கருமங்கையாரமருமத்தரேத்துசெங்காந்தளைநி
கருமங்கையாரமருமத்தர்வாழ்கச்சிபோலவெப்பாங்
கருமங்கையாரமருமத்தர்வாய்மைகதிர்ப்பச்சென்ற
கருமங்கையாரமருமத்தமுங்கடந்தெய்தலென்றே.
|
1
|
என்பங்கம்பங்கம்படச்சூழெனிலெங்குஞ்செல்சரணுக்
கென்பங்கம்பங்கம்பதித்தபிரான்கச்சியெய்துவம்வா
வென்பங்கம்பங்கம்பிகையுறச்சேர்த்தவனெம்பெருமா
னென்பங்கம்பங்கம்பியாவண்ணமேத்துவமேழைநெஞ்சே.
|
2
|
சேகரந்தோயமுடித்தோயிருள்சிந்தையார்க்கப்பரி
சேகரந்தோயமலாகச்சியேகம்பசேரலர்நஞ்
சேகரந்தோயனலாவென்றுசிந்தை செய்யாதமலச்
சேகரந்தோயமனாள்வருங்காலையென்செய்குவரே.
|
3
|
குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே.
|
4
|
கைக்கடக்கும்பக்களிறாமைவாயிலுங்கைவசஞ்செய்
கைக்க்கடக்கும்பக்கமேகவொட்டாதெமர்காள்பொன்னுல
கைக்கடக்கும்பக்கபூஞ்சினைமாவுறைகம்பன்வெண்ண
கைக்கடக்கும்பக்கதிர்முலைபாகனைக்கண்ணுமினே.
|
5
|
மின்னலங்காரம்புபெய்யாதுறமிக்கிராசிகடம்
மின்னலங்காரகனிற்பினுமென்மின்னனார்குமின்கு
மின்னலங்காரம்பெறநடஞ்செய்வியன்கச்சியைச்சேர்
மின்னலங்காரப்பணியான்கம்பந்தொழுவீரன்பரே.
|
6
|
அன்பரவைக்களஞ்செல்லேன்கம்பம்பணியாதபுலை
யன்பரவைக்களந்தீமழுவோயென்றரற்றித்துழா
யன்பரவைக்களந்தன்புசெய்யேன்மெய்யறிவுகுறி
யன்பரவைக்களங்கத்தேனெவ்வாறருள்கூடுவதே.
|
7
|
தேங்கடியாரரவார்சடையார்திருக்கம்பந்தொழு
தேங்கடியாரரவந்திகழ்காஞ்சியிற்சென்றுசிவந்
தேங்கடியாரரவோசைசெவிமடுத்தேமினிமுந்
தேங்கடியாரரந்தைப்படுங்கும்பியிற்செல்வழிக்கே.
|
8
|
கேதனக்கேதனமன்வரிலச்சங்கெடுத்தருள்சங்
கேதனக்கேதனவல்லார்மதிகெடக்கட்டியரைக்
கேதனக்கேதனமாமுமைபாற்கிளர்வோன்கச்சிநி
கேதனக்கேதனவானான்கம்பந்தொழக்கேடிலையே. )
|
9
|
கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே.
|
10
|
திகழுமலத்தகத்தாளாடொழக்கம்பஞ்சேர்ந்துறைசோ
திகழுமலத்தகப்பட்டுழல்குண்டரைச்சேர்ந்திடுமூர்த்
திகழுமலத்தகத்தெங்கோன்றன்கோன்சிவஞானமளித்
திகழுமலத்தகட்டாள்வாயென்பார்க்கருள்செய்திடுமே.
|
11
|
செய்யவையம்புயம்வைத்தாளும்வேந்தர்திருவுங்கைப்பச்
செய்யவையம்புயமன்போலுநோக்கியர்தீமையறச்
செய்யவையம்புயமார்கச்சியேகம்பஞ்சென்றுபத்தி
செய்யவையம்புயனேர்களத்தாயெங்கள்சிற்பரனே.
|
12
|
பரவாதவந்தனையன்போல்வளர்த்துப்படித்துளறும்
பரவாதவந்தனையந்தோவிடேனினிப்பார்வெறுந்தா
பரவாதவந்தனைசெய்யடியார்தம்பணிசெயென்றம்
பரவாதவந்தனையீந்தனையேபழங்கம்பத்தனே.
