logo

|

Home >

saiva-siddhanta >

pandara-sathiram-arulthiru-ambalavana-desigar-arulicheitha-ubayanittai-venbaa

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த உபாயநிட்டை வெண்பா

உபாயநிட்டை வெண்பா


		பாயிரம்

கற்றுடலற் றேஉயிரைக் கண்டருள்கொண் டேஅரனைப்
பெற்றனம்மெய் அம்பலவா ணன் பெருமை - உற்றநலப்
பண்பா வடுதுறைச்சீர் பன்னும் உபாயநிட்டை
வெண்பா உரையை விரும்பி.				

தொந்தித்த காயந் தொலைவதற்கு முன் உயிரைச்			(௧)
ஐந்திதார்க் கறோ திடமாகும் - சிந்தித்த 
தோலோ எலும்போ தொகுத்ததசை தானோஎன்று
ஆலோசித் தார்க்கறிவேயாம்.

அங்கத்தை நோக்கி அதுத்த தசை தொல் எலும்பாம்			(௨)
பங்கத்தைத் தீதென்னப் பார்ப்பாரேல் - சங்கத்தை
அற்றாரே பூரணமாய் ஆன அரன் தாளுண்ரப்
பெற்றாரே யில்லைப் பிறப்பு.

கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் நின்றதனு			(௩)
எண்ணொன்றி நின்றங்கு இசையாவாம் - கண்ணொன்றி 
நோக்குவதே  ஆவியென நுண்ணறிவால் எவ்விடத்தும்
ஆக்குவதே ஆவிக்கு அணி.

கண்ணே ஒருபொருளைக் காணில் கலந்தொன்றாய்			(௪)
எண்ணுவான் தன்னை இழந்ததுவாம் - கண்ணினால்
பூணும் ஒருவனையே பூணின் அவனாகக் 
காணும் பொரியாகுங் கண்.

ஊனும் உயிரும் ஒருங்கொப்ப நிற்பினும்				(௫)
உனுயிரை நோக்கா ஒழுங்கனேஓ - ஊனைக்
கறித்தறிவை நோக்கிக் குறியா அறிவால்
பறித்தெறிவ தன்றோ பயன்.

உயிரும் உடலும் ஒருங்கொப்ப நின்றாங்கு				(௬)
உயிருடலை நோக்கி உறுமால் - உயிர்தான்
பிடிக்குங்கால் ஒன்றாய்ப் பிடிக்கும்பின் பேர்ந்து
விடுக்குங்கால் வேறாய் விடும்.

அறிவாற் பிறியும் அறியாமை யாலும் 				(௭)
செறிவாம் தனுத்தெசிக்கத் தேரின் - பிறிவான்
மனமிடைய யாக்கை மனுவாம் கருவி
தனுமிடைய ஆவி தகும்.

தன்னைத்தான் என்னான் தகுமுடலைத் தானென்பான்			(௮)
பின்னற்றாற் செத்த பிணமென்பான் - முன்னத்தால்
சேட்டிக்கும் ஆவி செயற்படுவது அங்கமென
நாட்டுகையால் ஆவியென நாடு.

மருவும் தனுவதனை மாற்றுயிர்மேல் வைத்தல்			(௯)
தெரியும் பொருளைத் தெருயத் - தெரியாத்
தனுவனைத்தும் நோக்கித் தகுமுயிரே தானா
வினையனைத்தும் நிற்கும் விரைந்து.

கருவி அனைத்தினையுங் காணுங் கருவக்கு			(௧0)
ஒருவன் இவனெனவும் ஒரா - மருவும் 
கருவியே தானாய்க் கலந்தொன்றாய் நிற்கும்
மருவுமுயிர்க் குற்றதோர் மாண்பு.

புலமனைத்தும் நின்று பொருந்தியும்மற் றுன்னைத்		(௧௧)
திலமளவுங் காணத் தெரியா - மலமனமே
அங்கமே பொய்யாய் அகன்றபோது ஆவிதான்
சங்கமே ஆகத் தகும்.

