logo

|

Home >

Scripture >

scripture >

English-Translation

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை English Translation Part 2

தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 
 

Thirugyanasambandhar Thevaram - Second Thirumurai - Part 2

 English Translation and Tamil Explanation

(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)

 

திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையார்  THIRU-P-PERUM-PULIYOOR - maNNum Or pAkam uTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்  THIRU-K-KADAMBOOR - vAn amar tigkaLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்  THIRU-P-PAANDI-K-KODUMUDI - peN amar mEniyinArum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி  THIRU-K-KAZHU-MALAM - piraman Ur, vENupuram, pukali
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்  THIRU-K-KUTRALAM - tirunta mati cUTi, teN nIr caTaik karantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்  THIRU-NANAA - pantu Ar viral maTavAL
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்  THIRU-P-PIRAMAPURAM - viLagkiya cIrp piraman Ur
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்  THIRU-P-PIRAMAPURAM - pUmakan Ur
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்  SEERKAAZHI - viN iyagkum matikkaNNiyAn  
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை  THIRU-AGATH-THIAAN-PALLI - vATiya veNtalai mAlai cUTi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்  THIRU-ARAI-ANI-NALLOOR - pITinAl periyOrkaLum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்  THIRU-VILA-NAGAR - oLir iLampiRai cennimEl uTaiyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்  THIRU-AAROOR - pavanam Ay, cOTai Ay
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்  THIRUK-KADA-OOR-MAYAANAM - variya maRaiyAr, piRaiyAr  
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்  THIRU-VENU-PURAM - pUtattin paTaiyinIr! pUgkonRait tArinIr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி THIRU-THEVOOR - paN nilAviya
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்  THIRU-KOCH-CHAI-VAYAM - nIla nal mAmiTaRRan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை  THIRU-NANI-PALLI - kAraikaL, kUkai, mullai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்  KOLARU-THIRU-P-PATHIGAM - vEy uRu tOLi pagkan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்  THIRU-NAARAIYOOR - uraiyinil vanta pAvam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு  THIRU-NARAIYOOR CHITH-THEECHARAM - nEriyan Akum; allan
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு  THEN-THIRU-MULLAI-VAYIL - tuLi maNTi uNTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்  THIRU-K-KOCHAI-VAYAM - aRaiyum pUmpunalOTum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்  THIRU-NEL-VOYIL-ARA-TH-THURAI - entai Ican emperumAn
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்  THIRU-MARAI-K-KAADU - pogku veNmaNal kAnal
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்  THIRU-P-PUGALOOR - VARTHA-MAANEECH-CHARAM - paTTam, pAlniRa matiyam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்  THIRU-TH-THENKOOR - purai cey valvinai tIrkkum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்  THIRU-VAAZH-KOZHI-PUTH-OOR - cAkai Ayiram uTaiyAr
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை  THIRU-ARACILI - pATal vaNTu aRai konRai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்  SEERKAAZHI - pogku veNpuri vaLarum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று  SEERKAAZHI - nam poruL nam makkaL enRu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ  THIRU-TH-THURUTHI - varaittalaip pacum ponOTu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை  THIRU-K-KODIKA - inRu nanRu nALai nanRu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்  THIRU-K-KOVALOOR-VEERATTAM - paTai koL kURRam vantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்  THIRU-AAROOR - paruk kai yAnai mattakattu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை  THIRU-CH-CHIRAPURAM - anna men naTai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை  THIRU-AMBAR-MAAKAALAM - pulku pon niRam puri caTai
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி  THIRU-K-KADIK-KULAM - poTi koL mEni
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய  THIRU-K-KEEZH-VELOOR - min ulAviya caTaiyinar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்  THIRU-VALAM-CHUZHI - enna puNNiyam
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்  THIRU-K-KETHEE-CHURAM - virutu kunRa mAmEru vil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்  THIRU VIRKUDI VEERATTAM - vaTi koL mEniyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே  THIRU-K-KOTTUR - nIlam Artaru kaNTanE
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு  THIRU-MAANTH-THURAI - cempon Artaru
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென  THIRU-VAAI-MOOR - taLir iLa vaLar ena
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற  THIRU-AADAANAI - mAtu Or kURu ukantu
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி  SEER-KAAZHI - poTi ilagkum tirumEniyALar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு  THIRU-K-KETHARAM - toNTar anjcukaLiRum (m) aTakki
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய  THIRU-P-PUGALOOR - vegkaL vimmu kuzal iLaiyar
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி  THIRU-NAAGAI-K-KAARONAM - kUnal-tigkaL kuRugkaNNi
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்  THIRU-IRUMBAI-MAAGAALAM - maNTu kagkai caTaiyil
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்  THIRU-TH-THILATHAIP-PATHI - poTikaL pUcip
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி  THIRU-NAAKECH-CHURAM - tazai koL cantum(m), akilum
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி  THIRU-MUKKEECH-CHURAM - cAntam veNnIRu enap pUci
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்  THIRU-P-PAATHIRI-P-PULIYOOR - munnam ninRa muTakkAl
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி  THIRU-P-PUKALI - viTai atu ERi

            திருச்சிற்றம்பலம்

            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 203                பதிக எண்: 67

67. திருபெரும்புலியூர்                67. THIRU-P-PERUM-PULIYOOR

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருப்பெரும்புலியூர் என்னும் இத்திருத்தலமானது புலிக்கால் முனிவரால் பூசிக்கப் 
பெற்றமையால் இப்பெயர் பெற்றது. சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் பெறும். 
அதனின்று இது வேறு ஆகும். திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும். இறைவரது திருப்பெயர் வியாக்ரபுரீசுவரர். 
இறைவியாரது திருப்பெயர் சௌந்தரிய நாயகி. இதற்கு திருஞானசம்பந்தர் அருளிய 
திருப்பதிகம் ஒன்று உள்ளது.

பதிக வரலாறு

    திருவையாற்றை நண்ணி வழிபடும் திருஞானசம்பந்தர் திருத்தொண்டர்களோடு 
அடைந்து பணிந்த தலங்களுள் முதலாவது இத்திருப்பெரும்புலியூர். அங்குள்ள திருக்கோயிலை 
அணைந்து போற்றிப் புனைந்த தமிழ்த்தொடை இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2189.     மண்ணுமோர்பாகமுடையார்மாலுமோர்பாகமுடையார் 
    விண்ணுமோர்பாகமுடையார்வேதமுடையவிமலர் 
    கண்ணுமோர்பாகமுடையார்கங்கைசடையிற்கரந்தார் 
    பெண்ணுமோர்பாகமுடையார்பெரும்புலியூர்பிரியாரே.        1

    மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர் பாகம் உடையார்; 
    விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்; 
    கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்; 
    பெண்ணும் ஓர் பாகம் உடையார் - பெரும்புலியூர் பிரியாரே.

    maNNum Or pAkam uTaiyAr; mAlum OrpAkam uTaiyAr; 
    viNNum Or pAkam uTaiyAr; vEtam uTaiya vimalar; 
    kaNNum Or pAkam uTaiyAr; kagkai caTaiyil karantAr; 
    peNNum Or pAkam uTaiyAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     பெண்ணை ஓர் பாகமாக உடையார்; திருமாலையும் ஓர் பாகமாக உடையவர்;
 மண்ணையும் தன்மேனியில் ஒருபாகமாக உடையவர்; விண்ணையும் ஓர் பாகமாக உடையவர்; 
வேதத்தையும் உடைய விமலர்; கண்ணும் ஓர் பாகமாக உடையவர்;  அவர் கங்கையைச் சடையில் 
கரந்தார்;  அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார். (தனது விசுவரூபத்தில் சிவபெருமான் 
மண்ணையும் மண்ணைப் படைக்கும் பிரமனையும், மண்ணைக் காக்கும் திருமாலையும், 
விண்ணையும் விண்ணில்  கண்ணாக ஒளிரும் ஞாயிறையும் பாகமாக உடையவர். கபிலர் பாடிய 
பாடலைக் கபிலரது பாடல் என 6ஆம்  வேற்றுமைச் செய்யுட் கிழமைபடக் கூறுதல் மரபு. அதுபோலச் 
சிவன் வேதத்தைச் செய்யுட் கிழமையாக உடையவர்.)

குறிப்புரை:     சிவபெருமானது விசுவரூபத்தில் ஒவ்வொரு பாகம் மண்ணும், அம்மண்ணைப் 
படைக்கும் பிரமனும், காக்கும் மாலும், விண்ணும், கண்ணும், பெண்ணும் உடையவர். வேதத்தை 
(ச் செய்யுட் கிழமையாக) உடைய நிமலர். கங்கையைச் சடையில் ஒளித்தவர். உடையாரும், விமலரும், 
கரந்தாருமாகிய சிவபெருமான் புலியூர் பிரியார் என்க. உடையார் எழுவாய். பிரியார் பயனிலை. 
பெரும்புலியூர்- செயப்படுபொருள். மேலும் இங்ஙனமே கொள்க.  

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. The famous big temple is 
called Perum-pattrap-puliyoor. Our Lord in Thiru-p-perum-puliyoor called Vyakrapureeswarar 
is manifest in Thiru-p-perum-puliyoor. He has taken the special  form known as Viswaroopam. 
He is the Supreme Being as manifested in the whole universe- animate and inanimate in Himself. 
In this form our Lord is manifested as earth and sky. He is manifest in various forms. 
He manifests Himself as Thirumaal giving a portion in His viswaroopam to him. He has embedded 
His consort Uma Devi on the left side of His body. He is the creator of the four Vedas as Vimalan.
He is a spotless holy being. Since He gave one half of His body to His consort, He has got 
one eye only. He supports the river Ganges in His matted hair.

2190.     துன்னுகடற்பவளஞ்சேர்தூயனநீண்டதிண்டோள்கள் 
    மின்னுசுடர்க்கொடிபோலும்மேனியினாளொருகங்கைக் 
    கன்னிகளின்புனையோடுகலைமதிமாலைகலந்த 
    பின்னுசடைப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே.        2        

    துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள் 
    மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக் 
    கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த 
    பின்னுசடைப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.            

    tunnu kaTal pavaLam cEr tUyana nINTa tiNtOLkaL 
    minnu cuTarkkoTi pOlum mEniyinAr; oru kagkaik 
    kannikaLin punaiyOTu kalaimatimAlai kalanta 
    pinnucaTaip perumAnAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     கடலில் நெருங்கித் தோன்றும் பவளத்தைப் போலத் தூயவும் நீண்டவுமாகிய 
திண்ணிய தோள்கள் சுடர்க்கொடி போலும் திருமேனியுடைய கங்கை எனும் கன்னிகளின் 
நீரோடு பிறைமதி, கலந்த பின்னிய சடையை உடைய பெருமானார் அவர் திருப்பெரும்புலியூரை 
விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     துன்னு -நெருங்கிய. பவளம் சேர் தோள்கள் - கடலிலுள்ள. பவளத்தை ஒத்த 
தோள்கள். தூயன தோள்கள். நீண்ட தோள்கள். திண்மை - உறுதி. சுடர்க்கொடி போலும் மேனியினாள் - 
சோதிக்கொடி போன்ற திருமேனி உடையவள். கங்கைக் கன்னிகள் புனையோடு - கங்கை நதியின் 
கிளைகளின் நீரொடு.  நதிகளைப் பெண் பாலாகக் கொள்ளுதல் மரபு.  நதிபதி எனக் கடலைக்  
கொள்ளுதலால் கன்னி என்பது பெண்ணென்னும் பொருட்டு. புனை -  நீர். ' அனைவரும்ஷ கானகத்து
அமுதளாவிய புனை வர உயிர்வரும் உலவை' (கம்பர். அகத்தியப் - 4 )  கலைமதிமாலை- பதினாறு 
கலைகளுடைய திங்கட்கன்னி. சிவபெருமான் சடைமேலுள்ளது. பிறையேயாயினும் மதிக்குரிய 
அடை கொடுத்துக் கூறுதல் உண்டு. சாதியடை. திருமுறையுள் ஆண்டாண்டுக் காண்க. புனையோடு 
மாலை கலந்த சடை. பின்னுசடை. சடையையுடைய பெருமானார்.

    Oh! It is Civan, Lord of Thiru-p-perum-puliyoor. The river Ganges is personified 
as goddess of that river. Her shoulders are long and attractive, looking like the coral. 
Her body is bright like lightning; she looks like a vine with lean body. Other small 
branches of the river come and join the main big river Ganges. The baby moon with 16 
phases also adorns our Lord along with the Ganges river and other minor rivers – all
bound in the matted hair looking like a garland. The Lord in Thiru-p-perum-puliyoor ,
adorned with these is manifested here as one who never leaves the place.

2191.     கள்ளமதித்தகபாலங்கைதனிலேமிகஏந்தித் 
    துள்ளமிதித்துநின்றாடுந்தொழிலரெழில்மிகுசெல்வர் 
    வெள்ளநகுதலைமாலைவிரிசடைமேல்மிளிர்கின்ற 
    பிள்ளைமதிப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே.        3

    கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி, 
    துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு செல்வர்;
    வெள்ள, நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற 
    பிள்ளைமதிப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.

    kaLLam matitta kapAlam kaitanilE mika Enti, 
    tuLLa mitittu ninRu ATum tozilar; ezil miku celvar; 
    veLLam, nakutalaimAlai, viricaTai mEl miLirkinRa 
    piLLai matip perumAnAr--perum puliyUr piriyArE.

பொருள்:     கள்ளத்தைப் பொருளாகக் கொண்ட பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித் 
துள்ளி மிதித்து நின்று ஆடும் தொழிலை உடையவர்; அழகிய ஞானச் செல்வர்; கங்கை வெள்ளம் 
நகுதலை மாலை, இளம்பிறை ஆகியன விரிந்த சடைமேல் ஒளிர்கின்ற பெருமான் அவர் 
திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     கள்ள மதித்த சுபாவம் -கள்ளத்தைக் கருதிய பிரமனது கபாலம். முதல் வினை 
சினை மேல் ஏற்றப்பட்டது. அதைக் கையில் ஏந்தித் துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலை 
உடையவர் என்று சிவபெருமான் நடனமாடுங்காலத்துக் கபாலத்தைத் தாங்கியிருந்த உண்மை 
கூறப்பட்டது. எழில் மிகு செல்வர்- சென்று அடையாமையாகிய அழகுமிக்க செல்வத்தை 
உடையவர். வெள்ளம் - கங்கை . நகுதலை மாலை - சிரிக்கின்ற தலைகளின் வரிசை. 
பிள்ளைமதி - இளம்பிறை. 

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord Civan carries 
in His hand one of the skulls of Brahma. He performs His vocation of the cosmic dance 
by carrying the skull in His hand, jumping and treading. He is the most attractive 
Supreme Being, wearing the Ganges river and a garland of smiling skulls. They look 
very bright on His matted hair. Here our Lord has kept the baby moon also on the
matted hair. This Lord is manifest in Thiru-p-perum-puliyoor without leaving this
place.

2192.     ஆடலிலையமுடையாரருமறைதாங்கியாறங்கம் 
    பாடலிலையமுடையார்பன்மையொருமைசெய்தஞ்சும் 
    ஊடலிலையமுடையார்யோகெனும்பேரொளிதாங்கிப் 
    பீடலிலையமுடையார்பெரும்புலியூர்பிரியாரே.        4

    ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறுஅங்கம் 
    பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து, அஞ்சும் 
    ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர்ஒளி தாங்கி, 
    பீடு அல் இலையம் உடையார் - பெரும்புலியூர் பிரியாரே.

    ATal ilaiyam uTaiyAr; arumaRai tAgki ARu agkam 
    pATal ilaiyam uTaiyAr; panmai orumai ceytu, anjcum 
    UTu alil aiyam uTaiyAr; yOku enum pEr oLi tAgki,
    pITu al ilaiyam uTaiyAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     ஆடுதலில் தாள கதி உடையவர்; அரிய மறைகளோடு ஆறங்கங்களையும் பாடும் 
சங்கீத லயம் உடையார். பன்மையை ஒருமை செய்தும் ஐந்தும் ஊடல் இல்லையாகச் செய்தவர்; 
யோகம் என்னும் ஒளியைத் தாங்கி பெருமையுடைய நள்ளிரவில் லயம் (ஆடுதல்) உடையார். 
அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     ஆடல் இலையம் - நடன லயம். ஆறு அங்கம் - சிக்கை. கற்ப சூத்திரம். வியாகரணம், 
நிருத்தம், சந்தோவிசிநி, சோதிடம் என்பன. பாடல் இலயம் - சங்கீத லயம். பன்மை ஒருமை செய்து -         
அநேகம் ஏகம் என்னும் நிலைகளைத் தோற்றி. அஞ்சும் - ஐம் பொறிகளும். ஊடலில்- ஊடுதலாலே 
(ஐம்பொறி அடக்கம் இல்லாதமையால்). ஐயம் உடையார்- மெய்ப்பொருள் நிச்சயமின்றி. 
ஐயப்படுதலுக்குரியார். யோகு-யோகம், யோக நெறி, ஒளிநெறியாதலின் யோகெனும்
பேரொளி என்றார். பீடு அல் - பெருமையுடைய நள்ளிரவில். இலயமுடையார் - நட்டம் பயிலுதலுடையார், 
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும். ஆற்றல் யோகெனும் பேரொளி தாங்கியிருத்தல் கொண்டே 
'உறைந்ததோர் ஒளியதாக்கி ஒடுங்கிடின் யோகபூசை' (ஞானபூசாகாரணம் 14) என்பதும், ஞானி யோகி 
கிரியா வான்முறையே அறிவிற்கறிவாகவும் அறிவில் ஒளியாகவும் அறிவில் மூர்த்தியாகவும் தியானிப்பர் 
என்பதும், 'மூன்றும் பெறின்புறப் பூசையாமே' (ஞான. 14) என்பதும். 'மூன்றும் உணர்வும் ஒளியும் மூர்த்தியும்' 
என்பதும் தருமையாதீனத்து முனிவருள் ஒருவராகிய ஸ்ரீமத் சட்டைநாதத் தம்பிரான் சுவாமிகள் 
குறிப்புரையால் உணரத்தக்கன. இதனால் யோகியர் யோகெனும் பேரொளி தாங்கும் உண்மை புலப்படும்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord of 
Thiru-p-perum-puliyoor's vocation is to dance, whenever He decides to. He 
used to chant the songs of the six angaas. These six angaas praise the four 
Vedas. He sings them with  full propriety in musical tone. He takes the shape 
of a single being as well as multifarious appropriate forms. He needs no 
control of the five senses. We, therefore, observe Him with fear. He does 
His dance in the dark midnight, with the bright light of His yogic power. 
This Lord of Thiru-p-perum-puliyoor is manifest in the temple in Thiru-p-perum -
puliyoor without leaving this place.

2193.     தோடுடையார்குழைக்காதிற்சுடுபொடியாரனலாடக் 
    காடுடையாரெரிவீசுங்கையுடையார்கடல்சூழ்ந்த 
    நாடுடையார்பொருளின்பநல்லவைநாளுநயந்த 
    பீடுடையார்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே.        5

    தோடு உடையார், குழைக்காதில்; சுடுபொடியார்; அனல்ஆடக் 
    காடு உடையார்; எரி வீசும் கை உடையார்; கடல் சூழ்ந்த 
    நாடு உடையார்; பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த 
    பீடு உடையார்; பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.

    tOTu uTaiyAr, kuzaik kAtil; cuTupoTiyAr; anal ATak             
    kATu uTaiyAr; eri vIcum kai uTaiyAr; kaTal cUznta 
    nATu uTaiyAr; poruL inpam nallavai nALum nayanta 
    pITu uTaiyAr; perumAnAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     குழையணிந்ததொரு காதில், தோடணிந்ததொரு காதில், இருகாதிலும் 
திருநீறணிந்து, காட்டில் எரியுடன் ஆடுபவர்; கையில் எரி ஏந்தியவர்; கடல் சூழ்ந்த நாட்டினை 
உடையவர்; அறம் பொருள் இன்பமான  நல்லவைகளை விரும்பும் பெருமை உடையவர் 
பெருமானார் அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     குழையணிந்ததொரு காதில். தோடணிந்ததொரு காதில். காதில் திருநீறணிதல் 
உணர்த்தப்பட்டது. காட்டில் தீயில் ஆடுபவர். கையில் எரி ஏந்தியவர். கடல் சூழ்ந்த நாடெல்லாம் உடையவர். 
பொருள் இன்பம் ஆகிய நல்லவற்றை நாள்தோறும் விரும்பி, அடியவர்க்கருளும் பெருமை உடையார்.

    Oh! it is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Our Lord who never leaves the 
city in Thiru-p-perum-puliyoor wears in one of His ears the earring made of palm leaf. 
In the other ear He wears the earring made up of tender leaves. He applies the holy ashes 
all over His body. He desires to perform His avocation of dance on the burning ghat over 
fire during midnight. He holds in one of His hands the ball of fire. He is the Lord of 
the entire cosmos, which is surrounded by the oceans. He takes delight always in bestowing 
happiness and wealth. He is Lord of all the people, all the places and He resides 
permanently in Thiru-p-perum-puliyoor.

2194.     கற்றதுறப்பணிசெய்துகாண்டுமென்பாரவர்தங்கள் 
    முற்றிதறிதுமென்பார்கள்முதலியர்வேதபுராணர் 
    மற்றிதறிதுமென்பார்கள்மனத்திடையார்பணிசெய்யப் 
    பெற்றிபெரிதுமுகப்பார்பெரும்புலியூர்பிரியாரே.        6

    "கற்றது உறப்பணி செய்து காண்டும்" என்பார் அவர்தம் கண்; 
    'முற்று இது அறிதும்" என்பார்கள் முதலியர் வேதபுராணர்; 
    "மற்று இது அறிதும்" என்பார்கள் மனத்து இடையார்; பணி செய்ய, 
    பெற்றி பெரிதும் உகப்பார் - பெரும்புலியூர் பிரியாரே.

    "kaRRatu uRap paNi ceytu kANTum" enpAr avartam kaN; 
    "muRRu itu aRitum" enpArkaL mutaliyar; vEtapurANar; 
    "maRRu itu aRitum" enpArkaL manattu iTaiyAr; paNi ceyya, 
    peRRi peritum ukappAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     'கற்றதனாலாய பயன் வாலறிவான் நற்றாள் தொழல்' என்று அறிந்து, தம்மை 
அடையத் திருப்பணி செய்வோருக்குக் கண்ணாகவும், இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு 
முதல்வராகவும், வேதமும் புராணமுமாயிருப்பவர் (பழையோர்), இவை கூறும் பொருளை 
அறிவோம் என்பவர்களுடைய மனத்தில் இருப்பவர் ஆகிய இவர்கள் பணி செய்ய, அப்பணியின் 
தன்மையினைப் பெரிதும் மகிழ்ந்து அவர்களுக்கு அருள் செய்வர்; அவர் திருப்பெரும்புலியூரை 
விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     கற்றது உறப்பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண் - கற்றதனாலாய 
பயன் தம்மைப் பொருந்தத் திருப்பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்கு அவர்தம் 
கண்ணாயுள்ளார். முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் - இதனை முற்றும் அறிவோம் 
என்பவர்களுக்கு முதல்வராயிருப்பவர். வேதபுராணர் - வேதமும் புராணமுமாயிருப்பவர். 
வேதத்தால் உணர்த்தப்படும் பழையோர். மற்று இது அறிதும் என்பார்கண் மனத்திடையார் 
-இதைப் பின்னே அறிவோம் என்பாருடைய மனத்தில் இருப்பவர், பணி செய்யப் பெற்றி 
பெரிதும் உகப்பார் - திருத்தொண்டு செய்துவரின் அத்தொண்டின் தன்மையையும் 
தொண்டர் தன்மையையும் மிக விரும்பி அருள் செய்வார். 

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. Great scholars with divine 
knowledge study deeply and do service to Lord with firm faith that they will see God. 
For such people our Lord delights them in their mind being their eyes. Those 
people who have firm faith that they have full knowledge about divinity are graced 
by Him as the first and as creator of Vedas and Puranaas. There are certain people 
who do have in their mind that they will learn this at a later stage. For such people 
also He delights them in their mind. He takes special care of His devotees and takes 
delight in all of them. This Lord is manifest in Thiru-p-perum-puliyoor without 
leaving this place forever.

2195.     மறையுடையாரொலிபாடல்மாமலர்ச்சேவடிசேர்வார் 
    குறையுடையார்குறைதீர்ப்பார்குழகரழகர்நம்செல்வர் 
    கறையுடையார்திகழ்கண்டங்கங்கைசடையிற்கரந்தார் 
    பிறையுடையார்சென்னிதன்மேற்பெரும்புலியூர்பிரியாரே.        7

    மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார், 
    குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர்; அழகர்; நம் செல்வர்; 
    கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில் கரந்தார்; 
    பிறை உடையார், சென்னிதன்மேல்;- பெரும்புலியூர் பிரியாரே.

    maRai uTaiyAr, olipATal; mA malarccEvaTi cErvAr, 
    kuRai uTaiyAr, kuRai tIrppAr; kuzakar, azakar; nam celvar; 
    kaRai uTaiyAr, tikaz kaNTam; kagkai caTaiyil karantAr; 
    piRai uTaiyAr, cennitanmEl;--perum puliyUr piriyArE.

பொருள்:     வேதாகமங்களை உடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர் 
போலும் சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும் 
ஆகிய அனைவரது குறையையும் தீர்ப்பர். இளைஞர், அழகர், நம்முடைய செல்வர், கண்டக் கறையுடையார், 
கங்கையைச் சடையில் கரந்தார், சென்னியின் மேல் பிறையுடையார்; அவர் திருப்பெரும்புலியூரை 
விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     வேதங்களுடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர்போலும் 
சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும் ஆகிய 
எத்திறத்தாருடைய குறைகளையும் தீர்ப்பார். இளைஞர், சொக்கர், நம் செல்வர், நீலகண்டர், 
கங்கைச் சடையர், சந்திரசேகரர்.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. These Vedic scholars on hearing 
their songs, think of the holy feet of our Lord without any break. If people have any mental 
suffering our Lord will drive it out of their life. Our Lord is always young. He is the most 
attractive being. He is our real asset. He imbibed the poison and keeps it at His throat. 
He retains the moon on His matted hair. He supports the Ganges on His head without any 
visibility to others. This Lord of Thiru-p-perum-puliyoor never leaves the city of 
Thiru-p-perum-puliyoor.

2196.     உறவியுமின்புறுசீருமோங்குதல்வீடெளிதாகித் 
    துறவியுங்கூட்டமுங்காட்டித்துன்பமுமின்பமுந்தோற்றி 
    மறவியன்சிந்தனைமாற்றிவாழவல்லார்தமக்கென்றும் 
    பிறவியறுக்கும்பிரானார்பெரும்புலியூர்பிரியாரே.        8

    உறவியும் இன்புஉறு சீரும் ஓங்குதல், வீடு எளிதுஆகி, 
    துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி
    மறவி அம் சிந்தனை மாற்றி, வாழ வல்லார் தமக்கு என்றும் 
    பிறவி அறுக்கும் பிரானார் - பெரும்புலியூர் பிரியாரே.

    uRaviyum inpu uRu cIrum Ogkutal, vITu eLitu Aki, 
    tuRaviyum kUTTamum kATTi, tunpamum inpamum tORRi, 
    maRavi amcintanai mARRi, vAza vallAr tamakku enRum 
    piRavi aRukkum pirAnAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     உறவும் இன்பமும் ஓங்கும் சிறப்பும், வீடு அடைதலும் எளிதாகி முத்தியும் பந்தமும் 
காட்டி, துன்பமும் இன்பமும் தோன்றச் செய்து, மறக்கும் மனத்தினை மாற்றி, வாழ வல்லவர்களுடைய 
பிறப்பினை அறுக்கும் பிரானார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் - உறவும் இன்பம் மிக்க சிறப்பும். உயர்தல் - எளிதாகி -
வீடு எளிதாகி. பற்றற்றொழிதல் எளிதாகி. துறவியும் கூட்டமும் காட்டி - முத்தியும் பந்தமும் காட்டி. 
துன்பமும் இன்பமும் தோற்றி - துக்கமும் சுகமும் ஆக்கி. மறவி அம்சிந்தனை மாற்றி - மறத்தல் உடைய
கருத்தை ஒழித்து. வாழ வல்லவர் தமக்குப் பிறத்தல் என்றும் இல்லாமல் போக்கும் பிரானார். 
இத்திருப்பாடல் எல்லாருள்ளத்தும் என்றும் நிற்கத்தக்கது.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. Our Lord Civan who is called 
Vyakrapureeswarar in this city helps the human souls in many ways and stops rebirth of 
such souls and gives eternal bliss finally. He shows all extremes - life of detachment 
and life of attachment, and happiness and sufferings due to the above. Then He makes 
the change in thoughts and attitude in the worldly matters showing austerity against
materialism. He finally makes the souls to think of Him always without forgetting and 
increases the happiness of the souls. He also graces and gives them the eternal bliss 
forever. He finally makes them not to forget Him forever. This Lord is manifest in the
temple in the city Thiru-p-perum-puliyoor and will never leave this place.

2197.     சீருடையாரடியார்கள்சேடரொப்பார்சடைசேரும் 
    நீருடையார்பொடிப்பூசும்நினைப்புடையார்விரிகொன்றைத் 
    தாருடையார்விடையூர்வார்தலைவரைந்நூற்றுப்பத்தாய 
    பேருடையார்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே.        9

    சீர் உடையார்; அடியார்கள்சேடர்; ஒப்பார்; சடை சேரும் 
    நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்; விரிகொன்றைத் 
    தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப் பத்துஆய - 
    பேர் உடையார்; பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.

    cIr uTaiyAr; aTiyArkaL cETar; oppAr; caTai cErum 
    nIr uTaiyAr; poTip pUcum ninaippu uTaiyAr; virikonRait 
    tAr uTariyAr; viTai UrvAr; talaivar; ain nURRup-pattu Aya 
    pEr uTaiyAr; perumAnAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     பெருமையுடையார்; அடியவர்களின் உடையான் (சுவாமி); சடைமேல் சேரும் கங்கையை 
உடையார்; திருநீறு பூசும் திருவுள்ளமுடையார்; விரிந்த கொன்றைப் பூமாலையை உடையவர்; இடபத்தை 
ஊர்வர்; எவ்வுயிர்க்கும் உலகிற்கும் தலைவர்; அவர்தம் அடியார் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

 குறிப்புரை:     சீர்  - கனம். உடையார்- சுவாமி. அடியார்கள் சேடர் ஒப்பார்- அடியார்களுக்கெல்லாம் 
பெரியோரைப் போல்வார். சடைசேரும் கங்கை உடையார். திருநீறு பூசும் திருவுள்ளம் உடையார். விரிந்த 
கொன்றைமாலை அணிந்தவர். எருது ஊர்வார். எவ்வுலகிற்கும் எவ்வுயிர்க்கும் தலைவர். 
ஐயாயிரம் பேர் உடையார். 

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. To the devotees who are 
very famous people, our Lord is the greatest. He supports the river Ganges in His 
matted hair. Always He remembers to smear His body with holy ashes. He wears the bright 
garland of cassia flowers on His head. He sustains the white bull for conveyance 
to move around the cosmos. He is the Chief of everything. He is named with 100 
good names. He is manifest as the Supreme Being in Thiru-p-perum-puliyoor. 
This Lord never leaves the city of Thiru-p-perum-puliyoor and stays there happily.

2198.     உரிமையுடையடியார்களுள்ளுறவுள்கவல்லார்கட் 
    கருமையுடையனகாட்டியருள்செயுமாதிமுதல்வர் 
    கருமையுடைநெடுமாலுங்கடிமலரண்ணலுங்காணாப் 
    பெருமையுடைப்பெருமானார்பெரும்புலியூர்பிரியாரே.        10

    உரிமை உடைய அடியார்கள் உள்உற உள்க வல்லார்கட்கு 
    அருமை உடையன காட்டி, அருள்செயும் ஆதிமுதல்வர்; 
    கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப் 
    பெருமை உடைப் பெருமானார் - பெரும்புலியூர் பிரியாரே.

    urimai uTaiya aTiyArkaL uL uRa uLka vallArkaTku 
    arumai uTaiyana kATTi, aruL ceyum Atimutalvar, 
    karumai uTai neTumAlum, kaTimalar aNNalum, kANAp 
    perumai uTaip perumAnAr--perumpuliyUr piriyArE.

பொருள்:     திருவருள் பெறுவதற்கு உரிமை உடைய அடியார்கள் உள்ளத்தில் நினைக்க 
வல்லார்களுக்கு, அவர்கள் காண்பதற்கு அரியனவற்றையெல்லாம் காட்டி அருள் செய்யும் 
அநாதி முதல்வன். கரிய நிறமுடை நெடுமாலும் தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் 
காண முடியாத பெருமை உடைய பெருமானார்; அவர் திருப்பெரும்புலியூரை விட்டுப் பிரியார்.

குறிப்புரை:     உரிமை உடைய .... முதல்வர் - திருவருள் உரிமை உடைய அடியவர்களின் 
உள்ளத்தில் மிக நினைக்க வல்லவர்கட்குக் காண்டற்கருமையுடையனவற்றைக் காட்டி அருள் 
செய்யும் அநாதி முதல்வன். ஆதி முதல்வன் என்பது ஆதிக்கும் ஆதியாய அநாதி முதல்வரை 
உணர்த்திற்று. மாயோனும் மலரவனும் காணாத தீப்பிழம்பாகிய பெருமை உடைய பெருமான்.

    Oh! It is Civan, our Lord of Thiru-p-perum-puliyoor. To those devotees who 
claim kinship and respectful friendship with our Lord and to those who concentrate 
on their mind on our Lord's holy feet, our Lord shows everything which they cannot 
see normally and graces them. He is the Chief and the origin of all the commencement 
and the cosmos. The black coloured Thirumaal and Brahma, the four-headed creator who is 
seated in the sweet smelling lotus flower, could not see our Lord. This Lord is manifest 
in the temple in Thiru-p-perum-puliyoor and never will leave this place.

2199.     பிறைவளரும்முடிச்சென்னிப்பெரும்புலியூர்ப்பெருமானை 
    நறைவளரும்பொழிற்காழிநற்றமிழ்ஞானசம்பந்தன் 
    மறைவளருந்தமிழ்மாலைவல்லவர்தந்துயர்நீங்கி 
    நிறைவளர் நெஞ்சினராகிநீடுலகத்திருப்பாரே.     11

    பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, 
    நறை வளரும் பொழில் காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன், 
    மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி, 
    நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

    piRai vaLarum muTic cennip perumpuliyUrp perumAnai, 
    naRai vaLarum pozil kAzi nal-tamiz njAnacampantan, 
    maRai vaLarum tamizmAlai vallavar, tam tuyar nIgki, 
    niRai vaLar nenjcinar Aki, nITu ulakattu iruppArE.

பொருள்:     பிறை தேய்தலின்றி வளரும் முடியைக் கொண்ட சிரமுடைப் பெரும்புலியூர்ப் 
பெருமானை, தேன் வளரும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த காழிநகர் நற்றமிழ் பாடும் ஞானசம்பந்தன் 
பாடிய வேதப்பொருள் வளரும் தமிழ்மாலையாகிய இந்தப் பதிகத்தை வல்லவர், தம்முடைய 
துயர் நீங்கி, திருத்தி மிக்க உளத்தினராகி இருப்பர்.

குறிப்புரை:     பிறை தளர்தலின்றி வளர்ந்து கொண்டேயிருக்கும். சடைமுடியைக் கொண்ட 
தலையை உடைய பெருமான். நறை - தேன். பொழில் - சோலை. நற்றமிழ் - திருப்பதிகங்கள். 
மறை வளரும் தமிழ்  மாலை- இத்திருப்பதிகம். வல்லவர் எழுவாய். இருப்பார் - பயனிலை. அவர்க்குத் 
துயர் நீக்கமும், நெஞ்சுவளர் நிறையும் உளவாகும்.

    Oh! It is Civan, our Lord in Thiru-p-perum-puliyoor. The baby moon in the matted 
hair of our Lord grows on gradually and becomes larger and larger day by day. Our saint 
Thiru-gnana-Sambandar hails from the city of Seerkaazhi. In this city, forest areas are 
plenty with plants and trees with fine flowers dripping honey. He came to the temple 
and prostrated before our Lord, and then started singing Tamil verses, which developed 
like Vedas. Those who study and memorise and sing these ten Tamil verses will find their 
suffering disappear and will experience heartfelt joy. Also they will live in the 
celestial world forever.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            67ஆம் பதிகம் முற்றிற்று
            End of 67th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 204             பதிக எண் 68. 

68. திருக்கடம்பூர்                 68. THIRU-K-KADAMBOOR

பண் : காந்தாரம்                 Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருக்கடம்பூர் என்னும் இத்திருத்தலமானது சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு
5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரி வடகரைத் தலங்களுள் முப்பத்து நான்காவது தலமாகும். 
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பேருந்தில் கடம்பூர் செல்லலாம். 
தேவாரப்பாடல் பெற்ற கோயில் மேலக்கடம்பூரில் உள்ளது.

    ஊரின் பெயர் கடம்பூர் ஆயினும் இங்குள்ள கோயிலுக்குக் கரக்கோயில் என்று பெயர். 
இது 'தென்கடம்பைத் திருக்கரக்கோயிலான்' என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் அறியக் 
கிடக்கின்றது. இதன் உண்மைக் காரணத்தை ஆராய்ச்சியாளர் இன்னும் ஆராய்ந்து கொண்டு 
இருக்கின்றார்கள். புலப்படவில்லை. இத்தலத்தை வணங்கிய இந்திரன் இதனைத் தன் உலகத்திற்குக் 
கொண்டுபோக நினைத்துப் பாதாளம்வரை தோண்டியும் அஃது அப்பாலும் ஊடுருவிப் போவது கண்டு 
அஞ்சி, முன்போல் அமைத்துப் பூசித்து அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றனன் என்ற வரலாறு 
கருதிக் கரக்கோயில் எனப்படும் என்பர் என்று திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தாம் 
அருமையாக எழுதிய பெரியபுராண உரையில் குறித்திருக்கின்றார்கள். 
(திருத்தொண்டர் புராணம் பகுதி - 4. பக்கம் 287).

    இறைவர் திருப்பெயர் அமிர்தகடேசர். இறைவியார் திருப்பெயர் சோதிமின்னம்மை. 
தேவேந்திரன் பூசித்துப் பேறு பெற்றான். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று 
திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. கோயில் கர்ப்ப இல்லின் 
அடிப்பாகம் இரத வடிவில் குதிரைகள் பூட்டிய நிலையில் இருக்கின்றது. இக்கடம்பூர்க்கும் 
கிழக்கே 1.5 கி.மீ. தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் இருக்கின்றது. இது முற்றிலும் இடிந்து 
போய் உள்ளது.

பதிக வரலாறு

    வாழ்கொளிபுத்தூரில் வழிபட்டு வந்த திருஞானசம்பந்தர் பார்புகழ் பதிகங்கள் 
பாடி வார்பொழிற் கடம்பையும் வணங்கி மகிழ்ந்தபொழுது அருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2200.     வானமர்திங்களும்நீரும்மருவியவார்சடையானைத் 
    தேனமர்கொன்றையினானைத்தேவர்தொழப்படுவானைக் 
    கானமரும்பிணைபுல்கிக்கலைபயிலுங்கடம்பூரில் 
    தானமர்கொள்கையினானைத்தாள்தொழவீடெளிதாமே.        1

    வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார்சடையானை, 
    தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை, 
    கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில் - 
    தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ வீடு எளிது ஆமே.

    vAn amar tigkaLum nIrum maruviya vAr caTaiyAnai, 
    tEn amar konRaiyinAnai, tEvar tozappaTuvAnai, 
    kAn amarum piNai pulkik kalai payilum kaTampUril 
    tAn amar koLkaiyinAnai, tAL toza, vITu eLitu AmE.

பொருள்:     ஆகாயத்தில் பொருந்திய பிறையும் கங்கையாகிய நீரும் மருவிய நீண்ட சடையுடையானை, 
தேன் பொருந்திய கொன்றைப்பூ மாலையனை, தேவர்களால் தொழப்படும் தேவனை, முல்லைக்காட்டில் வாழும் 
பெண்மானுடன் கலைமான் பயிலும் திருக்கடம்பூரில் விரும்பித் தங்கும் கருத்துடையவனை, அவனுடைய 
தாள்களைத் தொழ, வீடுபேறு எளிதாகும்.

குறிப்புரை:     வான்- ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும் - பிறையும். நீரும் - கங்கையும். 
மருவிய- கலந்த. வார் - நீண்ட. தேவர் தொழப்படுவானை- 'தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத்     
தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே'  (தி. 4 ப.112 பா.5) 
என்றவாறு. தன் அடியாரையும் தேவர் தொழுவர் எனின், தன் (பரமசிவ)னைத் தொழுதலில் 
ஐயமுண்டோ?. கான் -காடு. பிணை- பெண் மான். கலை- ஆண்மான். கடம்பூர் - கடம்பு மரம் உள்ள ஊர். 
தலவிருட்சம். 'கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூர்' என்றதால் கடம்பங்காடும் ஆகும். 

    The Lord's long matted hair is decorated with the moon and the Ganges - all are 
in a way adornment to our Lord. He wears the garland of cassia flowers with honey in them. 
He is worshipped by all the devas. The city is surrounded by forest areas, where the male 
deer embraces the female one joyfully in the forest. In such a rich and attractive city 
our Lord is manifest in the temple in the city. Those devotees who worship His holy feet 
will reach heaven easily.

2201.     அரவினொடாமையும்பூண்டுஅந்துகில்வேங்கையதளும்         
    விரவுந்திருமுடிதன்மேல்வெண்டிங்கள்சூடிவிரும்பிப் 
    பரவுந்தனிக்கடம்பூரிற்பைங்கண்வெள்ளேற்றண்ணல்பாதம் 
    இரவும்பகலும்பணியஇன்பநமக்கதுவாமே.        2

    அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை அதளும்         
    விரவும் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப் 
    பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பாதம் 
    இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே.

    aravinoTu Amaiyum pUNTu, am tukil vEgkai ataLum,
    viravum tiru muTi tan mEl veNtigkaL cUTi, virumpip 
    paravum tanik kaTampUril paigkaN veL ERRu aNNal pAtam 
    iravum pakalum paNiya, inpam namakku atu AmE.

பொருள்:     பாம்பினொடு ஆமை ஓட்டினையும் பூண்டு அழகிய துகிலும் வேங்கைப் புலியின் 
தோலும் கலக்கும். அழகிய சென்னிமேல் வெண்பிறை சூடி பரவப்படும் திருக்கடம்பூரில் பசிய 
கண்களையுடைய வெள்ளேற்று அண்ணலின் பாதத்தை இரவும் பகலும் பணிய நமக்கு 
அது இன்பம் ஆகும்.

குறிப்புரை:     அரவு - பாம்பு. ஆமை- முற்றலாமை இளநாகமோடு ஏனமுளைக் கொம்பவை 
பூண்டு, அம்துகில் வேங்கை அதள் - அழகிய புலித்தோலாகிய ஆடை. முடிமேல் திங்கள். சூடி விரும்பிப் 
பரவுங் கடம்பூர் என்க. அம்பிகைக்குரிய துகிலும், அரனுக்குரிய அதளும் விரவும் (-கலக்கும்) எனலுமாம்.
பரவும்- எழுந்தருளிய. சூடி விரும்பி எழுந்தருளிய கடம்பூர் என்று கொள்ளாக்கால், வினைமுடிபு பொருந்தாது. 
பரவுதல் - வாழ்த்துதல். துதித்தல் என்று பொருள் படுதல் ஈண்டு பொருந்தாது. இதில், சூடுதலும், 
விரும்புதலும், பரவுதலும் இறைவன் வினையாதல் வேண்டும். சூடி என்பதைப் பெயராகக் கொண்டு 
கூறலாம் எனினும், பூண்டு சூடி விரும்பிப் பரவும் என்று தொடர்தலால் இடையில் ஒரு வினையெச்சத்தை 
மட்டும் பெயராக் கோடல் யாங்ஙனம்? அதளும் விரவும் முடி எனல் விளங்கிற்றிலது. பைங்கண்         
வெள்ளேறு- பசிய கண்களையுடைய வெள் விடை. ஏற்றண்ணல்- எருதூரும் பெருமானார். இரவும்  பகலும் 
பாதம் பணிய நமக்கு இன்பமது ஆம் என்க. விரும்பிச்சூடி- அதளும் விரும்பி என்று பொருத்தினும் 
பொருந்தல் இல்லை. அதளும் விரவும் திருமுடி என்று கொண்டு அரையில் உடுத்த புலித்தோல் 
முடியையும் மறைத்துச் சுற்றியிருந்ததோ என்று எண்ணுவாரும் உளர்.

    Our Lord Civan is manifest in Thiru-k-kadamboor. He dons His body with snakes         
and tortoise shells. He wears the good-looking tiger's hide as His dress. In His attractive 
head He retains the white moon. He uses the white bull for His conveyance. The eyes of the 
bull are like fire. Those devotees who prostrate before the holy feet of our Lord day 
and night and worship Him with devotion will have happiness throughout their life.

2202.     இளிபடுமின்சொலினார்களிருங்குழல்மேலிசைந்தேறத் 
    தெளிபடுகொள்கைகலந்ததீத்தொழிலார்கடம்பூரில் 
    ஒளிதருவெண்பிறைசூடியொண்ணுதலோடுடனாகிப் 
    புலியதளாடைபுனைந்தான்பொற்கழல்போற்றுதுநாமே.        3        

    இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து ஏற 
    தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில் - 
    ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன்ஆகி, 
    புலிஅதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,நாமே.                

    iLi paTum incolinArkaL irugkuzalmEl icaintu ERa, 
    teLipaTu koLkai kalanta tIt tozilAr kaTampUril- 
    oLitaru veNpiRai cUTi, oNNUtalOTu uTan Aki,
    puli ataL ATai punaintAn ponkazal pORRutum, nAmE.

பொருள்:     இளி என்னும் இசையினிமையுடைய சொல் பேசும் மகளிருடைய கரிய கூந்தலுக்கு         
இசைந்து, ஏறத் தெளிந்த வேதக் கோட்பாட்டுடன் வேள்வித் தொழில் புரியும் மறையோர்கள் வாழும் 
திருக்கடம்பூரில் ஒளியதாகிய நெற்றியையுடைய உமாதேவியாருடன் ஒளிவீசும் வெண்பிறை சூடி, 
புலித்தோலாடை அணிந்த சிவபெருமானின் பொற்கழலினைப் போற்றுவோம் நாம்.

குறிப்புரை:     இளி - (யாழின் நரம்புகளுள் ஒன்று). ஏழிசையுள் ஒன்று. சொல்லினிமையும் இளி 
என்னும் இசையினிமையும் வேறுபடாது இருக்கும் என்றபடி. (சொல்லினிமைக்கு ஒவ்வாது இளியும் 
படும் எனலும் ஆம்). குழல் - கூந்தல். குழல்மேல் புகை இசைந்து ஏறத் தீத்தொழில் ஆர் கடம்பூர் 
எனலுமாம். ஏற என்னும் வினையெச்சம். ஆர் என்னும் வினைப்பகுதியொடு முடிந்தது. கலந்த 
என்பதனொடு முடித்தலும் கூடும். ஏறக் கொள்(ளும்) கை எனல் வலிந்து பொருள் கொள்வதாகும். 
ஏறத் தெளி(த்தல்) என்று பொருத்தலுங்கூடும். யாகத்தில் இருபத்தேழு நட்சத்திரப் பெண்டிர்க்கும் 
தீவழி உதவும் வேதவுண்மை குறிக்கப்பட்டது. தெளிபடு கொள்கை - தெளிவு பொருந்திய கோட்பாடு. 
வேதக்கொள்கை. தீத்தொழில் -வேள்வி. ஆர் - பொருந்தி. தீத்தொழிலார் - வேள்வியாளர் எனலுமாம். 
ஒளி தருபிறை - வெண்பிறை. 

    ஒள் நுதல்- ஒளியதாகிய நெற்றியை உடைய உமாதேவியார். பண்புத்தொகை நிலைக்களத்துப் 
பிறந்த  அன்மொழித் தொகை. 'பண்பு தொகவரூஉம் கிளவியானும் . . . ஈற்று நின்றி யலும் அன்மொழித்               
தொகையே' (தொல். சொல். 902). ‘பண்புத் தொகை படவும் ... அச்சொற்றொக்கபின் அத்தொகை 
அன்மொழித் தொகையாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி 
வரும்' (பிரயோக விவேகம் - 24 உரை). ஓடு உடன் இரண்ட பற்றிவரும் (பிரயோக விவேகம் - 24 உரை), 
ஓடு உடன் இரண்டனுள் ஒன்று மூன்றனுருபின் நீட்சி (தொல்காப்பியர் 'ஓடு' என்றே கூறினார்).           
மற்றொன்று உடனாதல் (ஒருசேர இருத்தல்) குறித்தது. 'எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை 
நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடனாகி நின்றருளி' (தி.7 பா.230) என்புழிக் காண்க. 
ஓடுடன் கூடி  என்றலும் உண்டு. சூடி உடனாகிப் புனைந்தான் என்றியைக்க. புலி அதன் ஆடை - 
புலித்தோலுடையை. புனைந்தான் - அணிந்த சிவபிரான். பொன் கழல் - பொன் போலுஞ் சேவடி. 
கழல் - ஆகுபெயர். நாம் கழலைப் போற்றுதும் (போற்றுவோம்). 'கள்' வண்டு என்பாருமுளர். 
இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

    In the city of Thiru-k-kadamboor, scholarly Brahmins offer oblations in the 
consecrated fire everyday. The girls who speak tender words in musical tone gather 
round the oblation and hold their hair in the smoke of the holy fire get it dried. 
In such a sacred city of Thiru-k-kadamboor very bright dazzling white moon 
dons our Lord's matted hair. He is manifest in the temple along with His consort 
Uma Devi wearing on His loins the tiger skin. Let us all with sincere devotion 
prostrate before Him and praise Him and worship Him.

2203.     பறையோடுசங்கமியம்பப்பல்கொடிசேர்நெடுமாடம் 
    கறையுடைவேல்வரிக்கண்ணார்கலையொலிசேர்கடம்பூரில் 
    மறையொலிகூடியபாடல்மருவிநின்றாடல்மகிழும் 
    பிறையுடைவார்சடையானைப்பேணவல்லார்பெரியாரே.        4

    பறையோடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம் 
    கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் - 
    மறையொலி கூடிய பாடல் மருவி நின்று,ஆடல் மகிழும் 
    பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியாரே.

    paRaiyOTu cagkam iyampa, palkoTi cEr neTumATam                 
    kaRai uTai vEl varikkaNNAr kalai oli cEr kaTampUril- 
    maRaiyoli kUTiya pATal maruvi ninRu, ATal makizum- 
    piRai uTai vArcaTaiyAnaip pENa vallAr periyArE.                

பொருள்:     பறை முதலிய இசைக்கருவிகளும் சங்கும் ஒலிக்க, கொடிகள் பல சேர்ந்த நெடிய 
மாடங்களில் குருதிக் கறை படிந்த வேல்போலச் செவ்வரி படர்ந்த கண்களையுடைய இளமகளிரின் 
ஆடல்பாடல்களாகிய கலைகளின் ஒலி கூடிய திருக்கடம்பூரில் வேத ஒலியுடன் ஆடலை 
மகிழும் பிறையணிவார் சடையானைப் பேண வல்லவர்களே பெரியவர்கள். 

குறிப்புரை:     பறை - வாத்தியம். சங்கம் - சங்குகள். இயம்ப - ஒலிக்க. கறை – குருதிக் கறை, கறுப்பு, 
வேல், பிறருடம்பிற்பட்டு, இரத்தம் தோய்ந்து உலர்ந்து கறுப்புறுதல் கூறப்பட்டது. சாதியடை. கண்ணுக்குச் 
செவ்வேல். அதன் கொடுமையும் கூர்மையும் செம்மையும் பற்றி ஒப்பாகும். கலை-மேகலை. மாடங்களில் 
மகளிர் ஆடுதலால் உண்டாகும் ஒலி. மறை ஒலி - வேத முழக்கம். பாடல் - வேதகீதம். ஆடல் மகிழும் 
சடையான். வார்- நீண்ட. பேணவல்லார் விரும்பி வழிபடவல்லார் -பெரியார் - திருவருட்பெருமை 
உடையோர். பேணவல்லார் - வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம். வித்தும் 
அதன் அங்குரமும் மெய் உணரில் -வித்ததனிற் காணாமையால், அதனைக் கைவிடுவர். கண்டவர்கள், 
பேணாமையால் அற்றால் பேறு (திருக்களிற்றுப்படியார் 57) என்னும் உண்மை நூலின் கண் 
பேணாமையாலாம். பெறாமை கூறுமுகத்தான் பேண வல்லார் பெருமை உணர்த்தப்பட்டமை விளங்கும்.

    The city is full of all sorts of noises from all places of devotion. The noise of 
the drum and the blowing sound of the conch are heard everywhere. There are many palatial 
buildings with many staircases. At the top of the building the flags in many colours always 
swing in the air. Many young girls join together and dance and sing. The musical instruments
make music. All such sounds are plentifully heard all around the city. The Vedic scholars 
chant the Vedas and sing songs also. They then dance and the Lord accepts it merrily. 
Our Lord with long matted hair with the crescent is manifested in this city. Those who 
sing in praise of our Lord will be great scholars.
 
2204.     தீவிரியக்கழலார்ப்பச்சேயெரிகொண்டிடுகாட்டில் 
    நாவிரிகூந்தனற்பேய்கள்நகைசெயநட்டம்நவின்றோன் 
    காவிரிகொன்றைகலந்தகண்ணுதலான்கடம்பூரில் 
    பாவிரிபாடல்பயில்வார்பழியொடுபாவமிலாரே.        5

    தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேள்எரி கொண்டு, இடுகாட்டில், 
    நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம் நவின்றோன் 
    கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் - கடம்பூரில் 
    பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

    tI viriya, kazal Arppa, cEyeri koNTu, iTukATTil, 
    nA viri kUntal nal pEykaL nakaiceyya, naTTam navinROn- 
    kA viri konRai kalanta kaNnutalAn-kaTampUril, 
    pA viri pATal payilvAr paziyoTu pAvam ilArE.

பொருள்:     தீப்போலும் செஞ்சடை விரியவும் கழல் ஆர்க்கவும் செந்தீயைக் கையில் கொண்டு 
 இடுகாட்டில் (உலகனைத்தும் அழியும் சர்வ சங்கார காலத்தில்) நீட்டிய நாவினையும் பரந்த
தலைமயிரினையும் உடைய நல்ல பேய்கள் மகிழ்ச்சியால் சிரித்தலைச் செய்ய நடனம் ஆடினவன், 
சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்களை அணிந்த நெற்றிக் கண்ணினன், அவனுடைய 
திருக்கடம்பூரில் பண்களால் இசை கூட்டப்பெற்ற பாடல்களைப் பயின்று பாடுவார் பழியும் பாவமும் 
இல்லாதவராவர்; மாறாகப் புண்ணியமும் புகழும் உடையோராவர். 

குறிப்புரை:     தீவிரியக் கழல் ஆர்ப்பச் சேய் எரி கொண்டு இடுகாட்டில் நட்டம் நவின்றோன் - 
தீப்போலும் சடை விரியவும் கழல் ஒலிக்கவும் செந்தீயைக் கையில் கொண்டு, உலகனைத்தும் 
கற்பொடியென அழியுஞ் சருவசங்கார காலத்தில், அகண்டாகாரப் பெருவெளியில், தான் தனியனாகி 
இலங்கித், திருநடம் பயிலுஞ் சிவபெருமான், நாவிரி கூந்தல் நல்பேய்கள் நகைசெய்ய - நீட்டிய 
நாக்கையும் பரந்த கூந்தலையும் உடைய நல்ல பேய்கள் நகுதலைச் செய்ய (நட்டம் நவின்றோன்). 
காவிரி கொன்றை - சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்கள். கண்ணுதலான்- நெற்றிக்கண்ணன். 
பாவிரி பாடல் - ஓசை (யின்பம்) பெருகிய பாட்டு. பா - பரந்து செல்வதோரோசை (தொல்.). 
பயில்வார் - பயிற்சி செய்வார். பழியோடு பாவம் இலார் -(புகழும் புண்ணியமும் உள்ளவராய்ப்) 
பழியும் பாவமும் இல்லாதவராவர்.

    Our Lord Civan performs His vocation whenever He wants to do. Then His 
matted hair expands like fire. On His legs, the anklet clinks while dancing. 
He carries fire in one of His hands. On the burial ground the devils laugh 
seeing our Lord dancing. He wears garlands of cassia flowers. He has a third 
eye on His forehead. Those devotees who reach the temple in Thiru-k-kadamboor 
and sing the divine songs in pleasing musical tone and worship Him will be 
people of no sins and flaws.

2205.     தண்புனல்நீள்வயல்தோறுந்தாமரைமேலனம்வைகக் 
    கண்புணர்காவில்வண்டேறக்கள்ளவிழுங்கடம்பூரில் 
    பெண்புனைகூறுடையானைப்பின்னுசடைப்பெருமானைப் 
    பண்புனைபாடல்பயில்வார்பாவமிலாதவர்தாமே.        6

    தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக, 
    கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில், 
    பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப் பெருமானை, 
    பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

    taNpunal nIL vayaltORum tAmaraimEl anam vaika, 
    kaN puNar kAvil vaNTu ERa, kaL avizum kaTampUril, 
    peN punai kURu uTaiyAnai, pinnucaTaip perumAnai, 
    paN punai pAtal payilvAr pAvam ilAtavar tAmE.

பொருள்:     குளிர்ந்த நீர் பரந்த வயல்கள் தோறும், தாமரை மலர்களின்மேல் அன்னப் 
பறவைகள் தங்கும். கண்ணைக் கவரும் மலர்ச்சோலைகளில் வண்டு ஏறுதலால் தேன் பாயும் 
திருக்கடம்பூரில், திருமேனியில் பெண்ணைப் புனைந்த கூறுடையானை, பண்ணோடு பாட 
வல்லவர்கள் பாவமிலாதவராவர்; மாறாகப் புண்ணியராவர்.

குறிப்புரை:     தண் புனல் - குளிர்ந்ததாகிய நீர். அனம் - அன்னப்புள். கண் புணர்கா – 
கண்கள் தாமே சென்று புணர்தற்குத் தக்க அழகுமிக்க சோலை. கள் - தேன். அவிழும் -அலரும். 
வண்டுகள் ஏறுதலால் மலர்கள் தேன்நெகிழ அலரும் என்றபடி. பெண் புனை கூறு உடையான் - 
'மாதியலும் பாதியன்' அர்த்தநாரீச்சுவரன். பின்னுசடை - பின்னிய சடை. பண்புனை பாடல் - 
பண்களால் அழகு செய்யப்பெற்ற பாடல்கள். 'பண்ணின் பயனாம் நல்லிசை' (பெரிய. சண்டேசுர. 9). 
கலந்த பாடல் என்றவாறு 'பாவம் இல்லாதவர்' - என்றதற்கு மேற்பாட்டில் உரைத்தாங்கு 
உரைத்துக் கொள்க.

    In the city of Thiru-k-kadamboor, there are many tanks full of cold water 
and many lotus flowers. The swans in large numbers stay over the lotus flowers and 
enjoy. There are many gardens full of flowering plants with dripping honey from 
the petals.In such a sacred city, our Lord is in concomitant form with matted hair. 
Those who sing songs in harmonious sound and worship Him will have no sins 
in their life.

2206.     பலிகெழுசெம்மலர்சாரப்பாடலொடாடலறாத 
    கலிகெழுவீதிகலந்தகார்வயல்சூழ்கடம்பூரில் 
    ஒலிதிகழ்கங்கைகரந்தானொண்ணுதலாளுமைகேள்வன் 
    புலியதளாடையினான்றன்புனைகழல்போற்றல்பொருளே.        7

    பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத, 
    கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில், 
    ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண்நுதலாள் உமை கேள்வன், 
    புலிஅதள் ஆடையினான்தன் புனை கழல் போற்றல் பொருளே.

    pali kezu cemmalar cAra, pATaloTu ATal aRAta, 
    kali kezu vIti kalanta, kAr vayal cUz kaTampUril, 
    oli tikaz kagkai karantAn, oN nutalAL umai kELvan, 
    puli ataL ATaiyinAn tan punaikazal pORRal poruLE.

பொருள்:     பூசைக்குப் பொருந்திய செம்மலர்கள் அடைய, பாடுதலும் ஆடுதலும் ஒழியாத 
ஆரவாரம் மிக்க தெருக்கள் கலந்த, கரிய நிறமுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கடம்பூரில்
ஒலிக்கின்ற கங்கையாற்றினைச் சடையிற் கரந்தான் ஒளிதிகழ் நெற்றியுடையானாகிய 
உமையின் கணவன், புலித்தோலாடையினானுடைய கழலணிந்த திருவடிகளைப் போற்றுதல் 
பிறந்ததன் பயனாகும்.

குறிப்புரை:     பலி -பூஜை (சேது புராணம்). செம்மலர் - செய்ய பூக்கள். பலிகெழுமலர் - பூஜைக்குப் 
பொருந்திய பூக்கள். சார - அடைய. பாடலொடு ஆடல் - பாட்டும் ஆட்டும். அறாத - நீங்காத. கலி- ஒலி.
 கடம்பூர். வீதியிலுள்ளார் சிவபூஜைக்குப் பொருந்திய பூக்கள் கொண்டு வந்து பூசித்துப் பாடுதலும் 
ஆடுதலும் செய்பவர் என்றவாறு. செம்மலர் என்பதற்குப் பெருமையிற் சிறந்தோர் எனலுமாம் .
பாடலாடலறாத கலிகெழு வீதி கலந்த கடம்பூர், வயல்சூழ்கடம்பூர். செம்மலர் என்று பொருள் 
கொள்ளின் பலி என்பது (அம்மல்லரது மெய்வலிமை குறிக்க). மாமிசம் என்றாகும். புலி அதள் ஆடை - 
(பா. 3). புனை -அழகுறுத்தப்பட்ட. கழல் - கழலணிந்த திருவடிகளை. போற்றல் - துதித்தல். 
பொருள் -உடம்பின் பயன். போற்றாமை - உடம்பெடுத்ததன் பயனின்மை என்றவாறு. பிறவிப் பயன் 
ஆகமங்களை உணர்ந்து சிவபிரான் திருவடி மலர்களை எப்பொழுதும் இடைவிடாமல் 
போற்றுதலேயன்றிப் பிறிதில்லை. எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.

    In this sacred city of Thiru-k-kadamboor, there are broad streets where 
the Saiva devotees who do the Siva poojas collect very fine flowers and perform 
their rituals. They sing the ritual songs and dance very happily and in the streets, 
the Vedic noise is heard all over. The paddy fields are full of water always. 
In such a sacred city, our Lord is manifest in the temple in Thiru-k-kadamboor. 
He supports the river Ganges in His matted hair, invisible to others. He is the 
consort of our goddess Uma Devi. He wears on His loins the hide of the tiger. 
For those devotees praising the fame of our Lord is the only meaningful act 
in their life.

2207.     பூம்படுகிற்கயல்பாயப்புள்ளிரியப்புறங்காட்டில் 
    காம்படுதோளியர்நாளுங்கண்கவருங்கடம்பூரில் 
    மேம்படுதேவியொர்பாகமேவியெம்மானெனவாழ்த்தித் 
    தேம்படுமாமலர்தூவித்திசைதொழத்தீயகெடுமே.            8

    பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில் 
    காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில், 
    "மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்!" என வாழ்த்தி, 
    தேம் படு மா மலர் தூவித் திசை தொழ, தீய கெடுமே.

    pUm paTukil kayal pAya, puL iriya, puRagkATTil 
    kAmpu aTu tOLiyar nALum kaN kavarum kaTampUril, 
    "mEmpaTu tEvi OrpAkam mEvi! emmAn!" ena vAztti, 
    tEm paTu mA malar tUvi, ticai toza, tIya keTumE.

பொருள்:     மூங்கிலை வென்ற தோளியர் கண்ணுக்குத் தோற்ற கயல் மீன்கள் மலர்கள் 
நிறைந்த படுகரில் பாயவே பறவைகள் விலகிப் பறக்கும் திருக்கடம்பூரில், புறங்காட்டில், 
சிறந்த உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்ட எம்மான் என வாழ்த்தி, தேனுள்ள பெரிய 
மலர்களைத் தூவித் (திருக்கடம்பூரில் இருக்கும்) திசை நோக்கித் தொழ தீயன கெடும்.

குறிப்புரை:     படுகு - படுகர், நீர்நிலை. வண்டு -வண்டர்.சிறகு - சிறகர். கரும்பு - கரும்பர் 
எனவருதல் போல்வது இது. பூம்படுகரில் கயல்மீன்கள் பாயவும் புட் (பறவை)கள் இரிய (ஓட)வும் 
புறங்காட்டில் தோளிர் கண் கவரும் என்க. காம்பு அடுதோள்- மூங்கிலை நீ எனக்கு ஒப்பாகாய் 
என்று கொல்லும் தோள். அடுதல் - கொல்லுதல். கண்களை ஒவ்வாது தோற்றோடிக் கயல் படுகரிற் 
பாய்தலும் புள் (வண்டு) இரிதலும் கூறப்பட்டன. 'கயலஞ்சப் பிறழ் கண்ணாள்' (கம்பர் மிதிலைக். 26). 
'புள்ளுறை கமலவாவிப் பொருகயல் வெருவியோட வள்ளுறை கழிந்த வாள்போல் வரியுற வயங்கு 
கண்ணாள்' (மேற்படி உண்டாட்டு 20). 'நறைபாய் வளமலர்வாய் அளிபடரச் சேல்பாய்வனகயல் 
பாய்வன செங்கால் மடவன்னம் போல்பாய் புனல் மடவார் படிநெடுநாடு' (மேற்படி கங்கைப் 8). 
இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

    In the city of Thiru-k-kadamboor, very rich and attractive ponds are many 
Inside the ponds birds of many kinds gather and live here. When the carp fish fall
into the pond in large numbers and jump, the birds fly away. In this city, very young 
damsels are pretty with shoulders like bamboo's tender poles. Our Lord in this temple 
is manifest very attractively, to these girls. He dances on the burial ground. When 
the devotees go to Thiru-k-kadamboor and praise Him "Oh! You Lord! concomitantly one 
with Your consort Umaa! Oh my Lord!" and scatter the flowers and worship Him, 
their sins will vanish.

2208.     திருமருமார்பிலவனுந்திகழ்தருமாமலரோனும் 
    இருவருமாயறிவொண்ணாஎரியுருவாகியஈசன் 
    கருவரைகாலிலடர்த்தகண்ணுதலான்கடம்பூரில் 
    மருவியபாடல்பயில்வார்வானுலகம்பெறுவாரே.         9

    திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும், 
    இருவரும்ஆய் அறிவு ஒண்ணா எரிஉரு ஆகிய ஈசன் - 
    கருவரை காலில் அடர்த்த கண்நுதலான் - கடம்பூரில் 
    மருவிய பாடல் பயில்வார் வான்உலகம் பெறுவாரே.

    tiru maru mArpil avanum, tikaztaru mA malarOnum, 
    iruvarum Ay, aRivu oNNA eri uru Akiya Ican- 
    karuvarai kAlil aTartta kaN nutalAn--kaTampUril         
    maruviya pATal payilvAr vAn ulakam peRuvArE.

பொருள்:     திருமகள் மருவிய மார்பினை உடைய திருமாலும் பெரிய தாமரை மலர்மேல் 
விளங்கும் பிரமனும் ஆகிய இருவருங்கூடி முயன்றும் அறிவதற்கு இயலாதவாறு நெருப்புப் பிழம்பாக 
நின்ற ஈசன், கரியமலை போன்ற உடலைக் கொண்ட இராவணனைக் கால் விரலால் அடர்த்த நெற்றிக் 
கண்ணனின், கடம்பூரில் பொருந்திய திருப்பதிகங்களைப் பயில்வோர் வானுலகத்தைப் பெறுவர்.

குறிப்புரை:     திருமார்பிலவனும் -திருமகள் மருவிய மார்பினை உடைய திருமாலும், திருமறுமார்பன் 
என்பது வேறு. அதில் ஸ்ரீவத்ஸம் என்பது திருமறு எனப்பட்டது. மாமலரோன் - செந்தாமரை மலரில்
வாழ்கின்ற பிரமன் ஆகிய இருவரும் என்று ஒரு சொல் வருவிக்க. அறிவொண்ணா - அறிதற்கு ஒன்றாத. 
எரி உரு -தீப்பிழம்பு வடிவம். கருவரை- கரிய மலை போலும் இராவணனை. காலில் அடர்த்த 
கயிலையை எடுத்தபோது திருவடிப் பெருவிரலூன்றி நெருக்கிய.  காலனைக் காலாற் கடிந்த கண்ணுதலான் 
எனலுமாம். பிற திருப்பதிகங்களுள், ஒன்பதாவது பாட்டில், அடிமுடி தேடிய வரலாற்றை யொட்டி 
இராவணன் கயிலை எடுத்த வரலாற்றைக் கூறக்காணோம். சில பதிகங்களுள் இரண்டுங்கூறிப்பட்டில 
ஆயினும், இவ்வாறு வரலாற்றை முன்பின் ஆகக் கூறவில்லை. 

    Our Lord in Thiru-k-kadamboor was incomprehensible to these two - Thirumaal 
with goddess Lakshmi residing on his chest, and Brahma, the four-faced god Naanmugan - 
both failed in their attempt to see our God. Then our Lord stood before them as a 
superb tall flame of fire. Our Lord crushed Raavanan, king of Sri Lanka whose appearance 
was like a black mountain. Our Lord pressed the top of the mountain with His right toe 
and brought him under complete control. Our Lord of this temple resides in Thiru-k-kadamboor. 
The devotees who reach this temple and sing songs on our Lord, praising Him will reach heaven.

2209.     ஆடைதவிர்த்தறங்காட்டுமவர்களுமந்துவராடைச் 
    சோடைகள்நன்னெறிசொல்லார்சொல்லினுஞ்சொல்லகண்டீர் 
    வேடம்பலபலகாட்டும்விகிர்தன்நம்வேதமுதல்வன் 
    காடதனில்நடமாடுங்கண்ணுதலான்கடம்பூரே.        10

    ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்ஆடைச் 
    சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல் அலகண்டீர்! 
    வேடம்பலபல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன், 
    காடு அதனில் நடம் ஆடும் கண்நுதலான், கடம்பூரே.

    ATai tavirttu aRam kATTumavarkaLum, am tuvar ATaic 
    cOTaikaL, nanneRi collAr; collinum, col alakaNTIr! 
    vETam pala pala kATTum vikirtan, nam vEtamutalvan, 
    kATu atanil naTam ATum kaN nutalAn, kaTampUrE.

பொருள்:     ஆடை உடுத்தலைத் தவிர்த்து தருமோபதேச வேடிக்கை காட்டும் சமணர்களும் 
துவர் ஊட்டிய ஆடை போர்த்தும் சோடைகளும் நல்ல நெறி காட்டார். காட்டினாலும் அவை 
மெய்ந்நெறி அல்ல. திருக்கடம்பூரில் கண்ணுதலான், 'பலப்பல வேடமாகும் பரன் நாரிபாகன்' 
விகிர்தன், வேதமுதல்வன்; காட்டில் கூத்தாடுபவன்.

குறிப்புரை:     ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும்- ஆடை உடுக்காமல் தர்மோபதேசம் 
செய்யும்  அமணர்களும் அம்துவர் ஆடைச்சோடைகள் -சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த 
வறட்சியர் (பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி (ஞான மார்க்கம்). 
சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும் 
விகிர்தன் - பலவேடமாகும். பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். கள்ளி முதுகாட்டில் 
ஆடிகண்டாய் (தி. 6 ப. 23 பா.4)

    In this city of Thiru-k-kadamboor, the Jains, who preach their virtues, wearing no 
dress and the Buddhists who preach divine knowledge speak untrue words. Our Lord took many 
forms whenever needed. He is the creator of the Vedas. He dances on the burial ground. 
He has a third eye on His forehead. This Lord is manifest in the temple in 
Thiru-k-kadamboor city.

2210.    விடைநவிலுங்கொடியானைவெண்கொடிசேர்நெடுமாடம் 
    கடைநவிலுங்கடம்பூரிற்காதலனைக்கடற்காழி 
    நடைநவில்ஞானசம்பந்தன்நன்மையாலேத்தியபத்தும்
    படைநவில்பாடல்பயில்வார்பழியொடுபாவமிலாரே.         11

    விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர் நெடுமாடம் 
    கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி 
    நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும், 
    படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

    viTai navilum koTiyAnai, veNkoTi cEr neTumATam 
    kaTai navilum kaTampUril kAtalanai, kaTal kAzi 
    naTai navil njAnacampantan nanmaiyAl Ettiya pattum, 
    paTai navil pATal, payilvAr paziyoTu pAvam ilArE.

பொருள்:     விடை தங்கும் கொடியுடையானை, வெண்கொடிகள் கட்டப்பட்டிருக்கும் உயர்ந்த 
மாடங்கள், நீண்ட வாயில்கள் கூடிய திருக்கடம்பூரில் அன்புருவானவனைக் கடலை அடுத்த 
காழிமாநகரில் ஞானநெறி கூறும் ஞானசம்பந்தன் ஆக்கமாக ஏத்திப் பாடிய இப்பத்துத் 
திருப்பாடல்களையும் பயில்வார் பழியொடு பாவம் இல்லாதவராவர்; மாறாகப் புகழும் 
புண்ணியமும் உடையோராவர்.

குறிப்புரை:     விடை நவிலும் கொடியானை -எருது பயின்ற கொடியை உடையவனை. வெண்கொடி-
வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில். இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல்
விளைப்பவன். அன்புருவானவன் எனலுமாம். அன்பே சிவம். நடை - ஞானாசாரம் நன்மை - மங்களம். 
படைநவில் பாடல். திருவருட்சாதனமாக நவின்ற பாடல்கள். படை- சாதனம்.  அல்லற்பட்டு 
 செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555). படை - நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படைக்கும் 
 பாடல் என்றார், கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள், பழியொடு பாவம் இலர் (பா. 5ல்) 
உரைத்தாங்கு உரைத்துக் கொள்க.

    Our Lord manifested in the temple in Thiru-k-kadamboor has a flag of a bull's 
picture, which represents His aspect. In this city, there are many great palaces with 
tall gates and many staircases. Here the white flags always float on the flagpole. 
Our Lord has an eagerness to stay in this city. Our saint Thiru-gnana-Sambandar from 
Seerkaazhi, a city on the seashore, was a man of great character. He approached the 
temple in Thiru-k-kadamboor, prostrated before Lord and worshipped Him. He then sang, 
requesting our Lord His grace, for one and all. Those songsters who can memorise 
these songs of virtue and recite them before our Lord, will get rid of all their 
sins and evils in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            68ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 68th Hymm

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 205                     பதிக எண் 69. 

69. திருப்பாண்டிக்கொடுமுடி                 69. THIRU-P-PAANDI-K-KODUMUDI

பண்: காந்தாரம்                         Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் இத்திருத்தலமானது கொடுமுடி புகைவண்டி நிலையத்திற்கு 
வடக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி -
கரூர் -கொடுமுடி என்ற பேருந்து வழியில் பேருந்தின் மூலம் இத்தலத்தை அடையலாம். இறைவர் திருப்பெயர் 
கொடுமுடி நாதர். இறைவி திருப்பெயர் பண்மொழி நாயகி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் காவிரி. 
மூவர்களாலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள் இருக்கின்றன. 
இத்தலத்துச் சுந்தர மூர்த்தி நாயனாரது திருப்பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தது. 
கோயமுத்தூர் வித்துவான் கந்தசாமி முதலியாராலும் வேங்கட்ரமண தாசர் என்பவராலும் இயற்றப்பெற்ற 
தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தங்கி வழிபட்ட 
காலத்தில், அக்கொங்கு நாட்டில், 'பயின்றதனால் பனித்த குளிர் முன்னான பிணி வந்து மூள்வது 
போல் முடுகுதலும்’ பரிசனங்கள் அதை அவர்க்கு அறிவித்து இறைஞ்சினர். திருவருளைத் தொழுது, 
திருநீலகண்டத்தின் தியானவுறைப்பால் அக்குளிர்நோய் அடியாரை வருத்தாமல், ‘அவ்வினைக்கு 
இவ்வினை ஆம்' எனத் தொடங்குந் திருப்பதிகம் பாடியருளித் தடுத்தார். அந்நாட்டினர் எல்லோர்க்கும் 
அந்நோய் பற்றாது நீங்கிற்று. பின் பல தலங்களைப் பணிந்து சென்று திருப்பாண்டிக் கொடுமுடியை 
அடைந்து வழிபட்டுப் பாடி மகிழ்ந்து சாத்தியது இவ்வளத் தமிழ்மாலை.

                திருச்சிற்றம்பலம்


2211     பெண்ணமர்மேனியினாரும்பிறைபுல்குசெஞ்சடையாருங் 
    கண்ணமர்நெற்றியினாருங்காதமருங்குழையாரும் 
    எண்ணமருங்குணத்தாருமிமையவரேத்தநின்றாரும் 
    பண்ணமர்பாடலினாரும்பாண்டிக்கொடுமுடியாரே.            1

    பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும், 
    கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும், 
    எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும், 
    பண் அமர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.

    peN amar mEniyinArum, piRai pulku cenjcaTaiyArum, 
    kaN amar neRRiyinArum, kAtu amarum kuzaiyArum, 
    eN amarum kuNattArum, imaiyavar Etta ninRArum, 
    paN amar pATalinArum--pANTikkoTu muTiyArE.

பொருள்:     மாதினை ஒருபாகம் கொண்ட திருமேனியாரும், பிறை பொருந்திய சிவந்த 
சடையுடையவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவரும், காதில் பொருந்திய குழை உடையவரும், 
எட்டு என்னும் குணத்தை உடையவரும் தேவர்களும் வணங்கிப் பணிந்து துதிக்க நின்றவரும், 
பண் பொருந்திய திருப்பாடல்களாகி நின்றாரும் (யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     பெண் அமர் மேனியினார் - அர்த்தநாரீச்சுவரர். பிறைபுல்கு செஞ்சடையார் - 
சந்திரசேகரர். கண்ணமர் நெற்றியினார்- -பால நேத்திரர். காது அமரும் குழையார் - குழைக்காதனார். 
எண் அமரும் குணத்தார்  -எண் குணத்தார். இமையவர் ஏத்த நின்றார் - தேவர்  தொழப்படுவார். 
பண் அமர்  பாடலினார் -பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி (தி.6 ப.5 பா.57). 'பண் துளு'கப் 
பாடல் பயின்றாய் போற்றி' (தி.6 ப.5 பா.7). 'பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகி ... 
அனைத்தும் ஆகி' (தி.4 ப.70 பா.4). இத்தலத்தின் தேவியார் திருநாமம் 'பண்மொழியம்மை'. 
'வேதமே பண்ணுளார்' என (தி.2 ப.28 பா.3). முற்போந்ததும் ஈண்டறியத்தக்கது.

    Our Lord Civan shares His left half of His body with the consort here. He is 
therefore called Arthanaareeswarar. He is also in the concomitance form. On His matted 
hair He retains the moon. In His forehead He has a third eye. He wears in one of His 
ears a special earring made out of tender leaf and called Kuzhai. He is the Supreme 
Being with eight attributes. The devas praise and worship Him. He used to chant 
various divine songs in musical tone.

2212.     தனைக்கணிமாமலர்கொண்டுதாள்தொழுவாரவர்தங்கள் 
    வினைப்பகையாயினதீர்க்கும்விண்ணவர்விஞ்சையர்நெஞ்சில் 
    நினைத்தெழுவார்துயர்தீர்ப்பார்நிரைவளைமங்கைநடுங்கப் 
    பனைக்கைப்பகட்டுரிபோர்த்தார்பாண்டிக்கொடுமுடியாரே.        2

    தனைக் கணி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள் 
    வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்; நெஞ்சில் 
    நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை நடுங்கப் 
    பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் - பாண்டிக்கொடுமுடியாரே.

    tanaik kaNi mA malar koNTu tAL tozuvAr avar tagkaL 
    vinaippakai Ayina tIrkkum viNNavar; vinjcaiyar; nenjcil 
    ninaittu ezuvAr tuyar tIrppAr; nirai vaLai magkai naTugkap 
    panaikkaip pakaTTu uri pOrttAr-pANTikkoTu muTiyArE.

பொருள்:     கொன்றையின் அழகிய மலர் கொண்டு தன் தாள் தொழுவார்களின் 
தீவினைகளாகிய பகையினை முழுதும் தீர்க்கும் மேலானவன்; தேவர்கள், வித்தியாதரர்கள் 
மற்றும் நெஞ்சில் நினைப்பவர்கள் மனத்துயர் தீர்ப்பவர்; வரிசையாக வளையல்கள் 
அணிந்த உமையம்மை அஞ்சப் பனை மரம் போன்ற நீண்ட கரத்தையுடைய யானையின் 
தோலினை உரித்துத் திருமேனியின் மேற்போர்த்தார். அவர் யாரெனில் திருப்பாண்டிக் 
கொடுமுடியாரே.

குறிப்புரை:     கணி- கொன்றை. விண்ணவர்- சிவபெருமான். தன்னைக் கொன்றையின் 
சிறந்த அழகிய மலர் கொண்டு திருவடிப் பூஜை புரிவார்களுடைய வினையாகிய (வீட்டுப்) 
பகையைத் தீர்க்கும் விண்ணவன் என்றவாறு. விண்ணவர் என்றதற்கு ஏற்பத் தமை என்று 
இருத்தல் வேண்டுமாயினும், ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய கடவுளைக் கூறலின் குற்றமாகாது. 
'கொன்றைசூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்' என்ற ஆசிரியர்.  நமக்கும் 
அதையே உபதேசித்தருள்வதுணர்க. விஞ்சையர் -நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார். 
விஞ்சையர் -வித்தியாதரர். சிவபெருமானைக் குறித்ததாகக் கொண்டு ஞானசொரூபர் எனலும் ஆம். 
விஞ்சை - வித்தை. ஞானம், நிரைவளை மங்கை - வரிசையுற்ற வளையல் அணிந்த உமாதேவியார். 
பனை, கை, பகடு - பனை போலும் துதிக்கையை உடைய யானை. உரி - தோல்.

    Our Lord in Thiru-p-paandi-k-kodumudi chases the adverse, bitter grief and 
sufferings of those devotees who worship Him with cassia flowers. He is such a Chief
Supreme Being. He is the embodiment of divine knowledge. Those servitors who
remember our Lord in their mind and rise to worship Him, by the grace of our Lord,
will completely be free of their distress. Our goddess Umaa feared when she saw 
a fierce elephant with trunk like a palmyrah tree rushing towards her. Our Lord 
killed the elephant and removed its hide and covered His body with that hide.

2213.     சடையமர்கொன்றையினாருஞ்சாந்த வெண்ணீறணிந்தாரும்
     புடையமர்பூதத்தினாரும்பொறிகிளர்பாம்பசைத்தாரும் 
    விடையமருங்கொடியாரும்வெண்மழுமூவிலைச்சூலப் 
    படையமர்கொள்கையினாரும்பாண்டிக்கொடுமுடியாரே.        3

    சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண்நீறு அணிந்தாரும், 
    புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் 
    விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூஇலைச்சூலப் 
    படை அமர் கொள்கையினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.

    caTai amar konRaiyinArum, cAnta veN nIRu aNintArum,
    puTai amar pUtattinArum, poRi kiLar pAmpu acaittArum 
    viTai amarum koTiyArum, veNmazu mU ilaiccUlap 
    paTai amar koLkaiyinArum--pANTikkoTu muTiyArE.

பொருள்:      சடையில் கொன்றையைச் சூடியவரும், மணமுள்ள வெண்ணீற்றினை 
அணிந்தவரும் பக்கத்தில் பூத கணங்களை உடையவரும், புள்ளிகள் விளங்குகின்ற பாம்பினை 
அரையிற் கட்டியவரும், எருது எழுதிய கொடியுடையவரும், வெண்ணிற மழுவினையும் 
மூவிலைச் சூலத்தினையும் படையாகக் கொள்வதில் விருப்பம் உடையவரும் ஆகிய 
(அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே. 

குறிப்புரை:     சாந்தம் வெண்நீறு - சாந்தமென நீறணிந்த சைவர் (தி. 2 ப. 71 பா. 8). புடை - பக்கம். 
பூதத்தினார் - பூதகணங்களை உடையவர். பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் - 
கட்டியவர். விடை - எருது. கொடியார்- துவசம் ஏந்தியவர், இடபத் துவசம் உயர்த்தியவர். மழுவும் 
மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் - விரும்புங் கோட்பாடுடையவர்.

    Our Lord who is manifest in the temple in Thiru-p-paandi-k-kodumudi adorns 
His matted hair with strings of cassia flowers. He smears His body with holy ashes 
as sandal paste. He maintains an army of ghosts. He wears on His loin the dotted 
snake and uses it as a belt. He keeps a flag with a signal of the bull. He uses 
the trident and white axe as His weapons of war.

2214.     நறைவளர்கொன்றையினாரும்ஞாலமெல்லாந்தொழுதேத்தக் 
    கறைவளர்மாமிடற்றாருங்காடரங்காக்கனலேந்தி 
    மறைவளர்பாடலினோடுமண்முழவங்குழல்மொந்தை 
    பறைவளர்பாடலினாரும்பாண்டிக்கொடுமுடியாரே.        4

    நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம்எல்லாம் தொழுது ஏத்த 
    கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
    மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
    பறை வளர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.

    naRai vaLar konRaiyinArum; njAlam ellAm tozutu Etta, 
    kaRai vaLar mA miTaRRArum; kATu aragkA, kanal Enti, 
    maRai vaLar pATalinOTu, maNmuzavam, kuzal, montai 
    paRai, vaLar pATalinArum--pANTikkoTumuTiyArE.

பொருள்:     தேன் மிகுந்த கொன்றை மலரை அணிந்தவரும், உலகமெல்லாம் தொழுது வழிபடும் 
கறையுடைய கரிய மிடற்றினை உடையவரும், இடுகாடே ஆடும் அரங்காக, அனலினை ஏந்திக் 
கொண்டு வேதப் பாடலினொடு மார்ச்சனையுடைய முழவம் குழல் மொந்தை பறை ஒலிக்கப் 
பாடலினாரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     நறை - தேன். ஞாலம் - பூமி. கறை - நச்சுக்கறுப்பு. மா-  கரிய, அழகுமாம். 
மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ-  நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் - 
வேதப்பாடல். மண் முழவம்-   மார்ச்சனையையுடைய முழா. குழல்-வேய்ங்குழல். மொந்தை - 
ஒரு கட்பறை. பறை-  வாத்தியம். சொல் எனலுமாம்.

    Our Lord is manifest in the temple in Thiru-p-paandi-k-kodumudi. He has adorned 
His body with garlands of flowers. The entire people in the cosmos worshipped Him as He 
imbibed the poison and saved the entire universe, hence His throat is dark blue in colour. 
Our Lord's avocation is to dance on the burial ground using it as a platform for dance; 
while dancing He holds fire in one of His hands. And He chants the song of the four 
Vedas along with the music created by tabla, flute and drum. He sings to match the 
drum voices and dances well.

2215.     போகமுமின்பமுமாகிப்போற்றியென்பாரவர்தங்கள் 
    ஆகமுறைவிடமாக அமர்ந்தவர்கொன்றையினோடும்
    நாகமுந்திங்களுஞ்சூடிநன்னுதல்மங்கைதன்மேனிப் 
    பாகமுகந்தவர்தாமும்பாண்டிக்கொடுமுடியாரே.        5

    போகமும் இன்பமும் ஆகி, "போற்றி!" என்பார் அவர்தங்கள் 
    ஆகம் உறைவுஇடம் ஆக அமர்ந்தவர் - கொன்றையினோடும் 
    நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப் 
    பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.

    pOkamum inpamum Aki, "pORRi!" enpAr avar tagkaL 
    Akam uRaivu iTam Aka amarntavar--konRaiyinOTum 
    nAkamum tigkaLum cUTi, nannutal magkaitan mEnip 
    pAkam ukantavar tAmum--pANTikkoTumuTiyArE.

பொருள்:     (கட்டுண்ட) உயிருக்குச் சிற்றின்பமும், (முத்தியில்) வீட்டின்பமாகிய சிவபோகமுமாகி, 
'போற்றி' என வணங்குவோரின் உடல் இடமாகக் கொண்டு அமர்ந்தவர், கொன்றையினுடன் பாம்பையும் 
பிறையையும் சூடி அழகிய நெற்றியுடைய உமை நங்கையைப் பாகமாக விரும்பியவர்தாம், ஆகிய 
(அவர் யாரெனில்) திருப்பாண்டிக்  கொடுமுடியாரே. 

குறிப்புரை:     போகமும் இன்பமும் ஆகி -பெத்தத்தில், தநுகரண புவனங்களொடு சேர்த்து நான்காவதாக 
எண்ணப்படும் போகமும், அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில் சிவபோகமாம் 
சிவாநந்தமும் ஆகி. ஆகம் - சுத்தியால் ஓங்கிய தேகம். உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில். 
'ஊன் உடம்பு ஆலயம் (திருமந்திரம்). 'ஓங்குடலம் திருக்கோயில்' (ஞான பூஜா விதி 9). நாகம் - பாம்பு. 
நல்நுதல் மங்கை- அழகிய நெற்றியையுடைய உமாதேவியார். மேனிப்பாகம்- திருமேனியிற்பாதி. 
உகந்தவர் -விரும்பியவர். 

    Our Lord Civan who manifests Himself in Thiru-p-paandi-k-kodumudi has eight stages 
of happiness as well as the final joy that arises out of these. Those devotees who pray 
to our Lord and adore Him will enjoy the state of our Lord staying in their body. He wears 
cassia flowers, snakes and the moon - all in His matted hair. He feels veryhappy to share 
half of His body with His consort Uma Devi and be a concomitant Supreme Being.

2216.     கடிபடுகூவிளமத்தங்கமழ்சடைமேலுடையாரும் 
    பொடிபடமுப்புரஞ்செற்றபொருசிலையொன்றுடையாரும் 
    வடிவுடைமங்கைதன்னோடுமணம்படுகொள்கையினாரும் 
    படிபடுகோலத்தினாரும்பாண்டிக்கொடுமுடியாரே.        6

    கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்
    பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்
    வடிவு உடை மங்கைதன்னோடு மணம் படு கொள்கையினாரும், 
    படிபடு கோலத்தினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.

    kaTi paTu kUviLam mattam kamaz caTaimEl uTaiyArum, 
    poTipaTa muppuram ceRRa porucilai onRuTaiyArum, 
    vativu uTai magkai tannOTu maNam paTu koLkaiyinArum, 
    paTi paTu kOlattinArum--pANTikkoTu muTiyArE.

பொருள்:     மணமுள்ள வில்வம் ஊமத்தை ஆகிய பூக்களின் மணம் கமழுகின்ற சடையைச் 
சிரசின்மேல் உடையவரும், திரிபுரம் மூன்றும் சாம்பலாக எரித்து அழித்த போர்வில்லொன்று உடையாரும், 
அழகிய மங்கை தன்னோடு கூடிய கொள்கையினை உடையவரும் எல்லா உருவங்களுக்கும் காரணமான 
வடிவத்தை உடையவரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     கடி- மணம். கூவிளம்- வில்வம். மத்தம் - ஊமத்தை. கமழ்-மணக்கின்ற. செற்ற- அழித்த. 
பொருசிலை -போர்வில். 'வடிவுடை மங்கை'. படிபடு கோலத்தினார் - படியாகப் பொருந்திய கோலம். 
எல்லா உருவங்களுக்கும் காரணவுருவம் இறைவனுடையதே. ‘யாதேனும் காரணத்தால்  எவ்வுலகில் 
எத்திறமும் மாதேயும் பாகம் இலச்சினையே ஆதலினால்'  (திருக்களிறு 82), காரியமான எல்லாப் 
படிக்கும் இறைவனது கோலமே காரணப் படியாயிற்று. படி - ஒப்பு. பிரதிசத்தம். 

    Our Lord Civan who is manifest in Thiru-p-paandi-k-kodumudi temple wears bael leaves 
and datura flowers on His matted hair. He held the Meru mountain as His bow and destroyed the 
three flying forts. He married the most beautiful Paarvathi Devi. The souls before taking 
the shape of a body originate from His form.

2217.     ஊனமர்வெண்டலையேந்தியுண்பலிக்கென்றுழல்வாரும் 
    தேனமரும்மொழிமாதுசேர்திருமேனியினாரும் 
    கானமர்மஞ்ஞைகளாலுங்காவிரிக்கோலக்கரைமேல் 
    பானலநீறணிவாரும்பாண்டிக்கொடுமுடியாரே.        7

    ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும், 
    தேன் அமரும்மொழிமாது சேர் திருமேனியினாரும், 
    கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல் 
    பால்நலநீறு அணிவாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.

    Un amar veNtalai Enti uN palikku enRu uzalvArum, 
    tEn amarum mozimAtu cEr tirumEniyinArum, 
    kAn amar manjnjaikaL Alum kAvirik kOlak karaimEl-             
    pAl nala nIRu aNivArum--pANTikkoTu muTiyArE.

பொருள்:     மாமிசம் பொருந்திய வெள்ளை மண்டையோட்டை ஏந்தி உண்ணுகின்ற 
பிச்சைக்கென்று திரிவாரும், தேன்போல இனிமை பயக்கும் மொழிபேசும் பண்ணார் மொழியம்மை 
கலந்த திருமேனியுடையாரும் முல்லை நிலத்தில் பொருந்திய மயில்கள் ஆடும் காவிரியின் 
அழகிய கரைமேல் பால் போன்ற வெண்ணீறு அணிவாரும் ஆகிய (அவர் யாரெனில்) 
திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:      ஊன் - மாமிசம். தலை- பிரமகபாலம். பலி - பிச்சை. உழல்வார் - திரிவார்.
தேன் அமரும் மொழி மாது- பண்மொழியம்மை, இத்தலத்து தேவியின் திருநாமம். தேன்... திருமேனியினார் -
அர்த்தநாரீச்சுர வடிவுடையவர். கான் - காடு. மஞ்ஞைகள் - மயில்கள். கோலம் - அழகு. பால்நலம் நீறு
- பால்போலும் நன்மைகளையுடைய நீறு. 

    Our Lord Civan who has manifested Himself in Thiru-p-paandi-k-kodumudi goes 
round the cosmos to accept alms in the bowl. He carries a skull which smells bad. 
He is the concomitant Supreme Being sharing half of His body with His consort 
Paarvathi Devi whose words are as sweet as honey. He smears His body with holy 
ashes, which is as white as milk. He is manifested on the bed of Cauvery river
where peacocks dance in the forest area of the river bed.

2218.     புரந்தரன்தன்னொடுவானோர்போற்றியென்றேத்தநின்றாரும் 
    பெருந்திறல்வாளரக்கன்னைப்பேரிடர்செய்துகந்தாரும் 
    கருந்திரைமாமிடற்றாருங்காரகில்பன்மணியுந்திப் 
    பரந்திழிகாவிரிப்பாங்கர்ப்பாண்டிக்கொடுமுடியாரே.        8

    புரந்தரன்தன்னொடு வானோர் "போற்றி!” என்று ஏத்த நின்றாரும், 
    பெருந்திறல் வாள் அரக்க(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும், 
    கருந்திரை மா மிடற்றாரும் - கார் அகில் பல்மணி உந்திப் 
    பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடுமுடியாரே.

    purantaran tannoTu vAnOr, "pORRi!" enRu Etta ninRArum, 
    peruntiRal vAL arakkan(n)naip pEr iTar ceytu ukantArum, 
    karuntirai mA miTaRRArum--kAr akil palmaNi untip 
    parantu izi kAvirip pAgkarp pANTikkoTu muTiyArE.

பொருள்:     இந்திரன் தன்னோடு வானவர்கள் 'போற்றி' என்று வழிபட நின்றவரும், பேராற்றல் 
வாய்ந்த வாளை ஏந்திய அரக்கனைப் பெருந்துன்பப்படச் செய்து பின் விரும்பி அருளியவரும், 
கருங்கடல் நஞ்சினை உண்ட கரிய மிடற்றை உடையவரும், (யாரெனில்) கரிய அகில், பன்மணிகள்
முதலியவற்றை அடித்துக் கொண்டு பரந்து பாயும் காவிரியின் பாங்கரில் திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     புரந்தரன் - இந்திரன். வானோர் - தேவர். இந்திரனோடு தேவர்கள் சிவபிரானைப் 
போற்றி போற்றி என்று ஏத்தும் முதன்மை உணர்த்தப்பட்டது. பெருந்திறல் -மிக்க வலிமை. வாள் - கொடுமை. 
வாளை ஏந்திய அரக்கன் (இராவணன்) எனலுமாம். பேர் இடர்- மலையைப் பேர்க்கும் துன்பம். பெரிய துன்பம்.
கருந்திரை - கரிய கடல் நஞ்சு. திரை என்பது கடலுக்கு சினையாகு பெயர். கடல் என்பது நஞ்சுக்கு இடவாகு 
பெயர். திரை இருமடியாகு பெயர். மா - கரிய, அழகிய. மிடற்றார் - கண்டத்தினார். கார் அகில்-கரிய அகில் 
மரத்தினையும்.   பல்மணி- பலமணிகளையும். உந்தி - செலுத்தி. பரந்து -- பரவி. இழி-ஒழுகும். பாங்கர் - பக்கம்.

    The demigod Indra and all other celestials pray before our Lord and say 'glory to Thee'.
Raavanan was the greatest warrior. Our Lord smashed his heads and shoulders and annihilated his 
mightiness. Later when Raavanan begged pardon our Lord excused him and graced him. He imbibed 
the black poison and kept it permanently inside His throat. The river Cauvery brings along with 
its water the black eaglewood and all kinds of gems in the fast and gushing water. By the side 
of the river our Lord is manifested.

2219.     திருமகள்காதலினானுந்திகழ்தருமாமலர்மேலைப் 
    பெருமகனும்மவர்காணாப்பேரழலாகியபெம்மான் 
    மருமலிமென்மலர்ச்சந்துவந்திழிகாவிரிமாடே 
    பருமணிநீர்த்துறையாரும்பாண்டிக்கொடுமுடியாரே.        9

    திருமகள்காதலினானும், திகழ்தரு மா மலர்மேலைப் 
    பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர்அழல் ஆகிய பெம்மான் 
    மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரிமாடே 
    பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே.

    tirumakaL kAtalinAnum, tikaztaru mA malar mElaip 
    perumakanum(m), avar kANAp pEr azal Akiya pemmAn- 
    maru mali menmalarc cantu vantu izi kAviri mATE 
    paru maNi nIrttuRai Arum pANTikkoTu muTiyArE.

பொருள்:     திருமகளின் காதலரான திருமாலும் தாமரை மலர் மேல் இருக்கும் பிதாமகனான 
பிரமனும் காண இயலாதவாறு பேரழலாக நின்ற பெருமான் (யாரெனில்) மணம் மலிந்த மென் 
மலர்களும் சந்தனமும் கொண்டு வந்து பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் பெரிய நீர்த்துறை 
பொருந்திய பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     திருமகள் காதலினான்- இலக்குமி காதலரான திருமால். திகழ்தரு- விளங்குகின்ற. 
மாமலர் - தாமரைப்பூ. மேலை -- மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ. 
மரு - மணம்.  மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு- பக்கம். பரு - பருத்த. மணித்துறை- நீர்த்துறை. 
துறைமணி உம் என்றும் துறை ஆரும் என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க. 
துறை ஆரும் பாண்டிக்கொடுமுடி.

    The demigod Thirumaal, husband of goddess Lakshmi, and Brahma who stays in the 
lotus flower - both failed in their attempt to see our Lord's feet and head. At that 
moment our Lord stood before these two as a very big and tall superb column of fire. 
This Lord is manifested on the banks of the Cauvery river which brings along with its
water, sweet smelling soft flowers, sandalwood logs etc. He stays in Thiru-p-paandi-k -
kodumudi as the Chief Lord.

2220.     புத்தரும்புந்தியிலாதசமணரும்பொய்ம்மொழியல்லால் 
    மெய்த்தவம்பேசிடமாட்டார்வேடம்பலபலவற்றால் 
    சித்தருந்தேவருங்கூடிச்செழுமலர்நல்லனகொண்டு 
    பத்தர்கள்தாம்பணிந்தேத்தும்பாண்டிக்கொடுமுடியாரே.        10

    புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழிஅல்லால் 
    மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம்பலபலவற்றால் 
    சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு, 
    பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே.

    puttarum, punti ilAta camaNarum, poymmozi allAl 
    meyttavam pEciTamATTAr; vETam pala palavaRRAl                 
    cittarum tEvarum kUTi, cezu malar nallana koNTu, 
    pattarkaL tAm paNintu Ettum pANTikkoTu muTiyArE.

பொருள்:     புத்தர்களும் அறிவிலாத சமணரும் பொய்ம்மொழியல்லால் மெய்ம்மைத் தவம் பற்றி 
எதுவும் பேசமாட்டார்கள். திருவேடம் பலபலவற்றால் சித்தர்களும் தேவர்களும் கூடிச் செழுமையான 
மலர்களில் நல்லன கொண்டு பத்தர்களாகப் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியாரே.

குறிப்புரை:     புந்தி - அறிவு. மாட்டார்-  வன்மையில்லாதவர். வேடம்பலபலவற்றால் - சிவமூர்த்தம் 
மகேசுரமூர்த்தம் எனப் பற்பலவற்றால். சித்தர்- சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய நல்ல 
மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்). சித்தர், தேவர் எல்லோரும் ஏத்தும் தலம். 

    The Jains and Buddhists always speak falsehood. They never speak the true divine 
words. Our Lord will have several forms. Siddhars, devas, devotees and all other servitors 
bring fresh flowers in large quantities and strew them on the holy feet of our Lord and 
prostrate before Him. This Lord is our Thiru-p-paandi-k-kodumudi Supreme Being.

2221.     கலமல்குதண்கடல்சூழ்ந்தகாழியுள்ஞானசம்பந்தன் 
    பலமல்குவெண்டலையேந்திப்பாண்டிக்கொடுமுடிதன்னைச் 
    சொலமல்குபாடல்கள்பத்துஞ்சொல்லவல்லார்துயர்தீர்ந்து 
    நலமல்குசிந்தையராகிநன்னெறியெய்துவர்தாமே.        11

    கலம் மல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், 
    பலம் மல்கு வெண்தலைஏந்தி பாண்டிக்கொடுமுடி தன்னைச் 
    சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து, 
    நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்னெறி எய்துவர் தாமே.

    kalam malku taN kaTal cUznta kAziyuL njAnacampantan, 
    palam malku veNtalai Enti pANTikkoTu muTitannaic 
    cola malku pATalkaL pattum colla vallAr, tuyar tIrntu, 
    nalam malku cintaiyar Aki, nanneRi eytuvar tAmE.

பொருள்:     மரக்கலங்கள் மிகுந்த கடலால் சூழப்பெற்ற காழிநகருள் திருஞானசம்பந்தன் 
பயன் நிறைந்த வெண்டலை ஏந்தியும் பாண்டிக் கொடுமுடியாகிய தன்னைப் பாடிய சொல்லச் 
சொல்ல இன்பம் மல்கும் திருப்பாடல்கள் பத்தினையும் சொல்ல வல்லார் துயர்கள் நீங்கிப் 
பேரின்பம் நிறைந்த சிந்தையராகி நன்னெறியாகிய ஞானமார்க்கத்தை எய்துவர்.

குறிப்புரை:     கலம் - மரக்கலம். கடலில் தோணியாக மிதந்த காழியாதலின் 'கடல் சூழ்ந்த 
காழி' என்றார். பலம் - பயன். வலிமையுமாம். தலை - பிரமகபாலம். சொல- சொல்ல, பாட. 
சொல்லச்சொல்ல மல்கும் பாடல்கள் - நலம் - பேரின்பம். நன்னெறி - ஞானமார்க்கம்.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi city which is bordered 
with cool sea full of boats and ships anchored therein. Our Lord of Thiru-p-paandi-k-
kodumudi carries in His hand white human skull for the benefit of the souls on the earth, 
and is manifested in the temple. Our saint went to this temple, worshipped Him and sang 
these sacred songs on His praise. Those scholars who can memorise these songs and recite 
them before our Lord will get rid of their sufferings, will become virtuous and will 
attain divine life.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            69ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 69th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 206                பதிக எண்- 70

70. திருக்கழுமலம்-திருச்சக்கரமாற்று        70. THIRU-K-KAZHU-MALAM

பண் : காந்தாரம்                    Pam: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருக்கழுமலம் என்னும் தலமானது சீகாழி என்னும் தலமாகும். காளி, சிதம்பரத்தில்
நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, இத்தலத்தில் இலிங்கமொன்றை எழுந்தருளுவித்து
வழிபட்டுப் பேறுபெற்றமையால் இது காளிபுரம் என்னும் பெயர் எய்திற்று. ஸ்ரீகாளி என்னும் பெயரே
சீகாழி என மருவியது. ஸ்ரீபாதம் - சீபாதம். ஸ்ரீமாந் - சீமான். சென்னைப் பட்டினம், மயிலாப்பூர், 
திருவல்லிக்கேணி, திருவேட்டீசுவரன்பேட்டை, இராயப்பேட்டை, கோமளேசுவரன் பேட்டை, இராயபுரம், 
எழும்பூர் முதலான பல ஊர்களையும் சேர்த்து இக்காலம் சென்னை என வழங்குவதுபோல, பிரமபுரம், 
வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், 
கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைத் தனித்தனியே கொண்ட பன்னிரண்டு தலங்களும் 
வெவ்வேறாய் இருந்து வழங்கிவரப் பெற்ற பதிகளைச் சீகாழி என ஒரு தலத்தின் பெயரைச் 
சொல்லுதலாலே ஏனையப் பதினொன்றையும் உணர்த்தும் வழக்கம் நேர்ந்தது.

    இரண்டாவது திருமுறையுள் காழி, கொச்சைவயம், சிரபுரம், பிரமபுரம், புகலி, பூந்தராய் 
என்னும் ஆறு மட்டும் உள்ளன. இவற்றுள் பிரமபுரம் (பிரம்மாவால் பூசிக்கப்பெற்றது) சீகாழி பெரிய 
கோயிலுள் பிரமேசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை உடைய பகுதியாகும் .  தோணிபுரம் 
என்பது பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணம் பற்றியதாகும். இது சீகாழி பெரிய 
கோயிலில் தோணியப்பர் பெரிய நாயகியுடன் எழுந்தருளியிருக்கும் தோணி வடிவாய் அமைந்த 
திருக்கோயில் உள்ள பகுதியாகும்.

    மயிலாடுதுறை- சிதம்பரம் பாதையில் சீகாழி தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 
சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறை- சிதம்பரம் பேருந்துச் சாலையில் உள்ளது.
இது காவிரிக்கு வடகரையில் பதினான்காவது தலமாகும். பிரமபுரத்தில் இறைவரது திருப்பெயர் 
பிரமபுரீசுவரர்.  இறைவியாரது திருப்பெயர் திருநிலைநாயகி. தோணிபுரத்தில் இறைவரது 
திருப்பெயர் தோணியப்பர். இறைவியாரது  திருப்பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் பிரமதீர்த்தம்.  
இது வடக்குக் கோபுர வாயிலுக்குத் தென்கிழக்கில், திருநிலை அம்மையார் கோயில் திருமுன்புள்ளது.
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு ஞானப்பால் ஊட்டப் பெற்றது இத்தீர்த்தக் கரையில்தான்.        

    இதுவன்றி, சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காளிதீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், 
ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிரதீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கெளதம தீர்த்தம், 
வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், 
பதினெண்புராண தீர்த்தம், புறவநதி, கழுமலநதி, விநாயகநதி என்னும் தீர்த்தங்கள் இருக்கின்றன.         

    திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திருஅவதாரஞ் செய்தருளப் பெற்ற பதி இது. அவர் மூன்றாம் 
ஆண்டில் நீராடத் தந்தையாருடன் சென்று, பிரமதீர்த்தக் கரையில் பசித்திருக்க, அம்மையப்பரால் 
ஞானப்பால் ஊட்டப்பெற்ற பெருமை வாய்ந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையாருடைய பெருமையைக்
கேள்வியுற்ற திருநாவுக்கரசு நாயனார் சீகாழிக்கு எழுந்தருளிவந்து, அவரை வணங்கி, அவருடைய 
நட்பைப் பெற்றதோடு அவரால் அப்பர் என்னும் திருநாமத்தைப் பெற்ற சிறப்புடைய பதி இது.

    சுந்தரமூர்த்தி நாயனார் சீகாழிக்கு எழுந்தருளியபோது, இது ஞானசம்பந்தப் பெருந்தகையார் 
அவதரித்த திருப்பதி என்று மிதித்தற்கு அஞ்சி நகர்ப்புறத்து நின்று பாட இறைவர் அங்குக் காட்சி 
தரக்கண்ட பெருமை வாய்ந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளி ஆளுடைய பிள்ளையாரை 
வணங்கி அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து அவருடன் இருக்கும் பெருமை பெற்றது. 
கணநாத நாயனார் அவதரித்த திருப்பதியும் இதுவே. 

    இத்தலத்தில் திருத்தோணியப்பர் பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து சிவஞானச் 
செல்வத்தை அளிப்பதற்குக் குரு வடிவமாய் அமர்ந்திருக்கின்றார். பஞ்சகிருத்தியங்களைச் 
செய்தருளுதற்குப் பிரமபுரீசுவரர் மூலலிங்கமாய் எழுந்தருளியிருக்கிறார். திருத்தோணிக்குத் 
தென்பால் சட்டைநாதர் பேரின்ப சித்திகளை அருளுதற்பொருட்டுச் சங்கம வடிவாய் 
விளங்குகின்றார். ஆதலால் இது குருலிங்கசங்கம பதியாய்ச் சிறந்து விளங்குவது. 
சந்திரன், முருகவேள், ஆதிசேடன் முதலானவர்களும் பூசித்துப் பேறு பெற்ற சிறப்பினை 
உடையது. மூவர் முதலிகள் பாடிய எழுபத்தொரு பதிகங்களை உடைய தனிச்சிறப்பு 
இப்பதிக்கு உரியதாகும்.

    இக்காழியில் முக்கிய தெய்வமாக விளங்குகிறவர் சட்டை நாத சுவாமி. இவரது மூர்த்தம் 
சிவமூர்த்தங்களுள் ஒன்று. இரணியனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலை 
சட்டையாகப் போர்த்துக் கொண்ட காரணத்தால் இவர் இப்பெயர் பெற்றார். ஒவ்வொரு 
வெள்ளிக்கிழமை தோறும் அர்த்த சாமத்தில் இவருக்கு சிறந்த வழிபாடு நடைபெற்று வருகின்றது.

    இங்கு வடுகநாதருக்கு நித்தியபூசையும், வெள்ளிக்கிழமைதோறும் நைமித்திக பூசையும் ,
சித்திரை மாதத்துப் பரணியில் விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. சிவபெருமான்
 உமாதேவியாரோடு எழுந்தருளி, திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் காட்சி தந்தருளிய
 அருள் வெளிக்கு ஞாயிறு காணி என்று பெயர். இங்குள்ள நந்தவனத்திற்கு இந்திர நந்தவனம் 
என்னும் பெயர் இன்றும் வழக்கில்  இருக்கிறது. இது சிவபூசைக்காக முற்காலத்தில் இந்திரன் 
அமைத்ததாகும். வலம்புரி மண்டபத்தில் பல சித்திரங்கள் பழங்காலத்தில் எழுதப் பெற்றிருக்கின்றன. 
அவற்றுள் கிள்ளி வளவனைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

    பட்டினத்து அடிகள் இத்தலத்திற்கு மும்மணிக்கோவை இயற்றியுள்ளார்கள். அது திருக்கழுமல 
மும்மணிக்கோவை என்னும் பெயருடையது. இது பதினொன்றாந் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது. 
இத்தலபுராணம் சீகாழி அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்றது, திரிசிரபுரம் மகாவித்துவான் 
மீனாட்சிசுந்தரம் பிள்ளை சீகாழிக்கோவை என்னும் நூலை இயற்றியுள்ளார்கள். அது வலம்புரி 
மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இப்புராணமும் கோவையும் அச்சில் வெளிவந்துள்ளன. 
1937இல் வெளிவந்துள்ள சீகாழித் தலபுராணத்தில் வசனமும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. 
அதை எழுதியவர் வித்துவ சிகாமணி திரு. ப. அ. முத்துத்  தாண்டவராய பிள்ளை ஆவர். 
இத்தலம் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமானது. கோயில் மிகத் தூய்மையாக இருக்கின்றது. 
இருபத்தாறாம் பட்டத்து எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் பிற்காலத்துச் 
சோழமன்னர்கள் செய்தது போல திடீரென்று ஆலயத்திற்கு எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள் 
எல்லாம் குறைவற நடக்கின்றனவா எனக் கவனித்து அருளுகின்றார்கள்.  

    இங்கு சித்திரையில் நடைபெறும் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாள் விழாவே 
திருமுலைப்பால் விழாவாகும். இவ்விழா நாட்களில் கூடும் பெருந்திரளான மக்கள் பயனுறும் 
பொருட்டுத் திருமுறை மாநாடுகளை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் ஆண்டுதோறும் 
கூட்டுவித்தருளுகின்றார்கள். திருமுறை இசைவாணர் ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி
பட்டமும் ரூ.1000/- அடங்கிய பணமுடிப்பும் அளித்தருளுகின்றார்கள். 

பதிக வரலாறு

    இந்தத் திருப்பதிகம் மதுரையில் அருளப் பெற்றது. திருஞானசம்பந்தப் பெருமானின் 
அருட்பார்வை கூன்பாண்டியன் மேற்படவும் அவன் உடற்பிணி சற்றே ஒழியவும், அவன் 
ஞானப்பிள்ளையாரை நோக்கித் தங்கள் திருப்பதி யாது என வினவினான். அதற்கு
மறுமொழியாகப் பிள்ளையார் 'அங்கு ஆதியாய பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் 
நாம் பரவும் ஊரே' என்று இப்பதிகத்தை அருளினார். அப்பன்னிரு பெயர்களையும் 
உணர்த்துவது இத்திருப்பதிகம். பதிகம் முழுவதும் இப்பன்னிரு பெயர்களைக் கூறுவதாகவே 
அமைந்துள்ளது. அப்பன்னிரண்டு பெயர்களாவன: (1) பிரமபுரம்; (2) வேணுபுரம்; (3) புகலி; 
(4) வெங்குரு; (5) தோணிபுரம்; (6) பூந்தராய்; (7) சிரபுரம்; (8) புறவம்; (9) சண்பை; (10) காழி; 
(11) கொச்சைவயம்; (12) கழுமலம்.

    ‘பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவு மூரே' என்று பிள்ளையார் 
கூறுவதால் ஊர் பன்னிரண்டு என்று அறிதல் வேண்டும். ஊர் பன்னிரண்டேயன்றி ஓரூருக்குப்
பன்னிரண்டு பெயர்கள் அல்ல. மன்னுநிலை பெற்ற, பொன் அம் சிரபுரம்- பொன்னாகிய 
செல்வத்தையும் அழகையும் உடைய சிரபுரம். அரன் மன்னு தண் காழி -சிவபிரான் 
எழுந்தருளியிருக்கும் குளிர்ந்த காழிநகர். வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் - பிரளயகாலத்தில் 
இந்நகரம் தோணியாக மிதந்ததனால் தோணிபுரம் எனப் பெயர் பெற்றது. தூநீர்ச் சிரபுரம் - 
தூய நீரை உடைய சிரபுரம். கோனிய - வளைந்த. கோட்டாற்று - கோட்டாறு சூழ்ந்த. கூரும்-
மிகுதியான. காணிய - செய்யிய என்னும் வாய்ப்பாடு, பொருட்டுப் பொருளில் வந்தது. 
காணும் பொருட்டு, காண, வையகம் - உலகத்தவர்.

            திருச்சிற்றம்பலம்

2222.      பிரமனூர்வேணுபுரம்புகலிவெங்குருப்பெருநீர்த்தோணி 
    புரமன்னுபூந்தராய்பொன்னஞ்சிரபுரம்புறவஞ்சண்பை 
    அரன்மன்னுதண்காழிகொச்சைவயமுள்ளிட்டங்காதியாய 
    பரமனூர்பன்னிரண்டாய்நின்றதிருக்கழுமலநாம்பரவுமூரே.        1

    பிரமன்ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த் தோணி 
    புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம், சண்பை, 
    அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்ட அங்கு ஆதிஆய 
    பரமன் ஊர் பன்னிரண்டுஆய் நின்ற திருக்கழுமலம் - நாம் பரவும் ஊரே.

    piraman Ur, vENupuram, pukali, vegkuru, perunIrt tONi 
    puram, mannu pUntarAy, pon am cirapuram, puRavam, caNpai, 
    aran mannu taN kAzi, koccaivayam, uLLiTTa agku Ati Aya                 
    paraman Ur panniraNTu Ay ninRa tiruk kazumalam--nAm paravum UrE.

பொருள்:     நிகர் இல் பிரமபுரம் - ஒப்பு இல்லாத பிரமபுரம். நீர் மேல் நின்ற மூதூர் - கடல் மேல் 
மிதந்த தொன்மையான ஊர், தோணிபுரம். அகலிய வெங்குரு- அகன்ற நிலப்பரப்பையுடைய வெங்குரு. 
அந்தண் தராய் - குளிர்ந்த பூந்தராய். அமரர் பெருமான் -தேவதேவன், மகாதேவன். இறைவனைப் பாடும் 
பொழுதும் நாம் கைதொழுதல் வேண்டும் என்பது இத்திருப்பாடலால் பெறப்படும் ஒழுக்கம்.

குறிப்புரை:     1. பிரமபுரம், 2. வேணுபுரம், 3. புகலி, 4. வெங்குரு, 5. தோணிபுரம், 6. பூந்தராய்,
 7. சிரபுரம்  8. புறவம், 9. சண்பை, 10. காழி, 11. கொச்சைவயம், 12. கழுமலம் ஆகிய திருப்பெயர்களை 
இம்முறையே தனித்தனி முதலிற்கொண்டு தொடங்கும் திருப்பாடல் இப்பதிகத்திற் காணப்படுகின்றன. 
ஈற்றுப்பாடல் மட்டும். 'கழுமலத்தின் பெயரை' என்றுரைக்கும் காரணம் பற்றியும் ஒவ்வொரு பாட்டிலும் 
'கழுமலம்'  என்று வருதல் பற்றியும் கழுமலம் என்று தொடங்கிற்றிலது. இம்முறையே, சேக்கிழார் சுவாமிகளும்,

    'பிரமபுரம் வேணுபுரம் பெருபுகலி வெங்குருநீர்ப் 
    பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்                        
    வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் 
    பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் '

(பெரிய. திருஞான. 14) என அருளியிருக்கின்றார். (பார்க்க. தி. 2 பா. 109, 110). மன்னு - நிலைபெற்ற.      
பொன்அம் -பொன்னையும் அழகையும் உடைய. அரன் மன்னு தண்காழி - சிவபிரான் எழுந்தருளிய 
குளிர்ந்த காளீச்சரம். உள்ளிட்டு - உட்பட்டு. அங்கு ஆதி ஆய பரமன் ஊர். பன்னிரண்டாய் நின்ற 
திருக்கழுமலம் நாம் பரவும் ஊர். ஊர் பன்னிரண்டே அன்றி ஒரு ஊர்க்குப் பேர் பன்னிரண்டல்ல. 
இவ்வுண்மை அறியாதார் ஒரே ஊர்க்குப் பன்னிரண்டு பெயர் உள்ளன என்று எழுதியும் பேசியும் 
தொன்மையை அழித்தனர். தலபுராணத்திலும் தொன்மை மாறாத உண்மை உணர்த்தப்பட்டது.

    Our Lord Civan manifests Himself in the cool city called Kaaleechcharam. This city 
is different from the other eleven cities. The twelve names mentioned here relate to eleven 
other villages all around this.  This name relates to the main city Kaaleechcharam. This 
verse describes the twelve names of the twelve hamlets comprising Seerkaazhi. 
The Madurai king Koon Pandyan asked Thiru-gnana- Sambandar "Oh Lord! which is your 
sacred city?". For this question Thiru-gnana- Sambandar replied in twelve poems. 
This verse carries the twelve names of Seerkaazhi separately and then totally 
he sang 12 poems. The word Kazhumalam alone comes in almost all the poems. "The 
place where I live begins from Piramanoor and is completed in Kochchaivayam; 
it includes the twelve names and is called Kazhumalam”.

2223.     வேணுபுரம்பிரமனூர்புகலிபெருவெங்குருவெள்ளத்தோங்குந் 
    தோணிபுரம்பூந்தராய்தூநீர்ச்சிரபுரம்புறவங்காழி 
    கோணியகோட்டாற்றுக்கொச்சைவயஞ்சண்பைகூருஞ்செல்வங் 
    காணியவையகத்தாரேத்துங்கழுமலநாங்கருதுமூரே.        2

    வேணுபுரம், பிரமன்ஊர், புகலி, பெரு வெங்குரு, வெள்ளத்துஓங்கும் 
    தோணிபுரம்,பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி, 
    கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும் செல்வங் 
    காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் - நாம் கருதும் ஊரே.

    vENupuram, piraman Ur, pukali, peru vegkuru, veLLattu Ogkum 
    tONipuram, pUntarAy, tU nIrc cirapuram, puRavam, kazi, 
    kONiya kOTTARRuk koccaivayam, caNpai, kUrum celvam 
    kANiya vaiyakattAr Ettum kazumalam--nAm karutum UrE.

பொருள்:     தண் புகலி - குளிர்ச்சியான புகலி. வெள்ளங் கொள்ளத் தொங்கிய - 
தொங்குதல் தோணி. தொகு -கூடிய. தொல் - பழைய. தலை பண்டு ஆண்ட மூதூர் - 
தலை - சிரம்; சிரபுரம். எற்றான் - ஏற்ற சிவபிரான்.

குறிப்புரை:     வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம்- பிரளய வெள்ளத்துள் மேல் ஓங்கி மிதந்து         
விளங்கிய தோணிபுரம்.  தூநீர் - பரிசுத்த ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு - 
இன்றும் உளது. 'கோட்டாறு சூழ் கொச்சை' (தி. 3 ப. 89 பா. 1). கூரும் - மிகும். காணிய - காண.

    This place where I come from begins with the name Venupuram and carries twelve 
names including Shanbai. This place is praised by philanthropic people as Kazhumalam.

2224.     புகலிசிரபுரம்வேணுபுரஞ்சண்பைபுறவங்காழி 
    நிகரில்பிரமபுரங்கொச்சைவயநீர்மேல்நின்றமூதூர் 
    அகலியவெங்குருவோடந்தண்டராயமரர்பெருமாற்கின்பம் 
    பகருநகர்நல்லகழுமலநாங்கைதொழுதுபாடுமூரே.        3

    புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை,புறவம்,காழி, 
    நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற மூதூர், 
    அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்பெருமாற்கு இன்பம் 
    பகரும் நகர் நல்ல கழுமலம் - நாம் கைதொழுது பாடும் ஊரே.

    pukali, cirapuram, vENupuram, caNpai, puRavam, kAzi, 
    nikar il piramapuram, koccaivayam, nIrmEl ninRa mUtUr, 
    akaliya vegkuruvOTu, am taN tarAy, amarar perumARku inpam 
    pakarum nakar nalla kazumalam--nAm kaitozutu pATum UrE.

பொருள்:     தொல் நீரில் தோணிபுரம் - பழைய வெள்ளத்தில் மிதந்த தோணிபுரம். 
துயர் தீர் காழி- பிறவிக்குக் காரணமான துயர்களை நீக்கும் காழி. இன்தீர வேணுபுரம் - 
இனிய நீரினை உடைய வேணுபுரம். சிலம்பன் நகர் -சிரபுரம். பொன் நீர புன் சடையான் - 
பொன் நிறமுடைய அழகிய சடை உடையவன். 

குறிப்புரை:     நிகர் - ஒப்பு. இல் - இல்லாத. நீர்மேல் நின்ற மூதூர் - தோணிபுரம். அகலிய - அகன்ற 
இடத்தையுடைய. அம்தண்தராய் - பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர் பிரானுக்கு. பகரும்- 
கூறும். 'நாம் கைதொழுது பாடும் ஊர்' என்றதால். நாம் பாடும்போதும் கைதொழுதல் 
இன்றியமையாதது என்பது விளங்கும். இத்தமிழ் மறையைப் போற்றும் அருளொழுக்கம் 
புலப்படும் பா. 6 குறிப்புரை பார்க்க.

    The city where I worship our Lord Civan and recite sacred songs consists of
towns Pugali to Poontharai and includes twelve sacred town's names. Here our Lord 
Civan relishes the maximum joy and this is known as Kazhumalam.

2225.     வெங்குருத்தண்புகலிவேணுபுரஞ்சண்பைவெள்ளங்கொள்ளத் 
    தொங்கியதோணிபுரம்பூந்தராய்தொகுபிரமபுரந்தொல்காழி 
    தங்குபொழிற்புறவங்கொச்சைவயந்தலைபண்டாண்டமூதூர் 
    கங்கைசடைமுடிமேலேற்றான்கழுமலநாங்கருதுமூரே.        4

    வெங்குரு, தண் புகலி, வேணுபுரம், சண்பை, வெள்ளம் கொள்ளத் 
    தொங்கிய தோணிபுரம், பூந்தராய், தொகு பிரமபுரம்,தொல் காழி, 
    தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலை பண்டு ஆண்ட மூதூர், 
    கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் -நாம் கருதும் ஊரே.

    vegkuru, thaNpukali, vENupuram, chaNpai veLLam koLLath 
    thogkiya thONipuram pUntharAy thoku pirama puram thol kAzi 
    thagku poziRpuRavam kochchai vayam thalaipaNTu ANTa mUthUr
    kagkai caTaimuTimEl ERRAn kazumalam nAm karuthum UrE.

பொருள்:     தண்ணந்தராய்- குளிர்ந்த பூந்தராய். தாமரையானூர்- தாமரையான் பிரமன்;
பிரமபுரம், தலை முன் ஆண்ட அண்ணல் நகர்- தலை - சிரம்; சிரபுரம். தண் புறவம்- குளிர்ந்த புறவம். 
சீர் அணியார் காழி -சீர் -பெருமை,கனம். விண்ணியல் சீர் வெங்குரு- விண்ணுலகத்துக்கு 
நிகரான வெண்குரு. நல் வேணுபுரம் - நல்ல - அழகிய வேணுபுரம். மேலார் ஏத்தும் கண்ணுதலான் 
மேவிய நற்கழுமலம் - மேலார் - ஞானியர், பத்தர், சித்தர் முதலியோர்; ஏத்தும்- வழிபடும்; கண்ணுதலான் 
-நெற்றிக்கண்ணினனாகிய சிவபிரான். மேவிய -இருக்கின்ற கழுமலம். கருதுதல்-  தியானித்தல். 
கைதொழுது கருதுமூரே -கைதொழுத வண்ணம் தியானிக்கும் ஊர் கழுமலமே. 

குறிப்புரை:     தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் என்றதால். 
தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு -கூடிய. தொல் -பழைய. பொழில்- சோலை. 
தலைபண்டு ஆண்ட மூதூர் - சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான். 

    Our Lord Civan who supports the river Ganges in His matted hair is manifest 
in this place called Kazhumalam. I was born in this place, which is the last of the 
twelve names of the esteemed towns. Venguru and Sirapuram are among these names.

2226.     தொன்னீரிற்றோணிபுரம்புகலிவெங்குருத்துயர்தீர்காழி 
    இன்னீரவேணுபுரம்பூந்தராய்பிரமனூரெழிலார்சண்பை 
    நன்னீரபூம்புறவங்கொச்சைவயஞ்சிலம்பனகராநல்ல 
    பொன்னீரபுன்சடையான்பூந்தண்கழுமலநாம்புகழுமூரே.        5

    தொல்-நீரில்-தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர் காழி
     இன் நீர வேணுபுரம், பூந்தராய், பிரமன்ஊர், எழில் ஆர் சண்பை, 
    நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம் நல்ல 
    பொன்நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் - நாம் புகழும் ஊரே.

    tol-nIril-tONipuram, pukali, vegkuru, tuyar tIr kAzi, 
    in nIra vENupuram pUntarAy, piraman Ur, ezil Ar caNpai, 
    nannIra pUm puRavam, koccaivayam, cilampannakar, Am nalla 
    pon nIra puncaTaiyAn pUn taN kazumalam--nAm pukazum UrE.

பொருள்:     சீரார் சிரபுரம் - புகழ் நிறைந்த சிரபுரம். நல்ல ஆராத் தராய் - நல்ல காணுந்தோறுந் 
தெவிட்டாத பூந்தராய். ஏரார் கழுமலம் - மிக்க அழகுடைய கழுமலம். என்று என்று உள்கி - இடைவிடாது 
தியானித்து. பேரான் நெடியவனும் நான்முகனும்- பெயரான் நீண்ட திருமாலும், பெயரான் நான்முகனாகிய 
பிரமனும். பெயர்தல் - அகலுதல், நீங்குதல். காண்பு அரிய- காணுதற்கு அரிய. காண இயலாத. 
அருமை இன்மையை உணர்த்திற்று.

குறிப்புரை:     தொல்நீர்- பழைய பிரளய வெள்ளம். துயர்- பிறவித் துயர் (பிறதுயர்கள் இதனுள் அடக்கம்). 
இன்நீர் - இனிய நீரினையுடைய. எழில் - அழகு. நல்நீர - நல்ல நீரினையுடைய. சிலம்பன் நகர் - சிரபுரம்.

    The town I praise is called Thonipuram, which floated in the sea at the time of the 
universal deluge and destruction of all things (end of the world). Beginning from this town 
and ending in the twelfth town called Sirapuram is my place. Our Lord Civan's matted hair 
glitters like gold. He is manifest in this precious town called Kazhumalam.

2227.     தண்ணந்தராய்புகலிதாமரையானூர்சண்பைதலைமுனாண்ட 
    அண்ணல்நகர்கொச்சைவயந்தண்புறவஞ்சீரணியார்காழி 
    விண்ணியல்சீர்வெங்குருநல்வேணுபுரந்தோணிபுரமேலாரேத்து 
    கண்ணுதலான்மேவியநற்கழுமலநாங்கைதொழுதுகருதுமூரே.        6

    தண் அம் தராய், புகலி, தாமரையான்ஊர், சண்பை, தலை முன் ஆண்ட 
    அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம் சீர்அணி ஆர் காழி, 
    விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம், மேலார் ஏத்து 
    கண்நுதலான் மேவிய நல் கழுமலம் - நாம் கைதொழுது கருதும் ஊரே.

    taN am tarAy, pukali, tAmaraiyAn Ur, caNpai, talai mun ANTa 
    aNNal nakar, koccaivayam, taN puRavam, cIr aNi Ar kAzi, 
    viN iyal cIr vegkuru, nal vENupuram, tONipuram, mElAr Ettu 
    kaN nutalAn mEviya nal kazumalam--nAm kaitozutu karutum UrE.

பொருள்:     நறவம் மிகு சோலைக் கொச்சை- தேன் கமழும் சோலைகளை உடைய  கொச்சைவயம். 
தராய் - பூந்தராய். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறலாய வெங்குரு- பெருமையுடைய வெங்குரு. 
விசயன் - அருச்சுனன். அரக்கன் - இராவணன். செற்றான்- அழித்தான்.

குறிப்புரை:     தண் அம்தராய் - பூந்தராய். தாமரையான் ஊர் -  பிரமபுரம். தலைமுன் ஆண்ட அண்ணல்
நகர்- சிரபுரம். விண்- ஆகாயம்.  இயல் -செல்லும். சீர்- கனம். புகழ். மேலார் - தேவர். மேன்மையுடைய 
ஞானியர் முதலோர்.மேவிய- விரும்பி எழுந்தருளியுள்ள. தியானம் புரியும்போது கைதொழுத வண்ணம் 
இருத்தல் வேண்டும். 'அஞ்சலி செய்திருந்து' (ஞானபூசா விதி - 8). பா. 3 குறிப்புரை பார்க்க. 

    The town where I offer worship with both hands and praise our Lord Civan
includes the town known as Poontharai, altogether twelve along with the town
Thonipuram. Our Lord Civan who has a third eye in His forehead is manifest 
in this city called Kazhumalam.

2228.     சீரார்சிரபுரமுங்கொச்சைவயஞ்சண்பையொடுபுறவநல்ல 
    ஆராத்தராய்பிரமனூர்புகலிவெங்குருவோடந்தண்காழி 
    ஏரார்கழுமலமும்வேணுபுரந்தோணிபுரமென்றென்றுள்கிப் 
    பேராலநெடியவனுநான்முகனுங்காண்பரியபெருமானூரே.        7

    சீர்ஆர் சிரபுரமும், கொச்சைவயம், சண்பையொடு, புறவம்,  நல்ல
    ஆராத் தராய், பிரமன்ஊர், புகலி, வெங்குருவோடு, அம்தண்  காழி
    ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்றுஎன்று உள்கி, 
    பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே.

    cIr Ar cirapuramum, koccai vayam, caNpaiyoTu, puRavam, nalla
    ArAt tarAy, piraman Ur, pukali, vegkuruvoTu, am taN kAzi
    Er Ar kazumalamum, vENupuram, tONipuram, enRu enRu uLki 
    pErAl neTiyavanum nAnmukanum kANpu ariya perumAn UrE

பொருள்:     சாயாப் பண்பார் சிரபுரம்- அழியாக் குணமுடையார், வருத்தமிலார் வாழும் சிரபுரம். 
தராய் -பூந்தராய். நண்பு - நட்பு. விருப்பம். வியப்பு - அழித்த. அகந்தையை அழித்த. வியத்தலுக்குக் 
காரணமானது அகந்தை. அதை அழித்த. விமலன் - தூயவன்.

குறிப்புரை:     சீர்ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத     
பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று - அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் - 
பெயராதவனாய், பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி அமையும். பேரானாய்க் 
காண்பு என்க.

    The town to which I am connected in many ways begins from the sacred city of 
Sirapuram and ends in the twelfth town of Thonipuram. The demigod Thirumaal and Brahma 
had in their minds the sacredness of all these twelve towns. They went to this temple 
to worship our Lord Civan and prostrated before Him and prayed. Even then our Lord Civan 
was invisible to both these demigods. This is such a sacred place for Lord Civan to be 
manifested and this is Kazhumalam.

2229.     புறவஞ்சிரபுரமுந்தோணிபுரஞ்சண்பைமிகுபுகலிகாழி 
    நறவமிகுசோலைக்கொச்சைவயந்தராய்நான்முகன்றனூர் 
    விறலாயவெங்குருவும்வேணுபுரம்விசயன்மேலம்பெய்து 
    திறலாலரக்கனைச்செற்றான்றன்கழுமலநாஞ்சேருமூரே.        8

    புறவம் சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி, 
    நறவம், மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன் தன்ஊர், 
    விறல்ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்பு எய்து 
    திறலால் அரக்கனைச் செற்றான்தன் கழுமலம் - நாம் சேரும் ஊரே.

    puRavam, cirapuramum, tONipuram, caNpai, miku pukali, kAzi,
    naRavam miku cOlaik koccaivayam, tarAy, nAnmukan tan Ur, 
    viRal Aya vegkuruvum, vENupuram, vicayan mEl ampu eytu 
    tiRalAl arakkanaic ceRRAn tan kazumalam--nAm cErum UrE.

பொருள்:     செழு மலிய பூங்காழி -செழிப்பு மலிதல் உடைய அழகிய காழி. செய்ய கொழு 
மலரான் நன்னகர்- செழுமையும் கொழுமையும் உடைய மலர் தாமரை. அதன் மேலான் பிரமன். 
விழுமிய சீர் -மிக்க புகழுடைய 'இன்னபெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும் ஊரே', 
என்றதால் இவை பன்னிரண்டு ஊர்களின் பெயர் என்பதும் ஒரு ஊருக்கே கூறப்பட்ட 
பன்னிரண்டு பெயர்கள் அல்ல என்பதும் பெறப்படும்.

குறிப்புரை:     நறவம்- தேன். நான்முகன்றன் ஊர் -பிரமபுரம். விறல் - பெருமை. விசயன்-
அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன். செற்றான் - அழித்தான். 

    The town to which I am connected in my life begins with the name Puravam and 
ends with twelve names including Venupuram. This sacred place is connected with Lord 
Civan and is called Kazhumalam. This Lord Civan once waged a playful fight with 
Arjunan and suppressed the mightiness of Raavanan the king of Sri Lanka.

2230.     சண்பைபிரமபுரந்தண்புகலிவெங்குருநற்காழிசாயாப் 
    பண்பார்சிரபுரமுங்கொச்சைவயந்தராய்புறவம்பார்மேல் 
    நண்பார்கழுமலஞ்சீர்வேணுபுரந்தோணிபுரநாணிலாத 
    வெண்பற்சமணரொடுசாக்கியரைவியப்பழித்தவிமலனூரே.        9

    சண்பை,பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி, சாயாப் 
    பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,பார் மேல் 
    நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம், தோணிபுரம் - நாண்இலாத 
    வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே.

    caNpai, piramapuram, taN pukali, vegkuru, nal kAzi, cAyAp 
    paNpu Ar cirapuramum, koccaivayam, tarAy, puRavam, pArmEl 
    naNpu Ar kazumalam, cIr vENupuram, tONipuram--nAN ilAta 
    veNpal camaNaroTu cAkkiyarai viyappu azitta vimalan UrE.

பொருள்:     நிச்சல் விழவு ஓவா நீடார் சிரபுரம் - நாள்தோறும் விழாக்கள் ஒழியாத காலத்தாலும் 
இடத்தாலும் நெடுமை பொருந்திய சிரபுரம். நச்ச + இனிய = நச்சினிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் 
தீர்த்து அருளும் அம்மான்  - பிறப்பச்சம் முதலியவற்றை நீக்கும் அம்மான். அம்மான்- அருமகன். 

குறிப்புரை:     சாலாப் பண்பு- அழியாக்குணம். பண்பார் - குணத்தார் எனினுமாம். நாண்- நாணம்.
வியப்பு - பெருமை. விமலன் - அநாதி  மலமுத்தன். 

    The town wherefrom I hailed begins from Shanbai and includes the twelfth last 
town called Thonipuram. Our Lord Civan is the Supreme Being who doomed the high dignity 
of the Jains and Buddhists in this town called Kazhumalam.

2231.     செழுமலியபூங்காழிபுறவஞ்சிரபுரஞ்சீர்ப்புகலிசெய்ய 
    கொழுமலரான்நன்னகரந்தோணிபுரங்கொச்சைவயஞ்சண்பையாய  
    விழுமிய சீர் வெங்குருவோடோங்கு தராய் வேணுபுரமிகு நன்மாடக்             
    கழுமலமென்றின்னபெயர்பன்னிரண்டுகண்ணுதலான்கருதுமூரே.        10

    செழு மலிய பூங்காழி புறவம், சிரபுரம், சீர்ப் புகலி, செய்ய 
    கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம், சண்பை, ஆய 
    விழுமிய சீர் வெங்குருவோடு, ஓங்கு தராய், வேணுபுரம், மிகு நல் மாடக் 
    கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் - கண்நுதலான் கருதும் ஊரே.

    cezu maliya pUg kAzi, puRavam, cirapuram, cIrp pukali, ceyya 
    kozumalarAn nannakaram, tONipuram, koccaivayam, caNpai, Aya 
    vizumiya cIr vegkuruvoTu, Ogku tarAy, vENupuram, miku nal mATak 
    kazumalam, enRu inna peyar panniraNTum--kaN nutalAn karutum UrE.

பொருள்:     காவி - கருங்குவளை மலர். இங்குக் 'கழுமலத்தின் பெயரை நாளும் பாவிய சீர்ப் 
பன்னிரண்டு நன்னூலா' என்றமையான், இவை கழுமலத்தைச் சார்ந்த நகரங்கள் எனப் பெறப்படும். 
புரையும் -ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை -அன்பு. தலை விருப்பு - தலையாய அன்பு.

குறிப்புரை:     செழுமலிய- செழிப்பு மலிதலையுடைய. செய்ய கொழுமலரான் நன்னகரம் - 
பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ். பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.

    The town wherefrom I hailed carries the name Kazhumalam. This is also ,the
same place which our Lord Civan wished to enjoy. This is a sacred, attractive and fertile 
town which carries twelve names as already mentioned. Our Lord Civan is called Kannuthalaan 
because He has a third eye on His forehead. This Lord is fully  manifest in this Kazhumalam.

2232.     கொச்சைவயம்பிரமனூர்புகலிவெங்குருப்புறவங்காழி 
    நிச்சல்விழவோவாநீடார்சிரபுரநீள்சண்பைமூதூர் 
    நச்சினியபூந்தராய்வேணுபுரந்தோணிபுரமாகிநம்மேல் 
    அச்சங்கள் தீர்த்தருளுமம்மான்கழுமலநாமமருமூரே.        11

    கொச்சைவயம், பிரமன்ஊர், புகலி, வெங்குரு, புறவம், காழி, 
    நிச்சல் விழ ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பைமூதூர், 
    நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி நம் மேல் 
    அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் - நாம் அமரும் ஊரே.

    koccaivayam, piraman Ur, pukali, vegkuru, puRavam, kAzi, 
    niccal vizavu OvA nITu Ar cirapuram, nIL caNpai mUtUr, 
    naccu iniya pUntarAy, vENupuram, tONipuram, Aki nam mEl 
    accagkaL tIrttu aruLum ammAn kazumalam--nAm amarum UrE.

பொருள்:     நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு 
பெயர்களைக் கொண்டதும் நம்மேல்  வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான 
கழுமலமாகும். 

குறிப்புரை:     நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா - ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும் 
இடத்தாலும் நெடுமை பொருந்திய. நச்ச இனிய- விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை. 
அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான் என்று வருதல் போல.

    I like the town named Kochchaivayam, it carries twelve names including Thonipuram. 
Our Lord Civan is manifest in the town Kazhumalam. He eradicates the fate of His devotees 
and graces them.

2233.     காவிமலர்புரையுங்கண்ணார்கழுமலத்தின்பெயரைநாளும் 
    பாவியசீர்ப்பன்னிரண்டுநன்னூலாப்பத்திமையாற்பனுவல்மாலை 
    நாவின்நலம்புகழ்சீர்நான்மறையான்ஞானசம்பந்தன்சொன்ன 
    மேவியிசைமொழிவார்விண்ணவரிலெண்ணுதலைவிருப்புளாரே.        12

    காவிமலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் 
    பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால் பனுவல்மாலை 
    நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் - ஞானசம்பந்தன் - சொன்ன 
    மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புஉளாரே.

    kAvi malar puraiyum kaNNAr kazumalattin peyarai nALum 
    pAviya cIrp panniraNTum nannUlAp pattimaiyAl panuval mAlai 
    nAvin nalam pukaz cIr nAlmaRaiyAn--njAnacampantan--conna 
    mEvi icai mozivAr viNNavaril eNNutalai viruppu uLArE.

பொருள்:     குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை 
நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய 
இப்பனுவல் மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் 
மேலான விருப்புடையவர் ஆவர்.

குறிப்புரை:     காவி -நீலோற்பவம், கருங்காவி. புரையும் -ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை - அன்பு. 
மை விகுதி தமிழ் 'பத்திமையாற் பணிந்து' (தி. 6 பதி. 54 பா. 3). தலைவிருப்பு - தலையன்பு.

    In this town of Kazhumalam very attractive, young damsels live in large numbers. 
Their eyes resemble the blue nilambo flowers and have a very good look. The town carries 
twelve names. The scholars who repeat the twelve names, as though the names are twelve 
divine books and sing these twelve verses sung by our Thiru-gnana-Sambandar in the best 
musical tone, will join the celestials and be among them.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            70ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 70th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 207                    பதிக எண் 71.

71. திருக்குற்றாலம்                    71. THIRU-K-KUTRALAM

பண்: காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருக்குறும்பலா என்னும் திருத்தலமானது நெல்லை மாவட்டத்தில் விளங்கும் சுற்றுலாத்
தலங்களில் ஒன்றாகும். தென்காசி- செங்கோட்டை பேருந்து வழியில் உள்ளது. மதுரை, திருநெல்வேலி, 
தென்காசி, செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. இது குற்றாலம் 
என்னும் ஒரு வகை ஆலமரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் இப்பெயர் பெற்றது. 'உயிர்கொண்டு 
போம்பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளரோ' என்னும் திருவங்கமாலைப் 
பகுதியும், 'குற்றாலத்து அமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக 
வேண்டுவனே' என்னும் திருவாசகப் பகுதியும் இத்தலச் சிறப்பு உணர்த்துவனவாகும். இங்குள்ள 
இறைவர்க்குக் கூத்தர் என்றும், இறைவியாருக்கு சிவகாமி அம்மையார் என்றும் பெயர்கள் 
வழங்கப்பெறுகின்றன.

    இக்கோயிலைச் சம்பந்தர் முதல் திருமுறையில் பாடியிருக்கின்றார். இக்குற்றாலத்திலே 
குறும்பலா என்ற கோயில் இருக்கின்றது. இதைத்தான் சம்பந்தமூர்த்தி சுவாமிகள் இரண்டாம் 
திருமுறையில் பாடியிருக்கின்றார்கள். திருக்குறும்பலா தலமானது திருக்குற்றாலத்தில் 
அருவியை அடுத்து வடகரையில் இருக்கின்றது. குறும்பலா என்னும் ஒருவகை மரத்தை தலவிருட்சமாக 
உடைமையால் அம்மரத்தாலேயே இக்கோயில் குறும்பலா என்னும் பெயர் எய்திற்று. 

    இறைவரது திருப்பெயர் குறும்பலாநாதர். இறைவியார் திருப்பெயர் குழல்வாய் மொழியம்மை. 
இது முதலில் விஷ்ணுதலமாய் இருந்தது. அவ்வூர் வைணவப் பெருமக்கள் சிவநிந்தையும், சிவனடியார் 
நிந்தையும் செய்ததோடு அகத்தியரையும் அவ்வூரில் அணுக வொட்டாது தடுத்தமையால், 
அவ்வைணவர்களது அகந்தையை அடக்கும் பொருட்டு அகத்தியர் வைணவ அடியார் வேடம் பூண்டு, 
கோயிலுக்குள் சென்று திருமாலின் திருத்தலையில் தம் கை வைத்துச் சிவலிங்க வடிவாக்கினார் 
என்றும் அன்று முதல் இது சிவன்கோயிலாயிற்று என்றும் பழைய வரலாறு உண்டு. இத்தலம் 
ஞானசம்பந்தரால் மட்டும் பாடப்பெற்றது. இதற்கு அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது.

பதிக வரலாறு 

    சிரபுரத்து வந்தருளும் செல்வர் சிலநாளிருந்து திருப்புத்தூரை வழிபட்டு, பூவணத்தைப்         
போற்றிக் காண்போரைக் கைதொழுது சுழியலை வணங்கிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு         
ஏத்தியது இத்திருப்பதிகம்.

    Thiru-k-kurumbala or Thiru-k-kutralam, both are one and the same place in Tirunelveli 
District. It is on the way from Tirunelveli to Shencottai.

            திருச்சிற்றம்பலம்

2234.     திருந்தமதிசூடித்தெண்ணீர்சடைக்கரந்துதேவிபாகம் 
    பொருந்திப்பொருந்தாதவேடத்தாற்காடுறைதல்புரிந்தசெல்வர் 
    இருந்தஇடம்வினவில்ஏலங்கமழ்சோலையினவண்டுயாழ்செய் 
    குருந்தமணநாறுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே.        1

    திருந்த மதி சூடி, தெண்நீர் சடைக் கரந்து, தேவி பாகம் 
    பொருந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் 
    இருந்த இடம் வினவில் - ஏலம் கமழ் சோலை இனவண்டு யாழ்செய், 
    குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண்சாரல், குறும்பலாவே.

    tirunta mati cUTi, teN nIr caTaik karantu, tEvi pAkam 
    porunti, poruntAta vETattAl kATu uRaital purinta celvar             
    irunta iTam vinavil-Elam kamaz cOlai inavaNTu yAzcey, 
    kurunta maNam nARum kunRu iTam cUz taNcAral, kuRumpalAvE.

பொருள்:     பிறையைச் சடையில் திருத்தமாகச் சூடி, தெளிந்த கங்கை நதியைச் சடையில் 
மறைத்து உமையம்மையைத்தன் மேனியில் பொருந்தி, காட்டில் உறைவதற்குப் பொருந்தாத 
இக்கோலத்தொடு உழிதருதலைச் செய்த செல்வர், இருக்கும் இடம் யாதென வினவில், ஏலம் 
மணக்கும் சோலையில் கூட்டமான வண்டுகள் யாழ்போல முரல, குருந்தம் மணம் நாறும் 
குன்றுகள் சூழ்ந்த, குளிர்ந்த சாரல்களையுடைய குறும்பலாவே.

குறிப்புரை:     திருந்தச் சூடிக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தால் உறைதல் புரிந்த 
செல்வர் என்று இயைக்க. மதி - பிறை. தெள்நீர் - தெளிந்த கங்கைநீர். சடைக்கரந்து- சடையில் 
மறைந்து. தேவிபாகம் பொருந்தி - தேவியினது பாகத்தைத் தான் பொருந்தி. பொருந்தாத 
வேடத்தால் - காட்டில் உறைவதற்கு ஒவ்வாத கோலத்தால். புரிந்த - விரும்பிய. ஏலம் வாசனைப் 
பொருள்களுள் ஒன்று. - 'தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் ... கப்பூரம் சாதியோடு ஐந்து'. 
யாழ்செய் - யாழோசை போலும் இன்னோசை செய்கின்ற குருந்தம் - குருந்தமரம். குறும்பலா 
என்பது பலாவகைகளுள் ஒன்று. குற்றாலம், குறும்பலா இரண்டும் திருக்குற்றால மலையிலுள்ள 
தலவிருட்சம். வம்பார் குன்றம்.... குற்றாலம் என்றும், குன்றிடஞ்சூழ் தண்சாரற்குறும்பலா என்றும் 
இருவேறு திருப்பதிகம் அருளியவாறு உணர்தற்பாலது.

    Behold! It is Civan who resides in the temple called Kurumbala or Kutralam. 
Our Lord Civan has decorated His hair and retains the baby moon on His matted hair. 
He supports the river Ganges also on His matted hair and keeps it invisible. He embeds
His consort Uma Devi on the left portion of His body. He loves to go and dance and
spend time in the burial ground. If you question regarding the place where our Lord is
manifested the answer is simple. In the entire area where He is manifested the sweet
smell of cardamom is felt everywhere. The bees,always humming in the big gardens around 
the temple, make noise like the beautiful music of lute. There are small hillocks 
all around the temple wherefrom the sweet smell of Kuruntha tree spreads in the entire
area. Very cool wind always blows all around His temple along with the cool light dazzling. 
And this place is called Kurumbala where our Lord Civan is manifest. 

2235.     நாட்பலவுஞ்சேர்மதியஞ்சூடிப்பொடியணிந்தநம்பான்நம்மை 
    ஆட்பலவுந்தானுடைய அம்மானிடம்போலுமந்தண்சாரல் 
    கீட்பலவுங்கீண்டுகிளைகிளையன்மந்திபாய்ந்துண்டுவிண்ட 
    கோட்பலவின்தீங்கனியைமாக்கடுவனுண்டுகளுங்குறும்பலாவே.        2

    நாள்பலவும் சேர் மதியம் சூடிப்பொடி அணிந்த நம்பான், நம்மை 
    ஆள்பலவும் தான் உடைய அம்மான், இடம்போலும் - அம் தண்சாரல், 
    கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு, விண்ட 
    கோள் பலவின் தீம்கனியை மாக் கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே.

    nALpalavum cEr matiyam cUTip poTi aNinta nampAn, nammai 
    ALpalavum tAn uTaiya ammAn, iTampOlum--am taNcAral, 
    kIL palavum kINTu kiLaikiLaiyan manti pAyntu uNTu, viNTa 
    kOL palavin tIm kaniyai mAk kaTuvan uNTu ukaLum kuRumpalAvE.

பொருள்:     விண்மீன்கள் பலவற்றைச் சேர்கின்ற பிறையைச் சிரசில் சூடி, திருநீற்றுப் 
பொடியை அணிந்த சிவபெருமான், நம்மைப் பலவகையாலும் ஆளாகக் கொண்ட அம்மான் 
இடம் யாதெனில், அழகிய குளிர்ந்த சாரலிலே வெடித்துப் பிளக்கும் பக்குவத்தில் உள்ள 
பலாப்பழத்தினைக் கீறிப் பிளந்து கிளைகள் தோறும் மந்தி பாய்ந்து உண்டு விண்ட அடிப்பலாவின் 
இனிய கனியை உண்டு கடுவன் துள்ளும் குறும்பலாவே.

குறிப்புரை:     நாள்பலவும் சேர்மதியம் -பூரண சந்திரன், 'பிள்ளைமதியும் புனலும் சூடி' 
எனப் (பா.7) பின்வருதலறிக. நம்பான் - சிவபெருமான். 'நம்பான் மேய நன்னகர்' (தி. 1 ப. 99 பா. 1). 
'நடம் பயிலும் நம்பானே'  'நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே' (தி. 3 ப. 125 பா. 1). ஆட்பலவும் - 
ஆலாகும் பலவகையும், கீள்பல - பிளத்தற்குரிய பலா. கீண்டு - பிளந்து. (கிழி - கீழ் - கீள், 
கிழிந்து - கீழ்ந்து -  கீண்டு) கிளை கிளையல் - கிளை கிளையாக. கிளையின் என்றிருந்ததோ? 
மந்தி - பெண் குரங்கு. விண்ட-(நீங்கிய) பிளந்த. கோள் - குலை. கடுவன் - ஆண்குரங்கு. 
உகளும் - துள்ளும். இது பலாவிற்கேற்ற வருணனை.

    Behold! Our Lord Civan manifests Himself in Kurumbala. He retains the moon 
on His hair, which grows day by day with sixteen phases. He applies all over His body 
the holy ashes. He has affection for us. He approaches us and takes us as His servitors 
and graces us. He is manifested in a temple situated in the beautiful cool mountain site. 
Here the female monkey selects the fully riped jack fruits, bites them and enjoys eating 
along with the other monkeys. Then some fruits fall off from the tree and the male monkeys 
wandering on the ground collect these sweet fruits and eat them to their satisfaction. 
This is such a place called Kurumbala where our Lord Civan is manifest in the temple.

2236.     வாடற்றலைமாலைசூடிப்புலித்தோல்வலித்துவீக்கி 
    ஆடலரவசைத்த அம்மானிடம்போலுமந்தண்சாரல் 
    பாடற்பெடைவண்டுபோதலர்த்தத்தாதவிழ்ந்துபசும்பொன்னுந்திக் 
    கோடன்மணங்கமழுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே.        3

    வாடல்-தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி, 
    ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் - அம் தண்சாரல், 
    பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து, பசும்பொன் உந்திக் 
    கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே.

    vATal-talaimAlai cUTi, pulittOl valittu vIkki,
    ATal aravu acaitta ammAn iTampOlum--am taN cAral, 
    pATal peTaivaNTu pOtu alartta, tAtu avizntu, pacumpon untik
    kOTal maNam kamazum kunRu iTam cUz taNcAral kuRumpalAvE.

பொருள்:     சதை வற்றி வறண்டுபோன தலைமாலையைச் சூடி, புலியின் தோலினை 
அரையில் இறுகக் கட்டி அதன்மேல் கச்சாகப் பாம்பினை அசைத்த அம்மானிடம் யாதெனில், 
குளிர்ந்த  சாரலில் இசைபாடும் பெண் வண்டு போதினை அலர்த்தத் தாது அவிழ்ந்து பசும்
பொன்னின் துகள் போலக் கிடத்தும் வெண்காந்தள் மலர் மணம் வீசும் குன்றுகள் சூழ்ந்த 
குறும்பலாவே. 

குறிப்புரை:     வாடல் - வற்றுதல். வலித்து வீக்கி - உறுதியாகக் கட்டி. அசைத்த - கட்டிய, 
ஆட்டிய எனலுமாம். போது - மலரும் பருவத்து. அலர்த்த - அலரச்செய்ய. கோடல் - வெண்காந்தள்.

    Behold! It is Civan the Lord of Kurumbala. He adorns His body with the garland
made up of human skulls, inside which the flesh is dried up. He wears on His loins the 
tiger hide. He has tightened His waist with the dancing snake. Lord Civan in this stature 
is manifest in the beautiful and cool hill temple where clouds gather during the monsoon 
season. Here the female bees make a humming noise like music, while flying from one flower 
to another where the buds start blooming.While the bees disturb the buds the pollen grains 
in the flowers fall on the ground like golden powder. In that area the sweet smell of the 
flowers - Malabar Glory Lily, red or white species spreads all around the hillock in the 
temple where our Lord Civan is manifest and this is called Kurumbala.

2237.     பால்வெண்மதிசூடிப்பாகத்தோர்பெண்கலந்துபாடியாடிக் 
    காலனுடல்கிழியக்காய்ந்தாரிடம்போலுங்கல்சூழ்வெற்பில் 
    நீலமலர்க்குவளைகண்திறக்கவண்டரற்றுநெடுந்தண்சாரல் 
    கோலமடமஞ்ஞைபேடையொடாட்டயருங்குறும்பலாவே.        4

    பால்வெண்மதிசூடி, பாகத்து ஓர் பெண் கலந்து,பாடி, ஆடி, 
    காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில், 
    நீலமலர்க்குவளை கண்திறக்க, வண்டு அரற்றும் நெடுந் தண்சாரல் 
    கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே.

    pAl veNmati cUTi, pAkattu Or peN kalantu, pATi, ATi,
    kAlan uTal kiziyak kAyntAr iTampOlum--kal cUz veRpil, 
    nIlamalarkkuvaLai kaN tiRakka, vaNTu araRRum neTun taNcAral, 
    kOla maTamanjnjai pETaiyoTu ATTu ayarum kuRumpalAvE.

பொருள்:     பால் போன்ற வெண்ணிறமான பிறையைச் சூடியும், உமையம்மையைப் 
பாகத்தில்  கொண்டும் பாடியும் ஆடியும்  எமனை உடல் பிளக்க உதைத்தும்  நின்ற சிவபிரானின் 
இடம் யாதெனில், பாறைகள் சூழ்ந்த மலைமேல்,  நீல நிறமான குவளைமலர்  கண்போல் திறக்க 
வண்டுகள் அரற்றும் நீண்ட குளிர்ந்த சாரலில், அழகிய மயில்கள் பெடையுடன்  மகிழ்ந்து ஆடுதலைச் 
செய்யும் குறும்பலாவே.

குறிப்புரை:     பிறை சூடியும், உமை மங்கையை இடப்பால் கொண்டும் பாடியும் ஆடியும் எமனை 
உதைத்தும் நின்ற சிவபெருமான் இடம். கல்ஆம் வெற்பு-  கற்கள் சூழ்ந்த மலை .  குவளைகள் கண்போல் 
திறக்க. அரற்றும்- ஒலிக்கும். கோலம்- அழகு.   மடம்- அழகு.  மென்மை, மஞ்ஞை- மயில். பேடை-
பெண்மயில். ஆட்டு- ஆட்டம். அயரும் - செய்யும். 

    Behold! It is Civan, who is manifest in Kurumbala. He retains the baby moon, which 
is white as cow's milk in His matted hair. He dances and sings beautifully to the accompaniment 
of music. He has embedded His consort Uma Devi on the left half of His body. While Civan sings 
and dances, she also participates and joins with Him. To help and save Markandeya who is the 
most sincere devotee of Lord Civan, He became furious and kicked Kaalan (God of Death) and 
tore his body. Lord Civan, who acted like this, manifests Himself in the temple surrounded 
by cool ponds in the nearby hillocks of big pebbles. In these water tanks purple Indian water 
lily and blue neulambo with fully blossomed petals look like the beautiful eyes of young girls. 
The bees while flying from one flower to another make good music. This being the range of 
mountains drizzling rains always bring coolness all around. Here the peacocks and peahens 
in large numbers gather, dance and enjoy their life. This is the place where our Lord Civan 
is manifested in the temple called Kurumbala. 

2238.     தலைவாண்மதியங்கதிர்விரியத்தண்புனலைத்தாங்கித்தேவி
    முலைபாகங்காதலித்தமூர்த்தியிடம்போலும்முதுவேய்சூழ்ந்த 
    மலைவாயசும்புபசும்பொன்கொழித்திழியும்மல்குசாரல் 
    குலைவாழைத்தீங்கனியும்மாங்கனியுந்தேன்பிலிற்றுங்குறும்பலாவே.        5

    தலை வாள்மதியம் கதிர்விரிய, தண்புனலைத் தாங்கி, தேவி 
    முலை பாகம் காதலித்த மூர்த்தி, இடம்போலும் - முது வேய் சூழ்ந்த 
    மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல், 
    குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே.

    talai vALmatiyam katir viriya, taNpunalait tAgki, tEvi 
    mulai pAkam kAtalitta mUrtti iTampOlum--mutu vEy cUznta 
    malaivAy acumpu pacumpon kozittu iziyum malku cAral, 
    kulaivAzait tImkaniyum mAgkaniyum tEn piliRRum kuRumpalAvE.

பொருள்:     தலையில் ஒளியுடைப் பிறை கதிர் விரிக்க, குளிர்ந்த கங்கைப் புனலைத் தாங்கி 
உமையம்மையின் பாகத்தை விரும்பிய மூர்த்தியின் இடம், யாதெனில், முற்றிய மூங்கில்கள் சூழ்ந்த 
மலைப் பாறைகளின் மேல் பொசியும் நீர் பசும் பொன்னைக் கொழித்து இழியும்; நிறைந்த மலைச் 
சாரல்களில் வாழையின் இனிய கனியும் மாங்கனியும் தேன் துளிர்க்கும் குறும்பலாவே.

குறிப்புரை:     தலைமதியம், வான்மதியம். வான் - ஒளி. தலையில் மதியம் கதிர்விரிய புனலைத் 
தாங்கி, பாகங் காதலித்த மூர்த்தி என்க. முதுவேய் -முதிய மூங்கில். அசும்பு - பொசியுநீர். 
பிலிற்றும்- துளிக்கும்.

    Behold! It is Civan our Lord of Kurumbala. Our Lord Civan retains on His head the 
bright moon which spreads its white rays all around. Along with that He supports the river 
Ganges also on His head. He has embedded His consort Uma Devi with much affection on the 
left half of His body. This our Lord Civan is manifest in the most attractive place where 
very big and old bamboo grows in clusters. Here in this mountain area, water springs from 
all directions, they all join and become a big water fall leading to torrential flow of 
golden water from the mountains. Adjoining this area plantain gardens and mango groves are 
in plenty - all yielding rich fruits, honey dripping from both the trees. In such a beautiful
atmosphere the famous temple of our Lord of Kurumbala magnificently exists.

2239.     நீற்றேதுதைந்திலங்குவெண்ணூலர்தண்மதியர்நெற்றிக்கண்ணர் 
    கூற்றேர்சிதையக்கடிந்தாரிடம்போலுங்குளிர்சூழ்வெற்பில் 
    ஏற்றேனமேனமிவையோடவைவிரவியிழிபூஞ்சாரல் 
    கோற்றேனிசைமுரலக்கேளாக்குயில்பயிலுங்குறும்பலாவே.        6

    நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண்நூலர், தண்மதியர், நெற்றிக்கண்ணர், 
    கூற்று ஏர் சிதையக் கடிந்தார் இடம் போலும் - குளிர் சூழ் வெற்பில், 
    ஏற்றுஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூஞ்சாரல், 
    கோல்-தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும் குறும்பலாவே.

    nIRRu Er tutaintu ilagku veN nUlar, taNmatiyar, neRRikkaNNar, 
    kURRu Er citaiyak kaTintAr, iTampOlum--kuLir cUz veRpil, 
    ERRu Enam Enam ivaiyOTu avai viravi izi pUnjcAral, 
    kOl-tEn icai murala, kELA, kuyil payilum kuRumpalAvE.

பொருள்:     திருநீற்றுடன் நெருங்கிய வெண்மையான பூணூலை உடையவர்; குளிர்ந்த மதியைச் 
சூடியவர்; நெற்றிக் கண்ணினை உடையவர்; எமனுடைய ஏற்றம் அழிய ஒறுத்தவர்; அவருடைய இடம் 
(யாதெனில்) குளிர்ச்சி சூழ்ந்த மலையில் ஆண் பெண் பன்றிகள் தம் இனத்துடன் கலந்து கீழ் இறங்குகின்ற 
அழகிய சாரலில் கொம்புத் தேனி இசை முரல, அதைக் கேட்டுக் குயில் இசை பயிலும் குறும்பலாவே.

குறிப்புரை:     நீற்றே - திருநீற்றிலே. வெள்நூல்- வெளிய முப்புரி நூல். கூற்று - எமன். ஏர் - எழுச்சி. 
சிதைய - கெட. ஏர் சிதைய - அழகு கெட எனலுமாம். ஏறு + ஏனம். ஏற்றேனம் - ஆண்பன்றி. ஏனம் - (பெண்) 
பன்றி. இவையோடு அவை விரவி -இவ்விலங்கு முதலியவற்றினத்தொடு அவ்விலங்கு முதலியவற்றினம் 
கலந்து. இழி - கீழிறங்குகின்ற. கோல்தேன் - கொம்புத்தேன். கேளா-கேட்டு. 

    Behold! It is Civan our Lord of Kurumbala. Our Lord Civan wears the sacred thread 
made of three strings, always moving on His body smeared with holy ashes. He also retains 
the cool moon on His head. He has a third eye in His forehead. Once He became furious with 
Kaalan (God of Death) for his improper behaviour and killed him. This, our Lord, is manifest 
in the place, where cool breeze always blows from the mountain range adjoining His temple. 
Here, both the male and female pigs join together and come down from the top of the mountain 
where dripping always subsists; the special bees found on the plants, on the plains and on 
low hill ranges, gather here to suck the pure honey. They make a humming music while flying. 
The Indian cuckoos hearing this humming of the bees, start singing in their beautiful voice. 
In such awe- inspiring, wondrous area, our Lord Civan is manifest in the temple situated here.

2240.     பொன்றொத்தகொன்றையும்பிள்ளைமதியும்புனலுஞ்சூடிப் 
    பின்றொத்தவார்சடையெம்பெம்மானிடம்போலும்பிலயந்தாங்கி 
    மன்றத்துமண்முழவமோங்கிமணிகொழித்துவயிரமுந்திக்
    குன்றத்தருவியயலேபுனல்ததும்புங்குறும்பலாவே.        7

    பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி, 
    பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும் - பிலயம் தாங்கி, 
    மன்றத்து மண்முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி, 
    குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.

    pon totta konRaiyum piLLaimatiyum punalum cUTi, 
    pin totta vArcaTai empemmAn iTampOlum--pilayam tAgki, 
    manRattu maNmuzavam Ogki, maNi kozittu, vayiram unti, 
    kunRattu aruvi ayalE punal tatumpum kuRumpalAvE.

பொருள்:     பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் இளம்பிறையும் கங்கைப் 
புனலும் சூடி, பின்னால் கூடிய சடையும் உடைய எம்முடைய பெருமானின் இடம் (யாதெனின்) பிரளய 
வெள்ளம் தாங்கி, அயலே குன்றத்து அருவி மணிகளைக் கொழித்து, வயிர மணிகளை உந்தித் தள்ளி 
மன்றத்தில் மார்ச்சனையை உடைய முழவு ஒலிப்பது போல முழங்கும் குறும்பலாவே.

குறிப்புரை:     பொன் தொத்த - பொன்போலும் பூங்கொத்துக்களை உடைய. பிள்ளைமதி - இளம்பிறை.
புனல் -கங்கை. பின்தொத்த - பின்கூடிய. பிலயம் - பிரளயம்.  'கற்பமுறுபிரளயம் வந்து உலக மூன்றையும் 
அழிக்குங்காலமேனும் தற்பரரின் திரிகூடம் போல் எனக்கும் அழியாமை தருதல்  வேண்டும்' 
(திருக்குற்றாலத் தலபுராணம், குறும்பலாச் சருக்கம் 17). திருக்குற்றாலத்தின் வீழும் அருவிகள் பிரளய
வெள்ளம் போல்கின்ற பெருக்கைத் தாங்குவன. மன்றத்தில் (மண்) - மார்ச்சனையை உடைய முழுவம்
போல்கின்ற ஓசை மிக்கன. மணிகளைக் கொழிப்பன. வயிரமணிகளை உந்தி (செலுத்தித்தள்ளி) 
வருவன. அவ்வருவிநீர், அயலிலுள்ள குறும்பலாவின்பால் ததும்பும்.

    Behold! It is Civan, the Lord of Kurumbala. Lord Civan, beautifies His matted hair 
with bunches of golden coloured Indian laburnum flowers. He also retains the baby moon 
on His hair. He supports the river Ganges also on His matted hair. His long matted hair 
hangs at His back in big bunches. This Lord Civan is manifest in the temple, where heavy 
waterfalls, looking like floods that inundated the land at the time of general destruction 
of the universe, fall into the pools with heavy noise similar to the tabla in the temple. 
The waterfalls carry diamonds and gems along with the water and rushes by the side of the 
temple called Kurumbala of our Lord Civan.

2241     ஏந்துதிணிதிண்டோளிராவணனைமால்வரைக்கீழடரவூன்றிச் 
    சாந்தமெனநீறணிந்தசைவரிடம்போலுஞ்சாரற்சாரல் 
    பூந்தண்நறுவேங்கைக்கொத்திறுத்துமத்தகத்திற்பொலியஏந்திக்
    கூந்தற்பிடியுங்களிறுமுடன்வணங்குங்குறும்பலாவே.        8

    ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ் அடர ஊன்றி 
    சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் - சாரல்சாரல், 
    பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில் பொலிய ஏந்தி, 
    கூந்தல்பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.

    Entu tiNi tiNtOL irAvaNanai mAlvaraikkIz aTara UnRi, 
    cAntam ena nIRu aNinta caivar iTampOlum--cAralcAral, 
    pUn taN naRu vEgkaik kottu iRuttu, mattakattil poliya Enti, 
    kUntal piTiyum kaLiRum uTan vaNagkum kuRumpalAvE.

பொருள்:     உயர்ந்து நெருங்கிய திண்ணிய தோளுடைய இராவணனை பெரிய கயிலை 
மலைக்கீழ் அவன் செருக்கு அழிய ஊன்றி, மணமுள்ள சந்தனம் எனத் திருநீற்றினை அணிந்த 
சைவரிடம் (யாதெனில்), தூறல் மழை பெய்யும் சாரலில் குளிர்ந்த பூக்களை உடைய கொத்தினை 
ஒடித்துத் தன் மத்தகத்தில் பொன்போல் பொலிய ஏந்திய, கூந்தற்பிடியும் களிறும் உடன் 
வணங்கும் குறும்பலாவே.

குறிப்புரை:     திணி - நெருங்கிய. திண் - திண்ணிய. உறுதியுடைய. மால்வரை - பெரிய 
கயிலைமலை. சாந்தம் எனநீறு அணிந்த - சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு 
(தி. 1 ப. 52 பா. 7). சாரல் சாரல் - மழைச்சாரலை உடைய மலைச்சாரலில். சாரல் தோறும் எனல் 
சிறவாது. வேங்கைப் பூக்கள் தண்மை (குளிர்ச்சி)யும் நறுமை (நன்மை)யும் உடையன. 
(நறுநாற்றம் -நன்னாற்றம்). இறுத்து - முறித்து. பிடி- பெண்யானைக்குக் கூந்தல் உண்டென்பது 
மரபு. கூந்தல் மாலைக்குமரி பிடிக்குழாம் (சிந்தா.858). 'கூந்தற்பிடிக்குழாம்' (பா. 11). 'நறைக்கூந்தற்பிடி' 
எனக் குமரகுருபர முனிவர் (பா. 45. 464) காலத்திலும் இவ்வழக்கம் இருந்தது. களிறு (ஆண்யானையையும்) 
பிடியும் வேங்கைப் பூக்களைப் பறித்து, சிவபூஜைக்குரிய நெறியில் மத்தகத்தில் ஏந்திக் குறும்பலா 
நாதரை வழிபடுகின்றன. அவ்விலங்குகட்குள்ள சிவபத்தி மக்கட் பிறப்பெய்தியும் அடியேற்கு         
இல்லை. எப்பிறப்பில் உறுமோ?

    Behold! It is Civan, our Lord in Kurumbala, who crushed Raavanan, the king of 
Sri Lanka, with mighty shoulders for his misbehaviour. He smears His body with sacred white 
ashes. This Lord is manifest in the temple situated along the mountain range where the rains 
pour all around the year. The male and female elephants break the branches of the east 
Indian kino tree with flower bunches. They carry these flora bunches in their trunks and 
visit the temple, offer the flowers to our Lord Civan and both worship Him. This is the
place called Kurumbala.

2242.     அரவினணையானும்நான்முகனுங்காண்பரியஅண்ணல்சென்னி 
    விரவிமதியணிந்தவிகிர்தர்க்கிடம்போலும்விரிபூஞ்சாரல் 
    மரவமிருகரையுமல்லிகையுஞ்சண்பகமுமலர்ந்துமாந்தக் 
    குரவமுறுவல் செய்யுங்குன்றிடஞ்சூழ்தண்சாரற்குறும்பலாவே.        9

    அரவின்அணையானும், நான்முகனும் காண்புஅரிய அண்ணல், சென்னி 
    விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் - விரிபூஞ்சாரல் 
    மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த, 
    குரவம் முறுவல் செய்யும் குன்றுஇடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே.

    aravin aNaiyAnum nAnmukanum kANpu ariya aNNal, cenni 
    viravi mati aNinta vikirtarkku iTampOlum--viri pUnjcAral, 
    maravam iru karaiyum mallikaiyum caNpakamum malarntu mAnta, 
    kuravam muRuval ceyyum kunRu iTam cUz taN cAral kuRumpalAvE.

பொருள்:     பாம்புப் படுகை உடையவனும் பிரமனும் காணவியலாத அண்ணல், சென்னியில் 
பிறையை அணிந்த மாறுபட்டவர்; அவருக்கு இடம் யாதெனில், அகன்ற அழகிய சாரலில் குங்கும 
மரமும் மல்லிகையும் சண்பகமும் இருகரையும் மலர்ந்து மாந்தக் குரவம் முறுவலைச் செய்யும் 
குன்றுகள் இடந்தோறும் சூழ்ந்த குளிர்ந்த சாரல்களுடைய குறும்பலாவே.

குறிப்புரை:     அரவின் அணையான்- பாம்பின் படுக்கையை உடைய திருமால். காண்பு அரிய - 
காண்டற்கு அருமையாயுடைய. அண்ணல்- சிவபெருமான். சென்னி - தலை. விரவி - கலந்து. 
மரவம் - குங்கும மரம். மாந்த - உண்ண, குடிக்க. குரவம் - குராமரம். முறுவல் செய்ய -பற்களைப்போலப் 
பூக்க    (சிரிக்க என்ற பொருளும் தொனித்தல் அறிக).

    Behold! It is Civan, our Lord of Kurumbala. The demigod Thirumaal who takes 
rest over the big snake and the other demigod four-faced Brahma, were both unable to 
meet and see our Lord Civan who is the Chief Supreme Being. He retains on His matted 
hair the baby moon very firmly. Our Lord Civan is the Supreme and is different from 
this world. This Lord Civan is manifest in the temple by the side of the mountain 
range where different kinds of flowers of fragrant trees, Arachin jasmine, a very 
fragrant large yellow flower, the bottle flower and champaka blossom like the laughing 
of young girls of the hillocks. This is the place of our Lord Civan called Kurumbala.

2243.     மூடியசீவரத்தர்முன்கூறுண்டேறுதலும்பின்கூறுண்டு 
    காடிதொடுசமணைக்காய்ந்தாரிடம்போலுங்கல்சூழ்வெற்பில் 
    நீடுயர்வேய்குனியப்பாய்கடுவன்நீள்கழைமேல்நிருத்தஞ்செய்யக்
    கூடிய வேடுவர்கள்கூய்விளியாக்கைமறிக்குங்குறும்பலாவே.        10

    மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு 
    காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் - கல் சூழ் வெற்பில் 
    நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல் நிருத்தம் செய்ய, 
    கூடிய வேடுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும் குறும்பலாவே.

    mUTiya cIvarattar, munkURu uNTu ERutalum pinkURu uNTu 
    kATi toTu camaNaik kAyntAr iTampOlum--kal cUz veRpil 
    nITu uyar vEy kuniyap pAy kaTuvan nILkazaimEl niruttam ceyya,
    kUTiya vEtuvarkaL kUy viLiyA, kai maRikkum kuRumpalAvE.

பொருள்:     துவர் ஊட்டிய துணியால் உடலை மூடியவர்; முன்கூறும் பின்கூறும் உண்டதன் 
பின்னும் காடி பருகுபவர் ஆகியோரை வெறுத்தவரின் இடம் (யாதெனில்), பாறைகள் சூழ்ந்த 
மலைமேல் மிக நெடியதாக உயர்ந்த மூங்கில் வளையப் பாய்கின்ற கடுவன் நீண்ட மூங்கில் மேல் 
கழைக்கூத்து செய்ய, அதனைக் காணக் கூடிய வேடுவர்கள் சீழ்க்கை ஒலித்து கை கவிக்கும் 
குறும்பலாவே.

குறிப்புரை:     சீவரத்தார் - துவர் ஊட்டின சீலையை உடுத்தவர். உண்டு- உட்கொண்டு. 
முன்கூறி பின்கூறி - 'அறுசுவையுண்டி, அமர்ந்து இல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டார்' 
என்றது சைனர் கூற்று. காடி-   காடிநீர். சமண்-  சமணர். வேய் - மூங்கில். குனிய-வளைய. 
கடுவன் - ஆண்குரங்கு. கழை- மூங்கிலின் கழை. நிருத்தம்- கூத்து. கூவி -அழைத்து. 
'குய்விளியாக்' -'கூய்விளியாக்' என்று பாடாந்தரம் உண்டு.  (சுவாமிநாத பண்டிதர் தலமுறைப் 
பதிப்பு பக். 911 பார்க்க) வேடர்கள் 'குய்' என விளித்தல் உண்டு.  கை மறிக்கும் -கைகவிக்கும். '
'தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே' (சிந்தா.1227). 

    Behold! It is Civan, Lord of Kurumbala. The Jains wear a special variety of cloth 
known as 'Seevaram' (Ochre Cloth) on their body. They eat earlier six different varieties 
of food; later they take sour toddy. Our Lord Civan had abhorrence for these Jains. The 
place where He manifests Himself is the mountain range where long bamboo clusters grow 
slantingly. The monkeys climb the bent branches and dance jumping from one branch to 
another. The forest hunters see the monkeys playing and they also enjoy making noise 
as 'Kuil' and drive away the monkeys and clasp their hands.In such a mountainous area 
our Lord Civan is manifested in the temple called Kurumbala.

2244.     கொம்பார்பூஞ்சோலைக்குறும்பலாமேவியகொல்லேற்றண்ணல் 
    நம்பானடிபரவும்நான்மறையான்ஞானசம்பந்தன்சொன்ன 
    இன்பாயபாடலிவைபத்தும்வல்லார்விரும்பிக்கேட்பார் 
    தம்பாலதீவினைகள்போயகலும்நல்வினைகள்தளராவன்றே.        11

    கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல்,
    நம்பான்,அடி பரவும் நான்மறையான் - ஞானசம்பந்தன் - சொன்ன 
    இன்புஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக் கேட்பார் 
    தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா அன்றே.

    kompu Ar pUnjcOlaik kuRumpalA mEviya kol ERRu aNNal, 
    nampAn, aTi paravum nAlmaRaiyAn--njAnacampantan--conna 
    inpu Aya pATal ivaipattum vallAr, virumpik kETpAr 
    tampAla tIvinaikaL pOy akalum; nalvinaikaL taLarA anRE.

பொருள்:     பூங்கொம்புகள் நிறைந்த பூஞ்சோலைகள் உடைய குறும்பலாவில் இருக்கும் எருதூரும் 
பெருமான், உயிர்களின் தசைக்கு உரியவர். அவருடைய திருவடியைப் பரவும் மறையவன் ஞானசம்பந்தன் 
சொன்ன பேரின்பமயமான திருப்பாடல்கள் இவை பத்தையும் வல்லவர், விரும்பிக் கேட்பவர் அனைவருக்கும் 
தம்முடைய தீவினைகள் அகன்று போக நல்வினை தளராமல் வளரும்.


குறிப்புரை:      'கொம்பார் சோலை' (திருக்குற்றாலப் பதிகம் 1 பார்க்க). ஏற்றண்ணல்-  எருதூரும் 
பெருமான். நம்பான்- (பா.2 பார்க்க). நம்பன் -உயிர்களின் நசைக்கு உரியவன். 'நம்பும் மேவும்   
நசையாகும்மே' (தொல். சொல். உரிச், 33). இன்பு ஆய பாடல் - பேரின்பமயமான திருப்பாக்கள். 
தம்பால- தம் இடத்திலுள்ள. தளரா - தளராமல் வளரும்.

    Behold! It is Civan, our Lord of Kurumbala. Our Lord Civan manifests Himself 
in the Kurumbala temple which is surrounded by thick forests and men-made gardens in 
plenty. They are all full of young tendrils and many flowery bunches all over the trees. 
He is the Supreme Chief of forest hunters and all tribals. He is also loved by one and 
all of us, especially by those who live in His area. Our saint Thiru-gnana- Sambandar 
who is a great scholar of four Vedas had great delight to worship our Lord's holy feet 
and did sacred chant on Him. Those devotees who can recite these ten songs and those 
who listen to those when others chant will get rid of their bad karma and will enjoy 
the effect of their good deeds.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            71ஆம் பதிகம் முற்றிற்று
            End of 71st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 208                பதிக எண்:72

72. திருநணா                    72. THIRU-NANAA

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருநணா என்னும் இத்திருத்தலமானது வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத 
பதியாதலின் நணா என்னும் பெயர் பெற்றது. திரு அடைமொழி. இது பவாநி என்றும், காவிரியும் 
பவாநியும் கூடுதலால் பவாநிகூடல் என்றும் கூறப்படும். இது கொங்கு நாட்டுத் தேவாரம் பெற்ற 
பதிகளில் ஒன்று. இது ஈரோடு தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 13.5 கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. சேலம், கரூர், ஈரோடு, கோவை முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப் 
படுகின்றன. இறைவரது திருப்பெயர் சங்கமுகநாதர். இறைவியாரது திருப்பெயர் வேதநாயகி .
குபேரன், விசுவாமித்திர முனிவர், பராசர முனிவர் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். இது பவாநி
முக்கூடல் என்னும் தீர்த்தச் சிறப்பு உடையது. பவாநி, காவிரி, அமுதநதி இவை ஆலயத்திற்குக்
கிழக்கே கூடுகின்றன. இவ்வாலயத்தில் தனியே ஒரு திருமால் கோயில் இருக்கின்றது. 
அவர் வழிபட்ட குறிப்பு 'பூமியளந்தானும் போற்ற மன்னி' என்னும் இக்கோயிலுக்குரிய 
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்பதாம் பாடல் பகுதியால் புலப்படுகிறது. இதற்கு ஞானசம்பந்தரது 
பதிகம் ஒன்று உண்டு.

பதிக வரலாறு

    ஆளுடைய பிள்ளையார் கொங்கிற் குடபுலம் சென்று பல சிவதலங்களை வணங்கித் 
கொடிமாடச் செங்குன்றூர்க்கு அடியவரும் ஏனையவரும் சிறப்புற வரவேற்கச் சென்றடைந்து 
வழிபட்டு இனிதிருந்தார். அதன் புறத்துள்ள சிவதலங்களை வணங்குங்கால் திருநணாவினை 
இறைஞ்சிப் பரவிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2245.     பந்தார்விரன்மடவாள்பாகமாநாகம்பூண்டேறதேறி 
    அந்தாரரவணிந்த அம்மானிடம்போலுமந்தண்சாரல் 
    வந்தார்மடமந்திகூத்தாடவார்பொழிலில்வண்டுபாடச் 
    செந்தேன்தெளியொளிரத்தேமாக்கனியுதிர்க்குந்திருநணாவே.        1

    பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறு அதுஏறி, 
    அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம்போலும் - அம் தண்சாரல் 
    வந்து ஆர் மடமந்தி கூத்துஆட, வார்பொழிலில் வண்டு பாட, 
    செந்தேன் தெளி ஒளிர, தேமாக்கனி உதிர்க்கும் திரு நணாவே.

    pantu Ar viral maTavAL pAkamA, nAkam pUNTu, ERu atu ERi, 
    am tAr aravu aNinta ammAn iTam pOlum--am taNcAral 
    vantu Ar maTamanti kUttu ATa, vAr pozilil vaNTu pATa, 
    centEn teLi oLira, tEmAgkani utirkkum tiru naNAvE.

பொருள்:     பந்தினைப் போன்ற மெல்விரல்களையுடைய உமையம்மையைத் தன் இடப்பாகத்தில் 
கொண்டு, நாகப்பாம்பினை அணியாகப் பூண்டு, இடப வாகனத்தில் ஏறி, அழகிய மாலைகளாகப் 
பாம்புகளை அணிந்த அருமகனின் இடம், (யாதெனில்) அழகிய குளிர்ந்த சாரல் உடையதும், 
காற்று வீச, இளமந்தி கூத்தாட, நீண்ட பொழிலில் வண்டுகள் பாட, செந்நிறத்தேனின் தெளிவு 
சொட்டத் தேமா கனியை உதிர்க்கும் திருநணாவே.

குறிப்புரை:     பந்து ஆர் விரல் மடவாள்- 'பந்தார் விரலி' 'பந்தமரும் விரல் மங்கை நல்லாள்' 
'பந்தார் விரலுமையாள்' 'பந்துலாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவை' 'பந்துசேர் விரலாள்' 
எனப்பிற இடத்திலும் அருளியிருத்தலறிக. பாகம் - இடப்பக்கம். நாகம்- பாம்பு. ஏறது - இடபவாகனம். 
அம்தார் அரவு அணிந்த - அழகிய பாம்புகளை மாலைபோல் அணிந்த. அம்மான் - அருமகன் 
என்பதன் மரூஉ. அம் மஹாந் என்பதன் திரிபெனல் பிழை. பெம்மான் என்பது பெருமகாந் 
என்பதன் திரிபெனல் இல்லை. 'எம்மான்', 'தம்மான்', 'கோமான்' என்பவற்றில் மகன் என்பதே 
திரிந்தது. வந்து - காற்று. மந்தி - குரங்கு. தெளி - தெளிவு. தேமா - தித்திக்கும் மா - எழுவாய். 
கனி - செய்யப்படு பொருள். உதிர்க்கும் - பயனிலை.

    Lord Civan is the Supreme Being in Thiru-nanaa. He has embedded His consort 
Umaa Devi on the left half of His body. Her fingers used to play very often various 
types of balls in different ways. He uses the snake as an ornament, it is His brilliant 
ornament all over His body. He sustains the white bull for His conveyance. He wears the 
snake as His beautiful garland also. This Lord is manifest in the temple very near
the wondrous cool mountain range. In the nearby mountains monkeys in large numbers 
join and dance and enjoy life. Near the mountain range thick forests exist with lots
of flower trees. Here, the bees collectively join creating noise, which sounds singing. 
The red honey dripping from flowers forms pools and mango fruits get dropped on the 
ground from the trees. In such an attractive place our Lord Civan has manifested Himself.

2246.     நாட்டம்பொலிந்திலங்குநெற்றியினான்மற்றொருகைவீணையேந்தி 
    ஈட்டுந்துயரறுக்குமெம்மானிடம்போலுமிலைசூழ்கானில் 
    ஓட்டந்தருமருவிவீழும்விசைகாட்டமுந்தூழோசைச் 
    சேட்டார்மணிகளணியுந்திரைசேர்க்குந்திருநணாவே.        2

    நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி, 
    ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் - இலை சூழ் கானில் 
    ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச் 
    சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.

    nATTam polintu ilagku neRRiyinAn, maRRoru kai vINai Enti, 
    ITTum tuyar aRukkum emmAn, iTampOlum--ilai cUz kAnil 
    OTTam tarum aruvi vIzum vicai kATTa, muntUz Ocaic 
    cETTAr maNikaL aNiyum tirai cErkkum tiru naNAvE.

பொருள்:     கண் அழகாக விளங்கும் நெற்றியை உடையவன், ஒருகையில் வீணையைத் 
தழுவி, (மற்றொரு கையில் வீணையை மீட்டி) ஈட்டும் துயர் அனைத்தும் நீக்கும் எம் தலைவன் 
இடம் (யாதெனில்), இலைகள் நெருங்கிய காட்டகத்தில் மூங்கில் அசையும் ஓசை, சலசலவென்று 
ஓடும் அருவி வீழும் ஓசையைக் காட்ட, மலையின் உயரத்தில் இருக்கும் மணிகளை அருவியின் 
அலைகள் கொண்டு வந்து கரை சேர்க்கும் திருநணாவே.

குறிப்புரை:     நாட்டம் - கண், தீவிழி. வீணையேந்தி - மிக நல்ல வீணை தடவி (பதி. 221 - 1). 
ஈட்டும் துயர்- ஆகாமியகன்மம் (சஞ்சிதமாய்ப் பிராரப்தம்) ஆகுந்துயரம். கான்- காடு. விசை - வேகம் 
முந்தூழ் - மூங்கில். சேடு ஆர் - (மலையின்) உயரத்தில் பொருந்திய. திரை - அருவியின் அலைகள்,

    Lord Civa is manifest in Thiru-nanaa. He has a beautiful third eye in His forehead, 
which brightens His appearance. He holds the Indian Lute (Veena) in one of His hands. 
He dispels the karma of His devotees. In this place, the trees with dense leaves are many 
in the forest area. Here the waterfalls from the mountains produce musical sounds. The bamboo 
trees are too many and in bunches they grow. They dash against one another due to heavy wind 
and make noise. The running water in the rivulets and rivers carries all varieties of gems 
and they get dropped and gathered on the banks of these water areas. Such a glorious place 
is Thiru-nanaa where our Lord Civan is manifested.

2247.     நன்றாங்கிசைமொழிந்துநன்னுதலாள்பாகமாய்ஞாலமேத்த 
    மின்தாங்குசெஞ்சடையெம்விகிர்தர்க்கிடம்போலும்விரைசூழ்வெற்பில் 
    குன்றோங்கிவன்றிரைகள்மோதமயிலாலுஞ்சாரற்செவ்வி 
    சென்றோங்கிவானவர்களேத்தியடிபணியுந்திருநணாவே.        3

    நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம்ஆய், ஞாலம் ஏத்த
    மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் - விரை சூழ் வெற்பில், 
    குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல், செவ்வி 
    சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.

    nanRu Agku icai mozintu, nannutalAL pAkam Ay, njAlam Etta,
    min tAgku cenjcaTai em vikitarkku iTampOlum--virai cUz veRpil, 
    kunRu Ogki van tiraikaL mOta, mayil Alum cAral, cevvi 
    cenRu Ogki vAnavarkaL Etti aTi paNiyum tiru naNAvE.

பொருள்:     இசையுடைய மறைகளை நன்றாகப் பாடியருளி, அழகிய நெற்றியுடைய 
உமையை இடப்பாகத்தில் கொண்டு, உலக மக்கள் வழிபட மின்னொளி வீசும் சடையைத் 
தாங்கிய எம்முடை விகிர்தற்கு இடம் (யாதெனில்) நறுமணம் சூழ்ந்த மலைமேல் ஒலியுடன் 
அருவி அலைகள் மோத அவ்வொலிக்கு ஏற்ப மயில்கள் நடமாடும் சாரல்களின் அழகினை 
மிக உடையதும் தேவர்கள் சென்று ஏத்தி அடிவணங்குவதுமாகிய திருநணாவே.

குறிப்புரை:     நன்று ஆங்கு இசைமொழிந்து- நன்றாக இசையுடைய சாமவேதத்தைப் 
பாடியருளி. வேதங்களைத் தோற்றுவித்தருளி எனலும், இசையைத் தோற்றியருளி எனலும் ஆம். 
மொழிந்து ஆய் ஏத்தத் தாங்கு செஞ்சடை விகிர்தர் என்று இயைக்க. நன்னுதலாள் உமாதேவியார். 
ஞாலம்- பூமியிலுள்ளோர், உலகோர் எனலுமாம். மின் - ஒளி. விரை- மணம். வெற்பு - மலை, குன்று 
ஓங்கி வல்திரை (அலை)கள் மோத மயில் ஆலும் சாரல். செவ்வி - அழகு.

    Lord Civan, the originator of the Vedas sings the Saama Veda in a very pleasant 
tone and displayed it to all (He sings other Vedas also). He has embedded His consort 
Umaa Devi. His entangled locks of red long hair are very bright like lightning and 
very conspicuous. He is manifest in this place and is glorified by the world. Here in 
the mountain range waterfalls are many, big and tall. The falls itself looks like small 
hills and the torrential flow of water dashes everywhere all around. The peacocks nearby
enjoy the falls and they dance. Here, the Devas arrive near the falls and offer their
worship to Lord Civa. Such a glorious place is Thiru-nanaa.

2248.     கையில்மழுவேந்திக்காலிற்சிலம்பணிந்துகரித்தோல்கொண்டு 
    மெய்யில்முழுதணிந்தவிகிர்தர்க்கிடம்போலுமிடைந்துவானோர் 
    ஐயஅரனேபெருமானருளென்றென்றாதரிக்கச் 
    செய்யகமலம்பொழில்தேனளித்தியலுந்திருநணாவே.        4

    கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல் கொண்டு, 
    மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் - மிடைந்து வானோர், '
    'ஐய! அரனே! பெருமான்! அருள்!" என்று என்று ஆதரிக்க, 
    செய்யகமலம் பொழில் தேன் அளித்து இயலும் திரு நணாவே.

    kaiyil mazu Enti, kAlil cilampu aNintu, karittOl koNTu, 
    meyyil muzutu aNinta vikirtarkku iTampOlum--miTaintu vAnOr, 
    "aiya! aranE! perumAn!" aruL enRu enRu Atarikka,             
    ceyyakamalam pozil tEn aLittu iyalum tiru naNAvE.

பொருள்:     கையில் மழுவாயுதத்தை உயர்த்தி, காலில் சிலம்பினை அணிந்து திருமேனியின்மேல் 
யானைத்தோல் முழுதுமாக அணிந்த விகிர்தர்க்கு இடம் (யாதெனில்) வானவர்கள் நெருங்கி, 'ஐய! அரனே! 
பெருமானே! அருள் செய்வீராக' என்று விரும்பிப் போற்ற, செந்தாமரை மலர்கள் சோலைகள் 
தேன்பொழியும்  திருநணாவே. 

குறிப்புரை:     கரி- கரத்தையுடையது. யானை, யானைத்தோலை உடம்பு முழுதும் மறையப் 
போர்த்தார் என்றவாறு. கைம்மழு. காற்சிலம்பு. மெய்ப்போர்வை. மிடைந்து - நெருங்கி. 'ஐயனே', 
அரனே, பெருமானே அருள் என்று வானோர் விரும்பிப் போற்ற. செய்ய கமலம்- செந்தாமரை. 
பொழி- வெளிப்படுத்தும் தேன்தரும் என்றபடி.

    Lord Civan holds the battle axe in one of His hands. He wears on His leg 
the tinkling anklets. He covers His body with the hide of the elephant. He is the 
Supreme (different from the world) Being. Here the Devas gather and offer worship 
to Lord Civa chanting "Oh Father! Hara" (one with the supreme power) "Oh! Noble 
and eminent with no parallel. Kindly grace us!" They love and pray Him. Here in the 
ponds red lotus flowers produce large quantity of honey. Such a glorious place is 
Thiru-nanaa where our Lord Civan is manifest.

2249.     முத்தேர்நகையாளிடமாகத்தம்மார்பில்வெண்ணூல்பூண்டு 
    தொத்தேர்மலர்சடையில்வைத்தாரிடம்போலுஞ்சோலைசூழ்ந்த 
    அத்தேனளியுண்களியாலிசைமுரலவாலத்தும்பி 
    தெத்தேயெனமுரலக்கேட்டார்வினைகெடுக்குந்திருநணாவே.        5

    முத்து ஏர் நகையாள் இடம்ஆக, தம் மார்பில் வெண்நூல் பூண்டு
    தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம்போலும் - சோலை சூழ்ந்த 
    அத்தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி, 
    தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.

    muttu Er nakaiyAL iTam Aka, tam mArpil veN nUl pUNTu, 
    tottu Er malar caTaiyil vaittAr iTam pOlum--cOlai cUznta 
    attEn aLi uN kaLiyAl icai murala; Alat tumpi, 
    tettE ena; muralak kETTAr vinai keTukkum tiru naNAvE.

பொருள்:     முத்துப் போன்ற பற்களையுடைய உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்டு, 
வெண்ணிறமான முப்புரிநூல் பூண்டு, அழகிய பூங்கொத்தைச் சடையில் வைத்த சிவபிரானின் இடம் 
(யாதெனில்), சோலைகளாற் சூழப் பெற்று, தேனுண்ட மகிழ்ச்சியினால் சடையில் வண்டுகள் 
இசை முரல, தும்பிகள் 'தெத்தே' என முரல, தன்பெயரைக் கேட்ட மாத்திரத்தே செவிமடுத்த 
நல்வினையாளரது தீவினையைப் போக்கும் திருநணாவே.

குறிப்புரை:     முத்து ஏர் நகையாள் -முத்தினைப் போலும் பற்களை உடைய உமாதேவியார். 
திருமார்பிற் பூணுநூல் பூண்டிருப்பது முன்னும் பின்னும் சிற்சில பதிகங்களிற் கூறப்படுகின்றது. 
தொத்து - (பூங்) கொத்து. ஏர் -அழகு. மலர் கொன்றை (யும்) பிறவும். 'சடையமர் கொன்றையினார்' 
(தி.2 ப.205 பா.3). 'கடிபடு கூவிளமத்தங் கமழ்சடை மேலுடையார்' (மேற்படி 6). அளி- வண்டுகள். 
களி- கள்ளுண்ட (மயக்கம்) களிப்பு. ஆல- ஒலிக்க. 'தெத்தே' என்பது அநுகரணம். கேட்டார் 
வினைகெடுக்கும் - செவிமடுத்த நல்வினை யாளரது தீவினையைப் போக்கும்.  

    Lord Civan has embedded His consort Umaa Devi on the left side of His body. 
Her teeth resemble pearls, white and uniform in position. He wears on His chest white 
coloured sacred thread. He has adorned His locks of hair with bunches of lovely, 
flowers. With these, He is manifest in Thiru-nanaa. This place is full of groves 
around the city with flowers - most of them with good quantity of honey. The bees 
in large numbers gather in the garden in great desire to suck honey, making noise, 
which resembles the word 'thetha'. The garden is such a beautiful place. Those people 
who hear the very name of the city as Thiru-nanaa will get their sins removed from 
their life.  In such a great glorious place our Lord Civa is manifest.

2250.    வில்லார்வரையாகமாநாகநாணாகவேடங்கொண்டு 
    புல்லார் புரமூன்றெரித்தார்க்கிடம்போலும்புலியுமானும் 
    அல்லாதசாதிகளுமங்கழல்மேற்கைகூப்பஅடியார்கூடிச் 
    செல்லாவருநெறிக்கேவல்லஅருள்புரியுந்திருநணாவே.        6

    வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு 
    புல்லார் புரம்மூன்று எரித்தார்க்கு இடம்போலும் - புலியும் மானும் 
    அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி, 
    செல்லா அருநெறிக்கே வல்ல அருள்புரியும் திரு நணாவே.

    vil Ar varai Aka, mA nAkam nAN Aka, vETam koNTu, 
    pullAr puram mUnRu erittArkku iTampOlum--puliyum mAnum 
    allAta cAtikaLum am kazalmEl kaikUppa, aTiyAr kUTi, 
    cellA aru neRikke valla aruL puriyum tiru naNAvE.

பொருள்:     மேருமலை வில்லாகப் பொருந்த, பெரிய பாம்பு வில்லின் நாணாக, தன்னைக் 
கூடாத பகைவர்களின் மும்மதில்களையும் எரித்தவருக்கு இடம் (யாதெனில்), புலியும் மானும் 
(இவையிரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல) அவை அல்லாத சாதி விலங்குகளும் 
அழகிய கழலணிந்த திருவடிகளைக் கைகுவித்து வழிபட, அடியார்கள் அனைவரும் 'செல்லாத 
செந்நெறிக்கே செல்ல' அருள்புரியும் திருநணாவே.

குறிப்புரை:     வில் ஆர் வரை ஆக - மேருமலை வில்லாகப் பொருந்த. மாநாகம் நாண் ஆக - 
பெரிய பாம்பு விற்கயிறாக. புல்லார் - தழுவாத (பகை)வர். புலி, மான் இரண்டும் பகை நீங்கி 
நட்புற்று வழிபடுதல் போல. அவை அல்லாத விலங்கினங்களும் திருவடியைக் கைகுவித்து 
வழிபடுகின்றன. அதுவே அன்றி அடியார்கட்கு அச்சம் முதலியன உளவாகா வண்ணம். 
அவர்கள் போகாத வழியிலே போகின்றன. சிவபக்தியும்  உடைய விலங்கினங்கட்குள்ள 
நல்வினை அடியேனுக்கில்லையே. இவ்வுயரிய மக்கட் பிறப்பை எய்தியும், அவனருளாலே 
அவன் தாள் வணங்க, அவனருள் செய்தல் வேண்டும். அதற்கு நாம் பெருந்தவம் புரிதல் 
வேண்டும். கழல் - திருவடிக்கு ஆகு பெயர். 

    Our Lord Civan handled the Meru mountain as His bow, used the very big snake 
called Vasuki as a rope to bend the bow; He dressed Himself as the greatest fighter 
and shot an arrow on the three fortresses of Asuras which were flying in the sky and 
destroyed them completely along with the people who lived there. This Lord is manifest 
in Thiru-nanaa where tiger and deer as well as other animals come to the temple to 
worship our Lord. The devotees also gather daily at the temple and offer worship to 
our Lord. Our Lord graces all the devotees to reach heaven, which is inaccessible to 
the people. Such a glorious city is Thiru-nanaa.

2251.     கானார்களிற்றுரிவைமேல்மூடியாடாவொன்றரைமேற்சாத்தி 
    ஊனார்தலையோட்டிலூணுகந்தான்தானுகந்தகோயிலெங்கு 
    நானாவிதத்தால்விரதிகள்நன்னாமமேயேத்திவாழ்த்தத் 
    தேனார்மலர்கொண்டடியாரடிவணங்குந்திருநணாவே.        7

    கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடுஅரவு ஒன்று அரைமேல் சாத்தி, 
    ஊன் ஆர் தலைஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் - எங்கும் 
    நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த 
    தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.

    kAn Ar kaLiRRu urivai mEl mUTi, ATu aravu onRu araimEl cAtti, 
    Un Ar talai OTTil UN ukantAn tAn ukanta kOyil-egkum 
    nAnAvitattAl viratikaL nannAmamE Etti vAztta, 
    tEn Ar malar koNTu aTiyAr aTi vaNagkum tiru naNAvE.

பொருள்:     காட்டில் வாழும் யானையினின்றும் உரித்த தோலை உடம்பின் மேல் போர்த்து, 
ஆடுகின்ற பாம்பினை இடையில் கச்சாகக் கட்டி, ஊன் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்று 
மகிழ்ந்தவன் வாழும் திருக்கோவில் (யாதெனில்) எல்லா இடங்களிலும், பலவிதங்களிலும் தவத்தவர்கள், 
யோகிகள், பத்தர், சித்தர் முதலியோர் பிறவிப் பிணிக்கு மருந்தாகிய தன்னுடைய திருநாமங்களைக் 
கூறி வாழ்த்த, தேனார் மலர் கொண்டு அடியவர்கள் தம்முடைய திருவடிகளை வணங்கும் திருநணாவே.

குறிப்புரை:     கான் - காடு. ஆர்- பொருந்திய. நிறைந்த, களிறு உரிவை - யானைத்தோல். . 
மேல்மூடி- உடம்பின்மேல் போர்த்து மறைத்து. ஆடு அரவு - ஆடும் பாம்பு. சாத்தி - சார்த்தி (கட்டி).         
ஊன் ஆர்தலை  ஓட்டில் - மாமிசத்தோடு கூடிய  பிரமகபாலத்தில். ஊண்-  உண்ணுதலை. உகந்தான் - 
விரும்பினவன். உகந்த - விரும்பி எழுந்தருளியுள்ள. நானாவிதத்தால் - பலவகையால். விரதிகள் - 
தவத்தோர்கள், யாகத்தோர்கள். நல்நாமமே - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய திருவைந் தெழுத்தையே. 
அடியார் அடி -  எழுவாய்த் தொடரும் ஆறன்றொகை நிலைத் தொடரும் ஆம்.

    Our Lord Civan covers His body with the hide of the elephant that lives 
in the forest. The dancing snake is used as a belt around His waist. He accepts alms 
in the skull of Brahma with pieces of flesh sticking to it. He uses the skull happily. 
He is very joyfully manifest in the temple of the city. The yogic devotees gather in 
the temple and pray repeating His name. Other devotees collect flowers full of honey 
and place them at the holy feet of our Lord and sing songs in His praise and prostrate 
before His holy feet. Such a glorious place is Thiru-nanaa.

2252.     மன்னீரிலங்கையர்தங்கோமான்வலிதொலையவிரலாலூன்றி 
    முந்நீர்க்கடல்நஞ்சையுண்டார்க்கிடம்போலும்முனைசேர்சீயம் 
    அன்னீர்மைகுன்றியழலால்விழிகுறையவழியுமுன்றிற் 
    செந்நீர்பரப்பச்சிறந்துகரியொளிக்குந்திருநணாவே.        8

    மன்நீர் இலங்கையர் தம்கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி, 
    முந்நீர்க் - கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் - முழை சேர் சீயம், 
    அல்-நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில், 
    செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

    man nIr ilagkaiyar tam kOmAn vali tolaiya viralAl UnRi, 
    munnIrk-kaTal nanjcai uNTArkku iTampOlum--muzai cEr cIyam, 
    al-nIrmai kunRi azalAl vizi kuRaiya aziyum munRil, 
    cennIr parappac ciRantu kari oLikkum tiru naNAvE.

பொருள்:     கடலிலே உள்ள இலங்கைக்கு அரசன், இராவணனின் ஆற்றலைக் கால் 
பெருவிரலை ஊன்றி அழித்தவரும் கடலிற் பிறந்த நஞ்சை உண்டவரும் ஆகிய பெருமானுக்கு 
இடம் (யாதெனில்) பகை கொண்ட சிங்கம் தன் பகை குன்றி, போரிடில் வலிமை தோற்கும் 
முன்றிலில் இரத்தம் பரந்து கிடக்க சண்டையில் வென்ற யானை சிறந்து ஒளிரும் திருநணாவே.

குறிப்புரை:     மன்நீர் - மிக்க நீர். நிலைபெற்ற நீர் (கடல்). முனை - பகை. சீயம் - சிங்கம். 
அல் - இரவு. நீர்மை - தன்மை. குன்றி - குறைந்து. அழல் - நெருப்பு. முன்றில் - முற்றம். 
செந்நீர் - இரத்தம். கரி- யானை, சிங்கத்தின் தொலைவும் யானையின் வெற்றியும் குறிக்கப்பட்டன.

    Raavanan, the king of Sri Lanka, an island surrounded by great seas, all around 
was a great mighty warrior full of unparalleled courage. Our Lord Civan subdued His 
physical power by slightly pressing the top of His mountain abode with His toe. He once 
imbibed the poison that came out of the ocean of milk. This Lord Civa is manifest in 
Thiru-nanaa. The mountain range of this city has many caves. Inside these caves lived 
a lion, the king of forests. An elephant had a fierce fight with this lion and destroyed 
the fiery eyes of the lion and finally its physical power. On observing the lion's blood 
at the cave's entrance, the elephant felt proud of its strength. At times such
events take place in this mountain range. Such is the speciality of the city, Thiru-nanaa.    

2253.     மையார்மணிமிடறன்மங்கையோர்பங்குடையான்மனைகள்தோறும் 
    கையார்பலியேற்றகள்வனிடம்போலுங்கழல்கள்நேடிப் 
    பொய்யாமறையானும் பூமியளந்தானும்போற்றமன்னிச் 
    செய்யாரெரியா முருவமுறவணங்குந்திருநணாவே.        9

    மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள்தோறும் 
    கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் - கழல்கள் நேடிப் 
    பொய்யா மறையானும், பூமி அளந்தானும் போற்ற, மன்னிச் 
    செய் ஆர் எரிஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.

    mai Ar maNimiTaRan, magkai Orpagku uTaiyAn, manaikaL tORum 
    kai Ar pali ERRa kaLvan, iTampOlum--kazalkaL nETip 
    poyyA maRaiyAnum pUmi aLantAnum pORRa, mannic 
    cey Ar eri Am uruvam uRa, vaNagkum tiru naNAvE.

பொருள்:     கருமணி போலும் கண்டத்தை உடையவன்; உமையைத் தன் மேனியில் ஒரு பாகமாக 
உடையவன்; இல்லங்கள் தோறும் கையில் பிச்சை ஏற்கும் கள்வன்; அவனுடைய இடம் (யாதெனில்) 
அவனுடைய திருவடிகளைத் தேடி பிரமனும் மூவடியால் உலகை அளந்தவனும் வழிபட அவர்களின் 
முன்னிலையில் செந்நிற நெருப்புப் பிழம்பாக உருவமுற  வணங்கும் திருநணாவே.

குறிப்புரை:     மைஆர் மணிமிடறன் - கருமை நிறைந்த நீலமணி போலும் திருக்கழுத்துடைய 
சிவபிரான். மேகத்தைப்போலும் அழகிய கண்டன் எனலுமாம். நேடி-தேடி பொய்யாமறை - வேதம், 
மன்னி- நிலைத்து. செய் - செம்மை. எரியாம் உருவம் - தீப்பிழம்பு வடிவம். விடமுண்ட ஆற்றலுடையவன் 
பலியேற்று உண்ணல் வேண்டா. மங்கைபங்கன். தன்பால் இரப்பவர்க்கு ஈதல் வேண்டும். அவன்
மனைகள்தோறும் சென்று இரப்பது, மங்கையுடைமைக்கு ஏவாது, தன் கோலத்திற்கு ஒவ்வாத செயலை  
மேற்கொண்டதால் அதற்கு ஓர் ஏது வெளிப்படாதிருத்தலைக் குறிக்கக் கள்வன் என்றார்.

