logo

|

Home >

saiva-siddhanta >

pandara-sathiram-arulthiru-dakshinamurthy-desigar-arulicheitha-upadesa-patrodai

பண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச் செய்த உபதேசப் பஃறொடை

உபதேசப் பஃறொடை


	உபதேசப் பஃறொடை

தேனார் கமலம் திருந்தியபூ ஆயிரங்கொண்டு
ஆனாத  அன்பால் அருச்சிகும் - மேனாளில்
ஆங்கதனில் தெய்வீக மாயொன்று அகன்றிடவே
ஏங்கி உயிர்த்தங்கு இரங்கியே - ஒங்கியதோர்
பத்தி விசேடப் பருவால் படிமீதில் 
சித்ர கமலவிழிச் சீருவமை - ஒத்தலுணர்ந்து
அற்சனைக்குத் தாழ்வுபெறாது அம்மா இசைந்ததென
நச்சம் விழியை நயந்திட்டு - மெச்சுவித்தன்று
ஆழியது பெற்றோனும் ஆமுலகம் அத்தனையும்
தாழ்வறவே செய்யுந் தலைமையது - தாழ்வுவரக்		(௫)
கண்டு கலங்கிப் கருணைபெறத் தன்னுதலில்
பண்டுதியா னித்த்ப்  படைப்பதனை - அண்டர்தொழப்
பெற்றோனும் கீழ்மேல் பெரும்பன்றி அன்னமெனும்
மற்றோ ருருவம் மருவியே - இற்றைவரை
காணா துழல அவர் கண்ணகலாது உள்நின்றோன்
தோணாது உலகோடு உயிரனைத்தும் - வீணாகாது
எள்ளுள்குள் எண்ணெயென எங்கும் நிறைந்தகலாது
எள்ளப் படாஇயல்பாம் இன்பநிலைக் - கொள்ளும்			(௧0)
தனுவாதி நான்கும் தருவநிலை யாகில்
உனுமார் உயிர்கள் ஒருகால் - தனுமருள் தான்
பேராமல் நின்று பிரியாத - ஆருயிர்க்காய்
ஐந்தொழில்யாம் செய்துமென அன்றே நியமித்துத்
தந்ததனால் ஐந்தொழிலும் தானகலா - எந்தையென
நின்றோன்;
ஒடுக்கம் நிகழ்த்தியிடுங் கேவலத்தின்
ஒன்றும் அனுபவத்தீர்வு உன்னவே - குன்றாத
தன்னருளோர் ஐந்தாய்த் தயங்குதல்கண்(டு) ஆங்கதனை
மன்னுருவ மாக மருவியே பின்னமுறும்				(௧௫)
காரண‘க்கள் மேவிக் கருதரிய எவ்வுயிரும்
எரகல(து) எய்தத் தனுவாதி - சீருடனே
தோற்றுவித்துத் சத்திநி பாதமும்பார்த்(து) உற்றளவின்
மோக முடனே அனுக்ரகித்துச் - சோகமுறும்
துன்பப் பிறவி துடைத்துத் தொலையாப்பே
ரின்பத்(து) இருத்தியிடும் எங்கோமான்;
தன்னை ஒருகால் தடுமா றியும் நினையா
என்னனைப் பிறப்பறுக்க எண்ணியே - துன்பவினை			(௨0)
ஏல்நாம சாதிக் குணக்கிரியை ஊனமறக்
கொள்ள நினைந்து குலவுதமிழ்ச் சம்பந்தர்
உள்ளம் கிழியருள ஓங்குந் தனது
தலமாய் இலகுபுகழ் தாங்கும் - நலமிகவும்
ஈட்டும் திருவா வடுதுறையில் எவ்வுலகும்
நாட்டம் பெறவருளால் நல்லுருவம் - காட்டியே
சொல்லும் அளவில் சுகப்பே(று) உதவ அருள்
புல்லும் திருவெழுத்துப் பொற்புடன் - பல்லாரும்			(௨௫)
நண்போ(டு) உரைத்திடவே நல் நமச்சி வாயனெனப்
பண்போ(டு) உயர்நாமம் பற்றியே - உண்பதனோ(டு)
ஆனகுணம் நான்கும் அடைந்தகலா ஆருயிருள்
தானுமொறுன்று போல் நடிக்கத் தாங்கியே
						- ஞானகுரு
தேசிகன்நாம் என்று தெளிய இயற்றியிருள்
பாசம் அறுக்கும் பரஞ்சோதி - நேசமுடன்
