சபாநாதர் துணை
வ. எண்.
பாடல்
வகை
ராகம்
தாளம்
1.
அப்படியிப்படி
பதம்
கலியாணி
அட
2.
அம்பர சிதம்பர
கீர்த்தனை
செஞ்சுருட்டி
ஜம்பை
3.
அம்பலவாணரே
கீர்த்தனை
கல்யாணி
ஏகம்
4.
அருமருந்து
கீர்த்தனை
மோகனம்
ஏகம்
5.
அழைத்து வா
பதம்
நீலாம்பரி
ஜம்பை
6.
அவனே தேவர்கள் கண்ட
கீர்த்தனை
பந்துவராளி
ஆதி
7.
ஆசை தீரவே
பதம்
எதுகுல காம்போதி
ஆதி
8.
ஆடிக்கொண்டாரந்த
கீர்த்தனை
மோகனம்
ஏகம்
9.
ஆடினதெப்படியோ
கீர்த்தனை
கலியாணி
ஏகம்
10.
ஆடிய பாதா
கீர்த்தனை
நாதநாமக்கிரியை
ஏகம்
11.
ஆடிய வேடிக்கை (தாளக் கீர்த்தனம்)
கீர்த்தனை
தோடி
சாப்பு
12.
ஆட்டுக்காலை
கீர்த்தனை
பியாகடை
ஏகம்
13.
ஆனந்தத் தாண்டவ (மூவடுக்கொலிக்கீர்த்தனம் )
கீர்த்தனை
கௌளிபந்து
திரிபுடை
14.
ஆராராசைப் பட்டார்
கீர்த்தனை
நாதநாமக்கிரியை
ஏகம்
15.
இனிச்சுமக்க முடியாது
கீர்த்தனை
காம்போதி
ஜம்பை
16.
இன்னமொரு ஸ்தல
கீர்த்தனை
தோடி
ஏகம்
17.
இன்னம் பிறவாமலே
கீர்த்தனை
நாதநாமக்கிரியை
ஆதி
18.
ஈசனே கோடி
கீர்த்தனை
சங்கராபரணம்
ஆதி
19.
உன் பாதமே துணை
கீர்த்தனை
பரஸ்
ஆதி
20.
உன்னை நம்பி
கீர்த்தனை
குறிஞ்சி
ஏகம்
21.
எத்தனைத் தவம்
பதம்
மோகனம்
அட
22.
என்னை யெனக்குத்
கீர்த்தனை
ஆனந்தபைரவி
ஏகம்
23.
என்று சென்று
கீர்த்தனை
புன்னாக வராளி
ஆதி
24.
ஐயனே நடனமாடிய (தாளக் கீர்த்தனம்)
கீர்த்தனை
கௌளிபந்து
ஏகம்
25.
கண்ட பின் கண்
கீர்த்தனை
சங்கராபரணம்
ஆதி
26.
கண்டவர் விண்டிலரே
கீர்த்தனை
ஆகிரி
ஏகம்
27.
கண்டாயோ மனமே
கீர்த்தனை
நாதநாமக்கிரியை
ஏகம்
28.
கனவிலு மறப்பதில்லை
பதம்
நீலாம்பரி
ஜம்பை
29.
கனவு கண்டு
பதம்
குறிஞ்சி
ஆதி
30.
கலந்து கொள்வேன்
கீர்த்தனை
ஆகிரி
ஆதி
31.
காணமுத்தி
கீர்த்தனை
கல்யாணி
ஆதி
32.
காணாமலிருந்தால்
கீர்த்தனை
கலியாணி
ஏகம்
33.
காணாமல் வீணிலே
கீர்த்தனை
காம்போதி
ஜம்பை
34.
கெட்டுப்போகாதே
கீர்த்தனை
முகாரி
சாப்பு
35.
சந்ததமுன் பாத
கீர்த்தனை
சௌராஷ்டிரம்
அட
36.
சபையில் வந்தெதிர்
பதம்
கல்யாணி
அடதாளசாப்பு
37.
சம்போ சங்கர
கீர்த்தனை
சௌராஷ்டிரம்
ஆதி
38.
சரசமிப்படி
பதம்
கலியாணி
ஏகம்
39.
சாமி தரிசனம்
கீர்த்தனை
தோடி
ஆதி
40.
சிதம்பரமே நினை மனமே
கீர்த்தனை
நாதநாமக்கிரியை
ஏகம்
41.
சித்தரின்ன முண்டோ
கீர்த்தனை
காம்போதி
அட
42.
சிற்சபை தனிலே
கீர்த்தனை
நீலாம்புரி
திரிபுடை
43.
சிவசிதம்பரமே
கீர்த்தனை
சாவேரி
சாப்பு
44.
சிவந்த பாதத்தை
கீர்த்தனை
கலியாணி
ஆதி
45.
சிவனை மறவாதே
கீர்த்தனை
முகாரி
ஆதி
46.
சுந்தர குஞ்சித பாத
கீர்த்தனை
ஆனந்தபைரவி
ஆதி
47.
சேவிக்க வேண்டுமையா
கீர்த்தனை
கல்யாணி
ஏகம்
48.
சொல்ல வாராய்
பதம்
சங்கராபரணம்
ஆதி
49.
தனித்திருக்க
பதம்
எதுகுல காம்போதி
ஆதி
50.
திருமுத்துப் பந்தலின்
பதம்
சௌராஷ்டிரம்
ஏகம்
51.
தீர்த்தமுதல்
கீர்த்தனை
கல்யாணி
ஜம்பை
52.
தூக்கிய பாத
கீர்த்தனை
ஆனந்தபைரவி
அட
53.
தெண்டனிட்டேன்
பதம்
யமுனாகல்யாணி
ஆதி
54.
தெரிசனஞ் செய்வேனே
கீர்த்தனை
பைரவி
ஆதி
55.
தெரிசனமே நினை
கீர்த்தனை
பியாகடை
ஏகம்
56.
தெரிசித்தவளவின்
கீர்த்தனை
கானாட சாரங்கம்
ஏகம்
57.
தெருவில் வாரானோ
பதம்
சௌராஷ்டிரம்
ஆதி
58.
தேடித் திரியாதே
கீர்த்தனை
நாகவராளி
ஆதி
59.
தேனார்மொழி
பதம்
நாதநாமக்கிரியை
ஏகம்
60.
தோத்திரம் செய் மனமே
கீர்த்தனை
கலியாணி
ஏகம்
61.
நடனங் கண்டபோதே
கீர்த்தனை
ஆகிரி
ஆதி
62.
நடிப்பவனே (தாளக்கீர்த்தனம்)
கீர்த்தனை
சங்கராபரணம்
ரூபகம்
63.
நானே முழுதும்
கீர்த்தனை
பந்துவராளி
ஏகம்
64.
நானே வலிய
பதம்
நாதநாமக்கிரியை
ஏகம்
65.
நினைத்து கொண்டால்
பதம்
நீலாம்பரி
ஆதி
66.
நிருத்தஞ் செய்தாரே (மூவடுக்கொலித்தாள கீர்த்தனம்)
கீர்த்தனை
ஆனந்தபைரவி
ஆதி
67.
நிர்த்தமிடுந்
கீர்த்தனை
பந்துவராளி
ஏகம்
68.
நீ தயவாயென்னை
கீர்த்தனை
பந்துவராளி
ஏகம்
69.
நேசமேன் பூசலே
பதம்
சௌராஷ்டிரம்
அட
70.
பாத தெரிசனஞ்
கீர்த்தனை
ஆனந்தபைரவி
ஆதி
71.
பிரிந்தாலும்
பதம்
நீலாம்பரி
ஆதி
72.
பூலோக கயிலாச
கீர்த்தனை
கலியாணி
ஜம்பை
73.
பேசவுமொண்ணாதோ
பதம்
ஆஷாடகன்னடம்
ஏகம்
74.
பேசாதே நெஞ்சமே
கீர்த்தனை
தோடி
ஆதி
75.
மனதறியாமல்
பதம்
காம்போதி
ஆதி
76.
மனதினிற் றயவானார்
பதம்
எதுகுலகாம்போதி
அட
77.
மனமுருகுது
பதம்
நாதகாமக்கிரியை
துருவம்
78.
மறவாதிரு நெஞ்சமே
கீர்த்தனை
புன்னாகவராளி
ஆதி
79.
மாணிக்க வாசகர் பேர்
கீர்த்தனை
ஆரபி
ஏகம்
80.
மாய வித்தை
கீர்த்தனை
கேதார கௌளம்
ஏகம்
81.
மையல் மிகவும்
பதம்
ஆனந்தபைரவி
ஆதி
82
யார்க்குத் தெரியுமையா
கீர்த்தனை
மோகனம்
அட
83.
வருவார் வருவார்
பதம்
கல்யாணி
ஆதி
84.
வேண்டாமிதெல்லாம்
பதம்
சாவேரி
திரிபுடை
85.
ஹரகர சிவ சிவ
கீர்த்தனை
ஆனந்த பைரவி
ஆதி
முத்துத்தாண்டவர் சபாநாதர் பேரில் பாடிய பதம்
பதம்-1
இராகம்- கல்யாணி- ஆதிதாளம்
பல்லவி
வருவார் வருவாரென்றென் மனதைத் தேற்றுவரல்லால்
வந்தாரென்பாரைக் காண்கிலேன்
அநுபல்லவி.
தெருவிற்கும் வாசற்குந் திரிவார் சகிமாரெல்லாந்
தில்லா புரீசர்முன்போய் நில்லாரேன் காதல் சொல்லார் ( வரு)
சரணங்கள்
1. நிலவி லுலாவச் சொல்வார் சலவைப் பன்னீரிரைப்பார் கலவிக்கு
வேளையென்பார் மலர்மெத்தையிதுவென்பார், சலமோவிது சிநே
கப்பலமோ நானேது செய்ய உலகாளுந்தில்லை யீசருலவியென்னை
யணைய (வரு)
2. நாமறியோமோ சாமி தாமதஞ் செய்வாரோ நீ மயங்காதேயென்
றுபூமலேற்றவறிவாற், காமனார் வந்தாலென்ன சோமனார் வந்தா
லென்ன பூமவர்வாடு முன்னே யேம சபேசரென்முன் (வரு)
3. கங்கைசடையிலாடச் செங்கையிற்றுடியாடப் பங்கயமெனுங்
கைகொள் மங்கையர்கள் கொண்டாட நங்கைசிவகாமி கொங்கை
சேர்புயமாட செங்கைவீசியாடச் சதங்கைபாதத்திலாட (வரு)
பதம்-2
இராகம்- நாதநாமக்கிரியை-ஏகதாளம்.
பல்லவி
தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர்
அநுபல்லவி
மானார் கரனே யம்பல வாணா பணிபூணா (தேனார்)
சரணங்கள்
1. அளகமதுசரிய முகமலர்வளை நெரியக் களபமுலை புளகமெழக்
கலவி செய்யத் தருணம், வளமைபெறுமக்கு மாலிகைமார் பாவதி
ரூபா, களமார் விடவூணா தில்லைக் கனகசபைவாணா (தேனார்)
2. அன்னை தான் வசை பேசவே துணையான மாதருமேசவே, கன்
னன் மாமதனெய்யவே மலர்க்கையிற் கங்கணந்தொங்கவே, எ
ன்னதான் செய்வாள் சொல்லீர் மயலெளிதல்லவே நில்லீர், மன்
னு சுந்தரர் தூதா தில்லை மன்றுளாடிய பாதா (தேனார்)
3. சந்தனஞ்சுடுதென்பள் மனந்தகைத்தால் பகையென்பள் அந்
தியுந் தணலென்பளொரு வல்லு நூறுகமென்பவள், கொந்தார்
கொன்றைத்தாமா நறுங்கோதை யம்பிகைவாமா இந்திரன் றிரு
மாலயன்றொழுமீசா நடராசா (தேனார்)
பதம்-3
இராகம்- ஆஷாடகன்னடம்-ஏகதாளம்.
பல்லவி.
பேசவுமொண்ணாத கோபமேதோ தென்புலியூர்
அநுபல்லவி.
ஈசரேயுமக்கு நானாகாதோ (பேச)
சரணங்கள்.
1. வருந்தினானழைக்கவுமாச்சோ உம்முடன் பொருந்தாத வென்
னைச்சேர்ந்தா லேச்சோ இருந்தவிடமெல்லா மவள் பேச்சோ அ
வள்கையின் மருந்து தான் தலைக்கேறிப்போச்சோ (பேச)
2. மாதர் வசையாலே மனம்நோமோ வென்னைத் தள்ள நீர் தாமோ பெ
ண் பழி வீணே போமோ, காதலறியாதவர் நீர்தாமோ சுந்தரனார்
தூதரே யிப்படி செய்யலாமோ (பேச)
3. கொந்தலர மளியிற்சேர்ந்தீரே சேர்ந்தணைந்து சந்ததம் நீங்காம
யல் தந்தீரே, அந்தமின்னார் தம்மைநினைந்தீரே சிவகாமசுந்தரிபா
கரே மறந்தீரே (பேச)
பதம்-4
இராகம்- கலியாணி - அடதாளம்.
பல்லவி.
அப்படியிப்படி செய்ததற்கொப்பினேன் தப்பிதமோ தில்லைத் தாண்டவராயா
அநுபல்லவி,
பொற்படியே கொடுத் தெப்படியாகிலும்
மெய்ப்புடன் வந்தென்னை யொப்புடன் கூடநீர் (அப்படி)
சரணங்கள்.
1. வாலையிலே தந்தச் சேலையிலே முத்துமாலையிலே பொன்னோலை
யிலேசெய்த, வேலையிலேயந்தி மாலையிலே தென்னஞ் சோலையி
லே காமலீலையிலேநீர் (அப்படி)
2. மேடையிலேமலர் சூடையிலேவிளை யாடையிலே யுறவாடையி
லே, நீராடையிலே யென்னைக்கூடையிலே முத்தாடையிலே கை
போடையிலே நீ (அப்படி)
3. நாளையிலே யென்னையாளயிலே சொந்தக் காளையிலேறியே வா
ளையிலே, யிந்தவேளையிலே நல்ல நாளையிலே கர்ப்பக் கோளையிலே
யாசை மீளையிலேநீர் (அப்படி)
பதம்-5
இராகம்-கலியாணி-ஏகதாளம்
பல்லவி.
சரசமிப்படி செய்யலாமோ சாமி நீர் சரசமிப்படி செய்யலாமோ
அநுபல்லவி
வரிசை பெறும் வினோதரே வளர் சிதம்பர நாதரே (சரச)
சரணங்கள்.
1. முலையிலே கையைப் போடுகிறீர் முகத்திலே முத்தம் நாடுறீர்
தலையிலே மலர்சூடுறீர் தழுவியே விளையாடுறீர் (சரச)
2. மாணமுறுமெங்கள் குலத்திலே மாதவர் வருமின்ப நலத்திலே
ஞானமுறுஞ்சிவஸ்தலத்திலே நாகரீக பொன்னம்பலத்திலே (சரச)
3. வேதந்துதித்திடும் நீதரே மிகுந்திடும் பிரக்கியாதரே
ஓதவருந் தில்லைவாதரே யுயர் சிதம்பரநாதரே (சரச)
பதம்-6
இராகம்-சாவேரி- திரிபுடை தாளம்
பல்லவி.
வேண்டா மிதெல்லாங் காரியமல்ல-தீண்டாதே நில்லும்
அநுபல்லவி
வேண்டா மிதெல்லாங் காரியமல்ல தீண்டாதே நில்லுந் தாய்தமர்கண்
டால், ஆண்டவரென்றும் பயப்படார் தில்லைத் தாண்டவராயரே (வேண்டா)
சரணங்கள்
1. இரவிலே வந்தென்னை மல்லிகைப் பூவினாலே யெறிந்து சருவித்
தாவி மடியைப் பிடித்துப் பண்ணாத சரசமே பண்ணுறீர்
கோவிலில்லாத வூரோவையோ பாவியேன் பக்ஷம்யார்சொல்
வார்கள் சேவிலேறும் நீதரே திருத்தில்லைநாதரே (வேண்டா)
2. ஆருமில்லா விடத்திற் பிடித்தாற் சேருவாளென்று பார்க்கிறீர்
அந்தத் தாருகாவனத்து மாதர் போலல்ல சமர்த்தி னானையா
ஊருமுலகுமறியச் சேலை தாருமிரவும் பகலும் வீட்டில்
வாருங் கூடியணையலாஞ் செம்பொன் மன்றுளீசரே (வேண்டா)
3. இன்னாரினியாரென் றெண்ணாமல் முன்னாளுறவா யிருந்தவரைப்
போற், பின்னாலேவந்து தழுவினாற் கண்ட பேரென்ன சொல்வா
ர், சொன்னாலுஞ் சற்றுமறிகிறீரில்லை முன்னால றிந்தவர் வருகிறா
ர் பாரும் பொன்னாடர் பணி கயிலைவாசரே புலியூரீசரே (வேண்டா)
பதம்-7
இராகம்-நீலாம்புரி-ஜம்பை தாளம்,
பல்லவி.
அழைத்துவா போடி யடிமானே யின்பம்
அநுபல்லவி
தழைத்த புலியூரிற் றாண்டவரைத் தாமே (அழை)
சரணங்கள்.