    Lord Civan's neck is dark blue in colour, because He imbibed the poison. 
Before it moved down the throat, Umaa pressed His neck and stopped its downward movement. 
He has embedded His consort on the left side of His body. He goes round the world and 
visits many houses and begs for alms. When the household ladies offer Him food, He covets 
their hearts. He is therefore called a robber. Thirumaal once upon a time measured the 
earth. The four-faced Brahma used to chant the four Vedas. These two went out in search 
of our Lord's feet and head and failed. They then prayed. Then our Lord Civan appeared 
before them as a tall and endless column of fire when they were terrified. Finally they 
worshipped Him and prayed to Him in this city of Thiru-nanaa.

2254.     ஆடையொழித்தங்கமணேதிரிந்துண்பரல்லல்பேசி 
    மூடுருவமுகந்தாருரையகற்றும்மூர்த்திகோயில் 
    ஓடுநதிசேருநித்திலமும்மொய்த்தகிலுங்கரையிற்சாரச் 
    சேடர்சிறந்தேத்தத்தோன்றியொளிபெருகுந்திருநணாவே.        10

    ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி 
    மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில் 
    ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார, 
    சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.

    ATai ozittu agku amaNE tirintu uNpAr, allal pEci 
    mUTu uruvam ukantAr, urai akaRRum mUrtti kOyil- 
    OTum nati cErum nittilamum moytta akilum karaiyil cAra, 
    cETar ciRantu Etta, tOnRi oLi perukum tiru naNAvE.

பொருள்:     ஆடையுடுத்தலை நீத்து அமணமாகத் திரிபவரும் முரட்டுத் தனமாகப் 
பேசிக்கொண்டு துணியால் உடலை மூடிக் கொள்வதை உகந்தவர்களும் கூறும் உரைகளை 
 விலக்கும் மூர்த்தி இருக்கும் திருக்கோயில் (யாதெனில்), ஓடுகின்ற சேருகின்ற முத்தும் 
அகிலும் கரையில்  அடைய, பெரியோர்கள் சிறப்பாக வழிபட, செங்காந்தள் மலர்ந்து 
ஒளிரும் திருநணாவே.

குறிப்புரை:     'ஆடை... உண்பார் என்பது திகம்பர சைனரையும் மூடும் உருவம் உகந்தார்' 
என்பது சுவேதாம்பர சைனரையும் தேரரையும் குறித்தன. நித்திலம் - முத்து. அகில் - அகில் மரம். 
சேடர் - பெரியோர். தோன்றி- செங்காந்தள். 'கொய்ம்மலர தோன்றி போற்சூட்டுடைய சேவலும்' 
(சீவகசிந்தாமணி 73).

    The Jains move around without proper dress and beg for alms. They receive 
and eat these from their hands. The Buddhists cover their body with ochre robes. 
These two blabber distressing news all around. Our Lord Civa never listens to 
those words. Our Lord is manifest in the temple in Thiru-nanaa. Here the river 
flows nearby with rushing water. The running water carries pearls, eagle wood etc. 
This wood emits fragrant smell when burnt. These are flung on the banks of the river. 
Great wisemen visit the temple and worship our Lord daily. The red flowers collected 
by devotees are placed over our Lord in plenty. They emit brightness all around the 
area. Such a glorious city is Thiru-nanaa.

2255.     கல்வித்தகத்தால்திரைசூழ்கடற்காழிக்கவுணிசீரார் 
    நல்வித்தகத்தாலினிதுணரும்ஞானசம்பந்தனெண்ணும் 
    சொல்வித்தகத்தாலிறைவன்திருநணாஏத்துபாடல் 
    வல்வித்தகத்தான்மொழிவார்பழியிலரிம்மண்ணின்மேலே.        11

    கல் வித்தகத்தால்-திரை சூழ் கடல் காழிக் கவுணி - சீர் ஆர் 
    நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் - எண்ணும் 
    சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல், 
    வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

    kal vittakattAl-tirai cUz kaTal kAzik kavuNi--cIr Ar 
    nal vittakattAl initu uNarum njAnacampantan--eNNum 
    col vittakattAl iRaivan tiru naNA Ettu pATal, 
    val vittakattAl mozivAr pazi ilar, im maNNin mElE.

பொருள்:     (சகரர்கள் தம்முடைய) திறமையால் தோண்டிய கடல் சூழ்ந்த சீகாழியில் 
கவுணியர்கள் குலத்தில் தோன்றிய  நல்ல ஞானம் உடைய ஞானசம்பந்தன் கருத்தில்  எண்ணிப் 
பெருமையுடைய திருநணாவை ஏத்திப்பாடிய பாடல்களைக்  கற்ற வல்லமையால் 
மொழிபவர்கள் இம்மண்ணுலகில் பழியிலாதவர்களாவர்.                    

குறிப்புரை:     கல் வித்தகத்தால்- 'கல்லயங்குதிரை சூழ நீள் கலிக் காழி' ( தி2. ப 211. பா 4)
கற்சாதுரியத்தால் என்பது பொருளாயினும் ஈண்டுப் பொருந்தாது. வித்தகம்- பெருமை. 
சிற்பம் முதலிய சிறந்த தொழில், அதிசயம்  என்னும் பொருள்களுள்  ஏதேனும் பொருந்தும், 
காழிச்சிறப்பாகும். 'திரைசூழ்கடல்' என்பது காழிக்கு அடையாதல் கடலில் மிதந்ததும் 
கடல் அருகிலிருந்ததும் பற்றி நல்வித்தகத்தால்- நல்ல  ஞானத்தால். எண்ணும் சொல்வித்தகத்தால் -
கருதிய சொற்சாதுரியத்தால் வல்வித்தகத்தால்- இசையில், பொருளில், அன்பில் வலிய 
சாதுரியத்தால். இம்மண்மேல் பழி இல்லாதவர் ஆவர்.

    The city of Seerkaazhi has seashore on one side. Here the waves of the 
sea with regularity and uniformity beautify the shore . Our saint Thiru-gnana-Sambandar 
was born in this city with good divinity. He understands everything intuitively. He sang on 
the Lord of Thiru-nanaa  songs of spiritual wisdom with right choice of words . Those 
devotees wha can sing these songs with musical talent, praising our Lord, will have 
no blame in them and will not be ridiculed by anybody.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            72ஆம் பதிகம் முற்றிற்று
            End of 72nd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 209                        பதிக எண்: 73 

73. திருப்பிரமபுரம்                        73. THIRU-P-PIRAMAPURAM

பண்: காந்தாரம்                            Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் சீகாழியில் மின்னார்சடை 
அண்ணலை வணங்கி, சொல்மாலைகள் சாத்தி மகிழ்வெய்தி, சிலநாள் உடனிருந்து திருவருள் வாழ்வை 
நடாத்தினர். பின்னர், அரசர் பலபலதலங்களை வழிபடச் சென்றார். கவுணியர் சீகாழியில் உறைகின்ற 
நாளில் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழிமாற்று, மாலைமாற்று, ஏகபாதம் முதலியவற்றைப் 
பாடுங்கால் அருளியது திருச்சக்கரமாற்று என்னும் இத்திருப்பதிகம்.

     இத்திருப்பதிகம் சீகாழிப்பதிக்குரிய பன்னிரு திருப்பெயர்களையும் போற்றிப் பரவும் 
வகையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தின் முதற்பாடலில் கூறப்படும் பன்னிரு பெயர்களும் 
1 முதல் 12 வரையுள்ள பாடல்களின் முதற்பெயர்களாக நின்று ஒரு வட்டமாக அமையும்படி 
அப்பெயர்களை மாற்றினமையின் இது 'சக்கரமாற்று' என்னும் பெயர்த்தாயிற்று. முதல் திருப்பாடலின் 
ஈற்றிலுள்ள 'கழுமலம்' என்னும் பெயர் இரண்டாம் திருப்பாடலின் முதற்  பெயராயிற்று. 
இவ்வாறே இரண்டாம் திருப்பாடலின் ஈற்றிலுள்ள 'தோணிபுரம்' என்னும் பெயர் அடுத்த திருப்பாடலில் 
முதலில் அமைகின்றது. இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலும் அமைந்து பன்னிரண்டாம் பாடலின், 
இறுதியில் பிரமபுரம் என்னும் பெயர், 'அயனூர்' எனவும் முதற் பாடலின் 'பிரமனூர்' என முதற்பெயராக 
நின்றும் ஒரு வட்டமாக அமைகின்றது. பன்னிரண்டு பெயர்களும் ஒரு சக்கரத்தின் ஆரைக்கால் போலச் 
சுழன்று வருதல் காண்க. பன்னிரண்டாம் திருப்பாடலில், இச்சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன 
தமிழ்தரிப்போர் என வருதலால் இத்திருப் பதிகத்திற்குச் சக்கரமாற்று எனும் பெயர் திருஞானசம்பந்தப் 
பிள்ளையாரே இட்டது எனலாம்.

                திருச்சிற்றம்பலம்

2256.     விளங்கியசீர்ப்பிரமனூர்வேணுபுரம்புகலிவெங்குருமேற்சோலை 
    வளங்கவருந்தோணிபுரம்பூந்தராய்சிரபுரம்வண்புறவமண்மேல் 
    களங்கமிலூர்சண்பைகமழ்காழிவயங்கொச்சைகழுமலமென்றின்ன         
    இளங்குமரன்றன்னைப்பெற்றிமையவர்தம்பகையெறிவித்திறைவனூரே.        1

    விளங்கிய சீர்ப் பிரமன்ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, மேல் சோலை 
    வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண் புறவம், மண் மேல் 
    களங்கம்இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம்கொச்சை, கழுமலம் என்று இன்ன
     இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே,    

    viLagkiya cIrp piraman Ur, vENupuram, pukali, vegkuru, mEl cOlai 
    vaLam kavarum tONipuram, pUntarAy, cirapuram, vaN puRavam, maNmEl 
    kaLagkam il UrcaNpai, kamaz kAzi, vayam koccai, kazumalam, enRu inna
    iLagkumaran tannaip peRRu, imaiyavar tam pakai eRivitta iRaivan UrE.

பொருள்:     சீர் விளங்கிய பிரமனூர்; சீர் - பெருமை, அழகு. உயர்ந்தோங்கிய சோலைகளின் 
வளத்தையெல்லாம் தான் கவர்ந்து உயர்ந்து விளங்குவதால், மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம் 
என்றார். களங்கமில் ஊர் சண்பை- குற்றங்கள் இல்லாத சண்பை நகர்.  கமழ் காழி- மணங்கமழ்கின்ற காழி. 
வயங்கொச்சை- கொச்சைவயம், என்றும்  இளையோனாகிய குமரனைப் பெற்று இமையவர்களுடைய 
பகையாகிய அசுரர்களை எறிவித்த இறைவனின் ஊர். எறிவித்திறைவனூரே - எறிவித்த என்பதில் 
பெயரெச்சத்தகரம் தொக்கு எறிவித்திறைவன் என ஆயிற்று.

குறிப்புரை:     இப்பதிகத்திலும் அடுத்த பதிகத்திலும் 206ஆவது பதிகத்தின் முதற்பாட்டிலுள்ள முறையே
பன்னிரு திருப்பெயர்களும் அமைந்திருத்தல் அறிதற்பாலது. மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம் 
என்றது, உயர்ந்தோங்கிய சோலைகளிலும் மேலோங்கி விளங்குவதால், சோலை வளத்தைத் தோணிமலை 
கவர்ந்து திகழ்வதாயிற்றென்றபடி. இளங்குமரன் - முருகக் கடவுள், பாலசுப்பிரமணியர். பெற்று - ஐந்து 
முகத்தோடு அதோமுகமும் கொண்டு. சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள் தம்பகை கெடுத்தோன் 
திகழுமூரே (தி.2 ப.210 பா.6).  பகை- பகையாய அசுரர்களை. எறிவித்த - எறியச் செய்த. பெயரெச்சத்தகரம் 
தொக்கது.

    This poem sung by Thiru-gnana-Sambandar mentions the twelve names of Seerkaazhi 
in alternate terms. The well renowned names are (1) Piramapuram, (2) Venupuram, (3) Pugali, 
(4) Venguru- Venkuru , (5) Thonipuram, (6) Poontharai, (7) Sirapuram, (8) Puravam, (9) Shanbai, 
(10) Kaazhi - Seerkaazhi, (11) Kochai - Vayam and (12) Kazhumalam. The young son god Kumaran, 
the second son of Lord Civan appeared in this city. The enemies of devas were rooted out by 
this god Kumaran in this city where Lord Civan manifests Himself.

2257.     திருவளருங்கழுமலமேகொச்சைதேவேந்திரனூரயனூர்தெய்வத் 
    தருவளரும்பொழிற்புறவஞ்சிலம்பனூர்காழிதகுசண்பையொண்பா 
    உருவளர்வெங்குருப்புகலியோங்குதராய்தோணிபுரமுயர்ந்ததேவர்             
    வெருவவளர்கடல்விடமதுண்டணிகொள்கண்டத்தோன்விரும்புமூரே.     2

    திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன்ஊர், அயன்ஊர், தெய்வத் 
    தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன்ஊர், காழி, தகு சண்பை, ஒண் பா 
    உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம் - உயர்ந்த தேவர் 
    வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே.

    tiru vaLarum kazumalamE, koccai, tEvEntiran Ur, ayan Ur, teyvat 
    taru vaLarum pozil puRavam, cilampan Ur, kAzi, taku caNpai, oN pA         
    uru vaLar vegkuru, pukali, Ogku tarAy, tONipuram--uyarnta tEvar 
    veruva, vaLar kaTalviTam atu uNTu aNi koL kaNTattOn virumpum UrE.        

பொருள்:     திருவளரும்- திரு - செல்வம்; பொருட்செல்வம், கல்விச்செல்வம், ஞானச் செல்வம் 
மூன்றும் வளரும் கழுமலம். தேவேந்திரன் ஊர் -சூரனுக்கு அஞ்சிய இந்திரன் அடைக்கலம் புக்க ஊர். 
தெய்வத்தரு - கற்பகமரம். சிலம்பனூர் - சிரபுரம். நாகநாத சுவாமியைச் சிலம்பன் என்றார். நாகம் - 
சிலம்பு- மலை. இவை ஒரு பொருளன. ஒள் பா உரு வளர் வெங்குரு- ஒண்பா -அறிவொளி அருளொளி     
உடைய பாடல்கள்; அப்பாடல்களின் உருவில் வளர்கின்ற வெங்குரு. ஓங்கு தராய் - அஞ்சியோட மேலும் 
மேலும் வளர்ந்தோங்குகின்ற பூந்தராய். வெருவ- அஞ்சியோட.

குறிப்புரை:     அயனூர் - பிரமபுரம். தெய்வத்தரு - கல்பக விருக்ஷாதி. சிலம்பனூர் - சிரபுரம். நாகநாத 
சுவாமியைச் சிலம்பன் என்றருளினார் போலும். நாகம் - மலை. ஒள்பா உருவளர் - அறிவொளியுடைய 
அருட்பாக்கள் வடிவில் வளர்கின்ற. வெருவ - அஞ்சியலற.

    Long long ago, the devas and asuras churned the ocean of milk where deadly poison 
came out of the ocean. All the devas and asuras were terrified and ran away to Lord Civan
and requested Him to save them from the deadly poison. Lord Civan then imbibed the poison 
when goddess Umaa Devi stopped the poison from going down the throat. His throat therefore 
retains the dark blue colour. This Lord Civan wished to manifest Himself in this city. 
This city is very famous where goddess Lakshmi also is manifest and this Kazhumalam carries 
twelve other names and is commonly known as Seerkaazhi city.

2258.     வாய்ந்தபுகழ்மறைவளருந்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்வாழூர்         
    ஏய்ந்தபுறவந்திகழுஞ்சண்பையெழிற்காழியிறைகொச்சையம்பொன்     
    வேய்ந்தமதிற்கழுமலம்விண்ணோர்பணியமிக்கயனூரமரர்கோனூர் 
    ஆய்ந்தகலையார்புகலிவெங்குருவதரன்நாளுமமருமூரே.         3

    வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் வாழ் ஊர், 
    ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி, இறை கொச்சை, அம் பொன் 
    வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய மிக்க(ய)யன்ஊர்,அமரர்கோன்ஊர், 
    ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குருஅது, - அரன் நாளும் அமரும் ஊரே.

    vAynta pukaz maRai vaLarum tONipuram, pUntarAy, cilampan vAz Ur, 
    Eynta puRavam, tikazum caNpai, ezil kAzi iRai koccai, am pon 
    vEynta matil kazumalam, viNNOr paNiya mikka(a)yan Ur, amararkOn Ur, 
    Aynta kalai Ar pukali, vegkuru atu--aran nALum amarum UrE.

பொருள்:     புகழ் வாய்ந்ததும் மறை வளர்வதுமாகிய தோணிபுரம். சிலம்பன் வாழூர் - சிரபுரம் 
நாகநாத சுவாமி கோயில். அயன் ஊர் - பிரமபுரம். அமரர்கோன் - இந்திரன். ஆய்ந்த கலையார் புகலி -
கலைகளை ஆராயும் அறிஞர்கள் வாழ்கின்ற புகலி. 

குறிப்புரை:     மறை-வேதம். சிலம்பன் வாழ் ஊர் - சிரபுரம். நாகநாத சுவாமி கோயில்.

    Our Lord Civan every day manifests Himself in this city. This city is very famous 
and the Vedas were elicited every day here. This city is called by twelve names such as 
Thonipuram etc., but it is commonly known as Seerkaazhi.

2259.     மாமலையாள்கணவன்மகிழ்வெங்குருமாப்புகலிதராய்தோணிபுரம்வான்         
    சேமமதில்புடைதிகழுங்கழுமலமேகொச்சைதேவேந்திரனூர்சீர்ப் 
    பூமனூர்பொலிவுடையபுறவம்விறற்சிலம்பனூர்காழிசண்பை 
    பாமருவுகலையெட்டெட்டுணர்ந்தவற்றின்பயன்நுகர்வோர்பரவுமூரே.        4

    மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப்புகலி, தராய், தோணிபுரம், வான் 
    சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன்ஊர்,சீர்ப் 
    பூமன்ஊர்,பொலிவு : உடைய புறவம், விறல் சிலம்பன்ஊர், காழி, சண்பை, 
    பா மருவு கலை எட்டு-எட்டு உணர்ந்த, அவற்றின் பயன் நுகர்வோர் பரவும்ஊரே

    mAmalaiyAL kaNavan makiz vegkuru, mAp pukali, tarAy, tONipuram, vAn 
    cEma matil puTai tikazum kazumalamE, koccai, tEvEntiran Ur, cIrp 
    pUmakan Ur, polivu uTaiya puRavam, viRal cilampan Ur, kAzi, caNpai- 
    pA maruvu kalai eTTu-eTTu uNarnta, avaRRin payan nukarvOr paravum UrE.        

பொருள்:     மாமலையாள்- இமயமலையின் புதல்வி. பார்வதி. அவளுடைய கணவன் 
விரும்பும் வெங்குரு. மாப்புகலி - பெரிய புகலி. வானத்தை முட்டும் காவல் மதில் சுற்றிலும் 
திகழும் கழுமலம். பூமகன் - தாமரை மலர்மேல் இருக்கும் பிரமன். பொலிவு - விளக்கம், 
விறல் - வலிமை, வெற்றி. பா- வேதம் கலை எட்டெட்டு - 64 கலைகள். பயன் நுகர்வோர் - 
அனுபவிக்கும் அறிஞர்கள். வேதக் கல்வியுடன் அறுபத்து நான்கு கலைகளையும் ஆய்ந்து 
நுகர்வோர் வாழும் சிறப்புடையது காழி. 

குறிப்புரை:     மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம் - காவல். பூமகனூர் - 
பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் - வலிமை. வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு 
கலைகள். நுகர்வோர் - அநுபவிக்கும் அறிஞர்கள்.

    In the ancient days, the Tamil language contained various literature mostly 
in political form. They deal with sixty-four arts and sciences such as Puraanam,
Vyakaranam, and Neethi Saastras etc. In those days, in the city of Seerkaazhi lived 
very great scholars who mastered all the sixty-four arts and sciences. They devotedly 
studied those arts and sciences and benefited by that knowledge. Such scholars adore 
our Lord in this city. Lord Civan who is the consort of Umaa, daughter of the mountain 
king wished to manifest Himself in Seerkaazhi, which carries twelve names as such 
Venguru etc.

2260.     தரைத்தேவர்பணிசண்பைதமிழ்க்காழிவயங்கொச்சைதயங்குபூமேல்             
    விரைச்சேருங்கழுமலமெய்யுணர்ந்தயனூர்விண்ணவர்தங்கோனூர்வென்றித்             
    திரைச்சேரும்புனற்புகலிவெங்குருச்செல்வம்பெருகுதோணிபுரஞ்சீர் 
    உரைச்சேர்பூந்தராய்சிலம்பனூர்புறவமுலகத்திலுயர்ந்தவூரே.        5

    தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம்கொச்சை, தயங்கு பூமேல் 
    விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன்ஊர், விண்ணவர்தம் கோன்ஊர், வென்றித் 
    திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு தோணிபுரம் சீர் 
    உரைச் சேர் பூந்தராய், சிலம்பன்ஊர், புறவம் - உலகத்தில் உயர்ந்த ஊரே.

    taraittEvar paNi caNpai, tamizk kAzi, vayam koccai, tayagku pUmEl 
    viraic cErum kazumalam, mey uNarnta(a)yan Ur, viNNavar tam kOn Ur, venRit 
    tiraic cErum punal pukali, vegkuru, celvam peruku tONipuram, cIr 
    urai cEr pUntarAy, cilampan Ur, puRavam--ulakattil uyarnta UrE.

பொருள்:     தரைத் தேவர்- பூசுரர். மறையோர். தமிழ்க்காழி- தமிழ் சிறக்கும் காழி நகர்.
 வயங்கொச்சை - கொச்சைவயம். மெய்யுணர்ந்தயனூர்- மெய் உணர்ந்த அயனூர்  . 'த'கர 
பெயரெச்ச விகுதி தொக்கது; பிரமனூர். விண்ணவர் தம் கோனூர்-  விண்ணவர் தம் கோன்,
 இந்திரன். அவன் சூரபன்மனுக்கு அஞ்சி சீகாழியில் மூங்கில் வடிவத்தில் இருந்தமையால் 
இவ்வூர் வேணுபுரமாயிற்று. உரை - புகழ். 

குறிப்புரை:     தரைத்தேவர்- பூசுரர். அந்தணர்- தமிழ்க்காழி என்றதால் ஸ்ரீகாளிபுரம் என்றதன்
 திரிபென்ற கூற்று ஆராயத்தக்கது. விரை - மணம். மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம் .
விண்ணவர்தம் கோன் ஊர் - வேணுபுரம். திரை - அலை. உரை - (புகழ்) மொழி.                       

    The greatest city in the world is Shanbai. This city is called Shanbai also, it is 
one of the twelve names, the chief name being Seerkaazhi. The devotees visit the temple here 
daily and serve our Lord, they are virtuous Brahmins and the devas of the earth.

2261.     புண்டரிகத்தார்வயல்சூழ்புறவமிகுசிரபுரம்பூங்காழிசண்பை 
    எண்டிசையோரிறைஞ்சியவெங்குருப்புகலிபூந்தராய்த்தோணிபுரஞ்சீர்         
    வண்டமரும்பொழில்மல்குகழுமலநற்கொச்சைவானவர்தங்கோனூர் 
    அண்டயனூரிவையென்பரருங்கூற்றையுதைத்துகந்தஅப்பனூரே.         6

    புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங் காழி, சண்பை, 
    எண்டிசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி,பூந்தராய்,தோணிபுரம், சீர் 
    வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,வானவர் தம்கோன்ஊர் 
    அண்டு அயன்ஊர், இவை என்பார் -அருங்கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே

    puNTarikattu Ar vayal cUz puRavam, miku cirapuram, pUg kAzi, caNpai, 
    eN ticaiyOr iRainjciya vegkuru, pukali, pUntarAy, tONipuram, cIr 
    vaNTu amarum pozil malku kazumalam, nal koccai, vAnavar tam kOn Ur,
    aNTu ayan Ur, ivai enpAr--arugkURRai utaittu ukanta appan UrE.

பொருள்:     புண்டரிகத்து வயல் சூழ் புறவம் - புண்டரிகம் - தாமரை; ஆர் - நிறைந்த தாமரை 
மலர்கள் நிறைந்த கழனி சூழ்ந்த புறவம் எட்டுத் திசையிலுள்ளோரும் வணங்கிய வெங்குரு 

குறிப்புரை:     புண்டரிகத்து ஆர்வயல் - தாமரை மலர்களால் நிறைந்த கழனி. இறைஞ்சிய - வணங்கிய. 
வானவர் கோனூர்- வேணுபுரம். அண்ட அயனூர் - பிரமதேவனூர், பிரமபுரம். காலசங்கார கர்த்தர் என்க. 

    All around the city of Thiru-p-piramapuram paddy fields were in plenty with lotus 
flowers therein. Our Lord Civan once upon a time kicked the demigod of death, Yama, very 
brave and mighty. Civan wished to be manifest in this glorious city, which has the name of 
Puravam which is one of the twelve names, the chief name being, of course, Seerkaazhi.

2262.     வண்மைவளர்வரத்தயனூர்வானவர்தங்கோனூர்வண்புகலியிஞ்சி         
    வெண்மதிசேர்வெங்குருமிக்கோரிறைஞ்சுசண்பைவியன்காழிகொச்சை         
    கண்மகிழுங்கழுமலங்கற்றோர்புகழுந்தோணிபுரம்பூந்தராய்சீர்ப் 
    பண்மலியுஞ்சிரபுரம்பார்புகழ்புறவம்பால்வண்ணன்பயிலுமூரே.         7

    வண்மை வளர் வரத்து அயன்ஊர், வானவர் தம் கோன் ஊர், வண் புகலி, இஞ்சி 
    வெண்மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை, வியன் காழி, கொச்சை,         
    கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், சீர்ப் 
    பண் மலியும் சிரபுரம், பார் புகழ் புறவம் - பால்வண்ணன் பயிலும் ஊரே.

    vaNmai vaLar varattu ayan Ur, vAnavar tam- kOn Ur, vaN pukali, injci 
    veN mati cEr vegkuru, mikkOr iRainjcu caNpai, viyan kAzi, koccai, 
    kaN makizum kazumalam, kaRROr pukazum tONipuram, pUntarAy, cIrp 
    paN maliyum cirapuram, pAr pukazum puRavam-pAlvaNNan payilum UrE.

பொருள்:     வண்மை - வள்ளன்மை. வரத்து - மேன்மை வண்புகலி. வளமுடைய புகலி. இஞ்சி -
மதில் இஞ்சி வெண்மதி சேர் வெங்குரு - வெண்மதி வந்து சேரும் உயர்ந்த மதில்களை உடைய வெங்குரு. 
மிக்கோர் -ஞானத்தில் மிக்கவர்கள். கண்மகிழும் - கண்ணுக்குப் பொலிவான. கற்றோர் புகழுந் 
தோணிபுரம் - சிவனை வழிபடக் கற்றோர். வேதாகமங்களைக் கற்றோர் எனலுமாம்.

குறிப்புரை:     வண்மை -கொடை. வரத்து - மேன்மையை உடைய. இஞ்சி - மதில். மிக்கோர்- 
ஞானம், தவம். தொண்டு, பூஜை முதலியவற்றால் மேம்பட்டவர். கற்றோர்-  சிவபிரானை வழிபடும் 
நெறியை உணர்ந்தோர். வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.  

    The city of Thiru-p-piramapuram has big palaces with walls tall enough to reach
the moon, which passes through the sky. Here great scholars who are well versed in books 
of wisdom praise the city. They are high philanthropists. Our Lord Civan has adorned His
body with white sacred ashes. He, therefore, exhibits pure whiteness all around. He 
manifests Himself in Thiru-p-piramapuram, which carries twelve names, the most important
being Seerkaazhi.

2263.     மோடிபுறங்காக்குமூர்புறவஞ்சீர்ச்சிலம்பனூர்காழிமூதூர் 
    நீடியலுஞ்சண்பைகழுமலங்கொச்சைவேணுபுரங்கமலநீடு 
    கூடியயனூர்வளர்வெங்குருப்புகலிதராய்தோணிபுரங்கூடப்போர் 
    தேடியுழலவுணர்பயில்திரிபுரங்கள்செற்றமலைச்சிலையனூரே.        8

    மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பன்ஊர், காழிமூதூர் 
     நீடுஇயலும், சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம், கமலம் நீடு 
    கூடிய(ய)யன்ஊர், வளர் வெங்குரு, புகலி, தராய், தோணிபுரம் - கூடப் போர் 
    தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச்சிலையன் ஊரே..

    mOTi puRagkAkkum Ur, puRavam, cIrc cilampan Ur, kAzimUtUr, 
    nITu iyalum caNpai, kazumalam, koccai, vENupuram, kamalam nITu 
    kUTiya(a)yan Ur, vaLar vegkuru, pukali, tarAy, tONipuram--kUTap pOr 
    tETi uzal avuNar payil tiripuragkaL ceRRa malaiccilaiyan UrE.

பொருள்:     மோடி புறங்காக்கும் - மோடி - கொற்றவை. காவல் தெய்வம். புறங்காக்கும். நகரைக் 
காவல் செய்யும் புறவம். சிலம்பன் ஊர் - சிரபுரம். கமலநீடு கூடியவன். தாமரை மலர் மீது தங்கியவன் 
ஊர் - பிரமபுரம். கூடப் போர்தேடி உழல் அவுணர் - போர் கூடத் தேடி அலைகின்ற அவுணர் - போருக்கு 
வருவோரைத் தேடி அலைகின்ற அசுரர்கள். செற்றமலைச் சிலையன் - செற்ற. அழித்த. மலைச்சிலை- 
மலை வில் மேருமலையாகிய வில். 

குறிப்புரை:     மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி புறங்காக்கும் ஊராகிய 
புறவம் என்க (தி.2 ப.210 பா.8). சீர்ச்சிலம்பன் ஊர் - சிரபுரம். கமல நீடு கூடியவன் ஊர் - பிரமபுரம் 
(தாமரையில் வாழ்பவன்). போர், புரங்கள், செற்றமலை சிலையன் - திரிபுரத்தசுரரை அழித்த
மேருவில்லியாகிய சிவபிரான். 

    We have already mentioned about the twelve names of Seerkaazhi. Our Thiru-gnana-Sambandar 
uses the different names of the city in different poems to start with. Similarly in this verse he
uses the name Puravam and adds some historical truth. Here he says the city Puravam is watched 
and safeguarded by a demigoddess called Durga. The asuras roamed all over the sky causing misery 
to devas. They waged war with their enemies causing intolerable misery to many. Our Lord Civan, 
therefore destroyed their three fortresses and completely eradicated their mightiness and killed
them all. This Civan wishes to be manifested in Thiru-p-piramapuram.

2264.     இரக்கமுடையிறையவனூர்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்றன்னூர் 
    நிரக்கவருபுனற்புறவநின்றதவத்தயனூர்சீர்த்தேவர்கோனூர் 
    வரக்கரவாப்புகலிவெங்குருமாசிலாச்சண்பைகாழிகொச்சை 
    அரக்கன்விறலழித்தருளிகழுமலமந்தணர்வேதமறாதவூரே.     9

    இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன்தன் ஊர், 
    நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன்ஊர், சீர்த் தேவர்கோன்ஊர், 
    வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி, கொச்சை, 
    அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் - அந்தணர் வேதம் அறாத ஊரே.

    irakkam(m) uTai iRaiyavan Ur tONipuram, pUntarAy, cilampantan Ur, 
    nirakka varupunal puRavam, ninRa tavattu ayan Ur, cIrt tEvarkOn Ur, 
    varak karavAp pukali, vegkuru, mAcu ilAc caNpai, kAzi, koccai, 
    arakkan viRal azittu aruLi kazumalam--antaNar vEtam aRAta UrE.

பொருள்:     இரக்கமுடைய இறைவன் ஊர் தோணிபுரம் - தோணிபுரம் கருணையே வடிவான 
சிவபெருமானின் ஊர். நிரக்க வரும் புனல் புறவம் -நீர் பெருக்குடன் விரைந்து பாயும் திருப்புறவம்.
தவத்து அயனூர் -தவத்தினையுடைய பிரமனின் ஊர். தேவர்கோன் ஊர்- சிரபுரம். வரக்கரவா புகலி -
புகலாக வந்தவர்களுக்குக் கரவாத திருப்புகலி. அரக்கன்- இராவணன். விறல் - வலிமை. அழித்தருளி - 
அழித்து அருளியவன். இகர ஈற்றுப் பெயர், சிவன், கழுமலம் அந்தணர் மறையோதல் அறாத வூரே.

 குறிப்புரை:     இரக்கம் உடை இறையவன்- கருணையே உருவமாகிய சிவபிரான். நிரக்க வருபுனல்
என்றது நீரின் பெருக்கத்தையும் விரைவையும் உணர்த்தும். தவத்து அயன்-  தவத்தையுடைய பிரமன். 
புகல் என்றெண்ணி வரக்கரவாத புகலி. மாசு - குற்றம். அரக்கன் - இராவணன். விறல் - வலி. அருளி- 
சிவன். 

    Our Lord Civan is the embodiment of grace to His devotees. He is manifest in Thonipuram,
this is one of the twelve names of Seerkaazhi. In this city scholarly Brahmins chant the Vedas 
without any break. In such a glorious city, our Lord who subdued the mighty Raavanan has 
manifested Himself. The city is well known for streams with profuse and fast flowing water.

2265.     மேலோதுங்கழுமலமெய்த்தவம்வளருங்கொச்சையிந்திரனூர்மெய்ம்மை         
    நூலோதுமயன்றனூர்நுண்ணறிவார்குருப்புகலிதராய்தூநீர்மேல் 
    சேலோடுதோணிபுரந்திகழ்புறவஞ்சிலம்பனூர்செருச்செய்தன்று 
    மாலோடுமயனறியான்வண்காழிசண்பைமண்ணோர்வாழ்த்துமூரே.        10

    மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை, இந்திரன்ஊர், மெய்ம்மை 
    நூல் ஓதும் அயன் தன்ஊர், நுண் அறிவார் குரு. புகலி, தராய், தூ நீர் மேல் 
    சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம் சிலம்பன்ஊர், செருச் செய்து அன்று 
    மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை - மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

    mEl Otum kazumalam, meyttavam vaLarum koccai, intiran Ur, meymmai 
    nUl Otum ayan tan Ur, nuN aRivAr kuru, pukali, tarAy, tU nIrmEl 
    cEl OTu tONipuram, tikaz puRavam, cilampan Ur, ceruc ceytu anRu
    mAlOTum ayan aRiyAn vaN kAzi, caNpai-maNNOr vAzttum UrE.

பொருள்:     மெய்த்தவம் உண்மைச் சரியை கிரியா யோகங்கள், வேதம். நுண்ணறிவு ஆர்குரு -
நுட்பமான அறிவுடையோர் வாழும் வெங்குரு. சேல் - சேல்மீன் இனம். செரு -போர்,  மண்ணோர் - 
மண்ணுலகத்தவர்.

குறிப்புரை:     மெய்த்தவம் - உண்மைத் தவம் (தபசு). மெய்ம்மை நூல் - சத்தியமான வேதங்கள், 
நுண் அறிவு ஆர் குரு - நுட்பமான அறிவு பொருந்திய குரு, வெங்குரு. சேல் - மீனினம். செரு - போர்.

    People in the entire world praise and felicitate this city of Seerkaazhi. Here 
scholars chant always rich wisdom. Our Lord Civan is manifest in this city of Kazhumalam,
which is one of the twelve names of Seerkaazhi. He is the Lord whose greatness was not 
known to Thirumaal and Brahma. This is the city where many lakes with variety of fish 
are found.

2266.     ஆக்கமர்சீரூர்சண்பைகாழியமர்கொச்சைகழுமலமன்பானூர் 
    ஓக்கமுடைத்தோணிபுரம்பூந்தராய்சிரபுரமொண்புறவநண்பார் 
    பூக்கமலத்தோன்மகிழூர்புரந்தரனூர்புகலிவெங்குருவுமென்பர் 
    சாக்கியரோடமண்கையர்தாமறியாவகைநின்றான்தங்குமூரே.        11

    ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை, கழுமலம், அன்பான் ஊர் 
    ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண் புறவம், நண்பு ஆர் 
    பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி, வெங்குருவும், என்பர் -
    சாக்கியரோடு அமண்கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே.

    Akku amar cIr Ur caNpai, kAzi, amar koccai, kazumalam, anpAn Ur 
    Okkam(m) uTait tONipuram, pUntarAy, cirapuram, oN puRavam, naNpu Ar 
    pUkkamalattOn makiz Ur, purantaran Ur, pukali, vegkuruvum, enpar- 
    cAkkiyarOTu amaNkaiyar tAm aRiyA vakai ninRAn tagkum UrE.

பொருள்:     ஆக்கு- ஆக்கம். ஆக்கமர் சீரூர்- ஆக்கம் மிக்க ஊர். அன்பான் ஊர் - அன்பான் 
சிவபெருமான், அவனுடைய ஊர் அன்பான் ஊர். ஓக்கம் - உயர்ச்சி. ஒண் - விளக்கம். புரந்தரன்-இந்திரன். 
கையர் - கீழ்மக்கள் ஒழுக்கமில்லாதவர்கள்.

குறிப்புரை:     ஆக்கு - ஆக்கம். 'ஆக்கம்மிக்க ஊர்' (தி.2 பா.210 பா.8). (மன்று மன்றம், இன்பு இன்பம், 
நீட்டு நீட்டம், பாட்டு பாட்டம் என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான் ஊர் - 
அன்புருவான் சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம். 'அன்பே சிவம்'. கமலத்தோன்- பிரமதேவன். 
புரந்தரன் - இந்திரன். ஓக்கம் - உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம். நீங்குவது நீக்கம், தேங்குவது தேக்கம், அடங்குவது 
அடக்கம், தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு. ஙகரவொற்றில்லை. இறக்கம் -இறங்கு. ஙகர 
வொற்றிருக்கின்றது. பகுதியில் அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.

    Our Lord Civan is an embodiment of affection and love. He is un-understandable to 
the Jains and the Buddhists. In this city all are affectionate to each other and praise 
our Lord. Our Lord Civan manifests Himself in the city of Shanbai which is full of greatness. 
This name is one of the twelve names of Seerkaazhi.

2267.     அக்கரஞ்சேர்தருமனூர்புகலிதராய்தோணிபுரமணிநீர்ப்பொய்கை 
    புக்கரஞ்சேர்புறவஞ்சீர்ச்சிலம்பனூர்புகழ்க்காழிசண்பைதொல்லூர் 
    மிக்கரஞ்சீர்க்கழுமலமேகொச்சைவயம்வேணுபுரமயனூர்மேலிச்                     
    சக்கரஞ்சீர்த்தமிழ்விரகன்றான்சொன்னதமிழ்தரிப்போர்தவஞ்செய்தாரே.     12

    அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம், அணி நீர்ப் பொய்கைப் 
    புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன்ஊர், புகழ்க் காழி, சண்பை, தொல் ஊர், 
    மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சைவயம், வேணுபுரம், அயன்ஊர், மேல் இச் 
    சக்கரம் சீர்த் தமிழ்விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தாரே.

    akkaram cEr taruman Ur, pukali, tarAy, tONipuram, aNi nIrp poykaip 
    pukkaram cEr puRavam, cIrc cilampan Ur, pukazk kAzi, caNpai, tol Ur 
    mikkar am cIrk kazumalamE, koccai vayam, vENupuram, ayanUr, mEl ic 
    cakkaram cIrt tamizvirakan tAn conna tamiz tarippOr tavam ceytArE.        

பொருள்:     அக்கரம் -அக்ஷரம்.க்ஷரம் -அழிவு.அக்ஷரம் - அழிவின்மை. தருமன் - இயமன், குரு. 
தருமனூர் - வெங்குரு. புக்கரம் -புஷ்கரம், தீர்த்தம். தொல்லூர்- பழமையான ஊர்.
மிக்கரன் சீர் - மிக்க அரன் சீர். அரனின் புகழை மிகவும் கொண்ட. இச்சக்கரம்- இந்தச் சக்கரபந்தம்.

குறிப்புரை:     அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு. அழியாத தருமனூர் என்றது
வெங்குருவினை. தருமன் - இயமதருமன் . . பூவை பாகன் - அன்பழுத்தும் அறமகற்கு இவ்வருள் பழுத்து....
பின்பழிச்சி ஒரு தருமன் தன் பதத்தின் இனிதிருக்கப் பெற்றான். (சீகாழித்தலபுராணம்) (தி.7. ப. 38 பா.9). 
புக்கரம் - தாமரை. தொல்லூர் - (புராதனபுரி) பழமையதாகிய ஊர், மிக்கரஞ்சீர்- மிக்கு அரன் சீர் 
என்றதாகக் கொண்டுரைக்கலாம். நன்கு புலப்பட்டிலது. இச்சக்கரம் எனச்சுட்டியதால் இப்பதிகம் 
சித்திரக் கவியுள் ஒன்றான சக்கர பந்தம் என்றறிந்து முன்னோர் தலைப்பிற் குறித்தனர்.

    This last poem, the twelfth one is peculiar to this section. All other sections 
carry only 11 verses. Thiru-gnana-Sambandar mentions all the twelve names of Seerkaazhi.
Hence, he has composed 12 poems in this section. This section is called Thiru-ch-chakkara-
maatru. Our Thiru-gnana-Sambandar is a very famous Tamil scholar very skilful too. 
He got immersed in the grace of our Lord Civan and in these verses he has mentioned 
all the twelve names of Seerkaazhi.Those devotees who can praise our Lord and sing 
melodiously these twelve verses will be considered the most scholarly people who perform 
all the religious penance.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            73.ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 73rd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 210                    பதிக எண்: 74

74.திருப்பிரமபுரம் - கோமூத்திரி                74. THIRU-P-PIRAMAPURAM

பண்: காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    இந்தத் திருப்பதிகம் திருக்கோமூத்திரி அந்தாதி என்னும் மிறைக்கவி அமைப்பில் உள்ளது. 
ஒரு செய்யுளின் முன்னிரண்டடி மேல்வரியாகவும் பின்னிரண்டடி கீழ்வரியாகவும் எழுதி அவ்விரண்டு 
வரியின் எழுத்துக்களையும் கோமூத்திர ரேகை போல் மாறிமாறிப் படிக்க அச்செய்யுளாகும்படி 
அமைத்துப் பாடுஞ் சித்திரக்கவி (தண்டி. 95). இந்த விதி இத்திருப்பதிகத்துக்குப் பொருந்துமாறில்லை. 
இத்திருப்பதிகமும் திருச்சக்கரமாற்றைப் போல, அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை அறியத்தக்கது.

            திருச்சிற்றம்பலம்

2268.     பூமகனூர்புத்தேளுக்கிறைவனூர்குறைவிலாப்புகலிபூமேல் 
    மாமகளூர்வெங்குருநற்றோணிபுரம்பூந்தராய்வாய்ந்தஇஞ்சிச் 
    சேமமிகுசிரபுரஞ்சீர்ப்புறவநிறைபுகழ்ச்சண்பைகாழிகொச்சை 
    காமனைமுன்காய்ந்தநுதற்கண்ணவனூர்கழுமலநாங்கருதுமூரே.        1

    பூமகன்ஊர், புத்தேளுக்கு இறைவன்ஊர், குறைவு இலாப் புகலி, பூமேல் 
    மாமகள்ஊர், வெங்குரு, நல்-தோணிபுரம், பூந்தராய், வாய்ந்த இஞ்சிச் 
    சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை, காழி, கொச்சை, 
    காமனை முன் காய்ந்த நுதல்கண்ணவன் ஊர் கழுமலம் - நாம் கருதும் ஊரே.

    pUmakan Ur, puttELukku iRaivan Ur, kuRaivu ilAp pukali, pUmEl 
    mAmakaL Ur, vegkuru, nal-tONipuram, pUntarAy, vAynta injcic 
    cEmam miku cirapuram, cIrp puRavam, niRai pukazc caNpai, kAzi, koccai,         
    kAmanai mun kAynta nutal kaNNavan Ur kazumalam-nAm karutum UrE.

பொருள்:     பூமகன்- பிரமன். பூமகனூர்- பிரமனூர். புத்தேளுக் கிறைவன்- இந்திரன்; புத்தேளுக் 
கிறைவனூர்-சிரபுரம். பூமேல் மாமகளூர்; பூமேல் மாமகள் - இலக்குமி. பூமேல் மாமகளூர் - திருமகள் 
பரவும் ஊராகிய திருவெங்குரு. அவள் வாழும் ஊர் எனலுமாம். இஞ்சி-மதில். இஞ்சிச் சேமமிகும் 
சிரபுரம் -மதிற்காவலுடைய சிரபுரம். காமன் - மன்மதன். இவ்வூர்கள் இறைவன் விரும்பும் ஊர்களாகும்.

குறிப்புரை:     பூமேல் மாமகளூர் வெங்குரு- திருமகள் பரவும் ஊராகிய வெங்குரு. அவள் வாழும் ஊர் 
எனலுமாம். செல்வம் பற்றியது. இஞ்சி - மதில். சேமம்-  காவல். காமனை -மன்மதனை. நுதல்-நெற்றி.

    In this Chapter also there are twelve verses. Every poem reports most of the twelve 
names of Seerkaazhi. However, this chapter is called by a special name "திருக்கோமுத்திரி அந்தாதி" 
and it is mentioned in the heading. The last two lines have beautiful rhymes. Goddess Lakshmi 
is manifest in this city of Venguru. By her grace the city is very rich. The palaces in this 
city have very tall walls, this city is guarded by Kaazhi. Also in this city our Lord Civan 
kicked the god of death Yama and he died.  Piramapuram is one of the twelve names of Kazhumalam.

2269.     கருத்துடையமறையவர்சேர்கழுமலமெய்த்தோணிபுரங்கனகமாட 
    உருத்திகழ்வெங்குருப்புகலியோங்குதராயுலகாருங்கொச்சைகாழி 
    திருத்திகழுஞ்சிரபுரந்தேவேந்திரனூர்செங்கமலத்தயனூர்தெய்வத் 
    தருத்திகழும்பொழிற்புறவஞ்சண்பைசடைமுடியண்ணல்தங்குமூரே.        2

    கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த் தோணிபுரம், கனக மாட 
    உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும் கொச்சை, காழி, 
    திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன்ஊர், செங்கமலத்து அயன்ஊர், தெய்வத் 
    தருத் திகழும் பொழில் புறவம், சண்பை - சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே.

    karuttu uTaiya maRaiyavar cEr kazumalam, meyt tONipuram, kanaka mATa 
    urut tikaz vegkuru, pukali, Ogku tarAy, ulaku Arum koccai, kAzi, 
    tirut tikazum cirapuram, tEvEntiran Ur, cegkamalattu ayan Ur, teyvat 
    tarut tikazum pozil puRavam, caNpai-caTaimuTi aNNal tagkum UrE.

பொருள்:     கருத்துடை மறையவர்- சிவஞானமுடைய மறையவர். கனகமாடம் - பொன் மாடம். 
உருத்திகழ் வெங்குரு - அழகாகத் திகழும் வெங்குரு. ஓங்குதராய் - மேலும் மேலும் உயரும் பூந்தராய். 
உலகாரும் கொச்சை-உலகமக்கள் சேரும் கொச்சைவயம். திருத்திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் - 
செல்வமிக்க சிரபுரம் தேவேந்திரனூர் (புகலி). செங்கமலத்தயனூர்- பிரமனூர். தருத்திகழும் பொழிற் 
புறவம் - தரு - மரம். மரங்கள் நிறைந்த சோலைகளால் ' அழகுடன் திகழும் புறவம். இவை இறைவன் 
தங்கும் ஊர்களாகும்.

குறிப்புரை:     கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம். கற்பகம் முதலியவை.

    Our Lord Civan has a lot of entangled locks of hair. He is manifest in 
Kazhumalam which is one of the twelve names of Seerkaazhi. In this city, Vedic  
scholars live in large numbers and do their rituals regularly. Goddess Lakshmi 
also stays in this city. In such a glorious city our Lord Civan is manifest. 
In the forest area, all around the city, Karpagam tree and many other trees 
grow in large numbers. Karpagam tree grows usually in the celestial world. 
It is supposed to yield whatever one wishes to have.

2270.     ஊர்மதியைக்கதுவவுயர்மதிற்சண்பையொளிமருவுகாழிகொச்சை         
    கார்மலியும்பொழில்புடைசூழ்கழுமலமெய்த்தோணிபுரங்கற்றோரேத்துஞ் 
    சீர்மருவுபூந்தராய்சிரபுரமெய்ப்புறவமயனூர்பூங்கற்பத் 
    தார்மருவுமிந்திரனூர்புகலிவெங்குருக்கங்கைதரித்தோனூரே.         3

    ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு காழி, கொச்சை, 
    கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர் ஏத்தும் 
    சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன்ஊர், பூங் கற்பத் 
    தார் மருவும் இந்திரன்ஊர், புகலி, வெங்குரு - கங்கை தரித்தோன் ஊரே.

    Ur matiyaik katuva uyar matil caNpai, oLi maruvu kAzi, koccai, 
    kAr maliyum pozil puTai cUz kazumalam, meyt tONipuram, kaRROr Ettum 
    cIr maruvu pUntarAy, cirapuram, meyp puRavam, ayan Ur, pUg kaRpat 
    tAr maruvum intiran Ur, pukali, vegkuru--kagkai tarittOn UrE.

பொருள்:     ஊர் மதியைக் கதுவ உயர் மதிற் சண்பை - ஊர் மதி - விண்ணில் ஊர்ந்து செல்லும் 
சந்திரன். கதுவ -பொருந்த,பற்ற. விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைப் பொருந்துமளவு உயர்ந்த
 மதில்களை உடைய சண்பை. ஒளி மருவும் காழி -பிரகாசமான காழிநகர். கார் மலியும் பொழில் 
புடைசூழ் கழுமலம்- கார்மேகங்கள் தங்கும் உயர்ச்சியும் குளிர்ச்சியும் கொண்ட சோலைகள் 
சூழ்ந்த கழுமலம். மெய்த்தோணிபுரம் - என்றும் உள்ள தோணிபுரம், பிரளய காலத்திலும் நின்று 
நிலவுதலைக் குறித்தது. கற்றவர்கள் போற்றும் பூந்தராய். என்றுமுள்ள புறவம். அயனூர் - பிரமபுரம். 
கற்பகத்தார் - தார் - மாலை, கற்பகப்பூ மாலை கற்பகத்தார் மருவும் இந்திரன் ஊர் புகலி - கற்பக 
மாலையை அணிந்த இந்திரன் அசுரனுக்கு அஞ்சிப் புகலாக அடைந்த ஊராதலின் புகலி, வெங்குரு 
இவை கங்கையைச் சடையில் தரித்தோன் ஊர்களே.

குறிப்புரை:     ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற. கற்பத்தார் - கற்பகப் 
பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.

    Our Lord Civan supports the river Ganges in His entangled locks of hair. In the 
city of Shanbai, which is one of the twelve names of Seerkaazhi, the moon moves in the 
sky above the high walls of the palaces, which look as though they touch the moon. In
such a glorious city our Lord Civan is manifest.

2271.     தரித்தமறையாளர்மிகுவெங்குருசீர்த்தோணிபுரந்தரியாரிஞ்சி         
    எரித்தவன்சேர்கழுமலமேகொச்சைபூந்தராய்புகலியிமையோர்கோனூர்         
    தெரித்தபுகழ்ச்சிரபுரஞ்சீர்திகழ்காழிசண்பைசெழுமறைகளெல்லாம் 
    விரித்தபுகழ்ப்புறவம்விரைக்கமலத்தோனூருலகில்விளங்குமூரே.        4

    தரித்த மறையாளர் மிகு வெங்குரு,சீர்த் தோணிபுரம், தரியார் இஞ்சி 
    எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி, இமையோர்கோன்ஊர், 
    தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை, செழுமறைகள் எல்லாம் 
    விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் - உலகில் விளங்கும் ஊரே.

    taritta maRaiyALar miku vegkuru, cIrt tONipuram, tariyAr injci 
    erittavan cEr kazumalamE, koccai, pUntarAy, pukali, imaiyOr kOn Ur, 
    teritta pukazc cirapuram, cIr tikaz kAzi, caNpai, cezumaRaikaL ellAm 
    viritta pukazp puRavam, viraikkamalattOn Ur-ulakil viLagkum UrE.

பொருள்:     (சிவனை சிரசிலும் சிந்தையிலும்) தரித்த மறையவர்கள் மிகுதியாக வாழும் 
வெங்குரு, புகழுடைத் தோணிபுரம், தன்னைத் தரியாத பகைவர்களாகிய முப்புராதிகளின் 
மும்மதில்களை எரித்தவன் சேரும் கழுமலம். கொச்சைவயம். பூந்தராய். புகலியாகிய 
தேவர்களின் தலைவன் ஊர். ஆராய்ந்த புகழுடைய சிரபுரம். பெருமையுடன் விளங்கும் காழி 
சண்பை. பொருள் வளமுள்ள  மறைகளையெல்லாம் விரித்த பெருமையை உடைய புறவம். 
மணமுடைய தாமரை மலரில் இருப்பவனூர் - பிரமபுரம். இவை உலகில் நின்று விளங்கும் ஊரே.

குறிப்புரை:     தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில். திரிபுரம். இமையோர்கோன் - இந்திரன். 
விரை- மணம்.

    The city Venguru is the most cherished city of the world. In this city, the 
Vedic scholars chant the Vedas everyday. Our Lord Civan once upon a time destroyed the 
three fortresses of the asuraas while manifesting Himself here. Indiran, the chief of
devas visits the city and offers worship to our Lord. In such a glorious city of 
Venguru which carries the twelve names of Seerkaazhi our Lord wishes to manifest 
Himself.

2272.     விளங்கயனூர்பூந்தராய்மிகுசண்பைவேணுபுரமேகமேய்க்கும் 
    இளங்கமுகம்பொழிற்றோணிபுரங்காழியெழிற்புகலிபுறவமேரார்         
    வளங்கவரும்வயற்கொச்சைவெங்குருமாச்சிரபுரம்வன்னஞ்சமுண்டு             
    களங்கமலிகளத்தவன்சீர்க்கழுமலங்காமன்னுடலங்காய்ந்தோனூரே.         5

    விளங்கு அயன்ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம், மேகம் ஏய்க்கும் 
    இளங் கமுகம், பொழில் - தோணிபுரம், காழி, எழில் புகலி, புறவம், ஏர் ஆர் 
    வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச் சிரபுரம், வன்நஞ்சம் உண்டு 
    களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் - காமன்(ன்) உடலம் காய்ந்தோன் ஊரே.

    viLagku ayan Ur, pUntarAy, miku caNpai, vENupuram, mEkam Eykkum 
    iLag kamukam pozil-tONipuram, kAzi, ezil pukali, puRavam, Er Ar 
    vaLam kavarum vayal koccai, vegkuru, mAccirapuram, van nanjcam uNTu 
    kaLagkam mali kaLattavan cIrk kazumalam--kAman(n) uTalam kAyntOn UrE.

பொருள்:     விளங்கு அயன் ஊர் - நிலவுகின்ற பிரமபுரம். பூந்தராய். ஏற்றம் மிகு சண்பை. வேணுபுரம். 
மேகமண்டலத்தைப் பொருந்த உயர்ந்த கமுகஞ் சோலைகளை உடைய தோணிபுரம் -காழி. அழகிய புகலி. 
புறவம். அழகு நிறைந்த வளமையுடைய வயல்கள் நிறைந்த கொச்சைவயம். வெங்குரு. பெரிய சிரபுரம். 
வலிய நஞ்சத்தை உண்டு கறை மலிந்த கண்டத்தனாகிய திருநீலகண்டனின் பெருமைமிகு கழுமலம். 
இவை மன்மதன் உடலை எரித்தவனின் ஊரே.

குறிப்புரை:      மேகம் ஏய்க்கும் - மேக மண்டலத்தை ஒன்ற ஓங்கும். கமுகம் - பாக்குமரம். 
எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலிய விடம். களங்கம் - குற்றம். 
களத்தவன் - (திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் - காய விழித்தவன், கோபித்தவன்.

    Our Lord Civan, manifest in the city of Thiru-p-piramapuram, burnt the body of 
Kaaman, the god of love. His throat is dark blue in colour. He is therefore called 
Thiru neela-kandan. In this city, a large number of areca trees are grown in the garden. 
The trees are all very tall and look tall enough to touch the moving moon in the sky. 
This city is full of rich trees all over the area. This Thiru-p-piramapuram is one of 
the names of Seerkaazhi city. In such a glorious city, our Lord Civan is manifest.

2273.     காய்ந்துவருகாலனையன்றுதைத்தவனூர்கழுமலமாத்தோணிபுரஞ்சீர் 
    ஏய்ந்தவெங்குருப்புகலியிந்திரனூரிருங்கமலத்தயனூரின்பம் 
    வாய்ந்தபுறவந்திகழுஞ்சிரபுரம்பூந்தராய்கொச்சைகாழிசண்பை         
    சேந்தனைமுன்பயந்துலகில்தேவர்கள்தம்பகைகெடுத்தோன்திகழுமூரே.        6

    காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம், மாத் தோணிபுரம், சீர் 
    ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன்ஊர், இருங் கமலத்து அயன்ஊர், இன்பம் 
    வாய்ந்த புறவம், திகழும், சிரபுரம், பூந்தராய், கொச்சை, காழி, சண்பை, 
    சேந்தனை முன் பயந்து உலகில் - தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே.

    kAyntu varu kAlanai anRu utaittavan Ur kazumalam, mAt tONipuram, cIr 
    Eynta vegkuru, pukali, intiran Ur, irug kamalattu ayan Ur, inpam 
    vAynta puRavam, tikazum cirapuram, pUntarAy, koccai, kAzi, caNpai- 
    cEntanai mun payantu ulakil-tEvarkaL tam pakai keTuttOn tikazum UrE.

பொருள்:     சினந்து வருகின்ற எமனை அன்று (மார்க்கண்டேயருக்காக) உதைத்தவன் 
ஊர் கழுமலம். பெரிய தோணிபுரம். புகலி பொருந்திய வெங்குரு. புகலி இந்திரனூர். இருங்கமலத்து 
அயனூர் - பிரமபுரம். இன்பம் பொருந்திய திருப்புறவம். சிரபுரம். பூந்தராய் கொச்சை,காழி, 
சண்பை முருகனை முன் பெற்று உலகில் தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களை அழித்தவன் 
திகழ்கின்ற ஊரே.

 குறிப்புரை:     காய்ந்து - கோபித்து. காலனை -இயமனை. சேந்தனை- முருகப்பிரானை. பயந்து-
 பெற்று. பகை- சூரன்படை.(பதி. 209 பா. 1 பார்க்க.) 

    Our Lord Civan created Lord Muruga, Lord Murugan completely destroyed the 
mightiness of Soorapanman and admitted him into his good grace as javelin and
peacock. Kaalan appeared before Lord Civan in an angry mood and our Lord Civan
kicked him and destroyed him. Our Lord is manifest in this city of Kazhumalam and 
this is one of the twelve names of this great city of Seerkaazhi.
 
2274.     திகழ்மாடமலிசண்பைபூந்தராய்பிரமனூர்காழிதேசார் 
    மிகுதோணிபுரந்     திகழும்வேணுபுரம்வயங்கொச்சைபுறவம்விண்ணோர் 
    புகழ் புகலிகழுமலஞ்சீர்ச்சிரபுரம்வெங்குருவெம்போர்மகிடற்செற்று 
    நிகழ்நீலிநின்மலன்றன்னடியிணைகள்பணிந்துலகில்நின்றவூரே.        7

    திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன்ஊர், காழி,தேசு ஆர் 
    மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம்கொச்சை,புறவம், விண்ணோர் 
    புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு - வெம்போர் மகிடற் செற்று, 
    நிகழ் நீலி,நின்மலன்தன் அடிஇணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே.

    tikaz mATam mali caNpai, pUntarAy, piraman Ur, kAzi, tEcu Ar 
    miku tONipuram,tikazum vENupuram, vayam koccai, puRavam, viNNOr 
    pukaz pukali, kazumalam, cIrc cirapuram, vegkuru-vempOr makiTaR ceRRu, 
    nikaz nIli, ninmalan tan aTi iNaikaL paNintu ulakil ninRa UrE.

பொருள்:     விளங்கும் மாட மாளிகைகள் மிக்க சண்பை. பூந்தராய். பிரமனூர், காழி. ஒளிமிகு 
தோணிபுரம். திகழும் வேணுபுரம். கொச்சைவயம். புறவம். தேவர்கள் புகழும் புகலி. கழுமலம். 
புகழுடைய சிரபுரம். வெங்குரு. கொடிய போரினைச் செய்யும் மகிஷாசுரனைக் கொன்றழித்து 
புகழுடன் விளங்குகின்ற நீலி (கொற்றவை) மலமற்றவனாகிய சிவனின் அடியிணைகளைப் 
பணிந்து உலகில் நின்ற ஊரே.

குறிப்புரை:     மலி- மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று - மகிடாசுரனைக் கொன்று. 
மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள் (துர்க்கை)கறுப்பாயி.

    The demi-goddess called Durga Devi, also called Neeli, fought a severe battle 
against a very fierce asura called Mahidasuran and killed him finally. Her anger did not 
subside. Also she wanted to wipe out her life's blame for killing an asura. She
She therefore went to the city of Shanbai and prostrated before our Lord Civan 
and got His grace and wiped out her sins of killing the asura. Shanbai is one of 
the twelve names of the city of Seerkaazhi. This goddess Neeli is none else than 
Durga Devi. She is also called Karuppayee. The asura's name is Mahidasuran. 
Mahida means buffalo, especially a female. The asura always used to ride on a male 
buffalo. He is therefore called Mahidasuran.

2275.     நின்றமதில்சூழ்தருவெங்குருத்தோணிபுரநிகழும்வேணுமன்றில் 
    ஒன்றுகழுமலங்கொச்சையுயர்காழிசண்பைவளர்புறவமோடி 
    சென்றுபுறங்காக்குமூர்சிரபுரம்பூந்தராய்புகலிதேவர்கோனூர் 
    வென்றிமலிபிரமபுரம்பூதங்கள்தாங்காக்கமிக்கவூரே.        8

    நின்ற மதில் சூழ் தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும் வேணு, மன்றில் 
    ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர் புறவம், மோடி 
    சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி, தேவர்கோன்ஊர், 
    வென்றி மலி பிரமபுரம் - பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே

    ninRa matil cUztaru vegkuru, tONipuram, nikazum vENu, manRil 
    onRu kazumalam, koccai, uyar kAzi, caNpai, vaLar puRavam, mOTi 
    cenRu puRagkAkkum Ur, cirapuram, pUntarAy, pukali, tEvar kOn Ur, 
    venRi mali piramapuram--pUtagkaL tAm kAkka mikka UrE.

பொருள்:     உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற வெங்குரு, தோணிபுரம், நின்று நிலவும் 
தோணிபுரம், கழுமலம், கொச்சைவயம், காழி, சண்பை, வளர்கின்ற திருப்புறவம், மோடி 
(கொற்றவை)  காக்கும் ஊர் சிரபுரம், பூந்தராய், புகலி, இந்திரனூர் (வேணுபுரம்) வெற்றி மிக்க 
பிரமபுரம்,  பூதங்கள் தாங்கும் ஆக்கம் மிக்க ஊர். 

குறிப்புரை:     மன்றில் - பொதியில். புறம் என்னும் பொருளது. மன்றில் ஒன்று எனல் 
பொருந்து மேற்கொள்க.

    The city Venguru is supported by Siva Bootas on all the eight sides. Here the 
fortress of the city is tall and very strong. Venguru is one of the twelve names of 
the famous city of Seerkaazhi.

2276.     மிக்ககமலத்தயனூர்விளங்குபுறவஞ்சண்பைகாழிகொச்சை 
    தொக்கபொழிற்கழுமலந்தூத்தோணிபுரம்பூந்தராய்சிலம்பன்சேரூர் 
    மைக்கொள்பொழில்வேணுபுரமதிற்புகலிவெங்குருவல்லரக்கன்திண்டோள் 
    ஒக்க இருபதுமுடிகளொருபதுமீடழித்துகந்தஎம்மானூரே.         9

    மிக்க கமலத்து அயன்ஊர், விளங்கு புறவம், சண்பை, காழி, கொச்சை, 
    தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன்சேர் ஊர், 
    மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு, வல் அரக்கன் திண்தோள் 
    ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே.

    mikka kamalattu ayan Ur, viLagku puRavam, caNpai, kAzi, koccai, 
    tokka pozil kazumalam, tUt tONipuram, pUntarAy, cilampan cEr Ur, 
    maik koL pozil vENupuram, matil pukali, vegkuru--val arakkan tiNtOL 
    okka irupatum muTikaL orupatum ITu azittu ukanta emmAn UrE.

பொருள்:     தாமரை மலரின் மேலிருப்பவனாகிய அயனுடைய ஊர், பிரமபுரம். விளங்குகின்ற 
திருப்புறவம். சண்பை. காழி. கொச்சைவயம். சோலைகள் நெருங்கிய கழுமலம். தூய தோணிபுரம். 
திருப்பூந்தராய். சிலம்பன் சேரூர். சிரபுரம். கரிய மேகம்போல் நிழல்தங்கும் பொழில்கள் உடைய 
வேணுபுரம். மதில் உடைய புகலி. வெங்குரு. அரக்கனின் திண்ணிய தோள்கள் இருபதினையும் 
முடிகள் ஒரு பத்தினையும் ஒருசேர வலி அழித்த எம்மானுடைய ஊர். 

குறிப்புரை:     தூ - தூய்மை உடைய. எல்லாவுயிர்க்கும் பற்றுக் கோடாகிய. மை- மேகம். 
கருமையுமாம்.   பொழில்-சோலை.  அரக்கன் - இராவணன். ஈடு - வலிமை. பெருமையுமாம். 
எம்மான் எம்பெருமான். 
    
    Raavanan, the king of Sri Lanka physically was very powerful, virile and the 
mightiest with no equal to him in the world. He had twenty shoulders and ten heads
with rich crowns. Our Lord Civan destroyed his widespread reputation. This Lord Civan 
wishes to manifest Himself in the city of Brahma called Thiru-p-piramapuram. Brahma used 
to be seated in the most beautiful lotus flower. This city Thiru-p piramapuram is one 
of the twelve names of Seerkaazhi.

2277.     எம்மான்சேர்வெங்குருச்சீர்ச்சிலம்பனூர்கழுமலநற்புகலியென்றும் 
    பொய்ம்மாண்பிலோர்புறவங்கொச்சைபுரந்தரனூர்நற்றோணிபுரம்போர்க்
     கைம்மாவையுரிசெய்தோன்காழியயனூர்தராய்சண்பைகாரின் 
    மெய்ம்மால்பூமகனுணராவகைதழலாய்விளங்கியஎம்மிறைவனூரே.     10

    எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன்ஊர், கழுமலம், நல் புகலி, என்றும் 
    பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன்ஊர், நல்-தோணிபுரம், போர்க் 
    கைம்மாவை உரி செய்தோன் காழி, அயன்ஊர்,தராய், சண்பை - காரின் 
    மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல்ஆய் விளங்கிய எம் இறைவன் ஊரே.

    emmAn cEr vegkuru, cIrc cilampan Ur, kazumalam, nal pukali, enRum 
    poymmANpu ilOr puRavam, koccai, purantaran Ur, nal-tONipuram, pOrk 
    kaimmAvai uriceytOn kAzi, ayan Ur, tarAy, caNpai--kArin
    meym mAl, pU makan2, uNarA vakai tazal Ay viLagkiya em iRaivan UrE.

பொருள்:     எம் தலைவன் சேர்ந்திருக்கும் வெங்குரு. பெருமை உடைய சிலம்பனூர் 
கழுமலம். நல்ல திருப்புகலி. என்றும் மெய்ப்புகழுடையோர் சேரும் திருப்புறவம், கொச்சைவயம், 
வேணுபுரம், நல்ல தோணிபுரம், போர் செய்யும் துதிக்கையுடைய களிற்றை உரித்தவனின் காழி,
பிரமனூர், சண்பை, கார்மேகம் போலும் மேனியனாகிய திருமால், பிரமன் அறியவியலா வகை 
தழற்பிழம்பாய் நின்ற எம் இறைவன் ஊரே. 

குறிப்புரை:     பொய்ம்மாண்பிலோர்-மெய்ப்புகழுடையோர்.  புரந்தரன் -இந்திரன். கைம்மா-  
துதிக்கையை உடைய யானை. காரின் மெய்மால்-மேகம்போலும். திருமேனியை உடைய திருமால். 
பூமகன் - பிரமன். தழல் - தீ.

    Thirumaal resembles black clouds in his entire frame. The four faced Brahma is 
seated in the lotus flower. These two demigods were unable to see the holy head and feet 
of our Lord Civan, but He stood before these two as a tall and big effulgence. This our 
Lord Civan is manifest in Venguru city which is one of the twelve names of Seerkaazhi.

2278.     இறைவனமர்சண்பையெழிற்புறவமயனூரிமையோர்க்கதிபன்சேரூர் 
    குறைவில்புகழ்ப்புகலிவெங்குருத்தோணிபுரங்குணமார்பூந்தராய்நீர்ச்
    சிறைமலிநற்சிரபுரஞ்சீர்க்காழிவளர்கொச்சைகழுமலந்தேசின்றிப் 
    பறிதலையோடமண்கையர்சாக்கியர்கள்பரிசறியா அம்மானூரே.        11

    இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன்ஊர், இமையோர்க்கு அதிபன் சேர் ஊர் 
    குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம் ஆர் பூந்தராய், நீர்ச் 
    சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை, கழுமலம் - தேசு இன்றிப் 
    பறி தலையோடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா அம்மான் ஊரே. 

    iRaivan amar caNpai, ezil puRavam, ayan Ur, imaiyOrkku atipan cEr Ur, 
    kuRaivu il pukazp pukali, vegkuru, tONipuram, kuNam Ar pUntarAy, nIrc 
    ciRai mali nal cirapuram, cIrk kAzi, vaLar koccai, kazumalam--tEcu inRip 
    paRi talaiyOTu amaNkaiyar, cAkkiyarkaL, paricu aRiyA ammAn UrE.

பொருள்:     இறைவனாகிய சிவபிரான் விரும்பி அமர்கின்ற சண்பை. எழிலுடைய புறவம். 
தேவர்களுக்கு அதிபனாகிய இந்திரன் சேரும் ஊர். குறைவில்லாத புகழுடைய திருப்புகலி. வெங்குரு. 
தோணிபுரம். நற்பண்புகள் உடைய பூந்தராய். நீர் அணைகள் மலிந்த நல்ல சிரபுரம். அழகிய காழி. 
கொச்சைவயம். கழுமலம். ஒளியின்றி மயிர் பறித்த தலையோடு சமணராகிய கீழ்மக்கள் 
சாக்கியர்களால் அறியமுடியாத இயல்புடைய அம்மானுடைய ஊரே.

குறிப்புரை:     இறைவன்- சிவபிரான். அமர்- விரும்பியெழுந்தருளிய. எழில்- அழகு. 
அதிபன்- இந்திரன். சிறை - அணை. தேசு - ஒளி. கையர் - கீழோர். பரிசு - சிவமாம்பெற்றி.         
சிவன் இயல்பு. 

    The Jains remove their hair from their head and appear dull, these people and the 
Buddhists could not understand our Lord Civan. Our Lord Civan with a longing has manifested 
Himself in this city of Shanbai, which is one of the twelve names of the city Seerkaazhi.

2279.     அம்மான்சேர்கழுமலமாச்சிரபுரம்வெங்குருக்கொச்சைபுறவமஞ்சீர் 
    மெய்ம்மானத்தொண்புகலிமிகுகாழிதோணிபுரந்தேவர்கோனூர் 
    அம்மான்மன்னுயர்சண்பைதராயயனூர்வழிமுடக்குமாவின்பாச்சல் 
    தம்மானொன்றியஞானசம்பந்தன்தமிழ்கற்போர்தக்கோர்தாமே.         12

    அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு, கொச்சை, புறவம்,அம் சீர் 
    மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம், தேவர்கோன்ஊர், 
    அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன்ஊர், வழி முடக்கும் ஆவின்பாச்சல் 
    தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர், தக்கோர் தாமே.

    ammAn cEr kazumalam, mAc cirapuram, vegkuru, koccai, puRavam, am cIr 
    meym mAnattu oN pukali, miku kAzi, tONipuram, tEvar kOn Ur 
    am mAl man uyar caNpai, tarAy, ayan Ur, vazi muTakkum AvinpAccal 
    tammAn onRiya njAnacampantan tamiz kaRpOr, takkOr tAmE.

பொருள்:     இறைவன் சேர் கழுமலம்; பெருமையுடைய சிரபுரம். வெங்குரு. கொச்சைவயம். 
திருப்புறவம். அழகிய மெய்ம்மையான புகழ் ஒளியுடைய புகலி. காழி. தோணிபுரம். இந்திரனூர். 
உயர் சண்பை. பூந்தராய். பிரமனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சலின் இயல்பில் தம்பிரானை ஒன்றிய,     
ஞானசம்பந்தன் பாடிய தமிழைக் கற்போர் பெருமை உடையவராவர்.

குறிப்புரை:     மா - பெருமை. இலக்குமியுமாம். மானத்து - பெருமையையுடைய. ஒள் - ஒளி. 
அம்மால் - அழகிய திருமால் (கிருட்டிண மூர்த்தி) சிவபிரானுமாம். வழிமுடக்கும் ஆவின் பாச்சல் -         
கோமுத்திரி என்னுஞ் சித்திரபந்தத்தினியல்பு கூறப்பட்டது. தம்மான்- தம்பிரான். 'தன்னடைந்தார் 
தம்பிரான் ஆவான்' (தி.2 ப.176 பா. 1). தம்மானை ஒன்றிய என்று இரண்டனுருபு விரித்து. 
சிவபிரானோடு அத்துவிதமுற்று என்று பொருள் கொள்க. தமிழ் சைவமும் தமிழும் என்ற 
தொடர்க்கண் உள்ள  தமிழ்மறை.

    Our Lord Civan is also known as Ammaan. He is manifest in the city called 
Kazhumalam, which is one of the twelve names of Seerkaazhi. In this chapter, all the 
twelve verses are made up of a special name called Komuththiri. All the twelve names 
of the city are the alternate names in all the twelve verses. Our saint Thiru-gnana-
Sambandar, merged with our Lord Civan of this place, chanted these twelve verses in 
chaste Tamil language. Those devotees who can memorise and sing these twelve verses 
before our Lord Civan will become great scholars.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            74ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 74th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 211                பதிக எண் 75. 

75. சீகாழி                    75. SEERKAAZHI

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram


திருத்தல வரலாறு

    137ஆவது பதிகத்தைப் பார்க்க.

பதிக வரலாறு

    137ஆவது பதிகத்தைப் பார்க்க.

                திருச்சிற்றம்பலம்

2280.     விண்ணியங்குமதிக்கண்ணியான்விரியுஞ்சடைப் 
    பெண்ணயங்கொள்திருமேனியான்பெருமானனற் 
    கண்ணயங்கொள்திருநெற்றியான்கலிக்காழியுள் 
    மண்ணயங்கொள்மறையாளரேத்துமலர்ப்பாதனே.        1

    விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப் 
    பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல் 
    கண் நயம் கொள் திருநெற்றியான் - கலிக் காழியுள் 
    மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

    viN iyagkum matikkaNNiyAn, viriyum caTaip 
    peN nayam koL tirumEniyAn, perumAn, anal 
    kaN nayam koL tiruneRRiyAn kalik kAziyuL,
    maN nayam koL maRaiyALar Ettu malarppAtanE.

பொருள்:     ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பிறைமதித் தலைக்கண்ணியை அணிந்தவன்.. 
பெண்ணைப்  பாகத்தில் பொருத்தமாகக் கொண்ட திருமேனியன்; பெருமகன்; அனல் பொருந்திய 
கண்ணை நெற்றியில் உடையவன். மகிழ்ச்சி நிறைந்த காழியில், உலகத்தவரின் நன்மையைக் 
கருதுகின்ற  தாமரை மலர் போன்ற திருப்பாதங்கள் உடையவனாகிய சிவபெருமானே. 

குறிப்புரை:     விண் இயங்கும் மதிக்கண்ணியான்- ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திங்களாகிய 
தலைமாலையை அணிந்த சிவபிரான். பெண் நயம் கொள் திருமேனியான் - அர்த்தநாரீசுவர வடிவினன்.
அனல் கண் நயம் கொள் திருநெற்றியான்- நெருப்புக் கண்ணைக் கொண்ட அழகிய நெற்றியை 
உடையவன். மண் நயம் கொள் - மண்ணோர் நலமாக்கொண்ட.

    The city of Seerkaazhi is full of loud noise and pomposity. In this city, Vedic 
scholars for the sake of virtue and for the benefit of the world worship the holy and 
flowery feet of our Lord in the temple everyday. This Lord Civan retains the crescent 
moon of the sky on His head as an ornament. His hair locks are widely spread. He has 
embedded His consort Umaa Devi on the left side of His body. He is therefore known as 
Arthanaareeswarar. He is the Supreme Being with no parallel. He has a third eye on His 
forehead which is fiery.

2281.     வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
     பலிவிரும்பியதொர்கையினான்பரமேட்டியான் 
    கலியைவென்றமறையாளர்தங்கலிக்காழியுள் 
    நலியவந்தவினைதீர்த்துகந்தஎந்நம்பனே.        2

    வலியகாலனுயிர்வீட்டினான்மடவாளொடும் 
    பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான் - 
    கலியை வென்ற மறையாளர்தம் கலிக் காழியுள் 
    நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.

    valiya kAlan uyir vITTinAn, maTavALoTum 
    pali virumpiyatu or kaiyinAn, paramETTiyAn
    kaliyai venRa maRaiyALar tam kalik kAziyuL,
    naliya vanta vinai tIrttu ukanta em nampanE.

பொருள்:     ஆற்றல்  மிகுந்த  எமனுடைய கையை உயிரை வாங்கினான்;  உமாதேவியாரை 
உடன்கொண்டு பிச்சையேற்ற கையை  உடையவன். யாவர்க்கும் மேலான இடத்திலிருப்பவன். 
உயிர்களின் துன்பங்களை விரட்டும் மறையாளர்கள் வாழும் மகிழ்ச்சி நிறைந்த காழியுள் 
உயிர்களை வருத்துவதற்கு வந்த வினைகளை ஒழித்து உயர்ந்தவன்; எம் விருப்பாயுள்ள 
சிவபெருமானே.

குறிப்புரை:     மடவாள்- உமாதேவியார். பரமேட்டியான்-  தனக்கு மேலான தொன்றில்லாத        
ஸ்தாநத்தையுடைய முழுமுதற் பொருள். ஆன்விகுதி தமிழ். கலியை - வறுமை முதலிய         
துன்பங்களை. உகந்த - உயர்ந்த. எம் நம்பன் - எம் விருப்பாயுள்ளவன். 

    In the city of Seerkaazhi religious scholarly Brahmins live in large numbers. They
conduct the ritual oblations in the sacrificial pit with an aim to wipeout poverty and 
sufferings of people. Our Lord Civan eliminates the bad karma of the devotees and is pleased 
to do it. Once He kicked and destroyed Kaalan, the god of death. He has embedded His consort 
Uma Devi on His chest. He accepts the alms in His hands. He is the Supreme Being, nonpareil.

2282.     சுற்றலாநற்புலித்தோலசைத்தயன்வெண்டலைத் 
    துற்றலாயதொருகொள்கையான்சுடுநீற்றினான் 
    கற்றல் கேட்டலுடையார்கள்வாழ்கலிக்காழியுள் 
    மற்றயங்குதிரள்தோளெம்மைந்தனவனல்லனே.        3

    சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன் வெண்தலைத் 
    துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடுநீற்றினான் - 
    கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள், 
    மல்-தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!

    cuRRal Am nal pulittOl acaittu, ayan veNtalait 
    tuRRal Ayatu oru koLkaiyAn, cuTu nIRRinAn- 
    kaRRal kETTal uTaiyArkaL vAz kalik kAziyuL,
    mal-tayagku tiraLtOL em maintan avan allanE!

பொருள்:     அழகிய புலித்தோலை இடுப்பைச் சுற்றி உடுத்து, பிரமனின் கபாலத்தில் 
பிச்சை ஏற்று உண்ணுதலாகிய கொள்கையை உடையவன். சுட்ட சாம்பலாகிய திருநீற்றுப் 
பூச்சினான்; நூல்களைக் கற்ற ஞானமும் செவியால் கேட்ட  ஞானமும் வாய்ந்த பெரியோர்கள் 
மகிழ்ச்சியுடன் வாழும் காழியுள், வலிமையும் திரட்சியும் கொண்ட தோள்களை உடைய 
எம் வீரன்; உயிர்கள்பால் கருணை கொண்ட சிவபெருமானே.  

குறிப்புரை:     சுற்றல் ஆம் புலித்தோல் - சுற்றுதல் - அரையிற் சுற்றி உடுத்தல். அசைத்து - கட்டி. 
துற்றல் -உண்ணல். சுடுநீறு (தி.2 ப.214 பா.2) மல்- வலிமை. தயங்கு - விளங்குகின்ற. மைந்தன் - 
வலியன். வீரன்.

    In the city of Seerkaazhi great scholars well-versed in useful subjects are 
many. Also the scholars constituting a learned assembly listening to a new literary work 
are many and efficient in this city of Seerkaazhi. Our Lord Civan who is the mightiest with
well developed shoulders, fit for wrestling resides here. He is a virtuous Supreme 
Being. He wears the hide of a tiger on His waist. He asks for alms, holding Brahma's 
skull. He has all goodness and propriety.

2283.     பல்லயங்குதலையேந்தினான்படுகானிடை 
    மல்லயங்குதிரள்தோள்களாரநடமாடியுங் 
    கல்லயங்குதிரைசூழநீள்கலிக்காழியுள் 
    தொல்லயங்குபுகழ்பேணநின்றசுடர்வண்ணனே.        4

    பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை 
    மல் அயங்கு திரள்தோள்கள் ஆர நடம் ஆடியும் 
    கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள், 
    தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்வண்ணனே.

    pal ayagku talai EntinAn, paTukAn iTai 
    mal ayagku tiraL tOLkaL Ara naTam ATiyum- 
    kal ayagku tirai cUza nIL kalik kAziyuL, 
    tol ayagku pukaz pENa ninRa cuTar vaNNanE.

பொருள்:     பற்கள் நிலைகுலைந்த மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவன்; பிணங்கள் 
நிறைந்த காட்டினிடையில் வலிமை திரண்ட தோள்கள் அசையக் கூத்தாடுபவனும், சகரரால் கல்லித் 
தோண்டப் பட்ட கடல் சூழ் கலிக்காழியுள், தொன்று தொட்டு எங்கும் பரவிய புகழை அடியவர்கள் 
விரும்பிப் போற்ற நின்ற ஒளி சுடரும் நிறத்தினனாகிய சிவபெருமானே.

 குறிப்புரை:     அயங்கு - அசங்கிய. நிலைகுலைந்த (தி.2 ப.140 பா.3). மல்.. ..தோள்- 
வலிமையால் அசைந்த தோள். 'மற்றயங்கு திரடோள்' என்றதை மேற்பாட்டில் காண்க. 
தோள்கள் ஆர நடமாடுதல். 'கல் அயங்குதிரை சூழ' - கற்களில் அசங்கிய அலை. 
'கல் வித்தகத்தால் திரைசூழ் கடற்காழி' (தி.2 ப.208 ப.11). 'தொல் புகழ்', 'அயங்குபுகழ்' -
(எங்கும்)பரவிய கீர்த்தி. பேண- அடியவர் விரும்பிப் புகல. 'பொருள்சேர் புகழ் புரிந்தார்', 
சுடர் வண்ணன் – ‘அந்தி வண்ணன்’ ‘அழல் வண்ணன்' என்பன அவன் திருநாமங்கள். 

    On the seashore in the city of Seerkaazhi, the waves are very huge which 
forcibly dash against the shore and toss the stones on the banks. Our Lord Civan 
is the Supreme Effulgence. This bright light has spread all over the area for ages 
over long years.His fame is widespread because of the effulgence spread everywhere. 
This Lord Civan holds the skull with teeth for begging alms. After people die, 
their physical body is taken to the burning ghat. Our Lord Civan dances on this 
burning ghat moving His very strong and mighty shoulders, which can do wrestling 
very easily and successfully.

2284.     தூநயங்கொள்திருமேனியிற்பொடிப்பூசிப்போய் 
    நாநயங்கொள்மறையோதிமாதொருபாகமாக் 
    கானயங்கொள்புனல்வாசமார்கலிக்காழியுள் 
    தேனயங்கொள்முடிஆனைந்தாடியசெல்வனே..    5

    தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய், 
    நா நயம் கொள் மறைஓதி மாது ஒருபாகமாக் 
    கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள், 
    தேன் நயம் கொள் முடி ஆன்ஐந்துஆடிய செல்வனே.

    tU nayam koL tirumEniyil poTip pUcip pOy, 
    nA nayam koL maRai Oti, mAtu orupAkamA, 
    kAn nayam koL punal vAcam Ar kalik kAziyuL,
    tEn nayam koL muTi An aintu ATiya celvanE.

பொருள்:     தூய்மையான திருமேனிமேல் திருநீற்றுப் பொடி பூசி, நாவின் நற்பயனைக் 
கொண்ட வேதத்தினை ஓதி, உமையைத் தன் உடலில் ஒருபாகமாகக் கொண்டு, வாய்க்கால் 
வழியோடும் நீர் மணம் நிறைந்த கலிக்காழியுள் தேன்கொண்டு ஆட்டப்படும் முடியுடையான், 
ஆனைந்து ஆடும் செல்வன் சிவபெருமானே. 

குறிப்புரை:     தூ - பரிசுத்தம். நயம் - நன்மை. நாநயம் கொள்மறை - நாவினது நற்பயனைக் 
கொண்ட வேதம். நாவாலுள்ளதாய நயம்-   நாநலம். நாவாலுளதாய நலம் (குறள் 641 உரை). 
பூசிப் போய்க் கொள்மறையோதி என்றியைக்க. ஓதி- பெயர். தேன் கொள்முடி - தேனாட்டப்படும் 
திருமுடி.  அம்முடியில் ஆனைந்து ஆடிய செல்வன். ஆனைந்து - பால், தயிர், நெய்,பிற சேரா.

    The Seerkaazhi city is surrounded by large forests from which, the wind carries 
the sweet smell of all flowers. The forest area also has many ponds, which are filled 
with this forest fragrance. Our Lord loves the ablution of the five products of the 
cow and also the ablution with honey. He places upon His body the holy ashes. He 
used to chant the songs of the Vedas in musical tone, which increases the efficacy 
of the tongue.

2285.     சுழியிலங்கும்புனற்கங்கையாள்சடையாகவே 
    மொழியிலங்கும்மடமங்கைபாகமுகந்தவன் 
    கழியிலங்குங்கடல்சூழுந்தண்கலிக்காழியுள் 
    பழியிலங்குந்துயரொன்றிலாப்பரமேட்டியே.        6

    சுழி இலங்கும் புனல்கங்கையாள் சடை ஆகவே, 
    மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன் - 
    கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள், 
    பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே. 

    cuzi ilagkum punal kagkaiyAL caTai AkavE, 
    mozi ilagkum maTamagkai pAkam ukantavan- 
    kazi ilagkum kaTal cUzum taN kalik kAziyuL,         
    pazi ilagkum tuyar onRu ilAp paramETTiyE.

பொருள்:     நீர்ச்சுழி விளங்கும் ஆறாகிய கங்கையான் சடையனாகவும், புகழ் விளங்கும் 
உமையாளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகவும் உகந்தவன், (யாரெனில்) கழி விளங்கும் 
கடல் சூழும் கலிக்காழியுள் நிந்தையாகிய பழியால் வரும் துயரம் ஒன்றும் இல்லாத 
பரமேட்டியாகிய சிவபெருமானே.

குறிப்புரை:     சுழி - நீர்ச்சுழி. 'கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுத் திருச்சுழியல்' 
(தி.7 பா.834). மொழி இலங்கும் மடமங்கை. பாகம் உகந்தவன்- 'மாதியலும் பாதியன்' 
கங்கையைச் சடையிலும் உமை நங்கையை வாமபாகத்திலும் உடையவன். பழி இலங்கும் 
துயர் - நிந்தையால் தோன்றும் துயரம். ஒன்று -சிறிதும் என்னும் பொருட்டு.

    The city of Seerkaazhi is surrounded by salt pans which are adjacent to the 
seashore. The city is always cool with the sea breeze. Our Lord Civan is the Supreme 
Lord, with none equal to Him. Also there are no people to criticise Him and cause Him 
suffering. He supports the river Ganges in His hair locks, which is curved and curled 
with eddies. In addition He has embedded His consort Uma Devi, who talks with musical 
resonance, on one part of His body.

2286.     முடியிலங்குமுயர்சிந்தையான்முனிவர்தொழ 
    அடியிலங்குங்கழலார்க்கவேயனலேந்தியுங் 
    கடியிலங்கும்பொழில்சூழுந்தண்கலிக்காழியுள் 
    கொடியிலங்கும்மிடையாளொடுங்குடிகொண்டதே.        7

    முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,
    அடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும், 
    கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள், 
    கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடிகொண்டதே!

    muTi ilagkum(m) uyar cintaiyAl munivar toza, 
    aTi ilagkum kazal ArkkavE, anal Entiyum,            
    kaTi ilagkum pozil cUzum taN kalik kAziyuL, 
    koti ilagkum(m) iTaiyALoTum kuTi koNTatE!

பொருள்:     முனிவர்கள் தங்கள் தியானத்தில் துவாதசாந்தப் பெருவெளியில் வைத்துத் 
தொழ விளங்கும் திருவடிகளில் கழல்கள் ஆர்ப்பரிக்க, அனலேந்தி (ஆடும் இறைவன்), மணம் கமழும் 
பொழில்சூழும் குளிர்ந்த கலிக்காழியுள் கொடிபோன்ற இடையை உடைய உமையுடன் குடிகொண்டதோ?

குறிப்புரை:     முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ அடி இலங்கும் கழல் ஆர்க்க -
 துவாதசாந்தத் தலத்தில் விளங்கும் உயர்ந்த தியானத்தால் மனன சீலர்கள் வழிபடத் திருவடியில்
பிரகாசிக்கும் கழல்கள் ஒலிக்க. கொண்டது முடி இலங்கும் என்று இயைத்துப் பொருள் கூறலும் ஆம்.
கொடி இலங்கும் இடையாள்- மின்னல் கொடி போலத் திகழும் மெல்லிடையுடைய உமாதேவியார். 
தொழ ஆர்க்க ஏந்தியும் காழியுட் குடிகொண்டதோ என்று அறிவினாவாக்குக.

    In the city of Seerkaazhi, men of noble conduct and character live in large numbers. 
They do yoga, while doing yoga they focus their thoughts at the mystic centre which is believed 
to be at the crown. While doing such practice they worship the holy feet of our Lord Civan of 
this place. Civan wears on His legs perfectly shaped warrior's anklet. They make noise while 
the wearer dances. These noblemen can hear the noise of the warrior's anklets on the legs of 
Lord Civan. While our Lord Civan dances, He holds in His hands the supernal effulgence. In the 
city of Seerkaazhi the forests with the flower trees give out a fresh, pure and fascinating 
smell. Our Lord's consort Paarvathi Devi's waist is thin like creepers. He is manifest with 
her in this city.

2287.     வல்லரக்கன்வரைபேர்க்கவந்தவன்தோள்முடி 
    கல்லரக்கிவ்விறல்வாட்டினான்கலிக்காழியுள் 
    நல்லொருக்கியதொர்சிந்தையார்மலர் தூவவே 
    தொல்லிருக்கும்மறையேத்துகந்துடன்வாழுமே.        8

    வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள்முடி 
    கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியுள்
     நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே, 
    தொல்இருக்கும் மறை ஏத்து உகந்து உடன் வாழுமே.

    val arakkan, varai pErkka vantavan, tOLmuTi 
    kal arakka(v) viRal vATTinAn kalik kAziyuL, 
    nal orukkiyatu or cintaiyAr malar tUvavE, 
    tol irukkumaRai Ettu ukantu uTan vAzumE.

பொருள்:     வலிய அரக்கன் இராவணன், கயிலை மலையைப் பெயர்க்க வந்தவனின் கல்போலும் 
தோள்களையும் முடியையும் வருத்தி, அவனுடைய வலிமையை வாட்டிய சிவபெருமான், கலிக்காழியுள் 
ஒருமையுடன் (அத்துவிதமாக) நல்ல சிந்தையுடையோர் மலர் தூவி வழிபட பழைய இருக்கு வேதமாகிய 
மறை துதி செய்ய, உமையுடன் விரும்பி உறைகிறான்.

குறிப்புரை:     நல்சிந்தை, ஒருக்கியதோர் சிந்தை - ஒற்றுமையாக்கியதொரு மனம். சிவனோடொற்றுமை. 
அத்துவிதம். மலர்தூவ- பூக்களைத் தூய் வழிபட. தொல் - தொன்மை. இருக்கும் மறை - விரித்தல் விகாரமாகக் 
கொண்டு இருக்கு வேதம் எனல் சிறந்தது. இருக்கும் எனில் அழியாது நிலைபெறும் என்க. மறையேத்து - 
வேதஸ்துதியை. உடன் - அம்பிகையுடன்.

    Raavanan, the mighty king of Sri Lanka came near mount Kailash where our Lord was 
seated along with His consort Uma Devi. He tried his best to slightly move the mountain 
but failed in his attempt. Then our Lord pressed the top of the same mountain slightly 
with His toe. Raavanan's shoulder and head got crushed and his valour was subdued. 
The scholars in the city of Seerkaazhi have single mindedness in their spiritual thoughts, 
reach the temple and strew flowers at our Lord's holy feet and pray. Also they chant the 
very old Rig Veda verses before our Lord, and worship Him.Here our Lord takes delight is 
manifesting Himself happily in this city along with His consort Umaa Devi.

2288.     மருவுநான்மறையோனுமாமணிவண்ணனும் 
    இருவர்கூடியிசைந்தேத்தவேயெரியான்றனூர் 
    வெருவநின்றதிரையோதம்வார்வியன்முத்தவை 
    கருவையார்வயற்சங்குசேர்கலிக்காழியே.        9

    மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும் 
    இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான்தன் ஊர் - 
    வெருவ நின்ற திரைஓதம் வார வியல் முத்து அவை 
    கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.

    maruvu nAlmaRaiyOnum mA maNivaNNanum 
    iruvar kUTi icaintu EttavE, eriyAn tan Ur- 
    veruva ninRa tirai Otam vAra viyal muttu avai 
    karuvai Ar vayal cagku cEr kalik kAziyE.

பொருள்:     பொருந்திய நான்மறையவனாகிய பிரமனும் நீலமணி வண்ணனாகிய திருமாலும் 
ஆகிய இருவரும் கூடி ஒற்றுமைப்பட்டு வழிபடவே, தீப்பிழம்பாக நின்றவனது ஊர், அச்சம் தோன்ற  
உயர்ந்த கடலலைகள் கொண்டு வந்த அகன்று பரவிய முத்துக்கள், கரிய  வைக்கோல் கொண்ட 
வயல்கள், சங்குகள் ஆகியவை சேர்ந்த கலிக்காழியே.

குறிப்புரை:     எரியான்தன் ஊர்- தீப்பிழம்பாக நின்றவனதூர். வியல் முத்தவை - அகன்று பரவிய 
முத்துக்கள். கருவை- கரிய வைக்கோல். கருவேல மரமுமாம். முத்தவையும் சங்கும் சேர் காழி என்க.

    Brahma who chants the well developed four Vedas and Thirumal with azure coloured body -
both worshipped our Lord who stood before them as a tall supernal effulgence in this city. 
Here the fierce sea waves dash and inundate the seawater flinging pearls and conches on 
the shore which finally reach the paddy fields where black hay is stored. Such is the 
wealth of the city Seerkaazhi.

2289.     நன்றியொன்றுமுணராதவன்சமண்சாக்கியர் 
    அன்றியங்கவர்சொன்னசொல்லவைகொள்கிலான் 
    கன்றுமேதியிளங்கானல்வாழ்கலிக்காழியுள் 
    வென்றிசேர்வியன்கோயில்கொண்டவிடையாளனே.        10

    நன்றி ஒன்றும் உணராத, வன்சமண், சாக்கியர், 
    அன்றி அங்கு அவர் சொன்ன சொல்அவை கொள்கிலான் - 
    கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள், 
    வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.

    nanRi onRum uNarAta vancamaN, cAkkiyar, 
    anRi agku avar conna col avai koLkilAn- 
    kanRu mEti iLag kAnal  vAz kalik kAziyuL, 
    venRi cEr viyankOyil koNTa viTaiyALanE.

பொருள்:     நன்மையானதொன்றும் அறிகிலராகிய வலிய சமணர்களும் சாக்கியர்களும் 
பகைத்து அவர்கள் கூறிய புறமொழிகளைப் பொருட்டாகக் கொள்ளாதவன். அவன் இளங்கன்றுடன் 
எருமைகள் வாழும் நெய்தலங் கானல்களையுடைய கலிக்காழியுள் வெற்றியுடைய பெரிய கோயிலைக் 
கொண்ட எருது வாகனனே (சிவபெருமானே). 

குறிப்புரை:     நன்றி - நன்மை. ஒன்றும் - சிறிதும். அன்றி - பகைத்து. கானல் - கடற்கரைச் சோலை. 
வென்றி- வெற்றி. வியன்கோயில் - பெரிய கோயில். விடை ஆளன் - எருதை (ஊர்தியாக) ஆள்பவன்.

    Our Lord Civan is manifest in the famous big temple in Seerkaazhi city. He has 
the white bull for His conveyance. On the small gravel soil the buffaloes and their 
young ones live happily in this area. Here live the Jains and Buddhists who without 
understanding the virtuous knowledge of our Lord speak among themselves controversial 
ideas very often. Our Lord never listens to these words of the Jains and Buddhists.

2290.     கண்ணுமூன்றுமுடையாதிவாழ்கலிக்காழியுள் 
    அண்ணலந்தண்ணருள்பேணிஞானசம்பந்தன்சொல் 
    வண்ணமூன்றுதமிழில்தெரிந்திசைபாடுவார் 
    விண்ணுமண்ணும்விரிகின்றதொல்புகழாளரே.        11

    கண்ணுமூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியுள் 
    அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல், 
    வண்ணம் மூன்றும் தமிழில்-தெரிந்து இசை பாடுவார்
    விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

    kaNNu mUnRum uTai Ati vAz kalik kaziyuL 
    aNNal am taN aruL pENi njAnacampantan col, 
    vaNNam mUnRum tamizil-terintu icai pATuvAr
    viNNum maNNum virikinRa tolpukazALarE.

பொருள்:     மூன்று கண்களை உடைய முதல்வன் வாழும் கலிக்காழியுள் தலைவனான           
சிவபெருமானின் குளிர்ந்த அருளைப் போற்றி ஞானசம்பந்தன் தமிழிற் சொன்ன சொல்லை
(பதிகத்தை) வண்ணம் மூன்றினையும் தெரிந்து இசையாகப் பாடுவார் விண்ணுலகிலும்
மண்ணுலகிலும் புகழ் உடையோராவர்.

குறிப்புரை:     கண்ணு மூன்றும் - முக்கண்ணும்.  உடை - உடைய. ஆதி-  முதல்வன். உம்மை 
இனைத்தென அறிந்த சினைக்கு வினைப்படுதொகுதியின் வேண்டுவது (தொல். சொல். 33). 
உடை- குறிப்பு. வினை. வண்ணம் மூன்றும் - மெலிவு. சமன், வலிவு என்பவை. இசைபாடுவார். 
இம்மூன்றும் தெரியாது பாடுவரேல் அவ்விசை, கேட்பவரை எழுப்பும் விசையுடையதாகும். 

    Our Lord Civan has three eyes. He is the Supreme Being. He is manifest in Seerkaazhi. 
Our saint Thiru-gnana-Sambandar had all praise for our Lord's virtuous deeds and sang these 
ten verses. Those devotees capable of singing these verses of eulogy for the graceful Lord, 
in proper musical tone, will be praised all over the earth and also in heaven.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            75ஆம் பதிகம் முற்றிற்று
            End of 75th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 212                பதிக எண்: 76

76. திருஅகத்தியான்பள்ளி                76. THIRU-AGATH-THIAAN-PALLI

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    வேதாரணியத்திற்குத் தெற்கே 2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இது சோழ நாட்டுக் காவிரித் 
தென்கரைத் தலங்களுள் 126ஆவது தலம். வேதாரணியத்திலிருந்து கோடியக்கரை செல்லும் பேருந்தில் 
சென்றால் இத்தலத்தை அடையலாம். திருக்கயிலையில் வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது 
திருமணக் கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின் 
அகத்தியான் பள்ளி என்னும் பெயர் பெற்றது என்பர்.

    இறைவர் திருப்பெயர் அகத்தீசுவரர், இறைவி திருப்பெயர் பாகம்பிரியாள்நாயகி. சுவாமி சந்நிதி 
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அகத்தியர் கோயில் 
மூலத்தானத்திற்கு மேற்கில் உள்ளது. பழைய வேலை செங்கல்லால் புதிய வேலை கருங்கல்லால் இயன்றது. 
அம்மன் உருவம் சிறியது. கோயில் முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

    1. அகத்திய தீர்த்தம்- இது அகத்தீசுவரர் திருக்கோயிலுக்கு அண்மையில் மேல்புறத்திலுள்ளது. 
2. அக்னிதீர்த்தம் - இது அகத்தீசுவரர் சந்நிதிக்கு கிழக்கே சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ள சமுத்திர 
தீர்த்தமாகும். 3. அக்னிபுட்கரிணி - இது அகத்தீசுவரர் சந்நிதியில்  உள்ள தீர்த்தம். 4. எமதருமதீர்த்தம் - இது 
அக்னிபுட்கரிணிக்கு வடக்கே உள்ளது. வன்னி தலவிருட்சம்.

    அகத்தியர் பூசித்தது. சிவபெருமானின் திருமணக் கோலத்தை, அண்மையில் உள்ள திருமறைக்
காட்டில் காட்டக் கண்டு வணங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் 
இயற்றும் பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் தமக்குப் புதல்வராகப் பெறுதற்குத் தவம் 
இயற்றி அவ்வாறே பெற்றது. எமதருமராசன் சீவன் முத்தி பெற்றது. இத்தலத்தை வழிபட்டாலும் 
நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய 
பதிகம் ஒன்று பெற்ற பெருமைக்குரியது இத்தலம்.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருமறைக்காட்டினின்றும் சிவிகைமீதேறி, சிவனடியை 
முடியிற்கொண்டு வணங்கி அடியவர் கூட்டம் கடலொலிபோல அரகர முழக்கஞ் செய்யவும், மங்கல தூரியம் 
தழைக்கவும் மறை முழங்கவும், சங்கபடகம் முதலிய வாத்தியங்கள் எங்கும் இயம்பவும்,  மலர் மாரி 
பொழியவும், மங்கல வாழ்த்திசைக்கவும், பூரண கும்பம் முதலியவை பொலியவும், அடியார் எதிர்கொள்ளவும்
சென்று, பல தலங்களை வணங்கித் தெண்டிரை சூழ்கடற் கானற்றிரு வகத்தியான்பள்ளியில் 
அண்டர்பிரான் கழல் வணங்கிப் பாடிய அருந்தமிழ் மாமறை இத்திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2291.     வாடியவெண்டலைமாலைசூடிமயங்கிருள் 
    நீடுயர்கொள்ளிவிளக்குமாகநிவந்தெரி 
    ஆடியஎம்பெருமானகத்தியான்பள்ளியைப் 
    பாடியசிந்தையினார்கட்கில்லையாம்பாவமே.        1

    வாடிய வெண்தலைமாலை சூடி, மயங்கு இருள், 
    நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி 
    ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியைப் 
    பாடிய சிந்தையினார்கட்கு இல்லைஆம், பாவமே.

    vATiya veNtalai mAlai cUTi, mayagku iruL,
    nITu uyar koLLi viLakkum Aka, nivantu eri 
    ATiya emperumAn akattiyAn paLLiyaip 
    pATiya cintaiyinArkaTku illai Am, pAvamE.

பொருள்:     ஊன் வற்றிய வெண்மையான மண்டையோடுகளால் ஆன மாலையைச் சூடி, செறிந்த 
இருளில் நீண்டு உயர்ந்த மயானக் கொள்ளிகள் விளக்குகளாக ஒளி செய்ய, ஆகாயம் முட்ட உயர்ந்து 
ஆடிய எம்முடைய பெருமானின் அகத்தியான்பள்ளியைப் பாடிய சிந்தையை உடையவர்களுக்குப் 
பாவம் இல்லையாகும்.

குறிப்புரை:     வாடிய -வற்றிய. தலைமாலை, 'தலைமாலை தலைக்கணிந்து', மயங்கு இருள் - 
செறிந்த இருள். கொள்ளி - தீக்கொள்ளி. கொள்ளி விளக்கொளி செய்ய என்றபடி. நிவந்த - உயர்ந்த 
வளர்ந்த, அகரம் தொகுத்தல் விகாரம். எரி ஆடிய - தீயில் ஆடிய. 'அனலாடி' 'தீயாடி' என்பவை 
சிவநாமங்கள். பாவம் இல்லையாம் என்க.

    Our Lord Civan's avocation is to dance on the burning ghat where in deep darkness 
the fire from the burning bodies, spreading flames, grows rapidly as tall flames and gives 
light all around. There our Lord dances wearing the garland of skulls, which retain dry 
flesh portions inside. This Lord is manifest in Thiru-agath-thiaan-palli temple. Those 
devotees who can praise and sing songs about the fame of our Lord with concentrated 
mind will have no sins in their life.

2292.     துன்னங்கொண்டவுடையான்துதைந்தவெண்ணீற்றினான் 
    மன்னுங்கொன்றைமதமத்தஞ்சூடினான்மாநகர் 
    அன்னந்தங்கும்பொழில்சூழகத்தியான்பள்ளியை 
    உன்னஞ்செய்தமனத்தார்கள்தம்வினையோடுமே.        2

    துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான், 
    மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர் - 
    அன்னம் தங்கும் பொழில் சூழ்-அகத்தியான்பள்ளியை 
    உன்னம் செய்த மனத்தார்கள்தம் வினை ஓடுமே.

    tunnam koNTa uTaiyAn, tutainta veN nIRRinAn, 
    mannum konRai matamattam cUTinAn, mA nakar-
    annam tagkum pozil cUz-akattiyAn paLLiyai 
    unnam ceyta manattArkaL tam vinai OTumE.

பொருள்:     தைக்கப்பட்ட உடையை உடையவன்; முழு நீறு பூசியவன்; கொன்றை, ஊமத்தை 
மலர்களைச் சூடியவன்; பெரிய நகரில் அன்னப்பறவைகள் தங்கும் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்
பள்ளியை நினைந்த மனத்தவர்களின் வினையெல்லாம் நில்லாமல் ஓடி நீங்கும்.

குறிப்புரை:     துன்னம்- தைத்தல். துதைந்த- நெருங்கிய. முற்றப் பூசிய. 'முழுநீறு பூசிய மூர்த்தி 
போற்றி' (தி. 6 ப. 5 பா. 3). 'முழுநீறு பூசிய முனிவர்'. உன்னம் - தியானம். மனத்தார்கள். தம் வினை - 
மனத்தையுடையவர் வினைகள்.

    Our Lord Civan wears well-stitched dress. He has spread on His body the pure 
white holy ashes. He has crowned his head with bunches of Indian laburnum (cassia fistula) 
and datura flowers. He is manifest in the temple in Thiru-agath-thiaan-palli. In this city, 
swans live in plenty in the forest areas. Those devotees who can bring to their
mind the name Thiru-agath-thiaan-palli and chant the Lord's mystic name will get rid 
of all their sins. 

2293.     உடுத்ததுவும்புலிதோல்பலிதிரிந்துண்பதுங் 
    கடுத்துவந்தகழற்காலன்றன்னையுங்காலினால் 
    அடர்த்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான் 
    தொடுத்ததுவுஞ்சரமுப்புரந்துகளாகவே.        3

    உடுத்ததுவும் புலிதோல்; பலி, திரிந்து உண்பதும்; 
    கடுத்து வந்த கழல் காலன்தன்னையும், காலினால் 
    அடர்த்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான் 
    தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள்ஆகவே.

    uTuttatuvum pulittOl; pali, tirintu uNpatum; 
    kaTuttu vanta kazal kAlan tannaiyum, kAlinAl 
    aTarttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
    toTuttatuvum caram, muppuram tukaL AkavE.

பொருள்:     உடுத்ததுவும் புலியின் தோல்; உண்பதுவும் திரிந்து ஏற்ற பிச்சை ஊண்; வென்றதுவும் 
காலால், சினந்து வந்த காலன் தன்னை; அகத்தியான்பள்ளியான் சரம் தொடுத்ததுவும் முப்புரங்கள் 
துகள் ஆகவே.

குறிப்புரை:     உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும் காலனை, முப்புரம் 
துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து-கோபித்து.

    Our Lord Civan has worn on His waist the hide of a tiger. He consumes the food 
He receives in the skull. He killed the regent of death by kicking him with anger, 
wears the anklets on His legs. This Lord is manifest in the temple in Thiru-agath-thiaan-palli 
where the natural forest areas are plenty. He shot an arrow and destroyed the three
fortresses of the asuras in the sky.

2294.     காய்ந்ததுவுமன்றுகாமனைநெற்றிக்கண்ணினால் 
    பாய்ந்ததுவுங்கழற்காலனைப்பண்ணினான்மறை 
    ஆய்ந்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான் 
    ஏய்ந்ததுவும்மிமவான்மகளொருபாகமே.        4

    காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்; 
    பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின்; நால்மறை, 
    ஆய்ந்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான் 
    ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒருபாகமே.

    kAyntatuvum anRu kAmanai, neRRikkaNNinAl; 
    pAyntatuvum kazal kAlanai; paNNin, nAlmaRai,
    Ayntatuvum; pozil cUz akattiyAn paLLiyAn 
    Eyntatuvum imavAn makaL oru pAkamE.

பொருள்:     அன்று காய்ந்ததுவும் (எரித்ததுவும்) காமனை நெற்றிக் கண்ணினால்; 
பாய்ந்ததுவும் (ஒறுத்ததுவும்) கழற் காலனை; பண்ணினால் ஆய்ந்ததுவும் மறையினை; 
அகத்தியான் பள்ளியான் பொருந்தியதும் இமாசலகுமாரியின் பாகத்தை.

குறிப்புரை:     அன்று நெற்றிக்கண்ணால் காய்ந்ததும் மன்மதனை, பாய்ந்ததும் இயமனை, 
பண்ணினால் ஆராய்ந்ததும் வேதத்தை, பொருந்தியதும் இமாசல குமாரி பாகத்தை.

    Our Lord kicked and killed the regent of death, Yaman. He killed the Indian 
cupid - Manmathan, angrily opening His third eye in the forehead. He used to chant 
the songs of the four Vedas in musical tone. He has embedded His consort, the daughter 
of the Himalayan king on His body. In such a glorious place our Lord Civan is manifest.

2295.     போர்த்ததுவுங்கரியின்னுரிபுலித்தோலுடை 
    கூர்த்ததோர்வெண்மழுவேந்திக்கோளரவம்மரைக் 
    கார்த்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான் 
    பார்த்ததுவும் அரணம்படரெரிமூழ்கவே.        5

    போர்த்ததுவும் கரியின்(ன்)உரி; புலித்தோல், உடை; 
    கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு 
    ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
     பார்த்ததுவும்(ம்) அரணம், படர்எரி மூழ்கவே.

    pOrttatuvum kariyin(n) uri; pulittOl, uTai; 
    kUrttatu Or veNmazu Enti; kOL aravam, araikku 
    Arttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
    pArttatuvum(m) araNam, paTar eri mUzkavE.

பொருள்:     போர்த்ததுவும் யானையின் தோல்; உடை புலித்தோல்; கூரியதோர் வெண்ணிற
மழுவேந்தி அரையில் கட்டியதும் கொல்லும் பாம்பினை; பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியான் 
பார்த்ததுவும் முப்புரம் படரும் எரியில் மூழ்கவே.

குறிப்புரை:     போர்த்ததும் யானைத்தோல். உடை - புலித்தோல். உடை என்பது தொழிலாகு பெயர், 
அது (உடுத்தது) வினையாலணையும் பெயர்ப் பொருளில் எழுவாய் நின்று புலித்தோலென்னும் 
பெயர்ப்பயனிலை கொண்டது. மழுவை ஏந்தி அரைக்கு ஆர்த்ததும் அரவம் (பாம்பு) என்க. 
பார்த்ததும் படர்ந்த எரியில் அரணம் (மும்மதில்) மூழ்க.

    Our Lord Civan cloaked His body with the hide of an elephant. He wears on His
waist the hide of the tiger. He holds in His hand the sharp white battle axe. He wears 
around His waist the snake. He witnessed the three crumbling fortresses of asuras in fire. 
This Lord is manifest in Thiru-agath-thiaan-palli.

2296.     தெரிந்ததுவுங்கணையொன்றுமுப்புரஞ்சென்றுடன் 
    எரிந்ததுவுமுன்னெழிலார்மலருறைவான்றலை 
    அரிந்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான் 
    புரிந்ததுவுமுமையாளொர்பாகம்புனைதலே.        6

    தெரிந்ததுவும் கணை ஒன்று; முப்புரம், சென்று உடன் 
    எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர்உறைவான் தலை, 
    அரிந்ததுவும்; பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான் 
    புரிந்ததுவும்(ம்) உமையாள் ஒர்பாகம் புனைதலே.

    terintatuvum, kaNai onRu; muppuram, cenRu uTan 
    erintatuvum; mun ezil Ar malar uRaivAn talai, 
    arintatuvum; pozil cUz akattiyAnpaLLiyAn
    purintatuvum(m) umaiyAL OrpAkam punaitalE.

பொருள்:     ஆராய்ந்ததுவும் அம்பு ஒன்றினை. ஒன்றையொன்று ஒருசேரச் சென்று எரிந்ததுவும் 
திரிபுரத்தை; அரிந்ததுவும் முன் எழிலார் தாமரை மலர் மேலானாகிய பிரமனின் சிரம் ஒன்றினை; 
அகத்தியான்பள்ளியான் புரிந்ததுவும் உமையாளை ஒரு பாகம் புனைதலையே.

குறிப்புரை:     தெரி (ஆராய்)ந்ததும் கணை (பாணம்). ஒன்றை ஒரு சேரச்சென்று எரித்ததும் 
திரிபுரத்தை. முன் அரிந்ததும் அழகு பொருந்திய பூவில் வாழும் பிரமன் தலையை, புரிந்தது 
(விரும்பிக் கொண்டது)ம் உமாதேவியார் ஒரு பாகத்தைப் புனைதலை, அப்பனது ஒரு பாகத்தை 
அம்மை அழகு செய்ததனாற்றான் உயிர்கட்கு அவ்வழகு உண்டாயிற்று.  அவளால் வந்த ஆக்கம் 
இவ்வாழ்க்கையெல்லாம் (சித்தியார் சூ-1-69).

    Our Lord Civan selected the arrow and shot and burnt the asura's three fortresses 
that were flying in the sky. Lord Brahma stays in the good-looking lotus flower. Our Lord 
plucked and removed one of his four heads to punish him. He has embedded His consort Uma 
Devi on the left portion of His body. Our goddess made Civa look lovely and attractive 
because of her concomitance. The people of the world attain beauty because of Uma Devi's 
concomitance.

2297.     ஓதியெல்லாமுலகுக்கோரொண்பொருளாகிமெய்ச் 
    சோதியென்றுதொழுவாரவர்துயர்தீர்த்திடும் 
    ஆதியெங்கள்பெருமானகத்தியான்பள்ளியை 
    நீதியால்தொழுவாரவர்வினைநீங்குமே.         7

    "ஓதி,எல்லாம்! உலகுக்கு ஓர் ஒண் பொருள் ஆகி! மெய்ச் 
    சோதி!" என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும் 
    ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான்பள்ளியை 
    நீதியால்-தொழுவார் அவர் வினை நீங்குமே.

    "Oti, ellAm! ulakukku Or oN poruL Aki ! meyc 
    cOti!" enRu tozuvAr avar tuyar tIrttiTum 
    Ati, egkaL perumAn, akattiyAn paLLiyai 
    nItiyAl-tozuvAr avar vinai nIgkumE.

பொருள்:     வேதங்களையெல்லாம் ஓதி அருளியவனே! உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற ஒளிர் 
பொருளானவனே! உண்மையொளியே! என்று தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய 
பெருமானது அகத்தியான் பள்ளியைத் தொழுவார்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை:     எல்லாம் ஓதி - வேதங்களையெல்லாம் ஓதியருளியவனே! உலகுக்கு ஓர் ஒண்பொருள் 
ஆகி -உலகங்களுக்கு ஒப்பற்ற ஒளிர் பொருளானவனே. மெய்ச்சோதி - உண்மையொளியே என்று கூறித் 
தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய பெருமானது பள்ளியைத் தொழுவார் வினை நீங்கும் என்க.

    Our Lord Civan is one from whom originated all the four Vedas. He is the only Supreme 
Being for the entire universe. And He is the only Being who gives the supernal effulgence 
to the universe. The devotees who chant His fame by quoting the above two aspects of our Lord 
in an order will get rid of all their sufferings. This Lord is the Supreme and is manifest in 
Thiru-agath-thiaan-palli. 

2298.     செறுத்ததுவுந்தக்கன்வேள்வியைத்திருந்தார்புரம் 
    ஒறுத்தவும்ஒளிமாமலருறைவான்சிரம் 
    அறுத்ததுவும்பொழில்சூழகத்தியான்பள்ளியான் 
    இறுத்ததுவுமரக்கன்றன்தோள்களிருபதே.        8

    செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம், 
    ஒறுத்தவும் ஒளி மா மலர் உறைவான் சிரம், 
    அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் 
    இறுத்ததுவும் அரக்கன்தன் தோள்கள் இருபதே.

    ceRuttatuvum takkan vELviyai; tiruntAr puram, 
    oRuttatuvum; oLi mA malar uRaivAn ciram, 
    aRuttatuvum; pozil cUz akattiyAn paLLiyAn
    iRuttatuvum arakkan tan tOLkaL irupatE.

பொருள்:     சினந்து அழித்ததுவும் தக்கனது வேள்வியை; தண்டித்து அழித்ததுவும் 
பகைவர்களின் திரிபுரத்தை; அறுத்ததுவும் பெரிய மலராகிய தாமரையின்மேல் இருப்பவனாகிய 
பிரமனின் சிரத்தை; மலர்ச்சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியான் முறித்ததுவும் அரக்கன் 
இராவணனின் இருபது தோள்களையும்.

குறிப்புரை:     செறுத்ததும் தக்கன் யாகத்தை. செறுத்தல் - கோபித்தல். அழித்தல். ஒறுத்தல் - 
கடிதல், வருத்துதல், ஒறுத்ததும் பகைவர் திரிபுரத்தை. திருந்தார்- பகைவர். திருந்தியவர் நண்பராவர்.          
அறுத்ததும் ஒளியை உடைய தாமரைப்பூவில் வாழும் பிரமன் தலையை. இறுத்ததும் (முறித்ததும்) 
இராவணனுடைய இருபது தோள்களையும்.

    Our Lord Civan arranged the demolition and destruction of Thakshan's huge 
sacrificial fire and all the items. He chastised the asuras and burnt the three 
fortresses of the enemies of the devas. Lord Brahma stays in bright and attractive 
lotus flower. Our Lord plucked one of his heads to punish his egoism. Our Lord 
squeezed the twenty shoulders of Raavanan, the king of Sri Lanka. Our Lord of all 
this fame is manifest in Thiru-agath-thiaan-palli.

2299.     சிரமுநல்லமதிமத்தமுந்திகழ்கொன்றையும் 
    அரவமல்குஞ்சடையானகத்தியான்பள்ளியைப் 
    பிரமனோடுதிருமாலுந்தேடியபெற்றிமை 
    பரவவல்லாரவர்தங்கள்மேல்வினைபாறுமே.        9

    சிரமும், நல்ல மதிமத்தமும், திகழ் கொன்றையும், 
    அரவும், மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியைப் 
    பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை 
    பரவ வல்லார் அவர் தங்கள்மேல் வினை பாறுமே.

    ciramum, nalla matimattamum, tikaz konRaiyum,
    aravum, malkum caTaiyAn akattiyAn paLLiyaip 
    piramanOTu tirumAlum tETiya peRRimai 
    parava vallAr avar tagkaL mEl vinai pARumE.

பொருள்:     தலைமாலையும் அழகிய பிறையும் ஊமத்தை மலரும் கொன்றைப் பூவும் 
பாம்பும் செறியும் சடையை உடையவனின் அகத்தியான்பள்ளியைப் பிரமனோடு திருமாலும் 
தேடிய இயல்பினைப் போற்ற வல்லவர்களின் மேலுள்ள வினைகள் அழியும்.

குறிப்புரை:     சிரமும் -தலைமாலையும், நல்லமதி (உம்) - அழகிய பிறையும். மத்தமும்- 
ஊமத்தம் பூவும். 'மத்தங்கமழ்சடை' (தி.2 ப. 205 பா.6). அரவும்- பாம்பும். 'அரவம்' என்ற பாடம் 
பிழை என்பது முதலடியாலே விளங்கும். பெற்றிமை -தன்மை. பாறும்-  ஓடும்.

    Our Lord puts on His body the garland of skulls. He retains the young moon; 
He wears the datura flowers on His matted hair. Also He wears the Indian laburnum 
flower on His hair. He has tied around His waist the snake. He adorns His disheveled 
locks with all these.Lord Brahma and Thirumal were unable to meet our Lord in spite 
of their best efforts.Those devotees who can praise our Lord's fame as above and 
worship will get rid of any sins that may approach them.

2300.     செந்துவராடையினாரும்வெற்றரையேதிரி 
    புந்தியிலார்களும்பேசும்பேச்சவைபொய்ம்மொழி 
    அந்தணனெங்கள்பிரானகத்தியான்பள்ளியைச் 
    சிந்திமின்நும்வினையானவைசிதைந்தோடுமே.        10

    செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி 
    புந்திஇலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி; 
    அந்தணன் எங்கள் பிரான், அகத்தியான்பள்ளியைச் 
    சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே.            

    centuvar ATaiyinArum, veRRu araiyE tiri 
    punti ilArkaLum, pEcum pEccu avai poymmozi; 
    antaNan, egkal pirAn, akattiyAn paLLiyaic 
    cintimin! num vinai Anavai citaintu OTumE.

பொருள்:     செந்துவர் ஊட்டிய ஆடையை உடுத்தவர்களாகிய சாக்கியரும் வெற்று 
உடம்பினராகிய சமணரும் ஆகிய அறிவிலாதவர்கள் பிதற்றும் பேச்சாகிய பரசமயக் 
கொள்கைகள் பொய்ம்மொழிகளாம். எவ்வுயிர்க்கும் செந்தண்மை கொண்ட அந்தணனின் 
அகத்தியான் பள்ளியைச் சிந்தியுங்கள்! உங்களுடைய வினைகள் சிதைந்து ஓடும்.

குறிப்புரை:     செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை - சொல்லும் 
பரசமயக்கோள்கள். அந்தணன் - சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள். நும் 
வினையானவை சிதைந்து ஓடும்.

    In this city of Thiru-agath-thiaan-palli, the Jains and the Buddhists live. 
The Buddhists wear red ochre robes on their body; the Jains roam about in the city 
without any proper dress on their body. They roam about and speak absurdity without 
any aim. Oh! You devotees, do not listen to those words and do not think about them. 
Concentrate in your mind on our virtuous Lord, the Supreme Being, who is manifest in 
Thiru-agath-thiaan-palli, your sins will disappear.

2301.     ஞாலமல்குந்தமிழ்ஞானசம்பந்தன்மாமயில் 
    ஆலுஞ்சோலைபுடைசூழகத்தியான்பள்ளியுள் 
    சூலநல்லபடையானடிதொழுதேத்திய 
    மாலைவல்லாரவர்தங்கள்மேல்வினைமாயுமே.        11

    ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில் 
    ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள், 
    சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய 
    மாலை வல்லார் அவர்தங்கள்மேல் வினை மாயுமே.

    njAlam malkum tamiz njAnacampantan, mA mayil 
    Alum cOlai puTai cUz akattiyAn paLLiyuL, 
    cUlam nalla paTaiyAn aTi tozutu Ettiya 
    mAlai vallAr avar tagkaL mEl vinai mAyumE.

பொருள்:     உலகம் புகழும் திருஞானசம்பந்தன் பெரிய மயில் ஆடும் சோலைகள் 
பக்கங்களில் சூழ்ந்த திருஅகத்தியான்பள்ளியுள் சூலப்படையானாகிய நல்லவனின் அடி 
தொழுது ஏத்திய இப்பாமாலையை வல்லவர்களின் ஆகாமிய வினைகள் அழியும்.

குறிப்புரை:     ஆலும் - ஆடும். புடை - பக்கம். நல்ல சூலப்படையான் என்றும் சூலமாகிய நல்ல
படையான் என்றும் கூறலாம். நல்ல பாம்பு. மாலை - இத்திருப்பதிகம். மேல்வினை - ஆகாமிய கன்மம் 
என்றலும் பொருந்தும்.

    The good name and fame of our saint Thiru-gnana-Sambandar expand all over the world.
 He paid a visit to the temple in Thiru-agath-thiaan-palli and worshipped and praised the 
holy feet of our Lord Civan who holds the battle axe in one of his hands. He is manifest 
in Thiru-agath-thiaan-palli temple. Our saint chanted this Tamil garland of ten verses. 
Those devotees who can memorise and chant these verses will get rid of the bad karma 
of their life.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            76ஆம் பதிகம் முற்றிற்று
            End of 76th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

 பதிகத் தொடர் எண்: 213                    பதிக எண்.77

77. திருஅறையணிநல்லூர்                    77. THIRU-ARAI-ANI-NALLOOR

பண் : காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருவறையணிநல்லூர் என்னும் இத்திருத்தலமானது திருக்கோவலூர் தொடர்வண்டி 
நிலையத்திற்குத் தென்கிழக்கே உள்ளது. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. இக்காலத்தில் 
அறகண்டநல்லூர் என்று வழங்குகிறது. திருவண்ணாமலை, பண்ணுருட்டி ஆகிய ஊர்களிலிருந்து 
திருக்கோவலூர் வருவதற்குப் பேருந்துகள் பல உள்ளன. அறையணி நல்லூர் பெண்ணையாற்றின் 
வடகரையில் உள்ளது. வானளாவிய கோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. திருக்கோவலூரில் 
இருந்து வடக்கே 1 கி. மீ. தூரத்தில் ஊர் உள்ளது.

    பாறையின்மீது அழகாகக் கட்டப்பெற்ற கோயிலை உடைய ஊர் என்று பொருள்படும். இவ்வூர்ப் 
பெயரை, பாண்டவர் வனவாச காலத்தில் தாம் கண்ட ஐந்து அறைகள் அந்த நல்லூர்க்கு  அலங்காரஞ் 
செய்யும் காரணத்தால் எய்தியது என்றும் கூறுவர். இறைவரின் திருப்பெயர் அறையணிநாதேசுவரர். 
இறைவியாரின் திருப்பெயர் அருள்நாயகி. பாறையில் பல்லவர் குடை மண்டபம் இருக்கிறது. 
வழி சரியாக இல்லை. முருகன் கோயில், திரௌபதியம்மன் கோயிலாக மாற்றப்பெற்றதாக 
இருக்கலாம். கங்கையம்மன் கோயில் ஒன்று புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். தீர்த்தம் பெண்ணையாறு. 
பிரசண்ட முனிவர் பூசித்துப் பேறு பெற்றார். இது திருஞானசம்பந்தரது ஒரே பதிகத்தைப் பெற்றது. 

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தப் பெருமானார் திருஆமாத்தூரையும் திருக்கோவில்வீரட்டத்தையும் வழிபட்டு, 
திருஅறையணி நல்லூரை அணைந்து ஏத்தி அடியார் அன்பின் மேன்மையை உலகம் அறிந்துய்யப் 
பாவலர்ந்த செந்தமிழ் கொண்டு பரவியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2302.     பீடினாற்பெரியோர்களும்பேதைமைகெடத்தீதிலா 
    வீடினாலுயர்ந்தார்களும்வீடிலாரிளவெண்மதி 
    சூடினார்மறைபாடினார்சுடலைநீறணிந்தாரழல் 
    ஆடினாரறையணிநல்லூரங்கையாற்றொழுவார்களே.        1

    பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா 
    வீடினால் உயர்ந்தார்களும் - வீடு இலார், இளவெண்மதி 
    சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல் 
    ஆடினார், அறையணிநல்லூர் அம் கையால் - தொழுவார்களே.

    pITinAl periyOrkaLum, pEtaimai keTat tItu ilA 
    vITinAl uyarntArkaLum--vITu ilAr, iLaveNmati 
    cUTinAr, maRai pATinAr, cuTalai nIRu aNintAr, azal 
    ATinAr, aRaiyaNi nallUr am kaiyAl-tozuvArkaLE.

பொருள்:     அழிவில்லாதவரும், இளமையான வெண்ணிற பிறையைச் சூடியவரும், 
வேதங்களை இசைத்தவரும், சுடுநீறாகிய சாம்பலைப் பூசியவரும், தீயாடினாரும் ஆகிய 
சிவபெருமானை அறையணிநல்லூரில் தொழுமவர்கள் பெருமையினால் பெரியோர்களாவர்; 
தங்களறியாமை கெட முத்திக்குரிய முற்றிய பற்றற்ற உயர்ந்தவர்களுமாவர். 

குறிப்புரை:   பீடு-பெருமை. பேதைமை- அறியாமை. ஈண்டுப் பண்பாகுபெயராய் ஆணவத்தையும்  
இனம்பற்றி மாயை கன்மங்களையும் உணர்த்தி நின்றது. தீதிலா வீடு - முற்றத்துறந்து பற்றற்ற நிலை. 
'ஒரு பற்றிலாமையும் கண்டிரங்காய்'  வீடினால்-விடுதலால். வீடு இலார் - (அழிவில்லாத) நித்தியர். 
இளமதி, வெண்மதி - பிறை. சுடலைநீறு  -மகாசங்கார காலத்தில் அனைத்துலகையும் அழித்துப் 
பொடித்த பொடி. அழல் - தீயில். பெரியோர்களும் உயர்ந்தார்களும் ஆவார் எவர் என்னில், 
அறையணி நல்லூரைத் தொழுபவர்களே என்று இயைத்துணர்க. வீடிலாரும் சூடினாரும் பாடினாரும் 
ஆடினாரும் ஆகிய சிவபெருமானது ஊர் என்க.

    Our Lord Civan has no end. He retains the young moon on His matted hair, 
He is the author of the four Vedas. He applies all over His body the holy ashes 
that arose while the big destruction of the universe happened. His avocation is 
to dance near the fire of the burning ghats. Those devotees who worship this Lord 
with their clean hands will become great in their lineage. The obstructive factor 
of emotional attachment will be shed by them and they will become great people.

2303.     இலையினார்சூலமேறுகந்தேறியேயிமையோர் தொழ
    நிலையினாலொருகாலுறச்சிலையினால்மதிலெய்தவன் 
    அலையினார்புனல்சூடியஅண்ணலாரறையணிநல்லூர் 
    தலையினாற்றொழுதோங்குவார்நீங்குவார்தடுமாற்றமே.        2

    இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர் தொழ, 
    நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில் எய்தவன், 
    அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணிநல்லூர் 
    தலையினால்-தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.

    ilaiyin Ar cUlam, ERu ukantu ERiyE, imaiyOr toza, 
    nilaiyinAl oru kAl uRac cilaiyinAl matil eytavan, 
    alaiyin Ar punal cUTiya aNNalAr, aRaiyaNi nallUr 
    talaiyinAl-tozutu OgkuvAr nIgkuvAr, taTumARRamE.

பொருள்:     மூவிலைத் தோற்றம் கொண்ட சூலம் ஏந்தியவர்; எருதினை வாகனமாக விரும்பி
 ஏறுவர்; தேவர்கள் தொழும் நிலையில், ஒரு காலால் மலையை வில்லாக வளைத்து பகைவரது 
மும்மதில்களை அழித்தவர்; அலைகள் கொண்ட கங்கையாற்றைத் தலையில் சூடிய தலைவர் 
ஆகிய சிவபிரானின் அறையணிநல்லூரைத் தலையினால் தொழுதெழுவார் பிறவியில் விழும் 
தடுமாற்றத்திலிருந்து நீங்குவார்கள்.

குறிப்புரை:     இலையின் ஆர் சூலம் - 'மூவிலைவேல்' 'இலையாருஞ் சூலத்தாய்' (அப்பர் 
திருத்தாண்டகம்)  'இலைமலிந்த வேல்நம்பியெறி பத்தர்' (திருத்தொண்டத்தொகை). தடுமாற்றம் - 
பிறவிக்குழியில் விழுந்தடுமாற்றம். ஓங்குவார் தடுமாற்றம் நீங்குவார் என்க. 'ஆரூர் தம் கையினால் 
தொழுவார் தடுமாற்றறுப்பாரே' (தி. 1 ப. 105 பா.6).                             

    Our Lord Civan holds in one of His hands the three pronged battle axe with the
shape of leaves. He is eager to sustain the white bull for His conveyance. At the request 
of the devas He pressed the bow with His foot and shot an arrow on the three fortresses 
of the asuras and destroyed them. He supports the Ganges river which has big waves on His 
matted hairlocks. This Lord is manifest in the temple in Arai-ani-nalloor. Those devotees 
who reach the temple in Arai-ani-nalloor and worship Him with their heads are noble persons, 
free from stumbling thoughts.

2304.     என்பினார்கனல்சூலத்தாரிலங்குமாமதியுச்சியான் 
    பின்பினாற்பிறங்குஞ்சடைப்பிஞ்ஞகன்பிறப்பிலியென்று 
    முன்பினார்மூவர்தாந்தொழுமுக்கண்மூர்த்திதன்தாள்களுக் 
    கன்பினாரறையணிநல்லூரங்கையாற்றொழுவார்களே.        3

    "என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி உச்சியான், 
    பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன் பிறப்புஇலி” என்று 
    முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு 
    அன்பினார்-அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே.

    "enpinAr, kanal cUlattAr, ilagkum mA mati ucciyAn, 
    pinpinAl piRagkum caTaip pinjnjakan, piRappu ili" enRu 
    munpinAr mUvartAm tozu mukkaN mUrttitan tALkaLukku 
    anpinAr--aRaiyaNi nallUr am kaiyAl-tozuvArkaLE.

பொருள்:     அறையணி நல்லூர் இறைவர் எலும்பணிந்தவர், சூலம் கையேந்தியவர், 
விளங்கும் பிறை தரித்த உச்சியார், பின்புறத்தில் தாழ்ந்த சடையுடையவர், தலைக்கோலம் 
அணிந்தவர், பிறப்பில்லாதவர், ஆதிமூர்த்தி என்று கையால் தொழுவாரே மூவரும் வணங்கும்
முக்கண்மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.

குறிப்புரை:     என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும் (தீய்க்கும்) சூலப்படை 
ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு இன் ஆல்-  பின்பினால். பின்புறத்தில். பின் - 
பின்புறத்தில்,  பின்னால்-பின்னலால் என்னும் பொருந்தும். 'பின்றாழ்சடை' (தி.1 ப.71 பா.4, ப.80 பா.2). 
'பின்னு சடைகள் (தி.1 ப.74 பா.6). 'பின்னிய தாழ்சடையார்" (தி.1 ப.8 பா.10). பிறங்கும் - விளங்கும். 
பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக் கொண்டு நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது. 
முன்பினார்- வலிமை, பழமையுடையார் நினைத்தலை உடையவர் எனலுமாம். முன்பின் ஆர் என்று 
பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார் சூலத்தார் உச்சியான் 
பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே மூவரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு
அன்பராவர்.

    Our Lord Civan adorns His body with the garland made up of skulls. He holds the 
glowing trident in one of His hands. He retains the bright young moon in His hair locks 
on the top of His head. At the back of His head the disheveled matted hair locks hang 
low carrying garland of flowers. He has no birth. This Lord is manifest in Arai ani-nalloor 
temple. Those celestials - Brahma, Thirumaal and Rudran - all the three high powered 
demigods worship our Lord Civan who is three eyed, those who worship the holy feet of 
Arai-ani-nalloor Lord are the pious devotees of this three-eyed Lord.

2305.     விரவுநீறுபொன்மார்பினில்விளங்கப்பூசியவேதியன் 
    உரவுநஞ்சமுதாகவுண்டுறுதிபேணுவதன்றியும் 
    அரவுநீள்சடைக்கண்ணியாரண்ணலாரறையணிநல்லூர் 
    பரவுவார்பழிநீங்கிடப்பறையுந்தாஞ்செய்தபாவமே.        4

    விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன், 
    உரவு நஞ்சு அமுதுஆகஉண்டு உறுதி பேணுவது அன்றியும், 
    அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணிநல்லூர் 
    பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே.

    viravu nIRu ponmArpinil viLagkap pUciya vEtiyan, 
    uravu nanjcu amutu Aka uNTu uRuti pENuvatu anRiyum, 
    aravu nILcaTaik kaNNiyAr, aNNalAr, aRaiyaNi nallUr 
    paravuvAr pazi nIgkiTa, paRaiyum, tAm ceyta pAvamE.

பொருள்:     திருநீற்றினை மார்பில் பூசிய மறையவன், கடல் நஞ்சினை அமுதமாக உண்டு 
உயிர்களுக்கு உய்தி அளித்தவன். அஃதல்லாமலும், அரவினை நீண்ட சடையில் தலைமாலையாகக் 
கொண்டவரும் தலைவருமாகிய அறையணிநல்லூர் சிவபிரானைப் பரவுவார் தம்மேல் வரும் 
பழிநீங்கப் பாவம் ஓடும்.

குறிப்புரை:     மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை. உரவு - கடல். அரவு - பாம்பு , 
கண்ணியார் - தலைமாலை உடையார். பரவுவார் - வாழ்த்தி வணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும். 

    Our Lord Civan is one who applies a lot of holy ashes to His attractive chest 
and body. He is the author of the four Vedas. He is the Supreme Being who stopped the 
universe from complete destruction by imbibing the poison. He has used the long serpent 
in His matted hair locks as garland for the hair. This Lord is manifest in the temple 
in Arai-ani-nalloor. Those devotees who adore, worship and pay reverence to our Lord 
will get rid of their sins in their life.

2306.     தீயினார்திகழ்மேனியாய்தேவர்தாந்தொழுதேவன்நீ 
    ஆயினாய்கொன்றையாயனலங்கையாயறையணிநல்லூர் 
    மேயினார்தமதொல்வினைவீட்டினாய்வெய்யகாலனைப் 
    பாயினாயதிர்கழலினாய்பரமனேயடிபணிவனே.        5

    தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர் தாம் தொழும் தேவன் நீ 
    ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்! அறையணிநல்லூர், 
    மேயினார்தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப் 
    பாயினாய்! அதிர் கழலினாய்: பரமனே! அடி பணிவனே.

    tIyin Ar tikaz mEniyAy! tEvartAm tozum tEvan nI 
    AyinAy! konRaiyAy! anal agkaiyAy! aRaiyaNi nallUr, 
    mEyinAr tama tolvinai vITTinAy! veyya kAlanaip 
    pAyinAy! atir kazalinAy! paramanE! aTi paNivanE.

பொருள்:     தீயைப் போல ஒளிரும் திருமேனியை உடையாய்! தேவர்கள் எல்லோரும் 
தொழும் மகாதேவன் நீ ஆயினாய்! கொன்றையினாய்! அங்கையில் அனலேந்தினாய்! 
அறையணி நல்லூரை அடைந்தவர்களின் தொன்று தொட்டு வருகின்ற வினைகளை 
ஒழித்தாய்! காலன் அழியப் பாய்ந்தாய்! ஒலிக்கும் கழலினாய்! பரமனே! அடி பணிந்தேன். 

குறிப்புரை:     தீயின் ஆர் திகழ் மேனியாய் - தீயைப் போலப் பொருந்திய பிரகாசிக்கும் 
திருமேனியை உடையாய். தேவர் நாம் தொழுதேவன் நீ ஆயினாய். கொன்றையினாய். அனல் 
அங்கையாய், வீட்டினாய், பாயினாய், கழலினாய், பரமனே என மனமுருக வாய்குளிர அழைத்து. 
அடிபணிவன் என்றது பக்தி சாகரத்தில் அழுத்துகின்றது. தம் - தம்முடைய. பாயினாய் - பாய்ந்தாய்.

    Our Lord Civan looks extremely bright like the red supernal effulgence. 
He is the head of all the devas who worship Him. He wears the cassia fistula flowers 
on His head. He holds fire in one of His hands. Those devotees who reach the temple 
of Arai- ani-nalloor and worship our Lord will get rid of their past sins. He kicked 
and destroyed the god of death. He wears the trinket on His legs. Oh! Lord I worship 
Your holy feet.

2307.     விரையினார்கொன்றைசூடியும்வேகநாகமும்வீக்கிய 
    அரையினாரறையணிநல்லூரண்ணலாரழகாயதோர் 
    நரையினார்விடையூர்தியார்நக்கனார்கூறும்போதுசேர் 
    உரையினாலுயர்ந்தார்களுமுரையினாலுயர்ந்தார்களே.        6

    விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கிய 
    அரையினார், அறையணிநல்லூர் அண்ணலார், அழகுஆயது ஓர் 
    நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், கூறும்போது சேர் 
    உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே.

    viraiyin Ar konRai cUTiyum, vEka nAkamum vIkkiya 
    araiyinAr, aRaiyaNi nallUr aNNalAr, azaku Ayatu Or 
    naraiyin Ar viTai UrtiyAr, nakkanAr, kURumpOtu cEr 
    uraiyinAl uyarntArkaLum uraiyinAl uyarntArkaLE.

பொருள்:     மணமுள்ள கொன்றையைச் சூடி, விடவேகமுள்ள நாகத்தை அரையில் கட்டி,
அழகாயதொரு வெள்விடை ஊர்தியை உடையவர்; ஆடையற்றவர்; ஆகிய அறையணிநல்லூரில் 
அண்ணலாரை நறிய பூவால் அருச்சித்து தோத்தரித்து உயர்பவர் புகழலால் உயர்வினை அடைவார்.  

குறிப்புரை:     வேகம் -விடவேகம். பத்துவேகம் 'பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்
பல்' (தி.4 ப.18 பா.10). நாகம் - பாம்பு. வீக்கிய - கட்டிய. அரையில் நாகம் வீக்கினார் என்க. நரையின் 
ஆர் விடை- வெண்ணிறத்தினைப் பொருந்திய எருது. நறும்போது - நறுமணம் கமழும் பூக்கள். 
உரையினால்-1,தோத்திரங்களால் - 2, புகழலால், பூவால் அருச்சித்து வாயால் தோத்திரம் புரிதல் 
பற்றிப்  'போதுசேர்  உரை'  என்றார். 'உரை மாலையெல்லாம் உடைய அடி' (தி.6 ப.6 பா.7). 
'உரையாலுணரப்படாத அடி' 'உரையாரும்  புகழானே' (தி.6 ப.62 பா.6). 'உரைப்பார் உரை உகந்து 
உள்கவல்லார் தங்கள் உச்சியாய்' (தி.7. பா 936)  'உரையார் தமிழ்மாலை' (தி.1 ப.84 பா.11). 'உரைப்பார் 
உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்' (குறள்). அர்ச்சனையில் உயர்வது     
புகழில் உயர்வதாகும் என்றவாறு. வழிபாட்டால் வரும் புகழேயன்றி மற்றைய வழிகளால் வரும் புகழ் 
உயர்வுடையதன்று. 'உரையார் பொருளுக்குப்பிலான்'  (தி. 6 ப.11 பா.7) என்பதற்கேற்பப் பொருள் 
உரைத்தலுமாம். 

    Our Lord Civan wears the garland made up of cassia fistula, which has sweet fragrance. 
He wears around His waist the ill-tempered poisonous snake. He is the Supreme Being manifest 
in the temple in Arai-ani-nalloor. He uses the handsome white bull for His conveyance. Those
who strew flowers and praise our Lord with pleasing holy words will become famous in their life.

2308.     வீரமாகியவேதியர்வேகமாகளியானையின் 
    ஈரமாகியவுரிவைபோர்த்தரிவைமேற்சென்ற எம்மிறை 
    ஆரமாகியபாம்பினாரண்ணலாரறையணிநல்லூர் 
    வாரமாய்நினைப்பார்கள்தம்வல்வினையவைமாயுமே.        7

    வீரம் ஆகிய வேதியர் வேக மா களியானையின் 
    ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம் இறை; 
    ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணிநல்லூர் 
    வாரம்ஆய் நினைப்பார்கள்தம் வல்வினை அவை மாயுமே.

    vIram Akiya vEtiyar; vEka mA kaLiyAnaiyin 
    Iram Akiya urivai pOrttu, arivaimEl cenRa em iRai; 
    Aram Akiya pAmpinAr; aNNalAr; aRaiyaNi nallUr 
    vAram Ay ninaippArkaL tam valvinai avai mAyumE.

பொருள்:     ஞானமுடைய வேதியர், வேகமாக மதத்துடன் வந்த பெரிய யானையின் குருதி 
ஈரமுடைய தோலினை உரித்துப் போர்த்து உமாதேவி அஞ்ச அவர்பாற் சென்ற எம்முடைய இறைவர், 
மாலையாகப் பாம்பினை உடையவர்; தலைவர். அவருடைய அறையணிநல்லூரை அன்புடன் 
நினைப்பவர்கள்தம் வல்வினை ஆயவை மாயும்.

குறிப்புரை:     வீரம் - ஞானம், ஞான வேதியர் - சிவபிரான். அட்ட வீரட்டம் (எட்டு வீரத்தலம்) 
நோக்கின் சிவபிரானுக்குப் பொருந்தும். (வீரம் ஆகிய வேதியர்) தக்க யாகத்தில் இருந்தவர்களும் ஆம். 
வேகமாகளியானை- அவர்கள் வேகத்துடன் போதர ஏவிய பெரிய மதக்களிப்பை உடைய யானை. 
யானையின் ஈரம் ஆகிய உரிவை - அந்த யானை ஈரிய தோல். அரிவை - உமாதேவியார். பாம்பு 
மாலை அணிந்தவர். வாரம் - அன்பு நினைப்பார்கள் தம் வல்வினை மாயும் - தியானம் 
புரிபவர்களுடைய தீவினை அழியும்.

    Our Lord Civan is an embodiment of super intelligence and He is the author of 
the four Vedas. He covered His body with the wet hide of an enraged big elephant 
and appeared before His consort Uma Devi. He wears the snake as His garland. 
He is manifest in the temple in Arai-ani-nalloor as the Supreme Being. Those who 
think and repeat His name with sincere devotion will get rid of their strong karma 
in their life.

2309.     தக்கனார்பெருவேள்வியைத் தகர்த்துகந்தவன்தாழ்சடை
    முக்கணான்மறைபாடியமுறைமையான்முனிவர்தொழ 
    அக்கினோடேழிலாமைபூணண்ணலாரறையணிநல்லூர் 
    நக்கனாரவர்சார்வலானல்குசார்விலோம்நாங்களே.        8

    தக்கனார் பெருவேள்வியைத்  தகர்த்து உகந்தவன் தாழ்சடை
    முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ 
    அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணிநல்லூர்
     நக்கனார் அவர் சார்வுஅலால் நல்கு சார்வு இலோம் நாங்களே.

    takkanAr peru vELviyait takarttu ukantavan, tAzcaTai
    mukkaNAn, maRai pATiya muRaimaiyAn, munivar toza 
    akkinOTu ezil Amai pUN aNNalAr, aRaiyaNi nallUr 
    nakkanAr avar cArvu alAl nalku cArvu ilOm, nAgkaLE.

பொருள்:     தக்கனுடைய பெரிய வேள்வியைத் தகர்த்து மகிழ்ந்தவர்; தாழ்ந்த சடை உடையவர்; 
முக்கண்களை உடையவர்; முனிவர்கள் முறைமையால் வழிபட எலும்பினோடு ஆமையோட்டையும் 
அழகாகப் பூண்டவர். தலைவர். அறையணி நல்லூர் நக்கனார், யாம்  அவருடைய திருவடிச் சார்பினை 
அல்லாது பேரின்பம் பயக்கும் வேறுசார்பு இலோம்.

குறிப்புரை:     தக்கனார் - தக்ஷன். முக்கணான் - திரிநேத்திரன். அக்கு - எலும்பு, உருத்திராக்கமுமாம்.
ஆமை பூண்ட அண்ணலார். அவர்சார்வு - அச்சிவபிரான்றிருவடிச் சார்பு. நாங்கள் அவர் சார்வு அல்லால் 
பேரின்பம் பயக்கும் சார்வு வேறிலோம். அடுத்த பாடலின் ஈற்றடியும் ஈதேயாதல் அறிக (தி.2 ப.44 பா.3.)

    Our Lord Civan ordered to demolish the sacrificial fire of Thakkan. His matted 
hair hangs very low on His back. He has three eyes. The sages pray Him, He authored 
the four Vedas in the proper manner. He is the super intellect wearing the tortoise 
shell and the garland made of skulls. He is the mendicant in the temple in Arai-ani-nalloor.
We worship Him alone for ultimate happiness and do not seek anybody else.

2310.     வெய்யநோயிலர்தீதிலர்வெறியராய்ப்பிறர்பின்செலார் 
    செய்வதேயலங்காரமாமிவையிவைதேறியின்புறில் 
    ஐயமேற்றுணுந்தொழிலராமண்ணலாரறையணிநல்லூர் 
    சைவனாரவர்சார்வலால்யாதுஞ்சார்விலோம்நாங்களே.         9

    வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின் செலார்; 
    செய்வதே அலங்காரம் ஆம்; இவைஇவை தேறி இன்புஉறில், 
    ஐயம் ஏற்று உணும் தொழிலர்ஆம் அண்ணலார், அறையணிநல்லூர் 
    சைவனார் அவர், சார்வுஅலால், யாதும் சார்வுஇலோம், நாங்களே.

    veyya nOy ilar; tItu ilar; veRiyarAyp piRar pin celAr; 
    ceyvatE alagkAram Am; ivai ivai tERi inpu uRil, 
    aiyam ERRu uNum tozilar Am aNNalAr, aRaiyaNi nallUrc 
    caivanAr avar, cArvu alAl, yAtum cArvu ilOm, nAgkaLE.

பொருள்:     பிறப்பிறப்பாகிய கொடிய நோயிலர்; வெறி பிடித்தவர் போலப் பிறர்பின் செல்லார். 
(தற்சுதந்திரம் உடையவர்); அவர் செய்து கொள்வதே அலங்காரம் (தூய உடம்பினர்.) இவ்வியல்புகளை 
ஆராய்ந்து தெளிந்தால், பிச்சையேற்று உண்ணும் தொழிலராகிய தலைவர் அறையணி நல்லூர்ச் 
சைவனார் (சிவபிரான்) அவருடைய திருவடிச் சார்பினை அல்லாது பேரின்பம் பயக்கும் சார்பு 
வேறு நாம் இலோம்.

குறிப்புரை:     வெய்ய -வெம்மையுடைய. வெறியராய் - வெறி பிடித்தவர்போல. செய்வதே 
அலங்காரம் ஆம் இவை இவை என்பது செய்வனவே அழகாக்கும் பெற்றி போலும். அவர் 
'கொண்டதே கோலம்' என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை 
நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல் இன்மை விளங்கும். 
சைவன் - சிவபிரான். சைவா போற்றி (திருவாசகம்) 'மான்மறிவொன்றேத்துஞ் சைவன்' 
(தி. 4 ப. 62 பா. 4). சைவத்தசெல்வவுருவன் திருநீற்றன் (தி.7பா.838).

    Our Lord Civan has no disease due to the sun's heat. He never follows others 
with violent desires. Whatever He carries to beautify Himself is good enough. We must 
understand His actions fully well and accept Him as He is. His behaviour of begging alms 
also must be accepted and we must depend on Him for our ultimate happiness, without any 
second thought for any other faith. Let us depend only on one Lord, the Lord of 
Arai-ani-nalloor.

2311.     வாக்கியஞ்சொல்லியாரொடும்வகையலாவகை செய்யன்மின் 
    சாக்கியஞ்சமணென்றிவைசாரேலும்மரணம்பொடி 
    ஆக்கியம்மழுவாட்படையண்ணலாரறையணிநல்லூர்ப் 
    பாக்கியங்குறையுடையீரேற்பறையுமாஞ்செய்தபாவமே.        10        

    வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை செய்யன்மின்! 
    சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்) அரணம் பொடி 
    ஆக்கிய(ம்) மழுவாள்படை அண்ணலார் அறையணிநல்லூர்ப் 
    பாக்கியம் குறை உடையீரேல், பறையும்ஆம், செய்த பாவமே.

    vAkkiyam colli, yAroTum vakai alA vakai ceyyanmin! 
    cAkkiyam camaN enRu ivai cArElum(m) araNam poTi 
    Akkiya(m) mazuvAL paTai aNNalAr aRaiyaNi nallUrp 
    pAkkiyam kuRai uTaiyIrEl, paRaiyum Am, ceyta pAvamE.

பொருள்:     பழகத் தகுதி அற்றோர் யாவரோடும் பேச்சுக் கொடுத்து செய்யத் தகாதனவற்றைச் 
செய்யாதீர்; சாக்கியர், சமணர் என்னும் இவர்களுடன் சாராதீர்; மதில்களைச் சாம்பலாக்கியவர் ஆகிய 
அந்த மழுவாள் படைத் தலைவர் அறையணி நல்லூரினை இன்றியமையாப் பொருளாக அடைவீரேல் 
செய்த பாவம் பறந்து போகும்.

குறிப்புரை:     வாக்கியம்- பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும்- சாராதீர்கள். 
சாராதேயுங்கள். சாரேல் - ஒருமை. அதனொடு 'உம்' சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர். 
இது திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி.2 ப.119 பா.10; தி.3 ப.91 பா.10) காண்க. அரணம் - 
திரிபுரம். ஆக்கிய மழு, மகர மெய் விரித்தல் விகாரம். பாக்கியம் குறை- பாக்கியமாகிய 
இன்றிமையாப் பொருள். பாக்கியம் - தெய்வம். (குறள் 1141). எதுவந்தால் முடிவுறும்? அஃது         
இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு முடிக்கப்படும் பொருள். 
இன்றியமையாப் பொருள் என்று பொருளுரைத்தனர் சான்றோர் (குறள் 612).

    Oh! people of Arai-ani-nalloor! please do not indulge in long idle talk and 
improper actions. Do not listen to the words of the Jains and the Buddhists nor join
those sections.Oh! You devotees! if you have any attachments to fulfil, you may go to
the temple in Arai-ani-nalloor and worship our Lord who burnt the three fortresses     
and completely destroyed those. Of course, He carries a battle axe in one of His hands 
and is manifest in the temple in Arai-ani-nalloor. If you follow this you will get what
you want and will also get rid of the sins of your past life. 

2312.     கழியுலாங்கடற்கானல்சூழ்கழுமலமமர்தொல்பதிப் 
    பழியிலாமறைஞானசம்பந்தன்நல்லதோர்பண்பினார் 
    மொழியினாலறையணிநல்லூர் முக்கண்மூர்த்திதன்தாள்தொழக் 
    கெழுவினாரவர்தம்மொடுங்கேடில்வாழ்பதிபெறுவரே.        11

    கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதிப் 
    பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின் ஆர் 
    மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள் தொழக் 
    கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே.

    kazi ulAm kaTal kAnal cUz kazumalam amar tol patip 
    pazi ilA maRai njAnacampantan, nallatu Or paNpin Ar 
    moziyinAl, aRaiyaNi nallUr mukkaN mUrttitan tAL tozak 
    kezuvinAr avar, tammoTum kETu il vAz pati peRuvarE.

பொருள்:     கழிகள் உலாவுகின்ற கடற்கானல் சூழப் பெற்ற சீகாழியாகிய பழைமையான
பதியில், பழியிலாத மறைகள் வல்ல ஞானசம்பந்தன் நன்மை பயக்கும் இயல்பினதாக மொழிந்த 
இத்திருப்பதிகத்தைக்கூறி அறையணி நல்லூர் முக்கண் மூர்த்தியினுடைய திருத்தாள்களைத் 
தொழப் பொருந்தினர் தம்மையும் பெறுவர்; சிவலோகத்தையும் பெறுவர்.

குறிப்புரை:     பழி இல்லாமை மறைக்கு அடை பண்பின் ஆர் மொழியினால் - இத்திருப்பதிகத்தால்.
கெழுவினார் - பொருந்தினவர். கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மோடும் பதி பெறுவர் என்றதால், 
தம்மையும் பெறுவர். பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல் - தம்மையுணர்ந்து தமையுடைய
தன்னுணர்வார் (சிவஞான அவையடக்கம்) என்றவாறு தம்மையுணர்தல். தன்னுயிர்தானறப் 
பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாந்தொழும் (குறள் 268), பதி - சிவம்.

    In the city of Kazhumalam salt pans are many by the side of the seashore. 
Along with the pans there are many thick gardens all around. In this old city of 
Kazhumalam our saint Thiru-gnana-Sambandar was born. He is spotless and is an expert 
in all the four Vedas. He reached the temple in Arai-ani-nalloor and chanted these 
ten verses. Those virtuous scholars with good manners, reaching the temple in 
Arai-ani-nalloor, may recite these verses. There they may worship and pray to the 
triple eyed Lord at His holy feet. They will reach the Sivaloka where faultless 
saints live by attaining Civagnanams.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            77ஆம் பதிகம் முற்றிற்று
            End of 77th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 214            பதிக எண். 78.

78. திருவிளநகர்                78. THIRU-VILA-NAGAR

பண் : காந்தாரம்                Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருவிளநகர் என்னும் இத்திருத்தலமானது காவிரித் தென்கரையில் உள்ள நாற்பதாவது 
தலம். மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து 
செம்பொனார் கோயில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவர் திருப்பெயர் துறை 
காட்டும் வள்ளலார். அருள் வித்தகர் என்னும் அந்தணர் பூக்கூடையை எடுத்துக் கொண்டு காவிரியாற்றில் 
இறங்கி வந்தபோது, வெள்ளம் அவரை அடித்துக் கொண்டு சென்றது. அவரோ பூக்கூடையை விடாது 
சிவபெருமானையே சிந்தித்தார். அவருக்கு இறைவர் ஒரு துறையைக் காட்டிக் கரையேறச் செய்து 
ஞான உபதேசம் செய்தருளிய காரணத்தால் இப்பெயரை இத்தலத்து இறைவர் பெற்றார். காவிரித்துறை 
காட்டினார் என்று இவ்வூர்த் தேவாரத்திலும் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைவி 
திருப்பெயர் தோழிநாயகி. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.  இது தருமை ஆதீன 
அருளாளுகைக்கு உட்பட்ட ஆலயமாகும்.

பதிக வரலாறு

    சிரபுரத்து வள்ளலார் திருச்செம்பொன்பள்ளியை வணங்கி மெய்த்த காதலால் விளநகர் 
விடையவர் பாதம் பத்தரோடு பணிந்து பாடியருளிய இசைப்பதிகம் ஈதாகும்.

            திருச்சிற்றம்பலம்

2313.     ஒளிரிளம்பிறைசென்னிமேலுடையர்கோவணஆடையர் 
    குளிரிளம்மழைதவழ்பொழிற்கோலநீர்மல்குகாவிரி 
    நளிரிளம்புனல்வார்துறைநங்கைகங்கையைநண்ணினார் 
    மிளிரிளம்பொறியரவினார்மேயதுவிளநகரதே.        1

    ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண ஆடையர், 
    குளிர் இள(ம்)மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி 
    நளிர் இளம்புனல் வார் துறை -நங்கைகங்கையை நண்ணினார், 
    மிளிர் இளம் பொறிஅரவினார், மேயது - விளநகர் அதே.

    oLir iLampiRai cennimEl uTaiyar, kOvaNa ATaiyar,
    kuLir iLa(m) mazai tavaz pozil kOla nIr malku kAviri 
    naLir iLampunal vAr tuRai--nagkai kagkaiyai naNNinAr, 
    miLir iLam poRi aravinAr, mEyatu-viLanakar atE.

பொருள்:     பிரகாசிக்கின்ற சிரசின்மீது பிறையை உடையவர்; கோவணம் ஆகிய ஆடையை 
உடுத்தவர்;  குளிர்ந்த நீர்த்துறைகளை உடைய கங்கை நங்கையைப் பொருந்தினவர்; மெல்லிய 
புள்ளிகளோடு புரள்கின்ற பாம்பினை அணிகலனாக உடையவராகிய இறைவர் மேவியது, 
கூதன்மாரி தவழும் பொழில்களூடே வளமான, பெருக்கெடுத்து தெளிந்த நீரோடும் காவிரி 
பாயும் திருவிளநகரதே.

குறிப்புரை:     ஒளிர்- பிரகாசிக்கின்ற. சென்னிமேல் பிறை உடையர். கோவணம் ஆகிய ஆடை 
உடுத்தவர். குளிர் மழைக்கு இளமை. பெய்து வெளிறாமை. நளிர்- குளிர்ச்சி. துறை நதிசாதியடை. 
மிளிர் - பிறழ்கின்ற, புரள்கின்ற, விளங்குகின்ற. பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள். 
'பொறியரவம்' (தி.1 ப.132 பா.2). 'பொறிகிளர்அரவம்' (தி.3 ப.92 பா.3). 'பொறிகிளர் பாம்பு' 
(தி.3 ப.101 பா.2). 'பொறியரவு' (தி.4 ப.35 பா.6) என்று பயின்ற ஆட்சியாயிருந்தும். ஆகரங்காட்டிய 
அகராதியில் அராப்பொறி இராப்பொறியாயிற்று.

    Our Lord Civan retains the bright young moon on His head. He wears the fore- 
lap cloth on His loins. He supports His beloved lady of the river the Ganges on His 
hair. He wears on His waist the bright young snake with dots on its head. Our Lord 
desires to manifest Himself in the temple in Thiru-vila-nagar. In this city black 
clouds gather to shower cool rains. The city is surrounded by thick natural forests 
as well as ponds with cool water. The river is full of fresh water with long banks, 
such is the beauty of the city.

2314.    அக்கரவ்வணிகலனென அதனொடார்த்ததோராமைபூண் 
    டுக்கவர்சுடுநீறணிந்தொளிமல்குபுனற்காவிரிப் 
    புக்கவர்துயர்கெடுகெனப்பூசுவெண்பொடிமேவிய 
    மிக்கவர்வழிபாடுசெய்விளநகரவர்மேயதே.        2

    அக்கு அர(வ்)வு அணிகலன் எனஅதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு, 
    உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப் 
    புக்கவர்-"துயர் கெடுக!" எனப் பூசு வெண்பொடி மேவிய 
    மிக்கவர் வழிபாடு செய் - விளநகர், அவர் மேயதே.

    akku ara(v)vu aNikalan ena atanoTu Arttatu Or Amai pUNTu, 
    ukkavar cuTunIRu aNintu, oLi malku punal kAvirip 
    pukkavar" tuyar keTuka!" ena pUcu veNpoTi mEviya 
    mikkavar vazipATu cey-viLanakar, avar mEyatE.

பொருள்:     எலும்புடன் பாம்பினையும் அவற்றுடன் ஆமையோட்டினையும் சேர்த்து 
அணிகலன் என அணிந்து, இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் பூசி, இறையவர் மேவியது. தெளிந்த 
நீர்ப்பரப்புள்ள காவிரியாற்றில் புக்கு நீராடி 'துயர் கெடுக' எனத் திருநீற்றுப் பொடி தரித்த 
மேலோர் வழிபாடு செய்யும் திருவிளநகரதே.

குறிப்புரை:     அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது. ஓர் ஆமை பூண்டு - எலும்பும்  
பாம்பும் (அழகுற) அணியும் ஆபரணம் என்ன, அவ்வாபரணத்தோடு கட்டியதோராமை அணிந்து, 
அணிகலனைச் சுட்டாமல் அக்கரவு - தட்டிற்றெனில் அவற்றொடு எனல் வேண்டும். அக்கர் எனின், 
வலிந்து பொருள் கொள்ளலாம். உக்கவர் - அழிந்தவர். சுடுநீறு - முற்பதிகத்தின் முதற்பாட்டுரையிற் 
பார்க்க. (ப. 211 பா.3) 'ஒளிமல்கு புனல் காவிரி' என்றது இன்றும் கண்கூடு. பூண்டு அணிந்து அவர் 
மேயது விளநகர் என்க. காவிரிப்புக்கவர் என்பது சிவபிரானைக் குறித்ததாகக் கொள்ளின், 
அணிந்து புக்கவர் என்க. 

    காவிரிப்புக்கவர்- காவிரி நீரிற் புகுந்து முழுகியவர். இது சிவபிரான் தீர்த்தம் அருளற்பொருட்டு
எழுந்தருளும் உண்மை குறித்தது. 'துயர்கெடுக' எனச் சங்கற்பஞ்செய்து திருநீறு பூசுதல் வேண்டும்.
துயர் - பிறவித் துன்பம். துயர்க்கெடு - பாசநீக்கம். துயர் கெடுக என்றார்க்கு இன்புறுக  என்றலும்
உட்கோளாகும். அவ்வின்பாக்கம்- சிவப்பேறு. இவ்விரண்டும் சேர்ந்ததே ஆன்மலாபமாகிய முத்தி.  
'பாசவீடும் சிவப்பேறும்' எனப் பயன் இருவகைப்படும். அவ்விரண்டனுள் பாசவீடாகிய பயனைப் 
பெறுமாறு உணர்த்து... தல் பயனோத்தின் முதற்பாதமாகிய இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்க. 
(சிவஞானபோதம், சூ. 10 மாபாடியம்). 

    'ஆன்மலாபம் இரண்டனுள் முடிவாய் எஞ்சி நின்ற சிவப்பேறு கூடுமாறுணர்த் ... துதல் 
பயனோத்தின் இரண்டாம் பாதமாகிய பதினோராஞ்சூத்திரத்தின் கருத்து என்க.  ‘ஆன்மலாபம் 
எனப்படும் பயன் இரண்டனுள் பாசநீக்கம் உணர்த்திய பின்னர்ச் சிவப்பேறு உணர்த்துதல் 
முறைமை' (மேற்படி சூ. 11). இவ்விரண்டும் 'சிவாயநம' என்று நீறணிந்தேன் என்று, 
'திருவருளால்' வந்த தேவாரத்தில் உள்ளன. 'துயர்கெடுப்பன் பூசுவெண்பொடி' என்றதால், 
பூசும்பொழுது திருவைந்து எழுத்தோதாது பூசுவது தகாது. மிக்கவர் -மேலான அடியவர் வழிபாடு - 
அருள் வழிபடுஞ் சிவதரிசனம் முதலியவை. 'நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம்
ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து  அருள்வழிபோதல்' வழிபாடு (திருவிளையாடற்புராணம்).

    Our Lord Civan wears over His body a garland made up of human skulls, snakes 
and also tortoise skull. He applies on His body the ashes of dead people. He is manifest 
in Thiru-vila-nagar temple. In this city the devotees take bath in the Cauvery river 
and apply holy ashes over their body and they worship our Lord. They pray to our Lord 
to get rid of their sufferings in their life.

2315.     வாளிசேரடங்கார்மதில்தொலைய நூறியவம்பின்வேய்த் 
    தோளிபாகமமர்ந்தவருயர்ந்ததொல்கடல்நஞ்சுடன் 
    காளமல்கியகண்டத்தர்கதிர்விரிசுடர்முடியினர் 
    மீளியேறுகந்தேறினார்மேயதுவிளநகரதே.        3

    வாளிசேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த் 
    தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல்கடல்நஞ்சு உண்ட 
    காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர், 
    மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது - விளநகர் அதே.

    vALI CEr aTagkAr matil tolaiya nURiya vampin vEyt 
    tOLi pAkam amarntavar, uyarnta tol kaTal nanjcu uNTa 
    kALam malkiya kaNTattar, katir viri cuTar muTiyinar,             
    mILI ERu ukantu ERinAr, mEyatu--viLanakar atE.

பொருள்:     படைக்கலன் வலிமை கொண்ட பகைவர்களின் மதில் சாம்பலாகுமாறு அழித்தவர்; 
புதிய மூங்கிலை ஒக்கும் தோளினை உடைய இறைவியைத் தன் மேனியின் ஒரு பாகமாக விரும்பியவர்; 
உயர்ந்ததும் பழமையானதுமாகிய பாற்கடலில் தோன்றிய நஞ்சுடன் கருமை நிறம் கொண்ட கண்டத்தர்; 
செவ்வொளி வீசுகின்ற முடியினை உடையவர்; வலிமை வாய்ந்த எருதினை வாகனமாக ஊர்ந்தவர் 
ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

குறிப்புரை:     வாளி- அம்பு. அடங்கார்- பகைவர். மதில்- மும்மதில். நூறிய- அழித்த. வம்பின் 
வேய்த்தோளி- புதிய மூங்கிலை ஒத்த தோள்களை உடைய உமாதேவியார். இரண்டு கணுக்கட்கும் 
இடைப்பகுதியே தோளுக்கு ஒப்பு. வம்பு- புதுமை. உயர்ந்த கடல். தொல் கடல் - பாற்கடல். 
நஞ்சு- விஷம். காளம்-  கருமை. மல்கிய - நிறைந்த. காளமல்கிய கண்டத்தர் - திருநீலகண்டர். 
கதிர் - செவ்வொளி. விரி -விரியும். சுடர்முடியினர்- நெருப்பைப் போலும் சடைமுடியுடையவர். அலரும்  
எரிசெஞ்சடை (பதி. 37). எரிதருசடை (பதி. 122) எரியார் சடை (பதி. 154) அனல்நிகர்சடை (பதி. 123) 
கனல் செய்தகமழ்சடை (பதி. 121) தீச்செய்தசடை (பதி. 119) நெருப்பினாற் குவித்தாலொக்கு நீள்சடை 
(தி.5 ப. 30. பா.7) நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை (மேற்படி 9) என்னும் திருமுறைச்சான்று 
கொண்டு இப்பொருள் எழுதப்பட்டது. மீளி - வலிமை, பெருமையுமாம். ஏறு  -விடை, எருது. உகந்து - 
விரும்பி, உயர்ந்து. மேயது - எழுந்தருளியிருப்பது.

    Our Lord Civan fitted the bow properly and completely destroyed the three
fortresses of the antagonists, the asuras. He has embedded His consort Uma Devi on
the left side of His body. Her shoulders are very attractive like the tender and new
bamboo poles. He imbibed the poison that came out of the ancient ocean; because of
the poison in side the throat His neck is dark blue in colour. His hair locks are 
broad and bright like glowing fire. He is pleased to use the strong white bull for 
His conveyance. This Lord is manifest in Thiru-vila-nagar.

2316.     கால்விளங்கெரிகழலினார்கையிலங்கியவேலினார் 
    நூல்விளங்கியமார்பினார்நோயிலார்பிறப்பும்மிலார் 
    மால்விளங்கொளிமல்கியமாசிலாமணிமிடறினார் 
    மேல்விளங்குவெண்பிறையினார்மேயதுவிளநகரதே.        4

    கால் விளங்கு எரி கழலினார், கை இலங்கிய வேலினார், 
    நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்) இலார், 
    மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார் 
    மேல் விளங்கு வெண்பிறையினார், மேயது - விளநகர் அதே.

    kAl viLagku eri kazalinAr, kai iLagkiya vElinAr,         
    nUl viLagkiya mArpinAr, nOy ilAr, piRappum(m) ilAr,
    mAl viLagku oLi malkiya mAcu ilA maNimiTaRinAr, 
    mEl viLagku veNpiRaiyinAr; mEyatu--viLanakar atE.

பொருள்:     காலில் வீரம் தோன்றும் கழலினை உடையவர்; கையில் விளங்கும் வேலினை 
உடையவர்; முப்புரி நூல் விளங்கும் மார்பினர்; நோகும் துன்பமிலார்; பிறப்பும் இலார். கருமை 
நிறம் மல்கிய, குற்றமற்ற நீலமணி போலும் மிடறினை உடையவர்; சென்னியின்மேல் விளங்கும் 
பிறையினை உடையவர்; ஆகிய இறையவர் மேவியது திருவிளநகரதே.

குறிப்புரை:     நூல்- பூணுநூல். நோய் (உம்) இலார் பிறப்பும் இலார் - நோகுந்துன்பமும் இல்லார் 
பிறத்தலும் இல்லார். மால் - கருமை. மால் விளங்கிய மிடறினார் - திருநீலகண்டர் . விளங்கு ஒளி 
மல்கிய மிடறு மாசிலா மணிமிடறு - குற்றம் இல்லாத நீலமணி போலும் மிடறு. அழகிய மிடறுமாம். 
மால் விளங்கு என்பதற்கு - இடமால் தழுவிய பாகம் (தி. 4 ப. 2 பா. 4; ப. 22 பா. 4; ப. 24 பா. 7: ப. 37 பா 7: 
ப. 40 ; பா.5; ப62; பா.8; ப. 66 பா 8; ப. 78 பா. 7; தி. 6 ப. 24 பா. 5) என்றும் கூறலாம்.

    Our Lord Civan has worn the warrior's trinket on His legs. He holds the trident 
in one of His hands. Over His body the sacred thread is conspicuous. He has no birth and 
no death and has no illness. His neck is dark blue in colour like the sapphire gem. 
It is very bright and conspicuous. He retains the bright white moon of the sky on 
His head. This Lord is manifest in the temple in Thiru-vila-nagar.

2317.     பன்னினார்மறைபாடினார்பாயசீர்ப்பழங்காவிரித் 
    துன்னுதண்டுறைமுன்னினார்தூநெறிபெறுவாரெனச் 
    சென்னிதிங்களைப்பொங்கராக்கங்கையோடுடன்சேர்த்தினார் 
    மின்னுபொன்புரிநூலினார்மேயதுவிளநகரதே.        5

    பன்னினார்,மறை, - பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித் 
    துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என; 
    சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்சேர்த்தினார்; 
    மின்னு பொன் புரிநூலினார்; மேயது - விளநகர் அதே.

    manninAr,-maRai,--pATinAr; pAya cIrp pazagkAvirit 
    tunnu taNtuRai munninAr, tU neRi peRuvAr ena; 
    cenni tigkaLaip pogku arA, kagkaiyOTu, uTan cErttinAr; 
    minnu pon purinUlinAr, mEyatu--viLa nakar atE.

பொருள்:     வேதங்களை ஆராய்ந்தவர்; வேதங்களைப் பாடினவர்; பரவிய பழமையான 
புண்ணிய காவிரி நதியின் குளிர்ந்த துறையை அணுகினவர்; தூநெறியாகிய சிவகதியைப் 
பெறுவாரென்று அறிவித்து, சென்னியில் பிறையையும் சினமிக்க அரவினையும் கங்கையுடன் 
சேர்த்தினவர்;  பொன்னால் ஆன பூணூல் அணிந்தவராகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

குறிப்புரை:     பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார். மறை இடை நிலை விளக்கு. பாய - பரவிய. 
சீர்க்காவிரி, பழங்காவிரி, காவிரித்துறை. முன்னினார் - அணுகினவர். தூநெறி - தூய (சிவ) கதி (பா.11). 
திங்களை அராவோடும் கங்கையோடும் உடன் சேர்த்தவர். ஓடு உடன் இரண்டும் ஒரு சேர நின்றதறிக.

    Our Lord Civan is the author of the four Vedas; He used to chant the songs 
of the Vedas in musical tone. On His head He wears the baby moon, the lady river 
Ganges and the snake, which is ferocious. He wears over His body the three-plaited 
sacred thread,which is as bright as gold. This Lord is manifest in the temple on the 
banks of the river Cauvery in the city of Thiru-vila-nagar. He graces His devotees 
who come and worship Him to enable them to become virtuous. The river Cauvery is 
widespread and has reputation in all the area and the city of Thiru-vila-nagar 
is situated on the bank of the river.

2318.     தேவரும்மமரர்களுந்திசைகள்மேலுளதெய்வமும் 
    யாவரும்மறியாததோரமைதியாற்றழலுருவினார் 
    மூவரும்மிவரென்னவும்முதல்வரும்மிவரென்னவும் 
    மேவரும்பொருளாயினார்மேயதுவிளநகரதே.        6

    தேவரும்(ம்),அமரர்களும், திசைகள்மேல் உள தெய்வமும், 
    யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால்-தழல் உருவினார்; 
    மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர் என்னவும், 
    மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது - விளநகர் அதே.

    tEvarum(m), amararkaLum, ticaikaL mEl uLa teyvamum, 
    yAvarum(m) aRiyAtatu Or amaitiyAl-tazal uruvinAr; 
    muvarum(m) ivar ennavum, mutalvarum(m) ivar ennavum, 
    mEva(a)rum poruL AyinAr; mEyatu--viLanakar atE.

பொருள்:     தேவர்கள், அமரர்கள், திசைகளின் மேலுள்ள பிற தெய்வங்கள் யாவராலும் 
அறிய ஒண்ணாதவர். அவர்கள் அறிய முடியாதபடி தழற்பிழம்பானவர்; முத்தொழிற்கும் கர்த்தராகிய 
மூவரும் இவரே என்னவும், மூவருக்கும் மேலாகிய முதல்வர் இவரே என்னவும் இம்மூவரும் அடைதற்கு 
அரிய பொருளாயினாரும் ஆகிய இறைவர் மேயது விளநகரதே.

குறிப்புரை:     தேவர் அமரர் என்பர் வெவ்வேறு எனல் காண்க. தேவர்-தெய்வமாவார். அமரர்-
மரணமில்லாதவர். அமரார் என்றிருந்தது. கால் குறைந்தது போலும், மரணமில்லாமையுடையவராய்த்
தெய்வமாகாதவர் அமரர். தெய்வமாகி மரணம் உடையார் தேவர். 'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்'
(தி.5 ப. 100 பா.3) என நுதலுந் தேவாரத்தால் தேவர்க்கு மரணம் உண்மை வெள்ளிடைமலை. 'செத்துச்
செத்துப் பிறப்பதே வென்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ' (தி. 5 ப. 100 பா. 2). திசைகள் மேல் உள
தெய்வமும் - அஷ்டதிக் பாலகர்களும் யாவரும் அறியாதது ஓர் அமைதி - 'ஏனையாவரும் எய்திடல் உற்று
மற்று இன்னது என்று அறியாத தேனை ... சிவனை... குறுகிலேன்' (திருவாசகம், திருச்சதகம்.42) 
மூவரும் இவரே எனவும் முதல்வரும் இவரே எனவும் மேவ அரும்பொருள் ஆயினார். இத்திருப்பாடலில் 
சிவபரத்துவம் உணர்த்தப்பட்டதறிக. மேவ - அடைய.

    The devas who are mortal deities; the amarars - immortal devas, one of the 18 
ganangals and the tutelary deities of the eight quarters, or regents of the eight points 
of the compass, cannot understand our Lord Civan. He looks like a supernal effulgence. 
The three mortal demigods or deities such as Brahma, Thirumaal and Rudran, they declare 
that Lord Civan is their chief Supreme Being. Our Lord Civa is such a rare, chief being. 
He is manifest in the temple in Thiru-vila-nagar.

2319.     சொற்றரும்மறைபாடினார்சுடர்விடுஞ்சடைமுடியினார் 
    கற்றருவ்வடங்கையினார்காவிரித்துறைகாட்டினார் 
    மற்றருந்திரள்தோளினார்மாசில்வெண்பொடிப்பூசினார் 
    விற்றரும்மணிமிடறினார்மேயதுவிளநகரதே.        7

    சொல் - தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார், 
    கல்-தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்
    மல்-தரும் திரள்தோளினார், மாசு இல் வெண்பொடிப் பூசினார்
    வில்-தரும் மணிமிடறினார், மேயது - விளநகர் அதே.

    col-tarum maRai pATinAr, cuTarviTum caTaimuTiyinAr, 
    kal-taru(v) vaTam kaiyinAr, kAvirit tuRai kATTinAr, 
    mal-tarum tiraL tOLinAr, mAcu il veNpoTip pUcinAr, 
    vil-tarum maNimiTaRinAr, mEyatu--viLa nakar atE.

பொருள்:     எழுதாக் கிளவியாகிய மறையைப் பாடினார்; செஞ்சுடர் வீசும் சடைமுடியினார்; 
செபமாலையைக் கொண்ட கையினார்; காவிரித் துறையைக் காட்டினார்; வலிய திரண்ட தோளினார்; 
தூய வெண் பொடியான திருநீறினைப் பூசினார்; ஒளி வீசும் நீல மணி மிடற்றினார் ஆகிய இறைவர் 
மேயது திருவிளநகரதே.

குறிப்புரை:     சொல்தரும் மறை- 'எழுதாக்கிளவி' யாதலின் கண்வழியே காணும் எழுத்தாலன்றிச், 
செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். 'சொற்றருமறை முதல் தொன்மை 
நூல் முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவருகுரவன்' (சிவபுண்ணியத்திரட்டு). 
கல்தருவடம்- செபமணி மாலை. தருவ்வடம்- வகரம் விரித்தல் விகாரம். மல்- வலிமை.
திரள்தோளினார் - பொடிப் பூசினார் - திருநீற்றை அணிந்தவர், ஒற்றுமிகை. வில்- ஒளி. தரும்மணி-
நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினை யாதலும் கூடும்.

    The ancient four Vedas were not written by hand by anybody. Our Lord Civan who 
was the author of all the four Vedas used to chant these. Those godly saints who heard His 
voice repeated it to other scholars. They used to repeat them to others and it went on 
through generations of scholars. That is why originally the Vedas are called "unwritten, 
very ancient maxims". His hair lock is bright. He holds in one of His hands the Rosary 
for silent recitation of mantras. His shoulders are extremely strong suitable for wrestling. 
His body is besmeared with the pure, white holy ashes. His neck is dark blue in colour 
like the sapphire gem. This Lord is manifest in the temple in Thiru-vila-nagar.

2320.     படர்தருஞ்சடைமுடியினார்பைங்கழலடி பரவுவார் 
    அடர்தரும்பிணிகெடுகென அருளுவாரரவரையினார்         
    விடர்தரும்மணிமிடறினார்மின்னுபொன்புரிநூலினார் 
    மிடறரும்படைமழுவினார்மேயதுவிளநகரதே.        8

    படர்தரும் சடைமுடியினார், பைங்கழல்அடி பரவுவார் 
    அடர்தரும் பிணி கெடுக எனஅருளுவார், அரவு அரையினார், 
    விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார், 
    மிடல் தரும் படைமழுவினார், மேயது -விளநகர் அதே.

    paTar tarum caTai muTiyinAr, paigkazal aTi paravuvAr 
    aTar tarum piNi keTuka ena aruLuvAr, aravu araiyinAr, 
    viTar tarum maNi miTaRinAr, minnu pon purinUlinAr, 
    miTal tarum paTaimazuvinAr, mEyatu--viLanakar atE.

பொருள்:     படரும் சடை முடியினார்; பசிய கழலை அணிந்த கழலடியைப் பணிவார்களுடைய 
வருத்தும் பிணிநோய்கள் கெடுக என அருளுவார்; பாம்பைக் கச்சாகக் கட்டிய அரையினார். விடம் 
தங்கிய கண்டத்தினர்; மின்னுகின்ற பொன்னால் ஆன முப்புரி நூலினர்; வெற்றியைத் தரும் 
மழுப்படையினர் ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

குறிப்புரை:     படர்தரும் - படரும். பைங்கழல் அடி- பசிய கழலை அணிந்த திருப்பாதம். 
ஒற்று விரித்தல் விகாரம். அடர்தரும்- தாக்கும். பிணிகெடுக என அருளுவார். 'துயர் கெடுக என' (பா.2)
இவ்வீரிடத்தும் வியங்கோள்வினையின் ஈற்றுயிர் கெட்டது. அரவு அரையினார் - பாம்பைக் கச்சாகக் 
கட்டிய திருவரையுடையவர். விடர் - மலைப்பிளப்பு. மலைகளில் மணி கிடைத்தல்பற்றிக் கூறியது.
மின்னுபொன்புரி நூலினார் (பா.5). 

    Our Lord Civan's disheveled hair locks are very broad and spread all over the body. 
These devotees come to the temple and prostrate at the holy feet of our Lord with devotion. 
Then our God graces them and destroys the afflictions caused to them. His waist is decorated 
with the snake around it. His neck has the luminosity of dark blue gem that comes out of the 
cracked rocks of the mountain. He has adorned His body with the three-plaited sacred thread. 
He holds in one of His hands the battle axe. That Lord is manifest in the temple in 
Thiru-vila-nagar.

2321.     கையிலங்கியவேலினார்தோலினார்கரிகாலினார் 
    பையிலங்கரவல்குலாள்பாகமாகியபரமனார் 
    மையிலங்கொளிமல்கியமாசிலாமணிமிடறினார் 
    மெய்யிலங்குவெண்ணீற்றினார்மேயதுவிளநகரதே.        9

    கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார், 
    பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார், 
    மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்
    மெய் இலங்கு வெண்நீற்றினார், மேயது - விளநகர் அதே.

    kai ilagkiya vElinAr, tOlinAr, kari kAlinAr, 
    pai ilagku aravu alkulAL pAkam Akiya paramanAr, 
    mai ilagku oLi malkiya mAcu ilA maNi miTaRinAr, 
    mey ilagku veN nIRRinAr, mEyatu--viLa nakar atE.

பொருள்:     கையில் விளங்கும் வேலினை உடையவர்; யானைத் தோலும் புலித்தோலும் 
தரித்தவர்; சர்வசங்கார காலத்தில் எல்லாம் எரிந்து கரியான பின்னும் தாம் ஒருவராக அழியாது 
நிற்பவர்; பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையைப் பாகமாக உடையவர்; கரிய ஒளி 
நிறைந்த குற்றமிலாத நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்; திருமேனிமேல் விளங்கும் 
வெண்ணீற்றினர்; அவ்விறைவர் மேவியது திருவிளநகரதே.

குறிப்புரை:     கை இலங்கிய வேலினார் (பா.4), தோலினார் கரிகாலினார் என்பது காலினார் 
கரித்தோலினார் என்றிருந்து பிறழ்ந்தது போலும். தோலினார் - யானைத்தோலும் புலித்தோலும் 
தரித்தவர். கரிகாலினார்- எல்லாம் வெந்து கரிந்து போகுஞ் சருவசங்கார காலத்தில் தாம் ஒருவரே 
அழியாது நிற்பவர் . கரிதல்- வெந்து கரியான காமன். கால்- காலம். பை - படம். பின்புறத்தில் 
 இடுப்பிற்கும் புறங்காலிற்கும் இடைப்பகுதி. படம் விரித்த பாம்பின் தோற்றம் இருத்தலால், 
அல்குலுக்கு அரவு ஒப்பாயிற்று. அல்குலைக் குறி எனல் குற்றம். திருமுறையில் அஃது ஒவ்வாது. 
மெய் - திருமேனி. உண்மையுமாம். உண்மையிலுள்ளது நீறு, சத்தியமாவது நீறு, தத்துவமாவது 
நீறு (பதி. 202).

    Our Lord Civan holds in one of His hands the shining battle axe. He wears on His 
waist the hide of animals. At the time of the universal deluge and destruction of all things 
in the world, our Lord Civan alone will be left over finally. He is the only Supreme Being 
not to be destroyed. Lord Civan has His consort Uma Devi on the left side of His body 
whose back beauty resembles the widespread hood of the snake. Our Lord's neck resembles 
the dark sapphire gem. He has smeared on His body the sacred bright holy ashes. This Lord 
is manifest in the temple in Thiru-vila-nagar.

2322.     உள்ளதன்றனைக்காண்பன்கீழென்றமாமணிவண்ணனும் 
    உள்ளதன்றனைக்காண்பன்மேலென்றமாமலரண்ணலும் 
    உள்ளதன்றனைக்கண்டிலாரொளியார்தருஞ்சடைமுடியின்மேல் 
    உள்ளதன்றனைக்கண்டிலாவொளியார்விளநகர்மேயதே.        10

    "உள்ள தன்தனைக் காண்பன், கீழ்” என்ற மா மணிவண்ணனும், 
    "உள்ளதன்தனைக் காண்பன் மேல்" என்ற மா மலர் அண்ணலும், 
    உள்ளதன்தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும் சடைமுடியின்மேல் 
    உள்ளதன்தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.

    "uLLatan tanaik kANpan, kIz" enRa mA maNivaNNanum, 
    "uLLatan tanaik kANpan, mEl" enRa mA malar aNNalum, 
    uLLatan tanaik kaNTilAr; oLi Artarum caTaimuTiyinmEl 
    uLLatan tanaik kaNTilA oLiyAr, viLanakar, mEyatE.

பொருள்:     (பாதாளம் ஏழினும்) கீழ் உள்ள பாதத்தைக் காண்பன் என்ற நீலமணி வண்ணனும் 
(எல்லாவற்றிற்கும்) மேலுள்ள முடியைக் காண்பன் என்ற தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் 
எங்கும் உள்ள தன்தனை (சிவபிரானை)க் கண்டிலர்; ஒளிதரும் சடைமுடியைச் சிரசின் மேல் உள்ள 
தன்தனை (எங்கும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் சிவபெருமானை ) கீழே காண்பன் என்றும், மேலே 
காண்பன் என்றும் திருமாலும் பிரமனும் உழன்றும் கண்டிலாத ஒளியராகிய சிவபிரான் 
மேயது திருவிளநகரே.

குறிப்புரை:     கீழ் உள்ளதைக் காண்பன் என்ற மாமணி வண்ணன்-திருமால்.  மேல் உள்ளதைக் 
காண்பன் என்ற மாமலர் அண்ணல் - பிரமன். இவ்வாறு கொள்ளாமல், எங்கும் உள்ள தன்னைக் கீழ் 
காண்பன் மேல் காண்பன் என்றதாக் கொள்ளுதல் சிறப்புடையது. வண்ணனும் அண்ணலும் 
கண்டிலார் என்க. உள்ளது + அன் + தன் + ஐ - உள்ளதன்றனை எனக் கொண்டு. சிவபிரானை 
என்று பொருளுரைத்தல் மிக்க பொருத்தமுடையதாம். ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் 
ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு என நீதி நூலும், உள்ளது - சத்து. சத்தெனவே 
அவிநாபாவமாகிய சிதாநந்தமும் பெறப்படும். சர்வ வியாபகவஸ்துவே உள்ளது எனப்பட்டது.

    The black-bodied Thirumaal, a tutelary deity asserted that he would see the 
holy feet of Lord Civan in the underworld. The other deity Brahma who stays in lotus 
flower asserted that he would see the holy head of Civan in the sky. But, they both 
could not see our Lord Civan's head or feet or body, He is the inner reality. None 
could see the bright baby moon and other things retained by our Lord Civan on His 
head. For He took the form of supernal effulgence unobserved by anyone, inclusive 
of these two demigods. He, however, is manifest in the temple in Thiru-vila-nagar 
to enable His devotees to come to the temple and worship Him.

2323.     மென்சிறைவண்டியாழ்முரல்விளநகர்த்துறைமேவிய 
    நன்பிறைநுதலண்ணலைச்சண்பைஞானசம்பந்தன்சீர் 
    இன்புறுந்தமிழாற்சொன்னஏத்துவார்வினை நீங்கிப்போய்த் 
    துன்புறுந்துயரம்மிலாத்தூநெறிபெறுவார்களே.        11

    மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய 
    நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன், சீர் 
    இன்புஉறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப் போய், 
    துன்புஉறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே.

    men ciRaivaNTu yAzmural viLanakart tuRai mEviya 
    nan piRai nutal aNNalaic caNpai njAnacampantan, cIr 
    inpu uRum tamizAl conna EttuvAr, vinai nIgkip pOy, 
    tunpu uRum tuyaram(m) ilAt tUneRi peRuvArkaLE.

பொருள்:     மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ்போல முரலும் திருவிளநகர்த் 
துறையில் இருக்கும் அழகிய பிறை அணிந்த நெற்றியை உடைய அண்ணலைச் சண்பை
(சீகாழி) ஞானசம்பந்தன் சீரும் இன்பமும் உடைய தமிழால் சொன்ன திருப்பாடல்களைப் பாடி 
வணங்குவார் தம்முடைய வினைகள் நீங்கி அகன்றுபோய், துன்புறுத்தும் துயரம் இலராய் 
தூநெறி பெறுவார்கள்.

குறிப்புரை:     வண்டுகள் யாழோசையைச் செய்கின்ற துறை என்று வளங்கூறப்பட்டது. சண்பை- 
சீகாழிப் பெயர்களுள் ஒன்று. சீர் இன்பு - சீரும் இன்பமும். துன்பு உறும் துயரம் - துன்பமும் அடையும் 
துயரமும். அண்ணலைச் சொன்னவற்றை ஏத்துவார் தூநெறி பெறுவார்கள்.

    Our Lord Civan is manifest in the temple near Cauvery riverbed. Here the beetles with 
tender wings make musical noise. The noise resembles lute's music. Here our Lord retains 
the baby moon on His head. Our saint Thiru-gnana-Sambandar was born in Shanbai. He chanted 
these ten verses in perfect and meticulous Tamil words. Those devotees who can memorise and 
chant these verses will get rid of their bad karma and the resulting agony. They will 
also enter the pure celestial world.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            78ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 78th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 215                    பதிக எண்: 79

79. திருவாரூர்                        79. THIRU-AAROOR

பண் : காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருவாரூர் என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் -
திருத்துறைப்பூண்டி தொடர்வண்டிப் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையம். மயிலாடுதுறை, 
தஞ்சை, காரைக்கால் முதலிய பல நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இது சோழநாட்டுக் 
காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்தேழாவது திருத்தலம் ஆகும்.

    இவ்வூர் மிகப் பழமை வாய்ந்தது. இச்செய்தியை, 'திருவினாள் சேர்வதற்கு முன்னோ 
பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே' என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரப் பகுதியால் 
அறியலாம். இவ்வூரில் பூங்கோயில், அரநெறி, பரவையுண் மண்டளி என்னும் மூன்று பாடல் பெற்ற 
கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள் புற்றிடங்கொண்டார் (வன்மீக நாதர்) எழுந்தருளியிருக்கும் 
திருக்கோயிலே பூங்கோயில் எனப் பெயர் பெறும். இதுவே திருமூலட்டானம் எனவும் வழங்கப் 
பெறும். இதற்கு முப்பத்துநான்கு திருப்பதிகங்கள் இருக்கின்றன.

    அரநெறி, நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட 
திருக்கோயிலாகும். இச்செய்தியைத் திருநாவுக்கரசு பெருந்தகையார் இவ்வூர்த் திருவிருத்தத்தில் 
'நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே' எனச் சிறப்பித்துள்ளனர். இது, கோயில் 
திருவிசைப்பாப் பதிகம் பாடிய கண்டராதித்த சோழ தேவரது மனைவியாராகிய செம்பியன் 
மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. இதற்கு அப்பர் அருளிய பதிகங்கள் இரண்டு 
உள்ளன. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக இருக்கின்றது.

    பரவையுள் மண்டளி, பரவை நாச்சியார் தமது மாளிகையின் ஒரு பகுதியில் மண்ணால் 
சிறுகோயில் கட்டி, அதில் இறைவனை எழுந்தருளுவித்து நாளும் வழிபட்ட கோயிலாகும். இது 
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற சிறப்புடையது. இது தெற்குக் கோபுரத்திற்கு அண்மையில் 
இருக்கின்றது (ஒரு காலத்து வருணன் இந்நகர்மீது அனுப்பிய கடலை உண்டமைபற்றி இத்தலத்து 
பரவையுண் மண்டளி என்னும் பெயரெய்தியது என்றும் கூறுபவர்).

    ஆக, இத்தலத்திற்கு முப்பத்தேழு பதிகங்களும் வேறு திருமுறைகளில் பல பாடல்களும் 
இருக்கின்றன. இத்தலத்தின் தேரும், திருவிழாவும், திருக்கோயிலும், திருக்குளமும் இவ்வூர்
தேவாரங்களில் வைத்துப் பாடப்பெற்றுள்ளன. திருக்குளமும் திருக்கோயிலும், செங்கழுநீர் ஓடையும் 
தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன. பிறக்க முத்தி தருவது, தியாகேசர்   எழுந்தருளிய ஏழுவிடங்கத் 
தலங்களுள் முதன்மை பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவித் தலமாயுள்ளது. திருமகளால் 
பூசிக்கப் பெற்றது. இங்குள்ள தேவாசிரிய மண்டபத்திலிருந்த  அடியவர்களைக் கண்டுதான் 
சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை அருளினார்.  அவர் விருத்தாசலத்தில் 
மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை மிகப்பெரிய கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து 
எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்த பழம்பதி இதுவேயாகும். அவர் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் 
சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை 
'அடியேற்கு எளிவந்த தூதனை' என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் 
ஒருகண் பெற்ற அவர், 'மீளா அடிமை' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு 
கண்பார்வையும் பெற்றது இத்தலத்தில்தான். நமிநந்தி அடிகள்  செருத்துணை நாயனார், 
தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் இவர்கள் முத்தி 
பெற்றதும் இப்பதியிலேதான்.

    இத்தலம் சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாகும்.
 ஒரு குலத்துக்கு ஒரு மகன் உள்ளான் என்பதையும் ஓராது ஓரான்கன்றுக்காகத் தன் மகனது உயிரைப் 
போக்கிய மனுநீதிச் சோழன் ஆண்டதும் இப்பதியேதான். 'திருவாரூர்ப் பிறந்தார்கள் 
எல்லார்க்கும் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியிருப்பதால் 
இப்பதியின் பெருமையை அளவிடுவார் யார் ? இதை விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும். 
பெரியபுராணத்தில் உள்ள திருவாரூர்ச் சிறப்பு என்னும் பகுதி படித்து இன்புறுதற்குரியதாகும். 

    திருவாதிரைத் திருவிழா, பழங்காலத்தில் இவ்விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. 
அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டு களித்து, அதன் சிறப்பை ‘முத்து விதானம்’ என்று தொடங்கும் 
ஒரு தனித் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்குக் கூறி அருளியிருக்கின்றார்கள். 
பங்குனி உத்திரத் திருவிழா இது மாசி மாதம் அத்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி உத்திர 
நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும் திருவிழாவாகும். இவ்விழா நினைவிற்கு வரவே ஒற்றியூரிலிருந்த 
சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து திருவாரூருக்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம் 
கூறுகின்றது. அதனால் இவ்விருவிழாக்களும் பழங்கால முதல் நடந்துவரும் சிறப்புடையனவாதலை 
நன்கறியலாம்.

    பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர்கள் வன்மீகநாதர், 
புற்றிடங்கொண்டார், திருமூலட்டானநாதர். இறைவியாரின் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை அம்மை.
யோகநிலையில் தனிக்கோயிலில் கமலாம்பிகை எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் 
தியாகராசர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றவர். பிறகு  அவரால்
 இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கர வர்த்திக்கும் அளிக்கப்பெற்றது. அந்த முசுகுந்த 
சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப் பெற்றவர். மார்கழி திருவாதிரையும் பங்குனி 
உத்திரமும் இவரை வழிபடற்குரிய சிறந்த நாள்கள் என்று அறிஞர்கள் உரைத்துள்ளனர்.

    இவர் எழுந்தருளியிருக்கும் இடம் தேவசபை என்றும், இவருக்குத் தென்றல் காற்று வரும் 
கல்சன்னல் திருச்சாலகம் என்றும், இவருக்குரிய கொடி தியாகக்கொடி என்றும், இவருடைய தேருக்கு 
ஆழித்தேர் என்றும், இவரை எழுந்தருளப்பண்ணும் பிள்ளைத் தண்டுகள் திருவாடுதண்டு, மாணிக்கத்தண்டு 
என்றும் பெயர் பெற்றுள்ளன. இவர் சந்நிதியில் நந்திதேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இத்தலத்து 
வழிபாட்டுக் காலங்களுள் திருவந்திக் காப்பு மிக்க விசேடமுடையது. இவருடைய நடனம் அஜபா நடனம், 
புயங்க நடனம் எனப் பாராட்டப்படும். ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகள் தருமை ஆதீனத்தை நிறுவிய 
ஸ்ரீ குருஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்த அருள்மிகு சித்தீச்சரம் திருக்கோயில் ஆலயத்தின் வடபால் 
உள்ளது. தலவிநாயகர் வாதாபி விநாயகர்.

1. திருவாரூர் மும்மணிக்கோவை- இது அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் 
பெருமாள் நாயனாரால் இயற்றப்பெற்றது. பதினோராந் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாய்         
விளங்கும் சிறப்புடையது.

2. கமலாலயச் சிறப்பு - இது சிதம்பரம் மறைஞான சம்பந்தரால் இயற்றப்பெற்றது. 

3. திருவாரூர்ப் புராணம் - நிரம்ப அழகிய தேசிகருடைய மாணாக்கராகிய அளகைச் சம்பந்தர் 
என்பவரால் செய்யப்பெற்றது.

4. திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பெற்றது.            

5. தியாகராச லீலை -திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் 
இயற்றப்பெற்றது. இது முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.

6. திருவாரூர் நான்மணிமாலை - இதை அருளியவர் குமரகுருபர சுவாமிகள்.

7. தியாகராசப் பள்ளு - இதை ஆக்கியோர் பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியிருந்த கமலை
ஞானப்பிரகாசர் ஆவர்.

8. திருவாரூர்ப் பன்மணி மாலை- இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாத
தேசிகரால் ஆக்கப்பெற்றது.

9. திருவாரூர் ஒரு துறைக்கோவை- இது வெறிவிலக்கு என்னும் ஒரு துறையை வைத்துக்
கொண்டு நானூறு பாடல்களால் ஆக்கப் பெற்றதொரு நூல். இதன் ஆசிரியர் கீழ்வேளூர்க்
குருசாமி தேசிகர் என்பர்.

10. திருவாரூர்க் கோவை- இது எல்லப்ப நயினார் என்னும் புலவரால் பாடப்பெற்ற சொற்சுவை
பொருட்சுவை நிரம்பிய நூல்.

11.கமலாம்பிகை பிள்ளைத் தமிழ்- தருமை ஆதீனத்து அடியார் கூட்டங்களில் ஒருவராய் 
விளங்கியிருந்த சிதம்பர முனிவரால் இயற்றப்பெற்றது.

    இவைகளன்றித் திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை முதலான நூல்களும், காளமேகப் 
புலவர் முதலானோரின் தனிப்பாடல்களும் இருக்கின்றன. கமலாலயத்தின் வடகிழக்கு மூலையில் 
மாற்றுரைத்த பிள்ளையாரின் திருக்கோயில் இருக்கின்றது. 'திருவாரூர்த் தேரழகு' என்னும் 
உலக வழக்கு இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும். தலப்பெருமையை விளக்கும் புராணப் 
பாடல் ஒன்று பின்வருமாறு:

    'திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா 
    ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி 
    விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால் 
    இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ'

                    -திருவாரூர்ப் புராணம் தலமகிமைச் சுருக்கம்

பதிக வரலாறு

    திருவாரூரிற் புற்றிடங்கொண்டருளும் பொற்றியாகராசரைத் திருநீற்றடைவே
மெய்ப்பொருளின்ப வாழ்வு என்று அறிந்து, அநுபவித்து விளங்கும் திருத்தொண்டர்களுடன்
இருந்தருளி, வழிபட்டுவருந் திருஞான சம்பந்த சுவாமிகள், திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும்
திருநாவுக்கரசு சுவாமிகளைக் காண விரும்பினார்கள். ஆரூர்ப்புறத்தே போந்தார்கள். 
போந்ததும் ஆரூரையே நோக்கி நின்றார்கள். திருப்புகலூர் வருக என்று அழைக்கின்றது. 
திருவாரூர் செல்லவொட்டாது தடுக்கின்றது. பிள்ளையார் உள்ளம், இடையில் ஒன்றும் துணியாது 
நிற்கின்றது. அந்நிலையை நோக்கி, அவ்வுள்ளத்தை அறிவுறுத்தும்போது, அவம் இல்லாத 
நெஞ்சமே !  நீ அஞ்சாதே. உய்யும்வகையை உணர்வாய் நீ, செம்பொற் புற்றின் மாணிக்கச் 
செழுஞ்சோதியை நேர்தொழும் சீலத்தை மறவாதே, தொழுதெழுந்து வழிபடு என்றருளியவராய்ப் 
பாடியது இத்திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2324.     பவனமாய்ச்சோடையாய்நாவெழாப்பஞ்சுதோய்ச்சட்டவுண்டு             
    சிவனதாள்சிந்தியாப்பேதைமார்போலநீவெள்கினாயே 
    கவனமாய்ப்பாய்வதோரேறுகந்தேறியகாளகண்டன் 
    அவனதாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        1

    பவனம்ஆய், சோடைஆய், நா எழா,பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு. 
    சிவன தாள் சிந்தியாப் பேதைமார், போல, நீ வெள்கினாயே? 
    கவனம் ஆய்ப் பாய்வதுஓர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன் 
    அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    pavanam Ay, cOTai Ay, nA ezA, panjcu tOyccu aTTa uNTu, 
    civana tAL cintiyAp pEtaimAr pOla, nI veLkinAyE? 
    kavanam Ayp pAyvatu Or ERu ukantu ERiya kALa kaNTan
    avanatu ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சமே! பிராணன் மேல் வாங்கி, நாவற்றி, நீரினையும் உட்கொள நாவெழாது, 
பஞ்சில் தோய்த்துப் பிழிந்ததை உண்டு, மரணமுறுங் காலத்தில் சிவனடியைச் சிந்திக்க இயலாத 
அறிவிலிகளைப் போல நீ நாணம் கொண்டாயே! கவனமாய்ப் பாய்கின்ற ஏறின்மீது உகந்து ஏறிய 
நீலகண்டனது திருவாரூரைத் தொழுது உய்யலாம்; திருவாரூரைத் தொழப் பெறாமல் உயிர் 
கழியுமோ என மயக்கம் கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     நெஞ்சே! மரணமுறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும் பாக்கியமில்லாத 
அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல் ஏறிவந்தருளும் திருநீலகண்டப் 
பெருமானுடைய திருவாரூரைத் தொழுது உய்யலாகும், மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத் 
தொழப்பெறாதே கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே மீண்டும் போந்து தொழப்பெறலாம் 
என்பது கருத்து. கொண்டு அஞ்சேல் என்பது காரணப் பொருட்டாய் வினையெச்சம். கொண்டு 
என்பது அஞ்சு என்னும் முதனிலை கொண்டது. பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு 
உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது மேல்மூச்சு வாங்குகின்றது என்ற வழக்கினாலும் 
அறியப்படும். நாக்கு உலர்ந்து போம். சோடை - வறட்சி. நாக்கு உலர்ந்து போதலோடு அதன்கண் 
எய்தும் உணவை உட்செலுத்த எழமாட்டாமலும் போம். நா எழாது என்பதில் துவ்விகுதி கெட்டது. 
ஒருமையாதலின் வல்லெழுத்து மிக்கது. பன்மையாயின், 'காக்கை கரவா கரைந்துண்ணும்' 
(குறள் 527) என்பது போன்று இயல்பாகும். நாவானது பால் முதலியவற்றை உட்செலுத்தமாட்டாது 
(வலி குன்றியது) பற்றி, அருகில் இருப்பவர் அப்பாலையோ பிறிதொருணவையோ பஞ்சில் 
தோய்த்து உட்புகுமாறு பிழிவர். அப்பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப் 
பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை அறியாதே உட்செலுத்தப் பெறுவர். 
பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிந்தியாப்பேதைமார் என்க. தோய்த்து என்பதன் மரூஉ. தோய்ச்சு 
என்பது போலி என்பாருமுளர். காய்தல் முதலியவும் இவ்வாறு மருவியுள. சிவன் + அ= சிவன. 
ஆறனுருபு. தாளிரண்டாதலின் பன்மையுருபு நின்றது. 'நுனகழலினை’ (திருவிசைப்பா 7). 
அட்ட - பிழிந்து ஒழுக்க.  கவனம்- விரைவு. கண்டனவன் எனப் பிரிக்காமல் கொள்வதே பொருத்தம். 
பிரித்துச் சுட்டுதல்.  வேண்டாதது. உய்யலாம் மையல் என்க. மையல் கொண்டஞ்சல் உய்யலாம் 
என்பாருமுளர். பேதைமார்  போலாமையை  'அவமிலா நெஞ்சமே' (பெரிய புராண. 518) எனச் 
சேக்கிழார் சுவாமிகள் விளக்கியது உணர்க. 

    "There is nothing new in death", this is a line in Pura Naanooru sung by Kaniyan 
Poongundranar. Our saint Thiru-gnana-Sambandar explains in detail the moment of death for 
human beings. The human body struggles and has long breathing just before death and reaches 
a dry stage. The movement of the tongue stops due to dryness in the tongue and around it. 
The near and dear ones - the bystanders near the dying man used to squeeze small cotton 
balls soaked in milk into the mouth of the dying body. Just at the moment of death the 
ignorant person is unable to think in his mind the holy feet of our Lord Civan. 
Oh! my dear heart and mind! you are afraid whether this kind of stage will come to you
also at the time of your death. With sincere devotion, you may think of our Lord Civan 
who is manifest in Thiru-aaroor and who sustains the bull, which runs galloping, for His 
conveyance. You may go to Thiru-aaroor and worship our Lord Neelakandan there. By 
worshipping Him at Thiru-aaroor you will never get any doubt or vagueness in your mind. 
And you can definitely ensure salvation.

2325.     தந்தையார்போயினார்தாயரும்போயினார்தாமும்போவார் 
    கொந்தவேல்கொண்டொருகூற்றத்தார்பார்க்கின்றார்கொண்டுபோவார் 
    எந்தநாள்வாழ்வதற்கேமனம்வைத்தியாலேழைநெஞ்சே 
    அந்தணாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        2

    தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும் போவார்; 
    கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார், கொண்டு போவார்; 
    எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழைநெஞ்சே! 
    அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    tantaiyAr pOyinAr; tAyarum pOyinAr; tAmum pOvAr; 
    konta vEl koNTu oru kURRattAr pArkkinRar, koNTu pOvAr; 
    enta nAL vAZvataRkE manam vaittiyAl? Ezai nenjcE! 
    anthaN ArUr thozuthu uyyalAm maiyalkoNtu anchal nenjcE.        