|
13
|
பத்திக்கணங்கணமாநின்றுபோற்றும்பழவடியார்
பத்திக்கணங்கணவேகம்பத்தாய்பத்துமுற்றுகருப்
பத்திக்கணங்கணங்கெய்தலென்றன்னைபண்பாகியென்னா
பத்திக்கணங்கணபாதவிர்த்தாண்டருள்பாலிப்பையே.
|
14
|
பாலிக்குமரிக்குந்தாணிழல்வெப்பம்பணிமொழியாற்
பாலிக்குமரிக்குமாறுசெய்வார்படிந்தாடிடத்தன்
பாலிக்குமரிக்குடிஞைக்குமெய்தரும்பாக்கியங்கொள்
பாலிக்குமரிக்குவாழ்வானகச்சிப்பதிக்கம்பனே
|
15
|
பதிகம்பரம்பரர்காவதுகாஞ்சிபணிபணியென்
பதிகம்பரம்பரசாயுதமாம்பத்திசெய்பவரேற்
பதிகம்பரம்பரவுந்தொடைமூவர்பகர்ந்தருளும்
பதிகம்பரம்பரமானந்தமேயுருப்பார்ப்பவர்க்கே
|
16
|
பவனனகன்றலைவன்காஞ்சிவாழ்பழங்கம்பமெனும்
பவன்னகன்றலைஞாலமெலாந்தொழப்பட்டகடம்
பவன்னகன்றலைவற்றநெஞ்சோர்வினைப்பஞ்சினுக்கின்
பவன்னகன்றலைமாலையனென்றென்றுபாடுதுமே.
|
17
|
பாடலம்போதுநிறைசிவகங்கைபடிந்துநித்தம்
பாடலம்போதுதொறுமீசன்கம்பன்பரனெனும்வாய்
பாடலம்போதுகுழல்விழிநாலெண்பகுப்பும்வளர்ப்
பாடலம்போகுதுமென்னேமெவ்வாறருள்பற்றுதுமே.
|
18
|
மேதகரக்கருந்தேவரும்யாவரும்வேட்கும்பரி
மேதகரக்கருமன்பருள்வாய்வெண்டாளம்பொன்கோ
மேதகரக்கருந்துன்றியகாஞ்சியின் மிக்ககம்ப
மேதகரக்கருங்கூந்தலுநீயும்விரும்பினையே.
|
19
|
9 விரும்பாவலருடம்பாய்மங்கைமார்கொங்கைமெல்லிதழ்க்க
விரும்பாவலருடங்கும்படிகேண்மனமேயச்சந்த
விரும்பாவலருடனார்த்தழைவேயந்தவமெய்யறிவ
விரும்பாவலருடங்கேத்துகம்பாவென்றுவேண்டுவையே.
|
20
|
வையம்பணிசிலைவேதற்குன்பாலினிவாழியென்றான்
வையம்பணிசிலைதென்காஞ்சிகாற்றனன்மாலென்பறம்
வையம்பணிசிலைவாழிடமீர்க்குவட்காரைவெல்லும்
வையம்பணிசிலையேறாகக்கொண்டுவளர்கம்பனே
|
21
|
கம்பரந்தாதிநிலம்வலென்றாதிகளங்கண்முகங்
கம்பரந்தாதியைகஞ்சமன்னாள்பங்கனேமுத்தியே
கம்பரந்தாதிருப்பூங்கொன்றையோடென்புங்கட்டியென்சொற்
கம்பரந்தாதியுங்கைக்கொண்டவாகச்சிகாவலனே.
|
22
|
வலங்கொடியானத்தன்பாளர்கள்சூழ்செந்தின்மாநகர்ச்சே
வலங்கொடியானத்தனாங்காமக்கோட்டிமணாளனைநா
வலங்கொடியானத்தன்போலானென்றேத்தல்செய்வாமினிக்க
வலங்கொடியானத்தன்மன்வாதனையைமருவலமே.
|
23
|
வலமாயக்கண்டகரளவென்றேத்திடின்வல்வினைய
வலமாயக்கண்டகத்தேகுடிகொண்டுமநக்களைய
வலமாயக்கண்டகத்தான்பானுவாநின்றுவாழ்வித்திடும்
வலமாயக்கண்டகரூரெரித்தேகம்பம்வாழ்முதலே.
|
24
|
முதலையையாவிகரந்திபங்காத்தவன்மொய்மலர்த்தாண்
முதலையையாவிகவானஞ்சுமாடிமுழுமலர்விம்
முதலையையாவிகமழ்கஞ்சனாடவுமுற்படுமம்
முதலையையாவிகலனையென்னாண்டமுறைகம்பனே.
