logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நிரஞ்சனமாலை

முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    [நிரஞ்சனம் என்னும் வடசொல் நிறைவு இருளின்மை ஆகிய பொருள்களைக் குறிக்கும். ஈண்டு மெய்யறிவு நிறைவை உணர்த்தி நின்றது. கட்டளைக்கலித்துறையால் முப்பத்தொரு பாடல்களில் அமைந்த இம்மாலை அறிவின்மையைப் போக்கி மெய்யறிவைத்தர மேண்டுமென்று வேண்டுவது.]     
கட்டளைக்கலித்துறை
    நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்
வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றாய்
அருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று
தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே.
                                                                         (1)
    குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்
றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி
ஒருவாறு தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்
திருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே.
                                        (2)
    என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா
துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழல்
தன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ
பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.
                                        (3)
    தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமாம்
என்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்
புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும்
அன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.
                                        (4)

 1. சூனியம்-வெறும் பாழ். மன்னி-பொருந்தி.
 2. முத்தனு-மூவுடல். மலம்-மும்மலம்.
 3. என்னையறிதல்-தன்னைத்தான் அறிதல். எனைவிட்டு-என்னை அறிவதை விட்டுவிட்டு. புராந்தகன்-புரங்களையழித்தவன்.4. புன்புணர்வு-இழிந்த சேர்க்கை.     


முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்


முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்
திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்
கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து
பொங்கெரி வெந்திர யத்தூ டிருப்பப் பொருந்துவதே.
                                            (5)
    சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்
நித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே
அத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய்
மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே.
                                            (6)
    கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி
ஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி
வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில்
அண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே,
                                            (7)
    காயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு
ஞேயங்க ளாதி முதனடு வீறி னினக்கயலே
ஆயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ
பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே.
                                            (8)
    சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி
சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்
மெத்தென் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக்
கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே.
                                            (9)
    வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே
யான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய்
கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவும்
மான்குறிக் குங்க ணுமைபங்க னேயென்கைம் மாணிக்கமே.
                                            (10)
    பிரமமுந் தானு மயலென் றருச்சிக்கும் பேதநிலை
தருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென்
றருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா
றிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே.
                                            (11)


    5. கண்ணி-மாலை. முனிந்து-வெறுத்து. வெந்நிரயம்-கொடிய நரகம்.
 6. மெய்த்த-மெய்ப்பொருளாகவுள்ள,
 7., கண்ணில் இரவி-கண்ணில் கதிரவன், உயிர்ப்பு-மூச்சுக்காற்று, வளி-காற்று.
 8. காயம்-உடல் கரணம்-அந்தக்கரணம். அர்ப்பிப்பல்-படைப்பேன். அவிச்சை-பொய்.
 9. கறைக்கண்டன்-கறை பொருந்திய கழுத்தையுடையவன். 10. வான்குறித் தெய்யுங்கணை-விண்ணைக் குறித்துச் செலுத்தப்படும் அம்பு. மகரக்குழை-மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட காதணி. மான் குறிக்கும்-மானைப்போன்று விளங்கும்.

11.1, அயல்-வேறு. நானாகி நின்றனை-நீ நானாகி நின்றாய்.     

முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்


முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா
ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்
சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கும்
மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.
                                            (12)
    மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்
விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு
நண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்
கண்ணுங் கருத்துங் கலந்துநின் றாயென்கைக் கண்ணுதலே.
                                            (13)
    நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால்
சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ
ஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே
பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே.
                                            (14)
    ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை
சென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்கம்
என்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்
மின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே.
                                            (15)
    உறங்குது மென்றுறங் காநிற் பவரிலை யோங்கொளியாய்ப்
பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகாண்
நிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று
புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே.
                                            (16)
    குருவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு
திருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கண்
பொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென்
கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே,
                                                                          (17)


 12. நாப்பண்-நடு.
 13. பவநாசம்-பிறப்பு அழிந்தொழிய. காகத்தின் இரு கண்கட்கும் கருமணி ஒன்றே என்பர். 14. ஆகம்-உடல். 15. மின்திரண்டால் அன்ன-மின்னல்கள் ஒன்று சேர்ந்தாற் போன்ற. 16. பிறங்கும்-விளங்கும். 17. கருவிற்கு-பிறவிக்காரணப் பொருளுக்கு.     


முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்


முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்
றயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு
பயிலுனுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்
குயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே.
    (18)
    ஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்
கேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்
வீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே
நாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயமே.
    (19)
    பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனும்
நாடு மளவிளி னீயன்றி வேறிலை நான்முகன்மால்
தேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்
சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே.
    (20)
    இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு
செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே
எல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்
நல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே.
    (21)
    பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ
பொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே
அழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்
மொழியா வருங்குரு லிங்கமென் றேயென்கை முன்னவனே.
    (22)
    விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி
அடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெயர்
உடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்
புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே.
    (23)

    
18. அயிலினும்-உண்டாலும். அல்லல்-துன்பம். சோரினும்-சோர்ந்தாலும். குயிலினும்-சொன்னாலும்.

19. இதில் கூறப்பட்டுள்ள நிலைகள் கைவரப்பெற்றவர்கள் மெய்யறிவாளர்களாவர்.

20. எல்லாம் நீயே என்பது இப்பாடலின் கருத்து.

21. மருளும் மயல்-மரளச் செய்யும் மயக்கம்.

 22. மனைவேட்கை-பிறர் மனைவியை விழைதல். பரதெய்வம்-பிற தெய்வங்களைப் போற்றல்.

23. விடயங்களில்-உலகப் பொருள்களில். மிகை ஒருவி-குற்றத்தில் நீங்கி.

    
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே
புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி
செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்
கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே.
    (24)
    உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா
தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்
தொடர்ந்து நுகருநன் ஞானக் கரத்திடை தோன்றுவைமால்
கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே.
    (25)
    யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்
நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவும்
ஆனா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்
வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே
    (26)
    உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியாய்
இலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ
சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்
விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே.
    (27)
    ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப
நானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைத்தழிதல்
வானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்
தீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே.
    (28)
    உருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு
மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய்
அருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்
கருவன் றுலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே.
    (29)

24. பொய்யினெறி செல்லாது-பொய்யான நெறிகளிலே செல்லாமல்.

25. விடயங்கள் உண்டு உழலாது-விடயங்களை நுகர்ந்து சுழலாமல்.

26. ஆனாதுயர்ந்த-அளவுபடாமல் மேலோங்கிய

27. ஒருவாது-நீங்காமல். தெரிப்பது-தெரியப்படுத்துவது.

28. ஆனந்தவாரிதி-இன்பக் கடல், நந்து-அழிந்துபோகிற.

29. மருவு அங்கம்-பொருந்திய உடல். உள்ளம்-மனம்.

    
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்


முகப்பு     பக்கம் எண் :     
    
    தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
    விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும்
நள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க
உள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்
துள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே.                     (30)
    அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்
பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்
கழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற்
கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே.                             (31)


  30. விள்ளேன்-விட்டு நீங்கேன் நள்ளேன்-பொருந்தேன். உள்ளேன்-நினையேன்.

 31.சங்கமம்-அடியார். கமர் உகுத்தேன்-நிலவெடிப் பிற் சிந்தினேன்.     


முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

Related Content

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruchchorruththurai

Sundaramurthy Swamigal

श्री दशिणामूर्ति स्तोत्रम - Shri daxinamurti stotram

ਸ਼੍ਰਿਇ ਕਾਲਭੈਰਵਾਸ਼੍ਹ੍ਟਕਂ - Kaalabhairavaashtakam

आर्तिहर स्तोत्रम - Artihara stotram