logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandha-puranam-of-kachchiyappa-chivachariyar-irandaamnaal-surabanman-yudhdha-padalam

கந்தபுராணம் - யுத்த காண்டம் - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்

Kandhapuranam of Kachchiyappa Shivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

யுத்த காண்டம் - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்


 

செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

4. யுத்த காண்டம்

 

4. இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்

 

கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம்

நுங்குறா தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ்

சங்கமாய் மதிசெலச் சக்கரப் படையெனத்

துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய.           1

 

வேறு

 

இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ எழுந்து

மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித்

திரும ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன்

நெருநல் உற்றிடும் வசையினை உளத்திடை நனைந்தான்.         2

 

நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம் நீட

இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே

அனிக மோடுபோய் மாற்றலர் வன்மையை அழித்துப்

புனைவன் வாகையென் ன்னினான் அழிவிலாப் புகழோன்.         3

 

செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத் தேற்றி

வெங்கண் ஒற்றிரில் அளப்பிலா¢ தங்களை விளியா

அங்கண் மாநிலம் முறைமுறை சூழ்தரும் அளக்கர்

எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான்.                      4

 

என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ்

சென்று சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத்

துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர் தொன்னாள்

வென்றி கொண்டநூ றாயிர வௌ¢ளத்தின் மிக்கோர்.                     5

 

வேறு

 

சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ் சாபங்

கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி

பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி

பீலிவல் முசல மாதி பெரும்படை கொண்டு சென்றார்.                    6

 

எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வௌ¢ ளத்தி னோருந்

திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி யார்ப்ப

விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக்

கண்டனன் அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல்.         7

 

தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை ஈட்டம்

நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும்

நீக்கினன் வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி

ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான்.     8

 

அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழுங்

கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச்

செழுங்கதிர் மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும்

இழிந்தனன் தலைமை நீங்கி இழிதொழில் பயின்ற தீயோன்.               9

 

எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொன்னாட்

கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற் கோதை

தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும்

அடுத்தபொற் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.10

 

குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல தன்னில்

சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி

மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும்

இந்திரப் பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல்.            11

 

பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்

எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக

அண்ணல்வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல

விண்ணுலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான்.               12

 

கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற 

வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்

காய்கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலக மென்ன

ஆயிர நூறு வௌ¢ளத் தவுணரும் புடைசூழ்ந் தார்த்தார்.          13

 

     வேறு

 

அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி சூரன்

துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன்

என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி

மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான்.    14

 

திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ் சிறிதோர்

கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப்

பொருதி றற்படை பலவுள என்னினும் போற்றும்

அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும்.                     15

 

ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின்

மேத கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப்

போதிர் முன்னுற என்றலும் நின்றிடு புதல்வர்

ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில்.           16

 

தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில்

கொந்து லாமலர் வாகையை மிலைச்சிய குமரர்

வந்த நாற்பெரும் படையையும் அணிபெற வகுத்து

முந்து தானையந் தலைவராய் ஏகினா¢ முறையால்.              17

 

ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர்

வாகை கொண்டநூ றாயிர வௌ¢ளத்து மறவோ£¢

ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி 

ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க.                    18

 

வேறு

 

கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத் தானை வீரர்

படா¢ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத் தேர்மல்

அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்றவ

விடந்தனி நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான்.         19

 

தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு கோடு

திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை

கண்டைஆ குளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்

கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற றம்மா.         20

 

தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு சேண்போய்

முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும் வீரர்

கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின் ஆர்ப்பும்

எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே.           21

 

நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ் செல்லக்

கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம்

தானுறு கின்ற காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர்

மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன்.              22

 

நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும்

ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை

ஏசுவர் போலுங் கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத்

தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற் சென்ற பூழி.                      23

 

கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண வௌ¢ளம்

துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை

என்னென உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும்

பொன்னுல கதனை வல்லே பூவுல காக்கிற் றன்றே.                      24

 

கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின் மீதும்

நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி

மண்ணுறச் சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின்

அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ.               25

 

திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ் செங்கேழ்ப்

பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந்

தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி

எங்கணுஞ் செறிவுற் றூழி இருளினை விளக்கிற் றம்மா.          26

 

வேறு

 

ஆனவியல் பெய்தஅவு ணப்படைக ளோடும்

வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத்

தானதுதெ ரிந்தமரர் தம்மிறைவன் ஓடிக்

கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான்.           27

 

அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள் செய்த

துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன்

இன்றுபொரு வான்விரைவின் ஏகினன் எதிர்ந்தே

சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான்.         28

 

ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே

ஏம்பலுறு கேசரியின் ஏற்றணையின் நீங்கிப்

பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை நோக்கி

வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான்.         29

 

என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல்

குன்றனைய தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப

வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை புகுந்தான்

மன்றல்மலா¢ சிந்திஅயன் மாலொடு வழுத்த.                    30

 

செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர்

தொழுந்தலைவ னாகியமர் தொல்முருகன் ஏறக்

கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு பூதர்

எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச.                     31

 

நாட்டமொரு மூன்றுடைய நாதனருள் மைந்தன்

வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை

வீட்டும்வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக்

கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர் கின்றார்.                32

 

பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற

பாரிடர்ந டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர்

பாரிடர்பு £¤ந்தனர் பரிக்குமெனை யென்னாப்

பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும்.          33

 

தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி

தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி

மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்

கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்.                      34

 

நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும்

கேடிலிசை வல்லதொரு கின்னரரு மாகிப்

பாடினர்கு மாரன்அடி பன்முறை பணிந்தே

ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும்.         35

 

சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும்

எண்மரும்இ லக்கர்களும் ஈண்டிய கணத்தின் 

வண்மைகெழு மன்னவரும் வையமிசை யாகித்

திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார்.              36

 

மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு தானை

இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன்

செம்மணிவில் வீசியமர் தேரினிடை ஏகிப்

பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான்.               37

 

அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு மாகி

மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த

தொடா¢ந்துநுகர் தீவலிதொ லைத்துமென முந்நீர்

படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல.                     38

 

வேறு

 

வளைந்திடு காலையில் வயவெம் பூதர்கள்

கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவா¢

தளந்தனை அடர்த்தனர் அவருந் தாக்கினர்

விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே.                      39

 

மாச்சினை மரங்களும் வரையுந் தண்டமும்

தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்

மீச்செலுங் கவண்கலும் வேலும் நாஞ்சிலும்

ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல்.                  40

 

மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில்லுமிழ்

அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல்

முப்புகா இலைப்படை முசலம் முற்கரம்

கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை.                 41

 

பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை

எற்றுவர் பா£¢தனில் எறிவர் மாதிரஞ்

சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர் துண்ணென

முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.                     42

 

இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில்

பொருகளி ராயிரம் புரள மோதுவர்

கரிகள ராயிரங் கரங்கொண் டேற்றியே

பரிபதி னாயிரம் பாரின் வீட்டுவார்.                             43

 

பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண்

டாயிர கோடியாம் அவுணர் தங்களைச்

சேயிரு நிலத்திடைச் சிதையச் சிந்துவார்

காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே.                  44

 

குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர்

இரங்குறு தேரினர் நிலத்தின் ஏகினோர்

வரங்கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்

சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.                45

 

மலைதனைச் சிந்துவர் மறங்கொள் பூதர்தாள்

நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்

கொலைதனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத் 

தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர்.                 46

 

இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித்

தெவ்வடு பூதர்தஞ் சேனை மன்னர்கள் 

அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி

வெவ்வசு ரப்படை மிகவும் மாய்ந்ததே.                          47

 

பொன்றிகழ படையொடு புவியும் வானுமாய்

நின்றிடும் அவுணா¢கள் நீடு தொல்பிணக்

குன்றுரு வாகியே குருதி யாற்றிடைச்

சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.                 48

 

நீடிய வேற்படை நிமலன் காணுற

வீடினம் யாமினி வெய்ய தோற்றமேற்

கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல்

ஆடிய உடற்குறை அனந்த கோடியே.                            49

 

வேறு

 

மானப் படைசேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும்

ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா றிகல்செய்யுங்

கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித்

தானை தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான்.       50

 

தேரா யிரமா யிரமங்  கொருபாற் சேமத் தொடுசெல்லக்

காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார

ஈரா யிரமாம் இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே

ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ டுறுகின்றான்.           51

 

வா£¢வில் லதனை விரைவில் குனியா வடிவா ளிகள்போக்கிச்

சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய் தனன்நிற்ப

ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர் புரிகின்றான்

போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர்.          52

 

ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா இகல்செய்யும்

பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ யுமிழ்கண்ணான்

மேதக் கசலந் தரனா£¢ உடலம் வீழும் படிகீண்ட

சோதிக் கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன். 53

 

எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய் திடுமாறு

கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்கொள்ளும்

தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார் பிடையோச்ச

விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார்.   54

 

மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண் டவன்மார்பில்

கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான்

பாறா டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா

நூறா யிரம்ஆ சுகமோர் தொடையின் நொய்திற் செலவெய்தான்.   55

 

வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சோ¢ அதிசூரன்

எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம்

எய்தான் முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ்

செய்தான் ஒருமால் வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.56

 

அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ ரன்மான்தேர்

பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னா

உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்

கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான்.               57

 

வேறு

 

பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை

ஏய ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள்

மாயும் வண்ணம றம்புரி உக்கிரன்

சீய மாமெனச் சென்றுதைத் தானரோ.                   58

 

உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப்

பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே

சிதைப்பன் இந்தச் சிறியனை என்றுமெய்

புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான்.                   59

 

தூண்டு கின்ற் சுடர்க்கணை யாவையும்

ஈண்டி யேதன் எதிருறும் பெற்றியைக்

காண்ட லுங்கதை கைக்கொடவ் வுக்கிரன்

மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே.                              60

 

வேறொர் தேரிடை வெய்தென எய்தியே

ஊறு நீங்கிய உக்கிரற் கண்ணுறீஇ

மாறி தெய்வத மாப்படை தொட்டுனை

ஈறு காண்பன் இறந்தனை நீயெனா.                             61

 

முன்னு பூசை முதலிய யாவையும் 

முன்னி யேநின் றொருங்குடன் செய்தபின்

வன்னி மாப்படை வாங்கி வணங்கியே

மின்னு தண்சுடர் மீக்கொள வீசினான்.                   62

 

ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன்

வீசு வெம்படை வீரத்தை நோக்கியே

ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை

நேச மோடு நினைந்தனன் போற்றினான்.                 63

 

எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன்

அவ்வ ழித்தன் அருள்செய உக்கிரன்

செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே

கவ்வி நுங்கினன் கண்கனல் கான்றிட.                   64

 

நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன் 

துங்க மாமகன் தொல்புனல் மாப்படை

பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்

அங்க வற்றையும் பற்றி அருந்தினான்.                          65

 

காற்றின் வெம்படை ஏவினன் கைதவன்

ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்

தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே

ஏற்ற மான இரும்பொருள் யாவதோ.                            66

 

மற்றும் அவ்வதி சூரன் மலரயன்

ஒற்றை வெம்படை ஓச்சலும் உக்கிரன்

பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால்

பெற்றி ருந்த பெரும்படை ஏவினான்.                           67

 

ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன்

பொய்யில் மாப்படை போந்திட ஆங்கதுங்

கையில வாங்கிக் கதுமென வாய்க்கொளா

வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே.                           68

 

ஆன காலை அரிமுகன் காதலன்

யானி னிச்செய் இயற்கையென் னேயிவன்

தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை

மேனி லாவிய வேதன்கொ லோவென்றான்.                      69

 

மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை

ஏவ ரேமற் றிதுசெயும் பெற்றியார்

ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத்

தேவர் மாற்றலன் பின்னருஞ் செப்பினான்.                       70

 

சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல் 

தோற்றங் கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன்

ஏற்றங் கண்டுழி என்செய்தும் என்றனர்

கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார்.                71

 

அண்ணல் வாசவ னாதிய ராகிய

எண்ணில் வானவர் யாவரும் இச்செயல்

கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப் 

பண்ண வன்முன் பணிந்திது கூறுவார்.                  72

 

எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை

செங்க ணான்படை தீயநின் மாப்படை

அங்கி யாவும் அணுகஇப் பூதா¢கோன்

நுங்கு மாறென் நுவலுதி என்னவே.                             73

 

இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன்

அந்தி வான்சடை அண்ணல் வரத்தினான்

கந்தன் எந்தை கழலிணை போற்றியே

வந்து ளான்எவ் வலியையும் ஆற்றுவான்.                       74

 

எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ்

செம்மை யானவன் செம்பொற் சிலம்படி

மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன்

எம்மி னும்பெரி யான்என்றும் ஈறிலான்.                 75

 

மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய

சக்க ரம்நுக ருந்தவத் தோனினும்

மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்

உக்கி ரன்னென் றுரைத்திடும் பேரினான்.                 76

 

பண்டு நாமருள் பல்படை யாவையும்

உண்ட தோவியப் பொல்லையில எல்லையில்

அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன்

கொண்ட தொல்புகழ் கூறத் தொலையுமோ.                      77

 

என்ன நான்முகன் எண்ணி இயம்பலும்

அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவருந்

துன்னு சென்னி துளக்கிப் பெருந்திறல்

இன்னு மாக இவற்கென் றியம்பினார்.                           78

 

வேறு

 

வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா அவுணர்

சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல்

ஊன மாகிய படையென உன்னலை உமைபால்

ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான்.        79

 

மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச்

சிந்தை மேலுறு வௌ¤யோ டரன்படை செலுத்த

அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால் அடர்க்கும்

எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில்.  80

 

நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும்

விஞ்சு பூதமுங் கணங்களும் வேறுபல் படையும்

எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற எவ்வுலகும் 

அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே.            81

 

ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும்

ஆசில் வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப்

பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை பன்னி

நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான்.      82

 

ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான்

மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான்

ஈண்டி வன்றனை அடுகிலன் யானென எண்ணி

மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில்.              83

 

அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின் அவர்பால்

நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க

விண்ணு லாம்புகழ் அவுணர்கோன் பெறுதலின் விடையூ£¢

பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே.     84

 

ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென் றயிர்த்துச்

சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார் 

வானு ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்

ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண் றிரிந்தார்.         85

 

நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை நீவிர்

ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து

பாங்கர் உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன்

வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான்.      86

 

எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்

பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத்

தெற்றெ னப்புடைத் திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான்

மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி.                    87

 

துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர்

மஞ்சு போலவே வரும்அசு ரேந்திரன் மனமும்

நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு நகையா

விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின்.    88

 

கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன் கரத்தின்

நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த

கொடிய வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப்

படியும் வானமுங் குலைந்தன உயிரெலாம் பதைப்ப.              89

 

பூதர் அங்கது நோக்கியே தண்டமும் பொருப்பும்

பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன்

மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்

சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச் சொரிந்தான்.   90

 

வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள் வலிதின்

விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி

முடியுங் கைகளும் ஆகமும முகத்தொடு மொய்ம்பும்

அடியுஞ் சோ£¤நீர் கான்றிட அழுந்திய அவர்பால்.         91

 

மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும் மண்மேல்

அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும்

இற்ற கண்டமு மாகிவெம் பூதர்கள் இறப்பக்

கொற்ற வீரா¤ல் கனகன்என் பவன்எதிர் கொண்டான்.      92

 

எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த

அதிரும் வார்கழல் அன்னலோ£¢ வடிக்கணை அழுத்த

உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை உற்றான்

கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின்.         93

 

பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம் பனைக்கை

நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக்

காகம் போலவௌ¢ ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர்

மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான்.           94

 

இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந் தினாங்

கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின்

அழிந்த வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக்

குழிந்த கண்ணுடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான். 95

 

குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை கூவித்

தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப்

புனிற்றி ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள்

பனித்தி டும்படி அழுத்தினன் ஆயிரம் பகழி.                      96

 

பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள் 

நிகழ நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப்

புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற் போத

அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான்.              97

 

அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந் தடர்க்கக்

கவன வெம்பரி யாயின உலந்தன காணாப்

பவன வேகத்தின் வேறொரு தேர்மிசைப் பாய்ந்தான்

புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள போல்வான்.               98

 

முந்து வெங்கணை உலப்பில தூண்டலும் முந்நீர்

செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய

வந்த முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே

மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ வந்தான்.         99

 

வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி

குருதி காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய்

பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம் பறித்துக் 

கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான்.         100

 

சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித் தெறித்துக்

குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன்

ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்

நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான்.      101

 

எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர் எறியத்

தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார்

விடுத்த தோர்கதை எறிதலும் அவனது விலக்கித்

தொடுத்து நூறுகோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.102

 

ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும் உடன்றே

அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள்

பொழிந்து மற்றுள பூதரை முடித்திடும் போதில்

கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான்.      103

 

தனது கார்முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்

முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின்

நனிபு குந்திட விடுத்தலும் நடலையுற் றிரங்கி 

மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை வளைத்தான்.104

 

வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக மறவோன்

குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி

இளைத்து நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன்

கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர் கிடைத்தான்.               105

 

எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற் றிரட்டி

கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா

அதிர்த ருந்தன தொண்சிலை வாங்கியா யிரமாம்

நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன் நொடிப்பில்.  106

 

பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன்

சில்லி யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப

மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல் ஒன்றை

ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான்.      107

 

உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும் முயங்கி

எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப

நித்தன் வேர்வுறு சோமுகற் கிளையவன் நெடுமால்

ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான்.               108

 

விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே வெகுண்டு

நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா

அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்துமற் றவன்கை

இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான்.            109

 

முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும் முனியா

இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக்

கொற்ற மார்அசு ரேந்திரன் மத்திகை கொண்டு

பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான்.   110

 

தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர் தண்டம்

இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப்

புகுது மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன்

மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான். 111

 

தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத் தொலைத்து

மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து

பட்ட காலையில் அவன்றன திரதமேற் பதைத்து

விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய் வீழ்ந்தான்.               112

 

விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு

பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே

அழிந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அதுகண்

டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந் துற்றான்.    113

 

வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர்

கோர வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி

யாரும் வானவர் வியபபுற அவுணர்கள் அயரத்

தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால்.         114

 

மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல் லவுணன்

றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே

பிறைத்த லைக்கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்

உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர் ஒத்தார்.               115

 

தார கத்திற லான்மகன் தூண்டியேழ் சரத்தால்

சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப

வீரன் மற்றொரு கார்முகம் வாங்கியே விடங்கால்

கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.           116

 

ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை இறுத்துப்

பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப

வாகை இன்றியே வேறொரு தேர்மிசை வறியன்

போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர்.            117

 

வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன்

பொருது வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார்

அரிய அற்புத மோவவன் வென்றிடல் அவுணன்

கா¤த ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின்.            118

 

மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு வளைத்து

நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச்

சீறி வானெழீஇ வீரவா குப்பெயர்த் திறலோன்

ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான்.        119

 

உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற் படர்ந்து

சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல்

குறைக ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற்

றிறைக ழிக்குமுன் அவன்றனைக் கையிலொன் றெறிந்தான்.       120

 

எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம் இறலுங்

குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி

செறிந்த நீலவொண் கிரிதனக் கொருபுடை சென்றே

உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப.            121

 

கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று

மொய்யு டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத

ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந் தொருதன்

செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில்.      122

 

( * பா-ம் - திரள்.)

 

காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங் கண்டு

தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர்

சேம வாள்கொடு வானெழ மேலையோன் சீறி

ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான்.           123

 

எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின் வீழ்ந்து

மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற்

செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னதோர் செய்கை

அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே.                     124

 

மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து

பக்க மேயின தானைகள் இரிந்ததும் பாராத்

தொக்க பேரழல் உலகட எழுந்ததோற்  றம்போல்

மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான்.    125

 

சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும்

ஆற்ற லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக்

காற்றின் முந்துசெல் தேரிடைக் கடிதுவந் தெய்திக்

கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக் குனித்தான்.        126

 

வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை

நீணி லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல்

பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற் புணர்த்த

நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால்.    127

 

கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக் கணங்கள்

மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்

உரங்கள் சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ்

சிரங்க ளானவும் பனித்திட ஓடினர் சிதறி.                128

 

யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில் 

வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து

மாண்டு ளார்சிலர் மயக்கமுற் றார்சிலர் மற்றும்

ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில் அரவம்.     129

 

வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன் விண்ணோர்

நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக்

கோதில் நல்லறம் அஞ்சின ஐவகை கொண்ட

பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி.         130

 

வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும் மறத்தால்

விஞ்சு பூதமீ ராயிர வௌ¢ளமும் வெருவி

எஞ்சி யேயவண் நின்றிடா தி£¤ந்துள வென்றால்

அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ.                      131

 

சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந் துளங்கிப்

பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப்

போரி யற்படைத் தலைவர்நூற் றெண்மரும் புகுந்து

மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும் மரமும்.                  132

 

அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி

பொன்னின் வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித்

தன்னு ழைப்புகும் வரையொடு தருக்களைத் தடிந்து

துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான்.  133

 

முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத்

தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தனன்

கடிது ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்

அடிது ளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார்.               134

 

துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந் துயர்கொண்

டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்

களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி

உளத்தின் வன்மைய தழிந்தனன் உன்மத்தன் உலைந்தான். 135

 

நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான்

ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான்

வாடு கின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான்

ஆடு றுந்துயர்  அறிந்தனன் அண்டவா பரணன்.           136

 

மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்

காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான்

ஆகம வீழ்ந்திடு குருதியுள் அழுந்தினன் அசலன்

மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி மறிந்தான்.         137

 

பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன் பதுமன்

எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்

மத்தன் வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான்

சித்தி ராங்கனுங் கனகனுந் துயர்க்கடல் திளைத்தார்.               138

 

நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும் நெடுங்கண்

பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற்

றஞ்சி ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி

துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என் பவனும்.         139

 

வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன் வெகுண்டான்

சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான்

சங்க பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான்

பிங்க லன்உயிர்க் கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான்.     140

 

இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர்

அனிக வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத்

துனைய மற்றது கண்டுநூ றாயிரத் தொகையோர்

கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள்.    141

 

தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச் சூரன்

வேர்த்து  வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி

ஆர்த்து வெஞ்சரம் ஆயிர கோடிதொட் டங்கண்

மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான். 142

 

முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன் முன்னம்

திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப்

பரித்தி றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி

உரத்தில் அன்னவர்க் கிலக்கமா யிரங்கணை உய்த்தான்.   143

 

உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும் உளைந்தே

எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி

வித்த கங்கெழு வீரமார்த் தாண்டனாம் விடலை

கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின்.               144

 

வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார் கடல்கள்

ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி

தூங்கு வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத்

தீங்க டுங்கணை ஆயிரம் நுதலிடைச் செறித்தான்.        145

 

செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து

மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி 

குறித்து வீசியே அவன்விடு கணையொடுங் குனிவில்

அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும் அட்டான்.          146

 

அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள் ளழுங்கிப்

பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி

ஒட்ட லான்வலி அடக்குவன் யானென உருத்து

விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன்.              147

 

வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன்

கொந்து லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா

ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட அதுகால்

உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள்.    148

 

முட்டு வெங்கணை வீரராக் கதனெனும் மொய்ம்பன்

தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க

நெட்டி ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில்

எட்டு மாதிரக் கரிகளும் வெருவஆர்த் தெழுந்தான்.               149

 

விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும் வியன்தேர்க்

கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத்

துண்ணெ னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன்

வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது மணிவாள்.             150

 

நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன்

தொடையல் மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன்

படையி ழந்திடும் வலியிலற் கொல்வது பழியென்

றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல.             151

 

அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட அலமந்

திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண்

டுரக்க டுங்கணை மாரிகள் ஒன்னலன் தேரும்

கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன்.         152

 

சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப

வீரன் மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச்

சாரி வட்டம தாய்வர அவுணனுந் தக்கோன்

தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி.                   153

 

திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி

வருதி றத்தினால் ஐயம தாவவர் வடிவை

ஒருதி றத்தருந் தௌ¤கிலர் உணர்ந்திட அற்றோ

இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.                     154

 

ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று 

கோள ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத்

தாளின் முப்பது மருமமீ திருபது தடம்பொற்

றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான். 155

 

வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகைமேல்

புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும்

மெலிவில் ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன்

சிலைகு னிந்திடப் பகழிவான் நிமிர்ந்திடச் சென்றான்.             156

 

சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை

ஒன்றொ ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த

குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால் குறைப்ப

நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான். 157

 

நடத்த லாகிய எல்லையில் பகழியோர் நான்கு

தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத்

தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள் 

விடுத்து மண்மிசை வீட்டினன் யாரையும் வென்றான்.             158

 

ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்

கூனல் வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல்

மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம் வலியா

ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான்.   159

 

வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக் குனித்துக்

கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச்

சூல்வி டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின்

மால்வி டுத்திடா அவுணன்மார் புற்றதவ் வைவேல்.              160

 

உற்ற தோரெ•கம் நுண்டுக ளாகிவிண் ணுலவிச்

சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன்

மற்றொர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்

சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத் தொடுத்தான்.       161

 

 

ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம் ஏந்தல்

பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த

வீழல் உற்றதங் கவன்உடல் உணர்ச்சிகள் வீந்த

சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம்.          162

 

மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது நோக்கிக்

ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று

நகேசன் மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங்

குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர் கொண்டான்.               163

 

எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி யெறிந்த

துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா

அதிகு ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து 

நுதிநெ டுங்கணை அழுத்தின் ஆயிர நுதலின்.             164

 

ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில்

பாய்த ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து

சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால் பறித்து

மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ.               165

 

எறித்த ருஞ்சுடா¢த் தபனனுஞ் சேடனும் இரங்கப்

பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம்

வெறித்த ருந்தொடை அவுணர்கோன் விசிகமொன் றதனால்

அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன் அம்மா.             166

 

கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங் கணைகள்

உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து

பரம்பு குந்திடும் அவுணர்கோன் தேர்மிசைப் பாயா

வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை அடித்தான்.         167

 

வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின் வலிதாய்

அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை வெடித்த

தாமெனக் கீண்டது விண்டது சோரி

துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால்.        168

 

வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச்

சூரன் மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா

ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன் உறங்கும

வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள.           169

 

பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன் பதைப்புற்

றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி

முரிந்த தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம்

புரந்த ரப்பெய்£ வாகையான் ஏற்றெதிர் புகுந்தான்.         170

 

ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன் என்பான்

ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை

மாற்றி வென்றிடும் என்னையும் இவனென மதித்துக்

கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக் குறுக.               171

 

குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன்

முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால்

உறுவ தோர்படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல்

மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது வரத்தால்.           172

 

தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான்

முண்ட கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம்

கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங் கணையை

விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான்.          173

 

நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை நெறியாத்

திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை

உறைந்த நான்முகப் படையொடுஞ் சோரிநீ£¢ உமிழ்ந்து

மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம் மறலி.                   174

 

தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார்

சூர ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும்

நீர ராஞ்செருச் செயலிது நன்றென நிகழ்த்தி

வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.                       175

 

சார்ங்கம் அன்னதோ£¢ வலியதாய் மாமதன் தனுவாம்

ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக்

கார்ங்க ரும்புய லாமென நாணொலி காட்டிக்

கூ£¢ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான்.  176

 

ஆ£¢ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம்

வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார்

சீர்ப்பெ டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப்

பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப் பறவை.                177

 

ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின்

சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன்

ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை உய்ப்பத்

தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான்.               178

 

தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத் தலைசேர்

வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே

எடுத்து விட்டிட வீரரந் தகன்றமக் கெதிரா

விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த.        179

 

விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை வீட்டிக்

கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி

உரந்த னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப்

புரந்த ரற்குளந் துணுக்குறப் போயது புறத்தில்.            180

 

விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட வீழ்¢ந்து

மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின்

உறல்ப டைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்

திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற் சென்றான்.       181

 

அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர் அறிஞன்

இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சோ

உருவ நோக்குறா ஒற்றனாம் இவனென உன்னிப்

பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும்.              182

 

எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத்

தமரை அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய்

குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர் கொண்டே

அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா.             183

 

பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி

ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி

மற்ற தேகடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய்

இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான்.   184

 

தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்

மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்

ஓதி டும்பணி யாவையுஞ் செய்குவன் உலகில

ஏதும் வல்லன்யான் வேண்டுபோ£¢ புரிதியால் என்றான்.   185

 

என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம்

தின்ற வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த

துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம் அவுணன்

குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான்.    186

 

சிலைப னித்திடக் குனித்திடு காலையிற் செம்பொன்

மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய்

அலைப னித்தன அண்டமும் பனித்தன அங்கண்

தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும்.               187

 

வேறு

 

அம்முறை வேலையில் ஆடல்கொள மொய்ம்பின்

செம்மல்த னாது செழுங்கர முற்ற

மைம்மலி வார்சிலை வன்மையின் வாங்கிக்

கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான்.          188

 

ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ்

சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடு காலை

மூர்த்தம தொன்றினின் முச்சக வைப்பும்

பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே.                  189

 

அங்கது காலையில் ஆயிர கோடி

துங்கநெ டுங்கணை தூர்த்தனன் ஆர்ப்பப்

புங்கவ னுக்கிளை யான்புய லென்ன

வெங்கணை வீசி விலக்கினன் நின்றான்.                 190

 

விலக்கிய காலை வெகுண்டிவன் ஆவி

கலக்குவன் என்று கடுஞ்சரம் வெய்யோன்

இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான்

கொலைக்கணை ஆயிர கோடி தொடுத்தே.                       191

 

வெற்றிகொள் வான்பினும் வெங்கணை கோடி

செற்றமொ டேசெறி வித்திடு காலை

மற்றவை சிந்தினன் வாளிகள் நூறு

நெற்றியில் விட்டனன் நீள்புய வீரன்.                            192

 

அச்சுத னாம்அவு ணன்குளம் எய்தி

மெய்ச்சரம் நூறும் விளிந்துபின் விண்ட

வச்சிர மாகிய மால்வரை ஒன்றின்

உச்சியின உற்றபொன் ஊசிகள் என்ன.                   193

 

நூறயில் வாளி நுதற்கிடை சென்று

மூறில னாகி உறுந்திறல் நோக்கி

ஆறுமு கேசன் அயற்படை அல்லால்

ஈறுசெ யாதிவன் யாக்கையை என்றான்.                 194

 

என்றிடும் வீரன் இதற்பினும் வாளி

துன்றுபல் கோடி சொரிந்திட வெய்யோன்

வன்றிறல வெங்கணை யாலவை மாற்றி

ஒன்றுடன் ஏழ்கணை ஒண்புயம் உய்த்தான்.                      195

 

அம்பிரு நான்கும் அணைந்துடன் ஆடல்

மொய்ம்பினன் மொய்ம்புற மூழ்கியுள் ளுற்ற

செம்புனல் உண்டு செழும்பிடர் போழ்ந்தே

உம்பர் வெருக்கொள ஓடிய மாதோ.                             196

 

ஓடிய வேலை யுளைந்திடு நெஞ்சன்

ஆடல்கொள் மொய்ம்பினன் அவ்வசு ரேசன்

பாடுறு தேர்விடு பாகர்தம் மெய்யில்

கோடிபல் கோடி கொடுங்கணை விட்டான்.                197

 

அலகில் நெடுங்கணை ஆகம் அழுந்த

வலவர்கள் ஆற்ற வருந்தின ராகிப்

புலவொடு சோரி புறத்தில் விளங்க 

இலவம லர்ந்தென யாரும் இருந்தார்.                           198

 

அங்கது நோக்கி அழன்றசு ரேசன்

செங்கணை ஐம்பது தீயென ஓச்சி

வெங்கண் விறற்புயன் மேதகு தேரைப்

பொங்குளை மாவொடு பொள்ளென அட்டான்.            199

 

அட்டிடு காலை அடற்புயன் ஆங்கோர்

வட்டணை யாழிகொள் வையம தேறி

நெட்டழல் வாயு நெடும்படை தன்னைத்

தொட்டனன் ஆங்கது சூரன் அறிந்தான்.                  200

 

வேறு

 

வீறாகிய அசுரர்கிறை மிகமூரல் படைத்து

மாறாகவொர் படைதொட்டிலன் வரிவில்லொடு நிற்பர்

சூறாவளி அழல்மாப்படை சூரன்மிசை தாக்கி

ஊறாயின நூறாயிரம் உதிராயின பிதிராய்.                              201

 

காற்றின்படை கன்லின்படை கண்டம்பல வாகக்

கூற்றின்படை கதிரின்படை கூடத்தொடுத் திடலுஞ்

சீற்றங்கெழு சூரன்மிசை சென்றேயவை தாமும்

ஏற்றந்தனை இழந்தேகடி திறந்திட்டன அன்றே.                   202

 

அருணன்படை மறலிப்படை அழிவெய்தலும் அம்மை

சரணந்தனில் வருசத்திகள் தருமைந்தரில் தலைவன்

வருணன்படை நிருதிப்படை மகவான்படை மூன்றும்

முரணங்கொடு கொடியோன்உர மொய்ம்பிற்புக விடுத்தான்.        203

 

ஏற்றவை அவுணர்க்கிறை இருதோளுரம் எய்தி

வீயுற்றன அதுகாலையில் வீரங்கெழு மொய்ம்பன்

மாயப்படை அவுணப்படை வல்லேசெல விடுப்பப்

போயப்படை யவன்மெய்யிடை புகுந்தேபொடி யான.                      204

 

விண்ணோர்படை இவையாவையும் விளிவாதலும் வீரன்

நண்ணான்பெரு விறல்கண்டனன் நனிவிம்மித னாகி

மண்ணோடுயிர்த் தொகையாவையும் வகுத்தோன்படை நளினக்

கண்ணோன்படை யொடுகூட்டுபு கடிதிற்செல விடுத்தான்.          205

 

விடுக்குற்றிடும் அயன்மால்படை விரைந்தேசினம் வீங்கி

அடுக்குற்றிடும் உருமுப்புகை அழல்கால்பல படைகள்

மடுக்குற்றிடு புணரித்தொகை வகுத்தெவ்வகை யுலகு

நடுக்குற்றிட அவுணற்கெதிர் நடந்திட்டன மாதோ.                 206

 

ஆண்டேவரும் அயன்மால்படை அவுணன்தட மார்பங்

கீண்டேகுதும் என்றேஅவன் கிளர்தான்அக லத்தின்

மூண்டேசின மொடுதாக்கிய முழுமாமணி வயிரச்

சேண்டோய்கிரி துளைப்பான்முயல் சிறைவண்டின மெனவே.              207

 

மாயோன்படை உலகந்தரு மறையோன்படை அவுணத்

தீயோனுரந் தனிற்பாய்ந்து திருத்தொல்வலி சிந்தி

மீயோங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி

ஏயோவென வசையெய்தி இரிந்திட்டன அன்றே.                  208

 

மீளுற்றவை இரியுஞ்செயல் விழிதீயுற நோக்கி

நீளுற்றிடு திறல்மொய்ம்பினன் நிமலன்வர முன்னிக்

கோளுற்றிடு பெரும்விம்மிதங் கொண்டுற்றிட அண்டம்

ஆளுற்றிடும் அவுணர்க்கிறை நகைசெய்திவை அறைவான்.        209

 

முத்தேவரின் முதலாகிய மூவாமுதல் வரத்தால்

எத்தேவர்கள் படையுய்க்கினும் எனைவெல்கில எந்தப்

புத்தேள்படை விடினும்மெதிர் பொரவேஒரு படையும்

உய்த்தேதடை வினைசெய்கிலன் அவற்றின்வலி உணர்வேன்.      210

 

