logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணைச் சிலேடை அந்தாதி  வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)

இயற்றியவர்  சிந்நயச் செட்டியார் 


        காப்பு 

ஞாலத் தருணை நலிவகற்று  நாயகற்குச் 
சீலத் தருணை சிலேடை வெண்பா -  மாலைசொல 
யானை திறை கொண்ட தெனாதிதயக் கார்வரையில் 
யானை திறை கொண்ட விபம் .

மாகவிஞர் நூன்முகத்தில் வைணீகர்  யாழிசையில் 
ஆக ரிவரும்  அருணையே  - நாகர்
மெயிலாய வெற்பினான்  மேம்படுதார்  வேய்ந்த 
கயிலாய வெற்பினான் காப்பு .   (1) 

முப்பொருளிற்  றாபதரு  மொய்தெருவிற்  கந்துகமும் 
அப்பிரிய முந்தும்  அருணையே - யொப்பரிய 
மாதார  கத்தன் வயன்றுதித்  தாரகத்தன் 
கேதார கத்தன் கிரி .  (2) 

சீரங் கனையார்  திருக்குஞ்  சுரிகுழலும் 
ஆரம் பரிக்கும் அருணையே- யீரிரண் 
டாரண வாசிய  னங்கண  வாசியன் 
வாரண வாசியன் வாழ்வு . (3)

நித்த விரதர் நியதியும்  மாதவமும் 
அத்த மனத்தாம் அருணையே  - பத்தரது 
மாச யிலத்தன் மனமாந்  தனியிலத்தன் 
சீச யிலத்தன் சிலம்பு . (4)

தேறு கலைப் பயில்வுந் தேங்குமுயிர்  நீங்குநரும் 
ஆறுதலை யாக்கும் அருணையே  - மாறனடித் 
தேக ரணத்தான் செலாத  கரணத்தான் 
கோக ரணத்தான் குடி . (5) 

தீத்தொழிலி னின்று  சிவாகமமுங்  கான்யாறும் 
ஆத்தி கரைத்தீர்க்கும்  அருணையே - மூத்தமக 
னாங்கானை  மாடத்தா னாகட்பெற்  றூர்ந்தபெம்மான் 
றூங்கானை மாடத்தான் றோய்வு . (6) 

மேதகுகல் லூரிகளின்  மெய்யுணர்ந்தார்  பொய்யுடம்பில் 
ஆதரங் கூரா  அருணையே - மோதகழி 
நீடலை யாற்றிருந்தார்  நில்லாமே யோட்டேடுக்குங்
கூடலை யாற்றிருந்தார் குன்று. (7) 

மேவாப் பெய் யென்றஞ்சி  வேந்துமுரு விற்சுரரும் 
ஆவா கணிமே  வருணையே - யேவாய்
நதிணகத் தலத்தா  னகுகைத்  தலத்தா
னதிகைத் தலத்தான னகம். (8) 

வேக வமர்க்களமு  மேலோ ரவைக்களமும் 
ஆகமங்க ணாடும்  அருணையே-  யாக 
கருத்தா சலமுற்றான்  காதலன்பர்  தம்பால் 
விருத்தா சலமுற்றான் வீடு . (9) 

ஒற்றரொன்னா ரூரி  லொருவெள்ளம்  யூபத்தில் 
அற்ற மறியும் அருணையே-  தெற்றலுற்ற 
வேணி  குழியான் வியோ  மகங்கை  பாய்ந்துமன்று 
மாணி குழியான்  மனை . (10)

காமருப டப்பைகளிற்  கார்குலங்கள் சீர்க்கிடங்கில் 
ஆமலக மாரும் அருணையே  - சாமத்தை 
மெச்சியே கம்பத்தான் மேலொழித்த  கம்பத்தான் 
கச்சியே கம்பத்தான் காப்பு . (11) 

