logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)

Kanchip puranam of civanjana munivar - part 2
patalam 7-29 /verses 445-1056 
In tamil script, Unicode/utf-8 format

 


திருவாவடுதுறை யாதீனம் 
சிவஞான சுவாமிகள் அருளிய 
காஞ்சிப் புராணம் 
பாகம் 1b / (445 - 1056)

7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 445 - 500
8. புண்ணிய கோடீசப்படலம் 501 - 534
9. வலம்புரி விநாயகர் படலம் 535 - 582
10. சிவாத்தானப்படலம் 583 - 631
11. மணிகண்டேசப் படலம் 632 - 698
12. சார்ந்தாசயப் படலம் 699 - 750
13. சத்த தானப்படலம் 751 - 763
14. பராசரேசப் படலம் 764 - 791
15. ஆதிபிதேசப் படலம் 792 - 797
16. முத்தீசப் படலம் 798 - 814
17. பணாதரேசப் படலம் 815 - 821
18. காயாரோகணப் படலம் 822 - 835
19. சித்தீசப் படலம் 836 - 839
20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் 840 - 863
21. இட்ட சித்தீசப் படலம் 864 - 888
22. கச்சபேசப் படலம் 889 - 901
23. சகோதர தீர்த்தப் படலம் 902 - 911
24. சுரகரேசப் படலம் 912 - 956
25. தான்தோன்றீசப் படலம் 957 - 970
26. அமரேசப் படலம் 971 - 991
27. திருமேற்றளிப் படலம் 992 - 1002
28. அனேகதங்காவதப் படலம்  1003 - 1014
29. கயிலாயப்படலம் 1015 - 1056

காஞ்சிப் புராணம் 
7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் (445-500)

  • அறுசீரடியாசிரிய விருத்தம் 
    445 மெய்த்தவர் யாவரும் அங்கது கேட்டு விழித்துணை நீர்வாரக்
    கைத்தலம் உச்சி முகிழ்த்து மயிர்ப்புள கங்கள் மலிந்தயர்வார்
    முன்தி பெறற்குயர் காரணம் இன்று தொகுத்து மொழிந்தனைநீ
    அத்தல மேன்மை அனைத்தும் விரித்தரு ளென்றலும் அச்சூதன் 
    (மலிந்து - நிறைந்து. அயர்வார் - பரவசப்படுவார். அயர்வாராகி எனப்பொருள் கொள்க)
    1
    446 கச்சியுள் எண்புறு தீர்த்தம் நிறைந்துள காமுறு பலதானம் 
    பொச்சமில் போகமும் வீடும் அளிப்பன போக்கரு மேன்மையவாம்
    அச்சம் அறுத்து வியாதன் எனக்கருள் செய்த முறைப்படியே 
    இச்சையின் ஓதுவல் அந்தணிர் கேண்மின் எனச்சொல லுற்றனனால் 
    (காமுறு - விரும்புகின்ற. தானம் - இடம். பொச்சம் - பொய். 
    கோக்கரும் - நீக்குதலில்லாத )
    2
    447 இந்நக ரிற்புகல் சத்திய மாவிர தப்பெயரிற் குணபால்
    தன்னிகர் மெய்த்தலம் ஒன்றுள தங்கமர் சத்திய விரதீசர்
    என்னை யுடைப்பெரு மாட்டியும் ஓரிரு மைந்தரும் உடன்மேவ
    மன்னி இருத்தலின் அத்தல மேன்மையை யாவர் வகுக்கவலார் 
    (குணபால் - கிழக்குப் பக்கம். )
    3
    448 சத்திய சத்தியர் சத்திய சோதகர் சத்திய சங்கற்பர்
    சத்திய காமர் இருத்தலின் அப்பதி சத்திய விரதமதாம்
    சத்திய நன்னெறி யார்க்கும் விரைந்தருள் செய்துறு தானமதிற்
    சத்திய மாவிர தத்தடம் ஒன்றுள தத்தட நீராடி 
    (சத்தியம் - உண்மை. சத்திய சத்தியர் - அழியாத உண்மையை உடையவர். 
    சத்திய சோதகர் - உண்மையைத் தொழிற்படுத்துபவர். 
    சத்திய சங்கற்பர் - உண்மை நினைவுடையவர். நினத்ததை நினைத்தவாறே 
    முடிப்பவர் என்றும் பொருள். சத்திய காமர் - உண்மையை விரும்புபவர். 
