangkaraa pooRRi maRRu oor saraN ileen pooRRi koola pongku araa alkul sevvaay veNnakai kariya vaaL kaN mangkai oor pangka pooRRi maalvidai uurthi pooRRi ingku ivvaazvu aaRRakilleen empiraan iziththiddeenee பொ-ரை: சுகம் கொடுப்பவனே வணக்கம். நின்னைத்தவிர வேறு ஒரு புகலிடம் இல்லேன் வணக்கம். சீற்றம் கொண்ட பாம்பின் அழகிய படத்தை ஒத்த நிதம்பத்தையும், சிவந்த இதழையும், வெள்ளிய பல்லினையும், ஒளியுடைய கருங்கண்ணையும் உடைய மங்கைப் பருவத்தினளாகிய உமையைப் பாகமாக உடையவனே வணக்கம் ! அரியைக் காளை வாகனமாகக் கொண்டவனே வணக்கம்! இவ்வுலகில் பொய் வாழ்வைச் சகிக்கிலேன். இதை அருவருத்து விட்டேன். Obeisance to Thee, Oh Lord Sankara, I have no refuge but Thee. Obeisance, Oh Lord, that on one side of Thy frame, holdeth the Goddess with slim waist, red lips, black eyes and bright smile Lord, riding on Thirumaal who came in the form of a bull (during the war on Thiripuram)! I bear not this accursed earthly life. Note: During the destruction of Trifort (Thiripuram) of the recalcitrant asuras, Thirumaal came forward to carry Lord Civa and took the shape of a bull. This anecdote is recounted in almost all saivite works- Also see Chapter XII, verse 15 of Thiruchchaazhal in Thiruvaachakam. கு-ரை: சரண்= புகலிடம், சீற்றங்கொண்ட காலையே, பாம்பு படமெடுத்தலின், 'பொங்கரா' என்றார். படத்தையே அல்குலுக்கு உவமையாகக் கொண்டார். அல்குலென்பது, பெண்குறி. 'வாட்கண்' என்பதற்கு வாள் போன்ற கண் என்பாரும் உளர். 66. இழித்தன னென்னை யானே யெம்பிரான் போற்றி போற்றி பழித்திலே னுன்னை யென்னை யாளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி யும்பர்நாட் டெம்பி ரானே இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி ! போற்றி ! பழித்திலேன் உன்னை: என்னை ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி! ஒழித்திடு இவ்வாழ்வு: போற்றி ! உம்பர் நாட்டு எம்பிரானே! iziththanan ennai yaanee empiraan pooRRi pooRRi paziththileen unnai ennai aaLudai paatham pooRRi pizaiththavai poRukkai ellaam periyavar kadamai pooRRi oziththidu ivvaazvu pooRRi umpar naaddu empiraanee பொ-ரை: யானே என்னை மிகவும் வெறுத்து விட்டேன். எங்கள் வள்ளலே வணக்கம்! வணக்கம்! உன்னை யான் குறை கூறேன். அடியேனை அடிமையாக உடைய திருவடிக்கு வணக்கம். இயற்றிய தவறுகளை எல்லாம் மன்னித்தல் பெரியோரின் கடப்பாடு ஆகும். ஆகவே பெரியோனான நீ சிறியோனான என் பிழையெல்லாம் பொறுத்தருளுக. வீட்டுலகின் எங்கள் தலைவனே! இவ்வாழ்க்கையை விரைவில் தொலைத்தருள்க! வணக்கம்! I degraded myself, Oh Lord, and yet I beseech Thy grace. Pray grant refuge. I did not blame Thee for anything. May Thy Feet take me in and grant refuge. Is it not natural for noble folks to bear with our inequities? Pray end my earthly state, Oh Thou, Lord of heavens, pray grant refuge. கு-ரை: உம்பர் = வானுலகம் என்பாரும் உளர். 67. எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி கொம்பரார் மருங்குன் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி யென்னை யாளுடை யொருவ போற்றி எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி ! கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள்-நீற, போற்றி ! செம்பிரான் போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி ! உம்பரா, போற்றி ! என்னை ஆளுடை ஒருவ, போற்றி! empiraan pooRRi vaanaththu avar avar eeRu pooRRi kompar aar marungkul mangai kuuRa veNNiiRa pooRRi sempiraan pooRRi thillai thirussiRRam palava pooRRi umparaa pooRRi ennai aaLudai oruva pooRRi பொ-ரை: எங்கள் வள்ளலே வணக்கம்! வானுலகிலுள்ள தேவர் பலருள் அவரவருக்குத் தக்கவாறு அருளும் சிங்கமே வணக்கம்! கொடி போன்ற இடையுடைய மாதினை ஒரு பாகம் உடையவனே! திரு வெண்ணீறுடையாய் வணக்கம்! செம்மேனியுடைய பெருமானே வணக்கம். அழகிய தில்லை ஞானப் பொதுவினையுடையாய் வணக்கம். வீடுடையானே வணக்கம். என்னை அடிமையாக உடைய ஒப்பற்றோனே வணக்கம். Obeisance to Thee! Oh Lord! you are like a lion for all gods of the sky! Thou, part female, with a waist, lean and stately. Thou, besmeared with ash to white; Oh noble Lord of Thillai's golden hall, pray grant refuge. Obeisance to Thee! Oh Lord of heavens. Obeisance to Thee! Oh Peerless one, that hast taken me in servitude. கு-ரை: “ஏறு" என்றது தலைவன் என்னும் பொருட்டாய் நின்றது. 68. ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் றனிமை தீர்த்தே ஒருவனே போற்றி ! ஒப்புஇல் அப்பனே, போற்றி ! வானோர் குருவனே, போற்றி ! எங்கள் கோமளக் கொழுந்து போற்றி ! 'வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி ! தருக நின் பாதம் போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே. oruvanee pooRRi oppu il appanee pooRRi vaanoor kuvanee pooRRi engkaL koomaLak kozunthu pooRRi varuka enRu ennai ninpaal vaangkida veeNdum pooRRi tharuka nin paatham pooRRi! thamiyaneen thanimai thiirththee பொ-ரை: கடவுளாகிய ஒருவனே வணக்கம். தன்னிகரில்லாத தந்தையே வணக்கம். தேவருடைய பரமாச்சாரியனே வணக்கம். அடியோமுடைய இளமைச் செவ்வி நிறைந்த சோதியே வணக்கம். 'இங்கே வா' என்று அடியேனை உன்னிடம் நீ அழைத்து ஏற்றுக் கொள்ளவேண்டும். ஐயா வணக்கம், ஆதரவின்றித் தனிப்பட்ட எனது துணையின்மையை ஒழித்து உன் திருவடித் துணையைக் கொடுத்தருளுக! வணக்கம்.! Obeisance to Thee! Thou the unique unparalleled Lord! Preceptor for all sky borne gods. Thou, fair and tender like a shoot! Pray, call out to me and absorb me unto Thee. grant Thou, Thy Feet to me, thus ending my lonesome state! (state of separation). கு-ரை: தேவர் குருவாதல், 'திருமால் இந்திரன் பிரமன் உபமனியன் தபனன் நந்தி செவ்வேளாதித் தரும முதுகுரவர்க்கும் தனதருளால் ஆசிரியத் தலைமை நல்கி' என்றமையாலறிக. என்றும் மாறாத எழிலுடைமை பற்றி 'கோமளக் கொழுந்தே' என்றார். கொழுந்து= சோதி 'தமியனேன் தனிமை தீர்த்தே நின்பாதம் தருகபோற்றி' என மாற்றுக. 69. தீர்ந்தவன் பாய வன்பர்க் கவரினு மன்ப போற்றி பேர்ந்துமென் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி யார்ந்த நின்பாத நாயேற் கருளிட வேண்டும் போற்றி தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி ! பேர்ந்தும், என்பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி ! வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி ! ஆர்ந்த நின்பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி! thiirntha anpaaya anparkku avarinum anpa pooRRi peernthum en pooymmai aadkoNdu aruLidum perumai pooRRi vaarntha nanjsu ayinRu vaanoorkku amutham ii vaLLal pooRRi aarntha nin paatham naayeeRku aruLida veeNdum pooRRi பொ-ரை: முடிந்த அன்புருவமாகிய அடியாரிடத்தே அவரைப் பார்க்கிலும் மிகுந்த அன்புடையவனே வணக்கம் . எனது பொய்ம்மையை நீக்கியும் என்னை அடிமையாகக் கொண்டு அருள் செய்யும் பெருந்தன்மையனே வணக்கம். பாற்கடலில் பெருகிய விடத்தை உண்டு, விண்ணவர்க்கு அமுதத்தைக் கொடுத்த பேருதவியாளனே வணக்கம். எங்கும் நிறைந்த நின் திருவடிகளை நாயனைய எனக்கு ஈந்திட வேண்டுகிறேன், வணக்கம்! Obeisance to Thee, Oh Lord! To those that have intense love for Thee, Thou art an even more loving one. Obeisance to Thy glory that took me in, condoning my falsehood, despite the fact that I slid away from Thee. Thou, the munificent that drank the frothing venom but served elixir to sky borne gods. Obeisance to Thee, prayer grant Thy graceful Feet to me, this lowly cur. கு-ரை: தீர்ந்த, என்றது மிக மேலாகிய, சத்திநிபாதத்து உத்தமர்களுடைய உயர்ந்த, பயன் கருதாத பேரன்பை. அன்பர்க்கு அன்பே முடிந்த கருவியும் பயனுமாம். இரண்டாம் அடியில், என் பொய்மையைப் பேர்ந்தும் என உரை நடை கொள்க. பேர்த்தும் = பெயர்ந்தும். வார்ந்த = நீண்ட, பெருகிய. அயிற்று=உண்டு. ஈவள்ளல்= ஈந்த வள்ளல், வினைத்தொகை, ஆர்ந்த= நிறைந்த. 70. போற்றியிப் புவன நீர்தீக் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்ற மாகி நீ தோற்ற மில்லாய் போற்றி யெல்லா வுயிர்க்கு மீறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்க ணின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே போற்றி! இப்புவனம், நீர் தீ காலொடு, வானம் ஆனாய் ; போற்றி ! எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய் ; போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறுஇன்மை ஆனாய் ; போற்றி ! ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே. pooRRi ippuvanam niir thii kaalodu vaanam aanaay pooRRi evvuyirkkum thooRRam aaki nii thooRRam illaay pooRRi ellaa uyirkkum iiRu aay iiRu inmai aanaay pooRRi aimpulankaL ninnai puNarkilaa puNarkkai yaanee பொ-ரை: இந்த நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பூதத்திலும் கலந்து அவையானவனே வணக்கம். எல்லா உயிர்களும் பிறத்தற்குக் காரணமாகி, நீ பிறப்பில்லாது இருப்பவனே வணக்கம். எல்லா உயிர்களும் ஒடுங்கும் முடிவிடமாயும் நீ முடிவில்லாதவனும் ஆனவனே வணக்கம்! ஐம்புலன் ஆசை உன்னை அடையாத மாயமுடையவனே, உனக்கு வணக்கம். Thou, manifest as the earth, water, fire, air and sky, Obeisance to Thee. Thou, origin of all life and yet Thyself without origin, Obeisance to Thee. Thou, the end of all life and yet Thyself having no end, Obeisance to Thee. Thou immanent in the five senses and yet Thyself beyond the bondage of the senses, Obeisance to Thee. Note: The term போற்றி means போற்றுவாயாக pray grant refuge: போற்றுதி. In certain instances போற்றி is equivalent to வணக்கம். I pay obeisance to Thee. கு-ரை: வான், பிற பூதங்களிலும் நுட்பமாய், அவற்றிற்கு இடங் கொடுத்தலின், அதனை 'ஒடு' என்பது கொடுத்து வேறு பிரித்தனர். பிறப்புக்குக் காரணமாய உடல், அகக்கருவிகள், உலகம், நுகர் பொருள் என்பன தோற்றுதற்கிடமாய மாயையோடு அத்துவிதமாய்ச் சிவசத்தி கலந்து எல்லாவற்றையும் தோற்றுவித்தலின், 'தோற்றம் ஆகி' என்றார். ஒடுக்கம் செய்வானை 'ஈறு' என்றார். சிவஞான போதமுதற் சூத்திரத்துள் சங்காரக் கடவுளை 'அந்தம்' என்றது காண்க . புணர்க்கை = மாயம், சேர்க்கை. 'புணர்க்கையானே' என்பதற்குக் கலப்பு, என்ற பொருளில், 'தொடக்குறாது எல்லாவற்றிலும் கலந்திருப்பவனே' என்றும் பொருள் கொள்ளலாம். THIRUCHCHITRAMBALAM 5.8 . ஆனந்தத்து அழுந்தல் 5.8. AANANTHATHTHU AZHUNTHAL எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Steeped in Bliss திருச்சிற்றம்பலம் 71. புணர்ப்ப தொக்க வெந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம் புணர்ப்ப தாக வன்றி தாக வன்பு நின்க ழற்கணே புணர்ப்ப தாக வங்க ணாள புங்க மான போகமே புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்: புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம் புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணே புணர்ப்பு அது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே! puNarppathu okka enthai ennai aaNdu puuNa nookkinaay puNarppathu anru ithu enRa poothu ninnoodu ennoodu ennithaam puNarppathu aaka anRu ithu aaka anpunin kazalkaNee puNarppathu aaka angkaNaaLa pungkam aana pookamee பொ-ரை: அழகிய கண்ணாளனே! நீ ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து அருள் புரிதற்குரிய பக்குவம் ஒத்து வந்தது . என் அப்பனே! என்னை ஆட்கொண்டு நான் உன்னை அடையும்படி திருவருட் பார்வை நல்கினாய். இவ்வுடம்பானது நின்னோடு என்னை இணக்குவதன்று என்று அறிந்த பின்பு, இதனால் என்ன பயன்? இது ஒழிவதாக! நின் திருவடிக் கண்ணே அன்பானது என்னைச் சேர்ப்பதாக! உயர்ந்த சிவானந்த போகமானது என்னை நின்னோடு பொருத்துமாக! Sire, when the time was ripe for me to be united with Thee, Thou took me in, and cast Thy benign sight on me. Later, Thou left me and I remained all alone. Of what use was the union therefore, if I have to stand here forlorn? Whether or not it be time to unite with Thee, let my devotion be to Thy Feet, oh Lord of grace, unite me with Thy bliss so high. கு-ரை: கண்ணாளன்= கணவன், தோழன். பூண= அடைய, புங்கம் = உயர்வு. என்னொடு=என்னை-உருபுமயக்கம். 72. போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி யின்பமு மேக நின்க ழலிணை யலாதி லேனெ னெம்பிரா னாகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே ஆக வென்கை கண்க டாரை யாற தாக வையனே போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர-ஆதி இன்பமும் ஏக! நின்கழல்-இணை அலாது இலேன், என் எம்பிரான் ; ஆகம் விண்டு, கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக, என்கை; கண்கள் தாரை-ஆறு அது ஆக; ஐயனே! pookam veeNdi veeNdileen purantharaathi inpamum eeka ninkazal iNai yalaathu ileen en empiraan aakam viNdu kampam vanthu kunjsi anjsali kaNee aaka enkai kaNkaL thaarai aaRu athu aaka aiyanee பொ-ரை: சிவபோகத்தை விரும்பி, இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களை விரும்ப மாட்டேன். ஒருவனே! என் தலைவனே! உன் திருவடி இரண்டுமன்றி வேறு யாதும் துணையில்லேன். அப்பனே! உடம்பு புளியம்பழ ஓடு போல என்னின் வேறாகப் பெற்று நடுநடுங்க, எனது கைகள் சிரமீது கும்பிடும் தொழிலின்கண் பொருந்துக. கண்களின் நின்று விழும் நீரொழுக்கு ஆறாகப் பெருகுவதாக. I do not seek the pleasures of gods like Indra. Oh unique Lord, I have no reguge other than Thine twin Feet. With splitting chest and shivering physique, may my hands fold up on my head in order to worship Thee, Oh my Chief! May tears well up and stream down on me. கு-ரை: 'போகம் வேண்டி' என்பதற்கு உலக போகங்களை விரும்பி என்றும் பொருள் கொள்வர். ஏக என்பதற்கு, செல்வதற்கு எனவும் பொருள் கொண்டு, நின்கழலிணையன்றிச் செல்வதற்கு வேறிடமில்லேன் என்றும் உரைப்பர். விண்டு= வேறுபட்டு. கம்பம்= நடுக்கம். வந்து= வர, குஞ்சி= ஆண் தலைமயிர்; தாரை=ஒழுக்கு. 73. ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று வஞ்சனேன் பொய்க லந்த தல்ல தில்லை பொய்மை யேனெ னெம்பிரான் மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணே மெய்க லந்த வன்ப ரன்பெ னக்கு மாக வேண்டுமே. ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன், என் எம்பிரான் மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்-கணே மெய் கலந்த அன்பர் அன்பு, எனக்கும் ஆக வேண்டுமே. aiya ninnathu allathu illai maRRu oor paRRu vanjsaneen poy kalanthathu allathu illai poymmai yeen en empiraan mai kalantha kaNNi pangka vanthu nin kazalkaNee mey kalantha anpar anpu enakkum aaka veeNdumee பொ-ரை: ஐயனே, உன்னுடைய ஆதரவின்றி வேறொரு ஆதரவு இல்லை. அப்படியிருந்தும் கள்வனேன் பொய்யினைச் சார்ந்திருப்பதன்றிப் பிறிதில்லை. என் தலைவனே! மை தீட்டிய கண்ணையுடைய அம்மை பாகனே! நின் திருவடிக் கண்ணே மெய்யைச் சார்ந்த அன்பர்களுடைய அன்பு, பொய்மை உடையேனாகிய எனக்கும் வந்து அமைதலை வேண்டுகிறேன். I have no other hold, except Thee, Oh my Chief! I, this treacherous thief, have nothing but falsehood in all deeds. Oh Lord, consort of the goddess with decorated eyes, pray, grant that I may have the same dedication as Thy devotees ever true to Thee. 74. வேண்டு நின்க ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே யாண்டு கொண்டு நாயி னேனை யாவ வென்ற ருளுநீ பூண்டு கொண்ட டியனேனும் போற்றி போற்றி யென்று மென்று மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே வேண்டும், நின் கழல் கண் அன்பு: பொய்ம்மை தீர்த்து, மெய்ம்மையே ஆண்டுகொண்டு, நாயினேனை, 'ஆவ' என்று அருளு, நீ ; பூண்டு கொண்டு அடியனேனும் 'போற்றி ! போற்றி! ' என்றும், என்றும் மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன ! நின் வணங்கவே. veeNdum nin kazaRkaN anpu poymmai thiirththu meymmaiyee aaNdu koNdu naayineenai aava enRu aruLu nii puuNdu koNdu adiyaneenum pooRRi pooRRi enRum enRum maaNdu maaNdu vanthu vanthu manna nin vaNangkavee பொ-ரை : அரசனே! பொய்யினை நீக்கி உண்மையாகவே ஆட்கொண்டருளி நாயனையேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள வேண்டும். உன் திருவடிகளைச் சென்னி மேற்கொண்டு கடையேனாகிய யானும் வணக்கம் வணக்கம் என்று எப்போதும் சொல்லவேண்டும். பிறவி வரினும் இறந்து இறந்து மீண்டும் உன்னையே வணங்குவதற்கு உன் திருவடிக் கண் அயரா அன்பினை வேண்டுகிறேன். Grant, that I may truly dedicate myself to Thy bejeweled Feet. Grant Thee Thy Grace and take me, this cur, under Thee. I request the favour of letting me pay obeisance to Thee over and over again - even death after death I shall always come back to offer obeisance to Thee, Lord. கு-ரை: ஆவ, இரக்கக் குறிப்பு. ஐயோ என்று இரங்கி அருளுகின்ற என்றும் கொள்ளலாம். 75. வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கு மோலமிட் டுணங்கு நின்னை யெய்த லுற்று மற்றொ ருண்மை யின்மையின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க வென்கொ லோநி னைப்பதே. வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஒர் உண்மை இன்மையின் வணங்கி, யாம் விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க! என் - கொலோ நினைப்பதே? vaNangkum ninnai maNNum viNNum veetham naankum oolam iddu uNangkum ninnai eythal uRRu maRRoor uNmai inmaiyin vaNangki yaam videengkaL enna vanthu ninRu aruLuthaRku iNangku kongkai mangkai pangka enkoloo ninaippathee பொ-ரை: நெருங்கிய நகில்களையுடைய மாதினை ஒரு பாகமாக உடையவனே ! உன்னையன்றி வேறொரு மெய்ப்பொருள் இல்லை. அதனால் மண்ணுலகமும் விண்ணுலகமும் உன்னை அடைய விரும்பி வழிபடுகின்றன. மறைகள் நான்கும் உன்னைக் காண ஓலமிட்டுக் காணப் பெறாமையால் வாடுகின்றன. அடியோங்களாகிய நாங்களும் உன்னை வணங்கி, 'விடமாட்டோம்' என்று கூறவும் நீ வெளிப்போந்து அருள் செய்வதற்குத் தடையாக எதனை நினைக்கிறாய்? அவ்வாறு நினையாமல் இணங்குவாயாக. Why doest Thou delay Thy grace, Oh Lord, consort of Goddess Uma? Why this delay to those of us who pay obeisance and declare that they will not relent on this, as there is no truth other than Thyself. The earth and the sky (ever) do pay obeisance to Thee. The four scriptures cry out for Thee and feel exhausted, unable to see Thee. கு-ரை: 'இணங்கு' என்பதைக் கொங்கை என்பதோடு கூட்டுதல் ஒரு முறை, 'அருளுதற்கு' என்பதோடு கூட்டிப் பொருளுரைப்பது உண்டு. 'மற்றொருண்மை யின்மையின் என்கொலோ நினைப்பதே' என இயைத்து, வேறு மெய்ப்பொருளின்மையின், நின்னைத் தவிர எதனை நாங்கள் நினைப்பது, என்றும் கூறுப. 76. நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாக்கினாற் றினைத்த னையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத் துலகு மாய நின்னை யைம்பு லன்கள் காண்கிலா வெனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை பாத மெய்தவே. நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல்; ஆவ கேட்பவே அனைத்து உலகும்; ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா ; எனைத்து, எனைத்து அது, எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே? ninaippathu aaka sinthai sellum ellai eeya vaakkinaal thinai thanaiyum aavathu illai sollal aava keedpavee anaiththu ulakum aaya ninnai aimpulankaL kaaNkilaa enaiththu enaiththu athu eppuRaththu athu enthai paatham eythavee பொ-ரை: நின்னை மனம் நினைத்து, அறிவதற்காக மேற்பட்டுச் செல்லும். அது செல்லும் அளவைப் பொருந்துவதற்கு, சொல்லினால் சிறிதும் கூடவில்லை. சொல்லக்கூடியன எல்லாம் காதினாற் கேட்கப் பட்டவையே. எல்லா உலகுமான உன்னை இந்த உடம்பின் கண் உள்ள ஐம்பொறி அறிவுகள் அறியமாட்டா. எமது தந்தையாகிய நினது திருவடியை அடைய அது எவ்வளவினதோ, எவ்விடத்துள்ளதோ தெரிகிலேன் . No one can describe Thee as within the possible bounds of human thought. It is only what is commonly heard of about Thee, that is brought to our notice. The five senses cannot realize Thee that art verily manifest as the entire cosmos. Hence of what kind,oh of what kind and in what locale, are Thy Feet, that I seek to reach, my Father? கு-ரை: தினை - சிற்றளவிற்கு அறிகுறி . உலகினில் இறைவன் கலந்து இருந்தாலும் அவன் தன்னைக் காட்டினாலொழிய, அறியக் கூடாமையின், 'ஐம்புலன்கள் காண்கிலா' என்றார். அசுத்த மாயையும் சுத்த மாயையும் கடந்து நின்றமையால், 'எனைத்தெனைத்து' என்றார் போலும். 77. எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ் வஞ்சனேற் குய்த லாவ துன்க ணன்றி மற்றொ ருண்மை யின்மையிற் பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் கீத லாது நின்க ணொன்றும் வண்ண மில்லை யீசனே எய்தல் ஆவது என்று நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன்கண் அன்றி, மற்று ஒர் உண்மை இன்மையின் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு ஈது அலாது, நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ; ஈசனே ! eythal aavathu enRu ninnai empiraan ivvanjsaneeRku uythal aavathu unkaN anRi maRRu or uNmai inmaiyin paithal aavathu enRu paathukaaththu irangku paaviyeeRku iithu alaathu nin kaN onRum vaNNam illai iisanee பொ-ரை: எம்பெருமானே! உன்னை அடைதல் என்பது எப்போது? இக்கள்வன் ஆகிய எனக்கு உன்னிடமின்றி உய்யும் வழிக்கு வேறொரு மெய்ம்மை இல்லாமையால் ஆண்டவனே! சிறுவனென்று கருதி பாவியேனைக் காப்பாற்றி, இரங்கி அருளுக! நீ இரங்கி அருள்கின்ற இச்செயலன்றி உன்பால் வந்து ஒன்றாகும் வழி வேறில்லை. For this wily me, there is no redemption save through Thee. Hence, when shall I reach Thee, Oh my Chief? Pray protect me there is no other way for me, this sinner, to merge with Thee. கு-ரை: பைதல் = குழந்தை, சிறுவன். ஒன்றும் வண்ணம் = ஒன்று சேரும் விதம். 78. ஈச னேநீ யல்ல தில்லை யிங்கு மங்கு மென்பதும் பேசி னேனொர் பேத மின்மை பேதை யேனெ னெம்பிரா னீச னேனை யாண்டு கொண்ட நின்ம லாவொர் நின்னலாற் றேச னேயொர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் , பேசினேன் - ஒர்பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் ! நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா! ஒர் நின் அலால், தேசனே! ஒர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே iisanee nii allathu illai ingkum angkum enpathum peesineen oru peetham inmai peethaiyeen en empiraan niisaneenai aaNdu koNda ninmalaa oru ninnalaal theesanee oru theevar uNmai sinthiyaathu sinthaiyee. பொ-ரை: எமது தலைவனே! ஆண்டவனே! இகத்திலும் பரத்திலும் உன்னையன்றி யாதும் இல்லையென்பதும், நீ வேறுபாடின்றி யாண்டும் கலந்துள்ளாய் என்பதும் அறிவில்லாத யான் எடுத்துரைத்தேன். உரைத்தலாற் பயன் என்ன? புலையனேனை ஆட்கொண்ட மாசற்றவனே! ஒளியானவனே ! ஒப்பற்ற உன்னை அல்லாமல் பிறிதொரு கடவுள் உண்டென்பதை என் உள்ளம் நினையாது. Lord, although I am an ignorant one, I have been talking thus: "There is nothing here or anywhere else but Thee, and that all life is merged in Thee, undifferentiated. Thou, free of all affliction, took me under Thee". Lord effulgence, my mind does not think of any other god than Thee. Note: The nature of god and the state of the soul in liberation. God is all pervasive and the soul enjoys bliss in the state of release. 79. சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரி லைம்பு லன்களான் முந்தை யான கால நின்னை யெய்தி டாத மூர்க்கனேன் வெந்தை யாவி ழுந்தி லேனெ னுள்ளம் வெள்கி விண்டிலே னெந்தை யாய நின்னை யின்ன மெய்த லுற்றி ருப்பனே சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச், சீர் இல் ஐம் புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்; எந்தை ஆய நின்னை , இன்னம் எய்தல் உற்று, இருப்பேனே. sinthai seykai keeLvi vaakku siiril aimpulankaLaal munthai aana kaalam ninnai eythidaatha muurkkaneen venthu aiyaa vizunthileen en uLLam veLki viNdileen enthai aaya ninnai innam eythal uRRu iruppanee பொ-ரை: நீ என்னை ஆட்கொண்ட முன்நாளில் மனம், வாக்கு, செயல், உலகக் கேள்வி, நயமில்லாத ஐம்புலன்கள் முதலிய தடைகளாலே உன்னை அடைந்திடாத மூடன் யான். உடனேயே உடல் தீயிற் பொருந்தப் பெற்று இறந்து வீழ்ந்தேனில்லை. மனம் நாணி, நாண மிகுதியால் இறந்தேனில்லை. எங்கள் அப்பனாகிய உன்னை இன்னும் கூட வந்தடையாது, அடையக் கருதி இங்கு இருப்பேன் ஆயினேன் (இது எவ்வளவு பரிதாபம்!) I, this wicked me, in previous times, did not get to Thee by thought, word, deed and discourse, due to the wayward nature of the five senses. For this lapse, I did not burn myself out, nor in shame break down (as in atonement). Nevertheless, I shall wait, longing to get at Thee, my Father! கு-ரை: சிந்தை முதலியன மாயா காரியங்களாய்த் தடை விளைத்தன என்பதே கருத்து. அவை கருவியாகாமை தெளிக. அடிகளின் தீவிரப் பக்குவம் குறிப்பது, இச்செய்யுள். 80. இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னதாட் கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க லந்து போகவும் நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த துண்ட தாயினும் விருப்பு முண்டு நின்க ணென்க ணென்ப தென்ன விச்சையே இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு; யானும் உண்டு இருந்தது, உண்டது-ஆயினும், விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது, என்ன விச்சையே! iruppu nenjsa vanjsaneenai aaNdu koNda ninnathaaL karuppu maddu vaay maduththu enai kalanthu pookavum neruppum uNdu yaanum uNdu irunthathu uNdathu aayinum viruppum uNdu ninkaN enkaN enpathu enna vissaiyee பொ-ரை: இரும்பு போலக் கடுமையான மனமுடைய கள்வனேனை ஆட்கொண்டருளினாய். நின் திருவடியில் எழும் கரும்புத்தேன் என்னை விழுங்கி உடன் கலந்து செல்லவும் (உடல் விடுவதற்கு) நெருப்பிருந்தது. அடியேனும் உணவு கொண்டு இங்கு இருந்தது உண்டு; எனினும் உடலை நீத்து உன்னை அடையாத நான் உன் மீது அன்பும் உண்டென்று கூறுவது என் அறியாமையே. I had tasted Thy sugary Feet that absorbed me, this wily one of iron-like heart. After this tasting and Thy departure, I stay here in anguish. I did not burn myself out though there was fire (on hand). I continue eating and living here, with no other care. It is indeed ignorance for me to declare that I have yet any desire for merger with Thee. கு-ரை: உடம்பு நிலைத்தற்குக் காரணமாய உலகப்பற்றிருப்பதாகக் கருதித் தம்மை 'வஞ்சனேன் ' என்றார். கருப்புமட்டு = கருப்பஞ்சாறு. அது வாய் மடுத்தமை திருவண்டப்பகுதியில் காண்க. THIRUCHCHITRAMBALAM 5.9 ஆனந்த பரவசம் 5.9. ANANDA PARAVASAM கலிநிலைத்துறை Ecstatic Bliss திருச்சிற்றம்பலம் 81. விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன் றாள்சேர்ந்தா ரச்சத் தாலே யாழ்ந்திடு கின்றே னாரூரெம் பிச்சைத் தேவா வென்னான் செய்கேன் பேசாயே விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய் ; இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார் ; அச்சத்தாலே, ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம் பிச்சைத்தேவா, என் நான் செய்கேன்? பேசாயே. vissu keedu poykku aakaathu enRu, ingku enai vaiththaay issaikku aanaar ellaarum vanthu un thaaL seernthaar assaththaalee aaznthidu kinReen aaruur em pissai theevaa en naan seykeen peesaayee பொ-ரை: பொய் என்னும் வித்து இவ்வுலகில் கெட்டொழிதல் கூடாது என்பதற்காக , பொய்யன் ஆகிய என்னை இவ்வுலகில் இருத்தினாய். உன் விருப்பத்துக்கு ஒத்தவர்கள் போய் உன் திருவடிப்பேறு பெற்றார்கள். திருவாரூரில் வீற்றிருக்கும் எமது ஐயங்கொள் பிரானே! நான் பயத்தால் அழுந்துகின்றேன். நான் உய்வதற்கு யாது செய்வேன், கூறி அருள்வாயாக! Lord! Thou made me stay back here, casting me away as a damaged seed that cannot sprout, while all others who pleased Thee, moved up and reached Thy Feet. I am now sinking down in fear, Oh mendicant Lord of Thiruvaaroor. Kindly speak out, what is it that I can do here, now. கு-ரை: ஆரூராகிய இதயத்திலுறையும் பிச்சைத் தேவா, எனக்கு அருட் பிச்சைபோடு என்று குறித்தவாறு காண்க. விச்சு=வித்து, பொய்க்கு= பொய்யின் - உருபு மயக்கம் 82. பேசப் பட்டே னின்னடி யாரிற் றிருநீறே பூசப் பட்டேன் பூதல ராலுன் னடியானென் றேசப் பட்டே னினிப்படு கின்ற தமையாதால் ஆசைப் பட்டே னாட்பட் டேனுன் னடியேனே பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமை யாதால் ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே. peesappaddeen nin adiyaaril thiru neeRee puusappaddeen puuthalaraal un adiyaan enRu eesappaddeen inippadukinRathu amaiyaa thaal aasaippaddeen aadpaddeen un adiyeenee பொ-ரை: உனது அடியாருள் ஒருவனாகப் பெரியோரால் எடுத்துரைக்கப் பெற்றேன். திருநீறு பூசுதலைப் பொருந்தினேன். உலகரால் என் அமைச்சு நிலைமாறி உன் அடியான் என்று இகழப்பட்டேன். இனி இவ்வுலகில் பொருந்தி இருத்தல் கூடாது என்று வீடு அடைய ஆசைப்பட்டேன். உனக்கு அடிமையானேன். உனக்கே ஆட்பட்டவன் ஆனேன். உன் அடியேனை நீ காத்திட வேண்டும். I was earlier counted as one of Thy devotees. I then got smeared all over with holy white ash. And, I was jeered at by worldly folks as Thy slave. I cannot bear any more of these (Oh Lord!). I Thy vassal sincerely yearn for Thee, yearn to be in servitude under Thee: கு-ரை: பெரியோர் பேச, உலகம் ஏசினமை கூறினர். படுகின்றது = உலகிற் பொருந்துகின்றது. அமையாது=பொருந்தாது. ஆல் - அசை 83. அடியே னல்லேன் கொல்லோ தானெனை யாட்கொண் டிலைகொல்லோ அடியா ரானா ரெல்லாரும் வந்துன் றாள் சேர்ந்தார் செடிசே ருடல மிதுநீக்க மாட்டே னெங்கள் சிவலோகா கடியே னுன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே அடியேன் அல்லேன்-கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை-கொல்லோ? அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார்; செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா ! கடியேன் உன்னைக், கண் ஆரக் காணும் ஆறு, காணேனே. adiyeen alleen kolloo thaan enai aadkoNdilai kolloo adiyaar aanaar ellaarum vanthu un thaaL seernthaar sedi seer udalam ithu niikka maaddeen engaL sivalookaa kadiyeen unnai kaNNaara kaaNumaaRu kaaNeenee பொ-ரை: நான் உன் அடியான் அல்லனோ? நீ, தானே வந்து என்னை ஆட்கொள்ள வில்லையோ? உன் அடியார்கள் யாவரும் உன் திருவடியைச் சேர்ந்து விட்டார்களே? சிவலோக முதல்வனே! தீவினை பொருந்திய இவ்வுடலை நீக்க மாட்டேன்; கடினமான நெஞ்சுடையேன்; உன்னை நேரே கண் குளிரப் பார்க்கும் வழியை அறிய மாட்டேன். Lord, am I not Thy devotee? Didst thou not take me in as Thy vassal? Lord of Civa Loka, all those that became Thy devotees went over to Thee and reached Thy Feet. But, I am unable to shake off this foul physical frame of mine. I, of mind so hard, do not find the right way to see Thee to my eye's delight. Note: St.Ramalingar in his Arutpa echoes similar thoughts in his verse "வாழையடி வாழையென.. .. யானொருவனல்லனோ". St. Ramalingar followed strictly the foot steps of Saint Maanikkavaachakar whom he took as his preceptor par excellence. கு-ரை: பிற அடியாரடைந்த வீட்டினைத் தலைப்படாமையால் அடிகள், தம்மை அவன் ஆண்டமையும், தாம் அடிமையானதும் இல்லையோ என்று ஐயுறுவார் போன்றனர். செடி= பாவம், குணமின்மை, தீவினை. கடியேன் - கடுமை யுடையேன். காணும் ஆறு= காணும் வழி. 84. காணு மாறு காணே னுன்னை யந்நாட் கண்டேனும் பாணே பேசி யென்றன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே யாரமுதே யத்தா செத்தே போயினே னேணாணில்லா நாயினே னென்கொண் டெழுகே னெம்மானே காணும் ஆறு காணேன்; உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி, என்-தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ! ஆணே பெண்ணே, ஆர் அமுதே, அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன், என்கொண்டு எழுகேன், எம்மானே? kaaNumaaru kaaNeen unnai annaaL kaNdeenum paaNee peesi en thannai paduththathu enna paranjsoothi aaNee peNNee aar amuthee aththaa seththee pooyineen eeN naaN illaa naayineen enkoNdu ezukeen emmaanee பொ-ரை: எங்கள் பெரியோனே! அறியும் வழியாக உன்னை அறிய மாட்டேன். என்னை ஆட்கொண்ட நாளில் உன்னை நான் காணப் பெற்றும் பாழானவற்றைப் பேச என்னை ஆட்படுத்தியது எதுவோ? மேலான ஒளிப் பிழம்பே! ஆணாகவும் பெண்ணாகவுமான தெவிட்டாத அமுதமே! அப்பனே ! நான் பயனற்று ஒழிந்தேன். வலியும் மானமுமில்லா நாயனையேன் எதனைத் துணையாகக் கொண்டு மேற்செல்வேன்? I do not find the way to see Thee (now, Oh Lord!), Even when I saw Thee earlier (in Thirup-Perun-Thurai), how come thou spoke sweet words to me then and let me stay back in this world? Light effulgence, Thou male, female, rare ambrosia, Oh Sire, I am virtually dead and gone now. How shall I, this weak shameless cur, rise up my Lord? Note: Our Saint felt much pained at having been left out, when all the other devotees were taken up by the Lord in Thirup-Perun-Thurai to get absorbed in Him. This soulful refrain is seen in many decads of the Saint. Confer, the lines "கோலமார் தரு பொதுவினில் வருகென". The good Lord, however consoled him with sweet diplomatic words , which was a matter of solace for the saint- vide line 12 கீர்த்தி திருஅகவல். கு-ரை: பாண்= பாழ் . பேசி பேச, பேசி யொழிய , ஏண் =வலி 85. மானேர் நோக்கி யுடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே தேனே யமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர் குறுகப் போனா ரடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. மான்நேர் நோக்கி உடையாள் பங்கா, மறைஈறு அறியா மறையோனே தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும் கோனே, சிறிதே கொடுமை பறைந்தேன்; சிவ மாநகர் குறுகப் போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே. maanneer nookki udaiyaaL pangkaa maRai iiRu aRiyaa maRaiyoonee theenee amuthee sinthaikku ariyaay siRiyeen pizai poRukkum koonee siRithee kodumai paRaintheen siva maanakar kuRuka poonaar adiyaar yaanum pooyyum puRamee poonthoomee பொ-ரை: மான் போலும் விழியுடைய, எம்மை உடையாளாகிய அருட்சத்தி பாகனே ! வேத முடிவும், அறியவொண்ணா இரகசியப் பொருளாவானே! தேன் போல இனியவனே! அமுதம் போல் சாவா மருந்தே! மனத்தால் கிட்டுவதற்கு அரியவனே! சிறுமை உடையேனது குற்றத்தை நின் பெருமையால் பொறுத்தருளும் அரசனே! அடியேன் ஒரு சிறிது கொடியவற்றைக் கூறினேன். அடியார் சிவபெரும்-புவனமடையச் சென்றனர். அடியேனும் பொய்யும் அவர்க்குப் புறம்பாக உலகில் தங்கினோம். Consort of Goddess Uma of deer like eyes, Lord that is beyond scriptures,Lord that is like honey and elixir, Lord that cannot be comprehended by us, Oh our Chief that condones the faults of this little me, I spoke somewhat harsh words. Hence, while Thy other devotees went over to the exalted city of Civa Loka, I and my load of falsehood stay here behind. கு-ரை: அடிகள் 'சிறிது கொடுமை பறைந்தது' யாதெனத் தெரியவில்லை. அடியார் பலரும் சிவபுரம் புகுதலை விரும்பத் தாம் உலகில் சின்னாளிருக்க இசைந்தமையை அவ்வாறு கூறி யிருத்தல் கூடும். 'ஏலத்தன்னை ஈங்கொழித் தருளித்' தில்லைக்கு வரும்படி இறைவன் பணித்ததை ஒப்புக் கொண்டது, உடனே சிவபுரம் சேர இயலாமைக்கு ஏதுவாயிற்று. நேர்மைக்கு மாறு, கொடுமை; நேரே சிவபுரம் போவதற்கு மாறாக உலகில் இருத்தல் கொடுமையாயிற்றுப் போலும். 86. புறமே போந்தோம் பொய்யும் யானு மெய்யன்பு பெறவே வல்லே னல்லா வண்ணம் பெற்றேன்யா னறவே நின்னைச் சேர்ந்த வடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவன் நின்றாள் சேர்ந்தாரே புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் ; சிறவே செய்து வழிவந்து, சிவனே ! நின் தாள் சேர்ந்தாரே. puRamee poonthoom poyyum yaanum mey anpu peRavee valleen allaa vaNNam peRReen yaan aRavee ninnai seerntha adiyaar maRRu onRu aRiyaathaar siRavee seythu vazivanthu sivanee ninthaaL sernthaaree பொ-ரை: நிலையா உடம்பும் யானும் நினக்குப் புறம்பே போயினோம். உண்மையன்பு பெறுதற்கே உரியன் அல்லா முறைமையை யான் அடைந்தேன். முற்றிலும் உன்னை அடைந்த அன்பர் உன்னைத் தவிர வேறொன்றையும் கருத்தில் கொள்ளாமல், சிறப்பாக வீட்டுக்குரியதைச் செய்து, செந்நெறியில் சென்று, சிவபெருமானே உன்னடி அடைந்தனர். Falsehood and I stayed out and stayed away. I became unworthy of true love. Thy pure devotees, knew not falsehood, clung to Thee and through deeds of glory reached Thy Feet, Oh! Lord Civa. கு-ரை: உடலிருத்தலைக் கருதாத அன்பர் வீட்டிற்குரியவாறே செய்வன செய்து அதனைப் பெற்றார் என்பது குறிப்பு. உடலையும் கடவுளையும் கருதாது, கடவுளையே கருதி மற்றவற்றை ஒழித்தனர் என்பார் 'அறவே நின்னைச் சார்ந்த' என்றார். சிறவு= சிறப்பு 87. தாரா யுடையா யடியேற் குன்றா ளிணையன்பு பேரா வுலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யா னூரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங் குன்றா ளிணையன்புக் காரா யடியே னயலே மயல் கொண் டழுகேனே தாராய், உடையாய் ! அடியேற்கு உன் தாள்-இணை அன்பு: பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன்யான் ; ஊர் ஆ மிலைக்கக், குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள்-இணை அன்புக்கு ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு அழுகேனே. thaaraay udaiyaay adiyeeRku un thaaL iNai anpu peeraa ulakam pukkaar adiyaar puRamee poontheen yaan uur aa milaikka kuruddu aa milaiththu aangku un thaaL iNai anpukku aaraa adiyeen ayalee mayal koNdu azukeenee. பொ-ரை: என்னை உடையவனே! அடியேனுக்கு உனது இரண்டு திருவடிகளிலும் செய்ய வேண்டிய அன்பைத் தருவாயாக! மீளாத உலகமாகிய வீட்டினுள் உன் மெய்யடியார் போய்ப் புகுந்தனர். யான் வெளியே போய் ஒழிந்தேன். ஊரிலுள்ள நல்ல பசு நற்புலங்களில் புல் மேய்ந்திட அதனோடு சென்ற குருட்டுப் பசுவும் மேய்ந்தது. அடியார்கள் உன்னை அடைந்துவிட, அன்புக் கண் இல்லானாகிய யான், இனி யார் பக்கம் எப்படிச் சென்று பயனடைதல் கூடும்? Oh my Chief, pray grant me the grace of union with Thy Feet. Thy devotees entered 'the world of No Return', whereas I had to step back and await my turn to unite with Thee. Take me Oh Lord on to the grace of Thy Feet. Just as a blind cow trails behind and follows after the other bellowing cows of the village, I follow Thee and long to serve Thee and cry out in desperation. கு-ரை: ஊர்ப் பசுவொடு சென்ற குருட்டுப் பசு மேய்ந்தது. உன் மெய்யடியாரோ, வீடு சென்றனர். அன்புக்கண் இலனாகிய நான் அவரோடு சேர்ந்து போதற்கு இடமில்லை. இனி யார் பக்கமாக , எப்படி நான் சென்று பயனடைதல் கூடும் என்றார். மிலைத்தல் = மேற்கொள்ளுதல் - ஈண்டுப் புல்லினை மேற்கொண்டு தின்றலாம். 'போரா' என்ற பாடமும் உண்டு, அதனைப் போதா என்பதன் மரூஉவாகக் கொள்வர். 88. அழுகே னின்பா லன்பா மனமா யழல் சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தே னென்கொண் டுன்னைப் பணிகேனே அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே, உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதே பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே? azukeen ninpaal anpaam manamaay azal seerntha mezukee annaar minnaar ponnaar kazal kaNdu thozuthee unnai thodarnthaa roodum thodaraathee pazuthee piRantheen en koNdu unnai paNikeenee. பொ-ரை: உன்னிடத்தே அன்பு மயமான உள்ளத்தோடு அழுது தொழ மாட்டேன். தீயிடைப்பட்ட மெழுகுபோன்ற உள்ளத்தராய் அடியார், மின்னொளி போலும் அழகிய நின் திருவடிகளைக் கண்டு வணங்கிப் பின் தொடர்ந்தனர். அவரோடு தொடர்ந்து செல்லாது வீணே பிறவியெடுத்த யான் இனி எத்துணை கொண்டு உன்னை வணங்குவேன்? Not following those that saw Thy golden Feet melting in dedication, worshipping Thee, and thus merged with Thee, I merely stand here and weep. I am bom in vain. In what manner shall I pay obeisance to Thee? கு-ரை: பழுது= குற்றம்; எனக்கொண்டு = என்ன முறைமையைக் கொண்டு, “பணிகேன்" என்றது "பணிந்து இரக்கேன்" என்னும் பொருளாய் நின்றது. 89. பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய வடியார்க்கு னணியார் பாதங் கொடுத்தி யதுவு மரிதென்றாற் றிணியார் மூங்கி லனையேன் வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. பணிவார் பிணி தீர்த்தருளிப், பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி: அதுவும் அரிது என்றால் , திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய்தீர் மெய்யானே! paNivaar piNi thiirththaruLi pazaiya adiyaarkku un aNiyaar paatham koduththi athuvum arithu enRaal thiNiyaar muungkil anaiyeen vinaiyai podi aakki thaNiyaar paatham vanthu ollai thaaraay poythiir meyyaanee பொ-ரை: பொய்ப்பற்றை ஒழிக்கின்ற மெய்ப்பொருள் ஆனவனே! வழிபடுவாரது நோயை அகற்றி அருளி, பழமை மிக்க அடியாருக்கு அழகு நிறை நின் திருவடிகளை அளித்து அருள்வாய். எனக்கு அது செய்தல் அரிதாயின், வலிய மூங்கிலைப் போல உருக்கமற்ற என் வினையை நாசமாக்கிப் பின், நின் தண்ணருள் பாதங்களை விரைவாக வலிய நீயே வந்து தர வேண்டும். Thou grantest Thy sacred Feet to Thy long time devotees, removing all their ills. Should that in my case be not possible, Oh our true Lord that destroys all falsehood, pray come over soon to me, crushing the sins of me, this hard bamboo-like me, placing Thy Feet on my head. கு-ரை: பன்னாட் பயின்று அன்பு செலுத்துதலில் தேர்ந்தவரென்பார், 'பழைய அடியார்' என்றார். திணி= திண்மையுடையது. தணி = தண்மையுடையது. உருக்கமின்மையின், 'திணி' என்றார். பிறவி வெப்பத்திற்கு நிழலாதலின், 'தணி' என்றார். ஒல்லை = விரைவு. 'பொய்தீர்' என்பதற்கு இயற்கையாகவே, பொய்யில் தீர்ந்த என்றும் பொருள் கொள்ளலாம். மனக்கோட்டமும் உருக்க மின்மையும் குறிப்பார், 'மூங்கில்' என்றார். பொடி= சாம்பல், மூங்கில், உருகாது சாம்பரேயாகும். 90. யானே பொய்யென் னெஞ்சும் பொய்யென் னன்பும் பொய் யானால் வினையே னழுதா லுன்னைப் பெறலாமே தேனே யமுதே கரும்பின் றெளிவே தித்திக்கு மானே யருளா யடியே னுனைவந் துறுமாறே யானே பொய்; என் நெஞ்சும் பொய் ; என் அன்பும் பொய் ; ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே ? தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனைவந்து உறுமாறே yaanee poy en nenjsum poy en anpum poy aanaal vinaiyeen azuthaal unnai peRalaamee theenee amuthee karumpin theLivee thiththikkum maanee aruLaay adiyeen unai vanthu uRumaaRee. பொ-ரை: அடியார்களுள் யான் ஒருவனே பொய் மயமானவன். என் மனமும் வஞ்சகமானதே. என் அன்பும் களங்கமுற்றது. ஆனால் தீவினையேன் பிழை உணர்ந்து வருந்தி அழுவேனாயின் உன்னை அடையலாமே. தேனே! அமுதே! கரும்புச் சாறே! இத்துணை இனிமை பயக்கும் பெரியோனே! அடியேன் உனைக் கலக்குமாறு அருள் புரிவாயாக! False am I, false my heart, false too is my love, can I, this sinner attain Thee by weeping (in intense devotion)? Oh Lord, grant that I come over to Thee. Oh come Great One, much like sugarcane juice, honey and sweet elixir. கு-ரை: மான் = மகான் - பெரியோன்; தேன், அமுது, கருப்பஞ்சாறு, இவைகள் இச்சை, அறிவு, செயல் இவைகளுக்கு இன்பம் தருவதென்ற குறிப்பு. THIRUCHCHITRAMBALAM. 5.10 . ஆனந்தாதீதம் 5.10. AANANTHAA THEETHAM எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Beyond the state of Bliss (Psalms of Exquisite Glee) திருச்சிற்றம்பலம் 91. மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர்கொ டாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை யன்பருன் மெய்ம்மை மேவினா ரீறி லாதநீ யெளியை யாகிவந் தொளிசெய் மானுட மாக நோக்கியுங் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே. மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின்மலர் கொள் தாள்-இணை வேறு இலாப் பதப் பரிசுபெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன்மெய்ம்மை மேவினார் ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானுடம் ஆக, நோக்கியும் கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன்; கடையன் ஆயினேன் பட்டகீழ்மையே. maaRu ilaatha maakkaruNai veLLamee vanthu munthinin malarkoL thaaL iNai veeRu ilaa pathapparisu peRRanin meymmai anpar un meymmai meevinaar iiRu ilaatha nii eLiyai aakivanthu oLisey maanudam aaka nookkiyum kiiRu ilaatha nenjsu udaiyan aayineen kadaiyan aayineen padda kiizmaiyee பொ-ரை: என்றும் மாற்றமில்லாத பேரருட் கடலே! எனக்கு முன்பாகவே நின்பாற் சென்று பூவின் தன்மையைக் கொண்ட நினது திருவடி இரண்டையும் விட்டு நீங்காத நிலையாகிய சிறப்பைப் பெற்ற நின் உண்மை அன்பர்கள் உன் மெய்த்தன்மை அடைந்தார்கள் . முடிவில்லாத பெருந்தகையாகிய நீ எளிவந்தருளி அருளொளி வீசும் மனித வடிவத்தோடு திருக்கண் பார்வை நல்கியும், பிளவு பட்டுருகாத திண்ணிய மனமுடைய நாயினேன், கீழ்ப்பட்டவன் ஆனேன். நான் பட்ட இழிவை என்ன என்பது ? Oh, changeless flood of grace, all Thy true devotees who were blessed by Thee to join Thy flowery Feet, reached the reality of Thy state. (However) although Thou the infinite one, camest down here in Thy effulgent human form, and cast sight on us all, I this lowly cur of unbent heart, suffered grief and got lost (in the wilderness). கு-ரை: பிறகடல்கள் ஊழிமுடிவில் வற்றினாலும், இறையருள், மாற்றமிலாதது. 'மாறு' என்பதற்குக் கைம்மாறு எனப் பொருள் கொண்டு 'பயன் கருதாத' என்று பொருள் உரைப்பினும் அமையும் . மலர்= மலர்த்தன்மை அல்லது பூக்கள். பரிசு= சிறப்பு, மெய்ம்மை= நிலையான தன்மை, பேராவியற்கை. இறைவன் குருவாய் வந்ததையே 'மானுடமாக' என்றார். 92. மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெனைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ண மென்றலா லரியை யென்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை யன்பருன் மெய்ம்மை மேவினார் பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே மை இலங்கு நல் கண்ணி பங்கனே ! வந்து எனைப் பணிகொண்டபின், மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருது கின்றிலேன்; மெய் இலங்கு வெள்-நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் ; பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு. நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே? mai ilangku nal kaNNi pangkanee vanthu enai paNi koNda pin maza kai ilangku pon kiNNam enRu alaal ariyai enRu unai karuthu kinRileen mey ilangku veNNiiRRu meeniyaay meymmai anpar un meymmai meevinaar poy yilangku enai pukuthaviddu nii poovathoo solaay poruththam aavathee பொ-ரை: தீட்டிய மை விளங்கும் அழகிய கண்ணுடையாள் பாகனே! நீ குருவாய் எழுந்தருளி வந்து என்னைத் தொண்டனாக்கினாய். மெல்லிய கையில் விளங்கும் பொன்வட்டில் போல உன்னை எளியாய் என்று கருதினேன். எய்துதற்கரியவன் என்று எண்ணவில்லை. திருமேனியில் விளங்கும் வெண்மையான திருநீற்றின் ஒளியுடையாய்! உன் மெய்யன்பர்கள் உண்மை நிலையை அடைந்தனர். பொய்யனான என்னை இந்நிலவுலகில் கைவிட்டுப் போதல் பொருத்தமா என்று சொல்லியருளுக! Consort of Goddess Uma of glittering eyes, I do not consider Thee as anything more than a golden cup in a child's hand, ever since Thou took me in servitude, not realizing what a great rarity Thou art! Thou in a physical frame shining in bright ash, unto Thee, all true devotees came and merged with Thee. Does it then befit Thee to depart, steeping me here in falsehood and disarray, pray tell me! கு-ரை: உன்னைத் தொடர்ந்து பற்றாது மெத்தனமாய் இருந்தேனென்பார் 'எளியை என்றெண்ணினேன்' என்றார். இறைவன் பொன்மேனி உடையனாய் அருள் அமுதக்காட்சி நல்கினமையின், இனிய பால் உணவு வைத்த பொன் கிண்ணத்திற்கு அவனை உவமித்தார், இறுகப்பிடிக்க இயலாமையின் 'மழக்கை' என்றார். ஆட்கொண்டபின் பொய்யைத் தீர்த்துச் சேர்த்துக் கொள்ளுதல் பொருத்தமாம் அன்றித் தள்ளிவிடுதல் தக்கதன்றெனக் குறித்தனர். 93. பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன் போத வென்றெனைப் புரிந்து நோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே யரத்த மேனியா யருள்செ யன்பரு நீயு மங்கெழுந் தருளி யிங்கெனை யிருத்தி னாய்முறை யோவெ னெம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; ' 'போத' என்று எனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே, அரத்த மேனியாய், அருள் செய் அன்பரும், நீயும் அங்கு எழுந்தருளி, இங்கு எனை இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே? poruththam inmaiyeen poymmai uNmaiyeen pootha enRu enai purinthu nookkavum varuththam inmaiyeen vanjsam uNmaiyeen maaNdileen malar kamala paathanee araththa meeniyaay aruLsey anparum niiyum angku ezuntharuLi ingku enai iruththinaay muRaiyoo eň empiraan vampaneen vinaikku iRuthi illaiyee பொ-ரை: உன் திருவருளைப் பெறுதற்குத் தகுதியில்லாதேன். நிலையாதவற்றில் பற்றுடையேன். அத்தகைய என்னை வருகவென்று அழைத்துத் திருவருட் பார்வை நல்கவும் உன்னொடு செல்லுதற்குரிய கவலையில்லாதிருந்தேன். உலகில் இருக்கும் கள்ள எண்ணமுடையேன், உன்னை அடையும் பொருட்டு இறந்தேனில்லை . தாமரை மலர் போன்று திருவடி உடையாய் ! சிவந்த திரு வடிவமுடையாய்! அருள் செய்யப் பெற்ற உன் அடியாரும் நீயும் அவ்வுலகில் எழுந்தருளி இவ்வுலகில் என்னை அமர்த்தி விட்டாய்! இது நியாயமாகுமோ என் தலைவனே! வீணான எனது ஊழ்வினைக்கு ஒரு முடிவு காணவில்லையே? I am not fit for Thy grace I have only falsehood in me. I still possess wickedness even after Thy kindly glance and my efforts to reach Thee. Yet, I am not dead and gone. Pray , show me Thy grace, Oh Lord of lotus Feet and rosy hue. Thou and Thy devotees moved over high above, making me stand back here, Oh Lord! Is this fair, is there no end at all to my dark days and evil deeds? Note: The Saint's repeated wailings over having been left behind, while his erstwhile companions went up with the Lord, is a heart-rending spectacle indeed. கு-ரை: போத = வருகை, புரிந்து = விரும்பி. அரத்தம் = இரத்தம், சிவப்பு, செவ்வரத்தமலர்; அருள்செய் என்பதற்கு அருள்வழியொழுகும் என்னலாம் . வினைப்போகம் முற்றினால், உடல் நழுவுமாதலின் அங்ஙனம் கூறினார். 94. இல்லை நின்கழற் கன்ப தென்கணே யேல மேலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினா யெல்லை யில்லைநின் கருணை யெம்பிரா னேது கொண்டுநா னேது செய்யினும் வல்லை யேயெனக் கின்னு முன்கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே இல்லை நின் கழற்கு அன்பு-அது,என்-கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே! கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் ; எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும், மறு இல் வானனே? illai nin kazaRku anpu athu en kaNee eelam eelum naRkuzali pangkanee kallai menkani aakkum vissai koNdu ennai ninkazaRku anpan aakkinaay ellai illai nin karuNai empiraan eethu koNdu naan eethu seyyinum vallaiyee enakku innum unkazal kaaddi miidkavum maRuvil vananee பொ-ரை: குற்றமற்ற சிதாகாசத்தில் உள்ளவனே! மயிர்ச்சாந்தணிந்த அழகிய கூந்தலாள் பாகனே! உன் திருவடிக்குச் சிறப்பாய அன்பு என்னிடம் இல்லை. கல்லை மெல்லிய பழமாக்கும் வித்தையைக் கைக்கொண்டு என் கல் நெஞ்சம் நெகிழ்வித்து உன் திருவடிக்கு என்னை அன்பனாக்கினை. எங்கள் பெருமானே! நினது திருவருளுக்கோர் அளவில்லை. நான் எதனைக் கருவியாகக் கொண்டு எத்தீயசெயல் செய்தாலும், மீட்டும் உன் திருவடிகளை எனக்குக் காட்டி, மீள ஆட்கொள்ளும் ஆற்றலுடையவன் அல்லவா? Consort of the Goddess with scented locks! Alas, there exists in me no love for Thy bejewelled Feet. And yet, Thou made me a devotee of Thy Feet, using a startling technique, a technique much like the one involving the transformation of stone into soft pulp. Limitless indeed is Thy grace, Oh Lord. Hence, whatever I may do and that by whatsoever means, Thou canst redeem me yet again, granting the vision of Thy holy Feet form once more. கு-ரை: குற்றமற்ற வானம், சிதாகாசம், வானம், என்பதற்கு வானன் போலி. அன்பது= சிறப்பாய அன்பு. ஏலம்= மயிர்ச் சாந்து, ஏலும் = பொருந்தும். விச்சை= வித்தை, ஏதுகொண்டு= இவ்வுடல் கொண்டு, எதுசெய்யினும், உலகப்பற்றில் ஈடுபட்டு யாது செய்தாலும். 95. வான நாடரு மறியொ ணாதநீ மறையி லீறுமுன் றொடரொ ணாதநீ யேனை நாடருந் தெரியொ ணாதநீ யென்னை யின்னிதா யாண்டு கொண்டவா வூனை நாடக மாடு வித்தவா வுருகி நானுனைப் பருக வைத்தவா ஞான நாடக மாடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே. வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன்தொடர் ஒணாத நீ, ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா, ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே vaana naadarum aRi oNaatha nii maRaiyil iiRum mun thodar oNaatha nii eenai naadarum therioNaatha nii ennai innithaay aaNdu koNdavaa uunai naadakam aadu viththavaa uruki naan unaip paruka vaiththavaa gnana naadakam aaduviththavaa naiya vaiyaka thudaiya vissaiyee பொ-ரை: விண்ணுலகோரும் அறியக் கூடாதவன் நீ ! மந்திரங்களில் முடிவான முதுமொழியும் முன்னே தொடர்ந்து பற்ற முடியாதவன் நீயே! விண் தவிர பிறபுவனங்களில் உள்ளவரும் அறிய முடியாதவன் நீயே! அடியேனை எளிதாக வந்து ஆட்கொண்டவாறு உடம்பைப் புளகம் கொண்டு கூத்தாடச் செய்த வகையும், நான் உள்ளம் உருகி உன்னை நுகரும் படி ஏற்படுத்தியவாறும், உலகப் பற்று சிதைந்து ஒழிய ஞானக் கூத்து இயற்றுவித்தவாறும் நீயே அறிவாய்! Beyond the comprehension of the sky borne gods, not approachable even for the vedas, not known to those of any other world, art Thou. However, Thou took me easily under Thee. Thou that made my body swing and melt, letting me drink of Thee and rejoice! And made me dance the gnosis numbers, so that all my desires in this world may wither away. கு-ரை: 'மறையிலீறு' என்பதற்கு வேதாந்தம் என்றும் கூறுப. ஆடுவித்தவா= ஆடுவித்தவாறு என்று அதிசயக் குறிப்பாகக் கூறுதல். இச்சை= ஆசை, பற்று 96. விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புலைய னேனையுன் கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய வன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமர மாயி னுங்கொலார் நானு மங்ஙனே யுடைய நாதனே. விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய் ; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும் வைச்சு வாங்குவாய், வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர் நச்சுமாமரம் ஆயினும், கொலார்: நானும் அங்ஙனே உடைய நாதனே! vissu athu inRiyee, viLaivu seykuvaay viNNum maNNakam muzuthum yaavaiyum vaissu vaangkuvaay vanjsaka perum pulaiya neenai unkooyil vaayilil pissan aakkinaay periya anparukku uriyan aakkinaay thaam vaLarththathoor nassu maamaram aayinum kolaar naanum angnganee udaiya naathanee பொ-ரை: வானுலகு, நிலவுலகு இன்னம் பிற எல்லாவற்றையும் நீ வித்தின்றியே தோற்றுவித்தாய். அவற்றைக் காத்து, ஒடுக்குவாய். களங்கமுற்ற, கீழ்ப்பட்ட என்னை நின் திருக்கோயிலின் வாசலில் இருக்கும் பித்துடையனாக்கினை. பேரன்பர்க்கு அடியனாக்கினை. மக்கள் தாம் வளர்த்த மரம் எட்டி மரமானாலும் அதனை வெட்டி எறிய மாட்டார்கள். அவ்வாறே யானும் ஆவேன். என்னை அடிமைகொண்ட தலைவனே! ஆதலால் என்னை அகற்றி விடாதே ! Thou that canst raise crops without using any seed! Thou that doest create, protect and absorb the sky, the earth and all else. Thou that made this wily wicked me so mad! Thou lined me up along with the great devotees in Thy temple court. No breeder ever doth fell his tree, even if it turns out to be a poisonous one. I too fit well this simile, Oh my Lord, my Master! கு-ரை: மாயையினின்று உலகம் தோன்றினும், உலகின் வடிவிற் கேதுவாய அடிப்படை யெல்லாம் இறைவனே கோலி, நிலத்தினின்று வித்தில்லாமற் பயிர் உண்டாக்கினாற் போல உலகங்களையும் பொருள்களையும் தோற்றுவித்தலின், 'விச்சதின்றியே' என்றார். வைத்தல், காத்தல், வாங்குதல், ஒடுக்குதல். பிச்சன் = பித்தன். 'உடைய நாதனே நானும் அங்ஙனே' என மாற்றுக. இனி இப்பகுதி உயிர்களின் முதற் பிறப்பிற்கு வினையாகிய காரணம் இல்லையாகவும், அவைகட்கு முதற்கண் நுண்ணுடம்பைக் கொடுத்துப் பின் தருதலைக் குறிப்பதாகச் சிவஞான மாபாடியத்துள் உரைக்கப்பட்டவற்றையும் அறிக. 97. உடைய நாதனே போற்றி நின்னலாற் பற்று மற்றெனக் காவ தொன்றினி யுடைய னோபணி போற்றி யும்பரார் தம்ப ராபரா போற்றி யாரினுங் கடைய னாயினேன் போற்றி யென் பெருங் கருணை யாளனே போற்றி யென்னைநின் னடிய னாக்கினாய் போற்றி யாதியு மந்த மாயினாய் போற்றி யப்பனே உடைய நாதனே, போற்றி ! நின் அலால் பற்று, மற்று எளக்கு ஆவது ஒன்று இனி உடையனோ? பணி ; போற்றி! உம்பரார் தம்பரா - பரா போற்றி! யாரினும் கடையன் ஆயினேன் போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின் அடியன் ஆக்கினாய் போற்றி !ஆதியும் அந்தம் ஆயினாய், போற்றி ! அப்பனே! udaiya naathanee pooRRi nin alaal paRRu, maRRu enakku aavathu onRu ini udaiyanoo paNi pooRRi umparaar thamparaa paraa pooRRi yaarinung kadaiyan aayineen pooRRi enperung karuNai yaaLanee pooRRi ennainin adiyan aakkinaay pooRRi aathiyum antham aayinaay pooRRi appanee பொ-ரை: என்னை அடிமையாக உடைய தலைவனே! வணக்கம். உன்னை அல்லாமல் இனி வேறு ஆதரவு உடையேனோ? சொல்லுவாயாக! வானவர்களின் மேலோர்க்கு மேலோனே ! வணக்கம். எல்லோரினும் கீழ்ப்பட்டவன் ஆயினேன். காத்திடுக! என் பேரருளாளனே! காத்திடுக, முதலும் முடிவுமானவனே அப்பனே! என்னை நினது அடியனாக்கினாய் காத்திடுக! Do I have any support other than Thee, Oh Lord, my Master? pray, protect me. Oh Lord of all gods, pray protect me, me that am lowlier than all. My Lord of infinite grace , pray protect me. Thou that made me Thy servitor, pray protect me. Oh Sire, standing forth ever as the beginning and the end. கு-ரை: உம்பர் = மேலிடம். உம்பரார் = வானவர். பராபரன் - மேலானவன். பணி = சொல்லு, 'என்னை நின் அடிய னாக்கினாய் போற்றி' என்பதை ஈற்றிற் கொள்க. 98. அப்ப னேயெனக் கமுத னேயா னந்த னேயக நெகவள் ளூறுதே னொப்ப னேயுனக் குரிய வன்பரி லுரிய னாயுனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னேதுணை யாள னேதொழும் பாள ரெய்ப்பினில் வைப்ப னேயெனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கண் மன்னனே அப்பனே, எனக்கு அமுதனே ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன் ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப்பருக நின்றது ஓர் துப்பனே சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய வையகத்து, எங்கள் மன்னனே? appanee enakku amuthanee aananthanee akam neka aLLuuRu theen oppanee unakku uriya anparil uriyanaay unai paruka ninRathoor thuppanee sudarmudiyanee thuNai yaaLanee thozum paaLar eyppinil vaippanee enai vaippathoo solaay naiya vaiyakaththu engkaL mannanee பொ-ரை: தந்தையே! எனக்குச் சாவா மருந்தானவனே! இன்பனே! உள்ளம் உருகும்படியாக நிறையச் சுரக்கின்ற தேன் போல்பவனே! உனக்கு உரிமையுடைய அடியாருள் யானும் உரிமை உடையவனாய் உன்னை நுகரும்படி அருள் செய்து நின்றதொரு வல்லாளனே! சோதி மகுடத்தனே! உதவியாளனே! தொண்டர்கள் தளர்வுற்று இருக்கும் பொழுது உதவும் செல்வமே! எங்கள் வேந்தனே! உலகத்தில் துன்பப்படும் படி என்னை வைப்பது நீதியோ? சொல்லியருளுக Sire, ambrosia to me, my very bliss! Like unto sweet nectar that wells up whilst the heart thus melt. Thou that lined me up alongside Thy devotees; and made me imbibe Thy weal! Of shining locks, You are a treasure for Thy devotees in need. Tell me, Oh Lord, is it proper for Thee to leave me in this world to suffer harrowing agony? கு-ரை: அள், நெருக்கத்தைக் குறிப்பது . 'வள்' என்று பிரித்து, 'மிகுதியாக' என்றும் பொருள் கொள்ளுவர். துப்பு = வலிமை, 'வையகத்து நைய வைப்பதோ சொலாய்' என மாற்றுக. 99. மன்ன வெம்பிரான் வருக வென்னெனை மாலு நான்முகத் தொருவன் யாரினு முன்ன வெம்பிரான் வருக வென்னெனை முழுதும் யாவையு மிறுதி யுற்றநாட் பின்ன வெம்பிரான் வருக வென்னெனைப் பெய்க ழற்கணன் பாயெ னாவினாற் பன்ன வெம்பிரான் வருக வென்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே மன்ன எம்பிரான். 'வருக' என் எனை; மாலும், நான் முகத்து ஒருவன், யாரினும் முன்ன எம்பிரான், 'வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன எம்பிரான், 'வருக' என் எனைப் பெய் கழற் கண் அன்பாய், என் நாவினால் பன்ன எம்பிரான், 'வருக' என் எனைப் பாவநாச; நின்சீர்கள் பாடவே manna empiraan varuka enenai maalum naanmukaththu oruvan yaarinum munna empiraan varuka enenai muzuthum yaavaiyum iRuthi uRRa naaL pinna empiraan varuka enenai pey kazaRkaN anpaay en naavinaal panna empiraan varuka enenai paava naasa ninsiirkaL paadavee பொ-ரை: அரசனாகிய எம் தலைவனே! என்னை வருக என்று அழைப்பாயாக. அரியும் அயனுமாகிய தேவர் முதலிய எல்லோரினும் முற்பட்டவனே! என்னை வருக என்று அழைத்தருள்க. எல்லாம் ஒடுங்கிய காலத்தில் ஒடுங்காது பிற்பட்டவனே! என்னை வருக என்றழைத்திடுக. உனது செறிந்த கழலுடைய திருவடியின் கண் அன்பாய் எனது நாவினால் துதிக்கப் படுபவனே! பாவத்தை நாசம் செய்பவனே! நின்புகழை நான் பாடும் பொருட்டு என்னை வருக என்று அழைத்திடுக. Pray, call out, asking me to come over to Thee. Oh my Lord and monarch ! Thou higher than Brahma, Thirumaal and others. Call out, asking me to come, my Lord, that outlasts all things after their fall. Order me to come and extol Thy bejewelled Feet. Order me to come thus enabling me to sing on Thy glorious Feet. Thou that extricate the effects of sinful deeds. கு-ரை: 'வருக என் எனை' = எனை வருகவென்று சொல். முன்ன = முற்பட்டவனே. பின்ன= பிற்பட்டவனே. பன்னன்= துதிக்கப்பட்டவன். சிவலோகத்தில் நின் சீர்கள் பாட என்னை வருக என்று அழைப்பாயாக என்பது பொருள். பாடுதல் சிவலோகத்தில் என்க. 100. பாட வேண்டுநான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக் காட வேண்டுநான் போற்றி யம்பலத் தாடுநின்கழற் போது நாயினேன் கூட வேண்டுநான் போற்றி யிப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீட வேண்டுநான் போற்றி வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே பாடி நைந்து - நைந்து உருகி, நெக்கு - நெக்கு ஆடவேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல்போது நாயினேன் கூடவேண்டும்நான்; போற்றி! இப்புழுக் கூடு நீக்கு எனைப்; போற்றி !பொய் எலாம் வீட வேண்டும் நான்; போற்றி! வீடுதந்து அருளு ; போற்றி! நின்மெய்யர் மெய்யனே paada veeNdum naan pooRRi ninnaiyee paadi nainthu nainthu uruki nekku nekku aadaveeNdum naan pooRRi ampalaththu aadum ninkazal poothu naayineen kuudaveeNdum naan pooRRi ippuzu kuudu niikku enai pooRRi poy elaam viida veeNdum naan pooRRi viiduthanthu aruLu pooRRi nin meyyar meyyanee பொ-ரை: உன்னுடைய மெய்யன்பர்க்கு மெய்யானவனே! நின்னையே நான் வணங்கிப் பாடவேண்டும். பாடி, மனம் வருந்திக் கசிந்து, கனிந்து கனிந்து ஆனந்தக் கூத்தாட வேண்டும். நான் வணங்கி நீ சிற்றம்பலத்தில் ஆடியருளும் போது, உன்னுடைய திருவடிக் கமலங்களை நான் அடைய வேண்டும். இந்தப் புழுக் கூடாகிய உடம்பை நீ தொலைத்து விட வேண்டும். உனக்கு வணக்கம். உலகப்பற்று யாவற்றையும் நான் கைவிட்டொழிக்கும்படி நீ செய்தருள வேண்டும். உனக்கு வணக்கம். வீட்டின்பத்தைக் கொடுத்தருள வேண்டும். உனக்கு வணக்கம். Pray, grant me this wish, and so ordain that I may sing on Thee, swinging in ecstasy , with intense melting love, that I this cur, merge with Thy flowery Feet bedecked with jewels. Feet that dance in Thillai's public hall. Pray remove this worm ridden physique of mine, that all my falsehood may cease to be. Pray, grant salvation to me. I thus pay obeisance to Thee, that art real to Thy devotees. கு-ரை: போற்றி - வணக்கம் எனவும், வணங்கி எனவும் பொருள் கொள்ளுக. வீட= தொலைக்க, 'விட' என்பது முதல் நீண்டதென்றுங் கூறலாம். எனை = எனக்கு THIRUCHCHITRAMBALAM 6. நீத்தல் விண்ணப்பம் 6. NEETHTHAL VINNAPPAM (பிரபஞ்ச வைராக்கியம்) Supplication for Redemption உத்தரகோசமங்கையில் அருளிச் செய்யப்பட்டது Resolute against worldly lore கட்டளைக் கலித்துறை Compiled whilst in Thiru Uththara-Kosa-Mangai திருச்சிற்றம்பலம் 'நீத்தல் விண்ணப்பம்' என்பது, 'இறைவன் தம்மைக் கைவிடுதலைப் பற்றிச் செய்யும் விண்ணப்பம்' எனப் பொருள் தரும். அஃதாவது, "நீ என்னைக் கைவிடுவையாயின், அடியேன் முன்போலவே உலகியலில் கிடந்து பிறப்பிற்கு ஆளாவேன். அதனால், என்னைக் கைவிடாது ஏற்றருள்க' என்று வேண்டுதல். எனவே, இஃது உலகியலில் தமக்கு விருப்பம் இன்மை கூறுதலாக அமைவதால், இதற்கு, 'பிரபஞ்ச வைராக்கியம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இதனை அடிகள், 'உத்தரகோசமங்கை' என்னும் தலத்தில் அருளிச் செய்தார் என்பது இத்திருப்பாட்டுக்களிலே நன்கு பெறப்பட்டுக் கிடக்கின்றது. 'உத்தரகோச மங்கையுள் இருந்து- வித்தக வேடம் காட்டிய இயல்பும்' (தி.8. கீர்த்தி, 48-49) என மேல் அருளிச் செய்தமையால் இவ்விண்ணப்பத்தைச் செய்த பின்னர், அடிகட்கு இறைவன் தனது திருவுருவத்தை மீளக்காட்டி, அவரைத் தேற்றுவித்தருளினான் என்பதும் கொள்ளக் கிடக்கின்றது. இதனைப் புராணம் சிறிது வேறுபடக்கூறும். இறைவன் தேற்றுவித்த முறை இன்னதென்பதனை அறியக்கூடவில்லை. ஐம்பது திருப்பாடல்களால் இயன்றிருத்தலின், இதனைத் திருச்சதகத்தின் பின்னர்க் கோத்தனர். The preface will be more appropriate if we quote Ms. Ratna Ma Navaratnam who had written as under This hymn is a prayer. That every man aspires to enjoy the bliss of Civa and be for ever in the presence of His eternal light has been the theme so far. In this poem, the poet supplicates that His loving grace should never forsake him; this time His path does not lead him up to the mystic mount of love, but to the way of renunciation and detached surface. In its primeval state, the soul of man though embedded in gloom was inseparable from His divine grace. When the soul has its first gleam of illumination by His grace, then begins the pangs of separation from His gracious Feet. The soul after its active impact with the divine grace begins its process of cleansing and purification and searches for the way of reunion with the gracious Feet. (The soul after its active impact with the divine grace begins its process of cleansing and purification and searches for the way of reunion with the gracious Feet). Love is one of the searchlights and the other is the discipline of detachment from the World. The prayer of the poet in the poet in the psalm is to reunite him to His loving gracious Feet and not to leave him alone in the world. 6.1 கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டு கொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்றோ லுடையவ னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேனெம்பி ரானென்னைத் தாங்கிக்கொள்ளே கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்? - விரல் வேங்கையின் தோல் உடையவனே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே சடையவனே. தளர்ந்தேன்: எம்பிரான், என்னைத் தாங்கிக் கொள்ளே kadaiyava neenai karuNaiyinaal kalanthu aaNdu koNda vidaiyavanee viddiduthi kaNdaay viRal veengkaiyin thool udaiyavanee mannum uththara koosa mangkaikku arasee sadaiyavanee thaLarntheen empiraan ennai thaangki koLLee. பொ-ரை: பக்குவத்தில் கீழ்ப்பட்டோனாகிய என்னை, உனது இரக்க மிகுதியால் வந்து அடிமைப் படுத்திக் கொண்ட காளையூர்தியானே! என்னைப் பாசத்தில் இருந்து நீக்கி அருளுக! வலிமையான புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவனே! புகழால் நிலைபெற்ற உத்தரகோச மங்கைப் பதிமன்னனே ! சடையுடையாய்! தளர்வடைந்தேன். எம் தலைவனே, என்னைக் காத்து அருளுவாயாக. Oh Lord of the bull mount, that in a compassionate gesture in the past, you took under Thee, even me, this lowliest of men! Pray do not forsake me now. Thou, Lord of the eternal Thiru Uththara-Kosa-Mangai, clad in the hides of fierce tigers! Kindly be my support, I have now become much too wearied and weak. கு-ரை: கருணையாற் கலந்தாண்டது போல, கருணையாலே தாங்கிக் கொள்ளவும் வேண்டும். என் தகுதியின்மையைக் கருதுதல் கூடாது என்றவாறு, விட்டிடுதி யென்பதற்குக் கைவிட்டிடுவையோ என்று வினாப் பொருள் உரைப்பது உண்டு. கண்டாய் - அசை. புலியின் உடம்பை நீக்கினவனுக்கு எனது உடலை நீக்கி வீடளிப்பது கடினமல்ல என்றவாறு. சடையவன், என்பது இறைவனது வரம்பிலாற்றலைக் குறிக்கும். 2. கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளே னெனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லே னுத்தர கோசமங் கைக்கரசே கள்ளே னொழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய்? - நின்விழுத் தொழும்பின் உள்ளேன்; புறம் அல்லேன்: உத்தர கோசமங்கைக்கு அரசே, கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எக்காரணமே? koL eer piLavu akalaa thadang kongkaiyar kovvai sevvaay viLLeen eninum viduthi kaNdaay nin vizu thozumpin uLLeen puRam alleen uththara koosa mangkaikku arasee kaLLeen oziyavum kaNdu koNdu aaNdathu ekkaaraNamee பொ-ரை: உத்தரகோச மங்கைப் பதிமன்னனே! எழுச்சி கொண்ட இளமை நிறைந்த அழகு நீங்காத பெரு நகிலை உடைய பெண்டிரது கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினை நீங்காது இருந்தேன். ஆயினும், உனது உயர்ந்த தொண்டினுக்கு உள்ளானவன் ஆயினேன். உன்னை எண்ணாது இருப்பவன் அல்லேன். என்னைப் பாசத்திலிருந்து நீக்குவாயாக. நான் வஞ்சனை உடையவன். உன்னை நீங்கி நின்ற பொழுதிலும் கூட என்னைக் கண்டு வலிய வந்து ஆட்கொண்டதன் காரணம் தான் என்ன? Lord of Thiru Uththara-Kosa-Mangai, how come Thou spotted me before and took me under Thee, despite the fact that I am given to wayward and furtive tendencies. Pray, forsake me not, even if I cling steadfast on to fair maiden's physique. I am always in Thy sacred service and never think of treading any different path. கு-ரை: விடுதி என்பதற்கு உடலை நீக்குக என்று பொருள் கோடலும் உண்டு. ஏர்புகொள், என மாறுக . ஏர்பு= எழுச்சி. இளவு - இளந்தன்மை. சிலர், ஏர் கொள்பிளவு எனப் பிரித்து, அழகிய காணத்தின் கூறளவு கூட அகலாது நெருங்கியுள்ள என்று பொருள் கொள்ளுவர். விள்ளல்= விடுதல். கடவுளைத் தாம் நாடாது, கடவுள் தம்மை நாடி வந்தருளினதை இறுதியடியில் குறித்தார். 3. காருறு கண்ணிய ரைம்புல னாற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா ரூருறை வாய்மன்னு முத்தர கோசமங் கைக்கரசே வாருறு பூண்முலை யாள்பங்க வென்னை வளர்ப்பவனே கார் உறு கண்ணியர் ஐம்-புலன் ஆற்றங்கரை மரமாய் வேர் உறுவேனை விடுதி கண்டாய்? - விளங்கும் திருவா ரூர் உறைவாய், மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே kaar uRu kaNNiyar aimpulan aaRRangkarai maramaay veer uRu veenai viduthi kaNdaay viLangkum thiruvaa ruur uraivaay mannum uththara koosa mangkaikku arasee vaar uRu puuNmulaiyaaL pangka ennai vaLarppavanee பொ-ரை; புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருக்கும் சிவனே! நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசனே! கச்சினைப் பொருந்திய அணிகள் அணிந்த நகிலை உடைய உமாதேவியை இடப் பாகமாகக் கொண்டவனே! என்னை வளர்த்து வருபவனே! அழகு நிறைந்த கண்களை உடைய மாதரது ஐம்புல இன்பத்தை நுகரச் செல்கின்ற நான், ஆற்றங்கரையில் நிற்கின்ற மரம் போல, அந்த இன்பங்களில் வேரூன்றி நிலைத்து விடும்படி விட்டுவிடுவாயோ? அவ்வாறு விடாமல் உன் கருணையினால் காத்து அருளுவாயாக. Lord of the Bounteous Thiruvaaroor, Lord abiding in Thiru Uththara-Kosa-Mangai, holding Thy fair consort in one part of Thy frame, Thou that even nurtures me,pray do not forsake me now, even if by chance I happen to fall prey to the sensual delights of black eyed damsels, much like the riverside trees sink roots deep into the soil. கு-ரை: கார்= கருமை அழகு. கருங்கண்ணியர் என்றும் பொருள் கொள்ளலாம். ஐம்புலன்= ஐம்புல இன்பம். 'கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள' என்பது திருக்குறள். விடுதி = நீக்குதி. வார் = கச்சு. குற்றம் உடையேனாயினும், என்னை வளர்ப்பவனாதலின், விட்டு விடுதல் கூடாது என்று குறித்தார். தாயொடும் கூடியே வளர்த்தல் கூடும் என்று குறிப்பித்தமை காண்க. நான் ஐம்புல இன்ப நீரால் வளர்ந்து, வெள்ளம் வந்தபோது பிடுங்கியெறியப் பெற்றுத் துன்பக் கடலில் வீழ்வேன். நீ என்னை அருளில் வளர்ப்பவன் ஆதலால், என்னை அங்கே வேரூன்ற விடாதே. 4. வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவு நீங்கியிப்பான் மிளிர்கின்ற வென்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன் றொளிர்கின்ற நீண்முடி யுத்தர கோசமங் கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச் செழுஞ்சுடரே. வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் - வெண் மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்-முடி உத்தர - கோசமங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே vaLarkinRa nin karuNai kaiyil vaangkavum neengki ippaal miLirkinRa ennai viduthi kaNdaay veN mathi kozunthu onRu oLirkinRa niiLmudi uththara koosa mangkaikku arasee theLikinRa ponnum minnum anna thooRRa sezunjsudaree பொ-ரை: வெள்ளிய இளம் பிறை ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடி தரித்த உத்தரகோச மங்கைப் பதி மன்னனே! தூய்மையான பொன்னின் ஒளியும், மின்னல் ஒளியும் போன்று காட்சி அளிக்கும் சோதிப் பிழம்பே! அருளில் நான் வளர்வதற்கு ஏதுவாய் உனது அருட் கையால் என்னை நீ வளைத்துப் பிடித்தாய். ஆனால் நான் அப்பிடியிலிருந்து இவ்வுலகப் பற்றிலே விருத்தி அடைகிறேன். அப்பற்றிலிருந்து என்னை நீக்கி அருளுவாயாக! Lord of Thiru Uththara-Kosa-Mangai, with a shining crescent on Thy long matted hair, Thou sporting a beauteous form of pure gold and lightning flash! Pray, do not forsake me. although I stood shying away from Thy booming graceful ways, and failed to receive Thy generous gift. கு-ரை: வளர்க்கின்ற என்பது 'வளர்கின்ற' என்றாயது என்னலாம்; வாங்குதல் = வளைத்தல், ஏற்றல் . மிளிர்தல்= ஒளிர்தல், பருத்தல். பொன் திருமேனிக்கும், மின் சடைக்கும் உவமையாவன. 5. செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள் விழுகின்ற வென்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால் உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே செழிகின்ற தீப் புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் - வெறி-வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தர - கோசமங்கைக்கு அரசே வழிநின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. sezikinRa thiippuku viddilin sinmoziyaaril pannaaL vizukinRa ennai viduthi kaNdaay veRivaay aRukaal uzukinRa puumudi uththara koosa mangkaikku arasee vazininRu nin aruL aar amuthu uudda maRuththananee பொ-ரை: தேன் உண்ணும் வாயினை உடைய வண்டுகள் கிண்டுகின்ற மலரைத் தரித்த முடியினை உடைய உத்தரகோச மங்கைக்கு மன்னனே! நான் போகின்ற வழிகளிலெல்லாம் இறைவன் ஆகிய நீ நின்று உனது திருவருளாகிய கிடைத்தற்கரிய அமுதத்தை ஊட்டவும் நானோ அதனை வேண்டாமென மறுத்தேன். வளர்கின்ற தீயில் விழும் விட்டில் பூச்சியினைப் போல மழலைச் சொல்லுடைய மங்கையர்பால் பலநாளும் விரும்பிக் கிடக்கின்ற என்னை அந்த அபாயத்தினின்று நீக்கி அருளுவாயாக. Pray, do not forsake me, me that am prone to fall victim to sweet talking maids much like beetles hopping on to a fiery flame! Although I stayed away unmindful of Thy grace, Oh Lord of Uththara-Kosa-Mangai, bedecked with flowers on Thy head swarmed by honey seeking bees pray forsake me not. கு-ரை: சின்மொழி = சில் மொழி; ஆரவார மொழி என்பாரும் உளர். வெறி = தேன். வண்டு, ஆறுகாலுடையது. 'விழுகின்ற' என்பதற்கு நேர்பொருள் கொள்ளுவதும் உண்டு. விருப்பத்தையே அவ்வாறு கூறினார் எனக் கருதுக. 6. மறுத்தனன் யானுன் னருளறி யாமையி லென்மணியே வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்றொகுதி ஒறுத்தெனை யாண்டு கொளுத்தர கோசமங் கைக்கரசே பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கடம் பொய்யினையே மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே; வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் - வினையின் தொகுதி ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தர - கோசமங்கைக்கு அரசே, பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் - தம் பொய்யினையே? maRuththanan yaan un aruL aRiyaamaiyin en maNiyee veRuththu enai nii viddiduthi kaNdaay vinaiyin thokuthi oRuththu enai aaNdukoL uththara koosa mangkaikku arasee poRuppar anRee periyoor siRunaaykaL tham poyyinaiyee பொ-ரை; என் மாணிக்க மணியே! உத்தரகோச மங்கைக்கு அரசே ! சிறிய நாய் போன்றவர்களது பொய்ச் செயல்களைப் பெருந்தகையோர் மன்னிப்பார்கள் அல்லவா! அடியேனாகிய நான் உன் திருவருளின் பெருமையை அறியாமையால் அதனை வேண்டாமென்று நீக்கினேன். அதற்காக நீ என்னை வெறுத்துக் கைவிட்டு விடுவாயோ! என் வினை அனைத்தையும் கடிந்து ஒதுக்கி விட்டு என்னை ஆண்டு கொண்டருள்க. Even though in my ignorance, I declined Thy offer of grace, pray do not forsake me, do not discard me on this score, Oh gem of my Lord! I beseech Thee, pardon for my inequity. Pray, quell my load of past evil and take me under Thee, Lord of Uththara-Kosa-Mangai. For, is it not normal for the noble ones to bear with the faults of delinquent little curs like me? கு-ரை: 'அறியாமையில் அழுந்திக்கிடந்த யான் உன் திருவருளை மறுத்தனன்' என்னலாம். ஒறுத்தல்=கடிதல், குறைத்தல், 7. பொய்யவ னேனைப் பொருளென வாண் டொன்று பொத்திக்கொண்ட மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று மையவ னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே பொய்யவன் ஏனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே விட்டு இடுதி கண்டாய் விடமுண்மிடற்று மையவனே மன்னு உத்தர - கோச மங்கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. poyyavaneenai poruL ena aaNdu onRu poththi koNda meyyavanee viddiduthi kaNdaay vidam uN midaRRu maiyavanee mannum uththara koosa mangkaikku arasee seyyavanee sivanee siRiyeen pavam thiirppavanee பொ-ரை: நஞ்சினை உண்டதால் கழுத்தில் கருமை நிறம் நிலைபெற்ற உத்தர கோச மங்கை மன்னனே! சிவந்த திருமேனி உடையவனே! மங்கலப் பொருள் ஆனவனே! சிறுமையேனுடைய பாவத்தை ஒழிப்பவனே! பொய்யனாகிய என்னையும் ஒரு பொருளாக மதித்து அடிமையாக்கிக் கொண்ட எம்பெருமானே! முத்தியாகிய ஒன்றை மறைத்துக் கொண்ட உண்மைப் பொருள் ஆனவனே! என்னைப் பந்த பாசங்களிலிருந்து நீக்கி அருள் புரிவாயாக. Oh Lord of blissful state, Lord of the eternal Uththara-Kosa-Mangai, Lord Civa, that ends the birth cycles of me, this little one! Oh, Truth Sublime, that took note of even me a dishonest one, as worthwhile soul, pray do not forsake me. கு-ரை: பொய்யனுக்கு வீடு உடனே கொடுக்காமையின், 'மெய்யவனே' என்றார். ஒன்று= வீடு. பொத்தல்= மறைத்தல், கீழே வருகின்ற செய்யுள்களில் உத்தரகோச மங்கைக்கரசே யென்பது முதல் இறுதிவரை உள்ள பகுதிக்கு முதலில் பொருள் கொள்ளப்படும். 8. தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரரு ளென்கொலென்று வேர்க்கின்ற வென்னை விடுதிகண் டாய்விர வார்வெருவ ஆர்க்கின்ற தார்விடை யுத்தர கோசமங் கைக்கரசே ஈர்க்கின்ற வஞ்சொடச் சம்வினை யேனை யிருதலையே தீர்க்கின்ற ஆறு என் பிழையை ' நின் சீர் அருள் என் கொல்?' என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோசமங்கைக்கு அரசே, ஈர்க்கின்ற - அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே thiirkkinRavaaRu en pizaiyai nin siir aruL enkol enRu veerkkinRa ennai viduthi kaNdaay viravaar veruva aarkkinRa thaarvidai uththara koosa mangkaikku arasee iirkkinRa anjsodu assam vinaiyeenai iruthalaiyee பொ-ரை: பகைவர் அஞ்சும்படி கிண்கிணி மாலை அணிந்த இடப வாகனத்தை உடைய உத்தரகோச மங்கைக்கு அரசே! ஐம்புல ஆசை ஒருபுறமும் அதற்கு மாறாகிய பயம் ஒருபுறமுமாக தீவினையேனை இருபுறமும் இழுக்கின்றன. உனது சிறப்பாகிய திருவருள் என் பிழையை எப்போது தீர்த்து ஆட்கொள்ளுமோ! என்று கவலை உற்று உள்ளம் புழுங்குகின்ற என்னைக் கைவிட்டு விடாதே. How shall I end my faults, How Thy grace of bliss will act on me! So wondering , I stand here in great distress. Forsake me not, Oh Lord of Uththara-Kosa-Mangai, mounted on a bull with clinking beads that strike terror in the hearts of those that do not join Thy congregation. Oh Lord, I am rattled by fear and the five senses that drag me down from both sides. கு-ரை: வேர்த்தல்= மனம் புழுங்குதல். தார் = கிங்கிணி மாலை. அஞ்சு= ஐம்புலவாசை, தலை=பக்கம், இடம். விடுதியோ என்பதில் விட்டிடாதே என்ற கருத்து போந்தவா காண்க. 9. இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக் கொருதலை வாமன்னு முத்தர கோசமங் கைக்கரசே பொருதலை மூவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே இருதலைக் கொள்ளியின்-உள் எறும்பு ஒத்து, நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் - வியன் மூ-உலகுக்கு ஒரு தலைவா, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே பொரு-தலை மூ-இலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. iruthalai koLLiyinuL eRumbu oththu ninai pirintha virithalaiyeenai viduthi kaNdaay viyan muu ulakukku oru thalaivaa mannum uththara koosa mangkaikku arasee poruthalai muu ilai veel valan eenthi polipavanee பொ-ரை: மேல், கீழ், நடு என்ற பெரிய மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற ஒரு தலைவனே! நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! போரிடும் நுனியுடைய மூன்று இலை வடிவான வேலாகிய சூலத்தை வலப்பக்கம் ஏந்தி விளங்குபவனே! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள் நடுவே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னைப் பிரிந்து, விரிந்த தலையுடன் அலங்கோலமாக நிற்கின்ற என்னை நீ கைவிட்டு விடாதே. Oh peerless Lord of the three worlds, although I parted company from Thee and consequently now stand bewildered here, much like an ant caught inside a stick burning at both ends, pray forsake me not, Oh Lord! Thou, shining bright with a battle trident on Thy right side, Lord of Uththara-Kosa-Mangai. கு-ரை: இருபறமும் தீப்பற்றி எரிகிற ஒரு கட்டையின் உள்ளிடத்தே அகப் பட்டுக்கொண்ட எறும்பானது ஒரு பக்கமும், வெளிவர முடியாமைபோல, உலகப் பாசத்திற்கும், நின்னை அடைய முடியாமைக்குமாகிய இரு துன்பத்திற்கும் நடுவே இடர் உறுவேன் என்றார். விரிதலை - இழவு முதலியவற்றாலாய துக்கத்திற்கு அறிகுறி. 10. பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்று மெலிகின்ற வென்னை விடுதிகண் டாயளி தேர்விளரி ஒலிநின்ற பூம்பொழி லுத்தர கோசமங் கைக்கரசே வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புர மாறுபட்டே பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று, ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் - அளி தேர் விளரி ஒலி நின்ற பூம்-பொழில் உத்தர - கோசமங்கைக்கு அரசே வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே. polikinRa ninthaaL pukutha peRRu aakkaiyai pookka peRRu melikinRa ennai viduthi kaNdaay aLi theer viLari oli ninRa puumpozil uththara koosa mangkaikku arasee vali ninRa thiN silaiyaal eriththaay puram maaRupaddee. பொ-ரை: வண்டுகள் பழகித் தேர்ந்து பாடுவதால் விளரிப் பண்ணின் ஓசை சோலைகளில் நிலைபெற்று உள்ளது. அந்தச் சோலைகளைக் கொண்ட பதியாகிய உத்தர கோச மங்கைக்கு அரசே! வலிய திண்ணம் உடைய மேருவினை வில்லாக வளைத்து, முப்புரத்தை எரித்து ஒழித்தாய். விளங்குகின்ற நின் திருவடியில் சரண் புகப் பெற்றும், உன்னை அடையாமல் வாழ்நாளை வீணாகக் கழித்து, வருந்தி இளைக்கின்ற என்னைக் கைவிட்டு விடாதே. I was inducted into Thy glistening Feet before. And then, banished from Thy presence, I now stand here with a declining physical frame. Hence, forsake me not, Oh Lord of Uththara- Kosa-Mangai, a shrine that is so full of fine flowering trees that reverberate with the humming tunes of honey seeking bees, Lord that, with a mighty bow, burnt down the recalcitrant Asuras of the three forts. கு-ரை: ஆக்கை = உடல், உடல் கொண்டு வாழும் வாழ்நாளிற்கு ஆகுபெயர். போக்க= (வீணே) கழிய. அளி= வண்டு. விளரி - ஏழு வகை இசையுள் ஒன்று. மாறுபட்டு= பகைத்து. புரம் எரித்தது போன்று, எனதுடலையும் ஒடுக்கி வீடருள்க என்பது கருத்து. 11. மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே ஊறுமட் டேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே நீறுபட் டேயொளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யார் உன் மணி மலர்த் தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் - வினையேன் மனத்தே ஊறும் மட்டே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே , நீறுபட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே. maaRupaddu anjsu ennai vanjsippa yaan un maNimalarththaaL veeRupaddeenai viduthi kaNdaay vinaiyeen manaththee uuRum maddee mannum uththara koosa mangkaikku arasee neeRu paddee oLikaaddum ponmeeni nedunthakaiyee பொ-ரை: பெருந்தன்மையனே! தீவினையேன் உள்ளத்தில் ஊறுகின்ற தேனே! நிலைபெற்ற உத்தர கோச மங்கைக்கு அரசே! திருநீற்றினைப் பொருந்தி விளங்குகின்ற ஒளியினைக் காட்டும் அழகிய திருமேனி உடைய பெருந்தன்மையனே! ஐம்புலன்களும் என்னைப் பகைத்து வஞ்சித்தலால் அடியேன் உன் அழகிய தாமரை மலரை ஒத்த திருவடியை நீங்கினேன். அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடாதே. I suffered a great deal under the misleading five senses and getting beguiled, stayed away from Thy flowery Feet. And yet forsake me not, Oh Lord reigning over Uththara-Kosa-Mangai, never again leave me. Lord that springs forth as sweet elixir, even in the minds of sinners like me, Lord glorious, shining bright with the smear of holy white ash! கு-ரை: வேறுபட்டேனை = நீங்கினேனை. மட்டு= தேன். நீறு பட்டு ஏய் ஒளி = நீறு பொருந்தி அதனால் உளதாய ஒளி. 12. நெடுந்தகை நீயென்னை யாட்கொள்ள யானைம் புலன்கள் கொண்டு விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ வடுந்தகை வேல்வல்ல வுத்தர கோசமங் கைக்கரசே கடுந்தகை யேனுண்ணுந் தெண்ணீ ரமுதப் பெருங்கடலே நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான் ஐம்புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ , அடும்-தகை-வேல் வல்ல உத்தர கோசமங்கைக்கு அரசே , கடும் தகையேன் உண்ணும் தெள்-நீர் அமுதப் பெருங் கடலே. nedunthakai nii ennai aadkoLLa yaan aimpulankaL koNdu vidunthakaiyeenai viduthi kaNdaay viravaar veruva adunthakai veel valla uththara koosa mangkaikku arasee kadunthakaiyeen uNNum theNNiir amutha perungkadalee பொ-ரை: பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மை உடைய வேற்போரில் வல்லவனாகிய திரு உத்தர கோச மங்கைக்கு அரசனே! மிகுந்த தாகம் உடையவன் ஆகிய நான் பருகுவதற்குரிய தெள்ளிய தூய புனல் போன்ற அமுதப் பெருங்கடலே! பெருந்தன்மையனே ! நீ அடியேனை ஆண்டு கொண்டு அருளவும் அடியேன் ஐம்புலன்களின் ஆசை கொண்டு அதனால் உன் அருளைக் கைவிடும் தன்மையன் ஆகினேன். அத்தகைய என்னை விட்டுவிடாதே. துன்பத்தினின்று நீக்கிக் காத்து அருள்வாயாக. Lord glorious, even as Thou cometh over to take me, alas, I am prone to go away from Thee, due to my ignorance and the influence of the five senses. Nevertheless, Oh Lord, forsake me not on this score. Oh Lord, that frightens and quells those that do not abide with Thee, Lord reigning over Uththara-Kosa-Mangai, with a powerful trident on hand. Yet Thou art like placid ambrosial water even for wicked folks like me. கு-ரை: வேல் வல்ல = வேற்போரில் வல்ல. தகை= தாகம், தன்மை. ஐம்புலன்= ஐம்புல அவா. 13. கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார் உடலில மேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே மடலின்மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே கடலினுள் நாய் நக்கி - ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய் - விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது-வெள்ளமே. kadalinuL naay nakki aangku un karuNai kadalin uLLam vidal ariyeenai viduthi kaNdaay vidal il adiyaar udal ilamee mannum uththara koosa mangkaikku arasee madalin maddee maNiyee amuthee en mathu veLLamee பொ-ரை: உன் திருவடியை விடாது பற்றும் அன்பர்களின் உடம்பு எனும் இல்லத்தில் நிலை பெறுகின்ற திரு உத்தரகோச மங்கைக்கு அரசே! பூவிதழ்த் தேன் போல் இனியவனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! கடல் போன்ற பெரிய நன்னீர் நிலைகளிலும் நீரை நாய் சிறிது சிறிதாக நக்கித் தான் குடிக்க இயலும். அது போல உன் கருணைக் கடலுக்குள்ளே உள்ளத்தைச் செலுத்தி நன்கு பருக இயலாத என்னைக் கைவிட்டு விடாதே! Pray, do not abandon me that am clinging on to Thy ocean of grace, much like a spaniel licking into sea shore bays! Lord of Uththara-Kosa-Mangai, ever housed in the hearts of devotees who never leave Thee! Thou, honey of flower petals, Oh gem, my elixir, flood of ambrosia! கு-ரை: 'விடலரியேனை' என்றாரேனும், 'முழுதும் மூழ்கும்படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை' என உவமைக்கேற்ப உரைத்தலே கருத்து என்க. உடல் இல்லம் = உடம்பாகிய வீடு. மடலின் மட்டு= பூவிதழில் துளிர்க்கின்ற தேன். மது வெள்ளம்= தேன் வெள்ளம். முன்பு சிறிதாய் உள்ள தேனைக் கூறினார்; பின்பு அது பெருக்கெடுத்தலைக் கூறினார். 14. வெள்ளத் துணாவற்றி யாங்குன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக் கிலேனை விடுதிகண் டாய்விரும் பும்மடியார் உள்ளத்துள் ளாய்மன்னு முத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களியெனக்கே வெள்ளத்துள் நா வற்றி - ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் நின்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் - விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய். மன்னும், உத்தர - கோச மங்கைக்கு அரசே, கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே . veLLaththuL naavaRRi aangku un aruL peRRu thunpaththininRum viLLakkileenai viduthi kaNdaay virumpum adiyaar uLLaththu uLLaay mannum uththara koosa mangkaikku arasee kaLLaththu leeRku aruLaay kaLiyaatha kaLi enakkee பொ-ரை: நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! நீர்ப்பெருக்கின் நடுவே இருந்து ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நாவுலர்ந்து போனாற்போல உன் அருள் வெள்ளத்தைப் பெற்றும், துயரத்தில் இருந்து நீங்குவதற்கு ஆற்றலில்லாத என்னைக் கைவிட்டு விடாதே. உன்னைக் காதலிக்கும் அன்பரின் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே! ஐம்புல வஞ்சனை உள்ள எனக்கு இதுவரை நான் பெற்று மகிழாத பேரின்பத்தைக் கொடுத்து அருளுக! Even though I received Thy grace before, I am now unable to get freed of worldly miseries, and am like a man suffering from thirst, even while surrounded by floodwaters. Lord of the eternal Uththara-Kosa-Mangai, that stands by the hearts of all true seekers. Pray, grant everlasting bliss to me, although I am full of dishonesty and deceit. கு-ரை: விள்ளக்கில் என்பதில், கில் ஆற்றல் உணர்த்துவது . விள்ளக்கில் இலேனை - என்பது விள்ளக்கிலேனை என்று குறுகியது. 15. களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழ லுத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த வெந்தைபி ரானென்னை யாளுடை யென்னப்பனே களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள வெளி வந்திலேனை விடுதி கண்டாய் - மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம் கழல் உத்தர - கோசமங்கைக்கு அரசே எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே! kaLi vantha sinthaiyodu unkazal kaNdum kalantharuLa veLi vanthileenai viduthi kaNdaay mey sudarukku ellaam oLi vantha puungkazal uththara koosa mangkaikku arasee eLi vantha enthaipiraan ennai aaLudai en appanee பொ-ரை: உண்மையான ஒளிகட்கெல்லாம் ஒளியைத் தந்த அழகிய திருவடியை உடைய உத்தர கோச மங்கைப் பதி மன்னனே ! எனக்கு எளிதில் வந்தருள் செய்த தந்தையும் தலைவனும் ஆகியவனே! என்னை அடிமையாக உடைய என் ஞானத் தந்தையே! மகிழ்ச்சி மிகுந்த மனத்தோடு உன் திருவடிகளைக் காணப்பெற்றும் நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு, பற்றிலிருந்து வெளிவந்து அருள் ஒளியில் புகாத என்னைக் கைவிட்டு விடாதே! Despite my having seen Thy ornamented Feet before with gleeful heart, I can not now come over and mix with Thee. Nevertheless, pray forsake me not on this score, Oh Lord of Uththara-Kosa-Mangai! Lord with Feet so fair, lending light to all the truly shining objects in the world. Thou art easy to reach, Oh Sire, Thou that took me under Thee. கு-ரை: ஒளிவந்த என்பது ஒளியைத்தந்த என்ற கருத்தினை உடையது. மெய்ச்சுடர் என்பது தன்னிற்றானே ஒளிரும் கதிரவன் போன்ற ஒளியுலகங்கள். எந்தை பிரான் - எனது தந்தையின் தலைவன்; படைப்போன் - தந்தையாயின், அவன் தலைவன் இறைவனென்க. வெளி வந்திலேனை, என்பதில் வெளி=அருள்வெளி. 16. என்னையப் பாவஞ்ச லென்பவ ரின்றிநின் றெய்த்தலைந்தேன் மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாயுவ மிக்கின்மெய்யே உன்னையொப் பாய்மன்னு முத்தர கோசமங் கைக்கரசே அன்னையொப் பாயெனக் கத்தனொப் பாயென் னரும்பொருளே என்னை 'அப்பா, அஞ்சல்', என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன் மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய் - உவமிக்கின், மெய்யே உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே , அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே! ennai appaa anjsal enpavar inRi ninRu eyththu alaintheen minnai oppaay viddiduthi kaNdaay uvamikkin meyyee unnai oppaay mannum uththara koosa mangkaikku arasee annai oppaay enakku aththan oppaay en arum poruLee பொ-ரை: உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய். உனக்கு நீயே நிகராவாய். நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! எனக்குத் தாய் போல் ஆவாய் ! தகப்பனை ஒப்பாய்! கிடைத்தற்கரிய அரும்பொருளே! என்னை நோக்கி 'ஐயா பயப்படாதே' என்று சொல்லுவார் இல்லாமல் நின்று வருந்தி இளைத்து அலைந்தேன். என்னைக் கைவிட்டு விடாதே! I have no one to comfort me with the words "fear not, Oh child". Hence, I wandered lonely in the wild and got wearied now. Thou art like a lightning flash, Oh Lord of the eternal Uththara-Kosa-Mangai. If at all we attempt a comparison, then Thou art indeed like Thyself alone, and none other. Forsake me not, Oh Lord, Thou art mother for me, Thou art father for me, Thou a rare treasure for me. கு-ரை: அருள் பெறுதற்கு முன்னுள்ள சத்திநிபாத நிலையை முதலடி குறிக்கும் என்பர். 17. பொருளே தமியேன் புகலிட மேநின் புகழிகழ்வார் வெருளே யெனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை யார்விழுங்கும் அருளே யணிபொழி லுத்தர கோசமங் கைக்கரசே இருளே வெளியே யிகபர மாகி இருந்தவனே பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார் வெருளே, எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் அருளே, அணி பொழில் உத்தர - கோசமங்கைக்கு அரசே இருளே, வெளியே, இகபரம் ஆகி இருந்தவனே. poruLee thamiyeen pukal idamee ninpukaz ikazvaar veruLee enai viddiduthi kaNdaay meymmaiyaar vizungkum aruLee aNipozil uththara koosa mangkaikku arasee iruLee veLiyee ikaparam aaki irunthavanee பொ-ரை: உண்மை அன்பர் முற்றிலும் அனுபவிக்கும் அருளமுதே! அழகிய சோலை சூழ்ந்த உத்தர கோச மங்கைப் பதிக்கு மன்னவனே! மறையாயும், வெளியாயும் இருப்பவனே! இம்மை மறுமைகளாகி இருந்தவனே என்றும் மாற்றமே இல்லாத மெய்ப்பொருளே ! தனியேனாகிய யான் சரண் புகும் இடமே ! உன் பெருமையை நிந்திப்பார்க்கு அச்சமானவனே! அடியேனைக் கைவிட்டு விடாதே! Thou art verily a treasure for me and a heaven for me. But, to those who seek to belittle Thee, Thou art a chilling fright indeed! Thou grace incarnate, worshipped by truth seekers, Pray leave me not high and dry. Lord of Uththara-Kosa-Mangai that abounds in bounteous groves, Thou art at once darkness and light: at once this world here and the next over there. கு-ரை: என்றும் நிலைத்த பொருளையே பொருள் என்றார். 'பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்' என்ற குறள் அடியும் காண்க. வெருள் - அச்சம். அச்சத்திற்கு ஏதுவானவனை அச்சமென்ப. 'புறச் சமயத்தவர்க்கு இருளாய்' என்றபடி இறைவன் தன்னையடையாதார்க்கு மறை பொருளாயிருத்தலின் அவனை 'இருள்' என்றார். அடைந்தார்க்கு அவன் வெளிப்படையாகத் தோன்றுதலின், 'வெளி' என்றார். இம்மை மறுமைக்குக் காரணம் ஆதலின் இகபரமாகி என்றார். 18. இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னினல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா வருந்தின னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்: ஒற்றி வை; என்னின் அல்லால், விருந்தினனேனை, விடுதி கண்டாய் - மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே, மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே irunthu ennai aaNdu koL viRRukkoL oRRi vai ennin allaal virunthinaneenai viduthi kaNdaay mikka nanjsu amuthaa arunthinanee mannum uththara koosa mangkaikku arasee marunthinanee piRavi piNi paddu madangkinarkkee பொ-ரை: பாற்கடலில் எழுந்த கொடிய பெருவிடத்தை அமுதமாக உண்டவனே! நிலைபெற்ற உத்தர கோச மங்கைக்கு அரசே! பிறவியாகிய நோயில் சிக்கி முடக்கமுற்றவர்களுக்கு நல்ல மருந்து ஆனவனே! அடியேன் முன்பு எழுந்தருளியிருந்து ஆட்கொள்ள வேண்டும். வேண்டுமாயின், என்னை விற்றுக் கொள்ளுக அல்லது ஒற்றி வைப்பாய் என்று கூறுவதல்லாமல் வேறொன்றும் அறியாத என்னை உன் திருவருட்குப் புதியதாய் உடையவன் என்று என்னை நீக்கி விடாதே! Thou art truly a medicine for those groaning under the ills of birth cycles! Do as Thou please, Oh Lord, take me in, sell me, or put me under mortgage. Apart from crying out in this manner, I, a new guest in the house of god, know not what to say. Oh Lord of the eternal Uththara-Kosa-Mangai, that consumed even the virulent poison as elixir, pray, forsake me not. கு-ரை: மடங்குதல் - தாழ்தல், முடங்குதல், அருள் ஆசானோடு வந்த அடியார்கள் தனக்கு முன்னே அருள் பெற்று விட்டபடியால் தன்னை 'விருந்தினன்' என்றார். பிற இடங்களில் அவர்களைப் பழவடியார் என்பதும் காண்க. இருந்து என்பதற்கு உள்ளத்தே இருந்து என்றும் பொருள் கொள்வர். உடல் பொருள் ஆவி மூன்றையும் இறைவனிடத்து ஒப்புவித்தமையால் அவனுக்கு விற்பனை முதலிய செய்தற்குரிய எல்லாச் சுதந்திரங்களும் உண்டு என்று குறிப்பித்தார். சுதந்திரமுடைய அவன் யாது செய்யினும் அதனைப்பற்றி வினவத் தனக்கு உரிமை இல்லை என்றும் குறித்தார். விற்றுக் கொள்ளுதலாவது உலகப் பாசத்திற்குத் தன்னை ஒப்புவித்து முடிவாகத் தன்பாற் கொள்ளுதல், ஒற்றிவைத்தல் சில காலங் கழித்து மீட்பித்தலைக் குறிக்கும். 19. மடங்கவென் வல்வினைக் காட்டைநின் மன்னருட் டீக்கொளுவும் விடங்கவென் றன்னை விடுதிகண் டாயென் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொ ளுத்தர கோசமங் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும் விடங்க, என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தர கோச மங்கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே. madangka en valvinai kaaddai nin man aruL thiikkoLuvum vidangka en thannai viduthi kaNdaay en piRaviyai veerodum kaLainthu aaNdukoL uththara koosa mangkaikku arasee kodung karikkunRu uriththu anjsuviththaay vanjsi kompinaiyee பொ-ரை: எனது பிறவி மாமரத்தை வேரோடு வெட்டி எறிந்து என்னை ஆட்கொண்டு அருளும் உத்தர கோச மங்கைக்கு அரசே! மலைபோன்று கொடுமை மிக்க யானை வடிவை உடைய கயாசுரனைக் கொன்று தோலுரித்துப் போர்த்தனை. அதுகண்டு வஞ்சிக் கொடி போன்ற உமையம்மை அஞ்சும்படிச் செய்தனை. எனது கொடிய வினைகளின் தொகுதியான காட்டினை முற்றிலும் அழிக்க உனது நிலைபெற்ற அருளாகிய பெருந்தீயினை மூட்டிக் கொளுத்தும் வீரனே! அடியேனைக் கைவிட்டு விடாதே! Oh fair one! that burns all my heavy load of evil, by Thy eternal flame of grace, pray do not forsake me. Lord of Uththara-Kosa-Mangai, root out my birth cycles and make me Thine. Thou that caused fright in Thy tendril like consort, while skinning a wild pachyderm (Kayaasuran, in the form of a ferocious elephant in the days of yore). கு-ரை: மடங்க = அடங்கி யொழிய; முனிவர்க்குத் தீங்கிழைத்த கயாசுரனைக் கொன்று அவனது தோலைப் போர்த்த காலை, இறைவனது தோற்றம் யானையின் தோற்றம் போன்றமையின் அது மென்மை மிக்க அருள் அன்னைக்கு அச்சத்திற்கு ஏதுவாயிற்று. இறைவன் தனது வீரச் செயலாலே தமது உடலை ஒழித்துவிட வேண்டும் என்பதே அடிகள் கருத்து. தமது தீவிரம்பற்றி அவ்வாறு கூறினர். 20. கொம்பரில் லாக்கொடி போலல மந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா வும்பருள் ளாய்மன்னு முத்தர கோசமங் கைக்கரசே யம்பர மேநில னேயனல் காலொடப் பானவனே கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே வெம்புகின்றேனை விடுதி கண்டாய் - விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு ஆனவனே kompar illaa kodipool alamanthanan koomaLamee vempukinReenai viduthi kaNdaay viNNar naNNukillaa umpar uLLaay mannum uththara koosa mangkaikku arasee amparamee nilanee anal kaalodu appu aanavanee பொ-ரை: தேவர்களும் அணுக முடியாத மேலிடத்தில் இருப்பவனே! நிலைபெற்ற உத்தரகோச மங்கை மன்னனே! வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் ஐம்பூதங்களையும் வடிவமாகக் கொண்டு அவையானவனே! என்றும் மாறாத இளமைச் செவ்வி உடையவனே! படர்தற்குக் கொழு கொம்பில்லாத கொடிபோன்று திரிந்து சுழன்றேன். வீட்டை அடைதற்குத் தவிக்கின்ற என்னை விட்டு விடாதே! I got withered and grief stricken, much like a tendril without any support. Leave me not Oh fair one of the skies above, beyond the reach of all heaven dwelling gods. Lord eternal of Uththara-Kosa-Mangai, manifesting Thyself as space, land, fire, wind and water. கு-ரை: கொடிபோல் அலமந்தனன் என்றது அருள் பெறுதற்கு முன்னிருந்த சத்திநிபாத நிலையைக் குறிக்கும் என்ப. கோமளம் என்பது இளமையையும் அழகையும் குறிக்கும். வெம்புதல் - தவித்தல், உம்பர் என்றது சிதாகாயத்தை. அம்பரம் - வான், அப்பு - நீர், கால் - காற்று. 21. ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னாலலைப்புண் டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத் தேனையும் பாலையுங் கன்னலை யும்மமு தத்தையுமொத் தூனையு மென்பினை யும்முருக் காநின்ற வொண்மையனே ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண் டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய் - வினையேன் மனத்துத் தேனையும், பாலையும், கன்னலையும் அமுதத்தையும், ஒத்து ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே aanaivem pooril kuRunthuuRu ena pulanaal alaippuN deenai enthaay viddiduthi kaNdaay vinaiyeen manaththu thenaiyum paalaiyum kannalaiyum amuthaththaiyum oththu uunaiyum enpinaiyum urukkaa ninRa oNmaiyanee பொ-ரை: எனது அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண் தேனும், பாலும் கருப்பஞ்சாறும், இனிய அமுதமும் போன்று தித்தித்து என் தசையையும் எலும்பையும் உருக வைத்த ஒளி வண்ணனே! கருமையான ஆனைச் சண்டையில் அகப்பட்ட சிறு செடி போல ஐம்புல ஆசைப் போரில் அகப்பட்டுத் திரிவுற்றுத் துயருறும் என்னைக் கைவிட்டு விடாதே! I stand battered by the five senses, Oh Sire, just like tiny shrubs caught between fierce warring elephants. Wilt Thou then forsake me? Thou effulgent one, that showers kindness on me, melting my flesh and bones, Thou like unto honey and cane juice and ambrosia to me, that am evil at heart . கு-ரை: யானைகள் செய்யும் சண்டையில் அவற்றின் காலில் அகப்பட்ட சிறு செடியானது மிதிபட்டு அங்குமிங்கும் அலைபட்டுக் களையப்படாது கிடக்கும். அதுபோன்று ஐம்புலனாசையிலகப்பட்டுத் துயருற்றும் உடல் நீங்காமை குறித்தவாறு. வினைப்போகத்தால் உடல் நீங்காமையின் அடிகள் தம்மை 'வினையேன்' என்றார். கன்னல் = கரும்பு. இங்கு அதன் சாற்றினைக் குறிக்கும். சருக்கரை என்பாரும் உளர். அமுதம், மருந்தையும் தேவர் உணவையும் குறிக்கும். சருக்கரைப் பொங்கல் முதலிய இனிய உணவுகளையும் அமுதம் என்பாரும் உளர். அமுது என்ற சொல், சோற்றினைக்குறித்தல் காண்க. தூறு=சிறு செடி. குறு என்ற சொல் மிகச் சிறுமையைக் குறிக்கும். ஒண்மை= ஒளி, அழகு. 22. ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும் வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட் கண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை யாண்மைய னேயலிப் பெற்றியனே ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே, விட்டிடுதி கண்டாய் - மெய் அடியவர்கட்கு அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம் பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே oNmaiyanee thiruneeRRai uththuuLiththu oLimiLirum veNmaiyanee viddiduthi kaNdaay mey adiyavarkadku aNmaiyanee enRum seeyaay piRarkku aRithaRku arithaam peNmaiyanee thonmai aaNmaiyanee ali peRRiyanee பொ-ரை: ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடியார்களுக்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியார் அல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கு அரிய பொருளாய் இருப்பவனே! இன்ன வடிவம் என்று அறிய முடியாதவனே! பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே ! ஆணாய் இருப்பவனே ! அலித்தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டு விடாதே! Ever standing by Thy true devotees and ever far away from all others, Thou primordial male and yet Thou female beyond comprehension, and neither male nor female, Pray forsake me not, Oh bright effulgence with profuse holy white ash smeared all over Thy body . கு- ரை: ஒண்மை=அழகு; ஒளித்தன்மை என்றும் கூறலாம். உத்தூளித்து = நீர் கலவாத பொடியைப் பூசி தொன்மை என்பதைப் பெண்மை, அலி என்பவற்றிற்கும் கூட்டலாம். உயிர்கள் நினைந்த வடிவின் படி அவர்களுக்குத் தோன்றுதலின் மூவகையும் கூறினார். அது அநாதியே நிகழ்தலின் தொன்மை என்றார். பெற்றி= தன்மை. மூன்றாம் அடியில், 'பிறர்க்கு, என்றும் சேயாய்' என மாற்றுக. 23. பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன் மற்றடி யேன்றன்னைத் தாங்குந ரில்லையென் வாழ்முதலே உற்றடி யேன்மிகத் தேறிநின் றேனெனக் குள்ளவனே பெற்றது கொண்டு, பிழையே பெருக்கிச், சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை, விடுதி கண்டாய் - விடிலோ கெடுவேன் ; மற்று, அடியேன் -தன்னைத், தாங்குநர் இல்லை; என் வாழ் - முதலே; உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன், எனக்கு உள்ளவனே. peRRathu koNdu pizaiyee perukki surukkum anpin veRRu adiyeenai viduthi kaNdaay vidiloo keduveen maRRu adiyeen thannai thangkunar illai en vaazmuthalee uRRu adiyeen mika theeRi ninReen enakku uLLavanee பொ-ரை: எனது வாழ்க்கைக்குக் காரணமான முதற்பொருளே! எனக்குப் பற்றுக் கோடாய் உள்ளவனே! அடியேன் இவ்வுலகம் இத்தன்மையது என்று அறியாது உன்னை விட்டு விலகியதால் வரும் துன்பத்தை அனுபவித்து மிகவும் தெளிவாக நின்றேன். எனது உள்ளத்தினனாய் இருப்பவனே! அடியேனுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு தவறுகளையே வளர்த்து, சுருங்கிய அன்புடைய பயனற்ற அடியேனைக் கைவிட்டு விடாதே! நீ கைவிடின் அடியேனைத் தாங்குபவர் வேறில்லை. அதனால் கெட்டொழிவேன். Devoid of devotion, full of faults, this worthless slave of Thine, doth revel in worldly gains. Yet forsake me not, Oh Lord. For, shouldst Thou forsake, I will be lost and gone. I have no one else to support me. கு-ரை: பெற்றது= பெற்றவுடம்பு. உற்று = திருவடியடைந்து, தேறி = தெளிந்து, நம்பி. உள்ளவன்= உள்ளத்தவன், உள்ளீடானவன். ஆதாரமாய் இருப்பவன், உயிர்க்கு உயிராய் இருப்பவன் என்றலுமொன்று. 24. உள்ளன வேநிற்க வில்லன செய்யுமை யற்றுழனி வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப் பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட் போத லொட்டா மெள்ளென வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை யெறும் பெனவே. உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல்வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே uLLanavee niRka illana seyyum maiyal thuzani veLLana leenai viduthi kaNdaay viyan maath thadakkai poLLal nalveezaththu uriyaay pulan ninkaN poothal oddaa meLLenavee moykkum neykkudam thannai eRumpu enavee பொ-ரை: மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண் துளையினை உடைய அழகிய யானையின் தோலை உடையவனே! ஐம்புலன்களும் உன்பால் செல்லவொட்டாமல் நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல என்னை நெருங்கி மொய்க்கின்றன. அதனால் உண்மையானவை செய்வதை விடுத்து பொய்யானவற்றையே செய்யும் மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடையவன் ஆயினேன். அவ்வாறு தூயவன் அல்லாதவன் ஆகிய என்னைக் கைவிட்டு விடாதே ! I stand in fiery vanities, leaving aside all truth, wallowing under evanescent falsehood! Oh Lord, Thou donning the hides of hollow trunk elephant, I am lured away from Thee by the five senses that drag me into fleeting pleasures, much as ants are drawn to a pot of ghee to which they swarm in large numbers. கு-ரை: இல்லன என்பது நிலையாதனவற்றைக் குறிக்கும். துழனி=ஆரவாரம். வெள்ளன் = வெள்ளத்தை உடையவன். பெருக்கினன். அலேனை = அல்லாதவனை, அல் எனப் பிரித்து இருள் உடையேனை என்பாரும் உளர். அல் = இருள். வியன் = அகன்ற, மா= பெரிய. தடக்கை = நீண்ட கை, புலன்=ஐம்புல அவா. ஆசைகள் ஒவ்வொன்றாக ஏற்பட்டு மிகப் பெருந்துன்பம் விளைத்தலின், 'மெள்ளெனவே மொய்க்கு' மென்றார். சிறிதாய் இருப்பினும் கடுப்பு மிக விளைத்தலால் 'எறும்'பென்றார். 25. எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய கூற்றொடுங்க வுறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர் பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே எறும்பிடை நாங்கூழ் எனப், புலனால் அரிப்புண்டு, அலந்த வெறும் தமியேனை விடுதிகண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது -அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும்பதமே, அடியார் பெயராத பெருமையனே eRumpidai naangkuuz ena pulanaal arippuNdu alantha veRum thamiyeenai viduthi kaNdaay veyya kuRRu odungka uRumkadi poothu avaiyee uNarvu uRRavar umpar umpar peRum pathamee adiyaar peyaraatha perumaiyanee பொ-ரை: கொடிய இயமன் ஒடுங்கும்படி அவன்மேல் மணம் நிறைந்த தாமரை மலர்களை ஒத்த உன் திருவடிகள் பொருந்தின. அந்தத் திருவடிகளையே அழுந்தி வழுத்திய அடியார்கள் தேவர்க்கும் மேலான பதவியை உடையவனாகிய உன்னைப் போற்றிப் பெற்றனர். அந்த அடியார்கள் உன்னை விட்டு நீங்காத பெருமை உடையவனே! எறும்புகள் பலவற்றினிடையே அகப்பட்ட நாங்கூழ்ப்புழு அரிக்கப்பட்டு வருந்தினாற்போல் அடியேன் ஐம்புலன்களால் அரிக்கப்பட்டு, துன்புற்று பயனில்லாத நிலையில் உள்ளேன். அடியேனைக் கைவிட்டு விடாதே! Pray forsake not this lonesome, forlorn me, me lying like a worm in an ant hill getting wearied due to the constant pricking of the five senses. Thou that doth not abandon Thy devotees even for a little while. Thou, abode of bliss attained by those higher than the high above. கு-ரை: நாங்கூழ்= நாகப்பூச்சி, பூநாகம் என்றும் கூறுப. அலந்த = வருந்தின. கடிப்போது என்பதற்கு கடிதலையுடைய திருவடிமலர் என்றும் பொருள் கொள்வர். கடி என்பது மணத்தை உணர்த்தும். உம்பர் உம்பர்= மேலிடத்திற்கு மேலான. பதம்= நிலை, பதவி 26. பெருநீ ரறச்சிறு மீன்றுவண் டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கை பொங்கி வருநீர் மடுவுண் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழு மணியே பெரு நீர் அறச், சிறுமீன் துவண்டு - ஆங்கு, நினைப் பிரிந்த வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி வரும் நீர்மடுவுள், மலைச்சிறு தோணி வடிவின், வெள்ளைக் குருநீர்மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே! peruniir aRa siRumiin thuvaNdu aanku ninai pirintha veru niirmaiyeenai viduthi kaNdaay viyan kangkai pongki varu niir maduvuL malaissiRu thooNi vadivin veLLai kuruniir mathi pothiyunj sadai vaana kozumaNiyee. பொ-ரை: மேல் உலகில் உள்ள சிறந்த இரத்தினம் போன்றவனே! வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் விளங்குகின்ற சடையினை உடையவனே! பெரிய கங்கை நீர்ப் பெருகுகின்ற குளத்துள் எதிர்த்து நிற்கின்ற சிறிய தோணியின் தோற்றம் போல் உள்ளது அப்பிறைச் சந்திரன். மிகுதியான நீரை உடைய குளத்தில் நீர் வற்றி வாடிய நிலை ; அதுசமயம் அக்குறைந்த நீரில் சிறிய மீன்கள் வாடினாற்போல நான் உள்ளேன். உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டுவிடாதே! Like a little fish that shrivel and shrink even as the lakes, go dry, I am in despair, Oh Lord, ever since I departed from Thee. Forsake me not Oh lustrous gem of the heavens above, donning a white crescent of the shape of a boat on Thy matted hair, a boat wafted across deep pools in the gushing waters of the mighty Ganges. கு-ரை: துவண்டாங்கு = துவளுதல் போல. துவளுதல் = அசைதல், வாடுதல், வெரு நீர்மை= வெருவும் நீர்மை, வெருவுதல்= அஞ்சுதல், மிகப்பெரிதாகப் பொங்கி வந்த கங்கையானது இறைவனது சடாபாரத்துள் அசைவின்றி அடங்கினமையின் சடையிலுள்ள கங்கையை நீர்மடுவுக்கு உவமித்தார் . மலை= மலைதல்,எதிர்த்தல், வெள்ளம் வரும்போது அங்குமிங்கும் அலைதலையே, மலைதல் என்றார். குரு=நிறம்,நீர்= தன்மை. 27. கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித் தழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்நின் புலன்கழலே கொழுமணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய்ம் முழுதும் கம்பித்து அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக் கழுமணியே, இன்னும்காட்டு கண்டாய் நின் புலன் கழலே. kozumaNi eer nakaiyaar kongkai kunRidai senRu kunRi vizum adiyeenai viduthi kaNdaay meym muzuthum kampiththu azum adiyaar idai aarththu vaiththu aadkoNdaruLi ennai kazumaNiyee innum kaaddu kaNdaay nin pulan kazalee பொ-ரை: உடல் முழுதும் புளகம் கொண்டு நடுநடுங்கி அழுது தொழும் அடியார் நடுவே என்னைப் பொருத்தி வைத்து ஆட்கொண்டருளிய மாணிக்கமே! மீண்டும் என்னைத் தூய்மை செய்த மாணிக்கமே! இன்னும் ஒருமுறை உன்னுடைய அறிவு மயமாகிய திருவடியைக் காட்டி அருளுக. முத்துப் போன்ற பல்லினை உடைய மாதரது நகிலென்னும் மலைமிசை அறிவு குறைந்து போய் விழுகின்ற அடியேனைக் கைவிட்டு விடாதே! இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக. Even though, I, Thy vassal am prone to rot, falling for luscious dames of hill-like bosom, pray, forsake me not, Oh my Lord! Once before, Thou admitted me into the core of Thy devotees who cried out for Thee with their frames in quiver. Thou took me under Thee then and showered blessings on me. I beseech Thee for grace again, purifying me and showing me Thy bejewelled Feet. கு-ரை: கொழுமணி = முத்து. நகைக்கு உவமித்தமையால் மணி என்ற பொதுச் சொல் முத்தைக் குறித்தது. கொழு = செழிப்பான. ஏர் = அழகு. குன்றி= குறைந்து, அறிவு வியாபகங் குறைவுற்று. கம்பித்து= நடுங்கி, ஆர்த்து= பொருந்தி. கழு= கழுவு; புலன் = அறிவு. 28. புலன்கடி கைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணு மண்ணுமெல்லாங் கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே துலங்குகின் றேனடி யேனுடை யாயென் றொழுகுலமே புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும், மண்ணும், எல்லாம் கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே ! துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே. pulankaL thikaippikka yaanum thikaiththu inku oor poyn neRikkee vilangkukinReenai viduthi kaNdaay viNNum maNNum ellaam kalangka munniir nanjsu amuthu seythaay karuNaa karanee thulangkukinReen adiyeen udaiyaay en thozukulamee பொ-ரை: விண்ணுலகமும், மண்ணுலகமும் முழுவதும் அஞ்சிக் கலக்கமுற்ற போது கடலில் எழுந்த ஆலகால விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! பாசத்திற்கு அஞ்சி நடுங்குவேனாகிய அடியேனை அடிமையாக உடையவனே! யான் வணங்கும் இனத்தவனாய் வந்தவனே! ஐம்புலன்கள் என்னைத் திகிலடையும்படி செய்ய யானும் திகிலடைந்து இங்கு ஒரு நிலையற்ற வழியிலே விலகித் திரிகின்ற என்னைக் கைவிட்டு விடாதே! I happen to depart from Thee and go astray due to the bewildering acts of my five senses. Pray, forsake me not, Oh Lord of compassion that drank as elixir the sea churned venom, even as the earth, the heavens and all shuddered in fright in the days of yore. Lord of my clan, I now stand before Thee here for mercy. கு-ரை: முந்நீர் = கடல்; ஆற்றுநீர், மழைநீர், ஊற்றுநீர் என்ற மூன்றும் உடைமையான் முந்நீர் என்ப. அது படைத்தல், காத்தல், அழித்தல் இம்மூன்றினையும் செய்யவல்ல தென்ப . துலங்குகின்றேன்=துளங்குகின்றேன். துளங்குதல்= அசைதல். தொழுகுலம் = வணங்கத்தக்க இனம். இறைவன் வேதியனாக ஆட்கொள்ள வந்தமையால் வேதியனே என்றும் அச்சொற்றொடர்க்குப் பொருள் கொள்ப. இறைவன் வழிபடப்படும் இனத்தவனாயும் உயிர்கள் வழிபடும் இனத்தவராயும் இருப்பதைக் காண்க. குலம்= கோயில் என்பாருமுளர். தேவர் கலக்கத்தை நஞ்சுண்டு நீக்கியதைப் போலத் தம்முடைய கலக்கத்தையும், பாச நஞ்சினைப் போக்கி, நீக்கி அருளல் வேண்டும் என்று இதனுள் குறித்தார். 29. குலங்களைந் தாய்களைந் தாயென்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கலெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கலந் தாமரை மேனியப் பாவொப்பி லாதவனே மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொரு மத்துறவே குலம்களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம் விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை அலங்கல் அம்-தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே kulam kaLainthaay kaLainthaay ennai kuRRam koRRa silaiyaam vilangkal enthaay viddiduthi kaNdaay ponnin minnu konRai alangkal anthaamarai meeni appaa oppu ilaathavanee malangkaL ainthaal suzalvan thayiril poru maththu uRavee பொ-ரை: பொன் போல மின்னுகின்ற கொன்றை மாலை அணிந்த அழகிய செந்தாமரை மேனி உடைய அப்பனே! யாரும் தனக்கு நிகரில்லாதவனே! கடைகின்ற மத்து பொருந்திய உடன் தயிர் சுழலுகின்றது. அவ்வாறு என்னைப் பற்றிய ஐந்து பாசங்களாலும் அலைவுற்று வருந்துகிறேன். எனது குற்றங்களை எல்லாம் ஒழித்தவனே! எனது பசுபோதத்தையும் நீக்கினாய். வெற்றி வில்லாக மேருவை உடைய எந்தையே! எனைக் கைவிட்டு விடாதே! Thou freed me of all the ills of caste and creed, Thou brandishing the mighty Meru mount, as The victorious bow. Pray, forsake me not, Oh Sire of lotus-like frame, sporting a garland of Konrai (cassia flowers) that shines bright with golden rays. Oh unparalleled one, I am swirling around here like a churning rod and am wafted about under the spell of the five malams. (the five malefic afflictions that drag me down). கு-ரை: 'சுழல்வன்' என்பதைக் 'குற்றம்' என்பதனோடு முடிக்க; குலம்= கூட்டம், 'குற்றம்' என்பதைக் குலம் என்பதனோடு சேர்க்க. சாதி என்று பொருள் கொண்டு சாதிப் பற்று முதலியவற்றைக் களைந்தாய் என்றும் பொருள் கொள்ளலாம். குற்றம் களைந்தாய் என்று வேறு பிரித்துப் பொருள் கொள்ளுப. ஐந்து மலங்களாவன - ஆணவம், கன்மம், மாயை, வைந்தவம், திரோதாயி. சிலர், வைந்தவத்திற்குப் பதிலாக மாயேயம் என்பர். வைந்தவம் - சுத்த மாயை காரியங்கள்; திரோதாயி - மறைப்புச்சத்தி; 'மாயேயம்' என்பது மாயையாலாகிய எல்லாக் காரியங்களையும் குறிக்கும். 30. மத்துறு தண்டயி ரிற்புலன் றீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக் கொத்துஉறு போது மிலைந்து, குடர் நெடுமாலை சுற்றித் தத்துறு நீறுடன் ஆரச்செம்-சாந்து அணி சச்சையனே. maththuRu thaN thayirin pulan thiikkathuvak kalangki viththuRuveenai viduthi kaNdaay veNthalai milaissi koththuRu poothu milainthu kudar nedumaalai suRRi thaththuRu niiRudan aara senj saanthu aNi sassaiyanee பொ-ரை: வெள்ளிய தலையை அணிந்து, திரட்சியுடைய கொன்றைப் போதினைச் சூடினாய். குடர் போலும் நீண்ட தோல் மாலையைக் கழுத்தினைச் சுற்றி அணிந்து, அசைந்து விளங்குகின்ற திருநீறும் சந்தனத்தின் சிவந்த குழம்பும் அணிந்த இளமையான தலைவனே ! மத்துப் பொருந்திய குளிர்ந்த கட்டித் தயிர் உடைதல் போல, ஐம்புலனாகிய தீப்பற்ற அதனாற்கலங்கி வித்தின் தன்மை அடைவேனைக் கைவிட்டு விடாதே ! Wouldst Thou forsake me Oh Lord, even as I am routed by the fire of the five senses, and am wafted about much like cold curd under the churning rod! Pray, forsake me not, Thou, donning a string of skulls, cassia flowers, garland of entrails, wearing ashes and fragrant sandal paste! Thou, the essence of all matter! கு-ரை: வித்து= நடுக்கம். இது 'விதுப்பு' என்பது. இது முதனிலை மாத்திரையாய் நின்று ஒற்றிரட்டி இப்பொருள் தந்தது. கொத்து = திரட்சி. குடர்= ஒடுங்கிய தேவர்களது குடர். அல்லது குடர்போன்ற நெடிய மாலை. மிலைச்சி= சூடி. தத்து = தத்துதல்; அசைதல், ஆரம்= சந்தனம். சச்சையன் = சச்சு +ஐயன் சச்சு - நுட்பம், இளமை, சச்சு, என்பது சத்து என்பதன் போலியாகக்கொண்டு, மெய்ப்பொருளாகிய ஐயனே என்பதும் உண்டு. சங்காரக் கடவுளாதலின், 'குடர்நெடுமாலை சுற்றி' என்றார். வெண்டலை தாருகவன முனிவரால் விடுக்கப்பட்டது 31. சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால் நிலநெருப்பாம் விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய் பச்சைய னேசெய்ய மேனிய னேயொண் படவரவக் கச்சைய னேகடந் தாய்தடந் தாள வடற்கரியே சச்சையனே, மிக்கதண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம் விச்சையனே, விட்டிடுதி கண்டாய் வெளியாய், கரியாய் பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக் கச்சையனே - கடந்தாய் தடம் தாள அடல் கரியே sassaiyanee mikka thaNpunal viN kaal nilam neruppaam vissaiyanee viddiduthi kaNdaay veLiyaay kariyaay passaiyanee seyya meniyanee oN pada arava kassaiyanee kadanthaay thadam thaaLa adal kariyee பொ-ரை: வெண்ணிறம் உடையோய்! கருநிறம் உடையோய்! பச்சை நிறம் உடையோய் ! சிவந்த திருமேனியாய்! ஒளி விளங்கும் படமுடைய பாம்பினைக் அரைக்கச்சாக அணிந்தவனே! அகன்ற அடியினை உடைய வலிமிக்க யானை வடிவுடைய கயாசுரனை வென்றவனே! மிக நுட்பமான மெய்ப் பொருளாகிய தலைவனே! வெளிப்படையான நீர், வான், காற்று, நிலம், நெருப்பு என்பனவற்றோடு கலந்து அவையாய வியப்புச் செயலுடையவனே! என்னைக் கைவிட்டு விடாதே! Thou, essence of all matter, adept at the art of manifestation - manifesting Thyself as water, fire, land, air and sky! Pray, forsake me not, Thou that art white and black, green and red of frame, Thou with a bright hooded snake as girdle, Thou that subdued the mighty wide footed pachyderm much to the relief of Thy consort in the days of yore! Note: White colour due to ash smeared over His frame. Black, the colour of poison in the neck. Green, the colour of Uma Devi, on the left half of His frame. Red, the complexion of the male half of Lord Civa. Reference to the skinning of an elephant. When a recalcitrant Asura came before the Lord in the guise of an elephant, He tore off his skin and wrapped it around Himself (vide Kayaasuran episode - See Story No. 2) கு-ரை: மிக்க= வெளிப்படையாய்; அறிவு நுண்பொருள் அத்துவிதமாய்ப் பூதப்பொருளில் கலந்து அவையாய்த் தோன்றல் வியத்தகு செயல் என்பார், 'விச்சையனே' என்றார். புகை நிறம், 'கரியாய்' என்பதனுள் அடங்குதலின், நிறங்கள் ஐந்துங் கூறியவாறாம். 'நிறங்களோரைந் துடையாய்' என்றதும் காண்க. கயாசுரன் கதை முன் கூறப்பட்டது. 32. அடற்கரி போலைம் புலன்களுக் கஞ்சி யழிந்தவென்னை விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே அடல் கரிபோல், ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய் விழுத் தொண்டர்க்கு அல்லால் தொடற்கு அரியாய், சுடர் மாமணியே, சுடுதீச் சுழலக் கடல் கரிது ஆய்எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக் கண்டனே adal karipool aimpulan kaLukku anjsi azintha ennai vidaRku ariyaay viddiduthi kaNdaay vizuth thoNdarkku allaal thodaRku ariyaay sudar maamaNiyee suduthii suzala kadal karithu aay ezunanjsu amuthu aakkum kaRaikkaNdanee பொ-ரை: மேன்மையான அடியார்களுக்கல்லது ஏனையோர்க்கு பற்றுதற்கரியவனே! ஒளிகாலும் பெரிய மாணிக்கமே ! கடல் சுடும் தீயாகிய வடவையும் நிலை கலங்க, திருப்பாற்கடலிலே எதிர்பாராதபடி அருமையாய் எழுந்த விடத்தை அமுதமாக்கிய நீலகண்டப் பெருமானே! தவிர்தற்குக் கூடாதவனே! வலிய யானை போன்ற ஐம்பொறிப் பற்றுக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே! Forsake me not, Oh Lord! Lord that would not let me down, as I tremble and drown before the mighty elephant like five senses! Thou art beyond the touch of any but Thy pristine band of devotees. effulgent one, the dark necked one that turned the venom of the ocean into ambrosia during churning by the devaas and the asuraas. கு-ரை: அழிந்த = மனம் தளர்ந்த. விடற்கரியாய்= பற்றி விடக்கூடாத அருமை உடையவனே. சுடுதீ= வடவை. வடவைத்தீ, கடலில் நீர் மிகாது வற்றுதலை நிகழ்த்தலின் 'சுடுதீ' என்றார். கடற்கு= கடலிலே. கறைக்கண்டனே என்பதற்குப் பின் 'விடற்கரியாய்' என்பதற்குப் பொருள் கொள்ளுக. 33. கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்து மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின் விரைமலர்த்தாள் பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் கொண்டெனெந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே கண்டது செய்து, கருணை-மட்டுப் பருகிக் களித்து மிண்டு கின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த்தாள் பண்டு தந்தால் போல் பணித்துப், பணிசெயக் கூவித்து, என்னைக் கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குது குதுப்பே. kaNdathu seythu karuNai maddu paruki kaLiththu miNdukinReenai viduthi kaNdaay nin virai malarththaaL paNdu thanthaaR pool paNiththu paNi seyak kuuviththu ennai koNdu en enthaay kaLaiyaay kaLaiyaaya kuthukuthuppee பொ-ரை: என் தந்தையே! உனது அருளாகிய தேனை மிகுதியாகப் பருகியதால் களிப்பு உண்டாயிற்று. அக்களிப்பின் காரணமாக மனம் போனவாறு எல்லாம் போய் நல்லது செய்யாமல் அல்லது செய்து வருகின்றேன். இவ்வாறு போகின்ற என்னைக் கைவிட்டு விடாமல் தடுத்து அருள் புரிவாயாக. மணம் நிறைந்த தாமரை மலர் போன்ற உன் திருவடியை அடியேன் காண்பதற்கு முன் காட்டினாற் போல மீண்டும் காட்டி அருள் புரிவாயாக. பிராரத்த வினையாகிய நிகழ் வினைக்கு நான் அஞ்சி நிற்பதால் "நான் எனது" என்ற தற்போதம் தலை தூக்கியது. அதன் காரணமாக இறைபணி ஆற்றாது பரபரப்பு அடைகின்றேன். வீடு பேற்றுக்குத் தடையாக உள்ள அந்தத் தற்போதத்தை வேரறக் களைந்து என்னைக் காத்தருள்வாயாக. I go on working even as I please, revel in the honey of grace, and roam about in joyous abandon. Yet, Oh Lord, forsake me not! Once before, Thou graced me with Thy flower like Feet of fragrance. Likewise, pray call out to me once again and command me to serve Thee. Rid me of faults and faulty revelries. கு-ரை: மட்டு= தேன், மது. 'ஒருவரை மதியா துறாமைகள் பேசி' என வன்தொண்டர் கூறிய கருத்தை ஒத்து நோக்குக. மிண்டுதல்= மதத்தாற் பொருதல். பணித்து = பணிவித்து. கூவுவித்து என்பது 'கூவித்து' என மருவிற்று. களை = இடுக்கண். பிராரத்தமாகிய நிகழ்வினைக்கு அஞ்சி, இறைபணி நில்லாமையால் உளதாம் தற்போதத்தைக் களைந்து அருள்க என்றார் 34. குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கனிவித் தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே. குது குதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில் விது விதுப்பேனை விடுதி கண்டாய் ? விரை ஆர்ந்து, இனிய மது - மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து எதிர்வது எப்போது? பயில்விக் கயிலைப் பரம்பரனே! kuthukuthupu inRi ninRu en kuRippee seythu nin kuRippil vithuvithuppeenai viduthikaNdaay virai aarnthu iniya mathumathu poonRu ennai vaazai pazaththin manam kaniviththu ethirvathu eppoothu payilvi kayilai paramparanee பொ-ரை: மிகுதியான மலர்களை உடைய தூய்மையான கயிலையில் வாழ்கின்ற மிக மேலானவனே! உன் திருவுள்ளக் கருத்தை அறிந்து அதன்படி நடக்காமல் என் மனத்தில் தோன்றியதை எல்லாம் செய்து வருகின்றேன். ஆனாலும் உனது திருக்குறிப்பை அறிவதில் ஆசை கொண்டு அதனை நாடி விரைந்து வருகின்றேன். என்னைக் கைவிட்டு விடாமல் ஆட்கொள்ளுவாயாக. வாழைப்பழத்தைப் போல என் மனத்தைக் கனியச் செய்து, மனம் நிறைந்த தெளிந்து இனிதாய் இருக்கின்ற தேனோடு மற்றோர் இனிமை கலந்தாற் போல நீ என்னிடம் கலந்து கொள்ளுவது எப்போது என்று கூறுவாயாக. I always do as I like, am devoid of the real, and am prone to neglect Thee. And yet, Oh Lord forsake not such a squalid kind of aspirant! Oh, Transcendent Lord of the effulgent mount Kailaash, when shalt Thou manifest Thyself before me, get my mind ripened into that rare repast, much as with plantain fruit and scented sweet honey! கு-ரை: குதுகுதுப்பு = மகிழ்ச்சி. 'குறிப்பில்' என்பதற்குக் 'குறிப்பினை இல்லாத' என்றும் பொருள் கொள்ளலாம். விதுவிதுப்பு = விரைதல், ஆசைப்படுதல், மது - மது, என்பது தேனொழுக்கினைக் குறித்தது. வாசனை உடைய தேன், அஃதில்லாத தேனிற்கலந்தாற் போல, இயக்குங் கடவுள் இயங்கும் உயிரிடைக்கலத்தல் கூறப்பட்டது என்றலும் ஒன்று . இரண்டுஞ் சித்துப் பொருளாதல் பற்றித் தேன் என்றார் என்ப. வாழைக் கனியானது, தானாக மெதுவாகக் கனிதலும், புகைமூட்டத்திற் கனிதலும் உண்டு. மனம் அங்ஙனம் பக்குவப்படுதலைக் குறித்தனர். பயில்வி= பயில்வீ; வீ பயில்= மலர் பொருந்து. 35. பரம்பர னேநின் பழவடி யாரொடு மென்படிறு விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மன மஞ்சிப் பொதும்புறவே பரம்பரனே, நின்பழ அடியாரொடும் என் படிறு விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய் மென் முயல் - கறையின் அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐவாய் அரவம் பொரும், பெருமான் - வினையேன் மனம் அஞ்சிப், பொதும்பு உறவே paramparanee nin paza adiyaarodum en padiRu virumpu aranee viddiduthi kaNdaay men muyalkaRaiyin arumpu ara neer vaithu aNinthaay piRavi aivaay aravam porumperumaan vinaiyeen manam anjsi pothumpu uRavee பொ-ரை: மெல்லிய, முயல் போன்ற களங்கத்தை உடைய இளம்பிறையையும், பாம்பையும் சமமாகச் சடையில் அமர்த்தி அவற்றைத் தலைக்கணியாய்க் கொண்டவனே! தீவினையுடையேன் உள்ளம் நடுங்கி ஒரு புகலிடத்தை அடையும்படி, பிறவிக்கேதுவான ஐம்புலன் எனும் ஐந்து வாயுடைய பாம்பானது தாக்குகிறது . பெருந்தகையோனே! மேலோர்க்கும் மேலோனே! உனது பழவடியாரோடு வஞ்சனை உடைய என்னையும் ஆட்கொள்ள விரும்பிய பாச நீக்க முதல்வனே! என்னைக் கைவிட்டு விடாதே! In spite of many shortcomings, Oh transcendent Lord, Thou liked me and favoured me as one of Thy devotees of long age. Pray, do not forsake me now, though I am still full of foul deeds. I stand forlorn and in my fright, look frantically for shelter. Oh Lord, that battles out the five hooded reptile of earthly births. Lord that wears a crescent and a cobra too! கு-ரை: என்படிறு - 'படிறு என்' என மாறி, 'படிறுடைய என்னை ' என்று பொருள் கொள்ளுக. என் - 'என்னை' என்பதன் கடைக்குறை. 'என் படிறு' என்பதற்கு எனது வஞ்சனை என்று பொருள் கோடலும் உண்டு. அரன்= பாசத்தை அழிப்பவன், கறை - களங்கம், சந்திரனிலுள்ள கறுப்பு, முயல் போலுதலின் அது 'முயற்கறை' என்னப்பட்டது. அரும்பு - தோற்ற நிலை - இங்கே அது பிறையை உணர்த்திற்று. அர=அரவு = பாம்பு, நேர் = சமமாக, பொரும்= சண்டையிடும். பொதும்பு = மரச்செறிவு, பொந்து, 'புகலிடம்' என்றும் பொருள் கொள்ளலாம். 36. பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் றீக்கதுவ வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவந் ததும்புமந் தாரத்திற் றாரம் பயின்றுமந் தம்முரல்வண் டதும்புங் கொழுந்தே னவிர்சடை வானத் தடலரைசே பொதும்பு உறுதீப்போல் புகைந்து எரியப், புலன் தீக் கதுவ வெதும்புறுவேனை விடுதி - கண்டாய் விரைஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே pothumpu uRu thiippool pukainththu eriya pulan thiikkathuva vethumpuRu veenai viduthikaNdaay virai aar naRavam thathumpum manthaaraththil thaaram payinRu mantham mural vaNdu athumpum kozuntheen avir sadai vaanaththu adal araisee பொ-ரை: வாசனை பொருந்திய தேன் நிறைந்த மந்தார மலரில் தங்கி ஏழிசையில் தாரம் என்னும் வல்லிசையை முதலில் எழுப்பிப் பின் மெல்லோசையை ஒலிக்கின்ற வண்டுகள் அழுந்தித் திளைக்கும் வளம்மிக்க தேன் பொழியும் மின்னும் சடையுடைய சிதாகாய நாட்டின் வலிமைமிக்க வேந்தே! மரச்செறிவில் பற்றிய நெருப்புப் போல புகை வீசியெரியும் ஐம்புலன்களாகிய தீ என்னைப் பற்றுதலால், உள்ளத்துயராகிய வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடாதே ! I slog under the pressure of the five senses that keep flaring up with smoke, like a bush on fire. Pray, forsake me not, Oh mighty Lord of the sky, with gleaming matted hair, full of fragrant and sweet honey brought in by bees humming low, around 'mandaara' groves. கு-ரை: மந்தார மலரைத் திறப்பதற்கு வல்லோசை வேண்டும். பொழிகின்ற தேனைப் பருகுவதற்கு மெல்லோசை போதும். முதலில் சடையிலுள்ள மந்தார முகையைத் திறந்து தேன் பொழிவித்து அத்தேனைத் தேருங்கால், மந்தவோசையை ஒலிக்குமென்று கருதுக. முரலுதல்= ஒலித்தல். அதும்புதல்= ஒதுங்குதல், அழுந்துதல், உடலிலுள்ள ஐம்புலன்கள், மரச் செறிவிலுள்ள தீப்போலும். தீ முதலிற் புகைந்து பின் மிளிர்வது, மெள்ள மெள்ள ஐம்புலன்கள் மனத்தையும் உயிரையும் பற்றுதற்கு உவமையாம். வானம்=பரமாகாசம். அதற்கு முதல்வன் கடவுளே யாதலின், அம்முதன்மை யுடையானை ' அடலரைசே' என்றார். 37. அரைசே யறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கட் டிரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந் தடர்வனவே அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு 'அஞ்சல்' என்னின் அல்லால் விரைசேர் முடியாய், விடுதிகண்டாய் வெள்-நகைக், கரும்-கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொன் பதப்புயங்கா, வரைசேர்ந்து அடர்ந்து என்ன, வல்வினை தான்வந்து அடர்வனவே araisee aRiyaa siRiyeen pizaikku anjsal ennin allaal viraiseer mudiyaay viduthikaNdaay veNnakai karungkaN thirai seer madanthai maNantha thirupoR patha puyangkaa virai seernthu adarnthu enna valvinai thaan vanthu adarvanavee பொ-ரை: வெண்மையான பற்களையும், கருமையான கண்களையும் உடைய திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பயன்பெற்ற பொன் போன்ற அழகிய திருப்பாதங்களை உடைய பாம்பணிந்த பெருமானே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போன்று, கொடிய வினைப் பயன்கள் என்னை வந்து தாக்குகின்றன. அரசனே! அறிவில்லாத சிறியேனின் குற்றத்தைப் பொறுத்து 'அஞ்சாதே' என்று நீ அருள் செய்தாலன்றி உய்யேன். மணங்கலந்த சடைமுடியாய்! என்னைக் கைவிட்டு விடாதே! Pray, forsake me not, Oh Lord, consort of the dark eyed one, with teeth white as the billows of the sea! Due to my past evil, I am now getting crushed in between two gnawing hills, Oh Lord donning colours, pray bear with me, for all my faults, and comfort me with the words "Fear Not'. கு-ரை: திரை = கடல். கண்ணாகிய கடலெனக் கொண்டு, 'உமாதேவி மணந்த அழகிய பொன்மேனியுடைய' என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. முத்தித்திரு- பாதத்தில் வீற்றிருப்பதை இங்குக் குறித்ததாகவுங் கருதலாம். 'உய்யேன்' தொக்கி நின்றது. அம்மை திருவடியில் வழிபட்டதாகவும் கூறலாம். 38. அடர்புல னானிற் பிரிந்தஞ்சி யஞ்சொனல் லாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே தொடர்வரி யாய்தமி யேன்றனி நீக்குந் தனித்துணையே அடர் புலனால், நின்பிரிந்து அஞ்சி, அம்-சொல் நல்லார் - அவர் - தம் விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும் சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதே தொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே adarpulanaal ninpirinthu anjsi anjsol nallaar avar tham vidar vidaleenai viduthikaNdaay virinthee eriyum sudar anaiyaay sudukaaddu arasee thozumparkku amuthee thodarvu ariyaay thamiyeen thani niikkum thanith thuNaiyee பொ-ரை: பெருக்கமாய் விளங்குகின்ற சோதிப் பிழம்பைப் போன்றவனே! சுடுகாடாகிய சங்கார முடிவின் முதலே! அடியார்க்கு அமுதமானவனே! அடியார் அல்லாதவர்கள் உன்னைப் பற்றுதற்கு அருமையானவனே! அடியேனின் தனிமையை நீக்கும் ஒப்பற்ற துணைவனே! என்னைத் தாக்குகின்ற ஐம்புல வேட்கையால் உன்னைப் பிரிந்து பயந்து அழகிய மொழி உடைய பெண்டிர் குழுவாகிய காட்டினைக் கடந்து வருவதற்கு இயலாத என்னைக் கைவிட்டு விடாதே! Parted from Thee, I stand here now in sheer fright, haunted by the warring senses, unable to break away from the band of sweet talking dames. Yet, forsake me not, Oh Thou an elixir for devotees! Lord of the burning ghat, like unto ever expanding tongues of flame! Thou, that are hard to accompany! Thou, peerless comrade, that ends my solitude. கு-ரை: விடர் - காடு, மலைப்பிளவு; எங்கும் அறிவு மயமாய்ச் செறிதலின் 'விரிந்தே யெரியுஞ்சுடர்' என்றார். சுடுகாடு என்பது எல்லாம் ஒடுங்கிய இடம். தனி = தனிமை 39. தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யானடந்த வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய மனத்துணை யேயென்றன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன்றுய ராக்கையின் றிண்வலையே தனித்துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த வினைத்துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய மனத்துணையே, என்-தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் - வைப்பே தினைத்துணையேனும் பொறேன். துயர் ஆக்கையின் திண்வலையே thaniththuNai niiniRka yaantharukki thalaiyaal nadantha vinai thuNaiyeenai viduthikaNdaay vinaiyee nudaiya manaththuNaiyee en than vaazmuthalee enakku eyppilvaippee thinai thuNaiyeenum poReen thuyar aakkaiyin thiNvalaiyee பொ-ரை: தீவினையேனது உள்ளத்திற்கு உறுதி கொடுக்கும் துணையானவனே! எனது வாழ்வுக்கு அடிப்படையான முதற்பொருளே! எனக்கு, இளைத்த காலத்தில் பயன்படும் சேமநிதி போன்றவனே! ஒப்பற்ற துணைவனாகிய நீ நிலையாக இருக்கும் காலத்தில் தற்போத உணர்ச்சியுற்று முறைமாறாக ஒழுகின இருவினையேனைக் கைவிட்டு விடாதே ! துயரத்தைத் தரும் உடம்பு என்னும் திண்ணிய வலையில் கிடப்பதைத் தினையளவு நேரம் கூட யான் பொறுக்க மாட்டேன். Even though I had Thee as a matchless comrade for me, I, in my total arrogance, left Thee and followed an 'upside down' trend, with Thyself standing away! Such are my evil rooted proclivities! Yet, I beseech Thee, forsake me not, Oh companion of my mind, although I am prone to get attached to many a foul deed. Thou, my support, my treasure in times of need , I cannot bear even for a moment, this powerful catch net of a physical frame! கு-ரை: தருக்கி = செருக்குற்று. காலால் நடப்பதற்குத் தலையால் நடப்பது முறை மாறிய செய்கையாம். வினைத்துணை = வினையிரண்டு. 'தினைத்துணை' என்பதில், துணை= அளவு. யாக்கை எளிதிற் கழியாமையின், 'திண்' என்றார். தாம் முயன்று அதனைக் கடக்க இயலாமையின் 'வலை' என்றார். இறுதியடிக்கு இறுதியிற் பொருள் கொள்ளுக. 40. வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியினொற்றைக் கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாயமென்னும் மலைத்தலை வாமலை யாண்மண வாளவென் வாழ்முதலே வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு, மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெள்மதியின் ஒற்றைக் கலைத்தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும் மலைத்தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே. valaiththalai maan anna nookkiyar nookkin valaiyil paddu milaiththu alaintheenai viduthikaNdaay veNmathiyin oRRai kalaiththalaiyaay karuNaa karanee kayilaayam ennum malai thalaivaa malaiyaaL maNavaaLa en vaazmuthalee பொ-ரை: வெண்மையான சந்திரனது ஒற்றைக் கலையைத் தனது சடாமுடியில் தரித்தவனே! கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கின்ற மலைக்குத் தலைவனே! மலைமகளாகிய பார்வதி தேவியின் மணவாளனே! எனது வாழ்விற்கு மூல காரணமாக உள்ளவனே! வலையிடை அகப்பட்ட மான் போன்ற மருட்சிப் பார்வை உடைய பெண்களின் கண் வலையில் சிக்கி அவர் வழியை மேற்கொண்டு திரிவேனைக் கைவிட்டுவிடாதே! Lord of mount Kailash, my life support, consort of the queen of hills, abode of mercy, sporting a thin white crescent on head, pray, forsake me not, although I got caught in , and wandered amidst, the catch nets of damsels with eyes like those of a trapped antelope. கு-ரை: மிலைத்து= அணிந்து, சூடி, மேற்கொண்டு; தலை = இடம் 41. முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி விதலைச் செய்வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ திதலைச் செய் பூண்முலை மங்கைபங் காவென் சிவகதியே. முதலைச் செவ்-வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் ? விடக்கு ஊன் மிடைந்த சிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ ? திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா, என் சிவகதியே! muthalai sevvaayssiyar veedkai venniiril kadippamuuzki vithalai seyveenai viduthikaNdaay vidakku uun midaintha sithalai seykaayam poReen sivanee muRaiyoo muRaiyoo thithalai sey puuNmulai mangkai pangkaa en sivakathiyee பொ-ரை: தேமல் விளங்கும் நகையணிந்த நகிலை உடைய உமையம்மை பாகனே! எனது இன்ப நெறியே! சிவபெருமானே! ஐயோ! ஐயோ! புலால் நாற்றம் உடைய தசை நிறைந்த நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். ஆசையாகிய வெப்பமுடைய நீர்நிலையில் சிவந்த வாயினை உடைய மாதராகிய முதலைகள் கடிக்கும்படி மூழ்கித் துன்பப்படுவேனைக் கைவிட்டு விடாதே! Forsake me not, Oh Lord - me that am prone to drown deep in shudder, into the lurid waters of lust, attracted by red lipped lasses! I cannot bear this illness ridden physical frame, so full of foul flesh, any more. Is it right for Thee to forsake me. Is it right at all? Oh my Lord, of shared physique with thy resplendent consort? Thou, my much longed-for goal! கு-ரை: வெந்நீர் வெப்பமுடைய நீர்; விரும்பத்தக்க நீர்; விதலை = துன்பம், விடக்கு = புலால் நாற்றம். சிதலை= நோய். திதலை = தேமல் 42. கதியடி யேற்குன் கழறந் தருளவு மூன்கழியா விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கவஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா விதி அடியேனை விடுதி-கண்டாய் வெள்-தலை முழையில் பதிஉடைவாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி மதிநெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே kathi adiyeeRku un kazal thanthu aruLavum uun kaziyaa vithi adiyeenai viduthikaNdaay veNthalai muzaiyiR pathi udai vaaL arap paarththu iRai paiththu suRungka anjsi mathi nedu niiril kuLiththu oLikkum sadai mannavanee பொ-ரை: ஒளி பொருந்திய பாம்பானது சிவனது சடாமுடியை நெருங்கி உள்ள வெண்மையான மண்டை ஓட்டைப் புற்றாகக் கொண்டு தங்கியிருக்கும். ஓரோர் சமயம் பாம்பானது புற்றினின்றும் வெளிப்பட்டு, தனது படத்தை விரித்து அங்கும் இங்கும் பார்க்கும். சடாமுடியில் மற்றோர் பாகத்தில் தங்கியிருக்கும் பிறைச்சந்திரன் பாம்பின் விரிந்த படத்தைப் பார்த்தவுடன் பயந்துபோய் தன் பக்கத்தில் இருக்கும் கங்கை நதியில் குதித்து, தன்னை மறைத்துக் கொள்ளும். இவ்வாறு பாம்பையும் சந்திரனையும் கங்கை நதியையும் அடக்கிக் கொண்டுள்ள சடாபாரத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தலைவனாகிய சிவபெருமானே! அடியேனுக்கு உன் திருவடிகளின் காட்சியைத் தந்து உயர்ந்த ஞானநெறியை அடையும்படி அருள்புரிவாயாக. ஊழ்வினையின் பயனால் அடியேனது உடல் இதுகாறும் நீங்கப் பெறவில்லை. என்னை விட்டுவிடாமல் ஆட்கொள்வாயாக. Thou granted me the grace of Thy bejewelled Feet before! And yet lo! what fate of mine is this, as I am still not able to rid myself of my fleshy frame! I beseech Thee,forsake me not , my Lord - Lord of matted hair on whose top is the crescent moon. This moon on sighting the hooded cobra in the nook of the white skull carried by you, dips into the flowing water of the Ganges in Thy head, and hides itself in fear. Note: A similar metaphorical allusion can be seen in சிதம்பரச் செய்யுட் கோவை (verse 54) composed by Saint Kumara Kurupara Swamigal, a latter day saivite savant of high theological insight and profound literacy skill. This learned saint might possibly have been influenced by this stanza. கு-ரை: கதி = வீடு என்றுங் கூறுப. விதி = பிராரத்தவினை அல்லது நிகழ்வினை. முழை = குகை, இற்பதி= வீட்டிடம், தங்குமிடம், இறை= சிறிது. நெடு நீர்= கங்கை. பைத்து = படமெடுத்து, இறை பார்த்துச் சுருங்க எனக்கொண்டு இறைவனைப் பார்த்துப் பயந்து சுருக்கிக் கொள்ளும் என்பாரும் உளர். 43. மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி யாத்தொழும்பர் முன்னவ னேபின்னு மானவ னேயிம் முழுதையுமே மன்னவனே, ஒன்றும், ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே, விட்டிடுதி கண்டாய் மிக்கவேத மெய்ந்நூல் சொன்னவனே, சொல்கழிந்தவனே, கழியாத் தொழும்பர் முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே. mannavanee onRum aaRu aRiyaa siRiyeen makizssi minnavanee viddiduthi kaNdaay mikka veetha meynnool sonnavanee sol kazinthavanee kaziyaa thozumpar munnavanee pinnum aanavanee im muzuthaiyumee பொ-ரை: மேலாகிய வேதமாம் உண்மை நூலினைப் பக்குவர்க்கு உணர்த்தியவனே ! சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! உன்னை விட்டு நீங்காத தொண்டர்க்கு முன்னிற்பவனே! அவர்கட்குத் தோன்றாத் துணையாகவும் உதவுபவனே! இப்படைப்பு முழுவதும் ஆனவனே! அரசனே ! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத சிறியேனுக்குக் களிப்பு விளைக்கும் சோதியனே! என்னைக் கைவிட்டு விடாதே! Thou that spelt out the four vast vedic scripture, in the days of yore! Thou that art beyond all speech! Thou, manifest before steadfast devotees, Thou standing out as all of these, pray, forsake me not, Oh Lord that showers bliss on all - bliss even on this little me, although I know not the right path towards Thee. கு-ரை: 'மாறு' என்பதற்குக் கைம்மாறு எனப் பொருள் கொண்டு, 'ஒரு கைம்மாறும் அறியாத' என்றும் பொருள் உரைக்கலாம். பொது வேதமும் மிக்க (சிறப்பாகிய) மெய்ந் நூலாகிய ஆகமமும் எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். 'ஆனவனே' என்பதைப் பின்னும்' 'முழுதையும்' என்பவற்றோடு தனித்தனியியைக்க. 44. முழுதயில் வேற்கண் ணியரென்னு மூரித் தழன் முழுகும் விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள் தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் பழுதுசெய் வேனை விடேலுடை யாயுன்னைப் பாடுவனே முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும் விழுது அனையேனை விடுதி-கண்டாய் நின்வெறி மலர்த்தாள் தொழுது செல்வானத் தொழும்பரில் கூட்டிடு; சோத்தெம் பிரான்; பழுது செய்வேனை விடேல்; உடையாய், உம்மைப் பாடுவனே muzuthu ayil veel kaNNiyar ennum muuri thazal muzukum vizuthu anaiyeenai viduthikaNdaay ninveRi malarththaaL thozuthu selvaana thozumparil kuuddidu sooththem piraan pazuthu seyveenai videel udaiyaay unnai paaduvanee பொ-ரை: கூரிய வேல் போன்ற கண்களை உடைய மாதரார் என்கிற வலிமையுடைய தீயிலே முற்றிலும் விழுந்து உருகி அழிந்து போகும் வெண்ணெய் போன்ற என்னைக் கைவிட்டு விடாதே! மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடியை அடைவதற்கு வணங்கிச் செல்லும் சிதாகாயத் தொண்டருடன் என்னைச் சேர்த்து விடு, இழிந்தேன், தலைவனே! உனக்கு வணக்கம். குற்றம் செய்யும் என்னைக் கைவிட்டு விடாதே! முதல்வனே! உன்னை நான் பாடுவேன். I got drowned in the fire of sharp-eyed damsel, like butter on ferocious flames . Pray forsake me not, Oh Lord! Get me into the band of Thy noble devotees, so that I can come over and pray before Thy fragrant flowery Feet. Do not leave out me, this wrong doer me! I will ever continue to sing verses in Thy glory. கு-ரை: 'முழுது' என்பதை, முழுகும் என்பதனோடு சேர்க்க. அயில் = கூர்மை 'எம்பிரான் சோத்து' என மாறுக. சோத்து= சோத்தம், இழிந்தோர் உயர்ந்தோர்க்குச் செய்யும் அஞ்சலி . மூரி= வலிமை. 45. பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்கலறித் தேடிற்றி லேன்சிவ னெவ்விடத் தானெவர் கண்டனரென் றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேனின் றுழைத்தனனே பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன் வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து, ஆங்கு அலறித் தேடிற்றிலேன்: 'சிவன் எவ்இடத்தான்? எவர் கண்டனர்?' என்று ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே. paadiRRileen paNiyeen maNi nii oLiththaaykku passuun viidiRRileenai viduthikaNdaay viyanthu aangku alaRi theediRRileen sivan evvidaththaan evar kaNdanar enRu oodiRRileen kidanthu uL urukeen ninRu uzaiththananee பொ-ரை: மாணிக்கமே! நின் புகழைப் பாட மாட்டேன். நின்னை வணங்க மாட்டேன். எனக்கு முதலில் காட்சியளித்துப் பின்னர் மறைந்து விட்டாய். உன் பொருட்டுப் பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னைக் கைவிட்டு விடாதே! அதிசயமுற்று, கதறித் துதித்து, சிவபெருமான் எங்கு உள்ளான், யார் அவனைக் கண்டார்கள்? என்று தேடமாட்டேன். நாடி ஓட மாட்டேன். வாடிச் செயலற்று உள்ளம் கசிந்து அன்பு செய்ய மாட்டேன். வீணே நின்று மனம் வருந்தினேன். Thou art verily a gem of bright effulgence. Alas! I do not sing on Thy glories, nor pay obeisance to Thee, In fact, for Thy sake, I should have discarded this fleshy frame of mine, but have not done so. Despite all this, forsake me not, Lord! I do not run about asking where the Lord is, whether any one has sighted Him, even as Thou hideth Thyself from me. Neither do I go out in search of Thee with cries of wonderment, but simply waste away here in vain. கு-ரை: மணி = மாணிக்கம். பச்சூன் - பசிய ஊன் என்றது நெருப்பிலே வேகாமல், விடப்படும் உடம்பை. வீடுதல்= அழித்தல், நீக்கல். உழைத்தல்= வருந்தல். 46. உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபர னென்றென் றறைவன் பழிப்பினையே உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப் பழத்து ஈயின் ஒப்பாய் விழை தருவேனை விடுதிகண்டாய்? விடின், 'வேலை நஞ்சு உண் மழை தரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய்மதியன் பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே uzaitharu nokkiyar kongkai palaappazaththu iiyin oppaay vizai tharuveenai viduthikaNdaay vidin veelai nanjsu uN mazaitharu kaNdan kuNam ili maanidan theeymathiyan pazaitharu maaparan enRu enRu aRaivan pazippinaiyee பொ-ரை: மான் போலும் பார்வையுடைய பெண்டிரின் மார்பில் பலாப்பழத்தில் மொய்க்கும் ஈயைப் போல ஆசைப்படுவேனைக் கைவிட்டு விடாதே! நீ கைவிடிலோ, விடத்தை உண்கின்ற மேகம் போன்ற கரிய கழுத்தை உடையவன், குணமில்லாதவன், மனிதன் , குறைந்த அறிவுடையோன், பண்டைப் பெரிய ஆண்டி என்று இவ்வாறெல்லாம் அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துரைப்பேன். “என்னைக் கைவிட்டு விட்டால் இப்பெயர்கள் எல்லாம் இங்ஙனம் கூறும் பொருளையே உடையனவாய் விடும்" என்றபடி இங்ஙனம் இச்சொற்கள் வேறு பொருள்பட வைத்தமை அடிகளது புலமைத் திறத்தையும் உணர்த்துகிறது. புலமைத்திறன் கண்டு இன்புறுக. நஞ்சுண்ட மழைக்கண்டன் = கண்டத்தில் கறுப்பு உடல் அழகிற்கு ஒரு மரு. பேரறிவு இல்லாதாரது செயல். நஞ்சுண்டதால் பேரழிவினின்று உலகத்தைக் காத்த பேரிரக்கம் உடையவன் . குணமிலி = பண்புகள் அற்றவன், குணம்+இலி = மாயா குணங்களாகிய முக்குணங்களுள் ஒன்றும் இல்லாதவன். மானிடன் = தேவன் அல்லன், மனிதன். மான்+இடன்= பெண்ணை அல்லது மானை இடப்பாகத்தில் கொண்டவன். தேய்மதியன் = குறைந்த அறிவுடையவன். தேய் + மதியன்= தேய்ந்த சந்திரன் அழிந்து ஒழியாதபடி அடைக்கலம் கொடுத்து, தன் சடாமுடியில் அணிந்து கொண்டவன். பழைதரு மாபரன் = பண்டைப் பெரிய ஆண்டி. பழை + தரு + மா + பரன்= அநாதியான பெரிய மேலானவன். இவையே, இச்சொற்கள் குறிக்கும் உண்மைப் பொருள். I crave for the breasts of dames with fawn-like eyes, much as flies go after jack fruit! And yet, Oh Lord forsake me not. Shouldst Thou forsake me, I will only blame Thee and call Thy name for this indifference. I will then have to speak Thee as one with dark neck, one with a waning moon on head, one that consumes the poison of the seas; and denounce Thee as a mere human being devoid of virtue! Such castigation I would be impelled to shower on Thee. Hence do not forsake me, please. Note: (1) The intensity of the Saint's appeal for mercy, goads him to employ variour means for attracting His attention, including feigned threats of castigation. Evidently these are not to be taken at their face value, as real threats (2) Likewise, the Saint's reference to himself as a lowly one , full of carnel proclivities, is a mere vicarious depiction of worldly men and events. Such epithets are common in the saivite tradition, and indeed in most other schools of theology also. கு-ரை: உழை= மான். முக்குணங்களையுங் கடந்தவன் இறைவன் ஆதலின், ' குணமிலி' என்றார். மானை இடக்கையில் தரித்தவனாதலின் 'மானிடன்' என்றார். கலை குறைந்த பிறைமதியைத் தலையிலுடைமையால் 'தேய்மதி' யன். பழமையான பெரிய மேலோன்- 'பழைதரு மாபரன்'; பரன்- 'அந்நியன்' என்றும் பொருள் கொள்ளலாம். 47. பழிப்பினின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலங் கொழித்துமந் தாரமந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழப் பழித்து விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணிப் பணிலம் கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமை தழிச் சிறைநீரில், பிறைக்கலம் சேர்தரு தாரவனே pazippil nin paatha pazanthozumpu eythi vizappaziththu viziththirun theenai viduthikaNdaay veNmaNi paNilam koziththu, manthaaram, manthaakini nunthum panthap perumai thazissiRai niiril piRaikkalam seertharu thaaravanee பொ-ரை: கங்கை நீரில் வெள்ளி மணியாகிய முத்தும் சங்கும் கொழிக்கின்றன. மந்தார மலரைத் தள்ளிக்கொண்டு அழகும் பெருமையும் தழுவி வரும் சடையை இடமாகக் கொண்டது வான் கங்கை. இந்நீரில் மதியாகிய பிறைத் தோணி சேர்கின்ற வெற்றி உடையவனே! இகழ்ச்சிக்கு இடமில்லாத நினது திருவடிப் பழமைத் தொண்டினை அடைந்து அது நழுவ, உன்னை இகழ்ந்து யாதும் செய்யத் தெரியாது விழித்துக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு விடாதே! Forsake me not, Oh Lord! I stayed awake for long, conscious of my past servitude under Thy flawless Feet, ruminating in sheer stupor, on (palpably unjust) ways to hurl abuse on Thee. Lord, sporting a garland, wearing a crescent that looks like a boat floating on the bunded waters of the river Mandaakini that flows down in grandeur, plucking mandaara flowers, gathering shells and pearls on the way. கு-ரை: விழ = நழுவ. வெண்மணி= முத்து. பணிலம் = சங்கு. மந்தாகினி = ஆகாயகங்கை. நுந்தும்= தள்ளும். பந்தம் = அழகு. தழி = தழீஇ = தழுவி . சிறை = இடம். கலம்= மரக்கலம். தார்= வெற்றிக்கு அறிகுறி; மாலை. 48. தாரகை போலுந் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் வீரவென் றன்னை விடுதிகண் டாய்விடி னென்னைமிக்கார் ஆரடி யானென்னி னுத்தர கோசமங் கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே தாரகை போலும் தலைத்தலை-மாலைத், தழல் அரப்பூண் வீர, என்-தன்னை விடுதி கண்டாய் விடின், என்னை மிக்கார் 'ஆர் அடியான்?' என்னின், 'உத்தரகோச மங்கைக்கு அரசின் சீர்அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே. thaarakai poolum thalai thalai maalai thazal arappuuN viira enthannai viduthikaNdaay vidin ennai mikkaar aaradiyaan ennin uththara koosamangkaikku arasin siir adiyaar adiyaan enRu ninnai sirippippanee பொ-ரை: விண்மீனாகிய நட்சத்திரம் போலும் வெண்டலை மாலையையும், நெருப்பைப் போன்ற கொடிய விடத்தை உடைய பாம்பையும் தலையில் பூண்ட வீரனே! என்னைக் கைவிட்டு விடாதே! என்னைக் கைவிட்டால் பெரியோர் 'நீ யாருடைய அடிமை' என்று என்னைக் கேட்டால் 'உத்தரகோச மங்கை மன்னனின் சிறந்த அடியார்க்கு அடிமையேன்' என்று விடைகூறி , உன்னை அவர்கள் சிரிக்கும்படி செய்வேன். Pray, forsake me not, Oh valiant Lord wearing a string of star like skulls and venomous serpents as ornaments! If Thou shouldst cast me away, note this forewarning. whenever elder folks ask me under whom I am vassal, I will just reply that I am vassal, a devoted servitor of the servants of the Lord of Uththara- Kosa- Mangai. So saying I, the discarded but faithful servant, will make thee the laughing stock of the whole world, indeed. கு-ரை: தீயினை இறைவன் அணிந்திருப்பதாகக் கூறாது தீப்போன்ற கெடுதியைச் செய்யும் விடத்தையுடைய பாம்பென்று கூறுதலும் உண்டு. மிருத்தியுஞ்சயதேவ தியானத்தில் நெருப்பினை இறைவன் சென்னியில் தரித்திருப்பது கூறியுள்ளது. அப்படியே கபாலி வடிவத்தில் வெண்டலை மாலை அணிந்தமை கூறப்பட்டது. இச் செய்யுளுள் தகுதியற்றவன் அடியனாயிருப்பினும், கைவிடும் படியான அடிமையை யுடைமை இறைவனுக்கு நகையாடத்தக்க இழுக்கு என்றார். 49. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையு மீசற்கென்று விரிப்பிப்ப னென்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் றோலுடைப் பிச்சனஞ் சூண்பிச்ச னூர்ச்சுடுகாட் டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் பிச்சனென் றேசுவனே சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய் விடின், 'வெம் கரியின் உரிப்பிச்சன், தோல் உடைப்பிச்சன், நஞ்சு ஊண்பிச்சன், ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன், என்னையும் ஆளுடைப்பிச்சன்' என்று ஏசுவனே sirippippan siiRum pizaippai thozumpaiyum iisaRku enRu virippippan ennai viduthikaNdaay vidin vengkariyin urippissan thol udaippissan nanjsu uuNpissan uur sudukaaddu erippissan ennaiyum aaLudai pissan enRu eesuvanee பொ-ரை: சிவனே! என்னை நீ விட்டுவிடாதே! விட்டுவிட்டால் என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தைப் பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டும் இறைவனுக்கே என்று யாவர்க்கும் கூறி அதனை யாவரும் அறியும்படி பரவச் செய்வேன். கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன், புலித்தோலாடை அணிந்த பித்தன், விடத்தை உண்கின்ற பித்தன், ஊருக்குப் பொதுவான ஊர்ச்சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன், தகாத என்னையும் அடிமை கொண்ட பித்தன் என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன். I will make a laughing stock of Thee by exposing the injustice of your discarding me now, after blessing me before. I will further elaborate on this by letting all men know that I am yet in servitude to Thee, despite Thy indifference. Hence forsake me not. Oh Lord! Shouldst Thou discard me, note that I will resort to calling you names - names such as an eccentric, wearing fierce elephant hides, clothed in leather, a lunatic feeding on poison, a crank, a weird one dancing with the flames of the burning ghat of the cosmos. And what is more, a strange master that took even me as His own. கு-ரை: பித்தர் செயல், தோலைப் பூணல், தகாதன உண்ணல், மயானத்திற் புரளுதல் முதலியன ஆதலின், இவ்வாறு கூறினர். இகழ்வது போல் புகழுதலாகிய அணி வஞ்சப்புகழ்ச்சி ஆகும். 50. ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்து வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின் றேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண் டாயமு துண்ணக் கடையவனே ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதிகண்டாய்? செம்பவள வெற்பின் தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கிக் காய்சின ஆலம் உண்டாய்; அமுது உண்ணக் கடையவனே. eesinum yaan unnai eeththinum en pizaikkee kuzainthu veesaRuveenai viduthikaNdaay sempavaLa veRpin theesu udaiyaay ennai aaLudaiyaay siRRuyiRku irangki kaaysina aalam uNdaay amuthu uNNa kadaiyavanee. பொ-ரை: செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய வானவர் முதலிய உயிர்களுக்கு இரங்கி, பாற்கடல் கடைந்தவனாகிய திருமால் அமுதத்தை உண்ண , கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆலகால விடத்தை உண்டவனே! யான் உன்னை இகழ்ந்து பேசினாலும் வாழ்த்தினாலும் எனது தவறுக்கே மனம் வாடி துக்கப்படுவேன். அவ்வாறு உள்ள என்னைக் கைவிட்டு விடாதே! Whether I rebuke Thee or chant in reverence to Thee, forsake me not this wearied me, as I am full of remorse and self pity for all my inequities. My Lord of effulgence bright like a coral mount of reddish hue, Thou that should be in all fairness feeding on elixir, but instead fed on virulent venom, out of sheer pity for the lowly mortals who could not stand the might of the rising poison of the seas. கு-ரை: குழைதல், இளகுதல் என்றும் பொருள்படும். வேசாறுதல், வேசறுதல் என்றாயிற்று . கடையவனே என்று தொடங்கியபடி அவ்வாறே முடித்தமை காண்க. கடையவன் = கடைந்த அவன் = திருமால் ; வினைத்தொகை. கடையவன் அமுதுண்ண என மாறுக. THIRUCHCHITRAMBALAM 7. திருவெம்பாவை 7. THIRU EMBAAVAI (சத்தியை வியந்தது) Maidens' Song of Adoration திருவண்ணாமலையில் அருளியது Compiled whilst in Thiru Annaamalai வெண்டளையான் வந்த எட்டடித்தரவுக் கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 'எம்பாவாய்' என்னும் முடிபினையுடைய பாடல்களை உடைமையால் இப்பாடல் தொகுதிக்கு, 'திருஎம்பாவை' என்பது பெயராயிற்று. இவ்வாறு வரும் பாடல்கள், 'பாவைப் பாட்டு' எனப்பட்டன, என்பது, தொல்காப்பியப் பேராசிரியர் உரையானும், அவையாவும் இறுதியில், 'எம்பாவாய்' என்னும் முடிவினையே உடையனவாய் வரும் என்பது யாப்பருங்கல விருத்தியுள் காட்டப்பட்ட பாடல் ஒன்றானும் அறியப்படுகின்றன. அதனால், முடிபினாற் பெற்ற பெயராக இங்கு 'திருஎம்பாவை' எனப்பட்டது. 'எம்பாவாய்' என்ற வார்த்தைக்கு முன்னால், 'ஏலோர்' என்பதனைக் கூட்டி, "ஏலோர் எம்பாவாய்' என முடித்தலும் இப்பாவைப் பாடல்கட்குரிய மரபு என்பதும் மேற்குறித்த அப்பாடலானே அறியப்படும். இனி இப் 'பாவைப்பாட்டு' என்பது யாது என்பது ஆராயற்பாலது. இளமகளிர், தாம், நற்பண்புகளையுடைய ஆடவரையே கணவராக அடைதல் வேண்டும் எனக் கருதி அதன்பொருட்டு மார்கழித் திங்களில் உமையம்மையை வழிபடும் நோன்பை மேற்கொண்டு, விடியற்காலையில் நீராடச் செல்லுங்கால் நீர்க்கரையில் அவ்வம்மையின் வடிவமாக மணலால் பாவை செய்து வழிபடுவர் எனவும், அதனால் அந்நோன்பு, 'பாவை நோன்பு' எனப்படும் எனவும் 'அந்நாளில் அப்பாவையை முன்னிலைப்படுத்தி அம்மகளிர் பாடும் பாடலே பாவைப்பாட்டு எனப் பெயர் பெற்றது' எனவும் உரைப்பர் சிலர். ஆயினும், அந்நோன்பைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பும் அடிகளது திருவெம்பாவையில் காணப்படாமையின் அங்ஙனம் உரைத்தல் கூடுமாறில்லை . 'ஆண்டாள் திருப்பாவையாகிய வேறொரு பாவைப்பாட்டில் இது விளக்கமாகக் கூறப்பட்டிருத்தலின், அடிகளது பாவைப்பாட்டும் அன்னதே எனக் கோடல் சாலும்' என்பது அவரது கருத்து, அக்கருத்து அடிகட்கு ஒத்ததாயின், மகளிர் முதற்கண் விடியலில் எழுந்து எழாதவர்களை எழுப்புதல், பின்பு யாவரும் ஒருங்குகூடி இறைவனை வாழ்த்தி வணங்குதல், நீர்த்துறைக்குச் சென்று நீராடுதல் என்பனவற்றை முறைப்படக் கூறும் தமது திருவெம்பாவையில் (அதன் பின்பு) இப்பாட்டிற்கு முதலாகிய பாவை வழிபாடு பற்றியாதல் பாவை நோன்பு பற்றியாதல் யாதும் கூறாதே போயினார் என்றல் முறையாகாது அன்றோ? அதனால், 'பாவைப் பாட்டு' என்பது பாவை நோன்பு பற்றியாதல், வழிபடப்படும் பாவை பற்றி யாதல் வந்தது அன்று என்பது தெளிவு. அன்றியும் சமண சமயத்தினரும் தம் கடவுள் பற்றிப் பாவைப் பாட்டுப் பாடினர் என்பது, மேற்குறித்த யாப்பருங்கல விருத்தியுட் காட்டிய பாடலாலும், பிறவாற்றாலும் அறியப்படுதலாலும், பாவைப்பாட்டு என்பது உமைவழிபாட்டுப் பாடலாயின், அவர் அதனைக் கொள்ளாராதலாலும் இது தெளிந்து கொள்ளப்படும். இன்னும், 'எம்பாவாய்' என்பது, வழிபடப்படும் தெய்வப்பாவையை விளிப்பதாய், பொருள் பயந்து நிற்குமாயின், பின்னர்க் கூறப்படும் பொருள்கள் அத்தெய்வத்தைப் பற்றியாதல் வேண்டுமன்றி வேறாதல் கூடாமையானும் அங்ஙனம் கூறுதல் பொருந்தாமையறிக. 'பாவைப் பாட்டு' என்பது, பாவை நோன்பு பற்றியதன்றாயின், மற்றியாதோ எனின் 'அம்மானைப்பாட்டு, ஊசற்பாட்டு' முதலியவை மகளிர் விளையாட்டுப் பாடலாதல் போலப் பாவைப் பாட்டும் அவரது விளையாட்டுப் பாடலேயாம். அங்ஙனமாயின், அம்மானை , ஊசல் முதலியன விளையாட்டாதல் போலப் பாவையும் விளையாட்டோ எனின், அன்னதன்று. இளமகளிர் தாம் நீராடுங்கால் பாவையொன்றனை நீராட்டி ஆடும் விளையாட்டின்கண் அப்பாவையை, ' எம்பாவாய்' என விளித்துப் பாடும் பாட்டே ‘பாவைப் பாட்டு' எனக் கொள்ளுதும் ஆகலின் 'பாவை' என்பது விளையாட்டாகாமை பற்றி இழுக்கில்லை. எனவே, விளையாட்டு வகையால் நோக்கின் இது ' நீராடற்பாட்டு' எனப் பெயர் பெற்ற பாட்டு என்பதும், அவ்வாறாயினும் பாவையை விளித்துப் பாடுதல் பற்றி 'பாவைப்பாட்டு' என வழங்கப்பட்டது என்பதும் போதரும். இவையெல்லாம் எதனால் பெறுதுமெனின், பாவைப்பாட்டுக்கள் யாவும் நீராடல் பற்றியே வருதலால் பெறுதும். இதனானே, இப்பாட்டின்கண் வரும் 'ஏலோர்' என்பது, பாவை நீராட்டு மகளிர் அப்பாவையை விளிப்பதோர் சொல்லெனக் கொள்ளப்படும். ஆண்டாள் திருப்பாவை பாவை நோன்பு பற்றி வந்தமை தெளிவாதலின், பாவைப் பாட்டுக்கள் பலவும் அத்தன்மையனவே எனக் கொள்ளுதல் எளிதாய் இருக்க, அதனை விடுத்து வேறு காரணம் கற்பித்துக் கொண்டு இவ்வாறெல்லாம் கூறி இடர்ப்படுதல் என்னையோ எனின் பாவை நோன்பாவது, 'மாயோன் கண்ணனாய்த் தோன்றி ஆயர்பாடியில் வாழ்ந்த ஞான்று அவனையே கணவனாகப் பெற விரும்பிய ஆயர்குல மகளிர் நோற்றுத் தம் கருத்து நிரம்பப் பெற்ற நோன்பு எனக் கிருட்டின பாகவதம் கூறுதலன்றித் தமிழ் நூல்களிலாதல், சிவநெறி நூல்களிலாதல் அஃது யாண்டும் கூறப்படாமையானும், ஆண்டாளும் ஆயர்பாடி மகளிர் போலக் கண்ணனைக் கணவனாகப் பெறுதலையே விரும்பினமையின், கிருட்டின பாகவதம் கூறமாற்றானே தானும் நோற்கக் கருதிப் பாடிய, அப்பாவைப் பாட்டிற்கு அக்காரணம் பொருந்துவதன்றி, தம் கடவுளரைக் கணவனாகப் பெறும் விருப்பத்திற்கே இயைபில்லாது, அன்பு காரணமாக அவரைப் பாடிப் பரவுதல் மாத்திரையே கருதி, பாவை நோன்பு என்பதொன்று காணப்படுவதற்கே இடனின்றிப் பாடப்பட்ட பிற பாவைப் பாட்டிற்கும் அதுவே காரணம் எனக் கூறின், அது நூற்கருத்திற்கு ஏலாமையானும் அங்ஙனங் கொள்ளுதல் பொருந்தாதாம். அதனாலன்றோ, வாதவூரடிகளது திருவெம்பாவை ஒன்றையே பற்றுக் கோடாகக் கொண்டு அதன் வரலாறுரைத்த கடவுள் மாமுனிவர், 'மார்கழித் திங்களில் திருவாதிரையை முடிவாகக் கொண்ட பத்து நாள்களிலும் மகளிர் விடியலில் எழுந்து, எழாதவர்களையும் எழுப்பிக் கொண்டு நீர்த்துறைக்குச் சென்று நீராடினர்' என்னுந் துணையே கூறியதன்றி, ஆண்டாள் கண்ணனைக் காதலித்துப் பாடிய பாவைப் பாட்டிற் காணப்பட்ட பாவை நோன்பை இங்கும் புகுத்திக் கூறாது போயினதூஉம் என்க. எனவே, திருவாசகத்தின் முன்னை உரையாளர் ஒருவரும் பாவை நோன்பு பற்றிய செய்தியை ஈண்டுக் கொண்டு கூறாமையும் இதுபற்றியேயாயிற்று. கிருட்டின பாகவதம் கூறும் பாவை நோன்பு, மாயோன் தேவி முதலிய பிற தெய்வங்களைப் பற்றியதாகாது, சிவபிரான் தேவியாகிய உமையம்மையைப் பற்றியதேயாக, அதனை, சிவபிரானையும், உமையம்மையையுமே வாழ்த்துவதாய் இத்திருவெம்பாவைக்கு ஏலாது என்றது என்னையெனின், அது, செயல்வகையில் உமையம்மையைப் பற்றியதாயினும், கருத்து வகையில் கண்ணனைக் கணவனாக அடைவதையே பயனாகக் கொண்டமையின், அக் கருத்தில்லாத மகளிரைப் பற்றி வரும் இத்திருவெம்பாவைக்கு அஃது ஏற்புடைத்தாகாமை தெளிவாதல் அறிக. இன்னும், ஆயர்பாடியில் தோன்றிய ஆயர் கன்னியர் அனைவரும், கண்ணனாகிய ஒருவனையே காதலித்தலை அவரது பெற்றோர் விரும்பாது சினந்தமையின், அம்மகளிர், தம் கருத்தை நிறைவேற்றுவதற்குத் தெய்வம் பராவுவாராய், அதனைத் தம் இல்லத்தில் தம் இருமுதுகுரவர் முன்னர்ச் செய்யமாட்டாது தாம் நீராடச் செல்லும் நீர்க்கரையிற் செய்தலும், அங்ஙனம் செய்கின்றுழி, மாயோனைக் கணவனாகப் பெற விரும்பும் தம் விருப்பத்தினை அவன் தேவியிடத்து வெளிப்படுத்த மாட்டாராயினமையின், அவளை வழிபடாது ஒழிதலும், கண்ணனைக் கடவுளாகக் கருதினும், கணவனாகக் கொள்ளலாம் எனக் கருதினமையின், அம்முறையால் சிவபிரானையும் அயலானோர் ஆடவனாகக் கருதி அப்பெருமானையும் வழிபடாது, உமையை வழிபடுதலும் உடையராயினமையின், அவையெல்லாம் திருவாதவூரடிகள் அருளிச் செய்த இத்திருவெம்பாவையிற் கூற்று நிகழ்த்தும் மகளிர்க்குப் பொருந்துமாறில்லை, என்னையெனின், இறைவனைக் கணவனாகப் பெற்றுத் தழுவி இன்புறக் கருதுதல் மாயோன் நெறியிற் காணப்படுவதன்றிச் சிவநெறியிற் காணப்படுவதன்று. ஆதலின், இறைவனைக் கணவனாகக் கருதுதல் மாயோன் நெறியிற் காணப்படுவதற்கும், சிவநெறியில் அது காணப்படாமைக்கும் காரணம், 'இறை இன்பமும், இவ்வுடம்பு இல்லாவிடினும் ஒளியுடம்பாய வேறோர் உடம்பு கொண்டு நுகரப்படுவதே' என்பது மாயோன் நெறியினர் கொண்ட கொள்கை. அவ்வாறின்றி, 'இறைவனுக்கும் உயிருக்கும் இடையே உடம்பென்பதொன்று நிற்கும் நிலையாதாயினும் அது, இறைவனை நேரே தலைப்படுவது ஆகாமையின் பந்தமே' என்பதும் 'அதனால் இடையீடு யாதுமன்றி உயிர் இறை நிறைவில் ஒன்றாய்க் கலந்து அவ்வின்பத்தில் அழுந்தி நிற்பதே வீடு' என்பதும் சிவநெறிக் கொள்கையுமாகும். இவ்வுண்மை, ஆண்டாள் வரலாற்றிலும், பாடலிலும் இறைவனைக் கணவனாகக் கண்டு காதலித்தமை கேட்கப்படுதலாலும் காரைக்காலம்மையார் வரலாற்றிலும், பாடலிலும் அது கேட்கப்படாமையோடு, இறைவனை அவர் 'அப்பா' என அழைத்தமையே கேட்கப்படுதலாலும் நன்கு புலனாகும். காரைக்காலம்மையார் தாம் தசைப்பொதி உடம்பைச் சுமந்து நின்றது உலகியல் பற்றித் தம் கணவன் பொருட்டாகவே என்பதையும், அவ்வுடம்பு கணவனுக்கு ஆகாமை அறிந்த அப்பொழுதே அவர் இறைவனை வேண்டி அவனது அருள் வலியால் அவ்வுடம்பை உதறித் தள்ளிப் பேயுருப் பெற்றதையும் சேக்கிழார், "ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு மென்று பரமனைப் பரவி நின்றார்" (தி. 12. காரைக் - 49) எனவும் "ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவா ரருளினாலே மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊனடை வனப்பை யெல்லாம் உதறி எற் புடம்பே யாகி வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவ மானார்" (தி.12. காரைக் - 50) எனவும் இனிது விளங்கக் கூறினார். இங்ஙனம் உடம்பைச் சுமையாகக் கருதி வெறுத்து, "அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே; அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவன் " (தி.11. அற்புதத்திருவந்தாதி-20) என்று இறைவனை அறிவினுள்ளே அறிவினாலறிந்து இன்புற்றிருந்த அம்மையாரது ஞானத்தின் மிகுதிக்கு ஓர் எல்லையும் உண்டோ ! அதனாலன்றோ ஞானத்தின் திருவுருவேயான ஞானசம்பந்தரும், 'அம்மை தலையால் நடந்த திருத்தலத்தை யான் காலால் மிதியேன்' என்று அஞ்சி ஆலங்காட்டினுள் செல்லாது புறத்தே தங்கியிருந்ததும் இறைவனும் அவரை 'வா' என்று உள்ளே அழையாது, அவரிருந்த இடத்திற்றானே சென்று பாடச்செய்து அப்பாடலைக் கேட்டதும் என்க. இவற்றாலெல்லாம், இறையின்பத்தை நுகர்தற்கு உடம்பு வேண்டப்படுவதன்று என்பதோடு அஃது அதற்குத் தடையுமாம் என்பதே சிவ நெறிக் கொள்கை என்பது போந்தது. "மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை" -குறள் 345 எனத் திருவள்ளுவரும் கூறுதல் காணலாம். வீடாவது ஓர் உலகமே என யாண்டும் கூறி, அவ்வுலகம் "செங்கண்மாலுலகமே' என்ற தம் கருத்தை " தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு" -குறள் 1103 என்பதன் உரையில் வெளிப்படுத்திய பரிமேலழகர், 'மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்' என்னும் குறள் உரையில், 'உடம்பென்ற பொதுமையான் உருவுடம்பும், அருவுடம்பும் கொள்ளப்படும்' எனக் கூறி, அருவுடம்பின் தன்மையை விளக்குமளவே உரைத்து, அதற்கு மேல் ஒன்றும் உரையாது போயினமையின், தாம் கூறும் வீட்டுலகத்திற் செல்வோர்க்கு உடம்பு உளதாதல் பற்றி யாதும் உரைக்க மறந்தார் போலும். இறை இன்பம் உடம்பு கொண்டே நுகரப்படுவது எனவும், இறைவன் சிறப்புடைய ஓர் ஆடவன் (புருடோத்தமன்) எனவும் கொள்ளுதலால், ' அவனது இன்பத்தை நுகரும் அடியார்களுள் ஆடவரினும், மகளிரே பெரிதும் தகுதியுடையவர்' என்பர் மாயோன் நெறியினர். சிவநெறியின்கண் அக்கொள்கை இன்மையானும், 'ஆடவர், மகளிர்' என்னும் வேறுபாடு உடம்பின் கண்ணதன்றி உயிரின்கண் இன்மையானும், இறையின்பத்தை நுகரும் அடியாரிடத்து ஆடவர், மகளிர் என்னும் வேற்றுமை கொள்ளாது, இருதிறத்தவரும் ஒப்ப உயர்ந்தவர் எனவே கொள்வர் சிவநெறியாளர். இதனானே, இறைவனோடு அவன் அடியாரிடை நாயக நாயகி பாவம் கொள்ளுதலும் சிவநெறியின்கண் இல்லையாயிற்று. அது சரியை, கிரியை, யோகம் என்பனவற்றை முறையே ' தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம்' எனக் கூறியவாறே, ஞானத்தை, 'நாயகி மார்க்கம்' எனக் கூறாது, "சன்மார்க்கம்' என்றே அவர் கூறிப்போதலாலும் நன்கறியப்படும். அங்ஙனமாயின், தொல்காப்பியர் "காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்" - பொருள் 81 எனக் கூறியவாறு கடவுள் வாழ்த்தில், 'கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்' என்பதொரு துறை காணப்படுவது என்னையெனின், பாடாண்திணையுள் வரும் -கைக்கிளை, பாட்டுடைத் தலைவனது பெருமை புலப்படற் பொருட்டு அவனைப் பாடும் புலவர், ஒருத்தி அவனைக் காதலித்தாளாகப் புனைந்து கூறுதலன்றி அஃது உண்மை நிகழ்ச்சி அன்றாதலின், அது பற்றி வருவதோர் ஐயமில்லை, அதனாலன்றோ , அத்துறையுள், காதலித்த தலைவி இவள் என இயற்பெயர் கூறுதல் இல்லையாயிற்று. சமண சமயத்தினர், 'பெண்டிர்க்கு முத்திப் பேறு இல்லை ' என்பர். இறைவனோடு அவன் அடியாரிடை நாயக நாயகி பாவம் கூறுவார், 'ஆடவர்க்கு முத்திப் பேறு இல்லை' என்பர். இவ்விரண்டும், உயிரியல்பையும், உடம்பியல்பையும் பகுத்துணரும் கொள்கை உடையவர்முன் ஒரு நகைப்புக்குரிய சொல்லாகும். இவற்றாலெல்லாம், ஆளுடைய அடிகளது திருவெம்பாவையினது பெற்றியை அதனையே கொண்டும், ஏனைச் சிவநெறி நூல்களைக் கொண்டும் நோக்குதல் வேண்டுமன்றிப் பிற நூல் கொண்டு நோக்குதல் கூடாமை உணர்ந்து கொள்க. இதனானே திருவெம்பாவையிற் கூற்று நிகழ்த்து மகளிராதல், அவர் வாயிலாக ஆளுடைய அடிகளாதல் பிற சிவநெறி நூல்களின் ஆசிரியராதல் இறைவனைக் கணவனாகவும், தம்மை மனைவியராகவும் கருதி நின்றார் என்பதற்கோர் காரணம் இன்மையும் நன்குணர்ந்து கொள்ளப்படும். இனி, இத் திருவெம்பாவை முதலாக உள்ள பாவைப் பாட்டுக்கள் கடவுள் பொருளாகப் பாடப்பட்டன எனினும், அவற்றிற்கு முன்னர் வழங்கிய பாவைப் பாட்டுக்கள் கடவுள் பொருளாகவன்றி மக்கள் பொருளாக வழங்கின எனக் கொள்ளல் வேண்டும். ஏனெனின், அம்மானை வரி, ஊசல் வரி முதலியன அவ்வாறு வருதலைச் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களிற் காண்கின்றாமாதலின், ஆசிரியர் தொல்காப்பியனார் பாடாண் திணையுள் ' கொற்றவள்ளை' என்பதொரு துறை கூறியிருத்தல் இக்கருத்தை நிலைநிறுத்தும். எவ்வாறெனின், 'வள்ளை' என்பது உரற்பாட்டாகலானும், அதனால் பாட்டுடைத் தலைவர் பாடப்படுவர் என அவர் கூறலானும், அவ்வாறே அம்மானைப் பாட்டு, ஊசற் பாட்டு முதலியவற்றானும் பாட்டுடைத் தலைவர் பாடப்பட்டனர் என்பது சொல்லாதே அமைதலான் என்க. கொம்மைப் பாட்டு, பள்ளுப்பாட்டு முதலியவற்றால் பாட்டுடைத் தலைவரை இக்காலத்தாரும் பாடுதல் காணப்படுவது. இப்பாட்டுக்கள், சொல்லும், பொருளும் விழுமியவாகாதுவரின், 'நாட்டுப் பாடல்' எனப் புறவழக்காம். அவ்வாறன்றி, நல்லிசைப் புலவரால் சிறப்புறப் பாடப்படுமாயின், வரிப்பாட்டு எனப் புலனெறி வழக்காய் உயர்ந்த இலக்கியமாம். புறத்திணை வகையும், அகத்திணை வகையுமாய்ப் பெரும்பான்மையும் மக்களையே நுதலி நடந்த இப்பண்டைப் புலனெறி வழக்கத்தினை, புறத்திணையுள் பாடாண் பகுதி கடவுளையும் நுதலி வருதலும், அகத்திணைப் பாடல்களுள் பாட்டுடைத் தலைவர் சார்த்துவகையாற் பாடப்படுதலும் ஆகிய மரபு பற்றி, ஆளுடைய அடிகள் முழுதும் கடவுளையே நுதலி வருவனவாக்கி, ( தி.8 திருவாசகம், திருக்கோவை ) இருபெரும் பகுதியவாய் திருப்பாட்டுக்களை அருளிச் செய்வார். திருவாசகத்திடையே கொற்றவள்ளை போல்வனவாய, பொற்சுண்ணம், அம்மானை, தெள்ளேணம், சாழல், பூவல்லி, உந்தி, தோணோக்கம், ஊசல் என்பனவற்றை அருளினாராகலின், அவ்வாறே அருளப்பட்ட பாவைப் பாட்டாகிய திருவெம்பாவைக்கும் மகளிர் விளையாட்டாதல் ஒன்றே காரணமாதல் சாலுமாகலின், அதற்கு வேறு காரணம் வேண்டுவதில்லை என்று அறிக. அம்மானை முதலிய பாட்டுக்களைப் போலவே மகளிரது நீர் விளையாட்டுப் பாடலாகிய பாவைப் பாட்டை இறைவனுக்கு ஆக்குவார், அதனை ஏனைய போலப் பொதுப்படச் செய்யாது , இயல்பாகவே சிவபிரானுக்குரியதாய் நிகழும் மார்கழி நீராட்டிற்கு உரித்தாகச் செய்தருளினார். அது தமது நெறிக்குப் பெரிதும் பொருந்துவதாய்ச் சிறந்து காட்டும் என்பது பற்றி . அதனானே அன்று தொடங்கி இத் திருவெம்பாவை சிவபிரானுக்குரிய திருவாதிரை விழா நாள்களில் இன்றியமையாது ஓதப்படுவதாயிற்று. மார்கழித் திங்களில் சிவபிரானுக்குத் திருவாதிரை விழா எடுத்தலும், அந்நாள்களில் உலகு செழிக்க அந்தணர் வேள்வி வேட்டலாகிய தம் தொழிலைச் சிறக்கச் செய்தலும், இல்லறத்தவராகிய ஆடவரும் பெண்டிரும் அந்நாளில் சென்று தீர்த்தமாடித் தாம் தாம் விரும்பியவற்றைப் பெற இறைவனை வேண்டி நிற்றலும், அவரிடையே சிற்றிளமகளிரும் முது பார்ப்பனியர் சொல்வழியே நோற்றலை மேற்கொண்டு தம் தாய்மாரோடு சென்று நீராடுதலும் போன்ற தவச்செயல்கள் நடைபெறுதலும் 'விரிகதிர் மதியமொடு' என்னும் பரிபாடலில் காண்க. "கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூ லந்தணர் விழவு தொடங்கப் புரிநூ லந்தணர் பொலங்கலம் ஏற்ப வெம்பா தாக வியனில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர்பு ஆடிப் பருமணல் அருவியின் ஊதை ஊர்தர உறைசிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின் தையல் மகளிர் ஈரணி புலர்த்தர " என்பது முதலாக விரித்துக் கூறியவாற்றான் நன்குணரப்படும். இதனுள், 'அம்பா ஆடல்' என்றது இளமகளிர் தம் தாயாரோடு கூடி ஆடுதலாம் என்பதை அதன் உரையால் காண்க. தேவர்கட்கு எடுக்கும் விழாக்கள் நிறைமதி நாள் பற்றி நிகழ்வன ஆதலாலும், அது சிவபிரானுக்குரிய திருவாதிரை நாளோடு கூடி வருவது மார்கழித் திங்களில் ஆதலாலும், அத்திங்கள் சிவபிரானுக்குரிய விழாத் திங்களாயிற்று. ஆகவே, அரசனுக்குரிய விழா நாள், நாடு முழுவதற்கும் விழா நாளாதல் போல, முழுமுதல் தேவனாகிய சிவபிரானுக்குரிய விழாத்திங்கள் ஏனைய தேவர் பலர்க்கும் விழாத் திங்கள் ஆயிற்று. அதனானே, திங்கள் பன்னிரண்டனுள்ளும் மார்கழித் திங்கள் சிறந்தது ஆயிற்று. தேவதேவனாகிய சிவபிரானது திருவாதிரை விழாவைத் தேவர் பலரும் ஒருங்குகூடிச் சிறக்கச் செய்வர் என்பதை, "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத் தும்நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே" என்னும் சேந்தனார் திருப்பல்லாண்டில் (தி. 