உருத்திர மனுக்கண் முன்னரும் பின்னு
முரைக்குமீண் டாதலா லிவைதாந்,
தெரித்துற விளக்கு நின்றிருப் பெயராற்
சிறத்தலா லுருத்திர மோதல்,
கருத்தனா முனக்கே நிச்சயித் ததனாற்
கதம்பயி லெறுழ்விடைப் பாகா,
வருத்தியா லவற்றை யுரைத்ததே யீண்டைக்
களந்தறிந் திடச்செயு மெமக்கே.
|
(2)
|
உரைக்குமீ சானச் சுருதியாற் றெரிக்கு
முன்னிடத் தெய்துமென் பதுவே,
பொருத்தமாம் புருட சூத்தத்தின் முடிவு
புனைமலர்க் கருங்குழல் பாகா,
விருப்புறு மேனோர் பூசனை விதியுள்
விளம்பினு மவ்விதிக் கேற்பக்,
கருத்துறும் பொருட்டுப் பொருள்விரித்தறவோர்
காட்டினு மிதுவழுப் படாதே.
|
(22)
|
(அதர்வசிரசு.)
அனைத்துயிர் களுமாந் தன்மையும்
விண்ணோ ராற்றொழு தகைமையு மரனே,
யுனக்குரைத் தயன்மான் முதலியோ
ருனதுவிபூதியென் றோதியுன் பெயர்கட்,
கினப்பொரு ளுரைக்குங் கடமையாலுன்ற
னிறைமையே குறித்துநின் பெருமை,
சினத்தொகை யகலத்தேற்றுமா
லதர்வ சிரோபநிடதமுழுவதுமே.
|
(23)
|
நின்றுழி நின்று முடிவுகொள் ளாது
நீயறைந் தமைசொலுங்கிளவி,
யுன்றனிக் கூற்று முடிவிடத் துய்த்துக்
கொண்டுகூட் டிடுந்தசைத் தாயுந்,
தன்றன திடத்தே முடியுமீண் டெனுமிச்
சழக்குரை தேர்ந்திடிற் றலைவா,
புன்றொழிற் கயவர் தமதறி யாமை
புலமையாய்ப் பரிணமித் ததுவே.
|
(24)
|
ஈண்டுநீ யாரென் றுன்னுருக் கடாவு
மிமையவர்க் கேனையோருருவை,
யாண்டுநீ யிறுத்தாயெனில்வழு வாகா
தடுக்குமோ நீயுயிர்க் குயிராய்க்,
காண்டக நிறைந்து மவனென யாரைக்
கழறுளதோ பெரு கன்பு,
பூண்டவர்க் கெளியாய் கயவருக் கேனும்
பொருந்துமோ விச்சழக் குரையே.
|
(25)
|
அனைத்தினும் பிரமந் தனக்கதிட் டான
மறையுமந் திரங்களினானு,
முனற்கரும் பரிதி மண்டலத் துறையு
மப்பொருட் குமைவிழிகளிப்ப,
மனக்கொரு வடிவஞ் செவியறி வுறுக்கு
மனுக்களி னானுமெய் யடியா,
ரினத்தனே நீயே யெங்ஙணு முறைவோ
னென்பதை யறியலா மன்றே.
|
(26)
|
ஐம்பெரும் பூத மிருசுட ரான்மா
வன்றிவே றுலகிலை யவைதா,
முன்பெரு வடிவ மெனப்படு மன்றே
யோர்ந்துளோர்க் கிங்கது தன்நா,
லெம்பிரா னீயே நிறையதிட் டாதா
வென்பதற் கையமு முளதோ,
வம்பரா மூர்க்கப் பேய்கடா மயக்கான்
மாறுபா டுறப்பிதற் றுவரே.
|
(27)
|
(கைவல்லியம்.)
மலைகம டுணைவன் முக்கண னீல
மணிமிடற் றவனென வானோர் திலகனே
யுன்னைத் தகரமாங் குகையுட் டியானஞ்செய்
திடுமுறை செப்பி,
யலரவன் முகுந்த னீசனோ டெனையு
மையநின்விபூதியென் றுரைக்கு,
மலவிரு டுமித்துச் சிவச்சுடர் விளக்க
வந்தகை வல்லிய மறையே.
|
(28)
|
(தைத்திரியம்.)