|
25
|
பன்னந்தனவனமாக்கேங்கம்பன்பழையோனெனும்பேர்
பன்னந்தனவனப்பிற்கழிவேம்பசுந்தாமரையின்
பன்னந்தனவனம்போற்பற்றறேமெப்படிகொல்வெள்ளி
பன்னந்தனவனம்போதனெய்தாப்பதஞ்சார்வதுவே.
|
26
|
சாறுவதீர்த்தநறுநீரிலேகம்பர்தாமுலவுஞ்
சாறுவதீர்த்தனென்றேத்திடுமேதியைத்தண்கருப்பஞ்
சாறுவதீர்த்தலைக்குங்காஞ்சிகாசிகமலைதண்கஞ்
சாறுவதீர்த்தவொப்பின்பெயர்நீங்கிடச்சார்மனமே.
|
27
|
மனவகங்கைக்கனத்தானனற்போற்றிமறுக்கவெய்யா
மனவகங்கைக்கனற்காரற்குமைக்குமகவைத்தொழ
மனவகங்கைக்கனக்கோனன்பர்தாடொழவைத்திகம்ப
மனவகங்கைக்கனத்தார்முத்தஞ்சேர்கச்சிவானவனே.
|
28
|
வானங்கனைகடலாய்ப்பரந்தான்வன்கரிகரக்க
வானங்கனைகடவாநடஞ்செய்கச்சிவாணன்பொன்னேர்
வானங்கனைகடமாவுரியான்கம்பமாவடிவாழ்
வானங்கனைகடனீதெனக்காட்டிவந்தாண்டனனே.
|
29
|
ஆண்டவனாரணன்கம்பனென்றேத்தவயன்சுரர்பல்
லாண்டவனாரணனோடடியேனுமணைந்திடிற்பே
ராண்டவனாரணந்தீசன்கணங்களிவ்வாலயத்து
ளாண்டவனாரணவுற்றானென்னாதுள்ளழைத்தருளே.
|
30
|
உள்ளலைவாளைதலைப்படுமோடையுடுத்தகச்சி
யுள்ளலைவாளைநன்னீலஞ்செங்காசுமிழ்கம்பத்தனே
யுள்ளலைவாளையரிக்கண்ணிகாமனுகுக்குமம்புக்
குள்ளலைவாளையதார்க்கொன்றையீந்தவளுய்வண்ணமே.
|
31
|
வண்ணஞ்சிவந்தவரேகம்பர்க்கார்மொழிவார்மறையின்
வண்ணஞ்சிவந்தவமானார்பிரான்முடிவாழ்மதிக்க
வண்ணஞ்சிவந்தவமேயீரவாடிநன்மாமைசெடும்
வண்ணஞ்சிவந்தவநங்கனுக்கேங்கிவருந்துவதே.
|
32
|
வருந்தலைவாமனனேமதன்சாபம்வணக்கியெய்ய
வருந்தலைவாமனனேயயனேமற்றைவானவர்யா
வருந்தலைவாமனனேகம்பனென்னுமெம்மான்கரந்தை
வருந்தலைவாமனனேகனுதற்கணைவாழ்த்துதியே.
|
33
|
துதிகானனந்தலையேகம்பவாழ்வையந்தோமிக்கிரந்
துதிகானனந்தலைமூன்றாளரைத்தொழுந்தேவெனவாழ்த்
துதிகானனந்தலைநீர்த்தடந்தீத்தன்மைசூளையருந்
துதிகானனந்தலையாம்பதியென்றெண்ணிச்சூழ்மன்னே.
|
34
|
மனமாலையாற்றவலைகடல்வீரமடியநல
மனமாலையாற்றனலியத்தருமன்மதன்மதச
மனமாலையாற்றண்ணளிசுரந்தாள்கச்சிமாநகர்க்கு
மனமாலையாற்றவனேகம்பமேவியவான்பொருளே.
|
35
|
பொருந்தங்குமரிக்குறும்பற்றிருவர்புகழ்சிவந்தாய்
பொருந்தங்குமரிக்குமுள்ளேவினையென்றுபோய்க்கம்பமே
பொருந்தங்குமரிக்குங்காறுமமர்பொன்னிசானவிதண்
பொருந்தங்குமரிக்குமேலாங்கம்பைப்புனலாடுநெஞ்சே.