ஈன்றமுட்டைக் கெய்தும் இரும்பருவம் கண்டுகடல்
தோன்றிக் கமடங் குடக்குரம்பை - கீன்றுருவாய்த்
தன்னை அடையத் தழைத்தருளால் கூவுதல் போல்
என்னைப் பருவம்  இசைவது பார்த்(து) - எந்நலமும்	(௩0)
ஒங்கும் பதியின் உயர்ந்ததவத் தோர்பணிய
வீங்குகிரு பைமேரு வீற்றிருந்து - பாங்கறியா
நீசனெனப் பாச நிகளமறத் தன்நாமம்
பேச அருள் தூதுட் பெருக்கியே - ஒசைபெறும்
காந்தச் செயலாய்க் கடுகும் பசாசமது
சேர்ந்ததுபோல் என்றன் செயலனைத்தும் - ஓய்ந்துமிகந்
ஒன்றும் படிகண்(டு) உளமகிழ்ந்தே;
					- ஒன்றாகா(து)
எஞ்சும் பிறப்பும் இருண்மலமும் எண்ணரிய
சஞ்சிதமும் நாட்டமெழத் தான்விழித்து - வஞ்சவினைக்(கு)
ஈடான மாயை எழிலான நால்வகையும்
கோடா மயக்குங் தனதுதிருக் கைத்தலத்தைத்
தன்னைநினை என்சிரத்தில் தானமைத்துப் - பன்னரிய
மிக்க உயிர்த்தொகையும் மேம்பட்ட எப்பொருளும்
ஒக்க உடனாயுமல்லா(து) ஒங்குநிலை - எக்கண்ணும்
நீங்காத தள்ளத் தலைப்பட்டுத் - தீங்ககலாப்
பாவி செவிவழியாய்ப் பாதலனென் உட்புகுத
மேவிஉப தேசம் விளம்பியே;
					- தேவான				(௪0)
தன்னையான் என்று தருக்கினல்லால் தீயவிருள்
என்னை அணுகாது இராதென்று - முன்னிஎனைத்
தானாகப் பாவித்துத் தானின்ற யானெனவே
மானமுறக் கண்டருளால் மன்னியிட - ஞானமுதல்
தீரவருள் யோகந் திண்ண மிற இயற்றிப்
பாரம் அதுவாய்ப் பரந்துவரும் - சீரான
ஆறத்து வாஅகல ஆன தொழிலருளான்
மாறற் றிடவே மதித்தியற்றி - வேறற்ற
தானேயான் ஆகித் தழைத்தென் னதுந்தானாய்த்
தானே தலைநின்ற தம்பிரான்;
					-ஈனமறப்				(௪௫)
பெத்தத்தும் முத்தியினும் பேரா(து) இலக்கணங்கள்
நித்தத் துவமாய் நிகழ்த்தமிகும் - உத்தமமாய்
நாட்டுகின்ற முப்பொருட்கும் நாசமுறா தேஉணர்த்த
வீட்டுகின்ற சற்கா ரியமென்று - தீட்டுமதால்
ஞானா கமநூல் நயந்துனக்கு நாமனைத்தும்
ஈனாய மில்லா(து) எடுத்துரைக்தும் - ஆனதனில்
ஐயமுற்ற தெல்லாம் அகலவினா(வு) என்றருளி 
மெய்யனரு ளால் உருவம் மேவியே - செய்யௌல(கு)
உண்டாக்கி ஆக்கி உடைத்திருளோ டே யடங்கக்
கண்டிடுவ தென்றுபதி காணுங்கால் - கண்ட			(௫0)
அருவம் உருவம் அருவுருவம் மற்றும்
மருவுங் கணங்குறியாம் மற்ற(து) - ஒருவியே
நிற்பதுவாய் எவ்வுயிர்க்கும் நீங்கா அறிவாகிச்
சொற்பொருளால் உன்னரிய சோதியாய் - அற்பகலும்
இல்லா வெளியாய் இருட்பகையாய் இன்பமதாய்ப்
புல்லறிவால் சுட்டாப் புனிதமதாய் - வல்லதொரு
தானே எவர்க்குந் தனை உணர்த்துந் தத்துவமாய்
ஞான முதற்சிவமாய் ஆக்கி அழிப்ப னென்றாய்
இன்பனே முன்புருவாய் பேசினாய் - என்பதனால்			(௫௫)
எய்துந் துடக்கோ(டு0 இயலாம் விகாரமது
எய்துமென நன்று வீனா என்று;
						- பைதலேய்
காலமது ஒன்றாகிக் காரியமூன் றாயுமற்(கு)