ஊனீத்திடு தவிண்ணவர் உலகம்புகழ் அயன்மால்

தானீத்துள படையென்னிடை சார்கின்றதொர் தன்மை

மாநீத்தமெ லாமுண்டிடு வடவைத்தழல் அதனைத்

தேனீத்தொகை தசையீதெனச் சேருந்திறன் அன்றே.                       211

 

தெரிந்திட்டனை நீயோச்சிய திறல்வெம்படை என்பால்

புரிந்திட்டதொர் வயமொன்றிலை பொள்ளென்றும் மேவி

முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்ன பொடிந்தே

எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால்.                       212

 

வில்வன்மைகொள் சரவன்மையும் விண்ணோர்படைக் கலத்தின்

பல்வன்மையும் பிறவாகிய படைவன்மையும் இயல்பாம்

தொல்வன்மையுங் கண்டேயுனைத் தொலைவில்படை ஒன்றால்

கொல்வன்எனக் காலந்தெரி கூற்றாமென நின்றேன்.                       213

 

என்னாவசு ரன்செப்பலும் இளையோன்இனி ஒன்றால்

ஒன்னார்களில் தலைவன்வலி உணர்வேனென உன்னாத்

தொன்னாள்எயில் மூன்றட்டருள் தூயோன்படைக் கலத்தை

மன்னாரருள் புரிசிந்தனை வழிபாட்டோடு விடுத்தான்.             214

 

விடுங்காலையின் இறைவன்படை விடம்வெங்கனல் அசனி

கொடுங்காலிருள் கதிர்வெய்யவன் கூற்றம்பல கூளி

தொடுங்கார்முகச் சரமாரிகள் சூலம்புடை சுற்ற

அடுங்காலமி தெனவேநெடி தார்த்துற்றதை யன்றே.                       215

 

உறுகின்றதொர் படைநோக்கினன் உரமுற்றெனக் குடைந்தே

இறுகின்றதொர் படைமற்றல ஈசன்படை ஈதால்

பெறுகின்ற அப்படையாலிது பிழைசெய்குவல் என்னாச்

செறுகின்றதொ ரவுணர்க்கிறை சிவன்றொல்படை எடுத்தான்.       216

 

ஊறேற்றிடு தன்சிந்தையின் உறுபூசனை நிரப்பி

ஆறேற்றிடு சடிலத்தவன் அடல்மாப்படை தொடுப்ப

நீறேற்றிடு மொய்ம்பன்விடு நிமலப்படை எதிர்போய்

மாறேற்றமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ.                  217

 

வேறு

 

காண்டகு நுதல்விழிக் கடவுள் மாப்படை

ஆண்டவை இரண்டும்நின் றாடல் ஆற்றியே

மாண்டிடும் உலகென வானம் போற்றிட

மீண்டன ஒல்லையில் விட்டு ளோர்கள்பால்.                     218

 

அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்

இன்னவை கொல்லுனக் கியன்ற வன்மைகள்

உன்னுயிர் இன்னினி ஒழிப்பன் காண்கெனாத்

தன்னெடுஞ் சிலைவளைஇச் சரங்கள் சிந்தினான்.         219

 

துன்புறு அடிக்கணை சூரன் சிந்தலும்

தன்பெருஞ் சிலையினைத் தானும் வாங்கியே

முன்புற நெடுஞ்சரம் முகிலின் தூவினான்

பொன்புனை அலங்கலம் யுத்து வள்ளலே.                220

 

அத்தகும் எல்லையில் அவுணர் மன்னவன்

முத்தலை நெடுங்கணை மூவைந் தேவியே

வித்தக மொய்ம்புடை வீர வாகுவின்

கைத்தல வில்லினைக் கண்ட மாக்கினான்.                       221

 

சிலையது துணிதலுஞ் சீறி வீரனோர்

இலையுடை வேலினை யெடுத்து வீசலுந்

தொவறு வரம்பெறு சூரன் மார்பெனும் 

மலையிடைக் குறுகியே மற்ற திற்றதே.                         222

 

இற்றுழி அவுணர்கள் இறைவன் மாலயன்

மற்றுள கடவுளர் வலியுங் கொள்வதோர்

கற்றையங் கதிர்மணிக் கதையொன் றோர்ச்சினான்

வெற்றிகொண் டுலவிய வீர வாகுமேல்.                 223

 

திண்மைகொள ப•றலைச் சேடன் பாங்குளார்

எண்மரொ டொன்றியோர் இயற்கைத் தாகியே

உண்மலி யார்ப்புடன் ஒழுகிச் சென்றென

வண்மணி கறங்கிட மணித்தண் டுற்றதே.                224

 

வெங்கதை வருதலும் வீர வாகுவோர்

செங்கதை எதிருறச் செலுத்தி நிற்றலும்

அங்கதை நீறுசெய் தவன்றன் மார்பிடைத்

துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே.            225

 

மேக்குயர் பெருஞ்சின வீர வாகுவின்

மாக்கிளர் அகலமேல் வயிர மாக்கதை

தாக்கலும் விண்டது தாரைச் செம்புணீர்

தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே.                 226

 

ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்

போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்

தாழந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்

வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி யோடவே.                       227

 

ஆற்றலின் றாகியே அண்ணல் வீழ்தலும்

மேற்றிகழ வலவனாம் விசாலி என்பவன்

தேற்றுறு பான்மையைச் சிந்தித் தோர்புடை

காற்றெனத் தேர்கொடு கடிது போயினான்.                228

 

போந்திடு காலையில் புலம்பி வீழந்துளான்

மாய்ந்திடுஞ சரதமாம் என்று மாறிலான்

ஆய்ந்தனன் சிலைனித் தப்பு மாரிதூய்க்

காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல்.          229

 

பொன்றிடா வரத்தினான் பூத சேனைமேற்

சென்றனன் கணைமழை சிதறிக் கோறலும்

நின்றவை இரிந்தன நெடிய தீங்கதிர்

என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம்போல்.                    230

 

தாக்கிகல் வீரருஞ் சயங்கொள் மொய்ம்பனும்

நீக்கமில் இராயிர நீத்தத் தானையும்

ஊக்கிய வலியழிந் துடைந்த தன்மையை

நோக்கினன் பன்னிரு நோக்கங் கொண்டுளான்.            231

 

ஆண்டது வேலையில ஆறு மாமுகன்

பாண்டிலந் தேர்மிசைப் பாகை நோக்குறா

ஏண்டகு சூரன்மேல் இரதம் ஒய்யெனத்

தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே.                 232

 

வேறு

 

இணைஅறு முருகன் இவ்வா றிசைத்தலும் இனைய தோரா

உணர்வுறு பவனன் என்னும் ஒருதனிப் பாகன் நகர்

கணமணி செறிந்த பொற்பிற் காமரு கடவுட் டேரைத்

துணையறு சூரன் முன்னர்த் துண்ணெனத் தூண்டி உய்த்தான்.      233

 

ஆயது காலை தன்னில் அவுணர்கோன் அநந்த கோடி

ஞாயிறு திரண்டொன் றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்

சேயுயர் விசும்பை நீங்கிச் செருநிலத் துற்ற தென்னத்

தூயதோர் குமரன் போரில் தோன்றிய தோற்றங் கண்டான்.         234

 

முண்டக மலர்ந்த தன்ன மூவிரு முகமுங் கண்ணுங்

குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோல மார்பும்

எண்டரு கரமீ ராறும் இலங்கெழிற் படைகள் யாவுந்

தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான்.     235

 

சூரெனும் அவுணர் கோமான் தொல்லைநாள் நோற்ற வாறும்

பாரிடை முடிவின் றாகிப் பல்லுகம் இருந்த வாறும்

ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்தெம் மையன்

பேரெழில் உருவம் நோக்கிப் பெரும்பயன் கோடற் கேயோ.        236

 

எஞ்சலில் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர தாற்றித்

துஞ்சிலென் தொலைவுற் றாலென் தூயவா லறிவின் மிக்கோர்

நெஞ்சினும் அளத்தற் கொண்ணா நிருமலக் குமர மூர்த்தி

செஞ்சுடர் வடிவங் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான்.                     237

 

பூவுல கண்ட மெல்லாம் புரந்திடுஞ சூரன் தன்னைத் 

தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க

மூவிரு முகத்து வள்ளல் முன்னவர்வந் தெய்தப் பெற்றான்

ஆவிவன் தவத்திற் கன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ.              238

 

இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே

உன்னருந் தலைமைத் தாகும் ஒருதனிக் குமரன் தன்னைத்

தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன் என்றால்

அன்னவன் தவத்தின் பேற்றை ஆரறிந் துரைக்கற் பாலார்.         239

 

பொருசமர் விளைப்பான் போலப் பொருக்கெனப் போந்து சூரன்

இருவிழி தன்னிற் காண்பான் எளிதுதன் வடிவங் காட்டி

அருளது புரிந்தான் என்னின் ஆதியங் குமரன் மாயத்

திருவிளை யாடல் யார்க்குந் தெரிகில போலு மன்றே.                    240

 

சிந்தையால் அறிதற் கொண்ணாத் திருவுரு விழியாற் கண்டு

முந்துதான் நின்ற சூரன் முழுதுல கடுவான் நின்றோன்

மைந்தனாம் இவனென் றுன்னி மனத்தினில் வெகுளி தூண்டக்

கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான்.          241

 

வேறு

 

சேனை யாய்நினைச் சூழந்தவர் செருவலி அழிந்து

போன போனதோர் மாதிரந் தெரிந்தில பூத

மான வீரரும் அழிந்தனர் சிலைத்தொழில் வல்ல

ஏனை யோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார்.              242

 

இற்ற நின்பெரும் படைக்கெலாந் தலைவனாய் என்பால்

ஒற்று வந்துள வீரனும் பொதுயிர் ஒழிந்தான்

மற்று நீயொரு பாலனோ என்னொடு மலைந்து

கொற்றம் எய்துதி நன்றுநன் றுன்னுளக் குறிப்பு.                  243

 

மேல தாகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்

ஞால மும்புரிந் துதவிய நான்முகத் திறையும்

மாலும் வெஞ்சமர் புரிதிறங் கருதிலர் மற்றோர்

பாலன் வல்லைகொல் என்னொடு போர்த்தொழில் பயில.          244

 

முந்தை நாள்வலி இல்லதோர் அடுக்கலும் முன்யான்

தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்

புந்தி நீங்கிய அவன்படைத் தலைவரும் போல

மைந்த என்னையும் நினைந்தனை போலுநின்  மனத்தில்.         245

 

தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா

ஆக்கம் உன்னலை பெருமிடல் உன்னலை அடலின்

வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர்

ஊக்கம் உன்னலை சிறுவநீ பெருஞ்சமர்க் குற்றாய்.                       246

 

கமல மேலுறை பகவனும் மாயனுங் ககனத்

தமரர் செம்மலும் மாதிரக் கிழவரும் அழுங்கச்

சிமைய மங்கையும் இரங்குற என்னொரு சிலையால்

இமையொ டுங்குமுன் நின்வலி அழிக்குவன் என்றான்.            247

 

வேறு

 

சூரனென் றுரைபெற் றுள்ள தொல்லையோன் இனைய தன்மை

வீரமுந் திறலுஞ் சீரும் வெகுளியுங் கொண்டு செப்ப

ஆரருள் உருவாய் நின்ற ஆதியங் குமரன் கேளா

மூரலுஞ் சிறிது தோன்ற இத்திறம் மொழிய லுற்றான்.                    248

 

வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை

பற்றியும் உடையம் எண்ணில் படைகளும் உடையம் வீயாப்

பெற்றியும் உடையம் தானைப் பெருங்கடல் உடையம் என்று

மற்றினி அகந்தை கொள்ளேல் மாற்றுதும் வல்லை மன்னோ.             249

 

வரமிகு சிறப்பி னேமை மழவிளங் குமரன் கொல்லோ

பொருதுவென் றிடுவான் வல்லன் என்றுநின் புந்தி கொண்டாய்

பொ¤துநீ மடவை மாதோ பிரான்தனி நெற்றி நாட்டத்

தொருசிறு பொறியே அன்றோ உலகெலாம் அடுவ தம்மா.         250

 

அறிவுடை முதியர் என்றும் ஆண்டினை யோர்கள் என்றுஞ்

சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்

வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்

விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே.              251

 

நூற்றுடன் எட்ட தென்ன நுவலுறும் உகத்தின் காறும்

பேற்றுடன் இனிது வைகும் பெரியநின் வலியை இன்னே

தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னால்

ஊற்றுடைப் பாலிற் புக்க உறையென அடுதும் என்றான்.           252

 