|
36
|
சேயரியம்பகமானேபொருள்வயிற்சென்றவர்தாஞ்
சேயரியம்பகவார்த்திடுங்கார்வரிற்செய்வதென்னாஞ்
சேயரியம்பகவற்கீங்கெனாச்சிறுத்தொண்டர்தந்தஞ்
சேயரியம்பகம்பாவென்றென்றேத்துந்திறனல்லதே.
|
37
|
அல்லாக்குமாரணங்குற்றுயிர்த்தேங்குமருள்பொறைதை
யல்லாக்குமாரனன்னாரருளாரென்னுமம்பகலை
யல்லாக்குமாரமடர்கச்சிக்கம்பரருட்குரிய
னல்லாக்குமாரனையீன்பயனீதென்னுமாயிழையே.
|
38
|
ஆயாதிருக்கச்சியேகம்பநின்னடியார்க்கடியே
னாயாதிருக்கச்சிவமென்பதென்றதையாய்ந்துமற்றொன்
றாயாதிருக்கச்சிதானந்தமாயமர்வண்ணமளி
யாயாதிருக்கச்சிதுநீத்தறிவுருவாந்திருவே.
|
39
|
திருக்காமக்கோட்டமுதல்விபங்காண்டருள்செல்வன்வினை
திருக்காமக்கோட்டமமாற்றிடுங்கம்பன்றிருந்தெழின்மு
திருக்காமக்கோட்டகளித்தானென்றேத்திநந்தீவினைப்பி
திருக்காமக்கோட்டமுறும்பாம்பரைக்கசைதேவனையே.
|
40
|
வசனத்தவன்புரவாளனவன்மதியம்பசிய
வசனத்தவன்புரவிப்பகலோனவன்மன்னுசத்த
வசனத்தவன்புரம்வென்றோனவனவனேநலஞ்சு
வசனத்தவன்புரவோர்வாழ்கலிக்கச்சிவாழ்கம்பனே.
|
41
|
கங்கணம்பன்னகஞ்சாந்தமுநீறுகருதொருபா
கங்கணம்பன்னகருங்குழன்மேனிகழுதுகழ
கங்கணம்பன்னகமேகம்பமன்பரகங்கள்சிரங்
கங்கணம்பன்னகவில்லானுக்கோதக்கடவனவே.
|
42
|
கடவாதவன்பருவராதவன்பரகந்தொறுஞ்சங்
கடவாதவன்பருவராவினையிருட்கார்க்குவன்றேர்
கடவாதவன்பருவராலுகள்கம்பைக்கம்பனலங்
கடவாதவன்பருவராதளித்தெனைக்காத்தனனே.
|
43
|
தனம்பொடியாதுமுளையாதெயிறிந்தத்தையல்கம்பத்
தனம்பொடியாதும்வளராப்பிறைமுடித்தானுக்கென்பா
தனம்பொடியாதுதைசாந்தமெனுங்கொன்றைதந்திடின்ம
தனம்பொடியாதுதையாதென்னுமென்கட்டனித்துவந்தே.
|
44
|
வந்தனையாவதுஞ்செய்தறியாமனமேமறலி
வந்தனையாவதுபார்நரகென்னுமுன்வாய்த்திடுத
வந்தனையாவதுசெய்தார்க்கருண்மயிலூரருட்ப
வந்தனையாவதுலாகம்பனேயென்றுவாழ்த்துவையே.
|
45
|
வைகாத்திருப்பதிநாள்கோள்வழங்குங்கதிகளென்ற
வைகாத்திருப்பதிகைப்பதிகாசிதன்மார்பமன்றி
வைகாத்திருப்பதிமாற்பேறுமுன்வரைப்பாயினுஞ்செய்
வைகாத்திருப்பதியான்கச்சியேகம்பமாவடியே.
|
46
|
மாவடிவாயவதாரஞ்செயேகம்பவாணர்கெடு
மாவடிவாயவம்பிஞ்சியிலேவியமன்னர்புள்ளு
மாவடிவாயவர்காணாதஞானவரோதயர்த
மாவடிவாயவந்தீர்சிந்தையாரெம்மையாள்பவரே.
|
47
|
ஆனந்தவெள்ளம்புயத்தாள்பணிகம்பவாணவத்தீ
யானந்தவெள்ளமலவுடற்பாரமறிவுமிகை
யானந்தவெள்ளவதியேனுங்கன்மமடாதுருப்பட்
டானந்தவெள்ளந்துளைந்தாடவைத்தியருமணியே.