9. ப. 12) உணர்க. திருவாதிரைத் திருநாட் சிறப்புப் பற்றித் திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்தார் (தி. ப. 4.4.21) வாதவூரடிகள் அருளிச்செய்த இம்மார்கழி நீராட்டு மேற்காட்டிய பரிபாடல் முதலிய சங்கப் பாடல்களுள், 'தைந்நீராட்டு' எனக் குறிக்கப்படுகின்றது. 'தைந்நீராட்டு' என்பதற்கு, 'தைத்திங்கள் நிறைமதி நாளில் ஆடும் நீராட்டு' எனப் பொருள் கொண்டு, மேற்குறித்த பரிபாடற் பகுதியின்படி மார்கழித்திங்கள் நிறைமதி நாளில் தொடங்கிய விழா, தைத்திங்கள் நிறைமதி நாள்காறும் நிகழ்ந்து நிரம்புமாகலின், அந்நாளில் நிகழும் நீராட்டு, 'தைந்நீராட்டு' எனப்படுதல் இயல்பே என்பாரும், 'தைந்நீராட்டாவது, தைப்பிறப்பு நாளில் ஆடும் நீராட்டு' என்பாரும், என இருதிறத்தார் உளர். அவருள் முன்னர்க் கூறியவாறு கூறுவார் பக்கம் வலியுடைத்து. அதனால் தொடக்க நீராட்டு மார்கழி நீராட்டும், முடிவு நீராட்டுத் தைந்நீராட்டுமாதலின், அடிகள் சிவபிரானுக்குரிய திருவாதிரை நாளில் ஆடும் மார்கழி நீராட்டினையே அருளிச் செய்தார். ஆதிரை விழா, ஆதிரை நாளுக்கு முன்பே தொடங்கி ஆதிரை நாளில் முற்றுப் பெறுதல் பிற்கால வழக்காம். இவ்வழக்குப் பற்றியே கடவுள் மாமுனிவர் தமது திருவாதவூரடிகள் புராணத்துள், "மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன்ஈ ரைந்தே ஆகிய தினங்கள் தம்மில் மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவ தான போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்" எனக் கூறி போந்தார். இங்ஙனம் திருவாதவூரடிகள் பாடாண் திணையின் பல்வகையானும், அகத்திணைத் துறைகள் பலவற்றாலும், 'தி.8 திருவாசகம் திருக்கோவையார்' என்னும் இருதிறத்துப் பாடல்கள் ஓராயிரத்திற்கு மேற்பட்டவற்றைப் பல அடிகளானும், சில அடிகளானும் அமையப் பாடியருளினமையின், இவையே தமிழ் மொழியில் முதற்கண் கடவுட் பேரிலக்கியமாக அமைந்தன என்பதும், அதன்பின்னரே அடிகள் அருளிய வகையானும், பிற வகையானும் கடவுள் இலக்கியங்கள் தமிழில் பெருகுவ ஆயின என்பதும், அடிகள் இவ்வாறு கடவுள் நெறியில் இயற்றமிழ் இலக்கியத்தைத் தோற்றுவித்து அருளினமையின், அதன் பின்னர் நல்லிசை ஞானசம்பந்தரும், நாவுக்கரையரும் பெரும்பான்மையும் பாட்டுக்களை நான்கு என்னும் அடிவரையறையுட் படுத்து இசைத்தமிழ் இறையிலக்கியத்தைப் பெருகச் செய்தனர் என்பதும், அவர் வழியே நின்று நம்பியாரூரரும், பின்னும் திருவிசைப்பா ஆசிரியன்மார்களும் அங்ஙனமே செய்தனர் என்பதும் இவ்வாற்றால் பிறமதங்களினும் நால்வர் பெருமக்கட்குப் பின்னர் இறை இலக்கியங்கள் இயற்றமிழாகவும், இசைத்தமிழாகவும் தோன்றின என்பதும், இங்ஙனம் யாப்பு வகையால் பல மதக்கடவுள் இலக்கியங்களும் ஒரு நெறிப்பட்டன போலத் தோன்றினும், அவை பொருள் வகையால் வேறுபட்டே நிற்பன என்பதும், அதனையறியாது அவையனைத்தையும் ஒன்றெனக் கருதின், ஒன்றானும் பயனின்றாய் ஒழியும் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். படவே, திருப்பாவைக்கு உரை கூறுவார் மதமே பற்றித் திருவெம்பாவைக்கும் உரைகூற முற்படுதல் பொருந்தாத ஒன்றாம்; ஆதலின் திருப்பாவையுள் கூறப்படும் பாவை நோன்பிற்குத் திருவெம்பாவையோடு யாதோர் இயைபும் இல்லை என்க. இனி இது நிற்க, அடிகள் அருளிச் செய்த இத்திருவெம்பாவைக்கு முன்னோர் உரைத்த குறிப்பு, 'சத்தியை வியந்தது' என்பது. இஃது உண்மையில் இப்பகுதிப் பதினான்காம் திருப்பாட்டில் 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி' என வரும் தொடரிலும், ' முன்னிக்கடலைச் சுருக்கி' எனவரும் பதினாறாம் திருப்பாடல் முழுவதிலும் அம்மையைத் தனியாக எடுத்துப் பாடினமை பற்றியே உரைக்கப்பட்டதாம். இங்கு காட்டிய இவ்விடங்களையன்றிப் பிறிதோரிடத்தில் அம்மையைத் தனியாகப் பாடிய பாடலாகத் திருமுறைகளிற் காணுதல் இயலாது. அதுபற்றியே இங்ஙனம் குறிப்பு உரைத்தனர் முன்னோர். இவ்வாறு ஒரு பகுதியுள் எவையேனும் ஒன்றிரண்டு பாடல்களைச் சிறப்புடையனவாகக் கருதி அப்பகுதிக்கு அவர் கருத்துரைத்தல் மேலே காட்டப்பட்டது; இனி வருகின்ற பகுதிகளிலும் காட்டப்படும். அங்ஙனமாக, இக்குறிப்பில் உள்ள, 'சத்தி' என்னும் சொல் 'அம்மை', 'மாது ', 'மங்கை' முதலிய இலக்கியச் சொற்கள் போலாது, சாத்திரச் சொல்லாய் இருத்தலானும், பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பியவாறாக அருளிச் செய்யப்பட்ட திருப்பாடல்கள், காகதாலிய நியாயமாக எட்டாய் அமைந்தமையானும், உலகத் தோற்றத்தின் பொருட்டு முதற்கண் எழுந்த, 'மனோன்மணி' என்னும், 'சிவசத்தி', 'சருவபூத தமனி' என்னும் சத்தியை எழுப்ப, அச்சத்தி, 'பலப்பிரமதனி ' என்னும் சத்தியை எழுப்ப, இவ்வாறே, 'பலவிகரணி', 'கலவிகரணி, காளி,இரௌத்திரி, சேட்டை , வாமை' என்னும் சத்திகள் முறையே ஒன்று ஒன்றனை எழுப்புதலையே இத்திருப்பாடல்கள் கருதின என உள்ளுறைப் பொருள் கூறினர், முன்னை உரையாளர். அதனையே பிறரும் மேற்கொண்டு உரைப்பாராயினர். அது கருத்தாயின், ஏனைய பன்னிரண்டு திருப்பாடல்கட்கும் உலகத் தோற்றத்தோடு இயைந்த உள்ளுறைப் பொருள் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறின், பெரிதும் வலிந்து கூறலாம் என்று அஞ்சி அவரும் நெகிழ்ந்து போயினமையானும், ஏனைய பகுதிகளில் யாதொன்றையும் இன்னோரன்ன சாத்திரப் பொருளே பொருளாக வெளிப்படையாகவேனும், குறிப்பாகவேனும் அருளிச் செய்யாத அடிகள், இத்திருவெம்பாவை மட்டில் யாது கருதி இங்ஙனம் செய்தார் எனக் கடாவுவார்க்கு விடையிறுத்தல் இயலாது. ஆதலால் அவ்வாறு உரைப்பன எல்லாம் சரியான உரை ஆகாது என்று உணர்க. இனி, இத்தத்துவ உரையை மேற்கொள்ளாது விடுத்து, 'இந்நீராட்டிற்குரிய மகளிர் பன்னிரண்டியாண்டிற்கு மேற்படாத பருவத்தினரே' எனக் கொண்டு 'இவ்வெட்டுத் திருப்பாட்டுக்களும் முதற்றொடங்கி ஒவ்வொருபாட்டும் முறையானே பன்னிரண்டியாண்டு முதலாக ஐந்தாண்டு ஈறாகக் குறைந்த பருவத்து மகளிரை எழுப்பியவையாம்' என உரைப்பாரும் உளர். அப்பொருளை இப்பாடல்கள் இனிது தோற்றுவியாமையேயன்றி, சில பொருள்கள் அக்கருத்திற்கு மாறுபடவருதலான், அதுவும் ஓர் நயங்கூறலாய் முடிவதன்றி வேறாகாதென்க. அன்னதேல் இவை எல்லாம் ஆக, திருவம்மானை, திருத்தெள்ளேணம் முதலியவை அந்தந்த விளையாட்டுப் பற்றிய பாடல் என்னும் துணையே தோன்றச் சொல் நிலையை அம்மகளிர் கூற்றாக அமைத்தாரேனும், பொருள் நிலையெல்லாம் தம் கருத்தாகவே அருளிச் செய்த அடிகள், இத்திருவெம்பாவை மட்டில் பொருள் நிலையையும், "உன்னடியார் தாள்பணிவோம்; ஆங்கவர்க்கே பாங்காவோம்; - அன்னவரே எங்கணவராவார்'. 'எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க', 'முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை' என்றாற்போல அம்மகளிரது கூற்றாகவே அருளிச் செய்தது என்னையெனின், நீராட்டுப் பாடலாகிய இதனை, ஏனைய விளையாட்டுப் பாடல்கள் போலப் பொதுவகையாற் செய்யாது, இறைவனது விழா நாளில் ஆடும் நீராட்டிற்குரியதாகச் செய்தருளினமையின், அதனைத் தமக்கேயன்றி அம்மகளிர்க்கும், உலகினர் பிறர்க்கும் பயன்படுக என்னும் கருணை காரணமாக , அங்ஙனம் செய்தருளியதன்றி வேறில்லை என்க. அம்மையைத் தனியாகப் பாடிய பாட்டு இதன்கண் காணப்பெறுதலும் மகளிர் பொருட்டேயாம். பாவைப்பாட்டுப் பற்றியும், இத்திருவெம்பாவைப் பொருள் பற்றியும், அவை ஏதுவாக அடிகளது நிலை, ஏனை அடியாரது நிலை பற்றியும் பலரும், பலவாறு கூறுபவாகலின், அவைபற்றி இத்துணை விரித்துக் கூறல் வேண்டுவதாயிற்று. இவற்றால், 'பாவைப்பாட்டு' என்பது, கன்னிமைப் பெண்கள் நோன்பு மேற்கொண்டு வழிபடும் பாவை பற்றியது அன்று; அம்மானை, ஊசல் முதலியன போல மகளிர் விளையாட்டுப் பாடலே' என்பதும், 'அவ்வாடலாவது நீராட்டு' என்பதும், அந்நீராட்டினை அடிகள் 'மார்கழி நீராட்டாக வரையறுத்தருளினார்' என்பதும் 'அதனால் இத்திருவெம்பாவையைத் தமக்கேயன்றி அந்நீராடு மகளிர்க்கும், உலகினர் பிறர்க்கும் பயன்படுமாறு செய்தருளினார்' என்பதும் ' இவ்வாற்றால் இத்திருவெம்பாவையில் வரும் மகளிராதல், இதனை அருளிச் செய்த அடிகளாதல், ஏனைச் சிவநெறி ஆசிரியராதல் இறைவனை உடம்பால் தழுவி இன்புறக் கருதினார் என்றதற்கு ஒரு தினைத் துணையேனும் இடமின்று' என்பதும் ஒருவாறு காட்டப்பட்டன. நூறும், ஐம்பதுமாகிய பாடற்றொகுதிகளை முறையானே முன் வைத்துப் பின்னர் இருபதாகிய பாடற்றொகுதிகளை வைக்கின்றுழி, எட்டடியான் இயன்ற இத்திருவெம்பாவையை முன்வைத்துக் கோத்தனர். இது, முழுதும் வெண்டளையான் வந்த எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவான் இயன்றது. தொல்காப்பியர், 'கொச்சக ஒருபோகு' என்றதனையே பிற்காலத்தார் 'கொச்சகக் கலிப்பா' என்றனர். "தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்" (தொல், பொருள் 452) என்றமையின் இது தரவு மாத்திரமாய் வந்தது. மேலும் இவ்வாறு வந்தமையும், இனியும் இவ்வாறு வருதலும் காண்க. இவ்விடத்து "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது" (தொல். பொருள் 452) என்றமையான், கலிவெண்பாட்டுப் போல இக்கொச்சக ஒரு போகு முழுதும் வெண்டளையானே வருதல் கொள்ளப்பட்டது. "தரவே தானும் நாலடி இழிபாய் ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே" (தொல். பொருள் 438) எனவும் "தரவே தானும் நான்கும் ஆறும் எட்டும் என்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும்" (தொல். பொருள் 445) எனவும் ஆங்காங்குக் கூறினமையின், இங்குத் தரவு எட்டடியாய் வந்தது. வருகின்ற பகுதியுள் ஆறடியாய் வரும். நாலடியாய் வருதலே பிற்காலத்தில் பெருவழக்காயிற்று. The cold wintry month of Maargazhi (around December / January) is significant among the saiva festivals of Tamilnaadu. As this is the time of the year when all saiva temples of the land are specially decorated, to celebrate with great zeal and veneration, the cosmic dance of the Lord. Indeed by a strange coincidence or otherwise, this is also the time when the other major religions of the world too, organize special prayers and ceremonies, offering thanks to God as conceived by them for His generosity and indulgence towards mankind. In Tamilnadu, on the full moon day of the month of Maargazhi, the festivities reach a climax. The star of Thiru Aathirai is on the ascendancy. Saint Appar composed a whole new decad (Thirumurai 4:21) describing the intricate details of the festival at Thiruvaaroor, as requested by his contemporary Saint Thirugnaana Sambandar (vide முத்து விதானம் மணிப்பொற் கவரி....) In the early morning hours of each day (around 5 a.m.) of Maargazhi, groups of girls in the town gather together and proceed to nearby lakes and rivers for the holy bath, singing the glories of Lord Civan in a chorus of divine music. While proceeding, they call in all the members of the team who had promised to join them but are delayed for some reason. This ritual goes on day after day during the whole month. It is well to note here that Thiru Embaavai is different in its import from a latter day Composition (similar sounding one) called Thiruppavai. For, the latter is an adoration for icon decorated by young girls who perform rituals. Thiru Embaavai, where maids are portrayed as a congregation proceeding to water front for the holy bath, contains deep insight into the many aspects of saivism and the true nature of the Almighty. The immanent craving of the soul for total emancipation is transparent in Thiru Embaavai, although there is similarity in the closing phrases of these two compilations. "Aelore Embaavaai" Embaavaai = Oh doll like maid! "Ael", 'Ore' = (ஏல், ஓர்). Understand this, and imbibe the spirit of the Lord. Arise, Oh doll like maid, and imbibe the spirit of the Lord. Such is the view implied in this chapter (7) Thiru Embaavai. Salient features of saiva theology have been incorporated into this chapter, as indeed into all other decads by Saint Maanikkavaachakar - like the uniqueness of Lord Civa, His birthless and deathless state, His powers of granting eternity to devotees, His generosity and kindness to all creatures and so forth. This chapter is cast in the form of questions and answers - the visiting maids asking questions and their friends responding suitably. Thus the saint dramatises the episode in a characteristic manner and in the process, drives home many salient features implicit in saiva theology. Such question/answer session as in Chapter 12 Thiruchchaazhal is a powerful tool in conveying the high points of spiritual knowledge which might otherwise largely remain as abstruse and recondite metaphysical notes. 7. 1 ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மே னின்றும் புரண்டிங்ங னேதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம்-கண் மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி-தான்? மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம் மறந்து போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே! ஈதே எம்தோழி பரிசு ? -ஏல் ஓர் எம்பாவாய்! aathiyum anthamum illaa arumperunj soothiyai yaampaada keeddeeyum vaaL thadangkaN maathee vaLaruthiyoo vanseviyoo ninsevithaan maatheevan vaar kazalkaL vaazththiya vaazththolipooy viithivaay keeddalumee vimmi vimmi meymmaRanthu poothaar amaLiyin meel ninRum puraNdu ingngan eetheenum aakaaL kidanthaaL ennee ennee iithee emthoozi parisueeloor empaavaay பொ-ரை: ஒளி பொருந்திய நீண்ட கண்ணை உடைய பெண்ணே ! முதலும் முடிவுமில்லாத காண்டற்கரிய பெருமையுடைய ஒளியானவனை நாங்கள் பாடுகிறோம். அதைக் கேட்டும் இன்னும் நீ துயில்கின்றனையோ ? உன் செவிதான் சொல்லுவதைக் கேளாத வலிய செவியோ? பெரிய கடவுளது நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திய வாழ்த்தின் ஓசை தெரு முழுவதும் பரவியுள்ளது. அதனைக் கேட்ட அளவிலேயே ஒருத்தி பொருமி அழுது, உடம்பு மறந்து, மலர் நிறைந்த படுக்கையிலிருந்து கீழே விழுந்தாள். இந்நிலத்தே ஒன்றிற்குமாகாதவள் போல் மூர்ச்சித்துக் கிடக்கலாயினள். இது என்ன நிலை பார்! அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய உன் தன்மை, விழித்து எழாதிருக்கும் இந்நிலையோ? இது என்ன? எமது கண் பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக. ஆய்வாயாக . Oh maid with long bright eyes, would you still slumber on, even after hearing your psalms extolling the glories of our Lord, the mighty rare flame (of grace), who has neither a beginning nor an end? Are you hard of hearing? (Thus question her friends who have come to wake her up. (And they find that) this maid on hearing sounds from the street in adoration for the holy anklet clad Feet of the Supreme Lord, is indeed filled with emotion, sobbing and sobbing, with consciousness fading out as in a trance. And she rolls over in her flower bedecked bed, lying there wistfully, unable to participate in the rituals. Alas! what pity, what pity! Such indeed is the mark of this friend! Please do arise, Oh maid, and come over and imbibe the spirit of our Lord. Thus they call out to their slumbering maid, standing in front of her house, in the early hours of the morning. கு-ரை: தம்முள் நட்புடைய பல பெண்டிர், தங்கள் தோழியாகிய ஒருத்தியைத் துயிலுணர்த்தற் பொருட்டுக் கூறிய பாட்டாக இது தோன்றுகின்றது. திருவண்ணாமலையில், மார்கழி மாதத்திலே, விடியற் காலை, குளத்தில் முழுகச் செல்லும் பெண்டிர், தம்மவரை அழைப்பதாகவும், தம்முட் பேசிக் கொள்ளுவதாகவும் இப்பதிகம் இயற்றப்பட்டதாகக் கூறுப. தத்துவ வுணர்ச்சி சான்ற ஒரு சாரார், மனோன்மணி, சர்வ பூததமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, இரௌத்திரி, சேட்டை, வாமை என்னும் ஒன்பது சத்திகளுள், முன்னின்றவர் பின்னின்றவரைத் துயில் எழுப்புவதாகவும், எல்லாருங்கூடி இறைவனை வழுத்தும் பொருட்டுத் தம்முள் பாடுவதாகவும், இயம்பிய பாடல்களின் தொகுதி திருவெம்பாவை ஆகும் என்ப. சத்திகளின் இயக்கத்தால், அனந்தர் வாயிலாக மாயைக்குக் கீழ்ப்பட்டவற்றின் படைப்பு நிகழும் என்ப. வளருதியோ= கண் வளருதியோ= தூங்குகின்றாயோ . ஏல் ஓர் என்பதை அசையாகவும் கொள்வர். இப்பாட்டு மனோன்மணி, சருவ பூத தமனியைத் துயிலெழுப்பி இயக்குவதை உணர்த்தும் என்ப. 2. பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகனாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசீ யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்து ளீசனார்க் கன்பார்யா மாரேலோ ரெம்பாவாய் "பாசம் பரஞ்சோதிக்கு" என்பாய், இராப்பகல் நாம் பேசும் போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் ! - 'நேரிழையீர்! சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?'-ஏல் ஓர் எம்பாவாய்! paasam paranjsoothíkku enpaay iraappakalnaam peesumpoothu eppoothu ippoothaar amaLikkee neesamum vaiththanaiyoo neerizaiyaay neerizaiyiir sii sii ivaiyum silavoo viLaiyaadi eesum idamiithoo viNNoorkaL eeththuthaRku kuusum malarppaatham thantharuLa vantharuLum theesan sivalookan thillai siRRampalaththuL iisanaarkku anpaaryaam aareeloor empaavaay பொ-ரை: “செவ்விய அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும்போது, 'எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கு' என்று கூறுவாய். அப்படிப்பட்ட நீ, எப்பொழுது இம்மலர்கள் நிறைந்த படுக்கையின் மீது விருப்பம் வைத்தாய்" எனக் கூறுகின்றனர், எழுப்பும் பெண்கள். துயில் நீங்காத மாது கூறுகிறாள் " நங்கையர்களே! சீ சீ, நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சில போலும் . நீங்கள் விளையாடி வைவதற்கு இதுவோ சமயம்? " என்றாள். பிற மாதர்களோ, "எமது கண்பாவை போன்ற தோழி! இப்படித் தூக்கத்தில் குழறாதே! விண்ணோர்கள் வழிபட, அவர்களுக்குத் தோன்றாத திருவடிகளை நமக்குத் தந்தருள வந்தருளும் குருவாகிய சிவலோக நாதன் தில்லை ஞான சபையாண்டவன் ஆகிய பெருமானுக்கு நம் அன்பு எவ்வாறிருக்க வேண்டும். நாம் யார்? அவனது அடிமைகளல்லவோ? சிந்தி, சொல்வதைக் கேள்” என்றனர். With dedication day and night unto the Lord of universal effulgence, when shall we be in close communication with Him (if not now)? Have you got attached to the flower-bedecked bed of yours, Oh lass with bright gold ornaments? (Thus in a friendly remonstrance, her friends gathered in front of her house, ask her to think and reply). To which she replies; Listen Oh maids, are the words of greetings to our Lord an ordinary matter? Is this the place for play and rebuke? The good Lord offers His flowery Feet to us here. Feet that even the heaven-dwelling gods dread to speak on! We are devotees of the Lord of effulgence, the Lord of Civa Loka, of the holy hall of Chidambaram. Come, let us go over to Him and imbibe the spirit of His presence. கு-ரை: பெண்டிருள் உரையாடலாக இப்பாட்டு இயற்றப்பட்டமை காண்க. சர்வ பூததமனி, பலப்பிரமதனியை எழுப்பு முறையென்ப. பாசம்= அன்பு 'ஆய்' என்பதைப் பாசம் என்பதனோடும் கூட்டுக . கூசுதல்= தோன்றாது மறைதல். ' 'அன்பு யார்', என்பதில் 'யார்' எது = எத்தன்மையது? திணை வழுவமைதி. ஓர்=சிந்தி, ஏல்= சொல்லை ஏற்றுக் கொள். 3. முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தெ னத்த னானந்த னமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீ ரீசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ வெத்தோநின் னன்புடைமை யெல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய். 'முத்து அன்ன வெள்- நகையாய்! முன்வந்து, எதிர் எழுந்து, “ என் அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்' 'பத்து உடையீர் ! ஈசன் பழ அடியீர் ! பாங்கு உடையீர் ! புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ ?' 'எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?' 'சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை ?' 'இத்தனையும் வேண்டும் எமக்கு' -ஏல் ஓர் எம்பாவாய்! muththanna veNnakaiyaay munvanthu ethirezunthen aththan aananthan amuthan enRu aLLuuRi thiththikka peesuvaay vanthu un kadaithiRavaay paththu udaiyiir iisan paza adiyiir paangku udaiyiir puththadiyoom punmaithiirththu aadkoNdaal pollaathoo eththoonin anpudaimai elloom aRiyoomoo siththam azakiyaar paadaaroo namsivanai iththanaiyum veeNdum emakku eeloor empaavaay. பொ-ரை: முத்துப் போன்ற வெள்ளிய பற்களை உடையவளே! முன்னேயெல்லாம் எங்களுக்கெதிராக எழுந்து வந்து என் தந்தையே, இன்பனே, அமுதம் போன்றவனேயென்று இறைவனை வாழ்த்துவாய். அதிகமாக வாயூறி இனிமை பயக்கும்படி அவன் புகழைப் பேசுகிற தன்மையுடையாய் நீ! இன்று நாங்கள் அழைத்தும் நீ எழுந்து வந்து உன் வாயிற்கதவைத் திறவாதிருக்கிறாய்" இவ்வாறு மாதர்கள் பலர் தங்கள் தோழி ஒருத்தியைத் துயிலெழுப்பத், தோழி கூறுகிறாள், "இறைவன்பால் மிகுந்த பற்றுள்ளவர்கள் நீங்கள். ஆண்டவனுடைய பழைய தொண்டர்கள். மிகுந்த உரிமையுடையவர்கள், புதிதாக வந்த அடியேங்களது சிறுமையை ஒழித்து நீங்கள் எங்களை ஆட்கொண்டால், அது கெடுதியா?" என்கிறாள். பிற மாதர்கள், “நீ அன்புடையாயென்பது ஏமாற்றமா? உன் தன்மையெல்லாம் நாங்கள் தெரியாதவர்களா? மனந்தூயதாகப் பெற்றவர், நம் பெருமானைப் பாட மாட்டார்களா? எங்களுக்கு வேண்டியது நீ பாட வேண்டும். அவ்வளவுதான், எமது பாவை போலாய் நீ இதைச் சிந்தி, சொல்வதைக் கேள்” என்றனர். Oh maid, of pearl-like teeth, you always come forward and speak sweetly adoring the Lord as father, One of bliss, One that is like ambrosia. Come now and unlock the door of your house (Reply) "You devotees, the Lord's time honoured vassals,You of the right path! Is it too much for you to attempt to remove the shortcomings of new devotees (like me) and carry them along?" Hearing this, the gathered maids, expostulate thus: Don't we all know how far your dedication ! is response: Will not those of gracious heart sing (like me) on the glory of Lord Civa? Nevertheless, you choose to find fault with me, which reprimand perhaps I do deserve. Let us now go over to Him and imbibe the spirit of His presence. கு-ரை: இது பலப்பிரமதனியும் அவளைச் சார்ந்தாரும் பலவிகரணி யென்னும் சக்தியைத் துயிலுணர்த்தியது என்ப. பத்து = பற்று என்பதன் மரூஉ. இனி, அடியாரிலக்கணம் பத்தும் உடையீர் என்றும் பொருள் கொள்ளலாம். பாங்கு = உரிமை, ஒழுக்கம். எத்து= ஏமாற்று . அழகியார் = தூயார். இத்தனை= இவ்வளவு. தனை = அளவு. உம், தான் என்ற பொருளில் வந்தது. பொல்லாததோ என்பது 'பொல்லாதோ' எனக் குறைந்தது. 4. ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந் தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய் 'ஒள்-நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ ? ' 'வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ ?' 'எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும் கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே' 'விண்ணுக்கு ஒரு மருந்தை, வேதவிழுப் பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து, உள்ளம் உள்நெக்கு நின்று உருக யாம் மாட்டோம்; நீயேவந்து எண்ணிக், குறையில், துயில்'-ஏல் ஓர் எம்பாவாய் ! oNNiththila nakaiyaay innam pularnthinRoo vaNNa kiLimoziyaar ellaarum vanthaaroo eNNikkodu uLLavaa sollukoom avvaLavum kaNNaith thuyinRu avamee kaalaththai pookkaathee viNNukku orumarunthai veetha vizupporuLai kaNNukku iniyaanai paadi kasinthu uLLam uLnekku ninRu uruka yaammaaddoom neeyeevanthu eNNi kuRaiyil thuyileeloor empaavaay பொ-ரை: "ஒளியுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய் ! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையோ? " இவ்வாறு மாதர் பலர் தங்கள் தோழியை எழுப்பி வினவ அவள், "அழகிய கிளி போன்ற சொல்லினர் எல்லோரும் வந்து விட்டார்களா? " என்று கேட்க மற்றவர்கள், " வந்தவர்களைக் கணக்கிட்டு உள்ளபடி சொல்லுகிறோம். அதுவரையும் கண்ணினைத் துயிலச் செய்து வீணாக நேரத்தைக் கழித்து விடாதே. விண்ணவர்கள் யாவருக்கும் ஒப்பற்ற அமுதமாய் உள்ளவனை , ஞானநூல் கூறும் மேலான பொருளானவனை, நமது கண்களுக்கு இனிய காட்சி தருவானை நாம் பாடி அழுது மனம் முழுதும் கனியும்படி உருகுவோமாக. நாங்கள் வந்திருக்கிறவர்களை எண்ண முடியாது . நீயே எழுந்து வந்து அவர்களை எண்ணிப்பார்த்து எண்ணம் குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குக” என்றனர். Oh maid with sparkling teeth, is it not dawn time, as yet? (so saying the visiting girls ask their slumbering team-mate to come and join them). To which she responds by asking a counter question whether all their other friends, sweet in talk like colourful parrots have arrived. (The maids reply) yes, we will count the numbers and report to you, but (please) do not close your eyes, sleeping and wasting time. You come right here yourself, and count. With melting hearts, sing on the One so soothing to the eyes, One that is ambrosia to heaven dwellers, the profound essence of the vedas. Let us not waste time in counting who all have arrived here. Please wake up and imbibe the spirit of the Lord, Oh maid! Note: The wake up call is intended to alert the indifferent 'work a day' world that is steeped in the transient pleasures of the earth, oblivious of the golden opportunity to achieve salvation and total union with the Lord, from right here in this human incarnation. "யாம் மாட்டோம்" means 'we are unable to do' as in St. Appar's "பத்தனாய்ப் பாடமாட்டேன்". கு-ரை: நித்திலம்= முத்து, வண்ணம் = அழகு, நிறம். கொடு = கொண்டு, உள்ளவா= உள்ளவாறு, துயின்று = துயில்வித்து, கசிந்து = அழுது. நெக்கு = கனிந்து, வேதம் = ஞான நூல். இது பலவிகரணி, கலவிகரணியைத் துயிலுணர்த்துவதாகக் கூறுப. 5. மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல மிடினு முணரா யுணராய்கா ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய் 'மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை. "நாம் போல் அறிவோம்," என்று உள்ள பொக்கங்களே பேசும் பால் ஊறு தேன் வாய்ப் படிறீ ! கடை திறவாய் ஞாலமே, விண்ணே , பிறவே, அறிவு-அரியான் கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச், "சிவனே! சிவனே! " என்று ஓலம் இடினும், உணராய், உணராய்காண்! ஏலக் குழலி பரிசு ' - ஏல் ஓர் எம்பாவாய்! maalaRiyaa naanmukanum kaaNaa malaiyinai naam pool aRivoom enRu uLLa pokkangkaLee peesum paal uuRu theenvaay padiRii kadaithiRavaay njaalamee viNNee piRavee aRivu ariyaan koolamum nammai aadkoNdaruLi koothaaddum siilamum paadi sivanee sivanee enRu oolam idinum uNaraay uNaraaykaaN eela kuzali parisu eeloor empaavaay பொ-ரை: " மயிர்ச்சாந்தணிந்த கூந்தலுடையாய்! திருமாலால் திருவடியினையும், நான்முகனால் (பிரம்மாவால்) முடியினையும் காண இயலாத மலை போன்ற நெடும் மேனியனை நாம் அறிய விழைகிறோம். அவனை அறியக் கூடும் என்று நினைக்கும்படியாக வேடிக்கையாகப் பொய்களையே பேசுகின்ற பாலும் தேனும் ஊறினாற் போன்ற இதழ்களையுடைய தந்திரக்காரியே! இவ்வுலகோரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அரியவன் அவன். அவனது திருவடிவத்தையும் சிறியோமை அடிமையாகக் கொண்டு குற்றம் பொறுத்துச் சீர் செய்யும் பெருங்குணத்தையும் வியந்து பாடுவோம். ' சிவபெருமானே, சிவபெருமானே' எனச் சரணடையும் குரல் எழுப்பியும், அதனைக் கேட்டுணராது துயில் நீங்காதிருக்கிறாய். எம்பாவாய் இதுவோ உன் தன்மை? நாங்கள் சொல்லுவதை ஏற்றுச் சிந்திப்பாய்” என்றனர். Oh maid, prone to gossip even on worldly trivialities, with words sweet like milk and honey - asserting that " we have come to know Him who is beyond the comprehension of Thirumaal and Brahma!" Please unlock your door. We are crying out from here on the greatness of Lord Civa in taking us under Him and caring for us, on His manifestation that transcends the earth, the sky and all else. Despite our loud calls 'Oh Lord Civa, Oh Lord Civa' you do not seem to understand this, Oh maid, you do not understand. Such is the nature of my friend with scented locks. Please come over and imbibe the spirit of Lord Civa. கு-ரை: 'மலையினை' என்பதற்கு, மலைவு விளைக்கும் ஒன்றை என்று பொருள் கொள்ளுவாரும் உளர். உள்ள = நினைக்க, படிறு = கபடம். இறைவனை அறியமுடியாமையைத் தான் உணர்ந்தும் பிறர் மாறாக எண்ணும்படி விளையாட்டாகப் பேசுவது, கபடமாயிற்று. கோதாட்டுதல் = சீராட்டுதல், கோது = குற்றம், அதனைப் பாராட்டாமை. முதல் உணராய்= அறியாய், என்னும் பொருட்டு; இரண்டாவது உணராய்= (துயிலை) நீங்காய். ஞாலமே, விண்ணே , பிறவே என்பதில் 'ஏ' எண்ணிடைச் சொல் போல் அசை. இது கலவிகரணி, காளியைத் துயிலுணர்த்தியதாகக் கூறியது என்ப. 6. மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவ னென்றலு நாணாமே போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான் றானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய் 'மானே! நீ, நென்னலை, "நாளை வந்து உங்களை நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ? வானே, நிலனே, பிறவே, அறிவு-அரியான் தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும் வான் வார்கழல் பாடிவந்தோர்க்கு, உன்வாய் திறவாய்! ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப்பாடு'-ஏல் ஓர் எம்பாவாய்! maanee nii nennalai naaLaivanthu ungkaLai naanee ezuppuvan enRalum naaNamee poona thisaipakaraay innam pularnthinRoo vaanee nilanee piRavee aRivu ariyaan thaanee vanthu emmai thalaiyaLiththu aadkoNdaruLum vaanvaar kazal paadi vanthoorkku unvaaythiRavaay uunee urukaay unakkee uRum emakkum eenoorkkum thamkoonai paadeeloor empaavaay பொ-ரை: “மான் போன்ற விழியுடைய பெண்ணே! நீ நேற்று 'உங்களை நாளை நானே வந்து துயிலெழுப்புவேன்', என்று கூறினாய். இன்று நாங்கள் உன்னை எழுப்ப வந்த பின்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய். நீ சொன்ன சொல் போயின திக்கினைச் சொல்ல மாட்டாயா? இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலகும் மண்ணுலகும் ஏனையவும் அறியக்கூடாத சிறப்புடையவன் எம்பெருமான். அவன் தானாகவே வலிய எழுந்தருளி வந்து நமக்கு முதற்கருணை காட்டி ஆண்டருளினான். அவனது பெருமைமிக்க நெடிய கழலணிந்த திருவடிகளைப் பாடி வந்தவர்களாகிய எங்களுக்கு நீ உன் வாய் திறந்து ஒன்றும் பேசாது தூங்குகிறாய். பாடி உடலும் உருகப் பெறாய். உனக்கே இது பொருந்தும். நமக்கும் பிறர்க்கும் தலைவனாகியவனை நீ பாடுவாயாக" என்றனர். Deer-like maids, yesterday you said that you yourself would come and wake us up tomorrow. Yet are you not now ashamed of having backtracked on this promise? Is it not dawn as yet? Please open your mouth and answer us, singing on the glories of bejewelled Feet of the Lord who is beyond the realm of the sky and the land and all the rest. Sing on the glory of His Feet that shower bliss on us and take us under His care. Don't you melt in emotion? Come, Oh doll-like maid and sing on the Lord who is your chief as also our chief and the chief of all others. Come over and imbibe the spirit of Lord Civa. கு-ரை: மான், பெண் என்ற பொருளில் வழங்கியது. தூங்கி ஒன்றும் பேசாமையால் , நீ போன இடம் கூறினாய் இல்லை என்று பொருள் கொள்ளுவாரும் உளர். 7. அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியா லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 'அன்னே, இவையும் சிலவோ? பல அமரர் உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான் சின்னங்கள் கேட்ப, “சிவன்" என்றே வாய் திறப்பாய் "தென்னா” என்னா முன்னம், தீசேர் மெழுகு ஒப்பாய் ; "என்னானை, என் அரையன், இன்அமுது," என்று எல்லோமும் சொன்னோம்கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ? வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசு?'-ஏல் ஓர் எம்பாவாய்! annee ivaiyum silavoo pala amarar unnaRku ariyaan oruvan irunjsiiraan sinnangkaL keedpa sivan enRee vaaythiRappaay thennaa ennaa munnam thiiseer mezukuoppaay ennaanai en araiyan in amuthu enRu elloomum sonnoom keeL vevveeRaay innam thuyiluthiyoo vannenjsa peethaiyarpool vaaLaa kidaththiyaal ennee thuyilin parisueeloor empaavaay பொ-ரை: தாயே! உனது விளையாடல்களுள் இவைகளும் சிலபோலும். தேவர்கள் பலரும் எண்ணி அடைவதற்கரியவனான ஒப்பற்றவன், பெரும் புகழுடையவனாகிய பெருமானது சங்கு முதலிய ஒலி கேட்கவும் 'சிவா' என்று வாய் திறப்பாய். 'தென்னவனே' என்று சொல்லுமுன்னம் தழலிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். ஆனால் இப்போது என் இனிய தலைவன், என் வேந்தன், இன்னமுதானவன் என்று நாங்கள் எல்லோரும் தனித்தனியே இயம்பினோம். இன்னமும் தூங்குகின்றாயோ? அன்பில்லாத திண்ணிய மனமுடைய அறிவிலார்போலச் சும்மா படுத்திருக்கிறாயே. துயிலின் சிறப்பை என்னென்று உரைப்பது? He eludes the many gods, is a matchless One, and is one of great glory and wealth. Are these traits insignificant, Oh mother-like friend! Please tell us. On hearing the attribute of the Lord, you always open your mouth and chant 'Civa Civa'. You melt like wax on fire, even before you hear the call. Oh Lord of the southern land! All of us here, raise voice individually, calling out. My Lord, my Chief, Oh Sire, one that is ambrosia. How come then, you still continue to sleep on! Do you still lie in bed like stony hearted fools? How strange is the nature of sleep! Maid, come over and imbibe the spirit of Lord Civa. கு-ரை: சின்னங்கள் - அடையாளமாகிய சங்கு முதலிய இசைக் கருவிகள். தென்னா - தென்னவனே, அழகா, ஆனு + ஐ = ஆனை. ஆனு = இனிமை, நன்மை, ஐ = தலைவன், இது இரெளத்திரி, சேட்டையைத் துயில் எழுப்பினது என்ப. 8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு மேழி லியம்ப வியம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவா யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ வூழி முதல்வனாய் நின்ற வொருவனை யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய் 'கோழி சிலம்பச், சிலம்பும் குருகு எங்கும் ; ஏழில் இயம்ப, இயம்பும் வெண்சங்கு எங்கும்; கேழ்இல் பரஞ்சோதி, கேழ்இல் பரம் கருணை கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ ? வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய்திறவாய் ! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ! ' ஏல் ஓர் எம்பாவாய்! koozisilampa silampum kuruku engkum eezil iyampa iyampum veNsangku engkum keez il paranjsoothi keezil parangkaruNai keez il vizupporuLkaL paadinoom keddilaiyoo vaazi iithu enna uRakkamoo vaay thiRavaay aaziyaan anpudaimai aam aaRum ivvaaRoo uuzi muthalvanaay ninRa oruvanai eezai pangkaaLanaiyee paadeeloor empaavaay பொ-ரை: கோழி கூவவும், பிற பறவைகள் எங்கும் ஓசை எழுப்புகின்றன. திருப்பள்ளி எழுச்சியை உணர்த்த, வெண்சங்கமானது எவ்விடத்தும் முழங்குகிறது. ஒப்பற்ற மேலான ஒளியானவனும், ஒப்பற்ற மேலான அருளுடையவனுமாகியவன் எம் பெருமான். அவனது, நிகரில்லாத உயர்ந்த புகழ்களை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? நீ நன்றாக வாழ்வாய்! இது எத்தகைய தூக்கமோ தெரியவில்லை. வாய் திறக்க மாட்டேன் என்கிறாயே ? திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் நம் சிவனிடத்தில் பேரன்புடையவர் எனச் சொல்லுகின்றனர். அதற்குக் காரணம் அவரும் உன்னைப்போல் பெருந்தூக்கம் தூங்குவதால் தானோ? கற்ப காலங்களுக்கு எல்லையாய தலைவனாய் விளங்கிய ஒருத்தனாகிய உமைபாகனையே பாடுக” என்றனர். The cock, crows and birds chirp around everywhere. Musical instruments play tunes and the white conch sounds the call. Do you not hear us sing on the Lord, the matchless universal flame, the matchless universal grace, the matchless nobility? What kind of sleep is this? Please open your mouth. Is this state much like the dedicated slumber of Thirumaal who is always sleeping in the snake bed in the ocean of milk? Sing on this unparalleled one who stands as the very source of time itself? On Him that is indulgent towards the meek and the forlorn! Come over and imbibe the spirit of Lord Civa, Oh doll like maid. கு-ரை: 'குருகு' என்பது பறவைகட்குப் பொதுவான பெயர். நாரை, அன்னம் முதலியவற்றிற்கும் பெயராம் . எங்கும் என்றதால், பறவைப் பொதுவெனக் கோடலே பொருத்தம். ஏழில் = எழில் என்பதன் நீட்சி. எழுதல்= எழுச்சி, இறைவனது திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சிக் காலத்தே, வெண்சங்கம் ஊதுதல் மரபு. 'விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்' என்ற தேவாரமும் காண்க. பல கோயில்களிலும் சங்கொலிப்பதால், 'எங்கும்' என்றார். மக்கள் எழவேண்டும் என்பதையும், சங்கொலி, குறிப்பால் உணர்த்தியவாறு. கேழ் = உவமை. வாழி - புகழ்ச்சி போல் இகழ்ச்சி . ஆழியான்= வஞ்சகன்; கள்வன். ஆழி = சக்கரம், அரசன். 'ஆழி' என்பதற்கு 'அம்பு' என்று பொருள் கொள்ளில், திரிபுரம் எரிய அம்பு விட்டான் என்று பொருள்படும். ஆழியான்= மாயோன் என்று பொருள் கோடலே சிறந்தது. அவனது அன்பு போலும் அன்பின், 'ஆழியான் அன்பு' என்றனர். மாயோன் சிவபெருமானுக்குத் தன் கண்ணைப் பறித்து, சாத்த சக்கரம் பெற்றமை போல் யானும் நெறிமுறை பிறழாது அப்பெருமானை வழிபட்டுப் பெருவாழ்வு பெறுவேன் என்று கூறுகின்றவள் இவள் என்பது, "ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ" என்ற ஏச்சுரையால் பெறப்பட்டது. 'நெறிமுறை பிறழாது சிவனை வழிபடுவேன்' என்ற நீதானே இத்துணை ஓசை எழவும் எழாது உறங்குகின்றாய். நீ தானே பெருவாழ்வு பெறப்போகின்றவள்' என்பது கருத்து. “மாயோனது அன்பினை நீயும் பெறுதற்கு அவன் திருப்பாற் கடலில் பாம்பின் மேல் உறங்குவது போல் எப்பொழுதும் உறங்குகின்றாய் போலும்” என்பது உள்ளுறை நகைச்சுவை. இப்பாட்டு சேட்டை வாமையை எழுப்பக் கூறியது என்ப. ஏழை = பெண். இங்கே அம்மையைக் குறித்தது. இதுவரை வந்த எட்டுத் திருப்பாட்டுக்கள் மகளிருள் முன் எழுந்தோர் பின்னர் எழற்பாலரை அவர்தம் வாயிலிற்சென்று அவரை எழுப்பியவை. அடுத்து வரும் ஒரு பாட்டு அவர் எல்லோரும் ஒருங்குகூடிய பின் முதற்கண் இறைவனைப் பரவுவது. 9. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே யுன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோ முன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோ மன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய் 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே ! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர்அடியோம் உன் அடியார் தாள்பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து சொன்னபரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் , என்ன குறையும் இலோம்'- ஏல் ஓர் எம்பாவாய்! munnai pazamporudkum munnai pazamporuLee pinnai puthumaikkum peerththum ap peRRiyanee unnai piraanaaka peRRa un siir adiyoom un adiyaar thaaL paNivoom aangku avarkkee paangku aavoom annavaree em kaNavar aavaar avar ukanthu sonna parisee thozumpaay paNiseyvoom innavakaiyee emakku emkoon nalkuthiyeel enna kuRaiyum iloom eeloor empaavaay பொ-ரை: முற்பட்டனவாகிய பண்டைப் பொருள்கள் யாவற்றிற்கும் பழமையான மெய்ப்பொருளே! பிற்பட்ட புதுமையின்பத்துக்கும் பழமையானவாறே மீண்டும் புதுமை நலம் தரும் தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற சிறப்புடைய உன் அடிமைகளாகிய நாங்கள் உன் தொண்டர்களது திருவடிகளை வணங்குவோம். அவ்வாறே அவர்களுக்கே உறவினர் போல் உரிமையராய் ஒழுகுவோம். சிவபெருமானிடம் அன்புடையராய் ஒழுகும் ஆடவர்களே எங்களுக்குக் கணவராய் வாய்த்தல் வேண்டும். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட முறையே அவர்கட்கு அடிமையராய் நின்று ஏவல் செய்வோம். இந்த முறையே எங்களுக்குக் கிடைக்குமாறு எம்பெருமான் நீ அருள் புரிவையாயின், எவ்வகையான குறைபாடும் தேவையும் இல்லாதவர்களாய் வாழ்வோம். Primordial entity that is older than the oldest! Eternity that is newer than the newest! We, Thy worthy disciples that are fortunate to have thee as our Chief, do worship the Feet of Thy disciples. We are with such disciples. Such-like disciples alone, are eligible to be our spouses. We work as their vassals, in accordance with their orders. Oh Lord Civa our Chief, if Thou shouldst grant us this dispensation, we will have no grouse whatsoever. Oh doll-like maid, imbibe the spirit of our Lord. கு-ரை: கன்னிப்பெண்டிர் கூறிய பாட்டு இது என்று தோன்றுகிறது . பேர்த்தும்= மீட்டும், பழமையாயிருந்தது போலவே புதுமையாயும் என்பது கருத்து. அப்பெற்றி= அந்தத் தன்மை, அதாவது , புதுமை. பாங்கு - உறவு, உரிமை, நட்பு, துணை. நவசக்திகள் ஒருங்கு இறைவனை வழுத்திய பாட்டாகவும் கூறுப. 10. பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன் வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலு மோத வுலவா வொருதோழன் றொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகா ளேதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலா ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய் 'பாதாளம் ஏழினும் கீழ் சொல்-கழிவு பாதமலர் ; போது ஆர் புனை முடியும் எல்லாப்பொருள் முடிவே! பேதை ஒரு பால், திருமேனி ஒன்று அல்லன் ; வேதமுதல் விண்ணோரும், மண்ணும், துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் ; கோது இல் குலத்து, அரன்-தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்! ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? ஏது அவனைப்பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்! paathaaLam eezinum kiiz soRkazivu paathamalar poothu aar punaimudiyum ellaa poRuLmudivee peethai oru paal thirumeeni onRu allan veethamuthal viNNorum maNNum thuthiththaalum oothaulavaa oruthoozan thoNdar uLan koothu il kulaththu aran than kooyil piNaa piLLaikaaL eethavan uur eethu avan peer aar uRRaar aar ayalaar eethavanai paadum parisu eeloor empaavaay பொ-ரை: சிவபெருமானது திருவடிக் கமலங்கள் கீழுலகம் ஏழினுக்குங் கீழாய், சொல்லின் அளவைக் கடந்ததாய் உள்ளன, மலர் நிறைந்த அழகு செய்யும் திருமுடியும் எல்லாப் பொருட்களின் முடிவாயுள்ளது. அவன் திருமேனியில் ஒரு பகுதியில் அம்மை இருப்பாள். அவன் ஒரு திருவடிவம் உடையவன் அல்லன். ஞான நூல்களும், வானுலகினரும், மண்ணுலகினரும் ஆகிய அனைவரும் புகழ்ந்த போதிலும், புகழ்ச்சி முற்றுப் பெறாத ஒப்பற்ற உயிர்த் துணைவன். அடியார் உள்ளத்தினன். அத்தன்மையனாகிய சிவபெருமானது கோயிலில் உள்ள குற்றமற்ற உயர்ந்த இனப் பெண் குழந்தைகளே! அவன் ஊர் யாது? அவன் பேர் யாது? அவனுக்கு யார் உறவினர்? அவனுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார்? அவனைப் பாடும் வகை யாது? சொல்லுவீராக. We cannot say what is underneath His flowery Feet, Feet that are below the seven underworlds. His flower-bedecked head is likewise the very consummation of all things. One half of His manifestation is His consort. Hence, He is not just one entity. Even though the scriptures and the residents of the sky and the earth worship Him, He is a unique comrade who cannot be described in words. He stays in the heart of His devotees. Oh flawless maids of the temple of Lord Civa, what is His place of residence, what is His name, who are His relatives, who are outsiders to Him, in what manner do we sing on Him, we know not what and how ! Hence, come over Oh doll-like maid, and imbibe the spirit of Lord Civa. கு-ரை: 'வேத முதல்' என்பதைத் தனி முடிபாகக் கொண்டு அவன் அறிவு நூல் தோற்றுவித்த மூல காரணன் என்ப. 'பேதையை ஒரு பாலிலுடைய திருமேனிகள் பல' என்பாரும் உளர். ஓதல்= பேசுதல், உலவா= வற்றாத, முடியாத. உளன்= உள்ளத்திலிருப்பவன். உள்ளத்தைக் கோயிலாக உடையவன், என்றலும் ஒன்று. 'குலம்' என்பதை 'அரன்' என்பதோடு சேர்த்து உருத்திரருட் சிறந்த 'மகா ருத்திரன்' என்றலும் ஒன்று. குலம் என்பதை, 'பிணாப்பிள்ளை' என்பதனோடு கூட்டுக. பிணா= பெண், 'ஏலோரெம்பாவாய்' என்றது அசையளவில் நின்றது. 11. மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்கா ணாரழல்போற் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மணவாளா வையாநீ யாட்கொண் டருளும் விளையாட்டி னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய். 'மொய் ஆர்தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி ஐயா! வழிஅடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல் போல் செய்யா! வெள்-நீறு ஆடி! செல்வா சிறுமருங்குல் மைஆர் தடம் கண் மடந்தை மணவாளா ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம் எய்யாமல் காப்பாய் எம்- ஏல் ஓர் எம்பாவாய் moy aar thadam poykai pukku mukeer enna kaiyaal kudainthu kudainthu un kazal paadi aiyaa vazi adiyoom vaaznthoom kaaN aar azalpool seyyaa veNNiiRu aadi selvaa siRumarungkul mai aar thadam kaN madanthai maNavaaLaa aiyaa nii aadkoNdaruLum viLaiyaaddin uyvaarkaL uyyumvakai ellaam uynthu ozinthoom eyyaamal kaappaay emai eeloor empaavaay பொ-ரை: நிறைந்த நெருப்புப் போல முழுதும் செம்மை நிறமுடைய திருமேனியனே ! வெள்ளிய திருநீற்றுப் பொடியில் மூழ்கினவனே! ஒப்பற்ற வீட்டுச் செல்வனே! நுண்ணிய இடையும் மை பொருந்திய நெடிய கண்ணும் உடைய உமையம்மை கணவனே ! தலைவனே! வண்டுகள் நிரம்பிய அகன்ற தடாகத்தில் புகுந்து 'முகேர்' என்று ஒலி எழுப்பும்படியாக நீரினைக் கையாலிறைத்து முழுகினோம். உன் திருவடிகளைப் பாடி, உன் பரம்பரை அடிமைகளாக நாங்கள் வாழ்ந்தோம். நீ, உயிர்களின் பக்குவத்திற்கேற்ப, அழகாகப் படிப்படியாக ஆட்கொண்டருளும் திருவிளையாட்டினால் உய்ந்தோம் . உய்தி கூடுகிறவர்கள் பிழைத்துக் கதி சேரும் வகைகளில் எல்லாம் யாங்களும் படிப்படியாக உய்தி கூடி முடித்தோம். இனி நாங்கள் இளைத்துப் போகாமல் எங்களை நீ காப்பாற்றுவாயாக! Entering the wide lake full of humming bees, and splashing the waters again and again, singing the glory of Thy bejewelled Feet, Oh Chief, we Thy vassals have been living here all the while. Oh Lord of fire-like reddish frame, covered over with white ash, Thou of bounteous wealth, consort of the slender waist, large eyed Uma Devi, in the light of Thy many acts for redeeming us, we have gone through all steps that aspirants wont to follow. Pray guard us now, against getting worn out. Thus chanting we imbibe the spirit of the Lord. கு-ரை: மொய்= வண்டு, 'முகேர்' தண்ணீர் எறிவதாலுளதாம் ஒலி. குடைதல் = நீராடுதல்,துளைத்தல். வழி = பரம்பரை, ஐ = அழகு. ஐயா = ஐயாக = அழகாக. உய்யும் வகை = படிப்படியாய்க் கதிக்கண் மேற்செல்லுமுறை. 12. ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந் தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய் 'ஆர்த்த பிறவித்துயர்கெட, நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைச்சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்; இவ்வானும், குவலயமும், எல்லோமும், காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி , வார்த்தையும் பேசி, வளைசிலம்ப, வார் கலைகள் ஆர்ப்பு அரவம் செய்ய, அணிகுழல் மேல் வண்டு ஆர்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து, உடையான்-பொன் பாதம் ஏத்தி, இரும்சுனை நீர் ஆடு'-ஏல் ஓர் எம்பாவாய்! aarththa piRavi thuyarkeda naam aarththu aadum thiirththan nal thillai siRRampalaththee thii aadum kuuththan ivvaanum kuvalayamum elloomum kaaththum padaiththum karanthum viLaiyaadi vaarththaiyum peesi vaLaisilampa vaar kalaikaL aarpparavam seyya aNikuzal meel vaNdu aarppa puuththikazum poykai kudainthu udaiyaan poRpaatham eeththi irunjsunainiir aadeeloor empaavaay பொ-ரை: நம்மைப் பிணித்த பிறவித்துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து முழுகும் புனித தீர்த்தமாய் உள்ளவன் சிவபெருமான். அழகிய தில்லை ஞானசபையின் கண் அனல் ஏந்தி நடம்புரிகின்ற கூத்துவல்லான். இந்த ஞாலத்தையும், வானுலகத்தையும், நம் எல்லோரையும் தோற்றுவித்தும், நிலை பெறுத்தியும் ஒடுக்கியும் விளையாடுபவன். இத்தகைய பெருமானுடைய புகழ்ச் சொற்களையும் பாடிச் சங்கினாலாகிய வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலைகளாகிய ஆடைகள் அசைந்து ஓசை எழுப்பவும், அழகிய கூந்தலின் மீது வண்டுகள் ரீங்காரம் செய்யவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடுவோம். நம்மை உடைய பெருமானது பொற்கழல்களை வணங்கித் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரிலே ஆடுவோமாக. The Lord is verily the lake whose waters we enter in great merriment, so that we may be rid of all the tribulations of this mundane existence in this worldly birth. He is the Lord of the holy hall of Thillai, where he dances His numbers waving the flame in His hand, and performing the tasks of creation, protection and abstraction. On Him let us talk and to the clinking of anklets and bangles, to the humming of bees around His fair locks, splashing the waters of the flowery lake let us all imbibe His spirit and shower adoration on Him. கு-ரை: ஆர்= கட்டு. 'தீர்த்தன்' என்பதற்குத் தூய குணமுடையான், ஆசான் என்ற பொருள்களும் உள. நல் = அழகிய. 'தீயாடும்' என்பதற்குச் 'சோதியாக நின்றாடும்' என்பாரும் உளர், விளையாடி= விளையாடுபவன். நடமாடி என்றாற்போல. நீராடுவதுடன், வாயால் வாழ்த்தியும் என்பார், 'வார்த்தையும் பேசி' என்றார். ஆர்ப்பரவம் = இரைச்சல்; புனித நீர்நிலைகள், இருவகையாக இருத்தல் கூடும். 'இருஞ்சுனை' என்பது உருவகமாகப் பேரின்பமாகிய சுனையைக் குறிக்கும் என்பாரும் உளர். ஆடு= ஆடுக என்பதன் கடைக் குறை. 13. பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். பைம்-குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால் தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்று இசைந்த பொங்குமடுவில், புகப் பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்! paingkuvaLai kaarmalaraal sengkamala paimpoothaal angkang kuruku inaththaal pinnum aravaththaal thangkaL malam kazuvuvaar vanthu saarthalinaal engkaL piraaddiyum emkoonum poonRisaintha pongku maduvil pukappaaynthu paaynthu nam sangam silampa silampu kalanthu aarppa kongkaikaL pongka kudaiyum punalpongka pangaya puumpunal paaynthu aadeeloor empaavaay பொ-ரை: நீர் மிகுந்த பொய்கையானது பசிய கருங்குவளை மலர்களை உடையது. எம்பிராட்டி உமையம்மையும் கருங்குவளை நிறமுடையவள். பொய்கை செந்தாமரைப் புதுமலர்களை உடையது. எம்பிரான் செந்தாமரை நிறமுடைய திருமேனி கொண்டவன். பொய்கையிடத்தே அழகிய குருகு எனப்படும் நீர்ப் பறவைகள் உள்ளன. பெருமானின் திருமேனியின்கண் குருக்கத்தி மலர் காணக்கிடக்கிறது. பெருமாட்டி, தன் கைகளில் சங்குவளையல் தொகுதி உடையவளாய் இருக்கிறாள். பெருமானும் பெருமாட்டியும் பின்னிக் கிடக்கும் பாம்பை அணிந்துள்ளனர். பொய்கையிடத்தே உடல் அழுக்கைக் கழுவும் பொருட்டு மூழ்குவோர் கூடுகின்றனர். பெருமான் பிராட்டியிடத்தே மும்மல நீக்கமுறுவார் வந்து அடைவார்கள். ஆகவே பொய்கை, இறைவனையும் இறைவியையும் ஒத்திருக்கிறது. இதில் இறங்கி நமது சங்கம் நீர் பாயப் பெற்று ஒலிக்கவும், அதனோடு நமது காற்சிலம்புகளும் நீர் பாயப் பெற்று ஒலிக்கவும், நீராடுவோம். நகில்கள் மகிழ்ச்சியால் பொலிவு பெறும்படியும், முழுகுகின்ற நீர் மேலே எழவும் தாமரை படர்ந்த அழகிய நீருள் பாய்ந்து ஆடுவோமாக! In this verse the saint presents a simile in which the lake is described as having common features with the Lord and His consort. Though a masterpiece in literary tradition, there is also a hidden philosophical note in this comparison. The lake of bubbling water has certain elements on account of which the saint is inclined to compare it with Lord Civa and His consort. The maids going there for their morning ablution, take note of the similarities and identifying the lake with the Lord, are glad to bathe therein and imbibe the spirit of the Lord. Just as the Lord is of red hue and His consort is different in complexion, so are the lotus buds and the 'Kuvalai flowers' that abound in the lake. The presence of birds and snakes in the water body, reminds one of the Lord's ornaments and apparel in the physical manifestation. Men wash off their dirt in the lake waters. This is akin to their getting rid of their malefic afflictions (malas). Such is the similarity of state and activity. Hence, Oh doll-like maids, entering and jumping into the bubbling waters, let us imbibe the spirit of the Lord. May the waters abound, and our bodies dance to the tingling of bangles and anklets. கு-ரை: அங்கம்= அழகு, உறுப்பு. குருகு = நீர்ப்பறவை, வளை, குருக்கத்தி. , பின்னும்= மேலும் பின்னிக் கிடக்கும். அரவம்= பாம்பு, ஓசை. மலம் = அழுக்கு, ஆணவம், பாய்ந்து என்பது நீர், சங்கு, ஆடை முதலியவற்றிற் பாய்தலைக் குறிக்கும். இறைவி உதவியால் இறைவன்பாற்பெறும் பேரின்பக் கடலுள் மூழ்குவதற்கு இப்பொய்கையாடல் அறிகுறியாயிற்று. 14. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய் காது ஆர் குழை ஆடப் பைம் பூண் கலன் ஆடக் கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச் சீதப்புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி, அப்பொருள் ஆமா பாடிச் சோதி திறம்பாடிச், சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி. அந்தம் ஆமாபாடிப் பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி, ஆடு ஏல் ஓர் எம்பாவாய்! kaathaar kuzai aada paimpuuN kalan aada koothai kuzal aada vaNdin kuzaam aada siitha punal aadi siRRampalam paadi veetha poruL paadi apporuL aamaapaadi soothi thiRam paadi suuzkonRai thaarpaadi aathi thiRam paadi antham aamaapaadi peethiththu nammai vaLarththu eduththa peyvaLai than paatha thiRam paadi aadeeloor empaavaay பொ-ரை: காதிற் பிணித்த தோடும், உடம்பிலணிந்த பசும்பொன் அணிகளும், கூந்தல் மாலையும் ஆடும்படி நீரில் விளையாடுவோம். மாலையைச் சுற்றும் வண்டுக் கூட்டம் சுழலும்படி குளிர்ந்த நீருள் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடுவோம். அறிவுநூற்பொருளினைப் பாடி, இறைவன் அப்பொருளாய் நிற்கும் முறையையும் ஒளியுருவனின் ஆற்றலையும் பாடுவோம். அவன் சென்னியிற் சூட்டப்பெற்ற, கொன்றை மாலையையும் அவன் ஆதியான முறையையும் பாடி, அந்தமான முறையையும் பாடுவோம். நம்மையெல்லாம் வெவ்வேறாய்ப் பிரித்து பக்குவமுறைக்கு ஏற்ப வேறுபடுத்தி வகைப்படுத்தி வளர்த்தும் பாதுகாத்தும் வருகின்றவளும், வளையல்கள் அணிந்துள்ள கைகளையும் உடையவளாய் விளங்குகின்றவளுமான உமாதேவியின் திருவடிகளின் சிறப்பையும் பாடி நீராடுவோமாக! May the 'Kundalam' in His ear dance! May His precious ornaments dance! May the garland on His locks dance! May the teams of bees dance! Bathing in the chill waters, singing on the hall of Thillai, singing on Him who is the very essence of the scriptures, singing on Him as He Himself the scriptures, singing on the nature of the flame of grace, on the cassia garland on His chest, on His being the very first and very last and on the greatness of our mother god , Uma Devi who brought us up, cutting off our worldly bonds, let us bathe in the lake and imbibe the spirit of the Lord. கு- ரை: குழை - மகளிர் காதணி. 'பூண் பைங்கலன்' என மாற்றுக. கோதையுடைய கூந்தல் ஆட எனவும், கோதை போன்ற கூந்தலாட எனவும் கொள்வது உண்டு. 15. ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறு மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் ஓர் ஒரு கால் "எம்பெருமான்" என்று என்றே, நம்பெருமான் சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களிகூர நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்பப் பார் ஒருகால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள் பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு'-ஏல் ஓர் எம்பாவாய் oor oru kaal emperumaan enRu enRee namperumaan siir oru kaal vaai oovaaL; siththam kaLikoora niir oru kaal oovaa nedum thaarai kaN panippa paar oru kaal vanthanaiyaL; viNNooraiththan paNiaaL peer araiyaRku ingkaNee pithu oruvar aam aaRum aar oruvar? ivvaNNam aadkoLLum viththakar thaaL vaar uruvap puuN mulaiyiir, vaay aara naam paadi aeer uruvap puum punal paainthu aadu eeloor empaavaay. பொ-ரை: கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய நகிலுடைய நங்கையீர்! ஒருத்தி ஒவ்வொரு சமயம் எம்பெருமான் என்று சொல்லிச் சொல்லி, நம் தலைவனது புகழினை ஒரு தரத்தோடு நிறுத்தாமல் வாய் ஓயாது பேசுவாள். மனமகிழ்ச்சி மிகுந்ததனால் வற்றாத அருவிபோலக் கண்கள் நீரைப் பொழிய, நிலத்தின்மிசை ஒரே முறை விழுந்தவள் எழாமலே இருக்கின்றாள். வானவர்களை ஒருக்காலும் வணங்க மாட்டாள். பெரிய மன்னனாகிய இறைவனுக்கு இவ்வாறு அன்பால் பித்துப் பிடித்தவள் போல் ஆனாள். இவ்வாறு பக்தி செய்வோரையும் ஆண்டு கொள்ளவல்ல அறிஞராகிய ஒப்பற்ற பெருமானின் திருவடிகளையும் நாம் பாடி அழகிய தோற்றமுடைய அருவி நீரில் புகுந்து ஆடுவோமாக! Singing every now and then, on the glories of our Lord, crying "Oh my Chief" eyes ever full of tears, heart filled with gladness, is this maid, much like one that has come to this earth for the first time now! She does not worship any of the heaven-dwelling gods, but is so tightly attached to Lord Civa. Let us sing on Him who attracted her in this manner and took her under Him. Oh fair breasted maids, lets us sing on this to our mouth's content and jump into the lake, imbibing the spirit of the Lord. கு-ரை: இடைவிடாது தூங்குபவள் செயல் ஒவ்வொரு சமயத்திலே வெளிப்பட, அதன் தன்மைகள் இன்னவாறு என்று குறித்தமை காண்க. பெண்கள் கூட்டத்தில் தலைமையானவள், தம்மொடு சேராத ஒரு பெண்மணியின் உயர் தன்மையினை எடுத்துக் காட்டித்தாமும் அத்தகையராதல் வேண்டுமென அறிவுறுத்தியவாறு. பனித்தல்= துளித்தல், இடைவிடாது பெய்தல். 16. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப் புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா டன்னிற் பிரிவிலா யெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே யென்னப் பொழியாய் மழை யேலோ ரெம்பாவாய் 'முன்னிக், கடலைச் சுருக்கி எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பித் திருப் புருவம் என்னச்சிலை குலவி, நம் தம்மை ஆள் உடையாள் தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு முன்னி, அவள், நமக்குமுன் சுரக்கும் இன் அருளே என்னப் பொழியாய்மழை' - ஏல் ஒர் எம்பாவாய் ! munnik kadalai surukki ezunthu udaiyaaL ennath thikaznthu emmai aaLudaiyaaL iddidaiyin minni polinthu empiraaddi thiruvadimeel poonam silampil silampi thiruppuruvam ennach silai kulavi namthammai aaLudaiyaaL thannil pirivu ilaa engkoomaan anparkku munni avaL namakku mun surakkum in aruLee ennap poziyaay mazai eeloor empaavaay பொ-ரை: மேகமே! இந்தக் கடலைக் குடித்து அதனை நீர் குறையச் செய்து மேல் வானில் எழுவாய்! எம்மையுடையாளாகிய உமையம்மை திருமேனிபோல் நீல நிறத்தோடு விளங்கி அவளது சிற்றிடைபோல் மின்னல் விடுத்து ஒளிர்வாய்! எங்கள் பெருமாட்டியின் திருப்பாதங்களின் மேலுள்ள அழகிய பொற்சிலம்பு ஒலிப்பது போல இடியினை முழக்குவாய்! அவளது திருப்புருவம் போல வானவில் வீசுவாய்! அம்மையைப் பிரிந்திரா எம் சிவபெருமானது அடியவர்களுக்கும் பெண்களாகிய நமக்கும் அவள் திருவுள்ளம் கொண்டு சுரக்கின்ற இனிய அருள் போல வான் மழையைப் பொழிவாயாக ! The (bounteous) clouds, absorbing the salty waters of the sea and rising high above are like jewels shining from the waist of our mother goddess, Uma Devi. The thunder of the clouds is like the tingling of Her anklets. Her holy eyebrow resembles the rainbow. Manifest in this manner, she takes us under her care. Our Chief, who is never separated from her, bestows grace on His devotees. She bestows it even before He does. Likewise, Oh clouds, may you too rain down gifts forthwith. So singing, let us imbibe the spirit of Lord Civa. கு-ரை: முன் = காலத்திற்குமுன், முன்னி = முந்தி, முற்பட்டு, விரும்பி யென்றும் பொருள் கொள்வர். 'இட்டிடை' என்பதில் இட்டு = சிறுமை, நுண்மை . 'ஆகா றளவிட்டி தாயினும்' என்பது போன்று. 17. செங்க ணவன்பாறிசை முகன்பாற் றேவர்கள்பா லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை யங்க ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 'செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால் எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கரும் குழலி ! நம்-தம்மைக் கோதாட்டி இங்கு, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செம்-கமலப் பொன்பாதம் தந்தருளும் சேவகனை அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர்அமுதை நங்கள் பெருமானைப், பாடி, நலம் திகழப் பங்கயப்பூம்-புனல் பாய்ந்து ஆடு' -ஏல் ஓர் எம்பாவாய் sengkaN avan paal thisaimukan paal theevarkaL paal engkum ilaathathu oor inpam nam paalathaa kongkuN karungkuzali namthammai koothaaddi ingku nam illangkaL thooRum ezuntharuLi sengkamala poRpaatham thantharuLum seevakanai angkaN arasai adiyoongkadku aar amuthai nangkaL perumaanai paadi nalanthikaza pangkaya puumpunal paaynthu aadeeloor empaavaay பொ-ரை: இயற்கையாக மணம் பொருந்திய கருங்கூந்தலை உடையவளே! சிவந்த கண்ணை உடைய திருமால், நான்முகன், பிற விண்ணவர், வேறு எவரிடத்தும் எவ்விடத்தும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நமக்குச் சிவபெருமான் மூலம் கிடைத்தது. சிறியோராகிய நம்மைப் பாராட்டி, இவ்வுலகில் நமது வீடுகள் தோறும் எழுந்தருளினான் எம்பெருமான். அவன் தனது செந்தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளைக் காட்டி அருள் வழங்கினான். அவ்வாறு கிடைத்த அருள் நமக்கு அமுதம் போன்றுள்ளது. யாவருக்கும் நன்மை பெருக நாம் நமது தலைவனைப் பாடி, அழகு மிகுந்து விளங்கும் தாமரைத் தடாகத்தின் புதுப்புனலில் வீழ்ந்து ஆடுவோமாக! The Lord bestows on us a state of bliss not found anywhere else, not even with the red eyed Thirumaal or Brahma, nor with any of the devas (heaven dwellers). The Lord, our protector, comes over to each of our dwellings and grants us the gift of His lotus like Feet and elevates us with great kindness. Of maid, with black locks visited by honey seeking bees, let us chant on our Lord of graceful eyes, a rare ambrosia for us, and jump into the beauteous lotus lake for ever increasing prosperity, imbibing the spirit of Lord Civa. கு-ரை: பெண்டிருள் ஒரு பெண்ணை விளித்து மற்றொரு பெண் கூறுவதாக இப்பாடல் இயற்றப் பட்டது. கொங்கு = மணம், உத்தமப் பெண்டிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்ப. சேவகன்= வீரன், அண்ணல். நலம்= அழகு. 18. அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணாகி யாணா யலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றால்போல் கண்ஆர் இரவி கதிர்வந்து கார் கரப்பத் தண்ஆர் ஒளிமழுங்கித், தாரகைகள் தாம் அகலப் பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய்ப் பிறங்கு ஒளிசேர் விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகிக் கண்ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடிப் பெண்ணே! இப் பூம்புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய் ! aNNaa malaiyaan adikkamalam senRu iRainjsum viNNoor mudiyin maNiththokai viiRu aRRaaRpool kaN aar iravi kathirvanthu kaar karappa thaN aar oLimazungki thaarakaikaL thaam akala peNNaaki aaNaay aliyaay piRangku oLiseer viN aaki maN aaki iththanaiyum veeRu aaki kaN aar amuthamum aay ninRaan kazalpaadi peNNee ippuumpunalpaaynthu aadeeloor empaavaay பொ-ரை: மாதே! அண்ணாமலை உறையும் அண்ணலின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கும் வானவர்களின் மகுடங்களில் உள்ள இரத்தினங்களின் தொகுதி இறைவனது பேரொளி முன் விளக்கம் இழந்து காணப்படுகிறது. அதுபோன்று கதிரவன் கதிர்கள் தோன்றியதும், இருள் மறைந்து, நட்சத்திரங்களின் ஒளி மங்குகிறது . அப்போது ஆணாகியும், பெண்ணாகியும், அலியாகியும் விளங்குபவன் புகழ் பாடுவோம். விளக்க மிக்க ஒளி பொருந்திய வானுலகமாகி, மண்ணுலகமாகி, இவ்வளவிற்கும் வேறான பொருளாகி, அன்பர்களுக்குப் பெருமைமிக்க அமுதமுமாய் விளங்குகின்ற பெருமானது திருவடிகளைப் பாடி இப்புதுப்புனலில் வீழ்ந்து மூழ்குவோமாக ! Just as the rows of jewels embedded in the head gear of heaven dwellers lose their shine when they come over to Thiru Annamalai for paying obeisance to the lotus Feet of Lord Civa, the rays of the sun diminished by clouds, screen out the stars (of the morning) which got dimmed and disappear. At this time of the day (the dawning of the day), let us sing on the glories of Him who is female, male as also neuter and is verily the brilliant space above. He who is all these and yet is different from all these! Singing on the bejewelled Feet of our Lord, who is also delightful to our eyes as the precious elixir, Oh maid come over and imbibe the spirit of our Chief. கு-ரை; முன்பாட்டுப்போன்று, இதுவும் ஒருத்தி, மற்றொருத்திக்குக் கூறியது. அண்ணாமலையில் இப்பதிகஞ் செய்யப்பட்டதற்கு, 'அண்ணாமலையான்' என்றது ஒரு குறிப்பு. தில்லையும் சில செய்யுட்களிற் பேசப்படுதல் காண்க. வீறு= தனிச்சிறப்பு: கண்ணார் இரவி என்பதிற் கண்= இடம், 'கண்ணாரமுது என்பதிற் கண் = பெருமை; ஒளி யுருவினராய விண்ணவர் வாழும் விண் - ' பிறங்கொளி சேர்' என விசேடிக்கப்பட்டது. கழல்= திருவடிக்கு இலக்கணப் பெயர். 19. உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தால் எங்கள் பெருமா னுனக்கொன் றுரைப்போங்கே ளெங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய் “உம் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்று அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம் கேள் ! எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க ; எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க ; கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?' ஏல் ஓர் எம்பாவாய்! ungkaiyiR piLLai unakkee adaikkalam enRu angku appazanjsoR puthukkum em assaththaal engkaL perumaan unakku onRu uraippoomkeeL emkongkai nin anpar allaarthooL seeraRka engkai unakku allaathu eppaNiyum seyyaRka kangkul pakalemkaN maRRu onRum kaaNaRka ingku ipparisee emakku emkoon nalkuthiyeel engku ezil en njaayiRu emakkueeloor empaavaay பொ-ரை: எங்கள் தலைவனே! 'உன் கையிலுள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் ' எனும் பழமொழியைப் புதுப்பிக்கின்றோமென சொல்லக் கூடியதை அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கிறோம். கேட்டருள்வாயாக! எமது தனங்கள் நின் அன்பர் அல்லாதார் புயங்களைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கன்றி வேறு தேவர்க்கு எவ்வகைத் தொண்டும் செய்யாதொழிக! இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாது ஒழிக. இந்நிலவுலகில் நாங்கள் வேண்டிக்கொண்டவாறு இவை அனைத்தையும் எங்களுக்கு உதவி அருள்புரிவாயானால் சூரியன் எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன? எது எப்படியாயினும் கவலை யாதுமில்லை. "For the children in your arms, you alone are the refuge", so goes an ancient proverb. Hence, we Thy offspring know that Thou art our refuge indeed. Nevertheless out of fear that this saying may, per chance, be turned around as a new one, we make a fervent request to you Oh Lord. Pray, ensure that we do not get wedded to any who is not Thy devotee. Ensure that our hands serve not any but Thyself. Let our eyes see nothing but Thee, day and night. Shouldst Thou grant these to us, Oh Lord, we will feel quite satisfied and will have no grouse whatsoever what else would then be of concern to us, even matters like where the sun rises (each day?). We care not for any other thing in this world. Come over, Oh doll-like maids, sing thus and imbibe the spirit of the Lord. கு-ரை: பெண்கள் பலரும் இறைவனை வேண்டிப் பாடல் . தாயே தன் பிள்ளையைக் காத்துக் கொள்ளுவளாதலின், அவள் பிள்ளை அவளுக்கு அடைக்கலமென்று பிறர் சொல்லுதல் மிகையாகும். அதுபோன்று, இறைவனிடம் வேண்டுகோள் செய்தல் மிகையென்ற அச்சம் இருப்பினும், ஆசை பற்றி வேண்டுகோள் செய்வோம் என்பார், இப்பழமொழியை எடுத்து இயம்பினர். 'அப்பழஞ்சொல்' என்பதில் அகரம், பண்டறி சுட்டு, அங்கு = அசை . அதுவும் பழமை குறிப்பதே. அன்பரில் காணப்படுபவனும் இறையாதலின் அவரைக் காண்பதை வேறாக வேண்டிற்றிலர். அன்பர்பணி அரன்பணியாதலுங் கொள்க. மாதர் பலராதலின், அவர்கள் கணவரும் பன்மையிற் கூறப்பட்டனர். ஒவ்வொருவர்க்கே ஒவ்வொரு கணவன் என்ற கருத்தில் ஈண்டுமாறு யாதுமில்லை. 20. போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர் போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள் போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய் 'போற்றி ! அருளுக, நின் ஆதி ஆம் பாதமலர் போற்றி ! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள் போற்றி ! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன்பாதம் போற்றி ! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூங்கழல்கள் போற்றி ! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை-அடிகள் போற்றி ! மால், நான்முகனும், காணாத புண்டரிகம் போற்றி ! யாம்உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் போற்றி ! யாம் மார்கழி நீர் ஆடு ' - ஏல் ஓர் எம்பாவாய் ! pooRRi aruLuka nin aathiyaam paathamalar pooRRi aruLuka nin anthamaam senthaLirkaL pooRRi ellaa uyirkkum thooRRamaam poRpaatham pooRRi ellaa uyirkkum pookamaam puungkazalkaL pooRRi ellaa uyirkkum eeRu aam iNai adigaL pooRRi maal naanmukanum kaaNaatha puNdarikam pooRRi yaam uyya aadkoNdaruLum ponmalarkaL pooRRi yaam maarkazi niir aadeeloor empaavaay பொ-ரை: எங்களைக் காக்கும் பெருமானே! எப்பொருட்கும் முதலாக உள்ள உன் திருவடிக் கமலங்களுக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாக உள்ள இளங்குழை போன்ற மெல்லிய திருவடிகளுக்கு வணக்கம். எல்லா உயிர்களும் தோன்றுதற்கு ஏதுவாகிய திருவடிகளுக்கு வணக்கம். எல்லா உயிர்களும் நிலை பெறுதற்குப் பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லா உயிர்களும் முடிவெய்துவதற்கு ஏதுவாகிய திருவடிகளுக்கு வணக்கம். திருமாலும் பிரமனும் செருக்கினால் காண ஒண்ணாத தாமரைத் திருவடிகளுக்கு வணக்கம் . உய்தி கூடும்படி அடிமையாக்கி ஆண்டருளும் பொற்பூம்பாதங்களுக்கு வணக்கம். இவ்வாறு நாம் இறைவனை வணங்கி மார்கழித் திங்களில் நீர் நிறைந்த துறையின்கண் முழுகுவோமாக! Obeisance to Thee! Pray, bestow on us Thy flower-like Feet that are the beginning (of all things) Obeisance to Thee! Pray, bestow on us Thy red coloured shoot-like Feet that are the end (of all things) Obeisance to Thee! Thy golden Feet are the very source of all living beings. Obeisance to Thee! Thy bejewelled Feet are the very bliss for all living beings. Obeisance to Thee! Thy twin Feet are the end of all living beings. Obeisance to Thee! Thy golden Feet are beyond the reach of Tirumaal and Brahma. Obeisance to Thee! Thy golden Feet take us in under Thee, and redeem us (from tribulations). Obeisance to Thee! May we sing thus and bathe in the cool waters in the month of Maargazhi (December/January of each year) and imbibe the spirit of Lord Civa. கு-ரை: முதலடியிற் போற்றி என்பதற்கு ஆடி என்பதற்குப் போலப் பொருள் கொண்டு, ' காப்பாற்றுபவனே' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'போற்றி' என்பதற்குக் காக்க எனவும் பொருள் கொள்ளலாம். போகம்= பாதுகாப்பு. சடவுலகிற்கும் சித்துலகிற்கும் ஆதியும் அந்தமுமாய் இறைவன் நிற்பதை அடிகள் கூறியருளினர். உயிர்கள் முத்தொழிற் படுவதைப் பின்மூன்றடிகளிற் கூறினர். யான் எனது என்னும் செருக்கில் உயிர் ஆழ்ந்து மறைப்புத் தொழிற்படுவதை அரி அயனில் வைத்து உரைத்தார். அருளலை ஈற்றியலடியிற் குறித்தார். எனவே, இறைவனது ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் இங்கு கூறப்பட்டமை காண்க. பேரின்பக் கடலுக்கு அறிகுறியாக, ஆர் கழிநீரைக் கூறினர். 'மார்கழி' எனவும், ஆர்கழி எனவும் பிரிக்கலாம். THIRUCHCHITRAMBALAM 8. திருவம்மானை 8. THIRU AMMAANAI (ஆனந்தக் களிப்பு ) Rapturous Delight திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thiru Annamalai ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 'அம்மானை' என்பது, மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று. இதன்கண் பாடப்படும் பாட்டே அம்மானைப் பாட்டாம். இஃது, 'அம்மானை வரி' என்றும் சொல்லப்படும். இவ்விளையாட்டு, மூன்று காய்களைக் கொண்டு ஆடுவது என்றும், 'மூன்று பெண்கள் நின்று ஒருத்தி ஒன்று சொல்வதும் மற்றொருத்தி அதன்கண் ஐயத்தை எழுப்புவதும், மூன்றாமவள் அவ்வையத்தை நீக்குவதுமாய் வரும் பாட்டுக்களைப் பாடி ஆடப்படும்' என்றும் கூறுவர். ஒரு பொருள் மேல் எழுப்பப்பட்ட ஐயத்தை நீக்குதல், அதனை முதலில் சொல்லியவளுக்கே உரியதாகலின், 'இங்ஙனம் வரும் பாடல்களைப் பாடி ஆடுவோர் இருவரே' என்றல் பொருந்தாது. சிலப்பதிகார அம்மானை வரிப்பாடல்களிற் சொல்லப்படும் கருத்துக்கள் மூவர் கூற்றாகவும் கொள்ளுதற்கு ஏற்புடையனவாய்க் காணப்படுகிறது. அடிகள் அருளிச் செய்யும் அம்மானைப் பாட்டு, பலர் நின்று தம் தம் முறை வரும் காலத்து ஒரோவொரு கருத்தமைந்த பாடலைப் பாடி ஆடும் முறையிலே அமைந்திருக்கிறது. அம்மானை ஆடும் மகளிரை, 'மூவர்' என்றே வரையறாது, 'ஏற்ற பெற்றியால் எத்துணையோருமாவர்' எனக் கொள்ளுதலே தக்கதாம். இனி, அம்மானைப் பாட்டுக்களின் அளவும் வேறுபட்டுத் தோன்றலால், அவற்றின் அளவிற்கேற்பக் காய்களின் தொகையும் வேறுபடும் போலும்! 'அம்மானை' என்பது 'அம்மனை' எனவும் வழங்கும். இவற்றுள் ஐய வினாவும் அதற்குரிய விடையும் கொண்டு வரும் அம்மானைப் பாட்டுக்கள் எல்லாம் பிற்காலத்தன ஆகவே காணப்படுகின்றன. இங்ஙனம் வரும் விளையாட்டுப் பாடல்களை, 'வரிப்பாட்டு' எனவும் , வரிப்பாட்டுக்களைப் பாடி ஆடும் விளையாட்டுக்களையும் கூத்தின்பாற்படுத்து, 'வரிக்கூத்து' எனவும் பண்டையோர் வழங்கினர் என்பது சிலப்பதிகாரத்தாலும் அதன் உரையாலும் அறியக் கிடக்கின்றது. இனி, அரசரும் வள்ளல்களும் போன்ற மக்களைத் தலைவராகக் கொண்டு பாடாண் பாட்டு வகையில் நிகழ்ந்த இவ்வரிப்பாடல்கள் பலவும் இறைவற்கே ஆகுமாறு அருளிச் செய்த அடிகள், இவற்றின் பொருளையும், உலகியலாகிய இன்பம் முதலியவை பற்றிவரச் செய்யாது, மெய்ந்நெறியாகிய இறைவனது திருவருள் பற்றியே வர அருளிச் செய்தார். அதனால், இவற்றைப் பாடி ஆடும் மகளிரை, இறைவன் திருவருள் பெற்றுப் பேரின்பத்தினைத் தலைப்பட்ட மகளிர் எனக் கொள்க. இதனாலே, இவ்வரிப்பாட்டு முறைகளை அடிகள் ஒருபுடை தழுவிக்கொண்டதன்றி, முழுவதூஉம் அவ்வாறே கொண்டிலர் என்பது தெளிவு. இவற்றிடையே சிறுபான்மை இன்பம் பற்றி வருவன போலவும் செய்ப. அவ்வாறு செய்தல் வரிப்பாட்டிற்கு இயல்பு ஆகும் . Saint Maanikkavaachakar while visiting the various saivite shrines of southern India, had occasion to witness children at play, in the streets, temple courts and gardens. Groups of young girls of the town were engaged in declamation, articulating some aspects or the other in the daily life of those times. The body movements and rhythmic games such as the throwing of flower balls, match the musical tunes of the accompanying songs. The saint was moved by this spectacle and thought it expedient to compose hymns glorifying Lord Civa and the concepts of saiva theology, through this dance drama exercise, as it was bound to sow the seeds of piety and dedication in the minds of the young and the impressionable. Such orchestral composition sung by a chorus of girls is found in chapters 7 to 9, 11, 13 to 16 in Thiruvaachakam. In some of these chapters, the first few lines, are framed as questions to which the remaining portion is a reply. In many of these, the saint gives vent to the anguish suffered by him in this worldly existence while others are presented as coming from the participants themselves. 8. 1 செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையா னங்கண னந்தணனா யறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய் செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு - அரிய பொங்குமலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம்தரமும் ஆட்கொண்டு தெங்குதிரள்சோலை, தென்னன் பெருந்துறையான் அம்கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும் அம்-கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்! sengkaN nedumaalum senRidanthum kaaNpariya pongku malarpaatham puuthalaththee poontharuLi engkaL piRappu aRuththiddu entharamum aadkoNdu thengku thiraLsoolai thennan perunthuRaiyaan angkaNan anthaNanaay aRaikuuvi viidaruLum angkaruNai vaarkazalee paaduthungkaaN ammaanaay பொ-ரை: அம்மனை ஆடும் அம்மையே! சிவந்த கண்களையுடைய நெடிய திருமாலும் வராகமாய் மண்ணைத் தோண்டிப் போயும் காண முடியாத ஒளி விளங்கும் தாமரை போலும் திருவடிகளோடு நிலவுலகத்தே புகுந்தருளி, நம் பிறப்பைத் தொலைத்து, நம்மை அடிமையாகக் கொண்டு, வலிய அழைத்து வீட்டினை நல்கும் தென்னை மரங்கள் நிறைந்த பொழிலுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும், அழகிய திருநோக்கு உடையவனும் சிறந்த பேரருளாளன் ஆகியும் இருப்பவனது அழகிய கருணை ததும்பும் நெடிய கழலணிந்த திருவடிகளையே நாம் பாடுவோமாக! Lo! The budding lotus-like Feet of our Lord, which even the red-eyed Thirumaal could not see, despite boring deep down, came over to the earth and ending all our future births, took us all under Him! He, of great virtue and graceful eyes, is the chief of the southern city of Thirup-Perun-Thurai. Unto His exalted bejewelled Feet, full of compassion, that beckons us towards Him and grants liberation, let us chant songs of glory - Ammaanaai. கு-ரை: நெடுமால் என்றது, தேவருட் சிறந்தமையோடு, திருப்பாற்கடலில் நெடிய உருவொடு பள்ளி கொண்டமையைக் கருதி என்ப. செவ்வரி படர்ந்து இருத்தலால் கண்கள் சிவந்தன. அஃது உத்தம இலக்கணம் என்ப. உம்மை உயர்வு உணர்த்திற்று. இடந்து சென்றும் என மாற்றுக . எந்தரம்=எமது தரம்= =எமது பக்குவநிலை. உம்மை இழிவு உணர்த்திற்று . பாதம்=பாதத்தோடு , பாதங்களை உடைய பெருமான் எனவும் கொள்ளுவர். தென்னன் = தென் + நன் = அழகிய நல்ல . 'பாண்டியன்' எனவும் பொருள் கொள்ளுவர். அறைகூவுதல்= போர்க்கு வலிய அழைத்தல். மகளிர்க்கு இறைவன் அருட்பேரழகு சிறப்பாகத் தோன்றுதலின், அங்கணன், அந்தணன், அங்கருணையென அது விசேடிக்கப்பட்டது போலும் ! . 'அம்மானை விளையாடும் ஆய்' எனப் பொருள் கொள்ளாது, 'அம்மானை' என்பது அம்மானாய் எனத் திரிந்து நின்றது என்பாரும் உளர். அசை அளவாகவே பெரிதும் அச்சொல் அமைந்துள்ளது . 2. பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார் புறத்தா ராராலுங் காண்டற் கரியா னெமக்கெளிய பேராளன் றென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த வாரா வமுதா யலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்கா ணம்மானாய் பாரார், விசும்புஉள்ளார். பாதாளத்தார், புறத்தார் ஆராலும் காண்டற்கு அரியான்; எமக்கு எளிய பேராளன்; தென்னன்; பெருந்துறையான்; பிச்சு ஏற்றி வாரா வழி அருளி, வந்து, என் உளம் புகுந்த ஆராஅமுது ஆய், அலைகடல்வாய் மீன் விசிறும் பேர் ஆசை வாரியனைப் பாடுதும்காண்; அம்மானாய்! paaraar visumpuLLaar paathaaLa thaarpuRaththaar aaraalum kaaNdaRku ariyaan emakku eLiya peeraaLan thennan perunthuRaiyaan pissu eeRRi vaaraa vazi aruLi vanthu en uLampukuntha aaraa amuthaay alaikadalvaay miinvisiRum peeraasai vaariyanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: நிலம், வானம், பாதாளம் ஆகிய உலகங்களிலும் வேறு உலகங்களிலும் உள்ள யாவராலும் தமது முயற்சியால் காணமுடியாத பெருமான், நமக்காக இரங்கி வந்த பெருமை உடையவன், பாண்டிப் பெருமான், பெருந்துறையில் வீற்றிருப்பவன், அவன் என்னை அவனிடத்து அன்பு மிகும்படி செய்து மீண்டும் பிறவிக்கு வாராத வழியைக் காட்டி என் உள்ளத்திலே தானே வலியப் புகுந்து, தெவிட்டாத அமுதமாக விளங்கினான். பரதவன் போல் நிலவுலகில் தோன்றி கடலில் வலை வீசிச் சுறா மீனைப் பிடித்து பரதவ அரசனுக்கு அபயம் அளித்தது போன்ற திருவிளையாடலைச் செய்தவனும், கருணைக்கடலும் ஆகிய சிவபெருமானைப் பாடுவோமாக! Beyond the comprehension of the inhabitants of the world and the sky and of the underworld and all the rest, is He! Nevertheless, for us, He is easy of approach. He is of the southern land of Thirup-Perun-Thurai. He made us rave in quest of liberation and,entering our hearts, granted us the boon of 'no return back to this earth'. He is the ever-sweet ambrosia, one of boundless wealth, much like the billowy seas replete with shoals of fast moving fish. On Him, let us chant hymns of glory - Ammaanaai. Note: Confer Thirukkural 356 - Point of no return - 'மற்றீண்டு வாரா நெறி' , Also Chandokya Upanishad - 'ந ச புநராவர்த்ததே' கு-ரை: அடிகள் அம்மானையாடும் மகளிரைப் பாடக் கூவுவதாகவே இப்பகுதிப் பாடல்கள் அமைந்துள்ளன. 'பேராளன்' என்பதில் பேர்= பெருமை, பிச்சு = பித்து , விசிறும் = (வலை) வீசும், வாரி= கடல், 'வந்து' என்பதைப் 'பிச்சேற்றி' என்பதற்கு முன் அமைக்க. 3. இந்திரனு மாலயனு மேனோரும் வானோரு மந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி யெந்தரமு மாட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்றந்த வந்தமிலா வானந்தம் பாடுதுங்கா ணம்மானாய் இந்திரன், மால், அயனும், ஏனோரும், வானோரும் அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்ச் சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேல்கொண்டான், தந்த அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்! inthiranum maalayanum eenoorum vaanoorum antharamee niRka sivan avani vantharuLi entharamum aadkoNdu thooLkoNda niiRRanaay sinthanaiyai vanthurukkum siir aar perunthuRaiyaan pantham pariya pari meeRkoNdaan thantha antham ilaa aanantham paaduthungkaaN ammaanaay பொ-ரை: இந்திரனும், பிரமனும், திருமாலும், பிறதேவரும் விண்ணவரும் வானுலகிலே இறையருளை நாடி நிற்கவும், சிவபிரான் திருத்தோளிலே திருநீற்றை அணிந்தவனாய், இப்பூமியின் கண்ணே எழுந்தருளி, பக்குவம் போதாத எம்மையும் ஆண்டு கொண்டருளி, எமது உள்ளம் புகுந்து அதனை அன்பால் உருகுவிக்கும் சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறைப் பெருமான், நமது பாசக்கட்டு ஒழியக் குதிரை மேல் எழுந்தருளி வந்து அருளிய எல்லை இல்லாத பேரின்பத்தை வியந்து பாடுவோமாக! Whilst Indra, Thirumaal, Brahma and others, the heaven dwellers, stand out waiting in the open space, Lord Civa came over to the earth and took us all into the congregation under Him. Adorned with white ash on the shoulders, He of the sacred and bounteous Perunthurai, melted my heart, and removing all my bonds, came over to me mounted on a stead (as if in control of my wayward swing). In adoration of His grant of infinite bliss, let us chant songs of glory - Ammaanaai. Note: Confer Kashmere Saivism - Saiva devotional songs of Kashmir - by Constantina Rhodes Bailey - Utpala Deva's Civa Stotravali (State University of New York Press ) -The seventh song which runs "Forever may I sing Thy praise Loudly to you Located in that place where Hari Haryaswa, and Virifica are waiting outside"- Utpala Deva A similar sentiment was expressed by Aathi Sankarar in 'Sivananda Lahiri' - இதம் தே யுக்தம்வா ---- மம வேத்யோசி புரதக' (How come, oh Lord thou art manifest before me when Hari, Brahma.....) கு-ரை: 'ஏனோர்' என்பதற்கு வானவர் ஒழிந்த முனிவர் முதலிய பிறர் என்பாரும் உளர். 'அந்தரம்' என்றமையால், 'ஏனோரும்' என்றது மேல் உலகிலுள்ள விண்ணவர் வகையினரையே. வானில் செல்லும் முனிவர், வானவருள் அடங்குதல் கூடும் 'அந்தரம்' என்பதற்கு 'நடு' என்று பொருள். ' இறைவன் சிவலோகம் நின்று வரும் வழியில் இடையிலே' என்று பொருள் கொள்ளுவாரும் உளர், 'தோட்கொண்ட நீற்றனாய், எம் தரமும் ஆட்கொண்டு' என மாற்றுக, உள்ளத்தை உருகுவிப்பவனும் அவனேயாதலின், வந்துருக்கும்' என்றார். பரிய = அற, ஒடிய 'பறிய' என்று பாடங்கொண்டு, 'நழுவ' என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. 4. வான்வந்த தேவர்களு மாலயனோ டிந்திரனுங் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போற் றலையளித்திட் டூன்வந் துரோமங்க ளுள்ளே யுயிர்ப்பெய்து தேன்வந் தமுதின் றெளிவி னொளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய் வான்வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும் கான்நின்றுவற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய தான்வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து தேன்வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த வான் வந்த, வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்! vaanvantha theevarkaLum maalayanoodu inthiranum kaanninRu vaRRiyum puRRu ezunthum kaaNpariya thaan vanthu naayeenai thaaypool thalaiyaLiththiddu uun vanthu uroomangkaL uLLee uyirppu eythu theen vanthu amuthin theLivin oLivantha vaan vantha vaarkazalee paaduthum kaaN ammaanaay பொ-ரை: வானுலகம் சேர்ந்துள்ள விண்ணவரும், திருமால், பிரமன், இந்திரன் போன்றோரும் தவம் புரிவதற்காக காட்டிலே நின்று யாதும் உட்கொள்ளாது உடம்பு உலரப் பெற்றும், உடல் மீது புற்று வளரப் பெற்றும் தவம் இருந்தனர். இங்ஙனம் தவம் புரிந்தும் காண முடியாது விளங்கியவன் எம்பெருமானாகிய சிவபெருமான். அவன் எனக்குக் குருவாக எழுந்தருளி வந்தான். நாய் போலும் எனக்குத் தாயைப் போல முதல் தரமான கருணையைத் தந்தருளினான். என் உடலினுள் எழுந்தருளி உரோமத்துளைகள் தோறும் உள்ளே உயிர்ப்பை ஊட்டுகின்ற தேனாக ஊறி நின்றான், தேனைப் போல இனிமை செய்திடும் அமுதின் தெளிவாகவும் விளங்கினான். அத்தகையவனது ஒளி தரும் மேன்மையுள்ள நீண்ட திருவடிகளை நாம் பாடுவோமாக.! The heaven dwelling gods, Thirumaal, Brahma and Indra, stood in penance in the forests and got withered, got covered over with ant hills. Yet they could not see Him. But He Himself came over to me, a cur-like me, and showered His blessings like a Mother. Let us therefore sing on him rising in emotion and with bated breath, on His glorious Feet - Feet that came all the way through the skies - Feet that are like bright and clean nectar for us all - Ammaanaai. கு-ரை: முதலடியில் 'வான்' = பூத ஆகாயம். இறுதியடியில் இருதய ஆகாசம். கான்= கானம் என்பதன் கடைக்குறை. தான்= இறைவன், ஊன் (கண்) உரோம (புளகம்) வந்து என மாற்றுக, உயிர்ப்பு = மூச்சு, உயிர் தளிர்த்தலாய மகிழ்ச்சி. 5. கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் றென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னு மொல்லை விடையானைப் பாடுதுங்கா ணம்மானாய் கல்லாமனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றிக் கல்லைப் பிசைந்து கனி ஆக்கித், தன்கருணை வெள்ளத்து அழுத்தி, வினைகடிந்த வேதியனைத் தில்லைநகர் புக்குச், சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதும் காண்; அம்மானாய்! kallaa manaththu kadaippadda naayeenai vallaaLan thennan perunthuRaiyaan pissu eeRRi kallai pisainthu kani aakki than karuNai veLLaththu azuththi vinaikadintha veethiyanai thillai nakar pukku siRRampalam mannum ollai vidaiyaanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: இறைவனது திருவருள் தன்மையை விளக்குகின்ற மெய்ந் நூல்களைக் கற்று அறியாது, நாயினும் கடைப்பட்ட என்னை, தன் மீது பேரன்பு கொள்ளச் செய்யும் வல்லமை உடையவன் சிவபெருமான். அவன் அழகிய நல்ல திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றான். எனது கல்லைப் போன்ற மனத்தைக் குழைத்து, கனிந்த பழத்தின் தன்மையை அடையச்செய்தான். அவனது கருணை வெள்ளத்திலே என்னை மூழ்கும்படி செய்து, எனது இருவினைகளை நீக்கியவனும் அவனே. அந்த அந்தணனே தில்லை நகர் சென்று ஞான அம்பலத்தில் நிலைபெற்று விளங்குகின்றான். விரைவாகச் செல்லும் காளையை வாகனமாக உடையவனும் அவனே. அவனை நாம் பாடுவோமாக! Because of my gross neglect of scriptural studies, I, this cur-like me, stand lowest in status. And yet, the mighty Lord of the southern Perunthurai shrine, turned me crazy (in spiritual longings) and steeped me in the flood waters of His grace. This is akin to the rare and awesome task of squeezing a stone slab into a ripe fruit. (The saint is agreeably surprised at the uniqueness of the Lord's generosity in turning him, a stony hearted soul, into a delectable fruit, so soft and juicy. Only Lord Civa can perform this miracle). A similar sentiment is articulated by him in 'Thiruththellenam' verse 9 - கல் நார் உரித்தென்ன. Also in போற்றித் திருஅகவல்- Line 97 - கல் நார் உரித்த கனியே . On this benign Lord who destroyed my malas (the threefold pernicious afflictions that dog human beings), on this Lord mounted on a swift moving bull who entered Thillai and continues to stay there for ever, let us chant songs of glory - Ammaanaai கு-ரை: 'பிச்சேற்றி' என்பதை 'நாயேனை' என்பதற்குப் பின் அமைக்க. பிச்சேற்றி = பேரன்பு கொள்ளச் செய்து. 6. கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் றீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாமேலை வீடெய்த வாட்டான் கொண் டாண்டவா பாடுதுங்கா ணம்மானாய் கேட்டாயோ தோழி ! கிறி செய்த ஆறு ஒருவன் தீட்டு ஆர் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டாதன எல்லாம் காட்டிச், சிவம் காட்டித் தாள்-தாமரை காட்டித், தன் கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய, நாம் மேலை வீடு எய்த ஆள்-தான் கொண்டு ஆண்டவா-பாடுதும்காண்; அம்மானாய் keeddaayoo thoozi kiRi seytha vaaRu oruvan thiiddu aar mathilpudai suuz thennan perunthuRaiyaan kaaddaathana ellaam kaaddi sivam kaaddi thaaL thaamarai kaaddi than karuNai theen kaaddi naaddaar nakai seyya naam meelai viidu eytha aaLthaankoNdu aaNdavaa paaduthungkaaN ammaanaay பொ-ரை: தோழியே! நான் உய்யும் பொருட்டு ஒருவன் செய்ததைக் கேட்பாயாக. சுதைகள் தீட்டப்பெற்ற மதில்களால் சூழப்பட்ட அழகிய நல்ல திருப்பெருந்துறைப் பெருமான் தான் அவன், அவன், எனக்குக் காட்டத்தகாத அரிய உண்மைகளைக் காட்டினான், அவன் தனது திருவடித் தாமரைகளைக் காண்பித்தான். தேன் போன்ற தன் கருணையைப் பருகச் செய்தான். தன்னையும் காண்பித்தான். உலகவர் நகைத்த போதும் நாம் மேலான வீட்டின்பத்தை அடைவதற்காக நம்மை அடிமை கொண்டான். அவனது இத்தகைய கருணையை எண்ணி நாம் பாடி அம்மானை ஆடுவோமாக ! Did you hear, oh my friend, of the playful pranks of this, our Lord of the southern land, in the picturesque fortress-bound Thirup-Perun-Thurai? He revealed to me all the hidden truth that was out of bound for others, showed me the path towards total salvation, showed me his lotus like Feet, showed me His honey-like grace. Letting this world around to ridicule us as they like, He took us under Him, so that we may inexorably go up and forward to attain salvation. Let us chant on Him - Ammaanaai. கு-ரை: கிறி = வழி, நெறி. தீட்டு= தீட்டிய சுதை. 'காட்டாதன எல்லாம் காட்டித் தாள் தாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி, சிவம்காட்டி' என உரைநடை கொள்க 7. ஓயாதே யுள்குவா ருள்ளிருக்கு முள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே யுலகேழு மாயானை யாள்வானைப் பாடுதுங்கா ணம்மானாய் ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானைச் சேயானைச், சேவகனைத், தென்னன் பெருந்துறையின் மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை, நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான - தத்துவனைத், தானே உலகுஏழும் ஆயானை, ஆள்வானைப் பாடுதும்காண்; அம்மானாய்! ooyaathee uLkuvaar uL irukkum uLLaanai seeyaanai seevakanai thennan perunthuRaiyin meeyaanai veethiyanai maathirukkum paathiyanai naay aana nam thammai aadkoNda naayakanai thaayaana thaththuvanai thaanee ulaku eezum aayaanai aaLvaanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் இடைவிடாமல் தியானிப்பவர்களின் நெஞ்சில் வீற்றிருக்கும் உண்மையானவன். அவ்வாறு தியானியாதவர்களுக்குத் தூரத்தே உள்ளவனாகிய வீரன். அழகிய நல்ல திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவன். அந்த அந்தணன் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன். நாய் போலும் இழிந்த நம்மையும் ஆட்கொண்ட தலைவன். தாயைப் போன்றதொரு தத்துவமாய் உள்ள மெய்யன். ஏழுலகத்திலும் கலந்து அவையாய் நிற்பான். அவன் எல்லாவற்றையும் ஆள்பவன் . அவனை நாம் பாடி அம்மானை ஆடுவோமாக ! He is the solid truth residing inside those who unceasingly contemplate on Him and is far away from all those who do not think of Him. He is the protector, gleefully abiding in the southern Perunthurai, the benign one, holding His consort on one half of His manifest frame. The Chief took us in, despite our being like mere curs. The lasting truth, much like a Mother for us! The one that is manifest as the very seven worlds! The one that holds sway over us ! On Him let us sing, Oh maids - Ammaanaai. கு-ரை: 'உள்ளான்' என்பதற்கு வடமொழியில், 'அந்தரியாமி' என்று பொருள் கூறுவர். ஆள்வான்=அரசன். தத்துவம் = மெய், இறைவன் ஒருவனே எல்லாவற்றிலும் கலந்து அவையாய் நிற்க வல்லான் என்பார் 'தானே' என்றார். நாய் அதன் முதலாளியைப் பின்பற்றுதல் போல, இறைவனைப் பின்பற்றும் கடப்பாடுடைய உயிர்களை 'நாயான' என்றார். 8. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய் பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண்சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி-பாடுதும் காண்; அம்மானாய்! paNsumantha paadal parisu padaiththaruLum peN sumantha paakaththan pemmaan perunthuRaiyaan viNsumantha kiirththi viyanmaNdalaththu iisan kaNsumantha neRRi kadavuL kali mathurai maNsumanthu kuuli koNdu akkoovaal moththuNdu puNsumantha ponmeeni paaduthungkaaN ammaanaay பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் அன்பர்கள் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டு அருள் பாலிக்கின்றான். அவன் உமாதேவியைத் தனது உடம்பில் ஒரு பக்கத்தில் உடையவன். திருப்பெருந்துறையை உடையவனும் அவனே. மண்ணுலகத் தலைவனும் அவனே. தனது நெற்றியில் மூன்றாவது அருட்கண் உடையவனும் அவனே. மதுரையம்பதியில் பிட்டு வாணிச்சிக்காக மண் சுமந்து மதுரை மன்னனால் முதுகில் பிரம்படி பட்ட அவனது பொன் போன்ற திருமேனியைப் புகழ்ந்து பாடுவோமாக. Conferring rewards on those that compile metrical hymns on His glory, holding His consort on His left half, Our chief of the Perunthurai shrine, Lord of the wide expanse of the universe, of glory beyond the skies above, Lord with a third eye on the forehead, this Lord of the famed city of Madurai (Koodal as it was originally known) carried a basket load of earth, on behalf of Vandhi, an old infirm and forlorn lady of the city, in return for a small amount of sweet rice as wages in kind. And in this high drama, He got wounded in the angry assault by the (ruling Pandyan) king's ferrule. Let us chant on this auspicious manifest frame of His- Ammaanaai. (cf. Thiru Vilayadal Puraanam, Thiru Vathavoor Puraanam and others, recounting the harrowing tales of hardship inflicted on Saint Maanikkavaachakar by the Pandyan king, then ruling over Madurai). கு-ரை: 'பரிசு' என்பதற்குப் 'பரிசில்' என்று பொருள் கொள்ளுவாரும் உளர். பண் சுமந்த பாடலுக்குப் பரிசு தந்தருளும் என உரைப்ப. 'பெம்மான்' பெருமானின் மரூஉ என்றும் கொள்ளலாம் . கீர்த்தி- கீர்த்தியுடையானுக்கு ஆகுபெயர். மண்டலம்= மண் தலம். கலி = ஒலி, முழக்கம், ஆரவாரம். 'அ' என்ற சுட்டு, மதுரையைக் குறித்தது. அக்கோவால்= மதுரை மன்னனால். மண் சுமந்த கதை வெளிப்படை. 9. துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்டபுரி நூலான் கோலமா வூர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றா னண்டமுத லாயினா னந்தமிலா வானந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளு மண்டம் வியப்புறுமா பாடுதுங்கா ணம்மானாய் துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான் கொண்ட புரிநூலான், கோலமா ஊர்தியான் கண்டம் கரியான், செம்மேனியான், வெள்-நீற்றான், அண்டம் முதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம் பண்டைப் பரிசே, பழ அடியார்க்கு ஈந்தருளும் அண்டம் வியப்பு உறுமா-பாடுதும் காண் அம்மானாய்! thuNda piRaiyaan maRaiyaan perunthuRaiyaan koNda purinuulaan koolamaa uurthiyaan kaNdam kariyaan semmeeniyaan veNNiiRRaan aNdammuthal aayinaan antham ilaa aanantham paNdai parisee paza adiyaarkku iintharuLum aNdam viyappu uRumaa paaduthungkaaN ammaanaay பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் சந்திரனின் ஒரு கலையை அணிந்தவன், வேத வடிவினன், பெருந்துறைப் பெருமான், திருமார்பில் அமைந்த முப்புரிநூலை அணிந்தவன், அழகிய இடப வாகனத்தன், நீலகண்டம் உடையான், சிவந்த திருமேனியான், வெண்மையான திருநீறணிந்தவன், உலகங்கட்கு முதல்வன் அவன் தன் பழைய அடியார்களுக்கு முடிவில்லாத இன்பத்தைக் கொடுத்தருள்பவன். இந்தச் சிறப்பினை உலகத்தவர் நகைக்கும்படியாக நாம் பாடுவோமாக ! He, wearing a crescent moon, reciting the four scriptures, abiding in Thirup-Perun Thurai, donning the sacred thread, mounted on the magnificent bull, sporting dark neck, red frame and white ash! He is verily the source of all the universe. As in the days of yore, He continues to reward His time-honoured disciples with infinite bliss. Let us, Oh maids, chant on Him, that this world may come to know of this amazing act of glory - Ammaanaai. கு-ரை: துண்டம்= துண்டு, இங்கே கலையை உணர்த்திற்று. பழஅடியார்= நெடுநாள் தவம் ஆற்றி ஞானம் பெற்று அனுபூதியில் தேர்ந்த அன்பர். 'ஆ' - ஆறு என்பதன் கடைக்குறை. அதனை, ஈற்றடியில், 'அண்டம் வியப்புறு' என்பதனோடும், 'ஈந்தருளும்' என்பதனோடும் கூட்டுக. 10. விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட வண்ணா மலையானைப் பாடுதுங்கா ணம்மானாய் விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானைத் தண்ஆர் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப், பெண் ஆளும் பாகனைப், பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல்காட்டி, நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய்! viN aaLum theevarkkum meel aaya veethiyanai maN aaLum mannavarkkum maaNpu aaki ninRaanai thaN aar thamiz aLikkum thaNpaaNdi naaddaanai peN aaLum paakanai peeNu perunthuRaiyil kaN aar kazalkaaddi naayeenai aadkoNda aNNaa malaiyaanai paaduthungkaaN ammaanaay பொ-ரை; விண்ணுலகத்தை ஆள்கின்ற இந்திரன் முதலானவர்க்கும் மேலாக விளங்குகின்ற ஞான வடிவினன் ஆகிய சிவபெருமான், மண்ணுலகை ஆளும் மன்னவர்களுக்கு மேன்மை தரும் பொருளாகி நின்றவன், குளிர்ந்த செம்மையான தமிழைப் பாதுகாக்கும் வளப்பம் மிகுந்த பாண்டி நாட்டிற்கு உரிமை படைத்தவன். உமாதேவியாரைத் தனது இடப்பாகத்தில் கொண்டவன். எல்லோராலும் விரும்பப்படுகின்ற திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருப்பனும் அவனே. அந்தத் திருப்பெருந்துறையில் நாய் போன்றவனாகிய எனக்குத் தனது பெருமை பொருந்திய திருவடிகளைக் காட்டி என்னை அடிமையாகக் கொண்ட திருவண்ணாமலைத் தேவனும் அவன் தான். அந்த அண்ணாமலை ஈசனை நாம் பாடுவோமாக ! Higher than the devas ruling over the skies above, and of greater glory than the earth ruling kings, is our Lord of the four vedic scriptures, He of the sacred southern land of the Paandiyan Kingdom, nourishing and promoting the profound genius of Tamil literature, having Uma Devi on His left half. He of the Thiru Annaamalai shrine who took me, a cur like one under Him at the much adored Thirup-Perun-Thurai, on Him let us sing. Oh maids - Ammaanaai. கு-ரை: வேதியன் = வேதம் ஓதுபவன், ஓதுவிப்பவன். வேதம் = அறிவு நூல், மாண்பு= மேன்மை, மூன்றாவது அடியில், இரண்டாவது 'தண்' நாட்டானை என்பதனோடு முடிவது; கருணையைக் குறிப்பது. திருவண்ணாமலையில் இப்பகுதி பாடப்பட்டமைக்கு இது ஒரு குறிப்புப் போலும். 11. செப்பார் முலைபங்கன் றென்னன் பெருந்துறையான் றப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த வப்பார் சடையப்ப னானந்த வார்கழலே யொப்பாக வொப்புவித்த வுள்ளத்தா ருள்ளிருக்கு மப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்கா ணம்மானாய் செப்பு-ஆர் முலைபங்கன், தென்னன், பெருந்துறையான் தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார்கழலே ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதும் காண் அம்மானாய்! seppaar mulaipangkan thennan perunthuRaiyaan thappaamee thaaL adainthaar nenjsurukkum thanmaiyinaan appaaNdi naaddai sivalookam aakkuviththa appu aar sadai appan aanantha vaarkazalee oppaaka oppuviththa uLLaththaar uL irukkum appaalaikku appaalai paaduthungkaaN ammaanaay பொ-ரை: எம்பெருமான் செப்புப் போன்ற தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன். அழகு மிகுந்த திருப்பெருந்துறை என்னும் தலத்தினை உடையவன். தன்னை அடைந்தவர்களின் மனத்தை உருக்கும் குணத்தை உடையவன். பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கியவனும் அவனே. கங்கை தங்கி இருக்கும் சடாபாரத்தை உடையவனும் அவனே. பேரானந்தமாக விளங்கும் அவனது திருவடிகளில் மனம் வைத்து,தம்மையே விற்றுக் கொடுத்த அன்பர்கள் மனத்தில் தங்கி இருப்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோமாக ! Abiding in the south, one half being the fair chested Uma Devi, and seated at Perunthurai is our Lord. He that unfailingly melts the heart of all those who approach Him! He that transformed the Paandiyan land verily into Civa Loham itself ! Sire with watery locks of matted hair! He is beyond and even the great beyond! Yet, He stays inside the hearts of His devotees who have totally surrendered themselves at His bejewelled Feet, so sacred and so blissful. Let us sing on Him, Oh maids - Ammaanaai. கு-ரை: செப்பு= சிமிழ். ஆர் = இணை , 'அப் பாண்டி' என்பதில் சுட்டானது பழமையையும் பெருமையையும் உணர்த்தும். நாலாவது அடியில், அப்பு = நீர் = கங்கை, ஒப்புவித்தல் = விற்றுவிடுதல். அடியவர் தம் நெஞ்சினை இறைவனுக்கு மீளா அடிமை ஆக்குதல் அன்றி ஒற்றியாக வைத்தல் இலர். "விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்" (திரு. 7, பதி- 95, பா. 2) எனச் சுந்தரர் அருளிச் செய்ததைக் காண்க . கழல் = அடி; உள் உயிரறிவின் கண் என்று பொருள்படுதல் கூடும். முதல் 'அப்பாலை' , அப்பாலுள்ள இடம். 'ஐ' சாரியை; இரண்டாவது, 'அப்பாலை' =அப்பாலுள்ள தலைவன். ஐ= தலைவன், 'பிரகிருதிக்கு அப்பாலுள்ளவன்' என்று பொருள் கொள்ளுவாரும் உளர். 12. மைப்பொலியுங் கண்ணிகேண் மாலயனோ டிந்திரனு மெப்பிறவி யுந்தேட வென்னையுந்தன் னின்னருளா லிப்பிறவி யாட்கொண் டினிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கட் டோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்குந் தானேயா யாவைக்கும் வீடாகு மப்பொருளா நஞ்சிவனைப் பாடுதுங்கா ணம்மானாய் மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும் எப்பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால் இப்பிறவி ஆட்கொண்டு, இனிப்பிறவாமே காத்து மெய்ப்பொருட்கண் தோற்றம் ஆய், மெய்யே நிலைபேறு ஆய் எப்பொருட்கும் தானே ஆய், யாவைக்கும் வீடு ஆகும் அப்பொருள் ஆம் நம்சிவனைப் பாடுதும் காண்; அம்மானாய்! maipoliyum kaNNi keeL maal ayanoodu inthiranum eppiRaviyum theeda ennaiyum than in aruLaal ippiRavi aadkoNdu inippiRavaamee kaaththu meypporudkaN thooRRamaay meyyee nilaipeeRaay epporudkum thaaneeyaay yaavaikkum viidu aakum apporuLaam namsivanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: மை எழுதிய கண்ணை உடையவளே! நான் சொல்லுவதைக் கேள். திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் தத்தமக்கு உரிய எல்லாப் பிறவிகளிலும் எம்பெருமானாகிய சிவ பெருமானைத் தேடியும் அவர்கட்கு அருளவில்லை . ஆனால் தகுதி இல்லாத என்னைத் தனது இனிய அருளினாலே இந்தப் பிறவியிலே குருவாய் வந்து ஆட்கொண்டான். இனிப் பிறவியே எடுக்காத வண்ணம் காப்பாற்றினான். மெய்ப்பொருளின் தோற்றமாய் நின்றவன் அவனே. மெய்யே நிலைபேறாகவும் கொண்டவன். எல்லா உயிர்கட்கும் தானே ஒரு முதற்பொருளாய் விளங்கினான். எல்லா உயிர்கட்கும் வீடு பேற்றுக்கு ஏதுவாய் இருக்கின்றான் அவன். இத்தன்மையான சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோமாக ! Listen, Oh bright-eyed maid! Even as Thirumaal, Brahma and Indra were searching for Him in their birth after birth, He in sheer grace, took me, even me, as vassal under Him, in my present birth itself - protecting me from future births, manifest as reality, the eternal truth that is the very source of all, He that is Himself the ultimate salvation unto that entity that is our Lord Civa let us all sing glories - Ammaanaai. கு-ரை: 'எப்பிறவியும் தேட' என்பது பலபிறவிகளிலும் தவஞ்செய்து நாடுதலைக் குறித்தது. மெய்யான பொருளின்கண் இறைவனது விளக்கம் கூறப்பட்டது. மெய்யான நிலையிலுள்ள உயிரின் கண்ணும், சட சத்தாகிய தூய மாயையின் கண்ணும் இறைவனது விளக்கம் குறிக்கப்பட்டது. சத்துத் தன்மையே இறைவன் இயல்பாதலின், அதுவே அவனுக்கு நிலைத்த இடம் என்றார். அத்தன்மையில் உள்ள சடத்திலும், சித்திலும் அவன் விளங்குதலை அவன் தோற்றம் என்றார். ஆனால் நிலைப்பொருள்,நிலையாப் பொருளாய எல்லாம் அவனையே ஆதாரமாகக் கொண்டு நிற்றலின், 'எப்பொருட்கும் தானேயாய்' என்றார். 'தானேயாய்' என்பதைத் ' தான் ஏய் ஆய்' எனப்பிரித்துத் 'தான் ஏயும் பொருளாய்' என்று பொருள் கொள்ளுவாரும் உளர் . ஏய்தல் = சார்பாதல். தோன்றாது சார்பாயிருத்தலின், ஒடுக்கநிலை குறித்தவாறாம். வீடு= முடிவாய இடம். விடு, வீடென நீண்டது. விடுதல்= தங்குதல். உயிருள் பொருளுக்கும், உயிரில் பொருளுக்கும் முடிவாய இடம் ஒருவகையால் இறைவனேயாவன். உயிர் பக்குவப்பட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கும். உயிரில்லன, மாயையில் ஒடுங்க, மாயை சிவசத்தியைச் சார்ந்து நிற்கும். 'நம் சிவன்' என்றது உரிமை பற்றி, அப்பொருள்= அந்த ஒரு பொருள். 13. கையார் வளை சிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை யெங்குஞ் செறிந்தானை யன்பர்க்கு மெய்யானை யல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய் கைஆர் வளை சிலம்பக், காது ஆர் குழை ஆட மை ஆர் குழல் புரளத், தேன்பாய, வண்டு ஒலிப்பச் செய்யானை, வெள்-நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக் கையானை, எங்கும் செறிந்தானை, அன்பர்க்கு மெய்யானை, அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறு அமர்ந்தானை-பாடுதும் காண்; அம்மானாய்! kai aar vaLai silampa kaathaar kuzai aada maiyaar kuzalpuraLa theenpaaya vaNdolippa seyyaanai veNNiiRu aNinthaanai seernthu aRiyaa kaiyaanai engkum seRinthaanai anparkku meyyaanai allaathaarkku allaatha veethiyanai aiyaaRu amarnthaanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: (இந்தப் பாட்டில் முதல் இரண்டடிகளில் அம்மானை ஆடும் பெண்களின் நிலையை மாணிக்கவாசகர் நம் கண் முன்னே கொண்டு வருகிறார். அவர்கள் கழற்சிக்காயை உயரே வீசி எறிவதும் அதைப்பிடிப்பதும் செய்கிறார்கள். அது சமயம் அவர்கள் உடல் முழுமையும் அசைந்து கொண்டிருக்கும். அந்த நிலையைப் பாடுகிறார்) கைகளிலுள்ள வளையல்கள் ஒலிக்கின்றன. காதில் உள்ள குழையணிகள் ஆடுகின்றன. சாந்தணிந்த கூந்தல் அசைகின்றது. அக்கூந்தலில் அணிந்துள்ள மலரில் இருந்து தேன் ஒழுகுகின்றது. அந்தத் தேனை உண்ண வந்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. (பின்வரும் நான்கடிகளில் அப்பெண்கள் சிவபெருமானின் பெருமைகளைப் பாடி அம்மானை விளையாடுகிறார்கள்). நம்பெருமானாகிய சிவபெருமான் சிவந்த திருமேனியை உடையவன் (The Ruddy One). வெண்மையான திருநீற்றை உடம்பில் அணிந்தவன் . தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாததாலும், தானே யாவர்க்கும் தலைவனாக இருப்பதாலும், குவிந்தறியாத கையை உடையவன். எல்லா இடத்தும் நிறைந்தவன். தன் அன்பர்களுக்கு மெய்யாய் விளங்குபவன். அன்பு இல்லாதார்க்கு விளங்காத அறிவன், அவன் திருவையாற்றிலும் எழுந்தருளியிருந்து அருள் புரிகின்றான். அவனைப் பாடி அம்மானை ஆடுவோமாக ! குறிப்பு: சேர்ந்தறியாத கையான் என்றால் ஒரு பொருளிலும் தோய்ந்தறியாத ஒழுக்கம் என்று பொருள் கொள்க. எப்பொருள்களிலும் நிறைந்து இருப்பானாயினும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்றலை உணர்த்திற்று. ஒருவரையும் தொழுதறியாத கைகளை உடையவன் என்பது இறைவனுக்குச் சிறப்புத் தராத பொருள் என்று அறிக. With bangles jingling (in His left hand), ear ring in oscillation, dark tresses waving in the air) where honey bees hum around for the dripping nectar (thus moves our Lord)-the auspicious one smearing his body with white ash, the one whose dwelling place,no one here is known to have ever seen (cf. கேட்டறியோம் உனைக் கண்டறிந்தாரை - Also கேட்டு ஆரும் அறியாதான் - திருச்சதகம் 28). The one who is immanent everywhere, The one true to His devotees but not so to others, this Lord of the vedic scriptures abiding in the sacred shrine of Thiru Iyaaru (திருவையாறு) Let us chant on His glories - Oh maids - Ammaanaai. கு-ரை: குழை, குண்டலமுமாம். 'மையார்' என்பதற்கு மேகம்போலக் கரிய அல்லது 'அஞ்சனம் போலக் கரு நிறமுடைய' என்பாரும் உளர். 'கையானை' என்பதற்கு, 'ஒழுக்கத்தானை' என்ற பொருள் கொள்ளுவாரும் உளர். கை= இடம், ஒழுக்கம், 'அறிந்து சேரா' என்று மாறிப் பொருள் கொள்ளுவதும் உண்டு. 14. ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவரா யேனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை யூனையு நின்றுருக்கி யென்வினையை யோட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையு மொத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்றொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்கா ணம்மானாய் ஆனை ஆய்க் கீடம் ஆய், மானுடர் ஆய்த் தேவர் ஆய் ஏனைப்பிறவு ஆய்ப் பிறந்து, இறந்து, எய்த்தேனை ஊனையும் நின்று உருக்கி, என்வினையை ஓட்டு உகந்து தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய கோன்-அவன் போல் வந்து, என்னைத் தன் தொழும்பில் கொண்டருளும் வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்! aanaiyaay kiidamaay maanudaraay theevaraay eenai piRavaay piRanthu iRanthu eyththeenai uunaiyum ninRu urukki envinaiyai ooddukanthu theenaiyum paalaiyum kannalaiyum oththu iniya koon avanpool vanthu ennai thanthozumpil koNdaruLum vaanavan puungkazalee paaduthungkaaN ammaanaay பொ-ரை: யானை, புழு, மனிதர், தேவர் முதலிய மற்றைப் பிறவிகளிலெல்லாம் பிறந்து இறந்து இளைத்த என்னை (ஆட்கொண்டு) ஊனையும் உருக்கி, என் பழவினையை ஓட்டியருளி தேன், பால், கருப்பஞ்சாறு ஆகியவற்றைப் போல இனிமையான தலைவனாக எழுந்தருளி என்னைத் தனது திருத்தொண்டிலே ஏற்றுக் கொண்டருளிய தேவதேவனுடைய அழகிய திருவடிகளையே நாம் பாடுவோமாக ! I have got so wearied, through repeated cycles of birth and death – through the many past births, I had undergone - as elephant, worm, man, devas and other living creatures. (now at least) unto such a one, He gave His blessings, melting my physique with compassion and driving away my past evil. He came over unto me as a benign chief, sweet as honey, milk and sugar cane. And gracefully took me as vassal under Him. On the auspicious jewelled Feet of this exalted Lord, Oh maids, let us sing glories - Ammaanaai. கு-ரை: பிறவாய்= பிறவியாய் என்பதன் குறுக்கம். 'ஏனை' என்றமையால் பிற உயிர்களாய் என்று பொருள் கொள்ளுதல் மிகை. அறிவு இச்சை செயல் மூன்றுக்கும் இன்பமளித்தலின், மூன்றுவமை கூறினார் போலும், கோன்= (காதலனாகிய) தலைவன். தொழும்பு= தொழும்பன் என்று பொருள் கொள்ளுவாரும் உளர், 'வானவன்' என்பதற்குத் 'தேவன்' என்று பொருள்கோடலும் உண்டு. 15. சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினி லிந்திரனைத் தோணெரித்திட் டெச்சன் றலையரிந் தந்தரமே செல்லு மலர்கதிரோன் பற்றகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை யோட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்கா ணம்மானாய் சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்-தன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்துச் சிந்தித் திசை-திசையே தேவர்களை ஓட்டு உகந்த செம்-தார்ப்பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய் ! santhiranai theyththaruLi thakkanthan veeLviyinil inthiranai thooLneriththiddu essan thalai arinthu antharamee sellum alar kathiroon palthakarththu sinthi thisaithisaiyee theevarkaLai ooddukantha senthaar pozil pudaisuuz thennan perunthuRaiyaan manthaara maalaiyee paaduthungkaaN ammaanaay பொ-ரை: தக்கன் செய்த யாகத்தில், சந்திரனைக் காலால் தேய்த்தும், இந்திரன் தோளை நெரித்து ஒடித்தும், யாகத் தலைவனாகிய எச்சனின் தலையைக் கொய்தும், வானிலே செல்லும் விளக்கமுடைய சூரியனது பற்களை உடைத்தும், விண்ணவர்களைத் திசைகள் தோறும் சிதறியோடும்படி செய்தலையும் விரும்பியவன் நம் சிவபெருமான். அவன் சிறப்பான பொழில்கள் சூழ்ந்துள்ள, அழகிய நல்ல திருப்பெருந்துறை என்னும் தலத்தை உடையவன். அவன் மந்தார மாலையை அணிந்துள்ளான். அந்த மந்தார மாலையை நாம் பாடுவோமாக! குறிப்பு: தக்கன் வேள்வியில் மேல் சொன்ன ஒறுத்தல்களைச் சிவபெருமான் செய்யவில்லை. அவன் செய்ய விரும்பினான். செய்தது வீரபத்திரர். அதனால் தான் "செய்தலையும் விரும்பியவன்” என்று போடப்பட்டதை அறிக. At the rituals of (the haughty) Dakshan, by His commandi Veerabadran pulverized the moon god, crushed the shoulders of Indra, slashed the throat of the Chief Priest (Dakshan) pulled out the teeth of the Sun god spreading rays on to the skies above. He made the assembled gods run away in panic in all directions. (This He did as punishment for their effrontery in ignoring Him at the rituals). Such is our Lord of the southern Perunthurai shrine surrounded by lush blooming groves. Let us sing on His 'mandaara' garland, Oh maids - Ammaanaai Note: It may be noted that the above punishments were carried out only by Veerabadran on the command of Lord Civan and not directly by Lord Civan. கு-ரை: தக்கன் வேள்விக்கதை வெளிப்படை. எச்சன் = யாகத் தலைவன், செந்தார்= செங்கழுநீர் மாலையாயிருத்தல் கூடும். மந்தாரம்= விண்ணுலகிலுள்ள ஐவகை மரப்பூக்களில் ஒன்று. அது செம்பரத்தை என்பாரும் உளர். 16. ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து தேனா யமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குத் தந்தருளுந் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசே ரானா வறிவா யளவிறந்த பல்லுயிர்க்குங் கோனாகி நின்றவா கூறுதுங்கா ணம்மானாய் ஊன்ஆய், உயிர்ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து தேன் ஆய், அமுதமும் ஆய்த் தீம் கரும்பின் கட்டியும் ஆய் வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும் தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளிசேர் ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும் கோன் ஆகி நின்றவா-கூறுதும்காண்; அம்மானாய்! uunaay uyiraay uNarvaay ennuL kalanthu theenaay amuthamumaay thiingkarumpin kaddiyumaay vaanoor aRiyaa vazi emakku thantharuLum theenaar malarkkonRai seevakanaar siir oLiseer aanaa aRivaay aLavu iRantha pal uyirkkum koonaaki ninRavaa kuuRuthungkaaN ammaanaay பொ-ரை: உடலாகவும், உயிராகவும், உணர்வாகவும் என்னுள் ஒன்றாகக் கலந்தருளித் தேனும், அமுதமும், இனிய வெல்லமும் ஆக இனிமை தந்து, வானவர்களும் அறியாத வீட்டு நெறியை எமக்குத் தந்தருளுகின்றவன் எம்பெருமானாகிய சிவபெருமான். அவன் தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்துள்ள வீரன். சிறந்த விளக்கமுடைய நீங்காத பேரறிவு உருவினனாய் உள்ளவன். கணக்கற்ற பல உயிர்களுக்கும் தலைவனாய் நின்ற விதத்தையும் நாம் புகழ்ந்து பேசுவோமாக! Mingled with me as flesh and as my soul, and also as gnosis, is He like honey and elixir and the sweet cubes of sugar cane, this our saviour sporting nectar filled 'Konrai' (cassia) flowers, showed me the right path which even the gods know not. And he shines forth as effulgence of immense brightness and wisdom. He is the Chief of the countless numbers of living beings. Let us speak on Him, Oh maids - Ammaanaai. கு-ரை: 'உயிராய்' என்பதற்கு முன் 'உணர்வாய்' என்பதை வைத்துப் பொருள் கொள்ளுக. அவ்வாறன்றி நின்ற முறையே வைத்து 'உயிராய்' என்பதற்குப் பிராணனாய் என்று பொருள் கொள்ளுவாரும் உளர். உடம்பு, உள்ளம், உயிர் என்பது, ஒன்றினொன்று நுட்பமாய் உள்ளன. 'அமுதம்' என்பதற்குப் 'பால்' என்று பொருள் கொள்ளுவாரும் உளர். உயிரறிவு போலாது, எப்போதும் விளங்கும் அறிவு இறைவனது ஆதலின் 'சீரொளிசேர்' என்றார். சீர், இயற்கையைக் குறித்தல் கூடும். அறிவுருவாய் எக்காலத்தும் உயிருலகிற் செறிதலின்,' ஆனா' என்றார். உயிர்கள் எண்ணிலவாதலின், 'அளவிறந்த' என்றார். கோனொருவனே ஆதலின், உம்மை கொடுத்தார். முற்றும்மையுமாம். 17. சூடுவேன் பூங்கொன்றைச் சூடிச் சிவன்றிரடோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின் றூடுவேன் செவ்வாய்க் குருகுவே னுள்ளுருகித் தேடுவேன் றேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்து மலர்வே னனலேந்தி யாடுவான் சேவடியே பாடுதுங்கா ணம்மானாய் சூடுவேன் பூம்கொன்றைச் சூடிச் சிவன் திரள் தோள் கூடுவேன்; கூடி முயங்கி, மயங்கி நின்று ஊடுவேன்; செவ்-வாய்க்கு உருகுவேன்; உள் உருகித் தேடுவேன்; தேடிச், சிவன் கழலே சிந்திப்பேன் ; வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி ஆடுவான் சேவடியே-பாடுதும் காண்; அம்மானாய்! suuduveen puungkonRai suudi sivan thiraL thooL kuuduveen kuudi muyangki mayangki ninRu uuduveen sevvaaykku urukuveen uLuruki theeduveen theedi sivan kazalee sinthippeen vaaduveen peerththum malarveen analeenthi aaduvaan seevadiyee paaduthum kaaN ammaanaay பொ-ரை: (இத்திருப்பாட்டில் மாணிக்கவாசகர் காமப்பொருள் தோன்றும் படி பாடினாராயினும், அடிகள் தமக்கு இறைவன் மீண்டும் தோன்றி அருள் புரியின் அவனது திருவடி இன்பத்தைச் சிறிதும் தடை ஏற்படாமல் (மலத்தின் வாதனை உண்டாகாமல்) தொடர்ச்சியாக நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தினையே உள்ளுணர்ந்து அருளினார் என்பதை உணர்க. சிவபெருமானை நேரில் காணப்பெறின் என்ன செய்வேன் என்பதை ஒருத்தி கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்). "சிவன் என் கண் முன்னே வந்து தோன்றுவானாயின், அவனுக்கு விருப்பமாய் உள்ள கொன்றைப் பூ மாலையை என் தலையில் சூடிக்கொண்டு அவனுடைய திரண்ட தோள்களில் சேர்வேன். அதனால் ஏற்படும் களிப்பினால் எனது அறிவு மயங்கி என் வசமிழந்து நிற்பேன். புறத்தே சென்று பிணங்குவேன் (ஊடல் செய்வேன் ). நான் பிணங்கியதால் அவன் மறைந்து விட்டான். மறைந்தவனை நினைத்து என் உள்ளம் வருந்தி உருகிற்று. அந்த நிலையில் அவனது சிவந்த இதழ்கள் என் நினைவிற்கு வர என் உள்ளம் மேலும் மேலும் உருகிற்று. தெளிவடைந்தேன். அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். தேடியும் காணவில்லை. பின்பு அவனுக்குப் பணி செய்வதற்கு நான் உரியவள் ஆயிற்றே என்ற நினைவு தோன்றியது. அந்த நினைவில் வேறு சிந்தனை கொண்டிருந்தேன். மனம் சோர்வுற்று வாடினேன். மீளவும் என் சிந்தனை நினைவில் 'அவன் என்னைக் கைவிடமாட்டான்' என்ற துணிபு ஏற்பட்டது. இத்துணிபு ஏற்பட்டவுடன் என் மனச் சோர்வு நீங்கி மகிழ்ந்தேன். இந்த விதமான எண்ணங்களை எல்லாம் மனத்தில் கொண்டு, திருக்கரத்தில் தீயேந்தி ஆடுவானாகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோமாக" என்று அம்மானை ஆடும் மற்ற மகளிரை நோக்கிக் கூறினாள். Often do I wear the beauteous 'Konrai' (cassia) flowers, (that are dear to Lord Civa ) Wearing them I embrace the brave shoulders of Lord Civa, joining, mingling and lost in bliss. I indulge in feigned conflict with Him.I melt at heart longing for His rosy lips, search for Him internally- searching, I am steeped in thoughts on His bejewelled Feet. I sulk in a mood of despondency, bloom forth again. Let us sing, Oh maids on the auspicious Feet of this Lord that dances with a flame on Hand (at the holy city of Thillai)- Ammaanaai. கு-ரை: இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் அடிகள் இதனுள் குறித்தார். தலைவன் தாரை அணிதல், மாலையிட்டமை குறிக்கும். ஞான யோகத்தாற் சார்தல், கூடுதலாகும். ஞானத்தாற் கலத்தல் முயங்குதலாகும். பின்னர், உடலோடுள்ள காரணத்தாற் பிரிவு ஏற்பட, ஊடுதல் நிகழும். மீண்டும் தலைவனைப் பிரிவாற்றாமை காரணமாக நாடுதலின், தேடுதலும் சிந்தித்தலும் மெலிதலும் நிகழ்வன. இறுதியாக வீடடைதல், மீண்டு மகிழ்தற்குக் காரணம். எல்லாம் இறைவன் கூத்து. ஆதலின் அவன் சேவடியைப் பாடுவோம் என்றார். 18. கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையி லெளிவந் திருந்திரங்கி யெண்ணரிய வின்னருளா லொளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே யொளிதிகழ வளிவந்த வந்தணனைப் பாடுதுங்கா ணம்மானாய். கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை , வெளிவந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீர் ஆர் பெருந்துறையில் எளிவந்து. இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால் ஒளிவந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளி வந்த அந்தணனைப் பாடுதும் காண்: அம்மானாய் ! kiLivantha menmoziyaaL keezkiLarum paathiyanai veLivantha maalayanum kaaNpariya viththakanai theLivantha theeRalai siir aar perunthuRaiyil eLivanthu irunthu irangki eN ariya in aruLaal oLivanthu en uLLaththin uLLee oLithikaza aLivantha anthaNanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் எப்பேர்ப்பட்டவர் என்றால் கிளியின் குரல் போன்ற மெல்லிய ஓசையை ஒத்த குரலினை உடையவளும், ஒளி வீசுகின்ற திருமேனியை உடையவளுமாகிய உமையம்மையைத் தனது உடலின் இடப்பாகத்தில் வைத்துக் கொண்டவன். வெளியில் தேடுவதற்காக வந்த திருமாலும், பிரமனும் காண இயலாத வித்தகன், தேனைப் போன்று உள்ளத்திற்குத் தெளிவு தரும் ஞானத்தைக் கொடுப்பவன். சிறப்புடைய திருப்பெருந்துறையில் எளிமையனாய் எழுந்தருளி வந்து எனக்குக் காட்சி தந்தவன். எம்மீது இரக்கம் கொண்டு நினைப்பதற்கு இயலாத இனிய கருணையாலே எனக்கு அருள் வழங்கியவன். அவன் ஒளி வடிவாய்த் தோன்றி என் உள்ளத்தினுள்ளே அருட்பேரொளி விளங்குமாறு அருள்புரிந்த பேரருளாளன் . இத்தகைய அழகிய பேரருளாளனாகிய சிவபெருமானை நாம் பாடுவோமாக! Oh maid, sweet-talking like a parrot, sing on the compassion-filled Lord of the Vedas ! He with one half shining with sandal paste, the Lord of rare skills, is hard to see, even for Thirumaal and Brahma. He is verily the clear nectar. He who readily comes over to the holy Perunthurai and out of pity showers grace on me so that my heart may light up in brilliance sing on Him, Oh maids - Ammaanaai. கு-ரை: 'வந்த' என்பது முதல் வினையாயும் துணை வினையாயும் வந்தது. கிளி - அதன் குரலுக்காக நின்றது. கேழ்= ஒளி, தேறல்= தேன். உள்ளத்தினுள்ளே, என்பதற்கு நெஞ்சிற்கப்பால் உயிரின் கண்ணே என்று பொருள் கொள்ளுக. அளி வந்த = அருள் தந்த. வருதல் துணை வினையாயின், அளிவந்த= அளித்த, கருணை செய்த, தெளிவந்த = தெளிந்த. எளிவந்த = எளிதின் வந்து, அல்லது எளிதாய். ஒளிவந்து = ஒளியாய். 19. முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை யென்னப்ப னென்பார்கட் கின்னமுதை யன்னானை யம்மானைப் பாடுதுங்கா ணம்மானாய் முன்னானை: மூவர்க்கும்; முற்றும் ஆய்; முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனைத் தென் ஆனைக் காவானைத் தென் பாண்டி நாட்டானை; 'என்னானை; என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை அன்னானை; அம்மானைப் - பாடுதும் காண்; அம்மானாய் ! munnaanai muuvarkkum muRRum aay muRRukkum pinnaanai pinjnjakanai peeNu perunthuRaiyin mannaanai vaanavanai maathu iyalum paathiyanai thenaanai kaavaanai thenpaaNdi naaddaanai ennaanai en appan enpaarkadku in amuthai annaanai ammaanai paaduthungkaaN ammaanaay பொ-ரை: [ எம்பெருமானாகிய சிவபெருமான் பிரம்மா, திருமால், உருத்திரன் என்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவன், மேம்பட்டவன்; தலையாயவன்; அவர்கள் தோற்றத்திற்குக் காரணமானவன். (இந்த மும்மூர்த்திகளை பிரம்மா, திருமால், சிவன் என்று பிழைபடக் கூறியும் எழுதியும் வருகிறார்கள். மும்மூர்த்திகளில் வரும் உருத்திரன் வேறு. சிவ பரம்பொருள் வேறு. முன்னவன் குண ருத்திரன். சிவன் குணாதீதனாகிய மகாருத்திரன். இவன் நிர்க்குணன். மும்மூர்த்திகளாகிய பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகிய தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும்; பிறக்கும்; மேல் வினையும் செய்யும். (சிவஞான சித்தியார் சுபக்கம் - 2ஆம் சூத்திரம் பார்க்க. "முந்தை காண் மூவரினும் முதலானான் காண்" திருநாவுக்கரசர் தேவாரம் 6-65-9-6202 பார்க்கவும்). "முந்தைய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் " திருவாசகம்- ( திருப்பள்ளியெழுச்சி 20-8-375 பார்க்க. மாண்டூக்ய உபநிடதம் (1-7)ஐயும் பார்க்க). இன்னும் திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் இவை கூறப்பட்டுள்ளன ] எல்லாம் தானேயானவனும், எல்லாப் பொருள்களாயும் விளங்குபவன்; அவை அனைத்தும் அழிந்த பின்னரும் இருப்பவன்; சடை, பிறைச்சந்திரன் முதலிய தலைக்கோலம் உடையவன்; எல்லோராலும் போற்றப்படுகின்ற திருப்பெருந்துறையில் மன்னனாக வீற்றிருப்பவன்; ஞான ஆகாயத்தில் விளங்குபவன்; உமையம்மையைத் தன் உடம்பில் ஒரு பாகத்தில் உடையவன்; அழகிய திருஆனைக்கா என்ற ஊரின்கண் கோயில் கொண்டிருப்பவன்; தென்பாண்டி நாட்டிற்கு உரிமை உடையவன்; “என் அப்பா" என்று அவனை அன்போடு அழைப்பவர்களுக்கும் இனிய அமுதத்தை ஒத்த அருளை வழங்குபவன். இத்தகைய எந்தையை நாம் பாடுவோமாக ! Preceding all the three entities (Brahma, Thirumaal and Rudran) - is Lord Civa of status higher than that of these gods. He has been in existence before these three, and shall continue to exist even after the three are gone! Lord with matted hair immanent ever at the much adored Thirup-Perun-Thurai. He of exalted state of glory! one half shared with Uma Devi! Lord of the southern Thiru Aanaikkaa! Abiding in the land of the Paandiyas. My own very Lord, sweet nectar to those who call out Him "Oh our Sire!" sing ye, Oh maids, on this Lord, our father- Ammaanaai. கு-ரை: மூவர் - அயன், அரி, உருத்திரன். 'முற்றுக்கும்' என்பதை 'முன்னானை' என்பதனோடும் 'பின்னானை' என்பதனோடும் கூட்டுக . பிஞ்ஞகம்= பின்னலையுடைய சடை என்பாரும் உளர். 'மன்னானை' என்பதற்கு 'மன்னவனை' என்று பொருள்கோடலும் உண்டு. வானவனை=தேவனை என்றும் பொருள்படும். தென் + ஆனைக்கா= தென்னானைக்கா. 'என்னானை' என்பதில் 'ஆனு' என்பது இனிமை என்னும் பொருட்டாய ஒரு சொல், அது 'ஆன்' என நின்று ஐயுருபேற்றது. அன்னானை= ஒப்பானை, அம்மான்= தந்தை. 20. பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்க ணீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் றொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்கா ணம்மானாய் பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான் , கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன் அடியார் குற்றங்கள் நீக்கிக், குணம் கொண்டு, கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே பற்றி, இப்பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான் பற்றிய, பேர் ஆனந்தம் - பாடுதும் காண்; அம்மானாய்! peRRi piRarkku ariyapemmaan perunthu Ariyaan koRRa kuthirai mel vantharuLum than adiyaar kuRRangkal nikki maNam koNdu koothadi suRiya suTRa thodarpu aRuppaan thoolpukazee paRRi ippaasaththai paRRaRanaam paRRuvaan paRRiyapeer aanantham paaduthungkaan ammaanaay பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் தன் அடியார்களைத் தவிர பிறருக்குத் தன் குணங்களையும், இன்ன தன்மையன் என்பதையும் அறிய இயலாதவனாய் இருப்பவன்; திருப்பெருந்துறை என்னும் ஊரின்கண் கோயில் கொண்டிருப்பவன்; வெற்றி தரும் குதிரையின் மேல் குதிரைச் சேவகனாக எழுந்தருளி வந்து தன் அடியார்கள் செய்த பாவ கருமங்களைப் போக்கிக் குணத்தைப் பாராட்டியவன்; பல பிறவிகளில் ஆன்மாவைச் சூழ்ந்து கிடந்த குடும்பப் பாசத்தைத் தொலைப்பவன். நாம் அவனுடைய பழமையான புகழையே பற்றிக்கொண்டு, இந்தப் பாசப்பற்று அறவே ஒழிதலை அடையும் பொருட்டு நாம் பற்றின பேரின்பத்தைப் புகழ்ந்து பாடுவோமாக. Lord whose nature is not known to any other, Lord of Perunthurai, mounting a valiant steed , ignoring the shortcomings of His devotees, and considering only their good deeds. Cajoles them and cuts off the bonds of encircling kith and kin. Let us attach ourselves to His time -honoured glories, so that all other attachments are ended. For this, sing ye, Oh maids, on His blissful state that we may be free of all bonds- Ammaanaai. (c.f. Thirukkural 350, for similarity in exhortation and alliteration as well: Cling to the One who clings to nothing; And so clinging, cease to cling). கு-ரை: பெற்றி= தன்மை. தொல் புகழைப் பற்றி= தொல் புகழைப் பாடற் பொருளாகக் கொண்டு , பற்றறவு என்பது 'பற்றற' என நின்றது. கடைசியடியில், 'பற்றிய' என்பதற்கு நாம், அல்லது 'நம்மை' என்பதைச் சேர்த்துப் பொருள் கொள்ளுக. பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - திருக்குறள் 350 THIRUCHCHITRAMBALAM 9. திருப்பொற்சுண்ணம் 9. THIRUP-POR-CHUNNAM (ஆனந்த மனோலயம்) The Soul in a Trance of Bliss தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. Compiled whilst in Thillai அறுசீரடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பொற்கண்ணம்- பொன்போலும் பொடி; இது வண்ண உவமை. 'பொன்' , 'அழகு' என்பாரும் உளர். அரிதாரம் முதலிய மணப் பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடித்த நறுமணப் பொடியே இங்கு பொற்சுண்ணம் எனப்பட்டது. இதனை மகளிர் பலர் குழுமி இடிப்பர் என்பது, 'பலர் தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்' (மதுரைக்காஞ்சி அடி. 399) என்னும் அடிக்கு 'இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கள் போலப் பரக்கும் சுண்ணத்தை யுடையாரும்' என நச்சினார்க்கினியர் உரைத்த உரையாலும் அறியப்படும். சுண்ணம் இடித்தல், தினை குற்றுதல் முதலியவற்றைச் செய்யும் பொழுது பாடப்படும் பாட்டே 'வள்ளை' என்னும் உரற்பாட்டு, இது மகளிரிடையே பல பொருள் பற்றி வருமாயினும் புலவர்கள் இதனை அகப்பாட்டுள் தலைவனைப் பற்றித் தலைவியும், தோழியும் பாடுவதாகவும், புறப்பாட்டுள் பகைவரை வென்ற அரசனது புகழைப் பலரும் பாடுவதாகவும், பாடாண்பாட்டுள் பாட்டுடைத் தலைவனது இயல்பை அவன் மேற் காதல் கொண்டவள் பாடுவதாகவும் செய்வர். அவ்வகைகளுள் இது, பாடாண்திணைக் கடவுள் வாழ்த்துப் பகுதி. அதனுள்ளும் கைக்கிளையாகாது ஐந்திணையேயாம். பாடாண் பாட்டு ஐந்திணை பற்றியும் வரும் என்பதனை, 'புரைதீர் காமம் புல்லிய வகையினும்' (தொல். பொருள், 79) என்றதனால் அறிக. தம் இயல்பின்படியே நச்சினார்க்கினியர் இதற்கு வேறுரை உரைத்தாராயினும், உண்மையுரையை உரையாசிரியர் உரைத்திருத்தல் காண்க. மற்றும், 'மக்கள் நுதலிய' (தொல். பொருள் 57) 'புறத்திணை மருங்கின்' ( தொல். பொருள் .58) என்னும் நூற்பாக்களையும் இங்கு உடன் நோக்கி உணர்க. 'சுண்ணம்' என்பது இங்கு அதனை இடிக்குங் காலத்துப் பாடும் பாட்டிற்கு ஆயிற்று. ஐந்திணை வகைகளுள் இப்பகுதி, கற்பிடத்துப் பிரிவின் கண் பருவங்கண்டு ஆற்றாளாய தலைமகளைத் தலைவர் வருவார் எனக் கூறி வற்புறுத்துந் தோழி கூற்று. இதன்கண் அடிகள் இன்ப மேலீட்டினையே புலப்படுத்தருளுதலின் இப்பகுதிக்கு, 'ஆனந்த மனோலயம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்த மனோலயம் - இன்பத்தால் உண்டாகிய உள்ள ஒடுக்கம். இதன்கண் உள்ள திருப்பாட்டுக்கள் எண் சீரடிகளாலாயவை . அச்சீர்களுள் மூன்றாவதும் ஏழாவதும் முன்னைச் சீர்களோடு வெண்டளை வகையிற் கண்ணுற்று இருவகை மாச்சீராகியும், நான்காவதும் எட்டாவதும் தேமாவாகியும் நிற்கும். எனினும், இவ்விருமாச்சீர்களின் ஓசையை ஒரு விளங்காய்ச் சீர் ஓராற்றால் தந்து நிற்றலின், ஒரோவடியிடத்து எழுசீரும், அறுசீரும் நிற்றல் உளவாம் . இதுபோலும் விருத்த யாப்பினுள் இங்ஙனம் சீர்கள் மயங்கி வருதல் இயல்பாதலின் இம்மயக்கம் பற்றி இப்பாட்டுக்களில் எல்லாரும் எல்லா அடிகளையும் அறுசீரான் இயன்றவையாகக் கூறுதல் பொருந்தாமையை , அவர் காட்டும் சீர்களுள் நாலசைச் சீர் பயின்று வருதலான் அறிந்து கொள்க . நாலசையின் ஆகும் சீர்களும் உள என நூல் செய்தோரும், அவை அருகி வருமெனக் கொண்டதல்லது பயின்று வரும் எனக் கொள்ளாமை வெளிப்படை. இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டதாகவே பதிப்புகளிற் காணப்படுகின்றது. விருத்தப்பாக்களுள் இப்பகுதி சந்தமுடைத்தாதலின் , இதனை முன்வைத்துக் கோத்தனர். Yet another chapter portraying maids at work, chanting the glories of Lord Civa in a chorus, steeped in a rapturous mood. The tunes of this orchestral rendering, harmonise with the physical movement of the maids, and are also helpful in alleviating the tedium of their labour. The participants in this choir are engaged in pounding turmeric along with fragrant ingredients, using mortar and pestle. The constant refrain of all the twenty stanzas of this chapter runs thus: "Oh maids,come let us pound the golden mix here in this courtyard,to the glory of Lord Civa" The items being pounded will be a mix of turmeric, frankincense and other pleasant smelling herbs to be added to the ritual bath waters, during ablution ceremonies in temples. There is also an inbuilt allegorical note in this portrayal, where the saint calls upon the devas, saints and other deities to join in the pounding exercise, so as to be freed from the bonds of worldly attachments, and thus experience the eternal joy of union with Lord Civa. The inherent symbolism, considers the world as one giant mortar, each devotee pounding the aromatic yellow ingredient in a mood of supreme ecstasy, brought about by the company of noble folks working in harmony with them, so as to be freed from the trials and tribulations of this mundane existence. The mind of man dances to the rhythmic tunes of Lord Civa. In verse 9 of this chapter, the saint depicts mount Meru as the pestle which pounds truth in the giant mortar symbolising this vast world. A splendid imagery presenting the link between man and nature much as in the cosmic dance of Lord Nataraja at Thillai. 1. முத்துநற் றாமம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபநற் றீபம் வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியுங் கங்கையும் வந்து கவரிகொண்மி னத்தனை யாறனம் மானைப்பாடி யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே முத்து நல் தாமம், பூமாலை, தூக்கி முளைக்குடம், தூபம், நல்தீபம், வைம்மின் ! சத்தியும், சோமியும், பார் - மகளும், நா - மகளோடு பல்லாண்டு இசைமின் ! சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின் ! அத்தன், ஐயாறன் அம்மானைப் பாடி, ஆடப், பொற் சுண்ணம் இடித்தும் நாமே ! muthu nalthaamam puumaalai thuukki muLaikkudam thuupam nalthiipam vaimmin saththiyum soomiyum paarmakaLum naamakaLoodu pallaaNdu isaimin siththiyum kowriyum paarppathiyum kangkaiyum vanthu kavari koLmin aththan aiyaaRan ammaanai paadi aada poRsuNNam idiththum naamee பொ-ரை: (இந்த முதல் பாட்டில் வரும் இறைவியர்களின் பெயர்களைத் தாங்கிய பெண்களை விளித்து, அவர்கள் இன்னின்ன செய்யுங்கள் என்று அமைந்துள்ளது. சத்தி= உருத்திராணி (உருத்திரனின் தேவி); சோமி = திருமகள் (சீதேவி, இலட்சுமி); பார்மகள்= பூதேவி; சோமி மற்றும் பார்மகள் இருவரும் திருமாலின் தேவியர்கள்; நாமகள் = சரசுவதி (பிரம்மாவின் தேவி), சித்தி = கணபதியின் தேவி; கௌரி, பார்ப்பதி = உமையம்மையின் பெயர்கள்; கங்கை = கங்காதேவி) தோழியர்களே! நல் முத்துக்களால் ஆகிய மாலையினையும் மலர் மாலையையும் தொங்கவிட்டு, பயிர் முளைகளிட்ட குடம், நறும்புகைக் கலசம், விளக்கு என்பவற்றை முறையாக வைப்பீர்களாக. உருத்திர சத்தியும், திருமகளும், நிலமகளும், கலைமகளும் பல்லாண்டு பாடுவீராக. கணபதியின் சத்தியும் காளியும் உமையும் கங்கையும் சேர்ந்து இறைவனுக்கு வீசுவதற்குச் சாமரத்தைக் கைப்பிடிப்பீராக. எம் தந்தையும், ஆசிரியனும் திருவையாற்றில் கோயில் கொண்டவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவனுக்குத் திருமுழுக்காட்ட அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போமாக. Oh maids! Place in position the holy lamp and glowing frankincense. Arrange the traditional pots of seedlings. Make a graceful display of garlands made of pearls and flowers. Let the goddesses of land and the mountains, and of learning and wealth, chant greetings of longevity . May the goddesses Paarvathi and Gangaa , wave the holy fan of the feather light 'Chaamaram' in front of our Lord. Singing and dancing in this way, let us pound the golden mixture (of turmeric and aromatic herbs) to the glories our Chief, our Lord of Thiru Iyaaru. (Note: The mixture of aromatic herbs, hand-pounded mortar and pestle is added to the holy bath waters of Lord Civa during rituals). கு-ரை: தாமம்= மாலை. நவதானியங்களின் விதைகளை இட்டு நீர் விட்டுப் பயிர் வளர்க்கப்பட்ட குடம் , முளைக்குடம் . அது மங்கலப் பொருள்களில் ஒன்று . சோமி என்பது சௌமி என்பதன் திரிபு . இலக்குமியையும் நாமகளையும் கூறவே, 'சத்தி', உருத்திர சத்தி எனப் பொருள் கொள்ளப்பட்டது. கௌரி என்பது காளிக்கும் பெயர். மற்றொரு பொருள், கன்னியாய நங்கை. அண்டந்தோறும் உள்ள மும்மூர்த்திகளின் சத்திகள் முதலிற் கூறப்பட்டனர். பிரகிருதி முடிவிலுள்ள சீகண்ட புவன சத்திகள் பிற்கூறப்பட்டன. 2. பூவியல் வார்சடை யெம்பிராற்குப் பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டு மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே குனிமின் றொழுமினெங் கோனெங்கூத்தன் றேவியுந் தானுவந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே பூ இயல் வார் சடை எம்பிராற்குப், பொன் திருச் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்; கூவுமின் தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம்கோன், எம் கூத்தன் தேவியும் தானும் வந்து, எம்மை ஆளச் செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே! puuviyal vaarsadai empiraaRku pon thirusuNNam idikka veeNdum maavin vaduvakir anna kaNNiir vamminkaL vanthu udan paaduminkaL kuuvumin thoNdar puRam nilaamee kunimin thozumin emkoon emkuuththan theeviyum thaanum vanthu emmai aaLa semponsey suNNam idiththum naamee பொ-ரை: கொன்றை மலரணிந்த நீள்சடையுடைய எம் பெருமானுக்கு அழகிய திருச்சுண்ணம் இடிக்க வேண்டும். மாங்காய் வடுவின் பிளவு போலும் கண்ணுடைய பெண்களே, வாருங்கள் . வந்து விரைவில் பாடுங்கள். அடியவர்கள் வெளியே நில்லாதபடி அவர்களை அழையுங்கள். ஆடுங்கள். வணக்கம் செய்யுங்கள். எம் தலைவனும் நடனம் ஆடுபவருமான கடவுள் தன் சத்தியும் தானுமாக வந்து எம்மை ஆண்டு கொண்டு அருளும்படி, செம்மையான பொன் போல் ஒளி செய்யும் வாசனைப் பொடியை நாம் இடிப்போமாக . We should pound the sacred golden mixture for our Lord of long, matted fair locks . Ye maids with eyes resembling split tender mangoes, come and sing with us and call out to Him loudly. Ye servitors do not stay outside , but come over , and dance and pray. That our Chief , the cosmic dancer, may alongside His consort , come and take us vassal, let us pound the golden mixture, for the glories of our Lord. கு-ரை: 'பூ' என்பதற்கு அழகு என்றும் பொருள் கொள்ளலாம். குனிமின், என்பதற்கு ' வளைமின்' என்று பொருள் கோடலும் உண்டு. பொற்பொடி கலந்த சுண்ணம் என்பாரும் உளர். 3. சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிபரப்பி யிந்திரன் கற்பக நாட்டியெங்கு மெழிற்சுடர் வைத்துக் கொடியெடுமி னந்தரர் கோனயன் றன்பெருமா னாழியா னாதனல் வேலன்றாதை யெந்தர மாளுமை யாள்கொழுநற் கேய்ந்தபொற் சுண்ண மிடித்துநாமே. சுந்தர நீறு அணிந்து, மெழுகித், தூய பொன் சிந்தி, நிதி பரப்பி , இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்துக், கொடி எடுமின்; அந்தரர் கோன் அயன்- தன் பெருமான், ஆழியான் நாதன், நல்வேலன் தாதை எம்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற் சுண்ணம் இடித்தும் நாமே ! sunthara neeRu aNinthum mezuki thuuya pon sinthi nithiparappi inthiran kaRpakam naaddi engkum ezil sudar vaiththu kodi edumin antharar koon ayan than perumaan aaziyaan naathan nalveelan thaathai entharam aaL umaiyaaL kozunaRku eeyntha poRsuNNam idiththum naamee. பொ-ரை: அழகிய திருநீற்றினைத் தமது மேனியிலே தரித்து, சுண்ணம் இடிக்கும் இடத்தைச் சாணத்தால் மெழுகி, தனிப் பொன் பொடியைத் தூவி, நவமணிகளாகிய நிதிகளைப் பல இடங்களில் வைத்து, இந்திரனுக்குரிய கற்பகத் தோகை நட்டு, எல்லா இடங்களிலும் அழகிய தீபங்கள் வைத்துக் கொடிகளை எடுப்பித்துக் கட்டுங்கள். வானவர்கட்குத் தலைவனாய், அயனுக்கு முதல்வனாய், சக்கர ஆயுதம் உடைய திருமாலுக்கு நாயகனாய், சிறந்த முருகப் பெருமானுக்குத் தந்தையாய், எம்போன்றவர்களையும் ஆட்கொள்கின்ற உமையம்மை கணவனுக்குத் தக்க அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போமாக. Oh maids, wear gracious white ash, cleanse the floor, sprinkle, golden mix and spread out the (nine fold) treasures (gems), install the all-too-benevolent tree of Indra, hold the banner and lay out beauteous lamps (lanterns). Our Lord is the Chief of all heaven dwellers, Master of Brahma and Thirumaal, Father of the spear-wielding Murugan, consort of Uma Devi ruling over us. Let us pound the golden herbs appropriate to Him of the highest state. கு-ரை: அணியும் எல்லாவற்றினும் அழகு மிக்கது, திருநீறு. ஆதலின் 'சுந்தர நீறு' என்றார். நிதி= நவமணி அவையாவன: முத்து, வைரம், பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், வைடூரியம், நீலம், புட்பராகம். ஆழி = சக்கரம். திருமாலை இறைவன் மனைவியாகக் கொண்டு சாத்தரைப் பயந்தமை காண்க. தரம்= நிலை, வகை. 4. காசணி மின்களு லக்கையெல்லாங் காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய வடியவர்க ணின்று நிலாவுக வென்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே . காசு அணிமின்கள், உலக்கை எல்லாம், காம்பு அணிமின்கள், கறை உரலை; ' நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தித் தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடிப் பாச வினையைப் பறித்து நின்று, பாடி, பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! kaasu aNiminkaL ulakkai ellaam kaampu aNiminkaL kaRai uralai neesam udaiya adiyavarkaL ninRu nilaavuka enRu vaazththi theesam ellaam pukaznthu aadumkassi thirueekampan sempon kooyilpaadi paasa vinaiyai paRiththu ninRu paadi poRsuNNam idiththum naamee பொ-ரை: உலக்கைகளுக்கு எல்லாம் பொன் வடம் கட்டுங்கள். கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட கருமை நிறம் உடைய உரல்களுக்குப் பட்டுச் சீலையைச் சுற்றுங்கள். இறைவன் மீது அன்பு உடைய அடியவர்கள் எப்போதும் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துப் பாடுங்கள். நாடெல்லாம் வியந்து போற்றுகின்ற காஞ்சி நகரில் உள்ள திருவேகாம்பர நாதர் வீற்றிருக்கும் செம்பொன்னால் ஆன திருக்கோயிலைப் பாடி, தளையாகிய இருவினைகளை நீக்கி நின்று திருவருளைப் பாடி, பொன் போன்ற வாசனைப் பொடியை நாம் இடிப்போமாக. Oh maids, dress up the mortar with silken fabric and the pestle with garlands of jewels. True devotees shower blessings of eternity. And chant the glories of the golden temple at Kaancheepuram. In this way let us root out the pernicious afflictions of bondage. Let us pound the golden herbs for the bath waters of Lord Civa. கு-ரை: காசு = பொன், மணி . காம்பு = பட்டுத்துணி; கறை= நிறம். கறை என்பதற்கே உரல் என்ற பொருளும் உண்டு. கரையுரல் என்பாரும் உளர். பாசவினை- வினைப்பாசம் என மாற்றுக. 'பறித்து' என்பதற்குப் பறிக்க என்றும் பொருள் கொள்ளலாம். 5. அறுகெடுப் பாரய னும்மரியு மன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லா நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோஞ் செறிவுடை மும்மதி லெய்தவில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர் நறு முறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில்பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்; செறிவு உடை மும்-மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம்பொன் கோயில்பாடி முறுவல் செவ் வாயினீர் ! முக்கண் அப்பற்கு, ஆடப், பொற் சுண்ணம் இடித்தும் நாமே ! aRuku eduppaar ayanum ariyum anRi maRRu inthiranoodu amarar naRumuRu theevar kaNangkaL ellam nammil pinpu allathu, edukka oddoom seRivudai mummathil eytha villi thirueekampan sempon kooyilpaadi muRuval sev vaayiniir mukkaN appaRku aada poRsuNNam idiththum naamee. பொ-ரை: அழகான பெண்கள் கூறுவதாக அமைந்துள்ளது இந்தத் திருப்பாட்டு. (ஒருவரை மங்கல நீராட்டுவதற்கு முன்னர் அறுகம்புல்லை நெய்யில் தோய்த்து எடுத்து, அதனை வாசனைப் பொடியில் திமிர்த்து நீராட்டுதல் மரபு). அவ்வாறு செய்வதற்கு அறுகம்புல்லை எடுத்துக்கொண்டு திருமாலும், பிரமனும், இந்திரனும், ஏனைய வானுலகத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நான்தான் முந்தி, நான்தான் முந்தி என்று முணுமுணுத்துக் கொண்டு நமக்கு முன்னதாகச் செல்லமுற்பட்டால் அவர்கள் நமக்கு முன்னதாகச் செல்ல ஒட்டாது தடுத்து நமக்குப் பின்னரே அவர்கள் செல்லத் தகுதி உடையவர்கள் என்பதை நிலைநாட்டும் வல்லமை எங்களுக்கு உண்டு. நன்றாகச் செல்லுகின்ற முப்புரத்தை எய்து எரித்த வில்லுடைய திருவேகம்பநாதனது செம்பொன் திருக்கோயிலைப் பாடி, முக்கண் உடைய நம் தந்தை திருமுழுக்காடுதற்கு நறுமணம் வீசுகின்ற வாசனைப் பொடி இடிப்போமாக. Besides Thirumal and Brahma, all other gods and Indra, line up in a row to pluck holy grass (Kusa grass) for the adornment of Lord Civa. But we will let them do this, only after we ourselves have plucked the same for our Lord, the Lord of Kaancheepuram who destroyed the three robust forts ( of the recalcitrant asuras) with mount Meru as a bow on hand! Let us sing on the golden temple at Kaancheepuram, Oh smiling maids, and pound the golden herbs for the bath waters of Lord Civa. கு-ரை: அறுகு= மங்கல விளக்கு. சிங்கம் முதலிய எழுதிய கொடி என்றும் கூறுப . அறுகம்புல் என்னின் அதுவும் ஒரு மங்கலப் பொருளாக எடுக்கப் படுதல் வேண்டும். நறுமுறு= முறுமுறு. முப்புரமும் சேர்ந்தே சென்றன என்று கேட்கப்படுதலின், 'செறிவுடை' என்றார். முறுவல் - நகை, பல், ஆட= முழுக. 6. உலக்கை பலவோச்சு வார்பெரிய ருலகமெ லாமுரல் போதாதென்றே கலக்க வடியவர் வந்து நின்றார் காண வுலகங்கள் போதாதென்றே நலக்க வடியோமை யாண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்துபொற் சுண்ண மிடித்துநாமே உலக்கை பல ஓச்சுவார் பெரியர், உலகம் எலாம் உரல்போதாது என்றே; கலக்க அடியவர் வந்து நின்றார், காண உலகங்கள் போதாது என்றே; நலக்க, அடியோமை ஆண்டு கொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி, மகிழ்ந்து, பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! ulakkai pala oossuvaar periyar ulakam elaam ural poothaathu enRee kalakka adiyavar vanthu ninRaar kaaNa ulakangkaL poothaathu enRee nalakka adiyoomai aaNdu koNdu naaN malar paathangkaL sudaththantha malaikku marukanai paadi paadi makiznthu poRsuNNam idiththum naamee பொ-ரை: சிவனடியார்களில் பலர், அவன் நீராடுவதற்குப் பயன்படுத்தும் வாசனைப் பொடி இடிப்பதற்கு உலக்கை கொண்டு கூடுகின்றனர். உலகம் முழுவதிலும் உரல்களை வைத்தாலும் இடம் போதவில்லை. இந்த நிகழ்ச்சியைக் காணவும், தங்களால் இயன்ற மற்ற உதவிகளைச் செய்யவும் மற்றும் அடியார்கள் பலர் வருகின்றனர். அவர்கள் நிற்பதற்கு இந்த உலகத்தில் இடம் போதவில்லை. அடியார்கள் யாவருக்கும் நன்மை உண்டாகும் பொருட்டு அவன் நம்மை ஆட்கொண்டருளினான். அன்று அலர்ந்த புதுமலர் போன்ற அவனது திருவடிகளை நமது சென்னி மேல் சூடும் பொருட்டுத் தந்தான். அத்தன்மையனான இமயமலை அரசன் மருமகனாகிய சிவபிரானை இடைவிடாது பாடி மகிழ்ந்து கொண்டே இந்தப் பொன் போன்ற நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போமாக. Noble folks, considering the vastness of all the worlds, that serve as mortar, take up countless pestles. As the worlds are numberless too, devotees throng to merge here together. The Lord took all genuine devotees under Him and made them pay obeisance to His fresh flower bedecked Feet. Singing and singing on the consort of the mountain King's daughter, come ye forth with gladness at heart and pound the golden herbs for the bath waters of Lord Civa. கு-ரை: ஓச்சுதல் = தூண்டுதல். நலக்க= நன்மையுண்டாக. இமயமலை அரசன் புதல்வியை இறைவன் மணந்தமையால், 'மலைக்கு மருகன்' என்றார். 'மலை' மலையரசனுக்கு ஆகுபெயர். 7. சூடகந் தோள்வளை யார்ப்பவார்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்பவார்ப்ப நாமு மவர்தம்மை யார்ப்பவார்ப்பப் பாடக மெல்லடி யார்க்குமங்கை பங்கின னெங்கள் பராபரனுக் காடக மாமலை யன்னகோவுக் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. சூடகம், தோள்வளை, ஆர்ப்ப - ஆர்ப்பத் தொண்டர்-குழாம் எழுந்து ஆர்ப்ப -ஆர்ப்ப, நாடவர் நம் தம்மை ஆர்ப்ப- ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப- ஆர்ப்பப் பாடகம் மெல்அடி ஆர்க்கும் மங்கை - பங்கினன், எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்ன கோவுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே! suudakam thooLvaLai aarppa aarppa thoNdarkuzaam ezunthu aarppa aarppa naadavar nam thammai aarppa aarppa naamum avarthammai aarppa aarppa paadakam meladi yaarkkum mangkai pangkinan engkaL paraaparanukku aadaka maamalai anna koovukku aada poRsuNNam idiththum naamee பொ-ரை: சுண்ணம் இடிக்கும் பெண்கள் ஒருவருக்கொருவர் பேசுகின்ற திறத்தையும் அப்போது எழுகின்ற பலவிதமான ஒலிகளையும் படம் பிடித்துக் காட்டும் திருப்பாட்டு இது. பெண்கள் சுண்ணம் இடிக்கும் பொழுது அவர்கள் கைகளில் அணிந்துள்ள சூடகம் என்ற வளையல்களும், தோள்வளையல்களும் ஒலிக்கின்றன. அடியார் கூட்டம் வீதி வழியே சென்றடையும் பொழுது அரகர என்று அடிக்கடி முழங்கிக் கொண்டே செல்லுகின்றனர். நம் இயல்பினை அறிந்துகொள்ள முடியாத அடியார் அல்லாத உலகத்தவர்கள் நம்மை இகழ்ச்சி பேசிச் சிரிக்கின்றனர். அவர்கள் அறியாமையை எண்ணி நாமும் ஏளனம் செய்வோம். உமாதேவியின் மென்மையான பாதங்களில் அணியப்பட்ட பாடகம் என்ற கால் அணிகள் ஒலிக்கின்றன. அவளைத் தனது இடப்பாகத்தில் உடையவனும் எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகியவன் சிவபெருமான். அவனது திருமுழுக்கின் பொருட்டுத் தேவைப்படும் பொன் போலும் நிறமுடைய வாசனைப் பொடியை அவரது புகழைப் பாடிக்கொண்டே இடிப்போமாக. Maids! Let us pound the golden herbs for the bath waters of Lord Civa- our mighty Lord of the universe who has on His left, His consort of soft Feet with tingling jewels. This we do even as the bangles on our hands and shoulders reverberate in harmony, as congregations of devotees chant in unison, as the society shouts at us in unison and we in turn shout back at them in unison. கு-ரை : சூடகம்= கைவளை. தோள்வளை = புயவளை, ஆர்த்தல் = ஒலித்தல், ஆரவாரம் செய்தல், பேசி நகையாடல், பாடகம்= காலணி வகையிலொன்று . பராபரம் - மேலான கடவுள், பரம், அபரம் என்னும் இரண்டிற்கும் முதல்வன் என்றலும் ஒன்று. பொன் மேனியன் ஆதலின், 'ஆடக மாமலையன்ன' என்றார். 8. வாட்டடங் கண்மட மங்கைநல்லீர் வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. வாள் தடம்கண் மட மங்கை நல்லீர் ! வரிவளை ஆர்ப்ப, வண்கொங்கை பொங்கத் தோள் திரு முண்டம் துதைந்து இலங்கச் 'சோத்து எம்பிரான் ! ' என்று சொல்லிச்சொல்லி நாள் கொண்ட நாண் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆடப், பொற்சுண்ணம் இடித்தும் நாமே! vaaLthadangkaN madamangkai nalliir varivaLai aarppa vaNkongkai pongka thooLthiru muNdam thuthainthu ilangka sooththam piraan enRu sollissolli naaLkoNda naaN malar paatham kaaddi naayin kadaippadda nammai immai aadkoNda vaNNangkaL paadippaadi aada poRsuNNam idiththum naamee பொ-ரை : வாள் போன்ற நீண்ட கண்களையும் இளமையையும் உடைய அழகிய மங்கைப் பருவப் பெண்களே! வரிகளை உடைய உங்கள் கை வளையல்கள் ஒலிக்கவும், வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோளிலும், நெற்றியிலும் திருநீறு பிரகாசிக்கவும், எம் பெருமானே உனக்கு வணக்கம் என்று பலகால் சொல்லி மகிழ்வோம். சிவபெருமான் அப்பொழுது பறித்த அன்று அலர்ந்த மலர்கள் சூட்டப்பெற்ற தனது திருவடிகளைக் காட்டி நாயினும் கீழ்ப்பட்ட நம்மை இப்பிறவியிலே ஆண்டு கொண்டருளிய சிறப்புக்களை ஓயாமல் பாடிக் கொண்டே அவன் நீராடுவதற்கான பொன் போன்ற நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போமாக . Ye young maids, with long bright eyes, let us pound the golden mix for the bath waters of our Lord, singing and singing on the manner He took us vassal in our present birth, we that are meaner than curs. And He showed us His fresh stemmed lotus like-Feet. This we do, to the reverberations of our elegant bangles, paying obeisance, calling to Him with shining white ash on our physical frame. கு-ரை: வாள்= ஒளி, வாள்போலும் என்று பொருள் கோடலும் உண்டு. முண்டம் = நெற்றி, சோத்து= சோத்தம், இழிந்தோர் செய்யும் அஞ்சலி, நாள் = புதுமை, 'மலர் நாண் பாதம்' என மாற்றுக. அல்லது புதிதாய் உண்டான கொடியில் 'அன்றலர்ந்த மலர்' என்றும் பொருள் கொள்ளலாம். வண்ணங்கள்= வகைகள், சிறப்புக்கள். 9. வையக மெல்லா முரலதாக மாமேரு வென்னு முலக்கைநாட்டி மெய்யெனு மஞ்ச ணிறையவட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச் செம்பொ னுலக்கைவ லக்கைபற்றி யைய னணிதில்லை வாணனுக்கே யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே வையகம் எல்லாம் உரல் - அது ஆக, மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்எனும் மஞ்சள் நிறைய அட்டி: மேதகு தென்னன், பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன், அணி தில்லைவாண னுக்கே, ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! vaiyakam ellaam uralathaaka maameeru ennum ulakkai naaddi meyenum manjsaL niRaiya addi meethaku thennan perunthuRaiyaan seyya thiruvadi paadippaadi sempon ulakkai valakkaipaRRi aiyan aNi thillai vaaNanukkee aada poRsuNNam idiththum naamee பொ-ரை: இவ்வுலகம் முழுதும் உரலாகக் கொண்டு, பெரிய மேரு மலையாகிய உலக்கையை உரல் நடுவில் நாட்டி, உண்மை என்னும் மஞ்சளை உரலில் நிரம்பப் போட்டு, மேன்மை மிக்க அழகனாகிய திருப்பெருந்துறை உடையானது செவ்விய திருவடிகளை இடைவிடாது பாடி, செம்பொன்னால் ஆகிய உலக்கையை வலது கையில் கொண்டு, தலைவனாகிய அழகிய தில்லை நாதனுக்குத் திருமுழுக்கிட பொற் சுண்ணம் இடிப்போமாக. Taking the whole world as mortar, and the great mount Meru as pestle, smearing turmeric profusely on our physical frames, let us sing on the holy Feet of the exalted Lord of southern Perunthurai. Singing and singing and handling the golden pestle on our right hands, let us pound the golden mix for the bath waters of the Lord of sacred Thillai. கு-ரை: அட்டி= போட்டு, இட்டு. அட்டுதல் = வார்த்தல்; இடுதல். மேருவாகிய உலக்கையை நடுவிலும் செம்பொன் உலக்கையைப் பக்கத்திலும் நாட்டி இடித்தல் கூறப்பட்டது. மங்கலமான பொருள், மெய்யே என்பதும், அஃதே இறைவனுக்குகந்த திருமஞ்சனப் பொருளென்பதும் குறிக்கப்பட்டது. 10. முத்தணி கொங்கைக ளாடவாட மொய்குழல் வண்டின மாடவாடச் சித்தஞ் சிவனொடு மாடவாடச் செங்கயற் கண்பனி யாடவாடப் பித்தெம் பிரானொடு மாடவாடப் பிறவி பிறரொடு மாடவாட வத்தன் கருணையோ டாடவாட வாடப்பொற் சுண்ண மிடித்து நாமே. முத்து அணி கொங்கைகள் ஆட-ஆட மொய் குழல் வண்டு இனம் ஆட-ஆட, சித்தம் சிவனொடும் ஆட-ஆடச், செம்-கயல் கண் பனி ஆட-ஆடப், பித்து எம்பிரானொடும் ஆட-ஆடப், பிறவி பிறரொடும் ஆட-ஆட, அத்தன் கருணையொடு ஆட-ஆட, ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! muthuaNi kongkaikaL aada aada moykuzal vaNdinam aada aada siththam sivanodum aada aada sengkayal kaNpani aada aada piththu empiraanodum aada aada piRavi piRarodum aada aada aththan karuNaiyoodu aada aada aada poRsuNNam idiththum naamee. பொ-ரை : முத்துமாலை அணிந்த நகில்கள் அசைந்தாடவும், வண்டு கூட்டம் நெருங்கிய கூந்தலானது அசைந்தாடவும், மனமானது சிவபிரானிடத்து இடைவிடாது பயிலவும், மன உருக்கத்தினால் செவ்விய கயல் மீன் போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீரானது அசைந்து இலங்கவும், எம்பெருமானிடத்தில் பேரன்பு மென்மேற் பெருகவும், அன்பர் அல்லாதவர் பிறவிப்பிணியில் அழுந்திக் கிடக்கவும், எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவருளின் வழி நாம் என்றும் பழகப் பழக இறைவன் முழுக்கியற்ற பொற் சுண்ணம் இடிப்போமாக. Let our pearl bedecked bosoms dance and dance. Let the honey bees swarming around Him dance and dance. Let our hearts dance and dance with Lord Civa. Let our beauteous fish like eyes dance and dance, shedding tears of joy. Let us all dance and dance in ecstasy with our Lord. Let future birth go away from us and affect only those that are not with us. Thus with our Sire dancing and dancing in grace, let us, Oh maids, pound the golden mix for the bath waters of our Lord. கு-ரை: 'ஆட, ஆட', என்பது, தொடர்ந்த செயலைக் குறிக்கப் பல பொருளில் வந்தது. 11. மாடு நகைவா ணிலாவெறிப்ப வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமி னந்தம்மை யாண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமி னெம்பெரு மானைத்தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி யாடுமி னம்பலத் தாடினானுக் காடப் பொற்சுண்ண மிடித்துநாமே மாடு, நகைவாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம்பவளம் துடிப்பப் பாடுமின், நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்ட வண்ணமும்; பாடிப் பாடித் தேடுமின், எம் பெருமானைத் தேடிச் சித்தம் களிப்பத் திகைத்துத், தேறி ஆடுமின்: அம்பலத்து ஆடினானுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! maadu nakaivaaL nilaaeRippa vaaythiRanthu ampavaLam thudippa paadumin namthammai aaNdavaaRum paNikoNda vaNNamum paadippaadi theedumin emperumaanai theedi siththam kaLippa thikaiththu theeRi aadumin ampalaththu aadinaanukku aada poRsuNNam idiththum naamee பொ-ரை: நங்கையரே! உங்கள் வாயைத் திறந்து நீங்கள் பாடும் போது உங்கள் வெள்ளை வெளேர் என்ற பற்கள் சந்திரனின் கதிர்களைப் போன்று ஒளியை வீசுகின்றன. பவளத்தின் நிறத்தை ஒத்த உங்கள் அழகிய உதடுகள் துடிக்கின்றன . நம்மை இறைவன் ஆண்டுகொண்டருளிய விதத்தைப் பாடுங்கள். நம்மைத் தொண்டர்களாகக் கொண்ட விதத்தையும் இடைவிடாது பாடி, எம் பிரானைத் தேடுங்கள். தேடித் தெளிந்து மனமகிழ ஆடுங்கள். ஆடித் தில்லை அம்பலத்திலே நடனமாடிய பெருமான் திருமுழுக்காடப் பொற்கண்ணம் இடிப்போமாக. Sing ye, Oh maids, with your pearl-like lips vibrating and teeth glistening in your mouths, on how He took us in and got us in servitude to Him. And so singing go after Him and dance with gladness at heart, with conviction, pounding the golden mix for the bath waters of Him that dances at the public hall in Thillai. கு-ரை: மாடு= மருங்கு, பக்கம். பவளம்- இதழுக்கு ஆகுபெயர். 'தேடித் திகைத்தும் தேறிச் சித்தங்களிப்ப ஆடுமின்' என உரைநடை கொள்க. ஈண்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், ஒருவாறு சுட்டப்பட்டன. 12. மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்றன்னை யையனை யையர்பி ரானைநம்மை யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோட் பையர வல்குன்ம டந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் - தன்னை ஐயனை, ஐயர்பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர்-தம் பொய்யனை, மெய்யர் மெய்யைப் போது அரிக் கண்-இணை,பொன் தொடித்தோள் பை அரவு அல்குல், மடந்தை-நல்லீர் ! பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! mai amar kaNdanai vaananaadar marunthinai maaNikka kuuththanthannai aiyanai aiyarpiraanai nammai akappaduththu aadkoNdu arumaikaaddum poyyartham poyyanai meyyar meyyai poothu ari kaN iNai pon thodiththooL paiaravu alkul madanthai nalliir paadi poRsuNNam idiththum naamee பொ-ரை: செந்தாமரை மலர் போன்ற, செவ்வரி படர்ந்த இரு கண்களையும், பொற்கங்கணம் அணிந்த தோள்களையும், பாம்பின் படம் போன்ற அல்குலை முன்பக்கமும் உடைய அழகிய பெண்களே! நஞ்சின் கருமை பொருந்திய திருக்கழுத்து உடையவன், வானவர்க்கு அமுதம் ஆனவன், மாணிக்கம் போலும் சிவந்த மேனியனாய்த் திருக்கூத்து ஆடுகின்றான். எல்லாவற்றிற்கும் முதல்வனாய்த் திகழ்கின்றான். தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் உள்ளவன் நம் சிவபெருமான். அவன் நம்மைத் தன்வயப்படுத்தி ஆண்டருளினான். தனது அரிய தன்மையை நமக்குப் புலப்படுத்தினான். பொய்யர்களுக்குப் (அன்பில்லாதவர்களுக்குப்) பொய்மையானவனும் மெய்மையானவர்களுக்கு (அன்புடையவர்களுக்கு) மெய்மையானவனும் ஆகிய இறைவனைப் பாடித் திருப்பொற்சுண்ணம் இடிப்போமாக! Ye noble maids, gifted with lotus-like eyes, shrunken waists, shoulder bedecked with gold ornaments, sing on the Lord and pound the golden mix for the bath waters of Lord Civa - Our Lord with black throat, an ambrosia for heaven dwellers, dancer par excellence, our Chief, Chief of all chiefs - the one that took us in all worthy servitors and revealed His uniqueness, the reality for all true seekers but elusive to the false ones. கு-ரை: மை = கருப்பு, இருள். மாணிக்கக் கூத்தனை= மாணிக்கம் போலும் கூத்தனை. அகம் = தன்னுள், அரி= செவ்விய ரேகை. அது உத்தமப் பெண்டிரிலக்கணம். இணை= இரண்டு, ஒன்றிற்கொன்று ஒப்பான என்றும் பொருள் கொள்ளலாம். தொடி= கங்கணம். 'பையரவு' அரவுப்பை என மாற்றிப் பொருள் கொள்ளுக, பை = படம். 13. மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீ ரென்னுடை யாரமு தெங்களப்ப னெம்பெரு மானிம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன்ம கன்றகப்பன் றமையனெம் மையன் றாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. மின் இடைச் செம் துவர் வாய்க் கரும் கண், வெள்-நகைப் பண் அமர்மென் மொழியீர் ! என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை-நல்லீர்! பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே ! minidai senthuvar vaay karungkaN veLnakai paNamar menmoziyiir ennudai aar amuthu engkaL appan emperumaan imavaan makadku thannudai keeLvan makan thakappan thamaiyan emaiyan thaaLkaL paadi ponnudai puuNmulai mangkai nalliir pon thirussuNNam idiththum naamee பொ-ரை: மின்னல் போன்ற இடையினையும், பவளம் போன்ற வாயினையும் கருமையான கண்களையும், வெண்மையான பற்களையும் இசை பொருந்திய மென்மையான சொல்லினையும் உடைய நங்கையரே ! என்னை உடையவனாகிய கிடைத்தற்கரிய அமுதம் போன்ற நம் தந்தையாகிய எம்பெருமான் இமயமலை அரசன் மகளாகிய உமையம்மைக்கு, அவளை உடைய கணவனும் ஆவான் . மகனும் ஆவான். தகப்பனுமாவான். தமையனும் ஆவான். ( அத்தகைய) எம் தலைவனது திருவடிகளைப் பாடி, பொன் ஆபரணம் அணிந்த நகிலுடைய பெண்களே ! நாம் பொற்சுண்ணம் இடிப்போமாக. உலக மாதாவாகிய பார்வதி தேவியை மாணிக்கவாசகர் சிவன் அவளுக்குக் கணவனாகவும், மகனாகவும், தகப்பனாகவும், தமையனாகவும் உள்ள சிவபேத சத்திபேதங்களின் இயல்பை சிவஞானபோத மாபாடியத்திலும், சிவஞான சித்தியிலும் தெளியக் காண்க. அத்துடன் குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த சிதம்பரச் செய்யுட்கோவையில் உள்ள பாட்டையும் கண்டு களிக்க. " கனகமார் கவின் செய் மன்றில் அனக நாடற்கு எம் அன்னை மனைவி, தாய், தங்கை, மகள்" (33) Oh maids,of light waist,red lips,black eyes,shining teeth and melodious voice! Sing on our Chief- the one that is at once an elder brother to us, and is (also) a father and a son , one who is consort of the daughter of the king of mountains. The one that is verily our rare ambrosia, our noble Lord.Singing on Him,Oh gold bedecked fair maids,let us pound the golden mix for the bath waters of Lord Civa. Note: The good Lord functions in various ways and takes on the role of relatives and friends and guides the soul in unmanifest as also manifest forms- vide the Puraanaas. கு-ரை : ஆணும் பெண்ணுமாக உயிர்களைப் படைத்தற் பொருட்டு, இறைவன் சிவமும் சத்தியும் ஆன காலை சத்திக்குச் சிவன், கணவனாவன். சத்தியினின்றே சதாசிவ தத்துவம் தோன்றிய காரணம் பற்றி சதாசிவமூர்த்தி, சத்தியின் மகனாவன். சிவத்தினின்று சத்தி பிறந்ததனால், சிவன், சத்திக்குத் தகப்பனானவன். சிவ தத்துவமும், சத்தி தத்துவமும், சுத்தமாயையினின்று, முறையே இறைவனது ஞான சத்தி அதிட்டித்தலாலும், அதன் பின்னரே கிரியாசத்தி அதிட்டித்தலாலும், முன் பின்னாக உளதாகிய காலை, சத்திக்குச் சிவம் தமையனென்று கூற இடமுண்டாதல் காண்க. 14. சங்கம ரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை யிரைப்ப வராவிரைக்குங் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. சங்கம் அரற்றச் சிலம்பு ஒலிப்பத் தாழ்குழல் சூழ்தரும் மாலை ஆடச் செம் கனிவாய் இதழும் துடிப்பச் சேயிழையீர் சிவலோகம்பாடிக் கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடைமுடியான் கழற்கே பொங்கிய காதலின் கொங்கை பொங்கப் பொன் திருச் சுண்ணம் இடித்தும் நாமே ! sangkam araRRa silampu olippa thaazkuzal suuztharum maalai aada sengkani vaay ithazum thudippa seeyizaiyiir sivalookam paadi kangkai iraippa araa iraikkum kaRRai sadaimudiyaan kazaRkee pongkiya kaathalin kongkai pongka pon thirusuNNam idiththum naamee பொ-ரை: செம்மையான நகையணிந்த பெண்களே ! உங்கள் கைகளில் அணிந்துள்ள சங்கினால் ஆகிய வளையல்கள் ஒலிக்கின்றன. காலில் அணிந்துள்ள சதங்கைகள் ஒலிக்கின்றன. பின்னே நீண்டு தாழ்கின்ற கூந்தலில் சுற்றிய மாலை சுழலுகின்றன. செவ்விய கொவ்வைக்கனி போன்ற வாயும் உதடுகளும் துடிக்கின்றன. சிவலோகத்தின் சிறப்பைப் பாடுங்கள். சிவபெருமானது சடாமுடியில் உள்ள கங்கையின் பேரிரைச்சலுக்கு அஞ்சி அருகில் குடிகொண்டிருக்கும் பாம்பானது சீறிக்கொண்டு ஓசை எழுப்புகின்றது. கங்கையையும் பாம்பையும் தனது சடாபாரத்தில் கொண்டுள்ள எம்பெருமானிடத்தில் பேரன்பு கொண்டதன் விளைவாக உங்கள் தனங்கள் பூரித்துத் தானாகவே பால் சுரக்கின்றன. இந்நிலையில் நாம் இறைவன் நீராட்டலுக்குத் தேவைப்படும் பொன் போன்ற நிறமுடைய வாசனைப் பொடி இடிப்போமாக. To the jingling of our conch-shell bangles and the tingling of our anklets and the swinging of garlands encircling on our long tresses, Oh splendidly ornamented maids, sing ye with your red fruit-like lips on the glories of Civa Loka-on the jewel bedecked Feet of our Lord of matted locks. This we do with great devotion, even as we pound the holy golden mix for the bath waters of Lord Civa. கு-ரை: சங்கம், வளைக்கு ஆகுபெயர். கங்கை யொலியை இடிமுழக்கம் என்று அஞ்சிப் பாம்பு இரைகின்றது என்பது கருத்து. கற்றை = தொகுதி . காதல் மிகுந்த காலை கொங்கையிற் பால்சுரத்தல் 'சுரந்த திருமுலைக்கே' என்ற பாட்டால் விளங்கும். 15. ஞானக் கரும்பின் றெளியைப்பாகை நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச் சித்தம்பு குந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானற் றடங்கண்ம டந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. ஞானக் கரும்பின் தெளியைப் பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத் தேனைப், பழச் சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனைப் பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத்தழும்பு ஏற வாழ்த்திப் பானல் தடம் கண் மடந்தை-நல்லீர் ! பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! njaana karumpin theLiyai paakai naadaRku ariya nalaththai nanthaa theenai pazassuvai aayinaanai siththam pukunthu thiththikka valla koonai piRappu aRuththu aaNdukoNda kuuththanai naaththazumpu eeRa vaazththi paanal thadangkaN madanthai nalliir paadi poRsuNNam idiththum naamee பொ-ரை: கருங்குவளை மலர் போன்ற நீண்ட அழகிய கண்களை உடைய இளம் பெண்களே ! சிவஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவு போன்றவனும், அதன் பாகு போன்றவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், என்றும் கெடாத தேன் போன்றவனும், வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளின் சுவை போன்றவனும் , எமது உள்ளத்தில் புகுந்து இனிமை தரவல்ல தலைவனும், நமது பிறவித் தளையை அறுத்து, ஆண்டு கொண்டருளிய கூத்தப் பெருமானுமாகிய சிவபெருமானை, நாவில் தழும்பு உண்டாகும்படித் துதித்துப் பாடிப் பொன் போன்ற நிறத்தைக் கொண்ட வாசனைப் பொடியை இடிப்போமாக. The very essence of the sugarcane of pure knowledge, verily a syrup so sweet, goodness rare to reach, honey that is ever so fresh, He that is manifest in the sweetness of fruit, the Chief, that enters our minds, the dancing Lord that ended our birth cycles and took us vassal! On Him let us sing ye noble maids, and pound the golden mix for his bath waters - singing greetings that leave our tongue hardened with the routine. கு-ரை: சிவஞானம் இறைவனது அறிவு . அவனறிவைப் பெறுதலின் பயன் அவனே யாதலின், அவனை ஞானமாகிய கரும்பின் பயனாகிய தெளிவு என்றார். ஞானத்தின் ஞானமே தெளிவென்ப. அத்தெளிவால் நுகரப்படும் இன்பமும் அவனே ஆதலின், 'பாகை' என்றார். சடப்பொருளாய தேன் நாளடைவிற் கெடுதல் அடையக்கூடும். ஒரு நாளுங்கெடாத மெய்ப்பொருளாகிய இறைவனை 'நந்தாத் தேன்' என்றார். 