logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திருவாவடுதுறை ஆதீனத்து

மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்

 


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin pirapantat tiraTTu
 tiriccirAmalaiyamakavantAti
 


கடவுள் வாழ்த்து. 

 

விநாயகக்கடவுள்.
கராமலையாநின்றபோதிபங்கூவக்கடிதக்கரா
விராமலையாழிவிட்டாற்குமயற்குமெட்டாதுநிற்குஞ்
சிராமலையாதிபனெம்மானந்தாதியைச்செப்பவிடர்
வராமலையாவங்குசபாசவென்முன்புவந்தருளே.
(1)
ஸ்ரீ தாயுமானவர்.
துப்பனைத்துந்தொழுஞ்செஞ்சடையான்கவிதொண்டருரைக்
கப்பனையேட்டிற்பொறித்தான்கடுப்பொலிகண்டன்றனை
யொப்பனையம்பனைச்செற்றான்சிராமலையுத்தமனென்
னப்பனையன்றிப்புகழாதென்வாய்புறத்தாரையுமே.
(2)
ஸ்ரீ மட்டுவார்குழலம்மை.
அகந்தக்குழலுமனத்துயர்தீரவயிலங்கைவைத்
தகந்தக்குழகனையீன்றாய்குயிலைத்தடிந்தமுதை
யிகந்தக்குழலைக்கடிந்தசொல்லாய்முத்திளநகையாய்
சுகந்தக்குழலம்மையேயடியேற்குமுன்றோன்றுவையே.
(3)
செவ்வந்திவிநாயகர்.
ஆனக்குழையுடையம்மான்புயத்துமழன்மெழுகு
மானக்குழையுமனத்தினராய்ப்பத்திமார்க்கநின்று
கானக்குழையையணிவார்சிரத்துங்கழனிறுத்துந்
தானக்குழைசெவிச்செவ்வந்தியானைதருமின்பமே.
(4)
முருகக்கடவுள்.
கரம்பன்னிரண்டுமுடியாறினனெவன்கைக்கவண்கன்
னிரம்பன்னிலத்திற்றினைத்தாளடர்நெறியேகிக்கண்ண
விரம்பன்னியமொழிவேடிச்சிபாற்சென்றுவேண்டிமிக்கா
தரம்பன்னினனெவனோவவனேயெனைத்தாங்குவனே.
(5)
கலைமகள்.
எண்டோட்டுமுக்கட்டுநீரார்சடைத்திடுமாதர்பலி
கொண்டோட்டுவைத்தபொருளேதுவோவதைக்கூறவிருள்
விண்டோட்டுசெம்மணிமான்மகனாவின்விளங்குநறா
வெண்டோட்டுமுண்டகத்தாண்மலர்த்தாண்முடிமேல்வைப்பனே.
(6)
திருநந்திதேவர்.
இன்னடியார்களுடனிருப்பாநல்லினமணிக
டுன்னடிவாயிலினின்றேபிரம்புகைதொட்டுமையாண்
மன்னடிகொள்ளவருமாலயன்முதல்வானவர்க்குத்
தன்னடிமுந்திக்கொடுப்பானடியெந்தலைக்கணிந்தே.
(7)
சமயாசாரியர் நால்வர்.
கருமப்பரந்தவிர்த்தாள்வாருததியிற்கன்மிதக்கத்
தருமப்பதியிற்கராச்சேய்தரவென்புதாழ்குழலா
மருமப்பணிந்தபெருமானரியுருமாற்றிவர
வருமப்பர்சுந்தரர்சம்பந்தர்மாணிக்கவாசகரே.
(8)
சண்டேசுரநாயனார்.
முரண்டடிகொண்டுவெம்போத்தைநடாத்திமுனிந்துநிற்பா
னரண்டடியப்பவமப்புறத்தோடவருந்துதிக
டிரண்டடியார்சொலத்தன்னையன்றாளைச்சிதைத்தெனைய
னிரண்டடிசேர்ந்தவிறையடிப்போதென்னிதயத்ததே.
(9)
மற்றைத் திருத்தொண்டர்கள்.
பருத்தொண்டராநிற்குங்கொங்கையர்மான்முதற்பற்பலவாங்
கருத்தொண்டராதலவிச்சைவெப்போடிக்கழியவந்திக்
குருத்தொண்டராசின்மலரடிநீழற்குறுகிநின்ற
திருத்தொண்டரானவர்தாடொழுவாமுட்டிருக்கறவே.
(10)
சேக்கிழார் முதலியோர்.
மாக்கிளையார்மொழிபங்கனுக்கேயன்புவைத்தளவி
லாக்கிளையாரன்பறுத்துய்ந்ததொண்டரரும்புகழை
வாக்கிளையாரெனநாவலரோதவழுத்தியுய்ந்த
சேக்கிளையார்முதற்பல்லோரும்வாழ்கவென்சிந்தையினே.
(11)
அவையடக்கம்.
கடியார்கடுக்கையணிந்தார்நெடியவன்கண்ணிருக்கு
மடியாரணத்துமுடிமீதுவைத்தவராப்பணியார்
துடியார்கரத்தெஞ்சிராமலைநாதரைச்சொல்லுவதாற்
படியார்களிலிகழ்வாரோநல்லோர்களென்பாடலையே.
(12)

 

திருமாதிருக்குமணீமார்பனான்முகன்றேவர்செங்க
திருமாதிருக்குந்தொழநின்றநாயகன்றீவினைமு
திருமாதிருக்குமடியார்க்கறுக்குஞ்சிராமலையான்
திருமாதிருக்குநுதலான்பொற்றாளென்சிரம்வைப்பனே.
