logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )

Kanchip puranam of civanjana munivar - part 3 
part 3 / patalam 30 - 50 /verses 1057 - 1691 
In tamil script, Unicode format


 

திருவாவடுதுறை யாதீனம் 
சிவஞான சுவாமிகள் அருளிய 
காஞ்சிப் புராணம் 
பாகம் 3 - (1057 -1691)

30. வீரராகவேசப் படலம் 1057 - 1087
31. பலபத்திர ராமேசப்படலம் 1088 - 1105
32. வன்மீகநாதப் படலம் 1106 - 1124
33. வயிரவேசப் படலம் 1125 - 1162
34. விடுவச்சேனேசப் படலம் 1163 - 1193
35. தக்கேசப் படலம் 1194 - 1270
36. முப்புராரி கோட்டப்படலம் 1271 - 1281
37. இரணியேசப் படலம் 1282 - 1303
38. நாரசிங்கேசப் படலம் 1304 - 1318
39. அந்தகேசப் படலம் 1319 - 1350
40. வாணேசப் படலம் 1351 - 1461
41. திருவோணகாந்தன் தளிப்படலம் 1461 - 1470
42. சலந்தரேசப் படலம் 1471 - 1493
43. திருமாற்பேற்றுப் படலம் 1493 - 1511
44. பரசிராமேச்சரப் படலம் 1512 - 1573
45. இரேணுகேச்சரப் படலம் 1574 - 1608
46. யோகாசாரியர் தளிப்படலம் 1609 - 1618
47. சர்வ தீர்த்தப்படலம் 1619 - 1644
48. நவக்கிரகேசப் படலம் 1645 - 1650
49. பிறவாத்தானப் படலம் 1651 - 1660
50. இறவாத்தானப் படலம் 1661 - 1668
51. மகாலிங்கப்படலம் 1669 - 1691

காஞ்சிப் புராணம் 
30. வீரராகவேசப் படலம் (1057-1087)

  • அறுசீரடிக் கழிநெடிலாசிரிய விருத்தம்
     
    1057 புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற
    அத்தனா ரினிது வைகுங் கயிலையி னடைவு சொற்றாம்
    இத்தகு வரைப்பின் கீழ்பால் இள்நறாக் கொப்பு ளித்துத்
    தொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம்
    1
    1058 இராமன் முறையிடல்
    ஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவே லிராம னென்பான்
    தன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள்
    கொன்னுடைத் தறுகண் சீற்றக் கொடுந்தொழி லரக்கன் வௌளவித்
    துன்னரு மிலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான்.
    2
    1059 பெய்கழல் கறங்கு நோன்றாள் பெருவிற லிராம னந்நாள்
    எய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி யேங்கிக்
    கொய்தழை வனங்க ளெங்குங் கொட்புறீஇக் கமல வாவிச்
    செய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான்.
    3
    1060 இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ ரெழிற்சிவ கங்கை யாடி
    நெடும்பணை யொருமா மூல நின்மலக் கொழுந்தை யேத்திக்
    கொடும்படைச் சனக னீன்ற கோதையைப் பெறுவான் கூற்றை
    அடும்புகழ்ச் செய்ய தாளை யிரந்துநின் றழுது வேண்டி
    4
    1061 தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர்
    வாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான்
    சூழ்ந்தவெந் துயரத் தோடு மோடினன் துணைத்தாள் மீது
    வீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரே லென்னத் தேற்றி
    5
    1062 இத்துணை யிடும்பைக் கேது எவனென வினாவுஞ் செல்வ
    முத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான்
    மைத்தவார் கரிய கூந்தற் கௌளசலை மணந்த திண்டோள்
    சத்துவ குணத்தான் மிக்க தசரத னீன்ற செம்மல்.
    6
    1063 கலிநிலைத்துறை