    நன்னெறி - முத்திக்கு வாயிலாகிய நெறி; ஞானம்.
    4
    449 புதனமர் நாளினில் நீர்க்கட னாதி பொருந்த முடித்தங்கண்
    இதமுறு சத்திய மாவிர தீசரை ஏத்தி வணங்குநர்தாம்
    கதவினை தீர்த்தருள் உண்மை உணர்ந்து கலநநபர்கள் முத்தியினை
    மதமுறு காம மயக்கம் அனைத்தும் அறுத்துயர் முனிவீர்காள் 
    (அமர் - விருப்பம். இதம் - இன்பம். கதம் - கொடுமை)
    5
    450 மனைவியர் மக்கள் நிலங்கலை செல்வமும் மற்றெவை வேண்டிடினும் 
    அனையவை முற்றும் அளித்துயர் வீடும் அளித்திடும் அத்தீர்த்தம்
    இணைய தடம்பதி இந்திர தீர்த்தமும் இந்திர புரமுமெனப்
    புனைபெய ரும்பெறும் அப்பெயர் எய்திய காரணமும் புகல்வேன்
    6
    451 இந்திரன் அரசிருக்கை
    மதுமல ராளிதன் மேதகு கற்பம் வராகம துறுமாறாம்
    முதுமனு வந்தர நாட்சிவி என்றொரு வாசவன் முன்னுளனால்
    விதுவினை யொப்பன் அரம்பைய ராகிய மென்குழு தங்களிடைப்
    பொதுவறு தானவ மாக்கட லுக்கு வடாதெரி கனல்போல்வான் 
    (மலராளி - பிரமன். கற்பம் - ஒரு கால அளவை. அது நித்ய கற்பம், 
    மகாகற்பம் என இரண்டு வகைப்படும். நித்ய கற்ப மென்பது பிரமனுக்கு ஒரு நாள். 
    மகாகற்ப மென்பது பிரமனுக்கு வாழ்நாள். ஒவ்வொரு கற்பமும் அதன்கண் 
    நிகழும் நிகழ்ச்சியாற் பெயர் பெறும். பிரளய வெள்ளத்தில் அழுந்திய உலகத்தைத் 
    திருமால் வெள்ளைப் பன்றி வடிவங் கொண்டு தனது கொம்பினால் எடுத்து 
    நிலைநிறுத்திய கற்பம் சுவேத வராக கற்பம் எனப்படும். 
    மனுவந்தரம் - மனுவின் காலம். மனுக்கள் பதினால்வர் உளர் என்ப. 
    ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வோர் இந்திரராகப் பதினால்வர் இந்திரர் 
    உலர் என்ப. இப்பொழுது நிகழ்வது வைவச்சுத மனுவந்தரம். இப்பதினான்கு 
    இந்திரர்கலும் அழிந்தால் பிரமனது பகற்காலம் முடியும் என்ப. விது - சந்திரன். 
    வடாதெரியகனல் - வடவாமுகக்கினி.
    7
    452 கடவுளர் சேனைப் பங்கய பானு கற்சிறை அரிவயிரப்
    படையவன் ஓர்நாட்கடவுள் அவைக்கட் பாசிழை வெதிர்பொருதோள் 
    படவர லல்குற் சசிபுடை மேவப் பன்மணி அரியணைமேல்
    வடிவ மடங்கல் மேநநர் மடங்கல் போன்மென வைகினனால். 
    கடவுளர் சேனை - தேவர்கள் கூட்டம். பங்கய பானு - தாமரைகளுக்குச் சூரியன். கல் - மலை. வயிரப்படை - வஜ்ராயுதம். கற்சிறை அரீ - ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன, அவற்றை இந்திரன் வஜ்ராயுதத்தல் அரிந்தனன் என்பது புராணக் கதை. பாசிழை - பசிய அணிகலன். வெதிர் - மூங்கில். சசி - இந்திராணி.
    8
    453 இருபுடை வெண்கவ ரித்தொகை துள்ள மிகைக்குடை எழில்செய்ய
    விருதுநநந மாகதர் சூதர் முழக்க வியன்மணி மாநிதியைந்
    தருவொடு தேனு விழிக்கடை நோக்கினை நோக்குபு தலைநிற்ப 
    அருகுறு கின்னரர் யாழமிர் தஞ்செவி யார விருந்தயர. 