வேறு

 

என்னு முன்வெகுண் டவுணர்கோன் இருநிலந் தன்னை

முன்ன ளந்தவன் போல் அண்ட முகடுதோய் வுற்ற

கொன்னெ டுஞ்சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப

அன்ன பான்மையைக் கண்டனன் ஆதியங் குமரன்.                       253

 

மால யன்சுரர் பல்லியம் இயம்பிவாழ்த் தெடுப்ப

ஆல மார்வனத் தெம்பிரான் ஆடிய அந்நாள்

மேலை மூதண்ட முகடுற எடுத்ததோர் வியன்தாட்

கோலம் என்னஓர் நெடுஞ்சிலை யெடுத்தனன் குமரன்.             254

 

அடற்பெ ருந்திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப்

படித்த லந்தனை அருளுவான் ஆடல்செய் பரமன்

எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிட இயல்பால்

தடுத்த செங்கைபோல் குனித்தனன் அறுமுகன் தனுவை.          255

 

குனித்த வில்லிடைக் குமரவேள் நாணொலி கொண்டான்

அனைத்தும் அண்டங்கள் உடைந்தபேர் ஓதைபோல் அவுணன்

சினத்து மாறுதன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்

பனித்த டங்கடல் யாவுமார்த் துடைந்திடும் பரிசின்.                       256

 

அள்ளி லைப்படை அவுணர்கோன் அடுசர மழைதூய்

வள்ளல் தன்னையுந் தேரையும் உலகையும் மறைப்பத் 

தௌ¢ளி திங்கிவன் விஞ்சையென் றெந்தைசிந் தித்துக்

கொள்ளை வெங்கணை துரந்தவை யாவையுங் குறைத்தான்.      257

 

குறைத்த காலையில் சினவியே பின்னருங் கொடுநஞ்

சுறைத்த பொற்கணை பலதொட வாளிகள் ஓச்சி

அறுத்து மற்றவை குமரவேள் அவுணர்கோன் தன்னை

மறைத்து விண்ணெறி மாற்றினன் பகழிமா மழையால்.           258

 

ஆன பான்மைசேர் பகழியின் படலிகை அவுணன்

சோனை வாளியால் துணித்திடை வீட்டியே சுரர்தஞ்

சேனை காவலற் கண்டனன் வினைத்தனை சிந்தி

ஞான நாயகத் தாணுவைக் காணுநற் றவர்போல்.                 259

 

கண்டு தீயவன் பத்துநூ றாயிரங் கணைகள்

அண்ட நாயகன் குமரன்மேல் விடுத்தலும் அவற்றை

எண்ட ருஞ்சர மாரியால் விலக்கியீ ரேழு

புண்ட ருங்கணை உய்த்தனன் ஆங்கவன் புயமேல்.                260

 

கயப்பொ ருப்பினை உரித்தமால் வரைதரு காளை

வயப்பொ ருப்ப்பினை அடுகணை சூரனாம் வலியோன்

புயப்பொ ருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்

அயப்பொ ருப்பையுற் றடல்பெறா அழலவன் கதிர்போல்.          261

 

மாயை தன்மகன் வச்சிர யாக்கையின் வலியை

நாய கன்திரு மதலைகண் டழலெழ நகைத்துத்

தீய வன்பினும் விடுவதோர் சரமெலாஞ் சிந்தி

ஆயி ரங்கணை யால்அவன் சிலையினை அறுத்தான்.             262

 

சிலையி னைத்துணித் திடுதலும் அவுணர்கோன் செயிர்த்து

மலையி னைத்தடிந் தவன்மிசை மலரயன் தந்த

இலைய யிற்படை ஒன்றினை எறிதலும் ஈரேழ்

கொலையு டைக்கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான்.      263

 

ஏறு சேவகத் தவுணர்கோன் அயிற்படை இறலும்

வேறொர் கார்முகம் வாங்கினன் சரமழை வீசி

மாறு மாறவன் தொடுந்தொடுங் கணையெலாம் மாற்றி 

ஆறு மாமுகன் புயத்திலேழ் வாளிதொட் டார்த்தான்.                      264

 

செங்க திர்ப்பகை தன்னைமுன் உதவினான் செலுத்தும்

வெங்க ணைத்தொகை பரஞ்சுடர் உருவமாம் விமலன்

துங்க மிக்கதோள் புக்குநுண் தூளிய தாகிப்

பொங்க னற்றிரள் பட்டதோர் பூளைபோன் றனவால்.                      265

 

மொய்யி ருங்கணை பட்டுநீ றாதலும் முருகன்

வெய்ய சூர்வலி நன்றுநன் றாலென வெகுளா

ஐயி ரண்டுவான் பகழியால் அவன்சிலை அறுத்துச்

செய்ய தேரையும் ஆயிரங் கணையினால் சிதைத்தான்.           266

 

ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையிற் சிலையும்

பூழி ஆதலும் அரசனுக் கேமமாய்ப் போந்த

ஏழி ரண்டுநூ றாயிரந் தேரையும் இமைப்பின்

ஊழி நாயகன் தன்சர மழையினால் ஒழித்தான்.                  267

 

சேம மாகியே நின்றிடு தேரெலாஞ் செவ்வேள்

காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான்

தூம வெங்கனல் தூண்டிய விழியுடைச் சூரன்

ஏம மாகியே கொண்டிடு சூலமொன் றெறிந்தான்.                  268

 

நண்ண லன்விடு முத்தலைப் படையைநாற் கணையால்

பண்ண வன்திரு மாமகன் இருதுணி படுத்துத்

துண்ணெ னக்கணை ஏழினால் அவன்குடை துணியா

அண்ண லஞ்சுடர் முடியையோர் கணையினால் அறுத்தான்.               269

 

மணிப டுத்திய மவுலியை அறுத்தபின் வலியோன்

பணிப டுத்தமெய் எங்கணும் பகழிகள் போக்கி

அணிப டுத்தியே புனைதரு மதாணிகள் அனைத்தும்

துணிப டுத்தினன் மறைகளுந் துணிந்திடற் கரியோன்.             270

 

ஆன காலையில் சூரபன் மாவெனும் அரசன்

மான வன்மையில் குறைந்தது நோக்கிமா டுள்¢ள

சேனை காவலர் நாற்படை தன்னொடுஞ் சேர்ந்து

சோனை யாப்படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார்.                     271

 

ஏழு நேமியும் எறிந்துமே ருவைவளைந் தென்னக்

கேழில் பல்படை வீசியே ஆர்த்துடன் கிளர்ந்து

சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொன்னாட்

பூழி யாகவே அவுணரூர் அட்டவன் புதல்வன்.                           272

 

குருதி வேற்படை கொண்டவன் தன்புடைக் குழுமிப்

பொருதி றற்பெருந் தானையைப் பொள்ளென அடுவான்

கருதி யாங்கொரு கரத்தினில் இருந்திடு கடவுட்

பரிதி யம்படை தொட்டனன் இரவியிற் படர.                            273

 

இலகும் வெய்யவன் நடுவுநாள் யாமத்தின் ஏகி

அலகில் பேரிருள் அட்டென ஆழிபோய் அவுணர்

தலையும் ஆகமுங் கைகளும் அடிகளுந் தடந்தோள்

மலையும் வீசிய படைகளுந் துணித்தது மன்னோ.                274

 

மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெங்கண் 

மான யானைக ளியாவையும் துணித்திடும் வயமாத்

தானை யாவையும் துணித்திடுஞ் சமரினைத் தாங்குஞ்

சேனை காவலர் யாரையும் துணித்திடுந் திகிரி.                   275

 

அரந்து ணித்தவாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்

உரந்து ணித்திடும் இகழின்நாத் துணித்திடும் உரப்பில்

சிரந்து ணித்திடும் படைதொடு முயற்சிகள் செய்யிற்

கரந்து ணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடுங் கழல்கள்.             276

 

குடைது ணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்

தொடைது ணித்திடும் தேர்நிரை பூண்டமான் தொகையின்

இடைது ணித்திடும் அவுணர்தங் கரங்களின் இருந்த

படைது ணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும்.           277

 

கொற்ற மிக்கதோர் கோல்கொடு வலியுடைக் குலாலன்

சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று

பற்ற லார்பெருந் தானையைப் ப•றுணி படுத்தி

ஒற்றை நேமியம் பெரும்படை திரிந்ததால் உலவி.                       278

 

போர ழிந்திடும் அவுணர்தம் உடற்குறை புகையாச்

சோரி வன்னியா அதனிடைத் துணிந்துவீழ் பரியும்

தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி

வீர மாமகம் ஒன்றியற் றுவதென விளங்கும்.                            279

 

வெஞ்ச மாத்தொழில் புரிதரும் அவுணரை வீட்டி

வஞ்ச கத்தொடு மாயமாம் பேரிருண் மாற்றி

எஞ்ச லுற்றிடுங் குருதியம் பெருநிறம் எய்திச்

செஞ்சு டர்க்கதி ராயதால் அறுமுகன் திகிரி.                              280

 

நச்சு தன்னிடத் தமலையை இருத்திய நம்பன்

இச்சு தன்தனி ஆழிசென் றாடுறும் இயல்பை

அச்சு தன்கரத் தேந்திய நேமிகண் டதனை

மெச்சு தன்மையிற் புகழ்ந்தது விம்மித மேவி.                           281

 

தீர்த்தன் உய்த்திடு நேமியம் பெரும்படை செருவில்

ஆர்த்த தானைநூ றாயிர வௌ¢ளமு மடைய

மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூவிரு முகத்தோன்

வார்த்தை யால்அவை முழுவது மாற்றிய வாபோல்.                     282

 

ஆடல் உற்றவேற் பண்ணவன் அலர்கதிர்ப் பரிதி

பாடு சுற்றிய அவுணர்கோன் தானையைப் படுத்து

மோடு பெற்றதொல் புகழொடு மீண்டது முளிபுற்

காடு முற்றவுந் தனிபடர்ந் துண்டதோர் கனல்போல்.                      283

 

கைம்ம லிந்திடு குடைபல காம்பிடை துணிந்து

மெய்ம்ம லிந்திடு விழுநிணச் சேற்றிடை வீழ்ந்து

பொம்மல் கொண்டுநிற் புறுவன பூவலர் தடத்திற்

செம்மல் கொண்டமர் தாமரைக் காடுபோல் திகழும்.                      284

 

அழுங்கல் கொண்டதோர் கரிபரி அவுணர்பேர் அனிகம்

வழங்கல் இன்றிவீழ்ந் தவிந்திடு களேவரம் மலிதல்

தழங்கு தெண்டிரை உலகுள சயிலங்கள் அனைத்தும்

ஒழுங்க தாகிவந் தாயிடைத் தொக்கவா றொப்ப.                  285

 

அகல்வி சும்புகா றொங்கிய களேவரம் அதன்பால்

ஞெகிழி கொண்டவாய்ப் பேயின நிணனுண்டு சிரித்து

மிகவும் ஆர்ப்பெடுத் தீண்டுவ மின்னியே இடித்து

முகிலி ருங்கணம் முதுவரைச் சாரல்மொய்த் ததுபோல்.           286

 

மையல் யானையும் அவுணர்த மியாக்கையும் மற்றும்

ஒய்யெ னக்கொடு குருதியம் பேரியா றொழுகல்

செய்ய தோர்பணி கருங்கடல் மறைத்தல்சிந் தித்து

வெய்ய நஞ்சுமிழ்ந் திருநிலம் படர்தல்போல் விளங்கும்.           287

 

மாணி லைப்படு பேய்சில களேவர வரைபோய்ச்

சோணி தப்புனல் ஆறுபாய்ந் திடஅதன் துவலை

சேணி லத்துளார் அரிவையர் புனைகலை தெறிப்ப

நாணல் உற்றனர் பூப்பென நகைப்பரென் றுன்னி.                  288

 

சொல்ல ருந்திறல் அவுணரில் சிலர்தலை துணிந்து

வல்லை யிற்கிளர்ந் தார்த்தலும் வலியினால் தம்மை

அல்லல் செய்திடு கோளிரண் டல்லதை அவைபோல்

எல்லை யில்லவை வந்தஎன் றிரியுமால் இரவி.                         289

 

நீடி விண்படர் கொடிசில நிமிர்கவந் தத்தின்

காடு தன்னிடைப் புகுந்துதந் தலைமிசைக் காட்டி

ஆடல் யானையின் களேவரங் குத்துவ அடுபோ

ரூடு காக்கையின் முகரும்வந் தார்கொலென் றுரைப்ப.            290

 