ஏகும் விகராம் இலாததுபோல் - சீலம்
சிதையான் கனவுகண்டோன் செய்யநன வாக
நினையான் கனவுதனை நீங்கக் - கனவதுவும்
தான்துடக்கங் காகத் தகுதியது போலினியக்
கோன்துடக்கத் தேயிருக்குங் கொள்கையென - ஊன்றி நின்ற
ஐயம் ஒழிகென்(று) அகற்றியபின் ஐயனே
செய்ய உயிர்த்தொகையாய் அல்லவாய் - மைஉயிர்கட்(கு)		(௬0)
ஏற்ற தனுவில் இசைவித்(து) இருங்கன்மம்
தீற்றிப் பிறந்தும் இறந்துமவா - ஊற்றமுறும்
ஆணையது காட்டி அகலான் அவையென்ன
வீணகற்றும் ஞான விமலனே - வீணான
உற்பவத்தின் நீங்கா(து) உறிலுனக்கும் உண்டெனும்தீச்
சொற்பெறுமென் றோதநன்றே சொற்றவினா
						- விற்பனனே
நிற்கின்ற வானகத்தில் நிற்கும் சராங்கள்
நிற்பழிந்து பின்னுமுண்டாய் நீங்குகின்ற - கற்பனையில்
தோயாத வான்போல் திணையான நல்லுணர்வும்
தோயாத் உண்மை துணிகென்று - மாயமறக்				(௬௫)
காட்டியபின் 
						நன்றே கருதும் உயிர் அறிவு
நாட்டும் பிறவி நவையென்றும் - தீட்டுகின்ற
வீடின்பம் என்றும் வினைப்பயத்தால் தீநிரயம்
கூடுங்கொல் என்றும் குலவுமுயிர் - விடடைய
உண்டென்றும் பேரா(து) உயிர்க்குயிராய் நிற்குமிறை
உண்டென்றும் தோற்றா(து) உறபிணித்துக் - கொண்டுநிற்கும்
தன்னௌயுங் காட்டாத் தலைமைபெற நின்றனந்தம்
தன்னுடைய சத்தியதாய்த் தானொன்றாய் - மன்னுகின்ற(து)
ஆணவமாம் ஆங்கதனை ஆருயிர்க்கா யேஇரங்கிப்
பேணி நடத்தல் திரோதமாம் - காணியா				(௭0)
ஆணிகொண்டு நிற்குமலம் அற்பமகற் றாதுதொழில்
பூண உறல் மாயை பொசிப்பதற்குக் - காணுலுற
நன்றுதீ(து) என்றவினை நாட்டுகின்ற நான்கானும்
ஒன்றி வரும் அவத்தை ஓர்மூன்றாம் - இன்றதனை
ஓதியிடின் கேவலமொன்(று) உற்ற சகலமொன்று
சோதிவிடு கின்றசுத்தம் ஒன்றென்ன - நாதனே 
என்னைப் பிறியா(து) இருள் இருக்க என்னறிவாய்
உன்னைப் பிறிவறநீ ஓதுதலால் - அன்னதிஉனக்(கு)
உண்டாம் எனநன்(று) உயர்ந்த வினாநீயும்
கண்டோ தினைஎன்று கண்ணருளால்
						- கண்டறியும்
காட்சியற்ற நாட்டம் கதிரோன் அகத்துழலக்
காட்சி ஒழித்த கரும்படலக் - கோட்பாடு
செங்கதிரோற்(கு) இல்லா(து) இருள்விழியிற் சென்றதுபோல்
அங்கரனுக்(கு) இன்றி உயிர்க்காகும் - இங்கறியென்று
ஓதிய பின்னர்;
						உடலிந் தியங்கரணம்
மேதகுக்க லாதிஉயிர் என்பதனில் - தீதறவே
பேதமற நின்றுகண்டு பற்றி அறிந்துழன்றிங்(கு)
ஏதமுற எல்லாம் இயற்றியே - போதவரும்
காணாது காண்கின்ற காட்சிவிட ஐந்தவத்தை
நாணாமல் எய்தும் உயிரெனக்கங் - காணியே			(௮0)
நிற்கும் இவைஅறிவன்(று) என்பதெவன் 
						நின்றன்ன
நிற்கும் துயிலில் துரிசினிமை - வற்கமுறில்
அஞ்சி விரும்பாத லானுமைந்தும் வேறறியப்
பொஞ்சுதிலி னாலும் புகும்விடயம் - எஞ்சா(து)
எழுந்து பற்றிச் சிந்தித்து நிச்சயித்துட் கொள்ள
வழுங்குமத னாலுமிவை மன்னி - விளங்கவே