1. அன்னநடை மின்னே யேனிவ்வன்ம மென்னை யன்னையென்றும்
பார் உன்றன் தன்மம் சொன்னேனா னொரு வார்த்தை கன்மம்நா
ளுஞ் சுகமுறவே மருவாத ஜென்மமென்ன ஜென்மம் (அழை)
2. செம்பொன் மலரின்பமுடன் சூடி யுயர்செம்பவள வாயாலிசை
பாடிக், கும்பமெனுமிரு தனத்தை நாடி யென்னைக் கூடியவர் போ
னவிடந்தேடி யுறவாடி (அழை)
3. தில்லைவனந் தனிலிருக்குமீசர் எங்கள் சிவகாமவல்லியுடன் பிரி
யாதநேசர், அல்லலறுத்தாண்டவர் பிரகாசர் இப்போது அன்ன
மேநீர் சொன்னால் வருவாரென் பிராணேசர் (அழை)
பதம்- 8
இராகம்- எதுகுல காம்போதி- ஆதிதாளம்.
பல்லவி
ஆசைதீரவே யென்னை அணைந்தா லொண்ணாதோ
அநுபல்லவி
பூசைபுரியுந் தில்லை ஈசா சபை நடேசா (ஆசை)
சரணங்கள்
1. சந்திரனைக் கண்டு நீல மந்தரங்கமானதுபோல் எந்தன் மீதிற்பட்
சம் வைத்து வந்தாலொண்ணாதோ, கந்தர்ப்பன்கை புஷ்ப பாண
மந்தி நேரமே வருமே தந்திரமோ செய்வதெல்லா மந்திர சபை ந
டேசா (ஆசை)
2. தேடிய வலவன்பேடு கூடி மருவாதிருந்தா னீடியவுலகிற்பே
டோடி நின்றுய்யுமோ, நாடியே வந்தவென் மேல் மோடி செய்யலா
குமோ பாடிய கின்னரர் போற்ற வாடிய சபை நடேசா (ஆசை)
3. கரு மேகங்கண்டு மயிலொரு மைப்படு லீலை போற் கரிசனமுடன்
சேர்தல் பெருமையதல்லவோ திருவுள மகிழ்ந் தென்னை மருவ
ணை மீதினிற் சுருதிப் புகழுந் தில்லை கனக சபை நடேசா (ஆசை)
ஏசல்-பதம்-9
இராகம் - சௌராஷ்டிரம் - ஏகதாளம்,
பல்லவி.
1. திருமுத்துப்பந்தலின்கீழ் சுருதிப்பங்கயன் முதலோர்
இருபக்கந் தொழவேவரும் இவரார் சொல்லன்னே
ஒருபத்தன் செயுந் தவத்தைக் கருதி நிருத்தங் காட்ட
வருகிற பேரம்பல வாணர் காண்மின்னே
2. வடகயிலைதனின் மூன்று சுடருமுதித்தது போல
இடபமிசை யேறிவரு மிவரார் சொல்லன்னே
கடல்கடையும் போதெழுந்த விடமமுது செயுநேசர்
நடன பராபர தில்லை நாயகர் காண்மின்னே
3. சுரரெனு மூவாயிரவர் திரளு முனிவருஞ் சூழ
இரதமிசை யேறிவரு மிவரார் சொல்லன்னே
சரமதராஜனு மூன்று புரமுமெரிபட முனிந்த
பரமசிவகாமிவல்லி பங்கர் காண்மின்னே
4. கந்தருவரிசைபாட தந்திர நான் மறை முழங்க
இந்திரவிமானத்தில் வரு மிவரார் சொல்லன்னே
அந்திவடிவினவர்தொண்டர் புந்தியில்வாழ்வர் வால
சந்திரசேகர ரானந்தத் தாண்டவர் காண்மின்னே
பதம்- 10
இராகம்-சௌராஷ்டிரம்- அடதாளம்
பல்லவி.
நேசமேன் பூசலே னாசையேன் பேசுரீர்
நேசமேன் பூசலே னாசையேன் பேசுரீர்
அநுபல்லவி
வாசஞ்சேர் தில்லைநட ராஜரே முந்தவும்மை
மோசஞ் செய்தானே யந்த ரோசம் போதாதோ (நேசமே)
சரணங்கள்.
1. வாடியென் றழைத்துற வாடிமுகவிச்சைகள்
பாடியவள் மேற்சிந்து பாடிக்கொள் வீரல்லாற்
போடியென்கிறபேச்சைப்போடீர் முன்னமும் பேய்க்கூத்
தாடியென்பதுமெய்க்க வாடிய பாதரே (நேசமே)
2. கொம்பனையாள் குதிரைக் கொம்புரண்டானையொரு
கம்பஞ் சேர்த்தீர் சேர்த்த கம்புகன்றிடக்கண்டீர்
அம்பலவாணரேவூ ரம்பலேனுமக்கிப்போ
தென்போலுமேயொருத்தி யின்பஞ் செய்யாளோ (நேசமே)
3. பூண்டவாசையானேசம் பூண்டபோதேயெனக்கு
வேண்டாதவளைத் தீண்ட வேண்டாமென்றேனே
ஆண்டாரே நீரெனைப்பெண் டாண்டாற்றலைக்கு மேலே
தாண்டவாறீரோ தில்லைத் தாண்டவராயரே (நேசமே)
பதம் - 11
இராகம்-நாதநாமக்கிரியை-ஏகதாளம்.
பல்லவி.
நானே வலிய வந்தேனே கோபம்
அநுபல்லவி.
ஏனோவம்பலத்துறை வானே தூயோனே (நானே)
சரணங்கள்.
1. நினது மனதின் வன்மங்கண்டு நெஞ்சினினையா தெல்லா நினைந்
துநின்று துவண்டு , கன தனமெனும் ஸ்தனம் ரண்டு நல்லகாணிக்
கையென வலங்காரமாகக் கொண்டு (நானே)
2. தூறேதுமில்லையே யென்மீது வீணே தூறுசொல்லிப் பிரிந்துவந்
ததேசூது, வேறேயொருவரைத் தூது போகவிடுத்தாற்றீராதெ
ன்று வேண்டியிப்போது (நானே)
3. தில்லையம்பலத்திலாடிநின்ற சிவனே நீர் வாராத சேதியை நாடி
முல்லையமளிமேற்கூடிக்கொண்ட மோகத்தையுன்னிமுயங்க
வேதேடி (நானே)
பதம்-12
இராகம்-நீலாம்புரி-ஜம்பை தாளம்.
பல்லவி.
கனவிலு மறப்பதில்லை மானே நாளுங்
அநுபல்லவி.
கனக சபையிலாடுங் கடவுள் பதந்தானே (கனவிலு)
சரணங்கள்
1. ஒன்றாக நின்ற சுந்தரமும் மூவுலகுக் குயிர்க்குயிராகியே யுணர்த்
தும் விசித்திரமுங், குன்றா தருளளிக்குந்திரமு-மென்னைக் கூடி
விளையாடிய வுபாய தந்திரமுங் (கனவிலு)
2. இன்பவெள்ளத்தழுத்துமிங்கி தமுங் கிருபையெங்கெங்குந் தானா
யிருந்தில குஞ்சிதமும், அம்பரத்திலாடிய பொற்பதமும் புஷ்பவ
ணை மீதிலெனை யணைந்தவனுபோக விதமுங் (கனவிலு)
3. பரமகல்யாண சர்வேசா யெங்கள் பார்வதியெனுஞ் சிவகாமிபி
ராணேசா, கருணை சந்திரசேகர விலாசம் நாளுங் கனகசபையில
ன வரதமும் நடேசா (கனவிலு)
பதம்-13
இராகம்-எதுகுல காம்போதி - ஆதிதாளம்.
பல்லவி.
தனித்திருக்கப் போகாது மானே தில்லை
அநுபல்லவி.
வனத்து நடராஜர் தம்மை மருவாம னானே (தனித்)
சரணங்கள்.
1. காமன் பெருங்கழை வளைத் தெய்யப்-பூர்ணக்
கலைநிறைந்த மாமதியுந் தழல்மாரிபெய்யச்
சாமமெல்லாங்குயிற் கூவி வைய-வென்
றலையிலெழுத்தோவிதென்றெண்ணி மனம்நையத் (தனித்)
2. இரவோர் யுகமாகுதெங்கே செல்வேனினி
யென் தரத்துப்பெண்கட் கிதையேதென்று சொல்வேன்
கரவிலெய்யுமதனை யென்று வெல்வேன்-வீறு
காதல் வெள்ளந் நீந்தென்று கலந்தணைந்து புல்வேன் (தனித்)
3. திங்கள் கங்கையரவணியும் வேணிப்- புலியூர்ச்
சிவகாமவல்லியிடப் பாகமாக்கணீ
செங்கமலப் பாதத்தின் மனமூணி - நறுந்
தேன்கமழும் பூங்கொன்றைத் தொடையதனைக்கேணி (தனித்)
பதம்-14
இராகம் -கல்யாணி - அடதாளசாப்பு.
பல்லவி.
சபையில் வந்தெதிர் நில்லடி அவரைக் கிட்டித்
தழுவ வுன்றர மல்லடி
அநுபல்லவி
உபசரிப்பேன் சொல்லடி அம்பலவாண னருளிவரிந்தெனை வெல்லடி
சுபதினமென்றனக்குச் சொற்பமாய் வந்ததிப்போ
அபிநயம் பிடித்துக் கொண்டலைந்து நீ திரிகிறாய் ( சபை)
சரணங்கள்.
1. வழக்கமென்றறியா யோடி நாலுபேர் சொன்ன வார்த்தையுங்கு
றியாயோடி இழுக்குக்குச் சிரியாயோடி தினவெடுத்தா லிடம் பார்த்
துச் சொறியாயோடி உழக்கிற் கிழக்கு மேற்கென்றுண்டாக்கு
கிறாய்த் தேடி மழைக்கொதுங்கி மனைக்கு வழக்கிடுகிறாய் வாடி (சபை)
2. தெருவிற் பெண்களைக் கூட்டுறா யொளித்திருந்து திருடக்கன்னக்
கோ தீட்டுறாய் கருதித் திரகன் மூட்டுறாய் விரித்துனது கடினத்
தொண்டையைக் காட்டுறாய்ப் பெருமைக்கொரு சரிகைப் புடை
வையிரவல் வாங்கித் தரமறியா துடுத்தித் தசுக்குகின்ற சித்ராங்கி (சபை)
3. இடக்குத்தொழில் மறக்குமோ வடியுனக்கு வினிமேற்குணம் நிறக்கு
மோ எடுத்தவடி சிறக்குமோ உன்னிடத்தினி லின்ப நயம் பிறக்கு
மோ முடுக்காயம்பலத்தானை முயங்குவேனானென்று திடுக்கி
ட்டெவருமெச்சத் தென்பாய்ச் சொல்கிறாய் நன்று (சபை)
பதம் - 15
இராகம் - சௌராஷ்டிரம் - ஆதிதாளம்.
பல்லவி
தெருவில் வாரானோ எனைச் சற்றே-திரும்பிப் பாரானோ
அநுபல்லவி.
உருவிலியொடு திரிபுரத்தை யுமுடனெரி செய்த நடன ராஜன் (தெரு)
சரணங்கள்.
1. வாசர் முன்னில்லானோ வெனக்கொரு வாசகஞ் சொல்லானோ
நேசமாய்ப் புல்லேனோ கழைவைத்த ராசனை வெல்லேனோ, தே
சிகனம்பலவாண நடம்புரி தேவாதிதேவன் சிதம்பரநாதன் (தெரு)
2. போது போவதில்லையே யெனக்கொரு - தூது சொல்வாரில்லையே
ஈதறிந்தேனில்லையே யென்மேற் குற்றமேதொன்றுமில்லையே
வேதனுமாலு மூவாயிரருந் திரள் விண்ணவருந் தொழவாடிய
பாதன் (தெரு)
3. மெய்யென் றிருந்தேனே -யவனிட சைகையறிந்தேனே -மையல்
தணிந்தேனே -பசந்திடு மெய்யுங் குளிர்ந்தேனே வையகமுய்யப்
பதஞ்சலி போற்றிட வாழுங் கனகசபை நடராசன் (தெரு)
பதம் -16
இராகம்-குறிஞ்சி - ஆதிதாளம்.
பல்லவி.
கனவுகண் டெழுந்திருந்தேன்-மானே -தில்லை
அநுபல்லவி
அனவரத நடராஜர்க் கன்புசெய்ய நானே (கனவு)
சரணங்கள்
1. தெருவினிற் பவனி வந்திடவும் கண்டு தெரிசித்த ளவிலென்றன்
சீவன் வாதைப்படவும் ஒரு கிளியைத் தூது போக விடவுமாசை
யுள்ளத்திலடங்காம லோடிப் போய்த் தொடவும் ( கனவு)
2. கண்டவுடனவர் மீதில் விழவும் வாசம் - கமழ் கொன்றை மாலை தனிற்
காதலுற்றழவும் - புண்டரீக பாதத்தைத் தொழவும் கொங்கை
பூரிக்க வுடைதாழப் புறத்தாரிகழவுங் (கனவு)
3. அங்கசன் சமர் செய்தறவு மெத்த வாறாப்பேராசை யந்நேர முந்து
துறவுஞ் செங்கமல வணை மீதுறவுந் திருத்தில்லைத் தாண்ட
வரைச் சேர்ந்தின்பம் பெறவுங் (கனவு)
பதம்-17
இராகம் -சங்கராபரணம்-ஆதிதாளம்.
பல்லவி.
சொல்ல வாராய்-சேதி சொல்ல வாராய்
அநுபல்லவி.
சொல்லவாராய்சேதி சுந்தரமாமின்னே
தில்லை நடராசரென்னைச் சேர்ந்த மாமையல் (சொல்ல)
சரணங்கள்.
1. அடுத்தடுத்தே வந்தே யந்தரங்கம் பாராட்டித்
துடுக்காக மோடி செய்தாற் சொல்வதேது மானே (சொல்ல)
2. ஆசையாகினாலென்ன வதுர்ஷ்டமுன்னிலை வேணும்
பேசவுமறியாத பெண்பேதை நானடி (சொல்ல)
3. இருவருமொருமித் திருந்த சுகங்களெல்லாம்
ஒருவரறிவாரோ வூரிலெலா மலராகுதே (சொல்ல)
4. சம்புசிவகாமி பங்கர் சந்திர சேகரர்
செம்பொன்னம்பலவாணர் சேர்ந்தணைந்த மையல் (சொல்ல)
பதம்-18
இராகம்-ஆனந்தபைரவி - ஆதிதாளம்.
பல்லவி.
மையல்மிகவுமிஞ்சுதே சுவாமி நீரிப்போ
மருவாதிருந்தா லென்செய்வேன்
அநுபல்லவி
வையகம் புகழ்தில்லைவன நாதரேயென்சாமி - மருமலர்மெத்தைமீதி
லிருவருமாயிருந்து -சருவிச்சுருள் கொடுத்து மருவிமுத்து முத்தாட (மையல்)
சரணங்கள்.
1. வரிக்குயி லேழிசைகூவத் தென்றலுந்தாவ மன்மதன் மலர்க்க
ணைதூவ, உருக்குமதி தனிலே யுலைவாய் மெழுகது போல் உருகு
தென்றனுளம் பரவசமாயுடலம்-வருகுது காமவெள்ளம் பெரு
குது வரவர (மையல்)
2. களப கஸ்தூரிகள் பூசத் தேவரீருடன் கலந்திங்கிதமொழிகள்பே
ச, அளகமலர்கள் வீச வணை தனிலேயிருந்து அந்தரங்கமாகியெ
ந்தனுள மறிந்து-சிந்தைமகிழ்ந்து நீ ரிந்த நாளிற் சேர வர (மையல்)
3. தில்லை மூதூரில்வாசரே மூவாயிரவர் தினந்தினந்தொழுமீசரே
வல்லிசிவகாமி மகிழுஞ் சபேசரே மாதவர் பணியும் பொற்பாத
ரே, தமிழ்க்கொரு நீதரே யென் பிராணநாதரே வரவர (மையல்)
பதம் -19
இராகம்- எதுகுலகாம்போதி- அடதாளம்.
பல்லவி.
மனதினிற் றயவானார் தினந்தினமிப்படி வருமோ வாராதே
அநுபல்லவி.
தனக்குக் குறைவுண்டோ வென்கிறீர்தேவர்சித்த
மெனது பாக்கியந் தில்லைக் கனக சபேசரே (மனதினிற்)
சரணங்கள்.
1. உருமத்துக்கமலம் போற்றிரு முகம்புலர்வானே னொருமனதா
யிருந்தால் பெருமூச்சு வருவானேன், அருமந்த மனது தான்தெ
ருவெங்குமுலவுதே பெருமைக்குத் தழுவுவதுரிமை யோசாமி (மனதினிற்)
2. எவர்மோகந் தனில் வீழ்ந் தெவர்மயமானாலுங் கவரியின் காற்
றைப்போற்றுவள வேண்டாமோ, அவரவரிச்சை வைத்தான வா
சருசி போல நவபலங் காணுமன்றோ சிவகாமிபிராணேசரே (மனதினிற்)
3. தயவானாலடிக்கடி சுயமா வரவேணும் பிரியவார்த்தை பேசினார்
செயலாவதேது , அயலாகவெனைத் தள்ள நியாயமோ தேவர்க்கு
மயலார்க்குஞ்சரியே நன்னய சபைவாணா (மனதினிற்)
பதம்-20
இராகம்-நீலாம்புரி - ஆதிதாளம்,
பல்லவி.