    விருது - கீர்த்தி. மாகதர் - இருந்தேத்துவார். சூதர் - நின்றேத்துவார். மணி - சிந்தாமணி. ஐந்தரு - கற்பகம் முதலாய ஐந்து மரங்கள். தேனு - காமதேனு. இவை வேண்டியவற்றை அளிப்பன. இவை இந்திரனின் குறிப்பை நோக்கி நின்றன., அவனால் அன்பு செய்யப்பட்டோர் விரும்பியவற்றை அளிப்பதற்கு. அயர - செய்ய.
    9
    454 மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந்
    துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம்
    அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி
    நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக 
    விழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் 
    போலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத. 
    உறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல.
    10
    455 அரம்பை உருப்பசி மேனகை நநதலிய அரிமதர் விழிமடவார்
    நிரம்பிய காம நலங்கனி அவிநய நெறிமுறை கரமசைப்ப
    பரம்பு மிடற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினோடும்
    வரம்பெறும் அற்புத மின்னவிர் கொடியென மகிழ்நடம் எதிர்புரிய 
    அரி - செவ்வரி. மதர் - களிப்பு. பரம்பு - பரவிய. வரம் - மேன்மை
    11
    456 மருத்துவர் வானவர் கின்னரர் சித்தர் வசுக்கள் மருத்துக்கள்
    உருத்திரர் சாத்தியர் கந்தரு வத்தர் உடுக்கள் நவக்கோள்கள்
    திருக்கிளர் மெய்த்தவர் யோகிகள் கையிணை சென்னி மிசைக்குவியா
    நெருக்கினுள் எய்தி இறைஞ்சி மருங்குற நிரல்பட நிற்பவரோ. 
    மருத்துவர் - தேவ வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள். மருத்துக்கள் - திதி 
    என்பவன் வயிற்றில் இந்திரனால் கூறுபடுத்தப்பட்டுப் பிறந்து காற்று வடிவமாய்ச் 
    சஞ்சரிக்கும் நாரிபத்தொன்பதின்மர் என்பர். ந[த்தியர்- தருமனின் புதல்வர் பன்னிருவர் என்ப.
    12
    457 கணங்கொள் தயித்தியர் யாவரும் வந்து கடைத்தலை வாய்தலின்மாட்
    டுணங்குபு செவ்வி கிடைத்திலர் நிற்ப ஒழிந்தவர் தங்குறைதீர்த்
    தணங்கரும் இன்பவெள் ளத்தில் அழுந்தி அளப்பரு செல்வத்தான்
    இணங்கலர் கோளரி இன்னணம் மேவுழி எண்ணினன் இவையெலாம் 
    கணம் - கூட்டம். தயித்தியர் - அசுரர். கடைத்த்லை வாய்தல் - வாயிற்கடை. 
    உணங்குபு - வாடி. செவ்வி - தக்க சமயம். அணங்கரும் - துன்பமற்ற. 
    இணங்கலர்- இனக்கமில்லாத பகைவர்கள். கோளரி - சிங்கம்.
    13
    458 இந்திரன் அரசியலை வெறுத்தல்
    வேறு
    இருவினை யொப்பு வாய்ந்த பருவம்வந் தெய்தலாலே
    மருவருந் துறக்க வைப்பின் அரசியல் வாழ்க்கை தன்னை
    அருவருத் துவர்த்துக் காவற் சிறையிடை யகப்பட் டோ ரின்
    வெருவரும் பதைக்கும் அஞ்சும் வேறிவை கருத்துட் கொள்வான்
    இருவினை ஒப்பு - நல்வினைப் பயனாக வரும் இன்பம், தீவினைப் பயனாக 
    வரும் துன்பம் இரண்டினையும் இறயருளாக ஏற்றுக் கொள்ளும் மனவமைதி. 
    மருவருந்துறக்கம் - அடைவதற்கு அரிதான சுவர்க்கலோகம். 
    அருவருத்து - கூசி வெறுத்து.