உச்சாயத் தோடறிந்தங்(கு) இச்சித்(து) இதாகிதத்தில்
பட்ச முடனுவர்ப்புப் பற்றியே - பிச்சதாய்த்
தானழுந்த லானும் தயங்கும் உயிரியங்கல்
ஆன துயிலின் அறிவற்ற - ஈனத்தி					(௮௫)
னானும் சடமனைத்தும் தன்னறிவால் ஆன்மாவே
ஊனமென நீங்கும் உணர்கென்ன;
						- கோனே 
அறிவொன்(று) அறிவால் அறிவதொன்ற(து) என்னும் 
குறியென்னை என்னவினாக் கொண்ட - நெறிநன்று
பானு மதிவிளக்குப் பண்புடைய கண்படிகம்
ஆன அதன் சோதி அதுவன்றி - ஆனதுபோல்
நின்ற உயிர்க்(கு) அன்றி நிகழ்த்தும் இருபொருட்கும்
குன்றாத ஞானமதற்(கு) உள்ளதென - நன்றோதி
என்னை தெருட்டியபின்
						நின்னருளால் கீழ்மேலாய்
உன்னுஞ்சாக் ராதி உடற்கணுறும் - அன்னதனை
ஆக்கும் பொருள்கள் சடமென்று அறிந்தருளால்			(௯0)
நீக்கம் பெற ஆஃது நீங்குமெனை - ஆட்கொண்ட
ஐயா இரண்டவத்தை ஈங்ககன்ற தாங்கொன்று
பொய்யோ எனவிளங்க உன்றன்னைச் - செய்வதுதான்
தந்ததருள் என்னத் தலைவனே ஓதுமருள்
வந்த(து) இல(து) இன்(று) இருளற்றும் - நந்தாது
நிற்கின்ற யானே நிறைந்த பிரமமெனக்
கற்கொண்ட நெஞ்சர் கரையவே - சொற்கள்
அமையா இருள்கொண்(டு) அகன்றிடும்நீ எங்ஙன்
எமையாளும் அப்பொருளோ(டு) என்ன;
						- இமையாதோர்		(௯௫)
கண்டறியாக் கண்ணே கருதரிய பொய்யனைத்தும் 
கண்டறிந்தேன் என் அறிவால் யான் அதனால் - பண்டைப்
பொருளென்ன உன் அறிவு பொய் ஒன்றொன் றாக
மருள் என்று யாமுணர்த்த வந்துஇன்று - இருள் அற்ற
ஏதுஅத னாலும் இறைவர் அறி(வு) உனைப்போல்
ஓதி உணரா அதனாலும் - பேதித்த
தீப்பிணிக்கின்(று) அஞ்சும் திறத்தாலும் தீவனைமுன்
வாய்ப்ப(து) அறியா வழக்காலும்- கோப்புடைய
அப்பொருள்நீ அன்றுஇங்(கு) அருளால் உனக்குள்தாம்
எப்பொருளுந் தானே அறிந்தியற்றும் - மெய்ப்பொருளைத்		(௧00)
தேறென்(று) உறுத்தித் திருந்த உனைக்கண்ட
வாறெங்ஙக் கொண்டே உணர்ந்தேன் எனதறிவால்
என்னை என இன்(று) இயம்புதலும் - மன்னவன் நீ 
காணா அருளதனால் கண்டதெங்ஙன் கண்டினும்
வீணாங் கருவிகள்போல் மேவிடா நாணுகின்ற
பொய்யறிவும் சுட்டறிவால் பொய்யகன்ற போதனுனைச்
செய்ய அரி(து) என் அவையா செப்புகென - உய்யும்
தவத்தாய் உனதறிவைத் தானறிந்த(து) என்றுஇங்(கு)
எவ்ற்றாலும் இன்றி இயல்பாய் - உவப்புடனே
கண்டது போலுமின்னும் கட்டுரைப்ப(து) ஒன்றுனங்கிங்(கு)
உண்டது கேள்.
	நன்றிங்(கு) உகந்திருவர் - மண்டுபெருங்
காதலினால் கூடிக் கலந்தழிவ வான இன்பம்
போதமதால் சுட்டிப் பொருளாக ஓத
உரிமை யுடனே உகந்த பிரிவுடனே 
தானறிந்து கொண்டனைநீ தானருளாய் நின்றென்று
ஞான முதலாய் நடிக்கின்ற - கோனருளிச்
செய்துபின்னும் உன்றன் செயலறநீ தானுனையே
ஐயமறக் காணும் உணர்வதனைச் - செய்தல்சிவ			(௧௧0)
ஞானமென;
	நண்ணும் நவைகண்(டு) அறியாத