நினைத்துக் கொண்டால் சகிக்கப் போமோ தனக்குத்தானே
நிகராகிய சாமி செய்விந்தையை
அநுபல்லவி
அனைத்துலகுந் துதிக்கு மம்பலவாணரென்ற
னந்தரங்கமறிந்தே தந்தவின்ப சுகத்தை (நினைத்)
சரணங்கள்.
1. வெடித்த மல்லிகை முல்லை முடித்தென் குழலை சீவி
மடித்தசுருள் தந்திதழ் கடித்த சம்பிரம லீலை (நினைத்)
2. முலையை நெருடி நெஞ்சை உலைமெழுகாயுருக்கிக்
கலைநெகிழ்த்தியமிர்த நிலைசோதித்த விதத்தை (நினைத்)
3. முத்துஸ்தனத்தின்மேற் கையைவைத்து நகம்பதித்துச்
சித்திரமஞ்சத்திருத்தி முத்து முத்தாடினதை (நினைத்)
4. நாமரூப மொன்றில்லாச் சோமசேகரர் சிவகாமசுந்தரி
மகி ழேம சபேசரின்பம் (நினைத் )
பதம்-21
இராகம்-நீலாம்புரி - ஆதிதாளம்,
பல்லவி.
பிரிந்தாலு மறக்குதில்லை பெண்ணே-நடனம்
அநுபல்லவி.
புரிந்தா ரம்பலவாணர் பூவணையின் கண்ணே (பிரிந்தாலு)
சரணங்கள்.
1. சந்தனங் கஸ்தூரி வகைபூசி-மெத்த சரச விங்கித லீலைச் சுரதமொ
ழிபேசி , சந்தத மணைந்தால் வெகுவாசி யிரவிற்- றனித் திருக்கு
ம்பெண்ஜென்மந்தானென்ன சீ சீ (பிரிந்தாலு)
2. ஸ்தனத்தின் மீதிலழுந்த வைத்து நகத்தைக் - கொஞ்சி- முகத்தின்
முகம் வைத்து குறிபடுத்திய தரத்தை கலை நெகிழ்த்தி யுற
வாடும் விதத்தை நாளும் - கலவியநுராக மனுபவித்திருந்த சுக
த்தைப் (பிரிந்தாலு)
3. தென்கைலையம் பதியின்வாசர்- நாளும்- சிவகாம வல்லியுடன் பிரி
யாத நேசர்- என்கவலை தீர்க்குஞ் சருவேசர்- எங்குமிணையொருவ
ரில்லா ஈசர் நடராஜர் (பிரிந்தாலு )
பதம் 22
இராகம்-மோகனம் - அடதாளம்.
பல்லவி,
எத்தனைத் தவஞ்செய்தாரோ- மானே-தில்லை
ஈசருனைப் புணரத்தானே
அநுபல்லவி.
கர்த்தரெனத் தெரியப் பொன்னம் பலத்திலாடுங்
காரணபூரண வாரண மானவர் (எத்தனை)
சரணங்கள்.
1. கொக்கிறகைச் சூடுவாருக் கிப்போது கொழுந்தும் வேருண்
டாச்சே. மேலும் அக்கரவம் பூண்ட மார்பர் தமக்கு ரத்னஹார
முமுண்டாச்சே அந்தத் - தக்கனென்னும் மாமன் றலையை யரிந்
தார்க்குத் தாக்ஷண்ணிய முண்டாச்சே, சற்றும் வெட்கமில்லா
நிருவாணிக்குப் பட்டாடை மெத்தவுமுண்டாச்சே - யென்ன
ம்மா (எத்தனை)
2. ஒருத்தருமில்லாத பரதேசிக் கிப்போ துலகெல்லா முறவாச்சே
பெரு-முருத்திராக்ஷ வடஞ் சூடுஞ் சடைக்கிப்போ துயர் பொன்
துராவாச்சே, கையில் - தரித்த மான் கூச்சலைக் கேட்ட வருக்கிப்
போது சங்கீதமுண்டாச்சே, புரம்- சிரித் தெரித்தவருக்குச் ஜெ
கரட்சக ரெனுந் திருநாம முண்டாச்சே யென்னம்மா (எத்தனை)
3. யானைத் தோலும் புலித்தோலு முடுத்தார்க்கு ஆடைத்திரளாச்
சே, உயர்-வானத்தி னம்புலி சூடினார்க் கிப்போது மணிமுடி
யுண்டாச்சே, மது - பானத்தை முன்னாள் சுமந்தார்க்குச்
சைவப் பழமெனப்பேராச்சே பெண்கள் மானத்தைப்போ
க்கினார்க் காசானெனுமொரு பட்டமு முண்டாச்சே யென்னம்மா (எத்தனை)
4. மாட்டிலேறித் திரிவாருக்கு வேண்டிய வாகன முண்டாச்சே
தலை ஓட்டிலிரந்து குடிப்பாருக் கிப்போதுயர் பாத்திரமாச்சே
ஒரு-வீட்டில் குடியிருந்தே யறியார்க்கு விண்தோய் மதிலாச்சே
சுடுகாட்டிலாடுவார்க்குத் தில்லையென்றேயொரு காணியுமு
ண்டாச்சே-யென்னம்மா (எத்தனை)
பதம் 23
இராகம்--யமுனாகல்யாணி - ஆதிதாளம்
பல்லவி
தெண்டனிட்டேனென்று சொல்வீர் - நடேசர்க்கு நான்
தெண்டனிட்டேனென்று சொல்வீர்
அநுபல்லவி
அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டே
னாண்டவரெனுந் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த் (தெண்)
சரணங்கள்
1. பொருந்துங் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு
இருந்தோஞ் சொல்லவோ விண்டு ஏகாந்தந் தனிற்கண்டு (தெண்)
2. கண்டால் வருமப்பேச்சு கன்னிவயதிலேச்சு
பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு (தெண்)
3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாண் மலர்க்காக்கிச்
சென்னிமேற்கரந் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்)
பதம்-24
இராகம்-காம்போதி-ஆதிதாளம்
பல்லவி.
மனதறியாமல் மையல் கொண்டேன்-கொண்ட
மையலுக்கென்ன பலன் கண்டேன்
அநுபல்லவி
தினமும் கிருபை புரியும் நேசர் தில்லைச்
சிவகாமி மகிழ்ந்திடுந் திருநடராஜர் (மன)
சரணங்கள்.
1. மனதில் தாய்க்கு வெறுப்பாச்சே யினி வரவர நிஷ்டூரப்பேச்
சே நினைத்துக் கொண்டாற் பெருமூச்சே பருவ நேரிழையார்க்கி
தெல்லாமேச்சே (மன)
2. மதிகாய்வதென்ன கொடுமையோ மாரன் மலர்க்கணை யெய்யநூ
றுகையோ, சதிக்குயில் கூவுது பொய்யோ நிமிஷந்தானூறு யுக
மாகுதையோ (மன)
3. துதிசெய்து சொன்ன தொருகோடி செய்த சுகலீலை தன்னை மிக
நாடி அதிவிதமாக் கவிபாடி தில்லையம்பலவாணரை நான்
கூடி (மன)
பதம்-25
இராகம்- நாதகாமக்கிரியை - துருவதாளம்
பல்லவி
மனமுருகுது விழிபுனல் பூணுது மையல் பெருகுது மதியனல் மூளுது
வருமுருவிலிசர மெனைத் தீண்டுது வகையென்ன செய்வேன்
அநுபல்லவி,
அனவரதமு மதிவிதத் தாண்டவ மரவம் புலிமுநி தெரிசித்திடும்
ஹரஹர சிவசிவ வென்னை யாண்டரு ளம்பலவாணா (மன)
சரணங்கள்.
1. தலமீதொரு தாயேன் தந்தை தமரேன் மைந்தர் தாமேன் மலரே
ன் சந்தனமேன் புனுகேன் மையல் சாஸ்வதமே, கலை சோருது வ
ளை சோருது நல்லகை சோருது மெய்சோருது கனமுலை சோ
ருது பணிசோருதுநெறிமுடிசோருதையோ, இல்லையோ கிருபை
நீவந்தென்னையணை விலையோ இனிநிரந்த மந்திரமிலையோ இனி
யுயிர்விடுவேன் பழியெய்துவதினியே (மன)
2. விரகாக்கினி மேனியிலெழுகுது வேண்டாம் வேழமுண்ட கனி
போல், ஒருராத்திரி நூறுயுகமாய் விழியுறங்கே னுறங்கேன் அரு
ளாற் புகழ்ந்திடுவது முனையே - அருளாற்றினம் பணிவதுமுனையே
அருளாற் றொழுதிடுவது முனையே
அறிவேனறிவேன் கருணாகர தென் புலியூர்ச் சிவகாமசவுந்தரி பா
காவுன் கருணாகடாக்ஷமே புரிகுவாய் கனக சபேசா (மன)
3. தவசம்பவிதகுண குணந்தகு தகுதிந்திமி திமியென நின்றொரு
சவதம்பெறத் திருநடனம்புரி தருசங்கரனே, நவசந்திர நுதல்
வேல்விழிதரு நவசிந்தையிலுருகி யிதம்பெற, நவபஞ்சணையத
னின் மகிழ்ந்தெனை நண்பிலணைந்தாள் சிவசங்கர திரிசூலாதர-
திரியம்பக திரிலோக நாயகா திரிபுண்டரஹர மகாதேவ தேவராயமூர்த்தி (மன)
முத்துத்தாண்டவர்-சபாநாதர்பேரில் பாடிய பதம்-முற்றிற்று.
ஆக பதம் - 25
சிதம்பரம் சபாநாதர் பேரில் பாடியருளிய முத்துத்தாண்டவர் கீர்த்தனம்
கீர்த்தனம் 1.
இராகம்-கலியாணி-ஜம்பைதாளம்.
பல்லவி
பூலோக கயிலாசகிரி சிதம்பரமல்லாற் புவனத்தில் வேறுமுண்டோ
அநுபல்லவி.
சாலோக சாமீப சாரூப சாயுச்சிய சபைவாணராநந்தத்
தாண்டவம் புரிவதாற் (பூலோககயி)
சரணங்கள்.
1. நாலுமஹாமேருவென்னும் நாலுகோபுரனிலையும் - நவரத்னம
ணிகளாலொளிர் சித்ர மதில்களும் மேலுலகையள விடுதற்போலு
யர்ந்தேவெயில் விரிந்த கம்பத்திரள்களுங்
காலுலவுமாயிரக்கான் மணிமண்டபமும்-நவ கங்கையு நிறைந்த
சிவகங்கையின் விசாலமும் ஆலிலையின் மாலு மயனாலுமறியா
த பேரம்பல மேவுவோர்க் கற்புதம் புரிதலாற் (பூலோககயி)
2. வேதமுதலெனு மூலநாதர் தூபியுமேரு-வில்லியார் சிவகாமவல்
லியார்கோயிலும் மாதவர் விண்ணவர் முனிவர் தபோதனர் வித்
தியாதரர் மாளிகைகள் சூளிகைகளும்
ஏதமொருசற்றுமணு காதகட்டளைகளுமிரவிபோலிலங்குகின்ற
விந்தரவிமானங்களுங் காதலுற்றேகண்ட பூதலத்தோரெல்லா
ங்காண நூறாயிரங் கண்வேண்டுமென்கையாற் (பூலோககயி )
3. மேவார் தொழுந் தில்லை மூவாயிரம்புனிதர் வீதியுஞ்சைவர் திரு
வீதிமடங்களுந் தாவாதபசிதவிர வாவா வெனுஞ்சத்ர சாலை
யும்பலசோலையும்
பூவாவிகளும்வயலு மோவாமலேபெருகு பொன்னிநதியுந்தெ
ருவும் மன்னியவளங்கண்டுதேவார மூவர் முதற் பாவாணரனை
வருஞ் சிவஸ்தலத்தினிலதிகந் தில்லைவன மென்கையாற் (பூலோககயி )
கீர்த்தனம்-2
இராகம்-கல்யாணி-ஏகதாளம்.
பல்லவி.
சேவிக்க வேண்டுமையா- சிதம்பரஞ் - சேவிக்கவேண்டுமையா
அநுபல்லவி
சேவிக்கவேண்டுஞ் சிதம்பரமூர்த்தியாந்
தேவாதிதேவன் திருச்சந்நிதிகண்டு (சேவிக்க)
சரணங்கள்.
1. காரானை மாமுகத் தைந்து கரத்தானை கற்பகராயனை முக்குறு
ணியானைச் சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல்வாழ் தேவர் சிறை
மீட்குஞ் சேவற்கொடியானை (சேவிக்க)
2. சிங்காரமான சிவகங்கையின் மூழ்கிச் சிவகாமிசந்நிதி முன்பாக
வேவந்து பாங்காகவே பிரதட்சணமுஞ்செய்து பத்தர்கள் சித்
தர்கள் பணிவிடையோர் தொழச் (சேவிக்க)
3. சிட்டர்பரவுந் திருமூலத்தானைச் சிற்றம்பலமென்னும் பேரம்
பலத்தானை அட்டதிக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்
தில்லைத் தாண்டவ ராயனைச் (சேவிக்க)
4. நல்ல திருவிழா வானித்திருத்தேரும் நாடெங்குமே புகழ்நற்கோ
புரநான்குந் தில்லை மூவாயிரவர் வளர் வீதியுந் திருமஞ்சனமு
மார்கழி தரிசனமுஞ் (சேவிக்க)
கீர்த்தனம்-3
இராகம்-தோடி - ஏகதாளம்
பல்லவி.
இன்னமொருஸ்தல மின்ன மொரு கோயி
லின்னமொருதெய்வ மிப்படியுண்டோ
அநுபல்லவி.
பொன்னம்பலத்தினிற் பூமலராலயன்
போற்றுஞ்சிதம்பரர் பொற்பதமேயல்லால் (இன்ன)
சரணங்கள்
1. காசி கழுக்குன்றங் காளாஸ்திரி கச்சி கமலாலயந் திருவண்ணாமலையு
றை ராசியமான தெய்வங்கட் கொடுக்கமு நடனமுமிங் கேநளி
னமுமிங்கே (இன்ன)
2. பாலான சந்திர சூரியர் மண்டலம்-பாரிந்திரன் பதி பற்றியமண்டல
ம் பூலோகத்திற்குக் கைலாசம் வைகுந்தம்பிரம்ஹ மண்டலத்துப்
புதுமையமிங்கே (இன்ன)
3. கரிசற்பிணிகள் பறந்து போஞ்சிவகங்கையின் மூழ்கிக் கனகச
பைவந்து தெரிசித்தளவினிற் றேவனுமாவன் தெரிசித்தாரைக்
கண்டாற் றேவனுமாவன் (இன்ன)
கீர்த்தனம்-4
இராகம்-கல்யாணி-ஜம்பை தாளம்
பல்லவி.
தீர்த்தமுதல் மூர்த்தியுந் தலவிசேஷமுமெங்கள் சிவசிதம்பரத்திற்றானே
அநுபல்லவி
கீர்த்தனஞ்செய்யமெய்ப் பொருண்மூன்றுமொன்றென்று
கேண்மையோடு வேதாகமம் பகருமாகை யால் (தீர்த்த)
சரணங்கள்.
1. தெரிசித்த போதந்த பிரமனென் னாளுஞ்செலுத்தும் பாக்கியங்க
ளுண்டாம்- பரிசுத்த போதுலகு பதினாலும் ரட்சிக்கும் பதுமவி
ழியோனாகலாம் உருசிக்கும் பானீய மன்பாக வுட்கொள்ளினுருத்
திரன்பதவிபெறலாம்வருசிற்பரானந்த தீர்த்தமதிலாடவே
மஹேசுரனுமேயாகலாம் (தீர்த்த)
2. கல்லுமுதன்மணல்களுந் துகள்களுமிலிங்க மெனக் கருதும் வேத
ங்களெல்லாந் தில்லைதனிலுண்டான குளம் படியினீ ரெல்லாஞ்சி
வகங்கையென்று சொல்லலாம் - குல்லை மாற்புகழரிய கூபங்களா
னந்தக்கூபமென் றேபகரலாம்.-- வல்லநடராஜர்பதங் காணாமலே
தலத்தில் வசித்தவரு முத்தி பெறலாம். (தீர்த்த)
3. சிந்தைமகிழ்சம்பந்தர் தரிசிக்க யாவருஞ் சிவசுரூபமான திறமும்
நந்திமுத லிந்திரர் மூவாயிரம் புனிதரும் நாரணருந் தொழுதேத்த
வேவந்து தெரிசித்தவர்க்கு மாறாத பேரின்ப வாழ்வு தருகின்றபத
மும்கந்தமுறு கோதைச் சிவகாமிபங்கிடனமிடு கடவுளருள் வடிவா
கையால் (தீர்த்த)
கீர்த்தனம்-5
இராகம் -நீலாம்புரி- திரிபுடைதாளம்.