சாற்றுமட வார்வயிறுஞ்  சார்ந்தவரைத் தேர்ந்தவரும் 
ஆற்றுப் படுக்கும் அருணையே - கூற்று 
வருமேற் றளியார்  வதைப்பரவ ராய 
திருமேற் றளியார்  சிலம்பு. (12)

உத்தமகு லச்சேயு  மொண்குமுதப் பூந்தடமும் 
அத்துவரி நேரும் அருணையே - பத்தர் 
சினேகதங்  காவதத்தார் தேவனென்பார்க் காக்கு
மனேகதங் காவதத்தா ரார்பு. (13)

மாதரெழிற் செய்குன்றும் வாயிலின் கண்வேரமுஞ்செய் 
யாதவரை யேய்க்கும்  அருணையே - யேதங்
குறிக்காரைக் காட்டான்  கொடுங் காலனுக்கு 
நெறிக்காரைக் காட்டா னிலம் . (14)

முத்தருள நிந்தனைக்கு மொய்குழலார் நீள்விழிக்கும் 
அத்தியந்த மாறும் அருணையே - சத்தி 
கரங்கணின்முட் டத்தான்  கருளுலகுக் காக்குங்
குரங்கணின்முட் டத்தான் குடி.  (15)

மங்குலொலி  யாலளையின்  மண்புரப்பார் திண்புயத்தில் 
அங்கதம லங்கும் அருணையே - கங்குலிற்றீஞ்
சொற்கோல மாதேவன் றொண்டனை முயங்குகென்ற
விற்கோல மாதேவன் வீடு . (16)

பற்கல் வரநதியும் பண்பிகவாச்  சாற்றோரும் 
அற்பரவைக் கோடும் அருணையே - பொற்பக்
கருவாலங் காட்டினான் கண்டமட்டுந் துய்த்துத் 
திருவாலங் காட்டினான் சேர்பு. (17) 

கொம்பனையார் நம்புகற்பில் கோயிலின்றி வீற்றிடத்தில் 
அம்ப லமலா அருணையே -யும்பருய்ய 
உண்பாக்க மைந்தனுசி தநஞ்சு முண்டமைந்தன் 
வெண்பாக்க மைந்தன் விருப்பு. (18)

காட்டிற் கடுந்தரக்குங்  கண்ணார் கவினரங்கும் 
ஆட்டைக் கலக்கம் அருணையே - கேட்டெழும்பூ 
பாளத் திநகரன்  பன்மாந் தினகரன்
காளத் திநகரன் காப்பு. (19)

இல்லவர்க்கு  வள்ளியோ ரீகையுமா னார்கதுப்பும் 
அல்லகண்ட மாற்றும் அருணையே - நல்லமுது 
நீதி புரியார் நினைத்த படியுரியா
ராதி புரியா ரகம் . (20)

போற்றலர்கண்  றேண்ணவரும்  பொற்புணையை நீவாரும் 
ஆற்றலைத்து கைக்கும் அருணையே - யேற்ற
புலிதாய வாசன் புலிதாய வாசன்
வலிதாய வாசன் மனை (21)

மேயோர்க்குச்  சத்திரமும்  வேழக்கு மீளிகளும் 
ஆயோ தனமூட்  டருணையே - தீயோர்
திடமுல்லை வாயிலார்  சிந்தைபலி கொண்ட
வடமுல்லை வாயிலார் வாழ்வு. (22)

பூவையர்தோள் புல்லினரும் போர்க்களத்திற்  பேய்க்கணமும் 
ஆவலங் கொட்டும்  அருணையே - தாவி
வருவிடைச்சு ரத்தன் மதுக்குழலி பாகன்
றிருவிடைச்சு ரத்தன் சிலம்பு. (23)

சேண்டொடவேள்  கோட்டத்திற்  றேனிசை  கேட்டீர்ம்பொழிலில்
ஆண்டலை யசைக்கும்  அருணையே - வேண்டுநரை
நோத கிரியா னுவலருஞ்சீ  ரங்கிரியான்
வேத கிரியான் விருப்பு. (24)