ஊனமுடை யேனை உகந்துருவம் - தானான
என் அரசே என்னை எனதறிவாற் சுட்டாமல்
மன்னருளால் யானும் மதியாமல் - நன்னிலைநீ
தந்ததுவும் அற்புதமே தான் எனக்கு மெய்ஞ்ஞானம்
தந்த(து) உணர்(வு) இங்ங(ன்) எனச் சாற்றியதில் - சிந்தைமிக
ஐயுற்ற(து) என்றும் அறிவுக்(கு) அறிவென்ற
மெய் அற்ற தென்னவினா மிக்கதே - பொய்யாம்
உலகும் உயிர்ப்பொருளும் உற்றகலா(து) ஒன்றாய்
இலகு பதியுமிக லாமல் - அலகில்				(௧௧௫)
பிறப்பிறப்பும் பேரா நிராயப் பிணியும்
மறப்பும் நினைப்புமென மன்னும் - திறத்தனவாம்
இத்தனையும் காட்டா இருளும் உனக்குணர்த்த
மெய்த்து வினைஒப்பு மேவவே - துய்ப்பதனுக்(கு)
ஆன அறிவருள அன்று திரோதமதாய்த்
தானின்று நன்றாந் தனிச்சிரிதை - ஊனமற
ஒங்குகிரி யாயோகம் முற்றியற்றி முற்றியபின்
தூங்கும் அவர்விழித்த தோற்றம்போல் - நீங்காத
தீய இருளும் திரண்டகரு மாளவே - துயகதிர்த்
தோற்றம்போல் ஞானமும்நீ மாளவே - தூயகதிர்த்		(௧௨0)
தோற்றம்போல் ஞானமும்நீ தானெனத்தா னேஒளியாம்
தேற்றம் இதனைத் தெளிகென்ன;
						- ஆற்றரிய
நல்ல அருளால் நயந்துபிற விப்பகையைக்
கொல்லான்றோ என்னுருவம் கொண்டதெனச் - சொல்லவிழப்
போற்றும் பொழிதில் புரிந்தருளின் நீஅடங்கத்
தோற்றும் பொருள்நீ துணிஎன்ன - ஆற்றாமல்
அந்தோ எத்ற்குமுத லாம் பொருளுண் டோஎன்ன
நாந்தாப் பொருளின்றி நல்லொளிதான் - வந்த(து)
இலதுலகில் என்று வழக்குரைத்து நாட்டி
நலமுடைய நாதனருள் தன்னால் - நிலவுகின்ற	(௧௨௫)
எல்லாம் அறிந்திறைவற்கு எத்தொழிலும் செய்கின்ற
சொல்லார்ந்த ஞானமின்று சோர்வறவே - புல்ல இன்று
பொற்றதனால் இங்குப் பிறன்குமுணர்(வு) ஏதென்னர்
மற்றதனால் யாதும் மதித்தெவையும் - குற்றமறச்
செய்திடுவ(து) இன்றென்க்குச் சோர்ந்ததொனச் சொப்புதலும்
மெய்யறிவாய் உன்னை விளக்கியதும் - துய்ய
நனாப்போலக் கண்டணைந்த நல்ல அருளும்
கனாப்பொருள்போல் இன்றாய்க் கழியும் - வினாச்சொற்ற
மிண்டறிவால் என்ன மிகுகுறைகள் உண்டாகில்
அண்டர்பொரு மானே அருள் என்ன ; 
						- உண்டாய			(௧௩0)
உன்னுணர்வு சிற்றுணர்விங்(கு) உற்றதுவோ பேருணர்வாம்
அன்னதனால் குற்றமென ஐயனே - மன்னிவரும்
சிற்றுணர்வு பேருணர்வைச் சேர்ந்தால் அதுவன்றி
மற்றுளதோ என்ன மதியுளாய் - உற்றிடினும்
ஒன்றாவ தில்லையென உண்மையனே சொற்றதனுக்(கு) 
ஒன்றாம் உவமை உரையென்ன - நன்றான
சீரார் கதிரொளியில் சென்றடங்கும் கண்ணொளிதான்
நேராம் ஒளியாய் இறந்ததோ - பரரென்ன
நின்ற ஒளியாய் இறந்ததோ - பாரென்ன
நின்ற ஒளியாய் நிரூபிக்கின் கண்ணொளிவே(று)
இன்றெனவே நன்றென்(று) இரங்கியே - பொன்றாத			(௧௩௫)		
செய்ய கதிருஞ் சிறந்த பொரு ளுங்கதிர்சேர்
துய்யவிழிக் கோகதிர்க்கோ தோன்றிடுவ(து) - ஐயமறச்
சொல் என்றிடலும்.