ஒட்டி அறிவை உறுமுடலைப் பேதமென				(௧௨)
வாட்டுயபேர்க்கு ஆவிவளமாகும் - மூட்டிக்கை
வித்தாரம் செய்து வெறும் பிணத்தைத் தானாக
வைத்தார்க்கு உயிர் ஏன்வரும்.

மனவாக்குக் காயத்தை மன்னியபின் அல்லால்			(௧௩)
தனியே அறியத் தகாதால் - மனவாக்குக்
காயத்துக் கெட்டாக் கருதியதோர் பூரணமாம்
மாயமே ஆவியென மன்.

உறையுந் தனுவில் உறையும் உயிர்தன்				(௧௪)
நிறைவை அறிந்தொருகால் நில்லா - அறையுமுடல்
சேட்டையல்லால் மற்றுயிரின் சீவகமே இல்லையெனக்
காட்டுகையால் ஆவியிலைக் காண்.

சீவிக்குங் காயம் செடமாமால் சீவகத்தை			(௧௫)
ஆவிக்கு நன்காய் அமைப்பதல்லால் - சீவிக்கும்
காயமே தானாய் கருதியவாறு எல்லாம் பொய்
மாயமே என்ன மதி.

ஆவியென வேறோபொய் யாக்கையே தானாக				(௧௬)
மேவியதே அன்றோ விளம்புங்கால் - ஒவியம்போல்
நீக்கித் தனுவை நிகழறிவைப் பூரனமாய்
ஊக்குவதே ஆவிக்கு ஒழுங்கு.

ஒன்றித் தனுவை உறுமதனைப் பேதமெனக்				(௧௭)
கொன்றுயிரை வாங்கல் குணமாகும் - நன்றிதனக்கு
உற்றார் தமக்கே உறும்புத்தி ஒவ்வாமல்
அற்றார் தமக்கேத மாம்.

சோதித்தத் காயத் துடக்கற்றால் தொல்லைமலம்			(௧௮)
சேதித்த தாகுமெனச் செப்புநூல் - பேதித்த
ஆவியே தானாய் அடையும் அரனடியும்
மேவியே நிற்கும் விரைந்து.

அளந்துடலை நோக்கி அறிவின்வாள் பூட்டிப்				(௧௯)
பிளந்ததனை ஆங்கே பிரித்து - வளர்ந்ததனைச்
சுட்டா நிராமயமாய்த் தோன்றாத இன்பமதாய்
எட்டாத பூரணமென்று எண்.

அறியும் அறிவே அறிவுஅறிய நிற்கும்					(௨0)
பொறியும் பொருளும் பொருந்தச் - செறியுமரன்
காட்டியவா றென்னக் கருதி அறிவதனை
ஈட்டியவா றன்றோ இயல்பு.

வாக்குமனக் காயம் மருவா அறிவுபொய்				(௨௧)
யாக்கையின்பால் உற்றங்கு அகப்பட்டால் - நீக்கித்
தெரிசித்துத் தன்னைத் திகழ்பரத்தோடு ஒன்றாய்ப்
பரிசித்தல் அன்றோ பயன்.

அறிவால் பலகாலும் ஆராய்ந்து பார்த்துப்				(௨௨)
பிறியாத் தனுவைப் பிரித்துக் - குறியாம்
அறிவோடு அறிவாய் அடங்குவதே முத்தி
நெறியாகும் என்ன நினை.

சேமப் படுத்திமலஞ் சிற்றுயிரைத் தன்னெறியில்			(௨௩)
காமப் படுத்தியொன்றுங் காட்டாதால் - தீமை
விளையுந் தனுவினுக்கு வேறாய் அறிவோடு
அனையுமே லாமாம் விபு.