கார்க்கு நிகர் தடக்கைக்  காவலருங் காவலரும்
ஆர்க்கு மளிகூர் அருணையே - போர்க்குநவை
யிச்சிறுபாக் கத்தன் பிலிக்கு மிரங்கியரு
ளச்சிறுபாக் கத்த னகம். (25) 

பாயகலை நுண்பொருளைப் பாலருநி  யாசிகளும்
ஆயத் தியங்கா அருணையே - மாயன்
றுருவக் கரையான் றெழார்க்குக் கரையான்
றிருவக் கரையான் சிலம்பு . (26) 

வேய்ந்தபுகழ்  நாற்சாதி  மேவகத்துங் காவகத்தும்
ஆந்தருமஞ் சாரும்  அருணையே - காந்தள்
பொரும்பைமா காளத்தார் பூண்டு களிக்கு 
மிரும்பைமா காளத்தா ரில் . (27)

தக்கவர்சார் மற்றையருஞ் சால்பரத்தி மார்கலனும்
அக்கதை யேற்கும் அருணையே - பிக்கை
யுணாவிற் கலந்தா னுடைதலைக  லந்தா
னணாவில் கலந்தா னகர்.  (28)

தாவற்றோர் தாழ்ந்தாரைத்  தையலர்கால் சஞ்சலத்தை
ஆவத்துக் காக்கும் அருணையே - தேவியொடு
கொஞ்சமாக் கூடலான்  கொஞ்சியங்ஙன்  கூடலான்
வெஞ்சமாக் கூடலான் வீடு (29)

வாரா வருந்தவர்க்கு  மைந்தருமின்  னார்விழியும்
ஆரா தநஞ்செய் அருணையே -  போராற்றி
யாண்டிக் கொடுமுடியா னாய்முடிய வேளைவென்ற
பாண்டிக் கொடுமுடியான் பற்று. (30)

நம்பினார்க்குச்  சித்தியொரு நாலிரண்டு  மீராறும் 
அம்பிகைவ ழங்கும்  அருணையே - வெம்பியெழு 
நஞ்சைக் களத்தா னராயணன்கா னாக்களத்தா
னஞ்சைக் களத்தா னகம்  (31)

மையுண்கண்ணார்  நுசுப்பும்  வண்டலையுந் தண்டலையும்
ஐயம் புகுக்கும் அருணையே - வையைமண்முன் 
கல்லைச் சிற்றம்பலத்தன்  கௌரியெச் சிற்றம்பலத்தன் 
றில்லைச் சிற்றம்பலத்தன்  சேர்பு (32)

வாக்கியத் தான்றோரு  மாலை யினைஞருஞ்சை
யாக்கிரக மண்ணும்  அருணையே  - நோக்கி 
னுருக்கழிப் பாலையா  னுற்றிடப்பு  ரிந்த 
திருக்கழிப் பாலையான் சேர்பு. (33)

பூசா கிரியைகளைப் புங்கவர்துன் னாரைமன்னர்
ஆசாரத் தாக்கும் அருணையே - மாசா
மவேதகா னத்தான் வழுத்தலர்கா னத்தான் 
சுவேதகா னத்தான்  றொடர்பு. (34)

செவ்வியோர் நெஞ்சிற் சிறப்புறா வீதிகளில் 
அவ்வியமு ழக்கும் அருணையே - தெவ்வை
யுழுமலவி  ருப்பா னுளத்தகவி  ருப்பான்
கழுமலவி ருப்பான் கலப்பு . (35)

தீனமைந்தர்  மொய்ம்பாற்  றெருவுதொரு மங்கலத்தால்
ஆனகந்தி ளைக்கும் அருணையே - நானத்
தொடைமுடி வள்ளல் சுரிகுழலாள் பங்கன்
கடைமுடி வள்ளல் கலப்பு . (36) 