பொருள்:     நெஞ்சமே! தந்தையரும் தாயரும் இறந்து போயினர்; அனைவரும் ஒருகாலத்தில் 
இறந்து போவதற்கு உரியவரே! உயிரைக் கொத்திக் கொண்டு போவதற்கு வேல் கொண்டு 
கூற்றுவன் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றான். எந்த நாள் வாழ்வதற்கு நீ மனம் 
வைத்துள்ளாய்? ஏழை நெஞ்சே! எவ்வுயிர்க்கும் செந்தண்மை கொண்டுள்ள ஆரூரைத் தொழுது 
உய்தி பெறலாம், மையல் கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     தந்தையர் தாயர் என்பன பலர்பால். தாமும் போவார் என்னும் பன்மை நோக்கி 
நின்றன. கொந்த - குத்த. 'கொந்தி அயில் அகல் அம்பால் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து' (பெரிய. 
கண்ணப்பர். 145). எரிய என்றுமாம். 'கொந்தழல்' (சிந். 1499).கூற்றத்தார் - இயமதூதர். (உடம்பும் 
உயிரும் கூறுபடுதலைச் செய்பவர்). கொண்டு போவாராய்ப் பார்க்கின்றனர். வைத்தி - வைப்பாய்? 
எந்த நாள் வாழ்வதற்கு மனம் வைத்தி என்று வினாவியருளினார். மனம் வாழாத நெஞ்சம் எனப்படும். 
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே, 
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பலகாலும். வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே 
என்பது திருவாசகம். வாழ்க்கை, உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உண்மை உரைத்தேன் 
விரதம் எல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழாநெஞ்சே (தி. 6 ப. 42 பா. 10) என்றதிற் குறித்தது. 
தம்முன்னோர் எல்லாரும் இறந்தவாறே தாமும் இறப்பது திண்ணம். மாய்க்க மறலிதூதர் 
சித்தமாயுள்ளனர். இறப்பு அண்மையில் இருக்கிறதென்றால், இறவாமல் என்றும் வாழ்வதற்கு 
எந்தநாள் மனம் வைப்பாய்? வாழ்வது-திருவடி நிழலில் அழியாத இன்பத்தைத் துய்த்துக் 
கொண்டிருப்பது. ஆரூர் தொழுது உய்யலாம். நெஞ்சே மையல் கொண்டு அஞ்சாதே. முதலாவது 
விளி அதன் போக்கை உணர்த்த. இரண்டாவது விளி அதற்கு அபயம் அளிக்க.

    Oh my poor mind! My father died. My mother died. I will also one day die. The 
servants of Yama (god of death) holding spears wait to plunge them into our body so as to 
remove the soul. Like this our life is transitory. Oh my dear mind! when are you going to 
choose deathless life? Do not get frightened due to your delusions. Be calm. If you go to 
Thiru-aaroor and prostrate before the holy feet of our Lord in Thiru-aaroor known as 
Vanmeekanathar, you are sure to get salvation, shed your fear, if you worship our Lord 
in Thiru-aaroor you can get deliverance (i.e.) deathlessness with perfect awareness 
of our Lord. 

2326.     நிணங்குடர்தோல்நரம்பென்புசேராக்கைதான்நிலாயதன்றால் 
    குணங்களார்க்கல்லதுகுற்றநீங்காதெனக்குலுங்கினாயே 
    வணங்குவார்வானவர்தானவர்வைகலும்மனங்கொடேத்தும் 
    அணங்கனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        3

    நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்; 
    குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே? 
    வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு ஏத்தும் 
    அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    niNam, kuTar, tOl, narampu, enpu, cEr AkkaitAn nilAyatu anRAl; 
    kuNagkaLArkku allatu kuRRam nIgkAtu enak kulugkinAyE? 
    vaNagkuvAr vAnavar tAnavar vaikalum manamkoTu Ettum 
    aNagkan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!        

பொருள்:     தசை,குடர், தோல், நரம்பு, எலும்பு ஆகியவற்றால் யாக்கப்பட்ட இவ்வுடம்பு 
நிலையிலாதது; நல்ல குணங்கள் உடையவர்களுக்கு அல்லாமல் பிறவியாகிய குற்றம் நீங்காது 
என நடுக்கம் கொண்டாயே; வணங்குவாராய் தேவர்கள், அசுரர்கள் முதலியோர் நாள்தோறும் 
(உடலால் மட்டுமன்றி) மனத்தாலும் தொழுது ஏத்தும், கடவுளின் ஆரூர் தொழுது உய்யலாம்; 
மயக்கம் கொண்டு அஞ்சற்க நெஞ்சே!

குறிப்புரை:     யாக்கை (கட்டப்பட்டது, உடம்பு). ஆக்கை என்று ஆயிற்று. யகரமெய் 
முதலிற்கொண்ட சொற்கள் அதனை ஊர்ந்த ஆ முதலாய் வழங்கப்படுதல், யாறு - ஆறு. 
யாமை - ஆமை. யாய் - ஆய். யாண்டு- ஆண்டு. யானை – ஆனை முதலியவற்றிற் காணப்படும். 
நிலாயது - நிலாவியது. குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போடுயிரிடை நட்பு            
 (குறள் 338). நல்ல குணங்களுடையார்க்கே குற்றம் நீங்கும். அல்லாதார்க்கு (தீய குணங்களை 
அடைவார்க்கு)க் குற்றம் நீங்காது. குலுங்கினாய்- நடுங்கினாய். சுராசுரர் எல்லாரும் நாடோறும் 
வணங்குவராய் மணம் (தூபம் முதலியவற்றைக்) கொண்டு ஏத்தும் கடவுள். மனம் என்ற பாடம் 
கழகப் பதிப்பில் உளது. மனம் கொடு - தியானித்து. அணங்கு- தெய்வத்தன்மை. அணங்கன் - 
சிவபிரான். குணம், குற்றம் இரண்டும் உடைமை குறிக்கச் சுராசுரரைக் குறித்தார்போலும்.

    The human body is made up of fats, intestines, skin, veins, nerves etc. 
As and when age advances all these parts get deteriorated gradually. Therefore 
one should not think that, one came into existence in this body permanently. 
People of good character get rid of all their suffering in their life, whereas 
people of bad character cannot get rid of their sins. This thought makes, you shiver. 
The devas, asuras and all other celestials come to Thiru-aaroor and prostrate before 
our Lord there. With such good devotion they pray and lead good life. If you worship 
with sincere devotion the Lord of Thiru aaroor - Vanmeekanathar, you can get salvation. 
Do not get frightened by delusions and illusions in your mind.

2327.     நீதியால்வாழ்கிலைநாள்செலாநின்றனநித்தநோய்கள் 
    வாதிய ஆதலால்நாளுநாளின்பமேமருவினாயே 
    சாதியார்கின்னரர்தருமனும்வருணனுமேத்துமுக்கண் 
    ஆதியாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        4

    நீதியால் வாழ்கிலை; நாள் செலாநின்றன. நித்தம் நோய்கள் 
    வாதிய; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
    சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
    ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    nItiyAl vAzkilai; nAL celA ninRana, nittam nOykaL 
    vAtiya; AtalAl nALum nAL inpamE maruvinAyE?                 
    cAti Ar kinnarar tarumanum varuNanum Ettu mukkaN 
    Ati ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சமே! நீ நீதி வழியே வாழவில்லை; ஆதலால் உன் வாழ்நாட்களும் நோய்கள் 
வாதித்து வீணே கழிகின்றன; இன்பத்தை நீ பொருந்தினாயோ? நற்சாதியார், கின்னரர், இயமன், 
வருணன் முதலியோர் தொழுது ஏத்தும் மூன்று கண்களையுடைய முதல்வரின் திருவாரூரைத் 
தொழுது உய்யலாம்; மயக்கம் கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     நெஞ்சே, நீதிவழியே வாழவில்லை, காலம்பல வீணே கழிகின்றன.         
நாளும் நோய்கள் வருத்தா. நோய்கள் வாதியா நாள் செலா நின்றன என்று கொண்டு 
கூட்டறிக. வாதியா- வாதித்து. வருத்தி. இதற்கு வாதிப்பனவாயின என்றுரைப்பது 
எவ்வாறு? நாளும். நாளும் இன்பத்தையே பொருந்தினாய். சாதி- குலம். ஆர் - பொருந்திய. 
கின்னரரும் தருமனும் வருணனும் வழிபட்டனரென்று குறித்தார். ஆதியாரூர் என்றது 
காவிரி நாட்டிடைத் தொன்மையில் மிக்கது. திசையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ 
பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே என்ற கருத்தைக் குறித்தது. ஆதியின்
ஆரூர் என்றலுமாம். ஆதி பாதமே ஓதி உய்ம்மினே (தி. 1 ப. 90 பா.3).

    My dear mind! You have not led your life as per morality and right conduct. 
You have lived sufficiently for long periods. Almost everyday in your life various 
diseases troubled you and gave you all kinds of uncomfortableness. You, therefore 
everyday very much liked to have sensual enjoyments. One of the demigods who was 
a celestial musician, Kinnarar is supposed to have the figure of a man, and the 
head of a horse; Dharuman, is the deity of justice and righteousness described 
as placing four feet on the earth in golden age, three in the silver, two in the 
bronzen and one in the iron age. Varuna is the deity (demigod) of the ocean and 
of the maritime tracts, also of rains, these and many others worship and praise 
our Lord who is the most ancient Supreme Being in Thiru-aaroor. He has a third 
eye in His forehead. If you also worship Him with sincere devotion you can get 
atonement and be freed from the pain caused by various diseases. Keep this in mind 
and do not get frightened by delusions.

2328.     பிறவியால்வருவனகேடுளஆதலாற்பெரியஇன்பத் 
    துறவியார்க்கல்லதுதுன்பநீங்காதெனத்தூங்கினாயே 
    மறவல்நீமார்க்கமேநண்ணினாய்தீர்த்தநீர்மல்குசென்னி 
    அறவனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        5

    பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத் 
    துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே?
    மறவல், நீ மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி 
    அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    piRaviyAl varuvana kETu uLa AtalAl, periya inpat 
    tuRaviyArkku allatu tunpam nIgkAtu enat tUgkinAyE? 
    maRaval, nI! mArkkamE naNNinAy; tIrtta nIr malku cenni 
    aRavan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சமே! பிறப்பினால் இறப்பாகிய கேடும் வரும்; ஆதலால் உலகத்தைத் 
துறந்தவர்க்கே துன்பம் நீங்கும்; துறவாதவர்க்குத் துன்பம் தொலையாது, என்று உளம் சோர்ந்தனையே! 
நீ ஆரூரை மறவாதே! சன்மார்க்கத்தையே பொருந்தினாய்! கங்கையாகிய தீர்த்தம் நிறைந்த 
சென்னியனாகிய  அறவனுடைய ஆரூரைத் தொழுது உய்யலாம்; மயக்கங்கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     அவமிலா நெஞ்சம் (பெரிய. திருஞா. 518) உயிர்க்குப் பிறத்தலும் இறத்தலும் 
பெருந்துன்பங்கள். மற்றையெல்லாத் துன்பங்களும் அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால் 
உண்டாவதே. 'தோற்றம் உண்டேல் மரணம் உண்டு' (தி.7 பா. 63). பிறந்தால் பிணிப்பட 
வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான் 
(தி. 4 ப. 20 பா. 8). கெடுவது இப்பிறவி சீசீ (தி. 4 ப. 76 பா. 10). துறவு வீடு பேரின்பத்தைக் 
கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும் கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும். 
ஆதலின், பிறவியால் கேடு வருவன உள. ஆதலின் துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம் 
நீங்காது என்று சோர்ந்தது நெஞ்சு. தூங்குதல்- சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச் 
சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (மறவாதே). மார்க்கமே நண்ணினாய் - 
சன்மார்க்கத்தினையே சேர்ந்தாய். மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர் (சித்தியார்) 
என்புழிப்போல் நின்றது. தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் 
நலங்கொடுக்கும் நம்பி (தி. 6 ப. 20 பா. 6)யாயிருத்தலாலும் தயாமூலதன்மவழி எனக்கு நல்கி 
மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண் என்றதில் அடியார்க்கு நல்கும் தயாமூலதன்மவழி 
யுடையனாதலாலும் அறவாழி அந்தணன் சிவனே. அறப் பெருஞ்செல்வி சிவையே.                
அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய அறத்தின் ஏகதேசமே ஏனையோர் பால் இருப்பது. 
பிறவி அறுப்பீர்காள், அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே என்றதை (தி. 1 ப. 91 பா.2). 
மறவல் நெஞ்சமே (தி.1 ப.90 .பா. 8). என்பதனோடு ஒப்பு நோக்கி உணர்க. மறவன் என்று பிரிப்பது 
மறமன்றி அறமாகாது.

    My dear mind! Birth in this world brings only harm. You languish in your mind 
thinking that ascetic people who wish to have eternal bliss alone will get rid of their 
suffering. You should never forget about our Lord Civan. You may follow the footsteps 
of great, wise people. Our Lord Civan, the sea of all virtue, supports the river Ganges 
in His matted hair. So go to Thiru-aaroor and worship our Lord and praise
Him, you can get redemption. Do not get frightened by your delusions.

2329.     செடிகொள்நோயாக்கையம்பாம்பின்வாய்த்தேரையாய்ச்சிறுபறவை 
    கடிகொள்பூந்தேன்சுவைத்தின்புறலாமென்றுகருதினாயே 
    முடிகளால்வானவர்முன்பணிந்தன்பராயேத்துமுக்கண் 
    அடிகளாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        6

    செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின்வாய்த் தேரையாய்ச் சிறுபறவை 
    கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே? 
    முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்து முக்கண் 
    அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    ceTi koL nOy Akkai am pAmpin vAyt tEraiyAyc ciRupaRavai         
    kaTi koL pUntEn cuvaittu inpuRal Am enRu karutinAyE? 
    muTikaLAl vAnavar mun paNintu, anparAy Ettum mukkaN 
    aTikaL ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal nenjcE!

பொருள்:     பாவத்துக்கும் துன்பத்துக்கும் ஏதுவான துர்நாற்றம் உள்ள உடம்பினால் 
இன்பம் அடையலாம் என்பது, பாம்பின் வாயில் உள்ள தேரை, அதன் வாயில் உள்ள வண்டு,  
அவ்வண்டின் வாயில் உள்ள தேன்துளியைச் சுவைத்து உண்ணலாம் எனக் கருதுவது ஒக்கும்; 
அத்தகைய உடலின்பத்தை விரும்பினாயே! தலை பெற்றதன் பயனாக வானவர்கள் முடி 
சாய்த்து அன்பராய்த் தன்முன் பணிந்து வழிபடும் மூன்று கண்களையுடைய சுவாமிகளின் 
ஆரூரினைத் தொழுது உய்யலாம்.  மயக்கங்கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     செடி- பாவம், துன்பம், தீ நாற்றமுமாம் (தி. 2 ப. 93 பா. 2) (தி. 6 ப. 82. பா.7 ) 
(திருவாலவாயுடையார் புராணம் 54-19).நோயையுடைய யாக்கை (பா. 3). ஐம்பாம்பு என்ற பாடமே
மதுரை- ஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பதிப்பிலுள்ளது. அம்பாம்பு என்ற பாடம் சிறவாது.
பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் 
ஒற்றியூருடைய கோவே (தி.4 ப. 47 பா. 1). பாம்பின் வாயில் தேரை, தேரையின் வாயில் சிறு பறவை 
(வண்டு) அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும் 
அச்சிறுபறவைக்கும். அதை உண்ணும் தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால் 
எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும் உவமை. உயிர்கள் விரும்பும் 
உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த 
பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற் செலுத்தாமையால், அடையப் பெறாத உண்மை 
யின்பத்தின் பெருமையும் உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு 
பெருங்கேடு யாக்கையின் செடி கொள் நோய். நோய் பாம்பைக் கொல்லும், பாம்பு தேரையைக் 
கொல்லும். தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில் பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு, 
தேன்றுளியால் முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன.  
இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி. நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன் உட்கோள்.

    ‘அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகங் காண 
    இடிகிணற் றறுகின் வேரைப் பற்றிநான் றிடஅவ் வேரைக் 
    கடுகார் எலியும் வந்து கறித்திட அதில்நின் றோனுக் 
    கிடைதுளி தேன்நக் கின்பம் போலும் இப்பிறவி யின்பம்'

    'கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம் 
    விண்ட நாகத்தின் வாயினில் வெருண்டவன் றேரை 
    மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி 
    வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்'

என்னும் தனிப்பாடல்களையும் 'வனப்பாழ்ங்கிணற்றுள் வெம்பாம்பு பற்றும் விடத் தேரை 
வாய்வண்டு தேன் வேட்டல் போல் விரித்துக் கொடுபோய்விட்.. கூற்றை எண்ணாது எண்ணும் 
வேட்கையெல்லாம் விட...    அரங்கன் திருத்தாளில் விழுநெஞ்சமே' (திருவரங்கத் தந்தாதி 93) 
என்பதையும் துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தனக்கு 
உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும் நினையாமல் இன்பத்தையே மேன்மேல் 
அவாவும் பேதைமையியல்புக்கு .... கானகத்தில் நீரற்ற பாழ்ங் கிணற்றிலே பாம்பின் 
வாய்ப்பட்டு நஞ்சு தலைக்கு ஏறிய தேரையின் வாயில் அகப்பட்டதொரு வண்டு தேனை 
விரும்புதலை உவமை கூறினார் என்றும் அதன் விளக்கத்தையும் நோக்கி உணர்க. 
இதற்குப் பிறர் எழுதியது பொருந்துமா என்று ஆய்க.

    The human body, a stone house of sins and agony, smells of offensive odour, 
the five-headed snake catches the toad with its mouth, the toad catches the beetle 
with its mouth. The beetle just before being swallowed by the toad thinks it is going 
to enjoy the honey from the sweet smelling flower. In a similar manner man desires
to enjoy worldly pleasures. The devas, as usual, bow their heads piously before our 
Lord in Thiru-aaroor, and praise Him who has a third eye in His forehead. Oh my dear
man! (or mind), if you follow the devas and with sincere devotion worship Lord Civan,
you can also get redemption. Do not get frightened by your illusions.

2330.     ஏறுமால்யானையேசிவிகையந்தளகமீச்சோப்பிவட்டில் 
    மாறிவாழுடம்பினார்படுவதோர்நடலைக்குமயங்கினாயே 
    மாறிலாவனமுலைமங்கையோர்பங்கினர்மதியம்வைத்த 
    ஆறனாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        7

    ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி, வட்டின் 
    மாறி வாழ் உடம்பினார் படுவதுஓர் நடலைக்கு மயங்கினாயே? 
    மாறு இலா வனமுலை மங்கை ஓர்பங்கினர், மதியம் வைத்த 
    ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    ERu mAl yAnaiyE, civikai, antaLakam, IccOppi, vaTTin 
    mARi vAz uTampinAr paTuvatu Or naTalaikku mayagkinAyE? 
    mARu ilA vanamulai magkai Or pagkinar, matiyam vaitta 
    ARan, ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal,nenjcE!

பொருள்:     நெஞ்சமே! மீதூர்கின்ற பெரிய களிறு, சிவிகை, கவசம், ஈச்சோப்பி முதலிய
ஆரவாரங்களைக் கண்டு, மாற்றுகின்ற சட்டையைப் போன்று மாறுகின்ற உடல் ஆகிய
பொய்க்கு மயக்கம் கொண்டாயே! உமையம்மையைப் பங்கில் கொண்டவர். பிறையையும்
கங்கை ஆற்றையும் உடையவரின் திருவாரூரைத் தொழுது உய்யலாம். மயக்கங்கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     ஏகாரம் எண்ணுப் பொருட்டு, சிவிகை- பல்லக்கு.  அந்தளகம் - கவசம் 
(தமிழ் லெக்ஸிகன்  பக். 82). ஈச்சோப்பி - ஈயோட்டி. விருது என்றாருமுளர். வட்டின்மாறி வாழ்
உடம்பு - உடையை மாற்றுவது போல் உடம்பினை மாற்றுவது, அவ்வுடம்பினை எடுக்கச் செய்யும் 
வினைப்பயனாக உயிர்க்கு நிகழ்வது.  வட்டு - உடை. வட்டின் - வட்டுப்போல. உடம்பில் மாறி 
வாழ்தல் ஆவது எடுத்த உடம்பினை விடுத்துப் புதியதோருடம்பிற்புகுதல். யானை, சிவிகை, 
அந்தளகம், ஈச்சோப்பி என்பவற்றை உடையவர் அருள் வாழ்வு பெறாராயின், அழியாத பேற்றை 
அடைவாரல்லார். மாறி வாழ் உடம்பினாரேயாவர். அவர் அந்நடலையே படுவர். நடலை- பொய். 
அதை நன்று என்று மயங்கிப் பற்றின் பிறவி தொலையாது, அல்லியங் கோதையார் பாகராகிய
தியாகராயரைத் தொழுது பிறவித் துன்பத்தினின்றும் உய்தி அடையலாம்.  நெஞ்சே மையல் 
கொண்டு அஞ்சாதே என்க. செல்வராயிருந்தபோது யானைமீதும் சிவிகை மீதும் சென்றவர்,            
வறியரானபோது, ஈயோட்டும் இழி நிலையும் உண்ணும் வட்டில் மாறும் நிலையும் அடைவது 
பற்றிக் கூறியதாகக் கொள்ளலும் பொருந்தும்.

    Oh my dear heart! The big elephant just before starting for a procession 
changes its palanquin, armors (coat of mail), banner and other dresses. Like this 
human beings in their various rebirths get different kinds of physical appearance 
according to the place of birth, religion, caste etc. In every such birth you always 
get perturbed by distress in your life due to ignorance. Our Lord Civan, manifest 
in Thiru-aaroor, is concomitant with His consort Uma Devi, the most incomparable
beauty with graceful breasts. Our Lord retains the baby moon and supports the 
river Ganges - both on His matted hair. If you worship this Lord with sincere 
devotion you can get atonement. Do not get frightened by your mental delusions.

2331.     என்பினாற்கழிநிரைத்திறைச்சிமண்சுவரெறிந்திதுநம்மில்லம் 
    புன்புலால்நாறுதோல்போர்த்துப்பொல்லாமையான்முகடுகொண்டு 
    முன்பெலாமொன்பதுவாய்தலார்குரம்பையின்மூழ்கிடாதே 
    அன்பனாரூர்தொழுதுய்யலாம்மையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        8

    என்பினால் கழி நிரைத்து, இறைச்சிமண் சுவர் எறிந்து - இது நம் இல்லம் - 
    புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு, 
    முன்புஎலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே
    அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    enpinAl kazi niraittu, iRaicci maN cuvar eRintu-itu nam illam- 
    pun pulAl nARu tOl pOrttu, pollAmaiyAl mukaTu koNTu, 
    munpu elAm onpatu vAytal Ar kurampaiyil mUzkiTAtE, 
    anpan ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சமே! நம்முடைய இவ்வுடல் என்புகளாகிய கழிகளை வரிசையாக வைத்து 
நரம்புகளால் கட்டி, மாமிசமாகிய மண்ணைக் குழைத்துச் சுவராக எறிந்து அப்பி, புலால் நாற்றமுடைய 
 தோலினை மேற்கூரையாகப் பொலிவின்றிப் போர்த்து அமைத்த குடிசையாகும். முன்னால் ஒன்பது 
வாயில்களைக் கொண்ட இக்குடிசையில் கவர்ச்சி கொள்ளாதே! அன்பனின்  திருவாரூரைத் தொழுது 
உய்யலாம். மயக்கங்கொண்டு அஞ்சாதே! 

குறிப்புரை:     எறிந்து - நீளக்கட்டி. முகடு - மேல்மூடு. ஒன்பது வாய்தல் - நவத்துவாரம். குரம்பை- 
உடற்குடில் (தி.4 ப.33 பா.4). அன்பன் - சிவபிரான். அன்பே சிவம், கால்கொடுத்தெலும்பு....கூரை 
(தி.4 ப. 67 பா. 13). ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து 
தாம் எடுத்த கூரை (தி.6 ப. 12 பா. 1). முகடு என்பது மூடு என மரூஉவாகும். ஒன்பது வாய்தல் - 
புழுப்பெய்த பண்டிதன்னைப் புறம் ஒரு தோலான் மூடி ஒழுக்க அறா ஒன்பது வாய் ஒற்றுமை 
ஒன்றும் இல்லை.  ( தி.4 . ப .5 பா.2). குரம்பை - (தி. 4 ப. 31 பா. 2, 3). புலால் கமழ்பண்டம் 
(தி. 4 ப. 67 பா. 8).

    Oh my dear mind! Our living place called 'Illam' is our physical body. 
This body is made up of pole-like bones; the walls are made of the flesh of the body; 
to cover the flesh, the insignificant skin, emitting bad smell, similar to meat is 
used; the top of the body is made up of a bad, thatched cover. Our body from the 
beginning has had nine openings. Do not involve yourself fully to nurture this body 
tenderly. Instead if you worship our Lord in Thiru-aaroor who always graces you, you 
will get atonement. Do not get frightened by delusions.

2332.     தந்தைதாய்தன்னுடன்தோன்றினார்புத்திரர்தாரமென்னும் 
    பந்தநீங்காதவர்க்குய்ந்துபோக்கில்லெனப்பற்றினாயே 
    வெந்தநீறடியாராதியார்சோதியார்வேதகீதர் 
    எந்தையாரூர்தொழுதுய்யலாமையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        9

    தந்தை, தாய்,தன்னுடன் தோன்றினார். புத்திரர், தாரம், என்னும்
    பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே? 
    வெந்தநீறுஅடியார், ஆதியார், சோதியார், வேதகீதர்
    எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    tantai, tAy, tannuTan tOnRinAr, puttirar, tAram, ennum 
    pantam nIgkAtavarkku, uyntupOkku il enap paRRinAyE? 
    venta nIru aTiyAr, AtiyAr, cOtiyAr, vEta kItar, 
    entai ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சமே! தந்தை, தாய், உடன்பிறந்தோர், மக்கள், மனைவி என்னும் 
பற்றினை விட்டு நீங்காதவர்களுக்கு உய்யும் வழி இல்லை என்று உள்ளத்தில் ஆரூரனின் 
திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டாய். சுட்டநீற்றினைப் பூசியவர், முதல்வர், 
சோதியார்  மறையைப் பாடியவர், எம்முடைய தந்தையாரின் ஆரூரைத் தொழுது 
உய்யலாம். மயங்கி அஞ்சற்க.

குறிப்புரை:     நெஞ்சே, நீ அஞ்சாதே, தந்தை, தாய், சகோதரர், புத்திரர், மனைவி என்னும் 
பற்று நீங்காதவர்க்குப் பிறவித் துன்பத்தினின்றும் உய்தி அடையும் உபாயம் இல்லை என்று 
தெளிந்து திருவாரூர்த் தியாகராசப் பெருமான் திருவடியே கதி எனப் பற்றிக் கொண்டாய். 
ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டாய். தந்தையார் தாயாருடன் பிறந்தார், தாரமார் 
புத்திரரார் தாந்தாமாரே. வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமா மிதற்கேது மகிழ வேண்டா.         
சிந்தையீருமக்கொன்று சொல்லக் கேண்மின், திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ்சென்னி 
யெந்தையார் திருநாம நமச்சிவாய வென்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்கலாமே. உடலைத் 
துறந்து உலகேழுங் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து உய்யப் போயிடலாகும். 
சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே. (தி.6 ப. 93 பா. 10), (தி. 4 ப. 112 பா.2).

    Oh my dear mind! One's own father, mother, brethren, one's children, wife, 
these are the worldly relationships. Those who are not freed of their bondage and 
earthly attachment to these relations will not get atonement. You better understand 
this fact. If you worship our Lord Civan who is manifest in Thiru-aaroor with sincere
devotion you can attain salvation. Our Lord has smeared His body with holy ashes; 
He is the oldest in the universe. He is the supernal effulgence; He used to chant 
the Vedic songs; He is our own Supreme Being. Do not get frightened by delusions 
of your mind.

2333.     நெடியமால்பிரமனும்நீண்டுமண்ணிடந்தின்னம் நேடிக்காணாப்
     படியனார்பவளம்போலுருவனார்பனிவளர்மலையாள்பாக 
    வடிவனார்மதிபொதிசடையனார்மணியணிகண்டத்தெண்டோள் 
    அடிகளாரூர்தொழுதுய்யலாம்மையல்கொண்டஞ்சல்நெஞ்சே.        10

    நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம் நேடிக் காணாப் 
    படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர் மலையாள் பாக 
    வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து எண்தோள் 
    அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

    neTiya mAl piramanum, nINTu maN iTantu, innam nETik kANAp 
    paTiyanAr; pavaLam pOl uruvanAr; pani vaLar malaiyAL pAka 
    vaTivanAr; mati poti caTaiyanAr; maNi aNi kaNTattu eNtOL
    aTikaL; ArUr tozutu uyyal Am; maiyal koNTu anjcal, nenjcE!

பொருள்:     நெஞ்சே! நெடிய மால் திருவடியைக் காண மண்ணை இடந்தான்; பிரமன் 
வானில் திருமுடியைக் காண நீண்டு பறந்தான். இருவரும் காண இயலாத பண்பினர். 
பவளத்தைப் போன்ற சிவந்த நிறத்தவர். இமய மலையில் வளர்ந்த மலையரசன் மகளைப் 
பாகமாகக் கொண்ட வடிவினர். பிறை பொலிந்த சடைமுடியினர். நீலமணி போலும் அழகிய
கண்டனார். எட்டுத் தோளினர். இத்தகைய சுவாமிகளது ஆரூர் தொழுது உய்யலாம்.
மயக்கங்கொண்டு அஞ்சற்க.

குறிப்புரை:     நெடிய மால் மண் (பூமியை) இடந்தான் - பேர்த்தான் பிரமன் (வானில் உயர) 
நீண்டான், பறந்தான், நீண்டு. இடந்து இன்னம் நேடிக் காணப்பாடியனார் என்க. படி - பண்பு.         
உருவம் எனில் ஈண்டுந் தீப்பிழம்புருவம் ஆகும். இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் 
இவன் இறைவன்  என்று எழுதிக் காட்டொணாதே (தி. 6 ப. 97 பா. 10) என்பதில் காட்சிக்குரியது 
எனல் உணர்க. பாகவடிவு-  அர்த்தநாரீச்சுரரூபம். மணி - நீலரத்நம். 

    Oh my dear mind! Do you know that the tutelary deity Thirumaal who took the 
shape of the tallest being started digging the earth in pig's form to see the holy 
feet of our Lord while Brahma took the shape of a swan and flew over the universe 
to see our Lord's holy head. But they both failed in their efforts. Our Lord Civan 
is the illustrious Chief Supreme Being; the beauty of His form is like red coral. 
His consort Parvathi Devi is on the left side of His body. She is the daughter 
of the Himalayan King; He retains the baby moon on His head; His neck is very 
charming like sapphire, He has eight shoulders. If you go to Thiru-aaroor and 
prostrate at the holy feet of our Lord Civan and worship Him with sincere devotion, 
you can have salvation.Do not get frightened by your mental delusions. 

2334.     பல்லிதழ்மாதவியல்லிவண்டியாழ்செயுங்காழியூரன் 
    நல்லவேநல்லவேசொல்லியஞானசம்பந்தனாரூர் 
    எல்லியம்போதெரியாடுமெம்மீசனையேத்துபாடல் 
    சொல்லவேவல்லார்தீதிலாரோதநீர்வையகத்தே.        11

    பல்இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன் 
    நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் -ஆரூர் 
    எல்லிஅம்போது எரிஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் 
    சொல்லவே வல்லார், தீது இலார், ஓதநீர் வையகத்தே.

    pal itaz mAtavi alli vaNTu yAz ceyum kAzi Uran- 
    nallavE nallavE colliya njAnacampantan--ArUr 
    elli ampOtu eri ATum em Icanai Ettu pATal 
    collavE vallAr, tItu ilAr, Ota nIr vaiyakattE.        

பொருள்:     பல இதழ்களையுடைய மாதவி, அல்லி முதலிய மலர்களில் மொய்த்து வண்டு 
யாழ்போல முரல் செய்யும் சீகாழியூரன், நல்லன நல்லனவே சொல்லும் ஞானசம்பந்தன் ஆரூரில் 
இரவுப் போதில் எரியாடும் என ஈசனை ஏத்திப் பாடிய பாடல்களைச் சொல்ல வல்லவர் இந்தக் 
கடலால் சூழப்பெற்ற உலகத்தே தீதிலராக வாழ்வர்.

குறிப்புரை:     யாழ் - யாழொலியை. நல்லவே நல்லவே என்ற அடுக்கும் ஏகாரமும் ஆசிரியர் 
திருவாய் மலர்ச்சியின் எய்தும் ஆன்மலாபத்தை உறுதிப்படுத்தி நின்றன. ஒழுக்கம் உடையவர்க்கு 
ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற்சொலல் (குறள். 139) என்றதனுரையில் பரிமேலழகர் எழுதிய 
தாற்பரியம் ஈண்டுக் கருதற்பாலது. எல்லியம்போது - இரவு. ஓதம் - கடல் வையகத்தே பாடல் 
சொல்ல வல்லவர் தீது இலர் என்க. இத்திருப்பதிகம் நித்திய பாராயணத்திற்கு உரியனவற்றுள் 
ஒன்றாகும்.

    Our saint Thiru-gnana-Sambandar is a native of Seerkaazhi city. In this city, 
the madhavi vine and the delightful bottle flower of the woods are plenty. Among the 
petals of this flower, which are many in number, the beetles make noise like lute and 
suck honey from the flowers and enjoy it. Thiru-gnana-Sambandar who used to chant 
repeatedly virtues in his songs reached the temple in Thiru-aaroor and praised 
Lord Civan manifested there. Our Lord used to dance on the burning ghat and this 
is His avocation. Our Thiru-gnana-Sambandar chanted these ten songs praising our     
Lord Civan. Those devotees who can memorise and chant these ten verses and worship 
our Lord are people of great wisdom and they will have no blemishes in their life
in this world.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            79ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 79th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 216                    பதிக எண்  80.

80.திருக்கடவூர்மயானம்                    80.THIRUK-KADA-OOR-MAYAANAM

பண்: காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருக்கடவூர் மயானம் என்னும் இத்திருத்தலமானது சிவபெருமான் ஒரு கல்பத்தில் 
பிரமதேவரை எரித்து, நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை 
அருளிய தலமாதலின் மயானம் என்னும் பெயர் எய்திற்று என்பர். இதை இக்காலம் 
மெய்ஞ்ஞானம் என்று மக்கள் வழங்குகின்றனர். இது திருக்கடவூர்க்குக் கிழக்கே 2 கி. மீ. 
தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நாற்பத்தெட்டாவது ஆகும்

    எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர். 
இவ்வூரில் திருக்கடவூர் - வீரட்டானம், திருக்கடவூர் - மயானம் என்னும் இரு (தேவாரம் பெற்ற) 
தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் திருக்கடவூர் மயானம் என்பது பற்றியது ஈண்டுத் 
தரப்பட்டுள்ளது. இறைவரது திருப்பெயர் பெரிய பெருமான் அடிகள், பிரமபுரீசர். 
இறைவியாரது திருப்பெயர் மலர்க்குழல் மின்னம்மை. காசிதீர்த்தம். இதிலிருந்துதான் 
திருக்கடவூர் வீரட்டானேசுவரருக்கு   நாடோறும் திருமஞ்சனம் கொண்டு வரப்படுகிறது. 
பங்குனி மாதம் சுக்கிலபட்சம் அசுவதி நட்சத்திரத்திலே இத்தீர்த்தத்தில் 
மக்கள் மிகுதியாக வந்து நீராடுகின்றனர். பிரமதேவர் பூசித்தது.  இது மூவர்களாலும் 
பாடப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று. சுந்தரர் 
பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. 

பதிக வரலாறு

    காழியார் வாழவந்தருளிய மறைவேந்தர் திருநாவுக்கரசு நாயனாரொடு திருஅம்பர் 
மாகாளம் முதலியவற்றை வழிபட்டுத் தொண்டர்களோடு திருக்கடவூரை அடைந்து, காலனை 
உதைத்த கால்மலர் வணங்கிச் 'சடையுடையான்' எனத் தொடங்கிப் பாடிப் பரவி அரிதிற்போந்து 
நண்புடைய குங்கிலியக்கலய நாயனார் திருமனையடைந்து விருந்தமர்ந்த நாளில் 
திருமயானத்தையும் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்.

2335.     வரியமறையார்பிறையார்மலையோர்சிலையாவணக்கி 
    எரியமதில்களெய்தாரெறியுமுசலமுடையார் 
    கரியமிடறுமுடையார்கடவூர்மயானமமர்ந்தார் 
    பெரியவிடைமேல்வருவாரவரெம்பெருமானடிகளே.        1

    வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி 
    எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார், 
    கரிய மிடறும் உடையார் - கடவூர் மயானம் அமர்ந்தார்; 
    பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

    variya maRaiyAr, piRaiyAr, malai Or cilaiyA vaNakki 
    eriya matilkaL eytAr, eRiyum mucalam uTaiyAr, 
    kariya miTaRum uTaiyAr-kaTavUr mayAnam amarntAr; 
    periya viTaimEl varuvAr avar emperumAn aTikaLE.

பொருள்:     சிரேட்டமான மறைகளையுடைய வேதியர்; பிறை சூடியவர்; மேருமலையை ஒரு 
வில்லாக வளைத்து சாம்பலாகுமாறு மும்மதில்களை எய்து எரித்தவர்; வீசும் உலக்கையை உடையவர்; 
நீலகண்டர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பித் தங்கினார்; பெரிய எருதின்மேல் வருவார்; 
அவர் எம்பெருமான் அடிகளாவார். 

குறிப்புரை:     வரிய மறையார் - வரிகளை உடைய வேதியர். வரிய - சிரேட்டமுடைய எனலும் 
பொருந்தும். மலையை ஒரு சிலையாக வணக்கி என்க. சிலை - வில். வணக்கி - வளைத்து. மதில்கள் 
எரிய எய்தவர். எறியும் முசலம் - வீசும் உலக்கை. மிடறு - கழுத்து.

     Our Lord Civan is the author of the ancient four Vedas in musical tone. He 
retains the baby moon on His matted hairlocks. Once upon a time He removed the Meru 
mountain from its original place and used it as His bow. With this bow He shot an arrow 
on the three flying fortresses in the sky belonging to the asuras. These asuras were 
afflicting intolerable misery on the devas. The arrow carrying at its tip an extraordinary 
strong effulgence burnt the three fortresses completely. Our Lord at times used a big iron 
bar shaped as a weapon in ancient warfare. At times He used to keep it in His hand. His neck 
is dark blue in colour like the sapphire. He is manifest in the temple of Thiruk-kada-oor-
mayaanam. He used to ride on His big bull and moves around. He is our Chief Lord and Preceptor.

2336.     மங்கைமணந்தமார்பர்மழுவாள்வலனொன்றேந்திக் 
    கங்கைசடையிற்கரந்தார்கடவூர்மயானமமர்ந்தார் 
    செங்கண்வெள்ளேறேறிச்செல்வஞ்செய்யாவருவார் 
    அங்கையேறியமறியாரவரெம்பெருமானடிகளே.        2

    மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக் 
    கங்கை சடையில் கரந்தார் -கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    செங்கண் வெள்ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார், 
    அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.

    magkai maNanta mArpar, mazuvAL valan onRu Entik 
    kagkai caTaiyil karantAr--kaTavUr mayAnam amarntAr; 
    cegkaN veL ERu ERic celvam ceyyA varuvAr, 
    am kai ERiya maRiyAr avar emperumAn aTikaLE.

பொருள்:     உமையம்மையை இடப்பாகத்தில் உடையவர்; மழுவாயுதத்தை வலக்கையில் 
ஏந்தியவர்; கங்கையாற்றின் பெருவெள்ளத்தைச் சடையில் மறைத்தவர்; திருக்கடவூர் மயானத்தில் 
விரும்பித் தங்கினார்; சிவந்த கண்ணையுடைய வெள்ளேறு ஏறி அடியார்களுக்குத் திருவருட்காட்சி 
அளித்து வருவார்; அங்கையில் தங்கிய மான்மறியை உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவார்.

குறிப்புரை:     மங்கை மணந்த மார்பர் - உமாதேவியாரை இடப்பால் உடையவர். மார்பு இடப்பக்கத்து. 
‘போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த ... அண்ணல்', வலன்- வலக்கையில். 
கரந்தோர்- மறைத்தார். செல்வம் - அடியார்கட்குத் திருவருட் காட்சி கிடைக்கும் பாக்கியம். செய்யா - 
செய்து. மறி - மான்கன்று (பா. 5). அதை ஏந்தியதால் அங்கை ஏறிய மறியார் என்றார்.

    Our Lord Civan is manifest in the temple in the city called Thiruk-kada-oor mayaanam. 
He has embedded His consort Uma Devi on the left side of His body. He carries a battleaxe 
in His right hand. He supports the river Ganges in His matted hairlocks and conceals her. 
It is a divine vision, rich too, when He rides on the white and red eyed bull to move about. 
He holds in His charming hand a deer. He is our Lord and the Chief Supporter.

2337.     ஈடலிடபமிசையஏறிமழுவொன்றேந்திக் 
    காடதிடமாவுடையார்கடவூர்மயானமமர்ந்தார் 
    பாடலிசைகொள்கருவிபடுதம்பலவும்பயில்வார்
    ஆடலரவமுடையாரவரெம்பெருமானடிகளே.        3

    ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி, 
    காடு அது இடமா உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்: 
    பாடல் இசை கொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
     ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.

    ITu al iTapam icaiya ERi, mazu onRu Enti,
    kATu atu iTamA uTaiyAr-kaTavUr mayAnam amarntAr, 
    pATal icai koL karuvi paTutam palavum payilvAr,
    ATal aravam uTaiyAr avar emperumAn aTikaLE.

பொருள்:     தனக்கு நிகர் வேறு இல்லாத இடபத்தின் மேலேறி, மழுவாயுதம் ஒன்றேந்தி, 
இடுகாட்டினைத் தன் இடமாகக் கொண்டவர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பி அமர்ந்தார்; 
இசைகொளப் பாடுவார்; கருவிகள் இசைப்பார்; கூத்துப்பலவும் ஆடுவார்; ஆடுகின்ற அரவத்தை 
உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவர்.

குறிப்புரை:     ஈடு + அல்= ஈடல். தன்னொடு பிறிதொன்று ஒப்பு அல்லாத இடபம். காடது இடமாக 
உடையவர். பாடல் இசை - பாடுதலில் இசை. படுதம் - கூத்து. 'பாகம் உமையோடாகப் படிதம் பல பாட'
(பதி. 198 பா.4) என்பதில் 'படிதம்' என்றுள்ளதறிக.

    Our Lord Civan, known in this place as Brahmapureeswarar is manifest in the 
temple in Thiruk-kada-oor-mayaanam. He moves about riding on an incomparable bull. 
He carries a battleaxe in one of His hands. He uses the burning ghat as His place 
of avocation. He used to chant the songs of Vedas etc., in musical tone with related 
instruments and dances. He is our Lord and Chief Supporter.

2338.     இறைநின்றிலங்குவளையாளிளையாளொருபாலுடையார் 
    மறைநின்றிலங்குமொழியார்மலையார்மனத்தின்மிசையார் 
    கறைநின்றிலங்குபொழில்சூழ்கடவூர்மயானமமர்ந்தார் 
    பிறைநின்றிலங்குசடையாரவரெம்பெருமானடிகளே.        4

    இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார், 
    மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்மிசையார் - 
    கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.

    iRai ninRu ilagku vaLaiyAL iLaiyAL orupAl uTaiyAr, 
    maRai ninRu ilagku moziyAr, malaiyAr, manattin micaiyAr- 
    kaRai ninRu ilagku pozil cUz kaTavUr mayAnam amarntAr; 
    piRai ninRu ilagku caTaiyAr avar emperumAn aTikaLE.

பொருள்:     முன்கையில் வளையல்கள் உடையவளாகிய இளமங்கை உமையை ஒருபாகமாக 
உடையவர்; வேத மொழிக்குப் பொருளாயிருப்பவர்; மயக்கம் இல்லாத அடியவருடைய  மனத்தில் 
இருப்பவர்; கரிய நிறம் தங்கிய பொழில்கள் சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தவர்; பிறை 
தங்கி விளங்கும் சடையை உடையவர். அவர் எம் பெருமான் அடிகளே.

குறிப்புரை:     இறை- முன்கை. வளையாள்- வளையலையுடையவள். இளையாள் - தேவியாரைக் 
குறித்தவை. மறை....மொழி யார்- வேதவாக்கியப் பொருளாயுள்ளவர். மலையார் - மலைத்தல் இல்லாதவர். 
தெளிந்தவர். அவர் மனத்தின் மிசையார். மனம் ஊர்தி. சிவபிரான் - ஊர்பவர். 'அன்பர் மனமாங்குதிரை'. 
கறை - கறுப்பு நிறம். மரச்செறிவால் இருள்மிக்க சோலை.

    Our Lord Civan retains His consort Uma Devi on the left of His body. She wears 
bangles in her forearms, very bright and prominent. She is a young and tender and 
good-looking goddess. He is the author of the four Vedas and used to chant them. 
He is manifest in the minds of great saints of good wisdom. His avocation is to be 
present at the dark burning ghat surrounded by thick dark forests. On His matted hair 
retains the moon. He is our Lord and Chief Supporter.

2339.     வெள்ளையெருத்தின்மிசையார்விரிதோடொருகாதிலங்கத் 
    துள்ளுமிளமான்மறியார்சுடர்பொற்சடைகள் துலங்கக் 
    கள்ளநகுவெண்டலையார்கடவூர்மயானமமர்ந்தார் 
    பிள்ளைமதியமுடையாரவரெம்பெருமானடிகளே.        5

    வெள்ளை எருத்தின்மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத் 
    துள்ளும் இளமான்மறியார், சுடர் பொன்சடைகள் துலங்கக் 
    கள்ளம் நகுவெண்தலையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    பிள்ளைமதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.

    veLLai eruttin micaiyAr, viri tOTu oru kAtu ilagkat 
    tuLLum iLamAn maRiyAr, cuTar pon caTaikaL tuLagkak 
    kaLLam naku veNtalaiyAr-kaTavUr mayAnam amarntAr; 
    piLLai matiyam uTaiyAr avar emperumAn aTikaLE.

பொருள்:     வெள்ளை எருதின் மேல் வருவார். ஒளிவிரியும் தோடு ஒரு காதில் விளங்க, 
துள்ளுகின்ற மான்மறியினை ஒருகரத்தில் உடையவர்; பொன்னொளி சுடர்விடுகின்ற சடைகள் 
அசைய அதன்மீது நகைசெய்யும் வெள்ளைத் தலையை உடையவர்; திருக்கடவூர் மயானத்தில் 
அமர்ந்தவர்; இளம் பிறையை உடையவர்; அவர் எம் பெருமான் அடிகளே. 

குறிப்புரை:     ஒளிவிரியும் தோடு ஒரு காதிலும், குழை ஒரு காதிலும் விளங்க. மான்மறி 
(பா. 2) துலங்க - ஒளி செய்ய. பிள்ளை மதியம் - இளம்பிறை.

    Our Lord Civan is manifest in the temple city of Thiruk-kada-oor-mayaanam. 
He goes round riding on the white bull. In one of His ears a very bright earring 
made of tender leaf hangs. In one of His hands He holds the deer, young and jumping 
about. His golden coloured matted hair is very bright and prominent. By the side of 
the earring He wears the white head gear which makes derision. His avocation is to 
visit the burning ghat; He retains the baby moon in His mattress. He is our Lord 
and Chief Supporter.

2340.    பொன்றாதுதிருமணங்கொள்புனைபூங்கொன்றைபுனைந்தார் 
    ஒன்றாவெள்ளேறுயர்த்ததுடையாரதுவேயூர்வார் 
    கன்றாவினஞ்சூழ்புறவிற்கடவூர்மயானமமர்ந்தார் 
    பின்றாழ்சடையாரொருவரவரெம்பெருமானடிகளே.        6

    பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார், 
    ஒன்றா வெள்ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார் - 
    கன்று ஆஇனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.

    pontAtu utirum maNam koL punai pUgkonRai punaintAr, 
    onRA veL ERu uyarttatu uTaiyAr, atuvE UrvAr- 
    kanRu A inam cUz puRavin kaTavUr mayAnam amarntAr; 
    pin tAz caTaiyAr, oruvar avar emperumAn aTikaLE.

பொருள்:     பொன்னிறமான தாதுக்கள் உதிரும் மணம் வீசி அழகு செய்யும் கொன்றை மலரைப் 
புனைந்தார்; சிறப்புடைய வெள்ளை ஏற்றுக் கொடியினை உயர்த்தார்; அந்த வெள்ளையேற்றினையே 
வாகனமாக ஊர்வார்; கன்றுகளை உடைய ஆவினஞ் சூழ்ந்த முல்லைக் காடுடைய திருக்கடவூர் மயானத்தில் 
அமர்ந்தார்; பின்னால் தாழ்ந்த சடையை உடைய ஒப்பற்றவர்; அவர் எம்பெருமான் அடிகளே.

குறிப்புரை:     பொன்தாது உதிரும் கொன்றை, மணம் கொள் கொன்றை. புனைகொன்றை - 
பூங்கொன்றை என்று இயைத்துக்  கொள்க. புனை-  அழகு செய்யும். புனைந்தார் - அணிந்தார்.
வெள்ளேறு - வெளியவிடை. ஒன்றா - ஒன்றாக. சிறப்புடையதாக. உயர்த்தது - தூக்கியது. 
அதுவே- அவ்விடையே. கன்று ஆ இனம் - கன்றுகளை உடைய பசுக்கூட்டம். புறவு -காடு.  

    Our Lord Civan crowns His head with garlands of cassia fistula flowers that have 
golden coloured pollen grains, these flowers are very fragrant. His flag has the figure 
of the bull as its insignia. He uses the white bull as His conveyance. The cows and 
their calves graze in the forests of the city. Our Lord has manifested Himself in
Thiruk-kada-oor-mayaanam. His long matted hair laps over His back. He is non-pareil; 
He is our Lord and Chief Supporter. At the back of His head, His hair hangs upto 
a very low level. He has no peers. He is our Lord and Chief Supporter.

2341.     பாசமானகளைவார்பரிவார்க்கமுதமனையார் 
    ஆசைதீரக்கொடுப்பாரலங்கல்விடைமேல்வருவார் 
    காசைமலர்போல்மிடற்றார்கடவூர்மயானமமர்ந்தார் 
    பேசவருவாரொருவரவரெம்பெருமானடிகளே.        7

    பாசம்ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார், 
    ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடைமேல் வருவார், 
    காசைமலர் போல் மிடற்றார்-கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.

    pAcam Ana kaLaivAr, parivArkku amutam anaiyAr, 
    Acai tIrak koTuppAr, alagkal viTai mEl varuvAr; 
    kAcai malar pOl miTaRRAr--kaTavUr mayAnam amarntAr; 
    pEca varuvAr, oruvar avar emperumAn aTikaLE.

பொருள்:     மும்மலங்களையும் அவற்றின் காரியங்களையும் போக்குவார்; அன்பர்களுக்கு 
அமுதம் போன்று இன்பமளிப்பார்; மூவாசைகளும் தீரச் செய்வார்; மாலையணிந்த விடைமீது வருவார்; 
காயாம்பூ மலர் போன்ற நிறத்த கண்டத்தர்; திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; அனைவரும் 
புகழுமாறு வருவார்; அவர் எம்பெருமான் அடிகளே.

குறிப்புரை:     பாசம் ஆன களைவார் - மலம் ஆயின ஐந்தையும் போக்குவார். ஆணவம், மாயை, 
கன்மம் என்று மும்மலமும். அவற்றையே மாயேயம். திரோதன சத்தியுடன் கூட்டி ஐம்மலமும் உண்டு என்பர்.
சிவஞானமாபாடியம் சூ. 2 அதி. 2. பார்க்க 'மலங்கள் ஐந்தாற் கழல்வன்' (திருவாசகம் 133). ஆன- 
வினைப்பெயர். பரிவார்க்கு - அன்பர்க்கு. பரிவு - அன்பு. அமுதம் அனையார்- அமிர்தத்தைப் போல்பவர். 
ஆசைதீர - மூவாசையும் (மண், பொன், பெண்) ஒழிய. அலங்கல் - மாலை. காசை மலர்- காயாம்பூ; திருநீல 
கண்டத்துக்கு ஒப்புரைப்பது மரபு.

    Our Lord Civan is manifest in the temple situated in the city of Thiruk-kada-oor- 
mayaanam. He annihilates the three evils in the soul of His devotees. For His sincere 
devotees He is like amrit. He graces His devotees to chase desires from their mind. 
He rides on His bull which wears garland of flowers. His neck is dark blue in colour. 
All the people praise His fame and come to the temple and worship Him. He is an 
incomparable Supreme Being. He is our Lord and Chief Supporter.

2342.    செற்ற அரக்கனலறத்திகழ்சேவடிமெல்விரலாற் 
    கற்குன்றடர்த்தபெருமான்கடவூர்மயானமமர்ந்தார் 
    மற்றொன்றிணையில்வலியமாசில்வெள்ளிமலைபோல் 
    பெற்றொன்றேறிவருவாரவரெம்பெருமானடிகளே.        8

    செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால் 
    கல்குன்று அடர்த்த பெருமான் - கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல் 
    பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

    ceRRa arakkan alaRat tikaz cEvaTi melviralAl 
    kal kunRu aTartta perumAn--kaTavUr mayAnam amarntAr; 
    maRRu onRu iNai il valiya mAcu il veLLimalai pOl 
    peRRonRu ERi varuvAr avar emperumAn aTikaLE.

பொருள்:     சினங்கொண்டு மாறுபட்ட அரக்கன் இராவணன் அலற தன் திருவடியின் திருவிரலால் 
அவனைக் கயிலை மலையின்கீழ் நசுக்கிய பெருமான், திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; பிறிதொன்று 
இணையில்லாத, வலிய குற்றம் இல்லாத வெள்ளிமலை போலும் எருது ஒன்று ஏறி வருவார்; அவர் 
எம் பெருமான் அடிகளே.

குறிப்புரை:     செற்ற- கோபத்தையுடைய. கற்குன்று - கயிலைமலை. மற்று ஒன்று இணை இல்லாத 
வலிய மாசு (குற்றம்) இல்லாத வெள்ளி மலைபோலும் பெற்று (எருது) ஒன்று ஏறிவருவார் என்க. பெற்றம்-
பெற்று என்று நின்றது.

    Raavanan, the king of Sri Lanka was a very angry king; he got vexed when our Lord 
crushed him under the mountain. Our Lord Civan pressed His mount Kailash with His toe. 
Thus our Lord controlled his wickedness. Our Lord is manifest in the temple in the city 
of Thiruk-kada-oor-mayaanam. He rides on His bull which is incomparable. The bull is 
blemishless and appears like a silver mountain. He is our Lord and our Chief Supporter. 

2343.     வருமாகரியினுரியார்வளர்புன்சடையார்விடையார் 
    கருமானுரிதோலுடையார்கடவூர்மயானமமர்ந்தார் 
    திருமாலொடுநான்முகனுந்தேர்ந்துங்காணமுன்னெண்ணாப் 
    பெருமானெனவும்வருவாரவரெம்பெருமானடிகளே.        9

    வரு மா கரியின் உரியார், வளர்புன்சடையார், விடையார், 
    கருமான் உரி-தோல் உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப் 
    பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

    varu mA kariyin uriyAr, vaLarpun caTaiyAr, viTaiyAr, 
    karumAn uri-tOl uTaiyAr--kaTavUr mayAnam amarntAr; 
    tirumAloTu nAn mukanum tErntum kANa mun oNNAp 
    perumAn enavum varuvAr avar emperumAn aTikaLE.

பொருள்:     தன்மேல் அடர்த்து வந்த பெரிய களிற்றின் உரியை உடையவர்; நீண்ட 
பொன்னிறமான சடையுடையார்; மானின் உரியாகிய தோல் உடையார்; திருமாலோடு 
நான்முகனும் ஆராய்ந்தும் காண ஒண்ணாத பெருமான் என வருவார். அவர் எம் பெருமான்
அடிகளே.

குறிப்புரை:     மான் உரிதோல் - மானை உரித்த தோல். மானினது உரியாகிய தோல் எனலுமாம். 
முன்னது வினைத்தொகை. பின்னது பண்புத்தொகையாதல் உரித்தோல் என்று நிற்புழி. ஒண்ணா - 
ஒன்றாத .மரூஉ. கன்று - கண்ணு. மூன்று - மூணு முதலியவைபோல. 

    A huge elephant rushed towards our Lord to kill Him. Our Lord killed the elephant
and stripped off its hide and covered His body with that hide. His tresses are very 
long and thin. It dangles behind His head. He uses His bull for His conveyance. He wears 
the hide of a deer as His dress for His waist. He is manifest in the temple
situated in the city of Thiruk-kada-oor-mayaanam. Both Thirumaal and the four-faced 
Brahma searched long to see our Lord but failed. Everyone speaks His fame to that 
extent. He is our Lord and Chief Supporter.

2344.     தூயவிடைமேல்வருவார்துன்னாருடையமதில்கள் 
    காயவேவச்செற்றார்கடவூர்மயானமமர்ந்தார் 
    தீயகருமஞ்சொல்லுஞ்சிறுபுன்தேரரமணர் 
    பேய்பேயென்னவருவாரவரெம்பெருமானடிகளே.        10

    தூய விடைமேல் வருவார், துன்னார் உடைய மதில்கள் 
    காய வேவச் செற்றார் - கடவூர்மயானம் அமர்ந்தார்; 
    தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர்,அமணர், 
    "பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

    tUya viTai mEl varuvAr, tunnAr uTaiya matilkaL 
    kAya vEvac ceRRAr-- kaTavUr mayAnam amarntAr; 
    tIya karumam collum ciRu pun tErar, amaNar, 
    "pEy, pEy!" enna varuvAr avar emperumAn aTikaLE.

பொருள்:     புனிதமான விடையின்மேல் வருவார். பகைவருடைய மதில்கள் எரிந்து வேகச் 
சினந்தார்; திருக்கடவூர் மயானம் அமர்ந்தார். தீய செயல்களைச் செய்யச் சொல்லும்
சிறுமையுடைய புல்லியதோர் அமணர் இறையைப் பேய் பேய் என்ன வருவார் அவர் எம் 
பெருமான் அடிகளே.

குறிப்புரை:     துன்னார் - பகைவர். செற்றார் - கோபித்தார். தீய கருமம் - கெட்ட செயல்கள். 
இறையை. பேய் பேய் என்பார் தேரரும் அமணரும், சிறுமை புன்மை இரண்டும் பொது அடை 
தீயகருமஞ் செய்தல் சிறுமை. சொல்லுதல் புன்மை சிறுமை யுறுபசெய்பறியலரே (நற்றிணை. 1).

    Our Lord moves all over the universe on His bull which is a huge, unblemished 
animal. He got angry with His antagonists - the asuras and destroyed them completely 
in fire along with their three forts which were flying in the sky. He is manifest 
in the temple city of Thiruk-kada-oor-mayaanam. Our Lord is renowned. The mean-minded 
Jains and Buddhists in this city preach to the public to do bad actions. They think of 
Him as a devil and move away from our Lord. Such a Being is our Lord and our Chief Supporter.

2345.     மரவம்பொழில்சூழ்கடவூர்மன்னுமயானமமர்ந்த 
    அரவமசைத்தபெருமானகலமறியலாகப் 
    பரவுமுறையேபயிலும்பந்தன்செஞ்சொல்மாலை 
    இரவும்பகலும்பரவிநினைவார்வினைகளிலரே.        11

    மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த, 
    அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல்ஆகப் 
    பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல்மாலை, 
    இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

    maravampozil cUz kaTavUr mannu mayAnam amarnta, 
    aravam acaitta, perumAn akalam aRiyal Akap 
    paravum muRaiyE payilum pantan cenjcol mAlai, 
    iravum pakalum paravi ninaivAr, vinaikaL ilarE.

பொருள்:     குங்கும மரங்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த கடவூரில் மன்னிய 
மயானத்தில் அமர்ந்த, அரவத்தைக் கச்சாக அரையில் கட்டிய பெருமானின் வியாபகத்தை 
அறிய இயலாது, அறிந்தபடி பாடிய சம்பந்தனின் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் 
நினைவார் வினைகள் இலராவர்.

குறிப்புரை:     மரவம் - குங்கும மரம். அசைத்த - கட்டிய. அகலம் - வியாபகம். அறியல்  
ஆக- அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே இருந்ததெனின், 
நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல் வேண்டுமோ? 

    In the natural forest area around Thiruk-kada-oor-mayaanam plenty of 
saffron  plants grow in large number (bulbous rooted plant). Our Lord Civan 
is renowned wearing snakes over His waist and His fame is too great, to be 
known fully well.  Therefore, let the devotees repeat His fame as chanted by 
our saint Thiru-gnana-Sambandar by day and night. They may chant these verses 
sincerely and worship our Lord. They will be then freed of karma in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            80ஆம் பதிகம் முற்றிற்று
            End of 80th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 217                பதிக எண்: 81

81. திருவேணுபுரம்                81. THIRU-VENU-PURAM

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்

2346.     பூதத்தின்படையினீர்பூங்கொன்றைத்தாரினீர் 
    ஓதத்தினொலியோடுமும்பர்வானவர்புகுந்து 
    வேதத்தினிசைபாடிவிரைமலர்கள்சொரிந்தேத்தும் 
    பாதத்தீர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே.        1

    பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர் 
    ஓதத்தின் ஒலியோடு மும்பர் வானவர் புகுந்து 
    வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்து ஏத்தும் 
    பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

    pUtattin paTaiyinIr! pUgkonRait tArinIr! 
    Otattin oliyOTum umparvAnavar pukuntu, 
    vEtattin icai pATi, viraimalarkaL corintu, Ettum
    pAtattIr!--vENupuram pati Akak koNTIrE.

பொருள்:     பூதகணங்களைப் படையாக உடையீர்! கொன்றைப்பூ மாலையினை 
அணிந்தீர்! கடலொலி போன்ற முழக்கமொடு உம்பர்களும் வானவர்களும் திருக்கோவிலினுள் 
புகுந்து, வேதம் இசைத்து மணமிக்க மலர்களைச் சொரிந்து வழிபடும் திருவடிகளை உடையீர்!     
திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் கொண்டீரே!

குறிப்புரை:     பூதகணம், கொன்றைப் பூமாலை சிவபிரானுக்குள்ளவை, வேணுபுரம் 
கடலிடத்தாகலின் ஓதத்தின் ஒலியோடும் வேதத்தின் இசைபாடி எனப்பட்டது. 'உம்பர், வானவர்' 
உம்பரும் வானவரும். உம்மைத்தொகை. 'உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் 
செம்பொனைத் தந்தருளி' (தி.7 ப.25. பா.2). 'ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் 
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத 
நாள் எல்லாம் பிறவா நாளே' (தி.6 ப.1 பா.10). 'அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு 
வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்' (தி.5 ப.39 பா.3). 'மண்ணினார் ஏத்த வானுளார் பரச         
அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம்' (தி.3 ப.118 பா.4). தாரன்மாலையன்
தண்ணறுங்கண்ணியன் (தி.5 ப.12 பா.7) என்பதால் இருபாலும் ஒவ்வொரு பூவைத்துத் தொடுக்கும் 
தார், ஒருபால் காம்பும் ஒருபால் மலரும் அமையத்தொடுக்கும் கண்ணிக்கும், பன்மலர் மாலைக்கும் 
வேறுபட்டது எனல் விளங்கும். ஓதம்-கடல்.

    Oh! Our Lord Civa! You own large armies of goblins called Bhuta Ganangal. 
They are dwarfish with huge pot-bellies and very small legs. You have adorned Your body 
with garlands made of cassia fistula flowers. The sea makes heavy noise. Along with 
this noise, the celestials and devas come to earth and chant the Vedic songs. They
carry the sweet smelling flowers and scatter them over the holy feet of our Lord 
and worship Him. Oh Lord! You have selected Venupuram as Your place to manifest.

2347.     சுடுகாடுமேவினீர்துன்னம்பெய்கோவணந்தோல் 
    உடையாடையதுகொண்டீருமையாளையொருபாகம் 
    அடையாளமதுகொண்டீரங்கையினிற்பரசுஎனும் 
    படையாள்வீர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே.        2

    சுடுகாடு மேவினீர் துன்னம் பெய்கோவணம் தோல் 
    உடை ஆடையது கொண்டீர் உமையாளை ஒரு பாகம் 
    அடையாளம் அதுகொண்டீர் அங்கையினில் பரசு எனும் 
    படை ஆள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

    cuTukATu mEvinIr! tunnam pey kOvaNam, tOl 
    uTai ATai atu, koNTIr! umaiyALai orupAkam 
    aTaiyALam atu koNTIr! am kaiyinil paracu enum 
    paTai ALvIr!--vENupuram pati Akak koNTIrE.

பொருள்:     சர்வ சங்கார காலத்தில் அனைத்தும் எரிந்துபோன சுடுகாட்டினில் இருந்தீர்!  
தைக்கப்பட்ட கோவணமும் தோலும் உடுக்கும் ஆடையாகக் கொண்டீர்! உமையாளை உமது ஒரு 
பாகத்தில் உமது கருணைக்கு அடையாளமாகக் கொண்டீர்! அழகிய உம் திருக்கையினில் பரசு 
எனும் மழுவாயுதத்தைப் படையாகக் கொண்டீர்! திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் 
கொண்டீரே!

குறிப்புரை:     துன்னம்- துளைத்தல், தைத்தல். கோவணம் தோல் உடையாடை-  'புலியதள்
கோவணங்களுடை  ஆடையாக உடையான்' (ப.219 பா.6). அங்கை - அகங்கை, உள்ளங்கை, 
அழகிய கையும் ஆம். பரசு எனும் படை - மழு என்னும் ஆயுதம். 

    Oh! Lord Civa! Your avocation is to visit the burning ghat to dance. You cover 
Your loins with damaged forelap cloth but cover your waist with tiger's hide. You grace 
Your devotees. As a symbol of grace You have embedded Your consort Uma Devi on one side 
of Your body. In Your attractive hand You hold an axe. Oh Lord! You are manifest in the 
city of Venupuram.

2348.     கங்கைசேர்சடைமுடியீர்காலனைமுன்செற்றுகந்தீர் 
    திங்களோடிள அரவந்திகழ்சென்னிவைத்துகந்தீர் 
    மங்கையோர்கூறுடையீர்மறையோர்கள்நிறைந்தேத்தப்         
    பங்கயஞ்சேர்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே.        3

    கங்கைசேர் சடைமுடியீர் காலனை முன்செற்று உகந்தீர் 
    திங்கள் ஓடுஇள அரவம் திகழ்சென்னி வைத்து உகந்தீர் 
    மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்தப்         
    பங்கயம் சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

    kagkai cEr caTaimuTiyIr! kAlanai mun ceRRu ukantIr! 
    tigkaLOTu iLa aravam tikaz cenni vaittu ukantIr!. 
    magkai Or kURu uTaiyIr!--maRaiyOrkaL niRaintu Etta, 
    pagkayam cEr vENupuram pati Akak koNTIrE.

பொருள்:     கங்கையாறு சேர்ந்த சடைமுடியினீரே! எமனை முன் அழித்து மகிழ்ந்தீர்! 
உமை மங்கையைப் பாகமாக உடையீர்! மறையவர்கள் திரண்டு நின்று ஏத்தி வழிபடத் 
தாமரை மலர்கள் மலரும் தடாகங்கள் சேரும் திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் 
கொண்டீரே!

குறிப்புரை:     செற்று - அழித்து. அரவம் - பாம்பு. சென்னி - தலை. பங்கயம் - தாமரை.

    Oh Lord Civa! You support the river Ganges in Your matted hair. Once upon 
a time You kicked Kaalan, the god of death, and thereafter were pleased to grace 
him. You are happy to retain the serpent along with the baby moon on Your matted 
hair, making these two shed their enmity. You have kept Your consort on one half 
of Your body. The Vedic scholars join together and praise Your fame. The city is 
full of big pools filled with lotus flowers as well as rich paddy fields. You have 
selected such a good looking city of Venupuram as Your place for manifestation.

2349.     நீர்கொண்டசடைமுடிமேல்நீள்மதியம்பாம்பினொடும் 
    ஏர்கொண்டகொன்றையினோடெழில்மத்தமிலங்கவே 
    சீர்கொண்டமாளிகைமேற்சேயிழையார்வாழ்த்துரைப்பக் 
    கார்கொண்டவேணுபுரம்பதியாகக்கலந்தீரே.        4

    நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும் 
    ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே 
    சீர்கொண்ட மாளிகைமேல் சேய் இழையார் வாழ்த்து உரைப்பக் 
    கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

    nIr koNTa caTaimuTimEl nIL matiyam pAmpinoTum 
    Er koNTa konRaiyinOTu ezil mattam ilagkavE,         
    cIr koNTa mALikaimEl cEyizaiyAr vAzttu uraippa, 
    kAr koNTa vENupuram pati Akak kalantIrE.

பொருள்:     கங்கைநீர் கொண்ட சடைமுடிமேல் ஒளி நீண்ட பிறையைப் பாம்பினோடும் 
அழகிய கொன்றையினோடும் எழில் ஊமத்தை மலர் விளங்கவே, பெருமையுடைய மாளிகைகள் 
மேல் மகளிர் உம்மைப் போற்றி வாழ்த்துரைப்ப, மேகத்தை அளாவிய திருவேணுபுரத்தை உம் 
திருப்பதியாகக் கொண்டீரே!

குறிப்புரை:     நீர் - கங்கைநீர், அபிடேக நீரும் ஆம். மதியம் - பிறை. மத்தம் - ஊமத்தை. 
மாளிகை- நகரில் உள்ள உயரிய வீடுகளும் தோணியப்பர் மலைக்கோயிலும் ஆம். கார்கொண்ட 
வேணுபுரம் என்றதனால் மூங்கிலின் உயர்ச்சி விளங்கும்.

    Oh Lord Civa! You support the river Ganges on Your matted hair that is flanked
on both sides by the moon, the snake, the attractive cassia and the fine datura flowers, 
everything looks bright. You get upon the palaces from where lovely girls wearing a lot 
of jewellery greet You. The clouds traverse and gather on the tall bamboo trees which 
are a characteristic part of the city. Oh Lord! You have selected such a city of
Venupuram as Your place for manifestation.

2350.     ஆலைசேர்தண்கழனியழகாநறவுண்டு 
    சோலைசேர்வண்டினங்களிசைபாடத்தூமொழியார் 
    காலையேபுகுந்திறைஞ்சிக்கைதொழமெய்மாதினொடும் 
    பாலையாழ்வேணுபுரம்பதியாகக்கொண்டீரே.        5

    ஆலைசேர் தண்கழனி அழகா நறவுண்டு 
    சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் 
    காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ மெய்மாதினொடும் 
    பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

    Alai cEr taNkazani azakA naRavu uNTu,             
    cOlai cEr vaNTu inagkaL icai pATa, tU moziyAr 
    kAlaiyE pukuntu iRainjcik kaitoza, mey mAtinoTum
    pAlaiyAz vENupuram pati Akak koNTIrE.

பொருள்:     கரும்புகள் விளைந்த கழனிகளில் தேனையுண்டு பூஞ்சோலைகளை அழகாகச் 
சேர்கின்ற வண்டினங்கள் இசைபாட, தூய்மையான மொழியே பேசும் மகளிர் வைகறைப் 
போதிலேயே திருக்கோயிலிற் புகுந்து வழிபட்டுக் கைதொழுமாறு, உமையம்மையினொடும்
பாலையாழ் இசைக்கும் திருவேணுபுரத்தை உம் திருப்பதியாகக் கொண்டீரே!

குறிப்புரை:     ஆலை- கரும்பாலை, கரும்பு. நறவு - தேன். தூ - தூய்மை. காலையே ... கைதொழ -
என்றதால் பண்டு மகளிர் நாள்தோறும் காலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட்ட 
உண்மை புலப்படுகிறது. பாலையாழ்- நாற்பெரும் பண்ணுள் ஒன்று. பாலையாழ், 'அராகம் நோந்திறம் 
உறுப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே' என்பது பிங்கலந்தை - 1381.நோந்திறத் 
தின்மறுதலை செந்நிறம். 'கைக்கிளை செந்நிறம் பெருந்திணை நோந்திறம்’ தொல். அகத். 55 
உரை இளம்பூரணம்.

    The city of Venupuram has a number of cool fields where sugarcane grows in 
plenty and the sugarcane plants work. In the well-developed garden area a large number 
of flower plants grow. Here the beetles fly and gather and suck honey from the flowers 
singing their music and making the people happy. In the early morning hours, lovely girls,
who speak pleasing words, visit the temple and worship our Lord by raising both their 
hands. There is good music of 'Paalai Lute' and the entire area is full of happiness. 
Oh Lord Civa! You, concomitant with Your consort Uma Devi, are manifest in Venupuram.

2351.     மணிமல்குமால்வரைமேல்மாதினொடுமகிழ்ந்திருந்தீர் 
    துணிமல்குகோவணத்தீர்சுடுகாட்டிலாட்டுகந்தீர் 
    பணிமல்குமறையோர்கள்பரிந்திறைஞ்சவேணுபுரத் 
    தணிமல்குகோயிலேகோயிலாகஅமர்ந்தீரே.        6            

    மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் 
    துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர் 
    பணிமல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத் 
    தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.                

    maNi malku mAlvarai mEl mAtinoTu makizntu iruntIr! 
    tuNi malku kOvaNattIr! cuTukATTil ATTu ukantIr!-- 
    paNi malku maRaiyOrkaL parintu iRainjca, vENupurattu 
    aNi malku kOyilE kOyil Aka amarntIrE.

பொருள்:     மணிகள் நிறைந்த பெரிய மலையின் மேல் உமையம்மையுடன் மகிழ்ந்து 
இருந்தீர் ! துணித்த கோவண ஆடையினீர்! சுடுகாட்டினில் கூத்தாடுதலை உகந்தீர்! 
சிவத்தொண்டு செய்யும் மறையோர்கள் பத்திகொண்டு வணங்க வேணுபுரத்தில் அழகு 
நிறைந்த திருக்கோயிலையே கோயிலாகக் கொண்டீரே!

குறிப்புரை:     'மணி மல்கு ...இருந்தீர்' தோணிபுரம் எனப்படும் மலைக்கோயிலில் 
அம்மையப்பராக வீற்றிருந்தீர். அக்கோயில் 'நாலைந்து புள்ளினம் ஏந்தின’ (தி.4 ப.82 பா.1) 
அமைப்புடையது. துணி- துண்டு. ஆட்டு - கூத்து. பரிந்து - அன்புகொண்டு.

    Oh Lord Civa! You have joyfully manifested Yourself along with Your consort 
on the big Thiruth-thoni hillock where a good number of big gems are studded. You wear 
on Your loins the worn-out fore-lap cloth. Your avocation is to go gladly to the 
burning ghat and dance there. The scholars in this city who are very much engrossed 
in service to You come to Your temple and worship You with dedication. You have 
conspicuously manifested Yourself in the cool temple city of Venupuram, considering 
it as Your much desired temple.

2352.     நீலஞ்சேர்மிடற்றினீர்நீண்டசெஞ்சடையினீர் 
    கோலஞ்சேர்விடையினீர்கொடுங்காலன்றனைச்செற்றீர் 
    ஆலஞ்சேர்கழனியழகார்வேணுபுரமமருங் 
    கோலஞ்சேர்கோயிலேகோயிலாக்கொண்டீரே.        7

    நீலம்சேர் மிடற்றினீர் நீண்ட செஞ்சடையினீர் 
    கோலம்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர் 
    ஆலஞ்சேர் கழனிஅழகார் வேணுபுரம் அமருங்             
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாக் கொண்டீரே.

    nIlam cEr miTaRRinIr! nINTa cenjcaTaiyinIr! 
    kOlam cEr viTaiyinIr! koTugkAlan tanaic ceRRIr!-- 
    Alam cEr kazani azaku Ar vENupuram amarum 
    kOlam cEr kOyilE kOyilAkak koNTIrE.

பொருள்:     நீலகண்டத்தினீர்! நீண்ட சிவந்த சடையினை உடையீர்! அழகிய விடையை 
உடையீர்! கொடிய எமனை அழித்தீர்! நீர்வளமிக்க கழனிகளுடன் அழகிய திருவேணுபுரத்தில் 
உள்ள திருக்கோயிலினையே உமது கோயிலாகக் கொண்டீரே! 

குறிப்புரை:     நீலஞ்சேர் மிடற்றினீர் - திருநீலகண்டத்தீர். கோலம் - அழகு. ஆலம் - நீர். 
கலப்பையும் ஆம். கோலம் - வளைவு.

    Oh Lord Civa! Your throat is dark blue in colour like the sapphire. 
You have long reddish matted hair. You have a very attractive bull for Your 
conveyance. Once upon a time You destroyed the ferocious Kaalan - the god of 
death.You have manifested Yourself in the temple of appealing Venupuram. In this 
city, there are many ponds full of cool water. The temple is full of very rich and 
admirable workmanship  and is shining to look at. You have considered this temple 
as Yours and are manifest there.

2353.    இரைமண்டிச்சங்கேறுங்கடல்சூழ்தென்னிலங்கையர்கோன் 
    விரைமண்டுமுடிநெரியவிரல்வைத்தீர்வரைதன்னிற் 
    கரைமண்டிப்பேரோதங்கலந்தெற்றுங்கடற்கவினார் 
    விரைமண்டுவேணுபுரமேயமர்ந்துமிக்கீரே.        8

    இரை மண்டிச் சங்குஏறும் கடல்சூழ் தென்இலங்கையர் கோன் 
    விரை மண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரை தன்னிற் 
    கரை மண்டிப் பேரோதம் கலந்தெற்றும் கடற்கவினார் 
    விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.            

    irai maNTic cagku ERum kaTal cUz ten ilagkaiyar kOn        
    virai maNTu muTi neriya viral vaittIr ! varai tannin        
    karai maNTip pEr Otam kalantu eRRum kaTal kavinAr 
    virai maNTu vENupuramE amarntu mikkIrE.

பொருள்:     ஒலித்தல் மிகுந்த, சங்குகளேறும் கடல் சூழ்ந்த தென்திசையில் உள்ள 
இலங்கையின் அரசன் இராவணனின் மணமுள்ள முடி நெரியுமாறு திருவிரலை வைத்தீர் !
மலை போன்ற அலைகள் நிறைந்து மோதும் நீர் நிறைந்த கடலழகுடன் மணமிக்க
திருவேணுபுரமே அமர்ந்து விளங்கினீரே! 

குறிப்புரை:     மண்டி - மேற்சென்று. நெருங்கியும் ஆம். விரை - நறுமணம். கவின் - அழகு. 
ஓதம் - நீர். எற்றும்-மோதும்.

    Many hundreds of conches lie on the seashore, actually these are insects, 
big and small. These insects in the conches eat the sea food in large quantities 
and take rest on the shore. Such shores of the sea surround Sri Lanka, and the 
king of this southern land, Raavanan, was once suppressed with his ten heads 
under mount Kailash by Lord Civan. Oh Lord! You subdued him simply by pressing 
Your mountain with Your toe, Of course finally he was pardoned and blessed. The 
city of Venupuram has a long seashore on the east and the huge waves of the sea 
disturb the shore, bringing large quantities of water. Oh Lord! You have chosen 
this beautiful and fragrant city as Yours and manifest Yourself as a renowned Lord. 

2354.     தீயோம்புமறைவாணர்க்காதியாந்திசைமுகன்மால் 
    போயோங்கியிழிந்தாரும்போற்றரியதிருவடியீர் 
    பாயோங்குமரக்கலங்கள்படுதிரையால்மொத்துண்டு 
    சேயோங்குவேணுபுரஞ்செழும்பதியாத்திகழ்ந்தீரே.        9

    தீஓம்பு மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன் மால் 
    போய்ஓங்கி இழிந்தாரும் போற்றரிய திருவடியீர் 
    பாய்ஓங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு 
    சேய்ஓங்கு வேணுபுரம் செழும்பதியாய் திகழ்ந்தீரே.

    tI Ompu maRaivANarkku Ati Am ticai mukan, mAl,
    pOy Ogki izintArum-pORRa(a)riya tiruvaTiyIr! 
    pAy Ogku marak kalagkaL paTu tiraiyAl mottuNTu, 
    cEy Ogku vENupuram cezum patiyAit tikazntIrE.        

பொருள்:     வேள்வி செய்யும் மறையவருக்கு முதல்வனாகிய பிரமன் மால் இருவரும் 
முறையே மேலோங்கி உயர்ந்தும் கீழ் நோக்கி இழிந்தும் இருவராலும் போற்றுதற்கு அரிய 
திருவடியை உடையீர்! உயர்ந்த பாய்களையுடைய மரக்கலங்கள் ஒலிக்கின்ற கடல் அலைகளால் 
மொத்துண்டு விண்ணளவு உயர்கின்ற திருவேணுபுரத்தை உம் செழும்பதியாகக் கொண்டு திகழ்ந்தீரே!

குறிப்புரை:     தீயோம்பு... முகன்:- பிராமணர்க்கு முதல்வன் பிரமன் என்னும் உண்மை 
உணர்த்தப்பட்டது. மால் - திருமால். ஓங்குதல்- பிரமன் செயல். இழிதல்- மால்வினை. போற்ற 
அரிய திருவடி எனத் திருவடிச்சிறப்பு உணர்த்தப்பட்டது. பாய் ... வேணுபுரம். பண்டு சீகாழியில் 
மரக்கலங்கள் (கடற்றுறையுள்) இருந்தமை தெளிவாகும். சேய்.... புரம் - விண்ணில் ஓங்கிய 
உயர்ச்சியைக் குறிப்பது.

    In this verse our saint Thiru-gnana-Sambandar establishes that tutelary 
god Brahma as the chief god for Brahmins. They daily involve themselves in starting 
the three sacrificial fires Kaarugapaththiyam, Aahavaniyam and Thatchinakkini. 
Brahmins are guardians of the three sacrificial fires. The chief of brahmins is 
Brahma who flew in the sky to see our Lord's head. The second one Thirumaal delved 
deep into the earth to see our Lord's holy feet. But they both failed. Oh Lord! 
You are the master with imperceptible holy feet and head. The city of Venupuram,
adjoining the sea, has a lot of vessels with mast, anchored near the shore. These 
vessels are tossed by the big sea waves. The city's sacred tree is bamboo. These 
tall trees are in plenty here. Oh Lord! You desired to have the rich Venupuram 
as Your abode and You are renowned in the temple of this wealthy city.

2355.     நிலையார்ந்தவுண்டியினர்நெடுங்குண்டர்சாக்கியர்கள் 
    புலையானாரறவுரையைப்போற்றாதுன்பொன்னடியே 
    நிலையாகப்பேணிநீசரணென்றார்தமையென்றும்
    விலையாகஆட்கொண்டுவேணுபுரம்விரும்பினையே.        10

    நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள் 
    புலை ஆனாரற உரையைப் போற்றாது உன்பொன்னடியே 
    நிலையாகப் பேணி நீ சரணென்றார் தமையென்றும் 
    விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

    nilai Arnta uNTiyinar neTug kuNTar, cAkkiyarkaL,
    pulai AnAr--aRa uraiyaip pORRAtu, un pon aTiyE 
    nilai Akap pENi, "nI caraN!" enRAr tamai, enRum
    vilai Aka ATkoNTu, vENupuram virumpinaiyE.

பொருள்:     நின்று உண்ணும் சமணர், உடல் தடித்த சாக்கியர்கள் புலையரானார்களாகிய இவர்கள் 
உரைக்கும் உரையைப் பொருட்படுத்தாது உன் பொன்னடியே நிலையாகப் பேணி நீயே சரண் என்றார்தமை,
என்றும் அதற்கு ஈடாக ஆட்கொண்டு திருவேணுபுரத்தில் இருத்தலை விரும்பினையே!

குறிப்புரை:     நிலையார்ந்த உண்டியினர்- நின்று உண்பவர். அடுத்த பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் 
ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால் உன் பொன்னடியே நிலையாகப் பேணி நீ(யே) சரண் என்றாரை 
என்றும் விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும்.

    In this city of Venupuram, the Jains and the Buddhists live here in large numbers. 
They used to take food in standing posture. They preach deceptive literacy. The Siva 
devotees who live in this city never pay heed to the words of the Jains and the Buddhists. 
They worship our Lord and eagerly take refuge at the feet of our Lord Civan. He therefore 
takes such devotees as His own servitors and graces them substantially. He loves to be 
manifested in the temple of Venupuram.

11ஆவது பாடல் கிடைக்கப்பெறவில்லை.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            81ஆம் பதிகம் முற்றிற்று
            End of 81st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 218                    பதிக எண்: 82

82.திருத்தேவூர்                        82. THIRU-THEVOOR

பண்: காந்தாரம்                        Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    தேவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இது கீழ்வேளூர் 
தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து 
வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் செல்லலாம். காவிரித் தென்கரையில் உள்ள எண்பத்தைந்தாவது 
தலம் ஆகும். இறைவரது திருப்பெயர் தேவகுருநாதர். இறைவியாரது திருப்பெயர் மதுரபாடணியம்மை. 
தீர்த்தம் தேவதீர்த்தம். தலமரம் வாழை. இந்திரன், குபேரன், வியாழன் முதலியோர் பூசித்துப் பேறு 
பெற்ற தலம். கெளதம முனிவரும் பூசித்தார். மாடக்கோயில் அமைப்புடையது. இதற்கு ஞானசம்பந்தர் 
பதிகங்கள் இரண்டு இருக்கின்றன.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரொடும் திருவாரூர் முதலிய தலங்களை வழிபட்ட காலத்து, 
இத்திருத்தேவூரை அணைந்து பாடியருளியதும் முற்பதிகத்தின் ஈற்றில் அருளியவாறே தமது சிவபக்தியின் 
உறைப்பை இதன்கண் ஒவ்வொரு திருப்பாட்டின் ஈற்றிலும் விளங்கவைத்துப் பாடியருளிச், சைவர் எல்லோரும்
சிவபெருமான் திருவடியே சேரப் பெறுமாறு உணர்த்துவதும் ஆகும் இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2356.    பண்ணிலாவியமொழியுமைபங்கனெம்பெருமான் 
    விண்ணில்வானவர்கோன்விமலன்விடையூர்தி 
    தெண்ணிலாமதிதவழ்தருமாளிகைத்தேவூர் 
    அண்ணல்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே.        1

    பண்ணில் ஆவிய மொழியுமை பங்கனெம் பெருமான் 
    விண்ணில் வானவர் கோன் விமலன் விடை ஊர்தி 
    தெண்ணில் ஆமதி தவழ் தருமாளிகைத் தேவூர் 
    அண்ணல் சேவடி அடைந்தன மல்லலொன்றிலமே.

    paN nilAviya mozi umai pagkan, emperumAn,
    viNNil vAnavarkOn, vimalan, viTai Urti-
    teN nilA mati tavaz taru mALikait tEvUr         
    aNNal; cEvaTi aTaintanam, allal onRu ilamE.

பொருள்:     'பண் நிலாவிய மொழி உமை'யைத் தன் பாகத்தில் கொண்டவன்; எங்களுடைய
பெருமான்; விண்ணில் வாழும் வானவர்களின் தலைவன்; மலம் அற்றவன்; எருதினை ஊர்பவன் 
ஆகிய தெளிந்த நிலவொளியுடைய சந்திரன் தவழும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருத்தேவூர் 
அண்ணலின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

குறிப்புரை:     'பண்ணிலாவிய மொழியுமைபங்கன்' என்றதில், இத்தலத்தின் தேவிக்கு வழங்கிய 
திருப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்னோர் 'மதுர பாடணியம்மை' என்று மாற்றினர். 
விண்ணில்  வானவர் என்பது தேவகணம் எல்லாவற்றையும் குறித்தது. கோன்- சிவபெருமான். 
விமலன் - மலரகிதன். விடையூர்தி - எருதூர்பவன். தெள்நிலா- தெளிந்த நிலவுடைய. மதி - பூரண 
சந்திரன், பிறையுமாம். அண்ணல்- பெரியோன், சிவன், அடைந்தது காரணம். அல்லல் இன்மை காரியம். 
அல்லல் - பிறவித்  துன்பம். பிறப்பில் எய்தும் துன்பம் எனலும் பொருந்தும். ஒன்று இலம் - ஒன்றும் 
இல்லேம். சிறிதும் இல்லேம் எனலுமாம்.

    Our Lord Civan has embedded His consort and therefore is a concomitant  Supreme 
Being. He is our Chief. He is also the Chief for all the devas and all the other celestials. 
He is an immaculate Supreme Being. He uses the bull for His conveyance . He is manifest 
in Thiru-thevoor temple in this city. The moon, shedding pure white light creeping over 
the sky, seems to lap over the tall palatial buildings of the city: We have prostrated 
before the holy feet of our Lord,and worship Him.We,therefore are free of any misfortune. 

2357.     ஓதிமண்டலத்தோர்முழுதுய்யவெற்பேறு 
    சோதிவானவன்துதிசெயமகிழ்ந்தவன்தூநீர்த் 
    தீதில்பங்கயந்தெரிவையர்முகமலர்தேவூர்
    ஆதிசேவடியடைந்தனமல்லலொன்றிலமே.        2

    ஓதிமண்டலத்தோர் முழுதுய்ய வெற்பேறு 
    சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் 
    தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் 
    ஆதி சேவடியடைந்தன மல்லலொன்றிலமே.

    Oti maNtalattOr muzutu uyya, veRpu ERu 
    cOti vAnavan tuticeya, makizntavan--tU nIrt 
    tItu il pagkayam terivaiyar mukammalar tEvUr 
    Ati; cEvaTi aTaintanam, allal onRu ilamE.

பொருள்:     மண்ணுலகத்தவர் தன்னுடைய புகழ்களை ஓதி முழுதும் உய்ய, உதயகிரியில் 
ஏறி சூரியன் துதி செய்ய மகிழ்ந்தவன், தூய்மையான நீரில் குற்றமற்ற தாமரை மலர்போல் 
மலர்ந்த முகமுடைய மகளிர் வாழும் திருத்தேவூர் முதல்வனுடைய சேவடியை அடைந்தனம். 
அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

குறிப்புரை:     மண்தலத்தோர் ஓதி முழுது உய்ய -மண்ணிடத்து வாழும் மக்கள் திருப்புகழ்களை 
ஓதிப்பூரணமான உய்வைப் பெற. வெற்பு ஏறு சோதி வானவன்- உதயகிரியில் ஏறி ஒளிர்கின்ற 
சூரியதேவன். துதி செய - வழிபட. மகிழ்ந்தவன் - உவந்து அருள்புரிந்த சிவபிரான். தேவூரில், 
நீரில், குற்றம்  இல்லாத தாமரைப் பூக்கள் மகளிருடைய முகம் போலப் பூக்கும் என்பது 
நீர் நிலவளம் உணர்த்திற்று. தேவூர் ஆதி - தேவூரில் கோயில் கொண்டெழுந்தருளிய முதல்வன்.

    People living on this earth who wish to have good life worship the sun god 
which rises in the early morning from behind the mountain called Udayagiri. The sun god,
of course, worships our Lord Civan. Indran who is the chief of devas also worships 
our Lord Civan. Our Lord, seeing these two worship Him, feels happy and graces them 
immediately. Our Lord Civan is manifest in the temple in Thiru-thevoor city, where 
lotus ponds are many. The flawless lotus flowers bloom and resemble the faces of 
beautiful girls in this Thiru-thevoor city. We all worship the holy feet of our 
Chief Supreme Being. Therefore misfortunes will never enter our life.

2358.     மறைகளான்மிகவழிபடுமாணியைக்கொல்வான் 
    கறுவுகொண்டவக்காலனைக்காய்ந்தவெங்கடவுள் 
    செறுவில்வாளைகள்சேலவைபொருவயல்தேவூர் 
    அறவன் சேவடியடைந்தனமல்லலொன்றிலமே.        3

    மறைகளால் மிகவழிபடு மாணியைக் கொல்வான் 
    கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த வெங்கடவுள் 
    செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் 
    அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    maRaikaLAl mika vazipaTu mANiyaik kolvAn 
    kaRuvu koNTavak kAlanaik kAynta em kaTavuL- 
    ceRuvil vALaikaL cEl avai poru vayal-tEvUr 
    aRavan; cEvaTi aTaintanam, allal onRu ilamE.

பொருள்:     வேதங்கள் ஓதி மிகவும் வழிபாடு செய்யும் பிரமசாரியாகிய மார்க்கண்டேயனைக் 
கொல்லும் பொருட்டுக் கோபித்து வந்த எமனைக் கொன்ற எம் கடவுள்; சேற்றில் வாளைமீன்கள், 
சேல்மீன்கள் ஆகியன பொரும் வயல்கள் கொண்ட திருத்தேவூரில் அறவன் சேவடியை அடைந்தனம். 
அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

 குறிப்புரை:     மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கறுவு- கோபம். எம்கடவுள், செறுவில் -
சேற்றில். பொரு – போர் செய்கின்ற. அறவன் - தருமரூபி, சிவபிரான். அறவாழியந்தணன்' (குறள்).

    The young devotee Markandeyan seriously involved himself in the daily rituals 
as per Vedic rules. Without adhering to general principles, Kaalan, the god of death
ferociously came to take away the life of the young saint Markandeyan. Our Lord Civan, 
indignant at the action of Kaalan, destroyed him by kicking. The carp fish and the saw 
fish fight against each other in the paddy fields in the city of Thiru-thevoor. Here our 
Lord Civan who is the Lord of charity is manifest in the temple. We have prostrated at 
His holy feet. Therefore, we will have no misfortune in our life.

2359.     முத்தன்சில்பலிக்கூர்தொறும்முறைமுறைதிரியும் 
    பித்தன்செஞ்சடைப்பிஞ்ஞகன்றன்னடியார்கள் 
    சித்தன்மாளிகைசெழுமதிதவழ்பொழில்தேவூர் 
    அத்தன்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே.        4

    முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறை முறை திரியும் 
    பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன் அடியார்கள் 
    சித்தன் மாளிகை செழுமதி தவழ் பொழில் தேவூர் 
    அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    muttan, cil palikku UrtoRum muRai muRai tiriyum 
    pittan, cenjcaTaip pinjnjakan, tan aTiyArkaL 
    cittan mALikai cezu mati tavaz pozil-tEvUr 
    attan; cEvaTi aTaintanam, allal onRu ilamE.

பொருள்:     அநாதி முத்தன்; சிறு பிச்சைக்கென ஊர்தோறும் முறைமுறையாகத் திரியும் பித்தன்; 
சிவந்த சடைமுடியினன்; தன்னுடைய அடியார்களின் சித்தத்தில் வாழ்பவன்; செழுமையான மதி தவழும் 
உயரமுள்ள மாளிகைகள், பொழில்கள் கொண்ட தேவூர்த் தந்தை அடைந்தனம். அடைந்த காரணத்தால் 
துன்பம் ஏதும் இலோம்.

குறிப்புரை:     முத்தன் - அநாதிமுத்தன். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன். எண்குணத்துள் 
ஒன்று. சடைப்பிஞ்ஞகன் - மயிர் முடியினன். தன் அடியார்கள் சித்தன் - தன் அடியை வழிபடுவோரது 
சித்தத்தில் இருப்பவன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன் என்றலும் அமையும். 'மதிதவழ்பொழில்' 
சோலையின் உயர்ச்சியைக் குறித்தது.

    Our Lord Civan has infinite detachment from the three evil passions. He is the most 
gracious one. He is a crazy person to collect alms from many people, visiting them in an 
orderly manner. His red disheveled locks of hair bears the Ganges river and the new moon. 
He is manifest in the divine thoughts of His devotees. In this city many tall palaces exist 
and also many forests with tall trees with the moon crawling over them. In such a sacred city 
of Thiru-thevoor and Lord is manifest in the temple. We worship Him in the temple and prostrate
at His holy feet. Therefore, we have not even an atom of suffering in our life.

2360.     பாடுவாரிசைபல்பொருட்பயனுகந்தன்பால் 
    கூடுவார்துணைக்கொண்டதம்பற்றறப்பற்றித் 
    தேடுவார்பொருளானவன்செறிபொழில்தேவூர் 
    ஆடுவானடியடைந்தனமல்லலொன்றிலமே.        5

    பாடுவார் இசை பல்பொருள் பயன் உகந்தன்பால் 
    கூடுவார் துணைக் கொண்ட தம்பற்றறப் பற்றித் 
    தேடுவார் பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர் 
    ஆடுவான் அடியடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    pATuvAr icai, palporuL payan ukantu anpAl 
    kUTuvAr, tuNaikkoNTa tam paRRu aRap paRRit 
    tETuvAr, poruL Anavan ceRi pozil-tEvUr 
    ATuvAn; aTi aTaintanam, allal onRu ilamE.

பொருள்:     அடியவர்களுக்குப் பேறாகவுள்ள பல்பொருள்களின் பயனைவிரும்பிப் பாடுவாருக்கு 
அவர்கள் விரும்பிய பொருளானவன்; தன்பால் கூடுமவருக்குக் கொண்ட துணையானவன்; பிற 
பற்றுக்கள் எல்லாம் அற்றொழியத் தன்னைப் பற்றித் தேடுவாருக்கு  அவர்கள் தேடும் பொருளானவன்; 
செறிந்த பொழில்கள் உள்ளத் திருத்தேவூரில் கூத்தாடுவான் ஆகிய சிவபிரான், அவனுடைய அடியைப் 
புகலாக அடைந்தனம், அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

குறிப்புரை:     பாடுவாரும் கூடுவாரும் தேடுவாருமான அடியார்கட்குப் பேறாயுள்ள 
பொருளானவன்,தேவூர்க்கூத்தன் என்றவாறு. இசைபாடுவார் சிவபிரானைத் துணையாக் 
கொண்டவர்கள். தங்கள் பற்றுக்கள் எல்லாம் அற்றொழிய அச்சிவபிரானையே பற்றாகப் 
பற்றித் தேடுவார்கள். அவர்களுக்கு அவனன்றி வேறுபொருள் இல்லையாதலின், 'தேடுவார் 
பொருளானவன்' என்றார். துணையாகக் கொண்ட தமது பற்று அற எனலுமாம். முன் 
துணையெனப் பற்றப்பட்டது பின் பொய்யாய்த் தோன்ற மெய்த்துணை உயிர்த்துணையாகிய 
சிவபிரானே எனல் விளங்கும். விளங்கின் அதையே பற்றுதலும் தேடுதலும் நிகழும். 'ஆடுவான்' 
என்றது எல்லாத் தலங்களிலும் ஒரு ஞானக்கூத்தனே எழுந்தருளியிருக்கும் உண்மை பற்றியது. 
இச்சித்தாந்த உண்மை உணராமல் உரைப்பவை பொருந்தா. (பதி.152 பா.1). 

    To the devotees who used to chant divine songs in praise of our Lord, 
to the devotees who realise that Lord Civan is the only Chief and the activating 
force in all matters,and as a result worship Him with love in big gatherings and 
to those who,having detached themselves from their kith and kin and all wordly 
matters, cling to Him with all seriousness,our Lord Civan alone is the only matter,
is their only kin. We have reached this Lord's feet and He is the Lord who dances 
in the temple of Thiru-thevoor surrounded by dense forests. Therefore we are free 
from sufferings.

2361.    பொங்குபூண்முலைப்புரிகுழல்வரிவளைப்பொருப்பின் 
    மங்கைபங்கினன்கங்கையைவளர்சடைவைத்தான் 
    திங்கள்சூடியதீநிறக்கடவுள்தென்தேவூர் 
    அங்கணன்றனையடைந்தனமல்லலொன்றிலமே.        6

    பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் 
    மங்கைபங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் 
    திங்கள் சூடிய தீநிறக் கடவுள் தென் தேவூர் 
    அங்கணன் தனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    pogku pUN mulaip purikuzal varivaLaip poruppin 
    magkai pagkinan, kagkaiyai vaLarcaTai vaittAn, 
    tigkaL cUTiya tI niRak kaTavuL, ten tEvUr 
    agkaNan tanai aTaintanam; allal onRu ilamE.

பொருள்:     ஆபரணம் அணிந்தவளும் சுழன்ற குழலை உடையவளும் வரிவளைக் கையினளும் 
ஆகிய மலையரையன் மங்கை பார்வதியைப் பங்கில் உடையவன்; கங்கையை நீண்ட சடையில்                
வைத்தவன்; பிறையைச் சூடிய செந்தீ நிறக் கடவுள்; தென் திருத்தேவூரில் கருணையாளனாகிய 
சிவபிரானை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

குறிப்புரை:     பூண் - ஆபரணம். குழல் - கூந்தல். பொருப்பின் மங்கை - இமாசலகுமாரி. 
தீநிறக் கடவுள் - அழல்வண்ணனாகிய சிவபிரான். அங்கணன் - கருணாக்கடாக்ஷன். கண்ணுக்கு 
அழகு கருணை.

    Our goddess Parvathi Devi is the daughter of the Himalayan king. Her breasts are 
well-developed and are covered with rich jewellery. Her thick tresses and rich lined 
bangles enhance her beauty. Our Lord is concomitant with her. Our Lord supports the 
river Ganges in His hairlocks. He retains the moon also on His head. He shines like 
dark red effulgence. He is manifest in the temple in the attractive city of Thiru-thevoor.
Our Lord is the storehouse of grace. We have reached Him and prostrated before His
holy feet. Therefore, we do not have even a very slight suffering in our life.

2362.     வன்புயத்தவத்தானவர்புரங்களையெரியத் 
    தன்புயத்துறத்தடவரைவளைத்தவன்தக்க 
    தென்தமிழ்க்கலைதெரிந்தவர்பொருந்தியதேவூர் 
    அன்பன்சேவடியடைந்தனமல்லலொன்றிலமே.        7

    வன் புயத்தவத்தான் அவர் புரங்களை எரியத் 
    தன் புயத்துறத்தட வரை வளைத்தவன் தக்க 
    தென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் 
    அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    van puyatta at tAnavar puragkaLai eriyat 
    tan puyattu uRat taTavarai vaLaittavan takka 
    tentamizk kalai terintavar poruntiya tEvUr 
    anpan; cEvaTi aTaintanam; allal onRu ilamE.

பொருள்:     வலிய புயங்களை உடைய அந்த அசுரர்களின் புரங்களை எரியத் தன் 
புய வலியால் பெரிய மேருமலையை வில்லாக வளைத்தவன்; பெருமையுடைய செந்தமிழ்களை 
ஆராய்ந்தவர் வாழும் திருத்தேவூரின் அன்பனின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால்         
துன்பமொன்றும் இலோம்.

குறிப்புரை:     வல்புயத்த அத்தானவர்- வலிய புஜங்களை உடைய அந்த அசுரர். அ- பண்டறிசுட்டும்
 உலகறி சுட்டுமாம். புயத்து அவம் எனப் பிரித்துரைத்தலும் அமையும். வரை - மேரு மலை. தேவூரில்
தமிழ்ப்புலவர் இருந்த உண்மை உணர்த்தப்பட்டது. அன்பன் - அன்பே சிவம். 

    The asuras were very sturdy with very strong shoulders. They had built the three 
fortresses in air. Our Lord Civan with His strong arms took the big Meru mountain and 
used it as His bow to destroy them. In the city of Thiru-thevoor many scholars, well learned 
in the arts of southern Tamil, live. Our Lord Civan who is the embodiment of love is 
manifest in the temple in this city.We have reached His holy feet, and praised Him. 
Therefore, we are never affected even by small sufferings. 

2363.     தருவுயர்ந்தவெற்பெடுத்த அத்தசமுகன்நெரிந்து 
    வெருவவூன்றியதிருவிரல்நெகிழ்த்துவாள்பணித்தான் 
    தெருவுதோறுநற்றென்றல்வந்துலவியதேவூர் 
    அரவுசூடியையடைந்தனமல்லலொன்றிலமே.        8

    தரு உயர்ந்த வெற்பெடுத்த அத்தசமுகன் நெரிந்து 
    வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள்பணித்தான் 
    தெருவு தோறும் நல்தென்றல் வந்து உலவிய தேவூர் 
    அரவு சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    taru uyarnta veRpu eTutta at tacamukan nerintu 
    veruva UnRiya tiruviral nekizttu, vAL paNittAn         
    teruvu tORum nal-tenRal vantu ulaviya--tEvUr 
    aravu cUTiyai aTaintanam; allal onRu ilamE.

பொருள்:     கற்பக மரங்கள் உயர்ந்த கயிலை வெற்பினை எடுக்க முயன்ற அந்த பத்துத்தலை 
இராவணன் அஞ்சி நசுங்க விரலைச் சற்று ஊன்றி, பின் அருள் கொண்டு ஊன்றிய விரலை நெகிழ்த்து 
வாள், வாழ்நாள் ஆகியன பணித்தருளினான். தெருக்கள்தோறும் நல்ல தென்றல் வந்து உலவும் 
திருத்தேவூரில் பாம்பினைச் சூடிய சிவபிரானாகிய அவனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் 
துன்பமொன்றும் இலோம்.

குறிப்புரை:     தசமுகன்- இராவணன். தேவூர்த் தெருக்களின் நலம் கூறப்பட்டது. சூடி - அணிந்த சிவன்.

    Our Lord Civan is manifest along with His consort on the Himalayan mountain. 
Here very significant old trees are plenty. Raavanan, the mighty ten-headed king of 
Sri Lanka, with egoism, tried his best to lift this Kailash mountain and keep it 
aside to make his pathway in the sky while flying. But alas he got his heads crushed 
and became terrified because our Lord slightly pressed the top of the mountain with 
His toe. Raavanan realised his misdeeds and praised, our Lord by chanting divine 
music (Saama Vedic song). On hearing the song, our Lord relented at heart. Then He 
graced him and gave a divine sword and more presents to him. In the city of Thiru-thevoor,
filled with the good southern wind, our Lord Civan manifests Himself in the temple 
wearing on His body snakes as jewellery. We have reached His holy feet, to take refuge 
under Him. Therefore, we have no sufferings in our life.

2364.     முந்திக்கண்ணனுநான்முகனும்மவர்காணா 
    எந்தைதிண்டிறலிருங்களிறுரித்தஎம்பெருமான் 
    செந்தினத்திசையறுபதமுரல்திருத்தேவூர் 
    அந்திவண்ணனையடைந்தனமல்லலொன்றிலமே.        9

    முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர்காணா 
    எந்தை திண்டு இறலிரும் களிறுரித்த எம்பெருமான் 
    செந்தினத் திசை அறுபதம் முரல் திருத்தேவூர் 
    அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    muntik kaNNanum nAnmukanum(m) avar kANA 
    entai, tiN tiRal irugkaLiRu uritta emperumAn, 
    centu inattu icai aRupatam mural tirut tEvUr 
    anti vaNNanai aTaintanam; allal onRu ilamE.

பொருள்:     கண்ணனும் நான்முகனும் அடிமுடிகளைக் காண முந்திக் கொண்டு சென்றும் 
காணாத எம்முடைய தந்தை, திண்மையும் திறலும் உடைய பெரிய களிற்றின் தோலை உரித்த எம் 
பெருமான்; செந்து என்னும் பண்ணின் இனத்து இசையைத் தேன் வண்டு முரலும்  திருத்தேவூர் 
அந்திவண்ணனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

குறிப்புரை:     களிற்றிற்குத் திண்மையும் திறலும் இருமையும் அடைகளாயின. செந்து - 
பெரும்பண்களுள் ஒன்று. 'செந்து மண்டலி' பிங்கலந்தை. செந்து இனத்து இசை -செந்து என்னும் 
பண்வகையைச் சார்ந்த  இசையை. 'செந்திலங்கு மொழியவர்' (தி. 2 ப. 3 பா. 10) 'செந்து 
நேர்மொழி யார்' (தி. 2 ப. 51 பா.11) , 'செந்திசை பாடல்' (தி. 1 ப. 114 பா. 11). அறுபதம்-  வண்டு. 
முரல் - ஒலிக்கும். திருத்தேவூர் என்று  ஆசிரியரே சிவதலங்களை வழங்குமாறு 
உபதேசித்தருளியவாறு உணர்க.

    The tutelary two deities Thirumaal and Brahma argued with each other 
and decided to see the holy feet or the head of Lord Civan first. They both searched 
for years and failed in their efforts. Then they worshipped our father Lord Civan. 
Our Lord once peeled the hide of a very big, fat and mighty elephant. He shines like 
the red glow of sunset. In the city of Thiru-thevoor, the beetles make soft sound as 
of a lute's music known as 'Chendu'. We worship and have taken refuge under His holy 
feet. Therefore we have no sufferings in our Life.

2365.     பாறுப்புத்தருந்தவமணிசமணரும்பலநாள் 
    கூறிவைத்ததோர்குறியினைப்பிழையெனக்கொண்டு 
    தேறிமிக்கநஞ்செஞ்சடைக்கடவுள்தென்தேவூர் 
    ஆறுசூடியையடைந்தனமல்லலொன்றிலமே.        10

    பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள் 
    கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு 
    தேறி மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர் 
    ஆறுசூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

    pARu puttarum, tavam aNi camaNarum, palanAL 
    kURi vaittatu or kuRiyinaip pizai enak koNTu, 
    tERi, mikka nam cenjcaTaik kaTavuL ten tEvUr 
    ARu cUTiyai aTaintanam; allal onRu ilamE.

பொருள்:     அழிவாராகிய பவுத்தர்களும் தவ வேடம் பூண்ட சமணரும் பலநாட்களாகக் 
கூறிவந்த கொள்கையினைப் பிழையெனத் தெளிந்து தேறி நம்முடைய செஞ்சடைக் கடவுளான 
சிவபிரானின் தென்தேவூர் கங்கை சூடியை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் 
இலோம்.

குறிப்புரை:     பாறுபுத்தர் - ஓடுகின்ற புத்தர்கள். பாறல் - ஓடுதல். தவம் அணி - தவக்கோலம் 
அணிந்த. குறி- குண்டர் சாக்கியர் கூறியதாம் குறியின்மையே சொலீர் (பதி. 137 பா. 10). தேறி - தெளிந்து.

    The Buddhists running about, and the Jains who do penance, preach about false 
target. We, the devotees, discovered that their utterances were all utterly false and 
have recognised that our Lord is the chief one. We have reached Thiru-thevoor where 
our Lord is manifest whose fame spreads everywhere in the world. His matted hair is 
red and bright. We have taken refuge under Lord Civan who supports the river Ganges 
on His head. We, therefore, have no sufferings even in small quantity in our life.

2366.     அல்லலின்றிவிண்ணாள்வர்கள்காழியர்க்கதிபன் 
    நல்லசெந்தமிழ்வல்லவன்ஞானசம்பந்தன் 
    எல்லையில்புகழ்மல்கியஎழில்வளர்தேவூர்த் 
    தொல்லைநம்பனைச்சொல்லியபத்தும்வல்லாரே.        11

    அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் காழியர்க்கு அதிபன் 
    நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் 
    எல்லையில் புகழ்மல்கிய எழில்வளர் தேவூர்த் 
    தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

    allal inRi viN ALvarkaL kAziyarkku atipan, 
    nalla centamiz vallavan, njAnacampantan,
    ellai il pukaz malkiya ezil vaLar tEvUrt 
    tollai nampanaic colliya pattum vallArE.

பொருள்:     சீகாழி மக்களுக்குத் தலைவன்; நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன், 
அளவற்ற புகழ் நிறைந்த பழமையான அழகிய திருத்தேவூரில் நம் விருப்பத்திற்கு  உரியவனாகிய 
சிவபிரானைப் பாடிய திருப்பாடல்கள் பத்தினையும் வல்லவர் அல்லல் இன்றி விண் ஆள்வர்.

குறிப்புரை:     அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் வல்லார் என்க. முற்பாக்களில் யாம்             
அல்லல் ஒன்று இலம் என்றருளி, இதில் இப்பத்தும் வல்லார் அல்லல் இலராவர் என்ற உண்மை 
உணர்த்தப்பட்டது. இத்திருப்பதிகத்தை நாடோறும் நியமமாகப் பாராயணம் செய்பவர் 
அல்லல் அடையார் என்பது திண்ணம்.  அதிபன் - தலைவன்.

    Our young saint Thiru-gnana-Sambandar is the chief of people of Seerkaazhi.
He is a great scholar in pure Tamil language. He praised the originator - Lord who is 
manifest in Thiru-thevoor. The city is highly famous all over the universe. These ten
verses are the real praise of our Lord. Those devotees who can chant these ten verses
daily from memory in the presence of our Lord will rule the celestial world without 
suffering in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            82ஆம் பதிகம் முற்றிற்று
            End of 82nd Hymn


            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 219                பதிக எண்: 83

83. திருக்கொச்சைவயம்                83. THIRU-KOCH-CHAI-VAYAM

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.


            திருச்சிற்றம்பலம்

2367.     நீலநன்மாமிடற்றனிறைவன்சினத்தநெடுமாவுரித்தநிகரில் 
    சேலனகண்ணிவண்ணமொருகூறுருக்கொள்திகழ்தேவன்மேவுபதிதான் 
    வேலனகண்ணிமார்கள்விளையாடுமோசைவிழவோசைவேதவொலியின் 
    சாலநல்வேலையோசைதருமாடவீதிகொடியாடுகொச்சைவயமே.        1

    நீல நன்மாமிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகரில் 
    சேலன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான் 
    வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழ ஓசை வேத ஒலியின் 
    சால நல்வேலை ஓசை தருமாடவீதி கொடி ஆடு கொச்சைவயமே.

    nIla nal mAmiTaRRan; iRaivan; cinatta neTumA uritta, nikaril 
    sElana kaNNi vaNNam oru kURu uruk koL, tikaz tEvan; mEvu patitAn 
    vElana kaNNimArkaL viLaiyATum Ocai, vizavu Ocai, vEta oliyin, 
    cAla nal vElai Ocai, taru mATa vIti koTi ATu koccaivayamE.

பொருள்:     திருநீலகண்டம் உடைய இறைவன்; கோபத்தை உடைய பெரிய யானையின் 
தோலினை உரித்தவன்; தனக்கு நிகரில்லாத சேல் மீன் போன்ற கண்ணியாகிய உமையை 
ஒருகூறாகக் கொண்டு திகழ்கின்ற கடவுள், அவர் பொருந்திய பதிதான் ஏதோவெனில், வேல் 
போன்ற கூரிய கண்களையுடைய மகளிர் விளையாடும் பண்ணோசையும் விழவினோசையும், 
வேதமுழக்கமும் மிக்க கருங்கடலின் ஓசையும் கலந்து தரும் கொடியாடும் மாடவீதிகளை 
உடைய திருக்கொச்சைவயமே.

 குறிப்புரை:     நீலநன்மாமிடற்றன் - திருநீலகண்டத்தர். சினத்த- கோபத்தை உடைய. 
மா- யானை. சேல் அன்ன கண்ணி - சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியார். 
கூறு - பாகம். உருகொள் திகழ் தேவன் என்க. கண்ணுக்கு வேல் ஒப்பு. மகளிர் 
விளையாட்டோசையும் விழாவினோசையும் வேதமுழக்கமும், கடலோசையும் உடைய வீதிகள், 
பதிதான் கொச்சைவயம் என்க. முதல் 9 பாக்கட்கும் இவ்வாறே கொள்க.  

    The name of the city Koch-chai-vayam is one of the twelve names of Seerkaazhi.
Our Lord Civan's neck is dark blue in colour. Once He peeled off the hide of a very big ,
sturdy and ferocious elephant. He has embedded His consort Uma Devi on the left side 
of His body. Her eyes resemble the carp fish and she is an incomparable goddess. 
Our Lord Civan is manifest in the temple in Koch-chai-vayam city. In this city the 
noise created by beautiful girls with spear like eyes, playing different games in large
numbers, is always heard. The loud noise of pompous festivals; the noise created by 
Vedic scholars chanting the Vedas; the noise created by the waves of the ocean, all 
these noises are always heard in the city. Also the flags flying in the streets filled 
with big palatial buildings are many. In such a pompous city our Lord Civa 
manifests Himself in the temple.

2368.     விடையுடையப்பனொப்பில்நடமாடவல்லவிகிர்தத்துருக்கொள்விமலன்     
    சடையிடைவெள்ளெருக்கமலர்கங்கைதிங்கள்தகவைத்தசோதிபதிதான்     
    மடையிடையன்னமெங்குநிறையப்பரந்துகமலத்துவைகும்வயல்சூழ்
    கொடையுடைவண்கையாளர்மறையோர்களென்றும்வளர்கின்றகொச்சைவயமே.     2

    விடை உடையப்பன் ஒப்பில் நடமாட வல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன் 
    சடை யிடை வெள் எருக்கமலர் கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான் 
    மடை இடை அன்னம் எங்கு நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ் 
    கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே

    viTai uTai appan; oppu il naTam ATa valla vikirtattu uruk koL vimalan; 
    caTai iTai veL erukkamalar, kagkai, tigkaL, taka vaitta cOti; patitAn- 
    maTai iTai annam egkum niRaiyap parantu kamalattu vaikum, vayalcUz, 
    koTai uTai vaNkaiyALar maRaiyOrkaL enRum vaLarkinRa, koccaivayamE.

பொருள்:     எருதினை உடைய எங்கள் அப்பன்; நிகரில்லாத திருக்கூத்து நிகழ்த்த வல்ல 
விகிர்த உருக்கொண்ட விமலன்; தன் சடையின் இடையே வெள்ளெருக்கமலரையும், கங்கையையும்,
திங்களையும் பொருந்த வைத்த சோதி; அவருடைய பதிதான் ஏதோவெனில், நீர் பாயும் பள்ள
மடைகளெங்கும் அன்னப் பறவைகள் பரந்து தாமரை மலர்களிலே தங்கும் வயல்கள் சூழ்ந்த, 
வள்ளன்மையுடையவர்களும்  மறையோர்களும் விருத்தியடைகின்ற திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     ஒப்புஇல் நடம்- உவமை இல்லாத ஞானத்திருக்கூத்து. விகிர்தம் - மாறுபாடு 
(பா.10). சடையிடை, வெள்ளெருக்க மலர்- 'வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பு' (கம்பர். 
யுத்தகாண். இராவணன் வதைப். 237). தக -தகுமாறு, பொருந்த. சோதிபதி - ஆறன்தொகை, 
அன்னம்பரந்து  கமலத்து வைகும் வயல். கொடையுடைவண்கையாளர்- கொடையில் ஓவார் 
குலமும் உயர்ந்த மறையோர்கள் (தி. 2 ப. 122 பா. 1). உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு 
ஒரு நாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக்காழி (தி.1 ப. 102 பா.1).

    Our Lord who is our Father loves to have a bull for His conveyance. His 
avocation is to dance in various styles, which are unparalleled. He is our immaculate
Supreme Being used to take various forms. His matted hair is decorated with white 
Yarcum flowers, the Ganges river, the baby moon etc. He shines with all these 
decorations. Our Lord Civan is manifest in the temple in Koch-chai-vayam. Here the 
swans stay in large numbers, resting over the lotus flowers in various fields and ponds. 
In this city, Vedic scholars who are good philanthropists do live in large numbers 
repeating the Vedic chanting. In such a gorgeous city of Koch-chai-vayam, 
our Lord is manifest in the temple of this Koch-chai-vayam city.

2369.     படஅரவாடுமுன்கையுடையானிடும்பைகளைவிக்குமெங்கள்பரமன் 
    இடமுடைவெண்டலைக்கைபலிகொள்ளுமின்பனிடமாயவேர்கொள்பதிதான் 
    நடமிடமஞ்ஞைவண்டுமதுவுண்டுபாடுநளிர்சோலைகோலுகனகக் 
    குடமிடுகூடமேறிவளர்பூவைநல்லமறையோதுகொச்சைவயமே.        3

    பட அரவாடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் 
    இட முடை வெண் தலைக் கைபலிகொள்ளும் இன்பனிடம் ஆயவேர் கொள்பதிதான்
    நட மிட மஞ்ஞை வண்டு மதுஉண்டு பாடு நளிர் சோலை கோலு கனகக் 
    குட மிடுகூட ஏறி வளர் பூவை நல்ல மறையோது கொச்சைவயமே.

    paTa aravu ATu mun kai uTaiyAn, iTumpai kaLaivikkum egkaL paraman, 
    iTam uTai veN talaik kai pali koLLum inpan, iTam Aya Er koL patitAn
    naTam iTa manjnjai, vaNTu matu uNTu pATu naLir cOlai, kOlu kanakak 
    kuTam iTu kUTam ERi vaLar pUvai nalla maRai Otu, koccaivayamE.

பொருள்:     படமெடுத்து ஆடும் பாம்பினைக் கங்கணமாகக்  கொண்ட முன்கையன்; 
துன்பங்களைக் களையும் எங்கள் மேலானவன்; வெண்டலையில் பலியேற்றலில் இன்பம்
கொள்பவன் ஆகிய சிவன் அழகாகக் கொள்ளும் பதிதான் ஏதோவெனில், மயில்கள்  நடமாட, 
வண்டுகள் தேனினை உண்டு பாடும் குளிர்ந்த சோலைகளில்  பொற்குடங்கள் நாட்டப் பெற்ற 
கூடமேறிக் கூட்டமான நாகணவாய்ப் புள்கள் நன்றாக மறையோதும் திருக்கொச்சைவயமே. 

குறிப்புரை:     மஞ்ஞை - மயில். மயில் ஆட வண்டு பாடும். நளிர் - குளிர்ச்சி. கூடத்தின் மிசைக் குடம் 
இடுதல் முன்பே இருந்தது. பூவை - நாகணவாய்ப்புள். கூடம் ஏறி மறை ஓதும் கொச்சைவயம் என்க.

    Our Lord Civan's forearm accommodates the moving snake, which has its hood. He is our 
Chief who removes all our misery in life. He loves to beg alms in the broad white skull. 
The attractive place Koch-chai-vayam is the place of His stay. In this city peacocks, many in 
number, move about and dance. The bees suck honey and make musical noise in the cool 
forest area. At the top most floor of palatial buildings a flat area on the top was provided 
to fix a golden pot full of water covered with sprays of mango leaves and a coconut atop 
of it. Here in the halls, bush myna birds make noise beautifully. In such a beautiful city 
of Koch-chai-vayam, our Lord is manifest in the temple.

2370.     எண்டிசைபாலரெங்குமிகலிப்புகுந்துமுயல்வித்தசிந்தைமுடுகிப் 
    பண்டொளிதீபமாலையிடுதூபமோடுபணிவுற்றபாதர்பதிதான் 
    மண்டியவண்டன் மிண்டிவருநீரபொன்னிவயல்பாயவாளைகுழுமிக் 
    குண்டகழ்பாயுமோசைபடைநீடதென்னவளர்கின்றகொச்சைவயமே.        4

    எண் திசை பாலர் எங்கும் இகலிப் புகுந்து முயல் வித்த சிந்தை முடுகிப் 
    பண்டு ஒளி தீபமாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் 
    மண்டிய வண்டன் மிண்டி வருநீர பொன்னி வயல் பாய வாளை குழுமிக் 
    குண்ட கழ்பாயும் ஓசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சைவயமே.

    eN ticai pAlar egkum ikalip pukuntu, muyal vitta cintai muTuki, 
    paNTu, oLi tIpa mAlai, iTu tUpamOTu paNivu uRRa pAtar patitAn- 
    maNtiya vaNTan miNTi varum nIra ponni vayal pAya, vALai kuzumik
    kuNTu akaz pAyum Ocai paTai nITa tenna vaLarkinRa koccaivayamE.

பொருள்:     எட்டுத் திசையிலும் உள்ள காவலர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் 
போட்டியிட்டு முந்திக் கொண்டு புகுந்து முன்பு தீபம், தூபம், பூமாலைகளுடன் வழிபட்டுப்  
பணிந்த திருவடிகளை உடையவர் பதிதான் ஏதோவெனில், அடித்துக் கொண்டுவரும் 
வண்ணடல் நிறைந்து வரும் காவிரியின் நீர், வயலிற்பாய, வாளைமீன்கள் திரண்டு குழிந்த 
பள்ளங்களில் வீழும்  ஓசை வாளினை ஏந்தி காலாட்படை குழுமிய தொக்கும் திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     பாலர் - பாலகர். இகலி- பகைத்து. வழிபடு முறையுட் சிறிது உணர்த்திற்று. 
ஒளி தீபமாலை  -தீபாவளி. பாதர் - திருவடியுடையவர். குண்டு - ஆழம்.

    The regents who guard and control the eight cardinal points of the universe 
as world protectors, are Indiran, Agni, Yaman, Viruthi, Varunan, Vaayu, Kuberan and
Easan Murthy. They all visit the city of Koch-chai-vayam. They all join together 
with mental happiness and pour the oil into the lamps in an orderly manner and light it. 
Then, they prostrate at the holy feet of our Lord Civan and worship Him. Our Lord 
Civan's holy place is Koch-chai-vayam. In this city the Cauvery river brings sediments 
along with sand. The water of the river flows into the fields in plenty. Here the fish 
in large numbers join together and play in deep waters creating a loud noise. This noise 
is similar to the noise of hostile armies proceeding for a war.

2371.     பனிவளர்மாமலைக்குமருகன்குபேரனொடுதோழமைக்கொள்பகவன் 
    இனியன அல்லவற்றையினிதாகநல்குமிறைவன்னிடங்கொள்பதிதான் 
    முனிவர்கடொக்குமிக்கமறையோர்களோமம்வளர்தூமமோடியணவிக் 
    குனிமதிமூடிநீடுமுயர்வான்மறைத்துநிறைகின்றகொச்சைவயமே.        5

    பனி வளர் மாமலைக்கு மருகன் குபேரனொடு தோழமைக் கொள் பகவன் 
    இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் 
    முனிவர்கள் ஒக்குமிக்க மறையோர்கள் ஓமம்வளர் தூமம் ஓடி அணவிக் 
    குனி மதிமூடி நீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே.

    pani vaLar mAmalaikku marukan, kupEranoTu tOzamaik koL pakavan, 
    iniyana allavaRRai initu Aka nalkum iRaivan(n), iTamkoL patitAn
    munivarkaL okku, mikka maRaiyOrkaL Omam vaLar tUmam OTi aNavi, 
    kunimati mUTi, nITum uyar vAn maRaittu niRaikinRa koccaivayamE.

பொருள்:     இமாசலகுமாரனுக்கு மருமகன்; குபேரனோடு தோழமை கொண்ட பகவன்; இனியன 
அல்லாதவற்றையும் இனியனவாக ஆக்கி நல்கும் இறைவன்; அவன் இடங்கொள் பதிதான் யாதெனில், 
முனிவர்கள் கூடியிருக்க, மிகுந்த மறையோர்கள் ஆற்றும் வேள்வியில் எழும் புகை ஆகாயத்தை முட்டி 
வளைந்த மதியையும் மூடி உயர்வானையும் மறைத்து நிறைகின்ற திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     பனி.... மலைக்கு. இமாசலராசனுக்கு. குபேரன் சிவபிரானுக்குத் தோழனாதல் 
பிரசித்தம் . இனிக்காதவற்றையும் இனியவாகச் செய்தருளும் பெருமான். பிறப்பு இன்னாதது 
என்பது சர்வமத சம்மதம். அதனை இனியதாகப் பலவுயிரும் விரும்புகின்றன. அவ்விருப்பம் மீண்டும் 
பிறப்பதற்கு உரிய  வினையாகின்றது. இது திருவருட்செயல். அணவி - கிட்டி. 'வேள்விப் புகையால் 
வானம் இருள்கூர் வெண்காடே' (பதி. 197 பா. 7).

    Our Lord Civan is the son-in-law of the king of snow-capped Himalayan mountain. 
Our God mentioned by Thiru-gnana-Sambandar as Bagavan is a close friend  of Kuberan, 
the god of wealth. He bestows all good grace on His devotees even though they do not 
chant pleasing praise. In this city, Vedic scholars create the sacrificial fire
along with the sages. The smoke arising out of the sacrificial fire rushes and spreads 
over the sky and makes the baby moon invisible. Also the entire sky becomes invisible .
This gorgeous city is Koch-chai-vayam where our Lord Civan is manifest. 

2372.     புலியதள்கோவணங்களுடையாடையாகவுடையான்நினைக்குமளவில் 
    நலிதருமுப்புரங்களெரிசெய்தநாதன்நலமாவிருந்தநகர்தான் 
    கலிகெடஅந்தணாளர்கலைமேவுசிந்தையுடையார்நிறைந்துவளரப் 
    பொலிதருமண்டபங்களுயர்மாடநீடுவரைமேவுகொச்சைவயமே.        6

    புலியதள் கோவணங்கள் உடைஆடையாக உடையான் நினைக்கும் அளவில்         
    நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா விருந்த நகர்தான் 
    கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை உடையார் நிறைந்துவளரப் 
    பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடுவரை மேவு கொச்சைவயமே.

    puli ataL kOvaNagkaL uTai ATai Aka uTaiyAn, ninaikkum aLavil 
    nalitaru muppuragkaL ericeyta nAtan, nalamA irunta nakartAn- 
    kali keTa antaNALar, kalai mEvu cintai uTaiyAr, niRaintu vaLara, 
    politaru maNTapagkaL uyar mATam nITu varai mEvu koccaivayamE.            

பொருள்:     புலியின் தோலையும் கோவணத்தையும் உடையாக உடையன்;  நினைத்த 
மாத்திரத்தில் முப்புரங்களையும் எரித்த தலைவன்; அவன் மகிழ்ந்து இருந்த தலம்  யாதெனில், 
வறுமை கெட வேள்விசெய்யும் அந்தணாளர்; வேதம் முதலிய கலைகள் பற்றிய சிந்தனை 
உடையவர்கள் நிறைந்து  மேலோங்க, பொலிவுடைய மண்டபங்கள்,  உயர்மாடங்கள் 
மலைபோல உயர்ந்து அமைந்துள்ள திருக்கொச்சைவயமே. 

குறிப்புரை:     அதள் - தோல். உடையாடை (ப.217 பா.2). கலி - வறுமை. அந்தணாளர் – அழகும் 
தண்மையும் ஆள்பவர். கலை - வேத முதலிய கலைகள்.

    Our Lord Civan wears around His waist tiger's skin as His dress. He uses 
the forelap cloth to cover His loins. He is the Hero, who in the fraction of a 
second, destroyed the three fortresses of the asuras who inflicted misery on the 
devas as well as on the world. In this city, Vedic scholars making sacrificial
fire for chasing kali (suffering and sorrow) from this world and people of 
artistic leanings are many. The city contains beautiful halls open on one side 
and connected with a temple, and very many palatial buildings and these together 
look like a range of mountains, such is the beauty of Koch-chai-vayam. This city 
is Koch-chai-vayam where our Lord Civan is manifest.

7ஆவது பாடல் கிடைக்கப்பெறவில்லை.

2373.     மழைமுகில்போலுமேனியடல்வாளரக்கன்முடியோடுதோள்கள்நெரியப் 
    பிழைகெடமாமலர்ப்பொன்னடிவைத்தபேயொடுடனாடிமேயபதிதான் 
    இழைவளரல்குல்மாதரிசைபாடியாடவிடுமூசலன்னகமுகின் 
    குழைதருகண்ணிவிண்ணில்வருவார்கள்தங்களடி தேடுகொச்சைவயமே.        8

    மழை முகில் போலு மேனியடல் வாளரக்கன் முடியோடு தோள்கள் நெரியப் 
    பிழை கெட மாமலர்ப் பொன்னடி வைத்த பேயொடு உடனாடி மேய பதிதான் 
    இழை வளர் அல்குல் மாதர் இசை பாடிஆட விடுமூசலன்ன கமுகின் 
    குழை தருகண்ணி விண்ணில் வருவார்கள் தங்களடி தேடு கொச்சைவயமே.

    mazai mukil pOlum mEni aTal vAL arakkan muTiyOTu tOLkaL neriya, 
    pizai keTa, mA malarppon aTi vaitta pEyoTu uTan ATi mEya patitAn- 
    izai vaLar alkul mAtar icai pATi ATa, iTum Ucal anna kamukin 
    kuzai taru kaNNi viNNil varuvArkaL tagkaL aTi tETu koccaivayamE.

பொருள்:     கார்மேகம் போன்ற மேனியையும் வெற்றி படைத்த வாளையும் கொண்ட  அரக்கன்
இராவணனின் பத்து முடிகளுடன் இருபது தோள்களும் நெரிய, அவன் செய்த பிழை கெட தாமரை 
போன்ற பொன்னடியை வைத்த, பேய்க்கணங்களுடன் ஆடுவோன் பொருந்திய  பதிதான் யாதெனில், 
மேகலை முதலிய அணிகள் அணிந்த அல்குலை உடைய மாதர்கள் இசைபாடியாட, கமுகாகிய ஊசலில் 
கட்டிய கயிறு விண்ணில் வருவார்களின் அடியைத் தடுக்கும் திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     மழை முகில்- மழையைப் பொழியும் மேகம். அரக்கன் -இராவணன். 
இராவண்ணன்  என்றவாறு. பிழை  - மதியாது மலையெடுத்த குற்றம். இழை -மேகலை முதலியன. 
கண்ணி - வலை. புட்களைப் படுக்கும் முடிப்புக் கயிறுமாம். கமுகின் குழை - (தளிர்) தருக்கண்ணி, 
விண்ணில் வருவோர் காலைச்சிக்கச் செய்யும் என்றதால்  அதன் உயர்ச்சி கூறிற்று.

    The king of Sri Lanka, Raavanan, with his body like black clouds which carry 
water in the sky, and a strong sword at his waist, had his ten heads and shoulders
crushed under mount Kailash, the abode of our Lord. Our Lord pressed the top of His 
mountain, with His flower like holy feet, very slightly. Raavanan realised his egoism
and begged pardon to our Lord for his misdeed. His avocation is to dance in the company 
of fiends.In this city, very attractive girls wearing jeweled girdle of seven or eight 
strands over their waist dance and sing in the music halls. In this city, the areca palm 
trees in large numbers grow very tall reaching the sky, with their leaf stalks waving 
around the legs of the celestials who move about in the sky. Such is the richness 
of the city.

2374.     வண்டமர்பங்கயத்துவளர்வானும்வையம்முழுதுண்டமாலுமிகலிக் 
    கண்டிடவொண்ணுமொன்றுகிளறிப்பறந்துமறியாதசோதிபதிதான் 
    நண்டுணநாரைசெந்நெல்நடுவேயிருந்துவிரைதேரமோதுமதுவிற் 
    புண்டரிகங்களோடுகுமுதம்மலர்ந்துவயல்மேவு கொச்சைவயமே.        9

    வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுதுண்டமாலும் இகலிக் 
    கண்டிட ஒண்ணு மொன்று கிளறிப் பறந்தும் அறியாத சோதி பதிதான் 
    நண்டுண நாரை செந்நெல் நடுவே இருந்து இரை தேரமோது மதுவிற் 
    புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல்மேவு கொச்சைவயமே.

    vaNTu amar pagkayattu vaLarvAnum, vaiyam muzutu uNTa mAlum, ikali, 
    "kaNTiTa oNNum" onRu kiLaRi, paRantum, aRiyAta cOti patitAn
    naNTu uNa, nArai cennel naTuvE iruntu; irai tEramOtu maTuvil 
    puNTarikagkaLOTu kumutam malarntu--vayal mEvu koccaivayamE.

பொருள்:     வண்டுகள் அமர்கின்ற தாமரை மலரில் இருக்கும் நான்முகனும் வையமுண்ட 
திருமாலும் தம்முள் மாறுபட்டு முறையே முடியும் அடியும் காண முனைந்து வானத்தில் பறந்தும் 
பூமியைக் கிளறியும் அறியவியலாத நீதியினது பதிதான் யாதெனில், நண்டினை உண்ண 
வேண்டி நாரை செந்நெல் வயலின் நடுவேயிருந்து இரைதேட, போதுகளில் தேனுடன் 
தாமரைகளோடு  குமுதங்களும் மலரும் வயல்கள் பொருந்திய திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     வளர்வான் - பிரமன். மால் கிளறி. வளர்வான் பறந்தும். நண்டு உண்ண. 
நாரை இரையைத் தேர (ஆராய). புண்டரிகம் - தாமரை. குமுதம் - ஆம்பல். 

    The demigod Brahma rests in the lotus flower where long bees swarm in large 
numbers. The tutelary god Thirumaal once devoured the entire world. They both had 
different ideas about who was superior to the other. Then they decided that they 
should see the head and feet of our Lord Civan, and the one who saw them first was 
superior. Thirumaal took the form of a swine and Brahma became the swan and one went 
deep down the earth and the other over the sky. They both could not see the head
and feet. Then our Lord Civan took the form of supernal effulgence, and He resides 
in the city of Koch-chai-vayam. In this city, there are rich fields and ponds always 
full of water. The cranes stand in the midst of red paddy fields and search for their 
food such as crabs. The lotus flowers are full of honey, blossom in large numbers 
in the fields. Along side the lily flowers also blossom in the fields. Such a delightful 
city is Koch-chai-vayam where our Lord Civan is manifest.

2375.    கையினிலுண்டுமேனியுதிமாசர்குண்டரிடுசீவரத்தினுடையார்                 
    மெய்யுரையாதவண்ணம்விளையாடவல்லவிகிர்தத்துருக்கொள்விமலன் 
    பையுடைநாகவாயிலெயிறாரமிக்ககுரவம்பயின்றுமலரச் 
    செய்யினில்நீலமொட்டுவிரியக்கமழ்ந்துமணநாறுகொச்சைவயமே.        10

    கையினில் உண்டு மேனியுதிமாசர் குண்டரிடு சீவரத்தின் உடையார்             
    மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன் 
    பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச் 
    செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து மணநாறு கொச்சைவயமே.

    kaiyinil uNTu mEni utir mAcar kuNTar, iTu cIvarattin uTaiyAr,            
    mey uraiyAta vaNNam viLaiyATa valla vikirtattu uruk koL vimalan- 
    pai utai nAka vAyil eyiRu Ara mikka kuravam payinRu malara, 
    ceyyinil nIlam moTTu viriyak kamazntu maNam nARu koccaivayamE.

பொருள்:     உணவினைக் கையில் வாங்கி ஏந்து உண்டு, உடலில் உதிரும் அழுக்குடைய 
சமணக் குண்டர்கள் துவரூட்டிய உடையராகிய பவுத்தர்கள் ஆகிய புறச் சமயத்தினர் சமயாதீதனான 
பரசிவத்தின் உண்மை உணரமாட்டார்; அவர்களுக்கு மெய்ப்புலப்படா வண்ணம் விளையாட 
வல்ல விகிர்தத்து உருவினைக் கொள்ளும் மலமற்றவன் வாழும் பதி யாதெனில், நச்சுப் 
பையினையுடைய நாகத்தின் வாயில் உள்ள பல்லினை ஒத்த பூக்களைக் குரவம் மிகுதியாக  
மலர, வயல்களில்  நீலோற்பவம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறும் திருக்கொச்சைவயமே.

குறிப்புரை:     மாசர் - அழுக்கர். புறப்புறச்சமயத்தார்க்குச் சமயாதீதனான பரசிவத்தின் 
மெய் புலப்படாமை கூறிற்று. எயிறு - பல். பயின்று - மிகுதியாய். செய் - கழனி. (மொட்டு - அரும்பு). 
கமழ்ந்து - பரந்து. வியலிடம் கமழ் (புறநா.50).

    The Jains do live in this city. They accept alms in their hands and eat it 
from their hands. Therefore, the dirt and dust from the body falls now and then. Some 
are strong  and stout people. The Buddhist monks wear salmon coloured dresses. They both 
preach undesirable and false wisdom. Our Lord Civan used to take different kinds of
forms according to need. He is manifest in Koch-chai-vayam. In this city, common 
bottle flower blossoms. This flower looks like the tooth and gums of the hooded 
snake.  In the fields blue Indian water lily blossoms in large numbers. Because of 
the blossoming of these two flowers sweet smell spreads everywhere in the city 
Koch-chai-vayam. In such a gorgeous city our Lord is manifest.

2376.     இறைவனையொப்பிலாதஒளிமேனியானையுலகங்களேழுமுடனே 
    மறைதருவெள்ளமேறிவளர்கோயில்மன்னியினிதாஇருந்தமணியைக் 
    குறைவிலஞானமேவுகுளிர்பந்தன்வைத்ததமிழ்மாலைபாடுமவர்போய் 
    அறைகழலீசனாளும்நகர்மேவியென்றுமழகாஇருப்பதறிவே.        11

    இறைவனை ஒப்பிலாத ஒளிமேனியானை உலகங்கள் ஏழும் உடனே
    மறைதரு வெள்ளம் ஏறிவளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியைக் 
    குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடும் அவர்போய்  
    அறை கழல் ஈசனாளும் நகர் மேவிஎன்று மழகா இருப்பதறிவே.

    iRaivanai, oppu ilAta oLi mEniyAnai, ulakagkaL Ezum uTanE 
    maRaitaru veLLam ERi vaLar kOyil manni initA irunta maNiyai, 
    kuRaivu ila njAnam mEvu kuLir pantan vaitta tamizmAlai pATumavar, pOy, 
    aRai kazal Ican ALum nakar mEvi, enRum azakA iruppatu aRivE.

பொருள்:     இறைவனை, ஒப்பு இலாத ஒளிமேனியான் தன்னை, ஏழு உலகங்களும் ஒருசேர 
மறையுமாறு ஊழிக்காலப் பெருவெள்ளம் மேவியபோது, அழியாமல் நின்ற திருக்கொச்சைவயம் 
திருக்கோயிலில் இனிதாக நிலைத்து இருந்த மணியைக் குறைவிலாத நிறைந்த ஞானம் மேவும் 
அருளுடை திருஞானசம்பந்தன் பாடி வைத்த தமிழ்மாலையைப் பாடுமவர் ஒலிக்கும் கழலணிந்த 
ஈசன் ஆளும் சிவலோகத்திற்குப் போய் அங்கு என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர்; இதனை அறியும் 
அறிவே அறிவு.

குறிப்புரை:     ஒப்பு இலாத ஒளி மேனியான்- உவமையில்லாத பிரகாசத்தையுடைய திருமேனியை 
உடையவன். 'அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பிரகாசமாய்' (தாயுமான.1).  விளங்குவது 
வேறொன்றில்லாமையால் ஒப்பின்மை தெளிவாம். மறைக்கும் வெள்ளம் ஊழிப்பிரளயம்.  

    Our Lord Civan is manifest everywhere in all directions in the universe since He
is all pervasive. He shines in supernal effulgence. At the time of the deluge the whole 
universe was immersed in water, except the Thiru-th-thoni mountain temple which alone 
floated. Our Lord Civan manifesting Himself in this temple enjoyed everything. 
Thiru-gnana-Sambandar who is bestowed with divine knowledge chanted these famous 
garlands of Tamil, in ten verses. Those devotees who can memorise all these ten 
verses, chant them before our Lord will be blessed by Him. They will reach the 
Siva Loka, where our Lord Civan wearing the tinkling anklets rules over. There 
they will happily stay with divine subtle body.

        திருச்சிற்றம்பலம் 
        THIRU-CH-CHITRAM-BALAM

        83ஆம் பதிகம் முற்றிற்று
        End of 83rd Hymn

        திருச்சிற்றம்பலம்
        THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 220                பதிக எண்:84

84.திருநனிபள்ளி                    84.THIRU-NANI-PALLI

பண்: காந்தாரம்                    Pann: Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருநனிபள்ளி என்னும் இத்திருத்தலமானது திருஞானசம்பந்த சுவாமிகளுடைய 
அருமைத் தாயாரின் பிறப்பகம் ஆகும்.  இது இக்காலம் புஞ்சை கடாரங் கொண்டான் என்று  
வழங்கப்பெறுகின்றது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 43ஆவது தலமாகும்.  மயிலாடு
துறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இறைவரின் திருப்பெயர் நற்றுணையப்பர்.  இறைவியாரின் 
திருப்பெயர் மலையான்மடந்தை. இத்தலம் முன் பாலை நிலமாய் இருந்தது.  ஞானசம்பந்தப் 
பெருந்தகையார் இதை நெய்தல் நிலமாகுமாறு பாடினார். பின்னர் இதையே கானகமும் வயலுமாக 
ஆக்கினர். இச்செய்தி,

    'நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே 
    போதின் மலிவயல் ஆக்கிய கோன்'

என்னும் பதினொன்றாந் திருமுறையிலுள்ள ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் (செய்யுள் 17)
கூறப்பெற்றுள்ளது.

    ஞானசம்பந்தர் பாலையை நெய்தலாகப் பாடியதை 'பாலை நெய்தல் பாடியதும்' என்னும் 
திருக்களிற்றுப்படியார் பாடலாலும் அறியலாம். இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, 
திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக மூன்று
பதிகங்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசு நாயனார் இக்கோயில் பதிகம் ஐந்தாம் திருப்பாட்டில்
 சமணர்கள், தமக்கு நஞ்சு கலந்த சோறு கொடுத்ததை,

    'வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலாவமணர் தந்த
     நஞ்சமுதாக்கு வித்தார் நனிபள்ளியடிகளாரே'

எனக் குறித்துள்ளார்கள்.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தர் திருவருள்பெற்றுச் சீகாழியில் எழுந்தருளியுள்ள உண்மையைக் 
கேட்டறிந்தனர். உலகோர் பலர் 'தாவில் சராசரங்களெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையாரை
மணிவயிற்றில் உலகுய்ய வைத்து வழங்கிய பகவதியார்' திருஅவதாரம் செய்த தலமாகிய 
திருநனிபள்ளியின் மறையவரும் அதைக் கேட்டுணர்ந்தனர். அதன்பின் சீகாழியை அடைந்தனர். 
ஆளுடை பிள்ளையார் அடிமலர் வணங்கினர். தாம் வாழும் திருப்பதிக்கு எழுந்தருளும்படி 
வேண்டினர். நாயனாரும் அதற்கு இசைந்து புறப்பட்டுத் திருநனிபள்ளியை அணுகினார். 
அவரை அருளிய சிவபாதவிருதயர் அதுதான் திருநனிபள்ளி என்றனர். அதுகேட்ட ஞானப் 
பிள்ளையார் இத்திருப்பதிகத்தைப் பாடி, அத்தலத்தை அடைந்து திருக்கோவிலினுட்புகுந்து 
வழிபட்டார். இத்திருப்பதிகமே பாலையாயிருந்த அத்திருநனிபள்ளியை நெய்தலாக்கிற்று' 
என்பர் பெரியோர். 'ஒண்கெழுவு ஞானத்தினரறிய மன்னு நனிபள்ளியது, பாலைதனை 
நெய்தலாக்கியும்' என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருஉல மாலையிலும், 'ஓடஞ் 
சிவிகை உலவாக்கிழியடைக்கப் பாடல் பனைதானம் பாலை நெய்தல்' எனத் திருக்களிற்றுப் 
படியாரிலும் (70) உள்ளமை அறிக.

            திருச்சிற்றம்பலம்

2377.     காரைகள்கூகைமுல்லைகளவாகையீகைபடர்தொடரிகள்ளிகவினிச் 
    சூரைகள்பம்மிவிம்முசுடுகாடமர்ந்தசிவன்மேயசோலைநகர்தான் 
    தேரைகளாரைசாயமிதிகொள்ளவாளைகுதிகொள்ளவள்ளைதுவள 
    நாரைகளாரவல்வாரிவயன்மேதிவைகுநனிபள்ளிபோலுநமர்காள்.        1

    காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர்தொடர் இகள்ளி கவினிச் 
    சூரைகள் பம்மி விம்முசுடு காடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் 
    தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளைகுதி கொள்ள வள்ளை துவள 
    நாரைகள் ஆரவல் வாரிவயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

    kAraikaL, kUkai, mullai, kaLa, vAkai, Ikai, paTar toTari, kaLLi, kavini; 
    cUraikaL pammi; vimmu cuTukATu amarnta civan mEya cOlai nakartAn- 
    tEraikaL Arai cAya mitikoLLa, vALai kutikoLLa, vaLLai tuvaLa,
    nAraikaL Araval vAri, vayan mEti vaikum nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     காரைச் செடிகள், கூகைமுல்லைகள், கனவாகைகள், படர்கின்ற முட்கொடிகள், 
கள்ளிச்செடிகள் முதலிய தாவரங்கள் அழகு செய்ய, சூரைகள் செறிந்துள்ள சுடுகாட்டில் தங்கும் 
சிவன் பொருந்திய சோலைநகர்தான் எதுவெனில், தேரைகள் ஆரைப்புற்கள் சாயுமாறு மிதிக்க, 
வாளைமீன்கள் குதிக்க,வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல்மீன்களை வாரியுண்ண, 
வயல்களில் எருமைகள் தங்கும் நனிபள்ளியாம், நம்மவர்களே!

குறிப்புரை:     காரை முதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்குள்ளன. 'முட்காற்காரை' (புறம். 258). 
கள- களா. 'கருவையிலும் சிங்கையிலும் களவாண்டான்' (தனிப்பாடல்). ஈகை - இண்டஞ்செடி. ஈங்கை -
புலி தொடக்கி எனலுமுண்டு. 'இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத்து' . தொடரி - முட்செடி. 'கடுவும் தான்றியும் 
கொடுமுள் தொடரியும்'. சூரை - 'கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து ' மணிமேகலை  6-81. பம்மி - 
செறிந்து. 'குளத்தினில் ஆரை படர்ந்து' திருமந்திரம் 2911. 'மகளிர் வள்ளை கொய்யும்' பதிற். 29-2. 

    Oh! My dear relatives and people!! Several vegetations such as Kaarai, Kookai, 
Mullai, Kalavaagai, and Eekai spread as creepers, also Thodari and Kalli cause admirable 
beauty all around. Here our Lord Civan is manifest in the burning ghat situated in this 
area; hedge caper shrub growing all around the burning ghat is plenty, However the city 
is surrounded by man-made gardens. Here the Indian toads jump over the common mountain 
ebony and press and destroy the creepers. On seeing this,  the swordfish jumps over the 
frog, catches them and eats them. The creepers get destroyed by the fish. On seeing the 
swordfish the herons come near and eat the fish in the watery fields. Here the buffaloes 
in large numbers enter into the deep waters and enjoy taking bath here.

2378.     சடையிடைபுக்கொடுங்கியுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணியயலே 
    இடையிடைவைத்ததொக்குமலர்தொத்துமாலையிறைவன்னிடங்கொள்பதிதான் 
    மடையிடைவாளைபாயமுகில்வாய்நெரிந்துமணநாறுநீலமலரும் 
    நடையுடையன்னம்வைகுபுனலம்படப்பைநனிபள்ளிபோலுநமர்காள்.        2
    
    சடை இடைபுக்கு ஒடுங்கி உளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணியயலே 
    இடை இடை வைத்தது ஒக்குமலர் தொத்து மாலை இறைவன் இடங்கொள் பதிதான் 
    மடை இடை வாளை பாய முகில்வாய் நெரிந்து மண நாறு நீலமலரும் 
    நடை உடை அன்னம் வைகுபுனலம் படப்பை நனிபள்ளி போலுநமர் காள்.         

    caTai iTai pukku oTugki uLa tagku veLLam, vaLar tigkaL kaNNi, ayalE 
    iTai iTai vaittatu okkum malar tottu mAlai, iRaivan(n) iTam koL patitAn- 
    maTai iTai vALai pAya, mukil vAy nerintu maNam nARu nIla malarum,         
    naTai utai annam vaiku, punal am paTappai nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     சடையின் இடையே புகுந்து அங்கே ஒடுங்கித் தங்கும் கங்கைவெள்ளம் வளருகின்ற 
பிறைச்சந்திரனெனும் தலைமாலை அதற்குப் பக்கத்தில் வைத்தது போன்ற பல மலர்க்கொத்து மாலைகளை 
அணிந்த இறைவன் இடங்கொண்டிருக்கின்ற பதிதான் எதுவெனில், நீர்மடையிடையே வாளைமீன்கள் 
பாய நீலமலர் மொட்டு வாய் நெகிழ்ந்து மணம் பரக்க நாற மலருவதும், அழகாக நடக்கும் அன்னப் 
பறவைகள் தங்கியிருப்பதுமாகிய வயற் படப்பைகள் உடைய நனிபள்ளியாம்! நம்மவர்களே!

குறிப்புரை:     உள்ள + தங்கு + வெள்ளம் எனப் பிரிக்க. படப்பை- தோட்டம். பக்கம் எனலுமாம். 
அன்னத்தின் நடை உவமிக்குஞ் சிறப்புடையது. ஆதலின், நடையுடையன்னம் எனப்பட்டது.

    The river Ganges enters the entangled locks of hair of our Lord Civan, stays 
there and is supported. Also the baby moon stays along with the river Ganges in the 
entangled locks of hair. In between these two are beautiful flower garlands of different
kinds of flowers. This Lord is manifest in Kadaram-kondan. In this city in the water 
channels flowing rapidly, the sea fish jumps through the sluices. There the Indian 
purple water lily blossoms and the sweet smell spreads all around. Also in this city 
gardens are many and ponds are many from which water flows through the sluices.
Here beautiful swans move near the sluices. This gorgeous city is Kadaram-kondan.

2379.     பெறுமலர்கொண்டுதொண்டர்வழிபாடுசெய்யலொழிபாடிலாதபெருமான் 
    கறுமலர்கண்டமாகவிடமுண்டகாளையிடமாயகாதல்நகர்தான்     
    வெறுமலர்தொட்டுவிட்டவிசைபோனகொம்பின்விடுபோதலர்ந்தவிரைசூழ் 
    நறுமலரல்லிபுல்லியொலிவண்டுறங்குநனிபள்ளிபோலுநமர்காள்.        3

    பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடிலாத பெருமான் 
    கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை இடமாய காதல் நகர்தான் 
    வெறுமலர் தொட்டு விட்ட விசைபோன கொம்பின் விடுபோது அலர்ந்த விரைசூழ் 
    நறுமலர் அல்லிபுல்லி ஒலிவண்டு உறங்கு நனிபள்ளி போலுநமர் காள்.

    peRu malar koNTu toNTar vazipATu ceyyal ozipATu ilAta perumAn, 
    kaRumalar kaNTam Aka viTam uNTA kALai, iTam Aya kAtal nakartAn- 
    veRumalar toTTu viTTa vicai pOna kompin viTu pOtu alarnta virai cUz 
    naRumalar alli pulli, oli vaNTu uRagkum nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     நெருங்கிய மலர்கள் கொண்டு தொண்டர்கள் வழிபாடு செய்தலாகிய தொண்டினை 
ஒழியாது கொள்ளும் பெருமான்; கருங்குவளை மலரினைக் காட்டும் மிடறாக விடத்தினை உண்ட காளை 
ஆகிய சிவனின் காதல் நகர்தான் ஏதோவெனில், தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம்
 நீங்கிய வெறும் பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து (அவ்வண்டுகள் தேனின்மை கண்டு 
எழுந்துவிட்டதால்) ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள் தொடாது 
விடுபோதுகள் பூத்தமையால் மணம் சூழும். பரவும் அந்த மணத்தினால் பூத்த அம்மலர்களின் 
அகவிதழ்களைப் பொருந்தி ஒலிக்கின்ற வண்டுகள் தேனை உண்டு உறங்கும் நனிபள்ளியாகும்! 
நம்மவர்களே!

குறிப்புரை:     தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம் நீங்கிய வெறும்பூக்களைத் 
தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து எழுந்துவிட்டதால் ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில் 
அவ்வண்டுகள் தொடாது விட்ட போதுகள் பூத்தமையால் மணம் பரவிற்று. பரவிய அம்மணத்தால்
 பூத்த மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி வண்டுகள் ஒலி அடங்கித் தேனுண்டு உறங்கின.
 இவ்வியற்கையை ஆசிரியர் அருளிய திறத்தை உணர்ந்து மகிழ்க.

    The devotees of the city collect the flowers available and carry them to the temple 
and strew them over the feet of our Lord. He accepts all the flowers without rejecting any. 
He is our Chief. His throat is dark blue and is similar to the purple Indian water lily, 
because He, the Hero, imbibed the poison. Civan desired to manifest Himself in the temple 
in Kadaram-kondan. Here the honey bees fly near flowers where there is no honey. However, 
they make heavy musical noise because of which the buds blossom. Here the bees suck the 
sweet honey and take rest and sleep inside the petals. Such manmade gardens are many 
in the city.

2380.     குளிர்தருகங்கைதங்குசடைமாடிலங்குதலைமாலையோடுகுலவி 
    ஒளிர்தருதிங்கள்சூடியுமைபாகமாகவுடையானுகந்தநகர்தான் 
    குளிர்தருகொம்மலோடுகுயில்பாடல்கேட்டபெடைவண்டுதானுமுரல 
    நளிர்தருசோலைமாலைநரைகுருகுவைகுநனிபள்ளிபோலுநமர்காள்.        4

    குளிர் தரு கங்கைதங்கு சடைமாடு இலங்கு தலைமாலையோடு குலவி 
    ஒளிர் தரு திங்கள் சூடி உமைபாகமாக உடையான் உகந்த நகர்தான் 
    குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டுதானும் முரல 
    நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.

    kuLir taru kagkai tagku caTaimATu, ilagku talaimAlaiyOTu kulavi, 
    oLir taru tigkaL cUTi, umai pAkam Aka uTaiyAn ukanta nakartAn- 
    kuLirtaru kommalOTu kuyil paTal kETTa peTaivaNTu tAnum murala, 
    naLir taru cOlai mAlai narai kuruku vaikum nani paLLipOlum; namarkAL!

பொருள்:     குளிர்ந்த கங்கை தங்கும் சடையின் அருகில் விளங்கும் தலைமாலையோடு 
கலந்து ஒளிர்கின்ற பிறையை அணிந்து உமையைப் பாகமாக உடையவன் ஆகிய இறைவன் 
உகந்த நகர்தான் யாதெனில், குளிர்ச்சியைத்தரும் கொம்பின்மீது குயிலின் பாடலைக் கேட்ட 
வண்டு தானும் முரல, குளிர்ச்சி தருகின்ற சோலையில் மாலையில் வெளுத்த குருகு தங்கும் 
நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

குறிப்புரை:     மாலையோடு  குலவிப் பிரகாசிக்கும் பிறைசூடி, கொம்பில் என்றே மதுரைத் 
திருஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் உள்ளது. சுவாமிநாத பண்டிதரும் வேறு சிலரும் பதித்தவற்றுள்,  
கொம்மல் என்றுள்ளது. குளிர்ச்சியைத்தரும் கும்மிப் பாடலொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு என்று 
கூறுவதினும் கொம்பு என்னும் இசைக்கருவியின் ஒலியொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு 
எனக்கூறுவது சிறந்தது.

    Our Lord Civan entertains the cool Ganges in His entangled hair along with the head 
garland of cassia flowers. He has the ornament of the bright young moon. He has embedded His 
consort Uma Devi on the left half of His body. This Lord desires to manifest Himself in the 
temple in Kadaram-kondan. Here in the city there are people who can sing beautiful songs 
using the special instrument called 'Kombu'. The Indian cuckoo on hearing the sound of 
Kombu makes its music. The female bees which hear both the musical notes, start singing 
their music too. In the nearby gardens the stork and small herons wait for their food 
making lines. Such a city is called Thiru-nani-palli or Kadaram-kondan.

2381.     தோடொருகாதனாகியொருகாதிலங்குசுரிசங்குநின்றுபுரளக்                 
    காடிடமாகநின்றுகனலாடுமெந்தையிடமாயகாதல்நகர்தான்
     வீடுடனெய்துவார்கள்விதியென்றுசென்றுவெறிநீர்தெளிவிப்பவிரலால்     
    நாடுடனாடுசெம்மையொலிவெள்ளமாருநனிபள்ளிபோலுநமர்காள்.        5

    தோடு ஒரு காதனாகி ஒருகாது இலங்கு சுரிசங்கு நின்று புரளக்                 
    காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் 
    வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிவிப்ப விரலால் 
    நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆரு நனிபள்ளி போலும் நமர்காள்.

    tOTu oru kAtan Aki, oru kAtu ilagku curicagku ninRu puraLa, 
    kATu iTam Aka ninRu, kanal ATum entai iTam Aya kAtal nakartAn- 
    vITu uTan eytuvArkaL viti enRu cenRu veRi nIr teLivippa viralAl,
    nATu uTan ATu cemmai oli veLLam Arum nanipaLLi pOlum; namarkAL!            

பொருள்:     ஒருகாதில் தோடும் மற்றொருகாதில் சுரிந்த சங்கு புரளும் காதினனாகி,     
சுடுகாடு இடமாக நின்று நெருப்பில் ஆடும் எந்தையின் காதல் நகர்தான் யாதொவெனில், 
பேரின்ப வீட்டினை விரைந்து எய்தும் சுத்தாத்துவித சைவர்கள் நீராடும் விதிமுறைப்படி 
சென்று நீரினை விரலால் தெளிப்ப, நாட்டு மக்கள் திரளாக நீராடும் வெள்ளம் நிறையும் 
நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

குறிப்புரை:     ஒரு காதில் சங்கத்தோடும் ஒரு காதில் சங்கக் குழையும் அணிந்தமை குறிக்கப்பட்டது. 
கனல் - தீயில். வீடுடன் எய்துவார்கள் பேரின்ப வீட்டை விரைந்து எய்தும் வைதிக சைவர்கள் மனைவியுடன் 
நீராடச் சென்று அடையும் வைதிகர்கள் எனலுமாம்.  விரலால் தெளித்தல்- கை (விரல்)களால் அர்க்கியங் 
கொடுத்தல். நாடுடன்  நாடு வெள்ளமா ஆரும் குடகு நாட்டில் தோன்றிக்  கொங்கு நாட்டில் பாய்ந்து 
சோழ நாட்டில் கடலை அடைவது நோக்கின் நாடுடன் நாடு காவிரி வெள்ளம் நிறையும். 

    Our Lord Civan has worn the Ola Roll in one of His ears. In another ear, He has worn 
a round chunk moving here and there in a low bend. His avocation is to visit the burning ghat 
and dance there in the midnight by the side of the burning fire. The devotees of this place 
who are desirous to attain salvation go to the river Cauvery and according to the rituals 
known to them perfectly, they take bath. Then they hold the sweet smelling water in a 
particular vessel and do the rituals, with their fingers sprinkling holy water from the 
special vessel over the river Cauvery by doing Arkkiyam - water offered reverentially 
to gods. The water thus sprinkled in the river is carried along the flood water and 
spreads all over the city. The city Kadaram-kondan is on the bank of the river Cauvery.

2382.     மேகமொடோடுதிங்கள்மலராவணிந்துமலையான்மடந்தைமணிபொன் 
    ஆகமொர்பாகமாக அனலாடுமெந்தைபெருமானமர்ந்தநகர்தான் 
    ஊகமொடாடுமந்தியுகளுஞ்சிலம்பவகிலுந்தியொண்பொனிடறி 
    நாகமொடாரம்வாருபுனல்வந்தலைக்குநனிபள்ளிபோலுநமர்காள்.        6

    மேகமொடு ஓடுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன் 
    ஆகம் ஓர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் 
    ஊகமொடு ஆடுமந்தியுகளும் சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி 
    நாகமொடு ஆரம் வாருபுனல் வந்தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

    mEkamoTu OTu tigkaL malarA aNintu, malaiyAn maTantai maNipon 
    Akam Or pAkam Aka, anal ATum entai perumAn amarnta nakartAn- 
    UkamoTu ATu manti ukaLum, cilampa akil unti oNpon iTaRi 
    nAkamoTu Aram vAru punal vantu alaikkum, nanipaLLipOlum; namarkAL!        

பொருள்:     விண்ணில் மேகத்துடன் செல்லும் பிறைமதியைச் சடையில் மலரினைப் போல 
அணிந்து இமயராசனின் திருமகளின் அழகிய பொன்னுடலைத் தன் ஒருபாகமாகக்  கொண்டு 
அனலாடும் எந்தை பெருமான் விரும்பி அமர்ந்த நகர்தான் யாதோவெனில், ஆண்குரங்குடன் 
மந்தி மகிழ்ந்து குதிக்கும் மலையில் விளையும் அகிலினை உந்தி ஒளிரும் பொன்னினைத் 
தள்ளிக் கொண்டு நாகம், சந்தனம் ஆகிய மரங்களை வாரிக் கொணர்ந்து காவிரி வெள்ளம் 
வந்து பாயும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

குறிப்புரை:     ஊகம்- கருங்குரங்கு, குரங்குமாம். மந்தி - பெண் குரங்கு. உகளும் - பாயும், குதிக்கும். 
இடறி - எற்றி, தள்ளி. நாகம் - நாகமரம். ஆரம் - சந்தனமரம். பாம்பும் (நாகரத்தமும்) முத்தும் ஆம். 
வாருபுனல் - கொழிக்கும் நீர்.

    Our Lord Civa concorporates His consort, the daughter of the king of Kailash mountain 
on the left half of His frame which is an attractive golden bright body. His avocation is to 
dance near fire. This our Lord is manifested in the temple in this city. In this city, the 
dark male monkeys play with their female monkeys. Here from the mountain eaglewood trees, 
the bright golden particles, jamoon plum trees, sandalwood trees- all these move along with 
the river flood which drops them along the river banks. Such a glorious city is Kadaram-kondan.

2383.     தகைமலிதண்டுசூலமனலுமிழுநாகங்கொடுகொட்டிவீணைமுரல             
    வகைமலிவன்னிகொன்றைமதமத்தவைத்தபெருமானுகந்தநகர்தான் 
    புகைமலிகந்தமாலைபுனைவார்கள்பூசல்பணிவார்கள்பாடல்பெருகி 
    நகைமலிமுத்திலங்குமணல்சூழ்கிடக்கைநனிபள்ளிபோலுநமர்காள்.        7

    தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரல         
    வகை மலி வன்னி கொன்றை மதமத்த வைத்த பெருமான் உகந்த நகர்தான் 
    புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல்பணிவார்கள் பாடல்பெருகி 
    நகை மலி முத்து இலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.

    takai mali taNTu, cUlam, anal umizum nAkam, koTu koTTi vINai murala, 
    vakai mali vanni, konRai, matamattam, vaitta perumAn ukanta nakartAn- 
    pukai mali kantam mAlai punaivArkaL pUcal, paNivArkaL pATal, peruki, 
    nakai mali muttu ilagku maNal cUz kiTakkai nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     பெருமைமிக்க தண்டாயுதம், திரிசூலம், நெருப்பைக் கக்கும் பாம்பு 
ஆகியவற்றை ஏந்தி, வீணை முதலிய வாத்தியங்கள் முழங்க கொடுகொட்டிக் கூத்தாடுவார்; 
வகை வகையாக நிறைந்த வன்னி, கொன்றை, ஊமத்தை மலர் ஆகியவற்றை அணிந்த 
பெருமானார்; அவர் விரும்பும் நகர்தான் யாதோவெனில், வாசனைப் புகை படிந்த 
மணமாலை புனைவார்களின் பூசல் ஓசையும், வழிபாடு செய்வார்களின் பாடலோசையும்
பெருகி, ஒளிமிக்க முத்துக்கள்  விளங்கும் மணல்சூழ்  வெளிகளை உடைய 
திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!

குறிப்புரை:     தகை- தடை. தண்டு- தண்டாயுதம்.  சிவிகையுமாம். கொடுகொட்டி - திரிபுர 
தகனகாலத்திற் சிவபிரான் ஆடிய திருக்கூத்து.  கந்தம் - மணம். நகை - வெண்மை. 

    Our Lord Civan is the master with bludgeon, the trident, the snake which spins 
out spark of fire. He has adorned Himself in an orderly manner with the summer tree 
leaves, Indian laburnum, cassia and datura flowers and others on His head. At the time
of destroying the three fortresses of the asuras which were flying in the sky, 
our Lord Civa made a very special dance called 'Kodukotti', this one among the 
eleven dances. This Lord desired to manifest Himself in the temple in Kadaram-kondan 
city. In this city, while fabricating garlands smoke-like fragrance spreads all around. 
The garland makers praise our Lord and start singing. The prostrating devotees also 
sing and all this noise spreads all over the domain. The various different coloured gems 
smear their brightness all over the sandy landscape. Such a gorgeous city is Thiru-nani-palli.

2384.     வலமிகுவாளன்வேலன்வளைவாளெயிற்றுமதியா அரக்கன்வலியோ 
    டுலமிகுதோள்களொல்கவிரலாலடர்த்தபெருமானுகந்தநகர்தானே 
    நிலமிகுகீழுமேலும்நிகராதுமில்லையெனநின்றநீதியதனை 
    நலமிகுதொண்டர்நாளுமடிபரவல்செய்யுநனிபள்ளிபோலுநமர்காள்.        8

     வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு 
    உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தானே 
    நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை 
    நலமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.

    valam miku vALan, vElan, vaLai vAL eyiRRu matiyA arakkan valiyOTu 
    ulam miku tOLkaL olka viralAl aTartta perumAn ukanta nakartAnE            
    nilam miku kIzum mElum nikar Atum illai ena ninRa nIti atanai 
    nalam miku toNTar nALum aTi paraval ceyyum nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     வெற்றி மிக்க வாளினையும் வேலினையும் வளைந்த கூரிய பற்களையும் உடைய 
(இறைவன் இருக்கும் கயிலைமலையை) மதியாத அரக்கன் இராவணனின் ஆற்றலோடு  கற்றூண் 
போன்ற திண்ணிய தோள்கள் வாடத் தன் திருவிரலால் வென்ற பெருமான் விரும்பும் நகர்தான் 
யாதோவெனில், கீழேலுலகம் மேலே ஏழுலகம் ஆகிய நிலங்களில் இதற்கு நிகரானது ஒன்றும் 
இல்லை என நின்ற நீதியாகிய இறைவனை அன்புடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடி 
வழிபாடு செய்யும் திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!

குறிப்புரை:     வாளன்- சிவபிரான் அருளிய வாளை உடையவன் (இராவணன்). வாளன் வேலன் 
இரண்டும் சிவபிரானைக் குறித்தவை எனலும் ஆம். உலம் - கற்றூண், திரண்டகல். ஆதும் - யாதும். 
'ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது' (தி. 4 ப. 3 பா. 1). இதில், பிறபத்தும் நோக்காதார் 'யாதும்' 
என்று எழுதிவிட்டனர். 'சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்' (தி. 6 ப. 20 பா.9).

    Raavanan, the king of Sri Lanka is a very robust and sturdy person. He has very 
firm muscular shoulders like stone pillars. He holds strong sword and trident. His teeth 
are all very bright and curved. But he had egoism and never cared for others. Our Lord 
made him lose his haughtiness and crushed his sturdy shoulders by just slightly pressing 
the top of His abode - the mount Kailash with His toe. Raavanan surrendered. Our Lord 
desired to manifest Himself in the temple in Kadaram-kondan immaculate. There is
surfen dity. o Himself in the temple in Kadaram-kondan city. Lord Civan is the Supreme Being of 
equity, implacable and immaculate. There is no equal to Him both in the underworld and top 
world to be compared to Him. He is the peerless embodiment of justice. Those servitors 
of very good character every day go to the temple and prostrate before our Lord's 
holy feet and worship Him.

2385.     நிறவுருவொன்றுதோன்றியெரியொன்றிநின்றதொருநீர்மைசீர்மைநினையார் 
    அறவுருவேதநாவனயனோடுமாலுமறியாதஅண்ணல்நகர்தான்     
    புறவிரிமுல்லைமௌவல்குளிர்பிண்டிபுன்னைபுனைகொன்றைதுன்றுபொதுளி 
    நறவிரிபோதுதாதுபுதுவாசநாறுநனிபள்ளிபோலுநமர்காள்.        9

    நிறவுரு ஒன்று தோன்றி எரிஒன்றி நின்றதொரு நீர்மை சீர்மை நினையார் 
    அறவுரு வேத நாவனயனோடு மாலுமறியாத அண்ணல் நகர்தான் 
    புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி 
    நறவிரி போது தாது புதுவாச நாறு நனிபள்ளி போலும் நமர்காள்.

    niRa uru onRu tOnRi eri onRi ninRatu oru nIrmai cIrmai ninaiyAr, 
    aRa uru vEta nAvan ayanOTu mAlum aRiyAta aNNal, nakartAn- 
    puRa viri mullai, mauval, kuLir piNTi, punnai, punai konRai, tunRu potuLi 
    naRa viri pOtu tAtu putuvAcam nARum nanipaLLi pOlum; namarkAL!

பொருள்:     செந்நிறப் பிழம்பு ஒன்று தோன்றி நெருப்பு என நின்ற அதன் இயல்பையும் 
பெருமையையும் நினையாதவராய், அறங்கூறும் வேத நாவனாகிய அயனும் மாலும்  அறியவியலாத 
அண்ணலுடைய நகர்தான் யாதோவெனில், புறவில் விரிகின்ற முல்லை , மௌவல் குளிர்ந்த அசோகு, 
புன்னை, புனையப்பட்டது போன்ற கொன்றை ஆகிய மலர்கள் நெருங்கித் தழைத்து தேன்கமழும் 
போதுக்களின் வாசமும் மகரந்தப் பொடியின் வாசமும் நாறும் திருநனிபள்ளியாகும்! நம்மவர்களே!  

குறிப்புரை:     முதலீரடியில் அரியும் அயனும் அடிமுடி தேடிய வரலாறு குறிக்கப்பட்டது. 
பின்னீரடியில்  முல்லை மௌவல் முதலியவற்றின் மணம் வீசும் சிறப்பு நனிபள்ளிக்கு உண்டென்பது 
கூறப்பட்டது. புற- புறவம். 'குறியதன்கீழாக்குறுகல்' (நன்னூல்).

    Our Chief Lord's city is Thiru-nani-palli. In the surrounding area of the 
city big forests full of big trees and flower plants are many. The flowering plants are 
Arabian jasmine, jasmine, asoka tree mastwood and Indian laburnum. These flowers spread 
their fragrance all over the forest and city area. This is the city of our Lord who 
appeared as a bright column of fire, its greatness and perfection were not recognised 
by Brahma, whose tongue keeps on chanting mantras, and also by Thirumaal.

2386.     அனமிகுசெல்குசோறுகொணர்கென்றுகையிலிடவுண்டுபட்ட அமணும் 
    மனமிகுகஞ்சிமண்டையதிலுண்டுதொண்டர்குணமின்றிநின்றவடிவும் 
    வினைமிகுவேதநான்குவிரிவித்தநாவின்விடையானுகந்தநகர்தான் 
    நனமிகுதொண்டர்நாளுமடிபரவல்செய்யுநனிபள்ளிபோலுநமர்காள்.        10

    அனமிகு செல்கு சோறு கொணர் கென்று கையிலிட உண்டுபட்ட அமணும் 
    மனமிகு கஞ்சி மண்டையதில் உண்டு தொண்டர் குணமின்றி நின்றவடிவும் 
    வினைமிகு வேதநான்கு விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் 
    நனமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.

    anam miku, celku, cORu koNarka!" enRu kaiyil iTa uNTu paTTa amaNum, 
    manam miku kanjci maNTai atil uNTu toNTar kuNam inRi ninRa vaTivum, 
    vinai miku vEtam nAnkum virivitta nAvin viTaiyAn ukanta nakartAn- 
    nanamiku toNTar nALum aTi paraval ceyyum nanipaLLipOlum; namarkAL!        

பொருள்:     'செல்க' 'சோறு கொணர்க' என்று கேட்டு அன்னத்தை மிகுதியாகக் கையில் இட 
உண்டு பழக்கப்பட்ட அமணர்களும் விருப்பத்துடன் கஞ்சியை மண்டை வட்டிலில் உண்டு 
அடியவர்களுக்குரிய குணம் இல்லாத வடிவினராகிய தேரரும் வினை மிகுவோராவர். வேதங்கள் 
நான்கினையும் விரித்த நாவினனாகிய எருது வாகனன் விரும்பும் நகர்தான் யாதோவெனில் 
திருநனிபள்ளியே! நம்மவர்களே!

குறிப்புரை:     செல்கு  - செல்லும். செல்குசோறு - வினைத்தொகை. கொணர்க - கொண்டு வருக. 
மண்டை- பனைமட்டையாலான உண்கலம். சிவபிரான் வேதங்களை அருளியவன் என்பது இங்கு
உணர்த்தப்பட்டது. நன - நனவு, தெளிவு.  

    The Jains in the city go round the city and ask for food, they get their food 
in their hand, eat, and roam about the city. Some people offer rice gruel in the food 
vessel made up of palmyrah leaves to the Buddhist monks. They drink it. Both these 
groups of people make false propaganda among the crowd. But the devotees of our Lord 
never listen to those words. Our Lord Civan's tongue chants the four Vedas accompanied 
by the sacrificial rites. He loves to have His bull for His conveyance. He desires to 
manifest Himself in the temple in Thiru-nani-palli. Here the scholar devotees who are 
well-versed in divine knowledge go to the temple everyday, prostrate at our Lord's holy 
feet and worship Him and praise Him. This city is Kadaram-kondan.

2387.     கடல்வரையோதமல்குகழிகானல்பானல்கமழ்காழியென்றுகருதப் 
    படுபொருளாறுநாலுமுளதாகவைத்தபதியானஞானமுனிவன் 
    இடுபறையொன்ற அத்தர்பியன்மேலிருந்தினிசையாலுரைத்தபனுவல் 
    நடுவிருளாடுமெந்தைநனிபள்ளியுள்கவினைகெடுதலாணைநமதே.        11    

    கடல் வரைஓதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருதப் 
    படு பொருளாறு நாலுமுளதாக வைத்த பதியான ஞானமுனிவன் 
    இடு பறையொன்ற அத்தர் பியன்மேல் இருந்து இனிசையால் உரைத்த பனுவல் 
    நடு இருளாடும் எந்தை நனிபள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே.             

    kaTal varai Otam malku kazi kAnal pAnal kamaz kAzi enRu karuta, 
    paTu poruL ARum nAlum uLatu Aka vaitta pati Ana njAnamunivan, 
    iTu paRai onRa attar piyan mEl iruntu in icaiyAl uraitta panuval, 
    naTu iruL ATum entai nanipaLLi uLka, vinai keTutal ANai namatE.

பொருள்:     கடல்நீரின் ஓதம் மலிந்து கழியும் கானலும் பானலும் மணங்கமழ்கின்ற காழி என்று 
தியானிக்கப்படு பெயர்; ஆறங்கம் நால்வேதங்கள் என்றும் உளதாக வைத்த பதி; அதிலான ஞான 
முனிவன் (ஞானசம்பந்தன்) பறை ஒலிக்கத் தந்தையின் தோள்மீது அமர்ந்து இசையால் உரைத்த 
இத்திருப்பனுவல் வழியே நடுயாமத்தில் கூத்தாடும் என் தந்தையின்  நனிபள்ளியைத் தியானிப்பவர் 
வினை கெடுக! இஃது நமது ஆணை!

குறிப்புரை:     ஆறும் நாலும் - ஆறங்கங்களும் நால்வேதங்களும் (தி. 2 பதி. 6 பா. 3). அத்தர் 
பியல்மேல் இருந்து - தந்தையார் திருத்தோள்மிசை அமர்ந்து. ஆணை நமதே (தி. 2 ப. 84 - 85 பா. 11 ; 
தி.3 ப 78.  பா.11; தி.3 ப. 118 பா.11).

    Our saint Thiru-gnana-Sambandar was born in the city of Kaazhi. This city is near the 
seashore. On the banks of the sea ponds, and gardens, full of trees flourish. In that area the 
fragrance of purple Indian water lily flowers gets dispersed all over the area. Our 
Thiru-gnana-Sambandar is well-versed in the six angas and four Vedas. He was travelling 
by sitting on his father's shoulders and began singing these ten verses in  good music. 
The servitors may chant these ten verses in musical voice and approach our Lord dancing 
in the dead of night for drum music in Nani-palli. If they think our Lord of Thiru-nani-palli, 
their karma will be wiped out.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            84ஆம் பதிகம் முற்றிற்று
            End of 84th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 221                பதிக எண்: 85

85. பொது- கோளறுதிருப்பதிகம்            85. KOLARU-THIRU-P-PATHIGAM

பண்: பியந்தைக்காந்தாரம்            Pann: Piyanthai Kaanthaaram

பதிக வரலாறு

    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருமறைக் காட்டில் பாலறாவாயர் 
எழுந்தருளியிருப்பதை அறிந்து விடுத்த ஏவலர் போற்றிச் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு 
அவர் இசைந்தார். புகலி மன்னர், மொழிமன்னர்க்குத் தென்னாடுற்ற செயலையும் அதைப் 
பாண்டிமா தேவியாரும் அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தையையும் புகன்றருளிக்கன்னி 
நாட்டிற்கு எழுந்தருளத் துணிந்தார். அப்பொழுது நாவரசப் பெருந்தகையார் 'பிள்ளாய்' அந்த 
அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி (எல்லை) இல்லை, உரைசெய்வது உளது. உறுகோள் 
தாமும் தீய. எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்றருளினார். அது கேட்ட புகலி வேந்தர், 
'பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால், பழுது அணையாது' எனப் பகர்ந்து பரமர் தாள்
போற்றி வேயுறு தோளியை விளம்பியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2388.     வேயுறுதோளிபங்கன்விடமுண்டகண்டன்மிகநல்லவீணைதடவி 
    மாசறுதிங்கள்கங்கை முடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால் 
    ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிபாம்பிரண்டுமுடனே 
    ஆசறுநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        1

    வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி 
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் 
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே 
    ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    vEy uRu tOLi pagkan, viTam uNTa kaNTan, mika nalla vINai taTavi,
    mAcu aRu tigkaL kagkai muTimEl aNintu, en uLamE pukunta atanAl- 
    njAyiRu, tigkaL, cevvAy, putan viyAzam, veLLi, cani pAmpu iraNTum, uTanE 
    Acu aRum; nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய உமையம்மையை இடப்பாகத்தில் 
உடையவர்; நஞ்சுண்ட கண்டர்; அவர் நல்ல வீணையை மீட்டு, குற்றமற்ற பிறை, கங்கை ஆகியவற்றைத் 
தம் முடிமேல் அணிந்து என்னுடைய உள்ளத்தில் புகுந்தார்; அவ்வாறு என்னுள்ளத்தில் அவர் இருப்பதனால் 
ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு கோள்களும், இராகு கேது ஆகிய இரு பாம்புகளும், எனக்குக் குற்றம் 
நீங்கினவாகும்; அவை  தீயனவேயாயினும்  சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து 
அன்புள்ளன ஆகும்.

குறிப்புரை:     வேயுறு தோளிபங்கன்- மூங்கிலின் இரு கணுக்களுக்கும் இடைப்பட்ட பகுதியைப் 
போலும் தோள்களையுடைய உமாதேவியாரை இடப்பால் உடையவர். ஞாயிறு - பாம்பு இரண்டும் சூரியன் 
முதலிய ஒன்பது கோள் (கிரகங்)களும் . ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன. 
அவை அடியார்களுக்கு  மிக நல்லன நல்லன. பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும்.

    Our Lord Civan has embedded His consort Uma Devi on the left side of His body. 
Her shoulders are as smooth as the bamboo stems in between the two joints (node). He 
imbibed the poison and kept it in His larynx. He retains the moon and supports the 
river Ganges - both adorning His head. In this posture happily playing  music on His 
veena, He has entered my mind and stays there. Because of His stay in my mind the 
nine planets (such as sun, moon, chevvai, budhan, guru, sukkiran, sani,raghu and kethu) 
will do all good without any evil. They will always do only good deeds to Civa's devotees.

2389.     என்பொடுகொம்பொடாமையிவைமார்பிலங்கஎருதேறியேழையுடனே 
    பொன்பொதிமத்தமாலைபுனல்சூடிவந்தெனுளமேபுகுந்த அதனால் 
    ஒன்பதொடொன்றொடேழுபதினெட்டொடாறுமுடனாயநாள்களவைதாம் 
    அன்பொடுநல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        2

    என்பொடு கொம்பொடு ஆமை இவைமார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே 
    பொன் பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
     ஒன்பதொடு ஒன்றொடு ஏழுபதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம்     
    அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே. 

    enpoTu kompoTu Amai ivai mArpu ilagka, erutu ERi, Ezai uTanE, 
    pon poti mattamAlai punal cUTi vantu, en uLamE pukunta atanAl- 
    onpatoTu, onRoTu, Ezu, patineTToTu, ARum, uTan Aya nALkaL avaitAm, 
    anpoTu nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமையின் ஓடு இவை மார்பில் விளங்கித் தோன்ற 
எருதேறி, உமையுடனே பொன்பொதிந்தது போன்ற கொன்றை, ஊமத்தை மலர்மாலை சூடி 
வந்து என் உள்ளத்தில் புகுந்தார்; அவ்வாறு என் உள்ளத்தில் அவர் இருப்பதினால், ஒன்பது 
ஒன்பதோடு ஒன்று,ஒன்பதோடு ஏழு, பதினெட்டு, ஆறு மற்றும் இவற்றுடன் ஆய ஆகாத நாட்கள்
என்பனவும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும்.  அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு 
நல்லனவாக மாறும்;  அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.  

குறிப்புரை:     கொம்பு- பன்றிக்கொம்பு. ஆமை - முற்றலாமையோடு. ஏழை - உமாதேவியார். 
'ஏழை பங்காளனையே பாடேலோரெம்பாவாய்'.  ஒன்பது-  அசுவினி முதலாகக் கொண்டு 
எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம். ஒன்பதோடொன்று - பத்து - மகம். ஒன்பதொடெழு -
 பதினாறு - விசாகம். பதினெட்டு- கேட்டை. ஆறு - திருவாதிரை. உடனாய நாள்கள் மற்றயவை. 
அவை - பரணி, கார்த்திகை. பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, நாள்கள் என்றதால். 
ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின. இவ்வுண்மையை,

    'ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை 
    தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும்
    மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் 
    பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே'

என்னுஞ் சோதிடநூற் பாட்டால் உணர்க. கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்கள் எழுதிய 
அகத்தியர் தேவாரத் திரட்டின் உரையில் உள்ளதும், தமிழ்ப்பொழில் - துணர் 7, 8, 9ல் பண்டித 
அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம்.எஸ். பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய 
கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும். 
ஆயினும் சிவபெருமானுக்குரிய  திருவாதிரையை முதலாக் கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை, 
அதனொடு ஒன்று சுவாதி. அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம். அதற்குப் பதினெட்டு பூரட்டாதி. 
அதற்கு முன் ஆறு பூராடம் என்றும், உடனாய நாள்கள். பரணி, கார்த்திகை, மகம், பூரம், விசாகம், 
கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.

    Our Lord Civa has adorned His body with bones, hog's husk, shell of the 
tortoise. He wears a garland made up of datura flowers which contain golden 
coloured granules of pollen grains. He also retains the river Ganges in His 
matted hair. In this posture, having mounted on His bull along with His consort 
Uma Devi He has entered into my mind and stays there. Because of His presence 
in my mind the inauspicious stars such as Aswini, Aayilyam etc., all these eighteen 
stars and other stars, will always do good to me with all sincerity. For devotees 
of Lord Civa also these stars will do all good.

2390.     உருவளர்பவளமேனிஒளிநீறணிந்துவுமையோடும்வெள்ளை விடைமேல் 
    முருகலர்கொன்றைதிங்கள்முடிமேலணிந்தெனுளமேபுகுந்தஅதனால் 
    திருமகள்கலையதூர்திசெயமாதுபூமிதிசைதெய்வமானபலவும் 
    அருநெதிநல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        3

    உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் 
    முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் 
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமிதிசை தெய்வமான பலவும் 
    அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    uru vaLar pavaLa mEni oLi nIRu aNintu, umaiyOTum, veLLai viTai mEl,         
    muruku alar konRai tigkaL muTimEl aNintu, en uLamE pukunta atanAl- 
    tirumakaL, kalai atu Urti, ceyamAtu, pUmi, ticai teyvam Ana palavum,
    aru neti nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     அழகு மேலோங்கும் பவளம் போன்ற செம்மேனியில் ஒளிவீசும் வெண்ணீறணிந்து, 
உமையம்மையோடு வெள்ளை எருதின் மீது அமர்ந்து, மணம் நாறும் கொன்றை மாலை சூடி, திங்களை 
முடிமேல் அணிந்து என் உள்ளமே புகுந்தார்; அவ்வாறு என் உள்ளத்தில் அவர் இருப்பதனால், திருமகள், 
கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை, நிலமகள், திக்குத் தெய்வங்கள், அரிய திதிகள் ஆயின 
பலவும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும்  சிவனடியார்களுக்கு 
நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து  அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     உருவளர் பவளமேனி- அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில். 
கலையதூர்தி - துர்க்கை. நேதி -திரவியம். 

    Our Lord Civa's brilliant body looks like the brightest coral. Over His body, 
He has applied the holy ashes all over. His head is adorned with Indian laburnum along 
with the baby moon. In this stature Civa with His consort Uma Devi riding on His white 
bull has entered into my mind. In lieu of this grace, goddesses Lakshmi, Durgai, Victory, 
Earth, the gods of the eight directions of the earth and others will give all the rare 
riches to me as well as to the devotees.

2391.     மதிநுதல்மங்கையோடுவடபாலிருந்துமறையோதுமெங்கள்பரமன் 
    நதியொடுகொன்றைமாலைமுடிமேலணிந்தெனதுளமேபுகுந்த அதனால் 
    கொதியுறுகாலனங்கிநமனோடுதூதர்கொடுநோய்களானபலவும் 
    அதிகுணநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        4

    மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன் 
    நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் 
    கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் 
    அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    mati nutal magkaiyOTu, vaTa pAl iruntu maRai Otum egkaL paraman, 
    natiyoTu konRai mAlai muTimEl aNintu, en uLamE pukunta atanAl- 
    koti uRu kAlan, agki, namanOTu tUtar, koTu nOykaL Anapalavum, 
    atikuNam nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     பிறைமதி போன்ற நெற்றி உடையாளுடன் ஆலமர நீழலில் இருந்து வேதம் 
ஆகிய அறத்தை உரைக்கும் எங்கள் பரமன், கங்கை நதி, கொன்றை மாலை ஆகியவற்றைத் 
தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தான். அவ்வாறு உள்ளத்தில் அவர் இருப்பதனால் 
சினமுடைய காலன்,நெருப்பு, எமன் அவனுடைய தூதர்கள், கொடுநோய்கள் ஆன பலவும் 
எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக 
மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     வடபால் -ஆலின்கீழ். வடம் -  ஆலமரம். 'கல்லால் நிழற்கீழ் வாடாமுலை 
மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது' (தி.1 ப.32 பா.1). வடபக்கம் என்பாருமுளர். 
கொதி-  கோபம்.  உக்கிரம். காலன் - 'காளமேகந் நிறக்காலனோடு அந்தகன்' (தி.2 ப.119 பா.6). அங்கி -
அக்கினி. நமனொடு தூதர் -இயமனும் இயமதூதரும். 'மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்து நீர் மையல் 
எய்தில்  விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?' (தி.4 ப.31 பா.2). 
'தரும ராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர்’ (தி.4 ப.49 பா.2) என்பவற்றால், நமன் (தருமராசன்) 
வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும், 'சூலத்தால் அந்தகனைச் சுருளக்கோத்துத் 
தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் (-காலால்) உதைசெய்து' (தி.6 ப.83 பா.9) 
என்பதில் அந்தகன் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக.

    Our Lord Civa authored all the Vedas while seated along with His consort Uma Devi 
under the stone banyan tree. He wears over His head the flower - Indian laburnum and the 
river Ganges. In this stature He has entered my mind. Because of this reason the ferocious 
god of death, god of fire, Yaman, Yama's servitors – all will do all good by converting 
all the severe ailments into good actions. For His devotees also all good things will happen.

2392.     நஞ்சணிகண்டனெந்தைமடவாள்தனோடும்விடையேறுநங்கள்பரமன் 
    துஞ்சிருள்வன்னிகொன்றைமுடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால் 
    வெஞ்சின அவுணரோடுமுருமிடியுமின்னுமிகையானபூதமவையும் 
    அஞ்சிடும்நல்லநல்லஅவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        5

    நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் 
    துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னுமிகையான பூதம் அவையும் 
    அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    nanjcu aNi kaNTan, entai, maTavAL tanOTum viTai ERum nagkaL paraman, 
    tunjcu iruL--vanni, konRai, muTimEl aNintu--en uLamE pukunta atanAl
    venjcina avuNarOTum, urum-iTiyum, minnum, mikai Ana pUtam avaiyum, 
    anjciTum; nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     நஞ்சினை அணியாகக் கண்டத்திற் கொண்ட எம்முடைய தந்தை, உமையம்மையுடன் 
எருதினை ஊர்தியாகக் கொண்ட பரமன், இருள் துஞ்சும் வன்னித்தழை,  கொன்றைமலர் ஆகியன சூடி 
என் உள்ளத்திற் புகுந்தான். அவன் அவ்வாறு என் உள்ளத்தில் இருப்பதனால், கொடிய சினத்தைக் 
கொண்ட அசுரர்களுடன் உரும் இடியும், மின்னலும்  வலிமையுடைய பூதங்களும் மற்றும் அச்சம் 
விளைவிக்கும் எவையும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு 
நல்லனவாக மாறும்;  அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும். 

குறிப்புரை:     துஞ்சிருள்வன்னி- வன்னிமரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால் 
இருள் துஞ்சும் நிலையினது உளத்திற்கு ஏற்றினும் அமையும்.

    Our Lord Civa is our Father whose throat appears dark blue because He imbibed the 
poison and kept it in His larynx. He has entered my heart along with His consort Uma Devi riding 
on His white bull, wearing on His head the darkened bunch of summer tree leaves and a garland 
made up of Indian laburnum flowers, because of this the ferocious Jains, thunder, lightning, 
the haughty bhutas - all will be afraid to meet us but will do only good deeds to us. For all 
the devotees also they will always do good.

2393.     வாள்வரியதளதாடைவரிகோவணத்தர்மடவாள்தனோடுமுடனாய் 
    நாண்மலர்வன்னிகொன்றைநதிசூடிவந்தெனுளமேபுகுந்த அதனால்
    கோளரியுழுவையோடுகொலையானைகேழல்கொடுநாகமோடுகரடி 
    ஆளரிநல்லநல்லஅவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே.         6

    வாள்வரி அதள தாடைவரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் 
    நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்து என் உளமேபுகுந்த அதனால் 
    கோள் அரிஉழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி 
    ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    vALvari ataLa tATai vari kOvaNattar maTavAL tanOTum uTan Ay, 
    nALmalar vanni konRai nati cUTi vantu, en uLamE pukunta atanAl 
    kOLari, uzuvaiyOTu, kolai yAnai, kEzal, koTu nAkamOTu, karaTi, 
    ALari, nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     வாள் போன்ற வரிகளையுடைய புலியின் தோலினை ஆடையாக உடையவர்; 
வரித்த கோவணத்தர்; உமையம்மையாகிய மடவாளுடன், அப்போது அலர்ந்த மலர் வன்னி, 
கொன்றை கங்கை நதி ஆகியவற்றைச் சூடி வந்து என் உள்ளத்தில் புகுந்தார்; அவர் அவ்வாறு 
என் உள்ளத்தில் புகுந்து இருப்பதனால், கொல்லும் வலிமையுடைய புலியுடன் கொலைத்தொழில் 
வல்ல யானை, பன்றி, கொடிய நாகப்பாம்பு,கரடி, சிங்கம் முதலிய கொடிய விலங்குகளும் 
எனக்குக் குற்றம் நீங்கினவாகும்; அவை தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக 
மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     வரி - கீற்றுக்களை உடைய புலியினது. வாள்வரி - அன்மொழித்தொகை. 
கோள்-வலிமை.  அரி - குரங்கு. கோளு (வலிமை,கொலையு)ம் அரி (பகை)யும் உடைய உழுவை (புலி) 
எனலுமாம். ஆளரி  - சிங்கம். ஆளரியேறனையான் (பெரிய. திருஞான. 474).

    Our Lord wears on His waist tiger's hide which is bright and lined. He also 
dons tightly on His forelap the special cloth. He beautifies His head by wearing fresh 
flowers, leaves of summer tree, Indian laburnum flowers, along with the river Ganges. 
Our Lord along with His consort goddess Uma Devi has entered into my heart, because 
of this ferocious monkey, tiger, murderous elephant, hog, poisonous snake, bear, 
lion and such others will always do good to us. For the devotees also they only 
do good always.

2394.     செப்பிளமுலைநன்மங்கையொருபாகமாகவிடையேறுசெல்வனடைவார் 
    ஒப்பிளமதியுமப்புமுடிமேலணிந்தெனுளமேபுகுந்த அதனால் 
    வெப்பொடுகுளிரும்வாதமிகையானபித்தும்வினையானவந்துநலியா 
    அப்படிநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        7

    செப்பு இளமுலை நன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வன் அடைவார் 
    ஒப்பு இளமதியும் அப்புமுடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் 
    வெப்பொடு குளிரும் வாதமிகையான பித்தும் வினையான வந்து நலியா 
    அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    ceppu iLamulai nal magkai orupAkam Aka viTai ERu celvan, aTaivu Ar 
    oppu iLamatiyum appum muTimEl aNintu, en uLamE pukunta atanAl- 
    veppoTu, kuLirum, vAtam, mikai Ana pittum, vinai Ana, vantu naliyA; 
    appaTi nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     செம்பு போன்ற வடிவினதாகிய இளமுலையுடைய உமையம்மையைத் தன்
 ஒருபாகமாகக் கொண்டு எருதேறுபவன் தன்னை அடைந்தார்க்குச் செல்வன் ஆகிய பெருமான், 
இளம்பிறையையும் கங்கை நீரையும் முடிமேல் அணிந்து என்னுடைய  உள்ளத்தில் புகுந்தான். 
அவ்வாறு அவன் என் உள்ளத்தில் புகுந்து நின்றதனால், வெம்மை நோய்,  குளிர் வாதம், 
கேடு செய்யும் பித்தம் முதலியன தீவினையின் பயனாக வந்து என்னை துன்புறுத்தல் செய்யா.  
அப்படி அவை எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும்  சிவனடியார்களுக்கு 
நல்லனவாக  மாறும்.  அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும். 

குறிப்புரை:     செப்பு - சிமிழ். அடைவு ஆர் - அடைதலுற்ற. அப்பு - கங்கை. வெப்பு - வெம்மை. 
சுரநோய் -  சிலேத்துமம். வாதம் - வளி. பித்து - பித்தம். மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் 
வளி முதலா  எண்ணிய மூன்று (குறள். 941).

    My Lord Civa, riding on His white bull along with His concomitant consort on the 
left side of His body, whose young breasts look like the wooden little box, has adorned 
His head by retaining the young moon by the side of river Ganges. He has entered into my 
mind and is manifested in my body. Since He is within me heat, cold, the severe bile, bad 
karma - all will never approach me and will never cause sufferings to me. For the devotees 
also they will bring only good.

2395.     வேள்படவிழிசெய்தன்றுவிடைமேலிருந்துமடவாள்தனோடுமுடனாய் 
    வாண்மதிவன்னிகொன்றைமலர்சூடிவந்தெனுளமேபுகுந்த அதனால்             
    ஏழ்கடல்சூழிலங்கை அரையன்றனோடுமிடரானவந்துநலியா 
    ஆழ்கடல்நல்லநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே.        8

    வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் 
    வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் 
    ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா 
    ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    vEL paTa vizi ceytu, anRu, viTaimEl iruntu, maTavAL tanOTum uTanAy, 
    vANmati vanni konRaimalar cUTi vantu en uLamE pukunta atanAl- 
    EzkaTal cUz ilagkai araiyan tanOTum iTar Ana vantu naliyA; 
    Az kaTal nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     மன்மதன் எரிந்து அழியும்படி நெற்றி விழியால் பார்த்து, உமையம்மையுடனாய் 
எருதின் மீதிருந்து, ஒளியுடைய பிறைமதி, வன்னி, கொன்றை மலர் சூடி வந்து என்னுடைய உள்ளமே 
புகுந்தான். அவன் அவ்வாறு என் உள்ளத்தில் புகுந்து இருந்ததனால், கடலால் சூழப்பட்டிருந்த 
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தன்னோடும் துன்பமானவைகள் வந்து வருத்தா. 
ஆழமான கடல்கள் போன்ற துன்பங்களும் எனக்குக் குற்றம் நீங்கினவாகும். அவை தீயனவேயாயினும் 
சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து. வாள் - ஒளி. அரையன் - அரசன். இராவணன். 
இடர் ஆன - துன்பமானவை, கடல் நல்ல.

    Once my father Lord Civa burnt the god of love Manmathan (cupid) by opening 
His third eye in the forehead. He, along with His consort Uma Devi, riding on His 
bull has entered into my mind. Retaining the bright moon on His head, beautifying 
it with leaves of summer tree and Indian laburnum flowers, He resides in me. 
Because of this featured manifestation Raavanan, the king of SriLanka surrounded         
by the seven seas, and any other factor will not cause any suffering to me. The deep 
seas also will do good to me. For our devotees also only good will be done by 
these people.

2396.     பலபலவேடமாகும்பரனாரிபாகன்பசுவேறுமெங்கள்பரமன் 
    சலமகளோடெருக்குமுடிமேலணிந்தெனுளமே புகுந்த அதனால் 
    மலர்மிசையோனுமாலும்மறையோடுதேவர்வருகாலமானபலவும் 
    அலைகடல்மேருநல்ல அவைநல்லநல்ல அடியாரவர்க்குமிகவே.        9    

    பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுஏறும் எங்கள் பரமன் 
    சலமகள் ஓடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் 
    மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலம் ஆன பலவும் 
    அலை கடல் மேரு நல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.        

    pala pala vETam Akum paran, nAripAkan, pacu ERum egkaL paraman, 
    cala makaLOTu erukku muTimEl aNintu, en uLamE pukunta atanAl- 
    malar micaiyOnum mAlum maRaiyOTu tEvar varu kAlam Ana palavum, 
    alaikaTal, mEru, nalla, avai nalla nalla aTiyAr avarkku mikavE.

பொருள்:     பலபல வேடங்களைத் தரித்துக் கொள்பவனும் பரனும் மாதொரு பாகனும் எருது 
வாகனனும் ஆகிய எங்கள் பரமன், சலமகளாகிய கங்கையுடன் எருக்க மலரினையும் முடிமேல் 
அணிந்து என்னுடைய உள்ளமே புகுந்தான். அவன் அவ்வாறு என்னுள்ளத்தில் இருந்ததனால், 
பிரமனும் மாலும் வேதங்களோடு தேவர்கள் கெட்ட காலங்களான அவையும் ஆழ்கடல் போன்றனவும் 
மலைபோல அசைக்க முடியாதனவுமாகிய துன்பங்களும் எனக்குக்  குற்றம் நீங்கினவாகும்; அவை 
தீயனவேயாயினும் சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும் அடியவர்களிடத்து அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     'வேடம் பலவாகி நின்ற பரமன்' (தி.2 ப.87 பா.6). ஒருவனுமே பலவாகி  நின்றதொரு 
வண்ணமே (தி. 3 ப. 10 பா. 8). ஒன்றொடொன்று ஒவ்வாவே (தி. 3 ப. 102 பா. 6). ஒன்றோடொன்றொவ்வா
வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றனன் (சித்தியார். 71). நாரி - உமாதேவியார். மலர்மிசையோன்-
செந்தாமரை மேலிருக்கும் பிரமன். காலம் ஆன - கெட்டகாலங்களானவை.

    My Chief Lord Civa takes many forms according to circumstances and graces people. 
He is concomitant with His consort Uma Devi. Both came to me riding on His bull and have 
entered into my mind. He sustains the river Ganges along with the flowers of yercum on
His head. Because of this feature, the demigod Brahma who is seated on the lotus flower, 
the other tutelary deity Thirumaal, will bring us only good also Vedas, Devas and other 
celestials. Bad time, the waves of the seas, the mountain Meru- all these which do bad 
actions will result only in good. For devotees also they will bring only good.

2397.     கொத்தலர்குழலியோடுவிசையற்குநல்குகுணமாயவேடவிகிர்தன் 
    மத்தமுமதியுநாக முடிமேலணிந்தெனுௗமேபுகுந்த அதனால் 
    புத்தரொடமணைவாதிலழிவிக்குமண்ணல்திருநீறுசெம்மைதிடமே 
    அத்தகுநல்லநல்ல அவைநல்லநல்லஅடியாரவர்க்குமிகவே.        10

    கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் 
    மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்         
    புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே 
    அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    kottu alar kuzaliyOTu vicayaRku nalku kuNam Aya vETa vikirtan,
    mattamum matiyum nAkam muTimEl aNintu, en uLamE pukunta atanAl
    puttarotu amaNai vaatil azivikkum aNNal tirunIru cemmai titamE,
    attaku nalla nalla; avai nalla nalla, aTiyAr avarkku mikavE.

பொருள்:     கொத்தாளமலர்கள் சூடிய குழலியாகிய உமையுடன் கூடி வந்து அருச்சுனனுக்கு 
அருளும் அருளாற் கொண்ட வேடத்தை உடைய விகிர்தன்; அவன், ஊமத்தைப்பூவும் பிறைமதியும் 
நாகமும் முடிமேல் அணிந்து என் உள்ளத்தே புகுந்தான். அவன் அவ்வாறு என் உள்ளத்தில் இருந்த 
காரணத்தால், புத்தரையும் சமணரையும் வாதில் அழிவிக்கும் அண்ணலுடைய திருநீறு உறுதியாக 
நன்மை பயக்கும். அந்த முறையில் எனக்குக் குற்றம் நீங்கி நல்லனவேயாகும்; தீயனவேயாயினும் 
சிவனடியார்களுக்கு நல்லனவாக மாறும்; தீயவும் அடியர்வகளிடத்து அன்புள்ளனவாகும்.

குறிப்புரை:     விசையற்கு- அர்ச்சுனனுக்கு. வேடவிகிர்தன்- வேடனாக மாறியவன். வாதில்- 
மதுரையில் நடந்த அனற்போர் புனற்போர்களிலும் போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த 
போரிலும். 

    Our Lord Civa once took the form of a hunter and, accompanied by His consort 
Uma Devi, exposed His posture to Arjunan and graced him. Uma had beautified her head 
and hair with bunches of flowers. Lord Civa's head was adorned with datura flowers 
along with the moon and the snake. In this posture, He appealed and has entered into 
my mind. The Buddhists and the Jains were defeated in the argument with the power of
the holy ashes. Therefore the bad deeds of these people will do only good to me. 
For devotees also they will always do good.

2398.     தேனமர்பொழில்கொளாலைவிளைசெந்நெல்துன்னிவளர்செம்பொனெங்கும்நிகழ 
    நான்முகனாதியாயபிரமாபுரத்துமறைஞானஞானமுனிவன் 
    தானுறுகோளுநாளுமடியாரைவந்துநலியாதவண்ணமுரைசெய் 
    ஆனசொல்மாலையோதுமடியார்கள்வானில் அரசாள்வராணைநமதே.        11

    தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ 
     நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன் 
    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் 
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

    tEn amar pozil koL Alai viLai cennel tunni, vaLar cempon egkum nikaza, 
    nAnmukan Ati Aya piramApurattu maRainjAna njAnamunivan, 
    tAn uRu kOLum nALum aTiyArai vantu naliyAta vaNNam urai cey 
    Ana col mAlai Otum aTiyArkaL, vAnil aracu ALvar; ANai namatE.

பொருள்:     தேன் நிறைந்த பொழில்கள், கரும்பு, நன்கு விளைந்த செந்நெல் வயல்கள் சூழ்ந்து 
செல்வ வளம் எங்கும் விளங்க, பிரமனை ஆதிமகனாகக் கொண்ட பிரமாபுரத்தில் மறைஞான 
முனிவனாகிய திருஞானசம்பந்தன், தான் உறும்கோளும் நாளும் அடியாரை வருத்தாத முறையில் 
உரை செய்த இத்திருப்பதிகத்தை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர். இது (சிவகுமாரனாகிய) 
என்னுடைய ஆணை.

குறிப்புரை:     மறைஞான ஞானமுனிவன் - அபரஞானமும் பரஞானமும் ஆகிய இரண்டையும் உடைய 
முனிவர். (பெரிய. திருஞான.) 'சிவனடியே சிந்திக்கும் சிவஞானம்' (ஆகிய) உணர்வரிய மெய்ஞ்ஞானம்       
பவம்...அறமாற்றும்...ஓங்கிய ஞானம் (ஆகிய) உவமையிலாக் கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர்... 
உணர்ந்தார். கோளும் - சூரியன் முதலிய கிரகங்களும். நாளும் - அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.

    The demigod Brahma was in this city of Brahmapuram, the first and foremost person 
on the earth. Around this city, natural forests are many. They have many honey yielding 
flowering plants. The sugarcane and red variety paddy fields are many. The red paddy heaps 
were many in all the places around the fields. Our saint Thiru-gnana- Sambandar who was a 
divine scholar and divine saint was born in Brahmapuram. He worshipped and prayed before the 
Lord of Brahmapuram to remove all the sufferings that might accumulate as bad karma in the 
lives of the servitors. Thus he sang the garlands of ten Tamil verses before the Lord. 
Those devotees who can memorise and sing these ten songs will rule over heaven. This is 
his oath and swearing.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            85ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 85th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 222                பதிக எண்: 86

86. திருநாரையூர்                    86. THIRU-NAARAIYOOR

பண்: பியந்தைக்காந்தாரம்            Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    நாரை பூசித்துப் பேறுபெற்றதால் இப்பெயர் பெற்றது. சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார் 
கோயிலுக்குப் போகும் பேருந்து வழியில் 5 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்து 
பேருந்து வசதி உள்ளது. காவிரிக்கு வடகரையிலுள்ள 33ஆவது தலமாகும். இறைவரின் திருபெயர் 
சௌந்தரேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி.

    திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடிய நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த திருப்பதி இது. 
தேவாரத் திருமுறைகள் கனகசபையின் மேல்பாலுள்ள ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார்நம்பி 
மூலமாய் வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலமும் இதுவேயாகும்.

    பொள்ளா என்பது பொல்லா என்று வந்துள்ளது. பொள்ளாதது என்பது உளி முதலியவற்றால் 
செய்யப்படாதது. எனவே சுயம்பு மூர்த்தியாகும். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் 3, அப்பர் பதிகம் 2 
ஆக ஐந்து பதிகங்கள் உள்ளன. பொல்லாப் பிள்ளையார் தனி மண்டபம், மகா மண்டபத்தில் 
ஆறுமுகருடைய உருவம் கல்லில் செதுக்கப்பட்டது. அருகில் சித்தல புரம் இருக்கிறது.   நம்பியாண்டார்நம்பி, 
இராஜராஜ சோழன் உருவங்கள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. அர்த்தசந்திர விமானம், 
விமானத்தின் உச்சியில் இரண்டு கலசங்கள் உண்டு. பிரகாரம் 204-370 மதில் உயரம் 9 அடி. அம்பிகை 
தெற்கு முகம். அபயகுல ராசராசர் திருமுறை வகுக்கும்படி சொன்ன இடம். நம்பியாண்டார்நம்பி வகுத்தது. 
இருவர் விக்கிரகங்களும் உண்டு. திருமுறை கண்ட புராணம் காண்க.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கடம்பையை வழிபட்ட பிறகு நலந்திகழ் நாரையூரை 
நண்ணி நம்பரைக் கும்பிடும் விருப்பொடு குறுகி வணங்கிப் பாடியருளிய செந்தமிழ் மாலை 
இத்திருப்பதிகம் ஆகும்.