16. ஆவகை நாமும்வந்தன் பர்தம்மோ டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேற் றேவர்க னாவிலுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவக மேந்தியவெல் கொடியான் சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவக னாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. ஆவகை, நாமும் வந்து, அன்பர் - தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி, விண்மேல் தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான், சிவபெருமான், புரம் செற்ற கொற்றச் சேவகன், நாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே ! aavakai naamum vanthu anparthammoodu aadseyum vaNNangkaL paadi viNmeel theevar kanaavilum kaNdu aRiyaa semmalar paathangkaL kaaddum selva seevakam eenthiya vel kodiyaan siva perumaan puram seRRa koRRa seevakan naamangkaL paadi paadi sempon seysuNNam idiththum naamee பொ-ரை: நாமும் நம் மெய்யன்பர்களோடு கூடி வந்து, அனைவரும் உய்யும் வகையில் பணி செய்கின்ற வகைகளைப் பாடுவோம். வானுலகத்திலுள்ள தேவர்கள் கனவிலும் காணமுடியாத செவ்விய, திருவடிக் கமலங்களை நமக்குக் காட்டுகின்றான். அவன் சிறப்புடைய காளை உரு எழுதிய வெற்றிக் கொடி உடையவன். அவன் திரிபுரம் எரித்த வெற்றி வீரன். அத்தன்மையான சிவபெருமானது திருப்பெயர்களை, இடைவிடாது பாடிக்கொண்டே செம்பொன் போல ஒளி செய்யும் பொற்சுண்ணம் இடிப்போமாக. Let us sing on the glories of our Lord, on how He takes us under Him into the congregation of devotees. Whereas heaven dwelling gods, even in their dreams, do not have access to His gracious flower-like Feet, He readily reveals them to us. The Lord of supreme valour holding aloft the banner of victory over the three forts (Thripuraas)! Unto Him let us sing and sing glories, pounding the golden mix for His bath waters. கு-ரை: சே = காளை; செல்வம், இறைவன் ஊர்தியாகிய சிறப்பு. சே, அகம் ஏந்திய வெல்கொடி எனப்பிரிக்க. 17. தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்சடை மேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடிவ லக்கையேந்து மூனக மாமழுச் சூலம்பாடி யும்பரு மிம்பரு முய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வான்-அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால்விடை பாடி, வலக்கை ஏந்தும் ஊன் அகம் மா மழுச் சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடிப், பொன் திருச் சுண்ணம் இடித்தும் நாமே ! theen aka maamalar konRai paadi sivapuram paadi thiru sadaimeel vaanaka maamathi piLLai paadi maalvidai paadi valakkai eenthum uunakam maamazu suulam paadi umparum imparum uyya anRu poonakam aaka nanjsu uNdal paadi pon thiru suNNam idiththum naamee பொ-ரை: தேன் பொருந்திய, பெருமை மிகுந்த கொன்றை மாலையைப் பாடுவோம். சிவனது திருநகரைப் பாடுவோம். அழகிய சடைமேல் வைக்கப்பட்ட, வானத்திலே விளங்குகின்ற சிறந்த இளம் பிறையைப் பாடுவோம். திருமாலாகிய இடப ஊர்தியைப் பாடுவோம். இறைவன் வலக்கரத்தில் கொண்டுள்ள பகைவரின் தசை கொண்ட மழுவையும் முத்தலை வேலையும் பாடுவோம். மேல் உலகத்தவரும், இவ்வுலகத்தவரும் பிழைக்கும்படியாக அந்தக் காலத்திலே, தனது உணவாக நஞ்சினை இறைவன் உண்டதைப் பாடுவோம். இத்தன்மையனான எம்பெருமானாகிய சிவபெருமான் நீராடுவதற்குத் திருப்பொற்சுண்ணம் இடிப்போமாக. Let us pound the golden herbs for the bath waters of Lord Civa, extolling the unique features that adorn His manifest frame- singing on the honey-filled cassia (Konrai) flowers on His head, singing on His abode of Civapuram, singing on the crescent moon on top of His holy matted hair, on His brilliant bull mount, on the flesh-piercing trident on His right hand. And singing again on His Feet of valour in consuming poison in order to save all folks here on earth and in the heavens above. Thus singing, let us pound the golden mix. கு-ரை: 'மால்விடை' என்பதற்குப் பெரிய காளை என்று பொருள் கூறுவாரும் உளர். போனகம்= உணவு. அன்று- பழமை குறிக்கும் சொல். 18. அயன்றலை கொண்டுசெண் டாடல்பாடி யருக்க னெயிறுப றித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலா லுதைத்தல் பாடி யியைந்தன முப்புர மெய்தல்பாடி யேழை யடியோமை யாண்டு கொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ண மிடித்துநாமே அயன் தலை கொண்டு செண்டு-ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயம் தனைக் கொன்று உரி போர்த்தல் பாடிக் காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம் தனைப் பாடி நின்று, ஆடி ஆடி , நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே ! ayanthalai koNdu seNdu aadalpaadi arukkan eyiRu paRiththal paadi kayanthanai konRu uri poorththal paadi kaalanai kaalaal uthaiththal paadi iyainthana muppuram eythal paadi eezai adiyoomai aandu koNda nayanthanai paadi ninRu aadi aadi naathaRku suNNam idiththum naamee பொ-ரை: பிரமனுடைய தலையைக் கிள்ளிப் பந்தாடியதைப் பாடுவோம். தக்கன் வேள்வியில், பகலவன் பல்லைப் பிடுங்கியதைப் பாடுவோம். யானை உருக்கொண்ட கயாசுரனைக் கொன்று அவன் தோலைப் போர்த்துக் கொண்டதைப் பாடுவோம். யமனைத் திருவடியால் உதைத்தமையைப் பாடுவோம். ஒருங்கு சேர்த்து உலவிய திரிபுரங்களை அம்பால் எய்து ஒழித்தமை பாடுவோம். சிற்றறிவுடைய அடியேங்களை ஆட்கொண்டருளிய நன்மையைப் பாடுவோம். இவ்வாறாக அவரது பெருமைகளைப் பாடி, பாடலுக்கு ஏற்ப நின்று, தொடர்ந்து ஆடி ஆடி இறைவனுக்குப் பொற்சுண்ணம் இடிப்போமாக. Let us sing on the many extraordinary feats of our Lord - singing on how he plucked the head of Brahma and threw it away treating it as a ball; how He clenched the teeth of Sun God; singing on how He skinned the demon Kayandharan and wore it as garment, how He kicked off the God of Death (Yamaa); how He destroyed the three forts together. And singing on His benevolence in taking us, we the lowly ones under Him. And dancing and dancing (with glee), let us pound the golden mix for the bath waters of our Lord. கு-ரை: செண்டு = பந்து, கையில் வைத்தெறியும் பந்து போலப் பிரமகபாலத்தைக் கையிற் கொண்டு ஐயம் புகுந்தமையின் அதைச் 'செண்டாடல்' என்றார். கயம் = கயாசுரனுக்கு ஆகுபெயர். 19. வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம்மே லிட்டுநின் றாடு மரவம்பாடி யீசற்குச் சுண்ண மிடித்துநாமே வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடிச் சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாசுணக் கச்சை பாடிக் கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டு நின்று ஆடும் அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே ! vadaamalar konRai maalaipaadi maththamum paadi mathiyum paadi siddarkaL vaazum thenthillai paadi siRRampalaththu engkaL selvam paadi kaddiya maasuNa kassai paadi kangkaNam paadi kaviththa kaimmeel iddu ninRu aadum aravam paadi iisaRku suNNam idiththum naamee. பொ-ரை: சிவபெருமான் தனது தலையில் சூடியுள்ள 'இண்டை' என்று சொல்லப்படும் வட்ட வடிவம் கொண்டுள்ள கொன்றைப்பூவால் ஆகிய மாலையைப் பாடுவோம். இறைவன் தலையில் சூடுகின்ற மற்றொரு பூவாகிய ஊமத்தை மலரைப் பாடுவோம். அவன் தலையில் இருப்பிடம் கொண்டுள்ள பிறைச்சந்திரனைப் பாடுவோம். தெய்வத்தொண்டர்கள் வாழும் அழகிய தில்லை நகரைப் பாடுவோம். அத்தில்லையின்கண் உள்ள ஞானசபையில் நடமாடும் நம் பெரும் செல்வமாகிய பெருமானைப் பாடுவோம். கையில் கட்டிய பாம்பாகிய காப்பினைப் பாடுவோம். மூடிய கையின் மேல் வைக்கப்பட்டுப் படமெடுத்து ஆடுகின்ற பாம்பைப் பாடுவோம். இவ்வாறு பாடியவாறு நம் சிவபெருமானுக்குப் பயன்படும் திருப்பொற் சுண்ணம் இடிப்போமாக . Singing on the rounded cassia garlands, and on the "Oomatham' (Datura) flower and the moon on His head, singing on Thillai where scholars and devotees reside, singing on the Lord of Thillai who is my very treasure, and on the cobra belt on His waist, on the cobra coiled around His wrist, and the cobra on His hand that dances with its hood spread out! Thus singing let us pound the golden mix for the bath waters of our Lord. கு-ரை: 'வட்டம்' என்பதை மலரோடு சேர்த்து, கொன்றையின் வட்ட மலர் மாலை என்பாரும் உளர். மத்தம் = ஊமத்தம்பூ. சிட்டர்= நல்லோர். மாசுணம்= பெரும்பாம்பு. கவித்த = மூடிய. திருப்புறம்பயத்தில் விடந்தீண்டிய ஒருவனை, அவன் மனைவியின் பொருட்டு, உயிர்ப்பித்தற்காக, இறைவன் பாம்பாட்டியாகச் சென்று விடம் நீக்கிய கதை கேட்கப்படுகின்றது. பாம்பாட்டிகள் மூடிய கையின்மேல் அரவம் ஆட்டுதல் மரபு போலும். நச்சர வாட்டிய நம்பன் போற்றி என்பதுங் காண்க. 20. வேதமும் வேள்வியு மாயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச் சோதியு மாயிரு ளாயினார்க்குத் துன்பமு மாயின்ப மாயினார்க்குப் பாதியு மாய்முற்று மாயினார்க்குப் பந்தமு மாய்வீடு மாயினாருக் காதியு மந்தமு மாயினாருக் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே வேதமும், வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும், பொய்ம்மையும், ஆயினார்க்குச் சோதியும் ஆய், இருள் ஆயினார்க்குத் துன்பமும் ஆய், இன்பம் ஆயினார்க்குப் பாதியும் ஆய், முற்றும் ஆயினார்க்குப் பந்தமும் ஆய், வீடும் ஆயினாருக்கு ஆதியும், அந்தமும், ஆயினாருக்கு; ஆடப், பொற்சுண்ணம் இடித்தும் நாமே ! veethamum veeLviyum aayinaarkku meymmaiyum poymmaiyum aayinaarkku soothiyumaay iruL aayinaarkku thunpamumaay inpam aayinaarkku paathiyumaay muRRum aayinaarkku panthamumaay viidum aayinaarukku aathiyum anthamum aayinaarukku aada poRsuNNam idiththum naamee பொ-ரை: வேதங்களும் அவைகளிலே விதிக்கப் பெற்ற வேள்விகளும் ஆனவர் நம் சிவபெருமான். அவர் மெய்யர்க்கு மெய்யாகவும், பொய்யர்க்குப், பொய்யாகவும் இருப்பவர். ஒளியும் இருளும் ஆனவர். துன்பமும் இன்பமும் ஆனவர். பாதியாகிய பெண் உருவமும் மற்றொரு பாதி ஆண் உருவமும் ஆனவர். இருமையும் கலந்த முழுவடிவமும் ஆனவர். உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆவதற்குக் காரணமானவர். உலகிற்கு முதலும் முடிவும் ஆனவர். இவ்வாறாக அவரது தன்மைகளைப் பாடி அவர் திருமுழுக்கிடத் திருப்பொற் சுண்ணம் இடிப்போமாக. Unto the Lord that is verily the vedas and the rituals thereof, unto the Lord that is verily the truth and the untruth, unto the Lord that is effulgence and also darkness, unto the Lord that is at once pain and pleasure, unto the Lord that is past as well as the whole, unto the Lord that is bondage as well as liberation, unto the Lord that stands out as the very first as also the very last, unto Him, Oh maids, Let us pound the golden mix for the bath waters of our Lord. கு-ரை: வேதமும் வேள்வியும் என்பதற்கு அறிவு நூலும், அவற்றுட் கூறப்படும் கொடை முதலிய அறமும் என்றும் பொருள் கொள்ளலாம். ஞான நூலும், வேள்வி கூறுங்கிரியை நூலும் எனப் பொருள் கொள்ளுவதும் உண்டு. 'வேள்வி' என்பது ஊன்பயில் வேள்வி, அல்லது ஐவகை வேள்வியாக இருக்கலாம். எல்லாம் நிகழ இறைவனே காரணன். வேத நூல்வழி பிரமயாகம் ,தேவயாகம், பிதிர்யாகம், மானுடயாகம், பூத யாகம் என வேள்வி ஐவகைப்படும். ஆகமத்தின்படி, செபயாகம், கன்மயாகம், தவ யாகம், தியான யாகம், ஞான யாகம் என வேள்வி ஐவகை. நெருப்பில் இறைவனை வழிபடுதலே 'வேள்வி எனவும், வேதத்தின் முக்கிய கிரியை அக்கினி காரியமாம் எனவும் கொண்டு, வேதநூற் சாரமும் வேள்வி வழிபாடும் ஆனவனென்பதும் உண்டு. அன்பர்க்கு ஒளியாயும் அல்லார்க்கு இருளாயும் இறைவனிருப்பான். நாம் அடையும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் இறைவனே காரணன் என்றது, அவனே இருவினைப் பயன் ஊட்டும் முதல்வனாகலின். பாதியாதல்= உமையாதல் அல்லது ஆண் மூர்த்தமாய்த் தோன்றல், 'பொய்யர் தம்பொய்யை மெய்யர் மெய்யை' என்றது காண்க. பொய்யர்க்குப் பொய்யாகத் தோன்றி, முடிவில் அவர் திருத்தமுற்ற காலை மெய்யாய் விளங்குவர் என்பது கருத்து. THIRUCHCHITRAMBALAM 10. திருக்கோத்தும்பி 10. THIRUK-KOTHTHUMBI ( சிவனோடைக்கியம் ) In perfect peace with the Lord தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் கோத்தும்பியை நோக்கிக் கூறுவதாக அமைந்த பகுதியாதலால் இது 'திருக்கோத்தும்பி' எனப் பெயர் பெற்றது. கோ - அரசு, தும்பி - வண்டு, கோத்தும்பி - அரச வண்டு; ஆண் வண்டு. களவொழுக்கத்தாற் கலந்த தலைவன் ஒருவழித் தணந்தபொழுது தலைவி ஆற்றாமை மிகுதியால் கடலும், கானலும், கழியும், புள்ளும், மரமும் போல்வனவற்றை முன்னிலைப் படுத்துச் சிலசொற்சொல்லி இரங்குவாள், அவ்வழி அவைகளை அவள், 'நீவீர் என்பொருட்டுத் தலைவரிடம் தூது சென்று சில சொல்லி வாருங்கள்' எனக் கூறுதலும் உண்டு. தலைவி சொல்லியவற்றைக் கேட்டலும், அவட்கு அவை ஒன்று செய்தலும் இலவாயினும், தனது ஆற்றாமை ஒருசிறிது நீங்கச் சிறிது ஆற்றியிருத்தலே இக்கூற்றுக்களுக்கெல்லாம் பயனாம். இவை 'மறைந்தவற் காண்டல் ' என்னும் நூற்பாவினுள் (தொல். பொருள், 109) 'காமம் சிறப்பினும்' என்றதனாற் கொள்ளப்படும். எவ்வாறெனின், 'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச், செய்யாமரபின் தொழிற்படுத் தடக்கியும் '(தொல், பொருள், 194) எனப் பின்னர்க் கூறுதலான் என்க, இவற்றை, “சென்றோன் நீடலிற் காமம் மிக்க கழிபடர் கிளவி' (நம்பியகப் பெருமாள், 168) என்றார் பிற்காலத்தார். இக்கூற்றுக்கள் பாடாண் திணையுள்ளும் அமையப் பாடுவராகலின், அம்முறையில் சிவபெருமானைத் தலைவனாகப் பெற்ற தலைவி அப்பெருமான் தன்னை உடன்கொண்டு செல்லாது பிரிந்த பிரிவின்கண் ஆற்றாளாய் வண்டினை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பகுதி. பாடாண்திணையுள் இதுபோல வருங்கூற்றுக்களே பிற்காலத்தில் வண்டுவிடு தூது, கிள்ளைவிடு தூது முதலிய அஃறிணைப் பொருள் பற்றிய தூதுப் பிரபந்தங்களாக வளர்ச்சியுற்றன. 'நெஞ்சுவிடு தூது' என்பதும் இதுவேயாம். வடமொழியுள் மேகவிடு தூதும் காணப்படும். எனவே, அடிகள் அருளிச்செய்த குயிற்பத்து, கிளிப்பத்து (திரு.8 திருத்தசாங்கம்) என்பனவும் இப்பொருள்மேல் வந்தனவாதல் விளங்கும். தேவாரத் திருமுறைகளிலும் இவ்வாறு வந்துள்ளவற்றைக் காண்க. இருபது என்னும் தொகையமைந்த பாடற்றொகுதிகளைக் கோக்கும் போது, எட்டடியான் இயன்ற பாட்டுக்களது தொகுதியை முன்னும், ஆறடியான் இயன்ற பாட்டுக்களது தொகுதியை அதன் பின்னும் வைத்து, நான்கடிகளான் இயன்றவற்றுள் சந்தம் பெற்று வந்ததனை முதற்கண் வைத்து, அதன்பின்னர்ச் சந்தமின்றி வருவனவற்றை வைக்கத் தொடங்கி, காமம் மிக்க கழிபடர் கிளவி சிறப்புடைத் தாகலின், அதனையுடைய இப்பகுதியை முதற்கண் வைத்துக் கோத்தனர் முன்னோர். இது முழுவதும், பெரும்பான்மை வெண்டளையும் சிறுபான்மை கலித்தளையும் பெற்று வந்த நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பாக்களான் இயன்றுள்ளது. இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே எல்லாப் பதிப்புகளிலும் காணப்படுவது. இதன்கண் அடிகள் சிவபெருமானது அருட்குணங்களில் திளைத்தல் ஒன்றே காணப்படுதல் பற்றி இதற்கு "சிவனோடு ஐக்கியம்' எனக் குறிப்புரைத்தனர். This chapter sung by the saint during his stay at the holy city of Thillai that abounds in rich groves and flower plants, has twenty stanzas in all, addressed to the restless honeybee that keeps hopping from flower to flower in search of nectar. Kothumbi, a large sized honey bee, is advised by the saint to seek eternal bliss from Lord Civa, rather than go after temporal pursuits. Hence the title Thiruk-Koththumbi. Though the saint apparently advises the ever busy honey bee humming through attractive glades of variegated plants and trees, the obvious message is for the wandering minds of this 'work-a-day' world, that are lured by transient pleasures, missing out on the golden path towards everlasting bliss that clearly lies ahead, beckoning one and all. Tholkaappiyam (தொல்காப்பியம்) the ancient work of grammar, lists Thumbi as a creature with four senses - sight, smell, touch and taste - alongside crabs, bees and such like genera- vide பொருள் சூத்திரம் confer (சூத்திரம் 575) புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - 572 நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - 573 சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - 574 நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - 575 தும்பி Honey Bee - கோத்தும்பி - A kind of large sized bee. The poet calls it as King bee. This chapter is in the nature of ஆற்றுப்படை (showing the way). ஆற்றுப்படுத்தல், guiding into the right path. Such versification is often found in saivite theological literature, where an advanced devout soul that has received the Blessings of the Lord through prayer and dedication, advises all aspirants to benefit by doing likewise. Poets under the patronage of kings and chieftains, had also furnished clues on many occasions to their erstwhile compatriots on the munificence of their benefactors. Saint Maanikkavaachakar urges all souls to seek benediction by glorifying Lord Civa and by refraining from the passing pleasures of this sublunary existence. 10.1 பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியு நாரணனு நான்மறையு மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ பூஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும், மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் ; கோத்தும்பீ ! puueeRu koonum purantharanum poRpu amainththa naaeeRu selviyum naaraNanum naanmaRaiyum maa eeRu soothiyum vaanavarum thaam aRiyaa see eeRu seevadikkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரச வண்டே! தாமரை மலர் மேல் ஏறித் தங்கும் நான்முகனும் இந்திரனும் எல்லோருடைய நாவிலும் சென்று தங்கிக் கலைகளுக்கெல்லாம் அரசியாக விளங்கும் அழகமைந்த கலைமகளும், திருமாலும், நான்கு வேதங்களும், எருமைக்கடா மீது ஏறி வரும் ஒளி உருவினன் ஆகிய எமன் என்று சொல்லப்படும் உருத்திரனும், தேவர்களும் ஆகிய எல்லோராலும் அறிய ஒண்ணாத இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானது செவ்விய திருவடி மலரையே அடைந்து நீ ரீங்காரம் செய்வாயாக! The effulgent benign Feet of the Lord is beyond the comprehension even of the lotus based Brahma, and Indra, and of the goddesses of learning and wealth, and of Thirumaal. Neither do the four vedas, nor the heaven dwellers understand Him. Unto Him fly thee, Oh King bee, humming tunes of mirth all the way. கு-ரை: சுத்த மாயையில் உள்ளனவாய்ச் சுட்டறிவுக்குக் காரணமாய நான்கு வாக்குகளும் நான்மறை எனப்படும். 'மாவேறு சோதி', என்பதற்குப் பெருமை பொருந்திய சோதிகளாகிய ஞாயிறு , திங்கள், நெருப்பு என்று பொருள் கொள்ளுவாரும் உளர். இறைவன் திருவுருவும் ஊர்தியும் உருத்திரர்க்கு உரிமையால் 'மாவேறு', 'சேவேறு' என இருவர்க்கும் ஊர்தி ஒப்புமை கூறப்பட்டது. 2. நானாரென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை யாண்டிலனேன் மதிமயங்கி யூனா ருடைதலையி லுண்பலிதே ரம்பலவன் றேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்? வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதிமயங்கி ஊன் ஆர் உடை தலையில் உண்பலிதேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்று ஊதாய், கோத்தும்பீ ! naan aar en uLLam aar njaanangkaL aar ennai yaar aRivaar vaanoor piraan ennai aaNdilaneel mathimayangki uun aar udaithalaiyil uNpali theer ampalavan theen aar kamalamee senRuuthaay kooththumpii பொ-ரை: அரச வண்டே ! தேவர் பெருமானாகிய இறைவன் என்னை ஆட்கொண்டு அருளினான். இல்லாவிடில் நான் எத்தன்மையனாக இருப்பேனோ ? என் மனம் எத்தகையதாய் இருக்குமோ? என் அறிவு என்னாமோ ? என்னை உலகில் யார் ஞானியென அறிவார்கள்? அறிவு மயங்கினாற் போல் நடித்து, தசை கலந்த உடைந்த கபாலத்தில் உணவு ஏற்கின்ற சபாநாயகனான, சிவபெருமானின் இன்பத்தேன் பொருந்திய திருவடிக்கமலங்களையே அடைந்து ஊதுவாயாக ! Had not the Lord of all the gods blessed me and taken me under Him, what would I have been, what revelations would really come to my mind, who then would have recognised me? When once Brahma got mired and thought that he is all in all, Lord Civan decided to teach him a lesson; nipped off one of his five heads and utilized the skull to get alms. Unto the sweet lotus like Feet of this, our Lord of Thillai, fly thee, Oh King bee, humming tunes of mirth all the way. கு-ரை: முதலடியில் 'ஆர்' என்பது வழுவமைதி. 'மதி மயங்கி' இகழ்ச்சிபோற் புகழ்ச்சி. 'மயங்கி' என்பதை மயங்க எனக்கொண்டு, அறிவு மயங்கினமையால், உடைபெற்ற தலை என்று பொருள் கொள்ளுவாரும் உளர். பிரமன், இறைவனைப் போலத் தனக்கும் ஐந்தலை இருப்பதாகக் கருதி நடுத்தலையால் இறைவனைப் பார்த்துச் சிரித்த காலை, அவன் செருக்கு ஒடுங்கும் வண்ணம், அந்நடுத்தலையைக் கிள்ளினார் வைரவமூர்த்தி என்பது புராணம். பலி = உணவு, பிச்சை. தேர் = ஆய்ந்து கொள்ளல். பிச்சைப் புகினும் தக்காரிடம் ஆய்ந்து ஐயமேற்றல் குறிப்பிக்கப்பட்டது. 3. தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெப்போது மனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும், பேசும்தொறும், எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக, ஆனந்தத்தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே-சென்று ஊதாய்; கோத்தும்பீ ! thinaiththanai uLLathu oor puuvinil theen uNNaathee ninaithoRum kaaNthoRum peesunthoRum eppoothum anaiththu elumpu uLneka aanantha theen soriyum kunippu udaiyaanukkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரச வண்டே ! தினையினைப் போன்று மிகச் சிறிய பூக்களில் சென்று தேனைப் பருகாதே! இறைவனை எண்ணுந்தோறும், காணுந்தோறும், அவனைப் பற்றிப் பேசுந்தோறும் ஆகிய இவற்றைச் செய்கிற எல்லாக் காலங்களிலும் உடம்பிலுள்ள எல்லா எலும்புகளும் இளகும்படி தேனைப் போன்ற பேரின்பத்தைப் பொழிகின்றான். அந்தக் கூத்தப்பிரானிடத்தே சென்று நீ ரீங்காரம் செய்வாயாக ! Do not delight in driplets of floral honey, Oh King bee! Instead, fly thee humming towards the dancing Lord Civa for He pours out the nectar of bliss for us, whensoever we think Him, whensoever we worship His manifest form, whensoever we talk of Him, indeed at all times, to make the bones soften and leak honey of bliss into the very bones. Note: Emphasizes the need to seek everlasting bliss as against the fleeting pleasures of the world. கு-ரை: தனை = அளவு. நெக = நெகிழ, குனிப்பு= கூத்து. சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாடு இதனுள் கூறப்பட்டது. 4. கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபி னென்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி, வண்ணப் பணித்து, என்னை 'வா' என்ற வான்கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்: கோத்தும்பீ ! kaNNappan oppathu oor anpu inmai kaNdapin enappan en oppil ennaiyum aadkoNdaruLi vaNNa paNiththu ennaivaa enRa vaankaruNai suNNa pon niiRRaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: கண்ணப்ப நாயனார் வரலாறு: வடசென்னை இருப்புப்பாதையில் காளத்தி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருமலைச்சாரலில் இருப்பது, அன்னை பூங்கோதை சமேதராய காளத்தி நாதர் திருக்கோவில். இது தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்று. பஞ்சபூதத் தலங்களில் வாயுத்தலமாக உள்ளது. தென்கையிலாயத் தலங்களில் முதன்மை பெற்றது. இக்கோயிலின் தலவிருட்சம் "கல்லால மரம்" (விழுது இறங்காத மரமே கல்லால மரம்) எனப்படும். இக்கோவிலின் அருகே ஓடுவது பொன்முகலி ஆறு. கண்ணப்ப நாயனாரின் மெய்க்காவலனாகிய நாணன் என்பான் திருக்காளத்தி நாதரை "குடுமித் தேவர்" என்று குறிப்பிட்டதாக இலக்கியம் கூறுகிறது. கண்ணப்பர் காலத்தில் (நால்வருக்கும் காலத்தால் முற்பட்டவர் கண்ணப்பர்) அக்கோவிலில் பூசை செய்து வந்தவர் சிவகோசரியார் என்ற ஆதிசைவர். இக்கோவிலுக்கு அண்மையில் உள்ளது பொத்தப்பி நாடு. அந்த நாட்டு வேடுவர் தலைவன் நாகன். அவன் தலைநகராகக் கொண்டு வாழ்ந்து வந்த ஊர் 'உடுப்பூர்' ஆகும். நாகன் மகனாகிய திண்ணனார் (பெற்றோர் இட்ட பெயர் திண்ணனார். பின்னர் சிவபெருமானால் 'கண்ணப்ப ' என்று அழைக்கப்பட்டதால் கண்ணப்பர் என்ற பெயர் நிலைத்துவிட்டது). மாலை நேரம் வேட்டை முடிந்து குடுமித்தேவர் திருமுன்பு நின்று கும்பிட்ட அளவில் நயனதீட்சை ஏற்பட்டு "நான்", "எனது" என்ற தற்போதம் இழந்து சிவ போதத்தில் மூழ்கிவிட்டார். ஆறு நாட்களாக உணவும் உறக்கமும் கொள்ளாமல் இரவு நேரம் முழுமையும் குடுமித்தேவர் அருகில் இருந்து அவரைப் பாதுகாத்துக் கொண்டும், பகல் நேரத்தில் குடுமித்தேவருக்கு நைவேத்தியத்திற்காக வேட்டையாடி அதைப் பக்குவம் செய்து கொண்டு வரவும், அருச்சனைக்கு மலர் பறித்துக் கொண்டு வரவும் ஆக இவ்வாறு ஐந்து நாட்கள் கழிந்தன. திண்ணனார் இறைவருக்குச் செய்தனவெல்லாம் அடியார் ஆவார்க்குச் சிறிதும் ஒவ்வாதனவே. ஆயினும் இறைவர் அவரது ஒவ்வாச் செயல்களை நோக்காது திண்ணனாரின் ஒப்புயர்வற்ற அன்பு கருதி அவரது செயலை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார் . சிவகோசரியார் தினமும் காலையில் பூசனைக்கு வரும்பொழுது ஐந்து நாட்களாகச் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி அருவருக்கத் தக்க செயல்கள் நடந்திருப்பதைக் கண்டு இரவு நேரத்தில் இச்செயலை யார் செய்திருக்கக்கூடும் என்று விளங்காமல், மனம் நொந்து இறைவனைப் பிரார்த்தித்து முறையிட்டார். அன்று இரவு சிவகோசரியார் கனவில் இறைவன் தோன்றி, "நாளை மாலை நீ பூசனை முடிந்தபின் மறைவில் நின்று இங்கு நடப்பதைக் கவனிப்பாயாக !" என்று பணித்தார். ஆறாம் நாள் மாலை திண்ணனார் நீரும் பூவும் நைவேத்தியமும் (வேகவைத்த இறைச்சி) கொண்டு குடுமித்தேவர் முன்பு வந்தவுடன் இறைவன் கண்ணிலிருந்து குருதி வருவதைக் கண்ணுற்று மனம் பதறிக் குடுமித்தேவர் "பாதம் பற்றி மாடுறக் கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார". அத்தருணத்தில் அவரது மனோநிலையைச் சேக்கிழார் பெருமான், "பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்ததென்னோ ? ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ? மேவினார் பிரியமாட்டா விமலனார்க்கு அடுத்ததென்னோ ? ஆவதொன்று அறிகிலேன் யார் என் செய்கேன்?" என்று பின்னும் இவ்வாறு விளக்குகிறார். இந்த நிலையில் திண்ணனார்க்குத் தன் தாய் தந்தை அறிவுறுத்திய பொன்மொழிகளுள் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. “உற்ற நோய் தீர்ப்ப ஊனுக்கு ஊன்". உடலில் ஒரு பாகத்திற்கு ஊறு ஏற்பட்டால் மற்றோர் உடம்பிலுள்ள அதே அங்கத்தைக் கொண்டு சரி செய்துவிடலாம். (Equivalent to modern transplant surgery). இந்த ஞாபகம் வரவே தனது கூரிய அம்பினால் தன் கண்ணை இடந்து சிவலிங்கத் திருமேனியான் கண்ணில் அப்பினார். அப்பியது ஒட்டிக்கொண்டது. குருதி வடிவது நின்றது. ஆனால் மற்றைய கண்ணிலிருந்தும் குருதி வடிய ஆரம்பித்தது . திண்ணனார் இதைக்கண்டு அஞ்சவில்லை. சிவலிங்கத் திருமேனியில் குருதி வடியும் திருக்கண்ணில் இடக்காலை ஊன்றி உள்ளத்தில் நிறைந்த விருப்போடு ஒரு தனி பக்தி கொண்டு தன் கண்ணைத் தோண்டுவதைத் தரித்திலர் தேவதேவர். சிவலிங்கத் திருமேனியிலிருந்து இறைவரது திருக்கரம் வெளிப்பட்டு வந்து, திண்ணனார் தன் கண்ணைப் பிடுங்காத வண்ணம் பற்றிக் கொண்டு “கண்ணப்ப நிற்க" என மூன்று முறை மொழிந்து 'என் வலத்தில் மாறிலாய் ! நிற்க' எனக் கூறி அருள் புரிந்தார். குருதி வடிவது நின்றது. “வானவர் வளர் பூமாரி பொழிந்தனர்". கண்ணப்பர் இடந்து அப்பிய கண் வளரப் பெற்றார், இந்த அசரீரியானது கண்ணப்பர் செவிகளிலும் மறைவில் நின்று பார்த்து வந்த சிவகோசரியார் காதிலும் விழுந்தது . (கண்ணப்ப நாயனாரது முழு வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க. மேலும் இந்நூலில் திருவாசகத்தில் வந்துள்ள கதைகள் என்ற பகுதியில் 40 ஆவது கதையைப் பார்க்கவும் ) . இத்தன்மையான கண்ணப்ப நாயனாரது, மென்மேலும் பெருகி வந்து எழும் ஈடு இணையற்ற அன்பிற்குச் சமமாக என்னிடம் அன்பு இல்லை என்று கண்டும், குற்றம் புரிதலில் எனக்கு நிகர் வேறு ஒருவர் இல்லாத என்னையும், என் தந்தையாகிய சிவபெருமான் என் மீதுள்ள பெருங்கருணையால் என்னை "வா" என்று கூறி ஆட்கொண்டுள்ளான். மேலும் என்னை நற்பண்புகள் உடையவனாகும் வண்ணம் அருள்புரிந்தான். அவன் திருநீறு அணிந்த அழகிய நெற்றியினை உடையவன். அத்தகையவனாகிய சிவபெருமான் திருவடி மலர்க்கே சென்று நீ ஊதுவாயாக. ! Although aware that my dedication is nothing compared to that of saint Kannappar,our Lord took me too under Him and, ordering me to perform many tasks, called me over to his presence. Unto this holy white ash-smeared Lord of illimitable grace, fly thee, Oh King bee, humming tunes of glory all the way. Note: The matchless generosity of the Lord is brought out here, apart from the saint's humility of thought. Brief Note on St. Kannappar: Saivite hagiology abounds in historic tales of supreme grace showered by Lord Civa on even the unlettered and uncivilised folks who display great dedication and simplicity of outlook. The chief instance is that of Kannappar (a hunter chieftain of a very early period) who during his maiden hunting sport in the forest ranges of Kaalahasti (near present day Tirupati hills), chanced to see a Civalinga which instantly filled him great joy and affection. He danced in ecstasy, and kindled by his past penance in a previous birth, he was drawn close to Lord Civa and continued to perform services to the Lord, in his own way. He offered animal flesh to the Lord as he was a mere hunter unfamiliar with other ways of life. The brahmin priest in charge of this shrine on seeing the desecration in the premises, when he came there the following morning, was filled with great sorrow and dismay and somehow managed to clean up the mess and performed the normal services. This was going on for six days. During his sleep on the sixth night, Lord Civa appeared in the brahmin priest's dream and asked him to see for himself by hiding in the premises, what great intensity of devotion exists in the one who is supposed to have committed the sacrilege. While the priest was thus watching, came the hunter with his meat offerings, singing songs of glory to Lord Civa. But soon the hunter saw blood oozing out of one eye of Lord Civa. He was struck with sorrow and intense pain, but quickly remembered the tribal adage that the donation of an eye is the cure for a damaged eye. Gladly therefore he plucked out one of his own eyes and applied it on the bleeding eye of Lord Civa, And lo, the bleeding stopped. Kannappar was filled with great joy on having cured his beloved Lord and was shouting and gesticulating in sheer ecstasy. Alas, at this point, the other eye of Lord Civa started bleeding. But without hesitation, having known the remedy, Kannappar now placed his shod foot on the Lord's bleeding part for positional guidance, and was about to pluck his other eye too for performing the replacement surgery! ' Hold on Kannappa' said Lord Civa three times, clutching his hand with His own and took him unto Himself, there to remain in eternal bliss alongside the Lord. This event is often recalled by successive generations of saivite saints as the very pinnacle of holy dedication. கு-ரை: கண்ணப்பர், அன்புருவராதலின், 'கண்ணப்பன்' என்ற அளவே கூறினார். "என் ஒப்பு இல்" என்றது குற்றம் புரிதலில் எனக்கு நிகர் வேறு ஒருவர் இல்லாத என்னையும் என்றபடி. வண்ணம்= குணம் வண்ண= குணமுடையனாக. பணித்து= கட்டளையிட்டு, செய்து. 'கோலமார்தரு பொதுவினில் வருக' என முன் கூறியது காண்க. சுண்ணம் = (இடித்த) பொடி. பொன்= அழகிய. 5. அத்தேவர் தேவ ரவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ 'அத்தேவர் தேவர்: அவர் தேவர்:'என்று, இங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே-சென்று ஊதாய்; கோத்தும்பீ aththeevar theevar avartheevar en Ru ingngan poyththeevu peesi pulampukinRa puuthalaththee paththu eethum illaathu en paRRu aRa naan paRRi ninRa meyththeevar theevarkkee senRuuthaay kooththumpii பொ-ரை: பல சமயத்தவரும் அந்த வானவர் முழுமுதற் கடவுள், இவர் அவர்க்கும் பெரிய தேவராவர் என்று பலவிதமாக உண்மையான கடவுள் இல்லாத தெய்வங்களைக் கடவுள் என்று எண்ணிப் பிதற்றுகிறார்கள், பிற ஆதரவு எதுவுமின்றி, என் உலகப்பற்று நீங்கும்படி நான் கைப்பற்றி நின்ற உண்மையான தேவதேவனாகிய சிவபெருமான் திருவடிக்கே போய் நீ ரீங்காரம் செய்வாயாக ! In this world there are many isolated folks who talk of many false gods, raving mad asserting that such and such is god, that one is god, and so on in this strain. Against this background stands the true Lord of all the gods in heaven, unto whom, I albeit unattached to any in this world, am so attached as to be free from all bonds. Unto this supreme Lord of gods, fly thee Oh King bee, humming tunes of mirth all the way (Note the alliteration of lines reminiscent of Thirukkural 350 reading as under). பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. -திருக்குறள் 350 கு-ரை: பத்து= பற்றுக்கோடு, ஆதரவு, பத்து= பற்று, அன்பு என்று கொள்வாரும் உளர். 'மெய்' என்பதை நாலாவதடியில் இரண்டாவது 'தேவர்' என்பதோடு முடிக்க. 6. வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலங் கல்வியென்னும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ வைத்த நிதி, பெண்டீர், மக்கள், குலம், கல்வி, என்னும் பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ ! vaiththanithi peNdiir makkaL kulam kalvi ennum piththa ulakil piRappoodu iRappu ennum siththa vikaara kalakkam theLiviththa viththaka theevaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: மயக்கம் நிறைந்த இந்த உலகிலே, தேடிவைத்த செல்வம் மனைவி, மக்கள், குலம், கல்வி இவைகளின் பின்னே மனம் செல்கிறது. பிறப்பு, இறப்புக்குக் காரணமான இவற்றினால் மனக்கலக்கமும், குழப்பமும் ஏற்படாமல் எனக்குத் தெளிவைத் தந்த அறிவாசானாகிய இறைவனின் திருவடிக்கே சென்று நீ ரீங்காரம் செய்வாயாக ! Fly thee Oh King bee, humming tunes of mirth, unto the Lord of supreme skills and wisdom who renders the mind still and frees it from the trails of sorrow that hover over the cycle of births and deaths in this mad, mad world of kith and kin, learning women and wealth. Note: Thirukkural 158 - Realization of செம்பொருள். The auspicious Lord delivers one from the clutches of birth cycles. கு-ரை: 'என்னும்' என்பது நிமித்தத்தை உணர்த்துஞ் சொல்லாய் நின்றது. விகாரம், திரிவையும், கலக்கம் ஐயத்தால் வரும் சஞ்சலத்தையும் குறிக்கும். வித்தகம்= ஞானம் 7. சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை யொட்டாத பாவித் தொழும்பரைநா முருவறியோஞ் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனைக் கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம் சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்: கோத்தும்பீ saddoo ninaikka manaththu amuthaam sankaranai keddeen maRappeenoo kedupadaa thiruvadiyai oddaatha paavi thozumparai naam uru aRiyoom siddaaya siddaRkee senRuuthaay kooththumpii பொ-ரை : சங்கரனைச் சற்றே உள்ளத்தில் நினைப்பின், அமுதம் ஊறும். அவனது கெடுதலற்ற திருப்பாதங்களைத் தீயேன் மறந்து விடுவேனோ? மறவேன். அவனை நினைத்தற்கு இசையாத பாவம் செய்த அடிமைகளது வடிவத்தை நாம் அறிய மாட்டோம். காணவும் அருவருப்போம். அத்தகைய பெரியோனாகிய சிவபெருமானிடத்தே சென்று நீ போய் ரீங்காரம் செய்வாயாக ! Will I ever forget Lord Civa who becomes an instant elixir in my mind, even as I, this worthless me, turn thoughts on Him albeit for a fleeting moment? We always keep away from the sinner - throng who do not cling tight on to his eternal blissful Feet. Fly thee, Oh King bee, towards this most exalted Lord of benevolence and skill, humming tunes of mirth all the way. கு-ரை: 'சட்டோ' என்பது சற்றே என்பதன் திரிபு. ஆயிற்று என்பது 'ஆயிட்டு' என்றாற்போல, ஏ, ஓ ஆயிற்று. 'சட்டோ' என்பதற்குக் கெடுதியோ, என்று பொருள்கொண்டு, சங்கரனை நினைத்தல் கெடுதியோ, எனப் பொருளுரைப்பாரும் உளர். 'மறந்தாற் கெட்டொழிவேன்' என்பதை விரைவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாரென்றலும் ஒன்று . ' திருவடியை' என்பது மறப்பேனோ என்பதற்கும் 'ஒட்டாத' என்பதற்கும் நடுவே நின்றது. சிட்டாய= சிற்றாய= நுட்பமாய. 8. ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை யேற்றுவித்த வென்றாதை தாதைக்கு மெம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்று வித்த என் தாதை, தாதைக்கும், எம் அனைக்கும், தம்பெருமான் ! குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ ! onRaay muLaiththu ezunthu eththanaiyoo kavadu viddu nanRaaka vaiththu ennai naaysivikai eeRRuviththa enthaathai thaathaikkum emanaikkum thamperumaan kunRaatha selvaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: இறைவன் தன் இயல்பில் ஒருவனாக இருக்கிறான். உலகத்தைத் தொழிற்படுத்தற் பொருட்டு அளவிறந்த பெயரையும் வடிவத்தையும் உடையனாகத் தோன்றுகின்றான். என்னைக் கருவி கரணங்களுடன் செம்மையாகப் படைத்து ஆட்கொண்டது அத்துணைச் செயல்களுள் ஒன்று. நாயைப் பல்லக்கில் ஏற்றியது போல என்னை இறையடியார்களுடன் உயர்ந்த இருக்கையில் இருத்தி வைத்தான். அவனே என் தந்தை. என் குடும்பத்தவராகிய தந்தைக்கும் தாய்க்கும் அவனே தலைவன். குறைவுபடாத செல்வத்தை உடையவனும் அவனே. அரசவண்டே அவனிடம் சென்று ரீங்காரம் செய்வாயாக ! Rising up all by Himself as the unique primal entity, spreading forth into countless branches, is my Lord, who kept me in good position, much as with a cur installed in a honoured seat. He is Lord of my forbears, and is ever full of glory. Unto Him, Oh King bee,fly thee humming tunes of mirth all the way. Note: Lord Civa, the source of all, is also the ultimate refuge. Dedication to Him ensures liberation. கு-ரை: சிவ தத்துவம் முதலில் தோன்றிப் பின் கலைகளும் தத்துவங்களும் புவனங்களும் பிறவும் விரிந்து உயிர் சகலாவத்தை உறுதற்குரிய கருவி கரணங்கள் எல்லாம் தோன்றுதலின், 'எத்தனையோ கவடுவிட்டு' என்றார். சிவிகை, உயர்ந்த இடத்திற்கு அறிகுறி. என் தாதை என்பது படைத்த அயனையும், அவன் தாதை என்பது அரியையும், 'எம்மனை' என்பது உமையையுங் குறிக்கும் என்பாரும் உளர். எம் + அன்னை= எம்மன்னை, எம்மனை. 9. கரணங்க ளெல்லாங் கடந்து நின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறை-மிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு மரணம், பிறப்பு என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே-சென்று ஊதாய் கோத்தும்பீ ! karaNangkaL ellaam kadanthu ninRa kaRaimidaRRan saraNangkaLee senRu saarthalumee thaan enakku maraNam piRappu enRu ivai iraNdin mayakku aRuththa karuNai kadalukkee senRuuthaay kooththumpii பொ-ரை: எனது புறக்கரணங்களாகிய கண்கள், செவிகள், மூக்கு, தோல், நாக்கு என்ற ஞானேந்திரியங்களுக்கும் வாய், கைகள், கால்கள், குதம், மருமத்தானம் என்ற கன்மேந்திரியங்களுக்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களுக்கும் அப்பாற்பட்டவன் எம்பெருமானாகிய நீலகண்டன். அவனது திருவடிகளைச் சார்ந்த பிறகு எனக்கு பிறப்பு, இறப்பு என்னும் இவை இரண்டால் வரக்கூடிய மயக்கத்தைத் தொலைத்து அருளிய அருட்கடல் போல்வான் அப்பெருமான். அவனது திருவடிகளையே சென்றடைந்து நீ ரீங்காரம் செய்வாயாக ! Even as I got attached to the Feet of Lord who has a besmirched throat, who is beyond all aspects of knowledge, He ended for me, all confused thoughts on the twin dread of death and rebirth. Unto this ocean of generosity, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: கரணம்= கருவி. கறை= களங்கம். மிடறு=கழுத்து, சரணம்= புகலிடமாகிய திருவடி. 'இரண்டின் மயக்கு' என்பதற்கு, இரண்டின் கலப்பு என்று பொருள் கொள்வாரும் உளர். 10. நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேய் உற்ற செல்வற்கே-சென்று ஊதாய்; கோத்தும்பீ ! nooyuRRu muuththu naan nunthu kanRaay inkirunthu naayuRRa selvam nayanthu aRiyaa vaNNam ellaam thayuRRu vanthu ennai aaNdu koNda than karuNai theeyuRRa selvaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரச வண்டே! பிணிவாய்ப்பட்டு, முதிர்வடைந்து தாயினாற் தள்ளப்பட்ட கன்று போல யான் இருந்தேன். நாய் போன்ற யான் பெற்ற பெருஞ்செல்வம் எல்லாவற்றையும் விரும்பி நுகர்ந்து மெய்நெறி அறியா வகையில் இவ்வுலகிலிருந்தேன். அந்த நிலையை மாற்றி, உய்யும் நெறி காட்டுவித்து, தாய் போலும் தன்மை கொண்டு என்னை அவன் ஆட்கொண்டான். அத்தன்மை ஆனவனும், குளிர்ந்த பேரொளி பொருந்தியவனுமாகிய சிவபெருமானிடம் நீ போய் ரீங்காரம் செய்வாயாக ! Saving me from old age and sickness and from a forlorn state like that of a weaning calf deserted by the mother cow, He came over to me much like my own mother and took me vassal under Him lest I should revel in any of the worldly pleasures and wealth. Unto this benign Lord of lustre and bliss, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: இதனுள் இறைவன் ஆசானாய் வந்தபோது தன்னை உடன் அழைத்துக் கொண்டு போகாமை குறித்தனர். நுந்து= தள்ளு. இருந்து= இருப்ப. தாய்= தாயியல்பு. தேய்= தேசு, ஒளி. 11. வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டுகொண்ட வன்னந் திளைக்கு மணிதில்லை யம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 'வல்நெஞ்சக் கள்வன், மனவலியன்', என்னாதே கல்நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்அம் கழலுக்கே-சென்று ஊதாய்; கோத்தும்பீ ! vannenjsa kaLvan manavaliyan ennaathee kalnenjsu urukki karuNaiyinaal aaNdukoNda annam thiLaikkum aNithillai ampalavan pon amkazalukkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரச வண்டே ! நான் உருகாத, திண்ணிய மனமுடைய வஞ்சகன், குரங்கு போன்ற மனத்தினன் என்றெல்லாம் எண்ணி இறைவன் என்னைத் தள்ளி விடவில்லை. எனது கல் போன்ற கடிய நெஞ்சினை உருகுவித்து, அருள் மிகுதியால் என்னை ஆட்கொண்டான். அன்னப் பறவைகள் மிகுந்த, அழகிய தில்லை நகரிலுள்ள பொன்னம்பலத்திற்கு நாயகன் அவன். அவனது பொற்கழல் அணிந்த அழகிய திருவடிக்கே சென்று ஊதுவாயாக ! Not discarding me as one hard of heart, or one of cruelty and deceit, He caused my stony heart to melt, and, in mercy, took me vassal under Him. Unto the beauteous Feet of this blessed Lord of Thillai fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: இறைவன்பால் அன்பின்மையைக் குறிப்பார், 'வல் நெஞ்ச' மென்றார். உலகப் பொருள்களிற் பற்றுண்மை குறிப்பார், 'மனவலியன் ' என்றார். 'மன' என்பதை 'மன்ன' என்பதன் திரிபாகக் கொண்டு, திருந்தாமல் நிலை பெற்ற என்று பொருள் கூறுவாரும் உளர். வலி= குரங்கு. 'வலியன்' என்பதற்குக் கொடியன் என்று பொருள் கூறுவதும் உண்டு 'அணி' என்பதை 'மணி' யென வைத்துப் பொருள் உரைத்தலும் உண்டு. மணி = மாணிக்கம் - மணியம்பலவன் எனக் கொள்க. திளைத்தல்= நிறைதல், பெருகுதல், நெருங்குதல். 12. நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந் தாயான வீசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேனது உள்ளப்பிழை பொறுக்கும் பெருமையனைச், 'சீ' ஏதும் இல்லாது என் செய்பணிகள் கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ ! naayeenai than adikaL paaduviththa naayakanai peeyeenathu uLLa pizaipoRukkum perumaiyanai sii eethum illaathu en seypaNikaL koNdaruLum thaay aana iisaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: நாய் போன்ற என்னைத் தன் திருவடிகளைப் பாடும்படி செய்த தலைவன் சிவபெருமான். அவன் பேய்த்தன்மை மிக்க எனது மனக்குற்றங்களை மன்னித்தருளும் பெருந்தன்மை உடையவன். இகழ்ச்சி சிறிதுமின்றி யான் செய்யும் தொண்டுகளை ஏற்றுக் கொண்டருளுகிறவனும் அவனே. எனக்கு அவன் தாய் போன்றவன். அவனிடமே போய் ரீங்காரம் செய்வாயாக ! My chief ordained me, this lowly cur, to sing on His Feet, condoning the many wrongful thoughts of this fiendish me! This gracious Lord, like a mother, spurns not, but ever accepts all my acts of servitude: Unto Him, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: அலையும் பேய்போல, மனம் சஞ்சலப்படுதலின் 'பேயேன்' என்றார். சீ= இகழ்ச்சிக் குறிப்பு. பாடுதல், எண்ணுதல், பணி செய்தல் ஆகிய முக்கரண வழிபாடும் குறிக்கப்பட்டது. 13. நான்றனக் கன்பின்மை நானுந்தா னும்மறிவோந் தானென்னை யாட்கொண்ட தெல்லாருந் தாமறிவா ரான கருணையு மங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ நான் தனக்கு அன்பு இன்மை நானும், தானும், அறிவோம்; தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்; ஆன கருணையும் அங்கு உற்றே-தான்; அவனே கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ ! naan thanakku anpuinmai naanum thaanum aRivoom thaan ennai aadkoNdathu ellaarum thaam aRivaar aana karuNaiyum angkuRRa thaanavanee konennai kuuda kuLirnthuuthaay kooththumpii பொ-ரை: சிவபெருமான் பால் யான் அன்பில்லாது இருத்தலை அவனும் நானும் அறிவோம். பிறர் அறியார். அவன் என்னை அடிமையாகக் கொண்டதை உலகினர் அனைவரும் அறிவர். எனக்கு உண்டான திருவருளும் அவன்பால் ஏற்பட்டதே. எனக்கு அவன் மேல் அன்பில்லாத போதும் திருவருள் அவனிடத்திருந்தே எனக்குக் கிடைத்தது. அதுபோல் இப்போது தலைவனாகிய அவனே, தானாக வந்து என்னைக் கூடும்படி மெல்லிய முறையில் ரீங்காரம் செய்க ! That I am devoid of dedication to Him, He and I alone, are aware of. Yet His acceptance of me as vassal, all the world knows well. Such is the kindness and indulgence of Lord Civa. Unto Him fly thee, humming notes of mirth all the way, Oh King bee, so as to mingle with Him who is above all else. கு-ரை: உற்றே, உற்றதே என்பதன் குறுக்கம். தலைவன் அவனாதலின், தலைவிபாற் சேறலும் அவன் கடனே ஆதலால், அவனே வலிய வந்து என்னைக் கூடவேண்டும். அன்பில்லாமையால், யான் போய்க் கூடும் ஆற்றலிலேன். 14. கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி யருவாய் மறைபயி லந்தணனா யாண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப்புறத்தே மரு ஆர் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ ! karuvaay ulakinukku appuRamaay ippuRaththee maruvaar malarkkuzal maathinodum vantharuLi aruvaay maRaipayil anthaNanaay aaNdu koNda thiruvaana theevaRkee senRuuthaay kooththumpii பொ-ரை: இந்தப் பூவுலகிற்கு விதை போன்று மூலப்பொருளாய் இருப்பவன் சிவபெருமான். அவன் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவனாகவும் விளங்குகிறான். உமையம்மையின் பூப்போன்ற குழல் இயற்கையாகவே நறுமணம் பொருந்தியது. அந்த உமையம்மையோடு சிவன் இந்த உலகத்திற்கு வந்து எனக்கு அருள் செய்தான். இரகசியப் பொருளாகிய வேதத்தைப் பயிற்றுவிக்கும் அருட்பேராசிரியனாக உருவெடுத்தவனும் அவனே. புறத்தே எனக்குக் காட்சி தந்தும் உள்ளத்திலே அருவாய் நிலவியும் என்னை ஆட்கொண்டு அருளியவனும் அவனே (இறைவன் யாதொரு வடிவும், பெயரும், தொழிலும் இன்றி நிற்றல் உலகத்தை நோக்காது தன்னியல்பில் நிற்கும் நிலையாம். இதுவே அவனது உண்மை இயல்பு= சொரூப இலக்கணம்). வீடு பேற்றிற்குக் காரணமாய் இருப்பவனும் அவனே. அவனிடம் போய் ரீங்காரம் செய்க! He is the embryonic source of the cosmos existing in the great beyond outside and inside all bits of space. He came into this world along with His consort of fragrant locks. Then He came before me as a sacred sage, although He is without any form. And He commisioned me under His tutelage. Unto this benign Lord, Oh King bee, fly thee, humming notes of mirth all the way. கு-ரை: 'உலகினுக்கு' என்பது 'கருவாய்' 'அப்புறமாய்' என்ற இரண்டினோடுஞ் சென்றியையும். அருளும் சிவமும் ஆதல் முற்கூறினார். மக்கள் வடிவொடு ஆசானாய் வருதல் வெளியேயும்,தோன்றாது உயிரறிவின் கண் மன்னுதல் உள்ளும் நிகழற்பாலன. திரு = வீட்டுச் செல்வம். 'திருவான' என்பதற்கு வீடாகிய பெருஞ்செல்வமான என்றுங் கூறலாம். 15. நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந் தானுந்தன் றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல் வானுந் திசைகளு மாகடலு மாயபிரான் றேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்? வானும், திசைகளும், மா கடலும், ஆயபிரான் தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ ! naanum en sinthaiyum naayakanukku evvidaththoom thaanum than thaiyalum thaazsadaiyoon aaNdilaneel vaanum thisaikaLum maakadalum aayapiraan theen unthu seevadikkee senRuuthaay kooththumpii பொ-ரை: நீண்ட சடை முடியுடைய சிவபெருமான் சிவமும் சத்தியுமாக வந்து என்னை ஆட்கொண்டான். அவ்வாறு ஆட்கொள்ளாவிடில் நானும் என் உள்ளமும் தலைவனாகிய இறைவனுக்கு உரியராதல் இயலாது. அவனுக்கு வெகுதூரமான இடத்தில் இருந்திருப்போம்? வானுலகும், பத்துத் திசைகளும், பெருங்கடல்களும் தானே ஆகிய சிவபெருமானது தேன் துளிக்கும் செய்ய திருப்பாத மலர்களிடமே போய் ரீங்காரம் செய்க! If the Lord of long-matted locks had not come over here with His consort in order to rule over me, where would have been me and my mind, I know not! The Lord is verily the sky and space, and the deep oceans of the world. Unto the sweet and sacred Feet of this Lord, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: தன்னை இறைவனும் சிந்தையைத் திருவருளும் உய்வித்தமை கூறியவாறென்ப . ஆட்கொள்ளாவிடத்து, அவனருளுக்குச் சேய்மையில் இருத்தல் குறிக்கப்பட்டது. திசைகள் கூறவே நிலவுலகமும் பிறவுலகமும் கூறியவாறாம். உந்துதல்= எறிதல், வீசுதல், துணித்தல். 16. உள்ளப் படாத திருவுருவை யுள்ளுதலுங் கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரானெம் பிரானென்னை வேறேயாட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. உள்ளப் படாத திரு உருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட் கொள் அப்பிரானுக்கே-சென்று ஊதாய்; கோத்தும்பீ ! uLLa padaatha thiruuruvai uLLuthalum kaLLa padaatha kaLivantha vaankaruNai veLLa piraan empiraan ennai veeRee aad koL appiraanukkee senRuuthaay kooththumpii பொ-ரை: சிவபெருமானது தூய இயல்பு (சொரூப இலக்கணம்) எல்லோராலும் மனத்தால் நினைக்க ஒண்ணாத ஒன்று. ஆயினும் சிவஞானத்தால் அந்தத் தூய இயல்பை உணர இயலும். அவ்வாறு நான் அருள் வழி நின்று அவனது இயல்பை உள்ளத்தால் உணர்ந்த காலை, பேரருள் வெள்ளத் தலைவனாகிய சிவன் ஒளிப்பின்றித் தெளிவாக எனக்கு மகிழ்ச்சியைத் தர வந்தான். எனக்கு அந்தத் தலைவன் தனியாக வீடு பேற்றைத் தந்தருள வேண்டும் என்ற எனது எண்ணத்தை (குறிக்கோளை) அவனிடம் சென்று கூறி ரீங்காரம் செய்வாயாக ! Whenever I contemplate on His innate nature, the form that is beyond all thought, this our Lord who is an ocean of unalloyed limitless grace, comes over and takes me in, under Him. Unto Him, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: 'கரணங்களெல்லாங் கடந்த முதல்வன்' ஆதலின் கரணங்களால் நினைக்கப்படாதவன் என்பார், 'உள்ளப்படாத' என்றார். 'திருவுரு' என்றது இறைவனின் சொரூப இலக்கணத்தை. கள்ளப் படாத = மறைதலில்லாத. களி = பெருமகிழ்ச்சி. அம் மகிழ்ச்சி, இறைவனருளாற் கிடைத்தலின், 'களிவந்தவான் கருணை' என்றார். அடியார்களைத் தொகுப்பாக, முன்னமே திருப்பெருந் துறையில் ஆட்கொண்டமையால், தில்லையில் தன்னைத் தனியே ஏற்று அத்துவித முத்தி கொடுத்தல் விரும்புவார், 'வேறே ஆட்கொள்ள' என்றார். 17. பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறு மெய்யாக் கருதிக் கிடந்தேனை யாட்கொண்ட வையாவென் னாருயிரே யம்பலவா வென்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள் தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன்-தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ ! poyaaya selvaththee pukku azunthi naaL thooRum meyyaa karuthi kidantheenai aadkoNda aiyaa en aar uyiree ampalavaa enRu avan than sey aar malar adikkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரசவண்டே! நிலையில்லாத செல்வத்தின் கண்ணே நான் சென்று அழுந்தி அதனை மெய்யான செல்வமென்று மதித்துக் கிடந்தேன். அவ்வாறான என்னை சிவன் ஆட்கொண்டருளினான். அவனை, என்னை அடிமை கொண்ட ஐயனே! என் அருமையான உயிருக்கு உயிரே! திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்றவனே! என்றெல்லாம் தோத்திரம் பண்ணுகிறேன். அவனது செந்தாமரை மலர் போன்ற திருவடிக் கண்ணே சென்று ரீங்காரம் செய்வாயாக ! Calling out to Him, "Oh Chief, my precious life, Lord of the public hall of Thillai, thou that took me under Thy tutelage, despite my daily wallowing under the evanescent transient pleasures of the world which I mistook for reality" - thus singing fly thee unto His flowery Feet, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: இதனுள் அடிகள் அருள்பெறுதற்கு முன்னுள்ள தம் நிலை குறிப்பித்தார். ஆருயிர்= உயிர்க்குயிர் என்பதைக் குறிக்கும். செய்= செம்மை, செந்நிறம். 18. தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும் பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும் சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் - குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ ! thoolum thukilum kuzaiyum suruL thoodum paalveLLai niiRum pasunjsaanthum paingkiLiyum suulamum thokka vaLaiyum udai thonmai koolamee nookki kuLirnthuuthaay kooththumpii பொ-ரை: இத்திருப்பாட்டு இறைவன் மாதொரு கூறனாய் இருக்கும் கோலத்தை விளக்குகின்றது. புலித்தோல் ஆடையும், குண்டலமும், சுந்தரவடம் என்று சொல்லப்படும் வட்ட வடிவமான தோடும், காதணியும், முத்தலைவேலும், பாலின் நிறம் போன்ற வெண்மையான திருநீறும், தனது வலப்பாகத்தில் உடையவன் எம் இறைவனாகிய சிவன். புதிய சந்தனமும் பசுங்கிளியும் மிகுதியான வளையல்களையும் உடையவளாக இடப்பாகத்தில் காணப்படும் பெண் உருவமாகியவள் எம் அன்னை . இவ்வாறு கூடிய பழமையான மாதொரு பாக வடிவத்தைக் கண்டு அரசவண்டே மெல்லென ரீங்காரம் செய்க! Oh King bee, hum thee thy gentle notes of mirth all the way, addressing His ancient manifest form. The form smeared over with white ash, having a tiger skin as raiment, adorned with a sandal paste and rare pendants, a trident on hand, a parrot on the left, and a string of bracelets in a row. Note: Lord Civa's most ancient manifested form is described here. The ornaments and apparel and the part wherein they are worn, indicate the male and female aspects combined into one single physical frame. கு-ரை: இறைவனது பாகத்திலே புலித்தோலும், குழையும், நீறும், சூலமும் இருப்பன. அம்மை பாகத்தில் துகிலுந் தோடும் சாந்தும் கிளியும் வளையும் உள்ளன . வளை பலவாதலின், 'தொக்க' என்று அடை கொடுத்தார். சிவமுஞ் சத்தியுமாய் நின்ற இறையுருவம் ஆண் பெண் தோற்றத்திற்குக் காரணமாய மூலவடிவைக் குறிப்பதாகலின் 'தொன்மைக் கோலம்' என்றார். 19. கள்வன் கடியன் கலதியிவ னென்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தா னென்மனத்தே யுள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 'கள்வன், கடியன், கலதி இவன்' என்னாதே வள்ளல், வரவர வந்து, ஒழிந்தான் என் மனத்தே உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ! kaLvan kadiyan kalathi ivan ennaathee vaLLal vara vara vanthu ozinthaan enmanaththee uLLaththu uRuthuyar onRu oziyaa vaNNam ellaam theLLum kazalukkee senRuuthaay kooththumpii பொ-ரை: அரசவண்டே ! கருணை வள்ளலாகிய சிவபெருமான் என்னை "இவன் வஞ்சகன், கொடுமையன், கீழ்க்குணம் உடையோன்" என்று ஒதுக்கிவிடாமல் அருட்கொடை அளித்தான். நாளுக்கு நாள் என் நெஞ்சின் கண்ணே பூரணமாகத் தோன்றி அருளினன். எனது மனத்துயரம் எல்லாவற்றையும் ஒன்றையாவது தப்பவிடாமல் தெளிவு தந்து ஒழித்தான். அப்படிப்பட்டவனது திருவடியிடமே போய் ரீங்காரம் செய்க ! Lord of grace that He is, He never despised me labeling me as thief, or sinner, or any wicked rebel, but came over to me time and time again, in order to remove all my agonies without leaving any of them behind. Unto His clear bejewelled Feet, Oh King bee, fly thee , humming notes of mirth all the way. கு-ரை: கலதி - கயமைக் குணமுடையோன். ஒழிந்தான் என்பது முடிவுற்றான் என்ற பொருட்டாய்ப் பூரண நிறைவைக் குறிக்கும். தெள்ளுதல் = தெள்ளி எறிதல், துயர் நீக்கித் தெளிவு படுத்தல். மனத்தில் தெளிவினை யுண்டாக்கித் துயர்களைத் தூர வீசுதல். 20. பூமே லயனோடு மாலும் புகலரிதென் றேமாறி நிற்க வடியே னிறுமாக்க நாய்மேற் றவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. பூமேல் அயனோடு மாலும் "புகல் அரிது” என்று ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க, நாய் மேல் தவிசு இட்டு, நன்றாய்ப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே-சென்று ஊதாய் கோத்தும்பீ ! puumeel ayanoodu maalum pukal arithu enRu eemaaRi niRka adiyeen iRumaakka naaymeel thavisu iddu nanRaay porudpaduththa thiimeeni yaanukkee senRuuthaay kooththumpii பொ-ரை: தாமரைப் பூவில் வீற்றிருக்கும் நான்முகனும், திருமாலும் வீடு புகுதல் இயலாதென தடுமாறி நின்றனர். எம்பெருமானாகிய சிவன், நாய்க்கு மேலான ஆசனமிட்டதுபோல, அடியேன் நிமிர்ந்து மகிழ்வெய்தியிருக்கும் வண்ணம் எனக்கு மேலான ஞான நிலை அருளினான். என்னை மதித்து அருள் செய்தவனும் அவனே, நெருப்புப் போன்ற சிவந்த மேனியை உடையவனாகிய அந்தச் சிவனிடம் சென்று அரசவண்டே நீ ரீங்காரம் செய்க ! Much to the chagrin of Brahma and Thirumaal who could not fathom His state, and so stood in trepidation, He cared well for me, making me feel like a cur put on a high pedestal. Unto Him who shines forth as a fire, fly thee, Oh King bee, humming notes of mirth all the way. கு-ரை: புகல் = (வீடு) புகுதல். ஏமாறுதல் = தடுமாறுதல். இறுமாக்க= நிமிர, மகிழ்வெய்த. நாய் என்பதில் நான்காம் வேற்றுமையுருபு தொக்கு நின்றது. நன்றா = நன்றாக. பொருட்படுத்த= மதித்த. மெய்யிற் பொருந்தச் செய்த என்றும் பொருள் கொள்ளலாம். பொருள் = மெய். படுத்த = பொருத்திய. தவிசு=இருக்கை. THIRUCHCHITRAMBALAM. 11. திருத்தெள்ளேணம் 11. THIRUTH-THELLENAM ( சிவனோடு அடைவு ) Drum Beats of Supreme Ecstasy தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 'ஏனம்' என்பது, 'குடையோலை' எனப் பொருள் தருவதொரு சொல். இது பற்றியே இச்சொல், கொள்கலங்கட்கும் பெயராய் இக்காலத்து வழங்கப்படுகின்றது. இதன் பண்டைய வடிவம், 'ஏணம்' என்பதாய் இருத்தல் கூடும். வலிமை எனப் பொருள் தரும் 'ஏண்' என்பது இதன் அடிநிலை என்றல் பொருந்தும். தெள்ஏணம் என்பது “தெள்ளுகின்ற குடையோலை' என்னும் பொருட்டாய், மகளிர் விளையாட்டிற் கொள்ளும் முற்றிலுக்குப் (சிறு முறத்திற்கு) பெயராய் வழங்கிற்று. அவ்வாறாயின், 'தெள்ளேணம்' என்பது, முற்றிலால் சிலவற்றை அள்ளித் தெள்ளிக்கொட்டும் முறையில் மகளிர் வலப்புறமும், இடப்புறமும் குனிந்தும், நிமிர்ந்தும் கைகொட்டி ஆடும் கொம்மை விளையாட்டேயாம். அதனால், அவ்விளையாட்டிற் பாடப்படும் பாட்டே தெள்ளேணப் பாட்டுமாம். எங்ஙனம் நோக்கினும், இவ்விளையாட்டு இத்தன்மை என்பதனை இக்காலத்து அறிதல் அரிதாயிற்று . இதனுள் அடிகள் கூறும் பொருளும், முன்னர்த் திருக்கோத்தும்பியிற் கூறிய பொருளோடே ஒத்திருத்தலின், 'சிவனோடு ஐக்கியம்' என்னும் பொருளே தருவதாகிய 'சிவனோடு அடைவு ' என்பதனையே இதற்கும் குறிப்பாகக் கூறினர். இருபது திருப்பாட்டுக்களால் ஆயினமையாலும், காதற்பொருட்கும் இயைபுடைமையாலும் இப்பகுதியை, திருக்கோத்தும்பியின் பின் வைத்துக் கோத்தனர். இது, தில்லையில் அருளியது என்பதே பதிப்புகளில் உள்ளது. இதன் யாப்பு வகையும், திருக்கோத்தும்பியில் உள்ள யாப்பு வகையேயாம். The saint recalls with gratitude and exuberance the bliss of benediction received by him and his erstwhile comrades, and expresses his indebtedness to the Lord for the many facets of supernal revelation vouchsafed to him through sheer generosity. He therefore enjoins on us all the need for and the appropriateness of, celebrating this by singing His glory in a show of ecstatic delight to the accompaniment of the beat of drums. Shouts of joy and achievement are themselves often time rather figuratively described as drum beats of victory, even though there may be no actual beating of any drum as such. ஏணம் (Enam) means the skin of deer - vide Saint Kumara Guru Daasa Swaamigal's Lexicon (சேந்தன் செந்தமிழ்). Reference to the use of deerskin in the drum is possibly implied here. From verses 9 and 10 of this chapter, it appears such song and dance exercise was popular among young maids of the day. The saint has added theological notes to the choreography and has rendered yeoman service to all humanity. 11. 1 திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை யுருநாமறியவோ ரந்தணனா யாண்டு கொண்டா னொருநாம மோருருவ மொன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை உரு நாம் அறிய, ஓர் அந்தணன் ஆய், ஆண்டுகொண்டான்; ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! thirumaalum panRiyaay senRu uNaraath thiruvadiyai urunaam aRiya oor anthaNanay aaNdu koNdaan orunaamam oor uruvam onRum illaaRku aayiram thirunaamam paadinaam theLLeeNam kottaamoo. பொ-ரை : திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தைப் பிளந்து போய் அறிய முடியாதன சிவபெருமானுடைய திருப்பாதங்கள் . அத்தகைய சிறப்புமிக்க வடிவத்தை நாம் அறியும்படியாக, ஒரு வேதியனாக வந்து, ஆட்கொண்டருளியவன் அவன். ஒரு பெயரும் ஒரு வடிவும் இல்லாத அவனுக்கு ஆயிரம் திருப்பெயர் ஓதிப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக! Our Lord has neither name nor any specific form nor anything of His own to speak about. And yet, Ye folks, let us chant a thousand holy names for Him and sing to the accompaniment of drum beats of glory and fame. Even Thirumaal could not realize His sacred Feet despite boring deep in the guise of an inveterate boar, whereas for us all to recognize, He readily came over in the form of a benign sage and took us as vassals under Him. கு-ரை: உரு என்பது சொரூப இலக்கணத்தைக் குறிக்கும். இறைவன் சுட்டி அறியப் படாதவன் ஆதலின், நாமம், உருவம் முதலியன அவனுக்கு இல்லை என்றார். சுட்டியுணர்தற்குக் கருவியாகிய குலம், குணம், ஊர் ஆகிய யாதும் இல்லை என்பார் 'ஒன்றுமில்லாற்கு' என்றார். அசத்தொடு தொடர்பில்லான் என்பது கருத்து. உயிர்களின் பொருட்டே இறைவனுக்கு நாமம் முதலியன கூறப்படும். தெள்ளேணம் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. அது எத்தன்மையது என்று விளங்கவில்லை. மணல் முதலியவற்றைத் தெள்ளிக் கொட்டுதல் போன்ற ஒரு விளையாட்டாக இருக்கலாம். 2. திருவார் பெருந்துறை மேயபிரா னென்பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை யருவா யுருவமு மாயபிரா னவன்மருவுந் திருவாரூர் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின், யாவரையும் கண்டது இல்லை ; அரு ஆய், உருவமும்-ஆய பிரான், அவன் மருவும் திருவாரூர் பாடி, நாம் - தெள்ளேணம் கொட்டாமோ ! thiruvaar perunthuRai meeyapiraan enpiRavi karuveer aRuththapin yaavaraiyum kaNdathillai aruvaay uruvamum aayapiraan avan maruvum thiruvaaruur paadi naam theLLeeNam kottaamoo பொ-ரை: மேன்மை பொருந்திய திருப்பெருந்துறையில் வீற்றிருந்த சிவபெருமான் என் பிறப்பின் மூலத்தை வேரோடு தொலைத்தான். அதன் பிறகு பிற ஒருவரையும் பொருளாக நான் பார்த்ததில்லை. உள்ளத்துள் அருவாயும், புறத்தே உருவாயும் நின்று அருள் செய்த பெருமான் உறையும் திருவாரூர்ச் சிறப்பைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Let us chant to the accompaniment of drum beats of glory and fame, extolling the sacred Thiruvaaroor, the favourite resort of Him who is manifest in physical form and yet has no form. This, our Lord of Thirup-Perun-Thurai cut off the roots of my future births, for which I have now no need to seek any one else. கு-ரை: பிறவிக்குக் கருவானது பற்று. அதனை வேரறுத்தலாவது முற்றத் தொலைத்தல். இறைவனைத் தவிரப் பிறரிடத்தில் ஒன்றையும் வேண்டாமையின் "யாவரையுங் கண்டதில்லை" என்றார். "அருவாய் மறை பயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட” என்று கோத்தும்பியில் கூறியவாறு, ஈண்டும் ' அருவாய் உருவமுமாய்" என்றார். திருவாரூர் என்பது இதய கமலத்தையும் குறிக்கும். அது ஞானத்திற்கு இடமாதல் "தேனமர் சோலைத் திருவாரூரின், ஞானந்தன்னை நல்கிய வியல்பும்" என்றமையால் விளங்கும். 3. அரிக்கும் பிரமற்கு மல்லாத தேவர்கட்குந் தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்து நம்மை யுருக்கும் பணிகொள்ளு மென்பதுகேட் டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர் கட்கும் தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம், வந்து, நம்மை உருக்கும், பணிகொள்ளும், என்பது கேட்டு, உலகம் எல்லாம் சிரிக்கும் திறம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ ! arikkum piramaRkum allaatha theevarkadkum therikkum padiththu anRi ninRasivam vanthu nammai urukkum paNi koLLum enpathu keeddu ulakamellaam sirikkum thiRam paadi theLLeeNam kottaamoo பொ-ரை: திருமாலுக்கும், அயனுக்கும், பிற தேவர்களுக்கும் அரிய பொருளாய் மேற்பட்டு நின்றான் முழுமுதற் கடவுள். அத்தகைய சிவபெருமான் தானே எழுந்தருளி வந்து எமது உள்ளத்தை உருகுவித்து, தொண்டு செய்யும்படி ஆட்கொண்டனன். இந்தச் செய்தியைக் கேட்டு உலகினரெல்லாம் (வியப்பால்) நகையாடும் வகையை நாம் விளையாட்டாகப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Let us all chant on our Lord to the accompaniment of drum beats of glory and fame, ignoring the ridicule of worldly folks who laugh at us for saying that Lord Civa, although beyond the comprehension of Thirumaal, Brahma and other devas, would certainly come right before us, melt our hearts and accept us as vassals. கு-ரை: அல்லாத தேவர்களென்பதில் இந்திரன் முதலியோர் அடங்குவர். திருமாலுக்கு மேற்பட்ட உருத்திர வருக்கத்தினர் அடங்கார். படித்து= தரத்தது, நிலையினது. தெரிவிக்கும் என்பது தெரிக்கும் எனத் தொக்கு நின்றது. சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறித்து நின்றது. உருக்கும் என்பதை முற்றெச்சமாகவும் கொள்ளலாம். சிரிக்குந் திறம்பாடி என்பது “நாடவர் நம் தம்மை யார்ப்ப வார்ப்ப, நாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப" என்ற அடிகளை நினைவுறுத்தும். சிரித்தல் வியப்பாலும், இகழ்ச்சியாலும் நிகழலாம். இறைவர் பெருமையும் தமது சிறுமையும் நோக்கி 'சிரிக்கும்' என்றார். 4. அவமாய தேவ ரவகதியி லழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ-மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம்-சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து சிவம் ஆன வா பாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! avamaaya theevar avakathiyil azunthaamee pavamaayam kaaththu ennai aaNdu koNda paranjsoothi navam aaya senjsudar nalkuthalum naam ozinthu sivam aana vaapaadi theLLeeNam kottaamoo பொ-ரை: பயனற்ற விண்ணவர்களைப் பாராட்டி அவர்கள் பாவநெறிகளில் சென்று அழுந்தாவண்ணம் என்னைக் காத்தவன் நம்பெருமானாகிய சிவபெருமான். அவன் என்னைக் காப்பாற்றி ஆட்கொண்டருளிய மேலான ஒளியுருவுடையவன். புதுமையான, செவ்விய நல்ல அறிவை (சிவஞானத்தை) நமக்குக் கொடுத்தான் ! உடனேயே நமது தற்போதம் நீங்கி, சிவமாம் தன்மை எய்தினோம் . இத்தன்மைகளைப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Saving me from sinking into the abysmal depths of the wasteful ways of the devas,our effulgent Lord took me in and rescued me from future births. Even as He bestowed His refreshing light on us, we got dissolved and got merged into Civam Himself. Let us all chant on this to the accompaniment of drum beats of glory and fame. Note: Refreshing light நவமாய செஞ்சுடர். Saint Ramalinga Swaamigal also speaks of having received ‘சுடர்ப்பூ ' from Lord Civa. கு-ரை: அவம் = பயனின்மை. அவகதி = இடம் பெயர்ந்து செல்லுநெறி. சிவத்தை ஒழிந்த பிற தேவர்கள் வீடு கொடுக்கும் ஆற்றலிலர். ஆதலின் அவமாய தேவர் என்றார். அவர்கள் பதவிகள் நிலையாதன ஆதலின் அவகதி என்றார். பவமாயம் என்பதை மாயப்பவம் என மாற்றி வஞ்சப் பிறவி என்றும் பொருள் கொள்ளலாம். செஞ்சுடர் என்பது சிவஞானத்தைக் குறிக்கும். பாசம் நீக்கப்பெற்ற பின் அதனை இறைவன் நல்குதலால் அதை 'நவமாய' என்றார். பாச நீக்கம் வரை அது இன்னது என்று விளங்காமை காண்க. நாம் என்பது யான், எனது என்னும் செருக்கினைக் குறிக்கும். சிவமானவா என்றது சிவத்தின் தன்மையை அடைந்தமையையே குறிக்கும். உயிர்ப்பொருள் தன்மையால் சிவமாதல் இல்லை. 5. அருமந்த தேவ ரயன்றிருமாற் கரியசிவ முருவந்து பூதலத்தோ ருகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் னுளம்புகுந்த திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ அருமந்த தேவர், அயன், திருமாற்கு, அரிய சிவம் உருவந்து, பூதலத்தோர் உகப்பு எய்தக் கொண்டருளிக் கரு வெந்து வீழக் கடைக்கணித்து, என் உளம் புகுந்த திரு வந்தவாபாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! arumantha theevar ayan thirumaaRku ariyasivam uruvanthu puuthalaththoor ukappu eytha koNdaruLi karuventhu viiza kadaikkaNiththu en uLam pukuntha thiru vantha vaapaadi theLLeeNam kottaamoo பொ-ரை: திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்குக் கூட அறிவதற்கு அரியவன் சிவபெருமான். அவன் ஞானாசாரியனாகத் திரு உருக் கொண்டு வந்து இந்நிலவுலகினர் வியப்பு அடையும்படி என்னை ஆட்கொண்டருளினான். எனது பிறவிக் காடு ஞானத்தீயால் எரிந்தொழியும்படி திருக்கடைக் கண்ணால் பார்த்து அருளினான். அவன் எனது நெஞ்சிற் புகுந்தமையால் பேரின்பச் செல்வம் அடையப் பெற்றேன். இந்தத் தன்மைகள் யாவற்றையும் நாம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Although beyond the comprehension of the lofty devas, Brahma and Thirumaal,our Lord assumed physical form and came over here to the delight of all worldly folks. With a glance, He destroyed my future births and entered my mind. Let us chant on this welcome arrival to the accompaniment of drum beats of glory and fame. கு-ரை: அருமருந்தன்ன என்பது அருமந்த என்றாயிற்று. தேவரினத்தில் மாலும் பிரமனுமே சிறந்தவர்கள். அவர்க்கு மேற்பட்டவர் உருத்திர வர்க்கத்தினர். உருவந்து= உருவோடு வந்து, உகப்பு= உயர்வு, மகிழ்ச்சி. புகுந்தமையால் வந்த திருவை 'புகுந்த திரு' என்றார். 6. அரையாடு நாக மசைத்தபிரா னவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிற முரையாட வுள்ளொளியாட வொண்மாமலர்க் கண்களினீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ அரை ஆடு நாகம் அசைத்த பிரான், அவனியின்மேல் வரை ஆடு மங்கை - தன் பங்கொடும், வந்து, ஆண்டதிறம் உரை ஆட உள் ஒளி ஆட, ஒள்-மா-மலர்க் கண்களில் நீர்த் திரை ஆடுமா பாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! araiyaadu naakam asaiththa piraan avaniyin meel varaiyaadu mangkai than pangkodum vanthu aaNdathiRam uraiyaada uLoLi aada oLmaamalar kaNkaLil niir thirai aadu maapaadi theLLeeNam kottaamoo பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் தனது இடுப்பில் ஆடுகின்ற பாம்பை கச்சையாகக் கட்டிக்கொண்டு விளங்குகின்றான். மலையில் விளையாடி வளர்ந்த உலக மாதாவாகிய பார்வதி தேவியைத் தனது உடம்பில் இடப்பாகத்தில் கொண்டு பூமியில் இறங்கி வந்து எம்மை ஆட்கொண்டு அருளினான். அவனுடைய இத்தன்மையான பேரருளை எண்ணும் பொழுது உள்ளத்தில் பேரொளி வீசப்பட்டு அறிவு விளக்கம் பெறுகின்றது. ஒளி வீசுகின்ற மலர் போன்ற உங்கள் நீண்ட கண்களிலிருந்தும் இன்பக் கண்ணீர் அலை போல் ததும்புகின்றன. அந்த நிலையில் பாடும் பொழுது உங்கள் சொற்கள் தடுமாறுகின்றன. அவ்வாறு பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! With His consort, the queen of the mountains, on the left side of His physical frame, He came into this world, a cobra crawling on His waist, and took us vassal. As we talk of this, our speech faultered, the inner light moved about softly and tears welled up in our bright flower-like eyes. Let us chant on this to the accompaniment of drum beats of glory and fame. கு-ரை: ஆடுநாகமென்பது, கிரியாசத்தியை ஆதல், குண்டலி சத்தியை யாதல் குறிக்கும். அசைத்த=கட்டிய, 'வரையாடு' என்பதில், ஆடு = விளையாடுதல். 'ஆடும்' என்பதற்கு 'ஆளும்' என்று பொருள் கொள்ளுவாரும் உளர். 'திறம்' என்பதைப் 'பாடி' என்பதோடு சேர்க்க. ஆடுமா= ஆடுமாறு, ஆடும் வண்ணம், வரை ஆடு மங்கை= மலையில் விளையாடிய (வளர்ந்த) நங்கையாகிய பார்வதி தேவி. 7. ஆவா வரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித் தாண்டுகொண்டான் பூவா ரடிச்சுவ டென்றலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ ஆ ! ஆ ! அரி, அயன், இந்திரன், வானோர்க்கு அரிய சிவன் 'வா,வா' என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்; பூஆர் அடிச் சுவடு என் தலைமேல் பொறித்தலுமே தே ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ ! aa aa ari ayan inthiran vaanoorkku ariya sivan vaa vaa enRu ennaiyum puuthalaththee valiththu aaNdu koNdaan puuvaar adissuvadu enthalaimeel poRiththalumee theevaana vaapaadi theLLeeNam kottaamoo பொ- ரை: திருமால், பிரமன், இந்திரன் ஏனைத் தேவர்களாகிய விண்ணவர் யாவருக்கும் அடைதற்கரிய முழுமுதற்பொருள் சிவபெருமான். எனக்கு ஐயோவென இரங்கி, நிலவுலகில் வலிய வந்து, ஒன்றுக்கும் பற்றாத என்னை வாவென அழைத்து ஆட்கொண்டருளினான். தனது மலர் போன்ற திருவடி அடையாளங்களை எனது தலைமேற் பதிவித்த அளவிலே, யான் தெய்வத்தன்மையடைந்த திறத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக! Ah! Ah! He came on the earth and bade me, 'Come! Come!' and deliberately took me vassal under Him, although He is beyond the reach of Thirumaal, Brahma, Indra and other gods in heaven. Even as He placed His flowery Feet on my head, I attained heavenly state instantly. Let us chant on this to the drum beats of glory and fame. Note : St. Appar "பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்து வை" திருச்சத்தி முற்றப் பதிகம். Striking similarity in the use of phrases. கு-ரை: 'ஆவா', அதிசயம், அல்லது இரக்கத்தைக் குறிக்குஞ் சொல். வலித்து, வலிந்து என்பதன் விகாரம். சுவடு= குறிப்பு, அடையாளம். தெய்வத் தன்மை, ஈண்டு, சிவத்தன்மையைக் குறிக்கும். கொண்டான், முற்றெச்சம். 8. கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னு மறம்பாவ மென்றிரண்டச்சந் தவிர்த்தென்னை யாண்டுகொண்டான் மறந்தேயுந் தன்கழனான் மறவாவண்ண நல்கியவத் திறம்பாடல் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ கறங்கு ஓலை போல்வது ஓர் காயப் பிறப்போடு இறப்பு என்னும் அறம், பாவம், என்று இரண்டு அச்சம் தவிர்த்து, என்னை ஆண்டுகொண்டான் மறந்தேயும் தன் கழல் நான் மறவா வண்ணம் நல்கிய, அத் திறம் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ ! kaRangku oolai poolvathu oor kaaya piRappoodu iRappu ennum aRampaavam enRu iraNdu assam thavirththu ennai aaNdu koNdaan maRantheeyum thankazalnaan maRavaa vaNNam nalkiya ath thiRampaadal paadi naam theLLeeNam kottaamoo பொ-ரை: சுழலுகின்ற ஓலைக்காற்றாடி போன்ற, உடம்பின் சார்பான பிறப்பு இறப்புக்குக் காரணமான, நல்வினை தீவினையென்னும் இரண்டின் பயத்தையும் இறைவன் நீக்கி உதவினான். என்னை ஆட்கொண்டருளிய பெருமான்தன்னை நான் மறந்தாலும் அவன் திருவடியை நான் மறவாதபடி அதனை என் சிரமேற் பொறித்து அருள்புரிந்தான். அந்தச் சிறப்பினைப் பாடல்களால் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Like the gyrating blades of a fan, this human frame swirls through cycles of births and deaths. Quelling these and the twin bonds of right deeds and the wrong, He took me under Himself. Let us chant on this to the drum beats of glory and fame, so that we may not forget His bejewelled Feet even for a fleeting moment of sloth (Confer Thirukkural 5- Twin bonds இருவினை , Also Civapuraanam line 51. ) கு-ரை: கறங்கோலை - குறுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து முள்ளினாற் பிணைக்கப்பட்ட ஓலைக் காற்றாடி. காயத்தை எடுத்தலும் விடுத்தலும் பிறப்பிறப்பாமென்றவாறு. 'என்னும்' என்ற சொல் காரணங் குறிப்பது, 'பிறப்பென்னும் பேதைமை' யென்றாற் போல. இரண்டு அச்சம்= இரண்டு பயம், இரண்டின் பயம் என இருவகையாகக் கொள்ளலாம். 9. கன்னா ருரித்தென்ன வென்னையுந்தன் கருணையினாற் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னேர் நுடங்கிடைச் செந்துவர் வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ கல் நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால் பொன்-ஆர் கழல் பணித்து, ஆண்ட பிரான் புகழ் பாடி மின் நேர் நுடங்கு இடைச், செம்-துவர் வாய், வெள் நகையீர் ! 'தென்னா, தென்னா' என்று- தெள்ளேணம் கொட்டாமோ! kalnaar uriththu enna ennaiyum than karuNaiyinaal ponnaar kazalpaNiththu aaNdapiraan pukazpaadi minneer nudangku idai senthuvarvaay veNnakaiyiir thennaa thennaa enRu theLLeeNam kottaamoo. பொ-ரை: மின்னலைப் போல வளைந்த இடையும், சிவந்த பவள வாயும், வெள்ளிய பல்லும் உடைய தோழிமாரே! கல்லில் நார் உரித்தாற்போல பக்குவமற்ற என்னையும் தன் பெருங்கருணையினால், தனது பொன்போலும் அருமையான திருவடிகளைப் பணிவித்து ஆட்கொண்டான், எம்பெருமானாகிய சிவபெருமான். அப்பெருமானது பெருமையைத் தென்னா தென்னாவென்று இசையொலியுடன் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக! Although any effort to reform me, this recalcitrant one, is much too difficult, like the attempt to peel of fibre from stone slab, He bade me pay obeisance to His golden Feet and took me under Him. Oh maids of shapely frame, rosy lips and dazzling smiles, let us chant His glories to the accompaniment of drum beats, calling out "Thenna! Thenna! " (Oh Lord of southern land). கு-ரை: கல்லைப் போன்ற கடினமான பொருளிலே நாருரித்தல், மிகவும் அரியதோர் செய்கை. அதுபோலத் தமது கடின நெஞ்சில் அன்புண்டாக்குதல் அரிய செய்கை என்றார். 'பொன்னார்' கழல், என்பதற்குப் பொலங்கழலுடைய திருவடி என்றும் பொருள் கொள்ளலாம். மின்னலைப்போல ஒளியும் வளைவும் உடையது இடை. தென்னா தென்னா என்பது இசைக்குரிய மரபொலிகளுள் ஒன்று. 10. கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்க ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன் புன-வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப் பிடித்து, ஆட்கொண்டவா நயந்து, நெஞ்சம் சின வேல் கண் நீர் மல்கத் - தெள்ளேணம் கொட்டாமோ ! kanaveeyum theevarkaL kaaNpariya kanai kazaloon punaveey anavaLai thooLiyodum pukuntharuLi nanavee enaippidiththu aadkoNdavaa nayanthu nenjsam sinaveel kaN niirmalka theLLeeNam koddaamoo பொ-ரை: எங்கள் பெருமானாகிய சிவனது திருப்பாதங்கள், வானவர்கள் தங்கள் கனவிலும் காணமுடியாத ஒன்று. அத்திருவடிகளில் ஒலிக்கின்ற சிலம்புகள் அணியப் பெற்றுள்ளன. எங்கள் அன்னை உமாதேவியின் தோள்கள் எழிலும், ஒளியும், நயப்பும் உடையன. வளையல்கள் அவளுடைய திருக்கரங்களை அலங்கரிக்கின்றன, அவளோடு எம்பெருமான் இந்த நிலவுலகத்திற்கு வந்து, நான் நனவு நிலையில் இருக்கும் பொழுதே என்னை வலிந்து ஆட்கொண்டு அருள் செய்தான். அவ்வாறு ஆட்கொண்ட அவனது கருணைத்திறத்தை எண்ணும் பொழுது கூரிய வேல் போன்ற நம் கண்களில் இன்பக் கண்ணீர் பெருகுகின்றது. அந்த இன்ப நிலையில் நாம் தெள்ளேணம் கொட்டி ஆடுவோமாக ! Lord Civa of vibrant Feet, beyond the reach of devas even in their dreams, came over along with His consort of bejewelled bamboo like shoulders, entered into me, caught hold of me during my wakeful state itself, and made me His. Glorifying this at heart, Oh maids, let us chant on this to the accompaniment of drum beats of joy, causing tears to well up in our eyes, eyes that are sharp like the fierce spears used in war. கு-ரை: வளை, வளையல், அல்லது வளைவு என்று பொருள்படும். மூங்கில் போலத் தோள் எழிலும் ஒளியும் நெய்ப்புமுடையது என்பது குறிக்கப் பட்டது. 'பிடித்து' என்றது, வலிய ஆட்கொண்டமை குறிக்கும். நயந்து= விரும்பி, அன்பு செய்து, சினம் = பருமை. 11. கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக்கலந் தாண்டலுமே யயன்மாண் டருவினைச் சுற்றமுமாண் டவனியின்மேன் மயன்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய செயன்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின் மேல் மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்டவா பாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! kayal maaNda kaNNithan pangkan enai kalanthu aaNdalumee ayal maaNdu aruvinai suRRamum maaNdu avaniyin meel mayal maaNdu maRRu uLLa vaasakam maaNdu ennudaiya seyal maaNda vaa paadi theLLeeNam kottaamoo பொ-ரை: கயல் மீன் தன்மை மிக்க கண்ணையுடைய உமையம்மை பாகனாகிய சிவபெருமான் அத்துவிதமாய் என்னறிவிற் பொருந்தினான். என்னை ஆண்டருளியவுடன் நிலவுலகில் பக்கத்தார்பால் பற்றொழிந்தது. கடத்தற்கரிய வினையால் வரும் சுற்றத்தார் உறவும் ஒழிந்தது. நெஞ்சின் கண் உள்ள மயக்கமும், எஞ்சியுள்ள சொல்லின் செயலும் ஒழிந்தன. காயத்தின் செய்கையும் தீர்ந்து போன விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Even as the Lord, holding a shared physical frame with elegant fish-eyed consort, came over and took me under Him, there ended for me all existing kin and foes, ended for me all illusory woes of the world, ended for me all the effects of my past deeds (Karma). All deliberation, all discourse, all these too, ended once for all. Let us chant on this to the accompaniment of drumbeats of glory and fame. கு-ரை: 'அவனியில் மேல்' என்பதை இரண்டாமடியின் முதலிற் கொள்க. கயல் - கயலின் தன்மை குறித்தது. குஞ்சுகளைப் பார்வையாற் பொரிவித்தல். அம்மையின் கருணைப் பார்வைக்குக் கயலின் பார்வையை உவமித்தல் மரபு. அருள் பெற்றவுடன் திரிகரணக் குற்றங்கள் ஒழிந்தமை கூறினர். பசு கரணம் நீங்கிப் பதி கரணம் பெற்ற நிலை குறிக்கப்பட்டது 12. முத்திக் குழன்று முனிவர்குழா நனிவாட வத்திக் கருளியடி யேனை யாண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட அத்திக்கு அருளி; அடியேனை ஆண்டு கொண்டு பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி தித்திக்குமா பாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! muththikku uzanRu munivarkuzaam nanivaada aththikku aruLi adiyeenai aaNdu koNdu paththi kadaluL pathiththa paranjsoothi thiththikku maapaadi theLLeeNam kottaamoo பொ-ரை: தவம் செய்யும் முனிவர் கூட்டம் வீடுபேறு அடைதற்பொருட்டு மிகவும் வாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருள் செய்யாமல் யானைக்கு அருள் செய்தான் சிவபெருமான். அடியேனையும் ஆட்கொண்டு அருளினான். மேலான ஒளி உருவமான அவன் என்னை அன்புக்கடலுள் பதியும்படிச் செய்தான். இவ்வாறு இன்பம் கொண்ட வகையைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! The congregations of holy folks in search of liberation, toiled and toiled hard in their mission and yet merely got withered and wearied, unable to achieve their goal. Whereas He showed me the direction for the same goal of liberation and graced me. Also, He took me under Him and steeped me in the sea of devotion. Let us chant on this benevolent nature of our Lord to the accompaniment of drum beats of glory and fame. கு-ரை: யானை, காளத்தியில் இறைவனை வணங்கி, முத்தி பெற்றது. திருவிளையாடற் புராணத்தில் வெள்ளை யானை சாபந் தீர்த்தமை கூறப் பட்டது. 13. பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடு மார்பாடுஞ் சாரா வகையருளி யாண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ பார் பாடும், பாதாளர் பாடும், விண்ணோர் - தம் பாடும் ஆர் பாடும், சாரா வகை அருளி, ஆண்டு கொண்ட நேர் பாடல் பாடி, நினைப்பு-அரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ ! paarpaadum paathaaLar paadum viNNoor thampaadum aarpaadum saaraa vakai aruLi aaNdu koNdu neerpaadal paadi ninaippariya thanipperiyoon siirpaadal paadinaam theLLeeNam kottaamoo பொ-ரை: நிலவுலகம், மேலுலகம், கீழுலகம், வேறு எவ்வுலகத்தாரிடத்தும் யான் சென்று பிறவாமல் காத்து என்னை ஆட்கொண்டு அருளினான் சிவபெருமான். அவனுடைய நேர்மையைப் புகழும் பாடலைப் பாடுவோம். எண்ணத்திற்கெட்டாத ஒப்பற்ற பெருந்தகையானாகிய பெருமானது புகழையும் நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! I was so ordained by the Lord that I do not mingle with worldly folks, nor with those of the underworld, nor for that matter with the heaven dwellers or anyone else, and was taken as vassal under Him in His grace. Let us chant on this act of virtue, chant on the bliss of the peerless Lord Civa to the accompaniment of drum beats of glory and fame. கு-ரை: பாடு = பக்கம், இடம். பிறவியற்றமையால் தமக்கு மூவுலகிலும் திரிதலில்லையென்று அறிவுறுத்தினர். நேர்= நேர்மை, உண்மை 14. மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியா னுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தாற் சேலேர்கண் ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ மாலே பிரமனே, மற்று ஒழிந்த தேவர்களே நூலே, நுழைவு அரியான் நுண்ணியன் ஆய் வந்து, அடியேன் பாலே புகுந்து, பரிந்து உருக்கும் பாவகத்தால் சேல்-ஏர்-கண் நீர் மல்கத் - தெள்ளேணம் கொட்டாமோ ! maalee piramanee maRRu ozintha theevarkaLee nuulee nuzaivu ariyaan nuNNiyanaay vanthu adiyeen paalee pukunthu parinthu urukkum paavakaththaal seel eer kaNniirmalkath theLLeeNam kottaamoo பொ-ரை: அரியும், அயனும், ஏனைத் தேவர்களும், மறை முதலிய அறிவு நூல்களும் புகுந்தறிய முடியாத அளவுக்கு நுட்பம் உடையவன் எம்பெருமானாகிய சிவபெருமான். அவன் என்னிடத்தே எழுந்தருளி என்னிடம் போந்தான். எனக்கு இரங்கி, என்னுள்ளத்தை உருகுவித்தான். அவ்வாறு உருகப்பண்ணிய இயல்பினைப் பாடி சேல்மீன் போல் அழகிய நம் கண்களில் நீர் பெருகும்படி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Be it Thirumaal, Brahma or the rest of the gods, or even the four scriptures (நான்மறை) no one can comprehend His true nature. And yet, He came over to me in subtle form, moving my heart in a gesture of mercy. On this let us chant to the accompaniment of drum beats of glory, tears welling up in our fish-like eyes. கு-ரை: 'மாலே, பிரமனே' என்பதில், ஏகாரம், எண் குறித்தது. பாவகம் = இயல்பு, கருத்து. 15. உருகிப் பெருகி யுளங்குளிர முகந்துகொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாந் தெள்ளேணங் கொட்டாமோ உருகிப் பெருகி, உளம் குளிர முகந்து கொண்டு பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை மருவித் திகழ் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம் திருவைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ ! uruki peruki uLamkuLira mukanthu koNdu parukaRku iniya parangkaruNai thadangkadalai maruvi thikazthennan vaarkazalee ninainthadiyoom thiruvai paravi naam theLLeeNam kottaamoo பொ-ரை: குடிப்பதற்கு இனிமை பயக்கும் மேலான சிவபெருமானது அருட்பெருங்கடலை அடைந்து அதன் கண்ணுள்ள அருள் அமுதமாகிய நீரை அருந்துவோம். அவ்வாறு அருந்தியவுடன் நமது உள்ளம் உருகிற்று. உடல் பூரித்தது. நெஞ்சம் குளிர்ந்தது. தென்னாட்டுத் தலைவனாகிய அவனது அழகு பொருந்திய நீண்ட கழல்களை உள்ளத்தில் எண்ணுவோம். அவனது அடியவர்களாகிய நமக்குச் செல்வம் போன்று விளங்கும் அவனைத் துதித்துக் கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! With intense melting hearts, let us freely imbibe the sweet waters of the expansive sea of universal grace. Let us join the blissful Feet of the Lord of the southern land paying obeisance to His glory, let us chant prayers to the accompaniment of drum beats of joy. கு-ரை: பெருகி= பூரித்து, 'திகழ்' என்பதை, 'வார்கழலே' என்பதோடு கூட்டுக. 16. புத்தன் புரந்தராதி வயன்மால் போற்றி செயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த வத்த னணி தில்லை யம்பலவ னருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ புத்தன்; புரந்தர-ஆதி அயன் மால் போற்றி செயும் பித்தன்; பெருந்துறை மேய பிரான்; பிறப்பு அறுத்த அத்தன்; அணி தில்லை அம்பலவன்; அருள் கழல்கள் சித்தம் புகுந்தவா- தெள்ளேணம் கொட்டாமோ ! puththan purantharaathi ayan maal pooRRi seyum piththan perunthuRai meeyapiraan piRappaRuththa aththan aNithillai ampalavan arudkazalkaL siththam pukunthavaa theLLeeNam kottaamoo பொ-ரை: பேரின்பத்தைத் தரக்கூடியவனாகிய சிவபெருமான் இந்திரன், பிரமன், திருமால் முதலிய தேவர்களால் போற்றி வணங்கக் கூடிய புதுமையானவன். அவன் அடியார்க்கு அன்பன். திருப்பெருந்துறையில் வீற்றருளிய மன்னன்; பிறவியைத் தொலைத்த அப்பன்; அழகிய தில்லைத் திருச்சபையில் ஆடுகின்றவன். அவனது திருவருட் பாதங்கள் எமதுள்ளத்திற் புகுந்த விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Our Lord is ever fresh and stands adored by Indra, Brahma and such-like gods. He of wayward stance, He that favoured the shrine of Thirup-Perun-Thurai, Sire that quelled my future births. He of the elegant public hall of Thillai! Let us chant on His graceful Feet entering our minds to the accompaniment of drum beats of joy. கு-ரை: புத்தன் = புதியவன், புத்தியுடையான் என்று பொருள் கோடலும் உண்டு. 'புதன்', புத்தன் என விரிந்தது என்பார். புத்தனாகிய சமய முதல்வன் இங்கே குறிக்கப்படவில்லை. போற்றி= வணக்கம். சித்தம்= நினைவு, உள்ளம். பித்தன் = பேரின்பத்தைத் தரக்கூடியவன். “பித்தா பிறைசூடி” என்ற சுந்தரர் தேவாரத்தையும் நினைவு கூர்க. 17. உவலைச் சமயங்க ளொவ்வாத சாத்திரமாஞ் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழலிணைக டந்தருளுஞ் செயலைப் பரவிநாந் தெள்ளேணங் கொட்டாமோ உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம் ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும் கவலைக் கெடுத்துக், கழல் இணைகள் தந்தருளும் செயலைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ! uvalai samayangkaL ovvaatha saaththiramaam savalai kadaluLanaay kidanthu thadumaaRum kavalai keduththu kazaliNaikaL thantharuLum seyalai paravi naam theLLeeNam kottaamoo பொ-ரை: பொய்ச்சமயங்களும் , பொருத்தமில்லாத நூல்களும் ஆகிய கடலில் விழுந்து தடுமாறிக் கொண்டிருந்த என் துன்பத்தை எம்பெருமானாகிய பெருமான், தனது இரண்டு திருவடிகளையும் எனக்குக் காட்டி, என் சிரமேற் பொறித்து, என் துன்பத்தை ஒழித்தான். அவனது இந்தத் திருவருட்செயலை வாழ்த்தி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! We totter amidst the stifling sea of woes, the quagmire of pointless creeds and a host of religions.Ending all the sorrows and granting the bliss of His benign bejewelled Feet, He comes over to us . Let us extol this act of grace and chant on Him to the accompaniment of drum beats of joy. கு-ரை: உவலை= பொய், சவலை=மெலிவு, கவல்= கவலை என்பதன் கடைக்குறைவு. 18. வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினுந் தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும் போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல், நீர், மண், கெடினும் தான் கெட்டல் இன்றிச், சலிப்பு அறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு. என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் - தெள்ளேணம் கொட்டாமோ ! vaankeddu maarutham maaynthu azalniir maNkedinum thaankeddal inRi salippu aRiyaath thanmaiyanukku uunkeddu uyirkeddu uNarvukeddu en uLLamum pooy naan kedda vaa paadi theLLeeNam kottaamoo பொ-ரை: ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய பஞ்சபூதங்கள் அனைத்தும் அழிந்த காலத்தும் தான் ஒடுங்குதலின்றி அசைவிலா இயல்புடையவன் எம் பெருமானாகிய சிவன். அவன் பொருட்டு என் உடலும், ஆவியும், சுட்டறிவும், அகக் கரணங்களும், தற்போதமும் ஒழிந்தன. இவ்வாறு என்னை மாற்றி அமைத்த அவனது தன்மையினைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Even if the sky get destroyed and so too the earth, water, fire and air dissolve and cease to be, He stands out unique, enduring, suffering no less whatsoever. I have surrendered my whole unto Him, my physique, my consciousness, my mind and my soul. Let us chant on how I relinquished all these to the accompaniment of drum beats of glory and fame கு-ரை: சலிப்பு = அசைவு. அண்டத்தில் ஐம்பூதங்களின் கேட்டினை உணர்த்தியதுபோல, பிண்டத்திலும் 'ஊன், உயிர், அறிவு, உள்ளம், நான்' என்ற ஐந்தின் ஒடுக்கங் கூறினமை காண்க. 19. விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோங் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ விண்ணோர் முழுமுதல்; பாதாளத்தார் வித்து ; மண்ணோர் மருந்து; அயன், மால், உடைய வைப்பு: அடியோம் கண்-ஆர, வந்து நின்றான்; கருணைக் கழல் பாடித் 'தென்னா, தென்னா' என்று தெள்ளேணம் கொட்டாமோ ! viNNoor muzumuthal paathaaLaththaar viththu maNNoor marunthu ayanmaal udaiya vaippadiyoom kaNNaara vanthu ninRaan karuNai kazalpaadi thennaa thennaa enRu theLLeeNam kottaamoo பொ-ரை: வானவர்க்கு முழுமுதற் தன்மையானவன் எம்பெருமானாகிய சிவன். அவன் கீழுலகினர்க்கு அடிப்படை மூலம் ஆவான். மண்ணுலகினர்க்கு அமுதமாய் விளங்குபவன். நான்முகன், திருமாலுக்குத் தேடி வைத்த நிதி போலுமாய் விளங்குபவன். அடியவர்களாகிய நாம் கண்ணாரக் காணுமாறு ஆசானாய் எழுந்தருளி வந்தான். அன்னானின் அருட் பாதங்களைத் தென்னா தென்னா என்று பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Unique, primal head of all gods above,source of all folks below, for the earthlings a rare medicine, truly a treasure trove for Brahma and Thirumaal! Such is our Lord Civa, who came over and stood before me to my eyes' delight. On His bejewelled Feet of grace, let us chant to the accompaniment of drum beats, crying out "Thenna! Thenna!" (Oh Lord of the southern land ) கு-ரை: இறைவன் தேவர்கட்கு ஒவ்வொரு தலைமையை வழங்கி அவர்கள் அனைவர்க்கும் தலைவனாக இருத்தலின், "விண்ணோர் முழுமுதல்” என்றும் பாதல உலகத்தார் தம் பாவம் காரணமாக அவ்விடத்துக் கிடப்பராதலானும், அவரை அப்பாவத்தினின்று நீக்கி நல்வினையால் மேல் ஏறி இன்பம் பெறச்செய்தல் பற்றி, ' பாதாளத்தார் வித்து' என்றும், மனிதரை ஆணவ மலமாகிய மிருத்துவைக் கடந்து வீடு பெற்று என்றும் ஒரு பெற்றியராய் வாழுமாறு செய்தலின், “மண்ணோர் மருந்து” என்றும், (மருந்து = அமுதம்) அயன் மால் இருவரையும் அணுக்கராகக் கொண்டு, தானும் அவருள் ஒருவனாய், காரணக் கடவுளராகும் பெருந்தலைமையைத் தந்து மிக்க இன்பத்தைப் பயத்தலின், 'அயன் மாலுடைய வைப்பு' என்றும், (வைப்பு= சேம நிதி) ' இவ்வாறு அவரவர் தகுதிக்கேற்ப வேறுவேறு வகையாக அருள்புரிகின்ற அவன் யாதொரு தகுதியும் இல்லாத நமக்கு, இவ்வூனக்கண்ணாலும் நிரம்பக்கண்டு இன்புறும்படி வந்து தங்கி அருள் புரிந்தான்' என்பார், 'அடியோம் கண்ணார வந்து நின்றான்' என்றும், 'அத்தகைய பேரருள் திறத்தை எஞ்ஞான்றும் மறவாது போற்றுவதன்றி நாம் அவனுக்குச் செய்யும் கைம்மாறு யாது' என்றும் அருளிச் செய்தார். 20. குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையா ணலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறு மலம்பார் புனற்றில்லை யம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ குலம் பாடிக், கொக்கு-இறகும் பாடிக் கோல் வளையாள் நலம் பாடி, நஞ்சு உண்டவா பாடி, நாள் தோறும் அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பு ஆடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ ! kulam paadi kokku iRakum paadi koolvaLaiyaaL nalam paadi nanjsu uNda vaapaadi naaLthooRum alampu aar punal thillai ampalaththee aadukinRa silampu aadal paadi naam theLLeeNam kottaamoo பொ-ரை: நாம் ஒவ்வொரு நாளும், இறைவன் திருவடிவங்களுக்குரிய வேடர்குலம் முதலிய குலத்தையும், அவன் சூடிய கொக்கிறகையும் புகழ்ந்து பாடுவோம். சங்கு வளையல் அணிந்த உமையம்மையின் நன்மைகளைப் பாடுவோம். இறைவன் தேவர்களை உய்விப்பதற்காகத் தான் விடத்தை உண்ட விதத்தைப் பாடுவோம். நீர்நிறைந்து அசையும் குளங்களையுடைய தில்லைச் சபையிலே கூத்தியற்றும் இறைவனது கழல் அசைதலையும் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக ! Praise be to his clan of devotees, praise be to His feathery outfit, praise be to the grandeur of His fair and bangled consort, praise be to His consuming the poison of the churned seas, praise be to His diurnal dance with clinking anklet sounds at the public hall of Thillai where sizzling waters abound! So singing this way, let us pay obeisance to Him to the accompaniment of drum beats of joy. கு-ரை: 'குலம்' என்பதற்கு மேன்மை என்றும் பொருள் கொள்ளுவர். 'கொக்கிறகு' என்பதற்கு வேட்டுவ வடிவம் கொண்ட காலை, இறைவன் சூடிய கொக்கின் இறகு என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. அலம்பு = அசைதல். புனல் = நீர் நிலை. நலம்= கருணையுமாம். THIRUCHCHITRAMBALAM 12. திருச்சாழல் 12. THIRUCH-CHAAZHAL (சிவனுடைய காருணியம்) The Sacred Dialogue on Civan's தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compassionate Energy நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் 'சாழல்' என்பது, மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று என்னும் அளவே, இதனால் அறியப்படுகின்றது. சிலப்பதிகார அரங்கேற்றுகாதை உரையில், (12:25) அடியார்க்கு நல்லார், 'பல்வரிக் கூத்தாவன இவை' என்பதற்கு எடுத்துக் காட்டிய சூத்திரத்துள், "நல்லார்தந் தோள் வீச்சு நற்சாழல்" என்பதொன்றுமே இதுபற்றிக் காணப்படும் பண்டைய குறிப்பு. இக்குறிப்பினால், இது மகளிர் விளையாட்டு என்னும் துணையே ஒருவாறு கூறலாகும். பிறிதொன்றும் இதுபற்றி அறிதற்கில்லை. பிற்காலத்தில் அம்மானைப் பாட்டில் வரும் தடைவிடை முறை, அடிகள் காலத்தில் சாழற்பாட்டில் அமைந்திருந்தது என்பது இப்பகுதியால் அறியப்படுகின்றது. இத்தடைவிடை முறையை அடிகள், புராண வரலாறு பற்றிப் புறச் சமயத்தார் சிவபெருமானது கடவுள் தன்மைக்குக் கூறும் தடைகட்கும் அவற்றிற்குச் சிவனடியார் கூறும் விடைகட்குமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார். இதனானே, அடிகள் தில்லையில் எழுந்தருளியிருந்த பொழுது ஈழநாட்டினின்றும் போந்த புத்தரோடு வாதிட்டு அவர்களை ஊமையராக்கியபின், அவரோடு வந்த ஈழநாட்டு அரசன் ஊமை மகளை, அவன் வேண்டுகோட்கு இரங்கி ஊமை நீங்கச் செய்து புத்தர்கள் எழுப்பிய தடைகளை அடிகள் தாமே எழுப்பி அவளை வினாவ, அவளே அவற்றிற்கு விடை கூறியபின் அந்நிகழ்ச்சியை இத்திருச்சாழலாகப் பாடியருளினார் என்னும் வரலாறு தோன்றியது போலும் ! இதனுள் கூறப்படும் தடைவிடைகள் போலும் தடைவிடைகளைக் கந்தபுராண ஆசிரியர் தட்ச காண்டம் ததீசி உத்தரப் படலத்துள் அமைத்துள்ளார். வரிப்பாட்டு முறையில் இது, களவிடத்துப் பிரிவின் கண் ஆற்றாமை மிகுதியால் தலைவி தலைவனை இயற்பழித்தவழி, தோழி இயற்பட மொழிந்து ஆற்றுவித்தலாக அமைந்து உள்ளது. தலைவி இயற்பழித்தலை, 'செங்கடுமொழி ' எனவும், தோழி அதனை மறுத்து இயற்பட மொழிதலை ‘அன்பு தலையடுத்த வன்புறை' (பொருள் 112) எனவும் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றி ஈண்டு இயற்பழிப்பாள் தோழி எனக் கூறின் அவள் தலைவியை 'ஏடீ' என்றல் பொருந்தாமை அறிக. முன்பு கைகொட்டுதலை வைத்து, பின்பு தோள்வீசுதலை வைத்திருத்தலால், இதனை இவ்விளையாட்டின் இயல்பு பற்றி இடைவைத்துக் கோத்தனர் போலும். இதனுள் சிவபெருமானது அருட்குணங்களின் சிறப்பே விளக்கப்படுதலின், இதற்கு, சிவனுடைய காருணியம் எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இதுவும் முன்னைப் பகுதி போலும் கொச்சகக் கலிப்பாவான் இயன்றது . Framed in the format dialogues among girl-children, the "Chaazhal" metres were once a popular game in which one maid raises a query and the other offers a suitable reply. The answer ends with a refrain 'Chaazhal" as if in assertion of the point made . Our Saint compiles a series of stanzas ( 20 in number) in this manner, through which he raises questions in saiva theology ( in the first two lines of each verse) which common folks may like to ask, and supplies relevant answers through the responding maid in the latter two lines. A truly deep and reverent study of this composition promotes high debating skills in the armour of devotees. During Saint Maanikkavaachakar's sojourn in Chidambaram, he had to engage in a theological debate with some Sri Lankan buddhist monks who came to Thillai in a group, headed by their king. They were overwhelmed by the clarity and rationale of the Saint's expostulations. Upon which the King made a fervent plea to the saint, for curing his daughter of her chronic dumbness. Praying of Lord Civa, out of compassion, the saint succeeded in restoring her power of speech. Thiruch-chaazhal has ever since remained as a venerable composition in saiva theology,in which, according to folklore, the latter two lines of each stanza are the words uttered by the daughter of the Sri Lankan King. 12. 1 பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதுந் திருவாயான் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை யீசனவ னெவ்வுயிர்க்கு மியல்பானான் சாழலோ பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம் பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண் ஏடீ ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும் கொண்டு என்னை ? ஈசன் - அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ ! puusuvathum veNNiiRu puuNpathuvum pongkaravam peesuvathum thiruvaayaal maRaipoolum kaaNeedii puusuvathum peesuvathum puuNpathuvum koNdennai iisan avan evuyirkkum iyalpaanaan saazaloo பொ-ரை: ஆண்டவன் திருமேனிமேல் பூசுவது வெள்ளிய திருநீற்றுப் பொடியாகும். ஆபரணமாக அணிவதோ பாம்பாகும். திருவாயினால் பேசுவது தெளிவில்லாத இரகசியமே போலும். தோழியே! இவற்றைப் பூசுவதும், பேசுவதும், பூண்பதும் செய்து என்ன பயன் ? எனில் இவற்றால் இறைவன் எல்லா உயிர்களுக்கும் அவ்வவற்றிற்குத் தக்க பயன் அளிப்பவன் ஆவான். Oh maid, see how strange, that He smears Himself with ash so white, wears ferocious cobras on His frame and then chants in beatitude the holy scriptures! Note Thee, maid, He is supreme rightful Lord for one and all, ever inclined to bless us all. Hence , of what significance are the smear on His frame, His chant and His ornaments (Chaazhalo) Note: His illimitable generosity is portrayed here- a characteristic feature out of the eight attributes of Lord Civa. கு-ரை: 'பூசுவதும் ' முதலியவற்றில் உம்மை இழிவைக் குறித்தது. ஏடி என்பது தோழியைக் குறிக்கும் வழக்குச் சொல். இயல்பு = தகுதி, பலன். சாழல் மகளிர் விளையாட்டில் ஒன்று. மறையோதுவதனால் அறிவினைத் தந்தும், அரவம் அணிவதால் உலகினை இயக்கும் தனது சத்தியை உணர்த்தியும், வெண்ணீறணிவதால் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்கியும் எல்லா உயிர்கட்கும் நற்பயன் அளித்தலின் இயல்பானான் என்றார் 2. என்னப்ப னெம்பிரா னெல்லார்க்குந் தானீசன் றுன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது வென்னேடீ மன்னுகலை துன்னுபொருண் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன் ; துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்? ஏடீ ! - மன்னுகலை, துன்னுபொருள் மறைநான்கே, வான்சரடாத் தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ! en appan empiraan ellaarkkum thaan iisan thunnam pey koovaNamaa koLLum athu enneedii mannukalai thunnuporuL maRai naankee vaan saradaa thannaiyee koovaNamaa saaththinankaaN saazaloo பொ-ரை: எந்தையாயும், எம் தலைவனாகவும், எல்லோருக்கும் ஈசனாகவும் உள்ளவன் சிவபெருமான். அவன் கிழிந்த துணிகளைச் சேர்த்துத் தைத்து, அந்த ஆடையைத் தான் நீர்ச்சீலையாகக் கொண்டான். இது எதனால்? தோழி! ஏன் எனில் நான்கு மறைகளையே பெரிய அரைநாணாக அணிந்துள்ளான். நிலை பெற்ற மெய் நூலில் நிறைந்த பொருளையே கோவணமாகத் தரித்துள்ளான் என்று அறிக How come, Oh maid, that this our father, our god that is Lord of all, wear a mere woven piece of loin cloth. Note thee this, my friend, with the thread of abiding love and profound truth of the scriptures four, He wove the very loin cloth that He puts on as His wear (Chaazhalo). Note: Reference to His omniscience is implied here. கு-ரை: துன்னம்= தைத்த துணி, மன்னு கலை = மெய்ந் நூல். தன்னையே என்பதைத் துன்னு பொருள் என்பதோடு சேர்க்க. மறை நான்கென்றது நால்வகை வாக்குகளைக் குறிக்கும். சரடு= அரைக்கயிறு. 3. கோயில் சுடுகாடு கொல்புலித்தோ னல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் றனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்றனிய னாயிடினும் காயிலுல கனைத்துங் கற்பொடிகாண் சாழலோ கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ ! தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ! kooyil sudukaadu kolpuliththool nalaadai thaayum ili thanthai ili thaanthaniyan kaaNeedii thaayum ili thanthai ili thaanthaniyan aayidinum kaayil ulakanaiththum kaRpodikaaN saazaloo பொ-ரை: இறைவனது ஆலயம் சுடுகாடாகும். கொல்லும் இயல்புடைய புலியின் தோல் அழகிய ஆடையாக உள்ளது. அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. தான் தனியாக இருப்பவன். தாயுமின்றி, தந்தையுமின்றித் தான் தனியனாக இருந்த போதிலும், அவன் கோபம் உற்றானாயின் உலகம் அனைத்தும் கல்லின் பொடிபோல் தூளாகி விடுமென்று அறிக. How strange, Oh maid, His residence is the burning ghat, His dress the fierce tiger hide; And He has neither father nor mother, but stands single unique, all by Himself ! Although single, know this, my friend, should He ever get furious all worlds would turn into mere dust (Chaazhalo). Note: His self-created existence as also His forbearance are referred to in this stanza. கு-ரை: எல்லாம் ஒடுங்கிய இடமே சுடுகாடாகும். புலித்தோலுடைமை உயிர்களின் செருக்கை அடக்க வல்லான் என்பதைக் குறிக்கும். தானே எல்லாம் தோன்றுதற்குக் காரணனாய்த் தான் தோற்றம் இல்லாதவனாய், ஒப்பற்ற ஒருவனாயிருத்தலின் "தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்" என்றார். எல்லாவற்றையும் ஒடுக்கும் முதல்வன் என்பது இறுதியடியால் குறிக்கப்பட்டது. 4. அயனை யனங்கனை யந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கண் மூன்றுடைய நாயகனே தண்டித்தாற் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ அயனை, அனங்கனை, அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ ! நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் சயம் அன்றோ வானவர்க்குத், தாழ்குழலாய்? சாழலோ ! ayanai anangkanai anthakanai santhiranai vayanangkaL maayaa vadusseythaan kaaNeedii nayanangkaL muunRudaiya naayakanee thaNdiththaal sayam anRoo vanavarkku thaazkuzalaay saazaloo பொ-ரை : பிரமனையும், மன்மதனையும், யமனையும், சந்திரனையும் சிவபெருமான் வருத்தி அடக்கினான். அதன் அடையாளங்கள் அழியாத வடுக்கள் உடையவராக ஏன் இறைவன் செய்தானோ எனின், அது அவனது முழுமுதல் தன்மையை உணர்த்துவதற்காகவே. முக்கண்ணை உடைய பெருமான் அவ்வாறு அவர்களைத் தண்டித்தது, மெய்யின் வெற்றியாகுமன்றோ ? He dealt a lasting blow on Brahma, Kaaman, Yamaa and the Moon! How come this, Oh maid? Don't you know, Oh friend that, when the three-eyed Lord Himself delivers such punishment, it is indeed a great reward for the heaven dwelling gods (Chaazhalo)? Note: Instant extirpation (of inequities and transgressions), for all those that happen to receive punishment directly from the hands of Lord Civa. கு-ரை: அனங்கன் = உடம்பில்லாதவன். வயனம் = வகை. அடையாளம். வடு =புண்ணின் தழும்பு. சிவபெருமானை இகழ்ந்தமையால் அத்தேவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், சிவ வடிவமுடைய வீரபத்திரரால் அவர்கள் தண்டனை அடைந்தமை இறைவனால் தண்டனை அடைந்ததை ஒக்கும். அது சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை வானவர்க்கு அறிவுறுத்துதலின் அது உண்மையின் வெற்றி என்ற கருத்துப் பற்றி 'சயமன்றோ' என்றார். 5. தக்கனையு மெச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணந் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதா னென்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி யருள்கொடுத்தங் கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ தக்கனையும், எச்சனையும், தலை அறுத்துத் தேவர் கணம் தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்தது தான் என்? ஏடி ! தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ ! thakkanaiyum essanaiyum thalai aRuththu theevarkaNam thokkana vanthavar thammai tholaiththathu thaan enneedii thokkana vanthavar thammai tholaiththaruLi aruL koduththangku essanukku mikaiththalai maRRu aruLinan kaaN saazaloo பொ-ரை: சிவபெருமானை மதியாது வேள்வி இயற்றிய அயன் புதல்வனாகிய தக்கனையும் யாகத் தலைவனையும் இறைவன் கொன்று ஒழித்தார். தேவர் கூட்டங்கள் தொகுதியாக வந்தவர்களை வருத்தியது என்ன செய்கை எனில், தொகுதியாக வந்தவர்களை வருத்தி அடக்கினாலும் இறைவன் அவர்களுக்கு இரங்கி அருளினான். யாகம் இயற்றிய தக்கனுக்கு இழிந்த ஆட்டுத்தலையைக் கொடுத்து அருளினான் என்று அறிக. What would you say, Oh maid, Oh his slashing of the heads of Dakshan and Echchan and on the crushing of all the devas assembled in the vain congregation? Note thee, my friend, He, nevertheless, bestowed grace on them all, and granting extra head, restored them back to life (Chaazhalo). Note: Dakshan arranged for a sacrifice ignoring Lord Civa and was duly punished as also other gods who attended the ritual. Echchan is the chief priest of the ritual - a role played by Dakshan himself. கு-ரை: முதலடியில் எச்சன் என்பது வேள்வியியற்றுங் குருவைக் குறித்து. நாலாவது அடியில் வேள்வி இயற்றுவானாகிய தக்கனைக் குறித்தது. தக்கனுக்கு ஆட்டுத்தலை கொடுத்தமை. " ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி யுந்தீபற" என்றமையால் உணர்க. மிகை என்பது குற்றம், இழிவு என்ற பொருளில் வந்தது. தன்தலைக்கு வேறான தலையை அதிகமான தலை என்பாரும் உளர். 6. அலரவனு மாலவனு மறியாமே யழலுருவாய் நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா னென்னேடீ நிலமுதற்கீ ழண்டமுற நின்றிலனே லிருவருந்தஞ் சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய் நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றது தான் என்? ஏடீ நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல், இருவரும் தம் சலமுகத்தால், ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ ! alaravanum maalavanum aRiyaamee azal uruvaay nilamuthaRkiiz aNdamuRa ninRathuthaan enneedii nilamuthaRkiiz aNdamuRa ninRilaneel iruvarumtham salamukaththaal aangkaaram thaviraarkaaN saazaloo பொ-ரை: பூவில் உறைகின்ற நான்முகனும் திருமாலும் அடிமுடி தேடி அறியாத வண்ணம் அனற் பிழம்பாய் நின்றான் இறைவன். அவ்வாறு பாதாளம் முதல் அண்டம் முடிய பொருந்த நின்றது எக்காரணத்தால் எனின் நிலத்திற்குக் கீழ்ப்பட்ட நிலம் முதல் அண்டத்திற்கு மேலாகவும் செல்லுமாறு நில்லாமற் போனால் அயன், அரி இருவரும் தமக்குள் நேரிட்ட தணியாப் பகையினால் செருக்கை ஒழிக்க மாட்டார்கள். Oh maid, would you tell me why He stood out as a flame so high, stretching from the nethermost world to farthest heaven, much to the chagrin of Brahma and Thirumaal? Note thee, my friend, had He not stood thus at that time Brahma and Thirumaal would not have been freed from ego and conceit (Chaazhalo). Note: Elimination of ego and conceit is a pre-requisite for salvation. And this comes about by the grace of Lord Civa alone. கு-ரை: நிலமுதற்கீழ் என்பது எல்லாவுலகிற்குங் கீழ்ப்பட்ட, முதல் தத்துவத்திற்குங் கீழாக எனப் பொருள்படும். அண்டமுற என்றது எல்லா உலகிற்கும் மேற்பட்ட எல்லைக்கும் அப்பாலாக என்று பொருள்படும். சலம் = பகை, கோபம், ஆங்காரம், செருக்கு. அலரவன் - என்பதில் அலர் தாமரை மலரைக் குறிக்கும். 7. மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தா லவன்சடையிற் பாயுமது வென்னேடீ சலமுகத்தா லவன்சடையிற் பாய்ந்திலளேற் றரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்று ஒருத்தி சலமுகத்தால், அவன் சடையில் பாயும் அது என்? ஏடீ ! சலமுகத்தால், அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணி எல்லாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து, பெருங் கேடு ஆம்; சாழலோ ! malaimakaLai orupaakam vaiththalumee maRRoruththi salamukaththaal avan sadaiyil paayum athu enneedii salamukaththaal avan sadaiyil paaynthilaLeel tharaNi ellaam pilamukaththee pukappaaynthu perumkeedaam saazaloo பொ-ரை: இமயமலை அரசன் புதல்வியாகிய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாதியில் வைத்துள்ளான் இறைவன். இருந்தும், இறைவனது மற்றொரு சக்தி நீர் வாயிலாக அவன் சடையின்கண் சென்று பொருந்தியது என்ன காரணம்? ஏன் எனில், நீர் வாயிலாக இறைவன் சடையில் விழுந்திடாவிடில், அவளது வேகம் காரணமாக இந்நிலவுலகம் பாதாளத்தில் அழுந்தி, விழுந்து பெரும் கெடுதி ஏற்பட்டு விடும். While He is having His consort on one part of His frame, another maid (Ganga) leaped down on to His matted hair! How come, and why is this so? Oh maid! Hark, my friend, had she not leaped in His braided locks thus, the whole world would have been washed away (Chaazhalo)! Note: Lord Civa answered the prayers of Bhagiratan who was anxious to bring down the holy Ganges to the earth for the consecration of the ashes of his ancestors. The severity of the free falling waters of the Ganges could be moderated only by Lord Civa and none else. He protected the earthlings from the deluge of avalanches by taking on the waters into His matted hair and then letting out on the earth gently. கு-ரை: சலமுகத்தால் என்பதற்குக் கோபங்காரணமாக என்றுரைப்பாரும் உளர். உமையிடத்து வைத்த பொறாமையால் தலையிற் போய் ஒருத்தி பாய்ந்தனள் என்பது நகைச்சுவை பயக்கும். பிலம்= பாதாளம். 8. கோலால மாகிக் குரைகடல்வா யன்றெழுந்த வாலால முண்டா னவன்சதுர்தா னென்னேடீ யாலால முண்டிலனே லன்றயன்மா லுள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ கோலாலம் ஆகிக் குரைகடல்வாய், அன்று எழுந்த ஆலாலம் உண்டான்; அவன் சதுர்-தான் என்? ஏடீ ! ஆலாலம் உண்டிலனேல், அன்று, அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண்; சாழலோ ! koolaalam aaki kurai kadalvaay anRezuntha aalaalam uNdaan avan sathur thaan enneedii aalaalam uNdilaneel anRayanmaal uLLidda meelaaya theevar ellaam viiduvar kaaN saazaloo பொ-ரை: கொந்தளிக்கிற பாற்கடலின் கண் பேரொலியோடு கிளம்பியது ஆலகால விடம். அவ்விடத்தை உணவாகக் கொண்ட பெருமானின் திறமைதான் என்ன? அவ்வாறு ஆலகால விடத்தை இறைவன் அருந்தியிருக்காவிடில் திருமால், பிரமன் முதலான மேலான விண் அதிபதிகள் எல்லோரும் இறந்தொழிவர் என்று அறிக. When in the days of yore, a virulent poison rose from the frothing sea (churned by asuraas and devas). He non-chalantly drank this venom. How smart and dexterous is He? Would you please explain? Oh maid? Hark ye, my friend, had He not done so then, all celestial gods would have perished, including Brahma and Thirumaal (Chaazhalo). Note: The unique valour and generosity of Lord Civa is portrayed here. The churning of the ocean for the elixir of eternity has been referred to in all saivite literature - vide 'Thiru Manthiram' ஓடி வந்தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்.... கு-ரை: கோலாலம்= பேரொலி, சதுர் = திறமை, சாமர்த்தியம். விடுவர்= இறப்பர். 9. தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான்; பெரும் பித்தன் காண்; ஏடீ! பெண்பால் உகந்திலனேல், பேதாய் ! இரு நிலத்தோர் விண்பால் யோகு எய்தி வீடுவர் காண்; சாழலோ ! thenpaal ukanthu aadum thillai siRRampalavan peNpaal ukanthaan perumpiththan kaaNeedii peNpaal ukanthilaneel peethaay irunilaththoor viNpaal yookueythi viiduvarkaaN saazaloo பொ-ரை: தென்திசை நோக்கிக் கருணையோடு கூத்தியற்றும் தில்லை ஞானசபை முதல்வன் பெண்ணைப் பாகமாக விரும்பியது ஏன்? பெரிய பித்துக் கொண்டதும் ஏன் ? அறிவிலியே ! பெண்ணைப் பாகமாக அவன் விரும்பாவிடில், இப்பெரிய நிலவுலகில் உள்ள மக்கள் விண் அடைதற் பொருட்டு, யோகம் பயின்று உயிர் விடுவார்கள். (இறைவன் சிவ-சக்தியாய் நின்று உயிர்களை இயக்காவிடில், இவ்வுலகில் ஆண், பெண் உறவு வாழ்க்கை நிலைக்காது என்பது கருத்து) Strange indeed, Oh maid, that He of the southern public hall of Chidambaram, dancing in bliss, takes delight in feminine form too! Don't you see He is terribly of unsound mind ? No, my friend, you are so dull as to ask this question. For, had He not done so then , all folks in the world would have obtained heaven's bliss through yoga and quit this earth renouncing household life (Chaazhalo). Note: A unique feature of saiva theology is the concept of the "Two-in-one" manifestation of Lord Civa (Artha Naareeswaraa). This portrays the Lord as the perennial source of creation and sustenance. கு-ரை: தென்றிசையைப் பார்த்து இறைவன் ஆடுதலினால் தென்பாலுகந்து என்றார். உகந்து= விரும்பி, கருணைகொண்டு. யோகு= யோகம், துறவு நிலை. இறைவன் சிவமுஞ் சக்தியுமாய் நின்று உயிர்களை இயக்காவிடின் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய் இன்பம் துய்க்க மாட்டா என்பது கருத்து, 'அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்' என்ற சிவஞான சித்தியும் காண்க. 10. தானந்த மில்லான் றனையடைந்த நாயேனை யானந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ யானந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ . தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான், காண்; ஏடீ ! ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ! thaan antham illaan thanai adaintha nayeenai aanantha veLLaththu azuththuviththaan kaaNeedii aanantha veLLaththu azuththuviththa thiruvadikaL vaanunthu theevarkadku oor vaan poruL kaaN saazaloo பொ-ரை: முடிவில்லாத பெருமான் தன்னை வந்து சேர்ந்த நாய் போன்ற என்னைப் பேரின்பத்தில் திளைக்கும்படி செய்தான். இஃது என்ன காண் என்றாள். உன்னை இவ்வண்ணம் ஆனந்த வெள்ளத்து அழுந்தச் செய்த திருப்பாதங்கள் வானுலகில் உயர்ந்த தேவர்கட்குக் கிடைத்ததற்கரிய ஒப்பற்ற பெரும் பொருளாகும் என்று அறிக என்றாள். Oh maid, He steeped me in a sea of bliss even as I, a mere cur, went over to Him who is an endless entity! The sacred Feet of Civan that steeped you in the sea of bliss is a priceless treasure to gods in heaven; behold friend (Chaazhalo)! கு-ரை: தான் என்றது இறைவனது தனிச் சிறப்பை விளக்கும். அவனொருவனே முடிவற்றவன் என்பது கருத்து. வானுந்து என்பதில் வான்= வானுலகம். வான்பொருள் என்பதில் வான்= பெரிய; உந்து தேவர்= உயர்ந்த தேவர். பிறவிண்ணவரைச் செலுத்துகின்ற அதிபதிகளாகிய தேவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். 11. நங்காயி தென்னதவ நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோண்மேலே காதலித்தான் காணேடீ கங்காள மாமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ நங்காய் ! இது என்ன தவம்? நரம்போடு எலும்பு அணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காண்; ஏடீ ! கங்காளம் ஆமா கேள்; கால-அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன் காண்; சாழலோ! nangkaay ithu ennathavam narampoodu elumpaNinthu kangkaaLam thooLmeelee kaathaliththaan kaaNeedii kangkaaLam aamaakeeL kaalaantharaththu iruvar thangkaalam seyyath thariththanankaaN saazaloo பொ-ரை: வினா: நங்காய்! சடாமுடி, காவி ஆடை முதலியவைகளை அணிவது தவக்கோலம் என்று சொல்லலாம். ஆனால் உங்கள் இறைவனோ தலை ஓட்டையும், நரம்புகளால் கட்டப்பட்ட எலும்புகளையும், முழு எலும்புக்கூட்டையும் தனது தோளில் விரும்பி அணிந்தது ஏன் ? விடை: முழு எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக. பேரூழி முடிவிலே பிரமவிட்டுணுக்களுடைய வாழ்நாள் முடிக்கப்பட்டு இறந்து விடுவார்கள். இவர்கள் நிலையாமை உடையவர்கள் என்பதையும், இத்தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும், பிறக்கும், மேல்வினையும் செய்யும் என்பதனையும் உணர்த்தும் பொருட்டு அவர்களுடைய எலும்புக்கூட்டை அணிந்துள்ளான். எங்கள் இறைவன் ஒருவனே எல்லா உயிர்களையும் ' ஒடுக்கும் முதல்வன்' என்பதை உணர்த்தும் பொருட்டும் தலை ஓட்டையும், நரம்பால் கட்டப்பட்ட எலும்புகளையும் அணிந்துள்ளான் என்பதனையும் அறிக. Maid, what sort of penance is this? He wears with delight skulls and bones bounded by veins on his frame. Understand this, my friend! He wears all these in order to mark the end of tenure for Brahma and Thirumaal whose remains returned to Him this way in due time. By this, He made them realize that the heavenly gods including Brahma and Thirumaal are all mortals and He is the only immortal in the universe (Chaazhalo). கு-ரை: நரம்போடெலும்பு என்பதற்கு நரம்போடு கூடிய எலும்பு என்று பொருள் கூறுவாரும் உளர். இறைவன் ஆமையோட்டைத் தரித்தமையால் ஓடு தரித்தார் என்றும் கூறலாம். விண்டுவின் கூர்மாவதாரத்தில் கூர்மத்தின் செருக்கை அடக்கி அதன் ஓட்டைப் பறித்தணிந்தார் என்று புராணம் கூறும். எலும்பு முதலியன அணிதல் இறைவனை ஒடுக்கும் முதல்வன் என்பதை உணர்த்தும். கங்காளம்=முழு எலும்பு. மூன்றாவதடியில் கங்காளம் ஆம் ஆ எனப் பதம் பிரிக்க. ஆம் ஆ= ஆம் ஆறு = ஆகும் விதம். நாலாவதடியில் காலம் = முடிவு காலம். செய்ய= செய்து. " பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் " என்ற தேவாரமும் காண்க. கங்காளம் அயன்மால் ஒடுக்கத்தையும் எலும்பு பிறருடைய ஒடுக்கத்தையும் குறிக்கும். 12. கானார் புலித்தோ லுடைதலையூண் காடுபதி யானா லவனுக்கிங் காட்படுவா ராரேடீ யானாலுங் கேளா யயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ கான் ஆர் புலித் தோல் உடை; தலை, ஊண்; காடு, பதி ; ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ ! ஆனாலும், கேளாய்; அயனும், திருமாலும் வான் நாடர் கோவும், வழியடியார்; சாழலோ ! kaanaar puliththool udaithalaiuuN kaadupathi aanaal avanukku ingku aadpaduvaar aareedii aanaalum keeLaay ayanum thirumaalum vaan naadar koovum vazi adiyaar saazaloo பொ-ரை: வினா: நங்காய்! காட்டிலுள்ள புலியின் தோல் உங்கள் இறைவனுக்கு உடையாகும். கபாலம் அவனுக்கு உணவுப் பாத்திரம் ஆகும். அவனது இருப்பிடம் சுடுகாடாகும். உடை முதலியன இவ்வாறாக உடையவனை அன்பினால் அடைபவர் யார்? விடை: எங்கள் இறைவன் அத்தகையவன் ஆயினும் திருமாலும், பிரமனும் வானுலகினர் தலைவனான இந்திரனும் அவனுக்குத் தொன்றுதொட்டு அன்பராய் இருந்து வருகின்றார்கள் என்பதை நீ அறிவாயாக. Tell me Oh maid, who on earth would want to be His vassal, as His apparel is of forest tiger hides, His food vessel is a skull, and His dwelling place the burning ghat? And yet, listen to me, Oh friend, even Brahma, Thirumaal and the Chief of the heavenly gods are all there serving Him as His devotees (Chaazhalo)! Note: The uniqueness of Lord Civa, despite His weird apparel and strange habits. கு-ரை: கான் - கானம் என்பதின் கடைக்குறை. ஆர்புலி வினைத்தொகை. ஆர் =தங்கு; தலை= கபாலம். ஊண்= உண்ணும் பாத்திரம். காடு= சுடுகாடு. பதி = இடம். வழி = பரம்பரை, கேளாய் = கேள், கேட்டறி. தாருகாவனத்து முனிவர், பிற தேவர்களை வணங்கி வேள்வி செய்து அனுப்பிய புலியைக் கொன்று அதன் தோலையுடுத்தமையால் தேவர் தலைவனாகிய இந்திரனும், பிரமன் தலையைக் கிள்ளிய போது கையிற் கொண்ட கபாலமே உண்கலம். ஆதலால் பிரமனும், திருமால் உள்ளிட்ட எல்லாரையும் ஒடுக்கிய இடமே சுடுகாடாதலால் திருமாலும், இறைவனால் ஒடுக்கப்படுதலின் அவர்கள் பரம்பரை அடியார்கள் ஆவர் என்றறிக. 13. மலையரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்டிருவை யுலகறியத் தீவேட்டா னென்னுமது வென்னேடீ யுலகறியத் தீவேளா தொழிந்தனனே லுலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ மலை அரையன் பொன் பாவை வாள்நுதலாள், பெண் திருவை உலகு அறியத் தீ-வேட்டான் என்னும் அது என்? ஏடீ! உலகு அறியத், தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும் கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடுங்காண்; சாழலோ ! malaiaraiyan poRpaavai vaaL nuthalaaL peNthiruvai ulakaRiyath thiiveeddaan ennum athu enneedii ulakaRiyath thiiveeLaathu ozinthananeel ulaku anaiththum kalainavinRa poRuLkaL ellaam kalangkidumkaaN saazaloo பொ-ரை: வினா: பனிமலை அரசன் மகளாகிய உமையம்மை பொன்னின் பதுமை போன்றவள்; ஒளி பொருந்திய நெற்றியுடைய திருமகளாகிய அவளை உலகினர் அறியும்படி உங்கள் இறைவன் மணந்தான் என்பது என்ன ? விடை: எங்கள் இறைவனாகிய சிவபெருமான் அங்ஙனம் செய்தது, கற்பிப்பான் ஒருவன் தான் கற்பிக்கும் கலை, மாணாக்கர்களுக்கு இனிது விளங்கித் தெளிவெய்துவதன் பொருட்டுத் தானே அதனைப் பயிலுதல் போலத் தான் உலகர்க்கு வகுத்த விதி இனிது விளங்குதற் பொருட்டு தானே மேற்கொண்டு செய்து காட்டியதன்றி வேறில்லை என்பதை அறிந்துகொள். ஆதலால் அங்கியங் கடவுள் முதலானோர் அவனின் உயர்ந்தவர்கள் இல்லை என்பதையும் அறிவாயாக. உமையம்மை இறைவனை வேண்டித் தவம் கிடந்தமையால் இறைவன் அருள் கிட்டியது. மறைநூல்களும் தவம் செய்தால் திருவருள் கிட்டும் என்றே மொழிகின்றன. உலகினர் வேண்டுவதும், நூல்கள் கூறும் பயனும் திருவருட்பேறு ஆதலின், அது கிட்டாவிடில் எல்லாம் கலங்கிடும் என்பது கருத்து. How is it Oh maid, it is said that He married the golden princess, of bright forehead, daughter of the chief of Himalayan range before the traditional altar of fire, in full view of the world's public? Note this, my friend, had He not thus wed her, before the altar of fire, all arts and scriptures would have come to naught (Chaazhalo) Note: For the proper functioning of human societies, all worldly order and community norms are set by Lord Civa Himself through precept. கு-ரை: 'வாணுதலாள்' என்பதில் வாள் = ஒளி, தீவேட்டல் = மணத்தல், தீ முன்பாக, விரும்பிய பெண்ணைக் கொள்ளுதலால் தீ வேட்டல் எனப்பட்டது. கலை= நூல். உமையம்மை இறைவனை மணப்பது கருதித் தவங்கிடந்தமையால் அத்தவத்தின் பயனாக இறைவன் திருமணம் நிகழ்த்தினன். ஆதலின் தவஞ்செய்தலின் பயனாக இறைவன் திருவருள் பெறலாம் என்பது உலகெல்லாம் அறியக் கிடந்தது. நூற்கருத்தும் அதுவே. பிழைசெய்தாலும் அதற்காக வருந்தித் தவம் ஆற்றின் இறைவனருள் கைகூடும் என்பது விளங்கும். உலகினர் வேண்டுவதும் நூல்கள் கூறும் பயனும் திருவருட்பேறே ஆதலின் அத்திருவருட் பேறில்லாவிடத்து எல்லாம் கலங்கிடும் என்றார். 14. தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் றான்புக்கு நட்டம் பயிலுமது வென்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேற் றரணியெல்லா மூன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன், தான் புக்கு நட்டம் பயிலும் அது என்? ஏடீ! தான் புக்கு நட்டம் பயின் றிலனேல், தரணி எல்லாம் ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண்; சாழலோ ! theenpukka thaNpaNai suuz thillai siRRampalavan thaanpukku naddam payilum athu enneedii thaanpukku naddam payinRilaneel tharaNi ellaam uunpukka veeRkaaLikku uuddu aamkaaN saazaloo பொ-ரை: வினா: தேன் பெருகிய குளிர்ந்த வயல் சூழ்ந்த தில்லைப் பதியின் ஞானசபை முதல்வனாகிய உங்கள் இறைவன் அங்கே அடியார்கள் பொருட்டு ஆனந்த நடனத்தைச் செய்பவன் என்று கூறுகிறீர்கள். அப்பேர்ப்பட்டவன் திருஆலங்காடு என்ற ஊருக்குச் சென்று அங்கு ஒரு பெண் முன்னால் நடனப் போரினை மேற்கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடியது ஏன்? விடை: காளியானவள் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று அவன் உதிரத்தைக் குடித்த வெறியால் உலகை நாசம் செய்யும் கருத்தோடு, புலாலில் பதித்த வேலாயுதத்தைத் தன் கையில் கொண்டு வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தாள். இதனை அறிந்த எங்கள் இறைவன் அவள்முன் சென்று ஊர்த்துவ தாண்டவம் இயற்றி அவள் செருக்கை அடக்கி, காளிக்கு, இவ்வுலகம் உணவாகி விடுவதினின்றும் காப்பாற்றினான் என்று அறிவோமாக. He goes over to the holy hall of Thillai (Chidambaram) around which luscious fields abound, and dances in joyful numbers! What for is this, Oh maid, would you say ? Listen, Oh friend, had He not danced in this way, all this in this world would have been consumed by the fiery goddess Kaali (Chaazhalo). Note: In this dance of combat, as it were, enacted by the Lord and goddess Kaali, He toned down the angry outburst of Kaali and saved the earthlings from destruction. A reference to the goodwill of the Lord. கு-ரை: நடம் என்பது நட்டம் என விரிந்தது. காளிதேவதை அசுரரைக் கொன்று இரத்தங் குடித்தமையாலுண்டான வெறியில் உலகத்தை நாசஞ் செய்யக் கருதிய காலை இறைவன் ஊர்த்துவ தாண்டவம் இயற்றி அவள் செருக்கை அடக்கினமை இங்கே கூறப்பட்டது. 15. கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடீ தட மதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளி லிடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு: ஏடீ ! தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண்; சாழலோ ! kadakariyum parimaavum theerum ukanthu eeRaathee idapam ukanthu eeRiyavaaRu enakku aRiya iyampeedii thadamathilkaL avaimuunRum thazal eriththa annaaLil idapamathaay thaangkinaan thirumaal kaaN saazaloo பொ-ரை: வினா: உங்கள் இறைவன் மதம் பொழியும் யானையையும், குதிரையையும் தேரையும் விரும்பி ஏறாமல் காளையை விரும்பி அதன் மேல் ஏறிச் சென்ற காரணம் யாது என எனக்கு விளங்கக் கூறுக ? விடை: பெரிய சுவர்களையுடைய கோட்டைகள் மூன்றையும் தன் சிரிப்பினால் உண்டாகிய நெருப்பில் இறைவன் அழித்த போது, அவன் சென்ற தேரின் அச்சு முறிய நேரிட்டது. அது சமயம் திருமால் அறத்திற்கே அறிகுறியாகக் கருதப்படும் காளை உருவம் கொண்டு அத்தேரினைத் தாங்கினான். இவ்வாறு பணிபுரிந்த திருமாலுக்கு மகிழ்ச்சி உண்டாதற்பொருட்டு அதனையே எங்கள் இறைவன் ஊர்தியாகக் கொண்டான் என அறிந்துகொள். Would you please recount for me, Oh maid, why He chose the bull as a mount ignoring other forms of ride - an elephant, a horse or a chariot? Know, my friend, that in the days of yore, when he burnt down the big trifort, Thirumaal guised as a valiant bull and came forward to carry Him along (Chaazhalo), Note: The uniqueness and the supremacy of Lord Civa. கு-ரை: கடம்= மதசலம், கரி= யானை; கரமாகிய துதிக்கையை உடைமையால் கரியெனப்பட்டது. பரிமா = குதிரையாகிய விலங்கு, திரிபுரம் எரித்தற் பொருட்டு விண்ணவர் சமைத்த தேரின் அச்சுமுறிந்த காலத்தில் திருமால் காளை வடிவாய் இறைவனுக்கு ஊர்தியாயினான் என்பது புராணக் கருத்து. காளை அறத்திற்கு அறிகுறியாகக் கருதப்படுதலின் திருமால் காளை வடிவம் கொண்டனன் போலும், 'மதில்களவை' என்பதில் 'அவை' என்பது கோட்டைகளைக் குறித்து நின்றது. 16. நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை யன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ யன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தா னாயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான் காண்; ஏடீ ! அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான் ஆயிடினும் கொன்றான் காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ ! nanRaaka naalvarkkum naanmaRaiyin udporuLai anRu aalin kiiz irunthu angku aRam uraiththaan kaaNeedii anRu aalin kiiz irunthangku aRam uraiththaan aayidinum konRaan kaaN puram muunRum kuuddoodee saazaloo பொ-ரை: வினா: பண்டைக் காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து உங்கள் இறைவன் செவ்வையாக சனகர், சனந்தனர், சனாதரர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு, நான்கு வேதங்களின் மூலக் கருத்துக்களை இயம்பினான் என்று சொல்கிறீர்களே ; அப்படியானால் அவன் முனிவர்கட்கும் துறவோர்களுக்கும் மட்டும் ஞானத்தை வழங்கி வீடு பேறு தருபவன் ஆகிறான். இத்தன்மையினால் இல்வாழ்வாராகிய மானுடர்க்கும் வானுலகத்தவர்க்கும் துணையாய் இருந்து பொருள் இன்பங்களைத் தாரான் ஆதலின் அவர்கள் உங்கள் இறைவனை அன்றிப் பிற கடவுளரைத் தானே அடைதல் வேண்டும் ? இதற்கு என்ன பதில்கூற முடியும் ? விடை: எங்கள் இறைவன் அது ஒன்றே செய்கிறான் என்று நினையாதே. அறநெறிக்குப் புறம்பாய் விளங்கிய முப்புரங்களை ஆண்ட அவுணர்களையும், அவர்களது முப்புரங்களையும் அழித்தான். இதனால் மானுடர்க்கும் தேவர்களுக்கும் நேர்ந்து வந்த துன்பங்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு இன்பத்தை வழங்கினான். தீயவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இவைகளால் அறியப்படுவது: (1) முனிவர்களுக்கு வீடுபேறு அளிப்பவனும் எங்கள் இறைவன்; (2) தீயவர்களைத் தண்டிப்பவனும் எங்கள் இறைவன்; (3) இல்வாழ்வாராகிய மானுடர்க்கும் வானுலகத்தவர்களுக்கும் இம்மையில் இன்பத்தை அருளியவனும் எங்கள் இறைவனே என்பதை நன்கு உணர்ந்து கொள்வாயாக. As you know, Oh maid, He clearly taught the import of the four scriptures in the days of yore, to four disciples. What is that? Yes, my friend. He revealed the virtue of the scriptures to the four noble souls who could not easily understand it. This shows His gracefulness (Arakkarunai) towards the four, but do not forget that he utterly destroyed the three citadels which will explain to you that He is capable of punishing properly the ignoble souls (Marakkarunai) who are made to realize their faults and correct themselves (Chaazhalo). கு-ரை: 'அன்று' பழமை குறிக்குஞ் சொல், 'நான் மறையினுட் பொருள்' என்றது அறம் பொருளின்பம் வீட்டினை. அறவுரை என்பதை வடநூலார் தருமோபதேசம் என்பர். 'அறம்' என்பது நாற்பொருளையுங் குறிக்கும். " அறநான் கருள்செய்தாய்", "அறம் பொருளின்பம் வீடு மொழிந்த வாயான்" "எல்லாவறவுரையும் இன்னருளாற் சொல்லினான்" என்ற தேவார அடிகளை உற்று நோக்குக. பக்குவர்களுக்கு அறிவுரை கூறி அருள்புரிந்தது போலத் தீயவர்களுக்குத் தண்டனை புரிதலும் இறைவன் செயல் என்பார், 'கொன்றான் புரமூன்று' என்றார். கூட்டோடே = கூடிய பொருள்களோடு முதற்பொருள் துணைப் பொருள் என்பன எல்லாம் அழிக்கப்பட்டன என்பது கருத்து. 17 . அம்பலத்தே கூத்தாடி யமுதுசெயப் பலிதிரியு நம்பனையுந் தேவனென்று நண்ணுமது வென்னேடீ நம்பனையு மாமாகே ணான்மறைக டாமறியா வெம்பெருமா னீசாவென் றேத்தினகாண் சாழலோ அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செயப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும் அது என்? ஏடீ ! நம்பனையும் ஆமாகேள்; நான் மறைகள் தாம் அறியா 'எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின காண்; சாழலோ ! ampalaththee kuuththaadi amuthuseya pali thiriyum nampanaiyum theevan enRu naNNum athu enneedii nampanaiyum aamaakeeL naanmaRaikaL thaam aRiyaa emperumaan iisaa enRu eeththinakaaN saazaloo பொ-ரை: வினா: தனக்கென ஓர் இடம் இல்லாதவனும் வெளியிடத்தில் கூத்து இயற்றுவார்போல கூத்தாடுபவனும் உண்பதற்குப் பிச்சையேற்றுத் திரிகிற சிவபெருமானை உங்கள் முழுமுதற் கடவுள் என விரும்புவது எவ்வாறு ? விடை: எங்கள் சிவபெருமான் முழுமுதற் கடவுளாக இருக்கும் விதத்தைக் கேட்பாயாக. அத்தகைய சிவபெருமானை நான்கு வேதங்களும் தாம் அறியமாட்டா. அதுமட்டுமல்ல அவைகள் எங்கள் சிவபெருமானை ‘எங்கள் தலைவனே' என்றும் ‘ஆண்டவனே' என்றும் வழிபட்டுத் துதித்து நிற்கின்றன என உணர்க. உயிர்களின் சுட்டறிவுக்குக் காரணமாகிய நால்வகை வாக்குகளும் இறைவனை அறியா எனில், அவன் உயிர் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்பதும், அவன் செய்கைகளின் காரணம் உயிரறிவுக்கு விளங்கா என்பதும் கருத்தாகும். Oh maid, although dancing in the public hall of Thillai, He has the habit of going out for alms. How come you have chosen to call this one, our Lord! Listen, Oh friend, He is beyond the comprehension even by the four scriptures that beckoned to Him for enlightenment, calling out to Him in reverence, "Oh Lord, Our beloved Chief" (Chaazhalo). கு-ரை: 'அம்பலம்' என்பது பொது இடத்தைக் குறிப்பதால் தனக்கென ஓர் இடம் இல்லான் என்றும் பிச்சையேற்று உண்பதால் தனக்கென உணவு முதலிய பொருள்கள் இல்லாதவன் என்றும் இறைவனை இகழ்ந்தமையை ஈண்டு மறுத்தார். இரண்டாமடியில், 'நம்பன்' என்பதற்கு நம்மைப் போல்வான் என்று பொருள் கொள்வாரும் உளர். உயிர்கள் சுட்டறிவுக்குக் காரணமாகிய நால்வகை வாக்குகளும் இறைவனை அறியா என்றது, அவன் உயிர் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்பதும், அவன் செய்கைகளின் காரணம் உயிரறிவுக்கு விளங்கா என்பதும் குறித்தவாறாம். பலி = பிச்சை. பலிதிரியும் =பலியின் பொருட்டுத் திரியும். அமுது செய= உணவு கொள்ள. தேவன் என்ற சொல் கடவுளை உணர்த்தி நின்றது. 18. சலமுடைய சலந்தரன்ற னுடறடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னே டீ நலமுடைய நாரணன்ற னயனமிடந் தரனடிக்கீ ழலராக விடவாழி யருளினன் காண் சாழலோ. சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ ! நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ் அலர் ஆக இட ஆழி அருளினன் காண்; சாழலோ ! salam udaiya salantharan than udalthadintha nalaazi nalam udaiya naaraNaRku anRaruLiyavaaRu enneedii nalam udaiya naaraNanthan nayanam idanthu aran adikkiiz alar aaka ida aazi aruLinankaaN saazaloo பொ-ரை: வினா: காத்தல் தொழில் செய்யும் நாராயணனுக்கு இறைவன் வலிமை மிக்க சக்கரம் அளித்தான். அது போரில் தணியாத வீரச் செருக்குடைய சலந்தராசுரனுடைய உடம்பை வெட்டியது. தனக்கு வெற்றியைத் தந்த சக்கராயுதத்தைப் போற்றித் தனதாக்கிக் கொள்ளாமல் வலிமை மிக்க அச்சக்கரத்தைப் பண்டைக் காலத்தில் நாரணற்குக் கொடுத்தருளிய செயல் எங்ஙனம் சிறந்தது ஆகும். இதற்குப் பதில் சொல்? விடை: திருமால் சிவபெருமானிடம் சக்கராயுதம் பெறுவதற்கு நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு அருச்சிப்பேன் என்று கருதிக்கொண்டு அவ்வாறு அருச்சித்துக் கொண்டு வரும் நாட்களில் ஒரு நாள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது இரு கண்களில் ஒன்றைப் பறித்து அருச்சித்தான். திருமாலின் இச்செயலுக்குச் சிவபெருமான் மகிழ்ச்சியுற்று அவன் விரும்பிய சக்கராயுதத்தைக் கொடுத்து அருளினான். வேண்டுவார் வேண்டுவதே ஈவான் எங்கள் இறைவன். தன்னிடம் மிகுந்த அன்பு செலுத்துவாருக்கு அவர் விரும்பியவற்றைக் கொடுக்கும் வள்ளன்மை உடையவன் அவன். தனக்கென ஒன்றையும் விரும்பாதவன். இத்தகைய செயல்கள் எங்கள் இறைவனது உயர்வுகளை உணர்த்துமன்றி, தாழ்வுகளை உணர்த்தாது என்று உணர்வாயாக. Oh maid, can you elaborate on the episode wherein He gifted to Thirumaal in the days of yore, the benign discus that gored through the body of one Jalandaran? Friend, He did this as He was much pleased with Thirumaal who offered His own eye in oblation during a ritual worship (Chanzhalo). Note: During a routine offering of Lord Civa, Thirumaal noticed a shortage of one flower and instantly plucked His own eye and used it as substitute for the missing flower. கு-ரை: சலம் = போரில் உறுதி, தணியாக் கோபம், தடிதல் = குறைதல், வெட்டுதல். அலர் = பூ . சலந்தராசுரன் என்பான் திருமால் பிரமன் முதலிய தேவர்களை எல்லாம் வென்று செருக்குக் கொண்டு சிவபெருமானிடம் போர் செய்வதற்காகக் கயிலை மலையை அணுகினான். அப்போது இறைவன் பார்ப்பன வடிவத்தோடு எதிர்ப்பட்டு நிலத்தில் வட்டவடிவமான கோடொன்றினைக் கீறி, அக்கோட்டினுள் அடங்கிய நிலத்தைப் பேர்த்தெடுக்குமாறு அவனை ஏவினான். அவன் அதை எடுக்க முயன்ற காலை, அஃதே சக்கரமாய் மாறி அவனைக் கொன்றது. திருமால் இறைவனை ஆயிரம் தாமரைப் பூக்களினால் அருச்சிக்கக்கருதி அர்ச்சித்தபோது ஒரு பூக்குறையக் கண்டு அதற்குப் பதிலாகத் தன்னுடைய கண்ணைப் பிடுங்கிச் சாத்தினன் என்பது " பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு " என்னுந் திருத்தோணோக்கச் செய்யுள் பகுதியால் அறிக. 19. அம்பரமாம் புள்ளித்தோ லாலால மாரமுத மெம்பெருமா னுண்டசது ரெனக்கறிய வியம்பேடீ யெம்பெருமா னேதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ அம்பரமாம், புள்ளித்தோல்; ஆலாலம், ஆர் அமுதம்; எம்பெருமான் உண்ட சதுர், எனக்கு அறிய இயம்பு; ஏடீ ! எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும் தம் பெருமை தான் அறியாத் தன்மையன் காண்; சாழலோ ! amparamaam puLLiththool aalaalam aar amutham emperumaan uNdasathur enakku aRiya iyampeedii emperumaan eethuduththu angkueethu amuthuseythidinum thamperumai thaan aRiyaath thanmaiyan kaaN saazaloo பொ-ரை: வினா: நீ முன்பு கூறியவாறு (இப்பதிகத்தின் பாட்டு எண் 8, 12) உங்கள் இறைவன் பேராற்றலும் பெருந்தலைமையும் உடையவனாய் இருந்தும் புள்ளிகளுள்ள புலித்தோல் ஆடையாக உடுத்துவதும் நஞ்சை (ஆலகால விடத்தை) அமுதமாக உண்பதுவும் பிச்சை எடுப்பதும் ஆகிய சாமர்த்தியமான இச்செயல்கள் அவனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று கூறு? விடை: எங்கள் சிவபெருமான் எதனை உடுத்தாலும் எதனை அமுதமாக உண்டாலும் அவன் பிறர் நலம் ஒன்றையே கருதித் தன் பெருமையைத் தான் அறியாத அருளாளன் என்பதை உணர்வாயாக. Maid, won't you tell me clearly how smart is He, for whom tiger skin is wear, poison is nectar? Know thou this Oh friend, whatsoever our Lord may gulp down, and whatever dress He wears, there is none indeed here, that can fully be aware of His greatness, (nor does He ever care to ruminate upon His own greatness) (Chaazhalo). கு-ரை: அம்பரம் = ஆடை ஆரமுதம் = உண்ணும் உணவு. சதுர்= திறமை. இறைவன் கருணையினாலே எல்லாம் செய்வதன்றித் தனது பெருமையை வெளிப்படுத்தவன்று. 'அவன் தன் பெருமையையே யறியாதவன்' என்று இறைவனது பேரருளியல்பினை விளக்கினர். 20. அருந்தவருக் காலின்கீ ழறமுதலா நான்கனையு மிருந்தவருக் கருளுமது வெனக்கறிய வியம்பேடீ யருந்தவருக் கறமுதனான் கன்றருளிச் செய்திலனேற் றிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கனையும் இருந்து, அவருக்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பு: ஏடீ ! அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச் செய்திலனேல் திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ ! arunthavarkku aalin kiiz aRam muthalaa naankanaiyum irunthavarukku aruLum athu enakku aRiya iyampeedi arunthavarukku aRammuthalnaanku anRu aruLi seythilaneel thirunthavarukku ulakiyaRkai theriyaa kaaN saazaloo பொ-ரை: வினா: உங்கள் இறைவன் செயற்கரிய தவமியற்றிய நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழ் வீற்றருளி, அறமுதலாகக் கூறப்படும் நாற்பொருளையும் உரைத்து அருளியதற்கு முன்னொருகால் (பாட்டு 16) ஏதோவொரு காரணம் சொன்னாய். ஒரு சில அருந்தவர்களுக்கு மட்டும் கற்பிக்கும் ஆசிரியத்திறம் உடையவன் எப்படி உலகத்திற்கு எல்லாம் தலைவன் ஆவான் என்பதற்குப் பதில் சொல்? விடை: உலக உயிர்களின் ஒழுக்க நெறிகளை (அறவொழுக்கம், பொருள் ஒழுக்கம், இன்ப ஒழுக்கம், வீட்டொழுக்கம்) பற்றிய அறிவை அந்த அருந்தவ முனிவர்கள் நால்வரும் அறிந்திலர். ஆதலான், அவர்களுக்கு அந்த நெறிகளை அறிவுறுத்தி அவர்கள் வாயிலாக உலக மக்கள் யாவருக்கும் அறநெறிகளை உணரச் செய்தான். உலகுக்கு எல்லாம் தலைவனான எங்கள் இறைவனை அன்றி வேறு யாரால் உலக ஒழுக்க நெறிகளைக் கூறமுடியும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பாயாக . Tell me clearly Oh maid, that I can well understand, how in those days, He taught the rare scriptures of the four fold verities, to the four ascetics only under the banyan tree. How a person who can teach few medicants only can become the Chief of the whole world. Had he not taught these four topics then to the four ascetics, no one would have come to know of the worldly norms (Chaazhalo). கு-ரை: 'அறமுதலா நான்கென்றது' - அறம் பொருள் இன்பம் வீட்டினை. 'திருந்த அவருக்கு' என்ற சொற்கள் திருந்தவருக்கு என்றாயிற்று, திருந்த= திருத்தமாக. உலகியற்கை அவர்கள் வாயிலாகவே அவர்க்குப் பின்வந்தோர் அறிந்தனரென்று கருத இடம் உண்டு. உலகியற்கை நாற்பொருளின் சார்பாக உள்ளது என்பதும் இதனால் தெளிவாகும். உலகியற்கை உலக உயிர்களின் ஒழுக்க நெறி. THIRUCHCHITRAMBALAM 13. திருப்பூவல்லி 13. THIRUP-POOVALLI (மாயாவிசய நீக்குதல்) Singing glories to our Lord தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் வல்லி - கொடி. 'பூவல்லி' எனப்பட்ட இதுவும் மகளிர் விளையாடும் ஒரு வகை விளையாட்டு என்பது வெளிப்படை. இதனுள், ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும் பூவல்லி கொய்யாமோ என வருந்தொடர், 'பூவைக் கொடியினின்றும் பறிப்போம்' எனப் பொருள் தரும். அதனால், இவ்விளையாட்டு ஓர் இடத்தில் மகளிர் பலர் கூடிப் பூங்காவிற் சென்று பூக்களைக் கொடிகளினின்றும் பறிப்பதுபோலப் பாவனை காட்டிச் சில பாடல்களைப் பாடி ஆடும் விளையாட்டு எனக் கொள்ளல் பொருந்துவதாம். சில பெண்களை வரிசையாக நிறுத்தி, மற்றும் சில பெண்கள் 'ஒருகுடம் நீர் வார்த்தேன்; ஒரு பூப்பூத்தது; இரண்டு குடம் நீர்வார்த்தேன்; இரண்டு பூப்பூத்தது' என்று ஒரு பாடலைப் பாடிக்கொண்டு, நிறுத்தி வைத்துள்ள பெண்களை ஒருவர்பின் ஒருவராகப் பூப்பறிப்பது போலச் சுற்றிவந்து விளையாடும் விளையாட்டொன்று அண்மைக் காலத்திலும் சிறுமியரிடையே நிகழ்ந்து வந்தது. மேலை நாட்டு விளையாட்டுப் போக்கினால், தமிழகத்தில் அண்மையில் காணப்பட்ட விளையாட்டுக்களும் மறையலாயின . ஆதலின், அடிகள் காலத்தில் நிகழ்ந்து வந்த இவ்விளையாட்டின் இயல்பு தெற்றென அறியப்படுகின்றதில்லை. அடியார்க்கு நல்லார் காட்டியதாக மேற்குறித்த சூத்திரத்துள்ளும், 'அந்தியம்போ தாடுங்களி கொய்யு முள்ளிப்பூ' என்றும் ' துஞ்சாத சும்மைப் பூ' என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், இது மகளிர் ஆடும் ஒரு வகை விளையாட்டு என்பது தெளிவு. பெண்களைக் கொடியோடு ஒப்புமைப்படுத்துதல் பற்றிக் கொடியினின்றும் பறிப்பதே விளையாட்டாயிற்றுப் போலும் ! திருச்சாழலின்பின், திருத்தோணோக்கத்தை வைத்தலே முறையாயினும், அது பதினான்கு திருப்பாடலான் இயன்றிருத்தல் பற்றி, 'பூவல்லி, உந்தி' என்பவற்றின் பின் வைத்துக் கோத்தனர். ' பூவல்லி, உந்தி' என்பவற்றுள் யாப்பியைபு பற்றிப் பூவல்லியை முன்வைத்துக் கோத்தனர். மாயையை, 'வல்லி- கொடி' என்றல் மரபு என்பது, 'வல்லி - மல கன்மம் அன்றுளவாம் ' (சிவஞானபோதம் சூ.2. அதி. 2) முதலியவற்றால் அறியப்படுதலின், வல்லியினின்றும் பூப்பறிப்பதாகப் பாடப்படும் இப்பாட்டினை, 'மாயாவிசயம் நீக்குதல்' எனக் கொண்டனர் முன்னோர் . மாயா விசயம்- மாயையின் வெற்றி. இதுவும் தில்லையில் அருளிச் செய்யப் பெற்றது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது . Saint Maanikkavaachakar comes across many kinds of musical plays staged by young girls at the holy town of Thillai, one of which relates to the plucking of flowers from tendril climbers whilst engaged in a chorus of devotional recitation. This must have prompted the saint to compose this decad extolling the generosity of Lord Civa in releasing him from worldly bondage. In this choreographic thanksgiving, to be sung by flower-plucking youngsters, we note significant aspects of saiva theology that are a source of guidance and inspiration to children, helping to see that they are not lured away by mundane aspects of terrestrial existence, but grow up in an atmosphere of divine wisdom and piety ( கொய்யாமோ) Note: The usage " Koyyamo" " let us pluck' and similar exhortation செய்யாம், கொள்ளாம் are still current in the Malayalam vocabulary. 13.1. இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்க ளத்தனையுந் துறந்தொழிந்தே னணையார் புனற்றில்லை யம்பலத்தே யாடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர் பாடிப்-பூவல்லி கொய்யாமோ ! iNai aar thiruvadi en thalai meel vaiththalumee thuNaiyaana suRRangkaL aththanaiyum thuRanthozintheen aNaiyaar punal thillai ampalaththee aadukinRa puNaiyaaLan siirpaadi puuvalli koyyaamoo பொ-ரை: சிவபெருமான் திருவடிகளுக்கு அவைகளே ஒப்பானவை அல்லாமல் பிற திருவடிகள் ஒப்பாகா. அவன் தனது ஒப்புயர்வற்ற திருவடிகளை என்தலைமீது வைத்து எனக்குத் தீட்சையைச் செய்வித்தான். அவ்வாறு செய்த உடனேயே இதுவரையில் எனக்குத் துணை போவார்கள் எனது உறவினர்களே என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் என் மனத்தைவிட்டு நீங்கப்பெற்று இறைவனே எனக்கு உற்ற துணை என்பதனை உணர்ந்தேன். அச்சிவபெருமானது பெருமைகளைப் புகழ்ந்து பாடி மலர்களைக் கொடியிலிருந்து பறிப்போமாக. Even as He set His peerless Feet on my head. I instantly renounced all bondage - my bonds with relatives who had, till then, been my solace and support. Come Ye, Oh maids, let us then sing gratefully on the glories of Him, the boat-like one (Lord Civa who ferries all souls across the water of the sea of births), and pluck creeper flowers paying obeisance to Him that dances at the public hall of Thillai, surrounded by plentiful waters and barrages. கு-ரை: இணை= இரண்டு, ஒப்பு. இறைவன் திருவடிகட்கு அவைகளே ஒப்பாவன அன்றிப் பிற ஒப்பாகா என்பது கருத்து. புணை = தெப்பம், பூவல்லி= பூக்கொடி. 'அல்லிப்பூ' என்பாரும் உளர். பூவல்லி என்பதும் மகளிர் விளையாட்டில் ஒன்றே. 2. எந்தையெந்தாய் சுற்றமற்று மெல்லா மென்னுடைய பந்த மறுத்தென்னை யாண்டுகொண்ட பாண்டிப்பிரா னந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்; அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவி, நாம்-பூவல்லி கொய்யாமோ! enthaienthaay suRRam maRRum ellaam ennudaiya pantham aRuththu ennai aaNdu koNda paaNdippiraan antha idaimaruthil aanantha theen iruntha ponthai paravi naam puuvalli koyyaamoo பொ-ரை: என் தந்தை, தாய், உறவினர்கள் மீதும் மற்றும் எல்லாப் பொருட்கள் மீதும் நான் இதுவரை கொண்டிருந்த பற்று அனைத்தையும் நீக்கி என்னைப் பிறவிப் பிணியினின்றும் காத்து அருள் செய்தவன் பாண்டிப்பெருமானாகிய சிவபெருமான். தேனீக்கள் பொந்துகளில் தேன்கூடு கட்டித் தேனைச் சேகரித்துச் சொரிந்து கொண்டிருப்பது போன்று, அவன் திருவிடைமருதூரில் கோயில் கொண்டு பேரின்பம் ஆகிய தேனைச் சொரிந்து கொண்டிருக்கிறான். அவனைத் துதித்து நாம் கொடிகளிலிருந்து மலர்களைக் கொய்வோமாக . The Lord of the Paandiyan Kingdom, severed all my bondage - my bonds with father, mother and all other relatives, and took me under His care and tutelage. Come Ye, maids, let us then gratefully sing on His glories and pluck creeper flowers, extolling the honeyed niches of the blissful shrine of Thiru-Idai-Maruthoor. கு-ரை: என்னுடைய பந்தமறு... பாண்டிப்பிரான், 'எந்தை யெந்தாய் சுற்றமற்றும் எல்லாம்' என்றும் வைத்துப் பொருள் கொள்ளலாம். முதல் அடிக்கும் இரண்டாமடியிற் பாதிக்கும், 'என்னப்பன்' தாய், உறவினர் முதலிய எல்லாரோடும் எனக்குள்ள தொடர்பாய கட்டினைத் தொலைத்து என்று பொருள் கொள்வாரும் உளர். தேன், மரப்பொந்துக்களில் இருப்பதால், இறைவனைத் தேனென்ற இடத்து , அவனிருக்கும் இடத்தைப் பொந்து' என்றார். அந்த = அழகிய. பந்தம் = கட்டு, பாண்டி நாட்டிலே தன்னை ஆண்டமையாலும், பாண்டியனை ஆண்டமையாலும், பாண்டிய மன்னனாய் ஒரு காலத்து விளங்கினமையாலும் ' பாண்டிப்பிரான்' என்றார். 3. நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்துத் தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான்; என் வல் வினையின் வாயில் பொடி-அட்டிப்-பூவல்லி கொய்யாமோ ! naayiR kadaippadda nammaiyum oor porudpaduththu thaayiR perithum thayaa udaiya thamperumaan maaya piRappu aRuththu aaNdaan en valvinaiyin vaayiR podi addi puuvalli koyyaamoo பொ-ரை: நாயினும் கீழ்ப்பட்ட நம்மையும் மதிக்கத்தக்க ஒரு பொருளாக வைத்தனன் இறைவன். தாயினும் மிகுந்த கருணையுடையவனான நமது பெருமான் நிலையில்லாத பிறப்பு, இறப்பு என்னும் வினைகளிலிருந்து நம்மைக் காத்து ஆட்கொண்டருளினான். நம்மைப் பற்றியிருக்கும் தீவினையின் வாயில் புழுதியைக் கொட்டி அதனை அழித்து வினைப்பயன் நம்மை வந்து தாக்காது காத்து அருள் செய்தான். அவனது இந்தச் செயல்களைப் புகழ்ந்து பாடி நாம் கொடிப்பூவைப் பறித்து ஆடுவோமாக. Our Lord who has greater compassion than a mother, took cognisance even of us who are worse than a cur, and took us under Him, quelling the cycle of our delusive births. Come Ye, maidens, let us then sing gratefully on His glories, and pluck creeper flowers, silencing the impact of all our past evils. கு-ரை: பொருட்படுத்து = மதிக்கத் தக்க பொருளாக்கி. தயா = கருணை. மாயம் = கள்ளம், வஞ்சகம். 'என் வல்வினையின் வாயில் பொடியட்டி' என்பதை 'ஆண்டான்' என்பதோடுஞ் சேர்க்கலாம். வாயில் பொடியட்டி என்பது வாயில் மண் போட்டு என்ற வழக்கச் சொல்லை நினைவுறுத்தும். அட்டுதல்=போடுதல், பொடி = புழுதி, தமக்கு வேறொரு தலைவன் இல்லை ஆதலால் இறைவனைத் தம்பெருமான் என்றார். 4. பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே யெண்பட்ட தக்க னருக்கனெச்ச னிந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல் விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண் பட்டவா பாடிப் பூவல்லி கொய்யாமோ! paNpadda thillai pathikku arasai paravaathee eNpadda thakkan arukkan essan inthu anal ViNpadda puutha padai viirapaththiraraal puNpadda vaapaadi puuvalli koyyaamoo பொ-ரை: செம்மை பொருந்திய தில்லையென்னும் திருப்பதிக்கு வேந்தனானவன் எம்பெருமானாகிய சிவபெருமான். மதிப்புப் பெற்ற தக்கன், அவனது யாகத் தலைவனாகிய எச்சன், சூரியன், சந்திரன், அக்கினி ஆகியோர் சிவபெருமானைத் துதிக்காமல் செருக்குடன் நடந்து கொண்டனர். இதனை அறிந்து வீரபத்திரர் தமது மேன்மை பொருந்திய பூதப்படையினரைக் கொண்டு அவர்கள் அனைவரையும் காயப்படுத்தி ஒடுக்கினார். இவ்வாறு செய்த விதத்தை எடுத்துப் பாடி அல்லி மலர் பறித்து ஆடுவோமாக. Let us sing on how the army of Veerabadrar, descending from the high above, inflicted heavy wounds on Dakshan, the head priest Ecchan, the Sun God, the Moon God, the Fire God and many other recalcitrant ones who did not pay obeisance to Lord Civa of the beauteous Thillai. So singing gratefully, Oh maids, let us pluck creeper flowers. கு-ரை: 'பண்' என்பதற்கு இசை என்று பொருள் கொள்வாரும் உளர். எண்= மதிப்பு, இரண்டாவதடியில் பட்ட= கெட்டொழிந்த. 'விண்பட்ட' என்பதற்கு மேன்மை பொருந்திய என்று பொருள் உரைப்பாரும் உளர். வான்வரை வளர்ந்த வடிவத்தையுடைய என்று கூறுவாரும் உளர். அருக்கன்= சூரியன். எச்சன்= யாகத் தலைவன், இந்து = சந்திரன்; தக்கன் முதலியோரைத் தண்டித்தற்கு வீரபத்திரரை இறைவன் அனுப்பினமை புராணத்தால் விளங்கும். 5. தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமா னூனாடி நாடிவந் துள்புகுந்தா னுலகர்முன்னே நானாடி யாடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி நாடி வந்து, உள்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட; நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ ! theenaadu konRai sadaikku aNintha sivaperumaan uun naadi naadi vanthu uLpukunthaan ulakar munnee naan aadi aadi ninRu oolam ida nadampayilum vaan naadar koovukkee puuvalli koyyaamoo பொ-ரை: வண்டுகள் நாடியடையும் கொன்றைப்பூவைச் சடையிற் சூடியவன் எம் பெருமான். அவன் மனித உடம்பெடுத்து என்னை ஆட்கொள்ள விரும்பி இப்பூவுலகுக்குப் பலமுறை வந்தான். உலகினர்க்கு முன்பாக என்னை ஆட்கொண்டு என் உள்ளத்தில் புகுந்தருளினான். ஆனால் இப்பொழுது நான் அவனைத் தேடிக் காணப் பெறாது ஓலமிட்டுக் கூத்தாடுகின்றேன். அவனோ நான் ஓலமிடுவதைச் செவியில் வாங்கிக் கொள்ளாமல் தில்லையம்பதியில் திருநடனம் புரிகின்றான். வானுலகத் தேவர்களுக்கும் தலைவனாக விளங்கும் அவனது இச்செய்கையினை வியந்து பாடி நாம் கொடிப்பூவைப் பறித்து ஆடுவோமாக. Lord Civa, wearing honey-filled cassia flowers on His matted hair, came over in search of my fleshy mortal frame and entered into me. Even as I sought after Him and cried out for Him in public, He, the Chief of the heavenly zones, performed the cosmic dance in holy Thillai. Singing thus, Oh maids, let us gratefully pluck creeper flowers in glory to Him. கு-ரை: 'தேனாடு' என்பதை தேன் + நாடு எனவும், தேன் + ஆடு எனவும் பிரிக்கலாம். தேன்=வண்டு. ஊன்= உடம்பு. இறைவன் மானுடச் சட்டை சாத்தி வந்தமை குறிக்கப்பட்டது. தான் இறைவனை நாடாமல் இறைவனே தன்னை நாடி வந்து அருள் புரிந்த கருணைத் திறத்தைக் குறிப்பார் ' நாடி வந்'தென்றார். இறைவன் தன்னை உடனழைத்துச் செல்லாமையால் 'ஓலமிட' என்றார். 6. எரிமுன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் றிருப்புருவ நெரித்தருளி யுருமூன்று மாகி யுணர்வரிதா மொருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. எரி மூன்று, தேவர்க்கு இரங்கி அருள் செய்தருளிச் சிரம் மூன்று அறத், தன் திருப் புருவம் நெரித்தருளி உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவா-பூவல்லி கொய்யாமோ ! erimuunRu theevarkku irangki aruL seytharuLi sirammuunRu aRaththan thiruppuruvam neriththaruLi urumuunRum aaki uNarvu arithaam oruvanumee puram muunRu eriththavaa puuvalli koyyaamoo பொ-ரை: சிவபெருமான் போக வடிவம், யோக வடிவம், அகோர வடிவம் (வேக வடிவம்) என்னும் மூன்று வடிவங்கள் கொண்டு போக, முத்தி, தண்டங்களை விதிக்கிறான். உயிர்களால் தாமே அறிய முடியாத முதல்வன் அவன். தக்கன் வேள்வியில் கலந்தவர்கள் அக்கினி, பிரமன், விட்டுணு. உடந்தையாய் இருந்து நடத்தியவர்கள் தக்கன், எச்சன், இந்திரன். தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைப் பற்றி அறிந்து சினம் கொண்டு வேள்வியை அழிக்கச் செய்தார். வீரபத்திரர் முன்னவர் மூவரையும் தண்டம் செய்தும் பின்னவர் மூவர்களுடைய தலைகளை வெட்டி வீழ்த்தவும் செய்தார். இருப்பினும் அத்தேவர்கள் வருந்தியதால் அவர்களுக்கு இரங்கி, பின் மூவருக்கும் தலை வளரச் செய்து , உயிர்ப்பிச்சை கொடுத்து அருளினார். ஆனால் இறைவன் தான் ஒருவனாக நின்று திரிபுரத்தை ஆண்டு வந்த அசுரர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டு தன் புருவங்களை நெறித்து அவ்வசுரர்களைக் கொன்று திரிபுரங்களை அழித்தான். இவ்வாறு தேவர்கள் மீது இரக்கம் கொண்ட விதத்தையும் அசுரர்களை அழித்த விதத்தையும் (திருவாசகத்தில் வந்துள்ள கதைகள் எண் 60ஐப் பார்க்கவும்) பாடி கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Indulgent to the devas, He ordained the three-fold altar fires for their good. Also He revamped the three godheads (Ayan, Hari, Aran) by a mere straining of eyebrows. He burnt down the Trifort (Thiripuram) - He that is beyond comprehension. He encompasses the three fold manifestation (Aruvam, Uruvam, Aru-Uruvam) - the formless - the visible, and the formless visible . Unto this peerless One who is beyond comprehension, let us, Oh maids! gratefully pluck creeper flowers and sing in a chorus. கு-ரை: ' எரி மூன்று தேவர்' என்பதற்கு முத்தீவேட்கும் முனிவர் எனப்பொருள் கொண்டு தக்கன் வேள்வியில் சிவபரஞ் சாதித்தவர் பொருட்டு இரங்கியருளி என முதலடிக்குப் பொருள் கொள்வாரும் உளர் . உரு மூன்றுமாகி என்பதற்கு அருவம், அருவுருவம், உருவம் என்று பொருள் கொள்வாரும் உளர். 'எரி மூன்று' என எடுத்தால் முத்தீ என்பது , வீட்டுத்தீ, காட்டுத்தீ, ஞானத்தீ என்பனவாகும். அவற்றை வட நூலார் காருக பத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினீயம் என்பர். 7. வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத் திணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமா னணங்கொ டணிதில்லை யம்பலத்தே யாடுகின்ற குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ வணங்கத் தலை வைத்து; வார் கழல், வாய் வாழ்த்த வைத்து இணங்கத், தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான் அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணம் கூரப் பாடி, நாம்- பூவல்லி கொய்யாமோ ! vaNangka thalaivaiththu vaarkazalvaay vaazhthavaithu iNangkaththan siiradiyaar kuuddamumvaiththu emperumaan aNangkodu aNithillai ampalaththee aadukinRa kuNam kuurap paadi naam puuvalli koyyaamoo பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் தன்னை வணங்குவதற்கு எம் போன்ற மக்களாய் உள்ளார்க்குத் தலையாகிய உறுப்பினைக் கொடுத்தான். நீண்ட, சிலம்பணிந்த தனது திருவடியை வாழ்த்துதற்கு வாயினை அமைத்தான். நாம் சேர்ந்து பழகுவதற்குத் தனது சிறந்த அன்பின் திருக்கூட்டமும் ஏற்படுத்தினான். தனது ஐந்தொழிலுக்கு அறிகுறியாக உமையம்மை காண அழகிய தில்லைப் பொதுவில் கூத்து இயற்றுகின்றான். இத்தகைய அவனது அருட்பண்பினை மிகுதியாகப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக . Our Lord granted us heads with which to pay obeisance, mouth by which to extol the glory of His splendid Feet, and dedicated holy congregation into which to merge. He dances in glee, with His consort at the public hall of the elegant Thillai shrine. Let us sing on these virtues and gratefully pluck creeper flowers in glory to Him. கு-ரை: "வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும்" என்ற தேவாரமும் காண்க. 'சீரடியார்' என்பதில் சீர் என்பது பயன் கருதாது அன்பு செலுத்தும் சிறப்பினைக் குறிக்கும். அணங்கு= தெய்வப் பெண். அது இங்கே அம்மையைக் குறித்து நின்றது. அணங்கொடு என்பதற்கு அழகொடு என்று பொருள் கொள்வாரும் உளர். கூர= மிகுதியாக. 8. நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை யாண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ நெறி செய்தருளித் தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்து கொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி முறி செய்து நம்மை முழுது உடற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடிப் பூவல்லி கொய்யாமோ! neRi sey tharuLiththan siir adiyaar pon adikkee kuRiseythu koNdu ennai aaNda piraan kuNam paravi muRi seythu nammai muzuthudaRRum pazavinaiyai kiRi seytha vaapaadi puuvalli koyyaamoo பொ-ரை: எம்பெருமான் எனக்கு நல்ல வழியை உண்டாக்கி அருளினான். தனது சிறந்த அடியார் திருவடிகளுக்குத் தொண்டு செய்ய என்னை இலக்காக்கிக் கொண்டு ஆட்கொண்டருளிய அருட்பண்பினை வாழ்த்திப் பாடுவோம். நம்மை அடிமையாக்கி முற்றிலும் வருத்தும் பண்டை வினையை அவன் பொய்யாக்கிய (இல்லையாகச் செய்த ) விதத்தைப் பாடி நாம் கொடிப் பூக்களைக் கொய்வோமாக. Setting me on the right path and directing me towards the golden Feet of His rare disciples, He took me as vassal and destroyed the impact of past action that greatly troubles us . Let us sing on this and gratefully pluck creeper flowers in glory to Him. கு-ரை: முறி= அடிமை, உடற்றும் = வருத்தும். 9. பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமல ரென்னாகந் துன்னவைத்த பெரியோ னெழிற்சுடராய்க் கன்னா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ பல் நாள் பரவிப் பணி செய்யப் பாத மலர் என் ஆகம் துன்ன வைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்க், கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல்-இணைகள் பொன் ஆனவா பாடிப்-பூவல்லி கொய்யாமோ ! pannaaL paravi paNi seyya paathamalar en aakam thunna vaiththa periyoon eziRsudaraay kalnaar uriththu ennai aaNdu koNdaan kazal iNaikaL pon aana vaapaadi puuvalli koyyaamoo பொ-ரை: அடியேன் எம்பெருமானைப் பல நாட்கள் வணங்கித் தொண்டு செய்யும் பொருட்டுத் தன் திருவடித் தாமரையை எனது சென்னியில் வைத்து அருள் செய்தான். அருள்மிகுந்த சோதி வடிவில் எனக்கு அவன் கோலம் காட்டினான். கல்லில் நார் உரித்தாற்போல என் நெஞ்சக்கல்லை நெகிழ்த்து அன்புடையதாக்கி என்னை ஆட்கொண்டு அருளினான். அவனது இரு சேவடிகளும் நமக்குப் பொன்போல மாறாத பயன் தந்த வகையைப் பாடி, நாம் கொடிப் பூக்களைக் கொய்வோமாக. That I may pay obeisance to Him and serve Him for long, He placed His flowery Feet on my head quite early in my life. This peerless Lord, this beauteous flame of grace, took me under Him despite my being a stony hearted one, as difficult to straighten out, as a stone slab is to get peeled. Let us sing gratefully on His bejewelled Feet and pluck creeper flowers in glory to Him. கு-ரை: நெடுங்கால மியற்றிய தவத்தின் பயனாக ஞானங்கிட்டும் என்பது, தமது அனுபவத்தின் வைத்து அடிகள் அறிவுறுத்தியருளினர். ஆகம் = உடம்பு, இங்கே தலையைக் குறிக்கும். 'எழிற் சுடராய்' என்பதை 'உள்ளத் தெழுகின்ற ஞாயிறே போல' என்பதோடு ஒத்துப் பார்க்க. 'பொன்' அரிய பலனளித்தற்கு அறிகுறி. 10. பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான் காரார் கடனஞ்சை யுண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அறப் பெருந்துறையான் சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான் கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி போர் ஆர் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ! peeraasaiyaam intha piNdam aRa perunthuRaiyaan siiraar thiruvadi enthalai meel vaiththa piraan kaaraar kadalnanjsai uNdu ukantha kaapaali poraar puram paadi puuvalli koyyaamoo பொ-ரை: 'ஆசைக்கோர் அளவில்லை' என்று தாயுமான சுவாமிகள் அருளியதற்கு இணங்க அளவில்லாத ஆசையினால் இந்த உடம்பை எடுத்து பிறப்பு, இறப்பு என்கின்ற துன்பத்தில் இளைத்த என்னை அதனின்றும் நீங்கும்படி அருள்புரிந்தான் எம்பெருமானாகிய சிவபெருமான். திருப்பெருந்துறை அண்ணல் தமது செவ்விய திருப்பாதங்களை எனது தலைமேல் வைத்த வள்ளல். திருப்பாற்கடலில் எழுந்த கருமை நிறம் கொண்ட நஞ்சை விரும்பி அருந்தியவனும் அவனே. பிரம்ம கபாலத்தைக் கையில் கொண்டு இருப்பவனும் அவனே. அவன் வீரச்செயல்கள் புரிந்த அட்டவீரட்ட தலங்களாகிய திருக்கோவிலூர், திருக்கண்டியூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்கொறுக்கை, திருக்கடவூர் இவைகளில் அவன் செய்த வீரச்செயல்களைப் புகழ்ந்து பாடி நாம் கொடிப் பூக்களைக் கொய்வோமாக . My Lord of Thirup-Perun-Thurai placed His benevolent Feet on my head, that this fleshly frame of mine, which is the seat of greed, may cease to be. The Lord that readily consumed the dark venom emanating from the sea; holds a skull on hand. Let us sing, Oh maids, on the Thiripuram, where His valour, was distinctly known and in gratitude pluck creeper flowers, glorifying His generosity. கு-ரை: பேராசை= பேராசையால், பிண்டம்= உடம்பு. பிறவிக்கு ஆகுபெயர். சீர்= செம்மை. கார்=அச்சம் , உண்டுகந்த = உகந்துண்ட. கபாலி= கபாலத்தை யுடையவன். பிரமன் சிரத்தைக் கொய்தகாலை, அவன் தலையையே பலிப் பாத்திரமாக வைரவர் பிச்சையேற்றமை புராணத்தால் அறியற்பாலது. 11. பாலு மமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியா மந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ பாலும், அமுதமும், தேனுடன் ஆம் பராபரம் ஆய்க் கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் ஞாலம் பரவுவார் நல்-நெறி ஆம்; அந் நெறியே போலும் புகழ் பாடிப் பூவல்லி கொய்யாமோ ! paalum amuthamum theenudanaam paraaparamaay koolam kuLirnthuLLam koNdapiraan kuraikazalkaL njaalam paravuvaar nanneRiyaam anneRiyee poolum pukazpaadi puuvalli koyyaamoo பொ-ரை: பாலும் தேனும் அமுதமும் ஒருங்கு சேர்ந்தது போல மிக்க மேலான இன்பமான பொருள் சிவபெருமான். அவன் எனது உள்ளம் குளிர்விக்கும் திருவடியோடு என் முன்னால் தோன்றி என் மனத்தைக் கவர்ந்து கொண்ட பெருமான் அவன். அவனது ஒலிக்கும் சிலம்பு பொருந்திய திருவடிகளை வழிபடும் இவ்வுலகத்தினர்க்கு நன்னெறி உண்டாகும். அந்த நன்னெறி போன்றதே அவனது புகழ். அந்தப் புகழினைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக . The Lord that is verily like milk, honey and ambrosia, the Lord that has a form beyond our comprehension. He cooled his form and came over to quench my heated body and entered into my heart and made it His abode. The path of those on earth who pay obeisance to His twinkling bejewelled Feet is indeed the only right path. Let us sing thus, Oh maids, and pluck creeper flowers to the glory of this path. கு-ரை: பராபரம் = மேலானவற்றிற்கு மேலானது. பரா = மேல், பரம் = மேல். 'கோலத்தாற் குளிர்ந்து' என்னவே, குளிர்ந்த கோலம் என்பது கருத்தாம். குளிர்தல், உள்ளத்திற்குக் குளிர்ந்திருத்தல், ஆதலால் உள்ளங் குளிர்விக்கும் என்று பொருள் உரைக்கப்பட்டது 'அந்நெறியே' என்பதைப் 'பரவுவார் என்பதனோடும் 'போலும்' என்பதனோடும் இயைக்க, அகரம், உயர்வு குறிப்பது. 12. வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்குங் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோ னான நெடுங்கட லாலால மமுதுசெய்யப் போனக மானவா பூவல்லி கொய்யாமோ வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும் கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக்குறியோன் ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்யப் போனகம் ஆன வா-பூவல்லி கொய்யாமோ ! vaanavan maal ayan maRRum uLLa theevarkadkum koonavanaay ninRu kuudal ilaa kuNakkuRiyoon aananedungkadal aalaalam amuthu seyya poonakam aanavaa puuvalli koyyaamoo பொ-ரை; வானவர் தலைவனாகிய இந்திரன், திருமால், பிரமன் ஏனைய தேவர்கள் யாவருக்கும் தலைவனாய் நின்றவன் சிவபெருமான். அவன் தன்னளவில் இயற்கையாகவே முக்குணமும், நாமம் முதலிய அடையாளங்கள் கூடப் பெறாதவன். பெரிய பாற்கடலில் உண்டான ஆலகால விடமானது, அவனுக்கு உண்ணுதற்குரிய உணவாக ஆயின. அவனது இச்செய்கையினைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. He stands out as the unique Lord, ruling over Thirumaal, Brahma and all other devas. He has no identifiable characteristics or hallmark about Him. Even as He drank the venom raising up from the deep expansive sea Thirup-Paar-Kadal, the deadly poison turned out to be edible nectar to Him. Let us sing on this, Oh maids, and pluck creeper flowers in glory to Him. கு-ரை: 'வானவன்' என்ற ஒருமையால், அது இந்திரனைக் குறிப்பதாயிற்று. குணம்,குறி, கூடல் இல்லாதவன் என்று மாற்றுக. அவ்வாறே 'நெடுங்கடல் ஆன ஆலாலம்' என மாற்றுக. ஒருவரும் அடையக் கூடாத குணமும் குறியும் உடையோன் எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். போனகம்= உணவு. அமுது செய்ய= உண்ண. 13. அன்றால நீழற்கீ ழருமறைக டானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார வேத்து நிறைகழலோன் புனை கொன்றைப் பொன்றாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி நன்று ஆக வானவர், மாமுனிவர், நாள் தோறும் நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றைப் பொன் தாது பாடி, நாம்-பூவல்லி கொய்யாமோ ! anRu aala niizalkiiz arumaRaikaL thaan aruLi nanRaaka vaanavar maamunivar naaLthooRum ninRaara eeththum niRaikazaloon punaikonRai ponthaathu paadi naam puuvalli koyyaamoo பொ-ரை: சிவபெருமான் பண்டை நாளில், கல்லால மர நிழலின் கண் எழுந்தருளி அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் கருத்துப் பொதிந்த அருமையான நான்மறைகளின் பொருளைச் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு அருளிச்செய்தான். அங்ஙனம் அவன் அருமறைகளை அருளினமையால் தேவரும், பெரிய முனிவர்களும் ஒவ்வொரு நாளும் செவ்வையாக சிலம்புகள் அணியப் பெற்ற அவன் திருவடிகளை வணங்குகின்றனர். அவன் திருமுடியில் பொன்னிறம் வாய்ந்த மகரந்தப் பொடி நிரம்பப் பெற்ற கொன்றைப் பூவைச் சூடி உள்ளான் . இத்தகைய சிறப்பு வாய்ந்தவனைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Singing on the gold-like pollen-filled cassia flowers worn by Him, whose Feet are adorned with fulsome jewels, whose Feet are daily worshipped intensely by exalted savants and devas, singing on Him that taught the rare scriptures under the banyan tree, Oh maids, let us pluck creeper flowers in glory to Him. கு-ரை: ஆர= முழுமையும். புனை = அழகு செய்யும் அருமறைகள் அருளினமையால், மறைவிதிப்படி வானவரும் முனிவரும் வழிபடுவாராயினர் என்ற கருத்துத் தொனித்தல் காண்க. 14. படமாக வென்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் கிடமாகக் கொண்டிருந் தேகம்ப மேயபிரான் தடமார் மதிற்றில்லை யம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது - அவை அளித்து, இங்கு இடம் ஆகக் கொண்டிருந்து, ஏகம்பம் மேய பிரான் தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா நடம் ஆடுமா பாடிப் பூவல்லி கொய்யாமோ! padam aaka en uLLee than iNaippoothu avai aLiththu ingku idam aakak koNdirunthu eekampam meeyapiraan thadam aar mathil thillai ampalamee thaan idamaa nadam aadu maapaadi puuvalli koyyaamoo பொ-ரை: எம்பெருமானாகிய சிவபெருமான் என் உடலைத் தனது இடமாக ஏற்றுக்கொண்டு எனது உள்ளமாகிய சுவரில் சித்திரம் போல நிலைபெறும்படி தனது இரண்டு திருவடி மலர்களைப் பதிய வைத்துள்ளான். அவ்வாறு எனது இதயத்தைத் தனது இடமாகக் கொண்டு இருந்தும், அதே சமயத்தில் புறத்தே திருக்கச்சியேகம்பம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவிலிலும் எழுந்தருளி அருள்புரிந்து வருகிறான். அதுமட்டுமன்று, நீர்நிலைகள் சூழ்ந்ததும் விசாலமான திருமதில்களையும் உடைய சிதம்பரத்தில் உள்ள திருக்கோவிலின்கண் உள்ள பொற்சபையையும் தனது இடமாகக் கொண்டு ஆனந்த நடனம் செய்து வருகிறான். இப்படிப்பட்ட எம்பெருமானது ஆனந்த தரிசனம் என்று சொல்லப்படும் முடிவிலாற்றல் உடைமையைப் பாடி நாம் கொடிப் பூக்களைக் கொய்வோமாக. The Lord of Thiru-Ekambam (Kaancheepuram) left the imprint of His flowery Feet on me, and chose the public hall of Thillai with its long forts as His dance stage. Singing on these dance numbers, Oh maids, let us pluck creeper flowers in His glory. கு-ரை: படம் = சித்திரம், போதவை - அடிகளைக் குறித்தன. இங்கு, என்பது உடலையாவது உள்ளத்தையாவது குறிக்கலாம். தடம் = குளம், நீர்நிலை; 'நடமாடு' என்பதை 'இடமா' என்பதனோடும் 'ஆ' என்பதனோடும் கூட்டுக. தான் - சிறப்புணர்த்தும். 