மன்னியவேழ் மஞ்சினொடு மால்வரையு மாண்டவரும் 
அன்னியமஞ் சாடும் அருணையே - துன்னுபிலம்
விண்ணிப் படிக்கரையன் வெம்பவவே லைக்கரையன் 
மண்ணிப் படிக்கரையன் வாழ்வு . (37) 

கங்கணக ரத்தியர்கண் கண்டாருங் கைரவமும்
அங்கணம் பூக்கும் அருணையே - தங்கண்
விருப்பனந் தாளார் விரவரிய  தாளார்
திருப்பனந் தாளார் சிலம்பு . (38)

சோதித் தருவுந் துரிய  நிலையினரும் 
ஆதித் தனைத்தே றருணையே - வேதியர்க
ளோம்பழ னத்தினா ணொண்பழ நத்தினான்
பூம்பழ  னத்தினான் பூ.   (39)

பூமாண் பொழிலிற் புறவத்தில் வேங்கையால் 
ஆமா விரியும் அருணையே - சாமாந்தர்
மையாற்றி  னையன் மறுத்தஞ்ச  லென்றருள்செ
யையாற்றி னைய னகம்.  (40)

தப்பருநீள் காவுந் தளிதொறும்வி நாயகரும்
அப்ப மிசையும் அருணையே - யொப்புயர்வின் 
மெய்த்தான மாட்சியான்  மேவாத மாட்சியா
னெய்த்தான மாட்சியா னேர்வு.  (41)

பேசுபுல வோர்மனைப்புன்  பேதையரும்  வாவிகளும் 
ஆசிரியம் பாடும் அருணையே - நேச 
மருவானைக் காவான் மருந்தெனக் காவான்
றிருவானைக் காவான் சிலம்பு. (42)

இம்மையொடு ஞானியரு  மேற்பாருக் கீவாரும் 
அம்மை கடுக்கும் அருணையே - யெம்மையாள் 
மைஞ்ஞீலி யத்தன் மழுமா னணியத்தன் 
பைஞ்ஞீலி யத்தன் பதி. (43)

மாசறக்கற் றோர்வாக்கின்  மாதரார் பார்வைகளின் 
ஆசு கமழும் அருணையே - தேசுடையைந்
தேச்சிலாச்சி ராமமத்தா ரீர்ஞ்சடையா யென்னவருள்
பாச்சிலாச்சி ராமத்தார் பற்று . (44)

காசினதி தோய்ந்தவர்க்குங்  காரிகையார்  தோய்ந்தவர்க்கும் 
ஆசை யகற்றும் அருணையே -  பேசளவி 
னாட்போக்கி யம்மா  னளித்தான்  றேடும்மம்மான்
வாட்போக்கி யம்மான்  மனை. (45)

மெத்துகுணத் தார்முனிவும் வேண்ட லர்கண்
மாரதரும் அத்திரமேவும்  அருணையே - துத்தி
யராப்பள்ளிக் கண்வளர்வா னம்புயத்தான்  போற்றச் 
சிராப்பள்ளிக் கண்வளர்வான் சேர்பு. (46)

மந்திரிகள்  வேறிசைந்த மந்திரத்திற் பொய்கைகளில்
அந்தரங்கஞ் சூழும் அருணையே - நந்த 
மடுங்கள வண்ணலா ராசையற்றாற்க்  குற்றார்
நெடுங்கள  வண்ணலார் நேர்வு.  (47)

நாயகருடன்  சென்ற நல்லாரை வேய்ங் குழலை
ஆயர் குறிக்கும்  அருணையே - நேயந்தஞ்
சாந்துருத் திக்கண்ணார் தாமுணர்சோ திக்கண்ணார்
பூந்துருத் திக்கண்ணார் பூ.  (48)

செம்பவள  வாய்ச்சியர்கள்  சிற்றிடைக்குங்  கட்கடைக்கும் 
அம்பர மழுங்கும்  அருணையே - தம்புகழ்ச்சிப் 
பாற்றுத் துறையார் பவமகலப் பாராத 
சோற்றுத் துறையார் தொடர்பு.  (49)