(1)
சிரமரவம்புதரித்தசிராமலைத்தேவனைவச்
சிரமவம்புணைநீர்பாய்ந்தபோல்வினைதேய்க்கநொந்தேஞ்
சிரமரவம்புயத்தாடாவென்றோதிச்சிறப்பினிறைஞ்
சிரமரவம்புரிவெங்காலன்செய்யினென்செய்குவிரே.
(2)
குவையாவலவினையப்பவெப்பேமிகக்கொண்டுநொந்தேன்
குவையாவலவித்துநின்றிருத்தொண்டரிற்கூடிடச்செய்
குவையர்வலவிழுங்கண்டாநறுங்கொன்றைகொண்டொளிர்வா
குவையாவலவிர்தனத்தில்பங்காசிரகுத்திரனே.
(3)
திரங்காவலமரலிவ்வுடற்கெய்துமுன்செவ்வியபத்
திரங்காவலர்கொண்டருச்சித்திடேனிருள்சீக்குஞ்செங்க
திரங்காவலரும்பநின்றதொப்பாஞ்சிகரச்சிரகுத்
திரங்காவலவுமைபங்காவென்றீவினைதீர்த்தருளே.
(4)
அரவப்பணிலனயன்மகவான்முதலாகியபொய்
அரவப்பணிவிடைசெய்துழலேனுழையார்த்திடுங்கை
அரவப்பணிந்தசடையாய்சிராமலையாதிபனே
அரவப்பணியுடையாயடியேனுன்னடைக்கலமே.
(5)
கலக்கந்தரமடவார்மயல்வாரிகலந்தவென்முன்
கலக்கந்தரவெஞ்சமன்வருங்காலங்கடுக்கைதப்ப
கலக்கந்தரநதிசூடுஞ்சிராமலையாய்கன்னிபா
கலக்கந்தரநினைவேண்டிக்கொண்டேனெனைக்கண்டுகொள்ளே.
(6)
கண்ணாடிமானப்பொலியுங்கபோலத்தர்காதலெனுங்
கண்ணாடிமானமற்றுண்டிருந்தேன்கடையேன்பொன்மன்றின்
கண்ணாடிமானத்தனேயினிமேனின்கழல்வைப்பனேன்
கண்ணாடிமானச்சிராமலையாய்சடைக்கங்கையனே.
(7)
கங்காதரவிண்டொடுஞ்சிரபூதரக்காவலமு
கங்காதரவிந்தம்வள்ளையொப்பாமலைக்கன்னிபங்கா
கங்காதரவிதழிச்சடையாய்நின்கழற்கிலெனா
கங்காதரவிலுடையாய்புரத்தைக்கடந்தவனே.
(8)
கடனாகவதரிக்குந்தாளப்பற்கவுரிபங்கா
கடனாகவதட்சிராமலையாய்வினைகட்கிடனாங்
கடனாகவதனென்றாலுநையாதெனைக்காத்தனிற்கே
கடனாகவதண்டங்கொண்டெமன்றேன்றிடுங்காலத்திலே.
(9)
காலக்கடியமடவாரரலறவிண்கன்னியர்செங்
காலக்கடியவிர்பஞ்சார்சிராமலைக்கத்தசெந்நீர்
காலக்கடியரவாபரணாகண்சிவந்துவருங்
காலக்கடியனையஞ்சேலெனவந்துகாத்தருளே
(10)
காதாசங்கத்தமியேனாகியவென்கருமக்குவி
காதாசங்கத்தண்குழைசேர்ந்திலகிக்கவின்பெருகுங்
காதாசங்கத்தழனேத்திரத்தாய்சிகரச்சிரநா
காதாசங்கத்தார் மயற்குள்விழாமனின்கான்மலரே
(11)
கானகத்தானவனைகரியோற்களித்தாய்சிரநா
கானகத்தானகரியுரித்தாய்பொற்கடுக்கைமலர்க்
கானகத்தானயம்போலேபிறந்துகழிந்துசுருங்
கானகத்தானமெலாமென்னென்பேகுப்பல்கண்டதுவே
(12)
கண்டமட்டுங்கடுங்காலற்கஞ்சேன்கடைநாளினில்
கண்டமட்டுந்தருவானைமொய்கோடொளிர்காழகில்சி
கண்டமட்டுந்துபொழில்சேர்சிராமலைக்காவலனைக்
கண்டமட்டுங்கறுத்தானையென்னாசொலற்கற்றபின்னே
(13)
கற்பகச்சோலைமீப்பாய்முடிக்கதிராற்கதிர்வி
கற்பகச்சோதனமெனவாஞ்சிராமலைக்காவலனே
கற்பகச்சோரியயிலேவியகுழகற்கத்தனே
கற்பகச்சோரவின்னின்னையெந்நாளிற்கலப்பதுவே
(14)
கலக்குஞ்சரமைந்துடையானைசெற்றகண்ணாபிழைய
கலக்குஞ்சமுமணிந்தாய்சிராமலைகாரணவி
கலக்குஞ்சமுரித்தாய்துயராங்கடையேன்றலையிற்
கலக்குஞ்சரணத்தானேகத்தனேவெங்கறைகண்டனே
(15)
கண்டாவியங்குமிழ்மேற்பாய்ந்துமீண்டுசெங்கத்திரிகைக்
கண்டாவியங்குலியக்கையொட்டிநிற்கமைதீட்டுவரை