15. அங்கி யருக்க னிராவணனந் தகன்கூற்றன் செங்க ணரியய னிந்திரனுஞ் சந்திரனும் பங்கமி றக்கனு மெச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் பங்கம் இல் தக்கனும், எச்சனும் தம் பரிசு அழியப் பொங்கிய சீர் பாடி நாம் - பூவல்லி கொய்யாமோ ! angki arukkan iraavaNan anthakan kuuRRan sengkaN ari ayan inthiranum santhiranum pangkam il thakkanum essanum tham parisu aziya pongkiya siir paadi naam puuvalli koyyaamoo பொ-ரை: அக்கினி, சூரியன், அந்தகாசுரன், சிவந்த கண்ணுள்ள திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், தக்க யாகம் என்று சொல்லப்படும் வேள்வி இயற்றுமுன் சீரோடு வாழ்ந்த தக்கன், அவன் யாகத்தின் தலைவனான எச்சன் ஆகியோரது செருக்கினைத் தமது கோபத்தில் உண்டான வீரபத்திரரைக் கொண்டு ஒடுக்கி அருள் செய்தார். எமனையும் இராவணனையும் இறைவன் தானே நேராகத் தண்டித்துப் பின்னர் அருளும் செய்தார். அதனால் எம்பெருமானுடைய புகழ் மிகுந்து பரவிற்று. இவ்வாறு பரவிய புகழைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Let us pluck creeper flowers singing on the effulgent glories of our Lord, as witnessed in His many exploits on various occasions - such as in quelling the effrontery of the Fire God, the Sun God, King Raavanaa, Yamaa - the God of Death, Andhakaasuran, the red eyed Thirumaal, Brahma, Indra, Chandran the Moon God and even Dakshan and Ecchan the head priest of the sacrificial altar. கு-ரை: தக்கன் யாகத்தில், அக்கினியின் நாவையும் கையையும் வீரபத்திரர் கொய்தார். அரியை மார்பிலே புடைத்தார். அயனைச் சிரசில் குட்டினார். இந்திரனை வெட்டினார். சந்திரனைப் பாதத்தினால் தேய்த்தார். தக்கனும் எச்சனும் கொலையுண்டனர். யமனை மார்க்கண்டேயர்க்காக இறைவன் உதைத்தார். இராவணன் கயிலையை எடுக்க முயன்ற காலை அவனை விரலால் அழுத்தி நெரித்தனர். திருமால், பிரமன் முதலியோரை அந்தகாசுரன் வருத்திப் பெண் வேடங்கொள்ளச் செய்தமையால், வைரவர் சூலத்தால் தண்டனையடைந்தான். அவன் இறைவனை வழுத்தவே, அவனுக்குக் கணபதி பதவி கொடுக்கப்பட்டது எனக் கந்தபுராணம் கூறும். தக்கன் வேள்வியியற்று முன், உமையம்மையை மகளாகப் பெற்றுச் சீரொடு திகழ்ந்தமையால், 'பங்கம் இல்' என்றார். 16. திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பான் மதுரையில் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் - தன்னைப் பணிகொண்ட புண் பாடல் பாடி நாம் - பூவல்லி கொய்யாமோ ! thiNpoor vidaiyaan sivapuraththaar pooreeRu maNpaal mathuraiyil piddu amuthu seytharuLi thaNdaalee paaNdiyan thannai paNikoNda puNpaadal paadinaam puuvalli koyyaamoo பொ-ரை: எங்கள் பெருமான் வலிய போர் இயற்றவல்ல காளையை ஊர்தியாகக் கொண்டவன். சிவலோகத்தாராகிய அடியார்களுக்குத் தலைவனாய் நின்று இடர்களைக் களையும் சிங்கம் போன்றவன். மண்ணுலகில், மதுரையம்பதியில் மண் சுமப்பதற்கு வந்தி என்னும் பிட்டு வாணிச்சிக்குக் கூலி செய்வதாக ஏற்றுக் கொண்டு அவள் உதிர்த்த பிட்டை உண்டு அவளுக்கு அருள் செய்தான். வைகை ஆற்றங்கரையில் வந்திக்கு ஏற்பட்ட பகுதியில் வேலை செய்யாதது போல நடித்தான். அதன் பயனாகப் பாண்டிய மன்னனால் பிரம்படி பட்டான். ( உடனே மண்ணைக் கொட்டி அவள் பகுதியை அடைத்து வெள்ளத்தையும் வற்றச் செய்து பாண்டிய மன்னனுக்கு மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறி மறைந்தான் ). இத்தகைய அவனது விநோதமான செயல்களைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Our Lord of the valiant bull mount, fierce lion-like champion of Civapuram, came over to the earth in Madurai and partook of the sweet dish of rice for the sake of the elderly lady Vandhi, the forlorn. And then, the way by which he was smitten by Paandiyan King's staff who claimed his services in the Vaigai river bed. With this song on the tale of the wounds He bore, Oh maids, let us pluck creeper flowers and pay obeisance to Him. கு-ரை: ' போரேறே நின்பொன்னகர்வாய்' என்று மேலே வருதல் காண்க. தண்டு = தடி, பிரம்பு, பாடல்= படல் என்பதன் விரிவு. 17. முன்னாயா மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே யென்னாக முள்புகுந் தாண்டுகொண்டா னிலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே ? என் ஆகம் உள் புகுந்து ஆண்டு கொண்டான் இலங்கு அணியாம் பல் நாகம் பாடி நாம் - பூவல்லி கொய்யாமோ ! munnaaya maal ayanum vaanavarum thaanavarum ponnaar thiruvadi thaam aRiyaar pooRRuvathee enaakam uLpukunthu aaNdu koNdaan ilangku aNiyaam pannaakam paadi naam puuvalli koyyaamoo பொ-ரை: பொன்னொளி பொருந்திய இறைவனது திருப்பாதங்களைத் தேவர்களுள் முன்னிற்பாராகிய திருமாலும், பிரமனும் ஏனைய தேவர்களும், அசுரர்களும் தம்முனைப்பால் தாமாக அறிய மாட்டார்கள். ஆனால் எனக்குப் பக்குவம் வருமுன்னே என் உடலில் புகுந்து அவனது திருவடிகளை எளிதாகத் தெரியும்படிச் செய்து என்னை ஆட்கொண்டருளினான். அவன் பல பாம்புகளைத் தனக்கு அணிகலனாகக் கொண்டான். அவனது இத்தன்மையான விநோதச் செயல்களைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Thirumaal, the first of Gods, Brahma and all other gods, as also the Asuraas, know not how to pay obeisance to His golden Feet and yet, Oh maids, He entered into my heart and took me under Him. Singing on His glistening snake ornaments, Oh maids, come Ye and pluck creeper flowers in His glory. கு-ரை: 'பொன்னார்' = பொன்போல மாற்றமில்லாத என்றும் பொருள் உரைப்பர். போற்றுவதே என்பதில் ஏகாரம் வினா. ஆகம் என்பதை அகமென்பதன் விரிவாகக் கொண்டு உள்ளம் என்று பொருள் உரைத்தலும் உண்டு . பாம்பு - குண்டலினி சத்தியைக் குறிப்பதால் இறைவனது வியத்தகு செயல்களுக்கவை அறிகுறியாம். 18. சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே யாராத வாசையதா யடியே னகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் றிருநடஞ்செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே ஆராத ஆசை அது ஆய் அடியேன் அகம் மகிழத் தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம் செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ ! siiraar thiruvadi thiN silampu silampu olikkee aaraatha aasaiyathaay adiyeen akammakiza theeraarntha viithi perunthuRaiyaan thirunadanjsey peeraanantham paadi puuvalli koyyaamoo பொ-ரை: தேர் ஓடுகிற தெருக்களை உடையது திருப்பெருந்துறை என்ற ஊர். அங்குள்ள திருக்கோவிலில் எங்கள் இறைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருந்து அருள் வழங்குகின்றான். அவனது சிறப்பான திருவடிகளில் வலிய சிலம்புகள் அணிந்திருக்கிறான். அவன் ஆனந்த நடனம் புரியும்போது அச்சிலம்புகள் கலீர் கலீரென்று ஒலிக்கின்றன. இந்த ஒலியைக் கேட்க அடியேன் தணியாத ஆசை உடையவனாய் இருக்கின்றேன். இந்த ஒலியைக் கேட்கக் கேட்க என்னுள்ளம் மகிழ்வெய்திப் பேரின்பம் அடையப் பெற்றேன். அந்தப் பேரின்பத்தை அருளிய அவனது அருட்செயலைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. To hear the twinkling of the anklet of His blissful holy Feet, I ceaselessly yearn with devotion. For the gladness of the lowly cur, that I am, the Lord of Perunthurai of wide streets coursed through by chariots, staged His cosmic dance before me. Singing on this matchless joy, Oh maids, let us pluck creeper flowers in His glory. கு-ரை: பகைவர் மனத்தில் அச்சம் விளைக்குஞ் சிலம்பு, என்பார் 'திண் சிலம்பு' என்றார். ஆர்வம் மேலுமேலும் எப்போதும் விளையும் என்பார், 'ஆராத' என்றார். ஆனந்தக் கூத்தாதலில் 'பேரானந்தம்' என்றார். 19. அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு இவ் உலகில் பிள்ளையும் ஆம் , முத்தி முழு முதல், உத்தரகோச மங்கை வள்ளல் புத்தி புகுந்தவா - பூவல்லி கொய்யாமோ ! aththi uriththu athu poorththaruLum perunthuRaiyaan piththa vadivukoNdu ivulakil piLLaiyum aam muththi muzumuthal uththarakoosa mangkai vaLLal puththi pukunthavaa puuvalli koyyaamoo பொ-ரை: எங்கள் இறைவனாகிய சிவபெருமான் திருப்பெருந்துறை நாதன் ஆவான். முன்னொரு காலத்தில் கயாசுரன் என்ற ஓர் அசுரன் யானை வடிவம் கொண்டு சிவபெருமானிடம் போர் புரிய வந்தான். சிவபெருமான் அவனை அடக்கி அழித்து அந்த யானையின் தோலைத் தன் திருமேனியில் போர்த்திக் கொண்டான் (கதை 35ஐப் பார்க்கவும்). அவன் தன்னிகரற்ற பேரன்பு உடையவன் ஆதலால் (பித்தன் ஆதலால் ) ஓரி என்ற ஊரின்கண் வசித்து வந்த சிவனடியார் மகளாகிய கௌரி என்ற பெண்ணிற்குப் பாலகனாக உருவெடுத்து அவளை ஆட்கொண்டான் (கதை 3ஐப் பார்க்கவும்.) எங்கள் இறைவனாகிய சிவபெருமான் ஒருவனே பிறப்பில்லாதவன். அவனல்லாது அந்நிலையை அருளவல்லார் பிறர் இல்லாத முத்தி முழு முதல்வன் (முடிந்த தலைவன்) அவன். அவன் திரு உத்தரகோச மங்கையில் எழுந்தருளித் தக்கார்களுக்கு வீடு பேற்றை அளித்து வருகிறான். அந்த வள்ளல் என்னுள்ளத்தில் புகுந்து என்னை ஆட்கொண்ட விதத்தைப் பாடி நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Our Lord of Perunthurai skinned the wild pachyderm and donned its hide, feigned madness and even took on the role of a child in this world. This, our generous Lord of Thiru-Uththara-Kosa-Mangai, who is verily the singular lead to salvation, entered my intellect. Sing Ye thus, Oh maids, and pluck creeper flowers in His glory. Note: See Chapter 2 "Keerthith-Thiru-Ahaval" - Lines 68, 69 - In a hamlet called Ori, Lord Civan became a child of greatest glory on earth in order to bless a devotee and make her His own. கு-ரை: கயாசுரன் கதை முன்னே கூறப்பட்டது. விருத்த குமார பாலரான படலத்தில், இறைவன் குழந்தையானமை காண்க. 'பாரிரும் பாலகனாகிய பரிசும்' என்றனர் கீர்த்தித் திருஅகவலுள். புத்தி= அறிவு. புத்தி என்பதற்கு உள்ளம் என்பாரும் உளர். 'முத்தி முழுமுதல்' என்றமையால், இறைவன் ஒருவனே வீடளிக்கவல்லான் என்பது முடிந்தது. 'பித்தன்' என்பதற்குக் கள்வன் என்று பொருள் உரைத்தலும் உண்டு. ' பித்தன்' என்பதற்கு 'பேரின்பம் அளிப்பவன்' என்பதே பொருத்தமான பொருள் என்று கூறுவாரும் உளர். 'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்' என்ற முதுமொழியை நினைவு கொள்க. 20. மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ மாவார வேறி மதுரை நகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலம் திகழ்அப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ ! maavaara eeRi mathurai nakar pukuntharuLi theevaarntha koolam thikaza perunthuRaiyaan koovaaki vanthu emmai kuRReeval koNdu aruLum puuvaar kazalparavi puuvalli koyyaamoo பொ-ரை: ஆவணி மூலத்தன்று குதிரைகள் மதுரை வந்து சேரும் என்று பாண்டிய மன்னனிடம் கூறுவாயாக என்று முன்னர் திருப்பெருந்துறையில் சிவபெருமான் என்னிடம் கூறி அருளினான் . அதன்படி அவனே குதிரைச் சேவகன் போன்று மாறுவேடம் கொண்டு மதுரை மாநகருக்குள் புகுந்து , தெய்வத்தன்மை உடைய தனது திருமேனியுடன் அரசன் முன் சென்று குதிரைகளை ஒப்புவித்தான் அவ்வாறு என் தலைவனாக வந்து என்னை ஆட்கொண்டருளினான். அவனது செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைத் துதித்து நாம் கொடிப்பூக்களைக் கொய்வோமாக. Oh maids, sitting on horse back, our Lord entered Madurai and graced me.This great Lord of Thirup-Perun-Thurai shining bright in heavenly splendour, came as chief and took me as His vassal unto Him. Let us pay obeisance to His beauteous lotus Feet and pluck creeper flowers. கு-ரை: 'மா ஏறியார' என மாறுக. ஆர= ஆர்த்து, அமர்ந்து. திகழ= திகழ் + அ. வினைத்தொகை. தேவு= தெய்வத்தன்மை, ஒளி. இந்த 20ஆவது பாட்டும் திருவுந்தியாரின் 20ஆவது பாட்டும் சில பிரதிகளில் இல்லை என்பர். அவ்வாற்றான் இவை இடைச்செருகலாயின . 19 பாட்டுக்களால் ஆயினமை பற்றியே இது திருச்சாழலின் பின் வைத்துக் கோக்கப்பட்டதாகும் . THIRUCHCHITRAMBALAM 14. திருவுந்தியார் 14. THIRU-VUNTHIYAAR (ஞான வெற்றி ) Victory of Gnosis தில்லையில் அருளிச் செய்யப்பட்டது A Sacred Drill of Young Folks கலித்தாழிசை Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் மகளிர் விளையாட்டு வகைகளுள் 'உந்தி' என்பது ஒன்று உண்டு என்பது பிங்கல நிகண்டால் அறியப்படுகின்றது. ' அடியார்க்கு நல்லார் காட்டினர்' என மேற்குறித்த சூத்திரத்துள்ளும், 'உந்தி' என்பது ஒன்று காணப்படுவதால், இது பல்வரிக்கூத்துள் ஒன்று என்பது அறியலாகும். இப்பகுதியுள் வரும் 'உந்தீபற' என்ற தொடர்களில் உள்ள உந்தீ என்பது 'உந்தி' என்னும் பெயர் விளியேற்று நின்றதாகவே கொள்ளக்கிடப்பதால், இவ்விளையாட்டினைச் செய்யும் மகளிர் அவ்விளையாட்டில் 'உந்தி' என்னும் புனைப்பெயரை உடையவராய் இருப்பர் எனக் கொள்ள வேண்டியுள்ளது. இதன்கண் ஓரிடத்து 'ஏடி, உந்தி' என வருதலும், அடியார்க்கு நல்லார் காட்டிய சூத்திரத்துள் வரும் சில வரிக்கூத்துக்கள், 'பப்பரப்பெண், கிழவி, வேதாளி, வாணி, பகவதி ' முதலிய பெயர்களை உடையனவாய் இருத்தலும் இதனை வலியுறுத்தும். இங்ஙனமாயின் இது கலம்பகத்துள் வரும், 'பிச்சியார், கொற்றியார், மதங்கியார்' என்னும் உறுப்புக்களுள் வரும் "பிச்சி, கொற்றி, மதங்கி' என்னும் பெயர்களோடு ஒப்பதாம். இதுபற்றியே, "பிச்சியார்' முதலியன போல, இதுவும் 'உந்தியார்' என ஆர் விகுதி பெற்று நின்றது. மேற்குறித்த சூத்திரத்துள் உந்தி என்பதோடு, 'பிச்சி, கொற்றி' என்னும் பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றால், மகளிர் விளையாட்டு எனவும் 'வரிக்கூத்து' எனவும் அறியப்படுகின்ற இது, 'உந்தி' என்னும் பெயராலும், பறத்தல் தொழிலோடு இயைத்துச் சொல்லப்படுவதாலும், இதனை ஆடும் மகளிர், பறவை போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய , இரு கைகளையும் முடக்கி இருந்து, பின் விரைந்தெழுந்து, இருகைகளையும் இருபக்கங்களில் சிறகு போல நீட்டிப் பறவைகள் பறப்பது போலப் பாவனை செய்து, ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடுவர் என்று கொள்ளல் பொருந்தும். இவ்வாறு ஆடுதல் மகளிர்க்கு நல்லதோர் உடற்பயிற்சியாயும் அமையும். கலம்பகத்துள் வரும் பிச்சியார் முதலிய துறைப் பாடல்கள் அயலார் கூற்றாக வருதலின் அப்பெயர்கட்கேற்பப் பன்மையில் அமைந்துள்ளன. இவ்வுந்தியார் என்பது, 'உந்தீ' என ஒருமையாக விளித்து, 'பற' என்னும் ஒருமை ஏவலாலே முடிக்கப்படுகின்றது. அதனால், ஒருவர்க்கொருவர் தோழியராய் ஒத்த நிலையில் உள்ள மகளிர் தம்மில் இவ்வாறு விளித்தும் ஏவியும் பாடி ஆடுவர் என்பது பெறப்படும். ஏனைய விளையாட்டுப் பாடல்கள் போல இவ் விளையாட்டுப் பாடலும் 'உந்திப்பாட்டு' எனப்படும். இதுவும், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது என்பதே பதிப்புகளில் சொல்லப்படுவது. இது முழுவதும் கலித்தாழிசையான் இயன்றது. இதனுள் சிவபெருமானது வெற்றியே கூறப்படுதலின், அவ்வெற்றி அப்பெருமானே முதற்பொருள் என்று உணரும் ஞானத்தினது வெற்றியாதற்குத் தடையின்மையின், இப்பகுதிக்கு, 'ஞானவெற்றி' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். யாப்பு வகையால் இது, திருத்தோள் நோக்கத்தின்பின் வைக்கற்பாலதாயினும், இருபது பாட்டுக்களான் இயன்றிருத்தல் பற்றி அதற்கு முன்னர் வைத்துக் கோத்தனர். In a popular drill form of the bygone era, a group of girls standing around in a circle, mimic with gestures the flying motion of birds, even as they sing psalms glorifying the uniqueness of Lord Civa. There are 20 verses (each of three lines) listed under five heads. The first four relate to the exploits of Thiripuram (the destruction of the forts of the three recalcitrant Asuraas). The next 12 are on the impudence and effrontery of Dakshan, the ferocious. The rest refer to Sage Upamanyu, Brahma and Raavana. According to some commentators, Undhiyaar is a game of youngsters who throw balls of small stone pebbles up into the air (உந்தியாடுதல்) even as they chant on Lord Civa. 14. 1. வளைந்தது வில்லு விளைந்தது பூச லுளைந்தன முப்புர முந்தீபற வொருங்குடன் வெந்தவா றுந்தீபற வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன முப்புரம் உந்தீ பற ! ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற! vaLainthathu villu viLainthathu puusal uLainthana muppuram unthiipaRa orungkudan venthavaaRu unthiipaRa பொ-ரை: சிவபெருமான் மேரு மலையை வில்லாகக் கையில் கொண்டு வளைத்தான். அம்பு எய்யவில்லை; போர் மூண்டது . அசுரர்களுடைய மூன்று நகர்களும் துயருற்றன. உடனேயே, திடீரென அந்த மூன்று நகர்களும் வெந்து நீறாயின. அதில் வாழ்ந்த அசுரர்கள் அனைவரும் ஒருமிக்க வெந்து நீறாயினர். வில்லில் கோத்த அம்பு பயன்படாமலே நேர்ந்த அந்த வியத்தகு செயலைப்பாடி உந்தி பறந்து விளையாடு. The bow was bent and the war was on. And lo! The cities of the three Asuraas (instantly) went into dire distress. So singing, (let us) fly thus like a bird, chanting on the total destruction of the Trifort, (let us) fly thus like a bird. கு-ரை: 'வில்லு' என்பதில், உகரம், சாரியை. பூசல் = போர், சண்டை. உந்தி பறத்தல் என்பது கழங்கு போலக் கையில் நின்று மேலொன்றை எறிந்து விளையாடும் விளையாட்டாக இருத்தல் கூடும். 2. ஈரம்பு கண்டில மேகம்பர் தங்கையி லோரம்பே முப்புர முந்தீபற வொன்றும் பெருமிகை யுந்தீபற ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம் கையில்; ஓர் அம்பே முப்புரம்-உந்தீ பற ! ஒன்றும் பெருமிகை உந்தீ பற ! iirampu kaNdilam eekampar thamkaiyil oor ampee muppuram unthiipaRa onRum perumikai unthiipaRa பொ-ரை: ஏகாம்பர நாதராகிய இறைவனது திருக்கரத்தில் இரண்டு அம்புகளை நாம் பார்க்கவில்லை. கண்டது ஓர் அம்புதானே திரிபுரம் எரித்தலுக்காக வழங்கியது. தன் புன்சிரிப்பால் இறைவன் திரிபுரம் எரித்தமையால் அந்த ஒரு அம்பும் உபயோகமற்றது ஆயிற்று என்று அத்தகைய வியத்தகு செயலைப்பாடி உந்தி பறந்து விளையாடுக. We just saw merely a single arrow in the Hands of Ekambarar (our Lord) and then the three forts perished (into oblivion). So singing, let us fly thus like a bird, chanting that even this single arrow was not needed, let us fly thus like a bird. கு-ரை: 'முப்புரம்' என்பதன்பின் 'அழிக்க' என்பது தொக்கது. மிகை=மிகுதி. வேண்டியதற்கதிகம்; சிரிப்பினை நோக்க, அம்பு பெரியதோர் கருவியாய் மால், எரி, வாயு முதலிய தேவர் ஆற்றல் கொண்டதாயிருந்தமையின் 'பெருமிகை' என்றார். 3. தச்சு விடுத்தலுந் தாமடியிட்டலு மச்சு முறிந்ததென் றுந்தீபற வழிந்தன முப்புர முந்தீபற தச்சு விடுத்தலும், தாம் அடியிட்டலும் ; அச்சு முறிந்தது என்று உந்தீ பற ! அழிந்தன முப்புரம்-உந்தீ பற ! thassu viduththalum thaam adi yiddalum assu muRinthathu enRu unthiipaRa azinthana muppuram unthiipaRa பொ-ரை: தேவர்கள் வருந்தித் தேரினை அமைத்துச் சிவபிரானுக்கு அனுப்பினர். அத்தேரிலே இறைவன் திருவடி வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. ஆயினும் திரிபுரம் அவன் நகையால் எரியுற்றொழிந்தன. இதற்கு ஞானப் பொருள்: இருவினையொப்பு, மலபரிபாகம் முதலியன பொருந்தி விட்டதும் இறைவன் ஆசானாக வந்து திருவடி தீக்கை செய்கிறான். பிறவி ஒழிந்து, மும்மலங்களும் தொலைந்தன என்பதாகும். Even as He set foot on the chariot (that was brought before Him during the battle of Thiripuram) the axle of this car broke and gave way, rendering this accessory of little or no use for the Lord. So singing, let us fly thus like a bird. Chanting that the Trifort was gone, let us fly thus like a bird (The Lord burnt down the three forts by a mere grin, obviating the need for any accessories). கு-ரை: நிலம் தேராகவும், அயன் தேரோட்டியாகவும், ஏனைத் தேவரெல்லாம் தேர்க்கு உறுப்புக்களாகவும், மேரு வில்லாகவும், திருமால் அம்பாகவும் அமைந்தமையால், 'தச்சு விடுத்தலும்' என்றார். இதன் விரிவைப் பாரதம் இலிங்க புராணம் முதலியவற்றிற் காண்க. தேவர் செருக்கொழிய, தேரின் அச்சு இறையருளால் இற்றது. இறைவன் தன் கடனைச் செவ்விதின் ஆற்றினமையின், முப்புரம் அழிந்தன. 4. உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே யுந்தீபற விளமுலை பங்கனென் றுந்தீபற உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு எய்ய வல்லானுக்கே-உந்தீ பற ! இளமுலை பங்கன் என்று-உந்தீ பற ! uyya vallaar oru muuvarai kaaval koNdu eyya vallaanukkee unthiipaRa iLamulai pangkan enRu unthiipaRa பொ-ரை: திரிபுரங்கள் முழுமையும் எரியுண்டபொழுதும் அங்கு வாழ்ந்த அசுரர்களில் சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்கின்ற மூவர் மட்டும் சிவபக்தி குன்றாமல் நன்னெறியைக் கடைப்பிடித்து ஒழுகி வந்தமையால் இறைவன் அம்மூவரை மட்டும் அழியாமல் காத்தார். பின்னர் அவர்களில் இருவரைத் தன் வாயிற்காப்போராகவும் மூன்றாமவரான சுபுத்தியைத் தனது திருக்கூத்திற்கு மத்தளம் முழக்குபவராகவும் ஆக்கிக் கொண்டார். இச்செயலைப் பாடி உந்தி பறந்து விளையாடுக. The Lord bestowed grace on the three Trifort dwellers (the three Asuraas, Sudanman, Susheelan, Subuddhi) as they could stand firm in the right path of salvation. Two of these three Asuraas were subsequently ordained as sentinels guarding His entrance gate, whilst the third one was appointed as drum beater for His dances. So singing, let us fly thus like a bird. He destroyed the three recalcitrant Trifort chiefs namely Dharahaakan, Kamalaakan and Vidyunmali as they were not worthy of salvation, unlike the other three trifort citizens who deserved grace (உய்யவல்லார் ஒரு மூவர்) (c.f. Thirumurai 1.69.1) chanting on the glory of this smart archer that holds His consort on His left, let us fly thus like a bird. கு-ரை: திரிபுரத்தசுரர்க்குத் திருமால் நாத்திகம் போதித்த காலை, தாரகாட்சன், கமலாட்சன் ,வித்யுந்மாலி என்னும் மூவரும் சிவபூசையைக் கைவிடாது நின்று , திரிபுரம் எரியுற்ற காலை, இறைவன் வாயில் காப்பாளராயினர் என்பது புராணம். 'எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்' என்ற திருத்தோணோக்கச் செய்யுட்பகுதியைக் காண்க. 5. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்க ளோடிய வாபாடி யுந்தீபற வுருத்திர நாதனுக் குந்தீபற சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடியவா பாடி உந்தீ பற ! உருத்திர நாதனுக்கு உந்தீ பற ! saadiya veeLvi sarinthida theevarkaL oodiya vaa paadi unthiipaRa uruththira naathanukku unthiipaRa பொ-ரை: வீரபத்திரர் பூதப்படையுடன் தாக்கிய யாகம் நிலை குலைந்தது . ஆங்கிருந்த தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடிய விதத்தைப் பாடி விளையாடுக. உருத்திரர்கள் தலைவனாகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடி உந்தி பறந்து விளையாடுக. Dakshan's Affrontery: With the sacrifice of the impudent Dakshan withering away under the wrath of Lord Civa, all the assembled gods (devas) ran away from the site. So singing, let us fly thus like a bird. Chanting glories of Him that is the chief of the Rudras, let us fly thus like a bird. கு-ரை: காயத்திரி, சரசுவதி, சந்திரன், பகன் முதலிய தேவர்கள் ஓடினமை, தக்கயாக வரலாற்றில் காண்க. கந்தபுராணம் பார்க்க. தேவர்கட்கு மேலாய் ஞானம் பெற்ற இனத்தினர் உருத்திரர். ஒவ்வொரு அண்டத்திலும், நூற்றெட்டு உருத்திரர் உளர். பிரகிருதி புவனங்கள் அனைத்திற்கும் மேலாக ஸ்ரீகண்ட ருத்திரர் உளர். யாவர்க்குந்தலைவர் சிவபெருமான். இவற்றின் விரிவை, சித்தாந்தப் பிரகாசிகை, சிவஞானபாடியம் ஆகியவற்றில் காண்க. 6. ஆவா திருமா லவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர்முகன் றாதையென் றுந்தீபற ஆ! ஆ! திருமால், அவிப் பாகம் கொண்டு, அன்று சாவாது இருந்தான் என்று உந்தீ பற! சதுர் முகன் தாதை என்று-உந்தீ பற ! aa aa thirumaal avippaakam koNdanRu saavaathu irunthaan enRu unthiipaRa sathurmukan thaathai enRu unthii paRa பொ-ரை: பிரமதேவனுக்குத் தந்தையாகிய திருமால் தக்கன் வேள்வி உணவில் தனக்குரிய பாகத்தைக் கொண்ட காலை வீரபத்திரரால் நெஞ்சில் அடியுண்டு மூர்ச்சித்து உயிர் மட்டும் போகாதிருக்கப் பெற்றான். பிரமனது தந்தை இவ்வாறு பிழைத்த விதத்தைப் பாடி உந்தி பறந்து விளையாடுக. On the days of Dakshan's sacrifice Thirumaal consumed the altar's ambrosia. He was therefore, punished by Veerabadran, but escaped from death, because he is the father of Brahma the creator. So singing, let us fly thus like a bird. Singing that such was the act of Thirumaal, Sire of Brahma, let us fly thus like a bird. கு-ரை: ஆவா, இரக்கக் குறிப்பு 7. வெய்யவ னங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீ பற ! கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற ! veyyavan angki vizungka thiraddiya kaiyai thaRiththaan enRu unthiipaRa kalangkiRRu veeLvi enRu unthiipaRa பொ-ரை: அவியில் விருப்பமுடையவனாய் அக்கினி தேவன் அவியை உட்கொள்ள ஒன்று சேர்த்த கையை வீரபத்திரர் துண்டித்தார். யாகமே நடக்காமல் நிலை பிறழ்ந்தது என்று பாடி விளையாடுக. The wily Fire God tried stealthily to swallow the altar's nectar, but his hand was severed.Singing on this, let us fly thus like a bird. Singing that the sacrifice withered away, let us fly thus like a bird. கு-ரை: வெய்யவன் = விருப்பமுடையவன், வெப்பமுடையவன் என்று பொருள் கொள்ளுதல் மிகையாகும். 8. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது என்னே? ஏடி ! -உந்தீ பற ! பணை முலை பாகனுக்கு உந்தீ பற ! paarppathiyai pakai saaRRiya thakkanai paarppathu enneedi unthiipaRa paNaimulai paakanukku unthiipaRa பொ-ரை: உமையம்மை அரனின் தேவியானாலும் தனது தவத்தால் தம்மால் வந்த மகள் தானே என்று இகழ்ச்சியாகப் பொருந்தாத சொற்களைக் கூறிய அறிவிலியாகிய தக்கனை நாம் பார்த்தல் கூடாது. பருத்த நகிலை உடைய அம்மையைத் தனது பாகத்தில் உடைய சிவனை மிகப்புகழ்ந்து பாடி உந்தி பறந்து விளையாடுக . How come, Oh maid, that Dakshan who branded Paarvathi as a foe, could yet be counted in the family divine. We should not care to see him. Singing on this, let us fly thus like a bird., so chanting,let us fly thus like a bird.,over to Him that holds His consort on the left of His frame. கு-ரை: 'பார்ப்பதென்னே' என்பதற்கு உயிரோடு வைத்துப் பார்ப்பதால் பயனென்னே எனப் பொருள் கொள்வாரும் உளர். பணை=பருமை. 9. புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினா ருந்தீபற வானவர் கோனென்றே யுந்தீபற புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி மரம் தனில் ஏறினார்-உந்தீ பற ! வானவர்-கோன் என்றே உந்தீபற ! purantharanaar oru puungkuyil aaki maranthanil eeRinaar unthiipaRa vaanavar koon enRee unthiipaRa பொ-ரை: இந்திரன், தக்கன் வேள்வியில் தப்பியோடும் பொருட்டு ஓர் அழகிய குயில் வடிவெடுத்து மரத்திலேறிப் பதுங்கினான். தேவர்களுக்கு அரசனான அவன் இவ்வாறு செய்தான் என்று பாடி விளையாடுக. At the sacrificial ground of Dakshan, in order to escape the fury of the destruction, Indra assuming the fair form of a kuil bird, climbed on to a tree and took refuge there. Singing on this, let us fly thus like a bird. Chant that such was Indraa, the leader of all sky borne gods and fly thus like a bird. கு-ரை: அவ்வாறு செய்தும் அவன் தப்பாது வெட்டுண்டு வீழ்ந்தானென்று கந்தபுராணங் கூறும். 10. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி யுந்தீபற தொடர்ந்த பிறப்பற வுந்தீபற வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை துஞ்சினவா பாடி உந்தீ பற ! தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற! venjsina veeLvi viyaaththiranaar thalai thunjsina vaa paadi unthiipaRa thodarntha piRappaRa unthiipaRa பொ-ரை: கொடிய கோபத்திற்கேதுவான தக்கன் வேள்வியின் அதிபதியான எச்சன் தலை வெட்டுண்டு இறந்த விதத்தைப் பாடி உந்தி விளையாடுக. நம்மைப் பற்றி வரும் பிறப்புத் தொலைய இறைவனைப் பாடி விளையாடுக. Dakshan, the ferocious one, started the ritual of sacrifice himself being the head priest. But lo! his head was severed. Singing on this, let us fly thus like a bird. Chant and fly like a bird, that we may be rid of the cycle of births and deaths. கு-ரை: வியாத்திரனார்= உறுதியாக உள்ளவர், துஞ்சுதல்= இறத்தல் . 11. ஆட்டின் றலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி யுந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக் கூட்டியவா பாடி உந்தீ பற ! கொங்கை குலுங்க நின்று உந்தீ பற ! aaddin thalaiyai vithikku thalai aaka kuuddiya vaapaadi unthiipaRa kongkai kulungka ninRu unthiipaRa பொ-ரை: பிரமனது மகனாகிய தக்கனுக்குச் சிறுவிதி என்று மற்றோர் பெயரும் உண்டு. அவன் கழுத்து வெட்டுண்ட பின் அவன்மீது இரக்கம் கொண்டு அவன் இழந்த தலைக்குப் பதிலாக அவன் கழுத்திலே ஆட்டின் தலையை இறைவன் பொருத்திய விதத்தைப் பாடி விளையாடுக. நகில்கள் குலுங்க நின்று விளையாடுக . Though Dakshan's head was severed, nevertheless, it was replaced by a goat's head on to his torso. So singing, let us fly thus like a bird. Chanting on this, let us fly thus like a bird, to the convulsion of the bosom. கு-ரை: விதி= சிறு விதி என்பதன் முதற் குறை. விதி என்பது அயன் பெயர். அவன் மகனாகிய தக்கனுக்குச் சிறு விதியெனப் பெயர் கூறப்படும். 12. உண்ணப்புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெலா முந்தீபற உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே கண்ணைப் பறித்தவாறு-உந்தீ பற ! கருக்கெட, நாம் எலாம் உந்தீ பற ! uNNa pukuntha pakan oLiththu oodaamee kaNNai paRiththavaaRu unthii paRa karuk keda naam elaam unthiipaRa பொ-ரை: தக்கனின் வேள்விச் சாலையில் தனக்குரிய அவிர்பாகத்தை உட்கொள்ளப் போன பன்னிரு சூரியர்களுள் ஒருவனான பகன் என்பவன் வீரபத்திரரைக் கண்டு ஓடி ஒளிக்கத் தொடங்கினான். அவன் அப்படி மறைந்து ஓடாவண்ணம் அவர் அவன் இரு கண்களையும் பிடுங்கிய விதத்தைப் பாடி விளையாடுக. நமது பிறவி ஒழியும் பொருட்டுப் பாடி ,விளையாடுக. At the sacrificial altar, when Bahan one of the devas, strove to steal the elixir of life , his eyes were plucked out so that he might not run away furtively from the site. Sing on this and fly thus like a bird. Let us sing and fly like a bird, that we may be rid of all future births. கு-ரை: பகனென்பவன் பன்னிரண்டு சூரியர்களுள் ஒருவன். அவன் கண்ணிழந்தமை சதபதப் பிரமாணம், கந்தபுராண முதலியவற்றில் கூறப்பட்டது. 13. நாமக ணாசி சிரம்பிர மன்படச் சோமன் முகனெரித் துந்தீபற தொல்லை வினைகெட வுந்தீபற நாமகள் நாசி, சிரம் பிரமன், படச், சோமன் முகம் நெரித்து உந்தீ பற ! தொல்லை வினை கெட உந்தீ பற ! naamakaL naasi siram piraman pada sooman mukam neriththu unthiipaRa thollai vinai keda unthiipaRa பொ-ரை: கலைமகள் மூக்கறுபடவும், பிரமன் தலையில் குட்டுப்படவும் நேர்ந்தமையும் , சந்திரன் முகத்தை நெரித்ததையும் பாடி விளையாடுக. நம் பண்டைவினை ஒழியும்படி விளையாடுக. At the sacrificial site, Brahma and the goddess of learning suffered fractures, as they were crushed, while Moon's face was smashed by way of punishment for their rank impudence. Let us sing on this and fly thus like a bird. Let us sing and fly like a bird that our past sins be destroyed. கு-ரை: பட என்பதை நாசி என்பதுடனும், சிரம் என்பதுடனும் சேர்க்க. வீரபத்திரர் பிரமனைக் குட்டியதாகவும், நாமகளை மூக்கரிந்ததாகவும், சந்திரனைப் பாதங்களால் தேய்த்ததாகவும் கந்தபுராணம் கூறுகின்றது. நெரித்ததும் என்பது 'நெரித்தும்' என ஆயிற்று. 14. நான்மறை யோனு மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. நான் மறையோனும், மகத்து இயமான் படப், போம் வழி தேடும் ஆறு உந்தீபற ! புரந்தரன் வேள்வியில்-உந்தீ பற ! naanmaRai yoonum makaththu iyamaan pada poomvazi theedumaaRu unthiipaRa purantharan veeLviyil unthiipaRa பொ-ரை: பிரமனும், யாகத்தின் தலைவனான தக்கனும் வீரபத்திரரால் மாண்டனர். முதற்கண் அவி பெறுபவனாகிய இந்திரன் இதைக் கண்டு நடுநடுங்கினான். அவன் தோள் நெரிக்கப்பட்டது. மனவலிமை இழந்தான். தப்பியோட எண்ணிக் குயில் வடிவம் கொண்டு பறந்து சென்றான். இவ்வாறு நிகழ்ந்ததைப் பாடி ஆடுவோம். After the severance of the head of Dakshan who was the officiant of the sacrifice , Brahma, who was well versed in the four vedas as well Indran got panicked and searched for an exit from the site. So singing, let us fly thus like a bird. Chanting on this, let us fly thus like a bird, noting that this happened at the sacrifice devised for honouring Indran. கு-ரை: நான்மறையோன்= பிரமன். மகம் = வேள்வி. இயமான் = எஜமான் , யாகாதிபதி. இயமான் என்பதற்குப் பின் உம் தொக்கது. புரந்தரன் என்பதைப் போம் வழி என்பதனோடு சேர்க்க. 15. சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி, நெரித்த ஆறு-உந்தீ பற ! மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற ! sooriyanaar thoNdai vaayinil paRkaLai vaari neriththa aaRu unthii paRa mayangiRRu veeLvi enRu unthiipaRa பொ-ரை: (இதே பதிகத்தில் 12ஆவது பாட்டில் பன்னிரு சூரியர்களுள் ஒருவனான பகன் என்பவனது இரு கண்கள் பிடுங்கப்பட்டது கூறப்பட்டது) இந்தப் பாட்டில் அவிர்பாகம் உண்ண வந்த பூடன் என்ற மற்றுமொரு சூரியனாருடைய கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிலுள்ள பற்களை வீரபத்திரர் உடைத்து உதிர்த்தார். இவ்வாறு நிகழ்ந்ததைப் பாடி உந்தி பறந்து ஆடுக. மற்றும் இதனால் தக்கன் செய்த வேள்வி கலக்கம் அடைந்ததைக் குறித்தும் உந்தி பறந்து விளையாடுக. At this sacrifice, the Sun God Bhushan's teeth were crushed; singing on this, let us fly thus like a bird. Chanting that Dakshan's sacrifice came to confusion, let us fly like a bird. கு-ரை: பன்னிரண்டு ஆதித்தர்களுள் பூஷன் என்பவன் பற்களை வீரபத்திரர் தகர்த்தாரென யசுர் வேத தைத்திரிய சங்கிதையிற் கூறப்பட்டது. கந்த புராணத்திலே சூரியனைக் கபாலத்தில் அடிக்க அவன் பற்கள் உதிர்ந்தன என்று சொல்லப்பட்டது. வாரி = வார, தொகுதியாய் உதிர. நெரித்தல் = உடைத்தல், தொண்டை = கொவ்வைக் கனி. 16. தக்கனா ரன்றேத லையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற தக்கனார், அன்றே, தலை இழந்தார்; தக்கன் மக்களைச் சூழ நின்று-உந்தீ பற! மடிந்தது வேள்வி என்று உந்தீ பற! thakkanaar anRee thalai izanthaar thakkan makkaLai suuzaninRu unthiipaRa madinthathu veeLvi enRu unthiipaRa பொ-ரை: அன்றைக்கு அதாவது முன்னரே தக்கன் தன் மக்களால் சூழப்பெற்று யாகத்தை நடத்த ஆவன செய்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாமல் தனது தலையை இழந்து இறந்தான் எனச் சொல்லி உந்தி பறப்பாயாக. அப்போது அந்த வேள்வியும் அழிந்தது என்று உந்தி பறப்பாயாக. Though Dakshan's children were all standing around the sacrificial fire, Dakshan's head was severed. Sing on this, let us fly thus like a bird. Chanting on the abrupt collapse of the sacrifice, let us fly thus like a bird. கு-ரை: தக்கனார் என்பதில் ஆர் இழிவினைக் குறிக்கும். துணையாவர் என்று கருதிய மக்கள் துணையாகாமையானும் தக்கனைப் போல் மக்களும் சிவப்பெருமை உணராமையானும் 'மக்களைச் சூழநின்று' என்றார். 17. பாலக னார்க்கன்று பாற்கட லீந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன் றன் றாதைக்கே யுந்தீபற பாலகனார்க்கு அன்று, பால்-கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே-உந்தீ பற ! குமரன்-தன் தாதைக்கே-உந்தீ பற ! paalakanaarkku anRu paaRkadal iinthidda koola sadaiyaRkee unthiipaRa kumaran than thaathaikkee unthiipaRa பொ-ரை: வியாக்கிரபாத முனிவர் என்று சொல்லப்படும் புலிக்கால் முனிவருடைய குமாரர் உபமன்யு முனிவர். இவர் தன் தாய்மாமனாராகிய வசிட்டர் வீட்டில் வளர்ந்த பொழுது காமதேனுவின் பாலை உண்டு வளர்ந்தவர். தன் தகப்பனார் ஆசிரமத்திற்குக் கொண்டு வரப்பட்டார். வியாக்கிரபாதர் ஆசிரமத்தில் காமதேனு கிடையாது. வேறு பாலைக் குடிக்க மறுத்து அழுதார். சிவபெருமான் குழந்தையின் பொருட்டுத் திருப்பாற்கடலை வருவித்துக் கொடுத்து அருள்புரிந்தார். முருகப்பெருமானை மகனாகப் பெற்றவர் ஆதலினால் மகவு அருமை அறிந்தவர். இச்செயலை மகிழ்ந்து உந்தி பறந்து விளையாடுக. On Sage Upamanyu: Fly thee singing on, unto the One with matted hair so fair who gifted the sea of milk to Sage Upamanyu (son of Sage Viyakkrabaadar). Chanting the name of Lord Civa, Sire of Lord Kumaran (Kaarththikeyan) let us fly thus like a bird. கு-ரை: பாலகனார் என்பதில் ஆர் என்பது உயர்வு குறிக்கும். உபமன்யு முனிவர் குழந்தையாய் இருந்தபோது தன் மாமனாராகிய வசிட்டர் ஆச்சிரமத்தில் காமதேனுவின் பாலை உண்டார். தன் பிதாவாகிய வியாக்கிரபாதர் ஆசிரமத்தில் பால் கிடையாமையால் அழுதபோது, அவர் தாயார் நீ சிவபெருமானைப் பூசிக்கவேண்டும் என்று கூற, அவரும் சிவபெருமானைப் பூசித்து வேண்டப் பாற்கடலையே சிவபெருமான் வருவித்தனர் என்பது கோயிற்புராணத்தால் அறிக 18. நல்ல மலரின்மே னான்முக னார்தலை யொல்லைய ரிந்ததென் றுந்தீபற வுகிரா லரிந்ததென் றுந்தீபற நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற ! உகிரால் அரிந்தது என்று-உந்தீ பற ! nalla malarin meel naanmukanaar thalai ollai arinthathu enRu unthiipaRa ukiraal arinthathu enRu unthiipaRa பொ-ரை: அழகிய தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரமன் தனது ஐந்து தலைகளுள் உச்சித் தலையினால் சிவபெருமானை இகழ்ந்தார். சிவபெருமான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து அவரால் அவ்வுச்சித் தலையை கிள்ளிவிடச் செய்தார். வைரவர் தனது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எறிந்தார். சிவபெருமானை இகழ்ந்ததால் தன் தலையை இழந்து பேரழிவை எய்தினான் என்று பாடி உந்தி பறந்து விளையாடுக. அதுவும் வைரவரின் நகத்தால் கிள்ளி எறியப்பட்டது என்று பாடி விளையாடுக. On Brahma: Singing on the Lord's exploit when He swiftly plucked one of the five heads of Brahma of the lotus seat, in the village called Thiruk-Kandiyoor, let us fly thus like a bird. Sing on He that plucked Brahma's head with His finger nail, let us fly thus like a bird. கு-ரை: சிவபெருமானைப் போன்று, தனக்கும் ஐந்துதலை இருப்பதாகச் செருக்குக் கொண்டு சிவபெருமானை வணங்காது இகழ்ந்ததற்காகப் பிரமன் நடுத்தலையை வைரவர் நுனிநகத்தாற் கிள்ளினார் என்று புராணங் கூறும். ஒல்லை= விரைவாக, உகிர் = நகம், மலரில் மிக்க அழகுடையது தாமரை மலராதலால் 'நல்ல மலர்' என்றார். 19. தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிர மீரைந்து மிற்றவா றுந்தீபற விருபது மிற்றதென் றுந்தீபற தேரை நிறுத்தி, மலை எடுத்தான் சிரம் ஈர்-ஐந்தும் இற்ற ஆறு-உந்தீ பற ! இருபதும் இற்றது என்று-உந்தீ பற! theerai niRuththi malai eduth thaan siram iirainthum iRRavaaRu unthiipaRa irupathum iRRathu enRu unthiipaRa பொ-ரை: இலங்கை மன்னன் இராவணன் திக்கு விசயம் செய்த காலை குபேரனிடத்துப் பெற்றது புட்பக விமானம். அதில் ஏறி மீண்டும் சென்ற காலை கயிலை மலைப்பக்கம் சென்ற போது அந்த உயரத்திற்கு மேல் பறக்கமுடியாமல் தடுக்கப்பட்டு நின்றது. தேரினை நிறுத்தி விட்டு அதனின்றும் இறங்கித் தன் தோள் வலிமையால் இமயத்தினை அகற்றி வைக்க முயற்சி செய்தான். அப்போது இமயத்தின் மேல் இருந்த சிவபெருமான் தனது திருவடிப் பெருவிரல் ஒன்றினால் சிறிது ஊன்ற இராவணன் அம்மலையின் கீழ் பன்னாள் அழுது கிடந்தான் . பின்னர், சாமவேதம் பாடி, சிவபெருமானை வேண்ட அவனுக்குப் பெருமான் அருள் புரிந்தார். அந்த நிகழ்ச்சியை எண்ணி, சிவனைப் புகழ்ந்து பாடி உந்தி பறந்து விளையாடுக. On King Raavana: While Raavana, the King of Sri Lanka was flying in his 'Pushpak' aircraft, it could not fly over and cross mount Kailaash in the Himaalayan range. Therefore, he stepped down and tried to lift the mount Kailaash and place it apart to enable him to proceed on his flight. While attempting to lift the mount, our Lord gently pressed the mount by His toe. Raavana got jammed under the hill and his ten heads were squeezed. Let us sing on this, and fly thus like a bird. The other girls said ' Why ten heads?' let us sing that his twenty shoulders were broken and fly thus like a bird. கு-ரை: இராவணன் செருக்கினால் கயிலை மலையை எடுக்க முயன்ற அளவில் இறைவன் பெருவிரலால் அழுத்த, அவன் மலையினுள் அகப்பட்டு நசுக்குண்டு வருந்தினமை திருமுறைகளுள் யாண்டும் ஓதப்படும். இருபது என்பதன் முன் தோள்கள் என்பது தொக்கது. 20. ஏகாச மிட்ட விருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பா லுங்காவலென் றுந்தீபற ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் ஆகாசம் காவல் என்று உந்தீபற அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீபற eekaasam idda irudikaL pookaamal aakaasam kaaval enRu unthiipaRa athaRku appaalum kaaval enRu unthiipaRa பொ-ரை: வானிலே போர்வையிட்டுச் செல்லும் முனிவர்கள் கதிரவன் வெப்பத்தால் ஒழிந்து போகாமல், அவர்களை வானில் காப்பது முதல்வன் என்று கூறி விளையாடுக. வானிற்கு அப்பால் உள்ள உலகத்தார்க்கும் அவனே காப்பாளன் என்று இயம்பி விளையாடுக. The Lord provided the benign shield in the sky in order to protect the lives of the sages who covered their body with Yogic cloth. Sing on this and fly thus like a bird. Chanting that He indeed protects even the space beyond, let us fly thus like a bird. கு-ரை: ஏகாசம் = உத்தரீயம், 'விண் செலல் மரபினையர்க்கேந்திய தொருகை' என்ற திருமுருகாற்றுப்படை காண்க. THIRUCHCHITRAMBALAM 15. திருத்தோள் நோக்கம் 15. THIRUTH-THOL-NOKKAM (பிரபஞ்ச சுத்தி ) The Drill of Shoulder Glance தில்லையில் அருளிச் செய்யப்பட்டது The Purification of the Universe நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் தோள் + நோக்கம் = தோணோக்கம். 'தோளை நோக்குதல் (பார்த்தல்)' என்பது பொருள். வாளா, 'நோக்கம்' என்னாது, 'தோள் நோக்கம்' என்றமையின் இது விநோதக் கூத்து ஏழனுள் ஒன்று எனப்படும் நோக்கு ஆமாறு இல்லை. மேற்காட்டிய (தி.8 திருச்சாழல் - விளக்கம்) அடியார்க்கு நல்லார் மேற்கோள் சூத்திரத் தொடராகிய 'நல்லார் தந்தோள்வீச்சு' என்பதனுள் குறிக்கப்பட்ட “தோள்வீச்சு’ என்பதேயாதல் வேண்டும். 'வீச்சு' என்னாது 'நோக்கம்' என்றது காலவேறு பாட்டான் அமைந்த வேறுபாடு எனலாம். பெண்கள் சிலர் முதலில் ஒருங்குகூடி நின்று ஒருவர் தோளை மற்றொருவர் சில பாட்டுக்களைச் சொல்லித் தொட்டு விளையாடி முடிவில் இருவர் இருவர் சேர்ந்து ஒருவர் கைகளை மற்றொருவர் மாற்றிப் பிடித்துப் பாடிக்கொண்டே வேகமாகச் சுற்றி முடிக்கும் ஒருவகை விளையாட்டு இக்காலத்திலும் நிகழ்ந்து வந்தது. எனினும், இஃது இன்னவகை விளையாட்டு எனத் துணியக்கூட வில்லை. முன்னர்ப் போந்த திருவுந்தியாரில் வந்தனவும், இதனுள் வருவனவும் ஆகிய பாட்டுக்கள், இவற்றிற்கு முன்னுள்ள விளையாட்டுக்களின் பாட்டுக்கள் போலக் காமப்பொருள் பற்றியவாகாது மகளிர் கடவுளை வாழ்த்திப் பாடும் கடவுள் வாழ்த்துப் பாடல்களேயாம் என்க. இதன் முதல் திருப்பாட்டில் இறைவன் அடிகட்கு உலக மயக்கினை நீக்கியருளினமையை இனிது எடுத்தோதினமை பற்றியும், இறுதி நான்கு திருப்பாட்டுக்களுள் சிவபெருமான் தக்கன் முதலியோரைத் தூய்மை செய்தமை, பிரம விட்டுணுக்களது மயக்கத்தைப் போக்கினமை, அடிகளது பிறவியையும், தற்போதத்தையும் அறுத்தமை என்பவற்றை அருளிச் செய்தமை பற்றியும் இதற்கு, ' பிரபஞ்ச சுத்தி' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். விளையாட்டின் இயல்பு பற்றி இது தெள்ளேணத்தின் பின்னராதல், சாழலின் பின்னராதல், கோக்கற்பாலதாயினும், பதினான்கு திருப்பாட்டுக்களான் இயன்றமை பற்றி ஈண்டு வைத்துக் கோக்கப்பட்டது. இது, 'தில்லையில் அருளிச் செய்யப்பட்டது' என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுவதும் நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவினால் ஆயது. இதனுள்ளும் வேண்டும் இடங்களில் 'பாடி' என்பது வருவிக்க. Like many other decads of Thiruvaachakam, this chapter too depicts a group of maids at play, chanting the unique glories of Lord Civa in a divine orchestral declamation. A row of young girls standing at a distance of about an arm's length from one another glance at their neighbouring colleagues, raising their hands shoulder high, simultaneously singing, dancing and recounting the many exploits of Lord Civa, who always showers blessing on all creatures in the universe. Similar drills are commonly witnessed even today in modern schools, as a routine physical exercise and as a recollection of some past historical events in the land. 15. 1 பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தா வுன்சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம் பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக்கருதி பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும் வண்ணம் தோள் நோக்கம் ! puuththaarum poykai punalithuvee enakkaruthi peeyththeer mukakkuRum peethaikuNam aakaamee thiirththaay thikazthillai ampalaththee thirunadamsey kuuththaa un seevadi kuudum vaNNam thooLnookkam பொ-ரை: விளங்குகின்ற தில்லைப் பொதுவில் திருநடனமியற்றும் கூத்தப் பெருமானே ! மலர் பூத்து நீர் நிறைந்த தடாகத்தின் தண்ணீர் இஃதாமெனக் கருதிக் கானல் நீரைத் தவறாக எண்ணி, அதனை மொண்டு கொள்ள விரும்பும் அறியாமையை நீக்கி எனது இயற்கைப் பண்பு ஆகாமல், அதனை ஒழித்தாய்! உன்னுடைய திருவடியைக் கூடும் வண்ணம், நாங்கள் திருத்தோள் நோக்கம் விளையாடுவோமாக ! Oh Lord that saved me from the illusory ordeal of the transient pleasures of the earth ,the fleeting moments of joy such as one would experience in mistaking the mirage of sand dunes for a flowery water lake!. Lord of the sacred cosmic dance in the effulgent hall of Thillai , who spared me from silly thoughts! Thus singing, Oh maids, may we play this dance number of shoulder glance, that we may merge into His holy Feet! கு-ரை: ஆரும் = நிறைந்துள்ள, முகக்க, உறும் என்பன முகக்குறும் எனப் புணர்ந்து நின்றது. பேய்த்தேர்= கானல். பேதை - பேதைமை என்பதன் கடைக்குறை. திருத்தோள் நோக்கம் என்பது ஒருவர் தோளை மற்றொருவர் கடைக்கண்ணாற் பார்க்க முயன்றாடும் ஆட்டம் போன்றதோர் மகளிர் விளையாட்டு. 2 என்றும் பிறந்திறந் தாழாமே யாண்டுகொண்டான் கன்றால் விளவெறிந்தான் பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை யம்பலவன் குணம்பரவித் துன்றார் குழலினீர் தோணோக்க மாடாமோ என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டு கொண்டான்: கன்றால் விளவு எறிந்தவன். பிரமன், காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்: குணம் பரவி துன்று ஆர் குழலினீர்! - தோள் நோக்கம் ஆடாமோ! enRum piRanthu iRanthu aazaamee aaNdu koNdaan kanRaal viLavu eRinthaan piraman kaaNpariya kunRaatha siirththillai ampalavan kuNamparavi thunRu aar kuzaliniir thooLnookkam aadaamoo பொ-ரை: நெருங்கிய நிரம்பிய கூந்தலை உடைய பெண்களே! தொடர்ச்சியாகப் பிறந்தும் இறந்தும், துன்பத்தில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருளினான் சிவபெருமான். கன்றுக் குட்டியால் விளாங்கனியை எறிந்தவனான திருமாலும் அயனும் அறிதற்கரியவன் அவன். குறைவற்ற புகழ்படைத்த தில்லைப் பொதுவில் நடனம் ஆடுபவனின் அருட்பண்பைப் போற்றி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக. Beyond the reach of Brahma and Thirumaal is our Lord. Thirumaal in one of his avatars as Kannan used a calf as a throw weapon. He took us under his tutelage, and saved us from the repeated cycles of births and deaths. Ye maids, with luxurious ornamented hair, may we extol the golden traits of this Lord of the public hall at Thillai of never ending bounties, and play this dance number of shoulder glance! Note: Kannan used a calf as a throw weapon - See Appendix Story No. 44. கு-ரை: துன்று= நெருங்கு, ஆர்= நிறை , துன்று குழல், ஆர் குழல் எனப் பிரிக்க. நெருங்கி நீண்ட கூந்தலென்பது கருத்து. 3. பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி. வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து, அங்கு அருள் பெற்று, நின்றவா-தோள் நோக்கம் ஆடாமோ! poruLpaRRi seykinRa puusanaikaL pool viLangka seruppuRRa siiradi vaay kalasam uun amutham viruppuRRu veedanaar seedu aRiya meykuLirnthu angku arudpeRRu ninRavaa thooLnookkam aadaamoo பொ-ரை: (மாணிக்கவாசகர் கண்ணப்பர் பெருமையைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரண்டில் இது ஒன்று. மற்றொரு பாட்டு 10ஆவது பதிகம் திருக்கோத்தும்பி 4ஆவது பாட்டு ) பூசனை செய்வதற்குரிய ஆகம விதிகள் ஒன்றும் அறியாதவர் கண்ணப்பர். திருக்காளத்தி நாதர் மீது ஈடுஇணையற்ற அன்பு கொண்டு தனக்கு நல்லன எனத் தோன்றியவாறு பூசனைகள் செய்தார். தனது செருப்புப் பொருந்திய பாதத்தால் இறைவன் சிரசின் மீதிருந்த நிர்மால்யமான மலர்களை நீக்கினார். தனது வாயால் கொண்டு வந்த நீரை இறைவன் உச்சியின் மீது உமிழ்ந்து திருமஞ்சனம் ஆட்டினார். தன் தலை மீது சுமந்து கொண்டு வந்த பூக்களை இறைவன் முடிமிசை சாத்தி, கையால் கொண்டு வந்த திருஅமுதமாகிய இறைச்சியைப் படைத்து 'என் நாவில் சுவை பார்த்து நல்ல சுவையுள்ளதையே கொண்டு வந்து அளித்துள்ளேன். நாயனீரே ! அமுது செய்து அருளுக' என்று வேண்டி நின்றார். இந்தச் செயலை ஆகமப் பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கும்படி விருப்பமாய் ஏற்று இறைவன் திருமேனி குளிர அப்பொழுதே அவர் திருவருள் பெற்று நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோமாக (கதை எண் 40ஐப் பார்க்கவும்) May we play this dance number, Oh maids, singing on how Saint Kannappar, the hunter was blessed by the Lord who was much pleased even with his offering of meat and water carried in his mouth, as also the touch by his foot worn with leather foot wear, as this act was performed by the native hunter with total dedication and compassion. The rituals of Kannappar were taken as conventional ceremony practised by learned pundits at considerable expenditure of time and money. Note: A brief note on the hagiography of Kannappar can be seen under the translation of verse 4 திருக்கோத்தும்பி. The saint (of Kalahasti) belongs to a period prior to St. Gnaana Sambandar and even to Kaaraikkaal Ammaiyaar (See Story No. 40). கு-ரை: கண்ணப்பர் பூசை, ஆகமங் கடந்த அன்பு வழிபாடு . பிறர் பூசை, உரிய பொருள்களைக் கொண்டு ஆகம நெறியிற் செல்லும் பூசை. குற்றங் கருதாத அன்பரடியாதலின், 'சீரடி' என்றார், சேடு= அழகு, நன்மை . 4. கற்போலு நெஞ்சங் கசிந்துருகக் கருணையினா னிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்க மாடாமோ கல் போலும் நெஞ்சம் கசிந்து உருகக் கருணையினால் நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி நல் பால் படுத்து என்னை , நாடு அறியத் தான் இங்ஙன் சொல்-பாலது ஆனவா-தோள் நோக்கம் ஆடாமோ! kalpoolum nenjsam kasinthu uruka karuNaiyinaal niRpaanai poola en nenjsin uLLee pukuntharuLi nalpaal paduththu ennai naadu aRiyath thaan ingngan solpaalathu aanavaa thooLnookkam aadaamoo பொ-ரை: கல்லைப் போலும் கடுமையான என் மனம் நைந்துருகும்படிச் செய்தான் இறைவன். இரக்கத்தினாலே என் முன்னே நிற்பவன் போலத் தோன்றி என் உள்ளத்திலும் புகுந்தருளினான். இம்முறையில் என்னை நன்னெறியிற் பொருந்துமாறு புகுத்திய அருட்செயலை உலகத்தார் தெரியும்படியாகச் செய்தான். இவ்வாறாகச் செய்தருளியதைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! He caused even my stony heart to thaw and melt, and led me on to the right stand in compassion, so that this world might come to know and talk about His grace. Singing thus, Oh maids ,shall we play this dance number of shoulder glance! கு-ரை: ' நிற்பானை' என்பது புறத்தே நிற்பதைக் குறித்தது. இங்ஙன், இங்ஙனம் என்பதன் கடைக்குறை. இங்ஙனம்= இவ்விதம், இம்முறை. 5. நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றா னுலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு , நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகு ஏழ் எனத், திசை பத்து எனத் தான் ஒருவனுமே பல ஆகி நின்றவா-தோள் நோக்கம் ஆடாமோ! nilam niir neruppu uyir niiL visumpu nilaappkaloon pulan aaya mainthanoodu eNvakaiyaay puNarnthu ninRaan ulaku eez enaththisai paththu enath thaan oruvanumee palavaaki ninRavaa thooL nookkam aadaamoo பொ-ரை: இறைவன் ஒருவனே நிலம், நீர், தீ, காற்று, விரிந்த வான், மதி , ஞாயிறு, அறிவுருவாய ஆன்மா ஆகிய எட்டுப் பொருட்களோடும், எட்டு வகையாய்க் கலந்து நிற்கின்றான் . தான் ஒருவனே ஏழு உலகும் பத்துத் திசையும் எனப் பலவாகி, தான் அநேகன் என்று சொல்லத்தக்க அனைத்திலும் நிற்கின்றான். இவ்வாறு பல பொருட்களாக நிற்கின்ற விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! May we play this dance number of shoulder glance, Oh maids, singing on His unique state of manifestation.A singular one that spreads out into many different forms- encompassing the eight fold states - the earth, water, fire, air, the expansive space, the Sun and the Moon and the intelligent soul. He stands out as the seven worlds and the ten directions. Note: Seven worlds - a convenient reference to the innumerable worlds in the universe. Ten directions - East, West, North, South and the four intermediate directions in between the four, and the top and the bottom directions. கு-ரை: உயிர்= காற்று, புலன்= அறிவு, மைந்தன்= புருடன்= ஆன்மா. ஒரு கடவுளே யாண்டும் வியாபித்து நிற்கும் ஆற்றல் உடைமையின், 'தான் ஒருவனுமே ' என்றார். 6. புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந் தத்த மதங்களிற் றட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கு மத்தன் கருணையினாற் றோணோக்க மாடாமோ. புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம் தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்கச் சித்தம் சிவம் ஆக்கிச், செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ! puththan muthalaaya pul aRivin palsamaiyam thaththam mathangkaLil thadduLuppu padduniRka siththam sivam aakki seythanavee thavam aakkum aththan karuNaiyinaal thooLnookkam aadaamoo பொ-ரை: புத்த சமயி முதலிய சிற்றறிவுடைய சமயத்தினர் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் சமயங்களில் முடிவு காணாது தடுமாற்றம் எய்தி நிற்கின்றனர். இறைவன் எனக்குத் தோன்றியருளி, என் உள்ளத்தைச் சிவமயமாக்கி விட்டான். அதனால் யான் செய்தவை எல்லாம் தவச் செயல்களாகும்படிப் பணித்த அப்பன் கருணையைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! There are many religions here in this world such as Buddhism, Jainism, etc that are in some way or other, deficient in their understanding and explanation of the basic truth of godhead. Their followers who adhere to these concepts stand confused in a state of trepidation. When such is the order of the day, He transformed my mind into Civam itself and in His grace, turned all my actions into a veritable penance. May we sing on this Lord's generosity, Oh maids, and play this dance number of shoulder glance! கு-ரை: சமயம்= சமயத்தார். தட்டுளுப்பு = தடுமாற்றம். சித்தம், சிவத்தின் வயமாகவே, நினைந்து செய்யும் செயல்கள், சிவச் செயலாயினமையின், அவை தவச் செயல் எனப்பட்டன. 7. தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப வீசன் றிருவருளாற் றேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் தீது இல்லை; மாணி, சிவகருமம், சிதைத்தானைச் சாதியும் வேதியன்-தாதை-தனைத், தாள் இரண்டும் சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவா-தோள் நோக்கம். thiithu illai maaNi siva karumam sithaithaanai saathiyum veethiyan thaathaithanai thaaLiraNdum sethippa iisan thiruvaruLaal theevar thoza paathakamee sooRu paRRinavaa thooLnookkam பொ-ரை: விசார சருமர் என்னும் அந்தணர் குற்றம் யாதும் நெஞ்சில் இல்லாத மாட்சிமை உடைய பிரம்மச்சாரி. ஆற்றின் கரையில் உள்ள மணலைக் கூட்டி, சிவலிங்கம் போல் உருவாக்கித் தான் மேய்க்கும் மாடுகளின் பாலைக் கறந்து அந்தச் சிவலிங்கத்தின் மீது ஊற்றித் திருமஞ்சனம் செய்து சிவபூசனை செய்து வருவது வழக்கம். இதை அறிந்த அவரது தந்தை எச்சதத்தன் பூசனை செய்யும் இடத்திற்கு வந்து அவர் காலால் அபிஷேகப் பொருட்களை உதைத்துச் சிதைத்து அழித்தார். உடனே அவரது மகனார் விசார சருமர் தனது தாதைதான் இவ்வாறு செய்தார் என்று பொருட்படுத்தாமல் வேதியனாகிய தன் தந்தையின் கால்கள் இரண்டையும் வெட்டி விட்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இறைவன் தேவியருடன் அவர் முன் தோன்றி 'தம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம்' என்று அருள் செய்து உச்சி மோந்து தடவி 'நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம்' எனத் திருவாய் மலர்ந்தருளி, தன் தலையில் அணியப்பெற்றிருந்த கொன்றை மாலையை எடுத்துச் சூட்டினார். விசார சருமர் இறைவனோடு சிவலோகம் எய்தினார். சண்டீசர் என்கின்ற பதவியைப் பெற்றதிலிருந்து விசார சருமருக்குச் “சண்டீசர்" என்றே பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு விசார சருமர் செய்த பாதகமானது இறையருளால் புண்ணியமாக மாறிய விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக. May we play this dance number of shoulder glance extolling the greatness of Lord Civa in accepting as virtue even the undesirable act of Sage Sandeesar, the faultless celibate, who felled the two feet of his own father ignoring his priestly status, when he desecrated the ritual of Civa worship. Such is His grace, that prompted all the devas to worship Him. கு-ரை: 'தீதில்லை' = தீதில்லாத தலைவன் ஆகிய; மாணி = மாண்புடையவன். இங்கே பிரமசாரி என்பது பிரமசாரியாகிய விசாரசருமரைக் குறிக்கும். சோறு= புண்ணியம், வீடு என்று பொருள் கொள்ளுவாரும் உளர். 8. மான மழிந்தோ மதிமறந்தோ மங்கை நல்லீர் வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தடியோ மானந்தக் கூத்த னருள் பெறினா மவ்வணமே யானந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம் மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கை நல்லீர்! வானம் தொழும் தென்னன் வார்கழலே நினைந்து அடியோம்; ஆனந்தக் கூத்தன் அருள் பெறில், நாம், அவ்வணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். maanam azinthoom mathi maRanthoom mangkai nalliir vaanam thozuthennan vaarkazalee ninainthu adiyoom aanantha kuuththan aruL peRil naam avvaNamee aanantham aakininRu aadaamoo thooLnookkam பொ-ரை: நல்ல மாதர்களே ! தற்பெருமை தொலையப் பெற்றோம். தற்போதங்கழலப் பெற்றோம். இறையடியராகிய நாம் வானவர் வழிபடுகின்ற அழகானது நீண்ட, சிலம்பணிந்த திருவடிகளை நினைவோம். ஆனந்த நடனம் செய்யும் இறைவனது பேரருளை நினைத்து, அவ்வாறே நாம் பேரின்பமுற்றுத் தோள் நோக்கம் ஆடுவோமாக ! Leaving aside all pride and all the laws of human comprehension, ye goodly maids, let us contemplate on the sacred Feet of the Lord - the Lord that came over to the southern lands and is worshipped by heaven-dwelling gods. We, His devotees, in such contemplation, receive the grace of this blissful Lord of eternal dance. Thus, receiving grace, we ourselves become bliss indeed ! May we then play, so singing, Oh maids, this dance number of shoulder glance. கு-ரை: மானம்= செருக்கு. மதி = உயிரின் தன்னுணர்ச்சி. 'தென்னன்' என்பதற்குப் பாண்டியனாய கடவுளென்றும் பொருள் கொள்ளலாம். வானம் = வானவர்க்கு ஆகுபெயர். இறைவன் ஆனந்தம் தர ஆடுவது போன்று, அவன் வயமாய் நின்று நாமும் ஆனந்தக் கூத்தாடுவோம் என்றார் 9. எண்ணுடை மூவரிராக்கதர்க ளெரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தலைமு னின்றதற்பி னெண்ணிலி யிந்திர ரெத்தனையோ பிரமர்களு மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் டோணோக்கம் எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்துக் கண்-நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர் காண்-தோள் - நோக்கம். eN udai muuvar iraakkatharkaL eripizaiththu kaN nuthal enthai kadaiththalai mun ninRathanpin eNNili inthirar eththanaiyoo piramarkaLum maNmisai maalpalar maaNdanarkaaN thooLnookkam பொ-ரை: திரிபுரம் எரியுற்ற காலை, தவத்தால் மதிப்புடைய திரிபுரத்தசுரர் மூவரும் தப்பினர். நெற்றிக் கண்ணுடைய நம் அப்பன் வாயிலின் கண் அவர்கள் காவலாளராய் (துவார பாலகராய்) நின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் கணக்கற்ற இந்திரர்களும், எவ்வளவோ பிரமர்களும், பூமியை உண்டு வயிற்றடக்கிய அரிகள் பலரும் இறையருள் கிட்டாது இறந்தனர். இந்த அதிசயத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! Let us play the dance number of shoulder glance, singing this way- The three renowned asuras of Thiripura who were the true followers of Lord Civan upto the last- in spite of their chiefs embracing other faiths ignoring Lord Civan - were protected and saved from death during the total destruction of Thiripura by Lord Civan. Two asuras among the three were engaged as portal guards of our Lord who sports a third eye on His forehead. The third asura was engaged as drum beater for Lord Civa's dance. This was in the days of yore. And even after that , came countless numbers of Indras, Brahmas and Tirumaals who perished on completion of their tenure in this world. Note: Tripuram, the Trifort burnt by the Lord - A very ancient episode - mentioned in 'Civa Geethai' of Padma Puraanam narrated by Sootha Munivar. This pre-dates the Mahaa Bhaaratham and Raamaayanam epics - Also confer St. Pattinathaar, முன்னை இட்ட தீ முப்புரத்திலே - பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் .... கு-ரை: இராக்கதர் - நீரில் தோன்றினரெனவும், அசுரர் தேவர் தாயாதிகள் எனவும் கூறுப. செய்யுளில் அசுரர்க்கும் அரக்கர்க்கும் வேறுபாடு காட்டாது இரண்டையும் பரியாயப் பெயராய் வழங்கும் மரபு இங்கே காணக் கிடக்கின்றது. திரிபுரத்தினரை அசுரரென்றே கூறுப. தாரகாட்சன், வித்யுந்மாலி, கமலாட்சன் ஆகிய மூவரும் சிவபூசனையில் தலை நின்று, பிற அசுரரைப் போல், விட்டுணு போதித்த நாத்திக வாதத்தை உடன்படாராயினர். ஆதலால், எரியிற் பிழைத்தனர். மூவருள் இருவர் வாயிற் காவலராயும் ஒருவர் முழாவொலிப்பவராயும் வரம் பெற்றார் எனச் சுந்தரர் தேவாரம் கூறினும், எல்லாரும் இறைவாயிலில் முதற்கண் நின்றவரேயாவர். அண்டங்கள் பலவாதலின், இந்திரன், பிரமன், அரி என்பாரும் பலராயினர். மண் மிசை = மண்ணுலகை உட்கொண்ட, மிசைதல் = உண்டல், மிசை மால் = வினைத்தொகை. மால், அப்பு தத்துவத்திற்கு அதி தேவதையாதலின், அதற்குக் கீழ்ப்பட்ட மண் தத்துவத்தைத் தான் உட்கோடல் பொருத்தமே. 10. பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்க ணிடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கர னெம்பிரான் சக்கரமாற் கருளியவா றெங்கும் பரவிநாந் தோணோக்க மாடாமோ பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக்குறையத் தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே சங்கரன், எம்பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு எங்கும் பரவி நாம் தோள் நோக்கம் ஆடாமோ pangkayam aayiram puuvinil oor puukkuRaiya thamkaN idanthu aran seevadimeel saaththalumee sangkaran empiraan sakkaram maaRku aruLiyavaaRu engkum paravi naam thooLnookkam aadaamoo பொ-ரை: திருமால் சிவபெருமானிடம் சக்கரம் பெறுதற்கு நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அருச்சிப்பேன் எனக் கருதிக் கொண்டு நாள்தோறும் அவ்வாறு செய்து வந்தான். அவ்வாறு இறைவனை அருச்சித்து வருகையில் ஒரு நாள் ஒரு மலரை சிவ பெருமான் மறைத்து விட்டார். உடனே திருமால் தாமரை போன்ற தமது கண்களில் ஒன்றைப் பறித்துத் திருவடியில் இட்டான். அதனால் அவன் சக்கரம் (சுதர்சனம்) பெற்றான். அன்பர்க்குச் சுகம் கொடுக்கும் எம்பெருமான் அரிக்குச் சக்கரம் கொடுத்தருளிய வரலாற்றை எவ்விடத்தும் நாம் துதித்துத் தோள்நோக்கம் ஆடுவோமாக. Our Lord Sankara, returned as a gift the circular discas weapon to Thirumaal even as the latter noticed a shortfall by one flower out of His total collection of one thousand lotus flowers gathered for the ritual of Civa worship and so plucked his own eye to make up for the missing lotus flower and offered it in obeisance to the Lord. May we sing on this from everywhere and play this dance number of shoulder glance, Oh maids! கு-ரை: பங்கயம் = சேற்றில் முளைப்பது, தாமரை. சங்கரன் = சுகமளிப்பவன். அன்பின் மேலீட்டால் தன்னை மறந்தமை குறித்தவாறாம். 11. காம னுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமக ணாசி சிரம்பிரமன் கரமெரியைச் சோமன் கலைதலை தக்கனையு மெச்சனையுந் தூய்மைகள் செய்தவா தோணோக்க மாடாமோ . காமன் உடல், உயிர் காலன், பல் காய் கதிரோன் நாமகள் நாசி, சிரம் பிரமன், கரம் எரியைச் சோமன் கலை, தலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ ! kaaman udal uyir kaalan pal kaaykathiroon naamakaL naasi siram piraman karam eriyai sooman kalai thalai thakkanaiyum essanaiyum thuuymaikaL seythavaa thooLnookkam aadaamoo பொ-ரை: இறைவன் தக்க யாகத்தில் வீரபத்திரரைக் கொண்டு மன்மதனது உடம்பையும் யமனது உயிரையும் போக்கினான். வெய்ய பகலவனது பற்களையும், கலைமகள் மூக்கையும், அயனது தலையையும் நீக்கினான். நெருப்புக் கடவுளின் கையையும், மதியின் கலைகளையும், தக்கன் மற்றும் எச்சன் என்போர் தலைகளையும் நீக்கினான். இவ்வாறு தேவர்கள் குற்றம் செய்தமைக்காக அவர்கள் ஒறுக்கப்பட்டுப் பரிசுத்தப்படுத்தப் பட்ட விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! How He penalised the participants in Dakshan's rituals for their gross effrontery in ignoring Him at the ceremonial altar! He ordered Veerabadran to punish them all and graced them later for their ignorance. The physical frame of Cupid -the god of love, the life of Yama- the god of death, the teeth of the Sun god, the nose of the goddess of learning, the head of Agni- the god of Fire, the head of Brahma, the shape of the Moon god, the head of Dakshan, the head priest (Echchan) - all these became casualties at this unholy sacrifice. Chanting on these , Oh maids, may we play this dance number of shoulder glance! கு-ரை: இறைவன் யோகத்திலிருந்த காலை மன்மதன் மலரம்பு தொடுத்ததற்காக, எரியுண்ட கதை தெளிவு. மார்க்கண்டர்க்காக யமன் உதைபட்டு உயிரிழந்தான். தக்கன் வேள்வியில், கதிரவன், அக்கினி, நாமகள், தக்கன், எச்சன் ஆகியோர் வீரபத்திரரால் தண்டனை அடைந்தனர். பிரமன், வைரவரால் ஒருதலை கிள்ளப் பெற்றான். சந்திரன், தக்கன் வேள்வியிலும் சாபமுற்றுக் கலையிழந்தான். குற்றவாளிகளைத் தண்டித்தல், அவர்கள் மனத்தைச் சுத்தமாக்கவே என்ற உண்மையறிக. 12. பிரம னரியென் றிருவருந்தம் பேதைமையாற் பரம மியாம்பரம மென்றவர்கள் பதைப்பொடுங்க வரனா ரழலுருவா யங்கே யளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்க மாடாமோ பிரமன், அரி, என்று இருவரும், தம் பேதைமையால் ' பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து பரம் ஆகி, நின்றவா-தோள் - நோக்கம் ஆடாமோ! piraman ari enRu iruvarum tham peethaimaiyaal paramam yaam paramam enRu avarkaL pathaippu odungka aranaar azal uruvaay angkee aLavuiRanthu paramaaki ninRavaa thooLnookkam aadaamoo பொ-ரை: அயன், மால் என்னும் இரு தேவரும் தமது அறியாமையால், தாங்களே எல்லோர்க்கும் மேலான முதற்கடவுள் எனத் தம்முள் வாதாடினர். அவர்களது ஆணவம் அடங்கும் வண்ணம் சிவபெருமான் அனற்பிழம்பாக உருக்கொண்டு, அவர்கள் பூசலிட்ட இடத்தில் தோன்றி எல்லை கடந்து அவர்களுக்கு எட்டாத மேலான பொருளாய் நின்ற விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! In order to quell the conflict between Brahma and Thirumaal, each one contending that he was the universal god, Lord Civa stood out there as a limitless flame of fire and thus established Himself as the sole universal lord. Singing on this, Oh maids, let us play this dance number of shoulder glance. கு-ரை: பரமம் = மேலான பொருள். அயனும் அரியும் பரம்பொருள் அல்லர் என்பது தெரிவித்தவாறாம். 13. ஏழைத் தொழும்பனே னெத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே யூழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்க மாடாமோ ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம் பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே ஊழி முதல், சிந்தாத நல்மணி, வந்து, என் பிறவித் தாழைப் பறித்தவா-தோள் நோக்கம் ஆடாமோ! eezai thozumpaneen eththanaiyoo kaalam ellaam paazukku iRaiththeen paramparanai paNiyaathee uuzimuthal sinthaatha nalmaNivanthu enpiRavi thaazai paRiththavaa thooLnookkam aadaamoo பொ-ரை: அறிவில்லாத அடியேன், நெடுங்காலமாக மிக மேலான கடவுளான சிவபெருமானைத் தொழாமல் , வீணான காரியங்களில் காலத்தைக் கழித்தேன். கற்பங்களுக்கு அதிபனாய், என்றும் அழியாத நல்மாணிக்கம் போன்ற சிவபெருமான் எனக்கு ஆசானாக எழுந்தருளி வந்து, என் பிறவியின் அடிப்படையைப் பிடுங்கி ஒழித்த விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! Me this wretched vassal, spent a long time in many wasteful ways, without worshipping the universal lord. And yet, this Lord, existing since the very beginning of time itself, this undying brilliant gem came over to me and plucked out the very roots of my birth cycles. On this, Oh maids, let us sing and play this dance number of shoulder glance. கு-ரை: ஏழை = அறிவிலி . காலத்தை நீர்போல வீணாக இறைத்தேன் என்றார். ஊழி= படைப்பு முதல் ஒடுக்கம் வரையுள்ள காலம். அக்காலத்திற்குத் தலைவன் இறைவனே. அவனே காலத்தைக் கடந்தவன். ஆதலின் 'ஊழி முதற் சிந்தாத' என்றார். தாழ், அடிப்படை. 14. உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன்வந் துளம்புகலுங் கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே யிரைமாண்ட விந்திரியப் பறவை யிரிந்தோடத் துரைமாண்ட வாபாடித் தோணோக்க மாடாமோ. உரை மாண்ட உள்ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும் கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓடத் துரை மாண்டவா பாடி-தோள் நோக்கம் ஆடாமோ! uraimaaNda uLoLi uththaman vanthu uLampukalum karaimaaNda kaamapperung kadalai kadaththalumee iraimaaNda inthiriya paRavai irinthu ooda thurai maaNda vaa paadi thooLnookkam aadaamoo பொ-ரை: எனது ஆன்ம ஒளிக்கு, ஒளி கொடுக்கும் உள் ஒளியாக விளங்குகின்ற முதல்வனாகிய சிவபெருமானது ஆற்றலை வாய்ச்சொற்களால் விவரித்துச் சொல்ல முடியாது. (27 ஆவது பதிகம் புணர்ச்சிப்பத்து 4ஆவது பாட்டு 'சொல்லும் பொருளும் இறந்த சுடரை) இந்த உத்தமன் எழுந்தருளி வந்து என் நெஞ்சத்தில் புகுந்தான். உலகியல் பற்றித் தோன்றும் ஆசையானது ஒரு கட்டுக்குள் அடங்காது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும் இயல்புடையது. ('ஆசைக்கோர் அளவில்லை' - தாயுமானவர் ) அது இலகுவில் கரைகாண முடியாத ஒரு பெருங்கடலைப் போன்றது. இறைவன் என்னுள் புகுந்து அவன் திருவருளை நான் உணர்ந்தபின் ‘ஆசை' என்கின்ற கடலை நான் கடந்து விட்டேன். எனது உலகியல் ஆசை என்னிடம் இருந்து அறவே தீர்ந்து ஒழிந்தது. அவ்வாறு ஆசையற்றபின் எனது மனமானது மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற இந்திரியங்களின் வழிப்படாது போயிற்று. அதன் காரணமாகப் புறவழியே செல்லும் அப்பஞ்சேந்திரியங்களாகிய பறவைகளுக்கு என்னிடம் உணவு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆகவே, அவைகள் என் உடலை விட்டு ஓடிப்போய் விட்டன. இவ்வாறாக எனது தன்முனைப்பு நீக்கிய விதத்தைப் பாடித் தோள்நோக்கம் ஆடுவோமாக . With the noble Lord of indescribable inner light, entering my mind, I could cross the unbounded sea of lust, upon which, the five sense organs, like starved birds, flew away from me, in total disarray. Chanting on this, Oh maids, let us play this dance number of shoulder glance. கு-ரை: சுட்டியறிதற்குத் துணையான வாக்கைக் கடந்தது இறைவனது பேரறிவு . ஆதலின் ' உரை மாண்ட' என்றார். காமம்= ஆசை, துரை= துறை, வழி, கதி. THIRUCHCHITRAMBALAM 16. திருப்பொன்னூசல் 16. THIRUP-PONNOOSAL ( அருட்சுத்தி) The Song of the Golden Swing தில்லையிலருளிச் செய்யப்பட்டது Imbibation of Pure Grace ஒற்றுமை பற்றிவந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் மகளிர் விளையாட்டுக்களில், 'ஊசலாடுதல்' ஒன்று என்பதும், இதனைப் பொழில் விளையாட்டில் கொடிகளால் ஆகிய ஊசலில் ஏறியும், இல்லங்களில் சங்கிலியிற் கோக்கப்பட்ட பலகையில் ஏறியும் ஆடுவர் என்பதும், 'அங்ஙனம் ஆடுங்கால் இனியதொரு பாடலைப் பாடிக் கொண்டு ஆடுவர்' என்பதும் நன்கு அறியப்பட்டவை. பொழில் விளையாட்டு, ஊசல் கலித்தொகை முதலியவற்றிலும், ஏனையது பிற்கால இலக்கியங்களிலும் காணப்படும். ஊசலாட்டில் பாடும் பாடல் 'ஊசல் வரி' எனப்படும் என்பதும், பாடாண்பாட்டும் அவ்வரிப்பாட்டு வகையில் பாடப்படும் என்பதும் சிலப்பதிகாரத்து ஊசல்வரியால் இனிது விளங்கும். மேற்கூறிய இருவகை ஊசல்களுள் இஃது இல்லத்துள் பொற்பலகைமீது ஏறியாடும் ஊசல்வகையாக அருளிச் செய்யப் பெற்றமையால் 'பொன்னூசல்' எனப்பட்டது. ஊசலை இக்காலத்தில் 'உஞ்சல்' என்றும், 'ஊஞ்சல்' என்றும் வழங்குப. இதன்கண் கூற்று நிகழ்த்தும் தலைவி, இறைவன் பால் பேரின்பம் பெற்றவள் என்றே கொள்க. ஒன்பது திருப்பாட்டுக்களான் இயன்றிருத்தலின், இது, பின் வரும் பத்துக்கள் சிலவற்றின்பின் வைக்கற்பாலதாயினும், ஆறடிகளான் இயன்ற கொச்சகக் கலிப்பாக்களான் இயன்றிருத்தல் பற்றி அவற்றிற்கு முன்வைத்துக் கோக்கப்பட்டது. இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. திருத்தோணோக்கத்தில் சில திருப்பாட்டுக்களுள் இறைவனது மறக்கருணையைக் கூறியவாறு போலாது, இங்கு முழுதும் அறக்கருணையைக் கூறுதலின், இதற்கு 'அருட்சுத்தி' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். அருட்சுத்தி - அருளால் உண்டாகிய தூய்மை. Since ancient times, playing on a swinging platform tied by ropes, chains or tendrils, to tree branches or other supports, has been a favorite pastime among children of all ages the world over. The joy of this swinging sport is enhanced by the accompanying songs set to harmonise with the pendulous movement of this cradle like contraption. We see in Thiruvaachakam, the saint's unique skill in handling ordinary day-to-day worldly activities as instruments inculcating philosophical thoughts in the minds of the young. Incidents recalling the valiant exploits of Lord Civa are woven into the many decad of Thiruvaachakam compiled by him in his own characteristic manner. Our saint witnessed the popular cradle swing sport in the groves and playgrounds of Thillai and transformed it into a veritable ritual glorifying the grace and generosity of the Lord. Until today, this type of cradle song was an important part of marriage ceremonies in the saivite families of southern India, where the bride and the bridegroom sit on the swinging plank, even as pipers play the recurring rhythm 'பொன்-ஊசல்- ஆடாமோ' . May you thus play the swing in tune with the recitation of the vocal number. In this decad, the swing song is in adoration of Lord Civa, whose exploits are recounted with glee by young maids participating in the declamation. 16.1. சீரார் பவளங்கான் முத்தங் கயிறாக வேராரும் பொற்பலகை யேறி யினிதமர்ந்து நாரா யணனறியா நாண்மலர்த்தா ணாயடியேற் கூராகத் தந்தருளு முத்தர கோசமங்கை யாரா வமுதி னருட்டா ளிணைபாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ. சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு ஆக ஏர் ஆரும் பொன்-பலகை ஏறி, இனிது அமர்ந்து நாராயணன் அறியா நாள் மலர்த்தாள், நாய்-அடியேற்கு ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை ஆரா அமுதின் அருள்-தாள்-இணை பாடிப் போர் ஆர் வேல் கண் மடவீர் ! - பொன் ஊசல் ஆடாமோ ! siiraar pavaLangkaal muththam kayiRu aaka eer aarum poRpalakai eeRi inithu amarnthu naaraayaNan aRiyaa naaNmalarththaaL naay adiyeeRku uur aakath thantharuLum uththara koosamangkai aaraa amuthin aruL thaaL iNaipaadi pooraar veelkaNmadaviir ponuusal aadaamoo பொ-ரை: போர் செய்தல் அமைந்த வேல் போன்ற கண்களை உடைய பெண்களே! சிறப்பு மிகுந்த பவளத் துண்டங்களைத் தூண்களாகவும் முத்து வடங்களைக் கயிறாகவும் உடைய அழகான பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி அமர்வோம். திருமாலால் அறியவொண்ணாத, அன்று அலர்ந்த தாமரை மலரை ஒத்த திருவடி நிழலை நாய் போலும் அடியேனுக்கு இறைவன் இருப்பிடமாக அளித்தார். உத்தர கோச மங்கையில் உறையும் அந்தத் தெவிட்டாத அமுதத்தின் அருளுருவாக விளங்கும் இரு பொன்னடிகளையும் புகழ்ந்து பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக ! May we all play the golden swing. Oh maids, seated atop beauteous planks connected to pearl-studded poles by elegant strings of coral beads! Singing on Him who blessed me, this cur of a vassal, with His fresh flower-like feet as resting place - feet that elude even Thirumaal! On the twin gracious Feet of this eternal elixir of Thiru Uththara-Kosa-Mangai, Oh maids of sharp spear-like eyes, let us chant glories and play the swing! கு-ரை: ஊர் என்றது எப்போதும் இருக்கின்ற இடம் எனப் பொருள்படும். கணவனுள்ளத்தைக் கவர்தலின் ' போர்த் தொழிலமைந்த கண்' என்றார். வேலின் வடிவம்போலக் கண்ணமைந்து இருப்பதனால் வேற்கண். மடவீர் = இளம் பெண்டிரே ! 2. மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிக டேன்றங்கித் தித்தித் தமூதூறித் தான்றெளிந்தங் கூன்றங்கி நின்றுருக்கு முத்தர கோசமங்கைக் கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ மூன்று, அங்கு இலங்கு நயனத்தன் மூவாத வான் தங்கு தேவர்களும் காணா மலர்-அடிகள் தேன் தங்கித் தித்தித்து அமுது ஊறித் தான் தெளிந்து, அங்கு ஊன் தங்கி நின்று, உருக்கும் உத்தரகோச மங்கைக் கோன் தங்கு இடைமருது பாடிக் குல மஞ்ஞை போன்று, அங்கு, அன நடையீர்! - பொன்-ஊசல் ஆடாமோ ! muunRangku ilangku nayanaththan muuvaatha vaanthangku theevarkaLum kaaNaa malaradikaL theen thanki thiththiththu amuthu uuRi thaan theLinthu angku uun thangki ninRu urukkum uththara koosamangkai koonthangku idaimaruthu paadi kulamanjnjai poonRu angku ananadaiyiir ponuusal aadaamoo பொ-ரை: அழகில் உயர்ந்த மயில்கள் தோற்றம் போலும், அன்னத்தை ஒத்த நடையும் உடைய மங்கையரே ! இறைவன் மூன்றாக விளங்கும் கண்களையும், வானுலகின் தலைவர்களும் காண முடியாத பூப்போன்ற திருப்பாதங்களையும் உடையவன். அந்தத் திருப்பாதங்கள் தேன் கலந்தது போன்று இனித்து, அமுதத்தினை ஊறச் செய்து, தெளிவு தந்து உடலிற் பொருந்தி உருகுவிக்கின்றன. திரு உத்தர கோச மங்கைக்கு மன்னனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவிடைமருதூரின் சிறப்பைப் பாடி நாம் பொன் ஊஞ்சல் ஆடுவோமாக ! May we play the golden swing, Oh maids that are like thorough bred peacocks moving around as stately pelicans do. Singing on the Lord of Uththara-Kosa-Mangai that stays in my fleshy body and melts my heart! The Lord that abides in Thiru-Idai- Maruthoor , Lord so sweet much like springs of clarified honey! The three-eyed Lord of the flowery Feet that even the heaven dwelling gods cannot see ! Singing on Him, let us play the golden swings, Oh Maids ! கு-ரை: அங்கு- அசை, தேன்- இனிமையைக் குறிக்கும். அமுது பாலின் சுவையினைக் குறிக்கும். 'மூவாத தேவர்கள்' என்பது மூப்படைந்து இறுதியுறுதல் இல்லாத மும்மூர்த்திகள், காரணேசுரர், சுத்த வித்தியாதத்துவ வாசிகள் முதலியோரைக் குறிக்கும். பரமுத்தியடையும் வரை இறை திருவடியை அவர்கள் முற்றும் உணர்ந்திலர் போலும். அச்சொற்றொடர் அமுதமுண்டு நெடுநாள் வாழும் தேவரையும் குறிக்கும். இன்பமும் மெய்யறிவும் பயத்தலால், 'தேன் தங்கி அமுதூறி' என்றார். உடலும் இறைவன் திருமேனி ஆதலின், 'ஊன் தங்கி' என்றார். 3. முன்னீறு மாதியு மில்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்க டாநிற்பத் தன்னீறெனக் கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ முன், ஈறும், ஆதியும் இல்லான்: முனிவர் குழாம் பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்பத் தன் நீறு எனக்கு அருளித், தன்கருணை வெள்ளத்து மன் ஊற, மன்னும் மணி உத்தரகோச மங்கை மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடிப் பொன் ஏறு பூண் முலையீர் ! - பொன் ஊசல் ஆடாமோ! mun iiRum aathiyum illaan munivar kuzaam pal nuuRu koodi imaiyoorkaL thaam niRpa than niiRu enakku aruLi than karuNai veLLaththu man uuRa mannum maNi uththara koosamangkai min eeRum maada viyan maaLikai paadi pon eeRu puuNmulaiyiir ponuusal aadaamoo பொ-ரை: பொன் நகையணிந்த நகிலுடைய பெண்டிர்களே! முடிவும் தோற்றமும் இல்லாதவன் எம் பெருமானாகிய சிவபெருமான். அவன் எதிரில் பலநூறு கோடி விண்ணவரும் தவத்தினர் கூட்டமும் பேரருளை எதிர்நோக்கி நிற்கிறார்கள். எம்பெருமான் அவர்களுக்கெல்லாம் அருள் புரியாது, தனது திருநீற்றை எனக்கு அளித்தருளித் தனது அருள் வெள்ளத்தில் நிலையாக ஊன்றும்படிச் செய்தான். என் இதயத்தே நிலை பெற்றிருக்கும் மாணிக்கம் போல்பவனது அழகிய ஊராகிய திருஉத்தர கோச மங்கையில் உள்ள மின்னொளி பாயும் மாடங்களை உடைய பெரிய மாளிகையைப் புகழ்ந்து பாடி நாம் பொன் ஊஞ்சல் ஆடுவோமாக ! The Lord that has no ending at any time, nor any past beginning, graced me with His gift of the holy white ash, even as congregations of ascetics and countless gods of heaven stood outside waiting for Him. He steeped my mind in the floodwaters of His grace! He that abides in the eternal Uththara- Kosa-Mangai ! Singing on His bright expansive citadel, Oh maids, bedecked with gold ornaments, let us play the golden swing. கு-ரை: முன்= நினைக்கும். நீறு= திருவருட் பேற்றிற்கறிகுறி . மன்= மன்ன, நிலையாக. 'ஊற' 'ஊன்ற' என்பதன் இடைக்குறை. மாடம், மேலிடங்களைக் குறிக்கும். மாளிகை, பெரிய வீடுகளைக் குறிக்கும். மாளிகையைப் பாடுதல், இறைவன் வீற்றிருக்கும் பதியினைப் பாடுதலாகும். 4. நஞ்சமர் கண்டத்த னண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி யுத்தர கோசமங்கை யஞ்சொலா டன்னோடுங் கூடி யடியவர்க ணெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் றூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ. நஞ்சு அமர் கண்டத்தன்: அண்டத்தவர் நாதன் ; மஞ்சு தோய் மாட மணி உத்தரகோச மங்கை அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள் நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணை செய்து துஞ்சல், பிறப்பு அறுப்பான்! தூய புகழ் பாடிப் புஞ்சம் ஆர் வெள் வளையீர்! - பொன் ஊசல் ஆடாமோ! nanjsu amar kaNdaththan aNdaththavar naathan manjsu thooy maadamaNi uththara koosamangkai anjsolaaL thannoodum kuudi adiyavarkaL nenjsuLee ninRu amutham uuRi karuNai seythu thunjsal piRappu aRuppaan thuuya pukazpaadi punjsam aar veL vaLaiyiir ponuusal aadaamoo பொ-ரை: திரட்சியான வெள்ளிய சங்கு வளையலணிந்த பெண்களே ! எம்பெருமானாகிய சிவன் நஞ்சு தங்கிய திருக்கழுத்தினை உடையவன்; விண்ணவர் தலைவன்; மேகங்கள் படியும் மாடங்களையுடைய திருஉத்தர கோச மங்கைப்பதியின்கண் இன்சொல் உடைய உமையோடு கூடி எழுந்தருளியுள்ளான். அடியார்களின் உள்ளத்தே நிலைபெற்று, அங்கு ஞான அமுதம் ஊறும்படித் திருவருள் புரிகிறான். நமது பிறப்பு இறப்புகளைத் தவிர்ப்பவனும் அவனே. அப்பெருமானது குற்றமற்ற கீர்த்தியைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஆடுவோமாக ! Lord with poison held down in His throat! Master of all worldly beings! This Lord, alongside His consort whose words are music, resideth in the hearts of His devotees, at elegant Uththara-Kosa-Mangai, of sky-high towers where clouds rest. And, bestowing springs of grace on devotees, puts an end to the cycle of births and deaths. Singing on His immaculate glories may we play the golden swing, Oh maids bedecked with an array of white shell bangles. கு-ரை: 'அண்டத்தவர்' என்பதற்கு அண்டத்திலுள்ள எல்லாவுயிர்கள் எனவும் பொருள் கொள்ளுவர். நான்காமடியில் ஊறி = ஊற, அஞ்சல் = சாதல். புஞ்சம்= தொகுதி, திரட்சி, குவியல் . வெள்ளியவளை= சங்கினாலாகியவை. 5. ஆணோ வலியோ வரிவையோ வென்றிருவர் காணாக் கடவுள் கருணையினாற் றேவர்குழா நாணாமே யுய்யவாட் கொண்டருளி நஞ்சுதனை யூணாக வுண்டருளு முத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூச லாடாமோ ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர் காணாக் கடவுள்; கருணையினால் தேவர் குழாம் நாணாமே உய்ய, ஆட்கொண்டருளி, நஞ்சு-தனை ஊண் ஆக உண்டருளும் உத்தரகோச மங்கைக் கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன் குணம் பரவிப் பூண் ஆர் வன முலையீர் ! பொன் ஊசல் ஆடாமோ ! aaNoo aliyoo arivaiyoo enRu iruvar kaaNaa kadavuL karuNaiyinaal theevar kuzaam naaNaamee uyya aadkoNdaruLi nanjsuthanai uuN aaka uNdaruLum uththara koosamangkai kooN aar piRaissenni kuuththan kuNamparavi puuN aar vana mulaiyiir ponuusal aadaamoo பொ-ரை: நகைகள் நிறைந்த அழகிய நகிலுடைய நங்கையீர் ! தம் நடுவே தோன்றிய அனற்பிழம்புருவாய சிவபெருமான் ஆண் வடிவோ, பெண் வடிவோ, இரண்டுமற்ற வடிவோ என்று அயன்மால் இருவரும் அறிய முடியாத யாவற்றையும் கடந்த பரம்பொருளாய் விளங்குகின்றான். பாற்கடலில் எழுந்த நஞ்சின் வேகத்தால் விண்ணவர் கூட்டம் அடங்கி அழியாத வண்ணம் அவர்களைப் பிழைப்பித்து ஆட்கொள்வதற்காகத் தன் பேரருளினால் அந்த நஞ்சைத் தன் உணவாக உட்கொண்டு அருளினான். வளைவான பிறைச்சந்திரனை அணிந்த சடையை உடைய திருநடன முதல்வனாகிய சிவபெருமான் திருஉத்தர கோச மங்கைத் தலத்தில் எழுந்தருளி அருள் வழங்கி வருகிறான். அவனுடைய கீர்த்திகளைப் பாடி நாம் பொன் ஊஞ்சல் ஆடுவோமாக. Whilst the conclave of gods stood in stupor, wondering whether He is male, female or neuter,the invisible Lord Civa, in His grace, removed their fear and took them under Him, consuming the awesome poison Himself. Let us sing on the glories of this Lord of Uththara- Kosa-Mangai, Lord of the cosmic dance, with crescent moon on His Head, Oh fair maids with jewelled bosom and play the golden swing. கு-ரை: நாணாமே = அடங்காமே . கோன்=வளைவு. எல்லாரையும் இயக்குவானாதலின், 'கூத்தன்' என்றார். வனம்= வனப்பு, அழகு. ஆட்கொண்டருளி= ஆட்கொண்டருள. 6. மாதாடு பாகத்த னுத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையா னடியாருட் கோதாட்டி நாயேனை யாட்கொண்டென் றொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பாற் போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. மாது ஆடு பாகத்தன்; உத்தர கோச மங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல்பிறவித் தீது ஓடாவண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான் ; காது ஆடு குண்டலங்கள் பாடிக்கசிந்து அன்பால் போது ஆடு பூண் முலையீர் ! பொன் ஊசல் ஆடாமோ ! maathu aadu paakaththan uththara koosamangkai thaathaadu konRai sadaiyaan adiyaaruL koothaaddi naayeenai aadkoNdu en tholpiRavi thiithu oodaa vaNNam thikaza piRappu aRuppaan kaathaadu kuNdalangkaL paadi kasinthu anpaal poothaadu puuNmulaiyiir ponuusal aadaamoo பொ-ரை: பூவும், நகையும் செறிந்து ஆடுகின்ற நகிலை உடைய நங்கையரே ! எம்பெருமானாகிய சிவன் உமையம்மையைத் தனது உடம்பின் ஒரு பாகத்தில் உடையவன். அவன் திரு உத்தர கோச மங்கையில் எழுந்தருளி அருள் வழங்கி வருகின்றான். மகரந்தப்பொடி திளைத்த கொன்றைப் பூவைத் தன் சடாமுடியில் அணிந்துள்ளான். தன் அடியார்கள் கூட்டத்தில் நாய்க்குச் சமமான என்னையும் பாராட்டி ஆட்கொண்டு அருளினான். பிறவிக்கு ஏதுவாகிய எனது ஆகாமிய வினைமேற்செல்லப் பெறாது தடுத்துத் திருவருள் உணர்வை எனக்கு ஊட்டி, என் பிறவியை ஒழித்தவனும் அவனே. அவனது வலது திருக்காதில் குண்டலங்கள் ஆடி அசைந்து கொண்டு இருக்கின்றன. இத்தகையோனது பெருமைகளை அன்போடு உருகிப்பாடி நாம் பொன் ஊஞ்சல் ஆடுவோமாக . Lord with His consort on one half of His frame! Lord of Uththara-Kosa-Mangai, with matted hair bedecked with pollen-filled cassia! Lord indulgent, that ends all my future births quelling the evil of my past, taking me amidst the conclave of His devotees! Singing thoughtfully with melting heart, on His oscillating ear ornaments, Oh maids, with flower decorated breasts, let us play the golden swing. கு-ரை: ஆடு = புணர்தல், பொருந்துதல், கோதாட்டுதல் = பாராட்டுதல். ஓடுதல்= மேற்சென்று மிகுதல். குண்டலங்கள், பிரணவ வடிவுடையனவாகலின், அவற்றின் பெருமை பகர்தல், இறைவனது மூலமந்திரச் சிறப்புரைத்தலாம். 7. உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் றன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பா னன்னத்தின் மேலேறி யாடு மணிமயில் போ லென்னத்த னென்னையுமாட் கொண்டா னெழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. உன்னற்கு அரிய திரு உத்தரகோச மங்கை மன்னிப் பொலிந்து இருந்த, மா மறையோன்-தன்புகழே பன்னிப் பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான்; அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணிமயில் போல் என் அத்தன்; என்னையும் ஆட்கொண்டான்; எழில் பாடிப் பொன் ஒத்த பூண் முலையீர்! - பொன் ஊசல் ஆடாமோ ! unnaRku ariya thiru uththara koosamangkai manni polinthiruntha maamaRaiyoon thanpukazee panni paNinthu iRainjsa paavangkaL paRRu aRuppaan annaththin meel eeRi aadum aNimayil pool en aththan ennaiyum aadkoNdaan ezil paadi pon oththa puuNmulaiyiir ponuusal aadaamoo பொ-ரை: நகைகள் அணியப் பெற்று, பொன் போல் விளங்குகின்ற நகிலையுடைய நங்கைமீர் ! எம்பெருமானாகிய சிவன் திருஉத்தர கோச மங்கைப் பதியில் நிலை பெற்று விளங்குகின்றான் . அவன் மனத்தால் நினைத்தற்கரிய பெரிய இரகசியப் பொருளாய் இருக்கின்றான். அவனது புகழினைச் சொல்லித் தாழ்ந்து வணங்கின், அங்ஙனம் செய்வாரது தீவினைத் தொடர்புகளை ஒழிப்பவன் அவன். எனது அப்பனாய், அடியேனையும் அடிமை கொண்டு அருள் வழங்கினான். அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப்போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து இறைவனது அழகினைப் பாடி ஆடுவோமாக. Lord of the scriptures four, abiding at the incomprehensible shrine of Thiru Uththara Kosa-Mangai ! As we recount His glories and prayerfully bow down before Him, beseeching His indulgence, He puts an end to all our bonds and inequities. Singing on the grace of my father Civa, in accepting me too unto His fold, Oh gold-like breasted maids, may we play the golden swing, much like peacocks swaying free, seated on top of pelicans. கு-ரை: அன்னம் = ஊஞ்சலுக்கு உவமை, மயில், மாதர்க்குவமை. அன்னத்தை விடைக்கும், மணிமயிலெனக் கொண்டு, மணியை இறைவனுக்கும், மயிலை அம்மைக்கும் உவமையாகக் கொண்டு விடைமேல் அம்மையப்பனாய் வந்து ஆட்கொண்டானெனப் பொருள் கொள்ளுவாரும் உளர். ' பொன்னொத்த' என்பது ' முலையீர்' என்பதோடு முடிவது. 8. கோல வரைக் குடுமி வந்து குவலயத்துச் சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச் சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து ஞாலம் மிகப், பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்; சீலம் திகழும் திரு உத்தரகோச மங்கை மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடிப் பூலித்து அகம் குழைந்து - பொன் ஊசல் ஆடாமோ! koola varaikkudumi vanthu kuvalayaththu saala amuthu uNdu thaazkadalin miithu ezunthu njaalam mikap pari meeR koNdu namai aaNdaan siilam thikazum thiru uththara koosamangkai maalukku ariyaanai vaayaara naampaadi puuliththu akam kuzainthu ponuusal aadaamoo பொ-ரை: எங்கள் பெருமானாகிய சிவன் அழகிய திருக்கயிலை மலையின் சிகரத்தினின்றும் இறங்கி நமது பூமிக்கு வந்து, கூலியாளாக உருக்கொண்டு மதுரையில் பிட்டு வாணிச்சியிடம் அவள் பங்குக்கு உரிய வைகைக் கரையை அடைப்பதாக ஒப்புக்கொண்டு அவள் கொடுத்த உதிர்ந்த பிட்டை வாங்கி நிரம்ப உண்டான். மற்றொரு காலத்தில் வலைஞன் உருக்கொண்டு கட்டுமரத்தின் மீதேறி மிக ஆழமான கடலுள் சென்று யாருக்கும் அகப்படாமல் இடுக்கண் விளைவித்துக் கொண்டிருந்த சுறாமீனைப் பிடித்தான் (கதை எண் 14 மற்றும் 15ஐப் பார்க்கவும்). இன்னொரு சமயம் குதிரைச் சேவகன்போல் வேடம் கொண்டு அதிகமான நல்ல குதிரைகளைப் பாண்டிய மன்னனிடம் ஒப்புவித்தான் (கதை 50ஐப் பார்க்கவும்). என்னை ஆட்கொண்டு அருளினான். அவன் நன்னெறி விளங்கும் திரு உத்தரகோசமங்கைத் தலத்தில் இருந்து அருளாட்சி செய்து வருகின்றான். அவன் திருமாலுக்குக் கூடக் காண்பதற்கு அரியனாய் உள்ளான். இத்தனை பெருமை வாய்ந்த சிவனை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி உடல் பூரிக்கப் பெற்று உள்ளம் உருகிப் பொன் ஊஞ்சல் ஆடுவோமாக. Our Lord is hard to reach even by Thirumaal! He resideth in Thiru-Uththara-Kosa Mangai that shines forth in virtue. He came down from His abode in the beauteous mountain peak of Kailash to Madurai town in this earth as a labourer and ate the sweet rice as elixir given by the old lady Vandhi in exchange for His labour, He rode on a catamaran as a fisher man on the deep sea to catch the ferocious shark (Nandhi deva); He came as a horse rider leading a fleet of horses to the Paandiyan King. Apart from the above, our Lord came and grabbed us also. Oh! maids, let us praise His glory joyfully melting and singing to the fullness of our hearts and play the golden swing. கு-ரை: 'வரை' என்பது கயிலையினையாவது உதய மலையையாவது குறிக்கும். 'தாழ் கடல்' என்பதில் 'தாழ்' என்ற சொல் ஆழத்தைக் குறிக்கும். கடல் அலைக்கு ஆகுபெயர். தாவிச் செல்லும் குதிரையின் கதி அலையின் போக்கினை ஒத்து நிற்கும். 'மிகப்பரி' என்பதை மிகு+ அப்பரி என்று பிரித்துப் பொருள் கொள்க. 'சீலம்' என்பது, ஆகு பெயராய் நன்னெறியாளரைக் குறித்தல் கூடும். 'பூலித்து' என்பது 'பூரித்து' என்பதன் போலி. 9. தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கைத் தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோச மங்கைத் தங்கு, உலவு சோதித் தனி உருவம் வந்தருளி எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொள்வான் பங்கு உலவு கோதையும், தானும், பணி கொண்ட கொங்கு உலவு கொன்றைச் சடையான், குணம் பரவிப் பொங்கு உலவு பூண் முலையீர் ! - பொன் ஊசல் ஆடாமோ! thengku ulavu soolai thiru uththara koosamangkai thangku ulavu soothi thani uruvam vantharuLi engkaL piRappu aRuththiddu emtharamum aadkoLvaan pangku ulavu koothaiyum thaanum paNi koNda kongku ulavu konRai sadaiyaan kuNam paravi pongku ulavu puuNmulaiyiir ponuusal aadaamoo பொ-ரை: விளக்கம் பொருந்திய நகையணிந்த நகிலையுடையீர்! தென்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் மிகுந்த உத்தர கோச மங்கையின்கண் நிலைபெற்று விளங்குகிறான் எம்பெருமான். ஒப்பற்ற ஒளி வடிவோடு எழுந்தருளி வந்து, எங்கள் பிறவியைத் தொலைத்து, அருள் செய்தான். தகுதியற்ற எம்போலியரையும் அடிமை கொள்ளும் பொருட்டுத் தனது பாகத்தில் உறையும் மங்கையும் தானுமாகத் தோன்றி ஏவல் கொண்டு அருளினான். தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலை அணியப்பட்ட சடையை உடைய எம்பெருமானது குணத்தைப் புகழ்ந்து நாம் பொன்னால் ஆகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோமாக.! Coming over amidst the palm studded groves of Thiru Uththara-Kosa-Mangai, staying bright in effulgence alongside His consort, He cuts off our birth cycles. And takes us as vassals under Him, our associates too, in servitude to Him. Extolling the virtues of Him having honey filled cassia flowers in His matted hair, Oh maids of shining ornamented breasts, may we play the golden swing. கு-ரை: 'தங்குலவு சோதி' என்பதைத் தங்கு சோதி உலவு சோதி எனப் பிரித்துப் பொருள் கூறுக. முழுமுதற் கடவுளின் வடிவமாதலின் தனி உருவம் என்றார். தரம் = வகை. பங்கு இறைவனது இடப்பாகத்தைக் குறித்து நின்றது. கோதை = மாலை. பெண்ணுக்கு ஆகுபெயர். கொங்கு=தேன் , பொங்கு= விளக்கம் THIRUCHCHITRAMBALAM 17. அன்னைப் பத்து 17. ANNAIP-PATHTHU (ஆத்தும பூரணம் ) Decad of Communion தில்லையில் அருளிச் செய்யப்பட்டது The fullness of the Soul கலிவிருத்தம் Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் அன்னைப் பத்து - 'அன்னை' என்னும் சொல்லையுடைய பத்துத் திருப்பாட்டுக்களால் இயன்ற பகுதி. இதன்கண் வரும், 'அன்னை ' என்பது, தலைவி தோழியைக் கூறும் சொல்லாய் அமைவது, அதனை, 'அன்னை என்னை என்றலும் உளவே' ( தொல். பொருள், 242) என்னும் இலக்கணத்தாலும், 'அன்னாய் இவனோர் இளமாணாக்கன்' (குறுந்தொகை, 33) என்னும் இலக்கியத்தாலும் அறிக. ஐங்குறுநூற்று அன்னாய்ப் பத்தினும் சிலவிடத்து, 'அன்னாய்' என்பது தலைவி தோழியைக் கூறியவாறாக வருதல் காண்க. இப்பகுதி முழுவதும், தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி, எழுவகை அறத்தொடு நிற்றல் நிலையுள், 'வேட்கையுரைத்தல்', வகையால் அறத்தொடு நின்றதாம். ஆகவே, இத்திருப்பாட்டுக்கள் யாவும் தலைவியது கூற்றைத் தான் கொண்டு கூறியவாறாகத் தோழி கூறியனவாம். எழுவகை அறத்தொடு நிலையை, 'எளித்தல் ஏத்தல்" (தொல். பொருள், 204) என்னும் நூற்பாவினால் அறிக, அன்னே என்பவற்றைக் கொண்டு கூட்டாக முன்னர்க் கூட்டி, தோழி செவிலியை விளித்தவாறாக உரைப்பாரும் உளர். பத்திற்கு மேற்பட்ட திருப்பாட்டுக்களான் இயன்றவைகளையெல்லாம் முன்னர் வைத்து அவற்றது இறுதிக்கண் நான்கடிகளின் மிக்க அடிகளையுடைய திருப்பாட்டுக்களான் இயன்றதனை வைத்த பின்னர்ப் பத்துத் திருப்பாட்டுக்களான் இயன்ற பகுதிகளை வைக்கப் புகுந்து, அவற்றுள் நேரே காமப் பொருள் பற்றி வருதலின் முன்னவற்றோடு இனிதியைதல் பற்றி இதனை முதற்கண் வைத்துக் கோத்தனர் முன்னோர். இது 'வேட்கை மீதூர்தல்' கூறுதலாதலின், இதன் உள்ளுறைப் பொருள் உயிரினிடத்து இறையின்பம் (சிவானந்தம்) நிறைதலே என்பது பற்றி, இதற்கு, 'ஆத்தும பூரணம்' எனக் குறிப்புரைத்தனர். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது. இதனுள் வரும் திருப்பாட்டுக்கள் அனைத்தும் அளவடி நான்கினால் ஆயினமை பற்றி இவற்றைக் 'கலிவிருத்தம்' என்றே கூறினராயினும், அடிகள் அளவொவ்வாதும், இடை மடங்கியும் வருதலின், இவற்றை ஆசிரியத்துறைப் பாற்படுத்தலே சிறப்பு . இன்னோரன்னவைகளை எல்லாம் உண்மையில், 'பண்ணத்தி' (தொல். பொருள் 482) எனக் கூறிப்போதலே நன்று. தாழிசை, துறை, விருத்தம் அனைத்தையும் கொச்சகக்கலியுள் அடக்குவர் பேராசிரியர். பாடல் தொகையும், பிறவும் வேறுபட வருதலின், இங்கு நின்றும், வரும் பகுதிகள், 'திரு' என்னும் அடை புணர்க்கப்பட்டும் புணர்க்கப்படாதும் ஏற்ற பெற்றியான் வரும். இதனுள், 'என்னும்' என்பவற்றிற்கெல்லாம், ' என்று எப்பொழுதும்' சொல்வாள் என்பது பொருள். தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்குமிடத்துச் செவிலி நற்றாய்க்குக் கூறுமாறு போலத் தலைவியது காதலை நிரம்பக் கூறாது, தோற்றுவாய் செய்யுமளவே கூறுவாளாகலின் (தொல். பொருள் 112, உரை - இளம்), இவளுக்கு இந்நிலை இவ்வாற்றான் ஆயது எனக் காரணத்தொடு கூறாது, கேள்வியான் ஆயதோ, காட்சியான் ஆயதோ, கூடிப் பிரிந்த பிரிவாற்றாமையான் ஆயதோ என, ஒன்றில் துணிவு பிறவாது ஐயுறுமாறே கூறினாள். அத்தகைய குறிப்புரையுள், 'நின் மகள்' எனக் கிளந்து கூறுதல் பொருந்தாது என்னுந் திருவுள்ளத்தால், அப்பெயர் இதனுள் யாண்டும் தோன்றா எழுவாயாய் எஞ்சி நிற்கவே வைக்கப்பட்டது. Overcoming the trials and tribulations of this mundane sublunary existence through constant prayer and dedication, the saint experiences a state of fullness within under the grace of Lord Civa. This state of equanimity and bliss is portrayed in this decad, as veritable outpourings of the irrepressible feelings of an innocent maid, laid bare before her mother, recounting how her heart goes out to Lord Civa, envisaged as bridegroom for the maid. The high point of SanMaargham wherein the relationship between the Jeevaatmaa and Paramaatmaa is portrayed as culminating in conjugal bliss, is presented here by the Saint in this decad with considerable dexterity and truthfulness. In these ten poems, the characters involved are (1) Mistress (தலைவி); (2) Maid to the Mistress (தோழி); (3) Foster Mother (செவிலித்தாய் ) and (4) Uterine Mother of the Mistress (நற்றாய்) The poem goes on like this:- The maid of the Mistress, in all humility, informs the foster mother (and not the real mother or her mistress) the condition of her mistress and what all she was prattling now and then about Lord Civa. In turn, the foster mother conveys what all she heard from the maid to the uterine mother of the mistress. In each stanza, we see the repeated refrain, "such is He, Oh mother, thus speaketh this mistress", as if it is an observation by a third person, another maid. The Saint possibly puts himself as the third person! Confer in this context, St. Thiru Gnaana Sambandar's "சடையாய் எனுமால் விடையாய் எனுமால்" pleading on behalf of a maid in distress. 17. 1 வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையின ரன்னே யென்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கு நாதரிந் நாதனா ரன்னே யென்னும் வேத மொழியர், வெள்-நீற்றர், செம்-மேனியர் நாதப் பறையினர்; அன்னே ! -என்னும்; நாதப் பறையினர், நான்முகன் மாலுக்கும் நாதர், இந் நாதனார்; அன்னே ! என்னும். veetha moziyar veNNiiRRar semmeeniyar naatha paRaiyinar annee ennum naatha paRaiyinar naanmukan maalukkum naathar innaathanaar annee ennum பொ-ரை: தோழியே ! நம் தலைவராகிய சிவபெருமான் ஞானம் உபதேசிக்கும் சொல் உடையவர் என்று எப்பொழுதும் சொல்லுவாள் என்று தலைவியின் நிலையைத் தோழி, செவிலிக்குக் கூறினாள். இவரே நாதமாகிய ஓங்கார ஒலி முழக்குவதற்குப் பறையை உடையவராய் உள்ளார். இவர் அயனுக்கும் அரிக்கும் தலைவராக உள்ளார் என்றும் தலைவி எப்பொழுதும் சொல்லுவாள் என்று தோழி மேலும் கூறினாள். Lord that chants the four vedas, Lord smeared over with white holy ash, Lord in a physical frame so red, Lord with a drum that raises the primordial sound. 'Such is He, Oh mother'; thus speaketh my mistress. Holding the sonorous drum of the primordial sound, He is the over Lord of the four faced Brahma and Thirumaal. "Such is He, Oh mother'; thus speaketh my mistress. கு-ரை: 'அன்னை' என்பது தலைவி, தோழியைக் கூறும் சொல்லாய் அமைவது. ' என்னும்' என்பவற்றிற்கெல்லாம் "என்று எப்பொழுதும் சொல்லுவாள்" என்பது பொருள். வேதமென்பது ஞான நூலை உணர்த்தும் - நால்வகை வாக்கைக் குறிக்கும் என்பாரும் உளர். சிவபெருமானைத் தன் தலைவராகக் கருதிய ஒரு சிறு பெண் தாயை நோக்கி, சிவபெருமானது பெருமைகளைக் கூறும் செய்யுள் எனவும் பொருள் கொள்ளுவர். உலகம் இயங்குவதற்குக் காரணமாய் எப்பொழுதும் ஒலிக்கும் ஓங்கார ஒலி , நாத தத்துவத்தின் கண் விளங்குவதால் 'நாதப்பறை' என்றார். ' இந்நாதனார் ' என்பதை 'இன்நாதனா' ரெனப் பாடங்கொண்டு, 'என் இனிய தலைவன்' என்று பொருள் கொள்வதும் உண்டு. 2. கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலின ருண்ணின் றுருக்குவ ரன்னே யென்னு முண்ணின் றுருக்கி யுலப்பிலா வானந்தக் கண்ணீர் தருவரா லன்னே யென்னும் கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர், உள் நின்று உருக்குவர்; அன்னே ! - என்னும்; உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக் கண்ணீர் தருவரால், அன்னே ! - என்னும் kaN anjsanaththar karuNai kadalinar uLninRu urukkuvar annee ennum uLninRu urukki ulappu ilaa aanantha kaNNiir tharuvaraal annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் கண்ணில் தீட்டிய மையினையுடையர். அருளாகிய கடலினை உடையவர்; உள்ளத்தில் நிலைபெற்று அதனை உருகுவிப்பவர். உள்ளத்தில் நின்று அதனை உருகச் செய்து வற்றாத ஆனந்தத்தால் உளதாகும் கண்ணீரைப் பெய்விப்பவரும் அவரே, என்று எப்பொழுதும் என் தலைவி சொல்லுவாள் என்று தோழி கூறியதாகச் செவிலி நற்றாய்க்குக் கூறினாள் என்பதை வருவித்துப் பொருள் கொள்ளுக. Lord's eyes gleams black as though mascara has been applied. Lord of vast sea-like compassion, Lord that melts our hearts, standing thereon. 'Such is He, Oh mother'; thus speaketh my mistress. Melting our hearts standing thereon, He causes tears of bliss in our eyes, 'Such is He, Oh mother'; thus speaketh my mistress. கு-ரை : முதலடியில் 'கண்' என்பதைக் 'கருணைக் கடல்' என்பதோடு முடித்து, 'நஞ்சனத்தர்' எனப்பிரித்து நஞ்சாகிய உணவுடையார் என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. 3. நித்த மணாளர் நிரம்ப வழகியர் சித்தத் திருப்பரா லன்னே யென்னுஞ் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தரா னந்தரா லன்னே யென்னும் நித்த மணாளர், நிரம்ப அழகியர் , சித்தத்து இருப்பரால்; அன்னே ! -என்னும்; சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர், ஆனந்தரால்; அன்னே ! - என்னும். niththa maNaaLar nirampa azakiyar siththaththu irupparaal annee ennum siththaththu iruppavar thennan perunthuRai aththar aanantharaal annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் என்றும் மணவாளராய் இருப்பவர்; நிறைந்த வனப்பு உடையவர்; நினைவில் எப்பொழுதும் இருப்பவர். அங்ஙனம் நினைவிலே இருப்பவர் அழகிய நல்ல திருப்பெருந்துறைக்குத் தலைவர்; பேரின்பவாணர். The Eternal Bridegroom, in all His fullness of charm, stays glued to my heart; 'Such is He, Oh mother'; thus speaketh my mistress. Staying glued to my heart is He, the Lord of the southern Perunthurai. He is the Lord, full of bliss, 'Such is He, Oh mother'; thus speaketh my mistress. கு-ரை: நித்தம் = நாள்தோறும். சித்தம்= மனத்தினொரு பகுதியாய் நினைவாற்றலைக் குறிக்கும். தென்னன் என்பதற்குப் பாண்டியனுடைய என்று பொருள் கொள்ளுதலும் உண்டு . மணவாளனாய் இன்பந்தருதல் என்றும் நினைவில் இருப்பதற்குக் காரணமாயிற்று. 4. ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேட மிருந்தவா றன்னே யென்னும் வேட மிருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடு மிதுவென்னே யன்னே யென்னும். ஆடு அரப் பூண்; உடைத் தோல்; பொடிப் பூசிற்று ஓர் வேடம் இருந்த ஆறு ! அன்னே! என்னும் ; வேடம் இருந்தவா, கண்டு கண்டு என் உள்ளம் வாடும்; இது என்னே ! அன்னே ! என்னும். aadara puuN udai thoolpodi puusiRRu oor veedam irunthavaaRu annee ennum veedam irunthavaa kaNdu kaNdu en uLLam vaadum ithu ennee annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் ஆடும் பாம்பாகிய ஆபரணமும் புலித்தோலும் அணிந்து , திருநீறாகிய துகள் அணிந்த ஒப்பற்றதொரு வேடம் உடையவர். அவ்வேடம் இருந்த வகையைப் பார்த்துப் பார்த்து எனது மனம் வாடுகின்றது. இது எதனால் ? The swinging hooded cobra is His ornament; the tiger skin His apparel; dressed up is He, in ash smeared form! Such is He, Oh mother'; thus speaketh my mistress. Ever viewing such dress-up, Oh mother, my heart withers and wilts; say, what is this! Thus speaketh my mistress. கு-ரை: 'அரா' என்பது 'அர' எனக் குறுகிற்று. பொடி = துகள், புழுதி; இது திருநீற்றைக் குறிக்கும். இருந்தவா= இருந்தவாறு. 'ஆடர' என்பது, குண்டலினி சத்தியைக் குறிக்கும். ஆடரா -உலகினை இயக்கும் ஆற்றலையும், தோலுடை காக்கும் ஆற்றலையும், பொடி ஒடுக்கும் ஆற்றலையும் குறிக்கும். முழு முதன்மை உடைய பெருமானின் பெருந்தன்மைகளை நினைத்து அவரை அடைதல் கூடுமோ என்று எண்ணி உள்ளம் வாடியது போலும். 5. நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரா லன்னே யென்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை யாண்டன்பு செய்வரா லன்னே யென்னும் நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர், பாண்டி நல் நாடரால்; அன்னே- என்னும்; பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! -என்னும் niiNda karaththar neRitharu kunjsiyar paaNdi nal naadaraal annee ennum paaNdi nal naadar paranthu ezu sinthaiyai aaNdanpu seyvaraal annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் நெடிய கையினை உடையார்; திரட்சியுடைய தலைமயிருடையார்; நன்மை பொருந்திய பாண்டிய நாட்டினர்; பாண்டி நாட்டை உடையவர்; அலைந்து திரியும் உள்ளத்தை அடக்கி ஆட்கொண்டு அருள் புரிவார். With long arms and dense locks, He is of the blessed Paandiyan land. 'Such is He, Oh mother', thus speaketh my mistress. This Lord of the blessed Paandiyan land, Oh mother, takes in, the all-pervasive mind and bestows blessings. Thus speaketh my mistress. கு-ரை: நீண்ட கை உத்தம இலக்கணத்தைக் குறிக்கும். நெறி என்பதற்கு, ஒழுங்கு என்றும் பொருள் கொண்டு, வரிசை வரிசையாக ஒழுங்காயமைந்த சடையினையுடையார் என்பார். குஞ்சி ஆடவரின் தலைமயிரைக் குறிக்கும். பாண்டி நாட்டில் இறைவன் தமக்கு அருள் புரிந்தமையானும், அதுவே சிவநெறிக்குப் பழம்பதியாதலானும் 'பாண்டி நன்னாடர்' என்றார். மனம் குவிந்து ஒருமைப் படாது எங்கும் பரந்து திரிவது கேடு பயக்கும். அதனைக் குவியச் செய்தலே அதை அடக்கி ஆளுதலாகும். இறைவன் தலைவனாக நின்று செய்யும் அருளே இங்கு அன்பெனப்பட்டது. 6. உன்னற் கரியசீ ருத்தர மங்கையர் மன்னுவ தென்னெஞ்சி லன்னே யென்னும் மன்னுவ தென்னெஞ்சின் மாலயன் காண்கிலா ரென்ன வதிசய மன்னே யென்னும். உன்னற்கு அரிய சீர் உத்தர மங்கையர் மன்னுவது என் நெஞ்சில்; அன்னே ! -என்னும்; மன்னுவது என் நெஞ்சில்; மால் அயன், காண்கிலார்; என்ன அதிசயம்! அன்னே! என்னும். unnaRku ariya siir uththara mangkaiyar mannuvathu en nenjsil annee ennum mannuvathu en nenjsil maal ayan kaaNkilaar enna athisayam annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன், நினைத்து அளவிடமுடியாத பெரும் புகழை உடைய திரு உத்தர கோச மங்கைப் பெருமான் நிலைபெற்று இருப்பது எனது உள்ளத்தில் ஆகும். சிறியேனாகிய எனது உள்ளத்தில் அவர் நிலை பெற்று இருப்பதும் (பெரிய) தேவராகிய திருமாலும் பிரமனும் அவரைக் காணும் ஆற்றல் இல்லாதார் என்பதும் எவ்வளவு வியப்பாக இருக்கிறது. He of the glorious Uththara-Kosa-Mangai, that is beyond our thought! And, He abides in my heart! Oh mother, thus speaketh my mistress. Of such abiding in my heart not even Thirumaal and Brahma are aware. What great wonder, Oh mother! Thus speaketh my mistress. கு-ரை: சீர்= புகழ். 'உத்தரகோச மங்கை' என்பது 'உத்தர மங்கை' எனக் குறுகிற்று. 7. வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்த ரன்னே யென்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் னுள்ளங் கவர்வரா லன்னே யென்னும். வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே !- என்னும்; பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே ! - என்னும். veLLai kalingkaththar veNthiru muNdaththar paLLi kuppaayaththar annee ennum paLLi kuppaayaththar paaypari meeRkoNden uLLam kavarvaraal annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் வெள்ளை நிறமுடைய ஆடை தரித்தவர்; திருநீற்றினால் வெண்மையாகிய திருநெற்றியை உடையவர்; அறச்சாலைக்குரிய மேற்போர்வை உடையவர்; அறப்போர்வை உடையோர் தாவிச் செல்லுகிற குதிரை மேல் எழுந்தருளி வந்து என் மனத்தைக் கவர்ந்து கொள்வார். Dressed in pure white is He. Smeared over in His forehead with white holy ash is He. He wears a knight shirt which extends upto the ankle. Oh mother! Thus speaketh my mistress. Wearing a knight shirt he rode on a galloping steed and stole away my mind. Oh mother ! Thus speaketh my mistress. Note: The Lord appeared as a cavalry chief, donning a white-apparel, the then prevailing costume, during the reign of the Paandiyan King. கு-ரை: கலிங்கம் - கலிங்க நாட்டில் நெய்த ஆடையைக் குறிப்பதாய் ஆடைக்குப் பொதுப் பெயராயிற்று . முண்டம் நெற்றியையும் தலையையும் குறிக்கும் . வெண்தலை எனப் பொருள் கொள்வாரும் உளர் . பள்ளி- துறவோர் அறச்சாலையையும் கல்விச் சாலையையும் குறிக்கும். அறச்சாலைக்குரிய குப்பாயம் கல்லாடையாக இருத்தலும் கூடும். 'கல்லாடை புனைந்தருளும் காபாலி' என்று கூறும் தேவாரம் காண்க. குப்பாயம் - சட்டை, மேற் போர்வை. மூன்றாவதடியில் பள்ளி என்பதற்குக் குதிரையேற்றம் பயில்கின்ற கழகம் எனப் பொருள் கொண்டு அதற்குரிய ஆடை என்பாருமுளர். 4ஆவது அடியில் 'ஆல்' அசை. 8. தாளி யறுகினர் சந்தனச் சாந்தின ராளெம்மை யாள்வரா லன்னே யென்னு மாளெம்மை யாளு மடிகளார் தங்கையி றாள மிருந்தவா றன்னே யென்னும் தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர் , ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! - என்னும்; ஆள் எம்மை ஆளும் அடிகளார்- தம் கையில் தாளம் இருந்த ஆறு ! அன்னே! - என்னும். thaaLi aRukinar santhana saanthinar aaLemmai aaLvaraal annee ennum aaLemmai aaLum adikaLaar thamkaiyil thaaLam irunthavaaRu annee ennum. பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் கொடி போல் நீண்ட அருகம்புல்லினால் ஆகிய மாலை அணிந்தவர்; சந்தனக் கலவை அணிந்தவர்; நம்மை அடிமையாகக் கொண்டு ஆண்டு அருளுவார். நம்மை ஆட்கொள்ளும் முதல்வருடைய திருக்கையில் தாளம் இருந்த வகை யாதோ? wearer of long 'Kusa' grass garland, smeared with sandal wood paste all over His body, He takes us vassal under Him, Oh mother! Thus speaketh my mistress. In the hands of Him that takes us vassal under him, how come there the sacred symbols, Oh mother! Thus speaketh my mistress. கு-ரை: தாளி - என்பது கொடி. தாளியறுகு என்பதற்குத் தாளிக் கொடியும், அறுகும் எனப் பொருள் கொள்வாரும் உளர். சாந்து திலகம் இடுவதற்கும் பூசுவதற்கும் உரிய வாசனைக் கலவை. ஆள் -அடியர், தொண்டர் என்பாரைக் குறிக்கும். தாளம் - வட்ட வடிவாய் அமைந்த ஒலிக்கருவி; அது பிரணவம் ஒலித்தற்குரியதாம். 9. தையலோர் பங்கினர் தாபத வேடத்த ரையம் புகுவரா லன்னே யென்னு மையம் புகுந்தவர் போதலு மென்னுள்ள நையுமிது வென்னே யன்னே யென்னும். தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர், ஐயம் புகுவரால்; அன்னே !- என்னும்; ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம் நையும், இது என்னே ! ; அன்னே! -என்னும். thaiyal oor pangkinar thaapatha veedaththar aiyam pukuvaraal annee ennum aiyam pukunthavar poothalum en uLLam naiyum ithu ennee annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் மாதொரு பாகத்தார் எனினும் தவ வடிவமுடையவர்; அவர் பிச்சை எடுப்பவர். அவர் பிச்சை ஏற்று மேற்செல்லுதலும் என் மனமானது பிரிவு பற்றி வருந்தும். இது என்ன காரணம் ? In one half of His frame is goddess Uma. Dressed as an ascetic is He. He goes out as a mendicant in search of alms, Oh mother! Thus speaketh my mistress. Even as He goes out in search of alms, how come my heart is filled with grief. Oh mother! Thus speaketh my mistress. கு-ரை: இறைவன் அன்பர் பொருட்டு, போக வடிவமும், யோக வடிவமும் கொள்ளுதல் இங்கே குறிக்கப்பட்டது. இறைவன் பிச்சை ஏற்பான் போலப் புகுந்து தாருகா வனத்து முனிவர்களுடைய பெண்டிரை மயக்கியது போன்று, அன்பர் பால் எழுந்தருளி வந்து உடல் பொருள் ஆவி மூன்றையும் கொண்டு அவர் மனத்தை அன்பினாற் பிணித்தல் குறிக்கப்பட்டது. 10. கொன்றை மதியமுங் கூவிள மத்தமுந் துன்றிய சென்னிய ரன்னே யென்னுந் துன்றிய சென்னியின் மத்தமுன் மத்தமே யின்றெனக் கானவா றன்னே யென்னும் கொன்றை மதியமும், கூவிளம் மத்தமும், துன்றிய சென்னியர்; அன்னே ! -என்னும் ; துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்று எனக்கு ஆன ஆறு ! அன்னே! -என்னும். konRai mathiyamum kuuviLa maththamum thunRiya senniyar annee ennum thunRiya senniyin maththam un maththamee inRu enakku aanavaaRu annee ennum பொ-ரை: எம்பெருமானாகிய சிவன் கொன்றை மலரும், பிறையும், வில்வத் தளிரும், ஊமத்தம்பூவும் நெருங்கி அமைந்த தலையினை உடையவர். அவை நெருங்கிய தலையின் கண் உள்ள ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும் பித்தை உண்டு பண்ணி விட்டது. His Head is so full of cassia flowers and vilva leaves, the crescent moon and the datura. Oh mother! Thus speaketh my mistress. The datura crowding densely on His Head are this day, causing madness in me, Oh mother! Thus speaketh my mistress. Note: We note the pun in the use of the word 'Datura' The Datura (உன்மத்தம்) is known to induce somnolence in the user கு-ரை: "ஊமத்தம்" பித்து விளைக்கும் இயல்பிற்று . ஆதலின் இறைவன்பால், மால் விளைப்பதாக அதனை வியந்தோதினர். அம்மலரே தனக்குப் பித்து மயமாக ஆயிற்றெனக் கொண்டு, அம்மலர் பெறுதலைத் தான் விரும்பியதாக மகள் கூறினாள் என்றலும் உண்டு. இன்று - இறைவன் எழுந்தருளி ஆட்கொண்ட இக்காலத்து எனப் பொருள்படும். THIRUCHCHITRAMBALAM 18. குயிற்பத்து 18. KUIL-PATHTHU (ஆத்துமவிரக்கம் ) The Decad of the Kuil தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. the Yearning of the Soul ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thillai. திருச்சிற்றம்பலம் குயிற்பத்து - குயிலை நோக்கிக் கூறும் பத்துத் திருப்பாட்டுக்களின் தொகுதி. இது பற்றிய விளக்கங்களையும், இதன் பின்னர் வரும் திருத்தசாங்கம் பற்றிய விளக்கங்களையும் திருக்கோத்தும்பியில் குறித்தவாறு உணர்ந்து கொள்க. தலைவனது பிரிவாற்றாமையால் இரங்கும் தலைவியது கூற்றாய் அமைந்த இதன் உண்மைப் பொருள், இறைவனைப் பெற்றும் பெறாதவாறாய் இவ்வுலகில் நின்று வருந்தும் உயிரினது இரக்கமேயாகலின், இதற்கு, 'ஆத்தும இரக்கம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். குயிலை நோக்கிக் கூறுதல் இனிது விளங்க, 'குயிற்பத்து' எனப் பெயர் பெற்றிருத்தலின் பின்னர் வரும் திருத்தசாங்கத்திற்கு முன்னே இதனை முன்னர்ச் சென்ற அன்னைப் பத்தோடு இனிது இயங்கக் கோத்தனர். இப்பகுதி முழுவதும் பெரும்பான்மையும் ஈரசை அறுசீரடி விருத்தத்தால் ஆயது. அறுசீரடியுள் மூன்றாவதனையொழித்து ஒழிந்த நான்கு தளையும் இயற்சீர் வெண்டளையாய் நிற்கும். இது, தில்லையில் அருளிச் செய்தது என்பதே பதிப்புகளில் காணப்படுவது. Addressing the melodious singing Kuyil bird (Cukkoo) that chirps from atop tree branches in mellifluous tunes at the break of dawn, the saint describes the many characteristics of Lord Civa as revealed to humanity. These monologues are intended to highlight the imponderable glories inherent in the Almighty and thereby lead the soul towards unification with the Lord. Aware of the uniqueness of the Supreme Master, whom none can equal, the soul gets engaged in prayer and dedication. The compassionate nature of Lord Civa is bound to draw the soul towards liberation. Often times, the wayward soul, not knowing the greatness of the Lord, is prone to be distracted by the myriad ramifications in the worldly order and gets lost in the wilderness as it were. Extolling the glories of Lord Civa is therefore, in itself, an act of compassion. For it arises out of pity for the struggling creatures around us. The saint gives vent to his longing for ineffable communion with the Lord and in the process addresses all souls to get oriented towards the Lord of grace. In keeping with ancient tradition, he calls out to the kuil which indeed is a call to all souls in the universe. He calls upon all to call out to Lord Civa, recounting His unique features and in particular His easy accessibility to the genuine worshippers. Prayer brings peace and happiness, and redeems the soul from the whirlpool of earthly woes. Even western scholars like A.L. Tennyson aver "More things are wrought by prayer than this world dreams of". 18. 1. கீத மினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவிற் பாதாள மேழினுக் கப்பாற் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை யாதிகுணமொன்று மில்லா னந்தமி லான்வரக் கூவாய் கீதம் இனிய குயிலே ! கேட்டியேல், எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்; சோதி மணிமுடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை ; ஆதி; குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய் ! kiitham iniya kuyilee keeddiyeel engkaL perumaan paatham iraNdum vinavin paathaaLam eezinukku appaal soothi maNimudi sollin sol iRanthu ninRa thonmai aathikuNam onRum illaan antham ilaan vara kuuvaay. பொ-ரை: இனிய குரலுடைய குயிலே ! நமது சிவபெருமானுடைய திருவடிகள் எங்குள்ளது எனக் கேட்டால் அவை கீழுலகம் ஏழுக்கும் அப்பாலாயின. ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்கு முடிவதெனச் சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமை உடையது. அவனது குணத்தைப்பற்றிக் கேட்பாயாயின் மாயையின் காரியமாகிய சாத்வீகம், இராசதம், தாமதம் ஆகிய முக்குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவனும் அநாதியாயும், முடிவு இல்லாதவனாயும் இருப்பவன். அத்தகையவன் என்னைச் சேரும் வண்ணம் இங்கு வரும்படிக் கூவி அழைப்பாயாக. Ye Kuil, of pleasing tunes, listen! Should you ask about the twin Feet of our Lord, they stretch down beyond the seven underworlds. Likewise, speaking about His effulgent gem-studded head, this stands as antiquity beyond description, Call out to this Lord Oh Kuil, welcoming Him that has no traits, no beginning nor any end. கு-ரை: குயிலினைப் பார்த்து அடிகள் கூறுவதாக அமைந்திருப்பது இப்பதிகம். கீதம்= இசை, இங்கே குயிலின் குரலைக் குறிக்கும். கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் என்ற அளவே கூறினமையால் , அதற்கு முடிவு கூறப்படவில்லை. "பாதாளம் ஏழு" என்றது கீழ்ப்பட்ட உலகு அத்தனையும் அடக்கி நின்றது. மணி= அழகிய, 'தொன்மை யாதி' என்பதற்குப் பழமை முதலிய என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. 2. ஏர்தரு மேழுல கேத்த வெவ்வுரு வுந்தன் னுருவா யார்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோ தரிக்குப் பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய் ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ்உருவும் தன் உரு ஆய் , ஆர்கலிசூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோ தரிக்குப் பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனைக் கூவாய் ! eer tharum eez ulaku eeththa evuruvum thannuruvaay aarkali suuz then ilangkai azaku amar vaNdoo tharikku peer aruL inpam aLiththa perunthuRai meeya piraanai siiriya vaayaal kuyilee thenpaaNdi naadanai kuuvaay. பொ-ரை: எம்பெருமானாகிய சிவனை ஏழுலகத்தாரும் துதிக்கின்றனர் . அவன் எப்பொருளிலும் அவையேயாய்க் கலந்திருக்கும் தன்மையானவன். முழக்கம் மிக்கக் கடல் சூழ்ந்த அழகிய நாடு இலங்கை. அதை ஆண்டு வந்த இராவணன் சிவபூசை விடாது செய்து வந்தவன். அவன் மனைவி மண்டோதரியும் சிவனிடம் மிக்க அன்பு பூண்டு சிவ வழிபாடு செய்து வந்தவள். அவ்வாற்றால் சிவபெருமானைக் குழந்தை வடிவில் எடுத்து அணைத்து இன்புற வேண்டும் என்று மண்டோதரி சிவபெருமானிடம் வேண்டினாள். அவ்வாறே ஒரு நாள் சிவபூசை முடிக்கும் தருணம் சிவபெருமான் குழந்தை வடிவில் காட்சி அளிக்க, மண்டோதரி அக்குழந்தையை எடுத்து அணைத்து இன்புற்று இருக்கும்போது இராவணன் வந்தான். மண்டோதரி இராவணனிடம் சிவபெருமானின் திருவருட் செயலைக் கூறிக் குழந்தையை அவனிடம் கொடுத்தாள். அவன் குழந்தையை வாங்கி எடுத்து அணைத்து மகிழ்கையில் சிவபெருமான் மறைந்து அருளினார். எம்பெருமான் இவ்வாறு பெரும் கருணையோடு மண்டோதரிக்குப் பேரின்பத்தை அளித்தவர். அவன் திருப்பெருந்துறையில் விரும்பி உறைபவன். தென் திசையில் உள்ள பாண்டி நாட்டினை உடையவனும் அவனே. குயிலே! அப்பெருமானை நீ உனது சீரிய வாயால் கூவி என்னிடம் வரும்படி அழைப்பாயாக. Ye Kuil, call out in welcome, in your known select voice, to this Lord of the southern Paandiyan land. The Lord adored by the sacred seven worlds whereat every living creature's form is manifestation of His own form! The Lord that in the sea-girt Lanka showered blessings on the charming Queen Mandothari! The Lord that favoured the Perunthurai shrine! கு-ரை: 'ஏர்தரும்' என்பதற்கு எழுந்து விளங்கும் எனப் பொருள் கொண்டு, 'ஏழுலகு' என்பதனோடாதல் 'எவ்வுருவும்' என்பதனோடாதல் சேர்த்தல் உண்டு. ஆர்கலி = நிறைந்த முழக்கம். அதனையுடைய கடலைக் குறிப்பது. இராவணன் தேவியாகிய வண்டோதரி சிவனடிப் பேரன்பிற் சிறந்தவள். 3. நீல வுருவிற் குயிலே நீண்மணி மாட நிலாவுங் கோல வழகிற் றிகழுங் கொடிமங்கை யுள்ளுறை கோயிற் சீலம் பெரிது மினிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க விருந்த நாயக னைவரக் கூவாய் நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திரு-உத்தரகோச மங்கை ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய் ! niila uruvin kuyilee! niiLmaNi maadam nilaavum koola azakil thikazum kodimangkai uLLuRai kooyil siilam perithum iniya thiru uththarakoosamangkai njaalam viLangka iruntha naayakanai vara kuuvaay. பொ-ரை: நீல நிறம் பொருந்திய உடலைக் கொண்ட குயிலே! திருஉத்தர கோச மங்கையில் இரத்தினங்கள் பதித்த பெரிய மாடங்கள் பல உள்ளன. இத்தலத்தில் நல்லொழுக்கம் மிகச் சிறந்து விளங்குகின்றது. இங்குள்ள திருக்கோயிலின் உள்ளிடத்தே அழகிய திருமேனி தாங்கி, பூங்கொடி போன்ற உமையம்மை உறைகின்றாள். அவ்வம்மை உடனாக இருந்து இவ்வுலகம் விளக்கம் அடையுமாறு இத்தலத்தில் அருள்புரிந்து வருகின்ற எம் தலைவனான சிவபெருமானை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக. The most beautiful and tendril-like Uma Devi dwells in the bright temple in Uththara- Kosa- Mangai whose virtue abounds and where tall and elegant gem-set mansions exist. There also abides my Lord Civan by whom the world becomes richer in spiritual wisdom. Ye Kuil, of assure hue, go there and bid my Lord Civan to come to me. கு-ரை: 'நீண்மணி மாட' என்பதை மணிநீள் மாடமென அமைத்துப் பொருள் கூறுக. கோலம் என்பதற்கு அழகு எனப் பொருள் கொண்டு, கோலவழகு என்பதற்கு மிகுந்த அழகு என்பர். கொடி மங்கை என்பதற்குத் திருமகள் என்று பொருள் கொள்வாரும் உளர். நிலாவும் என்பதைக் கோயில் என்பதோடு சேர்க்க. உத்தரகோச மங்கையில் இறைவன் ஆகமங்களை அறிவுறுத்தினமையால் ஞாலம் (கலை ஞானத்தால்) விளங்க இருந்த நாயகன் என்றார். 4. தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேணீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ள லூன்பழித் துள்ளம் புகுந்தென் னுணர்வது வாய வொருத்தன் மான்பழித் தாண்டமென் னோக்கி மணாளனை நீவரக் கூவாய். தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே ! இது கேள் நீ , வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்; ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு-அது ஆய ஒருத்தன்; மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை, நீ வரக் கூவாய் ! theen paza soolai payilum siRu kuyilee ithu keeL nii vaanpaziththu immaN pukunthu, manitharai aadkoNda vaLLal uunpaziththu uLLam pukunthu en uNarvu athuvaaya oruththan maanpaziththu aaNda mennookki maNaaLanai nii vara kuuvaay பொ-ரை: தேன் நிறைந்த பழங்களைக் கொண்ட மரங்கள் செறிந்த சோலையில் வசிக்கின்ற இளங்குயிலே ! இதை நீ கேட்பாயாக. வானிலுள்ளோரை ஆட்கொள்ளக் கருதாது இம்மண்ணுலகிலுள்ள பருவம் மிகுந்த மக்களை ஆட்கொண்டருளிய அருட்கொடையாளன் இறைவன். அவன் என் பிறப்பை ஒழித்து என் நெஞ்சத்துள் புகுந்து என் அறிவில் அத்துவிதமாய்க் கலந்து நின்ற ஒப்பற்றவன்; என்னை ஆட்கொண்ட வள்ளல். மானினது பார்வையை இகழ்வதாயும், ஆளும் தன்மை உடையதாயும், இனிமையான குளிர்ந்த பார்வையையும் உடையவள் உமையம்மையார். அவளுடைய நாயகனான சிவபெருமான் என்னிடம் வரும்படி நீ கூவி அழைப்பாயாக ! Listen, Ye little Kuil, moving about freely in honey sweet fruit-bearing groves ! The generous Lord leaving His heavenly abode, came over to this earth and took earthly folks in servitude. Brushing aside my fleshy existence He entered into my heart. He, the peerless Lord that influenced my thought! Call out to Him, in welcome, Oh Kuil! Him who is consort of the merciful Uma Devi of exalted state and deer-like eyes. கு-ரை: 'தேன்பழ' என்பதற்குத் தேனைப் பொழிகின்ற பழமென்பாரும் உளர், 'வான்பழித்து' என்றதற்குச் சிதாகாயத்தினின்று இறங்கி என்பதும் உண்டு. வானைவிட்டு இறங்கினமை அதனைப் பழித்தல் போலாகும் என்ப. பிறப்பை ஒழிப்பதால், 'ஊன் பழித்து' என்றார். உயிரறிவு இறையறிவோடு இரண்டறக் கலந்து நின்றே இறைவனை அறிதல் கூடும். அங்ஙனம் கலப்பதே உணர்வதுவாதல். மென் நோக்கிற்கு மான் பார்வை கீழ்ப்பட்டமையால் 'மான்பழித்து' என்றார். 5. சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல வந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை யறுப்பான் முந்து நடுவு முடிவு மாகிய மூவ ரறியாச் சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய் சுந்தரத்து இன்பக் குயிலே ! சூழ் சுடர் ஞாயிறு போல அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்; முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானைச் சேவகனை, வரக் கூவாய் ! suntharaththu inpa kuyilee suuzsudar njaayiRu poola antharaththee ninRu izinthu ingku adiyavar aasai aRuppaan munthum naduvum mudivum aakiya muuvar aRiyaa sinthura seevadi yaanai seevakanai vara kuuvaay. பொ-ரை: இசையால் இன்பந்தரும் அழகிய குயிலே ! ஒளிக்கதிர்கள் சூழ்ந்த கதிரவன் போன்ற திருவுருவுடன் சிதாகாசத்திலிருந்து இறங்கி வந்து, இந்நிலவுலகில் மெய்யடியார்களது பாசத்தை நீக்கியவன் எம்பெருமானாகிய சிவன். உலகத்தைப் படைத்தல், காத்தல், துடைத்தல் ஆகிய முத்தொழிலுக்கும் உரிய மூவராகிய பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவராலும் அறிய முடியாதவன் அவன். செம்பஞ்சுக்குழம்பின் நிறத்தைப் போன்ற சிவந்த திருவடிகளை உடையவன் அவன். நம்மை ஆட்கொள்ளும் அவ்வீரனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக ! Ye Kuil, that spreads happiness through mellifluous chirpings! The Lord, standing in the high above, as the spreading rays of light, comes down to the earth and removes the worldly bonds of all His devotees. The Lord of the sacred, blissful Feet, who is beyond the comprehension of the three deities Ayan, Hari, Aran (i.e., Brahma, Thirumaal and Rudhran).Unto this peerless Lord of Valour, Ye Kuil, call out in welcome. கு-ரை: கடவுள் ஞான சூரியன் என்பார் ' ஞாயிறுபோல' என்றார். சுடர் என்பதை இறைவனோடு வந்த அடியவர்க்கும் ஞாயிற்றினை இறைவனுக்கும் ஒப்பிடலாம். அந்தரம்=ஆகாயம். எல்லாத் தத்துவங்களையும் கடந்த ஆகாயம் சிதாகாயம். மும்மூர்த்திகளுள் உருத்திரர் ஞானம் பெறினும், அதிகார மலம் நீங்கப் பெறாமையின் அவரையும் உட்படுத்தி 'மூவரறியா' என்றனர். 'சிந்துர'மென்பதற்கு வெட்சி என்பாரும் உளர். வெட்சி போன்ற சிவந்த அடியென்பது கருத்து . பிறப்பறுப்பதில் இணையற்ற வீரனென்பார் 'சேவகனை' என்றனர். அறுப்பானாகியும், சேவடி உடையானாகியும், சேவகனாகியும் இருப்பவனை 'வரக்கூவாய்' என்றனர். முந்துநடுவு முடிவும் ஆகிய என்பதைச் சேவடியானை என்பதோடு முடித்துக் கூறுதலும் உண்டு. 6. இன்பந் தருவன் குயிலே யேழுல கும்முழு தாளி யன்ப னமுதளித் தூறு மானந்தன் வான்வந்த தேவ னன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய் இன்பம் தருவன்; குயிலே ! ஏழ் உலகும் முழுது ஆளி ; அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்: வான்வந்த தேவன்; நன் பொன் மணிச்சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானைக் கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனைக், கூவாய் ! inpam tharuvan kuyilee eez ulakum muzuthu aaLi anpan amuthu aLiththu uuRum aananthan vaan vantha theevan nanpon maNissuvadu oththa nalpari meel varuvaanai kompin mizaRRum kuyilee kookazi naathanai kuuvaay. பொ-ரை: ஏழுலகங்கள் முழுவதும் ஆளுகின்றவனும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு உடையவனாய், இருக்கின்றவனுமான எங்கள் சிவபெருமானிடம் குயிலே ! நீ நிலையான பேரின்பத்தை வேண்டி விருப்பமுடன் கேட்பாயானால் அவன் முழுவதும் உனக்குத் தருவான். மெய்யடியார்களுக்கு மென்மேலும் மிகுந்த இன்பப் பொருளாய் விளங்குபவனும் அவனே. அவன் சிதாகாசத்திலிருந்து எழுந்தருளிவந்த ஒளி உருவானவன். திருப்பெருந்துறை முதல்வன் ஆனவன். தூய பொன்னும் இரத்தினமும் சேர்த்து அமைந்த கட்டமைந்த உருவம் போன்ற நல்ல குதிரை மேல் எழுந்தருளி வந்தான். மரக்கிளையிலிருந்து கூவுகின்ற குயிலே ! அத்தகையவனை என்னிடம் வருமாறு நீ கூவி அழைப்பாயாக ! Ye Kuil, lisping in sweet tunes, do call out, welcoming the Lord of Kokazhi. He that comes riding a steed that has pock marks on its body resembling precious gems. He that arrives from the high above, He that provides blissful springs of ambrosia, He that rules over the seven worlds, He that bestows joy on all, Ye Kuil! கு-ரை: ஏழுலகும் முழுதாளியாய், அன்பனாய், ஆனந்தனாய், தேவனாய் வருவானை நாதனை மிழற்றுங் குயிலே கூவாய். குயிலே இன்பந்தருவான் என நான்கடிக்கும் முடிபமைத்துப் பொருள் கூறுதலும் உண்டு. அளித்தூறும் என்பது 'அளிக்க ஊறு' மெனக் கொள்ளுதலும் உண்டு. சுவடு= கட்டு. பொன்னினாலும் மணியினாலும் அமைத்த உருவத்தையே 'சுவடு' என்றார். பொன், மேனிக்கும்; மணி, அங்கங்களுக்கும் உவமையாதல் காண்க. மணி ஒத்த சுவடெனக் கொண்டு மணிபோன்ற தழும்பு அல்லது புள்ளியையுடைய நற்பரி என்பாரும் உளர். ஏழுலகம் என்பது தோன்றிய எல்லா உலகத்தையும் குறிக்கும். 7. உன்னை யுகப்பன் குயிலே யுன்றுணைத் தோழியு மாவன் பொன்னை யழித்தநன் மேனிப் புகழிற் றிகழு மழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய் உன்னை உகப்பன்; குயிலே ! உன் துணைத் தோழியும் ஆவன்; பொன்னை அழித்த நல் மேனிப் புகழில் திகழும் அழகன் மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய தென்னவன், சேரலன், சோழன், சீர்ப்புயங்கன், வரக் கூவாய் ! unnai ukappan kuyilee unthuNai thooziyum aavan ponnai aziththa nanmeeni pukazil thikazum azakan mannan parimisai vantha vaLLal perunthuRai meeya thennavan seeralan soozan siirppuyangkan vara kuuvaay பொ-ரை; எம்பெருமானாகிய சிவன் உன்னை மிகவும் விரும்பி உனக்குத் துணையாய் ஒத்த தோழியாய் இருப்பான். பொன்னைப் பார்க்கிலும் சிறந்த ஒளி வீசும் திருமேனியை உடையவன். அவன் தனது புகழையே அழகான உருவாகக் கொண்டு பேரரசன் போன்று விளங்குகின்றான். எனக்காக குதிரைச் சேவகன் போன்று உடை தரித்துக் குதிரைமேல் ஏறிவந்து அருள்புரிந்த அருட்கொடையாளன். அவனே திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அரசு புரியும் தமிழகத்தைத் தனது சிறப்பிடமாகக் கொண்டவனும் அவனே. அவன் சிறந்த பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டு திகழ்கிறான். இத்தகைய பெருமானை என்னிடம் வரும்படி கூவி அழைப்பாயாக ! Ye Kuil, this Lord of ours will gladly accept you and will also be a helpful companion to you. This charming Lord with a glorious sacred physical frame that puts even gold into shade ,this monarch of a philanthropist that came riding a horse in southern Madurai, He that favours the shrine of Thirup-Perun-Thurai, Lord of the southern Paandiya Land, as also the Chera Land and the Chola Land, He that wears snakes as ornaments ! Ye Kuil, call out to Him in welcome tunes. கு-ரை: உகப்பன், ஆவன் என்பதை, இறைவனுக்கு ஏற்றிக் கூறுவதே பொருத்தம். அடிகளுக்கு ஏற்றிக் கூறுவாரும் உளர். அழித்த= ஒளி மழுங்கச் செய்த, மூவேந்தரைக் கூறின இடத்துப் பல்லவரைக் கூறாமை காண்க. இதிலிருந்து அடிகள் பல்லவர் காலத்திற்கு முற்பட்டவர் என்பதை அறிக. மன்னன் என்பதை 'மேய' என்பதனோடு இணைத்தலும் உண்டு. புயங்கமென்பது பாம்பைக் குறித்தலின், பாம்பின் ஆட்டம் போன்றதொரு கூத்தாக அது இருத்தல் கூடும். புயங்கம் என்பதற்குப் பாம்பு என்றே பொருள் கொண்டு பாம்பினை அணியாக அணிந்தவன் என்று பொருள் கொள்வோருமுண்டு. 8. வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் றேடி யோவியவ ருன்னி நிற்ப வொண்டழல் விண்பிளந் தோங்கி மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் றாவி வரும்பரிப் பாகன் றாழ்சடை யோன்வரக் கூவாய். வா, இங்கே, நீ, குயில்-பிள்ளாய் ! மாலொடு நான்முகன் தேடி ஓவி, அவர் உன்னி நிற்ப, ஒண்தழல் விண் பிளந்து ஓங்கி மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்; தாவிவரும் பரிப்பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய் ! vaa ingkee nii kuyilpiLLaay maalodu naanmukan theedi ovi avar unni niRpa oNthazal viNpiLanthu oongki meevi anRu aNdam kadanthu virisudaraay ninRa meyyan thaavi varum parippaakan thaaz sadaiyoon vara kuuvaay பொ-ரை: குயிற்பிள்ளையே! நீ என்னருகில் வந்து நான் சொல்லும் மறைப் பொருளைக் கேட்பாயாக. பண்டைக் காலத்தில் திருமாலும் பிரமனும் தாம்தான் பரம்பொருள் என்று வாதாடி நின்றனர். அப்பொழுது எங்கள் சிவபெருமான் ஒளிமிக்க அனற்பிழம்பாய் ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து பொருந்தி விண்ணுலகங்களைத் தாண்டி, பரந்த சுடர்களை விட்டுக்கொண்டு உண்மைப் பொருளாய் அவர்கள் முன் நின்றான். சிவன் அவ்விருவரையும் நோக்கி "எனது அடியையும் முடியையும் காண முயலுங்கள். அதன்பின் யார் பரம்பொருள் என்று முடிவு செய்யலாம்" என்று கூறினார். திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி, பல்லாண்டுகள் உழன்றும் காணமாட்டாது களைத்து, தங்கள் ஆணவம் ஒடுங்கப் பெற்றனர். இந்நிலையில் சிவபெருமான் அனற்பிழம்பாய் நின்ற காட்சி நீங்கி, சிவ லிங்க உருவில் இருவருக்கும் காட்சி தந்து அருளினார். இருவரும் தம் பதைப்பு ஒடுங்கி, சிவபெருமானே பரம்பொருள் என்று உணர்ந்து வழிபட்டனர். அப்பேர்ப்பட்டவன் எனக்காக தாவிப்பாய்ந்து வருகின்ற குதிரை மீது ஏறி, குதிரைப்பாகனாயும் வந்தான். அவன் நீண்ட சடையை உடையவனாகவும் இருக்கின்றான். இத்தகைய எம்பெருமானை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக ! Ye, young Kuil, come over here and listen. When in the days of yore, Thirumaal and Brahma went in search of the Lord, and unable to find Him, gave up the effort in sheer exasperation and worshipped Him; our Lord of eternal frame chose to reveal Himself as an expanding flame of grace, piercing through the skies above, going beyond the myriad galaxies of celestial bodies, such is He, He that came over to Madurai in the garb of a cavalry chief, leading a Group of fleet-footed steeds! He, of long matted locks! Call out to Him in welcome tunes, Oh Kuil ! கு-ரை: 'பிள்ளாய்' என்பது குஞ்சினைக் குறிக்கும். மால் அடியையும், நான்முகன் முடியையும் தேடினமையால் 'ஒடு' என்று உருபு கொடுத்துப் பிரித்தார். மூன்றாம் அடியில் 'அன்று' என்பது பண்டைக் காலத்தைக் குறிக்கும். அதை 'மாலொடு' என்பதற்கு முன் அமைக்க. ஓவி - ஒழிந்து, நீங்கி. 'மேவி' என்பதைச் சுடராய் என்பதற்குப் பின் அமைக்க. மேவி = மேற்பட்டுப் பறந்து. 9. காருடைப் பொன்றிகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே சீருடைச் செங்கம லத்திற் றிகழுரு வாகிய செல்வன் பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாச மறுத்தெனை யாண்ட வாருடை யம்பொனின் மேனி யமுதினை நீவரக் கூவாய். கார் உடைப் பொன் திகழ் மேனிக் கடி பொழில் வாழும், குயிலே ! சீர் உடைச் செம்-கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன் ; பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து, எனை ஆண்ட ஆர் உடை அம்பொனின் மேனி அமுதினை, நீ, வரக் கூவாய் ! kaar udai ponthikaz meeni kadi pozil vaazum kuyilee siir udai seng kamalaththil thikaz uru aakiya selvan paaridai paathangkaL kaaddi paasam aRuththu enai aaNda aar udai amponin meeni amuthinai nii vara kuuvaay. பொ-ரை: மணம் நிறைந்த சோலையில் வாழ்கின்ற குயிலே ! கரிய நிறமுடைய ஆனால் பொன்னைப் போன்று ஒளி விளங்கும் உடம்பை உடையாய் ! நான் கூறுவதைக் கேள் . சிறப்புடைய செந்தாமரை போன்று விளங்கும் செம்மேனி கொண்ட முதல்வன் எம் சிவபெருமான். அவன் இந்நிலவுலகில் தனது திருவடிகளை எனக்குக் காட்டி, எனது பற்றுக்களை ஒழித்து, என்னை ஆட்கொண்டருளினான். அவன் ஆத்தி மலரால் ஆன மாலையை அணிந்துள்ளான். பொன்போன்ற திருமேனி உடையவன். அவன் சாவா மருந்தாகிய அமுதத்திற்கு ஒப்பானவன். அவனை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக ! Ye Kuil, of black and lovely physique, gleaming with gold, and dwelling in fragrant groves! Call out, welcoming this ambrosia-like Lord, who took me under Him, cutting off all my earthly bondage. He of wealth so rare shining in form much like the celebrated red lotus ! He that came down to the earth and revealed His Feet unto me! கு-ரை: கார்= கருமை. பொன் - அழகு, ஒளியைக் குறிக்கும். கடி = மணம். பாசம் = கட்டு மலம். ஆர்= ஆத்தி. 'பொனின்' என்பதில் 'இன்' சாரியை. காருடைப் பொன் என்பதற்குக் கரும் பொன் என்ற பொருள் கொள்வோரும் உளர். கரும் பொன் = இரும்பு. 10. கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேணீ யந்தண னாகிவந் திங்கே யழகிய சேவடி காட்டி யெந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண் டருளுஞ் செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய் கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ ; அந்தணன் ஆகி வந்து இங்கே, அழகிய சேவடி காட்டி, ' எம் தமர் ஆம் இவன்' என்று, இங்கு, என்னையும் ஆட்கொண்டருளும் செம்-தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய் ! konthu aNavum pozil soolai kuung kuyilee ithu keeL nii anthaNan aaki vanthu ingkee azakiya seevadi kaaddi emthamar aam ivan enRu ingku ennaiyum aadkoNdaruLum senthazal pool thirumeeni theevarpiraan vara kuuvaay. பொ-ரை: பூங்கொத்துகள் நிரம்பிய பெருஞ்சோலையில் தங்கிக் கூவும் குயிலே ! இதை நீ கேட்பாயாக!. இவ்வுலகில் வேதியனாக எழுந்தருளி வந்து, அழகிய தன் செம்மையான பொற்பாதங்களைக் காட்டியவன் சிவபெருமான். "எம் உறவினருள் ஒருவன் இவன்" என்று என்னை யாவரும் கருதும் வண்ணம் இந்நிலவுலகில் தகுதியற்ற என்னையும் அடிமை கொண்டு அருளினான். அனல் போல் சிவந்த திருமேனியுடைய விண்ணவர் தலைவனாகிய எம்பெருமானை என்னிடம் வரும்படி நீ அழைப்பாயாக ! Listen, Ye Kuil that blithely sings forth from amidst luscious groves of flower buds! Call out welcoming the Lord of the devas, the Lord with an impressive frame of flaming red, who came over here in the form of a noble ascetic and showed me His blissful Feet, and took me in servitude, saying that I, too, am one among His devotees. கு-ரை: 'கொத்து' என்பது 'கொந்'தென மெலிந்தது. 'கூவு'மென்பது 'கூம்'எனக் குறுகிற்று. தமர்=தமருள். தில்லையில் வீடருளுங் குறிப்பு இதன்கண் காண்க. THIRUCHCHITRAMBALAM 19. திருத்தசாங்கம் 19. THIRUTH-THASAANGAM (அடிமை கொண்ட முறைமை ) A Tenfold Exhortation தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Briefing a Parrot on the Inimitable Glories of Lord Civa நேரிசை வெண்பா Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் தசாங்கம் - அரசர்க்கு உரிய பத்து உறுப்புக்கள், அவை, மேலே தி-8, கீர்த்தித் திருஅகவலில் (அடி, 103 - 124) கூறப்பட்டன. அங்கு அடிகள் அவற்றை இறைவனது சிறப்புக்கள் பலவற்றிடையே தம் கூற்றாக அருளிச் செய்தார். இங்கு, அவற்றைத் தலைவி கூற்றாகத் தனியே எடுத்து அருளிச் செய்கின்றார். இதனாலே, கிள்ளை விடு தூது முதலிய தூதுப்பிரபந்தங்களில் இங்ஙனம் தசாங்கம் கூறுதலும் முறைமை ஆயிற்று. இது, மேலே, 'குயிற்பத்து' என்ற போலக் ' கிளிப்பத்து' எனப் பெயர்பெறுதலே தக்கதாயினும், நுதலிய பொருளின் சிறப்புப் பற்றித் 'தசாங்கம்' எனப் பெயர் பெற்றது. இறைவனுடைய தசாங்கமாகலின், 'திரு' என்னும் அடை புணர்க்கப்பட்டது. இதனை ஈண்டு வைத்துக் கோத்தமைக்குக் காரணம், மேலே குயிற்பத்தின்கண்ணே சொல்லப்பட்டது. இதுவும் தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது. தசாங்கம், நாட்டை ஆளும் அரசர்க்கு உரியவையாகலானும், மேலே கீர்த்தித் திருவகவலில் தசாங்கம் கூறுமிடத்து அடிகளே, 'எந்தமை ஆண்ட பரிசது பகரில்' என்று அருளிச் செய்தமையானும், இதற்கு, 'அடிமை கொண்ட முறைமை' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, முழுவதும் நேரிசை வெண்பாக்களால் ஆயது. This decad is set in venba metre, a rather difficult form of versification to handle,as there are strict grammatical restrictions governing the venba. In each of these stanzas, the Saint addresses a parrot, recounting the many valiant features of the Lord, for its benefit. "Dasaangam" literally means the ten insignia of Lord Civan. They are name,city, country, river, mountain, mount, implement, drum, garland and banner. Though addressed to a parrot, these exhortations are evidently intended for the enlightenment of the ordinary human souls that stand bewildered by the prevailing extent of theological obduracy and regimentation in this world. As in other decads, like those on the koel bird and honeybees, this is an interaction with different forms of living genera that abound in the neighbourhood. Such appeal to creatures that cannot understand human speech, is a common feature in many literary works (vide meghadoot 'cloud as messenger') and many others-offering deep insight into the imponderable characteristics of the supreme Lord. The contents of each stanza are in two parts - the first one in the form of a question and the second providing the answer (much as in Tiruch-Chaazhal - Decad 12). 9.1. ஏராரி ளங்கிளியே யெங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமந் தேர்ந்துரையா - யாரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோ லெம்பெருமான் றேவர் பிரானென்று ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன் , செம் பெருமான், வெள்-மலரான், பால்-கடலான், செப்புவ போல் 'எம் பெருமான், தேவர் பிரான்', என்று eer aar iLangkiLiyee engkaL perunthuRai koon siir aar thirunaamam theernthu uraiyaay - aaruuran semperumaan veNmalaraan paaRkadalaan seppuvapool emperumaan theevar piraan enRu பொ-ரை: அழகு பொருந்திய இளங்கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய்மையான தாமரை மேலிருக்கும் பிரமன் பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் ஆகியோர் "எங்கள் தலைவனே! விண்ணவர் தலைவனே” என்று வியந்து கூறுவார்கள். அதுபோன்று நீ பெருந்துறைக் கோமானது திருநாமங்கள் பலவற்றையும் ஆராய்ந்து "ஆரூரன்", "செம்பெருமான்", "எம்பெருமான்", "தேவர்பிரான்" என்றெல்லாம் உரைப்பாயாக, She: Oh handsome young parrot! think well and tell me the sacred name of our Lord of Perunthurai. Parrot: Brahma who is seated in white lotus flower calls Him as Aarooran while Thirumaal who is resting in the ocean of milk bids Him as Ruddy Lord (Chemperumaan). In the same vein, you call Him "Our Lord and Chief Lord of Devas". கு-ரை: தேர்ந்து= தெளிந்து, அறிந்து, ஆரூரன் = திருவாரூரில் உறைவோன், திருவாரூர் இதயத்திற்கு அறிகுறியாதலின், உள்ளத்து வள்ளலென்ற பொருளுங் கொள்ளப்படும். செம்பெருமான்=சிவபெருமான். செம்மை என்ற சொல், நேர்மை, நன்மை, மங்கலம் என்ற பொருள்களை உணர்த்தும். அயனுக்கும் அரிக்கும் இறைவன் முதல்வனாதலின், எங்கள் தலைவனே! விண்ணவர் தலைவனே ! என்று அவர்கள் விளிப்பர் போலும். 'செப்புவ' என்பது செப்புவது என்பதன் கடைக் குறையாகவுங் கொள்ளலாம். 2. ஏதமிலா வின்சொன் மரகதமே யேழ்பொழிற்கு நாதனமை யாளுடையா னாடுரையாய்- காதலவர்க் கன்பாண்டு மீளா வருள்புரிவானா டென்றுந் தென்பாண்டி நாடே தெளி ஏதம் இலா இன்சொல் மரகதமே! ஏழ்பொழிற்கும் நாதன், நமை ஆளுடையான் நாடு உரையாய் - காதலவர்க்கு அன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு, என்றும் தென் பாண்டி நாடே தெளி eetham ilaa insol marakathamee eezpoziRkum naathan namai aaLudaiyaan naadu uraiyaay - kaathalavarkku anpu aaNdu miiLaa aruLpurivaan naadu enRum thenpaaNdi naadee theLi பொ-ரை: குற்றமில்லா இனிய மொழி பேசும் மரகதம் போன்ற பச்சைக் கிளியே ! ஏழுலகுக்கும் தலைவனாய் நம்மை அடிமை கொண்ட பெருமானது நாட்டைச் சொல்லுவாயாக. அன்பர்கள்பால் அவர்கள் அன்பினை ஏற்று அவர் மீண்டும் பிறவிக்கு வராதபடி திருவருள் செய்வானது திரு நாடு, எக்காலத்தும் தெற்கேயுள்ள பாண்டிய நாடென்று அறிவாயாக ! She: Oh emerald-like parrot of sweet and flawless speech! Would you tell me which is the land of the Chief of the seven worlds, who has taken us in servitude? Parrot: Know thou clearly that the southern Paandiyan land is verily the land of Him who bestows the benediction of 'No Return back to the earth' and showers His kind grace on His true devotees. கு-ரை: மரகதம்= பச்சைமணி, பொழில்= உலகம். 'அன்பு ஆண்டு' என்பதற்கு 'அன்பினால் ஆட்கொண்டு' என்று கூறுதலுமுண்டு. 'மீளா அருள்' என்பதற்கு மீளாமைக்கு ஏதுவாகிய அருட்பேறு என்று பொருள் கொள்ளலாம். தெளி = அறி. உலகம் உள்ள காலமெல்லாம், சிவநெறி விளங்குதற்குரிய நாடென்ற கருத்துப் பற்றி, 'என்றும்', என அருளினர் போலும். 'என்றும்' என்பதை 'அருள் புரிவன்' என்பதோடுஞ் சேர்க்கலாம். 3. தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளு மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் -கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடு முத்தர கோசமங்கை யூர். தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும் மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? - கோதாட்டிப் பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும் உத்தர கோசமங்கை ஊர் thaathu aadu puunjsoolai thaththaay namai aaLum maathu aadum paakaththan vaazpathien - koothaaddi paththar ellaam paarmeel sivapuram pool koNdaadum uththara koosamangkai uur பொ-ரை: மகரந்தம் நிலவுகின்ற அழகிய பொழிலின்கணுள்ள கிளியே! நம்மை ஆட்கொண்டருளும் மங்கை சேர் பங்கினன் உறைகின்ற திருப்பதி யாது எனில், அது அன்பர்களெல்லாம் நிலவுலக சிவலோகமெனப் பாராட்டிச் சிறப்பாகப் போற்றும் திரு உத்தர கோச மங்கைப் பதி என்று சொல்லுவாயாக. She : Oh parrot! of pollen-filled flowery groves! Which is the city of Him with his consort as One Half of His frame, who takes us vassal under Him? Parrot : It is verily Thiru-Uththara-Kosa-Mangai, celebrated as Civapuram of the earth by all devotees who lovingly extol the virtues of the holy shrine. கு-ரை: கோதாட்டுதல்= பாராட்டுதல். அன்பர்க்கு ஞானம் உதவினமை, அப்பதிச் சிறப்பாகும். 4. செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசே ரையன் பெருந்துறையா னாறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியு மானந்தங் காணுடையா னாறு செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ ! நம் சிந்தை சேர் ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் - தையலாய் ! வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் ஆனந்தம் காண், உடையான் ஆறு. seyya vaayp painjsiRakin selvii nam sinthaiseer aiyan perunthuRaiyaan aaRu uraiyaay - thaiyalaay vaan vantha sinthai malangkazuva vanthiziyum aanantham kaaN udaiyaan aaRu. பொ-ரை: சிவந்த வாயும், பசிய சிறகினையும் உடைய அழகீ! நமது உள்ளத்தே அமர்ந்த அப்பனாகிய திருப்பெருந்துறை உடையானது ஆற்றினைப் புகழ்ந்துரைப்பாயாக ! மனத்திலே குடிபுகுந்த ஆணவம் முதலாக உள்ள மும்மலங்களையும் கழுவுவதற்காக வந்து சேரும் மேன்மை பொருந்திய 'ஆனந்த வெள்ளமாகிய பேரின்பமே' நம்முடைய பெருமானின் ஆறு ஆகும் என்று உரைப்பாயாக. She: Eh bounteous parrot of red beak and green feathers! Tell me which is the river of the Lord of Perunthurai, our Lord that merges into our hearts. Parrot: Oh maid! His river is verily the bliss that flows down from the skies, in order to cleanse the soul of all afflictions. கு-ரை: 'வாய்' என்பது மூக்கினையுமுளப்படுத்தும். 'செல்வீ' என்பது அருமைச் சொல். 'ஐயன்' என்பதற்குத் தலைவனென்றும் பொருள் கொள்ளலாம். 'மலங்கழுவ, வான் வந்த சிந்தை' என மாற்றுக. 'வான் வந்த' என்பதற்குப் 'பெருமை பொருந்திய' என்பதும் உண்டு. 'இழியும்' என்பதற்கு 'மேல் நின்று இறங்கும்' என்னலுமுண்டு. 5. கிஞ்சு கவா யஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவு மலைபகராய் - நெஞ்சத் திருளகல வாள்வீசி யின்பமரு முத்தி யருளுமலை யென்பதுகா ணாய்ந்து கிஞ்சுக வாய் அம்-சுகமே! கேடுஇல் பெருந்துறைக் கோன் மஞ்சன் மருவு மலை பகராய் - நெஞ்சத்து இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி அருளும் மலை என்பது காண், ஆய்ந்து kinjsuka vaay anjsukamee keedil perunthuRaikkoon manjsan maruvum malaipakaraay- nenjsaththu iruL akala vaaL viisi inpu amarum muththi aruLum malai enpathu kaaN aaynthu. பொ-ரை: முருக்கம் பூப்போலச் சிவந்த மூக்குடைய அழகிய கிளியே! கெடுதியற்ற, திருப்பெருந்துறை மன்னனும் அழகனும் ஆகிய சிவபெருமானது மலையைப் புகல்வாயாக ! நமது மனத்திலே உள்ள அஞ்ஞானமாகிய இருள் நீங்கும்படி ஞானமாகிய ஒளியை வீசிப் பேரின்பம் நிலைத்திருக்கும் வீடுபேற்றினை அளிக்கின்ற அவனது பேரருள் தான் அவனது மலை என்று ஆராய்ந்து சொல்லுவாயாக. She: Oh beautiful parrot with red beak like the hue holly leaved berberry flower! won't you name the mountain where abides the flawless Lord of the eternal Perunthurai shrine? Parrot: Know thou, upon due analysis, that the mountain is indeed that which bestows blissful salvation, throwing light on the mind and dispelling the darkness ignorance, which can be only Kailaash. கு-ரை: சுகம் = கிளி. மஞ்சன் = அழகன் . 'என்பது ஆய்ந்து பகராய்', என முடிபு கோடலுமுண்டு. 'அருளிய பெருமை அருள் மலை' என்று கீர்த்தித் திருவகவலிற் கூறியவாறு. 'அருளுமலை' என்பதை அருளுதற்கு இடமாகிய மலையைக் கயிலை என்றும் மகேந்திரம் என்றும் பொருள் கொள்ளலாம். 6. இப்பாடே வந்தியம்பு கூடுபுக லென்கிளியே யொப்பாடாச் சீருடையா னூர்வதென்னே - எப்போதுந் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரு மகிழ்ந்து . இப்பாடே வந்து, இயம்பு: கூடு புகல் என்? கிளியே ! ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? - எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய்த், தெய்வப்பெண், ஏத்து இசைப்ப, வான் புரவி ஊரும், மகிழ்ந்து. ippaadee vanthiyampu kuudu pukal en kiLiyee oppu aadaa siir udaiyaan uurvathu ennee - eppoothum theenpuraiyunj sinthaiyaraay theyvappeN eeththisaippa vaanpuravi uurum makiznthu பொ-ரை: எனது கிளியே! கூட்டில் புகாதே ! இவ்விடத்தே வந்து ஒப்பற்ற சிறப்புடையான் ஏறி வருகின்ற வாகனம் யாதென்று கேட்டுத் தெளிக. அறிவொளியுடைய நங்கையர் எப்போதும் தேன் போலும் இனிய உள்ளத்தினராய் வாழ்த்துப்பாடி வர, சிவபெருமான் மகிழ்ச்சியோடு வேதமாகிய குதிரைமீது ஏறி வருவான் என்பதைப் புரிந்து கொண்டு அவ்வாறு சொல்லுவாயாக. She: Oh my parrot! come hither over to me, do not enter thy cage. Please tell me which is the mount used by the Lord of unparalleled bounty to move about? Parrot: Know thou that He rides merrily upon the courser (strong swift horse) of the sky, along with heavenly maids singing His glories with hearts ever sweet as honey. கு-ரை: புகல்= புகாதே. ஒப்பு ஆடா = ஒப்பு இசையாத. தெய்வம்= ஒளித்தன்மை. புரையும் = போலும். ஏத்து = வாழ்த்து. வான் என்பது சுத்த மாயை என்றும் சிதாகாயம் என்றும் இருதிறமாகக் கூறுவர். 7. கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகரா - யேற்றா ரழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை. கோல் தேன் மொழிக் கிள்ளாய் ! கோது இல் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகராய் - ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும் கழுக்கடை காண், கைக்கொள் படை kooRReen mozikkiLLaay koothu il perunthuRaikoon maaRRaarai vellum padaipakaraay - eeRRaar azukku adaiyaa nenjsu uruka mummalangkaL paayum kazukkadai kaaN kaikkoL padai. பொ-ரை: கொம்புத் தேன் போல இனிய சொல்லுரைக்கும் கிளியே ! குற்றமற்ற திருப்பெருந்துறை மன்னனாகிய சிவபெருமான், தன் கையில் கொண்டுள்ள ஆயுதம் யாதென்று தெரிந்து கொள். தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்யடியார்களை எவ்விதமான மலமும் வாதிக்காதபடியும், அவர்கள் மனமுருகி மகிழ்ந்திருக்கும் படியும் அவர்களுடைய ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்கள் மீது பாய்ந்து ஒழிக்கின்ற சூலமே அவனது திருக்கரத்தில் கொண்டுள்ள பகைவரை வெல்லும் ஆயுதம் ஆகும். இதனை அறிந்து சொல்லுவாயாக. She: Oh parrot of voice sweet as choice honey from the honey-combs in boughs! won't you tell me of the implement that the Lord of the flawless Perunthurai shrine wields in quelling recalcitrant adversaries? Parrot: Hark! The trident in His Hand is verily the implement that charges on the threefold afflictions (the three 'malas' - Ego, Deeds and Illusions), melting heart of pure devotees who appeal for help. கு-ரை: கோல் = கொம்பு. மாற்றார்= பகைவர். ஏற்றார்= இரந்து அருள் பெற்றார். 8. இன்பான் மொழிக்கிள்ளா யெங்கள் பெருந்துறைக்கோன் முன்பான் முழங்கு முரசியம்பா - யன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை இன் பால்மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் - அன்பால் பிறவிப் பகை கலங்கப் பேரின்பத்து ஓங்கும், பரு மிக்க நாதப் பறை inpaal mozi kiLLaay engkaL perunthuRaikoon munpaal muzangkum murasu iyampaay -anpaal piRavi pakaikalangka peerinpaththu oongkum parumikka naatha paRai பொ-ரை: இனிய பால் போலும் சொல்லுடைய கிளியே! நமது திருப்பெருந்துறையுறைப் பெருமான் திருமுன்னே ஒலிக்கும் முரசு யாதென்று தெரிந்து கொள். அது யாதெனில் சிவனருளால் பிறவி என்னும் பகைப் பொருள் கலங்கி ஒழியும்படி பேரின்பமயமான சுத்த தத்துவத்தே ஒலிக்கும் விரிவு மிகுந்த மூல நாதமாகிய பறை என்பதைத் தெரிந்து கொண்டு அதனைப் புகழ்ந்து உரைப்பாயாக. She: Eh parrot of sweet milk-like speech! Which is the drum that booms in front of our Lord of Perunthurai? Parrot: This indeed is the venerable gross small drum that tapers in the middle (shape of hour glass) – a percussion instrument that booms in order to destroy the enemy of future births, ushering in the supreme bliss of eternity. கு-ரை: 'இன்பால்' என்பதில், 'இன்' என்பது பாலின் இயற்கை இனிமை உணர்த்துவது . முன்பால்= முன்பக்கம் . 'அன்பால்' என்பது இறைவனது அன்பை உணர்த்தும். அது அருளேயாகும். சுத்த தத்துவங்கள் அபர முத்தித்தானமாய் இன்பம் பயத்தலின், 'பேரின்பத்தோங்கும்' என்றார் . பரு=பருமை. விரிவு = வியாபகம். இந்நாதத்தைச் சூக்குமை வாக்கென்ப. பறை முழக்கத்தாற் பகைவர் மனங் கலங்குவராதலின், 'பிறவிப் பகை கலங்க' என்றார். 9. ஆய மொழிக்கிள்ளா யள்ளூறு மன்பர்பான் மேய பெருந்துறையான் மெய்த்தாரென்- றீயவினை நாளுமணு காவண்ண நாயேனை யாளுடையான் றாளியறு காமுவந்த தார். ஆய மொழிக்கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தார் என்? - தீயவினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளி அறுகு ஆம், உவந்த தார். aaya mozikkiLLaay aLLuuRum anparpaal meeya perunthuRaiyaan meyththaar en - thiiyavinai naaLum aNukaavaNNam naayeenai aaLudaiyaan thaaLi aRukaam uvantha thaar பொ-ரை: ஆராய்ந்து பேசும் அறிவுடைய கிளியே! எலும்பும் உருகும் வண்ணம் அன்பு செய்யும் மெய்யன்பர்களிடத்தில் விரும்பி அமர்ந்திருப்பவன் எங்கள் திருப்பெருந்துறைச் சிவபெருமான். அவன் தன் திருமேனிமீது அணிந்துள்ள மாலை யாது என்று கேட்பாயானால் யான் சொல்லுகிறேன் கேள். நாய் போன்றவனாகிய என்னைக் கொடிய தீவினைப் பயன்கள் அடையாதபடி நாள்தோறும் ஆட்கொண்டு அருளுபவன் விரும்புகின்ற மாலை 'கொடி அறுகு' மாலை என்பதைத் தெரிந்து கொண்டு அதனைப் புகழ்ந்து பேசுவோமாக. She: Oh parrot of considered speech! Which indeed is the true garland of our Lord of Perunthurai, who goes out to devotees that deeply long for Him? Parrot: He who owns me this worthless cur, and daily wards off my evil deeds, wears the garland woven out of 'Kusa' grass (Thaazhi Arugu). கு-ரை: 'ஆய' என்பதில், ஆய், முதனிலைத் தொழிற்பெயர். தாளி= கொடி. அள்ளூறல் = மிகுதியாக அமுதம் ஊறுதல். அது மிகுந்த உருக்கத்தால் ஆவதாகலின், என்புருகுதல் எனப் பொருள் கொள்ளுவர். 10. சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவு மேதிலார் துண்ணென்ன மேல்விளங்கி யேர் காட்டுங் கோதிலா வேறாங் கொடி சோலைப் பசும் கிளியே ! தூ நீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியும் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண் என்ன மேல் விளங்கி ஏர்காட்டும் கோது இலா ஏறு ஆம் கொடி soolai pasungkiLiyee thuuniir perunthuRaikkoon koolam poliyum kodikuuRaay - saalavum eethilaar thuN enna meelviLangki eerkaaddum koothilaa eeRu aam kodi பொ-ரை: பொழில்களில் உறையும் பசிய நிறக் கிளியே! பரிசுத்தமான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் பெருமானது அழகு விளங்கும் கொடியைப் புகழ்வாயாக ! அது யாதெனில் பகைவர் மிகுதியும் திடுக்கிட்டு அஞ்சும்படி, உயர்வாகத் தோன்றி அழகு காட்டுகின்ற, குற்றமற்ற காளை வடிவம் எழுதப்பட்டு உளதாகிய கொடியே ! She: Oh splendid parrot abiding in groves! Tell me which is His banner that shines bright and fair - the banner of the Lord of pure water Perunthurai? Parrot: This banner is that of the flawless Bull - fanning light in streamers high, greatly feared by adversaries. Note: The answer given in each stanza, portrays the Lord in His multifarious aspects, revealed to humanity for the benefit of all. The correlation between the gross external manifestation and the subtle message conveyed symbolically thereby, calls for an 'in- depth study, probing the theological significance of the known aspects of the Lord. கு-ரை: சோலையில் வளமுற வாழ்தல், கிளிக்குப் பெருமை . கூட்டில் வாழ் கிளி, சோலைக் கிளியாகாது. 'தூநீர்' என்பதற்குத் 'தூயதன்மை' எனப் பொருள் கொண்டு, 'கோன்' என்பதோடு இணக்குதலுமாம். ஏதிலார் = பகைவர், ஏறாம்= ஏறு ஆம், ஏறு= காளை வடிவு, ஏறு, அறத்திற்கு அறிகுறியாம். THIRUCHCHITRAMBALAM 20. திருப்பள்ளி எழுச்சி 20. THIRUP-PALLI-EZHUCHCHI (திரோதானசுத்தி ) The Wakeup Call திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Composed whilst in Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பள்ளி எழுச்சி - படுக்கையினின்றும் எழுதல். எழுச்சியை விளக்கும் பாடலை , எழுச்சி என்றது ஆகுபெயர். துயிலும் அரசரை அவர் எழுதற்குரிய காலமாகிய வைகறைக்கண் சென்று 'சூதர்' எனப்படும், நின்றேத்துந் தொழிலவர் அவரைப் புகழ்ந்துகூறி எழுப்புவது மரபு. அவர் கூற்றாகப் பாடாண் திணைப்பாட்டு, புலவரால் பாடப்படும் என்பதும், அங்ஙனம் பாடப்படும் அத்துறை, அத்திணையுள், 'துயிலெடை நிலை' எனப்படும் என்பதும், "தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்" (தொல். பொருள், 88) என்பதனால் அறியப்படும். மக்கட் பாடாண் பகுதியாக வரும் அதனை அடிகள் இங்கு கடவுட் பாடாண் பகுதியாக அருளிச் செய்தார் என்க. இங்கு சூதர் நிலையில் நிற்பார் அடியவர்களே. இவ்வாற்றால் இது, வைகறைப் பொழுதில் எந்தையார் திருநாமமாகிய ' நமச்சிவாய' (தி.6, ப.93 பா.10) என்பதனைச் சொல்லி விழித்தெழுவார், பின்னர் ஒருதலையாக ஓதும் திருமுறையாயிற்று. உறக்கமும், விழிப்பும் இல்லாது எஞ்ஞான்றும் ஒருநிலையேயுடைய இறைவனை இங்ஙனம் உறக்கத்தில் ஆழ்ந்து கண்விழியாதான் போல வைத்து பாடுதல் குற்றமாகாதோ எனின், ஆகாது; என்னையெனின், உலகத்துத் தலைவராயினார்க்கு அவர் தம் தொண்டர் செய்யும் பணிவிடைகளை எல்லாம், இறைவற்குத் தொண்டராயினார், தாம் அவனிடத்துச் செய்து மகிழ விரும்பும் வேட்கை காரணமாகப் பாடுதலானும், அவர்தம் வேட்கை உணர்ந்து இறைவனும் அவர்தம் செய்கைக்கு உடம்பட்டு அருளுதலானும் என்க. இவ்வாறன்றி இதனைக் குற்றம் எனின், இறைவனைத் தூய்மையில்லாதான் போல வைத்து ஆனைந்தும், நீரும், பிறவும் ஆட்டுவித்தலும், அழகில்லாதான் போல மாலை முதலியவற்றால் ஒப்பனை செய்வித்தலும், பசியுடையான்போல் உணவூட்டுதலும், பிறவும் எல்லாம் குற்றமாய் ஒழியும்; அஃதின்மையால், இத்திருப்பள்ளியெழுச்சியும் அன்னதேயாம் என்க. "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம் விரும்பும் உண்மை யாவது பூசனை " (தி.12. பெ.புரா. திருக்குறிப்பு 51) என உரைத்தருளினமையானும், பூசனையாவன இத்தொடக்கத்தன அன்றிப் பிறிதில்லையாகலானும், இவை - இறைவற்கு உவப்பாவனவல்லது குற்றமாகாது என விடுக்க. இவற்றைப் பூசனையென்னாது குற்றம் என்று இகழ்வோர், 'புறச்சமயிகள்' என்க. இதனானே, இஃதோர் வழிபாட்டு முறை பற்றிப் பாடியருளியதன்றி, உண்மையாகவே திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டருளிய பெருமான் பள்ளி கொண்டிருந்த காலத்து அடிகள் ஏனைய அடியாரோடும் உடன் சென்று நின்றவிடத்துப் பாடியதாகாமையும் அறிக. இனி, அகப்பாட்டுப் புறப்பாட்டுக்களிடை வேற்றுமை தெரிய மாட்டாமையால், 'இத்திருவாசகம் முழுவதும் அகப்பாட்டே' எனத் திரியக்கொண்டு, யாண்டும் தம் மனம் சென்றவாறே உரை கூறுவார், இதனை, “மேற்காட்டிய இலக்கணத்தை உடையது அன்று' எனவும் , இதுவும் 'தலைவனிடத்துக் காதலுடைய தலைவியும், அவள் தன் தோழியும் முதலாயினாரது கூற்றே' எனவும் கூறித் தம் கொள்கைக்கு மாறாவனவற்றையே தமக்கு மேற்கோளாக எடுத்துக் காட்டிப் பலபட உரைத்துப் போவர். அவற்றை எல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டப்புகின், மிக விரியும் என்க. திருக்கோத்தும்பி முதலாகத் திருத்தசாங்கம் ஈறாக மகளிர் கூற்றாக வந்த பலவற்றையும் முறைப்பட வைத்துக் கோத்து முடித்தமையின், 'சூதர்' என்னும் தொழிலவர் கூற்றாக வரும் இதனை இங்கு வைத்துக் கோத்தனர் என்க. துயிலெழுதல், அறியாமையின் நீங்கி அறிவு பெறுதலாதலின், இதற்கு, 'திரோதான சுத்தி' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இறைவனது சத்தி ஒன்றே, மலத்திற் கட்டுண்ட உயிர்களிடத்து அம்மலத்தின் ஆற்றலைத் தொழிற்படுத்தி அவைகளின் ஆற்றலை மறைப்பதாயும், இம்மறைத்தல் தொழிலால் மலத்தினது சத்தி வலுவிழந்து மெலியும் பக்குவகாலத்தில் உயிர்களின் அறிவை விளக்கும் சத்தியாயும் நிற்கும். அவ்விருநிலைகளுள், மறைக்கும் நிலையில் அது, திரோதான சத்தி எனப் பெயர்பெறும். மலத்தைச் செலுத்தி மறைப்பை உண்டாக்குதலால், இத்திரோதான சத்தியும், ஒருமலம் என்றும் சொல்லப்படும். அம்மறைப்பு நிலை நீங்குதலே, திரோதான மல நீக்கம். அந்நீக்கமே இங்கே 'திரோதான சுத்தி' என்றதன் பொருள் என்க. இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது. அடிகள் எங்கிருப்பினும் தம் பணியைத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட திருமேனியிடத்தே செய்யும் நினைவினராகலின், இதனுள் அவ்வாற்றானே, பலவிடத்தும் திருப்பெருந்துறை உறைதலையே ஓதியருளினார் என்றல் இழுக்கு ஆகாது. இது முழுதும் எண்சீரடி விருத்தத்தால் ஆயது. பள்ளியெழுச்சி பாடுதல், புறநீர்மை என்னும் திறத்தினால் என்பது மரபாகலின், இதனை ஓதுவார் அத்திறத்தானே ஓதுப. பள்ளியெழுச்சி புறநீர்மையால் பாடப்படும் என்பதனை, 'பாண்வாய் வண்டு நோதிறம் பாட' ( சிலப். அந்தி 75) என்பதில், நோதிறம் என்றதற்கு உரைக்கப்பட்ட உரைகளால் அறிக. இவ்வாற்றானே, இவை 'பண்ணத்தி' என்பதும் பெறப்படும். தாளத்தொடு கூட்டிப் பாடப்படாமையின், இவை இசைத் தமிழ் எனப்படாவாயின. In the cold wintry months of Maarghazhi (around December / January each year), it is customary for devotees of Lord Civa to wake-up in the early hours of dawn and gather in temples singing glories of the Lord and invoking His blessings. This wake-up call is sung with intense fervour as an appeal to the Almighty to resume conferring benediction on the congregation. This is symbolic of the light of wisdom dawning on the earthlings, even as the darkness of ignorance fades away. Devotees implore His indulgence and crave for His active intervention in alleviating the sufferings of mankind. 20.1. போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணை துணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருண் மலரு மெழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோஞ் சேற்றிதழ்க் கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யேற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய் யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. போற்றி ! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம்-கழற்கு இணை துணை மலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு, நின் திருவடி தொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! ஏற்று உயர் கொடி உடையாய் ! எனை உடையாய் ! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே ! pooRRi en vaaz muthal aakiya poruLee pularnthathu puungkazaRku iNaithuNai malarkoNdu eeRRinin thirumukaththu emakku aruL malarum ezil nakai koNdu nin thiruvadi thozukoom seeRRithaz kamalangkaL malarum thaN vayalsuuz thirupperunthuRai uRai sivaperumaanee eerRuyar kodi udaiyaay enai udaiyaay emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: சிறந்த இதழ்களை உடைய தாமரைகள் மலரும் குளிர்ந்த சேற்றுடை வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! உயர்ந்த நந்திக் கொடியினை உடையாய், என்னை உடையவனே! எனது வாழ்விற்கு மூலப்பொருளான எம்பெருமானே! பொழுது விடிந்தது. நீ எழுந்தருளினால் நாங்கள் நினது அழகிய இரு திருவடிகளுக்கு ஒத்த மலர்களை அவற்றின் மேல் தூவி உன் சந்நிதியில் நின்று நின் திருமுகத்தில் எழுகின்ற அருள்விளங்கும் அழகிய புன்சிரிப்பைப் பெற்று நின் திருவடிகளை வணங்குவோம். துயில் நீங்கித் திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக. Salutations to Thee, Oh Lord, that art the very cause of my existence. The day has dawned! And we pay obeisance to thy bejewelled Feet with sacred flowers so fair, noting Thy grace-filled holy face of beauteous smile. Oh Lord Civa of Thirup-Perun-Thurai, surrounded by cool fields where lotus flowers blossom in the mire! Oh Lord that hath taken us in servitude! Oh our Chief with a banner of a bull! Pray kindly arise and shower blessings on us. கு-ரை: ஏற்றுதல் = மலர் தூவுதல், 'சேற்று' என்பதை 'வயல்' என்பதோடு முடிக்க. 'பங்கயம்' என்ற வடசொல் சேற்றில் முளைப்பதெனப் பொருள்படும். ஏறு = காளை. புறவிருள் நீங்கக் கதிரவன் விரிதல் போல, அகவிருள் நீங்கத் திருமுகத்தே அருள்மலர்தல் கூறப்பட்டது. எழில்நகை, கதிரவன் கதிர்கள் போல்வது, பள்ளி = படுக்கை, துயில். 2. அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போ யகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரிய னெழவெழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந் திரணிரை யறுபத முரல்வன விவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யருணிதி தரவரு மானந்த மலையே அலைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே. அருணன், இந்திரன்-திசை அணுகினன்; இருள் போய் அகன்றது உதயம்; நின் மலர்த் திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம் கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே ! அலைகடலே ! பள்ளி எழுந்தருளாயே ! aruNan inthiran thisai aNukinan iruL pooy akanRathu uthayam nin malarththiru mukaththin karuNaiyin suuriyan ezaeza nayana kadimalar malara maRRu aNNal am kaNNaam thiraL nirai aRupatham muralvana ivai oor thirupperunthuRai uRai sivaperumaanee aruLnithi tharavarum aanantha malaiyee alaikadalee paLLi ezuntharuLaayee பொ-ரை: செங்கதிரோன் இந்திரன் திக்காகிய கீழ்த்திசை நெருங்கி விட்டான். இரவின் இருள் நீங்கி உதய ஒளி பரவிற்று. தாமரை போன்ற நினது திருமுகத்தின் அருளைப் போலக் கதிரவன் மேலே எழுந்து வருகிறான். நினது கண்கள் போன்றனவும் , வாசனையும் உள்ள தாமரை மலர்கள் விரியும்படி , அதன் பாங்கரில் திரளும் வரிசை வரிசையான வண்டுக் கூட்டங்கள் ஒலித்து ரீங்காரம் செய்கின்றன. இவற்றைக் கருதுக. திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய சிவபெருமானே! அருட்செல்வத்தைத் தர வருகின்ற இன்பமலையே! எல்லாப் பொருளும் அலைபோல் தோன்றி அடங்குதற்குரிய பெருங்கடலே! துயில் நீங்கி எழுந்தருளுக ! The sun has arisen in the east ! Darkness is dispelled. The effulgent grace of Thy sacred face so fair, rises up and up! The fragrant lotus blooms forth like the eyes of Thine,the Noble One full of mercy! The swarming six footed bees do hum their tunes! Oh Lord Civa of Thirup-Perun-Thurai, pray take note of these. Oh mountain of bliss that comes over to us to bestow the wealth of grace, pray, kindly arise and shower blessings on us. கு-ரை: 'அருணன்' என்பதைச் சூரியனது சாரதிக்கும் பெயராகக் கூறுவர். உதய காலத்தில் திருமுகத்திலே அருட் கதிரவன் விளங்கித் தோன்றத் தோன்ற, அன்பர்களது கண்களாகிய காவல் மலர்கள் மலரும்படியாக, என 'உதயநின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர ' என்பதற்குப் பொருள் கூறி, இத்தொடரைப், 'பள்ளி எழுந்தருளாயே ' என்பதோடு முடிப்பாரும் உளர். உதயம் = உதயவொளி. அகன்றது = பரவியது. தாமரைக்கு நயனத்தை ஒப்பிடுதல் உண்டு. கடி= வாசனை . ஓர்= அறிக. அறுபதம்= வண்டு, ஆறுகால் உடையது. நிரை= வரிசை. இறைவன் அலைகடல் போன்று இருப்பதைப் பட்டினத்தடிகள் திருவாக்கினால் அறிக. 3. கூவின பூங்குயில் கூவின கோழி குருகுக ளியம்பின வியம்பின சங்க மோவின தாரகை யொளியொளி யுதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரு மறிவரி யாயெமக் கெளியா யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. கூவின பூம் குயில்; கூவின கோழி ; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்குத் தேவ ! நல் செறி கழல் தாள்-இணை காட்டாய் ! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! யாவரும் அறிவு-அரியாய் ! எமக்கு எளியாய் ! எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே ! kuuvina puungkuyil kuuvina koozi kurukukaL iyampina iyampina sangkam oovina thaarakai oLi oLi uthayaththu oruppadu kinRathu viruppodu namakku theeva naR seRikazal thaaLiNai kaaddaay thirupperunthuRai uRai sivaperumaanee yaavarum aRivu ariyaay emakku eLiyaay emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: திருப்பெருந்துறையில் வீற்றிருக்குஞ் சிவபெருமானே, யாரும் அறிவதற்கு அரிதானவனே, கருணையால் அடியாராகிய எங்களுக்கு எளிதாக வந்தருள்பவனே! பொழுது புலர்வதை உணர்த்த அழகிய குயில்கள் கூவிவிட்டன. கோழிகளும் கூவின. பிற பறவை இனங்களும் ஒலித்து விட்டன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திர வெளிச்சங்கள் மறைந்தன. உதயத்தின் ஒளி நிலத்தின்கண் வந்து தோன்றுகிறது. கடவுளே, துயில் நீங்கி எங்கள்பால் விருப்பத்தோடு வீரக் கழல் செறிந்த பிறவி அறுக்கும் உனது நல்ல திருவடிகள் இரண்டையும் காட்டி அருள்வாயாக. Sweet voiced 'Kuil' birds have sung their tunes! Cocks have crowed ! All birds have chirped their numbers! Conch shells have blown! And the stars have lost their glimmer ! The brightening dawn avidly manifests itself before us! Lord, show us now Thy jewel-bedecked twin Feet. Oh! Lord Civa abiding at Thirup-Perun-Thurai ! you are ununderstandable by all others; yet you are easy of approach for us, Oh Chief, pray kindly arise and shower blessings on us . கு-ரை: குருகு = பறவை. தாரகை = விண்மீன். நல்தாள்= பிறவியறுத்து வீடளிக்கும் நன்மையுடைய தாள். ஒருப்படுகின்றது =தோற்றுகின்றது. 'விருப்பொடு நமக்கு' என்பதற்கு நமக்கு விருப்பம் உண்டாகுமாறு எனப்பொருள் கொண்டு 'ஒருப்படுகின்றது' என்பதனோடு முடிப்பதும் உண்டு. 