தேடவருங் கேயமுந்  தீர்ந்தொருவா  றாற்றுநரும் 
ஆடவரைக் கண்ணும் அருணையே - சாடுவிட 
முன்குடித்  திட்டையன் முன்னோர்க்காத் திட்டையன்
றென்குடித் திட்டையன் சேர்பு . (50)

மல்கலரிற்  றேனைவண்டும்  வாளரவும் புன்மாதர் 
அல்குலைத் தூற்றும் அருணையே - பல்கலைதேர்ந்
துள்ளமங்கை யுள்ளா  ருணர்விற்  புணர்வரியார்
புள்ளமங்கை யுற்றார் புரம் .( 51)

புங்கவர்கள் பூசனையைப் பூதவேள் விச்சமித்தை 
அங்கி கரிக்கும்  அருணையே - திங்களணி
நக்கரப் பள்ளியார் நான்முகிலை வேணிவைத்த 
சக்கரப் பள்ளியார் சார்பு . ( 52) 

கண்டுமொழி யார்மருங்குங்  காப்பமைந்த  நீண்மதிலும் 
அண்டந் தரிக்கும்  அருணையே- மண்டுபவ 
வேலைத் துறையான்  விழாமே  யெடுத்தாண்ட 
பாலைத் துறையான் பதி.  (53)

தம்மிலமின் னார்மனையிற் சத்திநிபா தத்தருள்ளில் 
அம்மனை யாடும் அருணையே - தம்மிடத்துப் 
பத்திமுற் றத்திருப்பான்  பாவியர்கள்  பாழ்மனத்தைச்
சத்திமுற் றத்திருப்பான்  சார்பு.  (54)

சுத்தமறைக் கந்தணருந்  துன்றுகல்லில் வாணிபரும் 
அத்த முரைக்கும் அருணையே - சித்தசற்சொல்
கட்டீச் சரத்தான் கருத்திற் கசோசரத்தான் 
பட்டீச் சரத்தான் பதி. (55) 

சந்ததந்தொ ழும்பரன்புந் தாயாரை நந்தனரும் 
அந்தரியா கத்தாழ் அருணையே - முந்த 
நலஞ்சுழிச் சம்பு நடைத்துரகம்  விற்ற 
வலஞ்சுழிச் சம்பு மனை.  (56)

போகுயர்காப் பூந்துணரும்  புக்கறியாக் காலனெஞ்சும் 
ஆகுல மேயும் அருணையே - யோகை 
நடமூக் ககத்தார் நணுக வெளியார் 
குடமூக் ககத்தார் குடி. (57) 

தாரிளைஞர்  மார்பகமுஞ்  சைவவிபூ திப்பொலி 
ஆர மணக்கும்  அருணையே - மாரனெய்த
வில்லம் புணர்ந்தான்  விழித்தவனைக் கண்டிலா
னல்லம் புணர்ந்தா னகர்.  (58)

தேநந்து செய்யிற் சிவஞா னியருளத்தில் 
ஆநந்த மண்டும் அருணையே - தாநவனும் 
வேழம்ப மாதரித்தான் வெண்பொடியும்  மாதரித்தான்
கோழம்ப  மாதரித்தான் குன்று . (59)

பெண்மைமிக்கார் கண்ணும் பிறங்கு பொன்னாட்டிற் பரியும் 
அண்மைய வாவும் அருணையே- வண்ம
நிறைசை யமலர் நெடுநீர்கொண் டான்றாழ் 
துறைசை யமலர் தொடர்பு. ( 60)

மாசில் சுளையினறா வார்கனியை  வண்மையரை
ஆசினிதந் தீண்டும் அருணையே - மாசுணத்த 
கேயூர வாகரன் கேடிலருட்  சாகரன் 
மாயூர வாகரன் வாழ்வு . (61)