நீட லுற்றசீர் அவுணர்கோன் ஆணையால் நிலமேல்

வீட லுற்றிடு வயவர்க்குத் தம்முயிர் மீட்டுங்

கூட லுற்றிடு திறனெனக் கூளிகை கொட்ட

ஆட லுற்றிடும் உடற்குறை அநந்தகோ டிகளால்.                 291

 

இனைய வெல்லையில் எம்பிரான் எரிகதிர்ப் பரிதி

முனையில் வந்தடல் செய்ததை உணா¢ந்திலன் முன்சூழ்

கனையி ருங்கடற் படையெலாம் பட்டவா கண்டு

மனம ருண்டொரு தமியனாய் நின்றனன் வலியோன்.                     292

 

நீண்ட தன்னொரு வேற்படை உய்த்துநீக் கினனோ

பாண்ட ரங்கம தியற்றுவான் படையின்வீட் டினனோ

மாண்டு போகவென் றொருமொழி தன்னின்மாற் றினனோ

ஈண்டு தானையை முடித்ததெவ் வாறிவ னென்றான்.                     293

 

தேரி ழந்தனன் சிலையதும் இழந்தனன் திறல்சேர்

பேரி ழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும்பூண்

ஏரி ழந்தனன் மவுலியுங் கவிகையும் இழந்தான்

பாரி ழந்திடு மன்னர்போல் நின்றனன் படிமேல்.                   294

 

நின்றி டுந்திறல் அவுணர்கோன் நெடுஞ்சினம் நெஞ்சில்

துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி

நன்று நன்றொரு பாலகன் வலியென நகையா

வென்றி நான்முகன் படைக்கலம் எடுத்துமேல் விடுத்தான்.         295

 

வேறு

 

சூர்ப்புயல் அன்னதொர் சூரன் விடுக்கும்

மாற்படு போதன் வயப்படை சென்று

பாற்படு மெல்லை பரஞ்சுடர் செங்கை

வேற்படை சென்று விழுங்கிய தன்றே.                          296

 

விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம்

அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி

வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி

முழங்கழல் என்ன முனிந்துடன் விட்டான்.                       297

 

விட்டிடு மாயவன் வெம்படை ஏகி

மட்டறு கண்ணர்தம் மாலுரு ஈன்று

கிட்டிய காலை கிளர்ந்திடும் ஔ¢வேல்

அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ.                 298

 

சயம்புனை செம்மல் தனாதருள் நீரால்

அயன்படை தன்னுடன் அம்புவி கேள்வன்

வியன்படை தன்னையும் வேற்படை உண்ணக்

கயம்படு சூரது கண்டுவிம் முற்றான்.                            299

 

கறுத்திடு கின்றதொர் கந்தர வள்ளல்

விறற்படை தன்னை விடுத்திடின் யாரே

மறுத்திடு வார• தென்று மனத்திற்

குறித்னன் மாயை கொடுத்தருள் கோமான்.                       300

 

முப்புரம் நீறெழ மூரல் விளைத்தோன்

மெய்ப்படை தன்னை விடுப்பது தேற்றி

அப்படை ஏந்தி அருச்சனை நீரால்

ஒப்பறு சீர்த்தியன் ஒய்யென உய்த்தான்.                 301

 

அத்தகு வெம்படை ஆடல் இயற்றும்

முத்தலை வேற்படை மூர்த்திகள் கோலம்

எத்திசை தன்னினும் ஈண்டுற ஆர்த்து

மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ.                           302

 

ஆடியல் யானைக ளாயின எட்டும்

வீடிய வேயென வீழ்ந்தயர் வுற்ற

நீடிய நேமியின் நின்றிடு செந்த

ஓடிய சேடனும் உட்கி உலைந்தான்.                             303

 

படித்தலம் நெக்கது பல்வகை மேகம்

இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத்

துடித்தது திங்கள் சுழன்றது மேரு

வெடித்த திடந்தொறும் விண்டதிவ் வண்டம்.                     304

 

இலக்கர் நடுங்கினர் ஏனைய வீரர்

கலக்க மடைந்தனர் காண்டகு பூதர்

மலக்கம தெய்தினர் மற்றிது தன்னை

விலக்கரி தாலென ஓடினர் விண்ணோர்.                 305

 

புடவி முதற்புவ னங்கள் அனைத்தும்

நொடிவரை செல்லுமுன் நொய்தென மாய

முடிவ தியற்றிடு மூர்த்திதன் நாமப்

படைவர அன்னது பா£¢த்தனன் வள்ளல்.                 306

 

எந்தைதன் மாப்படை ஈதென ஐயன்

சிந்தை புரிந்தொரு செங்கையை நீட்டி

வந்திடும் அப்படை பற்றினன் மாதோ

தந்தவன் வாங்கிய தன்மைய தென்ன.                   307

 

பெற்ற முயர்த்த பெருத்கை நாமக்

கொற்ற நெடும்படை யைக்கும ரேசன்

பற்றியொர் பாணி பரித்தனன் நின்றான்

மற்றது கண்டனன் மாயவள் மைந்தன்.                  308

 

வேறு

 

விட்ட விட்டதோர் படைக்கெலாம் வேறுவே றொன்று

தொட்டி லான்அத னாலது மாற்றுதல் துணியான்

கிட்டும் எல்லையில் அவையெலாங் கவர்ந்தனன் கேடில்

அட்ட மூர்த்திசேய் என்பது காட்டினன் அம்மா.                   309

 

என்னொ டேபொரற் கிவனலால் வேறிலை இனையோன்

தன்னொ டேபொரற் கியானலா திலையிது சரதம்

அன்ன பான்மையின் எனக்குநே ராம்இவன் அலது

பின்னை யாருளர் தமியனுக் குவமையாப் பேச.                  310

 

மான வேற்படை வன்மையும் விற்றொழில் வலியும்

ஏனை யாயுள வன்மையுங் கண்டனன் இனிமேல்

பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பனென் றுன்னி

மோன மாகியே நின்றனன் அவுணர்கள் முதல்வன்.                       311

 

பொருளின் நீர்மையால் புனைகலன் மாற்றலிற் புவிமேல்

இருளின் நீ£மையாய்த் தோன்றினோன் அற்புத மெய்தி

மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல்

அருளின் நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான்.         312

 

இந்தி ரன்தனி மதலையை இமையவர் தம்மை

அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை அதற்கா

முந்தொ ரொற்றனை விடுத்தனம் ஆங்கவன் மொழியுஞ்

சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர்தஞ் சிறையும்.           313

 

அன்ன தன்மையால் ஈண்டியாம் வந்தனம் அமரில்

தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை

முன்னம் அட்டிடு முறையென நின்னையும் முனிவால்

இன்ன வைகலே அடுதுமென் றேகினம் மீண்டும்.                 314

 

ஈண்டு நின்புடை ஈண்டிய இலக்கம்வௌ¢ ளத்து

நீண்ட தானையும் நின்சிலை வன்மையும் நின்னால்

தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளுந் தொலைந்து

மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய்.                315

 

நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது நின்னை

அடுதல் இங்கொரு பொருளுமன் றரிதுமற் றன்றால்

படையி ழந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய்

முடியு மென்றுதாழ்க் கின்றனம் தருமத்தின் முறையால்.          316

 

பன்னு கின்றதென் பற்பல விண்ணுளோர் பலரும்

துன்னு தொல்சிறை விடுத்தியேல் உன்னுயிர் தொலையேம்

அன்ன தன்மையே மறுத்திடின் ஒல்லைநாம் அடுதும்

என்னை கொல்லுன தெண்ணங்கள் உரைத்தியால் என்றான்.        317

 

வேறு வேறுநின் றுலகெலாம் அளிப்பது வெ•கி

ஆறு மாமுகம் பன்னிரு செங்கைகொண் டருள்வோன்

ஊறு சேர்அவு ணன்றனக் கினையன உரைப்ப

மாறொர் வாசகஞ் சொற்றிலன் உளத்திவை மதிப்பான்.            318

 

படையி ழந்தனன் இவனென உன்னியே பாலன்

இடைதெ ரிந்தனன் போலவே இமையவர் யாப்பை

விடுதி என்னவும் வல்லனா யினன்விளி வில்லேன்

அடலும் ஆற்றலுந் தெரிந்திலன் பிள்ளைமை யதனால்.           319

 

மன்ற லந்தொடை அறுமுகன் வரம்பிலா வைகல்

நின்று பேரமர் புரியநான் வறிதுநின் றிடினுங்

கொன்றி டுந்தொழில் வல்லனே தந்தைமுன் கொடுக்க

என்றும் மாய்ந்திடா ஒருவரம் பெற்றிடும் என்னை.                       320

 

தொழுத குந்திரு மவுலியுங் கவிகையுந் துணிய

இழிவ தாகியே தமியன்நின் றமரியற் றிடினும்

அழிவ தில்லையால் ஆவது மிலைபுகழ் அதனால்

பழிய தொன்றுறும் அங்கது பாதுகாத் திடுவேன்.                  321

 

வேற்று நீர்த்தடங் கொள்வதை அன்றிவௌ¢ ளங்கள்

ஊற்று நீர்ப்பெரும் புணரியைக் கொள்வதற் குறுமோ

ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே அன்றி

மாற்று மோவென தழிவுறா வரத்தையும் மைந்தன்.                      322

 

என்னை அங்கவன் முடித்திடல் அரியதா லியானும்

அன்ன வன்றனை இத்துணை வெல்வதும் அனைத்தே

தொன்ன கர்ப்பெரு வளத்தொடும் படையொடுந் துன்னிப்

பின்னர் வந்தமர் இயற்றியே பெருந்திறல் பெறுவேன்.                     323

 

வசைய தன்றிது செருச்செய்வோர் பற்பகல் மலைந்து

விசையம் எய்தினும் மேன்மையாம் வியப்புமாம் மேலுந்

திசைவி ளங்குறு புகழுமாம் யானுமிச் செய்கை

இசைவ தேகடன் அறிஞர்தஞ் சூழ்ச்சியும் இ•தே.                 324

 

என்று பற்பல சூழ்ச்சிகள் மனத்திடை எண்ணி

ஒன்றொர் மாயையின் மந்திரந் தன்னையுள் ளுறுத்தி

நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்தவண் நீங்கிப்

பொன்றி கழ்ந்திடும் மகேந்திரக் கோயிலுட் போனான்.             325

 

மறைந்து போயசூர் முயற்சியை மன்னுயிர் தோறும்

உறைந்த நாயகன் கண்டனன் ஒருதனிச் செவ்வேல்

எறிந்து மற்றவன் உயிர்கொள நினைந்திலன் இன்னும்

மறிந்து தீயவன் உய்யுமோ வெனுந்திரு வருளால்.                       326

 

வேறு

 

ஆய வேலைதனில் ஆறுமு கன்பால்

மாயனும் மயனும் வானவர் கோவும்

ஏய தேவர்களும் யாவரும் எய்தித்

தூய வந்தனை யுடன்சொல லுற்றார்.                           327

 

என்று காசிபன் இடந்தனில் வந்தான் 

அன்று தான்முத லாவசு ரேசன்

வென்றி யேகொடு வியப்பொ டிருந்தான்

உன்ற னோடுபொரு தோனன் இன்றே.                   328

 

நீடு சூரனுடன் நீஅமர் செய்தல்

ஆடலே அலதை ஆங்கவன் ஆவி

கோடல் சிந்தையிடை கொண்டலை என்னின்

ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ.                 329

 

துங்க முற்றுடைய சூர்தனை வேலான்

மங்கு வித்திடுதி மற்றதன் முன்னம்

அங்க வற்கெதிர் அருஞ்சமர் ஆற்றல்

எங்கண் வைத்துடைய இன்னருள் அன்றோ.                      330

 

என்றி யம்புதலும் எந்தை வினாவி

நன்று நன்றென நகைத்தினி நம்முன்

சென்று நின்றுசமர் செய்திடின் வல்லே

வென்று சூர்முதலை வீட்டுது மென்றான்.                331

 

ஆடல் சேரும்அவு ணன்சமர் ஆற்றா

தோடி னாரும்உறு கண்ணுள ராகி

வீடி னார்களௌ வீழ்ந்தயர் வாரும்

கூடி னார்குமர வேள்புடை வந்தார்.                             332

 