 					விழிக்கரம்தான் அற்றவரே
புல்லும் பிறிவி பொடிப்பரென - வல்லோர்கள்
சொற்ற பனுவல் துணி(வு)என் என இறுதி
பற்றிய தன்று பரமாகி - மற்றுலகம்
காணும் அறிவற்ற கருத்தென்(று) அறிஎனவே
பூண உரைக்கப் புனிதனே - தாணுவைப்போல்
கண்டெவையுஞ் செய்யாக் கருத்தறிய வாம் உவமை
திண்டிறலோய் செப்பென்னச் செய்யவிழி - பண்டிலரை		(௧௪0)
நாட்டமதற் குண்டாக நாட்டுமோ - வாட்டமறச்
செய்ய பசாசுபற்றின் மேம்பட்ட - கையால் 
தொழில்செய்யக் கூடிடுமோ தூயமறை அற்றதுன்பாய்
அழிகின்றார் துன்பொருவற் காகப் - பழியுன்றிச்
செய்வரோ ஈங்கிவைபோல் சேர அறிந்தியற்றா
உய்யுமறி(வு) ஓ(வு)என் றுணர்த்தியிட ;
					  - மெய்யனே
நன்முத்தி ஈதோ நவிலென்ன உன்பதைப்பை
வன்மத் துடன் வாங்கி வைத்தலிது - கன்மமற்ற
சுத்தியிது வாகும் சுகப்பேறு முத்தியென
வித்தகனே என்கேட(து) இன்றியே - சுத்த
அதீதத்தும் உண்டாஞ் சுகமென்னில் தீய
அதீதத்தும் உண்டாக வேண்டும் - விதியென்ன
அன்றைந் தொழிலின் ஒடுக்க(ம்)இளைப் பாற்றலென
நன்றங்(கு) அமலன் நவிற்றலறி - இன்றிங்குத்
தூய்தாய்த் துயின்றோர் துயிலெழுந்த பின் உறக்கம்
ஒதா விதமென்(று) உரைத்திடலும் - சுதன்றி
உள்ளதுபோல் இன்பாம் இனிய சுகமுமுனைக்
கொள்ளுதல்போல் உன்பதைப்புங் கூறரிய - தெள்ளறிவா		(௧௫0)
நீயுமற நின்றழுந்தும் நேர்மைகண்டு கொள்ளென்ன
நேய முதலே நினையாதேன்  - மாயமெலாம்
பற்றிப் பறித்த பரனே பதைப்பற யான்
உற்றடங்கல் யானறியா(து) ஓங்கியிடின் - முற்றும்
உவமை உண்ர்த்(து) என்ன உயர்ந்த இன்பா னோனே
சிவம்மறைந்த நாள்பதைத்த செய்கை - அவமதுதான்
நீ அறியாய் யாமுணர்த்தக் கண்டதுபோல் ஈங்கிவையும்
நீ அறியாய் தாமிவையும் யாமுணர்த்த - ஆயதெனச்
செப்புதலும் என் உயிரே செய்யவிழி யேமணியே
ஒப்புடனே யான் இகழா(து) ஓங்கிநின்ற - அற்புதத்துக்(கு)	(௧௫௫)
இன்றுவமை தாஎன்ன இன்னே வினாயதுநன்(று)
என்று மகிழ்ந்துகிரு பைக்கடல்தான் - ஒன்றாக
யானே பரமென்(று) அயரா(து) உரைத்தநிலை
தானே உவமையெனத் தந்ததற்பின் - ஞானக்
கடலமுதே யானழியாது என்னை இழந்த
திடமருள வந்த அருள் தீரா - உடல்விருத்தி
ஆர்ந்திடுவ(து) எங்ஙனெனத் தானலகை ஆனவர்தாம்
சோர்ந்துண்டல் போலுடற்காம் துப்புமெனப் போந்துனையான்