4. இன்னிசை வீணைய ரியாழின ரொருபா லிருக்கொடு தோத்திர மியம்பின ரொருபாற் றுன்னிய பிணைமலர்க் கையின ரொருபாற் றொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபாற் சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபாற் றிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யென்னையு மாண்டுகொண் டின்னருள் புரியு மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர், துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே ! innisai viiNaiyar yaazinar orupaal irukkodu thooththiram iyampinar orupaal thunniya piNaimalar kaiyinar orupaal thozukaiyar azukaiyar thuvaLkaiyar orupaal senniyil anjsali kuuppinar orupaal thirupperunthuRai uRai sivaperumaanee ennaiyum aaNdukoNdu innaruL puriyum emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: விடியற்காலம் இறைவழிபாட்டுக்காக வந்தவர்களில் இனிய ஓசை இசைக்கும் வீணையை உடையவர் ஒருபுறம் நிற்கிறார்கள்; யாழ் வாசிப்போர் இன்னொருபுறம்; மந்திரங்களோடு, துதிப்பாடல்களையும் ஓதுவார்கள் ஒருபுறம்; நெருக்கிக் கட்டப்பட்ட மலர்மாலைகளைக் கையில் ஏந்தியவர் ஒருபுறம்; தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபுறம்; தலைமேல் கை குவித்தவர் ஒரு புறம்; திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எம் தலைவனே! தகுதியற்ற அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் செய்பவனே! இவர்கள் யாவருக்கும் அருள்புரியத் திருப்படுக்கை விட்டு எழுந்தருளுக ! On one side are artists playing melodious stringed instruments, the harp and the Veena! On another side are those reciting the vedas, and singing prayers! On yet another side those handling densely-arranged flower garlands! On another side, devotees praying, crying aloud and wilting! On one side, those joining hands over their heads in worshipment! Oh Lord of Thirup- Perun-Thurai, Lord that, in His grace, takes me too in servitude! Oh my Chief, pray kindly arise and shower blessings on us. கு-ரை: வீணையும் யாழும் தம்முள் சிறிது வேறுபாடுடையன. இருக்கு = மந்திரம், பிணை = சேர்த்த,தொடுத்த. துவள்கை = அசைதல், 'தொழுகை' என்பதற்குத் தொழுங்கை எனப் பொருள் உரைத்தலும் உண்டு. அஞ்சலி= வணக்கம். 5. பூதங்க டோறுநின் றாயெனி னல்லாற் போக்கிலன் வரவில னெனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத லாடுத லல்லாற் கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்மரி யாயெங்கண் முன்வந் தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியு மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கு இலன், வரவு இலன், என, நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல், அல்லால் கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரைச் சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன் வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! puuthangkaL thooRum ninRaay enin allaal pookkilan varavilan ena ninaip pulavoor kiithangkaL paaduthal aaduthal allaal keeddaRiyoom unai kaNdu aRivaarai siithamkoL vayal thirupperunthuRai mannaa ! sinthanaikkum ariyaay engkaL mun vanthu eethangkaL aRuththu emmai aaNdaruL puriyum emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் அரசனே! மனத்திற்கும், ஊகித்து அறிவதற்கும், எட்டாதவனே ! ஐம்பூதங்களிலும், மற்று எல்லாப் பொருட்களிலும் நீ கலந்து நின்றாய் என்று அறிஞர்கள் கூறுவார்கள். நீ போக்கும் வரவும் இல்லாதவன் என்பார்கள். உன்பொருட்டு இசைப் பாடல்களைப் பாடுதலும் ஆடுதலும் செய்வதை அல்லாமல் உன்னைத் தாமாக நேரில் கண்டதாகக் கூறுபவர்களை நாம் கேட்டு அறியவில்லை. ஆயினும் அடியேங்கள் எதிரே தோன்றி, அருளி, எங்கள் குற்றங்களைத் தொலைத்துப், பேரருள் அளிக்கத் திருப்பள்ளி விட்டு எழுந்து அருளுக! Wise men sing and dance in ecstasy. They affirm that thou abideth in all elements and that you are ever free from death and birth. Apart from these sayings, we have not come across anyone who has actually seen and known Thee. Oh Lord of Thirup-Perun-Thurai surrounded by cool fields, Lord beyond all thought. Lord coming over to us and terminating all sorrows, gracing us and taking us in servitude, pray kindly arise and shower blessings on us. கு-ரை: கடவுள் காட்டாமல், தாமாகக் கண்டறிய இயலாமை குறிக்கப்பட்டது. பூதம் ஐம்பூதத்தையும் , உள்பொருள் யாவற்றையும் குறிக்கும். பிறப்பு இறப்பு இலன் ஆதலின், இறைவனைப் ' போக்கிலன் வரவிலன்' என்றார். ஏதங்கள்= குற்றங்கள். இச்சொல், பாசங்கள், மலங்கள், காமவெகுளி மயக்கமாய முக்குற்றங்கள் என்பவற்றை உணர்த்தும். 6. பப்பற வீட்டிருந் துணருநின் னடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரு மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றாரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யிப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியு மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார்;- அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானுடத்து இயல்பின் வணங்குகின்றார். - அணங்கின் மணவாளா ! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! இப்பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே ! pappaRa viiddirunthu uNarum nin adiyaar panthanai vanthu aRuththaar avar palarum maippu uRu kaNNiyar maanudaththu iyalpin vaNangku kinRaar aNangkin maNavaaLaa seppu uRu kamalangkaL malarum thaN vayal suuz thirupperunthuRai uRai sivaperumaanee ippiRappu aRuththu emai aaNdaruL puriyum emperumaan paLLi ezuntharuLaayee. பொ-ரை: உமை மணவாளனே ! எம் தலைவனே ! கிண்ணம் போன்ற சிவப்பு நிறத் தாமரை மலர்கள் விரியப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! விரிந்த மனத்தை ஒடுக்கி, பற்றற்ற நிலை நின்று மெய்ப்பொருளாகிய உன்னை உணர்ந்த அன்பர்கள் போற்றிப் பாச நீக்கம் அடையப்பெற்றுப் பிறப்பின் பயனைப் பெற்று விட்டார்கள். அவர்கள் அனைவரும் மனித இயற்கையில் மைபொருந்திய கண்களை உடைய மகளிர் மேல் அமையும் மானுடரது இயல்பை உடையவராய் இல்லறத்தைத் துறவாது , அதனோடு கூடி நின்று உன்னை வணங்கி நிற்கின்றார்கள். திருப்பள்ளி எழுந்தருளி வந்து இந்தப்பிறவியை நீக்கி எங்களை ஆட்கொள்ள அருள்செய்வாயாக. Thy devotees cast off their bondage, even as they abandon all activities and imbibe Thy spirit. Oh consort of goddess Uma, all Thy devotees worship Thee, much like maids of the world who have applied eye-shadow shades. Oh Lord Civa of Thirup-Perun-Thurai, surrounded by cool fields where fair lotus doth bloom, Thou that ends our birth cycles, and ruling over us granteth Thy grace, Oh our Chief, pray, kindly arise and shower Thy blessings on us. Note: This poem has been interpreted by various scholars in different angles. However, we have made best effort to consolidate all of them and given the above translation. கு-ரை: பப்பு, பரப்பு என்பதன் இடைக்குறை. வீடு= பற்று விட்ட நிலை, பந்தனை=கட்டு, பாசம், மலம். பலரும் = எல்லாரும், மைப்பு=நீருடைமை, மை = நீர். மைப்பு என்பதற்கு மைத்தன்மை எனப் பொருள் கொள்ளுதலும் உண்டு. 'மானுடத் தியல்பின், மைப்புறு கண்ணியர்' (ஆய்) என மாற்றுக. ' அவர் பலரும் மைப்புறு கண்ணியரும்' எனக்கொண்டு மானுடத் தியல்பாவது, கீழ் வீழ்ந்து வணங்குதல் என்பாரும் உளர். மனித வாழ்க்கையில் தலைவியர் தலைவர்பாற் காதலால் வழிபடுவதொப்ப என்ற பொருள் சிறப்புடைத்து . செப்பு= சொல், புகழ் என்பதுமுண்டு, இப்பிறப்பு = எடுத்த பிறப்பு. உடம்பொழித்து இரண்டறக் கலத்தலாகிய வீடு வேண்டும் என்பார் இவ்வாறு கூறினார். 7. அதுபழச் சுவையென வமுதென வறிதற் கரிதென வெளிதென வமரரு மறியா ரிதுவவன் றிருவுரு விவனவ னெனவே யெங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளு மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா வெதுவெமைப் பணிகொளு மாறது கேட்போ மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. அது, பழச் சுவை என, அமுது என ; அறிதற்கு அரிது என எளிது என; அமரரும் அறியார் : இது, அவன் திரு உரு; இவன் அவன் ; எனவே எங்களை ஆண்டு கொண்டு. இங்கு எழுந்தருளும் மது வளர் பொழில் திரு உத்தர கோச மங்கை உள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்; எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே ! athu paza suvaiena amuthu ena aRithaRku arithu ena eLithu ena amararum aRiyaar ithu avan thiru uru ivan avan enavee engkaLai aaNdu koNdu ingku ezuntharuLum mathuvaLar pozilthiru uththara koosa mangkai uLLaay thirupperunthuRai mannaa ethu emai paNikoLLum aaRathu keedpoom emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: முழு முதற்பொருளாகிய இறைவனைக் கனியின் சுவை எனவும்; அமுதம் எனவும்; அறிய முடியாதது எனவும், அறிதற்கு எளிது எனவும் இவ்வாறு பலவாறு வாதித்துத் தேவர்களும் அறியாநிலையில் இருப்பர். இந்நிலையில், வீடருளும் பரம் பொருளின் திருவடிவம் இதுவே எனவும், இத்திருவுருக் கொண்டு வந்த இவனே அப்பெருமான் என்றும் நாங்கள் சொல்லும்படி எம்மை ஆட்கொண்டருளினாய் ! தேன் மிகுந்த சோலை சூழ்ந்த திரு உத்தர கோச மங்கையில் உறைவோனே! திருப்பெருந்துறையுறைக் கோவே ! எங்களை நீ ஏவல் கொள்ளும் முறை எதுவோ அதனைக் கேட்டு நடப்போம். எம் தலைவனே ! திருப்பள்ளி எழுந்தருளுக ! Even the gods of heaven know not His traits - know not whether these are akin to the taste of fruit nectar, whether these are easy or hard to know! Whether manifest in this or that sacred form! (yet) Oh Lord of Thirup-Perun-Thurai, Thou hast appeared Thiru-Uththara-Kosa- Mangai of honey-filled groves. Pray, let us hear in what way Thou wouldst take our service. We would listen and act accordingly. Oh Chief, kindly arise and shower Thy blessings on us. கு-ரை: முழு முதற்பொருளை 'அது' என்பது வடமொழி வழக்கு . 'அவன்' என்று சொல்லுவது தமிழ் வழக்கு. பழத்திற் சுவைபோல், உலகிற் கலந்துள்ளது என்ற கொள்கை பற்றி அவ்வாறு கூறினர். பிறவியறுத்தலின் அமுதமாயிற்று. அன்பர்க்கெளிது எனவும் பிறர்க்கரிது எனவும் பேசியும், முயற்சிப் பயன் கைவந்திலர் என்பது கருத்து. 8. முந்திய முதனடு விறுதியு மானாய் மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார் பந்தணை விரலியு நீயுநின் னடியார் பழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி யந்தண னாவதுங் காட்டிவந் தாண்டா யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய் ; மூவரும் அறிகிலர்; யாவர் மற்று அறிவார் ?- பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில் தொறும் எழுந்தருளிய பரனே! செம்-தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய் ! ஆர் அமுதே ! பள்ளி எழுந்தருளாயே ! munthiya muthal nadu iRuthiyum aanaay muuvarum aRikilar yaavarmaRRu aRivaar panthaNai viraliyum niiyum nin adiyaar pazangkudil thoRum ezuntharuLiya paranee senthazal purai thiru meeniyum kaaddi thirupperunthuRai uRai kooyilum kaaddi anthaNan aavathum kaaddivanthu aaNdaay aar amuthee paLLi ezuntharuLaayee பொ-ரை: கிடைத்தற்கரிய நிறைந்த அமுதமே! முற்பட்ட முதலும், நிலையும், முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் நின்னை அறிய வல்லவர் அல்லர் எனின், வேறு யார் உன்னை அறிதல் கூடும்? பந்தின் தன்மை சார்ந்த திருக்கை விரலுடையவள் நின் திருவருட்சத்தி. அன்பர்களுக்கு நீயும் அவளும் அருள் புரிவான் வேண்டி அவர்களுடைய பழைய குடில்கள் தோறும் எழுந்தருளிய மேலானவனே! சிவந்த அனல்போலும் உள்ள உனது செம்மேனி வடிவம் காட்டி அருளினாய் ! நீ திருப்பெருந்துறையில் தங்குகின்ற திருக்கோயிலையும் காட்டினாய்! நீ ஆட்கொள்ளும் அருளாளனாய் வருதலையும் காட்டி, எங்கள்பால் வந்து ஆட்கொண்டவனே! நீ திருப்பள்ளி விட்டு எழுந்தருளுக! Thou art the very first as also the middle and the last entity. Even the gods of the Trinity (Brahma, Thirumaal and Rudhran) know thee not! Who else could then comprehend Thee? Lord expansive, visiting all Thy ancient servitors' homes, along with Thy consort ! Revealing Thy reddish flame-like sacred frame, revealing Thy temple of residence at Thirup-Perun-Thurai, revealing Thy ascetic form, Thou comest here with Thy consort and took us under whose soft hand fingers cares flower balls. Thee Oh rare nectar, pray, kindly arise and shower Thy blessings on us. கு-ரை: 'முந்திய' என்றது, எல்லாவற்றிற்கும் முற்பட்ட, முதற் பெரும் படைப்பு, காப்பு , அழிப்பைக் குறிப்பது. இடை முத்தொழில்கள் பல. பந்து - உருட்சி, திரட்சிக்குவமை. 'பந்துசேர் விரலாள்' என்ற தேவாரமுங் காண்க. எழுந்தருளி ஆட்கொள்ளுந்தொன்மை முறை குறிப்பார் 'பழங்குடில்' என்றார். அது போய்ப் பழகிய குடில் போலும். திருப்பெருந்துறையை 'உறை கோயிலாகக்' காட்டி என்பாருமுளர். 'அந்தணன்' வேதிய வடிவங்குறித்தல் கூடும். முந்திய முதல் - முத்தொழில்களுள் முற்பட்ட தோற்றம். உலகிற்கு, 'தோற்றம், நிலை, இறுதி' என்னும் முத்தொழிலையும் உளவாக்குதல் பற்றி இறைவனை அவையேயாக அருளிச் செய்தார். இதனானே, ஒருவனேயாய் நிற்கின்ற அவன் மூவராய் நிற்றலும் கூறியவாறாயிற்று. ஆகவே, "மூவரும் அறிகிலர்” எனப் பின்னர் கூறிய மூவர், அம்முத்தொழிலுள் ஒரோவொன்றைச் செய்யும் தொழிற்கடவுளராதல் இனிது விளங்கும். முத்தொழிலில் முதன்மையையும், ஒருங்குடைய முதல்வன் அருள் காரணமாக மூவராய் நிற்கும் நிலைகளை, 'சம்பு பட்சம்' எனவும், புண்ணியங் காரணமாக முதற்கடவுளரது தொழில்களுள் ஒரோவொன்றைப் பெற்று நிற்கும் கடவுளர் பகுதியை 'அணு பட்சம்' என்றும் ஆகமங்கள் தெரித்துக் கூறும் . அதனால் " ........................ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே " - தி. 11 ஞான உலா 5. "வீரன் அயன் அரி, வெற்பலர் நீர், எரி பொன்எழிலார் கார், ஒண் கடுக்கை கமலம் துழாய், விடை தொல் பறவை பேர், ஒண் பதி, நிறம், தார், இவர் ஊர்திவெவ் வேறென்பரால் ஆரும் அறியா வகை எங்கள் ஈசர்பரிசுகளே" -தி. 11 பொன்வண்ணத்தந்தாதி - 95 என்றாற்போலும் திருமொழிகள் சம்பு பட்சம் பற்றி வந்தனவும், " திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங் கருமா லுற அழலாய் நின்ற - பெருமான்" - தி. 11 ஞானஉலா 1 என்றாற்போலும் திருமொழிகள் அணு பட்சம் பற்றி வந்தனவும் ஆதல் தெளிவாம். 'மூவரும்' என்ற உம்மை, சிறப்பு. 'அறிகிலர்' என்றதன் பின், 'எனின்' என்பது வருவித்து 'உன்னை மூவர்தாமே அறியமாட்டார் எனின், மற்றுயாவர் அறிய வல்லார்' என உரைக்க. இத்துணை அரியவனாகிய நீ, உன் அடியவரது எளிய குடில் தோறும் உன் தேவியோடும் சென்று வீற்றிருக்கின்றாய் என்பார், ' பந்தணை விரலியும் ....... எழுந்தருளிய பரனே' என்று அருளினார், பந்து அணை விரலி - பந்தைப் பற்றி ஆடும் விரலை உடையவள். 'பந்து - கை' எனக் கொண்டு அதன் கண் பொருந்திய விரல் என்று உரைப்பினுமாம். இவ்வாறு உரைப்பின், கையினது அழகைப் புகழ்ந்தவாறாம். அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளியிருத்தல் அங்கு அவர்கள் நாள்தொறும் வழிபடுமாறு திருவுருக் கொண்டு விளங்குதல். இவ்வுருவத்தை 'ஆன்மார்த்த மூர்த்தி' என ஆகமங்கள் கூறினும், இஃது அவ்வில்லத்துள்ளார் அனைவர்க்கும் அருள் புரிதற்கு எழுந்தருளிய மூர்த்தி என்பதே கருத்து என்க. இதனானே, 'என்றும் உள்ள மூர்த்தியாக எழுந்தருள்வித்துச் செய்யும் ஆன்மார்த்த பூசை, இல்லறத்தார்க்கும், மாணாக்கர் வழிபட இருக்கும் ஆசிரியர்க்குமே உரியது' என்பதும், 'ஏனையோர்க்கு அவ்வப்பொழுது அமைத்து வழிபட்டுப்பின் விடப்படும் திருவருவத்திலும், திருக்கோயில்களில் விளங்கும் திருவுருவத்திலும் செய்யும் ஆன்மார்த்த பூசையே உரியது' என்பதும் பெறப்படும். இனி, 'பழங்குடில்தொறும்' எழுந்தருளுதல், 'விழாக்காலத்து' என்றும் சொல்லுப. ' எழுந்தருளிய' என இறந்த காலத்தாற் கூறினமையின் , அது பொருந்துமாறு இல்லை என்க. 'பழங்குடில்தொறும்' என எஞ்சாது கொண்டு கூறினமையின், 'இது, சில திருவிளையாடல்களைக் குறிக்கும்' என்றலும் பொருந்தாமை அறிக. திருப்பெருந்துறையில் இறைவன் குருந்த மர நிழலில் எழுந்தருளியிருந்து அடிகட்குக் காட்சி வழங்கிய இடத்தையே அடிகள், ' திருப்பெருந்துறை உறைகோயில் 'என்று அருளினார்; இது, 'திருப்பெருந்துறைக்கோயில்' என்னாது,' திருப்பெருந்துறை உறைகோயில்' என்றதனானே பெறப்படும். 'திருப்பெருந்துறைக்கண் நீ எழுந்தருளியிருந்த கோயில்' என்பது இதன் பொருளாதல் வெளிப்படை. இவ்விடத்தையே பின்னர் அடிகள் கோயில் ஆக்கினார் என்க. 9. விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கண் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோங் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியா ரெண்ணகத் தாயுல குக்குயி ரானா யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய் ! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே ! கடல் அமுதே ! கரும்பே ! விரும்பு அடியார் எண் அகத்தாய் ! உலகுக்கு உயிர் ஆனாய் ! எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே ! viNNaka theevarum, naNNavum maaddaa vizupporuLee una thozuppadi yoongkaL maNNakaththee vanthu vaaza seythaanee vaNthirup perunthuRai yaay vazi adiyoom kaNNakaththee ninRu kaLitharu theenee kadal amuthee karumpee virumpadiyaar eNNakaththaay ulakukku uyir aanaay emperumaan paLLi ezuntharuLaayee பொ-ரை: வானுலகிலுள்ள விண்ணவர்களும் நெருங்க முடியாத மேலான பரம்பொருளே ! உனது தொண்டாற்றும் அடியவராகிய நாங்கள் இம் மண்ணுலகில் பேரின்பத்தோடு வாழும்படியாக எழுந்தருளி வந்தாய் ! எங்களை வாழ்விக்கச் செய்தவனே ! வளம் பொருந்திய திருபெருந்துறையை உடையவனே ! பரம்பரையாக நின்னை வழுத்தும் அடியார்கள் கண்ணில் நின்று அல்லது அகத்தே நின்று மகிழ்ச்சி தருகிற தேன் போலும் இனியவனே ! விண்ணவர்க்குத் திருப்பாற்கடலின் அமுதம் போல்பவனே ! கரும்பு போல்பவனே ! உன்னை விரும்பும் அடியவர்கள் நினைவிலுள்ளோனே ! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே ! எமது தலைவனே ! திருப்பள்ளி எழுந்தருளுக. Pristine entity, that even the gods of heaven cannot approach! Thou that caused Thy dedicated servitors to come over to the earth and live here! Lord abiding at the bounteous Thirup-Perun-Thurai, thou that dispenseth joy, standing beside successive generations of devotees! Nectar of the ocean, sweet as sugarcane, dwelling in the hearts of loving devotees ! Thou art the cause of all life, Oh Chief ! Pray, kindly arise and shower blessings on us. கு-ரை: விழு=மேலான. தொழுப்பு = தொழும்பு என்பதன் வலித்தல் விகாரம்= தொண்டு. தேன், அமுது, கருப்பஞ்சாறு மூன்றையும் உவமையாகக் கூறுதல் அடிகள் மரபு. மண்ணுலகத்தில் அன்றி விண்ணுலகத்தில் ஞானம் கூடாது என்பதனை அடிகள் யாண்டும் குறிப்பித்தல் அறிக. 10. புவனியிற் போய்ப்பிற வாமையி னாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலா மவன்விருப் பெய்தவு மலரவ னாசைப் படவுநின் னலர்ந்தமெய்க் கருணையு நீயு மவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லா யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; ' இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய் ! திருமால் ஆம் அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும் அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே ! puvaniyiR pooy piRavaamaiyin naaL naam pookkukinRoom avamee intha puumi sivan uyyak koLkinRa vaaRu enRu nookki thirupperunthuRai uRaivaay thirumaalaam avan viruppu eythavum malaravan aasai padavum nín alarntha mey karuNaiyum niiyum avaniyiR pukunthu emai aadkoLLa vallaay aar amuthee paLLi ezuntharuLaayee பொ-ரை: கிடைத்தற்கரிய அமுதமே! இப்பூவுலகம் சிவபெருமான் உயிர்களுக்கு வீடருளி ஆட்கொள்கின்ற வகையுடையதாக விளங்குகிறது. இதனை அறிந்த திருமாலாகிய பெரியோனும் மலரில் உறைகின்ற நான்முகனும், தாங்கள் பூமியில் பிறந்து இறைவனால் ஆட்கொள்ளப் பெறாமல் வாழ்நாளை வீணாகப் போக்குகின்றோமே என்று விருப்பமுற்று ஆசைப்படும்படியாகவும், நீயும், பொய்யாத நின் திருவருட்சத்தியும் ஞாலத்தில் வந்தருளி எங்களை உய்யக் கொண்டருள வல்லவனே! திருப்பெருந்துறை உறைவானே ! இறைவனே ! திருப்பள்ளி விட்டு எழுந்தருளுக! Thirumaal nurturing great desire and Brahma too steeped in longing for Thee, are under, intense feeling that they are simply wasting away their time in their sky-born existence without getting a chance for being born on the earth! They realise that this earth is verily the place wherefrom to achieve redemption, Oh Lord of Thirup-Perun-Thurai! Thou and Thy all embracing reality of grace that tend to enter the earth and take us under Thee! Oh rare nectar, pray arise and shower blessings on us. கு-ரை: புவனி, அவனி, பூமி என்பன நிலவுலகை உணர்த்தின. அவமே = வீணே. அலரவன்= வெண்டாமரை உறைவோன். 'அலர்ந்த மெய்க்கருணை' என்றது, வீடு உய்ப்பிக்கும் தாயாகிய அருட்சத்தியை. திரோதான சத்தியின் வேறாய அருட்சத்தி எனக் குறித்தார். ஐந்தெழுத்திலே, வகரத்தாற் சுட்டப்படும் அருள் என்று அறிக. THIRUCHCHITRAMBALAM 21. கோயில் மூத்த திருப்பதிகம் 21. KOVIL MOOTHTHA THIRUP-PATHIKAM (அநாதியாகிய சற்காரியம் ) The Decad on the Temple of Thillai தில்லையிலருளிச் செய்யப்பட்டது The Early Decad on Thillai ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் 'கோயில்' என்பது, தில்லைப் பொன்னம்பலமே என்பது நன்கறியப் பட்டது. இதன்மேல் அருளிச் செய்யப்பட்டமையின், இதுவும் அடுத்த திருப்பதிகமும், 'கோயில் திருப்பதிகம்' எனப் பெயர் பெற்றன. இவற்றுள், 'மூத்த திருப்பதிகம்' எனப்பட்டமையால் இது, 'முதற்கண் அருளிச் செய்யப்பட்டது' என்பது பெறுதும். 'பொன்னம்பலம்' என்பது இதன்கண் எல்லாத் திருப்பாட்டுக்களிலும் எடுத்தோதப்பட்டிருத்தலும், இதனை அறிவுறுத்தும். முன்னர் வந்த சில திருப்பதிகங்களும், இனிவருகின்ற சில திருப்பதிகங்களும் அவற்றின்கண் அமைந்த வேறுவேறு சொல்லும் பொருளும் பற்றிப் பிறவாற்றாற் பெயர் பெற்றன. இவையிரண்டும் அவ்வாறின்றி ஒன்றில் பொன்னம்பலம் என்பது யாண்டும் எடுத்தோதப்பட்டமையாலும், மற்றொன்றில் பலவகைப் பொருளும் கலந்து வருதலானும், 'கோயில் திருப்பதிகம்' என்றே பெயர் பெறலாயின. 'மூத்த திருப்பதிகம்' என்பதனுள், 'மூப்பு' என்பது, உயர்வு குறிக்கும் என்பர், மாதவச் சிவஞான யோகிகள் (சிவஞான சித்தி. சூ. 29 உரை). இதன்கண் அடிகள், ஏனைய அடியார்களுடன் தாமும் சென்று சேர்ந்து இறையின்பத்தை நுகரும் பெரிய பேறு ஒன்றையே வற்புறுத்தி வேண்டி அருளிச் செய்திருத்தலின், ஏனைய திருப்பதிகங்களினும் இஃது உயர்வுடையது என்பது அவரது கருத்துப் போலும். திருவெம்பாவை முதலாகத் திருப்பள்ளி எழுச்சியீறாக வந்தவை, அடிகள் தம் கருத்தைப் பிறர் கூற்றாக வைத்துப் பிறிதோராற்றால் அருளிச் செய்தன; இனி வருவன அனைத்தும் அடிகள் தம் கூற்றாக நேரே அருளிச் செய்தனவேயாம். அவற்றுள், கோயில் திருப்பதிகமாதல் பற்றி இவ்விரண்டனையும் முன்வைத்துக் கோத்தனர். இதுவும், அடுத்த திருப்பதிகமும் தில்லையில் அருளிச் செய்யப்பட்டன என்று முன்னைப் பதிப்புக்களில் காணப்படுகிறது. இத்திருப்பதிகத்தின் முதலடி பற்றியே இதற்கு, 'அநாதியாகிய சற்காரியம்' எனக் குறிப்பு உரைத்தனர் முன்னோர். இங்கே, சற்காரியம் என்பது, அளவை முறையில் சொல்லப்படும் சற்காரியம் அன்று. 'என்றும் உள்ள நல்ல செயல்' - திருவருட்செயல் என்பதேயாம் . அச்செயலாவது இறைவன், சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களோடு உடனாகி , அவற்றை உய்வித்தல். இதன்கண் நான்காம் திருப்பாட்டுத் தவிர ஏனைய திருப்பாட்டுக்கள் யாவும் அறுசீரடி ஆசிரிய விருத்தமாவன. நான்காம் திருப்பாட்டு ஐஞ்சீரடி மயங்கிய விருத்தமாம். இதனுள்ளும் அடுத்த திருப்பதிகத்திலும் எல்லாத் திருப்பாட்டுக்களும் அந்தாதியாய் வருவன. This decad was probably composed by the Saint in the early part of his pilgrimage, seeking reunion with the Lord. His narration in this decad of the events of Thirup-Perun-Thurai indicates that he moved over to Thillai immediately after the Lord bade him to go there (கோலமார்தரு பொதுவினில் வருகென) and vanished from sight along with His other disciples . ' மூத்த' திருப்பதிகம் evidently, therefore belongs to a prior period in relation to கோயில் திருப்பதிகம்- Decad (22). These stanzas reflect the anguish of the saint at being left out in this world while his erstwhile companions were absorbed into the Lord at Thirup-Perun-Thurai. The thrills of admittance and the agony of isolation, course through the entire composition of St. Maanikkavaachakar evoking sympathetic response from generation to generation of saivaite scholars and saintly folks of whatever creed they be. 21.1. உடையா ளுன்ற னடுவிருக்கு முடையா ணடுவு ணீயிருத்தி யடியே னடுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் னடியார் நடுவு ளிருக்குமரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே உடையாள், உன் தன் நடுவு இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருந்தி; அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம் பலத்து எம் முடியா முதலே ! என் கருத்து முடியும் வண்ணம், முன் நின்றே ! udaiyaaL unthan naduvu irukkum udaiyaaL naduvuL nii iruththi adiyeen naduvuL iruviirum iruppa thaanaal adiyeen un adiyaar naduvuL irukkum aruLai puriyaay ponnampalaththu em mudiyaa muthalee en karuththu mudiyum vaNNam munninRee பொ-ரை: பொன்னம்பலத்திலாடும் ஈறில்லாத முதல்வனே! எல்லாவற்றையும் உடைமையாகப் பெற்றவளாகிய சக்தி, சிவமாகிய நினதுள்ளத்தில் இருக்கிறாள். சிவமாகிய நீயும் அவளிடையே கலந்திருக்கிறாய். அடியேன் உள்ளத்து நீவிர் இருவரும் இருப்பது உண்மையாயின், என் நெடுநாளைய விருப்பம் நிறைவேறும் வண்ணம், அடியேன் நின் அடியார் கூட்டத்தின் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக. சிறப்புக் கருத்து: இத்திருப்பாடல் இருதலை மாணிக்கமாகிய 'சிவயசிவ' என்னும் பெருமந்திரப் பொருளாக இருப்பதனால், திருவாசகம் என்னும் திருமறையின் இதய மந்திரமாகப் பாராட்டப் பெறுவது ஆகும். 'சி' எனும் எழுத்து சிவத்தையும் 'வ' எனும் எழுத்து சக்தியையும் குறிப்பதாகும். சிவ சிவ எனும் பொழுது சக்தி எழுத்தாகிய 'வ' சிவத்தைக் குறிக்கும். 'சி' எனும் இரண்டு எழுத்துகளுக்கும் நடுவில் வருவது "உடையாள் உன்தன் நடுவிருக்கும்" என்பதனைக் குறிப்பது ஆகும். சிவசிவ எனும் பொழுது இரண்டு 'வ' எனும் சக்தியைக் குறிக்கும் எழுத்துகளுக்கு நடுவே 'சி' வருவது "உடையாள் நடுவுள் நீயிருத்தி" எனும் சொற்றொடரைக் குறிப்பதாகும். "அடியேன் நடுவுள் இருவரும் இருப்பதானால்" என்ற சொற்றொடர் 'சிவசிவ' என்று என் நெஞ்சில் தியானப் பொருளாக நீங்கள் இருவரும் விளங்குகிறீர்கள் என்ற மந்திரப் பூர்வமான கருத்தை உரைப்பதால் இப்பாடல் "இதய மந்திரம்" என்ற பெருமையைப் பெறுகிறது. In the very centre of Thee, Thy consort of splendour doth reside. Thou resideth in the mind of Thy consort. Should both reside in my mind; Thy servitor, pray Oh Lord of the golden hall of Thillai, grant Thou in grace, that I, Thy servitor, stay in the midst of Thy devotees. Oh, primordial lord of eternity, do grant me your appearance, so that my aspirations be fulfilled. கு-ரை: சிவத்தினின்று பராசத்தி தோன்றுதலின், "உடையாள் உன் நடுவிலிருக்கும்' என்றார். சிவத்தின் ஒரு கூற்றிலே தோன்றுஞ் சத்தியே உலகத்தே ஐந்தொழில் செய்யப் போதுமாதலின், 'நடு' என்றார் என்பாரும் உளர். 'நடு' என்ற சொல் அந்தரியாமித்துவம் உணர்த்துதலின், அது அத்துவிதக் கலப்பையே குறிப்பதாம். தோன்றும் உலகின் எப்புறமும் ஆதாரமாய்ச் சிவசத்தி நிற்றல் போல, உலகின் பொருட்டுத் தோன்றுஞ் சிவசத்திக்கு எல்லாப்புறமும் சிவமே வியாபகமாயிருத்தலின், சிவத்தின் நடுவே சிவசத்தி தோன்றுமென்றார் . உலகத் தோற்றத்தின் கண், எங்குஞ் சிவமானது உள்ளீடாய்ச் சக்தியோடு கலந்திருத்தலின், 'நீ அவள் நடுவில் இருத்தி' என்றார். சிவ தத்துவ சம்பந்தமாய்ச் சக்தி தோன்ற, சக்தி சம்பந்தமாய்ச் சதாசிவம் தோன்றுதலின், இங்ஙனங் கூறினார் என்பாரும் உளர். 'அறிவினில் அருளான் மன்னி அம்மையோடப்பனாகி' என்றபடி, சத்தியுஞ் சிவமுமாகவே இறைவன் உயிரில் கலந்துள்ளான் ஆதலின் 'இருப்பதானால்' என்றார். அடியார் நடுவுளிருப்பதால், இறையன்பு நிலைத்து உலகப் பற்றொழிந்து விரைவில் வீடெய்துதல் கூடுமாதலின், 'என் கருத்து முடியும் வண்ணம்' என்றார். 2. முன்னின் றாண்டா யெனைமுன்ன மியானு மதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே யென்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடிலடியா ருன்னின் றிவனா ரென்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்றுப் பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே! 'என்?' இன்று, அருளி வர நின்று, 'போந்திடு' என்னாவிடில், அடியார், உன் நின்று, "இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே ! munninRu aaNdaay enaimunnam yaanum athuvee muyalvuRRU pinninRu eeval seykinReen piRpaddu ozintheen pemmaanee enninRu aruLi vara ninRu poonthidu ennaavidil adiyaar unninRu ivan aar ennaaroo ponnampala kuuththu ukanthaanee பொ-ரை: பொன்னம்பலத்துள் நின்று திருநடனம் புரிவதை உவக்கும் பெருமானே ! முன்பு அடியேனை ஆட்கொண்டாய். அடியேனும் நீ உபதேசித்த வழியில் ஆளாய் இருக்கவே முயன்று பணிபுரிந்து நிற்கிறேன். ஆயினும் உன் அடியார்களோடு உடன் செல்லாமல் பின்தங்கிவிட்டேன். ஆகவே, பெருமானே என்னை உன்பால் வருமாறு அருளி நின்று அழையாவிடில் முன்பு உன்னுடன் வந்த அடியார்கள் உன்பால் நின்று, இப்பொழுது இங்கு வருவதற்கு இவன் என்ன உரிமை உடையவன் எனக் கேட்கமாட்டார்களோ ? ஆதலால் என்னை விரைந்து உன்பால் அழைத்துக் கொள்வாயாக. சிறப்புக் கருத்து: இத்திருப்பாடல் ஒரு தலை மாணிக்கம் என்று சைவசித்தாந்தம் பகரும் " சிவாய நம" என்ற மந்திரத்தை உள்ளடக்கிய பாடல் ஆகும் "சி' எனும் சிவத்தை ' முன்னின்று ஆண்டாய்' என்ற தொடர் குறிக்கிறது. ' யானும் பின்னின்று அதுவே முயல்வுற்று ஏவல் செய்கின்றேன்' என்ற தொடர் 'நான் பின்னே இருந்து நின் அருள்வழி நின்றேன்' என்ற கருத்துடைய அருள் சக்தி - 'வ' என்பதையும், 'ய' எனும் ஆன்மா ஆகிய நான் "பிற்பட்டு ஒழிந்தேன்" என்று கூறுவது, சிவசக்தி வியாபகத்தில் ஆன்மாவின் 'நான்' எனும் ஆணவம் ஒழிந்தது என்பதாகும். தாய் தந்தை பராமரிப்பில் நிற்கும் பாலகன் போலத் துன்பமின்றி இன்பவடிவாய் விளங்கி, ஏவல் புரிதலாகிய "நம" என்பதனை "அதுவே முயல்வுற்றுப் பின்னின்று ஏவல் செய்கிறேன்" என்றும் தெரிவிக்கிறார் அடிகள். Oh Lord, gleefully dancing at the golden public hall! Once before, Thou, appearing in front of me in person, took me under Thee. I am now labouring again for that very vision and am zealously serving Thee, as I was left behind (at Thirup-Perun-Thurai, while other devotees joined Thee). If Thou grant not Thy grace and call out to me, will not Thy devotees surrounding Thee come over and ask 'who is this fellow standing here'? கு-ரை: ' முன்னின்று' என்றது அருட் குருவாய் எதிர்ப்பட்டு வந்ததைக் குறிக்கும் 'அதுவே முயல்வுற்று' என்பதற்கு நீ எதிர்ப்படுதலையே கருதி எனவும் பொருள் கொள்வார். பெம்மானே என்பதற்கு விரும்பத்தக்கவனே எனவும் பொருள் கொள்ப. போந்திடு= அடியார் நடுவுட் புகுந்திடு . அருள் இவர்தல் = திருவருள் மேற்படத் தான் அதனுள் அடங்குதல். 3. உகந்தானே யன்புடை யடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன் சகந்தா னறிய முறையிட்டாற் றக்க வாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தா யடியேற்குன் முகந்தான் றாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன், சகம் தான் அறிய முறையிட்டால், 'தக்க ஆறு அன்று' என்னாரோ ? மகம் தான் செய்து வழிவந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன் முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம் பலத்து எம் முழு முதலே ! ukanthaanee anpudai adimaikku urukaa uLLaththu uNarvu iliyeen sakam thaan aRiya muRaiyiddaal thakka vaaRu anRu ennaaroo makam thaan seythu vazivanthaar vaaza vaaznthaay adiyeeRku un mukam thaan thaaraavidin mudiveen ponnam palaththu em muzumuthalee பொ-ரை: பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள முழுமுதற்பொருளே! அன்போடு கூடிய எனது அடிமைத் தொண்டை விரும்பி ஏற்றுக் கொண்டவனே! நின்பால் அன்பு கொண்டு உருகாத மனத்தையுடைய அறிவற்றவன் யான். உலகம் அறிய யான் எனது துன்பத்தைச் சொல்லி உன்னைக் கூவிக் குறையிரந்தால், உலகத்தவர் "நீ செய்வது முறையன்று" என்று உன்னைக் கூற மாட்டார்களோ? வேள்வி இயற்றி, நல்வழி நிற்கும் முனிவர் வாழ்ந்துய்ய எழுந்தருளியவனே! அடியேனுக்கு நின் திருமுகத்தைக் காட்டாவிடில் யான் இறந்துபட விரும்புகிறேன். ( இதன் கருத்து, 'இப்பயனற்ற பிறவி எதற்கு என்று எண்ணி இறப்பேன்' என்பதாம்). Thou that are delighted by the dedication of devotees! If I, albeit devoid of heartfelt feelings towards Thee, have perforce to make a special open appeal (for clemency), would not the people of the world say that Thy indifference is unfair? Thou bestowed grace on those that Performed rituals and made them prosperous here on earth. Hence if Thou doth not now appear before me in person, I will meet a sordid end for sure, Oh, the primal lord of the golden hall of Thillai! கு-ரை: ' சகந்தான்' என்பதில் 'தான்' என்பது தனியே முறையிடாது பலரும் அறிய முறையிடுதல் , தமது அன்பின்மையைப் புலப்படுத்தும் என்பதைக் குறிக்கும். தன் அன்பின்மை அறியாது இறைவனருளாமையைத் தக்கவாறன்று என்பர் என்ற கருத்துங் கொள்ளப்படுவது. வேள்வி இயற்றினாலும், பயன் கருதாது செந்நெறி நிற்பவருக்கு இறைவனருள் புரிவனென்பது கூறப்பட்டது . வீடருளாவிடினும் அருள்திரு மேனியையாவது காட்ட வேண்டும் என்பார் 'முகந்தான்' என்றார். 4. முழுமுத லேயைம் புலனுக்கு மூவர்க்கு மென்ற னக்கும் வழிமுத லேநின் பழவடியார் திரள் வான் குழுமிக் கெழுமுத லேயரு டந்திருக்க விரங்குங் கொல்லோ வென் றழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. முழு முதலே ! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என்-தனக்கும் வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான் குழுமிக் கெழு முதலே ! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ? என்று அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே ! muzumuthalee aimpulanukkum muuvarkkum en thanakkum vazimuthalee ninpaza adiyaar thiraLvaan kuzumik kezumuthalee aruL thanthu irukka irangku kolloo enRu azum athuvee anRi maRRu en seykeen ponnampalaththu araisee பொ-ரை: பொற்சபையில் ஆடுகின்ற மன்னனே ! எல்லாவற்றிற்கும் ஆதியான பெருந்தலைவனே! மூவராகிய அயன், அரி, அரன் ஆகியோர்க்கும், ஐம்பொறி அறிவிற்கும், மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று அந்தக்கரணங்களுக்கும், புருடனாகிய எனக்கும் வழிவழியாய் நின்ற தலைவனே, பழமையான நின் அடியார்கள் கூட்டத்திற்குப் பெரிதும் அருள்புரிய எழுந்தருளும் முதல்வனே ! அடியேனுக்கு அருள் வழங்க இரங்குவையோ என அழுவதல்லாமல் உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்? (இத்திருப்பாடல் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள ஆண்டான் அடிமைத் தொடர்பை வெளிப்படுத்துவதாக உள்ளது). குறிப்பு: 'மூவர்க்கும்' என்பது மனம், புத்தி, அகங்காரமெனும் மூன்று அந்தக்கரணங்கள் எனப் பொருள் கொள்வாரும் உண்டு. Thou, the primal lord supreme! Thou the guide supreme for the five senses and for the trinity of gods, as also for me! Thou that goes forth into the milling crowds of Thy long-time devotees! What else can I do, apart from just crying out, asking if Thou wouldst pity me and shower grace on me, Oh Lord of the golden hall of Thillai! கு-ரை: 'வழிமுதல்' என்பது நிமித்த காரணத்தை உணர்த்துவது. 'அருள் தந்திருக்க' என்பதற்கு அருள் கொடுக்க எனப் பொருள் கொள்வாரும் உளர். செயலற்று வருந்துவதே தன்னாலேயாகும் என்பார் ' அழுமதுவே' என்றார். 5. அரைசே பொன்னம் பலத்தாடு மமுதே யென்றுன் னருணோக்கி யிரைதேர் கொக்கொத் திரவுபக லேசற் றிருந்தே வேசற்றேன் கரைசே ரடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் னடியேன்பாற் பிரைசேர் பாலி னெய்போலப் பேசா திருந்தா லேசாரோ 'அரைசே! பொன்னம் பலத்து ஆடும் அமுதே !' என்று உன் அருள் நோக்கி இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே வேசற்றேன்; கரை சேர் அடியார் களி சிறப்பக் காட்சி கொடுத்து, உன் அடியேன் பால் , பிரை சேர் பாலின் நெய் போலப் பேசாது இருந்தால், ஏசாரோ? araisee ponnampalaththu aadum amuthee enRu un aruL nookki iraitheer kokku oththu iravu pakal eesaRRu irunthee veesaRReen karaiseer adiyaar kaLisiRappa kaadsi koduththu un adiyeen paal pirai seer paalin neypoola peesaathu irunthaal eesaaroo பொ-ரை: மன்னனே ! பொற்சபையில் கூத்து இயற்றுகின்ற அருமருந்தே ! என்று உன்னை வாழ்த்தி உன் அருளை எதிர்பார்த்துக் காத்திருந்து, அமைதியாகவும், குறிப்பாகவும் இரை தேர்ந்தெடுக்கின்ற கொக்கினைப் போல இரவும் பகலும் கவலையோடு இருந்து இளைப்புற்றேன் . முத்திக் கரையை அடைவதற்குரிய அடியார்களுக்கு மகிழ்ச்சி மிகும்படியாக நீ காட்சி கொடுத்து அருளினாய். ஆனால் உன் அடியேனாகிய என்னிடத்தில் பிரை ஊற்றிய பாலில் அடங்கியிருக்கும் நெய் போல் வெளிப்படாது இருக்கின்றாய். அவ்வாறு நீ உரையாடாதிருந்தால் உன்னை உலகத்தார் ஏச மாட்டார்களா? சிறப்புக் கருத்து: இறைவன் ஆன்மாக்களின் பரிபாக நிலைக்குத் தகுந்த மாதிரி, அவரவருள் கலந்தும், கண்டும், காட்டியும் நிற்கிறான் என்பதை இத்திருப்பாடல் விவரிக்கிறது . "Oh Lord, ambrosia-like, that danceth at the golden public hall" - chanting thus, looking forward to Thy grace day and night, I remained patiently like a crane that stands silently on the water front, awaiting its prey. And in this way, I got wearied and wilted. And yet, while Thou revealed Thy form to devotees who gleefully reached the shores of salvation, Thou doth not manifest Thyself before me, but silently stayeth unseen, much like ghee hidden in the curdled milk. If this be so, will not the folks of the world castigate Thee for Thy indifference? கு-ரை: இரை தேர் கொக்கானது தன் விருப்பத்திற்கேற்ற உணவாகிய மீன் வருமளவும் அசையாது காத்திருத்தல் போல, உடம்பு நீங்கி வீடு பெறுதலை விரும்பி அடிகள் இறையருளை எதிர்பார்த்திருந்தனர் என்பது விளங்கிற்று. ஏசறுதல் = துக்கித்தல், கவலைப்படுதல். வேசறுதல்= வாடுதல், இளைத்தல். காட்சி= பேரறிவு. பாலில் நெய்யானது நன்கு விளங்காது நிற்கும். தயிரில் நெய்யானது நன்கு விளங்கும். பிரை சேர் பாலில் நெய்யானது விளங்கியும், விளங்காமலும் நிற்கும். பிரை= உரை, "கண்டும் கண்டிலேன்" என்றபடி ஞானம் பெற்றும் உடனே வீடு பெறாமையின் 'பிரைசேர் பாலில் நெய்போல' என்றார். 6. ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா னென்று பிறரெல்லாம் பேசா நிற்ப ரியான்றானும் பேணா நிற்பே னின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க வீசா பொன்னம் பலத்தாடு மெந்தா யினித்தா னிரங்காயே. ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம் பேசா நிற்பர்; யான்-தானும் பேணா நிற்பேன், நின் அருளே; தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க, ஈசா ! பொன்னம் பலத்து ஆடும் எந்தாய் ! இனித்தான் இரங்காயே! eesaaniRpar ennai unakku adiyaan enRu, piRar ellaam peesaa niRpar yaan thaanum peeNaa niRpeen nin aruLee theesaa neesar suznthirukkum thiruoolakkam seevikka iisaa ponnampalaththu aadum enthaay iniththaan irangkaayee பொ-ரை: ஒளி மயமானவனே, ஆண்டவனே! பொற்சபையில் கூத்து இயற்றும் எங்கள் அப்பனே! உலகத்தார் எல்லாரும் என்னை உனக்கு அடியவன் என்று சொல்லுவர். நான் உனது அருள் ஒன்றையே விரும்பி நிற்கின்றேன். ஆதலின் நான் உன்னை அடையாது அல்லல் உறின் யாவரும் இருவரையும் ஏசுவர். அவ்வாறாகாமல், மெய்யன்பர்கள் புடை சூழ நீ வீற்றிருக்கும் உனது திவ்விய சமூகத்தை வழிபடுவதற்கு இனியாயினும் இரங்கி அருள் செய்வாயாக. சிறப்புக் கருத்து: 'பிறர் என்ன கூறினாலும் யான் நின்னருளே வேண்டி நிற்பது எனக்கும் உனக்குமுள்ள அநாதியான தொடர்பு. அதனால் நீ எனக்குத் திருவோலக்கச் சேவை தந்தருள வேண்டும்' என்று மணிவாசக சுவாமிகள் வேண்டுகோள் விடுக்கிறார். Oh Sire, that danceth in the golden hall of Thillai! The world at large would indeed castigate Thee! Also, they would say I am the servitor of such a one! I, however, would still stand here yearning for Thy grace. Hence, Oh effulgent Lord, be pleased now to grant that I may pay obeisance to the holy congregation full of Thy devotees! கு-ரை: முற்பாட்டில் 'ஏசாரோ' என்றதற்குப் பதிலாக இப்பாட்டின் தொடக்கத்தில் 'ஏசா நிற்பர்' என்றார். 'தேசா' என்பதில், தேசு = ஒளி. ஓலக்கம்= சபை, காட்சி. 7. இரங்கு நமக்கம் பலக்கூத்த னென்றென் றேமாந் திருப்பேனை யருங்கற் பனைகற் பித்தாண்டா யாள்வா ரிலிமா டாவேனோ நெருங்கு மடியார் களுநீயு நின்று நிலாவி விளையாடு மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென் றருளாயே. 'இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று-என்று, ஏமாந்திருப்பேனை, அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ ? நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும் மருங்கே சார்ந்து வர, எங்கள் வாழ்வே, 'வா' என்று அருளாயே ! irangkum namakku ampalakkuuththan enRu enRu eemaanthiruppeenai arungkaRpanai kaRpiththu aaNdaay aaLvaar ilimaadu aaveenoo nerungkum adiyaarkaLum niiyum ninRu nilaavi viLaiyaadum marungkee saarnthu vara engkaL vaazvee vaa enRu aruLaayee பொ-ரை: எமது வாழ்வாக உள்ளவனே ! பொன்னம்பலத்தே அருட்கூத்தாடும் பெருமான் நமக்கு இரங்கி அருளுவான் என்று எண்ணி எண்ணி அவாவுற்று இருப்பவனாகிய எனக்குப் பிறர் எவராலும் பெறற்கரிய அருமையான உபதேசத்தை வழங்கி, என்னை ஆட்கொண்டாய். அவ்வாறிருக்க, எவ்வாறு செல்வமானது ஒரு பயன்படும் பொருளானாலும், அதற்கு உரிமை உடையவர் இல்லாத பொழுது அது பயன் இல்லாதவாறு போல என்னை உடையவனாகிய நீ என்னைப் புறக்கணித்தால் தான் கெடுவேன். ஆதலால், நீயும் உனது அடியார்களுக்கு நெருங்கி நிலைத்து விளங்கி மகிழ்கின்ற பக்கத்தில் அடியேனும் சார்ந்து வரும்படி 'இங்கே வா' என்று சொல்லி அழைத்துக் கொள்வாயாக. Standing here hoping that the Lord of the dancing hall would shower mercy on me, I was disappointed due to the lack of timely response from Thee. And yet Thou accepted me in a special way. Will I become an ownerless bull roaming around the city and getting despised by one and all. Pray, command me now, in all Thy grace, to come over to where Thou and Thy close devotees are at play, Oh the very essence of my life! கு-ரை: ' ஏமாந்திருப்பே' னென்பதில் ஏமாந்து = ஆசைப்படுதல், களிப்புறுதல். 'அருங்கற்பனை' என்பதில் 'அரும்' என்பது இன்மை குறித்தது . கற்பனை= ஏற்பாடு. ஆட்கொள்ளும் தகுதியேற்படுமுன்னே ஆட்கொள்ளுதலே அருங்கற்பனை எனப்பட்டது. ஆள்வார்= பாதுகாப்பார், உடையவர். நிலாவி= விளங்கி, மருங்கு =பக்கம். 8. அருளா தொழிந்தா லடியேனை யஞ்சே லென்பா ராரிங்குப் பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் றெருளார் கூட்டங் காட்டாயேற் செத்தே போனாற் சிரியாரோ. அருளாது ஒழிந்தால், அடியேனை, 'அஞ்சேல்' என்பார் ஆர், இங்குப் பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே ! பொன்னம்பலக் கூத்தா ! மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, 'வா' என்று, உன் தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ ? aruLaathu ozinthaal adiyeenai anjseel enpaar aaringku poruLaa ennai pukunthu aaNda ponnee ponnampala kuuththaa maruL aar manaththoodu unaipirinthu varunthuveenai vaa enRu un theruL aar kuuddam kaaddaayeel seththee poonaal siriyaaroo பொ-ரை: கனக சபையில் நடனமிடுவோனே! இவ்வுலகில் என்னையும் ஒரு பொருளாக மதித்து என் உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டருளிய பொன் போன்றவனே! நீ வீடு அருள் செய்யாது போனால் அடியேனை 'அஞ்சேல்' என அபயம் அளிப்பார் யார்? மயக்கம் நிறைந்த மனத்தோடு உன்னை விட்டுப் பிரிந்து வருந்தும் என்னை வா என்று அழைப்பாயாக. அவ்வாறு அழைத்துச் சிவஞானத் தெளிவுடைய அன்பர்கள் கூட்டத்தைக் காட்டாமல் புறக்கணிப்பின் மீளாப் பிறவியில் வீழ்வேன். அது கண்டு உன் அடியார்கள் ' அருள் பெற்ற பின்னரும் அதனைப் பேணாது பிறவியில் வீழ்ந்தான்; என்னே! இவனது அறிவு இருந்தவாறு' என எள்ளி நகையாடுவர் அல்லரோ! சிறப்புக் கருத்து: "வருந்துவேனை வா என்று உன் தெருளார் கூட்டம் காட்டுக" என வேண்டும் அடிகளார் எதிர்மறை வாய்ப்பாட்டால் "காட்டாயேல் செத்தே போவேன் ; செத்தே போனால் சிரியாரோ" என்கிறார். ஆகவே அடியார் கூட்டத்தைக் காட்டி, சாவாப் பெருதெறியை அருளுக என்பது அடிகளாரது வேண்டுகோளாகும். Oh! Dancer of the golden hall in Thillai! Thou so rare like gold itself, Considering me as a worthy fellow; you, yourself came and made me Thine own. Now if you desist from granting Thy grace who else is here to console me bidding me to shun all fear? I am confused in my mind and steeped in sorrow, due to separation from Thee. If Thou doth not call out to me now and show me Thy enlightened congregation, I will die. Thereafter you will become the laughing stock of the world. Think well this factor. கு-ரை: பொருளா = பொருளாக. பொன்= மாறிலாத ஒளிக்கு உவமை. ஆசிரியனாய்க் கடவுள் ஆட்கொண்டருளி மறைந்தவுடன் அடிகள் நெஞ்சம் திகிலடைந்தமையால் 'மருளார் மனத்தோடு' என்றார். தெருள்= தெளிவு, ஞானம். வீடருளப்பெறாது இறந்தால், பிறவி வருமென்ற அச்சம் பற்றி, 'செத்தே போனால் சிரியாரோ' என்றார். பிரிவாற்றாமையால் சாதல் கூடுமென்ற குறிப்பும் காண்க. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் பிறவியில் வீழ்தல் எஞ்ஞான்றும் இல்லையாயினும் அடிகளது வீடுபேற்று அவா அவ்வாறு அவரை அஞ்சப்பண்ணியது என்க. 9. சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் றிருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் றிருநாமந் தரிப்பார் பொன்னம் பலத்தாடுந் தலைவா வென்பா ரவர்முன்னே நரிப்பாய் நாயே னிருப்பேனோ நம்பி யினித்தா னல்காயே. சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்: திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து உன் திருநாமம் தரிப்பார்: 'பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னே நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ ? நம்பி ! இனித்தான் நல்காயே ! sirippaar kaLippaar theenippaar thiraNdu thiraNdu un thiruvaarththai virippaar keedpaar messuvaar vevveeRu irunthu unthirunaamam tharippaar ponnampalaththu aadum thalaivaa enpaar avar munnee narippaay naayeen iruppeenoo nampi iniththaan nalkaayee பொ-ரை: அடியார்கள், நின்னைக் கலந்துள்ள களிப்பு மிகுதியால் தாமே சிரிப்பார்கள், அகம் மகிழ்வார்கள்; நிட்டை கூடுவார்கள்; கூடிக்கூடி உன் புகழமைந்த வார்த்தைகளை விரித்துரைப்பார்கள்; விரும்பிக் கேட்பார்கள்; வியந்து பாராட்டுவார்கள். தனித்தனியே இருந்து நின் திருநாமமாம் திருவைந்தெழுந்தை மனத்தில் தரிப்பார்கள். "பொற் சபையில் கூத்தாடும் தலைவனே” என்று அழைப்பார்கள்; அத்தகையோர்முன் நாய் போன்றவனாகிய நான் இகழ்ச்சிக்கு உரியவனாய் இருப்பேனோ? நம்பி ! எனக்கு இனியாவது அருள் புரிவாயாக ! சிறப்புக் கருத்து: திருநாமம் 'தரித்தல்' என்பது திருவைந்தெழுத்தைக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கச் சொல்லும் விதம் மூன்று. (1) அருகில் இருப்போர் கேட்கும்படி ஒலி உண்டாக்கிச் சொல்லுவது; (2) ஒலி உண்டாக்காமல் நாவும் உதடும் அசைந்து ஆடுகின்ற நிலையில் உச்சரிப்பது; (3) ஒலி உண்டாக்காமலும் நா உதடுகள் அசையாமலும் மனத்திற்குள்ளே உச்சரிப்பது. Thy devotees are wont to indulge in gleeful laughter, wont to form congregation after congregation elaborating on Thy holy scriptures, listening to discourse, lauding Thy greatness, chanting Thy sacred names in separate batches. They cry out 'Oh Chief, dancing at the golden hall'. In front of all these men, will I, this cur, have to remain distraught, still hoping for Thy grace? Pray grant Thee Thy blessings at least now. கு-ரை: 'தேனிப்பார்' என்பது, தியானிப்பாரென்பதன் மரூஉ. 'வெவ்வேறிருந்து' என்பதைத் 'தேனிப்பார்' என்பதனோடுங் கூட்டலாம். 'தரிப்பார்' என்பதில் தரிப்பு= நினைவு, ஞாபகம். அணிவார் என்ற பொருள் சிறப்புடையதன்று. நரிப்பு= இகழ்ச்சி. 10. நல்கா தொழியா னமக்கென்றுன் னாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தா னினைந்துருகிப் பல்கா லுன்னைப் பாவித்துப் பரவிப் பொான்னம் பலமென்றே யொல்கா நிற்கு முயிர்க்கிரங்கி யருளா யென்னை யுடையானே. 'நல்காது ஒழியான் நமக்கு' என்று உன் நாமம் பிதற்றி, நயன நீர் மல்கா, வாழ்த்தா, வாய்குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப், 'பொன்னம்பலம்' என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய் ! என்னை உடையானே! nalkaathu oziyaan namakku enRu un naamam pithaRRi nayananiir malkaa vaazththaa vaaykuzaRaa vaNangkaa manaththal ninainthu uruki palkaal unnai paaviththu paravi ponnampalam enRee olkaa niRkum uyirkku irangki aruLaay ennai udaiyaanee பொ-ரை: என்னை அடிமையாக உடைய முதல்வனே! இறைவன், அடிமையாகிய நமக்கு அருள் வழங்காதிரான் என நம்பி நின் திருநாமமாம் பஞ்சாக்கரத்தைப் பலகாலும் உரைத்தோம். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, வாயால் வாழ்த்தி, உரை தடுமாறி, மெய்யால் வணங்கி நின்றோம். மனத்தால் நினைந்து, நினைந்து உருகி நின் திருமேனியைத் தியானித்து வணங்கினோம். பொன்னம்பலம் எனப் பலகாற் கூறித் தளரும் உயிராகிய எனக்குத் திருவுள்ளம் இரங்கி அருள்புரிவாயாக. சிறப்புக் கருத்து: 'ஆண்டவன் அடிமையைக் காக்க என்றும் கடமைப்பட்டவன் ஆதலின் நமக்கு அருள் வழங்காமலிரார்' என்று நம்பிக்கையுடன் கூறினார். இறைவனைத் தியானித்தும், துதித்தும் உரை தடுமாறியும், பலகால் பணிந்தும், 'பொன்னம்பலம்' எனப் போற்றியும் சோர்கின்ற அடியேற்கு இரங்கி அருள வேண்டும் என்பது கருத்து. சிறப்பில் சிறப்பான திருநாமம் திருவைந்தெழுத்தாகும். இதனைச் “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்" எனும் அப்பர் சுவாமிகள் திருமுறையால் அறியலாம் . "நாமம் பிதற்றி" என்பது பசுபோதம் அழிந்த நிலையில், அருளனுபவ நிலையில், பார்ப்பாரும் , கேட்பாரும் பழிப்பார்களே என்ற உணர்வுமின்றி 'ஓதுதல்' ஆகும். மனத்தில் நிறைந்து ஒளிரும் அன்பு கண்களில் நீர்ப்பெருக்காக வெளிப்படும் என்பதை உலகியலில் வைத்துத் திருவள்ளுவரும் “புன்கணீர் பூசல் தரும்" என்றார். ஆகவே இறைவனிடம் வைத்த இடையீடில்லா அன்பால் கண்களில் கண்ணீர் பெருகியதை "நயன நீர் மல்க" என்றார். அன்பனுபவம் அகம் நிறைந்து , வாயால் வாழ்த்தும்போது மனவிரைவு சொல்லினும் மிகுவதால் குழறும் நிலையை “வாய் குழறா" என்றார். வாய் பேச முடியாத நிலையில் உடலை மரம் போலக் கீழே கிடத்தி வணங்க நேரும். அதனால் “வணங்க" என்றார். இவ்வண்ணம் மனம், மொழி, மெய்களால் பரவினேன் என்பதைப் "பரவி” என்றும் கூறினார். இந்த மெய்ப்பாடுகளிலிருந்து தன்னுணர்வு மீளும்போது, "பொன்னம்பலம் பொன்னம்பலம்" என்றே வாய் சோர்கின்றேன் என்று அருளினார். Oh Lord, my Chief! Assured that Thou will not withhold Thy grace, I chant Thy name, greeting Thee with tears welling up, tongue quivering, paying obeisance with heart-melting thoughts and extolling Thy glories over and over again. Pray take pity on this living creature, me, that stands emaciated with repeated cries as "Ponnambalam". கு-ரை: பிதற்றுதல் = பலகால் பேசுதல் “மல்கா" - மல்க என்பதன் விரி. மல்கி என்றுங் கூறுப. மல்குதல் = பெருகுதல், குழறா = குழறி. வாய்தடுமாறுதல் அன்பின் மெய்ப்பாட்டிற்கு அறிகுறி. பாவித்து= கடவுள் உயிரோடு இரண்டறக் கலந்துள்ள நிலையை எண்ணி, ஒல்கா= ஒல்கி, தளர்ந்து. THIRUCHCHITRAMBALAM 22. கோயில் திருப்பதிகம் 22. KOVIL THIRUP-PATHIKAM (அநுபோகவிலக்கணம்) The Decad of the Thillai Temple தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. Marks of Divine Experience ஆசிரியவிருத்தம் Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் இப்பதிகம் பற்றிய குறிப்புக்கள் முன்னைத் திருப்பதிகத்தின் முகத்தே கொடுக்கப்பட்டன. இதன்கண், அடிகளது அநுபவம் இனிது விளங்கி நிற்றல்பற்றி, இதற்கு 'அநுபோக இலக்கணம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர், இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளில் காணப்படுவது. இது முழுவதும் எழுசீரடி விருத்தத்தால் ஆயது. இது கோயில் திருப்பதிகமாகவும், இதனுள் எல்லாத் திருப்பாட்டுக்களிலும், 'திருப்பெருந்துறையுறை சிவனே ' என்றே அடிகள் அழைத்தருளிச் செய்தல் கருதத் தக்கது. 'கோயில்' என்பது திருப்பெருந்துறையே எனச் சாதிப்பாரும் உளர். The ecstasy of union with the Lord is chronicled in this decad which portrays a more ebullient mood than before that has come upon the saint, consequent on his attainment of satisfaction about the Lord's showering of bliss on him. 22. 1 மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே யூறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே யீறிலாப் பதங்களி யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே. மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து, அமுதே ஊறி நின்று, என் உள் எழு பரஞ்சோதி ! உள்ளவா காண வந்தருளாய்; தேறலின் தெளிவே ! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே ! maaRi ninRu ennai mayakkidum vanjsa pulan ainthin vazi adaiththu amuthee uuRi ninRu ennuL ezu paranjsoothi uLLavaa kaaNa vantharuLaay theeRalin theLivee sivaperumanee thirupperunthuRai uRai sivanee iiRu ilaa pathangkaL yaavaiyum kadantha inpamee ennudaiya anpee பொ-ரை: தேனின் தெளிவு போன்ற தூய இனிமையானவனே ! சிவபெருமானே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற மங்கலப் பொருளான சிவனே! முடிவற்ற பதவிகள் எல்லாவற்றையும் கடந்த ஆனந்தமானவனே ! என்னுடைய அன்பு உருவமே ! என்னைப் பகைத்து நின்று எனது அறிவை மயங்கச் செய்யும் கள்ள ஐம்புலன்களின் வாயில்களை அடைத்தவனே ! அவ்வாற்றால் எனது உள்ளத்தில் அமுதம் ஊற்றெடுத்து நிற்க, ஆங்கே தோன்றுகின்ற மேலான ஒளியே ! நீ உண்மையாக இருக்கும் விதத்தை நான் காணும்படி வந்து அருள் செய்வாயாக ! Oh ambrosia that blocked the outlet of the deceitful unfettered and wayward senses five, that turn around and mislead me! Effulgent Lord, expansive nectar-like, that rises up from inside! Pray come over to us that we may see Thee as Thou in reality are! Thou, clear honey-like Lord Civa, Lord who has abode in Thirup-Perun-Thurai! Oh the embodiment of bliss that has no end- that transcends all states of existence! Thou my very dear one! கு-ரை: புலன் = பொறியறிவு. பொறி நுகருமியைபுடைய பொருளென்றுங் கூறுப. ஊறி நின்று= ஊறி நிற்க. உள்ளவா= உள்ளவாறு. அது கடவுளின் சொரூப நிலையைக் குறிக்கும். காண= அறிந்து அனுபவிக்க . பதவிகள் யாவும் தத்துவங்களுள் அமைதலின், தத்துவங்கடந்த தனி முதல்வனை 'பதங்கள் யாவையுங் கடந்த' என்றார். 'ஈறிலா' என்பதை 'இன்பமே' என்பதோடு முடித்து, எல்லையில்லாத இன்பமென்பதும் உண்டு. அதுவே வீட்டின்பமாம். அன்பே சிவமாம் என்றபடி சிவஞானிகளுடைய அன்போடு அத்துவிதமாய்க் கலந்திருத்தலின் 'அன்பே' என்றார். 2. அன்பினா லடியே னாவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந் துருக வென்பர மல்லா வின்னரு டந்தா யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே. அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருக என் பரம் அல்லா இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஓர் கைம்மாறு; முன்பும் ஆய்ப் பின்பு முழுதும் ஆய்ப் பரந்த முத்தனே ! முடிவு இலா முதலே! தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரைசே! anpinaal adiyeen aaviyoodu aakkai aananthamaay kasinthu uruka enparam allaa in aruL thanthaay yaan ithaRku ilan oor kaimmaaRu munpumaay pinpu muzuthumaay parantha muththanee mudivu ilaa muthalee thenperun thuRaiyaay sivaperumaanee siir udai sivapuraththu araisee. பொ-ரை: எல்லாப் பொருட்களுக்கும் முன்னர்த் தோன்றியவனே! உனக்குப் பின்னர் தோன்றிய அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் மலமற்றவனே ! எல்லையில்லாத முதற்பொருளே! தெற்கே உள்ள திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே ! சிவபெருமானே ! சிறப்புடைய சிவலோக மன்னனே! உன்மீது செலுத்திய அன்பினால் அடியேனின் உயிரும் உடலும் ஆனந்தமாய்க் கசிந்துருகும்படி எனக்குக் கிடைக்கத் தகுதியில்லாத இனிய பேரருளைத் தந்தாய். இத்தகைய பேருபகாரத்திற்கு அடியேன் உனக்குத் திரும்பச் செய்யக் கூடிய உதவி இல்லாதவனாய் இருக்கிறேன். Oh Lord, Thou granted me Thy sweet grace that goes beyond the limits of my eligibility for the same, so that I, in both body and soul may melt and thaw in a devotional state of total bliss. I, for this generosity have nothing to give in return to Thee. You are pervading out as the primordial as also the futuristic and as the wholesome one! Thou, the ultimate, that art the cause and hath no extinction. Lord of the southern Thirup-Perun-Thurai, Oh, Lord Civa, Lord of the bliss-filled Civa Puram! கு-ரை: பரம்= தகுதி, பக்கம். "ஓர் கைம்மாறு இலன்” என மாற்றுக. சிவபுரம் என்பது வீட்டுலகம் என்ப. 3. அரைசனே யன்பர்க் கடியனே னுடைய வப்பனே யாவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப் பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னு மமுதத்தெண் கடலே திருப்பெருந் துறையுறை சிவனே யுரையுணர் விறந்துநின் றுணர்வதோ ருணர்வே யானுன்னை யுரைக்குமா றுணர்த்தே. அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை புரை புரை கனியப் புகுந்து நின்று, உருக்கிப் பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே ! திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே ! உரை, உணர்வு, இறந்து நின்று, உணர்வது ஓர் உணர்வே ! யான், உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே . araisanee anparkku adiyaneen udaiya appanee aaviyoodu aakkai purai purai kaniya pukunthu ninRu urukki poy iruL kadintha meysudaree thirai poraa mannum amutha theNkadalee thirupperunthuRai uRai sivanee urai uNarvu iRanthu ninRu uNarvathu oor uNarvee yaan unnai uraikkumaaRu uNarththee. பொ-ரை: அன்பர்களுக்கு மன்னனே! அடியேனுடைய தந்தையே! உயிரோடு கூடி நிற்கும் உடம்பும், உடம்பிலுள்ள மயிர்க்கால்கள் தோறும் நெகிழ்ந்து உருகும்படி என் உள்ளத்தே எழுந்தருளி நின்று உருகுவித்தவனே! பொய்மையாகிய எனது அறியாமையைத் தொலைத்த மெய்யொளியே! அலை மோதாது நிலையான அமுதமாகிய தெள்ளிய ஆனந்தக் கடலே ! திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானே! வாக்காலும் மனத்தாலும் அறிய முடியாதவனே! இவை இரண்டும் கலந்த சிவஞானத்தால் (பதி ஞானத்தால் மட்டும்) அறியக்கூடிய பேரறிவே ! நான் உன்னைப் புகழ்ந்து உரைக்கின்ற விதத்தை நீ எனக்கு அறிவுறுத்துவாயாக. Oh Lord, You are the King of Thy devotees; You are the father of this slave; You as the flame of truth entering into me, dispelled the darkness of ignorance. My body and soul are gradually thawing and melting in devotion. Thou, everlasting sea of ambrosia undisturbed by wafting billows! Lord Civa abiding in Thirup-Perun-Thurai ! Thou, verily the rare gnosis realisable as gnosis beyond words and senses! Pray, enlighten me on how I can praise Thee. கு-ரை: அன்பர்க்கரசனே என மாறுக. ஆவி கனிதல் = தற்போதங் கழலுதலாகும். ஆக்கை உருகுதல் மெய்ப்பாட்டினால், புரை = துவாரம். இது மயிர்க் காலினைக் குறிக்கும். பொய்யிருள் என்றெடுத்து, பொய் நிலையாமையையும், இருள் அறியாமையையும் குறிக்கலாம். கடவுள் போக்குவரவற்ற பூரணன் ஆதலின் 'திரை பொரா' என்றார். உரையுணர்வு என்ற இடத்து, வாக்கின் சம்பந்தமான அறிவு. அதாவது சுட்டறிவு என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. 'பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே' என்றபடி, இறைவனைப் பதிஞானத்தாலே தான், உணர்தல் கூடும் என்பார், 'உரையுணர்விறந்து நின்றுணர்வதோர்' என்றார். இறைவன் ஞான வடிவினனாதலின் 'உணர்வே' என்றார். உணர்வதை உணர்த்தலரிது என்ற கருத்துப் பற்றி, 'உரைக்கும் ஆறுணர்த்தே ' என்றார். 4. உணர்ந்தமா முனிவ ரும்பரோ டொழிந்தா ருணர்வுக்குந் தெரிவரும் பொருளே யிணங்கிலி யெல்லா வுயிர்கட்கு முயிரே யெனைப்பிறப் பறுக்குமெம் மருந்தே திணிந்ததோ ரிருளிற் றெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கடா மில்லா வின்பமே யுன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. உணர்ந்த மாமுனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு - அரும் பொருளே ! இணங்கு இலி ! எல்லா உயிர்கட்கும் உயிரே ! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே ! திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ வெளியே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே ? uNarntha maamunivar umparoodu ozinthaar uNarvukkum therivarum poruLee iNangku ili ellaa uyirkadkum uyiree enai piRappu aRukkum emmarunthee thiNinthathoor iruLil theLintha thuuveLiyee thirupperunthuRai uRai sivanee kuNangaL thaam illa inpamee! unnai kuRukineeRku ini enna kuRaiyee ? பொ-ரை: கலைஞானம் உடைய பெரிய முனிவர்களும், தேவர்களும் பிற பெரியோர்களும் தமது உணர்வாலும் உணர்ச்சியாலும் உணர முடியாத பரம்பொருளே! ஒப்பில்லாதவனே! அனைத்து உயிர்கட்கும் உயிராக உள்ளவனே! என் பிறவிப் பிணியை நீக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே ! செறிந்த இருளில் கிடந்து அலமருவோர்க்கு அங்கு இனிது தோன்றிய ஒளி போன்றவனே ! இது உவமை ஆகு பெயர் . உண்மைப் பொருள் : அறியாமையில் மூழ்கி இருந்த என் முன் நீ பொருக்கெனத் தோன்றி என்னை அறிவன் ஆக்கினாய். திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! முக்குணங்களின் தொடர்பற்ற பேரானந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனிப் பெறக்கடவதாய் எஞ்சி நிற்கும் பொருள் யாது உளது? ஒன்றுமில்லை என்றவாறு. Thou, beyond the comprehension of learned saints and the gods of heaven and all others ! Thou, the life of all beings and yet unmixed with these beings, Thou the very medication that cuts off my birth cycles! Thou, the clear pure space amidst the dense darkness! Lord Civa abiding at Thirup-Perun-Thurai! Thou, the embodiment of bliss, free of all traits! Now that I have come nigh unto Thou, what else is there for me to ask of Thee? கு-ரை: உணர்ந்த என்பதற்குப் பரஞானத்தால் உணர்ந்த என்று பொருள் கொண்டு, பரஞானத்தாலும் முற்றிலும் அறிய முடியாத முதல்வனாகலின் 'உணர்ந்த மாமுனிவர்' என்றார். இணங்கு= இணங்குதல், ஒப்பாதல். ஒழிந்தார்= பிறர். எனைப் பிறப்பறுக்கும் என்பதில் எனை என்பதற்கு எத்தனையோ என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. 'இருளில் தெளிந்த' என்பதற்கு இருளில் நீங்கியறிந்த என்றும் , இருளிடத்தே யறிந்த என்றும் பொருள் கொள்ளுதலும் உண்டு. இருளென்று அறியப்படாத இருளாக இருத்தலின், ஆணவத்தை 'ஓரிருள்' என்றார். குணங்கள் என்பது சாத்வீகம், இராசதம், தாமதம் என்பவை . குணங்களோடு கூடிய இன்பம், தத்துவச் சார்புடையதாய் அழியுந் தன்மை யுடையதாகலின் இறையின்பத்தைக் 'குணங்கள் தாமில்லா இன்பம்' என்றார், பேரின்பமாதலின் என்ன குறை என்றார். 5. குறைவிலா நிறைவே கோதிலா வமுதே யீறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே யிறைவனே நீயென் னுடலிடங் கொண்டா யினியுன்னை யென்னிரக் கேனே. குறைவு இலா நிறைவே ! கோது இலா அமுதே ! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே ! மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே ! சிறை பெறா நீர்போற் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே! இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே? kuRaivu ila niRaivee koothu ilaa amuthee iiRu ilaak kozum sudar kunRee maRaiyum aay, maRaiyin poruLum aai, vanthu en manaththidai manniya mannee siRai peRaa niir pool sinthai vaai paayum thirupperunthuRai uRai sivanee iRaivanee nii en udal idam koNdaay ini unnai en irakkeenee பொ-ரை: யார்பாலும் எதையும் வேண்டாத பூரணப் பொருளே! குற்றமற்ற அருமருந்தே ! இறுதியிலாத சோதிப் பிழம்பே ! வேதங்களுமாகி, வேதங்களில் விளம்பப் பெறும் பொருளுமாகி எழுந்தருளி வந்து அடியேன் மனத்தில் இடம் கொண்ட அரசே! அணையற்ற வெள்ளம் போல என் மனப்புலத்தில் வந்து பாய்கின்ற, திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவனே ! இறைவனே! நீ அடியேனுடைய தேகத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு இடம் கொண்டாய் ! இனி யான் உன்னை யாது வேண்டி யாசிக்கக் கூடும்? Thou, the fullness without any short fall! Flawless Ambrosia! Like unto an endless hillock of flaming fire! Thou, the eternal, that stayeth firm in my thoughts as the sacred scriptures as also the import of these scriptures! Lord Civa, flowing down my mind like speeding waters that are unrestricted by barrages. My Lord, Thou got sheltered in my physical frame. Hence what else shall I now beg of Thee? கு-ரை: கொழுஞ்சுடர்க்குன்று என்பது, அயனும் மாலும் அடிமுடி அறியாது நின்ற அனற் பிழம்பு என்பாரும் உளர். சிறை = கரை, மறை = கலைஞானமாகிய வேதமென்ப. உடலிடத்தே உயிரோடு அத்துவிதமாகக் கலந்த பின் பூரண இன்பம் கிடைத்தலின், 'என்னிரக்கேனே' என்றார். 6. இரந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே யிமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தவா காய நீர்நிலந் தீகா லாயவை யல்லையா யாங்கே கரந்ததோ ருருவே களித்தன னுன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே ! இமையோர் சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய் ! திருப்பெருந்துறை உறை சிவனே ! நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய் ஆங்கே , கரந்தது ஓர் உருவே ! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டு கொண்டு இன்றே. iranthu iranthu uruka en manaththuLLee ezukinRa soothiyee imaiyoor siramthanil poliyum kamala seevadiyaay thirupperunthuRai uRai sivanee nirantha aakaayam niir nilam thiikaal aayavai allaiyaay aangkee karanthathu oor uruvee kaLiththanan unnai kaN uRa kaNdu koNdu inRee. பொ-ரை: உன்னுடைய திருவருளை வேண்டி வேண்டி என் உள்ளம் உருகும் காலத்தே அங்கு தோன்றுகின்ற ஒளியே! விண்ணவர் சிரத்தின் மீது விளங்குகின்ற சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! எங்கும் பரவியுள்ள விண்ணும், நீர், நிலம், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களும் ஆனாய். அவை அல்லாதவனும் ஆகி, அந்தந்தப் பூதங்களில் மறைந்து அருள் உருவம் ஆனவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு உள்ளத்திற் கொண்டு மகிழ்ந்தேன் . Thou, the flaming grace that riseth up in my mind, even as I beg and beg for your grace melt at heart, seeking Thy generosity! Your holy lotus-like Feet that shineth bright over the heads of heaven-dwelling Gods! Oh Lord Civa abiding in Thirup-Perun-Thurai, Thou manifest as the eternal sky, the earth, water, fire and air, and yet you are none of these five elements . However you are concealed in these and other forms around. I rejoice now this day seeing Thee with my own eyes. கு-ரை: சோதி என்றது பேரறிவை; நிரந்த = வரிசையான, ஐம்பூதத்திற்கும் ஆதாரமாகிய கலைகளை உருவாகக் கொண்டவன் ஆதலாலும், அவ்வுருவம் எளிதில் புலனாகாமையாலும், ஆங்கே கரந்ததோருருவே என்றார். அருட்சார்பு பற்றிய திருவுரு வாதலின் ஓருருவே என்றார். 'கண்டு கொண்டு' என்பதில், 'கொண்டு' என்பதைத் துணைவினையாகக் கொள்ளுதலுமுண்டு. 7. இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தே னீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே . இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்: நீ அலால் பிறிது மற்று இன்மை ; சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே! ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற் பாரே ? inRu enakku aruLi iruL kadinthu uLLaththu ezukinRa njaayiRee poonRu ninRanin thanmai ninaippaRa ninaintheen nii alaal piRithu maRRu inmai senRu senRu aNuvaay theeynthu theeynthu onRaam thirupperunthuRai uRai sivanee onRum nii allai anRi onRu illai yaar unnai aRiyakiRpaaree பொ-ரை: இது பரம சித்தாந்தத்தை உள்ளடக்கிய மிகச்சிறந்த பாட்டு. இதையே திருவாசகத்தின் இருதயமான பாட்டு என்பர் அறிஞர். எனது ஆன்மா சிறிது சிறிதாகப் பாசக்கூட்டங்களினின்றும் விடுபட்டுத் தேய்ந்து தேய்ந்து அணு வடிவில் முத்தி நிலையை அடைந்தது. அந்த நிலையில் பிறிதொரு பொருளை அறிதலும் இச்சித்தலும் , அனுபவித்தலும் இன்றி உலகையும் மறந்து என்னையும் மறந்து நிற்கின்றேன். திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே ! அந்நிலையில் உன்னையே அனுபவித்து உனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கின்றேன். எனக்கு அருளும் காலம் எய்திய இந்நாளில் என்மீது கருணை கூர்ந்து காலையில் முளைத்து எழுந்து மேலே செல்கின்ற கதிரவனைப் போன்று உனது பேரொளியை வீசி எனது அறியாமையாகிய இருளை நீக்கி என் உள்ளத்துள் நின்றனை. இத்தன்மையால் உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெய்ப்பொருளாகாது என்ற உண்மை ஞானத்தை நான் உணரப்பெற்றது உனது திருவருள் வழியே அன்றிக் கருவிகளின் வழியாகவும் தற்போதத்தின் வழியாகவும் அல்ல என்பதனையும் உணர்ந்தேன். அவ்வாறு அருளிய உனது பெருங்கருணையை என்னென்று புகழ்வேன். நீ இவ்வுலகப் பொருட்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே இல்லை. ஆயினும் உன்னைக் காண்பவர் எவரேனும் உளரோ? இல்லை என்பதே ஆயிற்று. Showering Thy grace on me this day dispelling darkness, Thou standeth here in my mind like unto a rising sun. On such nature of Thine, I contemplate deeply, to the exclusion of all other thoughts - contemplating on the fact that nothing else exists, apart from Thee anywhere. Oh Lord Civa abiding in Thirup-Perun-Thurai! Wearing out incessantly and getting reduced bit by bit to an atomic state, I merge into Thee. Thou art not anything in the Universe, and yet nothing exists in the Universe without Thee. You are the essence in all. Is there anyone (here on earth) who can comprehend Thee. கு-ரை: பொருள்களின் பருமை நுணுகி ஒடுங்கிச் செல்லுந்தோறும் அவற்றிற்கு இடக்கொடுத்து நிற்கும் சார்பும் நுணுக்கமாகவே அமையும். கரும்பின் பருமை எங்கணும் நிறைந்துள்ள சாறும் அக்காலத்துப் பருமையாகவே நிறைந்து நிற்கும். அதனுடன் விரவிநிற்கும் இனிமைப்பண்பும் அச்சாறு முழுவதும் பரந்தே நிற்கும். பின்பு அச்சாறு பிழிந்தெடுக்குங்கால் பரப்பு நுணுகிய நிலையினை எய்தும். அப்பொழுது இனிமைப் பண்பும் அதற்கேற்றவாறு நுணுகிய நிலையினை எய்தும். மேலும் பாகு ஆகும் போதும், கண்டு ஆகும் போதும் மேலும் மேலும் நுணுக்கமெய்தும். அவ்வப்போதெல்லாம் இனிமைப் பண்பும் அவ்வவற்றிற்கு இயைந்தவாறு நுணுக்கமெய்தும். இம்முறையே ஆண்டான் பொருள்களுடன் இயைந்து ஆண்டாண்டு நுணுக்கமெய்துவதற்கு ஒப்பாமென்க. 'சென்று சென்று' என்பது முதலிய பகுதிகளை முதலில் கூட்டி, ' சிவனே, ஒன்றும் நீயல்லை; அன்றி ஒன்றில்லை; ஆதலின், உன்னை அறியகிற்பார் யார்? ஆயினும், நீ இன்று எனக்கு அருளி என் உள்ளத்து நின்ற நின்தன்மையால், நீயலால் பிறிது இன்மையே யான் நினைப்பற நினைந்து நின்றேன்' என வினை முடிக்க. இன்று - எனக்கு அருளும் காலம் எய்திய இந்நாளில். எனக்கு அருளி - என்மேல் கருணை கூர்ந்து. 'இருள் கடிந்து' என்றதனை, ' நின்ற' என்பதற்கு முன்னே கூட்டுக. 'எழுகின்ற ஞாயிறு' என்றமையால் பொருட்கண்ணும், ' எழுந்து' என்பது பெறப்படும். முன்னைத் திருப்பாட்டில், இறைவன், தன் அடியார்களது உள்ளத்தில் தோன்றுகின்ற முறையை விளக்கியவாற்றிற்கேற்பவே இங்கும், 'ஞாயிறே' என்னாது, 'எழுகின்ற ஞாயிறே போன்று' எனக் காலையில் முளைத்தெழுந்து மேலே செல்லுகின்ற கதிரவனையே உவமையாகக் கூறினார். 'மன்னும் இருளை மதி துரந்தவாறு' என்னும் சிவஞான போதத்தையும் (சூ-11, அதி 2) அதன் உரையையும் காண்க. 'உள்ளத்து எழுந்து நின்ற' என இயையும். 'தன்மை' என்றது செயலை. 'தன்மையால் என்னும் உருபு தொகுத்தலாயிற்று. நினைப்பு அற - கருவிகளின் வழியும், தற்போதத்தின் வழியும் உணர்தல் அற்றுப் போக. நினைந்தேன் - உனது திருவருளின் வழியே உணரப்பெற்றேன். பிறிது - வேறொரு பொருள். மற்று, அசை நிலை. 'இன்மை' என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது. 'நீயலால் பிறிது இன்மையை உணர்ந்தேன்' என்றது, உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெய்ப்பொருள் ஆகாமையை உணர்ந்தேன்; அஃதாவது, உண்மை ஞானத்தைப் பெற்றேன் என்றவாறு . எனவே ' காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே' (தி.6 ப 95. பா.3 ) என்றது போல, இதுவும், 'நீ கருணை கூர்ந்து என் உள்ளத்தில் தோன்றி அறியாமையைப் போக்கி நீங்காது நிலை பெற்றமையால், யான் நினது மெய்ம்மையை உணர்ந்தேன் அல்லாது, வேறு எவ்வாற்றான் உணர்வேன்' என்று அருளிச் செய்ததாம், ' பிறிதொரு பொருள் இல்லை' எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், 'பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள்' (குறள் 351) என்புழிப்போல, 'பிறிதொரு மெய்ப்பொருள்' என்று சிறப்பு வகையாகவே கொள்ளப்படும். அல்லாக்கால், 'எனக்கு அருளி', 'இருள் கடிந்து', 'நின் தன்மையை நான் நினைந்தேன்' என்று வரும் திருமொழிகள் பலவும் மாறுகொளக் கூறலாய் முடியும். சென்று சென்று - பாசக் கூட்டங்களினின்றும் நீங்கி நீங்கி; அடுக்கு, சிறிது சிறிதாக நீங்குதல் பற்றி வந்தது. 'யாதனின் யாதனின் நீங்கியான்' (குறள் 341) என்றார் திருவள்ளுவ நாயனாரும். 'தேய்ந்து தேய்ந்து அணுவாய் ஒன்றாம்' என மாறிக் கூட்டுக. தேய்வதும், அணுவாவதும், ஒன்றாவதும் ஆன்மாவே என்க. ஆன்மா நித்தப் பொருளாதலின், தேய்தல் முதலியன அதன் வியாபாரமாம். முத்தி நிலையில் ஆன்மா இறைவனைத் தவிர பிறிதொரு பொருளை அறிதலும், இச்சித்தலும், அனுபவித்தலும் இன்றி, இறைவனையே அறிந்து, இறைவனையே இச்சித்து, இறைவனையே அனுபவித்து நிற்குமாதலின், அவ்விடத்து அஃது உலகை மறந்திருத்தலேயன்றித் தன்னையே தான் மறந்து நிற்கும். அதனால், அந்நிலையில் அதற்கு இறை அனுபவம் ஒன்றைத் தவிர்த்து ஏனைய வியாபாரங்களுள் ஒன்றும் இல்லையாதல் அறிக. இந்நிலையில் , 'உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே' (சிவஞான சித்தி, சூ. 11- 10) என்கின்றார் அருணந்தி சிவாசாரியார். இவ்வாறு ஆன்மா சிவனது திருவடி வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒருமுதலாய்க் காணப்படாது நிற்றலே ஆன்மா சிவத்தொடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல் ஆகும். சுத்த அத்வைதம், இவ்வாறன்றி, ஆன்மா முத்தியில் தானே பிரமம் ஆகும் என்னும் ஏகான்ம வாதம் முதலியன பொருள்படுமாறு இல்லை , இதனைச் சித்தாந்த நூல்கள் பலவிடத்தும் பலபடியாக இனிது விளங்க விளக்குதலை அறிந்து கொள்க. 'சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்' என்னும் தொடரை உமாபதி சிவனார் தமது சங்கற்ப நிராகரண நூலுள் சைவவாதி நிராகரணத்துள் எடுத்தோதியுள்ளார். அதுவே, 'பரம சித்தாந்தம்' என்னும் சிவஞானபோதத்து 10ஆம் சூத்திர முதல் அதிகரண பாடியத்துள் கூறப்பட்டமையும் அவ்விடங்களிற் காண்க. இத்திருப்பாட்டுள் இங்ஙனம் பரம சித்தாந்தத்தை அருளிச் செய்தமையின், இதனை 'திருவாசகத்தின் இருதயமான பாட்டு ' என்பர் அறிஞர். 'அணு' புலனாகாமை பற்றிக் கூறப்பட்ட உவமையாகு பெயர், சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நிலையை, திருவைந்தெழுத்தை மூன்றெழுத்தாகவும், பின்னர் இரண்டெழுத்தாகவும் பின்னர் ஓரெழுத்தாகவும் கணிக்கும் முறையில் வைத்து உணருமாறு அருளப்பட்டது. திருவைந்தெழுத்தை ஓரெழுத்தாகக் கணித்தல் இங்கு பிறர் மதம் பற்றிக் கூறப்பட்டது. 'ஆம்' என்னும் பெயரெச்சம், 'சிவன்' என்னும் செயப்படு பொருட்பெயர் கொண்டது. ' 'ஒன்றாதல்' என்பது 'ஒன்றித்து நின்று உணர்தல்' என்னும் பொருட்டாகலின் அதற்குச் செயப்படு பொருள் உண்மை அறிக. எனவே, "இவ்வாற்றானன்றி வேறாய் நின்று அறியப்படுவாயல்லை' என்பதை எடுத்தோதி, 'யார் உன்னை அறியவல்லார்' என்றதாயிற்று. 'யார்' என்னும் வினா ஒருவருமிலர் எனப் பொருள் தந்ததாயினும் பெரிதும் அரியர் என்றல் திருவுள்ளமாதல் அறிக. இங்ஙனம் கூறவே, 'பெரிதும் அரியவருள் நாயேனையும் ஒருவனாக்கிய நின் கருணையை என்னென்று புகழ்வேன்' என்பதும் பெறப்பட்டது. 'ஒன்றும் நீயல்லை, அன்றி ஒன்றில்லை' என்ற இரண்டிடத்தும், 'ஆயினும்' என்பதும் வருவித்து, 'நீ இவ்வுலகப் பொருள்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே இல்லை; ஆயினும், உன்னைக் காண்பவர் எவரேனும் உளரோ' என உரைக்க. 8. பார்பத மண்ட மனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதே லரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை யெழுந்ததோர் தேனே திருப்பெருந் துறையுறை சிவனே யாருற வெனக்கிங் காரய லுள்ளா ரானந்த மாக்குமென் சோதி பார், பதம், அண்டம், அனைத்தும் ஆய் முளைத்துப் பரந்தது ஓர் படர் ஒளிப் பரப்பே ! நீர் உறு தீயே! நினைவதேல் அரிய நின்மலா ! நின் அருள் வெள்ளச் சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறையுறை சிவனே! ஆர் உறவு எனக்கு, இங்கு? ஆர் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி ! paarpatham aNdam anaiththumaay muLaiththu paranthathu oor padar oLi parappee niir uRu thiiyee ninaivatheel ariya ninmalaa nin aruL veLLa siir uRu sinthai ezunthathoor theenee thirupperunthuRai uRai sivanee aar uRavu enakku ingku yaar ayal uLLaar aanantham aakkum en soothi பொ-ரை: நிலவுலகமும் அதன்மேலே உள்ள வைகுந்தம் போன்ற பதங்கள் முதலியவையும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டங்களுமாய்த் தோன்றி எங்கும் செறிந்து விளங்கும் நிறைந்த பேரொளிச் செறிவே ! வெற்றிருள் மறைந்து ஊடுருவி நிற்கும் தீப்போன்றவனே ! நினைவுக்கு எட்டாத அழுக்கற்ற விழுப்பொருளே! நின்னுடைய திருவருள் வெள்ளச்சிறப்புப் பொருந்திய மெய்யன்பர் திருவுள்ளத்து மேலோங்கி விளங்கும் பேரின்பத் தேனே ! திருப்பெருந்துறையில் திகழும் சிவபெருமானே! அடியேன்பால் பேரின்பம் பெருக்கும் பேரொளிப் பிழம்பே ! அடியேன் நின் திருவடியைச் சார்ந்தமையால் எளியோனுக்கு எவர்மாட்டும் உறவு, அயல் என்ற வேற்றுமை இல்லை. Thou, a vast expanse of spreading effulgence manifest as the earth, the heavens and all the universe! Thou, like fire immanent water, Thou, the flawless one beyond all thought ! Rising up as honey from the sacred hearts of Thy grace Thou filled flood of devotees ! Lord abiding in Thirup-Perun-Thurai! Thou that showers bliss on me! Who is here (on earth) that is my kin, and also not my kin. கு-ரை: நீருறு தீயென்பதற்கு அம்மையோடு இயைந்த அப்பன் என்றலும் ஒன்று. உறவும் பகையும் உண்மை உணராமையால் ஏற்படும் விருப்பு வெறுப்பினால் உண்டாவன. இறைவன் சார்புற்றார்க்கு அவ்விரண்டும் உளவாகா. உளவாகாமையால் உள்ளது அன்பொன்றேயாம். ஆகவே எல்லாரும் அன்பராவர் என்பதாம். 9. சோதியாய்த் தோன்று முருவமே யருவா மொருவனே சொல்லுதற் கரிய வாதியே நடுவே யந்தமே பந்த மறுக்குமா னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாது நீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் னிணையடி தந்தே சோதியாய்த் தோன்றும் உருவமே ! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய ஆதியே ! நடுவே ! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே ! தீது இலா நன்மைத் திருவருள் - குன்றே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! யாது நீ போவது, ஓர்-வகை? எனக்கு அருளாய் - வந்து நின் இணை - அடி தந்தே . soothiyaay thoonRum uruvamee aruvaam oruvanee solluthaRku ariya aathiyee naduvee anthamee pantham aRukkum aananthamaa kadalee thiithu ilaa nanmai thiruvaruL kunRee thirupperunthuRai uRai sivanee yaathu nii poovathu oor vakai enakku aruLaay vanthu nin iNai adi thanthee பொ-ரை: ஒளிப் பிழம்பாய்த் தோன்றும் திருவுடையானே ! ஒப்பில்லா அருவத்திருமேனி உடைய முழு முதல்வனே! சொல்லொண்ணாத முதல், நடு, இறுதியாய் நின்று இலங்கும் விழுப்பொருளே! ஆருயிர்களின் பிறவித் தளையை ஒழிக்கின்ற பேரின்பப் பெருங்கடலே ! எத்தகைய தீமையும் இல்லாத எல்லாவகை நன்மையும் நிறைந்த திருவருள் மலையே ! திருப்பெருந்துறை சிவபெருமானே ! நீ சிவக்குரவனாய் எழுந்தருளி வந்து எனக்கு உன் திருவடியைத் தந்து அருளினை. அங்ஙனம் தந்தருளிய நீ எளியேனைக் கைவிட்டுப் போகின்ற வகை எங்ஙனம்? அதை எனக்குச் சொல்வாயாக . Thou, Peerless one with no physical form, Thou manifest in the form of light effulgence! Thou beyond description, Thou the primordial, the middle, the last! The sea of bliss that cuts off all attachments! Mountain of grace, free of flaws! Oh Lord Civa abiding in Thirup-Perun-Thurai ! There is no way for Thee to part from me. Shower Thy grace and confer on me your twin Feet. கு-ரை: தொல்லோனாம் சிவபெருமாற்குத் தூமாயை உடையாகவும், தொல்லருள் உடலாகவும் உருவகிக்கப்படும். அம்முறையில் ஒளிவடிவமென ஓதப்பெற்றது. ஆண்டவன் ஆருயிர்களோடு எல்லா நிலையிலும், விரவிப் பிரிப்பின்றி நிற்பதால் 'ஆதியே, நடுவே, அந்தமே' என்று அருளினார். இவற்றைப் படைத்தல், காத்தல், துடைத்தல் எனலும் ஒன்று. பெரும் பேரின்பம் கடலாகவும் திருவருளாற்றல் மலையாகவும் உட்பட்ட மாண்பு சிந்திக்கத் தக்கது. 10. தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா வார்கொலோ சதுர ரந்தமொன் றில்லா வானந்தம் பெற்றே னியாதுநீ பெற்றதொன் றென்பாற் சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் றிருப்பெருந் துறையுறை சிவனே யெந்தையே யீசா வுடலிடங் கொண்டா யானிதற் கிலனொர்கைம் மாறே தந்தது, உன் - தன்னைக் கொண்டது, என் - தன்னை; சங்கரா! ஆர்-கொலோ, சதுரர் ? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று, என்பால் ? சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே ! எந்தையே ஈசா! உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே! thanthathu un thannai koNdathu en thannai sangkaraa aarkoloo sathurar antham onRu illaa aanantham peRReen yaathu nii peRRathu onRu enpaal sinthaiyee kooyil koNda emperumaan thirupperunthuRai uRai sivanee enthaiyee iisaa udal idam koNdaay yaan ithaRku ilan oor kaimmaaRee பொ-ரை: எனது உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருந்து அருளிய எங்கள் தலைவனே ! திருப்பெருந்துறை உறை பெருமானே ! அடியேனுக்கு அனுபோகப் பொருளாக உன்னைத் தந்தாய் ! அதற்குப் பதிலாக நீ என்னை ஏற்றுக் கொண்டாய் ! அடியேன் முடிவில்லாப் பேரின்பம் பெற்றேன் . நீ என்னிடத்தில் பெற்றுக் கொண்டது யாது ? எதுவுமில்லை. சங்கரா! நம் இருவருள் திறமையுடையவர் யார்? அப்பனே ! ஆண்டவனே ! எனது உடலைக் கோயிலாகக் கொண்டவனே ! இந்த அருட்செய்கைக்கு உனக்கு அளித்தற்குரிய பிரதி உபகாரம் எதுவுமில்லாதவனாய் யான் இருக்கிறேன் . Oh my Lord! Dweller of Thirup-Perun-Thurai! YOU GAVE THYSELF TO ME; the result of which I am experiencing everlasting happiness as an enjoyment object in the realm of bliss. On the contrary, YOU YOURSELF TOOK ME - this worthless cur and made me Thine own. By this, What have You gained? The answer will be 'NOTHING'. Oh Sankara ! Therefore, in this tug-of-love between You and me, who is cleverer? The logical answer will be that I am cleverer than You. Oh my father! Oh supreme being! You are the Lord of the universe. You have abided in my body and given me the unparallel and everlasting bliss; But I do possess nothing with me to offer You in gratitude for the grace You have showered on me . Note: It will be appropriate to quote Ratna Ma Navaratnam's words about this particular stanza. "In the above last stanza, the poet has immortalised the purest form of bliss. It ripples with the innocence of a child of bliss gazing into the eyes of love infinite and clasping his hands at the brilliant splendour of his divine Father questioning Him directly and sweetly as to who would prove victorious in a tug-of-love between them . Here, we hear the music of the sweetest song on earth and the beauty of Thiruvaachakam is embalmed in this key stanza". கு-ரை: சங்கரன் = சுகங்கொடுப்பவன். உடலின்பால் அறிவு சென்றபோதும் பேரின்பமே தோன்றுதலின் 'உடலிடங்கொண்டாய்' என்றார். கடவுளைப் பார்க்கிலும் தன்னைச் சமர்த்தனாகக் கூறியது இகழ்ச்சி போல் புகழ்ச்சி. THIRUCHCHITRAMBALAM 23. செத்திலாப் பத்து 23. SETHTHILAAP-PATHTHU (சிவானந்த மளவறுக் கொணாமை ) The Illimitable Bliss of Civan திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் "Alas! Why am I not dead yet?" திருச்சிற்றம்பலம் இறைவனது பிரிவாற்றாமையால் அடிகள் தாம் இறந்து படாதிருந்த தன்மையை நினைந்து இரங்கிக் கூறும் பகுதியாதலின், இது 'செத்திலாப் பத்து' எனப்பட்டது. இது, சொல்லொடு பொருட்கு உள்ள ஒற்றுமை பற்றிச் செத்திலாமையாகிய பொருளைச் சொல்மேல் ஏற்றி, செத்திலாப்பத்து என்றவாறு, 'ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்' (தொல் - சொல் 4) என்பது போன்று. எனவே, செத்திலாமையைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி என்பது இதன் பொருளாயிற்று. இனி வருகின்ற பத்துக்களுள் ஏற்பனவற்றிற்கும் இம்முறை கொள்க. உடம்பொடு நின்றவிடத்தும் அடிகள் சிவானந்தத்தையே அநுபவித்து இருப்பினும், அது, கருவி கரணங்களால் அளவுபட்டு நிற்றல் பற்றி, அங்ஙனம் அளவுபடாத பேரின்ப அநுபவ வேட்கையே இப்பகுதியின் உள்ளீடு என்னும் கருத்தால், இதற்கு, சிவானந்தம் அளவறுக் கொணாமை எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, திருப்பெருந்துறையில் அருளியது என்பதே, பதிப்புக்களில் காணப்படுவது. இப்பகுதி முழுதும் இடையிடையே சில சீர்கள் வேறுபட வந்த எண்சீரடி விருத்தத்தால் ஆயது. Saint Maanikkavaachakar gives vent to the infinite Bliss implied in saivite theological dispensation and bemoans his pathetic lot in having to depart from the Lord and His congregation at Thirup-Perun-Thurai. The repeated calls expressing 'death wish' are echoed and re-echoed in every stanza of this decad, as the Saint longs for casting off this mortal frame and joining the holy congregation once again - a hagiographical note which recalls the fact that he was once among the Saints attending on Lord Civa at Mount Kailash. Such fervent appeals are also seen in many other decads of Thiruvaachakam. Lord Civa's inimitable characteristics are described by the Saint, even as he pleads for early redemption. 23. 1 பொய்யனே னகநெகப் புகுந்தமு தூறும் புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங் கையனே னின்னுஞ் செத்திலே னந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை யிழந்தே னையனே யரசே யருட்பெருங் கடலே யத்த னேயயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை யறியேன் றிருப்பெ ருந்துறை மேவிய சிவனே. பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும் புதுமலர்க் கழல்-இணை-அடி பிரிந்தும் , கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன், ஐயனே! அரசே! அருள் - பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச் செய்ய மேனியனே! செய்வகை அறியேன் ; திருப்பெருந்துறை மேவிய சிவனே ! poyyaneen akamnekap pukunthu amuthu uuRum puthumalar kazal iNai adi pirinthum kaiyaneen innum seththileen anthoo viziththirunthu uLLa karuththinai izantheen aiyanee arasee arudperung kadalee aththanee ayan maaRku aRi oNNaa seyya meeniyanee seyvakai aRiyeen thirupperun thuRai meeviya sivanee பொ-ரை: தலைவனே ! மன்னனே ! அருட்பெருங்கடலே ! தந்தையே ! பிரமனும், திருமாலும் தேடிக் காண முடியாத சிவந்த திருமேனியுடையவனே! திருப்பெருந்துறை மேவிய சிவனே ! பொய்யனாகிய எனது உள்ளம் நெகிழும்படியாக அதன்கண் புகுந்து அருள் செய்தாய். அவ்வாறு நீ அருள் செய்தும், அமுதம் சுரக்கின்ற அன்று அலர்ந்த தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்துள்ள உனது இரண்டு திருவடிகளை அடியேன் பிரிய நேர்ந்தது. பிரிந்த பின்னர், வஞ்சகமுடைய யான் இதுவரை சாகாமல் இருக்கிறேன். ஐயோ! கண் விழித்துக் கவனமாக இருந்தும் என் மனத்தில் விரும்பிய எண்ணத்தை நிறைவேற்றாது கைவிட்டேன் . இனி அதனை அடைவதற்குச் செய்ய வேண்டிய முறையையும் அறிய மாட்டேன். Oh Lord! I departed from Thy Twin Feet, fair and bejewelled from where nectar flows and towards which I (albeit) of falsehood had (earlier) rushed with melting heart. Alas ! Even after this separation, I am not dead yet, but stand in solitude! Though physically awake, I missed the import of the inner mind. My Chief, Oh my Lord, Thou, the vast expanse of the sea of grace, sire of sacred form, beyond the comprehension of Thirumaal and Brahma! I know not what I have to do, Oh Lord abiding at Thy favourite shrine of Thirup-Perun-Thurai. கு-ரை: பொய்யனேன் = நிலையாதவற்றில் பற்றுடையேன். ' புகுந்து அமுதூறு' மென்பது 'புகுந்தமுதூறு' மென்றாயிற்று. புகுந்து அமுதூறுவிக்கும் என்றும் கொள்ளலாம் . பிரிவு ஆற்றாமையால் இறவாமையின் 'கையனேன்' என்றார். கையனேன் = வஞ்சகம் உடையேன்; சிறுமையேன். இன்னும்= பிரிந்து நாளாகியும் , விழித்திருந்தும் = கண்ணாலே இறைவனைக் காணப் பெற்றிருந்தும். உள்ளக் கருத்து = உடனே வீடடையும் எண்ணம். 2. புற்று மாய்மர மாய்ப்புனல் காலே யுண்டி யாயண்ட வாணரும் பிறரும் வற்றி யாருநின் மலரடி காணா மன்ன வென்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனமிக வுருகேன் பரிகி லேன்பரி யாவுட றன்னைச் செற்றிலே னின்னுந் திரிதரு கின்றேன் றிருப்பெ ருந்துறை மேவிய சிவனே. புற்றும் ஆய், மரம் ஆய்ப் புனல், காலே , உண்டி ஆய்; அண்ட வாணரும், பிறரும், வற்றி யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்துப் பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச் செற்றிலேன்; இன்னும் திரி தருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே ! puRRumaay maramaay punal kaalee uNdiyaay aNda vaaNarum piRarum vaRRi yaarum nin malar adi kaaNaa manna ennai oor vaarththaiyuL paduththu paRRinaay pathaiyeen manammika urukeen parikileen pariyaa udal thannai seRRileen innum thiritharu kinReen thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: திருப்பெருந்துறை வீற்றிருக்கும் சிவபெருமானே ! தாமரை மலர் போன்ற நின் திருவடிகளைக் கண்டு வணங்கி அருள் பெறுவதற்காக விண்ணுலகில் வாழ்வோரும் , பிற அண்டங்களில் வசிப்போரும், மற்றும் அவ்வாறு விருப்பமுறும் பலரும் கடும் தவம் இயற்றுகிறார்கள். அவ்வாறு உடல் அசையாது, இடம் பெயராது, காற்றைச் சுவாசித்துக் கொண்டு, மழை நீரால் நனைந்து கொண்டும் இருப்பதால் தம் உடம்பின் மேல் புற்றும், மரமும் வளரப் பெற்று உடல் உலர்ந்து போயினர். இவ்வாறெல்லாம் கடுந்தவம் இயற்றியும், நினது திருவடிகளைக் காணப் பெறாது நிற்கும் தன்மைத்தான அரசனே! சிவபெருமானே ! ஸ்ரீபஞ்சாக்கரமும், பிரணவப் பஞ்சாக்கரமுமாகிய ஒரே வார்த்தையை அடியேனுக்கு அறிவித்து அருள் செய்தாய். அவ்வுபகாரத்தை அறிந்தும் என் மனம் பதைபதைக்கவில்லை. உள்ளம் உருகவில்லை. அன்பும் செய்கிலேன். அன்பு செய்யாத இந்த உடலை அழித்து இறக்காமல் உள்ளேன். ஊர் சுற்றி வருகின்றேன். இது எவ்வளவு இழிவானது ? Oh Lord! Thy flowery Feet, the gods of heaven and all others, cannot see, in spite of their getting emaciated in penance over many incarnations such as ant hills and trees, consuming water and air alone as food! Thou took command of me through a single mystic exhortation. Yet, I do not melt at heart, nor shudder in trepidation. Neither do I display compassion. I do not despise this physical frame that is devoid of compassion. I am still wandering here in vain, Oh Lord Civa of Thirup-Perun-Thurai. Note: The mystic exhortation is evidently the Lord's command ordering him to come over to Thillai – vide line 12 of Keerthi Thiru Ahaval. கு-ரை: 'மரமாய்' என்பதற்கு மரம்போல் அசைவற்று நின்று என்று பொருள் கொள்வாரும் உளர். விண்ணுலகினர், மண்ணுலகில் வந்து இறைவனைக் காணத் தவம் செய்தமை - புராணத்துட் காண்க. ' ஓர் வார்த்தை' என்றது பிரணவம். பரிகிலேன் = அன்பு செய்யேன் என்றலுமுண்டு. 3. புலைய னேனையும் பொருளென நினைந்துன் னருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையி னானடந் தேன்விடைப் பாகா சங்கரா வெண்ணில் வானவர்க் கெல்லா நிலைய னேயலை நீர்விட முண்ட நித்த னேயடையார்புர மெரித்த சிலைய னேயெனைச் செத்திடப் பணியாய் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள்பு ரிந்தனை; புரிதலும், களித்துத் தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா ! எண்-இல் வான வர்க்கு எல்லாம் நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே ! pulaiya neenaiyum poruL ena ninainthu un aruL purinthanai purithalum kaLiththu thalaiyinaal nadantheen vidai paakaa sangkaraa eNNil vaanavarkku ellaam nilaiyanee alainiir vidam uNda niththanee adaiyaar puram eriththa silaiyanee enai seththida paNiyaay thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! காளையை வாகனமாக உடையவனே ! (சங்கரனே) அளவற்ற விண்ணவர்களுக்கு எல்லாம் ஆதாரமானவனே ! கடலில் எழுந்த நஞ்சை அமுது செய்தும் அழியாத் தன்மை உடையவனே ! பகைவர்களாகிய திரிபுராதிகளின் முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்தியவனே! கீழான அடியேனையும் ஒரு பொருளாகத் திருவுள்ளம் பற்றி உனது ஈடு இணையற்ற திருவருளை வாரி வழங்கினை ! அவ்வாறு நீ வழங்கியும், யான் அதனை அறியமாட்டாது, செருக்குக் கொண்டு போலிக் களிப்பெய்தி அவநெறியிலே சென்றேன் (தலையாலே நடந்தேன்), ஆதலால் நான் செத்துப் போகக் கட்டளை தருவாயாக. Taking note of me, the lowliest of men, Thou granted me Thy grace, upon which I, in a mood of delightful arrogance, took to an overconfident attitude, and behaved not in the virtuous way. Oh Lord of the Bull Mount, Lord Sankara, the permanent rest house of countless heaven dwelling gods, Sire Eternal that consumed the venom of billowy waters, Thou with a bow that decimated the forts of the recalcitrant asuraas, pray, bid me perish here and now Oh Lord of Thirup-Perun-Thurai. கு-ரை: தலையினால் நடந்தேன் = முறைக்கு மாறாக ஒழுகினேன். நிலை = ஆதாரம். சிலை= வில். 'செத்திட' என்பதில் இட என்னும் துணைவினை விரைவைக் குறித்து நின்றது. பணித்தல் = செய்வித்தல், கட்டளையிடுதல். 4. அன்ப ராகிமற் றருந்தவ முயல்வா ரயனு மாலுமற் றழலுறு மெழுகா மென்ப ராய்நினை வாரெ னைப்பலர் நிற்க விங்கெனை யெற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை மரக்க ணென்செவி யிரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம் என்பர் ஆய், நினைவார் எனைப் பலர் ; நிற்க-இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய் ? வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக்கண்; என் செவி இரும்பினும் வலிது; தென்பராய்த் துறையாய்! சிவலோகா ! திருப்பெருந்துறை மேவிய சிவனே ! anparaaki maRRu arunthavam muyalvaar ayanum maalum maRRu azal uRu mezukaam enparaay ninaivaar enai palar niRka ingku enai eRRinukku aaNdaay vanparaay murudu okkum en sinthai marakkaN ensevi irumpinum valithu thenparaay thuRai yaay sivalookaa thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: அழகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தை உடையவனே ! சிவலோகத்திற்கு உரியவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! எம் சிவபெருமானே! பிரமனும் திருமாலும் உன்னிடத்தில் பேரன்பு கொண்டனர். கடுந்தவம் புரிந்தனர். நெருப்பினில் இட்ட மெழுகு போல் உருகி எலும்புக் கூடாய் நின்றனர். இவர்களைப் போன்று பிற அடியார்களும் உன் திருவடியைக் கண்டு வணங்க இவ்வாறு கடுந்தவம் புரிந்தனர். எனினும் அவர்களுக்கு நீ காட்சி அளிக்கவில்லை (நான் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்குத் தெரியும்). என் மனம் வலிய பராய் மரத்தின் உலர்ந்த கட்டையைப் போன்றது. என் கண்ணோ காய்ந்த மரக்கட்டையால் ஆனது. என்னுடைய செவி இரும்பைப் பார்க்கிலும் வலிமையானது. இவ்வுலகின்கண் உள்ள இப்பேர்ப்பட்ட என்னை நீ எதற்காக ஆட்கொண்டு அருள் செய்தாய்? (அவ்வாறு கிடைத்த சிவானந்த அநுபவத்தை முழுதும் பயன்படுத்த உதவாத யான் இன்னும் செத்திலேனே!) Brahma and Thirumaal and all others devoted to Thee, engaged in rare penance, contemplate on Thee deeply, getting reduced to mere bones, much as wax is reduced, melting on fire. While many such were left standing outside, why didst Thou take me in under Thee? My heart is hard like knots in wood and so are my eyes. My ears are harder than steel. Oh Lord of Civa Loka, abiding at the southern shrine of Thirup-Paraaith-Thurai, Lord Civa of the famed Thirup-Perun-Thurai. கு-ரை: எனை = எத்துணையோ. பராய் = கடினமான ஒரு மரம். முருடு = கட்டை, விறகு. கடினமாய்க் காய்ந்த கட்டையில், நீர் வறண்டு போயிருக்கு மாதலின், உருக்கமில்லாத நெஞ்சிற்கு அது உவமையாயிற்று. கண்ணிற்கு மரமுவமையானதும் அக்கருத்துப் பற்றியே. இரும்பு துளைக்கப்படுதல் அருமை போலச் செவியும் நல்லுபதேசத்தால் தோட்கப்படாதது என்பார், 'செவி இரும்பினும் வலிது' என்றார். இறைவனது உபதேச மொழி, செவியில் தக்கவாறு புகுந்திருந்தால், தான் அவனைப் பிரிந்திருக்க இடமில்லையென்பது கருத்து. தென் = அழகிய, தெற்கின்கண் உள்ள. 5. ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பா லையனே யென்றுன் னருள்வழி யிருப்பே னாட்டுத் தேவரு நாடரும் பொருளே நாத னேயுனைப் பிரிவுறா வருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர்பி ரானே திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. ஆட்டுத் தேவர்-தம் விதி ஒழித்து, அன்பால் 'ஐயனே' என்று, உன் அருள்வழி இருப்பேன் ; நாட்டுத் தேவரும் நாடு-அரும்பொருளே ! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக் காட்டித், தேவ, நின் கழல் இணை காட்டிக், காய மாயத்தைக் கழித்து, அருள் செய்யாய்; சேட்டைத் தேவர்-தம் தேவர் பிரானே ! திருப்பெருந்துறை மேவிய சிவனே! aaddu theevar tham vithi oziththu anpaal aiyanee enRu un aruL vazi iruppeen naaddu theevarum naadu arum poruLee naathanee unai pirivuRaa aruLai kaaddi theeva nin kazal iNai kaaddi kaaya maayaththai kaziththaruL seyyaay seeddai theevar tham theevar piraanee thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: எல்லாவற்றையும் தொழிற்படுத்தும் காரணனே! சுரர்களுக்குத் தலைவரான பெருமானே! திருப்பெருந்துறையில் வீற்றிருந்தருளிய பெருமானே ! தலைவனே ! வினைக்கேற்ப என்னை ஆட்டுவிக்கிற தேவர்களது கட்டளையின் நீங்கி மெய்யன்போடு உனது திருவருள்வழி எப்போது இருக்கப் பெறுவேன்? உலகிலுள்ள தேவர் போன்ற பெருமையுடையவரும் தேடி அறிதற்கரிய பரம் பொருளே! முதல்வனே ! ஒளியானே ! உன்னைப் பிரியாமைக்கேதுவாகிய திருவருளை எனக்கு வழங்கி, கழலணிந்த உனது திருவடிகள் இரண்டையும் காண்பித்து, இந்த உடம்பாகிய சூழ்ச்சி வலையை ஒழித்தருளுக. Disregarding the sacrificial routine of the devas who perform goat killing rituals, I stay firm in Thy path of compassion, calling out, 'Oh my Chief', Thou, rare entity, beyond the reach even of the ascetics of the world! Oh Lord, may Thou put an end to my illusory physical frame and show Thy grace, revealing Thy bejewelled twin Feet and revealing Thy grace that is inseparable from Thee. Thou, the Chief, ruling over Gods that are given to misdemeanour. Lord abiding at Thirup-Perun-Thurai! கு-ரை: 'ஆட்டுத் தேவர்', என்பதற்கு விளையாட்டுத் தேவர், பொய்த் தேவர் என்ற பொருளுமுண்டு. நாட்டுத் தேவரென்பார், நிலத் தேவர், அதாவது வேதியர்கள் என்பதுமுண்டு. 'நாடு' என்பதற்கு உலகமெனப் பொருள் கொண்டு, 'நாட்டுத் தேவர்' என்பதற்கு புவனாதிபதிகளும் என்றும் பொருள் கொள்ளுதலுமுண்டு. காய மாயம் = காயமாகிய மாயம். மாயம் = தந்திரம், சூழ்ச்சி, நிலையாத் தோற்றம், 'சேட்டை', என்பதை, சேடு, ஐ எனப்பிரித்துப் பெருமையும் தலைமையுமுடைய எனப்பொருள் கோடலுமுண்டு. 6. அறுக்கி லேனுட றுணிபடத் தீப்புக் கார்கி லேன்றிரு வருள்வகை யறியேன் பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகா விறக்கி லேனுனைப் பிரிந்தினி திருக்க வென்செய் கேனிது செய்கவென் றருளாய் சிறைக்க ணேபுன னிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே அறுக்கிலேன் உடல் துணிபடத் தீப்புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்: பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி ! போற்றி ! என்போர் விடைப் பாகா ! இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன் ? 'இது செய்க' என்று அருளாய் ; சிறைக் கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே! aRukkileen udal thuNipada thiippukku aarkileen thiruvaruL vakai aRiyeen poRukkileen udal pookkidam kaaNeen pooRRi pooRRi enpoor vidai paakaa iRakkileen unai pirinthu inithirukka en seykeen ithu seyka enRu aruLaay siRaikkaNee punal nilaviya vayalsuuz thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: அழகிய, அறவடிவாகிய விடையின் தலைவனே ! வரம்பு வரை நீர் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் வீற்றருளிய சிவபெருமானே! உன்னைப் பிரிந்தமையால் எனது உடம்பானது துண்டு துண்டாகப் போகும்படி அதனை வெட்டும் துணிவு இல்லேன். எரியும் தீயில் புகுந்து இறக்கலாம் என்றால் அதுவும் செய்கிலேன். உன் திருவருட் செயல் முறையும் அறிய மாட்டேன். உடம்பையும் தாங்க மாட்டாமல் வருந்துகிறேன். புகலிடம் ஒன்றும் அறியேன். உன்னைப் போற்றி போற்றி என்று கூறும் அடியார்க்கு உரிமையானவனே ! சாக மாட்டாத யான் உன்னைப் பிரிந்தும் நன்றாக இருப்பதற்கு என்ன செய்ய முடியும் ? இன்னதைச் செய்க என்று நீ கட்டளையிட்டு அருள்வாயாக ! I do not chop my physical frame to pieces, nor jump into flaming fires. I know not the manner in which Thy grace descends. I cannot bear this physical frame any more. I do not see where I can go and seek shelter. Obeisance to Thee, obeisance to Thee, Oh Thou, riding the fierce bull! I do not perish, what is it I can do here in order to stay happily, now that I am separated from Thee? Pray, in Thy grace, do command me to do such and such things. Lord Civa abiding at Thirup-Perun-Thurai, surrounded by (rice) fields full of waters from the barrage. கு-ரை: துணி = துண்டு. ஆர்கிலேன்= தங்கும் ஆற்றல் இல்லாதேன். 'போற்றி, என்பதற்கு வணக்கம் எனப் பொருள் கொள்ளுதலும் உண்டு. உனைப் பிரிந்து இனிதிருக்க முடியாது என்ற கருத்துப் பற்றி, 'என் செய்கேன்' என்றார். அப்படி இருத்தல் கூடுமாயின், அதுவும் நீதான் உணர்த்த வேண்டும் என்றார். 7. மாய னேமறி கடல்விட முண்ட வான வாமணி கண்டத்தெம் மமுதே நாயி னேனுனை நினையவு மாட்டே னமச்சி வாயவென் றுன்னடி பணியாப் பேய னாகிலும் பெருநெறி காட்டாய் பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. மாயனே ! மறி கடல் விடம் உண்ட வானவா ! மணி கண்டத்து எம் அமுதே ! நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; ' நமச்சிவாய' என்று உன் அடி பணியாப் பேயன் ஆகிலும், பெருநெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ! சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ ? திருப்பெருந்துறை மேவிய சிவனே! maayanee maRikadal vidam uNda vaanavaa maNi kaNdaththu em amuthee naayineen unai ninaiyavum maaddeen namassivaaya enRu un adi paNiyaa peeyan aakilum peruneRi kaaddaay piRai kulaam sadai pinjnjakaneeyoo seeyan aaki ninRu alaRuvathu azakoo thirupperunthuRai meeviya sivanee. பொ-ரை: மாயம் செய்ய வல்லவனே! அலைகள் மடங்கி விழுகின்ற கடலில் எழுந்த நஞ்சை அருந்தின தேவனே! அதனால் நீலமணி போன்ற நஞ்சமைந்த திருக்கழுத்தை உடையவனே ! எங்கள் அருமருந்தே ! இளம் சந்திரன் வாழ்கின்ற சடையோடு தலைக் கோலம் அணிந்தவனே ! நாயினை ஒத்த யான் உன்னை நினைக்கவும் வல்லமையில்லேன். 'நமச்சிவாய' என்ற திருவைந்தெழுத்தை வாயினாற் கூறி உனது திருவடிகளை மெய்யினால் வணங்காத பேய்த் தன்மை உடையேன். எனினும் எனக்கு உனது மாண்பு அமைந்த ஞானநெறியைக் காட்டி அருளுவாயாக. Thou the mystique, Lord of the skies above, that drank the venom of the folding billows of the sea! My ambrosia with dark blue neck! I, this cur, do not contemplate on Thee. Even though I am a ghost-like one that doth not pay obeisance to Thy Feet through the chanting of the holy pentad, Namacivaya', pray, reveal unto me the glorious path to salvation, Oh Lord of the matted hair from where the crescent moon shines so bright! Is it fair that I have to stand away from Thee and wail in despondency? Oh Lord, abiding at Thirup-Perun-Thurai! கு-ரை: அருள் புரிந்தபின், உடன் அழைத்துச் செல்லாது, உலகிலே தம்மை விட்டுச் சென்ற தந்திரத்தை நினைந்து, அடிகள் 'மாயனே' என்றார். அடைக்கலம் புகுந்தாரை அபாய நிலையிற் காப்பாற்றுவான் என்பார், 'மணிகண்டத் தெம்மமுதே' 'பிறை குலாஞ் சடைப் பிஞ்ஞகனேயோ' என்றனர். திருவைந்தெழுத்து, வாசனாமலம் ஒழிக்குங் கருவி என்பது, சிவஞான போத ஒன்பதாஞ் சூத்திரத்தால் இனிது விளங்கும். உலகப் பற்றுடைமையால் தம்மை அடிகள் 'பேயேன்' என்றார். 8. போது சேரயன் பொருகடற் கிடந்தோன் புரந்த ராதிக ணிற்கமற் றென்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்றுநின் றொண்டரிற் கூட்டா யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே யடிய னேனிடர்ப் படுவது மினிதோ சீத வார்புன னிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன் புரந்தர - ஆதிகள், நிற்க, மற்று என்னைக் கோதுமாட்டி, நின் குரை கழல் காட்டிக் 'குறிக்கொள்க' என்று, நின்தொண்டரில் கூட்டாய்; யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே ! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ? சீதவார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே ! poothu seer ayan porukadal kidanthoon puranthara aathikaL niRka maRRu ennai koothu maaddi nin kuraikazal kaaddi kuRikoLka enRu nin thoNdaril kuuddaay yaathu seyvathu enRu irunthanan marunthee adiyaneen idar paduvathum inithoo siithavaar punal nilaviya vayal suuz thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: குளிர்ந்த நீர் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் தங்கி அருளிய சிவபெருமானே! அமுதமே! என் மன நோய்க்கு மருந்து போன்றவனே ! உன்னைப் பிரிந்து செய்வது யாதென மயங்கி இருந்தேன். உன் அடியனாகிய யான் துயரப்படுவது நல்லதாகுமா? மலரில் உறைகின்ற பிரமனும், அலைகள் மோதுகின்ற திருப்பாற்கடல் நாதனும், இந்திரனும் முதலிய தேவர்களும் உன் அருள் நாடி நிற்கின்றனர். என்றாலும் எனது குற்றங்களையெல்லாம் ஒழித்து என்னை ஆட்கொள்வாயாக. வீரக்கழல் ஒலிக்கின்ற உன் திருவடிகளைக் காட்டி அருளிக் காட்டிய குறிப்பில் நிற்கவென்று பணித்து, உன் அன்பர் கூட்டத்தில் என்னைச் சேர்ப்பாயாக. Even as Brahma of the Lotus, Thirumaal of the agitating seas, Indra and such like "Devas' stay out, I beseech Thee, 'pray cleanse me of all faults and join me on to the congregation of Thy servitors, commanding me to pay obeisance to Thy clinking bejewelled Feet'. I have been here, just wondering what I should do, Oh Thou ambrosia! Is it proper that I Thy vassal undergo such sufferings! Lord of Thirup-Perun-Thurai surrounded by (rice) fields of abundant cool waters. கு-ரை: கோது = குற்றம். மாட்டி= மாள்வித்து, தொலைத்து. 'குறிக்கொள்க' என்பதற்கு, வீடடையும் நோக்கத்தைக் கைக்கொள்ளுக எனப் பொருளுரைத்தலும் உண்டு. மருந்து= அமுதம். ஆர் புனல்= நிறைந்த நீர். "வார்புனல்' எனக்கொண்டு, பெரும்புனலென்றலும் உண்டு. 9. ஞால மிந்திர னான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் கால னாருயிர் கொண்ட பூங்கழலாய் கங்கையா யங்கி தங்கிய கையாய் மாலு மோலமிட் டலறுமம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் சேலு நீலமு நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. ஞாலம் இந்திரன், நான் முகன், வானவர் நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்; காலன் ஆர் - உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய்! அங்கி தங்கிய கையாய் ! மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப் பணியாய்; சேலும், நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே! njaalam inthiran naanmukan vaanavar niRka maRRu enai nayanthu inithu aaNdaay kaalan aar uyir koNda puungkazalaay kangkaiyaay angki thangkiya kaiyaay maalum oolam iddu alaRum ammalarkkee marak kaNeenaiyum vanthida paNiyaay seelum niilamum nilaviya vayalsuuz thirupperunthuRai meeviya sivanee பொ-ரை: கெண்டை மீன்களும், நீல நிறக் குவளைப் பூக்களும் விளங்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை சிவபெருமானே! யமனுடைய அரிய உயிரை வவ்விய அழகிய திருவடியை உடையவனே ! கங்கையைத் தலையில் தரித்தவனே ! நெருப்பு அமர்ந்த திருக்கையனே ! பூமியின்கண் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் மற்ற தேவர்களும், திருமாலும் உன் திருவடி கிடைக்கப் பெறாது ஓலமிட்டு அலறுகின்றனர். அத்திருவடித் தாமரைக்கே மரக்கண்ணை ஒத்த கண்களையுடைய என்னையும் வந்து சேரும்படி அருள்புரிவாயாக ! Oh Lord, Thou took me in under Thee, with great affection, even as all men of the world, and Indra, Brahma and other gods of heaven stood outside (in vain). Thou of fair bejewelled Feet that destroyed Yama, the God of Death! Thou, adorned with Ganga waters, holding fire on one hand! Pray, command me, this hard-knotted wood-like me, to come over to Thy flowery Feet, for which Thirumaal cried out in trepidation. Lord abiding at Thirup-Perun-Thurai, surrounded by (rice) fields abounding in flowers and fish! கு-ரை: ஞாலம் - நிலவுலகத்துப் பெரியோர். 'எனை நயந்தினிதாண்டாய்; ஆதலின், மாலும் ஓலம் இட்டு அலறும் அத்தகைய நின்மலர் போலும் திருவடி நிழற்கண்ணே, மரத்தினது கண்போன்று அன்பு நீர் மல்காத கண்களையுடைய என்னையும் வருமாறு பணித்தருள்; (விட்டிடாதே)' என முடிக்க. நீலம் - நீலப்பூ; குவளை மலர். 10. அளித்து வந்தெனக் காவவென் றருளி யச்சந் தீர்த்தநின் னருட்பெருங் கடலிற் றிளைத்துந் தேக்கியும் பருகியு முருகேன் றிருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவ னறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே அளித்து வந்து, எனக்கு 'ஆவ' என்று அருளி அச்சந் தீர்த்த நின் அருள் பெருங்-கடலில், திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே ! வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா ! களிப்பு எலாம் மிகக் கலங்கிடு கின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே ! aLiththu vanthu enakku aava enRaruLi assam thiirththanin arudperung kadalil thiLaiththum theekkiyum parukiyum urukeen thirupperunthuRai meeviya sivanee vaLai kaiyaanodu malaravan aRiyaa vaanavaa malai maathu oru paakaa kaLippu elaam mika kalangkidu kinReen kayilai maamalai meeviya kadalee பொ-ரை: திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருளிய சிவனே ! பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் உடைய திருமாலோடு பூ மேல் உறையும் அயனும் அறிய முடியாத தேவனே! இமயமலை அரசன் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனே ! கயிலைமலைக்கண் வீற்றிருந்த கருணைக் கடலே ! நீ கருணை கொண்டு குருவாய் எழுந்தருளி வந்து எனக்குக் கருணைக் குறிப்புக் காட்டிப் பாசப்பயம் ஒழித்தாய், நீ நல்கிய பெரிய திருவருட்கடலுள் மூழ்கி உள்ளம் நிரம்பி, அதனை உண்ட பின்னும் நான் அன்பால் உருக மாட்டேன். செருக்கே மிகுதிப் படுதலால் நான் வீடு கிடைக்காதோ என்ற அச்சத்தால் கலக்கமுறுகிறேன் (கலக்கத்தை நீக்குவாயாக). Lord Civa abiding at Thirup-Perun-Thurai! I do not melt (at heart) in joyous revelry collecting, storing and consuming Thy vast sea of grace that ended all my fear, Thou took pity on me and bestowed benediction. Oh Lord of the heavens, holding alongside Thee, Thy consort of gold-bangled hands, goddess of sea-like expanse, Oh Lord of the grand mount Kailash ! I am getting scared as my worldly delights tend to increase. கு-ரை: அளித்து = இரங்கி . ஆவ - இரக்கக் குறிப்பு. தேக்குதல் = நிறைதல். களிப்பு=செருக்கு. களிப்பெலாம் இக, எனப் பிரித்து, மகிழ்ச்சி எல்லாம் ஒழிந்து போக என்று பொருள்கோடலுமுண்டு. மலையிற் கடல்மேவும் நயம் இறுதியடியிற் காண்க. THIRUCHCHITRAMBALAM 24. அடைக்கலப் பத்து 24. ADAIKKALAP-PATHTHU (பக்குவ நிண்ணயம் ) Decad of Refuge திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Supplication for Shelter கலவைப் பாட்டு Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் அடைக்கலப்பத்து - இறைவனுக்குத் தாம் அடைக்கலம் என்பதைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி. கலம் - பாத்திரம். அடைக்கலம் - தம்மை அடைதலை உடைத்தாய்க் கிடக்கும் பாத்திரம். இஃது ஒற்றிக் கலம் அன்று. ஒற்றிக் கலமாயின் கடனாகக் கொள்ளும் பொருட்கு ஈடாக வைத்துப் பின்னர் மீட்கப்படும். விலைபெற்றுக் கொடாமையின் விலைக் கலமும் அன்று. மற்று, அதன்கண் பற்றுடையார் தம்மால் அதனைக் காக்க இயலாத பொழுது தம்மால் தெளியப்பட்டவர்பாற் கையடையாகக் கொடுத்து ஓம்படை செய்து போதல். 'சின்னாள் அடைக்கலமும்', 'என்றும் அடைக்கலமும்' என அடைக்கலம் இரு வகைத்து. திருநீலகண்ட நாயனாரிடத்து இறைவன் வைத்துச் சென்ற ஓடு போல்வன சின்னாள் அடைக்கலம். பிறவாறு தரப்படுவன என்றும் அடைக்கலம். சின்னாள் அடைக்கலமாகத் தரப்படுவதனை, இடைக்கலம் என்றலும் உண்டு என்பது, 'இடைக்கலம் அல்லேன்' (தி.4 ப.81, பா.8) என்ற அப்பர் திருமொழியால் அறியப்படுகின்றது. கலம் என்பது பாத்திரத்தைக் குறிக்கும் பெயராயினும், அது போன்ற தன்மையுடையாராகக் கொடுக்கப் படுவோரும் அப்பெயரால் பான்மை வழக்காகக் கூறப்படுவர். அங்ஙனம் சிலரைச் சிலர்பால் சிலர் அடைக்கலமாகத் தந்தமை இலக்கியங்களில் வெளிப்படை. அடைக்கலப் பொருளைப் பாதுகாவாது ஒழிதலும், அதற்குக் கேடு சூழ்தலும் பாதகங்கள் எல்லாவற்றிலும் அதிபாதகமாம். அதுபற்றியே இறைவன், திருநீலகண்ட நாயனாரை, அடைக்கலப் பொருளை வெளவினாராகக் காட்டி அவரை மருளப் பண்ணினான். எனினும், அடைக்கலப் பொருளைக் கெடாது பாதுகாத்தல் அங்ஙனம் கொடுக்கப்பட்டோரது பண்பும், ஆற்றலும் ஆகியவைக்கு ஏற்பவே நிகழும். ஒருவரை மற்றொருவர் அடைக்கலமாகப் பிறரிடத்துத் தருதலேயன்றி ஒருவர் தாமே தம்மைப் பிறருக்கு அடைக்கலமாகத் தருதலும் நன்கறியப்பட்டதே. இது, அடைக்கலம் புகுதல் அல்லது தஞ்சம் புகுதல் எனப்படும். அடியார்கள் இறைவனிடம் அடைக்கலம் புகுதல் இவ்வகையினதேயாம். ஆயினும், இது புதிதாகக் கொடுக்கப்படுவதன்று . எல்லா உயிர்களும் , எல்லாப் பொருள்களும் என்றும் இறைவனுக்கு அடைக்கலப் பொருள்களே. அவ்வுண்மையை உணர்ந்து நிற்பதொன்றே அடியார்கள் செய்வது. அங்ஙனம் உள்ள தமது நிலையையே அடிகள் இப்பகுதியில் எடுத்து அருளிச் செய்கின்றார். இறைவனுக்குத் தாம் அடைக்கலப் பொருளேயன்றித் தமக்கென ஒரு செயல் இல்லை என உணரும் உணர்வு பக்குவர்களுக்கன்றி வாராமையின், இதற்குப் பக்குவ நிண்ணயம் எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். நிண்ணயம்= துணிபு; இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளில் காணப்படுவது. இப்பகுதி பலவகை யாப்புக்களான் இயன்றது. அதனான், இதனைக் 'கலவைப் பாட்டு' என்கின்றனர். எனினும், பெரும்பாலானவை, கட்டளைக் கலித்துறைகளால் ஆக்கப்பட்டவை. The Saint bemoans his wayward disposition which, he feels, has brought him to the wretched state of isolation from the Lord and His congregation. His appeals to the Lord seeking reunion, run through the core of this decad as indeed of many other decads. Supplication and surrender! Alongside this fervent call, there is also an expression of gratitude for the mercy showered on him by the Lord, despite his shortcomings in worldly activities. 24.1 செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா வழுக்கு மனத்தடியே னுடையாயுன் னடைக்கலமே. செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த, பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான் பாவியேன்: புழுக்கண் உடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி-ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய் ! உன் அடைக்கலமே. sezukkamala thiraL ananin seevadi seernthamaintha pazuththamanaththu adiyar udan pooyinar yaan paaviyeen puzukkaN udai punkurampai pollaakkalvi njaanam ilaa azukkumanaththu adiyeen udaiyaay un adaikkalamee பொ-ரை: இறைவா! உன் திருவடிகள் செழுமையான செந்தாமரை மலர் போலத் திகழ்கின்றன. ஆன்றவிந்து அடங்கிய அன்பு கனிந்த மனத்தினை உடைய அடியார்கள் கூட்டம், உன்னுடன் சென்று உனது வியாபகத்தில் கூடி இருப்பது வளமான செந்தாமரை மலர்க் கூட்டங்கள் போன்று காட்சி அளிக்கின்றது. அவர்கள் உன் திருவடி நிழலில் முத்திநிலை எய்திப் பேரின்பம் அனுபவித்து வருகிறார்கள். அடியேன் ஒரு பாவி. புழுக்கள் நிறைந்த இழிந்த உடம்பை உடையவன். ஞானக் கல்வி ஒன்றையும் அறியாத அறிவிலி. என் மனத்தில் காம, கோப, தாபங்களாகிய அழுக்குகள் நிறைந்துள்ளன. இருப்பினும் நீ என்னை உன் உடைமையாக அநாதியே பெற்றுள்ளாய். ஆதலால் என்னை உன்னிடம் அடைக்கலப் பொருளாக அளிக்கின்றேன். என் அழுக்குகளை அகற்றி அடியேனை உன் அடைக்கலப் பொருளாக ஏற்று அருள்வாயாக ! (இறைவனது திருவடிகள் செழுமையான தாமரைக் கூட்டங்கள் போலக் காட்சி அளிக்கின்றன என்ற பொருள் கொள்ளுவாரும் உளர்). All ripe-minded devotees moved over with Thee and merged into Thy blissful Feet that are like bounteous blooms of lotus. Whereas I, this sinful one of dark and cruel mind, devoid of learning and gnosis, of foul physical frame, full of vermin stand here in vain! Oh my Master, Thou art the only refuge for me, Thy servitor. கு-ரை: அமைந்த= அமைதி பெற்ற. பழுத்த= அன்பினாற் கனிந்த, கண்= இடம். 'புழுக்கண்உடை' என்பதைப் புழுக்கள் நுடையெனப் பிரித்துப் புழுக்கள் நெளிந்த என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. குரம்பை= கூடு; உடல். அழுக்கு = வாசனா மலம். 2. வெறுப்பன வேசெய்யு மென்சிறு மையைநின் பெருமையினாற் பொறுப்பவ னேயராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைச் செறுப்பவ னேநின் றிருவரு ளாலென் பிறவியைவே ரறுப்பவ னேயுடை யாயடி யேனுன் னடைக்கலமே. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே ! அராப் பூண்பவனே ! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. veRuppanavee seyyum en siRumaiyai nin perumaiyinaal poRuppavanee araa puuNpavanee pongku kangkai sadai seRuppavanee nin thiruvaruLaal en piRaviyai veer aRuppavanee udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: என்னை உடைமையாக உடைய சிவபெருமானே! பாம்பை ஆபரணமாகப் பூண்டுள்ளாய். பொங்கி வரும் கங்கை நதியை உன் திருச்சடையில் அடக்கி வைத்துள்ளாய். உன்னுடைய பெருங்கருணையினால் என் பிறவியை வேரோடு களைய வல்லாய். அடியேன் வெறுக்கத் தக்க பாவங்களையே செய்து வருகின்றேன். இருப்பினும் என்னுடைய சிறுமைக் குணங்களை எல்லாம், உனது பெருமைக் குணங்களால் பொறுத்து அருள்வாயாக. என்னை உன்னிடம் அடைக்கலப் பொருளாக அளிக்கின்றேன். ஏற்று அருள்வாயாக. Thou, that in Thy grace, beareth with all my detestable lowly deeds! Thou donning a snake as ornament! Thou that containeth the gushing waters of the Ganga on Thy matted hair! Thou that cuts off the very roots of my births in the fullness of Thy blissful grace, Oh my Master, Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: 'பொங்கு கங்கை' என்றதனால் கங்கை வெள்ளம் எனப்பட்டது. 'செறிப்பவனே' என்றது ' செறுப்பவனே' என்றாயிற்று. உடைமையாக உள்ளவனுக்கு மீட்டும் அடைக்கலம் கூறல் தகுதியாமா ? அங்ஙனமிருந்தும் உடையாய் உன்னடைக்கலம் என்றதற்கு இயைபு யாது எனின், உன்னை உடையான் என்றும், நான் உன் உடைமை என்றும் உணர்வதற்கு முன்னே தற்போத முனைப்பால் புறம்பான பாவ கன்மங்களைச் செய்துவிட்டேன்; அவை முதிர்ந்து என்னை இப்போது வாட்டத் தொடங்குகின்றன. அவைகளினின்று அடியேனைக் காக்க வேண்டும் என்பது கருத்தே அன்றி, இயல்பாகவே உடைமையமைந்ததாக (ஸ்வதசித்தமாக) இருக்க உன் அடைக்கலம் என யான் இப்போது விண்ணப்பிக்கவில்லை; அச்சத்தாற் கூறும் அவல உரையே என்றவாறாம். 3. பெரும்பெருமா னென்பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப் பெருமானென் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோ னெடுமாலறி யாமனின்ற வரும்பெருமா னுடையா யடியேனுன் னடைக்கலமே பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான் ! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. perum perumaan en piRaviyai veer aRuththu perum pissu tharum perumaan sathurap perumaan en manaththi nuLLee varum perumaan malaroon nedumaal aRiyaamal ninRa arum perumaan udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: எல்லாத் தேவர்களிலும் பெரியவனான தலைவனே! என் பிறப்பினை அடியோடு தொலைத்து, நான் உன் திருவடிக்கண் பெரும் பித்தனாக இருக்கும்படி வைத்த பெருமானே! என் மனத்தினுள் எழுந்தருளும் பெருமானே! பிரமனும், திருமாலும் அறியாமல் அவர்களின் எதிரில் அண்ணாமலையாய் நின்ற அரிய பெருமானே! என்னை உடையவனே! அடியேன் உன் அடைக்கலமாவேன். Thou, great Lord, Thou that, by rooting out my future births, turned me to become mad with dedication to Your holy Feet. Lord of infinite dexterity, Thou beyond the reach of Thirumaal and Brahma and yet coming over into my mind easily. My Master! Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: பிச்சு = பித்து, மயக்கம் = பேரன்பு. சதுர் = திறமை, அதற்கு நான்கெனப் பொருள் கொண்டு , சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கினையும் வகுத்த பெருமான் எனக் கொள்ளுதலும் உண்டு. 4. பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தினின் கழற்புணைகொண் டிழிகின்ற வன்பர்க ளேறினர் வான்யா னிடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய வழிகின் றனனுடை யாயடி யேனுன் னடைக்கலமே பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல் வாய்ச் சுழி சென்று, மாதர் திரை பொரக் காமச் சுறவு எறிய அழிகின் றனன்; உடையாய் ! அடியேன் உன் அடைக்கலமே. pozikinRa thunpappuyal veLLaththil ninkazal puNai koNdu izikinRa anparkaL eeRinar vaan yaan idar kadal vaay suzi senRu maathar thirai porak kaama suRavu eRiya azikinRanan udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: என்னை உடையவனே! துன்பமாகிய மேகம் பொழிகின்ற மழையால் வெள்ளம் ஏற்பட, அதில் இழிந்து செல்லுகின்ற உன் அடியார்கள், நின் திருவடியாகிய தெப்பத்தைத் துணைக் கொண்டு வெள்ளத்தில் சிக்காமல் மேல் உலகம் ஏறி விட்டார்கள். ஆனால் அடியேன் உன் திருவடியைப் பற்றாது ஒழிந்தேன். அதன் பயனாகத் துன்பமாகிய கடலின் சுழியில் அகப்பட்டுத் தத்தளிக்கின்றேன். அங்கு மாதர்களாகிய அலைகள் என்மீது மோதுகின்றன. காமமாகிய சுறா மீன் என்னை எதிர்த்து முட்டித் தள்ளுகின்றது. இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கெடுகின்றேன். அடியேன் உன் அடைக்கலம் ஆவேன். என்னைக் காத்து ஏற்று அருள்வாயாக. In the seething floods of stormy tribulations, Thy devotees, taking the boat of Thy jewelled Feet, ascended heavenward! Whereas I, Thy servitor, under the vortex of the sea of woe, wafted away by lusty whale-like dames, am getting destroyed. Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: இழிகின்ற = இறங்குகின்ற. இச்செய்யுளில் அது இறந்த காலப் பொருளில் வந்தது. வான்= சிதாகாசம். 'இடர்' என்பதைச் 'சுழி' என்பதனோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதலும் உண்டு . இடராயிருப்பது உடம்பு. 5. சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் றிறமறந்திங் கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரி மானன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமா னருள்புரி யாயுடை யாயடி யேனுன் னடைக்கலமே சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு இருள்புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத்தடம்கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க, விண்ணோர் பெருமான் அருள் புரியாய்; உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே. suruL puri kuuzaiyar suuzaliR paddu un thiRammaRanthingku iruL puri yaakkaiyilee kidanthu eyththanan maiththadangkaN veruL puri maan anna nookki than pangka viNNoor perumaan aruL puriyaay udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: வெருட்சி கொள்ளும் இயல்பினை உடைய மானின் கண்களை ஒத்த அழகிய திருக்கண்களை உடைய உமையம்மையைத் தனது இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானே! தேவர்கள் தலைவனே! விருப்பத்தை விளைவிக்கின்ற அழகிய சுருண்ட கருமையான கூந்தலையும், மை பூசிய விசாலமான கண்களையும் உடைய பெண்களின் சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொண்டேன். உன் கருணைத் திறத்தை மறந்து ஒழிந்தேன். இக்கன்ம பூமியில் அறியாமையை வளர்க்கின்ற எனது உடம்பையே பிரதானமாகக் கருதி இளைத்துப் போனேன். அடியேன் உனக்கு அடைக்கலம். ஏற்று அருள்புரிவாயாக. Forgetting Thy greatness and getting caught in the snare of curly haired damsels, I get fatigued in this physical frame that promotes the darkness of ignorance. Thou, consort of the goddess of dyed eyes that are long, dark and deer like! Oh, Chief of heaven dwellers! Pray, grant Thy grace, My Master! Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: 'சுருள்' என்பது ஐவகை மயிர்முடியினொன்று, அவைகளாவன: முடி, கொண்டை, பனிச்சை, சொருக்கு, சுருள். கூழை = தலைமயிர், சூழல் = சூழ்ச்சி, தந்திரம். இருள் = நிலை இல்லாதனவற்றை நிலையென்றுணரும் புல்லறிவு. மாயாகாரியமாகிய உடம்பானது அப்படிப்பட்ட திரிபுணர்ச்சியை விளைக்கும். 'மைத்தடங்கண்' என்பதைக் 'கூழையர்' என்பதனோடுங் கூட்டலாம். வெருள் = மருட்கை, அச்சம். புரி= செய். 6. மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன் றடமலர்த்தாள் வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன் வல்வினையே னாழியப் பாவுடை யாயடி யேனுன் னடைக்கலமே. மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து, தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த்தாள்; வாழி ! எப்போது வந்து, எந்நாள், வணங்குவன் வல் வினையேன் ? ஆழி அப்பா ! உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே. maazaimai paaviya kaNNiyar vanmaththu ida udainthu thaaziyai paavu thayir pool thaLarntheen thadamalarththaaL vaazi eppoothu vanthu ennaaL vaNangkuvan valvínaiyeen aaziyappaa udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: கருணைக் கடலான தந்தையே ! என்னை உடைமையாகக் கொண்ட சிவபெருமானே! மிடா என்று கூறப்படும் தயிர்ப் பானையில் உள்ள தயிரை வலிய மத்தினால் கடையும் பொழுது, தயிர் உடைந்து தயிர்ப் பானையைச் சுற்றிச் சுற்றி அலையும் . அதே போன்று அடியேன், மாவடுவின் பிளவை ஒத்தனவாயும், மை தீட்டப்பட்டதாயும் உள்ள அழகிய நீண்ட கண்களை உடைய மாதர்களின் வலையில் அகப்பட்டுத் தளர்ந்தேன். வலிய வினையேனாகிய யான், தடாகத்தில் உள்ள தாமரை மலர் போல் மிளிர்கின்ற உனது அழகிய திருவடிகளை எந்தக் காலத்தில் எப்பொழுது வந்து வணங்கும் பேறு பெறுவேன்? அருள் புரிவாயாக. அடியேன் உன் அடைக்கலம். I got wearied like curd in a churning pot, agitated by the rod, in the hands of damsels with long dark eyes, resembling split tender mango kernels! When shall I, this evil me, leave this state and come over to Thee and pay obeisance? Salutations to Thy fair Feet! Sire! Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: மாழை = மாவடு; அழகு. தாழி = மிடா. ஆழி= கடல் . தடமலர்த்தாள் துணையாகலின் வாழியென்றார். கண்ணியரால் தளர்ந்தேன் என்று வேற்றுமையுருபு விரித்துக் கொள்க. 7. மின்கணினார் நுடங்குமிடையார் வெகுளிவலையி லகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி யென்கணிலே யமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கு மங்கணனே யுடையா யடியேனுன் னடைக்கலமே. மின்-கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டுப், புன்-கணன் ஆய்ப் புரள்வேனைப் புரளாமல் புகுந்து அருளி என்-கணிலே அமுது ஊறித் தித்தித்து, என் பிழைக்கு இரங்கும் அம் கணனே! உடையாய் ! அடியேன் உன் அடைக்கலமே. min kaNinaar nudangkum idaiyaar vekuLi valaiyil akappaddu punkaNanaay puraLveenai puraLaamaR pukunthu aruLi en kaNilee amuthu uuRi thiththiththu en pizaikku irangkum angkaNanee udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: சிவபெருமானே ! ஒளிவீசுகின்ற கண்களையும், துவளுகின்ற இடையினையும் உடைய பெண்களது ஊடலில் சிக்குண்டு, துன்பம் உடையவனாய் உழலுகின்றேன் . அங்ஙனம் நான் உழலாத வண்ணம் நீ என் உடம்பில் புகுந்து எழுந்தருளி ஆண்டருள்வாயாக. என் உள்ளத்தில் ஞான அமுதம் சுரந்து இன்பம் தரும்படிச் செய்வாயாக. என் குற்றத்திற்கு அவற்றைப் பொறுத்து அருள்வாயாக. அழகிய கருணைக் கண்களை உடையவனே ! உனது அடியவனாகிய நானும் உன் அடைக்கலப் பொருளே! என்னைக் காத்தருள்வாயாக. Caught in the ire of bright-eyed damsels of swaying hips, I am prone to roll down here in misery. Saving me from this, Thou entered into me, my eyes welling up with tears of joy and showed mercy, sweet like ambrosia. Thou of fair eyes, my chief, Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: மின்கண் = மின்னுகின்ற கண் என்றலும் உண்டு. நுடங்குதல் = துவளுதல், அசைதல். ஆசையினால் மாதர் கோபப்பட்டும் அவர்களை விட்டு நீங்க மனமிராது மயக்கமுறுதலால் வெகுளி வலை என்றார். என்கணிலே = என்னிடத்திலே. தித்தித்து= தித்திக்க. 8. மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ள மாகெடு வேனுடை யாயடி யேனுன் னடைக்கலமே மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்; பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம் ஆ ! கெடுவேன்; உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே. maa vadu vakir anna kaNNipangkaa ninmalar adikkee kuuviduvaay kumpikkee iduvaay nin kuRippaRiyeen paa idai aadukuzal poolkaranthu paranthathu uLLam aa keduveen udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: என்னை ஆளாக உடைய சிவபெருமானே! மாவடுவின் பிளவை ஒத்த கண்களை உடைய உமாதேவியாரை இடப்பாகத்தில் உடையவனே ! நின் திருவடித் தாமரையின் வியாபகத்தில் அடியேனை இருக்கும்படிக் கூவி அழைப்பாயாக; அல்லது கும்பி பாகம் என்னும் நரகத்தில் தள்ளுவாயாக; நின் திருவுள்ளக் கருத்து எதுவென்று நான் அறிகிலேன் . என் மனமானது, நூற்பாவுக்குள் வலத்திலும் இடத்திலும் மாறிமாறி ஓடுகின்ற குழல் போன்று ஒரு நிலைப்படாது அலமருகின்றது. ஆதலால் என்னை அவ்வாறு கெட்டுப் போகும்படி விடாது காத்து உன் அடைக்கலப் பொருளாக என்னை ஏற்று அருள்புரிவாயாக! Would Thou, holding as part of Thy Frame, Thy consort of eyes resembling split tender mangoes, call me over to Thy flowery Feet, or would Thou push me down into infernal hell ! I know not Thy intent. Much like a shuttle oscillating in a weaving machine, my mind wanders ever so stealthily in lust. In this way, alas, I will be ruined, Oh my Master! Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: வகிர் = பிளவு. அது வடிவத்தாற் கண்ணுக்கு உவமை. "மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்' என்ற விகற்பத் தொடர், 'நீ என்னை எவ்வாறு செய்வதன்றி, நான் இன்னதே செய்க எனக் கட்டளை செய்ய உரியேனோ ' என்றபடி. கூவுதல் - அழைத்தல், கும்பி - நரகம், குறிப்பு - திருவுள்ளம். பா -ஆடையாக்குதற்கண் நேரே நீண்டு கிடக்கும் இழைகளின் தொகுதி. குழல், அத் தொகுதியின் ஊடே குறுக்காக இழைகளைப் புகுத்தும் கருவி. இஃது ஒருபால் நில்லாது, ஆடை ஆக்குவோனது வலத்தினும் இடத்தினும் மாறி மாறி ஓடும். இஃது இங்ஙனம் ஓடினாலன்றி ஆடை தோன்றாதாகலின், ஆடை ஆக்குவோன் தன்னால் இயன்ற அளவில் இதனை விரைய ஓட்டுவான். அதனால், ஓரிடத்தில் நில்லாது விரைய ஓடும் இதனைத் தம் அலமரலுக்கு அடிகள் எடுத்துக் காட்டி இறைவன் பால் முறையிட்டு அருளினார். கரத்தலைக் குழலுக்குப் பாவின் ஊடே கரந்து செல்லுதலாகவும், உள்ளத்திற்கு மூவாசைகளின் மூழ்கிச் செல்லுதலாகவும் உரைக்க. பரத்தல் - சுழலல், 9. பிறிவறி யாவன்பர் நின்னருட் பெய்கழற் றாளிணைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்து பெற்றாருன்னை வந்திப்பதோர் நெறியறி யேனின்னை யேயறி யேனின்னை யேயறியு மறிவறி யேனுடை யாயடி யேனுன் னடைக்கலமே. பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் - இணைக் கீழ், மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார், உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன்; உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே. piRivu aRiyaa anpar nin arud peykazal thaaL iNaikkiiz maRivu aRiyaa selvam vanthu peRRaar unnai vanthippathoor neRi aRiyeen ninnaiyee aRiyeen ninnaiyee aRiyum aRivu aRiyeen udaiyaay adiyeen un adaikkalamee. பொ-ரை: என்னை உடைய சிவபெருமானே! எக்காலத்தும் உன்னை விட்டுப் பிரிந்திராமல் நின் குறிப்பினையே ஒன்றி வாழும் அன்பர்கள் நின் அருள் வடிவாகிய வீரக்கழல் அணிந்த திருவடியின் கீழ் மீளாச் செல்வமாகிய வீட்டின்பத்தினைப் பெற்றுள்ளனர். யானோ உன்னை வணங்குவதற்குரிய சிவாகம நெறிகளை அறிய மாட்டேன் . உன்னையே உள்ளவாறு உணரமாட்டேன். எனினும் உனது அடியவனாகிய என்னை உன் அடைக்கலப் பொருளாக ஏற்று வீட்டின்பத்தைப் பெற அருள்புரிவாயாக ! Thy closely associated devotees received the priceless gift of eternity under Thy gracious bejewelled twin Feet. I know not one right way to pay obeisance to Thee! Indeed I know nothing at all about Thee! Neither do I have any knowledge on how to know Thee . Oh my Chief, Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: பிரிவு என்பது பிறிவென வலித்தது. நின்னருள் பிரிவறியா எனமாற்றிக் கொள்க. மறிவு என்பது பிறவிக்கு மீளுதல். அதனை மரித்தலின் விகாரமாகக் கொண்டு நசித்தலெனப் பொருள் கொள்ளுதலும் உண்டு. இறைவன் நமக்கு வேண்டத் தக்கதை அறிவான். நாம் அவனது அடிமை. அடிமைகளாகிய நாம் இன்னது அருளுக என்று வேண்டுதல் செய்யத்தகாத செயல் என்பதால் ' நின் குறிப்பறியேன்' என்றார். 10. வழங்குகின் றாய்க்குன் னருளா ரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேனென் விதியின்மையாற் றழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளா யழுங்குகின் றேனுடை யாயடி யேனுன் னடைக்கலமே. வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக் கொண்டு, விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன். என் விதி இன்மையால், தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் ! அழுங்குகின்றேன்; உடை யாய்! அடியேன் உன் அடைக்கலமே. vazangkukinRaaykku un aruLaar amuthaththai vaari koNdu vizungkukinReen vikkineen vinaiyeen en vithi inmaiyaal thazangku arum theen anna thaNNiir parukaththanthu uyyak koLLaay azungkukinReen udaiyaay adiyeen un adaikkalamee பொ-ரை: என்னை உடைய சிவபெருமானே ! உன் அருளாகிய அமிர்தத்தை நீ எனக்குக் கொடுத்தாய். நீ கொடுத்ததற்காக நான் அதை ஆவலோடு வாரி வாயில் போட்டேன். தீவினையுடையவனாகிய நான் அதை உண்ணுவதற்கு நல்ல ஊழ் இல்லாத காரணத்தால், நீ கொடுத்த அமிர்தமானது என் தொண்டையில் விக்கிக் கொண்டது. துயர் உறுகின்றேன். ஆதலால் என் துயரத்தை நீக்கத் தேன் போன்ற உன் கருணையாகிய தண்ணீரைக் குடிக்கக் கொடுத்து அடியேனை உய்யக் கொண்டு அருள்புரிவாயாக. அடியவனாகிய நானும் உனது அடைக்கலப் பொருளே. காத்தருள்க. Even as I greedily swallow the grace-filled ambrosia that Thou doth so liberally dispense, I, full of past evil deeds, suffer hiccough in the absence of beneficial fate. Pray, grant me the rare "honey sweet" waters that I can consume with ease and thus get me redeemed. I am in great grief here in the present state. Oh my Chief, Thou art the only refuge for me, Thy servitor! கு-ரை: விக்குதல் = தொண்டையில் தடைபடுதல். விதி = நல்ல ஊழ். தழங்கு என்பதைத் தண்ணீர் என்பதனோடு சேர்க்க. தண்ணீர் - குளிர்ந்த தண்மையென்பாரும் உளர். ஓடுகின்ற நீரினாலே விக்கல் நிற்றலால் தண்ணீர் ' பருகத் தந்து' என்றார். அழுங்கு= அலைதல்; வருந்துதல். THIRUCHCHITRAMBALAM 25. ஆசைப் பத்து 25. AASAIP-PATHTHU (ஆத்தும இலக்கணம்) The Decad of Longing திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது On the State of the Self ஆசிரிய விருத்தம் Composed whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் ஆசையை விண்ணப்பித்துக் கொள்ளும் பத்துத் திருப்பாடல்களின் தொகுதி ஆசைப்பத்து. வெயிலில் நிற்போர்க்கு நிழலை அடைய விரும்புதலே இயல்பாதல் போல, துன்ப மயமாகிய உலகத்தில் நின்று இடருறும் உயிர்கட்கு இன்பமே வடிவான இறைவனை அடைய விரும்புதலே இயற்கையாதலானும், அவ்விருப்பத்தையே இப்பகுதி இனிது விளங்கக் கூறுதலானும் இதற்கு 'ஆத்தும இலக்கணம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இப்பகுதி முழுவதும், வேறுபட்ட சீர்களையுடைய அறுசீரடி விருத்தத்தால் ஆயது. In this decad, the Saint pours out in soulful numbers his intense longing for the company of the Lord and his band of devotees with whom he once was, during his initiation at Thirup-Perun-Thurai.After the departure of the preceptor, with all the other disciples, pining for reunion, not knowing why he alone was left behind while the rest of his companions merged with the Lord, Saint Maanikkavaachakar makes fervent appeal to Him to come over again before him and grace him with the blissful words, "Come nigh unto me". Weeping as it were, through verse after verse the saint blames himself for his indolence in not being able to come up to the level of his erstwhile compatriots all of whom attained salvation at Thirup-Perun-Thurai. His despondency is amply reflected in the sorrowing and doleful strains of this decad which repeatedly appeal for His grace, giving expression to his intense desire for reunion with the congregation from where he somehow feels excommunicated as being unworthy of His grace. In other chapters too, he mentions the finesse of the Lord who in subtle and gentle tones bade him stay back and come over later to the ornate public hall of the Thillai. 'கோல மார் தரு பொதுவினில் வருகென' Chapter 25 thus reflects the state of restlessness of his soul, even as he gives vent to his desire for early reunion with the Lord. Notes: 'Note Thou, Sire'. The term கண்டாய் is interpreted as "behold', Note Thou Sire, etc., in this context. The very same term கண்டாய் has a different connotation as in விட்டிடுதி கண்டாய் (Neeththal Vinnappam) where it means 'lest you should forsake me' or 'Pray forsake me not'. It acquires yet another meaning while used as an exhortation is in தொண்டரொடு கூட்டு கண்டாய். “Please ensure getting me into the congregation of Thy devotees." Make sure that I am included in the congregation. Saivite literature is replete with such nuances of grammar and rhetoric. 25.1. கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ விருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவு மருளைப் பெறுவா னாசைப் பட்டேன் கண்டா யம்மானே கருடக் கொடியோன் காண மாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே ! ஓ ! இருளைத் துரந்திட்டு, ' இங்கே வா' என்று அங்கே, கூவும் அருளைப் பெறுவான், ஆசைப் பட்டேன் கண்டாய்: அம்மானே ! karuda kodiyoon kaaNa maaddaa kazaRseevadi ennum poruLai thanthu ingku ennai aaNda pollaa maNiyeeyoo iruLai thuranthiddu ingkeevaa enRu angkee kuuvum aruLai peRuvaan asai paddeen kaNdaay ammaanee பொ-ரை: என் தலைவனாகிய சிவபெருமானே! கருடன் படம் பொறிக்கப்பட்ட கொடியைத் தனது சின்னமாகக் கொண்ட திருமாலும் காணமுடியாதது உனது செவ்விய வீரக்கழல் அணியப் பெற்ற திருவடி. இப்பேர்ப்பட்ட திருவடி என்னும் பெரிய பொருளை எனக்கு இப்பூவுலகில் தந்து என்னை ஆண்டருளிய பொள்ளாத (உளியினால் செதுக்கப்படாத) மாணிக்கம் போன்றவனே! என்னைச் சூழ்ந்திருக்கும் அஞ்ஞான இருளாகிய ஆணவ மலத்தை வலி இழக்கச் செய்வாயாக. அதன் பின்னர் உன்னுடைய வீட்டுலகத்தில் (சிவலோகத்தில்) கிடைக்கும் அருளைப் பெறுவதற்கு 'இங்கே வா' என்று என்னைக் கூப்பிடுவாயாக. இதற்கு நான் ஆசைப்பட்டேன் என்பதறிந்து என்னை அழைப்பாயாக. Oh Lord, flawless gem, that took me under Thee, granting me the gift of Thy bejewelled benign Feet! Feet that are beyond the reach of even Thirumaal with his banner of kite! How I yearn to receive Thy grace and to hear Thy call from above, asking me to come over to Thee leaving all darkness behind. கு-ரை: பொருள் = அருட் செல்வம். துரந்து= செலுத்தி, ஓட்டி; அங்கே என்றது வீட்டுலகத்தே. பொல்லா= உளி முதலியவற்றாற் செதுக்கப்படாத. 2. மொய்ப்பா னரம்பு கயிறாக மூளை யென்பு தோல்போர்த்த குப்பா யம்புக் கிருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ வெப்பா லவர்க்கு மப்பா லாமென் னாரமு தேயோ வப்பா காண வாசைப்பட்டேன் கண்டா யம்மானே. மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக மூளை, என்பு, தோல், போர்த்த குப்பாயம் புக்கு இருக்க கில்லேன்; கூவிக் கொள்ளாய்; கோவே! ஓ! எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என்ஆர் அமுதே! ஓ! அப்பா ! காண ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! moyppaal narampu kayiRaaka muuLai enputhool poorththa kuppaayam pukku irukkakilleen kuuvi koLLaay kooveeyoo eppaa lavarkkum appaalaam en aar amutheeyoo appaa kaaNa aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: எலும்பு, மூளை ஆகிய உடலின் பல உள் உறுப்புக்களை எல்லாம் பால் போன்ற வெண்மையான நரம்புகளைக் கயிறாகக் கொண்டு கட்டி, ஒரு நிலைப்படுத்தித் தோல் என்று சொல்லப்படும் சட்டையால் மூடப்பட்டுள்ள இந்த ஊனுடம்பினுள் யான் புகுந்து இன்னும் உயிர் வாழ விரும்பவில்லை . எந்த உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கும் அப்பாற்பட்டு அறிய முடியாது விளங்கும் அமுதம் போன்றவனே! என் தந்தையே! உன்னை எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்க ஆசைப்படுகின்றேன். அம்மானே ! நீ இதனை அறிவாய் . ஆதலால் என்னைக் கூவி அழைத்துக் கொள்வாயாக . Sire, how I yearn to see Thee, Oh Noble One, Rare Ambrosia, that is far beyond all others of whatever kind! Pray, send out Thy call bidding me to come over to Thee. Oh Lord, I can no longer stay here wallowing in this garment of skin covering fleshy sack of nerves, brain and bone. கு-ரை: மொய்= நெருங்கி; பால் நரம்பு = வெள்ளை நரம்பு; குப்பாயம் = சட்டை. கண்டாய் - அசை. 3. சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடி லிதுசிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி யாவா வென்ன வாசைப் பட்டேன் கண்டா யம்மானே சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் - இது சிதையக் கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குருமணியே ! தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி 'ஆ ! ஆ ! ' என்ன, ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! sii vaarnthu iimoyththu azukkodu thiriyunj siRukudil ithu sithaiya kuuvaay koovee kuuththaa kaaththu aadkoLLum kurumaNiyee theevaa theevarkku ariyaanee sivanee siRithu en mukam nookki aa aa enna aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: மங்கலப் பொருளாகிய சிவபெருமானே! அரசனே! திருநடனம் இயற்றுபவனே ! அடியேனைத் தடுத்தாட் கொள்ளும் ஆசிரிய மாணிக்கமே! நிணம் வடிந்து, ஈக்களால் மொய்க்கப்பட்டு அழுக்கு நிறைந்து அலைகின்ற சிறிய வீடாகிய இவ்வுடம்பு சிதைந்து அழியும்படி என்னை நீ விரைந்து அழைப்பாயாக! வானவனே! வானவர்க்கு அரியவனே! அழகிய பெரியோனே! அடியேனுடைய முகத்தைச் சிறிது பார்த்து அந்தோ! வா ! என்று நீ அழைப்பதை நான் விரும்புகின்றேன். இந்த விருப்பத்தை நீ அறிவாயாக. Oh Lord, of the cosmic dance, preceptor that provides protection and deliverance, pray call out to me so that this wandering little body of mine, full of grime and flea, may cease to be. Lord Civa, Lord beyond all gods, how I long to hear Thee call out to me, glancing at my face, signalling me to come over to Thee. கு-ரை: 'வார்ந்து' என்பது வார்த்து என்பதன் விகாரம். வார்த்து - வடித்து, ஊற்றி, ஒழுக்கி. வார்ந்து என்பதைத் தன்வினையாகக் கொள்ளலாம். அழுக்கு = மலம். இது என்றது தமது உடம்பைக் குறித்து நின்றது. ஆவா = ஐயோ, நீ வா என்றிரக்கச் சொற்கூறுவது. குடியிருக்கும் வீடு, குடிலாயிற்றுப் போலும். காத்து - தடுத்து. 4. மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடந் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தமெம் பெருமானே யுடைந்துநைந் துருகி யுன்னொளி நோக்கி யுன்றிரு மலர்ப்பாத மடைந்துநின் றிடுவா னாசைப் பட்டேன் கண்டா யம்மானே மிடைந்து, எலும்பு ஊத்தை, மிக்கு அழுக்கு ஊறல் வீறு இலி, நடைக் கூடம் தொடர்ந்து எனை நலியத், துயர் உறுகின்றேன்; சோத்தம் ! எம் பெருமானே! உடைந்து, நைந்து, உருகி, உன் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம் அடைந்து நின் றிடுவான், ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! midainthu elumpu uuththai mikku azukku uuRal viiRili nadaikkuudam thodarnthu enai naliyath thuyar uRukinReen sooththam emperumaanee udainthu nainthu uruki un oLi nookki un thirumalar paatham adainthu ninRiduvaan aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: எம் தலைவனாகிய சிவபெருமானே! உனக்கு வணக்கம். நடைவீடாகிய எனது உடம்பு பலதிறப்பட்ட எலும்புகளால் நெருக்கமாகக் கோத்து அமைக்கப்பட்டு உள்ளது. அது, ஊத்தை மிகுந்து அழுக்கு நீர் ஊறுகின்ற சிறப்பில்லாத இடமாகவும் இருக்கின்றது . இப்பேர்ப்பட்ட உடம்பு என்னைத் தொடர்ந்து வருத்தி வருவதால் துன்புறுகின்றேன் . துன்பத்தை நீக்கி அருள்வாயாக ! என் அகந்தை ஒழிந்து, மனம் நைந்து உருகி, உன் திருஅருட் பிரகாசத்தையே கண்டு, உன் மலர் போன்ற திருவடிகளை அடைந்து, அதன் கண்ணேயே நிலை பெற்றிருக்க ஆசைப்பட்டேன். அம்மானே ! இதனை அறிந்து அருள்புரிவாயாக ! My Lord, I suffer greatly here, as this worthless physical frame of mine, a mobile hut- close knit with bones abounding in filth and soaked in dirty mucus, continues to hurt me all the time! Pray, save me Oh Chief. My obeisance to Thee! How I long to come over and merge into Thy flowery Feet, melting at heart, awaiting Thy inherent effulgent grace! கு-ரை: எலும்பு மிடைந்து எனமாற்றுக. வீறு = சிறப்பு. கூடம் = வீடு, சோத்தம் = அஞ்சலி. 5. அளிபுண் ணகத்துப் புறந்தோன் மூடி யடியே னுடையாக்கை புளியம் பழமொத் திருந்தே னிருந்தும் விடையாய் பொடியாடீ யெளிவந் தென்னை யாண்டு கொண்ட வென்னா ரமுதேயோ வளியே னென்ன வாசைப் பட்டேன் கண்டா யம்மானே அளி புண் அகத்துப் புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய் ! பொடி ஆடீ! எளி வந்து, என்னை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதே ! ஓ ! ' அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே ! aLipuN akaththu puRanthool muudi adiyeen udai yaakkai puLiyam pazam oththiruntheen irunthum vidaiyaay podi aadii eLi vanthu ennai aaNdu koNda en aar amutheeyoo aLiyan enna aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: காளை மாட்டை வாகனமாக உடைய எம் தலைவனாகிய சிவபெருமானே ! திருநீறு செம்மையாக அணியப்பட்டு விளங்கும் திருமேனி உடையவனே! எளியனாய் எழுந்தருளி வந்து என்னை ஆண்டு கொண்டருளிய அரிய அமுதம் போன்றவனே! உனக்கு வணக்கம். புளியம்பழம் உட்பாகத்தில் நைந்து விளக்கமில்லாதிருந்தும், வெளிப்பாகத்தில் நல்ல தோட்டால் மூடப்பட்டு உறுதி உடையதாகக் காணப்படுகின்றது. அதைப் போல அடியேனது உடம்பின் உட்பாகம் உதிரம் முதலியவற்றோடு கூடிய மெல்லிய உறுப்புக்களால் ஆக்கப்பட்டு அருவருக்கத் தக்க பொருள்களாய்க் கிடக்கவும், உடம்பின் புறப்பக்கம் தோலால் மூடப்பட்டு, உட்பாகம் மறைக்கப்பட்டுப் பார்வைக்கு மிக அழகாகக் காணப்படுகின்றது . அடியேன் என் உடம்போடு பற்றற்று இருப்பினும், புளியம்பழத்தைப் போல ஒரு சிறிதளவு பற்று உடையவன் ஆவேன். அங்ஙனம் இருந்தாலும், அந்தச் சிறிதளவு பற்றையும் நீக்க அருள் செய்து 'இவன் இரங்கத் தக்கவன்' என்று நீ என்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அம்மானே! இதனை அறிவாயாக ! I stayed here, sporting a loathsome physical frame, much like a fully-ripped tamarind fruit having very slightly attached outer shell and having all pores and wounds inside my body and covered by outer skin. And yet, Oh Lord of the bull mount, with white ash smeared all over, Thou readily camest unto me and made me Thine, Oh rare ambrosia! How I long and yearn to be reckoned by you as one meriting pity. Note: The inside of a ripe tamarind fruit clings on to the outer shell, even if it be only slightly. The allusion is to the remaining trees of attachment lingering in the minds of aspirants. கு-ரை: அளி = நெருங்குதல், மூடிய அடியேன், என்பது மூடியடியேன் என அகரந் தொக நின்றது. பொடி = பூதி, நீறு. புளியம்பழமானது, அதன் ஓட்டினுள், ஓட்டிற்கு வேறாக இருத்தல் யாருமறிந்ததே. அதுபோல, ஞானிகள் பற்றற்றிருப்பர் . அடிகள் அனையரென்பதற்கு இச்செய்யுள் அகச்சான்றாதல் காண்க. அளியேன் = இரங்கத் தக்கேன். 6. எய்த்தே னாயே னினியிங் கிருக்க கில்லே னிவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மலர்ச்சே வடியானே முத்தா வுன்றன் முகவொளி நோக்கி முறுவன் னகைகாண வத்தா சால வாசைப் பட்டேன் கண்டா யம்மானே எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்க- கில்லேன்; இவ் வாழ்க்கை வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே! முத்தா! உன்-தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண , அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே ! eyththeen naayeen ini ingku irukka killeen ivvaazkkai vaiththaay vaangkaay vaanoor aRiyaa malar seevadiyaanee muththaa un than muka oLi nookki muRuval nakai kaaNa aththaa saala aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: தாமரை மலர் போன்ற மணமும், நிறமும் மென்மையும், அழகும் கூடிய உன் திருவடித் தாமரைகள் தேவர்களாலும் அறிய முடியாதது. அப்பேர்ப்பட்ட திருவடிகளை உடைய எம் தலைவனாகிய சிவபெருமானே உனக்கு வணக்கம். நாயானது ஒரு காரியமும் இன்றி அங்கும் இங்கும் மாறி மாறி ஓடி இளைத்தது போல நாயை ஒத்த அடியேனும் பலகாலும் பயனின்றி உழைத்து இளைத்து விட்டேன். இந்த உடம்போடு இக்கன்ம பூமியில் என்னால் இனிமேலும் இருக்க இயலாது. இவ்வாழ்க்கையை அடியேனுக்கு நீதான் கூட்டி வைத்தாய். இவ்வுடலைக் கொடுத்த நீயே இதனை வாங்குதல் வேண்டும். அநாதியே ! மலங்களினின்று விடுபட்டவனே! (முத்தா) என் தந்தையே ! (அத்தா) உன் அழகிய திருமுகத்தில் தோன்றும் புன்முறுவலைக் கண்டு மகிழ மிகவும் விரும்புகின்றேன். அம்மானே ! இந்த என் விருப்பத்தை நீ அறிவாயாக. Oh Lord, I this cur, got much wearied in this life and cannot stand it any more. I do not wish to stay here further. Hence, pray, take back this life which Thou gavest to me. Exalted Lord, of blissful flowery Feet, which heaven-dwelling gods too cannot see! Oh one ever free from (malas) impurities! Oh Father! Oh God, my Lord, how I long to see, Thy smiling effulgent face. Kindly bear this in your mind. கு-ரை: வாங்காய் = ஒடுக்குவாய், எடுப்பாய். முத்தா என்பதற்கு முத்தி தருவோனே என்றும் கூறுவது உண்டு. 7. பாரோர் விண்ணோர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமா னெனவேத்த வாரா வமுதே யாசைப் பட்டேன் கண்டா யம்மானே பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதீ ! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, 'எம்பெருமான்' என ஏத்த ஆரா அமுதே ! ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! paaroor viNNoor paravi eeththum paranee paranjsoothii vaaraay vaaraa ulakam thanthu vanthu aadkoLvaanee peeraa yiramum paravi thirinthu emperumaan ena eeththa aaraa amuthee aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: பூமியிலுள்ள மக்களும், விண்ணிலுள்ள தேவர்களும் வணங்கித் துதிக்கப் படுகின்ற எங்கும் நிறைந்த பொருளாய் விளங்கும் சிவபெருமானே! (பரம்பொருளே ! ) ஆன்மாக்களின் ஆணவ இருளை அகற்ற எழுந்தருளிய கருணைத் திருஉருவும், அருள்திரு மேனியும் உடையவனே! (பரஞ்சோதி ! ) நீயே எழுந்தருளி வந்து, வாராய் என அழைத்து, மீண்டுவராத உலகமாகிய வீட்டினைத் தந்து ஆட்கொள்பவனே! உண்டு தெவிட்டாத அமுதமே! நின் ஆயிரம் திருநாமங்களையும், எம்பெருமான் என்று உன் சிறப்புப் பெயரையும் கூறி வணங்க ஆசைப்பட்டேன். அம்மானே! இதனைக் கண்டு அருள்வாயாக. Expansive Lord, worshipped and adored by all beings on this earth and in the heavens above! Pray come over to me, Thou, wide spread flame so bright! Thou that takes all under Thee and grants the gift of the world from where there is no return! How I long to go about chanting your thousand names and go about hailing you as our God. கு-ரை: திரிந்து, என்பதை ஆனந்தக் கூத்தாடி என்றும் பொருள் கொள்ளலாம். ஆரா = நிறையாத, தெவிட்டாத. 8. கையாற் றொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யா தென்றன் றலைமேல் வைத்தெம் பெருமான் பெருமா னென் றையா வென்றன் வாயா லரற்றி யழல்சேர் மெழுகொப்ப வையாற் றரசே யாசைப் பட்டேன் கண்டா யம்மானே. கையால் தொழுது, உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு எய்யாது என்-தன் தலை மேல் வைத்து, 'எம்பெருமான்', 'பெருமான் ! ' என்று ஐயா ! என்-தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே ! kaiyaal thozuthu un kazalseevadikaL kazumath thazuvi koNdu eyyaathu en than thalaimeel vaiththu emperumaan perumaan enRu aiyaa en than vaayaal araRRi azalseer mezuku oppa aiyaaRRu arasee aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: திருவையாற்றில் எழுந்தருளியுள்ள அரசனாகிய சிவபெருமானே ! எனது கைகளால் உன்னைத் தொழுது, வீரக்கழல்கள் அணிந்த உனது சேவடிகளை நிரம்பத் தழுவி அவற்றை இடைவிடாமல் என் தலைமேல் சூடிக் கொண்டு எம் பெருமானே, பெருமானே ஐயா, என வாயாரப் புலம்பி, நெருப்பைச் சார்ந்த மெழுகை ஒத்து உருக ஆசைப்பட்டேன். அம்மானே! இதனைத் திருவுளம் பற்றுக ! Oh Lord of Tiru-Iyaaru, how I long to chant Thy name, and melt like wax on fire, crying Oh My Chief, My Master, worshipping Thee with folded hands, embracing Thy bejewelled Feet and holding them tight on to my head! கு-ரை: கழும = பூரணமாக. கழுமல்= நிறைதல். எய்யாது= சலியாது; இடைவிடாது . 9. செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக் கடியார் சோதிகண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப் படிதா னில்லாப் பரம்பர னேயுன் பழவடி யார்கூட்ட மடியேன் காண வாசைப் பட்டேன் கண்டா யம்மானே செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசிச், சிவபுர நகர் புக்குக், கடி ஆர் சோதி கண்டு கொண்டு, என் கண்-இணை களி கூரப் படி-தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம், அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! sedi aar aakkai thiRam aRa viisi sivapura nakarpukku kadi aar soothi kaNdu koNdu en kaN iNai kaLi kuura padi thaan illaap paramparanee un paza adiyaar kuuddam adiyeen kaaNa aasai paddeen kaNdaay ammaanee பொ-ரை: யாதொரு குணமும் இல்லாத மேலோனே! சிவபெருமானே ! அடியேன், அழுக்கும் முடை நாற்றமும் பொருந்திய எனது உடலைத் தேவரீர் திருவருளால் அறவே நீக்க வேண்டும். சிவபுர நகரிலே புகுதல் வேண்டும். அங்கே சிவஞான மணம் நிறைந்த சிவசோதியை என் கண் குளிரக் கண்டு களிப்படைய வேண்டும். அங்கே தேவரீர் திருவடிக்குத் தொன்று தொட்டு அடிமைப் பணி செய்யும் அடியார் கூட்டத்தினரையும் தரிசித்து , அவர்களோடு ஒன்றுபட்டு உன்னைத் தொழுது கொண்டே இருக்க ஆசைப்பட்டேன் அம்மானே! இதனை அறிவாயாக ('கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி' என்ற சேக்கிழார் வாக்கையும், 'மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே' என்ற சிவஞான போதப் பன்னிரண்டாம் சூத்திரத்தையும் நோக்குக). How I long to witness the congregation of Thy long standing devotees, Oh flawles Lord of the wide expanse, I, thy vassal would like to cast away this body and be rid of agonies. Thereafter I am anxious to enter Civapuram, the sacred home of our Lord and to view the ebullient flame of bliss to my heart's content. கு-ரை: படி = குணம், ஒப்பு. 'குணங்கள் தாமில்லா இன்பமே' என்றதுங் காண்க. கடி = காவல், மணம். செடி= குற்றம். பரம்பரனே = மேலானவற்றிற்கு மேலோனே, இறைவன் ஒருவனே ஒப்பற்றவனாதலின் ' படிதான் இல்லா' என்றார். 10. வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையி லகப்பட்டு நைஞ்சே னாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயா லஞ்சே லென்ன வாசைப் பட்டேன் கண்டா யம்மானே. வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு , நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன் ; பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா ! பவளத் திருவாயால், 'அஞ்சேல்' என்ன, ஆசைப் பட்டேன் கண்டாய்; அம்மானே ! venj seel anaiya kaNNaar tham vekuLi valaiyil akappaddu nainjseen naayeen njaanassudaree naan oor thuNai kaaNeen panjseer adiyaaL paakaththu oruvaa pavaLath thiruvaayaal anjseel enna aasai paddeen kaNdaay ammaanee. பொ-ரை: செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்டு அழகிய தோற்றம் கொண்ட திருவடிகளை உடைய உமாதேவியைத் தனது இடப்பாகத்தில் கொண்ட ஒப்பற்ற சிவபெருமானே ! நாயின் குணத்தை ஒத்தவன் யான். விருப்பத்தை விளைவிக்கும் சேல் மீனை ஒத்த கண்களை உடைய மாதர்களின் போகமே பெரிது எனக் கொண்டு அவர் ஊடலில் மயங்கி அகப்பட்டு நைந்து போனேன். ஞானச் சுடராகிய உன்னைப் பெற்றும், நான் எந்த வகையான ஒரு துணையையும் கண்டிலேன் . பவளத்தின் நிறத்தை ஒத்த உனது திருவாயால் என்னைப் பார்த்து ' அஞ்சாதே' என்று நீ சொல்ல ஆசைப்பட்டேன் அம்மானே! Caught in the fiery net of fish-eyed damsels, I, this cur, suffered a great deal, Oh Lord, Thou glistening flame of gnosis! Oh Peerless Lord, with one half as goddess Uma whose lovely Feet are dyed with the red silk cotton. I have no one else to help me. Pray call out to me with Thy pearl-like mouth, saying "fear not". How I long for this, Oh My Chief! கு-ரை: வெம்= விரும்பத்தக்க. அதனைச் சேலோடும் கண்ணோடும் கூட்டலாம். பஞ்சேர்= பஞ்சு + ஏர் . பஞ்சு போன்ற, அழகிய. THIRUCHCHITRAMBALAM 26. அதிசயப் பத்து 26. ATHISAYAP-PATHTHU (முத்தியிலக்கணம்) The Decad of Amazement திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Composed whilst in Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 'செத்திலாப்பத்து' முதலிய மூன்று பத்துக்களும், இவ்வுலக வாழ்க்கையினின்றும் நீங்கி இறைவன் திருவடி கூடுதற்கண் அடிகளுக்கு இருந்த விரைவு கூறுதலாகவே அமைந்தன. இனி அப்பால் வரும் புணர்ச்சிப் பத்து முதலிய மூன்று பத்துக்களும் இவை போன்றவையே. அவற்றது இடைக்கண் தம்மை இறைவன் ஆண்டு கொண்ட கருணைத் திறத்தை வியந்து கூறும் இதனை வைத்துக் கோத்தனர் முன்னோர். அவலச் சுவையே ஒருங்கு வாராது, வியப்புச் சுவை இடைமிடைந்து வருதல் நன்று என்னும் கருத்தினால் என்க. 'முத்தி இலக்கணம்' என்பது, இதற்கு முன்னோர் உரைத்த குறிப்பு. இதற்கு, இறைவன் முத்தியை வழங்கிய முறைமை எனப் பொருள் கூறுக. முத்தி என்றது முத்தி நிலையை. இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இஃது அறுசீரடி விருத்தத்தால் ஆயது. In this decad, the Saint extols the generosity of Lord Civa who took him under His command and joined him on to the holy congregation, ignoring his many foibles and failings. He recounts with a sense of self-pity and compunction, how he happened to get distracted by worldly allurements and sensual delights. Such attitude on his part, he feels, makes him unworthy of the Lord's company. And yet he is amazed to see the Lord's action in accepting him into His band of disciples and showering Bliss on him. He is agreeably surprised at this pleasant display of indulgence and is extremely beholden to Him who preferred to overlook his shortcomings and transgressions. In this connection it is well to remember that though St. Maanickavaachakar seeks to portray himself as an ordinary wayward soul steeped in mundane acts of profligacy and licentiousness, this is not to be construed into a vertitable catalogue of his own wrong doings; for, such condemnatory expostulations addressed to one's own self are common in the hagiography of many a saintly personage, which, in reality, is intended to show how ordinary men of the world conduct themselves in their day-to-day existence . It is an eye opener to all men in common ; it shows up how earthly trivialities pull men away from the Lord. Such outbursts of revulsion and self-condemnation by saints can be likened to a first line of defence against evil thoughts - to nip in the bud as it were, even a cursory, fleeting reflection on voluptuous tendencies and carnal proclivities. The wailings of saints like Pattinaththaar, Raamalingar, Arunagirinaathar and others come to mind in this context. Lord Civa's generosity is further brought to light by this decad, as He showers His grace and corrects the wayward. What amazement, this! When He is kind even to those who strayed away from the path of virtue, how much more will He do to those who do not stray away. Such is the view implied in this decad. Such is the confidence that builds up in the bosom of all those who recite these stanzas. 26.1 வைப்புமா டென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை யுருகாதே செப்பு நேர்முலை மடவர லியர்தங்க டிறத்திடை நைவேனை யொப்பி லாதன வுவமனி லிறந்தன வொண்மலர்த் திருப்பாதத் தப்ப னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே . வைப்பு, மாடு, என்று, மாணிக்கத்து ஒளி என்று, மனத்திடை உருகாதே செப்பு நேர் முலை மடவரலியர் - தங்கள் திறத்திடை நைவேனை - ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள்-மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே ! vaippu maadu enRu maaNikkaththu oLi enRu manaththidai urukaathee seppu neermulai madavaraliyar thangkaL thiRaththidai naiveenai oppu ilaathana uvamanil iRanthana oLmalar thirupaathaththu appan aaNdu than adiyaril kuuddiya athisayam kaNdaamee பொ-ரை: சிவபெருமான் ஒருவனே நாம் தேடி வைத்துள்ள சேம நிதிக்கு ஒப்பாக விளங்கி அருள் செய்பவன். அவன் மாணிக்கத்தின் ஒளி போன்றவன். அவன் எந்த ஒரு பிற பொருளுக்கும் நிகர் இல்லாத பெரியோன். பிறிதொரு பொருளுக்கு உவமானமாகச் சொல்லப்படும் தன்மைக்கும் அப்பாற்பட்டவன். ஒளி பொருந்திய மலர் போன்ற திருவடிகளை உடையவனும் அவனே. இப்பேர்ப்பட்ட என் தந்தை போன்ற சிவபெருமானை எனது உள்ளத்தில் எக்காலும் எண்ணி எண்ணி மனம் உருக வேண்டிய அடியேன் அவ்வாறு உருகாமல் இருந்து விட்டேன். உருகாமல் மட்டும் இருக்கவில்லை; இளமாதரது கிண்ணம் (செப்பு) போன்ற மார்பிடம் மனத்தை நைவித்து மயங்கி நிற்கின்றேன். இப்பேர்ப்பட்ட இழிதகையேனாகிய அடியேனைச் சிவபெருமான் "நான் கெட்டது அசுத்த மாயையின் சகவாச தோசத்தால் ஏற்பட்டது" என்று எண்ணி என்னை நல்வழிப்படுத்தி, தனது அடியார்களாகிய நல்லாரோடு சேர்த்து ஆண்டு கொண்டு அருளிய அதிசயம் கண்டேன். Oh Lord Civa, you are having a ruby-like effulgence. You are my very treasure of wealth for use at the hour of need. Yet, I do not melt at heart nor wonder at the awareness of these Feet. Instead, I languish under the lure of fair-breasted damsels. And yet, the Lord with matchless flowery Feet beyond compare, took me under Him as His vassal and joined me on to the congregation of His disciples. What amazement is this, that we have seen! கு-ரை: வைப்பு= எய்த்த காலத்துப் பயன்படுவதற்காகச் சேமித்து வைத்திருப்பது; மாடு = செல்வம், வைப்பு என்பதற்கு இடமெனப் பொருள் கொள்வாரும் உளர். இடருற்ற காலை பயன்படுதலால், 'வைப்புமா' டென்றார். நிலைத்த இன்பந் தருதலால் 'மாணிக்கத்து ஒளி' என்றார். செப்பு= குங்குமம் முதலியன வைக்கிற சிமிழ். பெருமையால் ஒப்பிலாதன என்றார். தன்மையால் உவமனில் இறந்தன என்றார். உவமன் = உவமம், உவமையில்லாது கடந்த என்றும் கொள்க. 2. நீதி யாவன யாவையு நினைக்கிலே னினைப்பவ ரொடுங்கூடே னேத மேபிறந் திறந்துழல் வேன்றனை யென்னடி யானென்று பாதி மாதொடுங் கூடிய பரம்பர னிரந்தர மாய்நின்ற வாதி யாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவ ரொடும் கூடேன்; ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன்-தனை - 'என் அடியான்' என்று பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற ஆதி-ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! niithi aavana yaavaiyum ninaikkileen ninaippavarodum kuudeen eethamee piRanthu iRanthu uzalveenthanai en adiyaan enRu paathi maathodum kuudiya paramparan nirantharamaay ninRa aathi aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee. பொ-ரை: எம் தலைவனாகிய சிவபெருமான் அனாதியாகவே என்றும் உள்ள பொருளாய் விளங்கும் முதல்வன். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிற்கின்ற பொருளும் ஆவான். அவன் மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும் (பரம்பரன்), இடையீடு இல்லாதிருப்பவனும் (நிரந்தரம்) ஆவான். அவன் தன் திருமேனியின் இடப்பாகத்தில் உமா தேவியாரைக் கொண்டு விளங்குபவன். அடியேன் வேதங்களிலும், சிவாகமங்களிலும் கூறப் பெற்றுள்ள நீதிகளை மனத்தாலும் எண்ணாதவன். அந்த நீதிகளை உணர்ந்து செயல்படும் அடியார்களோடு கூடிப்பழகி ஒழுகவும் செய்திலேன். காற்றாடியும், சக்கரமும் போல மாறி மாறித் திரும்பவும், திரும்பவும் பிறந்தும், இறந்தும், துன்பத்திலே உழன்று கிடக்கின்றேன். சிவபெருமான், இப்பேர்ப்பட்ட எனது அகப்பற்றையும், புறப் பற்றையும் நீக்கி, எனது அறியாமையையும் அகற்றி, எனது ஆணவ மலத்தையும் வலி இழக்கச் செய்து, சிவமயமாக விளங்கும் சிவனடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயம் புரிந்ததை அடியேன் கண்டேன். I contemplate not on any righteous thing, nor do I join those who are in such contemplation. I am just wandering about here, suffering the throngs of repeated births and deaths. And yet, what amazement, this, that we have seen! The omnipresent Lord, one half female, primordial Lord of eternity, took me under Him as His vassal and joined me on to the congregation of His disciples. கு-ரை: ஏதம்= குற்றம். ஏதமே= ஏதமேயாய்= குற்றத்தின் வடிவமேயாய்; வீணே என்றும் பொருள் கொள்ப. உழல்வேன் = அலைந்து துன்புறுவேன், நிரந்தரமாய்= நித்தியமாய். 3. முன்னை யென்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னையாவரு மறிவதற் கரியவ னெளியவ னடியார்க்குப் பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனி லிளமதி யதுவைத்த வன்னை யாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண் அது உடை எந்தை, தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்குப், பொன்னை வென்றது ஓர் புரிசடை முடி-தனில் இளமதி - அது வைத்த அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! munnai ennudai valvinai pooyida mukkaN athu udai enthai thannai yaavarum aRivathaRku ariyavan eLiyavan adiyaarkku ponnai venRathu oor purisadai mudithanil iLamathi athu vaiththa annai aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee. பொ-ரை: எங்கள் தந்தை போன்றவனாகிய சிவபெருமான் சோம, சூரிய, அக்கினி ஆகிய மூன்று கண்களை உடையவன் (இவை மூன்றும் காலக் கருவியாகிற சூரிய சந்திரர்களுக்கு ஒளி தருவனவாயும், அக்கினிக்கு வலிமையும், சுடுகின்ற ஆற்றலும் அளிப்பதாயும், யாக சாட்சியாகவும், யாகாக்கினிக்கு மூலமாயும் அமைந்தவை என்பது சிவாகமக் கருத்து. ) பதமுத்தியிலும், பதவிகளிலும் இருப்பவர்களாகிய அயன் முதல் அனந்தாதியர் முடிய எத்தகையவராலும் அவன் அறிதற்கு அரியவன். ஆனால், சிவன் ஒருவனே தியானிக்கத் தக்கவன் என்பதை உணர்ந்து, அதற்குரிய உபாயங்களில் நின்று, உபதேசம் பெற்று, ஐந்தெழுத்து அருமறை வழிநின்று சிவஞானம் பெற்ற தம் அடியார்கள் அறிந்து அநுபவிப்பதற்கும் எளியனாய் உள்ளவன். இளம்பிறை (மூன்றாம் பிறைச் சந்திரன்) செய்த மாபாதகங்களை மறந்து, அதனை இரட்சித்து, தாயன்பு காட்டிப் பேரருள் செய்து பொன் ஒளியினும் மேம்பட்ட தனது ஒப்பற்ற சடாமுடியில் வைத்துக் கொண்ட சிவபெருமான் தாய் போன்று விளங்குகின்றான். நான் முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் நசிக்கும்படிச் செய்து, தவம் மிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், வினையே மிக்கவனாகிய என்னையும் அவன் சேர்த்தருளிய அதிசயம் கண்டோமே. The three-eyed Lord, my Father, Lord beyond the comprehension of all, and yet easy of reach to devotees, Lord donning the crescent moon on His shining braided locks that surpass the sheen of gold, one like a mother unto me, took me as vassal under Him and joined me on to the congregation of devotees, that the effect of all my past evil deeds may cease to be. What amazement is this, that we have seen! கு-ரை: முன்னை = முன்னாக. இதனை வல்வினை என்பதனோடு சேர்த்துப் பழமையாகிய வினை என்பாரும் உளர். போயிட = விரைவிலொழிய. வினைக்கு ஆட்பட்டிருந்ததனால் 'உடை வல்வினை' என்றார். தன் + ஐ = தன் தலைவன். இதனை 'யறிவதற்கு' என்பதனோடு சேர்த்துத் தன்னை அறிவதற்கரியவன் என்றும் உரைப்பர். புரிசடை = கட்டிய சடை. சடையின் பிரிவுகளைப் 'புரி' என்றலும் உண்டு. 4. பித்த னென்றெனையுலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீ ரொத்துச் சென்றுதன் றிருவருட் கூடிடு முபாயம தறியாமே செத்துப் போயரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே. 'பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது; கேளீர்; ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே piththan enRu enai ulakavar pakarvathoor kaaraNam ithu keeLiir oththu senRu than thiruvaruL kuudidum upaayam athu aRiyaamee seththuppooy aru narakidai viizvathaRku oruppadu kinReenai aththan aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee பொ-ரை: உலகத்தவர் என்னைப் பித்தன் என்று கூறும் காரணத்தினைச் சொல்லுகின்றேன் கேளுங்கள். இறைவனது திருவருளோடு மனமொத்து நடந்து, அவ்வருளை விரைந்து எய்தும் உபாயம் அறியாதவன் யான்; ஆகவே வீணாக இறந்து கொடிய நரகத்தில் வீழ இருந்த அடியேனை என் அத்தனாகிய இறைவன் ஆட்கொண்டான். இவ்வாறு அருளித் தன் அடியார் கூட்டத்தில் சேர்ப்பித்த இவ்வதிசயம் யாம் கண்டோமே. Not knowing the path of attaining His Divine Grace, not falling in line with His will, I tend to move on ever towards death and the infernal realms of hell. Listen, this is why men of the world call me a mad man. And yet, what amazement is this, that we see here, Lord Civa, my Father, took me vassal under Him and joined me on to the congregation of His devotees (condoning my shortcomings). கு-ரை: திகில் பிடித்தாற்போல் நிற்பவனை உலகினர் பித்தனென்று இகழ்கின்ற மரபுபற்றி, இச்செய்யுளியற்றினர். 2ஆம் அடியில் தன் என்பது அத்தனைக் குறிக்கும். அருநரகு - பொறுத்தற்கரிய துன்புடைய நரகு என்பாரும் உளர். ஒருப்படுகின்றேன் = ஒருப்படுமியல்புடைய என்னை. 5. பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார்குழ லார்திறத் தேநின்று குடிகெடு கின்றேனை யிரவு நின்றெரி யாடிய வெம்மிறை யெரிசடை மிளிர்கின்ற வரவ னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே. பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்; குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடிகெடு கின்றேனை இரவு நின்று எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! paravuvaar avarpaadu senRu aNaikileen palmalar paRiththu eeththeen kuravuvaar kuzalaar thiRaththee ninRu kudikedu kinReenai iravu ninRu eriaadiya emiRai erisadai miLirkinRa aravan aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee பொ-ரை: எம் தலைவனாகிய சிவபெருமானது புகழ்களைச் சொல்லித் துதிப்பவர்கள் பக்கம் சென்று சேர மாட்டாதவன் யான். நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ (மரக் கொம்புகளில் தோன்றும் பூ (Flowers on branches) போன்ற பல மலர்களைப் பறித்துக் கொணர்ந்து சிவபூசை செய்யேன். குரவ மலர் அணிந்த நீண்ட கூந்தலை உடைய பெண்கள் சார்பில் நின்று பிழைப்புக்கே கேடு தேடுகின்றவன் யான். இத்தகைய என்னை, பேரூழிக்காலத்து இரவிலே ஊழித்தீயில் நின்று ஓங்காரத் தாண்டவம் புரிகின்ற எம் இறைவனும், தீக்கொழுந்து போலும் சிவந்த சடையிலே விளங்குகின்ற பாம்புகளை அணிந்தவனுமாகிய சிவபெருமான், ஆட்கொண்டு, தன் அடியார்களோடும் கூட்டி வைத்த அதிசயம் அறிந்தோமே. What amazement is this, that we have seen here. I do not mingle with the choir of devotees who sing on his glories, nor do I pay obeisance to Him with a multitude of floral tributes. Instead I tend to get lost in the company of damsels with sweet scented flower- bedecked tresses. And yet, lo, our Lord of the nocturnal dance of flame, with shining snakes on flashy braided locks, took me vassal under Him and joined me on to the congregation of devotees. கு-ரை: பாடு= இடம், குணம், பெருமை. பன்மலர்= நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ என்பன. குரவு= ஒருவகை வாசனையுள்ள மரம். வார்= நீண்ட. எரியாடிய = ஊழித்தீயிலாடிய என்பதும் உண்டு. எரிசடை= ஒளிர்கின்ற சடை என்றலும் உண்டு. 6. எண்ணி லேன்றிரு நாமவஞ் செழுத்துமென் னேழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிக டம்மொடு நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை யண்ண லாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள்-தம்மொடு; நல் வினை நயவாதே, மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படு கின்றேனை, அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! eNNileen thirunaamam anjsezuththum en eezaimai athanaalee naNNileen kalai njaanikaL thammodu nalvinai nayavaathee maNNilee piRanthu iRanthu maNNaavathaRku oruppadu kinReenai aNNal aaNdu than adiyaril kuuddiya athisayam kaNdaamee. பொ-ரை: எனது அறியாமையினால் சிவபெருமானுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை நினைந்திலேன். கலை ஞானத்தையும் நண்ணிலேன் . சிவஞானியர்களோடு கூடி, புண்ணியங்களாகிய நற்செயல்களையும் செய்ய மாட்டேன். இம்மண்ணுலகில் பிறந்து, இறந்து மண்ணோடு மண்ணாகப் போவதற்கு இருக்கின்றேன். இத்தகைய என்னைப் பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான் ஆட்கொண்டருளித் தன் அடியார்களோடு கூட்டுதலாகிய பேரருளைச் செய்தான். இது அதிசயம் அன்றோ ? இந்த அதிசயத்தைக் கண்டேன். Because of ignorance, I did not contemplate on His name, the Blissful Pentad; Hence I could not rise up and join the company of learned saints. Not yearning for righteous deeds, I develop a tendency to get born again and again into this earth and to die out into dust. And yet,lo, what amazement is this, that we see here! The noble Lord, took me vassal under him and joined me on to the congregation of devotees. கு-ரை: வாசனாமலம் நீங்குவதற்குத் திருவைந்தெழுத்தை நினைதல் சிவஞானபோதம் 9.ஆம் சூத்திரத்தில் கூறியதைக் காண்க. பிரணவத்தை ஐந்தெழுத்து எனலும் உண்டு. ஏழைமை= அறியாமை. நல்வினை= நற்செயல். இது இருவினைகளுள் சேர்ந்த நல்வினையன்று. அது பயன் கருதிச் செய்யப்படுவது. பயன் கருதாத நற்றவமே ஈண்டுக் குறிக்கப்பெற்றது. இறந்தவுடன் உடம்பானது மண் முதலிய ஐம்பூதத்திற் கலத்தலால் 'மண்ணாவதற்கு' என்றார். 7. பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை யித்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே. பொத்தை ஊன் சுவர்; புழுப்பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க்கூரை; இத்தை, மெய்எனக் கருதி நின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை முத்து, மாமணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின் முழுச் சோதி, அத்தன்-ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! poththai uunsuvar puzuppothinthu uLuththu asumpu ozukiya poykkuurai iththai mey ena karuthi ninRu idarkkadal suziththalai paduveenai muththu maamaNi maaNikka vayiraththa pavaLaththin muzussoothi aththan aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee பொ-ரை: எனது உடம்பு ஒன்பது துவாரங்களை உடையது. பல மயிர்த் துவாரங்களையும் கொண்ட ஓட்டைகளையும் உடையது. ஊனாலாகிய சதையைச் சுவராக உடையது. புழுக்கள் பொதிந்து கிடப்பதால் உளுத்துப் போனதும், நிணநீர் கசிந்து வடிகின்றதுமான நிறையற்ற தோலினால் ஆகிய கூரையைக் கொண்டது. அழிந்து போகும் இந்த உடம்பை நிலைத்த பொருளாக எண்ணித் துன்பக் கடலின் சுழியில் அகப்பட்டுள்ளேன் . இப்பேர்ப்பட்ட என்னைச் சிவபெருமான் ஆட்கொண்டு அருள் செய்தான். அவன் எவ்வாறுள்ளான் என்பது தெரியுமா ? முத்து, வயிரம் போன்றவற்றின் ஒளி போன்று விளங்கும் திருநீற்று ஒளி பிரகாசிக்கின்ற சோதியாய்த் தோன்றுபவன். மாணிக்கம், பவளம் என்பவற்றின் ஒளி போன்ற திருமேனி உடையவன். இப்பேர்ப்பட்ட அருட்பெரும் சோதியாகிய சிவபெருமான் என்னை ஆட்கொண்டு தன் அடியார் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்ட அதிசயம் கண்டோம். I keep whirling around here, tossed about by the harrowing sea of mundane tribulations. Tribulations that in fact stem from my holding this physical body as real thing, this worm ridden body of filth and oozing puss, this multi vented falsehood of a frame. And yet what amazement, our Sire took me vassal under Him and joined me on to the congregation. He, of fulsome effulgence , like unto the sheen of glittering pearls, topaz, coral, rubies and diamonds. கு-ரை: உடம்பகத்தே உள்ள தசையைச் சுவராகவும் தோல் முதலியவற்றைக் கூரையாகவுங் கூறினர். முத்து, வைரம் என்பவற்றின் நிறம் திருவெண்ணீற்றின் ஒளிக்கும், மாணிக்கம் பவளம் என்பவற்றின் ஒளி திருமேனியின் ஒளிக்கும் உவமைகளாயின. மாமணி முத்து என மாற்றுக. இதை என்பது இத்தை என விரிந்தது. பொத்தை என்பதற்குப் பருத்தது எனவுங் கூறுப. 8. நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி யாக்கி யாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை, குரம்பையில் புகப் பெய்து; நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்துத் தூக்கி முன் செய்த பொய் அறத்துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! niikki mun enai thannodu nilaavakai kurampaiyil pukappeythu nookki nuNNiya nodiyana soRseythu nukam inRi viLaakkaiththu thuukki mun seytha poy aRath thukaL aRuththu ezutharu sudarsoothi aakki aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee. பொ-ரை: சிவபெருமானே! நீ என்னை ஆதியில் உன்னிடமிருந்து பிரிவித்தாய் (இவர் முன்பு திருக்கயிலையில் உள்ள சிவகணநாதர்களுள் ஒருவராய் இருந்து இறைவனது ஆணையாலே இவ்வுலகில் தோன்றியவர் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்புரணம் கூறுகின்றது. இதை 'முன் என்னைத் தன்னொடு நில்லாவகை நீக்கி' என்பது தெளிவாகக் காட்டுகிறது). பிரிந்தபின் பிறவியிற் புகுவித்தாய். இந்த உடம்பினுள் புகுந்த பின்னர் யான் ஐம்பொறிகளின் துணைக் கொண்டு புலன்களைத் துய்த்துப் போகமே பெரிதெனக் கருதி பிறவிக்கடலின் கரை காணாது தவித்துக் கொண்டிருந்தேன். என் அறியாமைக்கு இரங்கி என்னை உனது திருவடியில் சேர்க்கத் திருவுளங் கொண்டு குருவாக வந்து திருவருள் நோக்கம் புரிந்து, நுண்ணியனவும், கைநொடியில் அமைந்தனவும் ஆகிய சின்முத்திரையைச் சொல்லாகச் சொல்லி அருள் செய்தாய் . இருமாடுகள் உழுவதற்கு நுகத்தடி போன்ற கம்பு வேண்டும். அவ்வாறன்றி, தொடர்பு ஏதும் இல்லாமல் என்னை உன் திருவடியில் சேர்த்துவிட்டாய். அதனால் நான் பிறவிக்கடலிலிருந்து மேலே தூக்கிவிடப்பட்டேன். இவ்வாறு தூக்கி விடப்படுவதற்கு முன், யான் செய்த, பொய்யான பயனில்லாத செயல்கள் ஒழியும்படிப் பாசமாகிய குற்றத்தைத் தொலைத்து, உன் வீட்டிற்கு உரியவன் ஆக்கினாய். இவ்வாறு என்னை ஆட்கொண்டு அருளி, உன் அடியாருடன் சேர்ப்பித்த வியப்பினை அறிந்தோமே. Note: This is a complicated verse and difficult to translate literally. To make the readers understand easily, a small introduction and an elaborate explanatory translation is given hereunder. Introduction: The first line in this stanza should be read "தன்னொடு நில்லா வகை முன் எனை நீக்கி குரம்பையில் புகப்பெய்து”. These words clearly indicate that Maanikkavaachakar was one of Lord Civan's celestial hosts (Civaganas), before he was born as Vaathavoorar in this earth. As per Lord Civan's mandate to fulfill certain role in this world, he was made to be born here. Lord Civan removed me from his proximity in yore and made me to be born with this body as "Vaathavooran" in the village called Thiruvaathavoor, to fulfill certain role in this earth. When the ordained time came, casting His looks on me, an electromagnetic effect was created on me by a very small mystic word, which He impressed in my mind (சொல் செய்து) . This instantaneously converted the Paandiyan minister into a sage, whose utterances were of ruby-like quality; thereafter he was called Maanikkavaachakar. Similar to ploughing without yoke and rope (which Lord Civan alone can do) He, lifted me from the sea of birth and deaths, and attached me to his holy Feet, without any bonding material of yoke and rope. Then he ploughed into my heart and mind to remove completely and nullify my past sins done due to my ignorance. Then I became whole, and joined His congregation of his devotees. What an amazement is this, that we have seen. கு-ரை: இறைவன் தன்னொடு நின்றது என்றது, முற்பிறவியில் கயிலையில் இருந்தமையைக் குறிக்குமென்றும், கேவலநிலையிலிருந்தமையைக் குறிக்கும் என்றும் கூறுப. நொடியன என்பதில் நொடி= கைநொடிப் பொழுதில் கூறப்படுஞ்சொல். அன = அன்ன, போன்ற, அத்தகைய சொல்லினை "ஓம்" என்ப. சொல்லின் பொருளை உள்ளத்திற் பதிய வைத்தமையாற் 'சொற்செய்து' என்றார். நுகம்=வண்டியிற் காளைகளைப் பூட்டும் மரத்தடி. 'நுகமின்றி' என்றது சுட்டறிவின் தொடர்பின்றி. விளாக்கைத்து =சேர்த்து, பூட்டி, கலக்கச் செய்து. விளாக்கை= விளாவுதல், கலத்தல். விளாக்கை என்பது வினையாக வழங்கப்பட்டது. பொய்= பயனில் செயல். துகள்= குற்றம். 9. உற்ற வாக்கையி னுறுபொரு ணறுமல ரெழுதரு நாற்றம்போற் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொரு ளப்பொருள் பாராதே பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே யத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள் அப் பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! uRRa aakkaiyin uRuporuL naRumalar ezutharu naaRRam pool paRRal aavathoor nilai ilaap paramporuL apporuL paaraathee peRRavaa peRRa payan athu nukarnthidum piththar sol theLiyaamee aththan aaNdu than adiyariR kuuddiya athisayam kaNdaamee பொ-ரை: மலர்களின் வாசனை கண்ணால் காண முடியாத ஒன்று. அதுபோல, ஐம்புலன்களால் பற்றப்படாமல் இருப்பது மேலாகிய மெய்ப்பொருள் (சிவபெருமான்). பொறிபுலன்களால் பற்றக்கூடாத பரம்பொருளைச் சிவஞானம் ஒன்றினால்தான் பற்ற முடியும். அவ்வாறு பற்றி அநுபவிப்பதே நாம் இந்தப் பிறவி எடுத்ததின் மேலான பயனாகும். அம்மெய்ப்பொருளைப் பற்றிக் கொண்டு அனுபவிக்க முயலாமல் கிடைத்த வினைப்பயனை கிடைத்த முறையே அனுபவித்து ஒழிவது அறிவீனர்கள் (பித்தர்கள்) செயல். அத்தகைய அறிவீனர்கள் சொற்கேட்டு கெட இருந்த என்னை, அவர்கள் சொல்லைக் கேளாத வண்ணமாக்கிச் சிவபெருமான் என்னை ஆண்டுகொண்டு தன் அடியார்கள் கூட்டத்தோடு சேர்த்த அதிசயம் கண்டோமே. The illimitable expansive one, much like the fragrance immanent in flowers, is beyond the comprehension of the human mind. Such is the relevance of the Entity residing in this human frame that we have come to possess. Senseless folks, not looking for this entity, revel in whatever transient pleasures chance to come their way. The good Lord, my Father, sheltered me from such folks, took me vassal under Him, and joined me on to the congregation. What amazement is this, that we have seen! (In this connection, we note the words of Thirumanthiram (705), உடம்பினுக்குள்ளே 'உறுபொருள்' (Lord the Supreme) கண்டேன் (Realized that the Lord Supreme resides in my body). The saint uses the same term 'உறுபொருள்' that resides in the யாக்கை (human body). கு-ரை: உறுபொருள்= மிகுந்த பயன். மலர் எழுதரு நாற்றம் பற்றப்படுவது போல் பற்றமுடியாத தன்மையுடைய பரம்பொருள் என்று கூறுவாரும் உளர். பெற்றவா என்பதை நுகர்ந்திடும் என்பதனோடு முடிக்காமல், பெற்ற என்பதனோடு முடித்து அடைதற்குரிய முறையிலே அடைந்த எனப் பொருள் கொள்வதும் உண்டு. பித்தர்= அறிவீனர். 10. இருடி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடி லிதுவித்தைப் பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத் தெருளு மும்மதி னொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ யருளு மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய வதிசயங் கண்டாமே இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது இத்தைப் பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனைத் தெருளும் மும்மதில், நொடி வரை இடிதரச் சினப் பதத்தொடு செம்தீ அருளும் மெய்ந்நெறி - பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே! iruL thiNinthu ezunthiddathoor valvinai siRu kudil ithu iththai poruL enakkaLiththu aru narakaththidai vizappuku kinReenai theruLum mummathil nodivarai idithara sinappathaththodu senthii aruLum meynneRi poynneRi niikkiya athisayam kaNdaamee. பொ-ரை: இப்பாட்டில் "இருள்" என்ற முதல் வார்த்தை ஆணவ மலத்தைக் குறிப்பதாகும். அது ஆன்மாவின் அறிவு, இச்சை முதலியன கொண்டு நல்ல செயல்களைச் செய்ய விடாது தடுத்து அறியாமையை விளைவிக்கும். ஆணவ மலம் தன்னையும் காட்டாது; தன்னிடமுள்ள பொருளையும் காட்டாது. ஆதலால் ஆணவ மலத்தை 'இருள்' எனக் குறிப்பிட்டார். ஆன்மா தனது முற்பிறவிகளில் செய்து தொகுத்து வைத்துள்ள தொகை வினைகளை (நல்வினையும் தீவினையும்) ஒரு பகுதியாவது நுகர்ந்து கழிப்பதற்காக இறைவனால் அருளப்பட்டது இந்தப் பிறவி. ஆணவ மலம் அநாதியாகவே ஆன்மாவைச் சார்ந்த வண்ணமாகவே இருந்துவரும். இறைவன் கருணையால் மட்டுமே அது வலி இழந்து கிடக்கும். ஆணவ மலத்தின் வலிமையினால் அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை யான் உயர்ந்த மெய்ப்பொருள் எனக் கருதி, களிப்போடு வாழ்ந்து வந்தேன். அதன் விளைவாக மீளுவதற்கு அரிதாகிய நரகத்தில் விழப்போகின்ற தருணத்தில் இருந்த என்னைச் சிவபெருமான் தடுத்து ஆட்கொண்டான். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உருவகப்படுத்தும் மூன்று கோட்டைகள் இரும்பு, வெள்ளி, பொன் ஆகியவற்றால் ஆகிய சுவர்களைக் கொண்டு ஆகாயத்தில் விளங்குவன. பகைவர்களது முப்புரங்களையும், நொடிப்பொழுதில் இடிந்து நொறுங்கி விழும்படியாகக் கோபக் குறிப்போடு சிவப்பு நிறமான தீயாகிய அம்பை விடுத்தார் சிவபெருமான். இது அவருடைய மறக்கருணையாகிய மெய்ந்நெறி ஆகும். எனது உடலையும், பொறி இன்பங்களையுமே சதம் என்று கொண்டு, இது பொய்ந்நெறி என்று உணராது இருந்தேன். அது காலை, சிவபெருமான் மும்மல காரியமாகிய முப்புரத்தை அழித்தது போன்று எனது பொய்ந்நெறியையும் நொடிப்பொழுதில் நீக்கி, என்னை ஆட்கொண்ட அதிசயம் கண்டோம். (இப்பத்துப் பாடலாலும் பரம்பரனும், அன்னையும், அத்தனும், அண்ணலுமாகிய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு திருவடி காட்டி அடியரிற்கூட்டியதும், புறச்சமயத்தாரின் பொய்யுரை கேட்டுப் பொய்ந்நெறி புகாமலும், நரகிடை விழாமலும் காத்ததும், 'இருவகைப் பற்றும் அற்று இறைவன் அடியே பற்றி நிற்க' என்னும் உபதேசமுமாகிய முத்திக்குரிய இலக்கணம் மொழிந்தமை காண்க). This physical frame is verily the result of past intemperate activity. Rejoicing that the pleasures derived out of the five senses of my perishable body are great and wonderful,I was about to fall into infernal abyss. But lo, what amazement, the Lord of true light, destroyed my false ways; the one of grace, He who in indignation, annihilated the trifort with flaming fire in the days of yore. கு-ரை: இருள் = அறியாமைக்கு ஏதுவாகிய ஆணவத்தை உணர்த்தும். திரிபுணர்ச்சியை உண்டாக்கும் மாயையினை இருளென்பாரும் உளர். திணிந்து= மிகுந்து, வினைப்போகமே தேகமாதலின் வல்வினைச் சிறுகுடில் என்றார். இரும்பு, வெள்ளி, பொன் ஆகியவற்றாலாகிய சுவர்களை முப்புரங்கள் உடையவாயிருந்தன. அவை ஆகாயத்தில் விளங்கினபடியால் தெருளும் மதில் என்றார். மதில்= கோட்டைக்கு ஆகுபெயர். பதம்= அடையாளம். நெறி என்பது ஆகுபெயர். THIRUCHCHITRAMBALAM 27. புணர்ச்சிப் பத்து 27. PUNARCHCHIP-PATHTHU (அத்துவித இலக்கணம்) The Decad of Divine Union திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது On the Characteristic Features of Non-duality ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai. திருச்சிற்றம்பலம் 'இன்றே போல்க நும் புணர்ச்சி' (புறம் 58) என்புழிப்போல, 'புணர்ச்சி' என்பது இங்கு ஒருங்கிருத்தலைக் குறித்தது; எனவே, இறையுலகத்தில் சென்று இறைவன் திருமுன்பிருத்தலைக் கூறும் பத்துத் திருப்பாட்டுக்களின் தொகுதியே இப்புணர்ச்சிப்பத்து என்பதாயிற்று. இதனுள் நான்காம் திருப்பாட்டுள், புல்லிப் புணர்வது என்று கொல்லோ என்னும் தொடரைச் சிறப்பாகக் கருதி இதற்கு, 'அத்துவித இலக்கணம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். அத்துவிதம்- இறைவனும் ஆன்மாவும் இரண்டற்று நிற்கும் நிலை. இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளில் காணப்படுவது. இஃது இடை இடையே சில அடிகள் சீர்குறைந்து வரும் எண்சீரடி விருத்தத்தால் ஆயது. சில அடிகள் இங்ஙனம் சீர் குறைந்து வருதல் பற்றி இவற்றைப் பொதுவே ஆசிரிய விருத்தம் என்றனர். இங்ஙனம் சில அடிகள் சீர்குறைந்து வருதலும் விருத்தத்திற்கு, இயல்பு. In this decad, we find a very significant aspect of Saivistic Theology that postulates a unique form of relationship between man and the Almighty. There are four distinct stages of relationship spoken of in literature, that bind a man of dedication to God, (i.e.) the bondage between the soul (Atman or Pasu) and the Lord (Paramaatman or Pathi). In the first stage (Daasa Maargham), the relation is as between the master and vassal. The next one (Sat Putra Maargham) envisages a father and son relationship. The third one is that which exists between comrades (Saha Maargham). In the fourth stage, ranked as the highest and the most coveted, the soul, attains full wisdom of the Lord (San Maargham) wherein there is communion with Lord, or 'Saayujyam' in theological parlance. From this state of total merger, there is no return back to the cycle of births and deaths. (c.f. Na cha punaravarthathe - Vide Chandokya Upanishad, Brihadaranya Upanishad and others). Different saints (Nayanmars) had appeared on the scene at different points of time to illustrate these different paths or marghas, all of which invariably lead to 'Saayujyam' in the fullness of time as ordained by Lord Civan. We have heard instances of saints who at one time were in close proximity to the Lord in His abode, but later sent into this world to illustrate the virtue of each one of these four distinct 'maarghas' or paths. Saint Sundarar's hagiography is a case in point. Saint Maanikkavaachakar too was earlier (whilst at Kailash), in a previous birth, in close proximity to Lord Civan (A state of Patha Mukti). After that, he had to spend a sojourn on earth , in order to fulfil certain tasks assigned by the Lord, before final Redemption, Saayujyam, envisaged in Sanmaargham. This state of 'No Return' is the one that all aspirants assiduously yearn for, with intense dedication and hope. This is a characteristic feature in Saiva Theology, rooted in the Timeless Vedas and the Aagamaas . Other subsequent schools of Theology (the so-called Hindu philosophy, a mammoth conglomeration of conflicting ideas) do not however do justice to this hoary aagamic tradition of the soul being in communion with the Lord. Hence without noting the true meaning of it all, certain sections of Hindu theologians are wont to paint a somewhat lurid picture of sensual delights in the relationship between the godly and the human. An aberration brought about by the passage of time. Saint Maanikkavaachakar pines for total communion with the Lord, as such a state of immaculate merger ensures the end of all births then and there. This is the state of Suddha Adwaitam (characteristic Non Duality). This decad therefore is verily a significant lighthouse in the voyage of our saintly personage. 27. 1 சுடர் பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்புகந்து கடைபட் டேனை யாண்டுகொண்ட கருணா லயனைக்கரு மால்பிரமன் றடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்தவென்னா ரமுதைப் புடை பட்டிருப்ப தென்றுகொல் லோவென் பொல்லாமணி யைப் புணர்ந்தே. சுடர் பொன் குன்றைத், தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து , கடை பட்டேனை ஆண்டு கொண்ட கருணாலயனைக் கருமால், பிரமன், தடைபட்டு, இன்னும் சார மாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதைப், புடை பட்டு இருப்பது - என்று கொல்லோ -என் பொல்லா மணியைப் புணர்ந்தே ? sudar poRkunRai thooLaa muththai vaaLaa thozumpu ukanthu kadaippaddeenai aaNdu koNda karuNaalayanai karumaal piraman thadaipaddu innum saaramaaddaa thannai thantha en aaramuthai pudaipaddu iruppathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee. பொ-ரை: இறைவன், ஒளிர்கின்ற பொன்மலை போன்றும் துளைக்கப்படாத முத்து போன்றும் விளங்குகின்றான். பயன் இன்றி, அடிமையாக இருக்க விரும்பிக் கீழ்ப்பட்ட என்னை ஏற்றுக் கொண்ட அருட்கோயில் அவன். கரிய நிறமுடைய திருமாலும் நான்முகனும் செருக்கினால் தடைப்பட்டு இன்னும் சென்றடைய முடியாத கிடைத்தற்கரிய அருமருந்தானவன். பொள்ளப்படாத மாணிக்கமாகிய சிவனைக்கூடி, அவன் பக்கலில் பொருந்தி இருப்பது எந்தாளோ? When indeed shall I stand closeted, in an immaculate state of oneness with Him, that is a flawless gem of mine, Him that is like unto an effulgent mount of gold, like unto genuine pearl serene. To me, a vain functionary of the lowliest order, He showed much indulgence taking me vassal under Him; an embodiment of compassion indeed! He that Brahma and Thirumaal as yet cannot imbibe, due to obstacles in their way, (yet) gave Himself over to me. This, my rare ambrosia! கு-ரை: மாற்றம் யாதுமில்லாத பயனைத் தருவதால் 'பொன் குன்ற' மென்றார். குறைவு யாதுமில்லாதது என்பார் 'தோளா முத்து' என்றார். வாளா= பயனின்றி. உரிச் சொல்லாகக் கொண்டு பயனற்ற என்றும் சொல்லலாம். கருணை + ஆலயன் = கருணாலயன், புடை = பக்கம். பட்டு= பொருந்தி. 'பொள்ளா' என்றது 'பொல்லா' என்றாயிற்று. பொள்ளாத = உளி முதலியவற்றால் செதுக்கப்படாத இறைவன் தனக்கு உரியவனானது பற்றி 'என் பொல்லாமணி' என்றார். 2. ஆற்ற கில்லே னடியே னரசே யவனித்தலத்தைம் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமா னென்றேத்தி யூற்று மணல்போ னெக்குநெக் குள்ளே யுருகி யோலமிட்டுப் போற்றி நிற்ப தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. ஆற்ற கில்லேன் அடியேன்; அரசே ! அவனித் - தலத்து ஐம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, 'சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி ஊற்று மணல் போல், நெக்கு - நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டுப், போற்றி நிற்பது என்று - கொல்லோ - என் பொல்லா மணியைப் புணர்ந்தே? aaRRakilleen adiyeen arasee avani thalaththu aimpulan aaya seeRRil azunthaa sinthai seythu sivan emperumaan enRu eeththi uuRRu maNalpool nekku nekku uLLee uruki oolam iddu pooRRi niRpathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee பொ-ரை: மன்னனே ! அடியேன் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்க மாட்டேன். பூதலத்தில் ஐம்பொறிகளுக்கு விடயமாகிய சேற்றில் ஆழ்ந்து விடாதபடிச் ' சிவனே , எம்பெருமானே' எனச் சிந்தித்தல் வேண்டும். எமது தலைவனை ஏத்தி மணலில் சுரக்கின்ற ஊற்று நீர் போல உள்ளம் நெகிழ்ந்து, நெகிழ்ந்து உருக்கம் கொண்டு, கூவியழைத்து, முழு மாணிக்கமாகிய உன்னைச் சேர்ந்து வணங்கி நிற்பது எந்நாளோ ? Lord, no more can I, Thy vassal, stand the travails of this earthly quagmire of the senses five. When indeed shall I stand closeted in an immaculate state of oneness with Thee, a wholesome gem of mine, paying obeisance, glorifying Thee by chanting 'Oh Lord Civa, our Master'. In such deep seated adoration, with intense dedication springing forth as in a sandy water front, crying out aloud for shelter, seeking salvation and redemption. கு-ரை: 'அவனித்தலத்து ஐம்புலன் ஆற்றகில்லேன்’ என்றலுமுண்டு. புலன் = பொறி ஏற்கும் பொருள். அதன்கண் அகப்பட்டால் எழுந்து விலகுவது கடினமாதலின் 'சேற்றி'லென்றார். ஊற்று மணல் என்பதை மணல் ஊற்று என மாற்றுக. நெக்கு= நெகிழ்ந்து. ஓலம்= அடைக்கல ஒலி. 3. நீண்ட மாலு மயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை யாண்டு கொண்ட வென்னா ரமுதை யள்ளூறுள்ளத் தடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்ப தென்றுகொல்லோ வென்பொல் லாமணியைப் புணர்ந்தே. நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன் வேண்டும் தனையும் வாய்விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவிப், பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே ? niiNda maalum ayanum veruva niiNda neruppai viruppileenai aaNdu koNda en aaramuthai aLLuuRu uLLaththu adiyaar mun veeNdum thanaiyum vaayviddu alaRi viraiyaar malar thuuvi puuNdu kidappathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee. பொ-ரை: உலகை அளக்கும் பொருட்டு நெடிய திருவுருக்கொண்ட திருமாலும், பிரமனும் அஞ்சும்படியாக உயர்ந்த அனற்பிழம்பானவனே ! உன்பால் விருப்பமில்லாத என்னை ஆட்கொண்டருளியவன் நீ! கிடைத்தற்கரிய என் அருமருந்தும், பொள்ளலில்லாத மாணிக்கமும் போல்வானே ! மிகுதியும் இன்பம் ஊறுகின்ற அன்பர் நின் முன்னே வேண்டியன எல்லாம் வாய்விட்டு அரற்றி, வாசனை மிகுந்த பூக்களைத் தூவி, வணங்கி, திருவடியைச் சிரமேற்கொண்டு செயலற்றிருப்பது எந்தாளோ? Ever expanding Flame, much to the chagrin of the tall-framed Thirumaal and Brahma, unto this illimitable glow of flame, Alas, I have no predilection. And yet, He, my rare elixir, took me vassal under Him. When indeed shall I stand closeted in an immaculate state of communion with Him, a wholesome gem serene - offering fragrant flowers, with satisfying crises of intensity, alongside the many devout souls of ever-flowing bliss. கு-ரை: அள்ளூறும்= மிகுதியாக ஊறும், எலும்பும் உருக என்றுரைத்தலும் உண்டு. சீவ உபாதி ஒழியும் வரை துதிப்பதையே 'வேண்டுந்தனையும் வாய்விட்டலறி' என்றார். 'பூண்டு' என்பதற்கு அடிமைத்திறம் பூண்டு, திருவடியைப் பொருந்தி என்றும் உரைப்ப. 4. அல்லிக் கமலத் தயனுமாலு மல்லாதவரு மமரர் கோனுஞ் சொல்லிப் பரவு நாமத்தானைச் சொல்லும் பொருளு மிறந்தசுடரை நெல்லிக் கனியைத் தேனைப்பாலை நிறையின் னமுதை யமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும், சொல்லிப் பரவும் நாமத்தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத், தேனைப், பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையைப், புல்லிப் புணர்வது என்று-கொல்லோ-என் பொல்லா மணியைப் புணர்ந்தே? alli kamalaththu ayanum maalum allaathavarum amarar koonum solli paravum naamaththaanai sollum poruLum iRantha sudarai nelli kaniyai theenai paalai niRai in amuthai amuthin suvaiyai pulli puNarvathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee பொ-ரை: அழகிய உள் இதழ்களையுடைய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் விண்ணவர் தலைவன் இந்திரனும், பிறரும் புகழ்ந்து, துதிக்கும் திருப்பெயரையுடையவன் சிவபெருமான். சொல்லுலகையும், பொருள் உலகையும் கடந்து நின்ற ஒளியானவன். நெல்லிக்கனியையும், தேனையும், பாலையும், பூரண நயமுள்ள அமுதையும் அதன் சுவையையும் போல் தித்தித்திருப்பவன். பொள்ளாத மாணிக்கம் போன்ற சிவனை இறுகப்பற்றி அத்துவிதமாகக் கலந்து நிற்பது எந்நாளோ? He of the name chanted not only by Thirumaal and Brahma of the petalled lotus, but chanted also by the head of the devas all of whom pay obeisance to Him in glorification. Our noble Lord who is the light surpassing speed and word's intent. He like unto the Nelli (amla)fruit, honey, milk, fulsome nectar, ambrosia, and the taste immanent in ambrosia; when indeed shall I stand closeted, in an immaculate communion with such a one, this wholesome gem of my Lord. கு-ரை: அல்லி = அகவிதழ், சொல்லும் பொருளும் மாயா காரியமாதலால், அவற்றைக் 'கடந்த' என்றார். சரியை, கிரியை, யோகம், ஞானயோகம், ஞானத்தின் ஞானம் என்னும் நிலையில் நிற்பவர்க்கு இறைவன் இன்பம் தருமுறையை நெல்லிக் கனி முதலிய உவமைகளாற் குறித்தார் எனலாம். 5. திகழத் திகழு மடியுமுடியுங் காண்பான் கீழ்மே லயனும்மாலு மகழப் பறந்துங் காணமாட்டா வம்மா னிம்மா னிலமுழுது நிகழப் பணிகொண் டென்னையாட்கொண் டாவா வென்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ்மேல், அயனும் மாலும் அகழப் பறந்தும் காணமாட்டா அம்மான், இம் மாநிலம் முழுதும் நிகழப் பணிகொண்டு , என்னை ஆட்கொண்டு, ஆ!ஆ! என்ற நீர்மை எல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே ? thikaza thikazum adiyum mudiyum kaaNpaan kiizmeel ayanum maalum akaza paRanthum kaaNamaaddaa ammaan immaanilam muzuthum nikaza paNikoNdu ennai aadkoNdu aa aa enRa niirmai ellaam pukaza peRuvathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee பொ-ரை: மிகச் சிறந்து விளங்குகின்ற திருவடியையும் திருமுடியையும் காண்பதற்காக கீழும், மேலுமாகப் பிரமனும், திருமாலும் அகழ்ந்தும், பறந்தும் காண இயலாத அம்மானாகியவன் சிவபெருமான். இப்பெரிய பூமி முழுதும் தெரியுமாறு என்னை ஏவல் கொண்டருளி வாவென்று ஏற்றுக் கொண்ட கருணைத் திறம் உள்ளவன் . பொள்ளா மணியாகிய என் மாணிக்கத்தைப் புகழ்ந்து பேசி அவனைக் கலந்து நிற்பது எந்நாளோ? Brahma flew so high and Thirumaal dug so deep for to see the Head and Feet of the expanding effulgent treat! And yet, they could not come through in their valiant feat. Such are the traits of our noble Lord who took command over this world and all, and made me vassal with His call that many a blessed task on me may fall. When indeed shall I stand closeted in an immaculate communion with Him chanting the awesome glory of Him, a gem for me. கு-ரை: திகழத் திகழும்= மிகுதியாக விளங்கும். கீழ் மேலயனும் மாலும் என்றது எதிர் நிரல் நிறை. கீழ் மாலும் மேல் அயனும் எனக்கொள்க. அகழ்ந்து என்பது, அகழ என நின்றது. அம்மான்= அப்பெரியோன். நிகழ= செய்தி பரவ. 6. பரிந்து வந்து பரமானந்தம் பண்டே யடியேற் கருள்செய்யப் பிரிந்து போந்து பெருமாநிலத்தி லருமா லுற்றே னென்றென்று சொரிந்த கண்ணீர் சொரியவுண்ணீ ருரோமஞ் சிலிர்ப்ப வுகந்தன்பாய்ப் புரிந்து நிற்ப தென்று கொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. பரிந்து வந்து, பரம - ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள் செய்யப், பிரிந்து போந்து, பெருமாநிலத்தில் அருமால் உற்றேன், என்று என்று, சொரிந்த கண்ணீர், சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய்ப், புரிந்து நிற்பது என்று-கொல்லோ-என் பொல்லா மணியைப் புணர்ந்தே ? parinthu vanthu parama aanantham paNdee adiyeeRku aruLseyya pirinthu poonthu perumaanilaththil arumaal uRReen enRu enRu sorintha kaNNiir soriya uLniir uroomam silirppa ukanthu anpaay purinthu niRpathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee. பொ-ரை: இறைவன் என்மீது இரங்கிக் குருவாய் வந்து பேரானந்தத்தை அருள் செய்தனன். அவனைப் பிரிந்து இப்பெரிய பூமியில் கடத்தற்கரிய மயக்கமுற்றேன். இதை எண்ணி, எண்ணிச் சிந்திய கண்ணீரோடு உள்ளம் உருகி, நீர் பொழிய, மயிர்கூச்செறிய மகிழ்ந்து, அன்போடு பொள்ளலில்லாத மாணிக்கம் போல்வானைச் சேர்ந்து காதலித்து நிற்பது எந்நாளோ? In the past itself came He with kindly slant towards me showering bliss so supreme. Later parting from Him, on to this world so wide came I and in darkness did dive. Chanting thus and with tearful eyes and melting heart, hair raised on end when indeed shall I, in conscious adoration stand closeted in an immaculate communion with Him, a wholesome gem for me. கு-ரை: பெருமாநிலத்து என்பதில் மா என்பது அசை. 'சொரிய உள்நீர்' என்பதற்கு உயிரின் தன்மைகள் நீங்க என்றும் பொருள் கொள்ப. புரிந்து = விரும்பி. 7. நினையப் பிறருக் கரியநெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை யில்லாத்தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டங் கனையக் கண்ணீ ரருவிபாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் புனையப் பெறுவ தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரைக், காலை, நிலனை, விசும்பைத் தனை ஒப்பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டம் கனையக் கண்ணீர் அருவி பாயக் கையும் கூப்பிக் கடி மலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே ? ninaiya piRarukku ariya neruppai niirai kaalai nilanai visumpai thanai oppaarai illaa thaniyai nookki thazaiththu thazuththa kaNdam kanaiya kaNNiir aruvi paaya kaiyum kuuppi kadi malaraal punaiya peRuvathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee பொ-ரை: அன்பரல்லாத மற்றவருக்கு நினைத்தற்கரிய வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்தும் ஆனவனைத் தனக்கு நிகரில்லாத தனியானவனைக் கண்டு மகிழ்ந்து அவனைக் கண்டு உடல் பூரித்துத் தழுதழுத்துத் தொண்டை ஒலி செய்யக் கண்ணீர் அருவியாய்ப் பாய கையினால் அஞ்சலி செய்து பொள்ளாத மாணிக்கம் போல்வானை அடைந்து அடைந்து அவனை நறுமலர்களினால் அணிசெய்யக் கிடைப்பது எந்நாளோ ? Looking at the Unique One, beyond compare or comprehension that is a rare effulgence, water, air, earth and sky all in one - I shed tears of joy that drip on to my bulging neck and, hands folded in supplication, deck with fragrant flowers. when indeed shall I stand closeted in an immaculate communion with Him, a wholesome gem of mine. கு-ரை: செய்யுள்பற்றி ஐம்பூதங்களை முறையாக வைக்கவில்லை. அன்பின் மெய்ப்பாட்டினால் தொண்டை தழுதழுத்து நாத்தடுமாறிக் கனைப்பதுபோல ஒலியெழுவதால் 'தழுத்தகண்டம் கனைய' என்றார். 8. நெக்கு நெக்குள் ளுருகியுருகி நின்று மிருந்துங் கிடந்துமெழுந்து நக்கு மழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்துநவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. நெக்கு - நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும் நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்-சிலிர்த்துப் புக்கு நிற்பது என்று-கொல்லோ-என் பொல்லா மணியைப் புணர்ந்தே? nekku nekku uL uruki uruki ninRum irunthum kidanthum ezunthum nakkum azuthum thozuthum vaazththi naanaa vithaththaal kuuththu naviRRi sekkar poolum thirumeeni thikaza nookki silir silirththu pukku niRpathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee பொ-ரை: உள்ளம் குழைந்து குழைந்து இடைவிடாது உருகி, நின்றும், அமர்ந்தும், கிடந்தும் , எழுந்தும், சிரித்தும், அழுதும் இடையறாது வணங்கி, வாழ்த்துவேனோ? பற்பல ஆனந்தக் கூத்தியற்றிச் செவ்வானம் போன்ற அவன் திருமேனியை விளங்கப் பார்த்து உடல் புளகங்கொண்டு பொள்ளலில்லாத மாணிக்கம் போல்வானை அடைந்து அத்துவிதமாய்க் கலந்து நிற்பதுவும் எந்நாளோ ? Melting and melting at heart internally, standing up, lying down, again rising up, smiling and weeping, worshipping, adoring, and in such many-faceted acts of supplication, do I look towards His effulgent blissful frame that is like unto a flame of reddish hue. In this state, with body quivering in tremulous response, when indeed shall I be in communion with Him, a wholesome gem of mine. கு-ரை: எச்செயல் செய்தாலும் இறைவனை வாழ்த்த வேண்டுமென்பார் 'நின்றுமிருந்தும் வாழ்த்தி' என்றார். நவிற்றி என்பது கற்று என்றும் சொல்லி என்றும் பொருள்படினும் ஈண்டுக் கூத்து இயற்றுதலைக் குறித்து நின்றது. மயிர் சிலிர்த்தல் வியப்பினாலாடுவது, புக்கு நிற்பதென்றது, இறைவியாபகத்துள் அடங்கி நிற்றலை. 9. தாதாய் மூவே ழுலகுக்குந் தாயே நாயேன் றனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க வெப்போது மேதா மணியே யென்றென்றேத்தி யிரவும் பகலு மெழிலார்பாதப் போதாய்ந் தணைவ தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே. 'தாதாய், மூ-ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் - தனை ஆண்ட பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும் ஏது ஆம் மணியே ! ' என்று - என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப் போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? thaathaay muueez ulakukkum thaayee naayeen thanai aaNda peethaay piRavi piNikku oor marunthee peruntheen pilka eppoothum eethaam maNiyee enRu enRu eeththi iravum pakalum ezilaar paatha poothu aaynthu aNaivathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee. பொ-ரை: பழமையாகிய ஏழுலகங்களுக்கும் தந்தையானவனே! தாயானவனே! நாயினும் கடையனான என்னை ஆட்கொண்ட பேதமை உடையவனே! உயிர்களது பிறவி நோய்க்கு ஒப்பற்ற மருந்தே! எக்காலத்திலும், எல்லாவிதப் பயனுமாகிற மாணிக்கமே ! இவ்வாறு இரவும், பகலும் இடைவிடாது வாழ்த்திப் பொள்ளலில்லாத மாணிக்கம் போன்றவனை அடைந்து அழகுநிறைந்த அவனது திருப்பாத மலரினை ஆராய்ந்து, சிவானந்தம் பெருக அணைவது எந்நாளோ ? For all the three and seven worlds we know, Thou art Father and Mother. Thou of simple nature that took me, this cur as vassal under Thee. Thou, matchless medication for the sickness that this worldly birth is, Thou ever-exalted gem, oozing honey of abundance! Chanting thus on Thy glorious day and night when indeed shall I join right, Thy special beauteous flowery Feet in an immaculate communion with Thee, a wholesome gem for me. கு-ரை: மூ= மூத்த; பழமையான. மூன்றிடத்துமுள்ள ஏழுலகங்கள் என்று பொருள் கொண்டால், ஈரிடத்தே ஏழுலகங் கூறு மரபிற்கு மாறாகும். 'ஏழு' என்பதை 'எழு' என்பதன் நீட்சியாகக் கொண்டு மேல் கீழ் நடு என்னும் மூவிடத்தும் எழும் மூவகையான உலகங்கள் யாவற்றிற்கும் என்று பொருள் கொள்ளலாம். 'பேதாய்' என்றது பக்குவமடைவதற்கு முன்னே தன்னை ஆண்டமையால் அது இகழ்ச்சி போற் புகழ்ச்சி. 'பெருந்தேன்' என்பது சிவானந்தத்துக்கு அறிகுறி. பில்க= சிந்த. ஏதாமணியே என்பதை மேதாமணியே எனக் கொண்டு அறிவு வடிவாகிய இரத்தினமே என்றும் உரைப்பர். மேதா= அறிவு. 10. காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லா மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே யெனையாண்ட பார்ப்பா னேயெம் பரமாவென்று பாடிப் பாடிப் பணிந்துபாதப் பூப்போ தணைவ தென்றுகொல்லோ வென் பொல் லாமணி யைப்புணர்ந்தே . காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும் ; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய், மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப் பூப்போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? kaappaay padaippaay karappaay muzuthum kaNNaar visumpin viNNoorkku ellam muuppaay muuvaa muthalaay ninRa muthalvaa munnee enai aaNda paarppaanee em paramaa enRu paadi paadi paNinthu paatha puuppoothu aNaivathu enRu kolloo en pollaa maNiyai puNarnthee. பொ-ரை: உலகங்களனைத்தையும் காப்பவனே ! படைப்பவனே! ஒடுக்குபவனே ! இடம் நிறைந்த வானுலகிலுள்ள தேவர்கள் அனைவருக்கும் முந்தைய மூத்தவனே ! ஆதியில் அடியவனை ஆட்கொண்ட அந்தணனே! பொள்ளலில்லாத மாணிக்கமே! நின்னைக் கூடிப் பணிந்து எமது பரமனே எனப் பலவாறாகப் பாடிப் பொலிவுடைய உனது பாதமலரைச் சார்ந்திருப்பது எந்தாளோ? When indeed shall I join Thy flowery Feet in an immaculate communion with Thee: Thee that thou art verily a wholesome gem for me. Singing and chanting, paying obeisance, calling out "Oh noble one that took me under Thee, Oh the ageless one, primordial origin of all, head of all the deities in the expansive heavens above, Thou that doth create, protect and involute the whole of the universe". கு-ரை: முழுதும் படைப்பாய், காப்பாய், கரப்பாயென வரிசைப்படுத்துக. கண் = இடம், பெருமை. அந்தண வடிவொடு ஆண்டமையாற் 'பார்ப்பானே' என்றார். பூப் போது= பொலிவுடைய மலர், அழகிய மலர். THIRUCHCHITRAMBALAM 28. வாழாப் பத்து 28. VAAZHAAP-PATHTHU (முத்தியுபாயம்) Decad on Quitting the World திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது The Path of Emancipation ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் இறைவனைப் பிரிந்து வாழ மாட்டாமையைத் தெரிவிக்கும் பத்துப் பாடல்களின் தொகுதி வாழாப்பத்து. செத்திலாப்பத்து, உனது பிரிவாற்றாமையால் செத்தொழியும் மெய்யன்பு இல்லாதவன் யான் என்றதாகலின், இஃது அதனின் வேறாதல் அறிக. இதன் பாடல் தோறும், இறைவனை, 'வருக என்று அருள்புரிவாய்' என வேண்டிக் கொள்ளுதலின், அதுவே வீடு பேற்றிற்கு வழி என்னும் கருத்தினால், இதற்கு, 'முத்தி உபாயம்' எனக் குறிப்பு உரைத்தனர் முன்னோர். இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுதும், எழுசீரடி விருத்தத்தால் ஆயது. In this decad too (as in other chapters), the Saint bemoans his sordid state of separation from the Lord and makes fervent appeal for reunion. Each stanza reflects the agony of his earthly life, and for removing him from the abode of Lord Civa whom he used to serve personally with intense dedication in his past life. Unable to bear the pangs of alienation and the intensity of strife in this sublunary existence, he longs for a call from the Lord, summoning him to come over near unto Him once again, as before. His disdain for the mundane and his firm resolve not to live any more on this planet earth, are clear pointers to the exalted spiritual status of the Saint. Significant too are his reminiscence of the past and his bewilderment at having been cast away into a hapless sojourn in this earth bound environment. 28. 1 பாரொடு விண்ணாய்ப் பரந்த வெம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யாரொடு நோகே னார்க்கெடுத் துரைக்கே னாண்டநீ யருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே ! பற்று நான்மற்று இலேன் கண்டாய்; சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?- ஆண்ட நீ அருளிலை யானால் , வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று அருள் புரியாயே. paarodu viNNaay parantha emparanee paRRu naan maRRu ileen kaNdaay siirodu polivaay sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee aarodu nookeen aarkku eduththu uraikkeen aaNda nii aruLilai yaanaal vaarkadal ulakil vaazkileen kaNdaay varuka enRu aruL puriyaayee. பொ-ரை: பூமி முதல் ஆகாயம் வரையிலுமான எல்லாப் பூதங்களிலும் கலந்து விளங்கும் எம்பெருமானே! உன்னைத் தவிர எனக்கு வேறு பற்றில்லை என்பதை நீ அறிவாய் . புகழோடு விளங்குபவனே ! சிவலோக மன்னனே! என்னை ஆட்கொண்ட நீயே எனக்கு அருளவில்லையானால், இக்குறையை நான் யார்க்கு எடுத்துச் சொல்வேன்? யாரிடம் நான் நொந்து கொள்வேன்? கடல்சூழ்ந்து பரந்த இவ்வுலகில் என்னால் இனியும் வாழ இயலாது. (நீ அருளாவிடில் உனக்குத் தானே பழிவரும்? ஆதலால்) என்னை உன்னிடத்தில் 'வா' என்று அழைத்து அருள்புரிய வேண்டும். Oh Lord, that has spread out as the wide expansive sky and the earth, I have no other bond except thee, as you will know. Oh Lord of Civapuram, shining in splendour, abiding in Thirup-Perun-Thurai, with whom shall I share my woes, and to whom shall I explain my misery? Whom shall I blame for my predicament? If thou that took me under Thee before, doth not now shower grace on me again, I cannot stand the ordeal of living in this lengthy sea-girt world anymore. Hence, pray bless me, Oh Lord, with thy gracious call, "Eh, come over now unto me". கு-ரை: மண்ணும் விண்ணும் கூறவே எங்கும் வியாபகமானமை கூறியவாறாயிற்று. பற்று= ஆதரவு. ' சிவபுரத்தரசே சீரொடு பொலிவாய்' என மாற்றுக. 'ஆண்ட நீ யருளிலையானா' லென்பதை 'ஆரொடு நோகேன்' என்பதன் முன்வைக்க. 'கண்டாய்' அசை. 2. வம்பனேன் றன்னை யாண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டா யும்பரு மறியா வொருவனே யிருவர்க் குணர்விறந் துலகமூ டுருவுஞ் செம்பெரு மானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யெம்பெருமானே யென்னையாள் வானே யென்னைநீ கூவிக்கொண் டருளே. வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே ! மற்று நான் பற்று இலேன் கண்டாய்; உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும் செம்பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எம்பெருமானே! என்னை ஆள் வானே! என்னை, நீ கூவிக் கொண்டருளே. vampaneen thannai aaNda maamaNiyee maRRunaan paRRu ileen kaNdaay umparum aRiyaa oruvanee iruvarkku uNarvu iRanthu ulakam uuduruvum semperumaanee sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee emperumaanee ennai aaLvaanee ennai nii kuuvi koNdaruLee. பொ-ரை: ஒன்றுக்கும் ஆகாத என்னை ஆட்கொண்ட இரத்தினமே! நான் உன்னைத் தவிர வேறு எதனிடத்தும் பற்று இல்லாதவன். தேவர்களும் அறியாத தனிமுதல்வனே! தம் அறிவால் அளவிட்டுணர முயன்ற அயன், அரி ஆகியோரின் அறிவின் எல்லையைத் தாண்டி, எல்லா உலகங்களையும் ஊடுருவி அவற்றுக்கும் அப்பால் நிற்கின்ற சிவந்த திருமேனிப் பெருமானே ! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! என்னை ஆள்பவனே ! (நான் உன்னைவிட்டு விலகித் தூரத்தில் நின்றாலும், கருணையால்) நீ என்னை 'வா' என்று கூவி அழைத்து அருள் செய்வாயாக ! Oh priceless gem, that took this strange me too under Thee before, I have no other bond except Thee, as you well know. Oh Lord of bliss, peerless one, beyond the reach of the sky borne gods, beyond the senses of Brahma and Thirumaal, Lord of Civapuram, abiding in Thirup-Perun-Thurai, my Lord Civa, my Chief, Pray send out Thy call to me and grant Thy grace. கு-ரை: வம்பு= பயனின்மை . இருவர்க்கு= இருவருடைய . உம்பர்= வானவர். 3. பாடிமால் புகழும் பாதமே யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ யாண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யூடுவ துன்னோ டுவப்பது முன்னை யுணர்த்துவ துனக்கெனக் குறுதி வாடினே னிங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பாடி மால் புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது உனக்கு; எனக்கு உறுதி வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே. paadimaal pukazum paathamee allaal paRRu naan maRRu ileen kaNdaay theedinii sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee uuduvathu unnoodu uvappathum unnai uNarththuvathu unakku enakku uRuthi vaadineen ingku vaazkileen kaNdaay varuka enRu aruL puriyaayee பொ-ரை: திருமால் பாடித் துதிக்கும் உன்னுடைய திருவடிகளே அல்லாமல் வேறு ஆதரவு உடையவன் அல்லன் யான். சிவலோக மன்னனே ! நீயாகவே என்னைத் தேடி வந்து ஆட்கொண்டாய் . திருப்பெருந்துறையில் விளங்கும் சிவபெருமானே! நான் பிணங்குவதும் உன்னோடுதான். மகிழ்வதும் உனைக் கண்டுதான். எனக்கு உறுதி அறிவிப்பது உன் பொறுப்பு தான். வாட்டமடைந்த நான் இவ்வுலகில் வாழ மாட்டேன். உன்பால் வருக என்று அருள் செய்வாயாக ! As you well know,I have no other bond except Thy feet adored by Thirumaal in prayerful hymns. Lord of Civapuram, abiding in Thirup-Perun-Thurai, Thou comest in search of me and take me under Thee. Often times,I argue with thee and as often,I stand pleased with thee. It is for Thee to implant firmness in me. Oh Lord,I have got so wearied indeed that I do not wish to live here any longer. Pray send out Thy gracious call "Eh, come over now unto me " கு-ரை: ' பாடி மால்' என்பது 'மால் பாடி' என மாற்றுக. எனக்குறுதி உணர்த்துவது உனக்கு எனக் கொள்க. 4. வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யெல்லைமூ வுலகு முருவியன் றிருவர் காணுநா ளாதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய் ; தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எல்லை மூ-உலகும் உருவி, அன்று, இருவர் காணும்நாள், ஆதி, ஈறு, இன்மை வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; ‘வருக' என்று, அருள் புரியாயே. vallai vaaL arakkar puram eriththaanee maRRu naan paRRu ileen kaNdaay thillaivaaz kuuththaa sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee ellaimuu ulakum uruvi anRu iruvar kaaNum naaL aathi iiRu inmai vallaiyaay vaLarnthaay vaazkileen kaNdaay varuka enRu aruLpuriyaayee. பொ-ரை: கொடிய வாளினை உடைய அசுரர்களது திரிபுரத்தை விரைவில் எரித்தவனே! தில்லையில் வாழும் கூத்தப்பிரானே! சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே ! முன்னொரு காலத்து, அயனும் அரியும் அடிமுடி தேடிய போது விண், நிலம், பாதாளம் எனும் எல்லைகளை உடைய மூவுலகங்களையும் ஊடுருவிக் கடந்து, முதலும் முடிவும் இல்லாதவாறு வளர்ந்தவனே! எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லை. இவ்வுலகில் நான் வாழமாட்டேன். 'வருக' என்று அருள்புரிவாயாக. I have no other bond except Thee, as you know, Oh Lord, that burnt down the fortress of the valiant three. Lord of the cosmic dance of Thillai, Lord of Civapuram, Lord Civa abiding in Thirup-Perun-Thurai, Thou that flared up as an endless mighty flame, even as Thirumaal and Brahma sought Thee in the days of yore, pushing through the limits of the three worlds. I do not wish to live here any more. Pray send out Thy gracious call, "Eh, Come over now unto me". கு-ரை: வல்லை = விரைவில். அரக்கரும் அசுரரும் வேறாயினும் இருசொல்லும் பரியாய நாமங்களாய் வருதல் காண்க. அன்று = பண்டைக் காலம். 'அன்று இருவர் காணு நாள் எல்லை மூவுலகுமுருவி ஆதியீறின்மை வல்லையாய்' என முடிக்க. வல்லையாய்= வலிமையுடையையாய். 5. பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே யாண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யெண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் ணென்றிவை நின்கணே வைத்து மண்ணின்மே லடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பண்ணின் நேர்மொழியாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய் ; திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! எண்ணமே உடல், வாய், மூக்கொடு செவி, கண், என்று இவை நின் கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று அருள் புரியாயே. paNNin neermoziyaaL pangka nii allaal paRRu naan maRRu ileen kaNdaay thiNNamee aaNdaay sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee eNNamee udalvaay muukkodu sevikaN enRu ivai ninkaNee vaiththu maNNin meel adiyeen vaazkileen kaNdaay varuka enRu aruL puriyaayee. பொ-ரை: பண்களை ஒத்த மொழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவனே ! நான் உன்னையன்றி வேறு ஆதரவில்லாதவன் . உறுதியாக என்னை ஆட்கொண்டாய். திருப்பெருந்துறை வாழ் சிவபெருமானே ! அந்தக்கரணம் என்று சொல்லப்படுவதும், எந்த ஒரு பொருளையும் அறிவதற்கு உரிய ஆற்றல் கொண்ட மனத்தையும் (எண்ணத்தையும்) பஞ்சேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளையும் நின்பால் வைத்து விட்டேன். அதன்பின் எவ்வாறு நான் மண்ணுலகத்தில் வாழ முடியும் . வாழ முடியாது. வாழ மாட்டேன். ஆதலால், உன்பால் ' வருக' என்று அருள் புரிவாயாக ! I have no other bond except Thee, as you know, Oh Lord, Thou that art consort of Uma the one with a voice of melody. Lord of Civapuram, abiding in Thirup-Perun-Thurai, Lord Civa that took me firmly under Thee. All my thoughts are trained on Thee, through the five-fold gadgets, the physical body, mouth, nose, ears and the eyes. On this planet earth, I no longer wish to live. Hence, pray, call out in Thy grace, "Eh, come now unto me". கு-ரை: பண்ணின் நேர் எனவும், பண்ணின் ஏர் எனவும் பிரிக்கலாம். பின்னதிற்கு, பண்ணைப் போல அழகிய என்று பொருள். தமது மனமும், ஐம்பொறிகளும் இறைவனை நாடினமை இதன்கட் குறித்தார். 6. பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே யாண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யஞ்சினே னாயே னாண்டுநீ யளித்த வருளினை மருளினான் மறந்த வஞ்சனே னிங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே பஞ்சின் மெல் அடியாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செஞ்செவே ஆண்டாய்; சிவ புரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; ‘வருக' என்று, அருள் புரியாயே. panjsin mel adiyaaL pangka nii allaal paRRu naan maRRu ileen kaNdaay senjsevee aaNdaay sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee anjsineen naayeen aaNdu nii aLiththa aruLinai maruLinaal maRantha vanjsaneen ingku vaazkileen kaNdaay varuka enRu aruL puriyaayee. பொ-ரை: பஞ்சினும் மென்மையான திருவடிகள் கொண்ட உமாதேவியாரை ஒருபாகமாக உடையவனே! உன்னையன்றி எனக்கு வேறு துணையில்லை (என்னிடம் எத்துணையோ குறைகளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது) நீ என்னைச் செம்மையாக ஆட்கொண்டாய். சிவலோக மன்னனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே ! அவ்வாறு ஆட்கொண்டு நீ அளித்த கருணையை அறியாமையால் மறந்த வஞ்சகனாகிய நாய் போன்றவனாகிய நான் அஞ்சுகின்றேன். இவ்வுலகில் வாழமாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள்புரிவாயாக. I have no other bond except Thee, as you know. Oh Lord, Thou that art consort of the one with soft silk cotton like feet. Lord of Civapuram, abiding in Thirup-Perun-Thurai well didst Thou take me under Thee. This cur-like me, standeth here, dogged by fear, forgetting the grace that Thou showered on me before, and mired by illusory thoughts. Such ungrateful me, I no longer wish to live here, Pray call out in Thy grace, "Eh, Come over now unto me". கு-ரை: பஞ்சின்' என்பதற்கு 'ஊட்டின செம்பஞ்சை யுடைய' எனவுங் கூறுப. செஞ்செவே =செம் + செவ்வே = மிகச் செவ்வையாக. நீ அளித்த அருளினை மருளினால் மறந்த நாயேன் அஞ்சினேன் வஞ்சனேன் என முடிக்க. 7. பருதிவா ழொளியாய் பாதமே யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துள முருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனே னுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பருதி வாழ் ஒளியாய் ! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திருஉயர் கோலச் சிவ புரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே! கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே. paruthi vaaz oLiyaay paathamee allaal paRRu naan maRRu ileen kaNdaay thiru uyar koola sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee karuNaiyee nookki kasinthu uLam uruki kalanthu naan vaazumaaRu aRiyaa maruLaneen ulakil vaazkileen kaNdaay varuka enRu aruLpuriyaayee பொ-ரை: சூரியனின் ஒளிக்குக் காரணமாய் விளங்குகின்ற ஒளிவடிவானவனே ! (சூரிய ஒளி கண் ஒளிக்கு ஆதாரம் ஆவதைப்போல, உன் திருவடியே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பதை உணர்ந்து உன்னைப் பற்றத் தெரியாத எனக்கு ) உன் திருவடிகளையன்றி வேறு பற்று ஒன்றும் இல்லை. ஞானமே உயர்ந்த வடிவினையுடைய சிவலோக மன்னனே! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! நான் உன் திருவருளையே எதிர்நோக்கி வாழ வேண்டியவன். அவ்வாறு செய்யவில்லை. அதற்காக மனம் கசிந்து உருக வேண்டியவன் உருகவில்லை. அவ்வருளோடு கலந்து வாழக்கூடிய வகையறியாத மயக்கம் உடையவன் நான். ஆதலால் இவ்வுலகில் இனி நான் வாழ மாட்டேன். (மயக்கம் உடையவனாயினும்) என்னை 'வருக' என்று அழைத்து அருள்புரிவாயாக! I have no other bond except Thy Feet, as you well know, Oh light effulgence, Lord of the bounteous Civapuram, abiding in Thirup-Perun-Thurai, I am bewildered and do not know the right way to join Thee by training thoughts on Thy grace, seeping and melting at heart. No longer do I wish to live here. Pray call out in Thy grace, "Eh, Come over now unto me". கு-ரை: இறைவன் செம்மேனியனாதலின் சூரியமண்டலத்தினொளிக்கு அவன் மேனி ஒளியை உவமித்தார். திரு= வீடளிக்குஞ் சிறப்பு. 8. பந்தணை விரலாள் பங்கநீ யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யந்தமி லமுதே யரும்பெரும் பொருளே யாரமு தேயடி யேனை வந்துய வாண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பந்து அணை விரலாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய் ; செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! அந்தம் இல் அமுதே ! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே ! அடியேனை வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய் ; 'வருக' என்று, அருள் புரியாயே. panthaNai viralaaL pangka nii allaal paRRu naan maRRu ileen kaNdaay senthazal poolvaay sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee antham il amuthee arumperum poruLee aaramuthee adiyeenai vanthu uya aaNdaay vaazkileen kaNdaay varuka enRu aruL puriyaayee. பொ-ரை: பந்து போலும் உருண்ட விரல்களையுடைய உமையம்மை பாகனே! உன்னையன்றி வேறு துணை இல்லாதவன் யான் ! செவ்விய அனல் போலும் திருமேனி உடையவனே! சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! முடிவில்லா நித்தியனே ! பெறுதற்கரிய பொருளே! கிடைத்தற்கு அரிய சாவா மருந்தே! அடியேன் உய்யும் குருவாய் வந்து ஆட்கொண்டவனே! இவ்வுலகில் யான் வாழ மாட்டேன்! வருக என்று அருள் புரிவாயாக ! I have no other bond except Thee as you well know, Oh Lord, Consort of the one with flower-like hands. Thou that art like blissful flame so red! Lord of Civapuram, Lord Civa abiding in Thirup-Perun-Thurai. Illimitable flow of nectar! Mighty and rare ambrosia! Thou didst take me under Thee before, coming over to me that I may get liberated. No longer do I wish to live here on this earth. Pray send out Thy gracious call, "Eh, Come over now unto me" கு-ரை: 'பந்தணை' என்பதற்குப் பந்து சேர்ந்த என உரைப்பாரும் உளர். 'அந்தமிலமுதே' என்பதில் அமுதென்பது மரணத்தைக் கடந்தவன் என்ற பொருளுடைத்து. 'உயவந்து அடியேனை ஆண்டாய்' என முடிக்க. 9. பாவநா சாவுன் பாதமே யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ விருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பாவ நாசா , உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! மூ உலகு உருவ, இருவர் கீழ்மேலாய் முழங்க, அழலாய் நிமிர்ந் தானே! மா உரியானே ! வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே. paavanaasaa un paathamee allaal paRRu naan maRRu ileen kaNdaay theevar tham theevee sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee muu ulaku uruva iruvar kiizmeelaay muzangku azalaay nimirnthaanee maa uriyaanee vaazkileen kaNdaay varuka enRu aruLpuriyaayee. பொ-ரை: பாவங்களை அழிப்பவனே ! தேவர்களுக்கும் தேவனே ! உன் திருவடியன்றி வேறு ஆதரவில்லாதவன் யான் . சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே ! அயன், மால் எனும் இருவரும் மேலும் கீழுமாய்ச் சென்று தேடும்படி மூவுலகும் ஊடுருவி ஒளிப்பிழம்பாய் உயர்ந்து நின்றவனே ! யானைத் தோல் போர்த்தவனே ! இவ்வுலகில் யான் வாழ மாட்டேன். நீ என்னை வருக என அருள் செய்வாயாக ! I have no other bond except Thy Feet as you well know, Oh Lord that exterminates the effects of all sin! Lord of all gods, Lord of Civapuram, Lord Civa abiding in Thirup-Perun-Thurai, that pierced as a flaming fire, through all the three worlds, even as the Duo Brahma and Thirumaal, went high and low in search of Thee! Oh Lord, donning elephant hide, I no longer wish to live here on this earth. Pray, send out Thy gracious call, "Eh, come over now unto me" கு-ரை: மூவுலகு உருவ என்பதை இருவர் என்பதனோடும், கீழ்மேலாய் என்பதை நிமிர்ந்தானே என்பதோடும், முழங்கு என்பதை அழலாய் என்பதோடும் முடித்தலுமுண்டு. மாவுரி என்பது புலித்தோலையும் குறிக்கும். 10. பழுதிறொல் புகழாள் பங்கநீ யல்லாற் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி யணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ வெனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செழுமதி அணிந்தாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே ! தொழுவனோ பிறரைத் துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்; மழ விடை யானே! வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே. pazuthu il tholpukazaaL pangka nii allaal paRRu naan maRRu ileen kaNdaay sezumathi aNinthaay sivapuraththu arasee thiruperunthuRai uRai sivanee thozuvanoo piRarai thuthippanoo enakku oor thuNai ena ninaivanoo sollaay maza vidaiyaanee vaazkileen kaNdaay varuka enRu aruLpuriyaayee பொ-ரை: குற்றங்கள் இல்லாத பழமையான புகழ் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டவனே! உன்னையன்றி வேறு ஆதரவில்லாதவன் யான். செழுமையான இளமதியை அணிந்தவனே! சிவபுரத்தரசனே! திருப்பெருந்துறையுறை சிவனே! உன்னைத் தவிர வேறு தேவர்களை வணங்குவேன் அல்லன்; வாழ்த்துவேன் அல்லன்; எனக்கு உதவி எனக் கருதுவேன் அல்லன்; இதனை நீ அறிவாய்! காளையை வாகனமாகக் கொண்டவனே! இவ்வுலகில் நான் வாழ்ந்திருக்க மாட்டேன். உன்பால் வருக என அருள் புரிவாயாக ! I have no bond except Thee, as you well know, Oh Lord, consort of the flawless, timeless goddess Uma. Lord of Civapuram, wearing the bright crescent, Lord Civa abiding in Thirup Perun-Thurai! Will I ever pay obeisance to any one other than Thee? Will I ever sing glories to any one other than Thee? Will I ever consider anyone else as friend? Pray, tell me, Oh Lord of the youthful bull mount! No longer do I wish to live here on this earth. Pray, send out Thy Gracious call, "Eh, come over now unto me". கு-ரை: சிவத்தோடு சத்தியும் யாண்டு முண்மையால் அவள் கீர்த்தியைத் தொல்புகழ் என்றார். சந்திரன் கடவுளை யடைந்து செழுமை உற்றமையால் செழுமதி என்றார். தொழுவனோ, துதிப்பனோ, நினைவனோ என்றமையால் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினாலும் பிறரை வழிபடேன் என்று குறிப்பித்தார். 'வருக' என்றருள் புரிதல் அறம் என்பார், அறத்திற்கு அறிகுறியாகிய விடையைக் கூறினார். THIRUCHCHITRAMBALAM 29. அருட்பத்து 29. ARUL-PATHTHU (மகாமாயாசுத்தி ) Decad of Grace திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் இறைவனது அருளை வேண்டும் பத்துப் பாடல்களின் தொகுதி அருட்பத்து. இதன் எட்டாம் திருப்பாடலில், "பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுப்பவன் இறைவன்' எனக் குறித்தலாலும், பரகதியாவது மாமாயையையும் கடந்தது ஆதலாலும் இதற்கு, 'மகாமாயா சுத்தி' எனக் குறிப்புரைத்தனர் போலும் முன்னோர். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இதுவும் முற்றிலும் எழுசீரடி விருத்தத்தால் ஆயது. In this decad, the saint appeals to the Lord for His 'Grace filled' query. "What does thou want?" When I call out to Thee with intense affection, Oh Lord, ask kindly "What is it you want?" This constant refrain runs through all the stanzas of this decad. The opening lines of this chapter, quoted frequently by saivite scholars in their discourse on the real nature of godhead, contain the exhortative salutation to Lord Civa, addressing Him as one that shines bright as a flaming lamp of effulgence,a spark lighting up the environs in sheer brilliance and ecstasy . Ideating on the Lord as a vibrant glow of light is an essential feature in the Saivistic School of Theology. The many characteristics of the Lord are illustrated in these stanzas which call out to Him recalling one or the other of His many distinctive forms as revealed in the scriptures. The resounding call of this decad is directed towards the Lord of Thirup-Perun-Thurai where he received benediction directly from Him when He assumed human form and took seat beneath a blooming 'Kuruntha' tree, "Oh Lord that chose the Kuruntha tree full of resplendent flowers", hails the Saint in each of these stanzas. Also echoed in each stanza is a distinct exhortative hail- 'Oh , the Primordial One', One of profound wealth , One of beauteous eyes, One without blemish or bondage, Oh Preceptor, Oh Father, One that is an embodiment of Truth,and so on . The use of the term 'adhenduvae' (meaning, 'what is it you want ' is rather rare Tamil literature, which led some scholars to assume that the Saints' birth place is outside the confines of the classical Tamil region. However, we note that just one word in the whole treatise cannot possibly justify such a conclusion. 29.1. சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையி னிறைமலர்க் குருந்தமே வியசீ ராதியே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே. சோதியே ! சுடரே ! சூழ் ஒளி விளக்கே ! சுரி குழல், பணை முலை மடந்தை பாதியே ! பரனே ! பால் கொள் வெள் நீற்றாய் ! பங்கயத்து அயனும், மால் அறியா நீதியே ! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே ! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே?' என்று, அருளாயே ! soothiyee sudaree suuzoLi viLakkee suri kuzal paNai mulai madanthai paathiyee paranee paal koL veNNiiRRaay pangkayaththu ayanum maal aRiyaa niithiyee selva thirupperunthuRaiyil niRaimalar kuruntham meeviya siir aathiyee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee. பொ-ரை: ஒளி வடிவமானவனே! (ஞாயிறு, திங்கள்) ஆகிய இரு சுடரானவனே! அவற்றைச் சூழ்ந்த (நட்சத்திரங்களாகிய) நல் ஒளியையுடைய விளக்கே! சுருண்ட கூந்தலையும், பருத்த நகிலையும் உடைய உமை மங்கையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவனே ! மேலோனே ! பால் போலும் வெண்ணிறமான திருநீற்றை அணிந்தவனே! தாமரை மலர்மீது வீற்றுள்ள நான்முகனும் மற்றும் திருமாலும் அறியாத நீதியே ! வளம் பொருந்திய திருப்பெருந்துறையில் மலர் நிறைந்த குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த சிறப்பையுடைய முதல்வனே ! அடியேன் விரும்பி உன்னை அழைத்தால் நீ எனக்கு 'அஞ்சாதே' என உறுதியுரை தந்தருள்க. ! Hail, Oh effulgence, flaming lamp of grace! Thou holding as part of Thy frame, Thy curly-haired fair consort, Thou smeared over with milky white ash! Thou of exalted state, தட் even the lotus based Brahma and Thirumaal do not comprehend! Thou primordial one, manifest under the blooming Kuruntha tree at the beauteous Thirup-Perun-Thurai shrine! Even as I call out to thee with intense affection, pray, ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: ஞாயிற்றைச் சோதியென்றும், திங்களைச் சுடரென்றும், நெருப்பினை விளக்கென்றும் கூறுவாரும் உளர். மடந்தை = மடமையுடைய பெண். மடமை= இளமை, அடக்கம். கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை. பாதி என்றதனால் உமையம்மை உடம்பினில் தான் பாதியாய் இருப்பவன் என்று பொருள் கொள்வார் உளர். பால் என்பது பாலின் நிறத்திற்கு ஆகுபெயராய் நின்றது. சீர், அடியார்க்கு ஞானம் அருளும் சிறப்பு. அதெந்துவே என்ற திசைச் சொல்லை மலையாளச் சொல்லாகக் கொண்டு அது என்ன என்று கேட்டருள்க எனப் பொருள் உரைப்பதும் உண்டு. கன்னடத்தில் அஞ்சாதே என்ற பொருள் உடையது என்ப. 2. நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே யொருத்தனே யுன்னை யோலமிட் டலறி யுலகெலாந் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரருத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே. நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளோர் பிரானே! ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்; திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே? ' என்று, அருளாயே ! niruththanee nimalaa niiRRanee neRRik kaNNanee viN uLoor piraanee oruththanee unnai oolam iddu alaRi ulaku elaam theediyum kaaNeen thiruththam aam poikai thirupperunthuRaiyil sezu malar kuruntham meeviya siir aruththanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: பரமானந்தத் தாண்டவமாடும் நிருத்தனே! குற்றமற்றவனே! என்றும் உள்ளவனே! நெற்றிக்கண் உடையவனே! வானோர் தலைவனே! ஒப்பற்றவனே! உன்னைக் காண வருந்தி அழைத்து உலக முழுவதும் தேடியும் காணக் கிடைக்கவில்லை. தூய்மையான பொய்கைகள் நிறைந்தது திருப்பெருந்துறை. ஆங்கு, வளமான மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் எழுந்தருளிய சிறப்புமிக்க மெய்ப் பொருளாகியவனே! அடியேன் விரும்பி அழைத்தால் அஞ்சேல் என அருள்புரிவாயாக ! Dancer par excellence, free of all blemish, smeared over with white ash, Thou with a third eye on the forehead, Lord of Heaven dwellers, Thou the Peerless, I cried out aloud and searched for Thee in all corners of this world. And yet I could not find Thee. Thou seated beneath the bounteous blooming Kuruntha tree at Thirup-Perun-Thurai, even as I call out to thee with intense affection. Pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: உயிர் தானே முயன்று கடவுளைக் காண முடியாதென்பதும், தேடி முயன்ற போது பக்குவம் பார்த்து இறைவன் தானே வந்து அருள் புரிவானென்பதும் இதனுள் கூறப்பட்டன. திருத்தமாம் என்பதைத் திருப் பெருந்துறை என்பதோடு சேர்த்து யான் திருத்தமடைவதற்கு ஏதுவாகிய என்றும் பொருள் கொள்ப. அருத்தம்= பொருள். அருத்தன் =பொருளானவன். 3. எங்கணா யகனே யென்னுயிர்த் தலைவா வேலவார் குழலிமா ரிருவர் தங்கணா யகனே தக்கனற் காமன் றனதுட றழலெழ விழித்த செங்கணா யகனே திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரங்கணா வடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே. எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே! தக்க நல் காமன் - தனது உடல் தழல் எழ விழித்த செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே?' என்று, அருளாயே ! engaL naayakanee en uyirth thalaivaa eelavaar kuzalimaar iruvar thangaL naayakanee thakka nal kaaman thanathu udal thazal eza viziththa sem kaN naayakanee thirupperunthuRayil sezu malar kuruntham meeviya siir am kaNaa adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee. பொ-ரை: எங்கள் தலைவனே ! எனதுயிர் நாதனே! மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலை உடையவனே! உமை, கங்கை ஆகிய இருவருக்கும் தலைவனே! அழகில் சிறந்த மன்மதனது உடல் தீப்பற்றி எரியுமாறு நோக்கிய சிவந்த கண்களை உடைய பெருமானே! திருப்பெருந்துறையின்கண் வளமிக்க மலர்களையுடைய குருந்த மரத்தடியில் விரும்பி வீற்றிருந்த சிறப்புடைய மாசில்லாதவனே! அடியேன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் செய்வாயாக ! Oh my Chief, Master of my life, Lord of the two long-haired, Uma and Ganga, Thou the red-eyed, that destroyed through Thy fiery glance, the physical frame of cupid, the God of Love ! Thou the beauteous eyed, seated beneath the blooming Kuruntha tree at Thirup-Perun-Thurai ! Even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: உயிர்களுக்கெல்லாம் தலைவனாதலின், எங்கள் நாயகனென்றார். குழலிமாரிருவர் என்பதற்குக் கிரியா சக்தி, ஞான சக்தி என்பாருமுளர். நெற்றிக்கண் நெருப்புக் கண்ணாதலின் செங்கணாயகன் என்றார். அழகிற் சிறந்தவனாதலால் தக்க நற்காமன் என்றார். 4. கமலநான் முகனுங் கார்முகி னிறத்துக் கண்ணனு நண்ணுதற் கரிய விமலனே யெமக்கு வெளிப்படா யென்ன வியன்றழல் வெளிப்பட்ட வெந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்த மேவியசீ ரமலனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே கமல நான் முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய விமலனே, எமக்கு வெளிப்படாய் என்ன, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் ! திமில நான் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே ? ' என்று, அருளாயே ! kamala naan muhanum kaar mukil niRaththuk kaNNanum naNNuthaRku ariya vimalanee emakku veLippadaai enna viyan thazal veLippadda enthaai thimila naan marai seer thriupperunthuRayil sezu malark kuruntham meeviya siir amalanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: தாமரை மலரில் இருக்கும் நான்முகனாகிய பிரமனும், கரிய மேகம் போன்ற நிறத்தினை உடைய கண்ணனும் அணுகுதற்கும் அரிய இயல்பாகவே மலம் அற்றவனே ! 'எமக்கு வெளிப்படுவாயாக' என்று அவர்கள் இரந்து வேண்ட அனற்பிழம்பாக வெளிவந்தருளிய எந்தையே! நான்கு வேத ஒலிகளும் சேர்ந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலர்களுடன் விளங்கும் குருந்த மரத்தடியில் எழுந்தருளிய புகழ்மிக்க அமலனே! அடியேன் விரும்பி அழைத்தால் அஞ்சாதே என்று அருள் செய்வாயாக ! Thou, free of all the blemish (Vimalane!). You are beyond the reach of the four faced, lotus based Brahma and the cloud coloured Thirumaal! Upon their appeal to you, you appeared before them as a large flame. Oh Sire, Thou seated beneath the blooming Kuruntha tree at Thirup-Perun-Thurai filled with Vedic Chants! Thou untouched by all afflictions! Even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way, What is it I want to say. கு-ரை: திமிலம் = பேரொலி. விமலன் = இயல்பாகவே பாசங்களில் நீங்கினவன். அமலன்= குற்றமற்றவன். நான்மறை= பல்வகை மந்திரங்கள் என்று பொருள் கொள்வாருமுளர். 5. துடிகொணே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கடோய் சுவடு பொடிகொள் வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரடிகளே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே. துடி கொள் நேர் இடையாள், சுரிகுழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு பொடிகொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே ! செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர் அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே?' என்று, அருளாயே ! thudi koL neer idaiyaaL suri kuzal madanthai thuNai mulaikkaNkaL thooi suvadu podikoL vaan thazalil puLLipool iraNdu pongu oLithangu maarpinanee sedi koL vaan pozil soozh thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir adikaLee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: உடுக்கையின் நடுவை ஒத்த இடையினை உடையவளும், சுருண்ட கூந்தலை உடையவளும், மடந்தையும் ஆகிய உமாதேவியாரின் இரண்டு தனங்களின் கண்களும் தோயப்பெற்றதால் உண்டான சுவடு, நீறு பூத்திருக்கின்ற நெருப்பின் மேல் இரண்டு புள்ளிகள் போலப் பொருந்தி மிக்க ஒளி தங்கப் பெற்ற மார்பை உடையவனே ! புதர்களை உடைய பெரிய சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வளமிக்க மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் விரும்பி வீற்றிருக்கும் சிறப்பினை உடைய அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால் 'அஞ்சேல்' என்று அருள்வாயாக.! Your consort Uma has her waist as narrow as the centre of Tudi (having the shape of a hourglass) and her locks are curly. When she embraced Thee, the tips of her two nipples left two dazzling imprints on your ash smeared red chest, and it glowed like two sparks of fire on a white background. கு-ரை: காஞ்சிபுரத்தில் உமை இறைவனைப் பூசித்த காலை வெள்ளம் வந்து விட, தனது முலைக் கண்கள் இறைவனது மார்பினிலே பதியும்படி தழுவிய கதை ஈண்டுக் குறிக்கப் பெற்றது. சுவடு=தழும்பு; இறைவனது திருமேனி வான்தழலிற்கும், அவர் மேலணிந்த சாம்பல் வெண்ணீற்றுக்கும், புள்ளி, சுவடிற்கும் உவமையாயின. செடி= புதர். அடிகள் = கடவுள், சுவாமிகள். 6. துப்பனே தூயாய் தூயவெண் ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே யுன்னை யுள்குவார் மனத்தி னுறுசுவை யளிக்குமா ரமுதே செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரப்பனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே துப்பனே, தூயாய்! தூய வெள்-நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே ! செப்பம் ஆம் மறைசேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே? என்று, அருளாயே ! thuppanee thuuyaay thuuya veNNiiRu thuthainthu ezu thuLangu oLi vayiraththu oppanee unnai uLkuvaar manaththil urusuvai aLikkum aar amuthee seppam aam maRaiseer thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir appanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: பவளத்தின் நிறத்தை ஒத்தவனே! தூய்மையானவனே! தூய வெண்ணீறு பூசப்பட்ட திருமேனியில் இருந்து வெளிப்படும் ஒளியானது, தீட்டப்பட்ட வைரத்தில் மாறிமாறி வீசுகின்ற ஒளியைப் போன்று விளங்குகின்றது. இப்பேர்ப்பட்ட வைர ஒளிக்கு ஒப்பானவனே! உன்னை இடைவிடாது தியானிப்பவர் மனத்தில் மிக்க சுவையைத் தரும் அரிய அமுதமே! செப்பமான வேதங்கள் ஒலிக்கின்ற திருப்பெருந்துறையிலே செழுமலர் குருந்த மரத்தடியில் விரும்பி வீற்றிருந்து அருளிய எம் தந்தையே ! அடியேன் விரும்பி அழைத்தால் 'அஞ்சாதே' என்று அருள்வாயாக ! Oh! One like coral in hue! Oh! Pure One! like a brilliant diamond smeared over with flawless white ash, Thou that provideth delight to those that contemplate on Thee! Oh Sire, seated beneath the bounteous flowery Kuruntha tree at Thirup-Perun-Thurai! Even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: பவள மேனியின் இடையிடையே படிந்து தோன்றும் திருவெண்ணீற்று அடையாளங்கள் அசைகின்ற ஒளி போன்றமையால் துளங்கொளி என்றார். துதைந்து = நெருங்கி, படிந்து. செப்பம்=செம்மை. 7. மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கண்மூன் றெரித்த கையனே காலாற் காலனைக் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரையனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே மெய்யனே! விகிர்தா ! மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்று எரித்த கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச் செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே ?' என்று, அருளாயே ! meiyyanee vikirthaa meeruvee villa meevalar purangkaL moonRu eriththa kaiyyanee kaalaal kaalanaik kaayntha kadum thazal pizampu anna meenich seyyanee selvath thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir aiyyanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: நிலைத்த பொருளானவனே! அன்பர்களின் பொருட்டு வெவ்வேறு வடிவம் கொள்பவனே! மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களின் முப்புரங்களையும் எரித்த திருக்கரங்கள் உடையவனே! காலனைத் திருவடியால் உதைத்து, கோபித்த கடும் அனற்பிழம்பை ஒத்த சிவந்த திருமேனியனே! செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் எழுந்தருளிய சிறப்பினை உடைய ஐயனே! அடியேன் உன்னை விரும்பி அழைத்தால், 'அஞ்சாதே' என்று அருள் செய்வாயாக ! Oh! Reality! You are oft changing thy forms to meet the different needs of your different devotees of different levels. Thou, that with Mount Meru as bow on hand, destroyed the three recalcitrant cities (Thiripura forts)! Thou of immense bounty and flaming grace, that kicked down the God of death! Thou of the prosperous town of Thirup-Perun-Thurai, seated under the blooming Kuruntha tree! Oh Lord, even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: விகிர்தா என்றதற்குப் பொய்யனே எனப் பொருள் கொள்வாரும் உளர். மெய்யர்க்கு மெய்யனாகவும், பொய்யர்க்குப் பொய்யனாயும் இருத்தலால் அவ்வாறு கூறுவர். வில்லா வென்பதைக் கையனே என்பதனோடு முடிக்க. வில்லையுடைய கையனே என்பது கருத்து. செய்யனே = செம்மையனே = நேர்மையனே. பிழம்பு = திரட்சி. 8. முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே. முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சிப் பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்து அருள் செய்யும் சித்தனே ! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால் 'அதெந்துவே?' என்று, அருளாயே ! muththanee muthalvaa mukkaNaa munivaa mottu aRaa malar paRiththu iRainjip paththiyaay ninainthu paravuvaar thamakkup para kathi koduththu aruL seyyum siththanee selvath thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir aththanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: இயல்பாகப் பாசங்களினின்று நீங்கியவனே! ஆதியானவனே! முக்கண்ணனே ! தவவேடம் பூண்டவனே! அலரும் பருவத்து அரும்புகளைப் பறித்து, திருவடிகளில் இட்டு வணங்கி, அன்புடன் தியானித்துத் துதிக்கிறவர்களுக்குப் பரகதி அருளும் ஞான வடிவனே! வளம் பொருந்திய திருப்பெருந்துறையில் செழுமை மிக்க மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் விரும்பி வீற்றிருக்கும் சிறப்புடைய அப்பனே ! அடியேன் உன்னை விரும்பி அழைத்தால் 'அஞ்சாதே' என்று அருளுவாயாக ! Thou naturally free of attachments, Thou the Primordial One, the three-eyed one, most saintly one! Thou the enlightened, that bestows liberation on to those who with flower buds and true dedication think of Thee and pay obeisance to Thee in total supplication! Oh Sire, of the prosperous Thirup-Perun-Thurai, seated beneath the blooming Kuruntha tree! Even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: ஞாயிறு, திங்கள், அக்கினி மூன்றையும் இறைவனுக்கு முக்கண்ணாகக் கூறுவர். முனிவா என்பதற்குத் துறவுவேடம் உடையவனே என்றும் உரைப்பர், இறைஞ்சுதல், நினைதல், பரவுதல் மூன்றுங் கூறினமையால் திரிகரணங்களாலும் வழிபடுவது குறிக்கப் பட்டது. சித்தன் என்பதற்குச் சித்தர் வடிவமுடையவனென்றும் உரைப்பர். சித்து= அறிவு, நுட்பமான அற்புதத் திருவிளையாட்டு. 9. மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவா ளரவங் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ ரருளனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய் ! தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், 'அதெந்துவே?' என்று, அருளாயே ! maruLaneen manaththai mayakkaRa nookki maRumaiyoodu immaiyum keduththa poruLanee punithaa pongku vaaL aravam gangkai niir thangku sem sadaiyaay theruLum naanmaRai seer thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir aruLanee adiyeen aathariththu azaiththaal athenthuvee enRu aruLaayee பொ-ரை: மருட்சியுடைய என் உள்ளத்தின் மயக்கம் தீரும்படியாகத் திருவருட் கண்ணால் நோக்கினாய். இம்மை, மறுமை என்ற இரண்டின் சார்பான பிறவியை ஒழித்த மெய்ப்பொருள் ஆனவனே! குற்றமற்ற தூயோனே ! சீறுகின்ற ஒளியுடைய பாம்பும் கங்கையும் தங்கிய சிவந்த சடையுடையவனே! உயிர்கள் திருந்துவதற்கு ஏதுவாக நான்மறைகளும் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் வளமிக்க மலர்களுடைய குருந்த மரத்தடியில் விரும்பி வீற்றருளிய சிறந்த கருணையாளனே! அடியேன் உன்னை விரும்பி அழைத்தால் 'அஞ்சாதே' என்றருள்வாயாக! Lord of immense wealth, that with a glance, destroyed my illusion and ended my furture as well as the present! Thou the Most Holy One! Thou with matted hair where stay the Ganga water and the seething bright cobra! Thou the graceful one, seated under the blooming Kuruntha tree at Thirup-Perun-Thurai, filled with the chanting of the four scriptures! Even as I call out to Thee with intense affection, pray ask me in Thy graceful way what is it I want to say. கு-ரை: மருள்= திரிபுணர்ச்சி, மயக்கு = அறியாமை, பிறவி அறுத்தமையால் மறுமையும் இம்மையும் ஒழிந்தன. பொருள்= மெய், பொங்கு= சீறுகின்ற. வாள்= ஒளி. 10. திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்த மேவியசீ ரிருந்தவா றெண்ணி யேசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரா னென்றென் றருந்தவா நினைந்தே யாதரித் தழைத்தா லலைகட லதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி யிதுகாண் போதரா யென்றரு ளாயே. திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, 'என்னுடை எம்பிரான்' என்று என்று, அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல்-அதனுளே நின்று 'பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய்' என்று அருளாயே ! thirunthuvaar pozil sooz thirupperunthuRaiyil sezu malark kuruntham meeviya siir irunthavaaRu eNNi eesaRaa ninainthiddu ennudai empiraan enRu enRu arunthavaa ninainthee aathariththu azaiththaal alai kadal athanuLe ninRu poruntha vaa kayilai puku neRi ithu kaaN pootharaay enRu aruLaayee. பொ-ரை: திருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் சிறப்பாக எழுந்தருளினாய். அவ்வாறு யான் பெற்ற குரு தரிசனத்தை இழந்து வருந்தாமல் சிக்கெனப்பற்றித் தியானித்த என்னுடைய எம்பிரானே ! அரிய 'தவமுடையவனே' என்று கூவி அழைப்பேன். பிறவியாம் அலைமிகுந்த கடலில் இருந்து என்னை அடைதற்கு நீ வருவாயாக, திருக்கயிலைக்குச் செல்லும் வழி இதுவே என்று எனக்குக் காட்டி அருள் செய்வாயாக ! In Thirup-Perun-Thurai, of well laid-out thick groves, under the blooming Kuruntha tree, Thou were seated in splendour. Thinking of this, and pondering over this, without any ill will, I cry out "Oh Lord, my Chief". Thou of impeecable penance, even as I bring this to my memory and call out to thee with intense affection, pray standing amidst the billowing water of the sea of births, send out Thy graceful call to me, beckoning me to come over to Thee, saying "this is the path leading to Kailash, hence hurry up and come". கு-ரை: திருந்து= தாம் திருந்துதற்கு ஏதுவாகிய என்றும் பொருள் உரைப்ப. ஏசறா - ஏசற்று= துக்கித்து. இனைந்திட்டு எனவும் பாடமுண்டு . இனைந்திட்டு = வருந்தி. எம்பிரான், அருந்தவா, என்று என்று நினைந்தே என முடிக்க. அலைகடல் என்பது துன்பமுள்ள பிறவிக்கு உருவகமாக நின்றது. ஆனந்தக் கடலுக்கு அதனை உருவகமாகக் கொண்டுளர். ஆனந்தக்கடல் அலைகடல் ஆகுமா என்பது ஐயம். போதராய் = போவாய், அல்லது வருவாய். THIRUCHCHITRAMBALAM 30. திருக்கழுக்குன்றப் பதிகம் 30. THIRUK-KAZHUK-KUNDRAP-PATHIGAM (குரு தரிசனம் ) The Decad of Tirukkazhuk-Kundram திருக்கழுக்குன்றத்தில் அருளிச் செய்யப்பட்டது Vision of the Holy Preceptor ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thiruk-Kazhuk-Kundram திருச்சிற்றம்பலம் இது, திருக்கழுக்குன்றத்தைப் பற்றிய பதிகமாதல் வெளிப்படை. 'பதிகம்' எனப்பட்ட இது, ஏழு திருப்பாட்டுக்களையே உடையதாயிருத்தலின், ஏனைய பாட்டுக்கள் கிடைத்தில என்க. இத்தலத்தில் அடிகட்கு இறைவன் முன்னர்த் திருப்பெருந்துறைக்கண் வந்து ஆட்கொண்ட கோலத்தையே காட்டினான் என்பது இதன்கண் இனிது விளங்கிக் கிடத்தலானும், புராணமும் அங்ஙனமே கூறுதலானும் இதற்குக் 'குரு தரிசனம்' என்றே குறிப்புரைத்தனர் முன்னோர். இது திருக்கழுக்குன்றத்தில் அருளிச் செய்யப்பட்டது என்பது அனைவர்க்கும் ஒத்த துணிபு. இது முழுவதும் எழுசீரடிச் சந்த விருத்தத்தால் ஆயது. Thiruk-Kazhuk-Kundram is a hallowed saivite shrine of great antiquity and canonical significance. Situated at a distance of 65 kms south of Chennai and 9 miles from Chengalpat, amidst lush green fields and groves, stands this massive hill top edifice as a veritable beacon light for all those in search of salvation and beatitude. Saint Maanikkavaachakar had the rare privilege of having physical vision of the Lord at this shrine too, where He revealed Himself as a holy preceptor come to bestow Benediction through personal contact. Initiated earlier at Thirup-Perun-Thurai, the Saint had a second blissful encounter at Thiruk-Kazhuk-Kundram, and paid obeisance to the holy Feet of Lord Civa, moved immensely by the generosity and indulgence shown by the Almighty. 'Kundram' means hill. Legend has it that on to this shrine in the days of yore, flocks of eagles (Kazhugu) used to descend daily at a certain hour, in order to partake of the temple offerings kept at the forecourt. This shrine, hailed as the mount of the vedas (Veda Malai) was visited by all the four prime preceptors (Samaya Kuravars) Appar, Gnanasambandar, Sundarar and Maanikkavaachakar, who have extolled the spiritual uniqueness of Thiruk-Kazhuk-Kundram in the many psalms compiled during their stay here. Saint Arunagiri Nathar hails it as 'Veda Giri'. Pilgrims from different parts of India who visit Rameshwaram, Chidambaram and Vaaranaasi, invariably make it a point to include Thiruk-Kazhuk-Kundram too in their pilgrimage schedule. This Chapter has only seven stanzas in it, although it is listed as a decad. probably three more could not be traced. Each stanza ends with the ovation "Thou that didst reveal Thy form to me at Thiruk-Kazhuk-Kundram" This is the only decad in Thiruvaachakam which bears the name of the town in the title itself. 30.1 பிணக்கி லாதபெ ருந்துறைப்பெரு மானுன் னாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோ ரின்ப மேவருந் துன்பமே துடைத் தெம்பிரா னுணக்கி லாததோர் வித்து மேல்விளை யாம லென்வினை யொத்தபின் கணக்கி லாத்திருக் கோல நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான் ! உன் நாமங்கள் பேசுவார்க்கு, இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து; எம்பிரான் ! உணக்கு இலாதது ஓர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின், கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! piNakku ilaatha perunthuRai perumaan un naamangkaL peesuvaarkku iNakku ilaathathoor inpamee varum thunpamee thudaiththu empiraan uNakku ilaathathoor viththu meel viLaiyaamal en vinai oththa pin kaNakku ilaath thirukkoolam nii vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: நல்லார் பொல்லார் என்ற வேறுபாடு நோக்காது எல்லார்க்கும் ஒப்பப் பெய்யும் மழை போல, அன்பர்க்கும், வன்பர்க்கும் அவரவர் வினைக்குத் தக்க அருள்மாரி பெய்துவரும் மாறுபாடில்லாதவனே! திருப்பெருந்துறையில் விளங்கும் பெருமானே ! உன் திருநாமங்களையே பேசும் மெய்யன்பர்களுக்கு உண்டாகும் துன்பங்களை அறவே துடைத்து அதனால் விளையும் இணையற்ற இன்ப வடிவாக இருப்பவனே! ஈரம் உலர்ந்து போகாத தனித்தன்மையுடைய பிறவி விதையானது மேலும் விளையாமல் எனக்கு இருவினை ஒப்பு வந்த பிறகு அளவில் அடங்காத் திருவடிவத்தைத் திருக்கழுக்குன்றத்தே நீ காட்டி அருளினாய். Oh Lord of Thirup-Perun-Thurai, with no dislike of anyone! Matchless bliss indeed, will visit those who chant wholeheartedly Thy names. Thou ended all my tribulations, Oh my Chief, quelling the wet seeds of endless birth cycles. And, on the extrication of my past good and evil deeds, Thou didst come over to Eagle Hill (Thiruk-Kazhuk-kundram) and revealed Thy unfathomable form of bliss. கு-ரை: பிணக்கு= சண்டை; மாறுபாடு, இணக்கு = இணங்கு என்பதன் விகாரம். ஒப்பு. உணக்குதல்= காய்தல்; வற்றுதல், ஓர் = தனியியல்புடைய. இருவினையொப்பு என்பது இருவினைப் பயன்களிலும் ஒரே தன்மையான பாவிப்பு. கணக்கிலா = அகண்டமான. 2. பிட்டு நேர்பட மண்சு மந்தபெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேனுனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லோக னேசிறு நாயினுங்கடை யாயவெங் கட்ட னேனையு மாட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே! சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்; சிட்டனே சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம் கட்டனேனையும் ஆட்கொள்வான் ; வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே! piddu neerpada maN sumantha perunthuRai perum piththanee sadda neerpada vanthilaatha sazakkaneen unai saarnthileen siddanee siva lookanee siRu naayinum kadaiyaaya vem kaddaneenaiyum aadkoLvaan vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: மதுரை மாநகரில் பிட்டு செய்து விற்று வந்த வந்தி எனப்படும் பிட்டு வாணிச்சியிடம் கூலி ஆளாய்ச் சென்று, அவள் கொடுத்த பிட்டை உண்டு, தன் தலையிலே மண்ணைச் சுமந்து திருவிளையாடல் புரிந்தவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அன்பர்கள்பால் பேரன்பு (பித்து) கொண்டவனே! உனது கட்டளைக்குட்படாத குறைவுடைய யான் உன்னைத் தானாக வந்து அடையவில்லை. சிறந்த ஒழுக்க நெறியானவனே! சிவலோக நாதனே ! இழிந்த நாயினும் கொடிய துன்பமுடைய என்னையும் அடிமை கொண்டருளும் பொருட்டு திருக்கழுக்குன்றத்து எழுந்தருளி உன் திருக்கோலம் காட்டி அருளினை. என்னே உனது பேரருள் ? For a pittance of rice-rolls, a food made out of rice flour and coconut (Pittu) offered by the forlorn old lady, Vanthi of Madurai, Thou carried sand on your head in the days of yore. Oh, the mighty graceful Lord of Perunthurai! This intransigent, unruly me, could not then come over to Thee, as I was not abiding by Thy Laws. Nevertheless Thou, Lord of Civa Loka, mystique of great virtue, didst come over to Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram) for redeeming this cruel me and revealed Thy immaculate form of bliss to me. கு-ரை: நேர்பட = இசைந்து கொள்ள, ஒற்றுமைப்பட . சழக்கு = குற்றம். சிட்டன் = ஆசாரம் உடையவன்; கட்டம் = கஷ்டம் (துன்பம்). சட்ட என்பதற்கு முற்றிலும் எனப் பொருள் கொள்வதும் உண்டு. 3. மலங்கி னேன்கண்ணி னீரை மாற்றிம லங்கெ டுத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக்கேட னேனினி மேல்வி ளைவ தறிந்திலே னிலங்கு கின்றநின் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன், இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! malangkineen kaNNin niirai maaRRi malam keduththa perunthuRai vilangkineen vinai keedaneen ini meel viLaivathu aRinthileen ilangku kinRa nin seevadikaL iraNdum vaippidam inRiyee kalangkineen kalangkaamalee vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: பிறவித்துயரால் கலங்கிய என் கண்ணீரைத் துடைத்து, என் அறியாமைக்கு ஏதுவாகிய ஆணவ மலத்தையும் வலியிழக்கச் செய்த பெருந்துறைப் பெருமானாகிய உன்னை விட்டு நீங்கினேன். நான் தீவினை எனும் கெடுதி உடையவன்; இனி நிகழப் போகும் வினைப்பயன்களையும் அறியாதவன். (மனம் பரிசுத்தமின்மையால்) அறிவில் விளங்குகின்ற உன் செய்ய பொற்பாதங்களிரண்டையும் வைத்து வழிபடும் இடமின்றி மருண்டேன். அங்ஙனம் மயங்கா வண்ணம் திருக்கழுக்குன்றத்தில் நின் திருவருள் கோலத்தைக் காட்டி அருளினாய். When I was troubled at heart Thou didst wipe out my tears at Thirup-Perun-Thurai. And yet I, this miserable one of foul deeds, left Thirup-Perun-Thurai. I know not what is in store for me in future. Even as I was grieving over where Thy effulgent blissful Feet could be, Thou didst come over to Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram) and revealed Thyself to me, so that I need not grieve any more. கு-ரை: மலங்குதல் = அசைதல் - கலங்குதல். பெருந்துறை, ஆகுபெயர். பெருந்துறை என்பதற்கு, மலம் கெடுத்த இடமாகிய பெருந்துறையை எனவும், மலங் கெடுத்தற் கேதுவாய பெரிய நெறியை எனவும் கூறுப. விலகினேன் என்பதன் விரித்தல் விகாரம் விலங்கினேன் என்பது. 4. பூணொ ணாததொ ரன்பு பூண்டுபொ ருந்தி நாடொறும் போற்றவு நாணொ ணாததொர் நாண மெய்திந டுக்க டலுள ழுந்திநான் பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றி யுகைத்தலுங் காணொ ணாத்திருக் கோல நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே பூண்-ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும் நாண் ஒணாதது ஓர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான் பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும், காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! puuN oNaathathu oor anpu puuNdu porunthi naaLthoRum pooRRavum naaN oNaathathu oor naaNam eythi nadukkadaluL azunthi naan peeN oNaatha perunthuRai perun thooNi paRRi ukaiththalum kaaN oNaath thirukkoolam nii vanthu kaaddinaay kazuk kunRilee. பொ-ரை: யாவராலும் எளிதாகக் கடைபிடிக்க முடியாத ஒப்பற்ற பேரன்பு பூண்ட உனது சீரடியார்கள் உனது திருவடியில் ஒரு நெறிய மனம் வைத்து நாள்தோறும் வணங்கி வருகிறார்கள். ஆனால் நானோ அதைக் கண்டு வெட்கமுடையவனாய் அவர்களைப் போன்று போற்றாது பிறவியாகிய துன்பக்கடலில் அழுந்தினேன். அவ்வாறு அழுந்தித் தவிக்கும்பொழுது திருப்பெருந்துறைப் பெருந்தோணி ஒன்று கிடைத்தது. அதனைப் பற்றிச் செலுத்தினேன். திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தேன். கழுக்குன்றிலே காண்பதற்கு மிக அருமையான உனது திருக்கோலத்தை நீ வந்து காட்ட நான் அதைக் கண்டு மகிழ்வுற்றேன் . உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே! Your devotees who had a very great uncomparable love for you, daily worshipped you and remained with you in communion. Unfortunately, I became ashamed and avoided to follow suit, like your other devotees, resulting in my falling into the sea of birth. While I was going to immerse, I got hold of the boat of Perunthurai and sailed. When I reached the Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram) You Thyself came there and showed me your blissful form of rarity. கு-ரை: முதலிரண்டடியும், திருப்பெருந்துறையில் அருள்பெறுதற்கு முன்னுள்ள அடிகள் நிலையைக் குறிப்பன, பெருநெறியாகிய பெருந்தோணி என்பாருமுளர். தோணி, திருவடிக்கே உவமையாதல் மரபு. 5. கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேதும றிந்தி லாதவென் சிந்தை வைத்த சிகாமணி ஞால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் கால மேயுனை யோத நீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே ! சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி ! ஞாலமே கரி ஆக, நான்உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! koola meeni varaakamee kuNam aam perunthuRai koNdalee siilam eethum aRinthilaatha en sinthai vaiththa sikaamaNi njaalamee kari aaka naan unai nassi nassida vanthidum kaalamee unai ootha nii vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: பன்றிக்குட்டிக்கு முலையருளத் தோன்றிய அழகிய திருமேனியுடைய பன்றியுருவனே! (வராகம் என்றால் பொன் என்ற பொருள் கொண்டு பன்றி என்ற பொருள் வராமல் பொன் போன்ற திருமேனி உடையவனே ! என்றும் பொருள் கொள்ளுவர்) திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நற்பண்பாகிய அருள் மேகமே! நல் ஒழுக்கமறியாத என் உள்ளத்தில் வைக்கப்பட்ட தலைமணி போன்றவனே! உலகம் சாட்சியாக நான் உன்னை விரும்ப, நீ என்னை விரும்பி எழுந்தருளிய கால வடிவானவனே ! உன்னை நான் துதிக்கும்படித் திருக்கழுக்குன்றத்தில் உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய் ! உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே ! Lord of Perunthurai, full of cloud-like grace, sporting a blissful and fine frame! You took the form of a sow to feed the piglets. Oh! Matchless Gem! set in the jewel of the heart of me that knows no virtue of any kind. I showed my eagerness again and again and showered my affection on Thee for which the world stands witness. When the appropriate time came, You revealed Thyself to me at Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram), so that I may worship and chant Thy glories for ever. கு-ரை: கோலம் = அழகு. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த செய்தி, திருவிளையாடல் புராணத்தில் காண்க. கொண்டல்= மேகம். கரி= சாட்சி. திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடிகட்கு உபதேசித்தமை, உலகமறிய நேர்ந்ததாகலின், ஞாலமே கரியாக என்றார். நச்சி நச்சிட = மிகவும் விரும்பிட. காலதத்துவம் இறைவன் தொழிற்குத் துணையாதலின் அவன் வடிவமாகக் கூறுதல் மரபு. பக்குவ காலத்தையும் இறைவனையும் ஒன்றாகவே கருதினமை காண்க. 6. பேத மில்லதொர் கற்பளித்தபெ ருந்து றைப்பெரு வெள்ளமே யேத மேபல பேச நீயெனை யேதி லார்முன மென்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்றத னிச்ச ரண்சர ணாமெனக் காத லாலுனை யோத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ! ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய் ? சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் எனக் காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! peetham illathu oor kaRpu aLiththa perunthuRai peru veLLamee eethamee pala peesa nii enai eethilaar munam en seythaay saathal saathal pollaamai aRRa thani saraN saraN aam enak kaathalaal unai ootha nii vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருள் ஒளி வீசிவரும் கருணைக் கடலே ! உன்னையன்றிப் பிற தெய்வம் பேணாமையாகிய மாசில்லாத கற்பு நெறியை அடியேனுக்குக் கொடுத்த அருள் வெள்ளமே ! கற்புடைய ஒருத்தியை அயலார் குறை சொல்லும்படி தலைவன் அவளைப் பிரிந்து உறைதல் கூடாது. பிரிதலும் ஆகாது. அவ்வாறு இருக்கத் திருப்பெருந்துறையில் அன்று நீ என்னைப் பிரிந்து ஏனையரோடு சிவலோகமாகிய இன்ப உலகத்திற்குச் சென்று விட்டாய். அதனால் அயலவர் அவரவர் வாயில் வந்தபடி என்னைப் பலவாறாகக் குறைவாகப் பேசினார்கள். இந்த நிலைக்கு நீ என்னை விட்டுவிடலாமா? ஏன் அவ்வாறு செய்தாய் ? இருந்தாலும் நான் உன்னுடைய திருவடியே அடைக்கலமாகக் கொண்டுள்ளேன். உனது திருவடியானது மரணமும், மரண காலத்தில் விளையும் தீமையும் தீங்கும் இல்லாத ஒப்பற்ற திருவடி அல்லவா! ஆதலால் உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும் என்று உணர்ந்து உன்னைப் புகழ்ந்து பாடினேன். அது போழ்து, நீயாகவே திருக்கழுக்குன்றம் வந்து உனது ஒப்பற்ற திருவுருவத்தை அடியேனுக்குக் காட்டி என்னை மகிழ்வித்தாய். என்னே உனது பெருங்கருணை இருந்தவாறு ! Thou of Perunthurai, magnificent flood of grace, that taught me agreeable traits! What didst Thou do to me against the foul talk of hostile folks, who ridiculed me for suffering hardships even after renunciation! Since Thy Feet of eternal grace are unique haven to me, Thou didst come over to me even as I was chanting Thy glories and revealed Thyself at Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram) shrine. கு-ரை: கற்பு = கற்புடைப் பெண்டிர். பிற கணவரை நாடாமை போலப் பிற தெய்வத்தை நாடா நிலை. கற்பு = கல்வி எனவும் உரைப்பர். பேதமில்லதோர் கற்பு =அத்துவித ஞானம். இறைவன் உபதேசம் செய்தவுடன் தம்முடன் அடிகளை அழைத்துச் செல்லாமையின், ஏதிலார் முனம் என்செய்தாய் என்றார். சாதல் சாதல் = சாதலில்லாமை = அழிவின்மை. பொல்லாமை, பாசச் சார்பாய குற்றம். உனையோத என்பதற்கு, உன்னை நான் ஓதவும், அங்ஙனம் ஓதியபின் எனவும் உரைப்பர். 7. இயக்கி மாரறு பத்து நால்வரை யெண்குணஞ் செய்த வீசனே மயக்க மாயதொர் மும்ம லப்பழ வல்வி னைக்கு ளழுந்தவுந் துயக்க றுத்தெனை யாண்டு கொண்டுநின் றூய்ம லர்க்கழ றந்தெனைக் கயக்க வைத்தடி யார்மு னேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே ! மயக்கம் ஆயது ஓர் மும்மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும், துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூய் மலர்க் கழல் தந்து, எனைக் கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே ! iyakki maar aRupaththu naalvarai eNkuNam seytha iisanee mayakkam aayathu oor mummala paza val vinaikkuL azunthavum thuyakku aRuththu enai aaNdu koNdu nin thuuy malar kazal thanthu enai kayakka vaiththu adiyaar munee vanthu kaaddinaay kazuk kunRilee பொ-ரை: தேவகணத்தவருள் ஒரு வகையினராகிய 'இயக்கர்' என்பவருள் பெண்பாலராகிய 64 இயக்கிமார்கள் உத்தரகோசமங்கையில் சிவபெருமானை ஒரு நெறிய மனம் வைத்து இடைவிடாது தியானித்து வழிபட்டு வந்தனர். அவர்களுடைய ஆன்ம குணங்கள் அழியவும் இறைகுணங்கள் எட்டனையும் அடையப் பெறவும் சிவபெருமான் ஞானோபதேசம் செய்து அருள் புரிந்தார். அவ்வாறு ஆட்கொண்ட சிவபெருமானே! அறியாமைக்கேதுவாகிய இருள், வினை, மருள் என்ற மும்மலங்களினால் உழலும் பண்டை வினைப் பயனில் யான் ஆழ்ந்து கிடந்தேன். யான்பட்ட துன்பம் கண்டு இரங்கி அத்தளர்ச்சியைப் போக்கி நின் தூய பூங்கழல்களைக் கொடுத்தருளினாய். இவையே மலச்சேற்றிலிருந்து கரையேறத் துணையாம் என்று உதவினாய். அடியேனை இதுகாறும் கசக்க வைத்தாய். இப்பொழுது அடியாரின் முன்னிலையில் குருவாக வந்து கழுக்குன்றில் எனக்கு உனது நின்ற திருக்கோலம் காட்டினாய் . Lord that bestowed the eight fold Siddis on the sixty four Iyakkimars (a class of elevated souls) in the days of yore! While I was getting drowned under the three pernicious ills of illusion, evil and ego, Thou halted my downfall and took me under Thy care and granted me the grace of Thy flowery Feet. (And now) ending my trials and tribulations, Thou didst reveal to me Thy Immaculate form of bliss at Eagle Hill (Thiruk-Kazhuk-Kundram), Note: In this decad, we find many autobiographical sketches listing the high points in the Saint's pilgrimage during the sojourn on this earth. கு-ரை: இயக்கர் = பதினெட்டுத் தேவகணங்களுள் ஒருவகையார். இயக்கியர் காதை, உத்தரகோச மங்கைப்புராணத்துட் காண்க. எண் குணம் = முற்றறிவு, இயற்கை அறிவு, தம் வயமுடைமை, இயல்பாகக் கட்டின்மை, வரம்பிலாற்றல், வரம்பிலின்பம், தூயவுடம்புடைமை, பேரருளுடைமை என்பன. எண்குணத்துளோமே என்ற அப்பர் திருவாக்குங் காண்க . மும்மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றில் ஆன்ம அறிவை மறைப்பவை. மும்மலத்துட் சேர்ந்த வினை மூலவினை. வல்வினை என்றது, இருவினைப் பயன்களை. துயக்கு = தளர்ச்சி. கயக்க = கசக்க, துன்புற, திருப்பெருந்துறையில் அடியவர்களோடு தன்னையும் கூட்டிச் செல்லாமல் துன்புற வைத்த செய்தி உணரத்தக்கது. THIRUCHCHITRAMBALAM 31. கண்ட பத்து 31. KANDA PATHTHU (நிருத்த தரிசனம் ) Decad of the Cosmic Dance தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் இஃது அடிகள் தில்லையில் சென்று சிவபெருமானது திருக்கூத்தைக் கண்டமையைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி. இதனானே இதற்கு, "நிருத்த தரிசனம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இஃது அடிகள் தில்லையை அடைந்து திருக்கூத்தைக் கண்டு வணங்கிய பொழுது பாடப்பட்டது எனக் கொள்ளுதற்கு இடம் உண்டு. இது நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவால் ஆகியது. In this decad, the Saint ruminates upon the Blissful Dance of Lord Civa at Thillai, adored by one and all, which he had the good fortune to witness in person, having been redeemed from the lurid distractions of this (mundane) paganist worldly existence. "I had vision of the Lord at Thillai" is the constant refrain at the end of each of the ten stanzas (கண்டேனே - A positive assertion that he indeed saw Him). This reminds one of Saint Appar's exclamation- கண்டேன் அவர் திருப்பாதம் (திருவையாற்றுப் பதிகம்) - Also at Naaraiyur - நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே . Again வாய்மூரடிகளை நான் கண்ட வாறே, Similar episodes indicating direct physical vision of the Lord are found in Thiru Murais. In the first stanza, there is a hint that the allurements of the five senses are verily the root cause of man's degradation and death. St. Appar too feels sorry for the miserable plight of the many vain folks in this world "who dies, only to be reborn" "பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே". 31.1 இந்திரிய வயமயங்கி யிறப்பதற்கே காரணமா யந்தரமே திரிந்துபோ யருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட வந்தமிலா வானந்த மணிகொடில்லை கண்டேனே இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய் அந்தரமே திரிந்து போய், அருநரகில் வீழ்வேற்குச் சிந்தை தனைத் தெளிவித்துச், சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே inthiriya vayam mayangki iRappathaRkee kaaraNamaay antharamee thirinthu pooy arunarakil viizveeRku sinthaithanai theLiviththu sivam aakki enai aaNda antham ilaa aanantham aNi koLthillai kaNdeenee பொ-ரை: ஐம்பொறிகளின் வசப்பட்டு அறியாமையுற்று இறந்தொழிவதற்கே காரணமானேன். இறந்தபின் வானிலே அலைந்து போய்க் கடத்தற்கரிய நரகத்தில் வீழும் இயல்புடையவன் யான். என் மனத்தைப் புனிதமாக்கி, என்னைச் சிவமாம் இயல்பாக்கி, என்னை ஆட்கொண்டருளிய எல்லையற்ற ஆனந்தக் கூத்தனை அழகுமிகுந்த தில்லைச் சபையில் காணலாயினேன் . I am prone to get drowned in the abysmal hell, mired by the five senses, wandering amidst the voids above, and thus bring death upon myself. Unto such a one, He gave clarity of mind and, took me under Him. This endless blissful form of His, I saw in person at the beauteous shrine of Thillai. கு-ரை: இந்திரியம் = பொறி, மயங்கி = மயக்கமுற்று என்றும் உரைப்பர். திரிபுணர்ச்சி எய்தி என்பது பொருள். இறந்தவுடன் வான் வழிச் சென்று பிற இடங்களுக்குப் போதல், நூல்களுட் கூறப்படும். சிந்தை அறிவைக் குறிக்கும். சிவத்தின் வசப்படுதலே சிவமாதல் என அறிக. ஆனந்தம் இறைவனுக்கு ஆகுபெயர். 2. வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத் தனைச்சிறிது நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை யெனைப்பெரிது மாட்கொண்டென் பிறப்பறுத்த விணையிலியை யனைத்துலகுந் தொழுந்தில்லை யம்பலத்தே கண்டேனே வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என்பிறப்பு அறுத்த இணை இலியை அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே! vinaippiRavi enkinRa veethanaiyil akappaddu thanaisiRithum ninaiyaathee thaLarvu eythi kidappeenai enaipperithum aadkoNdu en piRappaRuththa iNai iliyai anaiththulakum thozumthillai ampalaththee kaNdeenee பொ-ரை: வினைப்பயன் காரணமாக வருகிற பிறவி என்னும் துன்பத்தில் அகப்பட்டேன். இறைவனாகிய சிவனைச் சற்றும் எண்ணாது சோர்வுற்றுக் கிடக்கின்ற என்னை அவன் பெரும் வகையில் ஆண்டருளி ஏற்றுக் கொண்டு என் பிறப்பினைத் தொலைத்தனன். அந்த ஒப்பற்றவனை உலக முழுதும் வழிபடுகின்ற தில்லைத் திருச்சபையில் காணலாயினேன். Caught in the travails of worldly deeds and the resulting births, I lay fatigued here without the slightest thoughts on Him. And yet, He favoured me a lot and took me under Him. This matchless Lord who ended all my future births, I saw in person at Thillai public hall! கு-ரை: தனை என்பதற்கு உயிராகிய தன்னை என்று பொருள் கொள்வாரும் உளர். ஐம்புலனிற்பட்ட காலை, உயிர் தன்னையும் தலைவனையும் உணராமை காண்க. எனை = எத்துணை. 3. உருத்தெரியாக் காலத்தே யுள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூன்புக்குக் கருணையினா லாண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை யருத்தியினா னாயடியே னணிகொடில்லை கண்டேனே உருத் தெரியாக் காலத்தே உள் புகுந்து, என் உளம் மன்னிக் கருத்து இருத்தி, ஊன்புக்குக், கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத், தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய்-அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே ! uruththeriyaa kaalaththee uLpukunthu en uLammanni karuththu iruththi uunpukku karuNaiyinaal aaNdu koNda thiruth thuruththi meeyaanai thiththikkum sivapathaththai aruththiyinaal naayadiyeen aNi koLthillai kaNdeenee பொ-ரை : இறைவன், தன் அருட்கோலத்தோடு யான் கருவாய்க் கிடக்கின்ற காலத்திலேயே என்னுள் கலந்தான். என் எண்ணத்தைத் திருத்தினான், பின்னர் உருக்கொண்டு எழுந்தருளி வந்து திருவருளினால் என்னை ஆட்கொண்டனன். திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அவனது இன்பம் பயக்கும் மங்களமான குஞ்சிதபாதத்தை (திருவடியை) நாயனைய அடியேன், ஆசையுடன் அழகுமிகும் தில்லைத் திருச்சபையில் கண்டு உய்ந்தேன். I, this cur of a vassal, in deep devotion, witnessed, in person the form of the Lord of Thiruth-Thuruththi, the benevolent Feet of Lord Civa, at the beauteous Thillai shrine. The Lord had entered into me even before I had taken shape as a human being, and stayed put in my mind penetrating my fleshy frame and taking me under Him in full show of grace. கு-ரை: தாம் இறைவனை அறிதற்குமுன், அவன் தம்மைப் பக்குவப்படுத்தினமை கூறினார், ஊன் புக்கு என்பதற்குத் தனது உடலை இடமாக்கொண்டு என்றும் உரைப்பர். திருத்துருத்தி சோழ நாட்டில் உள்ளது. பதம்= பாதம், சிவம் = மங்களமான, அருத்தி = ஆசை; அன்பு. 4. கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காணவென்றன் பசுபாச மறுத்தானை யெல்லோரு மிறைஞ்சு தில்லை யம்பலத்தே கண்டேனே கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை, வல்லாளனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் பல்லோரும் காண, என்-தன் பசு பாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே! kallaatha pul aRivin kadaippadda naayeenai vallaaLanaay vanthu vanappu eythi irukkum vaNNam palloorum kaaNa enthan pasupaasam aRuththaanai ellorum iRainjsu thillai ampalaththee kaNdeenee பொ-ரை: சிவஞானத்தைச் சற்றும் பெறாத சிற்றறிவுடைய கீழ்ப்பட்ட நாயனையவன் யான். நீ என்னை அறிவுத் திறம் உடையவனாய்ப் போந்து அருள் அழகுடன் இனிது இருக்கும்படிச் செய்தனை. அடியார் பலர் காண எனது பாசத்தன்மையையும், பசுத்தன்மையையும் தொலைத்தனை. எல்லா உயிர்களும் வணங்குகின்ற நின்னைத் தில்லை அம்பலத்தில் கண்டேன். I witnessed in person at the public hall of Thillai, worshipped by one and all, this Lord who ended all my bondage in front of many folks present there. He did this to me, this lowly cur, even though I have little learning and no insight, and made me attain to a fair state over here. கு-ரை: வனப்பு= அழகு,புனிதம். பாசம் - ஆணவம், பசு - தன்னுணர்ச்சி 5. சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறு மாதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானென தென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு; பேதை குணம், பிறர் உருவம், யான், எனது' என் உரைமாய்த்துக் கோது இல் அமுது ஆனானைக்-குலாவு தில்லை கண்டேனே ! saathi kulam piRappu ennum suzip paddu thadumaaRum aatham ili naayeenai allal aRuththu aadkoNdu peethai kuNam piRar uruvam yaan enathu enRu uraimaayththu koothu il amuthaanaanai kulaavu thillai kaNdeenee பொ-ரை: சாதி, குலம், குடிப்பிறப்பு என்ற சுழியில் அகப்பட்டுத் தடுமாறினேன். ஆதரவற்ற நாய் போன்றவன் நான். எனது துன்பங்களைத் துடைத்து நீ ஆட்கொண்டாய். எனது அறிவற்ற தன்மையை அகற்றினாய். உருவம் காரணமாகப் பிறரை வெறுக்காமல் இருக்கச் செய்தாய். நான், எனது என்ற செருக்கினையும் அறவே இல்லாமல் ஆக்கினாய். எனக்கு இத்துணை அருள்புரிந்த அமுதம் போல ஆன சிவனை விளங்குகின்ற தில்லையில் கண்டேன். I saw at the grace-filled Thillai's hall, this flawless elixir of my Lord, who ended all my earthly woes and took this forlorn, "cur-like" me as His own, although I was caught in the whirlpool of caste, creed and birth. The Lord that quelled my ignorance and ego, and ended all other alien forms of worship. கு-ரை: வருணம் - பெரும்பிரிவு, குலம் அதனுட் பட்டது. அதனினுட்பகுதி, குடிப்பிறப்பு. ஆதம்= ஆதரவு, பிறருருவம் - பிற தெய்வத் தோற்றம் என்றும் உரைப்பர், 'குலாவு' என்பதற்கு ஞானம் விளங்கும் என்றும் உரைப்பர். 6. பிறவிதனை யறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டு முறவினொடு மொழியச்சென் றுலகுடைய வொருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலமன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே. பிறவி தனை அற மாற்றிப் பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும் உறவினொடும் ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலைச் செறி பொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும், வானவரும், வணங்கிட-நான் கண்டேனே ! piRavithanai aRamaaRRi piNimuuppu enRa ivai iraNdum uRavinodum oziyassenRu ulakudaiya orumuthalai seRipozilsuuz thillai nakar thirusiRRampalam manni maRaiyavarum vaanavarum vaNangkida naan kaNdeenee பொ-ரை: இறைவன் எனது பிறவியை அறவே நீக்கினான். பிறத்தலால் ஏற்படும் நோய்கள் மூப்படைதல் ஆகிய இந்த இரண்டையும், இந்த இரண்டிற்கும் உறவு போன்று அமையும் நரை, திரை, இந்திரியங்கள் வலிகுன்றுதல் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அறவே ஒழியச் செய்தான். இத்தனை அருள்புரிந்த ஒப்பற்ற உலக நாயகனாகிய சிவபெருமானை, நெருங்கிய சோலை சூழ்ந்த தில்லையம்பதியில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அந்தணர்களும் தேவர்களும் வணங்கிட நான் கண்டேன். The peerless Lord of the world, that extinguished completely all my future births, destroying thereby disease and old age with all its resultant effects such as hair becoming white, skin becoming wringled, and the senses loosing their vitality. I witnessed in person, vast number of seers and devas ever worshiping this, our Lord, at the public hall of Thillai, surrounded by lush green groves so dense. கு-ரை: 'பிணி, மூப்பு உறவினொடும் ஒழிய' என்பதற்குப் 'பிணி, மூப்பு முதலியன தமக்கில்லாது சுற்றத்தாரோடு ஒழிய' என்றும் உரைப்பர். பிறவியொழிந்த இடத்தே, பிணி, மூப்பு, சுற்றப்பற்று முதலியன ஒழிதல் இயல்பே. 7. பத்திமையும் பரிசுமிலாப் பசுபாச மறுத்தருளிப் பித்தனிவ னெனவென்னை யாக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றாற் றிருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளிப் பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்துப், பேராமே சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே ! paththimaiyum parisum ilaa pasupaasam aRuththaruLi piththan ivan ena ennai aakkuviththu peeraamee siththam enum thiN kayiRRaal thiruppaatham kadduviththa viththakanaar viLaiyaadal viLangku thillai kaNdeenee. பொ-ரை: அன்பும் பண்பும் இல்லாதவன் நான். ஆதலால் திருவடியை அடைவதற்குரிய தகுதி என்னிடம் இல்லை. உலகத்தவர் என்னைப் பித்தன் என்று கூறுவார்கள். அப்படி இருந்தும் அவன் திருவடியை அடைவதற்குரிய தகுதியை எனக்கு ஊட்டினான். என்னுடைய பந்த பாசங்களை அறவே நீக்கி அருளினான். என்னை அவன் அடிக்கே அடிமையாக ஆக்கம் பெறச் செய்தான். அது மட்டுமல்ல, யான் எனது அறியாமையினால் அவனது திருவடியை விட்டு அகலாமல் இருப்பதற்குச் சித்தம் என்னும் வலிய கயிற்றினால் அவன் திருவடியாகிய தறியிலே கட்டிக் கொண்டான். இப்பேர்ப்பட்ட பேரறிஞரான சிவபெருமானின் திருவிளையாடலை அருள் விளங்குகின்ற தில்லையில் நான் பார்த்தேன். Devoid of devotion and good manners, am I! Yet, He cut off my afflictions, and rendering me a wayward one, he tied me tight to His holy Feet with a sturdy rope of awareness. This dexterous play of the Lord, I witnessed in person at effulgent Thillai's public hall. கு-ரை: பத்திமை = அன்புடைமை. பரிசு = பண்பு. பசு = தன்னினைவு. பாசம்= கட்டு. வித்தகனார்=கல்வியாளர்; அறிஞர். 8. அளவிலாப் பாவகத்தா லமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்று மறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக் களவிலா வானந்த மளித்தென்னை யாண்டானைக் களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானைக் களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே ! aLavu ilaa paavakaththaal amukkuNdu ingku aRivu inRi viLaivu onRum aRiyaathee veRuviyanaay kidappeenukku aLavu ilaa aanantham aLiththennai aaNdaanai kaLavu ilaa vaanavarum thozunthillai kaNdeenee. பொ-ரை: அளவற்ற எண்ணங்களால் அழுந்தப் பெற்ற நல்லறிவில்லாதவன் யான். யான் செய்யும் செயலின் பயனாக எதிர்காலத்தில் வருவது ஒன்றையும் அறியாமல், பயனற்றவனாய்க் கிடக்கும் இயல்புடையவன் யான். அப்படிப்பட்ட எனக்கு எல்லையில்லாத பேரின்பம் தந்து என்னை ஆட்கொண்டவனை வஞ்சனையில்லாத தேவர்களும் தொழுகின்ற தில்லையிலே கண்டேன். I lie here with soul distraught, mired by myriad thoughts, senseless, unaware of what next would unfold! And yet, He bestowed immeasurable bliss on me and took me under Him. This Lord, worshipped by flawless heaven-dwellers at Thillai, I did witness with my own eyes. கு-ரை: பாவகம் = நினைவு; கற்பனை. அறிவின்றி = அறிவு விரிதற்கிடமின்றி. வெறுவியன்= வெறுமையன்; பயனற்றவன். களவிலாமையால், வானவர் தில்லையிற்றொழுவாராயினர் என்ற குறிப்புக் காண்க. களவிலா = சூழ்ச்சியற்ற; தூய்மையான 'வானவரும்' என்பதில் உம்மை, பிற அடியாரையும் தழுவியது. 9. பாங்கினொடு பரிசொன்று மறியாத நாயேனை யோங்கியுளத் தொளிவளர வுலப்பிலா வன்பருளி வாங்கிவினை மலமறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயிறில்லை யம்பலத்தே கண்டேனே. பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை, ஓங்கி உளத்து, ஒளிவளர உலப்பு இலா அன்பு அருளி வாங்கி வினை. மலம் அறுத்து, வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே! paangkinodu parisu onRum aRiyaatha naayeenai oongki uLaththu oLivaLara ulappu ilaa anpu aruLi vaangki vinai malam aRuththu vaankaruNai thanthaanai naankumaRai payilthillai ampalaththee kaNdeenee பொ-ரை: இறைவனை நாடுகின்ற முறைமையும், அவனுக்குப் பிடித்த குணங்கள் ஒரு சிறிதுமில்லாத நாயேனுக்குச் சிவபெருமான் என் உள்ளத்தே ஞான ஒளி தழைத்து மிகும்படி முடிவில்லாத அன்பினைத் தந்தருளினான். எனது வினைகளை அகற்றி பாசம் என்னைச் சாராமல் நீக்கி, உயர்ந்த பேரருள் வழங்கிய வள்ளலை நான்கு வேதங்களும் இடைவிடாது பயிலப்படுகின்ற தில்லைத் திருச்சபையில் காணலாயினேன். On me, this cur, that has neither the disposition nor awareness of the right ways and means, for achieving Him, He bestowed supreme grace, destroying ego and ending the effects of evil deeds. And showered endless Love, that light may shine and spread in my mind. Him I saw with my own eyes at Thillai's public hall resounding with the recitation of the four vedic hymns. கு-ரை : பாங்கு= முறை. பரிசு= பயன். 'உளத்தொளி ஓங்கி' என மாற்றுக. உளத்தொளி= உயிரினறிவிற் கலந்த இறையறிவு. உலத்தல்= வற்றிப்போதல். 'வாங்கு' என்பதற்குக் கழித்து என்றும் பொருள் உரைப்பர். மலம்=ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். நான்குமறை= நால்வகை வாக்குகள். 10. பூதங்க ளைந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்க டொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. பூதங்கள் ஐந்து ஆகிப், புலன் ஆகிப், பொருள் ஆகிப் பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம் இலாப் பெருமையனைக், கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே ! puuthangkaL ainthu aaki pulan aaki poruL aaki peethangkaL anaiththumaay peethamilaa perumaiyanai keethangkaL keduththu aaNda kiLar oLiyai marakathaththai veethangkaL thozutheeththum viLangkuthillai kaNdeenee பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய ஐம்பெரும் பூதங்களும் மாறுபாடு அடைகின்றன. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மாத்திரைகளும் மாறுபாடு அடைகின்றன. ஏனைய வேறுவேறு பொருள்களும் மாறுபாடு அடைகின்றன. ஆனால் சிவபெருமான், தான் ஒரு வித மாறுதலும் அடையாமல் இந்த எல்லாப் பொருள்களிலும் அத்துவிதமாய்க் கலந்து விளங்குகின்றான். இப்பேர்ப்பட்ட பெருமை உடையவன் என் துன்பங்களைப் போக்கி ஆண்டான். அவன், மேன்மேலும், கிளர்ந்து எழுகின்ற ஒளி போல்பவனாயும் விளங்குகின்றான். அம்மையின் நிறமாகிய மரகதம் போன்றும் அவன் ஒளி வீசுகிறான். இத்தகையவனை, ஞான நூல்கள் வணங்கி வாழ்த்துகின்ற அருள் திகழும் தில்லையில் கண்டேன் . I saw with my own eyes, at effulgent Thillai's public hall worshiped and adored by the four vedas, this our Lord, the bright shining light, precious emerald, that took me unto Him and ended my tribulations. The Lord that pervades in all the five elements (earth, water, fire, wind and sky) and in the five senses (touch, sight, sound, taste and smell) and indeed in all matter in the universe. Yet, He is untouched by all these diversities. கு-ரை: எல்லாவற்றிலும் அத்துவிதமாய்க் கலந்திருத்தல் பற்றி 'எல்லாமாகி' என்றார். புலன் = மன அறிவு. ஐம்பொறி அறிவென்றும் கொள்ளுவர். வேதங்கள் பயின்றோர்க்கு வேதங்கள் ஆகுபெயர். கேதங்கள்= துன்பங்கள். மரகதம், அம்மையின் நிறம். அருட் சத்தியும் அவன் வடிவேயாதலின், 'மரகதத்தை' என்றார். THIRUCHCHITRAMBALAM 32. பிரார்த்தனைப் பத்து 32. PRARTHTHANAIP-PATHTHU (சதாமுத்தி ) The Decad of Supplication திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Appeal for the Bliss of Eternity ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் பிரார்த்தனை - இரந்து நிற்றல். அடிகள் தம்மை ஏனை அடியார்களோடு உடன்சேரச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என இறைவனை இரந்து நிற்கும் செய்தியைக் கூறும் பதினொரு பாடல்களின் தொகுதியே இப்பகுதி. இங்ஙனம் இரக்கப்படுவது இடையறாத பேரின்ப நிலையேயாதல் பற்றி இதற்குச் 'சதா முத்தி' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். சதா= இடைவிடாமை. இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பது பதிப்புக்களில் காணப்படுவது. இதன்கண் உள்ள எல்லாத் திருப்பாட்டுக்களும் அறுசீரடி விருத்தங்கள். முதல் திருப்பாட்டில் முதற்கண் ஐஞ்சீரடி வந்து மயங்கிற்று. இப்பகுதி அந்தாதியாய் அமைந்தது. In this decad too we witness the Saint's pathetic longing for reunion with the Lord and His congregation, from where he was abruptly left out after benediction in Thirup-Perun-Thurai. This decad of supplication contains repeated strains of sorrow, revealing the deep pangs of separation suffered by the saint, the reasons for the separation not being clear to him. "All others have been redeemed at the congregation at Thirup-Perun-Thurai whilst I alone am here, left behind. Pray, Grant me Thy grace once again" is the refrain. These plaintive numbers instantly evoke similar feelings of despondency in the readers' hearts; for, they too seek redress from the trials and tribulations of this mundane sublunary existence, from which they find it difficult to free themselves. This leads them on to an introspective mood of self-pity and self-condemnation, ascribing, their plight to their own inequities, transgressions and infirmities. 32. 1 கலந்து நின்னடியா ரோடன்று வாளா களித்தி ருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னா ளுலர்ந்து போனே னுடையானே யுலவா வின்பச் சுடர்காண்பா னலந்து போனே னருள்செய்யா யார்வங் கூர வடியேற்கே. கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்; புலர்ந்து போன காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின்னாள்; உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான் அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே! kalanthu nin adiyaaroodu anRu vaaLaa kaLiththiruntheen pularnthu poona kaalangkaL pukunthu ninRathu idarpinnaaL ularnthu pooneen udaiyaanee ulavaa inpa sudarkaaNpaan alanthu pooneen aruLseyyaay aarvam kuura adiyeeRkee. பொ-ரை: நீ என்னை ஆட்கொண்ட அந்நாளில் உன் அடியாருடன் கூடிச் சும்மா மகிழ்ந்திருந்தேன். என் ஆயுட்காலங்கள் வீணாகக் கழிந்தன. பின்னாளில் துன்பமே நிலை பெற்றது. அதனால் யான் வாடிப் போனேன். என்றும் கெடாத பேரின்பம் அருளும் சோதியைப் பார்க்க விரும்பிப் பார்க்கப் பெறாது வருந்தினேன். என்னை ஆளாக உடையவனே! அடியேனுக்கு அன்பு மிகும்படி அருள் செய்வாயாக. Time was, when I stayed happily in the company of Thy devotees. Alas! days passed by, and then I was beset by myriad problems. As a result, I got so wearied here, Oh Master. I greatly yearn to witness again Thy unfading flame of blissful spark. Pray, Grant Thee Thy grace, Oh Lord, so that I, Thy vassal, may once again rise up in deep dedication. கு-ரை: வாளா என்பது அன்பு செலுத்தாமையைக் குறிக்கும். புலர்ந்து= விடிந்து, கழிந்த நாட்களும், மாதங்களும் பலவாயினமையின் காலங்கள் என்றார். மதுரையிற் பாண்டியன் முதலியோர்க்குப் பதில் சொல்ல வேண்டியிருந்ததை இடர் என்ற சொல் குறிக்கும். இறைவனைப் பிரிந்த ஆற்றாமையும் இடரே. அலந்து= எண்ணியது கிடைக்கப் பெறாது வருந்தி. 2. அடியார் சிலருன் னருள் பெற்றா ரார்வங் கூர யானவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவா லடியேன் மூக்கின்றேன் கடியே னுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல் பொங்க வுடையா யடியே னுள்ளத்தே யோவா துருக வருளாயே. அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே, முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்; கடியேனுடைய கடுவினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க, உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே. adiyaar silar un aruL peRRaar aarvam kuura yaan avamee mudai aar piNaththin mudivu inRi munivaal adiyeen muukkinReen kadiyeenudaiya kadu vinaiyai kaLainthu un karuNai kadalpongka udaiyaay adiyeen uLLaththee oovaathu uruka aruLaayee பொ-ரை: முதல்வனே! மெய்யடியார் சிலர் உன்மேல் அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்று உய்ந்தார்கள். யானோ புலால் நாற்றம் நிறைந்த பிணத்தைப் போல உடம்பிற்கு ஒரு முடிவின்றி இருக்கிறேன் . அதில் இருக்கப் பெற்ற வெறுப்பினால் அடியேன் மூப்படைகின்றேன். கடுமையான குணமுடைய எனது கொடிய வினைகளைத் தொலைத்து உன்னுடைய அருட்கடல் அடியேன் உள்ளத்தில் பொங்கி என்மீது பாய அடியேன் மனத்தகத்து அன்பைத் தந்து யான் உனது அருளையே பற்றிப் பணிந்து மனமுருக அருள்வாயாக ! Some of Thy devotees received Thy grace through deep dedication and intense craving for Thee, whereas, alas! here stand I, Thy vassal, wasting myself away endlessly like a foul physical frame so dead. Oh my Lord, I am ageing rapidly. Pray, Grant Thee that I may ever be in thought focused on Thee, and melt away, grant that the sea of Thy grace may surge through me, erasing the blistering heat of all the evil deeds of this wily wicked me. கு-ரை: இழிவு பற்றியும், அன்பின்மை பற்றியும் உடம்பைப் பிணமென்றார். முடை = புலால் நாற்றம்; தீய வாசனை. வெறுக்கத்தக்க தன்மை தன்னிடத்தில் அதிகப் படுவதாகக் கூறுவார், 'முனிவால் மூக்கின்றேன்' என்றார். கடியேன் = உருக்கமில்லாத நெஞ்சுடையேன். பொங்க = விளங்க என்றும் உரைப்ப. 3. அருளா ரமுதப் பெருங்கடல்வா யடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே யெய்த்தேன் கண்டா யெம்மானே மருளார் மனத்தோ ருன்மத்தன் வருமா லென்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ண மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே. அருள் ஆர் அமுதப் பெரும் கடல் வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த, இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே ! 'மருள் ஆர் மனத்து ஓர் உன் மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார் வெருளா வண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே! aruLaar amutha perungkadalvaay adiyaar ellaam pukku azuntha iruLaar aakkai ithu poRuththee eyththeen kaNdaay emmaanee maruL aar manaththu oor unmaththan varumaal enRingku enaikkaNdaar veruLaa vaNNam mey anpai udaiyaay peRa naan veeNdumee பொ-ரை: அடியார் அனைவரும் திருவருளாகிற அமுதக் கடலில் புகுந்து திளைக்க, அடியேன் அஞ்ஞானமென்னும் இருள் நிறைந்த இவ்வுடலைச் சுமந்து இளைத்தேன். இதனை நீ கண்டருளுவாயாக. எம் தலைவனே! மருட்சி நிறைந்த மனத்தை உடைய ஒரு பித்தன் வருகின்றான் என இவ்வுலகில் உள்ளவர்கள் சொல்ல அதற்கு நான் அஞ்சா வண்ணம் வீடுபேறு அடையும் மெய்யன்பைப் பெற அருளுவாயாக! Oh Lord! When all Thy devotees entered into Thy vast sea of grace-filled nectar, I alone stand here wearied, holding on to this foul physical frame, as you know. Therefore, pray, grant me this boon of grace, so that worldly folks may not shun me and dread me as a wayward man. And Oh, Chief, grant me a devotional bent of mind of the truest kind. கு-ரை: வருமால் என்பதில் ஆல் அசை. வெருளுதல் = மருளுதல்; அஞ்சுதல். 4. வேண்டும் வேண்டு மெய்யடியா ருள்ளே விரும்பி யெனையருளா லாண்டா யடியே னிடர்களைந்த வமுதே யருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்ட னேற்கு முண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க வன்பே மேவுதலே. வேண்டும், வேண்டும், மெய் அடியார் - உள்ளே, விரும்பி, எனை அருளால் ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே! தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம் கொல் வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே veeNdum veeNdum meyadiyaar uLLee virumpi enai aruLaal aaNdaay adiyeen idar kaLaintha amuthee arumaamaNi muththee thuuNdaa viLakkin sudar anaiyaay thoNda neeRkum uNdaamkol veeNdaathu onRum veeNdaathu mikka anpee meevuthalee. பொ-ரை: நின்னை மிகவும் விரும்பி நின்ற மெய்யடியார்கள் நடுவே என்னை வைக்க விரும்பிக் கருணையால் என்னை ஆட்கொண்டவனே! அடியேனுடைய பிறவித் துன்பத்தை நீக்கிய அருமருந்தே! கிடைத்தற்கரிய மாணிக்கமே! முத்தே! தூண்டா விளக்கின் சுடர் போன்றவனே ! நீ விரும்பாத எதையும் நானும் விரும்பாமல் நின்பால் மிக்க அன்பு கொள்வதே எனக்கு வேண்டும். அவ்வாறு இருக்க அருள் செய்வாயாக. You took me into the congregation of true devotees before, in grace and affection. Thou, ambrosia-like! Thou magnificent pearl so rare, that ended all my worldly cares. Thou, like a flame of a lamp that needs no pruning. Am I, this little vassal too, entitled to reach for Thy boundless affection, renouncing all that is to be shunned. கு-ரை: வேண்டும் வேண்டுமென்பதற்கு இடைவிடாது விரும்புமென்றும் பொருள் கொள்ப. இறைவன் இயற்கை அறிவுடையனாகலின் தூண்டா விளக்கின் சுடரனையாய் என்றார். 5. மேவு முன்ற னடியாருள் விரும்பி யானு மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா வுன்றன் கருணையினாற் பாவி யேற்கு முண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந் தாவி யாக்கை, யானெனதென் றியாது மின்றி யறுதலே. மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே, காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் - தன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ - பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து ஆவி, யாக்கை, யான் எனது, என்று யாதும் இன்றி, அறுதலே. meevum un than adiyaaruL virumpi yaanum meymmaiyee kaavi seerum kayal kaNNaaL pangkaa un than karuNaiyinaal paaviyeeRkum uNdaamoo parama aanantha pazangkadal seernthu aaviyaakkai yaan enathu enRu yaathum inRi aRuthalee. பொ-ரை: குவளை மலரைச் சேர்ந்து விளங்கும் கயல் மீன் போன்ற கண்ணை உடைய உமையம்மை பாகனே! உன் அடியார்கள் உன்னை வந்து அடைய வேண்டுமென்று பெருவிருப்பம் கொண்டு உன்னை அடைந்தார்கள். யானும் அவ்வாறு, உனது அடியார் கூட்டத்துள் ஒருவனாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பித் தொழுது வந்தேன். எனது உடல், உயிர், யான், எனது என்னும் பற்றுக்களை எல்லாம் அறவே நீக்கிவிட்டுச் சிவானந்தம் ஆகிய பரமானந்தத்தில் சேர்ந்திருக்கும் நிலை பாவியாகிய எனக்கும் உன் கருணையினால் உண்டாக அருள் புரிவாயாக. Am I, this little vassal too, entitled to Thy grace, to that state of total renunciation, shedding all notion of 'me, mine and my frame', thereby getting immersed in the primordial sea of bliss! Thou, consort of the one with blue coloured, fish-like eyes! Oh, to be in the congregation of Thy true devotees I do pray! கு-ரை: விரும்பி என்பதை விரும்ப என்பதன் திரிபாகக் கொண்டு அடியார் மெய்ம்மையையே உள்ளத்தில் விரும்ப, அவர்கள் சார்பு பற்றி யானும் மெய் விரும்புவேன் என்றலுமுண்டு. காவி= நீலோற்பல மலர். மேவும் என்பதை அடியாரென்பதோடு முடித்தலும், மெய்ம்மையே என்பதைச் சேர்ந்து என்பதனோடும் முடித்தலும் உண்டு. 6. அறவே பெற்றார் நின்னன்ப ரந்த மின்றி யகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றே னுடையானே பெறவே வேண்டு மெய்யன்பு பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்ப மாகடலே. அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும், புறமே கிடந்து, புலை-நாயேன் புலம்புகின்றேன்; உடையானே ! பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியாப், பிரிவு இல்லா, மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே ! aRavee peRRaar nin anpar antham inRi akam nekavum puRamee kidanthu pulai naayeen pulampu kinReen udaiyaanee peRavee veeNdum meyyanpu peeraa oziyaa pirivu illaa maRavaa ninaiyaa aLavu ilaa maaLaa inpa maa kadalee பொ-ரை: உடையானே! நின் அன்பர்கள் இன்பத்தை மிகப் பெற்று விட்டார்கள். அவர்கள் கூட்டத்துக்கு வெளியே பயனின்றிக் கிடந்து கீழ்த்தன்மையுடைய நாயேன் பேரின்பம் வேண்டுமெனப் புலம்புகிறேன். இடம் பெறாது, நீங்காது, பிரிவில்லாது மறக்கவும் நினைக்கவும் இல்லாத தொலையாத பேரின்ப சாகரமே! யானும் உன்னைப் பெறுதற்குரிய உண்மை அன்பைக் கட்டாயம் பெற அருள்புரிவாயாக. Melting ceaselessly at heart for Thee, all Thy devotees got Thy grace in full measure Oh Lord, whereas I, this vile cur, am languishing outside in loneliness. Pray, grant, that I too receive Thy grace so true. Thou, boundless and endless ocean of bliss! Bliss, unswerving and undying. Bliss that never wanes! Bliss that the mind does not hold, does not leave either! கு-ரை: அறவு என்பதற்கு நிராசை, ஆசையின்மை எனப் பொருளுரைப்பாரும் உளர். கடல் ஏழு ஆதலின் இன்பமாம் கடலுக்கும் ஏழு அடைமொழி கொடுத்தார். இறைவன் போக்கு வரவு இல்லாதவன் ஆதலின் 'பெயரா' என்றார். இன்பம் இறைவனை விட்டு நீங்காமையின் 'ஒழியா' என்றார். உயிர்களோடு இறைவன் அத்துவிதமாய்க் கலந்திருத்தலின் 'பிரிவில்லா' என்றார். சகல அவத்தையைக் கடந்த அதீத நிலையில் அனுபவிக்கப்படுவதாகலின் 'மறவா, நினையா' என்றார். வரம்பிலின்பமாகலின் 'அளவிலா' என்றார். பெற்ற பேரின்பம் உயிரை விட்டு நீங்காமையின் 'மாளா' என்றார். 7. கடலே யனைய வானந்தங் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண விடரே பெருக்கி யேசற்றிங் கிருத்த லழகோ வடிநாயே னுடையாய் நீயே யருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரா ரருளா லிருணீங்கச் சோதி யினித்தான் றுணியாயே. கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி-நாயேன் ? உடையாய்! 'நீயே அருளுதி' என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்து ஒழிந்தேன் ; சுடர் ஆர் அருளால், இருள் நீங்கச், சோதீ ! இனித்தான் துணியாயே ! kadalee anaiya aanantham kaNdaar ellaam kavarnthuNNa idaree perukki eesaRRu ingku iruththal azakoo adinaayeen udaiyaay niiyee aruLuthi enRu uNarththaathu ozinthee kazinthozintheen sudar aar aruLaal iruL niingka soothii iniththaan thuNiyaayee. பொ-ரை: முதல்வனே! கடல் போலும் பேரின்பத்தைக் கண்டவர்கள் எல்லாம் வலிதிற்பெற்று அனுபவிக்கிறார்கள். அடிமையாகிய நாயேன் துன்பத்தையே பெற்றுத் துயருற்று இங்கு இவ்வுலகில் இருப்பது உனக்கு அழகாகுமா? என்னை உடைய நாதனே! நான் கேளாமல் நீயே அந்தப் பேரின்பத்தை அருளுவாய் என்று எண்ணி இதுவரை உன்னிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்காமல் காலம் கழித்து ஒழிந்தேன். ஒளிவண்ணனே! இனியாவது பிரகாசம் நிறைந்த நின் அருள் எனும் வாளினால் எனது அறியாமையைச் சேதித்து அருள் புரிவாயாக ! Oh, Light effulgence, with a sparkling flame of grace supreme! At least now will you condescend to decree that my stark ignorance may cease to be? For I wasted away all my days, without calling out for your grace. Yet, Oh Lord, is it fair for this lowly cur of Thy vassal here to stay and languish in strife, slogging along in dire hardship? Whereas all those aware of Thy sea of bliss, got hold of the same and revel in Thee! கு-ரை: கடலே என்பதில் ஏகாரம் தேற்றம் உணர்த்தும். சுடர் = ஞானப் பிரகாசம். துணி என்றமையால் அருள் என்பது வாளாக உவமிக்கப்பட்டது. 8. துணியா வுருகா வருள்பெருகத் தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து திணியார் மூங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றே னணியா ரடியா ருனக்குள்ள வன்புந் தாரா யருளளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்; அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத் தணியாது, ஒல்லை வந்தருளித் தளிர் பொன் பாதம் தாராயே! thuNiyaa urukaa aruLperuka thoonRum thoNdar idaippukunthu thiNi aar muungkil sinthaiyeen sivanee ninRu theeykinReen aNi aar adiyaar unakku uLLa anpum thaaraay aruL aLiya thaNiyaathu ollai vantharuLi thaLir poRpaatham thaaraayee. பொ-ரை: சிவபெருமானே ! நீயே ஆதரவென்று துணிவுற்று மனம் உருகி, நின் அடியார்கள் திருவருள் பொலிவுமிக்கு விளங்குகிறார்கள். அவர்கள் நடுவே, திண்மையுள்ள கல் மூங்கிலைப்போல, உருகாத நான் இவ்வுலகில் நிலையற்றுத் தளர்வுறுகிறேன். உன்னை நெருங்கிய உன் அடியார்கள் உன்பால் வைத்துள்ள மெய்யன்பை நானும் அடைவதற்கு அருள்புரிவாயாக! தாமதம் செய்யாமல் விரைவில் வந்து உன் உள்ளத்தில் தளிர் போன்ற பொன்மயமான நின் திருவடிகளை எனக்குத் தந்து அருள்புரிவாயாக. Once before, I stood in the midst of Thy dedicated vassals, overflowing with grace. But now, Oh Lord Civa, here I am, left behind, with a hardy bamboo-like mind, wasting away myself all the time. Pray, grant Thee that I too may have such devotion to Thee, as Thy true vassals. Pray, grant me (the gift of) Thy tender golden Feet, grant Thee soon Thy graceful gift. கு-ரை: துணியா= துணிந்து : உறுதியுடன். திணி = திண்மை . மூங்கிலானது மேற் செல்லாது வளைவுற்று நிற்றல்போல, மனமானது கடவுளை நோக்காது உலகினை நோக்கினமை குறிக்கப்பட்டது. அணி = அழகு; நேர்மை. தாராய் = தருக. அருளளியத் தணியாதென்று சேர்த்து, அருள் தானே கனியும் வரை தாமதியாது என்று பொருள் கொள்வதும் உண்டு. 9. தாரா வருளொன் றின்றியே தந்தா யென்றுன் றமரெல்லா மாரா நின்றா ரடியேனு மயலார் போல வயர்வேனோ சீரா ரருளாற் சிந்தனையைத் திருத்தி யாண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 'தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம் ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ? சீர்ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா! பேர்-ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே ! thaaraa aruL onRu inRiyee thanthaay enRu unthamarellaam aaraa ninRaar adiyeenum ayalaar poola ayarveenoo siir aar aruLaal sinthanaiyai thiruththi aaNda sivalookaa peer aanantham peeraamai vaikka veeNdum perumaanee பொ-ரை: சிவபெருமானே! உன் உறவினராகிய அடியார்கள் அனைவரும் உன் அருளை எவ்வித மீதமும் இன்றி முழுமையாக அடைந்து, அகக்களிப்போடு உன் பேரானந்தத்தைத் துய்த்து வருகின்றார்கள். ஆனால் நான் உன் அடியாரைப் போன்று இல்லாமல் ஓர் அயலவனைப் போல் உன் அருளை நுகராது இருந்து வருத்த வேண்டுமா? சிறந்த உன் அருளால் என் மனத்தைத் திருத்தி ஆட்கொண்ட சிவலோக நாதனே, நின் பேரானந்தத்தை என்றும் நீங்காத வண்ணம் துய்த்துக் கொண்டே இருக்கும் நிலையை எனக்கு அருளுவாயாக. Steeped in great delight, are all Thy close devotees, who received Thy grace with ease! Grace that is rare to receive! Alas! should I, Thy vassal alone, tire myself out here in grief, as an outsider with no reprieve? Oh Lord of Civa Loka, that in Thy bounteous graceful way, took me under Thee before, and turned my thoughts sublime! Oh Mighty Chief of mine, pray do ordain that I may ever remain in divine bliss. கு-ரை: அயலார்= அருளுக்குப் புறம்பானவர்கள். ஆரா நின்றார்= உண்ணா நின்றார்= அநுபவிக்கின்றார். அயர்வேன் = தளர்வேன். பேராமை= பேணுதலில்லாமை. 10. மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா நானோர் தோளாச் சுரையொத்தா னம்பி யித்தான் வாழ்ந்தாயே யூனே புகுந்த வுனையுணர்ந்தே யுருகிப் பெருகு முள்ளத்தைக் கோனே யருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே. மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம்நெகா நான் ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி ! இத்தால் வாழ்ந்தாயே ? ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு என்றோ கூடுவதே ? maan oor pangkaa vanthippaar mathura kaniyee manamnekaa naan oor thooLaa surai oththaal nampi iththaal vaaznthaayee uunee pukuntha unai uNarnthee uruki perukum uLLaththai koonee aruLum kaalanthaan kodiyeeRku enRoo kuuduvathee. பொ-ரை: மான் போன்ற பார்வை உடைய உமையம்மை பாகனே! உன்னை வணங்குகின்ற மெய்யன்பர்களுக்கு இனிமையான கனியை ஒத்தவனே! தலைவா! அடியேனது மனம் இன்னும் நெகிழவில்லை. துளை (ஓட்டை) இல்லாத காய்ந்து போன சுரைக் குடுக்கை வெள்ளத்தில் மிதக்குமே அன்றி நீரில் ஆழ்ந்து நீரை முகர்ந்து கொள்ளும் தன்மை உடையதன்று. அதைப் போன்று அடியேன் நின் அருள் வெள்ளத்துள் ஆழ்ந்து மூழ்கித் திளைத்து, அடங்கியும் அருளின் கொள்கலமாய் உனது பேரருளை ஏற்றும், பேரானந்தத்தில் திளைக்க வேண்டிய வாய்ப்பையும் பெறாமல் விட்டிருக்கின்றேன். மனம் குன்றாத என்னை இந்த நிலையில் வைத்து விட்ட நீ வாழ்ந்து விட்டாயோ? எனது உடலில் புகுந்த உன்னை நன்றாக உணர்ந்து, உருகி, அதனால் ஆக்கத்தை அடையும் மனத்தை நீ அருளும் காலம் கொடியேனாகிய எனக்கு என்று கூடும்? சொல்லி அருள்வாயாக. Thou, with fawn-like consort as part of Thee, Thou sweet and fruit-like for those that chant Thy name! Would you discard me as one of worthless mien treating me as mere bottle-gourd shell unbored? Oh my Hope, how have you profited by this? Oh Chief, that entered my frame, grant me the heart that would melt and grow in thoughts on Thee. I know not when such time (of Grace) would arrive, for this wicked me! கு-ரை: தோளாச்சுரை, நீர்ப்பாத்திர முதலிய எவ்வகையான கருவியாகவும் பயன்படாதது. அதுபோல மனம் நெகிழ்ந்து அருள் தங்குவதற்குப் பயன்படாத இடத்து, அது தோளாச்சுரை போல்வது என்றார். பயன்படாத அடியவர் வாயிலாக இறைவன் பெருமை விளங்காமையின், 'நம்பியித்தால் வாழ்ந்தாயே' என்றார். 'ஊனே புகுந்த' என்பதற்கு மனித வடிவம் எடுத்து வந்த என்றும் உரைப்பர். 11. கூடிக் கூடி யுன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றன் மரம்போ னிற்பேனோ யூடியூடி யுடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக் காடி யாடி யானந்த மதுவே யாக வருள்கலந்தே. கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாரா ; வாடி வாடி, வழி அற்றேன், வற்றல் மரம் போல் நிற்பேனோ ? ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகிப், பெருகி, நெக்கு ஆடி-ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே! kuudi kuudi un adiyaar kunippaar sirippaar kaLippaaraa vaadi vaadi vazi aRReen vaRRal maram pool niRpeenoo uudi uudi udaiyaayodu kalanthu uL uruki peruki nekku aadi aadi aanantham athuvee aaka aruL kalanthee. பொ-ரை: நின் மெய்யடியார் பலரும் கூடிக்கூடிக் கூத்தாடுபவர்களாகவும், மகிழ்ந்து ஆனந்த அனுபவத்தில் செருக்கி நிற்க, யான் மட்டும் காய்ந்த மரம் போல வாடிவாடி உய்யும் வழியற்று இருப்பேனோ? உன்னோடு பலகால் ஊடியும் கூடியும் இரண்டறக் கலந்து உள்ளம் உருகி, ஆனந்தம் பெருகி நெகிழ்ந்து பரவசமாய் ஆடிப்பாடி ஆனந்தமே யானாக நின் திருவருளில் கலந்து நிற்பேனோ? நீ திருவருள் புரிவாயாக! In assemblage after assemblage, all Thy devotees dance, smile and revel in sweetness. Am I then to stand here alone like a withered tree, grieving and grieving, with little or no reprieve in sight? Pray, grant Thee Lord, that I too may be with Thee in graceful communion, arguing and arguing, melting at heart, dancing and dancing in an ever widening sway of glee and mirth. கு-ரை: குனிப்பார், சிரிப்பார் என்பவற்றை முற்றெச்சமாகக் கொள்க. கலந்தே என்பதைக் கலந்து என்பதனோடு இசைத்து மீட்டும் மீட்டும் கலந்தும் ஊடியும் எனப்பொருள் கொள்க. அன்பினால் கலத்தலும் குறைகண்ட இடத்து ஊடுதலும் நிகழ்வன. குறை நீங்கவே மீட்டும் கலத்தலுண்டாம். கலத்தலும், ஊடுதலும் காதலை மிகுதிப்படுத்தும் ஆதலின், அவற்றை வேண்டினர். உள்ளுருகுதல் தற்போதங்கழல்வதற்கு இடமாகும். மனம் நெகிழ்ந்த இடத்தே அந்தக் கரணங்கள் ஓய்வடையும். ஆனந்தக் கூத்து, பேரின்பத்தின் மெய்ப்பாடு. THIRUCHCHITRAMBALAM 33. குழைத்த பத்து 33. KUZHAITHTHA PATHTHU (ஆத்தும நிவேதனம்) Decad of Soulful Supplication திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பெரிதும் பணிந்த மொழிகளால் இறைவன் திருவுள்ளத்தைக் குழைவித்த பத்துப் பாடல்களின் தொகுதி குழைத்த பத்து. அம்மொழிகளாவன, தம் சுதந்திரம் இன்மையைப் பலவாற்றாலும் எடுத்துக் கூறும் சொற்கள். இப்பொருள் பற்றியே இதற்கு, 'ஆத்தும நிவேதனம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆத்தும நிவேதனம் - 'யான்' என்று எழும் சீவபோதத்தை இறைவனுக்கு உணவாகக் கொடுத்தல். இறைவன் சீவபோதத்தை உண்ணுதலாவது, அதனை விழுங்குதல்; அஃதாவது அருட்போதத்துள் அடக்கிக் கொள்ளுதல். வாயிலார் நாயனார் தமது மனவழிபாட்டில் தமது ஆன்ம போதத்தைப் பாகம் பண்ணியதனால் ஆகிய அன்பையே இறைவனுக்குத் திருவமுதாக நிவேதித்தார் என்க. இஃது, அந்தாதியாய் முதலிலும், முடிவிலும் 'குழைத்தல்' என்னும் சொல்லைப் பெற்று விளங்குதலின், அச்சொற்பற்றியும், 'குழைத்த பத்து' எனப் பெயர் பெற்றது. இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இப்பகுதி முழுவதும், அறுசீரடி விருத்தத்தால் ஆயது. This is a significant decad wherein the Saint throws light in Verse 9, on the highest form of salvation, the state of embodied emancipation. 33.1 குழைத்தாற் பண்டைக் கொடுவினை நோய் காவா யுடையாய் கொடுவினையே னுழைத்தா லுறுதி யுண்டோதா னுமையாள் கணவா வெனையாள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தா லருளா தொழிவதே யம்மா னேயுன் னடியேற்கே குழைத்தால், பண்டைக் கொடுவினை, நோய் காவாய்; உடையாய்! கொடுவினையேன் உழைத்தால், உறுதி உண்டோ -தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்; பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய் ! முறையோ?' என்று அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே? kuzaiththaal paNdai koduvinainooy kaavaay udaiyaay koduvinaiyeen uzaiththaal uRuthi uNdoo thaan umaiyaaL kaNavaa enai aaLvaay pizaiththaal poRukka veeNdaavoo piRaiseer sadaiyaay muRaiyoo enRu azaiththaal aruLaathu ozivathee ammaanee un adiyeeRkee. பொ-ரை: என்னை ஆட்கொண்டவனே! மிகப்பழமையான கொடிய வினைகளால் நான் துன்புறுவேன் ஆயின், உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டா? ஆதலால் அத்துன்பங்கள் என்னை வந்து சாராது என்னைக் காப்பாயாக. உமையம்மையின் மணவாளனே! தீவினை உடையேனாகிய நான் உய்யும் பொருட்டு முயற்சி செய்தால் பயன் உண்டோ? இல்லை . ஆதலால், நீயே நின் திருவுள்ளம் இரங்கி, என்னை ஆண்டு அருள்வாயாக. இளமதி சூடிய சடையை உடையவனே! வினைப்பயன் வந்து என்னை மீளவும் பற்றுவதற்கு ஏதுவாக யான் பிழை செய்துவிட்டேன் என்றாலும் கருணை செய்யாது விடுவது உனக்குப் பொருத்தமான செய்கையாகுமா? இவ்வாறு பொருந்தாத செய்கையைச் செய்து விட்டோமே என்று அடிமையாகிய யான் முறையோ என்று அழைத்தால் அதனைக் கேளாது ஒழிவது தந்தையே (அம்மானே) உனக்குப் பொருந்துவதோ? அருள்புரிவாயாக ! Oh! Lord Civa ! My Owner! I do accept that I am an erring man and a contrite soul. Pray, save me from my past evil deeds which crush me hard causing anguish. Oh Lord! For, however much this crude sinner, me, may strive here, will there be lasting reprieve, Oh Lord? Consort of Goddess Uma! Pray take me under Thee! Should Thou not bear with me if I do wrong? When I call out to Thee, "Is this in order, Oh Lord of the crescent mounted matted locks" . Will it be proper for Thee, Sire, to remain without showering bliss on me, Thy vassal? கு-ரை: 'முறையோ' என்பதை 'ஒழிவதே' என்பதோடு சேர்த்துத் தகுதியோ என்று பொருள் உரைப்பின் 'சடையாய் என்றழைத்தால்' என முடித்தல் வேண்டும். ஓலமிட்டழைப்பதை முறையோ என்று அழைப்பதாகவும் கூறுவர். அம்மானே = தந்தையே! , அழகிய பெரியோனே! எனவும் கூறுவர். 2. அடியே னல்ல லெல்லாமுன் னகல வாண்டா யென்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாவெங் கோவே யாவா வென்றருளிச் செடிசே ருடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா வுடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தா லொன்றும் போதுமே அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்; கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே, 'ஆ ! ஆ !' என்று அருளிச் செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா ! உடையாய்! கூவிப் பணி கொள்ளாது ஒறுத்தால், ஒன்றும் போதுமே? adiyeen allal ellaam mun akala aaNdaay enRiruntheen kodi eer idaiyaaL kuuRaa em koovee aa aa enRaruLi sedi seer udalai sithaiyaathathu eththukku engkaL sivalookaa udaiyaay kuuvippaNi koLLaathu oRuththaal onRum poothumee பொ-ரை: கொடி போலும் இடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனே! எம் அரசே! அடியேனது துன்பங்கள் அனைத்தும் தாமே விலகும்படி ஆட்கொண்டாய் என்று எண்ணியிருந்தேன். ஐயோ என என்மீது இரக்கம் கொண்டு வினைகள் சேர்வதற்குக் காரணமான எனது இவ்வுடலை இன்னும் அழிக்காதது எதற்காக? எங்கள் சிவலோகா ! எம்மை உடையவா! அடிமைகளாகிய எம்மை அழைத்துப் பணி கொள்ளாமல் தண்டித்தால் போதுமா? அருளவும் வேண்டாமா? அருள்புரிவாயாக ! I was overconfident, since Thou ended all my strife before, and took me under Thee. However, Oh Lord, consort of the goddess of fair creeper-like waist, why hast Thou not destroyed my foul physical frame yet? Oh, our Lord of Civa Loka, my master, is it enough so to punish me here in this worldly existence and not call me over to Thee for service under Thyself? கு-ரை: முன் என்றது திருப்பெருந்துறையில் அடிகள் ஆட்கொள்ளப்பட்ட காலத்தை. செடி= பாவம்; தீவினை. ஒறுத்தால் = தண்டித்தால், உடம்பில் தம்மை வைத்திருப்பதே தண்டனை என்பது அடிகள் கருத்து. 3. ஒன்றும் போதா நாயேனை யுய்யக் கொண்ட நின்கருணை யின்றே யின்றிப் போய்த்தோதா னேழை பங்கா வெங்கோவே குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டா லென்றான் கெட்ட திரங்கிடா யெண்டோண் முக்க ணெம்மானே. ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே, இன்றிப் போய்த்தோ -தான்? ஏழை பங்கா! எம் கோவே! குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால் என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக்கண், எம்மானே ! onRum poothaa naayeenai uyyak koNda nin karuNai inRee inRi pooyththoothaan eezai pangkaa emkoovee kunRee anaiya kuRRangkaL kuNam aam enRee niikoNdaal en thaan keddathu irangkidaay eNthooL mukkaN emmaanee பொ-ரை: உமையொரு பாகனே! எம் இறைவா! எட்டுத் தோள்களும், மூன்று கண்களும் உடைய தந்தையே! ஒன்றுக்கும் பற்றாத நாயனைய என்னை அன்று குருந்த மரத்தடியில் உய்யக் கொண்ட உனது கருணை இப்போது இல்லாமற் போய் விட்டதோ? மலை போன்ற எனது குற்றங்களை நீ குணங்களென்றே ஏற்றுக் கொள்ளுவாயானால் என்னதான் கெட்டுப் போகும்? ஆகவே எனது குற்றங்களைப் பொறுத்து அருளுவாயாக! Has Thy grace that once blessed me has now ceased to be, Oh my Chief? the grace that redeemed me, this useless cur-like me. Oh friend of the needy, what wouldst Thou lose, if Thou take all my great faults as virtue, my Chief? Pray show mercy, Oh Lord of eight-fold shoulders and three eyes! கு-ரை: எண் குணங்களை, எண் தோள்களாகக் கூறுவதுண்டு. அன்பர் செய்த மலை போன்ற குற்றங்களைக் குணம் என்று இறைவனேற்றுக் கொள்வான் என்ற குறிப்புக் காண்க. போய்த்தோவென்பது போயிற்றே என்பதன் மருவு. ஏழை = பெண் 4. மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகவென் றனை நூக்கி யுழலப் பண்ணு வித்திட்டா யானா லடியே னறியாமை யறிந்து நீயே யருள் செய்து கோனே கூவிக் கொள்ளுநா ளென்றென் றுன்னைக் கூறுவதே மான் நேர் நோக்கி மணவாளா மன்னே ! நின் சீர் மறப்பித்து, இவ் ஊனே புக, என்-தனை நூக்கி, உழலப் பண்ணு வித்திட்டாய்; ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து, கோனே ! கூவிக் கொள்ளும் நாள் என்று? என்று , உன்னைக் கூறுவதே ? maanneer nookki maNavaaLaa mannee ninsiir maRappiththu iv uunee puka en thanai nuukki uzala paNNu viththiddaay aanaal adiyeen aRiyaamai aRinthu niiyee aruL seythu koonee kuuvi koLLunaaL enRu enRu unnai kuuRuvathee பொ-ரை: மானின் பார்வையொத்த நோக்குடைய உமையவள் கணவனே! எம் அரசே! உன் புகழை மறக்கச் செய்து, இவ்வுடம்பில் புகுந்துழலும் படி என்னைச் செலுத்தி விட்டாய் ! ஆனால் அடியேனது அறியாமையை யானறிந்து உய்யும் வண்ணம் நீயே அருள் வழங்கி என்னை அழைத்துக் கொள்ளும் நாள் என்றைக்கு? கோவே! உன் புகழை நான் கூறும் நாள் என்றைக்கு? அதை நான் எதிர்நோக்கி இருக்கின்றேன் என்பதை அறிந்து அருள்புரிவாயாக ! Oh Lord, consort of the fawn-eyed one! Thou got all my thoughts on Thee erased-all thoughts on Thy glory, and pushed me into a fleshy body, making me loaf about here in distress. Yet Oh Lord, aware of my ignorance, pray, call me (Thy vassal) over to Thee in Thy grace. When shalt Thou do this? When shall I speak of this grace-filled call? கு-ரை: நூக்கி = தள்ளி. கூறுவது= முறையிடுவது. கேட்பது எனவும் பொருள் கொள்ளலாம். கூறுவதே என் தொழில். நீ பயனளிக்கமாட்டாய் போலும் என்று இறைவனை நோக்கிக் கூறும் குறிப்புக் காண்க 5. கூறுநாவே முதலாகக் கூறுங் கரண மெல்லாநீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதுநீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை யுன்னை விரித்துரைக்கிற் றேறும் வகையென் சிவலோகா திகைத்தாற் றேற்ற வேண்டாவோ கூறும்நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ! தேறும் வகைநீ! திகைப்புநீ ! தீமை, நன்மை, முழுதும் நீ! வேறுஓர் பரிசு, இங்கு ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின் தேறும் வகை என்? சிவலோகா ! திகைத்தால், தேற்ற வேண்டாவோ? kuuRum naavee muthalaaka kuuRum karaNam ellaam nii theeRum vakai nii thikaippu nii thiimai, nanmai muzuthum nii veeRoor parisu ingku onRillai meymmai unnai viriththu uraikkin theeRum vakaien sivalookaa thikaiththaal theeRRa veeNdaavoo பொ-ரை: பேசும் நா முதலாகக் கூறப்படுகிற கரணங்கள் யாவும் நீயே! தெளிவதற்கான உபாயங்களும் நீயே! மறதியும் நீயே! எனக்கு உளதாம் நன்மை தீமைகள் அனைத்தும் நீயே ! அடியேனுக்கென்று தனித்ததோர் தன்மை சிறிதும் இல்லை. இது சத்தியம். யான் கடைத்தேற உன்னையே புகழ்கின்றேன். அது கொண்டு திகைத்து என்னைத் தேற்ற வேண்டாமா? தேற்றி அருள்புரிவாயாக ! Thou art verily all my sense organs like the tongue and others. Thou art the path towards realization. Also art Thou, the cause of exasperation, all that is good and all that is evil? There is nothing but Thee, anywhere here. If we thus have to describe the truth about Thee, what indeed is the way for realizing Thee? Lord of Civa Loka, shouldst Thou not enlighten me, if I stand confused and exasperated? கு-ரை: எல்லாவற்றையும் இயக்குபவனும், எல்லாம் நிகழுவதற்குக் காரணம் ஆனவனும் கடவுள் ஆதலானும் அவன் எல்லாவற்றோடும் அத்துவிதமாய்க் கலந்திருத்தலாலும். நா முதலிய யாவும் அவனே என்றார். தேறுதல் = தெளிதல், வீடுகிடைக்குமோ என்ற தமது திகைப்பை இறைவன் மாற்ற வேண்டும் என்பது குறிப்பு. 6. வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டு மயன்மாற் கரியோய்நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தா யானு மதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே வேண்டத் தக்கது அறிவோய்நீ ! வேண்ட முழுதும் தருவோய்நீ ! வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ ! வேண்டி, என்னைப் பணிகொண்டாய்; வேண்டி, நீ, யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன்-தன் விருப்பு அன்றே? veeNda thakkathu aRivooy nii veeNda muzuthum tharuvooy nii veeNdum ayan maaRku ariyooy nii veeNdi ennai paNi koNdaay veeNdi nii yaathu aruL seythaay yaanum athuvee veeNdinallaal veeNdum parisu onRu uNdu ennil athuvum un than viruppanRee பொ-ரை: யான் விரும்பத்தக்கனவற்றை யான் கேட்காமலே அறிபவன் நீயே! எனக்கு வேண்டுவன யாவும் முழுவதுமாக அருள்பவனும் நீயே! உன்னைக் காண வேண்டும் என்று தேடிய அயனுக்கும் மாலுக்கும் அரியவனும் நீயே! அடியேனை விரும்பிப் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய். நீ எதனை விரும்பி எனக்கு அருள் செய்கிறாயோ யானும் அதையே விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ளுவேன். இன்னும் யான் விரும்பக் கூடியது யாதாகிலும் இருக்குமாயினும், அதுவும் உனது விருப்பத்தின்படியே நிகழ்வதாகும். Thou alone knowest best what exactly we should like to possess. Thou alone grantest in full, all that we would like to have. Hard to reach, art Thou, even for Thirumaal and Brahma who stand yearning for Thee. And yet, Thou didst take me in (so readily)! Whatever Thou in Thy grace wouldst grant, I accept the same willingly and happily. Apart from this, if there be any other desirable gift from Thee, that too is as per Thy sweet will indeed! 'வேண்டத்தக்கது' is not that what we need for our physical comforts in our mundane life; it is His Grace what we need which He knows. 'வேண்ட முழுதும் .... விருப்பன்றே ' is, He will shower His grace upon us as and when we reach that stage; and He knows how much I need. He decides according to my ability to absorb. கு-ரை: இதனுள் இறையருள் வசப்பட்டு நிற்குந் தமது நிலையை அடிகளறிவுறுத்தினர். பணி= ஏவல். பரிசு= வகை; செயல், 'வேண்டத்தக்கது' என்றால் பரிபாடலில் கூறியது போல "யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல. நின்பால் அன்பும் அருளும் அறனும் மூன்றும் உருளிணர் கடம்பின் ஒளி தாரோயே” (கடுவன் இளவெயினனார்) என்பதை நினைவில் கொண்டு வேண்டத்தக்கது இறைவனது பேரருளே ஆகும் என்பதை உணர்க. "வேண்ட முழுதும் தருவோய் நீ" என்பது நமது பரிபக்குவம், தேவை ஆகயிவ்விரண்டின் அளவறிந்து, அவன் தரும் அருளாகிய தன்மை என்பதையும் உணர்க. 7. அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங் குன்றே யனையா யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ வின்றோ ரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்க ணெம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே. அன்றே, என்-தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும் குன்றே அனையாய் ! என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ? இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ ? எண்தோள், முக்கண், எம்மானே ! நன்றே செய்வாய்; பிழை செய்வாய்: நானோ இதற்கு நாயகமே? anRee en than aaviyum udalum udaimai ellaamum kunRee anaiyaay ennai aadkoNda poothee koNdilaiyoo inRu oor idaiyuuRu enakku uNdoo eNthooL mukkaN emmaanee nanRee seyvaay pizaiseyvaay naanoo ithaRku naayakamee பொ-ரை: எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய எங்கள் தலைவனே ! மலையை ஒத்தவனே! என்னை ஆட்கொண்ட அக்காலத்திலேயே என் உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் நீ ஏற்றுக் கொள்ள வில்லையோ? அவ்வாறிருக்க, இப்போது எனக்கு இடையூறு ஏதேனும் உண்டோ ? எனக்கு நீ நன்மைதான் செய் அல்லது தீமைதான் செய் - நான் இதற்கு உரிமையுடையவன் ஆவேன் அல்லேன். அது உன் விருப்பம் அல்லவா? Thou, like unto a mountain of grace, didst Thou not take over my life, my physical frame, and all my belongings on the very day Thou enslaved me? Hence do I now have any obstacle in my way? Oh Lord with three eyes and eight shoulders, whether Thou doest good or ill, Thou art really the doer, not I. கு-ரை: 'அன்றே' என்பதை 'ஆட்கொண்ட போதே' என்பதனோடு முடிக்க. குருவுக்கு உடல், பொருள், ஆவி மூன்றையுங் கொடுத்தல் மரபு. பாதுகாப்புக்குச் சிறந்த அரணான மலைபோல நீயிருக்கும் பொழுது எனக்கு எப்படி இடையூறு வரும் என்ற குறிப்பைக் காண்க. உடைமை = பொருள். தனக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. நன்மையுந் தீமையுங் கடவுளைப் பொறுத்தது என்று குறித்தார். 8. நாயிற் கடையா நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய் மாயப் பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கு மதுவன்றி யாயக் கடவே னானோதா னென்ன தோவிங் கதிகாரங் காயத் திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே நாயின் கடைஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய் ; மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி, ஆயக் கடவேன், நானோ-தான்? என்னதோ, இங்கு, அதிகாரம் ? காயத்து இடுவாய்; உன்னுடைய கழல்கீழ் வைப்பாய், கண் நுதலே ! naayin kadai aam naayeenai nayanthu niiyee aadkoNdaay maaya piRavi un vasamee vaiththiddu irukkum athu anRi aaya kadaveen naanoo thaan ennathoo ingku athikaaram kaayaththu iduvaay unnudaiya kazal kiiz vaippaay kaN nuthalee பொ-ரை: நெற்றிக் கண்ணையுடைய பெம்மானே ! நாயினும் கீழான நாய்த்தன்மை உடைய அடியேனை, நீயே விரும்பி ஆட்கொண்டனை. இந்த மாயாகாரியமான பிறவியை உன் வசம் ஒப்புவிக்காமல் நானோ இது பற்றி ஆராயும் தகுதி உடையவன்? அதைப்பற்றிய அதிகாரம் என்னுடையதோ? (அல்ல - உன்னுடையதே) மீண்டும் என்னைப் பிறக்கச் செய்வாயோ ? அல்லது நின் திருவடி நிழலில் வைப்பாயோ? நீ எதுவேண்டுமானாலும் செய்க. Thou, in all Thy kindness, didst take me in - me that am of state lower than that of a cur. This, my illusory birth in this world is in Thy hands. Apart from this understanding, who am I to engage in any further analysis? Do I have any right here? Thou mayest either send me over to another physical birth or keep me under Thy jewelled Feet. Oh Lord, with a third eye on forehead, it is Thy sweet will! கு-ரை: நாயின் கெடுதல் தன்மை இருப்பினும் அதன் நல்லியல்பு இல்லாமையினால் நாயிற்கடையாம் நாயேனை என்றார். மாயம் = தந்திரம். என்ன பிறவி வருமென்று எதிர்பார்க்க முடியாமையால் அவ்வாறு கூறினார். 9. கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர வெண்ணா திரவும் பகலுநா னவையே யெண்ணு மதுவல்லான் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறு மண்ணா வெண்ணக் கடவேனோ வடிமை சால வழகுடைத்தே கண்ஆர் நுதலோய் ! கழல்-இணைகள் கண்டேன், கண்கள் களிகூர; எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்-அது அல்லால் மண் மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும் அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே! kaNNaar nuthalooy kazal iNaikaL kaNdeen kaNkaL kaLikuuraa eNNaathu iravum pakalum naan avaiyee eNNum athu allaal maN meel yaakkai vidumaaRum vanthu un kazaRkee pukumaaRum aNNaa eNNa kadaveenoo adimaisaala azaku udaiththee பொ-ரை: விழி பொருந்திய நெற்றியை உடையவனே! தலைவனே! நின் திருவடிகள் இரண்டையும் கண் குளிரக் காணப் பெற்றேன். வேறு எதையும் எண்ணாமல் இரவிலும் பகலிலும் யான் அந்தத் திருவடிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு நினைக்காமல் உடம்பை மண்ணின் மீது கழித்து ஒழிக்கும் விதத்தையும், எப்போது உன் திருவடி சேரும் பேறு எனக்கு உண்டாகும் என்றும் எண்ணிக் கொண்டிருக்க நான் உரிமை உடையவன் அல்லன். அன்றி உரிமை உடையவன் என்று கருதினால் அது என் அடிமைத்தனத்திற்கு அழகில்லாத செயலாகும். Lord with a third eye on forehead! I had witnessed Thy twin jewelled Feet before, to my eyes' delight. Apart from thinking of Thy Feet day and night, I do not have any other thought - that is any such thought as my physical frame falling down here on this earth and then my entering Thy jewelled Feet only thereafter. If such be the ordainment salvation after the physical frame falls to the ground, for me, Thy servitor, to think of, is that all that I deserve? What fairness this, Oh Lord! கு-ரை: எண்ணாது எண்ணுவது = சுட்டியறியாமல் அறிவது. அண்ணா =மேலோனே. மிகவும் அழகுடைத்தே என்று இகழ்ச்சி பற்றிக் கூறினார் என்றலும் உண்டு. 10. அழகே புரிந்திட் டடிநாயே னரற்று கின்றே னுடையானே திகழா நின்ற திருமேனி காட்டி யென்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதமெனக்குப் புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே யென்னைக் குழைத்தாயே. அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே ! திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்; புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே, குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே ! azakee purinthiddu adinaayeen araRRu kinReen udaiyaanee thikazaa ninRa thirumeeni kaaddi ennai paNi koNdaay pukazee periya patham enakku puraaNa nii thanthu aruLaathee kuzakaa koola maRaiyoonee koonee ennai kuzaiththaayee. பொ-ரை: என்னை உடையவனே! மிகப் பழமையானவனே! இளமை வடிவனே! அழகிய வேதியனே! ஒளி பொருந்திய உனது திருமேனியைக் காட்டி என்னை உன் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய். யானும் உனது திருவடிக்கு ஒப்பான தொண்டுகளைப் புரிந்தும் இன்பம் பெறாது அதனை எதிர்நோக்கிப் புலம்புகின்றேன். உலகில் புகழத்தக்க பதவிகள் யாவற்றினும் சிறந்த புகழத்தக்க பதவி நின் திருவடிப் பேறாகும். அந்தத் திருவடிப் பேறாகிய பேரின்ப நிலையை எனக்கு நீ கொடுத்து அருள் செய்யாமல் என் மனம் குழையச் செய்து விட்டாயே! இது உனக்கு அழகாகுமோ! Having done deeds so fair all along, Oh my Chief, I, this lowly cur, do now cry out aloud for Thee! Thou didst take me before as vassal, revealing Thy effulgent sacred form (now) without granting me Thy exalted feet of great glory, Oh Lord Primordial, how come Thou causest me to melt in anguish, Oh Thou the eternal youth, Thou the fair ascetic, Thou the Chief of all ! கு- ரை: அழகு என்பதை, குழைத்தாயே என்பதனோடு முடித்து இது அழகோ என்று பொருள் உரைத்ததும் உண்டு. THIRUCHCHITRAMBALAM 34. உயிருண்ணிப் பத்து 34. UYIRUNNIP-PATHTHU ( சிவானந்த மேலிடுதல் ) The Decad of Soul Absorption திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Delighting in the ecstasy of Civahood கலி விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் ஆன்மாவைப் தூய்மைப்படுத்துவது சிவனது அருளும், அதனைத் தன்னுட்படுத்துக் கொள்வது சிவனது ஆனந்தமும் ஆதல் பற்றிச் சிவானந்தத்திற்கு 'உயிர் உண்ணி' என்னும் ஆக்கப் பெயர் கொடுத்து, அதனைப் பொருளாக உடைய பத்துப் பாடல்களை இப்பகுதியில் அருளிச் செய்கின்றார். எனவே, 'உயிருண்ணிப்பத்து' என்பது, "உயிருண்ணியின் மேற்பாடப்பட்ட பத்துப் பாடல்கள்" என்றும், உயிருண்ணியைப் பற்றிய பத்துப் பாடல்கள் என்றும் பொருள் தருவதாம். ' உயிருண்ணி' என்பது, மிக்கெழும் சிவானந்தம் என்பது பற்றியே, இதற்கு 'சிவானந்தம் மேலிடுதல்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுவதும் கலிவிருத்தத்தால் ஆயது. The Saint pleads for the "life-consuming ecstasy" of getting absorbed into Civahood- a continuation of the intense cringing mode. 34.1 பைந்நாப்பட வரவேரல்கு லுமைபாகம தாயென் மெய்ந்நா டொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந் துறை யுறைவா யெந்நாட்களித் தெந்நாளிறு மாக்கேனினி யானே பைந் நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் மெய்ந் நாள் தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா ! செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்! எந்நாள் களித்து, எந்நாள் இறுமாக்கேன், இனி, யானே ? painnaappada aravu eer alkul umai paakam athaay en meynnaaL thoRum piriyaa vinaikkeedaa vidaippaakaa sennaavalar parasum pukaz thirupperunthuRai uRaivaay ennaaL kaLiththu ennaaL iRumaakkeen iniyaanee பொ-ரை: செம்மையான புலவர்கள் துதிக்கின்ற புகழையுடைய திருப்பெருந்துறையின்கண் உறைபவனே! பசிய நாவையுடைய பாம்பின் படத்தையொத்த முன் பகுதி உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே! நாள் தோறும் எனது உடம்பை விட்டு நீங்காது நிற்கும் என் வினையைத் தொலைப்பவனே! இடப வாகனனே! சிவானந்தம் மேலிட்டதால் இனி நான் எந்நாளும் மகிழ்ந்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன்! Oh Lord you are concorporate with Uma on the left half of Your body whose forelap is like the hood of a snake; You destroyed the impact of all evil deeds (bad karma) that never separate from my body; Lord of the Bull Mount! Thou abiding at Thirup-Perun-Thurai, the famed shrine extolled by venerable bards! Hereafter, I shall ever be rejoicing in your bliss! Also I shall ever be elated. கு-ரை: அல்குல் = இடைக்கு முன்பாகம். வினைப் போகமே தேகமாதலின், மெய் பிரியாவினை என்றார். ஞானிகளுக்கு வரும் வினைப் பயனை இறைவனே ஏற்றுக் கொள்கின்றான் என்ற கருத்து இங்கே புலனாதல் காண்க. 2. நானாரடி யணைவானொரு நாய்க்குத்தவி சிட்டிங் கூனாருடல் புகுந்தானுயிர் கலந்தானுளம் பிரியான் றேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யுறைவான் வானோர்களு மறியாததோர் வளமீந்தன னெனக்கே. நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்; தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்; வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன், எனக்கே. naan aar adi aNaivaan orunaaykku thavisu iddu ingku uun aar udal pukunthaan uyir kalanthaan uLam piriyaan theenaar sadaimudiyaan mannu thirupperunthuRai uRaivaan vaanoorkaLum aRiyaatha thoor vaLam iinthanan enakkee. பொ-ரை: நின் திருவடியைச் சேருவதற்கு நான் யார்? (யாதொரு தகுதியும் இல்லாதவன்) வண்டுகள் மொய்க்கும் சடைமுடி உடையவன். திருப்பெருந்துறை உறைபவன் சிவபெருமான். அவன் நாய்க்குத் தவிசு இட்டாற்போல், இவ்வூனுடலிற் புகுந்தான்; உயிரில் அத்துவிதமாய்க் கலந்தான்; உள்ளத்தில் பிரியாது எழுந்தருளி இருந்தான்; அடியேனும், தேவரும் அறியாத ஒப்பற்ற இன்பத்தை நல்கி அருளினான். Lord with matted hair full of honey bees, Lord abiding in the eternal Thirup-Penun- Thurai, who granted me resources beyond the comprehension of even the 'heaven-dwelling' gods! He entered into my fleshy physical frame, mingled with my life and never would leave my mind. He granted me an exalted seat, so that I, a mere cur, may be in communion in His holy Feet. கு-ரை: அடிகட்கு உடலிலும் உள்ளத்திலும் உயிரிலும் கலந்தவனாய் இறைவன் விளங்கினமை, ஈண்டு அறியற்பாலது. தேன் = வண்டு. சடையிலுள்ள மலரிலே வண்டு மொய்க்கும் என்பது கருத்து. 3. எனைநானென்ப தறியேன்பக லிரவாவது மறியேன் மனவாசகங் கடந்தானெனை மத்தோன்மத்த னாக்கிச் சினமால்விடை யுடையான்மன்னு திருப்பெருந்துறை யுறையும் பனவனெனைச் செய்தபடி றறியேன்பரஞ் சுடரே. எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன், மன-வாசகம் கடந்தான், எனை, மத்த-உன்மத்தன் ஆக்கி; சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே! enai naan enpathu aRiyeen pakal iravu aavathum aRiyeen mana vaasakam kadanthaan enai maththa un maththan aakki sina maal vidai udaiyaan mannu thirupperunthuRai uRaiyum panavan enai seytha padiRu aRiyeen paranj sudaree பொ-ரை: திருமாலை வலிவுடைய காளையாக்கி அதனை ஊர்தியாக உடையவன் சிவபெருமான். அவன் நிலைபெற்ற திருப்பெருந்துறையில் உறைகின்ற வேதியன்; என் மனத்தையும், சொல்லையும் கடந்து நின்றவனும் அவனே. அவன் என்னைக் களிப்புடைய பெரும்பித்தன் ஆக்க என்ன மாயச்செயல் செய்தானோ? எனக்குத் தெரியாது. அது முதல் எனது தற்போதம் அழிந்தது. அது முதல் சிவானந்தம் மேலிட்டது. அதன் விளைவாக நான் வாதவூரன், அமாத்தியன், அமைச்சன், அரச பணியிலிருந்து துறந்தேன் ஆகியவற்றை உணர்ந்திலேன்! பகலாவதும், இரவாவதும் அறிந்திலேன் ! எல்லாப் பொருட்களையும் அவனுடைய பெரிய ஒளிக்காட்சியாகக் கண்டு களிக்கின்றேன். Lord Civan is beyond the reach of human thought and speech. He has the mighty Vishnu as His Bull. This compassionate ascetic abides in eternal Thirup-Perun-Thurai. With what trickery He made me a mighty mad man; I do not know. My ego vanquished. I was filled with an all consuming love of Him. I saw everything, then, as the effulgent flame of Him. கு-ரை: தன்னுணர்ச்சியின்றி இறை நினைவே உடைமையால், தாம் யார் என்பதை அடிகள் தெரியாதவர் ஆயினர். அவத்தை அனைத்தையும் கடந்து, சுத்த நிலையில் இருப்பதால், கரணங்கள் கொண்டு உணரும் காலத்தின் இயல்பை அறிந்திலர். மனமும் சொல்லும் கூறவே, காயத்தையும் உடன் கொள்க. மத்த +உன்மத்தன் = களிப்புடைய பித்தன். மிகுந்த பித்தன் என்றும் பொருள் கொள்ளலாம். ஞானோபதேசம் பெறுதற்குமுன், அறியப்படாத தன்மை தனக்கு வந்து எய்தினமையாற் படிறு என்றார். பனவன்= முனிவன், வேதியன். பரஞ்சுடர் என்பதைப் பனவன் என்பதோடு இயைத்துப் படர்க்கையாகக் கொள்ளுவதே பொருத்தம். 