            திருச்சிற்றம்பலம்

2399.     உரையினில்வந்தபாவமுணர்நோய்களும்மசெயல்தீங்குகுற்றமுலகில் 
    வரையினிலாமைசெய்த அவைதீரும்வண்ணமிகவேத்திநித்தநினைமின் 
    வரைசிலையாக அன்றுமதில்மூன்றெரித்துவளர்கங்குல்நங்கைவெருவத் 
    திரையொலிநஞ்சமுண்டசிவன்மேயசெல்வத்திருநாரையூர்கைதொழவே.        1

    உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு குற்றம் உலகில் 
    வரையினில் ஆமை செய்த அவைதீரும் வண்ணம் மிகவேத்தி நித்த நினைமின்         
    வரைசிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவத் 
    திரையொலி நஞ்சமுண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    uraiyinil vanta pAvam, uNar nOykaL, u(m)ma ceyal tIgku kuRRam, ulakil 
    varaiyin nilAmai ceyta avai tIrum vaNNam mika Etti, nittam ninaimin- 
    varai cilai Aka, anRu, matil mUnRu erittu, vaLar kagkul, nagkai veruva, 
    tirai oli nanjcam uNTa civan mEya celvat tiru nAraiyUr kaitozavE!

பொருள்:     மேருமலையை வில்லாகக் கொண்டு அன்று திரிபுரங்களாகிய மூன்று 
மதில்களையும் எரித்தவர்; வளரும் இருட்போதில் உமை நங்கை அச்சம் கொள அலை ஒலிக்கின்ற 
பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; ஆகிய சிவன் மேவிய திருநாரையூரைத் தொழுதால், 
வாக்கால் வந்த பாவம், மனத்தால் நினைப்பதில் வரும் தீங்குகள், உடலால் செயலில் வரும் 
தீங்குகள் மற்றும் உலகில் அளவிலாமல் செய்த பிழைகளாவன அவைகள் அனைத்தும் தீரும். 
அவை தீரும் வண்ணம் சிவன் மேய செல்வத் திருநாரையூரை நித்தமும் நினைமின்.

குறிப்புரை:     உரையினில் வந்த பாவம்- வாக்கால் வந்த தீவினைகள். உணர்நோய்கள் - 
(மனத்தால்)  நினைப்பால் உண்டான தீவினைகள். செயல் தீங்கு குற்றம்- (காயத்தால்) தீச்செயல்களால்
வந்த  தீவினைகள். தீங்கு செயல் என மாற்றுக. பாவம், நோய்கள், குற்றம் மூன்றற்கும் 
'உம்ம'  என்னும் ஆறனுருபு ஏற்ற சொல் பொதுவாய் நின்றது. உம்முடைய பாவம் நோய்கள் குற்றம் 
என்க. செயல் தீங்கு குற்றம் - செயலது தீங்காலாகும் குற்றமென விரித்தலும் ஆகும். 
வரையினிலாமை - அளவில்லாமை,  அளவில் நில்லாமை (மை) எதிர்மறை வினையெச்சமும் 
பெயரும் ஆம். கைதொழுதால், செய்த அவை  தீரும். அவை - உம்முடைய உரையால் வந்த பாவமும் 
உணர் நோய்களும் தீச்செயலான குற்றமும்.

    Our Lord Civa took hold of the Meru mountain and used it as His bow and 
shot an arrow on the three fortresses of the asuras and completely destroyed them. 
He imbibed the poison from the ocean of milk and kept it in His larynx. At this 
moment our goddess Uma Devi got terrified on seeing the dark neck. Our Lord Civa
is manifest in the rich city of Thiru-naaraiyoor. Those devotees who worship this 
city with their hands will find their bad karma, brought about by the action of 
their mind, words, and body, wiped out. Oh! Ye devotees praise and worship this 
Lord at Thiru-naaraiyoor daily and keep Him in your mind. Your bad actions causing 
endless misery will be wiped out.

2400.     ஊனடைகின்றகுற்றமுதலாகியுற்றபிணிநோயொருங்குமுயரும் 
    வானடைகின்றவெள்ளைமதிசூடுசென்னிவிதியானவேதவிகிர்தன் 
    கானிடையாடிபூதப்படையானியங்குவிடையானிலங்குமுடிமேல் 
    தேனடைவண்டுபாடுசடையண்ணல்நண்ணுதிருநாரையூர்கைதொழவே.     2

    ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் 
    வான் அடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன் 
    கான் இடையாடி பூதப்படை யான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல் 
    தேன் அடைவண்டு பாடு சடையண்ணல் நண்ணு திருநாரையூர் கைதொழவே.

    Un aTaikinRa kuRRam mutal Aki uRRa piNi nOy orugkum--uyarum 
    vAn aTaikinRa veLLaimati cUTu cenni viti Ana vEta vikirtan, 
    kAn iTai ATi, pUtap paTaiyAn, iyagku viTaiyAn, ilagku muTimEl 
    tEn aTai vaNTu pATu caTai aNNal, naNNu tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     உயரும் வானில் இருக்கும் வெண்ணிறப் பிறைமதியைச் சூடும் சென்னியன்; 
வேதங்களில் விதிக்கப்பட்ட அறங்களின் பயன்களை அளிக்கும் விகிர்தன்; சுடுகாட்டில் ஆடுபவன்; 
பூதகணங்களாகிய படையை உடையவன்; சஞ்சரிக்கின்ற விடையை வாகனமாக உடையவன்; 
முடிமேல் விளங்குகின்ற மலர்களின்மேல் தேன்வண்டு பாடும் சடையர் ஆகிய அண்ணல் இருக்கும் 
திருநாரையூரைக் கைதொழுதால் ஊன் பொதிந்த உடலில் பிறப்பினால் வரும் குற்றங்கள், உற்ற 
நோயாகிய பிணிகள் ஒரு சேரக் கெடும்.

குறிப்புரை:     ஊன்- உடம்பு. ஆகுபெயர். ஒருங்கும் - கெடும். உயரும்வான், வான் அடைகிற் மதி, 
வெள்ளைமதி என்க. ஆடி - பெயர். இயங்கு விடையான் - சஞ்சரிக்கும் இடப வாகனன்.

    Our Lord Civa retains the white moon moving in the top sky on His head. He is
the Supreme Being different from the world and the author of the four Vedas. His avocation 
is to dance in the burning ghat along with His army of bhutaas. He moves on His strong bull, 
He has decorated His entangled locks of hair on His bright head, with the flowers full of 
honeybees jumping among the bunches of flowers. This Lord is manifest in Thiru-naaraiyoor. 
Those devotees who worship our Lord there with both their hands will get rid of all the 
misdeeds committed by their body as well as the diseases connected with their physical body.

2401.     ஊரிடைநின்றுவாழுமுயிர்செற்றகாலன்துயருற்றதீங்குவிரவிப் 
    பாரிடைமெள்ளவந்துபழியுற்றவார்த்தையொழிவுற்றவண்ணமகலும் 
    போரிடையன்றுமூன்றுமதிலெய்தஞான்றுபுகழ்வானுளோர்கள்புணரும் 
    தேரிடைநின்றஎந்தைபெருமானிருந்ததிருநாரையூர்கைதொழவே.        3

    ஊர் இடைநின்று வாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப் 
    பார் இடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்றவண்ணம் அகலும் 
    போர் இடையன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வான் உளோர்கள் புணரும் 
    தேர் இடைநின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கைதொழவே.

    Ur iTai ninRu vAzum uyir ceRRa kAlan, tuyar uRRa tIgku viravi,
    pAr iTai meLLa vantu, pazi uRRa vArttai ozivu uRRa vaNNam, akalum-
    pOr iTai anRu, mUnRu matil eyta njAnRu, pukaz vAn uLOrkaL puNarum 
    tEr iTai ninRa entai perumAn irunta tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     போரில் அன்று திரிபுரங்களை எரித்த அப்பொழுது புகழுடைய வானோர்கள் கூடித் 
தேராக நிற்க, என்னுடைய தந்தை பெருமானாகிய சிவன் இருக்கும் திருநாரையூரைக் கைதொழுதால் 
உலகில் நின்று வாழும் உயிர்களை அழிக்கும் இயமன் வருத்தத் துயருற்ற தீங்குகள், உலகினில் மெள்ள வந்த 
பழியுற்ற வார்த்தைகள் ஒழிந்த வண்ணம், (பாவம்) அகலும்.

குறிப்புரை:     இத்திருப்பாட்டின் முற்பகுதியில் காலன் தீங்கு விரவிப் பாரிடை வந்து பழியுற்ற 
வார்த்தை ஒழிவுற்ற வரலாறு கூறப்பட்டது. அது திருநாரையூர்ப் புராணத்தில் காணப்படவில்லை. 
ஞான்று- நாளன்று என்பதன் மரூஉ. இது கல்வெட்டுக்களில் பயின்றுள்ளது. 'நாளன்று போகி' 
(புறம் 124)  என்புழிப்பம் பொருள் ஈண்டுக் கொள்ளலாகாது. நாளாகிய அன்று, அந்நாள், பொழுது 
என்னும் பொருளில் ஆளப்படுகின்றது. 'திருமுடியூர் ஆற்றுத் தளிப்பெருமானடிகளுடைய..... 
திருக்கற்றளியாக அமைப்பித்து, இவ்வாடை மகர ஞாயிற்றுச் சனிக்கிழமை பெற்ற இரேவதி 
ஞான்று கும்பதாரை' (Archaeological Survey of India, Annual Report, 1905-1906, pp. 182-183).

    Long ago, our Lord Civa got wild with the three asuras and destroyed the three
fortresses with His arrow, which He shot on the fortresses. At that period the devas
were glad because their enemy was destroyed by Lord Civa. Therefore, all the devas 
jointly built a car for our Lord Civa. He then mounted the car in Thiru-naaraiyoor. 
He then graced all His devotees. If those devotees can worship the city Thiru-naaraiyoor, 
where Lord Civa mounted the car and pray they will get rid of the danger caused by Kaalan, 
the god of death. Also they will get rid of bad and ridiculous words of the common people 
of the world about them.

2402.     தீயுறவாய ஆக்கையதுபற்றிவாழும்வினைசெற்றவுற்றவுலகின் 
    தாயுறுதன்மையாயதலைவன்றன்நாமம்நிலையாகநின்றுமருவும் 
    பேயுறவாயகானில் நடமாடிகோலவிடமுண்டகண்டன்முடிமேல் 
    தேய்பிறைவைத்துகந்தசிவன்மேய செல்வத்திருநாரையூர்கைதொழவே.        4

    தீ உறவாய ஆக்கையதுபற்றி வாழும் வினை செற்றவுற்ற உலகின் 
    தாய் உறுதன்மையாய தலைவன் தன்நாமம் நிலையாக நின்று மருவும் 
    பேய் உறவாய கானில் நடமாடி கோலவிடம் உண்ட கண்டன் முடிமேல் 
    தேய் பிறைவைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    tI uRavu Aya Akkai atu paRRi vAzum vinai ceRRa, uRRa ulakin 
    tAy uRu tanmai Aya, talaivan tan nAmam nilai Aka ninRu maruvum
    pEy uRavu Aya kAnil naTam ATi, kOla viTam uNTa kaNTan, muTimEl 
    tEy piRai vaittu ukanta civan, mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     பேய்களுடன் கூடிநின்று சுடுகாட்டினில் கூத்தாடுவோன்; விடத்தை அழகாக 
நிறுத்திய கண்டன்; சென்னிமேல் தேய்ந்த பிறையைச் சூடி உகந்த சிவனுடைய திருநாரையூரைக் 
கைதொழுதால், நம் உயிர் தீமைகளுக்கு உறவாகிய உடலைப்பற்றி வாழும்  வினைகள் ஒழிந்து 
உலகில் தாய்போற் கருணையாளனாய தலைவனின் நிறைவினில் மருவி நிலையாக 
நிற்றலைப் பொருந்தும்.

குறிப்புரை:     செற்ற - நெருங்கிய. பின்னிய. செற்றவுலகு என்று இயைக்க. செய்ய என்பதற்கு 
அழித்த என்று பொருள் கொள்ளின் தலைவன் என்பதோடியையும். 'உலகின் தாய்' 'தாயாய் 
முலையைத் தருவானே' (திருவாசகம் 50-5) (தி. 2 ப. 24 பா.8). நடமாடி- பெயர், தேய்பிறை என்றது 
இயல்படை.  சிவபெருமான் திருமுடியில் உள்ள பிறைக்குத் தேய்தலும் வளர்தலும் இல்லை. 
தொழமருவும் என்க.

    Our Lord Civa has His avocation to dance in the burning ghat where He is 
closely associated and dances with the devils. His larynx is dark blue in colour since He
imbibed the poison. He retains the moon on His head. He is manifest in the temple in Thiru-
naaraiyoor. Those devotees, who worship and pray our Lord in the city of Thiru- naaraiyoor, 
will get rid of all the sufferings that might get accrued for being born in this world. Also 
His divine motherly name will grace you and can be meditated upon in your mind .

2403.     வசையபராதமாயவுவரோதநீங்குந்தவமாயதன்மைவரும்வான்
     மிசையவராதியாயதிருமார்பிலங்குவிரிநூலர்விண்ணுநிலனும் 
    இசையவராசிசொல்லஇமையோர்களேத்தியமையாதகாதலொடுசேர் 
    திசையவர்போற்றநின்றசிவன்மேய செல்வத்திருநாரையூர்கைதொழவே.        5

    வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் 
    மிசையவர் ஆதியாய திருமார்பு இலங்கு விரிநூலர் விண்ணும் நிலனும் 
    இசையவர் ஆசிசொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் 
    திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    vacai aparAtam Aya uvarOtam nIgkum; tavam Aya tanmai varum--vAn
    micaiyavar; Ati Aya tirumArpu ilagku virinUlar; viNNum nilanum 
    icaiyavar, Aci colla; imaiyOrkaL Etti; amaiyAta kAtaloTu cEr 
    ticaiyavar pORRa, ninRa civan; mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     மேலுலகத்தவராகிய வானவர்களுக்கும் தலைவர்; அழகிய மார்பில் விரிந்த  
பூணூலை உடையவர்; விண்ணுளோர்களும் மண்ணுளோர்களும் புகழ்ந்து வாழ்த்துவர்; 
இமையோர்கள் வணங்கும் பொருட்டு நிறையாத அன்புடன் வந்து சேர்வர்; இவ்வாறு எட்டுத்  
திசையிலும் வாழ்பவர் போற்ற நின்ற சிவன்  மேவிய  செல்வத் திருநாரையூரைக் கைதொழுதால், 
கடல் அளவாய பழிகள், குற்றங்களானவை  நீங்கும்; தவமாய தன்மை வரும்.
 
குறிப்புரை:     உவரோதம் - உபரோதம். இடையூறு உவர் ஓதம் என்னும் தொடர் உப்பு 
நீர்க்கடல் என்னும் பொருளதுமாம். அப்பொருள் கொள்ளின் வசை ஆம் அபராதமாய உவரோதம் 
என்பதற்குக் கடல் அளவு குற்றமாம்.

    Our Lord Civa existed before all the celestials who were in the heavenly 
abode. On His attractive chest three-ply sacred thread hangs beautifying His body. 
He is the Supreme Being manifested everywhere in the universe including the earth 
and the sky. All the devas worship and praise Him, He graces them all. He is worshipped 
and praised by all the eight tutelary deities of the eight directions sincerely and 
with love. If the devotees worship and praise our Lord Civan who is manifested in Thiru 
naaraiyoor, they will get rid of all their bad karma even when it is equal to the sea. 
They will get our Lord's grace and will do all austerities.

2404.     உறைவளரூனிலாயவுயிர்நிற்கும்வண்ணமுணர்வாக்குமண்மையுலகில் 
    குறைவுளவாகிநின்றகுறைதீர்க்குநெஞ்சினிறைவாற்றுநேசம்வளரும் 
    மறைவளர்நாவன்மாவினுரிபோர்த்தமெய்யனரவார்த்த அண்ணல்கழலே 
    திறைவளர்தேவர்தொண்டினருள்பேணநின்றதிருநாரையூர்கைதொழவே.         6

    உறை வளர் உன் நிலாய உயிர்நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் 
    குறைவு உள ஆகிநின்ற குறைதீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் 
    மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே 
    திறை வளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற திருநாரையூர் கைதொழவே.

    uRai vaLar Un nilAya uyir niRkum vaNNam uNarvu Akkum; uNmai ulakil 
    kuRaivu uLa Aki ninRa kuRai tIrkkum; nenjcil niRaivu ARRum; nEcam vaLarum- 
    maRai vaLar nAvan, mAvin uri pOrtta meyyan, aravu Artta aNNal, kazalE 
    tiRai vaLar tEvar toNTin aruL pENa ninRa tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     வேதம் வளரும் திருநாவினன்; யானையின் உரியைப் போர்த்த திருமேனியன்; 
பாம்பினைக் கச்சாகக் கட்டிய தலைவன்; ஆகிய சிவபெருமானின் கழலணிந்த  
திருவடிகளுக்குத் தேவர்கள் திருத்தொண்டு செய்து, அதன் வழித் திருவருளை அடைய 
விரும்புவர்; அவ்வாறு  தேவர்கள் பணி  செய்து திருவருளை அடைய விரும்பும் 
திருநாரையூரைக் கைதொழுதால், உறைபோல வளர்கின்ற உடம்பில் நிலவுகின்ற உயிர் 
சிவனடியில் நிற்கும் வண்ணம் ஞானம் அளிக்கும். உலக வாழ்வில், மெய்யுணர்வு இன்றி, 
உழலும் குறையைத் தீர்க்கும்; உள்ளத்தில் நிறைவளிக்கும்  சிவபத்தி வளரும்.

குறிப்புரை:     வேதம் வளரும் திருநாவினன், யானை உரி போர்த்த திருமேனியன், பாம்பைக் 
கச்சாகக் கட்டிய தலைவன் ஆகிய சிவபெருமான் திருவடிகளையே தேவர்கள் திருத்தொண்டின் 
எய்தும் திருவருளால் விரும்ப நின்ற திருநாரையூர். திறைவளர்தேவர்- சிவபிரானுக்குத் திறையாக 
வளர்கின்ற தேவர்கள். திறையாதல் - தம்மை அர்ப்பணம் செய்தல். அடைக்கலமும் ஆம். தெறுதல் - 
தெறை - திறை. 'ஒன்னார்த் தெறுபொருள் - பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருள். 
தெறுதலான் வரும் பொருள் எனவிரியும்' (குறள் 756, உரை).

    Our Lord Civa is the Author of the four Vedas. Our saint says: - In His 
tongue the Vedas developed and took the form of six angaas. He covers His body with the
hide of the elephant. He administers on His waist the snake and tightens like a corset. He 
is the protagonist as the Chief Supreme Being. The devas consider His holy feet precious and 
at His feet surrender their life. They wait in Thiru-naaraiyoor and serve Him so that they 
can get His grace. With this hope they worship and pray at the city of Thiru-naaraiyoor. 
We may believe that by worshipping Him, their soul will permanently and happily settle in 
their physical body which is a covering. Also that will promote spiritual awareness. It will 
remove their faults. They will get fulness in their heart. With such feelings we may often 
visit Thiru-naaraiyoor and worship our Lord and praise Him.

2405.     தனம்வருநன்மையாகுந்தகுதிக்குழந்துவருதிக்குழன்றவுடலின்
    இனம்வளரைவர்செய்யும்வினயங்கள்செற்றுநினைவொன்றுசிந்தைபெருகும் 
    முனமொருகாலமூன்றுபுரம்வெந்துமங்கச்சரமூன்றெரிந்த அவுணர் 
    சினமொருகாலழித்தசிவன்மேயசெல்வத்திருநாரையூர்கைதொழவே.        7

    தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் 
    இனம் வளர் அவர் செய்யும் வினயங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் 
    முனம் ஒருகாலம் மூன்று புரம் வெந்து மங்கச் சரம் மூன்று எரிந்த அவுணர் 
    சினம் ஒருகால் அழித்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    tanam varum; nanmai Akum; takutikku uzantu varu tikku uzanRa uTalin 
    inam vaLar avar ceyyum vinaiyagkaL ceRRU, ninaivu onRu cintai perukum-
    munam oru kAlam, mUnRu puram ventu magkac caram mUnRterinta, avuNar             
    cinam oru kAl azitta, civan mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     முன்னொரு காலத்தில் திரிபுரங்கள் மூன்றும் நெருப்பில் எரிந்து ஒழிந்து 
மங்குமாறு அம்பினை எய்தவர்; அவுணர்களின் சினத்தை அழித்தவர் ஆகிய சிவன் மேவிய செல்வத் 
திருநாரையூரைக் கைதொழுதால், செல்வம் வரும்; நலங்கள் உளவாகும்; மேன்மை பெறுதற்கு 
வருந்திய திசையெல்லாம் அலைந்து திரிந்து, உழலுகின்ற உடம்பில் வளர்கின்ற ஐம்புலன்களாகிய 
கள்வர் செய்கின்ற வஞ்சகங்களை அழித்து சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

குறிப்புரை:     திருநாரையூரைத் தொழுதலால் செல்வம் வரும். நலங்கள் உளவாகும். மேன்மை         
பெறுதற்கு முயன்று திசையெல்லாம் சுழன்ற உடம்பில் கூட்டமாக வளர்கின்ற ஐம்புலக் கள்வர் 
செய்கின்ற வஞ்சகங்கள் அழித்து, சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

    In the olden days, our Lord Civa shot an arrow and destroyed the three fortresses 
of the asuras. This Lord manifests Himself in Thiru-naaraiyoor. Those servitors who worship 
our Lord in the city with both their hands will acquire wealth and all that is good. 
To earn fame and name people may take strenuous efforts, move in all directions, with 
their perverted and wicked thoughts arising out of their sensory organs. After being 
relieved of such things, with their thoughts on His feet they will achieve full 
spiritual concentration and be masters of their five senses when they worship 
the Lord of Thiru-naaraiyoor.

2406.     உருவரைகின்றநாளிலுயிர்கொள்ளுங்கூற்றநனியஞ்சுமாதலுறநீர் 
    மருமலர்தூவியென்றும்வழிபாடுசெய்ம்மினழிபாடிலாதகடலின் 
    அருவரைசூழிலங்கையரையன்றன்வீரமழியத்தடக்கைமுடிகள் 
    திருவிரல்வைத்துகந்தசிவன்மேயசெல்வத்திருநாரையூர்கைதொழவே.        8

    உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்ற நனியஞ்சும் ஆதல் உற நீர் 
    மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் அழிபாடு இலாத கடலின் 
    அருவரை சூழ் இலங்கை அரையன்றன் வீரம் அழியத் தடக்கை முடிகள் 
    திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    uru varaikinRa nALil uyir koLLum kURRam nani anjcum; Atal uRa, nIr 
    marumalar tUvi, enRum vazipATu ceymmin !--azipATu ilAta kaTalin
    aru varai cUz ilagkai araiyan tan vIram aziya, taTakkai muTikaL, 
    tiruviral vaittu ukanta civan mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     அழிதலிலாத கடலின் நடுவில் மலைகளால் சூழப்பெற்றது இலங்கை. அதற்கு 
அரசனாகிய இராவணனுடைய வீரம் அழிய, அவனுடைய பெரியனவும் வலிமை உடையனவுமாகிய 
இருபது கைகள் பத்து முடிகள் நசுங்கத் திருவிரல் வைத்து உயர்ந்த சிவன் மேவிய திருநாரையூரைக் 
கைதொழுதால், உடம்பை விட்டு உயிர் நீங்குங்காலத்தில் உயிரைப் பற்ற வரும் கூற்றுவன் 'இவன் 
சிவனடியான்' என மிக அஞ்சுவான்; ஆதலின், அத்தகைய சிறப்பினை உற நீர் மணமுள்ள மலர்களைத் 
தூவி என்றும் சிவவழிபாடு செய்ம்மின்.

குறிப்புரை:     திருநாரையூரைத் தொழ உடம்பு நீங்கும் காலத்தில் உயிரைக் கொள்ளும் கூற்றுவன் 
மிக அஞ்சுவன். ஆதலால் நீர் மிகுதியாக மணமலர்களைத் தூவி எப்பொழுதும் சிவ வழிபாடு செய்மின். 
அழிதலில்லாத கடல் நடுவே மலைகள் ஆழப் பெற்ற இலங்கைக்கு வேந்தனாகிய இராவணனது வீரம்
அழியவும் பத்துத் தலைகளும் இருபது கைகளும் நசுங்கவும் ஒரு திருக்காற் பெருவிரலை ஊன்றி உயர்ந்த 
சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திருநாரையூர்.

    Raavanan was the king of Sri Lanka, surrounded by the indestructible ocean and
bordered by big and thick mountains. Our Lord Civa reduced Raavanan's mightiness and 
crushed his long hands and heads. He did these actions by pressing the top of His abode, 
mount Kailash, with His toe. He desired to manifest Himself in Thiru-naaraiyoor. Those 
servitors who worship and praise our Lord Civa's city Thiru-naaraiyoor with both their 
hands could not be approached easily by Yama, the god of death for he will fear to come 
near them at the time of their death. Therefore the devotees are advised to worship 
and praise our Lord in Thiru-naaraiyoor by spreading  fresh sweet smelling flowers 
over His feet.

2407.     வேறுயர்வாழ்வுதன்மைவினைதுக்கமிக்கபகைதீர்க்குமேயவுடலில் 
    தேறியசிந்தைவாய்மைதெளிவிக்கநின்றகரவைக்கரந்துதிகழும்             
    சேறுயர்பூவின்மேயபெருமானுமற்றைத்திருமாலுநேடஎரியாய்ச் 
    சீறியசெம்மையாகுஞ்சிவன்மேய செல்வத்திருநாரையூர்கை தொழவே.        9

    வேறு உயர்வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் 
    தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்             
    சேறு உயர்பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச் 
    சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    vERu uyar vAzvu tanmai; vinai; tukkam, mikka pakai tIrkkum; mEya uTalil 
    tERiya cintai vAymai teLivikka, ninRa karavaik karantu, tikazum- 
    cERu uyar pUvin mEya perumAnum maRRait tirumAlum nETa, eri Ayc 
    cIRiya cemmai Akum civan mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     சேற்றில் உயரும் தாமரை மலரில் பொருந்தியிருக்கும் பிரமனும் திருமாலும் தேட
நெருப்புப் பிழம்பாகக் கனன்ற செம்மையாகும் சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைக் 
கைதொழுதால், பிறப்பிறப்பிற்பட்டுச் சுழலும் உலக வாழ்க்கைக்கு வேறாய் நிலையான பேரின்ப 
வாழ்க்கை திகழும்; வினையும் அதனால் வரும் துக்கமும் மிக்க பகையும் தீர்க்கும். பொருந்திய உடலில் 
தெளிந்த சிந்தையும் மெய்யுணர்வும் தெளியச் செய்யும்; திருவருள் தனது மறைவை ஒழித்து விளங்கும்.

குறிப்புரை:     சேற்றில் தோன்றி உயர்ந்த தாமரைப் பூவில் மேவிய பெரியோனாகிய பிரமனும் 
திருமாலும் தேடத் தீப்பிழம்பாகிக் கனன்ற செம்மையாகும் சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை 
உடைய திருநாரையூரைக் கைதொழுதால் பிறந்திறந்துழலும் துன்ப வாழ்விற்கு வேறாய் உயர்ந்த 
பேரின்ப வாழ்வாகிய சகச நிலை திகழும். வினையும் அதனால் வரும் துக்கமும் மிக்க பகையைத் 
தீர்க்கும். பொருந்திய உடலில் தெளிந்த சிந்தையும் உண்மையும் தெளியச் செய்ய நின்ற தனது 
மறைவை ஒழித்து விளங்கும். தன்மை= சகசம், சுபாவம், இயல்பு, வினையாகிய துக்கம் மிக்க பகை. 
வினையைப் பகை  என்றல் திருமுறையில் பயிலக்காணலாம்.  'கரப்பர் கரிய மனக்கள்வர்க்கு 
உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்' (தி. 6 ப. 17 பா 5). 

    The tutelary deity Brahma, seated on the lotus flower which grows high from 
the mud, and the other deity Thirumaal, both went in search Civa's head and feet. 
They both failed in their attempts. At that moment, Lord Civa appeared before them 
as dazzling Supernal Infinite Flame. They both were terrified and realised their 
mistaken quarrel about their different ideas. This Lord Civan is manifest in 
Thiru-naaraiyoor.  Those servitors who worship the Lord in Thiru-naaraiyoor by 
raising both their hands will be freed from birth and death. Their sufferings 
caused by their bad karma and bitter enmity will be eradicated. In their clear 
mind truth will arise and Civa, so far invisible, will now appear and establish 
Himself in their minds.

2408.     மிடைபடுதுன்பமின்பமுளதாக்குமள்ளம்வெளியாக்குமுன்னியுணரும் 
    படையொருகையிலேந்திப்பலிகொள்ளும்வண்ணமொலிபாடியாடிபெருமை 
    உடையினைவிட்டுளோருமுடல்போர்த்துளோருமுரைமாயும்வண்ணமழியச் 
    செடிபடவைத்துகந்தசிவன்மேயசெல்வத்திருநாரையூர்கைதொழவே.        10

    மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் உன்னி உணரும் 
    படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை 
    உடையினை விட்டு உளோரும் உடல் போர்த்து உளோரும் உரை மாயும் வண்ணம் அழியச் 
    செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.

    miTai paTu tunpam inpam uLatu Akkum; uLLam veLi Akkum; unni uNarum,         
    paTai oru kaiyil Entip pali koLLum vaNNam oli pATi ATi perumai!--
    uTaiyinai viTTu uLOrum, uTal pOrttu uLOrum, urai mAyum vaNNam aziya, 
    ceTi paTa vaittu, ukanta civan mEya celvat tiru nAraiyUr kaitozavE.

பொருள்:     உடை உடுத்தாத சமணரும் உடையால் உடலைப் போர்த்திக் கொள்ளும் 
பவுத்தரும் பேச்சற்றுக் கொள்கை அழியக் குற்றப்படச் செய்த சிவன் மேவிய செல்வத் 
திருநாரையூரைக் கைதொழுதால் துன்பஞ் செறிந்த வாழ்க்கையை இன்பமுளதாக்கும். 
 மருள் கொண்ட உள்ளம் ஒளியுடையதாக்கும்.  அதனால் மழுப்படையை  ஒருகையில் 
ஏந்திக்கொண்டு பிச்சை ஏற்கும் வண்ணம் இசையுடன் பாடி ஆடுகின்ற  சிவனின் 
பெருமையைத் தியானித்து உணர்மின். 

குறிப்புரை:     வெளியாக்கும் - ஒளியை ஆக்கும். அடியார்கள் உளமான வெளியாகும் வலிதாய 
வினைகூட நினையாவே (சிவப்பிரகாசம்- காப்பு). உன்னி உணரும்- தியானித்து உணருங்கள். முன்னி 
எனப்பிரித்தலும் ஆம். அதற்கு நினைந்து என்றும் முந்தி என்றும் கொள்க. உணரும் - நிகழ்காலஉம்மீறு 
அன்று எதிர்காலம் உணர்த்தும் முன்னிலைப் பன்மை. சீவக. 808 உரை. சமணசாக்கிய சமயங்களின் 
கொள்கைகள். செடி - குணம் இல்லாமை. கைதொழ வெளியாக்கும் அதனால் ஆடியின் பெருமையை 
உன்னி உணரும் என்று இயைக்க.

    Our Lord Civa holds the trident in one of His hands and accepts the alms. He sings 
good songs and dances about. His fame is misrepresented by the Jains and the Buddhists who 
roam with and without dress in the city. But our Lord nullifies all their sayings and 
protects our devotees. He is manifest in the rich Thiru-naaraiyoor. Those servitors who 
worship our Lord in the city of Thiru-naaraiyoor will get rid of their sufferings. 
Happiness will flourish in their lives. Their mind will get brightened.  Therefore,
you servitors! think of Thiru-naaraiyoor and realise our Lord's fame and worship Him.

2409.     எரியொருவண்ணமாயவுருவானையெந்தைபெருமானையுள்கிநினையார் 
    திரிபுரமன்றுசெற்றசிவன்மேயசெல்வத்திருநாரையூர்கைதொழுவான் 
    பொருபுனல்சூழ்ந்தகாழிமறைஞானசம்பந்தனுரைமாலைபத்துமொழிவார்
     திருவளர்செம்மையாகியருள்பேறுமிக்கதுளதென்பர்செம்மையினரே.        11

    எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் 
    திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழுவான் 
    பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞான சம்பந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் 
    திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே.

    eri oru vaNNam Aya uruvAnai-entai perumAnai-uLki ninaiyAr 
    tiripuram anRu ceRRa civan mEya celvat tiru nAraiyUr kaitozuvAn, 
    poru punal cUznta kAzi maRai njAnacampantan urai mAlaipattum mozivAr, 
    tiru vaLar cemmai Aki aruL pERu mikkatu uLatu enpar, cemmaiyinarE.

பொருள்:     தீயைப் போன்ற செஞ்சுடர் வண்ணமாய நிறத்தை உடையவன்; எம்முடைய 
தந்தை; இப்பெருமகனைத் தியானித்து நினையாத முப்புராரிகளை அழித்த சிவன் மேவிய 
திருநாரையூரைக் கைதொழுவானும், மோதுகின்ற நீர்வளம் சூழ்ந்த காழியினனும் ஆகிய 
மறைஞானசம்பந்தன் உரைத்த மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் 
மொழிவார் திருவளர்  செம்மையராகி திருவருட் பேறு  உடையவராம்படிக்குச் செம்மையினராவர்.

குறிப்புரை:     எரி... உருவானை - தீயைப் போலும் ஒப்பற்ற அழகியதாய நிறத்தை உடையவனை.             
அழல் வண்ணன் என்பது திருநாமம். எந்தை பெருமானை உள்கித் திருநாரையூரைக் கைதொழுவான் 
ஆகிய மறைஞானசம்பந்தன் உரை(த்த) மாலை பத்தும் மொழிவார் செம்மையாகிப் பேறுமிக்கதுள்ளது 
என்பராய்ச் செம்மையினர் ஆவர் என ஆக்கம் விரித்து முடிக்க. உள்குதல் கைதொழுதல் இரண்டும் 
மொழிவார்க்கு ஏற்றி உரைத்தலும் பொருந்தும். அப்பொருட்குத் தொழுவான் என்பது 
வினையெச்சமாகும்.  முன்னைய பொருளுக்கு வினையாலணையும் பெயர்.           

    Our Lord Civa is our Supreme Father. His complexion is reddish like fire. The asuras 
never melt in their mind and think of our Lord Civan and His fame. Long ago Civa destroyed 
their three fortresses and saved the devas. He is manifest in the temple in Thiru-naaraiyoor. 
Our saint Thiru-gnana-Sambandar who is a scholar in Vedas hails from Seerkaazhi which has 
plenty of water areas such as tanks, ponds etc. He visited and worshipped Thiru-naaraiyoor 
and our Lord Civa who is manifest in the temple of the city. He chanted this Tamil garland 
of ten verses. Those servitors who memorise and chant these ten verses will get His grace, 
which could bring wealth and perfections.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            86ஆம் பதிகம் முற்றிற்று
            End of 86th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 223                பதிக எண்: 87

87. திருநறையூர்ச்சித்தீச்சரம்            87.THIRU-NARAIYOOR CHITH-THEECHARAM

பண்: பியந்தைக்காந்தாரம்            Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருநறையூர்ச்சித்தீச்சரம் என்னும் இத்திருத்தலமானது சித்தர்களால் பூசிக்கப்பெற்ற 
கோவில் என்று பொருள்படும். ஊரின் பெயர் திருநறையூர். கோவிலின் பெயர் சித்தீச்சரம். இது 
கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரையிலுள்ள 
அறுபத்தைந்தாவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இறைவர் திருப்பெயர் 
சித்தநாதர். இறைவி பெயர் அழகம்மை. தீர்த்தம் பிரம்மதீர்த்தம். இது கோயிலுக்கு வடபால் இருக்கின்றது. 
சித்தர்கள் பூசித்துப் பேறுபெற்றனர். இதற்கு ஞானசம்பந்தர் தேவாரம் மூன்று, சுந்தரர் தேவாரம் ஒன்று 
ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன. 

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அரதைப் பெரும்பாழி, சேறை, நாலூர், குடவாயில் 
என்பவற்றை வணங்கித் திருநறையூரைச் சார்ந்து, சித்தீச்சரத்தைப் போற்றிப் பாடியருளியது 
இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2410.    நேரியனாகுமல்லனொருபாலுமேனியரியான்முனாயவொளியான் 
    நீரியல்காலுமாகிநிறைவானுமாகியுறுதீயுமாயநிமலன் 
    ஊரியல்பிச்சைபேணியுலகங்களேத்தநல்குண்டுபண்டுசுடலை 
    நாரியொர்பாகமாகநடமாடவல்லநறையூரின்நம்பனவனே.        1

    நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் 
    நீர் இயல் காலும் ஆகி நிறைவானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் 
    ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்குண்டு பண்டு சுடலை 
    நாரி ஓர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே.

    nEriyan Akum; allan, orupAlum; mEni ariyAn; mun Aya oLiyAn; 
    nIr iyal, kAlum Aki, niRai vAnum Aki, uRu tIyum Aya nimalan- 
    Ur iyal piccaip pENi, ulakagkaL Etta, nalka uNTu, paNTu, cuTalai,
    nAri Or pAkam Aka naTam ATa valla naRaiyUrin nampan avanE.

பொருள்:     ஊரில் ஏற்கும் பிச்சையை விரும்பி, உலகவர் வழிபட்டுப் பிச்சை நல்க அதனை 
உண்பவன்; சுடலையில் மாதொருபாகனாக நடனம் ஆட வல்லவன்; திருநறையூரில் நம்மால் 
விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே, நுண்ணியனும் அல்லன், பரியனும் அல்லன்; 
ஒருபக்கமும் திருமேனி ஒருதன்மைத்து ஆதல் இல்லாதவன்; அநாதியான ஒளியான்; நீரும், 
இயங்குகின்ற காற்றும் ஆகி, எங்கும் நிறைந்த ஆகாயமுமாகி, மிக்க நெருப்புமாகி 
மலமற்றவனுமானவன்.

குறிப்புரை:     நேரியன் - நுண்ணியன், தோன்றுபவன் (சித்தி. 280). முன் ஆய ஒளியான் - 
அநாதியாகிய சிவப்பிரகாசன். திருமால் முன் சோதிப் பிழம்பு ஆனவன் எனலும் ஆம். அல்லன் -
நேரியனல்லாத பரியன். நீரியல் ... நிமலன் - நீர், காற்று, விண், தீ ஆகிய விமலன். நல்குண்டு. அகரம்.

    Our Lord Civa visits many cities in the universe and accepts the alms given by
people with good mind and eats them. He along with His consort as concomitant being, 
used to dance in the burning ghat. This Lord manifests Himself in the Chith-th-eecharam 
temple in the city of Naraiyoor. He is the most elite Supreme Being among all other men. 
He is the smallest object. Also He is the Supreme Being, biggest in size with no parallel 
to Him. Our Lord Civa, who offered a part of His body, before the tutelary deity Thirumaal, 
stood as dazzling supernal infinite flame. He is the embodiment of the five natural original 
elements such as earth, fire, water, wind and ether.

2411.     இடமயிலன்னசாயல்மடமங்கைதன்கையெதிர்நாணிபூணவரையில் 
    கடுமயிலம்புகோத்துஎயில்செற்றுகந்து அமரர்க்களித்ததலைவன் 
    மடமயிலூர்திதாதையெனநின்றுதொண்டர்மனநின்றமைந்தன்மருவும் 
    நடமயிலாலநீடுகுயில்கூவுசோலைநறையூரின்நம்பனவனே.        2

    இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில் 
    கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் 
    மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மன நின்ற மைந்தன் மருவும் 
    நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே.

    iTam mayil anna cAyal maTa magkai tan kai etir nANi pUNa, varaiyil 
    kaTum ayil ampu kOttu, eyil ceRRu ukantu, amararkku aLitta talaivan; 
    maTamayil Urti tAtai ena ninRu, toNTar manam ninRa maintan--maruvum         
    naTam mayil Ala, nITu kuyil kUvu cOlai naRaiyUrin nampan avanE.

பொருள்:     நடனம் மருவும் மயில்கள் ஆட, குயில்கள் கூவும் சோலைகளையுடைய 
திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன்  ஆகிய சிவன் அவனே, இடப்பாகத்தில் உறையும்
மயில் போன்ற சாயல் உடைய இளமங்கையாகிய இறைவி தன்கையால் மலையாகிய வில்லில் 
நாணினைப் பூட்ட, கடிய கூரிய அம்பினைப் பூட்டி திரிபுரங்களை  அழித்து உயர்ந்தவன்; 
தேவர்களுக்கு அருள் செய்தவன்; அழகிய மயிலினை ஊர்தியாகக் கொண்ட முருகனுக்குத் 
தந்தை எனப் போற்றும் தொண்டர்களின் மனத்தில் நிலையாக நின்ற மைந்தனாவான். 

குறிப்புரை:     நாணி- வில்லின்நாண்.வரை- மேருவாகிய வில். கடும் அயில் அம்பு - கடிய         
கூரிய கணை. மயிலூர்தி - முருகப் பெருமான் நின்று நின்றமைந்தன் எனக் காட்டுக.

    In the renowned city of Naraiyoor the peacocks dance and scream. Their noise is heard 
everywhere; the charming and pleasing song of the cuckoo is also heard all around the area. 
The city is surrounded by natural forests. In this city is manifest our Lord who is the Supreme 
Being. He has embedded His consort Uma Devi on the left side of His body. She has the 
likeness of peacock and is the daughter of the mountain king. Civa had a big bow of Meru 
mountain to which He tied the five headed snake as the rope. She fixed the hard and sharp 
arrow to the bow and He destroyed the three fortresses of the asuras. He was satisfied 
because He gave happiness to devas. The devotees worshipped our Lord Civa, standing before 
Him they chanted 'Glory to Thee - You are the Father of Lord Murugan who owns a young peacock 
as his conveyance' When they say, this Lord Murugan's father Lord Civa enters into the minds 
of the devotees and makes them happy.

2412.     சூடகமுன்கைமங்கையொருபாகமாக அருள்காரணங்கள் வருவான் 
    ஈடகமானநோக்கியிடுபிச்சைகொண்டுபடுபிச்சனென்றுபரவத் 
    தோடகமாயொர்காதுமொருகாதிலங்குகுழைதாயவேழவுரியன் 
    நாடகமாகவாடிமடவார்கள்பாடுநறையூரின் நம்பனவனே.        3

    சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான் 
    ஈடக மான நோக்கி இடு பிச்சை கொண்டு படுபிச்சன் என்று பரவத் 
    தோடக மாயொர் காதும் ஒருகாதிலங்கு குழைதாய வேழ உரியன் 
    நாடகம் ஆக வாடி மடவார்கள் பாடு நறையூரின் நம்பன் அவனே.

    cUTaka munkai magkai oru pAkam Aka, aruL kAraNagkaL varuvAn; 
    ITu akam Ana nOkki, iTu piccai koNTu, "paTu piccan" enRu parava,
    tOTu akam Ayor kAtum, oru kAtu ilagku kuzai tAya, vEza uriyan            
    nATakam Aka ATi, maTavArkaL pATum naRaiyUrin nampan avanE.            

பொருள்:     அழகிய மகளிர் புகழ்ந்து பாடும் திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் 
ஆகிய சிவன் அவனே; சூடகம் அணிந்த முன்கையினளாகிய மங்கை ஒருபாகமாக உயிர்களுக்கு 
அருளும் காரணங்களுக்காக வருவார்; பெரிய இல்லங்கள் தோறும் இடுகின்ற பிச்சை கொள்வான்; 
பித்து மிகக் கொண்டவன் இவன் என்று எல்லோரும் இவனைப் புகழ்வர்; தோடு ஒருகாதிலும் ஒரு 
காதில் குழையும் தாழ உடையவன்; யானையின் உரியை உடையவன்; கூத்தாடி.

குறிப்புரை:     சூடகம் -வளையல். ஈடு அகம் ஆன - பெரிய வீடுகள் ஆனவற்றை நோக்கி. 
தோடும் குழையும் இருவேறு திருச்செவியிலும் அணிந்தது முன்னும் குறிக்கப்பட்டது (தி. 2 ப. 84 பா.5)

    In the city of Naraiyoor, young girls daily dance singing good songs on Civa 
and go to the temple and praise our Lord, who is the most elite, saying 'glory to Thee'. 
His consort wearing bangles on her forehands, Uma Devi is on the left side of His body 
and He graces His devotees. He goes near very big palatial houses and accepts the alms
they give. The devotees adore and worship Him. He is the liberator from worldly life 
(redeem). He wears in His two ears - stud in one ear and earring made of palm leaf 
in the other ear. He covers His body with the hide of the elephant, He is a dancer.

2413.     சாயனன்மாதொர்பாகன்விதியாயசோதிகதியாகநின்றகடவுள் 
    ஆயகமென்னுள் வந்த அருளாயசெல்வனிருளாயகண்டனவனித்
     தாயெனநின்றுகந்ததலைவன்விரும்புமலையின்கண்வந்துதொழுவார் 
    நாயகனென்றிறைஞ்சிமறையோர்கள்பேணும்நறையூரின்நம்பனவனே.        4

    சாயனன் மாதொர் பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள் 
    ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன் இருளாய கண்டன் அவனித் 
    தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பும் மலையின்கண் வந்து தொழுவார் 
    நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே.

    cAyanan mAtu orpAkan; viti Aya cOti; kati Aka ninRa kaTavuL; 
    Ay akam ennuL vanta, aruL Aya, celvan; iruL Aya kaNTan; avanit 
    tAy ena ninRu ukanta talaivan--"virumpu malaiyin kaN vantu tozuvAr 
    nAyakan" enRu iRainjci, maRaiyOrkaL pENum naRaiyUrin nampan avanE.

பொருள்:     கயிலை மலையின்கண் வந்து தொழுமவரின் தலைவன் என்று தாழ்ந்து மறையவர்கள்         
போற்றும் திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே, அழகிய மாதினைத் தன்னில் 
ஒரு பாகமாக உடையவன்; நெறி காட்டும் ஒளி;  உயிர்கள்  சென்று அடையும் கதியாகிய கடவுள்; என் 
உள்ளமாகிய அகத்துள் வந்த அருளாய செல்வன்;  இருண்ட கண்டன்; உயிர்களுக்குத் தாயென நின்று 
உயர்ந்த தலைவன் ஆவன்.

குறிப்புரை:     கதியாக நின்ற கடவுள்- சிவகதியாக நிற்கும் பரமேச்சுவரன். அவனித்தாய்- 
தாயவன்காண் உலகிற்கு (தி.6 ப.64 பா.4). மலையின்கண் வந்து தொழுவார் நாயகன்-  மலையினிருந்து
வந்து வழிபடுகின்ற சித்தர்க்கு ஈசுவரன் என்று மறையோர்கள் இறைஞ்சிப் பேணும் நறையூர் என்க.
 பா. 'சித்தர் பேண’.

    Our father Lord Civa is the Supreme Being. He is concomitant with His most 
appealing consort. He eradicates bad karma of all His devotees. He took the form of 
supernal infinite flame. He enters into my mind and graces His devotees. His neck is
dark blue. He becomes our mother and regards His devotees with grace. The supernals
inhabiting the intermediate area between the earth and the sun, the mystic group of 
people stay on the mountain they like and do penance in that area. They come down to 
Chith-th-eecharam and worship our Lord Civa. The Vedic scholars worship our Lord
as Eeswaran - Lord of the Universe.

2414.     நெதிபடுமெய்யெமையனிறைசோலைசுற்றிநிகழம்பலத்தின்நடுவே 
    அதிர்படஆடவல்லஅமரர்க்கொருத்தனெமர்சுற்றமாயஇறைவன் 
    மதிபடுசென்னிமன்னுசடைதாழவந்துவிடையேறியில்பலிகொள்வான் 
    நதிபடவுந்திவந்துவயல்வாளைபாயும்நறையூரின்நம்பனவனே.        5

    நெதி படு மெய் எம் அயன் இறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே 
    அதிர் பட ஆடவல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் 
    மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடையேறி இல் பலி கொள்வான் 
    நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே.

    neti paTu mey em aiyan; niRai cOlai cuRRi nikaz amapalattin naTuvE 
    atirpaTa ATa valla amararkku oruttan; emar cuRRam Aya iRaivan; 
    mati paTu cenni mannu caTai tAza vantu,--viTai ERi--il pali koLvAn
    nati paTa unti vantu vayal vALai pAyum naRaiyUrin nampan avanE.

பொருள்:     நதி நீர் உந்தித் தள்ள வந்து வயலில் வாளைமீன் பாயும் திருநறையூரில் நம்மால் 
விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே, மெய்ப்பொருள் ஆகிய நிதி; எம்முடைய ஐயன் செழுமையான 
சோலைகள் சுற்றி விளங்கும் அம்பலத்தின் பிறை விளங்கும் சென்னியில் நிலை பெற்றுள்ள சடை 
தாழும்படியாக வந்து எருதின் மேலேறி வந்து பிச்சை கொள்வான். நடுவே அதிர வீசி ஆடவல்லவன்; 
அமரர்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவன்; எம்மவரும் சுற்றமும் ஆகிய சிவன்.

குறிப்புரை:     நெதிபடுமெய்- நிதியாகப் படுகின்ற மெய்(ப்பொருள்) அமரர்க்கு ஒருத்தன்- தேவாதி 
தேவர்க்கெல்லாம் தலைவன். அமரரால் அமரப்படுவான் (தி. 7 பா. 384). எமர் சுற்றம் ஆய இறைவன் - 
எம்மவராகிய அடியார்களுக்கு உறவாய கடவுள். இல் - வீடுதோறும்.

    The sword fish swims through the river and jumps into the fields in the city of 
Chith-th-eecharam. Here our Lord is manifest. He is considered the richest Supreme who 
could keep the riches in reserve for our soul's future. He is our Chief. The city is 
surrounded by several forest gardens. Here is the open dancing hall. Lord Civan dances, 
it creates a tremor all around. He is the Chief of the devas. For His devotees He is very 
close like relatives. On His head the baby moon is retained. His matted hair hangs low. 
He rides on His bull to reach the houses to accept alms.

2415.     கணிகையொர்சென்னிமன்னுமதுவன்னிகொன்றைமலர்துன்றுசெஞ்சடையினான் 
    பணிகையின்முன்னிலங்கவருவேடமன்னுபலவாகிநின்றபரமன் 
    அணுகியவேதவோசையகலகங்காறின்பொருளானஆதியருளான்             
    நணுகியதொண்டர்கூடிமலர்தூவியேத்துநறையூரின்நம்பனவனே.     6

    கணிகை ஒர்சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ்சடையினான்
    பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பலவாகி நின்ற பரமன் 
    அணுகிய வேத ஓசை அகல் அகம் ஆறின் பொருளான ஆதி அருளான் 
    நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே.

    kaNikai or cenni mannum, matu vanni konRai malar tunRu cenjcaTaiyinAn; 
    paNikaiyin mun ilagka, varu vETam mannu pala Aki ninRa paraman; 
    aNukiya vEta Ocai akal agkam ARin poruL Ana Ati-aruLAn 
    naNukiya toNTar kUTi malar tUvi Ettum naRaiyUrin nampan avanE.

பொருள்:     நெருங்கிய தொண்டர்கள் கூடி மலர் தூவி வழிபடும் திருநறையூரில் நம்மால் 
விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே. பணிப்பெண்ணாகிய கங்கை தங்கும் சென்னியில்
தேனுடைய வன்னி கொன்றை மலர் செறிந்த சிவந்த சடையினன்; பாம்பு முன்கையில் விளங்க 
அருளால் பலவேடங்கள் கொண்டு நின்ற மேலான இறைவன்; தன்னை அடைய வேண்டும் என்று 
தேடிக் கிட்டிய வேத முழக்கம், வேதத்தின் அகன்ற ஆறங்கங்கள் ஆகியவற்றின் பொருளானவன்; 
முதல்வன்; அருளாளன் ஆவான். 

குறிப்புரை:     கணிகை - கங்கை. கணிகையொர் சென்னி - தியானிப்போர், பிரமரந்திரன் 
எனல் பொருந்தாது. சென்னியில் வன்னியும் கொன்றை மலரும் துன்றிய செஞ்சடை உடையவன், 
பணிகையின்  முன் - வணங்குதற்கு முன்னரே பணிகின்ற கை என்ன வினைத்தொகையாகக் 
கொள்ளலும்  பொருந்தும். அணுகிய வேத ஓசை - தன்னை அடைய வேண்டும் என்று தேடிக்கிட்டிய 
வேத முழக்கம். அகல் அங்கம் ஆறின் பொருள் - விரிந்த ஆறங்கங்களின் பொருள்.

    The devotees of Civa bring flowers and spread them on His holy feet and praise 
Lord Civa who resides in Naraiyoor. He supports the Ganges river on His head. He has adorned 
his hair with the leaves of summer tree and Indian laburnum flowers, He takes several postures 
even before His servitors worship Him, He graces them. He is the embodiment of compassion and 
the Chief of the matter contained in the broad six angaas, which ultimately contain the essence 
of the Vedas that approached Him in the form of sounds.

2416.     ஒளிர்தருகின்றமேனியுருவெங்குமங்கமவையார ஆடலரவம் 
    மிளிர்தருகையிலங்கஅனலேந்தியாடும்விகிர்தன்விடங்கொள்மிடறன் 
    துளிதருசோலையாலைதொழில்மேவவேதமெழிலாரவென்றியருளும் 
    நளிர்மதிசேருமாடமடவார்களாருநறையூரின்நம்பனவனே.        7

    ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் 
    மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடங்கொள் மிடறன் 
    துளி தரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும்
    நளிர் மதி சேரு மாட மடவார்கள் ஆரு நறையூரின் நம்பன் அவனே.

    oLir tarukinRa mEni uru egkum, agkam avai Ara, ATal aravam 
    miLirtaru kai ilagka, anal Enti ATum vikirtan; viTam koL miTaRan
    tuLi taru cOlai Alai tozil mEva, vEtam ezil Ara, venRi aruLum, 
    naLirmati cErum mATam maTavArkaL Arum, naRaiyUrin nampan avanE.

பொருள்:     குளிர்ந்த பிறை தங்கும் உயர்ந்த மாடங்களில் அழகிய மங்கையர் சேரும் 
திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே. செந்நிறம் பிரகாசிக்கும் 
தன் திருஉடலில் (வெண்ணிற) எலும்பு அணி அணிந்து, மிளிர்கின்ற பாம்பு கையில் விளங்க, 
தீயினை ஏந்தி ஆடும் விகிர்தன்; நஞ்சு தங்கிய மிடறன். தேன் துளிர்க்கும் சோலைகளில் 
கரும்பாலைத் தொழில் நிறையும் தொழில் வளமும் வேத முழக்கத்தின் எழுச்சி நிறையும்
அருள் வளமும் அருளுவான்.

குறிப்புரை:     மேனி - நிறம். துளிதரல் - தேன்துளித்தல். வேதம் எழில் ஆர - வேத முழக்கத்தின் 
எழுச்சி நிறைய. மதிசேரும் மாடம் - வண்கொண்டல் விட்டு மதிமுட்டுவன மாடம் (கம்பர்).

    Our Lord Civa is manifest in the temple in Naraiyoor city. Around the city manmade 
gardens are many. There flower trees and plants grow in large numbers. They produce honey 
always. In the sugarcane gardens the machinery that is used to extract the juice of the 
sugarcane makes heavy noise and it converts the juice into sugar candy. The Vedic scholars 
raise heavy sound while chanting the Vedas. In the rich palatial tall buildings, reaching 
heaven, live beautiful girls and maidens. Here Civa's body is very bright and disperses 
the light all over. On the various parts of His body snakes dance about. He holds fire 
in one of His hands and dances. He is the Supreme Being quite different from the world, 
with poison filled throat.

2417.     அடலெருதேறுகந்த அதிருங்கழற்களெதிருஞ்சிலம்பொடிசையக் 
    கடலிடைநஞ்சமுண்டுகனிவுற்றகண்டன்முனிவுற்றிலங்கையரையன் 
    உடலொடுதோளனைத்துமுடிபத்திறுத்துமிசைகேட்டிரங்கியொருவாள்
    நடலைகள்தீர்த்துநல்கிநமையாளவல்லநறையூரின்நம்பனவனே.        8

    அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசையக் 
    கடல் இடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவு உற்று இலங்கை அரையன் 
    உடல் ஒடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் 
    நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரின் நம்பன் அவனே.

    aTal erutu ERu ukanta, atirum kazalkaL etirum cilampoTu icaiya,         
    kaTal iTai nanjcam uNTu kanivu uRRa kaNTan munivu uRRu ilagkai araiyan
    uTaloTu tOL anaittum muTipattu iRuttum, icai kETTu iragki, oru vAL 
    naTalaikaL tIrttu nalki, namai ALa valla naRaiyUrin nampan avanE.        

பொருள்:     திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே. வலிமை உடைய எருது 
ஊர்தலை விரும்பியவன்; ஆரவாரிக்கின்ற கழல்களுக்கு எதிராகச் சிலம்பினை அணிந்தவன். கடலிடை எழுந்த 
நஞ்சினை உண்டு களங்கனிவுற்ற மிடறன். சினந்து இலங்கை அரசன் இராவணனை அவன் உடலோடு 
தோள்கள் இருபதினையும் முடி பத்தினையும் அழித்து, அவன் இசையைக் கேட்டு இரங்கித் துன்பம் தீர்த்து 
ஒப்பற்ற வாள் நல்கி ஆள வல்லவன்; அவனே நம்மை ஆள வல்லவனாவான்.

குறிப்புரை:     கழல்கள் எனற்பாலது கழற்கள் எனத் திரிந்தது. அரையன் - அரசன், இராவணன். 
 உடல் தோள் முடி அனைத்தும் இறுத்தும் கேட்டு. இரங்கி, தீர்த்து (வாள்) நல்கி என்க. நல்கி ஆளவல்ல நம்பன்.

    Our Lord Civa loves to sustain the strong white bull for His conveyance. In one of His 
legs ring is tied up and on the other anklets move rapidly during His movement. With these 
sounds He moves around. He imbibed the poison that came out of the ocean and kept it in His 
larynx. Our Lord Civa squeezed the body, shoulders and the ten heads of Raavanan, the powerful 
king of Sri Lanka, who cried and repented. Later Civa heard his musical tone in 'Saama Geetha' 
and enjoyed his music. He removed his sufferings and gave him a divine sword. He, therefore, 
to grace us is manifest in Naraiyoor.

2418.     குலமலர்மேவினானுமிகுமாயனாலுமெதிர்கூடி நேடிநினைவுற் 
    றிலபலஎய்தொணாமையெரியாயுயர்ந்தபெரியானிலங்குசடையன் 
    சிலபலதொண்டர்நின்றுபெருமைக்கள்பேசவருமைத்திகழ்ந்தபொழிலின் 
    நலமலர்சிந்தவாசமணநாறுவீதிநறையூரின்நம்பனவனே.        9

    குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்று 
    இலபல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் 
    சிலபல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமைத் திகழ்ந்த பொழிலின் 
    நலமலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரின் நம்பன் அவனே.

    kulamalar mEvinAnum miku mAyanAlum etir kUTi nETi, ninaivuRR-
    Rila pala eyta oNAmai eri Ay uyarnta periyAn; ilagku caTaiyan
    cila pala toNTar ninRu perumai(k)kaL pEca, arumait tikaznta pozilin
    nala malar cinta, vAca-maNam nARu vIti naRaiyUril nampan avanE.

பொருள்:     சிலரும் பலருமாகத் தொண்டர்கள் கூடி நின்று தன்னுடைய பெருமைகளைப் பேசி
மகிழ, பெருமைகளுடன் திகழ்ந்த மலர்ச்சோலைகள் புதுமலர்கள் சிந்த, வாசங்கமழும் வீதிகளை 
உடைய திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் ஆகிய சிவன் அவனே. குலமுயர்ந்த தாமரை 
மலர்மேல் இருக்கும் பிரமனும் மாயம் மிக்க திருமாலும் இருவரும் எதிரெதிர் கூடி நின்று, தேடி 
முயன்றும் அவர்களால் நினைவாலும் அடையமுடியாத பொருள்சேர் புகழ்களை உடையவன்; 
அவர்களிடையே எரிபிழம்பாக உயர்ந்த பெரியவன்; விளங்கும் சடைகளை உடையவன்.

குறிப்புரை:     மேவினான்; பிரமன், மிகுமாயன்- மாயம் மிக்கவன். நேடி - தேடி நினைவுற்றில. 
பல- நினைப்பில் உற்றில்லாதன பலவாய். பெருமைகள் - பொருள் சேர்புகழ்கள். பெருமைக்கள் 
என்பதில் கவ்வொற்று இசைப்பொருட்டு விரித்தலாயிற்று. அருமை - அரிய மேகம். வரும்மை, 
அருமை எனலுமாம். பொழில் இனிய நல்ல மலர்களைச் சிந்த. வாசமணம். ஒருபொருளிரு சொல்.

    In the city of Naraiyoor, good people live around the city. They join together 
and always speak about the fame of our Lord Civa. In the city natural forests are many 
where dark clouds always gather. The sweet smell of the flowers filling the garden 
spreads all over the streets in the city. Here is manifest our Lord who is the elite 
among men. The tutelary deity Brahma seated in the lotus flower, the best among flowers 
and the highly renowned deity Thirumaal, both were in search of our Lord in opposite
irections. But our Lord Civa could not be even thought of in their minds with His 
eminency. They could not see Him at all. He, the Supreme Being, appeared before them as 
dazzling, infinite supernal flame. He has bright matted hair on His head.

2419.     துவருறுகின்றஆடையுடல்போர்த்துழன்றவவர்தாமுமல்லசமணும் 
    கவருறுசிந்தையாளருரைநீத்துகந்தபெருமான்பிறங்குசடையன் 
    தவமலிபத்தர்சித்தர்மறையாளர்பேணமுறைமாதர்பாடிமருவும்
    நவமணிதுன்றுகோயிலொளிபொன்செய்மாடநறையூரின்நம்பனவனே.        10

    துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர் தாமும் அல்ல சமணும் 
    கவர் உறுசிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் 
    தவம் மலிபத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் 
    நவமணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரின் நம்பன் அவனே.

    tuvar uRukinRa ATai uTal pOrttu uzanRa avar tAmum, alla camaNum,
    kavar uRu cintaiyALar urai nIttu ukanta perumAn; piRagku caTaiyan
    tavam mali pattar cittar maRaiyALar pENa, muRai mAtar pATi maruvum 
    navamaNi tunRu kOyil, oLi pon cey mATa naRaiyUrin nampan avanE.

பொருள்:     தவம் நிறைந்த பத்தர்கள், சித்தர்கள், மறை வல்லவர்கள் முதலியோர் போற்றி
வழிபடுவதுவும், மகளிர் முறையே பாடி மருவுவதும், நவமணிகள் பதிக்கப்பட்டதுமாகிய திருக்கோயிலும், 
பொன்னொளி வீசும் மாடங்களுமுடைய திருநறையூரில் நம்மால் விரும்பப்படுபவன் ஆகிய சிவன் 
அவனே, துவரூட்டப்பட்ட ஆடையை உடல்மேல் போர்த்துத் திரிகின்ற தேரர்களும், தேரர்கள் 
அல்லாத சமணரும் ஆகிய பலவழி ஓடும் சிந்தையாளர்களின் உரைகளை ஒழித்து அவைகளுக்கு 
அகப்படாது உயர்ந்த பெருமான்.

குறிப்புரை:     துவர் உறுகின்ற ஆடை - துவர் (காவி) ஊட்டிய துணி. அல்ல - (தேரர்) அல்லாத 
கவர் உறு சிந்தையாளர்- பல தலையாய் உற்ற மணம் உடையவர். பலதலை - ஐயம். தவம்மலி பத்தர் 
சித்தர் மறையாளர் பேண - தவத்தின் மிகுந்த அன்பரும் சித்துவல்லாரும் வேதியரும் விரும்பிவழிபட 
(பா. 4) இல் ‘மலையின் கண் வந்து தொழுவார்' என்றது இதிற்குறித்த சித்தரையே.

    The devotees and the mystic scholars, Vedic scholars, all these people verymuch
desire to worship our Lord Civa. The fair sex, the women folk chant the divine songs in an 
orderly manner and reach the temple and worship our Lord. The city has very palatial 
golden buildings. Our Lord Civa is manifest in the temple in Naraiyoor filled with nine gems. 
Here in this city, the Buddhists who wear saffron coloured cloth all around their body and 
the Jains have different ideas varied from our Lord Civa. Our Lord is too above all these 
ideas of these people. He has entangled locks of hair in His head. 

2420.     கானலுலாவியோதமெதிர்மல்குகாழிமிகுபந்தன்முந்தியுணர 
    ஞானமுலாவுசிந்தையடிவைத்துகந்தநறையூரின்நம்பனவனை 
    ஈனமிலாதவண்ணமிசையாலுரைத்ததமிழ்மாலைபத்துநினைவார் 
    வானநிலாவவல்லர்நிலமெங்குநின்றுவழிபாடுசெய்யுமிகவே.        11

    கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர 
    ஞானம் உலாவு சிந்தை அடிவைத்து உகந்த நறையூரின் நம்பன் அவனை
     ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்து நினைவார் 
    வான நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே.

    kAnal ulAvi Otam etir malku kAzi miku pantan, munti uNara 
    njAnam ulAvu cintai aTi vaittu ukanta naRaiyUrin nampan avanai, 
    Inam ilAta vaNNam, icaiyAl uraitta tamiz mAlai pattum ninaivAr 
    vAnam nilAva vallar; nilam egkum ninRu vazipATu ceyyum, mikavE.

பொருள்:     நெய்தற்கானலுள் உலாவிய கடல்நீரின் ஓதம் எதிரேறும் கழிகள் நிறைந்தது 
காழிநகர். அக்காழியில் ஞானமிகுந்த ஞானசம்பந்தன் திருப்பெருகு சிவஞானம் உலாவுகின்ற 
திருவுள்ளத்தில் சிவனின் திருவடிகளை வைத்து மகிழ்வார்; அவ்வாறு அவர் சிந்தையில் வைத்து 
மகிழ்ந்த திருவடிகளை உடைய திருநறையூர் நம்பனாகிய சிவனைக் குற்றம் இலாத வண்ணம் 
இசையோடு உரைத்த இத்தமிழ்ப்பாமாலைப் பாடல்கள் பத்தையும் சிந்திப்பவர் மண்ணுலகத்தவர் 
மிகவும் வணங்க வானுலகத்தில் இருக்க வல்லவராவர்.

குறிப்புரை:     ஞானம் உலாவு சிந்தை - திருப்பெருகு சிவஞானம் உலாவுகின்ற திருவுள்ளத்தில் 
சிந்திக்கும் வண்ணம்.

    Our saint Thiru-gnana-Sambandar hails from Seerkaazhi city. Here the seawater 
flows and crosses into the gardens and forms stagnant ponds. In his young age itself, 
he became very famous with his divine knowledge. In his mind, he fixed the holy feet of 
Lord Civan of Thiru-naraiyoor and was highly satisfied. Without  any flaw he sang 
in pure musical tone a garland of flowers, these ten Tamil verses. Those devotees who can 
understand and memorise these ten stanzas and sing them before Lord Civa will become 
praiseworthy enough to be hailed by the earth and live in the world of the sky.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            87ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 87th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 224                பதிக எண் : 88

88. தென்திருமுல்லைவாயில்            88. THEN-THIRU-MULLAI-VAYIL                

பண்: பியந்தைக்காந்தாரம்             Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    தென்திருமுல்லைவாயில் என்னும் இத்திருத்தலமானது சீகாழிக்குக் கிழக்கே பதின்மூன்று 
கி.மீ. தூரத்தில் கடற்கரையில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஏழாவது ஆகும். 
சீகாழியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இறைவர் திருப்பெயர் முல்லைவனநாதர். இறைவியாரின் 
திருப்பெயர் கோதையம்மை. தலவிருட்சம் முல்லை. உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் 
ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம். இதற்கு திருஞானசம்பந்தர் பதிகம் மாத்திரம் இருக்கின்றது. 
சோழநாடு, நாகை மாவட்டம், சீகாழி வட்டம். கோயிலின் வாயில் கிழக்குப் புறத்திலுள்ளது. கல்லாலான 
திருப்பணி. அம்மனுக்குத் தனிப்பிரகாரமுண்டு. கோயிலுக்கும் கடற்கரைக்கும் இடையில் சிந்தனை
பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கின்றது. வடக்கே நந்த கோபால தீர்த்தம் என்ற குளம் இருக்கிறது.

பதிக வரலாறு

    திருவெண்காட்டில் மெய்ப்பொருளாயினாரை வழிபட்ட முத்தமிழ்விரகர் பத்தராம் அடியார் சூழத் 
திருமுல்லைவாயில் நித்தனாரை வணங்கிப் பாடிச் சாத்திய செந்தமிழ் மாலை இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2421.     துளிமண்டியுண்டுநிறம்வந்தகண்டன்நடமன்னுதுன்னுசுடரோன் 
    ஒளிமண்டியும்பருகலகங்கடந்தவுமைபங்கனெங்களரனூர் 
    களிமண்டுசோலைகழனிக்கலந்தகமலங்கள்தங்குமதுவில் 
    தெளிமண்டியுண்டுசிறைவண்டுபாடுதிருமுல்லைவாயிலிதுவே.        1

    துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் 
    ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரன் ஊர் 
    களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கும் மதுவில் 
    தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திருமுல்லைவாயில் இதுவே.

    tuLi maNTi uNTu niRam vanta kaNTan, naTam mannu tunnu cuTarOn, 
    oLi maNTi umpar ulakam kaTanta umaipagkan, egkaL aran, Ur- 
    kaLi maNTu cOlai, kazanik kalanta kamalagkaL tagkum matuvin
    teLi maNTi uNTu, ciRaivaNTu pATu tiru mullai vAyil ituvE.

பொருள்:     பாற்கடலில் பரந்து வந்த நஞ்சினைத் துளிபோல ஆக்கி உண்டு கரிய நிறம் வந்த 
கண்டத்தை உடையவன்; அநவரதம் நடம் செய்யும் செறிந்த சுடரொளி செய்வோன்; ஒளி நிறைந்து 
வானோர் உலகமும் கடந்தவன்; உமையைத் தன் மேனியின் ஒரு பங்கில் கொண்டவன்; எங்கள் 
அரசனாகிய சிவனின் ஊர் எதுவெனில், இருள் நிறைந்த சோலைகள், கழனிகளில் இருக்கும் 
தாமரை மலர்களில் நிறைந்து இருக்கும் தேனின் தெளிவினை மிகுதியாக உண்டு சிறகுகளை 
உடைய வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     துளி - விஷத்துளி. நிறம் - ஈண்டுக் கருமை. தெளி - தெளிவு, தேறல். ஊர் - எழுவாய் 
(திருமுல்லைவாயிலாகிய). இது பயனிலை. இதுவே அரனூர் எனலுமாம்.

    Our Lord Civa, with fine concern, imbibed the poison that came out of the ocean 
and kept it in His larynx. His neck therefore looks dark blue in colour. His avocation 
is to dance with the bhutaas. He is concomitant with His consort Uma Devi. He took the 
form of dazzling supernal tall flame which crossed the world of the devas. The City 
Then-thiru-mullai-voyil has plenty of attractive delightful joyous gardens. Next to 
these gardens, rich fields with lotus flowers are many in which the bees settle, drink 
the honey to their stomach full and then sing. This glorious city is called 
Then-thiru-mullai-voyil.

2422.     பருவத்தில்வந்துபயனுற்றபண்பனயனைப்படைத்தபரமன் 
    அரவத்தொடங்கமவைகட்டியெங்குமரவிக்கநின்றஅரனூர் 
    உருவத்தின்மிக்கவொளிர்சங்கொடிப்பியவையோதமோதவெருவித் 
    தெருவத்தில்வந்துசெழுமுத்தலைக்கொள்திருமுல்லைவாயிலிதுவே.        2    

    பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன் 
    அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் 
    உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித் 
    தெருவத்தில் வந்து செழு முத்தலை கொள் திருமுல்லைவாயில் இதுவே.            

    paruvattil vantu payan uRRa paNpan, ayanaip paaitta paraman, 
    aravattoTu agkam avai kaTTi egkum aravikka ninRa aran, Ur 
    uruvattin mikka oLircagkoTu ippi avai Otam mOta veruvi, 
    teruvattil vantu, cezu muttu alaik koL tiru mullai vAyil ituvE

பொருள்:     வேண்டுங்காலத்தில் வெளிப்பட்டுப்  பயன் செய்யும் இயல்புடையவன்; 
உலகத்தைப் படைக்கும் பிரமனைப் படைத்த மேலோன்; பாம்பாகிய சங்கிலியை அணிந்து
அவை ஒலிக்க நின்ற அரன்; அவனுடைய ஊர் எதுவெனில், உருவில் பெரியதும்  ஒளிர்வதுமாகிய 
சங்கொடு முத்துச் சிப்பிகள் நீரோட்டத்தில் வந்து மோதி அஞ்சி  தெருக்களில் வந்து 
செழுமையான முத்துக்களை ஈன்று அலையும் திருமுல்லைவாயிலாகிய  இதுவே. 

குறிப்புரை:     பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் என்பது இரு வினையொப்பும் மலபரிபாகமும் 
சத்திநிபாதமும் நிகழப்பெற்று, குருவருளால் சிவஞானம் வளரலுற்று, பழமலம் பற்றறுத்து, சிற்றறிவு 
தீர்ந்து திருவடி அடையும் பருவத்தில் எழுந்தருளி வந்து, பயனாகப் பொருந்திய எண்குணத்தன். அரவிக்க- 
ஒலிக்க. தெருவம் -தெரு. முத்து + அலை + கொள் எனப் பிரிக்க. அலை - அலைதல். சங்கும் இப்பியும் 
முத்துக்களை ஈன்ற குறிப்புணர்த்தப்பட்டது.

    Our Lord Civa approaches people who become competent to get His grace and then gives 
heavenly bliss to those souls. He is such a great and qualitative Supreme Being. He created 
the tutelary god Brahma. He adorns His entire body with snakes. All the devotees and servitors 
and others praise Him and say 'glory to thee'. This Lord Civa is manifest in Then-thiru-mullai-voyil.
The big size changu and shellfish get terrified by the dashes of the sea waves and reach the 
streets of the city and deliver their rich pearls all over the areas.

2423.     வாராதநாடன்வருவார்தம்வில்லினுருமெல்கிநாளுமுருகில்             
    ஆராதஇன்பனகலாத அன்பனருள்மேவிநின்றஅரனூர் 
    பேராதசோதிபிரியாதமார்பினலர்மேவுபேதைபிரியாள் 
    தீராதகாதனெதிநேரநீடுதிருமுல்லைவாயிலிதுவே.        3

    வாராத நாடன் வருவார் தம்வில்லினுரும் மெல்கி நாளும் உருகில்             
    ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள்மேவி நின்ற அரனூர் 
    பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள் 
    தீராத காதன் எதிநேர நீடு திருமுல்லைவாயில் இதுவே.

    vArAta nATan, varuvAr tam villin uru melki nALum urukil         
    ArAta inpan, akalAta anpan, aruL mEvi ninRa aran, Ur- 
    pErAta cOti piriyAta mArpin alar mEvu pEtai piriyAL, 
    tIrAta kAtaneti nEra, nITu tiru mullai vAyil ituvE.

பொருள்:     மீண்டும் வருதலில்லாத நாடுடையவன்; வானவில் போல் தோன்றி விரைவில் 
அழியும் உடம்பு மெலிந்து நாள்தோறும் அன்பினால் உருகில் தெவிட்டாத இன்பம் தருபவன்; 
நீங்காத அன்பன்; அருள் தங்கிய சிவனுடைய ஊர் எதுவெனில், பெயராத ஒளி தங்கும் திருமார்பில் 
தங்கி இருப்பவள் திருமகள்; அத்திருமகள் நீங்காத, தீராத விருப்பத்துடன் செல்வவளங்கள் எல்லாம் 
தோன்ற நிலைத்திருக்கின்ற ஊர் திருமுல்லை வாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     வாராத நாடன் - மீண்டு வாராத பேரின்ப நாடுடையவன். வில்லின்உரு - 
வானவில்லைப் போலத் தோன்றி விரைந்து மறையும் உடம்பு. வாங்குசிலைபுரையும் உடல் 
நால்வர் நான்மணிமாலை. வில்லைப்போலக் கூனிக் கெடும் உடம்பெனலுமாம். நாளும் 
உருகில் ஆராத இன்பன் - நாள்தோறும் பக்தியால் உருகித் தற்போதம் அற்றுச் சிவபோதம் 
உற்றால், அமையாத பேரின்பமாக விளங்குபவன். 'உள்ளம் உருகில் உடனாவார்' (தி.2 ப.111 பா.3). 
கௌத்துவ மணி நீங்காத திருமால் மார்பின்கண் வீற்றிருக்கும் திருமகள், மலர்மகள் பிரியாது, 
நீங்காத காதலுடன் செல்வம் தோன்ற நீடுகின்ற திருமுல்லைவாயில் என்னும் பொருளும் உரியதாகும்.

    Our Lord Civa is manifest in such a place where salvation will never vanish. 
Those who are born on this earth are like the rainbow, they appear and soon disappear. 
But the people who live long are those whose body melts and becomes very lean; still 
they continue to worship our Lord Civa. For such people He gives heavenly bliss. He has 
infinite mercy which never diminishes. This Lord has manifested Himself in Then- thiru-
mullai-voyil. Here the tutelary deity Thirumaal is manifest. In his chest special gem 
called gowththuvamani, the most bright gem disperses light all around. Goddess Lakshmi 
who never leaves Thirumaal's chest will grace everybody and will make richness to grow 
in the city. Such a glorious city is Then-thiru-mullai-voyil.

2424.     ஒன்றொன்றொடொன்றுமொருநான்கொடைந்துமிருமூன்றொடேழுமுடனாய் 
    அன்றின்றொடென்றும்அறிவானவர்க்குமறியாமைநின்றஅரனூர்     
    குன்றொன்றொடொன்றுகுலையொன்றொடொன்றுகொடியொன்றொடொன்றுகுழுமிச்
     சென்றொன்றொடொன்றுசெறிவால்நிறைந்ததிருமுல்லைவாயிலிதுவே.        4

    ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இருமூன்றொடு ஏழும் உடனாய் 
    அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும்  அறியாமை நின்ற அரனூர் 
    குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச் 
    சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே.

    onRu onRoTu onRum oru nAnkoTu aintum- iru-mUnRoTu Ezum uTanAy, 
    anRu inRoTu enRum, aRivu Anavarkkum aRiyAmai ninRa aran Ur-
    kunRu onRoTu onRu, kulai onRoTu onRu, koTi onRoTu onRu, kuzumic 
    cenRu, onRoTu onRu ceRivAl niRainta tiru mullaivAyil ituvE.

பொருள்:     தத்துவங்கள் இருபத்து நான்கு, அவற்றுடன் கூடி அவையாகவே இருந்து அவற்றை 
அனுபவிப்பது ஆன்மா; புருடனாகிய ஆன்மா அறிவுடைப் பொருளாகிய  சேதனன்; பிரகிருதியிலிருந்து 
தோன்றிய தத்துவங்கள் அறிவற்ற அசேதனங்கள். அறிவற்ற தத்துவங்களாகிய பிரகிருதியைத் 
தன்னிடமிருந்து வேறாய்ப் பிரித்து அறிவதே ஞானம்.  அவ்வாறு அறிகின்ற கருத்தா ஆன்மா. 
அந்த ஞானம் பெற்ற ஆன்மாவே கடவுள் என்ற  மயக்கத்தையே அறிவாகக் கொண்டவர்களால் 
அறியப் பெறாமல் நின்ற பரமனாகிய சிவனின் ஊர் எதுவெனில், குன்றுகள் ஒன்றோடொன்று 
நெருங்கியிருப்பது போன்று உயர்ந்த மாளிகைகள் நெருங்கியிருப்பதும், குலைகள் ஒன்றோடொன்றும் 
கொடிகள்  ஒன்றோடொன்றும் செறிந்து நிறைந்திருக்கும் சோலைகளை உடையதுமாகிய 
திருமுல்லை வாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     ஒன்று.... ஏழும் உடனாய் - இருபத்தைந்தும் உடனாகி. தத்துவம் இருபத்தைந்தும் இவ்வாறு 
(1+1+1+4+5+6+7) தொகுத்து உரைக்கப்பட்டன. 1. மூலப்பகுதி (குணதத்துவ காரணம்), 2 . புத்தி 3. அகங்காரம்,
 4. மனம், 5. செவி, 6. மெய் (துவக்கு), 7. கண் (நோக்கு), 8. வாய் (நாக்கு), 9. மூக்கு 10.வாக்கு, 11. பாதம், 
12. பானி, 13. பாயு, 14. உபத்தம், 15. சத்தம், 16. பரிசம், 17. உருவம், 18. இரதம், 19.கந்தம் 20. ஆகாயம், 
21.வாயு, 22. தேயு, 23. அப்பு, 24. பிருதிவி என்னும் இருபத்து நான்கும் ஆன்மத்தத்துவங்களாகும். 
அவற்றுள், பிருதிவியை முதலாகக் கொண்டு எண்ணின், எண்ணப்பட்ட இருபத்து நான்கின் வேறாய் 
எண்ணுகின்ற கர்த்தா ஒன்று உண்டு. அதுவே ஆன்மா. அவ்வான்மாவே கடவுள் என மயங்கி, 
அம்மயக்கத்தை தெளிவெனக் கொண்டவர்க்கு பரமான்மா வேறொன்று உண்டு எனப் புலப்படாது. 
அவர், ஆன்மாக்களின் வேறாய், அவற்றிற்கு உயிராய், உடனாய் இருக்கின்ற  மெய்ப்பொருள் வேறு. 
இருபத்து நான்கு தத்துவங்களையும் கொண்டு நிற்கும் ஆன்மாக்கள் வேறு; அவ்வுண்மையை 
அறியாதார் பசுவைப் பதியாக் கொள்ளும் மயக்கம் மயக்கமே; தெளிவன்று; அது பாதகம் என்று 
உண்மையுணர்த்துவது சமயக் குரவர்க்குக் கடனாதலின், இத்திருப்பாட்டின் முன்னீரடியிலும் 
தமது கடமையாற்றினார் நமது சமயத்தின் ஆசிரியர். புருட தத்துவம் இருபத்தைந்தாவது. 
அதையே முடிவான பொருள் எனக் கொள்ளும் சமயமும் உண்டு. சிவதருமோத்தருத்துள், 
10வது சிவஞானயோகவியலின் 32ஆவது செய்யுளுரைக்கீழ் பௌராணிகர் மதத்தின்படி 
கூறியுள்ளதும் அதன் உரையில், ஐயஞ்சின் அப்புறத்தாலும் ஆரூரமர்ந்த அம்மானே
 (தி. 4 ப. 4 பா. 10) என்று மேற்கோள் காட்டியதும் உணர்க.

    The knowledge about truth (i.e. good) is called Thath-thuvam. There are 24 
thathuvams about soul's move. Above the 24th thathuvam, Prithvi, our Supreme God 
Civa is manifest. Philosophy is different from gnanam, wisdom. In case the soul 
completes all these 25 thathuvam they become eligible to get the holy bliss of 
Lord Civa. In the 25th thathuvam the soul is attached to the three malams. 
They are aanava malam, kanma malam and maaya malam - deceit. The soul must 
regret and abandon these malams. Thereafter they can reach the 25th stage. 
Ignorant people say God manifests Himself in the 25th stage. Such people of 
philosophical research declare that the Supreme Being is in 25th stage. However 
our Lord, manifest in the same Then-thiru-mullai-voyil, ignores the confusion 
of these people. This city is similar to hillocks against other hillocks, so 
close are the many tall buildings here. The clusters of fruits and flowers 
and the vines mix together very closely. Our Lord Civa is beyond the reach 
of philospher's confusing concepts.

2425.     கொம்பன்னமின்னினிடையாளொர்கூறன்விடைநாளுமேறுகுழகன் 
    நம்பன்னெமன்பன்மறைநாவன்வானின்மதியேறுசென்னியரனூர் 
    அம்பன்னவொண்கணவராடாங்கினணிகோபுரங்களழகார் 
    செம்பொன்னசெவ்விதருமாடநீடுதிருமுல்லைவாயிலிதுவே.        5

    கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஓர் கூறன் விடை நாளும் ஏறு குழகன் 
    நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதியேறு சென்னி அரனூர் 
    அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு ஆங்கின் அணி கோபுரங்கள் அழகார் 
    செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே.

    kompu anna minnin iTaiyAL Or kURan, viTai nALum ERu kuzakan,         
    nampan, em anpan, maRai nAvan, vAnin mati ERu cenni aran Ur 
    ampu anna oNkaNavar ATu Angkin aNi kOpuragkaL, azaku Ar         
    cemponna cevvi taru mATam, nITu tiru mullai vAyil ituvE.

பொருள்:     பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போன்ற இடையுடையவளுமாகிய உமாதேவியாரைத் 
தன் உடலின் ஒரு கூறாக உடையவன்; நாளும் எருதினை வாகனமாக  ஏறும் இளைஞன். நம் விருப்பத்திற்கு 
உரியவன்; எம்முடைய அன்பன்; மறைகூறும் நாவன்.  வானிலூறும் மதி தங்கிய சென்னியன் ஆகிய சிவனுடைய 
ஊர் எதுவெனில், அம்பு நிகர்த்த கூர்விழிகளை உடைய மகளிர் ஆடலரங்குகளையும், வரிசையான 
கோபுரங்களையும் அழகிய செம்பொன்னின் நிறம் வீசும் மாடங்களையும் உடைய திருமுல்லை 
வாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     பூங்கொம்பு உமாதேவியார்க்கும் மின் இடுப்பிற்கும் கொள்ளலாம். குழகன் - இளைஞன், 
அழகன். கணவர்- கண்ணுடை மகளிர். பொன்ன- பொன்னினுடைய.

    Our Lord Civa is concomitant with His consort Uma Devi. She is lean like the vine; 
her waist is compared to lightning. Everyday He rides on His bull and goes round; He is young 
in appearance. He is elite among men; He loves us. He chants the four Vedas with His tongue. 
He retains the moon on His head. He is manifest in Then- thiru-mullai-voyil. In this city, 
there are many dancing halls where young girls dance often with eyes bright and shining like 
the arrows. The temple towers are all very attractive. The palatial tall houses are bright 
like gold. Such a glorious city is Then-thiru-mullai-voyil.

2426.     ஊனேறுவேலினுருவேறுகண்ணியொளியேறுகொண்டவொருவன் 
    ஆனேறதேறியழகேறுநீறனரவேறுபூணுமரனூர் 
    மானேறுகொல்லைமயிலேறிவந்துகுயிலேறுசோலைமருவித் 
    தேனேறுமாவின்வளமேறியாடுதிருமுல்லைவாயிலிதுவே.        6

    ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன் 
    ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறு நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் 
    மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவித் 
    தேன் ஏறு மாவின் வளம் ஏறியாடு திருமுல்லைவாயில் இதுவே.

    Un ERu vElin uru ERu kaNNi oLi ERu koNTa oruvan, 
    An ERu atu ERi, azaku ERum nIRan, aravu ERu pUNum aran Ur
    mAn ERu kollai mayil ERi vantu, kuyil ERu cOlai maruvi, 
    tEn ERu mAvin vaLam ERi, ATu tiru mullai vAyil ituvE.

பொருள்:     ஊன் தங்கிய வேல் போன்ற கூரிய வடிவுடைய கண்ணினள். ஒளி மிக்கவள் ஆகிய
உமையம்மையைப் பாகமாக உடையவன்; ஆனினத்தில் சிறந்த ஏற்றினை ஊர்பவன்; 
கவினேறும் நீற்றினைப் பூசியவன்; உயர்ந்த பாம்பாகிய பூணினைப் பூண்டவன் ஆகிய 
அரன்  சிவனுடைய ஊர் எதுவெனில், மான் தங்கும் கொல்லை நிலத்தில் மயிலேறி 
வந்து, குயில்கள் தங்கும் சோலையில், தேன்வளமிக்க மாவின்மீதேறி ஆடும் திருமுல்லை 
வாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     கண்ணி - உமாதேவியார். அழகு ஏறும் நீறன் - சுந்தரமாவது நீறு, கவினைத் 
தருவது நீறு, அழகு ஏறுதலால் கண்திகைப்பது நீறு. கொல்லையில் மானும், சோலையில் மயிலும் 
குயிலும் ஏறுதல் இயல்பு. மா- வண்டு. தேன்- மலர்கள். முல்லை மாவின் வளத்தில் ஏறியாடும் 
என்றால்  மா - மரத்தையும், மாவின் வளம் முல்லையில் ஏறியாடும் என்றால் மா வண்டினையும் 
குறித்ததாகக் கொள்க.

    Our Lord Civa's consort's eyes are similar to the arrows with fleshy tips. Also 
it bestows black light on Civa. He rides on His bull and has administered the holy ashes  
on His forehead, which adds to His attraction. He uses the snakes as His ornaments. He is 
manifest in the temple in Then-thiru-mullai-voyil. Here the deer jump and play in the 
forest region (precinct). Peacock and the Indian cuckoo live in big natural gardens. 
Here the flower plants are many and they produce a lot of honey. The bees in large 
numbers fly here to suck honey. Such opulent areas are many in this glorious city.

2427.    நெஞ்சாரநீடுநினைவாரைமூடுவினைதேயநின்றநிமலன் 
    அஞ்சாடுசென்னியரவாடுகையனனலாடுமேனியரனூர் 
    மஞ்சாருமாடமனைதோறுமையமுளதென்றுவைகிவரினுஞ் 
    செஞ்சாலிநெல்லின்வளர்சோறளிக்கொள்திருமுல்லைவாயிலிதுவே.        7

    நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் 
    அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் 
    மஞ்சு ஆருமாட மனை தோறும் ஐயம் உளது என்று வைகி வரினுஞ் 
    செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே.

    nenjcu Ara nITu ninaivArai mUTu vinai tEya ninRa nimalan; 
    anjcu ATu cenni, aravu ATu kaiyan; anal ATum mEni aran; Ur 
    manjcu Arum mATamanai tORum, "aiyam uLatu" enRu vaiki varinum, 
    cenjcAli nellin vaLar cORu alik koL tiru mullai vAyil ituvE.            

பொருள்:     நெஞ்சம் நிறைய இடைவிடாது நெடிது தன்னையே தியானிக்கும் தன் மெய்யடியவரை 
வந்து சூழும் இருவினைகளும் அவர்தம்மைப் பற்றாது தேய்ந்தொழிந்து அழியுமாறு செய்ய 
அவர்களுடைய உள்ளமாகிய தாமரையில் வீற்றிருக்கும் தூயவன்; ஆனைந்தாடும் சென்னியன்; 
அரவு ஆடுகின்ற கையன்; ஆரழல் போற்சிவந்த மேனியன்; ஆகிய அரனாகிய சிவனின் ஊர்தான் 
எதுவெனில், உணவு உளதோ எனக் கேட்டு இரவு  நேரம் தாழ்ந்து வந்து எந்த வீட்டில் கேட்டாலும் 
செஞ்சாலி நெல்லின் சோற்றினை நிறைய அளிக்கும் மக்கள் வாழும் திருமுல்லைவாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     நெஞ்சார நீடு நினைவாரை மூடுவினை- உள்ளத்தாமரையில் சிவபெருமான் 
திருவடியே  அன்றி மற்று எதையும் எண்ணாமல், இடைவிடாது கருதிப் பணிகின்ற மெய்யடியாரைச் 
சூழும் இருவினையும் தேய அவரைப் பற்றாது முற்றும் தேய்ந்தொழிய. நின்ற நிமலன் - அவர் 
உள்ளத்தாமரையில்  நிலைத்தருளிய பரசிவன். ஈயப்படும் பொருளின் உயர்வு விளங்கச் செஞ்சாலி 
நெல்லின் வளர்சோறு எனக் குறிக்கப்பட்டது.

    Our Lord Civa removes the bad karma of devotees who think always of our Lord
in their mind and pray. He likes to be ablutioned by all the five products of cow 
such as milk etc. In His hands the snakes dance. His body resembles the supreme fire. 
This Lord is manifest in the temple in Then-thiru-mullai-voyil. In this city very tall 
buildings are many. Here live people, who always give cooked red rice to anybody who 
reaches the houses at late night and asks for food and, lead good, happy life. 
Such a plentiful city is Then-thiru-mullai-voyil.

2428.     வரைவந்தெடுத்தவலிவாளரக்கன்முடிபத்துமிற்றுநெரிய 
    உரைவந்தபொன்னினுருவந்தமேனியுமைபங்கனெங்கௗரனூர் 
    வரைவந்தசந்தொடகிலுந்திவந்துமிளிர்கின்றபொன்னிவடபால் 
    திரைவந்துவந்துசெறிதேறலாடுதிருமுல்லைவாயிலிதுவே.        8

    வரை வந்து எடுத்த வலி வாளரக்கன் முடிபத்தும் இற்று நெரிய
    உரை வந்த பொன்னின் உருவந்த மேனி உமை பங்கன் எங்கள் அரனூர் 
    வரை வந்த சந்தொடு அகிலும் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் 
    திரை வந்து வந்து செறி தேறலாடு திருமுல்லைவாயில் இதுவே.

    varai vantu eTutta vali vAL arakkan muTipattum iRRu neriya, 
    uraivanta ponnin uruvanta mEni umaipagkan; egkaL aran; Ur- 
    varai vanta cantoTu akilum unti vantu miLirkinRa ponni vaTapAl, 
    tirai vantu vantu ceRi tERal ATu tiru mullai vAyil ituvE.

பொருள்:     தன் செருக்கால் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க வந்த வலிமையும் 
வெற்றியைத் தரும் வாளையும் உடைய அரக்கன் இராவணனின் முடிகள் பத்தினையும் 
இற்றுவிழ நெரித்தவன்; மாற்றுயர்ந்த பொன்னின் சிறந்த பொன்னிறம் பொருந்திய 
திருமேனி உடைய உமாதேவியாரைத் தன்பங்கில் உடையவன் ஆகிய எங்கள் அரனாகிய 
சிவனுடைய ஊர் எதுவெனில், மலைகளின்மேல் தோன்றிய சந்தன மரங்களோடு அகிலும் 
தள்ளிக் கொண்டு வந்து பிறழ்கின்ற காவிரியாற்றின் வடகரைப்பால் அலைந்து அலைந்து 
வந்து தெளிதேன் ஆடுகின்ற திருமுல்லைவாயிலாகிய இதுவேயாம்.

குறிப்புரை:     உரை வந்த பொன்னின் உருவந்தமேனி உமை - கட்டளைக் கல்லில் மாற்று 
உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம் பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார். 
தேறல் - தெளிதேன்.

    Raavanan, the demon king of Sri Lanka, owned a strong sword. When he came to 
remove and replace the Himalayan mountain, our Lord Civa crushed his ten heads. 
He is concomitant with His consort Uma Devi whose body glitters like fine gold 
rubbed against to see the quality. He manifest in the temple in Then-thiru-mullai-voyil. 
In this city, the Cauvery river brings from the mountain area sandalwood 
pieces and eaglewood particles and leaves them on the northern banks of the river. 
Here the hanging honeycombs sway due to the wind. Such an attractive city is 
Then-thiru mullai-voyil.

2429.       மேலோடி நீடுவிளையாடல்மேவுவிரிநூலன்வேதமுதல்வன் 
    பாலாடுமேனிகரியானுமுன்னியவர்தேடநின்றபரனூர் 
    காலோடுநீலமலர்துன்றிநின்றகதிரேறுசெந்நெல்வயலிற் 
    சேலோடுவாளைகுதிகொள்ளமல்குதிருமுல்லைவாயிலிதுவே.        9

    மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேத முதல்வன் 
    பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரனூர் 
    கால் ஓடு நீலமலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலிற் 
    சேல் ஓடு வாளை குதி கொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே.

    mEl OTi nITu viLaiyATal mEvu virinUlan; vEtamutalvan,                     
    pAl ATu mEni kariyAnum, munniyavar tETa ninRa paran; Ur- 
    kAl OTu nIla malar tunRi ninRa katir ERu cennel vayalil                 
    cElOTu vALai kutikoLLa, malku tiru mullai vAyil ituvE.

பொருள்:     விரிந்த முப்புரிநூல் தன்மேல்புரண்டு அசையும் திருமேனியன்; வேதப்பொருளாகிய 
முதல்வன்; பால் போன்ற மேனியனாகிய பிரமனும் கரியனாகிய திருமாலும் தம் முனைப்பினால் 
காண முனைந்து தோற்று திகைக்க நின்ற பரன் ஆகிய சிவனின் ஊர் எதுவெனில், காம்பின்மீது 
அசைகின்ற நீலமலர்கள் செறிந்து நின்ற, கதிர்கள் நிறைந்த செந்நெல் வயலில் சேல்மீன்களுடன் 
வாளைமீன்களும் குதித்து மகிழும் வளம் நிறைந்த திருமுல்லைவாயிலாகிய இதுவே.             

குறிப்புரை:     மேலோடி..... நூலன்- திருமார்பில் அணிந்த முப்புரி நூல் அவனது திருமேனியில் 
திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல் மேவுதலை உணர்த்திற்று. விரிநூலன் என்பது சிவபிரான் 
என்னும் பொருட்டாய் நின்றதென்றும், அவன் விளையாடல் மேவியவன் என்றும் கொள்ளலும் பொருந்தும்

    Over the body of our Lord Civa, the three ply sacred thread moves and sways and 
gets elongated. He is the chief author of the four Vedas. The two tutelary deities Brahma 
and Thirumaal searched and failed to see the head and feet of Lord Civa. At that moment 
Lord Civa appeared before them as infinite supernal dazzling tall flame. They both got 
perplexed. Our Lord Civa is manifest in the temple in Then-thiru-mullai- voyil. In this 
city, the blue nelumbia flowers sway in the air in large numbers. In the red paddy 
fields the ears of the grains are richly grown. In this red paddy field carp fish 
and the sword fish jump and plunge and play.

2430.     பனைமல்குதிண்கைமதமாவுரித்தபரமன்னநம்பனடியே 
    நினைவன்னசிந்தையடையாததேரர்மண்மாயநின்றஅரனூர் 
    வனைமல்குகைதைவகுளங்களெங்குமுகுளங்களெங்குநெரியச் 
    சினைமல்குபுன்னைதிகழ்வாசநாறுதிருமுல்லைவாயிலிதுவே.        10

    பனை மல்கு திண் கைமதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே 
    நினை வன்ன சிந்தை யடையாத தேரர் மண் மாய நின்ற அரனூர் 
    வனை மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கு நெரியச் 
    சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே.

    panai malku tiN kai matamA uritta paraman; nam nampan; aTiyE 
    ninaivu anna cintai aTaiyAta tErar, amaN, mAya ninRa aran; Ur
    vanai malku kaitai, vakuLagkaL egkum, mukuLagkaL egkum neriya,            
    cinai malku punnai tikaz vAcam nARu tiru mullai vAyil ituvE.

பொருள்:     பனை மரம் போன்ற திண்ணிய துதிக்கையும் மிக்க மதத்தையும் உடைய களிற்றின் 
தோலை உரித்த பரமன்; நம்மால் விரும்பப்படுபவன்; அவனுடைய திருவடியை நினையாத நெஞ்சினராகிய 
தேரர், அமணர் மாய நின்ற அரனாகிய சிவனுடைய ஊர் எதுவெனில், காடுபோல் வளர்ந்த தாழைகளும், 
மகிழமரங்களும் எங்கும் மலர் மொட்டுக்களும் நெரியக் கிளைகள் நிறைந்த புன்னையின் மலர்கள் 
வாசனை நாறும் திருமுல்லைவாயிலாகிய இதுவே.

குறிப்புரை:     பனை கை – பனைக்கை மும்மதவேழம் பரமன் நம் நம்பன். நம்பன் அடியே நினைவு 
அன்ன சிந்தை- சிவபெருமான் திருவடியே நினைக்கும் அத்தகைய சித்தத்தை. வகுளங்கள் - மகிழ 
மரங்கள். முகுளங்கள் - மொட்டுக்கள்.

    The elephant with its trunk similar to the palmyrah tree in a rutted stage 
(a period of sexual excitement) rushed before our Lord Civa who He ripped off its 
hide. He is the most elite among men and has affection for us. He has come to destroy 
the Jains and Buddhists who never think about our Lord's holy feet. This Lord is manifest 
in the temple in Then-thiru-mullai-voyil. In this city a large number of trees such as 
fragrant screwpine and pointed lean ape flower tree shed a large quantity of tender 
flower buds. The alexandrian laurel trees also shed tender buds. The fragrant smell of 
all these flowers spreads all over the city.Such attractive city is Then-thiru-mullai-voyil.

2431 .     அணிகொண்டகோதையவணன்றுமேத்தஅருள்செய்தயெந்தைமருவார் 
    திணிகொண்ட மூன்றுபுரமெய்தவில்லிதிருமுல்லைவாயிலிதன்மேல்             
    தணிகொண்டசிந்தையவர்காழிஞானமிகுபந்தனொண்டமிழ்களின் 
    அணிகொண்டபத்துமிசைபாடுபத்தரகல்வானமாள்வர்மிகவே.        11

    அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார் 
    திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லைவாயில் இதன் மேல்         
    தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானமிகு பந்தன் ஒண் தமிழ்களின் 
    அணி கொண்ட பத்து மிசை பாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.

    aNi koNTa kOtai avaL nanRum Etta aruL ceyta entai, maruvAr  
    tiNi koNTa mUnRupuram eyta villi, tiru mullaivAyil itanmEl, 
    taNi koNTa cintaiyavar kAzi njAnam miku pantan oN tamizkaLin
    aNi koNTa pattum icai pATu pattar, akalvAnam ALvar, mikavE.

பொருள்:     அணி கொண்ட கோதை அவள் பத்தியுடன் வழிபட அவளுக்கு அருள் செய்த
எந்தை,பகைவர்களான முப்புராதிகளாகிய அவுணரின் திண்ணிய மூன்று புரங்களையும் 
அழித்த வில்லி, அவருடைய நகராகிய திருமுல்லைவாயில் இதன்மேல், நின்ற சிந்தையராகிய 
காழி ஞானசம்பந்தன் பாடியருளிய அழகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு 
பாடும் பத்தர்கள் அகன்ற வானுலகத்தை மிக ஆள்வர்.

குறிப்புரை:     அணி கொண்ட கோதையவள் என்பது இத்தலத்து அம்பிகையின் திருப்பெயர். 
தணி கொண்ட சிந்தையவர் - விருப்பு வெறுப்புக்களால் உண்டாகும் வெப்பம் தணிதலை உடைய 
உள்ளத்தவர் (தி.1 ப. 57 பா. 4), (தி.7 ப. 8 பா. 7), சித்தியார்  181 என்பவற்றில்  குறிக்கப்பட்ட மனமே 
தணி கொண்டதாகும்.

    In this city Then-thiru-mullai-voyil, the goddess is named as jeweled Kothai-
Ambigai. She prayed and worshipped our Lord who graced her. He is our father. He holds 
a bow and destroyed the three strong fortresses of the asuras who inflicted intolerable 
misery on the devas. Our saint Thiru-gnana-Sambandar has a strong appeal in his mind 
for our Lord in the city of Then-thiru-mullai-voyil. He hailed from the city of Seerkaazhi. 
He has the highest divine knowledge. He chanted before the Lord, the famous Tamil 
songs like a garland of ten verses. Those devotees who can chant these ten verses 
in good musical tone will rule the broad upper world happily for long.
 
            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            88ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 88th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM


பதிகத் தொடர் எண் :  225                    பதிக எண்: 89

89. திருக்கொச்சைவயம்                     89. THIRU-K-KOCHAI-VAYAM

பண்: பியந்தைக்காந்தாரம்                 Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

        பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

        பதிகம் 137ஐப் பார்க்க.


                திருச்சிற்றம்பலம்

2432.     அறையும் பூம்புனலோடுமாடரவச்சடைதன்மேற் 
    பிறையுஞ்சூடுவர்மார்பிற்பெண்ணொருபாகமமர்ந்தார் 
    மறையினொல்லொலியோவாமந்திரவேள்வியறாத 
    குறைவிலந்தணவர்வாழுங்கொச்சைவயமமர்ந்தாரே.        1

    அறையும் பூம்புனலோடும் ஆடரவச் சடை தன்மேற் 
    பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் 
    மறையின் ஒல்லொலி ஓவாமந்திர வேள்வியறாத 
    குறைவில் அந்தணவர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    aRaiyum pUmpunalOTum ATu aravac caTaitan mEl 
    piRaiyum cUTuvar; mArpil peN oru pAkam amarntAr- 
    maRaiyin olloli OvA mantira vELvi aRAta, 
    kuRaivu il antaNavar vAzum, koccai vayam amarntArE.                

பொருள்:     ஆடுகின்ற பாம்பினை அணிந்த சடைமுடிமீது ஒலிக்கின்ற அழகிய புனலாகிய 
கங்கையுடன் பிறையுஞ் சூடுவர். மார்பின் இடப்பக்கத்தைப் பெண்பாகமாக விரும்பினர்; மறையோதும் 
ஒலி நீங்காத, மந்திரமோதிச் செய்யும் வேள்விகள் அறாத, குறைவின்றி அந்தணர்கள் வாழும் 
திருக்கொச்சைவயத்தை விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     அறையும்- - ஒலிக்கும். மறையின் ஒல்ஒலி - வேதங்களை ஓதுவதால் உண்டாகும் 
ஒல்லென்னும் ஒலி.  குறைவு இல் அந்தணர் -  வேதாத்தியயனத்திலும், வைதிகாசாரத்திலும், யாக
கிருத்தியங்களிலும் குறைபாடில்லாத அழகும் குளிர்ச்சியும் உடையவர். வேதாந்தத்தை அணவுவார்  
அந்தணர் என்றார் நச்சினார்க்கினியர். 

    Our Lord Civa is manifest in the temple in the city Kochai-vayam. Thiru-k-kochai-vayam 
is one of the 12 names of Seerkaazhi. He supports the dainty river Ganges which makes noise 
with its rippling. He accommodates the snake also on His head along with the river Ganges. 
Also He retains the moon on His head. He is concomitant by embedding His consort Uma Devi on 
the left side of His body. In the city the sound 'Oll' is generated by reciting the Vedas. 
Along with this they conduct the fire rituals according to rules. These scholarly Brahmins 
live in large numbers in this city of Kochai-vayam.

2433.     சுண்ணத்தர்தோலொடுநூல்சேர்மார்பினர்துன்னியபூதக் 
    கண்ணத்தர்வெங்கனலேந்திக்கங்குல்நின்றாடுவர்கேடில் 
    எண்ணத்தர்கேள்விநல்வேள்வியறாதவர்மாலெரியோம்பும் 
    வண்ணத்த அந்தணர்வாழுங்கொச்சைவயமமர்ந்தாரே.         2

    சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூதக் 
    கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்றாடுவர் கேடில் 
    எண்ணத்தர் கேள்வி நல்வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் 
    வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    suNNattar; tOloTu nUl cEr mArpinar; tunniya pUtak                 
    ka(N)Nattar; vegkanal Entik kagkul ninRu ATuvar-kETu il 
    eNNattar--kELvi nal vELvi aRAtavar, mAl eri Ompum 
    vaNNatta antaNar--vAzum koccaivayam amarntArE.

பொருள்:     திருநீற்றுப் பொடியர்; தோலோடு நூல் சேர்ந்த மார்பினர்; நெருங்கிய பூதகணத்தர்; 
வெம்மையான கனலை ஏந்தி இரவில் நின்று ஆடுவர் ஆகிய இறைவர், தீயன சிந்தியாதவர்கள். 
சுருதி கேட்டல், நல்வேள்விகள் வேட்டல் ஆகியன அறாத இயற்றுவோர். மிக்க எரி ஓம்பும் 
வருணத்தராகிய அந்தணர் ஆகியோர் வாழும் திருக்கொச்சைவயத்தை விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     சுண்ணத்தர் (திருநீற்றுப்) பொடியர். பூதகண்ணத்தர் என்பதில், ணகரமெய் 
எதுகை நோக்கி விரிந்தது. பூதகணத்தையுடையவர் என்பது பொருள். கேள்வி - கருதி.    

    Our Lord Civa always smears the holy ashes on His body. He wears on His chest 
the three ply sacred thread along with the hide of the deer. He has the company of hobgoblins 
always with Him. Lord Civa's avocation is the dance at midnight holding supernal flame 
in one of His hands. He is manifest in the hearts of people with probity who have no 
blemishes in their life. In this city, virtuous men of good knowledge, Vedic scholars, 
who never fail to conduct the sacrificial fire of superior quality, live. These people 
live in large numbers in the city Kochai-vayam.

2434.     பாலையன்னவெண்ணீறுபூசுவர்பல்சடைதாழ 
    மாலையாடுவர்கீதமாமறைபாடுதல்மகிழ்வர் 
    வேலைமால்கடலோதம்வெண்டிரைகரைமிசைவிளங்குங் 
    கோலமாமணிசிந்துங்கொச்சைவயமமர்ந்தாரே.        3

    பாலை அன்ன வெண்ணீறு பூசுவர் பல்சடை தாழ 
    மாலை ஆடுவர் கீதம் மாமறை பாடுதல் மகிழ்வர் 
    வேலை மால்கடல் ஓதம் வெண் திரைகரை மிசை விளங்குங் 
    கோல மாமணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே.            

    pAlai anna veN nIRu pUcuvar; palcaTai tAza, 
    mAlai ATuvar; kItamA maRai pATutal makizvar- 
    vElai-mAlkaTal Otam veN tirai karai micai viLagkum 
    kOla mA maNi cintum koccai vayam amarntArE.

பொருள்:     பாலைப் போன்ற வெண்மையான திருநீற்றைப் பூசுவர்; பலசடைகள் தாழ சந்தியா
காலத்தில் நடனமாடுவர்; கீதம் மாமறைகள் பாடுவதில் மகிழ்வர் ஆகிய இறைவராகிய சிவன், 
பெரிய கடலின் ஓதமும் வெண்ணிறமான அலைகளும் கரையின்மேல் அழகு விளங்கும் மாமணிகளைக் 
கொணர்ந்து சிந்தும் திருக்கொச்சைவயத்தையே விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     பாலை அன்னவெண் நீறு - 'பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு'. மாலை - இரவு. 
கீதம்... பாதல் மகிழ்வர் (தி. 4 ப. 77 பா.3; தி. 6 ப. 34 பா. 8; தி. 2 ப. 43 பா. 5). மாமணி - உத்தமரத்நம். அழகிய 
முத்தும் நீலமணியும் ஆம்.

    The water in the big ocean collected as flood water in ponds carries along with the 
waves very attractive and colourful gems. They are collected on the banks of the ocean and 
in other places. In such an attractive city, our Lord Civa manifests Himself in the temple of 
this city. He smears over His body the milky white holy ashes. Civa's  entangled locks of hair 
hang low on His back. His avocation is to dance during night hours. He desires to sing the 
Vedic songs whenever possible.

2435.     கடிகொள்கூவிளமத்தங்கமழ்சடைநெடுமுடிக்கணிவர்             
    பொடிகள்பூசியமார்பிற்புனைவர்நன்மங்கையோர்பங்கர் 
    கடிகொள்நீடொலிசங்கினொலியொடுகலையொலிதுதைந்து 
    கொடிகளோங்கியமாடக்கொச்சைவயமமர்ந்தாரே.            4

    கடிகொள் கூவிளம் மத்தங்கமழ் சடைநெடு முடிக்கு அணிவர்             
    பொடிகள் பூசிய மார்பில் புனைவர் நன்மங்கை ஓர்பங்கர் 
    கடிகொள் நீடொலி சங்கினொலி ஒடுகலை ஒலி துதைந்து 
    கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.            

    kaTi koL kUviLam mattam kamaz caTai neTu muTikku aNivar; 
    poTikaL pUciya mArpil punaivar; nal magkai Orpagkar-             
    kaTi koL nITu oli, cagkin oliyoTu, kalai oli, tutaintu, 
    koTikaL Ogkiya mATak koccaivayam amarntArE.

பொருள்:     ஒளிரும் வில்வம், ஊமத்தம்பூ ஆகியவற்றை மணங்கமழும் நெடுமுடிக்கு அணியாக 
அணிவர்; மார்பில் திருநீற்றுப் பொடியினைப் பூசிப் புனைவர்; அழகிய உமை மங்கையைப் பாகமாக 
உடையர் ஆகிய இறைவராம் சிவன்; மங்கல நீள்ஒலி, சங்கினொலியொடு வேதம் முதலியன ஓதும் 
கலையொலியுடன் கலந்து ஒலிப்பதும், கொடிகள் பறப்பதும் விண்ணுயர் மாடங்கள் உடையதுமாகிய 
திருக்கொச்சைவயத்தை விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     மத்தம் கமழ்சடை மார்பில் புனைதல்- முதற்பாட்டின் குறிப்பிற் காண்க. கடி - மணம் 
(விவாகம்). கலை - வேதம் முதலிய கலை. துதைந்து - நெருங்கி.

    In marriage houses, the sound of chunks is heard long at a stretch. Along with 
this sound noise raised by Vedic scholars chanting the Vedas is also heard all over the 
city. In the palatial tall houses flags fly always. In this attractive city, our Lord 
Civa is manifest in the temple. He wears the trifoliage bael leaves and datura flowers 
as long clusters tied on either side of the string. He has smeared the holy ashes over 
His chest, which He has shared with His consort and thus becomes a concomitant 
Supreme Being. 

2436.    ஆடன்மாமதியுடையாராயினபாரிடஞ்சூழ 
    வாடல்வெண்டலையேந்திவையகமிடுபலிக்குழல்வார்
     ஆடல்மாமடமஞ்ஞையணிதிகழ்பேடையோடாடிக் 
    கூடுதண்பொழில்சூழ்ந்தகொச்சைவயமமர்ந்தாரே.        5

    ஆடன் மாமதி உடையார் ஆயின பாரிடம் சூழ 
    வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடுபலிக்கு உழல்வார் 
    ஆடல் மாமட மஞ்ஞை அணி திகழ் பேடையோடு ஆடிக் 
    கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

    ATal mA mati uTaiyAr; Ayina pAriTam cUza, 
    vATal veNtalai Enti, vaiyakam iTu palikku uzalvAr- 
    ATal mA maTamanjnjai aNi tikaz pETaiyOTu ATik             
    kUTu taNpozil cUznta koccaivayam amarntArE.

பொருள்:     அசைகின்ற பெரிய மதியை உடையார்; பூதங்களாயின சூழ வற்றிய வெண்மையான 
தலையோட்டினை ஏந்திக் கொண்டு உலகத்தவர் இடுகின்ற பிச்சைக்கு அலைவார் ஆகிய இறைவராம் 
சிவன், ஆடுகின்ற பெரிய அழகிய மயில் தன் அழகிய பேடையோடு மகிழ்ந்து  ஆடிக் கூடுகின்ற குளிர்ந்த 
பொழில்கள் சூழ்ந்த திருக்கொச்சைவயத்தையே விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     பாரிடம்- பூதம். வையகம்- பூமியோர். இடவாகு பெயர். உழல்வார் - கழல்வார். 
தடுமாறுவார். இடுபலிக்கு வையகத்தில் திரிவார் எனலுமாம். 

    In this city, the male young peacocks join together with their peahen and happily 
play in the cool forest areas. In such a city our Lord Civa is manifest in the temple of 
the city. He retains the lovely moon, which roams in the sky, on His head. He used to toil 
to get alms from women in the world by holding a white skull wherein the dried flesh is 
still left. He goes along with His army of goblins to get alms.

2437.     மண்டுகங்கையுமரவுமல்கியவளர்சடைதன்மேல் 
    துண்டவெண்பிறையணிவர்தொல்வரைவில்லதுவாக 
    விண்டதானவராணம்வெவ்வழலெரிகொளவிடைமேல் 
    கொண்டகோலமதுடையார்கொச்சைவயமமர்ந்தாரே.        6

    மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேல் 
    துண்ட வெண்பிறை அணிவர் தொல்வரை வில்லதுவாக 
    விண்ட தானவர் ஆணம் வெவ்வழல் எரிகொள விடைமேல் 
    கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    maNTu kagkaiyum aravum malkiya vaLar caTai tanmEl 
    tuNTa veNpiRai aNivar; tolvarai vil atu Aka, 
    viNTa tAnavar ANam vev azal-eri koLa, viTaimEl
    koNTa kOlam atu uTaiyAr--koccaivayam amarntArE.

பொருள்:     கங்கை வெள்ளமும் பாம்பும் தங்கிய நீண்ட சடையின்மேல் வெண்பிறைத் துண்டத்தை 
அணிவர்; புராதனமான மேருமலையை வில்லாகக் கொண்டு, பகைவராகிய அசுரர்களின் கோட்டைகளை 
வெவ்விய அழலில் எரியும்படியாகச் செய்ய எருதின்மேல் அழகாக ஊர்ந்து வருவாராகிய சிவன் 
திருக்கொச்சைவயத்தையே விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     மண்டு - மிக்குச்செல்லும். கங்கையும் பாம்பும் மல்கிய சடை. வளர்சடை. துண்டப்பிறை- 
வெண்பிறை. தானவர் - அசுரர்.

    Our Lord Civa reveals Himself in Kochai-vayam. He supports the river Ganges full of 
water, and the snake in His long matted hair. He retains the moon also on His head. Once 
He took the very old mountain Meru and converted it into His bow. Then He shot an arrow 
on the three fortresses and burnt it and destroyed it completely, they were owned by 
asuras who inflicted intolerable misery on the devas. He exposes Himself riding on the 
white bull, gracing His devotees.

7ஆவது பாடல் கிடைக்கப்பெறவில்லை.

2438.     அன்றவ்வால்நிழலமர்ந்து அறவுரைநால்வர்க்கருளிப் 
    பொன்றினார்தலையோட்டிலுண்பதுபொருகடலிலங்கை 
    வென்றிவேந்தனையொல்கவூன்றியவிரலினர்வான்தோய்             
    குன்றமன்னபொன்மாடக்கொச்சைவயமமர்ந்தாரே.        8

    அன்று அவ்ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளிப் 
    பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை 
    வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்             
    குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    anRu a(v)Al nizal amarntu aRa urai nAlvarkku aruLi, 
    ponRinAr talai OTTil uNpatu, porukaTal ilagkai 
    venRi vEntanai olka UnRiya viralinar--vAn tOy                 
    kunRam anna pon mATak koccai vayam amarntArE.

பொருள்:     அன்று அந்த ஆலமர நிழலில் அமர்ந்து தவமுனிவர்கள் நால்வர்க்கு அறவுரை 
வழங்கினார்; உண்பது இறந்துபட்டவரின் மண்டையோட்டில்; மோதுகின்ற கடல் சூழ்ந்த இலங்கையின் 
வெற்றி வேந்தனாகிய இராவணன் ஒடுங்க ஊன்றிய கால்விரலினர் ஆகிய இறைவராகிய சிவன் 
வானளாவிய குன்றம் நிகர்த்த  பொன்மாடங்கள் அமைந்த திருக்கொச்சைவயத்தை விரும்பித் தங்கினாரே.

குறிப்புரை:     அன்று அ ஆல் நிழல் என்று பிரிக்க. பொன்றினார் தலை - இறந்த அயனார் தலை. 
வான்நோய் குன்றம் அன்னமாடம். பொன்மாடம். சீகாழியின் செல்வநெடுமாடம் சென்று சேணோங்கிய 
சிறப்புணர்த்திற்று.

    Our Lord Civa is manifest in the city of Kochai-vayam. This city is composed of many, 
tall attractive palatial buildings, they appear as though they are mountains in contact with     
the clouds in the sky. In olden days, He sat under the shade of a banyan tree and graced 
the four saints by explaining the inner, deep meaning of the virtue of divinity. He used 
to take alms and eat the food dropped in the skull of Brahma which He was carrying after 
his death. Raavanan, the king of Sri Lanka, surrounded by heavy seashore came to tilt the 
Himalayan mountain where our Lord was staying. Our Lord pressed the top of the mountain 
with His toe and crushed Raavanan and reduced his mightiness.

2439.     சீர்கொள்மாமலரானுஞ்செங்கண்மாலென்றிவரேத்த 
    ஏர்கொள்வெவ்வழலாகியெங்குமுறநிமிர்ந்தாரும் 
    பார்கொள்விண்ணழல்கால்நீர்ப்பண்பினர்பால்மொழியோடுங் 
    கூர்கொள்வேல்வலனேந்திக்கொச்சைவயமமர்ந்தாரே.        9

    சீர்கொள் மாமலரானும் செங்கண் மால் என்று இவர் ஏத்த 
    ஏர்கொள் வெவ்வழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் 
    பார்கொள் விண்ணழல் கால் நீர்ப்பண்பினர் பால் மொழியோடும் 
    கூர்கொள் வேல் வலன் ஏந்திக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    cIr koL mA malarAnum cegkaNmAl enRu ivar Etta, 
    Er koL vev azal Aki egkum uRa nimirntArum; 
    pAr, koL viN, azal, kAl, nIr, paNpinar--pAlmoziyOTum, 
    kUr koL vEl valan Enti, koccaivayam amarntArE.

பொருள்:     அழகியதும் பெரியதுமாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் சிவந்த 
கண்ணையுடைய திருமாலும் என்று இவர்கள் துதிக்க, சீர்கொள் வெவ்வழல் தூணாகி வானம் பாதாளம் 
எங்கும் உற உயர்ந்தார்; நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் எனும் ஐம்பெரும் பூதத்தின் இயல்பை 
உடையார் ஆகிய இறைவராகிய சிவனார் பால்மொழி மங்கையோடும் கூர்மையான வேலினை 
வெற்றியுடன் ஏந்திக் கொண்டு  திருக்கொச்சைவயத்தையே விரும்பித் தங்கினாரே. 

குறிப்புரை:     பார்கொள்விண் அழல்கால் நீர்ப்பண்பினர் - நிலம். வான், தீ, வளி, புனல் என்னும் 
ஐம்பெரும் பூதத்தின் இயல்பை உடையவர். 'மண்ணிற்றிண்மை’, நீரில் இன்சுவை, தீயின் வெம்மை, 
காலின் ஊக்கம்,  வானிற்கலப்பு இவற்றினைத் தோற்றியவன் இறைவனாதலின், அப்பண்புகள் 
அவனுடைமையல்லவோ?  எல்லாம் உன் உடைமையே (தாயுமானவர் பாடல்). பால்மொழி -உமாதேவியார்.

    Our Lord Civa is manifest in the temple in Kochai-vayam city. He holds a very sharp 
spear in one of His hands keeping company with His consort Uma Devi. She speaks very sweet words
similar to milk. Brahma, the four-faced deity who is seated in the very attractive lotus flower 
as well the red eyed Thirumaal praised our Lord and worshipped Him. At that moment our Lord Civa 
appeared before them as a dazzling, good looking,supreme tall flame. He is the embodiment of the 
five elements such as earth, sky etc. 

2440.     குண்டர்வண்துவராடைபோர்த்ததொர்கொள்கையினார்கள் 
    மிண்டர்பேசியபேச்சுமெய்யலமையணிகண்டன் 
    பண்டைநம்வினைதீர்க்கும்பண்பினரொண்கொடியோடுங் 
    கொண்டல்சேர்மணிமாடக்கொச்சைவயமமர்ந்தாரே.            10

    குண்டர் வண்துவராடை போர்த்ததொர் கொள்கையினார்கள் 
    மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மையணி கண்டன் 
    பண்டை நம்வினை தீர்க்கும் பண்பினர் ஒண் கொடியோடும் 
    கொண்டல் சேர்மணி மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

    kuNTar, vaN tuvar ATai pOrttatu or koLkaiyinArkaL,
    miNTar pEciya pEccu mey ala; mai aNi kaNTan, 
    paNTai nam vinai tIrkkum paNpinar, oNkoTiyOTum 
    koNTal cEr maNi mATak koccai vayam amarntArE.

பொருள்:     குண்டராகிய சமணர், துவரூட்டிய ஆடையினைப் போர்த்த பவுத்தர் ஆகிய பொய்யர்கள் 
பேசிய பேச்செல்லாம் மெய்யல்ல. நீலமணி போன்ற கண்டம் உடையவர்; நம்முடைய பழவினைகளையெல்லாம் 
தீர்க்கும் பண்பினர் ஆகிய இறைவர் சிவனார் ஒளிரும்  கொடியாகிய உமையொடும் கார்மேகம் தங்கும் 
உயர்ந்த மாடங்கள் அமைந்த திருக்கொச்சைவயத்தையே விரும்பித் தங்கினாரே. 

குறிப்புரை:     துவர்க்கு வண்மை அடையாதலின் அதனது துவர் நிறத்தின் மிகுதி புலப்படும். பார்ப்பவர் 
கண்ணுக்கும் கருத்திற்கும் முறையே தோற்றத்தாலும் நினைப்பாலும் வெறுப்பை விளைக்கும் வண்டுவர் 
ஆடையில் ஊட்டப்பட்டது என்க. பேசிய பேச்சு மெய்யல்லாதவை. பொய்ப்பேச்சு.

    The Jains are men of low character. Buddhists wear salmon coloured cloth covering 
their body. These strong people speak false ideas. Those devotees who do not care for these words, 
our Lord graces them. His throat is dark blue in colour like the colour of sapphire. He wipes out 
the bad karma of His devotees. He is such a great helping character, the Supreme Being. In this city, 
very tall palatial buildings are many where the clouds crawl on top. In this attractive city, He is 
manifest along with His consort Uma Devi who is bright and lean like vine plants.

2441.     கொந்தணிபொழில்சூழ்ந்தகொச்சைவயநகர்மேய 
    அந்தணனடியேத்துமருமறைஞானசம்பந்தன் 
    சந்தமார்ந்தழகாயதண்டமிழ்மாலைவல்லார்போய் 
    முந்திவானவரோடும்புகவலர்முனைகெடவினையே.        11

    கொந்தணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய 
    அந்தணன் அடியேத்தும் அருமறை ஞானசம்பந்தன் 
    சந்தம் ஆர்ந்த அழகாய தண்டமிழ் மாலை வல்லார் போய் 
    முந்தி வானவரோடும் புகவலர் முனை கெட வினையே.

    kontu aNi pozil cUznta koccaivaya nakar mEya 
    antaNan aTi Ettum arumaRai njAnacampantan 
    cantam Arntu azaku Aya taN tamiz mAlai vallAr, pOy,         
    munti vAnavarOTum puka valar; munai, keTa, vinaiyE.

பொருள்:     கொத்துக் கொத்தான மலர்களால் அழகமைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த கொச்சைவய 
நகர்தனில் தங்கும் அந்தணனாகிய சிவனாரின் திருவடிகளை ஏந்திப் போற்றும் அருமறை வல்ல 
ஞானசம்பந்தன் பாடிய, சந்தம் நிறைந்த, அழகாய குளிர்ந்த தமிழ்மாலை வல்லவர்கள் முன்பு செய்த 
வினைகளின் முனைப்புக் கெட்டு, வானவருடன் புக வல்லவராவர். 

குறிப்புரை:     அந்தணன் - தோணியப்பர். 'அறவாழி அந்தணன்', 'அந்தணர் என்போர் அறவோர்' 
'அந்தணர் நூல்' என்பவற்றால் திருவள்ளுவர் குறிக்கும் பொருளைக் காண்க. அருமறை ஞானசம்பந்தன்
- மறையின் அருமையும், அம்மறையால் எய்தும் ஞானமும், அந்த ஞானத்தோடு தமக்குள்ள சம்பந்தமும்
 உணர்த்திப் பெயர்க்காரணம் புலப்படுத்தியவாறு. இத்திருப்பதிகம் சந்தம் நிறைந்தும் அழகுடையதாயும்
 உள்ள தமிழ் மாலை. அழகு - சொல்லழகு,  பொருளழகு, தொடையழகு, திருவருட்பொலிவு 
வினைகெடமுனை (முன்பு) புகவல்லவர் என்க.

    In this city of Kochai-vayam, there are many natural attractive gardens where
many bunches of flowers blossom. Our Lord Civa who is a gracious one is manifest here. 
Our Saint Thiru-gnana-Sambandar who is a great scholar in four Vedas prostrated before 
the holy feet of our Lord. He chanted these canta-p-pattu (stanza of  four lines with 
four to twenty-six syllables in a line) of ten good verses as a garland in Tamil language. 
Those devotees who can memorise and chant these with affection before our Lord will 
get rid of all their sufferings that accrue from their past life. They will enter the 
celestial world in advance and will live in the world of devas. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            89ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 89th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 226                 பதிக எண்: 90

90.திருநெல்வாயிலரத்துறை             90. THIRU-NEL-VOYIL-ARA-TH-THURAI

Pann: Piyanthai Kaanthaaram            பண்: பியந்தைக்காந்தாரம்

திருத்தல வரலாறு

    திருநெல்வாயில் அரத்துறை என்னும் இத்திருத்தலமானது, விழுப்புரம் - திருச்சி குறுக்குத் 
தொடர்பாதையில் திருப்பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிக்களம் என்னும் இடத்தில் 
இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரத்தில் அமையப்பெற்றுள்ளது.

    இறைவர் திருப்பெயர் அரத்துறைநாதர். இறைவி திருப்பெயர் ஆனந்தநாயகி. சுந்தரமூர்த்தி 
நாயனார் 'வண்டார் குழலாள்' என்று கூறியுள்ளார். 'வண்டார் குழலாள் மங்கை பங்கினனே' (தி.7 ப. 3 பா.3) 
என்பது அவரது தேவாரப்பகுதி. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர். திருஞானசம்பந்தப் 
பெருந்தையார்க்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம். 
மூவர் பாடலும் பெற்றது. திருப்புகழும் பெற்றது.

    இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக ஞானசம்பந்தர் குறிப்பித்துள்ளார். 
கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண்சோலை நெல்வாயிலரத்துறையடிகள் தம்மருளே 
(தி.2 ப.226  பா.1 ) என்பது இவர் தேவாரப் பகுதி. இங்கே நிவா வடவெள்ளாறு ஆகும். சந்தரமூர்த்தி 
சுவாமிகள், திருக்குறள், நாலடியார் இவைகளிலுள்ள கருத்து, அடி இவைகளை இவ்வூர் ஏழாம் பாடலில் 
எடுத்தாளுகின்றார். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று , திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, 
சுந்தரர் பதிகம் ஒன்று ஆக  மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    திருமுதுகுன்று, திருப்பெண்ணாகடம், பணிந்து திருவரத்துறை வரும்பொழுது, (ஒவ்வொருகால், 
தந்தையார் தோள்மேல் ஏறிவரும்) பிள்ளையார் பாததாமரை நோதலையும் நோக்காது பைய நடந்தார். 
சிவனருளால், அரத்துறை அந்தணர் கண்டவாறு, ஞானவேந்தர் ஏற முத்துச் சிவிகையும், அவர்க்கு நிழலிட
முத்துக்குடையும், தென் தமிழ் விளங்க வந்த திருக்கழுமலத்தான் வந்தான்........ வந்தான் என்று ஊத 
முத்துச் சின்னங்களும் இருந்தன. அன்பர் பலரொடும் சென்று அவற்றை ஆளுடைய பிள்ளையாரிடம் 
அரத்துறை அந்தணர் கொடுத்தனர். அவர் மன்றுளார் அருள் என்று வணங்கினார். எந்தையீசன் என 
எடுத்து இவ்வருள் வந்தவாறு  மற்று எவ்வண்ணமோ என்று சிந்தை செய்தருளியதே இத்திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2442.     எந்தையீசனெம்பெருமானேறமர்கடவுளென்றேத்திச் 
    சிந்தைசெய்பவர்க்கலாற்சென்றுகைகூடுவதன்றால் 
    கந்தமாமலருந்திக்கடும்புனல்நிவாமல்குகரைமேல் 
    அந்தண்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        1

    எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச் 
    சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் 
    கந்த மா மலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல் 
    அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.

    "entai! Ican! emperumAn! ERu amar kaTavuL!" enRu Ettic 
    cintai ceypavarkku allAl, cenRu kaikUTuvatu anRAl- 
    kanta mA malar unti, kaTum punal nivA malku karaimEl, 
    am taNcOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     மணமுள்ள மலர்களை உந்தித்தள்ளிக் கொண்டு புதுவெள்ளம் பெருகி வருகின்ற 
நிவாநதியின் கரைமேல் அழகும் குளிர்ச்சியும் கொண்ட சோலைகளையுடைய நெல்வாயில் 
திருவரத்துறை அடிகளின் திருவருள், எம்முடைய தந்தையே! ஈசனே! எங்களுடைய பெருமானே! 
விடையேறும் கடவுளே! என்று துதித்து வழிபட்டு நினைப்பவர்களுக்கே  கூடுவதாம்; மற்றையோர்க்குக் 
கூடாதாகும்.

குறிப்புரை:     இத்திருப்பதிகம் முத்துச் சிவிகையில் ஏறுவதன் முன்னர், திருவருட் சிறப்புணர்த்தப் 
பாடியருளியது. அப்பொழுது ஆங்கு இருந்த அன்பர் அனைவருக்கும் ஆண்டவன் திருவருளைப் 
பெறுவதற்கு வேண்டும் வழிபாட்டை வற்புறுத்துவதை ஒவ்வொரு பாடலிலும் உணரலாம். எட்டாவது 
திருப்பாட்டில் அருளைச் செயப்படுபொருளாக கொள்ளல் வேண்டும். ஏனைய ஒன்பது பாக்களிலும் 
அருள் எழுவாயாக நிற்றலறிக. ஈற்றுப்பாட்டில் அருளைச் சொன்ன பாடல் என்றதுணர்க. எந்தை, ஈசன் 
எம்பெருமான், ஏறமர்கடவுள் (தி.2 ப. 92 பா. 5) என்று எடுத்து வாக்கால் ஓதி மனத்தால் சிந்தித்து
(காயத்தால் வழிபாடு) செய்பவர்க்கே அடிகள் திருவருள் கைகூடுவது, சென்று- மலவழி மலநடை
கொள்ளாது நீக்கி அருள்வழியில் அருணடை கொண்டு. நிவா-ஆற்றின் பெயர். அரத்துறை-அறுத்துறை
 என்பதன் மரூஉ. அரன் துறை என்பது சிறவாது. றகரம் ரகரமாக ஒலித்தல் பல சொற்களிற் காணலாம். 

    Our Lord Civa is manifest in the temple in the Arath-thurai city. The city lies 
on the banks of the river Niva. The gardens are many around the city. Very attractive 
cool trees are many in the gardens. The water in the Niva river carries a good quantity 
of sweet smelling flowers and passes through the city Thiru-nel-voyil. "Our Lord is our 
Father! Our Chief! The most noble minded Supreme Being! You appear before us riding on 
a bull". The devotees, who chant repeating His many names, with devoted mind and worship 
Him will get His plentiful grace. But those who do not follow this will not be graced.

2443.     ஈரவார்சடைதன்மேலிளம்பிறையணிந்தவெம்பெருமான் 
    சீருஞ்செல்வமுமேத்தாச்சிதடர்கள்தொழச்செல்வதன்றால் 
    வாரிமாமலருந்திவருபுனல்நிவாமல்குகரைமேல் 
    ஆருஞ்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        2

    ஈரவார் சடைதன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான் 
    சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால் 
    வாரி மா மலர் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல் 
    ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

    Ira vAr caTai tan mEl iLampiRai aNinta emperumAn
    cIrum celvamum EttAc citaTarkaL tozac celvatu anRAl
    vAri mA malar unti, varupunal nivA malku karaimEl, 
    Arum cOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     திரளான மலர்களை வாரிக்கொண்டு வருகின்ற நீர்ப்பெருக்குடைய நிவாநதியின் 
கரைமேல், சோலைகள் செறிந்த நெல்வாயில் அடிகளின் திருவருள், குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை 
அணிந்த எம்பெருமானின் பெருமையையும் ஐசுவரியத்தையும் துதிக்க அறியாத குருடர்களுக்குக் 
கைகூடுவது அன்று.

குறிப்புரை:     ஈரம் - குளிர்ச்சி. குளிருஞ்சடை (தி. 2 ப. 62 பா. 6). குளிர்ந்தார் சடையன் (தி. 1 ப. 134 பா. 3). 
சிதடர் - குருடர், பேதையர்.

    Our Lord is manifest in the temple in Arath-thurai in the city of Thiru-nel-voyil. 
This city is on the banks of the river Niva. This river carries and brings a large quantity 
of fine flowers. The water rises as waves, and surf and passes on. On the banks of the
river big gardens are many. Here our Lord is manifest in the temple and graces honest devotees 
with the moon on His long, cool matted hair. Those unfortunate persons who cannot praise our 
Lord by saying 'Oh greatest Lord - You are the Supreme Being' and those who do not glorify His 
fame, and grace and are unable to worship Him will not be eligible for salvation.

2444.    பிணிகலந்தபுன்சடை மேற்பிறையணிசிவனெனப்பேணிப் 
    பணிகலந்துசெய்யாதபாவிகள்தொழச்செல்வதன்றால் 
    மணிகலந்துபொன்னுந்திவருபுனல்நிவாமல்குகரைமேல் 
    அணிகலந்தநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        3

    பிணி கலந்த புன்சடை மேற்பிறை அணி சிவன் எனப்பேணிப் 
    பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வதன்றால் 
    மணி கலந்து பொன் உந்தி வருபுனல் நிவா மல்கு கரைமேல் 
    அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

    piNi kalanta puncaTaimEl piRai aNi civan enap pENip 
    paNi kalantu ceyyAta pAvikaL tozac celvatu anRAl
    maNi kalantu pon unti, varupunal nivA malku karaimEl, 
    aNi kalanta nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     பொன்னையும் மணியையும் உந்திக்கொண்டு வரும் வெள்ளமுடைய 
நிவாநதிக்கரையின்மேல்  அழகமைந்த நெல்வாயில் அறத்துறை அடிகளுடைய திருவருள் 
பிணிப்பினையுடைய பொலிவான சடையின்மேல் பிறையை அணிந்த சிவன் என விரும்பி,
மனம், வாக்கு, காயம் எனும் முக்கரணங்களாலும் தொண்டு செய்யாத பாவிகளுக்குக்
கைகூடுவது அன்று. 

குறிப்புரை:     பிணி - பிணிப்பு. சடையாதற்குப் பிணிப்பு இன்றியமையாதது. கலந்து - 
திரிகரணங்களும் ஒற்றுமையுற்று. பணி செய்யாத பாவிகள். மணிகளையும் பொன்னையும் உந்தி 
(த் தள்ளி)க் கொண்டு வரும் நீர்.

    Our Lord Civa is manifest in the fascinating Arath-thurai temple in Thiru-nel-voyil 
city. The temple is situated on the banks of the Niva river. The water in the river carries 
different kinds of gems and golden particles and thrusts them forward. On the banks of the 
river in the magnificent temple our Lord is manifest. He keeps the servitors spell bound 
with His divine grace. "Your matted hair is very soft where You retain the moon". The 
sinners who do not praise our Lord like this and do not do service to Him, and do not 
worship Him will not be eligible to get His grace and salvation.

2445.     துன்னஆடையொன்றுடுத்துத்தூயவெண்ணீற்றினராகி 
    உன்னிநைபவர்க்கல்லாலொன்றுங்கைகூடுவதன்றால் 
    பொன்னுமாமணியுந்திப்பொருபுனல்நிவாமல்குகரைமேல் 
    அன்னமாருநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        4

    துன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூய வெண்ணீற்றினர் ஆகி 
    உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் 
    பொன்னும் மா மணி உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரைமேல் 
    அன்னம் ஆரு நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.

    tunna ATai onRu uTuttu, tUya veN nIRRinar Aki,
    unni naipavarkku allAl, onRum kaikUTuvatu anRAl- 
    ponnum mA maNi unti, poru punal nivA malku karaimEl, 
    annam Arum nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     பொன்னையும், நிறைய மணிகளையும், உந்தித் தள்ளிக்கொண்டு வருகின்ற 
வெள்ளத்தையுடைய நிவாநதியின் கரைமேல் அன்னங்கள் தங்கும் திருநெல்வாயில் அரத்துறை
அடிகளின் அருள், தைக்கப்பட்ட ஆடை ஒன்றை உடுத்துத் தூய வெண்ணீற்றைப் பூசினராகி, 
சிவனை நைந்து நினைபவர்க்கல்லால் சிறிதும் கைகூடுவதன்று.  

குறிப்புரை:     துன்ன ஆடை- தைத்தலையுடைய ஆடை. அன்னம்-பறவை. திருஞானசம்பந்தர்
 காலத்தில் அன்னப்புள் இருந்த உண்மை இதனாலும் புலனாயிற்று. 

    Our Lord Civa with His divine grace is manifest in Arath-thurai temple. This 
temple is situated on the banks of Niva river where swans stay long and happily live. 
The river water carries golden pieces and very valuable gems and thrusts them on the
bank of the river. Our Lord wears a forelap cloth, which is already torn and stitched. 
He has tied it round the loins. He smears the holy ashes over His body and is brilliantly 
eminent. Unless people think and praise His fame and grieve and melt they will not get 
His grace and be eligible for salvation.

2446.     வெருகுரிஞ்சுவெங்காட்டிலாடியவிமலனென்றுள்கி 
    உருகிநைபவர்க்கல்லாலொன்றுங்கைகூடுவதன்றால் 
    முருகுரிஞ்சுபூஞ்சோலைமொய்ம்மலர்சுமந்திழிநிவாவந் 
    தருகுரிஞ்சுநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        5

    வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி 
    உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் 
    முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழிநிவாவந் 
    தருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.

    "veruku urinjcu vegkATTil ATiya vimalan" enRu uLki 
    uruki naipavarkku allAl, onRum kaikUTuvatu anRAl
    muruku urinjcu pUnjcOlai moymmalar cumantu izi nivA vantu 
    aruku urinjcu nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     நறுமணம் உராய்கின்ற பூஞ்சோலையின் மொய்த்த மலர்களைச் சுமந்து கொண்டு 
ஓடும் நிவாநதி வந்து உராய்கின்ற திருநெல்வாயில் அரத்துறை அடிகளுடைய அருள், காட்டுப்பூனை 
உராய்கின்ற வெம்மையான காட்டில் ஆடும் மலமற்றவன் மேலானவன் என்று நினைந்து உருகி 
நைபவர்க்கு அல்லால் ஒரு சிறிதும் கை கூடுவதன்று.

குறிப்புரை:     வெருகு -காட்டுப்பூனை. உரிஞ்சு- தேய்க்கின்ற. உருகி நைபவர் - உள்ளம் உருகி 
இதுகாறும் இறைவனை வழிபட மறந்தமைக்கு வருந்துவோர். இழி - இறங்குகின்ற.

    Our Lord Civa is manifest in the Arath-thurai temple showering His grace on 
His devotees.There are gardens all along the riverside. There, very sweet smelling
flowers in bunches,blossom and spread their sweet smell all around. The river runs 
fast carrying these good flowers very near the temple. People who do not praise our
Lord's fame by telling 'Oh Civa! You are immaculate Supreme Being! Oh Lord! dancing 
on the fierce burning ghat where wild cats live!' cannot get His grace and be eligible 
for salvation, if they do not chant His fame and melt with feelingful grief. 

2447.     உரவுநீர்ச்சடைக்கரந்தவொருவனென்றுள்குளிர்ந்தேத்திப் 
    பரவிநைபவர்க்கல்லாற்பரிந்துகைகூடுவதன்றால் 
     குரவநீடுயர்சோலைக்குளிர்புனல்நிவாமல்குகரைமேல் 
    அரவமாருநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        6

    உரவுநீர்ச் சடைக்கரந்த ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப் 
    பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் 
    குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல் 
    அரவம் ஆரு நெல்வாயிலரத்துறை அடிகள் தம் அருளே.

    "uravu nIr caTaik karanta oruvan" enRu uL kuLirntu Ettip 
    paravi naipavarkku allAl, parintu kaikUTuvatu anRAl
    kurava nItuyar colaik, kuLirpunal nivA malku karaimEl, 
    aravam Arum nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     குரா மரங்கள் நீண்டு உயர்ந்த சோலைகள் அருகே குளிர்ந்த புனல் வெள்ளம் 
உடைய நிவாநதியின் கரையின்மேல் பாம்பணிந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளுடைய 
அருள், உலவுகின்ற கங்கை நீரைச் சடையில் மறைத்த ஒருவன் என்று உள்ளம் குளிர்ந்து ஏத்திப் 
பரவி நைபவர்க்கல்லால் பரிவுடன் கை கூடுவது அன்று.

குறிப்புரை:     உரவுநீர்- பரந்த கங்கை. ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் 
தீர்த்தமாம் (நாலடி. 175) என்பதில் பரந்த கடல்நீரைக் குறித்தல் அறிக. பரவி- வணங்கி வாழ்த்தி. 
பரவுவார் பிணிகளைவாய் என்பதில் வணக்கமும், வாழ்த்துவதும்  ... யானும் உன்னைப் பரவுவனே. 
(திருவாசகம் 20) என்பதில் வாழ்த்தும் உணர்த்துவது உணர்க. 

    Our Lord Civa is manifest in the temple Arath-thurai and graces His devotees. 
Common bottle flower trees are grown tall and thick in the gardens that are all along 
the river. The water is cool. The water snakes take rest on the banks of the river and 
happily live there. Unless people develop pleasing minds and praise our Lord with 
devotion saying 'Oh Lord, You are incomparable Supreme Being; You support the river 
Ganges and keep her concealed in Your matted hair, it is impossible to get His love'. 
Saying this they must praise, worship and grieve in their mind for Him. If they do 
not do so, our Lord does not grace such people and does not love them. Every thing is 
impossible to them.

2448.     நீலமாமணிமிடற்றுநீறணிசிவனெனப்பேணும் 
    சீலமாந்தர்கட்கல்லாற்சென்றுகைகூடுவதன்றால் 
    கோலமாமலருந்திக்குளிர்புனல்நிவாமல்குகரைமேல் 
    ஆலுஞ்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        7

    நீல மாமணி மிடற்று நீறு அணி சிவன் எனப்பேணும் 
    சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் 
    கோல மா மலர் உந்திக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல் 
    ஆலும் சோலை நெல்வாயிலரத்துறையடிகள்தம் அருளே.

    "nIla mA maNi miTaRRu, nIRu aNi civan!" enap pENum 
    cIla mAntarkaTku allAl, cenRu kaikUTuvatu anRAl
    kOla mA malar unti, kuLir punal nivA malku karaimEl,
    Alum cOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     அழகிய மணம் மிக்க மலர்களை உந்தித் தள்ளிக் கொண்டு வரும் குளிர்ந்த 
புனலுடைய நிவாநதிக்கரையின்மேல் அசையும் சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறை 
அடிகளின் அருள்நீலமணி போன்ற கண்டன்; திருநீறு அணிந்த சிவன் எனப் போற்றும் ஒழுக்கமுடைய 
மாந்தர்களுக்கு அல்லால் கைகூடுவது அன்று. 

குறிப்புரை:     சீலமாந்தர்- ஞானியர். அவரே சிவனெனப் பேணும் உண்மை நிலை உணர்ந்தவர்.     
திருநீலகண்டா! நீறணி முதல்வா! சிவபெருமானே! எனப் போற்றும் மனிதரும் ஆம். 

    Our Lord Civa is manifest in the Arath-thurai temple situated on the banks 
of the river Niva and graces His devotees. The river's cool water carries attractive 
flowers in large numbers, runs fast and thrusts the flowers forward. The gardens are 
in plenty on the banks of the river and they are very thick and the branches wave 
creating noise. The devotees of Civa with devotion pray 'Oh Lord of dark blue throat -
Neelakandan; You have applied the holy ashes on Your body'. Unless for such people, 
our Lord never shows His love and grace to the people who never praise Him pleasingly. 
 
2449.     செழுந்தண்மால்வரையெடுத்தசெருவலியிராவணனலற 
    அழுந்தவூன்றியவிரலான்போற்றியென்பார்க்கல்லதருளான் 
    கொழுங்கனிசுமந்துந்திக்குளிர்புனல்நிவாமல்குகரைமேல் 
    அழுந்துஞ்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        8

    செழுந்தண் மால்வரை எடுத்த செருவலி இராவணன் அலற 
    அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் 
    கொழுங்கனி சுமந்து உந்திக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல் 
    அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.

    cezun taN mAl varai eTutta ceru vali irAvaNan alaRa, 
    azunta UnRiya viralAn; "pORRi!" enpArkku allatu aruLAn
    kozug kani cumantu unti, kuLirpunal nivA malku karaimEl, 
    azuntum cOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     கொழுவிய கனிகளைச் சுமந்து உந்திக்கொண்டு வரும் வெள்ளமுடைய 
நிவாநதியின் கரைமேல் நெருங்கிய சோலைத் திருநெல்வாயில் அரத்துறை அடிகள்  
தம்முடைய அருளை, 'செழுமையும் குளிர்ச்சியும் உடைய கயிலைமால்வரையை எடுத்த 
பேராற்றல் உடைய இராவணன் அலற அழுந்த ஊன்றிய திருவிரலானே போற்றி' 
என்பார்க்கு அல்லது அருளார்.

குறிப்புரை:     விரலான்- அண்மை விளி. அருளான் - அருள் செய்யான். அருள் அருளான் என்று 
இயைக்க. அடிகள் தம் அருளை. போற்றி என்பார்க்கு அல்லது அருளான்.

    Our Lord Civa is manifest in the temple Arath-thurai situated on the banks of 
the river Niva. The cool water of the river carries big sweet fruits and thrusts them 
forward. The gardens are many with plenty of fruit trees. Those devotees who pray with 
devotion saying 'Oh Lord! the mighty Raavanan tried to tilt the rich, thick forested 
mountain of the Himalayas. Then You pressed the mountain with Your toe, Raavanan
trembled and got crushed under the mountain. You have such a toe'. Like this the  
devotees may praise Him and worship Him. Those do not follow this will not get the
grace of our Lord.

2450.     நுணங்குநூலயன்மாலுமிருவருநோக்கரியானை 
    வணங்கிநைபவர்க்கல்லால்வந்துகைகூடுவதன்றால் 
    மணங்கமழ்ந்துபொன்னுந்திவருபுனல்நிவாமல்குகரைமேல் 
    அணங்குஞ்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.         9

    நுணங்கு நூல் அயன்மாலும் இருவரும் நோக்கு அரியானை 
    வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் 
    மணம் கமழ்ந்து பொன்னும் உந்திவருபுனல் நிவா மல்கு கரைமேல் 
    அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.

    nuNagku nUl ayan mAlum iruvarum nOkka (a)riyAnai 
    vaNagki naipavarkku allAl, vantu kaikUTuvatu anRAl
    maNam kamazntu pon unti, varupunal nivA malku karai mEl, 
    aNagkum cOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.

பொருள்:     மணம் கமழ்ந்து பொன்னினை உந்தி வரும் புனலுடைய நிவாநதியின் கரைமேல் 
அழகு செய்யும் சோலைகளுடைய திருநெல்வாயில் அரத்துறை அடிகளுடைய அருள் நுண்ணிய 
கேள்வியறிவுடைய அயன் மால் இவ்விருவரும் காணுதற்கு அரியானை வணங்கி நைபவர்க்கு 
அல்லால் வந்து கைகூடுவதன்று.

குறிப்புரை:     நுணங்கும் நூல் - நூற்பொருளின் நுண்மை நூலின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது. 
நுணங்கிய கேள்வியர் (குறள் 419) என்பதற்கு. கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை. கேள்வி 
மேலேற்றப்பட்டது என்ற பரிமேலழகர் உரையால் அறியலாம். அவன் வேதம் நுணங்கிய நூல். 
நோக்க அரியான்- நோக்கரியான். நான்கன்றொகையாக்கலும் ஆம். கமழ்ந்து -தோற்றி. 
கமழ்ந்து உந்தி வருபுனல் என்றியைத்துக் கொள்க. அணங்கும் - அழகு செய்யும்.

    Oh! Our Lord Civa is manifest in the Arath-thurai temple on the banks of river 
Niva. He graces His devotees who come to the temple and worship Him. The river water 
carries golden particles and sweet smelling flowers and thrusts them forward on the 
bank of river. Along the banks of the river, very attractive gardens are many. 
The tutelary deity Brahma has acute divine knowledge and is a scholar. The other deity
Thirumaal also had precise divine knowledge. They both could not see our Lord. 
He is such a rarity. Those servitors who worship Him and feelingfully grieve and pray 
will be graced by our Lord, while others who do not follow this could not get His grace.

2451.     சாக்கியப்படுவாருஞ்சமண்பாடுவார்களுமற்றும்                 
    பாக்கியப்படகில்லாப்பாவிகள்தொழச்செல்வதன்றால் 
    பூக்கமழ்ந்துபொன்னுந்திப்பொருபுனல்நிவாமல்குகரைமேல் 
    ஆர்க்குஞ்சோலைநெல்வாயிலரத்துறையடிகள்தம்மருளே.        10

    சாக்கியப் படுவாரும் சமண் பாடுவார்களும் மற்றும்                 
    பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால் 
    பூக் கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரைமேல் 
    ஆர்க்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள் தம் மருளே.

    cAkkiyap paTuvArum camaN paTuvArkaLum maRRum 
    pAkkiyap paTakillAp pAvikaL tozac celvatu anRAl
    pUk kamazntu pon unti, poru punal nivA malku karaimEl, 
    Arkkum cOlai nelvAyil arattuRai aTikaL tam(m) aruLE.            

பொருள்:     மலர்களின் நறுமணங் கமழ்ந்து, பொன்னினை உந்தி மோதும் நீர்ப்பெருக்கம் 
 உடைய நிவாநதியின் கரைமேல், ஒலிக்கும் சோலைசூழ் திருநெல்வாயில் அரத்துறை அடிகளுடைய 
அருள், சாக்கிய மதமாகிய குழியில் படுவோர், சமணசமயப் படுகுழியில்  படுவோர் மற்றும் 
சைவநெறியில் வாழும் புண்ணியம் இல்லாத பாவிகளுக்குக் கைகூடுவதன்றாம். 

குறிப்புரை:     சாக்கியப்படுவார் - சாக்கிய மதத்தில் விழுபவர். சமணப்படுவார்- சமண மதத்தில் 
விழுபவர். மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் - சாக்கியரும் சமணரும் அல்லாத வேறு மதங்களில்     
விழுந்து, சைவ சமயம் புகும் பாக்கியத்தை அடையமாட்டாத தீய வினையின் பயனை நுகர்பவர்கள். 
ஆர்க்கும்- ஒலிக்கும்.

    Our Lord Civa is manifest in the Arath-thurai temple situated on the banks of the 
river Niva. The river water carries golden particles as well as sweet smelling flowers and 
dashes them against the banks and thrusts forward. Along the banks of the river noisy gardens 
are many. Our Lord who resides in this temple graces His devotees. The Buddhists, the Jains 
and those who follow other different faiths, but could not follow the Saiva faith are all 
sinners. They could not worship our Lord Civa and could not get His grace.

2452     கறையினார்பொழில்சூழ்ந்தகாழியுள்ஞானசம்பந்தன் 
    அறையும்பூம்புனல்பரந்தஅரத்துறையடிகள்தம்மருளை 
    முறைமையாற்சொன்னபாடல்மொழியும்மாந்தர்வினைபோய்ப் 
    பறையுமையுறவில்லைப்பாட்டிவைபத்தும்வல்லர்க்கே.        11

    கறையினார் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் 
    அறையும் பூம்புனல் பரந்த அரத்துறையடிகள் தம்அருளை 
    முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர் வினை போய்ப் 
    பறையும் ஐயுறவில்லைப் பாட்டு இவை பத்தும் வல்லர்க்கே.        

    karaiyin Ar pozil cUznta kAziyuL njAnacampantan,             
    aRaiyum pUm punal paranta arattuRai aTikaL tam(m) aruLai 
    muRaimaiyAl conna pATal, moziyum mAntar vinai pOyp             
    paRaiyum, aiyuRavu illai, pATTu ivai pattum vallArkkE.

பொருள்:     இருண்ட பொழில்கள் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் ஒலிக்கும் பூம்புனல் பரந்த 
அரத்துறை அடிகளுடைய திருவருளை தக்க முறையில் சொன்ன திருப்பாடல்கள் பத்தும் வல்லவராய்ப் 
பாடுவோரின் வினைகள் நீங்கிப் போய்விடும். இதில் ஐயமேதும் இல்லை 

குறிப்புரை:     பொழில் (சோலை) மரச்செறிவால் கதிரொளி புகப்பெறாது, இருண்டு கிடக்கும் 
நிலை பற்றிக் கறுப்பு நிறம் உரித்தாயிற்று. நிழல் என்பதற்கு ஒளி என்பது பொருளாதலின், 
பொழிலின் நிழல் காரொளியுடையதாதல் வேண்டும். அவ்வாறன்றி, உட்புக இயலாமல் தாவரச் செறிவு 
கறுத்த நிழலைச் செய்திருக்கின்றது என்றவாறு. மாந்தராகிய வல்லார்க்கு அவர் தம் வினைபோய்ப் 
பறையும். அதற்கு ஐயம் இல்லை. பறைதல் - அழிதல். வினை பறைவதில் வல்லார்க்கு ஐயம் இல்லை 
எனலுமாம். மொழிவதும் வன்மையுறுவதும் ஒன்றாகா. இத்திருப்பதிகத்துள், திருவருளைக்கூட வேண்டின் 
சிவநாமங்களை எடுத்தோதியும் அவன் சீரும் செல்வமும் சொல்லிப் போற்றியும், உருகிப் பரவி நைந்தும், 
பேணிப் பணிகள் செய்தும் வழிபடுவது இன்றியமையாதது என்பது உணர்த்தப்பட்டது.

    Our saint Thiru-gnana-Sambandar appeared in Seerkazhi city which was surrounded 
by dark thick forests. He came to Thiru-nel-voyil Arath-thurai surrounded by attractive 
river and worshipped our Lord. He orderly chanted the ways and means to get the grace of 
our Lord in these ten verses. Those who can memorise and chant these ten verses with 
devotion will definitely get rid of the bad karma of their life. This is a positive 
declaration. This is a sacred formula (Manthiram).

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            90ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 90th Hymn

            THIRU-CH-CHITRAMBALAM
            திருச்சிற்றம்பலம்

பதிகத் தொடர் எண்: 227                    பதிக எண்: 91

91. திருமறைக்காடு                    91. THIRU-MARAI-K-KAADU

பண்: பியந்தைக்காந்தாரம்                Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகத்தொடர் எண் 173ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருவாய்மூரில் சிவபிரான் திருவடியைப் பணிந்து பாடி அங்கு வைகி, கூடும் மெய்யன்பு 
பொங்க, திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் சேர்ந்து, மீண்டும் 
திருமறைக் காடுற்றனர். அத்தமிழ்மொழித் தலைவரோடு சண்பை நாடுடைய பிள்ளை அம்மறைக் 
காட்டுறையும் மணாளன் மலரடிகளை வணங்கிக் கொண்டு வாழ்ந்திருந்த காலத்தில் 
பாடியருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2453.     பொங்குவெண்மணற்கானற்பொருகடற்றிரைதவழ்முத்தம் 
    கங்குலாரிருள்போழுங்கலிமறைக்காடமர்ந்தார்தாம் 
    திங்கள்சூடின ரேனுந்திரிபுரமெரித்தனரேனும் 
    எங்குமெங்கள்பிரானார்புகழலதிகழ்பழியிலரே.        1

    பொங்கு வெண் மணல் கானல் பொருகடல் திரை தவழ் முத்தம் 
    கங்குலார் இருள்போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் 
    திங்கள் சூடினர் ஏனும் திரிபுரம் எரித்தனரேனும் 
    எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ்பழி இலரே.

    pogku veNmaNal kAnal porukaTal-tirai tavaz muttam 
    kagkulAr iruL pOzum kali maRaikkATu amarntAr tAm 
    tigkaL cUTinarEnum, tiripuram erittanarEnum, 
    egkum-egkaL pirAnAr--pukaz alatu, ikaz pazi ilarE.

பொருள்:     மேன்மேல் புதிதாகத் தோன்றுகின்ற வெண்மணற் பரப்புடைய கடற்சோலைகளில், 
மோதுகின்ற கடல் அலைகளினால் தவழ்கின்ற முத்துக்கள் இரவின் இருளைப் பிளக்கின்ற காட்சி 
உடையது; ஒலி நிறைந்தது ஆகிய திருமறைக்காட்டில் அமர்ந்தவராகிய இறைவர் திங்களைச் 
சென்னியில் சூடினர்; திரிபுரத்தை எரித்தனர்; என்றாலும் எங்கள் இறைவராகிய சிவனார் புகழே 
உடையவர்; இகழாகிய பழியிலார்.

குறிப்புரை:     போழும் - பிளக்கும். கலி - ஒலி. மறைக்கு அடை. காட்டிற்கு அன்று திங்களைச் 
சூடியதும்   திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப் பழியாகாது. இகழ்பழி - வினைத்தொகை. 
இகழாகிய பழி எனலும் பொருந்தும்.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-marai-k-kaadu city. In this 
city ,the vast white sandy area on the seashore was in abundance. Here the gardens are along 
the shore. The sea waves dash on the shore. In the waves pearls crawl and reach the banks 
during night. They break the darkness of the night and give bright light all over the area. 
There in the seashore the noise of the sea waves is always heard. Our Lord manifest here, 
retains the moon on His head. Once He burnt the three forts of the asuras. However, 
all over the world His fame spreads and He is blemishless and it is not a sin to kill 
the asuras.

2454.     கூனிளம்பிறைசூடிக்கொடுவரித்தோலுடையாடை 
    ஆனிலங்கிளரைந்துமாடுவர்பூண்பதுமரவம் 
    கானலங்கழியோதங்கரையொடுகதிர்மணிததும்பத் 
    தேனலங்கமழ்சோலைத்திருமறைக்காடமர்ந்தாரே.        2

    கூன் இளம்பிறை சூடிக்கொடு வரித்தோல் உடை ஆடை 
    ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம் 
    கானல் அம்கழி ஓதம் கரையோடு கதிர் மணி ததும்பத் 
    தேன் அலம் கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே.

    kUn iLampiRai cUTi, koTu varit-tOl uTai ATai, 
    Anil amkiLar aintum ATuvar; pUNpatuvum aravam- 
    kAnal am kazi Otam karaiyOTu katir maNi tatumpa,         
    tEn nalam kamaz cOlait tiru maRaikkATu amarntArE.

பொருள்:     வளைந்த இளம்பிறையைச் சென்னியில் சூடியவர்; வளைந்த வரிகளையுடைய 
புலியின் தோலை ஆடையாகத் தரித்தவர்; ஆனைந்தாடுவர்; அவர் பூண்பது பாம்பு;  அவர்
நெய்தலங்கானில் கழியோதத்தின் கரையினில் ஒளிவீசும் மணிகள் ஒளிர, தேன்மணம் கமழும் 
சோலைகளையுடைய திருமறைக்காட்டில் விரும்பி அமர்ந்து இருந்தார்.

குறிப்புரை:     ஆனில் அம் கிளர் ஐந்து (தி. 2 ப. 10 பா. 5) 'நாயன்மார் ஆனைந்தில் இரண்டுபேர் 
உரையார் நவையெனமற்று இரண்டொன்று நயந்துள்ளது.  ஆன்முலைக்கண்' என்னும் 
ஞானபூசாவிதி 14ன்  உரைக்கண். கோமயம் கோசலம் இரண்டும் ஆகா என்று இவையிற்றில்பேர் 
ஐந்து என்ற திருப்பாட்டுக்களில் அருளிச் செய்யாமல் அடக்கியருளிச் செய்தார்கள். நின்ற நெய் பால் 
தயிருமாக அஞ்சையும் ஒரு பாத்திரத்திலே கூட்டி உண்டாக்கி வைத்து என்று எழுதியிருத்தலை உணர்க. 
(தி. 2 ப.60 . பா. 3 . தி. 5 ப. 49 பா. 10; தி. 7 ப. 5 பா. 1).

    Our Lord Civa is manifest in Thiru-marai-k-kaadu temple. In the seashore thick 
gardens are many. The waves of the sea dash against the saltpans. The bright gems, 
flung by the sea waves, spread their bright light all over the area. The gardens have 
many trees with sweet smelling honey in the honeycombs. Our Lord retains the curved 
moon on His head. He wears tiger's hide which has curved lines all over its body. 
He loves to be ablutioned by the five items from the cow. He uses the snake as 
His jewellery.

2455.     நுண்ணிதாய்வெளிதாகிநூல்கிடந்திலங்குபொன்மார்பில் 
    பண்ணியாழெனமுரலும்பணிமொழியுமையொருபாகன் 
    தண்ணிதாயவெள்ளருவிசலசலநுரைமணிததும்பக் 
    கண்ணிதானுமொர்பிறையார்கலிமறைக்காடமர்ந்தாரே.         3

    நுண்ணிதாய் வெளிதாகி நூல்கிடந்து இலங்கு பொன் மார்பில் 
    பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒருபாகன் 
    தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரை மணி ததும்பக் 
    கண்ணி தானும் ஒர்பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே.

    nuNNitu Ay veLitu Aki nUl kiTantu ilagku pon mArpil, 
    paNNiyAz ena muralum paNimozi umai oru pAkan; 
    taNNitu Aya veL aruvi cala cala nurai maNi tatumpa,         
    kaNNi tAnum or piRaiyAr--kali maRaikkATu amarntArE.

பொருள்:     நுண்மையும் வெண்மையும் உடைய முப்புரிநூல் மார்பில் கிடந்து விளங்கும்; 
யாழ் முரலுவதுபோல இன்சொல் பேசும் உமையம்மையைத் தன்னில் ஒருபாகத்தில் உடையார்; 
பிறையைத் தலைமாலையாக உடையார்; அத்தகைய இறைவர் குளிர்ந்த வெண்ணிற அருவிகள் 
சலசல என ஒலிக்க நுரை மணிபோலத் ததும்ப ஒலி நிறைந்த திருமறைக்காட்டில் விரும்பி 
அமர்ந்திருந்தார்.

குறிப்புரை:     மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும் உடையதாயிருத்தல் 
வேண்டும்.  அதுகொண்டு முதுகின் அழுக்காற்றுவார்க்கு இது தெரியுமே? பண்+யாழ் = பண்ணியாழ்.
 மாதர்பிறைக் கண்ணியான் (தி. 4 ப. 3 பா. 1). 

    Our Lord Civa is manifest in Thiru-marai-k-kaadu where pomposity and loud noise 
are always heard. He wears over His chest slender white sacred thread, which increases 
His gorgeous appearance. He has His consort Uma Devi on the left side of His body. 
She speaks very soft words equal to the stringed musical instrument (lute). She speaks 
with modesty and composure. The cool white waterfalls come down with permanent noise, 
the floodwater foams and gems are found overflowing the entangled locks of hair 
of Civa. He retains the young moon on His head as a garland.

2456.     ஏழைவெண்குருகயலேயிளம்பெடைதனதெனக்கருதித் 
    தாழைவெண்மடற்புல்குந்தண்மறைக்காடமர்ந்தார்தாம் 
    மாழையங்கயலொண்கண்மலைமகள்கணவனதடியின் 
    நீழலேசரணாகநினைபவர்வினைநலிவிலரே.        4

    ஏழை வெண்குருகயலே இளம் பெடை தனது எனக்கருதித் 
    தாழை வெண் மடல் புல்குந்தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் 
    மாழை அங்கயல் ஒண்கண் மலைமகள் கணவனது அடியின் 
    நீழலே சரணாக நினைபவர் வினை நலிவிலரே.

    Ezai veN kuruku, ayalE iLampeTai tanatu enak karutit 
    tAzai veNmaTal pulkum taN maRaikkATu amarntArtAm, 
    mAzai am kayal oNkaN malaimakaL kaNavanatu aTiyin
    nIzalE caraNAka ninaipavar, vinai nalivu ilarE.

பொருள்:     அறியாமையுடைய வெண்ணிறக் குருகு அருகிருக்கும் தாழை வெண் மடலைத்தன் 
பெடையென மயங்கிப் புல்கும் காட்சியையுடைய குளிர்ந்த திருமறைக்காட்டினை விரும்பி அமர்ந்தவர்; 
மாழைமைப் பண்பினையும் அழகிய கயலின் வடிவத்தையும் கொண்ட கண்களை உடைய பார்வதியின் 
கணவன் ஆகிய சிவபிரானின் திருவடி நீழலே தமக்குப் புகலிடம் என நினைப்பவர் வினைகளினால் 
துன்பப்படுதல் இலராவர்.

குறிப்புரை:     வேதாரணியத்தில் ஏழை வெண்ணாரையானது தாழை மடலைத் தனது நற்றுணைப் 
பேடை என்று கருதித் தழுவுமென்க. (நாரை) இது தாழை இதுபேடை எனப் பகுத்தறியும் அறிவு இல்லாமையால்
ஏழை நாரை என்றார். புல்குதல் - கூடுதல். மாழை - அழகு, இளமை, அடியின் நீழலே சரணா நினைபவர் 
என்றதால். சிவனடியார்கள் சிந்தனைக்குரியது சிவனடியே அன்றிப் பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம். 
'காதலால் ... அவை இரண்டுமே செய்கருத்து உடையார்' (திருநீலநக்கர் 5) என்புழி அருச்சித்தல் பணிதல் 
என்று தொழிலால் இரண்டாயினும் சிந்தனையால் ஒன்றே ஆதல் உணர்க.

    Our Lord Civa is manifest in Thiru-marai-k-kaadu. The white ignorant heron very near 
sees the screwpine plant. The leaves are fragrant and yellow in colour. The heron thinks the 
flower petals as its young female bird (Pedai) and tries to copulate with the petals of the 
screwpine. Our Civa is the consort of the mountain king's daughter. She is youthful and her
eyes look carp fish. Those devotees who always surrender to Him and think the shadow of Civa's 
holy feet is the only grace-giving supreme shadow will have no suffering in their life.

2457.     அரவம்வீக்கியஅரையுமதிர்கழல்தழுவிய அடியும் 
    பரவநாஞ்செய்தபாவம்பறைதர அருள்பவர்பதிதான் 
    மரவநீடுயர்சோலைமழலைவண்டியாழ்செயுமறைக்காட்
     டிரவுமெல்லியும்பகலுமேத்துதல்குணமெனலாமே.        5

    அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும் 
    பரவ நாம் செய்த பாவம் பறைதர அருள்பவர் பதிதான் 
    மரவ நீடுயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு 
    இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணம் எனலாமே.

    aravam vIkkiya araiyum, atirkazal tazuviya aTiyum, 
    parava, nAm ceyta pAvam paRai tara aruLpavar patitAn            
    maravam nITu uyar cOlai mazalai vaNTu yAz ceyum--maRaikkATTu 
    iravum ellium pakalum Ettutal kuNam enal AmE.                

பொருள்:     பாம்பினைக் கச்சாகக் கட்டிய திருவரையையும், ஒலிக்கின்ற கழல்கள் கட்டிய 
திருவடிகளையும் போற்றினால் நாம் செய்த பாவங்கள் அழியும் வண்ணம் அருள்செய்பவர்; 
சிவபிரானாகிய அவரை, வெண்கடம்ப மரங்கள் நிறைந்த சோலைகளில் இளவண்டுகள் 
யாழிசை போல ஒலிசெய்தற்கு இடமாகிய திருமறைக்காட்டில், இரவும் எல்லியும் பகலும் 
ஏத்தி வழிபடல் நற்குணம் ஆகும்.

குறிப்புரை:     வீக்கிய - கட்டிய. அரை - திருவரை (இடுப்பு). கழலடி. அரையையும் அடியையும் 
பரவினால்  பாவம் அழியும் வண்ணம் அருள் செய்யும் பரசிவன். மரவம்-குங்குமமரம். இரவும் 
எல்லியும்  பகலும்  - 'இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே' (தி. 5 ப. 74 பா. 9), 'எல்லியும்  பகலும்
இசைவானவர் சொல்லிடீர்'  (தி.5 ப.75 பா. 6), 'எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும்' 
(தி. 4 ப. 41 பா. 3), 'எல்லியும் பகலும் பணியது செய்வேன்' (தி. 7 ப. 69 பா. 7), 'இரவும் எல்லியும் 
பகலும் ஏத்துவார், எம்மையும்  ஆளுடையாரே' (தி.7 ப. 75 பா. 8) என்பவற்றை ஆராய்ந்தால் 
இரவுக்கும் பகலுக்கும் வேறாயது எல்லி என்று புலனாகும். ஆயின், அவ்விரண்டினும் வேறாய் 
நிற்பது அவ்விரண்டன் சந்தியேயன்றி வேறில்லை. இரவோடு  பகலும்,  பகலோடு இரவும் 
சந்திக்கும் இரண்டிலும் எல் (ஒளி) இருப்பதால் 'எல்லி' என்ற பெயர் பெற்றது. 
எல்- ஒளி, சூரியன், பகல், எல்லியை இரவென்னும் பொருளில் வழங்குதல் பயின்றுளது. எல்லியம் 
பகல் - ஒளி வீசும் பகற்பொழுது. எல்லியம் பகல் - என்பது நல்ல பாடம். 

    Our Lord Civa administers around His waist the snake and tightens it with a corset. 
He wears the tinkling anklet on His ankle. If we prostrate before Civa, He will chase our 
suffering caused by our bad past karma. He is manifest in Thiru-marai-k-kaadu. Around the
city, tall thick trees are grown in gardens. The Crocus sativus trees are many in gardens 
(fragrant trees). In these gardens, bees make music like lute sound. One should worship 
night and day our Lord who is manifest here. We must chant His fame always. These will 
give us good health.

2458.     பல்லிலோடுகையேந்திப்பாடியுமாடியும்பலிதேர் 
    அல்லல்வாழ்க்கையரேனுமழகியதறிவரெம்மடிகள் 
    புல்லமேறுவர் பூதம்புடைசெலவுழிதர்வர்க்கிடமாம் 
    மல்குவெண்டிரையோதமாமறைக்காடதுதானே.        6

    பல்லில் ஓடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் 
    அல்லல் வாழ்க்கையர் ஏனும் அழகியது அறிவர் எம்மடிகள் 
    புல்லம் ஏறுவர் பூதம் புடை செலவு உழிதர்வர்க்கு இடமாம் 
    மல்கு வெண் திரை ஓதமா மறைக்காடு அதுதானே.

    pal il OTu kai Entip pATiyum ATiyum pali tEr 
    allal vAzkkaiyarEnum, azakiyatu aRivar; em aTikaL; 
    pullam ERuvar; pUtam puTai cela uzitarvarkku iTam Am- 
    malku veN tirai Otam mA maRaikkATu atutAnE.

பொருள்:     பற்கள் இல்லாத மண்டையோட்டினைக் கையிலேந்திப் பாடியும் ஆடியும் 
பிச்சை கொள்வர்; அத்தகைய அழகில்லாத அல்லல் வாழ்க்கையை உடையவரென்றாலும் 
அவருக்கு அது அழகியது; அதனையும் அவர் அறிவார்; அத்தன்மையவராகிய எம்முடைய 
இறைவர்; எருதினை ஊர்தியாக உடையவர்; சிவகணங்கள் புடைசூழத் திரிவர்; அவருக்கு 
இடமாவது யாதெனில், நிறைந்த வெண்மையான அலைகள் கடலோதம் மிக்க திருமறைக் 
காடாகிய அதுவாம்.

குறிப்புரை:     பல் இல் (லாத) ஓடு. பலிதேரும் வாழ்க்கை அல்லலை ஆக்குவதேனும் அடிகளுக்கு 
அழகியது. அதனையும் அவரே அறிவார். புல்லம் - (புல்லைமேயும்) எருது. 'புல்வாய்' என மானைக் 
குறித்தல் காண்க. உழிதர்வர் - உழிதருவர் (பா. 10). திரிவர். 'உழிதருகால்' (திருவாசகம்) திரிதருவர் - 
திரிதர்வர், திரிதவர். 'தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ' (மேற்படி).

    Our Lord Civa has manifested Himself in Thiru-marai-k-kaadu. He holds a skull 
without any teeth and dances and sings and goes all round the universe to get alms. 
Such a way of life gives distress, He Himself knows this. However, it is good for Him. 
He rides on His bull and goes around. Goblins accompany Him in large number and He roams 
all over with them. Thiru-marai-k-kaadu is the place He desires as His place for  
manifestation. The city has pure white waves of the sea around it all through the year.

2459.    நாகந்தான்கயிறாகநளிர்வரையதற்குமத்தாகப் 
    பாகந்தேவரொடசுரர்படுகடலௗறெழக்கடைய 
    வேகநஞ்செழஆங்கேவெருவொடுநிமிர்ந்தெங்குமோட 
    ஆகந்தன்னில்வைத்தமிர்தமாக்குவித்தான்மறைக்காடே.        7

    நாகம் தான்கயிறாக நளிர் வரை அதற்கு மத்தாகப் 
    பாகம் தேவரொடு அசுரர் படுகடலளறு எழக் கடைய 
    வேக நஞ்சுஎழ ஆங்கே வெருவொடு நிமிர்ந்து எங்கும் ஓட 
    ஆகம் தன்னில் வைத்த அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே.

    nAkam tAn kayiRu Aka, naLir varai ataRku mattu Aka, 
    pAkam tEvaroTu acurar paTu kaTal aLaRu ezak kaTaiya, 
    vEka nanjcu eza, AgkE veruvotu nimirntu egkum OTa,             
    Akam tannil vaittu amirtam AkkuvittAn maRaikkATE.

பொருள்:     நாகந்தனைக் கடை கயிறாகவும், குளிர்ந்த சிகரமுள்ள மந்தாரமலையை மத்தாகவும் 
இருபக்கங்களில் தேவர்களும் அசுரர்களும் ஒலிக்கும் கடல் சேறெழக் கடைய வெப்பமான நஞ்செழுந்தது. 
நஞ்செழக் கண்ட தேவர்களும் அசுரர்களும் அஞ்சிச் சிதறி எத்திசையிலும் ஓட, அந்த நஞ்சினைத் தன் 
கழுத்தினில் வைத்து அமிர்தம் ஆக்குவித்த  அச்சிவனின் ஊர் திருமறைக்காடே.

குறிப்புரை:     வரை - மந்தரமலை. தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு. வெருவ - வாய்பிதற்றல். 
ஆகம் - மார்பு, உடம்பு, உடம்பாயின், உடம்பினுள் என்றும், மார்பாயின் அதன்மேல் ஆதேயமான 
கழுத்தில் என்றும் கருதுக.

    Our Lord Civa is manifest in Thiru-marai-k-kaadu. Long ago devas and asuras 
brought the very big snake called Vaasuki and used it as the rope; they used the 
heavy Mantara mountain as the churning rod, then they decided between the two who is 
to hold the head-end and the other the tail-end and started churning the dark milky 
ocean. While they were churning slough came from the seawater. Along with this
mud a highly horrifying poison also came out of the seawaters.Those who were churning 
saw the poison, got terrified and ran away, far beyond the sea. Then our Lord imbibed 
the poison and His Devi stopped it from going down the throat into His body. He 
converted it into Amirtham. This Lord is manifest in this Thiru-marai-k-kaadu city.

2460.     தக்கன்வேள்வியைத்தகர்த்தோன்றனதொருபெருமையைஓரான் 
    மிக்குமேற்சென்றுமலையையெடுத்தலுமலைமகள்நடுங்க 
    நக்குத்தன்திருவிரலாலூன்றலுநடுநடுத்தரக்கன் 
    பக்கவாயும்விட்டலறப்பரிந்தவன்பதிமறைக்காடே.        8

    தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒருபெருமையை ஓரான் 
    மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க 
    நக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்தரக்கன் 
    பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே.

    takkan vELviyait takarttOn; tanatu oru perumaiyai OrAn; 
    mikku mEl cenRu malaiyai eTuttalum, malaimakaL naTugka, 
    nakku, tan tiru viralAl UnRalum, naTu naTuttu arakkan
    pakka vAyum viTTu alaRap parintavan; pati--maRaikkATE.

பொருள்:     தக்கன் இயற்றிய வேள்வியைத் தகர்த்தவன் தன்னுடைய நிகரற்ற பெருமையை         
அறியாத இராவணன் அகந்தை மிகச் சென்று கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தலும், 
மலைமகளாகிய பார்வதி நடுங்கவே, அலட்சியமாகச் சிரித்துத் தன் பெருவிரலினை ஊன்றினான்; 
ஊன்றலும் அரக்கன் வாய்விட்டலறினான்; அவன் அலறலைக் கண்டு அவன்மேல் பரிதாபம் கொண்டு 
இரங்கியருளிய சிவனின் ஊர், திருமறைக்காடே ஆகும்.

குறிப்புரை:     தனது பெருமையை ஓரான் - தன்பெருமைதான் அறியாத் தன்மையன் (திருவாசகம்). 
ஓரான்- உணரான் என்பதன் மரூஉவாகும். நக்கு-  சிரித்து. நடுநடுத்து - நடுநடுங்கி. பரிந்தவன்-
இரங்கியவன்.

    The tutelary deity and father-in-law of Lord Civa, Thakkan arranged for a very 
elaborate sacrifice according to spiritual discipline with several sacrificial pits etc., 
without inviting our Lord Civa to participate in the sacrificial function. Our Lord Civa 
got wild and arranged to demolish and destroy the entire sacrificial area. Without 
understanding the peerlessness and fame of such a Lord, Raavanan, the asura king, 
due to his haughtiness, reached the Kailash mountain and tried to dislocate. At the 
very moment, the mountain king's daughter trembled. Immediately our Lord laughed at the
ignorance of Raavanan and pressed the top of the mountain with His toe. Instantaneously, 
Raavanan trembled and wept with all his mouth. Civa understood his foolishness, excused 
him and graced him. This Lord is manifested in Thiru-marai-k- kaadu city.

2461.     விண்டமாமலரோனும்விளங்கொளியரவணையானும் 
    பண்டுங்காண்பரிதாயபரிசினனவனுறைபதிதான் 
    கண்டலங்கழியோதங்கரையொடுகதிர்மணிததும்ப 
    வண்டலங்கமழ்சோலைமாமறைக்காடதுதானே.        9

    விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவணையானும் 
    பண்டும் காண்பரிதாய பரிசினன் அவனுறை பதிதான் 
    கண்டலம் கழிஓதம் கரையொடு கதிர்மணி ததும்ப 
    வண்டலம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே.

    viNTa mA malarOnum, viLagku oLi aravu aNaiyAnum,         
    paNTum kANpu aritu Aya paricinan avan uRai patitAn
    kaNTalam kazi Otam karaiyoTu katir maNi tatumpa, 
    vaNTalam kamazcOlai mA maRaikkATu atutAnE.

பொருள்:     இதழ்கள் விரிந்த தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும், மாணிக்க மணிகளால்
 ஒளிபரப்பும் பாம்புப் படுக்கையனான திருமாலும் பண்டும் இன்றும் காண அரியவனாகிய 
இயல்பினன் ஆகிய சிவபெருமான் வாழ்கின்ற ஊர்தான் யாதெனில், தாழைகள் மிகுந்த கடற்கழி 
ஓதத்தின் கரையினில் சுடர்விடும் மணிகள் கிடக்க, வண்டலின் மணம் கமழும்  சோலைகளை 
உடைய திருமறைக்காடேயாம். 

குறிப்புரை:     விண்ட - (பூத்த) இதழ்கள் விள்ளலுற்ற. அரவு - அணை-  சர்ப்ப சயனம். பண்டும் 
 என்றதால் இன்றும் காணாமை எனப்படும். கண்டல் - தாழை. நீர்முள்ளியும் ஆம். 

    The tutelary deity Brahma who stays in the blossomed lotus flower and Thirumaal 
who takes rest on the big snake spreading light all around, they both from age-old days 
tried their best but could not see our Lord Civa who was a rarity for them.  This Lord 
is manifest in Thiru-marai-k-kaadu. In the seashore gardens the screwpine trees are many; 
adjacent are backwaters overflowing with bright gems, the oozy soil in the groves 
spreads the fragrance of the flowers. Such is the beauty of Thiru-marai-k-kaadu.

2462.     பெரியவாகியகுடையும்பீலியுமவைவெயிற்கரவாக் 
    கரியமண்டைகையேந்திக்கல்லெனவுழிதருங்கழுக்கள் 
    அரியவாகவுண்டோதுமவர்திறமொழிந்துநம்மடிகள் 
    பெரியசீர்மறைக்காடேபேணுமின்மனமுடையீரே.        10

    பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயில் கரவாக் 
    கரிய மண்டை கையேந்திக் கல்லென உழிதரும் கழுக்கள் 
    அரிய வாக உண்டோதும் அவர்திற மொழிந்து நம்மடிகள் 
    பெரிய சீர்மறைக்காடே பேணுமின் மனமுடையீரே.

    periya Akiya kuTaiyum pIliyum avai veyil karavA, 
    kariya maNTai kai Enti, kallena uzitarum kazukkaL- 
    ariya Aka uNTu Otum avar tiRam ozintu, nam aTikaL 
    periya cIr maRaikkATE pENumin ! manam uTaiyIrE!

பொருள்:     சிந்திக்கும் மனமுடையீர்! பெருங்குடையும் மயிற்பீலியும் ஆகிய இவை வெயிலை 
மறைக்கா.  கரிய மண்டையைக் கையிலேந்தி பிச்சை கேட்டு அலையும் சமணர்கள், அரிதாக 
'உண்டு, இல்லை, உண்டும் இல்லையும் ஆம்' எனவோதும் அவர்களுடைய கொள்கையை ஒழிமின்! 
நம்முடைய இறைவனாகிய சிவபிரானின் பெரும்புகழுடைய திருமறைக்காட்டினையே போற்றுமின்! 

குறிப்புரை:     பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப்புறப்புறச் சமயத்தவர். மண்டை- உள்கலம்.
உண்டு - உணவு கொண்டு. 'உண்டாம் இல்லையாம்' என்பன முதலியவை. 

    The Jains and Buddhists, the wretched groups of people hold big umbrella and 
peacock feathers to protect themselves from sun's heat and go round for alms. They carry 
a smutty pot to get alms and move about with pomposity. While roaming they chant mystical 
words 'undaam; illayaam'. My dear good-hearted people - "You better keep yourself away 
from these Jains and Buddhists. Lord Civa who is our Chief and the famous Supreme Being 
is manifest in the temple in Thiru-marai-k-kaadu and you will worship Him".

2463.     மையுலாம்பொழில்சூழ்ந்தமாமறைக்காடமர்ந்தாரைக் 
    கையினாற்றொழுதெழுவான்காழியுள்ஞானசம்பந்தன் 
    செய்தசெந்தமிழ்பத்துஞ்சிந்தையுட்சேர்க்கவல்லார்போய்ப் 
    பொய்யில்வானவரோடும்புகவலர்கொளவலர்புகழே.        11

    மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக்காடு அமர்ந்தாரைக் 
    கையினால் தொழுதெழுவான் காழியுள் ஞானசம்பந்தன் 
    செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்ப் 
    பொய்யில் வானவரோடும் புகவலர் கொளவலர் புகழே.

    mai ulAm pozil cUznta mA maRaikkATu amarntAraik 
    kaiyinAl-tozutu ezuvAn, kAziyuL njAnacampantan, 
    ceyta centamiz pattum cintaiyuL cErkka vallAr, pOy, 
    poyil vAnavarOTum puka valar; koLa valar, pukazE.

பொருள்:     மேகங்கள் உலவுகின்ற பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் அமர்ந்த 
இறைவராகிய சிவபெருமானை, கையினால் தொழுது கொண்டே எழுவானாகிய 
காழிஞானசம்பந்தன், பாடிய செந்தமிழ்த் திருப்பதிகத்தில் உள்ள திருப்பாடல்கள் 
பத்தினையுமுள்ளத்தில் இருத்த வல்லவர்கள், வானவர்களோடும் கூடிச் சென்று அழியாத 
வீட்டுலகில் புகழுடன் புகவல்லவராவர்.

குறிப்புரை:     மை - மேகம். பொய்யில்வானவர் - அழியாத வீட்டுலகினர்.

    In the city of very attractive Thiru-marai-k-kaadu clouds spread out in the sky and 
move over the natural forest area. Here is manifest our Lord Civa, Our saint Thiru-gnana-Sambandar 
hailing from Seerkaazhi worships the Lord with both his  hands and prostrates before Him. Then 
he gets up and chants the pure Tamil ten songs. Those servitors who can memorise the ten verses 
and keep them in their mind and praise the fame of our Lord will be eligible to reach the devas 
world without falsehood  along with the celestials. They will shine with all fame in the universe.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            91ஆம் பதிகம் முற்றிற்று
            End of 91th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 228                     பதிக எண்: 92

92. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்                92. THIRU-P-PUGALOOR - VARTHA-MAANEECH-CHARAM

பண்: பியந்தைக்காந்தாரம்                Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்னும் இத்திருத்தலத்தில் அருளாசி புரிகின்ற இறைவர் 
திருப்பெயர் வர்த்தமானேச்சுரர். இறைவியார் திருப்பெயர் கருந்தாழ்குழலியம்மை. திருப்புகலூர் 
ஆலயத்திற்குள் வடபக்கத்தில் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் அமைந்துள்ளது. இது ஆண்டவன் 
பெயரைக் குறிக்கின்றது. இங்கே அக்கினீசுவரர் உருவமும், அதற்கடுத்து வடபக்கத்தில் 
வர்த்தமானேசுவரர் சந்நிதியும் முருக நாயனார் திருவுருவமும் அமைந்துள்ளன.

பதிக வரலாறு

    திருப்புகலூர்த் தொண்டர்களொடும் செம்மை முருகனார் எதிர்கொள்ள வந்து, வேதமுதல்வர் 
திருக்கோயிலை எய்திப்புகுந்து பூமலிமுன்றிற் புடைவலங் கொண்டு ஒருப்படு சிந்தையொடும் 
அணைந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், பணிந்து சாத்திய தமிழ்த்தொடை மாலை 
இத்திருப்பதிகம்.


            திருச்சிற்றம்பலம்

2464.     பட்டம்பால்நிறமதியம்படர்சடைச்சுடர்விடுபாணி 
    நட்டநள்ளிருளாடுநாதனார்நவின்றுறைகோயில் 
    புட்டன்பேடையொடாடும்பூம்புகலூர்த்தொண்டர்போற்றி 
    வட்டஞ்சூழ்ந்தடிபரவும்வர்த்தமானீச்சரத்தாரே.        1

    பட்டம் பால் நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி 
    நட்ட நள்ளிருள் ஆடுநாதனார் நவின்று உறைகோயில் 
    புட்டன் பேடையொடு ஆடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி 
    வட்டம் சூழ்ந்த அடிபரவும் வர்த்தமானீச்சரத்தாரே.

    paTTam, pAlniRa matiyam, paTar caTaic cuTar viTu pANi,
    naTTam naL iruL ATum nAtan navinRu uRai kOyil, 
    puL-tan pETaiyoTu ATum pUm pukalUr, toNTar pORRi 
    vaTTam cUzntu aTi paravum varttamAnIccarattArE.

பொருள்:     நெற்றிப் பட்டம் பாலின் நிறமான பிறை மதியம்; படருகின்ற சடையில் ஒளிர்கின்ற
கங்கை நதி; நட்ட நடு இரவில் கூத்தாடும் தலைவன் ஆகிய சிவன் வெளிப்பட்டு உறைகின்ற திருக்கோயில் 
யாதெனில், ஆண்பறவை தன் பெடையோடு ஆடும் பூம்புகலூரில் தொண்டர்கள் போற்றி வலம் வந்து 
திருவடியைப் பரவும் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     பட்டம்- உத்தரீயம். பாணி- கங்கை. 'பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த 
தோணிபுரத்துறைந்தனை’ (தி. 1 ப. 1 பா. 128). 'விண்ணியல் பாணியன்' (பொன்வண். 30)  
'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்'. புள் - பறவை. பேடை -பெண் பறவை.

    Our Lord Civa is manifest in Pugaloor - Vartha-maaneech-charam. In this attractive city 
male birds love to join the female birds, and enjoy dancing. Here the devotees stand in a circle 
and praise our Lord by chanting divine songs and worship the Lord in Pugaloor Vartha-maaneech-charam.
He wears a cloth loosely over the shoulders (upper garment). In His matted hair He sustains the 
bright white moon. He supports the bright Ganges also in His matted hair. His avocation is to 
dance in midnight. He is the Chief Dancer. He is manifest in the temple called Thiru-p-pugaloor- 
Vartha-maaneech-charam.

2465.     முயல்வளாவியதிங்கள்வாண்முகத்தரிவையிற்றெரிவை 
    இயல்வளாவியதுடைய இன்னமுதெந்தையெம்பெருமான் 
    கயல்வளாவியகழனிக்கருநிறக்குவளைகண்மலரும் 
    வயல்வளாவியபுகலூர்வர்த்தமானீச்சரத்தாரே.        2

    முயல் வளாவிய திங்கள் வாண்முகத்து அரிவையில் தெரிவை 
    இயல் வளாவியது உடைய இன்னமுது எந்தை எம்பெருமான் 
    கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளை கண் மலரும் 
    வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

    muyal vaLAviya tigkaL vALmukattu arivaiyil-terivai 
    iyal vaLAviyatu uTaiya in amutu, entai, emperumAn
    kayal vaLAviya kazanik karuniRakkuvaLai kaN malarum 
    vayal vaLAviya pukalUr varttamAnIc carattArE.            

பொருள்:     முயலாகிய களங்கம் பொருந்திய திங்கள் போன்று குளிர்ச்சியும் ஒளியும் உடைய 
முகத்து அரிவையை மனைவியாகப் பெற்றவர்; இன்னமுது போன்று இன்பம் அளிப்பவர்; எம் தந்தை, 
எம்முடைய பெருமகன் ஆகிய இறைவர் கயல்மீன்கள் பொருந்திய கழனிகளில் கரிய நிறக் குவளை 
கண்போல  மலரும்; கயல்கள் பொருந்திய திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே. 

குறிப்புரை:     முயல் -களங்கம். திங்கள் (சந்திரன்) இடத்திருப்பது. அரிவை தெரிவை இரண்டும் 
மாதர் பருவத்தின் வேறுபாட்டாற்பெற்ற பெயர்கள். கண்மலரும் - கண் போல் பூக்கும். குவளைகள் 
பூக்கும் எனலுமாம். 

    In the city of Pugaloor - Vartha-maaneech-charam, carp fish are in plenty in the 
paddy fields. There are ponds and fields nearby where black coloured Indian water lily 
blossoms.Our Lord Civa is manifest in this temple in this city. His consort Uma Devi, 
the chief among women is very bright faced like the moon, which has the dark spot. 
He is sweet like amrit. He is our Chief as well as our Father.

2466.     தொண்டர்தண்கயமூழ்கித்துணையலுஞ்சாந்தமும்புகையும் 
    கொண்டுகொண்டடிபரவிக்குறிப்பறிமுருகன்செய்கோலம் 
    கண்டுகண்டுகண்குளிரக்களிபரந்தொளிமல்குகள்ளார் 
    வண்டுபண்செயும்புகலூர்வர்த்தமானீச்சரத்தாரே.        3

    தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும் 
    கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பு அறிமுருகன் செய் கோலம் 
    கண்டு கண்டு கண் குளிரக் களிபரந்து ஒளிமல்கு கள்ளார் 
    வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

    toNTar taNkayam mUzkit tuNaiyalum cAntamum pukaiyum 
    koNTu koNTu aTi paravi, kuRippu aRi murukan cey kOlam 
    kaNTu kaNTu, kaN kuLirak kaLi parantu, oLi malku kaL Ar 
    vaNTu paN ceyum pukalUr vartta mAnIccarattArE.

பொருள்:     திருமுருகனார், குளிர்ந்த கயத்தில் மூழ்கி மாலையும் சந்தனமும் தூபமும் கொண்டு 
திருவடி தொழுது, திருக்குறிப்பினை நன்கு அறிந்து இறைவருக்குச் செய்கின்ற திருக்கோலத்தைத் 
தொண்டர் கண்குளிரக் கண்டு கண்டு, களி பரந்து ஒளி நிறையும்; அவ்விறைவர், தேனினை மிகுதியாக 
உண்ட  வண்டுகள் பண்பாடும் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     கயம் - நீர்நிலை. துணையல் -மாலை. 'கொண்டு' இரண்டனுள். ஒன்று துணையல் 
முதலியவற்றைக் கொண்டு என்றும் மற்றொன்று அடியை உளங்கொண்டு என்றும் கொள்ள நின்றமை
உணர்க. குறிப்பு அறிமுருகன் - முருக நாயனார் சிறப்புணர்த்திற்று. அவரது குறிப்பு அறியும் ஆற்றலை.
தமக்கு நண்பருமாம் பெருமை தந்தை பிள்ளையாரே அறிவார். பூக்கள் திறக்கும் அநுபவ மிகுதியால் 
அவற்றைக் கொள்ளும் சமயக் குறிப்பும் ஆம்.

    A group of devotees join together, take bath in cool water ponds. Thereafter they 
collect flowers, make garlands, prepare sandalwood paste, materials to emit fragrant smell, 
reach the temple and prostrate before the holy feet of Civa in the temple and worship Him. 
The saint Muruga Nayanar noted the spiritual sacrifice and rituals done by the devotees. 
Then he helped them and did service to our Lord in the same way as the devotees did. 
He decorated our Lord and saw His graceful look and happily worshipped our Lord. 
In the forest area the beetles suck the honey and make sound like musical tone. 
Our Lord Civa is manifest in Pugaloor - Vartha-maaneech-charam  with pleasure.

2467.     பண்ணவண்ணத்தராகிப்பாடலொடாடலறாத 
    விண்ணவண்ணத்தராயவிரிபுகலூரரொர்பாகம் 
    பெண்ணவண்ணத்தராகும்பெற்றியொடாணிணைபிணைந்த 
    வண்ணவண்ணத்தெம்பெருமான்வர்த்தமானீச்சரத்தாரே.        4

    பண்ண வண்ணத்தராகிப் பாடலொடு ஆடல் அறாத 
    விண்ண வண்ணத்தராய விரிபுகலூரர் ஒர்பாகம்             
    பெண்ண வண்ணத்தராகும் பெற்றியொடு ஆணிணை பிணைந்த 
    வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே.

    paNNa vaNNattar Aki, pATaloTu ATal aRAta 
    viNNa vaNNattar Aya viri pukalUrar, orpAkam 
    peNNa vaNNattar Akum peRRiyoTu, AN iNai piNainta 
    vaNNa vaNNattu emperumAn varttamAnIccarattArE.

பொருள்:     'ஏழிசையாய் இசைப்பய'னாகிய பண்ணிசைமயமானவர்; பாடுதலும் ஆடுதலும் 
ஒழியாதவர்; ஆகாச இயல்புடையர் ஆகிய திருப்புகலூர் தம்முடைய ஒருபாகம் பெண் தன்மையராகும் 
இயல்புடையவர்; ஆண் இணை பிணைந்த மிகுந்த அழகுடைய எம்பெருமானாகிய அவர் திருப்புகலூர் 
வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     பண்ண வண்ணத்தர் - பண்ணிசை மயமான சிவபெருமான். 'ஏழிசையாய் இசைப் 
பயனாய்'. விண்ணவண்ணத்தர் - ஆகாசரூபர். பாகம் பெண்ண வண்ணத்தர் - அம்மையப்பர். அர்த்தநாரீசுவரர். 
ஆண் இணை பிணைந்த வண்ண வண்ணத்து எம்பெருமான் என்றது அறியத்தக்கது.

    Our Lord Civa is manifest in wide area of Pugaloor - Vartha-maaneech-charam. His 
avocation is to dance with the accompaniment of musical tone. He used to sing along with 
the lute. He exposes Himself as the embodiment of the sky. He kept His consort on the left 
side of His body. He is concomitant, the female shape jointly with the male, called 
Artha-naarees-warar.

2468.     ஈசனேறமர்கடவுளின்னமுதெந்தையெம்பெருமான் 
    பூசுமாசில்வெண்ணீற்றர்பொலிவுடைப்பூம்புகலூரில் 
    மூசுவண்டறைகொன்றைமுருகன்முப்போதுஞ்செய்முடிமேல் 
    வாசமாமலருடையார்வர்த்தமானீச்சரத்தாரே.        5        

    ஈசன் ஏறமர் கடவுளின் அமுது எந்தை எம்பெருமான் 
    பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில் 
    மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதும் செய்முடிமேல் 
    வாச மாமலருடையார் வர்த்தமானீச்சரத்தாரே.                

    Ican, ERu amar kaTavuL, in amutu, entai, emperumAn, 
    pUcum mAcu il veN nIRRar--polivu uTaip pUm pukal Uril, 
    mUcu vaNTu aRai konRai murukan muppOtum cey muTimEl 
    vAcamAmalar uTaiyAr, varttamAnIccarattArE.

பொருள்:     செல்வன், அறவிடை ஊர்தியாக உடைய கடவுள்; இனிய அமுது; எம் தந்தை; 
எம்முடைய பெருமான்; பூசுதற்கு மாசு அற்ற வெண்ணீறு உடையவர்; பொலிவுடைய திருப்புகலூரில், 
முருக நாயனார் முப்போதும் முடிமேல் சூட்டுகின்ற முரலும் வண்டுகள் ஒலிக்கும் மணம் மிக்க  
கொன்றை மாமலர் உடையார்; அவர் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே. 

குறிப்புரை:     இதன் முதலடியோடு ஒத்தது முன் (தி. 2 ப. 90 பா. 1) உணர்ந்தது. பூச - பூசுதற்கு. 
நீற்றர் - நீறுடையவர். பூச என்னும் எச்சம் நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு 
முடிந்தது.

    The saint Muruga Nayanar, belonging to this gorgeous city of Pugaloor, goes daily 
and collects the Indian laburnum flowers where the beetles swarm in large numbers over the 
flower. Then he goes to the temple all the three times of the day when the sun shines 
and worships our Lord by spreading the flowers on the holy feet of our Lord. The Lord 
of Pugaloor - Vartha-maaneech-charam, who exposes Himself with the fragrant flowers 
all over His body, is the Chief Supreme Being for all. He sustains the white bull 
for His conveyance. He is like the sweet ambrosia. He is our Father. He is the greatest 
Supreme Being. He applies faultless holy ashes over His body.

2469.     தளிரிளங்கொடிவளரத்தண்கயமிரியவண்டேறிக் 
    கிளரிளம்முழைநுழையக்கிழிதருபொழிற்புகலூரில் 
    உளரிளஞ்சுனைமலருமொளிதருசடைமுடியதன்மேல் 
    வளரிளம்பிறையுடையார்வர்த்தமானீச்சரத்தாரே.        6

    தளிர் இளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டு ஏறிக் 
    கிளர் இளம்முழை நுழையக் கிழிதரு பொழில் புகலூரில் 
    உளர் இளம்சுனை மலரும் ஒளிதரு சடை முடி அதன்மேல் 
    வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே.

    taLir iLag koTi vaLara, taNkayam iriya vaNTu ERik 
    kiLar iLam(m) uzai nuzaiya, kizitaru pozil pukalUril, 
    uLar iLanj cunai malarum oLitaru ca TaimuTi atan mEl             
    vaLar iLampiRai uTaiyAr varttamAnIccarattArE.

பொருள்:     தளிர்களை உடையதும் இளமையானதுமாகிய கொடிகள் வளர்ந்து குளிர்ந்த 
நீர்நிலையில் சாய வண்டுகள் ஏற, இளமான் உள் நுழைவதற்குக் கிழிபடும் சோலைகளை உடைய 
திருப்புகலூரில் இளஞ்சுனையில் மலரும் ஒளிதருஞ்சடை முடிமேல் வளருகின்ற  இளம்பிறையை 
உடையவர் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     இளமுழை- இளமான். உளர்- அசைகின்ற; கழல்கின்ற. தளிர்களையுடைய கொடி. 
இளங்கொடி. தண்கயம் - குளிர்ந்த நீர் நிலையில். இரிய- சாய . சுனை மலரும் ஒளிருஞ்  சடை.
சடை முடிமேல் பிறை உடையார்.

    In the city of Pugaloor, forests are many all around, inside cool water ponds are 
located all over. Adjoining the water pools, grows young cowslip creeper in large numbers. 
The beetles suddenly rise and enter through the holes of tender shoots of creepers and plants. 
While crossing they destroy the tender leaves of the creepers. Our Lord Civa adorns His 
matted hair with flowers that blossomed in the water ponds. Along with this He retains 
the moon also on His matted hair. He is the Lord of Pugaloor-Vartha-maaneech-charam.

2470.     தென்சொல்லிஞ்சமர்வடசொல்திசைமொழியெழில்நரம்பெடுத்துத் 
    துஞ்சுநெஞ்சிருள்நீங்கத்தொழுதெழுதொல்புகலூரில் 
    அஞ்சனம்பிதிர்ந்தனையஅலைகடல்கடையவன்றெழுந்த 
    வஞ்சநஞ்சணிகண்டர்வர்த்தமானீச்சரத்தாரே.        7

    தென் சொல்லிஞ் சமர்வட சொல்திசை மொழி எழில் நரம்பு எடுத்துத் 
    துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழுதொல் புகலூரில் 
    அஞ்சு அனம் பிதிர்ந்து அனைய அலைகடல் கடையவன்று எழுந்த 
    வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே.

    ten col, vinjcu amar vaTa col,-ticai mozi, ezil narampu eTuttut 
    tunjcu nenjcu iruL nIgkat tozutu ezu tol pukalUril, 
    anjcanam pitirntanaiya, alaikaTal kaTaiya anRu ezunta, 
    vanjca nanjcu aNi kaNTar varttamAnIccarattArE.

பொருள்:     தொண்டர்கள் தமிழ்மொழி, விஞ்சமர் வடமொழி மற்றும் திசைமொழிகளில் இசை 
எழுச்சியுடைய சிவதோத்திரங்களை, சோர்ந்த நெஞ்சில் உள்ள அகத்திருள் நீங்கக் கூறித் தொழுது 
கொண்டே எழுகின்ற திருப்புகலூரில், மை பிதிர்ந்து எழுந்ததுபோல அன்று கடலைக் கடைய எழுந்த 
கரிய (ஆலகால) நஞ்சினை அணிந்த கண்டத்தர்; திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     தென்சொல் -தமிழ். விஞ்சுதல் - மிகுதல். வடசொல் - ஆரியபாடை. திசைமொழி-
ஏனைய மொழிகளினின்று தமிழில் வந்து வழங்கும் சொற்கள். -  சிவதோத்திரம் பாடும் பாஷைகள் 
குறிக்கப்பட்டன. நெஞ்சு இருள் - நெஞ்சிலுள்ள (அகத்து) இருள். எழில் நரம்பெடுத்தலாவது - இசை
எழுச்சியையுடைய யாழ்நரம்பில் அமைத்துப் பாடுதல். அஞ்சனம் -மை. நஞ்சுக்குவமை. 

    Sincere devotees who are scholars in Tamil, Sanskrit and in other languages 
fillip the strings of lute and adjust it and then play on it divine songs for shedding         
their mental agony. Then they worship our Lord in Pugaloor. This Lord imbibed the poison 
that came out of the ocean when the seawater was churned. As He stopped the poison
in the throat His neck is like dark blue gem. He is the Lord who is manifest in Pugaloor-
- Vartha-maaneech-charam.

2471.     சாமவேதமோர்கீதமோதியத்தசமுகன்பரவும் 
    நாமதேயமதுடையார்நன்குணர்ந்தடிகளென்றேத்தக் 
    காமதேவனைவேவக்கனலெரிகொளுவியகண்ணார் 
    வாமதேவர்தண்புகலூர்வர்த்தமானீச்சரத்தாரே.        8

    சாமவேதம் ஓர்கீதம் ஓதி அத்தசமுகன் பரவும் 
    நாமதேயம் அதுடையார் நன்குணர்ந்து அடிகள் என்றேத்தக் 
    காமதேவனை வேவக்கனல் எரிகொளுவிய கண்ணார் 
    வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

    cAma vEtam Or kItam Oti at tacamukan paravum 
    nAma tEyam atu uTaiyAr, nanku uNarntu, "aTikaL" enRu Etta; 
    kAma tEvanai vEvak kanal eri koLuviya kaNNAr; 
    vAma tEvar taN pukalUr varttamAnIccarattArE.

பொருள்:     சாமவேத கீதம் ஓதி, அந்தப் பத்துத்தலை இராவணன் தன்னை வழிபட்டு 
நலமுற்றான் என்ற பெயருடையார்; அவரே நம் சுவாமிகள் என்று நன்குணர்ந்து ஏத்த 
மன்மதன் எரிந்து வீழக் கனல் எரி கொளுத்திய நெற்றிக் கண்ணர்; வாமதேவர் ஆகிய 
அவர் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     தசமுகன் (இராவணன்) சாமவேத கீதம்பாடி நலம் உற்றான். நாமதேயம் - பெயராற் 
சுட்டப்படுவது. கண்ணார் - நெற்றிக் கண்ணினார். வாமதேவர் - பஞ்சப்பிரம மந்திர ரூப மூர்த்திகளுள் 
ஒன்றாய் விளங்கும் சிவபிரான். சதாசிவருடைய ஐந்துமுகத்தில் நான்காவது வாமதேவம்.

    Our Lord is manifest in cool Pugaloor. Raavanan, the king of Sri Lanka got crushed 
under the Himalayas mountain. He then sang divine songs in Saama Vedam  and praised the 
city and its God's name. He understood and praised him as Supreme Being. This Lord burnt 
the deity of love - Kaaman through His third eye.

2472.     சீரணங்குறநின் செருவுறுதிசைமுகனோடு 
    நாரணன்கருத்தழியநகைசெய்தசடைமுடிநம்பர் 
    ஆரணங்குறுமுமையையஞ்சுவித்தருளுதல்பொருட்டால் 
    வாரணத்துரிபோர்த்தார்வர்த்தமானீச்சரத்தாரே.         9

    சீரணம் அங்குற நின்செருவுறு திசைமுகனோடு 
    நாரணன் கருத்தழிய நகை செய்த சடைமுடி நம்பர் 
    ஆரணம் குறும் உமையை அஞ்சுவித்து அருளுதல் பொருட்டால் 
    வாரணத்து உரிபோர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே.

    cIr aNagku uRa ninRa ceru uRu ticaimukanOTu 
    nAraNan karuttu aziya nakai ceyta caTai muTi nampar; 
    Ar aNagku uRum umaiyai anjcuvittu, aruLutal poruTTAl, 
    vAraNattu uri pOrttAr varttamAnIccarattArE.