சங்க மாகியுறு சாரதர் ஆனோர்

எங்கள் நாயகனை எய்தி இகற்சூர்

மங்குல் வானிடை மறைந்தது தேரா

அங்கண் ஞாலமலை வுற்றிட ஆர்த்தார்.                 333

 

திகழ்ந்த பூதர்கள் செருத்தனில் எம்மை

இகழ்ந்த சூ£¢நகரின் இம்மதில் வீட்டி

அகழ்ந்து கோபுரம் அகன்கட லிட்டு

மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மின மென்றார்.                       334

 

வம்மின் வம்மினென வல்லைவி ளித்துத்

தம்மி னங்களடு சாரதர் மேலோர்

அம்ம கேந்திரம் அழுங்குற ஆர்த்திட்

டிம்மெ னக்கடி தெயிற்புறம் உற்றார்.                            335

 

உற்ற காலைதனில் ஒண்மதில் காக்குங்

கொற்ற வீரன்அதி கோரன் மருங்கிற்

சுற்று தானையொடு சோர்விலன் நின்றான்.                      336

 

கண்டு ளான்நன கனன்றிதழ் கவ்வித்

திண்டி பேரிதி பிலைப்பறை ஆர்ப்பத்

தண்ட லின்றிஅமர் தானைக ளோடு

மண்டு போர்புரிய வந்தெதிர் புக்கான்.                            337

 

எதிர்பு குந்திடலும் ஏற்றெதிர் சென்றார்

அதிர்பு குங்கழலின் ஆடுறு பூதர்

பொதிர்பு குந்தவருள் போந்துழி எண்ணில்

கதிர்பு குந்தனையகாட்சி படைத்தார்.                             338

 

தோம ரம்பரசு குலமொ டெ•கம்

ஏம ருங்கதைகள் ஏவினர் கோரன்

மாம ருங்கவுணர் மற்றிவர் குன்றங்

காம ரம்படைக லந்து விடுத்தார்.                       339

 

எடுத்து வேழநிரை எற்றினர் தேரை

ஒடித்தே றிந்தனர் உகண்டுகள் பாய்மாப்

பிடித்தொர் கைகொடு பிசைந்தனர் வீரர்

துடித்தி டும்படி துகைத்தனர் பூதர்.                              340

 

எறிவர் பல்படையும் எய்குவர் வெங்கோல்

குறிய ஈட்டிகொடு குத்துவர் வாளால்

செறுநர் தங்களுடல் சிந்துவர் இவ்வா

றறியும் வெஞ்சமரை ஆற்றினர் தீயோர்.                 341

 

சோரி பொங்கின சொரிந்தன மூளை

சாரு றுங்குடர் சரிந்தன சேனங்

காரி பம்பின கணங்களும் ஏனை

வீர ராம்அவுண ரும்பலர் வீந்தார்.                              342

 

ஈடு றுஞ்சமர் இழைத்துழி இவ்வா

றாடல் வெங்கணவர் ஆற்ற முனிந்தே

சாடி வன்மையொடு தாக்கலும் நில்லா

தோடி னார்அவுண ராயுளர் முற்றும்.                            343

 

கோர மிக்கஅதி கோர னெனும்பேர்

வீரன் மற்றதனை நோக்கி வெகுண்டே

ஓரே ழுத்தனை உரத்தொடு பற்றிச்

சார தப்படைஞர் தம்மொடு நேர்ந்தான்.                  344

 

தலைத னிற்கரத லத்தினின் மொய்ம்பின்

மலையி னிற்பெரிய மார்பின் முகத்தின்

ஒலிக ழற்கணம் உலைந்திட மோதிக்

கொலைவி ளைத்தொருவ னேகுல வுற்றான்.                    345

 

ஈடி லாதொ ரெழுப்படை பற்றா

ஓடி யோடிஉரு முற்றென மோதி

வீடு றாதமர் விளைத்திடு பூதர்

கோடி கோடியொ ரிமைப்பிடை கொன்றான்.                      346

 

இந்த வாறவன் எழுக்கொடு தாக்க

முந்து தூசிமுரி வுற்றது கண்டான்

கந்தன் ஏவல்செய் கணப்படை மன்னன்

சிந்து மேகன்முனி வோடெதிர் சென்றான்.                347

 

சென்ற பூதரிறை செங்கையில் வைகுங்

குன்றம் ஒன்றைஅதி கோர னெனும்பேர்

வென்றி யான்மிசை விடுத்தலும் நோக்கித்

தன்த டக்கையெழு வால்தகர் வித்தான்.                  348

 

தகரும் எல்லைதரி யார்கடல் வற்ற 

முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல்

வெகுளி யோடவுணர் வேந்தனை எய்தி

அகல மீதினில் அடித்தனன் மாதோ.                             349

 

அடித்த லோடும்அவு ணர்க்கிறை யானோன்

இடுக்கண் எய்திஇவன் ஆவியை இன்னே

முடிப்பன் என்றுமுச லங்கொடு மொய்ம்பில்

புடைத்த னன்உருமு வீழ்வது போல.                            350

 

பூதன் மொய்ம்பிடை புடைத்த எழுத்தான்

ஏதமா முரிய ஏற்றெதிர் தெவ்வைக்

காது கைகொடு கபோலம் அதன்கண்

மோத வேயவுணன் ஆவி முடிந்தான்.                           351

 

வாய்தல் போற்றிய வயப்படை வீரன்

சாத லுற்றுழி தலைத்தலை ஆர்த்துப்

பூத சேனையா¢கள் பொம்மென ஏகி

மூதெ யிற்றலை முதற்கடை சென்றார்.                 352

 

ஆண்டி யோசனை ஒராயிரம் வான்போய்

ஈண்டு செம்மணிக ளால்இய லுற்று

மாண்ட தீயவட வாமுக மேபோல்

நீண்ட தோர்சிகரி நின்றது கண்டார்.                             353

 

கண்ட தோர்சிகரி கைகொடு தொட்டுத்

தெண்டி ரைக்கடலின் மேற்செல விட்டார்

மண்டு மேருவரை யின்குவ டேந்திச்

சண்ட வாயுவிடு தன்மைய தென்ன.                            354

 

 

அன்ன வேலையில் அலைந்தது ஞாலம்

பன்ன கேசனும் மிகப்பட ருற்றான்

மன்னு சூருறை மகேந்திர மூதூர்

துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார்.                            355

 

ஈண்டு பூதரெறி யுஞ்சிக ரந்தான்

ஆண்டவ் வேலையிடை ஆழ்ந்தது தொன்னாள்

நீண்ட மேனிஇறை நின்றளி யாமுன்

மாண்டு சாய்ந்துவிழு மந்தர மென்ன.                           356

 

வேறு

 

பொலங்கெழு சிகரிஅப் புணரி சேர்தலின்

கலங்கின விரிதிரைக் கைம்ம றித்ததால்

மலங்கின மொடுசுறா அருந்தி மிங்கில

கிலங்களும் இரிந்ததங் கிளைக ளோடுமே.                       357

 

மாதலம் புகுந்திடுஞ் சிகரி வாரியுட்

பூதரங் குய்த்திட விரைவிற் போவது

வேதமுன் கொணர்தரு மீனம் வேலையில்

பாதலம் புகுந்திடு பான்மை போலுமே.                           358

 

கழற்கறங் கியதெனுங் கண்ணர் உந்திய

அழற்கொழுந் தாகிய சிகரத் தாய்மணி

நிழற்பொலிந் திடுவன நீல வேலையில் 

தழற்பரந் தழுவதோர் தன்மை போலுமே.                359

 

நாகர மணிவெயில் நணுகும் வேலையில்

சீகரம் உம்பர்போய்த் தெறிந்து மீள்வது

சாகரம் உற்றது தழலென் றுன்னியே

மாகர வாரிநீர் வழங்கல போலுமால்.                            360

 

காமரு சிகரியில் கவைஇய மாமணி

ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே

பூமது நுகர்தரு பொறிவண் டானவை

தாமரை வனமென அயிர்த்துச் சாருமால்.                361

 

பங்கய மணிநிழற் பரப்பை நோக்கியே

இங்கிவை தசையென எண்ணிப் புட்குலம்

நுங்கிய செல்வன நொய்தின் எய்தியே

அங்கிகொ லெனச்சில அகன்று போயின.                 362

 

தெழித்திடும் வேலையிற் செய்ய சோதியால்

தழற்பொலி கோபுரந் தரிப்பின் றேகலால்

கிழித்தன பணிபதி கிளர்ந்து மற்றவர்

விழித்தனர் உருமென வெருவி ஓடினா£¢.                       363

 

பூதர்கள் யாம்பிடு பொலங்கொள் போபுரம்

ஓதநெஞ் சடைதலும் உதிரங் கான்றதால்

சேதன மோவிது செப்பும் என்றனர்

மீதுறு கதிர்மணி வெயிலென் றுன்னலார்.                364

 

பொற்பகல் சிகரியுட் பொருந்தி ஆழ்பவர்

அற்பகல் நுகருமீன் அவரை நுங்குமால்

முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது

பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே.                  365

 

ஆனதொர் கோபுரம் அளப்பி லாதமர்

தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால்

மீனுறு திரைக்கடல் வௌ¢ள மேற்செலா

மாநகர் எயில்தனை வளைந்து புக்கதே.                  366

 

காதிடும் இயற்கையில் கால்கொண் டேகலிற்

பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின்

மீதமர் காரினில் விமலன் விட்டிடும்

பூதரை நிகர்த்ததப் புரிசை சூழ்புனல்.                            367

 

மைக்கடல் புவியினும் மகேந்தி ரப்புரம்

மிக்கது போலுமென் றைய மேற்கொளா

இக்கணம் நாடுதும் என்று சென்றபோல்

புக்கது நகரிடைப் புணரி நீத்தமே.                       368

 

மீனெனும் மைந்தரை மிசைந்த தானவர்க்

கானதொ ரிறுவரை அணுகிற் றிவ்விடை

யானவர்ப் பொருவனென் றெண்ணிச் சேறல்போல்

போனதப் பதியினுட் புணரி நீத்தமே.                            369

 

இவ்வகை நிகழ்ந்திட எறிந்த கோபுரம்

பௌவமுற் றிடுதலும் பைம்பொன் மாமதில்

வெவ்வலி அரசர்கள் விளிய ஈறிலாக்

கௌவைகொள் திருநகர்க் காட்சித் தாயதே.                      370

 

எல்லைமற் றனையதில் ஈண்டு சாரதர்

மல்லலம் புரிசையின் வடாது பாங்கரை 

ஒல்லையில் தம்பதத் துதைப்பச் சாய்ந்தது

செல்லுற வீழ்ந்திடு சிகர மேயென.                              371

 

மாமதில் சாய்தலும் வலிய பூதர்கள்

காமரு நகரினுட் கலந்து நண்ணினார்

ஏமரு கடங்கலுழ் இபங்கள் ஈண்டியோர்

தாமரை மலர்த்தடந் தன்னிற் புக்கபோல்.                 372

 

கானுறு பங்கயக் கடவுட் கிப்பகல்

போனதோர் காலையிற் புணரி யாவையும்

மாநிலங் கொள்வது மானப் பூதவெஞ்

சேனைகள் மகேந்திர புரத்திற் சென்றவே.                373

 

புக்கனர் வீரர்கள் புயலின் மேனியுஞ்

செக்கரங் குஞ்சியாந் தீயுங் கைகளாய்

மிக்கெழு புணரியும் வேறு வேறுறா

மைக்கடல் உலப்பில வருவ போலவே.                          374

 

துதித்திட அரியவன் நகரில் துண்ணென

எதிர்த்திடு தானவர் இனத்தை ஒல்லையில்

சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும்

உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே.                   375

 

மதரொடு குறுகும்அவ் வயவெம் பூதர்கள்

அதிர்கழல் அடிகளால் அளப்பில் மாளிகை

பிதிர்பட உந்தலும் பிறங்கு பூழிகள்

கதிருறு கதியினுங் கடந்து போனவே.                           376

 

வேறு

 

அங்கவ் வெல்லையிற் சாரத வேந்தர்கள் அயில்வேற்

புங்க வன்தனை நீங்கியாம் அவுணர்கோன் புரத்துள்

இங்கி னிப்படர் கின்றது தக்கதன் றென்னாச்

செங்க ளந்தனின் மீண்டனர் சேனையுந் தாமு.                    377

 

ஆன காலையிற் பூதர்தஞ் செய்கைகள் அனைத்தும்

ஞான நாயகன் காண்குறா நல்லருள் புரிந்து

மான வேற்படை வீரரும் அமரரும் வழுத்தச்

சேனை யாவையுங் கொண்டுதன் பாசறை சேர்ந்தான்.             378

 