    14
    459 அழியுமிவ் விடய வாழ்விற் களித்திருந் தந்தோ கெட்டேன்
    பழிபவக் கடலிற் காலப் பாந்தள்வாய்க் கிடந்தும் நாணேன்
    வழிமுறை அறியா மாய வல்லிருட் படுகர்ச் சேற்றுள் 
    இழியும்ஊர்ப் பன்றி யேபோல் உழந்தவென் அறிவு நன்றால் 
    பவக்கடல் - பிறவியாகிய கடல். காலப் பாந்தள் - காலமாகிய பாம்பு. 
    படுகர் - குழி, பள்ளம்; பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை, 
    கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினாயேஔ (திருமுறை 2:79:6)
    15
    460 அருவினை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் காலம்
    கருவுறும் எவையும் கால வயத்தவாம் காலந் தான்மற்
    றொருபொருள் வயத்த தன்றாலுந்தியோன் கற்பத் தீரேழ்
    பொருவிலிந் திரர்கள் மாய்வர் பொன்றுவர் மனுக்கள் தாமும்
    16
    461 ஓதுமிக் கற்பம் வேதற் கொருதினம் அந்நாள் முப்ப
    தாதலோர் மதியாம் திங்க ளாறிரண் டாயி னாண்டாம்
    ஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்த மாகப்
    போதரும் போதில் அன்னான் பொன்றுவன் மன்ற மாதோ 
    பரார்த்தம் - பிரமன் வாழ்நாளிற் பாதி
    17
    462 அம்மலர்க்கிழவன் காலம் அரிக்கொரு தினமன் னோனும்
    அம்முறைத் திங்கள் கூடு மாண்டுநூ றெய்திற் பொன்றும்
    அம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன்
    இம்மையில் வீடு பேற்றிற் குபாயமே அறிதல் வேண்டும்.
    18
    463 அவையகத் துள்ளார்க் கெல்லாம் விடையளித் தெழுந்து போந்து
    நவையற விரைவின் அந்தப் புரநநதினை நணுகி அங்கநந
    புவிபுகழ் குரவற் கூவிப் போற்றிநின் றிதனை விள்வான்
    சிவியெனத் திசைபோங் கீர்த்தித் தேவர்கட் கிறைவன் மன்னோ
    19
    464 இந்திரன் தேவகுருவிடம் முறைகூறல்
    இவ்வர சியற்கை தன்னில் இனியெனக் காசை யில்லை
    அவ்விதி முகுந்தன் ஏனோர் வாழ்க்கையும் அவாவு கில்லேன்
    மெய்வகை உணர்ந்து முத்தி மேவுதற் குபாயம் ஒன்று
    செவ்வனோர்ந் துரைத்தி என்னத் தேசிகன் தேர்ந்து சொல்வான்
    20
    465 இந்திரனுக்குத் தேவகுரு உபதேசித்தல்
    நன்றுநீ வினாய முத்தி நற்றவம் வேள்வி தானம்
    கன்றுபட் டினிவே றொன்றாற் காண்பரி தாகும் மைந்தா
    துன்றிய மாய வாழ்க்கைத் தொடக்கறுத் துய்யக் கொள்வான்
    என்றுமெம் பெருமான் உள்ளான் அவநநதிறம் இயம்பக் கேட்டி
    21
    466 கலிவிருத்தம்
    குறைவிலா மங்கல குணத்த னாதலின்
    நிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின்
    அறைகுவர் சிவனென அறிவின் மேலவர்
    இறையவன் பெருமையை யாவர் கூறுவார்
    22
    467 மேலெனப் படுவன எவைக்கும் மேலவன்
    மாலெனப் படுவன எவையும் மாற்றுவான்
    நூலெனப் படுவன எலாம்நு வன்றவன்
    வேலெனப் படும்விழி பாகம் மேயினான்
    23
    468 பங்கயன் றன்னைமுன் படைத்து மால்முதல்
    புங்கவர் தம்மைப்பின் உதவும் பொற்பினான்
    அங்கவன் இலனெனில் அகில லோகமும்
    பொங்கிய வல்லிருள் பொதிந்த நீரவே
    24
    469 பகலிர விளதுள தெனும்ப குப்பிலா
    அகலரு மிருள்பொதி அநாதி காலையில்
    உகலரும் பரசிவன் ஒருவனே உளன்
    மிகுமுணர் வவனிடை வெளிப்பட் டோ ங்குமால் 
    (மிகுமுணர்வு - தடையிலா ஞானமாகிய பராசத்தி)
    25
    470 எங்குள யாவையும் இவன்வ யத்தவாம்
    எங்கணு மிவனொரு வயத்தின் எய்திடான்
    எங்கணும் விழிமுகம் எநநநநம் கால்கரம்
    எங்கணுந் திருவுரு இவனுக் கென்பவே
    26
    471 அரியயன் அமரர்கள் அசுரர் யோகிகள் 
    இருளறு வேதவே தாந்தம் யாருமிப்
    பெரியவன் அடியிணை காணும் பெட்பினால்
    தெரிகிலா மாறுகொண் டின்னுந் தேடுவார் )
    27
    472 அவனவன் அதுவெனும் அவைதொ றொன்றுமிச்
    சிவனலான் முத்தியிற் சேர்த்து வாரில்லை
    துவலரும் இம்முறை சுருதி கூறுமால்
    இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்
    28
    473 பன்னுவ தெவன்பல பரிந்த நெஞ்சினும்
    அந்நியர் தமையொநநத் தரனை ஏத்துதி
    இன்னதே வீட்டினுக் கேது வாமெனும்