    எம்பி ரானிது கேட்டரு ளேழிரண் டாண்டு
    வெம்பு காடகத் துறைதிநீ வியனிலந் தாங்கி
    நும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று
    கம்பி யாதெனை யெந்தையிக் கானிடை விடுத்தான்
    7
    1064 ஏய வாணையைச் சிரமிசைக் கொண்டெழு மெனையே
    தூய சீரிலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார்
    ஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள்
    மாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன்
    8
    1065 தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி
    மான்ற வம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான்
    ஆன்ற வெம்பியை விளித்துவீழ்ந் தனனது கேளா
    ஏன்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தன னிளவல்.
    9
    1066 அனைய காலையி லிராவண னவட்கவர்ந் தகன்றனன்
    புனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி
    இனையு மென்னுயிர் பொன்றுமு னிரங்குதி யெந்தாய்
    உனைய டைந்தனன் சரணமென் றழுதழு துரைத்தான்
    10
    1067 அகத்தியர் இராமனைத் தேற்றித் தத்துவோபதேசம் செய்தல்
    உரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்திய னுரைப்பான்
    விரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின்
    நிரைத்த வைம்பெரும் பூதத்தின் நிலைபெறு முடலம்
    தெரிக்கில் யாவையு முடன்பிறந் தவையெனத் தெளிநீ
    11
    1068 மற்று யிர்க்குவே றாணலி பெண்ணென வழக்கஞ்
    சற்று மில்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்
    பெற்றி போலுமிப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்
    கற்று ளோயிவை யிருமைக்கும் மாயைகா ரணமாம்.
    12
    1069 செய்வி னைப்பய னுள்ளது வருமெனத் தெளிதி
    எவ்வ முற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு வெனலும்
    பௌளவ முற்றுமோ ருழுந்தள வாக்கிமுன் பருகுஞ்
    சைவ மாமுனி மொழிக்கெதி ரரசனுஞ் சாற்றும்
    13
    1070 அத்த நின்னுரை முழுவது முண்மையே யானும்
    இத்த லக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
    கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்
    பித்த னென்றுல குரைத்திடு மாதலிற் பெரியோய்
    14
    1071 பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
    சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
    உறந்த தத்துவ ஞானத்துக் குரியவ னாவேன்
    அறைந்த வாறல தென்னுள மடங்கிடா தென்றான்
    15
    1072 மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு
    கலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்குமக் கதிர்ப்பூண்
    முலைம டந்தையை யிராவணன் கவர்ந்துபோ முறைமை
    இலைகொள் வேலினாய் எவருனக் கியம்பின ரென்றான்
    16
    1073 சடாயு வென்றுயர் கழுகிறை சானகி பொருட்டு
    விடாது போருழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன்
    கடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும்
    வடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி.
    17
    1074 நின்க ருத்திது வேலுயர் நெடுவரை குழைத்து
    வன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள்
    புன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி யவனே
    உன்க ருத்தினை முடித்திட வல்லனென் றுணராய்.
    18
    1075 உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினி லழிப்போன்
    நிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா
    அலகி லாற்றல னுருத்திர னொருவனே யன்றி
    இலையெ னப்புகன் றோலிடு மியம்பருஞ் சுருதி
    19
    1076 தென்தி சைக்கிறை யிராவணன் திருவடி விரலின்
    ஒன்ற னாலிறக் கண்டன னொருசிறு துரும்பால்
    அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்
    வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான்
    20
    1077 அனைய னாகிய தனிமுதல் பாற்சர ணடைந்தோர்
    எனைய வேட்பினு மெண்மையி னெய்துவ ரதனாற்