கண்டாவியங்குத்தடுமாறுவேற்கருளக்கடுவார்
கண்டாவியங்குஞ்சிராமலையாயென்கருதினையே
(16)
தினைப்போதகத்தன்பிலார்க்குநெஞ்சேசெந்திருத்தவனந்
தினைப்போதகத்தனனத்தையறுமுகன்செய்யகுந்தத்
தினைப்போதகத்தன்மிளைக்களஞ்சாரங்கண்சீரெனவோ
தினைப்போதகத்தன்சிராமலையானெனச்செப்பலையே
(17)
ஏற்றானைசாரர்க்கருள்கூர்சிராமலையீசனை
ஏற்றானைசாரதன்பேர்போர்த்தானையெம்பெருமானையையம்
ஏற்றானைசாரவிக்கானைச்செற்றானையெண்ணார்களையீடு
ஏற்றானைசாரநிற்பேர்க்கில்லையோநல்லவின்பங்களே
(18)
இன்பந்தரும்பிறப்பேகுநெஞ்சேயிளமாதர்முலை
இன்பந்தருபல்லின்முத்தென்றிரங்கியிடாமலும்பர்
இன்பந்தருமலர்போலாம்சிரவெற்பிறைவனீர்
இன்பந்தரும்பர்புகழவைத்தான்கழலேத்துவையே
(19)
வையம்பரிவிற்புகழுச்சிராமலையாய்வயங்கும்
வையம்பரிவின்மலைநாணிவாசுகியாய்தலைக்கு
வையம்பரிவில்வம்பூண்டாயுமைமணவாளாதயை
வையம்பரிவிடையாயென்னையாளவருமப்பனே
(20)
அப்பாசிராமலையாயெனையாளென்பவர்கன்பவால்
அப்பாசிராமலையாநிற்குமோதிவள்பங்கனே
அப்பாசிராமலையாநின்னையேசொல்லலன்றியுடல்
அப்பாசிராமலையாயார்மலரீரென்றறைகிலனே
(21)
அறக்காதகன்கொடியேன்வினையேனெனளவுமனத்து
அறக்காதலென்பதில்லெனைச்சிராமலையாய்கரியல்
அறக்காதவள்ளுகிராலுரித்தாயடியாரெனுமைய்
அரக்காதநெஞ்சருடன்சேர்த்தருள்செய்யகளங்கனே
(22)
களங்கறுப்பானஞ்சடைசிவப்பான்மறைகாண்பரியான்
களங்கறுப்பானன்மொழிபூண்முலையிதழ்க்கண்ணிபங்கன்
களங்கறுப்பானபுரரைச்செற்றானெனைக்காயும்வினை
களங்கறுப்பானஞ்சிராமலைவாழுமுக்கட்பரனே
(23)
கட்பரச்சுரும்பேறுங்கடுக்கையங்கண்ணியது
கட்பரச்சுகைத்தேயுயிரொடுமக்காலத்துநின்
கட்பரச்சுமாவறியாவெனைக்காத்தருண்முக்
கட்பரச்சுதன்போற்றுஞ்சிரவெற்புகந்தனே
(24)
கந்தரத்தாவண்சிராமலையாய்வெங்கறையுறையுங்
கந்தரத்தாவலினென்பணிந்தாயந்திக்காலம்வந்தற்
கந்தரத்தாவலர்ப்பூங்குழல்சோருமென்கன்னிக்குச்சு
கந்தரத்தாவறுநின்மாலைவேண்டுங்கருத்தினனே
(25)
கருமந்திரண்டதினாடோறும்வாடிக்கறையுற்றநு
கருமந்திரங்குநெற்போலதறீர்ந்துகதியடைவீர்
கருமந்திரகமதுவுணுங்கொன்றைக்கணியனைப்ப
கருமந்திரவஞ்செழுத்தான்சிராமலைகைகுவித்தே
(26)
குவிக்குந்தரமியேன்சிரமேற்கரங்கொண்டுயர்பா
குவிக்குந்தருமொழிபங்காசிரகுத்திரகொலையாக்
குவிக்குந்தறுகட்கமன்வருநாண்மெய்குலைவுற்றண்ணாக்
குவிக்குந்தருணத்தஞ்சேலெண்றெனையுய்யக்கொண்டருளே
(27)
அருந்தவருமந்தரருமடுகுலிசங்கொளங்கை
அருந்தவருமம்பும்வெற்பரியாயென்றடிதொழத்தீய்
அருந்தவருமழுவேந்துஞ்சிராமலையாய்விடத்தை
அருந்தவருமம்வைத்தாயென்னையாள்பணியத்தியனே.
(28)
தியங்காமனந்தந்தைதாயானவாசிரவெற்பவிர
தியங்காமனந்தமுனிந்தாயெனா*வுனைச்சிந்தைவைத்தோ
தியங்காமனந்தனையில்லேற்கெவ்வாறினித்தீர்வதுசத்
தியங்காமனந்தணன்மாறாழ்பதநமன்சேரச்சமே.
(29)
அச்சங்கராமலையக்கொண்டயானைமுன்பாகியவெள்
அச்சங்கராவணையானம்பமாதுக்கருமயறீர்
அச்சங்கராசிரவெற்பரநீயிங்கணைவதனுக்கு
அச்சங்கராகவிதழியந்தார்கொடன்பாகவென்றே.
