logo

|

Home >

information-to-know >

thiruvasaga-thiruvullakidai

திருவாசகத் திருவுள்ளக்கிடை

சிவமயம்

(பிரதிகளிற் காணப்படும் வேற்றுமைகள் ( ) என்று பகவரைகளுள் தரப்பட்டுள்ளன)
            
1. சிவபுராணம் - சிவனது அநாதி முறைமையான பழமை; என்பது. சிவனது அருவநிலைமை கூறுதல் 
(சிவபுராணமும் கீர்த்தித் திருவகவலும் சிவனுடைய உயிர், அருள் நிலைமை என்பது அருவநிலை). 

2. கீர்த்தித்திருவகவல் - சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை (சிவனுடைய அருளின் முறைமை). 

3. திருவண்டப் பகுதி - சிவனுடைய தூலசூக்குமத்தை வியந்தது (சிவனுடைய தூலசூக்குமத்தை விகற்பித்தது, 
யோகநூல் தூல சூக்குமத்தை வியந்தது). 

4. போற்றித் திருவகவல்-  சகத்தினுற்பத்தி; என்பது, பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல் (ஞானஞ் சகத்து உற்பத்தி.)

5. திருச்சதகம் - பத்தி வைராக்கிய விசித்திரம்; என்பது, பத்து வகையாக இரட்சித்த முறைமை; 

    1. மெய்யுணர்தல்-தேகாதி பிரபஞ்சங்களைக் கண்டு நீங்கல்; 
    2. அறிவுறுத்தல்- பொறியோடே கூட்டுதல், அருள் தரிசனம், குருதரிசனம்; 
    3. சுட்டறுத்தல்- தன்செயலறுத்தல் (ஆனந்தத்தழுந்தல்); 
    4. ஆத்தும சுத்தி - அனுபவத்தழுந்தல் (ஆனந்தபரவசமாதல்); 
    5. கைம்மாறு கொடுத்தல் - தன்னைச் சிவத்தினிடத்திலே கொடுத்தல் (ஆனந்தாதீதமாதல்); 
    6. அனுபோகசுத்தி- சுகமேலீடு (சுட்டறிவொழித்தல்); 
    7. காருணியத்திரங்கல்- சிவனுடைய வெற்றிப் பாட்டிரங்கல் (ஆத்தும சுத்தி); 
    8. ஆனந்தத் தழுவல் (கைம்மாறு கொடுத்தல்); 
    9. ஆனந்த பரவசம் (அனுபவசுத்தி);
    10. ஆனந்தா தீதம். 

6. நீத்தல் விண்ணப்பம்- பிரபஞ்ச வைராக்கியம் (நீத்தல் விண்ணப்பமும் திருவெம்பாவையும் தெசசத்திகளை 
விகற்பித்தது. தெச சத்திகளாவன: அம்பிகை, ஞானாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பராசக்தி, ஆதிசக்தி, 
இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி ஆக பத்து ) 

7. திருவெம்பாவை - சத்தியை வியந்தது; சத்திகளாவார்: அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை ,உமை, 
பராசத்தி, ஆதிசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என ஒன்பதின்மர் (தெசசத்திகளையும் வியந்தது). 

8. திருவம்மானை-  ஆனந்தக் களிப்பு; என்பது, சுகமேலீடு (ஆனந்தக் கனிவு,)

9.  திருப்பொற்சுண்ணம் - ஆனந்த மனோலயம்; என்பது, தானன்றி நிற்றல் (திருச்சுண்ணம் என்பது  தன்னறி நிற்றல்). 

10. திருக்கோத்தும்பி - சிவனோ டைக்கியம்; என்பது, சிவனுடன் இடையறாது நிற்றல். 

11. திருத்தெள்ளேணம்- சிவனோடடைவு; என்பது, சிவனுடனே சென்று கூடுதல் (சிவனுடைச் செலவு). 

12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்; என்பது, சிவனுடைய அருட்சத்தி  விளையாட்டு. 

13. திருப்பூவல்லி- மாயா விசய நீக்குதல்; என்பது, மாயையினுடைய பலத்தை மறுத்தல் (மாயா விஷயமறுத்தல்). 

14. திருவுந்தியார் - ஞானவெற்றி அருட்சத்தியினுடைய சாமர்த்தியம். (ஞான வெற்றிப்பாடு)

15. திருத்தோணோக்கம் - பிரபஞ்ச சுத்தி; என்பது, ஆன்மாக்களைச் சுத்திகரித்தல். 

16. திருப்பொன்னூசல் - அருட்சுத்தி; என்பது, அருளோடு கூடுதல் (அருள் கூட்டம் என்பது அருளோடே கூடினது). 

17. அன்னைப்பத்து-  ஆத்தும பூரணம்; என்பது, ஆன்மா சிவனுடனே நிறைதல் (ஆத்தும சம்பூரணம்). 

18. குயிற்பத்து - ஆத்தும விரக்கம்; என்பது, சிவனைக் கண்டிரங்குதல் (ஆத்தும விகாரம் என்பது சீவனைக் கண்டிரங்குகிறது). 

19. திருத்தசாங்கம்-  அடிமைகொண்ட முறைமை; என்பது, பத்தடையாளம் (பத்து வகையாய் அடிமை கொண்டது). 

20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி; என்பது, ஏகமாகிய திரோதாயி மறைப்பான மலம் நீக்குதல். 

21. கோயில் மூத்ததிருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (சிவானந்தத்தில் திகைப்பு என்பது சிவானந்தம் அளவறுக்கொண்ணாமை). 

22. கோயிற்றிருப்பதிகம் - அனுபோக விலக்கணம்; என்பது, சிவானு பூதிக் கடையாளம்.