    கனைகொள் பூந்தடம் உடுத்தவிக் காஞ்சிமா நகரிற்
    புனைம லர்க்குழல் பாகனை யருச்சனை புரிவாய்
    21
    1078 வீரம் வேண்டினை யாதலின் விதியுளி வழாது
    வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி
    வீர னேதொழு தேத்துதி யெனமுனி விளம்ப
    வீரர் வீரனு மம்முறை பூசனை விளைப்பான்
    22
    1079 இராமன் சிவபூசைசெய்து வரம் பெறல்
    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    வெண்ணீறுங் கண்டிகையு முடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு
    தண்ணிடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால்
    எண்ணூறு மிருநூறு மாயதிருப் பெயரியம்பி யருச்சித் தேத்தி
    உண்ணிடு பெருங்காதல் வளர்ந்தோங்கத் 
          தொழுதுநயந் துருகுங்காலை
    23
    1080 எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும்
    அவ்விலிங்கத் திடைநின்று மெழுந்தருளி விடைமேற்கொண் டமரர்சூழ
    நவ்விவிழி யுமையோடுங் காட்சிகொடுத் தருளுதலும் நலியா வென்றித் 
    தெவ்வடுதிண் புயத் தோன்றல் பலமுறையுந் தொழுதேத்திச் செப்ப லுற்றான்.
    24
    1081 அண்ணலே யடியேனுக் கெளிவந்த 
          பெருங்கருணை யமுதே அன்பர்
    புண்ணியமே இராவணனாம் அரக்கர்கோன் 
          பொலந்தொடித் தோட்சீதை யென்னும்
    பெண்ணரசைக் கவர்ந்தெடுத்துப் போயினான் 
          முறைபிறழு மவனை யின்னே
    நண்ணலரும் பறந்தலையிற் கிளையோடு 
          முடிக்கவரம் நல்கு கென்றான்.
    25
    1082 எனப்புகலச் சிவபெருமான் திருவருள்கூர்ந் 
          தெமக்குநீ யின்று தொட்டு
    மனக்கினிய னாயுலகில் வீரரா 
          கவனெனும்பேர் மருவி வாழ்வாய் 
    உனக்கிகலி எதிர்ந்தோர்கள் எனைத்துணைய 
          ரேனுமவ ருடையக் காண்டி
    பனித்தநறுந் தொடையோயென் றருள்செய்து 
          பாசுபதப் படையு நல்கி
    26
    1083 முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன் 
          தனிப்படையும் முரன்று மாக்கள் 
    கொள்ளையிடு நறைத்துளவோன் படையுமவர் 
          தமைக்கொண்டு கொடுப்பித் தேனைக்
    கள்ளவிழ்தார்க் கடவுளர்தம் படைபிறவும் 
          நல்குவித்துக் கருணை கூர்ந்து
    நள்ளலரைப் பொடிபடுக்கும் பெருவரமு 
          மளித்தருளி நவிலு கிற்பான்.
    27
    1084 கவற்றிநெடும் பகைதுரக்கு மிவையுனக்குக் 
          கருணையினா லளித்தேங் கண்டாய்
    இவற்றினொடு மிளவலொடும் கிட்கிந்தை 
          யிடத்தமர்சுக் கிரீபன்சேனை
    அவற்றொடும்போய்ப் பரவைகடந் திராவணனைக் 
          கிளையோடு மறுத்து வீரஞ்
    சுவற்றியபின் சீதையொடும் மீண்டரசு 
          புரிந்துகலி துரந்து வாழ்வாய்
    28
    1085 என்றரு ளெதிரிறைஞ்சி யிராகவன்மற் 
          றிதுவொன்று வினாத லுற்றான்
    அன்றினார் புரமெரித்தோய் குறுமுனிவ 
          னாருயிர்கட் காண்மை பெண்மை
    யொன்றுமிலை யாக்கையெலா முடன்பிறந்த 
          வாகுமென வுரைத்தல் செய்தான்
    மன்றவெனக் கவைமுழுதுந் தேறவிரித் 
          தருளென்று வணங்கி வேண்ட
    29
    1086 வேதாந்த நிலையனைத்து மவன்தெளிய 
          விரித்துரைத்து வரங்கள் நல்கிக்
    காதார்ந்த குழையுமையா ளுடனாக 
          விலிங்கத்துட் கரந்தா னெங்கோன்
    நாதாந்தப் பரஞ்சுடராம் இவ்விலிங்கந் 
          தனைத்தொழுது நயந்தோ ரெல்லாம்
    கோதார்ந்த பகைவென்று பெருஞ்செல்வ 
          மெய்தியருள் கூடு வாரால்.
    30
    1087 கற்கீச வரலாறு
    எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    தகைபெருமிக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித் 
          தடங்கரையில் கற்கீசத் தலமா மங்கண்
    உகமுடிவில் கயவர்தமை யழிப்ப மாயோ 
          னுயர்பிருகு சாபத்தால் கற்கி யாகி
    இகழருஞ்சீர்க் காஞ்சியில்வந் திலிங்கந் 
          தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான்
    புகழுறுமவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப் 
          புனலாடு மவர்பெறுவார் போகம் வீடு
    31