(30)
கவனத்தனேகமினார்பாற்றிரிகடையேன்கயமு
கவனத்தனேசிரவெற்பரனேகஞ்சக்கண்ணன்றுர
கவனத்தனேடிடநின்றவனேயுன்கழற்கன்பனா
கவனத்தனேரிட்டுழல்விலனாகக்கருணைசெய்யே.
(31)
கருத்திருக்கையவர்தாளிலென்றோதிக்கசிவுறுவார்
கருத்திருக்கையறுப்பார்நரர்காள்சங்கரியிடப்பா
கருத்திருக்கையமற்றேத்துஞ்சிரவெற்பர்காலுமழற்
கருத்திருக்கையர்சரணேசரணென்றுகாத்திருமே.
(32)
இருந்தாலமேழினர்கையறுத்தாரெதிரேற்றடுசெய்
இருந்தாலமுண்சிரவெற்பரென்னாதயினியமுதய்
இருந்தாலம்வைத்துண்டரிவையர்பாலிறுமாந்திருப்பார்
இருந்தாலதிலென்னிராதொழிந்தாலுமென்னிப்புவிக்கே.
(33)
விக்காதமலைசெலுந்தெறுநோய்கண்மிகுந்துபர
விக்காதமலைக்கும்வெஞ்சமனஞ்சுமெய்யன்பர்க்குச்செவ்
விக்காதமலைபங்கார்சிரவெற்பரைமேவிக்கைகு
விக்காதமலையுடையார்க்கன்றோவிம்மிகுந்தத்ததே.
(34)
குந்தனஞ்சந்தனம்புற்றமைதீட்டுகட்கோதைநெருங்
குந்தனஞ்சந்தனம்பூசாததுங்குயில்காண்மயன்மி
குந்தனஞ்சந்தனந்தாமலர்நீத்ததுங்கூறுமின்வை
குந்தனஞ்சந்தனங்குந்தன்*றோழுஞ்சிரகுத்திரற்கே.
(35)
குத்தம்புவிற்கணுதலாள்பங்காவெங்கொடியரைச்செ
குத்தம்புவிக்கிடர்தீர்ப்பாய்நிலவுமிழ்கோதின்முத்து
குத்தம்புவிண்செல்சிராமலையாயெனக்கோக்களின்மி
குத்தம்புவிட்டுருகிப்பாடுவார்க்குக்குறைவிலையே.
(36)
இலங்காதவருறவாகாதென்பீர்தன்னையேத்துந்தொண்டாய்
இலங்காதவருக்கிலான்சிரவெற்பனியாகசபை
இலங்காதவருக்குப்பற்புடைத்தானென்றியம்பிடவாய்
இலங்காதவருசமனுக்கென்செய்வமென்னாதரமே.
(37)
தரங்கந்தரங்கச்சிளமுலைபொன்மலைதண்முருக்க
தரங்கந்தரங்கச்சபங்கூந்தல்சார்புறங்கால்வடமு
தரங்கந்தரங்கச்சுரர்தொழச்சூரடுசத்திகண்ணாந்
தரங்கந்தரங்கச்சடையார்சிராமலைத்தையலுக்கே.
(38)
தைக்குஞ்சரமெனமுன்னின்றெய்வேளைச்செற்றான்சமன்வ
தைக்குஞ்சரணத்தம்மான்சாயுகிர்பெறுந்தாளுடைத்தத்
தைக்குஞ்சரவொலிசெய்யுஞ்சிராசலத்தானுருமோ
தைக்குஞ்சரமுரித்தானெனக்கின்பந்தருமப்பனே.
(39)
பனையஞ்சருகிற்கவிபொறிப்பார்மடப்பாவியர்க்கொப்
பனையஞ்சருமகவான்மாலுமென்றலைவார்பகர்ந்தப்
பனையஞ்சருவணர்போற்றுஞ்சிராமலைப்பார்த்திபன்பண்
பனையஞ்சருக்கனெயிறுகுத்தானெனப்பாடிலரே.
(40)
இலங்காரமாடைகலன்பூமிமக்களிளமுலைமேல்
இலங்காரமாதர்தமர்நெஞ்சமேயிவையாவுஞ்சென்மத்து
இலங்காரகனட்டமச்சனியாமெனவெண்ணியிகழ்ந்து
இலங்காரணாசிரவெற்பாவென்னோம்பலனென்கடத்தே.
(41)
கடத்தும்பியானனத்தானைப்பெற்றானைமுக்கண்ணனைத்திங்
கடத்தும்பிணையனறுங்கொன்றையானைக்கவர்வினைச்சங்
கடத்தும்பிணியினும்யானுழலாமலென்கண்மயக்கைக்
கடத்தும்பிரானைச்சிராமலைமீதினிற்கண்டனனே.
(42)
கண்டங்குநெற்றியுமான்மழுக்கையும்வெங்கார்விடஞ்சேர்
கண்டங்குலவரவப்பணியுங்கதிர்கான்றிடக்கற்
கண்டங்குதலைச்சொல்பங்கன்சிராமலைக்கத்தனிற்கக்
கண்டங்குநின்றுதொழுதேனென்றீவினைகைவிட்டதே.
(43)
கையிலாயனம்பன்முக்கண்ணன்சிராமலைக்காரணன்செங்
கையிலாயனம்பனடிபணியாமல்வெங்காதலுவ
கையிலாயனம்பன்னரும்வினைக்கன்னெஞ்சமளவுசங்
கையிலாயனம்பன்மின்மண்முதலாசைகதியலவே.