தன்னைத்தான் என்னா தகுமுடலைத் தானென்னச்			(௨௪)
சொன்னத்தால் தீதனைத்துந் தோற்றீயதால் - தன்னை
அறியுமாறு எவ்வாறு அகன்றவுடல் தன்னைப்
பிறியுமா றாமாற் பெறும்.

அகமோ புறமோ அகம்புறமோ ஆவி					(௨௫)
செகமொ தனுவினுக்குத் தேரின் - இகமே
பிறியாத் தனுவைப் பிறத்தறிவை நோக்கில்
அறிவாய் அகம்புறமே யாம்.

அகமேல் தனுவோடு அழியும் அகத்தின்					(௨௬)
புறமே பொறிவழியில் சேரா - அரனோடு
அத்துவித மாமால் அரன்நிறைவோடு ஒன்றாக
ஒத்ததுவாய் நிற்குமென ஓர்.

யானென்ற காயம் எனதென்றால் யானென்னும்				(௨௭)
தானிற்கச் செய்யத் தகுமன்றோ - ஊனின்று
பற்றறவே விட்டறிவாய்ப் பார்க்கில் நிரா தாரமாய்
உற்றதுவே யாகுமென ஓர்.

எங்கும் இருக்கும் இசைந்ததனு வோடிசைந்து			(௨௮)
தங்கி அறியத் தகுவதாம் - மங்குமுட்ல்
சேதித்தா ரன்றோ திருவருளோடு அத்துவிதம்
சாதித்தார் எனனத் தகும்.

பேதித்துக் காயத்தைப் பின்னமற எவ்விடத்தும்			(௨௯)
சாதித்தால் முத்தித் தகைமையாம் - சேதித்த
அங்கத்தால் செய்ததவம் அத்தனையும் முத்திபத
சங்கத்தால் ஆகத் தகும்.

பொறியனைத்தும் ஒன்றைப் புணராமற்(று) ஆவி			(௩0)
அறிவனைத்தும் நோக்கி அணையும் - பொறியனைத்தும்
ஆற்றார்க்கே அத்துவிதம் ஆகுமாம் நற்றவத்தைப்
பெற்றார்க்கே முத்திபதப் பேறு.

சாக்கிரத்தோ(டு) அஞ்சவத்தை தானாவர் தம்முடப்பை	(௩௧)
நீக்கியபே ரன்றோ நினையுங்கால் - தூக்கும்
சரியாதி மூன்றில் தகும்பதத்தில் நிற்போர்ப்
பிரியா உடல்பிரியாப் பேர்.

பெத்தருக்கே காயமெனப் பேசிச் சமயநெறி			(௩௨)
மித்தருக்கே இன்றாய் மொழியுமால் - சத்தியமே
மந்திரமே தேகமென மன்னியதும் ஆவிக்குப்
பெந்தமே யாமால் பிழை.

அத்துவா ஆறின் அமைந்ததாம் மந்திரத்தைச்			(௩௩)
சித்தத் தயலாய்த் தெசித்ததாம் - முத்தர்
நிருமலமே தானாய் நிகழைவமே யாமால்
ஒருமலமும் இல்லையென ஓர்.

காயம் உயிரென்னக் கருதுங்கால் பேத்தமாம்			(௩௪)
தோயுங்கால் ஒன்றாகத் தோற்றுமால் - காய
நடையொருகால் ஆவி நடையொருகா லாகத்
தடையெடுத்து நிற்கத் தகும்.

ஊனாய்த் திரிந்தங் குழலுமொரு கால்மனுவே			(௩௫)
தானாய்த் திரியத் தகுமொருகால் - கோனாகும்
நேயமே தானாக நிற்குமொரு காலுயிர்
காயமேல் உற்ற கடன்.

ஆகம் திரியாமெய் ஆவிஅல்லால் அங்கத்துப்				(௩௬)
போகம் திரியாப் பொறியல்லால் - மோகநிலை
ஆவியே சென்றங்(கு) அடையுமேல் எவ்விடத்தும்
தாவியவை யாகத் தகும்.