    பொன்னுரை மனங்கொடு புகலு வான்சிவி
    29
    474 குரவனே அயனரி குரவ னேசிவன்
    குரவனே தந்தைதாய் குரவ னேயெலாம்
    குரவனே என்றுநூல் கூறும் உண்மையைக்
    குரவனேயென்னிடை இன்று காட்டினாய்
    30
    475 உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன்
    இன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி
    பொன்பொதி சடையனைப் போற்று மாறிது
    அன்பொடும் அடியனேற் கருளு கென்றலும்
    31
    476 கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர்
    இடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம்
    விடலருஞ் சத்திய விரத தானத்தின்
    முடிவில்சத் தியவிர தீசன் முன்பரோ.
    32
    477 மேற்றிசை சத்திய விரத தீர்த்தமொன்
    றாக்கவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப்
    போற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென்
    றூற்றெழுந் துறுதடத் துதந மாடியே.
    33
    478 விதியுளி முடித்துநித் தியநை மித்திகம்
    புதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம் 
    மதிநுதல் விளங்கிட அக்க மாமணி
    நிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே. 35
    34
    479 தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால்
    வெள்ளொளிச் சத்திய விரத நாதனை
    நநள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான்
    நள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய்
    35
    480 என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ
    வென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால்
    தொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம்
    சென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான் 
    (விரதங் கேள்வியால் -விரதத்தைக் கேள்வியால்)
    36
    481 உள்ளது கூறினை உம்மை யாயிடை
    அள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள்
    வெள்ளச்சீர்ச் சத்திய விரதம் மூழ்கியீண்
    டெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய். 38
    (மும்மை - முற்பிறப்பு. அள் - கூர்மை. குலிசி - வஜ்ராயுதத்தை 
    உடையவன். புந்தி நாள் - புதன் கிழமை)
    37
    482 ஒருபொழு தாடினார் உம்பர் கோனிடம்
    இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு 
    தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே
    மருவுவர் யாரதன் வண்மை கூறுவார்
    38
    483 புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின்
    அந்தநாள் மூழ்கலின் அரச நீயுமிப்
    பந்தமில் வீடுறற் பாலை யாயினை
    மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன்
    (மந்தணம் - இரகசியம். வாசவன் - இந்திரன்)
    39
    484 இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும்
    அப்புத வாரநாள் அதிக மாயதென்
    செப்புதி என்றலும் தேசி கப்பிரான்
    ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான்.
    40
    485 புதன் வழிபட்ட வரலாறு - கொச்சகக் கலிப்பா 
    மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான
    புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை
    கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப்
    பதிக்கணணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ்செய்தான்
    41
    486 மேதகுசத் தியவிரதப் பெருமானும் வெள்விடைமேல்
    மாதுமையா ளுடனேறி வயக்கரிமா முகனிளையோன்
    காதல்புரி அருள்நந்தி கணநாதர் புடைசூழ
    வாதரமோ டெழுந்தருளித் திருக்காட்சி அளித்தருள
    42
    487 கண்டுபர வசனாகிக் கைதொழுது பெருங்காதல்
    மண்டியெழு மயிர்சிலிர்ப்ப மனத்தடங்காப் பேருவகை
    கொண்டுநில முறவீழ்ந்து குழைந்துருகி விழிதுளிப்பத்
    தொண்டனேன் உய்ந்தேனென் றெழுந்தாடித் துதிசெய்வான்.