(44)
அலரிக்கதிருக்குடுவொக்கினுமைந்தருவுக்கெட்டி
அலரிக்கடுமரமொக்கினுமாதிரவங்கனைமை
அலரிக்கரைச்செற்றவையர்சிராமலையன்பருக்கொப்பு
அலரிக்கரியவன்வேதாபுனிதனமரருமே.
(45)
அமலைத்தவரைச்சிராமலையாதிபரையழகிய்
அமலைத்தவரையுடையாரைநாளுமருமறையோது
அமலைத்தவரையரைப்பணியீர்முன்னடுத்தும்முடல்
அமலைத்தவரையெவ்வாறுவெல்வீரிவ்வருஞ்சன்மத்தே.
(46)
சனனம்பலவடிவம்பலவூர்பலதாய்பலவ
சனனம்பலமும்பலவிதிலவெள்ளித்தடவரையா
சனனம்பலவன்சிராமலையானெனத்தான்சொலும்வ
சனனம்பலனிச்சனனத்துண்டேயென்றனிநெஞ்சமே.
(47)
தனங்கட்டிமாங்கனிசெந்தாமரைசத்தியொத்திடும்வ
தனங்கட்டிருவொப்பர்மின்னாரென்றைவர்தளம்பினர்மைந்
தனங்கட்டிடென்றசிராமலையாய்தமிழ்க்கூடலிலிந்
தனங்கட்டிவிற்றவனேயென்னையாட்கொள்சலதரனே.
(48)
தருக்கும்படருஞ்சிராமலையாய்தனந்தாங்கியமா
தருக்கும்படர்வினைக்குஞ்சுழலாதெனைத்தாங்கிக்கொள்வே
தருக்கும்படலைத்துளவார்க்குங்காண்பரியாய்சலமுந்
தருக்கும்படவெரித்தாய்புரமுத்தலைச்சத்தியனே.
(49)
சத்தியங்கார்கலிவற்றவிட்டாற்கத்தனேமிகுவஞ்
சத்தியங்கார்புரஞ்செற்றாய்சிரசயிலாவினைப்பா
சத்தியங்கார்களிற்சேர்த்தெனையாதரித்தாளிதுவே
சத்தியங்கார்விடக்கண்டாசரணஞ்சரணுனக்கே.
(50)
சரமலங்காரமதனெய்யநீத்துவெண்டண்டரளச்
சரமலங்காரநறுங்குழலாளைத்தழுவுசல
சரமலங்காரச்சுனைசேர்சிராமலைச்சங்கரகுஞ்
சரமலங்காரவுரித்தாயுன்செஞ்சந்தனப்புயத்தே.
(51)
தனத்துக்கவாதையடியேன்சிரசயிலச்சிவவ
தனத்துக்கவான்மதியொத்தாள்பங்காகலன்சார்களஞ்சந்
தனத்துக்கவான்செங்கதலியொப்பாமொருதாயிடம்பால்
தனத்துக்கவாவுற்றழாதாண்டருண்முக்கட்சங்கரனே.
(52)
சங்கமையானனங்கைகாறமைத்தடவித்தமரின்
சங்கமையானந்தலென்றலறாமுனென்றன்னைவெம்பா
சங்கமையானதற்றான்கொண்டடாமுன்றளர்ந்துடல்க
சங்கமையானமுறாமுன்சிராசலத்தாயருளே.
(53)
அரும்பாலனம்பகமீராறினானென்றளித்திடுங்கற்பு
அரும்பாலனம்பல்வயினடைத்தேவிபங்கற்புதவுய்
அரும்பாலனம்பசிரவெற்பநீயணையாமையினய்
அரும்பாலனம்பல்கலனீத்துவாய்விட்டலறுமின்னே.
(54)
அலரம்பையோதிகவான்றுப்பதரத்தரிவையர்காள்
அலரம்பையோதிமன்றந்தைகுமாரனடுத்தெய்யவே
அலரம்பையோதிருக்காலுதிர்த்தேங்குவனத்தையறி
அலரம்பையோதியென்னோதீர்சிராமலையையரையே.
(55)
ஐயரைக்காணிகணமாவதுநினைத்தன்புடன்மெய்க்கு
ஐயரைக்காணிபத்தோல்புலித்தோலரையன்றெடுத்த
ஐயரைக்காணிசிரபூதரமென்றமர்ந்திருக்கும்
ஐயரைக்காணிலையோநெஞ்சமேநமனஞ்சுதற்கே.
(56)
அஞ்சார்கருமலரப்பாரைச்செற்றவென்னப்பன்வெப்பால்
அஞ்சார்கருமிடற்றான்சிரபூதரத்தையன்சரண்
அஞ்சார்கருதுமடியார்வெங்கோபத்தடுமியமற்கு
அஞ்சார்கருமந்தொலைப்பார்சுவர்க்கமவரதுவே.
(57)
அவராகமருப்படலாமையோடறுகக்குநெடி
அவராகமருப்பனமுலையாமினணிந்தவதூய்
அவராகமருப்பதமலரீந்தஞ்சிராமலையை
அவராகமருப்பமுள்ளேனையாண்டருளஞ்சலென்றே.
(58)
அஞ்சலிக்குஞ்சடையானைச்சிராமலையையனையம்பு
அஞ்சலிக்குந்திபவில்லானைச்செற்றவெனப்பனையால்
அஞ்சலிக்கும்படியுண்டானைவாழ்த்தியனுதினமும்
அஞ்சலிக்குந்தொழும்பேற்கில்லையோமுத்தியாயதுவே.
