logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருமுறைகளின் மகிமை

(Greatness of Thirumurais)

 
புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே; 
	புத்த னார்தலை தத்தெனத் தத்துமே;
கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
	கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே;
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
	பழைய என்புபொற் பாவைய தாக்குமே;
சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
	செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.

தலைகொள் நஞ்சமு தாக விளையுமே;
	தழல்கொள் நீறு தடாகம தாகுமே;
கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே;
	கோள ராவின் கொடுவிடம் தீருமே;
கலைகொள் வேத வனப்பதி தன்னிலே;
	கதவு தானும் கடுகத் திறக்குமே; 
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே;
	அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே.

வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே;
	வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே;
மங்கை பாகனைத் தூது நடத்துமே;
	மருவி யாறு வழிவிட்டு நிற்குமே;
செங்க லாவது தங்கம தாக்குமே;
	திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே;
துங்க வான்பரி சேரற்கு நல்குமே;
	துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே.

பெருகும் வைகை தனையடைப் பிக்குமே;
	பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே; 
நரியெ லாம்பரி யாக நடத்துமே;
	நாடி மூகை தனைப்பேசு விக்குமே;
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே;
	பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே;
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே;
	வாத வூரர் வழங்கிய பாடலே.

 

Related Content

Thiruvasagam Part-1 - Romanized version

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்ந

Antiquity Of The Saiva Religion By R. A. Sastri

Chidambaram

Image Worship By Tamby Rajah Esq, Colombo