பொருள்:     தங்களுடைய பெருமை அழிவுறப் போரிட்டு நின்ற பிரமனோடு நாரணனும் 
அவர்களுடைய அகந்தை அழியப் புன்முறுவல் செய்தவர்; சடை முடி உடைய நம்பர்; மிக்க 
அழகுடைய உமையம்மையை அஞ்சுவித்து அருளும் காரணத்தால் யானையின் தோலை
உரித்துப் போர்த்தார்; அவ்விறைவர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.

குறிப்புரை:     அணங்கு- தெய்வம், அழகுமாம். செரு - இருவரும். சிவபிரானைக் காண்பேன் 
என்று சொல்லி நிகழ்த்திய போர். 'அவனொடு நாராயணனும் கருத்தழிய நம்பர் நகை செய்தார்'. 
அஞ்சுவித்து - அஞ்சச்செய்து. வாரணத்து உரி - யானைத்தோல்.

    Tutelary deity Brahma and Thirumaal - both had pride between them and exulted 
to find out the chief of them. To dispel the wrong opinion of these two, our Lord Civa 
appeared before them as dazzling infinite supernal tall flame and laughed at them. 
Uma Devi trembled to see a big elephant coming towards her. Instantaneously our 
Lord Civa stripped off the hide of the elephant after killing it before her, 
to enable Uma Devi to ward off her terror.

2473.     கையிலுண்டுழல்வாருங்கமழ்துவராடையினால்தம்
    மெய்யைப்போர்த்துழல்வாருமுரைப்பனமெய்யெனவிரும்பேல் 
    செய்யில்வாளைகளோடுசெங்கயல்குதிகொளும்புகலூர் 
    மைகொள்கண்டத்தெம்பெருமான்வர்த்தமானீச்சரத்தாரே.        10

    கையில் உண்டுழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் 
    மெய்யைப் போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் 
    செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் 
    மைகொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே.

    kaiyil uNTu uzalvArum, kamaz tuvar ATaiyinAl-tam 
    meyyaip pOrttu uzalvArum, uraippana mey ena virumpEl 
    ceyyil vALaikaLOTu cegkayal kutikoLum pukalUr, 
    mai koL kaNTattu emperumAn varttamAnIccarattArE.

பொருள்:     கையில் பிச்சை ஏற்று உண்டு அலைந்து திரியும் சமணரும் நாறும் துவராடையால்
உடலைப் போர்த்துத் திரியும் பவுத்தரும் உரைப்பன மெய்யுரை  என அவற்றை விரும்பற்க. வயலில் 
வாளை மீன்களோடு செங்கயல்மீன்கள் மகிழ்ச்சியில் குதி கொள்ளும் புகலூரில் உள்ள, கரிய கண்டத்து 
எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே. 

குறிப்புரை:     ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து உழல்வார் தேரர். உரைப்பன - உரைக்கும்.  
புறப்புறச் சமயக் கொள்கைகளை. மெய் - வாய்மை. விரும்பேல் - விரும்பாதே. செய் - கழனி. 
வாளையும் கயலும் மீன்கள். மை - கருநிறம்.

    Our Lord Civa is the Neelakandar. He is manifest in Pugaloor. In this city the 
carp fish and the sword fish jump and play in the fields, full of water and enjoy 
themselves. Our Lord of this city is very famous and the most exalted Supreme Being .
Oh! My dear devotees, do not think that the preaching of the Jains who accept food in
their hands and eat, as well as the teaching of the Buddhists who cover their body 
with ochre cloth are real, divine, virtuous knowledge.They are only false propaganda.

2474.     பொங்குதண்புனல்சூழ்ந்துபோதணிபொழில்புகலூரில் 
    மங்குல்மாமதிதவழும்வர்த்தமானீச்சரத்தாரைத் 
    தங்கு சீர்திகழ்ஞானசம்பந்தன்தண்டமிழ்பத்தும் 
    எங்குமேத்தவல்லார்களெய்துவரிமையவருலகே.        11

    பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழில் புகலூரில் 
    மங்குல் மாமதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரைத் 
    தங்கு சீர்திகழ் ஞானசம்பந்தன் தண்டமிழ் பத்தும் 
    எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர் உலகே.        


    pogku taNpunal cUzntu pOtu aNi pozil pukal Uril, 
    magkul mA mati tavazum varttamAnIccarattArai, 
    tagku cIr tikaz njAnacampantan taN tamiz pattum 
    egkum Etta vallArkaL, eytuvar, imaiyavar ulakE.

பொருள்:     மேலெழுந்து பெருகும் குளிர்புனல் சூழ்ந்து மலர்கள் அழகு செய்யும் சோலைகள் 
உடைய புகலூரில் ஆகாயத்தில் பெரிய மதி தவழ்ந்து செல்லும் வர்த்தமானீச்சரத்தாரை, புகழ் நின்று 
விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய தண்ணிய தமிழ்ப்பாடல்கள் பத்தினையும் எவ்விடத்திலும் ஏத்த 
வல்லவர்கள் இமையவர் உலகை எய்துவர்.

குறிப்புரை:     போது - பூவின் முன்னைய பருவத்தது. மங்குல் - ஆகாயம். மதி தவழும் ஈச்சுரம் 
என்று கொண்டு. அத்திருக்கோயிலின் உயர்ச்சியைக் கருதுக. ஈச்சரத்தாருக்கு ஏற்றின் பிறையணிந்த 
வரலாறு குறித்ததாம். தங்கு சீர் - நிலைத்த சீர்த்தி. தண்டமிழ் என்றது இத்திருப்பதிகத்தை.

    The famous city of Pugaloor is full of cool water in plenty in ponds and tanks. 
Also the city is surrounded by big forests full of good trees with flowers. Here the temple 
in which our Lord of Pugaloor - Vartha-maaneech-charam is manifest is very big and tall 
towers reach the sky. Our saint Thiru-gnana-Sambandar who is a very famous scholar came 
to Pugaloor and praised our Lord, worshipped Him and sang ten divine songs on Him. 
Those devotees, who memorise, and chant devotedly these ten songs everywhere they visit, 
will reach the world of devas.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            92ஆம் பதிகம் முற்றிற்று
            End of 92nd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 229                பதிக எண் : 93

93. திருத்தெங்கூர்                 93. THIRU-TH-THENKOOR

பண்: பியந்தைக்காந்தாரம்            Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருத்தெங்கூர் என்னும் இத்திருத்தலமானது காவிரித் தென்கரைத் தலங்களுள் 116 ஆவது 
தலமாகும். இது திருநெல்லிக்காவிற்குத் தென்மேற்கில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
திருவாரூரிலிருந்து திருநெல்லிக்கா செல்லப் பேருந்துகள் உள்ளன. ஊரின் பெயர் தெங்கூர் 
என்றே சம்பந்தர் தேவாரத்தில் காணப்படுகிறது. சுந்தரர் ஊர்த்தொகையில் தேங்கூர் என்று  
குறிப்பிட்டுள்ளார். 'நாங்கூருறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே' என்பன அவர் வாக்கு.

    இறைவரின் திருப்பெயர் வெள்ளிமலை நாதர். இவ்வூர்த் திருப்பதிகத்தில் ஒவ்வொரு 
திருப்பாடலிலும் 'வெள்ளியங் குன்றமர்ந்தாரே' என்று இறைவர் திருப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார் 
சம்பந்தர். இறைவியாரின் திருப்பெயர் பெரிய நாயகி. திருமகளும், நவக்கோள்களும் 
பூசித்துப்  பேறு எய்தினர். திருமகள் வழிபட்ட இலிங்கம். அத்திருமகள் சந்நிதிக்கு எதிரில் இருக்கின்றது.

    இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. நவக்கிரகங்கள் பூசித்த லிங்கங்கள் 
உண்டு. அம்பாள் கோவில் தனியாக உள்ளது. அக்கோயில் தெற்கு பார்த்து அமையப்பெற்றுள்ளது. 
சுவாமி கோயிலுக்குத் தென்கிழக்குத் திக்கில் உள்ளது. அம்மன் உருவம் சிறியது. நவக்கிரகங்கள்
 பூசித்தன என்பதற்குப் பிரகாரத்தில் 9 லிங்கங்கள் இருக்கின்றன. 

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த நாயனார், திருவாரூர், திருக்காறாயில், தேவூர், திருநெல்லிக்கா, 
திருக்கைச்சினம் ஆகிய தலங்களை வழிபட்டு வந்த காலத்தில், தெங்கூரை அணைந்து பரவிப் 
பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2475.     புரைசெய்வல்வினைதீர்க்கும்புண்ணியர்விண்ணவர்போற்றக் 
    கரைசெய்மால்கடல்நஞ்சையுண்டவர்கருதலர்புரங்கள் 
    இரைசெய்தாரழலூட்டியுழல்பவரிடுபலிக்கெழில்சேர் 
    விரைசெய்பூம்பொழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        1

    புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் 
    கரை செய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் 
    இரை செய்து ஆரழலூட்டி உழல்பவர் இடுபலிக்கு எழில்சேர் 
    விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    purai cey valvinai tIrkkum puNNiyar, viNNavar pORRa, 
    karai cey mAl kaTal nanjcai uNTavar; karutalar puragkaL 
    irai ceytu Ar azalUTTi, uzalpavar, iTupalikku;--ezil cEr 
    virai cey pUmpozil-tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     துன்பம் செய்யும் வலிய வினைகளைத் தீர்க்கும் புண்ணியர்; தேவர்கள் போற்றித் 
துதிக்கவே பேரொலியுடன் கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; பகைவர்களின் மதில்களை 
மிக்க நெருப்பினுக்கு ஊட்டி இரை செய்தவர்; ஊரார் இடுகின்ற பிச்சைக்கு அலைந்து திரிபவர்; 
இத்தகைய இயல்புடையவர் நறுமணம் செய்கின்ற பூஞ்சோலைகளை உடைய திருத்தெங்கூர் 
வெள்ளியங்குன்றில் அமர்ந்தார்.

குறிப்புரை:     ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி, இடுபலிக்கு உழல்பவர் அமர்ந்தார் 
என்றார். தென்கு (தெங்கு)  + ஊர் = தெங்கூர். 

    The city 'Thenkoor' is surrounded by fascinating forest areas. Fragrance 
is always felt all around the area. Our Lord Civa is manifest in the temple called 
'Velliyan Kundru'. He removes past bad karma that causes ailments to the devotees. 
He is the embodiment of virtuous deeds. He imbibed the poison that came out of the 
sea. He was adored by devas. He burnt the three forts of asuras. He used to roam 
about to get alms.

2476.     சித்தந்தன்னடிநினைவார்செடிபடுகொடுவினைதீர்க்கும் 
    கொத்தின்தாழ்சடைமுடிமேற்கோளெயிற்றரவொடுபிறையன் 
    பத்தர்தாம்பணிந்தேத்தும்பரம்பரன்பைம்புனல்பதித்த 
    வித்தன்தாழ்பொழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        2

    சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை தீர்க்கும் 
    கொத்தின் தாழ் சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் 
    பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த 
    வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    cittam tan aTi ninaivAr ceTi paTu koTuvinai tIrkkum, 
    kottin tAzcaTai muTimEl kOL eyiRRu aravoTu piRaiyan; 
    pattar tAm paNintu Ettum paramparan; paimpunal patitta 
    vittan tAzpozil tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     சித்தத்தில் தன் திருவடிகளை நினைவாரின் பாவத்தில் தோன்றிய கொடிய 
வினைகளைத் தீர்ப்பவர்; முடிச்சு முடிச்சான தாழ்ந்த சடைமுடிமேல் கொல்லுகின்ற நச்சுப் 
பற்களையுடைய பாம்பினொடு பிறையையும் அணிந்தவர்; பத்தர்கள் பணிந்து ஏத்தும் 
பரம்பரன்; குளிர்ந்த புனலில் பதியச் செய்த விதையானவன் ஆகிய சிவன், அடர்ந்த 
பூஞ்சோலைகளை உடைய திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றில் அமர்ந்தார்.

குறிப்புரை:     தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க. சித்தத்தில் நினைவார். 
செடிபடு-  பாவத்தாலுண்டான. பிறையன் என்பது சிவனென்னும் பெயரளவாய் நின்று. தீர்க்கும் 
எனுமெச்சத்தைக் கொண்டது. கோள்- வலிமை, கொலை. புனல் பதித்த வித்தன் - நீரில் பதியச் 
செய்த விதையானவன் (தி.6 ப. 15 பா. 2) (திருவாசகம் 253).

      Our Lord Civa is manifest in Thenkoor city in the temple called 
Vellian Kundru. The city is surrounded by forest area where short trees are many. 
He removes the strong severe sins of devotees who think of Him with oneness of 
mind. His bulky entangled locks of hair is adorned by the young moon along with 
the snake which moves around the moon. The servitors prostrate and praise Him 
and worship Him. He is the age old Supreme Being. He resembles the seeds dropped 
in water.

2477.     அடையும்வல்வினையகலஅருள்பவரானலுடைமழுவாட் 
    படையர்பாய்புலித்தோலர்பைம்புனற்கொன்றையர்படர்புன் 
    சடையில்வெண்பிறைசூடித்தார்மணியணிதருதறுகண் 
    விடையர்வீங்கெழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        3

    அடையும் வல்வினை அகல அருள்பவர் ஆனலுடை மழுவாட் 
    படையர் பாய்புலித் தோலர் பைம்புனல் கொன்றையர் படர்புன் 
    சடையில் வெண்பிறை சூடித்தார் மணிஅணிதரு தறுகண் 
    விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    aTaiyum valvinai akala aruLpavar, anal uTai mazuvAL
    paTaiyar, pay pulittOlar, paimpunal konRaiyar, paTar pun        
    caTaiyil veNpiRai cUTit tAr maNi aNi taru taRukaN 
    viTaiyar vIgku ezil-tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     அடைந்த,  அடைய இருக்கின்ற வலிய வினைகள்  அகல அருள்பவர்;
வெப்பமுடைய மழுவாள் படையினர்; பாயும் புலியின் தோலை உடுத்தவர்; குளிர்ந்த 
புனலையும் கொன்றை மாலையையும் உடையவர்; படர்ந்த பொன்னிற  சடையில் 
 வெண்பிறையைச் சூடியவர்; கழுத்தில் மணியைத் தாராக அணிந்ததும் தறுகண்மை 
உடையதுமாகிய விடையை வாகனமாக உடையவர் ஆகிய இறைவர், மிக்க அழகுடைய 
தெங்கூர் வெள்ளியங்குன்றில் அமர்ந்தவரே.

குறிப்புரை:     வினை அகல அருள்பவர். விடை எருதுக்கு அதன் கழுத்தில் மணி கட்டுதல் 
உண்மையான், மணி அணிதிரு விடை எனப்பட்டது. தறுகண் - கொடுமை; அஞ்சத் தக்கவற்றிற்கு 
அஞ்சாமை. ‘தறுகணன் (நன்னூல்) கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு 
பொருள் பயத்தலை - அலக்கண், புண்கண், இடுக்கண் (இடுங்குகண்) வண்கண் முதலியவற்றிற் 
காண்க.

    Our Lord Civa is manifest in the very fascinating city of Thenkoor. He removes 
the severe sins of His devotees completely. He holds a battleaxe, which is very hot. 
He wears on His waist tiger's hide as His dress. His entangled locks of hair He adorns 
with Indian laburnum flowers. Near the flowers He retains the moon. He loves to sustain 
the white strong bull for His conveyance and He moves about on His bull. A bell has been 
tied round the neck of the bull and it goes on ringing whenever He moves fast.

2478.     பண்டுநான்செய்தவினைகள்பறையவோர்நெறியருள்பயப்பார் 
    கொண்டல்வான்மதிசூடிக்குரைகடல்விடமணிகண்டர் 
    வண்டுமாமலரூதிமதுவுணஇதழ்மறிவெய்தி 
    விண்டவார்பொழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        4

    பண்டு நான் செய்த வினைகள் பறையவோர் நெறி அருள் பயப்பார் 
    கொண்டல் வான்மதி சூடிக்குரை கடல் விட மணிகண்டர் 
    வண்டு மாமலர் ஊதி மதுவுண இதழ் மறிவு எய்தி 
    விண்டவார் பொழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    paNTu nAn ceyta vinaikaL paRaiya, Or neRi aruL payappAr; 
    koNTal vAnmati cUTi; kurai kaTal viTam aNi kaNTar
    vaNTu mA malar Uti matu uNa, itaz maRivu eyti 
    viNTa vAr pozil-tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     முன்பு நான் செய்த வினைகள் அழியச் சிறந்ததொரு வழியை அருள் செய்வார்;
 மேகம் தவழும் வானத்தில் உள்ள பிறைமதியைச் சூடியவர்; ஒலிக்கின்ற கடலில் பிறந்த விடம் 
தங்கிய நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்; வண்டுகள் பெரிய மலர்களிடத்து முரன்று 
தேனை உண்ண மலரிதழ்கள் அசைவெய்தி விரிந்த நீண்ட மலர்ச்சோலைகளக்  கொண்ட 
திருத்தெங்கூர் வெள்ளீயங்குன்றில் அமர்ந்தவரே.

குறிப்புரை:     பறைய - அழிய, பயப்பார். கொண்டல் - மேகம். வானிற்கு அடை. குரைகடல் - 
முழங்கும் கடல். வண்டு... விண்ட பொழில் - இயற்கை உணர்த்திற்று.

    The city Thenkoor is surrounded by many forest areas. Here tall trees and plants 
with good flowers are many. The beetles come in large numbers to suck the honey in these 
flowers. As the beetles disturb the buds they all blossom. In this city, our Lord Civa 
is manifest in the temple called Velliyan Kundru. He eradicates the entire sins that 
accrued in the past births due to bad karma and graces me by giving virtuous divine
knowledge. He retains on His head the baby moon moving in the sky. His neck is dark
blue in colour like sapphire because He imbibed the poison that came out of the 
milky ocean.

2479.     சுழித்தவார்புனற்கங்கைசூடியோர்காலனைக்காலால்             
    தெழித்துவானவர்நடுங்கச்செற்றவர்சிறையணிபறவை 
    கழித்தவெண்டலையேந்திக்காமனதுடல்பொடியாக 
    விழித்தவர்திருத்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        5

    சுழித்தவார் புனல் கங்கை சூடியோர் காலனைக் காலால்             
    தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறை அணி பறவை 
    கழித்த வெண்தலை ஏந்திக் காமனது உடல் பொடியாக 
    விழித்தவர் திருத்தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    cuzitta vAr punal kagkai cUTi, Or kAlanaik kAlAl            
    tezittu, vAnavar naTugkac ceRRavar, ciRai aNi paRavai 
    kazitta veNtalai Enti; kAmanatu uTal poTi Aka 
    vizittavar--tirut tegkUr veLLi amkunRu amarntArE.

பொருள்:     சுழற்சியைக் கொண்ட மிக்க புனலுடைய கங்கையைச் சிரசில் சூடியவர்; கொலைத் 
தொழிலில் ஒப்பற்ற காலனைச் சினந்து அதட்டிக் காலால் தேவர்கள் நடுக்கங் கொள்ள அழித்தவர்; 
அன்னப்பறவையை வாகனமாகக் கொண்ட பிரமனின் வெண்மையான கபாலத்தில் பிச்சை ஏந்தியவர்; 
மன்மதனின் உடலைச் சாம்பலாகும்படி விழித்து எரித்தவர் ஆகிய இறைவர் திருத்தெங்கூர் 
வெள்ளியங்குன்றில் அமர்ந்தாரே.

குறிப்புரை:     சுழித்த- சுழற்சியைச் செய்த. தெழித்து- கோபித்து. சிறையணிபறவை             
கழித்த    வெண்டலை - பிரமகபாலம். அன்னப்பறவையான காரணம் பற்றியது. 

    Our Lord Civa is manifest in Thiru-th-thenkoor temple Velliyan Kundru. He supports 
the river Ganges in His matted hair. He kicked Kaalan, the deity for death. On seeing this 
event the celestials trembled. The tutelary deity Brahma took the form of a swan and flew 
high in the sky. Our Lord holds Brahma's skull in His hand to receive alms. He opened His 
third eye in the forehead and burnt the body of Kaaman, the god of love .

2480.     தொல்லைவல்வினைதீர்ப்பார்சுடலைவெண்பொடியணிசுவண்டர் 
    எல்லிசூடிநின்றாடுமிறையவரிமையவரேத்தச் 
    சில்லைமால்விடையேறித்திரிபுரந்தீயெழச்செற்ற 
    வில்லினார்திருத்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        6

    தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் 
    எல்லி சூடி நின்றாடு மிறையவர் இமையவர் ஏத்தச் 
    சில்லை மால் விடை ஏறித் திரிபுரந் தீஎழச் செற்ற 
    வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    tollai valvinai tIrppAr; cuTalai veNpoTi aNi cuvaNTar; 
    elli cUTi ninRu ATum iRaiyavar, imaiyavar Etta, 
    cillai mAlviTai ERi, tiripuram tI ezac ceRRa
    villinAr--tirut tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     முன்பு ஈட்டிய வலிய வினைகள் இரண்டையும் தீர்ப்பார். சுடுகாட்டுச் சாம்பலை 
அணியும் வீரர்; தண்ணொளியுடைய திங்களைச் சூடி ஆடும் இறையவர்; தேவர்கள் போற்றி செய்யச் 
சிலைக்கும் பெரிய எருதினை ஊர்த்து முப்புரம் தீயெழ அழித்த மலைவில்லை உடையவர் ஆகிய 
இறைவர் திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றில் அமர்ந்தாரே.

குறிப்புரை:     தொல்லைவினை - பூர்வகர்மம், பிராரப்தம், சஞ்சிதம் இரண்டும். சுவண்டர் - 
சு- அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை. 'சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே' 
(தி. 7 பா. 470) என்பது கொண்டு முன் பொருத்தம் என்றும். அது இங்குப் பொருந்தாது. 
எல்லி - தண்ணொளியுடைய திங்கள். எல் - ஒளி. சில்லை - இழிவு. பாசக்கடற்குளே வீழ்கின்றதே 
இழிவு. வில்லினார் - மேருமலையாகிய  வில்லை உடையார்.

    Our Lord Civa is manifest in Thiru-th-thenkoor temple known as Velliyan Kundru. 
He eradicates the sins of past karma of devotees. He applied the holy ashes of the 
burning ghat over His body. His avocation is to dance. He does so retaining the moon on 
His matted hair. He is the holder of a big bow. He rode on His bull and fired and 
destroyed completely the three forts of asuras,when the celestials prayed to our
Lord Civa for His help.

2481.     நெறிகொள்சிந்தையராகிநினைபவர்வினைகெடநின்றார் 
    முறிகொள்மேனிமுக்கண்ணர்முளைமதிநடுநடுத்திலங்கப் 
    பொறிகொள்வாளரவணிந்தபுண்ணியர்வெண்பொடிப்பூசி 
    வெறிகொள்பூம்பொழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        7

    நெறிகொள் சிந்தையராகி நினைபவர் வினைகெட நின்றார் 
    முறிகொள் மேனி முக்கண்ணர் முளைமதி நடுநடுத்து இலங்கப் 
    பொறிகொள் வாளரவு அணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி 
    வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    neRi koL cintaiyar Aki ninaipavar vinai keTa ninRAr; 
    muRi koL mEni mukkaNNar; muLaimati naTu naTuttu ilagka, 
    poRi koL vAL aravu aNinta puNNiyar; veNpoTippUci 
    veRi koL pUmpozil-tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     சிவநெறியில் பயிலும் சிந்தை உடையவராகித் தன்னை தியானிப்பவரின் 
வினைகெடும்படித் துணையாக நின்றவர்; செந்தளிர் போன்ற மேனியர்; முக்கண்ணர்; பிறை மதி 
நடுநடுங்கி விளங்க அதனுடன் புள்ளிகளையுடைய கொல்லும் பாம்பினையும் சேர்த்து அணிந்தவர்; 
புண்ணியர்; திருநீற்றினைப் பூசியவர் ஆகிய இறைவர் மிக்க மணமுடைய பூம்பொழில் திருத்தெங்கூர் 
வெள்ளியங்குன்றில் அமர்ந்தாரே.

குறிப்புரை:     நெறி - திருநெறி. முறி - தளிர். முளைமதி - பிறை. வெறி - மணம்.

    Our Lord Civa is manifest in the temple known as Velliyan Kundru situated in the 
city of Thiru-th-thenkoor. The city is surrounded by big forest areas full of flower plants. 
The flowers blossom and spread fragrance all over the area. He smears His body with holy 
ashes. Those devotees who live honestly with virtuous mind and think always 
about God Civa will get rid of their sins. His body is very fine like tender leaves and 
He has three eyes. The moon He retains on His head gets freightened to see the snake 
moving around His head.

2482.     எண்ணிலாவிறலரக்கனெழில்திகழ்மால்வரையெடுக்கக் 
    கண்ணெலாம்பொடிந்தலறக்கால்விரலூன்றியகருத்தர் 
    தண்ணுலாம்புனற்கண்ணிதயங்கியசடைமுடிச்சதுரர் 
    விண்ணுலாம்பொழில்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        8

    எண்ணிலா விறலரக்கன் எழில்திகழ் மால்வரை எடுக்கக் 
    கண்ணெலாம் பொடிந்து அலறக்கால் விரல் ஊன்றிய கருத்தர் 
    தண்ணுலாம் புனல் கண்ணி தயங்கிய சடை முடிச்சதுரர் 
    விண்ணுலாம் பொழில் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    eN ilA viRal arakkan ezil tikaz mAlvarai eTukka, 
    kaN elAm poTintu alaRa, kAlviral UnRiya karuttar; 
    tan ulAm punal kaNNi tayagkiya caTai muTic caturar        
    viN ulAm pozil tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     அளவில்லாத ஆற்றலுடைய அரக்கன் இராவணன் அழகு விளங்கும் கயிலை 
மால்வரையை எடுக்க, அவனுடைய இருபது கண்களும் நீர் சொரிந்து அலறக் கால்விரல் ஊன்றிய 
தலைவர்; குளிர்ச்சி தங்கிய கங்கையில் பிறையாகிய கண்ணி அசையும் சடைமுடியை உடைய 
திறலர் ஆகிய இறைவர் விண்ணளவு ஓங்கிய பொழில்களையுடைய திருத்தெங்கூர் 
வெள்ளியங்குன்றில் அமர்ந்தாரே. 

குறிப்புரை:     எண்- கணக்கு. விறல் - வலிமை. கருத்தர்- தலைவர் வினை முதல்வர். கண்ணி - கங்கை. 
பிறைக்கண்ணியுமாம். விண் உலாம் பொழில் - சோலையுயர்வு குறித்தது.

    Lord Civa is manifest in the temple known as Velliyan Kundru in the city of 
Thiru-th-thenkoor. The city is surrounded by very big forest areas. Here the trees are 
all very big and tall,covering the sky. The king of Sri Lanka has immeasurable prowess 
in abundance. He once came near the Himalayas mountain and tried to displace the mountain. 
While he was trying to do it, our Chief Lord Civa slightly pressed the top area of the
mountain with His toe. At that moment Raavanan's eyes were crushed and he wept and swaggered. 
The Lord supports the cool river Ganges on His matted hair.

2483.     தேடித்தானயன்மாலுந்திருமுடியடியிணைகாணார் 
    பாடத்தான்பலபூதப்படையினர்சுடலையிற்பலகால் 
    ஆடத்தான்மிகவல்லாருச்சுனற்கருள்செயக்கருதும் 
    வேடத்தார்திருத்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.    9

    தேடித்தான் அயன்மாலும் திருமுடி அடியிணை காணார் 
    பாடத்தான் பலபூதப் படையினர் சுடலையிற் பலகால் 
    ஆடத்தான் மிகவல்லாருச் சுனற்கருள் செயக்கருதும் 
    வேடத்தார் திருத்தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    tETittAn, ayan mAlum, tirumuTi aTi iNai kANAr; 
    pATattAn pala pUtappaTaiyinar; cuTalaiyil palakAl 
    ATattAn mika vallar; aruccunaRku aruL ceyak karutum 
    vETattAr tirut tegkUr veLLi am kunRu amarntArE.

பொருள்:     அயனும் மாலும் முறையே தம்முடைய திருமுடியினையும் திருவடியினையும் 
தேடித்தான் காணார்; பாடுவதற்கு பல சிவகணங்களை உடையவர்; சருவ சங்கார காலத்தில் 
அனைத்தும் அழிந்தொழிந்த நிலைக்களத்தில் புனருற்பவத்தின் பொருட்டு ஐந்தொழிற் கூத்து 
ஆடுவதற்குத்தான் மிக வல்லவர்; அருச்சுனனுக்கு அருள்செயக் கருதும் வேட்டுவக் கோலத்தார் 
ஆகிய இறைவர் திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றில் அமர்ந்தாரே.

குறிப்புரை:     அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடித் தான்காணார். 
இணை- ஒத்தன (இரண்டும்). பாட ... படையினார் - பாட என்னும் வினையெச்சம் படையை உடையவர் 
என்பதில்  உள்ள உடையவர் எனும் வினைக் குறிப்பைக் கொண்டது, ஆடவல்லர். வேடத்தார் - 
வேட்டுவக் கோலத்தார்.

    The tutelary deities Brahma and Thirumaal went out in the universe to search and 
see our Lord's holy head and holy feet, but both failed in their attempts. Our Lord's army 
of Bhutas goes on singing and dancing in the burning ghat where our Lord dances for long. 
He graced Arjuna in the guise of a hunter. This Lord resides in Thiru-th-thenkoor.

2484.    சடங்கொள் சீவரப்போர்வைச்சாக்கியர்சமணர்சொல்தவிர 
    இடங்கொள்வல்வினை தீர்க்குமேத்துமினிருமருப்பொருகைக் 
    கடங்கொள்மால்களிற்றுரியர்கடல்கடைந்திடக்கனன்றெழுந்த 
    விடங்கொள்கண்டத்தார்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரே.        10

    சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர 
    இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்தும் இனிருமருப் பொருகைக் 
    கடங்கொள் மால்களிற்று உரியர் கடல் கடைந்திடக் கனன்று எழுந்த
    விடங்கொள் கண்டத்தார் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரே.

    caTam koL cIvarap pOrvaic cAkkiyar, camaNar, col-tavira, 
    iTam koL valvinai tIrkkum; Ettumin-irumaruppu orukaik 
    kaTam koL mAl kaLIRRu uriyar, kaTal kaTaintiTak kananRu ezunta 
    viTam koL kaNTattar, tegkUr veLLi am kunRu amarntArE!

பொருள்:     உடலின்மேல் துவரூட்டிய போர்வை போர்த்த சாக்கியர், சமணர்கள் தவிர்க்கும், 
மாயையைப் பற்றுக்கோடாகக் கொண்ட வல்வினையைத் தீர்க்கும், இரண்டு பெரிய தந்தங்களையும் 
ஒரு பெரிய துதிக்கையினையும் மதநீரையுங் கொண்ட பெரிய களிற்றின் தோலைப் போர்த்தியவர்; 
கடலைக் கடைந்திட கனன்று எழுந்த நஞ்சினைக் கொண்ட கண்டத்தினர் ஆகிய இறைவர் திருத்தெங்கூர் 
வெள்ளியங்குன்றமர்ந்தாரே அவரை ஏத்துமின்.

குறிப்புரை:     சடம் - உடம்பு, பொய். இடம் கொள் - மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்ட. 
இருமருப்பு- இரண்டு (பெருங்) கொம்பு. கடம் - மதநீர். களிற்றுரியர் - யானைத்தோலர். 
கனன்று - வெம்மை வீசி.

    In the city of Thiru-th-thenkoor, the Jains and Buddhists wear ochre cloth, 
and go on preaching false propaganda against our Lord and against our saiva religion. 
Our lord got disgusted with those two religionists and hated them, whereas He eradicates 
the sins of His devotees accrued from the past bad karma and graces them. He covered 
His body with the hide of the big elephant, which He killed and ripped off. The elephant 
has two big tusks. He imbibed the poison which came out of the milky ocean while it was 
churned by devas and asuras. He kept the poison in His throat, and gave the appearance 
of sapphire, which is dark blue in colour.

2485.     வெந்தநீற்றினர்தெங்கூர்வெள்ளியங்குன்றமர்ந்தாரைக் 
    கந்தமார்பொழில்சூழ்ந்தகாழியுள்ஞானசம்பந்தன்
     சந்தமாயினபாடல்தண்டமிழ்பத்தும்வல்லார்மேல் 
    பந்தமாயினபாவம்பாறுதல்தேறுதல்பயனே.        11

    வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியம் குன்று அமர்ந்தாரைக் 
    கந்தமார் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் 
    சந்தமாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் 
    பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

    venta nIRRinar tegkUr veLLi am kunRu amarntArai, 
    kantam Ar pozil cUznta kAziyuL njAnacampantan, 
    cantam Ayina pATal-taNtamiz pattum vallArmEl,
    pantam Ayina pAvam pARutal tERutal payanE.

பொருள்:     சுட்ட திருநீற்றினர்; திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்தார் ஆகிய இறைவரை 
மணம் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் பாடிய சந்தமுடைய தண்டமிழ் 
திருப்பதிகப் பாடல்கள் பத்தும் வல்லவர்கள் மேல் வினைப்பற்று உண்டாவதற்கு ஏதுவான பாவங்கள் 
நீங்கி ஓடுதலும் தெளிதலும் அடையும் பயனாம்.

குறிப்புரை:     சந்தம் ஆயின பாடல்- சந்தப்பாடல். பந்தம் ஆயின பாவம் - வினைப்பற்று உண்டாவதற்கு 
ஏதுவான பாவங்கள். பாறுதல் - ஓடுதல். தேறுதல் - தெளிதல்.

    Our Lord Civa is manifest in the temple known as Velliyan Kundru. He smears His body 
with holy ashes. Our Thiru-gnana-Sambandar was born in Seerkaazhi. This city is surrounded 
by vast big areas with sweet smelling flower plants. He came to Thiru-th-thenkoor, worshipped 
our Lord. Then he chanted these ten verses - a special verse called Chandap-paadal (stanza of 
four lines with four to twenty-six syllables to a line). Those devotees who can memorise these 
ten verses and chant them before our Lord will get rid of their sins accumulated from previous 
births. Their minds will get very clear ideas and all benefits.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            93ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 93rd Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 230                        பதிக எண்: 94

94.திருவாழ்கொளிபுத்தூர்                        94. THIRU-VAAZH-KOZHI-PUTH-OOR

பண்: பியந்தைக்காந்தாரம்                    Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருவாழ்கொளிபுத்தூர் என்னும் இத்திருத்தலமானது மதுரை, இராமசுவாமிப் பிள்ளை என்னும் 
ஞானசம்பந்தப் பிள்ளையால் அச்சிடப்பெற்ற தேவாரத்தில், வாள்கொளி புத்தூர் என்றும், வேறுசில 
பதிப்பில், வாளொளி புற்றூர் என்றும் காணப்பெறுகின்றது. சேக்கிழார், பெரிய புராணத்தில் 
திருவாழ்கொளிபுத்தூர்  என்றே குறித்துள்ளனர். 

    மயிலாடுதுறை - சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில் நீடூர் தொடர் வண்டி நிலையத்திற்கு 
வடக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இக்காலம் மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய ஊர்களிலிருந்து 
பேருந்து வசதியும் உண்டு. வைத்தீசுவரன் கோயிலுக்கு நேர் மேற்கிலும் 10 கி.மீ. அளவே. இறைவர் 
திருப்பெயர் மாணிக்க வண்ணர். இது திருமேனியின் ஒளிகாரணமாக ஏற்பட்ட திருப்பெயராகும். 
இப்பெயரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூர்க்குரிய ஒவ்வொரு திருப்பாட்டிலும், 'வாழ்கொளிபுத்தூர் 
மாணிக்கத்தை மறந்து என்நினைக்கேனே' என இப்பெயரை எடுத்தாண்டுள்ளார்கள்.

     இறைவி திருப்பெயர் வண்டமர் பூங்குழலி. இத்திருப்பெயரை, ஞானசம்பந்தர் 
இவ்வூர்ப் பதிகம் பாடல் எட்டில், 'வண்டமர்பூங்குழல் மங்கையொர் பாகமாயவன்' என்று குறித்தருளினார். 
திருமால், அருச்சுனன் ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றார்கள். துர்க்காதேவியாரும் வழிபட்ட தலம். 
துர்க்கைக்கு வழிபாடு இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. வாசுகி வழிபட்ட தலம். அவ்வாசுகிக்கு 
ஆண்டுதோறும் அபிடேக பூஜை நடைபெறுகின்றது. அருச்சுனனது வாளாயுதத்தை ஈசுவரன் 
மறைத்து வைக்கும் ஆற்றால் அவனை ஆட்கொள்ளக் கருதினார். வாளை எடுத்துச் செல்லும் வழியில், 
அவன் அதைத் தேடிவர, வாகையிலைகளை அறிகுறியாக இட்டுச் சென்றான். வாளிருந்த இடத்தில் 
வாசுகி மறைத்திருந்தது. அதை வழிபட்டு வாளைப் பெற்றான் அருச்சுனன். அக்காரணத்தால் 
வாளொளிபுற்றூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

    தலவிருட்சம் வாகை. நெடுங்காலம் அது நின்றது. கி.பி. 1951ல் அம்மரம் பட்டுவிட்டது.
ஆனால்,

    'வாகை நுண்டுளி வீசும் 
    வாழ்கொளி புத்தூரு ளாரே'

என வரும் தேவார அடிகளிலே இன்று அந்த வாகை வாழ்கிறது. திரிசிரபுரம் மகாவித்துவான், 
திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது. 
இப்புராணத்தை எழுதுவித்தவர் புலவர் திரு. அ. ஐயாத்துரைப் பிள்ளை அவர்கள். இத்தலத்திற்கு
ஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    காழிவேந்தர், திருப்பந்தணைநல்லூரையும், திருவோமாம்புலியூரில் உள்ள வடதளியையும் 
வழிபட்டு, 'அலர்ந்த செந்தமிழ்ச் சொற்றொடை' பாடி, பிரியா விடைபெற்று, மதில் சூழ்ந்த பொற்பதியாகிய
 வாழ்கொளிபுத்தூர் அடைந்து போற்றிப் புனைந்தவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2486.     சாகையாயிரமுடையார்சாமமுமோதுவதுடையார் 
    ஈகையார்கடைநோக்கியிரப்பதும்பலபலவுடையார் 
    தோகைமாமயிலனையதுடியிடைபாகமுமுடையார் 
    வாகைநுண்டுழிவீசும்வாழ்கொளிபுத்தூருளாரே.        1

    சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவது உடையார் 
    ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபல உடையார் 
    தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார் 
    வாகை நுண்டுழி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    cAkai Ayiram uTaiyAr, cAmamum Otuvatu uTaiyAr, 
    IkaiyAr kaTai nOkki irappatum palapala uTaiyAr; 
    tOkai mA mayil anaiya tuTiyiTai pAkamum uTaiyAr
    vAkai nuN tuLi vIcum vAzkoLiputtUr uLArE.

பொருள்:     வாகை மரம் நுண்துளிகளைச் சிந்தும் திருவாழ்கொளிபுத்தூருளார், வேதத்தின் 
எண்ணற்ற சாகைகளின் பொருளை உடையவர்; சாமவேதம் ஓதுவதை உடையார். ஈகை உடையார்; 
வாயிற்கடையில் நின்று பிறரிடம் இரப்பதும் பல உடையார்; தோகையை உடைய மயிலேறுவின் 
சாயலையும் துடிபோன்ற இடையையும் உடையவளாகிய உமையைப் பாகமாகவும் உடையார்.

குறிப்புரை:     சாகை- வேதநூற்பிரிவு. சாமம்- சாமவேதம். ஈகை - வினைத்தொகை. வார்ந்த 
நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி (திருவாசகம் 73) இட்டும் வட்டியும் ஈ தொழில் 
பேணில் என்? (தி. 5 ப. 99 பா. 3) என்பவற்றில் உள்ள வினைத் தொகையை நோக்குக.

    Our Lord Civa is manifest in Vaazh-kozhi-puth-oor city. Here fragrant sirissa 
trees grow in large numbers. The fine tender leaves fall in large numbers from the trees. 
He is the Chief Author of the various inner sections in Vedas. He used to sing divine 
songs in the peculiar tone called Saama Kaanam. He moves in different postures to those 
houses to get alms from the owners. He has happily accommodated Uma Devi on the left 
half of His body. She is brilliant like the graceful peacock and her waist is slender 
like the middle of the drum.

2487.     எண்ணிலீரமுமுடையாரெத்தனையோரிவரறங்கள் 
    கண்ணுமாயிரமுடையார்கையுமொராயிரமுடையார் 
    பெண்ணுமாயிரமுடையார்பெருமையோராயிரமுடையார் 
    வண்ணமாயிரமுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        2

    எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோர் இவர் அறங்கள் 
    கண்ணும் ஆயிரம் உடையார் கையுமொர் ஆயிரமுடையார் 
    பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமையோர் ஆயிரம் உடையார் 
    வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    eNNil Iramum uTaiyAr; ettanaiyO ivar aRagkaL
    kaNNum Ayiram uTaiyAr; kaiyum Or Ayiram uTaiyAr; 
    peNNum Ayiram uTaiyAr; perumai Or Ayiram uTaiyAr; 
    vaNNam Ayiram uTaiyAr--vAz koLiputtUr uLArE.

பொருள்:     உயிர்களிடத்து அளவில்லாத அன்புடையவர்;  இவருடைய அறங்கள் எத்தனையோ; 
இவர் ஆயிரங்கண்ணர்; இவர் கைகள் ஆயிரம் உடையர்; பெண்ணும் ஆயிரம் உடையவர்; அளவற்ற 
பெருமைகள் உடையவர்; அளவற்ற வடிவங்கள் உடையர்; இவர் திருவாழ்கொளிபுத்தூருளாரே.

குறிப்புரை:     எண் இல் ஈரம் - 'அளவுபடாததோர் அன்பு' (தி. 4 ப. 3 பா. 10). எண்ணில் - ஆராய்ந்தால் 
எனலுமாம். இவர் அறங்கள் எத்தனையோர் என்று கொள்க. அறங்கள் எத்தனை? எத்தனை (யுடை)யோர்? 
இவர் எத்தனையோர்? தனை - அளவு ஆயிரங்கண்ணர். ஆயிரங்கையர். பெண்ணும் ஆயிரம் உடையார் - 
சிவசக்தியை உடையது சிவம். சிவமும் சத்தியும் உருவம் முதலியவை இல்லாத உயர்வின. அவற்றில் 
ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆற்றலைப் பெண்மையாயும் ஆற்றலுடையதை ஆண்மையாயும் 
உருவகித்தமையால், உண்மையிற் பெண் என்றும் அஃது ஆயிரம் என்றும் கொண்டு ,நினைப்பென்னும் 
நெடுங்கிணற்றில் விழுதல் பெரும்பாவமாகும். சிவசக்தியும் சிவமும், அவ்வச்சத்திகட்கு இடமாய 
விந்துவும் முறையே பலவேறு வகையான விருத்திப்பட்டும் நிற்கும். சிவஞான மாபாடியத்தில் 
சூ.2 அதி. 2ஆல் அறியலாம்.

    Our Lord is manifest in Vaazh-kozhi-puth-oor temple. He shows love and grace to 
devotees in innumerable ways. Those people who were graced with virtue are numerous. 
He has thousand eyes. He has thousand hands. He is the embodiment of  goddess Sakthi 
and owns numerous items. He has done very famous deeds. His appearance is various.

2488.     நொடியோராயிரமுடையார்நுண்ணியராமவர்நோக்கும் 
    வடிவுமாயிரமுடையார்வண்ணமுமாயிரமுடையார் 
    முடியுமாயிரமுடையார்மொய்குழலாளையுமுடையார் 
    வடிவுமாயிரமுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        3

    நொடியோர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆமவர் நோக்கும் 
    வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் 
    முடியும் ஆயிரம் உடையார் மொய் குழலாளையும் உடையார் 
    வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    noTiOr Ayiram uTaiyAr; nuNNiyar Am, avar nOkkum;         
    vaTivum Ayiram uTaiyAr; vaNNamum Ayiram uTaiyAr; 
    muTiyum Ayiram uTaiyAr; moykuzalALaiyum uTaiyAr; 
    vaTivum Ayiram uTaiyAr--vAzkoLiputtUr uLArE.

பொருள்:     நொடி ஒரு ஆயிரம் உடையார்; நோக்குக்கு நுண்ணியர் அவர்; நோக்கும் நோக்கமும் 
எண்ணிலாதவை; நிறமும் அளவிலாதன உடையவர்; ஆயிரம் முடிகளை உடையார்; மொய்த்த 
கூந்தலாளாகிய உமையைப் பாகமாக  உடையார்; எண்ணற்ற வடிவுகளை உடையவர்;  அவ்விறைவர் 
திருவாழ்கொளி புத்தூருளாரே. 

குறிப்புரை:     நுண்ணியர் - 'நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே' திருவா. 1 அடி 76.

    Our Lord Civa is manifest in Vaazh-kozhi-puth-oor. He is illustrious in time measurement.
He is a minute Supreme Being. His visibility is in many different aspects and ways. He exposes
Himself in many different colours. His hair is of many kinds. He retains His consort Uma Devi 
on the left side of His body. He takes very many forms according to His need. His hair is of
various types. He exposes himself in many shapes.

2489.     பஞ்சிநுண்துகிலன்னபைங்கழற்சேவடியுடையார் 
    குஞ்சிமேகலையுடையார்கொந்தணிவேல்வலனுடையார் 
    அஞ்சும்வென்றவர்க்கணியாரானையினீருரியுடையார் 
    வஞ்சிநுண்ணிடையுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        4

    பஞ்சி நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார் 
    குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல்வலன் உடையார் 
    அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரியுடையார்         
    வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    panjci nuN tukil anna paigkazal cEvaTi uTaiyAr; 
    kunjci mEkalai uTaiyAr; kontu aNi vEl valan uTaiyAr; 
    anjcum venRavarkku aNiyAr; Anaiyin Iruri uTaiyAr; 
    vanjci nuNNiTai uTaiyAr--vAzkoLiputtUr uLArE.

பொருள்:      பஞ்சிலான  நுண்ணிய துகில்போல மென்மையானதும் பசிய கழல்  
அணிந்ததுமாகிய  சிவந்த திருவடிகளை உடையவர்; தலைமுடிமேல் துணியைப் போர்த்தியவர்;  
சினமிக்க வேலின்  வலத்தை  உடையார்; பொறிவாயில் ஐந்தும் அவித்தவர்களுக்கு நெருக்கமானவர்; 
ஆனையின் உரித்த ஈரமான தோலை உடையவர்;  கொடி போன்ற நுண்ணிய இடையுடைய உமையைப் 
பாகத்தில் உடையார் ஆகிய இறைவர் திருவாழ்கொளிபுத்தூரரே.

குறிப்புரை:     சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது. குஞ்சி மேகலையுடையார்- சைவத் துறவியர் 
சடைமுடி மறைக்கும் கல்லாடையைக் குறித்தது போலும். குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ? 
மகளிர் இடையில் அணிவது மேகலை. இங்குக் குஞ்சி (தலைமயிர்) மேல் உடையது மேகலை என்று 
குறிக்கின்றது. கொந்து -கோபம் (ஞானாமிர்தம்). அஞ்சும் வென்றவர் - பொறிவாயில் ஐந்தவித்தார். 
இடைக்கு உவமை வஞ்சிக்கொடி.

    Our Lord Civa is manifest in the temple in Vaazh-kozhi-puth-oor city. In this city, 
girls with slender body like the vine 'common rattan of South India' live in large numbers. 
He wears rich attire. His foot is red in colour like red lotus flower. In His hairlocks 
He wears a cloth.He holds a battleaxe to represent His victory. He fixes bunches of flowers 
at the top of the battleaxe. He is very near His devotees who have repressed the sensations 
of the five sensory organs. He has covered His body with the hide of an elephant.

2490.     பரவுவாரையுமுடையார்பழித்திகழ்வாரையுமுடையார் 
    விரவுவாரையுமுடையார்வெண்டலைப்பலிகொள்வதுடையார் 
    அரவம்பூண்பதுமுடையாராயிரம்பேர்மிகவுடையார்                 
    வரமுமாயிரமுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        5

    பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் 
    விரவுவாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வதும் உடையார் 
    அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம்பேர் மிகவுடையார் 
    வரமும் ஆயிரமுடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    paravuvAraiyum uTaiyAr; pazittu ikazvAraiyum uTaiyAr; 
    viravuvAraiyum uTaiyAr; veN talaip pali koLvatu uTaiyAr; 
    aravam pUNpatum uTaiyAr; Ayiram pEr mika uTaiyAr;             
    varamum Ayiram uTaiyAr--vAzkoLiputtUr uLArE.                

பொருள்:     தன்னைத் துதிப்போரையும் அடியவர்களாக உடையார்; தன்னைப் பழித்து 
இகழ்பவரையும் அடியவர்களாக உடையார்; தன்னொடு கலந்து நிற்கும் மெய்யன்பர்களையும் 
அடியவர்களாக உடையார்; வெண்மையான தலையில் பிச்சை ஏற்றலை உடையவர்; 
பாம்பினை  அணியாகப் பூண்பதை உடையவர்; திருநாமம் பேராயிரத்திற்குமேலாக உடையவர்; 
அளவற்ற வரங்கள் ஈயும் கொடையும் ஆற்றலும் உடையவர்; இறைவராகிய அவர் 
திருவாழ்கொளிபுத்தூருளாரே.

குறிப்புரை:     விரவுவார் - மெய்யன்புடைய அடியார். 'பரவுவார் இமையோர்கள் ... விரவுவார் 
மெய்யன்பின் அடியார்கள்' திருவா. 21-விரவுதல். 'கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்' 
(திருவா 485).'எனைக் கலந்து' (திருவா.84). கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே 
(திருவா 105)

    Our Lord is manifest in Vaazh-kozhi-puth-oor. There the deceptive people and other 
religionists who take vengeance and despise Civa's followers also live. However, Civa without 
caring for them, looks after His devotees and the devas who follow our God. He takes alms 
in Brahma's skull. He adorns His body with snakes. He is addressed with thousand names. 
He graces people granting their wishes.

2491.     தண்டுந்தாளமுங்குழலுந்தண்ணுமைக்கருவியும்புறவில் 
    கொண்டபூதமுமுடையார்கோலமும்பலபலவுடையார் 
    கண்டுகோடலுமரியார்காட்சியுமரியதோர்கரந்தை 
    வண்டுவாழ்பதியுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.             6

    தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில் 
    கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபலவுடையார் 
    கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை 
    வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    taNTum tALamum kuzalum taNNumaikkaruviyum puRavil 
    koNTa pUtamum uTaiyAr; kOlamum pala pala uTaiyAr; 
    kaNTu kOTalum ariyAr; kATciyum ariyatu; Or karantai         
    vaNTu vAz pati uTaiyAr--vAzkoLiputtUr uLArE.

பொருள்:     தண்டு, தாளம், குழல், தண்ணுமைக்கருவி, புறங்காட்டில் பூதமும் உடையார்; 
பலபல கோலங்களும் உடையார்; கண்டுகொள்வதும் அரியவர்; காட்சிக்கும் அரியவர்; 
கரந்தைப் பூவில் வண்டு வாழ்கின்ற பதியை உடையார்; அவர் திருவாழ்கொளி   புத்தூருடையாரே.

குறிப்புரை:     தண்டு, தாளம், குழல், தண்ணுமைக்கருவி, பூதம், பல பல கோலம். காட்சியருமை. 
கண்டு கொள்ளலருமை ஆகியவற்றை இறைவன் உடையவன். தண்டு- வீணை. சிவிகை என்றும் 
பொருள் உண்டு. அஃது இங்குப் பொருந்தாது. தாளம் முதலிய இன்னிசைக் கருவிகளாகிய இனம்பற்றி 
வீணை என்பதே. 'வேயுறு தோளிபங்கன் ... மிக நல்ல வீணை தடவி' (தி. 2 ப. 85 பா. 1). கரந்தைப் பூவில் 
வண்டு வாழ்கின்ற வளமுடையபதி, 'செஞ்சடைசேர் கரந்தையான்' (தி. 1 ப. 61 பா. 3). அவர் காட்சி 
கொடுப்பதும் அரிது. அவரைக் கண்டு கொள்வதும் அரிது என்பதன் உண்மை. அத்துவிதமாய் 
நின்றுணர்வோர்க்கே விளங்கும்.

    Our Lord Civa is manifest in Vaazh-kozhi-puth-oor city. In this city, fragrant 
basil plants grow in large numbers. Beetles live in these flowers in large numbers. Such
a fertile area is Vaazh-kozhi-puth-oor. Our Lord holds a kind of drum that could create
sound when both our hands are used, flute, thannumer and along with this the bhutas
who reside in forest- all these He manages. He takes multifarious shapes. He could 
not be seen; He is a variety.

2492.     மானவாழ்க்கையதுடையார்மலைந்தவர்மதிற்பரிசறுத்தார் 
    தானவாழ்க்கையதுடையார்தவத்தொடுநாம்புகழ்ந்தேத்த 
    ஞானவாழ்க்கையதுடையார்நள்ளிருள்மகளிர்நின்றேத்த 
    வானவாழ்க்கையதுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        7

    மான வாழ்க்கையது உடையார் மலைந்தவர் மதிற்பரிசு அறுத்தார் 
    தான வாழ்க்கையது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த 
    ஞான வாழ்க்கையது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த 
    வான வாழ்க்கையது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    mAna vAzkkai atu uTaiyAr; malaintavar matil paricu aruttAr;     
    tAna vAzkkai atu uTaiyAr; tavattoTu nAm pukazntu Etta, 
    njAna vAzkkai atu uTaiyAr; naL iruL makaLir ninRu Etta, 
    vAna vAzkkai atu uTaiyAr--vAzkoLi puttUr uLArE.

பொருள்:     மாண்பிறந்த மானவாழ்க்கையராகிய அசுரர், தன்னுடன் பகைத்தபொழுது 
அவர்களுடைய திரிபுரத்தின் திண்மையை அழித்தவர்; இரப்பவர்க்கு மறுக்காதே ஈயும் தான 
வாழ்க்கையுடையவர்களும், நாம் புகழ்ந்து ஏத்துதற்கு உரிய  தவத்தொடு ஞான 
வாழ்க்கையுடையவர்களும், மகளிரும் நின்று நள்ளிருளிலும் ஏத்தும் வானவாழ்க்கை 
உடையார்; அவர் திருவாழ்கொளிபுத்தூருளாரே. 

குறிப்புரை:     மலைந்தவர் - மாறுபட்ட (பகை)வர். தவத்தொடு ஞானவாழ்க்கை உடையவர். 
புகழ்ந்து ஏத்தற்குரியது ஞான வாழ்வு ஒன்றே. மற்றைய வாழ்வெல்லாம் இகழ்ந்து ஒதுக்கற் பாலன. 
நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த வானவாழ்க்கையை துடையார் அல்லிய... குழலார்.....பரவ....வல்லார்
என்பதொடு பொருத்திக் காண்க.

    Our Lord Civa is manifest in Vaazh-kozhi-puth-oor. He is the noblest Supreme Being. 
His life is the greatest. He destroyed the three fortresses of asuras who became unfriendly 
with Him. He is in the habit of giving divine grace. When we follow truth of divine virtue, 
He gives us divine love and divine life. The celestial damsels stand in a row in large numbers 
and praise Him. He is manifest in the celestial land.

2493.     ஏழுமூன்றுமோர்தலைகளுடையவனிடர்படஅடர்த்து 
    வேழ்விசெற்றதும்விரும்பிவிருப்பவர்பலபலவுடையார் 
    கேழல்வெண்பிறையன்னகெழுமணிமிடறுநின்றிலங்க 
    வாழிசாந்தமுமுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.         8

    ஏழு மூன்றும் ஓர்தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து 
    வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல உடையார் 
    கேழல் வெண்பிறை அன்ன கெழுமணி மிடறு நின்று இலங்க 
    வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    Ezum mUnRum Or talaikaL uTaiyavan iTarpaTa aTarttu, 
    vEzvi ceRRatum virumpi, viruppu avar palapala uTaiyAr; 
    kEzal veNpiRai anna kEz maNimiTaRu ninRu ilagka 
    vAzi cAntamum uTaiyAr--vAzkoLiputtUr uLArE.

பொருள்:     பத்துத் தலைகளை உடைய இராவணன் துன்புற நசுக்கியும், தக்கன் செய்த 
யாகத்தை விரும்பி அழித்தும் உடையார்; அவர் பலபல விருப்புடையார்; வெண்பிறை போன்ற 
பன்றியின் மருப்பு போன்று வேறு பிறவும் தன் மார்பிலும், நீலமணிபோல விடம்  மிடறிலும் 
விளங்க, சந்தனப் பூச்சுடையார் திருவாழ்கொளிபுத்தூருளாரே.

குறிப்புரை:     பத்துத் தலையுடையவன், வேழ்வி - வேள்வி. தக்கன் செய்த யாகம். எதுகை 
நோக்கி ளகரம் ழகரமாயிற்று. விரும்பிச் செற்றதும் உடையார் என்றும் அவர் பலபல விருப்புடையார் 
என்றும் இயைக்க. கேழல்- பன்றிக் கொம்பு. 'ஏனக்கொம்பு' (தி. 2 ப. 102 பா. 2). அன்ன - அவைபோல்வன. 
(ஆமை, நாகம்,  தலையோடு முதலியன). மிடறு - திருக்கழுத்து. சாந்தம் - சந்தனம். பொறுமையுமாம். 
அட்டபுட்பத்துள் ஒன்று.

    Our Lord Civa is manifest in Vaazh-kozhi-puth-oor. He crushed Raavanan, the king 
of Sri Lanka who had ten heads. Raavanan suffered and was terrified. Lord Civan ordered 
to destroy the holy worship performed with sacrificial fire in the sacrificial hall 
arranged by the deity Thakkan. He has a liking for many different objects. He has tied 
round His neck a tusk of the pig which looks like the white moon. He has applied the 
sandal paste all over His body.

2494.     வென்றிமாமலரோனும்விரிகடல்துயின்றவன்தானும் 
    என்றுமேத்துகையுடையாரிமையவர்துதிசெயவிரும்பி 
    முன்றின்மாமலர்வாசமுதுமதிதவழ்பொழிற்றில்லை 
    மன்றிலாடலதுடையார்வாழ்கொளிபுத்தூருளாரே.        9

    வென்றி மாமலரோனும் விரிகடல் துயின்றவன் தானும் 
    என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி 
    முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ் பொழில் தில்லை 
    மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    venRi mA malarOnum, virikaTal-tuyinRavan tAnum,         
    enRum Ettukai uTaiyAr; imaiyavar tuti ceya, virumpi, 
    munRin mA malar vAcam mutu mati tavaz pozil-tillai         
    manRil ATal atu uTaiyAr--vAzkoLiputtUr uLArE.

பொருள்:     பெரிய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமன், பரந்த பாற்கடல் மேல் துயிலும் 
திருமால் ஆகிய இருவராலும் வணங்கப்படுதலை உடையவர்; இமையவர்கள் தம்மைத் துதிசெய்ய 
மகிழ்ந்து, முற்றத்தில் மலர்களின் நறுமணம் வந்து கமழ, முழுநிலவு தவழ்கின்ற பொழில்களையுடைய 
தில்லை  மாநகரில் கூத்தாடுதலை உடையார் இருப்பது திருவாழ்கொளி  புத்தூரரே.

குறிப்புரை:     ஏத்துகை - துதிக்கை. வினைத்தொகையும் ஆம். பா.1. ஈகை. பார்க்க. துதி - (தோத்திரம்) 
புகழ்ச்சி மலர்வாசம் பொழில். மதி தவழ் பொழில். ஆடலது - திருக்கூத்தாடுதலை.

    Our Lord Civa Himself manifests in Vaazh-kozhi-puth-oor. Brahma who is seated 
in lotus flower as well as Thirumaal who rests in the broad ocean - they both daily 
worship our Lord. He accepts their prayers. The devas were anxious to worship our 
Lord Civa daily. To satisfy these devas He dances in the Chidambaram temple where 
the sacred flowers spread their very attractive fragrance all over the temple area.

2495      மண்டைகொண்டுழல்தேரர்மாசுடைமேனிவன்சமணர் 
    குண்டர்பேசியபேச்சுக்கொள்ளன்மின்திகழொளிபுத்தூருளானை 
    துண்டவெண்பிறைசூடிச்சுண்ணவெண்பொடியணிந்தெங்கும் 
    வண்டுவாழ்பொழில்சூழ்ந்தவாழ்கொளிபுத்தூருளாரே.         10

    மண்டை கொண்டு உழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர் 
    குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழ் ஒளிபுத்தூர் உளானை 
    துண்ட வெண்பிறை சூடிச் சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் 
    வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.

    maNTai koNTu uzal tErar, macu uTai mEni van camaNar,
    kuNTar,pEciya pEccuk koLLanmin ! tikaz oLi puttUr uLAnai         
    tuNTa veNpiRai cUTi, cuNNa veNpoTi aNintu, egkum 
    vaNTu vAz pozil cUznta vAzkoLiputtUr uLArE.

பொருள்:     மண்டைப் பாத்திரங்கொண்டு அலைகின்ற தேரர்களும் அழுக்குப் படிந்த உடலுடைய 
வலிய சமண குண்டர்களும் பேசிய வீண்பேச்சுக்களைப் பொருளாகக் கொள்ளல்மின். நல்ல ஒளிதிகழும் 
துண்ட வெண்பிறைசூடி, சுண்ண வெண்பொடி அணிந்து, எவ்விடத்தும் வண்டு வாழும் பொழில்கள் 
சூழ்ந்த திருவாழ்கொளிபுத்தூரரே.

குறிப்புரை:     பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும், வெண்மையும், சுண்ணப் பொடி         
என்பதிலும் சுண்ணமும் பொடியும் எனல் சிறந்தது. சுண்ணம் - திருப்பொற் சுண்ணம்.

    The Buddhists roam about in the city of Vaazh-kozhi-puth-oor holding a skull in their 
hands to receive alms, the Jains whose body is full of dirt are stout, these two fat bodied 
people preach all falsehood. Oh! Ye! People do not bother to heed to the false propaganda 
they preach. Our Lord Civa sustains on His head the very bright moon. He smears all over 
His body the holy ashes. He is manifest in Vaazh-kozhi-puth-oor city where the beetles 
live in large numbers in the forest areas. Oh! Ye devotees worship this our Lord and 
praise Him and live virtuous life.

2496.     நலங்கொள்பூம்பொழிற்காழிநற்றமிழ்ஞானசம்பந்தன் 
    வலங்கொள்வெண்மழுவாளன்வாழ்கொளிபுத்தூருளானை 
    இலங்குவெண்பிறையானையேத்தியதமிழிவைவல்லார் 
    நலங்கொள்சிந்தையராகிநன்னெறியெய்துவர்தாமே.        11

    நலம் கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் 
    வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை 
    இலங்கு வெண் பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் 
    நலம் கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே.

    nalam koL pUmpozil kAzi nal-tamiz njAnacampantan, 
    valam koL veN mazuvALan vAzkoLiputtUr uLAnai- 
    ilagku veNpiRaiyAnai--Ettiya tamiz ivai vallAr, 
    nalam koL cintaiyar Aki, nanneRi eytuvar tAmE.

பொருள்:     மங்கலமுள்ள பூம்பொழில்களுடைய காழி நல்ல தமிழ் வல்ல ஞானசம்பந்தன், வெற்றி 
கொள்கின்ற வெண்ணிற மழுவையுடையன், திருவாழ்கொளிபுத்தூருளானை விளங்குகின்ற 
வெண்பிறையாளனைப் புகழ்ந்து பாடிய தமிழான இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லார் நல்ல 
சிந்தையராகி நல்ல நெறியை எய்துவர்.

குறிப்புரை:     நலம் - குறைவிலாமங்கலம். நன்னெறி - சரியையாதியின் பயனாகிய ஞானம்,

    Our saint Thiru-gnana-Sambandar hails from the city of Seerkaazhi. The city is 
surrounded by vast natural forest areas. There the very attractive trees are fully grown, 
such a famous city is Seerkaazhi. The saint came to Vaazh-kozhi-puth-oor and worshipped 
our God Lord Civan who holds a white axe which always brings Him victory. He sustains 
the moon on His head. Our saint Thiru-gnana-Sambandar praised His fame, worshipped Him 
and chanted the Tamil garland of ten verses. Those devotees who can memorise and chant 
these ten verses before our Lord will be virtuous in their life and will also get 
divine knowledge.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            94ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 94th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 231             பதிக எண்: 95

95. திருஅரசிலி                95. THIRU-ARACILI

பண்: பியந்தைக்காந்தாரம்        Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    திருவரசிலி என்னும் இத்திருத்தலமானது அரச மரத்தை இறைவன் இல்லாக உடைமையின் 
இப்பெயர் பெற்றது என்பர்.  இது இக்காலம் ஒழிந்தியாப்பட்டு என்று மக்களால் வழங்கப்  பெறுகின்றது. 
பாண்டிச்சேரி- திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் 
இறங்கி கிழக்கே 2 கி. மீ. சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். இது தொண்டை
 நாட்டுத்தலமாகும்.

    இறைவரின் திருப்பெயர் அரசிலி நாதர். இறைவியாரின் திருப்பெயர் பெரிய நாயகி. 
இறைவரின் திருப்பெயர் திருஅரசிலி ஆளுடையார் ஆலாலசுந்தரர் என்றும், திரு அரசிலி ஆளுடையார்     
என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. வாமதேவ முனிவர் பூசித்துப் பேறு பெற்றது. இத்தலத்திற்குத் 
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது. இங்குள்ள தீர்த்தம் அரசடித் தீர்த்தம். குளம் பெரியது. 
இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்தும் சந்திவிளக்கு மற்றும் திருநந்தா விளக்குகளுக்கு ஆடுகள் 
விடப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன.

பதிக வரலாறு

    கவுணியர் வேந்தர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களை வணங்கி வழிபட்ட காலத்தில், 
வேறுபல நதியும் காடும் கடந்து அரசிலியை அடைந்தார். இது தொண்டை நாட்டிற்குச் சென்று 
மீண்ட காலத்து நிகழ்ச்சி, சேக்கிழார் சுவாமிகள், திருவரசிலியை மீளுங்கால் எடுத்தோதியதாலும் 
செல்லுங்கால் குறிப்பாகவும் காட்டாமையாலும் மீண்டு அருளும்போது பாடப்பட்டதாகும் இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2497.     பாடல்வண்டறைகொன்றைபால்மதிபாய்புனற்கங்கை 
    கோடல்கூவிளமாலைமத்தமுஞ்செஞ்சடைக்குலாவி 
    வாடல்வெண்டலைமாலைமருவிடவல்லியந்தோள்மேல் 
    ஆடல்மாசுணமசைத்த அடிகளுக்கிடமரசிலியே.        1

    பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனல் கங்கை 
    கோடல் கூவிள மாலை மத்தமும் செஞ்சடைக் குலாவி 
    வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியம் தோள்மேல் 
    ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

    pATal vaNTu aRai konRai, pAlmati, pAy punal kagkai, 
    kOTal, kUviLa mAlai, mattamum, cenjcaTaik kulAvi, 
    vATal veN talai mAlai maruviTa, valliyam tOLmEl 
    ATal mAcuNam acaitta aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     வண்டுகள் பாடி மொய்க்கின்ற கொன்றை, பால்நிறப் பிறைமதி பாய்கின்ற 
புனலை உடைய கங்கைநதி, வெண்காந்தள் மலர், வில்வமாலை, ஊமத்தம்பூ ஆகியன செஞ்சடையில் 
கலந்து குலாவ, வற்றிய வெண்டலைமாலை மார்பில் மருவ இடையில் புலித்தோலாடையின்மேல் 
ஆடும் பாம்பினைக் கச்சாகக் கட்டிய சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:     செஞ்சடையில் குலாவுவன- கொன்றை, பிறை, கங்கை, கோடல் (வெண் காந்தள்) 
கூவிள (வில்வ) மாலை, ஊமத்தம்பூ. தலைமாலை. வல்லி - உமாதேவியார். மாசுணம் - பாம்பு. 
நிலத்திலூர்ந்தும் புரண்டும் மாசு உண்ணுங் காரணத்தாற்பெற்ற பெயர். அழுக்கு அடையும் 
ஆடைக்கு மாகணி என்ற பெயர் உள்ளமை அறிக. பிறர் உடுத்த மாகணியும் தீண்டார் (ஆசாரக்கோவை). 
'வல்லியத் தோல் ' என்றிருந்தது.  லகரம் ளகரம் ஆகிய பிழை போலும். வல்லியம் - புலி.

    Our Lord Civa adorns His head with Indian laburnum flowers. In this bunch of  
flowers beetles join together and sing music. He retains the milky white moon also on
His head along with the gushing river Ganges near the moon. In the neck white species 
of malabar glory lily flowers, garland of bael leaves, garland of datura flowers-all 
hang together. In addition, there hangs the white dried skull where the dried flesh is 
still attached to the bones. On His waist, He wears the hide of a tiger, He covers 
His shoulders with the snakes. Our Lord Civa desires to manifest Himself in the 
city of Thiru-aracili.

2498.     ஏறுபேணியதேறியிளமதக்களிற்றினையெற்றி 
    வேறுசெய்ததனுரிவைவெண்புலால்கலக்கமெய்போர்த்த
    ஊறுதேனவனும்பர்க்கொருவனல்லொளிகொளொண்சுடராம்         
    ஆறுசேர்தருசென்னியடிகளுக்கிடமரசிலியே.         2

    ஏறு பேணியது ஏறி இளமதக் களிற்றினை எற்றி 
    வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த 
    ஊறு தேனவன் உம்பர்க்கு ஒருவன் நல்லொளி கொளொண் சுடராம்     
    ஆறு சேர்தரு சென்னியடிகளுக்கு இடம் அரசிலியே.

    ERu pENi atu ERi; iLa matakkaLiRRinai eRRi, 
    vERu ceytu, atan urivai veNpulAl kalakka mey pOrtta         
    URu tEn avan; umparkku oruvan; nal oLi koL oN cuTar Am; 
    ARu cErtaru cenni aTikaLukku iTam araciliyE.

பொருள்:     விரும்பி விடைதன்மேல் ஏறியவன்; இளமதக் களிற்றினை வென்று அதனைக் 
கொன்று அதன்தோலினைத் தன்மேல் அதன் வெண்நிணம் கலக்க உடல்மேல் போர்த்தியவன்; 
நினைவார்க்கு ஊறுகின்ற தேன்போல் இனியவன்; தேவர்களுக்கு அனல்போல ஒளிவீசுகின்ற 
செஞ்சுடராம்; கங்கையாறு சென்னிமேல் சேர்தருகின்ற சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:      களிறு- களிப்புடையது என்னுங் காரணப் பொருட்டாய், ஆண் யானையைக் 
குறிப்பது. உரிவை-தோல், புலால் கலக்க மெய்யிற் போர்த்த இனியன். யானையை உரித்துப் 
போர்த்தவன்  இன்னாதவன் என்று கொள்ளுதல் பொருந்தாமை உணர்த்த. ஊறுதேனவன் 
(சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் இனியவன்) 
என்றருளினார். ஆணவமல  நாசஞ்செய்வதே யானையுரி வரலாற்றின் தாற்பரியம். உம்பர்க்கு 
ஒருவன்- அமரரால் அமரப்படுவான்.  சுடர் - சிவம். ஒளி - சத்தி. 

    Our Lord Civa loves to sustain the white bull for His conveyance and goes round 
the universe. The rutted elephant, which was about to dash against our Lord Civa was 
kicked and killed by our Lord. Then He ripped off its hide and covered His body with it,
with the white flesh attached to its hide enabling it to mix with His body. He is the 
only top Supreme Being praised by devas. He exhibits the brightest supernal light.
In His matted hair, He sustains the river Ganges. For such a Lord the city of 
Thiru-aracili is a much desired place to manifest.

2499.     கங்கைநீர்சடைமேலேகதமிகக்கதிரிளவனமென் 
    கொங்கையாளொருபாகமருவியகொல்லைவெள்ளேற்றன் 
    சங்கையாய்த்திரியாமேதன்னடியார்க்கருள்செய்து 
    அங்கையாலனலேந்துமடிகளுக்கிடமரசிலியே.        3

    கங்கைநீர் சடைமேலே கதமிகக் கதிர் இளவனமென் 
    கொங்கையாள் ஒருபாகம் அருவிய கொல்லை வெள்ளேற்றன் 
    சங்கையாய்த் திரியாமே தன்னடியார்க்கு அருள்செய்து 
    அங்கையால் அனலேந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

    kagkai nIr caTaimElE katam mika, katir iLavana men
    kogkaiyAL orupAkam maruviya, kollai veL ERRan; 
    cagkai Ayt tiriyAmE tan aTiyArkku aruL ceytu, 
    agkaiyAl anal Entum aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     வேகம் மிக்க கங்கைநீரினைச் சடையின் மேலும், அழகும் இளமையும் 
மென்மையும் உடைய முலையாளை ஒருபாகத்திலும் பொருந்தியவன்; முல்லை நிலத்து
வெள்ளை நிற எருதினை உடையவன்; அச்சத்துடன் திரியாமல் தன்னடியாருக்கு அருள்செய்பவன் 
ஆகிய அங்கையில் அனலேந்திய சுவாமியாகிய சிவனுக்கிடம் திருவரசிலியே.

குறிப்புரை:     கதம் - வேகம். வனம்- அழகு. சங்கை- சந்தேகம். அடியார்கள்  'தமக்கு
 ஆண்டவன் அருள்வானோ அருளானோ' என்னும் ஐயுறவு கொண்டு திரிந்து, வீண்காலம் 
போக்கும் அவ்வப் பொழுது நேராது சிவப்பொழுது போக்குமாறு அவர்கட்கு அருள்வான் 
என்பது கருத்து. திரியாமே அருள் செய்து அனல் ஏந்தும் அடிகள் என்க.  எருதேறித் திரியும் 
இறைவன் எனினும் அடியார்க்கு  அருள்செய்யத்  தவறான் என்றும். சங்கை - ஐயம். 
ஐயம் - பிச்சை. இரப்போர்க்கு இன்று நாம் இரப்பது சிறக்கக்  கிடைக்குமோ கிடைக்காதோ 
என்ற ஐயம் பற்றிய காரணப் பெயர். பிச்சைக்காரனாய்த் திரியும் ஒன்றே செய்யாமல் 
அடியார்க்கு அருள்வதையும் செய்து என்றும், பிச்சையெடுத்தாலும் அடியார்க்கு  அருளும்
பெருஞ்செல்வன் என்றும் கொள்ளும் பொருள் வலிந்து கொள்வனவேயாம். 

    Our Lord Civan is highly satisfied to be manifested in Thiru-aracili. He supports 
the river Ganges, which came very fast with plenty of water on His matted hair. His consort 
Uma Devi is very bright, young with highly attractive breasts. He keeps her on the left 
side of His body. The bull belongs to forest area, He loves to sustain the white bull 
for His conveyance. He graces His devotees who have no doubt whether Lord Civa will 
give or not give His divine grace; and they never spend any idle time; but only 
concentrate on God Civa. In His dainty hand He holds fire. Such a Lord is highly 
satisfied to manifest Himself in Thiru-aracili.

2500.     மிக்ககாலனை வீட்டிமெய்கெடக்காமனைவிழித்துப் 
    புக்கவூரிடுபிச்சையுண்பதுபொன்திகழ்கொன்றை 
    தக்கநூல்திகழ்மார்பிற்றவளவெண்ணீறணிந்தாமை 
    அக்கினாரமும்பூண்டஅடிகளுக்கிடமரசிலியே.        4

    மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் 
    புக்கவூர் இடு பிச்சை உண்பது பொன்திகழ் கொன்றை 
    தக்க நூல் திகழ்மார்பில் தவள வெண்ணீறு அணிந்து ஆமை 
    அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.

    mikka kAlanai vITTi, mey keTak kAmanai vizittu, 
    pukka Ur iTu piccai uNpatu, pon tikaz konRai, 
    takka nUl tikaz mArpil-tavaLa-veN nIRu aNintu, Amai 
    akkin Aramum pUNTa aTikaLukku iTam-araciliyE.

பொருள்:     மேம்பட்ட காலனைக் காலால் அழித்து, உடல் எரித்து நீறாகக் காமனை நெற்றிக் 
கண்ணால் நோக்கி, புகுந்த ஊரினர் இடுகின்ற பிச்சையை உண்டு, பொன்போல் திகழ்கின்ற 
கொன்றைமாலையும் தகுதியுடைய பூணூல் திகழ்கின்ற மார்பில் தவள வெண்ணீறும் அணிந்து, 
ஆமை ஓட்டினையும் எலும்பு மாலையும் பூண்ட சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:     மிக்க காலன்- இன்னான் இனியான் என்று கருதாது, உரிய காலத்தில் கூறுபடுத்தும் 
அறத்தில் மேம்பட்ட தருமராசன். தக்கநூல் - வேதாந்தம் என்னத் தக்க பூணூல். நூலது வேதாந்தம் 
நுண்சிகை ஞானமாம் (திருமந்திரம்). அக்கின் ஆரம் - எலும்பு மாலை. இனமல்லாமையால் 
ஆமையோடும் உருத்திராக்க மாலையும் எனல் ஒவ்வாது.

    Our Lord Civa kicked and killed Yama, the god of death, who comes with divine 
virtue only to take the life of people. He burnt Manmathan into ashes with His third eye.
He accepts and eats the alms given by people. He wears over His chest the garland made 
of Indian laburnum flowers glittering like gold. He has glorified His chest by wearing the 
sacred thread and the holy ashes. He has adorned His body with the tortoise shell and the 
garland made of skull bones. This God Civa is highly satisfied to be manifested in the temple 
in Thiru-aracili city.

2501.     மானஞ்சும்மடநோக்கிமலைமகள்பாகமுமருவித் 
    தானஞ்சாவாண்மூன்றுந்தழலெழச்சரமதுதுரந்து 
    வானஞ்சும்பெருவிடத்தையுண்டவன்மாமறையோதி 
    ஆனஞ்சாடியசென்னியடிகளுக்கிடமரசிலியே.        5

    மான் அஞ்சும் மடநோக்கி மலைமகள் பாகமும் மருவித்    
    தானம் சாவாண் மூன்றும் தழல் எழச் சரமது துரந்து 
    வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன் மாமறை ஓதி 
    ஆன் அஞ்சாடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

    mAn anjcum maTa nOkki malaimakaL pAkamum maruvi, 
    tAnam cAvAN mUnRum tazal ezac caram atu turantu,     
    vAn anjcum peruviTattai uNTavan; mAmaRai Oti; 
    An anjcu ATiya cenni aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     மான் அஞ்சும்படியான மடப்பம் பொருந்திய நோக்கினை உடையவளாகிய 
பார்வதியைப் பாகமாகப் பொருந்தி, அகந்தையினால் தன்னை மதியாத அசுரர்களின்
முப்புரங்களும் தழலால் எரிந்து வீழ அம்பினைச் செலுத்தி, வானவர்கள் அஞ்சும்படிப்
பெருகிய விடத்தைக் களிபோல் திரட்டி உண்டவன்; வேதங்களை ஓதியவன்; பசு தரும் 
ஐந்தினையும் ஆடிய சென்னியன் ஆகிய இறைவனுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:     மான் அஞ்சும் மடநோக்கியாகிய மலைமகள், நோக்கி -(கண்ணி) 
நோக்கத்தையுடையவள். மானினது கண்போன்ற கண் என்னாது, அக்கண்ணினது நோக்கம் 
போன்ற நோக்கம் எனல் முன்னோர் கருத்து. மான்விழி என்பதும் மான் கண் என்பதும் ஒன்றாகா, 
விழிப்பது விழி. கண்ணுவது கண், விழித்தல் - இமை திறத்தல். கண்ணுதல் - மனம் கருதல். 
இமை திறந்தும் திறவாதும் கருதல் செய்யலாம். திறக்கக் கருதினாலன்றி இமை திறத்தல் 
நிகழாது. வான் - வானோர், அசுரர். ஓதி-பெயர்.

    Our Lord Civa joined together with the daughter of the mountain king and 
kept her on the left side of His body. The deer in the forest, whenever they see the 
eyes of Uma Devi, are afraid and run away from her sight. He shot an arrow with terrible 
fire in the sky of asuras who opposed our Lord Civa without any fear. They were 
destroyed along with their followers. He imbibed the serpent's poison that came out 
of the ocean. The devas trembled to see our Lord devouring the poison. He loves to be 
ablutioned by the five sacred products of the cow on His head, over the matted hair. 
This Lord is highly satisfied to be manifested in Thiru-aracili city.

2502.     பரியமாசுணங்கயிறாப்பருப்பதமதற்குமத்தாகப் 
    பெரியவேலையைக்கலங்கப்பேணியவானவர்கடையக் 
    கரியநஞ்சதுதோன்றக்கலங்கிய அவர்தமைக்கண்டு 
    அரிய ஆரமுதாக்குமடிகளுக்கிடமரசிலியே.        6

    பரிய மாசுணம் கயிறாப் பருப்பதம் அதற்கு மத்தாகப் 
    பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் 
    கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு 
    அரிய ஆரமுதாக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

    pariya mAcuNam kayiRA, paruppatam ataRku mattu Aka,
    periya vElaiyaik kalagka, pENiya vAnavar kaTaiya, 
    kariya nanjcu atu tOnRak kalagkiya avar tamaik kaNTu, 
    ariya Ar amutu Akkum aTikaLukku iTam araciliyE.

பொருள்:     பெரிய பாம்பு கயிறாக, மந்தாரமலை அந்தக் கயிறுக்கு மத்தாகப் பெரிய பாற்கடல் 
கலங்க அமுதத்தை விரும்பிய வானவர் கடையக் கரிய நஞ்சு தோன்றியது. அமுதுக்குப் பதில் நஞ்சு 
தோன்றக் கண்டு கலங்கிய அவ்வானவர்களைக் கண்டு இரக்கங்கொண்டு, அக்கொடிய நஞ்சை 
அரிய ஆரமுது ஆக்கும் சுவாமிக்கு இடம் திருவரசிலியே. 

குறிப்புரை:     பரிய - பெரிய. அரிய அமுது எனவே அமையும். 'அரிய ஆரமுது' என்றது பெரிய 
பேராசிரியர் (மகாமகோபாத்தியார்) என்ற (ஆன்மாக்களின் அகங்காரத்தை வளர்க்கும்) பட்டப்பெயர் 
போல்வது. ஆருயிர் -காருடல் என்பன போல ஆரமுதும் பண்புத் தொகை. அரிய - நஞ்சு அமுது ஆதல் 
முன் இன்மை குறித்தது. ஆர் - முன் இல்லாத அஃது இப்பொழுது (அமுதாக்கிய சமயம்) விளங்குதலைக் 
குறித்தது. அருமை - இன்மை, விளக்கம்.

    The devas desired to drink amrit from the ocean. They took the big Vaasuki snake 
as the rope to churn the ocean. They took the big mountain manthaaram as the churning staff 
and started churning the big ocean of milk. At that time a black coloured strong animal 
poison was vomitted by Vaasuki. The devas and asuras got terrified on seeing the poison 
and ran away to our Lord Civa. On seeing them our Lord pitied them and arranged to bring 
the poison to Him. Then He imbibed it as amrit. Thus He saved all the devas and all other 
celestials. This Lord's suitable place for manifestation is Thiru-aracili.

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

2503.     வண்ணமால்வரைதன்னைமறித்திடலுற்றவல்லரக்கன் 
    கண்ணுந்தோளுநல்வாயுநெரிதரக்கால்விரலூன்றிப் 
    பண்ணின்பாடல்கைந்நரம்பாற்பாடியபாடலைக்கேட்டு 
    அண்ணலாயருள்செய்தஅடிகளுக்கிடமரசிலியே.        8

    வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல்லரக்கன் 
    கண்ணும் தோளுநல் வாயுநெரி தரக்கால் விரலூன்றிப் 
    பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு         
    அண்ணலாய அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

    vaNNa mAlvarai tannai maRittiTal uRRa val arakkan 
    kaNNum tOLum nalvAyum neritarak kAlviral UnRi, 
    paNNin pATal kainnarampAl pATiya pATalaik kETTu, 
    aNNalAy aruL ceyta aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     கயிலை மால் வரையை மறித்திட்ட வலிய அரக்கன் இராவணனின் கண்ணும் 
தோளும் வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றிப், பின் அவன் கை நரம்பால் யாழ் செய்து பண்ணொடு 
பாடிய பாடலைக் கேட்டு அண்ணலாய் அருள் செய்த சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:     வண்ணமால்வரை- கயிலைமலை. மறித்திடல் - கீழ் மேலோக்குதல். கண், தோள், 
வாய் நெரிய என்க. கைந்நரம்பு - இராவணன் கையிலிருந்த யாழ். பண்ணின் பாடல் நரம்புக்கு அடை
பாடிய பாடல்- அந்தரம்பாற் பாடிய பாடல். அண்ணலாய் - நாளும் வாளும் அருளிய பெருமையிற் 
சிறந்தவனாகி, இன்னா செய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.

    Raavanan, the king of Sri Lanka due to His haughtiness and mightiness tried to
turn the admirable Kailash mountain topsy-turvy. Then he got crushed under the mountain 
with all his eyes, shoulders and mouths. Thus he suffered because our Lord Civa slightly 
pressed the top of His mountain with His toe. Raavanan then realised his fault and 
decided to be pardoned by Lord Civa. He therefore took out of his own hand the nerves 
and made it a veena and sang praising our Lord Civa in the most intrinsic tune called 
Saama Gaanam. On hearing the music our Lord Civa showered benevolence on him and graced 
him with many gifts. This Lord highly likes to be manifested in Thiru-aracili.

2504.     குறியமாணுருவாகிக்குவலயமளந்தவன்றானும் 
    வெறிகொள்தாமரைமேலேவிரும்பியமெய்த்தவத்தோனும் 
    சொறிவொணாவகையெங்குந்தேடியுந்திருவடிகாண 
    அறிவொணாவுருவத்தெம்மடிகளுக்கிடமரசிலியே.         9

    குறிய மாணுருவாகிக் குவலயம் அளந்தவன் தானும் 
    வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த் தவத்தோனும் 
    சொறி ஒணாவகை எங்கும் தேடியும் திருவடிகாண 
    அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே.

    kuRiya mAN uru Akik kuvalayam aLantavan tAnum, 
    veRi koL tAmarai mElE virumpiya meyttavattOnum, 
    ceRivu oNA vakai egkum tETiyum, tiruvaTi kANa 
    aRivu oNA uruvattu em aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     குறுகிய பிராமண பிரமசாரி உருவாகி உலகத்தை அளந்தவனான திருமாலும் 
மணமுள்ள தாமரை மலர்மேலே இருத்தலை விரும்பிய தவத்தவனாகிய பிரமனும் எங்கும் தேடிய 
திருவடியைக் காணவும் அறியவும் ஒணாத உருவத்து எம்முடைய சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே.

குறிப்புரை:     குறிய மாணுரு - வாமன அவதாரம். 'குறுமாணுருவன்' (தி. 1 ப. 101 பா. 5).வெறி - மணம். 
மெய்த்தவத்தோன்-  பிரமன். செறிவு ஒணா- செறிதல் ஒன்றா. செறிதல்- பொருந்துதல். அறிவொணாவுருவம்
-ஐம்பொறிகளாலும், மனாதியாலும், ஜீவ போதத்தாலும் அறிதல் ஒன்றாத ஞான சொரூபம். 'பாசஞானத்தாலும்
பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற்கீழ்' 
நின்று அறியப்படும் திருவுருவம் அது. 'அறிவினில் அருளான் மன்னி' (சித்தியார்).

    Our tutelary deity Thirumaal once took the dwarfish stature of Vaamana. Later
he took the form of a very big and tall being and measured the whole world in one step.
The other tutelary deity Brahma highly likes the fragrant lotus flower. These two
demigods searched all over the world to see the head and feet of our Lord Civa and 
failed in their attempts to know or to reach Lord Civa's form. At that moment our Lord
Civa appeared before them dazzlingly as infinite, supernal and tall flame and graced
them. This Lord highly likes to be manifested in Thiru-aracili temple.

2505.     குருளையெய்தியமடவார்நிற்பவேகுஞ்சியைப்பறித்துத் 
    திரளைகையிலுண்பவருந்தேரருஞ்சொல்லியதேறேல் 
    பொருளைப்பொய்யிலிமெய்யெம்நாதனைப்பொன்னடிவணங்கும் 
    அருளையார்தரநல்குமடிகளுக்கிடமரசிலியே.        10

    குருளை எய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் 
    திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் 
    பொருளைப் பொய்யிலி மெய் எம்நாதனைப் பொன்னடி வணங்கும் 
    அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

    kuruLai eytiya maTavAr niRpavE kunjciyaip paRittut         
    tiraLai(k) kaiyil uNpavarum, tErarum, colliya tEREl! 
    poruLai, poy ili mey em nAtanai, pon aTi vaNagkum 
    aruLai Artara nalkum aTikaLukku iTam--araciliyE.

பொருள்:     இளம்பெண்கள் அருகில் நிற்க, தலைமயிரைப் பறித்து, கையில் திரட்டி வைத்த 
உணவுப் பிண்டத்தை உண்ணும் சமணரும் தேரரும் மெய்யெனக் கூறிய மொழிகளை மெய்யெனத் 
தெளியவேண்டா.  உண்மைப் பொருள், பொய்யிலாத மெய் ஆகிய எம் தலைவன் அவனுடைய 
பொன்னடியை வணங்கும்  அருளை ஆர்தர அளிக்கும் சுவாமிகளுக்கு இடம் திருவரசிலியே. 

குறிப்புரை:     உண்பவர் - சமணர். சொல்லிய- சொன்னதம் சமயக் கொள்கைகளை. 
வினையாலணையும் பெயர். பொருள்- 'உயர் பொருள்' (தி.1 ப.13 பா.5). 'உரமென்னும் பொருள்' 
(தி.7 ப.86  பா.5 ) ‘பல்கலைப்பொருள்'  (தி.7 ப.69 பா.10). 'மெய்ப்பொருள்' (தி.4 ப.74 பா.9). 
'கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே' (தி.2 ப.41 பா.7) 
என்றதால் ஆன்மாக்களுக்குப் பொருளாவது சிவபரம் பொருளே என்றறிக. குருளை என்பது 
ஈண்டு இளமையைக் குறித்தது. இளமகளிரை வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருந்தும், 
தலைமயிரைப் பறித்து விடுவது பொருத்தம் ஆகாமையை உணர்த்துவதுடன், அதற்கு ஏதுவாவது 
அமிர்தபோஜனப்ரியம் என்றும் குறித்தார்.

    In the city young damsels do live in good numbers. The Jains do not live jointly
with them and enjoy life. Instead they remove the hair from their head and become baldheaded. 
They  roam around the city and get alms in their hands and eat it. These people as well as the 
Buddhists preach the details of their religion which is all falsehood. Ye devotees! do not 
listen to their religious propaganda. Our Lord Civa is the object for our goal. He is beyond 
any vicious speech and has no falsehood. He is the embodiment of truth. He fully graces the 
devotees who prostrate over His holy feet. For such a Lord of ours, the suitable place for
manifestation is Thiru-aracili.

2506.     அல்லிநீள்வயல்சூழ்ந்த அரசிலியடிகளைக்காழி 
    நல்லஞானசம்பந்தன்நற்றமிழ்பத்திவைநாளும் 
    சொல்லவல்லவர்தம்மைச்சூழ்ந்தமரர்தொழுதேத்த 
    வல்லவானுலகெய்திவைகலுமகிழ்ந்திருப்பாரே.        11

    அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி 
    நல்ல ஞானசம்பந்தன் நற்றமிழ் பத்து இவை நாளும் 
    சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்த அமரர்தொழுது ஏத்த 
    வல்ல வானுலகு எய்தி வைகலும் மகிழ்ந்திருப்பாரே.

    alli nIL vayal cUznta aracili aTikaLai, kAzi 
    nalla njAnacampantan nal-tamiz pattu ivai, nALum, 
    colla vallavar, tammaic cUzntu amarar tozutu Etta, 
    valla vAn ulaku eyti, vaikalum makizntu iruppArE.

பொருள்:     அல்லிமலர்கள் மலரும் நீண்ட வயல்கள் சூழ்ந்த திருவரசிலி அடிகளைக் 
காழி நல்ல ஞானசம்பந்தன் பாடிய நற்றமிழ்ப் பாடல்களான இவை பத்தினையும் நாளும் 
பாட வல்லவர்,  அமரர்கள் தம்மைச் சூழ்ந்து தொழுதேத்த வல்லவராய் வான் உலகெய்தி 
எந்நாளும் மகிழ்ந்திருப்பர்.

குறிப்புரை:     அல்லி - அகவிதழ் (இரவில் பூக்கும் பூக்கள்). நற்றமிழ் - பிறவிப்பிணிக்கு             
மருந்தாகிய தமிழாகிய இத்திருப்பதிகம். 'நாளும் சொல்ல வல்லவர் வைகலும் மகிழ்ந்திருப்பார்' 
ஒருநாள் தவறின் அன்று மகிழ்ந்திரார் என்பது அவரவர் அநுபவத்தால் உணரப்படும்.

    Our Lord Civa is manifest in Thiru-aracili. This city is surrounded by long paddy 
and other fields. Here water lily grows in good number. Our good scholarly saint Thiru-gnana-
Sambandar, born in Seerkaazhi, chanted these ten verses on our Lord  Civan manifested in 
Thiru-aracili. These devotees who can memorise and chant daily these ten verses and worship 
our Lord will reach the celestial world. the devas and others will praise them. They will 
live there happily forever.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            95ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 95th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 232             பதிக எண்: 96

96.சீர்காழி                96. SEERKAAZHI

பண்: பியந்தைக்காந்தாரம்        Pann: Piyanthai Kaanthaaram

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்

2507.     பொங்குவெண்புரிவளரும்பொற்புடைமார்பனெம்பெருமான் 
    செங்கணாடரவாட்டுஞ்செல்வனெஞ்சிவனுறைகோயில் 
    பங்கமில்பலமறைகள்வல்லவர்பத்தர்கள்பரவுந் 
    தங்குவெண்டிரைக்கானற்றண்வயற்காழிநன்னகரே.        1

    பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பன் எம்பெருமான் 
    செங்கணால் அரவாட்டும் செல்வன் எம் சிவன் உறைகோயில் 
    பங்கமில் பலமறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் 
    தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

    pogku veNpuri vaLarum poRpu uTai mArpan em perumAn
    cegkaNAl aravu ATTum celvan, em civan, uRai kOyil- 
    pagkam il palamaRaikaL vallavar, pattarkaL, paravum 
    tagku veNtiraik kAnal-taNvayal kAzi nan nakarE.

பொருள்:     அசையும் வெண்ணிற முப்புரிநூல் பொலிவுடன் விளங்கும் மார்பன்; எம்முடைய 
பெருமான்; சிவந்த கண்ணுடைய பாம்பினை ஆட்டும் செல்வன்; எம்முடைய சிவன் உறைகின்ற 
திருக்கோயில், பங்கமில்லாத மறைகள் வல்லவர், பத்தர்கள் போற்றித் தங்கி வாழ்வதும், வெண்ணிற 
அலைகள் மோதும் கடற்கானல்களும், குளிர்ந்த வயல்களும் உள்ள காழி நல்ல நகரே.

குறிப்புரை:     வெண்புரி- வெண்ணிறத்தை உடைய நூலாலாகிய முப்புரி. பங்கம்- தோல்வி. 
மறைப்பொருள்கள் வேறு எந்நூற் பொருள்களுக்கும் தோல்வி அடையாமையைக் குறிக்க. பங்கம் இல்
மறைகள். அழியாமையினைக் குறித்தது ஆகும். வேதம் நித்தியம், வல்லவர்களும் பத்தர்களும்
பரவும்  காழி  நன்னகர் என்க.

    Our Lord Civa is manifest in the temple in Seerkaazhi. On His attractive chest the 
white three ply sacred thread rolls over. He catches and makes the red eyed snake to dance. 
He is an immensely prosperous Supreme Being who is manifested in the temple. Vedic scholars 
who never fail in their Vedic knowledge and the notaries of divine knowledge extol together 
our Lord. The city has a large number of gardens along the seashore where the white waves 
always dash against the shore. Also there are many paddy fields round the city, such a
city is the most attractive city of Seerkaazhi.

2508.     தேவர்தானவர்பரந்துதிண்வரைமால்கடல்நிறுவி 
    நாவதாலமிர்துண்ணநயந்தவரிரிந்திடக்கண்டு 
    ஆவவென்றருநஞ்சமுண்டவனமர்தருமூதூர் 
    காவலார்மதில்சூழ்ந்தகடிபொழிற்காழிநன்னகரே.        2

    தேவர் தானவர் பரந்து திண்வரை மால் கடல் நிறுவி 
    நாவது ஆலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு             
    ஆவ என்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் 
    காவலார் மதில் சூழ்ந்த கடிபொழில் காழி நன் நகரே.

    tEvar tAnavar parantu, tiN varai mAl kaTal niRuvi, 
    nAvatu Alamirtu uNNa nayantavar irintiTak kaNTu, 
    "Ava!" enRu aru nanjcam uNTavan amartaru mUtUr- 
    kavalAr matil cUznta kaTi pozil kAzi nannakarE.

பொருள்:     சுரரும் அசுரரும் திரண்டு திண்ணிய மந்தரமலையை மத்தாகப் பெரிய 
பாற்கடலில் நிறுவி, நாவினால் அமிழ்தம் உண்ண விரும்பிய அவர்கள் அஞ்சிச் சிதைந்து ஓடக் 
கண்டு, ஆ  ஆ என்று இரங்கி உண்ணற்கு அரிய நஞ்சை உண்டவன், விரும்பித் தங்கும் பழமையான 
ஊர்,காவலாக மதில் சூழ்ந்ததும் மணமிக்க பொழில்கள் உடையதுமாகிய காழி நன்னகரே.

குறிப்புரை:     நிறுவி - மத்தாக நிறுத்தி. நாவதால் - நாக்கால். அது பகுதிப் பொருள் விகுதி. 
இரிந்திட - சாய. ஆவ என்று- ஆஆ என்று இரங்கி. இத்தொடர் திருமுறைகளில் பயின்றுள்ளதை 
ஆங்காங்கு நோக்குக. காவல் ஆர் மதில் சூழ்ந்த நகர். பொழிலை உடைய காழி நகர்.

    The devas and asuras jointly wanted to enjoy drinking ambrosia with their tongue. 
They brought the very strong Manthara mountain and used it as churn-staff and fixed it and 
started churning the big milky ocean. While churning a very serious animal poison came out 
of the ocean. On seeing the poison they trembled and cried 'Ah! Ah!' and ran towards our 
Lord Civa and prayed and solicited for His help to save their life. Our Lord Civa collected 
the poison and imbibed it in His throat. Thus He saved devas, asuras and all other celestials. 
This Lord Civa is manifest in the very big temple city of Seerkaazhi. The city is protected 
with tall protective walls around the city. This city is surrounded by natural forests where 
sweet smelling flower plants are many and spread the sweet smell all over the area.

2509.     கரியின்மாமுகமுடையகணபதிதாதைபல்பூதந் 
    திரியஇல்பலிக்கேகுஞ்செழுஞ்சுடர்சேர்தருமூதூர் 
    சரியின்முன்கைநன்மாதர்சதிபடமாநடமாடி 
    உரியநாமங்களேத்துமொலிபுனற்காழிநன்னகரே.     3

    கரியின் மாமுகம் உடைய கணபதி தாதை பல்பூதம் 
    திரிய இல்பலிக்கு ஏகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்         
    சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடி 
    உரிய நாமங்கள் ஏத்தும் ஒலிபுனல் காழி நன் நகரே.

    kariyin mA mukam uTaiya kaNapati tAtai, palpUtam 
    tiriya il palikku Ekum cezunjcuTar, cErtaru mUtUr- 
    cariyin munkai nal mAtar catipaTa mA naTam ATi, 
    uriya nAmagkaL Ettum oli punal kAzi nannakarE.

பொருள்:     யானையின் பெரிய முகமுடைய கணபதியின் தந்தை; பூதங்களுடன் திரிந்து 
இல்லந்தோறும் பிச்சைக்கு எழுபவர்; அடியார்கள் உள்ளத்தில் ஒளிரும் செழுஞ்சுடர்; அவர் 
சேர்ந்திருக்கும் பழைமையான ஊர் யாதெனில், வளையல்கள் சரியும் முன்கைகளுடைய 
இளமகளிர் தாள ஜதியுடன் நடனமாடி சிவனின் திருப்பெயர்களைப் பாடி வழிபடுவது 
ஒலிக்கும் புனல் நிறைந்ததுமாகிய காழி நன்னகரே.

குறிப்புரை:     கரத்தை உடையது கரி எனப்பட்டது. பூதகணங்களோடு பலிக்கு ஏகினார் 
எனல் அறிக. செழுஞ்சுடர்- அழியாததும் அறியும் ஆன்மாக்களிடத்தில் வளர்வதுமாகிய ஒளி- 'செழுஞ்சுடரே
செழுஞ்சுடர் நற்சோதி மிக்கவுருவே' அப்பர் 'ஒளிவளர் விளக்கே' (திருவிசைப்பா). சரி - வளையல். சதிபட 
மாநடம்  ஆடல் தண்ணுமை விளங்கலுறு தாளம் இசையெல்லாம் வண்ணமலர் மெல்லடி  வழிச்சதியில் 
நிற்பக் கண்ணினை கொள்பல் வளைய கைவழி நடப்ப. (பிரபுலிங்க. மாயை பூசைகதி 52) . நடித்தல்,
செப்பமைந்த தண்ணுமையிசை  தாளம் மென்சிறுதாட் டுப்பமைந்த வொண்சதிதழீ இச்சுவைய  பல்காய 
முப்பமைந்தலின் கறியென நடித்தல்.  (பிரவு கைலாச 31). உரிய நாமங்கள் ஓதி என்றதால், அக்காலத்து 
மகளிர்க்குச் சிவநாமம் ஓதும் உரிமையை ஆசிரியர் உணர்ந்து மகிழ்ந்து பாட்டிலும் நாட்டிய 
உண்மை புலப்படும். இக்கால மகளிர் பலர், இறைவனை ஏத்த உரிய நாமங்களை உணராமைக்குக் 
காரணத்தை  ஆராய்ந்து கண்டு, போக்குதல், சமய வளர்ச்சிக்கு வழி கோலுவதாம். 
மகளிரே சமயம் வளர்க்கத் தக்கார்.

    Our Lord Civa is the father of Lord (elephant-headed) Ganesha. Accompanied  by several 
bhutas He goes round the houses asking for alms. He accepts the food and moves around the 
universe. He appears as Supreme Flame. He manifests Himself in the old city of Seerkaazhi. 
In this city, very radiant girls wearing bangles in their forearms dance. They dance on tinkling 
plates that create musical sounds with attractive postures and sing divine songs on His name. 
Finally they worship Him,  praying and declaring 'glory to Thee - Oh Lord - glory to Thee'. 
The city is surrounded by sea waves making noise all the year round.

2510.     சங்கவெண்குழைச்செவியன்தண்மதிசூடியசென்னி 
    அங்கம்பூணெனவுடையஅப்பனுக்கழகியவூராந் 
    துங்கமாளிகையுயர்ந்ததொகுகொடிவானிடைமிடைந்து 
    வங்கவாண்மதிதடவுமணிபொழிற்காழிநன்னகரே.        4

    சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி 
    அங்கம் பூண் எனவுடைய அப்பனுக்கு அழகிய ஊராம் 
    துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து 
    வங்க வாண்மதி தடவுமணி பொழில் காழி நன் நகரே.

    cagka veNkuzaic ceviyan, taNmati cuTiya cenni 
    agkam pUN ena uTaiya appanukku azakiya UrAm- 
    tugka mALikai uyarnta toku koTi vAn iTai miTaintu, 
    vagka vAN mati taTavum maNi pozil kAzi nan nakarE.

பொருள்:     சங்கால் ஆன வெண்ணிறக் குழை அணிந்த செவியன்; குளிர்ந்த பிறைமதி 
சூடிய சென்னியன்; எலும்புமாலையைப் பூணென உடைய அப்பன்; அந்த அப்பனுக்கு அழகிய ஊராம் 
அது எதுவெனில், உயர்ந்த மாளிகைகள் உயரத்தில் தொக்க கொடிகள் ஆகியவற்றுடன் நெருங்கித் 
தோணி போன்ற வடிவுடைய பிறை தடவும் அழகிய பொழில்களை உடைய காழி நன்னகரே.

குறிப்புரை:     அங்கம் -எலும்பு. துங்கம்- உயர்ச்சி. தொகு கொடி- தொக்க கொடிகள். 
வினைத்தொகை, மிடைந்து - நெருங்கி. வங்கமதி - வெள்ளியைப் போன்ற திங்கள். 

    Our Lord Civa in one of His ears wears the white chunk as an earring. 
In His matted hair He retains the cool moon. He is our Chief who wears the 
garland made up of bones. This Lord likes His best to be manifested in attractive 
Seerkaazhi. In this city, very tall palatial buildings are many. In the top terrace 
of these buildings very big, glorious flags are tied to the flag poles. Many flags 
flying in the sky sway gently near the white moon moving in the sky. The city is 
surrounded by natural forests, very beautiful to look at. Such a very famous city 
is Seerkaazhi.

2511.     மங்கைகூறமர்மெய்யான்மான்மறியேந்தியகையான் 
    எங்களீசனென்றெழுவாரிடர்வினைகெடுப்பவற்கூராஞ் 
    சங்கையின்றிநன்னியமந்தாஞ்செய்துதகுதியின்மிக்க 
    கங்கைநாடுயர்கீர்த்திமறையவர்காழிநன்னகரே.         5

    மங்கை கூறமர் மெய்யான் மான்மறி ஏந்திய கையான் 
    எங்களீசன் என்று எழுவாரிடர் வினை கெடுப்பவர் கூராம் 
    சங்கையின்றி நன்னிய மந்தாஞ் செய்து தகுதியின் மிக்க 
    கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே.

    "magkai kURu amar meyyAn, mAnmaRi Entiya kaiyAn, 
    egkaL Ican!" enRu ezuvAr iTarvinai keTuppavarku Ur Am-         
    cagkai inRi nanniyamam tAm ceytu, takutiyin mikka 
    kagkai nATu uyar kIrtti maRaiyavar kAzi nannakarE.

பொருள்:     பெண்ணொரு பாகமான உடலன்; மான்கன்றினை ஏந்திய கையன்; எங்களுடைய 
ஈசன் என்று விழித்து எழுவாரின் இடர்வினைகளைக் கெடுப்பவன்; அவருக்கு ஊர் யாதெனில், 
ஐயமின்றி நல்ல ஆசார ஒழுக்கத்தால், கங்கை நதி பாயும் நாடுவரைப் பரவிய, புகழ் வாய்ந்த 
மறையவர் வாழும் சீகாழி நன்னகரே.

குறிப்புரை:     உண்மை வடிவானவன் என்பது பொருந்துமேல் கொள்க. எழுவார் -விழித்து எழுதல். 
மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாகத் தியானித்து எழுதல். இடர்வினை. இரண்டன் உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாயும் உம்மைத் தொகையாயும் கொள்ளலாம். வினை கெடுப்பவன்-
வினைகளைப் போக்கிப் பிறவியை ஒழித்துப் பேரின்பம் அருளும் சிவபெருமான். சங்கை - ஐயம் .
தகுதி- ஒழுக்கத்தால் உயர்தல் மிக்க மறையவர். கீர்த்தியை உடைய மறையவர். உயர்கீர்த்தி 
வினைத் தொகை. கங்கை நாடு - கங்காநதி பாயும் நாட்டினின்றும் வந்த மறையவர் என்றேனும் 
அந்நாடு வரையிலும் பரவிய கீர்த்தியை உடைய மறையவர் என்றேனும் கொள்க.

    Our Lord Civa gave half of His body to His consort Uma Devi. In one of His hands He 
holds a young deer. Those people who, while getting up from their bed in the early hours think 
in their mind and utter 'Oh! Civa is our Lord' will find their past bad karma wiped out by 
our Lord Civa. For such a Lord Seerkaazhi is the city and  there He is manifested. In that city 
Vedic scholars with much clarity and no doubts, do all the daily sacred rituals without any 
fault. Their fame spreads all over the country where the Ganges river flows. They live in 
such a glorious city Seerkaazhi.

2512.     நாறுகூவிளமத்தநாகமுஞ்சூடியநம்பன் 
    ஏறுமேறியஈசனிருந்தினிதமர்தருமூதூர் 
    நீறுபூசியவுருவர்நெஞ்சினுள்வஞ்சமொன்றின்றித்             
    தேறுவார்கள்சென்றேத்துஞ்சீர்திகழ்காழிநன்னகரே.        6

    நாறு கூவிளம் அத்த நாகமும் சூடிய நம்பன் 
    ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர் தரு மூதூர் 
    நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்றின்றித் 
    தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர்திகழ் காழி நன் நகரே.

    nARu kUviLam mattam nAkamum cUTiya nampan, 
    ERum ERiya Ican, iruntu initu amartaru mUtUr- 
    nIRu pUciya uruvar, nenjcinuL vanjcam onRu inRit 
    tERuvArkaL, cenRu Ettum cIr tikaz kAzi nannakarE.

பொருள்:     மணமுடைய கூவிளம், ஊமத்தை, சுரபுன்னை ஆகிய மலர்களைச் சூடிய நம்பன்; 
விடை ஏறிய செல்வன்; அவ்வீசன் விரும்பி இருந்தருளும் ஊர் யாதெனில், திருநீறு பூசிய உருவராய், 
நெஞ்சில் வஞ்சம் ஒன்றும் இன்றிச் சிவனே தம் தெய்வம் என்று தெளிந்தவர்களாகிச் சென்று ஏத்தும் 
பெருமை திகழும் காழி நன்னகரே.

குறிப்புரை:     ஏறும் ஏறிய ஈசன் - என்பதிலுள்ள உம்மை ஏற்றின் அடங்காமையையும் அதை 
அடக்கிய ஈசன் ஆற்றலையும் குறித்தது. பசுக்களுக்கு எல்லாம் பதியாதலை உணர்த்துவதே அதன் 
உண்மைக் கருத்து. இருந்து அமர்தரும் ஊர் என்றதால் நிலைத்திருக்கையும் மிக்க விருப்பமும் புலப்படும்.

    Our Lord Civa, the most elite Supreme Being, adorns His head with the sweet smelling 
bael leaves and datura flowers. Along with these He accommodates the snake also on His hair. 
He is our Lord who loves to sustain the white bull and rides on it. This Lord is manifested 
in Seerkaazhi. In this city, the servitors always smear their body with holy ashes. They 
have no evil feelings in their mind. They are very clear in their thoughts. Such good people 
go to the temple in Seerkaazhi and worship our Lord Civa daily.

2513.     நடமதாடியநாதன்நந்திதன்முழவிடைக்காட்டில் 
    விடமமர்ந்தொருகாலம்விரித்தறமுரைத்தவற்கூராம் 
    இடமதாமறைபயில்வாரிருந்தவர்திருந்தியம்போதிற் 
    குடமதார்மணிமாடங்குலாவியகாழிநன்னகரே.        7

    நடமதாடிய நாதன் நந்தி தன் முழவிடைக் காட்டில் 
    விடம் அமர்ந்து ஒருகாலம் விரித்தற முரைத்தவற்கூராம் 
    இடம் அதாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் 
    குடம் அதார் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே.

    naTam atu ATiya nAtan, nantitan muzavu iTaik kATTil; 
    viTam amarntu, oru kAlam, virittu aRam uraittavaRku Ur Am- 
    iTam atA maRai payilvAr; iruntavar, tirunti am pOtiR 
    kuTam atu Ar maNi mATam kulAviya, kAzi nannakarE.

பொருள்:     நந்தியினுடைய முழவுக்கு ஏற்பத் திருக்கூத்து ஆடிய நாதன்; காட்டில் கல்லாலின் 
கீழ் அமர்ந்து ஒரு காலத்தில் அறத்தை விரித்து உரைத்தவருக்கு ஊராம்; அது யாதெனில், 
பெருந்தவத்தோர், மறைபயில்வார்க்கு இடமதாம்; திருத்தமான போதுபோன்ற கலசம் அமைந்த 
மாடங்கள் நெருங்கிய காழி நன்னகரே.

குறிப்புரை:     நடமது - திருக்கூத்து, நடனமாகியமது எனக் கொண்டுரைத்தலுமாம். ஆனந்த 
நடனம் என்பதை நடமது எனப் பொருந்தும் மதுவை உண்டு அடையும் இன்பத்தை மது எனலாம். 
ஆனந்தத்தைக் குறிக்க அச்சொல்லை ஆள்வது பொருந்தும். நந்தி மத்தளம் வாசிக்க நடமாடினார் 
என்னும் வரலாறு இதில் குறிக்கப்பட்டது. ஒருகாலம் அறம் விரித்து உரைத்தவற்கு என்பதில் 
சநகாதியர்க்குக் கல்லாலின் கீழ்  இருந்து உபதேசித்த உண்மை குறிக்கப்பட்டது. இடம் - பரப்பு. 
வேதப்பொருளின் விரிவைக் குறித்தது . இருந்தவர்-பெருந்தவத்தோர்.

    Our Lord Civa is our Chief. He dances in the burning ghat while the servitor,
Nandhi plays the drum. Lord Civa imbibed the animal poison, which came from the ocean.
Once He explained the deep knowledge about divine virtue to the four saints Janakar 
and others. He highly likes the city of Seerkaazhi. In this city, Brahmin  scholars 
have mastered all the entire Vedas. Attractive components looking like water pot are 
fixed at the top portion of the pillars with gems in the palaces all over the area. 
Such a glorious city is Seerkaazhi.

2514.    கார்கொள்மேனியவ்வரக்கன்றன்கடுந்திறவினைக்கருதி 
    ஏர்கொள்மங்கையுமஞ்சஎழில்மலையெடுத்தவன்நெரியச் 
    சீர்கொள்பாதத்தோர்விரலாற்செறுத்தவெஞ்சிவனுறைகோயில் 
    தார்கொள்வண்டினஞ்சூழ்ந்தண்வயற்காழிநன்னகரே.        8

    கார் கொள் மேனி அவ்வரக்கன் தன் கடுந்திற வினைக்கருதி 
    ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச் 
    சீர் கொள் பாதத்தோர் விரலால் செறுத்த வெஞ்சிவன் உறைகோயில் 
    தார் கொள் வண்டினம் சூழ்ந்தண் வயல் காழி நன் நகரே.

    kAr koL mEni av arakkan-tan kaTun tiRa vinaik karuti, 
    Er koL magkaiyum anjca, ezil malai eTuttavan-neriya, 
    cIr koL pAtattu OrviralAl ceRutta ven civan uRai kOyil- 
    tAr koL vaNTu inam cUznta taNvayal kAzi nan nakarE.

பொருள்:     கார்மேகத்தின் நிறங்கொண்ட மேனியன்; அரக்கன் இராவணனின் வலிய 
திறனைக் குறித்து அழகிய மங்கையாகிய உமையும் அஞ்ச, அழகிய கயிலைமலை எடுத்தவன் 
நசுங்கப் பெருமையுடைய  திருவடியின் ஒருவிரலால் அழித்த எம்முடைய சிவன் உறைகின்ற 
திருக்கோயில், யாதெனில், பூவில் மொய்க்கும் வண்டினம் சூழ்ந்த குளிர்ந்த வயல்களை 
உடைய காழி நன்னகரே.

குறிப்புரை:     ஏர் கொள் மங்கை- அழகுடைய உமாதேவியார். எழில் மலை - அழகிய கயிலை. 
உயர்ச்சியைக் குறித்த எழுச்சியுமாம். தார்-பூ. 

    Raavanan, the king of Sri Lanka, a dark bodied person, considered his mightiness 
as great and tried to tilt mount Kailash where the most delightful charming Uma Devi stayed. 
She got frightened by the movement of the mountain. Immediately our Lord Civa pressed the 
mountain with the small toe of His holy feet. Raavanan got crushed under the mountain. 
This Lord Civa is manifest in the famous city of Seerkaazhi temple. Here honey is available 
in plenty in flowers. Bees gather in large numbers near the flowers to suck honey. Also 
cool paddy fields are many round the city.

2515.     மாலுமாமலரானுமருவிநின்றிகலியமனத்தாற் 
    பாலுங்காண்பரிதாயபரஞ்சுடர்தன்பதியாகுஞ் 
    சேலும்வாளையுங்கயலுஞ்செறிந்துதன்கிளையொடுமேய 
    ஆலுஞ்சாலிநற்கதிர்களணிவயற்காழிநன்னகரே.        9

    மாலும் மாமலரானும் மருவி நின்று இகலிய மனத்தால்             
    பாலும் காண்பரிதாய பரஞ்சுடர் தன் பதியாகும்
    சேலும் வாளையும் கயலும் செறிந்து தன்கிளையொடு மேய 
    ஆலும் சாலி நற்கதிர் களணி வயல் காழி நன் நகரே.

    mAlum mA malarAnum maruvi ninRu, ikaliya manattAl,
    pAlum kANpu aritu Aya paranjcuTar tan pati Akum- 
    cElum vALaiyum kayalum ceRintu tan kiLaiyoTu mEya, 
    Alum cAli nal katirkaL aNi, vayal kAzi nan nakarE.

பொருள்:     திருமாலும் பெரிய தாமரை மலர் மேலிருக்கும் பிரமனும் இருவரும் கூடித் தம்முள் 
மாறுபட்ட மனத்தராய்த் தன்னுடைய பக்கத்தையும் கூடக் காண்டற்கு இயலாத பெரிய சோதி; அந்த 
மெய்யொளியின் ஊராவது, சேல்மீனும் வாளை மீனும் கயல் மீனும் தம் சுற்றத்தோடு நெருங்கி 
மேயவே, ஆடுகின்ற கதிர்களைக் கொண்ட சாலிநெல் வயல்களை உடைய சீகாழி நன்னகரே.

குறிப்புரை:     பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர்- தனது பக்கத்தையும் காண்பதற்கு எளிதல்லாத 
மெய்யொளி. சேல்,வாளை, கயல் என்பன வெவ்வேறு வகை மீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம்
பல உள. ஆலும் சாலி - ஆடுகின்ற நெல்.

    Tutelary deities Thirumaal and Brahma had different opinions about their 
superiority. By their side our Lord Civa was available but could not be seen by 
these two demigods. Then instantly Lord Civa appeared as a dazzling, infinite supernal 
flame. This Lord Civa is manifest in the famous temple in Seerkaazhi. In this city, 
carnatic carp fish, sword fish, and carp tank fish - all join together with their young
ones and jointly live and play with each other. Also the paddy fields are full of paddy
with the ear of the grains moving in the air.

2516.     புத்தர்பொய்மிகுசமணர்பொலிகழலடியிணைகாணுஞ் 
    சித்தமற்றவர்க்கிலாமைத்திகழ்ந்தநற்செழுஞ்சுடர்க்கூராஞ் 
    சித்தரோடுநல்லமரர்செறிந்தநன்மாமல்கொண்டு                 
    முத்தனேயருளென்றுமுறைமைசெய்காழிநன்னகரே.        10

    புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழலடி இணை காணும் 
    சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்த நற்செழுஞ்சுடர்க் கூராம் 
    சித்தரோடு நல்லமரர் செறிந்த நன்மாமல் கொண்டு                 
    முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே.

    puttar, poy miku camaNar, poli kazal aTi iNai kANum 
    cittam maRRu avarkku ilAmait tikaznta nal cezunjcu Tarkku Ur Am- 
    cittarOTu nal amarar, ceRinta nanmAmal koNTu, 
    "muttanE, aruL!" enRu muRaimai cey kAzi nannakarE.

பொருள்:     பொய்மிகு பவுத்தரும், பொய்மிகு சமணரும், பொன்போல் ஒளிரும் கழல் அணிந்த
 இரு திருவடிகளின் உணரும் பேறு இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லாமையாகத் திகழ்ந்த நற்செழுஞ் 
சுடருக்கு ஊர் யாதெனில், சித்தர்களுடன் நல்ல அமரர்களும் திரண்ட நன்மலர்கள் கொண்டு 'முத்தனே 
அருள்க' என்று முறைமை செய்யும் காழி நன்னகரே.

குறிப்புரை:     'பொய்மிகு' என்பது இடைநிலை விளக்கு. பொலிகழல் இணைகாணும் சித்தம் 
அற்றவர்க்கு- பொன்போல் ஒளி செய்யும் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் 
ஒழிந்த அப்புத்தர்க்கும் சமணர்க்கும். இல்லாமை- பெறுதல் இல்லாதபடி. திகழ்ந்த நல்செழுஞ்சுடர்க்கு - 
சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர் 
கொண்டு வழிபாடு செய்யும்போது 'முத்தனே அருள்' என்று முறையிட்டுக் கொண்டனர் என்றபடி. 
குறையிரந்து, முறைமை செய்தல். அரசர் முதலியவர்பால் குடிகள் முதலியார்க்கு உள்ளது.

    Our Lord Civa wears on His holy feet very good looking anklets. The Buddhists 
and Jains  are all liars. Our Lord could not be seen by these groups of people. This 
Lord looks very bright like red flame, to manifest Himself Seerkaazhi is the right 
place. The supernals and celestials with fine flowers come to the temple and do the 
poojas - homage to the deity and declare 'Muthane! - one emancipated from evil-grace 
us!". This is the city Seerkaazhi where these people pray.

2517.     ஊழியானவை பலவுமொழித்திடுங்காலத்திலோங்கு......
    .................................................
    .................................................
    ..................................................        11

    ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு.......
    ....................................................
    ....................................................
    .....................................................

    Uzi Anavai palavum ozittiTum kAlattil Ogku.............
    ......................................................
    ......................................................
    .......................................................

பொருள்: பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.

    The Seerkaazhi is not destroyed even after many deluges.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            96ஆம் பதிகம் முற்றிற்று
            End of 96th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 233             பதிக எண்: 97.  

97.சீர்காழி                97. SEERKAAZHI

பண் : திருவிராகம்             Pann: Thiruviraagam

திருத்தல வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகம் 137ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்

2518.     நம்பொருள்நம்மக்களென்றுநச்சியிச்சை செய்துநீர் 
    அம்பரமடைந்துசாலஅல்லலுய்ப்பதன்முனம் 
    உம்பர்நாதனுத்தமனொளிமிகுத்தசெஞ்சடை 
    நம்பன்மேவுநன்னகர்நலங்கொள்காழிசேர்மினே.        1

    நம் பொருள் நம்மக்கள் என்று நச்சி இச்சை செய்துநீர் 
    அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் 
    உம்பர் நாதன் உத்தமன் ஒளி மிகுத்த செஞ்சடை 
    நம்பன் மேவு நன்னகர் நலம் கொள் காழி சேர்மினே.

    "nam poruL, nam makkaL" enRu nacci, iccai ceytu, nIr, 
    amparam aTaintu, cAla allal uyppatan munam- 
    umpar nAtan, uttaman, oLi mikutta cenjcaTai 
    nampan, mEvu nan nakar-nalam koL kAzi cErminE!

பொருள்:     பொருட் சார்பும் உடற்சார்பும் விரும்பி பொருளின் மேலும் மக்கட் சுற்றத்தின் மேலும் 
பற்றுவைத்து ஆசைக்கடலுள் அழுந்தி மிக்க துன்பம் அடைந்து கேடுறுவதன் முன் தேவர்களுக்கும் 
தேவனான உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையன்; நம் விருப்பத்திற்கு  உரியவன் ஆகிய சிவன் மேவும் 
நல்ல நகர், அழகுடைய காழியைச் சேர்மின். 

குறிப்புரை:     பொருட்பற்றாலும் மக்கட்பற்றாலும், லோகந்தரம் சேர்ந்து, துன்பம் அடைதற்கு 
முன்னமே சீகாழியைச் சேருங்கள் நீங்கள் என்று உபதேசம் புரிந்தருள்வதை உணர்க. அம்பரம் 
அடைதல் – நாதனார் ஆனை உய்க்க நரகொடு சுவர்க்கம் போய்ச் சேர்தல்.

    You declare that it is your wealth; they are your children. Before being 
immersed in the fathomless sea of attachment and before you get languished, toiling 
and moiling in your life, you please reach the attractive city temple of Seerkaazhi. 
Prostrate before our Lord's holy feet and worship Him. Our Lord is the Chief of devas, 
He is the Supreme Being of exemplary conduct. His red hair locks are very bright. 
He is the most elite among men.

2519.     பாவமேவுமுள்ளமோடுபத்தியின்றிநித்தலும் 
    ஏவமானசெய்துசாவதன்முனம்மிசைந்துநீர் 
    தீபமாலைதூபமுஞ்செறிந்தகையராகிநந் 
    தேவதேவன்மன்னுமூர்திருந்துகாழிசேர்மினே.        2

    பாவம் ஏவும் உள்ளம் ஓடு பத்தியின்றி நித்தலும் 
    ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்துநீர் 
    தீப மாலை தூபமும் செறிந்த கையராகிநம் 
    தேவ தேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே.

    pAvam mEvum uLLamOTu, patti inRi, nittalum 
    Evam Ana ceytu, cAvatan munam-icaintu nIr, 
    tIpam mAlai tUpamum ceRinta kaiyar Aki, nam 
    tEvatEvan mannum Ur tiruntu kAzi cErminE !

பொருள்:     பாவமான நினைவுகள் உடைய நெஞ்சினோடு இறைவன்மீது பத்தியின்றிக் 
குற்றமானவையே செய்து நீர் இறந்து போவதற்கு முன்னம், தீபம், மாலை, தூபம் ஆகியன கையில் 
கொண்டு நம் பதியினை வழிபட்டு உய்ய, தேவதேவனாகிய மகாதேவன் இருக்கும் ஊர்திருத்தமான 
காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     நல்வினை தீவினை என்பன கன்மங்கள். அவை ஆகாமியவினை. அவ்விரண்டும் 
அறமும் மறமும் ஆகும் நிலைமையில் சஞ்சிதம் எனப்படும். அறம் - புண்ணியம். மறம்- பாபம். 
அப்புண்ணிய பாவம் இரண்டும் அநுபவத்திற்கு வந்து சுக துக்கங்கள் ஆக்கும். அப்போது அவ்விரண்டும் 
பிராரப்தம் எனப்படும். புண்ணியம் பசு புண்ணியம், சிவ புண்ணியம் என இருவகைப்படும். அவற்றுள் 
ஈண்டுச் சிவபுண்ணியத்துள் அடங்கும் சிவபூஜையைக் கருத வேண்டும். 'புண்ணியஞ் செய்வார்க்குப் 
பூவுண்டு நீருண்டு' என்பது திருமந்திரம். அப்புண்ணியத்தைச் செய்க என விதிப்பாராய், 'நீர், தீபம், 
மாலை, தூபம் என்பவை செறிதல் வேண்டும்' என்றருளினார். நீர் என்பது முன்னிலைப் பெயராயினும் 
பொருத்தமாயிருத்தலின் வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டது.

    Oh! Ye people! with a wrong bent of your mind, you execute unfair and sinful actions 
in your life. You have no devotion to God and lack the divine, virtuous mind. Everyday you 
undertake corrupted, bad actions using false words. But before you die, create devotion and 
love for Lord Civa and reach the temple carrying light and incense, and flower garlands, 
and prostrate before His holy feet and worship our Lord Civa who is manifest in the temple 
of Seerkaazhi as the Chief of devas.

2520.     சோறுகூறையின்றியேதுவண்டுதூரமாய்நுமக் 
    கேறுசுற்றமெள்கவேயிடுக்கணுய்ப்பதன்முனம் 
    ஆறுமோர்சடையினானாதியானைசெற்றவன் 
    நாறுதேன்மலர்ப்பொழில்நலங்கொள்காழிசேர்மினே.        3

    சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு 
    ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் 
    ஆறும் ஓர்சடையினான் ஆதியானை செற்றவன் 
    நாறு தேன்மலர்ப் பொழில் நலம் கொள் காழி சேர்மினே.

    cORu kURai inRiyE tuvaNTu, tUram Ay, numakku 
    ERu cuRRam eLkavE, iTukkaN uyppatan munam- 
    ARum Or caTaiyinAn, Ati yAnai ceRRavan, 
    nARu tEn malarppozil nalam koL--kAzi cErminE!

பொருள்:     உண்ண உணவும் உடுத்த உடையும் இன்றிச் சோர்ந்து போக, உம்முடைய பெருகிய 
சுற்றத்தாரும் உம்மை விட்டுத் தூர விலகிப்போய் இகழ, நீர் துன்பம் எய்தும் முன்னமே கங்கையாற்றையும் 
அது தங்கிய ஒப்பற்றதொரு சடையையும் உடையவன்; எப்பொருட்கும் முதலாமவன், ஆனையின் தோலை 
உரித்து அதனை அழித்தவன்; அச்சிவனுடைய தேன் நாறும் மலர்பொழில்களை உடைய அழகிய 
காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     இடுக்கண் என்பது மரூஉ. அலக்கண், தறுகண், வன்கண், புன்கண் முதலியவை 
உள்ளேயுற்ற நிலையை வெளியே தோற்றும் கண்ணென்னும் உறுப்பைப் பற்றித் தோன்றிய 
பெயர்களாதல் அறிக. ஆறும்- சுவதந்திரம் முதலிய அறுகுணங்களும் எனக் கொண்டு, அவற்றால் 
ஓர்தற்குரிய சடையுடையான் எனல் சிறக்கும். சடைஞானமயமாகும். 'நுண்சிகை ஞானமாம்' (திருமந்திரம்).

    Oh my dear people! You may become very poor in your life. You are unable to help 
your close, poor relatives who require food, dress and comforts because of their poverty; 
you are not able to support them; you feel very bad and become very unhelpful to your poor
relatives and suffer in your mind. But before you reach such bad times you may reach the 
very attractive temple in the rich city of Seerkaazhi and worship our Lord Civa. You should 
realise and know that our Lord Civa supports the river Ganges in His matted hair. You should 
remember that our Lord plucked one of the four heads of Brahma. Our Lord is highly satisfied 
to manifest Himself in Seerkaazhi which is surrounded by many forest areas, full of flowers 
which spread the sweet smell of honey all round the area.

2521.     நச்சிநீர்பிறன்கடைநடந்துசெல்லநாளையும் 
    உச்சிவம்மெனும்முரையுணர்ந்துகேட்பதன்முனம் 
    பிச்சர்நச்சரவரைப்பெரியசோதிபேணுவார் 
    இச்சைசெய்யுமெம்பிரானெழில்கொள்காழிசேர்மினே.    4

    நச்சி நீர்பிறன் கடை நடந்து செல்ல நாளையும் 
    உச்சிவம் எனும் உரையுணர்ந்து கேட்பதன் முனம் 
    பிச்சர் நச்சரவரைப் பெரிய சோதி பேணுவார் 
    இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்மினே.

    nacci nIr piRan katai naTantu cella, "nALaiyum 
    ucci vam!" enum urai uNarntu kETpatan munam-
    piccar, naccu aravu araip periya cOti, pENuvAr 
    iccai ceyyum empirAn,-ezil koL kAzi cErminE!

பொருள்:     பொருளைப் பெரிதும் விரும்பிப் பிறரொருவர் வாசலில் போய் நின்று இரக்க, 
அவர் கொடுக்க மனமின்றி 'நாளை வருக; உச்சிப்போதில் வருக' என அலைக்கழிக்கும் உரையைக் 
கேட்டு வருந்தும் நிலை எய்தும் முன்னமேயே, பித்தர், நஞ்சுடைய பாம்பினை அணிந்தவர், 
பேரொளியானவர், தன்னைப் பேணுவாரை விரும்பும் எம்பிரானாகிய சிவனின் அழகிய 
காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     இரப்பவர் பிறர் கடைவாயில் நின்று 'இடுக' என்று இரக்க. அவர் 'நாளை 
நண்பகலில் வருக' என்று சொல்லும் சொல்லைக் கேட்டுணர்ந்து வருந்தும் நிலையெய்தும் 
முன்னரே சிவபிரான் திருக்காழியைச் சேருங்கள்.

    Oh! Ye poor people! You walk and reach rich man's house for help. That rich man 
even after seeing your poor status, neglects you and tells you to come next day at day 
time. As soon as you hear such words from the rich man you feel sorry and get disappointed 
to hear his corrupt words. But before hearing such words from that rich man, you may go to 
the temple where our Lord Civa is manifest in the city of Seerkaazhi and worship Him. 
He has full concern for your life; He is the brighest Supreme Being with the poisonous 
snake on His waist; He shows much affection those who worship Him. You may realise 
this our Lord Civa is manifest in such a glorious temple in Seerkaazhi city and reach 
the temple in that city and worship Him.

2522.     கண்கள்காண்பொழிந்துமேனிகன்றியொன்றலாதநோய் 
    உண்கிலாமைசெய்துநும்மையுய்த்தழிப்பதன்முனம் 
    விண்குலாவுதேவருய்யவேலைநஞ்சமுதுசெய் 
    கண்கள்மூன்றுடையவெங்கருத்தர்காழிசேர்மினே.         5

    கண்கள் காண்பொழிந்து மேனி கன்றியொன்றலாத நோய் 
    உண்கிலா மைசெய்து நும்மை உய்த்தழிப் பதன்முனம் 
    விண்குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சமுது செய் 
    கண்கள் மூன்று உடைய வெங்கருத்தர் காழி சேர்மினே.

    kaNkaL kANpu ozintu, mEni kanRi, onRu alAta nOy 
    uNkilAmai ceytu, nummai uyttu azippatan munam- 
    viN kulAvu tEvar uyya vElai nanjcu amutu cey, 
    kaNkaL mUnRu uTaiya, em karuttar--kAzi cErminE!

பொருள்:     முதுமை எய்தி கண்கள் காணும் தன்மை ஒழிந்து உடல் தளர்ந்து இன்னதென்று 
அறிய முடியாத நோய் வந்து உணவு உட்கொள இயலாமையைச் செய்து நும்மை வருத்தி அழிப்பதன் 
முன்னம், விண்ணுலகத்தில் மகிழ்ந்திருக்கின்ற தேவர்கள் உய்வதற்காகக் கடலில் தோன்றிய 
நஞ்சினை அமுதாக உண்டருளியவரும் கண்கள் மூன்று உடையவருமாகிய  எம்முடைய கருத்தர் 
சிவனிருக்கும் காழி சேர்மினே.

குறிப்புரை:     காண்பு- காட்சி. 'காண்பரிதாய பரசுடர்' 'காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள 
வேண்டும்' 'காண்பினிய மணிமாடம்' (தி. 7 ப. 46 பா. 2, 3) 'கண்கள் காண்பொழிந்து'

    Oh! Ye people! Before you lose the vision of your eyes, before your body gets 
rotten, before you get more than one disease in your body, before such evil effects  
destroy your body i.e., before you die, well before such things happen to you, you         
may go to the temple of our Lord, our Chief who is manifest in the temple in Seerkaazhi 
city. He saved the devas and all other celestials from death, from the poison that came 
out of the ocean and He imbibed it. He has three eyes. He is our Chief. You better go 
there, worship Him and get benefits in your life.

2523.     அல்லல்வாழ்க்கையுய்ப்பதற்கவத்தமேபிறந்துநீர்
     எல்லையில் பிணக்கினிற்கிடந்திடாதெழும்மினோ 
    பல்லில்வெண்டலையினிற்பலிக்கியங்குபான்மையான் 
    கொல்லையேறதேறுவான்கோலக்காழிசேர்மினே.        6

    அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்         
    எல்லையில் பிணக்கு இனிற் கிடந்திடாது எழும்மினோ 
    பல்லில் வெண்தலை இனிற்பலிக்கியங்கு பான்மையான் 
    கொல்லை ஏறதேறுவான் கோலக் காழி சேர்மினே.

    allal vAzkkai uyppataRku avattamE piRantu, nIr, 
    ellai il piNakkinil kiTantiTAtu ezu(m) minO !
    pal il veN talaiyinil palikku iyagku pAnmaiyAn, 
    kollai ERu atu ERuvAn, kOlak kAzi cErminE!

பொருள்:     துன்பமயமான வாழ்க்கையை வாழ்வதற்கு வீணாகப் பிறந்து நீர் அளவிலாத 
சிக்கல்களில் சிக்கி அவற்றில் அழுந்திடாது எழும்மினோ. பற்கள் இல்லாத வெண்மையான 
தலையில் பிச்சைக்கு இரந்து அலையும் இயல்புடையவன், கொல்லை நிலத்துக்கு உரிய எருதின் 
மீது ஊருவோன் ஆகிய சிவனின் அழகிய காழி சேர்மினே.

குறிப்புரை:     அவத்தம் - (அபத்தம்) தவறு. பொய். பலிக்கு இயங்குபான்மையான், இயங்குதல் - நடத்தல்.

    Oh! Ye people! You get disease, ailment, sorrow, distress, calamity, diverse 
circumstances - all these happen to you because your birth is vain and reach the stage 
of an unprofitable life. Before such things happen to you, please go to the temple in 
Seerkaazhi city where our Lord Civa is manifest and worship Him. He moves round the 
forest area on His bull to get alms in the white skull which has no teeth in the skull bone.

7ஆவது பாடல்கிடைக்கப் பெறவில்லை.

2524.     பொய்மிகுத்தவாயராய்ப்பொறாமையோடுசெல்லுநீர் 
    ஐமிகுத்தகண்டராயடுத்திரைப்பதன்முனம் 
    மைமிகுத்தமேனிவாளரக்கனை நெரித்தவன் 
    பைமிகுத்தபாம்பரைப்பரமர்காழிசேர்மினே.        8

    பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர் 
    ஐமிகுத்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம் 
    மைமிகுத்த மேனி வாளரக்கனை நெரித்தவன்
    பைமிகுத்த பாம்பரைப் பரமர் காழி சேர்மினே.

    poy mikutta vAyarAyp poRAmaiyOTu cellum nIr 
    ai mikutta kaNTarAy aTuttu iraippatan munam- 
    mai mikutta mEni vAL arakkanai nerittavan, 
    pai mikutta pAmpu araip paramar, kAzi cErminE!

பொருள்:     பொய்யே பேசும் வாயினை உடையராய், பிறர் ஆக்கங் கண்டு பொறாமையுடன் 
வாழும் நீர், கோழைபட்ட மிடறு உடையராய் பேசவும் முடியாமல் மூச்சிரைப்பதன் முன், கரிய 
மேனியனான அரக்கன் இராவணனை நசுக்கியவன், நச்சுப்பையை உடைய பாம்பினைக் கச்சாகக் 
கட்டியவன் ஆகிய பரமனாகிய சிவனின் காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     ஐமிகுத்த கண்டர் - கோழை பெருகிய கழுத்தினர். இரைப்பது என்பது கோழை 
கட்டியபின் பேசமுடியாமல் மூச்சுடன் வரும் ஒலி.

    Oh! Ye people! You are all great liars; you speak falsehood. You speak out of 
jealousy and speak ill words. You get much mucous in your throat and find it difficult
for breathing.But before the breathing stops, you may go to the temple in Seerkaazhi
where our Lord Civa is manifest. You should know that our Lord Civa crushed the black 
bodied Raavanan's body, his heads and shoulders. He wears on His waist the hooded snake. 
This Lord will chase all your suffering if You worship Him well before starting a 
bad way of life.

2525.     காலினோடுகைகளுந்தளர்ந்துகாமநோய்தனால் 
    ஏலவார்குழலினாரிகழ்ந்துரைப்பதன்முனம் 
    மாலினோடுநான்முகன்மதித்தவர்கள்காண்கிலா 
    நீலமேவுகண்டனார்நிகழ்ந்தகாழிசேர்மினே.        9

    காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால் 
    ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் 
    மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா 
    நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.

    kAlinOTu kaikaLum taLarntu, kAma nOytanAl         
    Ela vArkuzalinAr ikazntu uraippatan munam- 
    mAlinOTu nAnmukan matittavarkaL-kANkilA 
    nIlam mEvu kaNTanAr nikaznta--kAzi cErminE!

பொருள்:     காமமாகிய பெருநோயை அனுபவித்தலால் கையுடன் கால்களும் தளர்ந்து கட்டற்றுப் 
போய், அன்புடன் உபசாரங்கள் செய்து போற்றி வந்த மனைவியரும் பழித்துரைக்கும் இழிவை அடையும் 
முன்னர், தற்போதத்தால் அறியப் புகுந்த திருமாலோடு நான்முகனும் காண இயலாதவராய், நீல நிறம் 
மேவிய கண்டர் வாழும் காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     காலுங் கையுந்தளர்ந்து, நோய்மிகப் பெற்றமையால் அன்பொடு உபசாரங்கள் செய்து 
போற்றிவந்த  மனைவியரும் இகழ்ந்துரைக்கும் இழிவை அடையும் முன்னரே காழி சேர்மின்  என்க. 
ஏலம் -  மயிர்ச்சாந்து.

    Oh! Ye people! Your hands and legs fail in their strength and you loiter and swing 
here and there. You get all sorts of ailment and suffer. Then your good and beautiful wife 
may show her affection and treat you lovingly. But after a long period of illness she will 
get disgusted and speak ill of you. But before hearing her ill words you may go to the 
temple in Seerkaazhi and worship our Lord. You know that the two demigods Thirumaal and 
Brahma were unable to see our Lord. That Civa is our Neelakandar. You should reach the 
temple and worship our Lord Civa who is manifest there in the temple.

2526.     நிலைவெறுத்தநெஞ்சமோடுநேசமில்புதல்வர்கள் 
    முலைவெறுத்தபேர்தொடங்கியேமுனிவதன்முனந் 
    தலைபறித்தகையர்தேரர்தாந்தரிப்பரியவன் 
    சிலைப்பிடித்தெயிலெய்தான்திருந்துகாழிசேர்மினே.        10

    நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் 
    முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன்முனந் 
    தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்பரியவன் 
    சிலை பிடித்து எயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.

    nilai veRutta nenjcamOTu nEcam il putalvarkaL 
    mulai veRutta pEr toTagkiyE muniva tan munam- 
    talai paRitta kaiyar, tErar, tAm tarippa(a)riyavan; 
    cilai piTittu eyil eytAn;--tiruntu kAzi cErminE!

பொருள்:     நோயில் கிடக்கும் நிலையினால் வெறுப்படைந்த அன்பிலாத புதல்வர்களும் 
பால்குடி மறந்த இளம் பாலகர்களும் சலித்து வெறுப்படையா முன்னம், சமணர் பவுத்தர் ஆகிய 
புறச்சமயத்தவர் தரிப்பதற்கு அரியவன், மலையை வில்லாகப் பிடித்து மும்மதில் எய்தான் 
ஆகிய சிவனின் திருத்தம் எய்திய காழியைச் சேர்மினே.

குறிப்புரை:     பெற்றவரை வழிபட்ட மக்களும் பலநாள் படுக்கையிற் கிடந்தும் வருந்தும் 
அப்பெற்றோர்க்கு அவ்வப்போது வேண்டுவன செய்து சலித்து, வெறுத்து, இவ்வாறு கிடந்து தாமும் 
துன்புற்று நம்மையும் துன்புறுத்தும் இவர்கள் இருப்பதினும் இறப்பதே நன்று, என முன்னைய நிலையை     
வெறுப்பர். அதனை 'நிலைவெறுத்த நெஞ்சம்' என்றார். வெறுத்தல் செறிதல், நெருங்கல்.

    Oh! Ye people! You may ail and suffer for long periods. Your children may comfort 
you initially as their father, but later on when the illness is prolonged the wife and 
children will be disgusted and angry. Before such an angry situation arises, you  may go 
to the temple of Seerkaazhi and worship our Lord Civa. You may reach this city of Lord 
Civa, who is too rare to be realised by the Jains who pluck the hair from their head 
and by the Buddhists. This Civa is the Lord, who holding a bow, burnt the three fortresses 
of the asuras. Worship the Lord of this beautiful city.

2527.     தக்கனார்தலையரிந்தசங்கரன்றனதரை 
    அக்கினோடரவசைத்த அந்திவண்ணர்காழியை 
    ஒக்கஞானசம்பந்தனுரைத்தபாடல்வல்லவர் 
    மிக்கஇன்பமெய்திவீற்றிருந்துவாழ்தல்மெய்ம்மையே.        11

    தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனதரை 
    அக்கினோடு அரவசைத்த அந்திவண்ணர் காழியை 
    ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் 
    மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

    takkanAr talai arinta cagkaran-tanatu arai 
    akkinOTu aravu acaitta antivaNNar--kAziyai, 
    okka njAnacampantan uraitta pATal vallavar, 
    mikka inpam eyti vIRRiruntu vAztal meymmaiyE.

பொருள்:     தக்கனுடைய தலையை அரிந்த சங்கரனார், எலும்புடன் பாம்பினையும் 
திருமேனிமேல் தரித்தவர், அந்தி வண்ணர், அவருடைய காழியைப் பொருத்தமாகத் 
திருஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர், மிகுந்த இன்பத்தை 
எய்தி, சிறப்புடன் வாழ்தல் மெய்யாகும்.

குறிப்புரை:     தலையரிந்த சங்கரன் என்றதால், தலை அரிந்த கொடுமை செய்தல் கடவுட்குத் 
தகுமோ? என்பார்க்குச் சுகத்தைச் செய்பவன் அசுகத்தை விளைக்குமளவு மிக்க அபராதங்களைத் 
தக்கன் செய்தான் என்றும், ஆண்டும் சிவபிரான் மறக்கருணையால் ஆண்டு சுகத்தையே 
பின்விளைவாகச் செய்தான் என்றும் உணர்க.

    Our Lord Civa is manifest in the temple situated in the glorious city of 
Seerkaazhi. Our Lord chopped off the head of Thakkan, a tutelary deity. Our Lord civa 
is Sankaran, the author of all good things. He wears on His waist the snake along with 
the garland of skull bones. He pities people in distress. Our saint Thiru-gnana-Sambandar 
guided us to Lord Civan in the temple in Seerkaazhi city and chanted these ten verses. 
Those devotees who can memorise these ten songs and chant it before our Lord Civan will 
get delight in the senses and pleasure in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            97ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 97th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 234                பதிக எண் : 98

98. திருத்துருத்தி                    98.THIRU-TH-THURUTHI

பண் : நட்டராகம்                    Pann: Nattaragam

திருத்தல வரலாறு

    துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள். இவ்வூர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் 
காவிரியின் நடுவுள் இருந்தது. 'பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் 
துன்னிய துருத்தியானை' என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் இச்செய்தியை அறியமுடிகிறது.

    குத்தாலம் என்னும் ஒருவகை ஆத்தி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளமையால்
 இது மரத்தின் பெயரால் குத்தாலம் என்று வழங்கப்பெறுகின்றது. இதைக் குற்றாலம் என்றும் வழங்குவர். 
குத்தாலம் என்பதே மருவிக் குற்றாலம் என்று வழங்குகின்றது. திருநெல்வேலி மாவட்டம் 
குற்றாலம் வேறு. இது வேறு. இது மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், 
குத்தாலம் தொடர்வண்டி நிலையத்திற்கு 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் 
தென்கரையில் உள்ள 37ஆவது பதியாகும். மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் 
செல்லும் பேருந்துகளில் இவ்வூருக்குச் செல்லலாம்.

    இறைவரின் திருப்பெயர், 'சொன்னவாறு அறிவார்'; வீங்கு நீர் துருத்தி உடையார். கற்றளி 
மகாதேவர் என்பன. வடமொழியில் உத்தரவேதீசுவரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அரும்பன்ன 
வனமுலை அம்மை. வடமொழியாளர் மிருது முகிழாம்பிகை என்பர். திருவேள்விக்குடிப் பதிகத்தில், 
சம்பந்தர் இவ்வூர் அம்பாள் பெயரை 'அரும்பன வனமுலை யரிவையோடொருபகலமர்ந்த பிரான்' 
என்று அருளியிருக்கின்றார். தீர்த்தம் காவிரி, வடகுளம் என்பன. இவற்றுள் வடகுளம் என்பது, 
கோயிலினுள் வடபாலில் இருக்கின்றது.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு எழுந்தருளி, தம்மேல் உற்ற பிணி வருத்தத்தைத் 
தீர்த்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார். ‘வடகுளத்துக்குளி' என்று சிவபெருமான் மொழிந்தருள, 
சுவாமிகளும் வேதமெல்லாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தியாளரைத் தொழுது, அக்குளத்தில் 
மூழ்கினார். அக்கணமே பிணி நீங்கி, மணியொளிசேர் திருமேனி ஆயினார். இச்செய்தியைச் 
சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகளும் இவ்வூர்ப்பதிகத்தில் 'என் உடம்படும் , பிணியிடர் 
கெடுத்தானை' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

    அக்கினி, வருணன் முதலானோர் பூசித்துப் பேறு பெற்றனர். திரிசிரபுரம் மகாவித்துவான் 
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இத்தலத்திற்குப் புராணம் எழுதியுள்ளார்கள். மூவர்களும் 
இத்தலத்தைப் பாடியுள்ளனர். மூன்று பதிகங்கள் உள்ளன. இத்தலம் தருமை ஆதீன அருளாட்சியில் 
உள்ளது. இவ்வூரில் விக்கிரமசோழீச்சரம், ஓங்காரேச்சரம், மன்மதேச்சரம் என்னும்  
கோயில்கள் இருக்கின்றன. அவைகள் பாடல் பெறாதவைகள். இத்தலத்தைப்பற்றி ஐயடிகள் 
காடவர்கோன் நாயனார் அருளிய வெண்பா பின்வருமாறு:

    வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் 
    குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
    அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே 
    திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பதிக வரலாறு

    ஆளுடைய பிள்ளையார் அழுந்தூர் மாடக்கோயிலின் வான்பொருளினை வணங்கிப் பரவி 
மீண்டு, திருத்துருத்தியின் இறைவராகிய சொன்னவாறறிவாரைத் தொழுது பாடியருளியது 
இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2528.     வரைத்தலைப்பசும்பொனோடருங்கலன்களுந்திவந் 
    திரைத்தலைச்சுமந்துகொண்டெறிந்திலங்குகாவிரிக் 
    கரைத்தலைத்துருத்திபுக்கிருப்பதேகருத்தினாய் 
    உரைத்தலைப்பொலிந்துனக்குணர்த்துமாறுவல்லமே.        1

    வரைத்தலைப் பசும்பொன் ஓடு அருங்கலன்கள் உந்திவந் 
    திரைத்தலைச் சுமந்துகொண்டு எறிந்து இலங்கு காவிரிக் 
    கரைத்தலைத் துருத்தி புக்கிருப்பதே கருத்தினாய் 
    உரைத்தலைப் பொலிந்து உனக்கு உணர்த்துமாறு வல்லமே.

    varaittalaip pacum ponOTu arug kalagkaL unti vantu, 
    iraittu, alaic cumantu koNTu eRintu, ilagku kAvirik 
    karaittalait turutti pukku iruppatE karuttinAy! 
    uraittalaip polintu unakku uNarttum ARu vallamE?            

பொருள்:     மலையின் உச்சியிலிருந்து பசும்பொன்னுடன் அரிய மணிகளை உந்தி அலைகள் 
தம் தலைமீது சுமந்துகொண்டு வந்து வீசி விளங்கும் காவிரியின் கரையில் அமைந்துள்ள 
திருத்துருத்தியில் சென்று தங்கியிருப்பதே கருத்தாக உடையாய்! சொன்னவாறு அறிதலில் 
விளங்கிய உனக்கு உணர்த்துமாறு வல்லமோ? எல்லோமல்லோம் என்றவாறு.

குறிப்புரை:     காவிரியிலிருந்து கிளைத்த விக்ரமம் என்னும் ஆறு செல்ல அவற்றைச் 
சார்ந்திருத்தலின் துருத்தி எனப்பட்ட இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் சொன்னவாறறிவார் 
என்பது . அது கருதி உரைத்தலைப் பொலிந்த -  சொன்ன வாறறறிதலில் விளங்கிய உனக்கு 
உணர்த்துமாறு வல்லோமோ? வல்லோம் அல்லோம்.  அறிவார்க்கு அறிவிப்பது எப்படி என்றவாறு. 
பொலிந்த உனக்கு என்பதில் பெயரெச்சத்து அகரம் தொக்கது.  சொன்னவாறு அறியவல்ல உனக்கு 
உரைத்தலைப்  பொலிந்து உணர்த்துமாறு வல்லமோயாம்? வெளிப்படச் சொல்லாத முன்பே அன்பர் 
நினைத்தவற்றைச்  சொன்னவாறு அறியும் உனக்கு யாம் உணர்த்தும் வன்மையுடையோமோ? 
இல்லை, எனலுமாம்.

    Our Lord Civa is highly enthusiastic to stay in the temple of Thiru-th-thuruthi 
city. The river Cauvery brings from the mountain gold particles and rare gems and pushes 
them forward. They make gushing noise and waves are formed in the river. On the bank 
of this river our Lord is manifest. You, the Lord, have the ability to understand 
what we think, but may not express to You with clarity. Therefore, we lack the ability 
to make You realise; but You, being the Lord, are efficient in knowing our thoughts 
fully well, without our effort.

2529.     அடுத்தடுத்தகத்தியோடுவன்னிகொன்றைகூவிளம் 
    தொடுத்துடன்சடைப்பெய்தாய்துருத்தியாயோர்காலனைக் 
    கடுத்தடிப்புறத்தினானிறத்துதைத்தகாரணம் 
    எடுத்தெடுத்துரைக்குமாறுவல்லமாகினல்லமே.        2

    அடுத்து அடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம் 
    தொடுத்து உடன் சடைப் பெய்தாய் துருத்தியாய் ஓர்காலனைக்             
    கடுத்த அடிப்புறத்தினான் இறத்து உதைத்த காரணம் 
    எடுத்து எடுத்து உரைக்குமாறு வல்லம் ஆகில் நல்லமே. 

    aTuttu aTuttu akattiyOTu, vanni, konRai, kUviLam, 
    toTuttu uTan caTaip peytAy! turuttiyAy! Or kAlanaik 
    kaTuttu, aTip puRattinAl niRattu utaitta kAraNam 
    eTuttu eTuttu uraikkum ARu vallam Akil, nallamE.

பொருள்:     அகத்தியொடு வன்னியிலை, கொன்றை மலர், வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து 
வைத்துத் தொடுத்த மாலையைச் சடையில் வைத்துள்ளாய்! துருத்தியில் உள்ளாய்!
காலனைச் சினந்து புறங்காலினால் அவன் மார்பில் உதைத்த காரணத்தை எடுத்தெடுத்துப் 
போற்றுமாறு வல்லமோ? வல்லமை உடையோமல்லோம்.

குறிப்புரை:     சிவபிரான் சடையில், அகத்திப்பூ, வன்னியிலை, கொன்றை மலர், வில்வம் 
என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த மாலையை அணிந்துளான் என்னும் உண்மை 
வேறு யாண்டும் காண்டல் அரிது.

    Our Lord Civa adorns His matted hair with variety of flowers, one after another, 
fastened as a garland. The flowers are coronilla gaandiflora (Agatthi Poo), leaves of summer 
tree, trifoliage bael leaves, Indian laburnum flowers and cassia fistula flowers. Our Lord 
is manifest in the temple of Thiru-th-thuruthi. Oh Lord! You were furious with Kaalan, 
the god of death and kicked his chest with Your holy feet and destroyed Him. If we explain 
the reason for this behaviour again and again we will achieve benefits and rise to eminence.

2530     கங்குல்கொண்டதிங்களோடுகங்கைதங்குசெஞ்சடைச் 
    சங்கிலங்குவெண்குழைசரிந்திலங்காதினாய் 
    பொங்கிலங்குபூணநூலுத்திராதுருத்திபுக் 
    கெங்குநின்னிடங்களாவடங்கிவாழ்வதென்கொலோ.         3

    கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச் 
    சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்காதினாய் 
    பொங்கு இலங்கு பூணநூல் உத்திரா துருத்திபுக்கு 
    எங்கு நின்னிடம் களா அடங்கி வாழ்வது என் கொலோ.

    kagkul koNTa tigkaLOTu kagkai tagku cenjcaTaic 
    cagku ilagku veNkuzai carintu ilagku kAtinAy!
    pogku ilagku pUNa nUl uruttirA! turutti pukku, 
    egkum niniTagkaLA aTagki vAzvatu enkolO?        

பொருள்:     இரவில் தோன்றும் பிறைச்சந்திரனுடன் கங்கை தங்கும் செஞ்சடையும், சங்கினால் 
ஆன வெண்ணிறக் குழை சரிந்து தொங்குகின்ற காதினை உடையாய்! கிளர்ந்து விளங்குகின்ற 
பூணூலை உடைய உருத்திரனே! எவ்விடமும் நின் இடமாக இருக்கவும் துருத்தியில் புக்கு அங்கு 
அடங்கி வாழ்வது என்கொல்?

குறிப்புரை:     பூணூல் உருத்திரா - முப்புரி நூலைப் பூண்ட உருத்திர மூர்த்தியே. துருத்திபுக்கு 
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்தல் என்கொல்- புக்கது துருத்தியாயினும் எல்லா இடங்களும்
சிவப்பிரகாசத்தால் உன் நிறைவையே உணர்த்துகின்றன. அவ்வாறு ஓரிடத்திருந்து பலவிடத்தும் 
காட்சி தரும் ஆற்றல் இருந்தவாறென்னே! என்றபடி, துருத்தியில் இன்றும் அத்திருக்கோயில் 
பொலிவு அத்தலம் முழுதும் விளங்கக் காணலாம்.

    Oh! Lord Civa! In Your red matted hair You protect the baby moon which illuminates 
the night hours. Along with the moon, the river Ganges also is sustained in Your matted 
hair. From Your ear, the white ola roll hangs. The sacred thread brightly adorns Your 
chest. Oh! Lord Rudramoorthy, all places in the universe are Yours and You are manifested 
in the universe. Such is Your ability. What is the reason for You to  enter into the temple 
and manifest Yourself in this city Thiru-th-thuruthi?

2531.     கருத்தினாலோர்காணியில்விருத்தியில்லைதொண்டர்தம் 
    அருத்தியாற்றம்மல்லல்சொல்லியையமேற்பதன்றியும் 
    ஒருத்திபால்பொருத்திவைத்துடம்புவிட்டுயோகியாய் 
    இருத்திநீதுருத்திபுக்கிதென்னமாயமென்பதே.        4

    கருத்தினால் ஓர்காணியில் விருத்தி இல்லை தொண்டர்தம் 
    அருத்தி ஆற்றம் அல்லல் சொல்லியை ஐயம் ஏற்பது அன்றியும் 
    ஒருத்தி பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் 
    இருத்தி நீதுருத்தி புக்கிதென்ன மாயம் என்பதே.

    karuttinAl Or kANi il; virutti illai; toNTar tam         
    aruttiyAl,-tam(m) allal colli, aiyam ERpatu anRiyum
    oruttipal porutti vaittu, uTampu viTTu yOkiyAy 
    irutti nI, turutti pukku; itu enna mAyam enpatE!

பொருள்:     அக்கறையுடன் காணி நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழ்தல் இல்லை. 
விருப்பினோடு தொண்டர்களின் வறுமைத் துன்பத்தை உரைத்து ஐயம் ஏற்கின்றீர்; அத்துடன் 
ஒருத்திபால் உடம்பைப் பொருத்தி வைத்துவிட்டு யோகியாய்த் திருத்துருத்தியில் புகுந்து 
அங்கு இருக்கின்றீர்! இது என்ன மாயமென்பதோ?

குறிப்புரை:     யோகியாயிருந்த உண்மை உணர்த்தியவாறு. ஒரு காணி நிலம் உடையவனாகி 
அதிற்பயிரிட்டு ஜீவனம் புரிதல் இல்லை. தம் வறுமைத் துன்பம் உரைத்துப் பிச்சை எடுப்பது.
 'பகலிடம் புகலிடம்,...துருத்தியார், இரவிடத் துறைவர் வேள்விக் குடியே' என்று முதலிற் 
கூறியதுமன்றிப் பாடல்தொறும்  அதனைத் தெரிவித்திருப்பதாலும் (தி. 3 ப. 90 பா.1). 'ஒருத்திபால் 
பொருத்தி வைத்து உடம்பு விட்டுத் துருத்திபுக்கு இருத்தி, இது என்ன மாயம் என்பதோ?' என்று இங்கு 
வினாவியதாலும் 'காப்பது வேள்விக்குடி தண் துருத்தி யெங்கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்' 
என்றதாலும் ஆளுடைய பிள்ளையார் காலத்துக்கும் முன்பே, பகலில் துருத்திவாசமும் இரவில் 
வேள்விக்குடி வாசமும் உண்டு என்ற வரலாறு வழங்கப்பட்டமை விளங்கும். இவை இல்லையேல் 
இரண்டு தலங்களையும் ஒருங்கு பாடார் என்க. 'வட்டக் குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார்,
 அட்டக்கொண் டுண்பதறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோம்'  என்றதில் 'வேள்விக்குடி' என்னும் 
பெயர்க் காரணம் உள்ளதறிக. மான்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு யானைத்தோல் 
போர்ப்பதறிந்தோமெனில் நாம் இவர்க்கு ஆட்படோம் என்பதில் துருத்தி யோகியை நினைவூட்டினாரென்பர்.

    Oh! Lord Civa! If I think about Your economic status, You have no agricultural 
land of Yours. You cannot, therefore, develop the land and grow edible paddy and get 
income from the land. You have affection for Your devotees. Therefore whenever they 
pray to thee explaining their suffering, You understand their prayers and grace them. 
You become concorporate with Your consort by giving one half of Your body to her.
However You efface from Your memory Your longing to be with her. You observe 
meditation (called Yoga) and are manifest in Thiru-th-thuruthi temple. What is the
reason for this?

2532.     துறக்குமாசொலப்படாய்துருத்தியாய்திருந்தடி 
    மறக்குமாறிலாதஎன்னைமையல்செய்திம்மண்ணின்மேல் 
    பிறக்குமாறுகாட்டினாய்பிணிப்படுமுடம்புவிட் 
    டிறக்குமாறுகாட்டினாய்க்கிழுக்குகின்றதென்னையே.        5

    துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி 
    மறக்கு மாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல் 
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டு 
    இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்ற தென்னையே.

    tuRakkumA colappa TAy! turuttiyAy! tiruntu aTi 
    maRakkum ARu ilAta ennai maiyal ceytu, im maNNinmEl 
    piRakkum ARu kATTinAy! piNippaTum uTampu viTTu 
    iRakkum ARu kATTinAykku izukkukinRatu ennaiyE?

பொருள்:     எந்நிலையிலும் விட்டு நீங்கப்படாதாய்! திருத்துருத்தியாய்! உன்னுடைய திருந்திய 
திருவடிகளை மறக்க இயலாத என்னை மயக்கம் செய்து இம்மண்ணுலகில் பிறக்கும்படி செய்தாய். 
நோய்களுக்கு இடமாகும் உடம்பைவிட்டு இறக்குமாறு காட்டினால் உனக்கு ஏற்படும் நஷ்டம் என்ன?

குறிப்புரை:     துருத்தியில் எழுந்தருளிய முதல்வனே, பகலில் துறவிபோல வேடங்கொண்டு 
இரவில் வேள்விக்குடியில் மணவாளக் கோலம்பூண்டு, தழும்பும் உற இணை விழைச்சுடையாய்; 
துறக்கும் ஆறு சொல்லப்படாய், உன் திருந்திய திருவடிகளை மறக்கும் மாறுபாடு சிறிதும் இல்லாத 
என்னை மையல்செய்து, இம்மண்ணுலகில் பிறக்குமாறு காட்டியருளினை, நோய்களுக்கு இடமாகும் 
உடம்பைத் தவிர்த்து, இறக்குமாறு காட்டியருளினை; இவ்வாறு பிறப்பும் இறப்பும் நீ காட்ட நான் உனக்குச் 
செய்த இழுக்கு யாது? மறக்கும் ஆறு எனலும் உண்டு. நான்கடியிலும் ஆறு என்றே கொள்ளல் ஏலாததன்று. 
'பிணிப்படும் உடம்பு' - 'இடும்பைக் கிடும்பை’ (மூதுரை) என்றதுணர்க. 

    Oh! Lord Civa! You are manifest in Thiru-th-thuruthi. During daytime You stay in 
Thiru-th-thuruthi as a saint, but during night hours You take the appearance of a married 
husband and are manifest in Velvikudi city. You have not suggested to us the ways and means 
to become a saint and be yogic. I prostrated at Your holy feet and felt ecstatic in eternal 
bliss. However, You made me be born on this earth and get involved in the world of illusion. 
Then shedding the body, subject to all sorts of diseases You make me die. Have I done to You 
any harm? Please inform me.

2533.     வெயிற்கெதிர்ந்திடங்கொடாதகங்குளிர்ந்தபைம்பொழில் 
    துயிற்கெதிர்ந்தபுள்ளினங்கள்மல்குதண்துருத்தியாய் 
    மயிற்கெதிர்ந்தணங்குசாயல்மாதொர்பாகமாகமூ 
    எயிற்கெதிர்ந்தொரம்பினாயெரித்தவில்லியல்லையே.        6

    வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாத கங்குளிர்ந்த பைம்பொழில் 
    துயிற்கு எதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்         
    மயிற்கு எதிர்ந்தணங்கு சாயல் மாதொர் பாகமாகமூ             
    எயிற்கு எதிர்ந்து ஓரம்பினாய் எரித்த வில்லி அல்லையே.        

    veyiRku etirntu iTam koTAtu akam kuLirnta paim pozil 
    tuyiRku etirnta puL inagkaL malku taN turuttiyAy! 
    mayiRku etirntu aNagku cAyal mAtu orpAkam Aka mU 
    eyiRku etirntu Or ampinAl eritta villi allaiyE?

பொருள்:     முற்றிய வெயிலோடு பகைத்த குளிர் அஞ்சாது அகத்தில் தங்கியிருக்கும் அடர்ந்த 
பசுமையான பொழில்களில், உறங்குதற்குப் பறவைகள்   வந்து தங்கும்  குளிர்ந்த திருத்துருத்தியில் 
உள்ளவரே! நீர், மயிலை  வென்ற சாயலை உடைய உமையம்மையை ஒரு  பாகத்தில் கொண்டு மூன்று 
எயில்களைப் பகைத்து ஒரு அம்பினால் எரித்த வில்லாளி அல்லவா?    

குறிப்புரை:     துருத்தியில் உள்ள சோலைவளம் கூறியவாறு. வெயிலுக்கு எதிர்த்து இடம் கொடாது 
குளிர்ந்த சோலை இப்பொழுதும் உண்டு. அணங்கு -அழகு.

    Around the city of Thiru-th-thuruthi, there are many dense forests full of tall 
trees and plants. They never give any space for sun's rays. The area is naturally very 
cool. The varieties of birds come and stay in this cool shades and enjoy their life. 
In such a glorious city, Lord Civa is manifest. His consort, the most enticing woman 
makes the peacock distressed because her beauty is nothing when compared to that of 
Uma Devi. Lord Civa confronted the asuras and burnt the three forts with one shot of 
His arrow. Oh Civa! Are You not then the best bowman?

2534.     கணிச்சியம்படைச்செல்வாகழிந்தவர்க்கொழிந்தசீர் 
    துணிச்சிரக்கிரந்தையாய்கரந்தையாய்துருத்தியாய் 
    அணிப்படுந்தனிப்பிறைப்பனிக்கதிர்க்கவாவுநல் 
    மணிப்படும்பைநாகநீமகிழ்ந்த அண்ணலல்லையே.        7

    கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்தசீர்         
    துணிச்சிரக்கு இரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் 
    அணிப்படும் தனிப்பிறைப் பனிக்கதிர்க்க வாவுநல் 
    மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்த அண்ணலல்லையே.

    kaNicci ampaTaic celvA! kazintavarkku ozinta cIr 
    tuNic cirak kirantaiyAy! karantaiyAy! turuttiyAy! 
    aNippaTum tanip piRaip panik katirkka avAvum nal 
    maNip paTum painAkam nI makiznta aNNal allaiyE?

பொருள்:     மழுப்படைச் செல்வனே! இறந்து போன பிரமர், நாரணர் ஆகியோரின் 
எண்ணற்ற தலைகளை முடித்த மாலையாய்! கரந்தை அணிந்தவனே! துருத்தி மேயவனே! 
அழகிய பிறையின் குளிர்ந்த கதிரொளியை விரும்பும் நல்ல மணியுடன் நச்சுப் பையும் 
உடைய நாகத்தை உடன் வைத்த தலைவன் அல்லவா நீ?

குறிப்புரை:     கணிச்சி படை- கணச்சியம்படை, மழுப்படை. கழிந்தவர்- நூறு கோடி பிரமர்கள்
 நொந்தினார், ஆறு கோடி நாராயணர் அங்கனே, ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர், "ஈறிலாதவன்
 ஈசன் ஒருவனே' (தி. 5 ப. 100 பா. 3) என்றதிற் குறித்தவர்கள். துணி சிரம் கிரந்தை - துணிந்த  தலை 
முடிச்சு; தலை மாலையை அணிந்தவனே, கரந்தையாய் - சிவகரந்தையைச் சூடியவனே, 

    Oh Lord Civa! You are an immensely prosperous Supreme Being. You hold in
Your hand a battleaxe. The demigods of Thirumaal and Brahma who were famous 
deities were dead and gone many years ago. You have braided their skull bones with 
tight knots. You have worn on Your head the fragrant basil leaves and flowers-Indian
globe thistle. You are manifested in the temple in Thiru-th-thuruthi city. Oh Civa ! 
Are You not the Chief Supreme Being keeping on Your head the radiant, and unparalleled 
young baby moon, loving its cool light, along with the hooded snake which keeps in its 
body the bright good gem? You are the Chief with such desires.

2535.     சுடப்பொடிந்துடம்பிழந்தநங்கனாயமன்மதன் 
    இடர்ப்படக்கடந்திடந்துருத்தியாகஎண்ணினாய் 
    கடற்படையுடையவக்கடலிலங்கைமன்னனை 
    அடற்பட அடுக்கலிலடர்த்த அண்ணலல்லையே.        8

    சுடப்பொடிந்து உடம்பு இழந்தநங்கனாய மன்மதன் 
    இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய் 
    கடற்படை உடையவக் கடல் இலங்கை மன்னனை 
    அடற்பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே.

    cuTap poTintu uTampu izantu anagkan Aya manmatan 
    iTarppaTak kaTantu, iTam turutti Aka eNNinAy!
    kaTal paTai uTaiya ak kaTal ilagkai mannanai, 
    aTal paTa, aTukkalil aTartta aNNal allaiyE?

பொருள்:     நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்க உடம்பினை இழந்த மன்மதன், 'அங்கன் அநங்கன்' 
ஆயினான்; உருவிழந்த அந்த மன்மதன் இடர்படும்படி அவனை வென்று நீ துருத்தியை இடமாகக் 
கொள்ள நினைந்தாய்; கடல் போலும் பெரும்படை உடைய கடலிடை இலங்கைக்கு அரசனாகிய 
இராவணன் கொலையுறக் கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன் நீ அல்லையோ?

குறிப்புரை:     நெற்றிக்கண்ணால் சுட்டொழிக்க, சாம்பலாகி மெய்யிழந்த உருவிலியாகிய 
மன்மதன். இடர்ப்படும்படி வென்று துருத்தி இடம் ஆகத் திருவுள்ளம் கொண்டருளினை. கடல் 
போலும் பெரும் படையை உடைய  அப்பிரசித்தி பெற்ற கடலின் நடுவே உள்ள இலங்கைக்கு 
வேந்தனை, கொலை உறத் திருக்கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன் அல்லையோ?

    Oh Lord Civa! Your third internal eye on Your forehead has supernal hot flame. 
The demigod of love, Manmathan, burnt by Your third eye flame lost his body. You killed 
him. You are now manifested in the temple in Thiru-th-thuruthi city. The king of Sri Lanka,
Raavanan, had a naval force. Oh Lord Civa! Are You not chiefly responsible for crushing 
him and almost killing him under Your mount Kailash?

2536.     களங்குளிர்ந்திலங்குபோதுகாதலானுமாலுமாய் 
    வளங்கிளம்பொனங்கழல்வணங்கிவந்துகாண்கிலார் 
    துளங்கிளம்பிறைச்செனித்துருத்தியாய்திருந்தடி 
    உளங்குளிர்ந்தபோதெலாமுகந்துகந்துரைப்பனே.        9

    களம் குளிர்ந்து இலங்கு போதுகாதலானும் மாலுமாய் 
    வளங் கிளம்பொனங் கழல்வணங்கி வந்து காண்கிலார் 
    துளங் கிளம்பிறைச் செனித்துருத்தியாய் திருந்தடி 
    உளங் குளிர்ந்த போதெலாம் உகந்து உகந்துரைப்பனே.

    kaLam kuLirntu ilagku pOtu kAtalAnum, mAlum Ay, 
    vaLam kiLar pon am kazal vaNagki vantu kANkilAr; 
    tuLagku iLampiRaic cenit turuttiyAy! tiruntu aTi, 
    uLam kuLirnta pOtu elAm, ukantu ukantu uraippanE.        

பொருள்:     குளிர்ச்சியுடன் விளங்குகின்ற தாமரையாகிய கனத்தில் இருக்கும் பிரமனும் 
மாலுமாய், பொன்போல் ஒளிரும் கழலணிந்த நின்திருவடிகளை வணங்கிப் பணிந்து 
காணவியலாதவர்கள் ஆயினர்; பிரகாசிக்கும் இளம்பிறையை அணிந்த சென்னியாய்; 
திருத்துருத்தியாய்! என்னுடைய உள்ளம் குளிர்ச்சி அடைந்த போதெல்லாம் உன் திருவடியைப் 
புகழ்ந்து பாடுவேன்.

குறிப்புரை:     கள் அம் குளிர்ந்து, இலங்கும்போது காதலான் - தேனுடைய அழகிய குளிர்வுற்று 
விளங்கும் தாமரைப்பூவை விரும்புமவன். களம் இடமுமாம். போது ஆகிய களம், களமாகிய போது 
களம்போது ஆகக் காதலிப்பவன்.

    The tutelary deity Brahma, manifest in the lotus flower which contains cool 
honey, and the demigod Thirumaal - both came to worship our Lord ; but they both 
could not see the holy feet of our Lord. Oh Lord of Thiru-th-thuruthi! Civa! You 
retain on Your head the bright lighted young moon. Oh Lord! Whenever I am pleased 
in mind, the fame of Your holy feet I chant and feel happy. 

2537.     புத்தர்தத்துவமிலாச்சமணுரைத்தபொய்தனை 
    உத்தமமெனக்கொளாதுகந்தெழுந்துவண்டினம் 
    துத்தநின்றுபண்செயுஞ்சூழ்பொழில்துருத்தியெம் 
    பித்தர்பித்தனைத்தொழப்பிறப்பறுத்தல்பெற்றியே.        10

    புத்தர் தத்துவமிலாச் சமண் உரைத்த பொய்தனை 
    உத்தமம் எனக்கொளாது உகந்தெழுந்து வண்டினம் 
    துத்தநின்று பண்செயும் சூழ்பொழில் துருத்தியெம் 
    பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.

    puttar, tattuvam ilAc camaN, uraitta poytanai 
    uttamam enak koLAtu, ukantu ezuntu, vaNTu inam 
    tuttam ninRu paN ceyum cUz pozil-turutti em 
    pittar pittanait toza, piRappu aRuttal peRRiyE.

பொருள்:     புத்தர்களும் மெய்ந்நெறி இலாத சமணர்களும் உரைத்த பொய்களை 
உத்தமம் எனக் கொள்ளாது, விரும்பி எழுந்து, வண்டுக் கூட்டம் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த
திருத்துருத்தியில், எம் பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் தக்கது ஆகும். 

குறிப்புரை:     உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம்- ஏழிசையுள் ஒன்றானது. பித்தர் பித்தன்-
பித்தர்க்கெல்லாம்  பித்தனாயிருப்பவனைத் தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே 
பெற்றிமையாகும்.

    The Buddhists and the Jains who have no philosophy for their religion carry on 
false propaganda about their faith and religion. The true devotees of our Lord Civa never 
believe their words and realise it is false. In the city of Thiru-th-thuruthi, the bees 
get up with happiness and sing melody known as 'Thuttham' in the thick cool forest area. 
The sincere devotees of this city worship our Lord, and He graces them with affection. 
Those who worship this Lord with devotion will get rid of the birth and death cycle of life.

2538.     கற்றுமுற்றினார்தொழுங்கழுமலத்தருந்தமிழ் 
    சுற்றுமுற்றுமாயினானவன்பகர்ந்தசொற்களால்
    பெற்றமொன்றுயர்த்தவன்பெருந்துருத்திபேணவே 
    குற்றமுற்றுமின்மையிற்குணங்கள்வந்துகூடுமே.         11

    கற்று முற்றினார் தொழுங் கழுமலத் தருந்தமிழ் 
    சுற்று முற்றுமாயினானவன் பகர்ந்த சொற்களால் 
    பெற்ற மொன்று உயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே 
    குற்ற முற்றுமின்மையிற் குணங்கள் வந்து கூடுமே.

    kaRRu muRRinAr tozum kazumalattu aruntamiz 
    cuRRum muRRum AyinAn avan pakarnta coRkaLAl, 
    peRRam onRu uyarttavan perun turutti pENavE, 
    kuRRam muRRum inmaiyin, kuNagkaL vantu kUTumE.

பொருள்:     முற்றக் கற்றவர்கள் தொழும் திருக்கழுமலத்தில், தமிழாகரன் பகர்ந்த திருப்பாடல்களால் 
விடைக்கொடி உயர்ந்தவனின் திருத்துருத்தியைப் போற்றவே குற்றம் முற்றும் இன்மையாகி குணங்கள் 
வந்து கூடும்.

குறிப்புரை:     சுற்றும் முற்றும் ஆயினன் - சுற்றிலும் முற்றிலும் ஆகிய சிவபிரான். பெற்றம் - எருது 
எழுதிய கொடிக்கு ஆகு பெயர்.

    In the city of Kazhumalam the sincere devotees who have mastered all the divine 
knowledge worship our Lord Civa manifested in the temple in that city. In this city, 
our saint Thiru-gnana-Sambandar was born. He was well-versed in the sacred Tamil. With 
this divine knowledge he chanted ten verses before our Lord in Thiru-th-thuruthi. Those 
devotees who chant these ten verses with sincere devotion before our Lord, manifested 
in the temple in Thiru-th-thuruthi city, and worship Him will have no blemishes in their 
life. All good qualities will get into them.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            98ஆம் பதிகம் முற்றிற்று
            End of 98th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 235                பதிக எண் : 99

99. திருக்கோடிகா                99. THIRU-K-KODIKA

பண் : நட்டராகம்                    Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருக்கோடிகா என்னும் பெயர்க்காரணம் புலப்படவில்லை. இது திரிகோடி அதாவது 
மூன்றுகோடி ரிஷிகள் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர். அது பொருந்துமாறு 
இல்லை. இத்திருத்தலமானது மயிலாடுதுறை- கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில்
 நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. 
இது காவிரி வடகரைத்தலங்களுள் முப்பத்தேழாவது ஆகும். காவிரி வடகரை வழியாக 
மயிலாடுதுறை -கும்பகோணம் பேருந்து வழியில் இத்தலம் உள்ளது. இறைவரது திருப்பெயர் 
கோடிகா ஈசுவரர். இறைவியாரது திருப்பெயர் வடிவம்மை. தீர்த்தம் சிருங்கதீர்த்தம். இது 
கோயிலுக்கு வடபால் உள்ளது. இவ்வூர்க்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் மூன்றுமாக 
நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவேள்விக்குடி, திருத்துருத்தி என்னும் 
தலங்களைப் பரவி  மணாளக்கோலத்தைத் தழும்பிய தன்மையும் கூடப்பாடித் திருக்கோடிகாவில்
தேவர்சிகாமணியைப் பாடியது இத்திருப்பதிகம். 

                திருச்சிற்றம்பலம்

2539.     இன்றுநன்றுநாளைநன்றென்றுநின்றஇச்சையால் 
    பொன்றுகின்றவாழ்க்கையைப்போகவிட்டுப்போதுமின் 
    மின்தயங்குசோதியான்வெண்மதிவிரிபுனல் 
    கொன்றைதுன்றுசென்னியான்கோடிகாவுசேர்மினே.        1

    இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் 
    பொன்று கின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் 
    மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் 
    கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

    "inRu nanRu, nALai nanRu" enRu ninRa iccaiyAl 
    ponRukinRa vAzkkaiyaip pOka viTTup pOtumin ! 
    min tayagku cOtiyAn veNmati, viripunal, 
    konRai, tunRu cenniyAn kOTi kAvu cErminE!

பொருள்:     இன்றைக்கு நன்மைகளே விளைந்தன. இன்று போலவே நாளையும் நன்மையே 
விளையும் என்ற இச்சையால், அழிகின்ற வாழ்க்கையை இப்படியே அழிந்து போக விட்டுவிடாமல், 
மின்னல் போலச் சுடர்விடுகின்ற சோதியானும், வெண்மதிப்பிறை, பரந்த புனல், கொன்றைமலர் 
ஆகியன நெருங்கிய சென்னியை உடையவனின் திருக்கோடிகாவைச் சேர்மினே.

குறிப்புரை:     இத்திருப்பதிகம் முழுதும் உள்ள உபதேசத்தை உணர்ந்தொழுகுக. பொய் 
வாழ்க்கையைப் போக்கி, மெய் வாழ்க்கையைப் பெறும் அன்புற்று வம்மின் உலகீர், சிவபெருமான் 
எழுந்தருளிய திருக்கோடிகாவைச் சேர்மின் (தி. 5 ப. 78 பா. 2, 6) (ஐயடிகள் க்ஷேத்திர வெண்பா 6).

    Today is a good day; tomorrow is a good day. With these stupid thoughts and 
desire, you spend your days without worshipping our Lord. To get rid of this way of 
wrong doing, you have to follow divine life. Our Lord Civa is a very bright Supreme 
Being like lightning. He adorns His head with the white moon, river Ganges and 
Indian laburnum flower. He is manifest in the temple in Thiru-k-kodika city. 
You devotees reach the city and worship our Lord manifest there.

2540.     அல்லல்மிக்கவாழ்க்கையை ஆதரித்திராதுநீர் 
    நல்லதோர்நெறியினைநாடுதுந்நடம்மினோ 
    வில்லையன்னவாணுதல்வெள்வளையொர்பாகமாம் 
    கொல்லைவெள்ளையேற்றினான்கோடிகாவுசேர்மினே.        2

    அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்             
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ 
    வில்லை அன்னவாண் நுதல் வெள்வளை ஓர் பாகமாம் 
    கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே.

    allal mikka vAzkkaiyai Atarittu irAtu nIr, 
    nallatu Or neRiyinai nATutum, naTa(m)minO! 
    villai anna vAL nutal veLvaLai Or pAkam Am 
    kollai veLLai ERRinAn kOTi kAvu cErminE!

பொருள்:     துன்பமயமான வாழ்க்கையின்மீது நீர் ஆசை வையாதீர்; நல்லதொரு நெறியை நாம் 
விரும்பி அடைவோம். வம்மின், வில் போன்ற ஒளியுடைய நுதலையும் வெண்ணிற சங்கு வளையல்களையும் 
கொண்ட உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர்; தரும  விடைமீது ஏறுவார்; அவருடைய 
திருக்கோடிகாவினைச் சேர்மின்.

குறிப்புரை:     துன்பம் மிக்க வாழ்க்கையை விரும்பியிராமல், நல்லதொரு கதியை நாடுவோம். 
வம்மின், வெள்ளேற்றண்ணலது திருக்கோடிகாவைச் சேர்மின்.

    Ye people! Do not undergo the life which is full of pain and suffering. You start
straightaway to get good life by following divine spiritual mode of living. Our Lord Civa 
has embedded His consort Uma on the left side of His body. Her forehead is very bright like 
the bow. She wears white bangles on her hands. He sustains the white bull of the forest 
area for His conveyance. Oh! Ye people may reach the temple in the Thiru-k-kodika city 
and worship our Lord manifest there and lead a virtuous life.

2541.     துக்கமிக்கவாழ்க்கையின்சோர்வினைத்துறந்துநீர் 
    தக்கதோர்நெறியினைச்சார்தல்செய்யப்போதுமின் 
    அக்கணிந்தரைமிசையாறணிந்தசென்னிமேல் 
    கொக்கிறகணிந்தவன்கோடிகாவுசேர்மினே.        3

    துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர் 
    தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின் 
    அக்கணிந்து அரைமிசையார் அணிந்த சென்னிமேல் 
    கொக்கிறகு அணிந்தவன் கோடிகாவு சேர்மினே.

    tukkam mikka vAzkkaiyin cOrvinait tuRantu nIr, 
    takkatu Or neRiyinaic cArtal ceyyap pOtumin ! 
    akku aNintu, araimicai, ARu aNinta cenni mEl 
    kokku iRaku aNintavan kOTi kAvu cErminE!

பொருள்:     துக்க மிக்க வாழ்க்கையினால் தோன்றும் சோர்வினை ஒழித்து நீர், தகுதியான
 நற்கதியை அடைவதற்குப் போதுமின்; எலும்பு மாலையை அரையில் கட்டி, கங்கையாற்றினை 
அணிந்த சென்னிமேல் கொக்கின்  இறகை அணிந்தவனின் திருக்கோடிகாவினைச் சேர்மின்.  

குறிப்புரை:     துக்கம் மிக்க வாழ்க்கையினால் வரும் இளைப்பை ஒழித்து தக்கதொரு கதியை 
அடையத் திருக்கோடிகாவைச் சேர்மின்.

    Oh ye people! You are distressed in your life and get exhausted. To get relieved 
of these, follow good and spiritual life. Our Lord wears the garland of bones round His 
waist. On His head He supports the river Ganges and places the crane's feathers. Oh! 
Ye people reach the temple where our Lord Civa is manifest in the city of Thiru-k-kodika.

2542.     பண்டுசெய்தவல்வினைபற்றறக்கெடும்வகை 
    உண்டுமக்குரைப்பன்நானொல்லைநீரெழுமினோ 
    மண்டுகங்கைசெஞ்சடைவைத்துமாதொர்பாகமாக் 
    கொண்டுகந்தமார்பினான்கோடிகாவுசேர்மினே.        4

    பண்டு செய்த வல்வினை பற்றறக் கெடும்வகை 
    உண்டும் அக்குரைப்பன் நான் ஒல்லை நீர் எழுமினோ 
    மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக் 
    கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

    paNTu ceyta valvinai paRRu aRak keTum vakai 
    uNTu; umakku uraippan, nAn; ollai nIr ezuminO! 
    maNTu kagkai cenjcaTai vaittu mAtu orpAkamAk 
    koNTu ukanta mArpinAn kOTi kAvu cErminE!

பொருள்:     முற்பிறவிகளில் நீர் செய்த வினைகள் முற்றும் கெடும் வகை உண்டு; அதனை உமக்கு 
நான் உரைப்பன்; விரைந்து எழுமின்; பொங்கி எழுகின்ற கங்கையாற்றை செஞ்சடையில் வைத்து 
உமையம்மையைப் பாகமாகக் கொண்டு மகிழ்ந்த மார்பினை உடையவனாகிய சிவனின் 
திருக்கோடிகாவினைச் சேர்மின்.

குறிப்புரை:     முற்பிறவியில் செய்த வினை பசையறக் கெடும்படி திருக்கோடிகாவைச் சேர்மின்.

    Oh ye devotees! There is one way to wipe out the strong ill effects of your past bad 
karma. I will tell you the way. You may start immediately to proceed to the temple in the city 
of Thiru-k-kodika where our Lord Civa is manifest and worship Him there. Our Lord supports the 
river Ganges in His red mattress. He has embedded His consort Uma Devi on the left side of His body.

2543.     முன்னைநீர்செய்பாவத்தால்மூர்த்திபாதஞ்சிந்தியா 
    தின்னநீரிடும்பையில்மூழ்கிறீரெழும்மினோ 
    பொன்னைவென்றகொன்றையான்பூதம்பாடஆடலான் 
    கொன்னவிலும்வேலினான் கோடிகாவுசேர்மினே.        5

    முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது 
    இன்ன நீர் இடும்பையில் மூழ்கிறீர் எழும்மினோ 
    பொன்னை வென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான் 
    கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

    munnai nIr cey pAvattAl mUrtti pAtam cintiyAtu, 
    innam nIr iTumpaiyin mUzkiRIr, ezu(m)minO! 
    ponnai venRa konRaiyAn, pUtam pATa ATalAn, 
    kol-navilum vElinAn, kOTi kAvu cErminE!

பொருள்:     முற்பிறவியில் நீர் செய்த பாவத்தால், சிவமூர்த்தியின் திருவடியைச் சிந்தை
செய்யாமல் இன்னமும் துன்பத்தில் முழுகுகின்றீர்; இத்துன்பத்தினின்றும் எழும்மினோ; பொன்னின் 
நிறத்தை வென்ற கொன்றை மாலையை உடையவன், சிவகணங்கள் பாட ஆடுபவன்; கூர்மையான 
வேலினை உடையவன் ஆகிய சிவபிரானின் திருக்கோடிகாவினைச் சேர்மின்.

குறிப்புரை:     முற்பிறவியில் செய்த பாவத்தால், சிவமூர்த்தியின் திருவடியைச் சிந்தை செய்யாமல்
துன்பத்தில் முழுகுகின்றீர். எழுமின், சிவபிரானது திருக்கோடிகாவைச் சேர்மின்.

    Oh ye people! You do not worship the holy feet of our Lord Civa, therefore you suffer. 
This happens on account of your past bad karma. Follow my advice. Start immediately to the temple in 
Thiru-k-kodika city, where our Lord Civa is manifest. He wears in His matted hair the Indian 
laburnum flowers, brighter than real gold. His avocation is to dance in the company of His 
boothas who sing and dance with Him. He holds in His hand the battleaxe which has high power 
to kill the enemies of our Lord. Again I tell you go to the temple in Thiru-k-kodika and worship 
our Lord Civa with sincere devotion. 

2544.     ஏவமிக்கசிந்தையோடின்பமெய்தலாமெனப் 
    பாவமெத்தனையுநீர்செய்தொருபயனிலைக் 
    காவல்மிக்கமாநகர்காய்ந்துவெங்கனல்படக் 
    கோவமிக்கநெற்றியான்கோடிகாவுசேர்மினே.        6

    ஏவமிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப் 
    பாவம் எத்தனையும் நீர் செய்து ஒருபயனிலைக் 
    காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல்படக் 
    கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

    Evam mikka cintaiyOTu inpam eytal Am enap 
    pAvam ettanaiyum nIr ceytu oru payan ilai; 
    kAval mikka mA nakar kAyntu vegkanal paTak 
    kOvam mikka neRRiyAn kOTi kAvu cErminE!

பொருள்:     குற்றம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாமென நினைந்து பாவமான செயல்கள் 
எத்தனை செய்தாலும் அவற்றால் உமக்கு ஆவதொரு நன்மையும் இல்லை. பாதுகாவல் மிக்க திரிபுரங்கள் 
நெருப்பில் கனன்று எரியச் சினமிக்க நெற்றிவிழி உடையானது திருக்கோடிகாவினைச் சேர்மினே.

குறிப்புரை:     ஏவம் - இகழ்ச்சி, குற்றம். காவல் மிக்க மாநகர் - திரிபுரம்.

    Oh ye people! You live in this world of disrespect lacking in greatness. You imagine 
the life in this world as one of happiness. Without dignity and honor, you may suffer in your 
advanced age and feel unhappy. Before this happens to you, you may go to the temple in 
Thiru-k-kodika city and worship the holy feet of our Lord Civa manifest there. He wears 
on His body the garland made of white bones as jewellery. In His golden hair He retains 
the white curved young moon. Go to this temple in Thiru-k-kodika city and worship Him.

2545.     ஏணழிந்தவாழ்க்கையையின்பமென்றிருந்துநீர் 
    மாணழிந்தமூப்பினால்வருந்தன்முன்னம்வம்மினோ 
    பூணல்வெள்ளெலும்பினான்பொன்றிகழ்சடைமுடிக் 
    கோணல்வெண்பிறையினான்கோடிகாவுசேர்மினே.        7

    ஏணம் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்துநீர் 
    மாண் அழிந்த மூப்பினால் வருந்தன் முன்னம் வம்மினோ 
    பூணல் வெள்எலும்பினான் பொன் திகழ் சடைமுடிக் 
    கோணல் வெண்பிறையினான் கோடிகாவு சேர்மினே.

    EN azinta vAzkkaiyai inpam enRu iruntu nIr, 
    mAN azinta mUppinAl varuntan munnam vamminO!         
    pUNal veL elumpinAn, pontikaz caTai muTik 
    kONal veNpiRaiyinAn, kOTikAvu cErminE!

பொருள்:     அறத்தின் வலிமை அற்ற வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் நற்குணம் 
நற்செயல்கள் இன்றி மூப்படைந்து வருத்துவதன் முன்னம் வம்மின். வெள்ளெலும்பினை
அணிகலனாகப் பூண்டவன்; பொன்போலத் திகழ்கின்ற சடைமுடியில் கோணிய வெண்பிறையைச் 
சூடியவன் ஆகிய சிவனின் திருக்கோடிகாவினைச் சேர்மினே.

குறிப்புரை:     மூப்படைந்து, அதனால் தளர்ச்சி எய்தி வருந்துவதன் முன்னரே, வம்மின்; 
திருக்கோடிகாவைச் சேர்மின். ஏண் - பெருமை. பொன்போலும் சடையில் வெண்பிறையைச் சூடியவன்.

    Oh ye people! thinking that this life is full of happiness, which really has no 
benevolence, you get exhausted and disgusted in your advanced age. But before such a stage
happens to you, do come to me. I will tell you go to the temple in Thiru-k-kodika  city and 
worship our Lord Civa manifest there. Our Lord wears white garland of bones as His jewellery. 
He retains the white young moon on His golden bright matted head. I repeat, go to the temple 
in Thiru-k-kodika city with sincere devotion, and praise our Lord's fame.

2546.     மற்றிவாழ்க்கைமெய்யெனும்மனத்தினைத்தவிர்ந்துநீர் 
    பற்றிவாழ்மின்சேவடிபணிந்துவந்தெழுமினோ 
    வெற்றிகொள்தசமுகன்விறல்கெடஇருந்ததோர் 
    குற்றமில்வரையினான்கோடிகாவுசேர்மினே.        8

    மற்றி வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து நீர் 
    பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்து எழுமினோ 
    வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்ததோர் 
    குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்மினே.

    maRRu i(v) vAzkkai mey enum manattinait tavirntu nIr, 
    paRRi vAzmin, cEvaTi! paNintu vantu ezuminO! 
    veRRi koL tacamukan, viRal keTa iruntatu Or 
    kuRRam il varaiyinAn kOTi kAvu cErminE!

பொருள்:     இந்த உலகவாழ்க்கையை மெய்யெனக் கருதும் மனத்தைத் தவிர்ந்து நீர், சிவனின் 
சேவடியைப் பற்றி வாழ்மின், சேவடியை உவந்து பணிந்து எழுமின், வெற்றியே கொண்டு வாழ்ந்த 
இராவணனின் ஆற்றல் அழிய இருந்த ஒப்பற்றதும் தூய்மையானதும் ஆகிய கயிலைமலையை 
உடையவனின் திருக்கோடிகா சேர்மினே.

குறிப்புரை:     இது மெய் வாழ்க்கை அன்று என்று நீக்கித் திருக்கோடிகாவைச் சேர்மின்.

    Oh ye people! You have firm faith in this life. You also believe that this 
life is true and permanent. Drop these false ideas completely. Immediately prostrate 
before the holy feet of our Lord Civa, grip Him with sincere devotion and lead a 
good life. Our Lord Civa destroyed the mightiness of Raavanan who got victory in 
every walk of his life. Our Lord belongs to mount Kailash which has no blemishes. 
You may reach the temple in the city of Thiru-k-kodika and worship Him with 
sincere devotion.

2547.     மங்குநோயுறும்பிணிமாயும்வண்ணஞ்சொல்லுவன் 
    செங்கண்மால்திசைமுகன்சென்றளந்துங்காண்கிலா 
    வெங்கண்மால்விடையுடைவேதியன்விரும்புமூர் 
    கொங்குலாம்வளம்பொழிற்கோடிகாவுசேர்மினே.        9

    மங்கு நோய் உறும்பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் 
    செங்கண் மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா 
    வெங்கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் 
    கொங்குலாம் வளம்பொழில் கோடிகாவு சேர்மினே.

    magku nOy uRum piNi mAyum vaNNam colluvan; 
    cegkaN mAl, ticaimukan, cenRu aLantum kANkilA- 
    vegkaN mAlviTai uTai--vEtiyan virumpum Ur, 
    kogku ulAm vaLam pozil, kOTi kAvu cErminE!

பொருள்:     உயிருணர்வு மங்குதற்கு ஏதுவாகிய நோய் அடைவதற்குக் காரணமாகிய கட்டு 
அழியும் வழியைச் சொல்வேன்; செங்கண்மால், திசைமுகன் இருவரும் அகழ்ந்தும் மேனோக்கிப் 
பறந்தும் சென்றளந்து காண அரியவன்; செங்கண் மால்விடை உடையவன், வேதியன் ஆகிய 
சிவன் உறைகின்ற ஊர், நறுமணம் உலாவுகின்ற திருக்கோடிகாவினைச் சேர்மினே.

குறிப்புரை:     நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு, உடலையும் அதைச் சார்ந்து உயிரையும் 
பிணித்தலால்  பிணி எனப்பட்டது. பிறவிப் பிணி அழியும் வகை சொல்வேன். திருமாலும் நான்முகனும் 
சென்று அளந்தும் காணமாட்டாத பெருமையவன்.

    Oh ye people! I will give you the beneficial suggestions to wipe out the bad karma that 
creates ailments in your present life that make life dim or dull. There will be no more difficulties 
if you immediately go to the temple in Thiru-k-kodika city and worship Him with sincere devotion. 
The red eyed deity Thirumaal and the four-faced Brahma strolled all over the cosmos to see Him. 
They were unable to achieve their aim. He is such a famous Supreme Being. He loves to sustain the 
white strong bull for His conveyance. He is the author of the four Vedas. Go to the city of natural 
forests with a lot of honey in the flowers.

2548.     தட்டொடுதழைமயிற்பீலிகொள்சமணரும் 
    பட்டுடைவிரிதுகிலினார்கள்சொற்பயனிலை 
    விட்டபுன்சடையினான்மேதகும்முழவொடும் 
    கொட்டமைந்த ஆடலான்கோடிகாவுசேர்மினே.        10

    தட்டொடு தழை மயிற்பீலி கொள் சமணரும் 
    பட்டு உடைவிரி துகிலினார்கள் சொல் பயனிலை 
    விட்ட புன்சடையினான் மேதகும் முழவொடும் 
    கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.

    taTToTu tazai mayil pIli koL camaNarum, 
    paTTu uTai viri tukilinArkaL, col payan ilai; 
    viTTa pun caTaiyinAn, mEtakum muzavoTum 
    koTTu amainta ATalAn, kOTikAvu cErminE!

பொருள்:     தடுக்கு பாயுடன் மயிற்பீலியைக் கைக்கொள்ளும் சமணரும் பட்டுடையை விரித்துப் 
போர்க்கும் தேரரும் உரைக்கும் சொற்களினால் பயனில்லை. தொங்கவிட்ட பொன்னார் சடையினான்; 
சிறப்புடைய முழவொடு தாளக் கொட்டமைந்த ஆடலான் ஆய சிவனின் திருக்கோடிகாவினைச் சேர்மினே.

குறிப்புரை:     சொல்லுஞ் சொல் பயனில்லை. தொங்கவிட்ட பொன்னார் செஞ்சடை.

    The Jains stroll all around the city carrying a flat plate in which the peacock's 
feather is fixed. The Buddhists cover their body with broad silk shawl. They both make 
meaningless announcements. You never listen to them. You may go to the temple in the 
Thiru-k-kodika city and worship Him with sincere devotion. His entangled locks of hair 
hang downwards on His back. His avocation is to dance to the music of the fascinating 
drum. Again I repeat, ye people go immediately to the temple in the city of Thiru-k-kodika,
pray to Lord Civa and worship Him with sincere devotion.

2549.     கொந்தணிகுளிர்பொழிற்கோடிகாவுமேவிய 
    செந்தழலுருவனைச்சீர்மிகுதிறலுடை 
    அந்தணர்புகலியுளாயகேள்விஞானசம் 
    பந்தனதமிழ்வல்லார்பாவமானபாறுமே.        11

    கொந்தணி குளிர்பொழில் கோடிகாவு மேவிய 
    செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை
     அந்தணர் புகலி உளாய கேள்வி ஞானசம் 
    பந்தன தமிழ்வல்லார் பாவம் ஆன பாறுமே.

    kontu aNi kuLirpozil kOTi kAvu mEviya
    centazal uruvanai, cIrmiku tiRal uTai
    antaNar pukaliyuL Aya kELvi njAnacam 
    pantana tamiz vallAr pAvam Ana pARumE.

பொருள்:     பூங்கொத்துக்களுடைய குளிர்ந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கோடிகாவினில் 
மேவிய செந்தழல் போன்ற திருமேனியனைப் பெருமைமிக்க திறலுடை அந்தணர்கள் வாழும் 
புகலியுள் மிக்க கேள்விஞானம் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகமான தமிழ்ப்பாடல்கள் 
வல்லவர்களின் பாவமாயின அழியும். 

குறிப்புரை:     திருக்கோடிகாவை மேவிய அந்தணர் வாழும், திருப்புகலியுள் ஆய்ந்த மறையாகிய 
வேள்வியை உடைய திருஞானசம்பந்தருடைய இத்தமிழ் மாலை பாட வல்லவர் பாவம் போக்குவர். 
கொந்து - பூங்கொத்து. கேள்வி - கருதி. அந்தணர் புகலி என்றதால் அங்கு அக்காலத்தில் சிவபத்தியிற் 
சிறந்த அந்தணர் பலர் இருந்தமையும், அதிற் சிறவாதாரைக் கூறார் என்பதும், கூறியது கொண்டு 
அவரை நாமும் இப்பொழுது நினைந்து பணிந்து நலம் பெறலாயிற்று என்பதும் உணர்க.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-k-kodika city. The city is 
surrounded by big natural cool forests where flower plants have bunches of blossom.
His body is like bright red supernal flame. Our saint Thiru-gnana-Sambandar was born
in the city of Pukali. Here the scholar Brahmins,well versed in all divine knowledge
live in large numbers. Our saint is a scholar in Vedas. He chanted these ten verses on
our Lord Civa who is in the temple in Thiru-k-kodika city. Those scholars who memorise 
and repeat these ten verses before our Lord Civa in the temple will get rid of 
their sins, if any in their life. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            99ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 99th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 236                பதிக எண்: 100

100.திருக்கோவலூர்வீரட்டம்            100. THIRU-K-KOVALOOR-VEERATTAM

பண்: நட்டராகம்                    Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    கோவலூர் என்பது ஊரின் பெயராகவும், வீரட்டம் என்பது கோயிலின் பெயராகவும் 
அமைந்துள்ளன. வீரட்டம் என்றால் வீரத்தைக் காட்டிய இடம். இச்செய்தி 'கோவலூர்தனுள் 
வீரட்டானஞ் சேர்துமே' என்னும் இக்கோயிலுக்குரிய திருஞான சம்பந்தர் தேவாரப் பகுதியால் 
அறியக் கிடக்கின்றது. இத்தகைய தலங்கள் எட்டாகும். அவைகளுள் இது ஒன்று. இது அந்தகாசுரனைக் 
காய்ந்த இடம். இச்செய்தியை,

    அவுணரிற் கள்வ னான அந்தகற் காய்ந்து மூன்று 
    புவனமும் கவலை தீர்த்த புண்ணியன் புரமீ தாகும்

என்னும் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தின் அர்ச்சனைப் படலமும் வலியுறுத்தும்.

    இறைவரது திருப்பெயர் - வீரட்டநாதர். இறைவியாரது திருப்பெயர் - சிவானந்தவல்லி.
தீர்த்தம் பெண்ணையாறு. இது பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கிறது. 
திருக்கோவலூர் என்னும்  தொடர்வண்டி நிலையத்தில் வடக்கே 1/2 கி.மீ தூரத்திலுள்ள 
திருஅறையணி நல்லூரை  அடைந்து, அங்கிருந்து பெண்ணையாற்றைக் கடந்து தென்கரையிலுள்ள 
இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத்  தலங்கள் இருபத்திரண்டில் பதினொன்றாவது ஆகும். 
பண்ணுருட்டியிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து 
நிலையத்துக்கு வடபால் கோயில் உள்ளது. மலாடர் கோமானாகிய மெய்ப்பொருள் நாயனார், 
தம்மோடு பலமுறை போர்புரிந்து, தோற்ற முத்தநாதனால், வஞ்சனையால் உயிர்க்கு இறுதி நேர்ந்த 
இடத்தும் 'மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்' எனும் உறுதியால் ,அவனைக் காத்துக் கூத்தப் 
பெருமான் திருவடி நீழல் அடைந்த பதி இதுவாகும். இத்திருக்கோயிலுக்குச் சம்பந்தர் பதிகம் 
ஒன்று அப்பர்  பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன. 

பதிக வரலாறு

    திருமறைச்சிறுவர் திருவாமாந்தூரை அணைந்து போற்றித் திருக்கோவலூரைச் 
சேர்ந்து ஏத்திப் பாடியது இத்திருப்பதிகம் . 

            திருச்சிற்றம்பலம்

2550.     படைகொள்கூற்றம்வந்துமெய்ப்பாசம்விட்டபோதின்கண் 
    இடைகொள்வாரெமக்கிலையெழுகபோதுநெஞ்சமே 
    குடைகொள்வேந்தன்மூதாதைகுழகன்கோவலூர்தனுள் 
    விடையதேறுங்கொடியினான்வீரட்டானஞ்சேர்துமே.        1

    படைகொள் கூற்றம் வந்து மெய்ப்பாசம் விட்ட போதின்கண் 
    இடை கொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே 
    குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்தனுள் 
    விடையது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.

    paTai koL kURRam vantu, meyp pAcam viTTa pOtinkaN, 
    iTai koLvAr emakku ilai; ezuka! pOtu, nenjcamE! 
    kuTai koL vEntan mUtAtai, kuzakan, kOvalUr tanuL- 
    viTai atu ERum koTiyinAn--vIraTTAnam cErtumE.

பொருள்:     நெஞ்சமே! சூலப்படையைக் கொண்ட எமன் உடலிலிருந்து உயிரைப் பறிக்கும் 
பாசக்கயிற்றை நம்மீது விட்டபோதில் இடைநின்று தடுக்க வல்லவர் எமக்கு ஒருவருமிலர்; ஆகவே 
எழுக! என்னுடன் போதுக! குடைக் கூத்தனாகிய முருகனின் தாதை; குழகன்; விடைக்கொடியினான் 
ஆகிய சிவனின் திருக்கோவலூர் தனுள் வீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     பாசம் - கயிறு; எமபாசம். நெஞ்சமே எழுக, போதுக. வெண்கொற்றக் குடையைக் 
கொண்ட மலையமான் முதுதாதையாகிய குழகன் சிவபிரான். குழகன் இத்தலத்தின் இறைவன் 
திருப்பெயர்; (பா. 3, 6,9) விடையது - அது பகுதிப் பொருள் விகுதி. வீரட்டானம், வீரஸ்தாநம்.

    The demigod of death Yaman will come to You with arms and weapons. He will put 
round Your body the noose to remove the soul from Your body. At that moment nobody could 
prevent him and help you. Oh my dear heart! get up, join with me and get satisfied. 
The canopy of royalty is owned by Malayaman, the Supreme Being, the Father, our Lord 
Civa. Our Lord Civa has the insignia of the bull in His flag. He is manifest in the 
Veerattam temple in Kovaloor city. Let us reach there.

2251.     கரவலாளர்தம்மனைக்கடைகள்தோறுங்கால்நிமிர்த் 
    திரவலாழிநெஞ்சமேயினியதெய்தவேண்டில்நீ 
    குரவமேறிவண்டினங்குழலொடியாழ்செய்கோவலூர் 
    விரவிநாறுகொன்றையான்வீரட்டானஞ்சேர்துமே.        2

    கரவல் ஆளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த் 
    திரவல் ஆழிநெஞ்சமே இனியது எய்த வேண்டில்நீ 
    குரவம் ஏறிவண்டினம் குழல்ஒடியாழ் செய் கோவலூர் 
    விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே.

    karavalALar tam manaik kaTaikaL tORum kAl nimirttu, 
    iraval-Azi nenjcamE!--iniyatu eyta vENTin nI, 
    kuravam ERi vaNTu inam kuzaloTu yAz cey kOvalUr, 
    viravi nARu konRaiyAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     கடல்போல் அலைகின்ற நெஞ்சமே! கரத்தலில் வல்லவர்களின் மனைவாசல் 
தோறும் கால் நடந்து இரத்தலைச் செய்யாதே. நீ இனியதை வேண்டுவாய் ஆயின், குரவ மரத்தின் 
மேலேறிப் பூக்களை  மொய்த்து, வண்டினங்கள் குழலோடு யாழ்போல முரலும் திருக்கோவலூரில், 
மணம் நாறுகின்ற கொன்றையான் சிவனுடைய திருவீரட்டானம் சேர்துமே. 

குறிப்புரை:     கரப்பவர் வீடுகளின் கடைவாயில் தோறும், கால் நிமிர்த்து (நடந்து) இரப்பதைச் 
செய்யாதே; நெஞ்சமே! ஆழி நெஞ்சம்- கடலாழத்தினும் காண்டற்கரிய ஆழமுடைய நெஞ்சமே! 
நினைப்பென்னும் நெடுங்கிணறு. இனியதை எய்த வேண்டினால், சிவபெருமான் வீரட்டானத்தைச் 
சேர்வோம்.

    Oh my dear people! Do not walk straight to the gates of great people and beg 
for alms. Oh my dear heart! You are in an impervious depth, which is deeper than the ocean. 
If you wish to become morally noble, the only remedy is we should go to the Veerattam 
temple of our Lord Civa in the city of Kovaloor and worship Him. The city has trees with 
flowers swarmed around by bees and their humming is like music of flutes and lutes. 
Our Lord wearing the fragrant cassia resides in the temple.

2552.     உள்ளத்தீரேபோதுமின்னுறுதியாவதறிதிரேல் 
    அள்ளற்சேற்றிற்காலிட்டிங்கவலத்துளழுந்தாதே 
    கொள்ளப்பாடுகீதத்தான்குழகன்கோவலூர்தனுள் 
    வெள்ளந்தாங்குசடையினான்வீரட்டானஞ்சேர்துமே.     3

    உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல் 
    அள்ளற் சேற்றிற் காலிட்டு இங்கவலத்து உள் அழுந்தாதே 
    கொள்ளப் பாடு கீதத்தான் குழகன் கோவலூர் தனுள் 
    வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

    uLLattIrE! pOtumin(n), uRuti Avatu aRitirEl! 
    aLLal-cERRil kAl iTTu, igku avalattuL azuntAtE, 
    koLLap pATu kItattAn, kuzakan, kOvalUrtanuL- 
    veLLam tAgku caTaiyinAn--vIraTTAnam cErtumE.