(59)
ஆயாவப்பாலரியம்பாய்சிராமலையையநின்னை
ஆயாவப்பானிற்கும்வெவ்வினைப்பட்டலைந்தேமனம்புண்
ஆயாவப்பார்சடையாவுழல்வேற்குவையச்சிலரை
ஆயாவப்பாவென்றினிப்பிறந்தோதலதைத்தவிரே.
(60)
அதரம்பவளமழகார்கபோலங்களத்தமனை
அதரம்பணைகொண்முலைமிகுவாசவனிச்சமலர்
அதரம்பதநிகரன்றெனமாதர்க்கறைவேற்குநல்
அதரம்பரசிரவெற்பாவருளங்கைநாகத்தனே.
(61)
நாகங்கண்மொய்த்தலர்ந்தோங்கிடநிற்குஞ்சிரநகமன்
நாகங்கணக்கையுமைமணவாளநம்பாவடியேன்
நாகங்கணங்கைசொலறாழல்பார்த்தனனிகுவித்தல்
நாகங்கணற்பணியாயுனக்கெசெயுநாடொறுமே.
(62)
நாடியிலங்குவருள்ளுறைவாய்சிரநாகதமிழ்
நாடியிலங்குலவும்மணவாளநம்பாவருவாய்
நாடியிலங்குலிசேர்த்தாயுள்வேதியர்நண்ணியென்கை
நாடியிலங்குக்கருத்தேதென்றோதுமந்நாள்விரைந்தே.
(63)
விரைத்தடங்கற்பகச்சோலைகள்சூழ்தரவெய்யவன
விரைத்தடங்கற்செய்தொளிர்சிகரச்சிரவெற்பரத
விரைத்தடங்கற்பின்முலைநகையாரைவிரும்பிமெய்யை
விரைத்தடங்கற்குபுறம்பாய்நின்றேன்வினைவெப்பரிந்தே.
(64)
அரிக்குங்கடியபிணிக்குமஞ்சேனென்னலர்க்குமஞ்சேன்
அரிக்குங்கடியரவுக்குமஞ்சேனென்னையாளுடையான்
அரிக்குங்கடியம்புயற்குமெட்டானமருங்குவடல்
அரிக்குங்கடியஞ்சிரவெற்பெனாதவர்க்கஞ்சுவனே.
(65)
அஞ்சங்கருடன்பரியார்க்கரியசிராசலத்தாய்
அஞ்சங்கருப்பமனத்தேனைக்காலனணுகுறுங்கால்
அஞ்சங்கருக்குப்பசுத்தானமீயுமுனாச்செனுமுன்
அஞ்சங்கருகுகளரலறாமுன்வந்தாதரியே.
(66)
ஆதரிக்கப்பட்டவெஞ்சூலர்கூடலையன்றினிதா
ஆதரிக்கப்பட்டஞ்சூடினரஞ்சிரவெற்பர்கயில்
ஆதரிக்கப்பட்டருமொழிபாகரென்னார்வினைப்பொல்
ஆதரிக்கப்பட்டந்தோகுணுங்காயலைவார்கரைந்தே.
(67)
கரியவனந்தணன்காண்பரியான்கடுஞ்சாபத்தின்வெண்
கரியவனந்தலிலாதளித்தான்கதித்தோங்கிடஞ்சி
கரியவனந்தமுறுமீச்சிராமலைகாயும்வினை
கரியவனந்தறவிர்ந்துலகீர்சென்றுகைதொழுமே.
(68)
கைக்கும்பினாகந்தரித்தான்புரத்திற்கனலுறந
கைக்கும்பினாகக்கரத்தான்சிராமலைகண்டிடினங்
கைக்கும்பினாகம்புரைமனஞ்சென்றுகவலையுறல்
கைக்கும்பினாகமவற்காயிச்சன்மங்கடிதறுமே.
(69)
கடிக்கமலங்குவளைமுகங்கண்ணென்றுகாட்டியிதழ்
கடிக்கமலங்குவிர்மாதர்கள்பானுங்கனவினைபோக்
கடிக்கமலங்குன்றவேத்துஞ்சிராமலைக்காவலனைக்
கடிக்கமலங்குலவுஞ்சடையானைக்கதிதக்கவே.
(70)
தக்கனியாகஞ்சிதைத்தாய்விண்கர்க்கடகந்தனைச்சூ
தக்கனியாலிகன்மந்திகடாவுஞ்சிரசயிலா
தக்கனியாயபுரத்தைவென்றாய்நின்றனக்கன்பின்மே
தக்கனியானலனாயினுந்தாளுதவியருளே.
(71)
தவியாச்சிறுமைதனிலுழல்வேற்குநின்றாளிணைப
தவியாச்சிறந்தளியாவிடிற்றான்சிரவெற்பமண்ணு
தவியாச்சியப்பிட்டுகந்தாய்தமியன்வழக்குப்பொல்லா
தவியாச்சியம்விடமாட்டேன்செவ்வந்திதகும்வண்ணனே.
(72)
வணமாடக்கூமனைமக்கணெஞ்சேயிந்தவாழ்க்கைகள்பொய்
வணமாடக்கூரகிபூண்டான்சிராமலையான்வளவா
வணமாடக்கூடலிற்சென்னியின்மேற்றட்டுவைத்துப்பின்கோ
வணமாடக்கூலிக்குமண்சுமந்தான்கழல்வந்தித்தலே.