மிருமது சுருதி கூறுமுன் றகர
வித்தையை வேறுள விசேடப்,
பருதிக ளானுந் தயித்திரி யந்தான்
பகர்ந்திடும் வள்ளலே மாயோ,
னாமுறு பொருளா முனைத்தியா னிப்பா
னவன்றனை நடுவணோ
திடுமவ் வகையறி யாத பேதைகண்
மயக்கான் மற்றொரு வாறுகொள் ளுவரே.
|
(29)
|
(விருகதாரணியாதி.)
மறைகளிற் றலைமை யெய்திய விருக
தாரணி யகமுதன் மறைகள்,
பிறவுநல் விதயத் துறுபொரு ளாமுன்
பெருமையே பேசிடு மன்றே,
யறவனே யிவற்றின் கருத்தெலா
முன்பா லடைவதேநியமமென் றுரைப்பார்,
திறனறிந் துயர்ந்தோ ராதலாற்
கயவர் தீமொழி யாற்பய னென்னே.
|
(30)
|
(மாண்டூக்கியம்.)
தன்பொருள் விரிக்கும் பிறசுரு தியினாற்
றன்கருத் தறிதருந்ததைத்தா,
நின்புடை யெல்லா முதன்மையு முண்மை
நிகழ்த்துமாண் டூக்கிய சுருதி,
யுன்கழ றருமீ சானமா மனுவோ
டுருத்திரோபநிடத மனுக்க,
ளென்பவு மேனை மனுக்களு மநேக
மிம்முறை விளங்கவோ திடுமே.
|
(31)
|
அறப்பெருங் கடலே யளவிலா வணக்க
மறைந்திடு மெண்ணிலா மனுக்கள்,
பிறர்க்குரித் தாகார் சிறந்ததோர்
பெருமை பேசிடும் வெளிப்படை யுனக்கே,
கறைப்பெரு மிடற்றாய் சூத்திரர்
முதலோர் காலினும் விழுந்திடு மூர்க்கர்,
குறித்துனை வணங்கக் கூசுவ ரந்தோ
கொள்ளுவ ரோதெரிந் தவரே.
|
(32)
|
மொழிந்திடு மெல்லா வணக்கமு மெல்லா
மொழிகளு முன்னையே சாரு,
மிழிந்திடாத் திருமா லாதிவிண் ணோரை
யீன்றவன் றானுநீ யெனவே,
பொழிந்தசீ ருனது தலைமையே யெடுத்துப்
புகழ்ந்துநின் பெருங்கணத் தலைமை,
விழைந்துளோர் தமது பெருமையுஞ்சால
விளக்கிடுஞ் சுருதிகள் பலவே.
|
(33)
|
(புராணங்கள்.)
எண்ணிலாச் சாகைக் குவால்களாற் றெரித்திங்
கெம்மனோர் மாசறத் தெளிய,
நுண்ணிய நியாய வொழுங்குக ளானு
நுவன்றுறத் தேற்றுநின் பெருமை,
பண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்
பன்முறை யுணர்த்திடு மன்றே,
கண்ணிலாச் சிறுவர் தமக்குமுள் ளங்கை
நெல்லியங் கனியெனும் படியே.
|
(34)
|
(பாரதம்.)
நின்பதாம் புயத்தி னருச்சனை யாற்று
நெறியினன் மாயவ னெனவு,
மன்புறு மீசன் மாலயன் றனக்கு மாதியங்
கடவுணீ யெனவு,
மின்புறக் கிளக்கும் பாரதந் தானு
மெந்தைநின் றலைமையே விரிக்கும்,
புன்புலை யேற்குந் தண்ணருள்
புரிந்த பூரணா னந்தமா கடலே.
|
(35)
|
(இராமாயணம்.)
அகந்தைநோ யறுக்கு மயனரி யரற்கு
மாதியாம் பகவனீ யெனவு,
மகஞ்செய விரும்பு மிராமனுன் னிடத்து
வைத்திடுங் குறிப்புரை யதனாற்,
றிகழ்ந்தவச் சுவமே தத்தினால்
வழுத்துந் தெய்வ நீ யென்நவும் விளக்கி,
யுகந்தவான் மீகி செய்தகாப் பியமு
முன்புக ழேவிரித் திடுமே.
|
(36)
|
(மிருதியோக நூல்கள்.)