4. வினைக்கேடரு முளரோபிறர் சொல்லீர்விய னுலகி லெனைத்தான்புகுந் தாண்டானென தென்பின்புரை யுருக்கிப் பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையிலுறை பெம்மான் மனத்தான்கண்ணி னகத்தான்மறு மாற்றத்திடை யானே. வினைக் கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில் எனைத் தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கிப் பினைத் தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான், மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடை யானே! vinaikkeedarum uLaroo piRar solliir viyan ulakil enaiththaan pukunthu aaNdaan enathu enpin purai urukki pinaiththaan pukunthu ellee perunthuRai uRaipemmaan manaththaan kaNNin akaththaan maRumaaRRaththu idaiyaanee பொ-ரை: எங்கள் தலைவனாகிய சிவன் திருப்பெருந்துறையில் விளக்கமாக உறையும் பெருமான். அவன் தானாகவே வலிய வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளி, என் உடம்பில் புகுந்து என்னை ஆட்கொண்டான். என் மனத்தகத்தும், கண்ணிலும், அன்ன பிறவற்றிலும் புகுந்து என்னை மயங்கவைத்தான். என் தேகத்தில் உள்ள எலும்பில் உள்ள துளைகள் உட்பட எல்லாப் பாகங்களையும், உள்ளத்தையும் உருகச் செய்தான். என் சொல்லின் இடையிலும் உள்ளான். என் உயிருடனும் ஒன்றி ஆண்டான். வினைச்சூழலில் சிக்கிய என்னை இவ்வாறு என் வினைகள் எல்லாவற்றையும் நீக்கி ஆண்டு கொண்ட வினைக்கேடனாக அவன் விளங்குகின்றான். இவ்வுலகத்திலும் அவனைவிட வினையைக் கெடுப்பவர் வேறு எவரும் உள்ளார்களோ? மானிடரே சொல்லுங்கள். Lord Civan of the sacred Perunthurai, by Himself, willingly came to me. His love not only pierced the exterior of my body, but percolated through the very marrow of my bones and melted them. He abides in my mind; in my eyes; in my utterances and rule me. Oh Humanity! can anyone tell whether there is anyone else other than Lord Civan who can in this vast world destroy one's Karma similar to His deed. கு-ரை: தான் புகுந்து= தானே வலிந்து, புரை = உள்துளை. பினைத்தான் = பின்பக்கத்தானும், எல்லே - இரக்கச் சொல், அவன் பெருமைக்குக் குறைவான செய்கை, கருணையாற் செய்தருளினன் என்பது கருத்து. 'என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்துபுக்கென்னுளே நிற்கும் இன்னம்பரீசன்' என்ற அப்பர் திருவாக்கை ஒப்பிடுக. பெம்மான்= விரும்பத்தக்க பெரியோன் எனவும் கூறலாம். (பெம்= விருப்பம். மான்=மகான்) மறும் என்பது மற்றும் என்பதன் இடைக்குறை. 5. பற்றாங்கவை யற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவாமெனிற் கெடுவீரோடி வம்மின் றெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அதுபற்றி நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடிவம்மின் ; தெற்று ஆர் சடை முடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர் கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே ! paRRu aangku avai aRRiir paRRum paRRu aangku athu paRRi naRRu aam kathi adaivoom enin keduviir oodivammin theRRu aar sadaimudiyaan mannu thirupperunthuRai iRaisiir kaRRu aangku avan kazal peeNinarodum kuudumin kalanthee பொ-ரை: உலகப் பற்றுக்களாகிய மனைவி, மக்கள், சுற்றம் முதலியவர்களோடு உள்ள பற்றை நீக்கி விட்டுள்ளீர்கள். நல்ல கதி அடையவேண்டும் என்று நீங்களாகவே முயலுகின்றீர்கள் . அவ்வாறு நல்ல கதி அடைவதற்குப் பற்றற்றான் பற்றினை அடைவதற்குரிய உபாயத்தைக் கடைப்பிடிக்காமல் உலகப்பற்றைத் துறந்த அளவிலே நிற்பீர்களானால் இகம், பரம் என்னும் இரண்டனையும் வீணே இழந்து நிற்பீர்கள். ஆதலால், பின்னிக் கிடக்கின்ற சடைமுடியை உடையவனும், நிலை பெற்ற திருப்பெருந்துறையில் உறைபவனுமாகிய சிவபெருமானுடைய மெய்யடியார்கள் அவனுடைய புகழைக் கற்று, அவனுடைய திருவடிகளையே வழிபட்டு வருபவர்களோடு கலந்து கூடி, அவர்கள் வழிநின்று செயல்பட்டால் ஒழிய சிவகதி அடைய முடியாது என்பதை உணருங்கள். ஆதலால், அந்த மெய்யடியார்கள் கூட்டத்தோடு கலக்க ஓடி வாருங்கள் . Ye folks! you think that by your own efforts you can reach the state of salvation because you have detached yourself from the egoism of "I" and "Me" as well you have forgone your attachment to your wife, children and to your near and dear ones. If you think so, you stand disappointed and lost in ruins. The only way to your salvation is that you have to join the congregation of Lord Civan's servitors who have mastered the scripture and follow strictly the path shown therein. You come fast to join such band of servitors and follow the way of life and then only you can attain salvation. கு-ரை: ஆங்கு = அசை. உலகில் என்றும், விரைவில் என்றும் பொருள் கொள்ளலாம். பற்றும் பற்று என்பதில் பற்று= ஆதரவு. அது என்னும் சொல் ஆதரவின் சிறப்புணர்த்துவது . நற்று நன்று என்பதன் வலித்தல் விகாரம். தென் + தார் - தெற்றார். தென் தேன் என்பதன் குறுக்கம். கலந்தே என்பதை கூடுமின் என்பதோடு முடிக்க. 6. கடலின்றிரை யதுபோல்வரு கலக்கமல மறுத்தென் னுடலும்மென துயிரும்புகுந் தொழியாவண்ண நிறைந்தான் சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை யுறையும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்றான்செய்த படிறே . கடலின் திரை - அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என் உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவண்ணம், நிறைந்தான் சுடரும் சுடர்மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும் படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே ! kadalin thirai athu pool varukalakkam malam aRuththu en udalum enathu uyirum pukunthu oziyaa vaNNam niRainthaan sudarum sudar mathisuudiya thirupperunthuRai uRaiyum padarum sadaimakudaththu engkaL paran than seytha padiRee பொ-ரை: எம் பெருமானாகிய சிவபெருமான் ஒளி வீசும் கதிர்களையுடைய பிறைச் சந்திரனைத் தன் தலையில் சூடியவன். அவன் திருப்பெருந்துறையில் தங்கி விரிந்த சடையை மகுடமாகக் கொண்ட மேலோன். இப்பெருமான் செய்த மாயச் செயல் என்னவெனில், கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற, துன்பம் செய்கின்ற எனது பாசங்களைத் தொலைத்து அருளியது தான். என் உடலிலும் உயிரிலும் அவனே கலந்து நீக்கமற நிறைந்து விளங்கினான். Lord Civan entered into my body and soul and filled it full, leaving nothing unpervaded. This indeed is His magical feat who dwells in Perunthurai, with crown of spreading braided locks wreathed with the moon's bright beams. கு-ரை: சுடர் = கதிர், பரன் = மேலோன். படிறு= சூழ்ச்சி; வஞ்சகம். 7. வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளுந் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை யிறைதாள் பூண்டேன்புறம் போகேனினிப் புறம்போகலொட் டேனே . வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும் விண்ணும் ; வேண்டேன் பிறப்பு, இறப்புச் சிவம் வேண்டார்-தமை நாளும் தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறைதாள் பூண்டேன்; புறம் போகேன்; இனிப், புறம் போகல் ஒட்டேனே! veeNdeen pukaz veeNdeen selvam veeNdeen maNNum viNNum veeNdeen piRappu iRappu sivam veeNdaarthamai naaLum thiiNdeen senRu seerntheen mannu thirupperunthuRai iRaithaaL puuNdeen puRampookeen ini puRam pookal oddeenee பொ-ரை: நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பரம்பொருளைச் சென்றடைந்தேன். அவன் திருவடிகளை அணியாகப் பூண்டேன். இனிமேல் அதனை விட்டுப் புறம்போகேன்; அவன் என்னைவிட்டுப் புறம்போகவும் விடமாட்டேன். ஆகையால், நான் மண்ணுலக ஆட்சியையும், அதனால் விளையும் கீர்த்தியையும் பொருளையும் விரும்பமாட்டேன். விண்ணுலக வாழ்க்கையையும் அதனால் உண்டாகும் புகழையும் வேண்டேன். பிறப்பு, இறப்பு இவைகளையும் வேண்டேன். தூய மங்கலப் பொருளான எங்கள் தலைவனாகிய சிவபெருமானைப் போற்றித் துதிக்காத புறச்சமயத்தாரோடு யாதொரு தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். I pray not for renown or wealth, nor for the gift of the earth nor the sky. I desire not the cycles of births and deaths. Neither would I ever go near the congregation of those that seek not "Civam'. I reach the Feet of the Lord of the eternal Thirup-Perun-Thurai. I hold His Feet as ornament and will never go away from there. I will not also let go His Feet hereafter away from me. கு-ரை: உறுதியால் விரும்பாமை பற்றி, வேண்டேன் எனத் தனித்தனியே முற்படக் கூறினர். தீண்டேன் என்பது யாதொரு தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்ற கருத்தைக் குறிப்பது. ஒட்டேன்=இசையேன். 8. கோற்றேனெனக் கென்கோகுரை கடல்வாயமு தென்கோ வாற்றேனெங்க ளரனேயரு மருந்தேயென தரசே சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந் துறையுறையு நீற்றார்தரு திருமேனிநின் மலனேயுனை யானே. கோல்-தேன் எனக்கு என்கோ-குரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன் எங்கள் அரனே! அரு மருந்தே ! எனது அரசே ! சேற்று ஆர் வயல் புடை சூழ் தரு திருப்பெருந்துறை உறையும் நீற்று ஆர் தரு திருமேனி நின் மலனே! உனை யானே! kooltheen enakku enkoo kurai kadalvaay amuthu enkoo aaRReen engkaL aranee arumarunthee enathu arasee seeRRaar vayal pudaisuuz tharu thirupperunthuRai uRaiyum niiRRaar tharu thirumeeni ninmalanee unaiyaanee பொ-ரை: எங்கள் சிவனே! கிடைத்தற்கரிய அமுதே! என் மன்னவனே! சேறு மிகுந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் திருநீறு பொலியும் திருமேனியுடன் எழுந்தருளிய மாசிலாதவனே! உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத் தேன் என்பேனோ? ஒலிக்கின்ற கடலில் இருந்து எழுந்த அமுதம் என்பேனோ? Oh flawless Lord, with an ash smeared holy frame, abiding at Thirup-Perun-Thurai surrounded by slushy (rice) fields, what shall I call Thee! Shall I say Thou art the choicest honey for me! Or the nectar rising from the gurgling ocean? When such is Thy state, I am overwhelmed by ecstasy, Oh Rare Medication, Oh my Monarch, our Lord Haran! I am at a loss of words to express my feelings. கு-ரை: கோற்றேன் = கோல் + தேன். கோல் = கொம்பு; மரக்கிளை. அதிலமைந்த தேன், மிகச் சுவையும் தூய்மையும் உள்ளது. சேற்று - சேறு என்பதன் விரித்தல் விகாரம். நீற்றும், அனையதே. ஆர்தரு= ஆரும்=பொருந்தும்; நிறையும். 9. எச்சம்மறி வேனானெனக் கிருக்கின்றதை யறியே னச்சோவெங்க ளரனேயரு மருந்தேயென தமுதே செச்சைமலர் புரைமேனியன் றிருப்பெருந்துறை யுறைவா னிச்சம்மென நெஞ்சின்மன்னி யானாகிநின் றானே. எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்; அச்சோ ! எங்கள் அரனே! அரு மருந்தே ! எனது அமுதே! செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான்; நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின் றானே! essam aRiveen naan enakku irukkinRathai aRiyeen assoo engkaL aranee aru marunthee enathu amuthee sessai malar purai meeniyan thirupperunthuRai uRaivaan nissam ena nenjsil manni yaan aaki ninRaanee பொ-ரை: எங்கள் சிவபெருமானே ! அருமையான மருந்தானவனே ! என்னுடைய அமுதமானவனே ! வெட்சி மலர் போலும் சிவந்த திருமேனியுடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனே! உறுதியாக என் உள்ளத்தில் நிலைபெற்று அத்துவிதமாய் என்னோடு கலந்து, யானாகி நின்றவனே! எங்கள் பாசத்தை நீக்குபவனே! எனக்குரிய வினை மிச்சத்தை யான் அறிவேன். இனி எனக்கு வரக்கூடிய வினை மூட்டைகளை அறிய மாட்டேன். இது என்ன வியப்பு ! I know only what I need; but how much I need, I yet do not know to receive from Thee. But, I do not realize what I already have with me now. Wonder great, Oh Lord Haran! Oh Rare Medication! Oh my nectar, abiding at Thirup-Perun-Thurai with frame of reddish hue, like unto 'Vetchi' flowers Thou that standeth in my heart ever so firmly. கு-ரை: எச்சம் = குறை; பாக்கி. செச்சை - வெட்சி; சிவந்த மலர். நிச்சம் = நித்தம்; நிச்சயம் என்பதன் மரூஉ என்பார். நின்றானே என்பதை, விளியாகக் கொள்க. அச்சோ = வியப்பு; அழகு என்பவற்றை உணர்த்தும் சொல். 10. வான்பாவிய வுலகத்தவர் தவமேசெய வவமே யூன்பாவிய வுடலைச்சுமந் தடவிமர மானேன் றேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை யுறைவாய் நான்பாவிய னானாலுனை நல்காயென லாமே. வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே , ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன் ; தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் ! நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே! vaan paaviya ulakaththavar thavamee seya avamee uun paaviya udalai sumanthu adavi maram aaneen theen paay malarkkonRai mannu thirupperunthuRai uRaivaay naan paaviyan aanaal unai nalkaay enal aamee பொ-ரை: தேன் ஒழுகுகின்ற மலர்களை உடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும் திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! ஞான வெளியில் பரவிய சிவஞானியர் தவம் செய்வர். யானோ ஊன் நிறைந்த இந்த உடம்பைச் சுமந்து வீணான காட்டு மரம்போல் ஆனேன். உனது இன்பம் இவ்வாறு இருந்தது என்று சொல்ல வல்லேன் அல்லன். நான் இவ்வாறு பாவியாகிப் போய்விட்ட பின்பு உன்னை அருளாதவன் என்று கூறுதல் பொருந்துமோ? Whilst the gods of heaven are all engaged in penance, I stand here in vain, like a wild forest tree, carrying this fleshy body. Hence, Oh Lord of the honey-filled cassia (Konrai) flowers, abiding at the eternal Thirup-Perun-Thurai! If I thus have to stand here like a man of sin, performing no penance, can I then say Thou art not a benevolent one? கு-ரை: வான்பாவிய உலகத்தவர் = விண்ணவர். அடிகள் தங்குறைக்காகக் தம்மை இகழ்ந்து இறைவனைப் போற்றுங் குறிப்பு, இச்செய்யுளிலும் முந்திய செய்யுளிலும் காண்க. THIRUCHCHITRAMBALAM 35. அச்சப்பத்து 35. ACHCHAP-PATHTHU (ஆனந்தமுறுதல்) The Decad of Fear தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. What I fear and What I fear not ஆசிரிய விருத்தம் Composed whilst in Thillai திருச்சிற்றம்பலம் வாதவூரடிகள் தில்லையில் எழுந்தருளியிருக்கின்ற காலத்துச் சிவானந்தானுபவம் சிறந்து விளங்க, அதிலே தோய்ந்து ஒன்றி இருக்கின்ற அனுபவ நிலையில் அதற்குப் புறம்பானவர்களைக் காண நேர்ந்தபோது, எவற்றிற்கும் அஞ்சாத எமக்கு இவர்களைக் காண்பது மட்டும் அச்சமாகின்றது என்று இதனை அருளிச் செய்தார்கள். அச்சப்பத்து என்பது அஞ்சுதற்குரிய காரணங்களைப் பொருளாகக் கொண்டு அவற்றினின்று தப்பி உய்ய அருளை விரும்பும் நோக்குடன் விண்ணப்பிக்கும் முறையில் அமைந்த பத்துப் பாடல்களை உடையது. இதனாலே, பெயர்க்காரணமும் இனிது விளங்கும். அமுதம் உண்டார் அவ்வினிமையையே என்றும் விரும்புவதல்லது வேம்பு தின்ன விரும்பார். அதுபோலச் சிவானந்த மேலீட்டில் திளைக்கும் அடிகளார் அதிலேயே நிலைத்து நிற்க விரும்பி, அதற்கு எதிரான புறச்சூழலைக் கண்டு அஞ்சுவதாக விண்ணப்பிக்கின்றார். In this decad, Saint Maanikkavaachakar warns against the ill effects of associating with undesirable folks, in a poignant manner. He feels outraged at sight of indifferent folks in society who do not pay obeisance to Lord Civa. A sense of abhorrence and revulsion descends on him when he chances to come across such men as are outside the holy congregation of Lord Civa. This state of mind, he refers to as one of fear welling up in his bosom, as he cannot tolerate the mood of callousness and ingratitude displayed by ignorant men of the world. Such kind of fear, says the saint, is even more devastating than the fear and confusion caused by the many different mishaps and ailments suffered by worldly folks. By listing out these mishaps, which he does not fear despite their exacting pain which he can somehow bear with fortitude and wisdom, the Saint highlights the dire consequences of associating with the followers of alien faiths. While he does not have any fear in facing up to the challenges of worldly trials and tribulations of enormous strength, he has great fear even on seeing folks that stand outside the Saivite School of Theology. Evidently due to the fear of getting polluted by crude thoughts and evil preachings - vide 'முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு' in the decad of 'Accho' - the concluding chapter - 51. Also confer Thiruk- Kural stanza (356) - 'மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும், இனந்தூயார்க்கு இல்லை நன்றாகா வினை' . For those that are pure at heart the progeny left behind will be of excellent character. For those that are in pure company there is nothing that will not turn out to be of great benefit. Also confer Thiruk-Kural - சிற்றினஞ்சேராமை, தீ நட்பு and கூடாநட்பு. 35. 1 புற்றில்வா ளரவு மஞ்சேன் பொய்யர்தம் மெய்யு மஞ்சேன் கற்றைவார் சடையெம் மண்ணல் கண்ணுதல் பாத நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை யுண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் ; கற்றை வார் சடை எம் அண்ணல், கண்-நுதல் பாதம் நண்ணி , மற்றும் ஓர் தெய்வம் - தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற் கற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே! puRRilvaaL aravum anjseen poyyar tham meyyum anjseen kaRRai vaar sadai em aNNal aNNal kaNNuthal paatham naNNi maRRum oor theyvam thannai uNdu ena ninainthu empemmaR kaRRilaathavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: புற்றில் வாழும் ஒளி பொருந்திய பாம்புக்கும் நான் அஞ்சமாட்டேன் . பொய்யர்கள் கூறும் மெய் போன்ற கூற்றுகளுக்கும் அஞ்சமாட்டேன். ஆனால் நீள் சடையுடைய எம் அண்ணலாகிய சிவபெருமானது திருவடிகளை அடைந்தும், வேறொரு தெய்வம் உண்டென்று எண்ணி, எம் தலைவனாகிய சிவன் புகழைப் பேசாதவர்களைக் கண்டால் அம்ம ! நாம் அஞ்சுகின்றோம். I fear not the glistening cobras that take shelter in ant hills. Nor do I fear the 'truth-like' utterances of pretenders! But, of my heavens,I do have fear indeed, when I see unlearned folks who having reached holy Feet of our Lord Civan - the one with braids of long matted hair and three eyes - yet think there are other gods. கு-ரை: வாள் என்பதற்கு, வாள் போன்ற என்றலுமுண்டு . புற்றிலுறைந்து ஒளிமிக்க நாகரத்தினம் அமையப்பெற்ற பாம்புகள் கொடிய விடமுடையனவாதலால் அதனை எடுத்துரைத்தார். பெம்மாற்- பெம்மானை. ஈண்டு 'பெம்மானுடைய தன்மைகளை' என்று பொருள்படும். 2. வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினு மஞ்சேன் இருவரான் மாறு காணா வெம்பிரான் றம்பிரானாந் திருவுரு வன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே . வெருவரேன், வேட்கை வந்தால், வினைக் கடல் கொளினும், அஞ்சேன்; இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம் திருஉரு அன்றி, மற்று ஓர் தேவர், எத்தேவர்? என்ன அருவரா தவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! veruvareen veedkai vanthaal vinaikkadal koLinum anjseen iruvaraal maaRu kaaNaa empiraan thampiraan aam thiruvuru anRi maRRu oor theevar eththeevar enna aruvaraa thavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை, ஐம்புல ஆசைகள், இம்மாதிரியான அடங்காத ஆசைகள் பலவும் என்னுள்ளத்தில் எழுந்தாலும், அதற்கு நான் அஞ்ச மாட்டேன். கடல் அனைய பிராரத்த வினை என்னை வந்து தாக்கினாலும் அதற்கும் நான் அஞ்சமாட்டேன். தம்முள் மாறுபட்ட அயனும் திருமாலும் காண முடியாத எம் தலைவனாகிய சிவன் தனக்குத் தானே தலைவன் ஆவான். அப்பெருமானின் திருவுருவை அன்றி வேறொரு தேவரைக் காண நேரின் அவர் எத்தேவர் என வெறுப்புக் கொள்ளாதவர்களைக் கண்டால் அதுவே நாம் அஞ்சுகின்ற நெறியாம். I do not go into trepidation even if greed overwhelms and strikes me. I fear not the onslaught of the sea of my past evil coming and hurting me as Prarartha Karma whose effect has begun to operate in this life. But, Oh my heavens, I am filled with fear indeed, when I see folks that do not display their revulsion towards alien faiths - revulsion by exclaiming which other God is the true god - other than Lord Civa, my Chief, whose sacred form is beyond the reach of Thirumaal and Brahma. கு-ரை: 'வேட்கை வந்தால் வெருவரேன்' என மாற்றுக. மாறு= மாறுபாடு. மாறுபாடுபற்றிக் காணாவெனக் கொள்க. தம்பிரானார் தம் வயமுடையவர், எல்லாப் பொருளும் அவன் திருவுரு ஆவதன்றி, அவனின் வேறாய ஒரு தனித் தெய்வமில்லை என்பது. அம்ம= அச்சத்தை உணர்த்தும் இடைச் சொல். 3. வன்புலால் வேலு மஞ்சேன் வளைக்கையார் கடைக் கணஞ்சே னென்பெலா முருக நோக்கி யம்பலத் தாடு கின்ற வென்பொலா மணியை யேத்தி யினிதருள் பருக மாட்டா வன்பிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் ; என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம ! நாம் அஞ்சு மாறே! vanpulaal veelum anjseen vaLaikkaiyaar kadaikkaN anjseen enpu elaam uruka nookki ampalaththu aadukinRa en polaa maNiyai eeththi inithu aruL parukamaaddaa anpu ilaathavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: எதிரிமீது பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் குத்தி மாமிசத்தைக் கொள்ளுவது கூர்மையான வேலின் இயல்பு. அதனால் வேலின் நுனியில் புலால் நாற்றம் வீசிக் கொண்டிருக்கும். அப்பேர்ப்பட்ட வலிய வேலைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். கைகளில் வளையல் அணியப்பட்ட விலைமாதர்கள் வேல் போன்ற அழகிய கண்களை உடையவர்கள். அவர்களுடைய கடைக்கண் பார்வைக்கும் நான் அஞ்சேன். ஆனால் என் தலைவனாகிய சிவபெருமான் அம்பலத்தே ஆடுகின்றான். பொள்ளாத மாணிக்க மணியைப் போன்றவன் . அவனைக் கண்ணாரக் கண்டால் என்பெல்லாம் உருகும். அவனைப் போற்றி மகிழ்ந்து அவனுடைய இனிய அருளைப் பெற வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்யமாட்டாதவர்களைக் கண்டால் அம்ம நான் அஞ்சுகின்றேன் . I fear not the awesome lance, smeared over with flesh! Nor the sly glances of bangled lasses ! But, Oh my heavens, I am filled with fear indeed at sight of unfriendly folks who cannot take in His grace so sweet, and cannot extol the glories of my gem Lord Civan that dances at the public hall in Thillai, melting all my bones. 4. கிளியனார் கிளவி யஞ்சே னவர்கிறி முறுவ லஞ்சேன் வெளிய நீறாடு மேனி வேதியன் பாத நண்ணித் துளியுலாங் கண்ண ராகித் தொழுதழு துள்ள நெக்கிங் களியிலாத வரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்; வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளி உலாம் கண்ணர் ஆகித் தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! kiLiyanaar kiLavi anjseen avar kiRi muRuval anjseen veLiya niiRu aadum meeni veethiyan paatham naNNi thuLi ulaam kaNNar aaki thozuthu azuthu uLLam nekku ingku aLi ilaathavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: கிளியை ஒத்த சொல்லுடைய விலை மகளிர் இனிமையாகப் பேசுகின்ற மொழிகளுக்கும் அஞ்சமாட்டேன். மயக்கத்தை விளைவிக்கும் அவர்களது சிரிப்பிற்கும் அஞ்சமாட்டேன். ஆனால், வெள்ளிய திருநீறணிந்த திருமேனியை உடைய சிவபெருமானது திருவடிகளையடைந்து, ஆனந்தக் கண்ணீர் ததும்பும் கண்களை உடையவராகிக், கைகளால் தொழுது, அழுது, மனம் கசிந்து, துதித்து மனம் கனியாதவரைக் கண்டால் அம்ம ! நாம் அஞ்சுகின்றோம். I fear not the sweet parrot-like talk of dames, nor their deceitful smiles! But Oh my heavens, I am filled with fear indeed, when I see those that are devoid of compassion, that do not pay obeisance to Lord Civan with melting hearts and tearful eyes. I fear these folks that do not go unto the Vedic Ascetic (our Lord) sporting a white ash-smeared frame. கு-ரை: கிறி= பொய்; வஞ்சகம். இங்கு என்பதைக் கண்டாலென்பதோடு முடிக்க. அளி = அன்பு; கனிவு. உலவும் என்பது உலாமென்றாயிற்று. 5. பிணியெலாம் வரினு மஞ்சேன் பிறப்பினோ டிறப்பு மஞ்சேன் துணிநிலா வணியி னான்றன் றொழும்பரோ டழுந்தி யம்மா றிணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ றணிகிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்; துணி நிலா அணியினான் - தன் தொழும்பரோடு அழுந்தி, அம்மால், திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி, வெண் நீறு அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! piNi elaam varinum anjseen piRappinoodu iRappum anjseen thuNi nilaa aNiyinaan than thozumparoodu azunthi ammaal thiNi nilam piLanthum kaaNaa seevadi paravi veeNNiiRu aNikilaa thavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: நோய்கள் எல்லாம் ஒருங்கு திரண்டு வந்தாலும் யான் அஞ்சமாட்டேன். பிறப்பு இறப்பு இவைகட்கும் அஞ்சமாட்டேன். உறுதியான பூமியைப் பன்றி வடிவம் எடுத்து திருமாலானவர் தேடியும் காண முடியாத திருவடி எங்கள் தலைவனாகிய சிவபெருமானின் திருவடி . அப்பேர்ப்பட்ட அழகிய சிவபெருமான் பிறைச்சந்திரனைத் தனது சடாமுடியில் கொண்டுள்ளான் . அவன் உடம்பெல்லாம் தூய்மையான வெண்ணீறு (விபூதி) அணிந்துள்ளான். அப்பெருமானின் அடியார்கள் கூட்டத்தில் கலந்து அவன் சேவடியைத் தொழுது போற்றாதவர்களைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகின்றோம். I fear not the onslaught of diseases, nor the cycles of births and deaths! But Oh my heavens, I am filled with fear indeed, when I see those who do not wear white ash, paying obeisance to the sacred Feet of Lord Civan who is beyond the reach of (even) Thirumaal, (despite valiant attempts), digging deep into the hard earth. I fear such folks who do not join the holy congregation of the Lord of the crescent Moon. கு-ரை: துணிநிலா = துண்டு மதி . மூன்றாம் பிறைச் சந்திரன் தோன்றுங் காலத்தே சந்திரனின் பிற பகுதிகள் தோன்றாமையால் இளம்பிறையைத் 'துணி நிலா' என்றார், அம்மால் என்பதற்கு அவ்வளவு பெருமையை உடைய திருமால் எனவும் கூறுவர். திணி = திண்மையுடையது. 6. வாளுலா மெரியு மஞ்சேன் வரைபுரண் டிடினு மஞ்சேன் றோளுலா நீற்ற னேற்றன் சொற்பதங் கடந்த வப்பன் றாளதா மரைக ளேத்தித் தடமலர் புனைந்து நையு மாளலாத வரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்; தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன், தாள தாமரைகள் ஏத்தித் தட மலர் புனைந்து, நையும் ஆள் அலாத வரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! vaaL ulaam eriyum anjseen varai puraNdidinum anjseen thooL ulaam niiRRan eeRRan soRpatham kadantha appan thaaLa thaamaraikaL eeththi thadamalar punainthu naiyum aaL alaa thavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: ஒளி வீசுகின்ற நெருப்புக்கும் அஞ்சமாட்டேன். மலையே புரண்டு வந்தாலும் அதற்கும் நான் அஞ்சமாட்டேன். ஆனால் திருநீறு அணிந்த தோள்களை உடையவனும் காளை வாகனமுடையவனும் சொல்லின் எல்லையைக் கடந்த தூயவனும் எம் தந்தையும் ஆகிய சிவபெருமானின் திருவடித் தாமரைகளைப் புகழ்ந்து வாழ்த்தி, அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு அருச்சனை செய்து, மனம் நைந்து உருகி அப்பெருமானுக்கு அடிமை ஆகாதவரைக் காணும்போது மட்டுமே நான் அஞ்சுவேன். I fear not the glistening flames of fire, nor the roll-down of mountain ranges! But, Oh my heavens, I am filled with fear indeed, when, I chance to come across recalcitrant folks who adore not the 'lotus-like' Feet of Him that is beyond description - folks who do not, in servitude intensely long for the ash-smeared frame of the bull-mounted Lord Civa! கு-ரை: ஏற்றன்= காளையை உடையவன், பதம் = தரம். சொற்பதம் என்பதற்குப் பேசப்படுகின்ற பதவி எனவும் கூறுப. தாள தாமரை = தாளவென்பது குறிப்புப் பெயரெச்சம். தட= பெருமையை உடைய . ஆளலாதவர் = ஆட்படாதவர். ஒளி வீசாத நெருப்பினும் ஒளியோடு கூடிய நெருப்பு விரைவாகப் பொருள்களை எரித்து விடுமாகலின் அதனை விதந்தோதினர். 7. தகைவிலாப் பழியு மஞ்சேன் சாதலை முன்ன மஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தவம் பலத்து ளாடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாத மேத்தி யகநெகா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்; புகை முகந்து எரி கை வீசிப் பொலிந்த அம்பலத்துள் ஆடும், முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி, அகம் நெகாத வரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே! thakaivu ilaa paziyum anjseen saathalai munnam anjseen pukaimukanthu erikai viisi polintha ampalaththuL aadum mukai nakai konRai maalai munnavan paatham eeththi akam nekaa thavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: நீக்க முடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன் . அகாலமாய் இறப்பதற்கும் பயப்படமாட்டேன். புகை கொண்ட அனலைத் திருக்கையிலே ஏந்தி, பொலிவுமிக்க சபையில் சிவபெருமான் கூத்தியற்றுகின்றனன். மொட்டுகள் மலர்ந்து உள்ள கொன்றை மலர் மாலையணிந்த அம்முதல்வனது திருவடிகளைத் துதித்து மனம் கசியாதவரைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம். I fear not the words of slander heaped on me unjustly! I had long since discarded the fear of death! He that, wafting aloft His mighty palm, holding the smoke laden fire, danceth in the resplendent public hall, He the primordial Lord with garlands made up of flower bud and fully blossomed flowers of Konrai (Cassia) on Him! Unto His Feet, whosoever doth not pay obeisance and doth not melt at heart in prayer - if I see such folks, Oh my heavens, I am filled with fear indeed! கு-ரை: தகைவு = தடுத்தல்; நீக்குதல். 'புகை முகந்த எரி' என்பது 'முகந்தெரி' என்றாயிற்று. முகை = மொட்டு. நகை = விரிதல்; விளங்குதல். முன்னவன்= பழமையோன் எனவும் கூறுவர். 8. தறிசெறி களிறு மஞ்சேன் றழல்விழி யுழுவையஞ்சேன் வெறிகமழ் சடைய னப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்க ளேத்திச் சிறந்தினி திருக்க மாட்டா வறிவிலாத வரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்; வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச் செறி தரு கழல்கள் ஏத்திச் சிறந்து, இனிது இருக்க மாட்டா அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! thaRi seRi kaLiRum anjseen thazalvizi uzuvai anjseen veRi kamaz sadaiyan appan viNNavar naNNa maaddaa seRi tharu kazalkaL eeththi siRanthinithu irukka maaddaa aRivu ilaathavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: கட்டுத்தறியில் கட்டுப்பட்டு இருக்கும் மதம் பிடித்த ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன். நெருப்பைப் போலும் விழிகளை உடைய புலிக்கும் அஞ்ச மாட்டேன். இயற்கையாகவே மணம் வீசுகின்ற சடையை உடையவன் எங்கள் தந்தையாகிய சிவபெருமான். அவன் தேவர்களாலும் காண முடியாத திருமேனியை உடையவன். அவன் திருவடிகளைத் துதித்து அவனுடைய திருவருளைச் சார்ந்து இன்பத்தோடு சிறப்பாக வாழத் தெரியாத அறிவிலிகளைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம். I fear not the pachyderm forcibly tearing away from its moorings! Nor do I shudder at the sight of the fiery-eyed tiger! Our Chief, of fragrant matted hair, that is beyond the reach of heaven dwellers! If there be witless folks who adore not His richly ornamented Feet and therefore cannot stay happily in blissful peace, if I see such men, Oh my heavens, I am filled with fear indeed! கு-ரை: தறி = யானைகட்டிய கம்பம். செறி = செறுதல், தாக்குதல். மதமிகுதி, வளமிகுதி முதலியவற்றால் கட்டுத் தறியை யானை தாக்கும். கழல்கள் திருவடிக்கு ஆகுபெயர். 9. மஞ்சுலா முருமு மஞ்சேன் மன்னரோ டுறவு மஞ்சே னஞ்சமே யமுத மாக்கு நம்பிரா னெம்பி ரானாய்ச் செஞ்செவே யாண்டு கொண்டான் றிருமுண்டந் தீட்ட மாட்டா தஞ்சுவா ரவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்ன ரோடு உறவும் அஞ்சேன்; நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார்-அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே ! manjsu ulaam urumum anjseen mannaroodu uRavum anjseen nanjsamee amutham aakkum nampiraan em piraanaay senjsevee aaNdu koNdaan thirumuNdam thiidda maaddaathu anjsuvaar avarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: மேகத்தில் உருவாகி உறுமுகின்ற இடியைக் கண்டு அஞ்சமாட்டேன் . எந்த நேரத்திலும் அன்பாகப் பழகிய அரசன் தக்க சமயத்தில் கைவிடவும் செய்வான். அவ்வாறு இருந்தும் அந்த மாதிரியான அரசர்களோடு நெருங்கிப் பழகவும் அஞ்சமாட்டேன். பாற்கடலில் எழுந்த நஞ்சை அமுதமாக உட்கொண்டருளியவன் நம் தலைவனாகி என்னைச் செம்மையாக ஆட்கொண்டான்; அவன் அருள் விளக்கமாகிய திருவெண்ணீற்றை நெற்றியில் அணிவதற்குப் பயப்படுபவர்களைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுகிறோம். I fear not the cloud-ridden thunder nor the company of kings! But then, Oh my heavens I do have fear indeed, when I see folks that shy away from wearing the sacred white ash of the Lord who well did take me under Him, who verily did turn venom into elixir! He, our Lord, our Chief, under whom I am bound in servitude! கு-ரை: திரு = செல்வம். அதாவது திருவெண்ணீறு. விபூதி என்ற சொல்லும் இக்கருத்தை உடையது. முண்டம் = நெற்றி. முண்டம், திரு, தீட்டமாட்டாவென முடிக்க. 10. கோணிலா வாளி யஞ்சேன் கூற்றுவன் சீற்ற மஞ்சே னீணிலா வணியி னானை நினந் துநைந் துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா வாணலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே கோள் நிலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்; நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு, வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்தி நின்று, ஏத்த மாட்டா ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே! kooL nilaa vaaLi anjseen kuuRRuvan siiRRam anjseen niiLnilaa aNiyinaanai ninainthu nainthu urukinekku vaaL nilaam kaNkaL soora vaazhthi ninRu eeththamaaddaa aaN alaathavarai kaNdaal amma naam anjsumaaRee பொ-ரை: வளையாத கொலைத் தன்மை கொண்ட அம்பிற்கு அஞ்சமாட்டேன். இயமனுடைய சினத்திற்கும் அஞ்சமாட்டேன். ஆனால், நீண்ட பிறைமதியை அணியாகக் கொண்ட சிவபெருமானைத் தியானித்து நெக்குநெக்கு நைந்துருகி ஒளி பொருந்திய கண்களில் இருந்து நீர் சொரிய வாழ்த்தி திருமுன் நின்று துதிக்கமாட்டாத பேடிகளைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம். I fear not the straight-flying killer-darts! Nor do I fear the fury of Yama, the God of Death! But, Oh my heavens, I do have fear indeed, at sight of folks that do not pay obeisance to the Lord of the brightening crescent ornament that do not think of Him with "heart melting" intensity, do not pine for Him, deep with emotion, tears rolling down in bright trickles! Note: The exclamatory term 'அம்ம' denotes a high degree of fear in this context. Some commentators have translated this as 'Ah me' . However, in order to stress the intensity of the feeling, it has been rendered into English as 'Oh, my heavens' கு-ரை: கோள்= உயிரைக் கொள்ளுந் தன்மை. அதாவது கொலைத் தன்மை. பிறையின் அகலத்திலும் அதன் நீளம் அதிகமானதால் நீள்நிலா என்றார். வாள் நிலாவும் என்பது வாள் நிலா என்றாயிற்று. சோர= வடிய. ஏத்தமாட்டா என்பது வழிபட மாட்டா என்ற பொருளில் வழங்கியது. THIRUCHCHITRAMBALAM 36. திருப்பாண்டிப்பதிகம் 36. THIRUP-PANDIP-PATHIKAM ( சிவானந்த விளைவு ) The Decad of the Paandiyan Land திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Outpourings of Beatitude கட்டளைக் கலித்துறை Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் 'பாண்டியன் நாடு' என்பது, பாண்டி நாடு' என மருவிய வழி, பாண்டி என்பதே அந்நாட்டின் சிறப்புப் பெயர் போல நிற்றலின், அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறும் பதிகத்தைப் பாண்டிப்பதிகம் என்றார். இதனைப் புகார்க் காண்டம் (சிலப்பதிகாரம்), அயோத்தியா காண்டம் (இராமாயணம்) போலக் கொள்க. அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சியாவது, இறைவன் நரியைக் குதிரையாக்கித் தானும் ஒரு குதிரைமேல் வந்து காட்சி வழங்கியது. பாண்டி நாட்டை அடிகள் இறைவன் வெளிப்பட்டருளும் நாடாகக் கருதுதலின், திரு என்னும் அடையும் புணர்த்தருளினார் . இறைவன் அடிகள் பொருட்டுக் குதிரை கொணர்ந்து அளித்தமையை, அவர் அவனது அருள் இன்பத்தின் தொடக்கமாகக் கருதி இதற்குச் 'சிவானந்த விளைவு' எனக் குறிப்பு உரைத்தனர் முன்னோர். விளைவு - தோற்றம். இதன் மூன்றாம் திருப்பாட்டின் பொருள், இதற்கு அரண் செய்யும். இறைவன் மதுரையில் குதிரை கொணர்ந்து அளித்தமை அனைவராலும் உணரப்பெற்றபின், அவ்விடத்தே அடிகள் இதனை அருளிச் செய்தார் எனக் கருதுதற்கு இடம் உண்டு. இதன்கண் அடிகள் தம்மை இவ்வுலக வாழ்க்கையின் நீக்கித் தன்பால் வரவழைத்துக் கொள்ளல் வேண்டும் என இறைவனை நோக்கி விண்ணப்பியாமை, இக்கருத்தை வலியுறுத்தும். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுவதும் கட்டளைக் கலித்துறையால் ஆயது. Saint Maanikkavaachakar refers to the many anecdotes in the realm of the Paandiyan King, whereunto the Lord came, manifest as a human being, and bestowed benediction on the devotees resident in the southern city of Madurai, and then vanished from human sight. This decad therefore serves as internal evidence chronicling the hoary events of a bygone era. The Lord's arrival as a cavalry chief negotiating the sale of horses to the Paandiyan Kingdom and His generosity in conferring beatitude on those that came by His way, is an astonishing revelation which is well known and oft repeated in all saivite congregations. The term 'Paandu' (or Pandu) has a connotation of great antiquity, from which the word 'Paandiya' is derived. The Paandiyan Kingdom is an ancient seat of culture,philosophy and literature, for the promotion of which the Tamil Sangam was founded in the capital city of Madurai, nurtured by the meandering waters of the river Vaigai. This Sangam grew into an authoritative academy of Tamil learning under the benign guidance and support of Lord Civa Himself. Vide Prof. Sundaranaar "கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து.. பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பைந்தமிழ்" It is also pertinent to note here, as some theological commentators have done in the past that the "Horse Episode” enacted in Madurai, is verily a conceptual exposition of Vedanta Siddhanta Samarasa Sanmaargham, highlighting the Lord's stewardship of the masses whom He controls and directs, redeeming the wayward souls, weaning them away from all mundane sublunary allurements. (Somewhat as in the destruction of Thiri Puram முப்புரம் செற்றது மும்மல காரியம்- -vide Thiru Mandiram) The saint's exhortation to worldly folks to come over to Lord Civa, is couched here in this chapter, in very forceful language. He further warns all against letting this unique opportunity of human birth in this world slip away, without the ultimate goal of salvation being realised here and now. This is one significant point of time, says the saint, when all folks can freely imbibe the bliss of Lord Civa. Set in Kattalai Kali Thurai metre, this decad beckons the soul to hurry forward towards salvation, avoiding further delays. These stanzas are oft-quoted verses in saivite literature and dicourses. They resound with the characteristic metrical effect of 'Kattalai Kali Thurai', even as they reveal the appropriateness of the present time for the attainment of salvation. Saint Maanikkavaachakar is known to be the first saivite savant to promote and popularise 'Kattalai Kali Thurai' as an effective form of versification. 36. 1 பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதா மொருவரை யொன்று மிலாதவ ரைக்கழற்போ திறைஞ்சித் தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனா ரொருவரை யன்றி யுருவறி யாதென்ற னுள்ளமதே. பருவரை மங்கை - தன் பங்கரைப் பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரைக் கழல்-போது இறைஞ்சித் தெரிவர நின்று, உருக்கிப் பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என்-தன் உள்ளம் அதே. paruvarai mangkai than pangkarai paaNdiyaRku aaramuthaam oruvarai onRum ilaathavarai kazalpoothu iRainjsi therivara ninRu urukki parimeeR koNda seevakanaar oruvarai anRi uruvu aRiyaathu en than uLLam athee. பொ-ரை: இறைவன், பெரிய மலையாம் இமயமலை அரசன் புதல்வியைப் பாகமாகக் கொண்டவன். பாண்டிய மன்னனின் பெறுதற்கரிய அமுதம் போன்றவன்; பெயர், வடிவம் ஒன்றும் இல்லாதவன். தனது திருவடி மலரை நான் வணங்கும்படி வெளிப்பட்டு நின்று மனத்தை உருக்குவித்தான். குதிரை மேல் ஏறி வந்த வீரர் ஒருவரையல்லாது, பிறர் எவருடைய வடிவத்தையும் என் உள்ளம் அறிய மாட்டாது. My heart knows not, even the outlines of any entity other than the unique cavalry Chief Lord Civa who melts the hearts of devotees, standing manifest before those that pay obeisance to His flowery Feet in all dedication. He, the unparalleled, he that hath no form, name or identity, He, the rare ambrosia to the Paandiyan King, He, with the mountain goddess Uma Devi as one half of His frame! கு-ரை: பரு = பருத்த; பெரிய. வரை = மலையரசன், மங்கை = புதல்வி. இறைஞ்சி = இறைஞ்ச. உரு என்பதற்கு இயல்பு என்றும் பொருளுரைப்பர். 2. சதுரைமறந்தறிமால் கொள்வர்சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தன்னசோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்துகூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. சதுரை மறந்து, அறிமால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்; கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடு மேல், குடி- கேடு கண்டீர்! மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே. sathurai maRanthu aRimaal koLvar saarnthavar saaRRi sonnoom kathirai maRaiththanna soothi kazukkadai kai pidiththu kuthiraiyin meel vanthu kuudidu meel kudikeedu kaNdiir mathuraiyar mannan maRupiRappu ooda maRiththidumee பொ-ரை: எம் தலைவனாகிய சிவபெருமான் சூரியனையும் மறைக்கின்ற அரும்பெரும் சோதி வடிவானவன். மதுரையில் சவுந்தரபாண்டியனாக எழுந்தருளி மணிமகுடம் தரித்து, தடாதகைப் பிராட்டியாரை மணந்து அரசாண்டவன். (மதுரையர் மன்னன்) அவன், தாற்றுக் கோலினைக் கையில் ஏந்தி, குதிரையின் மீது ஏறி வந்தான். அந்தக் காட்சியைக் கண்டவர்களின் பிறவிப்பிணி ஒழிந்து விட்டது. அவனைச் சார்ந்த அடியார்கள் அனைவரும் தமது நிலையை மறந்து ஞானப்பித்துக் கொள்வர். இதனைப் பறை அறிந்து சொல்லுகின்றேன். கேட்டு உய்வீர்களாக. If and when the Lord with trident on hand comes over here, so effulgent as to overshadow the brightness of the Sun, all those around Him will lose consciousness and go into a trance. This we do assert in all firmness. If He comes and joins us riding a horse all future births will cease to be! Even for the King of Madurai, there will then be no more births! கு-ரை: சதுர் = திறமை. தற்போதம் இழத்தலையே சதுரை மறத்தலாகக் கூறினர். சிவஞான அவாவே அறிமால் எனப்பட்டது. கழுக்கடை = தாற்றுக்கோல்; குடிகேடு= குடியின் முடிவு; அதாவது பிறவியின் அழிவு. ஓட= மேல் நிகழ. மறு பிறப்பாகிய ஓடத்தை மேற்செல்லாது தடுத்து விடும் என்றலும் ஒன்று. 3. நீரின்ப வெள்ளத்து ணீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனா ரோரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்; பார் இன்ப வெள்ளம் கொளப் பரி மேற் கொண்ட பாண்டியனார், ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார்; பேர் இன்ப வெள்ளத்துள் பெய்கழலே சென்று பேணுமினே. niir inpa veLLaththuL niinthi kuLikkinRa nenjsam koNdiir paarinpa veLLam koLa parimeeR koNda paaNdiyanaar oor inpa veLLaththu urukkoNdu thoNdarai uLLam koNdaar peerinpa veLLaththuL peykazalee senRu peeNuminee பொ-ரை: இறைவன் திருமேனி, மானுடர்களைப் போன்று மாயையால் ஆனதன்று. உண்மையும், அறிவும், ஆனந்தமுமே அவன் வடிவு. பாண்டிப்பிரானாகிய அவன் மானிட உருக்கொண்டு குதிரையின் மேல் எழுந்தருளி வந்தான். அது போழ்து இந்தப் பூமி முழுவதும் இன்ப வெள்ளம் பாய்ந்தது. அவன் தனது மெய்யடியார்களை ஆட்கொள்ளத் திருவுள்ளம் பற்றிய காரணத்தால் அவன் ஒப்பற்ற பேரின்ப வெள்ளமாகிய வடிவு கொண்டு இந்நிலவுலகத்திற்கு எழுந்தருளி வந்தான். நீர் மேல் எழுத்துப் போல் அழிந்து போகின்ற சிற்றின்ப வெள்ளத்துள் நீந்தித் திளைக்கின்ற மனத்தை உடைய மானுடர்களே, உடனே அதை ஒழித்து, வீட்டுலகமாகிய பேரின்ப வெள்ளத்துள் மூழ்கி என்றும் இன்பம் பெறும் இயல்பினால் அவன் திருவடிகளைச் சென்று இறுகப் பற்றுங்கள்; போற்றுங்கள். வாழ்வு பெறுவீர்கள். Hark! Ye folks, that seek to swim, bathe and revel in the coolness of the flood waters of transient worldly joys! Our Lord of the Paandiyan land came over here on horse back so that all earthlings may taste the blissful flood of grace. He, manifest as infinite bliss, holds His devotees close to His heart. Unto His bejewelled Feet, go ye and be steeped in the flood of supernal bliss. கு-ரை: இன்பப் பெருக்கை விரும்புவார், இறைவன் பேரின்பச் சேவடியே நாடவேண்டும் என்பது குறிக்கப்பட்டது. பார் = நிலம்; பூமி, தொண்டரை = தொண்டருடைய. உருபு மயக்கம். 4. செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன் மின்றென்ன னன்னாட் டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளு மறிவொண் கதிர்வா ளுறைகழித் தானந்த மாக்கடவி யெறியும் பிறப்பை யெதிர்ந்தார் புரள விருநிலத்தே செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும் ; அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே. seRiyum piRavikku nallavar sellanmin thennan nalnaaddu iRaivan kiLarkinRa kaalam ikkaalam ek kaalaththuLLum aRivu oN kathirvaaL uRaikaziththu aanantha maakkadavi eRiyum piRappai ethirnthaar puraLa irunilaththee பொ-ரை: பாண்டியனது நல்ல நாட்டிலே, எம் இறைவனாகிய சிவபெருமான், மற்ற காலங்களைக் காட்டிலும் சிறந்த இக்காலத்தில் ஞானப்போருக்கு எழுந்து அருளுகின்றான். அவன் ஞானம் என்கின்ற ஒளி பொருந்திய வாளை அதன் உறையில் இருந்து உருவிக் கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றான். அவன் ஆனந்தம் என்கின்ற குதிரை மீது ஏறி வருகின்றான். அவன் முன்செல்லக்கூடிய பிறப்பை விரும்பாத மெய்யடியார்களின் பிறவி என்கின்ற துன்பத்தைத் தனது ஞான வாளால் வெட்டி இந்த நிலத்திலே புரண்டு கிடக்க இல்லாமற் செய்து விடுவான். பிறவியினை விரும்புகின்ற அறிவிலிகளாகிய பெத்தான் மக்களே (நல்லவர் என்று நகையாகக் குறிப்பிடுகிறார்) - நீங்கள் மேலே சொன்னவாறு இறைவன் எழுந்தருளும் பொழுது அவன் முன் செல்லாதீர்கள் (அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றவர்களைப் பார்த்து - உங்கள் அறியாமையைப் போக்கி, பிறப்பை அறுத்துப் பேரின்ப வாழ்வு பெற இறைவன் சந்நிதியை அடையுங்கள் என்று குறிப்பாக உணர்த்துகிறார்). Let not any of the noble folks go into the crowded birth cycles! The time is ripe now for the Lord of the holy southern land to rise up in effulgence and rule over this terrain. This, our Lord, quells all, taking out His shining sword from the sheath. Ever does He do this - the bright sword pulled out from the sheath, He riding the magnificent horse of infinite bliss - taking out the sword of gnosis. கு-ரை: எக்காலத்துள்ளும் என்பதை எறியும் என்பதனோடு முடித்தலுமுண்டு. செறியும் பிறவிக்கு நல்லவர். பிறவி தொலைய விரும்புபவர், புறநாட்டிற்கு இக்காலத்தே செல்லாதீர்களென்றலும் ஒன்று . எதிர்ந்தார் பிறப்பை எறியும் என மாறுக. எதிர்ந்தார் இருநிலத்தே புரள, என மாறுக . 5. காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய வாலமுண் டானெங்கள் பாண்டிப் பிரான்றன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே. காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண்-அரிய ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து, முந்துமினே. kaalam uNdaakavee kaathal seythu uymmin karuthu ariya njaalam uNdaanodu naanmukan vaanavar naNariya aalam uNdaan engkaL paaNdi piraan than adiyavarkku muula paNdaaram vazangkukinRaan vanthu munthuminee பொ-ரை: சிவபெருமான் அனைவருக்கும் திருவருள் இன்பத்தை வழங்குகின்றான். இந்த நினைத்தற்கரிய நல்லகாலம் கிடைத்திருக்கும் போதே அன்பு செய்து பிழையுங்கள். உலகத்தை உண்டவனாகிய திருமாலும், பிரமனும், பிற தேவர்களும் நெருங்க முடியாத ஆலகாலம் உண்டவன் எங்கள் பாண்டி நாயகன். தனது அடியவர்கட்கு மூலமாகவுள்ள நிதியினை எடுத்தளிக்கின்றான். விரைந்து வந்து முயலுங்கள். Folks, when there is still time, do pay obeisance to Him and be redeemed! The Lord who consumed venom (spewing out from the ocean floor), The Lord unapproachable even to the gods of heaven, This, our Chief of the Paandiyan land! To His devotees, He is now dispensing freely the primordial gift - the gift of total liberation. Hence hurry forward and do receive it soon! கு-ரை: வாழ்நாளை வீணாக்காது உய்யுங்கள் என்ற குறிப்பும் காண்க. பண்டாரம் = கருவூலம்; நிதிக் களஞ்சியம். மூல பண்டாரம் என்பது பேரின்பச் செல்வம். பாண்டி நாட்டிலே தமக்கு அருளினமையின் 'பாண்டிப் பிரான்' என்றார். 6. ஈண்டிய மாயா விருள் கெட வெப்பொரு ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்றாள் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே ஈண்டிய மாயா இருள்கெட, எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் ; வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்; பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப் பரிசு இதுவே iiNdiya maayaa iruLkeda epporuLum viLangka thuuNdiya soothiyai miinavanum solla vallan allan veeNdiya poothee vilakku ilai vaaythal virumpuminthaaL paaNdiyanaar aruL seykinRa muththi parisu ithuvee பொ-ரை: செறிந்ததும், அழியாததும் ஆகிய அறியாமை இருள் நீங்க, எல்லாப் பொருளும் நன்கு விளங்க, அடியேனை உள்ளிருந்து தூண்டிய சோதி வடிவன் சோமசுந்தரப் பெருமான். நேரில் ஊனக்கண்ணால் கண்டு அனுபவித்த பாண்டியனும், சிவனை இறைவன் என்று உணர முடியாதவன் ஆனான். அவனை நாம் காண வேண்டிய போது காண்பதற்குத் தடை ஒன்றுமில்லை. ஆதலால் அவனது திருவடிகளை விரும்புவீராக! பாண்டிப்பிரானாகிய சிவபிரான் அன்பர்கட்கு நல்கி அருளும் வீடாகிய பரிசு அவனது திருவடிகளே ஆகும். That the burgeoning darkness of illusion may cease to be, that all matter may shine forth in great clarity, He prunes the effulgent lamp of gnosis. This is beyond description even for the fish-bannered Paandiyan King. Folks, the very moment you desire salvation, there will be no bar to the entry into His kingdom. Hence, be in intense longing for His Feet. This indeed is the way for salvation! கு-ரை: மாயாவிருள் என்பது மாயா மலத்தாலுண்டாகிய திரிபுணர்ச்சி. நில்லாதனவற்றை நிலையின என்றுணரும் அறிவு. தூண்டிய = செலுத்திய; குதிரையை என்பது தொக்கு நின்றது. எப்பொருளும் விளங்க உயிரின் அறிவை இயக்கிய என்றும் பொருள் கொள்ளலாம். ஐவாய்தல்= ஐவாசல்; ஐம்பொறி. விலக்கில்= விலக்கின். 'தாள் விரும்புமின்' எனமாறுக. பாண்டியனார் என்பது சிவபிரானுக்கு வழங்குதல் அடிகள் மரபு. அறியப்படாது வந்து விரைவில் அருள் புரிதலையே 'முத்திப்பரிசு' என்றார். 7. மாய வனப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறு மிப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காயவ ரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே மாய வனப்பரி மேல்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும் போய் அறும், இப்பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு, ஆய, அரும்பெரும், சீர்உடைத் தன் அருளே அருளும்; சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே . maayavana pari meel koNdu maRRu avar kaikkoLalum pooy aRum ippiRappu ennum pakaikaL pukunthavarukku aaya arumperunj siirudai than aruLee aruLum seeya nedum kodai thennavan seevadi seerminkaLee பொ-ரை: மாயமான நரிகளாகிய காட்டுக்குதிரைகளைப் பாண்டிய மன்னனுக்குக் கொடுப்பதற்காகத் தான் வேதமாகிய வேறு குதிரையின் மீது எழுந்தருளி வந்தான் இறைவன். அங்ஙனம் வந்து பக்குவமுடைய ஆன்மாக்களை ஆட்கொண்டு அருளுகின்றான். அக்கணமே அவ்வான்மாக்களுடைய பிறப்பு, இறப்பு என்ற பகைகள் நீங்கி விடும். தம்மிடம் அடைக்கலமாகப் புகுந்த ஆன்மாக்களுக்கு, அவர்கள் பரிபாக நிலைக்கு ஏற்ப, அரிய பெரிய சிறப்பினை உடைய தனது திருவருளை அருள்பவன் சிவபெருமான். ஆதலால் செம்மையான பெரிய கொடை வள்ளலாகிய பாண்டிப்பிரானுடைய சிறந்த திருவடிகளையே சென்று அடையுங்கள். Even as the mystique Lord gets on top of the steed (the illusory wild and wayward horse) and all others around stand enchanted by this spectacle, the inimical birth cycles will get destroyed. Unto those who join Him, this our sacred Lord of the southern land, of plentiful philanthropy, bestows His rare bliss of profusion. Hence, go thee and be one with His auspicious Feet! கு-ரை: தென்னவன் பரிமேல் கொண்டு மற்றவர் கைக்கொளலும் என முடிக்க. சேய்மையாகிய பெரும் கொடை எனப் பொருள் கொண்டு, அது முத்திப் பெருங்கொடை என்றலும் ஒன்று. பிறப்பென்னும்= பிறப்பிற்குக் காரணமாய. பகைகள்= மும்மலங்கள், அல்லது காமக் குரோத லோப மோக மத மாற்சரியமாய அறுபகைகள். பகைகள் போயறுமென முடிக்க. 8. அழிவின்றி நின்றதொ ரானந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே அழிவு இன்றி நின்றது ஓர் ஆனந்த -வெள்ளத்திடை அழுத்தி கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றிப் பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே. azivuinRi ninRathu oor aanantha veLLaththidai azuththi kazivu il karuNaiyai kaaddi kadiya vinai akaRRi pazamalam paRRu aRuththu aaNdavan paaNdi perumpathamee muzuthu ulakum tharuvaan kodaiyee senRu munthuminee பொ-ரை: சிவபெருமான் தன்னை அடைபவர்களை நிலைக்கச் செய்து, ஒப்பற்ற தன் அருளாகிய ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்வான். எப்பொழுதும் நீங்காத கருணையைக் காட்டுபவன். கொடிய இரு வினைகளை நீக்குபவன் (இருவினைகள்- நல்வினை, தீவினைகள்). பழமையாக வரும் ஆணவமலப் பற்றைத் தொலைத்து ஆட்கொண்டவன். பாண்டியநாடு மட்டுமின்றி உலகம் முழுவதையும் அரசாளும் தன்மையைத் தர வல்லவன். ஆதலின் அவனது பரிசிலைப் பெறுவதற்கே சென்று முந்துங்கள். Steeping us in the everlasting sea of beatitude, revealing His endless grace, removing the forceful impact of the two-fold kinds of activity, (the good and the evil), cutting off the effects of the adhering past - thus did He take us and rule over us. When such is the case, will He merely grant us the high status of just the Paandiyan Kingdom alone? Nay, He granteth the great gift of the whole world! Hence, go thee folks and hurry forward in order to receive it early! கு-ரை: பாண்டிப் பெரும்பதமேயோ, அன்றி உலக முழுதும், எனக் கொள்க. பாண்டியனாகிய அவனது பெருமை வாய்ந்த திருவடியே சென்று அவனது கொடையே முந்துமின், என முடிப்பதும் உண்டு. பதம்= பதவி; திருவடி. 9. விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர் கடக்கப் பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையுந் தாமறி யார்மறந்தே, விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார், புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மரஇயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே. viraviya thiivinai meelai piRappu munniir kadakka paraviya anparai enpu urukkum param paaNdiyanaar puraviyin meelvara punthi koLappadda puungkodiyaar maraiyal meeRkoNdu thammaiyum thaam aRiyaar maRanthee பொ-ரை: நல்வினை, தீவினைகளால் இனி வரும் பிறப்பாகிய கடலைக் கடப்பதற்கு அடியார்கள் சிவபெருமானைப் போற்றி வழிபடுகின்றார்கள். எலும்பையும் உருகப்பண்ணி ஆட்கொள்ளும் மேலான அவன் அவர்களுக்கு அருள் புரிகின்றான். அப்படிப்பட்ட பாண்டிப்பெருமான் வேதமாகிய குதிரை மீது ஏறி வருகின்றான். இந்தக் காட்சியைக் கண்ட பூங்கொடி போன்ற பெண்கள் தம்மையும் மறந்து, சிவபோதத்தில் மூழ்கி மரம் போன்று ஆனார்கள். In order to cross the "three watered" (spring, river and rain) "ocean-like" births, resulting from the accumulated evil deeds of the past, devotees, pay obeisance to Him. He, the exalted Lord of the Paandiyan land (in all kindness) melteth the bones of such devotees. When this Lord comes riding a steed, the fair streamlined flower-like damsels lose consciousness and go into 'Wood-like' trance. கு-ரை: முந்நீர் - ஆற்றுநீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்றுங் கலந்தது. நிலம் உண்டாவதற்கு முற்பட்ட என்ற பொருளில், முன்னீரென்று பாடங் கோடலும் உண்டு. பூங்கொடியார் மெய்யன்பர்க்கு உருவகம். மரம் இயல் = மரத்தின் தன்மை, புந்தி = அறிவு. தன்னுணர்ச்சி கெட்டு இறை அன்பு வயமாயினர் என்பது கருத்து. 10. கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென் றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியும் தானுமோர் மீனவன்பா லேற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே தோற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால் வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஓர் மீனவன் பால் ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே; தோற்றம் இலாதவர் ! சேவடி சிக்கெனச் சேர்மின்களே. kuuRRai venRu aangkuaivar kookkaLaiyum venRu irunthu azakaal viiRRirunthaan peruntheeviyum thaanum oor miinavan paal eeRRu vanthu aar uyir uNda thiRal oRRai seevakanee thooRRam ilaathavar seevadi sikkena seerminkaLee பொ-ரை: மார்க்கண்டேயருக்காக இயமனைக் காலால் உதைத்தவன். மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்களாகிய அரசர்களையும் அடக்கி அருள்பவன். அவன் தன் தேவியாகிய உமையம்மையோடும் அழகான அருள் கோலம் கொண்டு வீற்றிருந்தான். வேதமாகிய குதிரையின் மேல் ஏறி வந்து பாண்டியனுடைய ஆன்ம போதத்தை அழித்து ஆட்கொண்ட வலிமையை உடைய ஒப்பற்ற வீரனது திருவடிகளைத் தெளிவில்லாத மக்களே, உறுதியாகப் பற்றுங்கள் . Neutralising the god of death, quelling the onslaught of the commanding five senses (sight, smell, sound, taste and touch), stayed He in fine splendour, alongside His celebrated consort. Ye folks of unclean mind, note that this fierce, peerless and powerful warrior, our protector, this fish-bannered Paandiyan, crushed those that came as hostile force! Hence, do hold fast to Him and reach His sacred Feet. கு-ரை: ஐவர் = ஐம்புலன். கோ = அரசன். மீனவன்= மீன் கொடியுடையவன். பாண்டியற்குக் கொடி கயற்கொடி. உயிர் உண்ட= உயிர் போதத்தைக் கவர்ந்து கொண்ட, சேவகனே என்பதில், ஏகாரத்தை அசையாய்த் தள்ளி அதனைச் சேவடி என்பதோடு முடிக்கலாம். வீற்றிருந்தான் சேவகன் சேவடி சேர்மின்களே எனமுடிக்க. THIRUCHCHITRAMBALAM 37. பிடித்த பத்து 37. PIDITHTHA PATHTHU (முத்திக் கலப்புரைத்தல்) The Decad of a Tight Clasp சீர்காழியில் அருளிச் செய்யப்பட்டது Composed Whilst in Seergaazhi ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் இறைவனைச் சிக்கெனப் பிடித்தமையைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி பிடித்த பத்து . இறைவனை விடாது பற்றி நிற்றலே முத்திப் பேறு ஆதலின், இதற்கு, 'முத்திக் கலப்பு உரைத்தல்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, தோணிபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இதனை இங்ஙனம் கொண்டமைக்குக் காரணம், இதன் மூன்றாவது திருப்பாட்டில் இறைவனை அடிகள், 'அம்மையே அப்பா' என அழைத்திருத்தலே போலும்! ஞானசம்பந்தர் சீகாழியில் திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து இவ்வாறு அழைக்க, இறைவன் அங்ஙனமே அம்மையப்பனாய் வந்து அருள்புரிந்தமையும், திருத்தோணியில் என்றும் அவ்வம்மையப்பர் வடிவமாயே இறைவன் எழுந்தருளியிருத்தலும் யாவரும் அறியப்பட்டனவாதல் அறிக. இது, முழுதும் எழுசீரடி விருத்தத்தால் ஆயது. Saint Maanikkavaachakar is overwhelmed by the grace of the Lord who had saved him from plunging into the abysmal depths of falsehood and shame, and took him under His tutelage. He pours out in soulful numbers, his gratitude to the Lord, for this act of generosity, and exclaims that he holds on to Him so tight and hence asks Him how He could now retreat from his clasp under these circumstances of intense dedication. 'Whither shalt Thou Retreat' is the constant refrain, at the end of each stanza of this decad, confirming that he clasped the Lord so tight, right here in this birth itself. Stanzas 3 and 9 are oft-quoted verses in all saivite discourses, as they reveal the tight bond the saint has established with the Lord, who will never desert him. This decad is stated to have been composed during his sojourn at Seergaazhi, the birth place of Saint Thirugnaana Sambandar. 37.1. உம்பர்கட் கரசே யொழிவற நிறைந்த யோகமே யூற்றையேன் றனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே உம்பர்கட்கு அரசே ! ஒழிவு அற நிறைந்த யோகமே ! ஊற்றையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே ! செம்பொருள் துணிவே ! சீர் உடைக் கழலே ! செல்வமே; சிவபெருமானே ! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? umparkadku arasee ozivu aRa niRaintha yookamee uuRRaiyeen thanakku vampu ena pazuththu en kudimuzuthu aaNdu vaazvu aRa vaazviththa marunthee semporuL thuNivee siir udai kazalee selvamee sivaperumaanee emporuddu unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: தேவர்கள் அனைவருக்கும் அரசனே ! எல்லா இடங்களிலும், எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள சிவயோக வடிவானவனே ! அழுக்காகிய மலமுடையவன் யான். மல கன்மங்கள் என்னிடமிருந்து நீங்கவில்லை . அவ்வாறு பரிபாகப்படாத என்னிடத்தில், காலமல்லாத காலத்துப் பழுக்கும் கனிபோன்று என்முன் தோன்றி, என்னை மட்டுமன்றி என் குடிமுழுவதையும் (அடியார்கள் கூட்டம்) ஆட்கொண்டவனே! ஆட்கொண்டது மட்டுமன்றி இவ்வுலக வாழ்வாகிய இன்ப துன்ப வாழ்வு நீங்கவும், சிவஞான வாழ்வு வாழப்பெறவும் மருந்து போன்ற கருணையாளனே! எல்லா நூல்களாலும் அநுபவத்தாலும் துணிந்து கூறப்பட்ட செம்பொருளே! சிறப்புக்கள் பலவுமுடைய திருவடிகளை உடையவனே! நிலைத்த ஞானச்செல்வமே! நாங்கள் உய்யும் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனி என்னை விட்டு எங்கே சென்று எழுந்து அருளுவாய்? Lord of heaven-dwellers! Extant everywhere without exception! Thou, verily the medication that gave me life in Civa Loha, so that my birth here may cease to be! Thou, ruling over all my clan, Thou that ripens forth as fresh fruit even for me, this foul me! Thou, the conclusive testament of sacred scriptures! Thou of blissful bejewelled Feet, Thou a treasure trove! Oh Lord Civa for our benefit, I have caught hold of your Holy feet firmly; hereafter where can you rise and move to shower your grace! (You can shower Your grace only on me). கு-ரை: யோகமே = கலப்பே. உயர்வு என்ற பொருளுமுண்டு. குடி என்பதற்குக் குலமென்ற பொருளுமுண்டு. வாழ்வற = பிறவியற . கழல்: ஆகுபெயர். எம்பொருட்டென்றது தானும் தன்னைச் சேர்ந்தாரையும் உளப்படுத்தியது, ஞானி ஒருவனுடைய தவத்தினால் அவன் குடிமுழுதும் உய்யும் என்பது நூற்கருத்து. 2. விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து கடைபடா வண்ணங் காத்தெனை யாண்ட கடவுளே கருணை மாகடலே யிடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனே னுடையமெய்ப் பொருளே! முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து கடைபடா வண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே ! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? vidai vidaathu ukantha viNNavar koovee vinaiya neenudaiya mey poruLee mudai vidaathu adiyeen muuththu aRa maNNaay muzuppuzu kurampaiyil kidanthu kadaipadaa vaNNam kaaththu enai aaNda kadavuLee karuNai maakadalee idaividaathu, unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: இடபத்தை நீங்காது வாகனமாக விரும்பி ஏற்றுக் கொண்ட வானவர் தலைவனே! தீவினை உடையேன் ஆகிய என் மெய்ப்பொருளே! புலால் நாற்றம் நீங்காத, முழுதும் புழுவாலான கூட்டில் கிடந்து, முதிர்வெய்தி பாழாகி அடியேன் கீழ்மைப்படாவண்ணம் என்னைத் தடுத்தாட்கொண்ட தெய்வமே! அருட்பெருங்கடலே! இடையறாமல் உன்னை உறுதியுடன் பற்றினேன். நீ என்னை விட்டு எழுந்தருளிச் செல்வது எங்கே? Lord of heaven dwellers, ever on the favourite bull mount! Thou art the only (truth) reality, for me, me that am full of evil deeds! Thou that saved me from sinking down into dust with this verminful physical frame so foul, halting the ageing process! Lord that took me vassal under Thee, Thou an ocean of kindness! Oh God! Oh mighty sea of grace! Without any break, I have caught hold of Your holy Feet firmly; hereafter where can you rise and move to shower Your grace! கு-ரை: விடாது = நீங்காது. திருமால் விடையான படியினால் அதனை வாகனமாகக் கொண்டவரென்று திருச்சாழலிற் குறித்த கருத்தை நோக்குக. முடைவிடாத அடியேன் என்றது முடைவிடா தடியேன் என்றாமிற்று. முடை விடாது என்பதை குரம்பை என்பதோடு முடிக்க. குரம்பை = கூடு. அதாவது இவ்வுடம்பு. முடைவிடாது என்பதை வினையெச்சமாகக் கொண்டு மூத்து என்பதோடு முடித்தலும் உண்டு. அற மண்ணாய் = முற்றிலும் பாழாய். புலால் நாற்றம் நீங்கப் பெறாது அடியேன் கிடந்து மூத்துக் கடைபடா வண்ணமென முடிக்க. 3. அம்மையே யப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபத மளித்த செல்வமே சிவபெரு மானே யிம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. அம்மையே ! அப்பா! ஒப்பு இலா மணியே ! அன்பினில் விளைந்த ஆர் அமுதே ! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் - தனக்குச் செம்மையே ஆய சிவ பதம் அளித்த செல்வமே சிவபெரு மானே ! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? ammaiyee appaa oppilaa maNiyee anpinil viLaintha aar amuthee poymmaiyee perukki pozuthinai surukkum puzuththalai pulaiyaneen thanakku semmaiyee aaya sivapatham aLiththa selvamee sivaperumaanee immaiyee unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: அடியேனுக்குத் தாயும் தந்தையும் ஆனவனே! கிடைத்தற்கு அரியதாயும், பிறவி நோய் அகற்றும் தன்மை உடையதாகவும் உள்ள மாணிக்கமணி போன்றவனே! அன்பெனும் கடலில் விளைந்த கிடைத்தற்கரிய அமுதே ! நிலையில்லாதவற்றில் அறிவைப் பெருகச் செய்து நேரத்தைப் பயன்படாது கழிக்கின்றேன். புழுப் பற்றி அலைகின்ற கீழ்மைக் குணம் உடையவன் யான். அப்பேர்ப்பட்ட எனக்குப் பெருநன்மைக்கு ஏதுவாகிய சிவமாம் தன்மையை அருளிய நிலைத்த செல்வமே ! சிவபெருமானே ! இப்பிறவியிலுன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன். இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருளுவாய்? Thou Mother, Thou Father, Thou unparalleled gem, ripened out from grace into rare ambrosia! I have been wasting time here, wallowing in falsehood. Unto me, this lowly one of vermin-ridden head, Thou granted the sacred gift of Civahood! Thou a veritable treasure trove, Oh Lord Civa! This very moment I have caught hold of Your holy Feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: பொய்மை = பயனற்றவை; நிலையாதவை. பயனற்றவைகளை மிகுதிப் படுத்திப் பயன்படுஞ் செயலுக்குரிய நேரத்தைக் குறைப்பது இங்கே குறிக்கப்பட்டது. புழுத்தலை = புழுத்து அலைதல். உடம்பு புழுமயமாய் இருத்தலால் உடம்பொடு திரிதலைப் புழுத்தலைதல் என்றார். புழுத்தலை என்று கொண்டால் புழுப்பற்றிய தலைமை உடைய என்பது பொருளாகும். செம்மை = நன்மை; நேர்மை. பதம் = நிலை. 4. அருளுடைச் சுடரே யளிந்ததோர் கனியே பெருந்திற லருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே யிருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. அருள் உடைச் சுடரே ! அளிந்தது ஓர் கனியே ! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே! பொருள் உடைக் கலையே ! புகழ்ச்சியைக் கடந்த போகமே ! யோகத்தின் பொலிவே! தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெரு மானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? aruLudai sudaree aLinthathu oor kaniyee perunthiRal arunthavarkku arasee poruL udai kalaiyee pukazssiyai kadantha pookamee yookaththin polivee theruL idaththu adiyaar sinthaiyuL pukuntha selvamee sivaperumaanee iruL idaththu unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: அருள் என்னும் ஒளியுடைச் சுடரே! கனிவுள்ள ஒப்பில்லாத கனியே ! பேராற்றலுடைய, செயற்கரிய தவம் செய்தவர்களுக்கு அரசே! மெய்ப்பொருளை விளக்கும் சிவஞானக் கலையே! உலகத்தாரின் புகழ்ச்சியைக் கடந்த அனுபவமே! யோகக் காட்சியில் விளங்குகின்றவனே! தெளிவுற்ற இடத்து அடியாருள்ளத்தில் தங்கிய செல்வமானவனே ! சிவபெருமானே! அறியாமை நிறைந்த இவ்வுலகில் உன்னை உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். இனி நீ எங்கெழுந்து செல்வது? Thou, flame of grace, like unto a ripened fruit! Lord of the mighty ascetics! Manifestation of meaningful arts! Bliss beyond the reach of eulogy! The very sheens of penance! Thou, a treasure trove that enters the minds of clear-thinking devotees! Oh Lord Civa, in the darkest gloom, I have succeeded in catching hold of Your holy Feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: படிப்படியாகப் பக்குவப்படாது எப்போதும் ஒரே தன்மையான இன்ப நிலையிலிருப்பதால் அளிந்ததோர் கனியே என்றார். தவர் என்பது சரியையாளரையும், அருந்தவரென்பது, கிரியையாளரையும், திறலருந்தவரென்பது யோகிகளையும், பெருந்திறலருந்தவரென்பது ஞானிகளையும் குறிக்கும் என்பர். வீடடைதற்குரிய மெய்க்கலை ஞானத்தை இறைவன் ஆசிரியப் பரம்பரையில் வைத்து நல்கினமையால் பொருளுடைக்கலையே என்றார். சிவானுபவம் சொல்லினாற் கூறப்படாமையின், புகழ்ச்சியைக் கடந்த போகமே என்றார். சிந்தை தெளிந்த இடத்திலேதான் இறைவன் விளங்குதலின், தெருளிடத்து என்றார். இருளிடத்தே என்பதை வினைத் தொகையாகக் கொண்டு, உய்திக்கு வழி தெரியாது திகைக்கின்ற இடத்து எனப் பொருள் கொள்வாரும் உளர். 5. ஒப்புனக் கில்லா வொருவனே யடியே னுள்ளத்து ளொளிர்கின்ற வொளியே மெய்ப்பத மறியா வீறிலி யேற்கு விழுமிய தளித்த தோரன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே யெய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன்! உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே ! மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே ! செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ ! செல்வமே! சிவபெருமானே ! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? oppu unakku illaa oruvanee adiyeen uLLaththuL oLirkinRa oLiyee meyppatham aRiyaa viiRu iliyeeRku vizumiyathu aLiththathu oor anpee sepputhaRku ariya sezunjsudar muurththii selvamee sivaperumaanee eyppu idaththu unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: யாரும் தனக்கு நிகரில்லாத ஒருவனாய் உள்ளவனே! அடியேன் உள்ளத்து உள்ளே விளங்கும் அறிவொளியே ! உண்மை நிலையை உணராத, சிறப்பில்லாத எனக்கு உயர்நிலை கொடுத்த ஒப்பற்ற அன்பு வடிவே ! சொல்லுதற்கரிய செழுமையான சுடர் உருவே! செல்வமே! சிவபெருமானே! இளைத்த காலத்து உன்னை இறுகப்பற்றினேன். இனி நீ எங்கு எழுந்தருளுவது? Unique Lord, with no one to equal Thou. Light effulgence, shining bright inside me, Thy servitor! Thou, the kindly one, that granted the acclaimed gift of liberation to me that am ignorant of the realities of beatitude, and so devoid of firmness! Thou, of an indescribable flaming form of light! My treasure trove! Oh Lord Civa, In weariness I have caught hold of your Holy feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: வீறு = சிறப்பு. மூர்த்தி = வடிவுடையவன். வீட்டினை நாடிப் பிறவித் துயர் இளைத்த இடமே சத்தினிபாத நிலையாகும். 6. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா வாநந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியவெம் பொருளே திறவிலே கண்ட காட்சியே யடியேன் செல்வமே சிவபெரு மானே யிறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு,அளவு இலா ஆனந்தம் அருளி பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே ! திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? aRavaiyeen manamee kooyilaakkoNdu aaNdu aLavu ilaa aanantham aruLi piRaviveer aRuththu enkudi muzuthu aaNda pinjnjakaa periya emporuLee thiRavilee kaNda kaadsiyee adiyeen selvamee sivaperumaanee iRavilee unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: ஆதரவற்ற அடியேன் மனத்தைக் கோவிலாகக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, எல்லையற்ற ஆனந்தம் அருளிப் பிறவியின் வேரையறுத்து, என் குடிமுழுதும் ஆண்ட பிஞ்ஞகனே! பெரியதுக்கெல்லாம் பெரியதான எனது பொருளே ! திறந்த வெளியில் யான் கண்ட காட்சிப் பொருளே! செல்வமே! சிவபெருமானே! இறுதிக்காலத்து உன்னை இறுகப் பற்றினேன். இனி நீ எழுந்தருளுவது எங்கு ? Housed in the heart of this hapless me, granting immeasurable bliss, cutting off the roots of birth art Thou, Oh Lord of matted hair, that took me and all my clan under Thy tutelage! Our magnificent treasure, Vision manifest in the wide expanse! Oh Lord Civa! In my last days at the hour of death I have caught hold of Your holy Feet firmly; hereafter where can You rise and nove to shower Your grace! கு-ரை: அறவை = எல்லாமற்றவன்; யாதொரு கதியும் இல்லாதவன். பிஞ்ஞகம்= இறைவனது சடைமுடி, பிறை, அவனது தலைக்கோலமாகும். திறவு = திறத்தல், வெளிப்படை, தெளிவு. இறவு= முடிவு; இறுதி. இறுதி என்பதற்கு அபாயம் எனவும் கொள்க. 7. பாசவே ரறுக்கும் பழம்பொரு டன்னைப் பற்றுமாற டியனேற் கருளிப் பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே யீசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே பாசவேர் அறுக்கும் பழம் பொருள் தன்னைப் பற்றுமாறு, அடியனேற்கு அருளிப் பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே ! தேசு உடை விளக்கே ! செழும் சுடர் மூர்த்தீ ! செல்வமே ! சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? paasaveer aRukkum pazamporuL thannai paRRumaaRu adiyaneeRku aruLi puusanai ukanthu en sinthaiyuL pukunthu puungkazal kaaddiya poruLee theesudai viLakkee sezunjsudar muurththii selvamee sivaperumaanee iisanee unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: ஆணவ மலத்தின் ஆணிவேரை அழிக்கும் பழம் பொருளே! உன்னைப் பற்றும் வண்ணம் அடியேனுக்கு அருள் வழங்கினாய். என்னால் செய்யப்படும் பூசைகளுக்கு உவந்து, இடைவிடாது எழுந்தருளி, திருவடிக் காட்சியை அருளும் ஒளியுடைய விளக்கே ! செழுமையான சுடரே வடிவான மூர்த்தியே ! செல்வமே! சிவபெருமானே! ஈசனே! உன்னை இறுகப் பற்றினேன். இனி நீ எழுந்தருளுவது எங்கே? Lord that cuts off all roots of bondage! Lord that ordained me, Thy servitor, to get attached to Thyself! Lord that gladly accepted my rituals, and accepting, entered my mind and revealed unto me Thy sacred bejewelled Feet! Lamp so bright! Thou of the form of an effulgent flame! Oh Lord Civa! Oh Ruler Supreme! I have caught hold of Your holy Feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: பழம் பொருள் என்பதற்குப் பழைய உபாயம் என்றலும் உண்டு. அதாவது ஞானத்தைப் பற்றி நிற்றல். தேசுடை விளக்கே என்றது இறைவனது தனி நிலையையும் செழுஞ்சுடர் மூர்த்தி என்பது அவனது பல அருள் வடிவங்களையும் குறிக்கும். 8. அத்தனே யண்ட ரண்ட மாய்நின்ற வாதியே யாதுமீறில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெரு மானே பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை யல்லையாய் நிற்கு மெத்தனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. அத்தனே! அண்டர் - அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே ! பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்துப் பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும் எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? aththanee aNdar aNdamaay ninRa aathiyee yaathum iiRu illaa siththanee paththar sikkena pidiththa selvamee sivaperumaanee piththanee ellaa uyirumaay thazaiththu pizaiththavai allaiyaay niRkum eththanee unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: அப்பனே! தேவர்களாகவும் அவர்கள் வாழ்கின்ற உலகமாகவும் நின்ற முதல்வனே ! ஒரு சிறிதும் முடிவில்லாத திருவிளையாட்டுக்களை உடையவனே! (அல்லது ஞான வடிவோனே) மெய்யன்பர்கள் இறுகப் பற்றிப்பிடித்த நிலையான செல்வமே ! சிவபெருமானே! பேரன்பு கொண்டவனே (பித்தனே)! எல்லாவுயிர்களிடத்தும் இரண்டறக் கலந்து நின்று அவைகளைத் தழைக்கச் செய்தும், அவற்றின் வேறானவனாய் நிற்கும் மாயம் உடையவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது சொல் ? Thou Sire, primordial Lord, manifest as the canopy of all heavenly galaxies! Thou, the siddha (the mystique) that hath no end whatsoever! Lord Civa, the sacred treasure, so tightly caught hold of by devotees! You are the living germ of all the living creatures and yet distancing Yourself from them as being none of these creatures! You are such a clever imposter. I have Caught hold of Your holy Feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: அண்டமாய் = ஆதாரமான உலகமாய் என்பர். யாதும்= ஒரு சிறிதும். பித்தன் = விருப்பமுடையவன். தழைத்து, பிழைத்து என்பவை, தழைப்பித்து பிழைப்பித்து என்ற பொருளில் வந்தன. 9. பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய வூனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி யுலப்பிலா வானந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம்-புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே ! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? paal ninainthuuddum thaayinum saala parinthu nii paaviyeenudaiya uuninai urukki uL oLi perukki ulappu ilaa aananthamaaya theeninai sorinthu puRam puRam thirintha selvamee sivaperumaanee yaan unai thodarnthu sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தில், அது அழும் முன்னரே பசியறிந்து பால் ஊட்டுகின்ற தாயைக் காட்டிலும் நீ அன்பு மிக்கவன் ஆனாய். தாய் பீரம் பேணிப் பாரந்தாங்கச் செய்வாள். அதாவது, வலிமையை உண்டாக்கி வீரத்தை வளர்ப்பாள். உடற்கொழுப்பால் உள் ஒளியாய அறிவை மழுங்கச் செய்வாள். இறைவனோ உடலை உருக்கி உணர்வைப் பெருக்குகிறான். அழியாத ஆனந்தத்தை அளிக்கிறான். வற்றாத சிவானந்தம் என்னும் தேனைப் பொழிந்தாய். அடியேனைக் காக்கும் பொருட்டுத் தாயைப் போல நான்கு பக்கங்களிலும் என்னைப் பிரியாமல் என் பின்னாலேயே அங்குமிங்குமாக ஓடித்திரிந்த செல்வமே! சிவபெருமானே! உன்னை யான் இடைவிடாது தொடர்ந்து உறுதியாகப் பற்றினேன். இனி நீ எழுந்தருளுவது எங்கு? Oh Lord Civa, my treasure house, that augments the inner light and melts this fleshy frame of me - me, this "sin ridden" me! Thou of kindness far exceeding that of a mother who keeps time, feeding her child with milk at regular intervals! As a child whenever I stray, You followed me here and there and poured down on me the honey of eternal bliss. Now on my turn I am following you closely and continuously and have caught hold of Your holy Feet firmly: hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: மறப்பு நினைப்புடைய தாயினும், மறப்பு நினைப்பில்லாது எப்போதும் உதவும் கடவுளது கருணை பெரிதாதலின், சாலப்பரிந்து என்றார். ஊனினை உருக்கி என்பதற்குப் பிறவியை ஒழித்து என்றும் உரைப்பர். புறம்= இடம். சென்ற இடமெல்லாம் உடன் நின்றுதவுதலின், 'புறம், புறம்திரிந்த' என்றார். 10. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன் னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலா முருக்கி யெளியையா யாண்ட வீசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே யிறப்பொடு மயக்காந் தொடக்கெலா மறுத்தநற் சோதீ இன்பமே யுன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே. புன் புலால் யாக்கை, புரை - புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என் என்பு எலாம் உருக்கி, எளியை ஆய் ஆண்ட ஈசனே ! மாசு இலா மணியே ! துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதீ ! இன்பமே ! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே ? pun pulaal yaakkai purai purai kaniya ponnedum kooyilaa pukunthu en enpu elaam urukki eLiyaiyaay aaNda iisanee maasilaa maNiyee thunpamee piRappee iRappodu mayakkaam thodakku elaam aRuththa naRsoothii inpamee unnai sikkena pidiththeen engku ezuntharuLuvathu iniyee பொ-ரை: இழிந்த புலால் நாற்றம் அடிக்கின்றது என் உடம்பு . அதில் உள்ள துளைகள்தோறும் நெகிழச்செய்தாய். அந்த என் உடம்பைப் பொன்னாலாகிய பெரிய கோயிலாகக்கருதி நீ எழுந்தருளினாய். என் எலும்பனைத்தையும் உருக்கி எளியனாக எழுந்தருளி ஆட்கொண்ட முதல்வனே! குற்றமில்லாத மாணிக்கமே! பிறப்பு, இறப்பு , வாழ்வின் துன்பங்கள், அறியாமை என்பவற்றின் சார்புகள் யாவும் ஒழித்த ஒளி வடிவானவனே! பேரின்பமானவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன்: இனி நீ எங்கு எழுந்தருளுவாய்? Oh Lord, a flawless gem that took (even) my foul physical frame as a lofty golden temple and entered into it making my hair rise in ecstatic delight. Melting all my bones, ruling over me in simplicity and ease! Thou, sacred effulgence that cuts off my tribulations, my births and deaths and all other illusion. Thou, the very embodiment of bliss! I have caught hold of Your holy Feet firmly; hereafter where can You rise and move to shower Your grace! கு-ரை: யாக்கை என்பதைக் கோயிலா என்பதனோடு முடிக்க. துன்பமே என்பதில் ஏகாரம் எண்ணுப் பொருளில் வந்தது. THIRUCHCHITRAMBALAM 38. திருவேசறவு 38. THIRUVESARAVU ( சுட்டறிவொழித்தல் ) Compiled whilst in Thirup-Perun-Thurai திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஏசறவு - நாணம். தமது சிறுமை கருதாது தமக்கு அருள் புரிந்த இறைவனது கருணையின் பெருமையை அப்பொழுது உணராதொழிந்த தம் சிறுமையைக் கருதி வெள்கிப் பாடுதலின், இப்பகுதி 'திருஏசறவு' எனப்பட்டது. 'நாணொணாதது ஓர் நாணம் எய்தி' (தி. 8 திருக்கழுக்குன்றப்பதிகம் பா. 4) என முன்னரும் கூறினார். இதுவும் பத்துத் திருப்பாட்டுக்களை உடையதே. சிறுமையாவது ஏகதேசக் காட்சியால் உலக வயப்பட்டு மயங்குதலேயாகலின், அந்நிலைக்கு வெள்கிப்பாடும் இதற்கு, 'சுட்டறிவொழித்தல்' எனக் குறிப்பு உரைத்தனர் முன்னோர். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுவதும் நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவால் ஆயது. The sub-title (சுட்டறிவு ஒழித்தல்) "the quelling of consciousness', brings to mind, sub decad 3 of decad V - Thiruchchathagam (திருச்சதகம்) which bears a similar caption - சுட்டறுத்தல். A stage is reached where the Saint recognises no aspect of worldly import that can bind him on to material entities. The main title திருஏசறவு (extirpation of the distinct state) has the connotation of obliterating the distinctive 'ego based' individuality of the soul. Confer similar terms ஏசும் இடம் ஈதோ ? (Thiru Embaavai) ஏசல் இல்லையே (Saint Thirugnaana Sambandar) ஏசல் may be construed into a presumption of superior status on the part of the self and blaming others for any shortcomings. Our Saint is in no mood to shift blame onto others nor claim credit to himself. He abstains from cavil and owns responsibility for all his transgressions and inequities, abjuring any temptation to hold himself in any superior light. Despite all these, the good Lord was pleased to confer a unique state of Bliss on him and thus redeem him from the three pernicious afflictions - Aanavam (Ego), Kanmam (Worldly deeds) and Maayai (Illusion). In this decad, the Saint attributes his elevation to the high state of bliss, purely to the grace of the Lord and wonders how he, an ordinary soul, got this unique gift of salvation from Lord Civan; the universal master, the primordial Chief of all men and all gods alike. 38.1 இரும்புதரு மனத்தேனை யீர்த்தீர்த்தெ னென்புருக்கிக் கரும்புதரு சுவையெனக்குக் காட்டினையுன் கழலிணைகள் ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி கரும்பு தருசுவை எனக்குக் காட்டினை உன் கழல்-இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கியவாறு அன்றே, உன் பேர்-அருளே ! irumpu tharu manaththeenai iirththu iirththu en enpu urukki karumpu tharu suvai enakku kaaddinai unkazal iNaikaL orungku thirai ulavu sadai udaiyaanee narikaL ellaam perungkuthirai aakkiyavaaRu anRee un peeraruLee பொ-ரை: அலைகளையுடைய கங்கையாறானது ஒரு சேர உலாவி வருகின்ற திருச்சடையை உடைய எம்பெருமானே! இரும்பையொத்த மனத்தை உடைய அடியேனை இழுத்திழுத்து என் எலும்பையும் உருகச் செய்தாய். நினது திருவடிகள் இரண்டிலும் ஊறுகின்ற கரும்பை ஒத்த சுவையினை எனக்குக் காண்பித்து அருளினை. நரிகள் அனைத்தையும் பெரிய குதிரைகளாக்கிய வகை உனது பேரருளே அன்றோ ? (தகாத நரியைத் தகுதி வாய்ந்த பரியாக்கியது போலக் கனியாத மனத்தைக் கனிய வைத்தாய் என்பதாம்) Drawing in, and drawing in every now and then this hard-minded iron-like me towards Thee and causing my bones to melt in devotion, Thou revealed unto me Thy twin jewelled Feet of sugarcane sweetness. Thou of matted hair, with billowy waters flowing everywhere! Thou that transformed puny jackals into mighty steeds (for my sake). Is not this transformation an act of supreme grace? Note: An obvious reference to the well known episode enacted at Thiru Aalavaai, the Capital City of the Paandiyan Kings in support of St.Maanikkavaachakar who was commissioned to procure horses for augmenting the cavalry brigade. There is however another view point regarding this high drama, - of jackals and horses - which are held to be metaphorical reference to the astounding prowess of Lord Civa who is ever engaged in elevating little creatures (ex. Jackals) to higher status (ex. Large Stallions). Saivait literature has many parallel anecdotes that hold an inner meaning. Confer in this connection Thiru Mandiram - முப்புரம் என்பது மும்மல காரியம் - The burning of the three forts is verily the destruction of the three pernicious afflictions-ஆணவம் (Ego), கன்மம் (worldly deeds) and மாயை (Illusion) (See Stories Nos. 50 and 86). கு-ரை: இரும்பு = இரும்பின் தன்மை , எளிதில் உருகாமை. கங்கை சடையில் அடங்கினமையால், 'ஒருங்கு திரை' என்றார். ஒருங்கு= அடங்கு. அன்றே என்பதைப் 'பேரருள்' என்பதனோடு சேர்த்துப் பேரருளல்லவா என்று கொள்க. அன்றே, என்பதை, ஆக்கியவாறு என்பதனோடு இயைத்து, அந்நாளில் ஆக்கியவாறு என்றும் உரைப்பர். 2. பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் னாளானார்க் குண்ணார்ந்த வாரமுதே யுடையானே யடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாவென்னக் கண்ணார வுய்ந்தவா றன்றேயுன் கழல்கண்டே. பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ, 'வா' என்னக் கண் ஆர உய்ந்தவாறு அன்றே, உன் கழல் கண்டே! paN aarntha mozimangkai pangkaa nin aaLaanaarkku uNaarntha aaramuthee udaiyaanee adiyeenai maNNaarntha piRappu aRuththiddu aaLvaay nii vaa enna kaNNaara uynthavaaRu anRee un kazal kaNdee பொ-ரை: இசை போன்ற இனிய மொழிகளை உடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனே! உன் அடிமையானவர்கள் நுகர்வதற்குரிய, நிறைந்த, கிடைத்தற்கரிய அமுதமே! எம்மை ஆளாக உடையவனே ! இம்மண்ணுலகிற் பொருந்திய மனித்தப் பிறவியைப் போக்கி அடியேனை ஆண்டருள்பவனே! நீ என்னை 'வா'வென்று சொல்லி அழைத்து (வந்து) நீ காட்டிய திருவடியைக் கண்ணாரக் கண்டல்லவா நான் வாழும் நிலை ஏற்பட்டது. Thou, sharing Thy physical frame with goddess Uma Devi of elegant speech. Thou rare ambrosia to be consumed by all Thy vassals! Oh my Chief, do take me, Thy devotee, and accept me, cutting off my earthly moorings! Even as Thou called out to me, I attained redemption at Thy jewel-bedecked Feet, Feet that I witnessed with my very eyes in full measure. Oh, what wonder the manner of this salvation! கு-ரை: உண்ணார்ந்த= உண் + ஆர்ந்த, நுகரும்படி நிறைந்த, கண்ணார என்பதை உன் கழல்கண்டேனை என்பதனோடு முடிக்க. உன் திருவடியைக் கண்டுதானே நான் வாழ்ந்தேன். நீ ஆண்ட காலத்திற் போலவே, இன்று முதல் திருவடியைக் காட்ட வேண்டும் என்று குறித்தவாறு. 3. ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னு மருநரகில் ஆர்தமரு மின்றியே யழுந்துவேற் காவாவென் றோதமலி நஞ்சுண்ட வுடையானே யடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேயெம் பரம்பரனே. ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு என்னும் அருநரகில் ஆர் தமரும் இன்றியே, அழுந்து வேற்கு, 'ஆ! ஆ!' என்று ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன் பாத மலர் காட்டியவாறு அன்றே, எம் பரம் பரனே ! aatham iliyaan piRappu iRappu ennum arunarakil aarthamarum inRiyee azunthuveeRku aa aa enRu ootham mali nanjsuNda udaiyaanee adiyeeRku un paathamalar kaaddiyavaaRu anRee em paramparanee பொ-ரை: பெரிய கடலினின்றும் எழுந்த விடத்தை உண்டதனால் ஏற்பட்ட கருத்த கழுத்தை உடையவனே! எமது பெருமை மிக்க பெரியோனே ! ஆதரவில்லாதவனாய், பிறப்பும் இறப்புமாகிற கடத்தற்கு அரிய நரகில், உறவினர் யாரும் உதவுவதற்கில்லாமல் கிடந்து அழுந்தும் இயல்புடையவன் யான். எனக்கு 'ஐயோ' என இரங்கியருளி, உன் திருவடிக் கமலங்களைக் காட்டி ஆட்கொண்ட விதமன்றோ யானடைந்த பேறு. I, this friendless and forlorn one, plunging into the infernal hell of repeated cycles of births and deaths, having none to call my own! Unto me Thou revealed Thy flowery Feet , Oh Chief that consumed the venom of the ocean, amidst loud cries for help (from the devas and the asuraas)! Is this not great wonder, Oh my Lord of the wide expanse above! கு-ரை: ஆதம் = ஆதரவு, அழுந்துவேற்கு அடியேற்கு என்பதனோடு முடிக்க. ஓதம் = கடல், மலி= மிக்கெழுதல். அன்றே. அசை 4. பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே யடியேனை யுய்யக்கொண் டெச்சத்தார் சிறுதெய்வ மேத்தாதே யச்சோவென் சித்தத்தா றுய்ந்தவா றன்றேயுன் றிறநினைந்தே. பச்சைத் தால் அரவு ஆட்டீ ! படர் சடையாய் ! பாத மலர் உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக் கொண்டு, எச்சத்து-ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என் சித்தத்தாறு உய்ந்தவாறு அன்றே, உன் திறம் நினைந்தே ! passaiththaal aravu aaddii padar sadaiyaay paathamalar ussaththaar perumanee adiyeenai uyyakkoNdu essaththaar siRutheyvam eeththaathee assoo en siththaththu aaRu uynthavaaRu anRee un thiRam ninainthee பொ-ரை: பசுமையான நாவினையுடைய பாம்பை ஆட்டியவனே ! படர்ந்த சடையை உடையவனே! உன் திருவடி மலரைக் சூடியதால் உயர்ந்த அடியவர்களுக்குப் பெருமானே! என் மனம் போன வழியில் குற்றம் பொருந்திய சிறு தெய்வங்களை நான் பணியாத வண்ணம் என்னை ஆட்கொண்டாய். அந்த அருள்திறங்களை எண்ணி அந்தோ அடியேன் உய்ந்த வகையன்றோ எனக்குப் பெரு வியப்புத் தருகிறது. Lord with spreading matted hair, Charmer of the soft-tongued cobras! Chief of those who hold Thy flowery Feet on their heads! Thou redeemed me, Thy vassal, and prevented me from worshipping petty gods adored by those that suffer from many infirmities. What great wonder, I have been enabled to rise up and go over unto Thee, much as I yearned for, in contemplation of Thy glories! கு-ரை: தால் = தாலு = (வடமொழி) நாக்கு. இறைவன் பாம்பினைக் கச்சாக உடையவன். திருப்புறம்பயத்தில் பாம்பாட்டுவானாக விடந்தீர்த்த கதை முற்கூறப்பட்டது. உய்யக் கொண்டு = உய்யக் கொள்ள, எச்சத்தார்= எச்சத்து + ஆர். எச்சம்= குறை, ஆர்= நிறைந்த, சித்தத்தாறு= சித்தத்து + ஆறு= நினைவின் முறை. அது இறைவன் ஒருவனையே நினைதலாகிய முறை. 5. கற்றறியேன் கலைஞானங் கசிந்துருகே னாயிடினும் மற்றறியேன் பிற தெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேனெம் பெருமானே யடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே கற்று அறியேன் கலை-ஞானம்; கசிந்து உருகேன்: ஆயிடினும் மற்று அறியேன் பிறதெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து உற்று, இறுமாந்து இருந்தேன், எம்பெருமானே ! அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடுமாறு அன்றே, நின் பொன் அருளே ! kaRRaRiyeen kalainjaanam kasinthu urukeen aayidinum maRRaRiyeen piRatheyvam vaakku iyalaal vaarkazal vanthu uRRu iRumaanthu iruntheen emperumaanee adiyeeRku poRRavisu naaykku idumaaRu anRee nin pon aruLee பொ-ரை: சிவாகமக் கலைஞானங்களைக் கற்றறியேன். உன்பால் உள்ளம் வைத்துக் கசிந்து உருகேன். ஆயினும் மற்ற தெய்வங்களை அறிய மாட்டேன். நின் உபதேச மொழிகளைத் துணைக்கொண்டு உனது நீண்ட கழல்களைச் சார்ந்து இறுமாப்புற்றேன். எம் பெருமானே! நின் பொன்னான திருவடிகளை அடியேனுக்கு அருளியது பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் நாயை இருத்தியது போலாகும். Is not the showering of Thy effulgent grace on me, Thy vassal, like the building of a precious podium for a mere cur? I have not acquired knowledge of scriptures. Nor do I melt at heart and flow down in intense devotion. And yet, Oh my Master, I have no words of praise for any other gods but Thee, thanks to Thy exhortation, as a result whereof, Oh Chief, I sat in a state of stupor under Thy long anklet Feet! கு-ரை: வாக்கு= இறைவன் உபதேசமொழி . எம்பெருமானே என்பதை முதலிற் கொள்க. 6. பஞ்சாய வடிமடவார் கடைக்கண்ணா லிடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவே னின்னருளா லுய்ஞ்சேனெம் பெருமானே யுடையானே யடியேனை யஞ்சேலென் றாண்டவா றன்றேயம் பலத்தமுதே. பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால் உய்ஞ்சேன்; எம் பெருமானே! உடையானே! அடியேனை 'அஞ்சேல்' என்று ஆண்டவாறு அன்றே, அம்பலத்து அமுதே ! panjsaaya adimadavaar kadaikaNNaal idarppaddu nanjsaaya thuyar kuura nadungkuveen nin aruLaal uynjseen em perumaanee udaiyaanee adiyeenai anjseel enRu aaNdavaaRu anRee ampalaththu amuthee பொ-ரை: எங்கள் பெரியோனே! நாதனே! அம்பலத்தில் ஆடுகின்ற அமுதமே! பஞ்சுபோல் மெல்லிய பாதங்களையுடைய மாதரது கடைக்கண் பார்வையால் இடர்ப்பட்டு நஞ்சினை உண்பதால் வரும் துன்ப மிகுதியில் அஞ்சி நடுங்கும் இயல்பினன் ஆயினேன். ஆயினும் நின் அருளால் தப்பி உய்வடைந்தேன். அடியேனை அஞ்சாதே என்று ஆட்கொண்ட வகைதான் என்னே? I am wont to suffer agony caused by the side-glances of soft-footed damsels, and shudder in devastating grief. By Thy grace, Oh my Chief, my Lord, I got redeemed from all these earthly sorrows. Thou, ambrosia, of the public hall, did not this happen simply because of Thy indulgence in accommodating me as Thy vassal and ordering me to shed all fear? கு-ரை: பஞ்சாய என்பதற்குச் 'செம்பஞ்சூட்டிய' என்றுமுரைப்பர். கூர = மிக. நஞ்சாய = நஞ்சுத்தன்மை உள்ள. 7. என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கு மறியவொண்ணாத் தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமா னன்பானீ யகநெகவே புகுந்தருளி யாட்கொண்ட தென்பாலே நோக்கியவா றன்றேயெம் பெருமானே. என் பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா, தென் பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான், அன்பால், நீ, அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது , என்பாலே நோக்கியவாறு அன்றே, எம்பெருமானே! enpaalai piRappu aRuththu ingku imaiyavarkkum aRiya oNNaath thenpaalai thiruperunthuRai uRaiyum sivaperumaan anpaal nii akam nekavee pukuntharuLi aadkoNdathu enpaalee nookkiyavaaRu anRee emperumaanee பொ-ரை: பாலை நிலத்திற்கு ஒப்பான பசையற்ற என் பிறவியைப் போக்கினாய். தேவரும் அறிய ஒண்ணாத சிவபெருமானே ! தென் பாலுள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியவனே! நீ என் மீது வைத்த அன்பால் என் மனம் நெகிழ்ந்தேன். அதனுட்புகுந்து அடியேனை ஆட்கொண்ட அருமையான செயல் நீ என் பால் கருணைத் திருநோக்கு செலுத்திய முறை அன்றோ ? Oh Lord Civa of the southern Perunthurai shrine, that out of kindness towards me, cut off my earthly births! Thou beyond the comprehension, even of the sky-borne gods! Is not this kind favour due to Thy indulgence in looking at me with compassion, entering into me and causing my heart to melt in ecstasy, Oh my Chief? கு-ரை: பாலை = இடத்தே, ஐ, சாரியை. அன்பால்= தயவால்: அருளால். 8. மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா வோத்தானே பொருளானே யுண்மையுமா யின்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினாற் பேர்த்தேநீ யாண்டவா றன்றேயெம் பெருமானே மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா ஓத்தானே, பொருளானே, உண்மையும் ஆய், இன்மையும் ஆய் பூத்தானே, புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால் பேர்த்தே, நீ ஆண்டவாறு அன்றே, எம்பெருமானே ! muuththaanee muuvaatha muthalaanee mudivu illaa ooththaanee poruLaanee uNmaiyumaay inmaiyumaay puuththaanee pukunthu ingku puraLveenai karuNaiyinaal peerththee nii aaNdavaaRu anRee emperumaanee பொ-ரை: காலத்திற்கும் அதற்குட்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் மூத்தவனே ! மூப்படையாத முதற் பொருளானவனே! அழிவற்ற வேத வடிவானவனே! அவ்வேதங்களின் பொருளும் ஆனவனே ! என்றும் அழியாது நிலைத்த பொருளாகியும், தோன்றி நின்று அழியக்கூடிய பொருளாகியும் நிற்கின்றவனே! உலக வாழ்வில் உழலும் என்னை நின் திருவருளினால் அந்நிலை நீக்கி, ஆண்ட முறைதான் என்னே? Lord primordial, foremost of all entities, ageless one! Oh, the infinite flow of the four fold scriptures. Thou the essence of all! Thou, that blossoms forth as "The Real" as well as "The Non Real"! Out of kindness Thou entered into me, - me that have been loitering around here, and transformed me over, again accepting me as Thy vassal! Is this not Thy (Unique) way of showering grace, Oh Lord? கு-ரை: ஓத்து = ஓதப் படுவது; நூல் ஓத்தானே, பொருளானே, என்பதற்குச் சொல்லுலகமும் பொருளுலகமும் ஆனவனே என்றுமுரைப்ப; பேர்த்தே, மீண்டுமெனவு முரைப்ப. 9. மருவினிய மலர்ப்பாத மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறு மிகவலறிச் சிவபெருமா னென்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா றருளெனக்கிங் கிடைமருதே யிடங்கொண்ட வம்மானே. மருவு இனிய மலர்ப்பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக, தெருவு தொறும் மிக அலறிச் 'சிவபெருமான்' என்று ஏத்தி, பருகிய நின்பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு அருள் எனக்கு, இங்கு-இடைமருதே இடம் கொண்ட அம்மானே ! maruvu iniya malarppaatham manaththil vaLarnthu uL uruka theruvu thoRum mika alaRi sivaperumaan enRu eeththi parukiya nin parang karuNai thadangkadalil padivaamaaRu aruL enakku ingku idaimaruthee idangkoNda ammaanee பொ-ரை: திருவிடைமருதூர் என்கின்ற ஊரில் எழுந்தருளியுள்ள மகாலிங்க மூர்த்தியே! அடைதற்கினிய மலர் போன்ற நின் திருவடிகள் என் உள்ளத்தில் வளர, அதனால் என் உள்ளம் உருகினேன். அங்ஙனம் உருகிய நிலையில் தெருக்கள் தோறும் “சிவ சிவ” என்று அலறிக்கொண்டு சிவபெருமானே என்று போற்றித் துதித்தேன். அவ்வாறு துதித்தும் உன் அருளைப் பருகக்கிடைத்ததே தவிர தோயக் கிடைக்கவில்லை. எனவே, அங்ஙனம் கருணைக் கடலிலேயே மூழ்கித் திளைக்கும்படி அருள் புரிவாயாக. With Thy 'Sweet-to-attain' flowery Feet spreading out in mind, causing me to melt at heart I ran about in the streets chanting aloud in trepidation, "Oh Lord Civa" and paid obeisance to Thee. That I may now merge into Thy expansive sea of kindness which I drank before, pray grant Thou Thy grace here, Oh Lord seated in Idai Marudoor! கு-ரை: உள்ளுருக என்பதற்கு, உயிர்ப்போதங் கெட எனவும் உரைப்பர். பருகிய= பருக, செய்யிய என்னும் வினையெச்சம். 10. நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன் தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் றானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தா னூனாரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே. நானேயோ தவம் செய்தேன்? 'சிவாய நம' எனப் பெற்றேன் தேன் ஆய் இன் அமுதமும் ஆய்த் தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான் ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே! naaneeyoo thavam seytheen sivaayanama enappeRReen theenaay in amuthamumaay thiththikkum sivaperumaan thaanee vanthu enathu uLLam pukunthu adiyeeRku aruLseythaan uun aarum uyir vaazkkai oRuththu anRee veRuththidavee பொ-ரை: நானோ தவம் புரிந்தேன்? சிவாயநம எனும் திருவைந்தெழுத்தைச் செபிக்கப் பெற்றேன். தேனாகவும், இன்னமுதமாகவும் தித்திக்கும் சிவபெருமான் தானாகவே எளிவந்தருளி என் மனதில் புகுந்து அடியேனுக்கு அருள் வழங்கினான். புலால் நிறைந்த உடலில் உயிர் வாழ்ந்திருத்தலைக் கண்டித்து அதனை வெறுத்திருக்கும்படி அடியேனுக்கு அருள் செய்தான். Was it I, that had performed some penance (before)? I had the chance to chant the holy pentad "Civaya Nama" It is Lord Civa alone who tastes sweet like honey and rare elixir, that came over here by Himself and, entering my mind, showered grace on me, His servitor, that I may be impelled to detest and abhor this flesh-ridden earthly existence. கு-ரை: நமசிவாய என்பது தூல பஞ்சாட்சரம், போகமளிப்பது. சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம்; வீடளிப்பது. THIRUCHCHITRAMBALAM 39. திருப்புலம்பல் 39. THIRUP-PULAMBAL ( சிவானந்த முதிர்வு ) The Sacred Lament திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டது The Maturity of Rapture கொச்சகக் கலிப்பா Compiled whilst in Thiru-Aaroor திருச்சிற்றம்பலம் புலம்பல் என்பது, இங்கு அன்பினால் அழுதலைக் குறித்தது. "அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரிது அவன் திருவடியிணை இரண்டும்" (தி.7. ப.58 பா.10) என்று அருளியதும் காண்க. அன்பு மீதூர மீதூரச் சிவானந்தம் மேன்மேல் விளையுமாகலின், இதற்கு 'சிவானந்த முதிர்வு' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இதன் முதற்பாட்டில், "ஓங்கெயில் சூழ் திருவாரூர் உடையானே” என வருதல் காண்க. இரண்டாம் திருப்பாட்டில் திருப்பெருந்துறையும், இறுதித் திருப்பாட்டில் திருக்குற்றாலமும் குறிக்கப்படுகின்றன. பின்னர் வரும் திருப்படையெழுச்சிக்கு முன் நிற்கற்பாலதாய இது, பின்னர் ஏடு படித்தோரால் இவ்விடத்து வைத்துப் பிறழக் கோக்கப்பட்டது போலும்! இதுவும் முன்னையது போலக் கொச்சகக் கலிப்பாவினால் ஆயது. This chapter consists of only three verses. Perhaps the other seven poems were lost. Saint Maanikkavaachakar assumes his own self that he will praise none but Lord Civan in his lifetime. He has seen Him and enjoyed the sweetness in His presence. He conveys the enjoyment he had of Civan's grace in this chapter. 39.1. பூங்கமலத் தயனொடுமா லறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி வோங்கெயில்சூழ் திருவாரூ ருடையானே யடியேனின் பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே பூம்-கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே, கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண்-நீறு ஆடீ, ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன் நின் பூம்-கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே! puungkamalaththu ayanodu maal aRiyaatha neRiyaanee koongkalar seer kuvimulaiyaaL kuuRaa veNNiiRu aadii oongkeyil suuz thiruvaaruur udaiyaanee adiyeen nin puungkazalkaL avai allaathu evaiyaathum pukazeenee. பொ-ரை: அழகிய தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமனும் திருமாலும் அறிய முடியாத சிவஞான நெறியால் மட்டும் அடையப் பெறும் சிவபிரானே ! கோங்கம்பூவை ஒத்த தனத்தையுடைய உமையம்மை பாகனே ! வெண்மையான திருநீற்றை அணிந்தவனே ! அடியேன் நின் மலரடிகளையன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழ மாட்டேன். I will praise only Your flowery Feet. Oh! white-ashed one, who are concorporate with one who has sharp breasts resembling the Kongu flowers. Oh! owner of Thiru-Aaroor, begirt with lofty wall.. Thy ways are mysterious even to lotus-born Brahma and Thirumaal. I, your slave, will praise not but Thy flower-like Feet. கு-ரை: திருமாலுக்கும் பிரமனுக்கும் கடவுளை அறியும் சிவஞானம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமையால் அவர்கள் அறியாத நெறியான், என்றார். கோங்கின் அரும்பை நகிலுக்கு உவமையாகக் கூறுவர். அலர் என்பது விரியும் பருவத்து அரும்பு. வெண்ணீறு ஆடி என்பதற்குத் திருவெண்ணீற்றில் முழுகினவனே என்றலும் உண்டு. 2. சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையா யடியேனா னுடையானே யுனையல்லா துறுதுணைமற் றறியேனே. சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ-இலைச்சூலப் படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை விடையானே, விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான், உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே! sadaiyaaneee thazalaadii thayangku muuvilaissuulap padaiyaanee paranjsoothii pasupathii mazaveLLai vidaiyaanee viripozilsuuz perunthuRaiyaay adiyeen naan udaiyaanee unaiyallaathu uRuthuNai maRRu aRiyeenee பொ-ரை: சடையை உடையவனே! தழலின்கண் கூத்தியற்றுபவனே (சருவ சங்கார காலத்து எல்லாவற்றையும் அழித்து அந்தத் தழலைக் கையில் ஏந்தி நடனம் ஆடுபவனே) ! மூன்று இலைபோல் கிளைகளையுடைய சூலாயுதம் உடையவனே! மேலான அறிவொளியே ! பசுக்களாகிய உயிர்களுக்குத் தலைவனே! வெண்ணிறமான காளையை வாகனமாக உடையவனே! விரிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே! என்னை உடையவனே! உன்னை அல்லாமல் வேறு உற்ற துணையாக எவரையும் நான் அறியமாட்டேன். I do not know any other help than yours. Oh! Fire-wielder with braided locks and glittering trident at hand. Oh! Light Supreme, Lord of all souls, Owner of the young white bull and residing in Perunthurai girt by spreading groves. Oh! My Master, I know not other than Thee of no surer succour. கு-ரை: அக்கினியின் இதயத்தில் இருப்பவன் சிவபிரான். ஆதலின், தழலாடீ என்றார். தயங்கு= விளங்கு. பசு = கட்டப்பட்ட உயிர்கள். உறுதுணை = இடருற்றகாலைத் துணை, பெரிய துணை எனவுங் கூறுவர். 3. உற்றாரை யான்வேண்டே னூர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே உற்றாரை யான் வேண்டேன்; ஊர்வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போலக் கசிந்து, உருக வேண்டுவனே ! uRRaarai yaan veeNdeen uur veeNdeen peer veeNdeen kaRRaarai yaan veeNdeen kaRpanavum ini amaiyum kuRRaalaththu amarnthu uRaiyung kuuththaa un kurai kazaRkee kaRRaavin manam poolak kasinthuruka veeNduvanee பொ-ரை: திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கும் கூத்தப் பெருமானே! உறவினர்களை யான் விரும்ப மாட்டேன். ஊரும் பேரும் எனக்கு வேண்டுவன அல்ல. திருவடி ஞானம் பெறாத கலைஞானம் உடையவரை யான் விரும்ப மாட்டேன். கற்க வேண்டியனவும் இனிப் போதும். கழல்கள் ஒலிக்கின்ற உனது திருவடிக்கே கன்றோடு கூடிய பசு, கன்றையே எண்ணிக் கசிவது போல எனது மனம் கனிந்து உருகுதலையே உன்பால் யான் வேண்டுகின்றேன். I want only you and need no other wealth. Oh dancer abiding in Kuttraalam! I need no kith and kin; Neither place nor name do I desire, no learned ones do I seek; Let my own learning suffice hence. But I do crave that my longing soul may melt for your anklet-girt Feet, Like a cow's heart for its calf. கு-ரை: கற்பன எல்லாம், சுட்டறிவு உடையார்க்கே பயன்படுவன. அகண்ட அறிவுடையார்க்குச் சுட்டறிவினால் பெறும் கலைஞானம் புதிது புதிதாக வேண்டியது இன்மையின் கற்பனவும் இனி அமையும் என்றார். கற்றா = கன்று + ஆ= கன்றினையுடைய பசு. பசு கன்றின்பால் அன்புடைமையாற் பால் சுரத்தலின், அதனை எடுத்து விதந்தனர். THIRUCHCHITRAMBALAM 40. குலாப்பத்து 40. KULAP-PATHTHU (அனுபவமிடையீடுபடாமை ) The Decad of Bliss தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் குலாப்பத்து - தாம் பெற்ற பேற்றைக் கொண்டாடிக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி. ஒவ்வொரு பாடலிலும், குலாவென்னும் சொல் வருதலும் காணத்தக்கது. இதனுள் அடிகள், 'சிவப் பேற்றைப் பெற்றுவிட்டேன்' எனக் கூறுதலின், இதற்கு 'அநுபவம் இடையீடு படாமை' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இடையீடு - தடை. இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது. இதுவும் கொச்சகக் கலிப்பாவினால் ஆயது. The Saint feels extremely glad that the good Lord has bestowed the highest gift of blissful communion on Him, condoning his many wayward acts in this world. And, He rejoices at this supreme generosity which he attributes simply to the benign grace of Lord Civan. 'Is this not due to the good Lord, absorbing me into His fold in His own characteristic manner', asks Saint in verse after verse in this decad. Such is the ecstatic delight under the stewardship of the Lord of Thillai, that Saint Maanikkavaachakar has come to experience at this stage in his earthly sojourn. 40.1. ஓடுங் கவந்தியுமே யுறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே யெனத்தெளிந்து கூடு முயிருங் குமண்டையிடக் குனித்தடியே னாடுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே 'ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு உள் கசிந்து; தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து ; கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன் ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே oodum kavanthiyumee uRavu enRiddu uLkasinthu theedum poruLum sivan kazalee enaththeLinthu kuudum uyirum kumaNdaiyida kuniththu adiyeen aadum kulaath thillai aaNdaanai koNdanRee பொ-ரை: அயலார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்ணத் திருவோடும், பிறர்கண்டு நாணாதிருக்கக் கோவணமும் உறவாகக் கொண்டு மனம் கசிந்தேன். வேறு எதனையும் எவரையும் உறவாகக் கொண்டிலேன். உள்ளம் உருகித் தேடுகின்ற பொருள் சிவனது திருவடியே என்று தெளிந்தேன். விளங்குகின்ற தில்லை ஆண்டவனைப் பற்றிக் கொண்டு என் உயிரும் அதன் கூடாகிய உடலும் ஆனந்தத்தில் நிறைந்து யானும் வளைந்து கூத்தாடுவேன். Verily do I dance in ecstasy imbibing the spirit of the Lord of Thillai. This, I do with my body and soul stirred in a mood of trepidation, heart melting in devotion, taking (Kamandal) bowl and the loin cloth alone as worthy kin, firm in the conviction that only Lord Civan's bejewelled Feet are to be sought after! Is not such ecstatic delight the result of clinging on to the Lord of Thillai who absorbed me into His fold? கு-ரை: குமண்டையிட = நிறைவினால் அசைந்திட; தெவிட்ட. 2. துடியே ரிடுகிடைத் தூய்மொழியார் தோணசையாற் செடியேறு தீமைக ளெத்தனையுஞ் செய்திடினு முடியேன் பிறவே னெனைத்தனதாண் முயங்குவித்த வடியேன் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே துடி ஏர் இடுகு இடைத்தூய் மொழியார் தோள் நசையால் செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே thudi eer idukidai thuuymoziyaar thooL nasaiyaal sedi eeRu thiimaikaL eththanaiyum seythidinum mudiyeen piRaveen ennaiththana thaaL muyangkuviththa adiyeen kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: என்னைத் தனது திருவடியின் கண் கலப்பித்து இன்புறச் செய்த விளக்கமிக்க தில்லையாண்டவனை அடியேன் பற்றினேன். ஆதலால் உடுக்கையொத்த இடையும் தூயமொழியும் உடைய மாதர்களின் தோள்கள் மீதுள்ள விருப்பத்தால் பாவமிகுவதற்குக் காரணமான தீச்செயல்கள் எத்தனை முன்பு செய்திருந்தாலும் இனி நான் பிறக்கவும் மாட்டேன், இறக்கவும் மாட்டேன். Even if I do countless deeds of evil lured by lascivious intent towards sweet talking,slim-waisted damsels, I am now ordained not to die nor take any future birth. Is not such a state of supreme bliss, due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: ஞானிகளுக்கு நேரும் பிராரத்த வினைகளை இறைவன் ஏற்றுக் கொள்வான் ஆதலின் தனக்கு மேற்பிறவிக்கு இடமில்லை என்பது குறிப்பித்தார். 3. என்புள் ளுருக்கி யிருவினையை யீடழித்துத் துன்பங் களைந்து துவந்துவங்க டூய்மை செய்து முன்புள்ள வற்றை முழுதழிய வுள்புகுந்த வன்பின் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து, முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே enpu uL urukki iruvinaiyai iidu aziththu thunpam kaLainthu thuvanthuvangkaL thuuymai seythu munpu uLLavaRRai muzuthu aziya uLpukuntha anpin kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: அடியேன் சிவன்பால் செய்த அன்பு காரணமாக அவன் சஞ்சிதம், ஆகாமியம் இருவினைகள் மிகாதவாறு வலியடக்கினான். அவற்றால் வரும் துன்பங்களையும் களைந்தான். மாயா, கன்ம, மாயேயங்களைப் பிடுங்குவது போல உயிரைவிட்டு அகலச்செய்து எனது ஆன்மாவைச் சுத்த ஆன்மாவாகச் செய்தான். அவன் என் உள்ளத்தில் புகுந்து அநாதியே பற்றியுள்ள மலங்கள் அனைத்தையும் முழுதும் அழித்தான். இத்தனை பேரருள் செய்த தில்லையாண்டானை அன்றே நான் குலாவுதல் கொண்டேன். Causing my bones to melt (in devotion) stifling the impact of the duo of right and wrong deeds, ending all trials and tribulations, cleaning out the result of the commission and omission, He destroyed completely all my past evil and entered into me in all His grace. Is not this state, due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: என்பின் உட்பகுதியும் அன்பினால் உருகுதல் பற்றி 'என்புள்ளுருக்கி' என்றார். ஈடழித்து = இருவினைப் பயனையும் சமமாக அழித்து எனவும் உரைப்பர். துவந்துவம் = விருப்பு வெறுப்பு, போற்றல் இகழ்தல், தழுவல், அடித்தல் என்பனபோல எதிரிடையாய இருவகைச் செயல்களும் குணங்களுமாம். முன்பு எதிர்காலம். அன்பின் என்பதில் இன்சாரியை . அன்பு என்பதை ஆண்டானை என்பதோடு முடிக்க. 4. குறியு நெறியுங் குணமுமிலாக் குழாங்கடமைப் பிறியு மனத்தார் பிறிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தி லுருத்தமுதாஞ் சிவபதத்தை யறியுங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே. குறியும், நெறியும் குணமும், இலாக் குழாங்கள்-தமைப் பிறியும் மனத்தார் பிறிவு-அரிய பெற்றியனை; செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ-பதத்தை அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. kuRiyum neRiyum kuNamum ilaak kuzaangkaL thamai piRiyum manaththaar piRivu ariya peRRiyanai seRiyum karuththil uruththa muthaam sivapathaththai aRiyum kulaaththillai aaNdaanai koNdanRee. பொ-ரை: சிவபெருமான் சடை உடையவன், செம்மேனியன், வெண்ணீற்றன் என்ற அடையாளங்களை (குறிகளை) உடையவன். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை நெறிகள் அவனை அடைவதற்குரிய நெறிகளாகும் . இந்த நெறிகளைச் சார்தற்குரிய ஆன்ம பரிபாகமே குணமாகும். இம்மூன்றும் இல்லாத கூட்டத்தார் அஞ்ஞானத்தை உணர்த்துவார்கள். ஆதலால், மெய்யடியார்கள் இவர்களை விட்டுப் பிரிந்து நிற்பார்கள். இந்த மெய்யடியார்களால் பிரிதற்கரிய தன்மையை உடையவன் இறைவன். இத்தகைய பரிபாகம் உற்ற ஞானிகளை விட்டுப் பிரிய இயலாதவன் இறைவன் ஆகின்றான் (என்ற இரு பொருளையும் உணர்த்துகின்றன). 'பிரிவறியப் பெற்றியன்' என்பதில் நயம் காண்க. மெய்யடியார்கள் இறைவனை விட்டுப் பிரியார்கள்; இறைவன் அவர்களை விட்டுப்பிரிய மாட்டான்). மெய்யடியார்கள் மேலே கூறிய குறிகளும், நெறிகளும், குணங்களும் செறிந்த மனத்தோடு ஞான வடிவாகிய சிவசொரூபத்தை அநுபவிக்கும்போது அமுதமாகிய சிவபதத்தைக் கண்டுகளித்து உண்பது போல் ஓர் அநுபவம் பெறுவர். எல்லாவற்றையும் அறிகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனுமாகிய இறைவனை அடியேன் அவ்வாறு பற்றிக் கொண்டு பேரின்பத்தை அநுபவித்தேன். Those that are inclined to get away from groups of people who have neither virtue nor distinction nor any ethical cores or symbols, will always be with the Lord and never depart from Him. Such is the nature of Lord Civan who ensures the continuity of His disciples in everlasting comradeship with Him! He takes shape in the minds of His intense devotees. Such a state beneath the feet of Lord Civan is verily one of supreme bliss. Is not this state, due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: குறி என்றதற்குப் பெயர் என்றுங் கூறுப. நெறி என்பது சமயவழி . குழாங்கள் என்பதற்குச் சுற்றம் என்றும் தொல் பசுக் குழாங்கள் எனவும் உரைப்பர். பெற்றி = தன்மை. செறியும் = (அன்பு) மிகும். உருத்து= உருவோடு தோன்றி. 5. பேருங் குணமும் பிணிப்புறுமிப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி யாருங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே பேரும் குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி-தனைத் தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம் சேரும் வகையால், சிவன் கருணைத்தேன் பருகி ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. peerum kuNamum piNippu uRum ippiRavithanai thuurum parisu thurisu aRuththu thoNdar ellaam seerum vakaiyaal sivan karuNai theenparuki aarum kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: பெயராலும் குணங்களாலும் கட்டப்படுகின்ற இப்பிறவி தூர்ந்து போகும் வண்ணம் குற்றங்களைப் போக்குகிறவன் இறைவன். மெய்யடியார்கள் அனைவரும் சிவன் திருவடி வந்தடையும்படி அவனது அருள் எனும் தேனைப் பருகினேன். தங்குதற்கு இடமாகிய விளக்கமிக்க தில்லை ஆண்டவனை யான் பற்றிக் கொண்டேன். He cut off in totality all future births that have a tendency to get us bonded to name and fame, while in the manner of all true devotees, I consumed the honey of Lord Civan's grace. Is not such an abiding state of Bliss, due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: உடம்பு காரணமாக உயிருக்கு ஒரு பேரும் பல இயல்புகளும் பேசப்படுதலின் பிறவியே அதற்குக் காரணம் என்றார். தூரும் பரிசு= பற்றறக் கழியும் வண்ணம். வகையால்= வகையினைப் பின்பற்றி. ஆரும் என்பதைத் தில்லைக்கு அடையாக்குவாரும் உளர். 6. கொம்பி லரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே நம்புமென் சிந்தை நணுகும்வண்ண நானணுகு மம்பொன் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே கொம்பில் அரும்பு ஆய்க் குவிமலர் ஆய்க் காய் ஆகி வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே; நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம், நான் அணுகும் அம் பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே kompil arumpaay kuvimalaraay kaayaaki vampu pazuththu udalammaaNdu ingngan pookaamee nampum en sinthai naNukum vaNNam naan aNukum ampon kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: ஒரு மரத்தின் கொம்பில் தோன்றுகின்ற அரும்பு, போதாய் விரிய ஆரம்பித்து மலராய் விரிந்து, காயாய்ப் பின்னர் பழமாகி வீணாய்த் தரையில் விழுகின்றது. இம்மாதிரி நான் வீணாக மாண்டு போகாத வண்ணம் இருக்க விரும்புகின்றேன். ஆதலால் என் மனமும் நானும் சிவனை அணுக வேண்டிப் பொன்னாலாகிய அழகிய சிற்றம்பலத்தே ஆடுகின்ற தில்லையாண்டவனைப் பற்றிக் கொண்டேன். Ensuring that my physical frame does not age with time like flower buds in the branches that grow into closed blooms and raw fruit, which then ripen into fresh fruit, eventually to perish and be gone from here! I have conviction that this sorry state of ageing will not come to pass in my case. To get to this position, I approach the Lord of the beauteous golden Thillai. Is not this reality of blissful state, due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: கொம்பு உலகத்திற்கும், அரும்பு, மலர், காய் முதலியன உடம்பின் வளர்ச்சி நிலைகளுக்கும் உவமையாகும். போகாமே, வண்ணம் அணுகும், தில்லை, கொண்டன்றே என முடிக்க. 7. மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் றோணெரிய மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாச மொன்றுமிலோ மெனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே . மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் 'கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக்களித்து, இங்கு அதிர்க்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே mathikkum thiRal udaiya val arakkan thooLneriya mithikkum thiruvadi en thalaimeel viiRRiruppa kathikkum pasupaasam onRum iloom enak kaLiththingku athirkkum kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: எல்லாராலும் புகழ்தற்குரிய வலிமை வாய்ந்த மனவன்மையுடைய இராவணன் கயிலையைத் தூக்க முயன்றபோது அதன்கீழ் அவன் நசுங்கும்படியாக எம்பெருமான் வலதுகால் பெருவிரலின் நகத்தின் நுனியால் ஊன்றினான். அதனால் அவன் பெருமானின் ஆற்றலை உணர்ந்து, ஆணவ மலம் கெட, அகந்தை ஒடுங்கிச் சாமகானம் செய்து இராவணன் என்ற பெயரையும் வாளையும் பெற்று உய்ந்தான். அதுபோல சிவனது திருவடிகள் என் தலைமேல் பொருந்தியதால் நம்மைப் பிணிக்கும் பசுபாச உணர்வுகள் இல்லாதவனாகி மகிழ்ந்து ஆரவாரிக்கும்படித் தில்லையின் கண் உள்ள ஆண்டவனைப் பற்றிக் கொண்டேன். Even as the sacred foot that crushed the shoulders of the much acclaimed valiant asura king Raavanaa rests on my head, I revel in the thought that I will have no 'on coming' bondage for my soul. Such blissful exultation, this! Is this not due to the indulgence of the good Lord of Thillai absorbing me into His fold? Note: The Lord's act of valour in removing the ego of King Raavanaa by crushing him under foot when he attempted, albeit unwittingly, to lift Mount Kailash, is referred to, here. Raavanaa cried out in agony when pressed down by the Lord's feet and received benediction upon His entreaties for mercy (See Story No. 9). கு-ரை: இராவணன் கதை வெளிப்படை. கதிக்கும் = மேற்பட்டு எழும். பசு = உயிரின் தன்னினைவு, பாசம்= மும்மலமாகிய கட்டு. இங்கு = இவ்வுலகில். அதிர்க்கும் = ஆரவாரிக்கும். 8. இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே நடக்குந் திருவடி யென்றலைமே னட்டமையாற் கடக்குந் திறலைவர் கண்டகர்தம் வல்லரட்டை யடக்குங் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால் கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை அடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. idakkum karumuruddu eenappin kaanakaththee nadakkum thiruvadi en thalai meel naddamaiyaal kadakkum thiRal aivar kaNdakar tham vallaraddai adakkum kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: பூமியைத் தோண்டும் இயல்புடைய கரிய வலிய பன்றியின் புறத்தே காட்டகத்தில் அருச்சுனனுக்காக நடந்த திருவடியை என் தலைமேல் நாட்டினான் இறைவன். அதனால் என்னை வெல்லும் திறனுடைய ஐம்பொறிகளாகிய கொடியவர்களது வலிமையான விளையாட்டை அடக்கவல்ல விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனை யான் பற்றிக் கொண்டேன் (32ஆவது கதையைப் பார்க்கவும்). Ever since the Lord planted on my head His sacred Feet, that once walked the forest regions in pursuit of a burrowing black boar, I was able to contain the powerful play of the five senses - the ferocious five that operate with great vigour. Is not such gift of bliss, due to the good Lord of Thillai absorbing me into His fold? Note: This stanza makes reference to the well known episode wherein Lord Civan in the guise of a hunter went after a wild boar which His devotee (Arjunaa) too claimed as his own. Unaware of who the hunter was, he challenged the Lord and found Him 'invincible' in combat. He then realized His identity and fell at His Feet and received benediction (See Story No. 32). கு-ரை: 'கருமுருடு' என்றது பன்றியின் நிறத்தையும், வலிமையையும் குறித்தவாறு. அருச்சுனன் தவத்திற்காக இறைவன் வெளிப்பட்டு அருள் புரியக் கருதிய காலை, இறைவன் வேட்டுவ வடிவம் கொண்டு, மூகாசுரன் என்பவன் கொண்ட பன்றி வடிவத்தின் பின், அதனை ஓட்டிச் சென்றமை பாரதத்திற் காண்க. கண்டகர் = கீழ்மக்கள்; கொடியவர். வல்லாட்டை = வலிமிக்க ஆட்டங்களை. அடக்கும் என்பதை ஆண்டான் என்பதனோடு முடிக்க. 9. பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்றலையா லாட்செய் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே. பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தால் கிழியீடு நேர் பட்டுத் தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால் ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. paazssey viLaavi payan iliyaay kidapeeRku kiizssey thavaththaal kiziyiidu neerpaddu thaaLseyya thaamarai saivanukku en pun thalaiyaal aadsey kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: பாழான வயலை உழுது பயன் பெறாது இருப்பவனாகிய எனக்கு முற்பிறவியில் செய்த தவத்தால் பொற்கிழி போலக் கிடைத்தவன் இறைவன். சிவந்த தாமரை மலர் போலும் திருவடிகளையுடைய ஆதி சைவனாகிய சிவபெருமானுக்கு, என் இழிவான தலையால் அடிமைத் தொழில் செய்ய வேண்டி, விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனாகிய கூத்தப் பெருமானை யான் பற்றிக் கொண்டேன். Much like one toiling in vain over uncultivable barren lands, I have been lying here (for long) without any gainful reward. And yet, by virtue of my past penance, I came by what is a veritable treasure trove indeed. And rendered service to the fair lotus-like Feet of Lord Civan with my base head. Such blissful activity! Is not this due to the good Lord of Thillai absorbing me into His fold? கு-ரை: பாழ்ச் செய் = பாழான வயல். இங்கே பயனில்லாத உடம்பினைக் குறிக்கும். தவத்தால் = நல்வினைப் பயனால். கிழியீடு = புதையல் போல் துணியில் கட்டியிடப்பட்ட நிதி. செய்ய தாமரைத் தாள் என மாறுக. 'ஐயாறதனிற் சைவனாகியும்' என்றபடி இறைவன் திருவையாற்றில் சைவனாக வடிவம் கொண்ட கதைமுன் கூறப்பட்டது. ஆள் = அடிமைத் தொழில். 10. கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தாற் றிருப்பணிகள் செய்வேனுக் கிம்மை தரும்பய னித்தனையு மீங்கொழிக்கு மம்மை குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே. கொம்மை வரிமுலைக் கொம்பு அனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே kommai varimulai kompu anaiyaaL kuuRanukku semmai manaththaal thiruppaNikaL seyveenukku immai tharum payan iththanaiyum iingku ozikkum ammai kulaaththillai aaNdaanai koNdanRee பொ-ரை: திரட்சியும் வனப்பும் கொண்ட தனத்தையுடைய பூங்கொடி போன்ற உமாதேவியாரை ஒரு கூறாக உடைய சிவனுக்கு, நேர்மையான உள்ளத்தோடு பணிவிடை செய்கிறவன் யான். ஆதலால் இப்பிறப்பில் எனக்கு நிகழக்கூடிய வினைப் பயன்கள் அனைத்தையும் இவ்வுலகத்திலேயே ஒழிக்கச்செய்து மறுமை இன்பத்தை அளிக்கும் விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனை, யான் பற்றிக் கொண்டேன். Unto me that renders sacred service with holy heart, to Lord Civan who has one half of His frame as the fair lily-like goddess, He has so ordained that all results of my past evil deeds be extinguished here, forthwith! Such Mother-like generosity! Is not this blissful state, due to the good Lord of Thillai absorbing me into His fold? THIRUCHCHITRAMBALAM 41. அற்புதப் பத்து 41. ARPUTHAP-PATHTHU (அனுபவமாற்றாமை) The Decad of the Extra Ordinary திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst In Thirup-Perun-Thurai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் அற்புதம் - அதிசயம், வியப்பு. இறைவன் தம்மை ஆண்டருளியது இயற்கையில் நிகழத்தக்க ஒன்றாக நினையாது, என்றும், எங்கும் இல்லாததொரு புதுமையுடையதாகக் கருதுதலின், அதனை எடுத்தோதியருளிய பத்துப் பாடல்களின் தொகுதி இது . இஃது அடிகள் உள்ளத்தில் அடங்காததோர் அற்புதமாய்த் தோன்றலின், முன்னர், 'அதிசயப்பத்து' என அருளிச் செய்ததனோடு அமையாது, பின்னும் அற்புதப் பத்து எனப் பத்துத் திருப்பாடல்கள் அருளிச் செய்தார். யாப்பு வகையும் வேறுபடாமை காண்க. இங்ஙனமே, 'கல்வி' எனக் கூறிய பத்துக் குறள்களில் கல்வியின் பெருமை அடங்காமை கருதித் திருவள்ளுவ நாயனாரும், அதனையே 'கல்லாமை' என வேறு பத்துக் குறள்களாற் கூறுதல் காண்க. 'கல்வி', 'கல்லாமை' என்பன உடன்பாடும் எதிர்மறையுமாய்ச் சொல் வேறுபாடுடைய எனினும், பொருட்கண் வேறுபாடின்மையறிக. அதிசயப்பத்திற்கு, 'முத்தி இலக்கணம்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இதற்கு, அநுபவம் ஆற்றாமை என உரைத்தனர். ஆற்றாமை- தம் தகுதிக்கு மேற்பட்டதாதல். அங்ஙனமாயின், இஃது அதிசயப்பத்தின் பின்வைக்கற்பாலது எனின், பிறபொருள் இடையிட்டு வருதலே நன்றெனக் கருதினராகலின், இங்கு வைத்துக் கோத்தனர். The Saint is overwhelmed by the unexpected strange spectacle of the Lord's direct intervention in preventing him from going down the abysmal depths of profanity and lust, despite his wonted inclination towards carnal desires. And so, he is unable to express his feelings of joy at the turn of events, leading to his salvation and redemption. Pleased as he is, with the Lord's generosity, his feelings are beyond description in words. Shorn of the frills of theological rhetoric, the Saint's outpourings at his admittance into the galaxy of devotees, are couched in simplicity and wonderment. Compare this with the Saint's wailings in desperation in the earlier chapters. Commentators like G.U. Pope had noticed the change in tenor at this stage in his outpourings. He is agreeably surprised at being chosen as the Lord's worthy companion, despite his many misdeeds of the past wherein he was exposed alternately to the thrills of victory and the agony of desolation, in this worldly existence. In each stanza of this decad, the Saint refers to the Lord - அத்தன்,வேந்தன்-இறைவன் and so on, revealing the multifaceted aspects of Godhead. Much as Saint Raamalinga Swaamigal addresses the Lord as அப்பனே, அம்மையே etc., in 'திருப்பள்ளி எழுச்சி' of "திருஅருட்பா". Compare this with the Saint's own Decad of Amazement - Chapter (26) - wherein, he is wonderstruck at the Lord's generosity in redeeming him and getting him admitted into the holy congregation. And in each stanza, the Lord is referred to as Appan (father), Ammai (mother), the Primordial One, the Chief, the Flame of Grace and so on. The title of Chapter (26), அதிசயம் refers to the feelings of amazement in the Saint who had a rare experience of bliss that he had long been waiting for. Chapter (41) on the other hand records feelings of exultation of which he had no prior inkling or expectation. The Decad of the Extraordinary (chapter 41) thus goes beyond the Decad of Amazement, for it is a new phenomenon , which is not within the realm of comprehension. We may note in this connection- St. Thiru-Naavukkarasar - திருவையாறு - exclaiming கண்டறியாதன கண்டேன் , I saw what is normally hidden from the eyes of ordinary folks. அற்புதம்- indescribable event, unspeakable experience, the extra-ordinary. அதிசயம் - is rarity, longing for the rare, anticipated state of blissful communion with the Lord. 41. 1 மைய லாயிந்த மண்ணிடை வாழ்வெனு மாழியு ளகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் றலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவரு டந்துதன் பொன்னடி யிணைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுன் னின்றதோ ரற்புதம் விளம்பேனே மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு என்னும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே, பொய் எலாம் விடத் திருவருள் தந்து, தன் பொன் அடி-இணை காட்டி மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே. maiyalaay intha maNNidai vaazvu ennum aaziyuL akappaddu thaiyalaar enum suziththalai paddu naan thalai thadumaaRaamee poyelaam vida thiruvaruL thanthu than pon adi iNaikaaddi meyyanaay veLi kaaddi mun ninRathoor aRputham viLampeenee பொ-ரை: இப்பூமியில் மயக்க உணர்ச்சி உடையவனாய், உலக வாழ்வு என்னும் கடலில் அகப்பட்டு, பெண்கள் என்னும் சுழியில் சிக்கி, நான் நிலை கெட்டுப் போகாதபடி தடுத்தாட்கொண்டான் சிவபெருமான். அதனால் நிலையற்ற பொருட்களின் மேல் வைத்த பற்று எல்லாம் ஒழிந்தன. அவன் திருமேனி தாங்கி வந்து பரவெளியாகிய ஞானாகாயத்தைக் காட்டித் தனது பொன் போன்ற திருவடிகளையும் காட்டினான். முன்னே மானுட வடிவில் வெளிப்பட்டு நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேன் அல்லன். He, the (only) Reality: What great miracle is this, I can hardly describe! The good Lord bestowed grace on me, revealing His golden Feet, appearing before me in the space outside and showing Himself as the unique reality. He bestowed blessings so that I may be free from all falsehood, so that I may not turn topsy-turvy steeped in confusion, caught in the sea of earthly life, wafted about in the vortex of lust for damsels. கு-ரை: மையல்= மயக்கம். வாழ்வெனுமாழி= பிறவிக்கடல், பெண்டிரை மணப்பதால் மக்களும் சுற்றமும் சூழப் பெற்று அவர்கள் பாசத்தினின்று புறம் போதல் அருமையாகலின் சுழித்தலைப்பட்டு என்றார். தலை = அறிவுக்கு இடம், மெய்யனாய் என்பதற்குத் திருமேனி உடையனாய் என்றும், வெளி காட்டி என்பதற்கு அதனை வெளிப்படக் காட்டி என்றும் உரைப்பர். 2. ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோ ரியல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையனல் லாரொடுந் தலைதடு மாறாகிப் போந்தி யான் றுயர் புகாவண மருள் செய்து பொற்கழ லிணைகாட்டி வேந்த னாய்வெளி யேயென்மு னின்றதோ ரற்புதம் விளம்பேனே. ஏய்ந்த மாமலர் இட்டு, முட்டாதது ஓர் இயல் பொடும் வணங்காதே, சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடு மாறு ஆகி போந்து, யான் துயர் புகா வணம் அருள் செய்து, பொன் கழல் இணை காட்டி, வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே! eeyntha maamalar iddu muddaathathoor iyalpodum vaNangkaathee saantham aar mulai thaiyal nallaarodum thalai thadumaaRu aaki poonthu yaan thuyar pukaavaNam aruL seythu ponkazal iNaikaaddi veenthanaay veLiyee en mun ninRathoor aRputham viLampeenee பொ-ரை: சிவாகம முறைப்படி நால்வகை மலரால் நியமம் தவறாது அன்பு விதியோடும் அருட்பணியாகிய பூசனையை இடையீறின்றிச் செய்வதற்கு அருள் புரிந்தாய். சந்தனச் சாந்தணிந்துள்ள தனங்களை உடைய பெண்களோடு கூடித் தலை தடுமாறிச் சென்று, நான் துன்பக் கடலில் புகாத வண்ணம் தடுத்தாட்கொண்டாய். உன் பொன்னடிகளை எனக்குக் காட்டி, இராசனைப் போல வடிவு கொண்டு எழுந்தருளி என் கண் காண என் முன் நின்றதாகிய ஒப்பற்ற அற்புதத்தை யான் சொல்லவல்லேன் அல்லன். He,the Monarch: What great miracle is this, I can hardly describe! He came and stood in front of me in the space outside, as my Monarch, revealing His golden bejewelled Feet granting grace so that I do not go into sufferings any more, so that I do not turn topsy-turvy, falling into the company of sandal-pasted damsels, forgetting to worship Him with choice flowers - worship that never should have a pause. கு-ரை: ஏய்ந்த மாமலர் = பழுதில்லாத வாசனையுடைய நன்மலர். முட்டாததோர் இயல்பாவது= நன்மை வரினும் தீமை வரினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பயன் கருதாது வழிபடுதல். சாந்தம்= சந்தனம் . தையல்= அழகு. 3. நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனுமாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்னின்றப் பெருமறை தேடியவரும்பொரு ளடியேனை யடித்த டித்துவக் காரமுந் தீற்றிய வற்புத மறியேனே. நடித்து, மண்ணிடை பொய்யினைப் பல செய்து "நான், எனது' எனும் மாயம் கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிவேனைப் பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை அடித்து அடித்து, அக்காரமும் தீற்றிய அற்புதம் அறியேனே ! nadiththu maNNidai poyyinai pala seythu naan enathu enummaaya kadiththa vaayilee ninRu munvinai mika kazaRiyee thiriveenai pidiththu munninRu apperumaRai theediya arumporuL adiyeenai adiththu adiththu akkaaramum thiiRRiya aRputham aRiyeenee பொ-ரை: இப்பூமியில் யான் பொய்யான வாழ்வுகள் பலசெய்து மெய்யடியார் போல நடித்தேன். 'நான்', 'எனது' என்னும் பற்றுகளாகிய பாம்புகள் என்னைக் கடித்த பொழுது, என் பழவினைகளால் இது நேர்ந்தது என்று பேசிக் கொண்டு திரிந்து வந்தேன். ஆனால் இறைவனாகிய சிவபெருமானோ, அவ்வாறு நான் ஆழ்ந்து போகாத வண்ணம் என்னைப் பிடித்து, என் முன்னே குருவாக மானுட வடிவம் தாங்கி நின்று திருவருள் அமுதத்தை எனக்கு ஊட்டி நின்றான். இந்த அற்புதத்தை யான் சொல்ல வல்லேன் அல்லன். He, the Rare Entity: What great miracle is this, I hardly can understand! I wander about here now, as a result of past evil deeds, and am engaged in the many falsities of this worldly existence with high egoistic pretensions, under the illusory thoughts, 'I' and 'Mine'. And yet the rare Lord who is ever sought after by the Vedas, the invaluable scriptures, caught hold of me and fed me repeatedly with the sweet foods of emancipation (Liberation). கு-ரை: மாயம்= மயக்கம், அறியாமை பற்றி வரும் செருக்கு. செருக்கினால் ஒரு காரியத்தைச் செய்தவுடன் அதன் பயன் முற்செய்த வினைப் பயனுக்கு ஏற்ப வருதலால் முன்வினை என்றார். அக்காரம்=சருக்கரை. பேரின்பத்திற்கு உருவகம். தீற்றிய= தின்பித்த, நுகர்வித்த. 4. பொருந்து மிப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்று போய்க் கருங்கு ழலினார் கண்களா லேறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடு மகலாதே யருந்து ணைவனா யாண்டுகொண் டருளிய வற்புத மறியேனே. பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது பொய்களே புகன்று போய் கரும்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப் பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு-அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவன் ஆய், ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே ! porunthum ippiRappu iRappu ivai ninaiyaathu poykaLee pukanRu pooy karung kuzalinaar kaNkaLaal eeRuNdu kalangkiyee kidappeenai thirunthu seevadi silampu avai silampida thiruvodum akalaathee arunthuNaivanaay aaNdu koNdu aruLiya aRputham aRiyeenee பொ-ரை: நான் செய்த வினைகளுக்கு ஏற்பத் தொடர்ச்சியாக வந்து என்னைப் பொருந்தும் பிறப்பு, இறப்பு என்னும் நிலைகளைப் பற்றி நான் நினைக்கவேயில்லை. பொய்யான இவ்வுலக இன்பங்களையே விரும்பினேன். கருங்கூந்தலையுடைய பெண்களின் நஞ்சு தோய்ந்த வேல் போன்ற கண்களால் நான் தாக்கப்பட்டுக் கிடந்தேன் . இத்தகைய என்னையும் அவன் தனது திருந்திய சிலம்பு பொருந்திய சேவடிகளில் உள்ள சிலம்புகள் ஒலி எழுப்பிட, உமையம்மையோடு சேர்ந்து வந்து ஆட்கொண்டருளினான். இந்த அற்புதத்தை யான் சொல்ல வல்லேன் அல்லன். He, the Comrade: What great miracle is this, I hardly can understand! Even as I lay here perturbed by the visual darts of black-haired damsels, unmindful of the inevitable cyclic advents of births and deaths, and went about spreading only falsehood, the good Lord came over to me as a priceless comrade and took me in tutelage in all His grace. He, with jingling anklets in His holy Feet, even in partnership with His consort! கு-ரை: இவை என்பது பிறவியை நீக்கும் வழிகளைக் குறித்து நின்றது. புகன்று= விரும்பி; சொல்லி . ஏறு= இடி , எறியப்படுதல். கண்களாகிய வேலினாலே எறியுண்டு எனவும் கொள்க. சிலம்பவை என்பது பிரணவம் முதலிய மந்திர ஒலிகளைக் குறிக்கும் என்ப. திரு= அருட்சத்தி. 5. மாடுஞ் சுற்றமு மற்றுள போகமு மங்கையர் தம்மோடுங் கூடி யங்குள குணங்களா லேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி யாடு வித்தென தகம்புகுந் தாண்டதோ ரற்புத மறியேனே. மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும் கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை வீடு தந்து, என்-தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி ஆடு வித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே ! maadum suRRamum maRRu uLa pookamum mangkaiyar thammoodum kuudi angkuLa kuNangkaLaal eeRuNdu kulaaviyee thiriveenai viiduthanthu en than venthozil viiddida menmalar kazalkaaddi aaduviththu enathu akampukunthu aaNdathoor aRputham aRiyeenee பொ-ரை: செல்வமும் சுற்றமும் ஏனைய போகப் பொருள்களும் ஆகிய இன்பங்களைப் பெண்களோடு அடைந்து, அங்குள்ள இன்பங்களால் தாக்குண்டு குலாவித் திரிந்தேன். சிவபெருமான் இத்தகைய என்னை, மெல்லிய மலர்களை ஒத்திருக்கும் திருவடிகளைக் காட்டி, எனது தீய தொழில்களை அழியச் செய்தான். என்னைப் பரவசமாய் ஆடச்செய்தான். என் நெஞ்சமே கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். உயர்ந்த வீட்டின்பத்தைத் தந்து ஆண்டருளிய ஒப்பற்ற அற்புதத்தை யான் எவ்வாறு சொல்வேன்? He that Granteth Liberation: What great miracle is this, I hardly can understand! I am wont to revel in the transient pleasures of the earth, disturbed by the characteristic features here, cherishing worldly fortune, steeped in the company of damsels, and wandering amidst relatives and others. For such a one, He granted liberation, and in order to end my cruel deeds revealed His soft flower-like Feet, making me swing in ecstasy, entering my inner-self and taking me in tutelage! கு-ரை: குலாவுதல் = பாராட்டுதல். வீட்டுதல் = அழித்தல். வீடு=பாச நீக்கம் எனவும், முடிவாய்த் தங்குமிடம் எனவும் கூறுப. விடுபடுதல்= வீடு; விடுதல்= தங்குதல் தங்குமிடம், வீட என இருவகையாகவும் பொருள் கொள்க. அகம் =உள்ளம். 6. வணங்கு மிப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி யணைந்து வந்தெனை யாண்டுகொண் டருளிய வற்புத மறியேனே. வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் - தம்மோடும் பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத் தொடும் கூடி அணைந்து வந்து, எனை ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே! vaNangkum ippiRappu iRappu ivai ninaiyaathu mangkaiyar thammoodum piNainthu vaayithaz peruveLLaththu azunthi naan piththanaay thiriveenai kuNangkaLum kuRikaLum ilaak kuNakkadal koomaLa thodum kuudi aNainthu vanthu enai aaNdu koNdu aruLiya aRputham aRiyeenee பொ-ரை: நாம் பிறப்பு இறப்பு என்னும் மக்கட்பிறவி எடுத்தது கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம். இந்த நோக்கத்தை யான் மறந்து மாதர் வாய் எச்சில் வெள்ளத்தில் அழுந்த இருந்தேன். அவ்வாறு பித்தனாகித் திரிகின்ற நிலைக்குப் போகவிடாமல் தடுத்து ஆட்கொண்டான் எம்பெருமான். இறைவன் குணங்களுக்கெல்லாம் ஒரு கடல் போல்பவன். சுட்டறிவால் உணரத்தக்க குணங்களும் அடையாளங்களும் இல்லாத குணமேயான கடலாகிய சிவபெருமான் அழகே வடிவாய் தமக்கென வேறு வடிவின்றித் தன்னோடு ஒன்றி நிற்கும் பராசக்தியோடு சேர்ந்து வந்து அடியேனை ஆட்கொண்டருளிய அற்புதத்தை யான் அறியேன்; எவ்வாறு புகல்வேன்? The Sea of Goodness: What great miracle is this, I hardly can understand! Unmindful of the impending cycles of births and deaths I have been roaming about here like a mad man steeped in carnal tendencies in the company of damsels. And yet the good Lord, the sea of generosity, who had no attributes, nor any distinct marks of identification, came over to me alongside His effulgent consort, and bestowed grace on me taking me in tutelage! கு-ரை: காற்றுப் போன்று பிறப்பு இறப்பும் மாறிமாறி வருதலால் வணங்கும் என்றார். அஞ்சி ஈடுபடுதற்குரிய எனவும் கொள்க. பிணைந்து = நெருங்கிச் சேர்ந்து. கோமளம் = பசிய நிறம் என்றும் கொள்ப. 7. இப்பி றப்பினி லிணைமலர் கொய்துநா னியல்பொடஞ் செழுத்தோதித் தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் றடமுலை யார்தங்கண் மைப்பு லாங்கண்ணா லேறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி யப்ப னென்னைவந் தாண்டுகொண் டருளிய வற்புத மறியேனே. இப்பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி, அப்பன், என்னை, வந்து, ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே! ippiRappinil iNai malar koythu naan iyalpodu anjsu ezuththu oothi thappilaathu pon kazalkaLukku idaathu naan thada mulaiyaar thangkaL maippu ulaam kaNNaal eeRuNdu kidappeenai malar adi iNaikaaddi appan ennai vanthu aaNdu koNdu aruLiya aRputham aRiyeenee பொ-ரை: (மேல் பாட்டில் பிறவி எடுத்ததின் பயன் சிவபெருமானை வணங்குதல் என்று கூறியவர், எவ்வாறு வணங்க வேண்டும் என்று சற்று விரிவாக இப்பாட்டில் கூறுகின்றார் ) எனக்குக் கிடைத்த இந்த மானுடப் பிறவியிலேயே நான் சிவனை முறையாக வணங்க வேண்டும். ஆதலால் அவனை அருச்சிப்பதற்குப் பொருத்தமான புட்ப விதிகளில் கூறிய பூக்களைக் கொய்ய வேண்டிய முறைப்படி நீராடித் தோய்ந்து உலர்ந்த ஆடை உடுத்து வாய் பேசாமல் திருவைந்தெழுத்தைத் தியானித்துக் கொண்டே கொய்து, அருச்சிக்கும்போது பூக்களை வீசி எறிதலும், மேனியில் மேல் எறிதலும் இல்லாது திருவடிகளுக்கு இட்டு வணங்குதல் வேண்டும். யான் அவ்வாறு செய்யாது பருத்த தனங்களை உடைய பெண்களின் கருமை தவழும் கண்களால் தாக்குண்டு நொந்து கிடந்தேன். அது சமயம், எம்பெருமான் வலிய வந்து தனது குஞ்சித சேவடியைக் காட்டி என்னை ஆண்டு கொண்டு அருளினான். இந்த அற்புதத்தை இன்னதென்று உரைக்க என்னால் முடியவில்லை. He, the Sire: What great miracle is this, I hardly can understand! In this present birth I have not been incessantly paying obeisance to the golden Feet of the Lord, with suitable flowers, regularly chanting the five-letter pentad as envisaged in the scriptures. Instead attacked by the visual darts of full-breasted damsels having dyed eyes, I have been just lying down here (all the time), in vain. And yet, the good Lord, my Sire, came over to me and, in grace, took me in tutelage, revealing His flowery twin Feet! கு-ரை: இணைமலர்= தமக்குத்தாமே ஒத்த பூக்கள் என்றும் உரைப்பர். இயல்பு = முறை. நல்லியல்பு = நன்மனம் என்றும் கொள்க. இறைவழிபாட்டில் தவறக்கூடாது என்பார், தப்பிலாது என்றார். மைப்பு= மைதீட்டிய தன்மை எனவும் கொள்வர். மைப்பு = கருமேகம், உலவும் என்பது உலாம் என்று ஆயிற்று. உலவும்= பொருந்தும். கிடப்பேனை= கிடப்பேனுக்கு. 8. ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின விருவினை யறுத்தென்னை யோசை யாலுணர் வார்க்குணர் வரியவ னுணர்வுதந் தொளியாக்கிப் பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையா லாசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய வற்புத மறியேனே ஊசல் ஆட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை , ஓசையால் உணர்வார்க்கு உணர்வு - அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கிப் பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம்பெருங் கருணையால் ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே! uusal aaddum ivvudal uyir aayina iruvinai aRuththu ennai oosaiyaal uNarvaarkku uNarvu ariyavan uNarvu thanthu oLi aakki paasam aanavai paRRaRuththu uyarnthathan paramperung karuNaiyaal aasai thiirththu adiyaar adikkuuddiya aRputham aRiyeenee பொ-ரை: சிவபெருமான், ஓசை ஒலி வடிவாய வேதங்களைத் துணையாகக் கொண்டு, தம்மை ஒருவாறு உணர முற்படுவார்க்கும் உணர முடியாதவன். உடலையும் உயிரையும் ஊசலாட்டுகின்ற நல்வினை தீவினை என்கின்ற இருவினைகளையும் என்னிடம் இருந்து அறுத்து நீக்கி விட்டான். சிவஞானத்தையும் எனக்கு நல்கினான். அதனால் நான் அறியாமை நீங்கி அறிவு வடிவம் ஆனேன். (ஒளியாக்கி) அங்ஙனம் அறிவு வடிவம் ஆனதின் பயன் எனது உலகியல் ஆசையும் நீங்கியது. தனது மேலான கருணையால் மெய்யடியார்களின் திருவடிகளிலேயே என்றும் நான் தோயும் வண்ணம் பூட்டி வைத்தான். இந்த அற்புதத்தை எங்ஙனம் நான் சொல்வேன் ? He, beyond reach through sounds and scriptures: What great miracle is this, I hardly can understand! Beyond the comprehension of those who seek to know Him through the sounds of chantings and scriptural readings is He! Yet, upon me He did bestow knowledge about Himself and cutting off the effect of my past two-fold deeds (the right and the wrong deeds) that cause the swinging of body and soul, transformed me into effulgent light, ending all my attachments in this world. And in His highly acclaimed fund of mercy, admitted me into the holy congregation of His servitors, much to my satisfaction and relief. Notes: Though the Lord is verily manifest in sound waves - vide Saint Appar's Decad Number 252 - பதிகம் திருவையாறு, "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே". He cannot be reached through the reverberating sounds of scriptural chantings alone. One has to imbibe the spirit of the Lord's glory, in deep dedication and humility. The Saint's utterance "ஒளியாக்கி' is a significant revelation of the physical body getting transformed into a body of light. Also confer Saint Raamalinga Swaamigal's plain declaration on such transformation. கு-ரை: இவ்வுடலுயிரான ஊசலாட்டும் என மாறுக. நல்வினை மேலுலகிற்கு இழுக்க, தீவினை கீழுலகிற்கு இழுக்க, உடலும் உயிரும் ஊஞ்சல் போல் அங்கும் இங்கும் அலைதலால் 'ஊசலாட்டு' என்றார். ஓசை என்பது நூற்கல்விக்கு ஆகுபெயர். 'நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க' என்றதும் அறிக. உணர்வு= பரஞானம். ஒளியாக்கி = வெளிப்படுத்தி. உயர்ந்தபரம்= மிக உயர்ந்த. ஆசை= வாசனா மலத்தொடர்பு என்பாரும் உளர். 9. பொச்சை யானவிப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல விச்சை யாயின வேழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை யிச்ச கத்தரி யயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி யச்ச னென்னையு மாண்டுகொண் டருளிய வற்புத மறியேனே. பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, தான், புழுத்து அலைநாய் போல இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை, இச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே ! possai aana ippiRaviyil kidanthu naan puzuththu alai naaypoola issai aayina eezaiyarkkee seythu angku iNangkiyee thiriveenai issakaththu ari ayanum eddaatha than virai malark kazal kaaddi assan ennaiyum aaNdu koNdu aruLiya aRputham aRiyeenee பொ-ரை: பிறவி என்கின்ற காட்டில் சிக்கிக் கிடந்து, வினைப் போகத்தில் ஆழ்ந்திருந்தேன். பெண்களுக்கு விருப்பமானவற்றையே செய்து, அவர்களிடத்தேயே இணங்கிப் புழுத்து அலைகின்ற நாய் போன்று அடியேன் திரிந்து வந்தேன். அப்போது திருமாலுக்கும் பிரமனுக்கும் காணுதற்கெட்டாத என் தந்தையாகிய சிவபெருமான் தனது தெய்வ மணம் கமழுகின்ற திருவடிகளைக் காட்டி என்னை ஆட்கொண்டு அருளினான். இந்த அற்புதத்தை யான் எவ்வண்ணம் சொல்வேன் ? He, the Father: I have been here in this birth, inside this (wild) thicket of a worldly life, roaming about like a diseased cur, performing acts as desired by (lewd) damsels, and going along with them. And yet, He, the Father revealed unto me His fragrant, flower-like bejewelled Feet that are beyond the reach of Brahma and Thirumaal in this world, and took me in tutelage! Oh what great miracle is this, I hardly can understand. கு-ரை: பொச்சை = காடு, வழி தெரியாது அலைதற்கு இடமாகிய காடுபோல உண்மை நெறி இன்னதென்று அறிய முடியாத வண்ணம் இடர் நிறைந்த பிறவி என்பார் பொச்சையான பிறவி என்றார். புழுத்தலை= புழுத்து அலை என்பாரும் உளர். அங்கு = அவ்வாறே =அவர்கள் இச்சைப் படியே. அச்சன்= அப்பன். 10. செறியு மிப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார்செய்யுங் கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களு முன்னியே கிடப்பேனை யிறைவ னெம்பிரா னெல்லையில் லாததன் னிணைமலர்க் கழல்காட்டி யறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய வற்புத மறியேனே. செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும் கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை , இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி அறிவு தந்து, எனை ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே! seRiyum ippiRappu iRappu ivai ninaiyaathu seRi kuzalaar seyyum kiRiyum kiizmaiyum keNdaiyang kaNkaLum unniyee kidappeenai iRaivan empiraan ellai illaatha than iNaimalar kazalkaaddi aRivu thanthu enai aaNdu koNdu aruLiya aRputham aRiyeenee பொ-ரை: இறைவன் திருவடியில் சேர்வதற்குக் காரணமாக இப்பிறப்பும் இறப்பும் உதவப் பெற்றன என்பதை யான் உணராத நிலையில், அடர்ந்த கூந்தலை உடைய பெண்கள் செய்கின்ற வஞ்சனை, கீழான செயல்கள், அவர்களின் கெண்டை மீன் போன்ற கண்கள் இவற்றையே எண்ணிக் கிடந்து அலைந்தேன். எல்லா உயிர்களுக்கும் இறைவனும் என் தலைவனுமாகிய சிவபெருமான் தனது கருணையால் அவை நிலையற்றவை எனக் காட்டி, திருவடியே நிலையான பேரின்பம் என அருளி, சிவஞானத்தையும் உதவி என்னை ஆண்டு கொண்ட இந்த அற்புதத்தை யான் எவ்வாறு கூறுவேன்? He, the Lord: Unmindful of the surging cycles of births and deaths, I have been living here thinking only of lowly acts, falsities and the fish-like eyes of dense haired damsels. And yet the Lord, my Chief, revealed unto me His illimitable, bejewelled twin flowery Feet and bestowed wisdom on me, and in all His grace took me in tutelage! Oh, what great miracle is this, I hardly can understand ! Note : All the Saint's lachrymose outpourings of penitence and self mortification imploring the Lord's Mercy for transgressions and inequities, are only of vicarious significance, done for the sake of the teaming mortals of this world as is customary in theological literature. These are not to be construed into the Saint's own deeds which are impeccable supernal in character. The conclusion is inescapable, that the Saint who was in the holy congregation before, was deliberately sent into this world by the Lord in order to redeem the erring sea of humanity through the practical example of a holy life (Also note line 128 of கீர்த்தித் திருவகவல் - 'கோலமார் தரு பொதுவினில் வருக' - go Thou now and return back to me at Thillai). கு-ரை: தான் எடுத்த பிறவியைக் குறித்தலால் இப்பிறப்பு என்றார். கிடப்பேனை = கிடப்பேனுக்கு .உருபு மயக்கம். திருவடிகள் கிரியாசக்தியும் ஞானசக்தியுமாதலால் எல்லையில்லாத என்றார். THIRUCHCHITRAMBALAM 42. சென்னிப் பத்து 42. SENNIP-PATHTHU (சிவவிளைவு ) The Decad of a Heaven for our Heads திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது The Ultimate Realization of Bliss ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம். சென்னி- தலை, சிவபெருமான் குருவாகி வந்து அடிகள்தம் முடிமேல் தனது திருவடிகளைச் சூட்டி அருள, அத்திருவடிகளைத் தாம் என்றும் அகலாது புனைந்து நிற்கும் நிலையினை அருளிச் செய்த பத்துப் பாடல்களின் தொகுதி இது. திருவடிப் பேறே சிவப்பேறாதலின், இதற்குச் 'சிவவிளைவு' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். விளைவு - பேறு. இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப் பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இஃது இடையே சில அடிகள் அறுசீராய் நிற்ப வந்த எழுசீரடி விருத்தத்தால் ஆயது. Mannikkavaachakar received benediction and was ordained to rejoin the congregation, and stay there for all time, with head placed in reverence under the sacred Feet of the Lord, in everlasting effulgence and beatitude. At last, gone are His worldly woes and desolation! Gone are the pangs of separation from the Almighty that he had been suffering for long, in a mood of anguish and despair. A new life, as it were, has now opened up before the Saint, who was earlier pouring out his agony in soulful numbers - under a constant nagging fear that he might have been cast out of the holy assemblage, on account of any possible wrong doing or indifference on His part. Re-assured of the certainty of salvation, the Saint exhorts all fellow men around him with a clarion call to follow suit and to profit remarkably even as he did, by getting rid of all past deficiencies. These are thus, glad tidings that send out a re-assurance of the feasibility of redemption from right here on this earth. 42.1 தேவ தேவன் மெய்ச் சேவகன் றென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலு மறியொ ணாமுத லாய வானந்த மூர்த்தியான் யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான் றூய மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே. தேவதேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன், மூவராலும் அறி ஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான், யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறி ஒணா மலர்ச் சோதியான் தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னிச் சுடருமே! theeva theevan mey seevakan then perunthuRai naayakan muuvaraalum aRioNaa muthal aaya aanantha muurththiyaan yaavar aayinum anpar anRi aRioNaa malar soothiyaan thuuya maamalar seevadikkaN nam senni manni sudarumee பொ-ரை: விண்ணவர்கள் அனைவர்க்கும் தலைவன்; மெய்யான வீரன்; அழகிய திருப்பெருந்துறைத் தலைவன்; பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் பொருட்டு இறைவனால் நியமிக்கப் பெற்ற சகல வருக்க ஆன்மாக்கள் ஆவர். அவர்களாலும் அறியக்கூடாத ஆதியான பேரின்ப வடிவினன். சிவாகம விதிப்படிச் சிவ அநுபூதிமானாகிய ஆசாரியன் இருந்து காட்டி உபதேசிக்க அங்ஙனம் முறைமையில் நிற்கும் மெய்யன்பர்களையன்றி, பிறர் எவராலும் அறிய முடியாத இதயத் தாமரையில் விளங்கும் ஒளி வடிவினன். அவனது பெருமைமிக்க தாமரை போலும் திருவடிகள் நமது தலையின் மீது நிலைபெற்று விளங்குவதாம். Lord of all gods, truly a hero, the very embodiment of bliss, the primordial one, beyond the comprehension, even of the holy trinity (Brahma, Thirumaal and Rudran)! Of flower-like effulgence, beyond the reach of all, whosoever they be, except His close devotees! His fresh, grand flowery sacred Feet, shall abide on our heads, ever shining so bright! கு-ரை: மும்மூர்த்திகளுள், பிரமனும், அயனும் ஞானம் பெறாதவர்கள். உருத்திரன் ஞானம் பெற்றிருப்பினும், அதிகார மலம் உடையர். ஆதலால் மூவரையும் கூறினர். மலர்ச்சோதி, மென்மையும் குளிர்ச்சியும் உடைய சோதி. 2. அட்ட மூர்த்தி யழக னின்னமு தாய வானந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன் றென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழன் மங்கை யாளையோர் பாகம் வைத்த வழகன்றன் வட்ட மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே அட்டமூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் , சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன், மட்டு வார் குழல் மங்கை யாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே ! adda muurththi azakan innamuthu aaya aanantha veLLaththaan siddan mey sivalooka naayakan then perunthuRai seevakan maddu vaar kuzal mangkaiyaaLai oor paakam vaiththa azakan than vadda maamalar seevadikkaN nam senni manni malarumee பொ-ரை: திருப்பெருந்துறைப் பெருமான் மண், புனல், கனல், கால், வளி, சூரியன், சந்திரன் , இயமானன் என்னும் எட்டு வடிவங்களை உடைய அழகன், இனிய அமுதமான பேரின்பப் பெருக்குடைய பெரியோன். சிவலோகத் தலைவனாகிய மெய்ப்பொருள். தேன் மணம் கமழும் நீண்ட கூந்தலையுடைய உமையம்மையைத் தன் இடப்பாகத்தில் வைத்த அழகன். அவனது வட்டவடிவமான தாமரை மலர் போலும் செய்ய பாதங்கள் நமது தலை மீது நிலைபெற்று விளங்குவதாக. The fair one of eight-fold forms so grand, flood of sweet 'elixir-like' bliss, greater than the great, real Lord of Civa Loka, Valorous Chief of the southern Thirup- Perun-Thurai, the handsome one holding as past of His physical frame His consort of 'honey-flowered' long hair ! At His rotund, grand, flowery sacred Feet, shall our heads abide,ever blooming so bright !(Eight-fold forms are earth, water, fire, wind, space, sun, moon and soul). கு-ரை: நிலம், நீர், தீ, கால், வான், ஞாயிறு, திங்கள், உயிர் என்பன இறைவனது அட்ட மூர்த்தம். சிட்டர்= ஆசாரம் உடைய பெரியோர். மட்டு =தேன். மலரும்= விளங்கும். 3. நங்கை மீரெனை நோக்கு மின்னங்க ணாத னம்பணி கொண்டவன் றெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை மேய சேவக னாயகன் மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம் முயிருங் கொண்டெம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னிப் பொலியுமே. நங்கை மீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன், தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன் , மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான் பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னிப் பொலியுமே ! nangkaimiir enai nookkumin nangkaL naathan nampaNi koNdavan thengku soolaikaL suuz perunthuRai meeya seevakan naayakan mangkaimaar kaiyil vaLaiyum koNdu em uyirum koNdu em paNi koLvaan pongku maamalar seevadikkaN nam senni manni poliyumee. பொ-ரை: பெண்களே! என்னைப் பாருங்கள்! நம் தலைவன் கங்கையை அணியாகக் கொண்டவன். தென்னஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருந்த வீர முதல்வன். பெண்டீர் கைகளிலுள்ள வளையல்களைப் பறித்துக் கொண்டு, எம் உயிரையும் கவர்ந்து கொள்வான். எம் பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளுவான். அவனது விளங்குகின்ற தாமரை மலர்ப் பாதங்கள் நமது தலைமீது நிலைபெற்று விளங்குவதாக. Oh maids! Take a look! Our Chief who is the patron of Thirup-Perun-Thurai, encircled by coconut groves, has drafted us into the cadre of His servitors. Our Hero, our Chief who by charming the maids, makes them slim in pining and thereby causes their bangles to come loose, and even takes on my life too! At His blooming, grand, flowery sacred Feet, shall abide our heads ever sparkling so bright! கு-ரை : அம்பு, அப்பு என்பதன் மெலித்தல் விகாரம். அப்பு= நீர்; கங்கை, 'நம்பணி' எனப் பாடம் ஓதி, நமது வேலையை ஏற்றுக் கொண்டவன் என்பாரும் உளர். சேவகன் = ஆண்மை உடையவன். உடம்பு மெலியும்படி உருக்குதலால், வளைகள் கழல்வன ஆயின என்ற கருத்துப்பற்றி, 'வளையுங்கொண்டு' என்றார். உயிர்ப் போதத்தை ஒழித்தலால், 'உயிருங்கொண்டு' என்றார். பசுபாசத்தை அறுத்தல் கூறியவாறு. பொங்கு= விளங்கு. 4. பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் றில்லை மூதூர் நடஞ்செய்வா னெத்த னாகிவந் தில்பு குந்தெமை யாளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே பத்தர் சூழப் பரா-பரன் பாரில் வந்து, பார்ப்பான் எனச் சித்தர் சூழச் சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங் கொண்டு, எம் பணி கொள்வான் வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே ! paththar suuza paraaparan paaril vanthu paarppaan ena siththar suuza sivapiraan thillai muuthuur nadam seyvaan eththan aakivanthu ilpukunthu emai aaLung koNdu empaNi koLvaan vaiththa maamalar seevadikkaN nam senni manni malarumee பொ-ரை: பராபரனாகிய சிவபெருமான் அடியவர் புடை சூழ அந்தணர் வடிவுடன் திருப்பெருந்துறையில் ஆசாரியனாக எழுந்தருளினான் . ஞானிகள் சூழ்ந்திருக்கத் தில்லையம்பதியில் சபையிலே கூத்தியற்றுவான்; சாமர்த்தியம் உடையவனாகி எழுந்தருளி எம் உள்ளத்தினுள் புகுந்து எம்மை அடிமையாக்கி எம் பணிவிடையை ஏற்றுக் கொள்ளுவான். அவ்விறைவனது திருவடித் தாமரை மலர்கள் நமது தலைமீது நிலைபெற்று விளங்குவதாக. Unto this earth, comes He, of the great beyond, as a graceful priest, surrounded by devotees! Dancing at the ancient town of Thillai, Lord Civa in companionship with siddhas! He makes a furtive (disguised) entry into our mind and takes us in servitude! And duly accepts our work with satisfaction, placing His grand flowery Feet on our heads. Let His sacred Feet, abide in our heads ever blooming so bright. கு-ரை; பராபரன், சிவபிரான் வந்து நடம் செய்வான். புகுந்து பணிகொள்வான், வைத்த - மலருமே என முடிக்க. சித்தர்= சித்து உடையவர், ஞானிகள். இல், உள்ளத்திற்கு அறிகுறி. 5. மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்தி டாவகை நல்கினான் வேய தோளுமை பங்க னெங்க டிருப்பெ ருந்துறை மேவினான் காயத் துள்ளமு தூற வூறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே. மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடாவகை நல்கினான் ; வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந் துறை மேவினான்; காயத்துள் அமுது ஊற ஊற, 'நீ கண்டு கொள்' என்று காட்டிய சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே ! maaya vaazkkaiyai mey enRu eNNi mathiththidaa vakai nalkinaan veeya thooL umaipangkan engkaL thiruperunthuRai meevinaan kaayaththuL amuthu uuRa uuRa nii kaNdu koL enRu kaaddiya seeya maamalar seevadi kaN nam senni manni thikazumee பொ-ரை: மூங்கிலை ஒத்த தோள்களையுடைய உமைபாகன் திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருப்பவன். பொய்யான வாழ்வை மெய்யெனக்கருதா வண்ணம் ஞானத்தை எனக்களித்தான். உடலில் ஆனந்த அமுதம் பொங்கிச் சுரக்கப் பேரின்ப நிலையை நீ அறிந்து கொள்ளுவாயென அடையாளம் காட்டினான். அத்தகைய செம்மையான திருவடித் தாமரை மலர்கள் நமது தலைமீது பொருந்தி விளங்குவனவாம். Well did He grant, that we may not mistake this elusive sublunary existence for the 'real truth to be aspired for'! Lord of physical frame shared with goddess Uma of 'bamboo like' shoulders! Lord that patronised Thirup-Perun-Thurai! Lord that led me on to recognise the springs of nectar that keep gradually oozing out of this human body! At His auspicious, grand, flowery Feet of bliss, shall our heads abide, ever shining so bright. கு-ரை: மாயம் = பொய், சூழ்ச்சி, மயக்கம். வேய் = மூங்கில், வேய - குறிப்புப் பெயரெச்சம் . திருவண்டப்பகுதியுள், காயத்து அமுதூறலை வருணித்தமை காண்க. பங்கன், மேவினான், நல்கினான், சேவடிக்கண் திகழுமே என முடிக்க. 6. சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு தீவி னைகெடுத் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்க ழற்கணே பன்மலர் கொய்து சாத்தலு முத்தி தந்திந்த மூவு லகுக்கு மப்பு றத்தெமை வைத்திடு மத்தன் மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீவினை கெடுத்து, உய்யல் ஆம் பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சாத்தலும் முத்தி தந்து, இந்த மூ-உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே ! siththamee pukunthu emmai aadkoNdu thiivinai keduththu uyyalaam paththithanthu than pon kazalkaNee panmalar koythu saaththalum muththi thanthu intha muuvulakukkum appuRaththu emai vaiththidum aththan maamalar seevadikkaN nam senni manni malarumee பொ-ரை: எமது மனத்துள் தாமே வலிய வந்து புகுந்து எமை ஆட்கொண்டான் சிவபெருமான். முன்பு யான் செய்த தீவினைகள் எல்லாம் கெட்டு ஒழிந்து யான் வாழ்வு பெறும் வண்ணம் அவன்பால் வைக்கத் தக்கதாகிய அன்பினைத் தந்து அருளினான். அவ்வன்பினால் அவன் திருவடிகளில் நாம் பல மலர்கள் அருச்சனை செய்து வழிபடுகின்றோம். அங்ஙனம் செய்த சாதாரணமான செயலுக்கு, மண், விண், பாதாளம் எனும் மாயா காரிய உலகுகளுக்கு அப்பாலானதும், கிரியையும் யோகமும் கலந்த நெறியாய் ஞானத்திற்கு வாயிலான பூசை செய்த ஞானிகள் அடைவதும் ஆன பேரின்பமாகிய முத்தியை எனக்கு நல்கினான். அத்தகைய தலைவனாகிய சிவபெருமானுடைய திருவடித் தாமரைகள் நம் தலைமீது நிலைபெற்று விளங்குவதாக. Well did He grant devotion unto me. And entering my mind He took me in servitude, destroying the effects of all my evil deeds! Whereupon, even as I plucked many a flower and placed them at His golden Feet, He granted liberation, stationing me far above the three worlds. Such is the Sire (அத்தன்) at whose grand, flowery, pristine Feet of bliss, shall our heads abide,ever blooming so bright. Note: Some commentators have interpreted the first word of the last line of this stanza as மந்தன், wearer of 'dhatura' flower. Confer Arunai Vadi Vel Mudaliar. This seems to be for the sake of alliteration with 'மாமலர்' கு-ரை: சித்தம் = நினைவு என்பாரும் உளர். பொன் = அழகிய தத்துவச் சார்பாய உலகம் கடந்த முதல்வனோடு கலத்தலாகிய நிலை என்பார், 'மூவுலகுக்கு மப்புறத்தே' என்றார். 7. பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன் பேர ருடந் தருளினா னறவை யென்றடி யார்க டங்க ளருட்கு ழாம்புக விட்டுநல் லுறவு செய்தெனை யுய்யக் கொண்டபி ரான்ற னுண்மைப் பெருக்கமாந் திறமை காட்டிய சேவ டிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே. பிறவி என்னும் இக் கடலை நீந்தத் தன் பேர்-அருள் தந்தருளினான் அறவை என்று அடியார்கள் - தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல் உறவு செய்து, எனை உய்யக் கொண்ட பிரான் - தன் உண்மைப் பெருக்கம் ஆம் திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே! piRavi ennum ikkadalai niintha than peeraruL thantharuLinaan aRavai enRu adiyaarkaL thangkaL aruL kuzaam pukaviddu nal uRavu seythu enai uyya koNda piraan than uNmai perukkam aam thiRamai kaaddiya seevadikkaN nam senni manni thikazumee பொ-ரை: பிறவியெனும் இக்கடலை நீந்தி முத்தியாகிய கரைசேர்வதற்குத் தனது திருவருள் என்னும் தெப்பத்தைத் தந்தருளினான் சிவபெருமான். என்னை ஆதரவற்றவன் எனக் கருதி அடியார்களின் அருட்கூட்டத்தில் புகுவித்தான். அவர்களை எனக்குச் சுற்றத்தாராக்கி நான் உய்யும்படி ஆட்கொண்டான். அத்தகைய வள்ளலின் மெய்யான சிறந்த திறமைகளைக் காட்டியருளிய சேவடிகள் நம் தலைமீது பொருந்தி விளங்குவனவாகுக. In order to cross the ocean of birth, He granted me this magnificent gift of salvation, in all His graceful kindness. Ensuring that I do enter the holy congregation of devotees, out of pity towards me, a forsaken soul, He made me their kin and redeemed me, as worthy member of the assemblage of grace-filled servitors. Such is our Lord, the expansive Truth so real, whose valour He has revealed unto me. At His blissful, pristine Feet shall our heads abide, ever shining so bright. கு-ரை: அறவை = எல்லாம் அற்றவன்; அநாதை. பெருக்கமாந் திறமை= மிகுதியான திறமை. 8. புழுவி னாற்பொதிந் திடுகு ரம்பையிற் பொய்த னையொழி வித்திடு மெழில்கொள் சோதியெம் மீச னெம்பிரா னென்னுடை யப்ப னென்றென்று தொழுத கையின ராகித் தூமலர்க் கண்க ணீர்மல்குந் தொண்டர்க்கு வழுவி லாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே 'புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும் எழில் கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன்' என்று என்று தொழுத கையினர் ஆகித் தூ மலர்க் கண்கள் நீர் மல்கும் தொண்டர்க்கு வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே ! puzuvinaal pothinthidu kurampaiyil poy thanai oziviththidum ezil koL soothi em iisan empiraan ennudai appan enRu enRu thozutha kaiyinar aaki thuumalar kaNkaL niirmalkum thoNdarkku vazuvilaa malar seevadikkaN nam senni manni malarumee பொ-ரை: புழுக்களினால் பொதியப்பெற்ற இவ்வுடலில் பொருந்தி நிற்கும் நிலையாத வாழ்வை நீக்கி விடும் அழகிய சோதி! எம் ஈசா! எம்பிரானே! என் அப்பனே! - என்று சொல்லிச் சொல்லி, மலர்களைத் தூவித் தொழுகின்ற கைகளை உடையவர்களாய், கண்ணீர் பெருக நின்றனர் அடியவர்கள். அவர்களுக்குத் தவறாது நலம் பயக்கும் திருவடித் தாமரைகள் நம் தலைமீது பொருந்தி விளங்குவனவாம். Our Lord, our Chief, the resplendent Flame that destroys all falsehood immanent in this worm-ridden physical frame of ours! Chanting in this strain that such is He, our Master,our Sire, all servitors of the Lord worship Him with folded hands, tears welling up their flower-like eyes . Unto such devotees doth He unfailingly grant benediction. At His flowery pristine Feet of glory, shall our heads abide, ever blooming so bright. கு-ரை: பொய் = நிலை இல் வாழ்க்கை , எழில்= எழுச்சி; அழகு. உள்ளம் புனிதமாகவே, கண்களும் புனிதமாயின போலும்; ஆதலால், 'தூமலர்க்கண்கள்' என்றார். 9. வம்ப னாய்த்திரி வேனைவா வென்று வல்வி னைப்பகை மாய்த்திடு மும்ப ரானுல கூட றுத்தப் புறத்த னாய்நின்ற வெம்பிரா னன்ப ரானவர்க் கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைத்திடுஞ் செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே வம்பனாய்த் திரிவேனை 'வா' என்று வல்வினைப் பகை மாய்த்திடும் உம்பரான் உலகு ஊடு அறுத்து அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் அன்பர் ஆன வர்க்கு அருளி, மெய் அடியார் கட்கு இன்பம் தழைத்திடும் செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே ! vampanaay thiriveenai vaa enRu valvinai pakai maayththidum umparaan ulaku uudu aRuththu ap puRaththanaay ninRa empiraan anpar aanavarkku aruLi mey adiyaarkadku inpam thazaiththidum sempon maamalar seevadikkaN nam senni manni thikazumee. பொ-ரை: நிலையில்லாதவற்றை நிலையென நினைத்து, புல்லறிவாளனாய் வீணாய்த் திரிந்த என்னைக் கருணையால் குருவான திருமேனி கொண்டு எழுந்தருளித் திருநோக்கம் செய்து 'வா' என்று அழைத்து, எல்லா வினைகளுக்கும் காரணமான எனது வலிமையான ஆணவ மலத்தை அழிக்கின்ற வானவன் சிவபெருமான். அவன் எல்லாத் தேவர் உலகங்களையும் கடந்து அவற்றுக்கு அப்பாலும் நின்ற எம் தலைவன். அவன், மனத்தால் அன்பு செலுத்தி வழிபடும் தனது அன்பர்களுக்கு அருள் செய்பவன். மனத்தால் தன்னை வழிபட்டும், உடலால் உயிர்களுக்குத் தொண்டு செய்தும் வாழ்வோராகிய மெய்யடியார்களுக்கு அவர்கள் உள்ளத்தில் நின்று மேன்மேலும் பேரின்பத்தைத் தழைக்கச் செய்பவன். அத்தகைய பெருமானது செம்பொன் நிறமான திருவடித் தாமரைகள் எமது சென்னியின் மீது நிலைபெற்று விளங்குவனவாம். Unto me that have been loitering around here in vain, He gave out a call and extinguished the effects of my dark evil deeds of the past. He of the high above, piercing through all the worlds and yet standing apart from the worlds, blessing devotees, granting benediction to true savants that they may flourish in beatitude! At His resplendent, grand, golden, flowery Feet shall our heads abide, ever shining so bright! கு-ரை: வம்பன்= பயனற்றவன். உம்பரான்= மேலுலகத்தான். 