பாச றைப்புகு குமரவேள் பாரிடப் பகுதி

ஆச றப்புனை ஆவணச் சூழல்போய் அமர

வாச வத்தனிக் கடவுளா தியர்புடை வழுத்த

ஈச னிற்சிறந் தரியணை தன்னில்வீற் றிருந்தான்.                 379

 

ஈண்டு தானவர் இலக்கம்வௌ¢ ளத்தரும் இன்னே

மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க் கரத்தால்

தீண்டி வான்மையிற் குறைந்தனன் என்றுசெஞ் சுடரோன்

ஆண்டு மூழ்குவான் புக்கென அளக்கரை அடைந்தான்.            380

 

வேறு

 

புரந்தர னாதியர் புன்மை நீக்கியே

பெருந்திரு வுதவுவான் பிரான்தன் காதலன்

இருந்தனன் பாசறை ஈது நின்றிடத்

திருந்தலர் மாட்டுறுஞ் செய்கை செப்புவாம்.                      381

 

ஒருவரும் ஔத்தினும் உணர்வு றாவகை

அருவம தாகியே அகன்று சூர்முதல்

பொருவரு மகேந்திர புரத்துக் கோயிலுள்

திருமகள் மணமனைச் சேறல் மேயினான்.                       382

 

பஞ்சடி நூபுரப் பதுமை கோயில்போய்

அஞ்சியல் அடுத்தமெல் லமளி மேலுறாத்

துஞ்சலன் யாரொடுஞ் சொல்லும் ஆடலன்

வெஞ்சமர் வினையமே உன்னி மேவினான்.                     383

 

ஆனதொ ரெல்லையில் அரசன் போர்செயப்

போனதும் பொருதலும் புறந்தந் தோமென

மாநகர் அதனிடை வறியன் வந்ததும்

பானுவின் பகைஞனுக் கொற்றர் பன்னினார்.                     384

 

சொன்னடை மந்திரத் தொடா¢பும் மாயமும்

தன்னுறு படைகளும் சாதனஞ் செய்வோன்

அன்னது கேட்டலும் அலக்கண் எய்தியே

மன்னுறு கடிநகர் வல்லை ஏகினான்.                            385

 

மணிநிரை இகலியே மாறு வில்லுமிழ்

இணையறு சினகரம் எய்திச் சேக்கைமேல்

தணிவறு சூழ்ச்சியோ டமர்ந்த தாதைதன்

துணையடி வணங்கியே தொழுது கூறுவான்.                     386

 

மாற்றலர் யாவரும் மறிய வல்லைபோர்

ஆற்றுதி யாலென ஐய முற்பகல்

சாற்றினை விடுத்தனை தமியன் ஏகியே

ஏற்றவர் தம்முடன் இகல்செய் தேனரோ.                 387

 

உற்றிலன் அறுமுகன் ஒழிந்த வீரர்கள் 

சுற்றிய படையொடு துவன்றிப் போர்செய்தார்

பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான்

மற்றவர் உணர்ச்சியும் வலியும் மாற்றினேன்.                    388

 

சென்றமர் இயற்றிய செறுநர் யாரையும்

வென்றனன் அத்துணை விமலன் மாமகன்

ஒன்றொரு மாப்படை உய்ப்ப என்படை

வன்றிறல் நீங்கியே வருந்தி மீண்டதே.                          389

 

அன்னதோர் பான்மையால் அனையா¢ யாவரும்

பின்னுணர் வெய்தியே பெயர்ந்து போயினார்

என்னிது வெற்றியென் றியானும் மீண்டனன்

உன்னொடும் உரைத்திலன் உள்ளம் வௌ¢கினேன்.               390

 

நெற்றியங் கண்ணுடை நிமலன் ஏனையோர்

முற்றரு படைகளால் முடிவின் மாயையால்

பற்றலர் யாரையும் படுத்து நாளையே

வெற்றிகொள் குவனெனா நென்னல் மீண்டனன்.          391

 

ஞாயிறு வந்தபின் நண்ண லா£¢மிசைப்

போயமர் இயற்றிடப் புறத்திற் சென்றனன்

ஆயதன் முன்னரே அனிகந் தன்னுடன்

ஏயென ஏகினை எந்தை நீயென்றார்.                             392

 

வரந்தனில் அழிவுறா வள்ளல் ஈண்டுறு

திருந்தல ருடன்அமர் செய்தற் காகவோர்

அருந்துணை வேண்டலை அதனை உன்னிமீண்

டிருந்தனன் இப்பகல் ஈதென் செய்கையே.                393

 

ஓர்ந்திலை இத்திறம் உணர்வு ளாரொடுந்

தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை

சார்ந்திடு நாற்பெருந் தானை தன்னொடும்

போ¢ந்தனை அமர்க்கிது பெருமைப் பாலதோ.                    394

 

அமரருக் காக்கமும் அவுணர்க் கேக்கமும்

அமையவர் முதல்வனுக் கின்பும் நல்கினை

குமரனைக் கணங்களைக் குறித்து மன்னநீ

சமா¤னுக் கேகுதல் தலைமை யாகுமோ.                 395

 

திகழ்ச்சிகொள் மேலவர் சிறியர் தம்மொடு

நிகழச்சிகொள் போரிடை நேர்வ ரேயெனில்

புகழ்ச்சிய தில்லையால் பொருது வெல்லினும்

இகழச்சியின் பாலதாம் எவரெ வர்க்குமே.                396

 

சென்றது கிடந்திடச் சிறியன் என்னினும்

ஒன்றிவண் மொழிகுவன் உள்ளங் கோடியால்

இன்றிர வகன்றபின் ஏகி யாரையும்

வென்றிகொண் டேகுவன் விடுத்தி யாலெனை.            397

 

கொற்றவை சிறுவனைக் கொற்றங் கொள்வதும் 

சுற்றுறு படையையான் தொலைக்குந் தன்மையும்

ஒற்றுவர் கண்டுமுன் உரைக்க எந்தைநீ

தெற்றென மகிழ்ச்சியிற் சிறந்து வைகுதி.                398

 

வேறு

 

கூரிய வேற்படை கொண்டுடை யோனை

வீரர்கள் தம்மொடு வெற்றிகொ ளேனேல்

வாரலன் ஈண்டு மகிழ்ந்திறை நல்கும்

பேரர சாட்சி பிடிக்கிலன் என்றான்.                              399

 

என்பது கேட்டலும் எவ்வுல கிற்குந்

துன்பு புரிந்திடு சூரபன் மாவாம்

முன்பன் மகிழ்ந்து முகத்தெதிர் நிற்குந்

தன்புதல் வற்கிது சாற்றுதல் உற்றான்.                           400

 

மூவர்கள் தாங்களும் முச்சக முள்ள

தேவரும் ஐயிரு கிக்குடை யோரும்

ஏவரும் ஏற்கினும் எம்பியை அட்ட

மேவலன் ஆற்றலை வெல்லரி தம்மா.                          401

 

பன்னிரு செங்கை படைத்துள சேயோன்

தன்னொ டெதிர்ந்து சமர்த்தொழில் செய்வார்

என்னல தில்லை இவன்சிறி யோனென்

றுன்னலை வன்மையின் ஒப்பில னேகாண்.                      402

 

குன்றம் எறிந்திடு கூரிய வேற்கை

வன்றிற லாளனை வன்மையில் யானே

வென்றிடு கின்றனன் மேலது நிற்க

ஒன்றுள தைய உரைப்பது கேண்மோ.                           403

 

ஒற்றென வந்துநம் மூர்அலை வித்துப்

பற்றலர் நீடு படைக்கிறை யாகுங்

கொற்ற வனைத்தனி கூவி மலைந்து

செற்றனை ஏகுதி சேனையொ டென்றான்.                404

 

தந்தை புகன்றிடு தன்மையை ஓரா

எந்தை பிராற்குளம் இத்திற மாமேல்

முந்திறை தன்னின் முடிப்பனி தென்ன

மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன்.                      405

 

அடுசமர் செய்வகை ஆங்கவன் ஏக

விடையது நல்கி வியத்தகு மன்னன்

இடையுறு சூழ்ச்சிக ளியாவும் இகந்து

மிடைதரு தொல்வள மேவி இருந்தான்.                 406

 

தாதைதன் ஏவல்த லைக்கொடு சென்றே

ஆதவன் மாற்றல னாகிய மைந்தன்

ஏதமில் தன்குலம் ஏகலும் அங்கண்

தூதுவர் பற்பலர் துண்ணென வந்தார்.                   407

 

துங்கம துற்றுள சூர்தரு மைந்தன்

செங்கம லம்புரை சீறடி தன்னைத்

தங்கண் முடிக்கொடு தாழ்ந்தனர் நின்றே

இங்கிவை கேட்க எனாமொழி குற்றார்.                   408

 

வேறு

 

மன்னவன் இன்றுபோய் மலைந்து மீண்டபின்

ஒன்னலன் மாட்டுறும் உலப்பில் பூதர்கள்

இந்நகர் வடாதுசார் எய்திக் காவலோன்

தன்னுயிர் கொண்டனர் தானை சிந்தினார்.                409

 

தகுவர்தம் மாப்படை தலைய ழிந்தபின்

அகலிரு விசும்பளந் தாண்டு நின்றிடு

சிகரியைக் கீண்டுதஞ் செங்கை யாலெடா

வெகுளியொ டளக்கரின் மீது வீசினார்.                   410

 

நீடிய சிகரிபோய் நேமி புக்கபின்

மாடுறு வடபுல மதிலை முற்றவுஞ்

சாடினர் மீண்டனர் தலைவ இந்நகர்

கோடில தாங்கடற் குட்டம் போன்றதே.                   411

 

என்றலும் வினவியே ஏந்தல் தன்புடை

சென்றிடும் வயவரிற் சிலரை நோக்கியே

வன்றிற லுடையநம் மரப்ல் தச்சனை

ஒன்றொரு கணத்தின்முன் உய்த்தினர் என்னவே.          412

 

ஆயவர் விரைந்துபோய் அவுணத் தச்சனை

மேயினர் இறைமகன் விளித்து ளானெனக்

கூயினர் வருகெனக கொடுவந் துய்த்தனர்

மாயிருங் கதிரைமுன் வெகுண்ட மைந்தன்முன்.          413

 

தன்னடி வணங்கியே தச்சன் நிற்றலும்

மன்னவர் மன்னவன் மதலை வல்லைநீ

இந்நகர் வடமதில் சிகரி ஏனவுந்

தொன்னெறி அமைக்கெனச் சொற்றுத் தூண்டினான்.       414

 

எல்லைமற் றன்னதின் எல்லை தன்பகை

கல்லுயர் மொய்ம்பன்மா காயன் என்பதோர்

வல்லவு ணன்தனை வருதி என்றுகூய்

ஒல்லையின் இனையதொன் றுரைத்தல் மேயினான்.              415

 

சேயுயர் வடமதிற் சிகரி தன்னிடைப்

போயினை அந்நெறி புரத்தி யால்எனா

ஆயிரப் பத்தெனும் அணிக வௌ¢ளமோ

டேயினன் தானுறும் இருக்கை எய்தினான்.                       416

 

அத்துணை ஏகியே அவுணர் கம்மியன்

உத்தர நெடுமதில் ஓங்கு கோபுரஞ்

சித்திர வுறுபபொடு சித்தத் துன்னியே

வித்தக வன்மையால் விதித்துப் போகவே.                       417

 

அடுகரி புரவிதேர் அவுணர் தானையாங்

கடலுடன் சென்றுமா காயன் என்பவன்

வடமதிற் சிகரியின் வாய்தல் போற்றியே

சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான்.                            418

 

ஆயது நிகழ்வுழி ஆழி வெற்பின்வாய்

ஞாயிறு நணுகநள் ளிருளின் யாமினி

போயது மெய்ப்புலன் புந்தி சேர்வுழி

மாயைய தகன்றிடும் வண்ணம் என்னவே.                       419

 

கங்குலென் றுரைபெறு கடவுட் கற்புடை

நங்கையை மேவுவான் நயப்பு மேற்கொளா

அங்கவ ளைத்தொடர்ந்து தணுகு வானெனச்

செங்கதிர் அண்ணல்கீழ்த் திசையில் எய்தினான்.          420

 

ஆகத் திருவிருத்தம் - 876

     - - - 


·  முந்தையது : யுத்த காண்டம் - பகுதி 1...

·  அடுத்தது : யுத்த காண்டம் - பகுதி 3...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்