(73)
வந்துடைத்தாயவினையேற்கருள்செய்வணங்குவர்ப
வந்துடைத்தாயற்றுடைப்பானகையைமகத்திற்கண்சி
வந்துடைத்தாயன்மகற்கோர்சிரமறுத்தாயதளு
வந்துடைத்தாயமதென்றாய்சிராமலைவாழ்சம்புவே.
(74)
சம்பையக்கூடலில்ன்மாவாக்கினாரைச்சிராதரம்வாழ்
சம்பையக்கூரகிபூண்டாரையன்னைதராததின்வ
சம்பையக்கூழிலிட்டாலெனப்பாலனந்தள்ளினனி
சம்பையக்கூடுவமென்றாற்சகிப்பின்றுமால்சகியே.
(75)
மாலையிராவதன்வேதாவொப்பார்கொல்கண்வாய்திறந்தால்
மாலையிராவதுபோல்வானிலங்குமவுலியெலா
மாலையிராவணனைநெரித்தானைவழுத்தியுன்னி
மாலையிராவருத்திச்சிரபூதரம்வாழ்பத்தர்க்கே.
(76)
பத்தானனத்தனழுந்தப்பனிமதிதேம்பவெள்ளி
பத்தானனத்தன்பணியச்சமனுயிர்பாறநற்ற
பத்தானனத்தன்விழிசூடத்தேடப்பண்பாயினசு
பத்தானனத்தன்சிராமலைநாதன்பொற்பாதங்களே.
(77)
தங்கக்கலைவளைத்துச்சூரியன்பற்றகர்த்தடுமா
தங்கக்கலையுரித்தந்தணன்சென்னிதடிந்தறுப
தங்கக்கலைக்கண்டுழன்றோடரியைத்தடுத்தனசீர்
தங்கக்கலைச்செஞ்சடைச்சிரவெற்பன்றடக்கைகளே.
(78)
தடவரைவில்லிசிராமலையப்பன்சரணத்தைநீ
தடவரைவீசங்கணமாயினுமென்றுசாற்றிற்றுப்பு
தடவரைநாடினைநெஞ்சேநல்லோரினித்தானெனைச்சி
தடவரைபட்டுழலென்பார்நீற்கிதுதருமமன்றே.
(79)
தருமங்குலவவளர்த்தபிராட்டிபொற்றாளுக்கும்வே
தருமங்குலனமெய்யாரும்பணியுநின்றாளுக்குநாத்
தருமங்குலச்சொன்மலர்தூய்த்தொண்டாயினன்றங்கியமா
தருமங்குலவுமின்னுஞ்சேர்சிராதரத்தாவருளே.
(80)
தாவிப்படிவழிமீதேறிமந்திகடண்டருவில்
தாவிப்படிகொள்கடகத்தைச்சீறுஞ்சிராதரவத்
தாவிப்படியடியேன்வாடவோநிற்குச்சம்மதியுள்
தாவிப்படியுளரேசாமனின்பதத்தாமரையே.
(81)
மருமந்தநாசையொழியாதுமிக்கமயக்கமுற
மருமந்தநாரியரின்பமெய்யாக்கிவந்தேனையல
மருமந்தநானெனச்சொற்றேயமன்வருகாலத்தைய
மருமந்தநாளிற்சிரவெற்பநீயும்வரலந்தமே.
(82)
அந்தனையாரிடையார்சிறியாரையலைக்கழிக்கும்
அந்தனையாரையகன்றுநெஞ்சேதொண்டனாவெனையால்
அந்தனையாவலினுண்சிரவெற்பனடிகட்குநல்
அந்தனையார்சுகந்தக்குழறாள்கட்குமாக்குவையே.
(83)
ஆகம்பரியன்சிகியம்பரியனத்தாகரிய
ஆகம்பரியனயற்கரியாயஞ்சிராமலையை
ஆகம்பரியமறைகந்தரவிடையாள்பங்கவென்
ஆகம்பரியடலேற்றாய்நின்றாள்கட்கன்பாவதென்றே.
(84)
ஆவிக்குமண்சுமந்தாயையவானத்துக்கப்புறமள்
ஆவிக்குமரியதாஞ்சிரபூதரத்தற்புதவென்
ஆவிக்குமறலிதோன்றிடுநாட்டொண்டையாவென்றுமெய்
ஆவிக்குமப்பொழுதெற்கேதுன்றாளன்றியாதரமே.
(85)
ஆதரத்தந்தமிலன்பர்க்கன்பாயுய்கிலார்மனங்கை
ஆதரத்தந்தருவாயார்க்கன்பாகியவரிதழ்த்தேன்
ஆதரத்தந்தமிலுண்டோய்ந்துநல்வழியற்றுழலும்
ஆதரத்தந்தசத்தெங்கள்சிராமலையத்தனுக்கே.
(86)
அத்தந்தருணமறிந்தார்க்குமீகையினாலையநின்
அத்தந்தருவொக்குமென்றேகவியசடர்க்குரையேன்
அத்தந்தருஞ்சடையான்சிரபூதரத்தானொருவீர்
அத்தந்தருக்கத்தனெம்மானையான்சொல்லலானபின்னே.
(87)
ஆனனம்பாணியைந்தீரைந்துளாயஞ்சிராமலையாய்
ஆனனம்பாவென்றுரைக்கினெஞ்சேகொடிதாய்மிகுபொய்
ஆனனம்பாற்சமனாணைசெல்லாதழலார்க்குமம்மய்
ஆனனம்பாரவுடல்சேருமன்றுண்மையாமிதுவே.