நீங்கா உவமைதந்த நித்தியஞா னக்கதிரே
தூங்கா ஒளியே துரிசற்றிங்(கு) - ஒங்குமிகும்				(௧௬0)
பூகரும்பின் உள்ளிருந்து போதுவரக் கண்டினிமை
யாங்கனியே என்ன ;
				அருளாளன் - பாங்குடனே
நீயாகி நிற்கின்ற நின்மலபோ தன்நேய
மேயாம் எனஎன் இறைவனே - நேயமுற
ஆம்பரம முத்தி அறியும் உருவழிந்து
போம்பொழுதில் தானே புகுமென்றும் - தீம்பாம்
இருள்சற்(று) அகலாத தால்சீவன் முத்தி
மருவியதிங் கென்ன மதித்தும் - வருமிதனில்
ஐயப்பா டெய்தல் அகல அருள் என்ன
மையுற்ற கண்டம் மறைந்துளோன் - உய்யமுன்னோர்				(௧௬௫)
சொற்ற சிவாகமத்தில் சோர்வறநே யத்தழுந்த
பற்ற உரைத்ததுவும் பற்றுரைக்குச் சுத்திசெயல் ஆயிடுமோ
எல்லிருளாய்த் தோன்றுமிருங் கூகைதனக்(கு) - எல்லென்று
காட்டியிடல் ஆயிடுமோ காட்ட அரிதாமதுபோல்
தீட்டு(ம்)அருள் அற்றவர்க்குத் தேற்றரிதாம் - ஆட்டமிகச்
சீவிக்கும் போதம் அருளால் செயலறவே
ஆவிக்குச் சுத்தி என அறிந்து - நாவதனால்
சீவகந்தீ ராஅதனால் சேர்ந்ததுயிர் முத்தியெனும்
பாவ வலியைமிகப் பார்த்திரங்கல் - ஆவதனால்
நாளைப் புதுமணம் நாளரும்பை இன்றெமக்கிவ்
வேளைக்(கு) இருங்கந்தம் மேவிடெனக் - கோளறவே
நன்னீர் சொரிந்திடினும் நாடி வெகுண்டுகையால்
பன்னிர் படிறு படுத்திடினும் - துன்னுமணம்
காட்டும் பருவமுற்றுக் காதலுறுங் கந்தமதும்
காட்ட மலராக் கணக்கேபோல் - நாட்டுமலம்
விட்டகலோம் என்பவரை வேண்டிஅருள் நேயமுமை
எட்டுணையும் நீங்கா இயல்பதனை - உட்டெளிவீர்			(௧௭௫)
என்றால் அவரால் இசைந்தறியல் ஆகாவாம்
ஒன்றாலும் என்றே உரைத்ததற்பின் - நின்றோங்கும்
நேயத்திற் சீவன் செயலறுதல் சீவன்முத்தி
யாய்  உற்(று) அறையுநன்னூதல் ஆங்கதுவே - மேயமுத்தி
யாவைக்கும் மேலாத லாற்பரம முத்தியெனக்
கூவப் படும் இரண்டாய்க் கூறியிடா - வாம் என்(று)
அயர்வகற்றிப் பின்னர் அருளாற் பொருளாய்
உயர்பவர்தம் நேர்மை உணரென்று - அயலான
யாவும் அறிந்(து) அகன்ற தான அறிவோடுதமை
ஆவலுடன்கண்(டு) அருல் உணர்ந்தே - தாமவ்				(௧௮0)
வருளில் அடங்க அகலாத நேயப்
பொருளதனால் நிற்கின்ற பொற்பும் - மருளறியும்
தம்மறிவால் சுட்டாமல் தாமும் தமதறிவும்
அம்ம இழவா(து) இழந்துணர்வார் - செம்மை
மனவாக்குக் காயத்தின் மன்னு(ம்) அறி(வு) எல்லாம்