பெரும்பெயர் மனுயோ கீச்சுரன் முதலாம்
பெரியருஞ் சாத்திரந் தெரித்த,
விரும்பதஞ் சலியார் முதலியோர் தாமு
மேனையோர்க் குரியபல் பேதம்,
விரும்புபல் வழியுங் காட்டியா வர்க்கு
மேற்பட நினைப்புகழ்ந் துரைப்பார்,
கரும்பனைக் காய்ந்த கடவுளே யிதனைக்
கண்டுமந் தோமயங் குவரே.
|
(37)
|
(வேதாந்தசூத்திரம்.)
பிறநய மாகும் புருடனங் குட்டப் பிரமிதி
தனைவிரும் பாம லறவனே யுனதீ சானநற்
சுருதி யாற்பர மென்றுநிச் சயித்தோன்
செறியும்வே தாந்தப்
பொருளினைத் தெரிக்குஞ் சூத்திரஞ்
செய்தவன் கருத்து,
மிறைவநின் பெருமை கண்டதே
யாகு மென்பராலாயவல் லவரே.
|
(38)
|
(கீதைகள்.)
பெருவழக் காகக் கீதைக ளகத்துப்
பேசுமோந் தத்துசத் தென்னு,
முரைதரு பதமும் பிரமமென் பதமு
முணர்த்திடும் பொருளுநீ யென்றே,
தெரிதரக்காட்டுஞ் சாத்திரங்களினும்
வெளிப்படத் தெரிந்தன மையா,
விரிதரு நீயே யுலகினுக் கெல்லா
மேற்படுந் தெய்வமென் பதுவே.
|
(39)
|
உனையலா லெல்லா விறைமையு முடையோ
னென்றுமற் றெவன்றனை யுரைப்பே,
முனிவிலீ சான முதலிய சுருதி
மொழிப்பொரு டானுநீ யன்றே,
யனையனா யிவைதாஞ் சமாக்கியை
சுருதி யலவெனு மயங்கிருட் குகையுள்,
வனைபுகழ் வேதத் துபயநூறேர்ந்த
மதியினோர் மதியகப் படாதே.
|
(40)
|
பலபல விடத்துஞ் சுருதியி லுனையே
பகர்ந்திடு புராணமுமிவ்வா,
றிலகுறத் தெரிக்கும் விச்சுவா திகனென்
றிப்பெயர் சிற்பராவெல்லா,
வுலகினுக் கதிக னீயெனப் பகுத்து
வெளிப்படத் தெளியவற் புறுத்திக்,
கலகஞ்செய் பொல்லாக் கயவர்தஞ்
செவிக்குங் கடுங்கனற் சலாகையா மன்றே.
|
(41)
|
இறைமையிவ் வாறு பகுத்திடத் தகாதே
லுனையொழிந் தியாண்டுமுற் றுறுமோ,
முறைபெரு மண்டந் தொருமய னரன்
மான்மூவரும் வேறுவே றாகிப்,
பிறழுறுங் கற்பந் தொறுநவ நவமாய்ப்
பிறந்துநின் னாணையி னடங்கி,
யுறைவரே யாதி யந்தமு மின்றி
யொழிவற நிறைந்தவான் பொருளே.
|
(42)
|
வைப்பெனப் பெறுமுன் பெருமையே முழக்கு
மறைகளும் பலபல மறைதே,
ரப்பொருள் விரிக்கும் புராணமு மவ்வா
றாகுமிவ்வளவினாற் றானே,
செப்பிடத் தகுமா னின்பெருந் தகைமை
தேருநர்க் கிதுவன்றி வேறு,
மெய்ப்படு மளவை வேண்டுமோ
வேண்டா விளங்கிழைக் கிடங்கொடுத் தவனே.
|
(43)
|
பிறர்க்குரித் தல்லாப் பெயர்களான் மறைகள்
பிஞ்ஞகா நாரணன் மேன்மை,
குறித்துரைத் திடுமா லேனைவிண் ணவர்க்குக்
கூறிடா திம்முறை யிதனான்,
மறைப்பொரு ளுண்மை தெரியலா
மென்னா மந்திரோ பநிடத முதலாந்,
திறப்படு மறைக ளோதிடாக் கயவர்
செப்பிடு முரைபயன் படாதே.
