logo

|

Home >

information-to-know >

thamarukam-thirumurai-musical-instruments

தமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Thamarukam - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
தமருகம் கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி 
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம் 
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர் 
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.6 

கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் 
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார் 
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் 
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே. 3.9.4 

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை 
தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம் 
உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச் 
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. 4.73.6 

விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்கு 
சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும் 
அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ் 
சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.2 

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் 
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில் 
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண் 
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம் 
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண் 
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை 
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6.64.3 

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் 
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் 
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் 
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.1 

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன் 
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு 
ஆமே தமருக பாசமும் கையது 
வாமே சிரத்தொடு வாளது கையே 10.1293 

சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய் 
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு 
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு 
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே 10.1398 

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் 
தாடித் தெழுந்த தமருக ஓசையும் 
பாடி எழுகின்ற வேதாக மங்களும் 
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே 10.2317 
அங்கி தமருகம் அக்குமா லைபாசம் 
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் 
தங்குஉ பயந்தரு நீல மும்உடன் 
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே 10.2780 

தழங்கும் தமருகப் பறையும் 11.829 

தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் 11.896 

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு 
கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன் 
திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக் 
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. 11.1191 

மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர் 
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல் 
துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின் 
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே 11.1267 

அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த 
வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத் 
தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப் 
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட 12.3693 
 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்