|
48
|
மணிகண்டவாதிரைநாளானரன்கம்பவாணனென்கண்
மணிகண்டவாதினிதாள்வோன்றனைப்புத்தர்வாமிகள
மணிகண்டவாதியைவென்றுண்மைதேர்மன்வியாகரண
மணிகண்டவாதிவிபுதர்கணாடொறும்வாழ்த்துமினே.
|
49
|
வாராரிடைமருமான்றொழவேகம்பமன்னிவளர்
வாராரிடைமருதூரார்தமதன்பர்மாரருங்கொல்
வாராரிடைமருவிப்புகல்வேனிவ்வருத்தமந்தோ
வாராரிடைமருளப்பணைபூண்முலைமாதரசே.
|
50
|
மாதேவனீசர்மொழியாற்சிறுதெய்வம்வந்தித்துவிம்
மாதேவனீசர்சதுர்வேதங்கடாமன்னுதற்புருடன்
மாதேவனீசனெனவுரியானவனன்பர்கட
மாதேவனீசலியாதுசெய்யேகம்பவைப்பிற்சென்றே.
|
51
|
வைப்பதுமத்தமுடிமீதுநாடகவர்க்கமெண்சு
வைப்பதுமத்தகமேலதுநாட்டமருவுகம்பம்
வைப்பதுமத்தமறுப்பதுபார்வையப்பாகன்வெண்பா
வைப்பதுமத்தனென்றாலென்னையோநங்கைமால்கொள்வதே.
|
52
|
மாலையடியடிகேண்முனந்தேடவைத்தாய்சமனா
மாலையடியடியென்னாமற்காத்துவளந்தருபா
மாலையடியடிதோறுஞ்சுவைபெறப்பாடமையின்
மாலையடியடியோங்கட்கருள்கச்சிவாழ்கம்பனே.
|
53
|
வாதங்கமண்டலநீரழலாய்க்கம்பமன்னிநின்ற
வாதங்கமண்டலம்பாயுறிபோய்வன்கழுப்பொருந்த
வாதங்கமண்டலத்தார்செய்யவென்றவர்வாழ்த்துமத்தா
வாதங்கமண்டலமூன்றுங்கடந்தென்மனத்தகத்தே.
|
54
|
அகத்தியனாரதன்பூவிற்குநாசியரிந்திடுசெய்
யகத்தியனாரதவத்தியென்னாதறுத்தான்முதலோ
ரகத்தியனாரதனாற்றொழுங்கம்பரறிவிற்செம்போ
தகத்தியனாரதமர்க்கொளித்தேமன்றிலாடுவரே.
|
55
|
ஆடானையம்பலமேயானைக்கம்பனையன்பிலர்பா
லாடானையம்பலமீவானைக்கண்டனளாகிமங்கை
யாடானையம்பலகொண்டுசென்றாளங்ஙனேநெகிழ்ந்த
தாடானையம்பலந்தோவெங்குமாயதலர்த்திருவே.
|
56
|
திருமேற்றளிவளர்கம்பன்பனியுந்திண்கோடையுங்கூ
திருமேற்றளியுடன்செய்தவத்தோர்க்கிறைசீரெழின்மு
திருமேற்றளிமுரல்கொன்றையன்றாள்சிந்தியார்சமன
திருமேற்றளிவிடவேறேதுறுதிதிருந்துவரே.
|
57
|
திருவோணகாந்தன்றளிவளரேகம்பன்சீர்க்கருக
திருவோணகாந்தன்றன்கோன்வரைப்பாற்சென்றியான்முன்கண்ட
திருவோணகாந்தனிபேசாமெனுந்திண்விரதத்தின்மு
திருவோணகாந்தம்பிறிதொன்றொவ்வாணண்பிற்சீரியனே.
|
58
|
அனேகதங்காவதமப்புகழக்கம்பவறுத்தருள்வா
யனேகதங்காவதம்பற்பலவோடியலைந்துவறி
யனேகதங்காவதன்பால்வரைப்பாற்றவமாற்றிக்கச்சி
யனேகதங்காவதனேயலையாவகைநன்னெறியே.
|
59
|
நெறிக்காரைக்காட்டுகுழலார்பின்சென்றுநிற்பீருயிர்போ
நெறிக்காரைக்காட்டுவிர்கம்பனுக்காலையினேர்ந்தநெறு
நெறிக்காரைக்காட்டுப்பள்ளிக்கோவுக்கன்புநிகழ்த்திக்கச்சி
நெறிக்காரைக்காட்டுச்செல்லீர்துனையாவருநீர்மையரே.