|
(44)
|
தாணுமா லயற்குத் தம்முளே யுயர்ச்சி
தாழ்ச்சிகூ றிடும்புராணங்கட்,
கேணுறுங் கற்பப் பிரிவினாற் போக்கென்
றியம்பிடு மச்ச புராண,
மாணலா ரிதனைச் சிவபுரா ணத்திற்
கப்பிர மாணமோ துவதா,
நாணிலா துரைத்துத் தமதறி யாமை
நாட்டுவர் நாடரும் பொருளே.
|
(45)
|
உன்னிறை மையினை முகுந்தன திடத்து
முவனவ தாரங்க ளிடத்துந்,
தன்னுடைக் கூறா மொற்றுமை
யதனாற் சாற்றிடு மாரண மொழிக,
ளின்னதிவ் வளவே யவற்றினுள்
ளுறையென் றியம் புவ ரருந்தவ முனிவர்,
மன்னனே யிதனைத் தேறிட மாட்டார்
ம**க்கமாங்# கடலழுந் துவரே.
#word cannot be made out/poor quality print
|
(46)
|
மாயவ னின்பா லேகனாய் முன்னர்
வந்துதித் தனன்பின்னரவன்றான்,
பாயுல கொடுக்கும் புருடனை யயனைப்
படைத்தனன் முந்துகா லத்தென்,
றேயுறு மகோப நிடதமோ திடுவ
தியாதது நின்னிடத் துறாதா,
லோய்விலா துருகி யுள்ளவல்
லவாக ளுள்ளகத் துறைமணி விளக்கே.
|
(47)
|
அறுக்குமோர் கற்பத் தயனொரு கற்பத்
தரியொரு கற்பத்திலரன்முன்,
பிறப்பனுன் பான்மற் றிருவரை முன்னோன்
பெற்றளித் திடுவன்மற் றிதனா,
லுறப்பெறு முயர்ச்சி தாழ்ச்சிக ளொருவர்க்
குள்ளதோ வில்லையென் றிவ்வா,
றிறப்புறா மறைகண் முழுவது
முணர்ந்தோ ரியம்புவ ரெம்பெரு மானே.
|
(48)
|
ஆங்கொரு சாரா ரயனரி யிருவர்க்
குருத்திர னதிகனா மெனவு,
மீங்கிவர் தம்பா லவன்பிறந் தானென்
பதுமவன் கூற்றினுக்கெனவு,
மோங்குமால் விடையா யுன்னுரு
நாம மொப்புமை செய்கைமற் றெல்லா,
நீங்கிடா துடையோ னாதலான்
மேலாய் நிற்பவனெனவுமோ துவரே.
|
(49)
|
தேவர் மூ வருக்குந் தலைமையொப்
புமைதான் செப்புக வன்றி மற் றிவருண்,
மேவரு மேலோ னுருத்திர னெனத்தான்
விளம்புக வெந்தவா றேனுங்,
காவல நீயே யாவர்க்கு மேலாய்
கடவுளென் பதுபெரு வழக்கே,
யோவுறா துலகெ லாம்பணி செய்யு
மொருவனீ யாகிநின் றனையே.
|
(50)
|
உலகெலாம் பணிசெய் திடத்தகுந் தலைமை
யொருவனீ யேரிது வறியாக்,
கலதிகள் வறிதே போக்குவர் வாணாள்
கடையனேற் கருள்பசு பதியே,
சுலவுதே வருக்கு மானுடர் போலச்
சுராசுரர் மானுடர் முதலாம்,
பலவுயிர் களுமுன் பணிவழி நிற்றற்
பாலன பசுக்கள்போ லன்றே.
|
(51)
|
மானிடர் தருமப் பெருமைதேர்ந் துரைக்கு
மாதவர் நின்னி**த்# தன்பு,
மானிடந் தரித்தோய் தரும்மார்க் கத்துட்
சிறந்தெடுத் ண்ணிய வாற்றான்,
மானிடப் பிறப்பைப் பெற்றுஞ்செய்
வினை***.# வயத்தராய் நினக்கன்பு செய்யா,
மானிடப் பதர்கட் கெந்த*** றேனும்#
வருங்கதி கண்டிலன் யானே.