    43
    488 நெடியோனும் மலரவனும் நேடரிய திருவடிகள்
    அடியேனுக் கெளிவந்த அருட்கருணைத் திறம்போற்றி
    ஒடியாத எண்குணங்கள் உடையானே எனையுடையாய்
    கடியார்சத் தியவிரத நாயகநின் கழல்போற்றி
    44
    489 என்றேத்தி எந்தையென யான்கிரக நிலைபெறவுங்
    குன்றாதுன் திருவடிக்கீழ் மெய்யன்பு கூர்ந்திடவும்
    இன்றாதி யென்வாரத் தித்தீர்த்தம் படிந்துபொறி
    வென்றோர்முன் னையின் இரட்டிப் பயனெய்தி வீடுறவும்
    45
    490 வேண்டுமென இரந்தேற்ப அளித்தருளி வெள்விடைமேல்
    யாண்டகையங் ககன்றனனால் அன்றுமுதல் அத்தீர்த்தம்
    பூண்டபுத வாரத்துச் சிறப்பெய்தும் புந்தியுறக்
    காண்டியெனுங் குரவனுரை காரூர்தி செவிமடுத்தான் 
    புந்தியுற - புத்தியில் பொருந்த. காரூர்தி - மேக வாகனத்தை உடையவன், இந்திரன்
    46
    491 இந்திரன் சத்தியவிரதம் அடைந்து வழிபடுதல்
    அப்பொழுதெ அரசுரிமை அம்மநநயோன் புநநவைத்துச்
    செப்பருஞ்சத் தியவிரதத் திருநகரின் விரைந்தெய்தி
    முப்பொழுதும் நீராடி முழுநீறு மெய்பூசி
    மெய்ப்படுகண் டிகைபூண்டு புண்டரமும் நுதல்விளங்க 48
    47
    492 உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன்
    திருப்பதங்கள் சிந்தித்துக் கோயிலினுள் சென்றெய்தி
    அருத்தியொடும் பூசனைசெய் தாராமை மீக்கொள்ளப்
    பெருத்தெழுந்த பேரன்பிற் பெருமானைத் துதிக்கின்றான்
    48
    493 இந்திரன் துதித்தல் - அறுசீரடியாசிரிய விருத்தம்
    நநநநநடி வினும் தேறா மலர்சிலம் படியாய் போற்றி
    அறைபுனல் உலகம் எல்லாம் படைத்தளித் தழிப்பாய் போற்றி
    சிறைநிறை வாசத் தெண்நநர் சத்திய விரத தீர்த்தத்
    துறைகெழு வரைப்பின் மேய சுந்தர விடங்கா போற்றி 
    மலர் சிலம்படி - விரிந்தும் சிலம்பை அணிந்தும் உள்ள திருவடி. 
    அறி - ஒலிக்கின்ற. சிறை - கரை. சுந்தர விடங்கன் - பேரழகன்.
    49
    494 அண்ணலே விடயத் துன்ப மாற்றிலேன் ஓலம் ஓலம்
    எண்ணறும் யோனி தோறுந் திரிந்தலைந் தெய்த்தேன் ஓலம்
    கண்ணினுள் மணியே வேறு கண்டிலேன் களைகண் ஓலம்
    புண்ணிய முதலே இன்பப் பூரணா ஓலம் ஓலம் 
    எய்த்தேன் - இளைத்தேன். களைகண் - பற்றுக்கோடு. 
    புண்ணிய முதல் - புண்ணியங்களுக்குக் காரணமானவன்.
    50
    495 புழுப்பொதிந் தநநம்பு பாயும் புன்புலை உடலே ஓம்பிக்
    கழித்தனன் கால மெல்லாம் கடையனேன் பொறிகள் யாண்டும்
    இழுத்திழுத் தலைப்ப நொந்தேன் இனித்தினைப் பொழுது மாற்றேன்
    சழக்கறுத் தருள்வாய் உன்றன் சரணமே சரணம் ஐயா 
    அசும்பு- அழுக்குநீர்க் கசிவு. புலை ? 