பல்லவி.
சிற்சபைதனிலே கண்டுகொண்டேனென்றும்
அநுபல்லவி.
அற்புதக் கூத்தனை நாடி அவனை யெங்குந்தேடி (சிற்ச)
சரணங்கள்
1. வையந்தருஞ் சிவகாமிமா லேகொன்றை-மாலையென வணிந்தானை
மாந்தர்க்குமுன்னாலே செய்யும் நாள் வாசனையின் மேலேகடற்றி
ரையென வேவரும்பிறவி தீரும் வகையாலே (சிற்ச)
2. அடியவருக்கருள் புரிகுவானைப்பண்டு அரிபூசைக்கு வந்துடன் ச
க்கரமளித்தோனைத் - துடியிடையாள் மலைமகள் பங்கோனை அ
ன்பாய்த்தொழு வார்க்குக்கதி கொடுக்குந் தூயவெளியானைச் (சிற்ச)
3. தேவர்வான் கோனயன் மாலாதி மெய்ம்மை திகழ்மூவாயிரவ
ரில் நானொருவனென்ற நீ திமூவர்பாடற்கருளநாதி- வந்து மூவுல
குந்தொழத் தில்லை தனிநடஞ்செய் சோதி (சிற்ச)
4. முனிவர் புரிதவ மகிழ்ந்தேயென்று யின்பமுடி விலா-வருளளித்த
முதலே நாமென்று தனியே - நீயறிதியெனவின்று நின்றசாட்சி
யைக்கண்ணாற் கனகசபையரு கேநின்று (சிற்ச)
கீர்த்தனம்- 6
இராகம்-ஆகிரி- ஆதிதாளம்.
பல்லவி.
நடனங்கண்டபோதேயென்றன் சடலஞ்செய்த பாக்கியமையா
அநுபல்லவி.
விடமணிந்த கண்டா மன்றுண் மேவுமம்பல வாணாவுன் (நடன)
சரணங்கள்
1. அரியயனுந்தேடிக்காணாவுருவமாய்நின்ற காரணா--மரு மலர்ப்பச்
சிலை கொண்டுருகு மன்பர் சிந்தை யொன்று (நடன)
2. அன்னை தந்தை நீயேயென்றே யுன்னை யேமிக நம்பினேன் என்னை
யேநீ காக்கவேண்டுஞ்சொர்ண சபைநடராஜா (நடன)
3. பதஞ்சலி வியாக்கிர பாத ரிதயம் புகுந் தாண்டவனேநி தம்பிரி
யாச் சிவகாமிநேசனேசிதம்பரேசனே (நடன)
கீர்த்தனம்-7
இராகம்-சங்கராபரணம், ஆதிதாளம்
பல்லவி.
ஈசனே - கோடி சூரியப் பிரகாசனே கனகசபை
அநுபல்லவி.
வாசனே-யானந்த நடராஜனே (ஈசனே)
சரணங்கள்
1. அறியே னெஞ்சி னேசம் பிறியேன் வருங்கருமங்குறியேனறி
வில்லா தசிறியேனெனை நீயாளாய் (ஈசனே)
2. நினையேனுனை வேடமும் புனையேன் சிவகங்கையி - னனையேன்
கொடிய தீவினையே னுய்யவே யாளாய் (ஈசனே)
3. துதியேன் வணங்கா வஞ்சமதியேனென்றாலுஞ் சபாபதியே
நம்பினேன் சிவகதியே தந்தென்னையாளாய் (ஈசனே)
கீர்த்தனம்-8
இராகம்-- செஞ்சுருட்டி-ஜம்பை தாளம்
பல்லவி.
அம்பர சிதம்பர பரம்பர சதாநந்த வடிகண் மறவா தருளுமனு தினமுமே
அநுபல்லவி.
செம்பொன்மலைச் சிலைவளைத்த திவ்ய பரமானந்தசம்போ
சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா (அம்பர)
சரணங்கள்.
1. கங்கைமதி யரவசையக் காதிற் குழையசையச்-- செங்கைமழுத்துடி
யசையச் சைவசடை யசையப் பொங்குபுலியதளசையப் பொற்பாத
ச்சிலம்பசைய மங்கை சிவகாமவல்லி மகிழநடம்புரியும் (அம்பர)
2. நின் மலநிராலம்ப நிர்க்குண நிரஞ்சன - சின்மயானந்தபர சி
த்குணசொரூப- வன் மலக் கோணீக்கியருள் வாரியுற வேயெ
னது புன்மையுறவுமை காணப்பொது வினடம் புரியும் (அம்பர)
3. துங்கமறையாகமங்கள் சொன்ன விதிவழுவாமற்சிங்காரமாமெ
ங்கள் செய்து தினந்தினமு- மங்கா தநீறுபுனைவை திகமூவாயிரர்
நங்கோனென் றேபரவ நாளும் நடம்புரியும் (அம்பர)
கீர்த்தனம்-9
இராகம் - பந்துவராளி-ஏகதாளம்.
பல்லவி
நீதயவாயென்னையாளா-யிரு-மாதவர்பாடுங் கங்காளா
அநுபல்லவி.
தாதகி சூடியதோளா உமை-காதலா குஞ்சிதத்தாளா (நீதய)
சரணங்கள்.
1. ஒலிகடல் விடமுண்டநேயா - கீறுபுலியின தளுடைய தூயாமெ
லியுமடியவர்சகாயா பதஞ்சலி புலியணிநடராயா (நீதய)
2. காலனை வதை செய்தகாலா புலிப்பாலனை யாண்ட கபாலா- வேல
னைத்தருமனுகூலா ஐந்துகோலனை வென்ற திரிசூலா (நீதய)
3. மூலர் பரவியவி னோதா திருநாவலூரன் விடு தூதா-யாவரும்நம்
பினபாதா மகாதேவா கனகசபை நாதா (நீதய)
கீர்த்தனம் 10
இராகம்-குறிஞ்சி-ஏகதாளம்
பல்லவி.
உன்னைநம்பினேனையா சரணம் நாகம்
அநுபல்லவி.
புனைசம்போ நடராசா புலியூர்வாழீசா (உன்னை)
சரணங்கள்.
1. இருவர் தம்மிசைகொண்ட காதா தித்தியென நின்று நடஞ்செய்
யுமிங்கிதப் பொற்பாதா - திருநாவலூரன் விடு தூதா தில்லைச்சிவ
காமி யொருபாகா சிதம்பரநாதா (உன்னை)
2. மழு வுழை தரிக்கின்ற கையா கொன்றை மலர் மாலை புனைகின்றவ
டிசுடர் மெய்யா எழுபுவி துதிக்கின்றதுய்யா அன்பரிடமாயிருந்தி
ன்பமுடனாளுமையா (உன்னை)
3. நெடியமாலயன் தேடிக்காணாதெங்கும் நிறைந்தவா வெலும்பெ
ல்லாமணிந்திடும் பூணா அடியவர் தொழுந்தமிழ்வாணாதில்லையம்
பதிநடராஜா அம்பலவாணா (உன்னை)
கீர்த்தனம்-11
இராகம்-ஆனந்தபைரவி -ஏகதாளம்
பல்லவி
என்னையெனக்குத்தெரியச்சொல்வாய் தில்லை பொன்னம்பலத்தரசே
அநுபல்லவி.
தன்னையறியுமறிவது நீ சற்றுந் தப்பவொண்ணாதிப்போ
சாமிசமயம் (என்னை)
சரணங்கள்.
1. பூதமுநானல்லபொறிபுல நானல்ல ஓதுமனாதி யொருநான்கும்
நானல்ல போதக்கருவி புறம்பல்ல வுள்ளல்ல வாதமுநானல்லவெ
ன்று மயங்கும், (என்னை)
2. ஒளியல்ல விருளல்ல உடலினிறைவதல்ல வெளிறு கறுப்பல்லவி
ளக்கொத்ததல்ல அளியு மவஸ்தையல்ல வவஸ்தைப்பிரிவதல்ல
தெளிவுமறிவுமல்ல தெளியாததல்ல (என்னை)
3. பாசமுநானல்ல பதிபசு நானல்ல பேசிலணுவு மல்லபெரியவுரு
வுமல்ல ஈசரிலக்கவிலங்கும் பொருளல்ல கோசரமேயேகதேச
முநானல்ல. (என்னை)
4. சேர்ந்துவருவதல்ல சேராதிருப்பதல்ல ஓர்ந்து, களிப்பதல்ல
வோரா திருப்பதல்ல பேர்ந்து வருவதல்ல பேராத்தனியுமல்ல
தீர்ந்தவுயிரேது தில்லைநடேசா (என்னை)
கீர்த்தனம்- 12.
இராகம்-பரஸ்-ஆதிதாளம்.
பல்லவி.
உன்பாதமே துணை கிருபைசெய்யா யஞ்ச
லென்பாரெனக்கு வேறில்லைமெய்யா
அநுபல்லவி
அன்பாகியம்பலத்தாடுமையா அனல்வடி வென வொளிர்
பனகசயனன் முதலின ரனுதினம் நிரை கனக சபேசா (உன்பாதமே)
சரணங்கள்.
1. பலதெய்வமுந்தெய்வ மெனக்குறியேன் நின்னையலதென்மனத்
திலொன்றையுமறியேன் வலதெள்ளவுமில்லாச்சிறியேன் மரு
வியவிருவினை யிருளற வரு ளமரரு முலகரு மகிழ் திருநடராஜா (உன்பாதமே)
2. என்னள வினிற்சித்த மிரங்காதோ வந்து சொன்னதெண்ணாத
பராமுகமேதோ உன்னுதலுவுவதெப்போவோ உடல்வினைபட
வடரடல்வினை கெடவொருமட வரலொடுமிடும் நடன வினோதா (உன்பாதமே)
3. இனியவரெவரெனக் கென் குறை தீரா யோகமுனி வோரை வா
ழ்வித்தவுபகாரா தனியாம் பெரும்பற்றப்புலியூரா சயமிகுபுயவ
லிமுயலகனெ ளிய மனிய பதமருள் தமநிய சபைநாதா (உன்பாதமே)
கீர்த்தனம்-13.
இராகம்- சௌராஷ்டிரம்- அடதாளம்.
பல்லவி.
சந்ததமுன் பாதசேவை தந்தென் மேற் கிருபை பாராய்
அநுபல்லவி,
செந்திரு மேவும்புலியூர்வாழ் சிற்சபை நடேச சுவாமி (சந்த)
சரணங்கள்.
1. பண்சிலம்போசையளிக்கப் பாவியென் வினை யொழிக்கக்
கண்களானந்தந் துளிக்க கண்டென்மன துட் களிக்கச் (சந்த)
2. சிந்தூரப் போர்வையுமாடத் தேவர்கள் நான்மறைபாட
ஐந்தெழுத்துருவம் நாட அணிமலர் தூவிக்கொண்டாடச் (சந்த)
3. பங்கயத்தன் மால்காணாப் பாதனே பொற்பணி பூணா
தங்குவில் வாசுகிநாணா சம்புவேயம்பலவாணா (சந்த)
கீர்த்தனம் - 14
இராகம்-காம்போதி - அடதாளம்.
பல்லவி.
சித்தரின்னமுண்டோ பூலோகத்திற் சித்தரின்ன முண்டோ
அநுபல்லவி.
அத்தர் தில்லைவாழு மம்பலவாண
ரானந்தத்தாண்டவ ராயரல்லாமற் (சித்த)
சரணங்கள்.
1. ஒப்பிடுவித்தைக ளெப்படி யுலகத்தி லுடலேசெப்பாகவுயிரே
பந்தாகச் செப்பிடுவித்தைகள் விளையாடின பின்பு செப்புமில்லை
பந்து மில்லையென்றொளிக்குஞ் (சித்த)
2. இதஞ்சொல்லிக் கின்னரர் கிம்புருடர்பாடவிளந்தனிலம்பிகை
கண்களி கூடப் பதஞ்சலி வெம்புலி யஞ்சலிபண்ணப்பதஞ்சலி
யாமற் பதஞ்சலி பண்ணுஞ் (சித்த)
3. மாலொடு பிரமனுந் தேடரிதான மலர்ப்பதங்கண்டு வணங்கித்
தெரிசிக்கச் சாலோக சாமீப சாரூப சாயுச்யந் தந்தருள் தாண்டவ
ராயனல்லாமற் (சித்த)
கீர்த்தனம்-15
இராகம்- கலியாணி- ஏகதாளம்.
பல்லவி
காணாமலிருந்தா லென் கலக்கந்தெளியாதே
அநுபல்லவி.
பூணாரமரவணிந்த பொன்னம்பலநாதனைக் (காணா)
சரணங்கள்
1. திரிபுரத்தையெரித்தானைச் செங்கையின் மான் தரித்தானைக்
கரியுரித்துப் போர்த்தானைக் கங்கை முடித்தானை
அரியயனுந் துதித்தானை யஞ்செழுத்தாயுதித்தானை
உருவிலியை யெரித்தானை யொளிவெண்ணீற்றானைக் (காணா)
2. தலைமாலை தரித்தானை தக்கன்சிரந் துணித்தானை
உலகெலாம் நிறைந்தானை யுவமையில்லானை
மலைத் துவாய் வளைத்தானை மறலிவீழவுதைத்தானைக்
கலைமதியைப் புனைந்தானைக் கண்மூன்றுடையானை (காணா)
3. நாலு கோபுரத்தழகும் நன்மதின்மண்டபத்தழகும்
சீலமிகுந்தெருவழகும் சிவகங்கையழகும்
ஆலமிடற்றினிலழகும் ஆடுமம்பலத்தழகும்
பாலனமொழியுமையழகும் பரமானந்தத்தழகும் (காணா)
கீர்த்தனம்-16
இராகம் - ஆகிரி -ஏகதாளம்
பல்லவி
கண்டவர் விண்டிலரே அனுதினம் விண்டவர் கண்டிலரே
அநுபல்லவி
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
அண்டரண்டங் கடந்த ஆதி சோதி பாதம் ( கண்டவர்)
சரணங்கள்
1. முத்தி பத்தி சத்தி முப்பால் விளைவதல்ல தெற்றியொற்றுமொ
ரு நிலைமை தானுமல்ல தத்தெய்யென்று தாள மத்தள மதிரவே
தித்தியென்று மன்றுளாடும் திருக்கூத்தைக் (கண்டவர்)
2. அந்தக்கரணமொரு நான்கு சத்தாதி யைந்து மடக்கியறிவுடன்
கூடிச் சந்தித்து நின்றருள் சற்குருவும் போற்றும் அந்தம
தாகிய வானந்த நடனத்தைக் (கண்டவர்)
3. ஒவ்வுதானுமல்ல வௌவ்வுமிவ்வுமல்ல நவ்வுஞ்சிவ்வுமல்ல நாத
நடுவணையுற் சிவ்வுமவ்வுமல்ல சேர்ந்தவட்டமல்ல அவ்வுமுவ்வு
மல்ல வாதிசூக்ஷ்ம நடனங் (கண்டவர்)
கீர்த்தனம்-17
இராகம்: ஆனந்தபைரவி -ஆதி தாளம்
பல்லவி
பாத தெரிசனஞ்செய்யும்போதே-செய்த
பாவம் வேறுண்டு நிஜபலமானதே.
அநுபல்லவி
வேதம் பரவுந் தில்லைமன்றுண்மீதே மெத்த மிடுக்குள்ள காளியுந் திடு
க்கிட வுலகமுந் நடுங்கிடத் திகுர்தியென் றடுக்குட னடித்திடும் (பாத)
சரணங்கள்
1. பத்தியுடனே பூஜை பண்ணும் பாலன் தன்னைப் பற்றிப்பிடிக்க
வந்த பாசக் காலன் தத்திவிழவே யுதைத்தருள் காலன் வெற்
றித்தாண்டவம் புரிந்தென்னை யாண்டவனெனவரு மாண்டவ
ரெலும்பையும் பூண்டவர் சிலம்பணி (பாத )
2. சுந்தரமூர்த்தியார் தமிழுக்காக வும்பர் தொழுதிடத் தூதுக்கி
சைந்தன்பாக அந்தமின் பரவைக்கு முன்பதாக வந்த வரகர
சிவகிரி திரிபுர மெரிபட நகைபுரி வரதர் பரம ரகசியமான (பாத)
3. ஆலவிடமருந்துஞ் சர்வேசன் கங்கை யணிந்தவன் கயிலை
மா மலைவாசன் மாலுக்கிளையவுமை மகிழ்நேசன் சதுர்மறைவி
ரிமுடி மிசையுறைபவனழல் நிகர் கறைவிட வரவொடுபிறை
யையுமணிபவன் (பாத)
கீர்த்தனம்-18
இராகம் - கலியாணி -ஏகதாளம்.
பல்லவி
ஆடினதெப்படியோ நடனம் நீ ராடினதெப்படியோ
அநுபல்லவி
தேடியமெய்ப்பொருளே வளமேவும் சிதம்பரத்தேயொரு
சேவடி தூக்கி நின் (றாடின)
சரணங்கள்.