    ஆகத் திருவிருத்தம் 1087 
    ---------

    31. பலபத்திர ராமேசப்படலம் (1088-1105)

    எண்சீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்
    1088 பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப் 
          படைவேளைப் பொடிபடுத்த பழையோ னென்றுந்
    திகழ்வீர ராகவேச் சரத்தி னோடு 
          திருத்தகுகற் கீச்சரமும் புகன்றா மிப்பால் 
    புகழுறுகற் கீச்சரத்தின் மேற்பால் கண்டோர் 
          பொருவலித்திண் பகட்டூர்தி யுடையக் காணும்
    நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது 
          நீடுதிருத் தானவளம் பாட லுற்றாம்
    1
    1089 கலிவிருத்தம்
    மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்
    கண்ணன் முன்வரு காலை அலப்படை
    அண்ண லாம்பல பத்திர வாண்டகை
    பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள்
    2
    1090 கார்த்த டக்கை கடும்புசெய் கைதவப்
    போர்த்தொ ழிற்குப்பொறாத மனத்தனாய்த்
    தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்
    ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான்
    3
    1091 அங்கண் முப்புரம் அட்ட பிரான்றளி
    எங்கு முள்ளன நோக்கி யிறைஞ்சியத்
    துங்க வைப்பினில் தொக்க முனிவரர்
    தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான்
    4
    1092 ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை
    ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்
    தேசின் மிக்க திருநகர் யாவது
    பேசு கென்ன முனிவரர் பேசுவார்
    5
    1093 பருவ ரைத்தோட் பரதன் வருடமே
    கரும பூமி யெனப்படுங் காணது
    மருவு மெவ்வுல கத்தினும் மாண்டதாம்
    திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே 
    பரதன் வருடம் - பாரதவர்ஷம், பரதகண்டம்
    6
    1094 கரும பூமி வரைப்பிற் கடவுளர்
    மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்
    அருள்வி ளைக்கு மவற்றினும் மேலவாம்
    தரும சக்கர பாணி தலங்களே.
    7
    1095 அவற்றின் மிக்கன மானிட ராக்கிய
    சிவத்த லங்கள் கடவுளர் செய்தன
    அவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம்
    சிவத்த லங்கள் அவற்றின் சிறந்தன
    8
    1096 சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம்
    வியந்தெ டுத்து விளம்பப் படுமவை
    நயந்த வங்கவற் றுள்ளும்நற் காசிமிக்
    குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே
    9
    1097 ஓத காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும்
    பூத லத்திடை யில்லை புகலுமம்
    மாத லத்தி னுகத்தின் வருத்தமும்
    பாத கப்பய னும்பட ராவரோ
    10
    1098 பிறந்து ளோர்கள் வதியப் பெறுநரங்
    கிறந்து ளோருளத் தெண்ணுநர் யாவரும்
    அறந்த ழைக்குமே கம்ப ரருளினாற்
    சிறந்த முத்தி யுறுவது தேற்றமே.
    11
    1099 மேற்படி வேறு
    என்றறி வுறுத்திய வியல்பின் மாதவர்
    மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்
    அன்றவர் ஏவலிற் காஞ்சி யண்மியங்
    கொன்றிய வளனெலா முவந்து நோக்கினான்
    12
    1100 தெறுமப் படைச்சிவ தீர்த்தம் யாவையும்
    முறைமையின் ஆடினான் முரசு கண்படா
    இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண்
    டறைபொழி லேகம்ப மருச்சித் தேத்தினான்
    13
    1101 அந்நகர் வயினமர்ந் தருளுஞ் சீருப
    மன்னிய னிணையடி வணங்கித் தொண்டுபூண்
    டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன்
    தன்னுடைப் பெயரினோர் இலிங்கம் தாபித்தான்
    14
    1102 உண்ணிறை காதலி னருச்சித் தோகையால்
    பண்ணிசை மொழிகளிற் பழிச்சு மேல்வையின்
    கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர்
    வண்ணவர் தொழவிடை மீது தோன்றியே
    15
    1103 வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம்
    பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன்
    தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற்
    காண்டகை யிடையறா வன்பு நல்குதி
    16
    1104 இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு
    நிச்சலு மினிதமர்ந் தருளி நின்னடி
    நச்சினோர்க் கிருமையும் நல்கு வாயென
    அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான்
    17
    1105 காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத்
    தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய
    சீருடை யிலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்
    ஏருடைக் கைலையி னினிது வாழ்வரால்
    18