    இழிவு. சழக்கு - பொய்.. சரணமே சரணம் - திருவடிகளே புகலிடம்.
    இந்திரனுக்குச் சத்திய விரதர் காட்சி கொடுத்தல்
    51
    496 அடைக்கலம் அடியேன் என்றென் றழுதிரந் தயருங் காலை
    விடைத்தனிப் பெருமான் அன்னோன் பத்தியின் விளைவு நோக்கி
    நடைப்பிடி உமையா ளோடு நண்ணிநீ வேண்டிற் றென்னை
    எடுத்துரை தருதும் என்றான் இந்திரன் தொழுது வேண்டும்
    52
    497 வினைவழிப் பிறந்து வீந்து மெலிந்தநாள் எல்லை இல்லை
    அனையவற் றடிகேள் உன்றன் அடிதொழப் பெற்றி லேனால்
    நினவரும் தவத்தால் இன்று நின்னருட் குரிய னாயினேன்
    இனிவரும் பிறவி மாற்றி என்றனை உய்யக் கோடி
    53
    498 இத்தலந் தீர்த்தம் என்றன் பெயரினான் இலக வேண்டும்
    அத்தனே என்ன லோடும் அவ்வகை அருளி மீளா
    முத்திசேர் கணநா தர்க்குள் முதல்வனாந் தன்மை நல்கிப்
    பைத்தபாம் பாரம் பூண்ட பண்ணவன் இலிங்கத் தானான் 55
    54
    499 அற்றைநாள் முதலச் சூழல் இந்திர புரமாம் அங்கண்
    கற்றைவார் சடையீர் ஓர்கால் கண்ணுறப் பெற்றோர் தாமும்
    வெற்றிவேற் காலன் றன்பால் விரவிடார் கருவில் எய்தார் 
    இற்றதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார்.
    55
    500 சத்திய விரதம் காநநத் தருவளஞ் செறித லாலே
    சித்திசேர்ந் தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென்
    றித்திருப் பெயரின் ஓங்கும் எநநபரால் மாசு தீர்ந்த
    உத்தமக் கேள்வி சான்ற உணர்வடை உம்பர் மேலோர் 
    காரைத் தருவனம் - காரை என்னும் ஒருவகை மரங்கள் பொருந்திய காடு
    56
    ஆகத் திருவிருத்தம் 500
    ------

    8. புண்ணிய கோடீசப்படலம் (501-534)

    கலிநிலைத்துறை
     
    501 செச்சைச்சடை அந்தணர் தேமலர் சூழ்ந்த
    மெய்ச்சத்திய மாவிரத்தத்தல மேன்மை சொற்றாம்
    கச்சிப்பதி யிற்கவர் புண்ணிய கோடி மேன்மை
    நச்சிப்புகல் கின்றனம் நன்கு மதித்துக் கேண்மின் 
    (செச்சைச்சடை - சிவந்த சடை)
    1
    502 மின்பாய்பொழிற் சத்திய மாவிர தத்த லத்தின்
    தென்பாலது புண்ணிய கோடிநந் தேவன் வைப்பு
    வன்பாலர்கள் எய்தரும் புண்ணிய தீர்த்த மாடே
    என்போலி கட்கும் சிவப்பேறெளி தெய்து மங்கண்.
    2
    503 இறைவனிடத்துத் திருமால் வரம் பெறல்
    மலர்மேயவன் மேகநல் வாகன கற்பம் ஒன்றில்
    தலமேழ்புகழ் நாரணன் தாமரை யாளி யாதி
    உலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர் கோனைப்
    பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான்.