1. ஒன்றல்ல ரண்டல்ல ஒன்றிரண்டுமல்ல நன்றல்ல தீதல்ல நாத
விந்துமல்ல அன்றல்ல வின்றல்ல யாதியந்தமல்ல மன்றுண்மர
கதவல்லி கொண்டாட (ஆடின )
2. ஆணல்ல பெண்ணல்ல வன்றியலியுமல்ல காணரூபமல்ல கா
ணாத ரூபமல்ல சேணல்லவேயொரு தேவர்க்குள்ளே தேவ வா
ணுதற் பச்சை மடந்தை கொண்டாட (ஆடின)
3. பூதங்களல்ல புறம்பல்ல வுள்ளல்ல வேதங்களாலே விளங்கும்
பொருளல்ல ஆதவன் போலே யசையும் வடிவல்ல மாதுமை
யாள் பச்சை வல்லி கொண்டாட ( ஆடின )
4. பஞ்சவர்ணமுமல்ல பஞ்சபூதமுமல்ல நெஞ்சிநினைவு மல்ல நினை
விற் கனவுமல்ல, அஞ்சு முகமுமல்ல ஆறாதாரமுமல்ல வஞ்சிம
ரகத வல்லி கொண்டாட (ஆடின)
கீர்த்தனம் - 19
இராகம்-மோகனம்-ஏகதாளம்.
பல்லவி,
ஆடிக்கொண்டாரந்த வேடிக்கைக்காணக்கண்
ணாயிரம் வேண்டாமோ
அநுபல்லவி
நாடித்துதிப்பவர் பங்கிலுறைபவர் நம்பர் திருச்செம்
பொன்னம்பலவாணர் (ஆடிக்)
சரணங்கள்
1. பங்கயப் பாதச் சிலம்பசைந்தாடப் பாதச்சதங்கைகள் கிண்கிணென்
றாடப் பொங்கமுடனே யுரித்துத்தரித்த புலித்தோலசைந்
தாடச் செங்கையிலேந்திய மான்மழுவாடச் செம்பொற்கு
ழைகண் முயலகனாடக் கங்கையிளம்பிறைச் செஞ்சடையா
டக் கனகசபைதனிலே (ஆடிக்)
2. ஆர நவமணி மாலைகளாட வாடுமரவம் படம்விரித்தாடச் சீர
ணிகொன்றைமலர்த்தொடையாடச் சிதம்பரத்தோராட பே
ரணிவேதியா தில்லைமூவாயிரம் பேர்களும் பூசித்துக்கொண்டு
நின்றாடக் காரணி காளி யெதிர்த்து நின்றாடக் கனகசபைதனிலே ( ஆடிக்)
3. நிர்த்த கணபதி வேலர்நின்றாட நின்றயன் மாலுட னிந்திரனா
ட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட மெ
ய்ப்பத்திமேவும் பதஞ்சலியாட வியாக்ரமபாதரும் நந்தியுமா
டக் கொப்புற்ற காதாள் சிவகாமியம்மையுங் கூடவே நின்றாட (ஆடிக்)
கீர்த்தனம் - 20
இராகம்-சௌராஷ்டிரம்- ஆதி தாளம்
பல்லவி.
சம்போ சங்கர மஹாதேவா சதாசிவ சம்போ சங்கர மஹாதேவா
அநுபல்லவி
செம்பொற் சபையில் நடனஞ் செய்யுஞ்சிதம்பர அரகர சிவ (சம்போ)
சரணங்கள்
1. அரிமாற் பிரமற்கரியோனே சித்தந்தெளிந்த வன்பர் தமக்
குரியோனே புவனங்களில் திரியுமுப்புரமெரிசெய்த சச்சிதா
னந்தபர ஹரஹரசிவ (சம்போ)
2. அனவரதத் தாண்டவராயா கைலை வெற்பை அசைத்தவனை ரட்
சித்த நேயா மருவார் கொன்றை புனலொடுமதி தும்பை புனை
யுஞ்சிற்பர ஹரஹரசிவ (சம்போ)
3. இருமுனிவர்க்கருளும் நாதா மூவாயிரவரென்றுமர்ச்சனை செ
ய் பொற்பாதா வெனை யாண்டருள் திரிபுரை சிவகாமி தினமும்
மருவிய ஹரஹரசிவ (சம்போ)
கீர்த்தனம்-21
இராகம்-நாதநாமக்கிரியை- ஏகதாளம்
பல்லவி.
ஆடிய பாதா இருவர் பாடிய காதா
அநுபல்லவி
நீடியவேதாதில்லை நிர்த்தவினோதா (ஆடிய)
சரணங்கள்.
1. இருமுனிவருமொரு நிருபனுமருகினில் உருகியுருகிமனம்
ஹரஹரவெனவே (ஆடிய)
2. அந்தர துந்துமியுந், துடியுந் தவில் திந்திமி திமிதிமி திந்திமியெ
னவே (ஆடிய)
3. கும்பமுலையுமையாள் சம்ப்ரமத்தொடுகாண உம்பர் தொழ
வரு சிதம்பரந்தனில் (ஆடிய)
கீர்த்தனம். -22
இராகம்- கானாட சாரங்கம்- ஏகதாளம்
பல்லவி
தெரிசித்தளவின் முத்தி பெறலாம் புலியூரானைத்
தெரிசித்தளவின் முத்தி பெறலாம்
அநுபல்லவி
தெரிசித்தளவின் முத்தி பெறலாம் புலியூரானைத்
திகம்பர நடம்புரி சிதம்பர தேவனைத் (தெரி)
சரணங்கள்.
1. அரனை மன்மதனைச் சங்கரனை மான் மழுவேந்துங் கரனைச்சடை
யிற்கங்காதரனைப் பரனைச் சருவதயாபரனைப் பரா திகம்பரனைத்
தில்லையில் வாழ்ச் சிதம்பரனைச் சங்கரனைத் (தெரி)
2. மாயனை யாண்டவுபாயனை மலைமகள் நேயனை அழிவில்லாக் காய
னை தூயனை வைபோகராயனை நால்வேதவாயனைத் தாண்டவ
ராயனைச் சிவாயனைத் (தெரி)
3. ஈசனை சிற்பர நேசனை யதிகப்பிரகாசனைக் கைலாச வாசனைப்
பூசனைசெய்யு மன்பர் நேசனைத் திரிபுரநாதனைச் சிவகாமி நேச
னைச் சபேசனைத் (தெரி)
கீர்த்தனம்-23
இராகம்-கேதார கௌளம்-ஏகதாளம்.
பல்லவி.
மாயவித்தை செய்கிறானே அம்பல வாணன்
மாயவித்தை செய்கிறானே
அநுபல்லவி
மாயவித்தை செய்கிறான் காயமொன் றெடுத்துக்கொண்டு
நேயமானவெளிதன்னி லுபாயமாய்க் கூடித் திரிந்து (மாய)
சரணங்கள்.
1. உண்டுபண்ணி வைக்கிறான் கொண்டுகொண்டு போகிறான்
நன்றுக்குந் தீதுக்கும் நடுவாயிருக்கிறான்
பண்டு, நாளும் வெளியெங்கும் பாரெங்கும் காணவொண்ணான்
அண்டர்தொழவம்பலத்தி னொண்டி கட்டியாடிக்கொண்டு ( மாய)
2. உண்கிறானுறங்கிறான் உருவாந் தேரோட்டுகிறான்
சங்கீதத்தை மீட்டுகிறான் தானே தீபங் காட்டுகிறான்
மங்கையுடன் கூட்டுகிறான் மலைக்கண்கள் காட்டுகிறான்
அங்கலிங்க பீடமாக விங்குமங்குமா யசைந்து (மாய)
3. கூட்டுகிறான் வெகுசண்டை மூட்டுகிறான் தத்துவத்தின்
மாட்டுகிறானுலகம்பா ராட்டுகிறான் பின்னையுமோர்
ஆட்டிடையனம்பலத்தி லஞ்சாடு மேய்க்கிறவன்
காட்டுமெய்யி லாறுக்கப்பால் வீட்டிலே குடியிருந்து (மாய)
4. மண்ணுமல்ல விண்ணுமல்ல வாய்வுமல்ல தேய்வுமல்ல
பெண்ணுமல்ல வாணுமல்ல பேசாமனின்றவிடம்
ஒண்ணிலிருந் தஞ்சையு முண்டுபண்ணிக் கொண்டவன்
கண்மாயக் காரனென்றுங் கைக்குள்ளேயுஞ்சிக் காமல் (மாய)
கீர்த்தனம்-24
இராகம்-பியாகடை- ஏக தாளம்
பல்லவி
ஆட்டுக் காலைத் தாரும் என் சாமி வாதாட்டுக் காலைத் தாரும்
அநுபல்லவி.
ஆட்டுக் காலைத் தேடி யம்பலவாணரே
காட்டுப்புலியும்பாம்புங் காத்துக்கொண்டிருக்குதே - (ஆட்டு)
சரணங்கள்
1. கின்னரர்கிம் புருடராதியர் வீணையர் கெருட காந்தருவர் சித்
தவித் தியாதரர் தன்னிகரில்லாத தந்திரர் மந்திரர் சரணஞ் ச
ரணமென்றிரு கை கூப்பிநிற்கப் பொன்னின் விமானத்தர் சிவி
கைவாகனத்தர் பூதகணாதிபர் போற்றியடி விரும்ப அன்னவாக
னத்தன் விண்ணிலேற வாயனாட்டுக் காலைத்தேடிக்
கோட்டுப்பன்றியா யினான். (ஆட்டு)
2. முப்பத்து முக்கோடி தேவர்குழாங்களும் முனிவரானவரும் ரி
ஷிகளனைவோருஞ், செப்பமான சந்திராதித் தருங்கூடிச் செய
செயென்றுபாதந் தம்மைத் தேடுகிறார்கள். ஒப்பில்லாத காளி ய
ம்பலத்தே நின்று உன்றாளைக் கண்டு தொந்தோமென் றாடுகிறா
ள், மெய்ப்பாதாகுமந்தக் காலை எனக்குத் தந்தால் வேண்டுமறுப
த்தஞ்சாம் விளையாட்டாகுஞ் சாமி (ஆட்டு)
3. ஆக்கிய திசை வளர்த் திக்குப்பாலகரு மாதி வைரவரும் நாதரனை
வருந் தாக்கிய தாவர சங்கம கோடியுஞ் சந்தித்துப் பாதத்தைக்
காத்துக் கொண்டிருக்கவே , பாக்கியஞ் செய்தவன் முயலகனொ
ருகாலைப் பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்து கொண்டான்
தூக்கிய பொற்றாளை எனக்குத் தந்தாற் றலைசுமக்குஞ் சுமக்கும்
போதும் போதுஞ் சாமியிந்த (ஆட்டு)
கீர்த்தனம்-25
இராகம்-தோடி-ஆதிதாளம்.
பல்லவி.
சாமிதரிசனம் கண்டு சபலமானே னானே
அநுபல்லவி
வாமியொருபாகர் சபைவாண ராதிரையில் (சாமிதரி)
சரணங்கள்.
1. அனுதினமுமடி போற்று மடியர் தம்மை நினையாத மனிதனையு
மீடேற்ற வரமருளவே, தனன வெனவே பரத சாஸ்திர விதி தவ
றாமற் றினமு முமைகாண நடஞ்செய்தருள் சிற்சபையில் (சாமி)
2. சோமனுயர்நதியரவு தூயதாகிய கொன்றைத் தாமமணியுஞ்
செஞ்சடாபாரனார், பூமன் முதன் முனிவோர் கணமே மாதவருட
ன் சாமளசொரூபர் பணி யேம சபைதனிலே (சாமி)
3. தேவாதிதேவரும் தில்லை மூவாயிரரும் பாவாணர்மூவர் தமி
ழ்பகரடியவரும், நாவாரவே புகழ்ந்து பூவாலர்ச்சனை செய்து
காவாவென்றே துதிக்கும் கனகசபைதனிலே (சாமி)
கீர்த்தனம்-26
இராகம்-கல்யாணி- ஏகதாளம்,
பல்லவி.
அம்பலவாணர் நீரே தென்புலியூர் அம்பலவாணர் நீரே
அநுபல்லவி.
அம்பலவாணர் நீரே யன்பர்க்கன்பான சுவாமி
செம்பொற்கிளிமொழியாள் சிவகாமிநாதர் நீரே- (அம்ப)
சரணங்கள்
1. காலனை யுதைத்தீரே காமனை எரித்தீரே
வேலனை ஈன்றீரே வேதவஸ்துவும் நீரே - (அம்ப)
2. திரிபுரமெரித்தீரே திங்களைத் தரித்தீரே
கரியையுரித்தீரே காலகாலரும் நீரே- (அம்ப)
3. இடைபிங்கலையும் நீரே ஏகப்ரம்மமும் நீரே
விடையின் மேல்வருவீரே வெட்டவெளியும் நீரே- (அம்ப)
கீர்த்தனம்-27
இராகம்- நாதநாமக்கிரியை- ஏகதாளம்.
பல்லவி.
ஆராராசைப்பட்டார் நின்பாதத்துக் காராராசைப்பட்டார்
அநுபல்லவி
அருள் பாராய் பதந்தாராய் துயர் தீராய் புலியூராய்
நின்பாதத்துக் (காரார்)
சரணங்கள்
1. கனகமேனியன் பனக சயனன் கஞ்சனுடன் பதஞ்சலி புலி போற்
ற அனவரதமுங் கனக சபையு ளாடிச் சிவந்தென்னைத் தேடிய
பாதத்துக் (காரார்)
2. பாவித்த வெங்கனற் போலுற்ற வந்தகன் பாசத்தின் மேவியே
நேசிப்பதேதுனைச் சேவித்த வேளையிலே முத்திபாலிக்குந்தே
வே யென்னை யாண்டகோவே நின் பாதத்துக் (காரார்)
3. அருவரை தன்னை இருபது கையாலசைத்துப் பலங் கொண்டெ
டுத்த ராவணன் ஒருபது சிரம் நெரியவே முன்னொருவிர லூன்
று மருமலர்ப் பாதத்துக் (காரார்)
4. மூவாயிரவரும் பூவார் மனிதரும் முப்பத்து முக்கோடி தேவர்
முனிவரும் தேவாதிதேவனே வாவா வென் றேத்திடும் தேவா
சிவகாமி நேசா நின் பாதத்துக் (காரார்)
கீர்த்தனம்-28
இராகம்-பந்துவராளி-ஏகதாளம்,
பல்லவி
நானே முழுதும் நம்பினேன் கனக சபையானே நின் பாதந்தானே
அநுபல்லவி.
ஆனே வாகனமாகக் கொண்டோனே புலியூரானே
அறியேநான் சிறியேன் பிரியா தருள் செய்வாய் (நானே)
சரணங்கள்
1. விடியா மிடியாற் கொடியார் பக்கலிற் றவிழ்ப்படியா தருள் செ
ய்யவுங் குடியாயிருக்குமுன் அடியாருடனே யென்னைக்கூட்
டாய் நாட்டாய் காட்டாய் திருநடனம் (நானே)
2. கனவிலு நனவிலு மனதிலுமுனை நாடிக் கவிபாடித் துதிசெய்ய
வுந்தினமும் வரந்தானே யருளுன பதியை யெண்ணித் திருநா
ள் வருநாளொரு நாளுனைக் கண்டு (நானே)
3. அந்தரிசிவகாம சுந்தரி மணவாளா வந்தரி தொழுந்தாளா திந்
திரிடி குடிகு திந்திமியென வாடுஞ் சிவனே சிவனே சிவனே துணை
யென்று (நானே)
கீர்த்தனம்-29 (தாளக் கீர்த்தனம்)
இராகம்- கௌளிபந்து-ஏகதாளம்.
பல்லவி.
ஐயனே நடன மாடிய பொற்பாதா ஆனந்தக் கயிலாயனே
அநுபல்லவி
துய்யனே திருச் சபைதனில் தாண்டவந்
தோகுஜெம்தரி தாகு தித்திமி திகுர்த மென்றொரு பாதந் தூக்கிய (ஐயனே)
சரணங்கள்.
1. கங்கை சடைக்கணிந்த கருணேசாதவளங்கா
அங்கையின் மழுவேந்து மரனே பரமலிங்கா
செங்கைபார்ப்பதி பங்கினாளும் வளர் பிரசங்கா
ஜோகு ஜெம்தரி தோகு தித்திமி திகுர்தமென்றொரு பாதந் தூக்கிய (ஐயனே)
2. வேழமுகனைப்பெற்ற விமல நமச்சிவாயா
ஆழிதரித்தகையனான முகுந்தனேயா
சோழன்கை வெட்டுண்ட தூயா வும்பர் சகாயா
ஜோகு ஜெம்தரி தாகு தித்திமி திகுர்தமென்றொரு பாதந் தூக்கிய (ஐயனே)
3. சித்தஜனுடன்புர மெரித்தபாபநாசா
உத்தண்டர் சர்வேசா உமைமகிழ்ந்திடுநேசா
சத்திமாகாளிமுன் றலைகுனிந்திடவீசித்
தாகுஜெம்தரி தோகு தித்திமி திகுர்த மென்றொரு பாதந் தூக்கிய (ஐயனே)
கீர்த்தனம்-30 (தாளக்கீர்த்தனம்)
இராகம்-தோடி-சாப்புதாளம்.