|
60
|
மையானப்பதிவளர்கச்சிப்பிரான்வருமேறெனுந்தன்
மையானப்பதியினையூர்ந்தருளேகம்பவாணனிள
மையானப்பதிநன்னிலாநீந்துவேணிமௌலியன்க
மையானப்பதினைந்துமூவேழுநீக்கவரந்தருமே.
|
61
|
தருமந்தரதமந்தேர்கல்விவேட்டுத்தரையினுருத்
தருமந்தரதமங்கெய்தர்ரெனுஞ்சொற்றனைக்கம்பம்வாழ்
தருமந்தரதமர்க்கெட்டார்வரைதனிற்கைபுயமாந்
தருமந்தரதமக்கூந்தற்குநீசென்றுசாற்றுகவே.
|
62
|
கவளக்கரியன்றுவேன்றாரன்பாற்சொன்னகட்டுரைக்காங்
கவளக்கரியன்றுகொல்லாமித்தெய்வங்கனையிருளாங்
கவளக்கரியன்றுதந்தநஞ்சுண்டிருள்கண்டனொன்றா
கவளக்கரியன்றுறைசூழ்கம்பன்வரைக்காரிகையே.
|
63
|
காரியங்காரணமாம்பஞ்சபூதக்கலப்பின்மயங்
காரியங்காரணங்கெய்தாவகையருள்காட்டுமவி
காரியங்காரணஞ்சூழ்கம்பனூரல்லுங்காய்பகலுங்
காரியங்காரணவோசையைக்காட்டுங்கலிக்கச்சியே.
|
64
|
கச்சித்தெருவில்வந்தார்நெகிழ்த்தாரென்களபமுலைக்
கச்சித்தெருளினர்யாவரென்பேற்குக்கல்லாலமர்யோ
கச்சித்தெருதினையூருஞ்செயுங்கன்னல்கல்லிபந்துய்க்
கச்சித்தெருவையுறுஞ்சூலமேந்திடுங்காணென்பரே. (65)
|
65
|
பராரைவரைவரைபோல்வளைக்குங்கம்பரைத்திருவம்
பராரைவரைவரையோவறியார்பன்னெடுங்கணக்கும்
பராரைவரைவரையத்தெரியார்படித்தோரிற்செம்மாப்
பராரைவரைவரையிட்டொழிப்பாரவ்விதண்டையர்க்கே.
|
66
|
தண்டகநாடகமாடுமெந்தாய்தண்குறங்கரம்பைத்
தண்டகநாடகலல்குல்பங்காபொற்றடவரைக்கோ
தண்டகநாடகராதிமண்காற்றங்கித்தண்புனலாந்
தண்டகநாடகம்வாழ்கம்பனேநின்சரண்சரணே.
|
67
|
சரமைந்தனங்கனொருங்கேவுமுன்கொன்றைதந்திருட்குஞ்
சரமைந்தனங்கண்மெலியச்செய்யார்பொய்மைசாற்றுபரா
சரமைந்தனங்கணபோற்றியென்றேத்தக்கைதந்தருளீ
சரமைந்தனங்கண்மகிழ்கம்பைசூழ்கம்பஞ்சார்ந்தவரே.
|
68
|
தவந்தானங்காலந்தொறுமறவார்தங்குகச்சியினெய்
தவந்தானங்காலன்றிறல்வாட்டுகம்பன்றன்வெற்பினர்கை
தவந்தானங்காலந்தருமென்செய்கேன்சந்தக்குன்றினும்வந்
தவந்தானங்காலன்பிலாமதன்றானும்வருத்துவனே.
|
69
|
வரகந்தமாதனவாழ்வோருணற்குமற்றின்பம்விற்ப
வரகந்தமாதனமாயதென்னேகம்பர்மைந்தமெய்த்த
வரகந்தமாதனவள்ளிகொண்காவென்றுவாழ்த்தவருள்
வரகந்தமாதனவெற்பாளர்போலுநம்மன்னவர்க்கே.
|
70
|
மன்னாதபோதனர்வாழ்கம்பவாணநின்வான்கருணை
மன்னாதபோதனகாபுகலேதென்முன்வந்துதரு
மன்னாதபோதனதாநரகாரவருந்துகென்னா
மன்னாதபோதனரியறியாதமெய்வாழ்வருளே.