மனவாக்குக் காயத்தான் மன்னா(து) - அனுபவமாய்
நிற்கின்ற நேய முதலே அறிவதென
நற்கண் ணுதல்மறைத்தோன் நன்குரைப்ப(க்);
						- கற்கண்டின்
மிக்கசுவை தானாய் விளங்கும் மொழிதந்தாய்
தக்கமல மாயத் தருக்கிடும்நாள் - தொக்க				(௧௮௫)
அறுவு மலமோ அறிவதென நன்றாம்
குறியொடு நீ கொண்டவினா என்றும் - அறிவான
பொய்யறிவு முன்னறூவு பொற்போ(டு) இழந்திருப்ப
மையறிவாய் நின்று வழங்கிடும்நாள் - பைய
உறுவதெல்லாம் மாயமன்றி உண்டோ அதுபோல்
பெறுவதெல்லாம் பேரருளின் பேறென்(று) - அறிவாளன்
தேற்றியபின் அஞ்செழுத்தில் தேறும் பொருளதுமுன் 
ஊற்றமுறக் கண்டொன்(று) ஒருவியே - போற்றும்
அருள்கண்(டு) அதுவழியாய் ஈதும் - தெருளின்(று)			(௧௯0)
அருள் ஆகமத்தின் அடை(வு) என்(று) அருள;
அருளாளா அன்பர்க்(கு) அமுதே - இருளற்ற
முத்தே முதுவயிரக் குன்றேஎம் மாணிக்க
வித்தே வெளியில் விளைகின்ற - பத்திப்
பவளமே பாதி மரகதமே முத்தர்
கவளமே காதற் கனியே - தவளமா
நீற்றொளியே நீத நிலையேபார் நீர்தீயோ(டு)
ஆற்றரிய காற்றே அகல்விசும்பே - கூற்றம்
மடியக் குறியில்வரும் வள்ளலே தாளைத்
தடியப் புகுந்த தவமே - அடிமைக்(கு)					(௧௯௫)
அவாஅகலா(து) ஒங்கும் அரசே பருவம்
தவாது மலரில் தயங்கும் - உரிய
மதுமணம்போல் என்னை மருவும் பருவம்
எதுவெண்றென் உள்ளத்(து) இருந்து - பதுமெனநீ
தானே அறீந்ததுபோல் தானொழியாது எவ்விடத்தும்
யானாக இன்று வெளிநின்ற - ஞானகுரு
தேசிகனே உன்னைநினைந்(து) இன்னைமறந்(து) உள்ளுருகும்
ஆசைமிகத் தந்தாண்(டு) அருள்						(௧௯௯)
அருளால் உனைத்துதிக்கும் அன்பரைப் போல் தீய
இருளால் உயர்தேனும் இன்றிங்(கு) - அருளான
சுத்தாபுன் சொல்லால் தொடுத்ததொடை நீபுனைந்தான்
அத்தா நமச்சிவா யா.

		அருள்திரு தட்சணாமூர்த்தி தேசிகர் அருளிய
			- உபதேசப்பஃறொடை முற்றியது - 

 


See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14

Related Content

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara sattiram arultiru ampalavaana tesikar arulis seyta -

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara-sattiram arultiru-ampalavaana-desigar-arulisseyta-na

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த