words cannot be made out/poor quality print
|
(52)
|
இருபிறப் பாளர் நியதியாய் வழுத்தற்
கெடுத்தல்கா யத்திரி யன்றே,
வருமதற் குயர்ந்த தெய்வநீ யென்றே
வழுத்திடு மிதுபெருவழக்கே,
மருவரும் பொருளே யாதலி னுன்றாள்
வழிபடா விருபிறப் பாளர்,
புரியுநல் வினைக ளியாவையும்
புனையுந் தூசிலா வணியெனப் படுமே.
|
(53)
|
விப்பிரர்க் கெல்லா மங்கியிற் றெய்வ
மேவுமென் றுந்தழற்கடவுட்,
கொப்பிலா நீயே யந்தரி யாமி யென்னவு
முயர்மறை மிருதி,
செப்பிடும் வசன மிவ்விரு வகையுந்
திரண்டுநீ யடியனே னரகிற்,
குப்புறா தருள்வோய் விப்பிரர் தமக்குக்
குலதெய்வ மென விளக் கிடுமே.
|
(54)
|
வேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு
விசேடமா யிக்கலி யுகத்தில்,
வேதநீ தெய்வ மெனப்புரா ணங்கள்
விளம்பவு மன்பினாலுன்றன்,
பாததா மரையை வழிபடா தேனைப்
பண்ணவர் தமைவழிபடுவோர்,
பாதகமறையோர் மூடர்க ளவர்க்குப்
பயன்றரா பரதெய்வங் களுமே.
|
(55)
|
எந்தைநீ பொறுமை யுடையவன் கருத்துக்
கெளியவ னுள்ளருள் கையில்,
வந்தது போலுன் னடியர்க்கு விரைவின்
வாய்த்திடுமவர்பெறும் பேறுஞ்,
சிந்தைவேட் டதற்கு மேற்படப் பெறுவர்
தேர்ந்திடின் முழுதுமுன் னுடைமை,
யிந்தவாய் மையினாற் பயன்குறித் தவர்க்கு
மீண்டுநீ சரணெனத் தகுமே.
|
(56)
|
இம்மையிற் போக முனைவழி படுவோர்க்
கெண்ணரும் பெருமைய தென்ப,
ரம்மையி லேனை யுள்ளன நிற்க
வண்ணலே யுன்னனு சரர்க,
டம்முடைப் பதமு மரியயன் முதலோர்
தம்பதங் களுக்குமே லாகச்,
செம்மைதேர்ந் துரைப்ப ராகமத் துறையிற்
றிளைந்துமெய் யுணர்ந்தமா தவரே.
|
(57)
|
நிகழ்பிர கிருதி கடந்தமெய் வாழ்வா
நிரதிச யானந்த மதுவுந்,
திகழுநின் னருளாற் பெறுவதாம்
பிறவித் தீயநோ யறுக்குநன்மருந்தே,
புகலுதற் கேது மெய்ப்பொரு ளுண்மை
போதிக்கு ஞானமா மதுவு,
மகலிடத் துனது திருவருள் கிடைத்தா
லல்லது கிட்டுறா தன்றே.
|
(58)
|
வருந்திடா வகைவேட் டதனின்மேம்
பட்ட பயன்பெற வுதவிடவற்றாந்,
திருந்துநின் வழிபா டொருதலை யாகச்
செய்யவேண் டிடுந்தகைத் தாயும்,
பிரிந்துனை நீத்து வேறொரு தெய்வம்
வழிபட நாடுவர் பேயோ,
ரருந்தவப் பொருளே வெய்யவூழ்க்கொடுமை
விலக்குத லரிதரி தந்தோ
|
(59)
|
மருளினா லவிச்சை யாலவாத் தன்னான்
மதாபிமா னங்களால் வறிதே,
யொருவுக வாணா ளுனைத்தொழா மூர்க்க
ரொருவனேயாங்களெல் லோமுந்,
திருமகன் மனைவி முதலியோ ரோடுஞ்
சேரநின் னடியராய்த் தொழுதேம்,
பெரிதுமிம் மதியே பெயர்ந்திடாதிருக்கும்
பேறளித் தருள்கமற் றெமக்கே
|
(60)
|