ஆவி தனுவை அடையுங்கால் ஆவியற				(௩௭)
மேவித் தனுவாய் விளங்குமால் - ஆவியினை
அக்கையெ சென்றங்(கு) அடையுமேல் ஆக்கையறத்
தாககுமது வாகத் தகும்.

பூணுந் தனுவே பொறிக்கிடமாம் பொய்யிதெனக்			(௩௮)
காணுமவர்க்(கு) அவ்வாறே காண்பதுவாம் - வீணும்
தனதாகி நிற்கும் தகுதியோர் தங்கள்
மனதாகி நிற்கும் மதி.

மலமடைய மாயா தனுவிளையும் அந்த				(௩௯)
மலமிடையக் காய மனுவாம் - நலமுடைய
ஆக்கையறக் காயம் அருள்தனுவாம் ஓர்தனுவில்
தாக்கியமெய் பாவகத்தால் தான்.

ஆகமற்ற தாலடைவ(து) ஆகும் அரனாலுமல			(௪0)
பாகமுற்றால் மந்திரத்தின் பண்பாகும் - தேக
மனுவால் துறந்தறிவின் மன்னுமரன் ஞானத்
தனுவாகும் என்னத் தகும்.

ஆவி தியானத்(து) அடங்காவாம் ஆங்கரனைத்			(௪௧)
தாவி மனமுஞ் சருவாவாம் - மேவும்
உடலகலத் தோற்றும் உயிரால் உயிரின்
கடனகலத் தோற்றுமரன் காண்.

அங்கத்தார்க் காகும் அரிய தியானமலப்				(௪௨)
பங்கத்தை மாற்றுதற்குப் பாங்காகும் - துங்க
கருமி தொழிலோடுங் காண்பான் மெய்ஞ் ஞானத்
தருனியுறும் ஞானநூல் தான்.

கருமி தியானங் கருதியதும் ஞானத்				(௪௩)
தருமிநூல் ஓதும் தருக்கும் - தெரியுங்கால் 
சாலோக மாதிப் பதநோக்குஞ் சற்குருவால்
நூலோது வார்க்கறிவே நோக்கு.

நாட்டமற்றான் ஆங்கவன் போல் நாட்டமற்றார்க் கேமதியைக் (௪௪)
காட்டியதும் உண்டோஅக் கண்ணுடையான் - நாட்டமற
வந்தார்க்குக் காட்ட வழக்குண்டோ ஞானத்தை
நந்தா தவர்க்குரைக்க நன்று.

நாட்டம் இருவருக்கும் நண்ணுமென வெண்மதியைக்		(௪௫)
காட்டாமல் தானே கருதுமரன் - நாட்டம்
பிரிந்தான் மெய்த் தோற்றத்துப் பின்னொருகால் பெற்றுத்
தெரிந்தான் தெரிவே(து) உரை.

சீவிக்குந் காயம் சிவனலவே என்னுமலப்				(௪௬)
பாவிகட்கிந் நூலைப் பகரற்க - மேவும்
உயிரே செயலர் றொடுங்கும்போ தீசன்
செயலென்பார்க் கேயுரைக்கச் செய்.

	அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த
	     உபாயநிட்டை வெண்பா முற்றியது.

உபாயநிட்டை வெண்பா உரைத்தான்நாற் பத்தா(று)
அபாயநிட்டை வாராமல் ஆர்க்கும் - உபாயநிட்டை
வெண்பாவால் ஆவடு தண்டுறையை வெகினர்க்கு
நண்பாகும் அம்பலவா ணன்.

- முற்றும் - 

 


See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14

 

Related Content

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara sattiram arultiru ampalavaana tesikar arulis seyta -

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara-sattiram arultiru-ampalavaana-desigar-arulisseyta-na

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த