logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

*ஏசுமத நிராகரணம்

		அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருக மாதி 
		யிறையவ னென்றா யோரீ யீன்றிட மலமீ தூருஞ் 
		சிறுபுழு விரையு றாதென் செய்குவை யதனை நோக்க 
		வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய். 			1 

		வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி 
		நேயமற் றெவர்கூற் றாய நிகழவதெ னுலகத் தந்நாட் 
		டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி 
		னாயகோ வாதி மாந்தர்க் கடங்கிய விதமென் கொல்லோ. 			2 

		சொல்லின னவர்க்கச் சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே 
		கொல்லமற் றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி 
		நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி 
		யல்லல்செய் திடலாற் றீயோ யறைந்தசொற் பழுதே யாகும். 			3 

(* ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யியற்றிய வீரமாமுனிவரென்னும் கிருஸ்துவரைக் கவிச் சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித் தெழுதியதாமென்பர்.)


(குறிப்பு :- இந்நூல் இப்போது அகப்பட்டிலது, அன்பர்கள் கண்டுதவின் வெளியிடலாம்.)

Related Content

பிரபுலிங்க லீலை - பகுதி-1 - Prabhulinga leelai - Part-I

பிரபு லிங்கலீலை - பகுதி-2 - Prabulingaleelai - Part-II

பிரபுலிங்கலீலை - மூன்றாம் பகுதி - Third part of Prabhulingal

சித்தாந்த சிகாமணி 2 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம் றிய சித்தாந

கூவப் புராணம் (திருவிற்கோலம்) - ஆசிரியர்: துறைமங்கலம் சிவபிர