தொக்கவடி யார்மனமுந்  தூயதுரு நீற்றுடம்பும் 
அக்கவட மல்கும் அருணையே - மிக்கவரா
லெள்ளாறு  வந்தா ரிழிகுழிபு கச்சிவந்தார்
நள்ளாறு வந்தார் நகர். (62)

ஏரியுறீஇ  நீரை யெழுபுயலும்  விப்பிரரும் 
ஆரியமு கக்கும்  அருணையே - பேரியம்பி 
யும்பர்மா காள னுவந்தூது  மாகாள 
னம்பர்மா காள னகம் .  (63)

எஞ்சுதலில் வேட்டத் திறைவருஞ்சை  வக்குழுவும் 
அஞ்சுமா னூக்கும்   அருணையே - நெஞ்சி
னலதைப் பதியார் நணுகாப் பதியார்
திலதைப் பதியார் சிலம்பு . (64)

மாண்டவெழிற் கன்னிமட வாரு மடிமைகளும் 
ஆண்டவரை நாடும் அருணையே - நீண்ட
வுருப்பாய்  புரத்தா னுமைசேர்  புரத்தான் 
றிருப்பாம்  புரத்தான் சிலம்பு .(65)

வேலைதோ றன்பினரு மிக்க சுவைக்கரும்பும் 
ஆலைய ருமரும் அருணையே - பாலுருவத்
தாழி மிழலையா னம்பகங்கொண் டாழிநல்கு
வீழி மிழலையான் வீடு . (66)

சாகாதி யைக்கரியுந்  தாம்பரித்தே ரைக்கிரியும் 
ஆகார மொக்கும் அருணையே - மோகப்
பெருக லுடையார்  பெறாத்தோ லுடையார்
மருக லுடையார் மனை.  (67)

காண்டகுகி ழாரிலிளங்  காலுமெய்யைத் தாபதரும் 
ஆண்டுபல வாட்டும் அருணையே - யீண்டுவையை 
நீத்தமங்கை  யார்வா னிகழ்த்து குறட்களித் தான்
சாத்தமங்கை  யார்வான் றலம். (68)

கல்லிதய நல்லார் கருங்குழலுஞ் செவ்வாயும்
அல்லி குவிக்கும் அருணையே - மல்லிரித்த 
வாகைக்கா  ரோணத்தான்  மாலுநிரு வாணத்தா 
னாகைக்கா ரோணத்தா னாடு. (69)

சேமவெண்ணீ றக்குநருஞ்  சிற்பரந் தேர்ந்தாருளமு 
ஆமய மாயும் அருணையே - வாமத் 
தமலா லயத்தா னகநி லயத்தான்
கமலா லயத்தான் கலப்பு . (70)

பார்வருமா யுள்வேத பண்டிதரு நீத்தாரும் 
ஆர்வ மொழியும்  அருணையே - கார்வல் 
லிரவையுண்  மண்டளியா ரீர்ங்கோதை பாகர்
பரவையுண் மண்டளியார் பற்று.  (71)

சீலத்தின்  வேந்தர்  திருப்பவனி  யிற்பொழிலில் 
ஆலத்தி சுற்றும் அருணையே - சால 
வளம ரமருவா ரன்றெயின்மூன்  றட்டார்
விளம ரமருவார் வீடு. (72)

தீரவுயர் சோலைகளிற் றேசிகர்தம் பொன்மனையில் 
ஆரவிட்ட மாட்டும்  அருணையே - யேர 
மரவீர மாநகரன்  மாயமதி லெய்த 
கரவீர மாநகரன் காப்பு.  (73)

கச்சுவிடா தாய்க்குலமுங் கற்பத்தால் யோகிகளும் 
அச்சுதனைப் போற்றும்  அருணையே - நச்சி 
தலையாலங் காட்டா ரருச்சியார்க்  கெட்டாத்
தலையாலங் காட்டார் தலம் .  (74)

விற்பனர்வாய்ச் சொற்பொருளு மெய்யடியார் கண்ணிணையும் 
அற்புத மடுக்கும்   அருணையே - வெற்பின் 
மடவாயி னம்பன்  மணிநகைகாட் டென்னுங்
குடவாயி  னம்பன் குடி . (75)