பொருள்:     ஊக்கமுடைய உள்ளத்தீரே! போதுமின்! உயிருக்கு உறுதி யாது என்பதை அறிதிரேல், 
பிரபஞ்சம் என்னும் சேற்றில் கால் வைத்து இங்கு துன்பத்தில் அழுந்தாமல் உள்ளத்தைக் கொள்ளை
கொள்ளும் கீதம் பாடுமவன், குழகன், திருக்கோவிலூரில் கங்கை வெள்ளம் தங்கும் சடையனாகிய 
சிவனின் திருவீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதியாவதை அறிதிர் என்னில் 
திருக்கோவலூர் வீரட்டானம் சேர்வோம். அள்ளற்சேறு-நரகம்.

    Oh my dear people! You are noble hearted people. If you want to achieve the only 
redeeming reality for your life, do not involve yourself in the mire of bad deeds, which 
will take you to hell. Our Lord Civa, singing such noble songs pleasing to our ears, 
supports the river Ganges on His matted hair. He is manifest in the Veerattam temple 
in Kovaloor. Let us reach the place and worship Him. Do come.

2553.     கனைகொளிருமல்சூலைநோய்கம்பதாளிகுன்மமும் 
    இனையபலவுமூப்பினோடெய்திவந்துநலியாமுன் 
    பனைகளுலவுபைம்பொழிற்பழனஞ்சூழ்ந்தகோவலூர் 
    வினையைவென்றவேடத்தான்வீரட்டானஞ்சேர்துமே.        4

    கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் 
    இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன் 
    பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் 
    வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே.

    kanaikoL irumal, cUlainOy, kampatALi, kunmamum, 
    inaiya palavum, mUppinOTu eyti vantu naliyAmun, 
    panaikaL ulavu paimpozil pazanam cUznta kOvalUr, 
    vinaiyai venRa vETattAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     இருமல் முதலாய நோய்கள் பலவும் மூப்பினொடு பொருந்தி வந்து 
வருத்துவதற்கு முன், பனை மரங்கள் இருக்கும் பைம்பொழில்கள் பழனங்கள் சூழ்ந்த 
திருக்கோவலூரில், இருவினையை வென்ற சிவவேடத்தானின் திருவீரட்டானத்தைச் 
சேர்துமே.

குறிப்புரை:     கம்பதாளி-  தாள்நடுங்கும் ஒருவகை நோய். கம்பம் - நடுக்கம். தாளி -
கால்களைப்  பற்றுவது. 'பெண்ணை' என்றதற்கேற்ப பனந்தோப்பு மிக்கிருக்கும் நாடு. 
இருவினையையும்  போக்கிய சிவவேடத்தை உடையவன்.

    Oh my dear people! In your advanced age you will get cough with guttural 
sound in your throat (croaking). Arthritic complaints, stiffness, shivering, 
chronic, enlargement of spleen and such other diseases will affect you severely. 
Before such a stage happens, let us go to the Veerattam temple and worship Lord 
Civa manifest there. Around the city of Kovaloor, green palmyrah trees are in 
large numbers. Forest areas are there. Paddy fields are there. In such a glorious 
city, our Lord Civa who is detached from the dual karma manifests Himself and 
graces devotees.We will go there to worship Him.

2554.    உளங்கொள்போகமுய்த்திடாருடம்பிழந்தபோதின்கண் 
    துளங்கிநின்றுநாடொறுந்துயரலாழிநெஞ்சமே 
    வளங்கொள்பெண்ணைவந்துலாவயல்கள்சூழ்ந்தகோவலூர் 
    விளங்குகோவணத்தினான்வீரட்டானஞ்சேர்துமே.         5

    உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்த போதின்கண் 
    துளங்கி நின்று நாள்தொறும் துயரல் ஆழி நெஞ்சமே             
    வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் 
    விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே.

    uLam koL pOkam uyttiTAr, uTampu izanta pOtin kaN; 
    tuLagki ninRu nALtoRum tuyaral, Azi nenjcamE!             
    vaLam koL peNNai vantu ulA vayalkaL cUznta kOvalUr, 
    viLagku kOvaNattinAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     மனம் கொள்ளத் தக்கதாய போகத்தைப் புண்ணியம் இல்லாதவர்கள் 
உடம்பிழந்த போது அனுபவியார் என்று கலங்கி நின்று நாள்தொறும் துயரமாகிய கடலில்
ஆழ்கின்ற நெஞ்சமே!  பெண்ணையாற்று நீர் வந்து உலாவும் வயல்கள் சூழ்ந்த திருக்கோவலூரில்
மறைப்பொருளாய் விளங்கும் கோவணத்தினானின் திருவீரட்டானம் சேர்துமே. 

குறிப்புரை:     ஆழி நெஞ்சமே! -ஆழ்தலை உடைய மனமே! மனத்தில் விரும்பப்பட்ட போகங்களை 
அநுபவிக்கச் செய்யும் புண்ணியம் இல்லாதவர்கள் கட்டையை விட்டகன்ற சமயத்தில், தளர்ந்து நின்று 
நாள்தோறும் துயரம் அடையாதே.

    Oh my dear people! In your advanced age you cannot achieve whatever you want, 
especially comforts and enjoyments in your life. Everyday you will suffer because of 
your physical inability. Avoid all your tragic thoughts and agony. Let us go to the 
Veerattam temple in Kovaloor city and worship our Lord Civa who is manifest in that temple. 
The river Pennai flows around the city. Paddy fields are in plenty all around this city. 
Our Lord Civa wears forelap cloth on His waist and graces the people there. 

2555.     கேடுமூப்புச்சாக்காடுகெழுமிவந்துநாள்தொறும் 
    ஆடுபோலநரைகளாயாக்கைப்போக்கதன்றியும் 
    கூடிநின்றுபைம்பொழிற்குழகன்கோவலூர்தனுள் 
    வீடுகாட்டுநெறியினான்வீரட்டானஞ்சேர்துமே.        6

    கேடு மூப்புச் சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும் 
    ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கதன்றியும்             
    கூடி நின்று பைம்பொழில் குழகன் கோவலூர் தனுள்
    வீடு காட்டு நெறியினான் வீரட்டானம் சேர்துமே.

    kETu mUppuc cAkkATu kezumi vantu nALtoRum
    ATu pOla naraikaLAy yAkkai pOkku atu anRiyum, 
    kUTi ninRu, paimpozil kuzhakan kOvalUrtanuL- 
    vITu kATTum neRiyinAn--vIraTTAnam cErtumE.

பொருள்:     நாள்தோறும் கேடும் மூப்பும் இறப்பும் பொருந்துவதோடன்றி, குறியாட்டினைப் 
போல நரைகளாகி உடம்பு அழியுந்தன்மையது; அதனால் அன்பர்கள் குழாத்துடன் குழுமி நின்று 
குழகனின் பைம்பொழிற் திருக்கோவலூர்தனுள் வீடுகாட்டு நெறியினானின் வீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     கேடும் முதுமையும் இறப்பும் பொருந்தி வந்து நாள்தொறும் ஆடுகளைப் 
போல நரைகளாகி உடம்பு அழிதலுடையது. பேரின்ப வீட்டைக் காட்டும் திருநெறி. 
நெறியினான் - திருநெறியில் சென்று  அடையப்பெறும் சிவபிரான்.

    Our body gets weakened in advanced age and becomes grey. Decay in our body 
moves all the time like goats. Therefore, the worst factors of our life, like advanced
age, mortality and decay come near us and destroy life. Oh my dear heart, let us go 
to the Veerattam temple in the city of Kovaloor and worship our Lord Civa manifest there. 
All around the city green thick forests are many. Lord Civa will show the way to 
eternal bliss.

2556.    உரையும்பாட்டுந்தளர்வெய்தியுடம்புமூத்தபோதின்கண் 
    நரையுந்திரையுங்கண்டெள்கிநகுவர்நமர்களாதலால் 
    வரைகொள்பெண்ணைவந்துலாவயல்கள் சூழ்ந்தகோவலூர் 
    விரைகொள்சீர்வெண்ணீற்றினான்வீரட்டானஞ்சேர்துமே.        7

    உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்த போதின்கண் 
    நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் 
    வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் 
    விரை கொள் சீர்வெண்ணீற்றினான் வீரட்டானம் சேர்துமே.

    uraiyum pATTum taLarvu eyti uTampu mUtta pOtin kaN, 
    naraiyum tiraiyum kaNTu eLki nakuvar namarkaL AtalAl, 
    varai koL peNNai vantu ulA vayalkaL cUznta kOvalUr, 
    virai koL cIr veN nIRRinAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     பாட்டும் உரையுமாக மகிழ்ச்சியுடன் இருந்த உடல் மூப்பு வந்து 
தளர்வு அடையும்; நரையும் திரையும் கண்டு எள்கி நமர்கள் நகுவர்; ஆதலால், 
மலைமீது தோன்றிய பெண்ணையாறு வந்து  உலவுகின்ற வயல்கள் சூழ்ந்த
திருக்கோவலூரில் மணமும் பெருமையும் உள்ள திருநீற்றினானின் வீரட்டானம் 
சேர்துமே . 

குறிப்புரை:     உரையும் பாட்டும் - பேச்சும் பாடலும். ' பாட்டும் உரையும் பயிலாதன 
இரண்டோட்டைச் செவியும் உள'. 

    In our advanced age our life full of speech and song dwindles and becomes
ineffective.Our relatives laugh on seeing our gray hair and wrinkles in the skin
and dispraise us. Therefore, let us go to the Veerattam temple in Kovaloor city 
and worship our Lord Civa manifest there.In this city the river Pennai comes down 
from the mountain and flows around the city. Paddy fields are in large number 
around the city. Our Lord Civa, having applied over His body the sweet smelling 
holy ashes, which spreads fragrance, resides there.

2557.     ஏதமிக்கமூப்பினோடிருமலீளையென்றிவை 
    ஊதலாக்கையோம்புவீருறுதியாவதறிதிரேல்                 
    போதில்வண்டுபண்செயும்பூந்தண்கோவலூர்தனுள் 
    வேதமோதுநெறியினான்வீரட்டானஞ்சேர்துமே.        8

    ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை 
    ஊதல் ஆக்கையோம்புவீர் உறுதியாவது அறிதிரேல்             
    போதில் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர் தனுள் 
    வேதம் ஓதுநெறியினான் வீரட்டானம் சேர்துமே.

    Etam mikka mUppinOTu, irumal, ILai, enRu ivai 
    Utal Akkai OmpuvIr! uRuti Avatu aRitirEl, 
    pOtil vaNTu paNceyum pUn taN kOvalUr tanuL,
    vEtam Otu neRiyinAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     பழுதுடைய மூப்பினோடு இருமல், ஈளை என்று இவையுடன் ஊதல் ஆகும்
 உடம்பை விரும்புவீர்; உமக்கு ஆக்கம் அளிப்பது எது என அறிவீரேல் மலர்ப்போதுகளில்
 வண்டுகள் வந்து பண் மிஞற்றும் குளிர்பூக்கள் மலிந்த திருக்கோவலூர்தனுள் வேதம் 
ஓதும்  நெறியினானின் வீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     ஈளை -சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள் ஒன்று. ஊதல் ஆக்கை - 
பருத்தலை உடைய உடம்பு. உறுதி - ஆன்ம லாபம். அறிதிர் ஏல் - அறிவீர் எனில். வேதம் ஓதும் 
நெறியினான்-    வேதநெறியை அருளியவன்.

    You people of obesity! You develop your heavy body and roam with many ailments 
in your advanced age. Cough and phlegm give you all trouble despite your care for your body. 
If you want to achieve the real fitness for your eternal life, please do come to me. Let us 
go to the Veerattam temple in the gorgeous city Kovaloor and worship our Lord Civa with 
sincere devotion. He is the author of the four Vedas and will chant it wherever needed. 
In this city beetles fly to the flowers and make harmonious sound.

2558.     ஆறுபட்டபுன்சடையழகனாயிழைக்கொரு 
    கூறுபட்டமேனியான்குழகன்கோவலூர்தனுள் 
    நீறுபட்டகோலத்தான்நீலகண்டனிருவர்க்கும் 
    வேறுபட்டசிந்தையான்வீரட்டானஞ்சேர்துமே.        9

    ஆறு பட்டபுன் சடை அழகனாய் இழைக்கு ஒரு 
    கூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தனுள் 
    நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும் 
    வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே.

    ARu paTTa puncaTai azakan, Ayizaikku oru 
    kURu paTTa mEniyAn, kuzakan, kOvalUr tanuL- 
    nIRu paTTa kOlattAn, nIlakaNTan, iruvarkkum 
    vERupaTTa cintaiyAn,-vIraTTAnam cErtumE.

பொருள்:     கங்கையாறு தங்கிய புன்சடை அழகன்; உமையம்மைக்குத் தன் உடலின் 
ஒரு கூறினை அளித்த மேனியன்; குழகன்; திருக்கோவலூர்தனுள் திருநீறு படிந்த 
கோலமுடையவன்; திருநீலகண்டன்; திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் வேறுபட்ட 
சிந்தையான்; அவனுடைய வீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     ஆயிழை - உமாதேவியார். திருவெண்ணீறு சண்ணித்த மேனியழகினன். 
இருவர் - மாலும் அயனும்.  வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன். 'அந்தணர் தம் 
சிந்தையானை', 'வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை'. 

    Our Lord Civa has permitted the river Ganges to stay in His fine mattresses 
and looks a very attractive Supreme Being. He espoused His consort Uma Devi and has 
happily accommodated her on the left half of His body. He is manifest in the Veerattam 
temple in Kovaloor city. He smears His body with sacred ashes. He is called Neelakandar 
because He imbibed the poison in His throat. Our Lord was unrecognizable to Brahma and 
Thirumaal with different thoughts. He is manifest in the Veerattam temple. Let us go 
to the temple and worship Him. Do come.

2559.     குறிகொளாழிநெஞ்சமேகூறைதுவரிட்டார்களும் 
    அறிவிலாத அமணர்சொல்லவத்தமாவதறிதியேல் 
    பொறிகொள்வண்டுபண்செயும்பூந்தண்கோவலூர்தனுள் 
    வெறிகொள்கங்கைதாங்கினான்வீரட்டானஞ்சேர்துமே.        10

    குறிகொள் ஆழிநெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் 
    அறிவிலாத அமணர் சொல்ல வத்தமாவது அறிதியேல் 
    பொறி கொள் வண்டுபண் செயும்பூந்தண் கோவலூர் தனுள் 
    வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.

    kuRikoL, Azi nenjcamE! kURai tuvar iTTArkaLum, 
    aRivu ilAta amaNar, col avattam Avatu aRitiEl,         
    poRi koL vaNTu paNceyum pUn taN kOvalUr tanuL,         
    veRi koL kagkai tAgkinAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     கடல் போல ஆழமான நெஞ்சமே! குறிகொள்! துவரூட்டிய ஆடை உடுத்திட்ட
பவுத்தர்களும் மெய்யறிவில்லாத சமணர்களும் சொல்லும் சொற்கள் உறுதியற்றன; அதனை 
அறிதியேல் புள்ளிகளை உடைய வண்டுகள் பண் செய்யும் குளிர்ச்சியும் அழகும் உடைய
 திருக்கோவலூர்தனுள்  மணமுள்ள கங்கையைச் சிரமேல் தாங்கியவனின் வீரட்டானம் சேர்துமே.

குறிப்புரை:     'ஆழி நெஞ்சமே', நீராழங்கண்டாலும் நெஞ்சாழம் காண முடியாது. அவத்தம் - 
பொய்.    பொறி - வரி. வெறி - மணம்.

    Oh my dear heart! You think of many deep and different ideas. The Buddhists
cover their body with red ochre cloth. The Jains have no virtuous knowledge. What
they both announce is purposeless. If you admit their uselessness we shall go to the
temple of Veerattam in the city of Thiru-k-kovaloor and worship our Lord Civa with 
sincere devotion. The branded bees sing in musical tone. Our Lord supports the sweet
smelling river Ganges in His mattress. Let us go to the Veerattam temple and worship
Lord Civa with sincere devotion.

2560.     கழியொடுலவுகானல்சூழ்காழிஞானசம்பந்தன் 
    பழிகள்தீரச்சொன்னசொற்பாவநாசமாதலால்            
    அழிவிலீர்கொண்டேத்துமினந்தண்கோவலூர்தனுள் 
    விழிகொள்பூதப்படையினான்வீரட்டானஞ்சேர்துமே.        11

    கழியொடு உலவு கானல்சூழ் காழி ஞானசம்பந்தன் 
    பழிகள் தீரச் சொன்ன சொற் பாவநாசம் ஆதலால்             
    அழிவிலீர் கொண்டு ஏத்துமின் அந்தண் கோவலூர் தனுள் 
    விழிகொள் பூதப்படையினான் வீரட்டானம் சேர்துமே.

    kaziyoTu ulavu kAnal cUz kAzi njAnacampantan, 
    pazikaL tIrac conna col pAvanAcam AtalAl,            
    azivu ilIr, koNTu Ettumin! am taN kOvalUr tanuL, 
    vizi koL pUtap paTaiyinAn, vIraTTAnam cErtumE.

பொருள்:     கழிகள் உலவுகின்ற கடற்கானல்கள் சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தன் பழிகள் 
நீங்கப் பாடிய இத்திருப்பதிகம் பாவங்களை நாசம் ஆக்கும். ஆதலால், பிறப்பு இறப்பு ஆகிய அழிவு 
நீங்கப் பெறுவீர்! இத்திருப்பதிகத்தை உள்ளத்திற் கொண்டு சிவனை வழிபடுங்கள். அழகும் 
குளிர்ச்சியும் உடைய திருக்கோவலூர்தனுள் விழிகொள் பூதப்படையினானின் வீரட்டானம் சேர்துமே. 

 குறிப்புரை:     பழிகள் தீரச்சொன்ன சொல்.  பாவநாசம் - பழிகள் ஒழியப் பாடியருளிய 
இத்திருப்பதிகத்தினை ஓதுவார்க்குப் பாவங்கள் அழியும். கொண்டு -   இத்திருப்பதிகப் பொருளை 
உள்ளத்திற்கொண்டு.

    Oh! Ye people, you need not rot in unprofitable ways and incur any loss. 
Our saint Thiru-gnana-Sambandar was born in the Seerkaazhi city with saltpans and 
thick forest areas on the shores. He came to the temple and chanted these ten verses 
in Tamil language. These verses will chase our sins. Oh! Ye people chant these verses 
and worship our Lord Civa manifest in the temple in the cool and gorgeous city of 
Thiru-k kovaloor. Here our Lord Civa has an army of goblins with large eyes to help 
Him. Let us reach the Veerattam temple in the city of Thiru-k-kovaloor and worship 
our Lord Civa.
        
        திருச்சிற்றம்பலம் 
        THIRU-CH-CHITRAM-BALAM

        100ஆம் பதிகம் முற்றிற்று 
        End of 100th Hymn

        திருச்சிற்றம்பலம்
        THIRU-CH-CHITRAMBALAM
        

பதிகத் தொடர் எண்: 237              பதிக எண் 101. 

101.திருஆரூர்                101. THIRU-AAROOR

பண்: திருவிராகம்             Pann: Thiruviraagam            
            
திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 215ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருப்புகலூரிலிருந்து, திருவாரூரைத் தரிசிக்க, 
அதன் அருகில் வரும்போது, ஒரு பேரொளிமயமாக ஆரூர் தோன்றிற்று. அது கண்டு பாடியது
இத்திருப்பதிகம்.

        திருச்சிற்றம்பலம்

2561.     பருக்கையானைமத்தகத்தரிக்குலத்துகிப்புக 
    நெருக்கிவாயநித்திலந்நிரக்குநீள்பொருப்பனூர் 
    கருக்கொள்சோலைசூழநீடுமாடமாளிகைக்கொடி 
    அருக்கன்மண்டலத்தணாவுமந்தணரூரென்பதே.        1

    பருக்கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிப்புக 
    நெருக்கி வாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பன் ஊர் 
    கருக்கொள் சோலைசூழ நீடு மாட மாளிகைக் கொடி 
    அருக்கன் மண்டலத்து அணாவும் அம்தண் ஆரூர் என்பதே.

    paruk kai yAnai mattakattu arikkulattu ukip puka 
    nerukki, vAya nittilam nirakku nIL poruppan Ur- 
    karuk koL cOlai cUza, nITu mATa mALikaik koTi 
    arukkan maNTalattu aNAvum am taN ArUr enpatE.

பொருள்:     பெரிய கையை உடைய யானையின் மத்தகத்தின்மேல் சிங்கக்கூட்டம் அறையவே 
அவற்றின் நகம் செறிந்த பிளவிலிருந்து முத்துக்கள் சொரியும் உயர்ந்த கயிலை மலைக்கு உரியவனின் 
ஊர், எதுவெனில், கரிய இருளைத் தன்னுள்கொள்கின்ற அடர்ந்த சோலைகள்  சூழ, உயர்ந்த 
மாடமாளிகைகளின்மேல் படர்ந்த கொடிகள் சூரிய மண்டலத்தைத் தடவும் அழகும் குளிர்ச்சியும் 
உடைய திருவாரூர் என்பதாகும்.

குறிப்புரை:     மத்தகம்-  தலை, நெற்றி. அரி -சிங்கம். அருக்கன்- சூரியன். அணாவும் - கிட்டும்.
 ஆரூர் -  'ஆத்தி' பற்றி வந்த காரணப்பெயர்.  அது சோழ மன்னரது தார். 

    The elephant has a big and heavy trunk called its hand. With this big animal, 
the lion, animal king of the forest once upon a time put up a fight. The lion's very 
sharp and powerful nails, while fighting with the elephant, scratched the elephant's 
head and tore it deeply. From the head of the elephant a large number of pearls came out 
and fell down on the ground of mount Kailash where our Lord Civa permanently manifests 
Himself. However, He desires to stay in Thiru-aaroor. This city is surrounded by very 
big tall and thick trees in the garden all around the area. The trees in these gardens 
are so tall, they appear as though they touch the sun's orbit. The city is full of 
palatial tall buildings everywhere. In the terrace of these tall buildings flag posts 
have been fixed and the flags always keep swinging.

2562.     விண்டவெள்ளெருக்கலர்ந்தவன்னிகொன்றைமத்தமும் 
    இண்டைகொண்டசெஞ்சடைமுடிச்சிவனிருந்தவூர் 
    கெண்டைகொண்டலர்ந்தகண்ணினார்கள்கீதவோசைபோய் 
    அண்டரண்ட மூடறுக்குமந்தணாரூரென்பதே.        2

    விண்ட வெள்ளெருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் 
    இண்டை கொண்ட செஞ்சடை முடிச்சிவன் இருந்த ஊர் 
    கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீதஓசை போய் 
    அண்டர் அண்டம் ஊடறுக்கும் அம்தண் ஆரூர் என்பதே.

    viNTa veL erukku, alarnta vanni, konRai, mattamum, 
    iNTai, koNTa cenjcaTai muTic civan irunta Ur- 
    keNTai koNTu alarnta kaNNinArkaL kIta Ocai pOy, 
    aNTar aNTam UTu aRukkum am taN ArUr enpatE.

பொருள்:     இதழ் விரிந்து மலர்ந்த வெள்ளெருக்க மலர், வன்னியிலை, கொன்றைமாலை,
 ஊமத்தம் பூ ஆகியனவற்றைத் தலைமாலையாகக் கொண்ட சிவந்த சடைமுடியனாகிய சிவன் 
இருக்கும் ஊர், எதுவெனில், கெண்டைமீன் போன்று அகலமான கண்ணினராகிய மகளிர் பாடும் 
கீத ஓசைமேல் நோக்கிப் போய்த் தேவலோகத்தின் அண்டத்தையும் ஊடுறுவும் அழகும் குளிர்ச்சியும் 
உடைய திருவாரூர் என்பதாகும்.

குறிப்புரை:     இண்டை - திங்கள் வட்டம்போலத் திரட்சியுள்ள பத்திரபுட்பங் கலந்த மாலை வகை.
சிவலிங்கத்திற்கு இண்டை இன்றியமையாதது. அண்டம் - மேலுலகம்.

    Our Lord Civa desires to stay especially in Thiru-aaroor. He adorns His entangled 
locks of hair with blossomed white yercum flowers, broad widened leaves of summer tree, 
datura flowers etc. All these flowers are arranged in circlets and placed in His red 
mattress. In the city young damsels with broad eyes like carp fish join together and 
chant beautiful songs. This noise reaches the celestial orbit and is heard there. 
The city of Thiru-aaroor is such a glorious city.

2563.     கறுத்தநஞ்சமுண்டிருண்டகண்டர்காலனின்னுயிர் 
    மறுத்தமாணிதன்றனாகம்வண்மைசெய்தமைந்தனூர் 
    வெறித்துமேதியோடிமூசுவள்ளைவெள்ளைநீள்கொடி 
    அறுத்துமண்டியாவிபாயுமந்தணாரூரென்பதே.        3

    கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் 
    மறுத்த மாண் இதன்று அனாகம் வண்மை செய்த மைந்தன் ஊர் 
    வெறித்து மேதியோடி மூசு வள்ளை வெள்ளை நீள்கொடி 
    அறுத்து மண்டி ஆவிபாயும் அம்தண் ஆரூர் என்பதே.

    kaRutta nanjcam uNTu iruNTa kaNTar, kAlan in uyir 
    maRutta mANitan tan Akam vaNmai ceyta maintan, Ur-         
    veRittu mEti OTi, mUcu vaLLai veLLai nIL koTi
    aRuttu maNTi, Avi pAyum am taN ArUr enpatE.

பொருள்:     கொல்லுதற்கெனச் சினந்து எழுந்த நஞ்சினை உண்டதால் இருண்ட கண்டத்தை
 உடையவன்; எமனின் இனிய உயிரை அழித்து, மாணியின் உடம்பை அழியாததாக்கினான். 
அத்தகைய வலிமையை உடையவனின் ஊர் எதுவெனில், மிரண்ட எருமை ஓடி,மொய்த்து 
வளர்ந்திருந்த வள்ளை வெள்ளை நீண்ட கொடிகளை அறுத்துக் கொண்டு நெருங்கிக் குளத்தில் 
பாயும் குளிர்ச்சியும் அழகும் உடைய திருவாரூர் என்பதே. 

குறிப்புரை:     'பாலாகித்தோன்றிப் பருகினாராவிகொள்ளும் ஆலாலம்' கந்தபுராணம் - 
வள்ளியம்மையார், மாணி-பிரமசாரி. மார்க்கண்டேய முனிவர், வண்மை- கொடைமை, 
வண்மை என்றும் பாடம் இருத்தல் கூடும். வெறித்து - மயங்கி, கலங்கி, வள்ளை என்பது 
ஒரு கொடி. ஆவி -குளம்.

    Our Lord Civa's favourite place to manifest Himself is Thiru-aaroor. 
His throat is dark blue in colour because He imbibed the poison that came out of the 
ocean when it was churned. Our Lord Civa is the youngest, but the strongest 
Supreme Being. Once Kaalan, the god of death came to snatch the soul of His young 
devotee Maarkandeyan. At that time our Lord saved His devotee and graced him to 
live forever with his youthful posture. In this city the buffaloes get confused 
and run here and there destroying the creepers, panicled bindweeds and thereafter 
enter into cool tanks and stay there.

2564.     அஞ்சுமொன்றியாறுவீசிநீறுபூசிமேனியில் 
    குஞ்சியாரவந்திசெய்யஅஞ்சலென்னிமன்னுமூர்             
    பஞ்சியாருமெல்லடிப்பணைத்தகொங்கைநுண்ணிடை 
    அஞ்சொலாரரங்கெடுக்குமந்தணாரூரென்பதே.        4    

    அஞ்சும் ஒன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில் 
    குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னிமன்னும் ஊர்             
    பஞ்சி ஆரும் மெல்லடிப் பணைத்த கொங்கை நுண் இடை 
    அஞ்சொலார் அரங்கெடுக்கும் அம்தண் ஆரூர் என்பதே.            

    anjcum onRi, ARu vIci, nIRu pUci mEniyil, 
    kunjci Ara vanti ceyya, "anjcal!" enni mannum Ur- 
    panjci Arum mel aTi, paNaitta kogkai, nuN iTai, 
    amcolAr aragku eTukkum am taN ArUr enpatE.

பொருள்:     ஐந்து இந்திரியங்களும் தத்தம் புலன்களின் வழியே செல்லுவதொழிந்து, சிவத்தின் 
திறத்தில் ஒன்றி, காமம் முதலிய அறுபகைகளையும் அழித்து, உடலில் திருநீறு பூசி, தலையாரக் 
கும்பிட்டு வந்தனை செய்ய அஞ்சேல் என்று அருள்பவன் நிலை பெற்று இருக்கும் ஊர் எதுவெனில், 
பஞ்சு போலும் மெல்லிய பாதத்தையும் பெருத்த கொங்கைகளையும் நுண்ணிய இடையினையும் 
அழகிய பேச்சினையும் உடைய மகளிர் அரங்கேறி நடஞ்செய்யும் அழகும் குளிர்ச்சியும் கொண்ட 
திருவாரூர் என்பதே.

குறிப்புரை:     அஞ்சும் ஒன்றுதல்- ஐம்பொறிகளும் தத்தம் புலன்களைக் கொள்வதில் சிவபெருமான் 
திறத்திலன்றி மற்றெத்திறத்திலும் ஈடுபடாமை. 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' ஆறு வீசுதல் -
காமக் குரோத லோப மோக மத மாற்சரியம், அறு பகையும் செற்று ஐம்புலனும் அடக்கி நிற்றல். குஞ்சி - 
தலைமயிர். ஈண்டுத் தலைக்கு ஆகு பெயர். குஞ்சி ஆர- தலையார. வந்தி - வந்தனை. தலையாரக் 
கும்பிட்டு. அஞ்சல் என்னி - அஞ்சாதே என்னும் சிவபிரான். பஞ்சியாருமெல்லடி - பஞ்சுலாவிய 
மெல்லடி (தி.2 ப. 105 பா.9). அடியின் மென்மைக்குப் பஞ்சு ஒப்பு. மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செய்யும் 
திறம் அவையோரால் எடுத்துப் புகழ்ந்து பாராட்டும் அளவுடையதாகும்.

    Our Lord Civa is manifest in Thiru-aaroor. He graces His devotees saying
"Do not get any fear!' These devotees drop out the six enemical attitude. Their 
senses join together and they prostrate before our Lord and worship Him. In this 
city young damsels' feet are as soft as cotton. Their breasts are large and their 
waists are very narrow. They speak sweet gentle words. These girls reach the 
dancing hall and dance there in large numbers. 

2565.     சங்குலாவுதிங்கள்சூடிதன்னையுன்னுவார்மனத் 
    தங்குலாவிநின்றஎங்களாதிதேவன்மன்னுமூர் 
    தெங்குலாவுசோலைநீடுதேனுலாவுசெண்பகம் 
    அங்குலாவியண்டநாறுமந்தணாரூரென்பதே.     5

    சங்கு உலாவு திங்கள்சூடி தன்னை உன்னுவார் மனத் 
    தங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் 
    தெங்கு உலாவு சோலை நீடுதேன் உலாவு செண்பகம் 
    அங்கு உலாவி அண்ட நாறும் அம்தண் ஆரூர் என்பதே.

    cagku ulAvu tigkaL cUTi, tannai unnuvAr manattu
    agku ulAvi ninRa egkaL AtitEvan mannum Ur-
    tegku ulAvu cOlai, nITu tEn ulAvu ceNpakam 
    agku ulAvi, aNTam nARum am taN ArUr enpatE.

பொருள்:     சங்கினைப் போலும் வடிவுடைய வெண்பிறையைச் சூடியவன் (சிவபிரான் ) ;
தன்னை நினைப்பவரின்  மனத்தில் உலாவி நிற்பவன்; எங்களுடைய ஆதிதேவன்; அவன் நிலையாகத் 
தங்கும் ஊர் எதுவெனில், தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளும் ,தேனீக்கள் மொய்க்கின்ற 
செண்பக மரங்களும் உயர்ந்து வானில் உள்ள அணங்களிலும் நறுமணம் வீசும் அழகும் குளிர்ச்சியும் 
கொண்ட திருவாரூரென்பதே. 

குறிப்புரை:     சங்கு உலாவு திங்கள்- சங்கினைப் போலும் வெண்டிங்கள். சூடி- சூடிய சிவபிரான்,
எங்கள் ஆதி தேவன் என்று உரைக்கும் உரிமை ஆசிரியர்க்கு உண்டு. 

    Our Lord Civa called in this verse Aathithevan retains the white young moon,which 
looks like chunk. He stays fully in those devotees' mind who think of Him always. He is
manifest in Thiru-aaroor, a city with large and tall coconut gardens. Also the sweet 
smelling flowers with their fragrance reaching the upper world, of Michelia champaca 
trees in the gardens are many. They grow in large numbers. Thiru-aaroor is such a 
glorious city where our Lord Civa is manifest.

2566.     கள்ளநெஞ்சவஞ்சக்கருத்தைவிட்டருத்தியோ 
    டுள்ளமொன்றியுள்குவாருளத்துளானுகந்தவூர் 
    துள்ளிவாளைபாய்வயற்சுரும்புலாவுநெய்தல்வாய் 
    அள்ளல்நாரையாரல்வாருமந்தணாரூரென்பதே.         6

    கள்ள நெஞ்ச வஞ்சக் கருத்தை விட்டருத்தியோடு 
    உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்த ஊர் 
    துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் 
    அள்ளல் நாரை ஆரல்வாரும் அம்தண் ஆரூர் என்பதே.

    kaLLa nenjca vanjcak karuttai viTTu, aruttiyOTu         
    uLLam onRi uLkuvAr uLattu uLAn ukanta Ur- 
    tuLLi vALai pAy vayal, curumpu ulAvu neytalvAy 
    aLLal nArai Aral vArum, am taN ArUr enpatE.

பொருள்:     கள்ள நெஞ்சில் தோன்றும் வஞ்சகக் கருத்துக்களை விட்டொழித்து, அன்புடன் 
உள்ளம் ஒன்றி நினைவாரது உள்ளத்தில் உள்ள சிவபிரான் விரும்பிய ஊர் எதுவெனில், வயல்களில் 
வாளைமீன்கள் துள்ளிப் பாய நெய்தல் மலர்களில் வண்டுகள் உலவ சேற்றில் நாரைகள் ஆரல் 
மீன்களை உண்ணும் குளிர்ச்சியும் அழகும் கொண்ட திருவாரூரென்பதே.

குறிப்புரை:     கள்ளநெஞ்சு வஞ்சகக்கருத்து-  நெஞ்சத்தின் இயல்பும் அது காரணமாகத் 
தோன்றும் வஞ்சகமாகிய காரியமும், அக்காரியத்தின் விளைவான தீயகருத்தும் உணர்த்தப்பட்டன. 
அத்தீயகருத்து உள்ளவரை அருள்பெறலரிது. அக்கருத்தை ஒழித்து, அன்போடு, உள்ளம் ஒன்றியிருந்து, 
தியாநம் புரிபவர் உள்ளத்தில் உள்ள சிவபெருமான், வாளைகள் துள்ளிப்பாய்கின்ற வயல். வயலில் 
நாரை ஆரும் ஆரூர், நெய்தற் பூக்களைச் சூழ்ந்து வண்டுகள் உலாவும். அள்ளல் - சேறு. நெய்தற்கண் 
உள்ள ஆரல் மீன்கள்.

    Our Lord Civa is manifest in Thiru-aaroor. He evidently manifests Himself in 
those devotees' minds, who drop the viciousness from their minds, cunning and fraudulent 
actions and bad thoughts. After dropping all these they develop benevolence in their 
life and with concentrated mind worship our Lord. He evidently manifests Himself in 
the mind of such people. In this city, sword fish jump and swim in the paddy fields. 
White Indian water lily flowers grow in many places. The cranes devour and eat brownish 
or greenish eel fish in the wet ploughed land. Thiru-aaroor is such a glorious city 
where our Lord Civa evidently manifests Himself.

2567.     கங்கைபொங்குசெஞ்சடைக்கரந்தகண்டர்காமனை 
    மங்கவெங்கணால்விழித்தமங்கைபங்கன்மன்னுமூர் 
    தெங்கினூடுபோகிவாழைகொத்திறுத்துமாவின்மேல் 
    அங்கண்மந்திமுந்தியேறுமந்தணாரூரென்பதே.        7    

    கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் காமனை 
    மங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னும் ஊர் 
    தெங்கின் ஊடுபோகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்         
    அங்கண் மந்தி முந்தி ஏறும் அம்தண் ஆரூர் என்பதே.            

    kagkai pogku cenjcaTaik karanta kaNTar, kAmanai 
    magka vegkaNAl vizitta magkaipagkan, mannum Ur- 
    tegkin UTu pOki vAzai kottu iRuttu, mAvinmEl 
    am kaN manti munti ERum am taN Arur enpatE.

பொருள்:     பொங்கும் கங்கையைச் செஞ்சடையில் மறைத்த வீரர்; காமன் மறைய வெம்மை 
மிக்கக் கண்ணால் விழித்தவர்; மங்கை பங்கர் ஆகிய சிவனார் நிலைபெற்ற ஊர் எதுவெனில், அழகிய 
கண்ணுடைய மந்தி தென்னையினூடு சென்று, வாழையின் குலையை ஒடித்து, மாமரத்தின் மேல் 
முந்தியேறும் அழகும் குளிர்ச்சியும் கொண்ட ஆரூரென்பதே.

குறிப்புரை:     கங்கைநீர் பொங்குஞ் செஞ்சடை, கங்கையைக்கரந்த அகண்டர். அகண்டர்- 
சருவவியாபகர். மந்தி - பெண் குரங்குகள். தெங்கினூடுபோய், வாழைக்குலையை ஒடித்து, 
மாமரத்தின்  மேல் ஏறும் வளமுடைய. 

    Our Lord Civa is manifest everywhere in the universe. He supports the river Ganges, 
rapidly flowing with heavy noise, and conceals it in His entangled hair. He opened His third 
eye and destroyed Kaaman, the god of love. He has embedded His consort on the left side of 
His body and becomes a concorporated Supreme Being. He evidently manifests Himself in the 
temple in Thiru-aaroor city. In this city, the female monkeys climb the coconut trees and 
break the nearby banana bunches and further jump on to the mango tree and do a lot of havoc 
to all the trees. Thiru-aaroor is such a glorious city where our Lord Civa is manifest.

2568.     வரைத்தலம்மெடுத்தவன்முடித்தலம்முரத்தொடும்
    நெரித்தவன்புரத்தை முன்நெரித்தவன்னிருந்தவூர் 
    நிரைத்தமாளிகைத்திருவின்நேரனார்கள்வெண்ணகை 
    அரத்தவாய்மடந்தைமார்களாடுமாரூரென்பதே.        8

    வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் முரத்தொடும் 
    நெரித்தவன் புரத்தை முன் நெரித்தவன் இருந்த ஊர் 
    நிரைத்த மாளிகைத் திருவின் நேரனார்கள் வெண்ணகை 
    அரத்த வாய் மடந்தை மார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

    varaittalam(m) eTuttavan muTittalam(m) urattoTum 
    nerittavan, purattai mun(n) erittavan(n), irunta Ur- 
    niraitta mALikait tiruvin nEr anArkaL, veN nakai 
    aratta vAy maTantaimArkaL ATum ArUr enpatE.

பொருள்:     கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனின் பத்துத் தலைகளையும் 
அவனுடைய மார்புடன் சேர்த்து நெரித்தவன்; திரிபுரத்தை முன்னர் எரித்தவன் ஆகிய சிவன் இருக்கும் 
ஊர் எதுவெனில், வரிசையாக உள்ள மாளிகைகளில் திருமகளுக்கு நிகரானவர்கள், வெண்ணிற பற்களும் 
சிவந்த வாயிதழ்களும் கொண்ட மகளிர்கள் நடனமாடும் திருவாரூர் என்பதே.

குறிப்புரை:     உரத்தொடும்- மார்போடும், வலியுடன், நிரைத்த - வரிசையுற்ற. திருவின் 
நேரனார்கள் - திருமகளை  நேரொத்தவர்கள். அரத்தவாய் - செவ்வாய்.

    Our Lord Civa crushed Raavanan's ten heads and chest when he tried to replace 
mount Kailash. He burnt the three fortresses of asuras. In this glorious city our Lord 
Civa is manifest. In this city, many palatial buildings are very tall and beautiful. 
In such residences very attractive girls, beautiful like goddess Lakshmi, live. 
Their lips are red in colour and their teeth are pure white. They go to dancing halls 
and dance jointly and enjoy life. Here our Lord Civa is manifest.

2569.     இருந்தவன்கிடந்தவன்னிடந்துவிண்பறந்துமெய் 
    வருந்தியுமளப்பொணாதவனாவன்மகிழ்ந்தவூர் 
    செருந்திஞாழல்புன்னைவன்னிசெண்பகஞ்செழுங்குரா 
    அரும்புசோலைவாசநாறுமந்தணாரூரென்பதே.        9

    இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் 
    வருந்தியும் அளப்பொணாதவன் ஆனாவன் மகிழ்ந்த ஊர் 
    செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குரா 
    அரும்பு சோலை வாசநாறும் அம்தண் ஆரூர் என்பதே.

    iruntavan kiTantavan(n), iTantu viN paRantu, mey 
    varuntiyum aLappu oNAta vAnavan makiznta Ur--' 
    cerunti, njAzal, punnai, vanni, ceNpakam, cezug kurA,
    arumpu cOlai vAcam nARum am taN ArUr enpatE.

பொருள்:     தாமரை மலர்மேல் இருந்தவனாகிய பிரமனும் பாற்கடலில் பாம்பணைமேற் 
கிடந்தவனாகிய திருமாலும் முறையே விண்ணில் அன்னமாகப் பறந்தும் ஏனமாக நிலத்தை இடந்தும் 
உடல் வருந்தியும் அளப்பதற்கு ஒண்ணாத வானவன் ஆகிய சிவன் மகிழ்ந்து தங்கும் ஊர் எதுவெனில், 
செருந்தி, ஞாழல்,புன்னை, வன்னி, செண்பகம், செழுமையான குரா முதலிய மரங்கள் மலர்களை 
அரும்பும் சோலைகளிலிருந்து நறுமணம் நாளும் அழகும் குளிர்ச்சியும் கொண்ட திருவாரூரென்பதே.

குறிப்புரை:     நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும் அளப்பதற்கு ஒன்றாத உம்பரான். 
செருந்தி - ஒருவகைமரம்.

    Brahma, the tutelary deity used to stay in the lotus flower. The other deity 
Thirumaal used to rest always on the five-headed snake. They both flew in the sky and 
went deep into the earth and searched for our for Lord's holy feet and head. They both 
could not see our Lord after years of search and were exhausted. In this city several 
big groves with a number of flower plants such as panicled blossomed pear tree, orange 
eup calyxed, Alexandrian laural, leaves of summer tree, nichelia champaca,common 
bottle flower are many . They all blossom and spread their fragrance all over the 
nearby areas, such a glorious city is Thiru-aaroor where Lord Civa is manifest.

2570.     பறித்தவெண்டலைக்கடுப்படுத்தமேனியார்தவம் 
    வெறித்தவேடன்வேலைநஞ்சமுண்டகண்டன்மேவுமூர் 
    மறித்துமண்டுவண்டல்வாரிமிண்டுநீர்வயற்செநெல் 
    அறுத்தவாயசும்புபாயுமந்தணாரூரென்பதே.     10

    பறித்த வெண்தலைக் கடுப்படுத்த மேனியார் தவம் 
    வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் 
    மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டுநீர் வயல் செநெல் 
    அறுத்த வாயசும்பு பாயும் அம்தண் ஆரூர் என்பதே.

    paRitta veNtalaik kaTup paTutta mEniyAr tavam 
    veRitta vETan, vElai nanjcam uNTa kaNTan, mEvum Ur-
    maRittu maNTu vaNTal vAri miNTu nIr vayal cenel 
    aRutta vAy acumpu pAyum am taN ArUr enpatE.

பொருள்:     பறித்து விட்டதால் மயிர் நீங்கின வெண்தலை, கடுப்பொடியைக் கவசமாகப் 
பூசிய உடல் உடைய சமண பவுத்தர்கள் ஆகியோர் கொண்ட தவத்தை வெறும் முயற்சியாக 
ஆக்கிய சிவவேடன், கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டன் ஆகிய சிவன் மேவும் ஊர் 
எதுவெனில், ஆற்று நீரைத் தடுத்து மண்டிய வண்டலை வாரிக் கொண்டு மீதோடுகின்ற 
நீர் செந்நெல் வயல்களின்  வரப்புகளில் பொசியும் அழகும் குளிர்ச்சியும் கொண்ட
திருவாரூரென்பதே.

குறிப்புரை:     பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி.  கடுப்பொடியுடற்கவசர். 
கடுவே நின்று மெய்ப்பொடியட்டி. வெறித்த வேடன்-   அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான். 
அச்சம் - நெறியல்லா நெறியிற் செல்வதுபற்றித் தோன்றுவது. மறித்து - தடுத்து. திருப்பி. 
அசும்பு - நீர்ப்பொசிவு. 

    The Jains who live in the city with the hair from their head removed, 
and on their body the powder of mysobalan smeared, undergo false austerity 
and get frightened on seeing our Lord Civa's disguise. He imbibed the poison 
and His throat is dark blue in colour. He is manifest in the temple in 
Thiru-aaroor city. Along with the river water, the silt gushes in large 
quantities. The ploughing people remove the silt again and again and prevent 
the water flow and harvest the red paddy. However water comes out of the 
spring and flows. Such silt in plenty and water in plenty are available 
in Thiru-aaroor. Thus the city is known for very rich soil and profuse water.

2571.     வல்லிசோலைசூதநீடுமன்னுவீதிபொன்னுலா 
    வல்லிமாதமர்ந்திருந்தஅந்தணாரூராதியை 
    நல்லசொல்லுஞானசம்பந்தன்நாவினின்னுரை 
    வல்லதொண்டர்வானமாளவல்லர்வாய்மையாகவே.        11

    வல்லி சோலை சூதநீடு மன்னு வீதி பொன்னுலா 
    வல்லி மாது அமர்ந்து இருந்த அம்தண் ஆரூர் ஆதியை 
    நல்ல சொல்லு ஞானசம்பந்தன் நாவின் இன்னுரை 
    வல்ல தொண்டர் வானமாள வல்லர் வாய்மையாகவே.

    valli cOlai cUtam nITu mannu vIti--pon ulA 
    alli mAtu amarntu irunta--am taN ArUr Atiyai, 
    nalla collum njAnacampantan nAvin in urai 
    valla toNTar, vAnam ALa vallar, vAymai AkavE.

பொருள்:     மலர்க்கொடிகள் நிறைந்த சோலை மாமரங்கள் நீண்ட தெருக்கள் பொன்னுலா 
அல்லியங்கோதை அமர்ந்திருக்கும் அழகும் குளிர்ச்சியும் கொண்ட திருவாரூரில் இருக்கும்
முதல்வனை ஞான நன்னெறியினை உணர்த்தும் ஞானசம்பந்தன் நாவினின்றும் பிறந்த 
பேரின்பத் திருப்பாடல்களை வல்ல தொண்டர்கள் மெய்யாகவே  வானுலகத்தை  ஆள
வல்லவராவர்.

குறிப்புரை:     சூதம்- மாமரம். பொன்னுலாவல்லிமாது-  அல்லியங்கோதை தேவியின் திருநாமம். 
நல்ல- ஞான நன்னெறியுணர்த்துஞ்சொற்களை. இன்னுரை-  பேரின்பப்பாடல். வானம்  - தேன் வந்த 
முதின்றெளிவி னொளிவந்தவான் (திருவாசகம் 178).  வானுக்குள் ஈசனைத் தேடும் மதி இலீர் 
(திருமந்திரமாலை முத்தி நிச்சயம் பக். 139). வாய்மை- வாயின் (நாவின்) பொய்யாமொழி. 
வாய்மை எனப்படுவது யாதெனின் என்று ஒரு வினாவை ஏறிட்டுக் கொண்டு அதற்கு விடையிறுக்கும் 
ஆசிரியர்,  யாதொன்றும் தீமை இலாத(வற்றைச்) சொலல் என்றார். செயல் என்றோ எண்ணல்
என்றோ  உரைத்தாரல்லர், அதனால்,   வாய்மை சொற்களைப் பற்றியதாதல் விளங்கும். உள்-உள்ளம்.
உள்ளத்தின் தன்மை உண்மை . உள்ளுதலின் பொய்யாமை குறித்து. உள்ளத்தாற் பொய்யாதொழுகின்
உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். மெய்ம்மை- மெய்யாற் செய்யுஞ் செயலின் பொய்யாமை. 
உண்மையும் முறையே எண்ணம் செய்கை இரண்டனையும் பற்றிய காரணப் பெயர்களாம். 

     In and around the city of Thiru-aaroor groves are many and are full of vines. 
The mango trees are in large numbers in the wide streets of the city where temple festivals 
take place in all the seasons. In the temple of this city our Lord Civa evidently manifests 
Himself along with His consort, the most attractive goddess, here known as Alliyang Kothai 
Ammai. Our canonized saint Thiru-gnana-Sambandar camt to Thiru-aaroor temple and chanted 
the divine songs with his tongue and worshipped Lord Civa. Any devotees who can memorise 
and chant these ten wise songs will reign the upper world. This is true. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            101ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 101st Hymn

            THIRU-CH-CHITRAMBALAM
            திருச்சிற்றம்பலம்

பதிகத் தொடர் எண்: 238                பதிக எண்: 102

102. திருச்சிரபுரம்                102. THIRU-CH-CHIRAPURAM

பண்: நட்டராகம்                     Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    சீகாழிக்குரிய பதிகங்களுள் ஒன்று. பாடப்பட்ட காலம் இடம் முதலியன குறிக்கப்பட்டில.

            திருச்சிற்றம்பலம்

2572.     அன்னமென்னடையரிவையொடினிதுறையமரர்தம்பெருமானார் 
    மின்னுசெஞ்சடைவெள்ளெருக்கம்மலர்வைத்தவர்வேதந்தாம் 
    பன்னுநன்பொருள்பயந்தவர்பருமதிற்சிரபுரத்தார்சீரார் 
    பொன்னின்மாமலரடிதொழுமடியவர்வினையொடும்பொருந்தாரே.        1

    அன்ன மென் நடை அரிவையொடு இனிது உறை அமரர்தம் பெருமானார் 
    மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதந்தாம் 
    பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார் 
    பொன்னின் மாமலரடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே.

    anna men naTai arivaiyoTu initu uRai amarartam perumAnAr,         
    minnu cenjcaTai veL erukkammalar vaittavar, vEtam tAm 
    pannum nanporuL payantavar paru matil cirapurattAr; cIr Ar 
    ponnin mA malar aTi tozum aTiyavar vinaiyoTum poruntArE.

பொருள்:     அன்னப் பறவையின் நடைபோல மெல்லிய நடையுடைய உமையம்மையோடு 
இனிது உறைவர்; தேவர்தம் பெருமானார்; மின்னுகின்ற செஞ்சடைமேல் வெள்ளெருக்கம்மலர் 
வைத்தவர்; வேதங்கள் பேசுகின்ற நல்ல பொருள்களின் பயனை அளித்தவர்; வலிய மதில்களைக் 
கொண்ட சிரபுரத்தவர்; பெருமையுடையவர்; அவருடைய பொற்றாமரை மலரடிகளைத் தொழும் 
அடியவர் வினையொடும் பொருந்தார்.

குறிப்புரை:     அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடையுடைய உமாதேவியார். 
அடியவர் வினையொடும் பொருந்தார். இத்திருப்பதிகம் முழுதும் பாராயணம் புரிவாரது 
வினைதீர்க்கும்  உண்மையை அனுபவித்துணர்க.

    The name Thiru-ch-chirapuram is one of the twelve names known for Seerkaazhi. 
The main name is of course Seerkaazhi. Our Lord Civa is the Chief of devas. Goddess Uma, 
consort of our Lord Civa, abides on the left half of her consort's body. Her walk is similar 
to the steps of the swan with gentle and soft manners.Our Lord Civa adorns His entangled 
locks of red hair with white yercum flowers. He explained essential part of Vedas and it is 
the Upanishad, the most recondite and mysterious parts of Vedas. In the city of 
Thiru-ch-chirapuram very tall, big and strong compound walls are built all round the city. 
Our Lord is manifest in this city. He is the most famous Supreme Being with appealing holy feet. 
Those devotees who prostrate at His holy feet will get rid of the bad karma of their past life.

2573.     கோலமாகரியுரித்தவராவொடுமேனக்கொம்பிளஆமை 
    சாலப்பூண்டுதண்மதியதுசூடியசங்கரனார்தம்மைப் 
    போலத்தம்மடியார்க்குமின்பளிப்பவர்பொருகடல்விடமுண்ட 
    நீலத்தார்மிடற்றண்ணலார்சிரபுரங்தொழவினைநில்லாவே.        2

    கோலமா கரி உரித்தவர் அரவொடும்   ஏனக் கொம்பு இளஆமை
    சாலப் பூண்டு தண்மதி அது சூடிய சங்கரனார் தம்மைப் 
    போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொருகடல் விடமுண்ட 
    நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழவினை நில்லாவே.

    kOla mA kari urittavar; aravoTum, Enakkompu, iLa Amai, 
    cAlap pUNTu, taNmati atu cUTiya cagkaranAr; tammaip 
    pOlat tam aTiyArkkum inpu aLippavar; porukaTal viTam uNTa 
    nIlattu Ar miTaRRu aNNalAr; cirapuram toza, vinai nillAvE.

பொருள்:     தோற்றப் பொலிவு உடைய பெரிய களிற்றின் தோலை உரித்தவர்; பாம்பொடு 
பன்றியின் கொம்பு, இள ஆமையின் ஓடு ஆகியவற்றை அமையப் பூண்டு குளிர்ந்த மதிப்பிறையைச் 
சூடிய சங்கரனார்; இன்பமே வடிவானவர்; தம்மைப் போலவே தம்மை அடைந்தவர்களுக்கும் தனது 
பேரின்ப வடிவினை அளிப்பவர்; பெரிய கடலில் பிறந்த நஞ்சினை உண்டு கண்டத்தில் அடக்கியதால் 
அவர் நீல மிடற்று அண்ணலார்; அவருடைய திருச்சிரபுரம் தொழ வினை நில்லாவே.

குறிப்புரை:     சால - அமைய, சங்கரன்- சுகத்தைச் செய்பவன், நித்தியசுகம். பேரின்ப 
வடிவினனாகிய பரமசிவன் தன் அடி அடைந்தவர்க்குத் தனது பேரின்பவடிவினை அருள்கின்றான் 
(முத்தி நிச்சயப் பேருரை, பக். 74, 177).

    Our Lord Sankaran (He who gives bliss - another name of Lord Civa) removed the 
hide of the big and attractive elephant. He puts on His body the garland of snakes, 
hog's horn, young tortoise shell - all in good numbers. He retains the cool moon in 
His entangled hair locks. He graces His devotees with bliss like His own. He is called 
Neelakandar because He imbibed the severe poison that came out of the big ocean. Those 
devotees who prostrate and worship the Chief of Thiru-ch-chirapuram will get their 
past karma of bad deeds destroyed.

2574.     மானத்திண்புயவரிசிலைப்பார்த்தனைத்தவங்கெடமதித்தன்று 
    கானத்தேதிரிவேடனாயமர்செயக்கண்டருள்புரிந்தார்பூந் 
    தேனைத்தேர்ந்துசேர்வண்டுகள்திரிதருஞ்சிரபுரத்துறையெங்கள் 
    கோனைக்கும்பிடுமடியரைக்கொடுவினைகுற்றங்கள்குறுகாவே.        3

    மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட மதித்து அன்று         
    கானத்தே திரிவேடனாய் அமர் செயக் கண்டு அருள்புரிந்தார் பூந் 
    தேனைத் தேர்ந்து சேர்வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் 
    கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.

    mAnat tiNpuya varicilaip pArttanait tavam keTa matittu, anRu, 
    kAnattE tiri vETanAy, amar ceyak kaNTu, aruLpurintAr--pUn 
    tEnait tErntu cEr vaNTukaL tiritarum cirapurattu uRai--egkaL
    kOnaik kumpiTum aTiyaraik koTuvinai, kuRRagkaL, kuRukAvE.

பொருள்:     தற்பெருமையும் புயவலியும் வரித்த வில்லும் உடைய பார்த்தனை அவனுடைய 
தவங்கெட அன்று அறிந்து, கானகத்தில் திரிகின்ற வேடன் உருக்கொண்டு விரும்பி அவனுடன் 
போர் செய்து அருள்புரிந்தார்; பூக்களில் உள்ள தேனைத் தெரிந்து அடையும் வண்டுகள் திரிதரும் 
சிரபுரத்து உறையும் எங்கள் அரசனைக் கும்பிடும் அடியவரைக் கொடிய வினைகளாகிய 
குற்றங்கள் அடையா.

குறிப்புரை:     மானம்- பெருமை, வலி, பார்த்தன் அர்ச்சுனன், புருதையின் புதல்வன் என்னும் 
பொருளது.  மதித்து - அறிந்து. கானத்தே திரிவேடன்-  வனசரன். அமர் - விரும்பிச் செய்யும் போர். 
பகைத்துச் செய்யும் போரன்று. களிப்பு மிகுதி குறிக்கின்றுழி. 'அமர்க்களம்' என்பது உலகவழக்கு.

    Arjunan, one of the Paandava brothers, a very strong and famous bowman, travelled 
long in the Himalayas to do penance and to get a bow from Lord Civa. While He was doing the 
serious penance, our Lord Civa in the posture of a hunter along with His consort went near
him and disturbed his peace. Our Lord opposed Him and fought against Him. He appreciated 
Arjuna's valour and graced him with bliss. In this city the bees fly searching for good honey 
among the various flowers. He is our Chief. These devotees who worship our Lord will never 
find their strong bad karma nearing them.

2575.     மாணிதன்னுயிர் மதித்துணவந்த  அக்காலனையுதைசெய்தார்                 
    பேணியுள்குமெய்யடியவர்பெருந்துயர்ப்பிணக்கறுத்தருள்செய்வார் 
    வேணிவெண்பிறையுடையவர்வியன்புகழ்ச்சிரபுரத்தமர்கின்ற 
    ஆணிப்பொன்னினையடிதொழுமடியவர்க்கருவினையடையாவே.        4

    மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக்காலனை உதை செய்தார்            
    பேணி உள்கு மெய் அடியவர் பெருந்துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார் 
    வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற 
    ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே.           

    mANitan uyir matittu uNa vanta ak kAlanai utai ceytAr
    pENi uLkum mey aTiyavar perun tuyarp piNakku aRuttu aruL ceyvAr, 
    vENi veNpiRai uTaiyavar, viyanpukazc cirapurattu amarkinRa 
    ANipponninai, aTi tozum aTiyavarkku aruvinai aTaiyAvE.

பொருள்:     மாணி (மார்க்கண்டேயன்)யினுடைய ஆயுட்காலம் நிறைவுற்றதை அறிந்து 
அவனுடைய உயிரை விழுங்க வந்த அக்காலனை அவன் உயிர் நீங்குமாறு உதைத்தார். விரும்பிப்
போற்றி நினையும் மெய்யடியவர்களின் பெருந்துயர்ப் பிணக்காகிய மாறுபாட்டினை அறுத்து 
அருள்செய்வார். சடையில் வெண்பிறையை உடையவர்; விரிந்த புகழுடைய சிரபுரத்தில் 
அமர்கின்ற செல்வனின் ஆணிப்பொன் போல் ஒளிரும் திருவடிகளைத் தொழும் அடியவரை 
அரிய வினைகள் அடையா.

குறிப்புரை:     முனிவர் உயிரை அறிந்து கொள்ளவந்த அக்கூற்றுவனை 'பெறுமவற்றுள் 
யாமறிவதில்லை' (குறள்) என்பதில் பரிமேலழகர் மதிப்பது என்றுரைத்தார். உண்மை அடியவர்க்குத் 
திருவடி வேட்கையும், சதாகால தியானமும் இன்றியமையாதவை. துயர்ப்பிணக்கு - துயரத்தைத் 
தரும் மாறுபாடு.

    Maarkandeyan, young boy of sixteen years, was a very sincere devotee of our Lord Civa. 
Kaalan, the god of death, when the soul's lifetime ended, himself came to remove the soul of 
Maarkandeyan. Our Lord Civa kicked Kaalan, the deity of death for the southern side of the 
universe. Our Lord Civa graces and wipes out the heavy sufferings of His sincere devotees 
who always think of Him with love and affection. He retains the white moon in His entangled 
hair. The city of Thiru-ch-chirapuram is a very grand city of fame that spreads all over 
the universe. Our Lord Civa is the top most like gold of fine, tested quality, He is 
manifest in Thiru-ch-chirapuram. Those devotees who worship His holy feet will never 
get any severe distress.

2576.      பாருநீரொடுபல்கதிரிரவியும்பனிமதியாகாசம் 
    ஓரும்வாயுவுமொண்கனல்வேள்வியிற்றலைவனுமாய்நின்றார் 
    சேருஞ்சந்தனமகிலொடுவந்திழிசெழும்புனற்கோட்டாறு 
    வாருந்தண்புனல்சூழ்சிரபுரந்தொழுமடியவர்வருந்தாரே.        5

    பாரு நீரொடு பல்கதிர் இரவியும் பனிமதி ஆகாசம் 
    ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனும் ஆய்நின்றார் 
    சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனல் கோட்டாறு 
    வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே 

    pArum, nIroTu, palkatir iraviyum, panimati, AkAcam, 
    Orum vAyuvum, oNkanal, vELviyil-talaivanum Ay ninRAr- 
    cErum cantanam akiloTu vantu izi cezum punal kOTTARu 
    vArum taNpunal cUz cirapuram tozum aTiyavar varuntArE.

பொருள்:     நிலனும் நீருடன் அளவற்ற கதிர்களையுடைய ஞாயிறும் குளிர்ந்த சந்திரனும் 
வானும் வாயுவும் ஒள்ளிய நெருப்பும் வேள்வி இயமானனுமாய் நின்ற சிவன்; சந்தன மரங்களை 
அகிலோடு கொண்டு வந்து இழியும் செழுமையான நீர்வெள்ளத்தை உடைய கோட்டாற்றின் 
குளிர்ந்த புனல் சூழும் சிரபுரத்தைத் தொழும் அடியவர் வருத்தம் அடையார்.

குறிப்புரை:     வேள்வித்தலைவன்- இயமானன். 'இருநிலனாய்த் தீயாகி நீருமாகி 
இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் 
அட்டமூர்த்தியாகி' (அப்பர்) சிவனை நினையாத உயிர்கள் அவ்வெட்டுருவங்களுள் 
சிறந்த ஒன்று ஆமோ? கோட்டாறு- கோணிய  கோட்டாற்றுக் கொச்சை 
(தி. 2 ப. 70 பா. 2). 'கோட்டாறு சூழ் கொச்சை' (தி. 3 ப. 89 பா. 1.)

    Lord Civa is an embodiment of the eight tutelaries on eight sides such 
as the earth, water, the sun with several rays, the cool moon, the sky, the wind, 
the bright fire and the chief of the soul in the very hot sacrificial fire as the 
eighth Supreme Being. He is manifest in the temple in Thiru-ch-chirapuram where 
the river Kottar flows with cool water. The water in the river brings sandalwood 
logs, eaglewood logs etc., and comes down with large quantity of flood water.

2577.     ஊழியந்தத்திலொலிகடலோட்டந்திவ்வுலகங்களவைமூட 
    ஆழியெந்தையென்றமரர்கள்சரண்புகஅந்தரத்துயர்ந்தார்தாம்             
    யாழின் நேர்மொழியேழையோடினிதுறையின்பனெம்பெருமானார் 
    வாழிமாநகர்ச்சிரபுரந்தொழுதெழவல்வினைஅடையாவே.        6

    ஊழி அந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்து இவ் உலகங்கள் அவை மூட 
    ஆழி எந்தை என்று அமரர்கள் சரண்புக அந்தரத்து உயர்ந்தார் தாம்         
    யாழின் நேர்மொழி ஏழையோடு இனிது உறையின்பன் எம்பெருமானார் 
    வாழி மாநகர்ச் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே.

    Uzi antattil, olikaTal OTTantu, iv ulakagkaL avai mUTa, 
    "Azi, entai!" enRu amararkaL caraNpuka, antarattu uyarntAr tAm, 
    yAzin nEr mozi EzaiyOTu initu uRai inpan, emperumAnAr, 
    vAzi mA nakarccirapuram tozutu eza, valvinai aTaiyAvE.

பொருள்:     ஊழிக்காலத்தின் முடிவில் பேரொலியுடன் கடல் வெள்ளம் ஓட்டம் தந்து
 உலகங்களை மூழ்கடிக்க, அருட்கடலே! எந்தையே! என்று தேவர்கள் அடைக்கலம் புக,
 வானத்துயர்ந்த சிவனார், தாம் யாழின் இசைபோல இனிமையாகப் பேசும் அம்மையுடன்
 இனிது உறைகின்ற இன்பன், எம்பெருமானாரின் பெருங்கோயில் திருச்சிரபுரத்தைத் 
தொழுவாரை வலிய வினைகள் அடையமாட்டா.

குறிப்புரை:     யுகாந்த காலத்தில் வெள்ளம் உலகங்களை மூடி அழிக்கும்போது 
தேவர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தனர் என்பது வரலாறு. ஓட்டந்து - ஓட்டம் தந்து. 
ஆழி -அருட்கடல். அந்தரம் - வானம். இன்பன் - ஆனந்தரூபன். மாநகர் - பெருங்கோயில். 

    At the end of ages, the heavy noisy waves of the ocean spread all over the 
universe devouring the entire world, the devas got freightened and reached Lord Civa 
and prayed saying "Oh Lord! You are the grace of the ocean, our Father" and surrendered. 
At that moment our Lord Civa made the Thonipuram city float in the ocean and saved all the 
celestials. He is the Lord who manifests Himself along with His consort Uma Devi whose words 
are similar to lute's sound. Our Civa is the most graceful Supreme Being and is manifest 
in the big city of Thiru-ch-chirapuram. Those devotees who prostrate and worship at His feet 
with sincerity will not get their past bad karma's irresistible, resultant deeds.

2578.    பேய்கள் பாடப்பல்பூதங்கள்துதிசெய்ப்பிணமிடுசுடுகாட்டில் 
    வேய்கொள்தோளிதான்வெள்கிடமாநடமாடும்வித்தகனாரொண் 
    சாய்கள்தான் மிகவுடையதண்மறையவர்தகுசிரபுரத்தார்தாந் 
    தாய்களாயினார்பல்லுயிர்க்குந்தமைத்தொழுமவர்தளராரே.        7

    பேய்கள் பாடப் பல்பூதங்கள் துதிசெய்ப் பிணம் இடு சுடுகாட்டில் 
    வேய்கொள் தோளி தான்வெள்கிட மாநடமாடும் வித்தகனார் ஒண் 
    சாய்கள் தான் மிகவுடைய தண்மறையவர் தகு சிரபுரத்தார்தாம் 
    தாய்கள் ஆயினார் பல்லுயிர்க்கும் தமைத் தொழும் அவர் தளராரே.        

    pEykaL pATa, palpUtagkaL tuticeya, piNam iTu cuTukATTil, 
    vEy koL tOLitAn veLkiTa, mA naTam ATum vittakanAr; oN 
    cAykaLtAn mika uTaiya taN maRaiyavar taku cirapurattAr tAm; 
    tAykaL AyinAr, pal uyirkkum; tamait tozumavar taLarArE.

பொருள்:     பேய்க்கணங்கள் பாடவும் பூதகணங்கள் துதி செய்யவும் பிணங்களை இடும் 
சுடுகாட்டில் மூங்கில் போன்ற தோள்களையுடைய காளி நாணம் கொள்ள நடனமாடும் வித்தகனார், 
ஒள்ளிய சாய்ப்புல்கள் மிகவுடையதும், குளிர்ந்த மனமுடைய மறையவர்கள் வாழும் தகுதியுடைய 
சிரபுரத்தராகிய சிவனார், பல்லுயிர்களுக்குத் தாயும் தந்தையும் ஆயினார்; அவர்தமைத்
தொழுமவர் சோர்ந்து போகார் . 

குறிப்புரை:     பேய்கள் பாடவும் பூதங்கள் துதிக்கவும் காளி நாணவும் மகாதாண்டவம் 
ஆடிய ஞான சொரூபர். சாய்கள் - புகழ்கள். 'இந்திரன்தன் சாயாப் பெருஞ்சாய் கெடத் 
தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன்' (கம்ப. யுத்த. நாக 21). 'தாய்களாயினார் 
பல்லுயிர்க்கும் - (தாயவன் காண் உலகிற்கு) (அப்பர்) பல்லுயிர்க்கும் தாய்களாயினார் 
தமை என்று  மாற்றிக் கூட்டிச் சிவபெருமானை எனப் பொருளுரைக்க. 

    Our Lord Civa's avocation is to dance. He is the most proficient in 
all deeds and dances. Devils chant the praise, many goblins dance and worship 
our Lord; the female deity of dark complexion, Kaali with soft shoulders, 
bamboo-like, felt shy on seeing our God's famous dance. The famous Vedic scholars 
live in Thiru-ch-chirapuram. Our Lord is the mother for all souls. Such a famous 
Lord is manifest in Thiru-ch-chirapuram. Those devotees who worship this Lord 
will not become decrepit in old age.

2579.     இலங்குபூண்வரைமார்புடையிராவணனெழில்கொள்வெற்பெடுத்தன்று 
    கலங்கச்செய்தலுங்கண்டுதங்கழலடி நெரியவைத்தருள்செய்தார்' 
    புலங்கள்செங்கழுநீர்மலர்த்தென்றல்மன்றதனிடைப்புகுந்தாருங் 
    குலங்கொள்மாமறையவர்சிரபுரந்தொழுதெழவினை குறுகாவே.        8    

    இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பெடுத்து அன்று 
    கலங்கச் செய்தலும் கண்டு தங்கழலடி நெரிய வைத்தருள் செய்தார் 
    புலங்கள் செங்கழுநீர் மலர்த் தென்றல் மன்றதனிடைப் புகுந்தாரும்
     குலங்கொள் மாமறையவர் சிரபுரம் தொழுதெழ வினை குறுகாவே.            

    ilagku pUNvarai mArpu uTai irAvaNan ezil koL veRpu eTuttu, anRu, 
    kalagkac ceytalum, kaNTu, tam kazal aTi neriya vaittu, aruL ceytAr- 
    pulagkaL cegkazu nIrmalart tenRal manRu atan iTaip pukuntu Arum, 
    kulam koL mA maRaiyavar--cirapuram tozutu eza, vinai kuRukAvE.

பொருள்:     விளங்கும் பூண்கள் அணிந்த மலைபோன்ற மார்பினனாகிய இராவணன், 
அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற அன்று அவன் நெரியக் கழலடி 
வைத்துக் கலங்கச் செய்தார்; பின் அருளும் செய்தார்; அவருடைய வயல்களில் உள்ள
செங்கழுநீர்மலர்களிலிருந்து தென்றல் மன்றில் புகுந்து நிறைவதும்; சிறப்புடைய
 மறையவர்கள் கூட்டமாக வாழ்வதுமாகிய திருச்சிரபுரத்தைத் தொழுதெழ வினை நில்லா. 

குறிப்புரை:     நெரியக் கழலடியை வைத்து என்க. புலன்கள் - வயல்கள். கள்தேனுமாம். 
மன்றில் தென்றல் புகுந்து என மாற்றுக. குலம் - கூட்டம். மா- பெருமை.

    Raavanan, the king of Sri Lanka wears very bright and excellent jewellary. 
His chest is very big and broad, looks like a mountain. He tried to shift the admirable 
mount Kailash and to place it aside. On noticing this, our Lord pressed the top of the 
mountain with the toe of His holy feet. Raavanan got crushed under the mountain. He 
bemoaned for his bad action and begged pardon. Then our Lord Civa pardoned and graced him. 
In the city's fields purple Indian water lily flowers' fragrance, mixed with the southern 
wind, enters into the city. They give comforts to people. In the city Brahmins who are 
Vedic scholars do live in large numbers. Those devotees who worship this city will find 
that the evil effects of their past karma will never affect them.

2580.     வண்டுசென்றணைமலர்மிசைநான்முகன்மாயனென்றிவரன்று 
    கண்டுகொள்ளவோரேனமோடன்னமாய்க்கிளறியும்பறந்துந்தாம் 
    பண்டுகண்டதுகாணவேநீண்டவெம்பசுபதிபரமேட்டி 
    கொண்டசெல்வத்துச்சிரபுரந்தொழுதெழுவினையவைகூடாவே.     9

    வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று 
    கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்         
    பண்டு கண்டது காணவே நீண்ட வெம் பசுபதி பரமேட்டி 
    கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதெழ வினை அவை கூடாவே.

    vaNTu cenRu aNai malarmicai nAnmukan, mAyan, enRu ivar anRu 
    kaNTu koLLa, Or EnamOTu annam Ay, kiLaRiyum paRantum, tAm         
    paNTu kaNTatu kANavE nINTa em pacupati; paramETTi; 
    koNTa celvattuc cirapuram tozutu eza, vinai avai kUTAvE.

பொருள்:     வண்டுகள் சென்று மொய்க்கின்ற தாமரை மலர்மீது இருக்கும் பிரமன், திருமால் 
என்னும் இவர் இருவரும் அன்று அடிமுடி காண ஒரு பன்றியும் அன்னமுமாக நிலத்தைக் கிளறியும் 
வானத்திற் பறந்தும் தாம் முன்பு கண்டதையே கண்டதல்லால் அடியும் முடியும் கண்டிலர்; அவ்வாறு 
நீண்ட எம்முடைய பசுபதி, பரமேட்டியாகிய செல்வத்தைக் கொண்ட திருச்சிரபுரத்தைத் தொழுதெழ 
வினைகளாயவை கூடா.

குறிப்புரை:     பண்டு கண்டது காண்டல்- புதிதாக ஒன்றும் காணாமை. அறியுந்தோறும் 
அறியாமை காண்பது புதுக்காட்சி. அறியாமை விலகாதிருப்பதே பண்டு கண்டது காண்டலாகும். 

    Our tutelary Brahma in the lotus flower with a lot of bees swarming and the other 
deity Thirumaal both decided to see Civa's head and feet. Brahma took the form of a swan 
and flew high in the sky, Thirumaal took that of a hog and went deep into the earth by 
digging. They both failed in their efforts. They both saw only what they had seen long 
before. At that moment, Lord Civa appeared before them in the same posture as dazzling 
infinite supernal tall flame. This Lord Pasupathi and His consort Parametti, both evidently 
are manifest in the temple in Thiru-ch-chirapuram, which is a very prosperous city. Those 
devotees who worship Civa in Thiru-ch-chirapuram will find their bad karma never affecting them.

2581.     பறித்தபுன்தலைக்குண்டிகைச்சமணரும்பார்மிசைத்துவர்தோய்ந்த 
    செறித்தசீரவத்தோருந்தேர்கிலாத்தேவர்கள்பெருமானார் 
    முறித்துமேதிகள் கரும்புதின்றாவியின்மூழ்கிடஇளவாளை 
    வெறித்துப்பாய்வயற்சிரபுரந்தொழவினைவிட்டிடுமிகத்தானே.        10

    பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர் தோய்ந்த 
    செறித்த சீரவத்தோரும் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார் 
    முறித்து மேதிகள் கரும்பு தின்றாவியின் மூழ்கிட இளவாளை 
    வெறித்துப் பாய்வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடு மிகத்தானே.

    paRitta puntalaik kuNTikaic camaNarum, pArmicait tuvar tOynta 
    ceRitta cIvarat tErarum, tErkilAt tEvarkaL perumAnAr- 
    muRittu mEtikaL karumpu tinRu Aviyil mUzkiTa, iLa vALai 
    veRittup pAy vayal--cirapuram toza, vinai viTTiTum, mikat tAnE.

பொருள்:     மயிர் பறித்த புல்லிய தலையும் குண்டிகையும் உடைய சமணர்களும் துவர் 
தோய்ந்த ஆடையைப் போர்த்த சமணர்களும் இப்பூமி மேல் அறிய இயலாத தேவாதிதேவன்; 
சிவபெருமானார்; அவருடைய, எருமைகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்கிட மிரண்ட 
இளமையான வாளைமீன்கள் அஞ்சிப் பாயும் வயல்களை உடைய திருச்சிரபுரத்தைத் தொழ 
வினைகள் விட்டு மிகத் தூரத்தில் நீங்கிவிடும்.

குறிப்புரை:     மேதிகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்க வாளை கலங்கிப் பாயும் 
வயல். ஆவி- குளம் . வெறித்து - கலங்கி, அஞ்சி. 

    The Jains who live in this city remove their hair from their head and move 
baldheaded. In their hands they carry the ascetic's bowl. The Buddhists wear the 
salmon coloured dress - both could not see our Lord Civa. Lord Civa is the Chief of 
devas manifest in Thiru-ch-chirapuram temple. In this city the oxen break the 
sugarcane plants and eat them. Then they reach the ponds of cool water and sink there. 
On seeing this sword fish get perplexed and dash to the fields. In such an environment 
our Lord Civa is manifest and those who worship Him will get all their bad karma removed.

2582.     பரசுபாணியைப்பத்தர்களத்தனைப்பையரவோடக்கு                 
    நிரைசெய்பூண்திருமார்புடைநிமலனைநித்திலப்பெருந்தொத்தை
    விரைசெய்பூம்பொழிற்சிரபுரத்தண்ணலைவிண்ணவர்பெருமானைப் 
    பரவுசம்பந்தன்செந்தமிழ்வல்லவர்பரமனைப்பணிவாரே.         11

    பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பை அரவோடக்கு             
    நிரை செய் பூண் திருமார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை 
    விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப் 
    பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே 

    paracu pANiyai, pattarkaL attanai, pai aravOTu akku 
    nirai cey pUN tiru mArpu uTai nimalanai, nittilap peruntottai, 
    virai cey pUmpozil cirapurattu aNNalai viNNavar perumAnai, 
    paravu campantan centamiz vallavar paramanaip paNivArE

பொருள்:     மழுவேந்திய கரத்தனை, அன்புடையாருக்கு அப்பனை, நச்சுப்பையுடைய 
பாம்பினோடு எலும்புமாலையை நிரலாகப் பூண்ட மார்புடைய நிமலனை, முத்து மாலையை, 
மணம் வீசும் பூம்பொழில்களையுடைய திருச்சிரபுரத்து அண்ணலை,தேவர்கள் பெருமானை, 
போற்றும் ஞானசம்பந்தன் பாடிய  இச்செந்தமிழ்த் திருப்பதிகத்தை வல்லவர் பரமன் 
ஒருவனையே பணிவார்.

குறிப்புரை:     பரசுபாணி - மழுவேந்தியகையன். பத்தர்கள் அத்தன் -மெய்யன்புடையார்க்கு 
இறைவன். அத்தன் - கையகப்படுவோன் எனலுமாம். அக்கு -எலும்பு .

    Our Lord Civa carries in one of His hands the battle axe. He is the Chief 
for His devotees. He wears on His body hooded snakes and garland made of bones 
on His chest, very attractive.He is the Supreme Being. He appears as a bunch of 
pearls. He is a respectable Supreme Being manifested in the city with natural 
forests full of sweet smelling flower plants. He is the Chief of devas. Our saint 
Thiru-gnana-Sambandar paid respectful homage to Lord Civa and chanted ten verses 
in pure Tamil language. Those devotees who can praise Lord Civa with these songs 
will get rid of their bad karma.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            102ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 102nd Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

பதிகத் தொடர் எண்  239                     பதிக எண்: 103

103. திருஅம்பர்மாகாளம்                    103. THIRU-AMBAR-MAAKAALAM

பண்: நட்டராகம்                        Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    அம்பன், அம்பாசுரன் என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கக் காளி பூசித்த 
பதியாதலின் இப்பெயர் பெற்றது. இது கோயில் மாகாளம் எனவும் வழங்கப்பெறும். பேரளம்- திருவாரூர் 
தொடர்வண்டித் தொடரில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது
 காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஐம்பத்தைந்தாவது தலம் ஆகும். கோயில் ஊர் நடுவில் 
இருக்கின்றது. இவ்வூரில் நல்ல ஸ்தபதிகளுள்ளனர். சோழர் திருப்பணி. ஆனால் பூர்த்தியாகவில்லை.

    இறைவரின் திருப்பெயர் காளகண்டேசுவரர். இறைவியின் திருப்பெயர் பட்சநாயகி. கிழக்கு 
நோக்கிய சந்நிதி. அம்மன் சுவாமிக்கு வலப்புறம் விளங்குகிறார். தியாகராசர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் 
சுந்தரரும் பரவையாரும் உள்ளனர். தீர்த்தம் மாகாளதீர்த்தம். காளியால் பூசிக்கப்பெற்றது. 
இச்செய்தியை, 'காளி ஏத்தும் அழகனார் அரிவையோடிருப்பிடம் அம்பர் மாகாளந்தானே' என்னும் 
இத்தலத்துத் தேவாரப் பகுதியால் அறியலாம். இங்குக் காளிக்குத் தனிக்கோயில் தெற்குத் 
திருச்சுற்றாலையில் (பிரகாரத்தில்) இருக்கின்றது. மாகாள இருடியரும் பூசித்துப் பேறு பெற்றனர். 
இத்தலத்து இறைவரைப் புதிய மலர், சந்தனம், புகை இவைகளைக் கொண்டு வழிபடுவோர் தாம் 
எண்ணிய பொருளைப் பெறுவர். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் மூன்று உள்ளன.

    ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆயில்யநாளில் சோமாசி மாற நாயனார் யாகவிழா 
மிக்க சிறப்புடன் நடைபெறும். அம்பருக்கும் அம்பர்மாகாளத்திற்கும் இடையில் சோமாசிமாற நாயனார் 
யாகம் செய்த மண்டபம் இருக்கின்றது. சோமாசி மாற நாயனார் அவருடைய மனைவியார் இவர்களின் 
பிரதிமைகள் கோயிலில் இருக்கின்றன. அதிகார நந்தி மானிட உருவம் முன்நந்தி இடம் மாறி இருக்கிறது. 
நந்திக்கு அருகில் நாயனாருக்கு இறைவனும் இறைவியும் காட்சி தரும் வண்ணம் எழுந்தருளியிருக்கிறார்கள். 
அருகில் நாகநாதர் என்ற பெயரில் மற்றொரு சிவலிங்கம் இருக்கின்றது.

பதிக வரலாறு

    அம்பர்மாநகர் மாகாளத்தை வழிபட்ட திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு 
நாயனாருடன் வாழ்ந்திருந்த பொழுது பாடிய திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2583.     புல்குபொன்னிறம்புரிசடைநெடுமுடிப்போழிளமதிசூடிப் 
    பில்குதேனுடைநறுமலர்க்கொன்றையும்பிணையல்செய்தவர்மேய 
    மல்குதண்டுறையரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    அல்லுநண்பகலுந்தொழுமடியவர்க்கருவினையடையாவே.        1

    புல்கு பொன் நிறம் புரிசடை நெடுமுடிப் போழ் இளமதிசூடிப் 
    பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல் செய்தவர்மேய 
    மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்             
    அல்லு நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே.

    pulku pon niRam puri caTai neTu muTip pOz iLamati cUTi,
    pilku tEn uTai naRu malark konRaiyum piNaiyal ceytavar mEya- 
    malku taN tuRai aricilin vaTakarai, varupunal--mAkALam, 
    allum naN pakalum tozum aTiyavarkku aruvinai aTaiyAvE.

பொருள்:     பொன்னிறம் பொருந்திய முறுக்குண்ட சடையின் உயர்ந்த முடிமேல், மதியைப் 
பிளந்தது போன்ற வடிவமுடைய இளம்பிறையைச் சூடித் தேன் துளிர்க்கும் நறுமலர்க்  கொன்றையை 
மாலையாகச் சூடியவர் இருக்கும் தலம், பொலிவான குளிர்ந்த துறைகளை உடையதும் புது வெள்ளம் 
வருவதும் ஆகிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள மாகாளம். இதனை இரவும் பகலும் தொழும்
 அடியார்களின் நீக்குதற்கு அரிய வினைகள்  அவர்களை அடையாது நீங்கிப்போம்.

குறிப்புரை:     அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப்பகல் இடைவிடாமல் வழிபடும் 
அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள் நீங்கிப்போம். அவை மீண்டும் அவரை அடைய வல்லன 
அல்ல. 'அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்'. 'கங்குலும் பகலும் தொழும் அடியவர்' (பா. 4).

    Our Lord Civa's entangled locks of hair are golden coloured in which         
He retains the young moon. Also He puts on a garland made of Indian laburnum 
flowers full of honey. These two have been conjoined and worn by Him. He 
evidently manifests Himself in Thiru-ambar-maakaalam, which is situated 
on the northern side of Arisilaru river. Those devotees who worship our Lord 
day and night will never get any bitter suffering in their life.

2584.     அரவமாட்டுவரந்துகில்புலியதளங்கையிலனலேந்தி 
    இரவுமாடுவரிவையிவர் சரிதைகளிசைவன பலபூதம் 
    மரவந்தோய்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம்
    பரவியும் பணிந்தேத்த வல்லாரவர் பயன்றலைப்படுவாரே.        2

    அரவமாட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனலேந்தி 
    இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பலபூதம் 
    மரவம் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே.

    aravam ATTuvar; am tukil puli ataL; agkaiyil anal Enti,
    iravum ATuvar; ivai ivar caritaikaL! icaivana, palapUtam; 
    maravam tOy pozil, aricilin vaTakarai, varupunal, mAkALam 
    paraviyum paNintu Etta vallAr avar payan talaippaTuvArE.

பொருள்:     பாம்பை ஆட்டுவர்; புலியின் தோல் அழகிய துகில்; அழகிய கையில் அனலை ஏந்தி 
இரவு நேரத்திலும் ஆடுவர்; இவை இவரது செயல்கள்; பல பூதங்கள் பாடுவன; இவர் இருக்கும் தலம் 
மராமரங்கள் நிறைந்த சோலைகளை உடையதும் புதுவெள்ளம் வரும் அரிசிலாற்றின் வடகரையில் 
உள்ளதுமாகிய மாகாளம். இதனைப் பரவியும் பணிந்தும் ஏத்த வல்லார் நற்பயனை அடைவார்கள்.

குறிப்புரை:     பாம்பாட்டுபவர். புலித்தோல் உடுப்பவர். கையில் எரி ஏந்துவர். ஏந்தி இரவில் ஆடுவர். 
இவர் சரிதைகள் இவை. இசைவன -இசைபாடுவன. தலைப்படுவார் - அடைவார்.

    Our Lord Civa used to catch hold of snakes and let it dance. He wears the hide 
of the tiger as His loincloth. He holds in His attractive hand fire in a firepot and dances 
in the night. His goblins sing His fame of the stories and dance with Him and worship Him. 
The Thiru-ambar-maakaalam city is surrounded by gardens full of white seaside oak trees. 
The city Thiru-ambar-maakaalam is on the northern bank of the river Arisilaru. Our Lord is 
manifest in the temple in Thiru-ambar-maakaalam city. Those devotees who pay respect and 
praise our Lord and worship Him and prostrate before Him will get their desired benefit 
in their life.

2585.     குணங்கள்கூறியுங்குற்றங்கள்பரவியுங்குரைகழலடிசேரக்
    கணங்கள் பாடவுங்கண்டவர்பரவவுங்கருத்தறிந்தவர்மேய 
    மணங்கொள் பூம்பொழிலரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    வணங்குமுள்ளமோடணையவல்லர்களைவல்வினையடையாவே.        3

    குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடிசேரக்
    கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர்  மேய
    மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    வணங்கும் உள்ளமோடு அணைய வல்லர்களை வல்வினை அடையாவே.

    kuNagkaL kURiyum kuRRagkaL paraviyum kuraikazal aTi cErak 
    kaNagkaL pATavum, kaNTavar paravavum, karuttu aRintavar mEya- 
    maNam koL pUmpozil, aricilin vaTakarai, varupunal--mAkALam
    vaNagkum uLLamOTu aNaiya vallarkaLai valvinai aTaiyAvE.               

பொருள்:     அடியார் கூட்டங்கள் குணங்களை எடுத்துக் கூறிப் பாராட்டியும் குற்றங்களைக் 
கூறுதல் போலப் புகழ்ந்தும் ஒலிக்கின்ற கழல்கள் அணிந்த திருவடிகளுடன் கூடவேண்டிப் பாடவும், 
தரிசித்தோர் வாழ்த்தவும், இவ்வாறு வழிபடுவோரின் கருத்தை அறிந்து அருளும் சிவபிரான் 
எழுந்தருளியிருப்பதும், மணமுடைய பூஞ்சோலைகளை உடையதும் புதுவெள்ளம் வரும் 
அரிசிலாற்றின் வடகரையில் இருப்பதுமாகிய மாகாளம். இதனை  வணங்கும் உள்ளத்துடன் 
சேர வல்லவர்களை அடையும் வலிமை வினைகளுக்கு இல்லை.

குறிப்புரை:     கணங்கள் பாடவும், தரிசித்தோர் வாழ்த்தவும் அவரவர் கருத்தை அறிந்து 
அருளும் சிவபிரான் எழுந்தருளிய அரிசிற்கரை மாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடும் சேர 
வல்லவர்களை  அடையும் வன்மை வினைகளுக்கு இல்லை.

    Our Lord graces the servitors who speak of His noble qualities, but explain 
their own inadequate nature and speak of their degradation and thereafter try to 
prostrate at His holy feet. The goblins sing His fame. The devotees praise and pay 
respect to Him.  Then our Lord will understand our desire and will similarly agree 
to grace us. Those servitors, able to reach the city of Thiru-ambar-maakaalam with 
a sincere devotion in their mind to worship Him, will never get the effect of their 
bad karma in their life.

2586.     எங்குமேதுமோர்பிணியிலர்கேடிலரிழைவளர்நறுங்கொன்றை 
    தங்குதொங்கலுந்தாமமுங்கண்ணியுந்தாமகிழ்ந்தவர்மேய 
    மங்குல்தோய்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    கங்குலும்பகலுந் தொழுமடியவர்காதன்மையுடையாரே.         4

    எங்கும் ஏதுமோர் பிணியிலர் கேடிலர் இழை வளர் நறுங்கொன்றை         
    தங்கு தொங்கலும் தாமமுங் கண்ணியுந்தா மகிழ்ந்தவர்மேய 
    மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே.

    egkum Etum Or piNi ilar, kETu ilar, izai vaLar naRugkon2Rai 
    tagku togkalum tAmamum kaNNiyum tAm makizntavar, mEya- 
    magkul tOy pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam, 
    kagkulum pakalum tozum aTiyavar kAtanmai uTaiyArE.

பொருள்:     எந்தயிடத்தும் ஒரு சிறிதும் பிணி எய்திலர்; கெடுதலிலர்; மணமுடைய கொன்றை 
மலர்களைத் தொங்கலாகவும் தாராகவும் கண்ணியாகவும் அணிந்து மகிழ்பவர்; அவர், எழுந்தருளிய 
தலம் மேகம் தவழுகின்ற பொழில்களை உடையதும், புதுவெள்ளம் வருகின்ற அரிசிலாற்றின் வடகரையில் 
உள்ளதும் ஆகிய மாகாளம். இதனை இரவும் பகலும் தொழும் அடியவர்பால் சிவபெருமான் காதன்மை 
உடையவர்.

குறிப்புரை:     எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணி எய்திலர். கெடுதலிலர். தொங்கல்-மாலை.
தாமம்-தார்.  காதன்மை - காதலின் இயல்பு. 

    The heavy clouds in the sky over the city of Thiru-ambar-maakaalam have crowded 
over the forest area of the city. The city is on the northern bank of the river Arisilaru. 
Our Lord Civa wears the garland full of sweet smelling Indian laburnum flowers. This garland 
is entwined along with different, two or more flowers tied on either side of the string, 
and our Lord wears this sort of garland. The servitors, with passionate tender feelings, 
who worship our Lord both day and night will never get even small ailment in their life.

2587.     நெதியமென்னுளபோகமற்றென்னுளநிலமிசைநலமாய
    கதியமென்னுளவானவரென்னுளர்கருதியபொருள்கூடில் 
    மதியந்தோய்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    புதியபூவொடுசாந்தமும்புகையுங்கொண்டேத்துதல்புரிந்தோர்க்கே.        5

    நெதியம் என் உளபோகம் மற்றென்னு உளநிலமிசை நலமாய 
    கதியம் என்னுள வானவர் என்னுளர் கருதிய பொருள் கூடில் 
    மதியம் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே.

    netiyam en uLa? pOkam maRRu en uLa? nilammicai nalam Aya 
    katiyam en uLa? vAnavar en uLar?-karutiya poruL kUTil 
    matiyam tOy pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam, 
    putiya pUvoTu cAntamum pukaiyum koNTu Ettutal purintOrkkE.

பொருள்:     வானில் உள்ள சந்திரனோடு தோய்கின்ற அளவு உயர்ந்த பொழில்களையும்
புதுவெள்ளம் வருகின்ற அரிசிலாற்றின் வடகரையில் இருப்பதுமாகிய மாகாளத்தை புதிய 
மலர்கள், சந்தனம், தூபம் ஆகியவற்றைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவ புண்ணியம்
உடையவர்களுக்கு, இச்சிவபூசையால் எய்தப் பெறும் திருவருளைக் காட்டிலும் பெறத்தக்க 
நிதியம் எவை உள? சுகபோகம் எவை உள? இந்தப் பூமியின்மேல்  நன்மை பயக்கும் கதி 
எவை உள? இவற்றைக் காட்டிலும் சிறந்த நிதியமோ,போகமோ, கதியோ, தேவர்கள் என்ன 
பெற்றுள்ளனர்? (ஒன்றும் இல்லையாம்). இப்புண்ணியம் உடையோருக்கே கருதிய பொருள் கூடும்.

குறிப்புரை:     நெதியம் - நிதியம். மதியம்- தோய்புனல். கதியம் - வழி. மாகாளத்துப் பரசிவனைப்
புதுப்பூக்கள் சந்தனம் தூபம்  (முதலியவை) கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியத்தை 
உடையவர்க்கு  அச்சிவபூஜையால் எய்தும் திருவருளினும் நிதியம் சுகபோகம் வேறு என்ன 
இருக்கின்றன? 

    The city of Thiru-ambar-maakaalam is surrounded by thick forest areas where
the moon passes through and appears as settled there. The city is on the northern 
bank of the river Arisilaru. These servitors do the daily rituals for Lord Civa of 
Thiru-ambar-maakaalam daily with fresh flowers, sandal paste, grand fragrance of 
smoke etc. As the result of their daily Siva Pooja they get our Lord's grace in 
plenty. These religious people get wealth, family life of full pleasure etc. 
Above all, they get Lord Civa's grace.  Is there anything else to be got in 
the world? No.

2588.     கண்ணுலாவியகதிரொளிமுடிமிசைக்கனல்விடுசுடர்நாகம் 
    தெண்ணிலாவொடுதிலகமுநகுதலைதிகழவைத்தவர்மேய 
    மண்ணுலாம்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    உண்ணிலாநினைப்புடையவர்யாவரிவ்வுலகினிலுயர்வாரே.        6

    கண் உலாவிய கதிரொளி முடிமிசைக் கனல் விடுசுடர் நாகம் 
    தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய 
    மண்ணுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    உண்ணிலா நினைப்புடையவர் யாவர் இவ்வுலகினில் உயர்வாரே.

    kaN ulAviya katir oLi muTimicaik kanal viTu cuTar nAkam, 
    teN nilAvoTu tilakamum, nakutalai, tikaza vaittavar mEya-
    maN ulAm pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam 
    uL-nilAm ninaippu uTaiyavar yAvar, ulakinil uyarvArE.

பொருள்:     வைத்த கண் வாங்கமுடியாத கதிரொளி வீசும் செஞ்சடை முடியின்மீது நெருப்பை 
உமிழ்கின்ற நாகப்பாம்பு, தெளிந்த பிறை நிலவொடு திலகமும், நகும் தலையையும் விளங்க 
வைத்தவராகிய சிவபிரானார், எழுந்தருளியுள்ள தலம், நிலத்துக்கு அழகாகிய பொழிலையும் 
புதுவெள்ளம் வருகின்ற அரிசிலாற்றின் கரையின் வடகரையில் உள்ளதுமாகிய மாகாளம். 
இதனை மனத்தில் தியானிப்பவர் யாவர்? அவர் இவ்வுலகில் உயர்வுடையவராவர்.

குறிப்புரை:     கண் உலாவிய கதிர் ஒளி முடி-  செஞ்சடை முடியின் ஒளியை உணர்த்திற்று. 
திலதம்- திலகம். வைத்தவர் - சிவபிரானார். உள்- மனத்தில். நிலாம்-நிலாவுகின்ற.

    Our Lord Civa's entangled locks of hair give out the most supernal bright light 
similar to sun's rays. He has adorned His head by retaining the snake and the young moon
on it. He puts on the garland of skulls also on His head. The city Thiru-ambar-maakaalam
is surrounded by thick forest area. It is on the northern banks of the river Arisilaru. 
In the temple of this city, Thiru-ambar-maakaalam, our Lord resides. Whosoever deeply 
think of this city and worship our Lord with devotion in their mind will rise in this 
world as the people of virtues.

2589.     தூசுதானரைத்தோலுடைக்கண்ணியஞ்சுடர்விடுநறுங்கொன்றை 
    பூசுவெண்பொடிப்பூசுவதன்றியும்புகழ்புரிந்தவர்மேய 
    மாசுலாம்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    பேசுநீர்மையர்யாவரிவ்வுலகினிற்பெருமையைப்பெறுவாரே.        7

    தூசு தானரைத் தோலுடைக் கண்ணி அம்சுடர்விடு நறுங்கொன்றை 
    பூசு வெண்பொடிப் பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய 
    மாசுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    பேசு நீர்மையர் யாவர் இவ்வுலகினில் பெருமையைப் பெறுவாரே.

    tUcu tAn arait tOl uTai, kaNNi am cuTarviTu naRugkonRai, 
    pUcu veNpoTip pUcuvatu, anRiyum, pukaz purintavar mEya- 
    mAcu ulAm pozil, aricilin vaTakarai, varupunal-mAkALam 
    pEcu nIrmaiyar yAvar, iv ulakinil perumaiyaip peRuvArE.

பொருள்:     அரையில் உடையாவது தோல்; தலைமாலையாவது பொன்னொளி வீசும் 
கொன்றை மலர்; பூசுவது வெண்மையான திருநீறு; அஃதல்லாமல், சிவனின் புகழைப்  பல்காலும் 
பேசுதலை விரும்பியவர் வாழும் தலம் யாதெனில், மேகம் தங்கிய  பொழில்களையும் புதுவெள்ளம் 
வருகின்ற அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதுமான மாகாளம். இதனைப் போற்றும் இயல்புடையவர் 
யாவர்? அவர் பெருமையைப் பெறுவாரே.

குறிப்புரை:     தூசு -உடை. அரையில் தோலுடையே. தூசு. கொள்கையே- கண்ணி. பூசுவது 
வெண்பொடி. புரிந்தவர் - விரும்பினவர்.  மாசு - மேகம். யாவர்? அவர் பெருமை பெறுவார் என்க. 

    Our Lord Civa puts as cloth on His waist the hide. The Indian laburnum flower
garland He puts on His body. He applies the white holy ashes on His body. He likes to be 
praised. Those who speak of the fame of Thiru-ambar-maakaalam will get all the 
benevolence in their life.

2590.     பவ்வமார்கடலிலங்கையர்கோன்றனைப்பருவரைக்கீழூன்றி             
    எவ்வந்தீர அன்றிமையவர்க்கருள்செய்தஇறையவனுறைகோயில் 
    மவ்வந்தோய்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    கவ்வையாற்றெழுமடியவர்மேல்வினைகனலிடைச்செதிளன்றே.        8

    பவ்வமார் கடல் இலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழ் ஊன்றி 
    எவ்வந்தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறைகோயில் 
    மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    கவ்வை ஆற்று எழுமடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.

    pavvam Ar kaTal ilagkaiyar kOn tanaip paruvaraik kIz UnRi,
    evvam tIra anRu imaiyavarkku aruL ceyta iRaiyavan uRai kOyil- 
    mavvam tOy pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam 
    kavvai ARRu ezum aTiyavar mEl vinai kanal iTaic cetiL anRE!

பொருள்:     நீர்க்குமிழிகள் மிகுந்த கடலின் நடுவுள் உள்ள இலங்கையர்க்கு அரசனைப் பெரிய 
மலையாகிய கயிலை மலைக்கீழ் ஊன்றி நசுக்கி, துயரம் தீர அன்று தேவர்களுக்கு அருள் செய்த 
இறைவன் உறைகின்ற திருக்கோயில், மேகத்துடன் தோய்கின்ற அளவு உயர்ந்துள்ள பொழில்கள் 
உள்ளதும் புதுவெள்ளம் வருகின்ற அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதுமாகிய மாகாளம். 
இதனைத் தோத்திர முழக்குடன் தொழும் அடியவர்களின் மேல் வரும் வினைகள் தீயினிற் 
தூசாக ஒழியும்.

குறிப்புரை:     பவ்வம் ஆர் (கடல்)- நீர்க்குமிழி நிறைந்த. நுரையும் ஆம். 'நுரை மொக்குள் 
பௌவத்தோடு நொவ்விய புற்புதங்கள் திரைகொள் நீர்க்குமிழி ஐந்தாம்' (சூடாமணி நிகண்டு 5, 
பெயர்ப்பிரிவு 2.5). மவ்வம்- மேகம். அழகு (தோய்பொழில்) எனல் பொருந்தாது (தமிழ் லெக்ஸிகன்.
பக் 3112). கவ்வை- தோத்திர முழக்கம். தீயிற்பட்ட மரத்தூள் போல வினை அழியும்.

    Raavanan was the king of Sri Lanka, bordered by the oceans on all four sides. 
Our Lord Civa got him crushed under mount Kailash and destroyed his mightiness. 
He graced the devas and removed their difficulties. This Lord evidently is manifest 
in the temple in Thiru-ambar-maakaalam. The devotees praise the city and the Lord
with pomposity. Those devotees' past karma and bad deeds, if any, will get destroyed 
like the dust falling into fire flame and be burnt.

2591.    உய்யுங்காரணமுண்டென்றுகருதுமினொளிகிளர்மலரோனும் 
    பைகொள்பாம்பணைப்பள்ளிகொளண்ணலும்பரவநின்றவர்மேய 
    மையுலாம்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    கையினாற்றொழுதவலமும்பிணியுந்தங்கவலையுங்களைவாரே    9          

    உய்யுங் காரணம் உண்டு என்று கருதும் ஒளிகிளர் மலரோனும் 
    பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர்மேய 
    மையுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    கையினால் தொழுதவலமும் பிணியும்  தம் கவலையும் களைவாரே.         

    uyyum kAraNam uNTu enRu karutumin! oLi kiLar malarOnum, 
    pai koL pAmpu aNaippaLLi koL aNNalum, parava ninRavar mEya- 
    mai ulAm pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam
    kaiyinAl-tozutu, avalamum piNiyum tam kavalaiyum kaLaivArE.

பொருள்:     ஒளியுடைய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் நச்சுப்பையுடைய 
பாம்பாகிய அணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் வழிபட நின்றவர் எழுந்தருளிய 
தலம் யாதெனில் ,மேகம் உலவுகின்ற பொழில் உள்ளதும் புதுவெள்ளம் வரும் அரிசிலாற்றின் 
வடகரையில்  உள்ளதுமான மாகாளம். இதனைக் கையினால் தொழுவாரின் அவலமும் 
பிணியும் ஆக்கும்  பிறவியைக் களைவார்;  உய்யும் காரணம் அவ்வடியவர்களுக்கே உண்டு 
என்று நீவிர் கருதுமின்.

குறிப்புரை:     அவலமும் பிணியும், கவலையும் (ஆக்கும் பிறவியைக்) களைவார் மாகாளத்தைத் 
தொழுவாரே. அடியார்க்கே அவற்றைக் களையும் நிலைமை உண்டு. உய்யும் காரணம் அவர்க்கு 
உண்டு என்று நீவிர் கருதுமின்.

    Oh! Ye good people! If you want to be saved and to pull through your difficulties 
and to be rescued there is a way out. You remember that there is a doctrine. The tutelary 
deity Brahma and Thirumaal showed great enthusiasm and admiration for our Lord Civa. 
He likes to be manifested in the temple in Thiru-ambar-maakaalam city. The city is 
surrounded by thick forest area. The city lies on the banks of the river Arisilaru. 
There are sincere devotees who worship Him with both their hands. They will have no
misery, ailment and anxiety in their life forever.

2592.     பிண்டிபாலருமண்டைகொள்தேரரும்பீலிகொண்டுழல்வாரும் 
    கண்டநூலருங்கடுந்தொழிலாளருங்கழறநின்றவர்மேய 
    வண்டுலாம்பொழிலரிசிலின்வடகரைவருபுனல்மாகாளம் 
    பண்டுநாஞ்செய்தபாவங்கள்பற்றறப்பரவுதல்செய்வோமே.        10

    பிண்டி பாலரு மண்டை கொள்தேரரும் பீலிகொண்டு உழல்வாரும் 
    கண்ட நூலரும் கடுந்தொழிலாளரும் கழற நின்றவர் மேய 
    வண்டுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் 
    பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.

    piNTipAlarum, maNTai koL tErarum, pIli koNTu UzalvArum, 
    kaNTa nUlarum, kaTun tozilALarum, kazaRa ninRavar mEya- 
    vaNTu ulAm pozil, aricilin vaTakarai, varupunal--mAkALam, 
    paNTu nAm ceyta pAvagkaL paRRu aRap paravutal ceyvOmE.

பொருள்:     பிண்டி பாலத்தை ஏந்திய தேரரும், மயிற்பீலியைக் கையில் கொண்டு அலைகின்ற 
சமணரும் கண்ட நூலரும் கடுந்தொழிலாளரும் வெறுத்து மொழிய நின்றவர் எழுந்தருளிய தலம் 
யாதெனில், வண்டுகள் உலவுகின்ற பொழில்களும் புதுவெள்ளம் வருகின்ற அரிசிலாற்றின் வடகரையில் 
உள்ளதும் ஆகிய மாகாளம். இதனைப் பண்டு நாம் செய்த பாவங்கள் முற்றும் பற்றற வழிபடுவோம்.

குறிப்புரை:     பிண்டி பாலர் - தலையிலே பீலி கட்டப்பட்டு. எறிகின்ற படையான பிண்டிபாலத்தை 
ஏந்திய ஒருவகைச் சமணர், 'பெருவலியதனை நோனான் பிண்டி பாலத்தை யேந்தி' சிந்தா. 2269 என்பதன் 
உரையில் நச்சினார்க்கினியர் எழுதியதைக் காண்க.

    The Jains in the city are those who eat flour gruel to appease their hunger. 
They carry the human skull to get alms and stand in front of each house. They carry 
the peacock's feather swinging here and there. They carry various unimportant books
calling them Vedic books. They do hard physical work. Oh! Ye devotees, do not listen 
to those people's false propaganda. You may pray and worship our Lord Civa, manifest 
in the temple in Thiru-ambar-maakaalam city. By following this if you pay respect to 
our Lord, you will get rid of all your past bad karma deeds that chase you birth 
after birth.

2593.    மாறுதன்னொடுமண்மிசையில்லதுவருபுனல்மாகாளத் 
    தீறுமாதியுமாகியசோதியையேறமர்பெருமானை 
    நாறுபூம்பொழிற்காழியுள்ஞானசம்பந்தனதமிழ்மாலை 
    கூறுவாரையுங்கேட்கவல்லாரையுங்குற்றங்கள்குறுகாவே.        11

    மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத் 
    தீறும் ஆதியுமாகிய சோதியை ஏறமர் பெருமானை 
    நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ்மாலை 
    கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

    mARu tannoTu maNmicai illatu varupunal mAkALattu, 
    IRum Atiyum Akiya cOtiyai, ERu amar perumAnai,
    nARu pUm pozil kAziyuL njAnacampantana tamiz mAlai 
    kURuvAraiyum kETka vallAraiyum kuRRagkaL kuRukAvE.

பொருள்:     இப்பூமியில் தனக்கு நிகராக ஒப்புக் கூறத்தக்கது வேறு ஏதும் இல்லாததும்,
புதுவெள்ளம் வரும் அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய மாகாளத்தில் , ஆதியும் 
அந்தமுமாகிய சோதியை, விடையேறும் பெருமானை மணம் வீசும் பூம்பொழில்களை உடைய 
காழியுள் இருக்கும் ஞானசம்பந்தன் பாடிய  தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தைக் 
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் பிறவிக்குக் காரணமாகிய குற்றங்கள் அடையா. 

குறிப்புரை:     மண்மிசை தன்னோடு மாறு இல்லது - இப்பூமியில் தன்னுடன் ஒப்புக்கூறத் தக்கது. 
வேறு யாதும் இல்லாதது. ஈறும் ஆதியும் -அநாதி நித்தமுத்த சுத்த சித்துருவாகிய பரசிவம் 
உயிர்கட்கு அருளற் பொருட்டு ஆதியும் அந்தமும் ஆகி உபகரித்தல் குறித்தது. 'ஆதியும் அந்தமும் 
ஆயினார்'  (திருவாசகம் 214). இறைவன் ஏறுவதால் ஏறு எனப் பெயர் பெற்றது எனல் இதுபோலும் 
இடங்களில் பொருந்துவதே.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-ambar-maakaalam city-with no 
other parallel city in the world. He stays there. He has no beginning and no end, the
Supreme Being and the supernal flame.He loves to ride on His bull to go round the 
universe. On this Lord our saint Thiru-gnana-Sambandar sang Tamil poems. Those who
memorise and chant those who hear these poems will not find blameful deeds 
nearing them .

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            103ஆம் பதிகம் முற்றிற்று
            End of 103rd Hymn
    
            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 240                பதிக எண்: 104

104.திருக்கடிகுளம்                 104. THIRU-K-KADIK-KULAM

பண்: நட்டராகம்                     Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருக்கடிக்குளம் என்னும் இத்திருத்தலமானது கற்பகநாதர்குளம் எனவும் வழங்கப்பெறும். 
கற்பகவிநாயகர் சிவபெருமானைப் பூசித்து மாம்பழம் பெற்ற வரலாறு பற்றி இப்பெயர் எய்திற்று 
என்பர். திருத்துறைப்பூண்டி தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பேருந்தில் கடிக்குளம் செல்லலாம். 
இறைவரது திருப்பெயர் கற்பகநாதர். இறைவியாரது திருப்பெயர் சௌந்தரநாயகி. தீர்த்தம் 
விநாயகதீர்த்தம்.

     ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ஒன்று இருக்கின்றது. தற்போது இக்கோயில் 
திருப்பணி செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. கரையங்காடு என்பது இவ்வூரைச் சார்ந்ததாகும். 
இங்கு இரண்டாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து மேற்கே ஒருகல்லில் இடும்பாவனம் 
என்ற கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பரப்பு 11-52 ஏக்கராகும். இதில் சிவாலயம், மற்றைய 
மூர்த்திகள், கற்பக விநாயகர் திருக்கோயில், திருக்குளம் முதலியன அமைந்துள்ளன.

    ஐதீகப்படி கார்த்திகார்ச்சுனன் என்ற அசுரன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தானாம். 
சுவாமிக்கும் விநாயகருக்கும் இடையில் கோதண்டராமன் சந்நிதி கட்டப் பட்டுள்ளது. தீர்த்தத்தின் 
பெயரே கடிக்குளம் என்பது ஆகும். இக்கோயிலின் தலமரம் பலா. இக்கோயிலுக்குக் கரையங்காடு 
என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டது. இதற்கு இன்னும் பல கிராமங்களில் நிலங்கள் உண்டு.

பதிக வரலாறு

    தோணிபுரத்தோன்றலார் அருந்தமிழ் மாமறைபாடிக் கோடிக்குழகரைக் கும்பிட்டுத் 
தொண்டர்களோடு திருக்கடிக்குளம் புகுந்து பரவியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2594.     பொடிகொள்மேனிவெண்ணூலினர்தோலினர்புலியுரியதளாடை
    கொடிகொளேற்றினர்மணிகிணினெனவருகுரைகழல்சிலம்பார்க்கக் 
    கடிகொள்பூம்பொழில்சூழ்தருகடிக்குளத்துறையுங்கற்பகத்தைத்தம்
    முடிகள்சாய்த்தடிவீழ்தருமடியரைமுன்வினைமூடாவே.        1

    பொடி கொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலி உரியதளாடை 
    கொடி கொளேற்றினர் மணி கிணி எனவருகு உரைகழல் சிலம்பு ஆர்க்கக் 
    கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத்தம் 
    முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.

    poTi koL mEni veN nUlinar, tOlinar, puli uri-ataL ATai, 
    koTi koL ERRinar, maNi, kiNin ena varu kurai kazal cilampu Arkka, 
    kaTi koL pUmpozil cUztaru kaTikkuLattu uRaiyum kaRpakattai, tam 
    muTikaL cAyttu aTi vIztarum aTiyarai mun vinai mUTAvE.

பொருள்:     திருநீறு பூசிய திருமேனியர்; வெண்மையான பூணூலினர்; புலித்தோலாடையர்;
 விடைக் கொடியினர்; மணிகள் கிணின் என ஒலிக்க, கழல்களும் சிலம்பும் ஆர்க்க, மணமுள்ள 
பூம்பொழில்கள் சூழ்தரும் திருக்கடிக் குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம்முடைய முடிகளைச் 
சாய்த்துத் திருவடிகளில்  வீழ்தரும் அடியாரைப் பண்டுசெய்த வினைகள் வந்து சூழமாட்டா.

குறிப்புரை:     கடிக்குளத்தில் எழுந்தருளிய கற்பகத்தைத் தலைசாய்த்துத் திருவடியை 
வணங்கும் அடியார்களை வினைகள் சூழமாட்டா. கற்பகம் - இத்தலத்தில் இறைவன் திருநாமம்.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-k-kadik-kulam city. He spreads 
on His forehead and all over His body the sacred ashes. He puts on the white supernal 
thread on His chest. He puts on His waist the tiger's hide as His dress. He covers His
body with the hide of an elephant. He carries the flag of His bull as the insignia. 
On His ankle He puts on a round tinklet, and the tinkling anklets round His ankle 
make noise when He walks. The city is surrounded by very thick and attractive forest 
areas with plants and trees full of sweet smelling flowers. In the temple of the city 
our Lord Civa is manifest. Those devotees who prostrate before His Lord's holy feet 
and worship Him find their past bad karma deeds never affecting them. 

2595.     விண்களார்தொழும்விளக்கினைத்துளக்கிலாவிகிர்தனைவிழவாரும் 
    மண்களார்துதித்தன்பராயின்புறும்வள்ளலைமருவித்தம் 
    கண்களார் தரக்கண்டு நங்கடிக் குளத்துறை தருகற்பகத்தைப்     
    பண்களார்தரப்பாடுவார்கேடிலர்பழியிலர்புகழாமே.        2

    விண்களார் தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும் 
    மண்களார் துதித்து அன்பராயின்புறும் வள்ளலை அருவித்தம் 
    கண்களார் தரக்கண்டு நங்கடிக் குளத்துறை தருகற்பகத்தைப் 
    பண்களார் தரப்பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.

    viNkaLAr tozum viLakkinai tuLakku ilA vikirtanai vizavu Arum
    maNkaLAr tutittu anparAy inpu uRum vaLLalai, maruvi, tam 
    kaNkaL Artarak kaNTu, nam kaTikkuLattu uRaitaru kaRpakattaip 
    paNkaL Artarap pATuvAr kETu ilar; pazi ilar; pukaz AmE.

பொருள்:     விண்ணுளார் தொழும் விளக்கு; தளர்ச்சியிலாரின் விகிர்தன்; 
திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வார் துதித்து அன்பராகிப் பேரின்பம் 
ஈந்தருளும் வள்ளல்; கடிக்குளத்தில் உறைதரும் அக்கற்பகத்தை  மருவித் தம்முடைய 
கண்கள் ஆரக்கண்டு பண்களோடு பாடுவார் கேடும் பழியும் இலராவர்; புகழ் உளராவர்.

குறிப்புரை:     விண்ணோர் தொழும் விளக்கு. துளக்கு - தளர்ச்சி. விகிர்தன்- முரணுறு        
செயலினன். திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வோர் அன்பராகிப் பேரின்பம் 
பெற ஈந்தருளும் வள்ளல். அவ்வள்ளலைச் சேர்ந்து கண்ணாரக் கண்டு பண்ணாரப் பாடிப் 
பணிவார் கேடும் பழியும் இலராவர். புகழ் உளராவர். தரிசனமும் கீதமும் திருந்தவும் 
முற்றவும் செய்தால் எய்தும் பயன்கள் உணர்த்தப்பட்டன.

    The devas worship our Lord Civa as supernal flame. He has no slackness,
no languishing. He is the pre-eminent, Supreme Lord. People on this earth celebrate 
many temple festivals.They worship and have happy attachment to Him. They who sing 
divine songs in musical tone and praise Him will have no annihilation in their life. 
Their life will be free of sins and harm. They will be praised by one and all.

2596.     பொங்குநற்சரியுரியதுபோர்ப்பதுபுலியதளழல்நாகம் 
    தங்க மங்கையைப் பாகமதுடையவர் தழல்புரை திருமேனிக் 
    கங்கைசேர்தருசடையினர்கடிக்குளத்துறைதருகற்பகத்தை 
    எங்குமேத்திநின்றின்புறுமடியரையிடும்பைவந்தடையாவே.        3

    பொங்கு நற்சரி உரியது போர்ப்பது புலி அதளழல் நாகம் 
    தங்க மங்கையைப் பாகம் அதுடையவர் தழல்புரை திருமேனிக் 
    கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை 
    எங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை வந்து அடையாவே.

    pogku nan cari uri atu pOrppatu, puli ataL azal nAkam                 
    tagka magkaiyaip pAkam atu uTaiyavar, tazal purai tirumEnik 
    kagkai cErtaru caTaiyinar, kaTikkuLattu uRaitaru kaRpakattai, 
    egkum Etti ninRu inpu uRum aTiyarai iTumpai vantu aTaiyAvE.

பொருள்:     போர்ப்பது, சினம் பொங்கும் நல்ல யானையின் உரியும் புலியின் அதளுமாம்.
பூண்பது நெருப்புப் போல் சினக்கும் நாகம்; பொன் போலொளிரும் மங்கையைத் தனது 
ஒருபாகத்தில் உடையவர்; செந்தழல் போன்ற திருமேனியர்; கங்கை தங்கிய சடையினர்;
 அவர், கடிக்குளத்துறை கற்பகம்; அவரை எவ்விடத்திலும் ஏத்தி வழிபட்டு இன்புறும்
 அடியவரை இடும்பைகள் வந்து அடையா.

குறிப்புரை:     கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகத்தை எவ்விடத்தும் வழிபட்டு இன்பத்தை  
அடையும் அடியார்களை இடும்பைகள் வந்து அடையமாட்டா.

    Our Lord Civa covered His body with the hide of the elephant which came to Him 
with anger. He wears on His waist the hide of the tiger. He plays with the ferocious snake 
which comes round and round His body. He has embedded His consort on the left side of His 
body. His frame is red, similar to supernal fire. He retains the river Ganges on His 
entangled hair locks. With these our Lord Civa is manifest in the temple in Thiru-k-
kadik-kulam city. The servitors, who praise our Lord in all places they visit, and 
happily speak about Him, will have no misery in their life.

2597.     நீர்கொள்நீள்சடைமுடியனைநித்திலத்தொத்தினைநிகரில்லாப் 
    பார்கொள்பாரிடத்தவர்தொழும்பவளத்தைப்பசும்பொனைவிசும்பாரும் 
    கார்கொள்பூம்பொழில்சூழ்தருகடிக்குளத்துறையுங்கற்பகந்தன்னைச் 
    சீர்கொள்செல்வங்களேத்தவல்லார்வினைதேய்வதுதிண்ணமே.     4

    நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகர் இல்லாப் 
    பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும் 
    கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்துறையுங் கற்பகம் தன்னைச் 
    சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல்லார் வினைதேய்வது திண்ணமே.

    nIr koL nIL catai muTiyanai, nittilat tottinai, nikar illAp 
    pAr koL pAr iTattavar tozum pavaLattai, pacumponnai, vicumpu Arum 
    kAr koL pUmpozil cUztaru kaTikkuLattu uRaiyum kaRpakam tannai, 
    cIr koL celvagkaL Etta vallAr vinai tEyvatu tiNNamE.            

பொருள்:     கங்கையாற்றினைக் கொண்ட நீண்ட சடைமுடியனை; முத்துக்களின் கொத்தினை; 
பாரிடத்தில் உள்ளவர்கள் தொழும் ஒப்பில்லாப் பவளத்தை; பசும்பொன்னை, விண்ணளாவிய 
கார்முகில்களைக் கொள்ளும் பூம்பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் 
பெருமையுடைய செல்வங்களைப் புகழ வல்லவர்களின் வினைகள் தேய்ந்தொழிவது திண்ணமே.

குறிப்புரை:     திருக்கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தின் செல்வங்களைப் புகழ 
வல்லவருடைய வினைகள் தேய்ந்தொழிவது உறுதி. செல்வங்கள்-  அவளால்  வந்த ஆக்கம் 
இவ்வாழ்க்கையெல்லாம் (சித்தியார் 89).

    Our Lord Civa's entangled locks of hair are very long and hang down. He supports 
the river Ganges in the locks of hair, He is a string of pearls. People from all parts 
of the earth come to Thiru-k-kadik-kulam and worship our Lord. He looks like real gold. 
The city is surrounded by very thick delightful forest area where the clouds in the sky 
pass through the forest. They seem to stay there over the trees. In such a glorious city 
Thiru-k-kadik-kulam, our Lord is manifest. His divine grace of ever lasting wealth is 
praised by devotees. They come and worship Him in this city. It is certain their bad 
karma will definitely disappear.

2598.     சுரும்புசேர்சடைமுடியினன்மதியொடுதுன்னியதழல்நாகம் 
    அரும்புதாதவிழ்ந்தலர்ந்தனமலர்பலகொண்டடியவர்போற்றக்                      
    கரும்புகார்மலிகொடிமிடைகடிக்குளத்துறைதருகற்பகத்தை 
    விரும்புவேட்கையோடுளமகிழ்ந்துரைப்பவர்விதியுடையவர்தாமே.        5

    சுரும்புசேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் 
    அரும்பு தாதவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டடியவர் போற்றக்                      
    கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்துறை தருகற்பகத்தை 
    விரும்பு வேட்கையோடு உளமகிழ்ந்து உரைப்பவர் விதியுடையவர் தாமே.

    curumpu cEr caTaimuTiyinan, matiyoTu tunniya tazal nAkam, 
    arumpu tAtu avizntu alarntana malarpala koNTu aTiyavar pORRak 
    karumpu kAr mali koTi miTai kaTikkuLattu uRaitaru kaRpakattai, 
    virumpu vETkaiyOTu uL makizntu uraippavar viti uTaiyavar tAmE.

பொருள்:     சந்திரன், தீப்போல் சினக்கும் நாகம், நெருங்கிய வண்டுகள் தங்கும்
 சடைமுடியினன்; அரும்புகள் தாதவிழ்ந்து அலர்ந்த பலவகை மலர்கள் கொண்டு
 அடியவர்கள் தன்னைப் போற்றி வழிபட, கரும்பு வளரும் வயல்களும் மேக மண்டலத்தை 
அளாவிய கொடிகளும் பின்னிய கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தை மனமகிழ்ந்து
 வழிபட்டுப் புகழ்ந்துரைப்பவர்கள் விதிக்குத் தாம் ஆளாகாமல்  விதிக்குத் தாம் விதியாவர்.

 குறிப்புரை:     அரும்புகள் தாது அவிழ்ந்து விரிந்த பல மலர்களைக் கொண்டு அடியவர்கள் 
வழிபடக் கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகம். கரும்புகளும் மேக மண்டலத்தை அளாவிய 
கொடிகளும் பின்னிய கடிக்குளம்.  மனமகிழ்ந்து தோத்திரம் சொல்லும் அடியவர்கள் 
செல்வமுடையவராவார்கள். விதி-செல்வம்.

    In the entangled locks of hair, our Lord has a garland of flowers where bees
swarm in large numbers. He lets the ferocious, poisonous snake to live along with its
enemy, the moon,by removing its enmity. His devotees bring the buds and blossomed
flowers full of pollen inside the flowers. They spread the flowers at His feet and 
praise Him. In the garden area, sugarcane plants are very tall and vines get entwined 
with the sugarcane plants.Thiru-k-kadik-kulam is such a glorious city, where our Lord 
is manifest. Here the devotees with sincere devotion praise our Lord who is eternal 
bliss, eternal wealth. They will enjoy all the good karma and good wealth in their 
life by praising our Lord here wholeheartedly, with deep love.

2599.     மாதிலங்கியபாகத்தன்மதியமொடலைபுனலழல்நாகம்
    போதிலங்கியகொன்றையுமத்தமும்புரிசடைக்கழகாகக் 
    காதிலங்கியகுழையினன்கடிக்குளத்துறைதருகற்பகத்தின் 
    பாதங்கைதொழுதேத்தவல்லார்வினைபற்றறக்கெடுமன்றே.        6

    மாதிலங்கிய பாகத்தன் மதியமொடு அலைபுனல் அழல் நாகம்             
    போதிலங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக்கு அழகாகக் 
    காதிலங்கிய குழையினன் கடிக்குளத்துறை தருகற்பகத்தின் 
    பாதம் கைதொழுது ஏத்தவல்லார் வினை பற்றறக் கெடுமன்றே.

    mAtu ilagkiya pAkattan matiyamoTu alaipunal azal nAkam
    pOtu ilagkiya konRaiyum, mattamum, puricaTaikku azaku Aka, 
    kAtu ilagkiya kuzaiyinan; kaTikkuLattu uRaitaru kaRpakattin 
    pAtam kaitozutu Etta vallAr vinai paRRu aRak keTum anRE.

பொருள்:     உமை ஒரு பாகன்; சந்திரனுடன் கங்கையும் தீயுமிழ் நாகமும் கொன்றை 
மலரும் ஊமத்தம்பூவும் பின்னிய சடைக்கு அழகாக அணிந்தவன்; காதில் விளங்கும் குழையை 
உடையவன்; அவன் கடிக்குளத்தில் எழுந்தருளியுள்ள கற்பகம். அவனுடைய திருவடிகளைக் 
கைதொழுது ஏத்த வல்லவர்களின் வினைகள் உறுதியாகப் பற்றறக் கெடும்.

குறிப்புரை:     கற்பகத்தின் திருவடியைக் கைகூப்பித் தொழவல்லவர் வினைகள் 
முழுதும் கெட்டொழியும்.

    Our Lord Civa has embedded His consort Uma on the left side of His body. He 
retains very beautifully in His entangled locks of curved hair the moon, the river Ganges, 
the furious snake, Indian laburnum flowers, datura flowers and others. He puts on the 
earlobe in His ears. He is manifest in the temple in Thiru-k-kadik-kulam city. Those 
devotees who can touch His holy feet with their hands, pray and worship, will find 
their past bad karma entirely eliminated.

2600.     குலவுகோலத்தகொடி நெடுமாடங்கள்குழாம்பலகுளிர்பொய்கை 
    உலவுபுள்ளினமன்னங்களாலிடும்பூவைசேருங்கூந்தல்             
    கலவைசேர்தருகண்ணியன்கடிக்குளத்துறையுங்கற்பகத்தைச்சீர் 
    நிலவிநின்றுநின்றேத்துவார்மேல்வினைநிற்ககில்லாதானே.        7

    குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம் பலகுளிர் பொய்கை 
    உலவு புள்ளின மன்னங்களால் இடும்பூவை சேரும் கூந்தல்             
    கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தைச்சீர் 
    நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல்வினை நிற்ககில்லாதானே.

    kulavu kOlatta koTi neTumATagkaL kuzAm, pala kuLir poykai, 
    ulavu puLLinam, annagkaL AliTum pUvai cErum-kUntal             
    kalavai cErtaru kaNNiyan-kaTikkuLattu uRaiyum kaRpakattaic cIr 
    nilavi ninRu ninRu EttuvAr mEl vinai niRkakillA tAnE.

பொருள்:     பலவகைக் கோலத்தனவாகிய கொடிகள் நிறைந்து உயர்ந்த மாடங்களின் 
குழாமும்,  புலவு நாறிடும் நீர்ப்பறவைகள், அன்னங்கள் , ஒலியிடும் பூவை சேரும் குளிர்ந்த 
 பொய்கைகள் பலவும் உடையதும், கூந்தலுடன் கலந்த கண்ணியன் எழுந்தருளி உள்ளதுமாகிய 
கடிக்குளத்துள் உறையும் கற்பகத்தின் புகழினைப் பலபடியாக ஏத்துவார்மேல் உள்ள 
வினைகள் நிற்கமாட்டா. விலகி நீங்கும். 

குறிப்புரை:     பூவைசேரும் கூந்தற்கலவையென்பது வாமபாகத்தைக் குறித்தது. 
கற்பகத்தை ஏத்துவார்பால் வினைகள் நிற்கமாட்டா.

    In the city of Thiru-k-kadik-kulam, many palatial dwellings are seen in large 
numbers. In the top terrace portion very attractive flags are fixed and they swing 
in the air. There are many ponds in the city with cool water for damsels to take bath. 
The cranes and other meat eating birds and swans play, flying and swinging here and 
there and enjoying their life. In this glorious city, our goddess Uma Devi with bunches 
of sweet smelling flowers (chaplet) on her hair appears very attractive. Those devotees
who can visit the Thiru-k-kadik-kulam city,come to the temple, praise our Lord Civa
will never get bad karma deeds. They will fade away from their life.

2601.     மடுத்தவாளரக்கன்னவன்மலைதன்மேல்மதியிலாமையிலோடி 
    எடுத்தலும்முடிதோள்கரநெரிந்திறஇறையவன்விரலூன்றக் 
    கடுத்துவாயொடுகையெடுத்தலறிடக்கடிக்குளந்தனில்மேவிக் 
    கொடுத்தபேரருட்கூத்தனையேத்துவார்குணமுடையவர்தாமே.        8    

    மடுத்த வாளரக்கன் அவன்மலை தன்மேல் மதி இலாமையில் ஓடி 
    எடுத்தலும் முடிதோள் கரநெரிந்திற இறையவன் விரல் ஊன்றக் 
    கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக் கடிக்குளம் தனில்மேவிக் 
    கொடுத்த பேரருட் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே.        

    maTutta vAL arakkan(n) avan malaitan mEl mati ilAmaiyil OTi 
    eTuttalum, muTitOL karam nerintu iRa iRaiyavan viral UnRa, 
    kaTuttu vAyoTu kai eTuttu alaRiTa, kaTikkuLam tanil mEvik 
    koTutta pEr aruL kUttanai EttuvAr kuNam uTaiyavar tAmE.

பொருள்:     வாளரக்கன் இராவணன்; தன்னுடைய திக்கு விசயத்திற்கு இடையூறு மடுத்த கயிலை 
மலையை, அறிவில்லாமல் ஓடிப் பெயர்த்தெடுக்க முயலவும், அவனுடைய முடிகளும் தோள்களும் 
கரங்களும் நெரிந்து இற்றுப் போகும்படி கால்திருவிரல் ஊன்றி, நடுநடுங்கி, அவன் கையொடு 
வாயெடுத்து அலறிடச் செய்தவன்; கடிக்குளத்தில் எழுந்தருளி அருள் கொடுத்த   பேரருட்கூத்தனை 
ஏத்தி வழிபடுவார்; இறைவனின் எண்குணம் உடையவர் தாமே.

குறிப்புரை:     மடுத்த- (பகைவர் உடம்பின்) உட்புகுத்திய. இரு- முரிய. அருட்கூத்தன்
- ஞானநாடகமாடும்பிரான்.  குணம் - எண்குணம். 

    Raavanan, the king of Sri Lanka had a divine sword which could kill all 
his enemies and their army and forces. Without virtuous knowledge and prompted 
by egoism, he disturbed mount Kailash, to lift and keep it aside. At that moment, 
our Lord Civa pressed the top of His mount with His toe. Raavanan's ten heads 
and all shoulders were crushed and were about to be destroyed. At that time, 
Raavanan realised his mistakes and begged for pardon and worshipped our Lord 
with both his hands and cried. Our Lord Civa pardoned him and graced him with 
many boons. This Lord of Supreme Character is manifested in the temple in 
Thiru-k-kadik-kulam city. Those devotees who reach the city Thiru-k-kadik-kulam, 
go to the temple, praise our Lord and sing His fame will all be very virtuous 
people.

2602 .     நீரினார்கடற்றுயின்றவனயனொடுநிகழடிமுடிகாணார்             
    பாரினார்விசும்புறப்பரந்தெழுந்ததோர்பவளத்தின்படியாகிக் 
    காரினார்பொழில்சூழ்தருகடிக்குளத்துறையுங்கற்பகத்தின்றன் 
    சீரினார்கழலேத்தவல்லார்களைத்தீவினையடையாவே.        9

    நீரினார் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடிமுடி காணார்         
    பாரினார் விசும்புறப் பரந்து எழுந்ததோர் பவளத்தின் படியாகிக் 
    காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்றன் 
    சீரினார் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை அடையாவே.

    nIrin Ar kaTal-tuyinRavan, ayanoTu, nikaz aTi muTi kANAr; 
    pArin Ar vicumpu uRa, parantu ezuntatu Or pavaLattin paTi Aki, 
    kArin Ar pozil cuz taru kaTikkuLattu uRaiyum kaRpakattin tan 
    cIrin Ar kazal Etta vallArkaLait tIvinai aTaiyAvE.

பொருள்:     நீர் நிறைந்த கடலிடைத் துயின்றவனான திருமால் பிரமனோடு அடியும் 
முடியும்  காண இயலாதவாறு நிலம் முதல் விசும்புறப் பரந்து எழுந்த ஒப்பற்ற  பவள வடிவமதாகி, 
இருள் நிறங் கொண்ட பொழில்கள் சூழும் கடிக்குளத்தில் எழுந்தருளியிருக்கும் கற்பகத்தினுடைய 
பெருமையுடைய கழல்களை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா. 

குறிப்புரை:     கடல் துயின்றவன் - பாற்கடலில் யோக நித்திரை செய்யும் திருமால். 
விசும்பு - ஆகாயம். படி -உருவம். கற்பகத்தின் கழல் ஏத்தவல்லவர்களுக்கு வினை இல்லை.

    The tutelary deity Thirumaal who takes rest over the snake in the ocean, 
as well as Brahma tried their best to see our Lord's head and feet. They failed in 
their attempt and were unable to apprehend our Lord. At that moment, our Lord 
appeared before them as dazzling infinite supernal tall flame between the top most 
sky and the bottom of the earth. They both realised and became wearied. He is manifest 
in the temple in  Thiru-k-kadik-kulam city. His very famous holy feet are worshipped 
by sincere devotees who praise Him. They will never get their bad karma deeds, 
which only will leave them.

2603.     குண்டர்தம்மொடுசாக்கியர்சமணருங்குறியினில்நெறிநில்லா 
    மிண்டர்மிண்டுரைகேட்டவைமெய்யெனக்கொள்ளன்மின் விடமுண்ட 
    கண்டர்முண்டநன்மேனியர்கடிக்குளத்துறைதருமெம்மீசர்
    தொண்டர்தொண்டரைத்தொழுதடிபணிமின்கள்தூநெறியெளிதாமே.        10

    குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறிநில்லா 
    மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய் எனக் கொள்ளன்மின் விடம் உண்ட 
    கண்டர் முண்ட நன்மேனியர் கடிக்குளத்துறை தரும் எம் ஈசர் 
    தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே.

    kuNTar tammoTu cAkkiyar camaNarum, kuRiyinil neRi nillA 
    miNTar miNTu urai kETTu, avai mey enak koLLan min! viTam uNTa 
    kaNTar, muNTam nal mEniyar, kaTikkuLattu uRaitarum em Icar, 
    toNTar toNTarait tozutu aTi paNiminkaL! tU neRi eLitu AmE.

பொருள்:     குண்டர்களோடு சாக்கியரும் சமணரும் குறிக்கோளுடைய நெறியில் நில்லா 
மிண்டர்கள். அவர்களுடைய மிண்டுரை கேட்டு அவை மெய்யெனக் கொள்ளாதீர்; விடமுண்ட கண்டர்; 
திரிபுண்டரமாக நீறணிந்த அழகிய மேனியர்; கடிக்குளத்தில் உறைகின்ற எம்முடைய இறைவர்; 
அவருடைய தொண்டருக்குத் தொண்டரைத் தொழுது அடிபணிமின்கள். உங்களுக்குத் தூய 
நெறியாகிய சிவநெறி எளிதாகும். 

குறிப்புரை:     குறி- குறிக்கோள். தொண்டர் தொண்டர்- தொண்டர்க்குத்  தொண்டர். 
தூநெறி-திருநெறி,சிவநெறி. 

    The Jains and Buddhists are all goondas. They all carry wilful fault in the words.
Do not consider their preaching as divine words. Our Lord resting in the temple in 
Thiru-k-kadik-kulam city, imbibed the poison that came out of the ocean. He has applied 
the holy ashes over His body. Oh! Ye good people! go and worship in the city, the devotees 
of His devotees and prostrate over their feet. The pure divine grace of our Lord Civa will 
easily be with such devotees of devotees.

2604.     தனமலிபுகழ்தயங்குபூந்தராயவர்மன்னன்நற்சம்பந்தன் 
    மனமலிபுகழ்வண்டமிழ்மாலைகள்மாலதாய்மகிழ்வோடும்             
    கனமலிகடலோதம்வந்துலவியகடிக்குளத்தமர்வானை 
    இனமலிந்திசைபாடவல்லார்கள்போயிறைவனோடுறைவாரே.        11

    தனமலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நற்சம்பந்தன் 
    மனமலி புகழ்வண் தமிழ்மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்             
    கனமலி கடலோதம் வந்துலவிய கடிக்குளத்து அமர்வானை 
    இனமலிந் திசை பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே.

    tanam mali pukaz tayagku pUntarAyavar mannan--nal campantan- 
    manam mali pukaz vaN tamiz mAlaikaL mAl atu Ay makizvOTum, 
    kanam mali kaTal Otam vantu ulaviya kaTikkuLattu amarvAnai, 
    inam malintu icai pATa vallArkaL, pOy iRaivanOTu uRaivArE.

பொருள்:     செல்வமும் மிக்க புகழும் விளங்கும் பூந்தராய் மக்களின் தலைவன் சம்பந்தன் 
மனம் நிறைந்து புகழ்ந்த வளமான தமிழ் மாலைகளை அன்புடனும் மகிழ்ச்சியுடனும், மேகத்துடன் 
கடலோதம் வந்து உலவும் கடிக்குளத்து அமர்வானாகிய கற்பகத்தை அடியார் கூட்டத்தொடும் 
இசையுடன் பாட வல்லவர்கள் போய் இறைவனுடன் வாழ்வார்கள்.

குறிப்புரை:     செல்வமும் மிக்க புகழும். மாலது- அன்பு. கனம்- மேகம். இனம்- அடியார் கூட்டம்.

    Poontharai (one of the twelve names of Seerkaazhi) is a very rich town. The 
city is very famous around the earth. Those who live in this city, consider our saint 
Thiru-gnana-Sambandar as their chief king. He came to the temple in Thiru-k-kadik-kulam,
worshipped our Lord there. With full divine knowledge and fully contented heart he 
chanted in pure chaste Tamil the garland of ten verses. Those devotees who get attached 
to these ten Tamil verses of Thiru-gnana-Sambandar may visit this city with dashing 
waves on the banks of the ocean. Along with other devotees they may prostrate before 
our Lord and jointly chant these ten verses in good musical tone. They will live in the 
world of Lord Civa.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            104ஆம் பதிகம் முற்றிற்று
            End of 104th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத்தொடர் எண் : 241.                    பதிக எண் : 105

105. திருக்கீழ்வேளூர்                    105:THIRU-K-KEEZH-VELOOR

பண்: நட்டராகம்                        Pann:Natta Raagam

திருத்தல வரலாறு

    (வேள்- முருகப்பெருமான்) வழிபட்ட காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது காவிரித் 
தென்கரைத் தலங்களுள் எண்பத்து நான்காவது ஆகும். கீழ்வேளூர் தொடர்வண்டி நிலையத்திற்கு 
வடக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து செல்லும் பேருந்து வழியில் உள்ளது.
 நகரப் பேருந்துகளும் உள்ளன. இறைவரது திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் இவ்வூர்த் 
திருத்தாண்டகத்துள் எடுத்தாளப் பட்டுள்ளது. இறைவியாரது திருப்பெயர் வனமுலை நாயகி.

    இத்திருப்பெயரை ஞானசம்பந்தப் பெருந்தகையார் இவ்வூர்ப்பதிகம் இரண்டாம் 
திருப்பாட்டில் 'வாருலாவிய வனமுலையவளொடு' என்று எடுத்து ஏத்தியிருப்பது பெருமகிழ்ச்சிக்கு
 உரியதாகும். தீர்த்தம் சரவணப்பொய்கை. முருகவேள் பூசித்துப் பேறுபெற்ற பதி. அவருடைய 
பூசைக்கும் தவத்துக்கும் கெடுதியுண்டாகாதவாறு இறைவியார் துர்க்கையின் அம்சமாகக் 
காவல் பூண்டிருந்தார். அவர்க்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர். அவருடைய திருக்கோயில் 
முதல் பிரகாரத்தில் வடபக்கத்தில் இருக்கின்றது. இச்செய்தி,

    ‘மண்டுபே ரொளியான கேடிலியை
        யர்ச்சித்த வள்ளிநாயகன் வருகவே 
    மாகாளிகாத்த கீழ்வேளூரில் மாதவம்
        வளர்த்த வேலவன் வருகவே'

என்னும் இத்தலத்தைப்பற்றிய க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழால் அறியலாம். அகத்தியர், 
கூத்தப்பெருமானது வலத்திருவடியைக் கண்டு தரிசித்த பதியும் இதுவேயாகும்.

    குபேரனுக்குத் தனியாகக் கோயில் உள்ளமையால் அவனும் பூசித்துப் பேறுபெற்றிருக்க 
வேண்டும். இதற்கு சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு திருப்பதிகங்கள் 
இருக்கின்றன. இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் 
ஞானசம்பந்தப் பெருந்தகையார் கூறியுள்ளார். எனவே, கோயில் இறைவனார் இறைவியார்
திருப்பெயர்கள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.

பதிக வரலாறு

    நாகைக் காரோணத்தை வழிபட்டு வரும் காழிவேந்தர் கீழ்வேளூர் விமலரையும்
தரிசித்துப் பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2605.     மின்னுலாவியசடையினர்விடையினர்மிளிர்தருமரவோடும் 
    பன்னுலாவியமறையொலிநாவினர்கறையணிகண்டத்தர் 
    பொன்னுலாவியகொன்றையந்தாரினர்புகழ்மிகுகீழ்வேளூர் 
    உன்னுலாவியசிந்தையர்மேல்வினையோடிடவீடாமே         1

    மின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும் 
    பன்னுலாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர் 
    பொன்னுலாவிய கொன்றையம் தாரினர்புகழ்மிகு கீழ்வேளூர் 
    உன்னுலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடாமே.

    min ulAviya caTaiyinar, viTaiyinar, miLirtarum aravOTum 
    pan ulAviya maRaioli nAvinar, kaRai aNi kaNTattar, 
    pon ulAviya konRai am tArinar, pukaz miku kIzvELUr 
    un ulAviya cintaiyar mEl vinai OTiTa, vITu AmE.

பொருள்:     மின்னுதல் விளங்கிய சடையினர்; ஒளிரும் பாம்பணியுடன் எருது வாகனர்;
வேதத்தைப் பலமுறை ஓதும் நாவினர்; நஞ்சின் கறையை உடைய கண்டர்; பொன் போன்ற 
மகரந்தத் தாதினை உடைய கொன்றைப் பூ மாலையர் ஆகிய புகழ்மிகும் கீழ்வேளூர்ச் சிவனை 
உன்னுதல் நிலாவிய உள்ளத்தினரின்  வினைகள் நீங்கிப் போகவே வீடு ஆகும்.

குறிப்புரை:     உன் - உன்னுதல். திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு வினையில்லை. வீடுண்டு 
என்று அருளியது. இவ்வூர்ப்பெருமான் திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை 
உலகோர்க்கு உணர்த்துவதாகும்.

    Our Lord Civa's entangled hair is very bright like lightning. He loves to have 
a bull for His conveyance. He puts on His body snakes as jewellery. He chants the four
Vedas in musical tone with His tongue. His throat is dark blue in colour. He puts on
His body the garland made of gold-like Indian laburnum flowers. This city 
Thiru-k-keezh-veloor is very famous all over the earth. Our Lord Civa is manifest 
in the temple in this city. Those devotees who think of Him always in their mind 
will get rid of their bad deeds of karma and will get salvation.

2606.     நீருலாவியசடையிடையரவொடுமதிசிரநிரைமாலை 
    வாருலாவியவனமுலையவளொடுமணிசிலம்பவையார்க்க 
    ஏருலாவியஇறைவனதுறைவிட மெழில்திகழ்கீழ்வேளூர் 
    சீருலாவியசிந்தைசெய்தணைபவர்பிணியொடுவினைபோமே.    2    

    நீருலாவிய சடையிடை அரவொடு மதிசிர நிரைமாலை 
    வாருலாவிய வனமுலை அவளொடு மணிசிலம்பவை ஆர்க்க 
    ஏருலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் 
    சீருலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு வினைபோமே.        

    nIr ulAviya caTai iTai aravoTu, mati, ciram niraimAlai, 
    vAr ulAviya vanamulaiyavaLoTu maNi cilampu avai Arkka, 
    Er ulAviya iRaivanatu uRaivu iTam ezil tikaz kIzvELUr 
    cIr ulAviya cintai ceytu aNaipavar piNiyoTu vinai pOmE.

பொருள்:     உலவும் கங்கை நீர் தங்கிய சடை; அச்சடையின் இடையே பாம்பொடு சந்திரனும்; 
சிரங்கள் நிரலே அமைந்த மாலை ஆகியவற்றுடன், கச்சு நிலவும் முலையவளாகிய இறைவியுடன் 
மணிப்பரல்கள் உடைய சிலம்புகள் ஒலிக்க, அழகு நிறைந்த இறைவன் எழுந்தருளும் இடம் எழில்மிக்க 
கீழ்வேளூர். அதனைத் தியானித்து அடைபவரின் பிணிகளொடு வினைகளும் நீங்கிப் போகும்.

குறிப்புரை:     திருக்கீழ்வேளூரைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போம்.

    Our Lord Civa supports the river Ganges in His entangled locks of hair.
Along with that He puts on the snakes and the young moon. Also He puts on His 
head, the garland of skulls. He happily accommodates His consort Uma Devi, who
wears a corset over her soft breasts, on the left side of His body. He wears 
very graceful anklets, which make noise while He used to walk. This Lord is 
manifest in the temple in Thiru-k-keezh-veloor city. Those servitors, who think 
about the city in their mind and pray the Lord, will get rid of their all ailments 
and past bad deeds.

2607.     வெண்ணிலாமிகுவிரிசடையரவொடுவெள்ளெருக்கலர்மத்தம் 
    பண்ணிலாவியபாடலோடாடலர்பயில்புறுகீழ்வேளூர்ப் 
    பெண்ணிலாவியபாகனைப்பெருந்திருக்கோயிலெம்பெருமானை 
    உண்ணிலாவிநின்றுள்கியசிந்தையாருலகினிலுள்ளாரே.        3

    வெண்ணிலா மிகுவிரி சடை அரவொடு வெள் எருக்கலர் மத்தம் 
    பண்ணிலாவிய பாடலோடு ஆடலர் பயில்புறு கீழ்வேளூர்ப் 
    பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திருக்கோயில் எம்பெருமானை 
    உண்ணிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே.

    veN nilA miku viricaTai aravoTum, veL erukku, alar mattam, 
    paN nilAviya pATalOTu ATalar payil puRu kIzvELUr, 
    peN nilAviya pAkanai, peruntirukkOyil emperumAnai, 
    uL-nilAvi ninRu uLkiya cintaiyAr ulakinil uLLArE.

பொருள்:     வெண்பிறை தங்கிய விரிந்த சடையில் பாம்புடன் வெள்ளெருக்கம்மலர்; ஊமத்தை
 மலர்; பண் பொருந்திய பாடலினொடு ஆடுதலும் உடையவர் ஆகிய கீழ்வேளூரில் எழுந்தருளியிருக்கும் 
மாதொரு பாகனை, பெருந்திருக்கோயில் எம்பெருமானை உள்ளத்தின் உள்ளே நிலவச் செய்து உள்கும் 
பயிற்சி உடையவரே உள்ளார் எனும் பெருமை உடையர்.

குறிப்புரை:     கீழ்வேளூரில் பெருந்திருக்கோவிலில் எழுந்தருளிய அம்மையப்பரை உள்கும் 
பயிற்சி உடையார் எவ்வுலகில் இருப்பினும் சிவலோகத்தில் இருப்பவரேயாவர். ‘நரகம் புகினும் 
எள்ளேன்  திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா! உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது 
எங்கள் உத்தமனே'  திருவாசகம் 6-2. 

    Our Lord Civa retains the moon in His broad entangled hair locks which gives 
the white bright moon light. Along with the moon, He puts on the snake, white yercum 
flowers, datura flowers, on the hair. He is manifest in the big temple in Thiru-k-keezh- 
veloor city along with His consort. Those devotees, with the inner most divine thoughts 
on our Lord, may always make a practice of it, they will live in this world firmly with 
all virtues and will also live in Siva Loka.

2608.     சேடுலாவியகங்கையைச்சடையிடைத்தொங்கவைத்தழகாக 
    நாடுலாவியபலிகொளுநாதனார்நலமிகுகீழ்வேளூர்ப் 
    பீடுலாவியபெருமையர்பெருந்திருக்கோயிலுட்பிரியாது 
    நீடுலாவியநிமலனைப்பணிபவர்நிலைமிகப்பெறுவாரே.        4

    சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத்தொங்க வைத்தழகாக 
    நாடு உலாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளுர்ப் 
    பீடு உலாவிய பெருமையர் பெருந்திருக்கோயில் உட்பிரியாது 
    நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.

    cETu ulAviya kagkaiyaic caTai iTait togkavaittu azaku Aka 
    nATu ulAviya pali koLum nAtanAr, nalam miku kIzvELUrp 
    pITu ulAviya perumaiyar, peruntirukkOyilin piriyAtu 
    nITu ulAviya nimalanaip paNipavar nilai mikap peRuvArE.

பொருள்:     பெருமையுடைய கங்கையைச் சடையில் ஒழுங்கு பெற ஒழுக வைத்து, அழகாக 
நாட்டில் அலைந்து பிச்சை கொள்ளும் தலைவர்; அழகிய கீழ்வேளூரில் வலிமையுடைய 
பெருமையர்; பெருந்திருக்கோயிலைப் பிரியாது நெடிது இருக்கும் மலமற்றவனைப் பணிபவர் 
நிலைத்த பேரின்ப வாழ்வு மிகப் பெறுவர்.

குறிப்புரை:     சேடு- பெருமை. பீடு- வலிமை. நீடு- அழியாமை. கீழ்வேளூர்ப் பெருமானார்
பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்பவாழ்வு மிகப் பெறுவர். 

    Our Lord Civa supports the very famous river Ganges in His hair on the head. 
He is the Supreme Being, goes round the world in an appealing posture and gets alms 
from all over the world. Our Lord is manifest in the big good temple. He is the 
Supreme Being with very great fame. Those servitors who worship our Lord without 
any break will get permanent heavenly joy.

2609.     துன்றுவார்சடைச்சுடர்மதிநகுதலைவடமணிசிரமாலை 
    மன்றுலாவியமாதவரினிதியல்மணமிகுகீழ்வேளூர் 
    நின்றுநீடியபெருந்திருக்கோயிலின்நிமலனைநினைவோடும் 
    சென்றுலாவிநின்றேத்தவல்லார்வினைதேய்வதுதிணமாமே.        5

    துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை 
    மன்று உலாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளூர் 
    நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை நினைவோடும் 
    சென்று உலாவி நின்று ஏத்தவல்லார் வினை தேய்வது திணமாமே.

    tunRu vArcaTaic cuTar mati, nakutalai, vaTam aNi ciramAlai, 
    manRu ulAviya mA tavarinitu iyal maNam miku kIzvELUr 
    ninRu nITiya peruntirukkOyilin nimalanai, ninaivOTum 
    cenRu ulAvi ninRu, Etta vallAr vinai tEyvatu tiNam AmE.

பொருள்:     நீண்ட சடையுடன் நெருங்கிய வெண்பிறை, பிரம கபாலம், அக்குமணி, 
சிரமாலை ஆகியவற்றை அணிந்து, மன்றினுள் உலாவிய மாதவத்தர் ஆகிய சிவபிரான் 
இனிது இயங்குகின்ற கீழ்வேளூரில் நெடிது நிற்கும் பெருந்திருக்கோயிலின் நிமலனை 
வேறு  நினைவின்றி அவரையே ஏத்த வல்லாரின் வினை  தேய்ந்தொழிவது திண்ணமே.

குறிப்புரை:     நகுதலை - பிரமகபாலம். வடம் - கயிறு. சிரம் - தலைகள். திருக்கோயில் மன்றத்துள் 
மாதவத்தோர் உலாவிய சிறப்பு உணர்த்திற்று. சிரமாலையை உடையவரும் மன்றுள் நடமாடியவரும் 
ஆகிய மாதவர் எனச் சிவபெருமானைக் குறித்ததாயின் நிமலன் என்னும் ஒருமைக்கு ஏலாது,

    Our Lord Civa retains the moon in the dense and long entangled locks of hair.
He also puts on a garland of skulls, gems twined in a rope, which twine over as head wear. 
The highly skilled scholars performing penance spend their time usefully in the place of 
assembly. They come to the temple where our Lord, the immaculate Supreme Being, exhibits 
Himself. Those servitors who think of our Lord with concentrated mind and pray and worship 
Him will definitely get rid of their past bad deeds.

2610.     கொத்துலாவியகுழல்திகழ்சடையனைக்கூத்தனைமகிழ்ந்துள்கித் 
    தொத்துலாவியநூலணிமார்பினர்தொழுதெழுகீழ்வேளூர்ப் 
    பித்துலாவியபத்தர்கள்பேணியபெருந்திருக்கோயில்மன்னும் 
    முத்துலாவியவித்தினையேத்துமின்முடுகியஇடர்போமே.        6

    கொத்து உலாவிய குழல் திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்து உள்கித் 
    தொத்து உலாவிய நூலணி மார்பினர் தொழுது எழுகீழ்வேளூர்ப் 
    பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னும் 
    முத்து உலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர்போமே.

    kottu ulAviya kuzal tikaz caTaiyanai, kUttanai, makizntu uLkit 
    tottu ulAviya nUl aNi mArpinar tozutu ezu kIzvELUr- 
    pittu ulAviya pattarkaL pENiya--peruntirukkOyil mannum 
    muttu ulAviya vittinai, Ettumin! muTukiya iTar pOmE.

பொருள்:     பூங்கொத்துக்கள் நிலவும் குழல் திகழும் சடையனை; கூத்தனை; உளமகிழ்ச்சியுடன் 
நினைந்து கொத்தான பூணூலினை அணிந்த மார்பினராகிய மறையோர் தொழுதெழும் கீழ்வேளூரில் 
திருவடிப் பித்துக் கொண்ட பத்தர்கள் விரும்பிய பெருந்திருக்கோயிலில் நிலைபெற்றிருக்கும் 
முத்தினைப் பவளத்தை வழிபடுங்கள்.  உங்களை நெருக்கிய துன்பங்கள் ஒழிந்து போகும்.

குறிப்புரை:     கொத்து- பூங்கொத்துக்கள். தொத்து - கூடுதல். பித்து - திருவடிப்பற்று. முத்து... வித்து - 
'முத்தினைப் பவளத்தை' 'வித்தாம் முளையாகும் வேரேதானாம்'.

    Our Lord Civa puts on clusters of flowers on His entangled locks of hair. 
His avocation is to dance whenever He wants. He is manifest in the big sacred temple 
in Thiru-k-keezh-veloor. In this city Brahmin devotees who wear the sacred thread 
on their chest think and melt in their mind about our Lord. They worship Him in the 
temple. He is like pearls. He is the seed of everything in this world. Oh! Ye devotees! 
praise our Lord. Any bad karma deeds which approach you and persistently follow you 
will be discarded.

2611.     பிறைநிலாவியசடையிடைப்பின்னலும்வன்னியுந்துன்னாரும் 
    கறைநிலாவியகண்டரெண்டோளினர்காதல் செய்கீழ்வேளூர் 
    மறைநிலாவிய அந்தணர்மலிதருபெருந்திருக்கோயில்மன்னும் 
    நிறைநிலாவியஈசனைநேசத்தால்நினைபவர்வினைபோமே.         7

    பிறை நிலாவிய சடை இடைப்பின்னலும் வன்னியும் துன்னாரும் 
    கறை நிலாவிய கண்ட ரெண்டோளினர் காதல் செய்கீழ்வேளுர் 
    மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில் மன்னும் 
    நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.

    piRai nilAviya caTai iTaip pinnalum vanniyum tun Arum 
    kaRai nilAviya kaNTar, eNtOLinar, kAtal cey kIzvELUr- 
    maRai nilAviya antaNar malitaru-peruntirukkOyil mannum 
    niRai nilAviya Icanai nEcattAl ninaipavar vinai pOmE.

பொருள்:     பிறை தங்கிய சடையில் பின்னலும் வன்னியும் நெருங்கிய ஆத்தி மலரும் உடையர்; 
நஞ்சின் கறை தங்கிய கண்டர்; எட்டுத் தோளினர்; அவர் விரும்பும் கீழ்வேளூர் மறை பயின்ற அந்தணர் 
மிக்க பெருந்திருக்கோயில், நிலைபெற்று இருக்கும் குறைவிலா நிறைவு உடைய ஈசனை அன்பால் 
நினைபவர் வினைநீங்கிப் போகும்.

குறிப்புரை:     'மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்' என்றதால், அக்காலத்து 
வேதியர் சிறப்பும் அவர்க்குள்ள கோயில் வாழ்வும் புலப்படும். நின்ற - 'குறைவிலா நிறைவு' 
 அவ்வத்தேவரை அவ்வப்புவனத்தில் அவரவர்க்கு உரிய தொழிலில் நிறுத்துவதாம். 

    Our Lord Civa retains the moon in His entangled hair locks. Along with this He 
supports the river Ganges and puts on leaves of the summer tree also in His matted hair. 
His throat is dark blue in colour. He has immaculate body. He likes the city full of Vedic 
scholars by Brahmins and also the big sacred temple in Thiru-k-keezh-veloor city. 
He has no deficiency and no defect. He is perfect and noble minded. He is flawless 
perfection. Those people who think of our Lord with sincere love and devotion will 
get rid of their bad karma.

2612.     மலைநிலாவியமைந்தனம்மலையினையெடுத்தலுமரக்கன்றன் 
    தலையெலாநெரிந்தலறிடவூன்றினானுறைதருகீழ்வேளூர்க் 
    கலைநிலாவியநாவினர்காதல்செய்பெருந்திருக்கோயிலுள் 
    நிலைநிலாவியஈசனைநேசத்தால்நினையவல்வினைபோமே.        8

    மலை நிலாவிய மைந்தனம் மலையினை எடுத்தலும் அரக்கன்தன் 
    தலை எலாநெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளுர்க் 
    கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள் 
    நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே.

    malai nilAviya maintan am malaiyinai eTuttalum, arakkantan
    talai elAm nerintu alaRiTa, UnRinAn uRaitaru kIzvELUr- 
    kalai nilAviya nAvinar kAtal cey--peruntirukkOyiluL 
    nilai nilAviya Icanai nEcattAl ninaiya, valvinai pOmE.

பொருள்:     மலைபோலும் வலிமை உடையவன்; கயிலை மலையினை எடுக்கலுற்ற 
அவ்வரக்கன் இராவணனுடைய தலை பத்தினையும் நெரித்து அலறிட விரல் ஊன்றினான்; 
அவன் உறைகின்ற கீழ்வேளூரில் சகல கலைகளும் ஓதிய நாவினர். பத்தி செய்கின்ற 
பெருந்திருக்கோயிலுள் நிலைத்து உறைகின்ற ஈசன்; அவனைப் பத்தியுடன் நினைய 
வல்லவரின் வினைகள் நீங்கிப் போகும்.

குறிப்புரை:     மைந்தன்- வீரன், அழகன், வலியன், மலைநிலாவிய மைந்தன்-மலைபோலுந் 
தோற்றமுடைய (ஞான) வீரன். பத்துத் தலைகளும் என்னத் 'தலையெல்லாம்' என்று 
குறித்தருளினார்.  தலைநிலாவிய நாவினர் - வேதாகமாங்க பிராணேதிகாசாதி சகல 
கலைகளுமுணர்ந்த நாவினர்.

    Our Lord Civa displays Himself as the best warrior manifested on mount Kailash. 
Raavanan tried to lift and displace Kailash mountain. Then our Lord pressed the 
mountaintop with His toe. But his heads were all crushed and he bled. This Lord 
Civa is manifest in the big sacred temple of Thiru-k-keezh-veloor. He permanently 
displays Himself there. The scholars of the city who have mastered all the subjects 
such as Vedas, puranaas, ithikasams chant all these arts and sciences. They love and 
worship our Lord in this city. They will get rid of their strong bad deeds of karma.

2613.     மஞ்சுலாவியகடற்கிடந்தவனொடுமலரவன்காண்பொண்ணாப் 
    பஞ்சுலாவியமெல்லடிப்பார்ப்பதிபாகனைப்பரிவோடும் 
    செஞ்சொலார்பலர்பரவியதொல்புகழ்மல்கியகீழ்வேளூர் 
    நஞ்சுலாவியகண்டனைநணுகுமின்நடலைகள்நணுகாவே.        9

    மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பொண்ணாப் 
    பஞ்சு உலாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவோடும் 
    செஞ்சொல் ஆர்பலர் பரவிய தொல் புகழ்மல்கிய கீழ்வேளூர் 
    நஞ்சு உலாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.

    manjcu ulAviya kaTal kiTantavanoTu malaravan kANpu oNNAp 
    panjcu ulAviya mel aTip pArppati pAkanai, parivOTum 
    cenjcolAr palar paraviya tolpukaz malkiya kIzvELUr- 
    nanjcu ulAviya kaNTanai, naNukumin! naTalaikaL naNukAvE.

பொருள்:     மேகம் தவழும் கடலில் கிடப்பவனாகிய திருமால்; அவனோடு பிரமன். 
இருவராலும்  காண முடியாதவனும் பஞ்சு போலும் மென்மையான பாதத்தை உடைய 
பார்வதியைத் தன் பாகத்தில் கொண்டவனும் ஆகிய சிவனை,பத்தியுடன் செவ்விய 
சொற்களைப் பேசும் பலரும் வழிபட்டேத்திய பெருமை நிறைந்த கீழ்வேளூரில் நஞ்சு 
தங்கிய கண்டனை அணுகுங்கள். துன்பங்கள் உம்மை அணுகா.

குறிப்புரை:     கடல்- பாற்கடல். காண்பு- பார்வை. 'காண்பினொடு நேத்திரங்கள் பணித்தருள
வேண்டும்' 'கண்கள் காண்பு ஒழிந்து' 2. 97-5.

    The passing clouds move over the ocean where Thirumaal takes rest. Brahma
stays in the lotus flower. Both tried their best to search our Lord, but failed. 
Our Lord was invisible to them. Our Lord is concomitant with His consort Paarvathi Devi. 
Her feet are soft like cotton. She walks very gently. His throat is dark blue in colour. 
In this city virtuous scholars extol and worship our Lord. Our sufferings will never 
trouble us, only will disappear, if we also worship this Lord Civan.

2614.     சீறுலாவியதலையினர்நிலையிலாஅமணர்கள்சீவரத்தார் 
    வீறிலாதவெஞ்சொற்பலவிரும்பன்மின்சுரும்பமர்கீழ்வேளூர் 
    ஏறுலாவியகொடியனையேதமில்பெருந்திருக்கோயில்மன்னு 
    பேறுலாவியபெருமையன்திருவடிபேணுமின்தவமாமே.        10

    சீறு உலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரத்தார் 
    வீறு இலாத வெஞ்சொற் பலவிரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர் 
    ஏறு உலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னு 
    பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே.

    cIRu ulAviya talaiyinar nilai ilA amaNarkaL, cIvarattAr, 
    vIRu ilAta venjcol pala virumpanmin! curumpu amar kIzvELUr- 
    ERu ulAviya koTiyanai--Etamil peruntirukkOyil mannu 
    pERu ulAviya perumaiyan tiruvaTi pENumin! tavam AmE.

பொருள்:     தாறுமாறான தலைமுடியினர்; நிலையான கொள்கையில்லாத சமணர்; 
துவரூட்டிய ஆடையராகிய தேரர் ஆகியோரின் பெருமையில்லாத கொடிய சொற்கள் 
பலவற்றையும்  விரும்பாதொழிக. வண்டுகள் மொய்க்கும் கீழ்வேளூர் விடைக்கொடியன் ,
ஆன்மாக்களுக்குரிய பேறு உலாவிய பெருமையன்; குற்றமில்லாத பெருந்திருக்கோயிலில் 
இருப்பவன் ஆகிய சிவனின் திருவடியைப் போற்றுங்கள். அதுவே உண்மைத் தவம்.

குறிப்புரை:     சீறு-  முதனிலைத் தொழிலாகுபெயர். சீவரார் - துவரூட்டிய சீலையர் (தேரர்) .
வீறு- பெருமை,வெற்றியுமாம்.  பேறு - ஆன்மாக்களுக்குரிய பேறு (சிவானந்தம்). பேறு 
உலாவிய பெருமையன். ஆனந்தம் நிகழும் பெருமையை உடைய பரமசிவன்.

    The Jains in the city keep themselves baldheaded. Their words and actions 
are all false. The Buddhists wear the red ochre cloth. Do not believe their words 
of no virtue. Our Lord is manifest in the big sacred temple of Thiru-k-keezh-veloor 
with a flag which has the bull figure. He is the Supreme Being, graces His devotees 
with endless blessings. He is the Chief for all. Oh ye people! Worship the holy 
feet of Lord Civa. This is the only powerful austerity.

2615.     குருண்டவார்குழற்சடையுடைக்குழகனை அழகமர்கீழ்வேளூர்த் 
    திரண்டமாமறையவர்தொழும்பெருந்திருக்கோயிலெம்பெருமானை 
    இருண்டமேதியினினமிகுவயல்மல்குபுகலிமன்சம்பந்தன் 
    தெருண்டபாடல்வல்லாரவர்சிவகதிபெறுவதுதிடமாமே.     11

    குருண்ட வார்குழல் சடைஉடைக் குழகனை அழகமர் கீழ்வேளுர்த் 
    திரண்ட மாமறையவர் தொழும் பெருந்திருக்கோயில் எம்பெருமானை 
    இருண்ட மேதியினின மிகுவயல் மல்கு புகலி மன்சம்பந்தன் 
    தெருண்ட பாடல் வல்லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.

    kuruNTa vAr kuzal caTai uTaik kuzakanai, azaku amar kIzvELUrt 
    tiraNTa mA maRaiyavar tozum peruntirukkOyil emperumAnai,
    iruNTa mEtiyin inam miku vayal malku pukali man campantan 
    teruNTa pATal vallAr avar, civakati peRuvatu tiTam AmE.

பொருள்:     முன் கொண்டையும் நீண்ட குழலும் சேர்ந்த சடை கொண்ட இளைஞன். 
அழகு குடியிருக்கும் கீழ்வேளூரில் திரண்ட மறையவர்கள் தொழும் பெருந்திருக்கோயிலில் 
வீற்றிருக்கும் எம்முடைய பெருமான் ஆகிய சிவனை, இருள்போற்கரிய எருமைகள் மேயும் 
வயல்கள் மிகுந்த புகலிக்குத் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய ஞானம் நிறைந்த 
பாடல்களை வல்லவர் சிவகதி பெறுதல் உறுதி.

குறிப்புரை:     குருண்டவார் குழற்சடைக் குழகன்' - 'குருள்குஞ்சி' (தி. 2 ப. 116 பா. 4). 
குழகன்-இளையன், அழகன். புகலி - சீகாழி. மன் - இறைவன். தெருண்ட - தெளிந்த, 

    Our Lord's matted hair is curved and dishevelled. He is the youngest Lord,
manifested in the attractive big sacred temple in Thiru-k-keezh-veloor city.
Our saint Thiru-gnana-Sambandar is the chief of the city Pugali (Seerkaazhi). 
In this city black buffaloes are in large numbers. The paddy fields are plenty. 
He chanted these sacred and elaborate verses on our Lord Civa. Those devotees 
who can memorise and chant these songs on our Lord will definitely get salvation.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            105ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 105th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 242                பதிக எண்: 106. 

106. திருவலஞ்சுழி                106. THIRU-VALAM-CHUZHI

பண் : நட்டராகம்                     Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 138ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    திருநல்லூரில் மீண்டும் வந்து அணைந்து வணங்கி மகிழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி 
 நாயனார் திருவலஞ்சுழியில் எழுந்தருள்வதை அறிந்த அத்தலத்து மெய்யன்பர்கள் எதிர்கொண்டனர். 
சூழ்ந்தனர். அச்சூழல் வெண்மதியை வெண்மேகக்கூட்டம் சூழ்ந்த காட்சி போல் இருந்தது. கலந்த 
அன்பர்கள் தொழுது எழுந்தனர். கவுணியர் தலைவர் கும்பிட்டுக் கொண்டே திருவலஞ்சுழிக் 
கோபுரத்தை இறைஞ்சிக் கோயிலினுள் புகுந்தார். புக்க அப்பெரியோர் சிவபிரானை வினவும் 
பொருளுடையதாகப் பாடியதை ஊனமில்லாத இசையுடன் விளக்கியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2616.     என்னபுண்ணியஞ்செய்தனைநெஞ்சமேயிருங்கடல்வையத்து 
    முன்னநீபுரிநல்வினைப்பயனிடைமுழுமணித்தரளங்கள் 
    மன்னுகாவிரிசூழ்திருவலஞ்சுழியிடமாகக் 
    கொண்டநாதன் மெய்த்தொழில்புரிதொண்டரோடினிதிருந்தமையாலே.    1

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து 
    முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்         
    மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி இடமாகக்  
    கொண்ட நாதன் மெய்த்தொழில் புரிதொண்டரோடு இனிது இருந்தமையாலே

    enna puNNiyam ceytanai--nenjcamE! irugkaTal vaiyattu, 
    munnam nI puri nalvinaip payan iTai, muzumaNittaraLagkaL 
    mannu kAviri cUz tiru valanjcuzi iTamAkak 
    koNTa nAtan  meitozil puritontarOTu iniTu iruntamaiyAlE.

பொருள்:     நெஞ்சமே!  பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் காவிரி ஆறு பாயும் 
திருவலஞ்சுழி வாணனை வாயாரப் பலபன்னி ஆதரித்தும் ஏத்தியும் பாடியும் நீ வழிபடுவதற்கு 
முற்பிறவிகளிலே நீ செய்துள்ள நல்வினைப் பயன்களில் எத்தகைய  புண்ணியம் செய்துள்ளாய்? 

குறிப்புரை:     நெஞ்சமே! நீ (இவ்) வையத்து, திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி ஆதரித்து 
ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே என்ன புண்ணியஞ் செய்தனை? புண்ணியஞ் செய்ததா அன்றா 
என்னும் ஐயம் இல்லை. பல்வகைப் புண்ணியத்துள் இவ்வழிபாட்டிற்குரிய புண்ணியம் யாதென்பதே 
ஐயம். 'நல்வினைப் பயன்' என்று கொண்ட முடிவே அதற்குச் சான்றாயிற்று. அந்நல்வினையுள் யாது 
என்பது கருத்து. இத்திருமுறையுள் 79ஆவது திருப்பதிகத்துள் வரும் பல திருப்பாடலுள் 'பேதைமார்
போலநீ வெள்கினாயே' 'மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்' என்றுள்ள சிறப்பையும் அவ்வுண்மையைக் 
குறித்தருளக் கருதிய ஸ்ரீசேக்கிழார் பெருமானார், 'அவமிலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி' 
என்று அருளியதையும் உணர்ந்தால், நல்வினை பற்றிய ஐயம் இல்லாமையும் திருஞானசம்பந்தமூர்த்தி 
நாயனாருடைய திருவுள்ளத்தை நாம் உணரத்தகும் முறைமையும் தெளிவாகும். வாயாரப் பன்னுதல் 
பாடுதல் - வாக்கின் வினை. ஆதரித்தல் - மனத்தின்றொழில். ஏத்துதல் - காயத்தின் செயல்.

    Oh my dear heart! You were born in this world. What virtuous deed have you done 
in your life when you live in this world, which is surrounded by deep oceans! You had 
the opportunity to pay obeisance to our Lord Civa who is manifest in the temple in
Thiru-valam-chuli city. You get chances to show your respectful affection to Him,
to chant His fame, to prostrate before Him and to worship Him. His temple is surrounded 
by the river Cauvery, which brings fully matured and refined  gems, pearls and
other good articles. Oh my dear heart! a lot of virtuous deeds you have done, that 
perhaps must have resulted in your good experience. What are the good deeds among 
the many that have now brought this blissful experience? I wonder at the deed 
which has given me this joyful experience.

2617.    விண்டொழிந்தனநம்முடைவல்வினைவிரிகடல்வருநஞ்சம் 
    உண்டிறைஞ்சுவானவர்தமைத்தாங்கியஇறைவனையுலகத்தில் 
    வண்டுவாழ்குழல்மங்கையொர்பங்கனைவலஞ்சுழியிடமாகக் 
    கொண்டநாதன்மெய்த்தொழில்புரிதொண்டரோடினிதிருந்தமையாலே.        2

    விண்டொழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம் 
    உண்டிறைஞ்சு வானவர் தமைத்தாங்கிய இறைவனை உலகத்தில் 
    வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனைவலம் சுழியிடமாகக் 
    கொண்ட நாதன் மெய்த்தொழில் புரிதொண்டரோடு இனிது இருந்தமையாலே.

    viNTu ozintana, nammuTai valvinai--virikaTal varu nanjcam 
    uNTu iRainjcu vAnavar tamait tAgkiya iRaivanai, ulakattil 
    vaNTu vAz kuzal magkai orpagkanai, valanjcuzi iTam Akak 
    koNTa nAtan, meyttozil puri toNTarOTu initu iruntamaiyAlE.

பொருள்:     அகன்ற பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, தன்னை இறைஞ்சிய 
வானவர்களைக் காத்த இறைவனை, இவ்வுலகத்தில் வண்டு வாழ்கின்ற குழலுடைய  
மங்கையாகிய அம்மையைத் தன்பங்கில் கொண்டவனைத் திருவலஞ்சுழியைத் தன் 
இருப்பிடமாகக் கொண்டவனை, உடையானாகக் கொண்டு அவனுக்கு உண்மையான 
அடிமைத் தொழில் விரும்பிப் புரிகின்ற மெய்த்தொண்டரோடு மகிழ்ச்சியுடன் 
இருந்தமையாலே நம்முடைய வல்வினைகளாயின விண்டு ஒழிந்தன.

குறிப்புரை:     இனிதிருந்தமையாலே விண்டொழிந்தன வல்வினை. விண்டு - நீங்கி. 
கடல் - பாற்கடல். இறைஞ்சு வானவர்- வழிபடும் விண்ணவர். தாங்கிய - நஞ்சுண்டு காத்தருளிய. 
'வண்டார் குழலி'- தேவியார் திருப்பெயர். அவை கோட்டாறு, கோளிலி, பிரமபுரம், மருகல் 
என்பவை. மெய்த்தொழில்- உண்மைத் தொண்டு.

    Our Lord Civa imbibed the poison that came out of the ocean and saved the
devas and all other celestials. He is the consort of goddess Uma. He is manifest 
in the temple situated in Thiru-valam-chuli city and exhibits Himself there. 
Worship our Lord Civa in this temple. You have now joined the true servitors who 
sincerely participated in their real service.You have received their favour and 
stayed jointly with them during their service. Because of this fervor, definitely 
our bad karma will get eliminated and we are freed. 

2618.     திருந்தலார்புரந்தீயெழச்செறுவனவிறலின்கணடியாரைப் 
    பரிந்துகாப்பனபத்தியில்வருவனமத்தமாம்பிணிநோய்க்கு 
    மருந்துமாவனமந்திரமாவனவலஞ்சுழியிடமாக 
    இருந்தநாயகனிமையவரேத்தியஇணையடித்தலந்தானே.        3    

    திருந்தலார் புரந்தீயெழச் செறுவன விறலின் கணடியாரைப் 
    பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு 
    மருந்து மாவன மந்திரமாவன வலஞ்சுழி இடமாக 
    இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலந்தானே.        

    tiruntalAr puram tI ezac ceRuvana; viRalin kaN aTiyAraip         
    parintu kAppana; pattiyil varuvana; mattam Am piNinOykku 
    maruntum Avana; mantiram Avana--valanjcuzi iTam Aka 
    irunta nAyakan, imaiyavar Ettiya, iNai aTittalam tAnE.            

பொருள்:     திருவலஞ்சுழியைத் தன்  இடமாகக் கொண்டு இருந்தருளும் நாயகனின், 
தேவர்களும் தொழுதேத்திய திருவடிகளே, பகைவரின் முப்புரங்களையும் நெருப்பில் 
எரிந்தொழிய அழிப்பன. அடியவர்களைப் பெருமையுடன் வாழக் கருணையுடன் 
காப்பன; சிவபத்தியால் வருவன; உன்மத்தமாகிய பிணிக்கு மருந்தும் ஆவன. 
மந்திரமும்  ஆவன.

குறிப்புரை:    திருந்தலார்- பகைவர். விறல்- பெருமை, வெற்றி. பரிந்து- இரங்கி. 
பத்தி - சிவபத்தி. 'பத்தி வலையிற் படுவோன் காண்க'. மத்தம்- மயக்கம். பிணியும் நோயும் 
மயக்கத்தால் வருவனவே. தெளிவு நோயை விளைவிக்காது. இணையடித் தலந்தான் 
புரம்செறுவன, அடியாரைக் காப்பன பத்தியில் வருவன. நோய்க்கு மருந்தாவன, மந்திரமாவன 
என்க. அப்பர் அருளிய 'சிந்திப்பரியன' என்பது முதலிய இருபது திருவிருத்தங்களையும்
இங்கு எண்ணுக. 

    Our Lord Civa is manifest in the temple in Thiru-valam-chuli city. The devas
praise and worship Him. His holy feet destroyed the three fortresses of the asuras who 
were His antagonists. He graces His devotees. He gives His appearance in the hearts of 
those who do sincere service to Him. He is the medicine for all lapses and ailments 
caused by delusions.

2619.     கறைகொள்கண்டத்தர்காய்கதிர்நிறத்தினரறத்திறமுனிவர்க்கன் 
    றிறைவராலிடைநீழலிலிருந்துகந்தினிதருள்பெருமானார் 
    மறைகளோதுவர்வருபுனல்வலஞ்சுழியிடமகிழ்ந்தருங்கானத் 
    தறைகழல்சிலம்பார்க்கநின்றாடிய அற்புதமறியோமே.         4

    கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்று 
    இறைவரால் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள்பெருமானார் 
    மறைகளோதுவர் வருபுனல் வலஞ்சுழி இடமகிழ்ந்தருங்கானத் 
    தறை கழல் சிலம்பு ஆர்க்க நின்றாடிய அற்புதமறியோமே.

    kaRai koL kaNTattar; kAykatir niRattinar; aRattiRam munivarkku anRu- 
    iRaivar--Al iTai nIzalil iruntu ukantu initu aruL perumAnAr; 
    maRaikaL Otuvar; varupunal valanjcuzi iTam makizntu, arugkAnattu, 
    aRai kazal cilampu Arkka, ninRu ATiya aRputam aRiyOmE!

பொருள்:     நஞ்சினால் கறுத்த கண்டத்தை உடையவர்; செஞ்சூரியனின் நிறத்தவர்;: 
அன்று ஆலமரத்தில் நீழலில் முனிவர்களுக்கு அறத்தின் கூறுபாடுகளை மகிழ்வுடன் இனிது 
அளித்து அருளியவர்; வேதம் ஓதுவர் ஆகிய பெருமானார் ஆகிய இறைவர், புதுவெள்ளம் 
பாய்கின்ற திருவலஞ்சுழியினை இடமாக மகிழ்ந்து, அரிய கானத்தில் ஒலிக்கின்ற கழலும் 
சிலம்பும் ஆர்க்க நின்றாடிய அற்புதத்தை அறியோம்.

குறிப்புரை:     கறை- நஞ்சாலாய கறுப்பு. கதிர்- சூரியன். அறத்திறம் - தருமங்களின் 
வகைகளும் வேதாகம நூற்பொருளின் கூறுபாடும். கழல் சிலம்பு - உம்மைத்தொகை.

    Our Lord Civa is known as Neelakandar; His body is of red colour. Once He gave 
religious and moral teachings about divine morality and about virtuous deeds to the four 
saints. He is the author of the four Vedas. Such a Lord is manifest in Thiru-valam-chuli. 
Here He dances with His anklets. We are unable to understand His wonderful prowess 
to do all such things.

2620.     மண்ணர்நீரர்வண்காற்றினராற்றலாமெரியுருவொருபாகம் 
    பெண்ணராணெனத்தெரிவருவடிவினர்பெருங்கடற்பவளம்போல் 
    வண்ணராகிலும்வலஞ்சுழிபிரிகிலார்பரிபவர்மனம்புக்க 
    எண்ணராகிலுமெனப்பலஇயம்புவரிணையடிதொழுவாரே.        5

    மண்ணர் நீரர் வண் காற்றினர் ஆற்றலாம் எரியுரு ஒருபாகம் 
    பெண்ணர் ஆண் எனத் தெரிவரு வடிவினர் பெருங்கடல் பவளம்போல் 
    வண்ணராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க 
    எண்ணராகிலும் எனப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே.

    maNNar; nIrar; vaN; kARRinar; ARRal Am eri uru; orupAkam 
    peNNar; AN enat terivu aru vaTivinar; perugkaTal pavaLam pOl 
    vaNNar; Akilum, valanjcuzi pirikilAr; paripavar manam pukka 
    eNNar; Akilum, enaip pala iyampuvar, iNai aTi tozuvArE.

பொருள்:     மண் முதல் பஞ்ச பூதங்களிலும் பூதரூபமாக இருப்பவர்; ஒரு பாகம் 
பெண்ணுருவினர்; ஆணோ பெண்ணோ எனத் தெரிய முடியாத வடிவினர்; பெரிய கடலில் 
விளையும் பவளம் போன்ற நிறத்தினர்; திருவலஞ்சுழியைப் பிரியாது உறைபவர்; தன் 
தாளிணைகளைத் தொழும் எளியவர் மனம் புகும் எண்ணமுடையவர்; என இயல்பு 
பலவும் கூறுதற்கு உரியர். 

குறிப்புரை:     சிவபிரான் ஐம்பெரும் பூதரூபமாக உள்ளவர். அட்டமூர்த்தங்களுள் முதல் 
ஐந்து  அம்மையப்பர், அர்த்தநாரீசுவரர், பவள வண்ணர், நீங்காது வாழ்பவர்.

    Our Lord Civa is the embodiment of five elements such as earth, sky etc. 
He is concomitant i.e., both male and female bodied Supreme Being. His body 
is like the sea coral in colour. He is manifest in Thiru-valam-chuli and 
will never leave this place. He enters into the minds of His devotees 
and acts in their ideas. Those servitors who prostrate and worship His 
holy feet will chant always such famous deeds of our Lord . 

2621.    ஒருவராலுவமிப்பதையரியதோர்மேனியர்மடமாதர் 
    இருவராதரிப்பார்பலபூதமும்பேய்களுமடையாளம் 
    அருவராததோர்வெண்டலைகைப்பிடித்தகந்தொறும்பலிக்கென்று 
    வருவரேலவர்வலஞ்சுழியடிகளேவரிவளைகவர்ந்தாரே.        6    

    ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மடமாதர் 
    இருவர் ஆதரிப்பார் பலபூதமும் பேய்களும் அடையாளம்           
    அருவராதது ஓர்வெண்டலை கைப்பிடித்து அகந்தொறும் பலிக்கென்று 
    வருவரேலவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே.            

    oruvarAl uvamippatai ariyatu Or mEniyar; maTamAtar 
    iruvar AtarippAr; palapUtamum pEykaLum aTaiyALam; 
    aruvarAtatu Or veNtalai kaip piTittu, akamtoRum palikku enRu             
    varuvarEl, avar valanjcuzi aTikaLE; vari vaLai kavarntArE!

பொருள்:     ஒருவராலும் உவமை கூற முடியாத அழகிய திருமேனியர்; கங்கை, உமை எனப்படும் 
இரு மாதர்களாலும் விரும்பப்படுபவர்;  பல பூதங்களும் பேய்களும் அருவறுப்புராமல் வெண்தலையைக் 
கையில் கொண்டு இல்லந்தோறும் பிச்சைக்கென்று வருவரேல், அவர் வேறொருவரும் அல்லர்; அவர் 
திருவலஞ்சுழி அடிகளே; அவரே என் வரிவளை கவர்ந்த தலைவர்.

குறிப்புரை:     இறைவன் திருமேனிக்கு ஒப்புரைக்க வேறு யாதும் இல்லாமையால் 'ஒருவரால் 
உவமிப்பதை அரியதோர் மேனியர்' என்க. ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் 
இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே (அப்பர்) அருவராதது - அருவருக்காதது. முறுமுறுப்பு, 
சுறுசுறுப்பு, கிறுகிறுப்பு முதலியவற்றைப்போல அறுவறுப்பு என்பதும் உண்டு. மனத்தை அறுப்பது 
பற்றிய பெயர். அஃது இடையெழுத்தாக மருவிற்று. அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் 
அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலம் கோணாமுன் நெஞ்சமே... சாய்க்காடு கைதொழுநீ 
சார்ந்து' (க்ஷேத்திரவெண்பா 15).

    Our Lord Civa's divine body cannot be compared to anybody or to any other 
similarity. He has concern for both Uma Devi and the Ganges river, the goblins 
and the devils dance around Him and chanting good songs. Our Lord carries the 
white skull and moves to many houses to get alms. The Supreme Being manifests 
Himself in Thiru-valam-chuli. "He is the Lord who seized eagerly my bangles 
from my hand" the goddess says. 

2622.     குன்றியூர்குடமூக்கிடம்வலம்புரங்குலவியநெய்த்தானம்             
    என்றிவ்வூர்களிலோமென்றுமியம்புவரிமையவர்பணிகேட்பார் 
    அன்றியூர்தமக்குள்ளன அறிகிலோம்வலஞ்சுழியரனார்பால்             
    சென்றவூர்தனில்தலைப்படலாமென்றுசேயிழைதளர்வாமே.        7

    குன்றியூர் குடமூக்கிடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்             
    என்று இவ் ஊர்களிலோம் என்றும் இயம்புவரிமையவர் பணிகேட்பார் 
    அன்றியூர் தமக்குள்ளன அறிகிலோம் வலஞ்சுழியரனார் பால்             
    சென்றவூர் தனில் தலைப்படலாம் என்று சேயிழை தளர்வாமே.

    kunRiyUr, kuTamUkku iTam, valampuram, kulaviya neyttAnam, 
    enRu iv UrkaL i(l)lOm enRum iyampuvar; imaiyavar paNi kETpAr; 
    anRi, Ur tamakku uLLana aRikilOm; valanjcuzi aranAr pAl 
    cenRu, a(v) Urtanil-talaippaTalAm enRu cEyizai taLarvu AmE.

பொருள்:     குன்றியூர், குடமூக்கு, திருவலம்புரம், திருநெய்த்தானம் எனப்படும் 
இவ்வூர்களில் இல்லம் உடையேம் என்று இயம்புவர்; இமையவர்கள் பணி செய ஏற்பர்; 
இவையன்றி அவர்தமக்கு ஊர்கள் இன்னும் பலவுள; அவற்றை முழுதுமாக அறியோம்; 
திருவலஞ்சுழி  அரனார்பாற் சென்று அவ்வூரில் அரனார்பால்  கூடலாம் எனச் சென்று 
சேயிழை  தளர்வடைவாளோ?                                  

குறிப்புரை:     இதிற் குறித்த குன்றியூர் எங்குளதோ? தெரிந்திலது. 'வலம் என்றால் இடம் 
இருத்தல் வேண்டும்'. தலைப்படல்- சேர்தல். 'தம்மிற்றலைப்பட்டார்’ (திருக்களிறு 2)
 சேயிழை- தலைவி.

    Our saint Thiru-gnana-Sambandar said in the verse that the city called
Kuntriyoor and the other one Kudamookku are all places for our Lord to manifest. 
The devas listen to His commands. Our saint Thiru-gnana-Sambandar mentions the two
cities in this verse.But we do not know any city other than these two where our 
Lord is manifest. He belongs to all cities in the cosmos. However let us reach 
and go to the temple in Thiru-valam-chuli. These words were chanted by the heroine 
and she got released  from restraint.

2623.     குயிலினேர்மொழிக்கொடியிடைவெருவுறக்குலவரைப்பரப்பாய 
    கயிலையைப்பிடித்தெடுத்தவன்கதிர்முடிதோளிருபதுமூன்றி 
    மயிலினேரனசாயலோடமர்ந்தவன்வலஞ்சுழியெம்மானைப் 
    பயிலவல்லவர்பரகதிகாண்பவரல்லவர்காணாரே.             8
        
    குயிலினேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய 
    கயிலையைப் பிடித்தெடுத்தவன் கதிர்முடி தோள் இருபதுமூன்றி 
    மயிலினேரன சாயலோட மர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப் 
    பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.                

    kuyilin nEr mozik koTiyiTai veru uRa, kula varaip parappu Aya 
    kayilaiyaip piTittu eTuttavan katir muTi tOL irupatum UnRi,         
    mayilin Er ana cAyalOTu amarntavan, valanjcuzi emmAnaip         
    payila vallavar parakati kANpavar; allavar kANArE.            

பொருள்:     குயிலின் குரலைப் போல் இனிமையான மொழியும் கொடியிடையும் கொண்டவர் 
உமாதேவியார்; அவர் அச்சமடைய மலைக்குலத்தில் உயர்ந்ததும் பரந்ததுமாகிய கயிலை மலையை 
இராவணன் தனது இருபது கரங்களினால் பற்றி எடுத்தான்; அவனது மகுடம் தரித்த தலைகள் பத்தும் 
தோள்கள் இருபதும் நெரியக் கால்விரலை ஊன்றி மயிலின் சாயலை ஒத்தவளுடன் அமர்ந்தவன், 
திருவலஞ்சுழி எம்மான்; அவனைப் பயில வல்லவர் பரகதி காண்பர்; அல்லவர் காணார்.

குறிப்புரை:     கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும் உமாதேவியாரைக் குறித்தன. 
வல்லவர் காண்பவர். அல்லவர் காணார். 

    Our Lord Civa's consort Uma Devi speaks very gentle and fine words like the Indian 
cuckoo. Her waist is as thin as the vine plants. She has tender body like the peacock. 
She stayed on mount Kailash. To her astonishment and fear, Raavanan was trying to tilt 
the mountain to keep it aside. But our Lord pressed the top of the mountain with His toe 
and crushed Raavanan's twenty shoulders. The Lord is manifest along with His consort 
in the temple in Thiru-valam-chuli city. Those scholars who can memorise these ten verses 
and chant them before our Lord will get salvation. They will have no sufferings in their life.

2624.     அழலதோம்பிய அலர்மிசையண்ணலுமரவணைத்துயின்றானும்
     கழலுஞ்சென்னியுங்காண்பரிதாயவர்மாண்பமர்தடக்கையில் 
    மழலைவீணையர்மகிழ்திருவலஞ்சுழிவலங்கொடுபாதத்தால் 
    சுழலுமாந்தர்கள்தொல்வினையதனொடுதுன்பங்கள்களைவாரே.    9

    அழலது ஓம்பிய அலர்மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்         
    கழலும் சென்னியும் காண்பரிதாயவர் மாண்பமர் தடக்கையில் 
    மழலை வீணையர் மகிழ்திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் 
    சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே,

    azal atu Ompiya alarmicai aNNalum, aravaNait tuyinRAnum,            
    kazalum cenniyum kANpu aritu Ayavar mANpu amar taTakkaiyil
    mazalai vINaiyar; makiz tiru valanjcuzi valamkoTu pAtattAl 
    cuzalum mAntarkaL tolvinai atanoTu tunpagkaL kaLaivArE.

பொருள்:     மறைவிதிப்படித் தீயோம்புவோனும் தாமரை மலர்மீது இருப்பவனுமாகிய 
பிரமனும், பாம்பணையில் அறிதுயில் கொண்ட திருமாலும் ஆகிய இருவரும் முறையே
சென்னியும் கழலும் காண முயன்று காண அரிதாயவர் ஆகிய சிவபிரானை, தடக்கையில்
 மழலை போல இனிய இசையை ஒலிக்கும் வீணையுடன் பாடி மகிழ்ந்து  திருவலஞ்சுழியைப்
 பாதத்தால் வலங்கொண்டு சுழலும் மாந்தர்கள் சஞ்சித வினைகளுடன்  துன்பங்களைக் களைவார்.

குறிப்புரை:     அழலது- தீ. 'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்”.         
அண்ணல் - பிரமன், அரவணை - பாம்பாகிய படுக்கை. துயின்றான் - திருமால். 
ஆயவர் - சிவபிரான். மழலை வீணையர்- ‘மிக நல்ல வீணை தடவி' பாதத்தால் சுழலும் 
மாந்தர்கள்- திருக்கோயிலை வலம் வரும் அன்பர்கள்  . தொல்வினை - சஞ்சித கர்மம். 

    The tutelary gods Thirumaal and Brahma were unable to see our Lord's head 
and holy feet. At that moment our Lord Civa appeared before them as dazzling 
infinite supernal tall flame. He holds in His hand the Indian lute. Those servitors 
who can reach the temple in Thiru-valam-chuli city and worship Him will get rid of 
their past bad karma which causes sufferings in their life.

2625.     அறிவிலாதவன்சமணர்கள்சாக்கியர்தவம்புரிந்தவஞ்செய்வார் 
    நெறியலாதனகூறுவர்மற்றவைதேறன்மின்மாறாநீர் 
    மறியுலாந்திரைக்காவிரிவலஞ்சுழிமருவியபெருமானைப்
    பிறிவிலாதவர்பெறுகதிபேசிடிலளவறுப்பொண்ணாதே.     10

    அறிவிலாத வன்சமணர்கள் சாக்கியர் தவம்புரிந்தவம் செய்வார் 
    நெறியலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர் 
    மறியுலாம் திரைக்காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் 
    பிறிவிலாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப் பொண்ணாதே.

    aRivu ilAta vancamaNarkaL, cAkkiyar, tavam purintu avam ceyvAr-
    neRi alAtana kURuvar; maRRu avai tERan min! mARA nIr 
    maRi ulAm tiraik kAviri valanjcuzi maruviya perumAnaip 
    piRivu ilAtavar peRu kati pEciTil, aLavu aRuppu oNNAtE.

பொருள்:     நல்லறிவில்லாத கொடிய மனமுடைய சமணர்களும் சாக்கியர்களும் தவம் என்று 
அவமே புரிவார்; நெறியல்லாதவற்றைப் போதிப்பார்; அவர்கள் கூறும் சொற்களை நம்பாதீர்! மாறாக, 
அலை மறித்து வீசும் காவிரியாறு பாய்கின்ற திருவலஞ்சுழியில் இருக்கும் பெருமானைப் பிரியாது 
அடைக! அவனைப் பிறிவிலாதவர் பெறும் நற்கதிகளைக் கூறி அளக்க ஒண்ணாது.

குறிப்புரை:     தவம் புரிந்து அவம் செய்தல்-  மேற்கொண்ட தவத்திற்கு ஒவ்வாத  பாவச் 
செய்கையை உடையராதல். நெறி அல்லாதவற்றைப் போதிப்பர். தேறல்மின் - தெளியத்தக்கன 
அல்ல என்று தெளியாது ஒழிமின். பிறிவு இல்லாதவர் - இடைவிடாமல் வழிபடும் அடியவர். 

    The Jains and Buddhists of this town are ignorant people without divine 
knowledge. They of course, do some penance, but do all bad deeds in their life. 
Do not listen to their words, which are all false and non-virtuous. Instead we 
may talk of those servitors who go to the temple and worship our Lord Civa of 
Thiru-valam-chuli and think of Him always in their mind. The benefits they get 
from our Lord cannot be explained and they are all immensely high.

2626.     மாதொர்கூறனைவலஞ்சுழிமருவியமருந்தினைவயற்காழி 
    நாதன்வேதியன்ஞானசம்பந்தன்வாய்நவிற்றியதமிழ்மாலை 
    ஆதரித்திசைகற்றுவல்லார்சொலக்கேட்டுகந்தவர்தம்மை 
    வாதியாவினைமறுமைக்குமிம்மைக்கும்வருத்தம்வந்தடையாவே.        11

    மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல்காழி 
    நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை 
    ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக்கேட்டு உகந்தவர் தம்மை 
    வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே.

    mAtu or kURanai, valanjcuzi maruviya maruntinai, vayal kAzi 
    nAtan--vEtiyan, njAnacampantan--vAy naviRRiya tamizmAlai 
    Atarittu, icai kaRRu vallAr, colak kETTu ukantavar tammai 
    vAtiyA vinai; maRumaikku immaikkum varuttam vantu aTaiyAvE.

பொருள்:     உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டவன்; திருவலஞ்சுழியில் 
அமுதமாக இருப்பவன் ஆகிய சிவனை, வயல்கள் சூழ்ந்து இருக்கும் சீகாழித் தலைவன், 
மறையவன், ஞானசம்பந்தன் வாய்மையாகக் கூறிய இத்தமிழ் மாலையை, விரும்பிப் 
போற்றி இசையுடன் கற்று வல்லவர்கள், சொல்லக் கேட்டு உளம் மகிழ்ந்தவர்கள் 
ஆகியோரை வினைகள் வருத்தா; மறுமையும் இம்மையும் அவர்களை வருத்தம் 
வந்து அடையா. 

குறிப்புரை:     கூறன் - பாகத்தன். மருந்து - பிறவிநோய் தீர்க்கும் மருந்து. தீராநோய் 
தீர்த்தருள வல்ல  மருந்து. 'வருந்துயரந் தீர்க்கும் மருந்து' 'காழிநாதன்' 'வேதியன்' என்பன 
ஆசிரியர் சிறப்புணர்த்தின.  நவிற்றிய - திருவருள் நவிலச்செய்த 'நித்தம் நோய்கள் வாதியா' 
(தி. 2 ப. 79 பா. 4) வாதித்தல்-  வருந்துதல்.                            

    Our Lord Civa who has embedded His consort Uma Devi on the left side of 
His body is manifest in the temple in Thiru-valam-chuli. He is the Supreme Being, 
the top most curator of all ailments of all the souls. Our saint Thiru-gnana-
Sambandar came to the temple in Thiru-valam-chuli city and chanted with devotion 
and praised the Lord in these ten verses.Those devotees who can memorise and chant 
these ten verses with devotion and in the musical tone and those who hear these 
songs from the devotees- both will get rid of their past bad karma deeds. In this 
life and in their after life at any period during their life, no sufferings 
will reach them.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            106ஆம் பதிகம் முற்றிற்று
            End of 106th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 243                 பதிக எண்: 107

107. திருக்கேதீச்சரம்                107. THIRU-K-KETHEE-CHURAM

பண்: நட்டராகம்                    Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று. மன்னார் தொடர்வண்டி நிலையத்திற்குக் 
கிழக்கே 7.5 கி.மீ தொலைவில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ளது. இலங்கையில் 
தலை மன்னாருக்கு அருகில் உள்ளது. மாதோட்டம் இது 'மாவின் களிதூங்கும் பொழிலின் 
மாதோட்ட நன்னகரில், பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் 
எனையாள்வான் 'திருக்கேதீச்சரத்தானே'  என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்தி 
நாயனாரின் தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.  சம்பந்தமூர்த்தி நாயனாரும் 
இக்கோயில் பதிகத்தில் இதைக் கூறி உள்ளார்கள். இறைவர் திருப்பெயர்  திருக்கேதீசுவரர். 
இறைவியாரது திருப்பெயர் கௌரியம்மை. தீர்த்தம் பாலாவி ஆறு. துவட்டா என்னும் முனிவர் 
தவம் செய்து பேறு பெற்ற தலமாகும். சம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று 
ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

பதிக வரலாறு

    ஞானவேந்தர் திருவிராமேச்சுரத்தை நண்ணிப் பாண்டியனும் மங்கையர்க்கரசி 
அம்மையாரும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ வழிபட்டுக் கொண்டு பலநாள்கள் இருந்தனர். 
வழக்கம்போலக் கடற்கரையில் இனிதிருந்த ஒருநாள் ஈழநாட்டுத் திருக்கோணமலையைப் 
பாடிப் பணிந்தார். அப்போது மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சுரத்தைப் பரவினார். 
அதுவே இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2627.     விருதுகுன்றமாமேருவில்நாணரவாஅனலெரியம்பாப்             
    பொருதுமூவெயில்செற்றவன்பற்றிநின்றுறைபதியெந்நாளும் 
    கருதுகின்றவூர்கனைகடற்கடிகமழ்பொழிலணிமாதோட்டம் 
    கருதநின்றகேதீச்சரங்கைதொழக்கடுவினையடையாவே.        1

    விருது குன்றமா மேரு வில் நாணரவா அனல் எரியம்பாப்             
    பொருது மூவெயில் செற்றவன் பற்றி நின்று உறைபதி எந்நாளும் 
    கருதுகின்ற ஊர் கனை கடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் 
    கருத நின்ற கேதீச்சரம் கைதொழக் கடுவினை அடையாவே.

    virutu kunRa, mAmEru vil, nAN aravA, anal-eri ampA, 
    porutu mUveyil ceRRavan paRRi ninRu uRai pati--ennALum 
    karutukinra Ur--kanaikaTal kaTi kamaz pozil aNi mAtOTTam,        
    karuta ninra kEtIccuram kaitoza, kaTuvinai aTaiyAvE.            

பொருள்:     விருது வில்,மேருக் குன்றமாக, நாண், வாசுகி எனும் பாம்பாக, அக்கினி அம்பாக 
திரிபுரத்தைப் பொருது அழித்தவன் ஆகிய சிவன் விரும்பி உறையும் தலம் திருக்கேதீச்சுரம் ஆகும். 
எந்நாளும் அவன் கருதுகின்ற ஊர்; ஒலிக்கின்ற கடலும் மணங்கமழ்கின்ற சோலைகள் அழகு செய்யும் 
மாதோட்டத்தில் யாவரும் விரும்ப நிற்கும் கேதீச்சுரத்தைக் கைதொழ கொடிய வினைகள் 
அடையாமல் நீங்கும்.

 குறிப்புரை:     விருது- வெற்றி. அடையாளம் மாமேருகுன்றம் வில் ஆ- மகாமேருமலை வில்லாக.
மாதோட்டம் என்பது தலப்பெயர் கேதீச்சுரம் என்பது திருக்கோயில். மகாதுவட்டாபுரம் என்பதன் 
திரிபன்று.  அங்குப் பொழிலணி மாதோட்டம் உளது. இக்கேதீச்சுரத்தில் 'கேது' இருப்பதை 
இன்றுங்காணலாம்.  இத்தலத்தை வழிபடுவோர் வினைகளும் நோய்களும் தீரப்பெற்றின்புறுவர் 
என்பது திண்ணம். 

    Our Lord Civa, as a symbol of His victory over the flying three fortresses of 
asuras, killing all of them at one shot, used the following. He used the big Meru
mountain as His bow. He fixed the snake to bend the bow and fasten it by string. He 
used the burning fire at the tip of the arrow. Thereafter, He shot only one arrow and 
burnt the three fortresses. After that He created a liking to be manifested in 
Thiru-k-kethee-churam temple. In this city, the servitors realise that this temple 
is for Civa's manifestation.This city is surrounded by sea. There are many natural 
forests near the city. In these forests the flowers spread their sweet smell all around. 
All the people living in this city never fail to visit the Thiru-k-kethee-churam 
temple and worship our Lord. Those who worship our Lord with their hands, will never 
get any severe karma in their life .

2628.     பாடல்வீணையர்பலபலசரிதையரெருதுகைத்தருநட்டம் 
    ஆடல்பேணுவரமரர்கள்வேண்ட நஞ்சுண்டிருள்கண்டத்தர் 
    ஈடமாவதுஇருங்கடற்கரையினிலெழில்திகழ்மாதோட்டம் 
    கேடிலாதகேதீச்சரந்தொழுதெழக்கெடுமிடர் வினைதானே        2

    பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் 
    ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டிருள் கண்டத்தர் 
    ஈடமாவது இருங்கடல் கரையினில் எழில் திகழ்மாதோட்டம் 
    கேடிலாத கேதீச்சரம் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.

    pATal vINaiyar, pala pala caritaiyar, erutu ukaittu aru naTTam 
    ATal pENuvar, amararkaL vENTa nanjcu uNTu iruL kaNTattar, 
    ITam Avatu--irugkaTal karaiyinil ezil tikaz mAtOTTam, 
    kETu ilAta kEtIccuram tozuteza, keTum, iTar vinaitAnE.

பொருள்:     மறை பாடுவதுடன் யாழினையும் இசைப்பர்; பல ஒழுக்கத்தவர்; எருதினை 
வாகனமாகச் செலுத்துபவர்; ஆடல் பாடல் விரும்புபவர்; தேவர்கள் வேண்ட நஞ்சினை  உண்டதால் 
இருண்ட கண்டத்தர்; அவருடைய இடமாகிய பெரிய கடற்கரையினில் அழகுடன் விளங்கும்
 மாதோட்டத்தில் அழிவிலாத கேதீச்சரத்தை தொழுதெழ இடர்செயும் வினைகள் கெட்டு ஒழியும்.

குறிப்புரை:     சரிதையர் - ஒழுக்கத்தவர். உகைத்து - செலுத்தி. இருள் - இருண்ட. ஈடம் - முதல் நீட்சி.

    Our Lord Civa used to pluck the strings of the lute and adjust the strings and 
then He will sing sweet melodious songs on the lute. He is the embodiment of various 
old (Puranic history) stories. He dances very intricate postures perfectly. At the 
request of devas, He imbibed the poison. His throat is dark blue in colour. He selects 
the Maathottam city, which is near dark seashore. However, the city is very attractive 
and is therefore called Maathottam. In this city, the temple Thiru-k-kethee-churam has 
no blemishes. Those who worship our Lord in this temple, will find that diseases and 
bad deeds get destroyed in their lives.

2629.     பெண்ணோர்பாகத்தர்பிறைதவழ்சடையினரறைகழல்சிலம்பார்க்கச் 
    சுண்ணமாதரித்தாடுவர்பாடுவரகந்தொறுமிடுபிச்சைக்             
    குண்ணலாவதோரிச்சையினுழல்பவருயர்தருமாதோட்டத் 
    தண்ணல்நண்ணுகேதீச்சரமடைபவர்க்கருவினையடையாவே.         3

    பெண் ஓர்பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச் 
    சுண்ண மாதரித்து ஆடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்         
    குண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத் 
    தண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவர்க் கருவினை அடையாவே.

    peN Or pAkattar, piRai tavaz caTaiyinar aRai kazal cilampu Arkkac 
    cuNNam Atarittu ATuvar, pATuvar, akamtoRum iTu piccaikku 
    uNNal Avatu Or iccaiyin uzalpavar, uyartaru mAtOTTat, 
    aNNal, naNNu kEtIccuram aTaipavarkku aruvinai aTaiyAvE.

பொருள்:     மாதொரு பாகத்தர்; பிறை தவழ்கின்ற சடையை உடையவர்; ஒலியுடைய கழலும் 
சிலம்பும் ஆரவாரிக்கத் திருவெண்ணீற்றினைப் பூசி ஆடுவர்; பாடுவர்; இல்லங்கள் தோறும் 
இடுகின்ற பிச்சையேற்று உண்ண அலைவர்; உயர்ந்த மாதோட்டத்தில் தலைவர் எழுந்தருளி 
இருக்கும் திருக்கேதீச்சுரத்தை அடைபவரை அருவினை அடையா.

குறிப்புரை:     சுண்ணம்- திருவெண்ணீறு. பிச்சைக்கு இச்சை-  'தந்த துன்றன்னைக்
கொண்டதென்றன்னை' என்ற கருத்தும் ஈண்டுப் பொருந்தும். 

    Our Lord Civa has embedded His consort Uma Devi on His body. In His mattress 
the young moon crawls. He likes to spread the holy ashes over His body. He dances while 
the anklets and the roll create noise. He used to sing also. He goes from house to house 
to get alms as though He will eat the food given to Him. Our Lord Civa is manifest in 
Thiru-k-kethee-churam temple situated in the attractive city - Maathottam. Those devotees 
who reach the temple and worship our Lord Civa will never get the intense kind of karma.

2630.    பொடிகொள்மேனியர்புலியதளரையினர்விரிதருகரத்தேந்தும் 
     வடிகொள்மூவிலைவேலினர்நூலினர்மறிகடல்மாதோட்டத் 
      தடிகளாதரித்திருந்தகேதீச்சரம்பரிந்தசிந்தையராகி 
    முடிகள்சாய்த்தடிபேணவல்லார்தம்மேல்மொய்த்தெழுவினைபோமே.         4

    பொடிகொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்தேந்தும்             
    வடிகொள்  மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்து         
    அடிகள் ஆதரித்திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி                
    முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம்மேல் மொய்த்தெழு வினைபோமே.

    poTi koL mEniyar, puli ataL araiyinar, viritaru karattu Entum 
    vaTi koL mUvilai vElinar, nUlinar, maRikaTal mAtoTTattu 
    aTikaL, Atarittu irunta kEtIccuram parinta cintaiyar Aki, 
    muTikaL cAyttu, aTi pENa vallAr tammEl moyttu ezum vinai pOmE.

பொருள்:     திருநீறு பூசிய திருமேனியர்; புலித்தோல் உடுத்த அரையினர்; விரிந்த 
கரத்தினில் ஏந்திய மூவிலை வேலினர்; முப்புரி நூலினர்; மோதுகின்ற அலைகளை உடைய 
கடற்கரை மாதோட்டத்தில் அடிகள் விரும்பி இருக்கும் கேதீச்சுரத்தை மனத்தில் பத்தியுடன் 
தலை சாய்த்து வணங்கித் திருவடி போற்ற வல்லவர்கள்மேல் திரண்டு எழுகின்ற வலிய 
வினைகள்  நீங்கும். 