    ஆகத் திருவிருத்தம் - 1105 
    -------

    32. வன்மீகநாதப் படலம் (1106-1124)

    கலிநிலைத்துறை 
    1106 தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்றதோள்
    வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்திர ரஞ்சொற்றனம்
    மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர்
    கோன்தாழ் நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம்
    1
    1107 திருமால் தலையிழந்த வரலாறு
    புத்தேளிர் முன்னாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழெய்துவான்
    முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்
    இத்தால் வருங்கீர்த்தி யெல்லாம் நமக்கும் பொதுத்தானெனக்
    கொத்தார் மலர்க்கூந்தல் பங்கன்துணைத்தாள் குறிக்கொண்டரோ
    2
    1108 குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக் 
          கொழுங்கொன்றைவெள்
    ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம 
          லார்தம்மின் அருள்கூர்தலால்
    உருக்கூர் பளிக்குப் பறம்பிற் 
          பெருங்கீர்த்தி யுண்டாதலும்
    தருக்கான் முகுந்தன் கவர்ந்தான் 
          நடந்தான் தடுப்பக்கொடான் 
    தருக்கான் - செருக்கினால்.
    3
    1109 ஓடுந் திறங்கண்டு விண்ணோர் 
          தொடர்ந்தெய்த லுற்றாரவன்
    பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு 
          வெம்பூசல் பெரிதாற்றுபு
    நீடும்பர் தம்மைப் புறங்கண்டு 
          பின்நீ ளிடைச்சென்றுநின்
    றீடின்றி யெல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க 
          ளெனநக்கனன்
    4
    1110 நக்கான் முகத்தா லவன்தேசு முற்றும் 
          நறுஞ்சாமையாய்
    அக்காலை நீங்குற்ற வாற்றா லடல்விற் 
          கழுத்தூன்றுபு
    மைக்காள மன்னான் நெடும்போது 
          வாளாது நின்றான்குண
    திக்காளி யன்னான்றன் நிலைகண்டு 
          புகழ்வௌளவு திறமெண்ணினான்
    5
    1111 கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி யங்கண் 
          கடுக்கைப்பிரான்
    இச்சித்த கயிலாய நிருதித் திசைக்க 
          ணிலிங்கந்நிறீஇ
    நச்சித்தொ ழுங்காலை யெங்கோ னணைந்தென்னை 
          நவில்கென்றலும்
    பச்சைத் துழாயண்ணல் கவர்கீர்த்தி 
          விண்ணோர் பெறப்பாலியாய்
    6
    1112 என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பி 
          ரானோதுவான்
    வன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு 
          வார்வில்லுடை
    அந்நா ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன 
          வருள்செய்தலும்
    பொன்நாடர் கோமானும் விடைகொண்டு 
          மீண்டான் பொருக்கென்றரோ
    7
    1113 அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப்
    பைவாய்ப் பணிப்பாய லான்சென்னி யறுபட்டு வீழ்ந்தவ்விடம்
    இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்
    செவ்வே குறைச்சென்னி யாறங்கணோடுந் திருத்தக்கதே
    8
    1114 திருமால் தலை பெற்ற வரலாறு
    மேற்படி.வேறு
    ஆய காலையி லவன்புடை நின்று மப்புகழைப்
    பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார் 
    மாயி ரும்புவி மிசைவள ரிருபிறப் பாளர்க்
    கேயு மெச்சனாம் மாயவ னின்மையி னுயங்கி 
    எச்சன் - யக்ஞன், யாகவடிவினன்.
    9
    1115 மீட்டு மெய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்
    டீட்டு மன்பினுக் கெம்பிரா னெதிரெழுந் தருளப்
    பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்
    தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில்
    10
    1116 கலிவிருத்தம்
    அறுபதம் முரன்றிசை முழக்கு மாயிதழ்
    நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக
    எறுழ்வலிச் சிலையினா லெச்ச னாகிய
    சிறுமலர்த் துளாவினான் சென்னி யற்றதால்
    11
    1117 உறப்புறு மெங்களுக் குதவு முண்டியும்
    மறத்தொழில் பயிலிய மானர்க் கேன்றவான்
    துறக்கமு மில்லையாய் விட்ட துட்கென
    இறத்தலி னெச்சனிவ் வுலகி னெம்பிரான் 
    உறப்பு -நெருக்கம்.
    12
    1118 ஆதலி னெச்சனுக் களித்தி சென்னியென்
    றோதினன் வேண்டலு முரைத்தல் மேயினான்
    மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
    போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன்
    13
    1119 எம்புடை வரம்பெறு மிரும ருத்துவ
    உம்பரி னவன்தலை யொன்றிக் கூடுக
    நம்புமிவ் விருவரும் நந்தம் ஆனையால்
    பம்பிய வேள்வியில் பாகம் எய்துக 
    இரு மருத்துவ உம்பர் - வைத்திய தேவர்கள் இருவர், அசுவினி தேவர்கள்.
    14
    1120 என்றருள் மழுவலான் சரண மேத்திமற்
    றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
    மன்றநின் னருளினால் புற்றின் வாயெழூஉத்
    தின்றுநாணரச்செயுந் திறல்பெற் றேனரோ
    15
    1121 ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்குமிம்
    மேதகு வரைப்புவன் மீக நாதமென்
    றோதவும் கண்டவர் பிறவி யோவவும்
    ஈதிநீ வரமென விடையி னேந்தலும்.
    16
    1122 தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்
    இந்திரன் மீண்டன னிரும ருத்துவத்
    தந்திரத் தலைவரா லெச்சன் றன்சிரம்
    முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான்
    17
    1123 தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக்
    கொவ்வைச்செவ் வாயுமை கூறன் தாள்தொழு
    தவ்வத்த னாணையா லவியின் பாகமங்
    குய்வித்தோர்க் கமைத்துத்த னுலகம் புக்கனன்.
    18
    1124 இகழரு முகுந்தனே இந்த வாறிழி
    தகவுற விடும்பையில் தங்குநீர்மையால்
    உகலருஞ் செல்வத்தை உடம்பை யல்லது
    புகழினை விரும்பலும் போதத் துன்பமே.
    19

    ஆகத் திருவிருத்தம் 1124
    ----

    33. வயிரவேசப் படலம் (1125 -1162)