பல்லவி
ஆடிய வேடிக்கை பாரீர் ஐயராடிய வேடிக்கை பாரீர்
அநுபல்லவி
தேடிய மாலயன் காணாத பாதர் தில்லை மூவாயிரவர் கண்டவதீதர்
தாடொழுவார்க்கருணல்கும் பிரக்கியாதர் தம்பர மான சிதம்பர நாதர்
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம்
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம் கிடத
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
தாம்தகுந்தரி தரிகுதிரிகுகு தரிகுஜெம்தரி
தாம்தகுந்தரி தரிகுதிரிகுகு தரிகுஜெம்தரி
தந்ததிந்தந் தந்தணந் தணந்திமி
தந்ததிந்தந் தந்தணந் தணந்திமி
தந்ததிந்திமி தக்கிட ததிக்கிடத்தக
தந்ததிந்திமி தக்கிட ததிக்கிடத்தக
தத்தடிங்கு தடிங்குடிங்குகு
ததணதஜெணுத ததணதஜெணுத
தத்ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோமென (ஆடிய)
சரணங்கள்
1. அதிரும் வாணன் குட முழவோசை திசைமுட்ட வந்தர துந்து
பி நாதமகிலமெல்லாமெட்ட சதுர்முகனிசைக் கொத்தங்கருகிற்
றாளந் தட்ட சதியறிந்தயன்றாதை தூக்கி மத்தளங் கொட்ட
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம்
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம் கிடத
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
தாம்தகுந்தரி தரிகுதிரிகுகு தரிகுஜெம்தரி
தாம்தகுந்தரி தரிகுதிரிகுகு தரிகுஜெம்தரி
தந்ததிந்தந் தணந் தணந்திமி
தந்ததிந்தந் தணந் திணந்திமி
தந்ததீந்திமி தக்கிடத திக்கிடத தக
தந்ததிந்திமி தக்கிடத திக்கிடத தக
தத்தடிங்கு தடிங்கு டிங்குகு
ததணதஜெணுத
ததணதஜெணுத
தத்ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோமென (ஆடிய)
2. விரித்தசெஞ்சடையாட விளங்குகுண்டலமாட மென்கைமான்
மழுவாட மேனியிற் பொடியாடத் தரித்தவெம் புலியதண் மரு
ங்கிலிசைந்தாடத் தண்டை கிண்கிணி யிருதாளி லிசைந்தாட
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம்
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம் கிடத
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய் தெய்
தாம்தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி
தாம்தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி
தந்ததிந்தந் தந்தணந் தணந்திமி
தந்ததிந்தந் தந்தணந் தணந்திமி
தந்ததிந்திமி தக்கிடத திக்கிடத தக
தந்ததிந்திமி தக்கிடத திக்கிடத தக
தத்தடிங்கு தடிங்கு டிங்குகு
ததணதஜெணுத
ததணதஜெணுத
தத்ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோமென (ஆடிய)
3. நன்மைசேர் தும்புரு நாரதரிசைபாட நாதபிரம்மானந்தத்தழுந்
தியாவருந் தேடத் தம்மெய்ம் மறந்திருமாதவர் கூத்தாடத் தைய
லுமை மகிழ்கொண் டிருவிழி நாட
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம்
தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட
ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத்தோம் கிடத
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
ததிங்கத்தோம் கிடத தத்திமி தித்திமி தெய்தெய்
தாம்தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி
தாம்தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி
தந்ததிந்தந் தணந் தணந்திமி
தந்ததிந்தந் தணந் தணந்திமி
தந்ததிந்திமி தக்கிடத தக்கிடத தக
தந்ததிந்திமி தக்கிடத தக்கிடத தக
தத்தடிங்கு தடிங்கு டிங்குகு
ததணதஜெணுத ததணதஜெணுத
தத்ததிங்கணத்தோம்
தத்ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோமென (ஆடிய)
கீர்த்தனம்-31 (தாளக்கீர்த்தனம்)
இராகம்-சங்கராபரணம்-ரூபக தாளம்.
பல்லவி.
நடிப்பவனே சிற்சபை நின்று நடிப்பவனே
அநுபல்லவி.
நடிப்பவனேகங்கை முடிப்பவனே மறை
படிப்பவனே விடங் குடிப்பவனே (நடிப்பவனே)
சரணங்கள்
1. அரியுமயனும் வின்ணமரர் முனிவரு மனங் கசிந்தார் பனகசயன
மும் உருகியுருகியுள் ளொளியும் வெளியேயொளியும் வெளி
பெறவடியர் துதிசெய
தரிகு தரிகுகு தரிகு தரிகுகு தாம் தாம்தத்தாம்
திரிகு திரிகுகு திரிகு திரிகுகு தீம் தீம்தித்தீம்
தரிகு தரிகுகு தாம் திரிகு திரிகுகு தீம்
தரிகுதரிகுகு திரிகுதிரிகுகு
தத்ததெய்யத் தெய்யத்
திரிகிட தக ததிங்கணத்தோமென்று (நடிப்பவனே)
2. அண்ட ரண்டமு மண்டலங்களு மஞ்சலி சிரபந்தனத்தொ
டுகண்டு கண்டுளம் நைந்து பொங்கக் கணங்கனின்று வணங்
கியின்புற
தந்த தந்தக தந்ததந்தக தாம் தாம்தத்தாம்
திந்த திந்திகி திந்த திந்திகி தீம் தீம்தித்தீம்
தந்ததந்தகதாம்
திந்ததிந்திகிதீம்
தந்ததந்தக திந்ததிந்திகி
தந்ததெய்யத்தெய்யத்
திரிகிட தக த ததிங்கணத்தோமென்று (நடிப்பவனே)
3. பட்டரானவர் சிட்டரானவர் பத்தரானவர் முத்தரானவர்
இட்டமாம்புலி நட்டபாத மிணங்கிநின்று வணங்கி யின்புற
தகத தகதக தகத தகதக தாம் தாம்தத்தாம்
திகித திகிதிகி திகித திகிதிகி தீம் தீம்தித்தீம்
தக ததக தகதாம் திகித திகிதிகி தீம்
தக ததக தகதாம் திகித திதிகி தீம்
தகத தகதக திகித திகிதிகி
தத்ததெய்யத்தெய்யத்
திரிகிட தகத ததிங்கணத்தோமென்று (நடிப்பவனே)
கீர்த்தனம்-32 (மூவடுக்கொலித்தாள கீர்த்தனம்)
இராகம்-ஆனந்தபைரவி- ஆதிதாளம்
பல்லவி
நிருத்தஞ் செய்தாரே ஐயர் சதானந்த நிருத்தஞ் செய்தாரே ஐயர்
அநுபல்லவி
திருத்தமான மன்றுள் சிவசிதம்பரநாதர்
தித்திமி திமிதிமி தித்திட ததிக்கிடத்திகு
தத்திமி திமி தகிட ததிங்கணத்தோமென (நிருத்)
சரணங்கள்
1. அருமறையொலி கதிக்க ஹரஹர ஹரஹர ஹரஹர வெனவே
அடியவர் குழாந்துதிக்க திருநுதலுமை மதிக்கச் சிவசிவசிவ
சிவசிவசிவவெனவே சேர்ந்திருமுனி குதிக்க தரிக்கத்தோந்-தத்
திமி தரிகிட தத்தித்தாந் தாந் தாந்
ததண ததணஜெணு தஜெணுத தஜெணுத
ததண ததண தக ததிங்கணத்தோமென (நிருத்)
2. தித்திமத்தள நாதந் திந்தோந் திந்தோந் திந்தோமெனவே ஜெ
கமெங்கணுமோதப் பத்தரஞ் செழுத்தோதப் பம்பம்பம்பம்
பம்பம் மெனவேபகர் திருச்சங்கமூத
தித்தித்தோந் தித்திமி திரிகிட தித்தித்தீந்தீந்தீந்
திரிகுதிரிகுகு ஜெம்ஜெம்ஜெம்தரி
தரிகுதரி தக ததிங்கணத்தோமென (நிருத்)
3. தரணி பவத்தைக் கெலிக்கத் தகதக தகதக தகதகவெனவேதரி
த்தகை மழுச்சொலிக்க கருதினரெண்ணம்பலிக்க கலகல கலகல
கலகலவெனவே காலிற் சதங்கையொலிக்க
தரிகுகுந் தரி தித்தி தரிகிட தித்தித்தோந்தோந்தோந்
தகணக டிங்குகு தடிங்குடிங்குகு
தகண தகண தக ததிங்கணத்தோமென (நிருத்)
கீர்த்தனம்- 33 (மூவடுக்கொலிக்கீர்த்தனம் )
இராகம்- கௌளிபந்து- திரிபுடைதாளம்
பல்லவி
ஆனந்தத் தாண்டவ மாடினார் தில்லை யம்பலவாணனார்
அநுபல்லவி
ஆனந்தத் தாண்டவமாடி நின்றாரரியருள் சித்தம்பெறச் சக்கொ
ன் றருச்சிக்குந் தனிப்புஷ்பந் தரிச்சுத்தம் பதத்திற் பொற்றிருச்
சிற்றம்பலத்துணின்று (ஆனந்த)
சரணங்கள்.
1. பாதச்சிலம்பு கலீர் கலீர் கலீரென்னப் பைம்பொற் குழைகள்
பளீர் பளீர் பளீரென்ன வேதப்புராணந் தத்தெய் தத்தெய்
தத்தெய்யென்ன விரித்துச் செஞ்சடைக்குப் பொன் தரித்துக் கு
ஞ்சரத்தைக் கொன்றுரித்துத் திண்புரத்தைப் புன் சிரிப்பிற்
சங்கரித்துநின்று (ஆனந்த)
2. மால்கை மத்தளந் தணாதணாதணாவென்ன மலர்ப்பிரம்ம தாளங்கணீ
ர்கணீர் கணீரென்னச் சேல்விழிமாது சபா சபா சபாசென்ன
சிறக்கக்கிண்கிணிச் சத்தந் தறைக்குட்கிங்கிணுக்கென்று பிறக்
கச் சொர்க்கமட்டுக்குந் திறக்கச் சபை நிறக்க (ஆனந்த)
3. பத்தர்கள் தேகம் விரீர் விரீர் விரீரென்னப் பதஞ்சலி வியாக்கிரர்
ஜெயாஜெயா ஜெயாவென்ன சித்தர் கணங்கள் சிவா சிவா சிவாவெ
ன்ன திடுக்குச் செந்தணக் குத்திந் திடுக்குச் செந்தணக்கென்றங்
குடுக்கைக் கைம்புயச் செங்கையடுக்கத் தொனியெடுக்க (ஆனந்த)
கீர்த்தனம்-34
(இஃது கொள்ளிடக்கரைமேல் நின்று பாடியது.)
இராகம் - காம்போதி- ஜம்பைதாளம்.
பல்லவி
காணாமல் வீணிலே காலங் கழித்தோமே
அநுபல்லவி
சேடனார் போற்றுந் தில்லைச் சிதம்பர ஸ்தலத்தை (காணாமல்)
சரணங்கள்
1. சேரன் சோழன் பாண்டியனிரண்ணியவன்மன் கோபுரமுஞ்சூ
ர வீரப்பபூபன் செய்த திருமதில்களும் பாருலகும் போற்றுகின்
றபஞ்சாக்ஷரப்படிகளும் ஆரணங்கள் சூழ்ந்த திருவாயிரக்கால்
மண்டபமும் (காணாமல்)
2. கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும் மங்கைசிவ
காமியம்மை வாசல்மணிமண்டபமுந் திங்களணி திருமூலநாதர
ருட்சந்நிதியும் பொங்குசெல்வம் போலுயர்ந்த தங்கப்பேர
ம்பலமுங் (காணாமல்)
3. நிர்த்தசபை கனகசபை சிற்சபையின் தெரிசனமும் முத்திபெ
றலாமெனவே முழங்குஞ் சின்னத் தொனியும் பத்தர்க்குட்சிற
ந்த கோவிந்தராஜர் சந்நிதியும் சுற்றிலுந் துலங்கு ரத்னசொர்
ணக்கொடிமரங்களும் (காணாமல்)
4. தில்லை மூவாயிரவர் முனிவர் பெரும் வீதிகளும் - அல்லும்பகலு
மளிக்கு மன்ன தான சிறப்புஞ் சொல்லரிய மடங்களுஞ்சோலை
களும் வாவிகளும் நல்ல திருக் கூட்டங்களும் நாலுதெருவீதி
களும் (காணாமல் )
கீர்த்தனம்- 35
இராகம்- பைரவி- ஆதிதாளம்
பல்லவி
தெரிசனஞ் செய்வேனே முத்திகொடுக்குந் திருவம்பலவாணேசனை
அநுபல்லவி
அரியய னிருவரு மறியாத விமலனை
கரியுரி போர்த்த நங் கருணைக்கடலைத் தேடி (தெரி)
சரணங்கள்
1. செஞ்சடை மதிகங்கையுந் திருமுகஞ்சிறந்த பங்கயச் செங்கை
யும் பஞ்சாட்சரப்படியும் பாதத் தணிசிலம்பும்நெஞ்சாரவேது
தித்துநின்றெனது கண்ணாரத் (தெரி)
2. காளியுடன் வாதனை யிருமுனிக்குங் காட்சிகொடுத்த நாதனை மா
லுடன் பணி யிரண்யவன் மன்றனக்கருள் காலகாலனை யன்பர்
கருத்திற்குடி கொண்டானைத் (தெரி)
3. சிவகாமிபிராணேசனை யெனையாண்டருள் தில்லையம்பதியீசனை
அவனிதொழுந் தயாபரனை யென்னை யனை சிவசிதம்பர தேவசிற்
றம்பலவாணனைத் (தெரி)
கீர்த்தனம்-36
இராகம்-சங்கராபரணம்- ஆதி தாளம்
பல்லவி
கண்ட பின் கண் குளிர்ந்தேன் ஜனனக் கடலைக் கரைகடந்தேன்
அநுபல்லவி
அண்டர் பிரானைக் கருணாகடாக்ஷனை யம்பலத்தை கண்ட பேர்க்கரு
ள்மோக்ஷனை யண்ட பகிரண்டமும் படை நேயனை யாண்டவனை நித்
தியத் தாண்டவராயனைக் (கண்டபின்)
சரணங்கள்.
1. அந்திப்பிறை கங்கைதா னசைந்தாடவே யமரர்முனிவர் சிவசி
வவென்னவே சந்தித்தேயன்புடன் தும்புருநாரதர் சங்கீதமே
படிக்க விந்தைக் கிசைந்தமான் மத்தளம் கொட்டவே வேதங்க
ணீரென்று தாளமுழங்கவே திந்தோந் திரிகிடதோதிமி யென்ன
வே சிந்தித்து நின்றாடு மும்பர்கள் கோனைக் (கண்டபின்)
2. பரவைத்தன் வாசலிற்றூததனைவேனைப் பத்தர்க்கு முத்தியளித்
திடுங் கர்த்தனைக் கரமதிற் சூல கபாலந் தரித்தானைக் கங்காளனைப்
பரனை, நிராமயமாகப் புரந்தருனாதனை நித்திய கல்யாணனைச்
சித்தவினோதனைப் பரம்பரமாகிய வாண்டவனைக் கிருபையாரெ
ன்பாருக்கருள் பேரம்பல நாதனைக் (கண்டபின்)
3. தண்சேல் நல்விழி மாகாளி வாதுக்குத் தாக்கனித் தெக்கனி சொல்
லியேரண்டு கண்படைத்தே யெதிர்த்தாடுகின்றாள் தலைகவிழ்த்த
ப்புறம் நிற்கவே மண்ணிலொரு பாதம் விண்ணிலொரு பாதமாக
வே வைத்தூர்த்த நடனஞ்செயண்ணலைக் கண்ணனையாளு
முக்கண்ணனை யனங்கனை வென்ற கனக சபேசனை (கண்டபின்)
கீர்த்தனம்-37 (விஷந்தீண்டியவுடன் பாடியது.)
இராகம்-மோகனம் -ஏக தாளம்
பல்லவி
அருமருந்தொரு தனிமருந்திது அம்பலத்தே கண்டேனே
அநுபல்லவி
திருமருந்துடன் பாக மருந்து தில்லையம்பலத்தாடு மருந்து இருவினைக
ளறுக்கு மருந்து ஏழையடியர்க் கிரங்கு மருந்து (அருமரு)
சரணங்கள்
1. கொன்றை தும்பை யணிந்த மருந்து , கோவை மீதிற்படர்ந்த மரு
ந்து மன்றுளே நின்றாடு மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து (அருமரு)
2. இந்திரரானவர் வானவர்தாமு மிருடிகள் தமக்கெட்டா மருந்து
சந்திரர் சூரியர் காணா மருந்து தானே முளைத்துத் தழைத்த மருந்து (அருமரு)
3. திரித் தித்தித்தியென்றாடு மருந்து தேவாதி மூவர்கள் காணா மருந்
து கருத்தைத் திருத்தி யிருத்து மருந்து காலனைக் காலாலுதை
த்த மருந்து (அருமரு)
கீர்த்தனம்-38
இராகம்-புன்னாக வராளி- ஆதிதாளம்
பல்லவி
என்று சென்று காண்பே னெனது கண்குளிர
அநுபல்லவி
மன்றுள் பதஞ்சலி புலியூர் வாழுஞ் சபாபதியை (என்று)
சரணங்கள்
1. புண்டரீக முகத்தழகும் புன்சிரிப்பினழகும் வண்டுநிறவிழியழ
கும் வரிசை தந்தத்தழகும், குண்டலமுஞ் சவுக்களியும் கொப்
பு தரித்திடுமழகும், மண்டலமெல்லாம் விளங்குங்கண்டசரத்
தழகும் (என்று)
2. மெய்யெல்லாம் வெண்ணீறு விளங்கிய வற்புத வழகுங் கைகளிலே
தரித்திருக்குங் கனலும் டமருகமும் பையரவம் பூண்ட கையாற்
பயந்தீர்க்கு மழகும் வையமெல்லா முய்ய வங்கண்வர வீசுங்கை
யழகும் (என்று)
3. குஞ்சித பாதத் தழகுங் குனித்தவோர் பதத்தழகுங், கஞ்சன்மு
டி மாலையொடு கவின் பதக்கத்தழகுங், கொஞ்சுமொழி சிவகாமி
கூடனிற்குமழகும் நெஞ்சைவிட்டு நீங்கா மனிதமு மனங்களிக்க
(என்று)
கீர்த்தனம்-39
இராகம்-கல்யாணி-ஆதிதாளம்.