குறிப்புரை:     பொடி- திருநீறு. இலைவேல்- முத்தலைச் சூலம். அடிகள் -  சிவபெருமானை. 
பரிந்த- அன்பு கொண்ட.

    Our Lord Civa's holy body is smeared with holy ashes. He wears on His waist 
tiger's hide. He holds in His open wide hand the three fold battleaxe which is very 
sharp. He puts on His chest the three ply sacred thread. With great desire our Lord 
is manifest in the Thiru-k-kethee-churam temple situated in the city of Maathottam. 
This city is bordered by the sea, which brings waves that dash on the seashore 
one after another. Those devotees who with intense fondness go to this temple and 
worship our Lord Civa will find their bad karma disappear. They will have no suffering 
in their life .

2631.     நல்லராற்றவும்ஞானநன்குடையர்தம்மடைந்தவர்க்கருளீய 
    வல்லர்பார்மிசைவான்பிறப்பிறப்பிலர்மலிகடன்மாதோட்டத் 
    தெல்லையில்புகழெந்தைகேதீச்சரமிராப்பகல்நினைந்தேத்தி 
    அல்லலாசறுத்தரனடியிணைதொழுமன்பராமடியாரே.        5

    நல்லர் ஆற்றவும் ஞானநன் குடையர் தம்மடைந்தவர்க்கு அருளீய 
    வல்லர் பார்மிசை வான்பிறப்பிறப்பிலர் மலிகடன் மாதோட்டத் 
    தெல்லையில் புகழ் எந்தை கேதீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி 
    அல்லலாசறுத்தரன் அடியிணை தொழும் அன்பராம் அடியாரே.

    nallar, ARRavum njAnam nanku uTaiyar--tam aTaintavarkku aruL Iya 
    vallar, pAr micaivAn piRappu iRappu ilar, mali kaTal mAtOTTattu 
    ellai il pukaz entai, kEtIccuram irAppakal ninaintu Etti, 
    allal Acu aRuttu, aran aTi iNai tozum anpar Am aTiyArE.

பொருள்:     ஆற்றவும் நல்லர்; ஆற்றவும் ஞானம் நன்கு உடையர்; தம்மை அடைந்தவர்களுக்கு 
அருள் செய்ய வல்லவர்; மண்ணுலகத்திலோ வானுலகத்திலோ பிறப்பதும் இறப்பதும் இல்லாதவர்; 
பெரிய கடற்கரையில் உள்ள மாதோட்டத்தில் அளவிலாத புகழுடைய எம் தந்தையின் கேதீச்சுரத்தை 
அடியவர்கள் இரவும் பகலும் நினைந்து வழிபட்டு அல்லலையும் ஆசினையும் அறுத்து அன்பர் ஆவார்.

குறிப்புரை:     ஆற்றவும்- மிகவும். அருள் ஈய வல்லர். பார்மிசைவான் - மண்ணிலும் விண்ணிலும். 
எல்லை - அளவு. அல்லல் - துன்பம். ஆசு-குற்றம்.

    Our Lord Civa is the most virtuous being. He has the highest divine knowledge. 
He graces those who reach Him. He has no birth or death on the earth or in the heaven. 
He has fame everywhere and there is no end. He is manifest in Thiru-k-kethee-churam 
temple situated in the Maathottam city, which is surrounded by the vast ocean. 
The people, who think on the Thiru-k-kethee-churam temple both day and night, 
pray our Lord, and worship Him, will have no suffering and no deficiency in their 
life. Those who have sincere affection for our Lord are the real devotees.

2632.    பேழைவார்சடைப்பெருந்திருமகள்தனைப்பொருந்தவைத்தொருபாகம் 
    மாழையங்கயற்கண்ணிபாலருளியபொருளினர்குடிவாழ்க்கை 
    வாழையம்பொழில்மந்திகள்களிப்புறமருவியமாதோட்டக் 
    கேழல்வெண்மருப்பணிந்தநீள்மார்பர்கேதீச்சரம்பிரியாரே.        6

    பேழை வார்சடைப் பெருந்திருமகள் தனைப் பொருந்த வைத்தொருபாகம் 
    மாழை யங்கயற் கண்ணி பாலருளிய பொருளினர் குடிவாழ்க்கை 
    வாழை அம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்             
    கேழல் வெண் மருப்பணிந்த நீள்மார்பர் கேதீச்சரம் பிரியாரே.

    pEzai vArcaTaip perun tirumakaL tanaip porunta vaittu, orupAkam 
    mAzai am kayal kaNNipAl aruLiya poruLinar, kuTivAzkkai- 
    vAzai ampozil mantikaL kaLippu uRa maruviya mAtOTTa, 
    kEzal veNmaruppu aNinta nIL mArpar, kEtIccuram piriyArE.

பொருள்:     பெருமையும் நீட்சியும் உடைய சடையில் பெருந்திருமகள்தனைப் பொருந்த 
வைத்து, ஒருபாகத்தில் மாவடு போன்ற கண்ணியை வைத்து அவளுக்கு அருளிய பொருளினை 
உடையவர்; பன்றியின் வெண்மையான மருப்பினை அணிந்த பரந்த மார்பர். அவர் வெளிப்பட்டு 
எழுந்தருளிய தலம், அழகிய பொழிலில் மந்திகள் களிப்புடன் விரும்பித் தங்கிய மாதோட்டத்தில்
 உள்ள கேதீச்சுரம், அவர் அதைப் பிரியாரே.

குறிப்புரை:     பேழை -பெருமை. 'பேழைப் பெருவயிற்றோடும் புகுந்து என் உளம்பிரியாந்' 
(மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை 4). பெருந்திருமகள் - கங்கை. மாழை - அழகு. 
இங்கு மாதோட்டம் என்பதன் விளக்கம் உளது. கேழல்- பன்றி. மருப்பு - கொம்பு. 

    Our Lord Civa in His long entangled locks of hair keeps and supports the river 
Ganges and keeps her secretly without visibility. He has embedded His consort Uma Devi 
on the left side of His body. Her eyes are like the eyes of carp fish. This Lord adorns 
His body with the white tusk of the pig on His wide chest. He manifests Himself in the 
Thiru-k-kethee-churam temple and never leaves this place.

2633.     பண்டுநால்வருக்கறமுரைத்தருளிப்பல்லுலகினிலுயிர்வாழ்க்கை 
    கண்டநாதனார்கடலிடங்கைதொழக்காதலித்துறைகோயில் 
    வண்டுபண்செயுமாமலர்ப்பொழில்மஞ்ஞைநடமிடுமாதோட்டம் 
    தொண்டர்நாள்தொறுந்துதிசெய அருள்செய்கேதீச்சரமதுதானே.        7

    பண்டு நால்வருக்கற முரைத்தருளிப் பல்லுலகினில் உயிர்வாழ்க்கை 
    கண்ட நாதனார் கடல் இடங்கைதொழக் காதலித்து உறைகோயில் 
    வண்டு பண்செயு மாமலர்ப் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் 
    தொண்டர் நாள்தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சரம் அதுதானே.

    paNTu nAlvarukku aRam uraittu aruLip pal ulakinil uyir vAzkkai 
    kaNTa nAtanAr, kaTaliTam kaitoza, kAtalittu uRai kOyil- 
    vaNTu paN ceyum mA malarppozil manjnjai naTam iTu mAtOTTam, 
    toNTar nALtoRum tuticeya, aruL cey kEtIccuram atutAnE.

பொருள்:     முன்பு முனிவர் நால்வருக்கு அறம் உரைத்தருளியவர்; பல உலகங்களையும் 
படைத்து அவற்றில் உடம்புடன் உயிர் வாழ்க்கையையும் அவ்வுயிர்களின் கன்மத்திற்கேற்பப் 
படைத்தருளிய தலைவர்; கடலால் சூழப்பட்ட தலத்தில் வாழ் மக்கள் கைதொழுது உய்யும் பொருட்டு 
விரும்பி உறைகின்ற திருக்கோயில், யாதோவெனில், அது, வண்டுகள் பண்பாடும் பெரிய 
பொழில்களில் மயில்கள் நடமாடும் மாதோட்டத்தில் தொண்டர்கள் நாள்தோறும் துதி செய்து 
வணங்க அருள் செய்யும் திருக்கேதீச்சுரம் தானே.

குறிப்புரை:     பல உலகங்களிலும் உடம்போடு உயிர்வாழ்க்கையை, அவ்வவ்வுயிர்களின் 
கன்மத்திற்கேற்ப அருளிய முதல்வன் பரமசிவனே என்றதாம். பண்- பண்ணிசை. மஞ்ஞை - மயில்.

    In olden days, our Lord Civa explained divine virtues with deep meaning to 
four saints. He is the sole divine Supreme Being who establishes the effect of karma 
of all souls born in all the worlds surrounded by the oceans, to enable those people 
to visit this Lord in the Thiru-k-kethee-churam temple and worship Him with devotion,
 He manifests Himself in the Thiru-k-kethee-churam temple. In this city bees sing 
melody and fly to the forest area. In the gardens of very attractive flowers peacocks 
dance in Mathottam city. Here the servitors daily visit the temple situated in 
Mathottam city and pray our Lord and worship Him.

2634.    தென்னிலங்கையர்குலபதிமலைநலிந்தெடுத்தவன்முடிதிண்டோள் 
    தன்னலங்கெடஅடர்த்தவற்கருள்செய்ததலைவனார்கடல்வாயப் 
    பொன்னிலங்கியமுத்துமாமணிகளும்பொருந்தியமாதோட்டத் 
    துன்னியன்பொடுமடியவரிறைஞ்சுகேதீச்சரத்துள்ளாரே.        8

    தென் இலங்கையர் குலபதி மலை நலிந்து எடுத்தவன் முடிதிண்டோள் 
    தன்னலம் கெடஅடர்த்தவற்கு அருள்செய்த தலைவனார் கடல்வாயப் 
    பொன் இலங்கிய முத்துமாமணிகளும் பொருந்திய மாதோட்டத் 
    துன்னி யன்பொடுமடியவர் இறைஞ்சு கேதீச்சரத்து உள்ளாரே. 

    ten ilagkaiyar kulapati, malai nalintu eTuttavan, muTi tiNtOL 
    tan nalam keTa aTarttu, avaRku aruL ceyta talaivanAr--kaTalvAyap 
    pon ilagkiya muttu mA maNikaLum poruntiya mAtOTTattu,
    unni anpoTum aTiyavar iRainjcu kEtIccurattu uLLArE. 

பொருள்:     தெற்குத் திக்கில் உள்ள இலங்கையில் வாழும் அரக்கர் குலத்தினருக்குத் 
தலைவன்,  இராவணன். கயிலை மலையை வருந்தி எடுத்தவன்; அவனது முடிகள் 
திண்ணிய தோள்கள்  ஆகியவற்றின் வலிமை கெட அடர்த்துப் பின் அவனுக்கு 
அருள் செய்த தலைவனார்;  கடலினிடத்து பொன், விளங்கிய முத்துக்கள் மாமணிகள் 
ஆகியன பொருந்திய மாதோட்டத்தைத் தியானித்து அன்பொடும்  அடியவர் இறைஞ்சுகின்ற
கேதீச்சுரத்துள்ளாரே.

குறிப்புரை:     குலபதி - குலத்திற்குத் தலைவன். நலிந்து - நெருக்கி. அடர்த்து அவனுக்கு 
அருள் செய்த தலைவனார். உன்னி - தியாநித்து.

    Raavanan, the king of south Sri Lanka tried to squeeze with his hands and 
shoulders mount Kailash. Then his head and shoulders lost their strength and beauty 
due to Lord Civa's action. Then Civa heard his melodious song and pardoned him and 
graced him. Our Lord is such a Chief. The devotees reach the Maathottam and praise 
our Lord and worship Him who is in the Thiru-k-kethee-churam temple situated in the 
most attractive city of Maathottam where gold, pearls, ruby and other gems are all 
fully available. So our Lord desired to manifest Himself in the temple 
Thiru-k-kethee-churam.

2635.     பூவுளானுமப்பொருகடல்வண்ணனும்புவியிடந்தெழுந்தோடி 
    மேவிநாடி நின்னடியினைகாண்கிலாவித்தகமென்னாகும்             
    மாவும்பூகமுங்கதலியும்நெருங்குமாதோட்டநன்னகர்மன்னித் 
    தேவிதன்னொடுந்திருந்துகேதீச்சரத்திருந்தஎம்பெருமானே.        9

    பூ உளானும் பொருகடல் வண்ணனும் புவியிடந்து எழுந்தோடி 
    மேவி நாடி நின் அடியினை காண்கிலா வித்தகம் என்னாகும்             
    மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் மன்னித் 
    தேவி தன்னொடுந் திருந்து கேதீச்சரத்து இருந்த எம்பெருமானே.

    pU uLAnum ap poru kaTal vaNNanum, puvi iTantu ezuntu OTi
    mEvi nATi, nin aTi iNai kANkilA vittakam en Akum?-- 
    mAvum pUkamum kataliyum nerugku mAtOTTa nannakar manni, 
    tEvi tannoTum tiruntu kEtIccurattu irunta emperumAnE!

பொருள்:     பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் முறையே மேலெழுந்து பறந்தும் 
நிலத்தை இடந்தும் பொருந்தித் தேடி உம்முடைய திருமுடி மற்றும் திருவடிகளைக் காண்கிலார்; 
அவ்வாறு அவர்கள் காண முடியாது நின்ற உம்முடைய சாதுரியம் என்னாகும்? மாவும் பூகமும் 
கதலியும் நெருங்கும் மாதோட்ட நன்னகரில் தங்கித் தேவி தன்னொடும் அழகிய திருக்கேதீச்சுரத்திலே 
இருந்த எம் பெருமானே.

குறிப்புரை:     பூவுளான் - பிரமன். புவி - பூமி. இடந்து - போந்து. இடந்தவன் மாயன் . ஓடியவன் 
அயன். நுன் அடியினை -உன்னுடைய திருவடிகளிரண்டும். வித்தகம் - சாதுரியம். மா- பூகம் (பாக்கு), 
கதலி எல்லாம் உள்ளது அம்மாதோட்டம். தேவி - கௌரி (திருக்கேதீச்சரமான்மியம், பகுதி 1 பா. 36). 

    Oh! Our Lord Civa! You are manifested and reside along with your consort in the 
attractive temple Thiru-k-kethee-churam permanently. In this city, mango trees, arecanut 
trees, plantain trees are well in plenty, in the city of Maathottam the temple 
Thiru-k-kethee-churam is situated. The tutelary god four faced Brahma, manifest in 
lotus flower, and Thirumaal, the master of the oceans who excavated deep into the 
earth while Brahma flew very high in the sky, both failed to see Your holy feet 
and head. Then You stood as a tall infinite dazzling figure, but not visible to 
those two demigods. For such an action, what an ability You had?

2636.    புத்தராய்ச்சிலபுனைதுகிலுடையவர்புறனுரைச்சமணாதர் 
    எத்தராகிநின்றுண்பவரியம்பியஏழைமைகேளேன்மின் 
    மத்தயானையைமறுகிடவுரிசெய்துபோர்த்தவர்மாதோட்டத் 
    தத்தர்மன்னுபாலாவியின் கரையிற்கேதீச்சரமடைமின்னே.        10

    புத்தராய்ச் சிலபுனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் 
    எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின் 
    மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் 
    தத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம் அடைமின்னே.

    puttarAyc cila punai tukil uTaiyavar puRan uraic camaN Atar 
    ettar Aki ninRu uNpavar--iyampiya Ezaimai kELEnmin         
    matta yAnaiyai maRukiTa uriceytu pOrttavar, mAtOTTattu 
    attar, mannu pAlAviyin karaiyil kEtIccuram aTaiminnE!

பொருள்:     பவுத்தர்களாய் துகில் புனைவார் சிலர்; பழியே உரைக்கின்ற சமணர்களாகிய 
ஏமாற்றுவோர்; நின்று உண்பவர்களாகிய அவர்கள் இயம்பிய அறியாமையைத் தோற்றுவிக்கும் 
சொற்களைக் கேளாதீர்! மதம் கொண்ட களிறு கலங்க அதன் தோலினை உரித்துப் போர்த்தவர்; 
மாதோட்டத்துத் தலைவர்; அவர் இருக்கும் பாலாவியின் கரைமேல் திருக்கேதீச்சுரத்தை அடைமின்!

குறிப்புரை:     ஆதர்- அறிவிலார். எத்தர் -ஏமாற்றுவோர், விரகுள்ளவர். ஏழைமை-  அறியாமை
தோற்றும் சொற்கள். மறுகிட- கலங்க. பாலாவி- அத்தலத்தின் தீர்த்தம் அது மிகப்பெரியது. 

    The Buddhists wear on their body-stitched cloth. They speak slander and back bite. 
The Jains cheat and stand and eat. Do not listen to their ignorant words. Our Lord made 
the rutting elephant tremble at His sight. He stripped off its hide and covered His body 
with the same hide.Ye devotees! reach the Thiru-k-kethee-churam temple which is situated 
on the river banks of Paalavi river and worship our Lord who is manifest in the temple .

2637.     மாடெலாமணமுரசெனக்கடலினதொலிகவர்மாதோட்டத் 
    தாடலேறுடையண்ணல்கேதீச்சரத்தடிகளையணிகாழி 
    நாடுளார்க்கிறைஞானசம்பந்தன்சொல்நவின்றெழுபாமாலைப் 
    பாடலாயினபாடுமின்பத்தர்கள்பரகதிபெறலாமே.        11

    மாடு எலாம் மணமுரசு எனக்கடலினது ஒலிகவர் மாதோட்டத் 
    தாடல் ஏறுடை அண்ணல் கேதீச்சரத்து அடிகளை அணிகாழி 
    நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல்நவின்று எழுபாமாலைப் 
    பாடல் ஆயினபாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.

    mATu elAm maNamuracu enak kaTalinatu oli kavar mAtOTTattu,
    ATal ERu uTai aNNal kEtIccurattu aTikaLai, aNi kAzi 
    nATu uLArkku iRai--njAnacampantan--col navinRu ezu pAmAlaip 
    pATal Ayina pATumin, pattarkaL! parakati peRal AmE.            

பொருள்:     பக்கம் எல்லாம் மங்கல மணமுரசொலியென கடலொலி முழங்கும் 
மாதோட்டத்தில் வெற்றி விடையை ஏறும் தலைவர், திருக்கேதீச்சுரத்து அடிகளை, அழகிய 
காழி நகருளாருக்குத் தலைவன் ஞானசம்பந்தன் சொன்ன இனிய பாமாலைப் 
பாடல்களாயினவற்றைப் பாடுமின்! பத்தர்களே! பரகதி உறுதியாகப் பெறலாம். 

குறிப்புரை:     மணமுரசு - வீரமுரசு, தியாகமுரசு என்னும் மூவகையுள் ஒன்று. 'இமிழ்குரல் 
முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ்க்கெழுகூடல் தண்கோல்வேந்து' (புறம் 58). 'வம்மின் 
எனப்புலவோரை அளித்திடுவண் கொடைமுரசு . .. மணமுரசு ... திறல்முரசு' (முத்துக் 
குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 8). ஆடல் - வெற்றி. காழிநாடுளார்க்கிறை ஆசிரியர். 
பரகதி - சிவானந்தப்பேறு அடையும் நெறி.

    The city Maathottam is on the banks of the sea. The noise of the sea waves 
is so full that people hearing it assume that a marriage is going on with drum music. 
In this Maathottam city, our Lord is the most valiant and Chief Supreme Being manifested 
in Thiru-k-kethee-churam temple. Our saint Thiru-gnana-Sambandar hails from the attractive 
city of Seerkaazhi. He sang in a melodious tone this garland of ten verses on the Lord 
at Thiru-k-kethee-churam temple. Oh ye devotees! memorise and chant these ten songs, 
pray and worship our Lord in the temple. You will get salvation.
            
            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            107ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 107th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண் : 244.             பதிக எண் : 108

108.திருவிற்குடிவீரட்டம்                108. THIRU VIRKUDI VEERATTAM

பண் : நட்டராகம்                     Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    சிவபெருமான் தன் வீரத்தைக் காட்டிய இடங்கள் எட்டு, அவற்றுள் இது சலந்தரனைச் 
சங்கரித்த  பதி. மயிலாடுதுறை-பேரளம் தொடர்வண்டிப் பாதையில், விற்குடி தொடர்வண்டி 
நிலையத்திற்கு 1.5  கி.மீ தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. 
இறைவர் திருப்பெயர் வீரட்டநாதர். இறைவி திருப்பெயர் ஏலவார் குழலி. கோயில் கட்டுமலையில் 
இருக்கின்றது. உற்சவ மூர்த்தியின் கையில் சக்கரம் இருக்கின்றது. இதற்கு ஞானசம்பந்தருடைய 
பதிகம் ஒன்று மட்டும் உள்ளது. 

பதிக வரலாறு

    நாவரசரும் ஞானவேந்தரும் திருப்புகலூரில் வழிபட்ட காலத்தில் பிள்ளையார் திருவிற்குடி
வீரட்டஞ் சென்று மேவிப் பணிந்து பற்பல ஆயிரம் தொண்டரோடும் போற்றிப் பாடியருளியது 
இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2638.     வடிகொள்மேனியர்வானமாமதியினர்நதியினர்மதுவார்ந்த 
    கடிகொள்கொன்றையஞ்சடையினர்கொடியினருடைபுலியதளார்ப்பர் 
    விடையேறுமெம்மானமர்ந்தினிதுறைவிற்குடிவீரட்டம் 
    அடியராகிநின்றேத்தவல்லார்தமைஅருவினையடையாவே.        1

    வடிகொள் மேனியர் வான மாமதியினர் நதியினர் மது ஆர்ந்த 
    கடிகொள் கொன்றை அம்சடையினர் கொடியினர் உடைபுலியதள் ஆர்ப்பர்     
    விடை ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம்             
    அடியராகி நின்று ஏத்தவல்லார் தமை அருவினை அடையாவே.

    vaTi koL mEniyar, vAna mA matiyinar, natiyinar matu Arnta 
    kaTi koL konRai am caTaiyinar, koTiyinar, uTai puli ataL Arppar,    
    viTai ERum emmAn, amarntu initu uRai viRkuTi vIraTTam, 
    aTiyar Aki ninRu, Etta vallAr tamai aruvinai aTaiyAvE.

பொருள்:     அழகிய திருமேனியர்; ஆகாயத்தில் தவழும் பிறையைச் சூடியவர்; கங்கை நதியைச்
 சடையில் தாங்கியவர்; மணமுள்ள கொன்றை மலரை அணிந்த சடையினர்; உமாதேவியாகிய கொடியைப் 
பாகத்தில் உடையவர்; உடையாகப் புலித்தோலை அரையில் அசைப்பர்;  ஊர்தியாக விடையை ஏறுவர்; 
இப்பண்புகளை உடைய எங்கள் பெம்மான் விருப்பத்துடன் இனிது உறையும் இடம் திருவிற்குடி 
வீரட்டம்; இவருக்கு அடியாராகிப் பணிய வல்லார்தமை அருவினைகள் அடையா.

குறிப்புரை:     வடி- தெளிவு. மது- தேன். கொடி - - உமாதேவியார். அருவினை அடையாமைக்கு 
வேண்டுவது அடியாராகிநின்று ஏத்தும் வன்மை. 

    Our Lord Civa's body is bright, He has a divine body. He retains on His head 
the moon that crawls in the sky and the river Ganges. He adorns His matted hair with 
the flower of sweet Indian laburnum, which is full of honey. He is the consort of 
Uma Devi who is lean like a vine creeper. He uses on His waist the hide of the tiger. 
He rides on the bull to move about in the cosmos. This is our Lord who loves to be 
manifested in the temple in Thiru-virkudi-veerattam city. Those devotees who serve 
before our Lord and praise His fame will never get any serious sufferings in their life.

2639.     களங்கொள்கொன்றையுங்கதிர்விரிமதியமுங்கடிகமழ்சடைக்கேற்றி         
    உளங்கொள்பத்தர்பாலருளியபெருமையர்பொருகரியுரிபோர்த்து 
    விளங்குமேனியரெம்பெருமானுறைவிற்குடிவீரட்டம் 
    வளங்கொள்மாமலரால்நினைந்தேத்துவார்வருத்தமதறியாரே.         2

    களம் கொள் கொன்றையும் கதிர்விரி மதியமும் கடிகமழ் சடைக்கேற்றி     
    உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி உரிபோர்த்து 
    விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் 
    வளம் கொள் மாமலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே.

    kaLam koL konRaiyum katir viri matiyamum kaTi kamaz caTaikku ERRi, 
    uLam koL pattarpAl aruLiya perumaiyar; poru kari uri pOrttu 
    viLagku mEniyar; emperumAn; uRai viRkuTi vIraTTam, 
    vaLam koL mA malarAl ninaintu EttuvAr varuttam atu aRiyArE.

பொருள்:     தேனுடைய கொன்றை மலர்களும், நிலவொளி விரிக்கும் பிறைமதியமும் 
மணங்கமழ் சடைக்கு ஏற்றி அவற்றை உள்ளத்தில் கொள்கின்ற பத்தர்களுக்கு அருளிய பெருமை 
உடையவர்; போர் செய்யும் களிற்றின் தோலை உரித்துப் போர்த்திய மேனியர்; அவர் எம்முடைய 
பெருமான்; அவர் எழுந்தருளியுள்ள விற்குடி வீரட்டத்தை வளமான மலர்களால் வழிபட்டு 
மனத்தில் நினைந்து வாயால் துதிப்பவர் வருத்தம் என்பதையே அறியார்.

குறிப்புரை:     கதிர்-நிலவு. கடி - மணம். பத்தியை உள்ளத்திற் கொண்டவரிடத்தில் சிவனருள் 
விளங்கும். கரி - யானை. மலரால் வழிபட்டு மனத்தில் நினைத்து வாயால் துதிப்பார்.

    Our Lord Civa adorns His head with the Indian laburnum flowers which Blossom 
in saline soil and the moon which broadens its rays on the eighth day, Civa wears these 
on His sweet smelling mattress. The devotees with concentrated mind, pray to Lord Civa 
and get His grace, such is His fame. His whole body is brilliant white. He covers His 
body with the hide of the elephant after He killed it. This Lord is manifest in the 
temple in Thiru-virkudi-veerattam city. Those servitors who carry rich fresh fowers 
and spread it on His holy feet with concentrated mind, and pray to Him will never 
know what unhappiness is.

2640.    கரியகண்டத்தர்வெளியவெண்பொடியணிமார்பினர்வலங்கையில் 
    எரியர்புன்சடையிடம்பெறக்காட்டகத்தாடியவேடத்தர் 
    விரியுமாமலர்ப்பொய்கைசூழ்மதுமலிவிற்குடிவீரட்டம் 
    பிரிவிலாதவர்பெருந்தவத்தோரெனப்பேணுவருலகத்தே.         3

    கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணிமார்பினர் வலங்கையில் 
    எரியர் புன்சடை இடம்பெறக் காட்டு அகத்தாடிய வேடத்தர் 
    விரியு மாமலர்ப் பொய்கை சூழ்மதுமலி விற்குடிவீரட்டம் 
    பிரிவிலாதவர் பெருந்தவத்தோர் எனப்பேணுவர் உலகத்தே.

    kariya kaNTattar veLiya-veNpoTi aNi mArpinar, valagkaiyil 
    eriyar puncaTai iTam peRak kATTu akattu ATiya vETattar, 
    viriyum mA malarppoykai cUz matu mali viRkuTi vIraTTam 
    pirivu ilAtavar perun tavattOr enap pENuvar, ulakattE.

பொருள்:     நஞ்சுண்டதால் கருமையான கண்டத்தை உடையவர்; வெள்ளை வெளேர் என 
வெளுத்த வெண்ணீற்றினை அணிந்த மார்பினர்; கைவலத்தில் எரியினை ஏந்தியவர்; பொன் 
போல் பொலியும் சடையர்; இடுகாட்டகத்தாடிய சிவ வேடத்தர்; அவருடைய, தேன் நிறைந்த 
தாமரை மலர்கள் பரந்துள்ள பொய்கைகள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை மனத்தாலும் வாக்காலும் 
மெய்யாலும் பிரிவிலாதவர் பெரிய தவத்தைச் செய்தவர் என இவ்வுலகத்தில் போற்றப்படுவர்.

குறிப்புரை:     வலங்கை - வலக்கை இடக்கையென்றாலே குற்றமில்லாதது. வேடம் -
சிவவேடம். பிரிவிலாதவர் -  மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் நீக்கமின்றி நினைத்தும்     
போற்றியும்  வழிபட்டும்  வரும் அடியார்.

    Our Lord Civa's throat is dark blue in colour. On His chest, He smears the 
holy white ashes. In His right hand He holds brightening fire. His matted locks of hair 
are thick and lap over the ground whenever He moves on. This is how He dances in the 
burning ghat. This Lord Civa is manifest in the city of Thiru-virkudi-veerattam. 
This city is surrounded by many flower ponds. These servitors worship our Lord 
in the temple without any break. All the people in the world will praise those 
servitors as the real great austere men on earth.

2641.     பூதஞ்சேர்ந்திசைபாடலராடலர்பொலிதரநலமார்ந்த 
    பாதஞ்சேரிணைச்சிலம்பினர்கலம்பெறுகடலெழுவிடமுண்டார் 
    வேதமோதியநாவுடையானிடம்விற்குடிவீரட்டம் 
    சேருநெஞ்சினர்க்கல்லதுண்டோபிணிதீவினைகெடுமாறே.        4

    பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த 
    பாதம் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறுகடல் எழுவிடம் உண்டார் 
    வேதம் ஓதிய நாவுடையான் இடம் விற்குடிவீரட்டம் 
    சேரு நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடுமாறே.

    pUtam cErntu icaipATalar, ATalar, politara, nalam Arnta 
    pAtam cEr iNaiccilampinar, kalam peRu kaTal ezu viTam uNTAr, 
    vEtam Otiya nA uTaiyAn, iTam viRkuTi vIraTTam 
    cEru nenjcinarkku allatu uNTO, piNi tIvinai keTum ARE?            

பொருள்:     பூதங்களுடன் கூடிப் பாடுதலையும் ஆடுதலையும் உடையர்; அழகுடன் பொலியும் 
திருப்பாதத்துடன் சேர்ந்த இணைச் சிலம்பினர்; மரக்கலம் செல்லும் கடலிடை எழுந்த நஞ்சினை 
உண்டார்; வேதம் ஓதிய நாவினை உடையார்; அவருடைய இடம் திருவிற்குடி வீரட்டம்; அதனைச் 
சேரும் நெஞ்சினருக்கு அல்லால் பிணி, தீவினை கெடும் வழி உண்டோ'? இல்லை என்க.

குறிப்புரை:     பாடுதலுடையார், ஆடுதலுடையார், மரக்கலம், வேதங்களை அருளிச்செய்த 
முதல்வன், இடைவிடாது நினைக்கும். சேர்தல் - இடைவிடாது நினைத்தல் (குறள் 3 உரை). பிணியும் 
வினையும் கெடுமாறு, வீரட்டம் சேரும் நெஞ்சினர்க்கே உண்டு. சேரும் என்பது எதுகைத் 
தொடைக்கு ஏலாது.

    Our Lord Civa chants the songs along with the host of goblins. He dances whenever 
He needs. He wears the tinkling anklets that are tied to His dainty holy feet. He imbibed 
the poison that came out of the ocean where huge wooden vessels often sail. He is the 
author of the Vedas which came out of His tongue. This Lord Civa has selected and 
manifested Himself in the temple in Thiru-virkudi-veerattam city. Are there ways 
to get rid of bad karma and diseases for anybody unless they go to the temple 
and worship Lord Civa? No.

2642.     கடியஏற்றினர்கனலனமேனியரனலெழவூர்மூன்றும் 
    இடியமால்வரைகால்வளைத்தான்றனதடியவர்மேலுள்ள 
    வெடியவல்வினைவீட்டுவிப்பானுறைவிற்குடிவீரட்டம் 
    படியதாகவேபரவுமின்பரவினாற்பற்றறுமருநோயே.         5

    கடிய ஏற்றினர் கனலன மேனியரனல் எழவூர் மூன்றும் 
    இடிய மால்வரை கால்வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள 
    வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் 
    படியதாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே.

    kaTiya ERRinar, kanal ana mEniyar, anal eza Ur mUnRum 
    iTiya mAlvarai kAl vaLaittAn, tanatu aTiyavarmEl uLLa 
    veTiya valvinai vITTuvippAn, uRai viRkuTi vIraTTam 
    paTiyatu AkavE paravumin ! paravinAl, paRRu aRum, arunOyE.

பொருள்:     வேகமாகச் செல்லும் எருதுடையவர்; நெருப்புப் போலச் சிவந்த மேனியர்; 
திரிபுரம் மூன்றும் இடிந்து போக உயர்ந்த மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர்; தம்முடைய 
அடியவர் மேலுள்ள பகையாகிய வினையை அழிப்பர்; அவருடைய விற்குடி வீரட்டத்தினை 
முறையாகப் பணிமின்; பரவினால், அது, நோய் பற்றறுக்கும் மருந்தாகும்.

குறிப்புரை:     ஏற்றினர் - எருதுடையவர். கனல் அன்ன மேனியர் 'தீவண்ணர் திறம் ஒருகால் 
செப்பாராகில்'. ஊர் மூன்றும் - திரிபுரங்களும். வரை - மேரு. வெடிய -பகையாகிய. கேடாகிய 
அச்சத்தினைச் செய்யும். வீட்டுவிப்பான் - கொல்விப்பவன். படி - பண்பு. நோய் பற்று அறும்.

    Our Lord Civa sustains the bull which moves very fast. His body is 
as bright as the supernal fire. He handled the Meru mountain by pressing it 
with His leg and bent it and then fired over the three fortresses of asuras 
and burnt them all down. He removes the entire, strong, bad karma of His 
devotees from their life. This Lord Civa is manifest in the temple in 
Thiru-virkudi-veerattam city. Oh! Ye people, with good devotion go to the 
Thiru-virkudi-veerattam city temple and worship our Lord manifest there.         
If you worship, the severe diseases in your life will leave your body and 
you will feel happy

2643.     பெண்ணொர்கூறினர்பெருமையர்சிறுமறிக்கையினர்மெய்யார்ந்த 
    அண்ணலன்புசெய்வாரவர்க்கெளியவரரியவரல்லார்க்கு             
    விண்ணிலார்பொழில்மல்கியமலர்விரிவிற்குடிவீரட்டம் 
    எண்ணிலாவியசிந்தையினார்தமக்கிடர்கள்வந்தடையாவே.        6

    பெண் ஓர்கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த
    அண்ணல் அன்பு செய்வார் அவர்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு         
    விண்ணிலார் பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்
    எண்ணிலாவிய சிந்தையினார் தமக்கிடர்கள் வந்தடையாவே . 

    peN or kURinar; perumaiyar; ciRumaRik kaiyinar; mey Arnta
    aNNal anpu ceyvAr avarkku eLiyavar ariyavar allArkku
    viNNil Ar pozil malkiya malar viri viRkuTi vIraTTam
    eN nilAviya cintaiyinAr tamakku iTarkaL vantu aTaiyAvE.

பொருள்:     மாதொரு பாகர்; பெருமை உடையவர்; சிறிய மான்கன்றினைக் கையில் 
ஏந்தியவர், உண்மையான தலைவர்; தன்மாட்டு அன்பு செய்பவர்க்கு எளியவர்; அன்பிலார்க்கு 
அரியவர், அவருடைய, மலர்கள் விரிந்துள்ள விண்முட்டும் பொழில்கள் நிறைந்துள்ள விற்குடி
வீரட்டத்தைச் சிந்திக்கும் சிந்தை உடையவர்களை இடர்கள் வந்து அடையா.

குறிப்புரை:     கூறு- பாகம். மறி - மான். அன்பர்க்கு எளியவர் அல்லார்க்கு அரியவர். '
'அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு எளியான்' 'மெய்யடியார்க்கு 
எண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு' (திருவாசகம்) விண்ணில் ஆர் பொழில் என்க. 
எண் -எண்ணுதல்.

    Our Lord Civa espoused His consort on the left side of His body. He is God of fame. 
He holds in His hand a young deer. He is the real Chief. He is an uncomplicated Supreme 
Being for those who are deeply devoted to Him. He is a very rare person to those who are 
not sincere to Him. This Lord is manifest in the temple in Thiru-virkudi-veerattam city. 
This city is surrounded by great big forests where large number of flower plants, very 
tall, reaching the sky with large quantity of flowers, are available. Those servitors
who always think of this temple and praise our Lord in their mind will never get 
any hindrance in their life.

7வது பாடல் கிடைக்கப்பெறவில்லை .

2644.     இடங்கொள்மாகடலிலங்கையர்கோன்தனையிகழிதாவூன்று 
    திடங்கொள்மால்வரையானுரையார்தருபொருளினனிருளார்ந்த 
    விடங்கொள்மாமிடறுடையவனுறைபதிவிற்குடி வீரட்டம் 
    தொடங்குமாறிசைபாடிநின்றார்தமைத்துன்பநோயடையாவே.        8

    இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை இகழிதாவூன்று 
    திடம் கொள் மால்வரையான் உரையார்தரு பொருளினன் இருளார்ந்த 
    விடம் கொள் மாமிடறு உடையவன் உறைபதி விற்குடிவீரட்டம் 
    தொடங்கு மாறிசை பாடி நின்றார்தமைத் துன்பநோய் அடையாவே.

    iTam koL mAkaTal ilagkaiyar kOn tanai ikazi tAUnRu 
    tiTam koL mAlvaraiyAn, urai Artaru poruLinan, iruL Arnta 
    viTam koL mA miTaRu uTaiyavan, uRaipati viRkuTi vIraTTam 
    toTagkum ARu icai pATi ninRAr tamait tunpam nOy aTaiyAvE.

பொருள்:     மணி முதலிய செல்வங்களைத் தன்னிடம் கொண்டுள்ள பெரிய கடலின் 
நடுவில் உள்ள இலங்கையின் அரசனாகிய இராவணனின் வலிமை அழியக் கால் விரலை 
ஊன்றியவன்; திண்ணிய  பெரிய  கயிலை மலையன்; புகழ்வார் புகழுக்கெல்லாம் 
பொருளானவன்; இருண்மையான   விடம் கொண்ட  கரிய மிடறுடையவன்;  அவன் 
உறைகின்ற பதியாகிய திருவிற்குடி வீரட்டத்தை இசைபாடி நின்றார் தமைத் துன்பமும் 
நோயும் அடையாவே.

குறிப்புரை:     இகல்- வலி. மிடறு- திருக்கழுத்து. தொடங்கும் ஆறு- தொடங்கும் நெறி . 
 சிவசம்பந்தமான இசைப்பாட்டு என்றவாறு. துன்பநோய்- துன்பத்தைத் தரும் நோய்கள் .

    Raavanan is the king of Sri Lanka. This island is surrounded on all sides 
by vast big broad oceans. Lord Civa is the owner of the strong and big mount Kailash. 
To destroy the hostile mightiness of Raavanan our Lord Civa pressed the top of the 
mountain with His toe. He represents the meaning of all words. His throat 
is very dark blue in colour because He imbibed the poison. This Lord is manifest 
in the temple in Thiru-virkudi-veerattam city. Those scholars who can chant 
divine songs before our Lord in such ways as to long for and remember the fame of 
Thiru-virkudi-veerattam city will never get any hardships or diseases in their life.

2645.     செங்கண்மாலொடுநான்முகன்தேடியுந்திருவடியறியாமை 
    எங்குமாரெரியாகியஇறைவனையறைபுனல்முடியார்ந்த 
    வெங்கண்மால்வரைகரியுரித்துகந்தவன்விற்குடிவீரட்டம் 
    தங்கையால்தொழுதேத்தவல்லாரவர்தவமல்குகுணத்தாரே.     9

    செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை 
    எங்குமார் எரியாகிய இறைவனை அறைபுனல் முடி ஆர்ந்த 
    வெங்கண் மால்வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் 
    தங்கையால் தொழுது ஏத்தவல்லார் அவர் தவமல்கு குணத்தாரே.

    cegkaN mAloTu nAnmukan tETiyum tiruvaTi aRiyAmai 
    egkum Ar eri Akiya iRaivanai--aRaipunal muTi Arnta, 
    veg kaN mAlvaraikkari urittu ukantavan-viRkuTi vIraTTam 
    tam kaiyAl-tozutu Etta vallAr avar tavam malku kuNattArE.

பொருள்:     சிவந்த கண்களை உடைய திருமாலோடு நான்முகனும் தேடியும் திருவடியை 
அறியாதவாறு எங்கும் நிறைந்த நெருப்பாகிய இறைவனை, ஒலிக்கின்ற நீரருவிகளை முடியில் 
கொண்ட மலைபோன்ற களிற்றின் தோலை உரித்து மகிழ்ந்தவன்; அவனுடைய திருவிற்குடி 
வீரட்டத்தைத் தம் கையால் தொழுது வழிபட வல்லவர்கள் தவம் நிறைந்த குணத்தவரே.

குறிப்புரை:     அறியாமை - அறியாதவாறு. ஆர் எரி - நிறைந்த தீ. வரைக்கரி - 
மலைபோலும் யானை.

    The tutelary demigods of Thirumaal and the four faced Brahma were searching to 
see our Lord's head and feet. They could not see at all. But at that moment, the Lord 
took the form of a dazzling, infinite, supernal, tall flame before these two demigods. 
He wears the Ganges on His head. The ferocious elephant came before our Lord Civa. 
He then killed it and covered His body with its hide and was satisfied with for His 
action. Those devotees who can go to the temple in the Thiru-virkudi-veerattam city 
and worship our Lord by raising their hands and praising His fame will be the real, 
austere great men of the city . 

2646.    பிண்டமுண்டுழல்வார்களும்பிரிதுவராடையரவர்வார்த்தை 
    பண்டுமின்றுமோர்பொருளெனக்கருதன்மின்பரிவுறுவீர்கேண்மின் 
    விண்டமாமலர்ச்சடையவனிடமெனில் விற்குடி வீரட்டம் 
    கண்டு கொண்டடிகாதல்செய்வாரவர்கருத்துறுங்குணத்தாரே.             10 

    பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர்  வார்த்தை 
    பண்டு மின்றுமோர் பொருள் எனக்கருதன்மின் பரிவுறுவீர் கேண்மின் 
    விண்ட மாமலர்ச் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் 
    கண்டு  கொண்டடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே.

    piNTam uNTu uzalvArkaLum piri tuvar ATaiyar avar vArttai
    paNTum inRum Or poruL enak karutanmin!  parivu uRuvIr, kENmin; 
    viNTa mA malarc caTaiyavan iTam enil, viRkuTivIraTTam; 
    kaNTu koNTu aTi kAtal ceyvAr avar karuttu uRum kuNattArE.

பொருள்:     சோற்றுக் கவளம் உண்டு திரிபவர்கள் துவரூட்டிய ஆடையைப் போர்த்த 
பவுத்தர்கள் ஆகியோர் வார்த்தைகளை முன்பும் இன்றும் இனி எப்பொழுதும் ஒருபொருளாகக் 
கருதாதீர்! அன்புள்ளவர்களே! கேளுங்கள்!  விரிந்த பெரிய மலர்களை அணிந்த சடையனின் 
இடம் ஆன திருவிற்குடிவீரட்டத்தைக் கண்டு கொண்டு, அவனுடைய திருவடிகள்மேல் பத்தி 
செய்வார் உயர்வடையும் குணத்தை உடையவர்களாவர்.

குறிப்புரை:     வார்த்தையை ஒரு பொருள் என்று கருதாதீர்கள். பரிவு உறுவீர் - அன்புமிக்கரே! 
அடி-திருவடிகளை.

    Oh ye people! You have intense love of others. Please listen. The Jains eat
rice balls and roam. The Buddhists wear ochre cloth. In the olden days and today 
what these people preach has no substance. Our Lord Civa adorns His matted hair 
with blossomed flowers. If you ask where Lord Civa is manifested, it is Thiru-virkudi
veerattam. Those who see the temple and develop affection for the Lord and worship Him 
with devotion will be considered as people of good nature to be remembered.

2647.     விலங்கலேசியிடமெனவுடையவன்விற்குடிவீரட்டத் 
    திலங்குசோதியையெம்பெருமான்றனையெழில்திகழ்கழல்பேணி 
    நலங்கொள்வாழ்பொழிற்காழியுள்ஞானசம்பந்தனற்றமிழ்மாலை 
    வலங்கொடேயிசைமொழியுமின்மொழிந்தக்கால்மற்றதுவரமாமே.    11

    விலங்கல் ஏசியிடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து 
    இலங்கு சோதியை எம்பெருமான் தனை எழில்திகழ் கழல்பேணி 
    நலங்கொள் வாழ்பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நற்றமிழ்மாலை 
    வலங்கொடு இசைமொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே.        

    vilagkal Eci iTam ena uTaiyavan, viRkuTi vIraTTattu 
    ilagku cOtiyai, emperumAn tanai, ezil tikaz kazal pENi,
    nalam koL vAz pozil kAziyuL njAnacampantan nal-tamizmAlai 
    valam koTEicai moziyumin! mozintakkAl, maRRu atu varam AmE.

பொருள்:     மலையையே வில்லாகவும் இருப்பிடமாகவும் உடையவன்; அவனுடைய திருவிற்குடி 
வீரட்டத்தில் விளங்குகின்ற சோதியை, எம்முடைய தலைவனை, எழில் விளங்குகின்ற திருவடிகளைப் 
போற்றி, அழகுடைய நீண்ட மலர்ப்பொழில்களை உடைய காழியிலிருக்கும் ஞானசம்பந்தனுடைய 
நல்ல தமிழ் மாலையை வல்லமை பெற்று இசையுடன் பாடுமின்! அவ்வாறு இசைப்பதுவே 
எல்லாவற்றையும் நல்கும் வரமாகும்.

குறிப்புரை:     விலங்கலே (மேருமலையே) சிலையெனவும் (கயிலைமலையே) இடமெனவும் 
உடைய சிவன். எழில் - அழகு. நலம் - அழகு, செறிவு முதலிய நலங்கள்.

    Our Lord Civa uses the Meru mountain as His bow, His place of living is mount
Kailash. This Lord of supernal fire manifests Himself in Thiru-virkudi-veerattam city 
temple. Our saint Thiru-gnana-Sambandar who was born in Seerkaazhi, fully surrounded 
by attractive gardens, desired to worship His holy feet. He therefore came to 
Thiru-virkudi-veerattam city and chanted these ten verses in chaste Tamil language. 
Those devotees who can memorise and chant these Tamil verses in its proper musical 
style and worship our Lord will get all beneficial things in life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            108ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 108th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 245                 பதிக எண்: 109

109. திருக்கோட்டூர்                 109. THIRU-K-KOTTUR

பண்: நட்டராகம்                    Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருத்துறைப்பூண்டி தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 13.5 கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத்தலங்களுள் 111ஆவது ஆகும். திருத்துறைப்பூண்டி- 
மன்னார்குடிப் பேருந்து வழியில் கோட்டூர் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 
சிறிது தூரம் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    இறைவரின் திருப்பெயர் கொழுந்து நாதர். இச்செய்தி, 'கொந்துலாமலர் விரிபொழிற் 
கோட்டூர் நற்கொழுந்தினை' என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் 
விளங்குகின்றது. இறைவியாரின் திருப்பெயர் தேன்மொழிப்பாவை. தலவிருட்சம் வன்னி . தேவர்களும் 
குச்சர இருடிகளும் பூசித்துப் பேறு எய்தினர். இச்செய்திகள் இவ்வூர்த் தேவாரத்திலும் 
குறிப்பிடப்பெற்றுள்ளன.

    கோட்டூரில் மேற்கிலுள்ளதே இப்பாடல் பெற்ற தலமாகும். இவ்வூருக்குக் கிழக்கில் ஒரு கோயில் 
இருக்கிறது. இது கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். அது கருவூர்த்தேவர், திருவிசைப் பாடப்பெற்றது. இது 
திருஞானசம்பந்தப் பெருமானாரால் பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது .

பதிக வரலாறு

    சண்பை வேந்தர் மொழி வேந்தரோடு கூடியிருந்து, வற்கடம்போக்கி நாட்டை வாழ்வித்த பின்னர், 
திருவாஞ்சியம் முதலியவற்றைப் போற்றிக் கோட்டூரில் ஏத்திப்பாடியது இத்திருப்பதிகம் . 

                திருச்சிற்றம்பலம்

2648.     நீலமார்தருகண்டனேநெற்றியோர்கண்ணினேயொற்றைவிடைச் 
    சூலமார்தருகையனேதுன்றுபைம்பொழில்கள்சூழ்ந்தழகாய 
    கோலமாமலர்மணங்கமழ்கோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    சாலநீள்தலமதனிடைப்புகழ்மிகத்தாங்குவர்பாங்காலே.        1

    நீலம் ஆர்தரு கண்டனே நெற்றியோர் கண்ணினே ஒற்றைவிடைச் 
    சூலம் ஆர்தரு கையனே துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகாய 
    கோல மாமலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    சால நீள்தலம் அதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காலே.

    "nIlam Artaru kaNTanE! neRRi Or kaNNanE! oRRai viTaic 
    cUlam Artaru kaiyanE! tunRu paimpozilkaL cUzntu azaku Aya 
    kOla mA malar maNam kamaz kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL 
    cAla nIL talam atan iTaip pukaz mikat tAgkuvar, pAgkAlE.

பொருள்:     நீலநிறமுடைய ஆலகால விடத்தை உண்ட கண்டனே! நெற்றியில் ஒப்பற்ற
கண்ணை உடையோனே! ஒற்றை விடையனே! சூலம் பொருந்திய கையனே! நெருங்கிய
பசும்பொழில்கள் சூழ்ந்து அழகாய பொலிவுடைய சிறந்த மலர்களின் மணம் கமழ்கின்ற '
'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுவார்கள் இவ்வுலகில் மிகவும் புகழ் பெறுவர்.

குறிப்புரை:     நீலம் - நீலநிறமுடைய ஆலகாலவிடம். கோலம்-அழகு. கொழுந்து என்பது
இறைவன் திருப்பெயர். சாலநீள் தலம்-சிவலோகம். 

    Oh Lord Civa! You are Neelakandan. You are Netrikkannan. You ride on a 
single bull and go round everywhere. You hold in one of Your hands the three pronged
- trident. You are called Kolundhunaathar. You are manifest in Thiru-k-kottur temple
surrounded by thick forests where fine flowers full of fragrance blossom. The servitors
chant all the fame of Lord Civa while getting up in the early morning and worship Him.
He is the tender leaf of the city.Such servitors will reach Civa Loka and will stay 
very near Lord Civa and will get all praise and good fame.

2649.    பங்கயம்மலர்ச்சீறடிப்பஞ்சுறுமெல்விரலரவல்குல் 
    மங்கைமார்பலர்மயில்குயில்கிளியெனமிழற்றியமொழியார்மென்
    கொங்கையார் குழாங்குணலை செய்கோட்டூர் நற்கொழுந்தேயென்றெழுவார்கள்     
    சங்கையொன்றிலராகிச்சங்கரன்திருவருள்பெறலெளிதாமே.        2

    பங்கயம் மலர்ச்சீறடிப் பஞ்சுறு மெல்விரல் அரவல்குல் 
    மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார்மென் 
    கொங்கையார் குழாங்குணலை செய்கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    சங்கை ஒன்றிலர் ஆகிச் சங்கரன் திருவருள் பெறல் எளிதாமே.

    "pagkayam malarccIRaTi, panjcu uRu melviral, aravu alkul, 
    magkaimAr palar--mayil, kuyil, kiLi, ena mizaRRiya moziyAr, men
    kogkaiyAr kuzAm--kuNalai cey kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL 
    cagkai onRuilar Aki, cagkaran tiru aruL peRal eLitu AmE.

பொருள்:     செந்தாமரை மலரிதழ் போன்ற செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற சிறிய பாதங்களையும் 
மெல்லிய விரல்களையும் அல்குலையும் உடைய மங்கையர்; மயிலெனச் சாயலையும் குயில் கிளியென 
மிழற்றிய மொழியும் உடையவர்கள். மென்மையான கொங்கையர் ஆகிய மங்கையர் பலரும் கூட்டமாகக் 
குணலைக் கூத்து ஆடுவர்; அத்தகைய ஊராகிய கோட்டூரில் நற்கொழுந்தே என்று தொழுது எழுவார் 
ஐயமே இன்றிச் சங்கரன் திருவருளை எளிதாகப் பெறுவர்.

குறிப்புரை:     பங்கயம்- தாமரை. மயிலும் மொழிக்கு ஒப்பாக்கூறுவது உண்டுபோலும். குயில்மொழி, 
கிளிமொழி என்பனபோல மயில்மொழி என்று கேட்டிலோம். மிழற்றிய - மெல்லச் சொல்லிய. குணலை- 
கூத்துள் ஒன்று. சங்கை - சந்தேகம்.

    Oh Lord Civa is manifest in Thiru-k-kottur. The damsels' young legs are very attractive, 
small and tender. Their fingers are thin and soft like cotton. Their waist looks like the hood 
of the snakes. Their speech, songs and music are similar to that of peacock, Indian cuckoo and 
parrot. Their breasts are all very soft. Such young girls perform musical drama and dance and 
enjoy life in the city of Thiru-k-kottur. Our Lord Civa is manifest and called 'Nar-kolundhe'. 
Those servitors who chant 'Nar-kolundhe' and worship our Lord Civa, with His name as known 
Sankaran, while getting up in the morning, will get His good grace without any doubt in 
their life.

2650.     நம்பனார்நலமலர்கொடுதொழுதெழுமடியவர்தமக்கெல்லாம் 
    செம்பொனார்தருமெழில்திகழ்முலையவர்செல்வமல்கியநல்ல
     கொம்பனார்தொழுதாடியகோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    அம்பொனார்தருமுலகினிலமரரோடமர்ந்தினிதிருப்பாரே.        3

    நம்பனார் நலமலர் கொடு தொழுது எழும் அடியவர் தமக்கு எல்லாம் 
    செம்பொனார் தரும் எழில் திகழ் முலையவர் செல்வ மல்கிய நல்ல
    கொம்பனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    அம்பொனார் தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே.

    "nampanAr, nal malar koTu tozutu ezum aTiyavar tamakku ellAm; 
    cempon Artarum ezil tikaz mulaiyavar, celvam malkiya nalla
    kompu anAr, tozutu ATiya kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL 
    am pon Artarum ulakinil amararOTu amarntu initu iruppArE.

பொருள்:     நல்ல மலர்களைக் கொண்டு தொழுதெழும் அடியவர்களுக்கெல்லாம் நம்பனார்; 
செம்பொனாற் செய்யப்பட்டது போலும் அழகு திகழ்கின்ற முலையினராகிய வாழ்க்கைத் துணை 
நலத்துடன் நல்ல கொழுகொம்பு அன்னவர்கள் தொழுது ஆடித் 'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' எனத் 
தொழுது எழுவார்கள்; அவர்கள் பொன்னுலகில் தேவரொடும் இனிது இருப்பர்.

குறிப்புரை:     அடியவர் தமக்கு எல்லாம் நம்பனார். பொன்னுலகில் தேவரொடும் இனிதிருப்பர்.

    Our Lord Civa is supremely desirable for those servitors who in the morning worship 
Him with enticing flowers. He is worshipped by dancing and singing women who have thin bodies 
like red gold, very attractive breasts, those young women look like young tendrils. Lord Civa 
is manifest in the excellent Thiru-k-kottur city. Those servitors who get up in the early 
morning chanting the name of Civa of this temple as 'Kolundheesarae' will happily live in 
the golden heaven along with devas.

2651.     பலவுநீள்பொழில்தீங்கனிதேன்பலாமாங்கனிபயில்வாய 
    கலவமஞ்ஞைகள் நிலவுசொற்கிள்ளைகளன்னஞ்சேர்ந்தழகாய         
    குலவுநீள்வயற்கயலுகள்கோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    நிலவு செல்வத்தராகிநீள்நிலத்திடைநீடியபுகழாரே.        4

    பலவு நீள்பொழில் தீங்கனி தேன் பலா மாங்கனி பயில்வாய 
    கலவ மஞ்ஞைகள் நிலவு சொற்கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகாய                 
    குலவு நீள் வயல் கயலுகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே.

    "palavum nIL pozil-tIm kani tEn palA mAgkani payilvu Aya
    kalava manjnjaikaL nilavu col kiLLaikaL annam cErntu azaku Aya,
    kulavu nIL vayal kayal ukaL-kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL         
    nilavu celvattar Aki, nIL nilattu iTai nITiya pukazArE.

பொருள்:     இனிய கனிகளை அளிக்கும் தேன்பலா மாங்கனி முதலிய பலமரஞ்செடி 
கொடிகள் நிறைந்ததும் தோகை மயில்கள், மழலைச் சொற்கள் பயிலும் கிள்ளைகள், 
அன்னங்கள் எனப் பலவும் சேர்ந்து அழகுடன் விளங்கும் நீண்ட வயல்களில் கயல்மீன்கள் 
உகளும் 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுவார்கள் அழியாத செல்வம் உடையராவதுடன், 
இப்பரந்த உலகில் அழியாப் புகழும் உடையராவர்.

குறிப்புரை:     பலவு - பல மரஞ்செடி கொடிகளும். கலவம்- தோகை. மஞ்ஞை - மயில், கிள்ளை-கிளி,
நிலவு செல்வத்தர்-  அழியாத ஐசுவரியமுடையவர். நீடிய - அழியாத.

    The city of Thiru-k-kottur provides a forest area on all sides .Inside these 
Jack fruit mango fruit  and many other fruit trees grow in large numbers. The male 
peacocks with long feathers, parrots, and the swans all play and enjoy life inside 
the forests and eat all the fruits available, the forests are full of trees, plants 
and vines. All the fish very delightedly play and get satisfied in the very rich 
and gorgeous paddy fields.In such an attractive city of Thiru-k-kottur our Lord 
is manifest. Those devotees who pray to our Lord Civa and chant 'Nar-kolundhe' 
(embodiment of sweetest fragrance) will become rich and live with fame in this world.

2652.     உருகுவாருள்ளத்தொண்சுடர்தனக்கென்றுமன்பராமடியார்கள் 
    பருகுமாரமுதெனநின்றுபரிவொடுபத்திசெய்தெத்திசையும் 
    குருகுவாழ்வயல்சூழ்தருகோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    அருகுசேர்தருவினைகளுமகலும்போயவனருள்பெறலாமே.         5

    உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் தனக்கு என்றும் அன்பராம் அடியார்கள் 
    பருகுமார் அமுது என நின்று பரிவொடு பத்திசெய்து எத்திசையும் 
    குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    அருகு சேர்தரு வினைகளும் அகலும் போயவன் அருள் பெறலாமே.

    "urukuvAr uLLattu oNcuTar! tanakku enRum anpar Am aTiyArkaL 
    parukum Ar amutu!" ena ninRu, parivoTu patti ceytu, "etticaiyum 
    kuruku vAz vayal cUztaru kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL 
    aruku cErtaru vinaikaLum akalum, pOy; avan aruL peRal AmE.

பொருள்:     தன்னை நினைந்து உருகுபவர் உள்ளத்தில் ஒளிவளர் விளக்கு; தனக்கு 
என்றும் அன்பராகும் அடியவர்கள் உண்ணும் அரிய அமுது; என அன்புடன் எத்திசையிலும் 
பத்தி செய்து, குருகுகள் வாழும் வயல்கள் சூழ்ந்த 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது 
எழுமவர்களின் நீக்கற்கு அரிய வினைகள் அகன்று போகும்; இறைவனது அருள்  பெறலாகும்.

குறிப்புரை:     உள்ளம் உருகுவார்க்கு ஒளிவளர் விளக்கு . அன்புடையடியார்க்கு 
உண் ஆரமுது , பரிவும் பக்தியும் செய்து கோட்டூர் நற்கொழுந்தே என்று  எழுவார் 
வினைகள் விலகும். திருவருள் வாய்க்கும்.

    To those devotees who think of Him with melting minds, our Lord is supernal
flame. To other devotees of ardent love, Lord Civa is the divine nectar. This Lord is 
manifested in Thiru-k-kottur city. To Him, the servitors with tender love and piety 
for our Lord offer service to Him. These devotees live in Thiru-k-kottur city 
where herons are many. They worship our Lord and address Him as 'Nar-kolundhe'. 
The bad karma of  these devotees will be wiped out and our Lord's divine grace 
will be showered on them.

2653.     துன்றுவார்சடைத்தூமதிமத்தமுந்துன்னெருக்கார்வன்னி 
    பொன்றினார்தலைக்கலனொடுபரிகலம்புலியுரியுடையாடை 
    கொன்றைபொன்னெனமலர்தருகோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவாரை
     என்றுமேத்துவார்க்கிடரிலைகேடிலைஏதம்வந்தடையாவே.        6

    துன்று வார்சடைத் தூமதி மத்தமும் துன்எருக்கார் வன்னி 
    பொன்றினார் தலைக் கலனொடு பரிகலம்புலி உரியுடை ஆடை 
    கொன்றை பொன் என மலர் தருகோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை 
    என்றும் ஏத்துவார்க்கு இடரிலை கேடிலை ஏதம் வந்தடையாவே.

    "tunRu vArcaTait tUmati, mattamum, tun erukku, Ar vanni, 
     ponRinAr talai, kalanoTu, parikalam, puli uri uTai ATai,
     konRai pon ena malartaru kOTTUr naRkozuntE!" enRu ezuvArai- 
     enRum EttuvArkku iTar ilai; kETu ilai;--Etam vantu aTaiyAvE.

பொருள்:     பின்னிய நீண்ட சடையில் தூயமதி; ஊமத்தை மலர்; நெருங்கிய எருக்கு, ஆத்தி, 
வன்னியிலையும், இறந்த பிரமனின் மண்டையோடு உண்கலன்; புலித்தோல் ஆடை;  கொன்றை மாலை 
பொன்னாபரணம் எனப் பொலிதரும் 'கோட்டூர் நற்கொழுந்தே' என்று  தொழுது எழுமவரை என்றும் 
ஏத்துவாருக்கு இடரில்லை; கேடில்லை; ஏதமும் வந்தடையா.

குறிப்புரை:     கோட்டூர் நற்கொழுந்தே என்று எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் 
கேடும் ஏதமும் இல்லை.

    Our Lord's matted locks of hair droop behind Him. On His hair locks, He retains 
the moon, datura flowers, white yercum flowers, and leaves of summer tree. He adorns His 
head with the above and places a garland of skulls over His body. He holds a skull in His 
hand using it to get alms. He wears the tiger's skin on His waist. On all sides of the 
city, the temple Indian laburnum flowers blossom in large quantities with golden colour. 
In such a city of Thiru-k-kottur our Lord is manifest and renowned. This Lord is known 
as Kolundheesar. Those devotees who get up in the early morning, go to the temple daily 
and worship Him by chanting His name as above will have no distress, no annihilations 
nor any affliction in their life.

2654.     மாடமாளிகைகோபுரங்கூடங்கள்மணியரங்கணிசாலை 
    பாடுசூழ்மதிற்பைம்பொன்செய்மண்டபம்பரிசொடுபயில்வாய 
    கூடுபூம்பொழில்சூழ்தருகோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    கேடதொன்றிலராகிநல்லுலகினிற்கெழுவுவர்புகழாலே.         7

    மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை 
    பாடு சூழ்மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வாய 
    கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    கேடது ஒன்றிலராகி நல்லுலகினில் கெழுவுவர் புகழாலே.

    "mATa mALikai, kOpuram, kUTagkaL, maNi aragku, aNi cAlai, 
    pATu cUz matil paimpon cey maNTapam, paricoTu  payilvu  Aya
    kUTu pUmpozil cUztaru kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL
    kETu atu onRu ilar Aki, nal ulakinil kezuvuvar pukazAlE.

பொருள்:     மாட மாளிகைகள், கோபுரங்கள், கூடங்கள், அழகிய அரங்கங்கள், தெருக்கள், 
பக்கங்களில் சூழ்ந்த மதில்கள், பொன் மண்டபம் முதலியவை நிறைந்து, பூஞ்சோலைகள் குழ்ந்த 
'திருக்கோட்டூர் நற்கொழுந்தே' என்று தொழுது எழுமவர் சிறிதும் கேடிலராகி நல்லுலகில் 
புகழுடன் விளங்குவர்.

குறிப்புரை:     மாளிகை, கோபுரம், கூடம், மணி அரங்கம், சாலை, பொன் மண்டபம், மதில்,
பொழில், எல்லாம் கோட்டூர்ச் சிறப்பை உணர்த்தின. கேடில்லாதவராய். உலகெலாம் விளங்கிய-
புகழ் உடையவராவர். 

    Our Lord is manifest in the temple in Thiru-k-kottur city. This city 
has got on all sides very attractive forests. This city is full of palatial 
buildings, very large temple towers, gem fixed stages, very well planned 
city roads, the famous city walls,and the golden hall open on one side etc. 
The devotees get up and chant 'Oh Lord Narkolundhe',pray and worship Him. 
These devotees will have no downfall in their life.They will have high fame 
all over the world.

2655.     ஒளிகொள்வாளெயிற்றரக்கனவ்வுயர்வரையெடுத்தலுமுமையஞ்சிச் 
    சுளியவூன்றலுஞ்சோர்ந்திடவாளொடுநாளவற்கருள்செய்த 
    குளிர்கொள்பூம்பொழில்சூழ்தருகோட்டூர்கொழுந்தினைத்தொழுவார்கள் 
    தளிர்கொள்தாமரைப்பாதங்களருள்பெறுந்தவமுடையவர்தாமே.     8

    ஒளி கொள்வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை எடுத்தலும் உமை அஞ்சிச் 
    சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த
    குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் கொழுந்தினைத் தொழுவார்கள் 
    தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர் தாமே.

    oLi koL vAL eyiRRu arakkan av uyarvarai eTuttalum, umai anjci, 
    cuLiya UnRalum, cOrntiTa, vALoTu nAL avaRku aruL ceyta- 
    kuLir koL pUmpozil cUztaru--kOTTUr naRkozuntinait tozuvArkaL, 
    taLir koL tAmaraippAtagkaL aruL peRum tavam uTaiyavar tAmE.

பொருள்:     ஒளிவீசும் வாளினைப் போலும் கோரைப் பல்லினனாகிய அரக்கன், 
இராவணன் கயிலை மலையாகிய உயர் வரையைப் பெயர்த்து எடுக்க முயலும்போது: 
உமை அஞ்சிச் சுளிக்க இறைவன் கால் விரலை ஊன்றினான்; ஊன்றவே, அவன் சோர்ந்து 
வருந்தினான். சோர்ந்திட்ட, அவனுக்கு வாட்படையும் வாழ்நாளும் அருள் செய்தவன்; 
குளிர்ச்சியுடைய பைம்பொழில்கள் சூழ்ந்த திருக்கோட்டூர் நற்கொழுந்தினைத் தொழுதெழுமவர் 
தாமரைத்  தளிர் போன்ற திருவடிகளின் அருளைப் பெறுதற்குரிய தவத்தைச் செய்தவராவர். 

குறிப்புரை:     வாள் எயிறு- வாள்போலும் கோரைப்பல். சுளிய- சுளிக்க. வாளொடுநாள் - 
வாட்படையும் ஆயுளும். தளிர்கொள் தாமரைப் பாதங்கள். அருளைப் பெறுதற்குரிய தவம்.

    Raavanan,the king of Sri Lanka has very bright and sharp teeth. He once
attempted to shift the Kailash mountain, then Uma Devi, sitting on the mount, 
was frightened due to the slight movement of the mountain. Our Lord Civa, with His 
holy foot's big toe slightly bent and pressed the mountain top. Raavanan got crushed 
and prayed and begged for pardon. Our Lord Civa pardoned him and gave him a divine 
sword and long life and graced him. This Lord is manifested in the temple in 
Thiru-k-kottur city, which is surrounded by forests. Those devotees worship the Lord 
in this city known as Kolundheeswarar. This worship is equal to penance and they could 
reach the holy lotus feet of our Lord Civa.

2656.     பாடியாடுமெய்ப்பத்தர்கட்கருள்செயுமுத்தினைப்பவளத்தைத் 
    தேடிமாலயன்காணவொண்ணாத அத்திருவினைத்தெரிவைமார் 
    கூடியாடவர்கைதொழுகோட்டூர்நற்கொழுந்தேயென்றெழுவார்கள் 
    நீடுசெல்வத்தராகியிவ்வுலகினில்நிகழ்தருபுகழாரே.         9

    பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினைப் பவளத்தைத் 
    தேடிமால் அயன் காணவொண்ணாத அத்திருவினைத் தெரிவைமார் 
    கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் 
    நீடு செல்வத்தராகி இவ்வுலகினில் நிகழ்தரு புகழாரே.

    pATi ATum meyp pattarkaTku aruL ceyum muttinai, pavaLattai, 
    tETi mAl ayan kANa oNNAta at tiruvinai, "terivaimAr 
    kUTi ATavar kaitozu kOTTUr naRkozuntE!" enRu ezuvArkaL
    nITu celvattar Aki, ivulakinil nikaztaru pukazArE.

பொருள்:     பத்தியோடு பாடியாடுகின்ற பத்தர்களுக்கு அருள்செய்கின்ற முத்தினைப் 
பவளத்தை; திருமாலும் பிரமனும் தேடிக் காண முடியாத செல்வத்தை; மகளிருடன் கூடி 
ஆடவர்கள் கைதொழும் 'திருக்கோட்டூர் நற்கொழுந்தே'  எனத் தொழுதெழுமவர்  அழிவிலாத 
செல்வத்தை உடையராகி, இவ்வுலகெலாம் நிகழும் புகழும் உடையவராவர். 

குறிப்புரை:     பாடிஆடுகின்ற உண்மையடியார்க்கு அருளும் முத்து. அரி அயன் அறியாத திரு. 
மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூர்க் கொழுந்தே என்று எழுவார்க்கு நீடிய செல்வமும் 
உலகெலாம் நிகழும் புகழும் உண்டாம்.

    Our Lord Civa, to His true devotees dancing and singing His praise, is an 
embodiment of grace and is like pearls and coral. He is the Supreme Being of felicity 
but unknown to Thirumaal and the four faced Brahma who went out in search of Lord Civa 
and could not see Him at all. Men and women join together and go to the temple in 
Thiru-k-kottur city and worship our Lord Civa known as 'Kolundhu', manifest in 
Thiru-k-kottur city. These devotees will get lasting riches and will become world
famous forever.

2657.     கோணல்வெண்பிறைச்சடையனைக்கோட்டூர்நற்கொழுந்தினைச்செழுந்திரளைப் 
    பூணல்செய்தடிபோற்றுமின்பொய்யிலாமெய்யன்நல்லருளென்றும் 
    காணலொன்றிலாக்காரமண்தேரர்குண்டாக்கர்சொற்கருதாதே 
    பேணல்செய்தானைத்தொழுமடியவர்பெருமையைப்பெறுவாரே.        10

    கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர் நற்கொழுந்தினைச் செழுந்திரளைப் 
    பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன் நல்லருள் என்றும்.
     காணல் ஒன்றிலாக் காரமண் தேரர் குண்டாக்கர் சொல் கருதாதே 
    பேணல் செய்தானைத் தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே. 

    kONal veNpiRaic caTaiyanai, kOTTUr naRkozuntinai, cezuntiraLai,         
    pUNal ceytu aTi pORRumin! poy ilA meyyan nal aruL enRum 
    kANal onRu ilAk kAr amaN, tErar kuNTu Akkar, col karutAtE, 
    pENal ceytu, aranait tozum aTiyavar perumaiyaip peRuvArE.

பொருள்:     வளைந்த வெண்பிறையை அணிந்த சடையனை; திருக்கோட்டூர் நற்கொழுந்தினை, 
செழுந்திரளை, அலங்காரம் செய்து அடி போற்றுமின்; பொய்யிலா மெய்யனாகிய சிவனின் அருளினை 
என்றும் காணுதலில்லாக் கரிய சமணர்; தேரர் குண்டாக்கர் ஆகியோர் கூறும் சொற்களைப் 
பொருட்டாகக் கொள்ளாதே. சிவனைப் பத்தி செய்து தொழும் அடியவர் உறுதியாகப் 
பெருமையைப் பெறுவர்.

குறிப்புரை:     பூணல் - மலர்களாலும் ஆடை ஆபரணங்களாலும் அலங்கரித்தல். அரனைப் 
பேணல் செய்து தொழும் அடியவர். பேணல் - பக்தி.

    Our Lord Civa retains the curved white moon in His matted hair. He is manifest 
in the temple in Thiru-k-kottur city. He is known as Kolundheesar. His luxurious body 
is adorned with fresh flowers. The devotees praise His fame and worship His holy feet. 
The Jains and Buddhists have not done any good karma in their past life. Therefore, 
they were unable to see and get the grace of our Lord who is the embodiment of truth
and is free without falsehood. Our Lord's devotees do not listen to their preaching
but with devotion worship our Lord and get all fame in their life .

2658.     பந்துலாவிரற்பவளவாய்த்தேன்மொழிப்பாவையோடுருவாரும் 
    கொந்துலாமலர்விரிபொழிற்கோட்டூர்நற்கொழுந்தினைச்செழும்பவளம் 
    வந்துலாவியகாழியுள்ஞானசம்பந்தன்வாய்ந்துரைசெய்த 
    சந்துலாந்தமிழ்மாலைகள்வல்லவர்தாங்குவர்புகழாலே.         11

    பந்து உலாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோடு உருவாரும் 
    கொந்துலா மலர்விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினைச் செழும்பவளம் 
    வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்துரை செய்த 
    சந்துலாந் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.

    pantu ulA viral pavaLa vAyt tEn mozippAvaiyOTu uru Arum 
    kontu ulAm malar viri pozil kOTTUr naRkozuntinai, cezum pavaLam 
    vantu ulAviya kAziyuL njAnacampantan vAyntu uraiceyta 
    cantu ulAm tamiz mAlaikaL vallavar tAgkuvar, pukazAlE.

பொருள்:     பந்து நிலவுகின்ற கைவிரல்கள், பவளம் போற் சிவந்த வாய், தேன்போல் இனிக்கும் 
பேச்சு ஆகியன உடையவள்; பாவை போல அழகியள் ஆகிய உமையைத் தன் உருவில் ஒருபாகமாகக் 
கொண்டவன்; கொத்துக் கொத்தாக மலர்கள் விரிகின்ற பூம்பொழில்களை உடைய திருக்கோட்டூர் 
நற்கொழுந்தினைச் செழும்பவளம் வந்து உலவும் காழியுள் ஞானசம்பந்தன் உரை செய்த சந்தம் 
பொருந்திய இத்தமிழ்மாலையினை வல்லவர் புகழைத் தாங்குவர்.

 குறிப்புரை:     தேன்மொழிப்பாவை- இத்தலத்தில் உள்ள தேவியார் திருப்பெயர். இதனை மதுரவசனி 
என்று பின்னோர் மொழிபெயர்த்தனர். கொந்து - பூங்கொத்து. சந்து - சந்தம். பாவண்ணம்.

    Our Lord Civa's consort Uma Devi has very thin and fine fingers with which she 
plays balls. Her mouth looks like coral beads. Her speech and voice are very gentle 
and sweet like honey. Along with her, our Lord Civa is manifest in the temple in 
Thiru-k-kottur city, where He is known as Kolundheesar. On all sides of this city, 
the forests are full of plants with plenty of flowers. Our saint Thiru-gnana-Sambandar 
hails from Seerkaazhi where the sea waves bring plenty of coral gems to the seashore. 
He came to the temple in Thiru-k-kottur city, worshipped our Lord Civa and chanted 
these ten verses in chaste Tamil language. Those who memorise and chant these poems 
will get all fame in their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            109ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 109th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 246                     பதிக எண்: 110. 

110. திருமாந்துறை                    110. THIRU-MAANTH-THURAI

பண்: நட்டராகம்                         Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருமாந்துறை என்னும் இத்திருத்தலமானது வடகரை மாந்துறை என்று வழங்குகின்றது. 
காவிரிக்குத் தென்கரையில் ஒரு மாந்துறை இருக்கின்றது. இதை வேறு பிரித்துக் காட்டுதற்கு 
வடகரை மாந்துறை என்னும் பெயர் வழங்குகிறது. தென்கரை மாந்துறை வைப்புத் தலமாகும். 
தனக்கெனத் தனிப்பதிகமின்றி, வேறு ஓர் பதியில் வைத்துப் பாடப்பட்டது வைப்புத்தலம் 
என்னும் பெயர் பெறும்.

    இது லால்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கில் 5 கி.மீ தூரத்தில் இருக்கின்றது .
இது காவிரி வடகரையில் ஐம்பத்தெட்டாவது தலமாகும். திருச்சிராப்பள்ளியிலிருந்தும் 
லால்குடியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. இறைவர் திருப்பெயர் ஆம்பிரவனநாதர். 
இறைவி திருப்பெயர் அழகம்மை. மருதவானவரும் (மருத்துக்களும்) கண்ணுவ முனிவரும் 
பூசித்துப்பேறு பெற்றனர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. இதற்கு 
ஆம்பிரவனம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆம்பிரவனம் என்றால் மாமரங்கள் 
உள்ள காடு என்று பொருள்.

பதிக வரலாறு

    சைவ முதல் மறையோர் அன்பிலாலந்துறை முன்னவனைத் தொழுது பதியும் பணிந்து 
வடகரை மாந்துறை அணைந்தார். வலஞ்செய்து உள்புக்குத்தாழ்ந்து, பரிதி மதி மருத்துக்கள் 
தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலையைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                    திருச்சிற்றம்பலம்

2659.     செம்பொனார்தருவேங்கையும்ஞாழலுஞ்செருந்திசெண்பகமானைக் 
    கொம்புமாரமும்மாதவிசுரபுனைகுருந்தலர்பரந்துந்தி 
    அம்பொனேர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைகின்ற 
    எம்பிரானிமையோர்தொழுபைங்கழலேத்துதல் செய்வோமே.        1

    செம்பொனார் தருவேங்கையும் ஞாழலும் செருந்தி செண்பக மானைக் 
    கொம்பு மாரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்து உந்தி 
    அம்பொனேர் வருகாவிரி வடகரை மாந்துறை உறைகின்ற 
    எம்பிரான் இமையோர் தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.

    cempon Artaru vEgkaiyum, njAzalum, cerunti, ceNpakam, Anaik 
    kompum, Aramum, mAtavi, curapunai, kuruntu, alar parantu unti, 
    am pon nEr varu kAviri vaTakarai mAntuRai uRaikinRa 
    empirAn, imaiyOr tozu, paigkazal Ettutal ceyvOmE.

பொருள்:     செம்பொன்னைப் போலப் பூக்கும் வேங்கை ஞாழ! செருந்தி செண்பகம் ஆனைக் 
கொம்பு சந்தனம் மாதவி, சுரபுன்னை, குருந்தமலர் முதலியவற்றை உந்திக் கொண்டு பரந்து, 
பொன்னின் நேர்வரு காவிரிவடகரை திருமாந்துறை உறைகின்ற தம்பிரானின், இமையோர் 
தொழுகின்ற கழலணிந்த திருவடிகளைப் போற்றுதல் செய்வோம்.

 குறிப்புரை:     வேங்கை பொன் போல் பூக்கும் வேங்கை முதலியவை காவிரி வெள்ளத்தால் 
உந்தப்பட்டுவருவன. ஆரம் - சந்தனம். பொன் நேர்வருகாவிரி - பொன்னி. 
    
    Our Lord Civa is manifest in the temple situated in the city of Thiru-maanth-thurai 
on the northern bank of river Cauvery. This river water brings parts of kino tree, orange 
cup calyxed, panicled and blossomed pear tree twigs, michelia chambaca flowers, the tusks 
of elephants, twigs and branches of sandalwood also Alexandria laurel flowers, a kind of 
tree with fragrant folios and flowers and such other things. The running water of the 
river pushes all these items forward along with its flow. They were left on the banks 
of the river and people collect them. Lord Civa's holy feet at Thiru-maanth-thurai are 
worshipped by the devas. We will also worship these holy feet and praise His fame.

2660.     விளவுதேனொடுசாதியின்பலங்களும்வேய்மணிநிரந்துந்தி 
    அளவிநீர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைவானத் 
    துளவமான்மகனைங்கணைக்காமனைச்சுடவிழித்தவனெற்றி 
    அளகவாணுதலரிவைதன்பங்கனையன்றிமற்றறியோமே.        2

    விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்து உந்தி  
    அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானத் 
    துளவ மான்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன் எற்றி     (ஐயம்: எற்றி?நெற்றி?)
    அளக வாணுதல் அரிவை தன்பங்கனை அன்றி மற்றறியோமே.

    viLavu tEnoTu cAtiyin palagkaLum vEy maNi nirantu unti, 
    aLavi nIr varu kAviri vaTakarai mAntuRai uRaivAnat 
    tuLava mAlmakan aigkaNaik kAmanaic cuTa vizittavan, neRRi 
    aLaka vALnutal arivai tan pagkanai anRi, maRRu aRiyOmE.

பொருள்:     விளாங்கனி, தேன், சாதிக்காய், மூங்கில்முத்து முதலியன நிரம்ப உந்திக் 
கலந்து வருகின்ற காவிரியாற்றின் வடகரையிலுள்ள திருமாந்துறை உறைவான். துழாய் மாலை 
அணிந்த திருமாலுக்கு மகனான ஐங்கணைக் காமன் எரித்து விழ விழித்த நெற்றிக் கண்ணன்; 
நெற்றியில் சுருண்ட கூந்தலைக் கொண்ட அரிவையாகிய உமையின் பங்கன் ஆகிய சிவனை 
அன்றி வேறொரு தெய்வம் அறியோமே.

குறிப்புரை:     விளவு- விளா. வேய்மணி- மூங்கில்முத்து. துளவமால் மகன் - துழாய் அணிந்த 
திருமாலுக்கு மகனான.  அளகம் - கூந்தல். ஈற்றடியைச் சைவர் மறத்தல் கூடாது (பா. 3, 4 பார்க்க) 

    Our Lord Civa is manifest in the city of Thiru-maanth-thurai in the temple situated 
on the northern bank of the river Cauvery. This river carries the fruits of the wood apple 
tree which are very useful for people to eat. Along with this, the water carries pearl oysters 
also. Our Lord Civa with the fire of His third eye burnt Kaaman, the god of love and son of 
Thirumaal, and killed him. Our Lord conspicuously shines in the temple at Thiru-maanth-thurai 
along with His consort Uma. We people do not know any other Supreme Being in the world than 
Lord Civa who is manifest in Thiru- maanth-thurai.

2661.    கோடுதேன்சொரிகுன்றிடைப்பூகமுங்கூந்தலின்குலைவாரி 
    ஓடுநீர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைநம்பன் 
    வாடினார்தலையிற்பலிகொள்பவன்வானவர்மகிழ்ந்தேத்தும் 
    கேடிலாமணியைத்தொழலல்லதுகெழுமுதலறியோமே.        3

    கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின் குலைவாரி 
    ஓடுநீர் வருகாவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் 
    வாடினார் தலையிற் பலிகொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் 
    கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.

    kOTu tEn cori kunRu iTaip pUkamum kUntalin kulai vAri 
    OTu nIr varu kAviri vaTakarai mAntuRai uRai nampan, 
    vATinAr talaiyil pali koLpavan, vAnavar makizntu Ettum 
    kETu ilA maNiyait tozal allatu, kezumutal aRiyOmE.

பொருள்:     கொம்புத்தேன், குன்றுகளில் வளர்ந்த கூந்தற்பனையின் கூந்தற் குலையை வாரிக் 
கொண்டு ஓடிவருகின்ற வெள்ளப் பெருக்குடைய காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருமாந்துறையில் 
உறையும் நம்பன்; பிரமகபாலத்தில் பிச்சை கொள்பவன்; வானவர்கள் மகிழ்ந்து வழிபடும் கேடிலா 
மணியைத் தொழுதல் அல்லது வேறு முதல்வனை அறியோம்.

குறிப்புரை:     வாடினார்தலை - பிரமகபாலம். கேடிலாமணி - இத்தலத்து இறைவர் திருப்பெயர். 
மாந்துறை மணி என்பன முன் வழங்கியவை. கெழுமுதல் - நிறைவு, பொருத்தம்.

    The river Cauvery begins its source from the mountain where in between two small 
hills, honey flows down. After passing through this place, it carries the leaves of 
arecanut trees. On the banks of the river, in the city of Thiru-maanth-thurai, conspicuously 
shines our Lord Civa who has no flaws. We do not know to worship any other god in the world 
than this Lord of Thiru-maanth-thurai temple.

2662.     இலவஞாழலுமீஞ்சொடுசுரபுன்னையிளமருதிலவங்கம் 
    கலவிநீர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைகண்டன் 
    அலைகொள்வார்புனலம்புலிமத்தமுமாடரவுடன்வைத்த 
    மலையைவானவர்கொழுந்தினையல்லதுவணங்குதலறியோமே.        4

    இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம் 
    கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகண்டன் 
    அலை கொள்வார் புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த             
    மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே.

    ilavam, njAzalum, InjcoTu, curapunnai, iLamarutu, ilavagkam, 
    kalavi nIr varu kAviri vaTakarai mAntuRai uRai kaNTan; 
    alai koL vArpunal, ampuli, mattamum, ATu aravu uTan vaitta 
    malaiyai; vAnavar kozuntinai; allatu vaNagkutal aRiyOmE.    

பொருள்:     இலவம், ஞாழல், ஈஞ்சு, சுரபுன்னை, இளமருது, இலவங்கம் முதலிய 
மரங்களோடு கலந்து நீர்பெருகி வருகின்ற  காவிரியாற்றின் வடகரையிலுள்ள 
திருமாந்துறையில் உறைகின்ற கண்டன், அலைபாயும் மிக்க புனலையுடைய கங்கை             
அம்புலி ஊமத்தம்பூ ஆகியவற்றைப் பாம்புடன் சேர வைத்த மலை போன்றவனை, 
தேவர்களின் கொழுந்தினை அல்லது வேறு தேவரை வணங்குதல் அறியோம்.

குறிப்புரை:     இலவம் முதலியவை மரங்கள். ஈஞ்சு - ஈந்து, போலி. கண்டன் - தலைவன். 
புனல்- கங்கை. அம்புலி – பிறை. மலை - 'அருள் நிதிதரவரும் ஆனந்த மலையே' 
திருப்பள்ளியெழுச்சி.

    Our Lord Civa is the Chief of Thiru-maanth-thurai. He adorns His matted hair 
by supporting the river Ganges, and retains the moon and the snake. The river Cauvery 
brings the twigs and branches of the silk cotton tree and also many other things. 
On the northern riverbanks, the temple is situated. We do not worship anybody except 
the Chief of devas now manifested in Thiru-maanth-thurai temple. He is the Lord who 
has adorned His hair with the Ganges, the crescent and the snake.

2663.     கோங்குசண்பகங்குருந்தொடுபாதிரிகுரவிடைமலருந்தி 
    ஓங்கிநீர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைவானைப் 
    பாங்கினாலிடுந்தூபமுந்தீபமும்பாட்டவிமலர்சேர்த்தித் 
    தாங்குவாரவர்நாமங்கள்நாவினில்தலைப்படுந்தவத்தோரே.        5

    கோங்கு சண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலர் உந்தி 
    ஓங்கிநீர் வருகாவிரி வடகரை மாந்துறை உறைவானைப் 
    பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தித் 
    தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே.

    kOgku, caNpakam, kuruntoTu pAtiri, kuravu, iTai malar unti,        
    Ogki nIr varu kAviri vaTakarai mAntuRai uRaivAnai, 
    pAgkinAl iTum tUpamum tIpamum pATTu avi(m) malar cErtti,
    tAgkuvAr avar, nAmagkaL nAvinil-talaippaTum tavattOrE.

பொருள்:     கோங்கு, சண்பகம், குருந்தம், பாதிரி, குரா ஆகிய மலர்களை உந்திக் கொண்டு 
வரும் நீர்ப்பெருக்குள்ள காவிரியாற்றின் வடகரையில் திருமாந்துறையில் உறைவானை விதிப்படி 
இடுகின்ற தூபமும் தீபமும் தோத்திரத்துடன் நிவேதனம் மலரும் சேர்த்துச் சிவபூசை செய்பவர் 
நாவால் சேரும் தவத்தை உடையவரே ஆவர்.

குறிப்புரை:     குரவு - குராமரம். பாங்கு - சிவாகம விதி. பாட்டு - தோத்திரம். அவி - நிவேதனம்.
 தாங்குவார்- சிவபூஜாதுரந்தரர். தலைப்படல் - சேர்தல்.

    The river Cauvery brings along with the flood water, flowers, twigs, branches 
of trees, logs of wood etc., of different kinds from the mountain area such as a kind 
of champaca, and the twigs and branches of all sorts of trees, the trumpet flower tree, 
the dote tree. All these are dropped on the northern banks of the river where our God 
Civa is manifest in the temple in the city of Thiru-maanth-thurai. Those devotees, 
who reach the temple carrying flowers, an oblation, a lamp, incense, and prayer books 
and spread the flowers, worship Him and chant His various names, are people of 
religious penance .

2664.     பெருகுசந்தனங்காரகில்பீலியும்பெருமரம்நிமிர்ந்துந்திப் 
    பொருதுகாவிரிவடகரைமாந்துறைப்புனிதனெம்பெருமானைப்
    பரிவினாலிருந்திரவியும்மதியமும்பார்மன்னர்பணிந்தேத்த
    மருதவானவர்வழிபடுமலரடிவணங்குதல்செய்வோமே.         6

    பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்து உந்திப் 
    பொருது  காவிரி வடகரை மாந்துறைப் புனிதன் எம்பெருமானைப் 
    பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்து ஏத்த
    மருதவானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே

    peruku cantanam, kAr akil, pIliyum, peru maram, nimirntu unti, 
    porutu kAviri vaTakarai mAntuRaip punitan emperumAnai-             
    parivinAl iruntu, iraviyum matiyamum pAr mannar paNintu Etta,         
    marutavAnavar vazipaTum--malar aTi vaNagkutal ceyvOmE.

பொருள்:     பெருகிய சந்தன மரங்கள், கரிய அகில் மரங்கள், மயிற்பீலி, சாய மரங்கள் 
ஆகியவற்றை ஏறெடுத்து உந்திக் கொண்டு மோதிவரும் வெள்ளமுடைய காவிரியாற்றின் 
வடகரையில் உள்ள திருமாந்துறையில் உறையும் புனிதனாகிய எம்பெருமானைப்
பத்தியுடன் இருந்து சூரியனும் சந்திரனும் தேவர்களும் பார்மன்னரும் வழிபடும் மலரடிகளை 
நாமும் வணங்குதல் செய்வோம்.

குறிப்புரை:     பரிவு - பக்தி. இரவி - சூரியன். மருதவானவர்- மருத்துக்கள் .இதில் இத்தலத்தை
 வழிபட்டவர்களை உணர்த்தியருளினார்.

    The river Cauvery brings very huge quantity of floodwater from the mountain. 
Along with the profuse water, twigs and branches of sandalwood and eaglewood trees 
also move on in the water. On the way, especially on the banks of the river at 
Thiru-maanth-thurai,these logs settle down in plenty. In the temple, our Lord is 
manifest. He is worshipped by the sun, the moon, the kings and the seven winds 
with true devotion. We also will worship our Lord's holy feet. 

2665.     நறவமல்லிகைமுல்லையும்மௌவலும்நாண்மலரவைவாரி 
    இறவில்வந்தெறிகாவிரிவடகரைமாந்துறையிறையன்றங் 
    கறவனாகிய கூற்றினைச்சாடிய அந்தணன்வரைவில்லால் 
    நிறையவாங்கிவலித்தெயிலெய்தவன்நிரைகழல்பணிவோமே.        7

    நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மலர் அவைவாரி 
    இறவில் வந்து எறிகாவிரி வடகரை மாந்துறை இறையன்றங்கு 
    அறவனாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால் 
    நிறைய வாங்கி வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே.

    naRavam mallikai mullaiyum mauvalum nALmalar avai vAri 
    iRavil vantu eRi kAviri vaTakarai mAntuRai iRai, anRu agku 
    aRavan Akiya kURRinaic cATiya antaNan, varaivillAl 
    niRaiya vAgki valittu eyil eytavan, nirai kazal paNivOmE.        

பொருள்:     தேனுள்ள மல்லிகை மலர், முல்லை மலர், காட்டு மல்லிகை மலர் ஆகியவற்றை 
வாரிக் கொண்டு வந்து சாரலில் எறிகின்ற காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருமாந்துறையில் 
உறையும் இறைவன், அன்று தருமனாகிய கூற்றுவனைக் குலைத்த அந்தணன்; மலையாகிய 
வில்லை, நன்கு வளைத்து திரிபுரத்தை எய்தவன்; அவனுடைய திருவடிகளைப் பணிவோம்.

குறிப்புரை:     நறவம் - தேன், மணம். மெளவல் - காட்டு மல்லிகை. இறவில் - மிகுதியில். 
அறவனாகிய கூற்று - தருமராசன். வரைவில் - மேருவாகியவில். வாங்கி - வளைத்து. 
எயில் - திரிபுரம்.

    The river Cauvery, while flowing down the mountain, carries the jasmine flowers, 
Arabian jasmine, forest jasmine musk and the reeds in big quantity - all these get along 
the flood water and gradually settle down on the northern banks of the river at 
Thiru-maanth-thurai. In the temple situated on the banks of the river, our Lord Civa 
is manifest. He once kicked and killed the god of death, Kaalan. He once used the 
Meru mountain as His bow and burnt the three forts of asuraas in the sky. Let us 
all worship the holy feet of the Lord and get salvation.

2666.     மந்தமார்பொழில்மாங்கனிமாந்திடமந்திகள்மாணிக்கம் 
    உந்திநீர்வருகாவிரிவடகரைமாந்துறையுறைவானை 
    நிந்தியாவெடுத்தார்த்தவல்லரக்கனைநெரித்திடுவிரலானைச் 
    சிந்தியாமனத்தாரவர்சேர்வதுதீநெறியதுதானே.        8

    மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் 
    உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை 
    நிந்தியா வெடுத்து ஆர்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச் 
    சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீ நெறியது தானே.

    mantam Ar pozil mAgkani mAntiTa mantikaL, mANikkam 
    unti nIr varu kAviri vaTakarai mAntuRai uRaivAnai; 
    nintiyA eTuttu Artta val arakkanai nerittiTu viralAnai; 
    cintiyA manattAr avar cErvatu tI neRi atu tAnE.

பொருள்:     தென்றல் உலாவுகின்ற பொழில்களில் மந்திகள் மாங்கனி உண்டிட, மணிகளை 
உந்தி  வரும் காவிரியாற்றின் வடகரையில் திருமாந்துறையில் உறையும் இறைவனை நிந்தித்து
கயிலை மலையைப் பெயர்த்து ஆரவாரித்த வலிய அரக்கன் இராவணனை நெரித்த 
விரலுடையவனைச்  சிந்திக்காதவர் சேர்வது தீநெறியதுவே.

குறிப்புரை:     மந்தம் - தென்றல். நிந்தியா - நிந்தித்து. சிந்தியா மனத்தார்- சிந்திக்காத 
மனமுடையவர். தீ நெறி - நரகிற் செலுத்தும் தீயகதி.

    On all sides of the city of Thiru-maanth-thurai, big gardens with large mango 
and other fruit trees are grown together. The female monkeys reach these gardens and 
eat the well riped mango fruits and happily stay there enjoying their life. In the 
temple of this city Thiru-maanth-thurai, our Lord Civa is Manifest. Raavanan the king 
of Sri Lanka slandered our Lord Civa and tried to lift our Lord's mountain and 
shouted in  gratification. Our Lord Civa then pressed the top of the mountain with 
His toe and crushed Raavanan.Those people who do not think of this action of our 
Lord Civa will come upon misfortune, calamity and adversity.

2667.     நீலமாமணிநித்திலத்தொத்தொடுநிரைமலர்நிரந்துந்தி 
    ஆலியாவருகாவிரிவடகரைமாந்துறையமர்வானை 
    மாலுநான்முகன்தேடியுங்காண்கிலாமலரடியிணைநாளும் 
    கோலமேத்திநின்றாடுமின்பாடுமின்கூற்றுவன்நலியானே.        9

    நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி         
    ஆலியா வருகாவிரி வடகரை மாந்துறை அமர்வானை 
    மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடியிணை நாளும் 
    கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.

    nIlamAmaNi nittilat tottoTu nirai malar nirantu unti 
    AliyA varu kAviri vaTakarai mAntuRai amarvAnai- 
    mAlum nAnmukan tETiyum kANkilA--malar aTi iNai nALum         
    kOlam Etti ninRu ATumin! pATumin! kURRuvan naliyAnE.

பொருள்:     நீலமணிகளை முத்துக் கொத்தொடு பல்வகை மலர்களுடன் சேர்த்து நிரந்து 
உந்தி  முழக்கத்துடன் வருகின்ற காவிரியாற்றின் வடகரையில் திருமாந்துறையில் விரும்பி 
உறைபவனைத் திருமாலும் நான்முகனும் தேடியுங் காண்கிலார்; அம்மலரடியிணையை நாளும் 
சிவக்கோலத்துடன் ஏத்தி நின்றாடுமின்! பாடுமின்! இது செய்தீராகின் கூற்றுவன் 
உம்மை வருத்தமாட்டான்.

குறிப்புரை:     நித்திலத்தொத்து- முத்துக்கொத்து. ஆலியா- துளித்து. இணை- இரண்டு.
 நாளும்- நாடோறும். கோலம்- சிவக்கோலம். நலியான்- வருத்தமாட்டான்.

    The floodwater of river Cauvery, while flowing down the mountain, carries the 
blue sapphire  gems, pearls and flowers forward. The river Cauvery runs north of the 
city of Thiru-maanth-thurai. On the banks of the river all the articles will gradually 
settle down. Our Lord Civa is manifest in the temple on the northern banks of the river. 
However, He could not be seen by demigods Thirumaal and Brahma in spite of their 
search to see our Lord Civa. Oh Ye people ! Please go to the temple and chant divine 
songs on His holy feet and worship Him, the God of death will not chastise us. 

2668.     நின்றுணுஞ்சமண்தேரருநிலையிலர்நெடுங்கழைநறவேலம் 
    நன்றுமாங்கனிகதலியின்பலங்களும்நாணலின்நுரைவாரி 
    ஒன்றி நேர்வருகாவிரிவடகரைமாந்துறையொருகாலம் 
    அன்றியுள்ளழிந்தெழும்பரிசழகிது அதுவவர்க்கிடமாமே.      10

    நின்று உணுஞ் சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவு ஏலம் 
    நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி 
    ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒருகாலம் 
    அன்றி உள் அழிந்து எழும் பரிசு அழகிது அது அவர்க்கு இடமாமே.

    ninRu uNum camaN, tErarum, nilai ilar; neTugkazai, naRavu, Elam, 
    nanRu mAgkani, kataliyin palagkaLum, nANalin nurai vAri, 
    onRi nErvaru kAviri vaTakarai mAntuRai, oru kAlam 
    anRi, uL azintu ezum paricu azakitu; atu avarkku iTam AmE.

பொருள்:     கையிலேந்தி நின்று உண்ணும் சமணர்களும் தேரரும் நிலையான கொள்கையிலர். 
நீண்ட மூங்கில், தேன், ஏலம், நன்கு பழுத்த மாங்கனி, வாழையின் கனிகளும், நாணல் மலர்கள் 
ஆகியவற்றை வாரிக் கொண்டு நேர்வருகின்ற காவிரியாற்றின் வடகரையில் திருமாந்துறையில் 
ஒருகாலத்தன்றி எக்காலமும் உள்ளம் கசிந்து உருகி எழும் தன்மை அழகியது. இப்பரமானந்த நிலை 
அவ்விறைவர் இருக்கும் இடமாகும்.

குறிப்புரை:     கழை - மூங்கில், கரும்பு. நறவு - மணம். கதலி - வாழை. பலம் - பழம். ஒருகாலம் 
அன்றி- எக்காலத்தும். உள் அழிந்து எழும் பரிசு - நெஞ்சுருகி எழுகின்ற தன்மை. அது - 
அப்பரமானந்தநிலை. 

    The Jains of this city stand before houses, beg for alms and eat the food standing 
on the road sides. The Bhuddhists as well as these people preach false propaganda. The floodwater 
of river Cauvery carries long bamboo branches, twigs and logs of trees full of honey, mangoes 
and bananas. The reeds produce foam in the river water. The waves carry these foams of the 
reeds and reach the northern bank of the river Cauvery. In the temple situated here on the 
northern banks of the river our Lord Civa is manifest. We must worship all the year this 
Lord Civa in the temple. That divine supreme stage leads to supreme salvation.

2669.     வரைவளங்கவர்காவிரிவடகரைமாந்துறையுறைவானைச் 
    சிரபுரம்பதியுடையவன்கவுணியன்செழுமறைநிறைநாவன் 
    அரவெனும்பணிவல்லவன்ஞானசம்பந்தனன்புறுமாலை 
    பரவிடுந்தொழில்வல்லவரல்லலும்பாவமுமிலர்தாமே.        11

    வரை வளங்கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானைச் 
    சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன் 
    அரவு எனும் பணிவல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை 
    பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.

    varai vaLam kavar kAviri vaTakarai mAntuRai uRaivAnai, 
    cirapuram pati uTaiyavan--kavuNiyan, cezumaRai niRai nAvan,
    aravenum paNi vallavan, njAnacampantan--anpu uRu mAlai         
    paraviTum tozil vallavar, allalum pAvamum ilar tAmE.

பொருள்:     குறிஞ்சி வளங்களைக் கவர்ந்து கொண்டு வருகின்ற காவிரியாற்றின் 
வடகரையில் உள்ள திருமாந்துறையில் உறையும் இறைவனைச் சிரபுரமென்னும் காழியைப்         
பதியாக உடையவன் கவுணிய கோத்திரத்தவன், வளமான வேதங்களைப் பயின்ற நாவன், 
ஹரஹர  என்று முழங்குதல் வல்லவன் ஆகிய திருஞானசம்பந்தன் பாடிய பக்தி நிறைந்த
இப்பாமாலையைக் கொண்டு தொழுதிட வல்லவர் அல்லும் பகலும் பாவம் இலராவர்.

குறிப்புரை:     வரைவளம்- மலைவளங்களை, மறை நிறைநாவன் - வேதங்கள் நிறைந்த 
நாவினர் . அர- அரகர என்னும் முழக்கம். இப்பணியில் வல்லமை நல்லுயிர்க்கே உண்டாகும்.

    Our Lord Civa is manifest in the temple situated on the northern bank of the 
river Cauvery in the city of Thiru-maanth-thurai. The river water brings all products 
of the mountain forests. Our saint Thiru-gnana-Sambandar belongs to the sect of kounyas .
He utters the Vedas with his tongue. He does all the sacrificial duties for Lord Civa. 
He hails from Seerkaazhi city. He sang with sincere devotion, this garland of verses. 
Those devotees who memorise and chant them before our Lord and worship Him get rid of 
all sufferings and sins of their life.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            110ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 110th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 247                 பதிக எண்: 111

111. திருவாய்மூர்                    111. THIRU-VAAI-MOOR

பண்: நட்டராகம்                    Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருவாய்மூர் என்னும் இத்திருத்தலமானது திருக்குவளை என்று இக்காலம் வழங்கும் 
திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் 
தலங்களுள் ஒன்றாகும். திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரணியம் செல்லும் 
பேருந்துகளில் செல்லலாம். இறைவர் திருப்பெயர் வாய்மூர்நாதர். இறைவியார் திருப்பெயர் 
பாலினுநன்மொழியாள். தீர்த்தம் சூரிய தீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கிறது.
 தலவிருட்சம் பலா.

    விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஏழனுள் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் 
கமல நடனம், சூரியன் பூசித்துப் பேறு பெற்றான். சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் 
திருமறைக் காட்டில் எழுந்தருளியிருந்த பொழுது வாய்மூர் இறைவர், அப்பர் கனவில் தோன்றி,
'நாம் வாய்மூரில் இருப்போம் வா' என்றனர். உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் 
 தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர்  மறைந்து விட்டனர்.

    இதற்குள் ஞானசம்பந்தரும் எழுந்தருள, அப்பர், 'கதவைத் திறக்கப் பாடிய என்னினும், 
செந்தமிழ் உறைக்கப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளியுள்ளார். 
அவர்க்குக் காட்சி அளிக்கவாவது வெளிப்பட்டருள வேண்டும்' என்று பாட அவ்வாறே வாய்மூர் 
இறைவர் காட்சி தந்தருளினார்.

    இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகங்கள் இரண்டு ஆக மூன்று 
பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரரும் ‘வாய்மூர் மணாளனை' என்கின்றார்.

பதிக வரலாறு

    சிவபிரான் சண்பை வேந்தர்க்கு திருவாய்மூரில் அம்பிகையுடனே கூட மன்னிய ஆடல் 
காட்டினார். அதை அவர் மொழிவேந்தர்க்கும் காட்டிப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்


2670.     தளரிளவளரெனவுமைபாடத்தாளம்மிடவோர்கழல்வீசிக் 
    கிளரிளமணியரவரையார்த்தாடும்வேடக்கிறிமையார் 
    விளரிளமுலையவர்க்கருள்நல்கிவெண்ணீறணிந்தோர்சென்னியின்மேல் 
    வளரிளமதியமொடிவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        1

    தளர் இளவளர் என உமை பாடத் தாளம் இட ஓர்கழல் வீசிக் 
    கிளர் இளமணி அரவரை ஆர்த்தாடும் வேடக் கிறிமையார் 
    விளர் இளமுலை அவர்க்கு அருள் நல்கி வெண்ணீறு அணிந்தோர் சென்னியின்மேல் 
    வளர் இளமதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    "taLir iLa vaLar" ena umai pATa, tALam(m) iTa, Or kazal vIci, 
    kiLar iLa maNi aravu arai Arttu, ATum vETak kiRimaiyAr; 
    viLar iLamulaiyavarkku aruL nalki veN nIRu aNintu, Or cenniyin mEl 
    vaLar iLamatiyamoTu,--ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     வளரும் இளங்கொம்பு போன்ற உமை பாடவும் தாளம் இடவும் ஒருதாளை 
எடுத்து வீசி, கிளர்ந்தெழும் மணியுடைய பாம்பினை அரையில் கட்டி ஆடும் வேடமுடைய 
பொய்ம்மையார்; பசை கொண்ட இளமுலையருக்கு அருள் நல்கி, வெண்ணீறணிந்து, 
சென்னியின்மேல் வளரும் இளமதியமொடு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் 
அடிகள் வருவாரே.

குறிப்புரை:     இப்பதிகத்தில் அகத்துறை அமைந்தமை உணர்க. உமையம்மையார் தளிர்: 
இளவளர் எனப்பாடவும் தாளம் இடவும் ஒருதாள் எடுத்தும் ஆடும் கிறிமையார். கிறிமை - பொய்ம்மை. 
விளர் - வெழுப்பு, 'மன்னிய ஆடல்காட்ட' எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளியதை நோக்கின், 
இவர் காணீர் என்று இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. அதில் ககர உயிர்மெய் எட்டில் 
கெட்டிருக்க ரகர ஆகாரமாகக் கொண்டனர் போலும். 

    Our Lord Civa's avocation is to dance. Whenever He dances, His consort 
Uma Devi, similar to young and tender vine with tender leaves - stays near Him 
and chants divine music in proper tone along with her beating cymbal. At that 
moment Lord Civa waves His hand which holds the supernal fire. He wears the snake 
on His waist which has ruby in its hood. He blessed the women who get attached 
to Him, they have big breasts. He applies the holy ashes all over His body. 
He retains the moon on His hood and explicitly appears before His audience. 
This Lord Civa in Thiru-vaai-moor gives His darshan. Oh! ye people see His 
beautiful appearance.

2671.     வெந்தழல்வடிவினர்பொடிப்பூசிவிரிதருகோவணவுடைமேலோர் 
    பந்தஞ்செய்தரவசைத்தொலிபாடிப்பலபலநடைதொறும்பலிதேர்வார்         
    சிந்தனைபுகுந்தெனக்கருள்நல்கிச்செஞ்சுடர்வண்ணர்தம்மடிபரவ 
    வந்தனைபலசெயஇவராணீர்வாய்மூரடிகள் வருவாரே         2

    வெந்தழல் வடிவினர் பொடிப் பூசி விரிதரு கோவண உடை மேலோர் 
    பந்தம் செய்து அரவசைத்தொலி பாடிப் பலபல நடைதொறும் பலிதேர்வார்     
    சிந்தனை புகுந்து எனக்கு அருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர் தம் அடிபரவ 
    வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    ventazal vaTivinar; poTip pUci, viritaru kOvaNa uTaimEl Or 
    pantam ceytu, aravu acaittu, oli pATi, pala pala naTaitoRum pali tErvAr; 
    cintanai pukuntu, enakku aruL nalki, cenjcuTar vaNNar tam aTi parava, 
    vantanai pala ceya,--ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     செந்தழல் போலும் வடிவினர்; திருநீற்றினைப் பூசியவர்; விரிந்த கோவண ஆடையர்; 
அதன்மேல் இறுக்கிப் பாம்பினைக் கச்சாகக் கட்டியவர்; இசையுடன் பாடிக் கொண்டு வாயிற்கடைகள்
தொறும் பிச்சை தேர்வார்; என்சிந்தனையுட் புகுந்து எனக்கு அருள் செய்தவர்; செஞ்சுடர் வண்ணர்; 
அவருடைய திருவடிகளைப் பரவவும், வந்தனைகள் பல செய்யவும் 'அன்புடையீர்! (அப்பரே)
'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     இறைவர் என் சிந்தனையுட்புகுந்து எனக்கு அருள் நல்கித் தன்னைப் பரவச் செய்ய 
வருவார் காணீர் என்க.

    Our Lord Civa's entire divine body appears like supernal fire. He has applied the 
holy ashes all over His body. He wears the broad fore lap cloth and has tied it round 
the body using the snake as cord, to have the cloth properly fixed on the loins. He 
chants and creates the vedic musical sound. He moves on to many houses and accepts 
the alms. His red supernal fire-coloured body, the Thiru-vaai-moor Lord enters in my 
mind and graces me. He comes allowing the devotees externally to worship His holy feet. 
Oh ye people! come to see our Lord who comes towards all of us.

2672.     பண்ணிற்பொலிந்தவீணையர்பதினெண்கணமுமுணராநஞ்             
    சுண்ணப்பொலிந்தமிடற்றினாருள்ளமுருகிலுடனாவார்' 
    சுண்ணப்பொடிநீறணிமார்பர்சுடர்பொற்சடைமேல்திகழ்கின்ற 
    வண்ணப்பிறையோடிவராணீர்வாய்மூரடிகள் வருவாரே        3

    பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு         
    உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார் 
    சுண்ணப் பொடி நீறணி மார்பர் சுடர் பொற்சடை மேல் திகழ்கின்ற 
    வண்ணப் பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    paNNin polinta vINaiyar; patineN kaNamum uNarA nanjcu 
    uNNap polinta miTaRRinAr; uLLam urukin uTan AvAr; 
    cuNNappoTi-nIRu aNi mArpar; cuTar pon caTai mEl-tikazkinRa 
    vaNNap piRaiyOTu,ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     பண்ணிசையில் சிறந்த வீணையர்; தேவர் கூட்டத்தால் அறியப்படாதவர்; 
நஞ்சுண்டதனால் பொலிந்த மிடற்றினர்; உள்ளம் உருகி நினைக்கின் உடன் ஆவர்; 
திருநீற்றுப் பொடி அணிந்த மார்பினர்; பொன்போலச் சுடரும் சடையின்மேல் விளங்குகின்ற 
அழகிய பிறையுடன், 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     பண்- பண்ணிசை. வீணையர்-  (பா. 8 பார்க்க) பதினெண்கணம் - 
பதினெட்டுத் தேவர் கூட்டம். நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் -- நஞ்சு உண்டும் சாவா 
ஒருவன் என்ற கருத்தை உணர்த்திற்று.   'உள்ளம் உருகில் உடனாவர்' என்னும் பரமாப்த 
வசனத்தைத் திருவுந்தியாரில் (7) அமைத்து, உள்ளம் உருகில் உடனாவர் அல்லது தெள்ள 
அரியர் என்று உந்தீபற; சிற்பரச் செல்லர் என்று உந்தீபற ....என்றருளியது காண்க. 
சுண்ணம் -சுவர்ணம். திருநீற்றுப் பொற்சுண்ணம். பொன்போலச் சுடருஞ் சடை. 

    Our Lord Civan holds in His hands the Indian lute, veena. He imbibed the 
poison, is beyond the knowledge of 18 special devas. His divine throat is dark 
blue similar to sapphire. He has applied the white holy ashes paste on His chest. 
In His attractive plaited locks of hair He retains the moon. This Lord is renowned 
in the temple in Thiru-vaai-moor city. He will come to give His darshan, 
the full perception.

2673.     எரிகிளர்மதியமொடெழில்நுதன்மேலெறிபொறியரவினொடாறுமூழ்க 
    விரிகிளர்சடையினர்விடையேறிவெருவவந்திடர்செய்தவிகிர்தனார் 
    புரிகிளர்பொடியணிதிருவகலம்பொன்செய்தவாய்மையர்பொன்மிளிரும் 
    வரியரவரைக்கசைத்திவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.         4

    எரிகிளர் மதியமொடு எழில் நுதன் மேல் எறிபொறி அரவினொடாறு மூழ்க            
    விரிகிளர் சடையினர் விடையேறி வெருவ வந்திடர் செய்த விகிர்தனார் 
    புரிகிளர் பொடியணி திருவகலம் பொன் செய்த வாய்மையர் பொன்மிளிரும் 
    வரியரவு அரைக்கசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    eri kiLar matiyamoTu ezil nutalmEl, eRi poRi aravinoTu, ARu mUzka 
    viri kiLar caTaiyinar; viTai ERi; veruva vantu iTar ceyta vikirtanAr; 
    puri kiLar poti aNi tiru akalam pon ceyta vAymaiyar; ponmiLirum 
    vari aravu araikku acaittu,--ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     அழகிய நெற்றியின் மேல் ஒளிசெய்கின்ற பிறைமதியம், தாக்குதலைச் 
செய்யும் பாம்பு, கங்கையாறு ஆகியனவெல்லாம் மூழ்கும்படியாக விரிந்த சடையினர்; 
விடையேறி, யான் மருள வந்து உள்ளத்தைக் கவர்ந்த விகிர்தனார்; பூணூல், திருநீற்று 
அணி பொலிவு செய்யும் மார்பினர்; சத்திய ரூபர்; பொன்போல ஒளிரும் பாம்பினை 
அரைக்கு அசைத்து, அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     பொறி - படப்பொறி. அகலம் - மார்பு (பா.7). வாய்மையர்- சத்தியரூபர். 
வாய்மைரூபர்என்பதன் மரூஉவே வாய்மூர். அரவு அரைக்கு அசைத்து வருவார் இவர் 
காணீர் என்க. 

    Our Lord Civan retains the moon in His matted locks of hair. The moon shines 
as supernal fire. In His attractive top portion of His forehead, He contains the snake 
and supports the river Ganges near the snake. He moves on His bull towards us and 
disturbs us. He is the Supernal Lord. He has besmeared His chest with holy ashes. 
He is the embodiment of truth. He is renowned in the temple in Thiru-vaai-moor. 
He has tied a snake shining like gold round His waist and will come to meet us. 
Please do come to see Him.

2674.     அஞ்சனமணிவணமெழில்நிறமாவகமிடறணிகொளவுடல்திமில         
    நஞ்சினையமரர்களமுதமெனநண்ணியநறுநுதலுமைநடுங்க 
    வெஞ்சினமால்களியானையின்தோல்வெருவுறப்போர்த்ததன்றிமுமஃதே 
    வஞ்சனை வடிவினொடிவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        5

    அஞ்சன மணிவணம் எழில்நிறம் ஆகம் மிடறணி கொள உடல் திமில         
    நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறுநுதல் உமை நடுங்க 
    வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுறப் போர்த்த அன்றி முமஃதே 
    வஞ்சனை வடிவினொடி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே,

    anjcana maNivaNam ezil niRamA akammiTaRu aNi koLa, uTal timila, 
    nanjcinai, amararkaL amutam ena, naNNiya naRu nutal umai naTugka 
    venjcina mAlkaLiyAnaiyin tOl veru uRap pOrttu, atu anri mumaHtE, 
    vanjcanai vaTivinoTu, --ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     இருள்நிற நஞ்சினை அமுதமென நண்ணிய அமரர்கள் உடல் அஞ்சன மணிவணம் 
கொள, தன்னுடைய மிடறிடம் அணிகொள, உமையம்மை நடுங்க வெஞ்சினத்ததாகிய பெரிய 
களிற்றின் தோலினைப் போர்த்த தன்னுடைய நிறமும், அந்நஞ்சின் கரிய நிறமாய் அவ்வஞ்சனை 
வடிவுடன், 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     நீலமணி போலும் மேனியர். அஞ்சனம் - கருநிறம். மணிவண்ணம் போலும் 
அழகிய நிறம்.  அகம் மிடறு - கழுத்திடம். திமிலம் - பேரொலி. 

    The entire devas trembled to see the poison coming out of the ocean and ran to 
Lord Civa and begged to save them. Then our Lord Civa imbibed the poison to gain azure 
colour for His body and to make His throat attractive. Therefore, He treated the poison 
as ambrosia and imbibed it. His consort Uma Devi with very attractive forehead trembled 
to see the rutted elephant. Our Lord stripped off the hide of the elephant while those who 
witnessed it got frightened. Then our Lord covered His body with the hide of the 
elephant. This Lord of Thiru-vaai-moor, to entice the ladies, comes in the posture 
of a deceitful person. Please do come.

2675.    அல்லியமலர்புல்குவிரிகுழலார்கழலிணையடி நிழலவைபரவ     
    எல்லியம்போதுகொண்டெரியேந்தியெழிலொடுதொழிலவையிசையவல்லார் 
    சொல்லிய அருமறையிசைபாடிச்சூடிளமதியினர்தோடுபெய்து 
    வல்லியந்தோலுடுத்திவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        6

    அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணையடி நிழலவை பரவ 
    எல்லி அம்போது கொண்டு எரியேந்தி எழிலொடு தொழிலவை இசைய வல்லார் 
    சொல்லிய அருமறை இசைபாடிச் சூடிளமதியினர் தோடு பெய்து 
    வல்லியம் தோல் உடுத்தி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    alliya malar pulku virikuzalAr kazal iNai aTi nizal avai parava,
    elli ampOtu koNTu eri Enti, eziloTu tozil avai icaiya vallAr; 
    colliya arumaRai icai pATi, cUTu iLamatiyinar; tOTu peytu, 
    valliyantOl uTuttu,--ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     அகவிதழ்களையுடைய மலர்களைச்சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் 
தம்முடைய கழலணிந்த திருவடிகளைப் பரவிப் போற்ற, சந்தியா காலத்தில் எரியேந்தி அழகுடன் 
மகாசங்காரதாண்டவம் ஆட வல்லார்; தாம் சொல்லிய மறைகளை இசையுடன் பாடியவர்; 
இளம்பிறையைச் சூடியவர்; ஒரு காதில் தோடும் பெய்து புலித்தோலுடுத்து, 'அன்புடையீர்! 
(அப்பரே)'திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     இதன் முதலீரடியொடும். நள்ளிருள் மகளிர் நின்று ஏத்தவான வாழ்க்கையது 
உடையார். (தி. 2 ப. 94 பா.7) என்பதைப் பொருத்திக் காண்க. மகா சங்கார தாண்டவத்தைப் 
பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்கு சேர்ந்து காணும் உண்மை உணர்த்திற்று. வல்லியம் - புலி.

    Our Lord Civa's avocation is to dance at midnight holding fire in His hand. 
The young girls who adorn their hair with different kinds of flowers, one after 
another in a string attach it over their broadened hair. They all go to the temple 
at night and extol Him with great enthusiasm and admiration. Our Lord accepts the 
girls' affection and graces them. Our Lord Civa, manifest in the temple in Thiru-vaai-moor 
city, goes on singing vedic songs. He retains the young moon in His matted hair. 
He wears on one of His ears the ola roll. He wears on His waist the hide of a tiger 
and appears before us. Please do come to see our Lord of Thiru-vaai-moor.

2676.     கடிபடுகொன்றைநன்மலர்திகழுங்கண்ணியர்விண்ணவர்கனமணிசேர்
     முடிபில்குமிறையவர்மறுகினல்லார்முறைமுறைபலிபெயமுறுவல்செய்வார் 
    பொடியணிவடிவொடுதிருவகலம்பொன்னெனமிளிர்வதொராரவினொடும் 
    வடிநுனைமழுவினொடிவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        7

    கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் 
    முடிபில்கும் இறையவர் மறுகினல்லார் முறை முறை பலிபெய முறுவல் செய்வார் 
    பொடி அணி வடிவொடு திருவகலம் பொன் என மிளிர்வதொர் ஆரவினொடும்
    வடி நுனை மழுவினொடி இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    kaTipaTu konRai nanmalar tikazum kaNNiyar; viNNavar kana maNi cEr 
    muTi pilkum iRaiyavar; maRukil nallAr muRai muRai pali peya, muRuval ceyvAr,
    poTi aNi vaTivoTu, tiru akalam pon ena miLirvatu or aravinoTum
    vaTi nunai mazuvinoTu, --ivarANIr-vAymUr aTikaL varuvArE.

பொருள்:     மணமுள்ள கொன்றையாகிய நன்மலர்கள் விளங்கிய கண்ணியர்;         
விண்ணவராகிய  சூரிய சந்திரர் போல ஒளி சிதறும் முடியணிந்த இறையவர்; தெருக்களில் 
மகளிர் முறைமுறையே பிச்சையிடப் புன்முறுவல் செய்வார்; திருநீறு பூசிய மார்பகத்தில் 
பொன்னால் ஆன பூணூலைப் போல் மிளிர்வதொரு பாம்புடையவர்; கூரிய நுனை உடைய 
மழுவினர், 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     கண்ணியர் - தலையிற்சூடும் மாலையர். மணிமுடி. பில்கும் - (ஒளி) சிதறும். 
(பா.4) பொடி -திருநீறு. வடி - கூர்மை.

    Our Lord Civa adorns His plaited locks of hair with the garland of sweet smelling 
Indian laburnum flowers. The bright light emitted by the gems on His crown gets reflected 
like the sun and the moon. In the streets of Thiru-vaai-moor ladies bring alms and offer 
it in His skull. He used to smile at them as though He has kindly accepted their offering. 
He exhibits Himself by smearing holy ashes all over His body.  On His chest, He puts on the 
snake, which flashes light like gold. He holds a sharp axe in His hand. With such an 
appearance He comes before us. People may come to see Him.

2677.     கட்டிணைபுதுமலர்க்கமழ்கொன்றைக்கண்ணியர்வீணையர்தாமுமஃதே 
    எட்டுணைசாந்தமொடுமைதுணையாஇறைவனாருறைவதோரிடம்வினவில்
    பட்டிணையகலல்குல்வரிகுழலார்பாவையர்பலியெதிர்கொணர்ந்துபெய்ய     
    வட்டணையாடலொடிவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.    8

    கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமும் அஃதே 
    எட்டுணை சாந்தமொடுமைதுணையா இறைவனார் உறைவதோர் இடம் வினவில் 
    பட்டிணை அகல அல்குல் வரிகுழலார் பாவையர் பலிஎதிர் கொணர்ந்து பெய்ய 
    வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    kaTTu iNai putumalar kamaz konRaikkaNNiyar, vINaiyar; tAmum aHtE; 
    eN-tuNai cAntamoTu umai tuNaiyA, iRaivanAr uRaivatu Or iTam vinavil,        
    paTTu iNai akal alkul virikuzalAr pAvaiyar pali etir koNarntu peyya, 
    vaTTaNai ATaloTu,ivarANIr-vAymUr aTikaL varuvArE.

பொருள்:     இணை இணையாகக் கட்டிய புது மலர்கள் மணங்கமழ்கின்ற கொன்றைக் 
கண்ணியர்; வீணையர்; அவ்வீணையைப் போலப் பாடிக்கொண்டு, எண்மடங்கு சந்தனம் அணிந்து 
உமை துணையாக இறைவன் உறையும் ஊர் எது என வினவில், பட்டாடை அணிந்த அகன்ற 
அல்குலையுடைய மகளிர், விரிந்த குழலை உடையவர், பாவையனையர் பலியினை எதிர்கொண்டு 
இட, வட்டணை யாடலொடு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     கட்டிணை புதுமலர் - இணை இணையாகக் கட்டப்படும் புதிய பூக்கள். 
எட்டுணை - (எண் + துணை) எண்மடங்கு. பட்டு இணைந்த - பட்டிசைந்த. பாவையர்- தாருகவனத்து 
மகளிர். வட்டணை – வட்டம். தாளம் போடுதலுமாம். 

    Our Lord Civa adorns His matted locks of hair with fresh Indian laburnum flowers,
 piled up side by side closely, appearing a garland. He used to make music on the Indian 
lute. He has profusely applied the sandalwood paste all over His body and manifests 
Himself jointly with His consort in the temple in Thiru-vaai-moor city. He goes near 
the ladies of dharukan forest who are dressed in pure silk sarees. He approaches 
them and asks for alms. When they bring food He clasps His hands, dances before them 
that they could be bewitched and He entices them. This Lord will come to us. Please do 
come to see Him.

2678.     ஏன மருப்பினொடெழிலாமையிசையப் பூண்டோரேறேறிக் 
    கானமதிடமாவுறைகின்றகள்வர்கனவில்துயர்செய்து 
    தேனுணமலர்களுந்தி விம்மித் திகழ் பொற்சடைமேல்  திகழ்கின்ற 
    வானநன்மதியினொடிவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        9

    ஏன மருப்பினொடு எழிலாமை இசையப் பூண்டோர் ஏறு  ஏறிக்
    கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து 
    தேன் உணமலர்கள் உந்தி விம்மித் திகழ் பொற்சடை மேல் திகழ்கின்ற 
    வான நன்மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே..

    Ena maruppinoTu ezil Amai icaiyap pUNTu, Or ERu ERi
    kAnam atu iTamA uRaikinRa kaLvar, kanavil-tuyar ceytu, 
    tEn uNa malarkaL unti vimmit tikaz pon caTaimEl-tikazkinRa 
    vAna nalmatiyinoTu,-ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     பன்றியின் கொம்பு, அழகிய ஆமையோடு இரண்டையும் தம்மில் இசையப் பூண்டவர்; 
ஒரு எருதினை வாகனமாகவும், கானகத்தைத் தம் உறைவிடமாகவும் கொண்ட கள்வர்; அவர் கனவில் 
எனக்குத் துயர் செய்து, வண்டுகள் தேனினை உண்ண மலர்கள் உந்தி விம்மத் திகழ்கின்ற பொன்போல் 
ஒளி வீசும் சடையின் மேல் விளங்குகின்ற தூய நன்பிறைமதியொடு, 'அன்புடையீர்! (அப்பரே)'திருவாய்மூர் 
அடிகள் வருவாரே.

குறிப்புரை:     ஏனம்- பன்றி. மருப்பு- கொம்பு. பன்றிக்கொம்பும் ஆமையோடும் பூண்டவர் 
என்று திருமுறைகளில் பல இடங்களில் இருத்தல் வெளிப்படை.

    Our Lord Civa adorns His body with the tusk of the hog along with tortoise shell 
-both tied in a rope and made as garland. He rides on His bull and prefers to stay 
in the forest area. He appears in our dreams, disturbing us, and removes our bad karma. 
He adorns His body with the garland of Indian laburnum flowers full of honey. In His 
attractive locks of hair He retains the young moon. That Lord, manifest in Thiru-vaai-moor 
temple, comes to our presence. Please do come to see this Supreme Being.

2679.     சூடல்வெண்பிறையினர்சுடர்முடியர்சுண்ணவெண்ணீற்றினர்சுடர்மழுவர் 
    பாடல்வண்டிசைமுரல்கொன்றையந்தார்பாம்பொடுநூலவைபசைந்திலங்கக்
    கோடனன்முகிழ்விரல்கூப்பிநல்லார்குறையுறுபலியெதிர்கொணர்ந்துபெய்ய 
    வாடல்வெண்டலைபிடித்திவராணீர்வாய்மூரடிகள்வருவாரே.        10

    சூடல் வெண்பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண்ணீற்றினர் சுடர் மழுவர் 
    பாடல் வண்டிசை முரல் கொன்றையம் தார்பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்                   
    கோட நன்முகிழ் விரல்கூப்பி நல்லார் குறையுறு பலிஎதிர் கொணர்ந்து பெய்ய 
    வாடல் வெண்டலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே.

    cUTal veNpiRaiyinar; cuTar muTiyar; cuNNa veN nIRRinar; cuTar mazuvar; 
    pATal vaNTu icai mural konRai amtAr pAmpoTu nUl avai pacaintu ilagka, 
    kOTal nan mukiz viral kUppi, nallAr kuRai uRu pali etir koNarntu peyya,
    vATal veNtalai piTittu,--ivarANIr--vAymUr aTikaL varuvArE.

பொருள்:     வெண்பிறையைச் சூடியவர்; ஒளிவீசும் சடைமுடியினர்; திருநீற்றுப் பொடி பூசியவர்; 
சுடர் ஒளி மழுவினர்; வண்டுகள் மொய்த்து இசைபாடுகின்ற கொன்றையந் தாரினைப் பூணூல் பாம்பு 
ஆகியவற்றினொடு மார்பில் ஆசையுண்டாக அணிந்து, செங்காந்தள் அரும்பு போன்ற விரல்களையுடைய 
மகளிர், கைகள் கூப்பி பலி ஏற்றுக் கொள்ளுமாறு குறையுற்று எதிர் கொணர்ந்து இட, வறண்ட பிரம 
கபாலத்தை ஏந்திக் கொண்டு, 'அன்புடையீர்! (அப்பரே)' திருவாய்மூர் அடிகள் வருவாரே.

குறிப்புரை:     பசைந்து - பற்றி. பசுமையுற்று, கோடல் - வெண்காந்தள். ஈண்டுக் காந்தளையுணர்த்தி.
மகளிர் செவ்விரல்களுக்கு ஒப்பாயிற்று.  முகிழ் - அரும்பு. 

    Our Lord Civa retains the moon on His locks of matted hair. His hair locks are 
very bright like supernal fire. He besmears His body with holy ashes. He holds in His 
hand the battleaxe. He adorns His matted hair locks with a garland of Indian laburnum 
flowers. He adorns His body with the snake and with the three ply sacred thread. His 
hands resemble the Kaanthal flower with closed petals. He goes in front of the wives 
of the holy sages of dharuka vanam and demands alms in the skull of Brahma. Our Lord 
Civa of Thiru-vaai-moor temple will come towards us. Please do come to see Him.

2680.     திங்களொடொருவரைப்பொழிற்சோலைத்தேனலங்கானலந்திருவாய்மூர் 
    அங்கமொடருமறையொலிபாடலழல்நிறவண்ணர்தம்மடிபரவி 
    நங்கள்தம்வினைகெடமொழியவல்லஞானசம்பந்தன்தமிழ்மாலை 
    தங்கியமனத்தினால்தொழுதெழுவார்தமர்நெறியுலகுக்கோர்தவநெறியே        11

    திங்களொடு ஒருவரைப் பொழிற்சோலைத் தேன் நலம் கானல் அம் திருவாய்மூர்
     அங்கமொடு அருமறையொலி பாடலழல் நிறவண்ணர் தம் அடிபரவி 
    நங்கள் தம்வினை கெடமொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ்மாலை 
    தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி உலகுக்கோர் தவநெறியே

    tigkaLoTu oruvaraip pozil-cOlait tEn nalam kAnal am tiru vAymUr, 
    agkamoTu arumaRai oli pATal azal niRa vaNNartam aTi paravi, 
    nagkaL tam vinai keTa moziya valla njAnacampantan tamiz mAlai 
    tagkiya manattinAl-tozutu ezuvAr tamar neRi, ulakukku Or tavaneRiyE.

பொருள்:     திங்களுடன், மலைபோல உயர்ந்த பொழிற்சோலை, தேனலங்கானல்களை உடையது 
திருவாய்மூர்; அங்கு, நால்வேதங்களும் ஆறு அங்கங்களும் பாடல்களும் முழங்க, தீவண்ணராகிய 
சிவனின் அடியைப் பரவி, நம்முடைய வினைகளெல்லாம் கெட, மொழிய வல்லவர் திருஞானசம்பந்தர்; 
அவருடைய இந்தத் தமிழ் மாலையை மனத்தில் நிறுத்தித் தொழுது எழுவார் தமராவர்; அவருடைய நெறி 
உலகுக்குத் தவநெறி.

குறிப்புரை:     வரைப்பொழில்- மலையிலுள்ள சோலைகள். மறையொலி -- வேதமுழக்கம். நங்கள் 
தம்வினை - எழுவார் நெறி. எழுவார்க்குத் தமர்நெறி, உலகுக்கு ஒரு தவநெறி. 

    In the mountain area of Thiru-vaai-moor city, thick forests with tall trees 
grow very high and touch the moon. The compound walls in the city are also very tall 
and they touch the moon. Our Lord, in the city who is the embodiment of all the Vedas, 
and the Veda aagamas- the sciences are subordinate to the Vedas- exhibits Himself as 
supernal fire. We must worship His holy feet and extol Him with great enthusiasm and
admiration. Then our bad karma will be chased from our life as and when we chant the 
Tamil garland of ten verses of our saint Thiru-gnana-Sambandar. Those devotees who 
worship the Lord with sincere devotion in this religious way are people of real penance.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            111ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 111th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண்: 248                பதிக எண்: 112

112. திருஆடானை                112. THIRU-AADAANAI

பண்: நட்டராகம்                     Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    திருவாடானை என்னும் இத்திருத்தலமானது தேவகோட்டை தொடர்வண்டி 
நிலையத்திற்குத்  தென்கிழக்கே 35 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. காளையார் கோவிலில் 
(திருக்கானப்பேர்) இருந்தும் தேவகோட்டையிலிருந்தும் திருவாடானை செல்லப்             
பேருந்துகள் உள்ளன. பேருந்துகளில் வருவதே எளிதானதாகும். இது பாண்டி நாட்டுப் 
பாடல் பெற்ற பதிகளுள்  ஒன்று. 

    ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற பிருகு முனிவர், 
அவ்வுருவத்துடன் வந்து வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. 
தலவிருட்சம் வில்வம். இறைவரின் திருப்பெயர் ஆதிரத்தினேசுவரர். ஆடானை நாதர்         
என்ற வேறுபெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் அம்பாயிரவல்லி. 
திருக்கோயிலையொட்டி நான்கு மாடவீதிகள் இருக்கின்றன. சூரிய தீர்த்தம் 
திருக்கோயிலின் வடகிழக்கிலுள்ளது.

     நீலமணியைச் சிவலிங்கமாகத் தாபித்து, சூரியன் வழிபாடாற்றிப் பேறுபெற்றான். 
இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது. கமலை ஞானப்பிரகாச தேசிகர் 
மாணாக்கர் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது.  
தூணுகுடி குருசுப்பிரமணியக் குருக்கள் பண்டாரம் அவர்களால் இயற்றப்பெற்ற பதிகமும் 
அச்சில் உள்ளது. 

பதிக வரலாறு

    திருவிராமேச்சுரத்திலிருந்து திருக்கேதீச்சரத்தை நினைந்து போற்றிய ஞானச்செல்வர் 
வடதிசைமேற் செல்வாராய், பல சிவதலம் பணிந்து, கடற்கரைவாய் தவிரப் போந்து, திருவாடானை 
சேர்ந்து சாத்திய செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2681.    மாதோர்கூறுகந்தேறதேறிய
    ஆதியானுறையாடானை 
    போதினாற்புனைந்தேத்துவார்தமை 
    வாதியாவினைமாயுமே.        1

    மாது ஓர் கூறு உகந்து ஏறது ஏறிய 
    ஆதியான் உறை ஆடானை 
    போதினாற் புனைந்து ஏத்துவார் தமை 
    வாதியா வினை மாயுமே.

    mAtu Or kURu ukantu, ERu atu ERiya 
    AtiyAn uRai ATAnai 
    pOtinAl punaintu, EttuvAr tamai 
    vAtiyA vinai mAyumE.

பொருள்:     அம்பிகை பாகன்; விடை மேலேறி அருளும் முதல்வன்; அவன் உறைகின்ற  
திருவாடானையை மலர்களால் அலங்கரித்தும் அருச்சித்தும் வழிபடுவோரை வினைகள் வருத்தம் 
செய்யா; மாறாக, அவை அழிந்து ஒழியும்.

குறிப்புரை:     அம்பிகை பாகனாகி விடைமேலேறியருளும் முதல்வன் திருவாடானையைப் 
போது(அரும்பு, பூக்)களால் அலங்காரமும் அருச்சனையும் புரிந்து பூசிப்பவரை வினைகள் 
வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும். இப்பதிகம் முழுதும் அருச்சனையின் பயன் 
உணர்த்தப்பட்டமை அறிக.

    Our Lord Civa is delighted to keep His consort on one half of His body. 
The Lord is known as Aathian in this temple. He rides on His bull and goes round the 
city along with His consort. The devotees reach the temple carrying flowers, decorate 
Him with flowers and do the pooja as per religious regulations and worship Him. 
For such devotees their bad karma will disappear and they will have no suffering 
in their life.

2682.     வாடல்வெண்டலை அங்கையேந்திநின் 
    றாடலானுறையாடானை 
    தோடுலாமலர்தூவிக்கைதொழ 
    வீடுநுங்கள்வினைகளே.        2

    வாடல் வெண் தலை அம் கையேந்தி நின்று 
    ஆடலான் உறை ஆடானை 
    தோடுலா மலர் தூவிக் கைதொழ
    வீடு நுங்கள் வினைகளே.

    vATal veN talai agkai Enti ninRu 
    ATalAn uRai ATAnai 
    tOTu ulAm malar tUvik kaitoza, 
    vITum, nugkaL vinaikaLE.

பொருள்:     வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி நின்று ஆடுதலை உடையானது 
திருவாடானையை இதழ்களுள்ள மலர்களைத் தூவிக் கைதொழ, உங்கள் வினைகள் அழியும். 

குறிப்புரை:     வற்றிய பிரமகபாலத்தை ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரான் 
ஆடானையை மலர்தூவித் தொழுதால் வினைகள் அழியும். தோடு- பூவிதழ்.

    Our Lord Civa carries in His hand the dry skull of Brahma and dances before 
the houses of ladies demanding alms. If you go to the temple in Thiru-aadaanai and 
spread the flowers over His holy feet and worship Him, your bad karma will be destroyed.

2683.     மங்கைகூறினன்மான்மறியுடை 
    அங்கையானுறையாடானை 
    தங்கையால்தொழுதேத்தவல்லவர் 
    மங்குநோய்பிணிமாயுமே.        3

    மங்கை கூறினன் மான் மறி உடை 
    அங்கையான் உறை ஆடானை 
    தம் கையால் தொழுது ஏத்த வல்லவர் 
    மங்கு நோய் பிணி மாயுமே.

    magkai kURinan, mAnmaRi uTai 
    am kaiyAn, uRai ATAnai 
    tam kaiyAl-tozutu, Etta vallAr 
    magku nOy piNi mAyumE.

பொருள்:     மங்கை பங்கன்; மான்மறியை ஏந்திய திருக்கரத்தன்; அவன் உறைகின்ற 
திருவாடானையைத் தம்முடைய கையினால் தொழுது ஏத்த வல்லவரை மங்கச் செய்யும் 
நோயும் பிணியும் மாயும்.

குறிப்புரை:     மங்கைபங்கன், மான்கன்றேந்திய திருக்கரத்தன், ஆடானையைத் தம்          
கைகளால் தொழுது ஏத்தவல்லவர் நோயும் பிணியும் மாயும். மங்குதல் - கெடுதல்.

    Our Lord Civa is concomitant along with His consort Uma Devi. He holds the young 
deer in one of His hands. He is manifest in the temple in Thiru-aadaanai city.Those who reach 
the temple and worship our Lord with both hands and praise Him will get rid of their 
ailments in life. Their bad karma will disappear.

2684.     சுண்ணநீறணிமார்பில்தோல்புனை 
    அண்ணலானுறையாடானை 
    வண்ணமாமலர்தூவிக்கைதொழ 
    எண்ணுவாரிடரேகுமே.        4

    சுண்ண நீறணி மார்பில் தோல் புனை 
    அண்ணலான் உறை ஆடானை 
    வண்ண மாமலர் தூவிக் கைதொழ 
    எண்ணுவார் இடர் ஏகுமே.

    cuNNa nIRu aNi mArpil-tOl punai 
    aNNalAn uRai ATAnai 
    vaNNa mA malar tUvik kaitoza 
    eNNuvAr iTar EkumE.

பொருள்:     திருநீறு அணிந்த மார்பில் பூணூலொடு தோல்புனை அண்ணல் உறைகின்ற 
திருவாடானையை பலநிற மலர்களிட்டுத் தூவிக் கைதொழுது வழிபட்டுத் தியானம் செய்வாருடைய 
இடர்களானவை நீங்கும்.

குறிப்புரை:     தோல் - மான்றோல் பூணுநூலொடு சேர்த்துத் தரித்துக் கொள்வது. (தி. 1 ப.28 பா.2;
தி.1 ப. 133 பா.4; தி.1 ப.80 பா.9; தி. 1 ப.6 பா.3). வண்ணம் - அழகு. எண்ணுவார் - தியானம் புரிவார்.(பா.8)

    Our Lord Civa smears sandalwood paste and holy ashes all over His body. 
He wears on His body the sacred thread to which is attached a bit of hide of deer.
He is our Chief Supreme Being. He is manifest in the temple in Thiru-aadaanai city. 
Those people who can reach the temple and spread very fine and sweet smelling 
flowers on the holy feet of Civa and worship Him with both hands will find their 
ailment fully vanish from their life.

2685.     கொய்யணிம்மலர்க்கொன்றைசூடிய 
    ஐயன்மேவிய ஆடானை 
    கையணிம்மலரால்வணங்கிட
    வெய்யவல்வினைவீடுமே         5

    கொய்யணிம் மலர்க் கொன்றை சூடிய 
    ஐயன் மேவிய ஆடானை
    கையணிம் மலரால் வணங்கிட  
    வெய்ய வல்வினை வீடுமே.

    koy aNi(m) malarkkonRai cUTiya
    aiyan mEviya ATAnai 
    kai aNi(m) malarAl vaNagkiTa
    veyya valvinai vITumE.

பொருள்:     கொய்த அழகிய கொன்றை மலர்களைச் சூடிய ஐயன் எழுந்தருளியுள்ள 
திருவாடானையைக் கை நிறைந்த மலர்கள் தூவி வணங்கிட கொடிய வல்வினைகள் அழிந்து
போகும். 

குறிப்புரை:     கொய்- கொய்த. ஐயன்- தலைவன். பிதா, தலந்தொறும் கைநிறையப் 
பூக்களைக் கொண்டு தூவி வழிபடுவது சைவர்க்குரிய நன்னெறியாதலைப் பெரிய 
புராணத்துட் காண்க.

    Our Lord Civa adorns His matted locks of hair with fine Indian laburnum flowers 
picked up by hands, very attractive flowers. He is manifest in the temple in Thiru-aadaanai 
city. These servitors reach the temple and spread fine flowers with their hands on His 
holy feet and body and then they worship Him. The bad karma of the past life of these 
servitors will vanish and they will lead good life.

2686.     வானிளம்மதிமல்குவார்சடை
    ஆனஞ்சாடலன் ஆடானை 
    தேனணிம்மலர்சேர்த்தமுன்செய்த
    ஊனமுள்ளவொழியுமே.        6

    வான் இளம் மதி மல்குவார் சடை 
    ஆனஞ்சு ஆடலன் ஆடானை 
    தேன் அணிம்மலர் சேர்த்த முன்செய்த 
    ஊனம் உள்ள ஒழியுமே.

    vAn iLa(m) mati malku vArcaTai 
    An anjcu ATalan ATAnai 
    tEn aNi(m) malar cErtta, mun ceyta 
    Unam uLLa oziyumE.

பொருள்:     தூய நிறமுடைய இளம்பிறை பொருந்திய நீண்ட சடையை உடையவர்; 
பஞ்ச கௌவியம் ஆடுவர்; ஆகியவரின் திருவாடானையை தேனுடைய மலர்களைச் சேர்த்தலால் 
முன் செய்த பழவினை பற்றறக் கெடும்.

குறிப்புரை:     பிறை மல்கு நீள்சடை, பஞ்ச கெளவியம், அஞ்சு- ஐந்து. போலி, அணிமலர் 
சேர்த்தலால்  பழவினை பற்றறும் 'உள்ளத்தே புகுந்தளிப்பவன் ஊனம் எலாம் ஓட'.

    Our Lord Civa retains the young moon moving on the sky on His holy matted 
locks of hair.His entangled locks of hair are very long. He loves to be ablutioned 
with the five products of the cow. He is manifest in the temple in Thiru-aadaanai 
city . The servitors reach the temple and spread the honey filled , very attractive 
flowers over His holy feet. The bad effect of these servitors' past karma will be 
completely wiped out of their life .

2687.     துலங்குவெண்மழுவேந்திச்சூழ்சடை 
    அலங்கானுறையாடானை 
    நலங்கொள்மாமலர்தூவிநாள்தொறும் 
    வலங்கொள்வார்வினைமாயுமே.        7

    துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ்சடை 
    அலங்கான் உறை ஆடானை 
    நலம் கொள் மாமலர் தூவி நாள்தொறும் 
    வலம் கொள்வார் வினை மாயுமே.

    tulagku veNmazu Enti, cUz caTai 
    alagkalAn, uRai ATAnai
    nalam koL mA malar tUvi, nALtoRum 
    valam koLvAr vinai mAyumE.

பொருள்:     வெண்மையான ஒளியுடன் விளங்கும் மழுப்படையினை ஏந்தியவன்; சடையைச் 
சூழ்ந்த மாலையன் ஆகிய சிவன் உறைகின்ற திருவாடானையை அழகுடைய மிக்க  மலர்களைத் 
தூவி நாள்தோறும் வழிபட்டு வலம் கொள்வாருடைய வினை மாயும்.

குறிப்புரை:     சடையசைதலையும் ஒளிர்தலையும் மாலையையும் கூறலாம். நலம் - அழகு. 
வலங்கொள்ளல் வழிபாட்டின் உறுப்புக்களுள் ஒன்று.

    Our Lord Civa holds the white battleaxe in one of His hands. In His entangled 
matted locks of hair, He wears Indian laburnum flowers and bael leaves made as garlands. 
This Lord Civa is manifest in the temple in Thiru-aadaanai city. The servitors of this 
city reach the temple, spread very fine and sweet smelling flowers and then worship Him. 
They do their rituals daily and go round the temple through the right hand side daily. 
Such peoples' past bad karma will vanish fully out of their life and they will lead 
good life.

2688.     வெந்தநீறணிமார்பில்தோல்புனை 
    அந்தமில்லவன் ஆடானை 
    கந்தமாமலர்தூவிக்கைதொழும் 
    சிந்தையார்வினைதேயுமே.        8

    வெந்த நீறணி மார்பில் தோல் புனை 
    அந்தம் இல்லவன் ஆடானை 
    கந்த மாமலர் தூவிக் கைதொழும்
    சிந்தையார் வினை தேயுமே.

    venta nIRu aNi mArpil-tOl punai 
    antam illavan ATAnai 
    kanta mAmalar tUvik kaitozum 
    cintaiyAr vinai tEyumE.

பொருள்:     சுட்ட திருநீற்றை அணிந்த மார்பில் பூணூலொடு தோல் புனைவர்; 
அந்தமில்லவர்; அவர் உறையும் திருவாடானையை மணமுள்ள மலர்களைத் தூவிக் 
 கைதொழும் சிந்தனையை  உடையவரது வினை தேய்ந்து ஒழியும். 

குறிப்புரை:     பா. 4 பார்க்க. 'ஆதியும்... அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி' சிந்தையார் 
வினை- சிந்தனை உடையவரது வினை.

    Our Lord Civa smears His body with the holy ashes. The cow dung was burnt 
in fire and turned into white holy ashes. On His chest He wears deer's hide attached 
to the sacred thread. He has no blemishes in His appearance. He is manifest in the temple 
in Thiru-aadaanai city. Those who have the mind to go to the temple and spread the sweet 
smelling flowers on our Lord will find bad karma of their past life diminish and they 
will ever live happily.

2689.     மறைவலாரொடுவானவர்தொழு 
    தறையுந்தண்புனல்ஆடானை 
    உறையுமீசனையேத்தத்தீவினை 
    பறையும்நல்வினைபற்றுமே.        9

    மறைவலார் ஒடு வானவர் தொழுது 
    அறையும் தண்புனல் ஆடானை             
    உறையும் ஈசனை ஏத்தத் தீவினை 
    பறையும் நல்வினை பற்றுமே.

    maRaivalAroTu vAnavar tozutu             
    aRaiyum taNpunal ATAnai 
    uRaiyum Icanai Etta, tIvinai 
    paRaiyum; nalvinai paRRumE.

பொருள்:     மறைவல்ல பூசுரர்களொடு சுரர்களும் தொழும், ஒலிக்கும் நீர்த்தடங்கள், 
உடைய திருவாடானையில் உறையும்  ஈசனை ஏத்தத் தீவினை அழியும்;  நல்வினையாகிய
சிவபுண்ணியம் வந்து சேரும்.

குறிப்புரை:     வலார்- வல்லவர், பூசுரர். வானவர் - சுரர். ஆடானையில் எழுந்தருளும் 
உடையவனை. பறையும் - அழியும். பறைவது தீவினை. பற்றுவது நல்வினை.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-aadaanai city. This city has 
plenty of water sources and the land is very rich for water facility. In the city, 
the Vedic Brahmin, famous, scholars visit our Lord in the temple and worship Him. 
Along with them, the devas living in the heavenly abode also come to Thiru-aadaanai 
city and worship our Lord in the temple . Those who visit this temple and worship 
our Lord manifested in Thiru-aadaanai city will get rid of their bad karma and 
good actions of their life , beneficial to them will get collected .

2690.     மாயனும்மலரானுங்கைதொழ 
    ஆய அந்தணன்ஆடானை 
    தூயமாமலர்தூவிக்கைதொழத் 
    தீயவல்வினைதீருமே.        10

    மாயனும் மலரானும் கைதொழ 
    ஆய அந்தணன் ஆடானை 
    தூய மாமலர் தூவிக் கை தொழத் 
    தீய வல்வினை தீருமே.

    mAyanum malarAnum kaitoza 
    Aya antaNan ATAnai 
    tUya mA malar tUvik kaitoza, 
    tIya valvinai tIrumE.

பொருள்:     திருமாலும் மலர்மேல் உறையும் நான்முகனும் கைதொழல் ஆகிய 
அந்தணனின் திருவாடானையை தூய்மைமிக்க மலர்களைத் தூவிக் கைதொழத் 
தீவினைகள் தீரும்.

குறிப்புரை:     ஆய  - ஆகிய. தீயவினை; வல்வினை. அந்தணன் - சிவபிரான். 
மலர்தூவிக் கையால் தொழ வினை தீரும்.

    Our Lord Civa is manifest in the temple in Thiru-aadaanai city. The tutelary 
god Thirumaal and the four faced Brahma resting in the lotus flower, both worship 
our Lord Civa with both hands. Those servitors reach the temple in Thiru-aadaanai 
city and worship our Lord Civa spreading very bright and pleasing flowers with 
their hands. Thereafter they worship our Lord with both their hands. Their diseases 
and sufferings will disappear.

2691.     வீடினார்மலிவெங்கடத்துநின் 
    றாடலானுறையாடானை 
    நாடிஞானசம்பந்தன்செந்தமிழ் 
    பாடநோய்பிணிபாறுமே.        11

    வீடினார் மலி வெங்கடத்து நின்று 
    ஆடலான் உறை ஆடானை 
    நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் 
    பாட நோய் பிணி பாறுமே.

    vITinAr mali vegkaTattu ninRu 
    ATalAn uRai ATAnai 
    nATi, njAnacampantan centamiz 
    pATa, nOy piNi pARumE.

பொருள்:     இறந்தவர்கள் மலிந்த வெந்த காட்டில் நின்று ஆடலான் ஆகிய சிவன்  
உறைகின்ற திருவாடானையை நாடி, ஞானசம்பந்தனின் செந்தமிழ்த் திருப்பதிகத்தைப் 
பாட நோயும் பிணியும் அழியும்.

குறிப்புரை:     வீடினார் - இறந்தவர். வெங்கடம் - வெப்பமுடைய காடு, 'கள்ளிமுதுகாட்டிலாடி'
பாடலால் நோயும் பிணியும் அழியும்.

    Our Lord Civa spends His time in dancing in the burning ghat where dead 
bodies are burnt. He does then the special dance known as Uruthira Thaandavam. 
Our saint Thiru-gnana-Sambandar went to the temple in Thiru-aadaanai city and praised 
our Lord chanting these ten verses in pure classical Tamil. Those devotees who can
memorise and chant these ten verses before our Lord and worship Him will find 
their ailments and sufferings wiped out.


            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            112ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 112th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 249             பதிக எண்: 113

113.சீகாழி                 113. SEER-KAAZHI

பண்:நட்டராகம்                 Pann: Nattaraagam

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

            திருச்சிற்றம்பலம்.

2692.     பொடியிலங்குந்திருமேனியாளர்புலியதளினர் 
    அடியிலங்குங்கழலார்க்கஆடும்மடிகள்ளிடம் 
    இடியிலங்குங்குரலோதம்மல்கவ்வெறிவார்திரைக் 
    கடியிலங்கும்புனல்முத்தலைக்குங்கடற்காழியே.        1

    பொடி இலங்கும் திருமேனியாளர் புலியதளினர் 
    அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் 
    இடி இலங்கும் குரல் ஓதம் மல்கவ் வெறிவார் திரைக் 
    கடி இலங்கும் புனல் முத்தலைக்கும் கடற்காழியே.

    poTi ilagkum tirumEniyALar, puli ataLinar,
    aTi ilagkum kazal Arkka ATum aTikaL(L), iTam
    iTi ilagkum kural Otam malka(v) eRi vAr tiraik 
    kaTi ilagkum punal muttu alaikkum kaTal kAziyE.

பொருள்:     திருநீறு விளங்கும் திருமேனியாளர்; புலித்தோலினர்; திருவடியில் விளங்கும் 
கழல்கள் ஒலிக்கக் கூத்தாடும் அடிகள்; அவருடைய இடம், இடிபோல் முழங்கும் கடலோதம் மல்க, 
மோதும் அலைகள் மிகுதியாக விளங்க, நீர் முத்துக்களை எறியும் கடற்காழியே.

குறிப்புரை:     இலங்கும் - விளங்கும். கடல் அலையொலி இடியொலி போலுள்ளதாம். கடி- விரைவு.
மிகுதி. அடிகள் இடம் கடற்காழி என்றவாறே மேலும் இயைத்துக் கொள்க. 

    Our Lord Civa smears His divine body with holy ashes. He wears the tiger's 
hide on His waist. He dances when the anklets shining at His holy feet make loud 
noise. He is manifest in the holy city of Seerkaazhi. In this city, the sea waves 
create heavy noise like thunder. The sea waves with large quantity of water dash 
against the shore bringing large quantities of pearls along the seawater and they 
settle down on the seashore.

2693.     மயலிலங்குந்துயர்மாசறுப்பானருந்தொண்டர்கள்                 
    அயலிலங்கப்பணிசெய்யநின்றவ்வடிகள்ளிடம் 
    புயலிலங்குங்கொடையாளர்வேதத்தொலிபொலியவே 
    கயலிலங்கும்வயற்கழனிசூழுங்கடற்காழியே.        2

    மயல் இலங்கும் துயர் மாசறுப்பான் அருந்தொண்டர்கள்             
    அயல் இலங்கப் பணி செய்ய நின்ற இவ்வடிகள் இடம் 
    புயல் இலங்குங் கொடையாளர் வேதத்து ஒலிபொலியவே 
    கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடற்காழியே.

    mayal ilagkum tuyar mAcu aRuppAn, arun toNTarkaL 
    ayal ilagkap paNi ceyya ninRa(v) aTikaL(L), iTam- 
    puyal ilagkum koTaiyALar vEtattu oli poliyavE, 
    kayal ilagkum vayal kazani cUzum kaTal kAziyE.

பொருள்:     அறிவை மயக்கும் துயரினையும் மாசினையும் அறுக்க வேண்டி
அருந்தொண்டர்கள், அருகிலிருந்து திருப்பணி செய்ய நின்ற சுவாமிகளுக்கு இடம், 
யாதெனில், கைம்மாறு கருதாது மழையெனக் கொடுக்கும் கொடையாளர்கள் வாழ்வதும், 
' வேதவொலியால் பொலிவுற்றதும் கயல்மீன்கள் விளங்கும் வயல்களும் கழனிகளும் 
சூழுங்கடற் காழியே. 

குறிப்புரை:     துயர்மாசு- உம்மைத்தொகை. 'கைம்மாறு வேண்டாக் கடப்பாடுமாரி மாட்டு 
என் ஆற்றுங்கொல்லோ உலகு' (குறள்.211). கொடையாளர் - -அந்தணர்.

    The servitors of Lord Civa think of getting rid of their ill effects in their 
life due to past bad karma. They therefore come and settle where Civa is manifest and 
serve Him. Lord Civa is manifest in Seerkaazhi city. In this city, people of philanthropic 
nature do live, magnanimous like the clouds which give rain in plenty without any aim to 
receive anything from anybody. Also in the city, vedic scholars always chant the
Vedas and this noise is heard all over the city. The carp fish swim all over the paddy 
fields in large numbers in this city.

2694.     கூர்விலங்குந்திரிசூலவேலர்குழைக்காதினர் 
    மார்விலங்கும்புரிநூலுகந்தம்மணவாளனூர் 
    நேர்விலங்கல்லனதிரைகள்மோதந்நெடுந்தாரைவாய்க் 
    கார்விலங்கல்லெனக்கலந்தொழுகுங்கடற்காழியே.        3

    கூர் விலங்கும் திரிசூல வேலர் குழைக் காதினர் 
    மார் விலங்கும் புரிநூல் உகந்தம் மணவாளனூர் 
    நேர் விலங்க அல்லன திரைகள் மோதந் நெடுந்தாரைவாய்க் 
    கார் விலங்கல் எனக் கலந்து ஒழுகும் கடற்காழியே.

    kUrvu ilagkum tiricUla vElar, kuzaik kAtinar,        
    mArvu ilagkum purinUl ukanta(m) maNavALan, Ur- 
    nEr vilagkal(l) ana tiraikaL mOta(n), neTun tAraivAyk 
    kAr vilagkal(l) enak kalantu ozukum kaTal kAziyE.

பொருள்:     கூர்மை விளங்கும் திரிசூல வேலர்; குழையுடைய காதினர்; மார்பில் விளங்கும் 
முப்புரி நூல் உகந்தவர்; நித்த மணாளர்; மலைபோல் உயர்ந்து விளங்கும் அலைகள் மோத,
நீண்ட மழைத் தாரையிடத்து கார்மேகம் மலையெனக் கலந்தொழுகும் கடற்காழியே.

குறிப்புரை:     திரிசூலமாகி, வேலுடையவர், மார்வு - -மார்பு. உகந்த மணவாளன். 
விலங்கல் - மலை. தாரை- நீரொழுக்கு, பெருமழை.

    Our Lord Civa holds in one of His hands the sharp battle axe with three tridents. 
In one of His ears, He wears the ola roll. He wears the three ply sacred thread over His body 
and gives an appearance of a bridegroom. He loves to manifest Himself in the city of 
Seerkaazhi where the sea waves dash against the seashore.

2695.     குற்றமில்லார்குறைபாடுசெய்வார்பழிதீர்ப்பவர் 
    பெற்றநல்லகொடிமுன்னுயர்த்தபெருமானிடம் 
    மற்றுநல்லார்மனத்தாலினியார்மறைகலையெலாம் 
    கற்றுநல்லார் பிழைதெரிந்தளிக்குங்கடற்காழியே.        4

    குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர் 
    பெற்ற நல்லகொடி முன் உயர்த்த பெருமானிடம் 
    மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலையெலாம் 
    கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடற்காழியே.

    kuRRam illAr kuRaipATu ceyvAr pazi tIrppavar, 
    peRRam nalla koTi mun uyartta perumAn, iTam- 
    maRRu nallAr, manattAl iniyAr, maRai kalai elAm 
    kaRRu nallAr, pizai terintu aLikkum kaTal kAziyE.

பொருள்:     குற்றமில்லாதவரது குறையைக் கருதுதல் செய்வார்; அவரது பழியைத் 
தீர்ப்பவர், நல்ல எருதுக் கொடியினை உயர்த்த பெருமான்; அவருடைய இடம், நல்லவர்கள் 
மனத்தில் இனியவர்கள், மறை மற்றும் பிற கலைகளெல்லாம் கற்று வல்லவரானவர், 
அவர்களுடைய குறையை அறிந்து தலையளி செய்யும் கடற்காழியே .

குறிப்புரை:     குற்றம் இல்லார், குறைபாடு செய்பவரது பழியைத் தீர்ப்பவர். நல்லார்; 
இனியார்,கலையெல்லாம்  கற்று நல்லாரானவர் என்று அந்தணரைக் குறித்தல் அறிக. 
அளிக்கும்- தலையளி செய்யும் .

    Our Lord Civa is an Immaculate Supreme Being. He removes the sins and harm 
in the lives of people of flawless character and in the lives of those servitors who 
make a request to Him, speaking out their faults. He holds high His bull flag. He loves 
to be manifested on the seashore of Seerkaazhi city. Here people of good and pleasing 
character, and scholars of Vedic knowledge are many. When they go wrong they take a 
note of it carefully and consciously avoid it later. Such great men live in Seerkaazhi
city in large numbers where our Lord is manifest.

2696.     விருதிலங்குஞ்சரிதைத்தொழிலார்விரிசடையினார் 
    எருதிலங்கப்பொலிந்தேறுமெந்தைக்கிடமாவது 
    பெரிதிலங்கும்மறைகிளைஞரோதப்பிழைகேட்டலாற் 
    கருதுகிள்ளைக்குலந்தெரிந்துதீர்க்குங்கடற்காழியே.         5

    விருது இலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார் 
    எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடமாவது 
    பெரிது இலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழை கேட்டலாற் 
    கருது கிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்கும் கடற்காழியே.

    virutu ilagkum caritait tozilAr, viricaTaiyinAr, 
    erutu ilagkap polintu ERum entaikku iTam Avatu-
    peritu ilagkum maRai kiLainjar Ota, pizai kETTalAl,
    karutu kiLLaikkulam terintu tIrkkum kaTal kAziyE.

பொருள்:     பிறருக்கு இல்லாத சரிதைச் சிறப்பு உள்ளவர்; விரிந்த சடையினை உடையவர்; 
எருது பொலிய அதன்மீது ஏறும் எந்தையார்; அவருக்கு இடமாவது, பெருமையுடன் விளங்கும் 
மறைகளைக் கிளைஞர் ஓத, அவ்வோதலில் பிழை கண்டு கிளிக்கூட்டம்  அப்பிழைகளைத் 
தீர்க்கும் கடற்காழியே.

குறிப்புரை:     சரிதை- ஒழுக்கம். சீகாழியில் வேதியர்கள் வேதத்தை ஓதுங்கால் கேட்டுணர்ந்து, 
முன்புற்ற கேள்வி வன்மையால், கிளியினங்கள் அதன்கண் பிழைகளைத் திருத்தும் அற்புதம் 
உணர்த்தப்பட்டது.

    Our Lord Civa is the author of all puranic history which contains different 
victorious stories. His entangled locks of hair are very broad. His conveyance is the 
bright bull. Our Father Lord Civa rides on His bull and appears handsome. His proper 
place to live is Seerkaazhi. In this city, Vedic scholars chant very rich Vedas 
accurately. The parrots used to hear the Vedas without any mistake from great 
scholars. Then later some young scholars make mistakes while chanting the Vedas, 
but the parrots then and there correct the mistakes of the young scholars. 
Such parrots do live in the Seerkaazhi city in large number. 

2697.     தோடிலங்குங்குழைக்காதர்வேதர்சுரும்பார்மலர்ப் 
    பீடிலங்குஞ்சடைப்பெருமையாளர்க்கிடமாவது 
    கோடிலங்கும்பெரும்பொழில்கள்மல்கப்பெருஞ்செந்நெலின் 
    காடிலங்கும்வயல்பயிலுமந்தண்கடற்காழியே.        6

    தோடு இலங்கும் குழைக்காதர் வேதர் சுரும்பார் மலர்ப் 
    பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடமாவது 
    கோடு இலங்கும் பெரும்பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின் 
    காடு இலங்கும் வயல் பயிலும் அந்தண் கடற்காழியே.

    tOTu ilagkum kuzaik kAtar, vEtar, curumpu Ar malarp 
    pITu ilagkum caTaip perumaiyALarkku iTam Avatu- 
    kOTu ilagkum perum pozilkaL malka, perunj cennelin 
    kATu ilagkum vayal payilum am taN kaTal kAziyE.

பொருள்:     ஒருகாதில் தோடு விளங்குங் குழைக் காதர்; வேதத்தை உடையவர்; வண்டுகள் 
மொய்க்கும் மலர்கள் பீடுற விளங்கும் சடைப் பெருமையாளர்; அவருடைய இடமாவது, கிளைகள் 
கொம்புகள் விளங்கும் பெரிய பொழில்கள் மல்கப் பெருகும் செந்நெல்லின் பெருங்காடுடன் 
விளங்கும் வயல்கள் நிறைந்திருக்கும் அழகும் குளிர்ச்சியும் உடைய கடற்காழியே.

குறிப்புரை:     தோடும் குழையும் இலங்கும் காதர். வேதர் -வேதத்தை உடையவர். 
கோடு - கொம்பு, செந்நெலின்காடு - செந்நெற்பயிர் நெருக்கம்.

    Our Lord Civan wears in one of His ears the tender leaf as His earring. In another 
ear He wears ola roll as the earring. These different earrings are very bright. He is the 
author of all the four Vedas. His matted locks of hair He beautifies by wearing the garland 
of Indian laburnum flowers where the bees swarm in large numbers. In the bright entangled 
hair He retains the Ganges river also. This Lord loves to manifest Himself in the city of 
Seerkaazhi. In this city natural forests are many with large trees- of big branches full 
of leaves. Also in the city area red paddy fields are many-rich and dense.

2698.     மலையிலங்குஞ்சிலையாகவேகம்மதில்மூன்றெரித் 
    தலையிலங்கும்புனற்கங்கைவைத்தவ்வடிகட்கிடம் 
    இலையிலங்கும்மலர்க்கைதைகண்டல்வெறிவிரவலால் 
    கலையிலங்குங்கணத்தினம்பொலியுங்கடற்காழியே.        7

    மலை இலங்கும் சிலையாக வேகம் மதில் மூன்று எரித் 
    தலை இலங்கும் புனல் கங்கை வைத்த அவ்வடிகட்கு இடம் 
    இலை இலங்கும் மலர்க் கைதை கண்டல் வெறி விரவலால் 
    கலை இலங்கும் கணத்தினம் பொலியும் கடற்காழியே.

    malai ilagkum cilai Aka vEka(m) matil mUnRu erittu, 
    alai ilagkum punal kagkai vaitta(v)aTikaTku iTam- 
    ilai ilagkum malarkkaitai kaNTal veRi viravalAl, 
    kalai ilagkum kaNattu inam poliyum kaTal kAziyE.

பொருள்:     மேருமலை விளங்கும் வில்லாக திரிபுரம் மூன்றும் தீயில் வேவ எரித்தவர்; 
தலையில் விளங்கப் புனற் கங்கையை வைத்தவர் ஆகிய சிவனுக்கு இடமாவது, இலைகள் விளங்கும் 
தழை கைதை கண்டல் ஆகியவற்றின் மலர்மணம் விரவுவதும் கலைகள் விளங்கும் 
கூட்டம் பொலிவதும் ஆகிய கடற்காழியே.

குறிப்புரை:     வைத்த அடிகள் என்னும் பெயரெச்சத் தொடர்க்கு இடையில் வகரமெய் 
பிற்பதிப்புக்களில் இருக்கின்றது. கைதை - தாழை. கண்டல் - நீர்முள்ளி. கலையிலங்குங்கணத் 
தினம். கல்வி விளங்கும் மறையவர் கூட்டம்; மான்கூட்டம்.

    Our Lord Civa used the Meru mountain as His bow and destroyed the three forts 
of the asuras with fire. He supports the river Ganges with waves in His matted locks 
of hair. This Lord loves to be manifested in Seerkaazhi city. In this city, fragrant 
screw pine plant grows in large numbers along with the leaves and flowers. Thorny 
bushes also are found along with this. The fragrance of these spreads all over the 
city. A large group of Vedic scholars do live in this city.

2699.     முழுதிலங்கும்பெரும்பொருள்வாழும்முரண்இலங்கைக்கோன் 
    அழுதிரங்கச்சிரமுரமொடுங்கவ்வடர்த்தாங்கவன் 
    தொழுதிரங்கத்துயர்தீர்த்துகந்தார்க்கிடமாவது 
    கழுதும்புள்ளும்மதிற்புறமதாருங்கடற்காழியே.        8

    முழுது இலங்கும் பெரும் பொருள் வாழும் முரண் இலங்கைக் கோன் 
    அழுது இரங்கச் சிரம் உரமொடுங்கவ்வடர்த்து ஆங்கவன்         
    தொழுது இரங்கத் துயர் தீர்த்து உகந்தார்க்கு இடமாவது 
    கழுதும் புள்ளும் மதிற்புறம் அதாரும் கடற்காழியே.

    muzutu ilagkum perum poruL vAzum muraN ilagkaik kOn 
    azutu iragka, ciram uram oTugka(v) aTarttu, Agku avan         
    tozutu iragkat tuyar tIrttu, ukantArkku iTam Avatu- 
    kazutum puLLum matil puRam atu Arum kaTal kAziyE.

பொருள்:     அனைத்துமாக விளங்கும் பரம்பொருள் வாழும் இடமாவது; முரண்பட்ட 
இலங்கையர்கோன் அழுது வருந்த, அவனுடைய பத்துச் சிரங்களும் மார்பும் ஒடுங்குமாறு 
அடர்த்தவர்; ஆங்கு அவன் தொழுது இரக்க, அவனுடைய துயரைத் தீர்த்து அருள்புரிந்து 
உயர்ந்த சிவபிரான்; அவருக்கு இடமாவது கழுதும் புள்ளும் மதிற் புறத்தில் விளங்கும் 
கடற்காழியே.

குறிப்புரை:     முரண் -வலி, மாறுபாடு. சிரம் உரம்- தலையும் மார்பும். உகந்தார்- உயர்ந்த 
சிவபிரான். கழுது- வண்டு, பேயும் ஆம். புள் - பறவை.

    The King of Sri Lanka, Raavanan led a life of contradiction. Our Lord Civa 
crushed his head and chest. Then Raavanan realised his mistake and begged pardon 
and worshipped our Lord Civa. Lord Civa pardoned him and wiped out his sufferings. 
Civa loves to manifest Himself in Seerkaazhi city. In this city bees, beetles, 
and all birds live on the back side of the compound wall of the city. This city 
is also known as Kadalkaazhi.

2700.     பூவினானும்விரிபோதின்மல்குந்திருமகள்தனை 
    மேவினானும்வியந்தேத்தநீண்டாரழலாய்நிறைந் 
    தோவியங்கேயவர்க்கருள்புரிந்தவ்வொருவர்க்கிடங் 
    காவியங்கண்மடமங்கையர்சேர்கடற்காழியே.     9

    பூவினானும் விரிபோதின் மல்கும் திருமகள்தனை 
    மேவினானும் வியந்து ஏத்த நீண்ட ஆரழலாய் நிறைந்து 
    ஓவியங்கு ஏயவர்க்கு அருள்புரிந்த அவ்வொருவர்க்கு இடம் 
    காவியங் கண் மட மங்கையர் சேர் கடற்காழியே.

    pUvinAnum, viripOtin malkum tirumakaL tanai         
    mEvinAnum, viyantu Etta, nINTu Ar azal Ay niRaintu, 
    Ovi, agkE avarkku aruL purinta(v) oruvarkku iTam- 
    kAvi am kaN maTamagkaiyar cEr kaTal kAziyE.

பொருள்:     தாமரைப் பூவில் இருப்பவனாகிய பிரமனும் செந்தாமரை மலரானாகிய 
திருமகளை விரும்பும் திருமாலும், வியந்து போற்ற நீண்ட ஆரழலாக நிறைந்து, பின்னர் 
அவர்களுக்கு அருள்புரிந்த அவ்வொப்பற்றவருக்கு இடமாவது, கருங்குவளை நிகர்த்த 
கண்ணினை உடைய இளமங்கையர் சேரும் கடற்காழியே.

குறிப்புரை:     விரிபோது - பூத்த தாமரைமலர். மேவினான்- விரும்பிய திருமால். ஓவி- நீங்கி. 
புரிந்த ஒருவர் என்னும் பெயரெச்சத்  தொடரில் வகரம் விரித்தல் விகாரம் .

    The four faced Brahma and Thirumaal who loves to be with his consort 
Lakshmi manifested in the lotus flower- these two demigods wondered to see 
the dazzling infinite supernal fiery column of Lord Civa. Thereafter Lord Civa 
shed this form of the column and graced these two demigods. This Lord is 
manifest in the city of  kadalkaazhi, where very pretty girls with eyes, which 
resemble purple Indian water lily flower do live in large numbers.

2701.     உடைநவின்றாருடைவிட்டுழல்வாரிருந்தவத்தார் 
    முடைநவின்றம்மொழியொழித்துகந்தம்முதல்வன்னிடம் 
    மடைநவின்றபுனற்கெண்டைபாயும்வயல்மலிதரக் 
    கடைநவின்றந்நெடுமாடமோங்குங்கடற்காழியே.        10

    உடை நவின்றார் உடைவிட்டு உழல்வார் இருந்தவத்தார் 
    முடை நவின்றம் மொழி ஒழித்து உகந்தம் முதல்வன் இடம் 
    மடை நவின்ற புனற்கெண்டை பாயும் வயல் மலிதரக் 
    கடை நவின்ற நெடுமாடம் ஓங்கும் கடற்காழியே.

    uTai navinRAr, uTai viTTu uzalvAr,--irun tavattAr-
    muTai navinRa(m) mozi ozittu, ukanta (m) mutalvan(n) iTam- 
    maTai navinRa punal keNTai pAyum vayal malitara, 
    kaTai navinRa(n) neTumATam Ogkum kaTal kAziyE.

பொருள்:     உடை உடுத்தவராகிய தேரர், உடைவிட்டு உழல்வாராகிய சமணர்  
பெருந்தவத்தினர்போல் காட்சியளிக்கும்  அவர்களுடைய  முடை நாற்றம்  எடுத்த 
மொழிகளை ஒழித்து உயர்ந்தவன் இடம் யாதெனின், மடைகளில் ஓடும் நீரில் 
கெண்டை மீன்கள் பாயும் வயல்கள் நிறைந்ததும் நெடுமாடங்கள் நிறைந்ததுமாகிய 
கடற்காழியே.

குறிப்புரை:     உடை நவின்றார்- உடை செய்தார், உடுத்தார்,தேரர். உடைவிட்டு உழன்றார்
- ஆடையின்றித் திரிந்தவர்,  சமணர். முடை -நாற்றம். 

    In this city of Seerkaazhi, Buddhists wearing dresses and the Jains without 
any dresses on their body roam about. They carry out harsh penance for their austerity. 
Their false propaganda is avoided by our Lord Civa. He was pleased to manifest Himself 
in Seerkaazhi city. In this city carp fish jump and move on to the paddy fields, which 
are full of water with proper outlets. In the city area very tall and palatial buildings 
with broad entrances are many. Of course this city is called Seerkaazhi.

2702.     கருகமுந்நீர்திரையோதமாருங்கடற்காழியுள் 
    உரகமாருஞ்சடையடிகள்தம்பாலுணர்ந்துறுதலாற் 
    பெருகமல்கும்புகழ்பேணுந்தொண்டர்க்கிசையார்தமிழ் 
    விரகன்சொன்னஇவைபாடியாடக்கெடும்வினைகளே.            11

    கருக முந்நீர் திரைஓதம் ஆரும் கடற்காழியுள் 
    உரக ஆரும் சடையடிகள் தம்பால் உணர்ந்து உறுதலாற் 
    பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசையார் தமிழ் 
    விரகன் சொன்ன இவை பாடியாடக் கெடும் வினைகளே.

    karuku munnIr tirai Otam Arum kaTal kAziyuL, 
    urakam Arum caTai aTikaL tampAl uNarntu uRutalAl, 
    peruka malkum pukaz pENum toNTarkku, icai Ar tamiz 
    virakan conna ivai pATi ATa, keTum, vinaikaLE.

பொருள்:     கரிய நிறக் கடலின் அலையோதம் ஆர்க்கும் கடற்காழியுள் பாம்பு தங்கும் 
சடையடிகள் ஆகிய சிவபிரானிடத்தில் அவரே புகலிடம் என்று அறிந்து அடைந்த புகழை 
விரும்பும் தொண்டர்கள் இசையினால் தமிழ் விரகன் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தைப் 
பாடி ஆடக் கெடும் வினைகளே.

குறிப்புரை:     உரகம் - பாம்பு. அடிகள் தம்பால்-சிவபிரானிடத்தில். விரகன் - வல்லவன். அறிஞன்.

    From the vast big black ocean waves bring plenty of flood inundated water into 
all sides of the city. Our Lord Civa has worn the serpent all over His body. His entangled 
matted hair is very bright in appearance. We must understand His grace and chant His divine 
name, His fame will spread all over the earth. The servitors live very happily and do 
service to our Lord Civa. Our Thiru-gnana-Sambandar is the most skilful person. He 
chanted these ten verses. Those devotees who memorise and chant these ten verses 
and dance before our Lord will find their bad karma destroyed.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            113ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 113th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 250                     பதிக எண்: 114

114. திருக்கேதாரம்                    114. THIRU-K-KETHARAM

பண்: செவ்வழி                         Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    காசியிலிருந்து தொடர்வண்டியில் ஹரித்துவார் சென்று அங்கிருந்து பேருந்துகளில் 
கௌரிகுண்டம் வரைசென்று, அங்கிருந்து குதிரைகளிலோ, கால்நடையாகவோ கேதாரம் 
செல்லலாம். இது வடநாட்டு தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. பிருங்கி முனிவரின் பொருட்டு 
இறைவியார் இறைவரைப் பூசித்து இடப்பாகம் பெற்ற தலமாகும். இத்தலத்தில் ஆறுமாதம் 
தேவர்களாலும், ஆறுமாதம் மனிதராலும் பூசைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தேவபூசை 
ஐப்பசி பௌர்ணமியில் தொடங்குகிறது. அப்பொழுது பனிக்காலமாதலால் அங்கு மனிதர்களே 
இருக்க முடியாது. அர்ச்சகர் முதலானோர் மலையைவிட்டு வந்து விடுவர். பனிக்காலமாகிய 
ஆறுமாதம் கழித்துப் பூசைக்குச் செல்வர். திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், 
திருக்காளத்தியிலிருந்தே இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள் 
இருக்கின்றன. இறைவரின் திருப்பெயர் கேதார நாதர், இறைவியாரின் திருப்பெயர் கேதார
கௌரியம்மை.

பதிக வரலாறு

    திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்து ஏழுலகும் உடைய தேனை, சண்பை 
ஆளும் புரவலனார் பருகி ஆர்ந்து, தமிழ்வழக்கு நிகழாத வடக்கிலும் குடக்கிலும் உள்ள 
தானந்தோறும் சென்று தமிழிசை பாடுஞ் செய்கை போல வடகயிலை வணங்கிப் பாடித் 
திருக்கேதாரம் தொழுது இசை திருந்தப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2703.     தொண்டரஞ்சுகளிறும்மடக்கிச்சுரும்பார்மலர் 
    இண்டைகட்டிவழிபாடுசெய்யுமிடமென்பரால் 
    வண்டுபாடமயிலாலமான்கன்றுதுள்ளவரிக் 
    கெண்டைபாயச்சுனைநீலமொட்டலருங்கேதாரமே.        1

    தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர் 
    இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் 
    வண்டு பாட மயிலால மான்கன்று துள்ள வரிக் 
    கெண்டை பாயச் சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.        

    toNTar anjcukaLiRum (m) aTakki, curumpu Ar malar 
    iNTai kaTTi, vazipATu ceyyum iTam enparAl- 
    vaNTu pATa, mayil Ala, mAn kanRu tuLLa(v) varik  
    keNTai pAya, cunai nIlam moTTu alarum kEtAramE.

பொருள்:     வண்டுகள் பாட, அவ்விசைக்கேற்ப மயில்கள் ஆட, மகிழ்ச்சியால் மான்கன்று 
துள்ள, மருண்ட கெண்டைமீன்கள் பாயச் சுனையில் நீலமலர் மொட்டு விரியும் திருக்கேதாரமே, 
தொண்டர்கள் ஐம்புலன்களாகிய அஞ்சத்தக்க களிறுகளையும் அடக்கிச் சுரும்புகள் மொய்க்கும் 
பருவத்தில் உள்ள மலர்களை இண்டையாகக் கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்.

குறிப்புரை:     அஞ்சுகளிறும்- ஐம்புலங்களாகிய ஆண்யானைகளையும், 'ஐம்புலனும் அடக்கி 
ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்" (தி. 1 ப. 32 பா.6). இண்டை 
கட்டி வழிபாடு செய்தல் வடநாட்டிலும் உண்டு போலும்!. 'என்பரால்' என்றது.  காணாது 
கேட்டுப் பாடியருளியதைக் குறித்தது.

    The devotees, able to control the five sense organs, collect the flowers 
that blossom on that day and sacred leaves and make circlet for head wear, garlands 
and adore our God Civa and worship Him manifested in the Himalayas city called 
Thiru-k-ketharam. In this city, the bees go round and round the flower plants humming. 
The peacocks dance to their music. The young deer jump about in the mountain forests. 
The carp fish swim and jump in the water. The blue Indian lily buds blossom and the 
petals flourish. Such an attractive city is Thiru-k-ketharam.

2704.    பாதம்விண்ணோர்பலரும்பரவிப்பணிந்தேத்தவே 
    வேதநான்கும்பதினெட்டொடாறும்விரித்தார்க்கிடம்
    தாதுவிண்டமதுவுண்டுமிண்டிவருவண்டினம்
    கீதம்பாடமடமந்திகேட்டுகளுங்கேதாரமே.        2

    பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே
    வேத நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் 
    தாது விண்ட மது உண்டு மிண்டி வருவண்டினம்             
    கீதம் பாட மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.

    pAtam viNNOr palarum paravip paNintu EttavE 
    vEtam nAnkum patineTToTu ARum virittArkku iTam
    tAtu viNTa(m), matu uNTu miNTi(v) varu vaNTu inam     
    kItam pATa(m), maTamanti kETTu ukaLum kEtAramE.

பொருள்:     விரிந்த மலர்களில் தேனை உண்டு கிளர்ந்து வரும் வண்டுக்கூட்டம் கீதம் பாட 
இளமந்தி கேட்டுத் துள்ளும் கேதாரமே, விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த 
வேதம் நான்கினையும் அங்கங்கள் ஆறினையும் புராணங்கள் பதினெட்டையும் 
விரித்தாருக்கு இடம் என்பர்.

குறிப்புரை:     விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த விரித்தார்க்கு இடம் 
கேதாரம் என்க. வண்டினம் கீதம் பாட மந்திகள் கேட்டுத் துள்ளும். 

     See the celestials in heaven prostrate before the holy feet of Lord Civa 
manifested in the temple in Thiru-k-ketharam city in the Himalayas and then worship 
Him. That Civan is the author of the four Vedas, the six sub Vedas, eighteen puranic 
stories. He explained the meanings of all His writings in the three divine books. 
This Lord Civa is manifest in the temple in Thiru-k-ketharam. In this area the bees, 
which suck the honey from the flowers sing divine songs. The monkeys living in the 
same area hear and enjoy the music of the bees and live happily. Such a glorious 
city is Thiru-k-ketharam.

2705.    முந்திவந்துபுரோதாயமூழ்கிமுனிகள்பலர் 
    எந்தைபெம்மானெனநின்றிறைஞ்சும்மிடமென்பரால் 
    மந்திபாயச்சரேலச்சொரிந்தும்முரிந்துக்கபூக் 
    கெந்தநாறக்கிளருஞ்சடையெந்தைகேதாரமே.        3

    முந்தி வந்து புரோதாய மூழ்கி முனிகள் பலர் 
    எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் 
    மந்தி பாயச்சரேலச் சொரிந்தும் முரிந்துக்க பூக் 
    கெந்த நாறக்கிளரும் சடை எந்தை கேதாரமே.

    munti vantu purOtayam mUzki(m) munikaL palar,
    "entaipemmAn!" ena ninRu iRainjcum iTam enparAl- 
    manti pAya, carElac corintu(m) murintu ukka pUk 
    kentam nARa, kiLarum caTai entai kEtAramE.

பொருள்:     மந்தி பாயவே, சரேலென்று கிளைகளில் உள்ள மலர்கள் சொரிந்தும் 
முரிந்தும் உதிர்ந்த பூக்கள் மணம் நாறக் கிளருஞ் சடை எம் தந்தையின் கேதாரமே,
 புலர்வதன் முன் எழுந்து வந்து, நீரில் புரோதயம் மூழ்கி முனிவர்கள் பலர், 'எந்தை எம்மான்' 
என நின்று இறைஞ்சும் இடம் என்பர்.

குறிப்புரை:     புரோதாயம் - புர + உதயம் = புரோதயம். புர - கீழ்த் திசை உதயத்திற்கு 
முன்னர் எனலுமாம். 'நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்' புரோதயம் என்பது புரோதாயம் 
எனப் பிழையாய் நின்றது. சிவாலிங்கம், சடாட்சரம் ஆதினம் ஆதிபன் ஆம்பா (கண்ணாம்பா 
ஜகதாம்பா) முதலியவற்றில் நீண்டதுபோல உதயம் - உதாயம் என்று நீண்டது பிழை வழக்கு. 
புரா+உத்+ஆயம் எனின், (கதிரவன்) எழுமுன் என்க. 'தாயம்' என்பதை ணமுல் ப்ரத்யயாந்த 
மாகக் கொள்ளின் முன்னர்க்கொடுத்து என்றுரைக்க. முனிகள் பலர் இறைஞ்சும் இடம் கேதாரம். 
'சரேல் எனச் சொரிந்து' என்றிருந்தது போலும். 

    All the holy sages in that area get up much earlier than sun rise and 
take bath, and then go to the temple. There they chant and say 'Enthan Perumaan'. 
"Oh You are our Father - You are the noblest above all the nobles". Civa with 
entangled matted hair has manifested Himself in Thiru-k-ketharam temple. In this 
area, the monkeys jump from one branch to another. As a result branches with honey 
drops get broken and fall on the ground. The fragrance of these flowers spreads 
all over the area of Thiru-k-ketharam. Such a glorious city is Thiru-k-ketharam.

2706.     உள்ளமிக்கார்குதிரைம்முகத்தாரொருகாலர்கள் 
    எள்கவில்லா இமையோர்கள் சேரும்மிடமென்பரால் 
    பிள்ளைதுள்ளிக்கிளைபயில்வகேட்டுப்பிரியாதுபோய்க் 
    கிள்ளையேனற்கதிர்கொணர்ந்துவாய்ப்பெய்யுங்கேதாரமே.         4

    உள்ள மிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள் 
    எள்க வில்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் 
    பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டுப் பிரியாது போய்க் 
    கிள்ளையே நற்கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே.

    uLLam mikkAr, kutirai(m) mukattAr, oru kAlarkaL, 
    eLkal illa imaiyOrkaL, cErum(m) iTam enparAl-             
    piLLai tuLLik kiLai payilva kETTu, piriyAtu pOy 
    kiLLai, Enal katir koNarntu vAyp peyyum kEtAramE..

பொருள்:     கிளிப்பிள்ளைகள் துள்ளிக்கொண்டு கிளி பயில்வதைக் கேட்டுத் தாய்க்கிளி 
பிரியாது பிரிந்து சென்று தினைக் கதிரைக் கொய்துவந்து பிள்ளைக் கிளிகளின் வாயினில் 
ஊட்டும் காட்சியை உடைய திருக்கேதாரமே, மன ஊக்கமிக்கவர்கள், குதிரை முகம் உடையவர்கள், 
ஒற்றைக் காலுடையவர்கள், இகழ்தல் இலாத இமையோர்கள் சேரும் இடம் என்பர்.

குறிப்புரை:     உள்ளம் மிக்கார்- தியானபலம் மிகுந்தவர். குதிரை முகத்தார்- கின்னரர் ஸ்யாநிக், 
க்ஷரஹ்: கிம்ரூபுர த்ருட வதனோ மயூம் என்பது (அமரகோசம் முதற்காண்டம் சுலோகம் 74). ஒருகாலர்கள் 
-கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கான் மலர்துவி' (தி. 7. ப.  78 பா. 3). பிரமதகணத்தவருள் 
ஒருவகையர் என்னும் பவிடிய புராணக்கூற்று இங்குப் பொருந்துமோ?

    Our Lord Civa is manifest in the temple city of Thiru-k-ketharam, where people 
who are experts in meditation go to the temple and worship our God. Also the demigods 
who are celestial choristers with the human figure and the head of a horse (Kinnarar) 
and single legged celestials, and all other heavenly people - all gather in the  
temple and worship our Lord. The very young parrots call their mothers to give 
them food, because they are very hungry. Immediately the elderly parrots fly out 
and bring sheaves of millets with seeds attached to it and put them in the mouth 
of the young ones.

2707.     ஊழியூழியுணர்வார்கள்வேதத்தினொண்பொருள்களால் 
     வாழியெந்தையெனவந்திறைஞ்சும்மிடமென்பரால் 
    மேழிதாங்கியுழுவார்கள்போலவ்விரைதேரிய 
    கேழல்பூழ்திகிளைக்கமணிசிந்துங்கேதாரமே.        5

    ஊழி ஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண்பொருள்களால் 
    வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் 
    மேழி தாங்கி உழுவார்கள் போலவ் விரை தேரிய 
    கேழல் பூழ்தி கிளைக்க மணிசிந்தும் கேதாரமே.

    Uzi Uzi uNarvArkaL, vEtattin oN poruLkaLAl, 
    "vAzi, entai" ena vantu iRainjcum iTam enparAl 
    mEzit tAgki uzuvArkaL pOla(v), virai tERiya,
    kEzal pUzti, kiLaikka, maNi cintum kEtAramE.

பொருள்:     ஏர்கொண்டு நிலத்தை உழுவோரைப் போல, இரை தேடும் பன்றிகள் புழுதி 
மண்ணைக் கிளைக்க, மாணிக்கங்கள் சிதறும் திருக்கேதாரமே, ஊழி பலவும் அறியும் 
உணர்வுடைய சிவயோகிகள் வேதத்தில் உள்ள ஒள்ளிய பொருள்களால் வாழ்க எம் தந்தை 
என வந்து இறைஞ்சும் இடம் என்பர்.

குறிப்புரை:     ஊழிஊழி உணர்வார்கள். புழுதியின் மரூஉ. பூழ்தி. (பொழுது- போழ்து), 
கிளைக்க- கிண்ட.

    The devotees of Civa through out the ages have been understanding the deep 
meaning of Vedas. They all praise our Lord and worship Him with devotion. They gather 
in the city of Thiru-k-ketharam. In this city, like farmers who make furrows with ploughs 
while tilling the soil, pigs dig the soil for food and gems get scattered on the ground. 
Such a glorious city is Thiru-k-ketharam.

2708.     நீறுபூசிநிலத்துண்டுநீர்மூழ்கிநீள்வரைதன்மேல் 
    தேறுசிந்தையுடையார்கள் சேரும்மிட மென்பரால் 
    ஏறிமாவின்கனியும்பலவின்னிருஞ்சுளைகளும் 
    கீறிநாளும்முசுக்கிளையொடுண்டுகளுங்கேதாரமே.        6

    நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரை தன்மேல் 
    தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் 
    ஏறிமாவின் கனியும் பலவின்னிரும் சுளைகளும் 
    கீறிநாளும் முசுக்கிளையொடு உண்டுகளும் கேதாரமே.

    nIRu pUci, nilattu uNTu, nIr mUzki, nIL varai tan mEl 
    tERu cintai uTaiyArkaL cErum(m) iTam enparAl 
    ERi mAvin kaniyum palAvin(n) irunj cuLaikaLum 
    kIRi, nALum mucuk kiLaiyoTu uNTu ukaLum kEtAramE.

பொருள்:     முசுக்கள் தம் கிளையுடன் நாளும் மாமரத்திலேறி மாவின் இனிய கனிகளை 
உண்டும், பலாவின் கனிகளைக் கீறியுண்டும், துள்ளி விளையாடும் திருக்கேதாரமே, திருநீற்றினை 
நிறையப் பூசி, நீர்மூழ்கி, நிலத்தில் உண்டு உயர்ந்த மலைகளின் மேல் தங்கும் தெளிந்த 
சிந்தையுடையராகிய விரதிகள் சேரும் இடம் என்பர்.

குறிப்புரை:     தாபதரொழுக்கம் முதலீரடிகளில் குறிக்கப்பட்டது. தேறு சிந்தை - தெளிந்த 
உள்ளம். மாமரத்தில் ஏறிப் பழங்களையும் பலாவைக் கீறிச் சுளைகளையும் உண்டு திரிவன 
குரங்கினங்கள்.

    The ascetics who live in the Thiru-k-ketharam city take bath in the early 
morning every day. Then they smear their body with holy ashes. They take food from 
the land. They live on the long mountain ranges. They have clear ideas about the 
divine Supreme Being. They live in Thiru-k-ketharam city. In this city, the monkeys 
climb on the mango and jack trees and tear the fruits and eat them and live happily 
in the Thiru-k-ketharam city. Such a glorious city is Thiru-k-ketharam.

2709.     மடந்தைபாகத்தடக்கிம்மறையோதிவானோர்தொழத் 
    தொடர்ந்தநம்மேல்வினைதீர்க்கநின்றார்க்கிடமென்பரால் 
    உடைந்தகாற்றுக்குயர்வேங்கைபூத்துதிரக்கல்லறைகண்மேல் 
    கிடந்தவேங்கைசினமாமுகஞ்செய்யுங்கேதாரமே.        7

    மடந்தை பாகத்து அடக்கிம் மறைஓதி வானோர் தொழத் 
    தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் 
    உடைந்த காற்றுக்கு உயர்வேங்கை பூத்துதிரக் கல்லறை கண்மேல் 
    கிடந்த வேங்கை சினமாமுகம் செய்யும் கேதாரமே.

    maTantai pAkattu aTakki(m), maRai Oti vAnOr toza,
    toTarnta nammEl vinai tIrkka ninRArkku iTam enparAl- 
    uTainta kARRukku uyar vEgkai pUttu utira, kal aRaikaL mEl 
    kiTanta vEgkai cinamA mukam ceyyum kEtAramE.

பொருள்:     காற்று வீச, மரங்கள் அசைய வேங்கைப் பூக்கள் கற்பாறைகள் மேல் கிடக்க, 
அதனைக் கண்ணுற்ற வேங்கை வேறொரு வேங்கை எனச் சினங்கொண்ட முகத்தைக் காட்டும் 
அத்தகைய காட்சியுள்ள கேதாரமே, உமையைத் தன் பாகத்தில் கொண்டவர்; மறை ஓதி 
வானவர்களால் தொழப்படுபவர்; தொடர்ந்து நம்மேல் வினைகளைத் தீர்க்க நின்றவர் 
ஆகிய சிவபிரானுக்கு இடம் என்பர்.

குறிப்புரை:     சிவபிரான், மங்கைபங்கராகியும் வேதாகமங்களை அருளியும் உயிர்களின் 
வினைகளைத் தீர்க்கின்ற உண்மை முன்னீரடிகளில் உணர்த்தப்பட்டது. 'ஆரணம் ஆகமங்கள் 
அருளினால் உருவு கொண்டு, காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லை ஆகும்' என்பது 
சிவாகம வசனம். காற்றடிக்கப் பூத்த வேங்கைப் பூக்கள். கற்பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்தன. 
வேங்கை கண்டு பிறிதொரு வேங்கை எனச் சினந்தது.

    Our Lord Civa chants the Vedas drawing to Him the devas to worship Him. 
He is a concomitant Supreme Being with His consort in half of His body. He is the 
author of all the Vedas and the aagamaas. He is manifest in Thiru-k-ketharam to 
wipe out the bad karma of His devotees. In this city of Thiru-k-ketharam, severe 
wind blows very often because it is a high mountain range. The flowers in kino 
trees fall down in large numbers over the rocks giving a delightful appearance. 
The tigers moving in the mountain area, on seeing the kino flowers over the rock, 
opine the flowers themselves are real tigers and get deluded and run away.

2710.     அரவமுந்நீரணியிலங்கைக்கோனையருவரைதனால் 
    வெருவவூன்றிவிரலாலடர்த்தார்க்கிடமென்பரால் 
    குரவங்கோங்கங்குளிர்பிண்டிஞாழல்சுரபுன்னைமேல்         
    கிரமமாகவரிவண்டுபண்செய்யுங்கேதாரமே.        8

    அரவமும் நீரணி இலங்கைக் கோனை அருவரைதனால் 
    வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் 
    குரவம் கோங்கங் குளிர் பிண்டி ஞாழல் சுர புன்னை மேல்         
    கிரமம் ஆக வரிவண்டு பண்செய்யும் கேதாரமே.

    arava munnIr aNi ilagkaik kOnai, aruvaraitanAl 
    veruva UnRi, viralAl aTarttArkku iTam enparAl- 
    kuravam, kOgkam, kuLir piNTi, njAzal, curapunnai,mEl
    kiramam Aka varivaNTu paN ceyyum kEtAramE.

பொருள்:     குரா, கோங்கு, குளிர்ந்த அசோகு,ஞாழல்,சுரபுன்னை மேல் முறையாக அழகிய 
வண்டுகள் பண்ணொலி செய்யும் திருக்கேதாரமே முழங்குகின்ற கடலிடை அழகிய இலங்கையின் 
அரசன் இராவணனைக் கயிலை மலையின் கீழ் அவன் அஞ்சி அலற ஊன்றி அடர்த்த 
சிவபெருமானுக்கு இடம் என்பர்.

குறிப்புரை:     அரவம் - முழக்கம். வரை -மலை. குரவம் - குராமரம். பிண்டி - அசோகம். 
கிரமம் - முறை.

    Once upon a time - Raavanan, the king of the ocean-bordered Sri Lanka tried to lift 
the Kailash mountain. At that time our Lord Civa pressed the top of the mountain with 
His toe. Raavanan got pressed under the mountain. This Lord is manifest in thiru-k-ketharam. 
Here the bees in an orderly manner suck the honey from the flowers in trees such as bottle 
flower plants, a kind of cotton tree, ashoca tree, orange cup tree, alexandria laurel - 
making musical notes. Such a glorious city is Thiru-k-ketharam.

2711.     ஆழ்ந்துகாணாருயர்ந்தெய்தகில்லாரலமந்தவர் 
    தாழ்ந்துதந்தம்முடிசாயநின்றார்க்கிடமென்பரால்
    வீழ்ந்துசெற்றுநிழற்கிறங்கும்வேழத்தின்வெண்மருப்பினைக் 
    கீழ்ந்துசிங்கங்குருகுண்ணமுத்துதிருங்கேதாரமே.         9

    ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் 
    தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கு இடம் என்பரால் 
    வீழ்ந்து செற்று நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண்மருப்பினைக் 
    கீழ்ந்து சிங்கம் குருகுண்ண முத்து உதிரும் கேதாரமே.

    Azntu kANAr, uyarntu eytakillAr, alamantavar
    tAzntu, tam tam muTi cAya ninRArkku iTam enparAl- 
    vIzntu ceRRu(n) nizaRku iRagkum vEzattin veN maruppinaik 
    kIzntu cigkam kuruku uNNa, muttu utirum kEtAramE.

பொருள்:     தன்னுடைய நிழலைப் பிறிதொரு வேழம் எனக் கருதிச் சினந்து நிழலை விரும்பி
இறங்கும் களிற்றின் வெண்மருப்பினை சிங்கம் பிளந்து அடிக்குருத்தினை உண்ண முத்துக்கள் 
உதிரும் திருக்கேதாரமே பூமியை அகழ்ந்தும் காணார், வானத்தில் உயர்ந்து பறந்தும் அடையார்; 
மனங்கலங்கி அவர் பணிந்து தத்தம் முடிகளைச் சாய்த்து வணங்க நின்றவருக்கு இடம் என்பர்.

குறிப்புரை:     ஆழ்ந்து காணார்- பன்றியுருக்கொண்டு மண் இடந்தும் காணாத திருமால். 
உயர்ந்து எய்தகில்லார் - அன்னப்புள் வடிவு கொண்டு விண்பறந்தும் காணாத அயன், தாழ்ந்து 
தம்தம்  முடிசாய நின்றவர் சிவபிரான். சாய்ந்தவர்- அயனும் அரியும். சிங்கம் யானை மேல் 
வீழ்ந்து அழித்து மருப்பைப் பிளந்து உண்ணுகின்றுழி முத்துக்கள் உதிரும்.

    The demigod Brahma took the shape of swan and flew high in the sky to see 
Lord's head. The other one, Thirumaal took the hog's body and went down the earth 
to see the feet of Lord Civa. They both failed. They came before our Lord and 
prostrated before Him and asked for His grace. This Lord Civa loves to be manifested 
in Thiru-k-ketharam. In this city, the king of the forests, the lion, dashes against 
the elephant and kills it. Then it tears off the rutted head portion and eats its 
flesh. While eating, pearls from the elephant's head fall down on the ground. 
Such a glorious city is Thiru-k-ketharam.

2712.     கடுக்கள்தின்றுகழிமீன்கவர்வார்கள்மாசுடம்பினர் 
    இடுக்கணுய்ப்பாரவரெய்தவொண்ணாஇடமென்பரால் 
    அடுக்கநின்றவ்வறவுரைகள்கேட்டாங்கவர்வினைகளைக் 
    கெடுக்கநின்றபெருமானுறைகின்றகேதாரமே.         10

    கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர் 
    இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் 
    அடுக்க நின்று அவ் அறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக் 
    கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

    kaTukkaL tinRu kazi mIn kavarvArkaL, mAcu uTampinar, 
    iTukkaN uyppAr avar eyta oNNA iTam enparAl- 
    aTukka ninRa(v) aRa uraikaL kETTu Agku avar vinaikaLaik 
    keTukka ninRa perumAn uRaikinRa kEtAramE.

பொருள்:     அடுத்து நின்று தாம் உரைக்கும் அறவுரைகள் கேட்டவர்களுடைய வினைகளைக் 
கெடுக்க என்றே நின்ற சிவபெருமானது இடம் கடுக்காயைத் தின்று கழியிலுள்ள மீன்களைக் 
கவருவாராகிய தேரர், அழுக்குடம்பினராகிய சமணர், இவ்விரு கூட்டத்தாரும் துன்பத்தினை 
செலுத்துவர்; இவர்களால் அடைய முடியாத திருக்கேதாரம் என்பர்.

குறிப்புரை:     கடுக்கள் தின்று- துவர்க்காய்கள் தின்று. கழிமீன்கள் கவர்வார்கள் என்றதில் அவர்
புலைமை குறிக்கப்பட்டது. இடுக்கண் - (இடுங்குகண்) துன்பம். 

    The Jains in that city eat astringent seeds. They also eat damaged fish products 
without the knowledge of other people. They never care for their body but keep it dirty. 
They preach false and miserable words. These Jains do not approach the area where our 
Lord is manifested. Our Lord's devotees pray and preach real virtuous words. Our Lord 
listens to them and wipes out the bad karma of His devotees. Lord Civa is manifest in 
Thiru-k-ketharam city.

2713.     வாய்ந்த செந்நெல்விளைகழனிமல்கும்வயற்காழியான் 
    ஏய்ந்தநீர்க்கோட்டிமையோருறைகின்றகேதாரத்தை 
    ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள்பத்தும்மிசைவல்லவர் 
    வேந்தராகியுலகாண்டுவீடுகதிபெறுவரே.         11

    வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயற்காழியான் 
    ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை 
    ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசைவல்லவர் 
    வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவரே.

    vAynta cennel viLai kazani malkum vayal kAziyAn, 
    Eynta nIrkkOTTu imaiyOr uRaikinRa kEtArattai 
    Ayntu conna aruntamizkaL pattum icai vallavar, 
    vEntar Aki ulaku ANTu, vITukati peRuvarE.

பொருள்:     செந்நெல் விளை கழனிகள் மலிந்த வயல்களையுடைய காழியான், சுனைகள் 
பொருந்தியதும், இமையோர் உறைகின்ற சிகரங்களை உடையதுமாகிய திருக்கேதாரத்தைக் 
குறித்து ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தினையும் இசைக்க வல்லவர் 
அரசராகி உலகத்தை ஆண்டு பரமவீடாகிய சிவகதியைப் பெறுவார்.

குறிப்புரை:     ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரம் என்றதில். கேதாரத்தை 
வழிபடும் இமையவர் அவ்வாறு திங்களும் உறைகின்ற இடம் நீர்க்கோடு என்பது குறிக்கப்பட்டது. 
வீடுகதி - வீட்டிற்குரிய நெறி. வீடும் (பாசநீக்கம்) கதியும் (சிவப்பேறு) என உம்மைத் தொகையுமாம்.

    Our saint Thiru-gnana-Sambandar came into existence in the city of Kaazhi which
is full of paddy fields. Our saint Thiru-gnana-Sambandar investigated about Thiru-k-ketharam 
city and then chanted these in the chaste Tamil language on the Lord. The city of 
Thiru-k-ketharam has many waterfalls all around the area. The devas reside here. 
The devotees who memorise and chant these ten verses in musical tone and worship 
our Lord there will rule over the country like kings and finally they will get 
salvation and their bad karma will be wiped out.

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            114ஆம் பதிகம் முற்றிற்று
            End of 114th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM
            
பதிகத் தொடர் எண்: 251                பதிக எண் : 115

115. திருப்புகலூர்                     115. THIRU-P-PUGALOOR

பண்: செவ்வழி                    Pann:Chevvazhi 

திருத்தல வரலாறு.

    சிவபிரானிடத்தில் புகலடைந்த காரணம் பற்றிய பெயர் என்பர். திருஞானசம்பந்தர் 
அருளிய பதிகமாகிய க்ஷேத்திரக்கோவையில் 'துலைபுகலூ ரகலா திவை காதலித்தா னவன் 
சேர்பதியே"  என்று அருளியிருப்பதால், ஏதோ வரலாற்றை உட்கொண்டு அவ்வாறு கூறியிருக்க 
வேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று பொருள்படும்.

    திருப்புகலூர் என்னும் இத்திருத்தலமானது மயிலாடுதுறை- பேரளம் தொடர் வண்டிப்
 பாதையில் உள்ள நன்னிலம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே  6  கி.மீ. தூரத்தில் 
இருக்கின்றது. சன்னா நல்லூரிலிருந்தும் நாகையிலிருந்தும் பேருந்துகளில் திருப்புகலூர் 
செல்லலாம். காவிரிக்குத் தென்கரைத் தலமாகும்.

    இறைவரின் திருப்பெயர் அக்நீசர். இது அக்கினி பூசித்த காரணத்தால் ஏற்பட்ட 
பெயராகும். இதுவன்றிப் புகலூர் நாதர்,சரண்யபுரீசர், புன்னாக நாதர், கோணப்பிரான் 
என்னும் பெயர்களும் வழங்குகின்றன . இறைவியாரின் திருப்பெயர் கருந்தாழ்குழலி. 
இத்திருப்பெயரை, அப்பர் சுவாமிகள் (தி.4. ப 26. பா 3) 

     'பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக் 
    கருந்தாழ் குழலியுந் தாமூங் கலந்து 
    திருந்தா மனமுடை யார்திறத் தென்றும் 
    பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே'  

என எடுத்தாண்டுள்ளார்.

    தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் அக்கினி தீர்த்தம், பாணதீர்த்தம் என்பன. 
அக்கினி தீர்த்தம் கோயிலைச் சுற்றிலும் அகழிபோல் சூழ்ந்திருக்கின்றது.

    இது முருகநாயனார் அவதாரம் செய்த திருப்பதியாகும். முருகநாயனார் திருமடத்தில் 
திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தபொழுது, அப்பர் திருவாரூரை வழிபட்டுப் புகலூர்க்கு 
எழுந்தருளி ஞானசம்பந்தரைக் கண்டு அளவளாவியிருந்ததோடு, திருவாரூர்ச் சிறப்பை 
'முத்து விதானம்’ என்று தொடங்கும் பதிகத்தால் ஓதியருளியதும் இத்திருத்தலம்.

    திருப்பூந்துருத்தியிலிருந்து அப்பர் பெருமான் எழுந்தருளி இங்குத் தங்கி, 
கைத்தொண்டும் பாடுந்தொண்டும் செய்தார். அவர் சித்திரைச் சதய நாளிற் சிவானந்த 
ஞானவடிவான தலமும் இதுவே. பங்குனி உத்திரத் திருநாளுக்குப் பரவையார்க்குப் 
பொன் வேண்டி, சுந்தரர் இங்கு எழுந்தருளி, இறைவனை வணங்கித் திருப்பணிக்காக 
வைத்திருந்த செங்கற்களைத் தலையணையாகக் கொண்டு தூங்கி, விழித்தெழுந்தபோது, 
அக்கற்கள் பொன்னாயிருந்தமை  கண்டு வியந்து, 'தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்' 
என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளியது இத்தலத்திலேதான்.

    திருப்புகலூர் அந்தாதியை இயற்றியவர் பக்தர் நெற்குன்றவாணர். இது அச்சில் 
வெளிவந்துள்ளது.  தருமை ஆதீனப் புலவர், திரு. முத்து சு. மாணிக்கவாசக முதலியார் 
அவர்களாலும் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்பெற்றுள்ளது. வடமொழியில் தலபுராணம் 
இருக்கின்றது.  அச்சாகவில்லை. இவ்வந்தாதியின் அமைப்பும் சொற்பொருளின்பமும் 
பிற திரிபந்தாதிகளுக்கு வாய்க்காத எளிமையும், அஃது அமைந்த அருமையும், பெரும் 
புலவர்களுக்கும் விருந்தாயிருக்கும். புகழுரு எய்திய உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் 
எழுதிய மகாவித்துவான் சரித்திரத்தில் இதன் சிறப்பை அறியலாம். இக்கோயிலின் 
முன்கோபுரம் 27 மீ. உயரம் உடையது. மதில்களின் நீளம் 98 மீ. அகலம் 68 மீ. சுற்றிலும் 
நந்தவனம் உள்ளது. அதைச்சுற்றி 40 மீ. அகலம் கொண்ட அகழி உள்ளது.  உள்ளே இரண்டு 
பிரகாரங்கள் உள்ளன.