'உலகூடறுத்து' என்றது அனற்பிழம்பாய் அயன்மால் அடிமுடி தேட நின்ற நிலையைக் குறிக்கும். 10. முத்தனை முதற் சோதியை முக்க ணப்பனை முதல் வித்தினைச் சித்த னைச்சிவ லோக னைத்திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர் காளிங்கே வம்மி னீருங்கள் பாசந் தீரப் பணிமினோ சித்த மார்தருஞ் சேவ டிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே முத்தனை, முதல் சோதியை, முக்கண் அப்பனை, முதல் வித்தினை, சித்தனை, சிவலோகனை, திரு-நாமம் பாடித் திரிதரும் பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ; சித்தம் ஆர் தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே ! muththanai muthal soothiyai mukkaN appanai muthal viththinai siththanai sivalookanai thiru naamam paadi thiritharum paththarkaaL ingkee vammin niir ungkaL paasam thiira paNiminoo siththam aar tharum seevadikkaN nam senni manni thikazumee பொ-ரை: இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனும் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் ஒளிப் பொருட்களுக்கு எல்லாம் ஒளி வழங்கும் ஆதியான ஒளியானவனும் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்றையும் மூன்று கண்களாக உடையவனும் எல்லாப் பொருட்களும் தோன்றுதற்கு முதலான இடமாக (வித்தாக) விளங்குபவனும் ஞான வடிவானவனும் ஆக இருப்பவன் சிவபெருமான் ஆவான். இங்ஙனம் மனம், மொழிகளைக் கடந்து நிற்கும் பெரியவனாயினும், எம் போன்றோர் கண்டு வாழச் சிவலோகம் எனப் பெறும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ளான் அச்சிவபிரான். அத்தகைய பெருமானுடைய திருப்பெயர்களை இடைவிடாது துதிக்கும் சீரடியார்களே! விரைந்து இங்கே வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த அவனது சிவந்த திருவடிகள் நம் தலைமீது நிலை பெற்று விளங்கும். இது உறுதி. Come Ye hither eh devotees! And move about singing on the auspicious name of the Lord of Civa Loka! The Lord that dwelleth in the hearts of all His followers! He that is the primordial seed of all! He the three eyed Sire! He, the very beginning of light effulgence! He that is beyond all bondage! Singing thus, do pay obeisance to Him, that your bondage may all cease to be ! At His sacred Feet that fill our hearts, shall our heads abide, ever shining so bright. கு-ரை: இறையன்பர்களைத் திருப்பெருந்துறை ஞானாசிரியன் பால் வந்து மலமறப் பெறுமாறு தூண்டுதல் இதனுள் கூறப்பட்டது. சித்தம் என்பது, நினைவையும் குறிக்கும். THIRUCHCHITRAMBALAM 43. திரு வார்த்தை 43. THIRU-VAARTHTHAI (அறிவித்து அன்புறுதல் ) The Holy Tidings திருப்பெருந்துறையில் அருளியது Revealing a Catalogue of Supernal Events ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் வார்த்தை - நிகழ்ச்சி, இது, வர்த்தித்தல், வர்த்தமானம் என்பன போல்வது. நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் சொல்லும் ஆகுபெயரால், வார்த்தை எனப்படும். இறைவனது அருள் நிகழ்ச்சிகளை அருளிச் செய்த பாடல்களின் தொகுதியாதலின், இது, திருவார்த்தை எனப்பட்டது. இவ்வருள் நிகழ்ச்சியது பெருமையை யாவரும் அறியுமாற்றால் எடுத்துச் சொல்லுதல், அடிகளது அன்பின் பெருக்கமாக அமைதலின், இதற்கு, 'அறிவித்தன்புறுதல்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர் . இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இஃது, அறுசீரடி விருத்தத்தால் ஆயது எனக் கொள்வர். எனினும், எண்சீரடி விருத்தத்தால் ஆயதெனவே வேண்டும். சிலவிடத்து இரு மாச்சீர்கட்கு ஈடாக ஒரு விளங்காய்ச் சீர் நிற்கின்றது. சில இடங்களில் உயிரளபெடை ஒற்றளபெடைகள் கொள்ளற் பாலன. They shall indeed be one with the Almighty who have come to realise in all earnestness the supernal nature of Lord Civa, - His many-splendoured acts of valour and chivalry, displayed from time to time for the benefit of humanity. In all Saivaistic Schools of Theology, the beginningless and endless nature of the soul and the Lord (Jeevaatma and Paramaatma), are repeatedly stressed. Confer St. Thirumoolar (பதி, பசு, பாசம் எனப்பகர் - -- பசு, பாசம், அநாதி) , Also, 'என்று நீ அன்று நான்' - vide St. Thaayumaanavar. This is in sharp contrast to other schools of philosophy that attribute 'avatars' on the earth to the supreme all-powerful Lord, forgetting that He gets things done by sankalpa, a mere wish on a simple waving of the hand and such-like gestures. Paasam or bondage is what prevents the soul (Pasu) from entering the portals of the abode of God, there to stay for eternity. For this to happen the stage of 'Sathinipatham (அருள் வீழ்ச்சி) has to be reached. The three 'malas' are to be conquered. The pernicious affliction, the chronic 'ego malam' being the warding off the effects of kanmam and maaya (results of the past and the illusion of the present). Those that have genuinely assimilated the true nature of the infinite compassion inherent in His many acts of valour on this earth, become eligible for merger with Him. (Humanity has been classed into three categories Sahalar, Pralayaakalar and Vignaanakalar, in accordance with the remnants of malas still lingering around them). The removal of 'malas', thus becomes the 'Sine qua non' for liberation from birth cycles. The saint's revelations arise out of compassion towards human beings all of whom should achieve salvation even as he did. In the fourth line of each stanza of this decad, Saint Maanikkavaachakar declares unequivocally that those who have clearly come to know (of the exploits) of Lord Civa, will be one with Him - 'எம்பிரான் ஆவாரே' Rev. G.U. Pope conveys this meaning in his translation of this decad (those who have the power to know this, are one with His grace) whereas many other commentators interpret this as "those who have clearly come to know (of the exploits) of Lord Civa, will themselves be our gods". Since "எம்பிரான்" (Empiran) is singular case (no multiplicity of godhead) all persons who have come to know of the Lord could not themselves possibly have been intended to be taken as "gods” right away, although such godly folks (Master or Chief Preceptors) do eventually merge with the one and the only one supreme being 'Empiran'! 'ஆவாரே' implies that "they will become" that 'they have a right to become!'. No human being, (in flesh and blood state) howsoever knowledgeable, can be equated with Lord Civa. Saint Appar's avowal "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்.. அவர் கண்டீர்.. நாம் வணங்கும் கடவுளாரே", stands on a different footing altogether, as it serves to emphasise the importance of dedication from all quarters, high or low (Also the term கடவுளாரே used by St. Appar here, refers to minor gods, vignanakalars and others). The true meaning of the scriptural assertion 'Tat Tvam Asi' clarified elsewhere in this commentary may also be consulted. Instead of 'that thou art', it should correctly be interpreted as 'that thou becomest'. 43. 1 மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கரு ணையடியார் குலாவு நீதிகுண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந் தாதிப் பிரமம் வெளிப்படுத்த வருளறி வாரெம்பி ரானாவாரே மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி , கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும், போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து, ஆதிப் பிரமம் வெளிப் படுத்த அருள் அறிவார் - எம்பிரான் ஆவாரே. maathu ivar paakan maRaipayinRa vaasakan maamalar meeyasoothi koothil parangkaruNai adiyaar kulaavum niithi kuNam aaha nalkum poothu alar soolai perunthuRai em puNNiyan maNNidai vanthizinthu aathi piramam veLippaduththa aruL aRivaar empiraan aavaaree பொ-ரை: நம் பரமசிவம் மாதொரு பாகத்தன்; வேத மந்திரங்களையே மொழியாகக் கொண்டவன்; இதய மலரில் வீற்றருளும் ஒளியானவன்; குற்றமற்ற அருள் வடிவானவன்; அடியார் கொண்டாடும் நீதியானவன்; நீதியைக் குணமாகக் கொண்டு அருள் புரிபவன்; அரும்புகள் மலர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய எம் புண்ணிய மூர்த்தி; இப்பூமியில் குருநாதனாக வந்து இறங்கிய முதன்மையான சிவ சொரூபம். இத்தகைய சிவபெருமான் அடியேற்குக் காட்டிய திருவருளை உணர்பவர்களே எமக்குத் தலைவர் ஆவார். Those that have come to realise the many splendoured traits of the Lord, shall verily become one with His grace. The traits of Lord Civa that holdeth His consort on one half of His physical manifestation, the Lord reciting the four scriptures, Lord effulgence abiding in the 'lotus-like' hearts of all His devotees, He the flawless grace, expanding everywhere, bestowing benediction on servitors whose deeds He takes as acts of virtue, Lord benevolent of Thirup- Perun-Thurai, where groves of budding flowers abound! He that descended down to the earth and revealed His primordial grandiosity for the benefit of mankind! Those that realise this shall verily become one with His grace. கு-ரை: இவர்தல் = ஊர்தல்; அமர்தல். மறை = இரகசியம் எனக் கொண்டு உபதேச மொழி பயின்ற வாசகன் என்பாரும் உளர். கைம்மாறு கருதாத கருணை ஆதலால் 'கோதில் பரங்கருணை' என்றார். மலர் என்பது இதயத்திற்கு ஆகுபெயர். அடியார் குலாவு நீதி குணமாக நல்கும் என்பதற்கு அடியார் கைக்கொண்டொழுகு முறையைக் குணமாகக் கொண்டு அருளும் எனவும் கூறுவர். போது= விரியும் பருவத்தரும்பு, வெளிப்படுத்த என்பது 'வெளிப்படுத்திய' என்பதன் குறுக்கம். 2. மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க வவர்க்கருள் செய்தவீசன் ஞால மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழுங் கோல மணியணி மாடநீடு குலாவு மிடவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வாரெம்பி ரானாவாரே. மால், அயன், வானவர் கோனும் வந்து வணங்க, அவர்க்கு அருள் செய்த ஈசன் ஞாலம் - அதனிடை வந்திழிந்து, நல்நெறி காட்டி, நலம் திகழும் கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே maal ayan vaanavar koonum vanthu vaNangka avarkku aruLseytha iisan njaalam athanidai vanthi zinthu nalneRi kaaddi nalam thikazum koola maNi aNi maadam niidu kulaavum idavai mada nallaadku siilam mika karuNai aLikkum thiRam aRivaar empiraan aavaaree பொ-ரை: திருமாலும், பிரமனும், தேவர்க்கரசனும் வந்து பணிய, அவர்களுக்கு அருள்புரியும் நம் இறைவன் உலகத்திடைக் குருவாக இறங்கி வந்து, ஞான நெறியை அறிவுறுத்தினான். அழகு விளங்கும் நல்ல இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களை உடைய உயர்ந்து விளங்கும் திருவிடைமருதூரில், பெண் அடியவர் ஒருத்திக்கு அவளது ஒழுக்கம் விளங்கும்படிக் கருணைபுரிந்த தன்மையை அறிய வல்லவர் எம் தலைவராவார். Lord Civa blessed Thirumaal and Brahma (மால், அயன்) and the Chief of the 'Sky-Borne' gods (Indra), when they came over to Him and worshipped Him. Such a Lord, descended down upon this earth to reveal the right path (to humanity). He who showered the grace of emancipation on an exalted woman-devotee of the beauteous pearl-studded high rise mansion in Thiru-Vidai-Maruthur! Those that have truly come to realise all this, shall verily become one with Lord Civa's grace. Note: The exalted woman-devotee of pearl-studded mountain referred to in this stanza, is probably Queen Mandodhari of the high-towered Sri Lanka castle, as we see a similar reference in stanza 5 more explicitly indicating the tall forts of Sri Lanka (at a certain city இடவை ) where dwelt the soft-fingered woman-devotee of Lord Civa. Queen Mandothari is a highly venerated Saiva Saint in southern mythology as also Queen திரிசடை who is the daughter of Raavana's brother Vibishanan and who was the companion of Sita during her captivity in Sri Lanka. கு-ரை: வந்திழிந்து என்பதை இழிந்துவந்து என மாறுக. நலம் = அழகு. கோலம் = வடிவு, இடவை =திருவிடை மருதூர். அது பழம்பதியாதலின் 'நீடுகுலாவு' என்றார். இதனை 'நல்லாட்கு' என்பதோடு முடித்து நெடிது அன்பு பாராட்டும் எனவும் உரைப்பர். சீலம் = நல்லொழுக்கம். சீலமிகுவோரைக் கண்டு அருள் செய்தார் என்றலும் உண்டு. இடவை மட நல்லாள்= இலங்கை மன்னன் இராவணேசுரன் மனைவி மண்டோதரி. இதே பதிகத்தில் ஐந்தாவது பாட்டில் "ஓங்குமதில் இலங்கை அதனில் பந்தணை மெல்விரலாட்கு அருளும் பரிசு” என்று உள்ளது= இங்கு மண்டோதரியை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், இரண்டாவது பாட்டில் வந்துள்ள "இடவை மட நல்லாள்” என்பவள் பற்றி வேறு பல கருத்துக்களும் உரை ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. அந்த கருத்துக்களைக் கீழே தருகிறோம். அவரவர்கள் சிந்தனைக்குப் பொருந்துமாறு உள்ள பொருளை ஏற்றுக் கொள்க. சி. அருணை வடிவேல் ஐயா அவர்கள் குறிப்பு: 1. "இடவை” என்பது வந்தீ என்ற பிட்டு வாணிச்சி வாழ்ந்த இடத்தின் பெயராக இருக்கலாம். வந்தீயின் பொருட்டு இறைவன் மண் சுமந்த வரலாறு வெளிப்படை. 2. "இடவை" = இடைமருது என உரைத்து அதன்கண் மட நல்லாட்கு அருள்புரிந்த வரலாறு அறியப்பட்டிலது என்று கொள்வாரும் உண்டு . 3. "இடவை" என்பது திருவிடை மருதூரைக் குறிக்கும் அங்குள்ள இறைவர் வரகுண பாண்டி மன்னனின் அன்பிற்காக அவன் மனைவியை ஏற்றதனைப் பொருத்துவாரும் உளர். வரகுணபாண்டியன் மனைவியை இறைவர் ஏற்றுக் கொண்ட வரலாற்றையும் இடவை என்பது திருவிடைமருதூரைத்தான் குறிக்கும் என்பதன் விளக்கத்தையும் மகாவித்வான் தண்டபாணி தேசிகர் ஐயா அவர்கள் விவரமாக எழுதியுள்ளதைக் கதை எண் 25-Aயைப் பார்க்கவும். குறிப்பு:- “மருது" என்ற வார்த்தை வடமொழியில் "அர்ச்சுனம்" என்று வழங்கப் பெறும். மருத மரத்தைத் தலமரமாகக் கொண்ட தலங்கள் மூன்று அவை (1) மல்லிகார்ச்சுனம், (2) மத்தியார்ச்சுனம், (3) புடார்ச்சுனம் என்பன. அவற்றுள், தமிழ்நாட்டில் உள்ளவை இடைமருது, புடைமருது ஆகிய இரண்டுமாம். அவைகள் முறையே திருவிடைமருதூர் என்றும் திருப்புடைமருதூர் என்றும் வழங்கப்படுவது. பழைய உரையாசிரியர் ஒருவர் "இடவை மட நல்லாள்" என்பதற்கு இடைவிடாது எழுந்தருளும் பார்வதி தேவிக்குச் சிவகுணமே தானாக அருள் செய்தும் என உரை கண்டனர். இது மிகவும் பொருந்தாமை அறிக. 3. அணிமுடி யாதி யமரர் கோமா னானந்தக் கூத்த னறுசமயம் பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப் பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி வாரெம்பி ரானாவாரே. அணிமுடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம் பணி வகை செய்து, படவு அது ஏறி. பாரொடு விண்ணும் பரவி ஏத்தப் பிணிகெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண் பால் உகந்து மணி வலை கொண்டு, வான் மீன் விசிறும் வகை அறிவார் - எம்பிரான் ஆவாரே. aNimudi aathi amararkoomaan aanantha kuuththan aRusamayam paNivakai seythu padavu athu eeRi paarodu viNNum paravi eeththa piNi keda nalkum perunthuRai em peeraruLaaLan peNpaal ukanthu maNivalai koNdu vaan miin visiRum vakai aRivaar empiraan aavaaree பொ-ரை: இறைவன் அழகிய சடைமுடி உடைய முதல்வன்; தேவர்களின் தலைவன்; ஆனந்தக் கூத்துடையவன்; அறுவகைச் சமயங்களும் தன்னை வந்து வணங்கும்படிச் செய்கிறான். மண்ணுலகினரும், விண்ணுலகினரும் வாழ்த்தி வழிபட, அவர்களது பிறவிப் பிணி ஒழியும்படி அருள் செய்யும் பெருந்துறைப் பெருங்கருணையாளன். வலைஞர் மகள் வலைச்சியாக வந்த உமையம்மையை மணக்க வேண்டித் தோணி ஏறி அழகிய வலை ஏந்தி பெரிய கெளிற்று மீனை வீசிப் பிடிக்கும் திறத்தை அறியும் தன்மையர் எம் தலைவராவார். Lord Primordial! The everlasting one! Lord with ornamented crest! Lord of the dance of bliss! Chief of all gods! So chanting do all creeds on the earth and in the sky, pray, and pay obeisance to Him, ... setting out as it were, on the boats of servitude in myriad ways! Upon such folks of the earth and the sky, He bestows grace, that they may be freed from the agony of birth cycles. Such is our Lord of infinite grace abiding at Thirup-Perun-Thurai. Once He laid out a mighty fish net (to subjugate the deadly shark that was playing havoc with the lives of fisher folks), in order to get the hand of His beloved (Uma Devi). Those that truly come to know of the nature of this episode, shall verily become one with Lord Civan's grace! கு-ரை: அறுசமயம் என்றது உட்சமயங்களை. படவதேறி என்பதை மணிவலை கொண்டு என்பதனோடு முடிக்க. இதனுள் கூறப்பட்டதைத் திருவிளையாடற் புராணம் வலைவீசிய படலத்துட் காண்க. 4. வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய வாட லமர்ந்த பரிமா வேறி யையன் பெருந்துறை யாதியந்நா ளேடர் களையெங்கு மாண்டுகொண்ட வியல்பறி வாரெம்பி ரானாவாரே. வேடு உரு ஆகி, மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத் தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந்நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே. veedu uru aaki makeenthiraththu mikukuRai vaanavar vanthu thannai theeda iruntha sivaperumaan sinthanai seythu adiyoongkaL uyya aadal amarntha parimaa eeRi aiyan perunthuRai aathi annaaL eedarkaLai engkum aaNdu koNda iyalpu aRivaar empiraan aavaaree பொ-ரை: மகேந்திர மலையில் இறைவன் வேட்டுவ வடிவம் கொண்டு, தன்பால் இரத்தற்குரிய, மிகுந்த குறைகளை உடைய விண்ணவர் தன்னைத் தேடும்படியாக வீற்றிருந்தருளினான். அடியோங்கள் உய்வதை எண்ணி வலிமை பொருந்திய குதிரையில் ஏறியவன். இத்தகைய தலைவனாகிய திருப்பெருந்துறை முதல்வன் அக்காலத்தில் மலையில் வேடனாகவும், கடலில் வலைஞனாகவும் , நிலத்தில் குதிரை வீரனாகவும் எழுந்தருளி அவரவர் வடிவில் அவரவர்களை ஆண்டு கொண்ட தன்மையை அறிபவரே எம் தலைவராவார். Stayed He at Mount Mahendra in the guise of a hunter, when all sky-borne gods, despite their shortcomings, were eagerly going over in search of Him. He, the Chief of Perunthurai, the primordial Lord, once mounted on a mighty steed and took in tutelage all of us, everywhere, that we may meditate on Him and so be redeemed. Those who have come to realise this aspect of His, shall verily become one with His (our Chief) grace! கு-ரை: 'வேடுருவாகி' என்பதைத் 'தேட விருந்த' என்பதனோடு முடிக்க. மகேந்திரமலை - பொதிகை மலைக்குத் தெற்கே உள்ளது எனச் சிவதருமோத்திரம் கூறும். அதனைக் கயிலாயம் என்பாரும் உளர். வேடுருவாகி என்பதற்கு வேண்டுருவாகி எனப் பொருள் கொண்டு இறைவன் இயக்க வடிவம் கொண்டிருந்தார் என்பர். அக்கதை கேனோபனிடதத்தில் கூறப்பட்டது. அடியோங்கள் உய்யச் சிந்தனை செய்து என மாறுக. சிந்தனை செய்து என்பதைச் சிவபெருமானுக்கும் அடியோங்கள் என்பதற்கும் இயைப்பது உண்டு. ஆடல்= வலிமை, ஏறி என்பதை வினையெச்சமாகக் கொண்டு ஆண்டுகொண்ட என்பதனோடு முடிப்பதும் உண்டு. ஏடர்கள் = நண்பர்கள். 5. வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாயடியார் பந்தனை விண்டற நல்குமெங்கள் பரமன் பெருந்துறை யாதியந்தா ளுந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங் கையதனிற் பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வாரெம்பி ரானாவாரே. வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக்கடல் ஆய், அடியார் பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந்நாள் உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில், பந்து அணைமெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் - எம்பிரான் ஆவாரே. vanthu imaiyoorkaL vaNangki eeththa maakkaruNai kadalaay adiyaar panthanai viNdu aRa nalkum engkaL paraman perunthuRai aathi annaaL unthu thirai kadalai kadanthu anRu oongku mathil ilangkai athanil panthu aNai mel viralaadku aruLum parisu aRivaar empiraan aavaaree பொ-ரை: வானவர்கள் தாம் வாழ்வதற்காகவே இறைவனை வழிபடும் குறையுடைய குணம் உடையவர்கள். மெய்யடியார்களோ முத்தியினையும் வேண்டாது மெய்யன்பினால் இறைவனை வழிபட்டுக் கொண்டு இருக்க விரும்பும் நிறையுடைய குணமுடையவர்கள். வானவர்கள் தமது பகை விலகி நலம் மிக வேண்டும் என்று பயன் கருதி வழிபாடு செய்ய, இறைவன் அவர்கள் வேண்டுதலைக் கருதாது உண்மை அடியார்களின் பாச பந்தங்கள் நீங்கிப் போக, சிவத் தோற்றத்தை அருளுகின்றவன். பெரிய கருணைக் கடலாய் உள்ளவன் எங்கள் பரமனாகிய திருப்பெருந்துறை முதல்வன். அவன் திரைவீசும் கடலைக் கடந்து உயர்ந்த மதில் சூழ்ந்த இலங்கையில் பந்து விளையாடும் மெல்லிய விரலை உடைய வண்டோதரிக்கு அருள் புரிந்த - வேண்டுவார் வேண்டுவதே அருளும் கருணையுடையவன் என்னும் - வகையறிபவரே எம் தலைவராவார். With all the gods of heaven coming and paying obeisance in adoration, our exalted Lord as a mighty sea of compassion grants His devotees, liberation from bondage. He is the primordial Lord of Thirup-Perun-Thurai! Once He crossed over the wafting billowy seas and conferred benediction on the soft flowery-fingered woman-devotee (Queen Mandothari) at the high rise ramparts of (ancient) Sri Lanka. Those who have come to realise the way He does such things, shall verily become one with His (our Lord) grace. கு-ரை: கடலாய் என்பதை நல்கும் என்பதனோடு முடிக்க. பந்தனை= கட்டு; பாசம். விண்டு= பிரிந்து;நீங்கி. உந்துதிரை என்பதைத் திரை உந்து என மாற்றுக. அன்று - சாரியை. 6. வேவத் திரிபுரஞ் செற்ற வில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ வேவற் செயல் செய்யுந் தேவர் முன்னே யெம்பெரு மான்றா னியங்கு காட்டி லேவுண்ட பன்றிக் கிரங்கியீச னெந்தை பெருந்துறை யாதியன்று கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே வேவத் திரிபுரம் செற்ற வில்லி, வேடுவன் ஆய்க் கடி நாய்கள் சூழ, ஏவல் - செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான், இயங்கு காட்டில் ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே veeva thiripuram seRRa villi veeduvanaay kadinaaykaL suuza eeval seyalseyyum theevar munnee emperumaan thaan iyangku kaaddil ee uNda panRikku irangki iisan enthai perunthuRai aathi anRu keevalam keezalaay paal koduththa kidappu aRivaar empiraan aavaaree பொ-ரை: திரிபுரங்களும் வெந்து போகும்படி கோபித்த வில்லாளன் ஆகிய சிவபெருமான் வேட வடிவம் கொண்டான். காவல் நாய்கள் சூழ்ந்து வரத் தாம் ஏவும் பணியைச் செய்யும் விண்ணவர் முன் செல்ல, எம்பிரான் தாம் செல்லுகின்ற காட்டில் அம்பு தைத்து இறந்த பன்றிக்கு இரங்கினான். எம் அப்பன், ஆண்டவன், பெருந்துறை முதல்வன் அந்நாளில் தானே பன்றி வடிவம் எடுத்துப் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த திருவுள்ளக் கருத்தை அறியும் தன்மையரே எம் தலைவராவார். Bow on hand, the Lord burnt out the forts of the three Asuraas (Tripura). As a Hunter, surrounded by ferocious dogs, our Lord once moved about in the forests at the head of devas serving under His command. And out of compassion to the sorrowing piggies left behind by a wounded mother pig, he assumed the form of the lovely creature and suckled the young ones. Such is the dispensation of the primordial Lord of Thirup-Perun-Thurai. Those who have come to realise this rare nature of the Lord, shall verily become one with His (our Lord) grace. Note: The reference is to the Lord going towards Arjuna in the guise of a Hunter and the devas following Him in the form of dogs. Also note suckling of young pigs, another episode (See Story No. 30). கு-ரை: கடி= காவல். ஏவு = அம்பு. கேவலம் = தனிமை, வில்லி, எம்பெருமான், ஈசன், எந்தை, ஆதி, காட்டில் இரங்கி அன்று, கொடுத்த, கிடப்பு, அறிவார் என முடிக்க. 7. நாத முடையதோர் நற்கமலப் போதினி னண்ணிய நன்னுதலா ரோதிப் பணிந்தலர் தூவியேத்த வொளிவளர் சோதியெம் மீசன்மன்னும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை யறியவல் லாரெம்பி ரானாவாரே. நாதம் உடையது ஓர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார் ஓதிப் பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும் போது அலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றிப் பேதம் கெடுத்து, அருள் செய்பெருமை அறியவல்லார் - எம்பிரான் ஆவாரே. naatham udaiyathu oor nalkamala poothinil naNNiya nalnuthalaar oothi paNinthu alar thuuvi eeththa oLivaLar soothi em iisan mannum poothu alar soolai perunthuRai em puNNiyan maNNidai vanthu thoonRi peetham keduththu aruL sey perumai aRiyavallaar empiraan aavaaree பொ-ரை: வண்டின் ரீங்கார ஒலியுடைய தாமரை மலரில் அழகிய நெற்றியை உடைய திருமகளும், கலைமகளும் முறையே திருவாரூரிலும் திருக்கண்டியூரிலும் இறைவனை வழிபட்டு மாண்ட தத்தம் கணவர்கள் உயிர்பெற்று எழும் வரத்தைப் பெற்றனர். அவர்கள் வாழ்த்தி வணங்கி மலர்தூவி வழிபடும்படி ஒளி மிகுந்த சோதி வடிவாகி விளங்குகிறான் இறைவன். மலர்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எம் புண்ணிய மூர்த்தி மண்ணுலகத்தே குருவாய்த் தோன்றி அருளினான். சீவன் (ஆன்மா) சிற்றறிவும் சிறுதொழிலும் மலபந்தமும் உடையவன்; சிவன் முற்றறிவும் அருட்செயலும் அளவிலாத ஆற்றலும் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மையும் உடையவன். சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள இந்த வேற்றுமைகளை நீக்கி, அடியோமுக்கு அருள் செய்தான். நிறைவாய் விளங்க அருள் செய்கின்ற அவன் பெருமையை அறிய வல்லவரே எம் தலைவராவார். Seated on fair lotus flowers around which honeybees keep humming many tunes, the goddesses of learning and wealth chant hymns and pay obeisance to the Lord, through floral offerings. This effulgent Lord of ours, the flaming light of grace, stays for ever at Thirup-Perun-Thurai, full of groves with blooming buds. Such is our Lord of virtue who came down to the earth, ended all sectarianism and showered grace on all. Those who have come to realise this glorious act shall verily become one with His (our Lord) grace. கு-ரை: நாதம்= வண்டுகளின் ஒலி, நன்னுதலார் என்றமையால் கலைமகளும் திருமகளும் கூறப்பட்டனர். சோதி என்பதைப் பெருந்துறை என்பதோடு சேர்ப்பதும் உண்டு. பேதம் என்பது பாசத்தால் ஏற்பட்ட வேற்றுமை. பாசத்தை நீக்கி அத்துவிதக் கலப்பினை அருள் செய்தலால் 'பேதங் கெடுத்து' என்றார். 8. பூவலர் கொன்றைய மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோ னேதில் பெரும்புக ழெங்களீச னிருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்று மோவிய மங்கையர் தோள்புணரு முருவறி வாரெம்பி ரானாவாரே . பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் மாது நல்லாள், உமை மங்கை பங்கன், வண் பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் - எம்பிரான் ஆவாரே. puu alar konRai am maalaimaarpan poor ukir van puli konRa viiran maathu nallaaL umai mangkai pangkan vaN pozil suuzthen perunthuRaikkoon eethu il perumpukaz engkaL iisan irungkadal vaaNaRku thiiyil thoonRum ooviya mangkaiyar thooL puNarum uruvu aRivaar empiraan aavaaree பொ-ரை: அழகிய கொன்றைப் பூவினாலாகிய மாலையணிந்த மார்பை உடையவன்; போர் செய்வதற்குரிய நகங்கள் கொண்ட, வல்லமை மிக்க புலியைக் கொன்ற வீரன்; உமை நங்கை பாகன்; வளம் மிக்க சோலைகள் சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை மன்னன். குற்றமற்ற பெரும் புகழுடையவன் எம் இறைவன். பெரிய கடலரசனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற அழகிய நங்கையான உமாதேவியின் தோள்களைப் புணரும் அவன் திருவுருவை அறிபவரே எம் தலைவராவார். Our Lord with a garland of blooming 'Konrai' (Cassia) flowers, He that vanquished the ferocious sharp-clawed tiger, He that holdeth the fair goddess Uma on one side of His physique, Lord of the southern Perunthurai surrounded by luscious groves, our mighty Lord of flawless fame, He that once manifested Himself as a flaming fire, before a sea-based god! (Probably a reference to Thirumaal the sea-based). His form is immanent in (every) "portrait like" maid so fair! Those who have come to know of these traits shall verily become one with His (our Lord) grace. Note : Other commentators have identified 'இருங்கடல் வாணன்' with the Chief Fisherman as whose daughter, goddess Uma was brought up, according to the well known legendary episode (Thiru Vilayaadal) - vide 'அருணை வடிவேல் முதலியார்' (Footnotes). Many commentators have expressed inability to trace this event to any previous write-up. So also is the import of the last line of this stanza. Also 'ஓவிய மங்கையர்' is plural case, and hence the present commentator's version seems more plausible than those that link this to Thiru Vilayadal. கு-ரை: பூ - அழகு. அலர் = விளங்கு. உகிர் = நகம், தாருகா வனத்து முனிவர் விடுத்த வேள்விப் புலியினைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த கதை வெளிப்படை. ஏதில் = குற்றமில்லாத. ஈசன் என்பதை உரு என்பதனோடு முடிக்க. வாணன்= வாழ் + நன்= வாழ்பவன். இங்கே அரசன் என்ற பொருளில் வந்தது. ஓவியம் =சித்திரம். 9. தூவெள்ளை நீறணி யெம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து தேவர் தொழும்பதம் வைத்த வீசன் றென்னன் பெருந்துறை யாளியன்று காதல் பெருகக் கருணை காட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னை யாண்டருளுங் கிடப்பறி வாரெம்பி ரானாவாரே. தூவெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மகேந்திர நாதன், வந்து தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று காதல் பெருகக் கருணைகாட்டித் தன் கழல் காட்டிக் கசிந்து உருகக் கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே. thuuveLLai niiRu aNi emperumaan soothi makeenthira naathan vanthu theevar thozum patham vaiththa iisan thennan perunthuRai aaLi anRu kaathal peruka karuNai kaaddi than kazal kaaddi kasinthu uruka Keetham keduththu ennai aaNdaruLum kidappu aRivaar empiraan aavaaree பொ-ரை: தூய வெண்மையான திருநீற்றையணிந்த எம் பெருமான், ஒளி வடிவான மகேந்திர மலையின் தலைவனாவான். தாமே வலிய வந்து தேவர்கள் தொழும் திருவடி என் தலைமீது சூட்டிய ஈசன், பாண்டியன்; திருப்பெருந்துறையைத் தலைநகராகக் கொண்டு ஆள்பவன். அவன் குருநாதனாக எழுந்தருளிய அந்நாளில், எனக்கு அன்பு மிகும்படி அருள்காட்டித் தன் திருவடியையும் காட்டி அருளினான். உள்ளம் கசிந்து உருகும்படி என் துன்பங்களைக் கெடுத்து என்னை ஆண்டருளும் திருவுள்ளக் கருத்தை அறிபவரே எம் தலைவராவார். Our Lord, wearer of pure white ash, Chief of the effulgent Mount Mahendra, who came over and placed His Feet on this earth, the Feet worshipped by all the gods of heaven! This Lord ruling over the southern Thirup-Perun-Thurai showered grace on us and with affection overflowing then, revealed to us His blissful Feet, destroying all evil, even as we stood melting at heart under His stewardship. These who have come to know of this dispensation shall verily become one with His (our Chief) grace. கு-ரை: ஆளி = ஆள்பவன். கேதம் = துன்பம். எம்பெருமான், நாதன், ஈசன், ஆளி, அருளும் கிடப்பு அறிவார் என முடிக்க. 10. அங்கண னெங்கள மரர்பெம்மா னடியார்க் கமுத னவனிவந்த வெங்கள் பிரானிரும் பாசந்தீர விகபர மாயதோ ரின்பமெய்தச் சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை யாளியன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறி வாரெம்பி ரானாவாரே. அம்-கணன் எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக-பரம் ஆயது ஓர் இன்பம் எய்தச் சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை அறிவார் - எம்பிரான் ஆவாரே. angkaNan engkaL amarar pemmaan adiyaarkku amuthan avani vantha engkaL piraan irumpaasam thiira ikaparam aayathu oor inpam eytha sangkam kavarnthu vaN saaththinoodum sathuran perunthuRai aaLi anRu mangkaiyar malkum mathurai seerntha vakai aRivaar empiraan aavaaree பொ-ரை: எங்கள் பெருமான் அழகிய அருட்கண்களை உடையவன். விண்ணவர் தலைவன், அடியார்களுக்குச் சாவா மருந்தானவன். இந்நிலவுலகில் குருவாகி வந்த எங்கள் பெருமான் மிக்க திறமையை உடையவன். திருப்பெருந்துறை மன்னன். அவன் அடியார்களது வலிமை மிக்க மும்மலப் பற்று நீங்கவும், இம்மை மறுமையில் பேரின்பம் அடையும் பொருட்டும் அந்நாளில் சங்கினாலாகிய வளையல்களை எடுத்துக் கொண்டு வளையல் விற்பதற்குப் பெண்கள் நிறைந்த மதுரையம்பதி அடைந்த விதத்தை அறிய வல்லவர் எம் தலைவராவார். Our Lord of beauteous eyes! Chief of all the heaven-based gods! Elixir to devotees ! This our Lord, came over to this earth to ensure that all our bondage may cease to be, and that we may attain bliss here and in the great beyond! He that caused the bangles of the teeming maids of Madurai (the capital city of the Paandiyan Kingdom) to come loose (by getting them emaciated through the pangs of separation from Him). Those who have come to realise the implication of these events shall verily become one with His (our Lord) grace. கு-ரை: அங்கணன், பெம்மான், அமுதன், பிரான், சதுரன், ஆளி, தீர, எய்த, கவர்ந்து, சேர்ந்த வகை அறிவார் என முடிக்க. சங்கம் கவர்ந்து என்பதற்குச் சங்கம் கவர எனப் பொருள் கொள்வாரும் உளர். பெண்களுடைய சங்கு வளையல்களைக் கவர்வதற்கு மதுரை சேர்ந்தார் என்பது கருத்து. சாத்து= சரக்கு. THIRUCHCHITRAMBALAM 44. எண்ணப் பதிகம் 44. ENNAP-PATHIGAM (ஒழியா இன்பத்து வகை ) The Decad of Rumination தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Yearning for Endless Bliss ஆசிரிய விருத்தம் Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் அடிகள் தம் எண்ணத்தினை விண்ணப்பித்த பதிகம் எண்ணப்பதிகம். 'எண்ணம்' என்பது இங்கு விருப்பத்தினைக் குறித்தது. 'ஒழியா இன்பத்து உவகை' என்ற முன்னோர் குறிப்பிலும் 'உவகை' என்பது விருப்பத்தையே குறிக்கும். 'இன்பத்து உவகை - இன்பத்தின்கண் விருப்பம்' என்க. ஒழியா இன்பம் - நீங்காத இன்பம்; நிலைத்த இன்பம் - பேரின்பம். முன்பு ஆசைப்பத்தினுள் கூறியவற்றினும் வேறாகச் சிலவற்றை இதன்கண் அருளிச் செய்வார். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது, சீர்வரையறையில்லா விருத்தத்தால் ஆயது. பதிகம் என்றமையின், பத்துத் திருப்பாட்டுக்களை உடையது என்பது தேற்றம். அதனால் இஞ்ஞான்று காணப்படுவன ஆறு திருப்பாட்டுக்களேயாதலின், எஞ்சிய திருப்பாட்டுக்கள் விடுபட்டன என்பாரது கூற்று உண்மையேயாம். இவ்வாறன்றிப் பாயிரத்தின் பெயர்களுள் ஒன்றாகிய பதிகம் என்னும் சொல்லோடு இப்பதிகம் என்னும் சொல்லை ஒட்டித் திரித்து, ஆறு செய்யுளோடே அமைத்தல் கூடாமை அறிக. This chapter though classed as a decad, holds only six stanzas in all, as in the case of the decad on Thiruk-Kazhuk-Kundram (Chapter 30) which too has less than the normal ten verses of a standard decad. Each stanza makes a fervent appeal for instant salvation and everlasting bliss, seeking to remind the Lord, as it were, of His earlier promise to take him back after a while, on completion of certain tasks in Thillai, at the ebullient golden hall of cosmic dance. The Saint is well aware that his day of deliverance is near at hand. Even as the crucial hour draws nigh, he continues to pour out soulful strains of intense dedication and longing for liberation. He clings on steadfastly to the golden Feet of Lord Civa, as he knows full well that all genuine devotees do indeed attain His inimitable grace and benediction eventually. One is reminded of Thiruk-Kural verse 666 which avers. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - Thiru Valluvar on வினைத்திட்பம். "If those who have planned an undertaking possess firmness (in executing it) they will obtain what they have desired, even as they have desired it" - Translation by Reverend Drew and John Lazarus. Such is the implication of Thiruvaachakam, Chapter 44, which is a high point in the Saivistic School of Theology. The assertion of the inexorable march towards the ultimate goal of salvation through firmness of dedication is indeed a most rewarding revelation in the canonical works of saivism. 44.1. பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெறவேண்டுஞ் சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்போ லாருரு வாயவென் னாரமு தேயுன் னடியவர் தொகை நடுவே யோருரு வாயநின் றிருவருள் காட்டி யென்னையு முய்யக் கொண்டருளே. பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்; சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல் ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக் கொண்டருளே. paar uru aaya piRappu aRa veeNdum paththimaiyum peRa veeNdum siir uru aaya sivaperumaanee sengkamala malar pool aar uru aaya en aar amuthee un adiyavar thokai naduvee oor uru aaya ninthiruvaruL kaaddi ennaiyum uyyak koNdaruLee பொ-ரை: புகழே வடிவாய சிவபெருமானே! செந்தாமரைப்பூப் போன்ற அரிய செம்மேனியனே ! எனக்குக் கிடைத்தற்கரிய அமுதமானவனே! இந்நிலவுலகிலே உடம்பெடுப்பதாகிய பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குக் காரணமான அன்புடைமையைப் பெற வேண்டும். அவ்வன்பு என்றும் நீங்காமல் நிலவ உன் மெய்யடியார் கூட்டத்தின் நடுவே ஒப்பற்ற திருவடிவுடைய உன் திருவருள் காட்டி அடியேனையும் உய்திக்கு ஏற்றருள்வாயாக. Oh Lord Civa of glorious form! Pray, grant Thou that I may reach the end of my birth cycles. Also that I may acquire intense dedication towards Thee. Thou that art like unto a red lotus in form! Thou, rare ambrosia! Into the midst of Thy vassals' congregation, pray take me too in and redeem me, revealing Thy unique form of resplendent grace! கு-ரை: பார் = நிலவுலகம். 'செங்கமல மலர்போலும்' என்பதைச் 'சீருவாய' என்பதனோடு இயைக்கலாம். ஆருருவாய என்பதற்கு, அரிய இயல்புடைய என்றும் பொருள் கொள்ளலாம். ஓருரு என்றது, ஞானாசாரிய வடிவத்தை. 2. உரியே னல்லே னுனக்கடிமை யுன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந் தரியே னாயே னின்னதென் றறியேன் சங்கரா கருணையினாற் பெரியோ னொருவன் கண்டுகொ ளென்றுன் பெய்கழ லடிகாட்டிப் பிரியே னென்றென் றருளிய வருளும் பொய்யோ வெங்கள் பெருமானே. உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து இங்கு ஒரு பொழுதும் தரியேன்; நாயேன்: இன்னது என்று அறியேன்; சங்கரா ! கருணையினால் பெரியோன் ஒருவன், 'கண்டுகொள்' என்று, உன் பெய்கழல் அடி காட்டிப் 'பிரியேன்' என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே ! uriyeen alleen unakku adimai unnai pirinthu ingku orupozuthum thariyeen naayeen innathu enRu aRiyeen sangkaraa karuNaiyinaal periyoon oruvan kaNdu koL enRu un peykazal adi kaaddi piriyeen enRu enRu aruLiya aruLum poyyoo engkaL perumaanee பொ-ரை: சங்கரா! எங்கள் பெருமானே! நாயனைய யான் உனக்கு அடிமையாக இருத்தற்கு உரிய தகுதி உடையவன் அல்லன். ஆனால் உன்னை விட்டு நீங்கி ஒரு சிறிது நேரமும் தனியே இருத்தலை நான் பொறுக்க மாட்டேன். யான் இதன் காரணம் என்னவென்று அறிந்திலேன். குருநாதனாக எழுந்தருளிய பெரியோன் ஒருவன் என்மீது வைத்த இரக்கத்தால் தனது கழல் செறிந்த திருவடிகளைக் காட்டி, “அவற்றைப் பார்த்துக் கொள்" எனக் கட்டளையிட்டு உன்னைப் பிரிய மாட்டேன் என்று என்னிடம் கூறிப் போனது பொய்யாகி விடுமோ? I am not worthy of being Thy vassal. And Yet I, this cur that I am, can not stay here parted away from Thee, any longer, Oh Lord Sankara, I know not what this is all about! In Thy grace, Thou showed me Thy unique greatness and bade me see Thy bejewelled Feet and promised in words of kindness that Thou wouldst not part from me ever. Oh our Chief, are we to understand that such solemn words of Thy indulgence are not true? கு-ரை: திருப்பெருந்துறையில் இறைவன் உபதேசம் பண்ணினதைக் கூறி, அது பொய்யாமோ என்றது. அது உண்மை ஆனால், இறைவன் தன்னைப் பிரியாது இருத்தல் வேண்டும் என்று குறிப்பித்தார். ' பெரியோன்' என்று இறைவனைப் படர்க்கையாகக் கூறியது ஒரு நயம். 3. என்பே யுருக நின்னரு ளளித்துன் னிணைமல ரடிகாட்டி முன்பே யென்னை யாண்டு கொண்ட முனிவா முனிவர் முழுமுதலே யின்பே யருளி யெனையுருக்கி யுயிருண் கின்ற வெம்மானே நண்பே யருளா யென்னுயிர் நாதா நின்னரு ணாணாமே. என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி முன்பே என்னை ஆண்டு கொண்ட முனிவா, முனிவர் முழு முதலே, இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே நண்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே. enpee uruka nin aruL aLiththu un iNaimalar adi kaaddi munpee ennai aaNdu koNda munivaa munivar muzumuthalee inpee aruLi enai urukki uyir uNkinRa emmaanee naNpee aruLaay en uyir naathaa nin aruL naaNaamee பொ-ரை: எனது எலும்பும் உருகும்படியாக நின் திருவருளை மிக நல்கி, நின் தாமரையடிகள் இரண்டையும் எனக்குக் காட்டினாய். பக்குவம் வருமுன்னரே என்னை ஆட்கொண்டருளிய தவவடிவனே! துறவிகள் அனைவருக்கும் தலைவனே! பேரின்பத்தைக் கொடுத்தருளி என்னை உருகுவித்து எனது உயிர்ப் போதத்தைத் தொலைக்கின்ற எம் பெரியோனே ! எனது உயிர்க்கு உயிரானவனே! நண்பனே! நாணாமல் நின்னருளை அருள்வாயாக. Oh Thou, great sage, that granted me grace in the days of yore and revealed Thy twin flowery Feet, causing my bones to melt in dedication! Thou that had then taken me in tutelage! Thou, primordial Chief of all sages! Lord that softened my bones through grant of bliss! Thou that stood as one with my soul! Pray, grant me now, fellowship with Thee, Oh Master of my soul! Shy not away from this (commitment)! கு-ரை: முனிவா= துறவியே என்றும் உரைப்பர். உயிருண்ட= தற்போதம் இழப்பித்தல். 4. பத்தில னேனும் பணிந்தில னேனுமுன் னுயர்ந்தபைங் கழல்காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப் பாயெம் பெருமானே முத்தனை யானே மணியனை யானே முதல்வனே முறையோ வென் றெத்தனை யானும் யான்றொடர்ந் துன்னை யினிப்பிரிந் தாற்றேனே. பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய் ; எம்பெருமானே! முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! 'முறையோ' என்று எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே. paththu ilan eenum paNinthilan eenum un uyarntha paingkazal kaaNa piththu ilan eenum pithaRRilan eenum piRappu aRuppaay emperumaanee muththu anaiyaanee maNi anaiyaanee muthalvanee muRaiyoo enRu eththanaiyaanum yaan thodarnthu unnai ini pirinthu aaRReenee பொ-ரை: எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக்கத்தைப் போன்றவனே! தலைவனே ! முறையோவென்று எவ்வளவாயினும் நான் உன்னைப் பற்றித் தொடருவேன். இனிமேல் உன்னைப் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவன் ஆகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவன் ஆயினும், வணங்குதல் இல்லாதவன் ஆயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பதற்கு விருப்பம் இல்லாதவன் ஆயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கி அருள்வாயாக. Albeit I am devoid of dedication, albeit I have not paid obeisance (to Thee), albeit I have not raved mad for a vision of Thy exalted bejewelled Feet ever so fresh nor cried in raptures, I beseech Thee, Oh Lord, pray end my birth cycles, I can not bear my stay here away from Thee any longer, ever shouting variously, "Oh Thou, like unto a pearl, like unto a gem, Oh the Primordial Lord, is this meet on your part to keep me away still?" கு-ரை: பத்து, பற்று என்பதன் மருவு. பத்தி என்பதன் குறை என்பாரும் உளர். முறையோ என்றல், தகுதியோ என்று கேட்டல். 5. காணும தொழிந்தே னின்றிருப் பாதங் கண்டுகண் களிகூரப் பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னையெம் பெருமானே தாணுவே யழிந்தே னின்னினைந் துருகுந் தன்மையென் புன்மைகளாற் காணும தொழிந்தே னீயினி வரினுங் காணவு நாணுவனே . காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூரப் பேணும் - அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை , எம்பெருமானே, தாணுவே, அழிந்தேன்; நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால், காணும் அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே. kaaNum athuozintheen nin thiruppaatham kaNdu kaN kaLikuura peeNum athu ozintheen pithaRRum athuozintheen pinnai emperumaanee thaaNuvee azintheen nin ninainthurukum thanmai en punmaikaLaal kaaNum athu ozintheen nii inivarinum kaaNavum naaNuvanee பொ-ரை: எம்பெருமானே! தாணுவே! (நிலையானவனே ! ) நின் திருவடிகளைக் காண்பதை விட்டு விட்டேன். அவற்றைக் கண்டு கண்கள் களிப்புமிக வணங்குவதையும் விட்டு விட்டேன். திருவடிகளைப் பற்றுவதால் ஆனந்தப் பரவசம் அடைந்து பிதற்றும் நிலையையும் அடையவில்லை. என் இழி தன்மையால் நின்னையே தியானித்து மனம் உருகும் இயல்பும் இல்லாதவன் ஆயினேன். ஆதலால் நான் அழிந்தே போயினேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் உன்னைக் காணவும் வெட்கப்படுவேன் . I have now lost the capacity to witness Thy sacred Feet. And lost the joy of cherishing Thee to my eyes' delight. Nor am I able to rave mad as before, in praise of Thee. Consequently therefore I stand ruined here, Oh Lord that art verily a pillar of flame. On account of my varied acts of meanness, I do not now find in me the state of meditating on and melting for Thee at heart. Such being the case, even if Thou cometh over to me, now, I will only feel ashamed even of facing Thee. கு-ரை: காணுமது = காணுஞ் செயல். பேணுதல் = வணங்குதல். பின்னை, வினைமாற்றுப் பொருளில் வந்தது. 6. பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கருணை யொடு மெதிர்ந்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதியிலேன் போற்றியென் னமுதே யெனநினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே யாற்றுவ னாக வுடையவ னேயெனை யாவவென் றருளாயே. பால் திரு நீற்று எம் பரமனைப் பரம் கருணை யொடும் எதிர்ந்து தோற்றி, மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை; நீதி இலேன் போற்றி, என் அமுதே, என நினைந்து, ஏத்திப் புகழ்ந்து, அழைத்து அலறி, என் உள்ளே ஆற்றுவன் ஆக; உடையவனே, எனை, 'ஆவ' என்று அருளாயே.! paal-thiruniiRRu em paramanai param karuNaiyodum ethirnthu thooRRi mey adiyaarkku aruLthuRai aLikkum soothiyai niithi ileen pooRRi en amuthee ena ninainthu eeththi pukaznthu azaiththu alaRi ennuLLee aaRRuvan aaka udaiyavanee enai aava enRu aruLaayee பொ-ரை: என்னை அடிமையாக உடையவனே! பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள எம் பரமனே! மேலான கருணை உள்ளத்தோடு தாமே எதிர்வந்து தோன்றி, மெய்யடியார்களுக்குத் திருவருளை அளிக்கும் சோதி வடிவான சிவபெருமானே! யான் அறநெறி இல்லாதவன். இருப்பினும் உன்னை என் அமுதம் போன்றவனே என தியானித்துத் துதித்துப் போற்றிப் புகழ்ந்து கூவி அழைத்து ஓவென்று அலறுகின்றேன். என் மனம் ஆறுதல் அடையும்படி அடியேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள் புரிவாயாக. Lord of the wide expanse, smeared over with milky-white sacred ash! Light effulgence gracefully manifest before all true servitors, revealing to them the path of righteousnes! Unto such grace of light, I this wayward me, do pay obeisance, venerating Him as my ambrosia, contemplating on Him, and crying out in adulation, with shouts of joy and calls of trepidation! Even as I do all this within me, Oh Lord, my Master, I beseech Thy indulgence. Pray ordain in grace that I come towards Thee - 'ஆவ' என்று அருளாயே. Ordain that I am transformed into an eternal being. Note: Confer line 179, திரு அண்டப்பகுதி: என்னையும் இருப்பதாக்கினான். "இரு" - is the command. The Saint was ordered to stay back and return later. He was chosen for a specific task. Also 'இரு' means 'stay for ever without any death or birth'. Saint Vallalar recalls Saint Maanikkavaachakar's lines of 'திரு அண்ட ப்பகுதி' and asks for clarification - "இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்பு நீயே" (vide Verse 4 - ஆளுடை அடிகள் அருள்மாலை - By Vallalar) திருவாசகம் itself speaks of ஆமாறு and சாமாறு. " சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே ” Verse 14. திருச்சதகம்- Part 2, அறிவுறுத்தல் . 'ஆவ' - இரு - stay in Eternal Bliss. No return back, anymore - vide Upanishads -ந ச புநராவர்த்ததே'. கு-ரை: கருணை = அருட்சத்தி, தோற்றி = தோன்றி; செய்யுள் பற்றி வலித்தது . THIRUCHCHITRAMBALAM 45. யாத்திரைப்பத்து 45. YATHTHIRAIP-PATHTHU (அனுபவ அதீதம் உரைத்தல் ) The Decad of the Up Journey தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் இவ் யாத்திரை, சிவலோக யாத்திரை. திருப்பெருந்துறையில் இறைவன் இட்ட ஆணையின்படித் தில்லை சென்று தங்கிப் பன்னாளும் தம்மை அவன்பால் அழைத்துக் கொள்ளுமாறு முறையிட்ட அடிகட்கு ஒருநாள் இறைவன் அவரைத் தம் உடனிருந்தாரோடும் தன்னிடம் அழைத்துக் கொள்ளும் குறிப்பினைத் தோற்றுவிக்க, அடிகள் மகிழ்ச்சியுற்று உடனிருந்த அடியார்களை நோக்கி அருளிச் செய்தது இப்பகுதி. எனவே, அடிகள் அருளியவற்றுள் இதுவே இறுதியானதாகும். ஆயினும், பல பத்துக்களோடும் இயைய இதனை இவ்விடத்து வைத்துக் கோத்தனர் முன்னோர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறுதிக்கண் அருளிய 'தலைக்குத் தலைமாலை' என்னும் திருப்பதிகமும், பண்வகை பற்றி முதற்கண்ணே வைத்துக் கோக்கப் பட்டவாறு அறிக. இதனானே, இதற்கு, 'அநுபவாதீதம் உரைத்தல்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இறைவனோடு இரண்டறக் கலத்தலையே அவர் 'அதீதம்' என்றனர் என்க. அடியவர் பலரை நோக்கி அருளிச் செய்தமையால், அடிகளை முதல்வராகக் கொண்டு உடனிருந்த அடியார்களும் பலர் இருந்தனர் என்பது அறியப்படும். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இஃது அறுசீரடி விருத்தத்தால் ஆயது; அந்தாதியாக அமைந்தது. After his separation from the Holy congregation, for completing certain tasks as ordained by the Lord, the Saint laboured long and hard and has now reached a stage beyond the trauma and travails of his sublunary existence. His days of anguish and the unspeakable miseries suffered by him in this world are now over. His lachrymose outpourings appealing for early redemption have been answered. Consequently there is an undercurrent of joy and self-confidence in these lines, through which he gives out a clarion call to all saiva devotees to move forward towards the golden Feet of Lord Civa- never to return back to the earth any more. (confer the Upanishads that refer to the Land of No Return - Na Cha Punaravarthathe etc.). We can recognise the justifiable ecstasy welling up in the Saint who is now close to be assimilated into Lord Civa, after his prolonged arduous journey in search of permanent bliss. There is thus a reassuring note in these lines, whereby he shares his confidence with fellow devotees. Much as St. Thiru-Moolar exclaimed "May all the world of ordinary folks too profit by an intense devotion to Lord Civa, even as I did". The repeated reference to the Lord as Puyangam (meaning a wearer of serpents) in each stanza of this decad reminds us of the exploits of Lord Civa at Dharuka Vanam in the days of yore, where some conceited sages were steeped in ritual sacrifice, unaware of the unique glory of Lord Civa. They trained many killer-weapons at the Lord who nonchalantly subjugated them all. The serpents thrown by them at the Lord were caught and worn as ornaments by Lord Civa. Thus He came to be known as Puyangan. The title word 'Yatra' of this decad means 'Journey' verily a spiritual upgradation, a pilgrim's vicarious upward movement in quest of redemption and eternity. The Saint had earlier also asked for being spared the ordeals of physical journeys from shrine to shrine for ritual worship - Vide line 29, Potrith-Thiru-Ahaval - வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும். His journey is the gradual upliftment of the soul through constant prayer and dedication. Though there are six more decads after this chapter on the 'upward' journey, this is held by many as the concluding one, for it epitomises the acme of delight experienced by him just before his disappearance into the cosmos. Since he makes an appeal to his erstwhile compatriots in the saiva congregation, it is obvious that there were many saintly folks attached to him during the last days of his visible presence in the world, before absorption into the universal space beyond. We note that this decad has been framed in the familiar 'அந்தாதித்தொடை' - wherein - the last word of each stanza is used as the first word of the succeeding stanza (Probably a technique used to recall from memory all the stanzas one after the other). 45.1. பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வா யுருக்கும் வெள்ளக் கருணையினா லாவா வென்னப் பட்டன்பா யாட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால், 'ஆ! ஆ! ' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட் பட்டீர், வந்து ஒருப்படுமின்; போவோம்; காலம் வந்தது காண், பொய் விட்டு, உடையான் கழல் புகவே. puuvaar senni mannan em puyangka perumaan siRiyoomai oovaathu uLLam kalanthu uNarvaay urukkum veLLa karuNaiyinaal aa aa ennappaddu anpaay aadpaddiir vanthu oruppadumin poovoom kaalam vanthathu kaaN poyviddu udaiyaan kazalpukavee பொ-ரை: பூக்கள் நிறைந்த திருமுடியை உடைய மன்னனும் பாம்பை அணிந்த எம்பெருமானும் ஆகிய சிவபெருமான், சிறியவர்களாகிய நம்மை ஆட்கொண்டான். நம்மைவிட்டு நீங்காமல் நம் உள்ளத்தில் கலந்து ஞான உணர்வாகி நின்று நம்மை உருக்குகின்றான். (மெழுகு தீயின் சார்பை விட்டு விலகினால் இறுகி விடுவது போல, தாம் உயிர்களோடு கலந்து இருக்கும் தன்மை இல்லையானால் 'அவை உணர்விழந்து தீச்சார்பு பெற்று இறுகிக் கெட்டழியுமோ' என இரங்கி இடைவிடாது உள்ளத்தில் கலந்து ஞானமாய்த் திகழ்கின்றான்) அளவற்ற கருணையினால் ஆ! வா என்று அவனால் அழைக்கப்பட்டுப் பொய்யான இவ்வுலக வாழ்வைவிட்டு அப்பெருமானுடைய திருவடி நிழலில் புகுந்து கொள்ளக் காலம் வந்தது; போவோம்; வந்து ஒன்று சேருங்கள். Unite Ye, all folks that have kindly been called over and have come under the tutelage of our Lord with flower-bedecked Head - the mighty one with serpents as ornaments, the one that mingles with the hearts of us - we little creatures - and in deep indulgence melts us into His flood of grace! The time has come for us to discard all falsehood and enter into the bejewelled Feet of our Master! Let us go forward unto Him. கு-ரை: புயங்கம்= பாம்பு. அல்லது ஒருவகைக் கூத்து. உடையான் கழல் புகவே பொய்விட்டு எனமாறுக. 'போவோம்' என்பதைப் புகவே என்பதோடு முடிக்க. 'காலம் வந்தது காண்' என்பதை இறுதியிற் சேர்க்க. 2. புகவே வேண்டா புலன்களினீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே யனைய நமையாண்ட தகவே யுடையான் றனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள் மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள் ; நகவே, ஞாலத்து உள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட தகவே உடையான்-தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே. pukavee veeNdaam pulankaLil niir puyangka perumaan puungkazalkaL mikavee ninaimin mikka ellaam veeNdaa pooka viduminkaL nakavee njaalaththu uLpukunthu naayee anaiya namai aaNda thakavee udaiyaan thanai saara thaLaraathu iruppaar thaam thaamee பொ-ரை: மாயைக்கு அப்பாற்பட்டவனாகிய சிவபெருமான் தன் பெருமை அனைத்தையும் கருதாது, நம்மைக் காப்பது என்ற கருணையே பெரிதாக எண்ணி மாயையின் வெளிப்பாடாகிய இம்மண்ணுலகில் தாமே புகுந்து நாய் போலும் இழிந்த தன்மை உடைய நம்மை ஆட்கொண்டான். தீயினைச் சார்ந்த இரும்பு தனது கருமைநிறம் மாறித் தீயின் நிறத்தைப் பெறுதல் போலத் தளர்ச்சியும் கோபதாபங்களும் இயற்கையிலேயே இல்லாத சிவபிரானைக் கருணையாகிய தகுதியுடையவனை அடைய அவரவர்களும் பெருமான் உடைய வியாபகத்தில் வியாப்பியமாகிப் பேரின்பம் துய்ப்பார்கள். (தாம் - சீவன்; தாமாக - சிவமாக), ஆகவே, சீரடியார்களே! அமுதம் கிடைக்கின்ற நேரத்தில் நீங்கள் பொறிகளின் உணர்ச்சி வசப்பட்டுப் புலன்களின் மேல் செல்ல வேண்டாம். பாம்பினை ஆபரணமாக அணிந்த பெருமானுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளையே அதிகமாக நினைத்துப் போற்றித் துதி செய்யுங்கள். குற்றங்கள் அனைத்தும் உங்களால் விரும்பத் தக்கன அல்ல; அவற்றை விட்டுவிடுங்கள். Folks! Enter not into the bonds of the five sense organs. Contemplate deeply on the fair bejewelled Feet of our Lord with serpents as ornaments. Give up all the rest. Although we, dog ike, entered this earth, much to the ridicule of fellow devotees, He came over here and took us under His tutelage. Such is His glorious disposition! Those that go over to such a one, shall ever remain indefatigable and be masters of themselves. கு-ரை: புலன்கள்= பொறிக்கு விடயமானவைகள். மிகவே, என்றது இறை நினைவே மிகுதிப்பட்டுப் பிற நினைவுகள் இலவாதலை வேண்டி. மிக்க = மிகையான. இறை நினைவு ஒழிந்த பிற நினைவுகள் மிகையாம் என்ற கருத்துப் பற்றி 'மிக்க வெல்லாம்' என்றார். நகவே = விளங்கவே. யாரும் அறிய. மெய்யன்பர் சிரிக்கும்படி என்று உரைப்பாரும் உளர். தகவு = பெருந்தன்மை. 3. தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும் யாமா ரெமதார் பாசமா ரென்ன மாய மிவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடு மவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்க னாள்வான் பொன்னடிக்கே தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்; யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போகக் கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு போம் ஆறு அமைமின்-பொய் நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே. thaamee thamakku suRRamum thaamee thamakku vithivakaiyum yaamaar emathaar paasamaar enna maayam ivai pooka koomaan paNdai thoNdarodum avan than kuRippee kuRikkoNdu poom aaRu amaimin poyniikki puyangkan aaLvaan pon adikkee பொ-ரை: மெய்யடியார்களே! முத்தியை அளிப்பதும் ஐந்தொழில்களை நிகழ்த்துவதும் ஆகிய இறைவனுடைய திருவடி தாமே நமக்குச் சுற்றம்; அத்திருவடிகளே நமக்கு விதிக்கும் உபாயங்கள்; இவ்வாறு இருக்க நாம் யார்? நம்முடையவர் எனப்படும் பொருள்கள் ஆவார் யார்? நம்மைப் பிணித்து நிற்கும் பாசங்கள் யார்? இவை என்ன மாயம்? இவை அனைத்தையும் விட்டு ஒழியும்படித் தலைவனாகிய சிவபெருமானின் அடியார்களோடும் சேர்ந்து அவனது திருவுளக் குறிப்பை நமது நோக்கமாகக் கொள்ளுவோம். நிலையில்லாதவற்றை விடுத்துப் புயங்கக் கூத்தன், நம்மை ஆள்பவனின் திருவடி நிழலில் போய்ச் சேருமாறு ஒன்று சேருங்கள். Verily is He Himself His own kith and kin. Verily is it He Himself lays down laws and rules unto Himself. (As for us), in order that queries like who are we, who are our kith and kin which our bondage, what illusion these, may cease to be, abide Ye in the path of ascension, taking cue from His guiding sign, alongside the ancient devotees of the Lord - discard falsity, and reach out for the golden Feet of our master wearing serpents as ornaments. Note: Some commentators like G.V. Pillai, G.U. Pope and Arunai Vadivel Mudaliar have interpreted the terms "தாமே தமக்கு" as words relating to the nature of all human souls. However, Veera Bahu Pillai mentions these terms as attributes of the Lord Himself. The Lord is beyond kith and kin and the laws of the land. Hence we can take, the terms 'தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்' as reflection of the characteristics of the Lord. கு-ரை: சிவமாந்தன்மை உடையார்க்குச் சுற்றமும் விதிவகையும் தாமேயாவர். மேலே, 'செய்தனவே தவமாக்கும்' என்றது காண்க. ஆர் என்பதை 'எமது' 'பாசம்' என்பவற்றோடு சேர்த்தமை வழுவமைதி . சிவமே நோக்குவார், தம்மையும் தமது உடைமையும் பாசமுமாகிய இவற்றை நினைத்தல் கூடாது என்பது குறிக்கப்பட்டது. 4. அடியா ரானீரெல்லீரு மகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் றிருக்குறிப்பை செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்றன் பூவார் கழற்கே புகவிடுமே. அடியார் ஆனீர் எல்லீரும், அகல விடுமின் விளையாட்டை; கடிசேர் அடியே வந்து அடைந்து, கடைக் கொண்டு இருமின் திருக்குறிப்பை ; செடிசேர் உடலைச் செல நீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்-தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே. adiyaar aaniir elliirum akala vidumin viLaiyaaddai kadi seer adiyee vanthu adainthu kadaikoNdu irumin thirukkuRippai sedi seer udalai sela niikki sivalookaththee namai vaippaan podi seer meeni puyangkan than puuvaar kazaRkee pukavidumee பொ-ரை: அடியார்களாகிய நீங்கள் அனைவரும் இவ்வுலகியல் இன்பத்தில் ஈடுபட்டுப் பயன் இல்லாத தொழில்களைச் செய்வதான விளையாட்டினை விட்டு வெகுதூரத்தில் நீங்கிவிடுங்கள். சிவமணம் பொருந்திய இறைவனின் திருவடி சார்ந்து அவனது திருவுளக் குறிப்பைக் கடைப்பிடியுங்கள். பாவம் சேருதற்கு உரிய இவ்வுடம்பைக் களைந்து சிவபெருமான் நம்மைச் சிவலோகத்தில் அமர்த்துவான். திருநீறணிந்த திருமேனியுடைய புயங்கக் கூத்துடையானது மலர் நிறைந்த திருவடிக்கே உங்கள் உள்ளத்தைச் செலுத்துங்கள். Ye folks, having become servitors to the Lord, give up now all your idle sports of yore! Come over to the fragrant Feet of the Lord and stay there firm, awaiting the holy signal! He will remove our foul physical frame, and place us at His environs, the Civa Loka. The ash-smeared Lord Civa with serpent ornaments will then let us enter His flowery bejewelled Feet! கு-ரை: விளையாட்டு என்றது, தம்மையும் உலகையும் பற்றிய நினைவுகளின் சார்பாயுள்ளவற்றை, அவை பயன் இல ஆதலின் விளையாட்டு என்றார். கடி = மணம். திருக்குறிப்பை, என்பதைக் கடைக் கொண்டு என்பதனோடு முடிக்க. செடி= பாவம், வரும் பிறவிக்கு ஏதுவாய ஆகாமியம் என்பாரும் உளர். பொடி=திருநீறு. 5. விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் கால மினியில்லை யுடையா னடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே யொருப்படுமி னடைவோ நாம்போய்ச் சிவபுரத்து ளணியார் கதவ தடையாமே புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்க னாள்வான் புகழ்களையே விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவோர், காலம் இனி இல்லை; உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்; அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே; புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே . vidumin vekuLi veedkai nooy mika oor kaalam ini illai udaiyaan adikkiiz perumsaaththoodu udan poovathaRkee oruppadumin adaivoom naam pooy sivapuraththuL aNi aar kathavu athu adaiyaamee pudaipaddu uruki pooRRuvoom puyangkan aaLvaan pukazkaLaiyee பொ-ரை: மெய்யடியார்களே! கோபம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை விடுங்கள் . இனி மேன்மைப்பட வேறொரு காலம் இல்லை. முதல்வனது திருவடிக்கீழ் பெரிய அடியார் கூட்டத்துடன் போய் அடைவதற்கு ஒன்றுபட்டுச் சேருங்கள். சிவலோகத்தின் அழகுமிகுந்த கதவுகள் அடைபடும் முன்னரே போய்ச் சேருவோம். அதன் மருங்கே பொருந்தி, உள்ளம் உருகிப் புயங்கப் பெருமானாகிய நம்மை ஆள்பவனது கீர்த்திகளைத் துதிப்போமாக ! Folks, shed Ye all thy maladies of greed and fury! For, there is not much time left, now agree together, for to reach out under the Feet of our Master, in a large congregation! Before the ornate doors of 'Civa Puram' get shut, let us go and be there. Let us go right unto there and with melting hearts adore the glories of our serpent-ornamented master! கு-ரை: வெகுளியை விடுமின், வேட்கை நோய் மிக, ஓர் காலம் இனி இல்லை என்று ஓதிப் பொருள் உரைப்பாரும் உளர். சாத்து= திரள்; கூட்டம். சிவபுரம்= வீட்டிற்கு உருவகம். அதன் அருகில் அபரமுத்தித் தானம்போலும். ஊழிமுடிவிற் சாயுச்சியத்திற்கு உரியர் அல்லார் மீட்டும் பிறத்தல் என்பதற்கு உடம்பின் பகுதிகள் எல்லாம் உருக்கத்தில் ஈடுபடும்படி எனப் பொருள் உரைப்பதும் உண்டு. 6. புகழ்மின் றொழுமின் பூப்புனைமின் புயங்கன் றாளே புந்திவைத்திட் டிகழ்மி னெல்லா வல்லலையு மினியோ ரிடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்றாள் வணங்கிநாம் நிகழு மடியார் முன்சென்று நெஞ்ச முருகி நிற்போமே புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே, திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம் நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே. pukazmin thozumin puuppunaimin puyangkan thaaLee punthi vaiththiddu ikazmin ellaa allalaiyum ini oor idaiyuuRu adaiyaamee thikazum siir aar sivapuraththu senRu sivan thaaL vaNangki naam nikazum adiyaar mun senRu nenjsam uruki niRpoomee பொ-ரை: புயங்கப் பெருமானது திருவடிகளை மனத்துள் வைத்துத் தியானித்து, புகழுங்கள், வணங்குங்கள். மலர்களைச் சூட்டுங்கள். இனிமேல் ஒரு துன்பமும் உங்களைச் சேராத வண்ணம் எல்லாத் துன்பங்களையும் இகழ்ந்து ஒதுக்குங்கள். புகழ் நிறைந்த சிவபுரம் சேர்ந்து, அங்கே சிவபெருமானின் திருவடிகளை வணங்குவோம். அங்கு வாழும் அன்பர் முன்போய் மனமுருகி நிற்போமாக ! Extol His glories, (Ye folks)! Pay obeisance to Him! Weave garlands for Him. Keeping in mind, only the Feet of our Lord, wearer of serpents, ignore all worldly tribulations. In order to ensure that no more obstacles arise, let us go forward to the splendid and bounteous Civa Puram and bowing before the Feet of Lord Civa, proceed to where His present servitors are, and stand there with hearts melting in devotion. கு-ரை: 'புயங்கன் தாளே' என்பது நடுநிலைத் தீபகமாய்ப் 'புகழ்மின்' முதலிய வினைமுற்றுக்களோடும், புந்திவைத்திட்டு என்பதனோடும் இயைவது. 7. நிற்பார் நிற்கநில் லாவுலகி னில்லோ மினிநாஞ் செல்வோமே பொற்பா லொப்பாந் திருமேனிப் புயங்க னாள்வான் பொன்னடிக்கே நிற்பீரெல்லாந் தாழாதே நிற்கும் பரிசே யொருப்படுமின் பிற்பா னின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே; பொற்பால் ஒப்பாம் திரு மேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின் ; பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே. niRpaar niRka nillaa ulakil nilloom ini naam selvoomee poRpaal oppaam thirumeeni puyangkan aaLvaaN pon adikkee niRpiir ellaam thaazaathee niRkum parisee oruppadumin piRpaal ninRu peezkaNiththaal peRuthaRku ariyan perumaanee பொ-ரை: நிலையில்லாத இவ்வுலகில் நிற்க விரும்புபவர் நிற்கட்டும். இங்கு நாம் நிற்க மாட்டோம். இனி நாம் அழகில் தனக்குத்தானே ஒப்பாகிய திருமேனியுடைய புயங்கப் பெருமானது பொன்னடிக்கண் செல்வோம். எம்முடன் நிற்கும் அடியார்களாகிய நீங்கள் அனைவரும் என்றும் நிலைபெற்று நிற்குமாறு காலம் தாழ்த்தாது ஒன்றுபடுங்கள். வீணாக நின்று காலம் தாழ்த்தினால் பின் எங்கள் பெருமான் பெறுதற்கரியவன் ஆவான். Let those that choose to stay back here on earth remain. We will not stand here any longer in this transient world. Let us go forward to the golden Feet of our master whose sacred frame is ornamented with serpents the sacred frame which shines so fair in milky-white with holy ash smeared all over. Ye that chance to stay behind, do not tarry any longer but stand together united in the right way to be pursued. Should Ye still waste time and stand behind, it would be hard to realise our Lord. கு-ரை: பொற்பால் என்பதற்குப் பொன்னின் தன்மை எனப் பொருள் கொண்டு பொன்னின் ஒளி போலும் திருமேனி என்று உரைத்தலும் ஒன்று. 'பொன்னடிக்கே' என்பது நடுநிலைத் தீபகம். பேழ்கணித்தல்= தன்னைப் பெரிதும் மதித்தல், விழித்தல் என்று பொருள் உரைப்பாரும் உளர். 8. பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்கா ளருமா லுற்றுப் பின்னைநீ ரம்மா வழுங்கி யரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் றிருத்தாள் சென்று சேர்வோமே பெருமான் பேர்-ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள், அருமால் உற்றுப் பின்னை நீர், அம்மா அழுங்கி அரற்றாதே திரு மா மணி சேர் திருக்கதவம் திறந்த போதே, சிவபுரத்துத் திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே perumaan peer aananthaththu piriyaathu irukka peRRiirkaaL arumaal uRRu pinnai niir ammaa azungki araRRaathee thirumaa maNi seer thirukkathavam thiRantha poothee sivapuraththu thirumaal aRiyaath thiruppuyangkan thiruththaaL senRu seervoomee பொ-ரை: பெருமான் அருளுகின்ற பெரிய சிவானந்தத்துள் பிரியாது என்றுமிருக்கப் போகும் பேறுபெற்ற சீரடியார்களே! பின்னால், நீங்கள் நீக்குதற்கு அரிதாகிய சிவபுரத்தின் அழகிய பெருமணிகள் கட்டப்பெற்றுள்ள திருக்கதவுகள் திறந்திருக்கும் போதே செல்வோம். திருமாலும் அறியாத, பாம்பணிந்த பெருமான் உடைய திருவடிகளைப் போய் அடைவோம். Ye that have not got a chance to be in a state never away from the bliss of our Chief! Save ye from future dire confusion and the resulting distraught cries of depression and delusion. While the sacred gem-studded ornate doors of Civa Puram are still open now, let us go over to and reach the holy Feet of the serpent wearing Lord who is beyond the comprehension even of Thirumaal. கு-ரை: பேரின்ப நுகர்ச்சியை நெகிழ விட்டால், வாசனாமலத்தால் கேடு வருதல் கூறப்பட்டது. மூன்றாமடியில், 'சிவபுரத்து' என்பதைத் திருமாமணிக்கதவம் என்பதோடு முடிக்க. 9. சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்க னருளமுத மாரப் பருகி யாராத வார்வங் கூர வழுந்துவீர் போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்தவைத்துச் சிந்திமின்; போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் ! போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே seera karuthi sinthanaiyai thiruntha vaiththu sinthimin pooril poliyum veelkaNNaaL pangkan puyangkan aruL amutham aara paruki aaraatha aarvam kuura azunthuviir poora purimin sivan kazaRkee poyyil kidanthu puraLaathee பொ-ரை: போரில் பொலிவுடன் விளங்கும் வேலை ஒத்த கண்களையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்துடைய புயங்கப் பெருமான் அருளுகின்ற திருவருள் அமுதத்தை நிரம்ப அருந்தி, போதும் என்றமையாத ஆசைமிக, அந்த ஆசைக் கடலுள் அழுந்தும் அடியார்களே ! பொய்யான இம்மண்ணுலக வாழ்வில் கிடந்து புரளாமல் சிவபிரான் திருவடியைச் சேர்வதை எண்ணி உள்ளத்தைத் திருத்தமாக அமைத்து அப்பெருமான் திருவடிகளையே தியானித்து இருங்கள். Contemplate ye folks! with holy thoughts well-entrenched in mind, aimed at merging with the Lord. Drink Ye in full of the elixir of grace of the serpent-adorned Lord whose one half is goddess Uma of shining eyes sharp as spears used in war. Ye that have chanced to get stepped in immense dedication, do what is needed to reach the bejewelled Feet of Lord Civa. Refrain from wallowing in falsehood. கு-ரை: வாசனா மலம் ஒழிதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை நினைத்தலும், அயரா அன்பினாற் சிந்தித்தலும், கூறப்பட்டன. போர, போக என்பதன் மரூஉ. “போத" என்பதன் மரூஉவாகக் கொண்டு, 'போதிய அளவு' என்றும் உரைப்பர். "சிவன் கழற்கே, போரப் புரிமின்' எனமாறுக. 10. புரள்வார் தொழுவார் புகழ்வாரா யின்றே வந்தா ளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீ ராகி லிதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் றிருப்புயங்க னருளார் பெறுவா ரகலிடத்தே யந்தோ வந்தோ வந்தோவே புரள்வார், தொழுவார், புகழ்வார் ஆய், இன்றே வந்து, ஆள் ஆகாதீர், மருள்வீர்; பின்னை, மதிப்பார்ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்; தெருள்வீர் ஆகில், இது செய்ம்மின், சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே. puraLvaar thozuvaar pukazvaaraay inRee vanthu aaL aakaathiir maruLviir pinnai mathippaar aar mathiyuL kalangki mayanguviir theruLviir aakil ithu seymin sivalooka koon thiruppuyangkan aruL aar peRuvaar akalidaththee anthoo anthoo anthoovee பொ-ரை: பரவசப்பட்டுக் கீழே விழுந்து புரளுவாரும் வணங்குவாரும் புகழ்வாரும் ஆகி இன்றைக்கே வந்து எம்பெருமானுக்கு ஆட்படாதவர்களாய் மயங்குகின்றவர்களே! பின்பு, உங்களை மதிப்பவர்கள் யார்? அறிவு கலங்கி மயங்குகின்றவர்களே! நீங்கள் தெளிவடைய விரும்புவீரானால் திருவடி சேர்தலாகிய இதனைச் செய்யுங்கள். சிவலோக நாதனாகிய புயங்கப் பெருமானது வீடுநல்கும் திருவருளை இந்த அகன்ற உலகில் பெறுபவர் யார்? அந்தோ! அந்தோ! அந்தோவே! Listen Ye folks, that do not now become servitors to the Lord, ye that neither roll down on the ground in ecstasy, nor pay obeisance to Him, nor chant His glories, take note that ye will have to stand here later in bewilderment; for who then will hold ye in esteem? Distorted in mind, ye would only get steeped in illusion! Should ye on the other hand, choose to be smart, do roll down in ecstasy, pay obeisance to Him and chant His glories. Alas! who else in this vast world receive the grace of the serpent ornamented Lord of Civa Loka, Alas, Alas! கு-ரை: இப்பதிக முழுவதும் விரைவில் வீடுபெற விரும்புவார்க்கு அடிகள் மொழிந்த எச்சரிக்கை அறிவுரையாக இருக்கின்றது. இறையன்பு இல்லாரை மக்களும் பொருட்படுத்தார் என்ற கருத்துப் பற்றி, 'மதிப்பார் ஆர்' என்றார். உலக வாழ்வைக் கருதின் ஆண்டும் நயமில்லை என்றவாறு. 'நின்னருட் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே' என்ற தேவாரமும் காண்க. மயங்குதல் = வழியறியாது திகைத்தல். அகலிடம் = பூமி. அந்தோ = ஐயோ. இரக்கம்பற்றி மும்முறை கூறினர். THIRUCHCHITRAMBALAM 46. திருப்படை எழுச்சி 46. THIRUP-PADAI-EZHUCHCHI (பிரபஞ்சப் போர் ) Bringing up the Holy Brigade தில்லையில் அருளிச் செய்யப்பட்டது On the war against this Delusive World கலி விருத்தம் Composed whilst in Thillai திருச்சிற்றம்பலம் திருப்படை - தொண்டர் படை. அதனது எழுச்சியைக் கூறும் பகுதி இது. இது, முன்வந்த யாத்திரைப் பத்தினை அடுத்து அருளிச் செய்ததாகும். யாத்திரைப் பத்தினால் அடியார் அனைவரையும் அழைத்துத் திரட்டிக் கொண்ட அடிகள், அவர்கள் பின்னரும் மயங்காமைப் பொருட்டு இதனை அருளிச் செய்து அருளாண்மையை எழுப்பிக் கொண்டு, அவர்களோடு இறைவன் திருவருளில் கலந்தார். இதற்கு, 'பிரபஞ்சப் போர்' என முன்னோர் குறிப்புரைத்ததும், இது பற்றி. வெண்பா யாப்பினால் இயன்றவற்றை இறுதிக்கண் ஒருங்கு வைத்துக் கோத்தனராதலின், அளவிற் சிறிதாயினும் முன்னை யாப்புக்களோடு இயைய இதனை அவற்றிற்கு முன்வைத்துக் கோத்தனர். பத்து என்றோ, பதிகம் என்றோ கூறாமையால், இஃது இரண்டு திருப்பாட்டுக்களான் இயன்றது என்றே கொள்ளலாம். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களிற் காணப்படுவது. This chapter containing just two stanzas is counted as a distinct decad, with a forceful exhortation for war against worldly delusion. There is an awesome signal for a mighty war against the scourge of ignorance and callousness! The spectacle portrayed here is couched in logistic terminology and recalls the conventional four-fold formations in the armed forces of a bygone era - the cavalry brigade, the elephant brigade, the chariot brigade and the ground soldiers. Metaphorically a call to rise up valiantly and immobilize the delusion induced by earthly attachments. A pre-emptive strike (vicarious though) against evil forces. 46.1. ஞானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின் மானமா வேறுமையர் மதிவெண் குடைகவிமி னானநீற் றுக்கவச மடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோநா மாயப்படை வாராமே. ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின் மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்; ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் ; வான ஊர் கொள்வோம் நாம்-மாயப் படை வாராமே. njaanavaaL eenthum aiyar naatha paRai aRaimin maanamaa eeRum aiyar mathiveN kudai kavimin aana niiRRu kavasam adaiya pukuminkaL vaana uur koLvoom naam maayappadai vaaraamee பொ-ரை: சிவஞானமாகிய வாளினைக் கையில் ஏந்திய சிவபெருமானது பிரணவ நாதமாகிய பறையை அறையுங்கள். பெருமை பொருந்திய விடையேறும் இறைவன் சூடிய சந்திரனாகிய வெண்குடையைப் பிடியுங்கள். ஆக்கம் தரும் திருவெண்ணீறாகிய கவசத்தினுள்ளே முழுவதும் புகுந்து கொள்ளுங்கள். மாயா காரியமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்கும் முன்பாக அருள் வானில் உள்ள இன்பப்பதியாகிய சிவபுரத்தை யாம் கைப்பற்றுவோமாக! Beat Ye folks, the "holy chant emitting" drums of our Lord that wieldeth the sword of gnosis! May the valiant cavalry column hold aloft the "crescent white" canopy over the Lord! Go forward and proceed to put on the glorious shield of white ash! The seat of heavenly bliss, let us all gain thus, stalling the march of illusory bands. கு-ரை: பிரணவ பஞ்சாக்கரம், வாசனாமலம் நினைக்க ஒலிக்கப்படுவது. சிவஞானமாகிய அறிவினுள் இறைவன் விளங்குதலின், 'மதிவெண்குடை' என்றார். ஆன = நன்மைக்கான. வானம்= சிதாகாசம் அல்லது அருள். அடைய = முற்றிலும். 2. தொண்டர்கா டூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீ ரொண்டிறல் யோகிகளே பேரணி யுந்தீர்க டிண்டிறற் சித்தர்களே கடைக்கூழை சென்மின்க ளண்டர்நா டாள்வோநா மல்லற்படை வாராமே தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர் ; ஒண்திறல் யோகிகளே, பேர்-அணி உந்தீர்கள்; திண்திறல் சித்தர்களே, கடைக்கூழை செல்மின்கள்; அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே. thoNdarkaaL thuusi selliir paththarkaaL suuzap pookiir oNthiRal yookikaLee peer aNi unthiirkaL thiNthiRal siththarkaLee kadaikkuuzai selminkaL aNdarnaadu aaLvoom naam allaRpadai vaaraamee பொ-ரை: தொண்டர்களே! முன்னணியில் செல்லுங்கள். அன்பர்களே! புடைசூழ்ந்து செல்லுங்கள், ஒளி மிகுந்த வலிமையுடைய யோகிகளே! பெரும் படைப் பகுதியைச் செலுத்துங்கள். திட்டமான உடல் வன்மையுள்ள சித்தர்களே! பிந்திய அணி வகுப்பில் செல்லுங்கள். துன்பமாகிய படைகள் நம்மை வந்து தாக்காத வண்ணம் தேவர்களும் தொழுகின்ற நாட்டை நாம் ஆள்வோம். Servitors, may Ye lead the march! Devotees, may Ye move forward at the flanks! Oh valiant ascetics (in penance), push ahead with the mighty columns! Oh Realised souls of unyielding prowess, move from behind and bring up the rear! The land of heaven-dwellers, let us all gain thus, stalling the march of harmful bands! கு-ரை: ஞான நிலையிலுள்ள அடியார்களை முன்னும், கிரியை வல்லாரை மருங்கிலும், யோகிகளைப் பெரும்படை நிலவும் நடுவிலும், உடல்வலியின் பொருட்டுக் காயசித்தி முதலியவற்றில் சிறந்த சித்தர்களைப் பின்னணியிலும் வைத்தனர். 'அண்டர் நாடு' என்பது வீட்டு உலகத்தைக் குறிக்கும். THIRUCHCHITRAMBALAM 47. திருவெண்பா 47. THIRU-VENNBA ( அணைந்தோர் தன்மை ) Sacred Vennba Lines திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது On the traits of Realised Souls நேரிசை வெண்பா Composed whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் வெண்பா யாப்பினால் ஆகிய பகுதி, ' திருவெண்பா' எனப்பட்டது. இதற்குப் பொருள் பற்றிப் பெயரிடாமையின், இது, பல்வகைப் பொருள் பற்றியும் வருவதாகும். 'அணைந்தோர் தன்மை' என்ற முன்னோர் குறிப்பும் இதனை ஒருவாறு விளக்குவதேயாம். அணைந்தோர் - சிவனை இவ்வுலகத்தில் பெற்றோர். இவரை, 'சீவன் முத்தர்' என்ப. வெண்பா யாப்பினால் ஆயவற்றை இறுதிக்கண் வைக்கக் கருதி இங்கு கோத்தனர். திருத்தசாங்கமும் வெண்பா யாப்பினாலாயிற்றாயினும், பொருளியைபு பற்றி அதனைக் குயிற்பத்தின் பின்னாகக் கோத்தனர். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே, பதிப்புக்களில் காணப்படுவது. இது, பதினொரு திருப்பாட்டுக்களை உடையது. This decad is set in the classical 'Venba' metre, a much-acclaimed form of versification, bound by strict rules of prosody. The subsequent chapter (48) dealing with the ancient fourfold scriptures is also formulated in this metre. A 'Venba' is easy to memorise and recall, and is an excellent vehicle by which to propagate the eternal verities of spiritual and ethical values in the social order. Our Saint, as is characteristic of him, extols the unique generosity of Lord Civa in showering bliss on him, although he knows he is devoid of dedication and is ever beset with the strangle hold of worldly allurements. The implication evidently is that the good Lord would only be too glad to confer benediction on His genuine devotees, when He has been quite liberal in redeeming even the wayward souls jostling around in ignorance and callousness. 47.1. வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய திருவார் பெருந்துறையான் றேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து. வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? - செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம்தீ மருவாது இருந்தேன் மனத்து. veyya vinai iraNdum venthu akala mey uruki poyyum podi aakaathu en seykeen - seyya thiruvaar perunthuRaiyaan theen unthu senthii maruvaathu iruntheen manaththu பொ-ரை: சிவபெருமான் சிவந்த திருமேனி உடையவனாய், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவன். அவன் இவ்வுலகத் தீப்போன்று வெப்பத்தோடு இல்லாமல் தேன்போலும் இனிமையைத் தருகின்ற செஞ்சோதியானவன். அச்சோதியானவனை என் மனத்தினுள் பொருத்தாமல் இருந்துவிட்டேன். அதனால், என்னுடைய நல்வினை தீவினையாகிற வினைகள் இரண்டும் வெந்து ஒழியவில்லையே. அவற்றிற்கு இடமாய் இருக்கின்ற இந்தத் தேகமும் உருகிப் பொய்யான வாழ்வும் சாம்பல் ஆகாமல் இருந்ததே. நான் என்ன செய்வேன்? What on earth shall I do here in this scenario, whereat I am simply existing without melting in dedication without getting rid of the two-fold virulent acts (the good and the evil), and this with all my falsehood not destroyed! Alas! I had remained aloof for long, without contemplating on the honeyed flame of grace exuding from the Lord of the bounteous Thirup-Perun-Thurai. கு-ரை: உடம்பு உள்ள வரை, பிராரத்த வினை நுகரக் கிடத்தலின், உடம்பும் வாழ்க்கையும் ஒழிய விரும்பினமை கூறினர். இறைவனை அயரா அன்பினால் வழிபட்டால், உடல் வாழ்க்கை ஒழிந்திருக்கும் என்று குறிப்பிடுகிறார். 2. ஆர்க்கோ வரற்றுகோ வாடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே யென்செய்கேன் - தீர்ப்பரிய வானந்த மாலேற்று மத்தன் பெருந்துறையான் தானென்பா ராரொருவர் தாழ்ந்து ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ ? பார்க்கோ ? பரம்பரனே, என்செய்கேன்?- தீர்ப்பு-அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன், 'பெருந்துறையான் தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து? aarkkoo araRRukoo aadukoo paadukoo paarkkoo paramparanee en seykeen - thiirppariya aanantha maal eeRRum aththan perunthuRaiyaan thaan enpaar aar oruvar thaaznthu பொ-ரை: என்னோடுகூட நின்று பேரானந்தப் பெரும்பேறு அளிக்கும் தந்தை திருப்பெருந்துறை இறைவன் தான் என்று ஒருவர் என்பால் தெரிவிப்பாராயின் அவரை வணங்கி ஆரவாரிப்பேனா? அரற்றுவேனா? ஆடுவேனா? பாடுவேனா? பார்ப்பேனா? பரம்பரனே! நான் வேறு என்ன செய்து பாராட்டுவேன். What on earth shall I do here, Oh Lord of the wide expanse? Shall I shout so wild? Shall I cry out aloud? Shall I engage in dance, or sing in ecstasy? Shall I witness and bow before whomsoever calleth Thee Sire- Oh Lord of Perunthurai who induces the flow of the everlasting elixir of bliss in us. கு-ரை: தாழ்ந்து என்பதை ஆர்க்கோ, என்பதோடு முடிக்க. துணை அன்பர் இன்றித் தாம் ஆனந்த உணர்ச்சியைப் புலப்படுத்த முடியாது வருந்துவதை இதனுள் குறித்தார். 3. செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே யுய்யும் வகையி னுயிர்ப்பறியேன் - வையத் திருந்துறையுள் வேன்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையின் மேய பிரான். செய்த பிழை அறியேன்: சேவடியே கை தொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் - வையத்து இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான் seytha pizaiaRiyeen seevadiyee kaithozuthee uyyum vakaiyin uyirppu aRiyeen vaiyaththu irunthu uRaiyuL veelmaduththu en sinthanaikkee kooththaan perunthuRaiyil meeya piraan பொ-ரை: அடியேன் செய்த தவறுகளை இன்னது என்று அறியேன். ஏதோ திருவருள் வசத்தால் சிவந்த திருவடிகளையே வணங்கினேன். யானாகக் கடைத்தேறி உய்யும் வகையின் தோற்றமும் அறியேன். அங்ஙனமான அடியேனைத் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் குருமேனி தாங்கி இவ்வுலகத்தே வந்து வேல் வைக்கப்படும் உறைக்குள் வேலைச் செருகினாற்போல என் சிந்தனையுள் திருவருள் ஞானத்தைச் சேர்த்தான். I know not what wrongs I had done before! Nor am I aware of the means of attaining salvation through breathing and such-like techniques, adopted in the worship of the Lord's benign Feet by those that are on their way to redemption! And yet, He the Lord abiding in Thirup-Perun-Thurai, unsheathed the sharp tool of gnosis (for my sake) and plunged it as it were into my mind, to evoke, analytical studies in this world. Note: On hearing the Saint ruing for possible inequities on his part and bemoaning his lack of awareness of any past wrong doing, one cannot help shedding tears of sorrow at the needless trepidation suffered by him as recompense for any imaginary transgression. Time and again the Saint is wont to blame himself, in the harshest of terms, for inadequate performance, although he had done no wrongs at any time. This is characteristic of many Saivite devotees. Confer, for example, Thevaaram - பத்தனாய்ப் பாடமாட்டேன். Also, நாரையூர் நான்மணி மாலை - தூகேன் மெழுகேன். Also Pattinathar - முன் செய்த தீவினையோ.. . மூண்டதுவே. கு-ரை: வேல், ஞானத்திற்கு அறிகுறி, வழிபாடு ஒன்றே அன்றி வேறு உபாயத்தை நாடாது இருக்கவும் இறைவன் குருவாய் வந்து ஞானம் அளித்தனன் என்றார். மடுத்துக் கோத்தான்=அழுத்திப் பொருத்தினான். 4. முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் - றென்னன் பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் வருந்துயரந் தீர்க்கு மருந்து முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்;- தென்னன் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்; வரும் துயரம் தீர்க்கும் மருந்து munnai vinai iraNdum veer aRuththu munninRaan pinnai piRappu aRukkum peeraaLan - thennan perunthuRaiyil meeya perungkaruNai yaaLan varum thuyaram thiirkkum marunthu பொ-ரை: இனிவரும் எனது பிறப்புக்களை நீக்கும் பெரியோனும், தென்னவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருங்கருணையாளனும் இனி வரும் துயரங்களாகிய ஆகாமிய வினைகளை அறுக்கும் மருந்து போன்றவனும் ஆகியவன் சிவபெருமான். அவன் என்னுடைய பழைய வினைகள் இரண்டினையும் வினைகளின் வேராகிய மூல கன்மத்தையும் வேருடன் களைந்து, என் கண் காண என்முன்னே குருநாதனாக உருமேனி தாங்கிக் காட்சி வழங்கினான். The good Lord that terminates all future births, rooted out the impact of my past deeds, good and evil, and stood before me to take me under His tutelage! This, the Lord of the southern land, abiding in Perunthurai, One of great compassion, is verily the medication that destroys all upcoming sorrows. Note: Confer Thiruk-Kural - இருள்சேர் இருவினையும் சேரா. Both types of activity in the past, are cause for the present state of affairs. கு-ரை: முன்னை வினை சஞ்சிதத்தையும், பின்னை வினை ஆகாமியத்தையும், இப்பிறப்புத் துயர் பிராரத்தத்தையும் குறிக்கும். 'முன் நின்றான்' என்பதை முதலடியின் முதற்கண் கொண்டு, முன் நின்று, வேரறுத்து என முடிப்பதும் உண்டு. 5. அறையோ வறிவார்க் கனைத்துலகு மீன்ற மறையோனு மாலு மால் கொள்ளு மிறையோன் பெருந்துறையுண் மேய பெருமான் பிரியா திருந்துறையு மென்னெஞ்சத் தின்று. அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற மறையோனும், மாலும், மால் கொள்ளும் - இறையோன்; பெருந்துறையுள், மேய பெருமான்; பிரியாது இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று. aRaiyoo aRivaarkku anaiththulakum iinRa maRaiyoonum maalum maalkoLLum - iRaiyoon perunthuRaiyuL meeya perumaan piriyaathu irunthuRaiyum en nenjsaththu inRu. பொ-ரை: எல்லா உலகங்களையும் படைக்கின்றவனாகிய பிரமனும், காக்கின்றவனாகிய திருமாலும் சிவபெருமானைத் தேடிக் காணாது மயக்கம் கொண்டார்கள். ஆனாலும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனாகிய சிவபெருமான் அடியேன் மனத்து நின்று நீங்காது கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். இறைவனைத் தேடி அலைவார்களுக்கு இதனை யான் உறுதியாகச் சொல்லுகிறேன். Let me assert, for the sake of those that want to know, that our Lord eludes comprehension, even by Brahma the creator of all worlds and by Thirumaal! This Lord, our Chief, abiding in Perunthurai, doth now reside and stay in my mind, without ever leaving it. கு-ரை: அறையோ, பந்தயத்துக்கு அழைத்தல். சொல் என்ற பொருளும் உண்டு. அறிவார்க்கறையோ என்பதை இறுதியில் கொள்க. 6. பித்தென்னை யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதா மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை- யத்தன் பெருந்துறையா னாட்கொண்டு பேரருளா னோக்கு மருந்திறவாப் பேரின்பம் வந்து பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும், பேச்சு அரிது ஆம் மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை:- அத்தன், பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும் மருந்து, இறவாப் பேரின்பம், வந்து. piththu ennai eeRRum piRappu aRukkum peessu arithaam maththamee aakkum vanthu en manaththai- aththan perunthuRaiyaan aadkoNdu peeraruLaal nookkum marunthu iRavaa peerinpam vanthu. பொ-ரை: திருப்பெருந்துறை இறைவனாகிய எம் தந்தை அடியேனை ஆட்கொண்டு பெருங்கருணையோடு எனது துன்பங்களை நீக்கும் மருந்து போன்றவன். அழிவில்லாத பேரின்ப வடிவினன். அவன் வந்து என்னைப் பித்தனாக்கினான். பிறப்பை அறுத்தான். என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி, என்னால் விவரிக்க முடியாத அளவிற்குக் களிப்பை உண்டாக்கினான். He doth drive me so mad. And cuts off all my future births. He cometh over to me and turneth my mind into a state of indescribable ecstatic delight. This, my sire of Thirup-Perun-Thurai, doth take me in tutelage, casting a glance at me in profound compassion. Verily is He the great medication of sheer bliss that has no end! (இறவாப் பேரின்பம்) Note: Confer St. Pattinathaar - இறவாதிருக்க மருந்து காண் . இறவாநெறி - leading to total absorption into the Lord. கு-ரை: அத்தன், பெருந்துறையான் மருந்து இன்பம் வந்து பித்தென்னை ஏற்றும். பிறப்பு அறுக்கும் என் மனத்தை வந்து பேச்சரிதாம் ஆக்கும் என முடிக்க. 7. வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி யாரா வமுதா யமைந்தன்றே - சீரார் திருத்தென் பெருந்துறையா னென்சிந்தை மேய வொருத்தன் பெருக்கு மொளி. வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே- சீர் ஆர் திருத்தென் பெருந்துறையான், என் சிந்தைமேய ஒருத்தன், பெருக்கும் ஒளி. vaaraa vazi aruLi vanthu enakku maaRinRi aaraa amuthaay amainthanRee-siiraar thiruththen perunthuRaiyaan en sinthai meeya oruththan perukkum oLi. பொ-ரை: புகழ் நிறைந்த அழகிய தெற்கின் கண்ணதாகிய திருப்பெருந்துறை இறைவனும் என் மனத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய சிவபெருமான் அருளிய சிவஞானப் பேரொளி என் பிறவியைப் போக்கி என்னோடு ஒத்து ஆராத அமுதமாக அமைந்து இருந்தது. The light streaming forth from the unique Lord (peerless Lord) that abides in my mind! This righteous lord of the bounteous Thirup-Perun-Thurai shrine, revealed unto me the path of 'No Return'. He that had become the ambrosia of never ending sweetness. கு-ரை: மாறின்றி= பகையின்றி; பகையிலதாக்கி என்றும் உரைப்பர். 8. யாவர்க்கு மேலா மளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழா மடியேனை - யாவரும் பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கென் னெம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான், யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை - யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான் ! மற்று அறியேன் செய்யும் வகை yaavarkkum meelaam aLavu ilaas siir udaiyaan yaavarkkum kiizaam adiyeenai yaavarum peRRu aRiyaa inpaththuL vaiththaaykku en emperumaan maRRu aRiyeen seyyum vakai பொ-ரை: எல்லார்க்கும் மேலானவனாகிய அளவில்லாத புகழுடைய சிவபெருமான் யாவர்க்கும் கீழான அடியேனை எவரும் பெற்று அறியாத இன்பத்துள் வைத்தான். என்னுடைய எம்பெருமானே! அங்ஙனம் என்னை வைத்த உனக்குக் கைம்மாறாகச் செய்யும் உபகாரம் ஒன்றையும் அறியேன். He is above all else! And hath boundless righteousness! And yet He took under Him, me this lowly servitor, that is beneath all others in state, and placed me in bliss that no one else had experienced before! What return indeed can I do, Oh my Lord, for Thy generosity, I know not. 9. மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் - மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே யின்ப மிகும். மூவரும் முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த தேவரும், காணாச் சிவபெருமான் - மாஏறி, வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும். muuvarum muppaththu muuvarum maRRu ozintha theevarum kaaNaa sivaperumaan- maaeeRi vaiyakaththee vanthizintha vaarkazalkaL vanthikka meyyakaththee inpam mikum பொ-ரை: பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் மற்றைய தேவர்களும் எளிதில் காண முடியாத சிவபெருமான், குதிரையின்மீது ஏறிக்கொண்டு இவ்வுலகத்தில் வந்து இறங்கினான் அவனுடைய திருவடிகளை வணங்க என்னுடலில் பேரின்பம் ஊற்றெடுத்துப் பெருகியது. The three entities, Thirumaal, Brahma and Rudran, as also the thirty-three deities and the rest of heaven-dwelling gods, could not see our Lord Civa-Peruman. Such Lord came down to the earth on horseback. As one bows before His bounteous ornamented Feet, sheer bliss wells up inside. கு-ரை: முப்பத்துமூவர்; உருத்திரர் பதினொருவர்; ஆதித்தர் பன்னிருவர் - அசுவினி தேவர் - இருவர் ; வசுக்கள் - எண்மர். திக்குப் பாலகர் முதலியோர் பிற தேவர்கள். மா = குதிரை 10. இருந்தென்னை யாண்டா னிணையடியே சிந்தித் திருந்திரந்து கொண்ணெஞ்சே யெல்லாந் - தருங்காண் பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் மருந்துருவா யென்மனத்தே வந்து இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து, இரந்துகொள், நெஞ்சே ! எல்லாம் - தரும்காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் மருந்து உருவாய், என் மனத்தே, வந்து. irunthu ennai aaNdaan iNai adiyee sinthiththu irunthu iranthu koL nenjsee ellaam - tharum kaaN perunthuRaiyil meeya perung karuNaiyaaLan marunthu uruvaay en manaththee vanthu பொ-ரை: திருப்பெருந்துறையில் உறைகின்ற பேரருளாளன் எம் சிவபெருமான். அவன் அமுத வடிவமாய் என் உள்ளத்தே வந்திருந்து என்னை ஆட்கொண்டு அருளினான். அவனது திருவடிகள் இரண்டையுமே இடைவிடாது நெஞ்சமே நீ நினைந்திரு. உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவன் தருவான். ஆதலால் அவனது திருவடிகளையே எப்போதும் நினைத்திருக்க அவனிடம் இருந்து கேட்டு அவற்றைப் பெற்றுக் கொள்வாயாக. The Lord of great compassion, manifesting Himself as medication for Thee. He would indeed grant thee all your wish, Oh my mind! Hence meditating on His twin Feet, do stay,and make fervent appeal to Him that took me in servitude! கு-ரை: பெருங் கருணையாளன், மனத்தே வந்து இருந்து என்னை ஆண்டான், நெஞ்சே இணையடியே சிந்தித்து இருந்து இரந்து கொள், எல்லாம் தரும் காண் என முடிக்க. 11. இன்பம் பெருக்கி யிருளகற்றி யெஞ்ஞான்றுந் துன்பந் தொடர்வறுத்துச் சோதியா - யன்பமைத்துச் சீரார் பெருந்துறையா னென்னுடைய சிந்தையே யூராகக் கொண்டா னுவந்து. இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்துச் சோதி ஆய் - அன்பு அமைத்து சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர் ஆகக் கொண்டான், உவந்து. inpam perukki iruL akaRRi enjnjaanRum thunpam thodarvu aRuththu soothiyaay- anpu amaiththu siiraar perunthuRaiyaan ennudaiya sinthaiyee uur aaka koNdaan uvanthu. பொ-ரை: திருப்பெருந்துறையான் ஆனந்தம் பெருகச் செய்து அஞ்ஞான இருளை அகற்றித் துன்பத்தை வேரறுத்துப் பிறவிப்பிணிக்கு மருந்து வடிவாக என் மனத்துள் எழுந்தருளி அவனது அன்பையும் எனக்கு அருள் செய்து, என் மனத்தையே தனக்குத் திருக்கோயிலாகக் கொண்டான். Granting enormous bliss, removing all darkness and ignorance, invariably cutting off the chain of sorrows, He as an effulgent grace, ever doth abide in the bounteous Perunthurai, gladly taking my mind as His chosen resort. THIRUCHCHITRAMBALAM 48. பண்டாய நான்மறை 48. PANDAAYA-NAANMARAI (அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல் ) Decad on the Four Ancient Scriptures திருப்பெருந்துறையில் அருளியது Recounting the verities of Blissful Experience நேரிசை வெண்பா Composed whilst in Thirup-Perun-Thurai திருச்சிற்றம்பலம் இது, முதற்குறிப்பாற் பெற்ற பெயர். எனவே, இதுவும் பொருளாற் பெயர் பெறாது, சொல்லாற் பெயர் பெற்றதாதலின், இதன்கண்ணும் பல பொருளும் கலந்து வருதல் பெறப்பட்டது. ' அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்' என்னும் முன்னோர் குறிப்பு, இரண்டாவதும், ஏழாவதுமாய் நின்ற வெண்பாக்களின் பொருளைச் சிறப்பாகக் கொண்டு உரைத்தது. ஏனையத் திருப்பாட்டின் பொருளும் ஒருவாற்றான் இதற்கு இயைந்து நிற்கும். இது, திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இதன்கண் ஏழு திருப்பாட்டுக்களே காணப்படுகின்றன. இப்பாட்டுக்கள் அந்தாதியாய் வருவன. This decad too is set in Vennba metre, like the previous Chapter 47. While recounting the manner in which the Saint received acceptance by the Lord, despite his shortcomings, he exhorts all men to pay obeisance to Lord Civa with dedication and sincerity so that they may be freed from the bondage of birth cycles. There is a definite assurance of salvation and redemption in the stanzas of this decad. We find only seven stanzas here, even though it is counted as a decad (a chapter of 10 verses). All the stanzas are framed as 'Andhaadhi' verses, placing the last word of a verse, as the first of the next. The title of this decad gives us a clue to the existence of an 'age-old' package of four scriptures directly handed down by Lord Civa to His disciples under a banyan tree in the days of yore. The theme and tenor of all saivite scriptures tend to show that the "Ancient four scriptures" are different from the four vedas - Rig, Yajur, Sama and Atharvann. 48.1. பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே யுண்டாமோ கைம்மா றுரை. பண்டு ஆய நான் மறையும் பால் அணுகா; மால், அயனும் கண்டாரும் இல்லை; கடையேனைத் -தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே ! உண்டாமோ கைம்மாறு? உரை. paNdaaya naanmaRaiyum paal aNukaa maal ayanum kaNdaarum illai kadaiyeenai thoNdaaka koNdaruLum kookazi em koomaaRku nenjsamee uNdaamoo kaimmaaRu urai பொ-ரை: மிகப் பழமையான வேதங்களும் இறைவனிடம் அணுகவும் செய்யா. திருமாலும் பிரமனும் அவனைக் கண்டது இல்லை. யாவரினும் கடைப்பட்ட என்னைத் தொண்டனாக ஏற்றருளிய திருவாவடுதுறைக்கண் எழுந்தருளியுள்ள எம் தலைவனுக்கு யான் செய்யும் கைம்மாறு உண்டோ ? நெஞ்சமே, நீ சொல்! Not even the age-old scriptures four, nor Thirumaal nor Brahma could comprehend Him, as they find Him beyond their reach and sight. Such being the case, my Lord of Kokhazi in all His grace, took me in servitude, me, the basest of all beings. Oh my mind, is there any return that I can do to Him for this generosity, pray tell me! கு-ரை: கோகழி= திருவாவடுதுறையைக் குறிக்கும். 2. உள்ள மலமூன்று மாய வுகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளன் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவிக் காடு. உள்ள மலம் மூன்றும் மாய, உகுபெரும் தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த கருவும் கெடும், பிறவிக் காடு. uLLamalam muunRum maaya uku peruntheen veLLam tharum pariyin meel vantha - vaLLal maruvum perunthuRaiyai vaazththuminkaL vaazththa karuvum kedum piRavi kaadu பொ-ரை: உயிரைப் பற்றியுள்ள மும்மலமும் நீங்கியொழியச் சொரிகின்ற பெருமை வாய்ந்த தேனாகிய வெள்ளத்தை உதவுகின்ற வேதக்குதிரையின் மேல் எழுந்தருளி வந்த வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருப்பெருந்துறையைத் துதியுங்கள். துதிக்கவே பிறவிப் பெருங்காட்டின் மூலமும் கெட்டு அழியும். Folks, sing ye on the praise of Thirup-Perun-Thurai where abideth our benefactor! Even as ye sing thus, the jungle of rebirths would cease to be. This Lord of generosity came over to the city of Aalavaai (the present day Madurai) on horseback, spreading 'honey-like' sweetness (all around), so that the remnant three afflictions (the threefold 'malas') may cease to be. கு-ரை: மும்மலம் = ஆணவம், கன்மம், மாயை. 'வெள்ளம் தரும்' என்பதற்கு, 'வெள்ளம் தருகின்ற' எனப் பொருள் கொண்டு, 'தரும்' என்பதை வள்ளல் என்பதோடு முடிப்பது உண்டு. கரு= மூலம், வேர். 3. காட்டகத்து வேடன் கடலில் வலைவாண னாட்டிற் பரிப்பாக னம்வினையை- வீட்டி யருளும் பெருந்துறையா னங்கமல பாத மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. காட்டகத்து வேடன், கடலில் வலை வாணன் நாட்டில் பரிப் பாகன், நம் வினையை - வீட்டி அருளும் பெருந்துறையான் அம்-கமல பாதம், மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து. kaaddakaththu veedan kadalil valaivaaNan naaddil paripaakan namvinaiyai - viiddi aruLum perunthuRaiyaan amkamala paatham maruLum keda nenjsee vaazththu பொ-ரை: காட்டில் வேடனாகியும், கடலில் வலைஞனாகியும், நாட்டில் குதிரைப் பாகனாகியும் தோன்றி அருளியவன் நம்பெருமான். உயிர்களாகிய நம் வினைகளைத் தொலைத்து அருள்புரியும் திருப்பெருந்துறைப் பெருமானது அழகிய திருவடிக் கமலங்களை நெஞ்சமே ! அருள்பெறுவதோடு மட்டுமில்லாமல் உனது அறியாமையும் நீங்கும்படித் துதிப்பாயாக! The Lord, manifest as hunter in forests, as fisherman at sea and as cavalry chief on land, quelling the impact of our worldly deeds, doth shower blessings on all of us. Unto the fair "lotus-like" Feet of this Lord of Thirup-Perun-Thurai, do pay obeisance, Oh my mind, that my illusory state may cease to be! Note: The three manifestations of the Lord referred to here, are respectively in connection with anecdotes where Lord Civa fought with Arjuna in the forests. Secondly, He tamed the wild shark (form assumed by Nandi) in the seashore of the Paandiyan Kingdom. Thirdly He rode on horseback bringing a cavalry brigade to the Court of a Paandiyan King for the sake of St. Maanikkavaachakar (See Story No. 50). கு-ரை: பார்த்தன் பொருட்டு வேடனாயினமை பாரதத்துள் காண்க. பிறகதைகள் திருவிளையாடலுள் காண்க. மருளும் என்பதில் உம்மை இறந்தது தழுவியது. வினையோடு மயக்கமும் என்பது கருத்து. 4. வாழ்ந்தார்க ளாவாரும் வல்வினையை மாய்ப்பாருந் தாழ்ந்துலக மேத்தத் தகுவாருஞ் - சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி யேத்துந் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி யேத்து நமர். வாழ்ந்தார்கள் ஆவாரும், வல்வினையை மாய்ப்பாரும் தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் - சூழ்ந்து அமரர் சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை, நன்று இறைஞ்சி ஏத்தும் நமர். vaaznthaarkaL aavaarum valvinaiyai maayppaarum thaaznthu ulakam eeththa thakuvaarum - suuznthu amarar senRiRainjsi eeththum thiruvaar perunthu Raiyai nanRiRainjsi eeththum namar பொ-ரை: தேவர்கள் சூழ்ந்து வணங்கித் துதிக்கும், ஞானச் செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையை நன்றாக வணங்கித் துதிக்கும் நம்மவர்களாகிய அடியவர்களே உலகில் என்றும் அழியாது வாழ்ந்தவர் ஆவர். கொடிய வினைகளைத் தொலைப்பவர் ஆவர். இந்த உலகம் அனைத்தும் பணிந்து வாழ்த்தத் தக்கவரும் ஆவர். All those that well do pay obeisance in the bounteous Thirup-Perun-Thurai are verily our kin indeed! Thirup-Perun-Thurai where unto 'heaven-dwelling' gods gather together, and sing on His glories with deep dedication. Such folks alone, are really speaking, men who have lived well here, - men who have quelled the impact of harsh worldly deeds, men who deserve to be praised by us with heads bowed down in reverence. 5. நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல வெண்ணி யெழுகோ கழிக்கரசைப் - பண்ணின் மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் கழியா திருந்தவனைக் காண் நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல எண்ணி எழு-கோகழிக்கு அரசை - பண்ணின் மொழியாளோடு உத்தர கோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனைக் காண். naNNi perunthuRaiyai nam idarkaL pooy akala eNNi ezu kookazikku arasai - paNNin moziyaaLoodu uththara koosamangkai manni kaziyaathu irunthavanai kaaN. பொ-ரை: நெஞ்சமே! திருப்பெருந்துறையை அடைந்து நம் பிறவித் துன்பங்கள் நீங்குமாறு எண்ணி எழுவாயாக. திருவாவடுதுறை அரசனும், இசையினும் இனிய மொழியுடைய உமாதேவியாரோடு உத்தரகோச மங்கையுடன் சேர்ந்து, பிரியாது உறைபவனுமாகிய சிவபெருமானைக் காண்பாயாக . Oh! Mind! Approach Thirup-Perun-Thurai so that all our tribulations may leave us and cease to be. Ye folks go and witness the Lord of Kokazhi, ever abiding at Thiru-Uththara-Kosa-Mangai, alongside His consort whose speech sounds like music. கு-ரை: நெஞ்சிற்கு இது கூறப்பட்டது. எழு கோகழிக்கரசை நம்மிடர்கள் போயகல எண்ணிப் பெருந்துறையை நண்ணிப்பண்........ காண் என முடிக்க. 6. காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் பேணு மடியார் பிறப்பகலக் - காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையி லென்றும் பிரியானை வாயாரப் பேசு காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் பிறப்பு அகல - காணும் பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும் பிரியானை, வாய்ஆரப் பேசு. kaaNum karaNangkaL ellaam peerinpam ena peeNum adiyaar piRappu akala - kaaNum periyaanai nenjsee perunthuRaiyil enRum piriyaanai vaayaara peesu பொ-ரை: ("கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ (498)” என முன்னர் அருளியது போன்று) தத்தம் புலன்களை அறியும் பொறிகளும் அவற்றை வாயிலாகக் கொண்டு விளங்கும் மனம் முதலான அந்தக்கரணங்களும் ஆகிய அனைத்தும் சிவமே ஆதலானும் , சிவம் இன்பம் மங்களம் ஆதலாலும் சீவன் முக்தராகிய அடியவர் எங்கும் எதிலும் சிவமே கண்டு பேரின்பமயமாகப் போற்றுவர். தமது திருவருட் பார்வை ஒன்றினாலேயே அவ்வடியவர்களின் பிறப்பு நீங்கும்படிச் செய்யும் பெரியவனும் எப்போதும் திருப்பெருந்துறையை விட்டு நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை மனமே! நீ வாயாரப் புகழ்வாயாக. Oh my heart, do speak out to mouth's delight on the glories of Lord that ever resides at Thirup-Perun-Thurai, the Lord that ensures the end of future births for devotees who hold all visible things in the world including the sense organs as Civan. கு-ரை: காணும்= அறியும். கரணம்= அகக் கருவி, புறக் கருவி முதலியன. 7. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே யென்று பிறப்பறுத்தே னல்ல மருந்தினடி யென்மனத்தே வைத்து பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆம், பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை - பேசிப் பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து peesum poruLukku ilakkitham aam peessiRantha maasil maNiyin maNivaarththai - peesi perunthuRaiyee enRu piRappu aRuththeen nalla marunthin adi en manaththee vaiththu பொ-ரை: பிறவி நீங்குவதற்கு நல்ல மருந்தான பெருமானின் திருவடிகளை என் உள்ளத்தே கொண்டேன். பேசப்படும் பொருள் அனைத்துக்கும் குறிக்கோள் ஆனவன். பேச்சினைக் கடந்த மாசிலாமணியாகிய அப்பெருமானின் மாணிக்க மணி போலும் உபதேச வார்த்தையைப் பேசித் 'திருப்பெருந்துறையே' எனக் கூறி என் பிறவி நோயை வேரறுத்தேன். He that standeth as the very boundary of all debated issues, and shineth as a flawless gem! His priceless words are beyond the pale of speech - Yet speaking on this state, calling out "Oh great Path Breaker" and keeping this valuable medication at heart, I did terminate all my future births. கு-ரை: பெருந்துறை, அப்பெயருடைய பதிக்கும், பெருநெறியாய பிரானுக்கும் வழங்குவது. THIRUCHCHITRAMBALAM 49. திருப்படையாட்சி 49. THIRUP-PADAI-AATCHI (சீவ உபாதி ஒழிதல் ) The Marshalling of the Sacred Host ஆசிரிய விருத்தம் The Cessation of Life's Experiences திருச்சிற்றம்பலம் 'திருப்படை' என்பது, 'தொண்டர் படை' எனத் திருப்படையெழுச்சிக் கண்ணே கூறப்பட்டது. இவ்வுலகில் பழங்காலத்தில் படை என்பது தேரும் குதிரையும் யானையும் காலாளும் என்பதாம். அந்நால்வகைப் படைகளையும் தலைவன் ஆளும் திறம் படையாட்சி எனப்படும். அதுபோன்று, சிவசேனாபதிக்குரிய படைகள் தொண்டர்களும், பக்தர்களும், யோகிகளும் , சித்தர்களும் ஆவர். இதனை, 'திருப்படையெழுச்சி (46)' என்னும் திருப்பதிகத்தில் மணிவாசக மூர்த்திகளே அறிவித்துள்ளார். அப்படையை சிவபெருமான் குற்றங்கள் பலவும் போக்கிக் குணங்கள் பலவும் ஆக்கி ஆளும் திறம் இத்திருப்பதிகத்தில் கூறப்படுகின்றது. இதனால், இதற்குச் 'சீவ உபாதி ஒழிதல்' எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். உபாதி - குற்றம். இதன்கண், 'ஆகாதே' என வருவன பல, 'ஆகும்' எனக் கூறுவதனை வலியுறுத்தும் பொருட்டு எதிர்மறையாக அருளிச் செய்தார். இருப்பினும், இறைவன் எதிர்ப்பட்டு என்னுள்ளே புகுவானாயின், உயிர்க்கே உரிய குற்றங்கள் எதுவும் என்னை அணுகா என்பதை அறிவிப்பது இப்பதிகம் எனலாம். எனவே, இப்பதிகத்தில் வரும் நல்லனவெல்லாம் 'ஆகும்' எனவும், தீயனவெல்லாம் 'ஆகாது' எனவும் பொருள் கொள்ள வேண்டும். 'ஆமே' என்றால் 'அன்று' எனப் பொருள்படும். எனவே, "கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே ? (ஆகும்); காரிகையார் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே? (ஆகாது)" என்றே பொருள் கொள்க. இதனால் முத்திக்கு வாயிலாகிய ஞானத்தை எய்துவதற்குத் தடையாவன எல்லாம் தீயன என்றும், ஞானத்தை அடைவதற்கு ஏதுவாவன எல்லாம் நல்லன என்றும் அறிந்து கொள்க. இனி, மணிவாசகப் பெருமான் தாம் இவ்வுலக இன்பதுன்பங்களில் ஆழ்ந்து போனதாகவும், மாதர் மையலில் வீழ்ந்து தலை தடுமாறியதாகவும் இப்பதிகத்தில் மட்டுமன்றித் திருவாசகம் முழுமையும் எடுத்துக் கூறுகிறார். நிலையில் திரியாது அடங்கிய சிவஞானியரும் இங்ஙனம் நிலையற்ற உலகியல் இன்பங்களை நாடித் திரிவரோ? எனும் வினா எழுதல் இயல்பே. கருணையே வடிவமான சிவபெருமானை வழிபட்டு, அவனருள் பெற்ற சிவஞானியரும் கருணையே வடிவமாய்த் திகழ்வர். இதனையே, 'கயலார் கருங்கண்ணி தன் துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தரு கையினன்' எனத் திருஞான சம்பந்த மூர்த்திகளைப் புகழும் நம்பியாண்டார் நம்பிகளின் திருவாக்கினாலும் ஏனையவற்றாலும் அறிந்து கொள்க. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் சிவஞானியர், இறைவனிடத்து விண்ணப்பிக்கும் பொழுது உலகில் உள்ள உயிர்களின் குற்றம் குறைகளைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு விண்ணப்பிப்பது மரபு. அங்ஙனமே, மணிவாசகப் பெருமானும் செய்தனர் என்று அறிக. மேலும், மணிவாசகர் பெண்களின் மேல் வைத்த மையலைப் பற்றிக் குறிக்கும் போதெல்லாம் விலைமகளிரைக் குறித்தனரே அல்லாமல், இல்லறம் பேணி நல்லறம் ஆற்றும் மாண்பு உடையவர்களாகிய குடும்பப் பெண்களை அல்ல என்பதை நன்றாக உணர்ந்து கொள்க. In the language of yore, (படை - Padai means the armed forces consisting of chariot, elephant, cavalry and infantry divisions. The administration of these divisions by a King is called ஆட்சி - Aatchi). In this decad, Lord Civan is the Supreme Commander of His forces which consist of servitors, bakthaas, ascetics and siddhaas (See decad 46). His way of administering these forces to shower His grace by manifesting Himself before them. This is called Padai Aatchi (படை ஆட்சி). The word 'Thiru' is added to signify the sacredness. So, this is called Thirup-Padai-Aatchi. Maanikkavaachakar uses the word (ஆகாதே - aahathe) in almost each and every line while describing the good and bad events in life. It is to be understood that the expression 'aahathe' has its literal, negative meaning i.e., will not happen when referring to the things of bondage mentioned; whereas, it implies the opposite positive meaning also i.e., will happen when preceeded by the good things of grace mentioned by the poet. We have translated all the metaphors either in the affirmative or in the negative as the case may be, to enable the readers to understand the correct meaning. 49.1 கண்க ளிரண்டு மவன்கழல் கண்டு களிப்பன வாகாதே காரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு மாகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடு மாகாதே மாலறி யாமலர்ப் பாத மிரண்டும் வணங்குது மாகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன; ஆகாதே ? காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும்; ஆகாதே? மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ;ஆகாதே? மால் அறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும்; ஆகாதே? பண் களிகூர் தரு பாடலொடு ஆடல் பயின்றிடும்; ஆகாதே? பாண்டி நல்நாடு உடையான் படை-ஆட்சிகள் பாடுதும்; ஆகாதே? விண்களி கூர்வது ஓர் வேதகம் வந்து, வெளிப்படும்; ஆகாதே? - மீன் வலை வீசிய கானவன் வந்து, வெளிப்படும் ஆயிடிலே! kaNkaL iraNdum avan kazal kaNdu kaLippana aakaathee kaarikaiyaarkaL tham vaazvil en vaazvu kadaippadum aakaathee maNkaLil vanthu piRanthidu maaRu maRanthidum aakaathee maal aRiyaa malarppaatham iraNdum vaNangkuthum aakaathee paNkaLi kuurtharu paadalodu aadal payinRidum aakaathee paaNdi nal naadu udaiyaan padai aadsikaL paaduthum aakaathee viNkaLi kuurvathu oor veethakam vanthu veLippadum aakaathee miinvalai viisiya kaanavan vanthu veLippadum aayidilee பொ-ரை: மீன் வலை வீசிய வேடனாகிய சிவபெருமான் தன் தெய்வத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து நமக்கு வெளிப்பட்டு விட்டால், இரண்டு கண்களும் அவனுடைய திருவடியைக் கண்டு மகிழும். பெண்களோடு சேர்ந்து என் வாழ்க்கை கீழ்ப்படுதல் நிகழாது. உலகங்களில் போய்ப் பிறப்பதற்குக் காரணமான இறைவன் திருவடிகளை மறத்தல் எனும் செயல் நிகழாது . திருமால் அறியாத இறைவனது திருவடித் தாமரை இரண்டையும் வழிபடுதல் நிகழும். பண்ணுடன் கூடிய மகிழ்ச்சி தரும் பாடலும் ஆடலும் பழகுதல் நிகழும். நல்ல பாண்டிய நாட்டினை உடைய பெருமானது படையின் வீரச் செயல்களைப் பாடுதல் நிகழும். விண்ணவரும் வியக்கும்படியான இறைவனது பலதிறப்பட்ட மாற்றங்களுடைய காட்சியை அடியேன் கண்டு களிப்பேன். When Lord Civan, who as a fisherman cast his net to catch the coveted fish, which was holding the bundle of palm leaves containing the Vedas and Aagamaas, appears before me, manifesting His grace: Both my eyes would rejoice and gladden at the sight of His holy Feet The tempting beauty of joyous damsels shall cease to lure me. The cycle of birth and death in this world shall pass into oblivion. I shall adore the holy flowery Feet of Lord Civan unknown even to Thirumaal. I shall continue to sing and practise the melodious songs and dance joyfully. I shall sing extolling the heroic exploits of the servitors of the Lord (Holy Crusaders) of Paandiyan Kingdom I shall rejoice seeing million different mystic forms manifested in Lord Civan, the sight of which will astonish even the devas. Note: The fish is none else than Nandi Deva, the Chief Security Officer of Lord Civan's abode (See Story No. 14). கு-ரை: வாழ்வில் என்பதற்கு வாழ்வினைப் பார்க்கிலும் என்று பொருள் கொள்வாரும் உளர். வேதம் என்பது விண்ணவர்களிலும் உயர்த்திக் காட்டும் தனிச் சிறப்பு. உயிர் சிவனோடு இரண்டறக் கலந்த இடத்தே, ஏனைத் தேவரை எண்ணாமையின், அச்சிறப்புத் தோன்றாதென்க. 2. ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்துமு யிர்ப்பறு மாகாதே யுன்னடி யாரடி யாரடி யோமென வுய்ந்தன வாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரண மாகு மனாதி குணங்கள் கருத்துறு மாகாதே நன்றிது தீதென வந்த நடுக்க நடந்தன வாகாதே நாமுமே லாமடி யாருட னேசெல நண்ணுது மாகாதே யென்றுமெ னன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே யேறுடை யானெனை யாளுடை நாயக னென்னுள்புகுந் திடிலே. ஒன்றினொடு ஒன்றும், ஓர் ஐந்தினொடு ஐந்தும், உயிர்ப்பறும்; ஆகாதே? உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன; ஆகாதே? கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு - அது; ஆகாதே? காரணம் ஆகும் அனாதி குணங்கள் கருத்து உறும்; ஆகாதே ? நன்று, இது, தீது என வந்த நடுக்கம் நடந்தன; ஆகாதே? நாமும் மேல் ஆம் அடியாருடனே செல, நண்ணுதும்; ஆகாதே? என்றும் என் அன்பு நிறைந்த பரா-அமுது எய்துவது; ஆகாதே? ஏறு உடையான், எனை ஆளுடை நாயகன், என்னுள் புகுந்திடிலே! onRinodu onRum oor ainthinodu ainthum uyirppaRum aakaathee un adiyaar adiyaar adiyoom ena uynthana aakaathee kanRai ninainthu ezu thaay ena vantha kaNakku athu aakaathee kaaraNam aakum anaathi kuNangkaL karuththu uRum aakaathee nanRu ithu thiithu ena vantha nadukkam nadanthana aakaathee naamum meelaam adiyaarudanee sela naNNuthum aakaathee enRum en anpu niRaintha paraa amuthu eythuvathu aakaathee eeRudaiyaan enai aaLudai naayakan ennuL pukunthidilee பொ-ரை: காளை வாகனமுடையவனும் என்னை அடிமையாக உடையவனுமான என் தலைவன் என் அறிவினில் புகுந்து நிலைத்துவிடில், உயிரோடு உடம்பும், ஐம்பொறிகளோடு புலன்களும் கலப்பதால் விளையும் பிறப்பு இறப்பு என்னும் செயல் நிகழாது. உன் அடியார்களின் அடியார்களுக்கு அடியோம் என்று கூறி உய்வதற்கு ஏதுவான செயல்கள் நிகழும். அன்புடன் தன் கன்றை நினைந்து செல்லும் தாய்ப்பசு போன்று இறைவன் உயிர்கள் பால் கருணை காட்டச் செல்லும் முறையும் நிகழும். பிறவிக்குக் காரணமான அநாதி நித்தியமான மல குணங்களை இறைவன் தனது கருணையால் நிறுத்தி விடுதலும் நிகழும். அதனால் இது நல்லதோ தீயதோ என்று வந்த நடுக்கங்கள் நிகழாது. நாம் யாவரும் சீவன் முத்தர்களாகிய அடியாருடன் செல்ல ஒருமைப்படுதல் நிகழும். என்றும் என் அன்பு நிறைந்த அன்பிற்குரிய மேலான அமுதமானவனைப் போய் அடைதல் நிகழும். When the rider of the bull and my eternal beloved, who enslaved me, enters into my body, My body and soul and the five senses along with the five sense organs will lose their combined and co-ordinated actions. I stand redeemed by serving the servitors' of your servitors. I feel your benign presence showering your unlimited Grace on me similar to the love of the cow reaching towards its calf and yielding milk to it. The ever-attached Aanava (egoism) and past deeds (karma) that express themselves as ignorance and illusion will become ineffective by His grace. The anxiety about the outcome of good and bad deeds will disappear. After this elimination of sins, now we, along with the liberated souls, will become eligible to reach Lord Civan's abode. The loving sweet ambrosia will then come to me for ever by the grace of Lord Civan. கு-ரை: ஒன்றினோடு ஒன்றும் என்பதற்கு உடம்பினொடு பிராணனும் என்று கூறுவாரும் உளர். தாயென வந்த என்பதைக் கடவுளுக்கு ஏற்றித் தாய்போலக் குருவாகி வந்த எனப் பொருள் கொள்வதும் உண்டு. 3. பந்தவி கார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே யந்தமி லாத வகண்டமு நம்மு ளகப்படு மாகாதே யாதி முதற்பர மாய பரஞ்சுட ரண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே சேலன கண்க ளவன்றிரு மேனி திளைப்பன வாகாதே யிந்திர ஞால விடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே யென்னுடை நாய கனாகிய வீச னெதிர்ப்படு மாயிடிலே பந்த-விகார குணங்கள் பறிந்து மறிந்திடும்; ஆகாதே? பாவனை ஆய கருத்தினில் வந்த பரா-அமுது; ஆகாதே? அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே? ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே? செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும்; ஆகாதே? சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன; ஆகாதே ? இந்திர-ஞால இடர்ப் பிறவித்துயர் ஏகுவது; ஆகாதே? - என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே ! pantha vikaara kuNangkaL paRinthu maRinthidum aakaathee paavanai aaya karuththinil vantha paraa amuthu aakaathee antham ilaatha akaNdamum nammuL akappadum aakaathee aathi muthal paramaaya paranjsudar aNNuvathu aakaathee senthuvar vaay madavaar idar aanavai sinthidum aakaathee seel ana kaNkaL avan thirumeeni thiLaippana aakaathee inthiranjaala idar piRavi thuyar eekuvathu aakaathee ennudai naayakan aakiya iisan ethirppadum aayidilee பொ-ரை: என் தலைவனாகிய இறைவன் எதிர் தோன்றிக் கலந்து அருளுவானாயின் கடவுளைப் பாவிப்பதால் உள்ளத்தில் தோன்றிய ஞானக் காட்சியிலுள்ள மேலான அமுதத்தை அனுபவிக்க இயலும். எல்லையற்ற, கட்டுப்படாத வடிவக் காட்சி நமது உள்ளத்தில் புலனாதல் நிகழும். படைப்பு முதல் உதவிய மேலான சோதிப் பொருளைப் போயடைதல் நிகழும். செவ்விய பவள வாயுடைய பெண்டிரால் வரும் இடையூறுகள் ஒழிந்து விடும். சேல்மீன் போன்ற எம் கண்களால் இறைவனது திரு உருவத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டே இருப்பதாகிய செயல் நிகழும். இந்திர சாலம் போன்ற மாயமான இடைஞ்சலான பிறவித் துன்பம் ஒழிதல் நிகழும். When my Lord Civan meets me here in his sacred form :- The perversities induced by aanava malam will be uprooted and destroyed. The object of my meditation will surge up as sweet ambrosia in my thoughts. I shall be able to perceive within me the infinite macrocosm. The supernal effulgence that shines from the beginning of time shall, by itself, reach me. The afflictions that arise from the evil temptations of frivolous damsels with crimson lips, shall be dispelled. My eyes that are like restless carp-fish will now converge and embrace Lord Civan. The deluding sorrow of the cycle of illusory births will be totally destroyed. கு-ரை: இச்செய்யுளுள் கூறியன எல்லாம் கடவுளோடு இரண்டறக் கலப்பதற்கு முன் நிகழ்வன என்றும் பின் நிகழா என்றும் அறிக. ஆதிமுதல் பரமாய பரஞ்சுடர் என்றது ஐந்தொழில் செய்யும் தடத்த இலக்கணம் உடைய கடவுளைக் குறிக்கும். இந்திர ஜால வித்தையை அறுபத்து நான்கு கலைஞானங்களில் ஒன்று என்ப. 4. என்னணி யார்முலை யாக மளைந்துட னின்புறு மாகாதே யெல்லையின் மாக்கரு ணைக்கட லின்றினி தாடுது மாகாதே நன்மணி நாத முழங்கியெ னுள்ளுற நண்ணுவ தாகாதே நாத னணித்திரு நீற்றினை நித்தலு நண்ணுவ தாகாதே மன்னிய வன்பரி லென்பணி முந்துற வைகுவ தாகாதே மாமறை யும்மறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே யின்னியற் செங்கழு நீர்மல ரென்றலை யெய்துவ தாகாதே யென்னை யுடைப்பெரு மானரு ளீசனெழுந்தரு ளப்பெறிலே என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும்; ஆகாதே ? எல்லை இல் மாக் கருணைக் கடல் இன்று இனிது ஆடுதும்: ஆகாதே ? நல் மணி நாதம் முழங்கி, என் உள் உற, நண்ணுவது; ஆகாதே? நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது; ஆகாதே? மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது; ஆகாதே? மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும்; ஆகாதே? இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது; ஆகாதே? - என்னை உடைப் பெருமான், அருள்ஈசன் எழுந்தருளப் பெறிலே ! en aNiyaar mulai aakam aLainthudan inpuRum aakaathee ellai il maakkaruNai kadal inRinithu aaduthum aakaathee nanmaNi naatham muzangki en uLLuRa naNNuvathu aakaathee naathan aNith thiruniiRRinai niththalum naNNuvathu aakaathee manniya anparil en paNi munthuRa vaikuvathu aakaathee maa maRaiyum aRiyaa malarppaatham vaNangkuthum aakaathee in iyal sengkazuniir malar en thalai eythuvathu aakaathee ennai udaipperumaan aruL iisan ezuntharuLap peRilee பொ-ரை : என்னை அடிமையாக உடைய பெருமானாகிய கருணை முதல்வன் எழுந்தருளினால், முன்னர் அணிகலன்கள் அணியப்பட்டிருந்த எனது மார்பு அவனது திருமேனியில் படிந்து இன்புறுதல் நிகழும். எல்லையற்ற கருணைப் பெருங்கடலில் திளைத்தல் நிகழும். சிவலோக நிட்டையில் இருக்கும் சிவஞானியர்க்கு மணியோசை என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த நல்ல மணி நாதம் முழங்கி என் மனத்துள்ளே நன்றாக அடைதலும் நிகழும். இறைவன் அணிகின்ற திருநீற்றினை நான் பூசுதலும் நிகழும். நிலைபெற்ற அன்பரில் எனது பணிவிடை முற்பட்டு இருத்தல் நிகழும். பெருமை பொருந்திய, வேதநூல்களும் அறியாத திருவடிக் கமலங்களை வழிபடுதலும் நிகழும். இனிய இயல்புடைய செங்கழுநீர்ப்பூப் போன்ற திருவடிகள் எனது தலையிற் பொருந்துதல் நிகழும். When my Lord Civan who owns and rules me, arise to visit me: I shall enjoy His loving embrace on my jewelled chest. I shall bathe and enjoy in the vast limitless sea of His mercy. The soaring sound of sweet mystical music will be enjoyed in my heart. It will be possible for me to apply daily on my body the Holy Ash that my Lord Civan smears on His body. My services will be reckoned the foremost among my Lord's servitors' services. I shall be worshipping my Lord's flowery Feet which are beyond the reach of the four great Vedas. The sweet red water-lily flower shall adorn my head as a crown. கு-ரை: இறைவன் திருமேனியைத் தழுவுதல் அவனது திருவடிவத்தில் ஒடுங்குதல் ஆகும். மணி நாதம் முழங்குதல் யோகியர் உடம்பில் நிகழ்வது. 5. மண்ணினின் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே கண்ணிலி கால மனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே காதல் செயும்மடி யார்மன மின்றுக ளித்திடு மாகாதே பெண்ணலி யாணென நாமென வந்த பிணக்கறு மாகாதே பேரறியாத வனேக பவங்கள் பிழைத்தன வாகாதே யெண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை யெய்துவ தாகாதே யென்னை யுடைப்பெரு மானரு ளீச னெழுந்தருளப் பெறிலே. மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும்; ஆகாதே? வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும்; ஆகாதே? கண் இலி காலம் அனைத்திலும் வந்த கலக்கு அறும்; ஆகாதே? காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும்; ஆகாதே ? பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும், ஆகாதே? பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன; ஆகாதே ? எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது; ஆகாதே? - என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே ! maNNinil maayai mathiththu vakuththa mayakku aRum aakaathee vaanavarum aRiyaa malar paatham vaNangkuthum aakaathee kaN ili kaalam anaiththinum vantha kalakku aRum aakaathee kaathal seyum adiyaar manam inRu kaLiththidum aakaathee peN ali aaN ena naam ena vantha piNakku aRum aakaathee peer aRiyaatha aneeka pavangkaL pizaiththana aakaathee eN ili aakiya siththikaL vanthu enai eythuvathu aakaathee ennai udaiperumaan aruL iisan ezuntharuLa peRilee பொ-ரை: என்னை ஆளாகவுடைய பெருமானாகிய கருணைமிகு இறைவன் எழுந்தருளப் பெற்றால், மண்ணுலகில் மாயா காரியங்களைக் கருதி அவற்றால் எழுந்த மயக்க உணர்ச்சி ஒழிந்து விடும். தேவர்களும் அறியாத திருவடிக் கமலங்களை அடியேன் வழிபடுதல் நிகழும். ஞானம் இல்லாதவனாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட கலக்கம் நிகழாது. காதல் புரியும் அடியார்கள் மனம் இன்று களிப்பு எய்தும். பெண், ஆண், அலியென்னும் பால் வேறுபடுத்திப் பேசுகின்ற பிணக்கும் நான், நீ என்னும் ஆணவ காரியமான அகங்காரப் பிணக்கும் நிகழா. பெயர் கூட அறியப்பெறாத பல பிறவிகள் எடுத்ததையும் மறந்தோம். எண்ணிலடங்காத சித்திகள் என்னை வந்து அடைந்த போதிலும் அவை முத்திக்குத் தடையாக அமைய மாட்டா. When my Lord Civan who owns and rules me appears before me in His divine form:- All fond fancies that valued earth's illusions will cease. I shall adore and worship the flowery holy Feet of Lord Civan which is unapproachable even to heavenly ones. The bewilderment accumulated during all these numberless years from all sources will disappear from my thought. The mind of loving servitors will today glow with joy. The complexities arising out of differentiation among man, woman hermaphrodite, 'I-hood' and 'my-hood' will disappear from my mind. All deeds during my innumerable past births, the very names of which I neither know nor remember, will disappear. The numberless supernatural powers which obstruct reaching final beatitude will not gain over me. (Supernatural powers are obstacles for reaching the final beatitude.) கு-ரை: மாயையினால் ஆகிய மயக்கத்தை முதற்கண் குறிப்பித்தார். அது ஆணவத்தால் வந்த மயக்கின் வேறாகும். கண் = ஞானத்திற்கு அறிகுறி. கண்ணிலி காலம்= கண்ணிலியாயிருந்த காலம். கலக்கு- கலக்கம் என்பதன் கடைக்குறை. பவங்கள் = பிறவிகள். 6. பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே மின்னிய னுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே வீணை முரன்றெழு மோசையி லின்ப மிகுத்திடு மாகாதே தன்னடி யாரடி யென்றலை மீது தழைப்பன வாகாதே தானடி யோமுட னேயுய வந்து தலைப்படு மாகாதே யின்னிய மெங்கு நிறைந்தினி தாக வியம்பிடு மாகாதே யென்னைமு னாளுடை யீச னெனத்தனெ ழுந்தருளப் பெறிலே பொன் இயலும் திருமேனி வெண்நீறு பொலிந்திடும்; ஆகாதே? பூமழை, மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும்; ஆகாதே? மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும்; ஆகாதே ? வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும்; ஆகாதே? தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன; ஆகாதே? தான் அடியோ முடனே உயவந்து, தலைப்படும்; ஆகாதே? இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும்; ஆகாதே? - என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே ! pon iyalum thirumeeni veNniiRu polinthidum aakaathee puumazai maathavar kaikaL kuvinthu pozinthidum aakaathee min iyal nuN idaiyaarkaL karuththu veLippadum aakaathee viiNai muranRu ezum oosaiyil inpam mikuththidum aakaathee than adiyaar adi en thalai miithu thazaippana aakaathee thaan adiyoomudanee uya vanthu thalaippadum aakaathee in iyam engkum niRainthu inithaaka iyampidum aakaathee ennai mun aaLudai iisan en aththan ezuntharuLa peRilee பொ-ரை: என்னை முன்னாளில் ஆட்கொண்டருளிய என் அப்பன் எழுந்தருளப் பெற்றால் அவனது பொன் போன்ற திருமேனி மீது வெள்ளிய திருநீறு விளங்கித் தோன்றுதலைக் காணலாம். பெருந்தவத்தினர் தங்கள் கைகளைக் கூப்பி மலர் மழையை இறைவன் திருவடிகளில் சொரிந்திடுதலும் நிகழும். மின்னல் போலும் நுணுகிய இடையை உடைய மாதர்களின் உள்ளக் கருத்து வஞ்சகமானது என்பது வெளிப்பட்டு விடும். வீணையில் இருந்து எழும் நாதத்தினால் உண்டாகும் இன்பத்தினும் மிக்கதான இன்பம் மிகுதியும் ஏற்படும். இறைவன் அடியார்களின் திருவடிகள் என் தலைமீது விளங்குதல் நிகழும். இறைவனின் அடியார்களாகிய நாங்கள் உய்யும்படி அவன் எழுந்தருளி வந்து நம்மோடு கூடுதலும் நிகழும். இனிய வாத்தியங்கள் எவ்விடத்தும் நிறைந்து இனிதாக ஒலித்தலும் நிகழும். When Lord Civan who owns me and is my Father arises to visit me:- I will enjoy the brilliance of His sacred golden form smeared with holy ash. The mighty saints on seeing Him will adore Him by raining flowers on His Feet with folded hands. The thoughts of damsels whose lips are as slender as lightning will disappear from my mind. I will enjoy His vision, as I enjoy the melodious music of Veena. The (senior) saints, realising that I have become worthy, graced me by placing their sacred Feet on my head. Then, Lord Civan came by Himself mingled with us and graced all in the gathering of His servitors. Immediately the dulcat music of instruments filled the atmosphere all around to our enjoyment. கு-ரை: பூமழை என்பதைப் பொலிந்திடும் என்பதனோடு முடிக்க. அடியோம் என்பதை உடனே என்பதோடு முடித்தலும் உண்டு. இயம் = வாத்தியம். 7. சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே துண்ணென வென்னுள மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே பண்டறி யாத பரானு பவங்கள் பரந்தெழு மாகாதே வில்லிய னன்னுத லார்மய லின்று விளைந்திடு மாகாதே விண்ணவ ரும்மறி யாத விழுப்பொரு ளிப்பொரு ளாகாதே யெல்லையி லாதன வெண்குண மானவை யெய்திடு மாகாதே யிந்து சிகாமணி யெங்களை யாள வெழுந்தருளப் பெறிலே சொல் இயலாது எழுதூ மணி ஓசை சுவைதரும்; ஆகாதே? துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும்; ஆகாதே ? பல் இயல்பு ஆய பரப்பு அறவந்த பரா-பரம்; ஆகாதே? பண்டு அறியாத பர-அனுபவங்கள் பரந்து எழும்; ஆகாதே? வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும்; ஆகாதே? விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப்பொருள்: ஆகாதே? எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும்; ஆகாதே? - இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப்பெறிலே! sol iyalaathu ezu thuumaNi oosai suvaitharum aakaathee thuN ena en uLam manniya soothi thodarnthu ezum aakaathee pal iyalpu aaya parappu aRa vantha paraaparam aakaathee paNdu aRiyaatha paraanu pavangkaL paranthu ezum aakaathee vil iyal nannuthalaar mayal inRu viLainthidum aakaathee viNNavarum aRiyaatha vizu poruL ipporuL aakaathee ellai ilaathana eNkuNam aanavai eythidum aakaathee inthu sikaamaNi engkaLai aaLa ezuntharuLap peRilee பொ-ரை: சந்திரனைத் தலையின் மணியாக வைத்த பெருமான் எங்களை ஆட்கொள்ள எழுந்தருளப் பெற்றால் நம் சொல்லுக்கு அடங்காத சுத்த பரநாதமாகிய மணியோசை இன்பம் தரும். யான் துணுக்குற என்னுள்ளத்தில் ஓரொருகால் தோன்றிய சோதியானது இடையறாது தொடர்ந்து விளங்குதல் நிகழும். தாய், தந்தை, தாரம், மனை, மக்கள் என்னும் பல்வேறு பொருட்களின் இயல்பினால் தோன்றியதும், என் மனத்தை அமைதி இல்லாமல் செய்ததுமான பரபரப்பு என் மனத்தினுள் இறைவன் தோன்றியதனால் நீங்கியது. இதுவரை யான் கண்டது மாயையில் உண்டாகிய சீவ உபாதியாகிய சிறு சிறு அனுபவங்களே. ஆனால் இப்பொழுது மேலான எங்கும் என்றும் நிலைத்திருக்கும் சிவானுபவத்தை அனுபவித்தல் நிகழும். (இப்பாட்டில் குறிப்பிடப்படும் மணியோசை, செவியால் கேட்கப்படுவது அன்று. சிவானுபவத்தால் உள்ளத்தில் உணரப்படுவதாம்) Introduction to Stanza No. 7: To understand this stanza, an explanatory note is necessary. Ms. Ma Ratna Navaratnam writes, "The emancipated soul called as the liberated Jeevan Muktha is in a state of transcendent vitality, as it is about to enter the serenity of Bliss Eternal. In the immediacy of this attainment of fulfillment, Maanikkavaachakar breathing in the atmosphere of infinity looks tenderly with soul melting in love upon the world, he is about to bid farewell, and communicates to them the bliss in store for the liberated Jeevan Mukthas. And at the same time, he reviews all his past efforts to attain Lord Civan's Holy Feet, so that the seekers after him may also follow this wonderous "Way Of Life". We mortals hear through our external ears the voice of the bells ringing in the temples and elsewhere and describe them in words. But, the liberated Jeevan Mukthas, who see Civan in their body, while they are in their transcendent state,will also feel and enjoy the melodious voice of "Paranaatham". This will only be felt by the soul and not heard through the ears. This "melodious wordless Voice" was felt by sage 'Patanjali' and the saintly king ' Cheramaan Perumaal Naayanaar'. This wordless melodious voice felt by Maanikkavaachakar also has been mentioned in the first line of this poem. When Lord Civan who wears the crescent moon on his head manifests before us to grace and redeem all of us: The pure melodious bell-like sound that arises on account of the vision of the supreme will be felt and enjoyed by me. The light within my soul which fades and brightens intermittently will now burn incessantly. The manifold sufferings arising out of Maaya- one of the three primordial matters will cease to affect me. The Divine experiences unknown in the past shall be unfolded and encountered by me. The distraction of my mind caused by damsels having bow - like lovely brows, will cease to lure me. The profound object I now witness is unknown even to heavenly ones. The unlimited powers of eightfold qualities or attributes of Lord Civan shall be gained by me. கு-ரை: சொல் கலவாது ஒலிக்கின்ற மணி ஓசையைச் சிலம்பொலி என்பர். அது ஞான யோகத்தால் அறியற்பாலது. துண்ணென மன்னிய சோதி என்றது, ஞான நிலையின் தொடக்கத்திலுண்டாகும் விளக்கத்தை. பரப்பற வந்த பராபரம் என்றது மனோலயத்தை உளதாக்கும் இறைவன் திருவடிவம். பரானுபவங்கள் என்றது, அபரமுத்திப் போகங்கள். இப்பொருள் என்றது அடிகளுக்குத் தோன்றிய ஆசிரிய வடிவத்தை. எண்குணங்களை அடைந்து முடிந்த இடமாதலின் புதிதாக எய்திடுதற்கு இடமில்லை என்றார். இந்து சிகாமணி என்பதற்குச் சந்திரனைத் தலையில் தரித்தவனாகிய மணி போன்றவன் என்றும் கூறுப. 8. சங்கு திரண்டு முரன்றெழு மோசை தழைப்பன வாகாதே சாதி விடாத குணங்கணம் மோடு சலித்திடு மாகாதே யங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே யாசையெ லாமடி யாரடி யோமெனு மத்தனை யாகாதே செங்கய லொண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன வாகாதே சீரடி யார்கள் சிவானு பவங்க டெரிந்திடு மாகாதே யெங்கு நிறைந்தமு தூறு பரஞ்சுட ரெய்துவ தாகாதே யீறறி யாமறை யோனெனை யாள வெழுந்தருளப் பெறிலே. சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன; ஆகாதே? சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும்; ஆகாதே? அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும்; ஆகாதே? ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை: ஆகாதே? செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன: ஆகாதே? சீர் அடியார்கள் சிவ-அனுபவங்கள் தெரிந்திடும்; ஆகாதே ? எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்-சுடர் எய்துவது; ஆகாதே? - ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே! sangku thiraNdu muranRu ezum oosai thazaippana aakaathee saathi vidaatha kuNangkaL nammoodu saliththidum aakaathee angku ithu nanRu ithu nanRu enum maayai adangkidum aakaathee aasai elaam, adiyaar adiyoom enum aththanai aakaathee sengkayal oNkaN madanthaiyar sinthai thiLaippana aakaathee siir adiyaarkaL sivaanu pavangkaL therinthidum aakaathee engkum niRainthu amuthu uuRu paranjsudar eythuvathu aakaathee iiRu aRiyaa maRaiyoon enai aaLa ezuntharuLa peRilee பொ-ரை: எவராலும் முடிவு உணரப்படாத மறைப்பொருளாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்ள எழுந்தருளப் பெற்றால் சங்குகள் பல ஒன்று சேர்ந்து முழங்கினாற் போல் எழுகின்ற ஓசை மிகுதிப்படுதல் நிகழும். பிறப்போடு தோன்றிய நால்வகை சாதிக்கேற்ற குணங்கள் நம்மைவிட்டு நழுவி விடுதல் நிகழும். அவ்விடத்தே இது நல்லது இது தீயது என்ற மயக்கம் அடங்கி ஒழிதல் நிகழும். எமக்குள்ள விருப்பம் எல்லாம் இறைவனின் அடியார்க்கு அடியோம் என்னும் அவ்வளவே என்பதும் நிகழும். சிவந்த கயல்மீன் போன்ற ஒளியுள்ள கண்ணை உடைய பெண்டிர்பால் ஏற்படும் விருப்பு மாறி மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு, சிறந்த அடியார்களது சிவானுபவங்கள் இன்னது என்று விளங்குவதற்குரிய வேட்கை நிகழும். எங்கும் நிறைந்து அமுத வடிவாக உள்ள ஈசன் பரஞ்சோதியாக நின்று காட்சியளிக்கும் பேறும் நிகழும். When Lord Civan, the creator of Vedas, who has no beginning and no end, graciously rises in me to enslave me: I feel and enjoy in my heart the sweet sound of many conches blown simultaneously. The ill feelings that normally arise in my mind out of caste-complex will cease to exist in my mind. The delusory feelings in my mind that this is good, that is good, which is caused by Maaya shall not affect me hereafter. My entire desire is only that I should be the servitor of servitors. The thought of damsels who have red-carp like eyes will cease to lure me. The divine experiences felt by the venerable sages (bakthas) will also be felt by me. I shall gain and enjoy the bliss of heavenly all-pervasive light that springs forth ambrosia. கு-ரை: சங்கோச யோகானுபவம், சாதிக்குணங்கள் பழக்க மிகுதியால் உண்டாவன. மாயை என்றது புதுமை பற்றிய உணர்ச்சி. அமுதூறு பரஞ்சுடர் என்றது, உடம்பினில் காணப்படும் உத்தமனை. THIRUCHCHITRAMBALAM 50. ஆனந்த மாலை 50. AANANTHA MAALAI (சிவானுபவ விருப்பம் ) The Garland of Bliss தில்லையில் அருளிச் செய்யப்பட்டது Compiled whilst in Thillai ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 'ஆனந்தத்தை வேண்டும் பாமாலை ஆனந்த மாலை' என்க. ஆனந்தமாவது சிவானந்தமே' என்பது வெளிப்படை. 'சிவாநுபவ விருப்பம்' என்னும் முன்னோர் குறிப்பும் இதுவேயாதல் அறிக. 'மாலை' என்றமையால், பத்துத் திருப்பாட்டுக்களேனும் இதன்கண் இருந்திருத்தல் வேண்டும். இப்பொழுது காணப்படுபவை ஏழு திருப்பாட்டுக்களே. இவை அனைத்தும் அறுசீரடி விருத்தங்கள். இது, தில்லையில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. While Maanikkavaachakar was staying in Chidambaram during his last days, he became the ideal of a realised Jeevan Muktha. Here, he conveys to the humanity the incommunicable Bliss of Love portraying his life's experience. He explains the experiences of Bliss of Love, not in isolation, but in communion, in unison with the holiest devotees of the Lord. We have only seven verses in this decad as against the normal ten verses. 50.1. மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றா ரமர ரெல்லாங் கன்னே ரனைய மனக்கடை யாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த வென்னே ரனையே னினியுன்னைக் கூடும் வண்ண மியம்பாயே மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார், கடந்தார், வியன் உலகம் ; பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்; கல்நேர் அனைய மனக் கடையாய்க் கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. minneer anaiya puungkazalkaL adainthaar kadanthaar viyan ulakam pon neer anaiya malar koNdu pooRRaa ninRaar amarar ellaam kalneer anaiya manakkadaiyay kazippuNdu avala kadal viizntha en neer anaiyeen ini unnai kuudum vaNNam iyampaayee பொ-ரை: இறைவனது மின்னல் போலும் அழகிய திருவடிகளில் தேவர்கள் பொன் நிறமுள்ள அழகிய மலர்களைத் தூவி, இறைவனை வணங்கி நிற்கின்றார்கள். நானோ கல்லையொத்த மனத்தினனாய்க் கீழ்ப்பட்டவனாய் உள்ளேன். அறிஞர்களால் கழிக்கப்பட்டுக் கவலைப்பட்டு வீழ்ந்து கிடக்கும் எனக்கு நானே நிகரான கீழ்மை உடையேன். இனி நான் உன்னை வந்தடையும் வகையினைக் கூறி அருளுவாயாக. All the devas adored and worshipped you by offering Karpaga flowers of golden hue in your lightening-like flowery Feet. Oh! Lord, I am thy refuge but I am a base, worthless and stony minded man. I sank in the sea of fond desires. There is no other bad man like me. I pray kindly tell me and show me the path how in future I can be united in communion with you and wherefrom no sojourner ever takes rebirth. கு-ரை: பூங்கழல்கள் = பொலிவு உடைய திருவடிகள். இழிவில் தனக்குத் தானே நிகர் என்பார் என்நேரனைய என்றார். 2. என்னா லறியாப் பதந்தந்தா யான தறியா தேகெட்டே னுன்னா லொன்றுங் குறைவில்லை யுடையா யடிமைக் காரென்பேன் பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழைய வடிய ரொடுங்கூடா தென்னா யகமே பிற்பட்டிங் கிருந்தே னோய்க்கு விருந்தாயே. என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்; உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்; பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன்-நோய்க்கு விருந்தாயே. ennaal aRiyaa patham thanthaay yaan athu ariyaathee keddeen unnaal onRum kuRaivu illai udaiyaay adimaikku aar enpeen pannaaL unnai paNinthu eeththum pazaiya adiyarodum kuudaathu en naayakamee piRpaddu ingku iruntheen nooykku virunthaayee பொ-ரை: யான் ஆன்மகுணம் முற்றும் போகாதவன். அத்தகைய எனக்கு யான் இதுவரை அறிந்திராத சிவானுபவமாகிய பெரிய பதவியைத் தந்தருளினாய். அதன் தன்மை அறிந்து அதனைக் காவாமல் யான் கெடுதியுற்றேன். அடிமையைக் காக்கவில்லை என்ற குறை உனக்கு இல்லை. நீ உரிய காலத்தே ஆண்டனை; வேண்டிய எல்லாம் எனக்குத் தந்தனை; உன்னால் யாதொரு குறையும் ஏற்படவில்லை. நாதனே! அடியேனுக்கு யாரைத் துணை என்பேன்? என் தலைவனே! பல நாட்களாக உன்னை வழிபட்டுத் துதிக்கும் பழைய அன்பரோடு சேராது பிற்பட்டுக் கிடந்து, பிணிக்கு விருந்தாக இவ்வுலகில் இருக்கின்றேன். Oh! Lord, you gave me your supreme love which I was not able to appreciate and assimilate it. Having failed to understand I got ruined and lost in the puppet shows of the world. Oh! my Master! the fault is not yours for my inattentiveness. I am your slave. Who will come to this slave for help? My Lord! I see your ancient saints who adore and worship you for long? Even after seeing, I did not join them. I was left behind to suffer in distress as a feast to diseases. கு-ரை: என் நாயகமே என்பதை முதலில் கொள்ளலாம். நோய்க்கு விருந்தாய் இருந்தேன் என மாறுக. பதம் என்பதற்குத் திருவடி என்றும் உரைப்பர். நாதனே நீ அடிமைக்கு எவ்வகைத் தொடர்புடையாய் எனவும் பொருள் கொள்வர் . 3. சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி யறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா வுலக நெறியேறக் கோலங் காட்டி யாண்டானைக் கொடியே னென்றோ கூடுவதே சீலம் இன்றி, நோன்பு இன்றிச் செறிவே இன்றி, அறிவு இன்றித் தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்ச் சுழன்று, விழுந்து, கிடப்பேனை மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏறக் கோலம் காட்டி ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே? siilam inRi noonpu inRi seRivee inRi aRivu inRi thoolin paavai kuuththaaddaay suzanRu vizunthu kidappeenai maalum kaaddi vazikaaddi vaaraa ulaka neRi eeRa koolam kaaddi aaNdaanai kodiyeen enRoo kuuduvathee பொ-ரை: நல் ஒழுக்கமின்றி, விரதமின்றி அன்பில்லாமல் அறிவில்லாமல் தோற்பாவை கூத்தாடுவது போலத் துன்ப இன்பங்களிற் சுழன்று அவற்றில் மயங்கி அறிவற்று விழுந்து கிடக்கின்றேன். இத்தகைய பயனற்ற செயல்களில் ஈடுபடாதவண்ணம் முத்திக்குப் போகிற வழியில் முன்னேறிச் செல்லுமாறு குருவடிவான கோலம் காட்டினாய். இவ்வாறு என்னை ஆண்ட என் தலைவனைக் கொடிய பிணிகளை உடைய யான் போய்க் கூடுவது எந்நாளோ? கு-ரை: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிநிலைகளும் குறிப்பிடப்படுவதை அறிக . Oh! Master! I have no virtue I do not practise penance I am indisciplined I am untaught and devoid of understanding I had been dancing, whirling and falling giddy-like a puppet-show doll, made of skin. You made me understand the means to get rid of my delusions and showed me the way to your abode wherefrom there is no return and which was not reached before. When this wretch can see thy holy form which you showed and enslaved me; kindly let me know when I can be in communion with you. 4. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாநான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கா னன்றோ வெங்க ணாயகமே. கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழிகொண்டாய்; படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே ? கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே ! நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே? keduveen kedumaa kedukinReen keedu ilaathaay pazikoNdaay paduveen paduvathu ellaam naan paddaal pinnai payan ennee kodumaa narakaththu azunthaamee kaaththu aadkoLLum kurumaNiyee naduvaay nillaathu ozinthakkaal nanRoo engkaL naayakamee. பொ-ரை: கெடும் தன்மையுடைய யான் கெடக்கூடிய நியதியின்படிக் கெடுகின்றேன். அத்தகைய என்னை ஆளாக ஏற்றுக் கேடிலானாகிய நீ வீணாகப் பழி ஏற்றனை. துன்பப் படுவதற்குரிய யான் படவேண்டிய துன்பமெல்லாம் பட்டுவிட்டால் அதற்குப்பின் நீ காப்பதில்தான் என்ன பயன் உண்டு? கொடிய பெருநரகத்தில் யான் அழியாத வண்ணம் என்னைக் கை கொடுத்துத்தூக்கி ஆட்கொள்ளும் குருமணியே! எங்கள் நாயகமே ! நீ நடுநிலையில் நில்லாமற் போனால் அது நன்றாகுமோ சொல் ! Oh! ever imperishable Lord! I perish as though I am doomed to perish. You got the blame unnecessarily for accepting this worthless me as thine own. What gain will it be if you come to my rescue after I had undergone all my destined sufferings. Oh! crown of creations! my Lord, you saved me from sinking in the cruel hell, defended and ruled over me. Oh! our Lord Master! You are unattached to likes and dislikes. You are the storehouse of grace (Karunaakaran). Being so, is it fair for you not to behave impartially and punish me for my ills due to my past karma (In reality, Maanikkavaachakar wants Lord Civan to bestow grace and pardon and correct those humanity who err in their life-time due to their past karma, but correct themselves thereafter). கு-ரை: பிராரத்துவ வினையை முற்றிலும் அனுபவிப்பதற்கு முன்னேயே வீட்டினைத் தந்தருள வேண்டும் என்பது அடிகள் குறிப்பு. அன்பர் துன்பப் படுங்காலை அதனை நீக்குதல் இறைவர் கடன். அதனைச் செய்யாமை நடுவு நிலைக்கு மாறாகும் என்று குறிப்பித்தார். 5. தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தா னல்குதியே தாயே யென்றுன் றாளடைந்தேன் றயாநீ யென்பா லில்லையே நாயே னடிமை யுடனாக வாண்டாய் நான்றான் வேண்டாவோ தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே ; தாயே என்று உன் தாள் அடைந்தேன், தயா, நீ, என் பால் இல்லையே? நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ? thaayaay mulaiyai tharuvaanee thaaraathu ozinthaal savalaiyaay naayeen kazinthu pooveenoo nampi iniththaan nalkuthiyee thaayee enRu un thaaL adaintheen thayaa nii enpaal illaiyee naayeen adimai udan aaka aaNdaay naan thaan veeNdaavoo பொ-ரை: எல்லாவுயிர்கட்கும் தாயாகி வந்து பாலைத் தருபவனே ! (ஞானப்பால் அளிப்பவனே ! ) அதனைத் தாராது போனால் பாலின்றி மெலியும் சேய் போல் நாயேன் (அறியாமையாற்) கழிவாய்ப் போவேனோ? அண்ணலே! இனியாவது அருள் தருவாயாக! உன்னைத் தாய் என்றெண்ணி உன் திருவடியடைந்தேன். நீ என்னிடம் கருணை காட்டாதிருக்கிறாய். நான் உன்னையடைந்தவுடன் என்னை ஆட்கொண்டாய். இப்போது நான் உனக்குத் தேவையில்லையோ? Oh! Lord Civan! you are the Universal Mother! You have to allow me to suckle from your teat. If you desist, will not this cur become lean without any flesh and perish? Oh! Supreme being, at least hereafter bless me with thy grace. Considering you as my mother, I cling to your holy Feet. You have no grace for me. Along with the earlier saints, you took this cur as your slave. But now, have I become unacceptable to you? கு-ரை: தாயாய், சவலையாய் என்பவற்றில் ஆய் என்பதை உவமை உருபாகக் கொள்ளுதலும் உண்டு. 6. கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே யமையுமே யாவா வென்னா விடிலென்னை யஞ்சே லென்பா ராரோதான் சாவா ரெல்லா மென்னளவோ தக்க வாறன் றென்னாரோ தேவே தில்லை நடமாடீ திகைத்தே னினித்தான் றேற்றாயே கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே ? 'ஆ! ஆ! ' என்னாவிடில், என்னை 'அஞ்சேல்' என்பார் ஆரோ-தான்? சாவார் எல்லாம் என் அளவோ? ' தக்க ஆறு அன்று' என்னாரோ? தேவே! தில்லை நடம் ஆடீ ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே ! koovee aruLa veeNdaavoo kodiyeen kedavee amaiyumee aa aa ennaavidil ennai anjseel enpaar aaroothaan saavaar ellaam en aLavoo thakkavaaRu anRu ennaaroo theevee thillai nadam aadii thikaiththeen iniththaan theeRRaayee பொ-ரை: அரசே! நீ அருள்புரிய வேண்டாமோ? கொடுமையேன் கெட்டுப்போதல் முறையாமோ? நீ 'ஐயோ' வென இரங்காவிடில் எனக்கு அஞ்சேல் என உரைப்பவர் வேறு யார்? நின்னருள் பெறாதவர்கள் யாவரும் இது தலைவற்குத் தக்க முறையன்று என்று இகழ மாட்டாரோ? தில்லையிலே திருநடனமிடும் தேவனே! திகைப்படைந்தேன். இனி நீ என்னைத் தெளிவிப்பாயாக ! Oh King! should you not shower thy grace on me? Is it acceptable for your stature to let me this cruel one, to ruin? If you do not bid me to come to you, who else will comfort me and get rid of my fear? Will not those who are doomed to die along with me proclaim that your inaction is very unfair to let them all perish by not getting your grace? Should you get such a bad remark? Oh God! Dancer at the temple in Chidambaram (Thillai), I am perplexed. At least hereafter, console me to have peace of mind with thy grace. 7. நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லா நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரை யெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையா யரிய பொருளே யவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே தெரிய வரிய பரஞ்சோதீ செய்வ தொன்று மறியேனே. நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து, பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு-அது ஏற்றும் பெருந்துறையாய் ! அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே! தெரிய அரிய பரஞ்சோதீ ! செய்வது ஒன்றும் அறியேனே ! nariyai kuthirai pari aakki njaalam ellaam nikazviththu periya thennan mathurai ellaam pissu athu eeRRum perunthuRaiyaay ariya poruLee avinaasi appaa paaNdi veLLamee theriya ariya paranjsoothii seyvathu onRum aRiyeenee பொ-ரை: நரிகளைக் குதிரைகளாக்கி உலகமெலாம் தெரியச் செய்தாய்! பாண்டியனது பெரிய ஊராகிய மதுரையிலுள்ள மக்களைத் திகைப்பில் ஆழ்த்திய பெருந்துறைப் பெருமானே! பெறுதற்கரிய மெய்ப்பொருளே! அவிநாசி எனும் திருப்பதியில் வீற்றிருக்கும் எம் அப்பனே! பாண்டியனான கருணை வெள்ளமே! அறிதற்கரிய மேலான ஒளியானவனே ! நான் என்ன செய்வது என்று ஒன்றும் அறிந்திலனே ! Oh Lord of Perunthurai! Sire of Avinashi! the Pandyan Kingdom's rushing flood! Oh! infinite, and unknown splendour. For the sake of redeeming (me), you converted the forest jackals into a fleet of horses by your unlimited power of divine artfulness. The entire Madurai people of the mighty King were all perplexed and amazed at the succession of several events. By witnessing all these wonderous happenings in Madurai, I do not know what to do. கு-ரை: பரி = தாங்குவது என்ற பொருளில் இங்கே வந்தது. பிற இடங்களில் அது குதிரை எனப் பொருள்படும். நிகழ்வித்து = செலுத்தி எனவும் கொள்ளலாம். பெரிய தென்னன் எனப் பிரித்து பெருமையுடைய பாண்டியன் எனவும் கொள்ப. அவிநாசி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரமூர்த்திகள், முதலைவாய்ப் பிள்ளையை எழுப்பிய இடம். THIRUCHCHITRAMBALAM 51. அச்சோப்பதிகம் 51. ACHCHOP-PATHIGAM (அனுபவ வழி அறியாமை ) The Decad of Astounding Beatitude தில்லையில் அருளிச் செய்யப்பட்டது On the Lord's Generosity in Redeeming Wayward Souls கலி விருத்தம் Compiled whilst in Thillai திருச்சிற்றம்பலம் 'அச்சோ' என்னும் முடிபினையுடைய பத்துப் பாடல்களின் தொகுதி அச்சோப் பதிகம். ' அச்சோ' என்பது வியப்பிடைச் சொல். முன் வந்த அதிசயப் பத்து, அற்புதப் பத்துக்களில் இறைவனது திருவருளின் பெருமையே கூறினார். இதன்கண் தாம் பெற்ற பேறு பலர்க்குப் பெறுதற்கரிதாதலையே கூறுகின்றார். இதனையே பிறிதோராற்றால், 'அநுபவ வழி அறியமை' எனக் குறித்தனர் முன்னோர். அஃதாவது, 'தமக்குக் கிடைத்த ஆனந்தத்தை அனுபவிக்க வழி அறியாமை' என்றனர். 'அநுபவிப்பார் ஒருவரையும் காணாமையின், அநுபவிக்கும் வழியை அறிந்திலர்' என்றனர். இதன்கண் உள்ள பாடலைக் 'கலிவிருத்தம்' என்றனர். எனினும், நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா என்றலே பொருத்தம் உடையதாம். இதன்கண் ஒன்பது திருப்பாட்டுக்களே உள்ளன. மற்றொரு பாட்டு பிற்காலத்தில் ஓர் ஏட்டிற் காணப்பட்டது. At last, the Saints' arduous journey ends here as a climax to his efforts in achieving total salvation. So agreeably surprised is he at this culmination of his strenuous ordeal, that he exclaims at the end of each verse of this decad, "who on earth is there that can claim to have received benediction from the Lord in the manner He bestowed grace on me". The caption of the decad itself expressed the exhilaration felt by the Saint whose wayward tendencies have been condoned by Lord Civa. This, the last decad of Thiruvaachakam stands out as a happy consummation of a strenuous pilgrimage ordained by the Lord Himself for gathering back into His fold, His chosen disciples who had to perform certain tasks among humanity before getting absorbed into Himself, relieved of all birth and death cycles. Praise be to the Lord Who is ever so gracious to all! Praise be to Saint Maanikkavaachakar who laboured hard and laboured long as directed by the Peerless Lord! 51.1. முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! muththi neRi aRiyatha muurkkarodu muyalveenai paththi neRi aRiviththu pazavinaikaL paaRum vaNNam siththa malam aRuviththu sivam aakki enai aaNda aththan enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: யாகம் முதலான செயல்களை இறைவன் என்று அறியும் அறிவு படைத்தவரும், பக்தியினை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகின்ற அரன் பணியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இவையே முத்திக்குரிய எளிய வழிகள் என்று அறியும் திருவருள் வாய்ப்பில்லாதவரும் ஆகிய சமயவாதிகளே மூர்க்கர் எனப்படுவர். அத்தகைய மூர்க்கர்களோடு கூடித்திரியும் எனக்கு அன்பாகிய பக்தி ஒன்றே முக்திக்குரிய நெறி என்று காட்டினான் சிவபெருமான். அங்ஙனம் அவன் காட்டிய அன்பாகிய பக்தி நெறியில் யான் செல்லச் செல்ல, என்னுடைய பழைய வினைகளாகிய சஞ்சிதக் கருமங்களை நீக்கி , அவற்றுக்கு மூலகாரணமாய் உள்ள ஆணவ மலத்தையும் நீக்கினான். அத்தோடு நில்லாமல் என்னுடைய தன்முனைப்பாகிய ஆன்ம போதத்தைக் குறைத்துத் தன்னுடைய பேரறிவாகிய சிவபோதத்தை என் அறிவில் விளங்கச் செய்தான். மகன் குணமறிந்து கொடுத்து உதவும் தந்தை போன்று இத்துணை நன்மைகளையும் என்னை ஆண்டு கொண்டு அருளினான் எம் தந்தையாகிய சிவபெருமான். இத்தகைய பெரும் பேற்றினை இவ்வுலகில் வேறு யார் பெறுவார்கள்? இதுவும் அதிசயமே ! He, the Sire: Unto me that am prone to wander amidst wicked fools who know not the path of salvation, He revealed the path of loving dedication. And cutting off my wayward afflictions so that all my past evil is obliterated, He, my Sire, conferred benediction on me! He made me His own and took me under His fold. Ah me, who else is there that would receive such grace! Note: The word 'Chittham' occurs in verse 7 of கண்ட பத்து; - meaning to be taken as per the context. சித்தம் எனும் திண் கயிறு, strong rope of inclination, binding one to the Lord's Feet. 2. நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணங் குறியொன்று மில்லாத கூத்தன்றன் கூத்தையெனக் கறியும் வண்ண மருளியவா றார்பெறுவா ரச்சோவே நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே, திரு அருளே சேரும் வண்ணம், குறி ஒன்றும் இல்லாத கூத்தன் - தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! neRi allaa neRi thannai neRiyaaka ninaiveenai siRu neRikaL seeraamee thiruaruLee seerum vaNNam kuRi onRum illaatha kuuththan than kuuththai enakku aRiyum vaNNam aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை; நன்னெறி அல்லாத வழிகளை நன்னெறியாக நினையும் இயல்புடையவன் யான். அக்கீழ்ப்பட்ட நெறிகளை யான் அடையா வண்ணம் திருவருளைத் தந்து காத்தனன் இறைவன். எவ்விதமான உருவமும் பெயரும் இல்லாத கூத்தப் பெருமான் தன் ஞானத்திரு நடனத்தை யான் அறியும் வண்ணம் அடியேனுக்கு அருள் செய்த திறத்தை வேறு யார் பெற வல்லவர்? இதுவும் அதிசயமே ! He, the Attributeless Lord of the Cosmic Dance: Unto me that am inclined to consider the wrong path as the right one, the attributeless Lord of the cosmic dance clearly revealed in all grace His vibrant rhythmic numbers! And restraining me from taking to lowly acts and ordaining me verily into merger with the holy grace, He did bestow blessings on me! Who else is there that can receive such benediction? Ah me! 3. பொய்யெல்லா மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்ட பிரான் றன்கழலே சேரும்வண்ண மையனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளித் தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும் வண்ணம் ஐயன், எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! poy ellaam mey enRu puNarmulaiyaar pookaththee maiyaluRak kadaveenai maaLaamee kaaththaruLi thaiyal idam koNdapiraan thankazalee seerum vaNNam aiyan enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: நிலையல்லாதனவற்றை நிலையென்றெண்ணி நெருங்கிய முலைகளை உடைய பெண்டிரது அனுபவத்தில் மயங்க இருந்தவன் யான். அதில் மயங்கி யான் மாண்டு போகா வண்ணம் தடுத்தாட்கொண்டு பெண்ணை இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமான் தன் திருவடியில் அடையும் வண்ணம் எனக்கருள் செய்த அருமையைப் பெற வல்லவர் வேறு யார்? இஃது அதிசயமே ! He, the Overlord: I have a tendency to grovel under the illusion of carnal desires, mistaking all falsities for the truth. And yet, the good Lord gave me refuge and protected me from disintegration. The Lord that holdeth His consort on His left half, has revealed to me in grace how to reach out to His bejewelled Feet. Who else is there that can receive such benediction ? Ah me! 4. மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை யெண்ணமிலா வன்பருளி யெனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் மண்ணலெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. மண்-அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை, எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன் சுண்ண வெண்-நீறு அணிவித்துத் தூய்நெறியே சேரும் வண்ணம், அண்ணல் எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! maN athanil piRantheyththu maaNdu viza kadaveenai eNNam ilaa anparuLi enaiyaaNdiddu ennaiyum than suNNa veNniiRu aNiviththu thuuyneRiyee seerum vaNNam aNNal enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: மண்ணுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இளைத்து, இறக்க இருந்த என்னை நினைப்பதற்கரிய அன்பினைக் கொடுத்து ஆட்கொண்டான் இறைவன். அடியேனையும் தனது திருவெண்ணீறு அணியச் செய்து தூய நெறியாகிய சிவநெறியே சேரும் வண்ணம் அண்ணல் ஆகிய சிவபெருமான் அருளிய அருமையை வேறு யார் பெற வல்லவர்? இது அதிசயமாகும். He, the Noble One: I have a tendency to get born into this world repeatedly, get emaciated and fall down dead. And yet, He, the Peerless Lord, showed abundant grace on me and took me in tutelage! And made me smear the pure white holy ash in my body, ordaining that I take to the flawless path. Such is the grace of this noble one! Who else is there that can receive such benediction? Ah me! கு-ரை: எண்ணமிலா= மனத்தால் எதிர்பாராத என்றும் உரைப்பர். சுண்ணம்= பொடி. 5. பஞ்சாய வடிமடவார் கடைக்கண்ணா லிடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேனுன் னருள்பெற்றே னுய்ஞ்சேனா னுடையானே யடியேனை வருகவென் றஞ்சேலென் றருளியவா றார்பெறுவா ரச்சோவே. பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு, நெஞ்சு ஆய துயர் கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்; உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை 'வருக' என்று 'அஞ்சேல்' என்று, அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! panjsaaya adimadavaar kadaikkaNNaal idarppaddu nenjsaaya thuyar kuura niRpeen un aruL peRReen uynjseen naan udaiyaanee adiyeenai varuka enRu anjseel enRu aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: பஞ்சுபோலும் பாதமுடைய பெண்டிரின் கடைக்கண் பார்வைக்கு மயங்கி , நெஞ்சிலுண்டாகிய துயர்மிகும்படி நிற்கும் இயல்புடையவன் யான். உனது திருவருளைப் பெற்றேன். உய்வடைந்தேன். என்னை உடையவனே, அடியேனை 'அஞ்சாதே வா' என்று அருள் செய்த முறையைப் பெற வல்லவர் யார்? இது அதிசயமே. He, the Master: I have a tendency to suffer tribulations at heart, getting traumatised by the lurid eyes of soft-heeled damsels. Yet, I received Thy grace, and got liberated; Oh Master! Calling out, to me, Thy vassal, with the command 'Come hither', 'Fear not' Thou bestowed grace on me. Who else is there that can receive such benediction? Ah me! 6. வெந்துவிழு முடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழற் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறவென் றுரிசுமறுத் தந்தமெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று, வினைபெருக்கிக் கொந்து குழல் கோல் வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தம் அறுத்து, எனை ஆண்டு, பரிசு அற, என் துரிசும் அறுத்து, அந்தம் எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! venthu vizum udalpiRavi mey enRu vinai perukki konthu kuzal koolvaLaiyaar kuvimulaimeel viizveenai pantham aRuththu enai aaNdu parisu aRa en thurisum aRuththu antham enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: தீயால் வெந்து சாம்பலாகக் கூடிய இவ்வுடம்பின் பிறப்பை மெய்யென்று எண்ணி வினைகளைப் பெருக்கினேன். பூங்கொத்துகளை அணிந்த கூந்தலும் சங்கு வளையல்களும் அணிந்த பெண்டிரது குவிந்த நகிலின் மீது விரும்பி விழ இருந்த என் பாசத்தை நீ நீக்கி அருளினாய். என்னை ஆட்கொண்டு, என் உயிர்ப்போதம் கெடும்படி என் குற்றங்களை நீக்கி, முடிவான பரமுத்தியை அருளிய முறைமையை யாரே பெறவல்லவர்? இது அதிசயமே ! He, the Ultimate Goal: I have a tendency to fall prey to the charms of fair-bangled damsels of flower-bedecked hair, and to mistake this physical frame that is liable to perish in flames, for the truth. Yet the good Lord, removing my bondage, taking me vassal and cutting off all my foibles and misdeeds, bestowed in grace the ultimate gift of liberation! Who else is there that can receive such benediction? Ah me! கு-ரை: கொத்து என்பதன் மெலிவு, கொந்து. கோல் = சங்கு. துரிசு = குற்றம். அந்தம் = முடிவான இன்பம். முடிவான நிலை . 7. தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி யுய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை யையனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனைப் பையவே கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி , உய்யும் நெறி காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! thaiyalaar maiyalilee thaaznthu vizak kadaveenai paiyavee kodupoonthu paasam enum thaaz uruvi uyyuneRi kaaddu viththiddu oongkaaraththu udporuLai aiyan enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: பெண்டிரது மயக்கத்தில் அமிழ்ந்து, வீழ்தற்குரிய என்னை ஐயன் மெதுவாகக் கொண்டு சென்று பாசம் எனும் அடிநிலையை உருவி எடுத்து உய்தி கூடும் வழி காட்டி , ஓங்காரத்தின் உட்பொருள் உரைத்து, அருள் செய்த விதம் பெற வல்லார் வேறு யார்? இது அதிசயமே ! He, the Chief: I have a tendency, to sink deep into the mire of maidens' lure. And yet, He, my Chief, gently took me unto Himself and loosening the locks of worldly attachment, revealed the path of salvation and taught me in grace the inner meaning of the mystic 'Omkara' (The primordial). Who else is there that can receive such benediction? Ah me! 8. சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியிற் றடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் றன்கழலே சேரும்வண்ண மாதியெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே சாதல், பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறிக் காதலின் மிக்கு, அணி இழையார் கலவியிலே விழுவேனை, மாது ஒரு கூறு உடைய பிரான், தன் கழலே சேரும் வண்ணம், ஆதி, எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! saathal piRappu ennum thadanjsuziyil thadumaaRi kaathalin mikku aNi izaiyaar kalaviyilee vizuveenai maathu oru kuuRu udaiyapiraan than kazalee seerum vaNNam aathi enakku aruLiyavaaRu aar peRuvaar assoovee பொ-ரை: நீர் பெருகித் தொடர்ந்து வரும் ஆறுபோன்று இடையறாது வருவது வாழ்வு; அதில் இடையே தோன்றுவன இறப்பும் பிறப்பும் ஆகிய சுழிகள். இச்சுழிகள் எண்ணற்ற உயிர்களைத் தம்முள் ஆழ்த்திச் சுழற்றுகின்ற பெரிய சுழிகளாம். அத்தகைய பிறப்பு, இறப்பு எனும் பெருஞ்சுழியில் அகப்பட்டுத் தடுமாறிக் காமம் மிகுந்து அழகிய நகை அணிந்த மாதர் புணர்ச்சியில் வீழும் இயல்புடையவன் யான். என்னை உமையொரு பாகன் ஆகிய முதல்வன் தன் திருவடி அடையும்படிச் செய்த அருள்திறத்தைப் பெற வல்லவர் யார்? இஃது அதிசயமே ! He, the Primordial: Into the fierce vortex of death and rebirth cycles, I have a tendency to slip down and fall getting immersed in the company of bejewelled damsels of lurid thoughts. Yet, the good Lord, holding His consort on His left half, He, the primordial one, taught me in grace, the pathway leading to merger with His ornamented feet. Who else is there that can receive such benediction? Ah me! 9. செம்மைநல மறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமல மறுவித்து முதலாய முதல்வன்றா னம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை யேற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் - தான் நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மை எனக்கு அருளிய வாறு, ஆர் பெறுவார்? அச்சோவே ! semmai nalam aRiyaatha sithadarodu thiriveenai mummaimalam aRuviththu muthal aaya muthalvan thaan nammaiyum oor poruL aakki naaysivikai eeRRu viththa ammai enakku aruLiya vaaRu aar peRuvaar assoovee. பொ-ரை: எல்லாவற்றுக்கும் முதலான தலைவன் ஆன சிவபெருமான் வீட்டின்பத்தின் நன்மையை அறியாத மூடர்களோடு கூடித்திரிகின்ற இயல்புடைய எனது மூவகைப் பாசங்களையும் களைந்தெறிந்தான். ஒன்றுக்கும் பற்றாத அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து, நாயைப் பல்லக்கில் ஏற்றியது போன்று என்னை ஆக்கினான். பெற்ற தாயைப் போன்ற கருணை உள்ள அவன் எனக்கு இவ்வாறு அருளிய விதம் வேறு யார் பெற வல்லவர்? இஃது அதிசயம் அல்லவா? He, the Mother: From me that am ever inclined to wander amidst lowly fools who know not the glories of righteousness, He cut off the three afflictions (malas, the three pernicious maladies - the imprints of ego, activity and illusion)! This primordial cause of all, this mother-divine took us in right earnest and honoured us abundantly, much as honouring a mere cur with a palanquin ride. Who else is there that can receive such benediction? Ah me! திருவாசகம் மூலமும் உரையும் முற்றிற்று THIRUCHCHITRAMBALAM

Related Content

চন্দ্রচূডালাষ্টকম - Chandrachoodaalaa Ashtakam

শ্রী শিবরাত্রি ব্রত পূজাবিধি - Shivaratri vrata - How to obs

শ্রী শোণাদ্রিনাথাষ্টকম - shri shonadrinathashtakam

কল্কি কৃতম শিৱস্তোত্র - kalki kritam shivastotra

শিৱ স্তৱঃ - shiva stavah