பல்லவி
காணமுத்தி பெறலாமே ஒரு தரத்திற் காண முத்தி பெறலாமே
அநுபல்லவி.
காண முத்தி தருந்தில்லைத் தாணுவாயிருந்து பஞ்சபாணனைக் கண்
ணாலெரித்த, சோணகிரி வல்லவர் புராண சுந்தரர் தமிழ் மூவாணருக்
கருள் செயும் நிர்வாணரெனும் பேரம்பலவாணர் தஞ் சிவந்தபாதங்
(காண)
சரணங்கள்
1. பண்டு விடமுண்ட நீலகண்ட புரஹரசம்பு முண்டகத் திருமணா
ளர்புண்டரீகாசனர் துதிகொண்டசிவசங்கர பிரசண்டகாலனை
யுதைத்துத் தண்டனை புரி நடேசர் புண்டரீக மலர்த்தாளைக் (காண)
2. பஞ்சவதன மகேசர் குஞ்சரசருமதரர் வஞ்சி சிவகாமி நேசர் தஞ்
சமென்றடைந்தவர்தம் நெஞ்சிலுதையம் புரிந்த விஞ்சு கனக சபே
சர் செஞ்சிலம்பணியொளிர் குஞ்சிதத் தாண் மலரைக் (காண)
3. தேடரிய திகழ் பாத மாடரவப் பூணணிந்து வேடனுக்கருளிமூவ
ர் பாடவே மன மகிழ்ந்து, நீடிய செஞ்சடையினாடிய கங்கை புனை
ந்து கூடி வொளிர் நடராசராடிய மலர்ப்பாதத்தைக் (காண)
கீர்த்தனம் -40
இராகம் - ஆனந்த பைரவி-ஆதிதாளம்
பல்லவி.
ஹரகர சிவசிவ நமச்சிவாயா வெங்களம்மை சிவகாம சவுந்தரி நேயா
அநுபல்லவி
பரவுந்தொண்டருக் கன்புசெய்யுஞ் சகாயா நித்தியபதம்பெறு
சமயத்தி னிதம்பரிவாயிருந்து மிதம்பெறவிளையாடுஞ் சிதம்பர
தேவா (அரகர)
சரணங்கள்
1. தினமும்நின்பதசேர்வை சேவிக்கவேணுமிந்தத் தெரிசனமே
மோட்ச பலமெல்லாங் காணும் நினைவெல்லாமந்த ரூபமாய்த்தோ
ணுமென்றும் நித்தம்பலதேவதைகள் சுற்றம்பல விருந்தாலும்
வெற்றம்பலமல்லாது சிற்றம்பலமாமோ. (அரகர)
2. யாவருக்குமுயிர்க்குயிரா யுறைந்தாயே பரம ரகசியமாகவெங்
கும்நிறைந்தாயே மூவர்க்கு முதல்வனாய்ச் சிறந்தாயே கருணைமு
கதர செகநகநகவென நடமிடுயுகதர வரடமருக கரதரனே ( அரகர)
3. பாதிமதியணிந்தபரஞ் சோதியன்பாய்ப் பணியுந் தொண்டருக்
கெல்லாமநுபூதி ஆதிவுமைபதியாகிய நீதிமிகவுமம்பரமான திகம்
பர ரூப பரம்பரமான சிதம்பரதேவா (அரகர)
கீர்த்தனம் -41
இராகம் -மோகனம் - அடதாளம்
பல்லவி
யார்க்குத் தெரியுமையா சபாபதி நீ ராடியவிந்தை தானையா
அநுபல்லவி.
தூக்கியபாதா திரிசூலமுங் கையிலேந்தித் தும்புரு நாரதர் கிம்
புருடர்கின்னரர்சூழப் பொதுவிலன் பர் தாழ வாடின விந்தை
(யார்க்)
சரணங்கள்.
1. பாதச்சிலம்புமசைய உமையாளிடப்பாகத்திற் கூடி யொசிய
வேதகீதங்களும் நின்றோதவே மழுவேந்திவிடையை விட்டி
றங்கிச் சடையை விரித்துக்கொண்டு வேளை பார்த்து வொருதா
ளைத் தூக்கிக்கொண்டது (யார்க்)
2. குண்டலம் ரண்டுந் துலங்க திருச்சபையிற் குளிர் கங்காதேவிகு
லுங்க பண்டு சுந்தரர்க்காகப் பரவைக்குத் தூது சென்று பதுமநல்
லழகிய வதன விழிசுமந்த பாதம்நோகாமற் சாமவேதம் பாடிக்
கொண்ட (யார்க்)
3. திருச்சிற்றம்பலம் வாழ்வோய் பத்தி வலையிற் செகந் துதித்திட
வீழ்வோய் தரித் தித்தித் தோந்திமி திரித் தித்தித் தீந்திமி- தகத
கதரிகிட திகிதிகிதிரிகிட தாத்திமியெனத் திருக்கூத்தாடிய வி
ந்தை (யார்க்)
கீர்த்தனம்-42
இராகம்-ஆனந்தபைரவி-ஆதிதாளம்.
பல்லவி.
சுந்தரகுஞ்சித பாத நிலைகண்டு தொண்டு செய்வாய் மனமே
அநுபல்லவி
சந்ததந் தில்லை சிவகாமி பங்கனார் தானந்தமாகிய
வானந்த நாடகச் (சுந்தர)
சரணங்கள்
1. அச்சுதன் முன்னாளி லேனமாகித் தேடு மாக்கன் றலைகணெருங்
கிடச்சூடு மெச்சியோர் பாம்பும் புலியுங் கொண்டாடும் மேலாஞ்
சிதம்பரந் தன்னினின்றாடுஞ், (சுந்தர)
2. வெஞ்சினத் தேமானுயிரை மடிக்கும் வீட்டின் பந்தத் தெண்ணந்
தன்னை முடிக்கும் செஞ்சிலம்புங் கிண்கிணியும் படிக்குஞ்சிற்றம்
பலத்திலென்னாளும் நடிக்குஞ் (சுந்தர)
3. நல்லவர் செம்மை மனத்தவர் போற்றும் நம்புமடியார் பிறவியை
மாற்றுந் தில்லை மூவாயிரர் பூசை செய்தேத்துந் திருமால் தன்
கண்ணை மலரெனச் சாற்றுஞ் (சுந்தர)
கீர்த்தனம் -43
இராகம்- ஆனந்தபைரவி - அடதாளம்.
பல்லவி.
தூக்கிய பாதத்தி னோக்கொளிகண்டு சும்மாயிரு நெஞ்சமே
அநுபல்லவி.
தூக்கிய பாதத்தைக் கண்டவர்க்கே, சித்தி சொன்னேன் சொன்
னேன் முக்காலுமே வெற்றி தேக்குங் கருணைச் சிவகாமியே சத்தி-தில்லை
ச்சிதம்பரங் கண்டவர்க்கே முத்தி (தூக்கிய)
சரணங்கள்
1. பாக்கியமான பராபரங் காணும் பார்ப்பதெல்லா மதுவாகவே தோ
ணும் வாக்கு மனதுக்கெட்டாதது பூணு மன்றுள் நடனமுனக்குள்ளே
காணுந் (தூக்கிய)
2. பிறப்பிறப்பென்னுந் துயர்போயொளிக்கும் பேரின்பமான சுக
மே யளிக்கும் மறப்பும் நினைப்பு மிலாதெமிளிர்க்கும் மன்றுடை
யானருள் கொண்டு தளிர்க்குந் (தூக்கிய)
3. தத்துவமெல்லாந் தலை தடுமாறுந்தானே நாமானவிடங்கண்டு
தேறும் அத்துவிதப்பொருளாகியே வீறு மானந்த வின்ப வமிர்த
முள்ளூறுந் (தூக்கிய)
கீர்த்தனம்-44
இராகம்-கலியாணி-ஆதிதாளம்.
பல்லவி.
சிவந்த பாதத்தைக் காண வேணுமென்று சிந்தையி னினை மனமே
அநுபல்லவி.
தவந்தனக்குப் பயன் தருவோமெனத் தில்லைச் சபையி
நடனமிடுந் தாண்டவராயன் (சிவந்த)
சரணங்கள்
1. அம்பரத்தினின்றமரர்கோன் முநிவர்க்கு மாறு சமய வேத சாஸ்
திரத் தலைவர்க்கும் உம்பருக்கு முயரிருடிகட்கு முலகிலுள்ள பேர்
களுக்குமோ மென்றாடிச் (சிவந்த)
2. பதஞ்சலி பகவற்கும் வியாக்கிரபாதற்கும் பலனாளும் நடனஞ்
செய்த பாதங் காண்பதற்கு நிதமுமவன ருளினாலே துதிக்குமன்
பர் நினைவிலுங் கனவிலும் நின்று நடம்புரிந்து (சிவந்த)
3. காளியுடனே கூடி வாதாடின விந்தை கண்டதில்லைக் காதாற்கே
ட்ட துண்டிப்போது தூளியுடம்பிற்பூசி மான் மழுவு மேந்தித்
தொந்தோமென்றொரு காலைத் தூக்கி நின்றாடிச் (சிவந்த)
கீர்த்தனம்-45
இராகம்-பந்துவராளி - ஆதிதாளம்.
பல்லவி
அவனே தேவர்கள் கண்ட வவனேதேவர்கள் தலைவ
னவனைத் தினமு நினை மனமே
அநுபல்லவி
தவனேசர்பணி சிதம்பரவாச னொளிருஞ் சிற்சபை நட
ராஜனெவனோ அவனெவனோ (அவனே)
சரணங்கள்.
1. இகலாதி யேக னனேக னென்றே திகழுமெழிலான ஜோதியெவ
னோ புகலாதி பூமியான்மா பந்த பாச பரிபூரணமான தெவனோ ச
கலா தி பெயர் சராசரமாகியே நின்ற சம்புநாத னெவனோ அகலா
தியமரருக் காதாரமாந் தெய்வமா மகாதேவ னெவனோ வவனெ
வனோ (அவனே)
2. உருவாலு மருவாலு முருவருவதினாலு மொளிரும் பிரம்மமெவ
னோ விரிவாலு முயர்வாலு மெவ்வுயிர்க் குமுயிராய் விளங்கியமெ
ய்யனெவனோ ஒரு நாலு மறையாலு முடுக் கலைகருனாலும் ஓதொ
ணா நாதனெவனோ அரியாலு மயனாலு மடிமுடி யறியாத வாதிமு
ன்னாதி யெவனோ வவனெவனோ (அவனே)
3. பேரான வரிசிரமேறிப் பிளந்திடும் பெரியதாணு மெவனோ நேரா
னபங்கயன் சிரமதைக் கிள்ளிடும் நிமலனமல னெவனோ ஏரான
மதனை முன்னுதலின் விழியினா லெரித்தபகவனெவனோ சீரான
புலியூரிற் சிவகாமி பங்கனாஞ் சிற்சபாபதி யெவனோ வவனெ
வனோ (அவனே)
கீர்த்தனம்- 46
இராகம்-புன்னாகவராளி-ஆதிதாளம்.
பல்லவி.
மறவாதிரு நெஞ்சமே உனக்கிது பிறவா மருந்தாமே
அநுபல்லவி.
நறுமாமலர்ப் பொழில்சூழ் தில்லையம்பல நாதர்க்குஞ்சிதச்
செம்பொற் பாத மிமைப்பொழுதும் (மறவா)
சரணங்கள்.
1. நிச்சயமாகவே கேளா யஞ்செழுத்துண்டு நிற்கும் நிலையையறிந்
துச்சரித்துக்கொண்டு வைச்சவழியே சென்று அச்சமறவே
கண்டு மன்றுளானந்த நடமின்றே கண்டுகொளென்றும் (மறவா)
2. பழையவடியார் திருவடியில் வீழ்ந்தெழுந்து பணிசெய்யவே ய
வரிரங்கிமன மகிழ்ந்து பிழைவராமற் காத்துத் திருவடி நீழலிற்
பிசகா திருக்க வைப்ப ராசையாய் நீ எப்போதும் (மறவா)
3. தினவாரமுந்திரு மூலத்தானமேசென்று தெரிசனம்செய் சிவ
காமிசந்நிதிகண்டு அனவரதமுஞ் செம்பொனம்பலத்தாடியவம்
மையப்பர் பொற்றாள் செம்மையாகக் கண்டு (மறவா)
கீர்த்தனம்-47
இராகம்-முகாரி - ஆதிதாளம்
பல்லவி.
சிவனை மறவாதே நினை மனமே-ஒருக்காலும்
சிவனை மறவாதே நினை மனமே
அநுபல்லவி.
அவனியுடன் பகிரண்டங்களையு மளித்தாண்டவனைத்
தாண்டவனை யரசம்பலத்தானைச் (சிவனை)
சரணங்கள்.
1. நடவாத நடத்தை நடந்தாலுங் கூடியடையாத கொடிய கலியரவு
தொடர்ந்தாலும் படையாளர் சுற்று மடர்ந்தாலும் மாதர் கடை
மனை தோறும் நிதங்காத்துக் கிடந்தாலும் (சிவனை)
2. பெண்ணாசை வந்துபிடித்தாலும் நம்மையெண்ணாமலே ஒருவ
ரேசியடித்தாலும் புண்ணாகி மனது துடித்தாலு மோய்ந்துகண்
ணாகிசெவிமூடிக் கால்கள் துடித்தாலும் (சிவனை)
3. வாரியளறா யிறைத்திட்டாலும் பொன்னாம் மேருகிரி வீறுபட
விண்ணுடைபட்டாலும் பாருலக வாழ்வதுகெட்டாலும் முந்த
யாருமறியாத பழியாம் வினைதொட்டாலும் (சிவனை)
4. அரிபிரமர் பதங்க ளழிந்தாலு மின்னு மிருசுடரு மாறி எதிரேறி
யிழிந்தாலும் வருணனும் மண்மாரி பொழிந்தாலும் நாளுந் தரும
நெறி பகருமறை தவறி மொழிந்தாலும் (சிவனை)
5. மருமலர்களணியு மம்பரனைக் தேவதருவாகிக் கதியின்பந்தருங்
குருபரனை உருவாகிவருந் திகம்பரனை நீலத் திருவுடனே நடன
மிடுஞ் சிதம்பரேஸ்வரனை (சிவனை)
கீர்த்தனம்-48
இராகம்- தோடி- ஆதிதாளம்.
பல்லவி.
பேசாதே நெஞ்சமே பேசாதே
அநுபல்லவி.
பேசாதே நெஞ்சே பின்சொல்லிப் பேசியுந்தா னென்ன கண்டாய்
ஈசர்புலியூரில்வளர் நேசரனுபூதி யல்லாற் (பேசா)
சரணங்கள்.
1. சிங்காரவிடைபிங்கலை சங்காரவழி போகாமற் பொங்கமாகவே
நிறுத்தி எங்கள் குரு ராயர்பாத மேத்திக்கோ மனதைத்தேற்றி
க்கோ அருளைக் காத்துக்கோ அஞ்செழுத்தையும் போற்றிக்
கோ நானென்ற சத்தம் (பேசா)
2. ஆமையா யைந்துறுப்பையு மூமையெழுத்துள்ளிருத்திச் சோம
சேகர பதத்தை நாமெனக் கருத்துள் வைத்து நாடிக்கோ பொ
ருளைத் தேடிக்கோ முத்திவழியைக் கூடிக்கோ ஆனந்தக்கூத்தா
டிக்கோ நானென்ற சத்தம் (பேசா)
3. பட்டி பசுக்களைந்துண்டுக் கொட்டிலிலடைத்துக் கொண்டு எட்
டெழுத்துருவையுண்டு பொட்டென செபத்திற்றொண்டு பூண்
டுக்கோ வருளை ஈன்றுக்கோ நமது ஆண்டவன் தில்லை யம்பலத்தா
ண்டவன் தன்னை நீ கண்டால் (பேசா)
கீர்த்தனம் -49
இராகம்-நாதநாமக்கிரியை- ஏகதாளம்.