23.  செத்திலாப்பத்து - சிவானந்த மளவறுக் கொணாமை என்பது, சிவானந்த மணுகிச் செயிக்கப்படாமை (சிவானந்த மலைவு). 

24. அடைக்கலப்பத்து - பக்குவ நிண்ணயம்; என்பது, வித்து மங்குரமும்போல என்றல் (வஸ்து நிண்ணயம்). 

25. ஆசைப்பத்து - ஆத்தும விலக்கணம்; என்பது, ஆன்ம பேதத்தையறிதல் (ஆத்தும ரூபத்தை அறிதல்). 

26. அதிசயப்பத்து - முத்தியிலக்கணம்; என்பது, மோட்சத்தின் அடையாளம். 

27. புணர்ச்சிப்பத்து - அத்துவித விலக்கணம்; என்பது, ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றல் (அத்துவிதானந்த இலக்கணம்). 

28. வாழாப்பத்து - முத்தி யுபாயம்; என்பது, பிரபஞ்சத்தைவிட்டுப் பரபோகத்தைக் கூடுதற்குபாயம் (மோட்ச உபாயம், மோட்ச லட்சணம்). 

29. அருட்பத்து - மகாமாயா சுத்தி; என்பது மாயையைச் சுத்தி பண்ணுதல். 

30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குருதரிசனம்; என்பது, பசுத்துவங் கெட்டவிடம் (சற்குரு தெரிசனம்). 

31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (பரமானந்த நிருத்த தரிசனம்) 

32. பிரார்த்தனைப் பத்து-  சதாமுத்தி; என்பது, ஆன்மாக்களுக்கு முத்தி நிச்சயம் பண்ணுதல் (செகமுத்தி). 

33. குழைத்த பத்து - ஆத்தும நிவேதனம்; என்பது, நேயத்தோடே ஒன்றினது (குழைத்தல்) 

34. உயிருண்ணிப்பத்து-  சிவானந்த மேலிடுதல்; என்பது, நேயமேலிடுதல்

35. அச்சப்பத்து - ஆனந்த முறுதல்; என்பது, நேயத்திலே ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்தினது. ( ஆனந்த முற்றுதல்) 

36. திருப்பாண்டிப்பதிகம்-  சிவானந்த விளைவு என்பது, சுகமேலீடு ( திருப்பாண்டி விருத்தம்; சிவானந்த விரைவு). 

37. பிடித்தபத்து - முத்திக் கலப்புரைத்தல்; என்பது மற்றுள்ள ஆன்மாக்களுக்கு முத்தியின் சுகத்தைச் சொல்லியது.

38.  திருவேசறவு- சுட்டறிவொழித்தல்; என்பது, தன்செயலற நிற்றல் (ஏசற்பத்து சுட்டறிவு ஒழிதல்). 

39. திருப்புலம்பல்- சிவானந்த முதிர்வு; என்பது, சிவானந்தம் பெறாவிச்சை (சிவானந்தமிடி). 

40. குலாப்பத்து - அனுபவமிடையீடுபடாமை; என்பது, விட்டுப்பற்றாமல் ஒரு தன்மையாவது (அனுபவம் இடையறாமை)

41. அற்புதப்பத்து -அனுபவம் ஆற்றாமை; என்பது, அனுபவமுற்றுதல் பொறாமை, விம்முதல் .

42. சென்னிப்பத்து  - சிவவிளைவு; என்பது, சீவனுக்கு நிச்சயப்படுதல் (சிவனுக்கு நிச்சயப்படுதல்)

43. திருவார்த்தை-  அறிவித்தன்புறுதல்; என்பது, உன்னாலறியப்படாத துரைக்க அறியென்றது 
(அறிவிக்க அறிதல் என்பது உன்னால் அறியப்படாதது நானாக அறி என்றது). 

44. எண்ணப் பதிகம்- ஒழியா வின்பத்து வகை; என்பது, தேகமுதலாகிய ஆசையை அறுத்தல் (எண்ணப்பத்து அவாவினை  ஒறுத்தல்). 

45. யாத்திரைப்பத்து-  அனுபவாதீத முரைத்தல்; என்பது, அனுபவத்திலதீதப்பட்டுப்  போனது. 

46. திருப்படையெழுச்சி - பிரபஞ்சப்போர்; என்பது, மலவிளைவற்றது. 

47. திருவெண்பா- அணைந்தோர் தன்மை; என்பது, பரிசவேதிபோல என்றது. 

48. பண்டாய நான்மறை - அனுபவத்துக்கையமின்மை உரைத்தல் (அனுபவத்துக் கைம்மாறுரைத்தல் இப்படி 
இரட்சிக்கப்பட்ட ஆசாரியற்குக் கைம்மாறிலை என்றது). 

49. திருப்படையாட்சி- சீவ உபாதியொழித்தல்; என்பது கிரியா சூனியம் (பிரபஞ்சத்தில் சீவ உபாதி ஒழித்தல்). 

50. ஆனந்தமாலை-  சிவானுபவ விருப்பம்; என்பது, சிவனாந்த மேலீட்டில் கிரியாசத்தியழிவுரைத்தல் 
(மின்னேரனைய பூங்கழல் வழக்கழித்தல் வழக்கறிவுரைத்தல்). 

51. அச்சோப்பதிகம் - அனுபவவழியறியாமை; என்பது, அனுபவத்ததிசயம் 
(அச்சோப்பத்து- அனுபவம் வந்தவழி அறியாமை அனுபவவதிசயம் என்பது, அனுபவம் வழியறியாமை).

                திருச்சிற்றம்பலம். 
 

Related Content

வேதங்களின் சிறப்புகள்

புறநானூற்றில் சைவக் கருத்துக்கள்

மொழிபெயர்ப்பு சைவ நூல்கள்

திருவெம்பாவைக் கருத்து