கோலமக ளீர்விழியாற் கோங்கு விரிநிழலால் 
ஆலமர மானும்  அருணையே - கால 
விரிதிநிய மத்தா னெமைத் தொழுவார்த் தீர்ந்தென் 
பரிதிநிய மத்தான் பதி . (76) 

திண்டடந் தோட்காவலருஞ் சேதாவின் சிஃறுயரும் 
அண்டரண்ட மாளும் அருணையே - தொண்டராய்
மற்றோம மன்னன் மறுத்தடைந்தாரைப் புரக்குஞ்
சிற்றேம  மன்னன் சிலம்பு . (77) 

பூதரநேர் போதகமும்  பொன்றாக்  கொடை முரசும் 
ஆதரிக்க வேங்கும்  அருணையே - வேதன் 
மருவுசாத் தாநத்தன் வாஞ்சாதா நத்தன் 
றிருவுசாத் தாநந்தன் சேர்பு . (78)

சாடமரில் யானைகளுஞ் சால்வினைப் பொற்கம்மியரும் 
ஆடகமு ருக்கும் அருணையே - தோட
மடும்பா வனத்தா னழல்போல் வனத்தா
னிடும்பா வனத்தா னிடம் . (79)

வாம்பரியோ டுந்தெருவின்  மைந்தருந்தேனைச் சுரும்பும் 
ஆம்பல்வாய்த் துய்க்கும் அருணையே - வேம்பன்
றருக்கடிக்கு ளத்தான் றழற்கடிக்கு ளத்தான்
றிருக்கடிக்கு ளத்தான் சிலம்பு . (80) 

விஞ்சுற்ற தந்நிழன்மேல்  வேழமுமே தக்காரும் 
அஞ்சக் கரமோ தருணையோ - கஞ்சனுயிர் 
வீட்டியத் தான்குடியான்  வெய்யவிட மல்லவற்றை
நாட்டியத் தான்குடியா னாடு.  (81)

ஊக்கமுளார் யாரு முறுகொலையை நுண்ணறிவும்
ஆக்கத் தடுக்கும் அருணையே - பூக்கும் 
பெருவலிவ லத்தான் பிரியாவ லத்தான் 
றிருவலிவ லத்தான் சிலம்பு . (82)

கத்திதீர் கானகத்திற்  கற்றவர்செய் காவியத்தில் 
அத்தியா யஞ்சேர் அருணையே - பத்திமரீஇ
மைச்சின மாண்டார் மனநச் சினமாண்டார்
கைச்சின மாண்டார் கலப்பு . (83)

யாகமனு விண்ணவரை யேற்றத்தார்  சீற்றத்தை
ஆகருட ணிக்கும்  அருணையே - நாகத்து
மின்றிருவாய் மூரன் மெலவரும்ப நோக்கிமகிழ்
தென்றிருவாய் மூரன் சிலம்பு .  (84)

மங்கையர்கள் கொங்கையிலும்  வான்றுறவர் செங்கையிலும் 
அங்கசனம் பெய்யும் அருணையே - நங்கைதும்பைப்
போதா ரணியத்தன்  பொன்முடி வளைத்த பிரான்
வேதா ரணியத்தன் வீடு . (85)

பம்பிசைக் காரளியும்  பஃறொடையைக்  காளையரும் 
அம்புயத்தி லார்க்கும்  அருணையே- யெம்பாற்
றவாதசாந் தத்தான் றகித்தசாந் தத்தான்
றுவாதசாந் தத்தான் றொடர்பு . (86)

துச்சரிகட் கான்றோருந் தோகையன்னார்  கந்தரமும் 
அச்சங் கவிக்கும் அருணையே - நிச்சன் 
மனவாயி  லுள்ளார் மதிவெறுத்  தென்னுள்ளார்
புனவாயி லுள்ளார் புரம் . (87)