பல்லவி
சிதம்பரமே நினை மனமே ஜென்மமீடேறச்
சிதம்பரமே நினை மனமே
அநுபல்லவி.
சிதம்பரமேமுத்தி சின்மயமாகிய
பதஞ்சலி பூசித்த பாதரைக்காணச் (சிதம்)
சரணங்கள்.
1. ஆகமவேத புராணவுல்லாச சிவோக மகேச நடேசரைக்
காணச் (சிதம்)
2. தக்கிட திக்கிட தரிகிடவெனவே திக்குநடனமிடும்வேத
ரைக் காணச் (சிதம்)
3. திந்திமி திமிதிமி திமிதிமி யெனவே விந்தை நடனமிடும்வே
தரைக் காணச் (சிதம்)
4. சந்தனலேபன சம்பிரமவாலித கந்த வசந்த வை
போகரைக் காணச் (சிதம்)
5. பத்தியருட்சிவ காமசவுந்தரி முத்திதரும் பராசக்தியை
க்காணச் (சிதம்)
6. தரணியி லனைவருந் தமியொடு துதிசெயு மிரணியவன்ம
விநோதரைக் காணச் (சிதம்)
7. தேவர்தொழுந் திரு மாலயன் நேடு மூவாயிரர் பூசித்தமூ
ர்த்தியைக் காணச் (சிதம்)
கீர்த்தனம் -50
இராகம் - பியாகடை - ஏகதாளம்.
பல்லவி
தெரிசனமே நினை மனமே சபாநாதர் தெரிசனமே நினை மனமே
அநுபல்லவி
தெரிசனமேமுத்தி பரிசனமேநித்ய
வரிசைநடம்புரி வாழ்சபைவாணர் (தெரி)
சரணங்கள்
1. கஞ்சமலருதயன கஞ்சை வனிதைபதி கஞ்ச நயனன் பணி
கஞ்ச மலர்த்தாள் (தெரி)
2. ஆகமத் துட்பொருளாக நிறைந்தசு தாகர மகிமை கொ
ளாகாசலிங்கர் (தெரி)
3. கனகாம்பரதர கனக சடாதர கனக சுபாகர கனக சபேசர்
(தெரி)
கீர்த்தனம்-51
இராகம்-கலியாணி- ஏகதாளம்
பல்லவி
தோத்திரம் செய்மனமே உனக்கிது மாத்திரமுற்பனமே
அநுபல்லவி
காத்தெமையாளும் வெண்ணீற்றனை வார்சடை
யாற்றனை யானந்தக் கூத்தனை யனுதினம் (தோத்)
சரணங்கள்.
1. ஈசனைக் கனக சபேசனை ஞானப்பிரகாசனை யோர்சொ
ல்லுபவாசனைப் பதஞ்சலி பூசனை செயுஞ் சருவேசனைக்
கயிலாசவாசனைத் திருநடராஜனை யரனைத் (தோத்)
2. பாணனை யாண்ட நஞ்சூணனை வாசுகி நாணனை யக்கினிப்
பூணனை மால் தேடுஞ்சேணனை நித்ய கல்யாணனை முத்தி
நிர்வாணனை யம்பலவாணனை யரனைத் (தோத்)
3. வேளனை முண்டகத்தாளனை வீறுங்கங்காளனை விபூதித் தூ
ளனைப் பாம்பணி தோளனை யடியவர்க் காளனை யாதிரை
நாளனை யுமைமணவாளனை யரனைத் (தோத்)
கீர்த்தனம்-52
இராகம்- பந்துவராளி-ஏகதாளம்.
பல்லவி
நிர்த்தமிடுந் திருச்சிற்றம்பலவரை நித்தம் நினை மனமே
அநுபல்லவி
வித்தை வருமுயர் புத்தி வருஞ் செல்வ
மெத்தவருமொன்று மொத்து வரும் மன்றுள் (நிர்த்த)
சரணங்கள்
1. செந்திருமாலய னிந்திரன் மாதவர் செய்ய முனிவர் செ
யசெயவென்றிடத் தந்திர மாயொரு காலைத் தூக்கிக்கா
ளிமுன் தாகு தோதிமி திந்திமி தாவென (நிர்த்த)
2. சகலபுவனத் தவரவர்போற்றிடச் சந்திராதித்தர்கள் தா
முந்துதித்திடச் செகண தோதிமி திமிதத் திமிதிமி திகுத
தாகு தாகுதிக்கிட தத் தீயென (நிர்த்த)
3. அந்தமுள்ள மாலே சொந்த சவுந்தரியான சிவகாமியம்
மை மகிழ்ந்திடத் தந்த தநாதன தான தான தன தக்குதிக்
குடிகு தளங்குதாவென (நிர்த்த)
கீர்த்தனம்-53
இராகம்-நாகவராளி-ஆதிதாளம்
பல்லவி.
தேடித்திரியாதே நெஞ்சே தேடித்திரியாதே
அநுபல்லவி.
தேடித்திரிந்து திகையாதே நெஞ்சே
சிற்றின்பத்தாலே ஜெகமெல்லாம் பஞ்சே (தேடி)
சரணங்கள்.
1. நானென்ற வாணவந் தன்னையே நீக்கு நாதாந்தப் பேரொ
ளிதன்னிலே தாக்கு மோனமா மந்திரத் துண்மையை நோ
க்கு முத்திக்கு வித்தாய் முழுமதியாக்கு (தேடி)
2. ஆத்துமஞானிக்கு மெய் தனிற்சொட்டு அண்டரண்டப
கிரண்டங்கள் விட்டுப் பேரானவானந்த வெள்ளத்தை
யெட்டுப்பேச்சுரையற்ற விடந்தனைக் கிட்டு (தேடி)
3 போட்டவிடத்திற் பொருள் தனைத்தேடு போதநிஷ்டை
யுட்புகுந்தது நீயாடு நாட்டமுடன் சற்குருபாதந்தேடு
நாலாம் பதத்தி லருள் ஞானவீடு (தேடி)
கீர்த்தனம்-54
இராகம்-நாதநாமக்கிரியை-ஏகதாளம்.
பல்லவி
கண்டாயோ மனமே நடேசனைக் கண்டாயோ மனமே
அநுபல்லவி,
அண்ட முழுதும்பிரம்ம மென்றுதோன்றலீலை
கொண்ட வஸ்துவாய் வந்த புண்டரீகபுரத்தைக் (கண்)
சரணங்கள்
1. தொந்திப்பு நீங்கினையே மெய்ஞ்ஞானத்தின் சந்திப்பு வா
ங்கினையே செந்துப்பிரளயகன்ம மென்று பகலிரவா
யந்தக் கரணமே யானந்தங் கடலுருகிக் (கண்)
2. சத்துவக்குணம் புகுந்தாய் ரஜோ தம மற்றகுண மிகுந்தாய் செத்
தகயிறு தனிற் புற்றுப்பாம்பைப் பிரமை சற்றுத் தெளிந்து மகிழ்
பெற்றதிரள் பேரின்பங் (கண்)
3. இன்பந்தெளிந்துகண்டா யசேதன வெம்பசி தீர்ந்துக் கொண்டா
ய், அன்புக்கினியதோர் சிதம்பரந் தனிலே நடம் புரிந்தருடருமம்
பலவாணனைக் (கண்)
கீர்த்தனம் - 55
இராகம்- சாவேரி - சாப்பு தாளம்
பல்லவி
சிவசிதம்பரமே தெரிசிக்க மனமே ஜெனனமில்லை யிதுநிஜமே
அநுபல்லவி,
தவசிகட்கு நடஞ்செய் சம்போ சங்கர சிவ
பவநாச புனித பஞ்சாட்சரரூபர்வாழ் (சிவ)
சரணங்கள்
1. பரவும் பதஞ்சலி வியாக்கிர பாதரோடும் பார்த்தவர்க்கெல்லாம்
பிரம்மானந்தமே மூடும், அரியுமயனு மயங்கியே தேடு மாதியந்த
மில்லா வமலனின் றாடுஞ் (சிவ)
2. மங்களவேள்வியு மாதவர் பூசையு மருவியவாகம வேதத்தினோ
சையுந், துங்கமத்தள தாள சங்கீத ஓசையுந் துலங்குமெய்யடியா
ர் துதியோசையும் வளர் (சிவ)
3. வல்லவர் வாசஞ்செய் தில்லையுள் தொண்டு மகிழ்ந்து செய்வார் ப
தஞ்சென்னி மேற்கொண்டு அல்லும் பகலும் பேரின்பத்தையுண்
டு ஆனந்த நிர்த்த நடேசரைக்கண்டு (சிவ)
கீர்த்தனம்-56
இராகம்- முகாரி- சாப்பு தாளம்
பல்லவி
கெட்டுப் போகாதே நெஞ்சே அநியாயமாய்க்
கெட்டுப் போகாதே நெஞ்சே
அநுபல்லவி
சிட்டர் தொழுந் தில்லைச் சிதம்பரந் தனில்வாழுஞ்
சிவனே சிவனே சிவனேயென்றுரையாமற் (கெட்)
சரணங்கள்.
1. ஆசாபாசத்தைத் துரத்துஉனக் கதினாலுண்டோ சொல்வரத்து
பேசாமலனுதினம் பிழைக்கும் வகையைத்தேடி பெருமான் பெ
ருமான் பெருமானென்றுரையாமற் (கெட்)
2. விழலுக்குமுத்துலை போட்டு சும்மா வீணுக்கிரைத்ததென்னப
லன் காட்டு, பழகப்பழகவெட்டிப் பழமென் றுசிக்குமோ பரனே
பரனே பரனேயென் றுரையாமற் (கெட்)
3. சஞ்சலமேதுனக் கடங்கு குருசாமி பதம்பணியத்தொடங்கு, வஞ்
சகமேவேண்டாம் மன்னன் பொன்னம்பல வரதா வரதா வரதா
வென்றுரையாமல் (கெட்)
கீர்த்தனம்-57
இராகம் - காம்போதி-ஜம்பை தாளம்
பல்லவி
இனிச் சுமக்க முடியாது தேகம் தில்லை
அநுபல்லவி
வனத்துறையுஞ் சிவகாமவல்லி யுமைபாகா (இனிச்)
சரணங்கள்
1. மலத்தினால் விளைந்த புழுக்கூடு துன்பவாரியைம்புலவேடர் வா
ழும்பெருங்காடு, சலத்துளியா மேலிந்த வீடு இருமை தளைத்த
லெனுஞ்சனனந்தனையெடுத்துப்போடு (இனிச்)
2. ஒருநாலுபேர் சுமக்கு மூட்டை நானொருவனோ சுமப்பனிந்தவு
டன் மாயக்கூட்டை, மருவிலாப்பழங்காயக் கோட்டை சன்ன
வாசலொன்பதாகியே வரும்பழையவீட்டை (இனிச்)
3. வருவாதவூரனை யுங்காத்தீர் இரண்ணிய வன்மனுக்குத் தன தாக
ம் வரவே நீர் பார்த்தீர், திருநாளைப் போவானையுஞ் சேர்த்தீர்நாளு
ஞ்சிற்சபையிலானந்தத் தெரிசனந்தந் தேற்றீர் (இனிச்)
4. வருவதென்று மலர்க்கொன்றை தாரும்வந்து வாழாது வாழுமிந்த
மலமயக்கந்தீருந், திருவருளானோக்கி என்னைப்பாரும் பார்த்து
ச்சித்தமகிழ்ந் தானந்தத் தென்மதுரை சேரும் (இனிச்)
கீர்த்தனம்-58
இராகம்-நாதநாமக்கிரியை- ஆதி தாளம்
பல்லவி
இன்னம் பிறவாமலே யாளாய் கேளாய்
அநுபல்லவி
பொன்னம்பலவாணாவாகா பூமதனை வென்ற யோகா நிரந்தரமும்
ஏமசபையில் வைபோகா புலியூர்ச் சிவகாமிவல்லி யுமைபாகா (இன்)
சரணங்கள்
1. காயமே நிலையென்றெண்ணி தீயபாவமே பண்ணி மாயநரகை
நண்ணிவருந்தவே முடியாது பாவஞ்செய்யாமலிருந்த கலவுமொ
ண்ணாது தவஞ்செய்தாலு மிகுந்த ஜனனமும் போதும்- (இன்)
2. தொலையாச் சனனத்தாலே அலைவாய்த்துரும்பு போலேநினை
யாச்சுழலின் மேலேநின்மன தருளை நாட்டி யகலாத கன்ம வி
னைகளை விட்டோட்டி யழிவில்லாத சின்மய வீடுகாட்டி (இன்)
3. நின்னருளினாலே வந்தேன் சந்நிதி தனையடைந்தேன் முன்னம்
வினையைத் துறந்தேன் மூண்ட கடுவுண்ட தூயா வணங்கினரை
யாண்ட ருளும் வெகுநேயா கனகசபை தாண்டவ நடராயா- (இன்)
கீர்த்தனம். -59
இராகம்-ஆகிரி - ஆதிதாளம்
பல்லவி
கலந்து கொள்வேனே - இனிநான் கலந்து கொள்வேனே
அநுபல்லவி
கலந்து கொள்வேன் தில்லை யம்பலந் தன்னிலே
காரணங்கடந்த பூரணத்துடனே (கலந்து)
சரணங்கள்
1. கூற்றுவனாகத் தொடருமிருமைக்கொடிய வினைக ளடியோடகன்
றது சாற்றும் பெரிய புவன மெல்லாங்கொண்டு தான துவானது
நானதுவாகக் (கலந்து)
2. கட்டுரை கேளாதவன் மனம் யான்வைத்த காவலிற் றங்கியென்
னேவலாளாயது, தொட்டுமறித்திங்கெனைத் தடுப்பாரெவர்சொ
ல்லற்கரியதோர் நல்லவுறவினிற் (கலந்து)
3. செங்கோட்கடவுட் பதமு மயானமுஞ் செய்ய கமலத்தோன்கை
யஞ்சலித்தது, நங்குருநாதன்குறியும் நிலைத்தது நம்பலமான
பேரம்பலச்சோதியிற் (கலந்து)
கீர்த்தனம்-60
இராகம்- ஆரபி-ஏகதாளம்.
பல்லவி.
மாணிக்கவாசகர் பேறெனக்குத்தர வல்லாயோ வறியேன்
அநுபல்லவி.
காணிக்கையாகக் கொடுத்தே னுனக்கென்னை
ஆணிப்பொன்னே தில்லை யம்பலவாணா (மாணி)
சரணங்கள்.
1. நோயும் வறுமையுஞ் சண்டையிடாதே நோக்கரை நோக்காக நோக்
கிவிடாதே காயுந் தருமஞ் சலித்து விடாதே சந்தியில் வையாதே
ஆயுமிளம்பிறைசூடிய மூர்த்தி யத்துவித முத்தி புத்தியளித்துத்,
தீய மறுமை யெதிர் நின்று தள்ளுஞ் சிற்சபை மந்திர சிதம்பர
தேவா (மாணி)
2. கட்டிலை விட்டுக் கிடத்துமென்னாதே காலைக்கரங்களைக் கட்டுமெ
ன்னாதே கொட்டி முழக்கிட்டு கூ கூ வென்னாதே, கோரணிகொ
ள்ளாதே, யெட்டியொருவர் புலம்பி வராதே ஏழைப்பிணத்தை
யெடுமென்றிடாதே சிட்டர்தொழுந் திரு கட்டளைமேவுஞ் சிதம்
பரதேவா திரு நடராயா (மாணி)
3. கட்டையின் மேல் வைத்துச் சுட்டுவிடாதே கள்ளக்குழியிற் பு
தைத்து விடாதே பட்டும் பணியுந் தரித்தயலோர் வந்து பாலள்
ளிக்குத்தாதே கிட்டி யொருவர் சடங்கு செய்யாதே கேட்டவரெ
ல்லாங் கிடைக்கத் தகுமென்னச், சிட்டிப்பவன் பணிசிற்சபை
மேவுஞ் சின்மய ரூபா சிதம்பரநாதா (மாணி)
4. அப்பரும் லிங்கத் தடைந்தனரென்று மா ரூரர் வெண்கிரியேறின
ரென்று, செப்பரிய திரு ஞானசம்பந்தர் தேசுடன் சென்றாரெ
ன்றும், இப்படி யென்னை யலைத்து விடாதே எம்மானி ருந்தப
டியேவிருந்திடச் செப்பவருவீர் நடம்புரிமேவுஞ் சிதம்பர தேவா
சிவாமிநேயா (மாணி)
5. சிற்பர தற்பர மெய்ப்பொருளுங் கண்ட சித்தரெல்லோரும் நிறை
ந்து தெரிசிக்கத், தற்பதமாம் நாலாஞ் சத்தினி பாதமுஞ் சாயுச்சி
யமும் பெறவே, பொற்பூமாரியிமையோர் சொரிந்திடப் பொன்
னூசலாடுந் திருவாதிரை நாளிற் கற்பூர தீபம்போ லென்றனுட
லைக் கனக சபையிற் கலந்து கொள்வாயே (மாணி)
முத்துத்தாண்டவர் சபாநாதர் பேரில் பாடிய கீர்த்தனம் முற்றிற்று
ஆக கீர்த்தனம்-60
திருச்சிற்றம்பலம்