|
71
|
வாவிக்கமலத்தடவாளைமாங்கனிவாய்கிழித்து
வாவிக்கமலச்சுரைதேக்கிநீந்தும்வண்கச்சிக்கம்பா
வாவிக்கமலக்குநாச்செற்றுக்காலன்வந்தெய்துமுன்ன
வாவிக்கமலத்துணைத்தாடந்தாட்கொளவல்விரைந்தே.
|
72
|
வல்லியங்கோட்டுமலைதிரிகானிருள்வாய்வருவான்
வல்லியங்கோட்டுவில்லார்மொழிவார்மலையீன்றமுலை
வல்லியங்கோட்டுநன்னீர்க்கம்பைவாய்த்தழுவக்குழைந்தார்
வல்லியங்கோட்டுடனார்த்தெழுமேகம்பம்வாழ்வரைக்கே.
|
73
|
வரையும்வரையுமுள்வாடாதிருந்ததடியவர்யா
வரையும்வரையுமவ்வேட்டன்பர்பார்த்திவனாரிவனை
வரையும்வரையுமென்னாதெனைச்சேர்த்துவரையுங்கம்பர்
வரையும்வரையுந்திடமுமுள்ளார்தந்தமாந்தழையே.
|
74
|
மாந்தருமங்கலவாவிடமாந்தியவ்வானவரு
மாந்தருமங்கலரிட்டேத்தவாழ்கம்பவாணனொற்றை
மாந்தருமங்கலவைப்பாக்கொண்டானடிவாழ்த்துபுவிம்
மாந்தருமங்கலமாகக்கொள்ளாம்வம்பின்மாழ்குதுமே. )
|
75
|
மாவலியேவலையாப்பகைமீன்களைமாட்டிமண்மேன்
மாவலியேவலைமாற்றினன்றாழ்கம்பமஞ்சுளரோ
மாவலியேவலைநோக்கிபங்காமகன்பெண்ணெனுநா
மாவலியேவலையேகொடியேன்வினைமாய்த்திடவே.
|
76
|
வேதனைவாய்ப்பணிவுற்றவமேமெலிவேனுமுற
வேதனைவாய்ப்பணியார்கம்பத்தேவெளிநின்றுவிண்டு
வேதனைவாய்ப்பணிசெய்துமெட்டாதெங்குமேவுசம
வேதனைவாய்ப்பணீயான்றடுத்தாண்டனன்மேதகவே.
|
77
|
தகரங்கந்திக்குங்குழலாயினியுயிர்தாங்கெனுஞ்சொற்
றகரங்கந்திக்குமருள்வாரலர்தபனன்றனைச்சேந்
தகரங்கந்திக்குமுகனைக்கொய்கம்பர்தடவரைப்போ
தகரங்கந்திக்குமரம்போற்கொல்யானைத்தனிமன்னரே.
|
78
|
தனித்தனமேயன்பர்க்காகிநின்றோன்றமிழ்க்கச்சிக்கம்பத்
தனித்தனமேயன்பராசத்திபூசனைகொண்டபுனி
தனித்தனமேயபசப்பொழியான்மற்றொர்சார்புமில்லேந்
தனித்தனமேயனமேயினியேதுய்யத்தக்கதுவே.
|
79
|
வேதாகமங்கலைகற்றதனான்முத்திவேட்பதறி
வேதாகமங்கலைநீர்போக்குமேவியன்பத்திவிளை
வேதாகமங்கலைமாமதிவேய்ந்தவெண்ணிற்றொளிச்சு
வேதாகமங்கலையாத்திசைகொண்டமெய்யேகம்பனே.
|
80
|
ஏகம்பத்தானையரிதிசையூர்புகழேறுகச்சி
யேகம்பத்தானையுரிபோர்வைவாழிடஞ்சூதமதா
மேகம்பத்தானையுகைத்தடியார்க்கெளிவந்தருளு
மேகம்பத்தானையரிக்கண்ணிபாகனுக்கென்பர்களே.
|
81
|
பரம்பரமானந்தவாதவர்சூழ்கம்பனேயிம்பரும்
பரம்பரமானந்தமாநிறைந்தோய்பசுஞ்சாபக்கரும்
பரம்பரமானந்தமொத்தகண்ணார்திறம்பாறவெங்கும்
பரம்பரமானந்தமுத்திதந்தாண்டருள்பாலிப்பையே.
