3332
|
விநாயகர்.
பூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற்,
றாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு,
மாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங்,
காமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம்.
|
1
|
3333
|
ஆணைவிநாயகர்.
சீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட,
லார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர்,
நீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான,
வேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம்.
|
2
|
3334
|
மதவாரணப்பிள்ளையார்.
நாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க,
நாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண்,
ணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா,
நாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால்.
|
3
|
3335
|
பட்டீசர்.
மாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய
பாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்
காமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு
தாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம்.
|
4
|
3336
|
வெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு,
மிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே,
யொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத்,
தெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம்.
|
5
|
3337
|
ஞானாம்பிகை.
நயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு,
வியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,
பயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக்,
கயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம்.
|
6
|
3338
|
வண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக,
மொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந்,
தண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும்,
வெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம்.
|
7
|
3339
|
சபாபதி.
வந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச்,
சிந்துபல சீகரமந் தாகினிவெவ் வினைக்காடு தீத்த லேபோன்
முந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி
னந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம்
|
8
|
3340
|
சிவகாமசுந்தரியம்மை.
3340.
தொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே,
லண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது,
பண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங்,
கண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம்.
|
9
|
3341
|
தஷிணாமூர்த்தி.
இருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று,
மொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க,
ளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,
மொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால்.
|
10
|
3342
|
வைரவக்கடவுள்.
அரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ,
விரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப்,
பிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப்,
பரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி.
|
11
|
3343
|
அனுஞ்ஞைவிநாயகர்.
சடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு,
மிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான,
வடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன,
விடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம்.
|
12
|
3344
|
முருகக்கடவுள்.
இறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து,
பிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு,
மறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப,
ருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம்.
|
13
|
3345
|
திருநந்திதேவர். வேறு
இடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே
யடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்
கடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு
முடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர்.
|
14
|
3346
|
அகத்தியமுனிவர்.
வரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்
புரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்
கரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து
தரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம்.
|
16
|
3347
|
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
இறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு
முறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்
குறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற
நிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம்
|
16
|
3348
|
திருநாவுக்கரசுநாயனார்.
விடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த
கடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட
வடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்
தொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம்.
|
17
|
3349
|
சுந்தரமூர்த்திநாயனார்.
மறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே,
னிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண,
முறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,
கறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம்.
|
18
|
3350
|
திருவாதவூரடிகள்.
கரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று
வரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா
வுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்
பரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி.
|
19
|
3351
|
சண்டேசநாயனார்.
புரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்
விரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி
வரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்
தரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம்.
|
20
|
3352
|
அறுபத்துமூவர்.
மறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட
தறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்
றறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்
குறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ.
|
21
|
3353
|
பஞ்சாக்காதேசிகர்.
புகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே
மகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக
வகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்
திகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே.
|
22
|
3354
|
அம்பலவாணதேசிகர்.
நம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய
வம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்
வம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத
மும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே.
|
23
|
3355
|
சுப்பிரமணியதேசிகர். வேறு.
நன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன்,
மென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும்,
புன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ,
வென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே.
|
24
|
3356
|
திருத்தொண்டுபுரிவோர்.
சத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண்,
முத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச்,
சித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட,
புத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே.
|
25
|