(88)
ஆவணங்காட்டமதிக்கச்சுமக்கவப்போதுதெரி
ஆவணங்காட்டநரியையெல்லாம்பரியாக்கமுதிர்
ஆவணங்காட்டநம்மையன்சிராமலையானைவத்தது
ஆவணங்காட்டன்மையாரன்பன்றேயிதறிமனமே.
(89)
மனந்தனவாசையொழியாதுமாதர்மயலொருந
மனந்தனடுக்கமகலாதென்செய்குவன்வந்தெதிர்கா
மனந்தனயனந்திறந்தாய்சிராமலைவாணவெழில்
மனந்தனகந்தரிபங்காநின்பாதமலரருளே.
(90)
மலையரையன்செழியன்றிருப்பாவையெனவளர
மலையரைமெய்யுறவைத்தாரைவாணிவலவரைக்க
மலையரையாளுஞ்சிராமலையாரைவருதுயர்விம்
மலையரையென்றுவைத்தேனடியேன்கன்மனத்திடத்தே.
(91)
மனையாட்டிபங்குறவைத்தார்க்குமாதங்கவத்திரத்து
மனையாட்டினேறுங்குகனைப்பெற்றார்க்குவராகனைப்பூ
மனையாட்டிரங்கொள்சிராமலைவாணர்க்குமாத்திரஞ்ச
மனையாட்டிவைக்கவழிபடுவீர்வையமானிடரே.
(92)
மானாட்டமங்கைமணமாலைசூட்டமதுரைவள
மானாட்டமர்ந்துசெ*கோலோச்சியசிரமாதிரவெம்
மானாட்டமன்றிற்புரிந்தோனென்றோதிமனத்திலன்பாய்
மானாட்டமன்பர்க்கிணையோபுரந்தரன்மாலயனே.
(93)
அயனத்தமாறகலிந்திரன்செல்வத்தருத்தியில்லேற்கு
அயனத்தமானகளத்தார்படையினிதாகுங்கிள்ளை
அயனத்தமாம்பலு*யானைச்செற்றசிராசலத்தாய்
அயனத்தமாசையறுத்தருள்வாய்நின்னடித்திருவே.
(94)
திருமாரனந்தணன்காண்பரியானெஞ்சிராமலையான்
திருமாரனந்தமுனிந்தான்சடையிற்செறியிருட்க
திருமாரனந்தநதிமாதுமுள்ளவன்றேன்மிகவ
திருமாரனந்தண்முளரியந்தாளென்சிரம்வைப்பனே.
(95)
பன்னகமாலையுறக்கடிந்தான்முதற்பண்ணவர்வைப்
பன்னகமாலையன்வேதங்கள்வாழ்த்தும்பனுவலுடன்
பன்னகமாலையரஞ்சிரபூதரப்பண்பரன்பிற்
பன்னகமாலையர்தஞ்செவிக்கேறுமென்பாடலுமே.
(96)
பாடலமானப்பொலிகுழல்பாகன்சிராமலையான்
பாடலமானதென்றூர்ந்தானையன்றிப்பரந்தலர்ந்த
பாடலமானபுன்மைத்தேவரைச்சொப்பனத்திலும்யாம்
பாடலமானமற்றெண்ணலநண்ணலம்பார்க்கலமே.
(97)
@ பாரம்பரியமென்னைம்பொறியுண்......
பாரம்பரியவகந்தோறுஞ்சென்று......
பாரம்பரியசிராமலையாவிட......
பாரம்பரியம்விடையாய்வினையற...... 
@ இந்நூல் எழுதப்பெற்றிருந்தபிரதியில் இப்பாட்டும், 100 - ஆவது பாட்டும்
உள்ள ஏடு முறிந்துபோய்விட்டபடியால், முற்றும் அறிந்து 
இவற்றைப் பதிப்பிக்கக்கூடவில்லை.
(98)
பகவகங்காளசிரபூதரவயில்பாரவரை
பகவகங்காயம்புகழவிட்டாற்கப்பசீர்த்திரியம்
பகவகங்காதலொடுகாத்தற்கியார்பணிவாரெனுஞா
பகவகங்காரமறவெற்கருளுன்பதத்திருவே.
(99)
திருக்கையிலாதறுத்திந்தி......
திருக்கையிலாயத்தடைந்......
திருக்கையிலாங்கடனஞ்சு......
திருக்கையிலாயுதனீந்தா......
(100)


திருச்சிராமலையமகவந்தாதி முற்றிற்று. 


சிறப்புப்பாயிரம்.

கட்டளைக்கலித்துறை.
பூவார்பொழிற்சிர பூதரம் வாழ்முக்கட் புண்ணியனாந்
தேவாதி தேவனுக் கந்தாதி மாலையைச் செய்தணிந்தான்
பாவார் தமிழின் றவப்பய னாவரு பண்புடையான்
நாவார் பெரும்புகழ் மீனாட்சி சுந்தர நாவலனே.
(1)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தேன்பிறந்த கடுக்கையணீ சடைப்பெருமான் றாயான செல்வ மாய்ச்சேர்
வான்பிறந்த தலப்பனுவல் பிறதலநூல் களினுமென்னே வயங்க லென்னிற்
கான்பிறந்த குவளையந்தார் மீனாட்சி சுந்தரமா கவிஞர் கோமான்
தான்பிறந்த தலநூன்மற் றையதலநூ லினுஞ்சிறத்தல் சகசந் தானே.
(2)

 

Related Content