பதிக வரலாறு

    'ஓதாது ஞானமெல்லாம் உணர்ந்தார்' ஆகிய சண்பை வேந்தர் திருப்புகலூர்த் 
 திருத்தொண்டரொடும் செம்மை முருகனார் எதிர்கொள்ளத் திருக்கோயிலை எய்தி, 
உள்புகுந்து, தாழ்ந்து, விழுந்து, எழுந்து, நெக்குருகும் சிந்தையில் அன்பு பொங்கவும் 
கண்மலரில் நீரருவி செய்யவும் சார்த்திய தமிழ்த் தொடை மாலையுள் ஒன்று இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2714.     வெங்கள்விம்முகுழலிளையராடவ்வெறிவிரவுநீர்ப் 
    பொங்குசெங்கட்கருங்கயல்கள்பாயும்புகலூர்தனுள் 
    திங்கள்சூடித்திரிபுரமோரம்பாலெரியூட்டிய 
    எங்கள்பெம்மானடிபரவநாளும்மிடர்கழியுமே.        1

    வெங்கள் விம்மு குழல் இளையர் ஆடவ் வெறி விரவு நீர்ப்         
    பொங்கு செங்கட் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள் 
    திங்கள் சூடித் திரிபுரம் ஓரம்பால் எரியூட்டிய 
    எங்கள் பெம்மான் அடிபரவ நாளும் இடர்கழியுமே.

    vegkaL vimmu kuzal iLaiyar ATa(v) veRi viravu nIrp 
    pogku cegkaN karugkayalkaL pAyum pukalUrtanuL- 
    tigkaL cUTi, tiripuram Or ampAl eriyUTTiya-             
    egkaL pemmAn aTi parava, nALum(m), iTar kaziyumE.

பொருள்:     தேன் துளிக்கும் மலர்களைச் சூடிய குழலினராகிய இளைய மகளிர் ஆடுதலால் 
நாற்றம் விரவும் நீர்ப்பரப்பில் துள்ளும் செங்கட் கருங்கயல்கள் பாயும் திருப்புகலூர்தனுள் 
சந்திரசேகரன், திரிபுரத்தை ஒரே அம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான், அவருடைய திருவடியை 
நாளும் வழிபட இடர்கழியும்.

குறிப்புரை:     குழலில் மலரினது கள் இருத்தலால். 'வெங்கள் விம்மு குழல்' எனப்பட்டது. 
செங்கட் கருங்கயல்; திரிபுரம் ஓரம்பு - முரண்டொடை. நாளும் பரவ இடர்கழியும்.

    In the city of Thiru-p-pugaloor, young maidens adorn their hair locks with 
flowers full of honey. They dance in the hall with many other young girls. In the ponds
around the city spreads sweet fragrance, the black tank fish jump here and there. 
Their eyes are dark red in colour. Here in this city is manifested our Lord Civa who
retains the moon on His locks of hair. He burnt with one shot the asuras' three sky 
forts. Those devotees who can extol our Lord with great admiration will get their 
bad karma destroyed.

2715.     வாழ்ந்தநாளும்மினிவாழுநாளும்மிவையறிதிரேல் 
    வீழ்ந்தநாளெம்பெருமானையேத்தாவிதியில்லீர்காள்             
    போழ்ந்ததிங்கட்புரிசடையினான்றன்புகலூரையே 
    சூழ்ந்தவுள்ளமுடையீர்காளுங்கள்துயர்தீருமே.        2    

    வாழ்ந்த நாளும் இனி வாழுநாளும் இவை அறிதிரேல் 
    வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லீர்காள்             
    போழ்ந்த திங்கட் புரிசடையினான் தன்புகல் ஊரையே 
    சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே.            

    vAznta nALum(m), ini vAzum nALum(m), ivai aRitirEl 
    vIznta nAL emperumAnai EttA vitii(l)lIrkAL! 
    pOznta tigkaL puricaTaiyinAn tan pukalUraiyE 
    cUznta uLLam uTaiyIrkAL! ugkaL tuyar tIrumE.

பொருள்:     உடம்புடன் வாழ்ந்த காலமும், வாழ்கின்ற காலமும் இவையென அறிதிரேல், 
இறைவனை ஏத்தாது வீணாகக் கழிந்து போன நாள் இறந்த நாள். விதியில்லீர்காள்! பிறைச்         
சந்திரனை அணிந்த சடையினானுடைய புகலூரையே ஆராய்ந்த உள்ளம் உடையீர்காள்!
உங்கள் துயர் தீரும்.

குறிப்புரை:       உடம்பொடு உயிர்வாழ்வின் இறந்த காலத்தையும் அறிவீர் எனில் - 
'ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும்' (தி.1 ப. 41 பா. 3). எம்பெருமானை ஏத்தாத நாள் 
வாழ்ந்த நாளாகா. 'நின்திரு வருளே பேசின் அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே' 
(தி. 6 ப. 47 பா. 10) சூழ்ந்த - ஆராய்ந்த.

    Oh ye people of the city! If you are able to understand the days you 
have lived so far and the days you are going to live hereafter, and also if you 
come to know the past days when you had not worshipped our Lord, you would realise 
that you had no good karma to enable you to worship Him so far. However, it is never 
too late, now you can regret over your past lapses and atone for it, you may go to 
Thiru-p-pugaloor and worship our Lord who retains the moon on His hair locks, 
your sufferings will disappear.

2716.     மடையினெய்தல்கருங்குவளைசெய்யம்மலர்த்தாமரை 
    புடைகொள்செந்நெல்விளைகழனிமல்கும்புகலூர்தனுள் 
    தொடைகொள்கொன்றைபுனைந்தானொர்பாகம்மதிசூடியை 
    அடையவல்லாரமருலகமாளப்பெறுவார்களே.        3

    மடையின் நெய்தல் கருங்குவளை செய்ய அம்மலர்த் தாமரை         
    புடைகொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள் 
    தொடை கொள் கொன்றை புனைந்தானொர் பாகம் மதி சூடியை 
    அடைய வல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.

    maTaiyin neytal karugkuvaLai ceyya(m) malarttAmarai         
    puTaikoL cennel viLai kazani malkum pukalUrtanuL, 
    toTai koL konRai punaintAn,--or pAkam,--maticUTiyai 
    aTaiya vallAr amarulakam ALap peRuvArkaLE.

பொருள் :     மடைகளில் நெய்தல், கருங்குவளை, செந்தாமரை மலர்கள், பக்கங்களில் 
செந்நெல் விளைகின்ற கழனிகள் மல்கிய திருப்புகலூர்தனுள், தொடுக்கப்பட்ட மாலை 
போல மலர்கின்ற கொன்றையைப் புனைந்தான். சந்திர சேகரனை, அடையப்பெற்ற புண்ணியம் 
உடையவர்கள் தேவலோகத்தை ஆளப் பெறுவார்களே.

குறிப்புரை:     தொடை - மாலை. அமருலகம் - அமரர் உலகம் என்பது இவ்வாறு ஆளப்பட்டது. 
வன்மை பேற்றிற்குக் காரணம்.

    In the city of Thiru-p-pugaloor, there are many creeks where water always 
flows. Here white Indian water lily, purple Indian water lily and the red lotus blossom. 
flowers of beauty. Nearby paddy fields exist with red paddy. Here our Lord is manifested 
with His hair locks ornamented with Indian laburnum flowers. He also retains the moon 
in His hair locks; He is concomitant with His consort Uma Devi. Those who can reach 
the temple and worship His holy feet and chant prayerful songs will rule over heaven.

2717.    பூவுந்நீரும்பலியுஞ்சுமந்துபுகலூரையே                 
    நாவினாலே நவின்றேத்தலோவார்செவித்துளைகளால் 
    யாவுங்கேளாரவன்பெருமையல்லாலடியார்கள்தாம் 
    ஓவுநாளும்முணர்வொழிந்தநாளென்றுளங்கொள்ளவே.        4

    பூவும் நீரும்பலியும் சுமந்து புகலூரையே                 
    நாவினாலே நவின்று ஏத்தலோவார் செவித்துளைகளால் 
    யாவும் கேளாரவன் பெருமையல்லால் அடியார்கள் தாம் 
    ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உளம் கொள்ளவே.

    pUvum nIrum paliyum cumantu, pukalUraiyE 
    nAvinAlE navinRu Ettal OvAr; cevittuLaikaLAl 
    yAvum kELAr, avan perumai allAl, aTiyArkaLtAm, 
    "Ovum nALum uNarvu ozinta nAL" enRu uLam koLLavE.

பொருள்:     பூவும் நீரும் நிவேதனமும் சுமந்து சென்று, திருப்புகலூரையே நாவினால் பலமுறையும் 
பயின்று ஏத்துதல் ஒழியார்; செவித்துளைகளில் புகலூரின் பெருமையை அல்லால் யாதுங்கேளார் 
அடியார்கள். இவை செய்யாத நாள்கள் ஓவும் நாள் என்றும் உணர்வொழிந்த நாள் என்றும் கொள்ளவே.

குறிப்புரை:     பலி- நிவேதனம். ஓவார்- நீங்கார், அடியார்கள் அவன் பெருமை அல்லால் - 
செவித்துளைகளால் யாதும் கேளார். ஓவார், ஓவும் நாள் உணர்வு ஒழிந்த நாள் என்க. 'ஓவும் நாள் 
உணர்வு அழியும் நாள்’ (தி. 7 ப. 48 பா. 3).

    The servitors of our Lord take flowers, water and items for oblation and reach 
the temple. They chant with their tongue the fame of our Lord. They will not listen to 
any words other than the fame of our Lord. They will serve Him always. They will seriously 
think that the days on which they do not think or speak about our Lord's fame are the days 
lost without any benefit and the days of barren consciousness. The servitors are such 
good people.

2718.     அன்னங்கன்னிப்பெடைபுல்கியொல்கியணிநடையவாய்ப் 
    பொன்னங்கரஞ்சிமலர்ச்சின்னமாலும்புகலூர்தனுள் 
    முன்னம்மூன்றுமதிலெரித்தமூர்த்திதிறங்கருதுங்கால் 
    இன்னரென்னப்பெரிதரியரேத்தச்சிறிதெளியரே.        5

    அன்னம் கன்னிப்பெடை புல்கி ஒல்கி அணிநடையவாய்ப் 
    பொன்னம் கரஞ்சி மலர்ச்சின்ன மாலும் புகலூர்தனுள் 
    முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால் 
    இன்னர் என்னப் பெரிது அரியர் ஏத்தச் சிறிது எளியரே.

    annam kannip peTai pulki, olki aNi naTaiyavAy, 
    ponnam karanjci malarccinnam Alum pukalUrtanuL, 
    munnam mUnRu matil eritta mUrtti tiRam karutugkAl, 
    innar ennap peritu ariyar; Ettac ciRitu eLiyarE.

பொருள்:     சேவல் அன்னம் கன்னிப் பெடையைப் புல்கித் தளர்ந்து அழகிய நடையினவாய் 
'பொன்னங்காஞ்சி மலர்ச்சின்னம் மாலும்'திருப்புகலூர் தன்னுள், முன்பு மும்மதில்களையும் எரித்த 
மூர்த்தியின் திறத்தினை நினையுங்கால் இன்னர் என அறியவொண்ணாத பெரியர், ஆயினும் 
அனைவரும் தொழுது ஏத்தச் சிறிது எளியரே.

குறிப்புரை:     புல்கி - தழுவி. ஒல்கி - ஒதுங்கி. இன்னர் என்னப் பெரிது. அரியர் - அவன் இவன் 
என்று  யாவர்க்கும் அறியவொண்ணார் (தி. 6 ப. 85 பா.3). இவன் இறைவன் என்று எழுதிக் 
காட்டொணாதே (தி.6 ப. 97 பா. 10).

    In the city of Thiru-p-pugaloor, there are some kinds of trees called Kaanchi. 
They look golden with their cool shades. Here the male swans embrace the young maiden 
swans and reach the shades of Kaanchi tree and enjoy their life with clamour. Here our 
Lord Civa is manifested. Once upon a time, He burnt the three forts of the asuras. 
The devotees think about our Lord Civa as a great, rare personality and a unique 
and courageous Supreme Being. But He becomes very humble to His devotees who chant 
His fame. They are wonder-struck.

2719.     குலவராகக்குலமிலருமாகக்குணம்புகழுங்கால் 
    உலகினல்லகதிபெறுவரேனும்மலரூறுதேன் 
    புலவமெல்லாம்வெறிகமழுமந்தண்புகலூர்தனுள் 
    நிலவமல்குசடையடிகள்பாதந்நினைவார்களே.         6

    குலவர் ஆகக் குலம் இலரும் ஆகக் குணம் புகழுங்கால் 
    உலகில் நல்லகதி பெறுவரேனும் மலர் ஊறுதேன் 
    புலவம் எல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர் தனுள் 
    நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே.

    kulavar Aka; kulam ilarum Aka; kuNam pukazugkAl, 
    ulakil nalla kati peRuvarEnum, malar URu tEn
    pulavam ellam veRi kamazum am taN pukalUrtanuL,         
    nilavam malku caTai aTikaL pAtam ninaivArkaLE.

பொருள்:     உயர்குலத்திற் பிறந்தவராகுக அல்லது குலம் இல்லாதவராகுக; மலரில் 
ஊறுகின்றதேன் வயலெல்லாம் பரவும் மணங்கமழும் புகலூர்தனுள் பிறை நிலவு இருக்கும் சடையை 
உடைய அடிகளின் பாதம் நினைந்து; குணங்களைப் புகழ்வார் யாவர், அவர் உலகில் 
நல்ல கதியைப் பெறுவர்.

குறிப்புரை:     குலவர்- உயர்குலத்திற் பிறந்தவர். ஆக - இரண்டும் வியங்கோள்.  
குணம்- இறைவனுக்குள்ள எண்குணங்கள். பொருள் சேர்புகழ்கள். நல்லகதி - நல்லகதிக்கு 
யாதும் ஓர் குறைவு இலை (தி.3 பா. 24 பா.1). புலவும் - புலால் நாற்றம் உடையவை. 
நிலவம் - பிறை. 

    In the city of Thiru-p-pugaloor, people born in the higher caste or 
otherwise will get salvation provided they praise our Lord's eight dominant 
qualities and worship Him. Therefore, the devotees always pray our Lord and 
think of His holy feet. Thiru-p-pugaloor is a fine place because fragrance 
spreads not only in the honey-filled flowery area, but also in the places 
abounding in dead flesh. Devotees find no difference between these two areas. 
Our Lord Civan, retaining the moon on His matted hair, is always thought 
of by His devotees.

2720.     ஆணும்பெண்ணும்மெனநிற்பரேனும்மரவாரமாகப் 
    பூணுமேனும்புகலூர்தனக்கோர்பொருளாயினான் 
    ஊணுமூராரிடுபிச்சையேற்றுண்டுடைகோவணம் 
    பேணுமேனும்பிரானென்பராலெம்பெருமானையே.        7

    ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமாகப் 
    பூணுமேனும் புகலூர் தனக்கு ஓர்பொருள் ஆயினான் 
    ஊணும் ஊரார் இடுபிச்சை ஏற்று உண்டு உடைகோவணம் 
    பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே.

    ANum peNNum(m) ena niRparEnum(m), aravu AramAkap         
    pUNumEnum, pukalUrtanakku Or poruL AyinAn; 
    UNum UrAr iTu piccai ERRu uNTu, uTaikOvaNam 
    pENumEnum, pirAn enparAl, emperumAnaiyE.

பொருள்:     ஆண் எனவும் பெண் எனவும் நின்றார் என்றாலும், பாம்பினை மாலையாகப் 
பூணுவர் என்றாலும், புகலூருக்குச் செல்வம் ஆயினான்; ஊணாக ஊரார் இடும் பிச்சை ஏற்று 
உண்டு உடையாகக் கோவணம் விரும்பும்; எளியவர் என்றாலும் அந்த எம்பெருமானையே 
பிரான் என்பர்.

குறிப்புரை:     ஊணும் ஊரார் இடுகின்ற பிச்சையுண்டி, உடையும் கோவணம், பிச்சையைப் 
பேணும் (விரும்பும்) கோவணத்தைப் பேணும் எம்பெருமானையே பிரான் என்பர்.

    Our Lord Civan is manifest in the temple at Thiru-p-pugaloor and considers 
the place as His desired one. He may be in the form of male or female. He might wear the 
snakes as jewellery over His body. He may collect and eat alms given by women.
He may cover His body with one single forelap cloth on His loins. The devotees 
know about all the above features of our Lord; yet they declare that He is their 
Chief Supreme Being.

2721.     உய்யவேண்டில்லெழுபோதநெஞ்சேயுயரிலங்கைக்கோன் 
    கைகளொல்கக்கருவரையெடுத்தானையோர்விரலினால் 
    செய்கைதோன்றச்சிதைத்தருளவல்லசிவன்மேயபூம்
     பொய்கைசூழ்ந்தபுகலூர்புகழப்பொருளாகுமே.        8

    உய்ய வேண்டில் எழுபோத நெஞ்சே உயர் இலங்கைக்கோன் 
    கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஓர்விரலினால் 
    செய்கை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேயபூம் 
    பொய்கை சூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.

    uyya vENTil(l) ezu, pOta! nenjcE! uyar ilagkaik kOn
    kaikaL olkak karuvarai eTuttAnai orviralinAl
    ceykai tOnRac citaittu aruLa valla civan mEya, pUm 
    poykai cUznta, pukalUr pukaza, poruL AkumE.

பொருள்:     நெஞ்சே! நீ உய்ய வேண்டுவையாயின் போத எழுக! உயர்ந்த இலங்கையர்கோன் 
இராவணன் கைகள் தளரக் கையால் மலையை எடுத்தானை ஓர் விரலினால் சிதைத்தருள வல்ல 
சிவன் எழுந்தருளியுள்ள இடமாகிய பூம்பொய்கை சூழ்ந்த திருப்புகலூரைப் புகழ்ந்தால் 
மெய்ப்பொருள் கிட்டும்.

குறிப்புரை:     நெஞ்சே! உய்ய வேண்டுவையாயின் எழு. போத - புகுத என்பதன் மரூஉ. 
ஒல்க - தளர. புகழ்ந்தால் மெய்ப்பொருள் கிட்டும்.

    Oh my dear heart, if you want to get relief, get up in the early morning, 
go to the temple of our Lord Civan and worship Him. Raavanan, the king of Sri Lanka, 
once tried to lift mountain Kailash with his hands. Then our Lord pressed the top of 
the mountain with His toe and damaged His body to show His mightiness. Then He graced 
him. This Lord Civan is manifested in the temple in Thiru-p-pugaloor city. This city 
is surrounded by good water ponds. The devotees praise His fame everywhere. This is 
the only way to get salvation for them.

2722.    நேமியானும்முகநான்குடையந்நெறியண்ணலும் 
    ஆமிதென்றுதகைந்தேத்தப்போயாரழலாயினான் 
    சாமிதாதைசரணாகுமென்றுதலைசாய்மினோ
    பூமியெல்லாம்புகழ்செல்வமல்கும்புகலூரையே.        9

    நேமியானும் முகம் நான்கு உடையந் நெறி அண்ணலும் 
    ஆமிது என்று தகைந்து ஏத்தப் போயார் அழலாயினான் 
    சாமி தாதை சரணாகும் என்று தலை சாய்மினோ 
    பூமி எல்லாம் புகழ் செல்வ மல்கும் புகலூரையே.

    nEmiyAnum, mukam nAnku uTaiya(n) neRi aNNalum,
    "Am itu" enRu takaintu Ettap pOy, Ar azal AyinAn; 
    cAmitAtai; caraN Akum' enRu, talaicAyminO- 
    pUmi ellAm pukaz celvam malkum pukalUraiyE!

பொருள்:     சக்ராயுதத்தானும் நான்கு முகமுடைய நெறியண்ணலும் இறைவன் இருக்கும் 
இடமிது. ஆம் என நிலைபெறுத்திக் கூறி ஏத்தப் போக நெருப்பாக உயர்ந்தான். முருகனுடைய 
தந்தை; அவனே சரணாகும் என்று புகலூரையே தலை வணங்குமின்! நிலவுலகெல்லாம் உமக்குப் 
புகழும் செல்வமும் பெருகும்.

குறிப்புரை:     நேமியான் - சக்கிராயுதம் ஏந்திய திருமால், நான்கு முகமுடைய நெறியண்ணல் 
எனமாறுக. ஆம் இது என்று தகைந்து - மேலிடம் ஆகும் கீழிடமாகும் இ(றைவனது இ) ந்நிலை என்று 
கூறுபடுத்தி சாமி - முருகன். புகழ் செல்வம் - வினைத்தொகை. உம்மைத்தொகையும் ஆம்.

    Thirumaal, the demigod who carries the sharp chakra and the four faced Brahma 
decided on a proper method to see our Lord's head and feet. That is both should take 
the appearance of hog and swan and should try. They both searched and failed in their
attempt. Then Lord Civa became an infinite Supreme Flame. He is the Father of Murugan. 
This Lord is manifested in the temple in Thiru-p-pugaloor city. He is the Chief Lord 
and proper Supreme Being to worship. They must prostrate and worship Him. Then you 
will get the assets of the world and goodness and the world will praise You.

2723.     வேர்த்தமெய்யருருவத்துடைவிட்டுழல்வார்களும் 
    போர்த்தகூறைப்போதிநீழலாரும்புகலூர்தனுள் 
    தீர்த்தமெல்லாஞ்சடைக்கரந்ததேவன்திறங்கருதுங்கால் 
    ஓர்த்துமெய்யென்றுணராதுபாதந்தொழுதுய்ம்மினே.         10

    வேர்த்த மெய்யர் உருவத்துடை விட்டு உழல்வார்களும் 
    போர்த்த கூறைப்போதி நீழலாரும் புகலூர்தனுள் 
    தீர்த்தம் எல்லாம் சடைக்கரந்த தேவன் திறம் கருதுங்கால் 
    ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்மினே.

    vErtta meyyar uruvattu uTaiviTTu uzalvArkaLum, 
    pOrtta kURaip pOti nIzalArum,--pukalUrtanuL 
    tIrttam ellAm caTaik karanta tEvan tiRam karutugkAl- 
    Orttu, mey enRu uNarAtu, pAtam tozutu uymminE!

பொருள்:     வியர்வை நீர் பாய்ந்த மேனியராய், உடையைத் துறந்து திரியும் சமணர்களும், 
துவராடையால் உடலைப் போர்த்திய அரசமர நீழலராகிய தேரரும் ஆராய்ந்து மெய்யென்று
உணரார்; திருப்புகலூர்தனுள் கங்கை நீரைச் சடையிற் கரந்த தேவன்; அவருடைய பாதங்களைத் 
தொழுது உய்ம்மினே!

குறிப்புரை:     கூறை - ஆடை. போதி -அரசமரம். தீர்த்தம் - கங்கை. கரந்த - மறைத்த. ஓர்த்து -
ஆராய்ந்து.

    In the city, Jains sweat profusely in their body, and move on roads without 
any dress, and the Buddhists cover their body and take rest under the pipal tree - 
all these people preach wrong moral qualities. Do not listen to them. Our Lord supports 
the river Ganges on His hair locks; go to the temple and prostrate at His holy feet 
and pray. But do not try to make any research on His nature and customs and habit. 
Concentrate on and worship His holy feet to obtain heavenly bliss.

2724.     புந்தியார்ந்தபெரியோர்களேத்தும்புகலூர்தனுள் 
    வெந்தசாம்பற்பொடிப்பூசவல்லவிடையூர்தியை 
    அந்தமில்லா அனலாடலானையணிஞானசம் 
    பந்தன்சொன்னதமிழ்பாடியாடக்கெடும்பாவமே.        11

    புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள் 
    வெந்த சாம்பற் பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை 
    அந்தம் இல்லா அனல் ஆடலானை அணிஞானசம்         
    பந்தன் சொன்ன தமிழ் பாடிஆடக் கெடும் பாவமே.

    punti Arnta periyOrkaL Ettum pukalUrtanuL, 
    venta cAmpalpoTip pUca valla viTai Urtiyai,
    antam illA anal ATalAnai, aNi njAnacam 
    pantan conna tamiz pATi ATa, keTum, pAvamE.

பொருள்:     அறிவு நிறைந்த பெரியோர்கள் ஏத்தும் திருப்புகலூர்தனுள் 
திருநீற்றினைப் பூசும், எருதேறியை, அழிவிலாத அனலாடுவானைத் திருஞானசம்பந்தன் 
சொன்ன இத்தமிழ்த்  திருப்பதிகத்தைப் பாடப் பாவம் கெடும்.

குறிப்புரை: -     புந்தி- அறிவு. அந்தம்- முடிவு, முடிவின்மை இறைவனுக்குரியது (தி.2 ப. 117 பா. 11). 
தமிழ் -இத்திருப்பதிகம் பாடி ஆடினால் பாவம் கெடும்.

    In the city of Thiru-p-pugaloor, very great men of knowledge praise and 
worship our Lord Civan manifested in the temple. He smears His body with well 
burnt holy ashes. He sustains the bull for His conveyance. Our Lord who has no 
end in His life dances over the supernal fire. Our saint Thiru-gnana-Sambandar 
chanted these Tamil songs on our Lord. Those servitors sing these verses in proper 
musical tone and dance before our Lord and praise Him saying 'glory to thee'. 
Therefore, their bad karma will disappear.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            115ஆம் பதிகம் முற்றிற்று
             End of 115th Hymn

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 252             பதிக எண்: 116

116. திருநாகைக்காரோணம்         116. THIRU-NAAGAI-K-KAARONAM

பண்: செவ்வழி                Pann: Chevvazhi

திருத்தல வரலாறு:

    நாகராசனாகிய ஆதிசேடனால் பூசிக்கப்பெற்றமையின் நாகை என்னும் பெயர் பெற்றது. 
புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் 
என்னும் பெயர் எய்திற்று. அதுவே காரோணம் என்று மருவிற்று. இது நாகப்பட்டினம் தொடர்வண்டி 
நிலையத்திற்கு வடமேற்கே சுமார் 2 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 
எண்பத்திரண்டாவது தலம். சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை 
முதலிய பல நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

    இறைவரின் திருப்பெயர் காயாரோகணேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் நீலாயதாட்சி. 
தீர்த்தம் தேவதீர்த்தம், புண்டரீக தீர்த்தம், இவை முறையே கோயிலுக்குத் தெற்கிலும் வடக்கிலும் 
இருக்கின்றன. அதிபத்த நாயனார் திருஅவதாரம் செய்த திருப்பதியாகும். சுந்தர மூர்த்தி நாயனார் 
காற்றனைய வேகத்தையுடைய குதிரை, ஒளியுள்ள முத்துமாலை, சிறந்த பட்டு முதலானவைகளை 
வேண்டிப் பெற்றார். விடங்கர் தலங்கள் ஏழனுள் ஒன்று.

    திருக்கோயிலில் முதலில் இருக்கும் விநாயகருக்கு நாகாபரண விநாயகர் என்று பெயர். 
உள்ளேயிருக்கும் பிள்ளையாருக்கு மாவடிப் பிள்ளையார் எனப் பெயர். இத்தலத்து அம்மன் மிகச் 
சிறப்புடையவர். இத்தலத்தைப்பற்றி 'காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, 
நாகை நீலாயதாட்சி' என்னும் பழமொழி வழங்குகின்றது.

    இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் 
நான்கு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் 
பதிகத்தின் இறுதிப்பாட்டை வெள்ளிப்பாடல் என்பர். வெள்ளிப்பாடல் என்பது பின்னால் யாரோ 
ஒருவரால் எழுதிச்சேர்க்கப் பெற்றதாகும்.

    அவர்கள் அங்ஙனங் கூறுதற்குக் காரணம் ஐந்தாம் திருப்பாடலில், 'சுந்தரனே கந்த 
முதலாடை யாபரணம் பண்டாரத்தே யெனக்குப் பணித்தருள வேண்டும்' என்றிருப்பதாலும், 
11ஆம் திருப்பாட்டில் 'ஒளிமுத்தம் பூணாரமொண்பட்டும் பூவுங் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும்
 வேண்டும்' என்றிருப்பதாலும், முதலில் கூறியவற்றுள் சில இரண்டாவது கூறியவற்றுள் 
காணப்படுதலால் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படுத்தி, இதை வெள்ளிப்பாட்டு என்பர்.

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தலபுராணம் எழுதியுள்ளார்கள். 
அது புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்தது. 'கற்றோர் பயில் கடல் 
நாகைக்காரோணம்' என்று ஞானசம்பந்தர் கூறியிருத்தலாலும், பாக்கு விளையாடிக் கொண்டிருந்த
 பாலகர்களை நோக்கிப் பசியினால் காளமேகப்புலவர் 'சோறு எங்கு விக்கும்' என்று கேட்டதற்கு 
அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் = என்பதைப் பேச்சு 
வழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர் கோபித்து அவர்கள் மீது வசைபாடும் 
பொருட்டு, 'பாக்கு தறித்து விளையாடும் பாலகர்க்கு' என்பது வரை சுவரில் எழுதிவிட்டு, பசி 
தீர்ந்தபிறகு எஞ்சிய பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு 
அவ்விடம் வந்தபொழுது, அவர் எழுதியதற்குமேல் 'நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை’ என்று 
அவ்விளஞ்சிறார் எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச் சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது. 
இவைகளால் இவ்வூர் மக்களின் கல்வித்திறம் புலப்படும். இவ்வூரில் இருந்த காத்தான் சத்திரத்தைப் 
பற்றிய காளமேகப் புலவர் பாடலொன்றும் உண்டு.

    இந்த ஊர் ஒரு துறைமுகம். வாணிகத்தலம். கீழைத் தஞ்சையின் தலைநகரம். இவ்வூரில் 
மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் செளந்தரராஜப் பெருமாள் என்ற பெயரால் 
விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கின்றது. மற்றும் காவல் 
தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில், அமர்ந்தீசர் கோயில், மலைச்சுரம் கோயில் 
(கயிலாயநாதர்) (இது ஒரு கட்டுமலை), குமாரர் கோயில், நடுவண் நாதர் கோயில், அழகிய நாதர் 
கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன. 

     திருக்கோயில் 586-250 அடிகள் கொண்டது. இராயகோபுரம் முற்றுப்பெறவில்லை. 
உட்கோபுரம் 3 அடுக்குக் கொண்ட சோழன் கோபுரம். மடைப்பள்ளிக்கெதிரில் அதிபத்தர் 
திருவுருவம் உள்ளது. மாமரம் தலமரம். அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். 
இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர் சுவாமி பெயர்
 காரோணம் என்பது காயாரோகணர் என்பதன் மரூஉ.

    புண்டரீக ரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயாரோகணர் என்று வந்ததாகப் 
புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர் கருந்தடங்கண்ணி எனத் தமிழில் வழங்கும். 
இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில் ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. 
இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான் ரதம் என வழங்கும். 

பதிக வரலாறு

    அவயந்தியைப் பணிந்த பாலறாவாயர், திருத்தொண்டர் குழாத்தொடும், கற்றவர் வாழ் 
கடல்நாகைக் காரோணத்துக் கண்ணுதலைக் கைதொழுது பாடிய சொற்றமிழ் மாலைகளுள்     
ஒன்று இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2725.     கூனற்றிங்கட்குறுங்கண்ணிகான்றந்நெடுவெண்ணிலா 
    ஏனற்பூத்தம்மராங்கோதையோடும்விராவுஞ்சடை 
    வானநாடன் அமரர்பெருமாற்கிடமாவது 
    கானல்வேலிகழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        1

    கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்றந் நெடுவெண்ணிலா 
    ஏனல் பூத்தம் மராங் கோதையோடும் விராவும் சடை 
    வான நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது 
    கானல் வேலி கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.

    kUnal-tigkaL kuRugkaNNi kAnRa(n) neTu veN nilA, 
    Enal pUtta(m) marAm kOtaiyOTum virAvum caTai,         
    vAna nATan, amarar perumARku iTam Avatu- 
    kAnal vEli kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     வளைந்த பிறையாகிய தலைமாலையின் வெண்மையான ஒளியுடன், 
வேனிற் காலத்தில் பூத்த கடம்ப மலர்களையும் கலந்த சடையுடையவன்; வானநாடன்; 
அமரர் பெருமான்; அவனுக்கு இடமாவது, நெய்தலங் கானலாகிய வேலி சூழ்ந்த கடல் 
நாகைக் காரோணமே.

குறிப்புரை:     கூனல் திங்கட் குறுங்கண்ணி - வளைத்த பிறையாகிய சிறிய தலைமாலை. 
ஏனல் - தினை. மராங்கோதை - கடம்பலர் மாலை.  வான நாடன்; அமரர் பெருமான்' 
(தி.3 ப. 118 பா. 4; தி. 7 ப.25 பா.2; தி. 81 ப. 1 பா. 5; தி. 39 ப.3).

    Our Lord Civan adorns His head with the curved small garland similar to the 
young moon. The brightness of the young moon spreads its light all over Civa's head. 
In the mountain area millet gardens grow in plenty. In that garden the seaside Indian 
oak tree also grows. These flowers are made into garland and our Lord ties it round
His entangled locks of hair. He is the head of devas as well as the chief of saints. 
He is willingly manifest in the temple in Thiru-naagai-k-kaaronam city. In this city,
the gardens are many forming the fence of the city. There are many saltpans.

2726.     விலங்கலொன்றுசிலையாமதில்மூன்றுடன்வீட்டினான் 
    இலங்குகண்டத்தெழிலாமைபூண்டாற்கிடமாவது 
    மலங்கியோங்கிவருவெண்டிரைமல்கியமால்கடல் 
    கலங்கலோதங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        2

    விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்றுடன் வீட்டினான் 
    இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடமாவது 
    மலங்கி ஓங்கிவரு வெண்திரை மல்கிய மால்கடல் 
    கலங்கல் ஓதம் கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.

    vilagkal onRu cilaiyA matil mUnRu uTan vITTinAn, 
    ilagku kaNTattu ezil Amai pUNTARku iTam Avatu-
    malagki Ogki(v) varu veNtirai malkiya mAlkaTal
    kalagkal Otam kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     மலையொன்றை வில்லாகக் கொண்டு மதில்கள் மூன்றனையும் ஒருசேர 
அழித்தான், விளங்கும் கண்டத்தில் ஆமையைப் பூண்டான்; அவனுக்கு இடமாவது, உயர்ந்து 
அலைந்து வருகின்ற வெள் அலைகள் மல்கிய கருங்கடலின் கலங்கிய ஓதமுடைய கழிகள் 
சூழ்ந்த கடல்நாகைக் காரோணமே. 

குறிப்புரை:     விலங்கல் - மேருமலை. ஆமை கழுத்திற் பூண்டான். மலங்கி - அலைந்து,

    Our Lord Civa made a big bow using the Meru mountain and destroyed the three 
forts of the asuras. He wears on His pretty neck the tortoise shell. He manifests 
Himself in the sea city of Thiru-naagai-k-kaaronam. In the seashore near the city 
the white surging waves bring mixed water and run into the saltpans. These pans 
are many near the city, and are all full of muddy water and sand.

2727.    வெறிகொளாருங்கடற்கைதைநெய்தல்விரிபூம்பொழில் 
    முறிகொள்ஞாழல்முடப்புன்னைமுல்லைம்முகைவெண்மலர் 
    நறை  கொள் கொன்றைந் நயந்தோங்கு நாதற்கிடமாவது 
    கறைகொளோதங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.            3

    வெறி  கொள் ஆரும் கடற் கைதை நெய்தல் விரி பூம்பொழில் 
    முறி கொள் ஞாழல் முடப்புன்னை முல்லைம்  முகை வெண்மலர் 
    நறை  கொள் கொன்றைந் நயந்தோங்கு நாதற்கு இடமாவது 
    கறை கொள் ஓதம் கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.

    veRi koL Arum  kaTal kaitai neytal viri pUmpozil
    muRi koL njAzal, muTappunnai, mullai(m)mukai, veNmalar 
    naRai koL konRai(n), nayantu Ogku nAtaRku iTam Avatu- 
    kaRai koL Otam kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     தேனுடைய கொன்றை மலர்மாலையை விரும்பும் உயர்ந்த தலைவருக்கு 
இடமாவது, நாற்றம் மிகவும் உடைய கடல்தாழை, நெய்தல், தளிர் மிக்க ஞாழல் மரங்கள், 
வளைந்த புன்னை, முல்லை வெண்மலரின்  முகைகள் பரந்த பூம்பொழில்களும்  கரிய ஓதக் 
கழிகளும் சூழ்ந்த கடல்நாகைக் காரோணமே.

குறிப்புரை:     வெறி- மணம். கைதை- தாழை. முறி-தளிர் , ஞாழல்- மரம் ,கோங்கு. 
நறை - தேன். கறை-கறுப்பு.

    Our Lord Civa adorns His head with the orange cup flowers along with its 
tender leaves. The flowers of the curved mast wood tree, the white Arabian jasmine 
flower buds, the Indian laburnum flowers full of honey - the Lord desires to wear 
all these flowers and to manifest Himself in the city of seas, Thiru-naagai-k-kaaronam.
This city is surrounded by groves of sweet smelling screw pine tree full of flowers; 
and white Indian water lily - all in the natural forests which are around the city 
full of dark pans.

2728.     வண்டுபாடவ்வளர்கொன்றைமாலைம்மதியோடுடன் 
    கொண்டகோலங்குளிர்கங்கைதங்குங்குருள்குஞ்சியுள் 
    உண்டுபேரலும்மெனவைத்துகந்தவ்வொருவற்கிடம்
    கண்டல்வேலிகழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        4

    வண்டு பாட வளர் கொன்றை மாலைம் மதியோடு உடன் 
    கொண்ட கோலம் குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியுள் 
    உண்டு பேரலும் என வைத்து உகந்த ஒருவற்கிடம் 
    கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

    vaNTu pATa(v) vaLar konRai, mAlai(m) matiyOTu uTan- 
    koNTa kOlam, kuLirkagkai tagkum kuruL kunjciyuL
    uNTupOlum ena vaittu ukanta (v) oruvaRku iTam- 
    kaNTal vEli kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     வண்டு பாட வளரும் கொன்றை மலர்மாலையை மதியுடன் குளிர் கங்கை தங்கும் 
கொண்ட கோலம், 'குருள் குஞ்சி உள் உண்டு போலும்' என வைத்து உகந்தவர்க்கிடம் ஆவது, கண்டல் 
வேலியும் கழியும் சூழ்ந்த கடல்நாகைக்காரோணமே.

குறிப்புரை:     மாலைமதி- 'மாசில் வீணையும் மாலைமதியமும்'. கோலம்- அழகு. சிவவேடம்
குருள்குஞ்சி - குருண்டசடை, குருண்டவார் குழற்சடையுடைக்குழகன் (தி. 2 ப. 105 பா. 11). 

    Our Lord Civa adorns His head with blossomed Indian laburnum flower garlands 
tied along with the young moon. He also supports the cool river Ganges inside His 
curved and entangled hair locks and prevents its visibility. He feels happy over 
such arrangements. This city is surrounded by screw pine plants as fencing for 
the city. There exist many saltpans near the seashore. This city where our Lord 
manifests Himself is called Thiru-naagai-k-kaaronam.

2729.    வார்கொள்கோலம்முலைமங்கைநல்லார்மகிழ்ந்தேத்தவே 
    நீர்கொள்கோலச்சடைநெடுவெண்டிங்கள்நிகழ்வெய்தவே 
    போர்கொள்சூலப்படைபுல்குகையார்க்கிடமாவது 
    கார்கொளோதங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        5

    வார் கொள் கோலம் முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே 
    நீர் கொள் கோலச்சடை நெடுவெண் திங்கள் நிகழ்வெய்தவே 
    போர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடமாவது 
    கார் கொள் ஓதம்கழிசூழ் கடல் நாகைக்காரோணமே.

    vAr koL kOlam mulai magkai nallAr makizntu EttavE
    nIr koL kOlac caTai neTu veN tigkaL nikazvu eytavE, 
    pOr koL cUlappaTai pulku kaiyArkku iTam Avatu- 
    kAr koL Otam kazi cUz kaTal nAkaik kArONamE.

பொருள்:     முலைக்கச்சு விளங்கும் பொலிவுடைய அழகிய மங்கையர் மகிழ்ந்து 
வழிபடவும் கங்கை நீர் தங்கும் பொலிவுடைய சடையில் அழியாத வெண்பிறை விளங்கவும் 
போரில் விளங்கும் சூலப்படை பொருந்திய கையராகிய சிவபிரானுக்கு இடமாவது; 
கார்மேகம் போலும் கரிய நிறமுடைய கழிகள் சூழும் கடல்நாகைக் காரோணமே.

குறிப்புரை:     வார் - கச்சு. நிகழ்வு - விளக்கம். கார் - மேகம். ஏத்தவும் எய்தவும் 
புல்கு கையார்க்கு இடம் காரோணம் என்க. 'பரமாயவர்' என்றும் பாடம்.

    In this city, good people were happy to praise our Lord Civan. Civan 
manifests Himself in the temple in sea Thiru-naagai-k-kaaronam along with His 
consort Uma Devi. He happily and gracefully accommodates her who wears a corset 
over her soft breasts. In His cool entangled locks of hair, the moon spreads 
its long rays. He holds the battle-axe in one of His hands. Such a Lord desires 
to manifest Himself in the sea Thiru-naagai-k-kaaronam. In this city, big waves 
flush water into the black saltpans.

2730.     விடையதேறிவ்விடவரவசைத்தவ்விகிர்தரவர் 
    படைகொள்பூதம்பலபாடஆடும்பரமாயவர் 
    உடைகொள்வேங்கையுரிதோலுடையார்க்கிடமாவது 
    கடைகொள்செல்வங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே        6

    விடையது ஏறி இவ்விட அரவு அசைத்தவ் விகிர்தர் அவர் 
    படை கொள் பூதம் பலபாட ஆடும் பரமாயவர் 
    உடை கொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது 
    கடை கொள் செல்வங்கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

    viTai atu ERi(v) viTa aravu acaitta vikirtar avar, 
    paTai koL pUtampala ATum param Ayavar, 
    uTai koL vEgkai uri-tOl uTaiyArkku iTam Avatu- 
    kaTai koL celvam kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     விடையை ஏறுபவர்; நஞ்சுடைய பாம்பினை அரைக்குக் கச்சாக அசைத்த 
விகிர்தர். படையாகிய பூதங்கள் பலபாடக் கூத்தாடும் பரமர்; உடையாக வேங்கையினின்றும் 
உரித்த தோலை உடையவர்; அவருக்கு இடமாவது, மிக்க செல்வமுடையதும் 
கழிசூழ்ந்ததுமாகிய திருநாகைக்காரோணமே.

குறிப்புரை:     விடை ஏறி நச்சுப்பாம்பை அரைக்கச்சாகக் கட்டிய விகிர்தர். பூதங்கள் 
பாட ஆடும் பரமர்.

    Our Lord Civan rides on His bull to meet His devotees. He is Supreme, 
different from the world and He ties round His waist the poisonous snake. 
He is the Lord who dances according to the music of His bhuta army. He wears 
the tiger's hide as His dress. Lord Civa is manifested in the city of sea 
Thiru-naagai-k-kaaronam. In this city. the saltpans are many where the fishes 
flourish in large quantity which are real wealth for the city.

2731.     பொய்துவாழ்வார்மனம்பாழ்படுக்கும்மலர்ப்பூசனை 
    செய்துவாழ்வார்சிவன்சேவடிக்கேசெலுஞ்சிந்தையார் 
    எய்தவாழ்வாரெழில்நக்கரெம்மாற்கிடமாவது 
    கைதல்வேலிகழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        7

    பொய்து வாழ்வார் மனம் பாழ்படுக்கும் மலர்ப்பூசனை 
    செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் 
    எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடமாவது
    கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக் காரோணமே 

    poytu vAzvu Ar manam pAz paTukkum malarp pUcanai        
    ceytu vAzvAr civan cEvaTikkE celum cintaiyAr
    eyta vAzvAr ezil nakkar emmARku iTam Avatu
    kaital vEli kazi cUz kaTal nAkaik kArONamE.

பொருள்:     பொய்த்து வாழ்பவர் மனத்தைப் பாழ்படுத்துபவர்; மலரால் பூசனை 
செய்து வாழ்பவர்; சிவனுடைய திருவடிக்கே செலுத்தும் சிந்தையை உடையவர் ஆகியோர் 
தன்னை அடையும் பொருட்டு எழுந்தருளிய அழகுடைய நக்கர்; அந்த எம்மானுக்கு இடமாவது 
தாழைகளாகிய வேலி சூழ்ந்த கடல் நாகைக்காரோணமே.

குறிப்புரை:     பொய்து வாழ்வு- பொள்ளலுடையதாகிய வாழ்வு. ஆர்-பொருந்திய. வாழ்வாரும்
சிந்தையாரும் எய்த வாழ்வாராகிய நக்கர். பொய்து வாழ்வார் மனத்தைப் பாழ்படுக்கும் பூசனை 
என்றலும் பொருந்தும். பூசனை செய்து வாழ்வாரும் சிவன் சேவடிக்கே செலுஞ்சிந்தையாரும் எய்த 
வாழ்பவர் நக்கர். கைதல் (-தாழை) என்பது அருஞ்சொல். கைதல் சூழ்கழிக்கானல் (தி. 3 ப.66 பா.2). 

    In the city of sea Thiru-naagai-k-kaaronam, the Lord resides making Himself 
approachable even to people, who with false ideas in their mind spoil their life 
pursuing wrong ways. There are some other people who are devotees of Civa. They 
think always of Civa's holy feet. They carry flowers to the temple, spread these 
flowers and do the rituals. They lead a good life. Our, good Lord the pivot of 
all such lives has manifested Himself in the city of sea Thiru-naagai-k-kaaronam. 
This city has got screw pine trees in large numbers. They grow like fencing plants. 
Also there are many saltpans all round the city. This city is known as sea 
Thiru-naagai-k-kaaronam.

2732.     பத்திரட்டிதிரள்தோளுடையான் முடிபத்திற 
    அத்திரட்டிவிரலாலடர்த்தார்க்கிடமாவது 
    மைத்திரட்டிவ்வருவெண்டிரைமல்கியமாகடல் 
    கைத்திரட்டுங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        8

    பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடிபத்திற 
    அத்திரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது 
    மைத்திரட்டி இவ்வரு வெண்திரை மல்கிய மாகடல் 
    கைத்திரட்டும் கழி சூழ்கடல் நாகைக்காரோணமே.

    pattu iraTTi tiraL tOL uTaiyAn muTipattu iRa, 
    attu iraTTi, viralAl aTarttArkku iTam Avatu- 
    mait tiraTTi(v) varu veNtirai malkiya mAkaTal         
    kaittu iraTTum kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     இருபது தோள்கள் உடையான் ஆகிய இராவணனின் முடிகள் பத்தும் இற்றுப் 
போகுமாறு தன் சிவந்த விரலால் அடர்த்த சிவனுக்கு இடமாவது, கருமை நிறத்த நீரில் திரண்டு 
வரும் வெண்மையான அலைகள் நிறைந்த பெரிய கடல் பேரொலி செய்யும் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே.

குறிப்புரை:     பத்து இரட்டி தோள்- இருபது தோள்கள். அத்து- சிவப்பு. மை திரட்டி வரு 
வெள்திரை எனப் பிரிக்க. கத்து -ஒளி.

    Our Lord Civa with His red toe pressed the top of mount Kailash and Raavanan, 
bearing twenty shoulders and ten heads, got crumbled. This Lord is manifest in the temple 
situated in the city of sea Thiru-naagai-k-kaaronam. In this city the sea on the eastern 
side of the city brings big white sea waves with black sand and thrusts them into the
saltpans which are near the seashore. The saltpans are very bright and raise 
heavy noise.

2733.     நல்லபோதிலுறைவானுமாலுந்நடுக்கத்தினால் 
    அல்லராவரெனநின்றபெம்மாற்கிடமாவது 
    மல்லலோங்கிவ்வருவெண்டிரைமல்கியமாகடல் 
    கல்லலோதங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.    9

    நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால் 
    அல்லர் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடமாவது 
    மல்லல் ஓங்கி இவ்வரு வெண்டிரை மல்கிய மாகடல் 
    கல்லல் ஓதம்கழி சூழ்கடல் நாகைக்காரோணமே.

    nalla pOtil(l) uRaivAnum, mAlum, naTukkattinAl, 
    "allar, Avar" ena ninRa pemmARku iTam Avatu- 
    mallal Ogki(v) varu veNtirai malkiya mAkaTal         
    kallal Otam kazi cUz kaTal nAkaik kArONamE.

பொருள்:     தாமரை மலரில் வாழும் பிரமனும், திருமாலும் அறிவு மயங்கி ஐயுற 
நின்ற பெருமானுக்கு இடமாவது, வளமான வெள் அலைகள் மல்கிய கடல் ஓதம் நிறைந்த 
கழிசூழ் கடல்நாகைக்காரோணமே.

குறிப்புரை:     இவர் சிவபெருமான் அல்லார் எனவும் இவரே சிவபரஞ்சுடர் ஆவார் 
எனவும் ஐயுற நின்ற பெருமான். மல்லல் - வளம். கல்லல் - (சகரர்) தோண்டுதல்.

    The tutelary god Brahma resting over the beautiful lotus flower and the 
other demigod Thirumaal - these two trembled due to fear in their mind. They 
both had doubts whether our Lord Civa was the Supreme eternal fire or not. 
Lord Civa is manifested in the temple in the city of sea Thiru-naagai-k-kaaronam. 
This city has the ocean on its eastern side. Here the silvery big waves create 
heavy noise. This creates inundation, the saltpans are near the seashore.

2734.     உயர்ந்தபோதின்னுருவத்துடைவிட்டுழல்வார்களும் 
    பெயர்ந்தமண்டையிடுபிண்டமரவுண்டுழல்வார்களும் 
    நயந்துகாணாவகைநின்றநாதர்க்கிடமாவது 
    கயங்கொளோதங்கழிசூழ்கடல்நாகைக்காரோணமே.        10

    உயர்ந்த போதின் உருவத்துடை விட்டு உழல்வார்களும் 
    பெயர்ந்த மண்டையிடு பிண்டம் அரவுண்டு உழல்வார்களும் 
    நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடமாவது 
    கயங்கொள் ஓதம்கழி சூழ்கடல் நாகைக்காரோணமே.

    uyarnta pOtin(n) uruvattu uTai viTTu uzalvArkaLum, 
    peyarnta maNTai iTu piNTam AravuNTu uzalvArkaLum,        
    nayantu kANA vakai ninRa nAtarkku iTam Avatu- 
    kayam koL Otam kazi cUz kaTal nAkaikkArONamE.

பொருள்:     உடலில் ஆடையின்றி அலைகின்ற சமணரும், மண்டையில் பெய்த உணவைப் 
பிண்டமாக்கி உண்டு உழல்கின்ற தேரரும் விரும்பிக் காணாத வகை நின்ற தலைவருக்கு 
இடமாவது ஆழமான ஓதக் கழிசூழ் கடல்நாகைக்காரோணமே.

குறிப்புரை:     சமணரும் தேரரும் இங்குக் குறிக்கப்பட்டவாறு காண்க. கயம் - ஆழம். நீர்,பெருமை.
பியர்ந்த  பி. பே. 

    The Jains and Buddhists roam in the city. Some wear red coloured cloth similar 
to the cloth of red lotus flower. Some other roam without any dress on their body. 
They eat the food given by the public in the human skull they carry. These two, 
the Buddhists and the Jains have no desire to see our Lord Civa. This Lord Civa 
is manifest in the temple in sea Thiru-naagai-k-kaaronam city surrounded by deep 
salt pans full of sea water.

2735.     மல்குதண்பூம்புனல்வாய்ந்தொழுகும்வயற்காழியான்             
    நல்லகேள்வித்தமிழ்ஞானசம்பந்தன்நல்லார்கள்முன் 
    வல்லவாறேபுனைந்தேத்துங்காரோணத்துவண்டமிழ் 
    சொல்லுவார்க்கும்மிவைகேட்பவர்க்குந்துயரில்லையே.        11

    மல்குதண் பூம்புனல் வாய்ந்து ஒழுகும் வயற்காழியான்         
    நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் 
    வல்லவாறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண்டமிழ்
    சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.

    malku taN pUm punal vAyntu ozukum vayal kAziyAn- 
    nalla kELvit tamiz njAnacampantan--nallArkaL mun 
    valla ARE punaintu Ettum kArONattu vaN tamiz 
    colluvArkkum ivai kETpavarkkum tuyar illaiyE.

பொருள்:     குளிர்ந்த நீர் நிறைந்து கால்வழியே பாய்ந்தொழுகும் வயல்கள் மிக்க 
காழியான், கேள்வி ஞானமுள்ள தமிழ் ஞானசம்பந்தன், நல்ல அடியவர்களின் முன்தான் 
வல்லவாறு  புனைந்து ஏத்திப் பாடிய திருநாகைக்காரோணத்து வளமான இத்திருப்பதிகத்தைச்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவருக்கும்  துயரில்லையே. 

குறிப்புரை:     திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருநாகைக்காரோணத்தில், நல்லோர்கள் 
முன்னர் இத்திருப்பதிகத்தைப் பாடியருளிய உண்மை குறிக்கப்பட்டது. 

    Our saint Thiru-gnana-Sambandar was born in the city of Seerkaazhi. This city 
is surrounded by fields full of water. He has good command over Tamil language and great 
wisdom. He chanted before scholars in proper musical tone these ten songs on Lord Civa, 
manifested in sea Thiru-naagai-k-kaaronam. Those who can memorise these ten verses and 
repeat them in musical mode and those who can hear those songs - both these groups 
will have no sufferings in their lives.


            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAM-BALAM

            116ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 116th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத்தொடர் எண் : 253                பதிக எண் :117

117. திருஇரும்பைமாகாளம்            117. THIRU-IRUMBAI-MAAGAALAM

பண் : செவ்வழி                    Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    மாகாளர் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் இது மாகாளம் எனப் பெயர் பெற்றது. 
இரும்பைப் பதியிலுள்ள மாகாளம் என்னும் கோயில் இத்தொடரின் பொருளாகும். இது 
புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
பாண்டிச்சேரி- திண்டிவனம் (வழி கிளியனூர் ) செல்லும்  பேருந்துகளில் -திருச்சிற்றம்பலம் -
கூட்ரோட்டை அடுத்துள்ள இரும்பை கைகாட்டி அருகே இறங்கி இவ்வூரை அடையலாம். 
இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

    இறைவரின் திருப்பெயர் மாகாளேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் குயில்மொழிநாயகி. 
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது. கோயில் முன் பெரிய இலுப்பைத்  தோப்பு 
இருக்கிறது. கோயில் ஒழுங்காகக் கட்டப்படவில்லை. மூலத்தானத்திற்குப் பின்னது முருகன் கோயில். 
மூலத்தானம் கற்பணி. மற்றவை செங்கல் வேலை. ஊர் சிறியது.

பதிக வரலாறு

    பிள்ளையார் திருவக்கரையை அணைந்து, முகங்களொடு திகழும் மூர்த்தியை வணங்கிச் 
சென்று, திருவிரும்பையுள்ளே மாகாளத்தைப் போற்றி அச்செக்கர் மேனியாரைப் பாடியருளியது
 இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2736.     மண்டுகங்கைசடையிற்கரந்தும்மதிசூடிமான் 
    கொண்டகையாற்புரமூன்றெரித்தகுழகன்னிடம் 
    எண்டிசையும்புகழ்போய்விளங்கும்மிரும்பைதனுள் 
    வண்டுகீதம்முரல்பொழில்சுலாய்நின்றமாகாளமே.        1

    மண்டு கங்கை சடையிற் கரந்தும் மதிசூடி மான் 
    கொண்ட கையால் புரமூன்று எரித்த குழகன் இடம் 
    எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள் 
    வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

    maNTu kagkai caTaiyil karantum, mati cUTi, mAn
    koNTa kaiyAn, puram mUnRu eritta kuzakan(n), iTam- 
    eNticaiyum pukaz pOy viLagkum irumpaitanuL, 
    vaNTu kItam mural pozil culAy ninRa mAkALamE.

பொருள்:     பெருகும் கங்கை நதியைச் சடையில் மறைத்தவன்; பிறையைச் சூடி, மான் ஏந்திய 
கையான்; திரிபுரம் மூன்றையும் எரித்த அழகன்; அவனுடைய இடம், எட்டுத்திசையும் பரவி விளங்கும் 
இரும்பை அதனுள் வண்டுகள் கீதம் முரல்கின்ற பொழில்கள் சூழ்ந்த மாகாளமே.

குறிப்புரை:     கங்கைச்சடையன், பிறைசூடி, மானேந்தி, முப்புரமெரித்த முதல்வன். திசையெலாம் 
பரவிய  புகழுடைய தலம். 'மான்' உமாதேவியுமாம். ' விற்றாங்கி யகரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே' 
(அப்பர்) 'இசையால் திசைபோயது'. கலாய் - சுற்றி. ஊர் இரும்பை. கோயில் மாகாளம்.

    Our Lord Civa supports the river Ganges inside His entangled hair locks 
without any visibility. He retains the moon in His hair locks. In one of His hands 
He holds a young deer. With the same hand He shot an arrow and destroyed completely 
the three forts of the asuras. This Lord is manifest in the temple in the city 
Thiru-irumbai- maagaalam. This city is praised on all the eight directions. There
are natural forests in the city where the bees make humming sound which represents 
their songs.

2737.     வேதவித்தாய்வெள்ளைநீறுபூசிவினையாயின 
    கோதுவித்தாநீறெழக்கொடிமாமதிலாயின 
    ஏதவித்தாயினதீர்க்குமிடம்மிரும்பைதனுள் 
    மாதவத்தோர்மறையோர்தொழநின்றமாகாளமே.        2

    வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினையாயின 
    கோது வித்தா நீறு எழக் கொடி மாமதிலாயின 
    ஏத வித்தாயின தீர்க்கும் இடம் இரும்பைதனுள் 
    மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே.

    vEtavittAy, veLLai nIRu pUci, vinai Ayina 
    kOtu vittA, nIRu ezak koTi mA matil Ayina, 
    Eta vittu Ayina tIrkkum(m) iTam(m)--irumpaitanuL, 
    mA tavattOr maRaiyOr toza ninRa mAkALamE.

பொருள்:     வேதவித்து; வெண்ணீறு பூசி; வினையாயினவாகிய கோதுகளை அவித்தான்; 
சாம்பலாகக் கொடி பறக்கும் மும்மதில்களை எரித்தவன்; ஏதங்களுக்கு வித்தாயினவற்றைத்
தீர்ப்பவன்; அவனுடைய இடம் இரும்பை தன்னுள் மாதவத்தோரும் மறையோரும் 
தொழ நின்ற மாகாளமே.

குறிப்புரை:     மாதவத்தோரும் மறையோரும் தொழ நின்ற சிறப்புடையது மாகாளம். 
சிவபிரான் வேதவித்து. வெண்ணீறாடி, வினையெலாம் நீறுபட அழித்தவன். கோதுவித்தா 
என்றது பிழை. கோத வித்தாய் என்றிருத்தல் வேண்டும்.ஏதவித்து - குற்றத்திற்கு விதை. 

    Our Lord Civa is the seed i.e., He is the Author of all the four Vedas. 
He smears His body with white holy ashes. He will destroy all the bad karma of His 
devotees. The asuras inflicted intolerable misery on the devas. Our Lord shot an 
arrow and destroyed the three harmful forts of asuras with fire. Grave faults which 
are the seeds for bad actions, He completely wiped out and graced the devas. He 
evidently is manifest in the temple situated in the city of Irumbai. In this city, 
the great people who do religious penance and the other scholars well-versed in 
Vedas live. They both used to visit the temple of Lord Civa and worship Him daily.

2738.     வெந்தநீறும்மெலும்பும்மணிந்தவிடையூர்தியான் 
    எந்தைபெம்மானிடமெழில்கொள்சோலையிரும்பைதனுள் 
    கந்தமாயபலவின்கனிகள்கமழும்பொழில் 
    மந்தியேறிக்கொணர்ந்துண்டுகள்கின்றமாகாளமே.         3

    வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் 
    எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பைதனுள் 
    கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் 
    மந்தி ஏறிக் கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே.        

    venta nIRum elumpum aNinta viTai UrtiyAn, 
    entai pemmAn iTam--ezil koL cOlai irumpaitanuL, 
    kantam Aya palavin kanikaL kamazum pozil 
    manti ERik koNarntu uNTu ukaLkinRa mAkALamE.

பொருள்:     சுட்ட சாம்பலும் எலும்பும் அணிந்தவன்; விடை ஊர்தியான்; என்னுடைய தந்தை; 
என்னுடைய பெருமான் ஆகிய சிவனின் இடமாவது, அழகிய சோலைகள் நிறைந்த இரும்பைத் 
தன்னுள் மணங்கமழும் பொழில்களில் மந்தி மரமேறி பலாப்பழத்தைக் கொண்டு வந்து உண்டு
 துள்ளித் திரிகின்ற மாகாளமே.

குறிப்புரை:     பலவின்கனிகள் - பலாப்பழங்கள். பல இனிய கனிகள் எனலும் பொருந்தும். 
மந்திகள் கொண்டு வந்து, உண்டு திரியும் மாகாளம்.

    Our Lord Civa smears His body with holy ashes. He also adorns His body wearing 
garlands of bones. He loves to sustain the white strong bull for His conveyance to move
around the universe. He is our Holy Father. He is our Chief Supreme Being. This Lord 
is evidently manifest in the temple known as Thiru-maagaalam situated in the city of 
Irumbai. In this city many attractive gardens have developed all around the area. In 
these gardens, jack fruit smell is strongly felt. The monkeys reach these gardens, 
climb the jack fruit trees and pluck the fruits, eat them and roam happily.

2739.     நஞ்சுகண்டத்தடக்கிநடுங்கும்மலையான்மகள் 
    அஞ்சவேழமுரித்தபெருமானமருமிடம்
    எஞ்சலில்லாப்புகழ்போய்விளங்கும்மிரும்பைதனுள் 
    மஞ்சிலோங்கும்பொழில்சூழ்ந்தழகாயமாகாளமே.        4

    நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான் மகள் 
    அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் 
    எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள் 
    மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்த அழகாய மாகாளமே.                

    nanjcu kaNTattu aTakki(n), naTugkum malaiyAn makaL 
    anjca, vEzam uritta perumAn amarum(m) iTam- 
    enjcal illAp pukaz pOy viLagkum(m) irumpaitanuL,
    manjcil Ogkum pozil cUzntu azaku Aya mAkALamE.

பொருள்:     ஆலகால விடத்தைக் கண்டத்தில் அடக்கி; நடுங்கும் மலைமகள் அஞ்சக் களிற்றின் 
தோலை உரித்த பெருமான் ஆகிய சிவன் உறையும் இடம், குறைவிலாமல் நிறைந்த புகழ் எங்கும் 
விளங்கும் இரும்பை தன்னுள், கார்மேகங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் அழகுடையதுமாகிய 
மாகாளமே.

குறிப்புரை:     மலையான் - இமாசலராசன். வேழம் - யானை. எஞ்சல் - குறைதல். மஞ்சு - மேகம்.

    Our Lord imbibed the poison in His throat. The daughter of Himalayan king and 
the consort of our Lord Civa got frightened to see the ferocious big elephant and
trembled. Immediately our Lord Civa dashed towards the elephant, killed it and 
peeled its hide and covered His body with it. This Lord is diligently manifest in the 
very attractive temple Thiru-maagaalam. This temple is in the city of Irumbai which is 
a very famous city without any blemishes . Here the clouds gather in the natural 
forests which exist all around the city.

2740.    பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான் மகள் 
    கூசஆனையுரித்தபெருமான் குறைவெண்மதி 
    ஈசனெங்கள்ளிறைவனிடம்போலிரும்பைதனுள் 
    மாசிலோர்கள்மலர்கொண்டணிகின்றமாகாளமே.        5

    பூசும் மாசில் பொடியான் விடையான் பொருப்பான் மகள் 
    கூச ஆனை உரித்த பெருமான்  குறை வெண்மதி 
    ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பைதனுள் 
    மாசு இலோர் கள்மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே.

    pUcum mAcu il poTiyAn, viTaiyAn, poruppAn makaL         
    kUca Anai uritta perumAn, kuRaiveNmati 
    Ican, egkaL(L) iRaivan, iTampOl--irumpaitanuL,
    mAcu ilOr kaLmalar koNTu aNikinRa mAkALamE.

பொருள்:     தூய்மையான திருநீற்றினை அணிந்தவன்; விடை ஊர்தியான்; இமய அரசன் 
மகள் பார்வதி நடுங்க ஆனையின் தோலை உரித்த பெருமான்; பிறைமதி அணிந்த ஈசன்; எங்கள் 
இறைவன் ஆகிய சிவனின் இடம், இரும்பை தன்னுள் குற்றமிலாத அடியவர்கள் மலர்கொண்டு 
அலங்காரம் செய்கின்ற மாகாளமே.

குறிப்புரை:     பூசும்பொடி, மாசு இல்பொடி. பொருப்பான் - இமாசலராசன். தேவியார் 
கூசுமாறு  ஆனையை பிரித்தான். மாசு இலோர்கள் - மும்மலமாகிய குற்றம் இல்லாத சைவ 
மறையோர் அடியார் முதலியோர்கள் (தி.2 ப.6 பா. 10 பார்க்க).

    Our Lord Civan smears His body with holy ashes which has no defect. 
He sustains the white bull for His conveyance. Uma Devi, the daughter of the 
Himalayan king, His consort got dazzled to see the death of the ferocious big 
elephant. Our Lord dashed towards the elephant, killed it and peeled off its 
hide. He retains the moon and adorns His head with it. He is our God Civan. 
Our Lord delightedly manifests Himself in the temple in Irumbai city. Civa's 
devotees daily go to the temple with flowers, adore Him with the flowers and 
happily praise Him and worship Him. This temple is known as Thiru-maagaalam.

2741.     குறைவதாயகுளிர்திங்கள்சூடிக்குனித்தான்வினை 
    பறைவதாக்கும்பரமன்பகவன்பரந்தசடை
    இறைவனெங்கள்பெருமானிடம்போலிரும்பைதனுள் 
    மறைகள்வல்லார்வணங்கித்தொழுகின்றமாகாளமே.        6

    குறைவது ஆய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை 
    பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை 
    இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பைதனுள் 
    மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

    kuRaivatu Aya kuLirtigkaL cUTik kunittAn, vinai 
    paRaivatu Akkum paraman, pakavan, paranta caTai 
    iRaivan, egkaL perumAn, iTampOl--irumpaitanuL, 
    maRaikaL vallAr vaNagkit tozukinRa mAkALamE.

பொருள்:     குளிர்ந்ததும் குறையுடையதுமாகிய திங்களைச் சூடிக் கூத்தாடிய பிரான், 
வினைகளை அழிப்பவன்; பரமன்; பகவன்; விரிந்த சடையுடைய எங்கள் பெருமான் ஆகிய 
சிவனின் இடம் இரும்பை தன்னுள் வேதம் வல்ல அந்தணர்கள் வணங்கித் தொழ நின்ற 
மாகாளமே.

குறிப்புரை:     குனித்தான் - கூத்தாடிய பிரான். பறைவது - அழிவது. பரமன் முன்னைப் 
பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருள். பகவன் - சாட்குண்யன்.

    Our Lord Civa retains the waning moon on His hair locks and dances. He wipes 
out the bad karma of His devotees. He is our Supreme Being. He controls the pure rivers 
and water ponds. His entangled hair locks are very wide. He is our Lord. He manifests 
Himself in the temple in Irumbai city where Vedic scholars worship our Lord in the 
Thiru-maagaalam temple.

2742.     பொங்குசெங்கண்ணரவும்மதியும்புரிபுன்சடைத் 
    தங்கவைத்தபெருமானெனநின்றவர்தாழ்விடம் 
    எங்குமிச்சையமர்ந்தானிடம்போலிரும்பைதனுள் 
    மங்குல்தோயும்பொழில்சூழ்ந்தழகாயமாகாளமே.        7

    பொங்கு செங்கண் அரவும் மதியும் புரிபுன் சடைத் 
    தங்க வைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் 
    எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பைதனுள் 
    மங்குல் தோயும் பொழில் சூழ்ந்த அழகாய மாகாளமே.

    pogku cegkaN(N) aravum matiyum puripuncaTait 
    tagkavaitta perumAn ena ninRavar tAzvu iTam- 
    egkum iccai amarntAn iTampOl-irumpaitanuL, 
    magkul tOyum pozil cUzntu azaku Aya mAkALamE.

பொருள்:     சினத்தாற் சீறிப் பொங்குவதும் சிவந்த கண்ணை உடையதுமாகிய பாம்பையும் 
பிறையையும் புரிந்த பொன்னிற சடையில் தங்க வைத்த பெருமான் உறையும் இடம், எங்கும் 
விருப்பத்துடன் அமர்ந்தவன் இடம் இரும்பைதன்னுள், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததும் 
அழகாயதும் ஆகிய மாகாளமே.

குறிப்புரை:     சடையில் பாம்பும் பிறையும் பகையின்றி வாழவைத்த பெருமான். 'பொங்கு 
செங்கண்ணரவு’ என்றதால், விளங்கும் பெருங்கோபம் சடையின்கண் தணிந்தது. தாழ்வு - 
எழுந்தருளுதல்.

    Our Lord Civa retains the moon along with the snake in His hair locks and 
wipes out the enmity between them. He willingly manifests Himself in any place and 
is renowned conspicuously. This Lord Civa manifests Himself in the city of Irumbai 
in the temple known as Thiru-maagaalam. In this city natural forests all around the 
city exist. There the trees are all very tall reaching the cloudy sky.

2743.    நட்டத்தோடுநரியாடுகானத்தெரியாடுவான் 
    அட்டமூர்த்தியழல்போலுருவன்னழகாகவே 
    இட்டமாகவிருக்கும்மிடம்போலிரும்பைதனுள் 
    வட்டஞ்சூழ்ந்துபணிவார்பிணிதீர்க்குமாகாளமே.        8

    நட்டத்தோடு நரியாடு கானத்து எரி ஆடுவான் 
    அட்ட மூர்த்தி அழல்போல் உருவன் அழகாகவே 
    இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பைதனுள் 
    வட்டம் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.

    naTTattOTu nari ATu kAnattu eri ATuvAn, 
    aTTamUrtti, azal pOl uruvan(n), azaku AkavE 
    iTTam Aka irukkum(m) iTampOl--irumpaitanuL, 
    vaTTam cUzntu paNivAr piNi tIrkkum mAkALamE.

பொருள்:     நரிகள் நடமாடுகின்ற சுடுகாட்டிலே  கூத்தாடுதலோடு  எரியாடுவான்; 
எட்டுருவத்தன்;  ஆரழல் போல சிவந்த உருவன்; அழகாகவே விருப்பத்துடன் 
எழுந்தருளியிருக்கும் இடமாவது; இரும்பை தன்னுள் வலம் வந்து பணிவாரின் 
பிணிகளைத்  தீர்க்கும் மாகாளமே.

குறிப்புரை:     நட்டம் - திருக்கூத்து. அட்ட மூர்த்தி - எட்டுருவத்தன். மண், நீர், அனல், வளி, 
விண், இருஞ்சுடர், வேள்வித்தலைவன், இட்டம், விருப்பம். வட்ட சூழ்ந்தல் - வலம் வரல்.

    Our Lord Civa holding fire in one of His hands, dances in the burning ghat 
where the jackals roam and play. He takes the eight forms such as spiritual and 
natural regarded as His bodies. He takes the form of infinite and supernal fire 
whenever required. He very willingly and evidently is manifest in the temple known 
as Thiru- maagaalam in the city of Irumbai. In this temple our Lord wipes out the 
illness of people who come round the temple by right side.

2744.     அட்டகாலன்றனைவவ்வினானவ்வரக்கன்முடி 
    எட்டுமற்றும்மிருபத்திரண்டும்மிறவூன்றினான் 
    இட்டமாகவிருப்பானவன்போலிரும்பைதனுள் 
    மட்டுவார்ந்தபொழில்சூழ்ந்தெழிலாருமாகாளமே.         9

    அட்ட காலன்தனை வவ்வினான் அவ்வரக்கன் முடி 
    எட்டு மற்றும் இருபத்து இரண்டும் இற ஊன்றினான் 
    இட்டம் ஆக விருப்பான் அவன்போல் இரும்பைதனுள் 
    மட்டு ஆர்ந்த பொழில் சூழ்ந்து எழிலாரும் மாகாளமே.

    aTTa kAlan tanai vavvinAn, av arakkan muTi 
    eTTum maRRum irupattiraNTum(m) iRa UnRinAn, 
    iTTam Aka iruppAn avanpOl-irumpaitanuL, 
    maTTu vArnta pozil cUzntu ezil Arum mAkALamE.

பொருள்:     போராடிய காலனின் உயிரைப் பறித்தான்; இராவணனாகிய அரக்கனின் பத்து 
முடியும் இருபது தோள்களும் இற்று வீழும்படி விரல் ஊன்றினான்; அச்சிவன் விருப்பத்துடன் 
எழுந்தருளிய இடம் இரும்பை தன்னுள், தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்ததும் அழகுடையதுமாகிய 
மாகாளமே.

குறிப்புரை:     அட்ட- மார்க்கண்டேய முனிவரோடு போராடிய. எட்டும் இருபத்திரண்டும் - 
பத்துத் தலையும் இருபது கையுமாகிய முப்பதும். மட்டு - தேன்.

    Our Lord Civa, embittered against Kaalan, the god of death, who was 
fighting against Maarkandeyar, destroyed the life of Kaalan. He pressed the top 
of His mount Kailash with His holy feet and disintegrated Raavanan's ten heads 
and twenty shoulders. This Lord Civa willingly and evidently manifests Himself 
in the temple in the city of Thiru-maagaalam and extols Himself. This city is 
surrounded by vast forest areas, with honey dripping from the flowers of plants.

2745.     அரவமார்த்தன்றனலங்கையேந்தியடியும்முடி 
    பிரமன்மாலும்மறியாமைநின்றபெரியோனிடம் 
    குரவமாரும்பொழிற்குயில்கள்சேரும்மிரும்பைதனுள் 
    மருவிவானோர்மறையோர்தொழுகின்றமாகாளமே.        10

    அரவம் ஆர்த்தன் தன்னலம் கை ஏந்தி அடியும்முடி 
    பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம் 
    குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பைதனுள் 
    மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

    aravam Arttan, tannalam kai Enti, aTiyum muTi 
    piraman mAlum(m) aRiyAmai ninRa periyOn iTam- 
    kuravam Arum pozil kuyilkaL cErum(m) irumpaitanuL, 
    maruvi vAnOr maRaiyOr tozukinRa mAkALamE.

பொருள்:     பாம்பினை அரையில் கச்சாகக் கட்டி, நெருப்பினை அங்கையில் ஏந்தி அடியும் 
முடியும் அயனும் மாலும் அறியாத வண்ணம் நின்ற பெரியோன் எழுந்தருளிய இடம், குயில்கள் 
வந்து சேரும் குராமரங்கள் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த இரும்பை தன்னுள் வானோரும் 
மறையோரும் பொருந்தித் தொழுகின்ற மாகாளமே.

குறிப்புரை:     ஆர்த்து -கட்டி. அனல்- தீ. குரவம்- குராமரம். வானோரும் மறையோரும் 
தொழுகின்ற தலம்.

    Our Lord Civan has fastened the snake on His waist. Also He holds fire in one 
of His hands. He stood as an infinitely tall supernal fire and made Brahma and Thirumaal 
unable to see His holy feet and head. This Lord Civa manifests Himself in the temple 
situated in Thiru-irumbai city. The scholarly people of the Vedas as well as the devas 
worship our Lord manifested in the temple known as Thiru-maagaalam.

2746.     எந்தைபெம்மானிடமெழில்கொள்சோலையிரும்பைதனுள்
     மந்தமாயபொழில்சூழ்ந்தழகாருமாகாளத்தில் 
    அந்தமில்லா அனலாடுவானையணிஞானசம் 
    பந்தன்சொன்னதமிழ்பாடவல்லார்பழிபோகுமே.        11

    எந்தை பெம்மான் இடம் எழில்கொள் சோலை இரும்பைதனுள் 
    மந்தம் ஆயபொழில் சூழ்ந்த அழகாரும் மாகாளத்தில் 
    அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணிஞானசம் 
    பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழிபோகுமே.

    entai pemmAn iTam, ezil koL cOlai irumpaitanuL, 
    mantam Aya pozil cUzntu azaku Arum mAkALattil,
    antam illA anal ATuvAnai, aNi njAnacam- 
    pantan conna tamiz pATa vallAr pazi pOkumE.

பொருள்:     எம்முடைய தந்தை; பெருமான் எழுந்தருளியுள்ள இடம், அழகு தங்கிய 
சோலைகள் உள்ள இரும்பை தன்னுள் குளிர்ச்சியுடைய பொழில்கள் சூழ்ந்து அழகு நிறைந்த 
மாகாளத்தில் அந்தமிலா அனலாடுவான் மேல் ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்த் 
திருப்பதிகத்தைப் பாடவல்லாரின் பழிபோய்விடும்.

குறிப்புரை:     எழில்கொள் சோலை இரும்பை எனத் திருத்தலத்தையும் பொழில்சூழ்ந்து 
அழகு ஆரும் மாகாளம் எனத் திருக்கோயிலையும் குறித்ததால் அவ்விரண்டையும் சுற்றிக்கிடக்கும் 
சோலைவளம் குறிக்கப்பட்டது. 'மந்தமாய பொழில்' (தி. 2 ப. 117 பா. 11).

    Our Lord Civa is our Father. He is our Chief Supreme Being. This Lord evidently 
manifests Himself in the Thiru-maagaalam temple. The southern wind blows through the 
temple area and in the city of Thiru-irumbai where natural forests exist. Our Lord 
dances holding eternal fire. Our saint Thiru-gnana-Sambandar chanted ten Tamil verses 
on the Lord of this temple. Those devotees who can memorise these ten Tamil verses 
and chant them before our Lord will get rid of their blame due to the grace of our Lord.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            117ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 117th Hymn
            
            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 254              பதிக எண்: 118

118.திருத்திலதைப்பதி            118. THIRU-TH-THILATHAIP-PATHI

பண்: செவ்வழி                 Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    இராம இலக்குமணர்கள், தசரதச் சக்கரவர்த்திக்கு எள்ளும் புனலும் இறைத்த 
(திலதர்ப்பணஞ்செய்த) பதியாதலின் இப்பெயர் பெற்றது என்பர். பேரளம் தொடர்வண்டி 
நிலையத்திற்குத் தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே ஒரு கல்தூரத்தில்) 
அரிசிலாற்றின் தென்கரையில் இருக்கின்றது. சிதலைப்பதி என வழங்கும் ஊருக்கு, முக்கால் 
மைல் தூரத்தில் இருக்கின்றது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 58ஆவது தலம் ஆகும்.

    ஊரின் பெயர் திலதைப்பதி எனவும் அது வழங்குகிறது ஆயினும், இங்குள்ள கோயிலின் 
பெயர் மதிமுத்தம் என்பதாகும். இறைவரின் திருப்பெயர் மதிமுத்தர். இவ்வூர்ப்பதிகத்தின் 
இறுதிப்பாட்டில் 'திலதை மதிமுத்தர்மேல்' எனவரும் தேவாரப்பகுதி இதனை வலியுறுத்தும். 
இறைவியாரின் திருப்பெயர் பொற்கொடிநாயகி. பொற்கொடியம்மை. தலவிருட்சம் மந்தாரம்.
தீர்த்தம் சந்திரதீர்த்தம்.

    'புரவியேழும் மணிபூண்டியங்குங் கொடித்தேரினான் 
    பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டியூர்'

என்னும் இவ்வூர் தேவாரப் பகுதி சூரியன் பூசித்துப் பேறு பெற்றதை உணர்த்துகின்றது. 
இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் உள்ளது. இத்தலத்திற்கு புராணம் இருக்கிறது. 
அது  நாகலிங்கம் பிள்ளையால் இயற்றப்பெற்றது. 

பதிக வரலாறு

    சொல் வேந்தரும் சண்பை நல்வேந்தரும் திருவீழிமிழலை பேணுபெருந்துறை ஆகிய 
சிவதலங்களை வழிபட்ட காலத்தில் திலதைப்பதியை அடைந்து மதிமுத்தத்தில் இறைவனைப் 
பணிந்து பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2747.     பொடிகள்பூசிப்பலதொண்டர்கூடிப்புலர்காலையே 
    அடிகளாரத்தொழுதேத்தநின்றவ்வழகன்னிடம் 
    கொடிகளோங்கிக்குலவும்விழவார்திலதைப்பதி 
    வடிகொள்சோலைம்மலர்மணங்கமழும்மதிமுத்தமே.        1

    பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடிப் புலர் காலையே 
    அடிகள் ஆரத்தொழுது ஏத்தநின்ற அவ் அழகன் இடம் 
    கொடிகள் ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி 
    வடிகொள் சோலைம் மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

    poTikaL pUcip palatoNTar kUTi, pular kAlaiyE, 
    aTikaL Arat tozutu, Etta ninRa(v) azakan(n) iTam- 
    koTikaL Ogkik kulavum vizavu Ar tilataippati, 
    vaTi koL cOlai(m) malar maNam kamazum matimuttamE.

பொருள்:     பொழுது புலர்வதற்கு முன்பே தொண்டர்கள் பலர்கூடி, நீறணிந்து, திருவடிகளைத் 
தொழுது ஏத்த அழகன் நின்ற இடம், கொடிகளுயர்ந்து ஓங்க, விழாக்கள் நிறைந்த திலதைப் பதியில் 
வடிவான சோலைகளின் மணங்கமழும் மதிமுத்தமே.

குறிப்புரை:     தலம் - திலதைப்பதி. கோயில் - மதிமுத்தம். அடியார்கள் பலர் வைகறையில் 
நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவுடன் திருக்கோயில் வழிபாடு செய்த பண்டைய 
உண்மை நிகழ்ச்சி குறிக்கப்பட்டது. ஆரத்தொழுதல் -'தலையாரக் கும்பிட்டு' 'வாயாரப் பாடுந் 
தொண்டரினத்தகத்தான்' 'நாவார நம்பனையே பாடப்பெற்றோம்', 'கையாரத் தொழுதருவி 
கண்ணாரச் சொரிந்தாலும்' என்பவை முதலியவற்றால் செய்வன திருந்தவும் நிறையவும்                 
செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தல் காண்க.

    Devotees in this city of Thiru-th-thilathaip-pathi, get up in the early 
morning daily and collectively join together in their observance of religious 
rites by smearing their body with holy ashes. Then they go to the temple and 
with sincere devotion worship the holy feet of Lord Civa. And they praise the
Lord saying 'glory to thy holy feet'. This Lord is manifest in the temple of 
Thiru-th-thilathaip-pathi. In the temple, the tall religious flags always wave 
in the air. In this temple, festivals go on round the year without any break. 
In the nearby temple beautiful gardens are many, the flowers in the plants 
spread their fragrance all over the temple and nearby areas.

2748.    தொண்டர்மிண்டிப்புகைவிம்முசாந்துங்கமழ்துணையலும்
     கொண்டுகண்டார்குறிப்புணரநின்றகுழகன்னிடம் 
    தெண்டிரைப்பூம்புனலரிசில்சூழ்ந்ததிலதைப்பதி 
    வண்டுகெண்டுற்றிசைபயிலுஞ்சோலைம்மதிமுத்தமே.        2

    தொண்டர் மிண்டிப் புகைவிம்மு சாந்தும் கமழ் துணையலும் 
    கொண்டு கண்டார் குறிப்பு உணரநின்ற குழகன் இடம் 
    தெண் திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி 
    வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலைம் மதிமுத்தமே.

    toNTar miNTi, pukai vimmu cAntum kamaz tuNaiyalum 
    koNTu, kaNTAr kuRippu uNara ninRa kuzakan(n) iTam- 
    teNtiraip pUmpunal aricil cUznta tilataippati, 
    vaNTu keNTu uRRu icai payilum cOlai(m) matimuttamE.

பொருள்:     தொண்டர்கள் நெருங்கி, விம்மும் தூபமும் கமழ்கின்ற சந்தனமும் மாலைகளும் 
கொண்டு, தன்னை வழிபட, அடியார்களின் மனக்கருத்தினை அறிந்து நின்ற குழகனின் இடம், 
தெளிந்த பூம்புனல் ஓடும் அரிசிலாறு சூழ்ந்த திலதைப்பதியில்  வண்டுகள் மலர்களைக் கெண்டி 
இசைபயிலும் சோலைகள் கொண்ட மதிமுத்தமே.

குறிப்புரை:     மிண்டி- நெருங்கி. முத்தம் - முற்றம், மரூஉ. 'நிலா முற்றம்' 'சத்திமுற்றம்'. 
கண்டார் - தரிசனம் புரிந்த அடியவர். குறிப்பு - கருத்து. அரிசில் ஆற்றங்கரையில் உள்ளது 
இத்தலம்.

    Our Lord Civan is manifest in the temple known as Mathimuththam situated in 
Thiru-th-thilathaip-pathi city. This city is on the banks of the river Arisilaaru where 
clear water always flows. This city is surrounded by good gardens where flower plants 
are many. Fully blossomed flowers are in huge quantity. They disseminate their pleasant 
smell, the bees reach the garden and learn to sing their song in the particular mode 
called Kendisai. Devotees gather with others and reach the temple taking with them the 
sweet incense, sandalwood mix, flower garlands and offer all these to God. Then they 
all worship Him. Our Lord, understanding the devotees' demand, blesses them gracefully 
and suitably.

2749.     அடலுளேறுய்த்துகந்தானடியாரமரர்தொழக் 
    கடலுள்நஞ்சமமுதாகவுண்டகடவுள்ளிடம் 
    திடலடங்கச்செழுங்கழனிசூழ்ந்ததிலதைப்பதி 
    மடலுள்வாழைக்கனிதேன்பிலிற்றும்மதிமுத்தமே.        3

    அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழக் 
    கடல் உள் நஞ்சம் அமுதாக உண்ட கடவுள் இடம் 
    திடல் அடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி 
    மடல் உள்வாழைக் கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே.

    aTal uL ERu uyttu ukantAn, aTiyAr amarar tozak 
    kaTaluL nanjcam amutu Aka uNTa kaTavuL(L), iTam- 
    tiTal aTagkac cezug kazani cUznta tilataippati, 
    maTaluL vAzaikkani tEn piliRRum matimuttamE.

பொருள்:     வெற்றியையே கருதுகின்ற போரேற்றை ஊர்தியாகக் கொண்டு மகிழ்ந்தவன், 
அடியவர்களும் அமரர்களும் தொழுது இரக்க, கடலில் எழுந்த நஞ்சினை அமுதமாக உண்ட கடவுள் 
ஆகிய சிவன் எழுந்தருளிய இடம், வெளி முழுவதும் செழுமையான கழனிகள் சூழ்ந்த திலதைப்பதியில், 
தாழை மடலுள் வாழைக்கனி சாறு பிலிற்றும் மதிமுத்தமே.

குறிப்புரை:     அடல் உள் ஏறு- வெற்றியை உள்ளு (கருது) கின்ற விடை. வலிமைக்கு ஒப்புறுத்த 
உள்ளுகின்ற விடையையும் ஆம். 'ஏறுபோற் பீடுநடை'. பிலிற்றும் - கொப்புளிக்கும்.

    Our Lord Civan is manifest in Mathimuththam temple in the city of 
Thiru-th-thilathaip-pathi. There are small hillocks in the city area. Around these 
hillocks paddy fields are many. In the waterways plantain juice drips running through 
small sluices. Our Lord loves to sustain the white strong bull for His conveyance. 
Our Lord imbibed the poison that arose from the ocean and treated it as nectar. 
This action was seen by the devotees and all celestials and they all worshipped Him. 
This Lord desires to manifest Himself in the temple known as Mathimuththam in the 
city of Thiru-th-thilathaip-pathi.

2750.     கங்கைதிங்கள்வன்னிதுன்னெருக்கின்னொடுகூவிளம் 
    வெங்கண்ணாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்            
    செங்கயல்பாய்புனலரிசில்சூழ்ந்ததிலதைப்பதி 
    மங்குல்தோயும்பொழில்சூழ்ந்தழகார்மதிமுத்தமே.        4

    கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் 
    வெங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம் 
    செங்கயல் பாய்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி 
    மங்குல் தோயும் பொழில் சூழ்ந்த அழகார் மதிமுத்தமே.

    kagkai, tigkaL, vanni, tun erukki(n)noTu, kUviLam, 
    vegkaN nAkam, viricaTaiyil vaitta vikirtan(n) iTam- 
    cegkayal pAy punal aricil cUznta tilataippati, 
    magkul tOyum pozil cUzntu azaku Ar matimuttamE.

பொருள்:     கங்கைநதி, பிறைநிலவு, வன்னி இலையுடன் நெருங்கிய எருக்கம்பூ, 
வில்வம் ,கொடிய கண்ணுடைய நாகம் ஆகியவற்றை விரிந்த சடையில் வைத்த விகிர்தன் ஆகிய 
சிவனுக்கு இடம், சிவந்த நிறமுடைய கயல்கள் பாயும் வெள்ளம் பாயும் அரிசிலாறு சூழ்ந்த 
திலதைப்பதியில் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததும் அழகு நிறைந்ததுமாகிய 
மதிமுத்தமே.

குறிப்புரை:     திருச்சடையில் உள்ளன என்று கங்கை முதலிய ஆறு கூறப்பட்டன. 
மங்குல்- மேகம்.                                        

    Our Lord Civan supports the river Ganges in His entangled hair locks. The young 
moon, He retains it in the hair locks along with the Ganges. He adorns His entangled 
hair locks with garlands made of leaves of summer tree, yercum, the vilvam leaves and 
jasmine flowers. He is Supreme, different from the world. This city called 
Thiru-th-thilathaip-pathi, is surrounded by the Arisilaaru river. Here the tank 
fish swim and leap in the river water. Also natural forests are many where clouds 
slowly move over the trees and embrace the branches of the tall trees. Here the 
attractive temple Mathimuththam exists.

2751.    புரவியேழும்மணிபூண்டியங்குங்கொடித்தேரினான் 
    பரவிநின்றுவழிபாடுசெய்யும்பரமேட்டியூர்
    விரவிஞாழல்விரிகோங்குவேங்கைசுரபுன்னைகள் 
    மரவமவ்வவ்மலருந்திலதைம்மதிமுத்தமே.        5

    புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித் தேரினான் 
    பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் 
    விரவி ஞாழல் விரிகோங்கு வேங்கை சுரபுன்னைகள் 
    மரவம் அவ் அவ்மலரும் திலதை மதிமுத்தமே.

    puravi Ezum maNi pUNTu iyagkum koTittErinAn 
    paravi ninRu vazipATu ceyyum paramETTi Ur 
    viravi njAzal, viri kOgku, vEgkai curapunnaikaL, 
    maravam, avvav malarum, tilatai(m) matimuttamE.

பொருள்:     குதிரைகள் ஏழு பூட்டி இயங்கும் அழகிய தேரினனாகிய சூரியன் 
போற்றி நின்று வழிபடும் பரமேட்டியாகிய சிவன் எழுந்தருளியுள்ள ஊர்,ஞாழல் மரங்கள் 
கலந்து, விரிந்த கோங்கு, சுரபுன்னைகள், வேங்கை, மரா மரங்களுள்ளதும் முல்லை 
மலர்வதுமாகிய திலதைப் பதியில் உள்ள மதிமுத்தமே.

குறிப்புரை:     சூரியன் கதிரில் உள்ள ஏழுநிறமும் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன.
மரவம்- குங்குமமரம். சூரியன் பூசித்த தலம் என்பது முற்பகுதியால் விளங்கும்.

    The rich city of Thiru-th-thilathaip-pathi is surrounded by parks. Here in 
these parks, orange cup calyxed plants, a kind of cotton trees, silk cotton, the kino 
tree, mastwood tree, seaside Indian oak and Arabian jasmine are all in plenty. The sun god, 
who travels in the sky in his special car drawn by horses in this city Thiru-th-
thilathaip-pathi worships our Lord Civan who is manifest in this temple.

2752.     விண்ணர்வேதம்விரித்தோதவல்லாரொருபாகமும் 
    பெண்ணரெண்ணாரெயில்செற்றுகந்தபெருமானிடம்         
    தெண்ணிலாவிண்ணொளிதீண்டுசோலைத்திலதைப்பதி 
    மண்ணுளார்வந்தருள்பேணநின்றம்மதிமுத்தமே.        6

    விண்ணர் வேதம் விரித்து ஓதவல்லார் ஒருபாகமும் 
    பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமானிடம்         
    தெண்ணிலா விண்ணொளி தீண்டு சோலைத் திலதைப்பதி 
    மண்ணுளார் வந்தருள் பேண நின்றம் மதிமுத்தமே

    viNNar, vEtam virittu Ota vallAr, orupAkamum 
    peNNar, eNNAr eyil ceRRu ukanta perumAn iTam 
    teN nilAvin(n) oLi tINTu cOlait tilataippati, 
    maN uLAr vantu aruL pENa ninRa(m) matimuttamE.            

பொருள்:     விண் உலகத்தவன்; வேதங்களை விரித்து ஓத வல்லார்; ஒருபாகத்தில் 
பெண்ணை உடையவர்; பகைவரின் மூன்று மதில்களை எரித்தழித்து உயர்ந்த பெருமான் 
ஆகிய சிவன் எழுந்தருளியுள்ள இடம் தெளிந்த நிலவின் ஒளி தீண்டும் சோலைகளை உடைய 
திலதைப்பதி; அங்கு, மண்ணுலகத்தவர்கள் வந்து தன்னுடைய அருளை வேண்டி வழிபட  
நின்ற மதிமுத்தமே.

குறிப்புரை:     விண்ணோரும் வல்லாரும் பெண்ணரும் ஆகிய பெருமான்.

    Our Lord Civan is the Author of the four Vedas. He has embedded His consort on 
one part of His body. The asuras of Thripurathar never paused to think about our Lord. 
Our Lord destroyed their forts in the first instance. However, later on He graced them.
This Lord is manifest in the temple known as Mathimuththam situated in the city 
Thiru-th-thilathaip-pathi. The city is surrounded by developed gardens where the 
moon's pure rays always fall over the trees and the garden area. The people of the 
earth, to get our Lord's grace, reach this city and worship our Lord Civa.

2753.     ஆறுசூடியடையார்புரஞ்செற்றவர்பொற்றொடி 
    கூறுசேரும்முருவர்க்கிடமாவதுகூறுங்கால் 
    தேறலாரும்பொழில்சூழ்ந்தழகார்திலதைப்பதி 
    மாறிலாவண்புனலரிசில்சூழ்ந்தம்மதிமுத்தமே.        7

    ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொற்றொடி 
    கூறு சேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்             
    தேறல் ஆரும் பொழில் சூழ்ந்த அழகார் திலதைப்பதி 
    மாறு இலாவண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே.

    ARucUTi, aTaiyAr puram ceRRavar, poRRoTi 
    kURu cErum uruvarkku iTam Avatu kURugkAl- 
    tERal Arum pozil cUzntu azaku Ar tilataippati, 
    mARu ilA vaN punal aricil cUznta(m) matimuttamE.

பொருள்:     கங்கையாற்றைச் சடையில் சூடியவர்; தன்னைச் சரணாக அடையாத 
முப்புரத்தாரை அழித்தவர்; பொற்றொடியாகிய உமை ஒரு கூறாகச் சேரும் உருவர் ஆகிய 
சிவனுக்கு இடமாவது தேன் மிகுந்த பொழில்கள் சூழ்ந்ததுவும் அழகு நிறைந்ததுமாகிய 
திலதைப்பதியில் வற்றாத புனல் பாயும் அரிசிலாறு சூழ்ந்த மதிமுத்தமே.

குறிப்புரை:     சூடி- பெயர். அடையார் - பகைவர். செற்றவர் -அழித்தவர். பொற்றொடி - 
வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தேறல் - தேன். 
பொற்றொடி நாயகி என்னுந் தேவியார் திருப்பெயரில் தொடி என்பது கொடி என்றாயிற்றோ?

    Our Lord supports the river Ganges over His head. He destroyed the three 
forts of the enemies of Thripurathar. He retains His consort on one half of His 
body. This Lord is manifest in the temple known as Mathimuththam situated in the 
city of Thiru-th-thilathaip-pathi. This city is surrounded by the river called 
Arisilaaru where water never dries up. The city is surrounded by attractive 
forests full of flowers, yielding honey always.

2754.    கடுத்துவந்தகனல்மேனியினான்கருவரைதனை 
    எடுத்தவன்றன் முடிதோளடர்த்தார்க்கிடமாவது 
    புடைக்கொள்பூகத்திளம்பாளைபுல்கும்மதுப்பாயவாய் 
    மடுத்துமந்தியுகளுந்திலதைம்மதிமுத்தமே.        8

    கடுத்து வந்த கனல் மேனியினான் கருவரை தனை
    எடுத்தவன் தன்முடி தோள் அடர்த்தார்க்கு இடமாவது 
    புடைக் கொள் பூகத்து இளம்பாளை புல்கும் மதுப் பாயவாய் 
    மடுத்தும் மந்தியுகளும் திலதை மதிமுத்தமே.

    kaTuttu vanta kanal mEniyinAn, karuvaraitanai 
    eTuttavan tan muTitOL aTarttArkku iTam Avatu-
    puTaik koL pUkattu iLam pALai pulkum matup pAya, vAy
    maTuttu manti ukaLum tilatai(m) matimuttamE.

பொருள்:     தீப்போல் சினந்து வெப்பத்துடன் வந்தவன்; பெரிய கயிலைமலையை எடுத்தவன் 
ஆகிய இராவணனுடைய பத்து முடி இருபது தோள்களை நசுக்கியவர்க்கு இடமாவது பக்கத்தில் 
புடைத்து வளரும் இளம் பாளைகளிலிருந்து தேன்பாய மந்திகள் அதனை வாய்மடுத்து உண்டு 
துள்ளும் திலதைப்பதியில் உள்ள மதிமுத்தமே.

குறிப்புரை:     கனல் - தீ. பூகம் - பாக்கு மரம். மது - கள். மடுத்து - உண்டு.

    Raavanan came towards mount Kailash in an angry mood and with an appearance of 
dark clouds, he came to take the heavy mountain and to replace it. But our Lord quashed 
his head, shoulders etc. This Lord evidently is manifest in the Mathimuththam temple 
situated in the city of Thiru-th-thilathaip-pathi. This city is full of tall areca 
trees in many places, from the tender sheathes honey drips in the garden. The monkeys 
drink this honey, enjoy and play all around the area.

2755.     படங்கொள்நாகத்தணையானும்பைந்தாமரையின்மிசை 
    இடங்கொள்நால்வேதனுமேத்தநின்றஇறைவன்னிடம் 
    திடங்கொள்நாவினிசைதொண்டர்பாடுந்திலதைப்பதி 
    மடங்கல்வந்துவழிபாடுசெய்யும்மதிமுத்தமே.        9

    படம் கொள் நாகத்து அணையானும் பைந்தாமரையின் மிசை 
    இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் 
    திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி 
    மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

    paTam koL nAkattu aNaiyAnum, paintAmaraiyin micai 
    iTam koL nAlvEtanum, Etta ninRa iRaivan iTam
    tiTam koL nAvin(n) icai toNTar pATum tilaitaippati, 
    maTagkal vantu vazipATu ceyyum matimuttamE.

பொருள்:     படமுடைய பாம்புப் படுக்கை கொண்ட திருமாலும் தாமரை மலர் மேலிருக்கும் 
நான்முகனும் வழிபட நின்ற இறைவன் ஆகிய சிவன் எழுந்தருளியுள்ள இடம் நாவினால் அவனுடைய 
புகழைத் தொண்டர் பாடும் திலதைப்பதியில் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

குறிப்புரை:     மடங்கல்- இயமன். இடி, சிங்கம் என்பவற்றுள் ஒன்று பூசித்த தலமாயிருந்தால் 
தான் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தம் என்றிருக்கலாம்.

    The tutelary Thirumaal treated the snake Aathi Sedan with thousand heads as his
bed roll. In the new and fresh lotus flower, the demigod, the four faced Brahma resides. 
These two demigods came to worship our Lord Civa manifested in Mathimuththam temple 
in the city of Thiru-th-thilathaip-pathi. Here in this temple devotees with very strong 
and clean tongue chant songs on our Lord and worship Him. To the temple lions also come 
and worship our Lord.

2756.     புத்தர்தேரர்பொறியில்சமணர்கருவீறிலாப் 
    பித்தர்சொன்னம்மொழிகேட்கிலாதபெருமானிடம் 
    பத்தர்சித்தர்பணிவுற்றிறைஞ்சுந்திலதைப்பதி 
    மத்தயானைவழிபாடுசெய்யும்மதிமுத்தமே.        10

    புத்தர் தேரர் பொறியில் சமணர் கரு ஈறிலாப் 
    பித்தர் சொன்னம் மொழி கேட்கிலாத பெருமான் இடம் 
    பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி 
    மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

    puttar tErar, poRi il camaNar karu IRu ilAp 
    pittar--conna(m) mozi kETkilAta perumAn iTam- 
    pattar, cittar, paNivu uRRu iRainjcum tilataippati, 
    mattayAnai vazipATu ceyyum matimuttamE.

பொருள்:     பவுத்தராகிய தேரர்கள், அறிவற்ற சமணர்கள் ஆகிய பெருமையில்லாப் 
பித்தர்கள் சொன்ன மொழிகளை ஒருபொருட்டாகக் கேட்காத பெருமான் ஆகிய சிவன்
எழுந்தருளியுள்ள  இடம், பத்தர்களும் சித்தர்களும் பணிவுடன் தொழுது வணங்கும் 
திலதைப்பதியில் மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே. 

குறிப்புரை:     பொறி -அறிவு. வீறு இல்லாத பித்தர். பத்தர் - அன்பர். சித்தர் -அறிஞர். 
யானை வழிபட்ட தலம்.

    Our Lord Civan in this city never listens to the false propaganda of the Buddhists, 
the ignorant Jains and others who have no knowledge about virtuous deeds. This Lord is
manifest in the temple Mathimuththam in the city of Thiru-th-thilathaip-pathi. The devotees 
in this city, and scholars, reach the temple, bow before our God and worship Him. This 
temple and city are famous because an elephant that ran amok worshipped our Lord 
in the temple.

2757.     மந்தமாரும்பொழில்சூழ்திலதைம்மதிமுத்தர்மேல் 
    கந்தமாருங்கடற்காழியுள்ளான்தமிழ்ஞானசம் 
    பந்தன்மாலைபழிதீரநின்றேத்தவல்லார்கள்போய்ச் 
    சிந்தைசெய்வார்சிவன்சேவடிசேர்வதுதிண்ணமே.        11

    மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர்மேல் 
    கந்தம் ஆரும் கடற்காழி உள்ளான் தமிழ்ஞானசம் 
    பந்தன் மாலை பழிதீர நின்று ஏத்த வல்லார்கள் போய்ச் 
    சிந்தை செய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே.

    mantam Arum pozil cUz tilatai(m) matimuttarmEl, 
    kantam Arum kaTal kAzi uLLAn--tamiz njAnacam 
    pantan--mAlai, pazi tIra ninRu Etta vallArkaL, pOyc 
    cintai ceyvAr, civan cEvaTi cErvatu tiNNamE.

பொருள்:     குளிர்ச்சி நிறைந்த பொழில்கள் சூழ்திலதைப்பதியில் மதிமுத்தத்து இறைவர்மேல் 
மணம் கமழும் கடற்காழியில் உள்ளான் தமிழ்ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையைப் பாடி 
நின்று ஏத்த வல்லார்கள், சிந்திப்பவர்கள் சிவனின் சேவடிகளைப் போய்ச் சேர்வது திண்ணம்.

குறிப்புரை:     மந்தம் - 'மந்தமாய பொழில்' (தி. 2 ப.117 பா. 11). கந்தம் - மணம், புலால் நாற்றம். 
'பழிதீர நின்று மாலை ஏத்த'.

    Our Lord Civa is manifest in the temple Mathimuththam in the city of 
Thiru-th-thilathaip-pathi where the southern wind blows through the temple and through 
the gardens. The saint Thiru-gnana-Sambandar was born in the city of Seerkaazhi surrounded 
by seashore of sweet fragrance. He sang the ten Tamil verses as garland of flowers 
on Lord Civan. Those devotees who worship our Lord's holy feet and concentrate in their 
mind on the holiness of our Lord will certainly reach our Lord's Holy feet

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            118ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 118th Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM


பதிகத் தொடர் எண் : 255                பதிக எண் : 119

119. திருநாகேச்சுரம்                 119. THIRU-NAAKECH-CHURAM

பண் :     செவ்வழி                Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    ஐந்தலை அரவால் பூசிக்கப்பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர் பெற்றது. 
இச்செய்தி இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள (திருப்பாட்டு-4)

    'ஐந்தலை யரவின் பணி கொண்டருள் 
    மைந்தர் போன்மணி நாகேச் சுவரரே'

என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.

    மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில் திருநாகேசுவரம் தொடர்வண்டி 
நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென் கரையில் 
உள்ள 29ஆவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

     இறைவர் திருப்பெயர் சண்பகாரணியர், இறைவியார் திருப்பெயர் குன்றமுலைநாயகி .
தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. ஐந்தலை நாகமன்றி, சந்திர சூரியர்களால் பூசிக்கப்பெற்றது. 
தெய்வப் பாக்கிழாராகிய சேக்கிழார் பெருமானுக்கு மிக்க விருப்பமுள்ள தலம். சேக்கிழார் தமது 
ஊராகிய குன்றத்தூரில் ஒரு கோயில் எடுப்பித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயர் 
வைத்துள்ளமை இதை நன்கு புலப்படுத்தும்.

    திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனாரது பதிகம் மூன்று. சுந்தரமூர்த்தி 
நாயனாரது பதிகம் ஒன்று.  ஆக ஆறு பதிகங்களைப் பெற்ற பெருமை உடையது. நாளும் வணங்குவார் 
பிணி தீர்க்கும் பெற்றியுடையது.

    'நாளு நாதனமர் கின்ற நாகேச்சுர நண்ணுவார் 
    கோளு நாளுந் தீயவேனு நன்காங் குறிக்கொண்மினே'

என்னும் இக்கோயில் சம்பந்தர் தேவாரப்பகுதி சிந்திக்கற்பாலது.

பதிக வரலாறு 

    திருஞானசம்பந்தர் திருக்குடமூக்கினை அணைந்து , திருக்கீழ்க் கோட்டத்திருந்த 
வான் பொருளினை வணங்கி, காரோணத்தாரமுதைப் பணிந்தேத்தி,  திருநாகேச்சுரத்து அமர்ந்த 
செங்கனகத் தனிக்குன்றைப் பாடி அம்மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள் வணங்கி 
நாணாளும் பரவியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                திருச்சிற்றம்பலம்

2758.     தழைகொள்சந்தும்மகிலும்மயிற்பீலியுஞ்சாதியின்
    பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை  
    நழுவில்வானோர்தொழநல்குசீர்மல்குநாகேச்சரத் 
    தழகர்பாதந்தொழுதேத்தவல்லார்க்கழகாகுமே.        1

    தழைகொள் சந்தும் அகிலும் மயிற்பீலியும் சாதியின் 
    பழமும் உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை         
    நழுவில் வானோர் தொழ நல்கு சீர்மல்கு நாகேச்சரத்து 
    அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

    tazai koL cantum(m), akilum, mayilpIliyum, cAtiyin
    pazamum, untip punal pAy pazagkAvirit tenkarai, 
    nazuvu il  vAnOr toza, nalku cIr malku nAkEccurattu 
    azakar pAtam tozutu Etta vallArkku azaku AkumE.

பொருள்:     தழைத்த சந்தனம், அகில், மயிற்பீலி, சாதியின் பழம் முதலியவற்றை உந்திக் 
கொண்டு வெள்ளம் பாய்கின்ற பழங்காவிரியாற்றின் தென்கரையினில் வழுவுதல் இன்றி 
வானோர்கள் தொழ அவர்களுக்கு அருளும் பெருமை நிறைந்த திருநாகேச்சுரத்து அழகருடைய 
திருப்பாதங்களைத் தொழுது ஏத்த வல்லாருக்கு அது அழகாகும்.

குறிப்புரை:     சந்து - அகில், பீலி, சாதிப்பழம் எல்லாம் காவிரி வெள்ளத்தால் கொள்ளப்பட்டவை. 
நழுவு இல்-விலகுதல் இல்லாத. அழகராதலின் வணங்க வல்லார்க்கும் அழகு அருள்கின்றார்.

    Our Lord evidently is manifest in the very attractive temple in Naakech-churam
which has been very old on the southern bank of Cauvery river. This river water carries 
the sandalwood trees along with its branches, eaglewood trees, peacock's feathers, 
very good fruits and many other items. They are pushed forward by the running water 
of the Cauvery. They reach near Naakech-churam city and a portion is pushed forward
further. Here devas never move away, but worship our Lord Civan's holy feet in the 
temple and get our Lord's grace. They who praise Him will get enticing life forever.

2759.     பெண்ணொர்பாகம்மடையச்சடையிற்புனல்பேணிய 
    வண்ணமானபெருமான்மருவும்மிடமண்ணுளார் 
    நண்ணிநாளுந்தொழுதேத்திநன்கெய்துநாகேச்சரம் 
    கண்ணினாற்காணவல்லாரவர்கண்ணுடையார்களே.            2

    பெண் ஒர்பாகம் அடையச் சடையில் புனல்பேணிய 
    வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண் உளார் 
    நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்து நாகேச்சரம் 
    கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே.

    peN orpAkam(m) aTaiya, caTaiyil punal pENiya 
    vaNNam Ana perumAn maruvum(m) iTam--maN uLAr 
    naNNi nALum tozutu Etti nanku eytum--nAkEccuram, 
    kaNNinAl kANa vallAr avar kaN uTaiyArkaLE.

பொருள்:     பெண்கோலம் ஒருபாகத்தில் பொருந்த, சடையில் கங்கைப் புனலை வைத்த 
 அழகன் ஆகிய பெருமான் எழுந்தருளும் இடம் உலகில் உள்ளவர்கள் வந்து நாளும் தொழுது 
ஏத்தி நன்மை எய்தும் திருநாகேச்சுரம்.  அதைக் கண்ணினால் காண வல்லவர்கள்
கண்ணுடையவர்களே.

குறிப்புரை:     நன்கு- சிவபுண்ணியம் முதலிய நன்மைகள். கண்ணினால் என்றது காண்பதற்கு 
கடவுளையே பொருளாகக் கொண்ட கண் என்று அதன் சிறப்புணர்த்த.

    Our Lord Civa has embedded His consort on one part of His body. In His 
entangled hair locks He supports the Ganges river. This gorgeous Lord Civan is 
the Supreme Being. He is manifest in the temple in Naakech-churam city. Here the 
people on this earth every day reach Naakech-churam and worship our Lord and get 
all His grace. Those people who can see our Lord in Naakech-churam city with their
eyes are the only persons who own eyes.

2760.     குறவர்கொல்லைப்புனங்கொள்ளைகொண்டும்மணிகுலவுநீர் 
    பறவையாலப்பரக்கும்பழங்காவிரித்தென்கரை 
    நறவநாறும்பொழில்சூழ்ந்தழகாயநாகேச்சரத் 
    திறைவர்பாதந்தொழுதேத்தவல்லார்க்கிடரில்லையே.            3

    குறவர் கொல்லைப் புனம் கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர் 
    பறவை ஆலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை 
    நறவ நாறும் பொழில் சூழ்ந்த அழகாய நாகேச்சரத்து 
    இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே.

    kuRavar kollaippunam koLLai koNTum, maNi kulavu nIr,
    paRavai Ala, parakkum pazagkAvirit tenkarai- 
    naRavam nARum pozil cUzntu azaku Aya--nAkEccurattu 
    iRaivar pAtam tozutu Etta vallArkku iTar illaiyE.

பொருள்:     குறிஞ்சிக் குறவர்களின் கொல்லையில் தினைப் புனம் முதலியவற்றைக் 
கொள்ளை கொண்டும், ஒளி குலவும் வெள்ளநீரில் வண்டுகள் மொய்க்கவும்; பரந்து வரும் 
பழங்காவிரியின் தென்கரையில் தேன் மணக்கும் பொழில்கள் சூழ்ந்ததுவும் அழகாயதும் 
ஆகியது திருநாகேச்சுரம். திருநாகேச்சுரத்து இறைவருடைய திருப்பாதங்களைத் தொழுது 
ஏத்த வல்லார்க்கு இடரே இல்லை.

குறிப்புரை:     ஆல -அசைய. அழகாய நாகேச்சரம். நாகேச்சரத்து அழகர் (பா. 1) என்றவற்றால் 
தலமும் மூர்த்தியும் அழகுடைமை உணர்க.

    The nomadic community who are called Kuravaas mainly lives in mountainous area.
Some live in the forests also. The river Cauvery runs over these areas spreading  
the gems available all around the waterways. The river Cauvery spreads its water 
and pushes on to the southern bank of Naakech-churam city. In this city, the attractive 
smell of honey emanates from the gardens and spreads all over the area. Here our radiant 
Lord Civa of Naakech-churam city resides in the temple. Those servitors who can worship 
and praise our Lord will never get any suffering in their life.

2761.     கூசநோக்காதுமுன்சொன்னபொய்கொடுவினை  குற்றமும்
    நாசமாக்கும்மனத்தார்கள்வந்தாடுநாகேச்சரம் 
    தேசமாக்குந்திருக்கோயிலாக்கொண்டசெல்வன்கழல் 
    நேசமாக்குந்திறத்தாரறத்தார்நெறிப்பாலரே.        4

    கூச நோக்காது முன் சொன்ன பொய் கொடு வினை குற்றமும் 
    நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம் 
    தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல் 
    நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.

    kUcam nOkkAtu mun conna poy, koTuvinai, kuRRamum,
    nAcam Akkum manattArkaL vantu ATum nAkEccuram, 
    tEcam Akkum tiruk kOyilAk koNTa celvan kazal 
    nEcam Akkum tiRattAr aRattAr; neRippAlarE.

பொருள்:     கூசச் சொன்ன பொய், நோக்காது சொன்ன பொய், கொடு வினை குற்றம் 
முதலாய பாவங்களை நாசமாக்கும் கருத்தினர்கள் வந்து தீர்த்தமாடும் தலம்  திருநாகேச்சுரம் .
திருநாகேச்சுரத்தைத் திருக்கோயிலாகக் கொண்ட செல்வனின் திருவடிகள்மேல் அன்பு 
கொளும் திறத்தார்  சிவதன்மமுடையார்; அவர்கள் நன்னெறிப் பாலரே ஆவர். 

குறிப்புரை:     கூசச் சொன்ன பொய், நோக்காது சொன்ன பொய், பொய்யும் வினையும் 
குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள். ஆடுதல் - தீர்த்தமாடுதல். நேசம் - அன்பு. அறத்தார் - 
சிவ தருமமுடையவர். நெறிபாலர் - வீட்டு நெறிக்கண் ஒழுகுபவர்.

    Some people utter lies without thinking deeply and this affects others 
who get ashamed. Mistakes due to serious bad karma are committed by some people. 
These two bad items are never committed by good thinking people. These people 
happily reach the very bright temple of Naakech-churam city where our Lord Civan 
who is the owner of all wealth is manifested. Those devotees who have sincere 
devotion for this Lord's holy feet are the greatly respected people who follow 
the spiritual, divine values.

2762.     வம்புநாறும்மலரும்மலைப்பண்டமுங்கொண்டுநீர் 
    பைம்பொன்வாரிக்கொழிக்கும்பழங்காவிரித்தென்கரை 
    நம்பன்நாளும் அமர்கின்றநாகேச்சரநண்ணுவார்
     உம்பர்வானோர்தொழச்சென்றுடனாவதுமுண்மையே.        5

    வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு நீர் 
    பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை 
    நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் 
    உம்பர் வானோர் தொழச் சென்று உடனாவதும் உண்மையே.

    vampu nARum malarum malaip paNTamum koNTu, nIr 
    paim pon vArik kozikkum pazagkAvirit tenkarai 
    nampan nALum amarkinRa--nAkEccuram naNNuvAr 
    umparvAnOr tozac cenRu, uTan Avatum uNmaiyE.

பொருள்:     புதுமணம் கமழும் மலர்களும் மலைப்பண்டங்களும் கொண்டு வெள்ளநீர் 
பசும்பொன்னை வாரிக் கொழிக்கும் பழங்காவிரியின் தென்கரையில் நம் விருப்பத்திற்குரியவன் 
நாளும் விரும்பி அமர்கின்ற திருநாகேச்சுரத்தை  அடைவார் மேலுலகத்து வானவர்கள் 
தொழச் சென்று அத்தேவர்களுடன் வாழ்வதும் உண்மையே.  

குறிப்புரை:     உம்பரும் வானோரும், உடனாவது - அத்துவிதமுறுவது ஒன்றாய் வேறாய் 
உடனாதல். அஃது ஈண்டு ஆன்மாச் சிவனுடனாதலை உணர்த்திற்று.

    The Cauvery river water carries the sweet smelling flowers and the products 
of the mountain and golden particles and pushes them to the running water ways and 
reaches the very old banks of Naakech-churam city. Here our most desirable Lord Civan 
is manifest in the temple of Naakech-churam city, every day. Those servitors who reach 
the Naakech-churam city and then worship our Lord in the temple will be worshipped 
by the devas and celestials since they will become one with Lord Civan in the 
advaita stage.

2763.     காளமேகந்நிறக்காலனோடந்தகன்கருடனும் 
    நீளமாய்நின்றெய்தகாமனும்பட்டனநினைவுறின் 
    நாளுநாதன்னமர்கின்றநாகேச்சரநண்ணுவார் 
    கோளுநாளுந்தீயவேனுநன்காங்குறிக்கொண்மினே.        6

    காளமேகம் நிறக் காலனோடு அந்தகன் கருடனும் 
    நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவு உறின் 
    நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் 
    கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்மினே.

    kALamEkam niRak kAlanOTu, antakan, karuTanum, 
    nILam Ay ninRu eyta kAmanum, paTTana ninaivu uRin, 
    nALum nAtan amarkinRa nAkEccuram naNNuvAr 
    kOLum nALum tIyavEnum, nanku Am; kuRikkoNminE!

பொருள்:     காளமேக நிறக்காலன்; அந்தகன், கருடன், தூரத்தே நின்று மலரம்பு எய்த 
காமன் முதலியோர் அழிந்த காரணத்தை நினைவுற்றால் தலைவனாகிய சிவன் நாளும் விரும்பி
அமர்ந்துள்ள திருநாகேச்சுரத்தை நண்ணுவார்; திருநாகேச்சுரத்தைச் சரணாக நண்ணியவர்களைக் 
கோளும் நாளும் தீயவேனும் தீய செய்யா; நன்மையே செய்யும்; இவ்வுண்மையைக் கருத்தில் 
கொண்மின். 

குறிப்புரை:     காளம் - கருமை. காலன் அந்தகன் என்னும் இருவரும் வெவ்வேறு ஆவர். 
கருடன் பட்டது - இத்தலத்தில் ஐந்தலைப் பாம்பின் பணி கொண்டு கருடனைச் செற்ற வரலாறு 
குறித்தது. 'மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள்' (பெரிய. 2310). கோள்களும் நாள்களும் 
தீயன எனினும் நல்லன ஆகும்.

    The black-coloured god of death (Kaalan), the blind man, the mystical bird 
Garuda (i.e.) the conveyance of Thirumaal - all these and Kaaman, the god of love 
who used his arrow from a distance, were defeated by Lord Civan. The devotees who 
think daily of these actions of Civan and worship the Lord will find even bad 
planets and bad days doing only good to them. Remember this always.

2764.     வேயுதிர்முத்தொடுமத்தயானைமருப்பும்விராய்ப் 
    பாய்புனல்வந்தலைக்கும்பழங்காவிரித்தென்கரை 
    நாயிறுந்திங்களுங்கூடிவந்தாடுநாகேச்சரம் 
    மேயவன்றன்னடிபோற்றியென்பார்வினைவீடுமே.        7

    வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய்ப் 
    பாய் புனல் வந்தலைக்கும் பழங்காவிரித் தென்கரை 
    நாயிறும் திங்களும் கூடி வந்தாடு நாகேச்சரம்
    மேயவன் தன்னடி போற்றி என்பார் வினை வீடுமே.

    vEy utir muttoTu mattayAnai maruppum virAy, 
    pAy punal vantu alaikkum pazagkAvirit tenkarai- 
    nAyiRum tigkaLum kUTi vantu ATum--nAkEccuram 
    mEyavantan aTi "pORRi!" enpAr vinai vITumE.

பொருள்:     மூங்கில் உதிர்த்த முத்துக்களுடன் யானையின் தந்தங்களும் கலந்து பாய்கின்ற 
வெள்ளம் கொண்டுவந்து அலைக்கும் பழங்காவிரியின் தென்கரையில், சூரியனும் சந்திரனும் 
கூடி வந்து தீர்த்தம் ஆடும் திருநாகேச்சுரத்தில் எழுந்தருளியிருப்பவனின் திருவடிகளைப் போற்றி 
என வழிபடுவோருடைய வினைகள் அனைத்தும் அழியும்.

குறிப்புரை:     ஞாயிறு - சூரியன். சூரிய சந்திரர் வழிபட்ட தலம். சந்திரன்னொடு சூரியர் தாம் 
உடன் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்தலையரவின் பணிகொண்டருள் மைந்தர்போல் 
மணிநாகேச்சுரவரே (தி.5 ப.52 பா.4). வீடும் - அழியும்.

    The river Cauvery water carries the pearls said to have fallen from the bamboo 
plants and the tusks of elephants, these get dropped on the banks of the south Cauvery 
near the city of Naakech-churam. The city flourishes with these, the Cauvery wealth. 
The sun and the moon visit the city of Naakech-churam and worship our Lord Civan in 
the temple. Those servitors who worship the holy feet of our Lord and praise Him will 
get their bad karma wiped out.

2765.     இலங்கைவேந்தன்சிரம்பத்திரட்டியெழில்தோள்களும் 
    மலங்கிவீழம்மலையாலடர்த்தானிடமல்கிய 
    நலங்கொள்சிந்தையவர்நாள்தொறும்நண்ணுநாகேச்சரம் 
    வலங்கொள்சிந்தையுடையாரிடராயினமாயுமே.        8

    இலங்கை வேந்தன் சிரம் பத்திரட்டி எழில் தோள்களும் 
    மலங்கி வீழ அம்மலையால் அடர்த்தான் இடம் மல்கிய 
    நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணு நாகேச்சரம் 
    வலம் கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.

    ilagkai vEntan cirampattu, iraTTi ezil-tOLkaLum, 
    malagki vIza(m) malaiyAl aTarttAn iTam--malkiya 
    nalam koL cintaiyavar nALtoRum naNNum--nAkEccuram, 
    valam koL cintai uTaiyAr iTar Ayina mAyumE.

பொருள்:     இலங்கை வேந்தன் இராவணனின் தலை பத்தும் இருபது எழிலான 
தோள்களும் சாய்ந்து வீழக், கயிலை மலையின் அடியில் நசுக்கினான்; அச்சிவன் 
எழுந்தருளிய இடம், நலம் நல்கும் சிந்தனையை உடையவர்கள் தினந்தோறும் அடையும் 
திருநாகேச்சுரம். அதை வலம் வரும் கருத்து உடையவர்களின் இடர்கள் ஆயின மாய்ந்தொழியும்.

குறிப்புரை:     வீழ அடர்த்தான், சிந்தைக்கு நலம் தியாகபலம். வலம் - திருக்கோயிலைச் சூழ்தல்.

    Our Lord Civan pressed His Himalayan mountain with His toe and crushed king
Raavanan's ten heads and twenty shoulders. This Lord Civan is manifest in the temple 
in Naakech-churam city. The servitors of brilliant virtues and pleasing manners go to 
the temple daily and worship our Lord. In this temple those who take the right side 
and worship our Lord with sincere mind will get their sufferings wiped out fully 
in their life.

2766.     கரியமாலும்மயனும்மடியும்முடிகாண்பொணா 
    எரியதாகிந்நிமிர்ந்தானமரும்மிடமீண்டுகா 
    விரியினீர்வந்தலைக்குங்கரைமேவுநாகேச்சரம் 
    பிரிவிலாதவ்வடியார்கள்வானிற்பிரியார்களே.         9

    கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா 
    எரியதாகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டுகா 
    விரியினீர் வந்து அலைக்கும் கரைமேவு நாகேச்சரம் 
    பிரிவிலாத அவ் அடியார்கள் வானிற் பிரியார்களே.

    kariya mAlum, ayanum, aTiyum muTi kANpu oNA 
    eriatu Aki(n) nimirntAn amarum iTam--INTu kA 
    viriyin nIr vantu alaikkum karai mEvum--nAkEccuram 
    pirivilAta(v) aTiyArkaL vAnil piriyArkaLE.

பொருள்:     கரியனாகிய திருமாலும், நான்முகனும் அடியும் முடியும் காண முடியாமல் 
நெருப்புப் பிழம்பாக உயர்ந்தான் ஆகிய சிவன் விரும்பி அமரும் இடம், காவிரி வெள்ளம் பெருகி 
மோதி அலைக்கும் கரையில் மேவிய திருநாகேச்சுரம் அதை விட்டுப் பிரிதல் இல்லாத 
அடியார்கள் சிவலோகத்தைப் பிரியார்.

குறிப்புரை:     காண்பு-  காட்சிக்கு. காவிரியினீர் கரையை அலைக்கும் நாகேச்சுரத்தைப் 
பிரியாதவர் சிவலோகத்தைப் பிரியார்.

    The dark coloured demigod Thirumaal and Brahma were unable to see our Lord's holy 
feet and head. At the moment our Lord Civan became an infinitely tall supernal flame. 
This Lord is manifest in the temple in Naakech-churam city situated on the southern 
bank of the Cauvery where the floodwater rushes speedily with waves. Those servitors 
who never move away from Naakech-churam city and the temple and worship Him regularly 
will not leave Civa Lokam.

2767.     தட்டிடுக்கியுறி தூக்கிய கையினர் சாக்கியர் 
    கட்டுரைக்கும்மொழிகொள்ளலும்வெள்ளிலங்காட்டிடை 
    நட்டிருட்கண்நடமாடியநாதன்நாகேச்சரம் 
    மட்டிருக்கும்மலரிட்டடிவீழ்வதுவாய்மையே.        10

    தட்டிடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் 
    கட்டுரைக்கும் மொழி கொள்ளலும் வெள் இலங்காட்டிடை 
    நட்டிருட் கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் 
    மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.

    taTTu iTukki uRi tUkkiya kaiyinar, cAkkiyar, 
    kaTTuraikkum mozi koLLalum! veLLil amkATTu iTai         
    naTTiruLkaN naTam ATiya nAtan nAkEccuram, 
    maTTu irukkum malar iTTu, aTi vIzvatu vAymaiyE.

பொருள்:     பாயை இடுக்கி உறியைத் தூக்கிய கையினராகிய சமணரும், சாக்கியரும் 
கற்பனை செய்து உரைக்கும் மொழிகளைக் கொள்ளன்மின். பாடைகள் கிடக்கும் சுடுகாட்டிடை 
நள்ளிருளில் கூத்தாடிய நாதன் திருநாகேச்சுரத்தானைத் தேனிருக்கும் மலரினை இட்டுத் 
திருவடிகளில் வீழ்வது மெய்ம்மையான நன்மையைப் பயக்கும்.

குறிப்புரை:     கட்டுரைக்கும் மொழி கொள்ளலும் - கட்டிச் சொல்லும் சொற்களைக் 
கொள்ளாதேயுங்கள். கொள்ளல் என்னும் முன்னிலை ஒருமை ஏவல் வினையுடன் உம்மைச் 
சேர்த்துப் பன்மையேவல் வினையாக்கியவாறுணர்க. வெள்ளில் - பிணப்பாடை. 
நடு இருள் - நட்டிருள்.

    The Jains move about in the city carrying food plates in their armpit, 
and a pot hanging from the pole on their shoulders. The Jains and the Buddhists 
preach false propaganda with embellished similes. The devotees of Lord Civan, 
dancing at midnight in the burning ghat, never listen to these men. These servitors 
take plenty of flowers filled with honey, go to the temple and prostrate before 
Lord Civan and sing in praise of Him. This piety will yield the truest benefit.

2768.     கந்தநாறும்புனற்காவிரித்தென்கரைக்கண்ணுதல் 
    நந்திசேருந்திருநாகேச்சரத்தின்மேல்ஞானசம் 
    பந்தன்நாவிற்பனுவல்லிவைபத்தும்வல்லார்கள்போய் 
    எந்தையீசன்னிருக்குமுலகெய்தவல்லார்களே.        11

    கந்த நாறும் புனற் காவிரித் தென்கரைக் கண்ணுதல் 
    நந்தி சேரும் திருநாகேச்சரத்தின் மேல் ஞானசம் 
    பந்தன் நாவில் பனுவல்லிவை பத்தும் வல்லார்கள் போய் 
    எந்தை ஈசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.

    kantam nARum punal kAvirit tenkarai, kaNNutal 
    nanti cErum tiru nAkEccurattin mEl, njAnacam 
    pantan nAvil panuval(I) ivaipattum vallArkaL, pOy, 
    entai Ican irukkum(m) ulaku eyta vallArkaLE.

பொருள்:     மணம் நாறும் புனல் வெள்ளமுடைய காவிரியாற்றின் தென்கரையினில் நெற்றிக் 
கண்ணுடைய சிவபெருமான் எழுந்தருளும் திருநாகேச்சுரத்தின்மேல் ஞானசம்பந்தன் நாவினால் 
நவின்ற இத்திருப்பனுவல் பத்தினையும் வல்லவர்கள் எந்தை ஈசனாகிய சிவபிரான் இருக்கும் 
உலகினை எய்த வல்லவர்களாவர்.

குறிப்புரை:     கந்தம் - மணம். கண்ணுதல் நந்தி - சிவபிரான். உலகு - சிவலோகம்.

    Our Lord is known as the Lord with third eye on the forehead. He is manifest 
in the temple in Naakech-churam city. The temple is on the southern bank of the river 
Cauvery which flows with sweet smelling water. Our saint Thiru-gnana-Sambandar chanted 
over this Lord at Naakech-churam city these ten Tamil verses. The eminent scholars
may go to the temple and chant these ten verses sung by our Thiru-gnana-Sambandar 
on the Lord of Naakech-churam city. Such sincere people will definitely reach the 
Civa Loka, the top most heaven where our Supreme Being is manifested.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            119ஆம் பதிகம் முற்றிற்று
            End of 119th Hymn
            
            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண்: 256                பதிக எண்: 120

120. திருமூக்கீச்சரம்                120. THIRU-MUKKEECH-CHURAM

பண்: செவ்வழி                    Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 2 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது, காவிரியின் 
தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலம் ஆகும். திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து 
உறையூர் செல்ல நகரப் பேருந்துகள் பல உள்ளன. இது உறையூரிலுள்ள திருக்கோயிலாகும். 
இறைவர் பஞ்சவர்ணேசுவரர். இறைவியார் காந்திமதியம்மை. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் 
சிவதீர்த்தம். இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்த திருப்பதியாகும். தமிழ்நாட்டு மூவேந்தரும் 
சேர்ந்து வழிபட்ட பதியாகும். உதங்க முனிவர்க்குச் சிவபெருமான் ஐந்து காலங்களில் ஐந்து 
வர்ணமாகக் காட்சியளித்த தலம். கத்துருவின் மகன் கார்க்கோடகன் வந்து பூசித்துப் 
பேறுபெற்றான். வேதச் சுருதி என்னும் அந்தணன் பூசித்துப் பேயுரு நீங்கப்பெற்றான்.

    வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி 
வென்றமையால் இத்தலத்திற்குக் கோழியூர் என்ற வேறு பெயரும் உண்டு. இதற்கு ஞானசம்பந்தர் 
பதிகம் ஒன்று இருக்கின்றது. திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதற்குத் 
தலபுராணம் எழுதியுள்ளார்கள்.  அது அச்சில் வெளிவந்துள்ளது. உறையூர்க் காந்திமதியம்மை 
பிள்ளைத் தமிழையும் அவர் செய்திருக்கிறார். இன்னம் பல பிரபந்தங்கள் இக்கோயிலுக்கு உண்டு. 
பழுதுபட்டிருந்த இந்தக் கோயிலைத் தேவகோட்டையார் திருப்பணி செய்துள்ளனர். கல்தூண்களில் 
புராண வரலாறுகள் செதுக்கப் பட்டிருக்கின்றன.

பதிக வரலாறு

    கற்குடி மாமலைமேல் எழுந்த கனகக் கொழுந்தினைப் போற்றி நற்றமிழ்மாலை 
புனைந்தருளிய ஞானசம்பந்தர், புலன்கள் ஐந்தும் செற்றவரது திருமூக்கீச்சரம் பணிந்து
பாடியது இத்திருப்பதிகம்.

            திருச்சிற்றம்பலம்

2769.     சாந்தம்வெண்ணீறெனப்பூசிவெள்ளஞ்சடைவைத்தவர் 
    காந்தளாரும்விரலேழையோடாடியகாரணம் 
    ஆய்ந்துகொண்டாங்கறியந்நிறைந்தாரவரார்கொலோ 
    வேந்தன்மூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோர்மெய்ம்மையே.        1

    சாந்தம் வெண்ணீறு எனப்பூசி வெள்ளம் சடை வைத்தவர் 
    காந்தளாரும் விரல் ஏழையோடு ஆடிய காரணம் 
    ஆய்ந்து கொண்டாம் அறிய நிறைந்தாரவர் ஆர்கொலோ 
    வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.

    cAntam veNnIRu enap pUci, veLLam caTai vaittavar, 
    kAntaL Arum viral EzaiyOTu ATiya kAraNam             
    Ayntu koNTAm, aRiya(n) niRaintAr avar ArkolO? 
    vEntan mUkkIccurattu aTikaL ceykinRatu Or meymmaiyE.

பொருள்:     சாந்தம் ஈது என வெண்ணீறு பூசி, கங்கை வெள்ளத்தைச் சடையில் வைத்தவர்; 
செங்காந்தளை ஒத்த விரல்களை உடைய ஏழையுடன் மகிழ்ந்தவர்; அவ்வாறு மகிழ்ந்து ஆடியதற்குக் 
காரணம் ஆய்ந்து அறியத் தக்கது; வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்ற மெய்ம்மையை 
ஆராய்ந்து அறிய அறிவு நிறைந்தவர் யார்கொல்?

குறிப்புரை:     வெண்ணீறு சாந்தம் எனப்பூசி 'சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த நீறு' 
(தி.1. ப.52.  பா.7). காந்தள் ஆரும் விரல் - காந்தளை ஒத்த கைவிரல்கள். ஏழை - உமாதேவியார். கடவுள் 
நிறைவு ஆய்ந்து கொண்டறியத்தக்கது. கோச்செங்கட்சோழ நாயனார் கட்டுவித்த மாடக்கோயில் 
ஆதலின் வேந்தன் மூக்கீச்சரம் எனப்பட்டது. இப்பதிகத்தில் வரலாறு பற்றிய உண்மைகளைக் காண்க.

    Our Lord Civan smears all over His body the holy ashes treating it as 
sandalwood paste. He supports the river Ganges in His entangled hair locks. 
Our Lord has embedded His consort Uma Devi on the left half of His body. 
Her fingers are similar to white species of malabar glory lily. Is there 
any one who made any research to find out the reason for our Lord to become
a concomitant Supreme Being with His consort Uma Devi? The temple was built 
by the Chola king Kochengat-cholan. The Lord is present in this Thiru-
mukkeech-churam temple. The Lord's sincerity in this temple is that He is 
one with His consort and called Arthanaareeswarar.

2770.     வெண்டலையோர்கலனாப்பலிதேர்ந்துவிரிசடைக்
    கொண்டலாரும்புனல்சேர்த்துமையாளொடுங்கூட்டமா 
    விண்டவர்தம்மதிலெய்தபின்வேனில்வேள்வெந்தெழக் 
    கண்டவர்மூக்கீச்சரத்தெம்மடிகள்செய்கன்மமே.        2

    வெண் தலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
    கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா             
    விண்டவர் தம்மதில் எய்தபின் வேனில்வேள் வெந்தெழக் 
    கண்டவர் மூக்கீச்சரத்து எம்மடிகள் செய் கன்மமே.

    veNtalai Or kalanAp pali tErntu, viricaTaik 
    koNTal Arum punal cErttu, umaiyALoTum kUTTamA, 
    viNTavartam matil eyta pin, vEnilvEL ventu ezak 
    kaNTavar--mUkkIccurattu em aTikaL--cey kanmamE.            

பொருள்:     பிரம கபாலமாகிய வெளிறிய தலையைக் கலனாகக் கொண்டு பிச்சை தேர்வார்;
விரிந்து பரந்த சடையில் நிறுத்த அரிய கங்கைப் புனலைச் சேர்த்தவர்; உமையாளொடும் கூடியவர்; 
பகைத்தவர்களின் மதில்களை எய்து அழித்தார்; பின் வேனில் வேளும் எரியில் வேவச் செய்து பின் 
எழக்கண்டார்; இவை மூக்கீச்சரத்து அடிகள் செய்த செயல்கள்.

குறிப்புரை:     கொண்டல் - கொள்ளுதல். காற்று, மேகம் எனல் இங்குப் பொருந்தாது. 
வேனில் வேள் -மன்மதன்.

    Our Lord Civan carries in His hand the human white skull to accept alms. 
He supports the river Ganges in His entangled hair locks. He retains His consort 
Uma Devi on the left side of His body. He exterminated the three forts of the asuras 
who were His antagonists by sending an arrow to their three castles in the air.
He burnt the god of love, Manmathan, by opening His third eye in His forehead 
which emitted fire and destroyed Manmathan. All these actions were executed by 
our Lord, manifest in the temple in Thiru-mukkeech-churam.

2771.     மருவலார்தம்மதிலெய்ததுவும்மான்மதலையை 
    உருவிலாரவ்வெரியூட்டியதும்முலகுண்டதால் 
    செருவிலாரும்புலிசெங்கயலானையினான்செய்த             
    பொருவின்மூக்கீச்சரத்தெம்மடிகள்செயும்பூசலே.        3

    மருவலார் தம்மதில் எய்ததுவும் மான் மதலையை 
    உருவிலார் அவ் எரியூட்டியதும் உலகு உண்டதால் 
    செருவில் ஆரும்புலி செங்கயல் ஆனையினான் செய்த         
    பொருவின் மூக்கீச்சரத்து எம்மடிகள் செயும் பூசலே.

    maruvalArtam  matil eytatuvum, mAn matalaiyai 
    uruvilAra(v) eriyUTTiyatum,--ulaku uNTatAl, 
    ceruvil, Arum puli, cegkayal ANaiyinAn ceyta-
    poruvil mUkkIccurattu em aTikaL ceyum pUcalE.

பொருள்:     சேர பாண்டியர்களை வென்று தமிழ்கூறும் நல்லுலகை ஆண்ட 
கோச்செங்கட்சோழன் சமைத்த நிகரிலாத மூக்கீச்சரத்து எம் சுவாமிகள் தன்னொடு
பொருந்தாத அசுரர்களின் முப்புரங்களை அழித்ததுவும், திருமாலின் மகனை உருவில்
நிறைய எரியூட்டியதும் ஆகிய பூசலை ஆராய்ந்து மெய்ம்மையை அறிவர் யார்? 

குறிப்புரை:     மால்மதலை- மன்மதன். உருவில் ஆர - வடிவத்தில் நிறைய. புலிசெங்கயல் 
ஆனை- சோழ பாண்டிய சேரர்க்குரிய மூன்றும் மூவேறுயிர்களையும் முறையே 
மும்மண்டலத்திலும் உள்ளனவாயும் இருத்தல் அறிக. புலிவிற் கெண்டை என்பதில் 
வானவரம்பனாதலின், வானிற்றோற்றும் வில்லைக் கொண்டனர். 'தென்னவனாயுலகாண்ட 
செங்கணார்க்கு அடியேன்' மூக்கீச்சரத்தில் மூவேந்தர் திருப்பணியும் உண்டு போலும்.                         

    The emperor for the three kingdoms of Cheraas, Cholaas and Pandyaas was 
Kochengat-cholan. He built the temple in the city of Thiru-mukkeech-churam. 
In this city our Supreme Being is manifest. The conflicts in which Civan 
participated ended in the destruction of the three castles of the asuras. 
Then He burnt Kaaman, the god of love and son of Thirumaal. These two actions 
are well known to the whole world.

2772.     அன்னமன்னந்நடைச்சாயலாளோடழகெய்தவே 
    மின்னையன்னசடைக்கங்கையாள்மேவியகாரணம் 
    தென்னன்கோழியெழில்வஞ்சியுமோங்குசெங்கோலினான் 
    மன்னன் மூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோர்மாயமே.         4

    அன்னம் அன்னந் நடைச் சாயலாளோடு அழகு எய்தவே 
    மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம் 
    தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் 
    மன்னன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே.

    annam anna(n) naTaic cAyalALOTu, azaku eytavE             
    minnai anna caTaik kagkaiyAL mEviya kAraNam- 
    tennan, kOzi ezil vanjciyum Ogku cegkOlinAn, 
    mannan--mUkkIccurattu aTikaL ceykinRatu Or mAyamE!

பொருள்:     அன்னப் பறவை போன்ற மென்னடைச் சாயல் கொண்ட உமையம்மையை 
இடப்பாகத்திற் கொண்ட அழகுடன் மின்னலைப் போல ஒளிதிகழும் சடையில் கங்கையாளைப் 
பொருந்திய காரணம் பாண்டிய, சோழ சேர மண்டலங்களில் ஓங்கிய  செங்கோலினை உடைய 
வேந்தன் கோச்செங்கணான் சமைத்த திருமூக்கீச்சரத்து   அடிகளாகிய சிவபிரான் செய்யும்             
மாயமே, இதன் மெய்ம்மையை யாரறிவார்? 

குறிப்புரை:     சாயலாள்- உமையம்மையார். தென்னன் -தென்பாண்டி நாட்டான். செங்கோல் 
ஏனையிரண்டும் மண்டலத்திலும் ஓங்கும் பெருமை நாயனாருக்கு உண்டு என்று உணர்த்துகின்றதால் 
மும்மண்டலத்தும் ஓங்கும் செங்கோல் என்க. தென்னன் என்பது பாண்டி மண்டலத்துக்கு 
ஆவதால் ஆகுபெயர்.

    In the area of southern kingdoms, the city Uraiyoor and Vanchi 
are the capitals of Cholaas and Pandyaas. However, the very famous honest 
ruler holding in his hand the sceptre as the symbol of royal power was 
called Kochengat-cholan. He extolled himself as emperor and built the 
temple in the city of Thiru-mukkeech-churam. The Supreme Being is manifest 
in the temple in Thiru-mukkeech-churam city along with His consort Uma Devi 
in a gorgeous manner. She walks like swan. Our Lord who is such a great 
Supreme Being supports the river Ganges in His lightning like entangled 
hair locks. What is His purpose?

2773.    விடமுனாரவ்வழல்வாயதோர்பாம்பரைவீக்கியே 
    நடமுனாரவ்வழலாடுவர்பேயொடுநள்ளிருள் 
    வடமனீடுபுகழ்ப்பூழியன்தென்னவன்கோழிமன் 
    அடன்மன்மூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோரச்சமே.        5

    விடம் முனார் அவ் அழல் வாயதோர் பாம்பரை வீக்கியே 
    நடம் முனார் அவ் அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் 
    வடம் மன் ஈடுபுகழ்ப் பூழியன் தென்னவன் கோழிமன் 
    அடன் மன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்ற ஓர் அச்சமே.

    viTam munAr av azal vAyatu Or pAmpu arai vIkkiyE        
    naTam mun Ar av azal ATuvar, pEyoTu naL iruL;
    vaTa man nITu pukazp pUziyan, tennavan, kOziman,
    aTal man--mUkkIccurattu aTikaL ceykinRatu Or accamE!

பொருள்:     தீயினைப் போலச் சுட்டெரிக்கும் நஞ்சினை வாயில் உடைய கொடிய 
பாம்பினை அரையில் கட்டி, பேயொடு நள்ளிருளில் ஊழித் தீயில் கூத்தாடுதலையும் 
உடையர்;  வடக்கில் நீண்ட புகழினை உடையவன்;  சேரன், பாண்டியன், சோழ மன்னன் 
போர் வேந்தனாகிய கோச்செங்கட்சோழன் சமைத்த மூக்கீச்சரத்து  அடிகள் செய்யும் 
செயல் பேரச்சமே.  இச்செயலின் மெய்ம்மையை அறிவார் யார்?

குறிப்புரை:     நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டிப் பேயொடு நள்ளிருளில் தீயில் 
நடமாடுவர்.  வடமன் நீடுபுகழ்- வடக்கில்  மிக நீடிய கீர்த்தி, பூழியன்- பாண்டியன், கோழிமன்-
உறையூர்க் கிறைவன். அடல்மன்- போர்வேந்தன்.

    The mighty emperor Kochengat-cholan was considered a famous pandyan king 
for the northern kingdom, and as a chola king for Uraiyoor. He created the temple 
in the city of Thiru-mukkeech-churam. In this city temple, our Lord Civan is manifest .
He puts on His waist the snake which has poison in its fiery mouth. In the dark 
midnight He dances with the devils in the fire of the burning ghat. Are not these 
two actions of Civan terrible to those who witness them? 

2774.     வெந்தநீறுமெய்யிற்பூசுவராடுவர்வீங்கிருள் 
    வந்தெனரவ்வளைகொள்வதுமிங்கொருமாயமாம் 
    அந்தண்மாமானதன்னேரியன்செம்பியனாக்கிய 
    எந்தைமூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோரேதமே.         6

    வெந்த நீறு மெய்யிற் பூசுவர் ஆடுவர் வீங்கிருள் 
    வந்து எனர் அவ்வளை கொள்வது இங்கொரு மாயமாம் 
    அந்தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய 
    எந்தை மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றது ஓர் ஏதமே.

    venta nIRu meyyil pUcuvar; ATuvar, vIgku iruL; 
    vantu, enar av vaLai koLvatum igku oru mAyam Am-         
    am taN mA mAnatan, nEriyan, cempiyan Akkiya- 
    entai mUkkIccurattu aTikaL ceykinRatu Or EtamE.

பொருள்:     வெந்த சாம்பலை மேனியில் பூசுவர்; வீங்கு இருளில் கூத்தாடுவார்; இங்கு வந்து 
என்னுடைய கைவளை கொள்வதும் ஒரு மாயமாம்; செந்தண்மை உடையவன்; பகைவரது மானத்தை 
அழிப்பவன்; நேரியன்; செம்பியன்; கோச்செங்கட் சோழன் உண்டாக்கிய மூக்கீச்சரத்துள் எந்தை; 
அவ்வடிகள் செய்கின்றது ஒரு ஏதமே.

குறிப்புரை:     மெய்யில் நீறு பூசுவர், இருளில் ஆடுவர். இங்கு வந்து என்வளை கொள்வதும் ஒரு 
மாயமாம். இத்திருக்கோயில் மூவேந்தராலும் வழிபடப்பட்டது என்பதை 3, 9 பாடல்களாலும் 
அறிக. மானதன்-பகைவரது  மானத்தை அழிப்பவன். மானத்தை உடையவன். நேரியன் 
என்பவை சோழனையே குறித்தன.

    The mighty emperor is honoured by poets in meaningful songs. He is called 
Nerian and Chembian- these  two words represent the Chola King - the emperor is 
Kochengat-cholan. He created the temple in Thiru-mukkeech-churam city . In this 
temple , our Lord Civan is manifest. He smears His body with holy ashes and is 
grand in appearance. His avocation is to dance whenever He wants to do. In Dark 
hours,He comes very near me and with inflamed desire removes my very precious 
bangles. Is it not a fallacy of Lord Civan?

2775.     அரையிலாருங்கலையில்லவனாணொடுபெண்ணுமாய் 
    உரையிலாரவ்வழலாடுவரொன்றலர்காண்மினோ 
    விரவலார்தம்மதில்மூன்றுடன்வெவ்வழலாக்கினான் 
    அரையன்மூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோரச்சமே.        7

    அரையில்  ஆருங்கலை இல்லவன் ஆணொடு பெண்ணுமாய்             
    உரையிலார் அவ் அழல் ஆடுவர் ஒன்றலர் காண்மினோ 
    விரவலார் தம் மதில் மூன்று உடன் வெவ்வழல் ஆக்கினான் 
    அரையன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே.

    araiyil Arum kalai illavan; ANoTu peNNum Ay             
    uraiyil Ar av azal ATuvar; onRu alar; kANminO- 
    viravalArtam matil mUnRu uTan vev azal AkkinAn,         
    araiyan mUkkIccurattu aTikaL, ceykinRatu Or accamE!        

பொருள்:     இடையில் பொருந்தும் ஆடையில்லாதவன்; பெண்ணுமாவன்; ஆணுமாவன்; 
இவ்விரண்டில் ஒன்றாகச் சொல்லப்படுவானல்லன்; தீயாடுவர்; ஒன்றலர்; பகைவருடைய 
மதில்கள் மூன்றையும் ஒருசேர வெவ்வழல் கொளச் செய்தான்; வேந்தன் செய்த மூக்கீச்சரத்து 
அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே.

குறிப்புரை:     அரையில் ஆரும் கலையில்லவன் - இடையிற் பொருந்தும் உடையில்லாதவன். 
திகம்பரன், பெண்ணுமாய் ஆணுமாகி (பெரிய, தில்லைவாழ்). ஒன்றலர்காண்- பலபலவேடமாகும் 
பரன், விரவலார்- பகைவர். அரையன்- கோச்செங்கட்சோழநாயனார்.

    Our Lord Civan is a renowned figure, half male and half female. His avocation 
is to dance holding fire on His hand. He disguises Himself in many ways. He destroyed 
the three castles of His antagonists with an arrow carrying fire on its tip. Our Lord 
Civa is manifest in the temple in Thiru-mukkeech-churam city built by chola king 
Kochengat-cholan. Our Lord's terrific actions are these, a few out of many.

2776.     ஈர்க்குநீர்செஞ்சடைக்கேற்றதுங்கூற்றையுதைத்ததும் 
    கூர்க்குநன் மூவிலைவேல்வலனேந்தியகொள்கையும் 
    ஆர்க்கும்வாயானரக்கன்னுரதைந்நெரித்தவ்வடல் 
    மூர்க்கன்மூக்கீச்சரத்தடிகள்செய்யாநின்றமொய்ம்பதே.        8

    ஈர்க்கு நீர் செஞ்சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் 
    கூர்க்கு நன்மூவிலை வேல்வலன் ஏந்திய கொள்கையும் 
    ஆர்க்கும் வாயான் அரக்கன் உரதை நெரித்த அவ்வடல் 
    மூர்க்கன் மூக்கீச்சரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.

    Irkkum nIr cenjcaTaikku ERRatum, kURRai utaittatum, 
    kUrkkum nal mUilaivEl valan Entiya koLkaiyum,-- 
    Arkkum vAyAn arakkan(n) urattai(n) nerittu, av aTal 
    mUrkkan--mUkkIccurattu aTikaL ceyyAninRa moympu atE.

பொருள்:     ஆரவாரிக்கும் வாயான் அரக்கன் இராவணனின் நெஞ்சுரத்தை நெரித்த 
வலியனாகிய  மூக்கீச்சரத்து அடிகள்; தன் ஓட்டத்தில் இழுத்துச் செல்லும் நீரினைச் 
செஞ்சடையில் ஏற்றதும்; எமனை உதைத்துக் கொன்றதும்; கூர்மையான நல்ல மூவிலை 
வேலினை வலம் ஆக ஏந்திய கொள்கையும் ஆகிய செயல்கள் அவருடைய வல்லமையை 
வெளிப்படுத்துவனவே.

குறிப்புரை:     ஈர்க்கும் - இழுக்கும். கூர்க்கும் - கூராக இருக்கும். ஆர்க்கும் - ஆரவாரம் செய்யும்.

    Our Lord Civan is manifest in the temple in Thiru-mukkeech-churam city. What He 
has done as strong actions are (1) our Lord supports the river Ganges in His entangled 
hair locks and keeps it invisible. The Ganges water is extremely cool. Those who touch 
the water get benumbed. (2) He holds in His hand the three-pronged very sharp battle-axe 
as an emblem of His victory in various actions. (3) Raavanan shouts out 'hurrah!' out of 
joy from his mouth, an extraordinary, strong angry foe to devas. He was crushed by the 
Lord. These are the strong actions of our Lord of Thiru-mukkeech-churam. 

2777.     நீருளாரும்மலர்மேலுறைவான்நெடுமாலுமாய்ச் 
    சீருளாருங்கழல்தேடமெய்த்தீத்திரளாயினான் 
    சீரினாலங்கொளிர்தென்னவன்செம்பியன்வில்லவன் 
    சேருமூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோர்செம்மையே.        9

    நீர் உளாரும் மலர் மேல் உறைவான் நெடுமாலும் ஆய்ச் 
    சீர் உளாரும் கழல் தேட மெய்த் தீத்திரள் ஆயினான் 
    சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் 
    சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் செம்மையே.

    nIruL Arum malarmEl uRaivAn, neTumAlum Ay, 
    cIruL Arum kazal tETa, meyt tIttiraL AyinAn- 
    cIrinAl agku oLir tennavan, cempiyan, villavan, 
    cErum--mUkkIccurattu aTikaL ceykinRatu Or cemmaiyE.

பொருள்:     நீருள் பூக்கும் மலராகிய தாமரையின் மேல் உறைபவன் பிரமன். நெடுமால் 
இருவரும் கூடிப் பெருமையுடைய கழல்களைத் தேட ஞானத்திரளாய் நின்ற பெருமான்; 
பெருமையுடன் ஒளிரும் தென்னவன் செம்பியன் வில்லவன் மூவரும் சேர்ந்து வழிபடும் -
மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஒப்பற்ற செம்மையே.

குறிப்புரை:     மெய்த்தீத்திரள்- ஞானத்திரளாய் நின்ற பெருமான் (தி. 1 ப. 69 பா.3). 
தென்னவன்- பாண்டியன். வில்லவன் - சேரன். செம்பியன் -சோழன்.

    The eminent and most distinct kings are pandya kings, chera kings and 
chola kings. All these three kings visited the temple in Thiru-mukkeech-churam 
city and worshipped our Lord Civan manifest here. In the deep water tanks the 
lotus flower blossoms with very long stem. In that flower our tutelary four 
faced Brahma is manifest. He and the tall Thirumaal went in search of the 
famous holy feet of our Lord Civan and His holy head. At that moment, Lord Civa 
appeared as dazzling infinite, supernal flame before these two.

2778.     வெண்புலான்மார்பிடுதுகிலினர்வெற்றரையுழல்பவர் 
    உண்பினாலேயுரைப்பார்மொழியூனமதாக்கினான் 
    ஒண்புலால் வேல்மிகவல்லவனோங்கெழிற்கிள்ளிசேர்
     பண்பின்மூக்கீச்சரத்தடிகள்செய்கின்றதோர்பச்சையே.        10

    வெண் புலான் மார்பிடு துகிலினர்வெற்றரை உழல்பவர் 
    உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அதாக்கினான் 
    ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளிசேர் 
    பண்பின் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் பச்சையே.

    veN pulAl mArpu iTu tukilinar, veRRu arai uzalpavar 
    uN pinAlE uraippAr mozi Unam atu AkkinAn- 
    oN pulAl vEl mika vallavan, Ogku ezil kiLLi cEr 
    paNpin-mUkkIccurattu aTikaL ceykinRatu Or paccaiyE.

பொருள்:     பகைவரின் உடலைச் சிதைத்த வேலினனாகிய எழில்மிகு கிள்ளி சேரும் 
மூக்கீச்சரத்து அடிகள் பருத்த உடல்மேல் துகிலைப் போர்ப்பவராகிய தேரர்; ஆடையில்லாமல் 
அலைபவராகிய சமணர் தன் முன்னை வினைப்பயன் நுகர்வாலே உரைக்கும் பொய் 
மொழிகளை வெற்றுரையாக்கினான். அவன் செய்கின்ற செயல் என்றும் வாடாது நிற்பதுவே.

குறிப்புரை:     துகில் - ஆடை. வெற்றரை - ஆடையில்லாமை குறித்தது. உண்பினாலே 
- உண்டபிறகு

    The Buddhists cover their body with white dress which emits bad smell of 
raw meat. The Jains roam about without any dress. While these people take their food, 
they utter false propaganda. Our Lord rendered those words meaningless. Our Lord 
holds His conquering lance, which emits foul smell of meat. The chola king constructed 
this temple in Thiru-mukkeech-churam city. Our Lord manifests Himself in the temple 
and His action against the Buddhists' and Jains' false propaganda proving it as 
vain is His novel action.

2779.     மல்லையார்மும்மடிமன்னர்மூக்கீச்சரத்தடிகளைச்             
    செல்வராகநினையும்படிசேர்த்தியசெந்தமிழ் 
    நல்லராய்வாழ்பவர்காழியுள்ஞானசம்பந்தன் 
    சொல்லவல்லாரவர்வானுலகாளவும்வல்லரே.        11    

    மல்லையார் மும்மடி மன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்         
    செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் 
    நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன் 
    சொல்ல வல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே.            

    mallai Ar mum muTimannar mUkkIccurattu aTikaLaic 
    celvar Aka ninaiyum paTi cErttiya centamiz, 
    nallarAy vAzpavar kAziyuL njAnacampantan             
    colla vallAr avar, vAn ulaku ALavum vallarE.            

பொருள்:     செல்வம் மிக்க முடிமன்னர்கள் மூவரும் வந்து வணங்க நின்றவர் மூக்கீச்சரத்து 
அடிகள். அவரைச் செல்வராக நினையும்படி காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழில் சொன்னது
 இத்திருப்பதிகம். அன்புடையோராய் இத்திருப்பதிகப் பாடல்களைச் சொல்ல வல்லவர் 
இவ்வுலகத்தை மட்டுமன்றி வானுலகாளவும் வல்லர்.

குறிப்புரை:     மல்- வலிமை. மும்முடி மன்னர்- முடிவேந்தர் மூவர். ஞானசம்பந்தன் என்று 
இத்திருப்பாடல்களைக் குறித்தருளினார். சொல்லவும் வல்லார். ஆளவும் வல்லார். 

    All three kings i.e., pandyaas, cheras, and cholas were expert wrestlers. 
They come to Thiru-mukkeech-churam city and worship our Lord Civa in the temple. 
Our saint Thiru-gnana-Sambandar is a native of Seerkaazhi city where virtuous 
scholars live. He came before the Lord in the temple at the Thiru-mukkeech-churam 
city and sang in praise of the Lord in chaste Tamil ten verses. Those scholars 
who can memorise and could sing these verses will be able to rule heaven too.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            120ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 120th Hymn
            
            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத்தொடர் எண்: 257                பதிக எண் - 121

121. திருப்பாதிரிப்புலியூர்                121. THIRU-P-PAATHIRI-P-PULIYOOR

பண்: செவ்வழி                    Pann:  Chevvazhi

திருத்தல வரலாறு

    பாதிரி மரத்தைத் தலத்துக்குரிய மரமாகக் கொண்டமையாலும், புலிக்கால் முனிவரால் 
(வியாக்கிரபாதர்) பூசிக்கப்பெற்றமையாலும் இது இப்பெயர் பெற்றது. திரு- அடைமொழி. 
இது திருப்பாதிரிப்புலியூர் என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. 
கடலூர் (புதுநகர்) என இவ்வூர் வழங்குகிறது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் 
கடலூர் வரப்பேருந்துகள் உள்ளன.  இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

    இறைவர் திருப்பெயர் தோன்றாத்துணைநாதர். 'திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் 
துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே' என்ற இத்தலத்து முதற்பதிகத்திலுள்ள           
அப்பர் பெருமானின் திருவாக்கு இதற்குச் சான்றாகும். இறைவியார் திருப்பெயர் பெரிய நாயகி 
அம்மை.  தலவிருட்சம் பாதிரி. இதை  வடமொழியில் பாடலம் என்பர். தீர்த்தம்- கெடிலநதி. 
இது தென்திசைக் கங்கை என்று பாராட்டப் பெற்றுள்ளது. 

    திருநாவுக்கரசர் பெருமானைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் தள்ள, 
அப்பொழுது அவர் 'சொற்றுணை வேதியன்' எனத் தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை 
ஓதிக் கரையேறப் பெற்றதால், அவ்வூர் இப்பொழுது கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கப் 
பெறுகின்றது. சுவாமிகள் கரையேறி இப்பதிக்கு முதலில் வந்தபோது 'ஈன்றாளுமாய்' எனத் 
தொடங்கும் பதிகம் பாடப்பெற்றது. மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல்
வடிவமாகச் சாபமிடப் பெற்றார். அவர் இத்தலத்து இறைவரைப் பூசித்துச் சாபநீக்கம் பெற்றார். 
இச்செய்தி, 'முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்து' என்னும் இக்கோயிலுக்குரிய 
திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின் திருவாக்கால் புலப்படுகின்றது. இத்தலத்திற்கு 
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் 
இருக்கின்றன. சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய 
கலம்பகமும் இருக்கின்றன.

    'சிவாய நமவென்று நீறணிந்தேன் 
    தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூரானே'

என்னும் அப்பர் பெருமானுடைய திருவாக்கு, 'சிவாய நம' என்று சொல்லித் திருநீற்றை 
அணிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. 'திருந்தா வமணர்தந் தீநெறிப் 
பட்டுத் திகைத்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன்' என்னும் அவருடைய 
திருவாக்கு. அவர் சமண சமயத்திலிருந்ததற்கு அகச்சான்றாய் உள்ளது.

    இவ்வூரில் திருக்கோவலூர் ஆதீனத்தைச்சேர்ந்த ஒரு மடாலயம் இருக்கின்றது. அது
வீரசைவ மடமாகும்.

பதிக வரலாறு

    செல்வமல்கிய தில்லைமூதூரில் திருநடம் பணிந்து  திருத்தினைநகர் பாடித் 
திருமாணிகுழியை  அணைந்து ஏத்தி, திருப்பாதிரிப்புலியூரை உற்று, முன்னம் மாமுடக்கால்           
முயற்கு அருள்செய்த வண்ணத்தை மொழிந்து ஏத்திப்பாடிய திருப்பதிகம். 

            திருச்சிற்றம்பலம்

2780.     முன்னநின்றமுடக்கால்முயற்கருள்செய்துநீள்
    புன்னைநின்றுகமழ்பாதிரிப்புலியூருளான் 
    தன்னைநின்றுவணங்குந்தனைத்தவமில்லிகள் 
    பின்னைநின்றபிணியாக்கையைப்பெறுவார்களே.        1

    முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள் 
    புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் 
    தன்னை நின்று வணங்கும் தனைத்தவம் இல்லிகள் 
    பின்னை நின்ற பிணி ஆக்கையைப் பெறுவார்களே.

    munnam ninRa muTakkAl muyaRku aruLceytu, nIL 
    punnai ninRu kamaz pAtirippuliyUr uLAn 
    tannai ninRu vaNagkum tanait tavam i(l)likaL, 
    pinnai ninRa piNi yAkkaiyaip peRuvArkaLE.

பொருள்:     முன்னொரு காலத்தில் இங்கு வழிபட்ட முடங்கிய கால் முயலுக்கு அருள் 
செய்தவர், நெடிய புன்னை மரங்கள் நின்று கமழ்கின்ற பாதிரிப்புலியூரில் உள்ளார். அவரை 
வழிபட்டு நிற்கும் தவம் சிறிதேனும் இல்லாதவர்கள் பின்னர் வருந்தும் பிணியுள்ள உடலைப் 
பெறுவார்கள்.

குறிப்புரை:     முடக்கால் முயற்கு அருள் செய்து- இத்தலத்தில் முற்காலத்தில் முடங்கிய 
காலொடு முயலாகும் சாபம் பெற்ற மங்கண முனிவர் அச்சாபம் நீங்கப்பெற்ற வரலாற்றைக்
குறிப்பது. சிவபிரானை வழிபடும் தவம் வாய்க்கப்பெறாதவர்கள் பிணியுடைய உடம்பொடு 
வருந்துவர்.

    Long ago in this city, there was a saint by name Mangana Munivar. He got     
a curse to become a rabbit with crippled legs. Our Lord Civa, manifest in 
Thiru-p paathiri-p-puliyoor, rescued him from the curse, graced him and gave 
back his original life. In this city, very long mast wood trees grow in large 
numbers. Their flowers spread smell all over the areas. Those who do not have 
the grace to pray to this Lord, will get bad diseases in their birth. 

2781.     கொள்ளிநக்கபகுவாயபேய்கள்குழைந்தாடவே 
    முள்ளிலவம்முதுகாட்டுறையும்முதல்வன்னிடம் 
    புள்ளினங்கள்பயிலும்பாதிரிப்புலியூர்தனை 
    உள்ளநம்மேல்வினையாயினஒழியுங்களே.         2

    கொள்ளி நக்க பகு ஆய பேய்கள் குழைந்து ஆடவே 
    முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் 
    புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர் தனை 
    உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.

    koLLi nakka pakuvAya pEykaL kuzaintu ATavE, 
    muL ilavam mutu kATTu uRaiyum mutalvan(n) iTam, 
    puL inagkaL payilum pAtirip puliyUr tanai 
    uLLa, nammEl vinai Ayina oziyugkaLE.

பொருள்:     எரிகொள்ளி போன்று தீயினை உமிழும் பிளந்த வாயை உடைய பேய்கள் 
மகிழ்ந்து ஆடும் சுடுகாடு; முள் இலவமரங்கள் உள்ள அச்சுடுகாட்டில் உறையும் முதல்வனின் 
இடம் எதுவெனில், பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூர். அத்திருப்பாதிரிப்புலியூரில் 
அருளாட்சி புரியும் இறைவன் தன்னை நினைத்து வழிபட்டு உம்மேல் உள்ள 
வினைகளாயினவற்றை ஒழியுங்கள்.

குறிப்புரை:     முதல்வனது திருப்பாதிரிப்புலியூரை நினைத்து வழிபட்டு வினைகளை         
ஒழியுங்கள் (நுணுகுங்கள் பா.8).

    The bhutas, when they laugh, emit fire through their mouth. They sway 
their body and dance. In this burning ghat the thorny shrub, grows in large 
numbers. Here, our Lord Civa's avocation is to dance. In this city, swan, 
peacock and such other birds live in large numbers. Oh ye people! think of 
this city Thiru-p-paathiri-p-puliyoor and worship our Lord Civan in the temple. 
Then you can wipe out your bad karma from your life .

2782.     மருளினல்லார் வழிபாடுசெய்யும்மழுவாளர்மேல் 
    பொருளினல்லார்பயில்பாதிரிப்புலியூருளான் 
    வெருளின்மானின்பிணைநோக்கல் செய்துவெறிசெய்தபின்             
    அருளியாகத்திடைவைத்ததுவும்மழகாகவே.        3

    மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் 
    பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் 
    வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து வெறி செய்தபின்         
    அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகாகவே.

    maruL il nallAr vazipATu ceyyum mazuvALar, mEl 
    poruL il-nallAr payil--pAtirip puliyUr uLAn, 
    veruLin mAnin piNai nOkkal ceytu, veRi ceyta pin
    aruLi AkattiTai vaittatuvum(m) azaku AkavE.

பொருள்:     மயக்கமற்ற ஞானிகள் வழிபாடு செய்யும் மழுவாளர்; தனக்குமேல் ஒருபொருள் 
இல்லாத நல்லார் ஆகிய சிவனார் திருப்பாதிரிப்புலியூரில் உள்ளார்.  வெருண்ட மானின் 
பிணையை நோக்கி, காதல் கொள்ளச் செய்து பின் அருளித் தம்முடைய திருமேனியிடப்  
பாகத்தில் வைத்ததுவும் அழகே.

குறிப்புரை:     மருள் இல் நல்லார் - மயக்கமற்ற ஞானிகள். மேல் பொருள் இல்நல்லார் - 
தனக்குமேல் ஒரு பொருள் இல்லாத சிவனார். அம்மையப்பரான உண்மை குறித்தது.

    The saints who have no fear in their minds and never get infatuated, 
worship our Lord Civan in the temple, this Lord is peerless, with nobody above 
Him. His consort Paarvathi has fluttering eyes like a female deer. Lord Civan 
directly sees the giddiness of Paarvathi and draws her towards Him to appreciate 
Him. Then He embedded her on His body and this is the most gorgeous and 
exquisite action.

2783.    போதினாலும்புகையாலுமுய்த்தேயடியார்கள்தாம் 
    போதினாலே வழிபாடுசெய்யப்புலியூர்தனுள் 
    ஆதிநாலுமவலம்மிலாதஅடிகள் மறை                
    ஓதிநாளும்மிடும்பிச்சையேற்றுண்டுணப்பாலதே.        4

    போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம் 
    போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள் 
    ஆதிநாலும் அவலம்இலாத அடிகள்மறை                 
    ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்றுண்டு உணப்பாலதே.

    pOtinAlum pukaiyAlum uyttE aTiyArkaL tAm 
    pOtinAlE vazipATu ceyya puliyUrtanuL, 
    AtinAlum(m) avalam(m) ilAta aTikaL maRai
    Oti, nALum iTum piccai ERRu uNTu uNappAlatE?

பொருள்:     மலர்கள் தூபம் முதலியன கொண்டு அடியார்கள் ஆகமங்களில் விதித்த 
பொழுதுகளில் வழிபாடு செய்யத் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள, முதல்வன், 
அவலம் இலாத அடிகள் ஆகிய சிவன் நான்கு மறைகள் ஓதி நாளும் இடப்பெறும் பிச்சை 
ஏற்று உணப்பாலதே. 

குறிப்புரை:     போது- புஷ்பம். போதினால்- விதித்த காலங்களில்.  நாலும்-நான்கும், 
தொங்கும், பிச்சைக்குச் செல்லும்போதும் வேதம்  ஓதிய உண்மையுணர்க. உண்டு உணப்பாலது 
என்பதை ஆராய்தல் வேண்டும்.

    The devotees in Thiru-p-paathiri-p-puliyoor city go to the temple in all 
seasons. They spread good flowers and burn incense to produce good aromatic smoke. 
They worship our Lord Civan without fail daily at the proper time. Our Lord who 
manifests Himself in the temple in Thiru-p-paathiri-p-puliyoor city has no bad 
passions. He daily chants the Vedas and reaches the house of the devotees and 
accepts the charity they give and has the habit of eating the food He receives 
from them. All this is good.

2784.     ஆகநல்லாரமுதாக்கவுண்டானழலைந்தலை 
    நாகநல்லார்பரவந்நயந்தங்கரையார்த்தவன் 
    போகநல்லார்பயிலும்பாதிரிப்புலியூர்தனுள் 
    பாகநல்லாளொடுந்நின்றஎம்பரமேட்டியே.        5

    ஆக நல்லார் அமுதாக்க உண்டான் அழல் ஐந்தலை         
    நாக நல்லார் பரவ நயந்த அங்கு அரை ஆர்த்தவன் 
    போக நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள் 
    பாக நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.

    Akam nallAr amutu Akka uNTAn: azal aintalai 
    nAkam, nallAr parava(n), nayantu agku arai Arttavan-
    pOkam nallAr payilum pAtirippuliyUrtanuL, 
    pAkam nallALoTu ninRa em paramETTiyE.

பொருள்:     உமாதேவியார் நஞ்சினை அமுதமாக ஆக்க அதனை உண்டான்; நல்லார் 
பரவ நச்சு வெப்பத்தை உடைய நாகத்தைக் கச்சாக அரையில் ஆர்த்தவன்; போக நல்லார் 
வாழும் திருப்பாதிரிப்புலியூரில் மாதொருபாகமாக எம் பரமேட்டி நின்றார்.

குறிப்புரை:     உமாதேவியார் அமுதாக்கிக் கொடுக்க நஞ்சையுண்டான் நல்லோர் பரவ 
நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையிற்கட்டியவன். போகமாதர் 
பயிலும் புலியூர்.

    The young damsels learn music, dance and various other arts for advancement 
in their life. Our Lord embeds His consort on the left side of His body. Uma Devi 
who occupies the left portion of our Lord's body converted the poison into amrit 
and gave it to our Lord. Our Lord imbibed the poison. Scholars, the good people 
of this city extol our Lord Civa. He likes to wear the five-headed snake, with 
the dreadful poison, around His waist as an ornament.

2785.     மதியமொய்த்தகதிர்போலொளிம்மணற்கானல்வாய்ப் 
    புதியமுத்தந்திகழ்பாதிரிப்புலியூரெனும் 
    பதியில்வைக்கப்படுமெந்தைதன்பழந்தொண்டர்கள் 
    குதியுங்கொள்வர்விதியுஞ்செய்வர்குழகாகவே.        6

    மதியம் மொய்த்த கதிர் போல் ஒளிம் மணல் கானல்வாய்ப் 
    புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் 
    பதியில் வைக்கப்படும் எந்தை தன்பழந் தொண்டர்கள் 
    குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே.        

    matiyam moytta katir pOl oLi(m) maNal kAnalvAyp 
    putiya muttam tikaz pAtirippuliyUr enum 
    patiyil vaikkappaTum entai tan pazantoNTarkaL 
    kutiyum koLvar; vitiyum ceyvar, kuzagAkavE.        

பொருள்:     நெய்தற்கானலில், மொய்த்தது போல் வீசும் நிலவொளியில் வெண்மணற் 
பரப்பு புதிய முத்துக்கள் பரப்பியது போல் இலங்குகின்ற திருப்பாதிரிப்புலியூர் என்னும் பதியில் 
வைத்து வணங்கப்படும் எம் தந்தையின் பழந்தொண்டர்கள் அழகாக ஆனந்தக் கூத்தும் ஆடுவர்; 
ஆகம விதியும் செய்வர்.

குறிப்புரை:     மணல்நிலாப்போல் ஒளிர்கின்றது.  பழந்தொண்டர்கள்  அழகாக 
ஆனந்தக்கூத்தும்  ஆகமவிதியும் செய்வர்.

    Age-old devotees in this city perform their rituals as per aagama rules in a 
very grand manner. Then they do spiritual dance in the temple before our Lord. Near 
the seashore there are many developed gardens and the white sea sand in bright moon 
light looks like pearls. In such a gorgeous city, our Lord Civa is manifest in 
the temple.

2786.     கொங்கரவப்படுவண்டறைகுளிர்கானல்வாய்ச் 
    சங்கரவப்பறையின்னொலியவைசார்ந்தெழப் 
    பொங்கரவம்முயர்பாதிரிப்புலியூர்தனுள் 
    அங்கரவம்மரையில்லசைத்தானையடைமினே.        7    

    கொங்கு அரவப் படுவண்டறை குளிர் கானல்வாய்ச் 
    சங்கு அரவப் பறை இன்னொலியவை சார்ந்து எழப் 
    பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்தனுள் 
    அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடைமினே.            

    kogku aravappaTu vaNTu aRai kuLir kAnalvAyc 
    cagku aravap paRaiyin(n) oli avai cArntu eza, 
    pogku aravam(m) uyar pAtirippuliyUr tanuL 
    agku aravam(m) araiyil(l) acaittAnai aTaiminE!

பொருள்:     பூந்தாதுக்களில் மொய்க்கும் வண்டுகளின் ஒலி நிறைந்த குளிர்ந்த கானலில் 
சங்கொலி, பறையொலி முதலியவை சேர்ந்து எழ, ஒலிகள் பொங்கி எழும் உயர்வுடைய 
திருப்பாதிரிப்புலியூரில் பாம்பினை அரையிலசைத்த பரமனை அடையுங்கள்.

குறிப்புரை:     பூந்தாதுக்களில் ஒலி செய்யும் வண்டுகள், சங்கொலி, பறையின் ஒலி, 
பாம்பரையார்த்த பரமனை அடையுங்கள்.

    In the city of Thiru-p-paathiri-p-puliyoor, the noise due to pomposity 
is heard always.The noise is due to bees when they enter the flowers to suck honey, 
the noise of the conch shell of various sizes, drum beating on the tabor of various 
kinds and another type of drum. Our Lord Civa wears the snake as a band round His waist. 
Oh ye devotees! go to the temple and worship our Lord Civa manifest here.

2787.     வீக்கமெழும்மிலங்கைக்கிறைவிலங்கல்லிடை 
    ஊக்கமொழிந்தலறவ்விரலாலிறையூன்றினான் 
    பூக்கமழும்புனற்பாதிரிப்புலியூர்தனை
    நோக்கமெலிந்தணுகாவினைந்நுணுகுங்களே.        8

    வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கல் இடை 
    ஊக்கம் ஒழிந்து அலற அவ்விரலால் இறை ஊன்றினான்         
    பூக்கமழும் புனற் பாதிரிப்புலியூர்தனை 
    நோக்கம் மெலிந்தணுகா வினை நுணுகுங்களே.

    vIkkam ezum(m) ilagkaikku iRai vilagkal(l) iTai 
    Ukkam ozintu alaRa(v) viralAl iRai UnRinAn,            
    pUk kamazum punal, pAtirippuliyUr tanai 
    nOkka, melintu aNukA, --vinai,--nuNukugkaLE.

பொருள்:     செருக்குடன் எழும் இலங்கைக்கு அரசன் இராவணன் கயிலை மலையினைப் 
பெயர்த்து எடுத்தபோது, அவனது மனவெழுச்சி முற்றும் ஒழிந்து வாய்விட்டு அலறக் கால்விரலை 
ஊன்றி அடர்த்தான். அத்தகு பெருமை வாய்ந்த இறைவனுடைய மலர் மணங்கமழும் நீர்வளம் 
உடைய திருப்பாதிரிப்புலியூர்தனைத் தரிசித்தலால் வினைமெலிந்து அணுகாது நுணுகும்.

குறிப்புரை:     வீக்கம்- பெருமை. விலங்கல்- கயிலை. இறை - சிறிது. நோக்க - நோக்குதலால்- 
வினைமெலிந்து. அணுகா நுணுகுங்கள் (ஒழியுங்கள் பா.2).

    The king of Sri Lanka was a great renowned personality. He tried to lift 
mount Kailash where our Lord Civa was manifest. Then our Lord Civa crushed him 
by pressing the top of the mountain with His toe. This Lord is manifest in the 
temple in Thiru-p-paathiri-p-puliyoor city. Everywhere in this city, sweet smell 
is carried by the air. Also here plenty of water is available everywhere. Those 
people who visit Thiru-p paathiri-p-puliyoor city, go to the temple and worship 
our Lord Civa will find their bad karma languishing and finally wiped out 
completely from their life.

2788.    அன்னந்தாவும்மணியார்பொழில்மணியார்புன்னை 
    பொன்னந்தாதுசொரிபாதிரிப்புலியூர்தனுள் 
    முன்னந்தாவியடிமூன்றளந்தவன்நான்முகன் 
    தன்னந்தாளுற்றுணராததோந்தவநீதியே.        9

    அன்னம் தாவும் அணியார் பொழில் மணியார் புன்னை         
    பொன்னம் தாது சொரி பாதிரிப் புலியூர் தனுள்
    முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் 
    தன்னம் தாள் உற்று உணராத தோந்தவ நீதியே.

    annam tAvum aNi Ar pozil, maNi Ar punnai 
    ponnam tAtu cori pAtirippuliyUr tanuL, 
    munnam tAvi ati mUnRu aLantavan nAnmukan, 
    tannam tAL uRRu uNarAta Ontava nItiyE.

பொருள்:     அன்னப் பறவைகள் தாவி விளையாடும் அழகிய பொழில்களில் 
மணி போன்ற புன்னை மலர்கள் தாது சொரியும் திருப்பாதிரிப்புலியூர் தனுள், முன்பு, 
தாவி மூன்றடியால் உலகை அளந்தவன்; நான்முகன் இருவரும் முயன்றும் சிறிது தாளினை 
உற்று உணராதவராயினர். இது அவருடைய மிக்க நீதி முறைமையாகும்.

குறிப்புரை:     புன்னை பொன்போலும் தாதுக்களைச் சொரியும் உண்மை- திருமுறையில் 
முதற்பாட்டில் உணர்த்தப்பட்டது. முன்னம் . ...அளந்தவன் - திருவிக்கிரமன். தன்னம் - அற்பம். 
திருவடியாகக் கொள்ளின் இனம் பற்றித் திருமுடியும்  கொள்ளப்படும். 

    In this gorgeous city, swans play in the beautiful gardens. In these 
gardens, the flowers in the mast wood trees look like pearl gems. They shower 
their filaments on the ground. They look like golden powder. In ancient days, 
the demigod Thirumaal measured the whole universe with his three strides. 
The other demigod Brahma, was four faced. These two went out in the search 
of the head and feet of our Lord Civa, but failed in their attempts. At that 
moment, our Lord Civan as the embodiment of justice which is the result of 
virtuous penance, took a posture and became conspicuous (the infinite light).

2789.     உரிந்தகூறையுருவத்தொடுதெருவத்திடைத் 
    திரிந்துதின்னுஞ்சிறுநோன்பரும்பெருந்தேரரும்             
    எரிந்துசொன்னவ்வுரைகொள்ளாதேயெடுத்தேத்துமின் 
    புரிந்தவெண்ணீற்றண்ணல்  பாதிரிப் புலியூரையே        10

    உரிந்த கூறை உருவத்தொடு  தெருவத்திடைத்             
    திரிந்து தின்னும் சிறுநோன்பரும் பெருந்தேரரும்             
    எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்துமின்
    புரிந்த வெண்ணீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே.

    urinta kURai uruvattoTu teruvattu iTait 
    tirintu tinnum ciRu nOnparum perun tErarum 
    erintu conna(v) urai koLLAtE, eTuttu Ettumin 
    purinta veNnIRRu aNNal pAtirippuliyUraiyE!

பொருள்:     நீக்கப்பட்ட உடையுடன் தெருவில் திரிந்து தின்னும் இழிந்த விரதிகளாகிய
சமணரும், தேரரும் வயிற்றெரிச்சலினால் சொன்ன பொய்யுரைகளைக் கொள்ளாமல்; 
விருப்பத்தைத் தரும் வெண்ணீறு பூசிய அண்ணலார் திருப்பாதிரிப்புலியூரையே எடுத்து ஏத்துமின்.

குறிப்புரை:     உரிந்த... நோன்பர்- ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை 
உடையவர் என்னும் சமணர். எரிந்து சொன்ன உரை - எரிவினாற் சொன்னார்.

    The Jains roam in the streets without any dress and eat the food they get 
observing fasting. These people and the Buddhists preach indignant words. Oh ye 
people! do not listen to the words of these two races. Instead you turn to worship 
our Lord Civa and praise His virtuous words, and declare His fame by saying 'glory 
to Thee, oh Lord Civa'. Our Lord smears His body with holy ashes and is manifest 
in the temple in Thiru-p-paathiri-p-puliyoor city.

2790.     அந்தணல்லாரகன்காழியுள்ஞானசம் 
    பந்தனல்லார்பயில்பாதிரிப்புலியூர்தனுள் 
    சந்தமாலைத்தமிழ்பத்திவைதரித்தார்கள்மேல் 
    வந்துதீயவ்வடையாமையால்வினைமாயுமே.         11

    அந்தண் அல்லாரகன் காழியுள் ஞானசம் 
    பந்தன் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் தனுள் 
    சந்த மாலைத் தமிழ்பத்து இவை தரித்தார்கள்மேல் 
    வந்து தீய அடையாமையால் வினைமாயுமே.

    am taN nallAr akan kAziyuL njAnacam- 
    pantan, nallAr payil pAtirippuliyUr tanuL, 
    canta mAlait tamiz pattu ivai tarittArkaL mEl, 
    vantu tIya(v) aTaiyAmaiyAl, vinai mAyumE.

பொருள்:     எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்ட அந்தண நல்லார் வாழும் அகன்ற காழி 
நகருள் ஞானசம்பந்தன், அழகிய மகளிர் பயில் திருப்பாதிரிப்புலியூரில் பண்ணிசைத் 
தமிழ்மாலையாகிய இத்திருப்பாடல்கள் பத்தையும் பாடவல்லவர்மேல் தீயவை வந்து அடையா; 
தீமை உடையவை சேராமையால் வினைகள் ஒழியும்.

குறிப்புரை:     அம்தண்நல்லார் - அந்தணர். நல்லார் - பெண்டிர். சந்தம் - பண்ணிசை. 
தீமை உடையவை சேராமையால் வினைகள் ஒழியும்.

    Our saint Thiru-gnana-Sambandar is a resident of Seerkaazhi city. The scholarly 
brahmins do live in the broad streets of Seerkaazhi city. He went to Thiru-p-paathiri-p
puliyoor city where women of great fame do live in large numbers. He went to the temple 
in this city and worshipped our Lord Civa, praised Him and chanted these ten verses 
on our Lord in good musical tone. Those devotees who can memorise these ten verses, 
chant them before our Lord and worship Him will find their bad deeds disappear 
from their life forever.

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            121ஆம் பதிகம் முற்றிற்று 
            End of 121st Hymn

            திருச்சிற்றம்பலம்
            THIRU-CH-CHITRAMBALAM

பதிகத் தொடர் எண் : 258                பதிக எண் : 122

122. திருப்புகலி                    122. THIRU-P-PUKALI

பண் : செவ்வழி                     Pann: Chevvazhi

திருத்தல வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

பதிக வரலாறு

    பதிகத் தொடர் எண் 137ஐப் பார்க்க.

                    திருச்சிற்றம்பலம்.

2791.     விடையதேறிவெறியக்கரவார்த்தவிமலனார்
    படையதாகப்பரசுதரித்தார்க்கிடமாவது
    கொடையிலோவார்குலமும்முயர்ந்தம்மறையோர்கள்தாம்
    புடைகொள்வேள்விப்புகையும்பருலாவும்புகலியே         1

    விடைஅது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்
    படைஅதுஆகப்  பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
    கொடையில் ஓவார் குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
    புடைகொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

    viTai atu ERi, veRi akku aravu Artta vimalanAr, 
    paTai atu Akap paracu tarittArkku iTam Avatu- 
    koTaiyil OvAr, kulamum(m) uyarnta(m) maRaiyOrkaL tAm 
    puTai koL vELvippukai umpar ulAvum pukaliyE.

பொருள்:     எருதினை ஊர்தியாக ஏறுவோன்; நாற்றம் வீசும் எலும்பினையும் அரவினையும் 
அணிந்த பெருமானார்; ஆயுதமாக மழுவினை ஏந்தினார்; அவர் எழுந்தருளிய இடமாவது, 
கொடைக்குச் சலியாதவர்கள், குலமும் உயர்ந்தவர்கள் ஆகிய மறையோர்கள் தம் பக்கங்களில் 
ஆற்றும் வேள்விகளிலிருந்து எழும் புகை விண்ணுலகிலும் உலவும் புகலியே.

குறிப்புரை:     ஆர்த்த - கட்டிய. விமலனார் - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர், 
அநாதிமலமுத்தர். பரசு- மழு. புடை- பக்கம். வேள்வி - யாகம். உம்பர்- ஆகாயம். 
கலை நிலவிய புலவர்களிடர்களை தருகொடை பயில்பவர் (தி. 1 ப. 20 பா. 3). 
புகலி - புகலடைந்த காரணம் பற்றிய பெயர். 'அமரர் புகலால் மலிந்த பூம்புகலி 
மேவிய புண்ணியனே' (தி.1 ப. 63 பா.3).

    This city's name Thiru-p-pukali is one of the twelve names of Seerkaazhi. 
Our Lord Civan sustains the white bull for His conveyance to move about in the cosmos. 
He wears a garland of bones emitting bad smell of meat. He also puts on His body 
the snakes as a garland. He is an immaculate Supreme Being. He holds the battleaxe 
in one of His hands. Our Lord is manifest in the temple in Thiru-p-pukali city. 
In this city, big philanthropists do live in large numbers. Vedic scholars of the 
high positions, Brahmins do live here. They make the sacrificial fire. The smoke 
from the sacrificial fire spreads in the sky over this city.

2792.     வேலைதன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார், 
    ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர்ஆவது - 
    சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச் 
    சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.        2

    வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள்கண்டனார் 
    ஞாலம் எங்கும் பலிகொண்டு உழல்வார் நகராவது 
    சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச் 
    சோலை மேவும் கிளித்தான் சொற் பயிலும் புகலியே.

    vElai tannil miku nanjcinai uNTu iruL kaNTanAr, 
    njAlam egkum pali koNTu uzalvAr nakar Avatu- 
    cAla nallAr payilum maRai kETTup patagkaLaic 
    cOlai mEvum kiLittAn col payilum pukaliyE.

பொருள்:     பாற்கடலில் மிக்கு எழுந்த நஞ்சினை உண்டதால் இருண்ட கண்டத்தினர்; 
உலகமெங்கும் பிச்சையேற்று அலைவார்; அவருடைய நகராவது, மிகவும் நல்லவர்கள் 
வாழ்வது; மறையோர்கள் வேதங்களைச் சொல்லச் சோலைகளில் தங்கும் கிளிகள் 
மறைச் சொல்லைப் பயிலும் புகலியே.

குறிப்புரை:     வேலை- பாற்கடல். உண்டு என்னும் வினையெச்சம். இருள் என்னும் வினைப்பகுதி 
கொண்டது. இருள்கண்டார் - இருண்ட திருக்கழுத்தினை உடையவர். ஞாலம் -பூமி, உலகம், 
நாலம் என்பதன் மரூஉ. உழல்வார் - திரிபவர். நல்லார் சாலப்பயிலும் மறை என்க. சால நல்லார் 
என்றே கொள்ளலுமாம். கிளிகள் நல்லார் பயிலும் மறை(யைக்) கேட்டுப் பதங்களைச் சொற்பயிலும் 
என்க. 'கிளித்தான்' என்பது 'வேற்றுமையல்வழி' (தொல்.   தொகைமரபு.16) என்னுஞ் சூத்திரத்தின்படி
வல்லெழுத்து மிக்கது.)

    Our Lord Civan imbibed the severe poison that came out of the ocean of milk. 
Therefore His throat looks dark blue in colour. He rambles all over the cosmos and 
accepts the alms given to Him. This Civan is manifest in the temple in the city of 
Thiru-p-pukali. Very great scholars learn the Vedas word by word. The parrots living 
in the garden trees nearby listen to these Vedic words and repeat the words as heard 
by them. Thiru-p-pukali is such a gorgeous city where our Lord Civan is manifest.

2793.     வண்டுவாழுங்குழல்மங்கையோர்கூறுகந்தார்மதித் 
    துண்டமேவுஞ்சுடர்த்தொல்சடையார்க்கிடமாவது' 
    கெண்டைபாயமடுவில்லுயர்கேதகைமாதவி 
    புண்டரீகம்மலர்ப்பொய்கைநிலாவும்புகலியே.        3

    வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார் மதித்
    துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம்ஆவது 
    கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி
    புண்டரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.

    vaNTu vAzum kuzal magkai Or kURu ukantAr, matit 
    tuNTam mEvum cuTart tolcaTaiyArkku iTam Avatu- 
    keNTai pAya maTuvil(l), uyar kEtakai, mAtavi, 
    puNTarIkam malarp poykai nilAvum pukaliyE.

பொருள்:     வண்டுகள் வாழும் குழல் மங்கையைத் தன் திருமேனியின் கூறாகக் கொண்டு 
உயர்ந்தார்; பிறைத்துண்டம் பொருந்திய ஒளிரும் தொல் சடையார்; அவருக்கு இடமாவது, மடுவில் 
கெண்டை மீன் பாய, தாழை, குருக்கத்தி, தாமரை மலர்களை உடைய பொய்கை நிலவும் புகலியே.

குறிப்புரை:     மங்கை - உமாதேவியார்.  அவர் குழலில் வண்டுகள் வாழும் என்றது சாதியடை. 
மதித்துண்டம்-பிறை. 'திங்கட்பிளவு' சுடர்ச்சடை. தொல்சடை என்க. தொல்சடை 
என்னும் பண்பு தொகுதிமொழி. சுடர் என்னும் அடைகொண்டதாதலின், சுடரை (-ஒளியை) 
உடைய தொல்சடை என விரிக்க. தொல்சடை என்பதைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறலாகாது 
என்பதை, 'ஐம்பாலறியும் பண்பு தொகுதிமொழியும் ... தொழில் தொகுமொழியும்.. பிறவும்'.. 
மருவின் பாத்திய, புணரியல் நிலையிடை உணரத்தோன்றா' என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால்               
(எழுத்து. 482) உணர்க. கேதகை - தாழை. மாதவி- குருக்கத்திக்கொடி. புண்டரீகம் - தாமரை. 
பொய்கை - மானுட ராக்காத நீர்நிலை (சிந்தாமணி 337)

    Our Lord Civan has embedded His consort Uma Devi on the left half of His body 
with affection. In her entangled locks of hair bees in large numbers swarm round. 
He retains the bright moon on His age-old entangled hair locks. This Lord Civan is 
manifest in the city of Thiru-p-pukali. In this city carp fish jump and play in deep 
ponds full of water. Also in the city, fragrant screw pine plants are many, the 
common delight of the forest, and deep tanks full of water where lotus flowers 
grow in large numbers are also many. Such a fascinating city is Thiru-p-pukali.

2794.     திரியுமூன்றுபுரமும்மெரித்துத்திகழ்வானவர்க் 
    கரியபெம்மானரவக்குழையார்க்கிடமாவது 
    பெரியமாடத்துயருங்கொடியின்மிடைவால்வெயிற் 
    புரிவிலாததடம்பூம்பொழில்சூழ்தண்புகலியே.         4

    திரியும் மூன்றுபுரமும்(ம்) எரித்து, திகழ் வானவர்க்கு
    அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு  இடம் ஆவது 
    பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
    புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண்புகலியே

    tiriyum mUnRu puramum(m) erittu, tikaz vAnavarkku 
    ariya pemmAn2, aravak kuzaiyArkku iTam Avatu
    periya mATattu uyarum koTiyin miTaivAl, veyil
    purivu ilAta taTam pUmpozil cUz taN pukaliyE

பொருள்:     விண்ணில் திரிகின்ற மும்மதில்களையும் எரித்தவர்; இமையவர்க்கு அரிய
பெருமான்; சர்ப்ப குண்டலம் அணிந்தவர்; அவர் எழுந்தருளிய இடமாவது, பெரிய  மாடங்களின்
மேல் உயர்ந்த கொடிகளின் நெருக்கத்தால் வெயில் நிகழ்வதின்றி நிழலைச் செய்வதும், 
பெரிய பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய புகலியே. 

குறிப்புரை:     'அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு' (திருவாசகம்- திருச்சதகம் 35)
அரவக்குழையார் - சர்ப்ப குண்டலம் அணிந்தவர். மிடைவால் -நெருக்கத்தால். வெயில் புரிவு 
இலாத- வெயிலைச் செய்தலின்றி நிழலைச் செய்தலுடைய. தட-பெரிய . பூம்பொழில்-மலர்க்கா.

     The asuras roamed about in the sky in the three forts they had built 
and inflicted intolerable misery on the devas. Our Lord Civa burnt the three cities. 
He excels as the rare Supreme Being for devas. He uses sprouted leaves for His ear 
lobe. He is manifest in Thiru-p-pukali city. In this city very big palatial 
residential buildings are many where the flags waver in the top terrace. 
Also here the white rays of the sun could not enter because of dense gardens 
with many tall trees.

2795.     ஏவிலாருஞ்சிலைப்பார்த்தனுக்கின்னருள்செய்தவர் 
    நாவினாள்மூக்கரிவித்தநம்பர்க்கிடமாவது 
    மாவிலாருங்கனிவார்கிடங்கில்விழவாளைபோய்ப் 
    பூவிலாரும்புனற்பொய்கையில்வைகும்புகலியே.        5

    ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன்அருள் செய்தவர் 
    நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம்ஆவது 
    மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப் 
    பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.

    Evil Arum cilaip pArttanukku in aruL ceytavar, 
    nAvinAL mUkku arivitta namparkku iTam Avatu- 
    mAvil Arum kani vAr kiTagkil viza, vALai pOyp 
    pUvil Arum punal poykaiyil vaikum pukaliyE.

பொருள்:     விற்போர் வல்ல அருச்சுனனுக்கு இனிய அருள் செய்தவர்; நாமகளின் 
மூக்கை அரிவித்த நம்பர்; அவருக்கு இடமாவது, மாஞ்சோலையில் உள்ள மாங்கனிகள் 
அகழியில் விழ, வெருண்ட வாளைமீன் துள்ளிப் போய்த் தாமரை பூவலர்ந்த பொய்கையில் 
தங்கும் புகலியே.

குறிப்புரை:     நாவினாள் - நாமகள். மூக்கு அரிவித்த நம்பர் - மூக்கினை அரியச்செய்த 
சிவபிரானார். தக்கயாக சங்காரத்தில் வீரபத்திரர் அரிந்தார். சுருதியான் தலையும் நாமகள் 
மூக்கும் . . இறுத்து அவர்க்கு அருளும் பரமனார் (தி. 3 ப. 118 பா. 5). நம்பர்- உயிர்களின் 
விருப்பிற்குரியர். விருப்பாயிருப்பவர். மாவில் ஆரும் கனி- மாமரத்தில் நிறைந்த பழங்கள். 
வார் கிடங்கில்- நீண்ட அகழியில். விழ - விழலால். வாளை போய்ப் பொய்கையில் வைகும் என்க. 

    Our Lord Civa graced Archunan (one of Pandava brothers). He is a very famous 
archer in the bow. Our Lord instructed Veerabadran to destroy the sacrificial hall 
created by Thakkan. When he went there he saw many devas. Among them he saw Brahma and 
his wife goddess Saraswathi. Because of her presence in Thakkan's sacrificial hall 
Veerabadran chopped her nose. Later our Lord graced her. This Lord is manifest in 
Thiru-p-pukali. In this city, mango fruits, fully ripe fall into the big ponds 
under the trees. The sword fish rush to these ponds, full of flowers. The 
Thiru-p-pukali city is such an awe-inspiring city.

2796.     தக்கன்வேள்விதகர்த்ததலைவன்தையலாளொடும் 
    ஒக்கவேயெம்முரவோனுறையும்மிடமாவது 
    கொக்குவாழைபலவின்கொழுந்தண்கனிக்கொன்றைகள் 
    புக்கவாசப்புன்னைபொன்திரள்காட்டும்புகலியே.     6

    தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும் 
    ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது - 
    கொக்கு, வாழை, பலவின் கொழுந் தண் கனி, கொன்றைகள், 
    புக்க வாசப்புன்னை, பொன்திரள் காட்டும் புகலியே.

    takkan vELvi takartta talaivan, taiyalALoTum
    okkavE em uravOn uRaiyum(m) iTam Avatu- 
    kokku, vAzai, palavin kozun taN kani, konRaikaL, 
    pukka vAcappunnai, pontiraL kATTum pukaliyE.

பொருள்:     தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன்; தலைவன், உமாதேவியாருடன் 
சமமாக எம்முடைய வலியோன் உறையும் இடமாவது, மா, வாழை, பலவின் கொழுமையான 
கனிகளுடன் கொன்றைகள் புன்னைகள் பொன் திரட்சியைக் காட்டும் புகலியே.

குறிப்புரை:     தக்கன்- தக்ஷன். தகர்த்த- அழித்த. தையலாள் -உமாதேவியார். கொக்கு-மாமரம். 
புன்னைகள் பொன் போலப் பூக்கும். திரள் என்பது இங்குத் திரட்சி என்னும் பொருளதாயிற்று.

    Our Lord Civan is the Chief to order the destruction of the sacrificial fire 
of tutelary Thakkan. Lord Civan is the embodiment of spiritual, profound knowledge that 
may induce self-restraint. He is manifest along with His consort in the temple in 
Thiru-p-pukali city. In this city mango trees, banana trees, jack fruit trees are plenty. 
The sweet fragrance of the fruits of all these trees spreads all over the area. Also 
Indian laburnum flower plants, screw pine trees are many in this city. From these 
trees many pollen grains of the flowers fall on the ground. It appears as though golden 
dust has spread all over the area. Such a fascinating city is Thiru-p-pukali.

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

2797.     தொலைவிலாதஅரக்கன்னுரத்தைத்தொலைவித்தவன் 
    தலையுந்தோளுந்நெரித்தசதுரர்க்கிடமாவது 
    கலையின்மேவும்மனத்தோரிரப்போர்க்குக்கரப்பிலார் 
    பொலியுமந்தண்பொழில்சூழ்ந்தழகாரும்புகலியே.        8

    தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து, அவன் 
    தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம்ஆவது - 
    கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்புஇலார், 
    பொலியும்-அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும் - புகலியே.

    tolaivu ilAta arakkan(n) urattait tolaivittu, avan
    talaiyum tOLum neritta caturarkku iTam Avatu-                 
    kalaiyin mEvum manattOr, irappOrkkuk karappu ilAr, 
    poliyum--am taNpozil cUzntu azaku Arum--pukaliyE.

பொருள்:     தோல்வியையே கண்டிராத அரக்கன் இராவணனின் வலிமையை 
தொலைவித்து, அவனுடைய தலையுந் தோளும் நெரித்த சதுரர்; அவருக்கு இடமாவது 
வேத ஆகம புராண இதிகாசம் முதலிய கலைகளில் வல்ல உள்ளத்தை உடையவர்கள். 
இரந்து வந்தவர்களுக்கு இல்லையென மறைக்காதவர்கள் சிறந்து வாழ்வதும் குளிர்ந்த 
பொழில்கள் சூழ்ந்ததும் அழகு நிறைந்ததுமாகிய புகலியே,

குறிப்புரை:     தொலைவு - தோல்வி. உரத்தை - வலியை. மார்பை எனலுமாம். 
தொலைவித்து - ஒழித்து. அவன் தலையும் தோளும் நெரித்த சதுரர் என்க. சதுரர்க்கு - 
மூவர்க்கும் மேலாய முதல்வர். கலை- வேதாகம புராணேதிகாசாதி கலைகள். மனத்தோர் - 
உள்ளத்தையுடைய அந்தணர். கரப்பு இலார்- மறைத்தலில்லாமல் ஈந்துவப்பவர். கரப்பு -                     
மறைப்பு. பொலியும் - விளங்கும். அம் - (அழகு) ஆரும் – நிறையும்.

    The king of Sri Lanka is the most courageous person without any defeat 
in his life. Our Lord Civan shattered his mightiness and crushed his heads and 
shoulders. Lord Civan is the able and Supreme Being. He is manifest in the temple 
in Thiru-p-pukali city. In this city very highly knowledgeable persons in all 
arts and culture live in large numbers. These people will never deny anything 
to those poor people who ask for charity. They are such virtuous people in the 
city. Such an attractive city is Thiru-p-pukali for it has people of aesthetic 
hearts and generous behaviour.

2798.     கீண்டுபுக்கார்பறந்தாரயர்ந்தார்கேழலன்னமாய்க் 
    காண்டுமென்றார்கழல்பணியநின்றார்க்கிடமாவது 
    நீண்டநாரையிரையாரல்வாரநிறைசெறுவினிற்             
    பூண்டுமிக்கவ்வயல்காட்டுமந்தண்புகலியே.        9

    கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் - கேழல் அன்னம்ஆய்க் 
    "காண்டும்" என்றார் - கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது 
    நீண்ட நாரை இரை ஆரல் வார, நிறை செறுவினில் 
    பூண்டு மிக்க(வ்) வயல் காட்டும் அம் தண் புகலியே.

    kINTu pukkAr paRantE uyarntAr-kEzal annam Ayk 
    "kANTum" enRAr--kazal paNiya ninRArkku iTam Avatu- 
    nINTa nArai irai Aral vAra, niRai ceRuvinil 
    pUNTu mikka(v) vayal kATTum am taN pukaliyE.

பொருள்:     நிலத்தைப் பிளந்து புகுந்த திருமால்; ஆகாயத்தே பறந்து உயர்ந்த நான்முகன்
இருவரும் முறையே பன்றியும் அன்னமுமாய்க் காண்போம் என்றவர், காணவியலாமல் 
கழல் பணிய நின்றார்; அவருக்கு இடமாவது, உயரமான நாரைக்கு இரையாகிய ஆரல் 
மீன்கள் நிறைய ஒழுகியோடும் சேறுபூண்டு மிக்க வயல்கள் உள்ள குளிர்ந்த புகலியதே.

குறிப்புரை:     கீண்டு - (நிலத்தைப்) பிளந்து. திருமால் செயல். கேழல்- பன்றி. காண்டும் -
காண்போம். பறந்துயர்ந்தார். பிரான் திருவடிகளை. பணிய- பணிந்து வழிபட. நின்றார்க்கு-
நின்ற சிவபெருமானுக்கு. நாரைக்கு இரையாகிய ஆரல் மீன்கள் ஒழுகியோட. நிறைந்த செறு. 
செறு- சேறு மிக்க வயல் என்பது சந்தம் நோக்கி விரித்தல் விகார முற்றது. 

    The demigod Thirumaal assumed the form of a hog and cut the earth deeply. 
Brahma, the other tutelary, took the posture of a swan and flew over the sky to 
see our Lord's head. They both quarrelled to see Lord Civan's head and feet earlier 
than the other. They tried their level best but failed in the efforts. Then they 
stood before Lord Civan to prostrate on His feet. This Lord Civan is manifest in 
the temple in Thiru-p-pukali city. In this city, herons seek brownish or greenish 
fish. But these fish run along with the water flow. Also in the city the fields are 
full of mud and rich plants. Such a fascinating city is Thiru-p-pukali.

2799.     தடுக்குடுத்துத்தலையைப்பறிப்பாரொடுசாக்கியர் 
    இடுக்கணுய்ப்பாரிறைஞ்சாதஎம்மாற்கிடமாவது 
    மடுப்படுக்குஞ்சுருதிப்பொருள்வல்லவர்வானுளோர்
     அடுத்தடுத்துப்புகுந்தீண்டுமந்தண்புகலியே.         10

    தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர், 
    இடுக்கண் உய்ப்பார் - இறைஞ்சாத எம்மாற்கு இடம்ஆவது - 
    மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான்உளோர், 
    அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே.

    taTukku uTuttut talaiyaip paRippAroTu, cAkkiyar,-- 
    iTukkaN uyppAr--iRainjcAta emmARku iTam Avatu- 
    maTuppu aTukkum curutipporuL vallavar, vAn uLOr, 
    aTuttu aTuttup pukuntu INTum am taN pukaliyE.

பொருள்:     தடுக்குப் பாயினை உடுத்துத் தலைமயிரைப் பறிப்பாராகிய சமணர்களும்,
 சாக்கியர்களும் துன்பத்திற் செலுத்துவார்கள். யாரையும் வணங்காத எம்மானுக்கு இடமாவது, 
வைகறைப் போதில் மடுவில் நீர் மூழ்கும் சுருதிப்பொருள் வல்லவர்களாகிய மறையவர்கள், 
வானுலகத்தவர்கள் முதலியோர் வந்து புகுந்து திரளும் புகலியே.

குறிப்புரை:     பறிப்பார் - சமணர். உய்ப்பார் - செலுத்துவார். உண்டாக்குவார் என்றவாறு. 
இறைஞ்சாத- தலைவணங்காத. வணங்கப்பெறாமை எம்மானது. மடுப்படுக்கும்- (வைகறையில் நீர்) 
மடுவில் குளிக்கும். சுருதிப்பொருள் - வேதார்த்தம். வல்லவர் -  வல்ல அந்தணர். மடுப்பு 
அடுக்கும் எனப் பிரித்து. உட்கொள்ளுதலைப் பொருந்தும் என்று கொண்டு. சுருதிப்பொருளையுட்
கொண்டு என்க. வான் உளோர் -தேவர். பூதேவரும் மாதேவரும் அடுத்து அடுத்துப் புகுந்து 
ஈண்டும் புகலி.

    The Jains in this city put on their body the mat stitched with palmyrah 
leaves.They used to remove their hair from the head. The Buddhists and the Jains 
do not worship our Lord. Our Lord is manifest in the temple in Thiru-p-pukali city. 
The Vedic scholarly Brahmins and the devas who live in heaven come to Thiru-p-pukali 
city one after another and worship our Lord.

2800.     எய்தவொண்ணாஇறைவன்னுறைகின்றபுகலியைக்
    கைதவமில்லாக்கவுணியன்ஞானசம்பந்தன்சீர் 
    செய்தபத்தும்மிவைசெப்பவல்லார்சிவலோகத்தில் 
    எய்திநல்ல இமையோர்களேத்தஇருப்பார்களே.        11

    எய்த ஒண்ணா இறைவன்    உறைகின்ற  புகலியை,
    கைதவம் இல்லாக் கவுணியன் - ஞானசம்பந்தன்-சீர் 
    செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில் 
    எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

    eyta oNNA iRaivan uRaikinRa pukaliyai, 
    kaitavam illAk kavuNiyan--njAnacampantan--cIr 
    ceyta pattum(m) ivai ceppa vallAr, civalOkattil 
    eyti, nalla imaiyOrkaL Etta, iruppArkaLE.

பொருள்:     பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்; திருக்கோயில் 
கொண்டு உறைகின்ற திருப்புகலியை, வஞ்சகம் இல்லாக் கவுணிய குலத்தவன் ஞானசம்பந்தன் 
சீராகச் சொன்ன இப்பத்துத் திருப்பாடல்களையும் செப்ப வல்லவர்கள் சிவலோகத்தை எய்திச் 
சிவபுண்ணியம் செய்த தேவர்கள் போற்றி வழிபடச் சிவானந்தம் துய்த்துப் பதமுத்தி அடைவார்கள்.

குறிப்புரை:     எய்த ஒண்ணா இறைவன்- பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய 
பரம்பரன் (சித்தியார் சூத். 9). 'இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய்' (திருவாசகம் - 
திருச்சதகம் 25 ) உறைகின்ற திருக்கோயில் கொண்டு (கடல் கொண்ட கடை நாளிலும்) அடியார்க்கு 
அருளற்பொருட்டு எழுந்தருளியுள்ள. கைதவம்- வஞ்சகம். நல்ல இமையோர்கள் - சிவலோகத்தை 
அடையச் சிவபுண்ணியம் செய்த நன்மைகளையுடைய தேவர்கள். ஏத்த - எடுத்துப் புகழ்ந்து வழிபட, 
இருப்பார்களே - பேரின்பம் நுகர்ந்து அழியாதிருந்து விளங்கும் சாலோகமான பத முத்தி
யடைந்தாரே யாவர். 

    The souls in the physical body cannot comprehend or conceive our Lord. 
This Lord is manifest in the temple in Thiru-p-pukali city. Our saint Thiru-gnana-
Sambandar by birth belonged to Kouniyar family. He came to the temple and before 
the Lord chanted the famous ten verses. Those scholars who can memorise these 
songs and chant these ten verses before our Lord will reach the Civa Loka - 
the celestial world and will enjoy bliss. There the scholarly devas will praise 
them and they will attain everlasting Mukti. 

            திருச்சிற்றம்பலம் 
            THIRU-CH-CHITRAM-BALAM

            122ஆம் பதிகம் முற்றிற்று
            End of 122nd Hymn 


இரண்டாம் திருமுறை முற்றிற்று      
 

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை Engli