கஞ்ச  முகத்தியர்கள்  கையின் மலர்த்தடத்தில் 
அஞ்சங் குலாவும் அருணையே - விஞ்சுபய 
மற்றால மேயா ரமுதாக்கித் தாமேயார் 
குற்றால மேயார் குடி.  (88) 

மின்னனையார் மென்னடைக்கு மேவு மதிதியர்க்கும் 
அன்ன மருளும் அருணையே - தன்ம 
வுருவாப்ப னூரா னுடையான் சடையான்
றிருவாப்ப னூரான் சிலம்பு. (89)

சிந்தனையின் மிக்கீவார் சீர்த்தியும டந்தையரும் 
அந்தரதிக் கேயும் அருணையே - சுந்தரர்க்கா
வாடக மேவினா னாற்றிலிருந் தாவிபுக
வேடக மேவினா னில் .(90)

மைவனத்த வேட்டுவரும் வாரணத்தைக் கேசரியும்
ஐவனம டிக்கும் அருணையே - வைவளரும் 
வல்வே லிவருமான் வாகுதந்த சாமிதந்தை 
நெல்வே லிவருவா  னேர்வு . (91)

மிக்கார்வ நீடுதொண்டர் மெய்யைமட வார்மொழியை 
அக்கார மூடும் அருணையே - யெக்காலு
நேவைத் திருப்பதியார் நெஞ்சோ வதிலுறையுந்
தேவைத் திருப்பதியார் சேர்பு . (92)

ஓங்கார மோர்ந்தா ருளத்திலிளை யார்தோளில்
ஆங்காரந் துஞ்சும் அருணையே - பூங்கணைக்கை
வேடானை வாழ்வான் விழிமுளரி சற்றலர்த்தி
யாடானை வாழ்வா னகம் . (93)

மாலதா மாடுகண்ட வெம்புலியுந் தண்பணையும் 
ஆலவா லங்காட் டருணையே - சீலத்
தரங்குன்ற  வாணர் தமைப்புரியா ரென்றும் 
பரங்குன்ற வாணர் பதி . (94)

நிட்டா பரருமன்பர் நீடநின்றார் பான்மதனும் 
அட்டாங்கஞ் செய்யும் அருணையே - யொட்டாக் 
கழியற் பரமா கடியரணங் காய்ந்த
சுழியற் பரமர் தொடர்பு .  (95)

பாடினர்க்குப் பார்த்திபரும்  பலகதியிற் பாய்பரியும்
ஆடிக் களிக்கும்  அருணையே - மூடர்
திருப்பத்தூ ரத்த னிடபத்தூ ரத்தன் 
திருப்பத்தூ ரத்தன் சிலம்பு. (96)

போரரசர்  பாழிமொய்ம்பிற் பூசுரச்சிறார் கிடையில்
ஆரணங் கற்கும் அருணையே - கூருகிரி 
லூனப்பே ராளி யுரங்கிழித்துக்  கொக்கரித்த
வானப்பே ராளி கலப்பு.  (97)

மாண வுயர்ந்தோர்  மனத்திலறச்  சாலைகளில்
ஆண வமிகும் அருணையே - வாணியைநீ
மூக்கொடுங் குன்றன் முரணறவென் றஃதரிந்த 
மாக்கொடுங் குன்றன் மனை. (98)

மானவய வீரர் மகாரினமும் வேதியரும் 
ஆனைவலங் கொள்ளும் அருணையே - வானக்கொண்
மூவண வேந்தன்  முளரியினான்  காண்பரிய 
பூவண வேந்தன் புரம்.  (99)

வாகைத்தார் மன்னவரும்  வாச்சியமுந் தேங்கமலை
ஆகத்து வைக்கும் அருணையே - பாகத்திற்
காண மலையான் கருமலையான் செம்மலையான் 
கோண மலையான் குடி . (100)

அருணைச் சிலேடை வெண்பா முற்றிற்று.

 

Related Content