    கலிவிருத்தம்
    1125 வயிர வாளினான் வணங்கி வெந்துயர்
    வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்
    வயிர மாடமற் றதற்குத் தென்திசை
    வயிர வேச்சர மரபி யம்புவாம்
    1
    1126 பிரமன் செருக்கு
    வடவ ரைத்தலை முஞ்ச மானெனும்
    தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்
    படிம வுண்டியர் பாங்கின் நோற்றுழி
    அடல னப்பிரா னருளி னெய்தினான்
    2
    1127 வதன மைந்தொடும் வந்து தோன்றினான்
    பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்
    துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்
    கதம றுத்தவ ரிதுக டாயினார்.
    3
    1128 இலகு மிச்சகம் யார்மு தற்றுமன்
    உலகெ வன்புடை யுயிர்த்தொ டுங்கிடும்?
    பலப சுக்களின் பாசம் நீத்தருள்
    தலைவன் யாரிது சாற்று கென்றனர்.
    4
    1129 ஐம்மு கத்தயன் அனைய காலையின்
    மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்
    இம்ம றைப்பொருள் உஆரு முய்வகை
    நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ
    5
    1130 உலகி னுக்கியான் ஒருவ னேயிறை
    உலக மென்கணே யுதித்தொ டுங்கிடும்
    உலகெ லாமெனை வழிபட் டும்பர்மேல்
    உலகி னைத்தலைப் படுங்க ளுண்மையே
    6
    1131 வேதங்கள் உரைத்தல்
    கலிநிலைத்துறை
    என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம்
    முன்றோன்றி யங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்
    வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்
    குன்றான்ற வில்லான் றனையே முதலென்று கூறும்.
    7
    1132 அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன்
    அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்
    அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்
    அவனேயென ஓதிவெவ் வேறு முரைப்ப அங்கண்
    8
    1133 இருக்கு வேதங் கூறல்
    எச்சன் றனக்கு மிமையோர்க்குமெவ் வேதி யர்க்கும்
    அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்
    நச்சுமுனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்
    மெய்ச்சித்துரு என்றறி என்ற திருக்கு வேதம்
    9
    1134 யசுர் வேதங் கூறல்
    தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக்
    கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்
    வன்காழ்வலி செற்றவன் யாரவ னேம திக்கு
    நன்காரண னேதென்று நவின்ற தடுத்த வேதம்
    10
    1135 சாமவேதங் கூறல்
    தோலாவவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு
    மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்
    ஆலாலம் உண்டோன் அவனேயகி லங்களுக்கு
    மேலாய வேதுஎன விண்டது சாம வேதம்
    11
    1136 அதர்வண வேதங் கூறல்
    வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்
    உளரேல்புடை வீங்கி யெழுந்து திரண்டு ருண்ட
    இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி
    அளவிற்பெற லாமென விண்ட ததர்வ வேதம்
    12
    1137 முனிவோரெதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத்
    தனிநாயகன் மாயையின் வெகுண்டு சாற்றும்
    சினநீடு தமோகுண சீலனுருத்தி ரன்றான்
    மனமோடுரை செல்லரு நிட்களம் வான்பிரமம்
    13
    1138 பிரணவம் உரைத்தல்
    சால்பானுயர் ஓமென் மொழிப்பொருள் சம்பு வென்றல்
    ஏலாதென வம்மனு வேவடி வெய்தி வந்து
    மாலாலுரை செய்தனை நீகம லப்பொ குட்டின்
    மேலாயிது கேண்மதி யென்றுமுன் நின்று சொல்லும்.
    14
    1139 வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும்
    போதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான்
    மாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும்
    ஆதிப்பரம் யாரவ னாகும் மகேச னம்மா
    15
    1139 r> எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    என்றிது விளம்பும் பிரணவந் தனையும் 
          இகழ்ந்துதன் பெருமையே வியப்ப
    மன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி 
          மன்றயான் கருத்தனென் றுரைத்தான்
    குன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற் 
          கோட்படு மிருவரும் இவ்வா
    றொன்றிய செருக்கான் மீமிசை யிகலி யோவறப் 
          பிணங்குமவ் வேல்வை
    16
    1140 வயிரவ சம்பவம் - பிரமன் சிரமிழத்தல்
    அலர்ந்தசெங் கமல நிகரிணை விழியும் 
          அதுமுகிழ்த் தனையதோர் விழியும்
    மலர்ந்தபொன் நிறந்த கேச��

Related Content

A Revel In Bliss Of Tayumana Swami

Articles from Siddhanta Deepika in English

Chekkizar Swamikal Puranam

Muthuswami Dikshitar Shiva Kritis - Part-1 - Romanized

Muthuswami Dikshitar Shiva Kritis - Part-2 - Romanized