|
82
|
பாலனஞ்செய்துதவார்கொன்றைமாலைதண்பாசடைமேற்,
பாவனஞ்செய்துறுதென்கச்சியேகம்பர்பானுவுமேற்,பாலனஞ்
செய்துதல்போலெய்துமாலையின்பைந்துளவோன், பாலனஞ்
செய்துகொல்வானென்றென்றேங்குமென்பான்மொழியே.
|
83
|
பாதகமஞ்சனவெற்பாகவீட்டுநற்பண்புவிரும்
பாதகமஞ்சனமாட்டாதுகைபன்னுநாப்புகழ்செப்
பாதகமஞ்சனகண்டாகம்பாபன்றிநாடரிய
பாதகமஞ்சனமின்னமுங்காணரும்பண்ணவனே.
|
84
|
வனப்புண்டரிகமுகத்தார்தமுற்பலமாமலரின்
வனப்புண்டரிகவர்கண்விரும்பேல்வணங்காயுரைசெய்
வனப்புண்டரிகலவாமலருண்டுவண்கம்பமுண்டு
வனப்புண்டரிகவுரியானுண்டேமனம்வாய்கையுண்டே.
|
85
|
கைத்தாயினையகன்றாயமும்யானுங்கவலமறு
கைத்தாயினையவருகாலன்போலுமோர்சண்டகன்றன்
கைத்தாயினையவென்கண்மணியேகக்கடவியெனைக்
கைத்தாயினையநற்கம்பந்தொழாரிற்கடுந்தெய்வமே.
|
86
|
கடமாதங்கம்பப்பிரானைச்சிவநிசிக்கண்வணங்கிற்
கடமாதங்கம்பற்பலசூழவாழ்ந்தங்குங்கஞ்சர்கண்ணர்
கடமாதங்கம்பணியாப்பூண்டுவைகிப்பின்கார்மலச்சங்
கடமாதங்கப்பற்றறப்போய்க்கலப்பர்திருவடியே.
|
87
|
திருக்கோவையாரணனைப்படைத்தேகம்பத்தேமகிழ்வோய்
திருக்கோவையாருளத்தோரன்பர்கூறிடச்சிற்றம்பலத்
திருக்கோவையார்கரத்தால்வரைந்தாண்டசெல்வாவருள்கூ
திருக்கோவையார்படைவேட்கோவின்றாற்றுமென்சேல்விழியே.
|
88
|
விழுமந்தவாதவர்சார்பேநயந்துவிவேகங்கள
விழுமந்தவாதவவேனோர்மதங்களைமேற்கொண்டங்கண்
விழுமந்தவாதவமென்றுமைகாட்டிவிளக்கினைநல்
விழுமந்தவாதவர்வெற்பாகம்பாவென்விளம்புவனே.
|
89
|
புவனம்பவனங்கமண்ணழலாவன்புள்ளூர்களர்காம்
புவனம்பவனங்களாவமர்வோன்வினைபொய்மலந்த
புவனம்பவனங்கணன்கம்பனென்றென்றுபோற்றிவிரும்
புவனம்பவனங்கனத்தனென்றேகொண்டபோதனையே.
|
90
|
போதுமினையம்பரேநடவாதிங்கும்பூம்பகழிப்
பொதுமினையம்பரத்தைப்பொருமிடையார்வசையும்
போதுமினையம்பரிகம்பர்தார்புரிந்தாரினியோர்
போதுமினையம்பரவையின்வீரமும்பொன்றுகவே.
|
91
|
கவலைக்கரும்பரவப்பூம்பகழிக்குங்கன்னியர்நோக்
கவலைக்கரும்பரவேர்நகையல்குலுக்காசைகொண்டு
கவலைக்கரும்பரவைக்குள்விழாதுகருணைபெரு
கவலைக்கரும்பரமானந்தமீந்தனன்கம்பத்தனே.
|
92
|
கம்பாகம்பாநதிப்பாற்பூசைசெய்கவுரிக்கருணோக்
கம்பாகம்பாலித்தகோவேமகளிர்கடிதடநா
கம்பாகம்பாமொழிகண்களென்னாதுன்கழலைமுறுக்
கம்பாகம்பாகமுறுந்தமிழ்பாடுங்கடன்பணியே.
|
93
|
பணியாதனந்தம் பரிசடியாரெதிர்ப்பட்டிடிற்செய்
பணியாதனந்தன் புகழநிற்பீரென்றுபாடிப்புத்தி
பணியாதனந்தந்து பசரியாதுகம்பாவரவப்
பணியாதனந்தஞ்ச மென்றழிவேனெப்படியுய்வனே.
|
94
|