    3
    504 நம்மான் இரங்கிக் கடைக்கண்ணருள் நல்கி மாலோய்
    வம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங்
    கிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும்
    அம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன்
    4
    505 எந்தாயொரு நின்திருமேனி யிடப்புறத்து
    வந்தேன் அடியேன் உயர்நின்னருள் வண்மை தன்னால்
    நந்தாதயிவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும்
    பைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன்
    5
    506 அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன்
    இவ்வாற்றல் கச்சிப் பதியெய்தி யிலிங்கந் தாபித்
    தொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை யாற்றின்
    செவ்வேபெறு கிற்பை யெனத்திருவாய்ம லர்ந்தான்
    6
    507 திருமால் காஞ்சியில் இறைவனை வழிபடுதல்
    அங்கப்பொழு தேவிடை கொண்டருட் காஞ்சி எய்திப்
    பொங்கிப்பொலி தீர்த்த நறும்புன லாடிச் சூழும்
    தெங்கிற்பொலி இந்திர நன்னகர்த் தென்தி சைக்கண்
    துங்கச்சிவ லிங்கம் இருத்தி மெய்யன்பு தோன்ற
    7
    508 தெண்ணீத்தடம் ஒன்று வகுத்துத் திருந்த மூழ்கி
    வெண்ணீற்றணி அக்க மணித்தொடை மெய்வி ளங்கக்
    கண்ணீர்க்கம லம்பல கொய்து கருத்து வாய்ப்ப
    வண்ணீர்ச்சிவ பூசனை நித்தலுஞ் செய்து வாழ்ந்தான் 
    (கள்நீர்க்கமலம் - கண்ணீர்க்கமலம்- தெனாகிய நீறையுடைய தாமரை. வள்நீர் -வண்ணீர்- வளப்பத் தன்மை யுடைய)
    8
    509 கசேந்திரன் தொண்டு செய்தல்
    வேறு
    அன்னோன் ஏவல் மெய்ப்பணி ஆற்றும் அன்புந்தத்
    தன்னே ரில்லா வோர்மத வேழந் தானெய்தி
    என்நா யகனே என்பணி கொள்வாய் யென்றேத்திப்
    பொன்வாள் தோன்று முன்னர் எழுந்து புனலாடி
    9
    510 நாளலர் தாமரை பாதிரி வில்வம் நறும்புன்னை
    தாளுயர் சண்பகம் மல்லிகை தண்கழு நீர்மௌளவல்
    கோளறு கோங்கு முதற்பல கொய்து கொடுத்தென்றும்
    வேளை யளித்தவன் உள்மகிழ் வித்திடும் அந்நாளில் 
    (வேளை அளித்தவன் - மன்மதனைப் பெற்றவன், திருமால்.)
    10
    511 கசேந்திரனை முதலை பற்றல்
    ஓர்பகல் நீர்நிறை பூந்தடம் ஒன்றுறு பூக்கொய்வான்
    சீர்தகு திண்கரி சேறலும் அங்கொரு வன்மீனம்
    நீரிடை நின்று வெகுண்டடி பற்றி நிமிர்ந்தீர்ப்பக்
    காரொலி காட்டி யகன்கரை யீர்த்தது காய்வேழம் 
    (வன்மீனம் - முதலை. காரொலி - இடியொலி )
    11
    512 இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை ஓவாமே
    தெவ்வுடன் ஈர்ப்புழி யாண்டுகள் எண்ணில சென்றேகக்
    கைவரை ஆற்றரி தாயல றிக்கரு மாமேகத்
    தவ்வடிவோனை யழைத்தது மூல மெனக்கூவி
    12
    513 திருமால் கசேந்திரனைக் காத்தல்
    அண்ட ரெலாம்யாம் மூல மலேமென் றகல்போழ்திற்
    புண்டரி கக்கட் புண்ணியன் நன்புள் ளரசின்மேல்
    கொண்டெதி ரெய்திக் கரியர செய்துங் கொடுவெந்நோய்
    கண்டுளம் நெக்கான் அஞ்சலை யஞ்சேல் களிறென்னா
    13
    514 ஆழி யெறிந்தான் அதன்உயிர் உண்டான் கரியோடும்
    வாழிய காஞ்சி மாநகர் எய்திச் சிவபூசை
    வேழம் அளிக்கும் மேதகு பள்ளித் தாமத்தால்
    ஊழ்முறை யாற்றித் தவம்நனி செய்தங் குறைகாலை
    14
    515 எண்ணரு வானோர் இன்னமும் நாடற்கரியானைக்
    கண்ணினை யாரக் காண்டகு காதல் கைமிக்கங்
    குண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப்
    புண்ணிய வேதப் பழமொழி யோதிப் புகழ்கிற்பான்.
    15
    516 திருமால் துதித்தல் .கொச்சகக்கலிப்பா
    நீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய்
    ஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும்
    வேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம்
    பேராளா யெங்கள் பிரானே அடிபோற்றி
    16
    517 அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தட

Related Content

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (169

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (202